Tuesday, July 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 209

மாதவிடாயும்  சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா

என் சக தோழிகளுக்கும், தாய்மார்களுக்கும் ஒவ்வொரு முறையும் மாதவிடாய் உங்கள் வீட்டின் கதவுகளை தட்டும்போது உங்கள் கையில் இருக்கும் நாப்கின் அவ்வளவு எளிதாக உங்கள் கையில் வந்துவிடவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். நமது முன்னோர்கள், தங்களது மாதவிடாய் தருணங்களை மிகக் கடினமானதாகவே கடக்க வேண்டியிருந்தது.

மாதவிடாயின் கடினமான தருணங்களைக் கடக்க மரத்தூள்(தவிடு), புல், மணல், சாம்பல், கிழிந்த துணி என பலவற்றையும் பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர் தான் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, சானிடரி நாப்கினை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

பண்டைய காலத்தில் பெண்களின் மாதவிடாய் பயன்பாட்டிற்கு கந்தலும் கிழசலும் (துணிகள்)  பயன்படுத்தப்பட்டது. மாதவிடாயின் போது கந்தல் துணி பயன்படுத்தப்பட்டதற்கான ஆவணப்படுத்தப்பட்ட முதல் சில சான்றுகளில் ஒன்றாக, கி.பி 4 ஆம் நூற்றாண்டில், பிரபல கிரேக்க சிந்தனையாளர் ஹைபதியா, ஒரு ஆண் அபிமானியை தடுத்து நிறுத்த  ஒரு பயன்படுத்தப்பட்ட, மாதவிடாய் இரத்தம் தோய்ந்த கந்தல் துணியை வீசினார் என்பது வரலாற்றில் பதியப்பட்டுள்ள செய்தி.

பல்லாண்டுகளுக்கு முன்னர்  சீனாவில், மணல் நிரப்பப்பட்ட துணியை சானிட்டரி பேடாகப் பெண்கள் பயன்படுத்தினர். துணி ஈரமாக இருக்கும்போது, அதில் இருக்கும் மணலினை அகற்றிவிட்டு, பின்னர் அந்த துணியை துவைத்து, அடுத்த முறை பயன்பாட்டிற்காக அதே துணியை பயன்படுத்தினார்கள்.

பண்டைய எகிப்தில் தண்ணீரில் ஊறவைத்த ‘பாப்பிரஸ்’ (ஒரு வகை கோரை புல்லால் ஆன தாள்) பயன்படுத்தப்பட்டது. பின்னர் பாசி மாதவிடாக்கான துணிக்குள் பயன்படுத்தப்பட்டது! பாசியை கொண்டுவந்து , அவற்றை ஒரு துணியுள்  மடித்து, பின்னர் தங்கள் உள்ளாடைகளுக்குள் அந்தத் துணியை பெண்கள் வைத்திருப்பர். .

ஆப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும், பெண்கள் புற்களை பேடுகளாகப் பயன்படுத்தினர். ஆனால் அது உதிரக் கசிவை தடுப்பதற்கான பாதுகாப்பான வழிமுறையல்ல. ஏனெனில் வறண்ட பகுதிகளில் கடினமானதாக புல் வளர்வதால்  சருமத்திற்கு எளிதில் காயங்களையும், தீங்கையும் விளைவித்தது.

ரோமானிய பெண்கள் ஆடுகளின் கம்பளியை உருட்டி பயன்படுத்தினார்கள். கம்பளி மிகவும் கனமானதாக இருப்பதோடு நாற்றம் வீசக்கூடியதாக இருக்கும். இது அந்தப் பெண்களுக்கு நிச்சயமாக வேதனைக்குறியதே.

கிரேக்கர்கள் சிறிய மரத் துண்டுகளை பஞ்சு கொண்டு கட்டி பின்னர் அதை தங்கள் உடலில் செருகினர். உண்மையில் மரம் இரத்தத்தை உறிஞ்சவில்லை, ஆனால் பஞ்சு செய்தது. அதில் இருக்கும் மரத் துண்டுகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தின.

குளிர்ந்த காலநிலையில் வாழ்ந்த பெண்கள் அந்த நாட்களில் விலங்குகளின் ரோமங்களை நம்பியிருந்தனர். குளிர்ந்த பகுதிகள் பனியால் சபிக்கப்படுவதால், உயிர்வாழ்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டுமே இருந்தது. ஆகவே, பெண்கள் தங்கள் உதிரப் போக்கை தடுக்க, கொல்லப்பட்ட விலங்குகளின் ரோமங்களைப் பயன்படுத்தினர்.

இவை அனைத்துமே பெண்களுக்கு சுகாதார சிக்கல்களையும், பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துபவையாகவே இருந்தன. அவை உதிரப் போக்கை ஓரளவிற்குத் தடுத்தாலும். கடுமையான அசௌகரியங்களோடு தான் அவர்களது மாதவிடாய் நாட்கள் கடந்தன.

வர்க்க சமூகத்தில் சுரண்டப்படும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் எதையும் பயன்படுத்தவில்லை. உதிரப் போக்கை மறைக்கவும் அவர்கள் கவலைப்படவில்லை. அவர்களுக்கு அதற்கான வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லை. அவர்களுக்கு மிக மோசமான சூழலே  நிலவியது.

1800-களில் பருத்தி மற்றும் கம்பளி பெருமளவில் பெண்கள் பயன்பாட்டிற்கு வந்ததன் விளைவாக, அது குறித்து சிந்திக்க அவர்களைத் தூண்டியது. 1850-களின் முற்பகுதியில் மக்கள் வணிக ரீதியாக பல்வேறு வகையான மாதவிடாய் தயாரிப்புகளை பரிசோதிக்கத் தொடங்கினர். இரத்த கசிவை உறிஞ்ச உள்ளாடைகளுக்கும் வெளிப்புற ஆடைக்கும் இடையில் ஒரு மெல்லிய அடுக்கு ரப்பரை வைக்கும் யோசனை எழுந்தது.

முதலாம் உலகப்போரில் செவிலியர்கள் பாண்டேஜ்களை கண்டுபிடித்து போரினால் ஏற்படும் காயங்களில் உண்டாகும்  ரத்த போக்கை நிறுத்த பாண்டேஜ்களை பயன்படுத்தினர். இது இரத்தத்தை உறிஞ்சுவதால், செவிலியர்கள் தங்கள் மாதவிடாய் காலகட்டத்தின் உதிரப் போக்கை உறிஞ்சுவதற்கு ஏன் இதைப் பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தார்கள். இதுவே நாம் இன்று பயன்படுத்தும் சானிடரி நப்கின்கான தொடக்கம்.

நாம் தற்போது பயன்படுத்தும் சானிட்டரி பெல்ட்டுகளுக்கு முன்னோடியாக எலாஸ்டிக் பெல்ட்டில் பஞ்சு அடைத்து இருபக்கமும் இறுக்கி பிடிக்க ஒரு கிளிப்பை அக்காலகட்டங்களில் பயன்படுத்தினர். இந்த வகையான சானிடரி பேடனது 1800-களில் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 1970-ம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தது . இந்த சானிடரி பெல்டை கண்டுபிடித்தவர் ஒரு பெண் என்பது கூடுதல் சிறப்பு. அவரது பெயர் மேரி பீட்டிரிஸ் டேவிட்சன்.

இவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க பெண். சிறுவயது முதல் விளையாட்டாக இவர் கண்டுபிடித்தவை பல. இன்று நாம் எதார்த்தமாக கதவுகளில் சத்தம் வராமல் இருக்க, எண்ணெய் விடும் நடைமுறையும் இவரது கண்டுபிடிப்புகளில் ஒன்று. மேரி பீட்டிரிஸ் பெண்களின் மேம்பாட்டிற்காக  அவர்களின்  பிரச்சனையை கூர்ந்து ஆய்ந்து கண்டுபிடித்த கண்டுபிடிப்பாக சானிடரி பெல்ட் இருந்தது.

சானிடரி பெல்ட் மற்றும்  டிஷ்யூ ஹோல்டருக்கான காப்புரிமையை முதன் முதலில் பெற்றவரும் இவரே. பெல்ட்டுடன் இணைக்கப்பட்ட ஈரப்பதம் இல்லாத ஒரு துணி பையை சேர்த்து ஒரு பை போன்ற வடிவத்தில் உருவாக்கினார்.  ஆனால் சானிடரி நாப்கினில் பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு வரலாறு கொடுத்த இடம் மேரி பீட்டிரிஸ்சுக்கு ஏன் கொடுக்கவில்லை?

மேரி முதலில் சானிடரி பெல்ட்க்கு காப்புரிமை பெற்றபோது, ஒரு நிறுவனம் அவருடன் பேச ஒரு பிரதிநிதியை அனுப்பியது. அவர் கருப்பினத்தவர் என்பது தெரிந்ததும், அதை புறக்கணித்தது. ஆனால் மேரி துவளவில்லை. அவரின் கண்டுபிடிப்பு அவருக்கு பொருள் ஈட்டிதரவில்லை என்றாலும், யாரும் காப்புரிமையை எடுத்து நாப்கின்  உற்பத்தியை தொடங்குவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே இதை கண்டுபிடித்த பெருமைக்கு உரியவர். முதன் முதலில் ஐந்து கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கோரி தாக்கல் செய்த கறுப்பின பெண்ணும் இவரே.

மேரி பீட்ரைஸ் டேவிட்சன் முதல் தலைமுறை பயன்படுத்தும் இந்த சானிட்டரி பெல்ட்டை  கண்டுபிடித்தது பெண்களின் தேவையில் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. இந்த பெல்ட்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை உலகளவில் பயன்பாட்டில் இருந்தாலும் அது ஏழை எளியவர்களின் கைக்கு கிடைக்காது போனது.

“சேனிட்டரி பேட்”களை வணிகமயமாக்குவதற்கான முயற்சிகளை 1888-ம் ஆண்டில் சவுதல் பேட்(Southall Pad) என்ற தயாரிப்பு  நிறுவனம் மேற்கொண்டது. இதேபோல், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் 1890-களில் லிஸ்டரின் டவல் (Lister’s Towel): லேடிஸ் சானிட்டரி டவல்ஸ் என்ற ஒன்றை உருவாக்கியது. இந்நிறுவனங்கள் மேற்குலக நாடுகளை மட்டுமே கவனம் செலுத்தினர். இந்தியா போன்ற கீழை நாடுகளுக்கு தாமதமாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்கால சானிட்டரி பேட்களுக்கு மிக நெருக்கமான முன்மாதிரி 1921-ம் ஆண்டில் காட்-டெக்ஸ் பேடு அமெரிக்க சந்தைகளில் நுழைந்தது.  முதலாம் உலக போரில் காயமடைந்த வீரர்களுக்குப் பயன்படுத்தப்படும் பருத்தி-அக்ரிலிக் கலவையுடன் உறிஞ்சக்கூடிய கட்டுகள், அவர்களின் மாதவிடாய் ஓட்டத்தை சமாளிக்க உதவும் என்பதை செவிலியர்கள் உணர்ந்தபோது அதே உபகரணம் பின்னர், காட்-டெக்ஸ் (Cotton-Texture) – (COT-TEX) என அறிமுகப்படுத்தப்பட்டது,

நீண்ட காலமாக, பேடுகள் சில்லறை விற்பனை என்றாலும் அது ஒரு  உயர் வர்க்க பெண்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஏனென்றால் மற்றவர்கள் அவற்றை வாங்க முடியாத நிலை. காரணம் அதன் விலை அதிகமாக இருந்தது. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் நிலை  இப்படித்தான் இருந்தது.

இந்தியாவிலும் இன்றளவும் இதே நிலைமை தான்.  இந்தியாவில், 12  சதவிகித பெண்கள் மட்டுமே சானிட்டரி பேட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஏ.சி. நீல்சனின் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இன்றும் மணல் மற்றும் இலைகள் போன்ற பாதுகாப்பற்ற பொருட்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை இந்தியாவில் இன்றும்  உள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, அமிர்தசரஸில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மணல் நிரப்பப்பட்ட சாக்ஸை பேட்களாகப் பயன்படுத்துகின்றனர் என்பதும் இது பெரும்பாலும் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற மருத்துவ பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்றும் தெரியவருகிறது.

படிக்க :
♦ ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !
♦ பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா

இன்றும் இந்திய குடும்பங்களில்  மாதவிடாய்  பேசுபொருளாக இருப்பது இல்லை. அது எதோ தீட்டாக பார்ப்பது அல்லது பெண்களின் பிரச்சினை என்று மட்டுமே அணுகும் போக்கு தான் நிலவுகிறது. நவ நாகரீகப் பெண்ணாக இருந்தாலும் நாம் பயன்படுத்தும்  நாப்கின், கருப்பு பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டுதானே கடைகளில் தரப்படுகிறது ?

அடுத்த முறை கடைக்கு செல்லும் போது கருப்பு பிளாஸ்டிக் கவர் இல்லாமல் வாங்குங்கள். அது மறைக்கும் பொருளும் அல்ல; மறைக்க வேண்டிய தேவையுமில்லை.

சிந்துஜா 

சமூக ஆர்வலர்.

கொரோனா : தடுப்பூசி கொள்கையின் அரசியல் பொருளாதாரம்

டுப்பூசிக் கொள்கையின் சாரம் என்பதுவியாபார ஆபத்துகளை சமூகமயமாக்கு, லாபங்களை தனியார்மயமாக்குஎன்பதுதான். பெரிய மருந்து நிறுவனங்கள் எப்போதும் சொல்வது, “நாங்கள் பல கோடிக்கணக்கான பணத்தை ஆராய்ச்சிகளுக்கு செலவளித்திருக்கிறோம், அதனால் காப்புரிமையை நீக்குவது எதிர்கால ஆராய்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக அமையும்என்பதுதான்.

பெருந்தொற்று போன்ற பொது சுகாதாரம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்படும் போது, பெரிய மருந்து நிறுவனங்கள் சந்தையில் லாபத்திற்கான வாய்ப்புகள் இருக்குபோது மட்டும்தான் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மருந்து கண்டுபிடிப்பதற்கான செலவீனங்களையும், சந்தையில் ஏற்படும் நஷ்டத்தையும் ஈடுசெய்யும் வகையில் இவர்களுக்கு மக்களின் வரிப்பணம் மானியங்களாக வழக்கப்படும்.

படிக்க :
♦ கொரோனா : ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்புக்குள் மூச்சுத் திணறும் மனித சமூகம் !
♦ “நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”

ஆனால், அந்த மருந்து விற்பனை மூலம் கிடைக்கும் கொள்ளை லாபங்கள் இந்த நிறுவனங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கும். இதைத்தான், “வியாபார ஆபத்துகளை சமூகமயமாக்குவது, லாபங்களை தனியார்மயமாக்குவதுஎன்று சொல்கிறோம்.

Moderna நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து இரண்டு பில்லியன் டாலர்கள் மானியம் பெற்றிருக்கிறது. BioNtech நிறுவனம் ஜெர்மனி அரசாங்கத்திடமிருந்து அரை பில்லியன் யூரோ பெற்றிருக்கிறது. Oxford நிறுவனம் இங்லாந்து அரசாங்கத்திடமிருந்து உதவி பெற்றிருக்கிறது. தகிர் அமின் 2018ஆம் ஆண்டிலே சுட்டிக்காட்டியது போல், “புறக்கணிக்கப்பட்ட நோய்கள் (Neglected Diseases) பற்றிய உலகளவிலான அடிப்படை ஆராய்ச்சிகளுக்கும், மருந்து கண்டுபிடிப்புக்கும் செலவிடப்பட்டது வெறும் நான்கு பில்லியன் டாலர்கள்தான். இந்தத் தொகையில் 17 சதவீதம். அதாவது வெறும் 650 மில்லியன் மட்டுமே தனியார் மருந்து நிறுவனங்களிடம் இருந்து வந்திருக்கிறது. இது அவர்களின் வருவாய் கடலில் ஒரு துளி மட்டுமே.

உலக வர்த்தகக் கழகம், இந்த மருந்து நிறுவனங்களுக்கு நிறைய தள்ளுபடிகள் கொடுத்திருப்பினும் இவர்கள் மலையளவில் லாபம் பார்ப்பதில் குறியாக இருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசி மூலமான வருவாய்க்காக Pfizer நிறுவனம் 15 பில்லியன் டாலர்களும், Moderna நிறுவனம் 18.4 பில்லியன் டாலர்களும் இலக்கு வைத்திருக்கின்றனர். ஆனால், அடிப்படை ஆராய்ச்சி, மருந்து கண்டுபிடிப்பு, அந்த மருந்தை சந்தைக்கு கொண்டு வருவது என அனைத்து வகையிலும் கணிசமான நிதியுதவி வெளிப்படையாக அரசாங்கங்களால் வழங்கப்பட்ட போதிலும் இந்த மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் சேர்ப்பதில் எந்த விதத்திலும் சளைத்துப் போகவில்லை.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவது மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக, தொற்றுக்கு பெரிதும் ஆட்படும் ஆபத்தில் இருக்கக் கூடிய முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்தனர். பிறகு, இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. பின்னர், மூன்றாம் கட்டமாக மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பெருமையடித்துக் கொண்டது மோடி ரசு. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட 60 வயது கடந்தோர் இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கும் சமயத்தில் இந்த மூன்றாம் கட்ட அறிவிப்பு வெளியானது. மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் சரியாக வழங்கப்படாததால், “நாங்கள் எங்கள் மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிலையில் இல்லைஎன்று மாநில அரசுகள் தங்கள் இயலாமையை ஒப்புக் கொண்டது. இப்படியொரு நடைமுறை சாத்தியமற்ற அறிவிப்பை மோடி வெளியிட்டதற்கு பின்னால் மேற்குவங்கத் தேர்தல் பிரச்சாரம் மட்டுமே இருந்தது.

மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாதது, ஆக்சிஜன் இல்லாதது, போதிய வெண்டிலேட்டர் இல்லாமை, ஆம்புலன்ஸ் வசதி போதிய அளவில் இல்லாதது, பிணத்தை எரிக்க இடுகாட்டில் இடம் இல்லாமல் மக்கள் தங்கள் உறவினர்களின் இறந்த உடல்களுடன் வரிசையில் நிற்கும் இந்த நிலையில் இந்த தெளிவில்லாத தடுப்பூசிக் கொள்கையால் பயனற்ற ஊகங்களும், கள்ளச் சந்தையும், முறைக்கேடுகளும் தான் அதிகரிக்கும். இந்த சூழலை, தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் பெரும் லாபத்தை சம்பாதிக்க பயன்படுத்திக் கொள்வார்கள்.

பெருந்தொற்றால் மக்கள் தினம் தினம் இறந்துக் கொண்டிருக்கும் இந்த நிலைமையில், “தடுப்பூசியின் விலையை, அதன் கொள்முதலை, அதை தகுதியுள்ளவர்களுக்கு செலுத்துவதை வெளிப்படையாகவும் நெகிழ்வுத் தன்மையுடையாகவும் ஆக்கப்படும்என்கிறது இந்திய அரசு. அதாவது, தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்களே அதன் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிறது இந்திய அரசு.

Serum Institute of India-வின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனவாலா சொல்வது போல் மத்திய அரசிடம் விற்கப்படும் 200 ரூபாய் மதிப்புள்ள தடுப்பூசி தனியாரிடம் ரூபாய் 1000-த்திற்கு விற்கப்படும். அதாவது, ஒரே தடுப்பூசியை மத்திய அரசிடம் ஒரு விலைக்கு, மாநில அரசுகளிடம் மற்றொரு விலைக்கும், தனியாரிடம் வேறொரு விலைக்கும் விற்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதியளிக்கும் வகையில் அமைந்துள்ளது மோடி அரசின் தடுப்பூசிக் கொள்கை. ஒரே தடுப்பூசிக்கு மூன்று விலைகள்!

இதற்கிடையில் தடுப்பூசி திருவிழா என்ற ஒன்றை ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை அறிவித்தார் மோடி. ஆனால், அன்றைய தினங்களில் அதற்கு முந்தைய நாட்களில் செலுத்தப்பட்டதை விட குறைவான தடுப்பூசியே செலுத்தப்பட்டது. உண்மையான மதிப்பீட்டின் படி, இந்தியாவின் தற்போதைய தடுப்பூசி செலுத்தும் வேகத்தை கணக்கில் கொண்டு பார்த்தால், தேவைப்படும் இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதுதான் நிதர்சனம். பெருந்தொற்றை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் பிரதமர் தனது இருப்பை காட்டிக் கொள்ள மீண்டும் மீண்டும் சாத்தியமில்லாத வெற்றுத் திட்டங்களை அறிவிப்பது இந்த சூழலில் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும்.

கொரோணா இரண்டாம் அலையில், இளைஞர்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அந்த குடும்பத்தின் மற்றவர்கள் அனைவரும் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கொரோணா நோய்க்கானப் பரிசோதனைக்காக, மருத்துவமனையில் படுக்கை கிடைப்பதற்காக, ரெம்டெசிவிர் மருந்துக்காக, ஆக்சிஜன் சிலிண்டருக்காக, இறுதியாக இறந்தவர்கள் உடலை தகணம் செய்வதற்கு என அனைத்திற்கும் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், கள்ளச் சந்தையில் வியாபாரம் அமோகமாக நடக்கிறது.

இந்தியாவின் தடுப்பூசிக் கொள்கை என்பதுகோவில் தரிசனம்போல்தான் இருக்கிறது. ஒருவரால் ரூபாய் 1,000 கொடுக்க முடிந்தால் அவருக்கு தனிச்சிறப்பான வரிசை. ரூபாய் 500 மட்டுமே கொடுக்க முடிந்தால் அவருக்கு வேறொரு வரிசை. காசில்லாதவர்களுக்கு மற்றொரு வரிசை என மக்களின் உயிர்களை காசை வைத்து தரம் பிரிந்து வைக்கும் அவலம் இங்கே நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி நிறுவனங்களின் வருவாய் இந்த காலத்தின் இரண்டு மடங்கிற்கும் மேலே செல்லும் என்று முன்னாள் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் சொல்கிறார்.

மத்திய அரசு ஒரு தடுப்பூசியை, அதை தயாரிக்கும் நிறுவனத்திற்கான லாபத்தையும் சேர்த்து ரூபாய் 150-க்கு மொத்தமாக கொள்முதல் செய்தால், இதற்காக செலவு ரூபாய் 19,500 கோடி மட்டுமே. ஆனால், இந்த சந்தை துண்டு துண்டாக்கப்பட்டு மாநிலங்களை தனித்தனியாக தடுப்பூசி ஒன்றை ரூபாய் 430 வீதம் கொள்முதல் செய்ய சொல்லும் போது அதற்கான செலவு ரூபாய் 42,000 கோடி ஆகிறது. ஒரு தடுப்பூசியின் விலை ரூபாய் 200 இருக்கும்போதே, சர்வதேச அளவிலான கொள்முதலில் அதுவே விலை யர்ந்த கொள்முதலாக இருக்கும். இந்த ரூபாய் 200 விலையிலான தடுப்பூசி மூலமாகவே தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமான லாப ஈட்ட முடியும். மேலே குறிப்பிட்ட ஒரு தடுப்பூசியின் விலை ரூபாய் 430 என்பது மாநிலங்களின் கொள்முதல் விலையை ஊகித்து மட்டுமே. இந்த தடுப்பூசிக் கொள்கையின் படி தனியாருக்கு விற்கப்படும் விலை ரூபாய் 1000 முதல் 1200 வரை இருக்கலாம். மேலும், இந்த தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பு அளவை 60 மில்லியன் டோஸில் இருந்து 100 மில்லியனாக உயர்த்த இந்திய அரசாங்கமும் GAVI அமைப்பும் இணைந்து Serum Institute of India-விற்கு ரூபாய் 4200 கோடி நிதியுதவி அளித்துள்ளது. Bharat Biotech நிறுவனத்தின் தயாரிப்பு அளவை 10 மில்லியனில் இருந்து 700 மில்லியனாக உயர்த்த ரூபாய் 1500 கோடி நிதியுதவி அளித்துள்ளது இந்திய அரசாங்கம். மோடியின் தடுப்பூசிக் கொள்கை தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வதாக இருக்கிறது என்பது இங்கே அப்பட்டமாக வெளிப்படுகிறது.

Serum Institute of India தலைமை செயல் அதிகாரி அடர் பூனவாலா, ஒரு பேட்டியில் கூறுகையில், “ ஒரு தடுப்பூசியை ரூபாய் 150க்கு விற்பனை செய்தாலே லாபம் ஈட்ட முடியும். ஆனால், அதீத லாபம் (Super Profit) ஈட்டுவதுதான் எங்கள் லட்சியம். நடப்பில் ஈட்டப்படும்சாதாரணலாபத்தால் நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் திருப்தி அடைய முடியும். அந்த அதீத லாபத்தை ஒரு சில மாதங்கள் கழித்து பின்நாட்களில் நாங்கள் ஈட்டுவோம்என்றார். ஆனால், அந்த நாட்கள் வரை மோடி அவரை காத்திருக்க வைக்க விரும்பவில்லை போலும். உடனே தடுப்பூசிக் கொள்கையை தனியார் லாபவெறிக்கு ஏற்போல் திறந்து விட்டார்.

சில காலம் சென்ற பின்பு Business Standard-க்கு பேட்டி அளித்த அடர் பூனவாலா, “சிறப்பு விலையில் ஒரு தடுப்பூசி டோஸ் ரூபாய் 200 என்பது அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் முதல் 100 மில்லியன் தடுப்பூசிகளுக்கு மட்டுமே. இப்போது எங்களிடம் 50 மில்லியன் தடுப்பூசிகள் இருப்பு இருக்கிறது. அதை சிறப்பு உரிமத்தின் அடிப்படையில் அரசாங்கத்திடம் மட்டுமே கொடுப்போம். அதை சந்தையிலோ அல்லது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ மாட்டோம்என்றார். ஆனால், Serum Institute of India ஏற்றுமதி செய்தது என்பதே உண்மை. ஒருகட்டத்தில், உள்நாட்டு விற்பனையை விட ஏற்றுமதி அதிகரித்தது. Serum Institute of India தனது உற்பத்தி திறனை மாதத்திற்கு 110 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கும் விதமாக உயர்த்த ரூபாய் 3000 கோடி தேவைப்படுவதாக கூறியது. ஆனால், அதற்கு ரூபாய் 4200 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

இதேபோல் Bharat Biotech நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, கிருஷ்ணா எல்லா கூறுகையில், ”அந்த நிறுவனம் தடுப்பூசியை கண்டுபிடிக்க, மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் வரை ரூபாய் 350 கோடி செலவு செய்திருப்பதாககூறுகிறார். ஆனால், இந்த நிறுவனத்தின் உற்பத்தி திறனை தற்போதைய நிலையான ஆண்டுக்கு 60 மில்லியனில் ருந்து 700 மில்லியன் வரை தடுப்பூசிகள் தயாரிக்கும் வண்ணம் உயர்த்த ரூபாய் 1500 கோடி அரசாங்கம் அளித்துள்ளது.

இந்த கொள்கையின் விளைவாக தனியார் துறை தடுப்பூசி வழங்கும் முக்கிய புள்ளியாக வளர வாய்ப்பிருக்கிறது. மாநில அரசுகளின் பங்கை இது வெகுவாக குறைக்கும். இதனால், பெரும்பான்மையான மக்கள் ரூபாய் 1000-க்கு மேல் செலவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். மேலும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள், தடுப்பூசி கண்டுபிடிப்பிற்காக செலவு செய்ததற்கு சம்பந்தமில்லாமல் விலையை நிர்ணய செய்யும் நிலையை உண்டாக்குகிறது. உதாரணமாக, Serum Institute of India தயாரிக்கும் Covishield தடுப்பூசியை Oxford பல்கலைக்கழகம் மற்றும் AstraZeneca என்னும் நிறுவனமும் இணைந்துதான் கண்டுபிடித்தது. இதனால், Serum Institute of India மருந்து மேம்படுத்தும் (Product Development) கட்டத்தில் குறைவாகவே செலவு செய்திருக்கும். ஆனால், இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் விலையை நிர்ணயிக்க இந்த கொள்கை அனுமதிக்கிறது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்யும் தடுப்பூசிக் கொள்முதல் மக்கள் வரிப் பணத்தின் மூலமாகவே சாத்தியமாகிறது. ஆனால், இந்த தடுப்பூசிக் கொள்கை மத்திய அரசையும் மாநில அரசுகளையும் வெவ்வேறு நிலைகளில் வைத்து அணுகுகிறது. இது தனியார் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்ய மக்களை ஏமாற்றும் வேலையாகும்.

தடுப்பூசியின் பயன்பாட்டை வலியுறுத்தும் அதே நேரத்தில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவை முற்றிலுமாக ஒழித்துவிடும் என்பதை அறிஞர்கள் ஏற்பதில்லை. அனைவருக்கும் பொது மருத்துவம், மலிவான விலையில் மருந்துகள், தட்டுப்பாடுகள் இன்றி மருத்துமனைப் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை அனைத்தையும் உறுதி செய்யாமல் கொரோனா தொற்றை வெல்ல முடியாது என்பதே நிதர்சனம். அதனால், தடுப்பூசியின் அளவான பயன்பாட்டை பற்றி பேச வேண்டியிருக்கிறது. தற்போதைய நிலையில் கிடைக்கும் தடுப்பூசிகள் கொரோனா தொற்றாமல் முழுவதுமாக தடுக்காது.

தடுப்பூசியால் தொற்றை குணப்படுத்தவும் முடியாது. கொரோனா தடுப்பூசி என்பது தொற்றின் தீவரத்தை குறைத்து, இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும். தடுப்பூசியின் காப்புத்தன்மை எப்போது செயலாற்றத் தொடங்கும் என்பது தெரியாது. எவ்வளவு நாட்கள் இந்த காப்புத்தன்மை நீடித்திருக்கும் என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது. நடப்பில் இருக்கும் எல்லா கொரோனா தடுப்பூசிகளும் நெருக்கடி நிலையை கணக்கில் கொண்டு அவசர காலத்தில் அனுமதியளிக்கப்பட்டது. அதனால் அவற்றின் செயல்திறன் பற்றிய முக்கிய தகவல்கள் இன்னும் கண்டறிப்படவில்லை.

படிக்க :
♦ கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!
♦ நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்

ஆனாலும், தடுப்பூசிகள் விலையை தங்கள் ஈட்ட நினைக்கும் அதீத லாபத்திற்கு ஏற்றாப்போல் தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பார்கள். இதற்காக மக்களின் பொது சுகாதாரத்தை பலி கொடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் இடையூறுகளையும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் கணக்கு எல்லாம்அதீத லாபம் (Super Profit)” மட்டுமே.

இந்த கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும். ஆனால் இந்த நிலைமையிலும் தடுப்பூசி விசயத்தில் தனியார் ஏகபோகத்தை தூக்கிப்பிடிக்கும் ஒரு கொள்கையை மோடி அரசு அமல்படுத்தி வருகிறது. மக்கள் உயிர்களை பழிகொடுத்து கார்ப்பரேட்களை கொள்ளையடிக்க அனுமதிக்கும் இந்த அவல நிலை மோடி அரசு கார்ப்பரேட் விசுவாசத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.


ராஜேஷ்
மூலக்கட்டுரை : countercurrents 

மோடியை அம்மணமாக்கிய கங்கா மாதா || கருத்துப்படம்

கொரோனா இரண்டாம் அலை பற்றிய அறிவியலாளர்களின் எச்சரிக்கையை புறக்கணித்து, தேர்தல் பிரச்சாரங்களையும், கும்பமேளாவையும் நடத்தியது பாஜக கும்பல்.

இதனால் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருக்கிறது. ஆனால், மோடி அரசோ கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் அக்கறையில்லாமல் செயல்படுகிறது. உ.பி பாஜக அரசோ கொரோனா மரணங்களை மிகவும் குறைத்துக்காட்டி வந்தது. இந்த நிலையில் கங்கை நதிக்கரையில் பிணங்கள் மிதந்து மோடி அரசின் பொய் செய்திகளை அம்பலப்படுத்தியுள்ளது.

தற்போது கங்கை நதிக்கரை முழுவதும் மரண ஓலங்கள்.

மோடியை அம்மணமாக்கிய கங்கா மாதா


கருத்துப்படம் : மு.துரை

நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்

நடப்பதோ தேசிய பேரழிவு !
மனித சமூகத்திற்கு எதிரான குற்றம் ! சாட்சிகளாக நாம் நிற்கிறோம் !!
தீர்ப்பை வரலாறு எழுதும் !!!

2017-ல் உ.பி. மாநில தேர்தலில், குறிப்பிட்டவர்களை ஒருங்கிணைத்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி பொது மேடையிலிருந்து அன்றைய மாநில அரசை – அப்போது அங்கு எதிர்கட்சி ஆட்சி நடந்து கொண்டிருந்தது -“முஸ்லீம்களை தாஜா செய்வதற்காக அவர்களின் கல்லறை இடங்களுக்கு, இந்துக்களின் தகனம் செய்யும் இடங்களுக்கு அளிப்பதைவிட அதிகமாக நிதிஒதுக்கீடு செய்வதாக” குற்றம்சாட்டினார்.

வழக்கமான ஆவேச கூச்சல் ஏளனபடுத்துவது ஆகியவற்றோடு அதில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு உணர்ச்சியாக கோபம் மற்றும் கூரிய ஈட்டி முனையாக, பாதி வாக்கியத்தை உச்சஸ்தாயிக்கு கொண்டு போய் நிறுத்தி; குரலை இறக்கும்போது, அச்சுறுத்தும் எதிரொலியோடு, கூட்டத்திலுள்ளவர்களின் மனதில் பீதியோடு கூடிய வெறுப்பு உணர்வுகளை கிளறிவிட்டார்.

படிக்க :
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !

♦ கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

“சம்ஸான்! சம்ஸான்!” மோடியின் பேச்சால் மயங்கி கிடந்த அவரை வழிபடும் கூட்டம் அவர் சொன்னதை எதிரொலித்தது.

அநேகமாக இப்போது அவர் மகிழ்ச்சியாக இருப்பார். இந்தியாவின் தகன மையங்களில் பிணங்கள் குவியலாக எரியூட்டப்படுவதிலிருந்து எழும் ஜுவாலைகளின் படங்கள் சர்வதேச செய்திதாள்களில் முதல்பக்க செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் அனைத்து “கப்ரிஸ்தான்கள்” (முஸ்லீம்களுக்கான கல்லறை) “சம்ஸான்கள்” (இந்துக்களின் தகன இடங்கள்) இதில் மக்கள்தொகையின் நேர்விகிதத்தில் அவை எதற்காக இருக்கின்றனவோ மற்றும் அங்கிருப்பவர்களின் பணிசுமையை காட்டிலும் பன்மடங்கு அதிகமாக ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கின்றன.

“1.3 பில்லியன் அதாவது 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை தனிமைபடுத்தமுடியுமா?” வாஷிங்டன் போஸ்ட் தனது அண்மை தலையங்கத்தில், ‘இந்தியாவின் வெளிப்படுத்தப்படாத பேரழிவு மற்றும் இந்திய எல்லைக்குள் உருவாகியிருக்கும் புதிய எளிதில் வேகமாக பரவக் கூடிய கோவிட் மாற்றுருக்களை கொண்டிருப்பது குறித்து’ தனக்கேயுரிய பாணியில் கேட்டிருந்தது. “அவ்வளவு எளிதானதல்ல” என பதிலளித்தது. சில மாதங்களுக்கு முன்னதாக ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் தாக்கியபோது சாத்தியமில்லாத இந்த கேள்வி அதே வழியில் முன்வைக்கப்பட்டது. ஆனால் நம்மை பொறுத்தவரை இந்த ஜனவரியில் நடைபெற்ற World Economic Forum கூட்டத்தில் நமது பிரதமர் வெளியிட்ட வார்த்தைகள் நம்மை எல்லோருக்கும் மேலானவர்களாக நிறுத்திக்கொள்ள உரிமை படைத்தவர்களாக்கியது.

உலகத்தொற்று இரண்டாம் அலை பரவலின் உச்சத்தில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மோடி பேசினார். அவரது பேச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த துயரத்தை பற்றியதான ஒரு வார்த்தை கூட இல்லை. அதற்கு பதில் ‘இந்தியாவின் உள்கட்டமைப்பு பற்றி மற்றும் கோவிட்டை எதிர்கொண்டதற்கான முன்தயாரிப்புகள் பற்றி’ பெருமிதமான வார்த்தைகளில் நீளமான உரையாக இருந்தது. நான் அந்த உரையை பதிவிறக்கம் செய்துள்ளேன். மோடியின் ஆதரவாளர்களால் வரலாறு திரும்ப எழுதப்படும்போது – சீக்கிரம் நடக்கும் – என்று எதிர்பார்க்கிறேன். இவையெல்லாம் மறைந்துவிடும் அல்லது கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.

அவரது பேச்சிலிருந்து சில துளிகள்.

“நண்பர்களே இந்த கவலையான பயங்கலந்த காலக்கட்டத்தில் 130 கோடி இந்தியர்களிடமிருந்து நம்பிக்கை, தன்னம்பிக்கை, உறுதி ஆகிய செய்திகளை கொண்டுவந்துள்ளேன். இந்த கொரோனாவால் மோசமாக பாதிக்கப்படக் கூடிய நாடாக இந்தியாதான் இருக்கும் என்று உலகம் முழுதும் எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா ஒரு சுனாமியாக இந்தியாவை தாக்கும் என்றும் இந்தியாவில் 70 முதல் 80 கோடி வரை பாதிக்கப்படுவார்கள் என்றும் 20 லட்சம் பேர் வரை இறக்கக்கூடும் என்றும் கூறினார்கள்.

நண்பர்களே இந்தியாவின் வெற்றியை மற்ற நாடுகளின் தன்மையோடு ஒப்பிட்டு தீர்ப்பு சொல்வது அறிவார்ந்த செயல் அல்ல. உலக மக்கள்தொகையில் 18 சதவீதத்தை கொண்டிருக்கக்கூடிய எங்கள் நாடு கொரோனாவை வலிமையோடு ஒடுக்கி ஒரு பேரழிவிலிருந்து மனித குலத்தை காப்பாற்றியிருக்கிறது”.

மோடி என்ற மந்திரவாதி கொரோனாவை மிக வலிமையுடன் ஒடுக்கி மனித குலத்தை காப்பாற்றியதற்காக பெருமையை தலைவணங்கி எடுத்துக்கொண்டார். இப்போது அது (கொரோனா இரண்டாவது அலை) திரும்பிவிட்டது. அதை நம்மால் ஒடுக்கமுடியவில்லை. நாம் ஏதோ கதிர்வீச்சுக்குள் இருப்பதை போல உணர்வதைப் பற்றி நம்மால் புகார் அளிக்கமுடியுமா? மற்ற நாடுகள் தங்கள் எல்லையை நமக்கு மூடத்தொடங்கிவிட்டதே மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றனவே? நாம் நம்முடைய தொற்றோடும் மற்றும் நமது பிரதமரோடும் கூடுதலாக எல்லா நோய்களோடும் அறிவியலுக்கு எதிரான அவர் அவரது கட்சி அது பிரதிநிதித்துவபடுத்தும் அரசியல் ஆகியவற்றோடு சேர்த்து மூடி தாளிடப்பட்டுவிட்டோமே?

கோவிட்-19ன் முதல் அலை கடந்த ஆண்டு இந்தியாவுக்குள் வந்த போதும் பிறகு அது குறைந்த போதும் மத்திய அரசும் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்களும் வெற்றி பெற்றுவிட்டதாக தலையில் கிரீடத்துடன் பெருமிதத்தில் இருந்தனர். “இந்தியாவுக்குள் யாரும் சுற்றுலாவை பெற்றிருக்கவில்லை” என்று தி பிரிண்ட் என்ற இணைய பத்திரிகையின் தலைமை ஆசிரியர் சேகர்குப்தா ட்விட் செய்திருந்தார். “ஆனால் நமது சாக்கடைகள் சடலங்களால் அடைத்துக்கொள்ளப்படவில்லை, மருத்தவமனைகள் படுக்கைவசதிகளை இழந்துவிடவில்லை, தகன மையங்கள் மற்றும் கல்லறைத்தோட்டங்கள் மரத்துண்டுகளையோ இடங்களையோ இழந்துவிடவில்லை.

இது உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லையென்றால் அதற்கான தரவுகளை கொடுங்கள். நீங்கள் உங்களை கடவுளாக நினைத்துக் கொண்டிருக்கவில்லையென்றால். “உணர்ச்சிகளற்ற அவமரியாதையான தோற்றங்களை அந்த பக்கம் தூக்கிப்போடுங்கள். இம்மாதிரியான பெரும்பாலான உலக தொற்று அபாயத்திற்கு இரண்டாவது அலை ஒன்றுண்டு என்று சொல்வதற்கு நமக்கு கடவுள் தேவைப்படுகிறாரா?

இது முன்னமே கணிக்கப்பட்டது ஆனாலும் விஞ்ஞானிகளையும் வைராலாஜிஸ்டுகளையும் அதன் தீவிரம் ஆச்சிரியபடவைத்தது. அதனால் பிரதமர் பெருமிதமாக கூறிய கோவிட்-19க்காகவே உருவாக்கப்பட்ட அந்த உள்கட்டமைப்பு எங்கே? மோடி தனது பேச்சில் பெருமிதத்தோடு மிகவும் உயர்த்தி பேசிய அந்த நோய்தொற்றை எதிர்த்த “மக்கள் இயக்கம்” எங்கே?

மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி இல்லை. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மிகவும் சோர்ந்துவிட்டனர். நண்பர்கள் வார்டுகளில் கவனிக்க மருத்துவ உதவியாளர்கள் இல்லாததையும் அங்கே உயிருடன் மருத்துவம் பார்த்துக் கொள்கிறவர்களை விட சடலங்கள் அதிகமாக இருப்பதையும் கதையாக கவலையோடு பேசிக்கொள்கிறார்கள். மருத்துவமனை வளாகங்களில் சாலைகளில் வீடுகளில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் தகன மையங்களில் சடலங்களை எரிக்க விறகில்லை. வனப் பாதுகாப்புதுறை நகர சாலையோர மரங்களை வெட்டுவதற்கு பிரத்யேகமான அனுமதி தர வேண்டியிருக்கிறது.

கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாத மக்கள் என்ன கண்ணில் படுகிறதோ அவற்றை உபயோகப்படுத்துகிறார்கள். பூங்காக்களும் கார் நிறுத்தமிடங்களும் தகன மையங்களாக மாறிவருகின்றன. நம் வானத்தில் கண்ணுக்கு தெரியாத யுஎஃப்ஓ (Unidentified flying object) கண்டுபிடிக்கபடமுடியாத பறக்கும் பொருள் நிறுத்தப்பட்டுள்ளதைப் போலவும் அது நம் நுரையீரலிலிருந்து காற்றை உறிஞ்சி எடுப்பது போல உணர்கிறோம். இம்மாதிரியான ஒரு வான்வழிதாக்குதலை நாம் எப்போதும் அறிந்திருக்கமாட்டோம்.

ஆக்சிஜன் தான் தற்போதைய இந்தியாவின் ‘புதிய மோசமான பங்குசந்தையின் புதிய கரன்சிகள்’. இந்தியாவின் உயரடுக்கு மூத்த அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்கள் வழக்கறிஞர்கள் ஆகியோர் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காகவும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காகவும் ட்விட்டர்களில் குறுஞ்செய்தி மூலம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்சிஜனுக்கான கள்ளச்சந்தை உப்பிக்கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் செறிவு எந்திரங்கள் மற்றும் மருந்துகள் வருவது மிக கடினமாக உள்ளது.

மற்றப்பொருள்களுக்கும் கூட சந்தைகள் இருக்கின்றன. ஒரு இலவச சந்தையின் அடிப்பாக முடிவில் சவக்கிடங்கில் துணிகளால் மூடப்பட்டு கிடத்தப்பட்டிருக்கும் உங்களது அன்பானவரை கடைசியாக பார்க்க ஒரு லஞ்சம் தேவைப்படுகிறது. இறுதி பிரார்த்தனைக்கு பாதிரியாருக்கு அவர் ஒத்துக்கொண்டதற்காக அதிகப்படியான பணம் தரவேண்டியிருக்கிறது. ஆன்லைன் மருத்தவ ஆலோசனை மையங்களில் இருக்கும்   இரக்கமற்ற மருத்தவர்கள் நம்பிக்கையிழந்து தவிக்கும் குடும்பங்களிடம் இருப்பதையும் பறித்துக்கொள்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்கை எடுத்து கொள்ளவேண்டி இருந்தால் இருக்கும் நிலம் வீடு அத்தனையும் விற்று கடைசி காசு வரை செலவு செய்யவேண்டியிருக்கும். உங்களை மருத்துவனைக்குள் அனுமதித்து சிகிச்சைக்கு சேர்த்துக்கொள்வதற்கு முன்பே வைப்புதொகைக்கு மட்டும் உங்கள் குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு பின்னால் போய்விடும். இவை எதுவும் அதிர்ச்சியின் முழு ஆழத்தையும் வரம்பையும் குழப்பத்தையும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இழிவுக்குள்ளாவதையும் வெளிப்படுத்துவதில்லை.

தலைநகர் டெல்லியில் ஒரு குடும்பத்திலிருந்த மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நகரில் அப்போதுதான் நோய்தொற்றின் ஆரம்பகாலகட்டம் என்பதால் அந்த தாயிக்கு மருத்தவமனையில் படுக்கை கிடைத்துவிட்டது. தந்தையார் நோய்தொற்றுடன் மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதை கண்டறிந்தனர். அவர் செயல்கள் வன்முறைகளாக மாறின. தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். அவருக்கு ஆன்லைனில் சிகிச்சை அளித்தவந்த மனநலமருத்துவரோ தனது நோயாளியின் நிலைக்காக வருந்தி அழுதார். ஏனெனில் அவரது கணவரும் இதே நோய்தொற்றிற்கு பலியாகியிருந்தார். கடைசியில் மருத்துவமனையில் சேர்ப்பதே நல்லது என ஆலோசனை தெரிவித்தார்.

ஆனால் அவர் ஒரு கோவிட் நோயாளி என்பதால் அவரை நேர்த்துக்கொள்ள மறுத்து விட்டனர். அதனால் அந்த மகனே தந்தையை வீட்டில் வைத்து சிகிச்கை இல்லாமல் மற்ற அத்தனை தேவைகளையும் நிறைவேற்றி பார்த்துக்கொண்டார். கடைசியில் அந்த தந்தை இறந்துவிட்டார். அவர் கொரோனாவால் இறக்கவில்லை. எவ்வித மருத்துவ உதவி இல்லாத காரணத்தால் மனஅழுத்தம் அதிகமாகி இரத்தஅழுத்தம் மிகுந்தநிலையில் இறந்துவிட்டார்.

சடலத்தை என்ன செய்வது? தகனமையங்களில் வரிசையாக சடலங்கள் காத்திருப்பில் இருந்தன. உதவி செய்ய யாரும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே அவர்களும் தங்களது முறைக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

தனிப்பட்ட சிலர் தங்களது முற்போக்கான கருத்துகளால் அநியாயங்கள் இழைக்கப்படும்போது குறிப்பாக குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் இருந்தவர்கள், ராஜதுரோக சட்டத்திற்கெதிரான மாணவர்கள் போராட்டத்தில் இருந்தவர்கள், அதனால் பல்வேறு வழக்குகள் மோடி அரசால் போடப்பட்டு எதிர்கொண்டிருப்பவரகள் தான் உதவிகள் செய்து தகனம் செய்தனர்.

இது ஒரு குடும்பத்தில் அல்ல. டெல்லியின் பெரும்பாலான குடும்பங்கள் அனுபவிக்கும் கொடுமைகள்! சமூகத்தை சுற்றி வளைத்து எங்கெங்கும் ஆக்ரமித்திருக்கும் மோடி அரசின் ஆக்டோபஸ் நிறுவனங்கள் எதுவும் களத்தில் இல்லை. அமைச்சர்கள் அதிகாரிகள் எதையும் காணவில்லை. இந்தியாவின் பொது சுகாதார அமைச்சகம் உட்பட செயலிழந்து விட்டதாக டைம்ஸ் பத்திரிகை விமர்சனம் செய்திருக்கிறது. மோடியை காணவில்லை என அவுட்லுக் அட்டைப்படத்தில் விளம்பரம் கொடுத்திருக்கிறது.

முற்போக்கான தனிநபர்கள் குறிப்பாக முஸ்லீம்கள் களத்தில் தன்னலம் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். நோயாளிகளுக்கு மசூதிகள் திறந்துவிடப்படுகின்றன. தகன மையங்கள் ஏற்பாடு செய்து தருகிறார்கள். மோடியின் சங்கிகள் காத்திருக்கிறார்கள் மீண்டும் ஒரு கலவரத்தின் மூலம் முஸ்லீம்களின் சேவையை மறைத்து தேசதுரோகிகளாக காட்ட.

எல்லா பிரச்னைகளும் ஒரு நாளில் தீரும். ஆனால் அதை பார்க்க யார் நம்மில் உயிரோடு இருக்கப்போகிறார்கள் தெரியவில்லை. பணம் படைத்தவர்களால் நிம்மதியாக மூச்சு விட முடிகிறது. ஏழைகளால் முடியாது. இப்போதைக்கு நோயுற்றவர்கள் மற்றும் இறந்தவர்கள் ஆகியோர் மத்தியில் ஜனநாயகத்தின் மிச்சங்கள் உள்ளன. பணக்காரர்களும் வீழ்த்தப்பட்டுள்ளனர். மருத்தவனைகள் ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கின்றன. சிலர் தன்னுடன் கூடவே சொந்த ஆக்சிஜனை கொண்டுவரும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாகுறை பிரச்சினை மாநிலங்களுக்கிடையே தீவிரமான சகிக்கமுடியாத சண்டைகளை ஏற்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டு தங்களுக்குள் சண்டையில் உள்ளனர்.

டெல்லியின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையான சர்.கங்கா ராம் மருத்துவமனையில் ஏப்ரல் 22 அன்று இரவு அதிக அளவு ஆக்சிஜன் வெளிப்பட்டதால் தீவிர சிகிச்சையிலிருந்த 25 கொரோனா நோயாளிகள் அநியாயமாக இறந்து போனார்கள். அந்த மருத்துவமனை ஆக்சிஜன் வழங்கும் கருவியை மாற்றித்தருமாறு பலமுறை SOS செய்திகளை அனுப்பியுள்ளது. ஒரு நாளைக்கு பிறகு அதன் தலைவர் செய்திகளை தெளிவுபடுத்த விரைந்தார்கள். “அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் இறந்தார்கள் என்று நாம் சொல்லமுடியாது” என்றார்.

ஏப்ரல் 24-ல் டெல்லியின் இன்னொரு பெரிய மருத்துவமனையான ஜெய்ப்பூர் கார்டனில் ஆக்சிஜன் சப்ளை குறைந்ததால் 20 நோயாளிகள் இறந்து போனார்கள்.

அதே நாளில் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா டெல்லி உயர்நீதிமன்றத்தில் “சிறு குழந்தையை போல அழுது கொண்டிருக்காமல் நம்மாலானதை முயற்சிப்போம். இந்த நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் ஒருவர் விடாமல் ஆக்சிஜன் கிடைப்பதை இதுவரை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்” என்று சிறிது கூட கூச்சமேயில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தார்..

காவி உடை போர்த்தியிருக்கும் யோகி ஆதித்யநாத் என்கிற அஜய் மோகன் பிஷ்த் உ.பியின் முதலமைச்சர் தனது மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாகுறை கிடையவே கிடையாது என பிரகடனபடுத்தியிருக்கிறார். அதை மீறி மருத்தவமனைகளோ தனிநபர்களோ ஆக்சிஜன் இல்லை என்று வதந்திகளை பரப்பினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் சுற்றி விளையாடுவதில்லை. கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் உ.பி சிறையில் மாதக்கணக்காக பெயில் மறுக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார். ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த ஒரு தலித் பெண் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை ஒட்டி செய்தி சேகரிக்க சென்றதுதான் அவர் செய்த தவறு. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கூடுதலாக கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

“தனது கணவர் மதுரா மருத்தவமனையில் ஒரு விலங்கைப் போல தனது படுக்கையோடு கைவிலங்கினால் பிணைக்கப்பட்டுள்ளதாக” அவரது மனைவி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். இப்போது உச்சநீதிமன்றம் சித்திக்கை டெல்லியில் இருக்கும் ஒரு மருத்தவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க உ.பி. அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி நமக்கு உணர்த்துவது உபி யில் வாழ்பவராக இருந்தால் எவ்வித புகாரும் சொல்லாமல் செத்துபோங்கள் என்பதுதான்.

புகார் சொல்பவர்களுக்கு மிரட்டல் வருவது உ.பி.யில் தடை செய்யப்படவில்லை. இந்துமதவெறி பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ் – மோடி முதற்கொண்டு அவரது அமைச்சர்கள் சகாக்கள் எல்லோரும் இதன் உறுப்பினர்கள்தான். அதோடு தனக்கென ஆயுதந்தாங்கிய ராணுவ பிரிவும் வைத்துள்ளது – அதன் செய்தி தொடர்பாளர் சமீபத்தில், “நாட்டில் இப்போது நிலவும் கொரோனா பிரச்சினையைத் தூண்டிவிட்டு எதிர்மறை எண்ணங்களையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்த தேசவிரோத சக்திகள் முயற்சிசெய்வார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல ஊடகங்கள் ஒரு நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கி நம்பிக்கையை வளர்க்க உதவவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அரசை விமர்சனம் செய்பவர்களின் கணக்கை முடக்கி ட்விட்டரும் தனது பங்குக்கு உதவியை செய்கிறது.

ஆறுதலுக்கு நாம் எங்கே போக வேண்டும்? அறிவியலுக்கா? எண்களை சேர்த்துக்கொள்ளலாமா? எத்தனை பேர் இறந்தனர்? எத்தனை பேர் குணமடைந்தனர்? எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்? நோய் தொற்றின் உச்சம் எப்போது வரும்? ஏப்ரல் 27-ல் வந்துள்ள தகவல்படி 3,23,144 நோய்தொற்று பதிவுகள் 2,771 பேர் இறந்துள்ளனர். பரவாயில்லை துல்லியமான தகவல்கள் ஓரளவு உறுதியளிக்கிறது.

அதை எப்படி தெரிந்து கொள்வது? டெல்லியில் கூட பரிசோதனைகள் வருவது கடினம்தான். சின்ன நகரங்கள் பெரிய நகரங்கள் ஆகியவற்றின் கல்லறைகளில் புதைக்கப்பட்ட  தகனமையங்களில் எரியூட்டப்பட்டவை ஆகியவற்றை பார்க்கும்போது மொத்த கோவிட் நெறிமுறை எண்ணிக்கை என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட 30 மடங்கு அதிகம் இருக்கும் என தெரிகிறது. மாநகரங்களுக்கு வெளியே பணியிலிருக்கும் மருத்தவர்களை கேட்டால் அவர்கள் சொல்வார்கள் இது எப்படி என்று.

தலைநகர் டெல்லிக்கே இந்த நிலைமை என்றால் நினைத்துப்பாருங்கள் பீகார், உ.பி. மத்தியபிரதேச கிராமங்களில் என்ன நடக்கும் என்பதை. 2020-ல் மோடியால் திடீரென அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு கொடுத்திருந்த அதிர்ச்சிகரமான நினைவுகளால் உந்தப்பட்டு நகரத்திலிருந்து பல பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தோடு ஒரு சேர பறந்து போனார்கள் கூடவே தொற்றுகளை சுமந்துகொண்டு. அது நான்கு மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுத்த அறிவிக்கப்பட்ட உலகிலேயே மிக கெடுபிடியான ஊரடங்கு.

புலம்பெயர் தொழிலாளர்களை நகரங்களில் வேலை இல்லாமல் கையில் பைசா காசு இல்லாமல் குடியிருக்கும் இடங்களுக்கு வாடகை கொடுக்கமுடியாமல், உணவு இல்லாமல் பட்டினியோடு மற்றும் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாமல் அனாதைகளாக விடப்பட்டனர். சொந்த ஊருக்கு போக கிளம்பியவர்கள் நூற்றுக்கணக்கான மைல்களை நடந்தே கடக்க வேண்டியதாயிற்று. வழியில் பல்வேறு காரணங்களால் நூற்றுக்கணக்கானவர்கள் அநியாயமாக இறந்தே போயினர்.

இந்த முறை தேசிய ஊரடங்கு இல்லையென்றாலும் போக்குவரத்து ரயில் பஸ் ஆகியவை எவ்வித இடையூறுமின்றி செயல்பட்டாலும் தொழிலாளர்கள் நகரத்தை விட்டு கிளம்ப தொடங்கிவிட்டனர். இந்த பெரிய நாட்டின் பொருளாதாரத்தை இழுத்து செல்லும் இயந்திரமாக செயல்பட்டபோதும் ஏதாவது பிரச்னைகள் ஏற்படும்போது நிர்வாகத்தின் கண்களுக்கு அவர்கள் தெரியமாட்டார்கள்.

இந்த ஆண்டு தொழிலாளர்கள் வெளியேறியது மாறுபட்ட வகையான பயத்தினால். தங்களது சொந்த கிராமத்துக்கு செல்வதற்கு முன்பாக தங்கி போக தனிமைபடுத்தும் மையங்கள் இப்போது இல்லை. கிராமபுறங்களை நகர்புற தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சாதாரண முயற்சிகூட இல்லை.

சாதாரணமான வயிற்றுப்போக்கு, காசநோய் ஆகிய நோய்களுக்கே கொத்து கொத்தாக இறந்து போகக் கூடிய மக்களைக் கொண்ட கிராமங்கள் அவை. கொரோனாவுடன் அவர்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்? கொரோனாவுக்கான பரிசோதனைகள் அவர்களுக்கு கிடைத்திருக்கிறதா? அங்கே மருத்துவமனைகள் இருக்கிறதா? ஆக்சிஜன் கிடைக்கிறதா? இதற்கெல்லாம் மேலாக அன்பு இருக்கிறதா? அன்பை மறந்து விடுங்கள் அவர்களைப் பற்றிய கவலை யாருக்காவது இருக்கிறதா? இல்லை எதுவுமே இல்லை. ஏனெனில் அங்கே இருப்பது இதய வடிவில் ஒரு துளை – இந்தியாவின் பொது இதயம் இருக்க வேண்டிய இடத்தில் முழுதும் நிரம்பிய வெறுப்புணர்ச்சி நிரம்பியுள்ளது.

ஏப்ரல் 28 அதிகாலையில் எங்களது நண்பர் பரபுபாய் இறந்த செய்தி வந்தது. அவர் இறப்பதற்கு முன்பாக அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்தன. ஆனால் அவரது மரணம் ‘அதிகாரபுர்வ கொரோனா காரணமாக இறந்தவர்கள்’ பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் அவர் வீட்டிலேயே எந்த வித பரிசோதனையோ மருத்துவமோ இல்லாமல் இறந்து போனார்.

படிக்க :
♦ சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்

♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

அவர் நர்மதா சமவெளியில் அணை எதிர்ப்பு இயக்கத்தில் முன்கள போராளியாக இருந்தவர். பல சமயங்களில் கீவடியாவில் அவரது இல்லத்தில் தங்கி இருந்திருக்கிறேன்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக, அணைகட்டும் வேலையிலிருந்தவர்கள் மற்றும் அதிகாரிகளின் குடியிருப்புகளுக்காக, அவர்களது சொந்த நிலத்திலிருந்து பிடுங்கியெறியப்பட்ட, முதல் அணி உள்ளூர் பழங்குடிமக்கள் இவர்கள். விரட்டியடிக்கப்பட்ட அவர்கள், இன்றைக்கும் அந்த குடியிருப்புகளுக்கு அருகிலேயே, அன்னியர்களைப்போல, ஏழைகளாக்கப்பட்டு, நிச்சயமற்ற, ஒருகாலத்தில் சொந்தமாக இருந்த நிலத்தில், இன்றைக்கு ஒரு ஆக்ரமிப்பாளானாக குற்றம் சாட்டப்பட்டு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கிவடியாவில் மருத்துவமனைகள் இல்லை. அதற்கு பதில் ‘சமாதானத்தின்’ சிலையாக சர்தார் வல்லப்பாய் படேலின் சிலை மட்டுமே உள்ளது. அணைக்கும் அவர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான சுமார் 182 மீட்டர் மற்றும் 422 மில்லியன் அமெரிக்க டாலர் (கிட்டத்தட்ட 4000 கோடி) செலவில் கட்டப்பட்டது. அதிவேக மின்தூக்கிகள் சிலையின் மார்பு வரை சுற்றுலா பயணிகளை கொண்டு செல்லும். அங்கிருந்து நர்மதா அணையை பார்க்கமுடியுயம் உண்மைதான். அழிந்து போன மூழ்கிபோயிருக்கும் அந்த நதி பள்ளத்தாக்கின் நாகரிகத்தை எவரும் பார்க்க முடியாது. அந்த சிலை மோடியின் கனவு திட்டம். அக்.2018ல் அதை திறந்து வைத்தார்.

பரபுபாய் பற்றிய செய்தியை எனக்கு அனுப்பிய நண்பர் இன்னொன்றையும் அனுப்பினார். “இதை எழுதும்போது எனது கைகள் நடுங்குகின்றன. கெவடியா குடியிருப்பு உள்ளும் அதைச் சுற்றியும் கொரோனா நிலைமை மோசமானதாக இருக்கிறது” என்கிறார்.

நோயாளிகளின் எண்ணிக்கையை காட்டும் இந்தியாவின் கோவிட் வரைபடம் 2020 பிப்ரவரியில் மோடியால் ஏற்பாடு செய்யப்பட்ட “நமஸ்தே இந்தியா” நிகழ்ச்சிக்காக டொனால்ட் ட்ரம்ப் வருகை தந்த ‘அவரதுபாதையில் இருக்கும் குடிசைபகுதிகளை அவரது பார்வையிலிருந்து மறைப்பதற்காக கட்டப்பட்ட உயரமான சுவரை’ போன்றது.

அந்த எண்களைப் போலவே மோசமானது. அவை இந்தியா பற்றிய ஒரு வரைபடத்தை கொடுக்கின்றன. ஆனால் நிச்சயமாக அது அந்த இந்தியா அல்ல. இந்த இந்தியாவில் ஓட்டுப்போடும்போது இந்துக்களாக எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஆனால் ‘உபயோகித்தபின் தூக்கியெறியப்படும் பொருட்களாக’ சாகிறார்கள்.

“நாம் அழுகின்ற குழந்தையை போல அல்லாமல் முயற்சிப்போம்”

ஏப்ரல் 2020 ஆண்டிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியக் கூறுகளை கோடிட்டு காட்டிய, திரும்பவும் நவம்பரில் இதே அரசாங்கத்தால் போடப்பட்ட ஒரு குழு உறுதிசெய்த அந்த உண்மைகளுக்கு நாம் கவனம் கொடுக்காதிருக்க முயற்சிக்கலாம். டெல்லியின் பெரிய மருத்துவனைகளில் கூட அவற்றுக்கு சொந்தமாக ஒரு ஆக்சிஜன் உருவாக்கும் கருவிகூட இல்லாதிருப்பதை கண்டும் வியக்காதிருக்க முயற்சிக்கலாம்.

பிரதம மந்திரியின் பொது நிவாரண நிதியை இடமாற்றம் செய்த மற்றும் பொது நிதியை மற்றும் அரசின் உள்கட்டமைப்பை உபயோகபடுத்திக்கொண்டு பொதுமக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இல்லாதயாராலும் ஊடுருவி பார்க்கமுடியாத நிறுவனமாக இருக்கும் பிஎம் கேர்ஸ் நிதி (PM Cares Fund) – திடீரென ஆக்சிஜன் பற்றாகுறை பிரச்னைக்குள் தன்னை இணைத்துகொள்வதற்குள் நாம் வியக்காதிருக்க முயற்சிக்கலாம். நமக்கு கிடைக்கும் மூச்சுகாற்றில் மோடி தனக்கான பங்கினை கொண்டிருப்பாரா?

“நாம் அழுகின்ற குழந்தையை போல அல்லாமல் முயற்சிப்போம்”    

மோடி அரசுக்கு கவனம் தரவேண்டிய மேலும் அதிகமான அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் பிரச்னைகள் ஏராளமாக இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் மிச்சம் மீதி இருப்பதை அழிக்கவேண்டியிருக்கிறது. இந்து அல்லாத சிறுபான்மையினருக்கு தொல்லைகளை தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது, இந்து தேசத்திற்கான அடிப்படைகளை அமைப்பதற்கான பணிகளில் கவனத்தை செலுத்துவது ஆகியவைதான் இவர்களது இடைவிடாத அட்டவணையில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பணிகள்.

மிகப்பெரிய சிறைக்கொட்டடிகள் உதாரணமாக அஸாமில் பல தலைமுறைகளாக வசித்துக்கொண்டு இருக்கும் 2 மில்லியன்(20 லட்சம்) மக்களை திடீரென அவர்களது குடியுரிமையை பறித்து அடைப்பதற்கு அவசரமாக கட்டப்படவேண்டியிருக்கிறது. (இதில் நமது தன்னாட்சி கொண்ட உச்சநீதிமன்றமும் மிக அழுத்தமாக மத்திய அரசாங்கத்தின் பாதுகாவலனாக நிற்கிறது.)

கடந்த மார்ச் மாதம் வடக்கிழக்கு டெல்லியில் தங்களது இனத்தினருக்கு எதிராக நடந்த படுகொலையில் முதன்மை குற்றம்  சாட்டப்பட்டிருக்கும்  நூற்றுக்கணக்கான முஸ்லீம் மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இளம் முஸ்லீம் குடிமக்கள் விசாரணைக்குட்படுத்தப்ட்டு சிறையிலடைக்கப்படுவார்கள். இந்த நாட்டில் முஸ்லீமாக இருந்தால் படுகொலை செய்யப்படுவது கூட ஒரு குற்றம்தான். உங்கள் மக்கள் அதற்காக பணம் கொடுக்கப்படுவார்கள்.

அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான துவக்க விழா இருக்கிறது. அந்த இடத்தில்தான் ஏற்கனவே மசூதி இருந்தது. அதை இந்துவெறி நாசகாரர்கள் இடித்து தரைமட்டமாக்கி விட்டார்கள் பாஜகவின் மூத்த தலைவர்கள் அங்கே இருந்து நேரில் பார்த்துக்கொண்டிருந்தனர். இப்போது அந்த இடத்தில்தான் ராமர்கோவில் கட்டப்படுகிறது. (இந்த விசயத்திலும் தன்னாட்சி பெற்றிருப்பதாக சொல்லிக் கொள்ளும் உச்சநீதிமன்றம் மிக அழுத்தமாக அரசின் பக்கம் நின்றது அதாவது நாசகாரர்களுக்கு கருணை காட்டியது).

இப்போது மிக அவசரமான அவசியமான கவனம் கொடுக்க வேண்டிய வேலை பல ஆயிரம் மில்லியன் டாலரில் திட்டமிடப்பட்டிருக்கும் களையிழந்து காணப்படும் ஆடம்பர கட்டிடங்களுக்கு பதிலாக புது டெல்லியின் ஏகாதிபத்திய மையத்திற்கான சொகுசுகட்டிடஙகள் கட்டுமான வேலைகள்தான்.

புதிய இந்து இந்தியாவின் அரசாங்கம் பழைய கட்டிடங்களில் இயங்குவது அவமானகரமானது இல்லையா? உலகத்தொற்று அபாயத்தின் காரணமாக டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்திலும் “சென்ட்ரல் விஸ்டா”-வின் கட்டுமான பணிகள் “அத்தியாவசிய சேவை” எனஅறிவிக்கப்பட்டு தொடர்கிறது. பல்வேறு இடங்களில் இருந்து தினமும் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். கட்டுமான பணிகளுக்கான திட்டத்தில் ஒரு தகன மையத்திற்கான கட்டுமானமும் சேர்க்கப்படலாம்.

மிக முக்கியமாக உத்ரகாண்ட் மாநிலத்தின் கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் மில்லியன் கணக்கான (பத்து லட்சம்) மக்கள் கங்கை நதியில் குளிப்பதற்காக ஒரு சிறிய ஊரில் ஒன்று கூடவேண்டும். ஒரே நாளில் 35 லட்சம் பேர் எவ்வித சமூக இடைவெளியுமின்றி கங்கையில் குளித்தார்கள். மொத்தம் 70 லட்சம் பேர் அங்கே ஒன்றாக கூடியிருக்கிறார்கள்.

ஆசீர்வதிக்கப்பட்ட புனிதமாக்கப்பட்ட அவர்கள் நாட்டின் பல பாகங்களிலிருக்கும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப செல்லும்போது கையோடு நோய் தொற்றுகளை சுமந்து சென்று பரப்புவார்கள். கும்பமேளா நிகழ்ச்சியை பற்றி மோடி ‘இது புனித நீராடலை அடையாளபடுத்துவதாக’ மிக பெருமிதமாக கூறினார். (கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த சில நூறு முஸ்லீம்கள் என்ன பாடுபடுத்தப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்).

ஆனால் கும்பமேளா விசயத்தில் அவர்களுக்கு எதிராக இந்திய ஊடகங்கள் கொரோனா ஜிகாதிகள் என்று தாக்கவில்லை அல்லது மனிதகுலத்துக்கே எதிராக போர் தொடுக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்படவில்லை). உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வந்திருக்கும் சில ஆயிரம் ரோஹிங்யா முஸ்லீம் மக்களை கொலைவெறியோடு காத்திருக்கும் மியான்மரின் பலிபீடங்களுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். (இங்கேயும் தன்னாட்சி பெற்றுள்ளதாக சொல்லும் உச்சநீதிமன்ற, அரசாங்கத்தின் செயலுக்கே துணை நின்றது)

அதனால் நீங்கள் சொல்லமுடியும். இடைவிடாதவேலைகள்… வேலைகள்

நாட்டிலேயே எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும் அவற்றை ஓரம்கட்டி வைத்துவிட்டு செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை இதற்கெல்லாம் மேலான மேற்குவங்க தேர்தலை வென்றாக வேண்டும். அதற்காக நாட்டின் உள்துறை அமைச்சர் மோடியின் நம்பிக்கைக்குரிய அமித்ஷா தனது இலாக்கா பணிகளை மூட்டைக்கட்டி வைத்து விட்டு மேற்குவங்கத்தின் தேர்தல் வேலைகளில் பல மாதங்களாக முழு கவனத்தையும் செலுத்த வேண்டியிருந்தது.

தனது கட்சியின் கொலைவெறி கொள்கைகளை பரப்ப வேண்டியிருந்தது. மேற்குவங்கத்தின் மூலை முடுக்குகளிலெங்கும் நகரங்கள் முதல் பழங்குடி கிராமங்கள் வரை மனிதர்களுக்கு எதிராக மனிதர்களை பகையுணர்வோடு பார்க்க தூண்டுகின்ற வகையில் நிற்க வைக்க வேண்டியிருக்கிறது.

இந்த தேர்தலை கடந்த காலங்களை போல ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்க முடியும். ஆனால் பாஜக-வுக்கு இது கைப்பற்ற வேண்டிய புதிய இடம் அதோடு வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் மோடியின் ஆட்களை வோட்டிங்கை கண்காணிக்கிற பேரில் தங்களது திட்டங்களை செயல்படுத்த தொகுதி தொகுதியாக மாற்றி கொண்டு செல்ல நேரம் தேவைப்பட்டது.

ஒரு மாதம் முழுதும் எட்டு கட்டங்களாக தேர்தலை தேர்தல்கமிசன் (நம்புங்கள் இதுவும் சுயமாக செயல்படக்கூடியதுதான்) ஏப்ரல் 29 வரை நடத்தியது. மற்ற கட்சிகள் கொரோனா தொற்று அபாயத்தை சுட்டிக்காட்டி தேர்தல் அட்டவணையை பரிசீலித்து மாற்றியமைக்க கேட்டுக்கொண்டன. இதை தேர்தல் கமிசன் ஏற்க மறுத்து பாஜக-வின் திட்டத்திற்கேற்பவே செயல்பட்டுக்கொண்டிருந்தது. பிரச்சார வீடியோக்களை பார்த்திருக்க வேண்டும். பாஜக-வின் நட்சத்திர பிரச்சாரகர் பேச்சாளர் மோடி வெற்றிகளிப்பில் மாஸ்க் போடாமல் மாஸ் காட்டினார்.

அந்த கூட்டத்தில் நெரிசலாக கூடியிருந்த மாஸ்க் போடாத மக்களிடம் தனது வழக்கமான பாணியில் பிரச்சாரம் செய்தார். பெரும் எண்ணிக்கையில் கூடி தன்னை கவுரபடுத்தியதற்காக நன்றி கூறினார். அது ஏப்ரல் 17. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் இரண்டு லட்சத்தை தாண்டி மிக வேகமாக ராக்கெட்டை போல எகிறி கொண்டிருந்தது.

இப்போது மேற்குவங்கத்தின் தேர்தல்கள் முடிந்துவிட்டன. மேற்குவங்கம் கொரோனாவின் புதிய குடியிருப்பாக மாறியிருந்தது. புதிய மாற்றுரு மூன்றாவது ஸ்ட்ரெயின் எப்படி அழைக்கப்படுகிறது – என்னவென்று யூகியுங்கள் – ஆமாம் “பெங்கால் ஸ்ட்ரயின்” என்று. வங்காள தலைநகரம் கொல்கொத்தாவில் பரிசோதிக்கப்பட்ட ஒவ்வொரு இரண்டாவது நபரும் கோவிட் பாசிட்டிவ் ஆக இருக்கிறார். அதற்கேற்ப பாஜக-வும் தாங்கள் வெற்றி பெற்றால் வங்காளத்தின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. சரி இவர்கள் வெற்றிபெறாவிட்டால்?

“நாம் அழுகின்ற குழந்தையை போல அல்லாமல் முயற்சிப்போம்”

எப்படியோ இருக்கட்டும். தடுப்பூசிகள் பற்றிய செய்திகள் என்ன? அவைதான் நம்மை காப்பாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா தடுப்பூசிகளின் மைய தலைமையகமாக இருந்தது உண்மைதானே? உண்மையில் இந்திய அரசு இரண்டு உற்பத்தியாளர்களை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கிறது. அவை சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியா (SII) மற்றும் பாரத் பயோடெக். இந்த இரண்டு நிறுவனங்கள்தான் உலகிலேயே மிகவும் செலவுமிக்க தடுப்பூசிகளை தயாரித்து உலகிலேயே மிகவும் ஏழ்மை நிலையிலிருக்கும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் தனியார் மருத்துவமனைகளுக்கு சற்றே உயர்த்தப்பட்ட விலைகளுக்கு விற்கப்படும் என்றும் மாநில அரசுகளுக்கு சற்றே குறைக்கப்பட்ட விலையில் விற்கப்படும் என்றும் அறிவித்துள்ளன. இந்த நிலையிலும் கணக்கீடுகள் வெளிபடுத்துவது அந்த நிறுவனங்கள் மக்களின் உயிர்காக்கும் தடுப்பூசிகள் மூலம் அநியாய லாபம் ஈட்டுகின்றன என்பது உண்மை.

மோடியின் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் காலியான டப்பாவாக காட்சியளிக்கிறது. நூற்றுக்கணக்கான மில்லியன் (10 லட்சம்) மக்கள் ஏற்கனவே நிச்சயமற்ற எந்த உத்தரவாதமுமில்லாத வாழ்க்கையை வாழ தள்ளப்பட்டுள்ளனர். இந்த கொரோனா காலத்தில் எந்த வருமானத்திற்கும் வழியில்லாமல் உயிர் வாழ்வதற்கே தவிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் தேசிய ஊரக வேலை உத்திரவாத சட்டத்தின்(NREGA) கீழ் கிடைக்கும் அற்ப சம்பளத்தை நம்பியே வாழ்க்கையை நடத்துகின்றனர்.

2005-ல் காங்கிரசு ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்டது. பசியின் விளிம்பில் வாழ்ந்து வரும் மக்களிடம் மாத வருமானத்தில் பெரும்பகுதியை தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள செலவழிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இங்கிலாந்தில் தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசம் மட்டுமல்ல அடிப்படை உரிமையாகும். தடுப்பூசிகளை முறைகளை மீறி போட்டுக்கொண்டால் வழக்கு பாயும். இந்தியாவில் தடுப்பூசிகள் அவசியம் பற்றிய பிரச்சாரம் கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபத்தை மையமாக கொண்டுள்ளது.

இந்த காவிய பேரழிவு பற்றி நமது மோடி கூட்டணியிலுள்ள இந்திய தொலைக்காட்சி சேனல்களில் எல்லோரும் பயிற்சி பெற்ற ஒரே குரலில் பேசுவதை நீங்கள் கவனிக்கலாம். இந்த “அமைப்பு” செயலிழந்துவிட்டது இதை திரும்ப திரும்ப சொல்கிறார்கள். நோய் தொற்று இந்தியாவின் சுகாதார பராமரிப்பு “அமைப்பை” வென்றுவிட்டது.

இந்த அமைப்பு செயலிழந்து விட்டதாக சொல்வது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. இந்த அமைப்பு இருக்கத்தான் செய்கிறது. இருந்த கொஞ்ச நஞ்ச மருத்துவ உட்கட்டமைப்பை இந்த மோடி அரசும் இதற்கு முன்னிருந்த காங்கிரசு அரசும் கொஞ்ச கொஞ்சமாக வேண்டுமென்றே அகற்றிவிட்டது. பொது மருத்துவ சுகாதார அமைப்பு இல்லாமலிருக்கும் நாட்டில் தி்டீரென இம்மாதிரியான உலகதொற்று அபாயம் வந்தால் இப்படித்தான் நடக்கும். இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.25 சதவீதத்தை மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிடுகிறது.

இது உலகின் பெரும்பாலான நாடுகள் மிகவும் பின்தங்கிய ஏழைநாடுகள்கூட செலவிடுவதை விட மிகவும் குறைவு. இதுகூட உயர்த்தப்பட்ட அளவாகத்தான் இருக்கும் ஏனெனில் முக்கியமான விசயங்கள் ஆனால் சுகாதார துறையால் கட்டாயமாக தகுதிபெறாத விசயங்கள் அதில் நழுவப்பட்டுள்ளது. அதனால் உண்மையான புள்ளிவிவரம் 0.34 சதவீதத்தை விட சிறிது அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் துயரம் என்னவென்றால் இத்தகைய பாழ்படுத்தப்பட்ட ஏழை நாட்டில் 2016-ல் Lancet அறிவியல் பத்திரிகை நடத்திய ஆய்வில் நகர்புறத்தில் 78 சதவீதமும் கிராமப்புறங்களில் 71 சதவீதமும் சுகாதார அமைப்பு தனியார் கைகளில் விடப்பட்டுள்ளது. பொதுத்துறைகள் வசமிருந்த உள்கட்டுமானங்கள் முறையாக தனியார்களுக்கு கைமாற்றப்பட்டுள்ளது. ஊழல் நிர்வாகிகளால் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்கள் காப்பீட்டு திட்ட ஏமாற்றுகள் மூலம்.

சுகாதாரம் பேணுதல் ஒரு அடிப்படை உரிமை. எந்த ஒரு தனியார் நிறுவனமும் கட்டணமில்லாமல் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவும் நோயுற்றவர்களுக்கு மருத்துவமும் இறக்கும் தருவாயில் இருப்போருக்கு சுகமளித்தலும் நிச்சயமாக செய்யாது. இப்படிப்பட்ட நிலையில் வறுமையில் வாடும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியாவில் மருத்துவசேவையை அரசே ஏற்று நடத்தாமல் தனியார் நிறுவனங்களின் லாபம் குவிக்கும் நோக்கத்துக்கு கையளித்த்து ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த அமைப்பு செயலிழக்கவில்லை. அரசாங்கம் மக்களை தங்களின் நலனுக்காக செயல்படும் உணர்ச்சிகளற்ற பொம்மைகளாக கருதுவதால் அவர்களுக்கு எதிரான செயல்பாடுகளை விதியே என்று எளிதாக கடந்துவிடுவார்கள் என்ற மிதப்பில் அதிகாரம் நீடித்து நிலைக்கும் என்று செயல்படுகிறார்கள். அரசாங்கம் தோற்றுவிட்டது. தோற்றுவிட்டது என்பது கூட சரியான வார்த்தை இல்லை நாம் இங்கே சாட்சிகளாக பார்த்தக்கொண்டிருப்பது தங்களது கடமையை தெரிந்தே அலட்சியம் செய்யும் குற்றச்செயலை மட்டும் அல்ல! ஆனால் மனித சமூகத்திற்கு எதிரான ஒரு பூரணமான குற்றத்தை!

வைராலாஜிஸ்டுகள் இந்தியாவில் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகு சீக்கிரம் ஒரு நாளைக்கு ஐந்து லட்சத்தை தொட்டுவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறார்கள். அநியாயமாக பலியாகும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை நினைத்து பார்க்க முடியாத அளவு அதிகமாகும் என்று எச்சரிக்கிறார்கள். நமக்கு காத்திருக்கும் பயங்கரமோ அல்லது இழிவுபடுத்தலோ எதையும் அறியாமல் வாழ்கிறோம். எல்லாவற்றுக்கும்மேலாக மனித கவுரவம் இழிவுபடுத்தப்படுகிறது. மௌனமாக இருக்க வேண்டிய காலமா இது?

“மோடி ராஜினமா செய்ய வேண்டும்” என்ற ஹாஷ்டேக் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவுகிறது. மோடி என்ற தீர்க்கதரிசி சடலங்களின் பேரணியில் உரை நிகழ்த்துகிறார் என்பதாக மீம்ஸ்கள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.

வரலாறெங்கும் கொடுங்கோலர்களின் வரையறைகளை தீர்மானிக்கப்போவது வேறுயாருமல்ல! அவர்கள் யாரை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் அந்த “அப்பாவி மக்கள்தான்”.

படிக்க :
♦ கொரோனா : ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்புக்குள் மூச்சுத் திணறும் மனித சமூகம் !
♦ இந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்

இந்தியாவில் இருக்கும் நாம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழும் நமது தன்மைக்காக எப்படி பெருமைப்பட்டுக் கொள்கிறோம்? மத்திஸ்துவம் செய்து கொள்வதற்கு எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி இருப்பதற்கு நமது கோபத்தை அடக்கி கொள்வதற்கு எவ்வளவு அழகாக நமக்கு நாமே பயிற்சி பெற்றிருக்கிறோம்? நம்மால் ஒரு சமத்துவத்தை பெற இயலாத தன்மையை எப்படி நியாயபடுத்திக்கொள்கிறோம்? நமது அவமானங்களை சகித்துக் கொள்ளுமளவு எவ்வளவு பலகீனமாக இருக்கிறோம்?.

அதனால் அவர்களால் ஒன்றிணைக்கப்பட்ட நரகத்தில் இங்கே நாம் இப்போது இருக்கிறோம்.  ஜனநாயகத்தை உயிர்ப்போடு இயங்கவைக்க அவசியமான அத்தனை சுயாட்சி பெற்ற நிறுவனங்களும் சமரசம் செய்துகொண்டு அடங்கி போய்விட்டன. ஒரே ஒரு நோய்தொற்று மட்டும் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.


மூலக்கட்டுரை : அருந்ததிராய்
மொழியாக்கம் : மணிவேல்
நன்றி : The Guardian

கொரோனா : ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்புக்குள் மூச்சுத் திணறும் மனித சமூகம் !

லகம் முழுவதும் கொரோனாவால் இலட்சக் கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இப்போதும் இரண்டாம் அலையால் கொத்து கொத்தாக மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவோ மூச்சே விட முடியாமல் பிணக்காடாக பற்றி எரிகிறது, இந்த மரண ஓலத்திற்கு மத்தியிலும் இலாப வேட்டையாடும் ஏகபோக கும்பலும் உலக மேலாதிக்க வெறியும் மனித சமூகத்தின் கழுத்தை நெறித்துக் கொண்டு இருக்கிறது.

கொரோனா தொற்றிலிருந்து உலகைப் பாதுகாக்க வேண்டுமானால் ஊரடங்கு, புதிய கட்டுபாடுகள் போன்ற நடவடிக்கைகளைத் தாண்டி தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்துவதும், அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதுமே முதன்மையானது என மருத்துவ வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறி வருகின்றனர். ஆனால், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளைத் தவிர மற்ற பெரும்பாலான பின் தங்கிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் முதன்மையான பிரச்சனை தடுப்பூசி பற்றாக்குறைதான்.

படிக்க :
♦ சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்
♦ கொரோனா படுகொலைகள் : முதன்மைக் குற்றவாளி மோடியும் பா.ஜ.க. அரசுமே !

இந்தியாவில்  இதுவரை முதல் டோஸ் 10.8 சதவீதம் பேருக்கும், 2-வது டோஸ் 2.8 சதவீதம் பேருக்கும்தான் போடப்பட்டுள்ளது. மூன்றாவது அலை வருவதற்குள் 60 சதவீதம் மக்களுக்குத் தடுப்பூசிப் போட்டாக வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில் மூன்றாவது அலை வரக் கூடிய சூழலில் இன்னும் கால் பகுதி  மக்களுக்குக்  கூட தடுப்பூசிப் போடப்படாத நிலைதான் இருக்கிறது. ஒருபுறம் இந்த நெருக்கடியான அவல நிலைக்கு தடுப்பூசி உற்பத்தியிலும், அதன் விநியோகத்திலும் மோடி அரசு கொண்டிருக்கும் கார்ப்பரேட்  நலக்கொள்கையே முக்கியமான காரணம். மறுபுறம் உலகம் சந்தித்து வரும் இந்த நெருக்கடிக்கு தடுப்பூசி உற்பத்தியும், அதற்கான மூலப்பொருட்களும் அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் ஏகபோகங்களின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்தின் பிடியில் சிக்கி கொண்டுள்ளதே முதன்மையான காரணம் ஆகும்.

(உதாரணமாக அறிவுசார் சொத்துரிமையினால் இந்தியாவில் உள்ள “சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா” என்ற நிறுவனம் தான் காப்புரிமை பெற்ற ஜெர்மனியின் “அஸ்டஜெனேகா” நிறுவனத்திற்கு, தான் உற்பத்தி செய்த 6 கோடியே 63 லட்சம் தடுப்பூசிகளில் 5 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகளைக் காப்புரிமை வாங்கும் போதும், மூலப்பொருட்கள் வாங்கும் போதும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளி நாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறியுள்ளது.)

ஏகபோகங்களின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளை சுரண்டுவதற்கும் இரண்டாம் உலகப்போருக்கு பின் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் வரிசையில் உருவாக்கப்பட்ட உலக வர்த்தக கழகத்தின் (WTO – world trade organization) மேற்பார்வையில் இருக்கும் 60 ஒப்பந்தங்களில், TRIPS (Trade-Related Aspects of intellectual property rights) ஒப்பந்தம் என்பது அறிவுசார் சொத்துரிமையின் வணிகம் சார்ந்த நோக்கங்களுக்கான ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தில் உள்ள வர்த்தகம் தொடர்பான சில அம்சங்களையும் ,அறிவுசார் சொத்துரிமையையும்  தற்காலிகமாகத் தளர்த்தக் கோரி இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் 2020 அக்டோபர் மாதம் உலக வர்த்தக அமைப்பிடம் முன்மொழிந்தது.

இந்த முன்மொழிவை ஆதரிக்க வேண்டாமென குடியரசு கட்சியின் 12 செனட் உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகத்தை அப்போதே வலியுறுத்தினர். பைடனும் அன்றைக்கு அந்த முன்மொழிவு குறித்து வாய்திறக்கவில்லை.

ஆனால், தற்போது மே 5 அதனை ஆதரிப்பாதாக பைடன் கூறியதை தொடர்ந்து பத்திரிக்கைகள், போப் பிரான்ஸ் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்கள், இந்திய அரசு எனப் பலரும் பாரட்டுவதின் வாயிலாக பைடனுக்கு “மனித முகம்” தரிக்க முயற்சிக்கிறார்கள். அக்டோபர் 2020-இல் வாய் திறக்காத பைடன் 2021 மே ஆதரிப்பதாக சொல்வதற்கான காரணத்தையும் அதன் பின்னணியையும் அறிய வேண்டுமானால், அமெரிக்கவினுள் பைடனுக்கு எழுந்த அழுத்தம், சர்வதேச அளவில் சீனாவின் நகர்வுகள் ஆகியவற்றோடு சேர்த்துப் புரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது.

சீனா இந்த குறிப்பிட்ட காலங்களில் இந்தியா உட்பட வளர்ந்து வரும் 100 நாடுகளுக்கு தடுப்பூசி, நன்கொடை, மானியம் மற்றும் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் “சினோபார்ம்” தடுப்பு மருந்துதான் செர்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் 80 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதிலும் இந்தியாவிற்கு ஏராளமாக தொற்று நோய்க்கு எதிரானப் பொருட்களை சீனா வழங்கியது. (ஏப்ரல் மாதமே 5,000 வெண்டிலேட்டர், 21,569 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், 21.48 மில்லியன் முகக்கவசம், 3,800 டன் மருந்துகள்) அமெரிக்கா இந்தியாவை நோக்கி தும்மினாலே, பக்கம் பக்கமாக ஆண்டவன் அருள் பாலித்ததாகவும், மோடியின் சாதனை என்றும் எழுதுகின்ற ஆளும் வர்க்க ஊடகங்கள், சீனாவின் ‘உதவிகள்’ தொடர்பான செய்திகளை பெரிய அளவில் எழுதுவதில்லை.

ஆனால் சீனாவின்  இந்த நடவடிக்கையை ஆதரித்து இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் சீன வெளியுறவு அமைச்சரான வாங் யி (Wang Yi) என்பவரிடம் தொலைபேசியில் “சீனாவின் நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமைக்கு நன்றி எனவும், நோய்த் தொற்றுக்கு எதிரான சீனாவுடனான ஒத்துழைப்பை மேலும், வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளது” என்றும் கூறினார். சீனாவின் தரப்பிலிருந்து எந்த ஒரு பூகோள அரசியலின் நலனுக்காகவும் இந்த உதவிகள் செய்யப்படவில்லை முழுக்க நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் என்று பதிலளிக்கப்பட்டது. ஆனாலும் இந்த நகர்வுகளின் ’நல்லெண்ணம்’ நாம் அறிந்ததுதான்.

சீனாவின் நகர்வுகள் உலக அளவில் ஒரு ஆதரவை பெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் சட்டமியற்றும் செனட் உறுப்பினர்கள் 100 பேர் பைடனுக்கு இந்தியாவின் முன்மொழிவை ஆதரிக்குமாறு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இவர்களுக்கும் இந்தியா உட்பட பலரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிகிறது. ஆனால், அந்தக் கடிதத்தை வாசித்தால் அந்த “நல்லெண்ணம் படைத்தோரின்” கவலை என்னவென்று உண்மையில் புரிந்துக் கொள்ள முடியும். “உலகின் சில பகுதிகளில் மட்டுமே தடுப்பூசி போட்டால் உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க முடியாது” என்றும் “ட்ரெம்ப் நிர்வாகம் நமது நாட்டின் உலகலாவிய நற்பெயருக்கு ஏற்படுத்திய சேதத்தை மாற்றவும், அமெரிக்காவின் பொதுச் சுகாதார தலைமையை உலக அரங்கில் மீட்டெடுக்கவும் உங்கள் நிர்வாகத்துக்கு வாய்ப்பு உள்ளது” என்றும் கூறியுள்ளனர்.

அதாவது, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் அதனை தக்க வைக்கவும், மீட்டெடுப்பதும் தான் இவர்களின் பதற்றமாக இருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளே மே 5 அன்று அமெரிக்கா, இந்தியாவின் முன்மொழிவை ஆதரிப்பதற்கான அவசியமாகவும், அழுத்தமாகவும் அமைந்த்திருக்கிறது.

ஏனென்றால், அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு இந்திய நிகழ்வில் பேசும் போது, நாங்கள் இந்த ஆதரவை இந்தியாவின் நண்பராகவும் ஆசிய QUAD உறுப்பினராகவும் செய்கிறோம் என்றார். அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் டாய் எங்கள் (பைடன்) நிர்வாகம் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதை உறுதியாக நம்புகிறது. ஆனால், கோவிட்-19 தடுப்பூசிக்கான அந்த பாதுகாப்புகளை தற்காலிகமாகத் தளர்த்துவதை ஆதரிக்கிறது என்றார். செனட் உறுப்பினர்கள் முதல், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதி டாய் வரை எல்லோரும் அமெரிக்க மேலாதிக்கம் என்ற நிலையிலிருந்தே ஒற்றைக் குரலாக ஒலிக்கிறார்கள்.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் இந்திய பத்திரிக்கைகள் மற்றும், சமூக வலைதளங்களில் ஏதோ ஐ.பி.ஆர் (IPR – Intellectual Property Rights) ‘தள்ளுபடி’ செய்யப்பட்டது போலப் புகழ்ந்து பேசப்படுகிறது. ஆனால், உண்மையில் இது ஒரு தற்காலிகத் தளர்வு இல்லை. ஐ.பி.ஆர்ரை எளிதாக்குவதற்கான நகர்வுகளுக்கு அமெரிக்கா அளித்துள்ள ஆதரவு மட்டும்தான். உலக வர்த்தக கழகம், இந்த 7 மாதங்களில் பத்து முறை கூடியும் இந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்கப்படவில்லை.

இதுவரையிலும் 120 நாடுகளின் ஆதரவைப் பெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் இந்த முன்மொழிவு உலக வர்த்தக கழகத்தின் ஒப்புதலை அவ்வளவு எளிதாக பெற்று விட முடியாது. உலக வர்த்தகக் கழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஏகாதிபத்தியங்களின் ஒப்புதல் இல்லாமல் இது சாத்தியம் இல்லை.

இத்தகைய நடவடிக்கையெல்லாம் இதில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் யார் என்பதை அம்பலப் படுத்துகிறது என்பது தனிக்கதை. இதையெல்லாம் மீறி உலக வர்த்தக கழகம் இந்த முன்மொழிவின் மீது முடிவெடுத்து அமுல்படுத்த வேண்டுமானால் அதற்கு (உலக வர்த்தகக் கழகத்தில் விவாதிக்கப்ப்ட வேண்டிய நிகழ்ச்சி நிரலில் உள்ள பட்டியலின் படி) இரண்டாண்டுகள்  ஆகுமென்று கூறப்படுகிறது.

ஆக, இந்தத் தற்காலிகத் தளர்வு குறித்த அனைத்து நகர்வுகளும் மாயையே. இந்த மாயை ஒருபோதும் உலகம் சந்தித்துள்ள தற்போதைய நெருக்கடியைக் கடக்க உதவப்போவதில்லை.

“அறிவுசார் சொத்துரிமையைத் தளர்த்துவதை” எதிர்க்கும் ஏகபோகங்கள் !

கோவிட் தடுப்பூசி தயாரிப்பில் ஏகபோகங்களாக உள்ள அமெரிக்காவின் பைசர், பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான இந்த தற்காலிகத் தளர்வை எதிர்க்கின்றனர். இங்கிலாந்தில் இருக்கக் கூடிய பெரும் மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி பங்கு அமைப்புகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இணைந்து “கோவிட் 19 தடுப்பூசிகள் மீதான அறிவுசார் சொத்துரிமையைத் தளர்த்துவதை இங்கிலாந்து எதிர்ப்பது முற்றிலும் ஏற்கத்தக்கது” என்று கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த ஏகபோகங்கள் இதற்கு சொல்லக் கூடிய ‘நியாயவாதம்’, அறிவுசார் சொத்துரிமை நீக்கப்பட்டால் புதிய ஆராய்ச்சிகளுக்கான ஊக்கம் குறைந்து விடும் என்பதும், ஆராய்ச்சிக்காக ‘டன்’ கணக்கில் நாங்கள் பணத்தை செலவிட்டோம் என்பதும்தான். ஆராய்ச்சிகளுக்கான ஊக்கம் குறைந்து விடும் என்ற கதையே அறிவுசார் சொத்துரிமை ஏகபோகங்களின் இலாப நோக்கத்திற்குதான் அவை ஒரு போதும் சமூக நலணுக்கானதில்லை என்று அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.

மேலும், ‘டன்’ கணக்கில் பணத்தை ஆராய்ச்சிக்காக செலவளித்துள்ளோம் என்ற பாதி பொய்யையும் மீதி உன்மையையும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. இந்த ஏகபோக நிறுவனங்களின் தடுப்பூசி ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு நாட்டின் அரசும், அந்நாட்டு நிறுவனங்களும் உதவியாக பெரும் தொகையை அளித்துள்ளனர்.

உதராணமாக, ஐ-மேக் நிறுவனத்தின் நிறுவனரான தாஹிர் அமீன், எம்.ஆர்.என்.சி தடுப்பூசி உற்பத்தியை துரிதப்படுத்தியதில் மக்களின் பங்கு (பொது டாலர்களின் public dollar’s) அதிகம் உள்ளது என்பது ஆவணப் படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். மேலும் பயோஎன்டெக் நிறுவனம் அரை பில்லியன் யூரோக்களை ஜெர்மனிடம் இருந்தும், ஆக்ஸ்போர்ட் இங்கிலாந்து அரசாங்கத்திடமிருந்தும் ஆராய்ச்சிக்காக நிதி பெற்றுள்ளதை சுட்டிக் காட்டுகிறார். 2018-ஆம் ஆண்டு மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 4 பில்லியன் டாலர்களில் மருந்து நிறுவனங்கள் செய்த முதலீடு 17 சதவீதம் (650 மில்லியன்) மட்டும்தான், என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி உலகளவில் கடைப்பிடிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமை மற்றும் தடுப்பூசி கொள்கைகள் “ஆபத்தை சமூகமயமாக்கி லாபத்தை தனியார்மயமாக்கும்” நடவடிக்கையே என்று தாஹீர் அமீன் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்தப் பேட்டியில் கூறுகிறார். ஆகவே, இந்த ஏகபோக நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக முதலீடு செய்வதை காட்டிலும், வணிகம் சார்ந்த நடவடிக்கைகளுக்குத்தான் அதிகம் செலவிடுகின்றனர்.

அதற்கேற்றவாறு தடுப்பூசி உற்பத்தியில் இவர்களின் இலாபம் மலையளவு பெருக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தியில் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 3.5 பில்லியன் டாலர்கள் இலாபம் அடைந்துள்ளது. அமெரிக்காவின் மாடர்னாவிற்கான தடுப்பூசி வருவாய் 18.4 பில்லியன் டாலர்கள் வருமென எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார்கள். இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் தலைவர் பூனாவாலா “இந்தியாவில் இலாபம் கிடைக்கிறது, ஆனால் சூப்பர் இலாபத்தை ஈட்டவில்லை” என்கிறார்.

ஆகவே இந்த அறிவுசார் சொத்துரிமை மனித உயிர்களைக் குடித்து ஏகபோகங்களின் இலாபத்தை உறுதி செய்வதாகவே அமைகிறது. இப்படி தடுப்பூசி உற்பத்தியை அறிவுசார் சொத்துடைமை என்ற பெயரில் ஏகபோகங்கள் கட்டுப்படுத்துவதால்தான் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகள் தடுப்பூசி பற்றாக்குறையினாலும், தடுப்பூசியின் அதிகப்படியான  விலையினாலும் பேரழிவுகளை சந்திக்கின்றன.

தடுப்பூசி மற்றும் மூலப்பொருட்களை முடக்கும் அமெரிக்கா !

அறிவுசார் சொத்துரிமை தற்காலிகத் தளர்வு செய்வதைத் தாண்டி தடுப்பூசி உற்பத்தியில் ஏற்படும் நெருக்கடிக்கு தற்போதைய இன்னொரு முக்கியமன தடையாக இருப்பது தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் ஏற்றுமதியை அமெரிக்கா தடை செய்துள்ளது தான் என பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் முதற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெர்மன் ஆகியவை அமெரிக்காவைச் சாடுகின்றனர்.

இந்தியாவின் சீரம் நிறுவனம்  உட்பட உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மார்ச் மாத இறுதியில் வினியோக சங்கிலி சிக்கலை பற்றி விவாதிக்க கூடினார்கள். அதில் மூலப் பொருட்களின் பற்றாக்குறையை பற்றியும், அமெரிக்கா மூலப் பொருட்களை பதுக்குவதாகவும் விவாதித்தனர். இதில் சீரம் நிறுவனமும் உற்பத்தியை அதிகரிப்பதில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை பிரச்சனை இருப்பதாகத் தெரிவித்தது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 1954-இல் உருவாக்கப்பட்ட “பாதுகாப்பு உற்பத்தி சட்டம்” என்பதைப் பயன்படுத்தி தடுப்பூசிக்கான மூலப் பொருட்களின் ஏற்றுமதியை தடைசெய்தது ஒரு பக்கம் என்றால், உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியின் வினியோகத்தையும் நிறுத்தி வைத்துள்ளது அமெரிக்கா. இதற்கு பைடன் நிர்வாகம் சொல்லும் காரணம் அமெரிக்காவை முதலில் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.

ஆனால் உண்மை அமெரிக்காவைப் பாதுகாப்பதை தாண்டி அதன் மேலாதிக்க வெறிதான் முன்னிலையில் இருக்கிறது. அமெரிக்க ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் “நாங்கள் தற்போது கையிருப்பில் உள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 40 மில்லியனுக்கும் அதிகமான அளவுகளின் மேல் உட்கார்ந்திருக்கிறோம் என்றும் இது நாங்கள் பயன்படுத்தாத கையிருப்பு” என்றும் கூறுகிறார்.

டியூப் குளோபல் ஹெல்த் புதுமை மையத்தின் அறிக்கையின்படி ஜூலை மாதத்திற்குள் அமெரிக்கா 300 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசி அளவுகளை அடைந்து விடுவது மட்டுமில்லாமல் ஜூலை 5-க்குள் தனது நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டுமென இலக்கு வைத்துள்ளது. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் பல நாடுகள் பெரும்பான்மையான மக்களுக்குத் தடுப்பூசி போட பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். என்கிறது இந்த அறிக்கை.

இந்தியாவில் இறப்பு எண்ணிக்கையும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்த சூழலில் அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், புகழ்பெற்ற இந்திய-அமெரிக்கர்கள், அமெரிக்க வர்த்தக சபை மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் ஆகியோர் இந்தியாவிற்கு பாதுகாப்பு உபகரணங்களையும், தடுப்பூசியையும், அதற்கான மூலப் பொருட்களையும் ஏற்றுமதி செய்யுமாறு அழுத்தம் கொடுத்தனர்.

குறிப்பாக முன்னாள் அமெரிக்க உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் “இந்தியா எப்போதும் தேவைப்படும் மற்றவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது, இப்போது இந்தியாவுக்கு உதவ வேண்டிய நேரம்” என ட்வீட் செய்துள்ளார். இத்தகைய அழுத்தத்திற்கு பின்தான் ஏப்ரல் 25 அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் விரைவாக இந்தியாவிற்கு கூடுதல் ஆதரவை அனுப்புவதாக தெரிவித்தார்,

மேலும் மே 5-ஆம் தேதியன்று வெண்டிலேட்டரும் அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். இந்த தொடக்க நிலை ஆதரவை அடைவதற்கே இலட்சக்கணக்கான உயிர்களை இழக்க வேண்டியுள்ளது. ஆனால், அதுவும் உறுதியானதோ, நிரந்தரமோ கிடையாது.

படிக்க :
♦ RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE
♦ கொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்

ஏற்றுமதியை தடை செய்வது, வர்த்தகப் போர்களை நடத்துவது, காப்புவாதத்தில் ஈடுபடுவது, பொருளாதார தடைகளை விதிப்பது என தனது மேலாதிக்க வெறிக்காக இந்த பெருந்தொற்றுச் சூழலிலும் எரிக்கப்படும் மனித பிணங்களுக்கு இடையில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது அமெரிக்க மேல்நிலை வல்லரசு.

ஏகாதிபத்திய சிலந்தி வலைக்குள் சிக்கிக் கொண்டுள்ள எந்தவொரு நாடும் தன்னிறைவு அடைந்த சுயசார்பு நாடாக இருக்க முடியாதென்பது மட்டுமல்லாமல் ஏகாதிபத்தியத்தின் வேட்டைக் காடாக மாற்றப்பட்ட பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகள் இழக்கும் ஒவ்வொரு உயிரும் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க மற்றும் இலாப வெறியினால் பறிக்கப்படுபவைதான்.


பூபாலன்

உதவிய கட்டுரைகள் :
1.https://countercurrents.org/2021/05/covid-19-vaccines-politics-and-economics-of-the-ipr-waiver-ploy/
2.https://countercurrents.org/2021/05/political-economy-of-modi-governments-vaccination-policy/
3.https://m.timesofindia.com/home/sunday-times/look-at-the-number-of-pharma-covillionaires-motto-cant-be-socialise-risk-privatise-profit-says-i-mak-founder-tahir-amin/articleshow/82483061.cms
4.https://m.timesofindia.com/business/international-business/white-house-considering-intellectual-property-waiver-for-covid-19-vaccines/articleshow/82284519.cms|
5.https://www.cnbc.com/2021/02/02/covid-vaccine-pfizer-expects-about-15-billion-in-2021-sales-from-shots.html
6.https://science.thewire.in/health/the-least-the-centre-can-do-for-people-now-is-provide-free-covid-vaccines/
7.https://countercurrents.org/2021/04/vaccine-imperialism-now-led-by-biden-the-democrat-and-vaccine-compradors-now-led-by-modi-of-swadeshi/
8.https://www.google.com/amp/s/m.kalaignarseithigal.com/article/chinas-envoy-announces-rollout-of-covid-19-support-for-india-through-red-cross/2f97e422-2c8c-43c8-b6fa-b5eabcf995e4/amp
9.https://www.bbc.com/tamil/global-57036338

“நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”

2

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தை, அசுரர்கள் பருகிவிடாமல் தடுக்க மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு அதை 12 நாட்கள் கட்டி காத்தாராம். இங்கும் அங்குமாக ஓடியபோது சிந்திய அமுதத்துளிகள் புனித கங்கையின் ஹரித்துவார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, நாசிக் போன்ற இடங்களில் விழுந்தனவாம்.

எனவே, அந்த இடத்தில் புனித நீராடினால் ஏழெழு பிறவிகளில் செய்த பாவமும் கழுவப்படும் என்ற கட்டுக்கதையை 19 நூற்றாண்டுக்குப் பிறகே இந்துத்துவர்கள் பரப்பி வருகின்றனர்.

படிக்க :
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

♦ கங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்

அதாவது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்துக்களின் புனித நீராடுதல் நிகழ்வு என சொல்லப்படும் கும்பமேளா குறித்த வரலாறு 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே உருவாக்கப்பட்டிருக்கிறது. கும்பமேளா குறித்த எந்த விவரமும் புராண இதிகாச நூல்களில் இல்லை எனவும் ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்.

புனித கங்கையில் அமுதத் துளிகள் கலந்திருப்பதற்கும் அதில் நீராடினால் இந்துக்களின் பாவங்கள் கழுவப்படும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், புனித கங்கையில் நீராடும் நிகழ்வான கும்பமேளா மூலம் காலரா போன்ற பெருந்தொற்று நோய்கள் பரவி உலக மக்களை பலியாகியிருக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

1855-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளா உருவாக்கிய காலரா, எப்படி உலகம் முழுவதும் பரவியது என்பது குறித்து இஸ்தான்புல்லில் 1866-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச சுகாதார மாநாட்டில் அறிக்கை சமர்பிக்கப் பட்டிருக்கிறது.

கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள புனித யாத்திரைத் தளங்களில் காலரா வளர்ந்து பிறகு மெக்கா, எகிப்து, மத்திய தரைக்கடல் துறைமுகங்கள் மூலம் ஐரோப்பிய நகரங்களுக்கு பரவியதாகவும் 1866 அறிக்கை கூறுகிறது.

புனித கங்கை தொற்று நோய்களின் கூடாரமாக மாறியுள்ளதை சமீபத்திய ஆய்வுகளும் எடுத்துரைக்கின்றன. ஆனாலும் கூட பாவங்களை கழுவச் சொல்லும் மூட கட்டளையை நிறைவேற்ற லட்சக்கணக்கில் மக்கள் அங்கே கூடிக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக, உலகமே பெருந்தொற்று காலத்தில் பீடித்திருக்கும் போது, கும்பமேளா நடத்துவதும், அதில் பங்கேற்பதும் எத்தகைய பேரழிவுகளை உருவாக்கும் என்பதற்கு மோடி கால இந்தியா உதாரணமாகியிருக்கிறது.

2010-ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளா, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற கணக்கில் 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டும். ஆனால், சோதிடர்களின் அறிவுரைப்படி ஓராண்டு முன் கூட்டியே நடத்தியிருக்கிறது உத்திராகண்டை ஆளும் பாஜக அரசு. கோவிட்-19 இரண்டாம் அலையின் தீவிர பரப்பியாக செயல்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஜனவரி-14 முதல் ஏப்ரல் இரண்டாம் வாரம் வரை நிகழ்ந்தது கும்பமேளா. கிட்டத்தட்ட 35 லட்சம் பேர் கலந்துகொண்ட கும்பமேளாவுக்கு வர மத்திய அரசு சிறப்பு ரயில்களை விட்டது. மாநில அரசு கோவிட் பரிசோதனை எதுவும் தேவையில்லை, வந்து நோய்ப் பரப்பலில் ஈடுபடுங்கள் என சலுகையோடு அழைத்தது.

கும்பமேளாவில் இருந்து திரும்பியவர்கள் தொற்றோடு திரும்பி, வட மாநிலங்களின் மூலை முடுக்கெல்லாம் பரப்பி விட்டனர். விளைவு இன்று புனித கங்கையில் பிணங்கள் மிதக்கின்றன.  நதிக்கரைகள் பிணங்கள் புதைக்கும் இடுகாடுகளாக மாறியுள்ளன. மழையில் புதைத்த பிணங்கள் வெளியே வந்து நாய்களுக்கு இரையாகின்றன. கார்டினியன் நாளிதழ் தலையங்கள் எழுதியது போல, வட இந்தியா வாழும் நரகமாக மாறிவிட்டது.

கங்கை நதிக்கரையில் உத்தரப் பிரதேச மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள பீகார் மாநிலத்தில் பாக்ஸரில் கடந்த வாரம் 71 பிணங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அந்தப் பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் சீதாராம் சவுத்ரி, ‘கங்கையில் அவ்வப்போது பிணங்கள் மிதந்து வருவது இயல்பானதே. ஆனால், இத்தனை பிணங்கள் ஒரே நேரத்தில் மிதந்தது, நரகத்தில் உடைப்பு ஏற்பட்டுவிட்டதுபோல இருந்தது’ என்கிறார். இந்தப் பிணங்கள் ஆதித்யநாத் ஆளும் உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்தவை என்கிறார் பீகார் அமைச்சர்.

இந்தி நாளிதழான டைனிக் பாஸ்கர் அதன் 30 நிருபர்களைக் கொண்டு கள ஆய்வு ஒன்றைச் செய்திருக்கிறது. அதில் உத்தரப் பிரதேசத்தில் கங்கை ஆற்றின் கரையை ஒட்டி சுமார் 1,140 கிலோமீட்டர் பரப்பளவில் 2,000-க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். கோவிட் காரணமாக தினசரி சுமார் 300 பேர் மட்டுமே இறப்பதாக உத்தரப் பிரதேசத்தை ஆளும் சாமியார் அரசு கணக்குக் காட்டி வருகிறது.

டைனிக் பாஸ்கரின் விவரிப்பு கற்பனை கதைகளில் சொல்லப்பட்ட நரகம், கங்கை நதிக்கரையில் சமகாலத்தில் உண்மையாகியிருப்பதைக் கூறுகிறது. உ.பி.யின் கன்னாஜ் நதிக்கரையோரம் 350-க்கும் மேற்பட்ட உடல்களை பாறைத் துண்டுகளை வைத்து, மேலோட்டமாக புதைத்துள்ளனர்; கான்பூரில் உள்ள ஒரு சுடுகாட்டிலிருந்து சிறிது தூரத்தில் 400 பிணங்களை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருக்கின்றன. காசிப்பூர் காங்கை ஆற்றில் 52 பிணங்கள் மிதக்கினறன. பெரும்பாலும் அவை மிதந்து மாநில எல்லையைக் கடக்கக் கூடும்’ என்கிறது கள ஆய்வுக் கட்டுரை.

இறந்தவர்களை எரியூட்ட சுடுகாட்டில் இடம் கிடைக்காததாலும் எரியூட்டும் செலவு ரூ.2 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ஆனது உள்ளிட்ட காரணங்களாலும்  நதிக்கரை மணலில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர். இப்படி புதைக்கப்பட்ட பிணங்கள் சமீபத்தில் பெய்த மழையால் மேலே வந்து, அவற்றை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலமும் நிகழ்ந்திருக்கிறது.

கும்பமேளாவில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு திரும்பிய 10-ல் ஒருவருக்கு கோவிட் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் கூறின. கோவிட் தொற்றின் இரண்டாம் அலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு மோடியின் முன்மாதிரி ‘வளர்ச்சி’ மாநிலமான குஜராத் கடும் உயிரிழப்புகளை சந்தித்தது.

குஜராத்தின் திவ்யா பாஸ்கர் நாளிதழ் மார்ச் 1 முதல் மே 10 வரை 1,23,000 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது – இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 65,000 அதிகம் எனக் கூறுகிறது.  மற்றொரு நாளிதழான குஜராத் சமாச்சார், வடோதரா சுடுகாட்டில் தினமும் 200 பிணங்கள் எரிக்கப்படுவதாகக் கூறுகிறது.

படிக்க :
♦ கொரோனா படுகொலைகள் : முதன்மைக் குற்றவாளி மோடியும் பா.ஜ.க. அரசுமே !
♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

மோடி ஆட்சிக்கு வந்து இந்து ராஷ்டிரம் அமைந்து விட்டால் பாலாறும் தேனாறும் பாயும் என கற்பனையில் வாக்களித்து அரியணை ஏற்றிய மக்கள், ஆறுகளெல்லாம் பிணங்கள் ஆகிவிட்டதைக் காண்கிறார்கள். பிணங்கள் எரியும் நாற்றமும் காற்றை நிரப்பும் பிணங்களில் அழுகலும் மக்களின் நாசிகளை துளைக்கின்றன. மதமும் மூடத்தனமும் எத்தகைய அழிவைத் தரும் என்பதை இந்துத்துவ புனித மயக்கத்தில் ஆழ்ந்துள்ளவர்கள் இப்போதும் அறிய வாய்ப்பில்லை. நாம் நினைவுப் படுத்திக் கொண்டே இருப்போம்.

பா.ஜ.க-வின் ஆதரவாளராக இருந்து, தற்போது நாடே சுடுகாடாக மாறியிருப்பதால் மனம் வெதும்பிய குஜராத்தி கவிஞர் பரூல் கக்காரின் இந்த வரிகள் இந்துத்துவ குண்டர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருக்கின்றன…

“நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”


அனிதா
செய்தி ஆதாரம் : The Wire, The Print

சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்

உண்மை – கிலோ என்ன விலை? இதுவே தினகரன் நாளிதழ் நிலை !

“அரை உண்மை முழுப்பொய்யை விட ஆபத்தானது” என்பார்கள். அதற்கு உதாரணமாக இருக்கிறது தினகரன் நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்று. இந்தப் பெருந்தொற்று நெருக்கடி காலத்தில் அரசு – அதிகார வர்க்கத்தின் ஊதுகுழலாக, மக்கள் விரோதமாகப் பொய்யும் புனைசுருட்டுமாக செய்தி வெளியிட்டு, வாங்கும் காசுக்கு மேல் கூவுவதை  சிறப்பாகச் செய்து வருகிறது தினகரன்.

கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு போடப்பட்டது முதலே, மக்கள் யாரும் சரியில்லை – வெளியே வந்தால் போலீஸ் அடிக்கத்தான் செய்யும் என்கிற அளவுக்கு ‘செய்தி’ வெளியிட்ட தினகரன் இப்போது அதையெல்லாம் மிஞ்சிவிட்டது. ஒரே செய்தியில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதோடு, மக்களையும், மாவோயிசப் போராளிகளையும் அவதூறு செய்து நஞ்சை விதைக்கும் வேலையைச் செய்திருக்கிறது. 15.05.2021 தேதியிட்ட தினகரன் நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளியாகியிருக்கும், “மருத்துவ வசதி, விழிப்புணர்வு இல்லாமல் கொத்து கொத்தாக மடியும் மக்கள் – கிராமங்களை சூறையாடும் கொரோனா” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தியில் தான் இந்த நஞ்சைக் கக்கியிருக்கிறது.

படிக்க :
♦ RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE
♦ கொரோனா படுகொலைகள் : முதன்மைக் குற்றவாளி மோடியும் பா.ஜ.க. அரசுமே !

“பெருநகரங்கள், சிறுநகரங்களைத் தொடர்ந்து கிராமங்களையும் சூறையாடத் தொடங்கி விட்டது கொரோனா வைரஸ். முறையான மருத்துவ வசதி, விழிப்புணர்வு இல்லாததால் பாதிப்பையே அறியாமல் மக்கள் கொத்து கொத்தாக இறக்கின்றனர். அங்கு நிலைமையைச் சமாளிக்க முடியாமல் வடமாநில அரசுகள் திணறுகின்றன” என்று தொடங்குகிறது இந்த செய்திப்பதிவு.

மருத்துவ வசதிகளும், விழிப்புணர்வும் ஏன் இல்லாமல் போயின என்ற கேள்விக்குள் சென்று அதற்கான காரணங்களை அறிவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாத செய்தியாளர், “குறிப்பாக, பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், அரியானா, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று மாநிலங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அடுத்தடுத்த பத்திகளில் பல்வேறு மாநிலங்களில் நிலவும் அவலமான நிலையைச் சொல்லிச் செல்கிறார்.

பீகாரின் தலைநகர் பாட்னாவில் இருந்து 195 கி.மீ தொலைவில் உள்ள கைமர் மாவட்டத்தின் பம்ஹார் காஸ் கிராமத்தில், கடந்த 25 நாட்களில் 34 பேர் இறந்துள்ளதையும், அவர்கள் அனைவரும் கொரோனா அறிகுறிகள் இருந்தும் யாரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவில்லை என்பதையும் செய்திக் கட்டுரை பதிவு செய்கிறது. மேலும், “இந்த கிராமத்து மக்கள் கூறுகையில், “இங்கு சுமார் 70 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. பலரும் காய்ச்சலுடன் வீட்டு மருத்துவம் பார்த்துக் கொள்கின்றனர். மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்கின்றனர்” என்றும் கூறுகிறது.

அடுத்ததாக, “உத்தரப் பிரதேச மாநிலத்தின் மாய்மா கிராமத்தில் கடந்த ஒரு மாதத்தில் 25 பேர் இறந்துள்ளனர். அதில் 4 பேர் மட்டுமே கொரோனாவில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கிராமத்தினர் கூறுகையில், “அரசு கூறும் கொரோனா இறப்பைவிட 4 மடங்கு அதிக இறப்புகள் பதிவாகின்றன. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. உள்ளூரில் முறையான பரிசோதனை மையங்கள் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்கின்றனர்” என உ.பி மாநில கிராமத்தின் மோசமான நிலைமை பதிவு செய்யப்படுகிறது.

இதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் பரிசோதனைக்காக 10 கிலோமீட்டர் தாண்டி பக்கத்து ஊருக்கு போக வேண்டும் என்பதால், கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதாகவும் கட்டுரை சொல்கிறது.

மேற்சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மையாக இருக்குமா என நாம் தனியே சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நிலையைத்தான் கடந்த சில நாட்களாக கங்கையில் மிதந்து கொண்டிருக்கும் 2000-க்கும் மேற்பட்ட சடலங்கள் காட்டுகின்றன.

உ.பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறையும், மருத்துவ வசதிகள் இன்மையும் கடுமையாக இருப்பதை அம்மாநில ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் எம்.பி, எம்.எல்.ஏக்களே சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி வருகின்றனர். பீகாரின் ‘வளர்ச்சி’ நாயகன் நிதீஷ்குமார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றிய தகவலே செய்தித் தாள்களில் காணவில்லை. உ.பி.யை விட பீகார் முன்னேறிய மருத்துவக் கட்டமைப்பு கொண்ட மாநிலம் என்பதற்கும் எந்த உதாரணமும் நமக்கு கிடைக்கப் பெறவில்லை.

தினகரனின் இந்தச் செய்திக் கட்டுரையில் உள்ள ஒரு பெட்டிச் செய்தியானது, எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் கொரோனா தனிமை வார்டு இருப்பதையும், மருத்துவமனைக்கு சென்றால் செத்துவிடுவோம் என்ற அச்சத்தால் மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல மறுப்பதாக சொல்கிறது. இன்னொரு பெட்டிச் செய்தியோ, “மருத்துவக் கட்டமைப்புகள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் பரிசோதனை, சிகிச்சைகள் வழங்க அரசுகள் முயன்ற அளவு முயற்சிக்கின்றன. ஆனால், கிராமங்களில் மக்களிடமிருந்து முறையான ஒத்துழைப்பு இல்லாமலேயே இருக்கிறது” என்கிறது.

இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இந்தக் கிராமங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இருப்பதில்லை. அங்கு சென்று தங்களைக் குணப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அரசுகள் ஒருபோதும் மக்களிடம் உருவாக்கியதில்லை என்பதால்தானே இந்த நெருக்கடியான நிலைமையிலும் மக்கள் போக அஞ்சுகிறார்கள். இதுதான் ‘வளர்ச்சி நாயகன்’ மோடி ஆளும் காலத்திலும் நிலவும் உண்மை நிலைமை.

மேற்சொன்ன தகவல்களில் இருந்து உ.பி., பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் கிராமங்களில் அடிப்படை வசதிகள் உள்ள மருத்துவமனைகளை அரசுகள் உருவாக்கவில்லை; இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகள், கொரோனா வார்டுகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து செல்வதில்லை; கடந்த ஓராண்டுக்கும் மேலாக வாய்வீச்சில் ஈடுபட்டு வந்த மோடி, இந்த நிலைமைகளை மாற்ற எதையும் செய்யவில்லை என்பதை நம்மால் சந்தேகத்திற்கிடமின்றி உணர முடிகிறது.

ஆனால், தினகரனோ முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது மட்டுமல்ல, இந்த அச்சத்தை உருவாக்கியதில் அரசின் பங்கை அடியோடு மறைக்கிறது; பேச மறுக்கிறது. ஏதோ உ.பி, பீகார் போல் இல்லாமல், சட்டீஸ்கரில் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருப்பதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என்றும் ஒரு கேடான பொய்ப் பிரச்சாரத்தையும் இந்த செய்திக் கட்டுரையில் எழுதியிருக்கிறது தினகரன்.

மேற்சொன்ன வடமாநிலங்களின் நிலைமைகளில் இருந்து பெரிதாக எந்த வகையிலும் வேறுபடாத நிலைதான் சட்டீஸ்கரிலும் நிலவுகிறது. இங்கு நிலவும் மோசமான மருத்துவக் கட்டமைப்பு குறித்து 24.04.2021 தேதியிட்ட – Beds, oxygen, medicines: How Chhattisgarh dropped Covid ball- என்னும் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளக் கட்டுரை விளக்குகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் சூழலிலும் கூட சிலநூறு ஐ.சி.யூ படுக்கைகளே மாநிலம் முழுவதும் இருப்பதையும், வெண்டிலேட்டர்கள் சொற்பமாகவே உள்ளன என்பதையும், அரசு ஆவணத்தில் இருப்பதில் பாதியளவுக்குத்தான் ஐ.சி.யூ படுக்கைகள் உண்மையில் இருப்பதையும் இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது.

உண்மை நிலவரம் இவ்வாறிருக்கும் போது, தினகரன் பின்வருமாறு தனது அவதூறு பிரச்சாரத்தை மாவோயிஸ்டுகள் மீது நிகழ்த்தியிருக்கிறது. “சட்டீஸ்கரில் பெரும்பாலும் மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு நக்சல் பாதிப்பும் அதிகளவில் உள்ளது. இதனால் மருத்துவக் கட்டமைப்புகள் பெரிய அளவில் இல்லை. அதோடு கொரோனா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நக்சலைட்டுகள் மக்களை மிரட்டி வெளிநபர்கள் யாரும் கிராமத்திற்குள் வரக் கூடாது என பிரச்சனையும் செய்கின்றனர். இதன் காரணமாக மருத்துவக் குழு அங்கு செல்ல முடியாமல் மக்கள் பலர் இறக்கின்றனர்” என்கிறது தினகரன் செய்திக் கட்டுரை.

மிகவும் பச்சையான அயோக்கியத்தனம் இல்லையா இது? மாநிலத்தின் தலைநகரமே கோவிட் தொற்றுக்கு பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவமனைகள், மருத்துவர்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏதுமில்லாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மாநில சுகாதார அமைச்சரோ, கடந்த ஓராண்டுக்கு முன்பே ஐ.சி.யூ படுக்கைகளை அதிகரிக்க நிதி ஒதுக்க வேண்டுமென முதல்வருக்குக் கோரிக்கை வைத்து விட்டேன், ஆனால் பலனில்லை எனப் புலம்புகிறார். ஆனால், தினகரன் என்ன சொல்கிறது? மாவோயிஸ்டுகள் அதிகம் இருப்பதால், மலைக் கிராமங்கள் மருத்துவ வசதிகள் இல்லாமல் இருக்கின்றனவாம். ஒட்டுமொத்தமாக அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் தலைநகரில் மருத்துவ வசதிகளை செய்ய விடாமல் தடுப்பது யார்? உ.பி., பீகாரில், ராஜஸ்தானில் மருத்துவ வசதிகள் இல்லாமல் மக்கள் கொத்துக் கொத்தாக செத்துப்போக யார் காரணம் என்பதையும் இந்த பாணியில் விளக்கி இருக்கலாம் அல்லவா?

“கொரோனா தொற்று காரணமாக 7-8 மாவோயிஸ்டுகள் இறந்துவிட்டனர்; முக்கிய தலைவர்கள் உட்பட சுமார் 100 பேர் தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்; போலீசுக் கட்டுப்பாடுகள் காரணமாக போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் காலாவதியான மருந்துகளை சாப்பிட்டு மேலும் சிக்கலுக்கு உள்ளாகின்றனர்; இவர்களால் மலைவாழ் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது; வீடியோ கால் மூலம் மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்து கேட்கின்றனர்; நூற்றுக்கு மேற்பட்ட பி.பி.இ கிட்டுகள், இருநூறு தடுப்பூசி குப்பிகளை வாங்கியுள்ளனர்; இவர்கள் சரணடையத் தயார் என்றால் அரசு மருத்துவம் பார்க்க தயாராக உள்ளது” என்ற போலீசின் கதைகளை எல்லாம் தினகரன் மட்டுமல்ல பல ஆங்கில நாளிதழ்கள் கூட தினசரி வெளியிட்டு வருகின்றன.

கடந்த முப்பதாண்டுகளாக மத்திய – மாநில அரசுகள் பின்பற்றி வரும் தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளால் நாடு வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாக எல்லா அரசுகளுமே பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டன. அந்தப் பொய்களை எல்லாம் நொறுக்கி, உலகமயமும் தனியார்மயமும் மோசடியானவை, மக்களுக்கு எதிரானவை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது கொரோனா பெருந்தொற்று. நாடு முழுவதுமே மருத்துவக் கட்டமைப்புகள் மிக மோசமாக இருப்பதை இந்தப் பெருந்தொற்று முற்றாக அம்பலப்படுத்தி விட்டது.

மக்களுக்கு மருத்துவ வசதிகள் இல்லை, விழிப்புணர்வு இல்லை என்றால் அதற்குக் காரணம் இத்தனைக் காலமும் ஆட்சி செய்த அத்தனை பேரும் அயோக்கியர்கள், மக்கள் விரோதிகள் என்பதை மறைப்பதற்காக மிகவும் கேவலமான பொய்யை அரசும் ஆளும் வர்க்கமும் அவிழ்த்துவிட்டு வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் மாவோயிசப் போராளிகள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், மக்களுக்கு மருத்துவம் கிடைக்கத் தடையாக இருக்கிறார்கள் என்ற வடிகட்டிய பொய்.

படிக்க :
♦ கார்டியன் தலையங்கம் : மோடியின் தவறுகள் – கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருந்தொற்று
♦ லான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு

இத்தனை ஆண்டுகளாக இவர்கள் உருவாக்கிய வளர்ச்சி எதுவும் மக்களுக்கானதில்லை என்பதை இப்போதும் கூட, அப்பட்டமாக அம்பலமாகி நிற்கும் போதும் கூட முதலாளித்துவப் பத்திரிக்கைகள் சொல்லத் தயாராக இல்லை. மாறாக, அரசு அதிகாரிகள் வாந்தியெடுக்கும் பொய்களை, தமது சொந்தச் சரக்காகவே எழுதி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கின் பெயரால் அரசு தனது தோல்வியை மறைக்க போலீசின் குண்டாந்தடியை வைத்து மக்களை அடக்குகிறது. தினகரன் போன்ற முதலாளித்துவப் பத்திரிக்கைகளோ, தமது பொய்ப் பிரச்சாரம் மூலம் மக்களின் சிந்தனையை முடக்கி கருத்து அடியாள் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன.


வினவு செய்தியாளர்
திருச்சி.

RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE

ட்ரிங் ட்ரிங்
“ஹலோ! மாடு உதவி மையம்”
“மா!”
“மா. என்ன உதவி வேண்டும்?”
“மா”
“உங்களுக்கு இரும்பல் உள்ளதா?”
“மா”
“காய்ச்சலா”
“மா”
“ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதா?”

இரண்டு மாடுகள் பேசிக் கொள்வது போன்ற இந்த உரையாடல், உத்திரப் பிரதேச ஆதித்யநாத் அரசாங்கம் மாடுகளுக்கான கொரோனா உதவி மையத்தை தொடங்க  பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பகடி செய்து சமூக வலைத்தளங்களில் வந்த குறுஞ்செய்தியாகும். உ.பி-யில் கொரோனாவினால் இறந்தவர்களின் உடலை எரிக்க வழியில்லாமல் கங்கை ஆற்றில் வீசப்பட்டும் ஆற்றின் கரைகளில் புதைக்கப்பட்டும் இருப்பதாக பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

படிக்க :
♦ வல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் !! || CCCE
♦ தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE

கொரோனா இரண்டாவது அலையினால் மிகவும் மோசமாக பாதித்துள்ள அம்மாநிலத்தில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், அம்மாநில பி.ஜே.பி அரசோ (ஆதித்யநாத்), நோயைக் கட்டுப்படுத்துவதிலும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தாமல் ஆக்சிஜன் பற்றாகுறை என்று யாராவது செய்தி பகிர்ந்தால் அவர்களுடைய சொத்துக்கள் பறிக்கப்படும் என மிரட்டுவதிலும் பசு மாடுகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதிலுமே அதிக அக்கறைக் காட்டி வருகிறது.

உ.பி-க்கு ஆதித்தியநாத் என்றால் இந்தியாவிற்கு நரேந்திர மோடி-அமித்ஷா கூட்டணி.  ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரழப்புகள் அதிகரித்த போது சமூக வலைதளங்களில் வந்த விமர்சனங்களை கட்டுப்படுத்த மோடியை விமர்சிக்கின்ற செய்திகளை நீக்க வேண்டும் என சமூக வலைதள நிறுவனங்களிடம் முறையிட்டுள்ளது மத்திய அரசாங்கம்.

நிலைமை கைமீறி போகவே RSS-ன் தேசிய செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே ‘அழிவு சக்திகள் அல்லது பாரத விரோத சக்திகள் மக்களிடையே எதிர்மறைக் கருத்துக்களை பரப்புவதாகவும் செய்தி ஊடகங்கள் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டும்’ என்றும் பேசியிருந்தார்.

கொரோனா இரண்டாவது அலையினால் இந்தியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதிற்கு மோடி அரசே காரணம் என பல வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சமீபத்தில் கூட பிரபல மருத்துவ ஆய்வு இதழான லேன்செட் ஆகஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவால் ஏறத்தாழ 10 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் அதற்கு மோடி அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இந்த விமர்சனங்கள் எதுவும் அவர்களின் காதிற்குள் செல்லவில்லை. வழக்கம் போல வெளிநாட்டுச்சதி, பாரதத்தை வீழ்த்த திட்டமிடுகிறார்கள், மாநில அரசுகள் தான் இதற்கு பொறுப்பு என்று தங்களது ட்ரோல் ஆர்மி மூலமும் ஜால்ரா ஊடகங்கள் மூலமும் பிஜேபி/RSS தலைகள் தங்களுடைய ‘ஹிந்து ஹிருதய சாம்ராட்’க்கு முட்டுக்கொடுத்து வருகின்றன. தற்போது மோடி அரசாங்கத்தை பற்றிய நேர்மறை கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்காக ரவிசங்கர், ஜக்கிவாசுதேவ், அசீம் பிரேம்ஜி-யைக் கொண்டு தேசிய அளவிலான பிரச்சார (Positivity Unilimited) இயக்கத்தை பிஜேபி/RSS நடத்தியுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களை விட்டுவிடுவோம் இந்திய ஆய்வாளர்களும் மருத்துவர்களுமே மோடி அரசின் பொறுப்பற்றத் தன்மையை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் மரபணு மாற்றத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட INSACOG[1] என்ற அமைப்பின் ஆய்வாளர்கள் மே மாதம் முதல் வாரத்தில் ராய்ட்டர்ஸ் பத்திரிக்கைக்குப் பேட்டியளித்திருந்தனர். அதில் ‘தற்போது மரபணு மாறிய கொரோனா வைரஸ் (Double mutant corona virus-B.1.167-) இந்தியாவில் பரவி வருவதாகவும் இது அதிகம் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதாகவும்’ மார்ச் முதல் வாரத்திலே மத்திய சுகாதரத்துறை செயலரிடம் தெரிவித்தாக கூறியுள்ளனர்.

மேலும் மத்திய சுகாதரத்துறைக்கான பத்திரிக்கை செய்தியை தயாரித்து அனுப்பிய INSACOG உருமாறிய கொரோனா வைரஸ் (B.1.167) ‘அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது (High concern)’ என்று அச்செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கூடவே கொரோனா பரவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்றும் INSACOG  மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மார்ச் 24 அன்று வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் high corcern என்ற வார்த்தையை சுகாதாரத்துறை அமைச்சகம் நீக்கியிருந்தது.

INSACOG ஆய்வானது மார்ச் மாதத்தில் மகராஷ்ட்ரா மாநிலத்தில் பதிவாயிருந்த கொரோனா தொற்றில் 15-20 சதவீத பாதிப்புகள் B.1.167 கொரோனா வைரஸினால் ஏற்பட்டதாக கூறியுள்ளது. தற்போது அதன் அளவு 60 சதவீதத்திற்க்கும் மேலாக அதிகரித்தோடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் பரவியுள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு B.1.167 வைரஸ் முக்கிய காரணம் என மற்ற ஆய்வுகளும் கூறுகின்றன.

மரபணு ஆய்வு முடிகளின் அடிப்படையில் கொரோனா இரண்டாம் அலை குறித்து மார்ச் முதல் வாரத்திலேயே INSACOG ஆய்வாளர்கள் எச்சரித்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமோ அல்லது பிரதமர் அலுவலகமோ அதனைக் கண்டுகொள்ள இல்லை. நோய் தடுப்பிற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரத்திற்கும் கும்பமேளாவிற்கும் அனுமதி அளித்திருந்தனர். கொரோனா தொற்று உச்சத்திலிருந்த நேரத்தில் (ஏப்ரல் 13, 2021) சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பசுமாடு பற்றிய ஆய்வில் அக்கறைக் கொண்டிருந்தார். 98 கோடி மதிப்பிலான SUTRA-PIC என்ற இந்த திட்டம் இந்திய பசுக்கள் பற்றியும் அதன் பஞ்சகவ்யத்தைப் பற்றியும் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்துத்துவ அரசியலின் முக்கிய குறியீடாக உள்ள பசு அரசியலுக்காக  அறிவியல் பூர்வமான ஆதாரங்களை தேடுவதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால் கடந்த 14 மாதங்களாக பெருந்தொற்றில் நாம் பாதிப்படைந்திருக்கின்ற போதும் கொரோனா வைரஸைப் பற்றி ஆய்வு செய்யவதற்கான ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை மோடி அரசு இன்னும் அறிவிக்கவில்லை. மரபணு ஆய்விற்காக டிசம்பரில் ஆரம்பிக்கபட்ட INSCOG-க்கு தேவையான நிதியைக் கூட ஏப்ரல் முதல் வாரத்தில் தான் கொடுத்தனர்.

கொரோனா பரவ ஆரம்பித்த கடந்த மூன்று மாத காலத்தில் பி.ஜே.பி தலைவர்கள் (பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் உட்பட) பேசியவை அறிவியலுக்கு புறம்பானதாகவும் அரசியல் ஆதாயத்திற்கானதாகவும் இந்துத்துவ பரப்புரைகளுக்கானதாகவுமே இருந்தது. இதற்கான சில உதாரணங்களை மட்டும் கீழே தருகிறோம்.

  1. பிப்ரவரி மாத இரண்டாம் வாரத்தில் ஒரு இணையவழி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ‘கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது’ என்றார். ஆனால், மோடி பேசிய இரண்டு மாதத்திலே உலகளவிலான தொற்று இந்தியாவில் தான் அதிகம்.
  2. பிப்ரவரி மாத இறுதியில் மத்திய அமைச்சர்கள் ஹர்ச வர்தனும் நிதின் கட்காரியும் பாபா ராம்தேவினுடைய பதஞ்சலி நிறுவனத்தின் ‘கொரோனாநில்’ மருந்து கொரோனாவைக் குணப்படுத்துகிறது என்று அறிவித்து அதற்கான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். ஆனால் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த ஆதாரங்கள்  அறிவியல் முறைபடி இல்லை என்று ஆய்வாளர்கள் விமர்சித்திருந்தனர்.
  3. மார்ச் 7, 2021 டெல்லி மருத்துவக் கழகத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ‘கொரோனா பெருந்தொற்று அபாயத்தின் இறுதி ஆட்டத்தில் இந்தியா உள்ளது’ என்று மருத்துவர்கள் மத்தியில் அறித்தார். ஆனால், மற்ற நாடுகளின் அனுபவத்திலிருந்து பார்க்கும் போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை தவிர்க்க முடியாதது என்று பல ஆய்வாளர்களும் மத்திய அரசை எச்சரித்திருந்தனர்.
  1. ஏப்ரல் முதல் வாரத்தில் அஸ்ஸாம் மாநிலத்தினுடைய சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘அஸ்ஸாமில் கொரோனா இல்லை ஆகையால் முகக்கவசம் அணியத் தேவையில்லை, தேவையென்றால் மக்களுக்கு தெரியப் படுத்துகிறோம்’ என்றார். இச்சமயத்தில் அஸ்ஸாமின் சட்டசபைக்கான மூன்று கட்டத் தேர்தல் நிறைவடைந்திருந்தது. ஆனால், அரசு தரவுகளின் படி ஜனவரி 1-ல் இருந்து ஏப்ரல் 6 வரை 2,624 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்திருந்தனர். 66 இறந்திருந்தனர்.
  2. ஏப்ரல் 14, 2021, உத்திராகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத், ‘கும்ப் கங்கை நதியின் கரையில் அமைந்துள்ளது. நதி ஓட்டத்தில் கங்கா மாதாவின் அருள் உள்ளது. ஆகையால் கொரோனா இருக்க வாய்ப்பில்லை’ என்றார். கும்பமேளாவில் ‘புனித நீராடிய’ ஏப்ரல் 13 மற்றும் 14 இருதினங்களில் மட்டும் 1000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உத்திராகண்ட் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா அதிதீவிர பரவலுக்கான (Super spreader event) முக்கிய காரணிகளில் ஒன்றாக கும்பமேளா-புனித நீராடல் நிகழ்வை மத்திய அரசின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
  3. ஏப்ரல் 17, 2021 அன்று மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ‘பேரணியில் இவ்வளவு மக்கள் கூட்டத்தினைப் பார்த்ததில்லை. எங்கு பார்த்தாலும் மக்களாகத் தான் தெரிகிறார்கள்’ என்றார். மோடி உட்பட அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பானமையோர் கெரோனா வழிக்காட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றவில்லை. குறிப்பாக அன்றைய தேதியில் 2.35 லட்சம் கொரோனா பதிப்புகளும் 1,341 இறப்பும் இந்தியாவில் பதிவாகியிருந்தது.
  4. ஏப்ரல் 18, 2021 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்குப் போட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘கொரோனா தொற்று அதிகரிப்பிற்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கும் தொடர்பில்லை’ என்று கூறினார். ஆனால் ஏப்ரல் 1 லிருந்து (738 கொரோனா தொற்று) ஏப்ரல் 18 (8417 கொரோனா தொற்று) தேதிக்குள் மேற்குவங்கத்தில் கொரோனா தொற்றின் விகிதம் 1,040 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அரசாங்கப் புள்ளிவிவரம் கூறுகிறது.
  5. மே 12 2021, மத்தியப் பிரதேச கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தக்கூர் ‘கொரோனா மூன்றாவது அலையிலிருந்து தப்பிக்க சிகிட்த யாகத்தை நடத்த வேண்டும். இது சுற்றுச்சூழலை தூய்மையாக்கும். இந்த யாகத்தின் மூலமே நமது முன்னோர்கள் பெரும் தொற்றை தடுத்திருக்கின்றனர்’ என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
  6. கோரோனாவிற்கு மருந்தாக மாட்டு சிறுநீரைக் குடிப்பது, மாட்டுச் சானத்தை உடலில் பூசிக் கொள்வதுப் போன்றவற்றையும் பி.ஜே.பி எம்.எல்.எ.க்களும் கட்சி ஆதரவாளர்களும் செய்து வருகின்றனர்.

அறிவியலை புறக்கணிப்பது, உண்மைத் தரவுகளை மறைப்பது/திரித்துக் கூறுவது, மக்களை நம்பவைக்க மத நம்பிக்கைகளையும் பழங்காலக் கதைகளையும் கட்டவிழ்த்து விடுவது. இவைகள் தான் BJP/RSS கும்பலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மையாக இருந்ததாகக் கூறலாம். கொரோனா நெருக்கடி காலத்திலும் கூட தங்களிடைய இந்து ராஷ்ட்ரா கனவிற்காக அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்பதே BJP/RSS கும்பல் முதன்மையான பணியாக கொண்டிருந்தனர்.

படிக்க :
♦ பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE
♦ அண்ணா பல்கலை : M. Tech படிப்பிற்கான 69 % இட ஒதுக்கீட்டை அமல்படுத்து || CCCE

மக்களைத் தொற்றிலிருந்து காப்பாற்றுவது என்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். இதனை மோடி-அமித்ஷா பிரச்சனையாகவே பொது ஊடகங்கள் கட்டமைக்கின்றன. ஆனால், BJP/RSS யின் பிற்போக்கு சித்தாந்தமுமே இதற்கு முதன்மைக் காரணம் எனலாம்.

தங்களுடைய பிற்போக்கு சித்தாந்தத்தை மக்களிடம் பரப்புவதன் வாயிலாக அதற்கு மக்களுடைய ஆதரவையும் பெற்றுள்ளனர். இது ஏறத்தாழ பாசிஸ்ட்களின் உத்தியாகும். இந்துத்துவ சித்தாந்தம் அறிவியலுக்கு எதிரானது. அறிவியல் அணுகுமுறையும் அறிவியல் கன்ணோட்டமுமே மக்களை பெருந்துயரிலிருந்தும் பெருந்தொற்றுகளிலிருந்தும் காப்பாற்றும்.

ராஜன்
CCCE-TN

செய்தி ஆதாரம்:
1.   https://www.reuters.com/world/asia-pacific/exclusive-scientists-say-india-government-ignored-warnings-amid-coronavirus-2021-05-01/
2.   https://www.thequint.com/news/india/oximeters-and-thermal-scanners-for-cows-in-uttar-pradesh-fake-news#read-more
3.   https://www.youtube.com/watch?v=DnTXVLIranY
4.   https://thewire.in/politics/bjp-leaders-covid-19-pandemic-remarks
5.   https://theprint.in/india/harsh-vardhan-wants-significant-progress-on-cow-science-front-before-pm-speech-on-75th-i-day/639274/
6.   https://theprint.in/india/rss-launches-campaign-to-counter-covid-doomsdayers-shifts-strategy-to-relief-efforts/655629/

மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நிகழும் கொரோனா மரணங்கள் || மக்கள் அதிகாரம்

PP Letter headகொரோனா பேரிடர் : பொது சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் !
மோடி அரசின் கார்ப்பரேட் – காவி  பாசிச திட்டங்களை முறியடிப்போம் !

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன; ஆம்புலன்சுகள் தட்டுப்பாடு, போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை; ஆக்சிஜன் இல்லை, தடுப்பூசி தட்டுப்பாடு, சுடுகாட்டில் பிணங்களை எரிப்பதற்கு இடமில்லை என்று அனைத்தும் தட்டுப்பாடுகளாக உள்ளன.

அரசுகளோ மரணிப்பவர்களைக் கூட கணக்கில் எடுக்க தயாராக இல்லை. நாள் தோறும் இறப்பு எண்ணிக்கை என்று அரசு சொல்வதைவிட பல மடங்கு இறப்புகள் உள்ளன. மே 10-ம் தேதி வரை 3 இலட்சங்களைத் தொடும் இறப்பு எண்ணிக்கை உண்மையில் பல இலட்சங்களைத் தாண்டியிருக்கிறது.

படிக்க :
♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு
♦ கொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்

மக்கள் முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டனர். எங்கும் மரண ஓலங்கள், எங்கும் துன்ப துயரங்கள், வேலையில்லை, உணவு இல்லை, மக்கள் படும் துன்பங்களுக்கு அளவே இல்லை.

மக்கள் மரணிப்பதைத் தடுக்க துப்பற்ற அரசுகளின் கடைசி ஆயுதம் பொதுமுடக்கம். முற்றிலும் நிர்கதியில் இருக்கும் மக்களையே குற்றவாளிகளாக்கி, தண்டனை மக்களுக்கு வழங்கும் எளிய வழி தான் அரசுகள் கண்டுப்பிடித்துள்ள இந்த பொதுமுடக்கம்.

மோடி அரசே முதன்மைக் குற்றவாளி !

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் வரப்போகிறது என மருத்துவ அறிஞர்களும் சர்வதேச சுகாதார மையமும் தெரிவித்திருந்தும் ஒதுக்கித் தள்ளியது மோடி அரசு.

பார்ப்பன மூடநம்பிக்கையைப் பரப்பும் கும்பமேளா நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்காமல் அதனை ஊக்குவித்தது; உத்திரப் பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடத்தியது; கொரோனாவால் மக்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் போது, கிரிக்கெட் போட்டிக்கு தடைவிதிக்காமல், மக்களைத் திசைத் திருப்பியது; முக்கியமாக, மேற்கு வங்கத் தேர்தலில் மோடி-பாஜக வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை மோடி-அமித்ஷா கும்பலே முன்னின்று நடத்தியது – மொத்தத்தில் இந்த மோடி அமித்ஷா கும்பல்தான் கொரோனாவைப் பரப்பிய முதன்மைக் குற்றவாளிகள் (சூப்பர் ஸ்பிரட்டர்ஸ்).

இதுமட்டுமல்ல, ஆக்சிஜனுக்கு வழியின்றி மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது புதிய பாராளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லத்தை – சென்ட்ரல் விஸ்டா – பல்லாயிரம் கோடிகளில் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

அடிப்படை கட்டமைப்பு இல்லை

சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பாக ஆம்புலன்ஸுகளில் நோயாளிகள் காத்துக் கிடக்கின்றனர். நோயாளிகளை மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்ல போதிய இடமில்லை. மருத்துவமனைகள் நிரம்பி வலிகின்றன. கோவை மருத்துவமனையில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டவர்கள் இறப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளில் இறப்பவர்கள் குறித்து எந்த விவரமும் இல்லை.

மருத்துவமனைகள் நிரம்பி வலிவதைத் தடுப்பதற்காகவும் மக்களுக்கு உரிய சிகிச்சையும் தனிமைப் படுத்திக் கொள்வதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. தனியார் திருமண மண்டபங்கள், கல்லூரிகள், பள்ளிகளைக் கையகப்படுத்தி மருத்துவம் அளிக்க முடியும். ஆனால், அப்படி ஒரு முயற்சியில் இறங்க எந்த மாநில அரசும் தயாராக இல்லை.

இதனால், உரிய சிகிச்சை இல்லாமல் இருப்பது ஒருபுறம் இருந்தாலும் மருத்துவமனைகளில் மக்கள் குவிவதால் அனைவரும் கொரோனா நோயைத் தொற்றிக் கொண்டு சென்று வருகின்றனர். மெல்ல நகரங்களில் இருந்து கிராமங்களை நோக்கி கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது.

இப்போது இருக்கும் நிலை இப்படியே தொடர்ந்தால் அடுத்த இரண்டு மாதங்களில் தெருத் தெருவாக வீடு வீடாக மரண ஓலங்களைச் சந்திக்க நேரிடும் ஒரு பேரழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம்.

தடுப்பூசியில் கார்ப்பரேட் ஆதிக்கம்

கொரோனா நோய்த்தொற்று வருவதைத் தடுக்கும் வகையிலான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இந்தியாவின் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்தால் அனைவருக்கும் மருந்து கிடைக்கும். ஆனால், மோடி அரசோ அதற்கு நேரெதிரான திசையில் செயல்படுகிறது.

கோவிஷீல்ட் (சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிப்பு) கோவாக்சின் (பாரத் பயோடெக் தயாரிப்பு). இந்த தடுப்பூசிகளை அரசே வாங்கினால் ஒரு முறைக்கான (டோஸ்)  விலை கோவிஷீல்ட் ரூ.400/- கோவாக்சின் ரூ.600/. இந்த தடுப்பூசியை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் மக்கள் அவர்களது சொந்த செலவில் போட்டுக் கொண்டால் இரட்டிப்பு விலை தர வேண்டும்.

45 வயது மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிப் போடுவதாகவும், அடற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசிப் போடுவதற்கான செலவை மாநில அரசுகள் ஏற்க வேண்டுமென திடீரெனக் கொள்கை முடிவுகளில் பாரிய மாற்றம் செய்துள்ளது.

இதன்படி, 45 வயதுக்குட்பட்டவர்களது (சுமார் 101 கோடி பேர்) தடுப்பூசிக்கான செலவை அந்தந்த மாநில அரசுகள்தான் ஏற்க வேண்டும். அதாவது 202 டோஸ் தடுப்பூசிக்கான செலவை மாநில அரசே ஏற்க வேண்டும். மாநில அரசே தடுப்பூசி முழுவதையும் கொள்முதல் செய்தால் முறையே ரூ.400/ மற்றும் ரூ.600/ விலைக்கு விற்கப்படும். தனிநபரே, தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொண்டால் முறையே ரூ.800/ மற்றும் ரூ.1200/ செலவு செய்தாக வேண்டும்.

ஒரு டோஸ் தடுப்பூசியை கோவிஷீல்டும், இன்னொரு டோஸ் ஊசியை கோவாக்சினும் போடக் கூடாது என்பது இன்னொரு நிர்ப்பந்தம்.

இவை மட்டுமின்றி ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தடுப்பூசில் செய்து வரும் ஆதிக்கத்திற்கு மோடி அரசு அடிபணிந்தது. இந்தியாவின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த அனுமதித்தது. இதன் விளைவாக, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மக்கள் தொகையைவிட இரண்டு மூன்று மடங்குகள் அதிகமாக தடுப்பூசி சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நாமோ தடுப்பூசி இறக்குமதிக்காக ஏகாதிபத்திய நாடுகளை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த பின்னணியில் தான் தடுப்பூசி தட்டுப்பாடே ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இல்லை. முதல் டோஸ் கோவாக்சின் போட்டவருக்கு அது கிடைக்கவில்லை. கோவிஷீல்ட் போட்டவருக்கு அது கிடைக்கவில்லை. மக்கள் கையறு நிலையில் நிற்கின்றனர். பாதி கிணற்றை தாண்டிவிட்டு அடுத்தப் பாதிக்கு நகர முடியாமல் நிற்கின்றனர். உயிர் பயம் துரத்துகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு தனியார் மருத்துவமனைகளுக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளுகிறது.

ஒரு பொருளின் விலையை தீர்மானிப்பதில் தேவைக்கும் (demand) அளிப்புக்கும் (supply) இடையிலானப் பற்றாக்குறையே தீர்மானிக்கிறது என்பது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அரிச்சுவடி. தடுப்பூசியின் தேவை அதிகரிக்கிறது. ஆனால், சந்தையில் தட்டுப்பாடு தீவிரமடைகிறது. அரசின் கைகளில் இருப்பு இல்லை. கார்ப்பரேட் மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு குவிகிறது. இப்படியாக, இரட்டிப்பு விலை நம்மீது திணிக்கப்படுகிறது.

ஒரு கணக்குக்காக, 50 சதவீதம் பேர் அரசு மருத்துவமனையிலும், எஞ்சிய 50 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதாகவும்; 50 சதவீதம் பேர் கோவிஷீல்ட், எஞ்சிய 50 சதவீதம் பேர் கோவாக்சின் போட்டுக் கொள்வதாகவும் வைத்துக் கொண்டால் கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.35,350/ கோடிகளும், கோவாக்சின் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.75,750/ கோடிகளும் இலாபமாக கிடைக்கும்.

இந்த இலாப விகிதம் மேலும், மேலும் அதிகரிக்குமே அன்றி குறையப் போவதில்லை. ஏனென்றால், கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பதற்கானக் காப்புரிமை (patent right) அரசு நிறுவனங்களுக்குக் கூட இல்லை. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளானது ஒட்டுமொத்த பொதுத்துறைகளையே மூடிவிடுவது என்பதாக இருப்பதால், அரசுக்குச் சொந்தமான டஜன் கணக்கான மருந்து/தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களும், ஆராய்ச்சி மையங்களும் செயலற்று நிற்கின்றன.

மே 1-ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தடுப்பூசித் திருவிழா ஊத்தி மூடிக் கொண்டது. இன்று வரை (08.05.2021) 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் இல்லாததால் தமிழகத்தில் திருவிழா’ தொடங்கப்படவே இல்லை. சில வாரங்களுக்கு முன்பு தடுப்பூசித் தயாரிப்பதற்காக மத்திய அரசு ரூ.4500 கோடியை ஒதுக்கியது. அதை வாங்கிக் கொண்டு சென்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுவரை தேவையான உற்பத்தியை அளிக்கவில்லை.

அமெரிக்கா, சீனா, ரசியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் உயிரிழப்பை தடுத்து நிறுத்துவதிலும் தடுப்பூசிகள் முக்கியப் பங்காற்றுவதாக சொல்லப் படுகின்றது. இச்சூழலில் இந்தியா என்ற மிகப் பெரிய சந்தையில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது உலக மருத்துவக் கார்ப்பரேட்டுகளுக்கு ஒரே கொண்டாட்டமாக உள்ளது.

ரசியாவின் ஸ்புட்னிக் 91 சதவீதம் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. அந்த நிறுவனம் டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடுகிறது. அமெரிக்காவின் மாடர்னா, பைசர் ஆகிய நிறுவனங்களும் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு வரிசையில் நிற்கின்றன. இரு நாட்களுக்கு முன்னர் ஸ்புட்னிக் லைட் – தற்போது இரு டோஸ்கள் குறிப்பிட்ட இடைவெளியில் போடவேண்டும். ஸ்புட்னி லைட் ஒரே டோஸ்மட்டும் போதும் – அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தடுப்பூசிக்கானக் காப்புரிமையை கொடுக்க முடியாது என்று ஆபத்பாண்டவராகவும் கொடைவள்ளலாகவும் அறிமுகப்படுத்தப்பட்ட பில்கேட்ஸ் முகத்திலடித்தாற்போல கூறிவிட்டார். உலகமே அழிந்தாலும் கார்ப்பரேட்டுகள் தங்களின் லபத்தைக் கிஞ்சித்தும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

மற்றொருபுறம் செங்கல்பட்டில் இருக்கும் ஒருங்கிணைந்த தடுப்பூசித் திட்டத்தின் அடிப்படையிலான தடுப்பூசிகள் தயாரிக்கும் எச்.பி.எல். (Hindustan Biotech Limited) அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்க முடியும். ஆனால், இந்த பொதுத்துறை நிறுவனத்தில் மருந்து உற்பத்தி செய்வதற்கு எந்த முயற்சியையும் மோடி அரசு மேற்கொள்ளவில்லை.

படிக்க :
♦ ஸ்டெர்லைட்டை  நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்
♦ புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்

ஆக்சிஜன்

தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 400 மெட்ரிக்டன் தான். அது கையிருப்பில் இருக்கிறது என்று கூறியது எடப்பாடி அரசு. ஆனால், சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலினோ 840 டன் ஆக்சிஜன் தேவை என்றும் அதை உடனே மத்திய அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோருகிறார்.

மே 4-ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 13 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துப் போனார்கள். அவர்கள் இறப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறைதான் காரணம் என்று போராடிய மருத்துவர்கள் மீது நவடிக்கை எடுப்போம் என்று அரசு மிரட்டுகிறது. மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை – அதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்று பல முறை தெரிவித்தும் காதில் போட்டுக் கொள்ளாத மாவட்ட கலெக்டரும் மருத்துவ இயக்குனரும் படுகொலைகளை மூடி மறைத்து விட்டனர்.

முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்னரே அரசு அதிகாரிகளை அழைத்து பேசத்தெரிந்த ஸ்டாலின், இந்த செங்கல்பட்டு படுகொலைகளைப் பற்றி வாய்திறக்கவே இல்லை. இதுவரை வட நாட்டைப் பார்த்து “ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் சாகிறார்கள் தமிழ்நாட்டைப் பார் சீரும் சிறப்புமாக இருக்கிறது” என்று பெருமைப் பேசியவர்கள் எல்லாம் இச்சம்பவத்தை மூடி மறைத்தார்கள்.

முதல் நாள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் என்று கூறிய ஊடகங்கள் அடுத்த நாள் முதல் இப்பிரச்சனையைப் பேசாமல் பார்த்துக் கொண்டன. ஏற்கனவே, வேலூரில் 8 பேர், தற்போது செங்கல்பட்டில் 13 பேர் என நடந்துள்ள இந்த கொரோனா படுகொலைகளுக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை. செத்துப்போனவர்களுக்கு நிவாரணம் கூட இல்லை. ஏன் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டது எடப்பாடி அரசு என்றால், பதவியெற்றப் பின்னர்தான் வாயே திறப்பேன் என்று ஸ்டாலின் அரசு இருக்கிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையை ஈடுகட்ட மத்திய – மாநில அரசுகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு உண்மையாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் போதே 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்குத் (எடப்பாடி தலைமையிலான மாநில அரசுக்கு) தெரிவிக்கமாலேயே வெளிமாநிலங்களுக்கு எடுத்து வினியோகம் செய்தது மோடி அரசு. மற்றொருபுறம் ஸ்டெர்லைட் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு இருக்கிறது.

அரசு அதிகாரிகள், ஓட்டுக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து இந்த ஆலையைத் திறந்து தூத்துக்குடி மக்களுக்கு துரோகமிழைத்துள்ளனர். தமிழக அரசு இந்த ஆலையைக் கையகப்படுத்த வேண்டும் என்று சில முன்வைத்த கோரிக்கையைக் கூட அனைத்து கட்சிகளும் புறக்கணித்தன.

நாடு முழுவதும் உள்ள இரும்பு உருக்காலை, பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள், பெல் போன்ற கனரக ஆலைகள் எப்போதும் இடைவிடாமல் ஆக்சிஜன் உற்பத்தியை செய்து வருகின்றன. இந்த ஆலைகளது ஆக்சிஜன் உற்பத்தி இலக்கை போர்க்கால அடிப்படையில் உயர்த்தினால், ஓரிரு நாட்களிலேயே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க முடியும்.

“ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா” என்கிற மத்திய பொதுத்துறை அமைப்பின் கீழாக இயங்கக் கூடிய சேலம் உருக்காலை, பொகாரோ, பிலாய், ரூர்கேலா, துர்காபூர் பர்ன்பூர் உள்ளிட்ட டஜன் உருக்காலைகள், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பெட்ரோலிய சுத்திகரிப்பு மையங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. இவை எல்லாம் ஆக்சிஜன் தயாரிப்பை எப்போதும் செய்து வருகின்றன. இந்த ஆலைகள் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன்  99.7 சதவீதம் தரமாகவும் இருக்கின்றன.

ஒருவேளை பொதுத்துறை நிறுவனங்களால் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே இயங்கக் கூடிய நிறுவனங்கள் இருக்கின்றன. பிரிட்டன் ஆக்சிஜன் கம்பெனி என்ற பெயருடன் 1935-ல் இந்தியாவில் துவங்கப்பட்ட பன்னாட்டு நிறுவனம், தற்போது லிண்டே இந்தியா லிமிடெட் என்கிறப் பெயரில் நாடு முழுவதும் ஆக்சிஜன் சப்ளை செய்கிறது.

டாட்டா , ஜிண்டால், வேதாந்தா ஸ்டீல் நிறுவனங்கள் மக்கள் ‘நலனுக்காக’ ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்புவதாக பீற்றிக் கொள்கிறார்களே, அவர்களுக்கே ஆக்சிஜன் சப்ளை செய்வது லிண்டே நிறுவனம்தான். சென்னை அம்பத்தூரில் ரூபாய் ஒரு கோடி செலவில் மணி ஒன்றுக்கு 600 மீட்டர் கியூப் அளவுள்ள (வாயுக்களது அளவை மீட்டர் கியூப் என்பர்) ஆக்சிஜன் உற்பத்திக் கூடங்கள் அமைத்திருக்கிறது.

பெரிய மருத்துவமனைகள் சுமார் 1-2 கோடி அளவுக்கு செலவிட்டால் தங்கள் மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜனை தடை இன்றி உற்பத்தி செய்துவிட முடியும். முதல் லாக்டவுன் கட்டத்தில் மத்திய அரசு அறிவித்த ரூ.35,000 கோடிகள் இதற்கெல்லாம் செலவிடப்பட்டிருந்தால் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் போய் இருக்கும்.

இந்த வாய்ப்பை எல்லாம் நீதிமன்றங்களும் பரிசீலிக்கவில்லை. மத்திய-மாநில அரசுகளும் பரிசீலிக்கவில்லை. அரசுகளது நோக்கம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆக்சிஜன் பற்றாக்குறையைக் காட்டி கார்ப்பரேட்டுகளது கல்லாப் பெட்டியை நிரப்புவது எப்படி; ஸ்டெர்லைட் போன்ற கொலைகார கம்பெனிகளுக்கு புத்துயிர் கொடுப்பது எப்படி என்பதுதான்.

பல லட்சம் கோடி கடனில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு கொரோனாவை பயன்படுத்தி கடனையும் அடைத்து, மேலும் பல லட்சம் கோடி சம்பாதித்து விட்டது. இந்த கொரோனா காலக்கட்டத்தில் ஆக்சிஜன் வினியோகத்திலும் முன்னணி நிறுவனமாகி விட்டது. எப்படிப்பட்ட பேரிடரிலும் கார்ப்பரேட்டுகளை வாழ வைக்க வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கையாக இருக்கிறது.

ஊரடங்கு

கடந்த வருட ஊரடங்கில் லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே சென்றார்கள். செல்லும்போதே செத்துப்போனவர்கள் எத்தனை பேர்? ஜி.எ.ஸ்டி உள்ளிட்ட மக்கள் விரோத பொருளாதாரத் திட்டங்களால் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. கடந்த அக்டோபருக்கு பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்த்தெழ ஆரம்பித்த நிறுவனங்கள் மீண்டும் மூடுவிழாவை நோக்கிச் செல்கின்றன.

கடந்த ஆண்டு அனுபவத்தின் படி மருத்துவர்கள் சொல்வதிலிருந்தே பார்த்தால் கொரோனாவை ஊரங்கால் ஒழிக்க முடியாது என்பதுதான். ஊரடங்கு என்பது பெருந்தொற்றை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதுதான். அதை மத்திய மாநில அரசுகளால் ஒருபோதும் செய்ய முடியாது. கடந்த 30 ஆண்டுகளாக திட்டமிட்டு சீரழிக்கப்பட்ட பொது சுகாதரக் கட்டுமானத்தை மீட்டெடுக்காமல் இப்படிப்பட்ட பெருந்தொற்றை ஒரு போதும் எதிர்கொள்ள முடியாது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்ற ஆண்டு கொடுக்க வேண்டிய உதவித் தொகையில் ஒரு பகுதியாக ரூ.2000-ஐ கொடுப்பதாக அறிவித்துவிட்டு 14 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார்.  இந்த 14 நாட்கள் ஒவ்வொரு குடும்பமும் எப்படி தங்களின் பசியாற்றும். சிறுகடைகள், சிறு – குறு நிறுவனங்கள் வைத்திருக்கும் முதலாளிகள் எப்படி தங்கள் கடனை கட்டுவார்கள்?

நான்கு மணி நேரம் கடையைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் உணவகங்கள், தேநீர்க் கடைகள், பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள் வைத்திருப்போர் எப்படி வாழ்வார்கள்? அவர்களின் அன்றாட தண்டல் பணம் என்னாவது?

சிறுகடைகளில் வேலை செய்வோர் எலக்ட்ரீசியன்கள், பெயிண்டர்கள், கால்டாக்சி – ஆட்டோ ஓட்டுனர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை ஓட்டுவார்கள்? இதைப் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இல்லாமல் பிச்சைப் போடுவது போல ரூ.2,000-ஐ தூக்கிப் போட்டுவிட்டு ஊரடங்கிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதெல்லாம் கொடூர அடக்குமுறை அல்லவா?

கடந்த கொரோனாவில் பாதிக்கப்பட்ட சிறு-குறு நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி ரத்து செய்யப்படவில்லை. ஏனைய மற்ற வரிகளும் – செலவீனங்களும் ரத்து செய்யப்படவில்லை. அந்த நிறுவனங்களில் வேலை செய்த கோடிக்கணக்கானோர் வேலை இழந்தனர். அவர்களுக்கான ஊதியத்தை அரசு வழங்கவில்லை.

பல ஆலைகள் – நிறுவனங்கள் கொரோனாவை சாக்காக வைத்துக் கொண்டு தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்தினார்கள், ஊதியம் அளிக்கவில்லை. இதை இந்த அரசு எதுவும் தட்டிக் கேட்கவில்லை. மொத்தத்தில் ஊரடங்கில் பாதிக்கப்பட்டதும், பாதிக்கப்படப் போவதும்  சிறு முதலாளிகளும் உழைக்கும் மக்களும் தான்.

அரசு முற்றிலும் ஆள்வதற்கு தகுதி இழந்து எதிர்நிலை சக்தியாக மாறிப்போய் இருப்பதை, கொரோனாவும் அதன் தடுப்பு நடவடிக்கைகளுமே காட்டுகின்றன. தனியாரமயம்-தாராளமயம், உலகமயக் கொள்கைகள் நடமுறைப் படுத்தப்பட்ட பின்னால், திட்டமிட்டு அனைத்து அரசு நிறுவனங்களும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டும், பொது சுகாதாரக் கட்டமைப்பு சீரழிக்கப்பட்டதால் ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது இந்தியா.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

பிரச்சனை இவ்வாறு இருக்க, தமிழ்நாடு மாடல் என்றொரு கருத்தாக்கத்தை பரப்பிக் கொண்டு திரிகிறார்கள் திராவிட ‘வல்லுனர்கள்’. ஏனைய மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னேறியதுதான். ஆனால், அது மக்களின் தேவைக்குப் போதியதாக இருக்கிறதா என்பதை அர்கள் பார்க்கத் தவறுகிறார்கள். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 செவிலியர்கள் செய்ய வேண்டிய வேலைகளை 1 செவிலியர் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது என்பதுதான் தமிழக மருத்துவக் கட்டமைப்பின் நிலைமை.

கடந்த ஆண்டு தொடர்ச்சியான மக்களதுப் போராட்டங்களுக்குப் பின்னர், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு சில முயற்சிகளில் அரசு தீவிரம் காட்டியது. சில பகுதிகளில் வீடு வீடாக சென்று சோதிப்பதை ஓரளவிற்கு மேற்க்கொண்டது. அதனை முழுவீச்சாகச் செய்யவில்லை. சென்னையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 10 லட்சம் டெஸ்டுகள் எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. சளி, இருமல், காய்ச்சல் என்ற அறிகுறி இருந்தாலே டெஸ்ட் எடுக்கப்பட்டது. பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தோரை 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இவ்வருடமோ நிலைமை அதனைவிட மோசமாக உள்ளது. வீடுகளில் வந்து சோதிப்பதும் இல்லை. டெஸ்ட் எடுக்க சென்றால் 3 நாட்களுக்கு மாத்திரை கொடுத்து நான்காவது நாள் காய்ச்சல் இருந்தால் வாருங்கள் டெஸ்ட் எடுக்கலாம் என்கிறார்கள். மையங்களில் கூட்டத்தின் காரணமாக டெஸ்ட் எடுக்க முடியாமல் போவது, வீட்டில் தனிமைப் படுத்தப் படுவோருக்கு எவ்வித மருந்துகளும் கொடுக்காமல் இருப்பது, கிருமி நாசினி தெளிக்காமல் இருப்பதுப் போன்றவைகளும் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருபவைதான்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆக்சிஜன் இல்லாமையால் 11 பேர் பலி

கொரோனா பரவல் தீவிரமாக இருந்தாலும், சி.ஏ.ஏ., தொழிலாளர் சட்டத்திருத்தங்கள், சுற்றுச்சூழல் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை, மூன்று வேளாண் சட்டங்கள் போன்ற கார்ப்பரேட்-காவி பாசிச நடவடிக்கைகளை மோடி அரசு தொடர்ந்து மேற்கொள்ளவே செய்கிறது. இப்போது நடக்கும் கொரோனாப் படுகொலையின் பின்னணியில், மக்களின் போராடும் உரிமைகளை நசுக்கிவிட்டு, மேலும் இந்தத் திட்டங்களைத் தீவிரமாக மேற்கொள்ளவே செய்யும். அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் தமிழக தி.மு.க அரசு மேற்கொள்ளப் போவதில்லை என்பதை ஸ்டெர்லைட் விசயத்தில் நமக்கு உணர்த்தி விட்டனர்.

மோடி கொரோனாவிலிருந்துப் பாதுகாத்துக் கொள்வது மாநில அரசுகளின் பொறுப்பு என்கிறார். ஸ்டாலின் பொது மக்களின் பொறுப்பாக்கி ஊரடங்கை அறிவிக்கிறார். அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கொரோனோ தொற்றை கட்டுப்படுத்து வழி இருக்கும்போது, தனியார் மருத்துவமனைகளுக்கு பேமெண்ட் பாக்கி இல்லாமல் செல்ல காப்பீட்டு திட்டத்தை அறிவிக்கிறார் ஸ்டாலின். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு என்று போராடிய ஸ்டாலின், சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புக்கள் வந்த பின்னர்தான் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை மூடுவதாக அறிவித்தார்.

படிக்க :
♦ கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்
♦ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்

ஸ்டாலின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று பிரச்சாரம் செய்தவர்கள் யாரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் இறந்தவர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. ஸ்டாலின் மீது எவ்வித களங்கமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகக் கேடயமாக இருந்து தி.மு.க அரசைப் பாதுகாத்து வருகின்றனர்.

மத்திய அரசு கார்ப்பரேட்-காவி அரசு என்றால், அதற்கு மறைமுகமாக சேவை செய்யும் கார்ப்பரேட் நலன் சாரந்த அரசுதான் தமிழக திமுக கூட்டணி அரசு.

தனியாரமயம்-தாராளமயம்-உலகமயத்தின் அடிப்படையிலான அனைத்துக் கொள்கைகளும் பின்வாங்கப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை விசயங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அப்படி ஒரு நிலைமையை நோக்கி முன்னேறுவதுதான் நிரந்தர தீர்வாக அமையும்.


மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

99623 66321.

கொரோனா பேரிடர் காலத்தில் ஆவி பிடிப்பது சரியா || ஃபரூக் அப்துல்லா

கொரோனா பேரிடர் காலத்தில் ஆவி பிடிப்பது சரியா???
அறிவியல் பூர்வமான பகிர்வு

ஆவி பிடிப்பது எப்போது பலன் தரும் ? இதுவரை எதற்கு நாம் ஆவி பிடித்தலை பயன்படுத்தி வந்திருக்கிறோம்? நம்மில் பலரும் நமக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு மேல் சுவாசப்பாதை சளியால் அடைபட்டு இருக்கும் போது மூக்கின் மூலம் மூச்சு விட கஷ்டப்படுவோம்.

அப்போது மூக்கில் உள்ள சளியை ஓரளவுக்கு மேல் நீக்கி மூச்சு விட இயலாது. அப்போது மேல் சுவாசப்பாதை தொற்று நிலையில் (UPPER RESPIRATORY TRACT INFECTION) வீட்டில் தாய்மார்கள் நன்றாக தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மூலிகை தைலங்கள்/ ஈக்வலிப்டஸ் தைலம் போன்றவற்றை போட்டு வேது பிடிக்கக்கூறுவார்கள். மூக்கடைப்பு சரியாகும்.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா

♦ கொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி? || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

இன்னும் காது-மூக்கு-தொண்டை நிபுணர்கள் கூட சைனஸ் எனும் முகத்தில் உள்ள காற்றறைகளின் வாயில்களில் அடைப்பு ஏற்பட்டால் அவற்றில் சளி சேர்ந்து அடைத்துக் கொள்ளும். அந்த நிலையை சைனசைடிஸ் (sinusitis) என்போம். இந்த நிலையிலும் நீராவியை மூக்கின் வழிப் பிடிப்பது, அந்த அடைப்புகளை ஓரளவு சரி செய்து தலைவலியில் இருந்து நிவாரணம் வழங்கவல்லது.

எனவே, வேது பிடித்தல் / ஆவி பிடித்தல் போன்றவற்றை சைனசைடிஸ் மற்றும் மேல் சுவாசப்பாதை தொற்றுகளில் மட்டுமே அறிகுறிகள் சரியாவதற்காகப் பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவிட்-19 தொற்றுக் கண்ட நபர்களுக்கு மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தென்படுகின்றன. இந்த நாட்களில் அவரவர் விருப்பப்படி வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள், மூக்கடைப்பு சரி செய்யும் நோக்கத்தில் அந்த அறிகுறியை சரி செய்வதற்காக வேதுப் பிடிக்கின்றனர்.

ஆனால், அதையே கொரோனா வைரஸை இந்த வேது பிடிப்பதால் கொன்று விட முடியும் என்று நம்பி வீட்டிலேயே வேது மட்டும் பிடித்துக் கொண்டு அறிகுறிகளை துச்சம் செய்து காலத்தை தாழ்த்தினால் அது தவறாகும்.

ஏனென்றால், ஆவி பிடிப்பதால் தொண்டையிலோ மேல் நாசியிலோ பாரா நாசல் சைனஸ்களிலோ உள்ள வைரஸ்களை கொல்ல இயலாது என்பதை உணர வேண்டும். மேலும் நோய் தொற்று நிலை அடுத்த நிலைக்கு முற்றவதையும் வேதுப் பிடிப்பதால் நிறுத்த முடியாது.

இன்னும் சொல்லப்போனால், சாதாரண கொரோனா (MILD) நிலையில் இருந்து மிதமான கொரோனா நிலைக்கு (MODERATE) செல்லுமானால் நோயாளியின் நுரையீரலில் “நியுமோனியா” ஏற்பட ஆரம்பிக்கிறது.

இந்த நிலையில் மென்மேலும் சூடு அதிகமான நீரையோ எண்ணெய்கள் கலந்த நீரையோ வைத்து வேதுப் பிடிப்பது என்பது, ஏற்கனவே கொரோனா நியூமோனியாவால் வெந்த நுரையீரலில் வேலைப் பாய்ச்சுவது போல அமைந்து விடக் கூடும்.

கொரோனாவில் நடப்பது என்ன?

நுரையீரலில் அதீத உள்காயங்கள் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நுரையீரல் காற்றை உள்வாங்கி ரத்தத்தில் ஆக்சிஜனேற்றம் செய்யும் நிலையை இழக்கும்.

இதில் உள்காயங்கள் மிகுந்து இருக்கும் நிலையில் சூடான காற்று அந்த காயங்களில் படுவது என்பது ஆபத்தானப் பக்கவிளைவுகளை மிதமான மற்றும் தீவிர கொரோனா நோயாளர்களுக்கு உருவாக்கி விடக்கூடும்.

எனவே மக்களே தயவு செய்து, ஆவி பிடித்தல் – வேதுப் பிடித்தலை கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக் கொண்டு முக்கியமான நேரத்தை வீட்டிலேயே கடத்தி, ஆபத்தான நிலையை அடைந்தபின் மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகாதீர்கள்.

வீட்டில் வேது பிடிப்பது மற்றும் ஆவி பிடிப்பதே அறிவியல் பூர்வமாக நோய் தொற்று முற்றுவதை தடுப்பதில் பலனளிக்காது எனும் போது, இந்த ஆவி பிடித்தலை வெளி இடங்களில் வைத்து நிறைய பேர் ஒரே இடத்தில் ஒரே ஆவி பிடிக்கும் இயந்திரம் மூலம் ஆவி பிடிப்பது என்பது கொரோனா தொற்று மிகவும் வீறு கொண்டு பரவும் நிலையை உருவாக்கும் அபாயம் உண்டு.

அந்த இயந்திரத்தை ஒரு கொரோனா நோயாளி பயன்படுத்தினால் அதற்கடுத்தப் படியாக பயன்படுத்தும் பலருக்கும் தொற்று பரவும் நிலை உருவாகும். மேலும் வேது பிடித்ததும் தும்மல் இருமல் வரும். உடனே தொற்றடைந்த ஒருவர் அருகில் தும்முவது மூலம் நோயைப்பரப்புவார். எனவே, இது போன்ற அறிவியல் பூர்வமற்ற விசயங்களை பொதுவெளியில் செய்வது மிகவும் தவறு.

முடிவுரை :

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனா நோய் முற்றுவதையோ ஆவி பிடிப்பதால் தவிர்க்க இயலாது. இன்னும், அதீத வெப்பமான காற்றினால் சுவாசப் பாதையில் காயம் ஏற்படலாம். கொதிக்கும் தண்ணீர் ஊற்றி தீக்காயங்கள் அதிகம் ஏற்படலாம்.

மூக்கடைப்பை சரிசெய்வது தவிர வேறு எந்த பெரிய நன்மையையும் கொரோனாவில் ஆவி பிடித்தல் செய்யும் என்று ஒரு போதும் நம்பாதீர்கள். நியூமோனியா தொற்று அடைந்த நிலையில் ஒருவர் ஆவி பிடிப்பது அவருக்கு ஊறு விளைவிக்கும் செயலாக அமையலாம்.

இப்படி வேது பிடித்துக் கொண்டு, அது நம்மை காக்கும் என்று நம்பி முக்கியமான நேரத்தை வீட்டில் கழித்து விட்டு அதித்தீவிர மூச்சுத்திணறல் நிலையை அடைந்தபின் மருத்துவமனைக்குச் சென்றால் மரணம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.

படிக்க :
♦ நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா
♦ இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

இத்தகைய அறிவியல் பூர்வ ஆதாரமற்ற செய்திகளை நம்பி பொது இடங்களில் தொற்றுப் பரவலை அதிகரிக்கும் ஆவிப் பிடித்தலை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

இத்தகைய ஆவி பிடிக்கும் இயந்திரங்களை நிறுவி மனதால் மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்துடன் தன்னார்வலர்கள் பலர் களம் இறங்கியிருந்தாலும் இதனால் நோய் அதிகமாக பரவும் வாய்ப்பே அதிகமாக இருப்பதால் தயவு கூர்ந்து இதை உடனே நிறுத்தி விட்டு வேறு வகையான பெருந்தொற்று கால உதவிகளை மக்களுக்கு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

அறிவியல் ஆதாரங்கள் :
1. https://www.bmj.com/content/347/bmj.f6041
2. https://www.lung.org/…/pneumonia/treatment-and-recovery
3. https://pubmed.ncbi.nlm.nih.gov/2286438/
4. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3381273/

முகநூலில் : DrFarookAbdulla
disclaimer

கொரோனா படுகொலைகள் : முதன்மைக் குற்றவாளி மோடியும் பா.ஜ.க. அரசுமே !

கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை பரவத் தொடங்கி, இன்று நாளொன்றுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கான பேர் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கின்றனர். புதிய கட்டமைப்புகள் எதுவும் உருவாக்கப்படாததால், கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவமும், சுகாதாரமும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் செத்து மடிகின்றனர்.

உலக நாடுகள் எல்லாம் இந்தியா கொரோனா நோய் தொற்றில் முதலிடத்தில் இருப்பதைப் பார்த்தும், ‘வளர்ச்சி நாயகன்’ மோடியின் தேசத்தில் மக்கள் கொத்துக் கொத்தாக மரணிப்பதைப் பார்த்தும் உதவிகளைச் செய்தும் பலவிதமான ஆலோசனைகளை வழங்கியும் வருகின்றன.

படிக்க :
♦ லான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

இன்னொருபுறம், இந்தப் பிரச்சனைக்கு மக்கள்தான் காரணம் என ஆளும் வர்க்கங்களும், அதன் ஊதுகுழல் பத்திரிகைகளும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றன. மோடி அரசோ கொரோனாவை எதிர்கொள்ளும் பொறுப்பை மாநில அரசுகள் தலைமீது சுமத்திவிட்டு, மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கிறது.

லான்செண்ட் என்ற அறிவியல் ஆய்வுப் பத்திரிகையோ, மோடிதான் குற்றவாளி என்று சில விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அது வெளிநாட்டில் இருந்து ஒரு பத்திரிகை முன்வைத்துள்ள விமர்சனங்கள் மட்டுமே. ஆனால், மோடியின் தவறுகளோ அந்தப் பத்திரிகை தெரிவித்திருக்கும் விமர்சனங்களைவிடக் கொடிய குற்றங்கள்.

அவற்றில் முக்கியமான குற்றங்கள் மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.

• கொரோனா இரண்டாவது அலை தொடங்கும்போதே, உலக சுகாதார மையம், மருத்துவ அறிஞர்கள் விடுத்த எச்சரிக்கையை மோடி அரசு புறக்கணித்தது.

• கொரோனா தொற்றுப் பரவுவதைத் தெரிந்தும் உத்தரப் பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தியது, மக்கள் கொரோனாவால் கொல்லப்படுவதற்கான காரணங்களில் ஒன்று. இந்த தேர்தலை நடத்திய யோகி ஆதித்யநாத் அரசும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடத்த அனுமதித்த மோடி அரசும் குற்றவாளிகளே!

• கொரோனா நோய் பரவல் இருப்பதை நன்கு அறிந்தும், பல்வேறு அறிஞர்கள் சமூக செயல்பாட்டாளர்களின் எதிர்ப்பை மீறியும் வாரானாசியில் கும்பமேளா நடத்துவதற்கு தடைவிதிக்க மறுத்தது மோடி அரசு. கும்பமேளா நடத்தியதால், வடமாநிலங்கள் முழுவதும் கொரோனா பரவியது. மக்களின் மதநம்பிக்கையைப் பயன்படுத்தி மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கும் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக் கொடியக் குற்றமாகும்.

• மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை மட்டுமே மனதில் நிறுத்திக் கொண்டு கொரோனா எச்சரிக்கையையும் மீறி மோடி, அமித்ஷா, பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியது.

• கொரோனா நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைப் பரப்புவதற்கானக் காரணங்களில் ஒன்றாகவும் மக்களை கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்புகள் குறித்து சிந்திக்கவிடாமல் திசைத் திருப்பும் வகையிலும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தியது.

• கொரோனா முதல் அலையின்போதே ஆக்சிஜனின் அவசியத்தை அனைவரும் நன்கு உணர்ந்துவிட்டனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு வரும் என்று தெரிந்திருந்தும், அவசரகாலத் தேவைக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு வைத்துக் கொள்ளாமல் இருந்தது; புதிய ஆக்சிஜன் உற்பத்தியைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளாமல் இருந்தது.

• தடுப்பூசி உற்பத்தியிலும் ஆக்சிஜன் உற்பத்தியிலும் பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தாமல் தனியார் கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுத்தது.

• கார்ப்பரேட் முதலாளிகள் மக்களின் உயிரை விலைபேசிக் கொள்ளையடிப்பதற்கு வசதியாக தடுப்பூசி வினியோகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்தது மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளைக் கையகப்படுத்தி, இலவசமாக வினியோகிக்காமல் தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்து கொடுத்தது மோடி அரசு.

• கொரோனா முதல் அலை தாக்கத்தின்போது கிடைத்த அனுபவத்தில் இருந்து உ.பி., குஜராத், தமிழகம் போன்ற மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக மருத்துவக் கட்டமைப்பை விரிவுபடுத்தத் தவறியதற்கு மாநிலங்களின் ஜி.எஸ்.டி.யைக் கொள்ளையடித்து வைத்திருக்கும் முதன்மைக் குற்றவாளிகள் மோடி அரசு. மோடி அரசுக்குப் போதுமான நிர்பந்தம் கொடுத்து மாநில அளவில் மருத்துவக் கட்டமைப்பை விரிவுப்படுத்தத் தவறிய மாநில அரசுகள் இரண்டாம் நிலைக் குற்றவாளிகள்.

• அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தலைமையிலான மறுகாலனியாக்கக் கொள்கைகளின் அடிப்படையில், தடுப்பூசி உற்பத்தி செய்து ஏகாதிபத்திய நாடுகளுக்கு அனுப்பி வருகிறது மோடி அரசு.

• மத்திய பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி கொரோனா நோய் பரவலைத் தடுப்பதற்கு ஒதுக்கீடு செய்துவிட்டு, மாநில அரசுகளுக்கு தடுப்பூசிப் போடுவதற்கான செலவுகளை செய்யச் சொல்லி நிர்பந்திக்கும் வகையில், தடுப்பூசிப் போடுவதற்கானக் கொள்கையில் திடீர் மாற்றம் செய்து, தனதுப் பொறுப்பை முற்றிலுமாகக் கைகழுவி விட்டது மோடி அரசு.

• பேரிடர் மேலாண்மை நிதியைக் குறைந்த அளவிற்கு, அதுவும் அடுத்த ஆண்டுக்கான தொகையை முன்பணம் என்ற வகையில் மட்டுமே ஒதுக்கிக் கொடுத்து மாநில அரசுகளை நிர்கதிக்குத் தள்ளியிருக்கிறது மோடி அரசு.

• ஜி.எஸ்.டி. வரிவசூலில் இருந்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டியத் தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்திருத்ததன் மூலம் மாநில அரசுகளை நெருக்கடிக்கு தள்ளியிருப்பது மட்டுமின்றி, கடன் வாங்கி மாநில அரசுகளின் பொருளாதாரம் திவால் ஆவதற்கு காரணமாகியிருக்கிறது மோடி அரசு.

• ஆக்சிஜன் உற்பத்திக்காக தனியார் ஆலைகளைக் கையகப்படுத்தி உற்பத்தி செய்ய முயற்சிக்காமல் கார்ப்பரேட் நலன் காக்கும் வகையில் செயல்படுவது.

• கொரோனா தொற்றுப் பரவலில் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் திட்டமிட்டே குறைத்துக் காட்டுவது, மோடி அரசின் வழிகாட்டுதலின் கீழ் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

• ஆக்சிஜன் இல்லை, மருத்துவ வசதி இல்லை என்ற அரசின் அலட்சியப்போக்கை அம்பலப்படுத்துவதை குற்றம் என வரையறுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வரும் யோகி ஆதித்யநாத் கண்டிக்காமல் அவரது செயலை ஊக்குவிப்பது கொடிய குற்றம்.

• கொரோனா இரண்டாவது அலை உயர்ந்து வீசிக் கொண்டிருக்கிறது; மாநில அரசுகள் செயலிழந்துப் போய் ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், மத்தியில் இருந்து இன்றுவரை எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல், கல்லூளிமங்கன் போல, பாசிச மனநிலையில் அமைதி காப்பது.

• கொரோனா முதல் அலை ஓய்ந்து விட்டது என சென்ற ஆண்டின் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றியது.

• போதுமான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யவோ, மக்களுக்கு வழங்கவோ செய்யாமல் கோ.மூத்திரம், கோ.சாணம் ஆகியவற்றை உண்ணச் சொல்லி வடமாநிலங்களில் விற்பனை செய்து வரும் பா.ஜ.க. ஆதரவு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பசுப் பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிச குண்டர்களைத் தடை செய்யாமல் அவர்களைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்து மக்களைக் கொள்ளையடிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது;

இவற்றின் மூலம் கொரானாவைத் தடுப்பதற்கான அறிவியல் பூர்வமான வழிமுறைகளில் இருந்து மக்களைத் திசைத்திருப்பி, தனக்கு வரும் எதிர்ப்புகளை முடக்குவது; மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துவது ஆகியவை மோடி-பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பலின் திட்டமிட்ட செயல்பாடுகளாகும்.

ஆகையால், நமது நாட்டில் நிகழ்ந்து வரும் இந்த கொரோனா மரணங்கள், இயற்கையின் விளைவல்ல, மோடி அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பால் நிகழ்ந்த கொலைகள்; பச்சை படுகொலைகள்!

குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் நிகழ்த்தப்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரானப் படுகொலைகள் ஒரு வகை எனில், அரசு நடத்தி வரும் இந்த கொரோனா கொலைகள் இன்னொரு வகை.

படிக்க :
♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !
♦ கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல்  !!

மோடி அரசின் குற்ற நடவடிக்கைகளுக்கெல்லாம், தற்போது நடக்கும் கொரோனாப் படுகொலைகளுக்கு இந்த நாட்டின் பிரதமர் என்ற வகையிலும் அதிகாரங்கள் அனைத்தையும் தனது அலுவலகத்தில் குவித்து வைத்திருப்பவருமான மோடி முதன்மை காரணம். மோடி அரசுதான் முதன்மைக் குற்றவாளி. அதாவது கொத்துக் கொத்தாக மரணம் நிகழும் என்று நன்கு தெரிந்து விளைவிக்கப்பட்ட மரணத்தை விளைவிக்கும் படுகொலைக் (culpable genocide) குற்றமுமாகும். மோடி அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் சாணக்கியரும் பா.ஜ.க.வின் தேசிய தலைவருமான அமித்ஷா இரண்டாவது குற்றவாளி. யோகி ஆத்யநாத், குஜ்ராத் முதல்வர், மேற்குவங்க பா.ஜக. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் குஜராத், உ.பி., டெல்லி மாநில அதிகாரிகள் அடுத்த நிலையில் உள்ள குற்றவாளிகள்.

“விதி வந்தால் சாகவேண்டும், அதிருஷ்டம் இருந்தால் வாழ்ந்து கொள்ள வேண்டும்” என்ற தனது பார்ப்பன சனாதான நம்பிக்கையை மக்களின் மனதில் விதைப்பதுதான் உண்மையில் இந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. மோடி கும்பலின் அடிப்படை சித்தாந்தம் ஆகும். இந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் மோடி அரசு ஆட்சி செய்து வருகிறது. இதுதான் தற்போது நடந்து வரும் கொரோனாப் படுகொலைகளுக்கு அடிப்படையாகும்.


வைரவேல்

கொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா

தடுப்பூசி இரண்டு டோஸ் போடப்பட்டவர்களிலும் ஒரு சில மரணங்களைக் கேள்விப் படுகிறோம். இது மனதில் விரக்தியை ஏற்படுத்துகின்றதே என்று பல நண்பர்கள் கூறுகிறார்கள்.

இதற்கான எனது விடை

முதலில் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். தற்போதைய கோவிட் தடுப்பூசிகள் வைத்து செய்யப்பட்ட மூன்றாம் கட்ட ஆய்வுகளில், தடுப்பூசிகள் ஆய்வு செய்யப்பட்ட மக்களிடையே மருத்துவமனைகளில் அட்மிட் ஆகி சிகிச்சைப் பெறும் எண்ணிக்கையையும் கோவிட் நோயால் ஏற்படும் மரணங்களும் ஏற்படவில்லை.

படிக்க :
♦ நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா
♦ கொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி? || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ஆயினும் பல கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் போது தடுப்பூசிகள் போடப்பட்ட மக்களுள் அறிகுறிகளற்றக் கொரோனா ஏற்படலாம். சாதாரண (mild) தொற்று ஏற்படலாம் மிக மிகக் குறைவான மக்களுக்கு மிதமான சிகிச்சை தேவைப்படும் தொற்று நோய் ஏற்படலாம் அரிதினும் அரிதாக மரணங்களும் நேரலாம்.

ஆயினும் தடுப்பூசிப் போடப்படாத மக்களுள் ஏற்படும் கொரோனா மரணங்களை விட மிக மிகக் குறைவான அளவிலேயே தடுப்பூசிப் பெற்றவர்களிடையே மரணங்கள் நிகழ்கின்றன. நான் கொரோனா முன்கள மருத்துவராக கடந்த ஒரு வாரம் பணிபுரிந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 100 நோயாளிகளின் வரலாறுகளை நேரடியாகப் படித்திருக்கிறேன்.

அதிலிருந்து நான் கற்றவை. தடுப்பூசி ஒரு டோஸ் பெற்றிருந்தால் கூட அவருக்கு நோய் சாதாரண நிலையில் இருந்து மிதமான நிலைக்கு முன்னேறும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது. மிதமான மற்றும் தீவிர நோய் தன்மைக்குள்ளானவர்கள் யாரும் தடுப்பூசி பெற்றிருக்கவில்லை. இது என்னளவில் நான் கண்டவை.

இன்னும் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் பணி புரியும் எனது நண்பர்களின் கூற்று யாதெனில், அரிதினும் அரிதாகவே தடுப்பூசிப் பெற்றவர்கள் ஐ.சி.யூ நிலையை அடைகிறார்கள் என்பதே.

நடப்பது போர்ச்சூழல் இதில் ராணுவ வீரர்கள் தங்களை காத்துக் கொள்ளக் குண்டு துளைக்காத கவச உடை வழங்கப் படுகின்றது. ஆனால், அந்த உடை இருப்பதாலேயே அவர் மரணமடைய மாட்டார் என்று கூற முடியாது.

ஆயினும், அவர் மரணமடையும் வாய்ப்பை அந்த உடை வெகுவாகக் குறைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் அந்த கவச உடையுடன் கூடவே கையில் எதிரியை வீழ்த்த துப்பாக்கி எப்போதும் எதிரி கண்ணில் சிக்காமல் இருக்கும் யுக்தி போன்றவற்றை கடைபிடித்தால் தான் பிழைப்பார்.

அதுபோலவே, தடுப்பூசிப் போடப்பட்டிருந்தாலும் சமூக இடைவெளி, தனி மனித இடைவெளி, முகக்கவசம், கைகளைக் கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பேணுவதன் மூலம் நாம் மித/தீவிரத் தொற்று நிலையை அடைந்து மரணமடையும் வாய்ப்பையும் குறைக்கலாம். எந்த ஒரு யுக்தியும் 100 சதவீதம் பாதுகாப்பு தரும் என்று நம்ப இயலாது; நம்பவும் கூடாது.

இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும்; கூடவே, சாலை விதிகளை மதித்து அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடப்பக்க ஓரத்தில் வண்டியை செலுத்த வேண்டும். அதிலும் செல்போன் பேசாமல் ஓட்ட வேண்டும். வேகம் குறைவாக ஓட்ட வேண்டும். இத்தனையும் கூட்டாக செய்யும் போது அவர் விபத்துக்குள்ளாகாமல் பயணிக்கலாம். அதேபோன்றுதான் கொரோனா நோய்க்கு எதிராக நமது யுக்திகள் செயல்படுகின்றன.

எனவே, இந்த யுக்திகளால் போர்க்களத்தில் காக்கப்படும் உயிர்கள் தான் நமக்கு முக்கியம் இரு பக்கமும் இழப்புகள் இருக்கும். ஆனால், எந்தப் பக்கம் இழப்புகள் ஜாஸ்தி என்பதை கணக்கிட்டால் தடுப்பூசிப் போடப்படாத மக்கள் தொகையில் மிக அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதைக் கண்கூடாகக் காண முடிகின்றது. நீங்கள் நோய்த் தொற்றிலிருந்து  காத்துக் கொள்ள விரும்பினால் உங்களுக்கான  தடுப்பூசியை உடனே பெறுங்கள். இன்னபிற கொரோனா தடுப்பு நடவடிக்கைளையும் சேர்த்து கடைபிடியுங்கள்.

முகநூலில் : Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.disclaimer

கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை

விண்ணை முட்டும் அளவிற்கு அறிவியல் வளர்ந்திருந்தாலும் உடைந்த துடைப்பம், கிழிந்த கையுறைகள், அறுந்த காலனிகள் அங்கும் இங்கும் ஒட்டுப் போட்ட நீல ஆரஞ்சு நிற ஆடைகளுடன், தினம்தோரும் குப்பைத் தொட்டி அருகேயும், சாலைகளிலும் தெருக்களிலும் நாம் கையுறை அணிந்து அள்ள முடியாத, கண்களால் கூடப் பார்க்க விரும்பாத குப்பைக் கழிவுகளை அவர்கள் வெறும் கைகளால் அள்ளிக் கொண்டிருப்பார்கள்.

இவர்களை நாம் சாலையில் நடக்கும் போதும் அல்லது பேருந்தில் பயணம் செய்யும் போதும் நம் அருகே வருவதற்கோ அல்லது அமருவதற்கோ அனுமதிப்பது இல்லை. சிலர் அவர்களின் மீது ‘அய்யோ பாவம்’ என அனுதாபமாகப் பார்ப்பதும், சிலர் அவர்கள் படும் துன்பத்தைப் பார்த்து மனதளவில் கோபம் கொள்வதும் உண்டு.

படிக்க :
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

♦ நெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை !

இருந்தாலும் இவர்களை நாம் கடந்து செல்லும்போது மூக்கை மூடிக் கொள்வது வழக்கம். மாறாக நாம் விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் சுத்தத்திற்குப் பின் இருக்கும் இந்த மக்களின் துயரமான வாழ்வை கொஞ்சம் கண் திறந்துப் பார்க்கவும் காதுக் கொடுத்து கேட்கவும் இவர்களின் நியாமானக் கோரிக்கைகளை அழுத்தமாகப் பதிவு செய்யவும் முனைகிறது இந்த கட்டுரை.

பெரும்பாலும் இவர்கள் யாரும் அடுக்கு மாடி குடியிருப்புகளிலோ அல்லது நகரத்தின் சுத்தமானப் பகுதியிலோ வாழ்பவர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் கால்வாய்க்கு அருகே இருக்கும் குடிசைப் பகுதிகளில் வாழும் உழைக்கும் மக்கள்.

10 ஆண்டுகளாக மீன்பிடித்தொழில் செய்து வந்த சிலரும் கூட இப்போது குப்பை அள்ளுகிறார்கள். சிலபேர் தங்களுக்குத் தகுந்த வேலை கிடைக்காததால் இந்த வேலையைச் செய்கிறார்கள். இதைவிட்டால் வீட்டு வேலை, ஹோட்டலில் பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளுக்கு இங்கு வாழும் மக்கள் செல்வார்கள்.

தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்பவர்கள் தினந்தோறும 3 பகுதியாக வேலையை பிரிந்து செய்கிறார்கள். காலை 6 முதல் 2 மணிவரை ஒரு பகுதி, 2 முதல் 10 மணிவரை இரண்டாம் பகுதி, 10 முதல் 6 மணிவரை மூன்றாம் பகுதி என இடைவெளி விடாமல் வேலை செய்கிறார்கள்.

இவர்களுக்கு இந்த வேலை நிரந்தரம் கிடையாது. ஒப்பந்தம் முறையில்தான் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். இவர்களின் அதிகபட்ச ஒப்பந்த காலம் 8 ஆண்டுகள்தான்.  இடையில் தன் நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்டாலோ அல்லது தன் உரிமையை பற்றிப் பேசினாலோ அறிவிப்பு ஏதும் இல்லாமல் வேலையை விட்டு தூக்கி எறியப் படுவார்கள்.

எந்த அடிப்படை மருத்துவ வசதியும் இவர்களுக்கு கிடையாது. குப்பைகளை அள்ளும் போதும், குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை கால்களால் மிதிக்கும் போதும் கண்ணாடி இருந்து கை, கால்களை கிழித்தாலும் முதல் உதவி பெட்டிக் கூடக் கொடுக்கப் படுவதில்லை.

இவர்களை நேரில் சந்தித்து பேசும் போது, தங்களின் துயரங்களைச் சொல்கிறார்கள்.

“எங்களுக்கு வண்டி கொடுக்கப்பட்ட போது, வேலை சுமை குறையும் என்று நினைத்தோம் ஆனால், இபொழுது வேலை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது. முன்பு குப்பை இருந்தால்தான் சுத்தம் செய்யப் போவோம். ஆனால், இப்போது குப்பைகளை தேடிச் செல்ல வேண்டும். தினமும் சராசரியக இவ்வளவு குப்பைகளை ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயம். (காய்கறி குப்பை என்றால் 65 கி, Plastic குப்பைகள் என்றால் 30 கி, உணவு பண்டங்கள் என்றால் 10 கிலோ)”

“அதைச் சரியாக ஒப்படைக்க வில்லையென்றால் நாங்கள் முழுநாள் வேலை செய்தாலும் அரைநாள் என்றுதான் பதிவு செய்வார்கள். கொரோனா ஊரடங்கு என்றால் அன்று கட்டாயம் வேலைக்கு வரவேண்டும் உடம்பு வலி என்று விடுப்பு கேட்டால் கூட தரமாட்டார்கள்.”

“காய்கறி குப்பைகளை சில உரம் தயாரிக்க கம்பெனிக்கு விற்று காசுப் பெறுகிறார்கள். ஆனால், எங்களுக்கு ஒருரூபாய் சம்பளம் கூட்டி தருவதில்லை.”

“எங்களுடைய மாதச் சம்பளம் ரூ.11,500. அதில், ESI மற்றும் PF பிடித்தம்போக ரூ.10,500 தான் எங்கள் கைக்கு வருகிறது அதிலும் பஸ் செலவு சாப்பாடு செலவு என பாதி பணம் செலவாகி விடும்.”

“கொரோனா காலங்களில் பஸ் வசதிக் கூட செய்து தரவில்லை. சில நாட்கள் 4 கிலோ மீட்டர் வரை நடந்தே வேலைக்கு வந்திருக்கிறோம். காலை 6 மணிக்கு வேலையில் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் எப்படி சாப்பாடு செய்துக் கொண்டு வரமுடியும். இவர்கள் தண்ணீர் கேட்டாலே தருவதில்லை சாப்பாடு எப்படி தருவார்கள் வேறு வழி இல்லாமல் அம்மா உணவகத்தில்தான் சாப்பிட வேண்டும். அங்கும் சில நேரங்களில் சிலருக்குதான் உணவு இருக்கும் மீதி இருப்பவர்கள் இரவு வீட்டிற்கு போய்தான் சாப்பிட வேண்டும்.”

“2 மாதத்திற்கு ஒரு முறைதான் முகக்கவசம் அல்லது கையுறை தருகிறார்கள் அதுவரை கிழிந்ததை தான் பயன்படுத்த வேண்டும். கிழிந்ததைக் கொடுத்தால்தான் புதிய முகக்கவசமும் கையுறையும் தருவார்கள். கொரோனா நேரத்தில் பயன்படுத்திய மருத்துவ கழிவுகளை வெறும் கைகளால்தான்  நாங்கள் அள்ளி குப்பைத் தொட்டியில் போடுகிறோம்.”

“நாங்கள் இப்படி குப்பைகளை அள்ளுவதால் நோய் வரும் என்பதற்காக எங்களுக்கு 6 மாதம் ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். ஆனால், அதைக்கூட இவர்கள்  போடுவதில்லை.”

“கடைகளுக்குக் குப்பைகள் எடுக்கச் சென்றால் கடை அருகேக் கூட விடுவதில்லை கொஞ்சம் தொலைவில் குப்பைகளைக் கொட்டி எடுத்துச் செல்லச் சொல்கிறார்கள். வீடுகளில் குப்பை எடுக்கச் சென்றால் குப்பைத் தொட்டியில் கூட குப்பைகளைப் போட மாட்டார்கள். மேலும், குப்பைகளை யாரும் பிரித்து வைக்க மாட்டார்கள் நாங்கள் அந்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை எனப் பிரிக்க வேண்டும்.  நீண்ட நாட்களான குப்பைகளில் புழு வரத் தொடங்கி விடும். அதையும் வெறும் கைகளில்தான் அள்ளுகிறோம். எங்களுக்கு கை கழுவக் கூட தண்ணீர் தர மாட்டார்கள். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டாலே ஏதே கீழ் தரமான மனிதரைப் போல அருவருப்பாக பார்ப்பார்கள்” என்றெல்லாம் தங்களின் வாழ்க்கைத் துயரை விவரிக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

“குப்பை எடுக்க போகும் இடங்களில் வயது முதிர்ந்தவராக இருந்தாலும் “ஏய் குப்பை” “குப்ப காரரே” என்றுதான் அழைப்பார்கள். அதிலும் ஒருவர் “நேற்று குப்பை எடுக்க சென்ற வீட்டில் ஒரு அம்மா மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி எறிகிறார்” என்றார்.

இப்படி இவர்களை ஒதுக்குவது, தீண்டத்தகாதவர்களாக நடத்துவது பெரும்பாலும் அப்பார்ட்மெண்ட் பகுதிகளில்தான் தீவிரமாக நடக்கிறதாம்.

இதில் தூய்மைப் பணி செய்யும் பெண்கள் ஆண்களை காட்டிலும் கடுமையான பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை பெண்களை சந்தித்தபோது அறிய முடிகிறது.

பெண் தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்கையில்…

“ஆடைகள் மாற்றுவதற்குக் கூட இடமில்லை. பொது வெளியில் தான் ஆடைகள் மாற்றி கொள்கிறோம். கழிப்பறை வசதி கூட செய்து தரவில்லை கடற்கரை அருகே வேலை செய்யும் போது கடற்கரை சுடு மணல் மீதுதான் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கிறோம். தெருக்கள் சுத்தம் செய்ய போகும் போது சில வீடுகளில் கழிப்பறைப் பயன்படுத்திக் கொள்ள சொல்வார்கள் சில வீடுகளில் அதுக்குக் கூட அனுமதிப்பதில்லை.”

“மாதவிடாய் காலங்களில் கூட விடுமுறை அளிப்பதில்லை அந்த வலியோடு வேலைக்குக் கட்டாயமாக வர வேண்டும். மாதவிடாய் நேரங்களில் பேண்ட் அணிந்து வேலை செய்வது மிகக் கஸ்டமாக இருக்கிறது புடவை அணிந்துக் கொள்கிறோம் என்று சென்னால் கூட கண்டுக் கொள்வதே இல்லை. எங்களின் அடிப்படை தேவையான நாப்கின் கூட தருவதில்லை.”

“துடைப்பம் கூட எங்கள் கை காசு போட்டுதான் வாங்கி வேலை செய்கிறோம். இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் நடந்தே குப்பைகளை சுத்தம் செய்கிறோம். சோர்வில் சிறிது நேரம் உட்கார்ந்தால் கூட கேள்வி கேட்பார்கள், துளியும் மதிப்பது இல்லை.” என்கிறார்கள்.

அதில் ஒரு பெண்  “வெயிலில்  நீண்ட தூரம்  நடந்தே குப்பைகளை எடுப்பதால் கால்கள் அதிகமாக வலிக்கிறது இரவில் வலி தாங்காமல் பல நாட்கள் அழுது இருக்கிறேன்” என்றார்.

ஆண்களை காட்டிலும் பெண்கள் இப்படி உடல் சார்ந்த பல்வேறுப் பிரச்சனைகளை தினந்தோறும் சந்திக்கிறார்கள். ஆனாலும், ஆண்களை விட பெண்களுக்கு சம்பளம் ரூ.1,000 குறைவு.

இவர்களின் இத்தகையப் பிரச்சனைகளுக்காவும் கோரிக்கைக்காகவும் (வேலை நிரந்தரம், பாதுகாப்பு உபகரணங்கள், பெண்களுக்கான அடிப்படை வசதி, முறையாக ஊதியம் தருவது, மருத்துவ வசதி (முதலுதவி உபகரணங்கள்) போன்றவையே…) நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். ஆனால், எந்த பலனும் இல்லை.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ

♦ கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்

இந்த சமூகத்தால் குறிப்பாக மேட்டுக்குடியினரால் புறக்கணிக்கபடுவது தீண்டப்படாதோராக சமூகத்தால் ஒதுக்கப்படுவது ஒரு பக்கம் என்றால் இந்தக்  கார்ப்பரேட் நல அரசோ “துப்புரவுப் பணியாளர்கள்” என்ற பெயரை “தூய்மைப் பணியாளர்கள்” என மாற்றியதைத் தவிர இவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. மாறாக அடிப்படை மருத்துவ வசதிக் கூட செய்துதராமல் இவர்களை சாகடிக்கிறது.

ஓரளவிற்கு முன்னேறிய தமிழகத்திலே இந்த நிலை என்றால், வடமாநிலங்களில் யோசித்து பாருங்கள். மேடைக்கு மேடை தூய்மை இந்தியா என்று கத்தும் இந்த மோடி அரசோ, மாடுகளுக்கு செய்து தரும் வசதிகள் கூட மனிதனுக்கு செய்து தர மறுக்கிறது. ஆம்! ’வல்லரசு’ இந்தியாவில் தீண்டாமை சுவர் எழுப்பிய காவி கூட்டம்தானே இவர்கள்.


அகிலன்

கொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் || ஸ்ரீதர் சுப்பிரமணியம்

‘கொடுமை மட்டுமே தினசரி நிதர்சனம் என்ற சமூகத்தில் தொடர்ந்து வாழும் நிலை வந்தால் ஒன்று போராடுவது அல்லது அந்தக் கொடுமைக்கு வீழ்வது, இந்த இரண்டு தவிர மக்களுக்கு வேறு என்ன சாத்தியங்கள் இருக்கின்றன?’ என்று கேட்டார் ஏங்கெல்ஸ்.

இந்தியா இப்போது ஒரு பேரழிவில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. சிகிச்சை கிடைக்காமல் தன் உறவினர் இறந்து விட்டார் என்று ஒரு குடிமகன் மருத்துவமனை ஊழியரைத் தாக்குகிறான். இன்னொரு குடிமகன் ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக் கொண்டு பிளாட்பாரத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான். பல்வேறு நிலைகளில் நம்மைத் தாக்கும் அழிவு காலம் இது.

படிக்க :
♦ ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

இப்படி சிஸ்டம் மற்றும் அரசாங்கம் தோல்வி அடைந்து இருப்பதை விட, நம்மைப் பெரிதும் கவலையுற செய்வது ‘இது எதற்கும் மத்திய அரசு பொறுப்பில்லை’ என அரசின் ஆதரவாளர்கள் சொல்வதுதான்: அதுவும் இந்தியாவின் மாபெரும் இருண்ட காலங்களில் ஒன்றில் வாழ்ந்து கொண்டு அப்படி சொல்வது பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அப்படி அரசுக்குத் தரும் ஆதரவு நமது ஜனநாயகத்தின் எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கப் போகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழிற்சாலைகளில் பணியிடங்கள் கொடுமையானக் கதியில் இருந்தன. சாமானிய வாழ்வாதாரத்துக்குக் கூட லாயக்கற்ற சூழ்நிலையில் அவை இயங்கிக் கொண்டிருந்தன. அப்படிப்பட்ட சூழலை உருவாக்கியது ஆங்கிலேய மேட்டுக்குடிகளும் அரசும்தான் என்று ஏங்கெல்ஸ் குற்றம் சாட்டுகிறார். அப்படிப்பட்ட சூழலில் பணிபுரியும், வாழும் ஊழியர்கள் நோயுற்று விரைவிலேயே அகால மரணத்தைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டு இருப்பதை ஏங்கெல்ஸ் சுட்டிக் காட்டி ‘அது ஒரு சமூகப் படுகொலை’ என்று வர்ணிக்கிறார். என்ன, அங்கே அது கொலையாகத் தெரியவில்லை. காரணம்,  அங்கே கொலைகாரன் என்று யாரும் இருப்பதில்லை. அந்த சாவு இயற்கையான சாவாகவே தோற்றம் அளிக்கிறது.

இப்போது இந்தியாவில் நாம் காண்பது அதே போன்றதொரு சமூகப் படுகொலைதான். அதனால்தான் அரசை இதில் பொறுப்பாக்கத் தயங்குகிறோம். ஒரே வித்தியாசம், 1840-ல் ஏங்கெல்ஸ் வாழ்ந்த இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கம் மட்டுமே கொள்ளை நோய்களால் பாதிப்புற்றது. இன்றைய இந்தியாவில் கொள்ளை நோய் எல்லாரையுமே தாக்குகிறது.

முதல் அலையின் பொழுது லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் படும் கொடுமைகள் நமக்குத் தெரியவில்லை. அதுவும் சமூகப் படுகொலைதான். அப்போதும் நாம் அரசைக் குறை சொல்லத் தயங்கினோம். அந்தத் தொழிலாளர்கள் ‘தாமாகத்தானே’ போய்க் கொண்டு இருக்கிறார்கள். யாராவது அவர்களைத் துரத்தினார்களா என்ன? அதேபோல, இப்போதும் இந்த இரண்டாம் அலைக்கு மக்களைத்தான் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நகைமுரண் என்னவெனில் ஃபிப்ரவரி மாதம் கோவிட்டை முறியடித்ததை பா.ஜ.க கொண்டாடிய பொழுது, அந்த வெற்றிக்கானப் பெருமையை பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் கொடுத்தார்கள், மக்களுக்கு அல்ல.

சாமானிய மக்களிடம் நிபுணர் கமிட்டி கிடையாது. கொள்ளை நோய் ஆரூட வடிவங்கள் கிடையாது. ஆனாலும் தவறுக்கு அவர்களைப் பொறுப்பேற்க சொல்கிறோம். ஆனால், தேர்தல் கமிஷன் போன்ற அதிகாரம் மிகுந்த ஒரு அமைப்பு எட்டுக் கட்டத் தேர்தலை அறிவிக்கிறது. உத்தராகண்ட் முதல்வர் கும்பமேளாவை ஆதரித்துப் பேசுகிறார். நாட்டின் பிரதமர் தனக்கு மாபெரும் கூட்டம் குழுமி நிற்பதைக் கண்டுப் பெருமிதமுற்று வியக்கிறார். அவர் அப்படி வியந்த அதே தினம் இரண்டு லட்சம் இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவை எல்லாம் அரசுகளின் செயல்தானே? இவற்றை எல்லாம் எப்படி மக்களின் தவறாகப் பார்க்க முடியும்?

இந்த அலைக்கானப் பொறுப்பில் இருந்து அரசை விடுவிப்பதன் மூலம் நாமும் இந்த சமூகப் படுகொலையில் பங்கு கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். சுடுகாடுகளில் உடல்கள் எரிபடுபவதை ஊடகங்களில் காட்டக் கூடாது. அவை இந்துக்களுக்குப் புனிதமான விஷயங்கள் என்று வாதிடுவதும் இதன் பகுதிதான். இதற்கு முன்பு நிறைய இந்துக்களின் தகனங்கள் வீடியோவில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன, நேரடி ஒளிபரப்பும் நடந்திருக்கிறது. ஆனால், அதையெல்லாம் விட்டு விடுவோம். நாம் கேட்க வேண்டிய கேள்விகள் இவைதான்: ஆக்சிஜன் தட்டுப்பாடு வராமல் பார்த்துக் கொண்டிருந்திருப்பதன் மூலம் எத்தனை சாவுகளை இந்தியா தடுத்திருந்திருக்க முடியும்?  மக்கள் ஏன் தங்கள் உற்றார் உறவினர்களை பிளாட்பாரங்களில், பார்க்கிங் இடங்களில் வைத்து தகனம் செய்யும் நிலை வந்திருக்கிறது? இவையெல்லாம் நமக்கு அவமானமாக இல்லை, ஆனால் இவற்றை ஊடகங்கள் பதிவு செய்வது மட்டும்தான் அவமானமா?

கொள்ளை நோயின் பிரச்சினைகளை மறைப்பது அந்த நோயை அடுத்த கட்டப் பேரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும் – இது எல்லாக் கொள்ளை நோய் நிபுணர்களும் ஒருமித்து எச்சரிக்கும் விஷயம். 2019-ல் கொரோனா தொற்றுத் துவங்கியப் பொழுது, ஆரம்பத்திலேயே சீனா அதனை மறைக்க முயற்சிக்காமல் இருந்திருந்தால் உலகம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்காது. அதனால்தான் நோய்த் தாக்கம் மிகுந்து சாவு எண்ணிக்கைகள் அதிகரித்த இதர நாடுகளில் ஊடகங்கள் முழு உத்வேகத்துடன் செயல்பட்டு முடிந்த வரை வெளிப்படையாக இயங்கின: இத்தாலி, ஈரான், அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், பெரு, போன்றவை உதாரணங்கள். ஆனால், இந்தியா மட்டும் இதில் கலாச்சார ரீதியாக தனித்துவம் கொண்டதாக இயங்க முயல்வது பெரும் சோகம்.

மாபெரும் தந்தை பிம்பம் கொண்ட ஒருவர் கலாச்சார ரீதியாக புனிதப் பூச்சு பெற்று எந்தக் கேள்வியும் இல்லாமல் ஆட்சி செய்வதை ‘தந்தையாட்சி’ என்று சொல்வார்கள். (Patrimonialism) சமூகவியல் அறிஞர் மேக்ஸ் வெபர் உருவாக்கிய இந்தப் பதம் ஜனநாயகத்துக்கு எதிர்ப்பதமாக சில நேரங்களில் பயன்படுகிறது. கடந்த ஏழு வருடங்களாக இந்தியா அப்படிப்பட்ட ஒரு தந்தையாட்சியாகத்தான் செயல்பட்டு வருகிறது. என்ன, வழக்கமாக இந்த ஆட்சி முறை ஒரு குடும்பம், வாரிசு என்று செயல்படும். மாறாக இங்கே மதப்பெரும்பான்மைவாதக் கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது. போலவே, தேர்தல் வெற்றிகள் மட்டுமே கட்டற்ற அதிகாரத்துக்கு ஆதாரமாக முன்வைக்கப் படுகிறது. குடிமக்களின் கடமைகள் மற்றும் தேசபக்தி போன்றவை முக்கிய வாதங்களாக முன்னெடுக்கப் படுகின்றன. இதே போன்ற வாதங்கள் பணநீக்க நேரத்திலும் எழுந்தன.

இதில் நகைமுரண் என்னவெனில் அப்படிப்பட்ட அரசில் புனிதம் பெற்ற தந்தைக்கு எல்லாமே தெரியும், அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார், சரி செய்து விடுவார் என்று ஒரு புறம் பேசுகிறார்கள். ஆனால், குடிமக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை, ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை, பெட் கிடைக்கவில்லை. தந்தையோ சும்மா இருக்கிறார். கிடைக்காத எல்லாவற்றையும் அவர்களேதான் தேடித் தேடி பிடித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. சக்தியும் வசதியும் இருப்பவர்கள் தேடிப் பிடித்துக் கொள்கிறார்கள். இல்லாதவர்கள் நிலை? இங்கே சமூக டார்வினிய தியரியான ‘வல்லவன் மட்டுமே பிழைப்பான்’ என்பது நிதர்சனமாகி விட்டது.

படிக்க :
♦ இந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்

♦ கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்

மத்திய சுகாதார அமைச்சர் ‘ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை’ என்று சொல்கிறார். ஆக்சிஜன் கேட்டுப் பதிவு இடுபவர்கள் மேல் உ.பி அரசு வழக்குப் பதிகிறது. ‘இறந்தவர்கள் திரும்பியா வரப் போகிறார்கள், எதற்கு அனாவசியமாக இறப்பு எண்ணிக்கை பற்றிப் பேச வேண்டும்’ என்று ஹரியானா முதல்வர் பேசுகிறார்.

கொரோனா எனும் கொள்ளை நோய் இந்த அரசாங்கத்திடம் இருந்த ‘புனிதத் தந்தை’ எனும் மேற்பூச்சை அரித்து உண்மை நிலையைக் காட்டி விட்டது.

(குறிப்பு : நிஸ்ஸிம் மன்னத்துக்கரன் கனடாவில் உள்ள டல்ஹவுசி பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு வளர்ச்சி ஆய்வுத் துறையில் உதவிப் பேராசிரியராக பணி புரிகிறார்.  இந்தியாவில் தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் கொரோனா இரண்டாம் அலையை மத்திய அரசு அணுகும் விதம் குறித்து நேற்றைய ஹிண்டுவில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதனை அவரது உரிய அனுமதி பெற்று இங்கே மொழி பெயர்த்து இருக்கிறேன். )

கட்டுரையாளர் : நிஸ்ஸிம் மன்னதுக்காரன்
தமிழாக்கம் : ஸ்ரீதர் சுப்பிரமணியம்
செய்தி ஆதாரம் : The Hindu
முகநூலில் : Sridhar Subramaniam

disclaimer

பாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை

டந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிரான பாலஸ்தீன மக்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக காசாப் பகுதியில் இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலால் குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கில் படுகாயமடைந்துள்ளனர். இருத்தரப்பினருக்குமான வன்முறை என்று செய்திகள் பெரும்பாலும் கடந்துப் போகின்றன.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெருசலேத்திலுள்ள டமாஸ்கஸ் கேட் பிளாசா (Damascus Gate Plaza) புனித ரமலான் மாதத்தில் பத்தாயிரக்கணக்கான பாலஸ்தீன் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வழிபாட்டுத் தலமாகத் தொன்றுத்தொட்டு இருந்து வருகிறது.

படிக்க :
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை
♦ அமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை

ஏப்ரல் 16-ஆம் தேதி பல பத்தாயிரக்கணக்கான பாலஸ்தீனயர்கள் வழிபாட்டிற்காக வந்த நிலையில், பத்தாயிரம் பேர்களை தவிர மற்றவர்களை இஸ்ரேல் பாதுகாப்புப்படை வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பியது.  ஒட்டுமொத்த சிக்கலும் நீருப்பூத்த நெருப்பாக ஏற்கனவே இருக்க, சமீபத்திய சிக்கலின் தோற்றுவாயாக இது இருக்கிறது.

ஆழ்ந்திருக்கும் பனிப்பாறையின் நுனி மட்டுமே சமீபத்திய சிக்கல். இஸ்லாமியர்களுக்கு அல்-அக்ஸா(Al-Aqsa) பள்ளிவாசல் மூன்றாவது புனிதத் தளம். அது வீற்றிருக்கும் கோவில் மலை (Temple Mount) யூதர்களுக்கு புனிதத் தளமாகக் கருதப் படுகிறது. பாலஸ்தீனியர்களை அல்-அக்ஸாவிலும், கோவில் மலையிலும் கூடுவதைத் தடுக்கும் இஸ்ரேலின் நோக்கத்திற்குப் பின்னே பாலஸ்தீன ஆக்கிரமிப்பும், யூதக் குடியேற்ற வரலாறும் இருக்கிறது.

வெறுமனே ஆபிராகிமிய சமயங்களுக்குள் நடக்கும் சமய சிக்கலாக இதைப் பார்க்க முடியாது. இஸ்ரேலுடனான சவுதிக் கூட்டணியின் சமரசமும், அதன் டாலர் பொருளாதாரமும் இதை மறுக்கின்றன.  இதற்குப் பின்னே, 100 ஆண்டுகால வரலாறு இருக்கிறது.

1920-1940 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் இருந்தே யூதர்களின் வெளியேற்றமும், குறிப்பாக, இரண்டாம் உலகப்போர் காலக் கட்டத்தில் ஹிட்லரின் நாசி படைகள் நிழ்த்திய ஹோலோகாஸ்ட்டிலிருந்து தப்பிப் பிழைத்த யூதர்களுக்கான ஒரு நாடு தேவைக் கோரிக்கையும், தொடர்ச்சியாக 1948-க்கு பின்பு இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை பிரிட்டன் உருவாக்கியதும், மத்தியக் கிழக்கில் மேற்கத்திய வல்லரசுகளின் ஆதிக்கமும் பின்னனியில் இருக்கின்றன.

1967-ம் ஆண்டு அரபுப் போரில் பெற்ற வெற்றியின் தொடர்ச்சியாக ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரைப்பகுதியில் வீற்றிருக்கும் புனித தளமானப் பழைய ஜெருசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்து அங்கு சட்டவிரோதமாக யூதக் குடியேற்றங்களை செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இஸ்ரேலின் கோரப் பிடியில் சிக்கி பாலஸ்தீனம் பாலைவனமாகிவிட்டது. பொருளாதார ரீதியில் பாலஸ்தீனயர்கள் வீழ்ந்து விட்டனர்.

நவீனத் தகவல் தொழில்நுட்பமும், கொலைகாரப் போர்க்கருவிகளும் புடை சூழ்ந்திருக்கும் இஸ்ரேலுக்கு முன்னே ஏதுமற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே நம்பிக்கையாக அவர்களது போராட்டங்களை பாலஸ்தீனிய போராட்டக்குழு ஹமாஸ் முன்னெடுத்து வருகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஹமாஸின் இராக்கெட்டுகள் ஒரு சிறிய எதிர்வினை மட்டுமே.

பாலஸ்தீனியர்களின் வீரம் இராக்கெட்டுகளின் எண்ணிக்கையில் அல்ல.  ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்து விட்ட நிலையில், ஒவ்வொரு வீழ்ச்சிக்கு பின்னரும்  மீண்டெழுந்துப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அவர்களது எதிர்கால நம்பிக்கையில் மட்டுமே.

புகைப்படங்கள்

ஹமாஸின் இராக்கெட்டுகளுக்கு பதிலடிதான் இந்த தாக்குதல்கள் என்று இஸ்ரேல் கூறுகிறது. இதற்கு முன்பு, ஜெருசலேமின் அல்-அக்ஸா பள்ளிவாசலில் பாலஸ்தீனிய வழிபாட்டாளர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

பாலஸ்தீனிய பகுதிகளான கான் யூனிஸ் (Khan Younis), அல்-புரேஜ் (al-Bureij) அகதிகள் முகாம் மற்றும் அல்-ஜைடவுன் (al-Zaitoun) சுற்றுப்புறங்களில் உள்ள இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேலிய படைகள் செவ்வாய்க்கிழமை காலை வரை தொடர்ந்துக் குண்டுவீச்சு நடத்தின.

 

அல்-ஷாட்டி(al-Shat) அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டை விடியற்காலையில் இஸ்ரேலிய போர் விமானம் தாக்கியதில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

 

காசா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானம் வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர் அழிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளை மக்கள் பார்க்கின்றனர்.

 

இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது குழந்தைகள் உட்பட 24 ஆக உயர்ந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறைந்தது 106 பேர் காயமடைந்தனர். (சமீபத்திய தகவலின் படி 50 க்கும் மேற்பட்டவர்கள் பலி).

 

காசா, அல்-ஷதி(al-Shati) அகதிகள் முகாமில் இஸ்ரேலிய ஏவுகணையால் தாக்கப்பட்ட ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் கூரை இடிபாடுகளின் கீழ் தப்பியவர்களை  பாலஸ்தீனியர் ஒருவர் தேடுகிறார்.

 

இஸ்ரேலியப் படைகளால தாக்கப்பட்ட பின்னர் பகுதியளவு உடைந்துபோன குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளை ஒரு பாலஸ்தீனியர் ஆய்வு செய்கிறார்.

 

தெற்கு காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் மற்றும் புகையின்  ஒரு காட்சி.

 

வடக்கு காசாவிலுள்ள பெயிட் லஹியா(Beit Lahiya) நகரில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவப்பணியாளர் ஒருவர் மருத்துவம் பார்க்கிறார்.

 

காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்கள் தொடுத்தப்பிறகு தனது குழந்தையை எடுத்துக்கொண்டு ஒருவர் தப்பி ஓடுகிறார்.


ஆறுமுகம்
செய்தி ஆதாரம் : Aljazeera