Tuesday, July 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 207

நூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா

ந்திய சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் கொடுமைகளில் முக்கியமானது “சாதிய பிரிவினை”, அதிலும் மிகக் கொடுமையானது தீண்டாமைக் கொடுமை. அந்த வகையில், சில சாதியைச் சேர்ந்த மக்களை ஒடுக்கி அவர்களது சமூக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்திற்குள் முடக்கி வைக்கிறபோக்கு இன்றளவும் இந்தியாவில் நிலவி வருகிறது.

சாதி ஆதிக்கத்தால் அதிகம் நசுக்கப்படுபவர்கள் பழங்குடி மக்களும், ஒடுக்கப்பட்ட இனத்தவர்களுமே ஆவர். இவர்களில் குறிப்பாக சாக்கடைக் குழிகள் மற்றும் மலக் குழுகளோடு காலங்காலமாக, பரம்பரை பரம்பரையாக வாழ நிர்பந்தப்படுத்தப்பட்டு கிடக்கின்ற ஒரு சமூகம் “துப்புரவுத் தொழிலாளர்” பணி செய்கின்ற சமூகத்தினர். இவர்களை பற்றி பேசுகிற நாவலே இந்த “கழிசடை”.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா
♦ நூல் அறிமுகம் : தியாகி களப்பால் குப்பு || வாய்மைநாதன் || சு.கருப்பையா

தமிழில் கழிசடை என்றால் “மிகக் கேவலமான” அல்லது “கீழ்த்தரமான” என்று பொருள்படும். அப்படி சமூகத்தால் கீழ்த்தரமாக பார்க்கப்படும், அனுமந்தையா என்ற துப்புரவுத் தொழிலாளியின் வாழ்க்கைதான் இந்த கதை.

அவன் மனைவி கொண்டம்மா, வெட்டியான் சுடலை, முனிசிபல் அலுவலகத்தின் ஒட்டுண்ணிகளான ஆய்வாளர் தியாகராஜன், ராகவலு மற்றும் மொய்தீன் மேஸ்திரிகள், வட்டிக்கடை மாணிக்கம், சாராயக்கடை ஜோசப்பு மற்றும் அனுமந்தையாவின் சக துப்புரவுத் தொழிலாளிகளான இயேசு ரத்தினம், சுப்பையா, நாகையா , அந்தோணி, யாகூப், ஐசக் போன்றவர்களின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் அறிவழகன்.

நாள் முழுவதும் மலக்குழிகளிலும், சாக்கடையிலும் புழங்கும் அனுமந்தையா சாராயத்திற்கு அடிமையாகிப்போவதும், அதனால், உடல்நலம் கெட்டு பல நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் சம்பளத்தை இழப்பதும், அவனது ஐந்து குழந்தைகளுக்கு உணவளிக்க வட்டிக்கடை மாணிக்கத்திடம் பணம் வாங்குகிறான் அனுமந்தையா.

வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் போய்விட, மாணிக்கத்தைச் சரிக்கட்ட அனுமந்தையாவின் மனைவி கொண்டம்மா தன்னையே அவனுக்குத் தாரை வார்ப்பது போன்ற கதை ஓட்டம், சமூகத்தில் வட்டிக்கு காசு கொடுத்து பிழைப்பு நடத்தும் கிரிமினல்களின் இழிவாழ்க்கையையும் சுட்டிக் காட்டுகிறது.

தன்னை விரும்பி திருமணம் செய்து கொண்ட மனைவி கொண்டம்மா, மாணிக்கத்துடன் உறவு வைத்திருப்பதை பார்த்ததும் வேதனையுடன் குடித்துவிட்டு வந்து அவளை கடுமையாக  அடித்து நொறுக்குகிறான். அடியை வாங்கிக் கொண்ட கொண்டம்மா, ஏனய்யா! “அவன்கிட்ட ஆசைப்பட்டா படுத்தேன்”, அவனுக்கு வட்டிப்பணம் கொடுக்க முடியாததால் அவன் உன்னை கஷடப்படுத்துவதை தடுக்க எனக்கு வேறு வழி இல்லாமல் தானே இப்படி நடக்க வேண்டியிருக்கிறது என்று கூறும்போது, அவளின் பரிசுத்தமான அன்பையும் அரவணைப்பையும் நினைத்துப் அனுமந்தையா புலம்புகிறான்.

தினமும் பசியோடும், நோயோடும் மற்றும் (வேலை போய்விடும் என்ற) பயத்தோடும் வாழும் அனுமந்தையாவின் வாழ்க்கை அவனுக்கு மனப்போராட்டத்தையே கொடுக்கிறது. அவன் மலக்குழியை சுத்தம் செய்துவிட்டு அவ்வழியாக செல்லும் சாக்கடை நீரிலே முகத்தையும் கழுவி விட்டு, பசியைப்போக்க “அம்மா” சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கேட்பது, இன்றும் இந்த நிலைதான் துப்புரவுப் பணியாளர்களின் நிலையாக உள்ளது என்னும் அவலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய மறுக்க முடியாத உண்மை.

கோப்புப் படம்

தனது மகன் சீனய்யாவை தான் செய்யும் வேலைக்கு அனுப்பக்கூடாது வேண்டும் ஆசைப்படும் அனுமந்தையா, மகன் அதே வேலையைச் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது வேதனையால் குமைவதும், மனம் கலங்குவதும் ஒரு நல்ல தந்தைக்குரிய பண்பை அடையாளம் காட்டுகிறது. தன்னைக் குடிக்க வேண்டாம் என்று தடுக்கும் மனைவி கொண்டம்மா, மகன் மலக்குழிக்குள் வேலை செய்கிறான் என்று தெரிந்து கொண்டு, அந்தச் சுழலுக்குப் பழகிக் கொள்ள “சாராயம்” வாங்கி வந்து கொடுக்கும் போது, வேண்டாம் என்று தடுக்க நினைக்கும் அனுமந்தையாவால், அது முடியாமல் போய்விடும்போது பரிதாபமாக இருக்கிறது.

அனுமந்தையாவின் மனைவி கொண்டம்மா, இந்த நாவலின் அற்புதமான பாத்திரப்படைப்பு. வெட்டியான் சுடலையை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டு அனுமந்தையாவை திருமணம் செய்து கொள்வதும், தன் குடும்பத்திற்காக தன்னையே சிதைத்துக் கொள்வதும், தள்ளாத வறுமை நிலையிலும் குப்பைத் தொட்டியில் கிடந்த அனாதைக் குழந்தை லட்சுமியை தனது முத்த மகளாக எடுத்து வளர்ப்பதும், பரிசுத்தமான அன்பு, உழைக்கும் வர்க்கத்திடம் தான் அதிகம் இருக்கிறது என்பதை பறை முழங்குகிறது.

அதேபோல், வெட்டியானாக வரும் சுடலையும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறான். தொழிலின் மீதான அவனது நேர்த்தி, அர்ப்பணிப்பு, பிணம் எரிக்க வருபவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் உதவுவது என மனிதத்துவத்தை அற்புதமாக வெளிக்கொணருகிறான்.

சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வேலைக்கு கூட பினாமிகள் இருப்பதும், அவர்களுக்கும் சுடலை பங்கு கொடுக்க வேண்டியதிருப்பதும், வெட்டியான் வேலையில் கூட ஊழல் மலிந்திருப்பதை அறிவழகன் மிகவும் நுட்பமாக பதிவு செய்திருக்கிறார்.

கொண்டம்மா தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதால் பைத்தியமாகிப்போன சுடலை, பின்னர் நலமடைந்து தொழிலுக்கு திரும்பி, கிடைத்த வாழ்க்கையை திருப்தியாக வாழ்வதும், அனுமந்தையாவை தன்னை வென்ற ஒரு போட்டியாளனாக கருதாமல் அவனுடன் இயல்பாக பழகும் விதமும் அற்புதமானது. உழைக்கும் மக்களிடம் இருக்கும் வஞ்சனையற்ற மனதை, இக்கதாபாத்திரங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் அறிவழகன்.ஒரு வெட்டியானின் வாழ்க்கையை இதைவிட யாரும் அழகாக கூறவில்லை என்றே கருதுகிறேன்.

அனுமந்தையாவின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வரும் உயர்அதிகாரி குமாரசாமி, தனது பால்ய நண்பன் ராசப்பன்தான் அனுமந்தையா என்று தெரிந்து கொண்டு, அவன் மீது அதே நட்பை வெளிப்படுத்தி அரவணைக்கிறார் குமரசாமி.

அனுமந்தையா தனது நண்பரிடம் மகன் சீனய்யாவிற்கு தோட்டி வேலை கொடுக்கும் படி கோரிக்கை வைக்கிறான். அவரும் அந்த வேலையைக் கொடுக்கிறார்; ஆனால், அதுவே சீனய்யாவின் மரணத்திற்கும் காரணமாகி விடுகிறது. ஒரு மலக்குழியையை சுத்தம் செய்யும்போது சீனய்யா விஷவாயுவினால் தீ விபத்து ஏற்பட்டு இறக்கிறான். இறுதியில், அனுமந்தையாவின் வாழ்க்கையில் சோகமே மிஞ்சுகிறது.

அறிவழகன் இந்த நாவலின் மூலம் மிக அற்புதமான மனிதர்களை அடையாளம் காட்டுகிறார். அதுமட்டுமல்லாமல், அந்தோணி, ஐசக் என்று கிறித்துவனாக மாறினாலும், யாகூப் என்று இஸ்லாமியனாக மதம் மாறினாலும் அவர்களை இந்த சமூகம் தோட்டியாகவே பார்க்கும் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறார்.

அவர் இந்த நூலின் முன்னுரையில், “தங்களைப் பற்றியே உணராமல் இச்சமுதாயத்திற்காக சேவை செய்யும் இவர்களது வாழ்க்கை யாரையும் பிரமிக்க வைப்பது. உடலால் தூய்மையற்றவர்களாகயினும் உள்ளத்தால் கள்ளங் கபடமற்ற தூய்மையானவர்கள். இழி நோக்கம் அறியாதவர்கள். குடும்பத்தினர்களுக்குள்ளேயும் குரோதம் பாராட்டத் தெரியாதவர்கள். இச்சமுதாயத்திற்காக செருப்பினும் இழிவாய் சேவை செய்யக் கடமைப் பட்டவர்கள் எனும் மனோநிலையில் இயல்பாகவே தங்களைத் தியாகித்துக் கொண்டவர்கள். சாதி, சமய, இணைப் பாகுபாடின்றி அனைவருக்காகவும் தங்களை அர்பணித்துக் கொண்டவர்களாததால் மற்ற சாதியினரினும் உயர்ந்தவர்கள்” என்று மிக அருமையாக குறிப்பிட்டுள்ளார்.

படிக்க :
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை
கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

நான் இந்த “கழிசடை”யை தமிழில் வெளிவந்த நூறு சிறந்த நாவலுக்குள் ஒன்றாக கருதுகிறேன். ஆனாலும், துப்பரவுத் தொழிலாளிகள் சுரண்டப்படுவதையும், ஒடுக்கப்படுவதையும் பற்றித்தான் இந்த நாவல் பேசுகிறதேயொழிய, அடக்குமுறைக்கு எதிரான அவர்களின் எழுச்சியையும், தேவையையும் முன்னிறுத்தவில்லை என்ற குறைபாட்டையும் காண்கிறேன். அந்த குறைபாட்டை தகழியின் “தோட்டியின் மகன்” என்ற மலையாள நாவல் நிறைவு செய்கிறது.

இந்த நாவலை வாசித்து முடிக்கும் வரை அனுமந்தையாவுடன் நானும் வாழ்ந்தேன் என்பதையும், அவன் இறங்கிய மலக்குழிகள் மற்றும் சாக்கடைக்குள் நானும் நுழைந்து வேலை செய்து வெளியேறிய உணர்வும் எனக்கு ஏற்பட்டது என்பதை மறக்காமல் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். “கழிசடை” ஒரு அற்புதமான படைப்பு.

நூல் : கழிசடை
ஆசிரியர்: அறிவழகன்
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
பக்கங்கள் : 248
விலை : ரூ .160

நூல் அறிமுகம் : சு.கருப்பையா

disclaimer

ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !

.டி.டி. தளங்கள், சமூக ஊடகங்கள், மற்றும் மின்னணு செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் “இடையீட்டாளர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியாக்களுக்கான நெறிமுறைகள் விதிமுறைகள் 2021” (Guidelines for Intermediaries and Digital Media Ethics Code 2021) என்ற புதிய விதியை கொண்டுவந்துள்ளது மோடி அரசு.

மேற்கண்ட இந்த விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதியே அறிமுகப்படுத்தியிருந்தது. அனைத்து சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தளங்களின் நிறுவனங்களும் இவ்விதிமுறைளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதற்காக மே மாதம் 25-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசம் முடிவடைந்ததால், தற்போது அனைத்து நிறுவனங்களும் அவ்விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டாக வேண்டிய சூழல் எழுந்துள்ளது. கூகுல், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் மோடி அரசின் புதிய விதிகளுக்கு கட்டுப்படுவதாக அறிவித்துவிட்டனர்.

படிக்க :
♦ காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !
♦ நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !

இந்நிலையில் இந்த புதிய விதிகள் என்ன சொல்கிறது? இதுவரை சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு இதுபோன்ற எந்த விதிகளும் இல்லாத போது, தற்போது புதிதாக இத்தகைய விதிமுறைகளைக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன? இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? போன்ற கேள்விகளுக்கான விடைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஏன் இந்தப் புதிய விதிமுறைகள், மோடி அரசு சொல்லும் காரணங்கள் என்ன?

இந்த புதிய விதிமுறைகளை டெல்லியில் அறிமுகப்படுத்திப் பேசிய, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர், “இந்தியாவில் சமூக ஊடக நிறுவனங்கள் வரவேற்புக்குரிய ஒன்று என்றாலும், அவற்றில் பகிரப்படும் சில தகவல்கள், வெறுப்புணர்வைத் தூண்டக் கூடியதாக உள்ளன என்று மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் பல ஆண்டுகளாகவே வந்து கொண்டிருக்கின்றன. போலிச் செய்திகளின் பிரச்சனையும் இதில் அடங்கும்”

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர்

“மேலும் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, வெளிநாடுகளுடனான உறவுகள், பாலியல் வல்லுறவு, பாலியல் உணர்வைத் தூண்டும் உள்ளடக்கங்கள் உள்ளிட்டவை தொடர்பாக புகார்கள் வந்தாலோ, ஆட்சேபகர தகவல்கள் பகிர்வதாக தெரிய வந்தாலோ, இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி அரசுத்துறை நடவடிக்கை எடுக்கும்” என்று புதிய விதிமுறைகளை கொண்டு வருவதற்கான காரணங்களை சொல்லியுள்ளார்.

புதிய விதிகள் என்ன சொல்கின்றன?

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள்; நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓ.டி.டி. தளங்களின் நிறுவனங்கள், தங்கள் பயனர்களின் புகார்களை விசாரித்து தீர்ப்பதற்காக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் இந்தியாவில் இருப்பவராக இருக்க வேண்டும்.

மேலும், இணைச்செயலாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள ஒரு அதிகாரியை “அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக” அரசு நியமிக்கும். இவர் நினைத்தால் குறிப்பிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் உள்ளடக்கத்தைத் தடைவிதிக்க உத்தரவிட முடியும்.

சமூக ஊடகங்களில் ‘சட்டவிரோதமான’, ‘வெறுப்பைத் தூண்டும்’, ‘தேசத்தின் ஒற்றுமைக்கு அல்லது இறையாண்மைக்கு எதிரான’, இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றிய ‘தவறான கருத்துகள்’, சிறுவர் ஆபாச படங்கள், பாலியல் வக்கிரங்கள் தொடர்பான உள்ளடக்கங்களை “முதலில் பதிவிட்ட நபரைப்” பற்றிய விவரங்களை அரசிற்குத் தரவேண்டும். அதனை வைத்துக் கொண்டு அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். இந்த உள்ளடக்கங்களைப் பகிர்வோருக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்கிறது.

மேற்கண்டவை தொடர்பாக புகார்கள் வந்தால் அந்த குறிப்பிட்ட உள்ளடக்கத்தை 36 மணி நேரத்திற்குள் நீக்க அல்லது அந்த கணக்கை முடக்க வேண்டும்.

மேலும், இந்த நிறுவனங்களைக் கண்காணிக்கும் “மேற்பார்வைக் குழு அல்லது கண்காணிப்புக் குழு” ஒன்று அமைக்கப்படும்.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, பாதுகாப்பு, சட்டம், உள்துறை, வெளிவிவகாரங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஆகிய அமைச்சகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அதில் அங்கம் வகிப்பார்கள். மேற்கண்ட ‘நெறிமுறைகளை’ மீறுவதாக புகார் வந்தால் அதனை “தானே முன்வந்து விசாரிக்கும் அதிகாரம்” இந்த மேற்பார்வைக் குழுவுக்கு இருக்கும்.

ஓ.டி.டி. தளங்கள் தாங்கள் வெளியிடும் திரைப்படங்கள், தொடர்கள் போன்றவற்றை U, U/A7+, U/A13+, U/A16+, மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் A என்று வகைப்படுத்தி, குறிப்பிட்ட வயது வரம்புக்குள் இருப்பவர்கள் மற்றவற்றைப் பார்க்காத வண்ணம் தடுக்க வேண்டும்.

இதுபோன்று பல விதிமுறைகளைப் பற்றி சொல்கிறது.

இந்த விதிமுறைகளின் உண்மையான நோக்கம் !

சிறுவர் ஆபாசப் படங்கள், பாலியல் வக்கிரங்கள் தொடர்பான பதிவுகள் போன்றவற்றை தடுப்பது என்பதையும் இந்த விதிமுறைகள் தனது நோக்கமாக காட்டினாலும் உண்மை அதுவல்ல.

இந்து முன்னணி காலிகளால் பெண் உறுப்பு சிதைத்துக் கொல்லப்பட்ட அரியலூர் நந்தினி முதல் காஷ்மீரில் கருவறையிலேயே வைத்து சிதைக்கப்பட்ட அசீபா, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி நாக்கு துண்டிக்கப்பட்டு முதுகெலும்பு முறித்து போடப்பட்ட உத்தரப் பிரதேசத்தின் மனிஷா வரை பாதிக்கப்பட்டது யாரால்? இந்த கொடூரங்களை செய்தவர்களும் அவர்களை ஆதரித்தவர்களும் யார்? இவர்கள் தான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளைத் தடுக்கப் போகிறார்களா? இது ஒரு சகிக்க முடியாத பொய்.

உண்மையில் “தேச விரோதக் கருத்துக்கள் அல்லது தேசத்தின் இறையாண்மைக்கு ஆபத்தான கருத்துக்கள், வெறுப்பைத் தூண்டும் பதிவுகள், போலிச் செய்திகள்” என்று கூறி தங்களையும் தங்களது இந்துத்துவ அரசியலையும் சமூக ஊடகங்களில் விமர்சிப்பவர்கள், அது தொடர்பாக எழுதும் மின்னணு செய்தி ஊடகங்கள் மற்றும் இந்துத்துவத்தை விமர்சிக்கும் வகையில் வரும் சில ஓ.டி.டி. திரைத்தொடர்கள் (உதாரணமாக ‘லைலா’ (LEILA) போன்ற இணையத் தொடர்கள்) ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டது தான் இந்த விதிமுறிகளை மோடி அரசு அறிவித்திருப்பதற்கான காரணமாகும்.

000

நாள் தோறும் கோடிக்கணக்கான மக்கள் – ஜனநாயக சக்திகள் மோடி அரசின் காவி-கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளைக் கண்டு கொதித்துப் போயுள்ளார்கள். அவர்கள் இந்தப் பாசிச அரசிற்கு எதிரான கோபத்தைப் போராட்டங்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிக்கொண்டு வருகிறார்கள்.

அதில் ஒன்றாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதுபோன்ற உள்ளடக்கங்கள் நாடு முழுக்க வைரலாவதும் மோடி அரசின் யோக்கியதை அம்பலமாவதும் நடக்கிறது. தமிழகத்தின் கோ பேக் மோடி (GO BACK MODI) ஹாஷ்டேக் முதல் “டெல்லிச் சலோ” விவசாயிகள் போராட்டம் உலக அளவில் டிரெண்டானது வரை இந்த பார்வையில் தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை தங்களுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ளத் துணிவற்றவர்கள் மட்டுமல்ல, அதை அடக்கி ஒடுக்கி இல்லாமல் செய்வதற்கும் முயல்பவர்களும் ஆவர்.

ஏனெனில், தங்களது பாசிச ஆட்சியை நிறுவுவதற்கு கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற ஜனநாயக உரிமைகளை இல்லாமல் செய்வது அவர்களுக்கு முன்தேவையாக உள்ளது. அந்த வகையில் அதற்கான ஏற்பாடாகத் தான் சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்கள், ஓ.டி.டி. தளங்களுக்கான இந்த புதிய விதிமுறைகளும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட விதிகளைப் பார்ப்போம், இந்தியாவை தளமாகக் கொண்ட ஒருவரை புகார் அதிகாரியாக நியமிப்பது, அரசு அதிகாரப்பூர்வமாக நியமிக்கும் பிரதிநிதியிடம் (சங்கிகளை தான் நியமிப்பார்கள் என்பதை சொல்லாமலே புரிந்துகொள்ள முடியும்) எந்தவொரு உள்ளடக்கத்தையும் தடைவிதிக்கும் அதிகாரம் கொடுக்கப்படுவது.

மேலும், இதற்கெல்லாம் மேல், மோடி அரசின் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்தவர்கள் ‘கண்காணிக்கும் குழு’ என்ற பெயரில் அனைத்து சமூக ஊடக, மின்னணு செய்தி ஊடக, ஓ.டி.டி. தளங்களின் நிறுவனங்களையும் விசாரணை செய்யும் அதிகாரத்தில் அமர்ந்து கொள்வது என்பது அனைத்தும் முற்று முழுதாக இந்த தளங்களை பார்ப்பன பாசிஸ்டுகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் அதன் மூலம் தங்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிடுபவர்கள், அதை பரப்புபவர்களைக் கண்டறிந்து அவர்களை தண்டிக்கவுமே ஆகும்.

அதற்கு தான் ‘சட்டவிரோத’, ‘தேச விரோதக் கருத்துக்களை’ முதலில் பதவிடுபவர்களை கண்டறிவதும் அதை பரப்புபவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பது போன்றவற்றை தங்களது புதிய விதிமுறைகளில் சேர்த்திருக்கிறார்கள்.

இந்த விதிமுறைகள் அமுலுக்கு வரும்பட்சத்தில் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களுக்கு எதிரான கருத்துக்களே இல்லாத இந்தியாவை நாம் பார்க்கலாம் ! ஏனெனில் அதன் பின் அத்தகைய மாற்றுக் கருத்துக்களை பேசத்துணியும் குரல்வலைகள் அறுத்து வீசப்பட்டிருக்கும்.

பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஹத்ராஸ் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐந்தாம் தேதி, செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன் உட்பட அவருடன் வந்த சக ஊடகவியலார்கள் மீது உத்திரப்பிரதேசத்தில் ஒரு சதியை அரங்கேற்ற வந்ததாக கூறி அவர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (ஊபா) கைது செய்தது உ.பி அரசு.

மேலும் கொரோனா இரண்டாம் அலையால் காவி கும்பல் ஆளும் உத்திரப்பிரதேசம் மருத்துவ நெருக்கடிக்கு உள்ளானபோது “உத்திரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, போதிய படுக்கை வசதிகள் இல்லை என்று யாராவது சமூக ஊடகங்களில் பொய் செய்தியைப் பரப்பினால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும்” என்று யோகி ஆதித்யநாத் அரசு மிரட்டியது.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, கொரோனா உயிர் பலிகளை மறைத்தல் என கொரோனா இரண்டாவது அலையை மோடி அரசு கையாளும் கொடூரத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதற்கு எதிராக, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஒருவர் “அரசிற்கு எதிராக சர்வதேச ரீதியில் கருத்துருவாக்கம் செய்வதற்காக காங்கிரஸ்காரர்கள் தாயாரித்த டூல்கிட்” என்று போலியான ஒன்றை பகிர்ந்திருந்தார். காங்கிரஸ்காரர்கள் புகாருக்கு பிறகு அந்த டூல்கிட் போலியானது என்பதை உறுதிபடுத்திய ட்விட்டர் நிறுவனம் பா.ஜ.க-வினரின் பதிவை “சித்தரிக்கப்பட்டது” என வகைப்படுத்திக் காட்டியது.

மூக்கு உடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பாசிச பா.ஜ.க டூல்கிட் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மீதி வழக்கு தொடுத்தது மட்டுமின்றி ட்விட்டர் நிறுவனத்திற்குள் அதிரடியாக டெல்லி போலிசை அனுப்பி ‘விசாரித்திருக்கிறது’ (மிரட்டியிருக்கிறது என்று சொல்வது தான் பொருந்தும்).

படிக்க :
♦ டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்
♦ டிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது ?

நாடே அறிந்த உண்மையாகினும் தன்னை எதிர்த்து எந்தக் கருத்தும் வரக்கூடாது. அப்படி வந்தால் அது எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதற்கு இவை சிறு உதாரணங்கள். தற்போது இந்த புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்ததன் மூலம் நமது கருத்துரிமைக்கு எதிரான பார்பன பாசிச தாக்குதல் சட்டப்பூர்வாகியிருக்கிறது.

இந்தப் பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து களத்தில் போராடாமல் இனி கருத்து சுதந்திரத்தைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.


பால்ராஜ்
செய்தி ஆதாரங்கள் :
BBC News Tamil, BBC News Tamil2

ஒரு பங்கு ஆக்சிஜன் தயாரிக்க 10 பங்கு ஆக்சிஜனை வீணடிக்கும் ஸ்டெர்லைட் !

வேதாந்தாவின் ஆக்சிஜன் கருணை, முதலாளித்துவப் பேரழிவே!

ருவேளை, வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள தனது ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தான் வாக்குறுதியளித்தபடி நாளொன்றுக்கு 1,050 டன் மருத்துவ ஆக்சிஜனை வழங்கியிருந்தால், தமிழகத்தின் ஒருநாள் தேவையான 650 டன்னையும் அது பூர்த்தி செய்திருப்பதோடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்காக சிறிதளவு மிச்சப்படுத்தியிருக்க முடியும்.

எனினும், தி வயர் சயின்ஸ் (the wire science) பத்திரிக்கையாளார்கள் சந்தித்த வல்லுநர்கள், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திலிருந்து, மருத்துவ நோக்கங்களுக்காக நாளொன்றுக்கு 1,050 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஒரு வருடகாலம் ஆகவில்லையென்றாலும் சில மாதங்களேனும் ஆகும். அதுவரை, ஸ்டெர்லைட் வளாகத்திற்குள் இருக்கும் ஆலைகளை முறைப்படுத்தினால் படிப்படியாக 60 முதல் 100 டிபிடி (tonnes per day) வரை திரவ ஆக்சிஜனைத்தான் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.

படிக்க :
♦ ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி : தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி !
புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்

மேலும், வேதாந்தாவின் ஆக்சிஜன், மிகவும் செலவு செய்யக் கூடியதாகவும், வீணாகக் கூடியதாகவும் இருக்கும் என்றனர். அதே பணத்தைக் கொண்டு, குறைந்த விலை மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில், குழாய் வழியாக தொலைதூர இடங்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு சேர்க்கும் நீண்ட காலப் பயன்பாடுடைய உள்கட்டமைப்பை அமைக்க முடியும்போது எதற்காக இவ்வளவு செலவு செய்து (ஸ்டெர்லைட்டில்) ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டும்?

மே 25 காலை வரை, தான் வாக்குறுதியளித்த 1,050 டன்னுக்கு மாறாக, நாளொன்றுக்கு 21 டன்னும், ஒரு வார இறுதியில் மொத்தம் 150 டன்னும் மட்டுமே வழங்கியுள்ளது அந்நிறுவனம். உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு டன் திரவ ஆக்சிஜனுக்கும் (Liquid Oxygen), வேதாந்தா 10 டன் வாயு ஆக்சிஜனை உற்பத்தி செய்து வீணடிக்கிறது. இந்த ஏழு நாட்களில், கிட்டத்தட்ட 1,500 டன் வாயு ஆக்சிஜனை (Gaseous Oxygen) வளிமண்டலத்தில் செலுத்தி வீணடித்துள்ளது.

வேதாந்தா தற்போது இயக்கி வரும் ஆக்சிஜன் ஆலையானது ஒரு பெரிய காப்பர் உருக்கும் வளாகத்தில் உள்ள பல ஆலைகளில் ஒன்றாகும். ஆக்சிஜன் ஆலையிலிருந்து வரும் முழு ஆக்சிஜனும் வாயு வடிவத்தில் தொடர்ச்சியாக ஸ்மெல்ட்டரின் உலைக்கு செல்லும். தற்போது அந்த ஸ்மெல்டர் ஆலை சீல் வைக்கப்பட்டுள்ளதால், அவை வளிமண்டலத்தில் கலந்து வீணாகிறது.

மேலும், பொதுவாக ஒரு ஆக்சிஜன் ஆலை, தனது மொத்த உற்பத்தித் திறனில் 5% முதல் 10% வரை திரவ ஆக்சிஜனை (Liquid Oxygen) இருப்பு வைப்பது வழக்கம். ஒருவேளை ஆலை மூடப்பட்டால், திரவ நிலை ஆக்சிஜனை ஆவியாக்கி, உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்காக அது சேமித்து வைக்கப்படுகிறது.

“திரவ நிலை ஆக்சிஜனின் உற்பத்தி அளவு, ஆலையை வடிவமைக்கும் தொடக்க கட்டத்தில் தீர்மானிக்கப்படவேண்டிய ஒன்று” என்கிறார் ஐ.ஐ.டி கிரையோஜெனிக் பொறியியல் பேராசிரியரான காஞ்சன் சவுத்ரி.

கோப்புப்படம்

பெரும்பாலும் திரவ நிலை ஆக்சிஜனின் நிலையான அளவு ஆலையின் தொடக்க நிலை வடிவமைப்பின்போதே தீர்மானிக்கப்படும் என்பதால், தற்போதுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் வடிவமைப்பை மாற்றியமைத்தாலும், அதன் உற்பத்தியை சிறிதளவே அதிகரிக்க முடியும். தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள 10:90 விகிதத்திலிருந்து திரவ-வாயு ஆக்சிஜனின் விகிதத்தை கணிசமாக மாற்ற, ஆலை முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும் – காற்றழுத்திகள் (Compressors) மற்றும் விசையாழிகள் (Turbines) போன்ற கூடுதல் உபகரணங்களை நிறுவ வேண்டியிருக்கும். புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை நிறுவுவதற்கு அதிக காலமும் பணமும் தேவைப்படும்.

ஸ்டெர்லைட் ஆலையின் கட்டமைப்போ, வாயுவாக 90 சதவீதமும், திரவ நிலையில் வெறும் 10 சதவீதமும் மட்டுமே ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திரவ ஆக்சிஜனை மட்டும் தான் மொத்தமாக கண்டெய்னர்களில் அடைத்து எடுத்துச் செல்ல முடியும். வாயு ஆக்சிஜனும் மருத்துவப் பயன்பாட்டுக்குத் தேவைதான் என்றாலும், அதை கண்டெய்னர்களில் அடைத்து எடுத்துச் செல்ல முடியாது. ஒருவேளை குறைந்த தூரமாக இருந்தால், வாயு ஆக்சிஜனை தயாரிக்கும் இடத்திலிருந்து பயன்படுத்தும் இடத்திற்கு குழாய்கள் மூலம் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதை டி-வகை (7மீ³ கொள்ளளவு கொண்ட சிலிண்டர்) சிலிண்டர்களில் நிரப்ப முடிந்தாலும் ஒரு மாவட்டத்திற்குள் மட்டுமே கொண்டுசெல்ல முடியும். அதற்கும் அதிக செலவும், நேரமும் ஆகும்.

மே 23 அன்று, 29.06 டன் திரவ ஆக்சிஜனையும், 299 டன் வாயு ஆக்சிஜனையும் ஸ்டெர்லைட் உற்பத்தி செய்தது. முழு வாயு ஆக்சிஜனும் வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்டு வீணடிக்கப்பட்டது. இப்படி வீணடிக்கப்பட்ட 299 டன் வாயு ஆக்சிஜனையும் சிலிண்டர்களில் நிரப்ப வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு 30,000 சிலிண்டர்கள் தேவைப்படும். இது தற்போது உள்ள புள்ளிவிவரப்படி, மொத்த சென்னையின் தினசரி சிலிண்டர் தேவையை விட இரு மடங்கு அதிகம் ஆகும். சென்னை ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேதியியல் மற்றும் பொறியியல் பேராசிரியர் டி.சுவாமிநாதன் மற்றும் காஞ்சன் சவுத்ரி ஆகிய இருவரும் ஸ்டெர்லைட் ஆலையில் நடந்து வரும் ஆக்சிஜன் உற்பத்தியைப் பற்றி கருத்து தெரிவித்த போது, இந்தச் செயல்முறைக்கு அதிகப்படியான நிதி தேவைப்படும் என்பதால், நடைமுறையில் இது சாத்தியமற்றது என்றனர்.

வேதாந்தாவிடம் பெரும் பணம் இருந்தாலும், அது எப்போதும் அதனை செலவிடுவதில்லை.  பொது நலனுக்கென்று அது செலவு செய்வது இருக்கட்டும், சட்டப்பூர்வமாக அந்நிறுவனம் செய்ய வேண்டியதைக் கூட கடந்த காலங்களில் செய்ததில்லை.

கோப்புப்படம்

உதாரணமாக, மார்ச் 21, 2017 அன்று, ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்த 31 வயதான கார்த்தீபன், கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தன் இடது கையை இழந்தார். தனது ஒரு வயது குழந்தையை பராமரிக்கவும் தன்னுடைய வாழ்க்கையை நடத்துவும் முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். வேதாந்தா நினைத்திருந்தால் அப்போதே அத்தொழிலாளிக்கு இழப்பீடு வழங்கியிருக்கலாம் – ஆனால் அதற்குக் கூட 18 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது, அவர் வாழ்வதற்கான பணத்தைப் பெற ஆலை வாயிலுக்கு வெளியே போராட வேண்டியிருந்தது.

பொது சுகாதாரத்தில் இந்நிறுவனத்தின் விருப்பமின்மையை அம்பலப்படுத்தும் மற்றொரு உதாரணமும் உள்ளது. 2005-ம் ஆண்டில், உள்நோயாளிகள், புறநோயாளிகள் வசதியுடன் கூடிய ஒரு இலவச மருத்துவமனையை அமைக்குமாறு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் கூறியது. இதைச் சட்டப்படி கட்டாயமாகச் செய்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை மருத்துவமனை கட்டப்படவில்லை.

அதிகப்படியான மின்சாரப் பயன்பாடு

ஆக்சிஜனை காற்றிலிருந்து பிரிப்பது அதிக மின்சாரம் செலவாகும் ஒரு செயல்முறையாகும். அதை திரவமாக மாற்றுவும் அதிக மின்சாரம் தேவைப்படும். 1 மீ³ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு குறைந்தபட்சம் 0.9-1.0 கிலோவாட் (யூனிட்) மின்சாரம் தேவைப்படும் என்று மதிப்பிடுகிறார் சவுத்ரி. இப்படி தயாரிக்கப்படுவதில் 10 சதவீதம் திரவ ஆக்சிஜனாகவும் 90 சதவீதம் வாயு ஆக்சிஜனாகவும் இருக்கும். ஸ்மெல்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் ஸ்டெர்லைட்டுக்கு வாயு ஆக்சிஜனுக்கான தேவை இல்லை – எனவே ஆலை 10 யூனிட் மின்சாரத்தை கொண்டு 1மீ³ திரவ ஆக்சிஜனை பெற 10மீ³ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டும். மீதமுள்ள 9 மீ³ வாயு ஆக்சிஜனை வீணாக்க வேண்டும். ஒரு டி-வகை சிலிண்டரை நிரப்ப, ஆலை குறைந்தபட்சம் 70 யூனிட் மின்சாரத்தை நுகரும்.

ஒரு டன் வாயுவை உற்பத்தி செய்ய (100 கிலோ திரவத்துடன் உற்பத்தி செய்ய) குறைந்தபட்சம் 700 யூனிட் மின்சாரம் தேவைப்படும். இது ஒரு குறைந்தளவிலான மதிப்பீடே.

மே 25, 2021 அன்று காலை 6 மணி நிலவரப்படி, வேதாந்தா 1,653.64 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்ததாகக் கூறியது. இதில் 1,491 டன் வாயு ஆக்சிஜன் வீணாடிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை கொள்கலனில் மருத்துவப் பயன்பாட்டிற்காக அனுப்பப்பட்ட அளவு 150.58 டன் மட்டுமே, இது வீணான அளவில் பத்தில் ஒரு பங்கு ஆகும். ஸ்டெர்லைட் ஆலையின் இந்த உற்பத்தி நடவடிக்கை, ஒரு அறையை குளிர்விக்க ஒரு முழு கட்டிடத்திற்கும் குளிரூட்டுவதைப் போன்றதாகும்.

கோப்புப்படம்

150.58 டன் ஆக்சிஜன் உற்பத்திக்கான மின்சார செலவு சுமார் ரூபாய் 80 லட்சம் ஆகும். திரவ நிலை ஆக்சிஜனின் உற்பத்தியை மேம்படுத்த இரண்டாவதாக ஒரு ஆலையை இயக்கப்போவதாக வேதாந்தா தெரிவித்துள்ளது. இரண்டு ஆலைகளும் முழு கொள்ளளவோடு இயங்கினால், ஆக்சிஜனைப் பிரிப்பதற்கான மின்சார செலவு, 100 டன் உற்பத்திக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 50 லட்சம் வரை ஆகும்.

இது ஒருபுறமிருக்க, ஆலையில் இருந்து ஆக்சிஜனை இலவசமாக வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், செலவுகளோ அதிகமாக உள்ளன. மேலும் மருத்துவமனைக்கு நெருக்கமாக அமைந்துள்ள வேறு சில சிறிய ஆலைகளின் மூலம் இதைவிட இன்னும் சிறப்பாகவும் விலைகுறைவாகவும் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பதே உண்மை. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளான அதிகப்படியான மின்சாரப் பயன்பாடு, உயிர் காக்கும் வாயுவான ஆக்சிஜனை வீணடிப்பது போன்றவை கிட்டத்தட்ட குற்றத்திற்கு நிகரானதாகும்.

இது ஒரு கேள்வியை எழுப்புகிறது : வேதாந்தா ஏன் விருப்பத்துடன் இவ்வளவு பெரிய செலவைச் செய்கின்றது?

காற்றை நச்சுப்படுத்தியதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்களை மூச்சுத் திணறச் செய்ததற்காகவும் நிறுத்தப்பட்ட ஒரு நிறுவனத்தை அழைப்பதிலும், ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முனைவதிலும் உள்ள முரணைக் கண்டு வேதாந்தாவின் தாராள நன்கொடையின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெருந்தொற்று நோய் காலகட்டத்தின் போது ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முன்வந்த ஒரு நிறுவனத்தை கேள்வி கேட்பது அற்பமானதோ அல்லது இழிந்தததோ அல்ல:

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு
தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்டுகள் !

வேதாந்தாவின் சலுகை (1050 tonne per day) ஒரு வெற்று வாக்குறுதியாக உள்ளது. இதனை ஆலையை மீண்டும் இயக்குவது என்ற அதன் நோக்கத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது. ஒரு பெருந்தொற்றுச் சூழலில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முன்வரும் ஆலையின் மீது கேள்வி எழுப்ப வேண்டாம் என நாம் நினைத்தால் நம்முடைய உணர்ச்சி, அறிவை மறைக்கிறது என்று பொருள்.


அதியன்
மூலக் கட்டுரை : The Wire
கட்டுரையாளர் : நித்தியானந்த் ஜெயராமன்

பத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன? தீர்வு என்ன?

பத்ம சேஷாத்திரி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததற்கான பின்புலமும், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பதற்கான காரணமும் !

கடந்த சில நாட்களாக பத்ம சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு கொடுத்த பாலியல் சீண்டல் பிரச்சினை தமிழகம் முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆனால், இதற்கு முன்பும் பள்ளி, கல்லூரிகளில் இது போன்ற பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. எனினும் இப்பள்ளி பிரச்சினை மட்டும் ஏன் இவ்வளவு பெரிதாக மாறியது. அதற்கு பின்புலம் என்ன?

படிக்க :
♦ பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்
♦ அசாமில் 12வயது சிறுமி பாலியல் வன்கொலை

பார்ப்பனியத்தால் உயர்த்தி பிடிக்கப்பட்ட பள்ளி :

முதல் காரணமாக பார்க்கையில், தர்மத்தைக் காக்க வந்ததாக சொல்லிக் கொண்ட இப்பள்ளி, இப்படிப்பட்ட பாலியல் கொடுமையைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு, பார்ப்பனத் திமிரெடுத்து பேசியது பலரது வெறுப்பையும் தூண்டிவிட்டது

தங்களை ஆகச் சிறந்த தர்மத்தைக் காக்க அந்த பள்ளியின் விளம்பரங்களே அதற்கு சாட்சியாக உள்ளன. காயத்திரி மந்திரம் சொல்லிக் கொடுக்கிறோம், வேதங்கள் – இந்து புராணங்கள் சொல்லிக் கொடுக்கிறோம், சமஸ்கிருதம் கற்றுத் தருகிறோம் என்றெல்லாம் பில்டப் செய்துக் கொண்டனர்.

அப்பள்ளி விளம்பரம் ஒன்றில் “பகவான் ராமர் ராவணனை வதம் செய்து தர்மத்தை காக்க அவதாரம் எடுத்தாரே, அதேபோல் கல்வி சாம்ராஜ்ஜியத்தில் தர்மத்தை முன்னிறுத்தி ராமராஜ்ஜியத்தை பரிபாலனம் செய்தார் Dr.YGP” என்று அவர்களே தங்களை ‘யார்’ என்று முத்திரைகுத்திக் கொண்டனர்.

அப்படிப்பட்ட ‘யோக்கியர்கள்’, தங்கள் பள்ளியில் படித்த மாணவிக்கு இளைக்கப்பட்ட அநீதிக்காக பொங்கி எழாமல், கிரிமினல் ஆசிரியரையும் பள்ளிப் பெயரையும் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலரது எரிச்சலையும் ஈர்த்தன.

இரண்டாவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் உயர்நடுத்தர வர்க்க மற்றும் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். பல்வேறு பிரபலங்களும் இப்பிரச்சனையில் தலையிட்டு கண்டிக்கவும் செய்கின்றனர். ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தர அல்லது ஏழ்மையான குடும்பங்களை சார்ந்தவர்களாக இருந்திருந்தால் இவ்வளவு பெரிதாக பேசப்பட்டிருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.

YG மதுவந்தி

மூன்றாவதாக, YG மகேந்திரனும் அவரது மகளான மதுவந்தி நடந்துக் கொண்ட முறை அருவருப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. மதுவந்தி பாஜக-வில் இணைந்த பிறகு, தான் பிரபலமடைவதற்கு சில உத்திகளை பயன்படுத்தினார். தமிழிசை சௌந்தராஜன் பின்பற்றிய அதே உத்தி.

அபத்தமான கருத்துக்களை பார்ப்பனத் திமிரோடு, முட்டாள்தனமாக உளறுவது, அதை சமூக வலைத்தளங்களில் அது கேலி கிண்டலாக்கப்பட்டாலும், அக்கருத்துக்கள் எவ்வளவு இழிவானவையாக இருந்தாலும், அதற்கு ஆதரவாக திமிராகப் பேசுவது என தன்னை ‘பிரபலப்படுத்திக்’ கொண்டார்.  “பிராமணர்களுக்கு மூளை வலிமை ஜாஸ்தி… ரொம்பவே ஜாஸ்தி” என்றெல்லாம் இவர் பேசியது எடுத்துக்காட்டு.

தற்போது இப்பிரச்சனை வெடித்தப் பிறகும் இதை சாதிரீதியாக எடுத்துச் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்ட முயற்சித்ததே இவர்கள் தான். பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனவாசன் “மதுவந்தியால் ஒட்டுமொத்த பிராமண சமுதாயத்திற்கே தலைகுனிவு” என்று சொல்லியது நினைவிருக்கலாம். பிராமணர்களை தாக்குவதற்காகவே ராஜகோபாலன் செய்த தவறை வைத்து PSBB பள்ளியை திராவிடர்கள் தாக்குகிறார்கள் எனக் கூறிவந்தார்.

எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துவிட்டு தற்போது இவர்களும், கமலஹாசன், சுப்பிரமணியசாமி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றோர், சாதி ரீதியாக இப்பிரச்சனையை பார்க்கக் கூடாது என்று மற்றவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். எல்லாவற்றையும் அவர்களே செய்துவிட்டு, தற்போது பழியை மற்றவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கிறார்கள்.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது போல் இவர்களே மற்றவர்களை இழிவுபடுத்தி தங்களை உயர்வாக காட்டிக்கொண்டார்கள், தற்போது வசமாக சிக்கிக் கொண்ட பிறகு அவர்களது வெட்டி ஜம்பமே எமனாக மாறி நிற்கிறது.

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீது அத்துமீறல்கள் நடந்ததற்கான பின்புலம் என்ன?

கடந்த 4 ஆண்டுகளில் குறிப்பாக அ.தி.மு.க. மூலம் மறைமுகமாக பா.ஜ.க. தமிழகத்தை தன் பிடியில் வைத்திருந்தபோது மறைந்திருந்த அல்லது அடங்கி கிடந்த ராஜகோபாலன்கள் சுதந்திரமாக, துணிச்சலுடன் எல்லாவித குற்றங்களையும் செய்யத் தொடங்கினர்.

சில உதாரணங்களைப் பார்க்கலாம். 2017-ல் அரியலூரை சேர்ந்த நந்தினி என்ற பெண் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டு நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதை முன்னின்று நடத்தியது இந்து முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள்.

2018-ம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக ‘பேராசிரியர்’ நிர்மலா தேவி பிரச்சினை பெரிதாக வெடித்தது. தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. நிர்மலா தேவியில் தொடங்கிய அப்பிரச்சனை கவர்னரை விசாரிக்க வேண்டும் என்றளவுக்கு சென்று அப்படியே மூடி மறைக்கப்பட்டது.

2019-ம் ஆண்டு தமிழகத்தையே அதிரவைத்த பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி பாலியல் கொடூரம், பொள்ளாச்சி ஜெயராமன் மகன் வரை சென்று அதற்கு பிறகு ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டது. இன்று வரை அதற்கான நியாயம் கிடைக்கவில்லை.

2020-ம் ஆண்டில் இதேபோன்று நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவன் பல பெண்கள் புகார் அளித்ததற்குப் பிறகு குண்டாசில் கைதானான்.

இவையெல்லாம் சில உதாரணங்கள், “Tip of the Iceberg” போன்றவை மட்டும் தான். இத்தகைய பிரச்சனைகள் வெளிவந்ததும் பல்வேறு தடைகள், இடையூறுகளை தாண்டித்தான். அப்படியென்றால் ‘iceberg’ன் முழு பரிமாணத்தையும் தொகுத்துப் பார்த்தால் எவ்வளவு இருக்கும்? பத்ம சேஷாத்திரி பள்ளி மட்டுமல்லாமல் தற்போது பல பள்ளிகளில் நடந்த பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.

நெல்லையில் சட்ட கல்லூரியின் உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி ஒரு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்துக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய செய்தி சில நாட்கள் முன் வெளிவந்தது, இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் பல வெளிவர தொடங்கியுள்ளன.

ஏற்கெனவே பெண்களை தங்களுக்கு கீழாக, போகப் பொருளாக, தனது இச்சைக்கு பயன்படுத்தும் ஒரு இயந்திரமாக பாவிக்கும் இந்தியா போன்ற நிலப்பிரபுத்துவ பண்புகள் எஞ்சியிருக்கும் சமூகத்தில், ஆபாச நுகர்வுவெறி கலாச்சாரமும் இணைந்து, பெண்கள் மீது பாய்ந்து குதறிவிட நினைப்பவர்களுக்கு அதிகாரமும், குற்றமிழைப்பதற்கு பாதுகாப்பும் கிடைத்தால் என்ன ஆகும்?

இப்படிப்பட்ட கிரிமினல்தனங்களில் ஈடுபடுபவர்கள் வலதுசாரிகளாகவும், பிற்போக்குவாதிகளாகவும், சமூக விரோதிகளாகவும் குறிப்பாக பணபலம், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாகவே பார்க்க முடிகிறது. பா.ஜ.க போன்ற கட்சிகளும் வலதுசாரி, பிற்போக்கு, பாசிச சித்தாந்தத்தை கொண்டவை.

பா.ஜ.க பாசிசத்தின் எழுச்சியும், சாதி, மதவெறி போன்ற பிற்போக்குவாதிகளும் இணையும் புள்ளிதான் இந்த வலதுசாரி சித்தாந்தம். ரவுடிகள் பலர் பா.ஜ.க-வில் இணைந்த செய்திகள் பலவற்றை நாம் பார்த்து வருகிறோம். இந்த பிரச்சனைகளில் எல்லாம் இந்த பிற்போக்கு பாசிச கும்பல் அணுகிய விதங்களே அவர்களின் சித்தாந்தங்களை தோலுரித்து காட்டுகிறது.

பத்ம சேஷாத்திரி பள்ளி பிரச்சனையில் பாஜக பிரமுகர் ஒருவர் “அவசரப்பட்டு ராஜகோபாலனை தண்டிக்கக் கூடாது, இன்று மாணவிகள் நெட்பிளிக்ஸில் அடல்ட் மூவி பார்க்கின்றனர். அவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல” என சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கிறார். இதுதான் இப்பள்ளி மற்றும் ராஜகோபாலனை ஆதரிப்பவர்களின் எண்ணம். பொள்ளாச்சி பிரச்சனையில் எடுத்துக் கொண்டாலும், “இவளுங்க எதுக்கு அவனோடு போனாளுங்க” என்றதையும், ராமதாஸ் கும்பல், “டீ சர்ட், குளிங்கிளாஸ், ஜீன்ஸ் போட்டு வந்தால் பெண்கள் மயங்கி விடுவார்கள்” என்கிற விதங்களில் அணுகியதையும் பார்க்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் மீது, பெண்கள் மீதே பழி சுமத்துவதுதான் இவர்களின் சித்தாந்தம்.

பா.ஜ.க அதிகாரத்திற்கு வந்த பிறகு நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். அவ்வாறு இருக்கும்போது ஒடுக்கப்பட்ட பாலினமான பெண்களின் நிலையும் அவ்வாறு தானே இருக்கும்? பாசிஸ்டுகளின் அதிகாரம் வளரும்போது இயல்பாகவே வலதுசாரிகள், பிற்போக்குவாதிகள், சாதி – மத வெறியர்கள் துணச்சலுடன் கிரமினல் தனங்களை செய்ய தொடங்குகின்றனர்.

இவைதான் இதுபோன்ற குற்றங்களுக்கு பின்புலமாக அமைகின்றன. பா.ஜ.க மறைமுகமாக தமிழகத்தை கட்டுப்படுத்தியபோதே இப்படியென்றால் இன்னும் பா.ஜ.க தமிழகத்தை ஆண்டால் என்ன ஆகும் என்பதற்கு இவையெல்லாம் “ஒரு சோறு பதம்”.

பார்ப்பனர்களுக்கே எதிரானது பார்ப்பன பாசிசம் :

சங்கரராமன் என்ற பார்ப்பனர் சங்கராச்சாரி ஜெயேந்திரனின் ஊழல், பாலியல் லீலைகளை கேள்விக் கேட்டார் என்பதற்காக படுகொலை செய்யப்பட்டார். இவ்விருவரில் பாசிஸ்டுகள் யார் பக்கம் நின்றார்கள்?

பத்ம சேஷாத்திரி பள்ளி பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பெரும்பான்மையோர் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்த மாணவிகள். ஆனால், பாசிஸ்டுகள் ராஜகோபாலன் மற்றும் பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை பாதுகாக்கவே வரிந்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்குகின்றனர்.

ஜனநாயக, முற்போக்கு, கம்யூனிச இயக்கத்தை சார்ந்தவர்கள் தான் பாதிக்கப்பட்ட பார்ப்பனர்களுக்காக குரல் கொடுக்கின்றனர். பார்ப்பன பாசிஸ்டுகள் அரசியல் செல்வாக்கு, பணபலம், அதிகாரமுள்ள பக்கம்தான் சேரந்துக் கொள்கின்றனர்.

ஒருவரோ, ஒரு பள்ளி நிர்வாகமோ குற்றம் இழைத்ததற்காக அனைத்து பார்ப்பனர்களையும் குற்றம் சொல்ல முடியுமா என்று அம்பிகள் பொங்கி எழுகின்றனர். அன்று மதுவந்தி போன்ற கழுசடைகள் “பிராமணர்களுக்கு மூளை வலிமை ஜாஸ்தி” என்று உளறும்போது அதை கண்டித்திருந்தால், இன்று “எல்லாரையும் குற்றம் சொல்ல முடியுமா?” என்று பேசவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

இனியாவது உழைக்கும் வர்க்கமாக இருக்கும் பார்ப்பனர்கள், தங்களை ‘உயர்ந்தவர்கள்’ என்று வெட்டி ஜம்பமடிக்காமல் இதர உழைக்கும் மக்களுடன் இணைந்து பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து போராடினால்தான், அவர்கள் மீதுள்ள பார்வை மாறும்.

சுப்பிரமணியசாமி எனும் கோமாளி :

சுப்பிரமணியசாமி

பத்ம சேஷாத்திரி-க்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தி.மு.க ஆட்சியை கலைத்து விடுவேன் என்று பா.ஜ.க-வின் என்று சு.சாமி மிரட்டல் விடுக்கிறார். தி.மு.க-வே பெரும்பாலான சமயங்களில் பார்ப்பன பாசிசத்தை பகிரங்கமாக எதிர்த்து நிற்காமல் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. மக்கள்தான் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தங்களின் எதிர்வினைகளை ஆற்றி வருகிறார்கள். சு.சாமி-யின் மிரட்டலுக்கு பிறகு இன்னும் பலர் எதிர்வினை ஆற்றுகிறார்கள்.

பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக தமிழர்களின் உணர்வுகளை மேலும் தட்டியெழுப்பியது தான் நடந்துள்ளது. இவ்வாறெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் தமிழக பி.ஜே.பி அடக்கி வாசிக்கிறது. தனது பார்ப்பனத் திமிரை வெளிப்படையாகக் காட்டவே டிவிட்டரில் ‘வாண்டடாக வந்து வண்டியில் ஏறுகிறார்’ சு.சாமி.

“விசாகா” கமிட்டி அமைத்திருந்தால் தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா?

தண்டனையை கடுமையாக்க வேண்டும், விசாகா கமிட்டி அமைத்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று பல்வேறு அறிவுஜீவிகளும் அறிவுரை சொல்கின்றனர். ஒரு சமூக பிரச்சனையை மிகக் குறுகிய கண்ணோட்டத்தில் தனிநபர்கள் சார்ந்த பிரச்சனையாக பார்ப்பதன் விளைவே இவ்வாறெல்லாம் வெளிப்படுகிறது.

விசாகா கமிட்டியை ஒவ்வொரு நிர்வாகத்திலும் ஏற்படுத்தியிருந்தால் இதுபோன்ற குற்றங்களை தடுத்திருக்க முடியுமா? இன்று கூட மகளிர் போலீசு நிலையங்கள் உள்ளன, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் அங்குபோய் தைரியமாக புகார் கொடுக்க முடிகிறதா? போலீசுத்துறையே அதிகார, பணபலம், அரசியல் செல்வாக்கிற்கு தான் துணைபோகும் என்பதை மக்கள் தங்களது சொந்த அனுபவங்களால் அறிந்து வைத்துள்ளனர்.

அதேபோன்று தான் விசாகா கமிட்டியும். இப்பள்ளியில் கூட பாலியல் ரீதியான புகார்களை விசாரிக்கும் கமிட்டியில் ராஜகோபாலனே உள்ளார். இது தான் யதார்த்தம். விசாகா கமிட்டி அமைக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, சட்டமாக்கினாலும் எங்கும் நடைமுறைப்படுத்தவில்லை, ஒருவேளை இதுபோன்ற கமிட்டிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்தாலும் நடைமுறையில் செயல்பட போவதுமில்லை.

நிர்மலா தேவி

நிர்மலா தேவி பிரச்சினையில் இருந்து பத்ம சேஷாத்திரி பிரச்சனை வரை பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நடந்த அத்துமீறல்களை தங்களை தாங்களே தற்காத்துக் கொண்டேதான் அம்பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாகதான் வெளிப்படுத்தியுள்ளனர். இல்லையேல் எதாவது ஒரு வகையில் அதிகாரவர்க்கத்தால் இவர்கள் நசுக்கப்பட்டிருப்பார்கள், பொதுவெளியில் வெளிவந்து பலரது கண்டனங்கள், எதிர்ப்புகள், போராட்டங்களுக்குப் பிறகுதான் விசாரணை, கைது என்று பெயரளவிலான நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றன.

ஆகவே பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சினையை தைரியமாக வெளிப்படுத்துவதற்கான “களம்” வேண்டும் என்பது உடனடி அவசியம் என்று கருதுகிறோம்.

“ME TOO” இயக்கம் போல் தமிழகம் முழுக்க கடந்த ஆண்டுகளில் நடந்த பாலியல் அத்துமீறல்களை வெளிக் கொண்டு வருவதற்கு முற்போக்கு பெண்கள் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள், பெண் வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், இயக்கங்கள் போன்றோர் உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை இந்த சமூகமும், அரசும் முன்னின்று செய்ய வேண்டும். எனினும் இது தற்காலிக தீர்வுதான்.

அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழங்களில் உள்ள மாணவ – மாணவிகள் ஜனநாயக ரீதியான மாணவர்கள் சங்கங்களை தொடங்க வேண்டும். தங்களுடைய பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடும் பண்பை வளர்த்தெடுக்க வேண்டும். மதிப்பெண்களை பெறுவதற்கான இயந்திரமாக மட்டுமல்லாமல், சமூக, அரசியல் பிரச்சனைகளில் ஈடுபடுவதன் மூலமாகத்தான் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

படிக்க :
♦ #Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !

♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் மாணவச் சங்களை கட்டியெழுப்புவதும், ஆணாதிக்க, ஆபாச நுகர்வுவெறி, சாதி – மதவெறி போன்ற பிற்போக்குகளின் கூடாரமாக இருக்கும் இந்த சமூகத்தை தலைகீழாக, புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்காக வேலைகளை முன்னெடுப்பதே முழுத் தீர்வாக அமையும் !


மக்கள் அதிகாரம்,
நெல்லை.
9385353605

பாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்

த்ம சேஷாத்திரி பள்ளியின் பாலியல் வன்கொடுமை அம்பலமானதைத் தொடர்ந்து பார்ப்பனிய கும்பல் இந்துக்களின் மீதான தாக்குதல் என்று கூச்சலிடுகிறது. இலாபவெறியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும், பாலியல் சுரண்டல்கள் நடப்பதும் அவை கண்டுகொள்ளாமல் விடப்படுவதும் நடைபெறுகின்றன.

மாணவர்கள் நலனில் அக்கறையின்றி தமது கல்லூரியின் பெயரைக் காப்பாற்ற மட்டுமே முயற்சிக்கும் இத்தகைய தனியார் இலாப வெறிகொண்ட கல்வி நிறுவனங்களை தடை செய்து அரசே ஏற்று நடத்தவேண்டும்.

பாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை
ரத்து செய்! அரசுடைமையாக்கு!


கருத்துப்படம் : மு.துரை

டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்

மோடி அரசாங்கத்திற்கும், பெரிய தொழில்நுட்ப தளங்களுக்கும், முக்கியமாக ‘டிவிட்டர், பேஸ்புக்’ ஆகியவற்றுக்குமிடையே சமீபத்தில் போய்கொண்டிருக்கும் போராட்டத்தில் பெருமளவிலான பாசாங்குத்தனம் இருக்கிறது. சமூக ஊடகங்களின், மதிப்புயர்ந்த சக்தியை தனது உயர்வுக்கும், மோடியின் பிம்பத்தை ஊதி பெருக்கி காட்டவும் பயன்படுத்திக் கொள்வதில், மிகப்பெரிய வெற்றியை பெற்ற அரசியல்குழு ஆளும் பாஜக அரசுதான்.

தனது வெற்றிக்கான அரசியல் பிரச்சாரத்திற்கு மட்டுமல்ல, சிறுபான்மை மக்கள் மீது, அறிவுத்துறையினர் மற்றும் அரசியல்ரீதியான எதிர்கட்சிகள் மீதும் அவதூறுகளை பொழியவும், அவர்களுக்கெதிராக பொய்களை விளம்பரப்படுத்தி விரிவாக கொண்டு செல்வதற்கும், பாஜக-வின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு இந்த தளங்களில் தான் செயல்படுகிறது என்பதையும் மறக்க வேண்டாம்.

படிக்க :
♦ டிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது ?
மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !

கடந்த ஆண்டு மோடியின் அரசு இயந்திரம் வெற்றிகரமாக செயல்பட்டது பற்றி குறிப்பாக, முகநூலிலிருந்து விவரங்கள் அளிக்கப்பட்டன. முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக கடுமையான வெறுப்பை கக்கும் பேச்சை கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் இந்தியாவின் ‘பொது கொள்கை தலைமை அலுவலகங்கள்’ வழியாக அந்த தளங்களுக்கு, பாஜக மோடியை பகைத்துக் கொள்ள வேணடாமெனவும், அந்த கட்சியின் அடியொற்றி அதன் பின்னால் செல்லுமாறும் வற்புறுத்தப்பட்டன.

அந்த தளங்களின் பதிவுகளில் எல்லை மீறி போகுமளவு வெறுப்பை தூண்டும் உள்ளடக்கத்தை சுட்டிக்காட்டி, முகநூலின் சொல்லிக் கொள்ளப்படும் ‘சமூக தரத்தின்’ முழுமையான மீறல்கள் குறித்து புகார்கள் இருந்தன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது டிவிட்டர், முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்பின் ‘என்க்ரிப்ஷன்’ (encrypted) வடிவத்திலான செய்தி பரிமாறுதல்கள், அவற்றுக்கு எதிராக மோடி அரசின் சமீபத்திய அறிக்கைகள் நியாயமாகவே, “இதெல்லாம் ஏன்?” என்ற கேள்வியை எழுப்புகிறது.

கொஞ்ச காலத்திற்கு முன்பாக, சமூக வலைத்தளங்கள் நமது ஒவ்வொருவரின் தரவுகளை ‘gazillion bytes’ அளவிற்கு சேகரித்து வைத்துக் கொண்டு, நமது பழக்க வழக்கங்கள் மற்றும் தேர்வு செய்யும் வழிமுறைகளை பணமாக்கினர். இதற்காக பெரிய தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கு முயன்றனர்

தனது சொந்த நாட்டு குடிமக்களைக் கண்காணிக்கும் முயற்சிகள், அரசுக்கு எதிரான கருத்துகளை ஒடுக்குவது, அரசியல் எதிர்ப்பை அச்சுறுத்துவது மற்றும் ஒன்றும் அறியாத அப்பாவி பொதுமக்கள் மீது, கட்டுப்பாடற்ற செல்வாக்குப் போர்களை நடத்துவது, போன்றவற்றை எந்த மனவுறுத்தலும் இல்லாமல் தான் நரேந்திர மோடியின் கீழ் உள்ள இந்திய அரசாங்கம் அமல்படுத்துகிறது.

“புதிய டிஜிட்டல் ஊடக விதிகள் அமலாக்கம்” என்ற பேரில் இந்திய அரசின் ஒரு கட்சிக்கு ஆதரவான செயல்பாடுகளை உணர்ந்து அதனால் தூண்டப்பட்ட சமூக ஊடக தளங்கள் இப்போது மோடி அரசின் மீது குறை சொல்ல ஆரம்பித்துள்ளன. பாஜக பிரச்சாரகரது, ‘காங்கிரசுக்கு ‘எதிரானது’ என்று சொல்லப்பட்ட’ டுவிட்டுகளை ‘புனையப்பட்ட பொய் தகவல்கள்’ என்ற முத்திரை குத்தியதினால் எரிச்சலூட்டப்பட்ட மோடி அரசு பதில் நடவடிக்கையாக டுவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

வாட்ஸ்-அப் “புதிய விதிகள் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, தனிமனித பயன்பாட்டாளர் உரிமையை அவமதிப்பது” என்ற முறையீடுகளை முன்வைத்து நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது..

இந்த புதிய விதிகள் “ஒரு உள்ளூர் அதிகாரியை குறைதீர்க்கும் நடைமுறைகளை மேற்பார்வையிட பணிக்கு அமர்த்த வேண்டும். சட்டப்படியான ஆணை கிடைத்தவுடன் 36 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட உள்ளடகத்தை நீக்கி விட வேண்டும்” என்றெல்லாம் வற்புறுத்துகின்றன. அதோடு “இதற்கெல்லாம் ஒத்துவராத ‘இடைநிலை செயற்பாட்டாளர்கள்’ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற மிரட்டலும் சேர்ந்துள்ளது. இதனுடைய அர்த்தம, அவர்களின் தளத்தில் பயனாளிகளால் பதியப்படும் பொய்யான, வெறுப்பூட்டும் கருத்துகளுக்கு சட்டரீதியாகவே பொறுப்பேற்க வேண்டும், அவர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அல்லது அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செய்தாலும்.

உள்ளே மற்றும் தன்னளவில், பெருகிவரும் ஆட்சேபிக்கதக்க உள்ளடக்கத்திற்கான குற்றத்தின் ஒரு பகுதியை கொண்டு செல்ல ஒரு மேடை தேவைப்படுவது சர்ச்சைக்குரியதல்ல. தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் அரசியலின் அனைத்து பகுதிகளையும், அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் கல்வியாளர்களும் மற்றும் பயிற்சியாளர்களும், பல ஆண்டுகளாக ஒரு மேம்படுத்தப்பட்ட கண்டறிதல் வழிமுறைகளுக்காக வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மனித உள்ளடக்க மதிப்பீட்டாளர்கள் மற்றும் மிக வலுவான செயற்கை நுண்ணறிவு / யந்திரவகை கண்டறிதல் திறன்கள் கற்றலின் அதிகரிப்பு ஆகியவை, ஆட்சேபிக்கதக்க உள்ளடக்கம் அதிகமானவுடன் அவற்றை எடுத்து போட்டுவிடும் மற்றும் யார் அவற்றை பதிகிறார்களோ அவர்களை நிறுத்திவிடும்.

இந்த உரையாடல் வேறுபட்ட ஒன்று.

தவறான காலம் :

அரசின் ஆக்கிரமிக்கும் குணம் வந்த நேரம் மோசமானதாக இருக்க முடியாது. நமக்கு ஞாபகமிருக்கும், கடந்த ஜனவரி 6 அன்று, அதிபர் பைடன் தேர்தல் வெற்றியை ஆட்சேபித்து, அமெரிக்க தலைநகரை முற்றுகையிட்டு, கலகம் செய்ததற்காக, முன்னால் அமெரிக்க அதிபர் டொனாலட் டரம்ப் கணக்கை, தனது தளத்திலிருந்து நீக்கம் செய்தது, இதே டுவிட்டர்தான். சி.பி.ஐ மற்றும் டெல்லி போலீசு காலியான இருட்டாக இருந்த டெல்லி அலுவலகங்களில் திடீர் தாக்குதலாக போய் இறங்கியதன் மூலம் டுவிட்டரை எதிர்கொள்ள இந்திய அரசு முடிவு எடுத்த போதுதான் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தடுப்பூசிகளுக்காக பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டனை அடைந்திருந்தார். அதேசமயம், கோவிடால் பாதிக்கப்பட்ட இந்திய மக்கள், பைடனின் அமெரிக்காவில், தேவையில்லாத தலைப்பு செய்திகளை கொண்டு வந்தார்கள்.

கலந்துரையாடலின் ஒருபகுதியாக இந்தியாவில் அதிகரித்து வரும் “மதவெறி வன்முறை மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு கவலையளிப்பதாக இருப்பது பற்றிய” கேள்விகளை அமைச்சர் கேட்க வேண்டியிருந்தது.

”ஐரோப்பிய யூனியனின் உலகளாவிய தரவுகள் பாதுகாப்பு பகுதி”-யின் பால்நின்று கொண்டு எல்லா முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களும் -தனிப்பட்ட பயனாளர்களின் ஏராளமான தரவுகளை தொகுத்து வைத்திருந்தாலும் -உள்ளூர இருக்கும் ஆபத்துகளை எதிர்கொண்டு பயனாளர்களின் ரகசிய உரிமையை பாதுகாப்பதில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.-நிதி சம்பந்தமான தரவுகள் கசிவது குழந்தை கடத்தல் மற்றும் அரசின் கண்காணிப்பு ஆகியவை அவற்றில் அதிகம்.

டுவிட்டர் தனது அலுவலகங்களில் நடத்தப்பட்ட தேடுதல் சம்பந்தமாக “கருத்தை வெளிப்படுத்தும் உரிமைக்கு, உள்ளூர இருக்கும் பயமுறுத்தல் பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தியதன் மூலமும், தேவைக்கேற்றப்படி “புனையப்பட்ட பொதுத்தகவல்” “சரிபார்க்கப்படாத” அல்லது “அபாயகரமான உள்ளடக்கம்” ஆகியவற்றை எடுத்து விடுவதற்கான உறுதிமொழி மூலமும்” பதிலளித்ததில் வியப்பொன்றுமில்லை.

இந்த நாடகம் தன்னை வெளிபடுத்திக் கொண்ட போது, ‘நமது எல்லா தரவுகளையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும்’ கூகுளின் தலைவர் சுந்தர் பிச்சை ஒவ்வொருவரையும் காப்பாற்றும் பொருட்டு வந்தார். இண்டர்நெட் சுதந்திரம் ‘நிறுவப்பட்டதன்’ தன்மையை, அடிகோடிட்டு, அவர் சொன்னது” கூகுள் எப்போதும் போல ‘உறுதியாக ஆக்கப்பூர்வமாக’ அரசுடன் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளது” என்றார். ஆனால், ‘நிறுவனம் வெளிப்படைத் தன்மையின் அவசியத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறினார்.

“மேலும், இதனுடைய வெளிப்படைத் தன்மையான அறிக்கைகளில், அரசின் வேண்டுதல்களோடு இது இணக்கமாக போகும், எந்த சந்தர்ப்பத்தையும் முன்னிலைபடுத்த, ஒரு தொழில்நுட்பதளம் இந்தியாவின் பல்வேறு வேண்டுதல்களை இப்படிப்பட்ட வெளிப்படையான அறிக்கைகளாக வெளியிட்டால், இந்திய அரசு, உலகளாவிய அளவில் எப்படி பார்க்கபடும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் !” என்றார்.

ஒருவேளை உலகளவில் மறைந்திருக்கும், மிக மோசமான பத்திரிக்கைகளின் முகத்தில், இந்த கேள்வி சொந்த நாட்டிலும் தாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தகவல் தொழில்நுட்ப அமைச்சர், சமாதானமான தொனியை எடுத்துக் கொண்டார். “புதிய விதிகளுடன் இணக்கமில்லாமல் டுவிட்டர் நிறுவனம் இந்தியாவின் நீதித்துறையை குறைவாக மதிப்பிட்டுள்ளது” மற்றும் “பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக அது கூறியிருப்பது அடிப்படையில்லாதது தவறானது மற்றும் இந்தியாவை பற்றி அவதூறு செய்யும் முயற்சி” என்று தெரிவித்தார் அல்லது ‘நீதித்துறை வேண்டுதலின்படி பயனாளர்களின் தகவல்களை 36 மணி நேரத்துக்குள் தர வேண்டுமென அறிவுறுத்தலுக்கு வாட்ஸ்-அப் இணக்கமாகியது’ குறித்து வற்புறுத்திய போது பிரசாத் குரலில் நுணுக்கமான மாற்றத்தை கொண்டு வர வேண்டியிருந்தது அதாவது “தான் சாதாரண பயனாளர்களுக்கு என்க்ரிப்ஷன் (Encrypted) நீக்கச் சொல்லி அறிவுறுத்தவில்லை” என்று விளக்கம் கொடுத்து தனது வாதத்தை தானே மாற்றினார். (அது யாராக இருந்தாலும்)

தவறாகி போனது திட்டம்

அது எப்படி இருந்த போதும் அரசு தன்னை தானே ஒரு மூலையில் ஆதரிப்பதாக தெரிகிறது. ஆனால், தன் மீதான விமர்சனங்களை ஆன்லைனில் பொடிபொடியாக்க முயற்சிக்கும் போது ஒரு பெரிய நிறுவனத்தை எதிர்கொண்டது “பாஜக மெல்லுவதை விட அதிகமாக கடித்திருக்கலாம்”. பாஜக-வின் அரசியல் முத்திரை என்பது ஆன்லைன் இருப்பு மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வது மற்றும் துஷ்பிரயோகம் செய்வது ஆகியவற்றுடன் உள்ளார்ந்த முறையில் இயற்கையாக தொடர்புடையது. பிரதமர் நரேந்திர மோடி தனது பார்வையாளர்களான 70 மில்லியன் (ஏழு கோடி) பின்தொடர்பவர்களை இழக்க விரும்புவாரா? தனது சொந்த வாட்ஸ்-அப் பல்கலை வழியாக இவர்களின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ‘தவறான வழியில் செலுத்துவதற்காகவே‘ செய்திகளை எவ்வாறு பரப்பும்?

பிரதமர் மோடியின் செயல்முறை எப்போதுமே சமூக தளங்களை ‘திருப்பம் ஏற்படுத்தும் தனது விளக்கங்களை உருவமைக்க பயன்படுத்துவது’ என்பதுதான். ஆனால், சமீப-கடந்த காலங்களில் சில சந்தர்ப்பங்கள் இருந்தன. உதாரணத்திற்கு கடந்த ஆண்டு தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் இந்த ஆண்டு கோவிட்-19 இரண்டாவது அலையை எதிர்கொண்ட மோசமான தயாரிப்புகள் மற்றும் குளறுபடியான நிர்வாக குற்றங்கள். அதே சமூக தளங்கள் திரும்ப வந்து மோடி பாஜக அரசை மிகக் கடுமையாக கடித்து குதறின. பிரதமர் மோடி தனது தலைமைக்கான மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருந்த நேரத்தில் பெரிய தொழில்நுட்ப சமூக ஊடகங்கள் அதோடு ஆன்லைன் செய்தி ஊடகங்கள் ஆகியவற்றை கட்டுபடுத்தும் புதிய விதிகளை பற்றிய விவாதம் எல்லாம் ஒரு சேர வந்தன.

நமது பிரதமரின் இமேஜில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதும் அவரது தலைப்பு செய்தி மேலாளர்கள் எல்லாம் சுனாமி போன்று அடித்து வரும் வெளிநாட்டு மற்றும் இந்திய கெட்ட ஊடகங்களை சமாளிப்பதே பெரும் போராட்டமாகிவிட்டது என்பதும் ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. அதற்கான பதில் என்ற வகையில் மோடி அரசு தன்னை தாக்கியதில் மிக கடினமானதாகிய ‘பேச்சு சுதந்திரம்’ என்ற ஆயுதத்தின் பின்னால் சென்றது. சமூக ஊடகங்கள் மட்டுமல்ல சுயாதீன உள்நாட்டு டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் அந்த வரிசையில் இருந்தன.

அதனால் முக்கியமான அமெரிக்க சமூக ஊடக நிறுவனங்களுடன் குறைந்த அளவு வெடிபொருளுடன் சண்டையில் ஈடுபட்டாலும் “ஆன்லைன் செய்தி உள்ளடக்கத்தை அதன் வெளியீட்டாளரின் அனுமதியின்றி அகற்றக் கூடிய எல்லையற்ற அதிகாரத்தை அரசுக்கு தரும்” புதிய அத்துமீறும் ஊடக விதிகளுக்கு உள்நாட்டு டிஜிட்டல் செய்தி ஊடகங்களிடமிருந்து இணக்கத்தை எதிர்பார்ப்பதாக ‘யாரை பயமுறுத்தி பணிய செய்துவிட முடியும்’ என்று அது நினைத்ததோ அவர்களுக்கு இந்த வாரம் ஒரு பொது அறிவிப்பு வழங்கி தனது கோபத்தை அவர்கள் மீது திருப்பியது.

சட்ட வல்லுநர்கள் ஒரே குரலில் சொல்வதெல்லாம் இத்தகைய ஆன்லைன் டிஜிட்டல் ஊடக புதியவிதிகள் “இந்தியாவின் பேச்சு சுதந்திர சட்ட விஞ்ஞானத்தின் தலையில் குட்டு வைத்துள்ளது” என்பதைதான். “டிஜிட்டல் ஊடகங்களின் அமைப்பு” ‘இந்த விதிகள் அரசியலமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இரண்டையும் மீறுவதாக’ நீதிமன்றத்தில் சட்டரீதியாக ஆட்சேபித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கெல்லாம் தாய் விதி இதுதான். இதன் கீழிருந்த இந்த விதிகள்தான் சமூக தளங்கள் OTTs மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களுக்கென தனியாக கொண்டுவரப்பட்டன.

“டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்களின் சங்கம்” (இந்தியா டுடே மலையாளம் மனோரமா டைம்ஸ் ஆப் இந்தியா டைனிக் பாஸ்கர் மற்றும் NDTV ஆகியவற்றை உள்ளடக்கியது) தகவல் ஒளிபரப்பு அமைச்சருக்கு முறையீடு செய்துள்ளனர். “இப்போது இருக்கின்ற சட்டபூர்வமான மற்றும் சுயஒழுங்கமைப்பு அமைப்புகள் பிரஸ் கவுன்சில் தேசிய ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம் ஆகியவை இருக்கும் போது இத்தகைய புதிய விதிகள் தேவையில்லை” என சுட்டிக்காட்டியுள்ளனர். ‘டிஜிட்டல் செய்தி நிறுவனங்களால் தொடுக்கப்பட்ட இந்த நாட்டின் உயர்நீதிமன்றங்களில் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்க்க் கூடிய வழக்குகளையும்’ அமைச்சருக்கு நினைவுபடுத்தினர். புதிய விதிகளை அமல்படுத்த முயற்சிக்கும் முன் இந்த வழக்குகளின் முடிவுக்காக காத்திருக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

புதிய டிஜிட்டல் விதிகளை ஆட்சேபித்து ‘சட்ட மற்றும் அரசியலமைப்பு ரீதியான வழக்குகள்’ கேரளா மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. கேரள உயர்நீதிமன்றம் மனுதாரரை (லைவ் லா) குறிவைத்து நிர்ப்பந்தம் கொடுக்கக்கூடிய எந்தவித நடவடிக்கைக்கும் எதிராக எச்சரித்துள்ளது. தி க்யுன்ட் திவயர் மற்றும் நியூஸ் மினிட் (The Quint, The Wire and The News Minute) ஆகியவை இரண்டு தனிதனியான சட்ட ஆட்சேபங்களை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இப்படிப்பட்ட தகவல்கள் மோடி அரசின் காதுகளுக்குள் நுழையாமல் போனதற்கு நமது மோடி அரசாங்கம் பெரிய தொழில்நுட்ப மற்றும் உள்நாட்டு செய்தி டிஜிட்டல் ஊடகங்களுடன் மோதல் பாதையை தேர்ந்தெடுத்திருப்பதையே காட்டுகிறது.

உண்மையில் மோடி அரசின் மௌனம் அதன் அகம்பாவத்தின் அடையாளம் தான். நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் சட்டமுறையீடுகளை குறித்த கடிதத்திற்கு அவர்கள் எந்த மறுமொழியும் கொடுக்காதது மட்டுமல்ல ‘அத்துமீறும் டிஜிட்டல் ஊடக விதிகளை பதினைந்து நாட்களுக்குள் அமல்படுத்த போவதாக’ குறிப்பிட்டு ஒரு அடி முன்னால் சென்றுள்ளது. “பயமுறுத்தி பணியவைப்பது கட்டாயப்படுத்துவது” போன்ற வழிமுறைகள் மோடி அரசின் இமேஜ் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைக்க உதவும் என்று அனுமானித்துள்ளதையே இது காட்டுகிறது.

படிக்க :
♦ ஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை !
♦ அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?

இது பலன்கள் குறிப்பிடுவது. இந்த விதிகளினால் பாதிக்கப்படபோவோரிடம் குறைந்த பட்சம் ஆலோசனைக் கூட செய்யாமல் கடந்த காலத்தில் எந்த அரசும் இந்தளவு ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. அப்புறம் எப்படி இந்த அரசு பேச்சு சுதந்திரம் அல்லது ஜனநாயக ரீதியாக செயல்படுவது ஆகியவற்றின் உறுதிப்பாட்டிற்கு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் உரிமை கொண்டாட முடியும்?. மிக நீண்ட வரிசையில் இருக்கும் கேள்விகள் புதிய டிஜிட்டல் விதிகளை கட்டாயமாக திணிக்க முயற்சிப்பதால் மோடி அரசால் பதிலளிக்க முடியாது இந்த ஒன்றுக்கு பதலளிக்க திறனில்லாதது தான் மிக அதிகமாக சொல்லிக் கொண்டிருக்கும்.


கட்டுரையாளர் : M.K.வேணு, மாயா மிர்ச்சந்தானி
தமிழாக்கம் : மணிவேல்

செய்தி ஆதாரம் : The Wire

நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் ஒரு பாலியல் பொறுக்கி – ராஜேஷ் பாரதி

PSBB ராஜகோபாலன் வரிசையில் இன்னொரு பொறுக்கி,
நெல்லை அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி !

நீதிமான்களை உருவாக்குவதாக சொல்லிக் கொள்ளும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி பொறுக்கிகளை தான் உருவாக்குகிறதா? திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் தற்காலிக உதவி பேராசிரியராக ராஜேஷ் பாரதி என்னும் பாலியல் பொறுக்கியின் வரலாறு தற்போது அம்பலமாகியிருக்கிறது.

அக்கல்லூரியில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த ஒரு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு ‘தலைமறைவாக’ உள்ள குற்றவாளி ராஜேஷ் பாரதியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மாணவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படிக்க :
அசாமில் 12வயது சிறுமி பாலியல் வன்கொலை
காஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை

யார் இந்த ராஜேஷ் பாரதி?

கல்வி நிறுவனங்களை பார்ப்பன மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில், அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின் கீழ் டாக்டர் சந்தோஷ் குமார் என்ற தீவிர இந்துத்துவ வலதுசாரி சிந்தனை கொண்ட நபர் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் இயக்குனராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்.

அவ்வாறு திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய பொழுது அங்கு ஒப்பந்த உதவி பேராசிரியராக சுரேஷ் மாணிக்கம் என்பவர் பணிபுரிந்தார். சுரேஷ் மாணிக்கம், ராஜேஷ் பாரதியின் உடன்பிறந்த அண்ணன். (இவர் பின்னாட்களில் ஒரு மாணவியிடம் தவறான பாலியல் தன்மை கொண்ட குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவரது மனைவியால் குற்றஞ்சாட்டப்பட்டு உதவி பேராசிரியர் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்)

சந்தோஷ் குமார் பல்கலைக்கழக இயக்குனராக பதவி உயர்வு பெற்ற பின் சுரேஷ் மாணிக்கத்தின் வேண்டுகோளின் பெயரில் ராஜேஷ் பாரதி ஒப்பந்த உதவிப் பேராசிரியராக பல்கலைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். பல்கலைக் கழகத்தின் ஒப்பந்த உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட அடிப்படைத் தகுதியாக நெட், ஸ்லெட் போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் பாரதி மேற்படி எழுதிய தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாமல் இயக்குனர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் உதவியினால் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுகிறார். மேற்படி எவ்வித அடிப்படை தகுதிகளையும் பெறாமல் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சட்டக் கல்லூரியில் உதவி பேராசிரியராக ராஜேஷ் பாரதி செயல்பட்டு வருகிறார்.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பான முறையில் வழக்கறிஞராக செயல்பட்டு வரும் பல்வேறு திறமைமிக்க நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் உதவி பேராசிரியர்களாக செயல்பட்டு வந்தனர். ஆனால், அனைவரும் வயது முதிர்வு என்ற பொய்யான காரணத்தினை கூறி பணியிலிருந்து நிறுத்தப்பட்டனர். ஆனால், எவ்வித சிறப்பு திறமைகளுமற்ற ராஜேஷ் பாரதி தொடர்ந்து உதவிப் பேராசிரியராக இருந்து வருவது வியக்கத்தக்க விஷயம் ஆகும்.

சட்டம் கற்பிக்கும் பேராசிரியர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை திறன்களான அரசமைப்புச் சட்டம் பற்றிய அறிவு, குறிப்பிட்ட சட்டப்பிரிவை விளக்குதல் மற்றும் சட்டப்பிரிவு தொடர்பாக உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்கள் கொடுத்திருக்கும் பொருள் விளக்கங்களை மாணவர்களிடையே விளக்குதல், தொடர்ச்சியான சலிப்பற்ற வாசிப்பு ஆகியவை இன்றியமையாததாகும். இத்தகைய திறன்கள் எதையும் கொண்டிராத ராஜேஷ் பாரதி வகுப்புக்கு சினிமா நடிகர்கள் போல உடை அணிந்து புத்தகத்தை அப்படியே மாணவர்களிடம் வாசித்து விட்டு வருகின்ற பழக்கத்தை கொண்டு இருந்திருக்கிறார். மாணவர்கள் கேட்கும் எவ்வித கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் “நானும் ரவுடிதான்” என்று மிரட்டி வந்திருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் பாரதி தனது தலைமையில் கோனார், தேவர் சாதி மாணவர்களை ஒன்றிணைத்து அப்போதைய கல்லூரி முதல்வராக இருந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு வீரவாள் ஒன்றை பரிசளித்தார். அதுமட்டுமல்லாமல் மாணவர்களிடையே பாடம் கற்பிக்கும் போது தனது சாதி பெருமையை கூறி “நாங்கள் எல்லாம் சைவ உணவு சாப்பிடுபவர்கள், மாட்டுக்கறி போன்ற மாமிச உணவுகளை சாப்பிட மாட்டோம் ஒருவன் உண்மையான இந்தியன் என்றால் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது” என்றெல்லாம் பாசிச விஷமக் கருத்துக்களை மாணவர்களிடையே பரப்பி வந்திருக்கிறான்.

உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி

திருநெல்வேலி தமிழ்நாட்டில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடைபெறும் மாவட்டம். திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். சாதிய விழுமியங்களை தீவிரமாக கடைபிடித்து வரும் கிராமங்களில் இருந்து வரும் இத்தகைய மாணவர்கள் பெரும்பாலும் சாதிய சிந்தனை கொண்டவர்களாவர். சாதிய பிற்போக்கு சிந்தனையுடைய இம்மாணவர்கள் இடையே நவீன ஜனநாயக விழுமியங்களை கொண்ட கல்வியை புகுத்தி அவர்களை சமத்துவ சிந்தனை உடையவர்களாக மாற்றுவது சட்டக் கல்லூரி பேராசிரியர்களின் முக்கிய கடமையாகும்.

மாறாக இத்தகைய சிந்தனை கொண்ட மாணவர்களை அவர்களின் சாதியின் அடிப்படையில் குழுக்களாக பிரித்து, சாதிய உணர்வை புகுத்தி அவர்களை மற்ற சமூக மாணவர்களிடம் மோத விடுவது என்பதன் அடிப்படையில் ராஜேஷ் பாரதி தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார்.

ராஜேஷ் பாரதி யாதவ சமூகத்தைச் சேர்ந்தவன். முதலில் யாதவ சாதி மாணவர்களை மட்டுமே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ராஜேஷ் பாரதி பின்னாட்களில் தேவர், நாடார் போன்ற ஆதிக்க சாதி மாணவர்களை தலித் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை மாணவர்களுக்கு எதிராக ஒருங்கிணைத்து வந்துள்ளான்.

ராஜேஷ் பாரதியின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கூறும்போது, “ராஜேஷ் பாரதி குறிப்பாக கோனார், தேவர் ஜாதி மாணவர்களிடம் உங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்து தருகிறேன் எஸ்.சி பசங்க கூட சேர்ந்து சுற்றாதீங்க, நம்ம பசங்களாக இருங்க” என்று கூறி அவரின் கட்டுப்பாட்டில் முதலில் கொண்டு வருவான். பின்னர் மாணவர்களை எப்பொழுதும் தனது அடியாட்கள் போல வைத்துக் கொண்டிருந்தான். அவனுடன் சுற்றித்திரியும் மாணவர்கள் அனைவரும் சாதிவெறி சிந்தனை கொண்டவர்கள்” எனக் குறிப்பிட்டார்.

ராஜேஷ் பாரதி தனது கருத்துக்களுக்கும் தனது செயல்பாடுகளுக்கும் எதிரான மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் பல்வேறு வழிகளில் தொந்தரவு செய்து வந்திருக்கின்றான். குறிப்பாக தலித் மாணவர்களை “இந்த எஸ்.சி பசங்களை இப்படித்தான் சார் எப்ப பார்த்தாலும் ஏதாவது பிரச்சனை பண்ணிட்டு தான் இருப்பாங்க” என்று கல்லூரி முதல்வரிடமும் சக ஆசிரியர்களிடமும் தொடர்ந்து சித்தரித்து வந்துள்ளான்.

கடந்த 2017-ஆம் ஆண்டு கல்லூரி நிர்வாகத்தால் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மாணவிகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் எனும் பெயரில் மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் உதவிப் பேராசிரியர்கள் சுரேஷ் மாணிக்கம், காளிராஜ், மற்றும் ராஜேஷ் பாரதி ஆகியோர் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற திரைப் படப் பாடலுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் முன்னிலையில் அருவருப்பான முறையில் குத்தாட்டம் போட்டுள்ளனர். இதனை அறிந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மது அருந்திவிட்டு இத்தகைய ஆபாச நடனம் ஆடியதை கண்டித்து நடன வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

படிக்க :
♦ பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் !

ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

அதுமட்டுமன்றி இறுதி ஆண்டு மாணவர்கள் நிகழ்ச்சி தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி முதல்வரிடம் முறையிட்டனர். மாணவர்களின் புகாரால் கோபமுற்ற ராஜேஷ் பாரதி உள்ளிட்ட ஆசிரியர்கள் புகார் அளிப்பதற்கு சென்ற குறிப்பிட்ட மாணவரை தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் பொழுது முறைகேடான முறையில் தேர்வு எழுதுவதாக கூறி அவரை வலுக்கட்டாயமாக தேர்வு அறையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். ராஜேஷ் பாரதியின் இத்தகைய அயோக்கியத்தனங்கள் குறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ராஜேஷ் பாரதியின் இத்தகைய அயோக்கியத்தனங்களை அங்கு பணிபுரிந்த சக ஆசிரியர்களான ஜெனிபர், காளிதாஸ், சுரேஷ் மாணிக்கம், சண்முகப்பிரியா, ஜீவரத்தினம், நாராயணி ஆகியோரின் உதவியுடன் செய்து வருகிறான் என்று மாணவர்கள் சொல்கின்றனர்.

கல்லூரியின் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, கல்லூரி நிர்வாகத்தின் கண்டுகொள்ளப்படாத தன்மை மற்றும் பல்கலைக்கழக இயக்குனர் வரை கொண்டிருந்த செல்வாக்கு காரணமாக இவன் மென்மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் தன்னை ஒரு ரவுடியாக நிலைநிறுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்தன.

அதேப்போல் ராஜேஷ் பாரதி தனது பிறந்தநாளை கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களின் முன்னிலையில் வாளால் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வானது மாணவர்களின் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்நிகழ்வு குறித்து பாளையங்கோட்டை போலீசு நிலையத்தில் மாணவர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி

சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கல்லூரி முதல்வர் திருமதி லதா அவர்களிடம் விசாரணை செய்தபோது, “ராஜேஷ் பாரதி மாணவர்களுக்கு வாள் வீச்சு பயிற்சி கொடுத்து வருகிறார். அவ்வாறு பயிற்சி அளிப்பதை சிலர் தவறாக சித்தரித்து புகார் அளித்துள்ளனர். அவர் ஒரு நல்ல ஆசிரியர்” என நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். இதர ஆசிரியர்களும் கல்லூரி ஊழியர்களும் ராஜேஷ் பாரதி வாள் வீச்சு பயிற்சியை மாணவர்களுக்கு கொடுத்து வருகிறார் என்று அப்பட்டமாக பொய் கூறினர். போலீசு துறையோ, கல்லூரி நிர்வாகமோ அவன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இச்சம்பவம் பற்றி மாணவர்களிடம் கருத்து கேட்டப்போது, ராஜேஷ் பாரதி சாதிரீதியாக அணித்திரட்டி வைத்துள்ள மாணவர்களை அழைத்து கல்லூரியின் வளாகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாதக்கணக்கில் கல்லூரிக்கு வராத முதல்வருக்கு எப்படி அவர் வாள்வீச்சு பயிற்சி கொடுத்தது தெரியும்? ஒட்டுமொத்த கல்லூரி நிர்வாகமும் அவருக்கு சப்போர்ட் செய்யும் பொழுது நாங்கள் என்ன செய்ய முடியும் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

ராஜேஷ் பாரதி மாணவியிடம் செய்த பொறுக்கித்தனம் :

Covid-19 தொற்றுநோய் காரணமாக தினசரி வகுப்புகள் நடைபெறாத காரணத்தால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு ராஜேஷ் பாரதி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.

பின்னர் எப்படியோ அம்மாணவியின் செல்போன் எண்ணை தெரிந்துக் கொண்ட ராஜேஷ் பாரதி கடந்த 2020 மே மாதம் முதல் மாணவிக்கு போன் செய்து, “என்ன சந்தேகம் உதவி என்றாலும் நான் செய்து தருகிறேன்” எனத் தந்திரமாகப் பேசி இருக்கிறான். பின்னர் அடிக்கடி அம்மாணவிக்கு போன் செய்து நன்றாக படிக்குமாறும் கல்லூரியில் ஏதாவது உதவி வேண்டுமானாலும் தான் செய்து தருவதாகவும் கூறி வந்துள்ளான். அம்மாணவியும் ஆசிரியர் என்ற முறையில் இயல்பாகப் பேசியிருக்கிறார்.

இவ்வாறு இருக்கையில் கடந்த 2020 மே 31 அன்று அம்மாணவி தனது கல்லூரி சேர்க்கையை புதுப்பிப்பதற்காக கல்லூரிக்கு சென்றிருக்கிறார். கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கையை புதுப்பித்து விட்டு பேருந்து நிலையம் செல்ல பேருந்துக்காக நின்று இருக்கிறார். வக்கிரமான திட்டத்துடன் காரில் வந்த ராஜேஷ் பாரதி தான் மாணவியின் ஊருக்கு செல்வதாகவும் தன்னுடன் வருமாறும் வீட்டில் விட்டு விடுவதாகவும் கூறி காரில் அழைத்துச் சென்றிருக்கிறான்.

செல்லும் வழியில் இடையே காரை நிறுத்தி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கிறான். மயக்கநிலை தெளிந்து தனக்கு ஏற்பட்ட வன்கொடுமை தொடர்பாக கதறி அழுத மாணவியிடம் “நடந்த சம்பவத்தை கல்லூரியில் சொன்னால் உன்னை டிஸ்மிஸ் செய்து விடுவார்கள். எனக்கு மேலிடம் வரை செல்வாக்கு இருக்கிறது” என்று கூறி மிரட்டியுள்ளான்.

This slideshow requires JavaScript.

பின்னர், தொடர்ந்து மாணவிக்கு அடிக்கடி போன் செய்து “தான் சொல்வதைக் கேட்காவிட்டால் உன்னுடன் எடுத்த வீடியோவை வெளியில் பரப்பி விடுவேன்” என மிரட்டி தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு கூறி கொடுமைப்படுத்தி வந்துள்ளான். இதனால், தற்கொலை செய்யுமளவுக்கு மனரீதியாக பாதிக்கப்பட்ட அம்மாணவி கடந்த 2021 மே 12 அன்று நெல்லை போலீசு ஆணையரை நேரடியாக சந்தித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் உத்தரவிட்டதன் அடிப்படையில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசு நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 376(2)f, 506(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் திட்டமிட்ட முறையில் கூடுதலாக தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67, 67A ஆகிய பிரிவுகளை சேர்த்து வழக்குப்பதிவு செய்யாமல் தவிர்த்து இருக்கின்றனர்.

ராஜேஷ் பாரதியின் தந்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் என்பதாலும் சாதிரீதியான செல்வாக்கு மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு ஆகிய காரணத்தினால் அவன் இன்று வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை. அவனை போலீசார் கைது செய்து அவனது செல்போன் லேப்டாப் போன்றவற்றை ஆய்வு செய்தால் மேலும் பல பாலியல் வன்முறை நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பு உள்ளதாக மாணவர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

ராஜேஷ் பாரதி போன்ற பொறுக்கிகள் உருவாவதற்கான அடிப்படை எது?

கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், ஜனநாயக சிந்தனை கொண்ட, மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. டெல்லி JNU பல்கலைக்கழகத்தை சேர்ந்த கண்ணையா குமார், உமர் காலித், பட்டாச்சாரிய போன்ற முக்கியமான செயல்பாட்டாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிந்து கைது செய்தது.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவரான ரோஹித் வெமுலா எனும் தலித் சமூகத்தைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவர், பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, கல்வி உதவி தொகை உட்பட அனைத்து உதவிகளையும் நிறுத்தி, விடுதியை விட்டு விரட்டியடிக்கப்பட்டு படுகொலை செய்தது போன்ற நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன.

இது மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் துணைவேந்தர், இயக்குனர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி-யினர் தமது தத்துவ சார்புடையவர்கள் மற்றும் சாதிய மதவாத சிந்தனை கொண்டவர்களையும் பணியமர்த்தி வருகின்றனர். டெல்லி JNU பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் போன்ற முன்னணி மத்திய பல்கலைக் கழகங்களில் மட்டுமன்றி மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். இத்தகைய சதியை செய்து வருகிறது.

பல்கலைக் கழகங்களுக்கு உரிய அறிவார்ந்த சிந்தனை மரபை அழித்து அவ்விடத்தில் அதன் கட்டமைப்பு முழுவதையும் பார்ப்பனியமயமாக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது. மாணவர்களை அச்சுறுத்தி முடக்குவதோடு, அவர்களை சாதிய ரீதியாக பிளவுறச் செய்யும் வேலையை செய்கிறது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

மாணவர்களை சங்கமாகச் சேர விடாமல் தடுக்கும் பணியைச் செய்கிறது !!

சென்னை PSBB பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்களை உடனடியாக விசாரித்து ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்தது போல போலீசுத்துறை ராஜேஷ் பாரதியையும் உடனடியாக கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவன் செய்த அத்தனை கிரிமினல்தனங்களுக்கும் பாதுகாப்பு கொடுத்த கல்லூரி நிர்வாகத்தை விசாரித்து தக்க நடவடிக்கை வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் ஆகும்.

மேலும், மாணவர்கள் சாதிரீதியாக குழுக்களாக பிரித்து மோதிக்கொள்ள வைப்பது, அதற்கு இத்தகைய பொறுக்கி பேராசிரியர்கள் தூபம் போட்டு தன்னுடைய அடியாட்படையாக வைத்துக் கொள்வதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மாற்றங்களை கொண்டுவர போராடுவது ஒவ்வொரு மாணவன், பேராசிரியர், சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

படிக்க :
♦ உ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா – மக்கள் அதிகாரம் !
பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்

ராஜேஷ் பாரதியால் பாதிக்கப்பட்ட பெண் “பார்ப்பன” சமூகமாக இருந்தாலும் அதிகார வர்க்கம், பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் ராஜேஷ் பாரதி போன்ற செல்வாக்கு படைத்த (PSBB நிர்வாகத்தைப் போன்ற), பணம், அதிகார திமிர்பிடித்தவர்கள் பக்கம் தான் நிற்பார்கள். ஆகவே, மாணவர்களே சாதி – மதவெறி, சமூக விரோத அமைப்புகளை விட்டு வெளியேறி, மாணவர்கள் வர்க்கமாக ஒருங்கிணைந்து, பாதிப்புக்குள்ளான சகமாணவிக்கு உறுதுணையாக நில்லுங்கள்.

அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் புரட்சிகர மாணவர் சங்கங்களை தொடங்குவதும், மாணவர்கள் வர்க்கமாக ஒருங்கிணைந்து போராடுவதுமே இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும்.

தகவல் சேகரிப்பு : புகழேந்தி, நெல்லை. (நெல்லை அரசு சட்டக் கல்லூரி மாணவர்களிடம் சேகரித்த தகவலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது)

இதுதொடர்பாக நியூஸ் 18 செய்தி சேனலில் வந்த காணொலி :

தகவல் :
மக்கள் அதிகாரம்
நெல்லை

வர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் !!

கொரோனா காலத்தில் இராணுவ அதிகாரிகள் மாஸ்க் அணியாமல் கொண்டாடினால், அதற்குப் பெயர் பூரிப்பாம் !! மக்கள் வாழ்வாதாரத் தேவைக்கு மாஸ்க் போட்டு மார்க்கெட் சென்றால் அது சுற்றித் திரிவதாம் !! இதுதான் தினகரன் பத்திரிகையின் ஊடக அறம் !!

அதிகார வர்க்கத்திற்கு ஒரு நீதி ! மக்களுக்கு ஒரு நீதி ! இதுதான் ஊடக அறம் !!

கருத்துப்படம் : வேலன்

தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு !!

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவிற்கான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. போதிய அளவு படுக்கைகள் இல்லாதது, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துகள் தட்டுப்பாடு, கள்ளச் சந்தையில் மருந்துகள் விற்கப்படுவது, இறந்தவர்களின் சடலங்களை எரிக்கக் கூட வரிசையில் நிற்க வேண்டியிருந்த அவலநிலை இவையெல்லாம் இந்த கொரோனா வைரஸின் இரண்டாம் அலையால் ஒரே நாளில் நடந்துவிடவில்லை.

அறிவியலாளர்கள் சொன்ன முன்னெச்சரிக்கைகளை மோடி அரசு அலட்சியம் செய்தது இந்த இரண்டாம் அலைப் பரவலுக்கு காரணமென்றாலும், மரண விகிதம் அதிகரித்ததற்கு முழுக்க முழுக்க இந்திய மருத்துவ கட்டமைப்பை தனியார்மயப்படுத்தியதுதான் அடிப்படைக் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

படிக்க :
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்
♦ கொரோனா துயரத்திலும் மாளிகை கேட்கிறதா ? மோடியை சாடிய மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் || பி.பி.சி

கடந்த 30 ஆண்டுகளாக பொது சுகாதாரத்துறையை நிதியில்லாமல் கைகழுவி விட்டதும், மருத்துவத் துறையை தனியாரின் லாப வேட்கைக்கு திறந்துவிட்டதன் விளைவுதான் இந்த அவலநிலைக்கு முழுமுதற் காரணம் என்பதை ஆதாரங்களுடன் நம்மால் நிறுவ முடியும்.

இந்திய பொது சுகாதாரத்துறையின் நசிவுக்கு, தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டதும், பொது சுகாதாரத்துறைக்கு போதிய நிதி ஒதுக்காததும், அதனை புறக்கணித்ததும்தான் அடிப்படைக் காரணம்.

மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை :

கொரோனா நோய்த் தொற்று இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பின் அவல நிலையை திரை கிழித்துக் காட்டியுள்ளது. படுக்கைகள், ICU வார்டுகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருந்துகள் இவற்றின் பற்றாக்குறைகள் ஒருபக்கம் இருக்கும் போது, இன்னொரு பக்கம் போதிய மருத்துவ ஊழியர்கள் இல்லாத நிலை முகத்தில் அறையும் எதார்த்தமாக நம் முன் நிற்கிறது. “படுக்கைகள் நோயாளிகள் குணப்படுத்துவதில்லை, மருத்துவர்கள்தான் குணப்படுத்துகிறார்கள்”.

கொரோனா பெருந்தொற்றுக்கான இந்தியாவின் எதிர்வினையை பெருமளவில் முடக்கிப் போட்டிருக்கிறது, மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை. இந்தியாவில் 10,000 நபர்களுக்கு 38 மருத்துவப் பணியாளர்கள் தான் இருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் வரைவளவு 10,000 நபர்களுக்கு குறைந்தபட்சம் 45 மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

உலக அளவில் இந்தியாவில் அதிகமாக மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது, அதே நேரத்தில் உலக அளவில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.

1.3 பில்லியன் மக்கள் தொகையிருக்கும் இந்தியாவில் மருத்துவர் – நோயாளி விகிதம் பாதாளத்தில் இருக்கிறது. 10,000 நபர்களுக்கு வெறும் 9 மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள்.

இந்தியாவில் 3.2 மில்லியன் செவிலியர்கள் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் 5,085 நிறுவனங்களின் இருந்து 3,35,000 பயிற்சி பெற்ற செவிலியர்கள் மருத்துவத் துறையில் நுழைகிறார்கள். இருப்பினும் 10,000 நபர்களுக்கு வெறும் 15 செவிலியர்கள்தான் இருக்கிறார்கள். 10,000 நபர்களுக்கு 5.3 படுக்கைகள் மட்டுமே இந்தியாவில் உள்ளது.

படிக்க :
♦ “நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”
♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

தொற்றை எதிர்கொள்ள 2,65,000 மருத்துவப் பணியாளர்களை மாநில அளவிலான ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இதனடிப்படையில் மாநில அரசுகள் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்ததுதான். ஆனால், பீகார் மாநிலத்தில் 9,000 செவிலியர்கள் தேவைப்படும் நிலையில் 5,000 பணியிடங்கள்தான் நிரப்பப்பட்டது. டெல்லி அரசாங்கம் நான்காம் ஆண்டு ஐந்தாமாண்டு பயிலும் மருத்துவ மாணவர்களை  கொரோனா சேவையில் ஈடுபடுத்தி அவர்களுக்கு தினம் ரூ.1,000 – ரூ.2,000 வரை மதிப்பூதியம் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது.

டெல்லி புனித ஸ்டீபன் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர், டாக்டர். மேத்திவ் வர்கீஸ் கூறுகையில், “வெண்டீலேட்டர்  படுக்கைகளை பொருத்தவரை சிக்கலான விசயம் என்னவென்றால், அதை இயக்குவதற்கான ஊழியர்கள்தான். எல்லா மருத்துவர்களும் அதை இயக்க முடியாது. எனக்கும் வெண்டீலேட்டரை எப்படி இயக்குவதென்று தெரியாது. ஒரு மருத்துவமனை  வெண்டீலேட்டர்களை வாங்கலாம் ஆனால், அதை இயக்குவதற்கான ஊழியர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்.”

000

மருத்துவப் பொருட்களுக்கான பற்றாக்குறை :

எந்த சமூகத்திலும் பற்றாக்குறை என்பது சாதாரணமான விசயம்தான். ஆனால், இந்தியாவில் அடிப்படை மருத்துவப் பொருட்களுக்கான பற்றாக்குறை என்பது முறைக்கேடான ஒன்றாகவே இருக்க முடியும்.

இந்தியா உலகின் மருந்தகம் என்னும் பெருமைக்குரியதாக திகழ்கிறது. ஏனெனில், இந்தியாவின் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மிகத் திறமையுடன் நேர்மாறாக்க பொறியியல் (Reverse Engineering) மூலமாக பொதுவான மருந்துகளை தயாரிக்கின்றன. உலகின் மூன்றாவது பெரிய மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் நாடு இந்தியா. உலகின் தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் பங்கு 60 சதவீதமாக இருக்கிறது. அமெரிக்க மருந்து சந்தைக்காக மாத்திரைகளை தயாரிப்பதில் இந்தியா மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கிறது. ஆனால், இவையெதுவும் கொரோனா காலத்தில் இந்தியாவை காக்கவில்லை.

கொரோனா தடுப்பூசி இந்திய மக்களுக்கு அது தேவைப்படும் அளவிலும் வேகத்திலும் கிடைக்கவில்லை.

தற்போது இந்தியாவில் இரண்டு தனியார் நிறுவனங்களான Serum Institute of India மற்றும் Bharat Biotech மட்டுமே தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்கள் தான் இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசி கிராக்கியான மாதத்திற்கு 90 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த இரண்டு நிறுவனங்களால் மாதத்திற்கு 70 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே தயாரிக்க முடியும். இது தேவைப்படும் தடுப்பூசிகள் விட மிகக் குறைந்தது என்பது தெளிவு.

மோடி அரசு இந்தியாவின் அரசு தடுப்பூசி நிறுவனங்களையே கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதை Down to Earth என்ற பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. Central Research Institute (CRI), BCG Vaccine Laboratory (BCGVL), Pasteur Institute of India (PII), HLL Biotech, Bharat Immunological and Biologicals Corporation Limited, Haffkine Bio-Pharmaceutical Corporation Limited, Human Biological Institute, Integrated Vaccine Complex in Tamilnadu. இந்த நிறுவனங்களையும், அவற்றின் திறன் மற்றும் அனுபவங்களையும் புறக்கணித்துவிட்டு இரண்டு தனியார் கார்ப்பரேட்களுக்கு மட்டுமே தடுப்பூசி தயாரிக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16-ஆம் தேதி மூன்று பொதுத்துறை நிறுவனங்களை தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்போவதாக அறிவித்தது மத்திய அரசு. ஆனால், தடுப்பூசி தயாரிப்பில் மிகுந்த நிபுணத்துவமும், அதிக கொள்திறனும் கொண்ட நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இதில் முக்கிய நிறுவனமான Integrated Vaccine Complex in Tamilnadu இடம்பெறவில்லை.

கடந்த மார்ச் 17-ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே மோடியிடம் காணொளி காட்சி உரையாடலின் போது, மும்பையிலுள்ள அரசு நிறுவனவமான Haffkine Institute-க்கு Covaxin தடுப்பூசியில் தொழில்நுட்பத்தை மாற்றிக் கொடுக்கச் சொல்லி வேண்டுகோள் விடுதார். ஆனால், அது குறித்து இன்னும் மத்திய அரசு முடிவு செய்யவில்லை.

அமெரிக்காவும், பிரிட்டனும் தாங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை தங்கள் உள்நாட்டு தேவைக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவர்களுக்குள்ளே பகிர்ந்துக் கொள்கிறார்கள். ஆனால், இந்தியாவும் சீனாவும் மட்டுமே தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறார்கள். இதில் சீனாவின் நிலைமை சீராகவே இருக்கிறது. ஆனால், இந்தியாவின் நிலை மிக மோசமாக இருக்குபோதும் ஏற்றுமதி நடக்கிறது.

கடந்த 6 மாத காலத்தில் 11 லட்சம் ரெம்டெசிவிர் (Remdesivir) என்னும் வைரஸ் எதிர்ப்பு மருந்தை 100 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ரெம்டெசிவிர் மருந்தையும் அதன் முக்கிய மருத்துவ உள்ளடக்கப் பொருட்களையும் (Active Pharmaceutical Ingredients) ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ள போதிலும் இந்த ஏற்றுமதி நடந்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததை காரணமாக கொண்டு இந்த ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதே கொரோனா தொற்று குறைந்ததன்  காரணாமாக சந்தையின் கிராக்கி குறைந்து விட்டது என்று சொல்லி, ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பை நிறுவனங்கள் சுறுக்கிக் கொண்டனர். இதன் விளைவாகவே தற்போதைய தட்டுப்பாடு.

கடந்த நவம்பர் மாதம் உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், “இந்த ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றியதாகவோ மிகுந்த தொற்று பாதிப்புடையவர்களின் நிலையை மேம்படுத்தியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை” என்கிறது. இருந்தாலும், இதைப்பற்றிய தெளிவை மக்களுக்கு ஏற்படுத்தாமல், இந்த மருந்துக்காக மக்கள் உயிரை பணயம் வைத்து கூட்ட நெரிசலில் காத்துக் கிடக்க விட்டிருக்கிறது அரசு.

ஆக்சிஜன் பற்றாக்குறை :

வளர்ந்த நாடுகளின் சுகாதார அமைப்புகள் கூட ஸ்தம்பித்துப் போயிவிட்டது என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் ஆக்சிஜன் இல்லாமல் நோயிகளை கைவிடவில்லை. அங்கே பெரிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிக்கும் நிலையம் உள்ளது. அவர்கள் மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவதிப்பட்டார்கள், காரணம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்துறைகளையெல்லாம் வளரும் பிந்தங்கிய நாடுகளுக்கு மாற்றிவிட்டார்கள். சீனா எப்படி இந்த சூழலை கடந்து வந்தது? சீனா வெண்டீலேட்டர்கள் இல்லாமல், மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவதிப்படவில்லை. அவர்கள் எந்த நோயாளியையும் படுக்கையில்லை என்று திருப்பி அனுப்பவில்லை.

இந்தியாவின் இரும்பு மற்றும் பிற உலோகங்களை தயாரிக்கும் தொழிற்துறைகள் தான் அதிகமாக ஆக்சிஜனை தயாரிக்கின்றன. ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ள படி இந்தியாவின் ஒருநாள் ஆக்சிஜன் தயாரிப்பு அளவு 7,287 மெகா டன்னாக இருக்கிறது. மொத்த இருப்பாக 50,000 மெகா டன் ஆக்சிஜன் இருக்கிறது. இவை ஒரு நாளுக்கு தேவைப்படும் அளவான 3,842 மெகா டன்னை விட அதிகமாகும். ஆனால், அவை பெரும்பாலும் அதன் சொந்த தேவைக்காக மட்டுமே தயாரிக்கப் படுகின்றன.

இப்போது பிரச்சனை என்னவென்றால் இந்த தயாரிக்கப்பட்ட ஆக்சிசனை நாடு முழுவதும் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைப்பதுதான். அதற்கு தேவையான Cryogenic டாங்குகள் போதுமானதாக இல்லை. இந்தியா முழுவதும் வெறும் 1,170 Cryogenic டாங்குகள் தான் இருக்கிறது. ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்கும் தளவாடங்கள் இல்லாமைதான் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது.

இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்வது மத்திய, மாநில அரசின் பொறுப்பு. இவற்றை தீர்ப்பதற்கு பல முயற்சிகளை எடுத்து வருவதுபோல் செய்யும் நடவடிக்கைகள் பிரச்சனையை தீர்ப்பதற்கு அல்ல, அரசின் தோல்வியை மறைப்பதற்கும், தன் மீது எந்த குற்றமும் இல்லை என்பதை நியாப்படுத்தி கொள்வவதற்கும் ஒரு சில செயல்பாடுகளை செய்வதுபோல் ஊடகத்தில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

000

National Sample Survey புள்ளி விவரங்களின் படி, 2001-02 முதல் 2010-11 வரையிலான ஆண்டுகளில் தனிநபர் நடத்தும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும், சிறு, குறு, மிகப்பெரிய நிறுவனமயமான மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அதிலும் மிகப்பெரிய மருத்துவமனைகள் மிக விரைவாக வளர்ந்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதில் தனியாரின் பங்கு மிக அதிகமானது.  இந்திய நகரங்களில் 95 சதவீதம் மருத்துவமனைகள் அதாவது 13,413 மருத்துவமனைகள் தனியாருடையவை தான்.

இந்தியாவின் மொத்த மருத்துவ சந்தையின் மதிப்பு 100 பில்லியன் டாலரில் (2015) இருந்து ஐந்தாண்டுகளில் அதாவது 2020-ஆம் ஆண்டில் 280 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் அதன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 22.9 சதவீதமாக இருக்குமென்றும் கணிக்கப்பட்டது. இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் லாபத்தை பெருக்கிக் கொள்ள பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டன. உலகளாவிய பங்கு நிறுவனங்கள் இந்திய மருத்துவமனைகளின் பங்குகளை கைப்பற்றியிருக்கின்றன. இதன் மூலமாக மக்களின் சுகாதாரத்தை காட்டிலும் இந்த பன்னாட்டு விகிதப்பங்கு நிறுவனங்கள் லாபமே, இந்திய மருத்துவக் கட்டமைப்பின் நோக்கமாக மாற்றப்பட்டது.

இந்திய தனியார் மருத்துவமனைகள் உடைமை என்பது இனிமேலும், மருத்துவத் துறை சார்ந்தவர்களின் கைகளிலும், உள்ளூர் முதலாளிகளின் கைகளிலும் இல்லை. அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்திய மருத்துவமனைகளின் பங்குகளை கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. ஒரு அந்நிய நாட்டு நிறுவனம் அப்பல்லோ (Apollo) நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

ஒரு சில மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியாவின் சிறு, குறு நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் சக்தியை பயன்படுத்தி அதன் கிளைகளை பரப்பி வருகிறது. மருத்துவத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனங்கள் கார்ப்பரேட் பாணியிலான நிர்வாக முறைகளை புகுத்தி சிறு, குறு கிளினிக்குகளையும், ஒற்றையாக பணிபுரியும் மருத்துவர்களையும் தங்கள் வலைப்பின்னலுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். HCL போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மருத்துவத்துறையில் கால்பதித்துள்ளன. பெரும் கார்ப்பரேட் மருத்துவமனிகளான Apollo, Fortis போன்றவற்றிற்கு  நோயாளிகளை பரிந்துரைப்பதன் வழியாக வருவாய் ஈட்டுகிறது இந்நிறுவனம்.

மருத்துவத்துறை என்பது வியாபார ரீதியாக நெருக்கடிகளற்ற லாபம் கொழிக்கும் துறையாக பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதி நிறுவனங்கள், வளர்ச்சி முகமைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியாவின் மருத்துவத்துறையில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருகின்றனர்.

சர்வதேச நிதி கழகத்தின் (International Finance Corporation) அலுவலர் கூறுகையில், “மருத்துவத்துறை மிக முக்கியமான உலகளாவிய லாபம் கொழிக்கும் துறையாக வளர்ந்து வருகிறது. பெரும்பாலான நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட வேகமாக வளர்ந்து வருகிறது. உலகப் பொருளாதாரம் சர்வதேச நிதி நெருக்கடியில் இருந்து மீண்டவுடன் மருத்துவ சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்றாப்போல் தனியார் மருத்துவத் துறையை விரிவாக்க வேண்டும்” என்கிறார்.

தனியார்மயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடுதான் இந்தியாவின் பொதுத்துறை மருத்துவக் கட்டமைப்பு திட்டமிட்டே சீர்குலைக்கப்பட்டது. புதிய தாராளவாதக் கொள்கைகளின்படி மருத்துவம், சமூகத்திற்கான சேவையாக மக்களின் அடிப்படை உரிமையாக பார்க்காமல் கடைச்சரக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. அரசு நிதி பெருமளவில் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தனியாருக்கு திருப்பிவிடப்பட்டது.

தனியார் மருத்துவத்துறை என்பது காப்பீட்டுத் திட்டத்தை பரவலாக்கியதன் மூலமாக ஏழை – நடுத்தர வர்க்கத்தையும் தனியார் மருத்துவ கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்திருக்கிறது. இந்த பெருந்தொற்று நோய்க்கு மத்தியில் மாநில அரசுகள் கூட மருத்துவ காப்பீட்டை பிரச்சாரம் செய்வதன் மூலமாக மக்களின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், ஆக்சிஜன் சிலிண்டரை பெறுவதற்கும், படுக்கைகள் காலியாக இல்லாத மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதற்கும் இந்த காப்பீட்டுத் திட்டம் எப்படி உதவும்?

மருத்துவத் துறையில் தனியார்மயமாக்களில் வெளிநாட்டு நிதியின் பங்கு அதிகரிக்கும் போது மருத்துவ நிறுவனங்களில் வேலை செய்யும் மருத்துவர்கள் கூட இரண்டாம் பட்சமாக கருதப்பட்டு லாபமே முதன்மையான நோக்கமாக கருதப்படுகிறது.

ஆக மொத்தத்தில், இந்திய மருத்துவத்துறை என்பது லாபத்தை மட்டுமே மையமாக கொண்டு ஒழுக்கமைக்கப்பட்டதாகவும் ஒரு சில நிறுவனங்களின் ஏகபோகமாகவும் மாறி வருகிறது. கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களை  தனியாரிடம் குறிப்பாக கார்ப்பரேட்களிடம் விட்டுவிட வேண்டும் என்பதுதான் ஆகப் பெரும்பான்மையான ஓட்டுக் கட்சிகளின் நிலைப்பாடு.

மருத்துவத் துறையை தனியார்மயமாகியது, அரசு மருத்துவ கட்டமைப்புக்கான செலவை குறைத்ததும், மிக மோசமான விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளை சார்ந்திருப்பதை தவிர்க்க, பொது சுகாதாரத்தில் நிறைய முதலீடுகள் செய்யப்பட வேண்டுமென்று வாதிடுகிறார்கள் பொது சுகாதார ஆர்வலர்கள்.

2018-ம் ஆண்டு இந்திய சுகாதரத்திற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3.5 சதவீதம் மட்டுமே செலவு செய்திருக்கிறது. இந்த நிலை சில பத்தாண்டுகளாக மாறாமல்தான் இருக்கிறது.

இந்த பலவீனமான மருத்துவக் கட்டமைப்பிற்குக் காரணம் தனியார்மயம்தான். தனியார் மருத்துவமனைகள் எப்போது முழு கொள்திறனுடன் இயங்குகின்றன. சாதாரண நாட்களில் உபரியாக படுக்கைகளை பராமரித்து வந்தால்தான் பெருந்தொற்று காலங்களில் அதைப் பயன்படுத்தி தொற்றை சமாளிக்க முடியும். ஆனால், எப்போதும் லாப நோக்கத்துடனே செயல்படும் தனியார் மருத்துவமனைகள் அதை செய்வதில்லை.

000

படிக்க :
♦ கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!
♦ கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !

உண்மையில் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களின் மீது அக்கறை இருந்தால்  பிரச்சனைகளுக்கான காரணத்தை சரி செய்ய வேண்டும். அதற்கு  பொதுத்துறை மருத்துவக் கட்டமைப்பை மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் மேம்படுத்த வேண்டும். அதோடு இங்கு உள்ள தனியார் மருத்துவமனைகளையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இப்படி செய்ய கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதி வாங்கும் பாரளுமன்றக் கட்சிகள் முன்வருவார்களா ? இவர்களை நம்பி பலனில்லை. அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்மடுத்தும்படி அரசை நிர்பந்தித்து வீதியில் இறங்கிப் போராடினால்தான் இதற்கான தீர்வு கிடைக்கும்.


ராஜேஷ்

செய்தி ஆதாரம் :
National Herald , People’s World , India Today , EPW , Business line

இணையவழிக் கூட்டம் : அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரமாக்கு || மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம் நடத்தும் இணையவழி கூட்டம்

அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றிவரும் பணியாளர்களை அரசும் ஒப்பந்ததாரர்களும் இணைந்து நைச்சியமான வழியில் நிரந்தரமாக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் முன் நின்று பணியாற்றும் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர்களை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் நடத்தவிருக்கும் இணையவழிக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் !!

♦ ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் நிரந்தரமாக்கு!
♦ முன்கள பணியாளர்களாக அறிவித்திடு!

நாள் : 03.06.2021, வியாழக்கிழமை
நேரம் : மாலை 6 மணிக்கு

தலைமை :
தோழர் சண்முகசுந்தரம்,
தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்

உரை :
தோழர் மோகன் ,
அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் மாவட்டத் தலைவர் ,
சி.ஐ.டி.யு.

தோழர் முத்துக்குமார்,
மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம் .

மாலை 6 மணிக்கு காணத் தவறாதீர்கள் !!

மக்கள் அதிகாரம் முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.

தகவல் :
மக்கள் அதிகாரம்

கொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிவேகமாகப் பரவி, மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவிற்கு மோடி ஆட்சியே காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் உள்ளிட்டு பலரும் தலையங்கம் எழுதிவிட்டனர்.

கும்பமேளாவுக்கு அனுமதி, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் வரைமுறையற்ற கூட்டம், தடுப்பூசிகளை திட்டமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என தமது இயல்பான பாசிசத் தன்மையால், கொரோனாவை இந்தியா முழுவதும் தீவிரமாக பரப்பியது மோடி அரசு.

கொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader மோடி


கருத்துப்படம் : மு.துரை

அதிகாரவர்க்கத்தின் துணையோடு விதிகளை மீறிய ஜக்கி வாசுதேவ் !!

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம்: கட்டி எழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 4

2013-ல் ஈஷாவில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகம் சொன்ன நிலையில், 2020-ல் தமிழக வனத்துறை அப்படியே தன் நிலையை மாற்றிப் பேச ஆரம்பித்தது. 2020 ஜூன் மாதம் இந்த விவகாரம் தொடர்பான நிலை அறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முதன்மை வனப் பாதுகாப்பாளர் பி.துரையரசு என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது.

படிக்க :
♦ ஜக்கி வாசுதேவை ஆதாரங்களுடன் தோலுரிக்கும் சவுக்கு !
♦ சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!

அதில், ஈஷாவின் வளாகம் என்பது இக்கரை பொலுவம்பட்டியில் பிளாக்-2 காப்புக்காடுகளை ஒட்டி அமைந்திருக்கிறது என்றும் இது பிரபலமான யானை வாழிடம் என்றும் குறிப்பிட்டது. இருந்தபோதும், அந்தப் பகுதி யானைகள் செல்லும் பகுதியாக வரையறுக்கப்படவில்லை என தனது அறிக்கையில் குறிப்பிட்டார் துரையரசு.

ஒவ்வொரு ஆண்டும், யானைகள் ஈஷா வளாகம் அமைந்துள்ள பகுதியை ஒட்டி செல்வது வழக்கம்தான் என்றாலும், இந்தப் பகுதி யானைகள் செல்லும் பகுதியாக வரையறுக்கப்படுவதில்லை என்றது அறிக்கை.

இக்கரை பொலுவம்பட்டி குறித்து வனத்துறை இப்படி மாற்றிப் பேசியது, ஈஷாவுக்கு வசதியாகப்போனது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அரசு ஒரு உத்தரவை வெளியிட்டது. அதன்படி, மலைப்பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை வரைமுறைபடுத்தலாம் என்றது. HACA அனுமதியளிக்க வேண்டிய நிலங்கள், அதாவது இக்கரை பொலுவம்பட்டியும் இதில் அடங்கும் என்றது.

“சட்டவிரோத கட்டுமானங்களை வரைமுறைப்படுத்தி ஈஷா அமைப்புக்கு உதவுவதற்காகவே இந்த விதி கொண்டுவரப்பட்டதாக கருதுகிறோம்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன்.

தாங்கள் ஏற்கனவே கட்டிய கட்டிடங்களுக்கு HACA ஒப்புதல் கேட்டு 2017-ல் ஈஷா விண்ணப்பித்த போது அப்போதைய தலைமைக் காப்பாளரான எச்.பசவராஜு இந்த விண்ணப்பம் குறித்து பரிசீலிக்க ஒரு கமிட்டியை அமைத்தார். ஈஷாவின் கட்டுமானங்கள் உள்ளூர் வனச் சூழலையும் சுற்றுச்சூழலையும் அந்தக் கமிட்டி கண்டறிந்தது. இந்தக் கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றால் சில சாலைகளை அவர்கள் பயன்படுத்தக் கூடாது; ஏற்கனவே, கட்டிய சில கட்டிங்களில் மாறுதல்களைச் செய்ய வேண்டும்;

காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் எந்தக் கட்டுமானத்தையும் செய்யக் கூடாது என்று தெரிவித்தது கமிட்டி.

ஈஷா சட்டவிரோதமாக கட்டிடங்களைக் கட்டி வருகிறது என்பது 2012-லிருந்தே தெரிந்தும் அதை நிறுத்தாது ஏன்? என அதே ஆண்டு இந்திய ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை தமிழக வனத்துறையிடம் கேள்வி எழுப்பியது. HACA-வின் ஒப்புதல் பெறாமல் அந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்பதை சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியது.

ஆனால், தாங்கள் எல்லா கட்டிடங்களுக்கும் எச்.ஏசி.ஏ ஒப்புதல் பெற்றிருப்பதாக மார்ச் 16, 2017-ல் தெரிவித்தது ஈஷா. ஆனால், ஈஷா வளாகத்தில் நடந்த கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கொடுக்கலாமா என்பதை ஆராய கமிட்டி அமைக்கப்பட்டதே அதற்கு அடுத்த நாள்தான். அதாவது மார்ச் 17-ஆம் தேதிதான். இந்தக் குழு மார்ச் 29-ஆம் தேதி தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

ஏப்ரல் நான்காம் தேதிவாக்கில்தான் முதன்மை தலைமை வனக்காப்பாளர், ஈஷாவின் கட்டுமானங்களுக்கு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கலாம் என கடிதம் எழுதினார். இதையடுத்து நகர்ப்புற திட்டமிடல் துறை, கோயம்புத்தூரில் இருந்த மண்டல துணை இயக்குனரை வைத்து மே 3-ஆம் தேதி ஒப்புதல் அளிக்கச் சொன்னது. இதற்கு வனத்துறை விதிக்கும் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்பதோடு, நிபந்தனைகளையும் ஏற்க வேண்டும் என்று சொன்னது. அப்படி இருக்கும் போது மார்ச் 16-ஆம் தேதியே HACA எப்படி ஒப்புதல் அளித்திருக்க முடியும்?

இந்தக் கேள்விக்கும் சரி, மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் சரி ஈஷா பதிலளிக்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக Newslaundry அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதிலளித்த ஈஷாவின் செய்தித் தொடர்பாளர், உங்களுடைய முன்அனுமானங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் ஃபவுண்டேஷனைப் பற்றி தூற்றி எழுதினால், அது உங்கள் ரிஸ்க்தான்” என்று எச்சரித்தது.

கட்டுமானங்களைக் கட்டி முடித்த பிறகு அனுமதி அளிக்கும் பிரிவு என்பது தமிழக விதிகளில் கிடையாது. நகர்ப்புற திட்டமிடல் துறையானது கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடத்தை வரைமுறைப்படுத்தலாம். ஆனால், அந்தத் துறை விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும். அப்படியே வரைமுறைப்படுத்தினாலும் சுற்றுச்சூழல் அனுமதியை நகர்ப்புற திட்டமிடல் துறை அளிக்க முடியாது.

ஈஷாவின் கட்டுமானங்களுக்கு, அனுமதி அளிக்கலாம் எனப் பரிந்துரை செய்த பசவராஜு நம்முடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க முன்வரவில்லை. அவருக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்த துரையரசு “போதுமான நிபந்தனைகளை விதித்த பிறகுதான் வரைமுறைப்படுத்தும் பரிந்துரைகள் செய்யப்பட்டன. அவர்கள் நிபந்தனைகளை நிறைவேற்றினார்களா என்பது தெரியாது. எனக்குத் தெரிந்தவரை அவர்களுக்கு HACA ஒப்புதல் இப்போதுவரை கிடைக்கவில்லை” என்றார்.

படிக்க :
♦ கோவையில் போலீசு தடையை மீறி மோடி – ஜக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !
♦ மோடி – ஜக்கியின் யோகா தினம் – வினவு நேரலை

கோயம்புத்தூரின் மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற முறையில் HACA-வின் தலைவராக இருந்த ராஜாமணி ஈஷாவுக்கு அளிக்கப்பட்ட HACA ஒப்புதல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்று சொன்னார். “நீங்கள் என்ன எழுத நினைக்கிறீர்களோ, எழுதிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார் அவர்.

***

முந்தைய பாகங்கள் :
பாகம் 1 : சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி?

பாகம் 2 : யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !
பாகம் 3 : சத்குருவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் !

கட்டுரையாளர் : பிரதீக் கோயல்
தமிழாக்கம் : சுந்தர் ராஜன்
நன்றி : Newslaundry

முகநூலில் : Sundar Rajan

disclaimer

கொரோனா துயரத்திலும் மாளிகை கேட்கிறதா ? மோடியை சாடிய மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் || பி.பி.சி

கொரோனா பேரிடரை இந்திய அரசு எதிர்கொள்ளும்விதம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை ஓய்வுபெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.

`அரசமைப்புச் சட்டத்தின் வழி நடக்க வலியுறுத்தும் குழு’ (constituition conduct group) என்பது இந்திய மற்றும் மாநில அரசுகளில் உயர் பொறுப்புகளில் இருந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்டு இயங்கும் ஓர் அமைப்பு. இதில் 116 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தின்படியே நாட்டின் நிர்வாகம் நடைபெற வேண்டும்’ என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கும் அமைப்பாகவும் இது உள்ளது.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வதில் மத்திய அரசின் தவறுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த மே 20-ம் தேதி இந்த அமைப்பினர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இந்தக் கடிதத்தில் நேர்மையான காவல் ஆணையராக அறியப்பட்ட ஜூலியோ ரிபைரோ, முன்னாள் கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர், மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஜி.பாலச்சந்திரன் உள்பட 116 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

படிக்க :
♦ பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை புறக்கணித்த ஆப்பிரிக்க துறைமுகத் தொழிலாளர்கள் !!
♦ கொரோனா : கார்ப்பரேட் – சனாதன வைரஸுக்கு எதிரான இருமுனைப் போராட்டம் தேவை !

பிரதமருக்கு சிசிஜி அனுப்பியுள்ள கடிதம் :

“பிரதமர் அவர்களுக்கு, இந்திய ஆட்சிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களான நாங்கள், அரசமைப்புச் சட்டத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறோம். எங்களுக்கு எந்தவித அரசியல் சார்பும் கிடையாது. இதற்கு முன்னால் நிர்வாக செயல்முறைகள் எப்போதெல்லாம் அரசமைப்புச் சட்டத்தினை மீறுவதாக இருந்ததாகக் கருதினோமோ அப்போதெல்லாம் நாங்கள் உங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்.

தற்போது கொரோனா பேரலை என்ற துயரமான நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் நமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கோபத்துடனும் துக்கத்துடனும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம். இந்தியாவை மட்டும் கொரோனா தொற்று பாதிக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம்.

மருத்துவ உதவிகளுக்காகவும் கொரோனா சம்பந்தப்பட்ட மற்ற உதவிகளுக்காகவும் மக்கள் கதறும் சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்கள் அரசு, இவ்வளவு பெரிய சிக்கலை சாதாரணமாக கையாண்டு கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது எங்கள் உணர்வுகள் மரத்துப் போகின்றன. இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் விரும்பத்தகாத விளைவுகள் இந்தியர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்ட காரணத்தினால் துக்கத்துடனும் துயரத்துடனும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம்.

தயாராக இருக்கும் பிரதமர் மாளிகையின் மாதிரி

காற்றில் பறக்கும் கொள்கைகள் :

உங்களது அரசு பதவியேற்ற நாளில் இருந்து, `அமைச்சரவை கூடி முடிவெடுத்து அரசின் செயல்கள் நடைபெறும்’ என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது என்பதனையும், இந்த நாடு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றிய அரசு என்பதை நீங்கள் மறந்துவிட்டதையும், எந்த மாநிலங்களில் எல்லாம் உங்கள் கட்சி ஆட்சியில் இல்லையோ, அந்த மாநிலங்களை நீங்கள் நடத்தும் விதம் எப்படியுள்ளது என்பதைக் கண்டதாலும் இதனைக் கூறுகிறோம்.

கொரோனா போன்ற சிக்கல்கள் எழும்போது அந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வல்லமை படைத்தவர்களையும், நாடாளுமன்றக் குழுக்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கொள்கை காற்றில் பறக்கவிடப்பட்டதைப் பார்க்கிறோம்.
மாநில அரசுகளுடன் இத்தகைய தருணங்களில் மிகவும் நெருக்கமாகக் கலந்து உரையாட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லாததால் விரும்பத்தகாத அபாயகரமான விளைவுகளால் ஏழைகளும் இந்தச் சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களும் பாதிப்பதைக் கண்டு நாங்கள் மிகவும் மனம் வருந்துகின்றோம்.

பன்னாட்டு சமுதாயம் மற்றும் நம்முடைய விஞ்ஞானிகள், `கொரோனாவால் எத்தகைய விளைவுகள் வரும்?’ என்பதை எடுத்துக் கூறியும் கொரானாவின் முதல் அலை மற்றும் இரண்டாம் அலைக்கு இடையில் இருந்த இடைவெளியில் மிகத் தேவையான மருத்துவக் குழுக்கள், படுக்கைகள், தேவையான ஆக்சிஜனை கையிருப்பாக வைத்திருத்தல், மருத்துவ உபகரணங்களை பெருக்குதல் என முன்கூட்டியே திட்டமிடலை உங்களிடம் பார்க்க முடியவில்லை.

’இந்தக் கொரோனாவை எதிர்க்கும் ஆயுதமே தடுப்பூசிதான்’ என்று இருக்கும்போது, இந்திய மக்கள் தொகையோடு ஒப்பிட்டு போதுமான அளவுக்கு கையிருப்பு இருப்பதற்கு என்னென்ன செய்திருக்க வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வும் உங்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

எங்கே ஆத்ம நிர்பார் பாரத்?

நீங்கள் மற்றும் உங்களின் அமைச்சரவை சகாக்கள் பேசிய பேச்சுக்களைப் பார்க்கும்போது, கொரோனாவை பற்றிய விழிப்புணர்வில் இருந்து மக்களை திசைதிருப்ப முயன்றீர்கள் என்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

நீங்கள் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்ததன் காரணமாக மாநில அரசுகளும் மக்களும், `அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பதற்கேற்ப மிதப்புடன் இருந்துவிட்டார்கள் என்பது கண்கூடு. `இந்தியாவிலேயே எல்லாவற்றையும் உருவாக்குவோம்’ என்று கூறினீர்கள். அந்த `ஆத்ம நிர்பார் பாரத்’ இன்று எங்கே இருக்கிறது? தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் நம்மைவிட சிறிய நாடுகளில் இருந்து உதவிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை வலுப்பெறத் தொடங்கிய நேரத்தில், `எவ்வளவு நிதி தேவைப்படும்?’,` அதில் மாநில அரசுகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்?’ என்ற சரியான கணக்கு உங்களிடம் இருந்ததாகத் தோன்றவில்லை.

`பி.எம் கேர்ஸ்’ என்ற புதுமையான நன்கொடை திட்டத்தைத் தொடங்கி வைத்தீர்கள். ஏற்கெனவே `prime minister national relief fund’ என்ற ஒன்று இருக்கும்போது, இந்த பி.எம் கேர்ஸுக்கு பணம் எவ்வாறு பெறப்பட்டது, அது எப்படி செலவழிக்கப்பட்டது என்பதைப் பற்றிய தெளிவான தகவல்கள் இன்று வரையில் இல்லை. பி.எம் கேர்ஸ் நிதிக்கான நீங்கள் கொடுத்த வரிச்சலுகைகளின் காரணமாக தற்சார்பு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அந்தந்த பகுதிகளில் செலவழிக்கின்ற தொகைகள் அனைத்தும் பி.எம் கேர்ஸ் நன்கொடைக்கு வந்துவிட்டது. இதனால் அடிமட்டத்தில் செல்ல வேண்டிய உதவிகள் எதுவும் செல்லாமல் தடுக்கப்பட்டன என்பது கசப்பான உண்மை.

பிரதமருக்கு மாளிகை அவசியமா?

இதுதவிர, மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி தொகையை நீங்கள் சரியான நேரத்தில் செலுத்தவில்லை. அவ்வாறு நீங்கள் கொடுத்திருந்தால் மாநிலங்கள் தங்களின் நிதிச் சுமையில் இருந்து தலைநிமிர்ந்திருக்கும். அது நடக்காமல் போய்விட்டது.

அதேநேரத்தில் தேவையே இல்லாமல் புதிய நாடாளுமன்றக் கட்டம், பிரதமருக்கென்று ஒரு பெரிய மாளிகை. அந்த மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கு ரகசியப் பாதை என்றெல்லாம் திட்டமிட்டு ஏறக்குறைய 20,000 கோடி ரூபாய் இந்தநேரத்தில் செலவழிக்கப்படுவதைக் காண்கிறோம்.

இந்தச் செலவு இந்த நேரத்தில் தேவையா? என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் அந்த வேலைகள் தொடர்ந்து நடப்பதைக் காண்கிறோம். இதைத் தவிர அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவது என்பது கடுமையாக்கப்பட்டிருக்கிறது. இதுவரையில் அத்தகைய நிதி நிறுவனங்கள் பெற்று வந்த நிதிகள் பெருமளவு வராமல் போகும் சூழல் உருவாகியிருக்கிறது.

இந்திய அரசின் கீழ் வரும் அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் தேர்தல் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், இந்தத் தேர்தல்களை நடத்துவதில் நீங்கள் எத்தகைய வழிமுறைகளைக் கையாண்டீர்கள்? நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்தநேரத்தில் மிகப்பெரிய கூட்டங்களை கூட்டியதன் மூலம் எத்தகைய ஆபத்துக்கு மக்களை ஆட்படுத்துகிறோம் என்பதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் தொடர்ந்து உங்கள் பிரசாரத்தை நடத்தினீர்கள்.

கொரோனாவை பரப்பிய 2 சம்பவங்கள்!

அதேபோல், ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெற்றபோது, கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைப் பற்றி சற்றும் கவலைப்படாமல்தான் கும்பபமேளாவும் இருந்தன.
இரண்டாம் கொரோனா அலையினை வரவேற்பது போல உங்களின் இந்த நிகழ்வுகள் அமைந்தன. அதனுடைய தாக்கத்தை இன்று நாம் கண்டுகொண்டுள்ளோம். இது நகர்ப்புறங்களை மட்டுமல்ல, கிராமப்புறங்களையும் பாதித்துள்ளதைக் காண முடிகிறது.

எங்கெங்கும் பிணக்குவியல்

கொரோனா தொடர்பான செய்திகளை உங்கள் அரசு மிகச் சிறப்பாக கையாள்வதை முக்கியமானதாகப் பார்க்கிறீர்கள். ஆனால், கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என்பதில் கவனம் இருப்பதாகத் தெரியவில்லை. பல மாநிலங்களில் இந்தக் கொரோனா உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியும் சோதனைகளில், எத்தனை பாசிட்டிவ் அறிக்கைகள் வந்தன, எத்தனை பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள் என்பதைப் பற்றிய சரியான வெளிப்படைத்தன்மை இல்லை என்று பரவலாக உணரப்படுகிறது.

இவைகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லாத காரணத்தினால் எந்த அளவுக்கு மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற முறையான கணக்கும் இல்லாதது தெளிவாகிறது. இன்றுள்ள நிலையில் இந்தக் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான வழிகளை ஆராய வேண்டும் என்பதால் உங்களுக்கு சில ஆலோசனைகளை சமர்ப்பிக்கிறோம்.

1. நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி தர வேண்டிய பொறுப்பினை மத்திய அரசு ஏற்க வேண்டும். அதற்காக எங்கெல்லாம் தடுப்பூசி வாங்க முடியுமோ அதனைப் பெற்று மாநில அரசுகளுக்கும் தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்கும் ஏஜென்சிகளுக்கும் வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. மாநில அரசுகளுடன் ஆலோசித்து ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோருக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் மிகத் தேவையான மருந்துகள் மற்றும் அதற்குத் தேவையான கருவிகள் மாநிலங்களில் இருக்கிறதா என்பதையும் அவை இல்லாத இடங்களில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் அரசின் முக்கியமான கடமை.

3. கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.

4. `சென்ட்ரல் விஸ்டா’ என்ற பெயரில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கும் மற்றும் பிரதமரின் அரண்மனைக்கும் செலவழிக்கும் போக்கைக் கைவிட வேண்டும். இதுதவிர பிற தேவையற்ற செலவினங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு மாநில அரசுகளுக்கு மருத்துவ வசதியினை பெருக்குவதற்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும்.

5. கொரோனா பெருந்தொற்றின் கொடுமை தணியும் வரை, இந்திய உணவுக் கழகத்தில் உள்ள வழக்கமான ரேசன்களுக்கு கொடுப்பது தவிர, மீதமுள்ள உணவுத் தானியங்களை ஏழைகளுக்கு உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

6. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உடனடியாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து தற்போது நடைபெற்று வரும் சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் புரத உணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும்.

படிக்க :
♦ நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

7. கொரோனா இந்த ஆண்டு தணிந்துவிடும் என உறுதியாகக் கூற முடியாத நிலை உள்ளது. மூன்றாவது அலை வருவதற்கான காரணங்கள் இருப்பதால், இந்த நிதியாண்டு முழுமைக்கும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு மாதம் 7,000 என்ற அளவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் `குறைந்தபட்சக் கூலி’ கொடுக்க வேண்டும்.

8. வெளிநாட்டு நிதி ஒழுங்குபடுத்துதல் சட்டத்தில் (FCRA – Foreign Contrubution Regulation Act) புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தற்போதைய அளவில் தளர்த்திவிட்டு, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி அளிப்போரிடம் பணம் வாங்குவதற்கு வழி திறக்கவேண்டும். அவை முறையாக செலவழிக்கப்படுவதையும் உறுதி செய்யவேண்டும்.

9. கொரோனா தொற்றை தடுப்பதற்கு என்னென்ன செயல்கள் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்க வேண்டும்.

10. அனைத்துக் கட்சிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்து அவர்களின் ஆலோசனைகள், கொரோனாவை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், அரசின் முடிவுகள் குறித்து அந்தக் குழு ஆய்வு செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தித் தரவேண்டும். பல மாநிலங்களில் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த என்னென்ன வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை அந்தக் குழுவிடம் அளித்து ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.

மேலும், கொரோனா பெருந்தொற்றைத் தடுக்க அரசு மற்றும் நிர்வாக அளவில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நாங்கள் கடிதத்தில் விரிவாகக் கூறியிருக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும்விட மிக முக்கியமானது என்னவென்றால், இந்தக் கொரோனாவால் தங்களின் உறவுகளை இழந்து தவிக்கின்ற மக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக இந்த அரசு நடந்து கொள்ள வேண்டும்.

பரிவு மற்றும் கவனத்துடன் பார்த்துக் கொள்ளுதல் என்பதுதான் மத்திய அரசின் முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும். பிரதமர் அவர்களே, எந்தளவுக்குத் திறமையாக இந்தச் சிக்கலை நீங்கள் தீர்க்க முயல்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் வரலாறு உங்களை வகைப்படுத்தும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : பிபிசி தமிழ்

குறிப்பு :
பி.பி.சி. தமிழ் இணையதளத்தில் வெளியான இக்கடிதத்தின் தமிழாக்கத்தை அதன் முக்கியத்துவம் கருதி, அப்படியே இங்கு வாசகர்களுக்கு மறுபதிவு செய்துள்ளோம் !

disclaimer

மோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் !!

மோடியின் மன் கி பாத்  : (சுட்ட வடை) 
கொரோனா பெருந்தொற்றையும் இயற்கைப் பேரிடரையும் இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளது !

இந்தியாவின் மன் கி பாத் : (ஒரிஜினல் கதை)

மோடி எனும் பேரிடர்,

♠ முதல் அலையில் டிரம்பை வரவழைத்து பெருங்கூட்டம் கூட்டியது !
♠ தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்தது !!
♠ இரண்டாம் அலையில் மாநில தேர்தல்கள் – தேர்தல் பிரச்சாரக் கூட்டம் !!
♠ கும்பமேளாவுக்கு அனுமதி அளித்தது !!
♠ ஆக்சிஜன் இன்றி மக்கள் தவிக்கையில் ரூ. 20,000 கோடியில் சென்ட்ரல் விஸ்டா !!
♠ மக்கள் கொரோனாவில் சிக்கியிருக்கையில் புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை சட்டத்தை திணித்தது !!

கருத்துப்படம் :

கருத்துப்படம் : வேலன்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை புறக்கணித்த ஆப்பிரிக்க துறைமுகத் தொழிலாளர்கள் !!

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனவெறி ஆக்கிரமிப்பு போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனிய தொழிற்சங்கங்களின் பொது கூட்டமைப்பு (BGFTU) இஸ்ரேலின் பொருட்களை கப்பல் துறைமுகங்கள், விமான நிலையங்களில் இருந்து இறக்கவும் ஏற்றவும் எதிர்ப்பு தெரிவிக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும் BDS (Boycott, Divestment and Sanctions movement – பாலஸ்தீனத்துக்கு ஆதரவான சர்வதேச இஸ்ரேல் புறக்கனிப்பு இயக்கம்) இயக்கத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனை சர்வதேச துறைமுகத் தொழிலாளர்கள் சங்கம் (International Dockworkers Council – IDC) ஆதரித்த நிலையில், தென்னாப்பிரிக்க துறைமுக நகரமான டர்பனில் தென்னாப்பிரிக்க போக்குவரத்து மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த (SATAWU) துறைமுகத் தொழிலாளர்கள் இஸ்ரேலிய கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

படிக்க :
♦ சத்குருவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் !
♦ தடுப்பூசி வணிகம் : மக்களின் மரணத்தில் நடத்தப்படும் கொள்ளை !

மேலும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேலின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க அழைப்பு விடுக்கும் வகையில் மே 23-இல் டர்பன் நகர கடற்கரையில் 10,000–க்கும் மேற்பட்டோர் பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். (2008 – 2009 ஆண்டுகளிலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலின் கப்பல்களை தென்னாப்பிரிக்க துறைமுகத் தொழிலாளர்கள் புறக்கணித்தனர்)

இதேபோல், இத்தாலிய நகரமானா லிவோர்னோவிலும் (Livorno) துறைமுகத் தொழிலாளர்கள் இஸ்ரேல் அரசின் ஜிம் ஷாங்காய் (Zim shanghai) கப்பலில் ஆயுதங்களை உள்ளடக்கிய சரக்கினை ஏற்றாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம்

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆயுதங்கள் இருப்பதால், ”லிவோர்னோ துறைமுகம் பாலஸ்தீனிய மக்கள் படுகொலைக்கு ஒருபோதும் துணையாக இருக்காதுஎன்று இத்தாலியின் யூ.எஸ்.பி (Union Sindacale di Base) தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் லண்டன், நியூயார்க், ஸ்பெயின், சோமாலியா, லிபியா, ஈரான், பிரிட்டன், அயர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள மக்கள் தனியாகவும் சில இடங்களில் துறைமுகத் தொழிலாளர்களோடு இணைந்தும் Boycott Israel” போன்ற பல்வேறு முழக்கங்களுடன் பேரணிகள் நடத்தியுள்ளார்கள்.

தேசியவெறியைத் தூண்டிவிட்டு நடத்தப்படும் போர்களுக்கு எதிரான போராட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதற்கு வாய்ப்புள்ள ஒரே வர்க்கம் தொழிலாளி வர்க்கம் தான். போரை நடத்தும் கார்ப்பரேட் நிதியாதிக்கக் கும்பலுக்கு நெருக்கடி கொடுப்பது என்பது தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமே சாத்தியம். இத்தகைய சர்வதேச தொழிலாளர்கள் மற்றும் மக்களின் ஒற்றுமையும் ஆதரவும்தான் பாலஸ்தீனிய மக்களின் விடுதலைக்கு உரமூட்டும் !!


பூபாலன்
செய்தி ஆதாரம் : MIDDLE EAST EYE, Aljazeera