Tuesday, July 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 210

இந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்

கோவிட்-19.
பதிலளிக்கப்படாத கேள்விகள்.
ஆனால் இந்திய மக்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய பதில்கள்.

இந்தியாவில் கோவிட் : கே.விஜயராகவனுக்கு 35 கேள்விகள், வி.கே பால் மற்றும் பால்ராம் பார்கவா

ஊடகங்களில் பேட்டிகள் தந்துக் கொண்டிருக்கும் மத்திய அரசின் உயர்மட்ட விஞ்ஞானிகள் அதில், மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பானவற்றை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்திய மக்கள் எதைத் தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்களோ, அதை வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள்.

கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவல் சென்ற ஆண்டு ஆரம்பித்தது முதல் ஊடகங்களில் மற்றும் பொது வெளிகளில் அவ்வப்போதைய நிலைமைகளை விளக்குவதற்காக மோடி அரசு மூன்று விஞ்ஞானிகளை நியமித்தது. அவர்கள்

படிக்க :
♦ கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம் || ஜயதி கோஷ் || கணியன்
♦ கோவிட்-19 நோயாளிகளை கைவிட்ட அரசு : ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி?

  1. கே.விஜயராகவன் : முதன்மை அறிவியல் ஆலோசகர்
  2. வி.கே.பால் : நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் தடுப்பூசிகளில் தேசிய நிபுணத்துவக் குழுவின் தலைவர்
  3. பல்ராம் பார்கவா : இந்திய மருத்தவ ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் ஜெனரல்.
கே.விஜயராகவன் , வி.கே.பால் , பல்ராம் பார்கவா

தனியாகவோ அல்லது கூட்டாகவோ, அவர்கள் பல்வேறு அதிகாரத்துவத்தினர் மற்றும் அமைச்சர்களோடு சேர்ந்து, பொது மக்களுக்கு அறிவிக்கவும் வழிகாட்டவும் அதிகாரம் பெற்றவர்கள். கோவிட்-19லிருந்த மீண்ட, பிற ஜனநாயக நாடுகளில் உள்ள இவர்களின் சகாக்களை விட குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, கேள்விகளைக் கையாள்வதில் இவர்களுக்கு அக்கறையும் பொறுப்பும் மிகக் குறைவாகவே உள்ளது.

நோய்த்தொற்று பரவல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து, நான் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிபுணர்கள் பலரிடம் தொடர்ச்சியாகப் பேட்டிகளை எடுத்து மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவதன் ஒரு பகுதியாக, இந்திய அரசு தரப்பு நிபுணர்களிடம் சென்ற ஆண்டுக் கடுமையாக முயற்சி செய்தேன். எனது வேண்டுகோள்கள் அவ்வளவும் பலனற்றுப் போயின. எங்களுக்கு அவர்கள் பேட்டி எதுவும் தரமாட்டார்கள் என்று நிச்சயமாகத் தெரிந்த நிலையில், எனது மனதில் இருக்கும் கேள்விகளை பொது வெளியில் வைக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்களிடம் யாராவதுப் பேசும்போது இது பற்றிக் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில்.

  1. கோவிட்-19 எவர் ஒருவரும் இப்படி திடீரெனப் பரவுமென்றோ இவ்வளவு தீவிரமாக இருக்குமென்றோ எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ‘இது கிட்டத்தட்ட இல்லை என்றாலும் தவிர்க்க முடியாதது எதிர்பார்த்ததை விட அதிகமாக இல்லை’ அப்படியெல்லாம் ஒன்று இருக்கக் கூடுமா? ஐரோப்பாவும் அமெரிக்காவும் இரண்டு மற்றும் மூன்று அலைகளை அனுபவித்து விட்டார்கள் என்பது நம் கண்முன்னே நடந்தப் போதும் இந்தியாவில் பரவுவதின் தாக்கம் ஒரு அலையுடன் ஓய்ந்து விடும் என்று நம்பியதுப் பலன் தந்ததா?
  2. அவர்கள் பிரதமர் மோடியிடம் மற்றும் மத்திய அரசாங்கத்திடம் இரண்டாவது அலையை தவிர்க்க முடியாது எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்களா?
  3. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முதல் அலையை விட இரண்டாவது அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்ததைக் கணக்கிலெடுத்து பிரதமர் மோடி மற்றும் அரசாங்கத்திற்கு இந்தியாவிலும் அதே போன்றுதான் நிலைமை மோசமாக இருக்கும் என எச்சரித்தார்களா?
  4. ஜனவரியில் முதல் அலையை எதிர்கொள்ள தலைநகர் டில்லியில் உருவாக்கப்பட்ட ‘DRDO சாத்சங் மையங்கள் மற்றும் மும்மையில் உருவாக்கப்பட்ட ஜம்போ மையங்கள்’ ஆகியவை அகற்றப்பட்ட போது ‘இது தவறானது என்றும் இரண்டாவது அலை வரும் போதுக் குறிப்பாக முதல் அலையை விட மோசமானதாக இருந்தால் மும்பையும் டில்லியும் தயாரிப்பு நிலையை கைவிட்டதாக ஆகிவிடும்’ என்றும் (மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களிடம்) அரசுக்கு இந்த நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்தார்களா?
  5. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குறிப்பிட்டிருந்தப் படி ஏப்ரல் 2020-ல் அதிகாரப் பீடத்திலிருந்தக் குழுவின் தலைவர் வி.கே.பால் ஆக்சிஜன் பற்றாக்குறையை மற்றும் அதன் உற்பத்தியை விரிவுப் படுத்துவதன் தேவையை முன்னறிந்துக் கொண்டு இது பற்றி என்ன நடந்துக் கொண்டிருந்தது என்பதைக் கண்காணித்தார்களா? அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மிக தாமதமாவது அல்லது இல்லாமலே இருப்பது ஆகியவற்றை பற்றி அரசுக்குத் தெரிவித்தார்களா?
  6. மிகப் பெரிய தேர்தல் பேரணிகள், கும்பமேளாவில் கூடும் லட்சக்கணக்கான மக்கள் கூட்டங்கள், 60,000 பார்வையாளர்களோடு நடைப்பெறும் கிரிக்கெட் போட்டிகள் ஆகியவை கோவிட் காலக் கட்டுபாடுகள் எதையும் கடைப்பிடிக்காத நிலையில் அவை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதோடு எளிதாகத் தொற்றை மிக வேகமாகப் பரவச் செய்யும் நிகழ்வுகளாக மாறிவிடும் என்று அந்த நிபுணர்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை ஆலோசனை சொன்னார்களா?
  7. கடந்த ஆண்டு மே, ஜீன் மாதங்களில் பிஃபிசர் மொடெர்னா மற்றும் அஸ்ட்ராஜெனிகா ஆகியவை இரணடு டோஸ் கொண்ட மருந்துகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்த நிலையில் இந்தியாவின் 75 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசிகள் போடப்பட வேண்டுமானால் இந்தியாவிற்கு இரண்டு பில்லியன் (அ) இருநூறு கோடி ஜப்கள் தேவைப்படும் என்பதை அந்த நிபுணர்கள் கணக்கிட்டார்களா? இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தளவு டோஸ் மருந்துகளைத் தயாரிக்குமளவு இந்தியாவின் மொத்த உற்பத்தி திறன் போதுமானதாக இல்லை எனும் நிலையில் அதை மிக விரைவாக உயர்த்த வேண்டும் என்பதை உணர்ந்தார்களா? அப்படி ஒரு முடிவுக்கு அவர்கள் வந்திருந்தால் அதை – இது சாதாரண கணக்குதான்! விண்கோள் விஞ்ஞானமல்ல! – முறையாக அரசாங்கத்திற்கு ஆலோசனை சொன்னார்களா?
  8. இப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பிரதமருக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் தெரிவிக்கவில்லையென்றால் ஏன் தெரிவிக்கப்படவில்லை?
  9. இங்கிலாந்து அமெரிக்கா ஐரோப்பிய யுனியன் ஆகிய நாடுகள் தடுப்பூசிகளின் ஆய்வு உற்பத்தி ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்துக் கொண்டிருந்தனர் மற்றும் தடுப்பூசிகள் தடையில்லாமல் விநியோகிக்க ஏற்றவாறு கொள்முதலுக்கான முன் ஆர்டர்களை செய்துக் கொண்டிருந்தப் போது இந்த நிபுணர்கள் நமது அரசாங்கத்திடம் அதை சுட்டிக்காட்டி செயல்படத் தூண்டினார்களா? அவர்கள் செய்திருந்தால் அதற்கான அரசின் பதில் செயல்பாடு என்ன? அவர்கள் செய்திருக்காவிட்டால் ஏன் செய்யவில்லை? எது தடுத்தது?
  10. முன்னதாக ஜீலை 2020-ல் டாக்டர் பல்ராம் பார்கவா அந்த ஆண்டு சுதந்திரத் தினத்திற்கு முன்னதாக கோவாக்சின் அதனுடைய மூன்றாவது கட்ட மருத்துவ சோதனைகளை முடித்து விட வேண்டுமென, அதாவது ‘இரண்டு மாதங்களுக்குள்’ எனக் கூறியுள்ளார். தன்னளவில் ஒரு மருத்துவ ஆய்வாளரான அவர் ஒரு ஆரோக்கியமான மருத்துவ சோதனைகளை இந்த குறுகிய காலக்கட்டத்திற்குள் முடித்து விட முடியும் என்று எப்படி நம்பினார்? அவரது குறிப்புகள் மருத்துவனைகளுக்கான ஒரு வித மிரட்டலுடன் இணைந்து வந்ததாகக் கருதப்படுகிறது. அரசாங்கத்தின் வேறு எந்த மட்டத்திலிருந்தாவது இந்த வழிகாட்டல் வந்ததா? (ஏனெனில் இம்மாதிரியான நிறுவனங்களுக்கு அனுமதியோ வழிகாட்டலோ கொடுக்கும் அதிகாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு ICMR கிடையாது).
  11. கோவாக்சினின் கட்டம் 3 சோதனை செயல் திறன் முடிவுகள் கிடைக்காத போது, விரைவான “மருத்துவ சோதனை முறை” ஒப்புதல் என்று அவர்கள் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியிருந்தால் விஞ்ஞான நெறிமுறைகள் மற்றும் நடைமுறையின் மீறல் மட்டுமல்ல, தடுப்பூசிகள் பற்றிய தயக்கத்தையும் தீவிரமாக அதிகரிக்கும்?
  12. ஜனவரியில் கோவாக்சினை வெளிக் கொண்டு வந்ததில் வைக்கப்பட்ட வாதங்களை விளங்கிக் கொள்வதற்கு இந்த வேளையில் எழுப்புவதற்குரிய உபக்கேள்விகள் சில இருக்கின்றன.

அ. கோவாக்சினின் சக்தியை விலங்குகளின் மீதான சோதனைகள் மற்றும் அதன் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை முடிவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று டாக்டர் பார்கவா ஒரு செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார். அப்புறம் எப்படி டாக்டர் காகன்தீப்கங், டாக்டர் சாகித் ஜமீல் மற்றும் பிறருடைய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். முதலில் மருத்துகளுக்கு அனுமதி கொடுப்பதில் விலங்குகள் மீதான சோதனைகள் பயன்படுத்தப் படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், விலங்குகள் மனிதனின் நோய்களை முறையாகப் பிரதிபலிக்கும் போது மட்டுமே அது சாத்தியமாகும். இதுவரை கோவிட்-19ல் அப்படி இல்லை. கோவாக்சினில் விலங்கு சோதனைகள் எவ்வாறு அதன் செயல்திறனைக் காட்ட முடியும்.

ஆ. இரண்டாவது முதல் கட்ட சோதனைகள் என்பது பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ளத்தான் அதுவும் நீண்டகாலப் பாதுகாப்புக்கல்ல மற்றும் பக்கவிளைவுகளிலிருந்து பாதுகாப்பு அவ்வளவுதான் செயல்திறனுக்கானது அல்ல.

இ. மூன்றாவது முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 800 மட்டுமே. ஒரு தடுப்பூசியின் செயல்திறனை நிறுவுவதற்கு இந்த எண்ணிக்கை போதுமானதல்ல.

  1. மே ஒன்றாம் தேதியிலிருந்துப் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அரசின் முடிவையொட்டி விஜயராகவன் வி.கே.பால் மற்றும் பல்ராம் பார்கவா மூவரும் கீழ்கண்ட கேள்விகளை எழுப்பனீர்களா?

அ. இந்தியாவின் தற்போதைய தடுப்பூசிகள் உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு மொத்தமாக 2.5 மில்லியனுக்கும் (25 லட்சம்) கீழ்தான் எனும் போது, பதினெட்டிலிருந்து நாற்பத்தி நான்கு வயதுகுட்பட்ட 595 மில்லியன் (59 கோடியே 50லட்சம்) மக்களுக்கு அறிவிக்கப்பட்டப்படி மே ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசிப் போடுவது சாத்தியமா?

ஆ. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளும் அதற்குட்பட்ட வயதுள்ளவர்கள் தடுப்பூசிகளைக் கட்டணம் கொடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதும் சரியா? இது நீதிநெறிமுறைகேள்வி சார்ந்த அல்ல. ஆனால், அனுபவரீதியான ஒன்று. 44 வயதுக்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். இரண்டு தடுப்பூசிகளுக்குக் கட்டணம் கொடுக்க முடியாமல் தள்ளிப் போக்கூடிய அபாயம் இருக்கிறது.

இ. மத்திய அரசு இலவசமாகத் தடுப்பூசிகளை மக்களுக்குக் கொடுக்கும் போது மாநில அரசுகள் மட்டும் ஏன் கட்டணம் வாங்க வேண்டும்? எல்லோரும் இந்த நாட்டு மக்கள்தானே? இதில் என்ன வேறுபாடு இருக்கிறது?

ஈ. மாநில அரசுகளை தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட வைப்பது சரியா? ஏற்கனவே சீரம் இன்ஸ்டிடியுட், பாரத் பயோடெக் நிறுவனங்கள் மாநிலங்களுக்காக ஒதுக்கியுள்ள 50 சதவீதத் தடுப்பூசிகளுக்காகப் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் போது தனியார் நிறுவனங்களையும் அதே 50 சதவீத ஒதுக்கீட்டில் போட்டிப்போட வைப்பது எப்படி சரியாகும்?

  1. கோவாக்சின் என்பது உள்நாட்டில் வளர்த்தெடுக்கப்பட்ட தடுப்பூசி. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் ஆதரவு மற்றும் கூட்டு ஒத்துழைப்புடன் உருவாக்கப் பட்டிருக்கும் போது அவர்கள் பாரத் பயோடெக்கின் அறிவுசார் சொத்துரிமையை வாங்கிக் கொண்டு இந்த தடுப்பூசிகளின் உற்பத்தியை சாத்தியமான அதிகளவில் செய்ய உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்பாடுகள் செய்வதற்கான ஆலோசனை தெரிவித்தார்களா? இது மற்ற கோவிட்-19 தடுப்பூசிகளின் ஐ.பி உரிமைகளை நீக்க தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு வலு சேர்ப்பதாக இருக்குமே?
  2. இந்தியாவில் கோவிட்-19ல் ஏற்பட்டிருக்கும் உயிர் பலிகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 2,00,000 என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நடைமுறையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரும் இதுதான் மொத்தம் என்று நம்புகிறார்கள். நம்ப முடியாவிட்டாலும் இது குறைவான எண்ணிக்கை என்பதுதான் உண்மை. அவர்கள் எப்படி இதுதான் சரியான எண்ணிக்கை என்று இந்தியாவை ஏற்றுக் கொள்ள வைக்கப் போகிறார்கள்?
  3. தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகான எதிர்விளைவுகள் பற்றிய தகவல்கள் கொடுப்பதை பிப்ரவரி 26, 2021-லிருந்து அரசாங்கம் ஏன் நிறுத்திவிட்டது? சுகாதார அமைச்சகத்தின் சார்பாக ஒரு இணையான ஆராய்ச்சி நடத்தப்பட்டதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அனுபவம் போல கோவிஷீல்டு போட்டுக் கொள்வதால்தான் ரத்தம் கெட்டியாகிறது என்பதற்கான எந்த சம்பந்தமும் கண்டுபிடிக்கவில்லை. பல மாநிலங்களில் ஏற்கனவே இதைப் போன்றவற்றை அனுபவித்துக் கொண்டும், அதனால் நேர்ந்த மரணங்களை மறைக்கின்ற ஒரு செயல்பாட்டிலும் இருக்கும் போது, இந்த முடிவு எந்தளவு நம்பகத் தன்மையானது?
  4. ஜாமி முல்லிக் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் ஏப்ரல் 27-ல் கடந்த நான்கு வாரங்களாக ஒவ்வொரு வாரமும் சராசரி உயிர்பலிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து வருகிறது. உண்மையில் கடந்த வாரம் இது 84 சதவீதமாக உயர்ந்தது. அதன் காரணமாக இந்தியாவின் மரணங்களின் அளவு பிப்ரவரியில் 7 சதவீதத்திலிருந்து கடந்த வாரத்தில் 1.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நமக்கு உணர்த்துவது நாம் அதிகக் காலத்திற்குக் குறைந்த அளவு மரண விகிதம்தான் என்று பேசிக் கொண்டு வசதியாக இருக்க முடியாது என்பதைத் தானே?
  5. அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் அளவு ஒரு நாளைக்கு சற்றேறக்குறைய 4,00,000-ஆக அதிகரித்தள்ளது. அதனால் விளையும் உயிர்பலிகளின் அளவு 1.7 சதவீதத்திற்கு குறையாமல் இருந்தால் நாம் ஒரு நாளைக்கு 6,800 அளவுக்கு பலிகளை எதிர்பார்க்கலாமா?

    படிக்க :
    ♦ வல்லரசு இந்தியா : கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை || கருத்துப்படம்
    ♦ கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்

  6. இந்த இடத்தில் யாராவது ஒருவர் பெரியக் கேள்வியாகக் கேட்கக்கூடும். எப்போதும் இந்திய நோயாளிகள் மற்றும் அதனால் பலியானவர்களின் எண்ணிக்கையை ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் மட்டும் ஒப்பிட்டுப் பேசுகிறார்களே! பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாள், குறைந்தபட்சம் மலேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுடன் ஒப்பிட மாட்டேன் என்கிறார்களே ஏன்? ஏனெனில் உயிர்பலிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு என கணக்கிடும் பொழுது அந்த நாடுகளில் குறைவாக இருப்பதால் இந்தியா நிலைமை மோசமாக இருக்கும். அதே ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் நமது நிலைமை பரவாயில்லையாகத் தோன்றும் என்பதாலா?
  7. அவர்கள் நம்பிக்கொண்டிருப்பது ஒவ்வொரு நாளும் கண்டுப் பிடிக்கப்படாத அதிகரிப்புகள் தான் என்பதை ஏன் நம்மிடம் நேர்மையாக ஒத்துக்கொள்ளக் கூடாது? அதிகாரப்பூர்வமான அதிகரிப்பு என்பது ஒரு நாளைக்கு சற்றேறக்குறைய 4,00,000 என்பது நமக்கு தெரியும். இதே கண்டுபிடிக்கப்படாத அதிகரிப்புகளைப் பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு கணக்கீடுகள் தருகின்றன. புரபசர்.கெளதம்மேன்ன் இதைவிட 20-25 மடங்கு அதிகம் என்கிறார். ஸீரோலாஜிக்கல் சர்வே கடந்த முறை பிப்ரவரியில் 27.5 மடங்கு என அரசாங்கமே வெளியிட்டது. சியாட்டில் உள்ள ஐ.எச்.எம்.ஐ., இது 29 மடங்குக்கு அதிகம் என்கிறது. ஆனால் நம்மிடம் சொல்லக் கூடிய நிலையிலிருக்கும் இந்த மூன்று கனவான்களும் நமது அரசாங்கத்தின் பார்வை என்ன என்று சொல்வார்களா? அவர்களுக்கு நமக்கு அறிவிக்க வேண்டியக் கடமையும் இருக்கிறது தானே?
  8. மே மாத ஆரம்பக் காலங்களில் தினமும் 5,00,000 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என பேராசிரியர் ப்ராமார்முகர்ஜி தனது கணக்கீடாக தெரிவித்திருக்கிறாரே மே இறுதியில் இந்த அலையின் உச்சக்கட்டமாக இது அதிகரித்து அதிகபட்சமாக 10 லட்சம் தினசரி பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  9. கோவிட்-19 நோயாளிகளுக்குப் பல்வேறு மருந்துகளை எந்தவித தேவைப்படும் சான்றுகள் இல்லாமலேயே கேள்விக்குரிய மருந்துகளைக் கட்டுப்பாட்டு ஜெனரல் (Drug Controller General) அனுமதித்துள்ளார்கள். அந்த மருந்துகள் டோஸிலிசுமாப் இடோலிசுமாப் ஃபவிபிராவிர் தற்போது வைராஃபின்.சுகாதார அமைச்சகமும் தனது பங்குக்கு ஹைட்ரோக்சிக்ளரோக்யூன் என்ற மருந்தை உபயோகிக்க அனுமதித்துள்ளது. அதன் செயல்திறன் பற்றி எந்த சான்றுகளும் இல்லாமல். அதோடு, அதன் பக்கவிளைவுகளும் அற்பானவை அல்ல. நீங்களே அறிவியல் அறிஞர்களாகவும் இருப்பதால் விஜயராகவன் பால் பார்கவா DCGI முடிவு பற்றி அதனிடம் விவாதித்தீர்களா? அவற்றின் பயன்பாட்டை அரசாங்கம் தொடர்ந்து அங்கீகரிப்பதற்கு எதிராக இந்த மருந்துகள் பற்றிய நிபுணர்களின் நியாயமான சந்தேகத்தின் பலனைப் பொதுக் களத்தில் அவர்கள் எப்படி கட்டம் கட்டுகிறார்கள்?
  10. நாம் வைரல் ஸ்ட்ரயின்ஸ் (viral strains) பற்றி பேசுவோம். பஞ்சாபில் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.1.7 ஸ்ட்ரயின் (முதலில் இங்கிலாந்திலிருந்து தகவல் தரப்பட்டது) அல்ல. ஆனாலும், சமூகப்பரவல் நிலைமையை அடைந்தது என்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்களா?
  11. பி.1.617 ஸ்ட்ரயின் பற்றிய விவரங்களை ஏன் பகிர்ந்துக் கொள்ளவில்லை? இரண்டுமே மிக சுலபமாகப் பரவக் கூடியது மற்றும் பத்திரிக்கைகளில் பரவலாக வந்துள்ள தகவல் படி அநேகமாக தடுப்பூசிகளுக்கு அதிக எதிர்ப்பை தரக்கூடியது என்பதாலா? “மாற்றுருவின் தீவிரம் மற்றும் பரவக் கூடிய தன்மை பற்றி சிறியளவு சான்றுகளே இருப்பதாக” சமீபத்தில் இங்கிலாந்தின் சிறந்த விஞ்ஞானிகள் ‘பைனான்சியல் டைம்ஸ்’-ல் சுட்டிக்காட்டியிருப்பதுடன் ஒத்துப்போகிறார்களா? அவர்கள் ஏன் தங்களுக்குத் தெரிந்ததை நமக்கு சொல்ல மறுக்கிறார்கள்? ஜாக்கிரதையாகவும் நிதானமாகவும் செய்திகளை நம்மிடமிருந்து மறைக்கிறார்கள்? இதன் மூலம் இந்திய மக்களை ஊகவணிகத்திற்கும் தவறானச் செய்திகளுக்குப் பலியாகவும் அதன்பலனாக மிகையான எண்ணங்களுக்கும் ஏன் பீதியடையவும் விட்டுவிடுகிறீர்கள்?
  12. பிரதமர் திரும்ப திரும்ப அரசியல் பேரணிகளை நாட்டின் நீள அகலங்களில் நடத்தி (அஸாமிலிருந்து கேரளா மே.வங்கம் தமிழ்நாடு) அவரால் ஈர்க்கப்பட்ட கூட்டத்தின் அளவில் தன்னையே மெச்சிக் கொண்டு அதன்மூலம் அரசாங்கத்தின் கோவிட் கால கட்டுப்பாடுகளான சமூகஇடைவெளிப் பாதுகாத்தல், மாஸ்க் அணிதல் ஆகியவற்றை அலட்சியபடுத்தி தன்னளவில் ஒரு முன்னுதாரணத்தை வைத்துவிட்டதாக அவர்கள் பிரதமரிடம் எடுத்துச் சொன்னார்களா?
  13. உண்மையில் ஒரு மிக ‘சிறந்த பேச்சாளர்’ என்று நாடெங்கும் விரிவாக அறியப்பட்டிருக்கும் நமது பிரதமரிடம் மக்களிடம் மாஸ்க் அணிவது சமூகஇடைவெளிக் கடைபிடிப்பது ஆகியவற்றுக்கான அவசியத்தை விளக்கி கட்டாயம் அணிய வேண்டும் கடைபிடிக்க வேண்டும் என்பதை- சுயமுயற்சியாக திரும்ப திரும்ப செய்ய வேண்டும் என்று எடுத்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்களா? ஒவ்வொரு வீடுகளுக்கும் இந்த செய்தியை அறிவுறுத்தி செய்ய தூண்டுவது தொலைக்காட்சிகளில் வீடியோ மற்றும் வணிக விளம்பரமாக வரும்படி செய்து மக்களுக்கு ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கும் வண்ணம் வாராவாரமோ அல்லது அவசியத்திற்கேற்ப தினசரியோ செய்தியாளர் சந்திப்புகளை நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டார்களா?
  14. சென்ற ஆண்டு தி வயர் அறிவியல் செய்தப் புலனாய்வில் சந்தையில் காலம் கடந்த மாஸ்க்குகளும் போலி N95 மாஸ்க்குகளும் இருப்பதை கண்டறிந்தோம். இப்போதும் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்ற மாஸ்க் பற்றி மக்களிடையே குழப்பமே நீடிக்கிறது. இது பற்றி ஒழுங்குமுறைகள் இருக்கின்றன. ஆனால், அவை எல்லாமே தொழில்நுட்பரீதியாக மற்றும் அமுலாக்கம் சுத்தமாக இல்லை. சரியான மாஸ்க்குகள் வாங்கவும் உபயோகிக்கவும் மக்களுக்காக அரசாங்கம் இதுவரை என்ன செய்திருக்கிறது?
  15. மக்களின் முறையான நடவடிக்கைகளுக்கு எதிரான அறிவியலுக்கு எதிரான அறிக்கைகளை அமைச்சர்கள் கொடுக்கும் போது அவர்கள் அரசாங்கத்திடம் என்ன சொல்வார்கள்? உதாரணத்திற்கு, அஸாம் சுகாதார அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா “என் மாநிலத்தில் மாஸ்க் அணிய தேவையில்லை” என்கிறார் அல்லது உத்திரக்காண்ட் மாநில முதலமைச்சர் திரத்சிங் ராவட் “கடவுளின் மகிமை ஒன்றேப் போதும் கங்கா நதி மாதாவின் சக்தி மக்களை கோவிட்-19லிருந்து காப்பாற்றும்” என்கிறார்.
  16. ஆயுஷ் அமைச்சகத் துறை கோவிட்-19ஐ எதிர்த்துப் போராட ‘மாற்று மருந்துகளை’ முன்வைத்து உபயோகிக்க சொல்கிறது. மும்பை நகரத்திலும் மற்றும் தெலுங்கானா மாநிலமும் ஹோமியோபதி மாத்திரைகளை தங்களது மக்களுக்கு விநியோகிக்கிறது. பாபா ராம்தேவ் மற்றும் அவரின் நிறுவனம் பதஞ்சலியும் ‘கோரோனில்’ என்ற மருந்தை கோவிட்-19க்காக சந்தைப் படுத்தியது. அதன் அறிமுகவிழாவில் மத்திய சுகாதார அமைச்சர் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக சமீபமாக இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக ‘பசு அறிவியலில்’ குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டவில்லை என்பதற்காக இதே அமைச்சர் ஹர்ஷவர்தன் பல அமைச்சகங்களை திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தார். நீங்கள் தான் சான்று அடிப்படை மருந்துகளுக்காக வாதாடுபவர்கள். இதில் எந்த தீர்வுகளும் நோயாளிகளுக்கு உதவி செய்யும் அல்லது காப்பாற்றும் என்பதை நிரூபிக்க எந்தவித ஆதாரங்களும் இல்லாதபோது அவற்றின் தொடர்ந்த உபயோகத்தை எப்படி நீங்கள் அனுமதித்திருக்கறீர்கள்.
  17. “கொரோனாவை அடக்கி ஒடுக்குவதில் வலிமையுடன் வெற்றிப் பெற்றிருப்பதாக” கடந்த ஜனவரியில் டாவோஸில் World Economic Forum கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே? அல்லது பாஜக பிப்ரவரி 21 அன்று “இந்திய மோடி அரசு கோவிடை வென்றுவிட்டதாக” ஒரு தீர்மானத்தை வெளியிட்டிருக்கிறார்களே? மார்ச் 7 அன்று மருத்துவர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் “இந்தியாவில் கோவிட்-19 தொற்று அபாயத்தின் இறுதி ஆட்டத்தில் இருக்கிறோம்” என்கிறாரே? இதைப் பற்றியெல்லாம் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? இவையெல்லாம் நடப்புக்கு எதிரானது மற்றும் நியாயமற்றக் கருத்துகள் என்று அவர்கள் அரசாங்கத்திடம் சொல்லி எச்சரித்திருக்கிறார்களா? அல்லது தற்போதைக்கு மௌனமாக இருப்பதே நமக்கு மிகுந்த நல்லது என்று இருந்துவிட்டார்களா?
  18. “அரசாங்கத்திடம் கல்யாண நிகழ்ச்சிகள் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது ஏனென்றால் அவை கோவிட் தொற்றுகளைப் பரப்பும் மையங்களாக செயல்படும்” என்று அவர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்களா? சில மாநிலங்களில் 50 விருந்தினர்கள் வரை அனுமதிக்கப் படுகிறார்கள். வேறு சில மாநிலங்களில் 100 பேர் வரை அனுமதிக்கிறார்கள்.
  19. வேகமான சுயமாக இயங்கக் கூடியப் பரிசோதனைக் கருவிகளை கடந்த ஆண்டு இந்தியாவின் விஞ்ஞானிகள் உருவாக்கி வளர்த்து வைத்திருக்கிறார்களே அவற்றை மக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் ‘இரத்தப் பரிசோதனை நிலையங்களில் கூட்டம் சேர்வதையும் அதனால் தங்களுக்கு ‘போதுமான நேரம் மற்றும் தேவையான சாதனங்கள் இல்லை’ என்றும் மக்களை விரட்டாமல் தடுக்கலாமே? ஏன் அவர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனைக் கொடுக்கவில்லை?.
  20. ஏப்ரல் 23-படி அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையங்கள் 15,133 மாதிரிகளை வரிசைப் படுத்தியிருக்கின்றன. இது இந்தியாவின் மொத்த மாதிரிகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானது. ஐரோப்பாவில் இது 8 சதவீதம் அமெரிக்காவில் 4 சதவீதம். இவற்றை ஒப்பிடும் போது, போதுமான அளவு மரபியல் வரிசைகள் செய்யப் பட்டிருக்கின்றன என்று நாட்டை எப்படி சமாதானப் படுத்தப் போகிறார்கள்?
  21. ‘இந்தியாவில் மக்களுக்கு தடுப்பூசிகள் போடக் கூடிய செயல்முறை மாற்றப்பட வேண்டும் என்று நம்புவதாக’ நாட்டின் பல நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்களே அவர்களது வாதத்தை விஜயராகவன் பால் மற்றும் பார்கவா எப்படி எதிர்கொள்கிறார்கள்? உதாரணத்திற்கு “ஒவ்வொரு கோவிட் நோயாளியை சுற்றி இருப்பவர்களுக்கும் தொடர்பில் இருப்பவர்களுக்கும் தடுப்பூசிகள் போட்டு ‘ring vaccination’ கவனமாகப் பார்த்துக் கொள்வது மற்றும் நோய்த்தொற்று மூர்க்கத்தனமாகப் பரவிக் கொண்டிருக்கும் பகுதிகள் மாவட்டங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவது” ஆகியவற்றைப் பேராசிரியர் ப்ராமர் முகர்ஜி தீவிரமாகப் பரிந்துரைக்கிறார். பேராசிரியர் கிரிதரா பாபு “சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர்களை ASHA workers கொண்டு போலியோ தடுப்பூசிகள் போடப்படும் அதே முறைகள் மற்றும் செயல்திட்டங்களைப் பயன்படுத்தி செய்யலாம்” என பரிந்துரைக்கிறார்.
  22. மூன்றாவது அலை வருவதாக சாத்தியக் கூறுகள் தெரிகையில் மக்களுக்கு அவர்களால் என்ன சொல்ல முடியும்? குறிப்பாக இரண்டாவது அலையின் மூலம் எந்தளவு பாடம் கற்றுக் கொண்டார்கள் அது எந்த அளவு மக்களுக்கு பயன்படப் போகிறது.

    படிக்க :
    ♦ கொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு!
    ♦ ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி

இந்த கட்டுரையின் ஆசிரியர் பற்றி ஒரு சிறு குறிப்பு :

அன்று குஜராத் முதலமைச்சராக இருந்த, இன்றைய இந்தியாவின் பிரதமரான நரேந்திரமோடி அவர்களை, ஒருதொலைக்காட்சி நேரலையில் (19-Oct-2007 )அன்று இவர் பேட்டி எடுக்க ஆரம்பித்த மூன்று நிமிடங்களில் தண்ணீர் குடித்தார்.பிறகு தனது மைக்கை கழட்டி வைத்துவிட்டு, இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை என்று பேட்டியை முடித்துக் கொண்டு, மோடி கிளம்பிவிட்டார்.அதற்கு பிறகு மோடி பிரதமரான பின் இவர் எந்த தொலைக்காட்சி சேனலிலும் வேலை பார்க்க முடியவில்லை.

அவர்தான் கரண்தாபர். இந்த கட்டுரையின் ஆசிரியர் (இது மட்டும் எனது)


கட்டுரையாளர் : கரண் தாபர்
மொழியாக்கம் : மணிவேல்
செய்தி ஆதாரம் : The Wire

கங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்

ந்தப் புகைப்படங்களைப் பகிர விரும்பவில்லை. கங்கை ஆற்றின் கரைகளில், பீகாரின் பக்சர் அருகே, நூற்றுக்கணக்கான பிணங்கள் ஒதுங்கியிருக்கின்றன எனச் செய்திகள் வருகின்றன. ஒரு டஜன் சடலங்கள் ஒதுங்கி அலையும் காட்சிகள் அதிர்ச்சியாக உள்ளன.

இந்தப் பிணங்கள் அருகேயுள்ள கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதியிலிருந்து வருகின்றன என பீகாரும், அவை பீகாரின் பிணங்கள்தான் என உத்தரப் பிரதேசமும் அடித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன.  கோவிட் தொற்று ஏற்பட்டு இறந்தவர்கள் நூற்றுக்கணக்கில் கங்கையில் எறியப்படுகிறார்கள் என்கிற அச்சம் இப்போது இந்தியாவை உறையச் செய்திருக்கிறது.

படிக்க :
♦ கங்கையை சுத்தப்படுத்திய கொரோனா ஊரடங்கு !
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

ஆனால், டேமேஜ் கன்ட்ரோலில் இறங்கியுள்ள மோடி மீடியா, “இல்லை இல்லை, இது வழக்கமாக நடைபெறுவதுதானே, கேட்பாரற்றச் சடலங்களை நாங்கள் இப்படித்தானே வீசுவது வழக்கம்” என்று சமாளிக்கத் தொடங்கியுள்ளன.  மனிதத் தன்மையற்று நடந்துக் கொள்வதுதானே நமது வழக்கம் என்கிறப் பதிலைக் கொண்டே சங்கிகள் நம் வாயை அடைக்கக் கூடும். இல்லையா பின்னே!

பரிதாபத்துக்குரிய வடஇந்திய பாமர மக்களுக்கு இப்படித்தான் ராம ராஜ்ஜியம் வந்து சேர்ந்திருக்கிறது. ஜீவன் கங்கையில் கரைந்த பிறகு சடலங்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்றொரு தத்துவமும் முன்வைக்கப்படலாம்.

நோய் பரவலைத் தடுக்க முடியவில்லை, உயிரிழப்பை தடுக்க முடியவில்லை என்பதை நாம் “புரிந்துக் கொள்ள முடிகிறது”. தில்லியின் சுடுகாடுகள் நிரம்பி வழிந்ததற்கு பின்னாலுள்ள வரம்புகளையும் “புரிந்துக் கொள்ள” முடிகிறது.

ஆனால், உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் இப்படி கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆற்றில் வீசப்படுகின்றன என்பதை எப்படிப் புரிந்துக் கொள்வது? வாழ்வதற்கு வழியில்லாத அந்த மக்கள், மரியாதையோடு சாகவும் வழியில்லையா?  சடலங்களை ஆற்றில் விடுவது மதம் சார்ந்த நம்பிக்கை என்கிற ஒற்றை சால்ஜாப்பில் இதை கடந்து விட முடியாது. கடக்கிறோம் என்றால், அந்த எண்ணத்தைத்தான் முதலில் கேள்வி கேட்க வேண்டும்.

பிரச்சனை, அந்த மாநிலங்களில் யார் ஆட்சி செய்தாலும் நிலைமை மாறாமலிருப்பதுதான். இந்தி வட்டார மாநிலங்களில் மனிதர்களுக்கு மரியாதை என்பது இல்லவே இல்லை.

இதில் பாஜக ஆட்சிகள் நரகம் என்றால், முந்தைய ஆட்சிகள் சொர்க்கம் அல்ல. உ.பி, ம.பி, பீகார் உள்ளிட்ட  மாநிலங்களில் பொதுச் சமூகம், சிவில் சமூகம், நவீனம், நிர்வாகம், ஆட்சி என்று எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சியாளர்கள் மக்களை காட்டுமிராண்டிகளாகவே (இந்த சொற்பயன்பாட்டுக்கு மன்னிக்கவும்) வைத்திருக்கிறார்கள். இதைப் பற்றி நாம் நிறைய எழுதிவிட்டோம்.

மோடி 2014-இல் இந்த மாநிலங்களில் வெற்றிப் பெற்றதற்கு முதன்மையான காரணம் அவர் தன்னை விகாஷ் புருஷ் (வளர்ச்சியின் நாயகன்) என்று சொல்லி மக்களை நம்பவைத்ததுதான். அதற்காகத்தான் குஜராத் மாடல் பெரிதும் ஊதிப் பெருக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு குஜராத் மாடல் என்பது தமாஷானதுதான் என்றாலும், உ.பி, பீகாருக்கு அது முன்னுதாரணான மாடல்தான். அதை நம்பித்தான் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், வந்தது விகாசம் அல்ல, விநாசம்.

உ.பி, பீகாரில் பாஜக/பாஜகஆதரவு ஆட்சிகள் அடிப்படையில் எந்த வளர்ச்சியையும் செய்யவில்லை என்பதைத் தான் இந்தக் கொடூரமான சம்பவங்கள் காட்டுகின்றன.

ஆறு ஆண்டுகளில் மிகப்பெரிய உள்கட்டமைப்பை உருவாக்கி விட முடியாதுதான். ஆனால், வளர்ச்சியின் திசை வழியை உருவாக்கியிருக்க வேண்டும். (முன்பு) மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் கர்நாடகத்திலும் இமாச்சலிலும் ஆளும் பாஜகவினரால் அதை செய்ய முடிகிறது தானே? ஏன் உ.பியில் முடியவில்லை? பீகாரின் ஒரிஜினல் விகாஷ் புருஷனான நிதீஷ் குமார் ஏன் செயலற்று இருக்கிறார்?

ஏனென்றால், கங்கைச் சமவெளியின் சமூக அடித்தளமே வர்ணாசிரம தர்மத்தால் ஆளப் படுகிறது. பாமர மக்களுக்கு உழைப்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. எனவே, அவர்களுக்காக எந்த சமூக நலத் திட்டங்களும் வாழ்வாதார வளர்ச்சித் திட்டங்களும் தேவையில்லை. அவை, அனாவசியம் என்பது மட்டுமல்ல, அந்த சிந்தனை வருவதற்கான வாய்ப்பே அங்கே இருப்பதாகத் தெரியவில்லை. கோவிட் வந்திருக்கிறதா, வெளியே சொல்லாதே என்பதுதான் யோகி அரசாங்கத்தின் கட்டளை.

அங்கேயுள்ள மேல்வர்ண மற்றும் மேட்டுக்குடி மக்களுக்கு பல வசதிகள் உள்ளன. ஆனால், சூத்திர, பஞ்சம மக்களுக்கு ஒரு துளி வசதிக் கூட இருக்காது.

இந்தியாவில் வேறு எங்கும் ஏழைகள் இல்லையா, பஞ்சம-சூத்திரர்கள் இல்லையா? இருக்கிறார்கள். அங்கே, அந்தப் பிரிவுகளையும் தாண்டி, அவர்கள் வளரக் கூடிய அரசியல் சூழல் பல மாநிலங்களில் நிலவுகிறது. அதனால்தான் பஞ்சாபும் தமிழ்நாடும் ஆந்திரமும் குஜராத்தும் கேரளமும் இமாச்சலப் பிரதேசமும் கர்நாடகமும் ஒரிசாவும் சமூக வளர்ச்சியில் போட்டிப் போட்டு வளர்கின்றன.

அப்படியென்றால், இந்த லாலூ, மாயவதி, முலாயம் போன்றவர்கள் எல்லாம் இருபதாண்டுகள் ஆண்டார்களே, அவர்கள் என்னதான் செய்தார்கள் என்கிற கேள்வி எழலாம். ஆனால், உண்மையில் யாரிடமும் பதில் இல்லை. சாதிப் பிரதிநிதித்துவ அரசியல், சமூகநீதி அரசியலாகப் பரிணமிப்பதற்கு முன்பே வெறும் சாதி அடையாள அரசியலாக குன்றிப் போய்விட்டதா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

சுயமரியாதை அரசியலும் சமூக-ஜனநாயகப் பொருளாதார அரசியலும் உருவானதாகத் தெரியவில்லை. சாதி அடையாள அரசியல்தான் வியூகம் என்றால் அதில் இவர்களை விட அமித்ஷாதான் ஜித்தன். சோஷல் ஜஸ்டிஸா சோஷல் இஞ்சினீயரிங்கா என்றால் பாஜகதான் கில்லாடி.

அதனால்தான் எஸ்.பி, பி.எஸ்.பி, ஆர்.ஜெ.டி, ஜே.டி.யு போன்ற ஜனதா பரிவாரிய பகுஜன் கட்சிகள் கூட தங்கள் மாநிலங்களை வளர்ப்பதில் போதுமான அளவுக்கு கவனம் செலுத்தவில்லை. அதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.

தமிழ்நாடு, கர்நாடகம், பஞ்சாப் போல அங்கே தேசிய இனம் சார்ந்த ஓர்மை இல்லை என்பது மற்றுமொரு காரணம். பீகாரிக்காவது கொஞ்சமாவது உண்டு, உ.பி-யில் அதுக்கூட கிடையாது. ஏனென்றால் உ.பி, ம.பி எல்லாம் செயற்கைப் பிரதேசங்கள்.

நாம் மாநிலங்கள், ஆனால் இயல்பில் தேசங்கள். அவையோ வெறும் பிரதேசங்கள். நாம் நமது மாநிலத்தை அரசியல் அலகாக நினைக்கிறோம். அவர்கள் அவற்றை வெறும் நிர்வாக அலகுகளாக நினைக்கிறார்கள்.

இந்தியாவே தங்களுக்குத்தான் சொந்தம் என நினைக்கக் கூடிய ஒரு உத்திரப் பிரதேசக்காரனுக்கு தனக்கென ஒரு தேசிய இன அடையாளம் இல்லை என்பது இதுவரை உறைக்கவில்லை.

திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய சாதனை என்பது சமூகநீதி, தேசிய இன அரசியல், சமூக-ஜனநாயகப் பொருளாதாரம் சார்ந்த மக்கள்நல ஆட்சிமுறை ஆகியவற்றை பிணைத்ததுதான். (கேரளமும் பஞ்சாபும் இதை வேறுவிதங்களில் செய்தன).

ஒரு கப்பற்படையின் வேகம் அந்த கப்பல்படைத் தொகுப்பில் செல்லும் கப்பல்களிலேயே மிகவும் மெதுவாகச் செல்லும் கப்பலின் வேகத்தைப் பொறுத்ததுதான் என்று சொல்வார்கள். இந்தியாவின் வேகம் உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தது!

பேரிடரால் ஏற்படும் துயரங்களால் வரக்கூடிய சவால்களை விட இந்தச் மனிதத் தன்மையற்ற சமூக-அரசியல் சூழலால் ஏற்படும் துயரங்கள்தான் மிகவும் வலிதருபவை. கோவிட்டால் வரக்கூடிய சமூக இடைவெளியை விட வருணாசிரமத்தால் வரக் கூடிய சமூக இடைவெளிதான் மிகவும் ஆழமானது.

படிக்க :
♦ தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா !

♦ கங்கையை சுத்தம் செய்தாரா மோடி ? கதை விட்ட வானதி சீனிவாசன் !

இந்த மாநிலங்கள் எதை நோக்கித்தான் செல்கின்றன என்பதை யோசிக்கும் போது திகைப்பாக இருக்கிறது. பாசிச கலாச்சாரும் மதவெறியும், இறுகிப்போன சாதி அடையாளமும் ஆணாதிக்கப் பிற்போக்கு கலாச்சாரமும் பின்தங்கிய உற்பத்தி முறையும் ஒரு பக்கம். ஆனால், பெரும்பான்மைவாத (இந்தி) அரசியலின் எழுச்சி என்பது மறுபக்கம்.  நினைத்தாலே தலைச் சுற்றுகிறது. நமது தலையெழுத்தோ இவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது!

நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவாவது இந்த மாநிலங்களின் அரசியலில் தலையிட்டாக வேண்டும் என்று நினைக்கிறேன். அங்கே உள்ள முற்போக்கு, ஜனநாயக அரசியல் சக்திகளிடம் பேச வேண்டியிருக்கிறது.

ஆழி.செந்தில்நாதன்
முகநூலில் :
Aazhi Senthil Nathan
disclaimer

கொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்

பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள்…!

கொரோனா பெறும் தொற்றில் இந்தியாவில் மக்கள் அனைவரும் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருக்கும் சூழலிலும் கொரோனா தடுப்பு மருந்துகளை கார்ப்பரேட்டுக்கள் விற்று இலாபமீட்ட வழிவகை செய்கிறது மோடி அரசு.

ஆக்சிஜன் தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். தடுப்பூசி தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். கோரோனா நோயாளிகளிடமிருந்து கொள்ளையடிக்கிறது தனியார் மருத்துவமனைகள். கொரோனாவில் பிழைக்க முடியாத ஏழை மக்கள் தினம் தினம் தினம் மருத்துவ வசதிகள் இன்றி இறக்கிறார்கள். கொரோனாவில் அம்பலமாகும் மோடி அரசின் கார்ப்பரேட் சேவை.

கொரோனா அச்சத்தை பயன்படுத்திக்கொண்டு, தடுப்பு மருந்துகளை தனியார் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு திற்ந்துவிட்டு கொள்ளையடிக்க வழி ஏற்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.


கருத்துப்படம் : மு.துரை

பாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்

பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க அவதூறுகளையே அறிக்கையாக்கிய உண்மை கண்டறியும் குழு – அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் கண்டன மறுப்புரை !

கடந்த மார்ச் மாதம் சென்னை பல்கலைக் கழகத்தில் தொல்லியல் துறைத் தலைவராக இருக்கும் பேரா.சௌந்திரராஜன், தன்னிடம் மதிப்பெண் அறிந்துக்கொள்ள சென்ற மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் சகமாணவர்களைத் தாக்கியதகவும் மாணவர்கள் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர்.

மேலும் பேரா. சௌந்திரராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆறு நாட்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தினர். பேரா.சௌந்திரராஜனும் மாணவர்கள் தன்னைத் தாக்கியதாக நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தார்.

படிக்க :
♦ பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !

♦ சென்னை பல்கலை : உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது || புமாஇமு கண்டனம்

பேரா.சௌந்திரராஜன் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை துறைத் தலைவர்(பொறுப்பு) பதவியிலிருந்து நீக்கிவதற்காகவே பாலியல் குற்றச்சாட்டு நாடகம் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக பேரா.லட்சுமணன் தலைமையில் 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பேரா.சௌந்திரராஜனை சந்தித்தனர்.

உண்மை அறியும் குழு(உ.அ.கு) தனது அறிக்கையை கடந்த ஏப்ரல் 15, 2021 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்டது. அவ்வறிக்கையில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்துப் போராடிய மாணவர்கள் மீது ஆதாரங்களே இல்லாமல் பல பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தனர். அதேவேளையில் பேரா.சௌந்திரராஜனின் செயல்பாடுகளை நியாப்படுத்தியும் அவரை காப்பாற்றுவதையுமே நோக்கமாகக் கொண்டிருந்தது உ.அ.கு அறிக்கை.

அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பேரா.லட்சுமணன் மற்றும்  இருவர், பேரா.சௌந்திரராஜன் குற்றமற்றவர் என்ற சித்திரத்தை உருவாக்கவே முயற்சித்தனர். அறிக்கையில் உள்ள விசயங்களை ஒட்டி பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். மாணவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களையும் கேட்டனர்(அறிக்கையில் இல்லை). உ.அ.கு-வின் நடுநிலையற்ற அணுகுமுறையையும் பத்திரிக்கையாளர்கள் அம்பலப்படுத்தினர். ஆனால், மேடையிலிருந்த பேரா.லட்சுமணன் மற்றும்  இருவரும் எந்த கேள்விக்கும் நேரடியானப் பதிலை சொல்லவில்லை. (சில செய்தி ஊடகங்கள் தங்களின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்).

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் அனுமதி இல்லாமல் பொதுவெளியில் பேசக் கூடாது என்று பல்கலைக் கழக நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளதால் தங்கள் மீது உ.அ.கு சுமத்தியுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்து பேச முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால், மாணவர்கள் சார்பாக சென்னை பல்கலைக் கழகத்தில் செயல்படும் மாணவர் அமைப்பாகிய அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை சார்ந்த நாங்கள் உ.அ.கு-ன் அறிக்கை மீதான இந்த மறுப்புரையை வெளியிடுகிறோம்.

***

உ.அ.கு-வின் அறிக்கையையும் அதன் உள்நோக்கத்தையும் புரிந்துக்கொள்ள, இப்பிரச்சனையைத் தொடக்கத்திலிருந்து தெரிந்துக் கொள்வது உதவியாக இருக்குமென்பதால் அதனை சுருக்கமாகத் தருகிறோம்.

கொரோனா ஊரடங்கினால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகள் மூடப்பட்டன. பல்கலைக் கழகத்தின் மெரினா விடுதியில் தங்கியிருந்த ஆய்வு மாணவர்களும் முதுநிலை மாணவர்களும் தங்களுடைய ஊருக்குச் சென்று விட்டனர். மாணவர்களிடம்  இருந்து ஊரடங்கு காலத்திற்கான(மார்ச்-நவம்பர் 2020) விடுதி கட்டணம், விடுதி ஊழியர்கள் மற்றும் மெஸ் ஊழியர்களுக்கான சம்பளம்(மெஸ் இயங்கவில்லை) சேர்த்து எட்டு மாதத்திற்கானக் கட்டணத்தைப் பல்கலைக் கழக நிர்வாகம் கட்டச் சொல்லியது.

முதல் கட்டமாக மார்ச் 2020 முதல் ஜூன் 2020 வரைக்குமான கட்டண விவரங்கள் விடுதி தகவல் பலகையில் ஜனவரி 2021-ல் ஒட்டப்பட்டது. இது குறித்து பல்கலைக் கழகப் பதிவாளரிடம் பேசுவதற்காக மாணவர்கள் பலமுறை முயன்றும் அவரை சந்திக்க முடியாமல் போனதால் கட்டணக் குறைப்புத் தொடர்பாக பதிவாளரின் பி.ஏ-விடம் எட்டு முறை கடிதம் அளித்தனர். நிர்வாகத்திடமிருந்து எவ்வித பதிலும் வராததால் விடுதிக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை குறைப்பதாக ஒப்புக் கொள்கிறது.

இதற்கிடையில் இப்போரட்டத்தில் ஈடுபட்ட தொல்லியல் துறை மாணவர்களின் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டுப் பேசிய அத்துறைத் தலைவர்(பொறுப்பு) பேரா.சௌந்திரராஜன், மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துக் கொள்கிறார்கள், போராட்டத்தை முடிக்க சொல்லுங்கள், இல்லையெனில் டிஸ்மிஸ் செய்து விடுவோம் என மாணவர்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

இதன் பிறகு, அகழாய்வு பணிக்காக மாணவர்கள் வேலூரில் ஒருமாதம் முகாமிட்டிருந்தனர். தொல்லியல் துறை மாணவர்களின் மூன்றாம் பருவத் தேர்வுக்கான முடிவுகள் அப்போது (12-02-2021) வெளியானது. இத்தேர்வு முடிவுகளை தொலைபேசி வாயிலாக அலுவலகப் பணியாளரை தொடர்புக் கொண்டு தெரிந்துக் கொள்ளும் படி மாணவர்களிடம் கூறியுள்ளனர். அலுவலகப் பணியாளரோ மதிப்பெண்களைக் கூறாமல் Grade-டை மட்டும் தெரிவித்துள்ளார். இத்தேர்வில் விடுதி கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மற்றும் ஆதரித்த மாணவர்கள் 7 பேர் பெயிலாகி இருந்தனர். (கூடுதலாக ஒருவர் பெயிலாகி இருந்தார்; அவர் எந்த ஆதரவையும் தெரிவிக்கவில்லை.)

மற்ற மாணவர்களும் தங்களுடைய மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதியதினால் விடைத் தாள்களை மறுதிருத்தம் (revaluation) செய்ய வேண்டுமென்று கோரி பெயிலான 7 மாணவர்கள் மற்றும் உடன் பயிலும் 17 பேரும் சேர்ந்து மொத்தம் 24 மாணவர்களுடைய  கையொப்பமிட்ட கடிதத்தை 14-03-2021 அன்று பல்கலைகழக துணைவேந்தர், பதிவாளர், தொல்லியல் துறைத் தலைவர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோருக்கு கடிதம் மூலமாகவும் e-mail வழியாகவும் அனுப்பினர்.

அகழாய்வு பணியில் இருந்து பாதியிலேயே கிளம்பி பல்கலைக் கழகம் வந்ததும் மாணவர்கள் மதிப்பெண்களை அறிந்துக் கொள்ளத் தொல்லியல் துறைக்குச் சென்று விசாரித்தனர். மாணவர்கள் தபாலில் அனுப்பியிருந்த விடைத் தாள்கள் துறையில் இல்லை. Scan செய்து email-ல் அனுப்பியிருந்த விடைத் தாள் நகலை பென்சில்களால் திருத்தியிருக்கிறார்கள். இது பற்றி துறைத் தலைவரிடம் மாணவர்கள் விசாரித்துள்ளனர்.

பெயிலான ஒரு மாணவரிடம் (போராட்டத்தில் முன்நின்றவர்) “நீ தபாலில் அனுப்பிய விடைத் தாளும் email-ல் அனுப்பிய விடைத்தாளும் வேறாக உள்ளது. நீ டீ பார் செய்யப்பட்டுள்ளாய். அதனால்தான் உனக்கு அரியர் போடப்பட்டுள்ளது” என்று பேரா.சௌந்திரராஜன் கூறியுள்ளார். இரண்டு தேர்வுத் தாளையும் காட்டுங்கள் என்று மாணவர் கேட்டதற்குத் துறைத் தலைவர் முடியாது என்று மறுத்து விடுகிறார். விடைத் தாளை திருத்திய ஆசிரியரின் கையொப்பம் விடைத் தாளில் இல்லை, விடைத் தாள் பென்சிலால் திருத்தப்பட்டுள்ளது.

பதில்களுக்கான மதிப்பெண்கள் திருத்தப் பட்டுள்ளது. இது பற்றி அம்மாணவர் கேட்டதற்கு “அதெல்லாம் நீ பேசக் கூடாது” என்று மாணவரை மிரட்டியுள்ளார் பொறுப்புத் துறை தலைவர் பேரா.சௌந்திரராஜன்.

பேரா.சௌந்திரராஜன் திட்டமிட்டு ஃபெயில் செய்திருக்கிறார் என்பதை மாணவர்கள் உணரவே வேறு பேராசிரியரை வைத்து விடைத் தாள்களை மறுதிருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக முன்னாள் துறைத் தலைவரை கொண்டு விடைத் தாள்களை மறுதிருத்தம் செய்ய பல்கலைக் கழக நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. விடைத்தாள் மறுதிருத்தலில் மாணவர்கள் அனைவருமே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைகின்றனர். (உ.தா. 20 எடுத்த மாணவன் மறுதிருத்தலுக்குப் பிறகு 48 மதிப்பெண் எடுக்கிறார்.)

இதன் பிறகு அகழாய்வு பணியை முழுவதும் முடித்து வந்த மாணவர்கள் தங்களுடைய Internal/external மதிப்பெண்களை துறைத் தலைவர் பேரா.சௌந்திரராஜனிடம் கேட்டுள்ளனர். அதனை பல்கலைக் கழக விதிமுறைப்படி துறை தகவல் பலகையில் போட வேண்டும் எனவும் கோரியுள்ளனர். அதற்கு போரா.சௌந்திரராஜன் மாணவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். உடனிருந்த மாணவியையும் தகாத வார்த்தைகளால் திட்டி அத்துமீறி மார்பகத்தில் கைவைத்து தள்ளியிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட மாணவி 17-03-2021 அன்று பொறுப்புத் துறைத் தலைவர் பேரா.சௌந்திரராஜன் மீது பாலியல் புகாரை பல்கலைக் கழகத்திடம் கொடுக்கிறார். இப்புகாரின் மீது பல்கலைக் கழக நிர்வாகம் எந்த  நடவடிக்கையையும் எடுக்காததால் மாணவர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர். உடனே பல்கலைக் கழகம் sexual harassment committee-ஐ அமைத்து இப்புகாரை விசாரிக்கிறது.

இக்கமிட்டியோ பாலியல் புகாரை நடுநிலையோடு விசாரிப்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட மாணவியை harss செய்வது போல நடந்துக் கொள்கிறது. இவ்விசயங்கள் பத்திரிக்கைகளில் கசிய ஆரம்பிக்கின்றன. உடனே பல்கலைக் கழக நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற போர்வையில் போராடிய மாணவர்களை இடைநீக்கம் செய்கிறது.

இதற்கிடையில் SFI, மாதர் சங்கம் மற்றும் பல ஜனநாயக அமைப்புகளிடமிருந்து மாணவர்களுக்கான ஆதரவு பெருகவே பல்கலைக் கழக வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை மார்ச் 22 அன்று காலை  காலை 9 மணியளவில் போலீஸ் கைது செய்கிறது. மாணவர்களுக்கு ஆதரவாக போராடிய SFI, மாதர் சங்கம் மற்றும் பல ஜனநாயக அமைப்பின் பிரதிநிகளையும் போலீஸ் கைது செய்கிறது.

மார்ச் 30 அன்று வளாகத்திற்குள் போராடக் கூடாது, பிரசுரம் அளிக்க கூடாது, நிர்வாக அனுமதி இல்லாமல் ஊடகங்களிடம் பேசக் கூடாது என்ற நிபந்தனைகளின் பெயரில் மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை பல்கலைக் கழக நிர்வாகம் ரத்து செய்கிறது.

ஆக இப்பிரச்சனை ஜனவரி மாதத்திலிருந்தே துவங்குகிறது. தங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராடுகின்ற மாணவர்களை பழி வாங்குவதும் அவர்களிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துக் கொள்வதையே பேரா.சௌந்திரராஜன் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார். இவையனைத்தும் உ.அ.கு-விடம் மாணவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால், உ.அ.கு-வோ இவையனைத்தையும் மறைத்து விட்டு தங்களுக்கு தேவையானவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டு அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.

***

இந்த அறிக்கையில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எங்களுக்கு உள்ளது. இருப்பினும் சில பிரச்சனைகளை மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறோம்.

1. உ.அ.கு-வின் அறிக்கை, பெயிலான மாணவர்களுடைய விடைத் தாள்களின் கையெழுத்துப் பிரதியும், மெயில் காப்பியும் வேறாக உள்ளது எனத் துறைத் தலைவர் தெரிவித்ததாகக் கூறுகிறது. ஆனால், மாணவர் தரப்பிலிருந்தோ ஒரு மாணவரின் விடைத் தாள் மட்டுமே மாறியுள்ளதாக துறைத் தலைவர் கூறியதாக அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பும் இருவேறு கூற்றைத் தெரிவிக்கிறது.

தபாலில் அனுப்பிய விடைத் தாள்களை மாணவர்கள் கேட்ட போது பொறுப்புத் துறைத் தலைவர் காட்டவில்லை. ஒரிஜினல் விடைத் தாளை பல்கலைக் கழகப் பதிவாளர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கேட்ட போதும் காட்டவில்லை. தபாலில் அனுப்பிய விடைத் தாள் தொலைந்து விட்டதாக துறைத் தலைவர் கூறியிருக்கிறார்.

மேலும்,  email-ல் அனுப்பப்பட்ட விடைத் தாளைக் கொண்டு மறுதிருத்தல் செய்ததில் அதிகமான மதிப்பெண் வித்தியாசத்தில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். உ.அ.குழுவோ பேரா.சௌந்திரராஜனுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, இப்பாடங்களை கௌரவ ஆசிரியர்கள் தான் எடுத்தார்கள் என்கிறது உ.அ.கு.

எந்த அரசு உயர்கல்வி நிறுவனங்களிலாவது நிரந்திர பேராசிரியர்கள் அல்லது துறைத் தலைர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்களின் வழிகாட்டுதலை மீறி ஒரு கௌரவ ஆசிரியர்கள் சுகந்திரமாகச் செயல்பட முடியுமா? அதிகாரப் படிநிலைகள் கெட்டித்தட்டி போயுள்ள நமது உயர்கல்வி நிறுவனங்கள் என்ன அவ்வளவு ஜனநாயகமாகவா செயல்படுகிறது? கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களை கேட்டாலே கூட இதற்கு பதில் சொல்லிவிடுவார்கள். உ.அ.குழுவோ எதார்த்தத்தை மீறி இதனை தலைகீழாகப் பார்க்கிறது.

பெயில் செய்யப்பட்ட மாணவர்களின் விடைத் தாள்கள் மட்டும் காணாமல் போனதன் மர்மம் என்ன? மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதின் காரணம் என்ன? இதற்கெல்லாம் யார் காரணம்? இவைப் பற்றியெல்லாம் உ.அ.கு-க்கு சந்தேகமே வரவில்லை.

மெஸ் போராட்டத்தில் தொடர்புடைய மாணவர்களை பொறுப்புத் துறைத் தலைவர் பேரா.சௌந்திரராஜன் திட்டமிட்டு பழிவாங்கியுள்ளார். இது பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு தெரியும். ஆனால், நிர்வாகம் துறைத் தலைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்கள் மறுதிருத்தல் வேண்டி பல்கலைக் கழக துணைவேந்தர், பதிவாளர், தொல்லியல் துறைத் தலைவர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.

நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கையை  கண்டுக் கொள்ளவில்லை என்பதால் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பிறகே பல்கலைக் கழக நிர்வாகம் மறுதிருத்தலுக்கு சம்மதித்தது. ஆனால் உ.அ.கு-வோ மாணவர்கள் கடிதம் கொடுக்கவில்லை மறுதிருத்தலுக்கான முறையான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று சட்ட நுணுக்கங்களுக்குள் செல்கிறது.

திட்டமிட்டு பழிவாங்கப்பட்டது ஆதாரத்துடன் தெரிந்தப் பின்பு மாணவர்கள் போராடாமல் மறுதிருத்தலுக்கான காசோலைப் படிவத்தையா நிரப்பிக் கொண்டிருக்க முடியும்? பேரா.சௌந்திரராஜனின் திட்டமிட்ட பழிவாங்குதலை ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியுள்ளனர். கடிதத்திற்குப் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்த நிர்வாகத்தினை தங்களுடைய போராட்டத்தின் மூலம் மறுதிருத்தலுக்கான ஒப்புதலைப் பெற்று அப்பாடங்களில் தேர்ச்சியும் அடைந்துள்ளனர்.

இந்த உண்மையெல்லாம் மறைத்து விட்டு பல்கலைக் கழக நிர்வாகம் மாணவர்களுக்கு ஆதரவாகவும் பேரா.சௌந்திரராஜனுக்கு எதிராகவும் நடந்துக் கொண்டது போன்ற பிம்பத்தினை உ.அ.குழுக் கட்டியமைக்க முயற்சிக்கிறது.

படிக்க :
♦ கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து : சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !
♦ சென்னை பல்கலை : மாணவியை பாலியல்ரீதியில் துன்புறுத்திய தொல்லியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடு !

2. மதிப்பெண்களை (Internal&External) தகவல் பலகையில் வெளியிட வேண்டுமென துறைத் தலைவரிடம் மாணவர்கள் கேட்டுள்ளனர். அவர் அதை மறுத்ததோடு மாணவர்களை திட்டியுள்ளார். உ.அ.குழு அறிக்கையில் தங்களை தாக்கியதோடு உடன் வந்த மாணவியிடம் தகாத முறையில்(பாலியல் குற்றச்சாட்டு) பேரா.சௌந்திரராஜன் நடந்து கொண்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர். பேரா.சௌந்திரராஜனோ மாணவர்கள் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இருதரப்பினரும் தங்களுடைய வாதங்களுக்கு ஆதரவாக பல செய்திகளை உ.அ.குழுவிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், உ.அ.குழுவோ இருதரப்பின் வாதங்களை ஆராயாமல் தொல்லியியல் துறை மற்றும் பல்கலைக் கழக ஊழியர்கள் சொன்ன செய்திகளை மட்டும் எடுத்துக் கொண்டு பேரா.சௌந்திரராஜன் தாக்கப்பட்டார் என்று முடிவு செய்து விட்டது.

ஒரு அரசு நிர்வாகத்தில் குறிப்பாக பல்கலைக் கழகங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் மீது மாணவர்கள் புகார் அளித்தால் ஒன்று மாணவர்களை தண்டிப்பார்கள் அல்லது நிலைமை கைமீறிவிட்டால் மொத்த நிர்வாகமே ஓரணியில் நின்று அந்த போராசிரியரை காப்பாற்ற முயற்சி செய்வார்கள். மாணவர்கள் பேராசிரியரை பழிவங்குவதெல்லாம் எதார்த்தத்தை மீறிய கற்பனை.

மாணவி மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடைபெறவில்லை பேரா.சௌந்திரராஜனை பழிவாங்குவதற்காகவே புனையப்பட்ட பொய்க்குற்றச்சாட்டு என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் உ.அ.குழு தெரிவித்தது. அதற்கான ஆதாரங்கள் என்ன என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு பதிலில்லை. அறிக்கையிலும் குறிப்பிடவில்லை. பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டக் குழுவின் மீது நம்பிக்கையில்லை என்று மாணவி ஏன் கூறுகிறார் என்று பத்திரிக்கையாளர்களிடம் எதிர்கேள்வி கேட்கிறது உ.அ.குழு. இதனால் மாணவர்களுக்கு உள்நோக்கம் இருப்பதாக உ.அ.குழு முடிவுக்கு வருகிறது.

பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டக் குழு பாதிக்கப்பட்ட மாணவியிடம் செய்த விசாரணையின் ஒலிப்பதிவை யாரோருவர் கேட்டாலும் மாணவியின் முடிவுக்குத்தான் வரமுடியும். மிகவும் பிற்போக்கான ஆணாதிக்க மனநிலையிலிருந்தே பாலியல் குற்றச்சாட்டு விசாரனைக்குழு மாணவியிடம் விசாரணை செய்துள்ளது. இக்குழுவைப் பொருத்தவரை மாணவி மீதான தாக்குதல் திட்டமிட்டு நடந்தது கிடையாது.

அச்சூழலில் எதிர்பாராமல் நடந்த ஒன்று. எனவே, இதனை குற்றமாக கருத முடியாது. உ.அ.கு-வும் இவ்வாறேக் கருதுகிறது. உ.அ.கு-வின் உறுப்பினர்கள் மாணவர்களின் தரப்பிலிருந்தோ அல்லது பாதிக்கப்பட்ட மாணவியின் நிலையிலிருந்தோ இப்பிரச்சனையை அணுகவில்லை. ஒரே சமூகத்தை சேர்ந்த சகப் பேராசிரியரை காப்பாற்ற வேண்டும் என்னும் மனநிலையிலேயே இப்பிரச்சனையை அணுகியுள்ளனர்.

உ.அ.கு-வின் உறுப்பினரான தோழர் மஞ்சுளா “உ.அ.குழுவின் அறிக்கையானது பாலியல் துன்புறுத்தல் நிகழ்வின் உண்மைகளை மறுக்கிறது மற்றும் குற்றவாளியைக் காப்பாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது (on the final conclusion of this fact finding report which rebuffs the actual facts and is aimed at protecting the perpetrator)” என்று கூறி அறிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அதே குழுவில் அங்கம் வகிக்கும் நாசர் என்பவரும் இக்குழுவின் அறிக்கையில் மாற்றுக் கருத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களின் இன்டர்னல்/எக்ஸ்டர்னல் மதிப்பெண்களைப் பல்கலைக் கழக விதிப்படி துறையின் தகவல் பலகையில் போடாத செயலுக்கு இக்குழு ஒரு விளக்கம் தருகிறது. தகவல் பலகையில் மதிப்பெண்களைப் போடுவது அத்துறையில் நடைமுறையில் இல்லை. HOD சௌந்திரராஜன் ஏற்கனவே நடைமுறையில் இருந்த மரபைத்தான் தொடர்கிறார். புதிதாக அவர் எதையும் செய்யவில்லை என்கிறது.

மிக எளிமையான கேள்வி “ஒரு துறைத் தலைவர் பல்கலைக் கழக விதிப்படி நடக்க வேண்டுமா? அல்லது மரபு, வழக்கம் என்று செயல்பட வேண்டுமா?” உ.க.குழு மரபு, வழக்கம் அடிப்படையில் செயல்பட்டதை சரியென்று ஏற்றுக் கொள்கிறது. பல்கலைக் கழக சட்ட விதிகளைக் குழி தோண்டிப் புதைக்கிறது.

3. உ.அ.குழு கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் பொறுப்புத் துறைத் தலைவர் பதவியில் உள்ள பேரா.சௌந்திரராஜனை முழுத்துறைத் தலைவர் பதவிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு சதி நடப்பதாகவும் அவர் மீது சாதிய ரீதியான ஒடுக்குமுறை இருப்பதற்கான சாத்தியங்களை புறந்தள்ளிவிட முடியாது என்றும் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய Dr.லட்சுமணன், மாணவர்களின் போராட்டங்களுக்குப் பின்னால் பல்கலைக் கழக பேராசிரியர்கள் இருப்பதாகவும் பேரா.சௌந்திரராஜனை முழுமையான துறைத் தலைவர் பதவிக்கு வரவிடாமல் தடுப்பதற்காகவே அவர் மீதுப் பொய்யான குற்றச்சாட்டுகளை மாணவர்கள் தொடர்ந்து வைப்பதாகவும் அத்துறையில் பணியாற்றுகின்ற பேரா.சௌந்திரராஜன், Dr.கருணாகரன் மற்றும் பேரா.ராமசாமி(ஓய்வு) மூவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலே மாணவர்கள் இது போன்று நடந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மீதான இந்த ஆதாரமற்றக் குற்றச்சாட்டை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். இது போன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைத்ததற்கு உ.அ.குழுவை வன்மையாக கண்டிக்கிறோம்.

இதில் இரண்டு விசயங்கள் சொல்லப்பட்டுள்ளது. ஒன்று மாணவர்களின் போராட்டங்களுக்கு பின்னால் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது மற்றொன்று  பேரா.சௌந்திரராஜன் உள்ளிட்ட மூவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாணவர்கள் திட்டமிட்டே பொய்யானக் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள் என்பது.

மாணவர்களின் போராட்டங்களுக்குப் பின்னால் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கான ஆதாரங்களோடு பேராசிரியர்களின் பெயர்களைச் சுட்டிக்காட்ட வேண்டும். அறிக்கையில் இதைப் பற்றி ஒரு வரிக் கூட இல்லை. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இக்குற்றச்சாட்டை ஒட்டி பத்திரிக்கையாளர்கள் எழுப்பியக் கேள்விகளுக்கு உ.அ.குழுவின் உறுப்பினர்கள் நேரடியானப் பதில்களை சொல்லாமல் மழுப்பவே செய்தனர்.

பிறகு எதனடிப்படையில் மாணவர்கள் மீது உ.அ.குழு குற்றம் சுமத்துகிறது?

பல்கலைக் கழகங்கள் / உயர்கல்வி நிறுவனங்களில் துறைத் தலைவர், கல்லூரி மேலாளர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, சிண்டிகேட் உறுப்பினர், துணைவேந்தர் போன்ற பதவிகளுக்காகப் பேராசிரியர்களுக்கு இடையே நடக்கும் திரைமறைவு குழாயடி சண்டைகள் யாவரும் அறிந்ததே.  இதில் சாதி, பெரும் பணம், அரசியல் கட்சிகளின் தலையீடுப் போன்றவை மிகவும் வெளிப்படையாகவே நடக்கிறது.

தனியார் கல்லுரிகளின் வளர்ச்சிக்கு இவை இன்னும் வலுப்பெற்று பல்கலைக் கழகங்களை கட்டுப்படுத்துகின்றப் பிரதான சக்தியாகவே மாறியுள்ளன. ஆளும்வர்க்கத்துடன் நெருக்கமாக இருப்பதன் மூலம் உயர்ப்பதவிகளை அடைவது, மாணவர்களை ஒடுக்குவது, அதிகாரத்தில் தொய்ப்பது, அதிக வருவாய் பார்ப்பது இதுவே உயர்கல்வித் துறையின் பொதுத்தன்மையாக மாறியிருக்கிறது(இது குறித்து வாரத்திற்கு இரண்டு செய்திகளாவது பத்திரிக்கைகளில் வந்து விடுகின்றன).

உ.அ.குழு பதறுவதைப் போலவே பேரா.சௌந்திரராஜனின் பொறுப்புத் துறைத் தலைவர் பதவியை பறிக்க சதி நடப்பதாக வைத்துக் கொண்டாலும் இது பேராசிரியர் தரப்புகளுக்கிடையே நடக்கும் பதவிக்கான போட்டியே தவிர மாணவர்களுக்கும் இதற்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது. மாணவர்கள் போராட்டங்களுக்குப் பின்னால் எந்த பேராசிரியரும் இல்லை என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம்.

பேரா.சௌந்திரராஜன், Dr.கருணாகரன் மற்றும் பேரா.ராமசாமி(ஓய்வு) ஆகியோர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்கள் என்று பேரா.லட்சுமணன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். ஆனால், இதற்கான ஆதாரங்களை எங்கேயும் குறிப்பிடவில்லை. மாணவர்கள் மீதான இந்த ஆதரமற்ற பொய் குற்றச்சாட்டை மறுப்பதோடு இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மெஸ் பிரச்சனையிலிருந்தே மாணவர்களிடம் பழிவாங்கும் நோக்கத்துடனும் அதிகாரத்துவத்துடனும் பேரா.சௌந்திரராஜன் நடந்து வந்துள்ளார். இதனால், மாணவர்கள் பேரா.சௌந்திரராஜன் மீது புகார் கொடுத்துள்ளனர். பேரா.ராமசாமி(ஓய்வு) மீது மாணவர்கள் எங்கேயும் புகார் அளிக்கவில்லை. உ.அ.குழுவினர் மாணவர்களைச் சந்தித்து பேசிய பொழுது தொல்லியல் துறைப் பேராசிரியர்கள் பாடம் நடத்துவதைக் குறித்து கேள்விகள் கேட்டுள்ளனர்.

அதற்கு சரியாக பாடம் நடத்துவதில்லை என்று தங்களது அதிருப்தியை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பாடம் எடுத்தவர்களில் மூவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் உடனே சாதிய ஒடுக்குமுறை என்ற பிம்பத்தை உ.அ.குழு உருவாக்குகிறது.

ஆசிரியர் பாடம் நடத்துவது சரியில்லை என்று மாணவர்கள் கருதுவதே சாதிய ஒடுக்குமுறையா? ஆசிரியர் இடைநிலைச் சாதியாக இருந்து அதிருப்தி தெரிவிக்கும் மாணவர்கள் தலித் சமூகத்தினராக இருந்தால் இதை உ.அ.குழு என்னவென்று சொல்லும்? சொல்லித் தரும் பேராசிரியாருக்குப் பாடத்தில் ஆழ்ந்த அறிவு உள்ளதா, மாணவர்களிடம் ஜனநாயகமாகவும் நேர்மையாகவும் நடந்துக் கொள்கிறாரா? நன்றாக பாடம் நடத்துகிறார? போன்றவையெல்லாம் மற்றவர்களை விட மாணவர்களுக்கே நன்றாகத் தெரியும்.

மேலும், இக்குழுப் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் தலித் என்பதை அப்பட்டமாக மறைத்து விட்டது. காரணம் அது ஒன்று மட்டுமே சௌந்திரராஜனை காப்பாற்றும் கடைசி ஆயுதம். இதற்கு குழுவில் உள்ள தலித் இன்டெலெக்சுவல் கலெக்ட்டிவின் Mr.லக்ஷ்மணன் கூறுவது. அம்மாணவரின் சான்றிதழ் படி அவர் தலித் இல்லை.

இதன்படி ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் கிறுத்தவராக மதம் மாறினால் அவருக்கு இந்த சமூகத்தில் சாதிய ரீதியான ஒடுக்குமுறை இல்லை என்று சமூக எதார்த்தத்தை மறைக்கிறார். இது அயோக்கியத்தனம் இல்லையா? அதிகாரத்தில் இருக்கும் தலித் மற்றொரு தலித்தை ஒடுக்கும் போது அதிகாரத்தில் இருக்கும் தலித்தைக் காப்பாற்ற முனைகிறது. அவ்வளவுதான் இதன் யோக்கியதை.

இப்பிரச்சனையில், ஒன்று மாணவர்கள் பொறுப்புத் துறைத் தலைவரிடம் சாதி ரீதியாக நடந்துக் கொண்டதற்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டும் அல்லது வேறு ஏதாவது தருணங்களில் சாதிய ரீதியாக பேரா.சௌந்திரராஜனிடம் மாணவர்கள் நடந்து கொண்டார்களா என்பதைக் கண்டறிந்து அறிக்கையில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

தகுந்த ஆதாரங்களும் இல்லாமல் நேர்மையானப் பகுப்பாய்வும் செய்யாமல் பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றுவதற்காக மாணவர்கள் மீது தலித் விரோதி என்ற பொய்க்குற்றத்தை சுமத்தியதோடுப் பொதுவெளியிலும் அறிவித்து விட்டது உ.அ.குழு. இது நடுநிலைத் தவறிய அறிவு நேர்மையற்ற அணுகுமுறை என்று கருதுகிறோம்.

எங்கள் மீதான குற்றச்சாட்டிற்குத் தகுந்த ஆதாரங்களைக் காண்பித்தால் எங்களை சுயபரிசீலனை செய்துக் கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இல்லையேல் உ.அ.குழு மாணவர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கோருகிறோம்.

மெஸ் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் ஜனநாயகமற்ற முறையில் நடந்துக் கொண்ட பல்கலைகழக நிர்வாகத்தைக் கண்டித்தும் பழிவாங்கும் நோக்கத்தோடு மாணவர்களை பெயில் செய்ததோடு மாணவியிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துக் கொண்ட பொறுப்புத் துறைத் தலைவர் பேரா.சௌந்திரராஜனை கண்டித்தும் இரண்டரை மாத காலமாக வெவ்வேறு கட்டங்களில் சமரசமின்றி மாணவர்கள் நடத்தியப் போராட்டத்தினை ஆதாரமற்றப் பொய்க்குற்றச்சாட்டுகளின் மூலம் களங்கப் படுத்தியுள்ளது உ.அ.குழு.

தங்காத விடுதிக்கும், இயங்காத மெஸ்-க்கும் எதற்காகக் கட்டணம் செலுத்த வேண்டும்? பல்கலைக் கழகம் தன்னுடைய நிதி சுமையைச் சமாளிப்பதற்கு மாணவர்கள் மீதுத் திணிப்பதை எதிர்த்து மாணவர்கள் போராடக் கூடாதா? மாணவர்களை பழிவாங்குவதற்காகப் பெயில் செய்ததையும் அவர்களின் விடைத் தாள்களை தொலைத்ததையும் எதிர்த்து மாணவர்கள் கேள்வி கேட்கக் கூடாதா? தன்னுடன் படிக்கும் நண்பர்கள் பாதிக்கப்படும் போது சகமாணவர்களும் அவர்களுக்கு ஆதரவாகப் போராட மாட்டார்களா? பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டக் குழு நடுநிலையாக நடந்துக் கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மாணவி கருத்து சொல்லக் கூடாதா? மாணவர்களின் இயல்பான எதிர்வினைகளை உள்நோக்கத்தோடு திரித்து அறிக்கையாக்கியுள்ளது உ.அ.குழு.

மாணவர் போராட்டங்களுக்கு ஆதாரமற்ற வகையில் களங்கம் கற்பிப்பது என்பது ஒரு ஆளும்வர்க்க உத்தியாகும். விடுதிக் கட்டணக் குறைப்புக்கானப் போராட்டத்திலிருந்தே இப்பிரச்சனைத் தொடங்குகிறது என மேலே விவரித்திருந்தோம். இந்தக் கோரிக்கை ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த மாணவர்களுக்கோ அல்லது குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கானதோ அல்ல அனைத்து மாணவர்களுக்கானதாகும்.

குறிப்பாக கொரோனா ஊரடங்கை ஒட்டி பலக் கல்லூரிகளில் விடுதிக் கட்டணக் குறைப்புக்கான கோரிக்கைகள் பரவலான பேசு பொருளாகவே இருந்தது. உரிமை என்று பேசினாலே தண்டிக்கப்படும் நமது பல்கலைக் கழக / கல்லூரிகளின் ஒடுக்குமுறைகளுக்கிடையே தங்களுடைய உரிமைக்காக வெகு சில மாணவர்களேப் போராட முன்வருகின்றனர்.

இச்சூழலில் மாணவர்களின் பொதுப் பிரச்சனைக்கானப் போராட்டத்தை தங்களுடைய குறுகியப் பார்வையினால் ஆதாரமே இல்லாமல் சாதிய சாயத்தை பூசுவதன் மூலம் மாணவர்களுடையப் போராட்டத்தைப் பின்னோக்கி இழுக்கின்ற வேலையை உ.அ.குழு செய்துள்ளதாகக் கருதுகிறோம். குறிப்பாக மாணவர்களிடம் சாதிய உள்நோக்கம் இருந்தாகத் தெரியவில்லை. மாறாக மொத்தப் பிரச்சனையையும் உ.அ.குழுவே சாதிய கண்ணோட்டத்துடன் அணுகி இருப்பதாகக் கருதுகிறோம்.

படிக்க :
♦ சென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது || போலீசு அராஜகம்
♦ கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை !

இந்த அணுகுமுறை மாணவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்குப் பதிலாக அவர்களைப் பிரிப்பதற்கே துணை புரியும். மேலும், இப்போக்குப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதற்கும் அதனை எதிர்த்துப் போராடும் மாணவர்களைத் தீவிரமாக ஒடுக்குவதற்கும் எவ்வித எதிர்ப்பும் இன்றி கல்வி நிறுவனங்களை பாசிச பிடியின் கீழ் கொண்டு செல்வதற்கும் வழியமைத்துக் கொடுக்கும் என்றே கருதுகிறோம்.

சரியான நேரத்தில் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை பாதுகாக்கும் உ.அ.குழுவின்  நோக்கத்திற்கு உடன்படாமல் அதை அம்பலப்படுத்தி அறிக்கையை நிராகரித்த Ms.G.மஞ்சுளா அவர்களுக்கும், இவ்வறிக்கையில் மாற்றுக் கருத்து உள்ளதாக உடன்பட மறுத்த Mr.உசைன் நாசர் அவர்களுக்கும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்றோம்.

நன்றி!

இவண்,
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்,
சென்னை பல்கலைக் கழகம்.

சமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் !

0

எந்தக் குற்றமும் செய்யாத ஹனிபாபு 9 மாதங்களாக சிறையில் இருக்கிறார்;
விடுதலை கோரும் அவரது குடும்பம்

தேசிய புலனாய்வு முகமை எந்த குற்றமும் செய்யாத ஹனி பாபுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஹனி பாபுவின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை என தடயவியல் பரிசோதனைகளில் தெரிய வந்த போதும், நீதிமன்றங்களும் விசாரணை நிறுவனங்களும் இன்னமும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை ஹனி பாபு குடும்பத்தினர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளனர்.

படிக்க :
♦ ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் !

♦ பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !

“அப்பாவியான ஹனி பாபு மும்பையில் ஒரு நெரிசலான சிறையில் அவரைப் போன்ற விசாரணை கைதிகளுடன் அடைக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கழித்திருக்கிறார். கைதுக்கு முந்தைய ஐந்து நாள் நீண்ட விசாரணையின் போது, அவரை ஒரு சாட்சியாக இருக்கும் படி என்.ஐ.ஏ அதிகாரிகள் கட்டாயப் படுத்துவதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிலருக்கு எதிராக சாட்சியங்களை வழங்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் அவர் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

மற்றவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்க மறுத்ததால் என்.ஐ.ஏ அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என கைதாவதற்கு முன் அவருடைய போனிலிருந்து வந்த இறுதி அழைப்பின் போது குறிப்பிட்டார்” எனவும் ஹனிபாபுவின் குடும்பத்தினர் தங்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் சிறைச்சாலை நிலைமைகள் குறித்து ஹனிபாபுவின் குடும்பம் கவலை தெரிவித்துள்ளது. “இது அடிப்படை மனித உரிமைகளை முற்றிலும் மீறுவதாகும். உண்மையில், பெருந்தொற்று என்ற காரணத்தைக் காட்டி, ஆரம்பத்தில் இருந்தே ஹானி பாபுவை நேரில் சென்று பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. புத்தகங்களைக் கொண்ட பார்சல்கள் கூட அவருக்கு தர மறுக்கப்படுகிறது.

மேலும் கடிதங்களை அனுப்புவது / பெறுவது மற்றும் தொலைபேசி அழைப்புகள் செய்வது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விருப்பத்தைப் பொறுத்தே நிர்வகிக்கப் படுவதாகத் தெரிகிறது” என தெரிவித்துள்ளனர்.

ஹனிபாபு குடும்பத்தினர் எழுதியுள்ள கடிதம் :

“மிக மோசமான தவறு, தவறைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதேயாகும், பீமா கொரேகான் வழக்கில் அப்படித்தான் தெரிகிறது.  கொரேகான்-எல்கர் பரிஷத் வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு படுகொலை சதித்திட்டத்துடன் தொடங்கியது. ஆனால், விரைவில் கையொப்பமிடப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத சில கடிதங்கள் தொலைதூரத்தில் இருந்து தனிப்பட்ட கணினிகளில் ஜோடிக்கப்பட்டன. ஆயினும் கூட, நீதியைக் குழப்புவதையும் தடுப்பதையும் அரசு தொடர்கிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியரான ஹனி பாபு, பீமா கொரேகான் வழக்கில் கைதான 16 பேரில் 12-வது நபராக கைதானவர்.  ஹனி பாபு மொழியியல் அறிஞர் (EFLU, ஹைதராபாத் மற்றும் கொன்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகம், ஜெர்மனிய பி.எச்.டி.). அவர் ஒரு நேர்மையான கல்வியாளர் மற்றும் ஒரு சமூக ஆர்வலர், தன்னை ஒரு அம்பேத்கரிஸ்ட் என்று அடையாளப் படுத்திக் கொண்டு, சமூக நீதிக்கான சாதி எதிர்ப்புப் போராட்டங்களுக்காக தனது வாழ்க்கையையும் பணியையும் அர்ப்பணித்துள்ளார்.

மற்றவர்களின் கவலைகளைச் சந்திக்க எப்போதும் வழியிலிருந்து விலகிச் செல்லும், மிகவும் ஜனநாயகமான, அறிவொளியுடன் கூடிய, நட்புமிக்க அறிவுஜீவிகளில் ஒருவரான அவரை,  மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் பரவலாக நேசிக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.

2018 பீமா கொரேகான் – எல்கர் பரிஷத் வழக்கு முழுமையும் அநீதியாக உள்ள நிலையில் ஹனி பாபுவை சந்தேக நபராக பார்ப்பது மிகுந்த கவலையை அளிக்கக் கூடியதாகும்.  பீமா கோரேகான் – எல்கர் பரிஷத் வழக்கில் 2020 ஜூலை 28 அன்று ஹனி பாபு அநீதியாக கைது செய்யப்பட்டார். ஐந்து நாட்கள் அர்த்தமற்ற விசாரணைக்காக என்.ஐ.ஏ மும்பைக்கு அவரை வரவழைத்தது.

கைதுக்கு முன்னதாக 2019 செப்டம்பரில் அவரது வீட்டில் நடந்த முதல் போலீசு சோதனை (இரண்டாவது ஆகஸ்ட் 2020)யில் எந்தவித சோதனை வாரண்ட்டும் உரிய நடைமுறை பின்பற்றுதலும் இல்லாமல் புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு பொருட்களின் சரியான கணக்கையோ அவற்றின் மதிப்பு குறித்த தகவலையோ அவருக்கு உடனடியாக வழங்கவில்லை.

அவற்றை தங்களுடைய நோக்கத்துக்குப் பயன்படுத்தும் விதமாகப் பறிமுதல் விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.  உண்மையில், இந்த மொத்த சோதனையும் பறிமுதல் செயல்முறையும் சட்டத்தின் ஆட்சியின் மூலம் பிரச்சினகளை தீர்க்கலாம் என எப்போதும் பேசி வந்த ஹனி பாபு போன்றவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

இப்போது குற்றமற்றவரான ஹனி பாபு மும்பையில் ஒரு நெரிசலான சிறையில் அவரைப் போன்ற விசாரணை கைதிகளுடன் அடைக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கழித்திருக்கிறார். கைதுக்கு முந்தைய ஐந்து நாள் நீண்ட விசாரணையின் போது, அவரை ஒரு சாட்சியாக இருக்கும் படி என்.ஐ.ஏ அதிகாரிகள் கட்டாயப் படுத்துவதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிலருக்கு எதிராக சாட்சியங்களை வழங்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் அவர் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

மற்றவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்க மறுத்ததால் என்.ஐ.ஏ அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என கைதாவதற்கு முன் அவருடையப் போனிலிருந்து வந்த இறுதி அழைப்பின்போது குறிப்பிட்டார்.  என்.ஐ.ஏ அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது, குற்றச்சாட்டு மட்டும் அவரை ஒரு ‘மாவோயிஸ்ட்’ என முத்திரை குத்துவதற்கும் காலவரையின்றி சிறையில் அடைப்பதற்கும் போதுமான ‘சான்றுளாக’ நினைக்கிறது. கைதான 16 பேர் மீதும் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதை தாமதப்படுத்தத் திட்டமிடுவது தெரிகிறது.

புதிதாகக் கைது செய்யப்பட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும், புதிய ஆதாரங்கள் ஆராயப்பட வேண்டும் என காரணமும் சொல்கிறார்கள்.  நாடு முழுவதிலிருந்தும் பீமா கொரேகான் வழக்கில் கைதான் 16 பேரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதவர்களாகவும் அனைவரும் குற்றமற்றவர்களாக, மற்றவர் மீது குற்றம் சொல்லாதவர்களாக இருந்த போதும் இந்த முழு வழக்கு தவறானது அல்ல என நிரூபிக்க என்.ஐ.ஏ முனைந்துக் கொண்டுள்ளது.

எனவே, ஹனி பாபுவின் குடும்ப உறுப்பினர்களான நாங்கள், எங்கள் வேதனையையும் வலியையும் பகிர்ந்து கொள்ள இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம். மேலும்,  மராட்டிய சிறைகளில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவது குறித்து மும்பை உயர்நீதிமன்றம் கூட தானாக முன்வந்து வழக்காக விசாரித்த நிலையில், இந்த கொடூரமான காலங்கள் எங்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்குவதையும் நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

ஹனி பாபு செய்த ஒரே ‘குற்றம்’ சாதி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் சமூக நீதிக்கான அம்பேத்கரிய உறுதியான அர்ப்பணிப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால், டெல்லி பல்கலைக் கழகத்தில் ஓ.பி.சி இடஒதுக்கீடுகளை நடைமுறைப்படுத்தவும் பட்டியலின் / பழங்குடியினருக்கு எதிரானப் பாகுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவும் இடைவிடாமல் ஆரம்பக்கட்டத்தில் போராடிய சிலரில் அவர் ஒருவராக இருந்தார்.

90 சதவீத மாற்றுத் திறனாளியான ஜி.என்.சாய்பாபா-வின் சகமாணவராகவும் பின்னாளில் சகஊழியராகவும் இருந்த காரணத்தால் அவர் சிறை வைக்கப்பட்ட போது அவரின் விடுதலை கோரும் குழுவில் தீவிரமாக செயல்பட்டார்.

உண்மையில், இடஒதுக்கீடுகளை அமல்படுத்துவதற்கானப் போராடுபவரோ அல்லது ஒரு குடிமகனின் உரிமையைப் பாதுகாப்பு, நியாயமான விசாரணையை கோருவது குற்றவியல் மற்றும் மாவோயிச தொடர்புகளுக்கு சான்றாக இருப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

என்.ஐ.ஏ இதுவரை கணிசமான ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளாததால், ஹனி பாபுவின் சிவில் மற்றும் சட்ட உரிமை மீறல்கள் தொடர்கின்றன. மிக முக்கியமாக, பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களின் குளோன் நகல்களுக்கான ஹனி பாபுவின் கோரிக்கை காலவரையின்றி தாமதமாகி வருகிறது.

மாசசூசெட்ஸை தளமாகக் கொண்ட டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான ஆர்சனல் கன்சல்டிங், பீமா கொரேகான வழக்கில் கைதான ரோனா வில்சன் கணினியில் ஒரு ஹேக்கரால் தீங்கிழைக்கும் மென்பொருள் மூலம் கோப்புகள் சொருகப்பட்டதும் அது, அவருடைய நண்பரின் மடி கணினிக்கு பரவியதை கண்டறிந்தது. இதம் மூலம் என்.ஐ.ஏ-வின் ஒரே ஆதாரமான மாவோயிஸ்ட் கடிதங்கள் என அழைக்கப்படும் ஆதாரங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

இவை கண்டுபிடிக்கப்பட்டு ஓராண்டு ஆனபிறகும் கூட இந்த வழக்கில் ‘ஆதாரங்களாக’ சமர்பிக்கப்பட்டுள்ள அனைத்து தரவுகளையும் உடனடியாக தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றங்கள் தானாக முன்வந்து அறிந்துக் கொள்ளவில்லை என்பதில் நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் உடனடியாக கிடைக்கக் கூடிய அத்தகைய செயல்முறை, தாமத தந்திரோபாயங்களால் மாற்றப்பட்டுள்ளது.

அவை நீதிக்கு இடையூறு விளைவிக்கும். மேலும், தொற்று பேரழிவு காரணமாக பல நாடுகள் தங்கள் அரசியல் கைதிகளை விடுவிக்கும் ஒரு நேரத்தில், பீமா கொரேகான் 16 பேரின் பிணை விண்ணப்பங்கள் வயது மற்றும் உடல்நலக் குறைவு இருந்த போதிலும் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப் படுகின்றன. எனவே, கோவிட் தொற்றும் மரணங்களும் சிறைச்சாலைகளில் அதிகரிப்பது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம். இது அடிப்படை மனித உரிமைகளை முற்றிலும் மீறுவதாகும்.

தற்போது நடந்து வரும் தொற்று நோயால் பாதிக்கப்படாத ஒரு நபர் அல்லது வீடு அல்லது நிறுவனம் (நீதிமன்றம் உட்பட) இருக்க முடியாது. குறிப்பாக ஹனி பாபுவைப் போல விசாரணை கைதிகளின் குடும்பத்தினரின் வேதனை வார்த்தையால் விவரிக்க முடியாததாகும். தகவல் தொடர்பும் மறுக்கப்பட்டு விசாரணைக்கு முடிவில்லாமல் காத்திருப்பவர்களின் வேதனைப் பன்மடங்கானது.

ஹானி பாபு தனது அரிதான கடிதம் ஒன்றில், சிறைக்குள் தபால் முத்திரைகள், காகிதம் மற்றும் பேனா ஆகியவையும் கூட விலை உயர்ந்தவை என்பதால் அவர் விரும்பும் போதெல்லாம் கடிதங்களை எழுத முடியாது என தெரிவித்திருந்தார். சிறைச்சாலையிலிருந்து அவர் எழுதிய கடிதங்கள், அவரின் வாழ்க்கையை அவருக்குத் திருப்பித் தரும் விதமாக, நம்முடைய நீதித்துறை முறைமையில் உள்ள உளப்பூர்வமான நம்பிக்கையைப் பதிவு செய்கின்றன.

விசாரணையைத் தொடங்குவதில் ஏற்படும் தாமதம் அவரது தனிப்பட்ட, கல்வி மற்றும் அறிவுசார் வாழ்க்கையை ஹனி பாபு-விடமிருந்து மேலும் விலக்கிவிடும்.  சமீபத்திய உச்சநீதிமன்ற அவதானிப்பு திட்டவட்டமாகக் கூறுவது போல், விரைவான விசாரணை என்பது UAPA-இன் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்குக் கூட ஒரு அடிப்படை உரிமை. செயல்முறையே இனி தண்டனையாக இருக்கக் கூடாது!

எனவே, நாங்கள் ஹனி பாபு-வின் குடும்ப உறுப்பினர்கள், முறையிடுகிறோம் :

  1. குளோன் பிரதிகள் உட்பட அனைத்து ஆதாரங்களும் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கிடைக்கும் படி செய்யப்பட வேண்டும். இதனால், குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் தங்களுடைய சுயாதீன விசாரணையை முடித்து விரைவாக வழக்கு விசாரணையை தொடங்க முடியும்.
  2. நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளின் படி விசாரணை தொடங்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் உடனடியாகப் பிணை வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் இந்த நீதி அமைப்பு தீய நோக்கங்களை மறைமுகமாக வளர்ப்பதற்கு தன்னளவில் திறந்திருக்கிறது என்றே கொள்ளலாம்.

இப்படிக்கு ஜென்னி (மனைவி), ஃபர்சானா (மகள்), ஃபாத்திமா ( தாய்), ஹரீஸ் & அன்சாரி (சகோதரர்கள்)

இதுபோல, கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், செயல்பாட்டாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பெருந்தொற்று காலத்தில் விசாரணை கைதிகளாக உள்ள ஹனி பாபு போன்றோரை சிறையில் விடுவிக்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.

ஹனி பாபு-வின் சமூக நீதிக்கான சாதி எதிர்ப்புப் போராட்டங்களே சனாதன அரசுக்கு எதிராக நிறுத்தியுள்ளதாகவும் கொடூரப் பெருந்தொற்றுக் காலத்தில் விசாரணை கைதிகளை சிறையில் இருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனவும் கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!

♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !

“ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நேர்ந்து கொண்ட ஹனி பாபு போன்ற அறிவுஜீவிகளை வேட்டையாடுவதன் மூலம், சங்க பரிவாரங்கள் இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிரானக் குரல்களை அழுத்தப் பார்க்கிறது. அரச வேட்டையின் பலியாக சிறைகளில் தவிக்கும் ஹனி பாபு மற்றும் பல குற்றமற்றவர்களுக்காக நாம் குரல் எழுப்பத் தொடங்க வேண்டிய நேரம் இது.

இந்த நாட்டின் ஜனநாயக விழுமியங்களும் மனித உரிமைகளும் நாம் பேசுவது போல் இறுக்கமடைந்துள்ளன. நமது மௌனத்தின் ஒவ்வொரு கணமும் அதற்கு மேலும் வலுசேர்க்கிறது. நம்முடைய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, நீதிக்கான குரல்களை நாம் ஒன்றாக உயர்த்த வேண்டும்” என தங்களுடைய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.


கலைமதி
செய்தி ஆதாரம் :
♦ ‘An Innocen Hany Babu Has spent Nine Months in Jail’: An Appeal From His Family
♦ ‘Victim of State Hunt’: Kerala MPs, MLAs, Eminent Persons Urge Hany babu’s Release

கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மிகப்பெரிய அவலங்களை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், மத்திய மோடி அரசோ மக்களை கொரானாவில் இருந்து காப்பாற்றும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவ்வளவு ஏன்? அவர்கள் ஆளும் மாநிலத்திலேயே தினம் தினம் அவலமான செய்திகள்தான் வந்தவண்ணம் இருக்கிறது.

இந்த கொரோனா மக்களுக்கு ஏற்படுத்தும் துயரத்தைவிட அரசு மக்களுக்கு ஏற்படுத்து துயரம்தான் அதிகம். உழைக்கும் மக்களை கொண்ட மக்கள் நல அரசு உருவானால் மட்டுமே இது போன்ற பேரழிவில் இருந்து உழைக்கும் மக்களை காப்பாற்ற முடியும் என்ற சாரம்சத்தின் அடிப்படையில் கொரோனா அவலங்களை பற்றி தருமபுரி மக்கள் அதிகாரம் தோழர்கள் பாடிய பாடல் காணொளி வடியில் வெளியிடுகிறோம்.

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

பாடல்இசை :
புரட்சிகர கலைக்குழு, தருமபுரி
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
செல்: 97901 38614

சமூக மாற்றத்திற்கான புரட்சிகர பாடல்களை தொடர்ந்து கொண்டுவர நிதி கொடுத்து ஆதரவு தாருங்கள் !

பெயர் : Gopinath P
கணக்கு எண் : 6720415617
வங்கி விவரம் : Indian Bank, Pennagaram Branch
IFSC NO : IDIB000P076

பாடல் வரிகள் :

கொரோனா கொல்லுதம்மா
கொலைகார அரசாலே
மரண ஓலம் ஓயவில்லையம்மா – இந்த தேசமே
மயானமா மாறிப்போனதம்மா

லாக்டவுன் தொடருதம்மா
வாழ்க்கையே இருளுதம்மா
சுடுகாட்டில் எடமில்லாம – பொனம்
ரோடெல்லாம் ஏரியுதம்மா
வைரசா அரசான்னு
ஒன்னுமே புரியலம்மா
ஆக்சிஜனே இல்லாம – உயிர்வாழ
நம்ம ஆத்தா உசுரு போனதம்மா
(கொரோனா)

ஆகாச ஒசரத்துல
வல்லபாய் பட்டேலு
ஏழைகளுக்கிங் கில்ல
குளுக்கோசு பாட்டிலு
குழந்தைகள் மருந்தில்லாம
கொத்து கொத்தா சாவுது
குஜராத்து மாடலுன்னு அய்யோ
கொலையறுத்தான் மோடி நின்னு
(கொரோனா)

இந்தியாவின் இதயமே
மூச்சுவிட ஏங்குதம்மா
இரண்டாம் அலையம்மா
வடக்கே அழியுதம்மா
மருந்திலும் கொள்ளையம்மா
மரணத்திலும் கொள்ளையம்மா
யோகி ஆட்சியிலே – சங்கி
அந்த உ.பி அழியுதம்மா
(கொரோனா)

கொரோனா வைரஸ்சு
மக்கள மிரட்டுதம்மா
காவி பாசிசமோ
மக்கள பிரிக்குதம்மா
கார்ப்பரேட்டு பாசிசமோ
கழுத்த நெறுக்குதம்மா
இத்தன கிருமிகள… அய்யோ
இத்தன கிருமிகள….
ஒழிக்க ஒரு மருந்திருக்கு – அது
புரட்சி எனும் அருமருந்து
(கொரோனா)

வீடியோ ஆக்கம்
வினவு

தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி

PP Letter head

10.05.2021

ம.க.இ.க-வின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினரும், மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா-வின் தந்தையுமான தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது  !

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும் மக்கள் அதிகாரம்  கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா அவர்களின் தந்தையுமான  தோழர் சம்புகன் இன்று காலை உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தொடக்க காலம்  முதல் இறப்பு வரை அந்த அமைப்பிலேயே இருந்து அதன் கொள்கைகளை உயர்த்திப் பிடித்தவர்.

அவர் தங்கியிருக்கக் கூடிய சூலூர் ஆதிக்க சாதிவெறியர்களின் மதவெறியர்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். அப்பகுதியில் ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவாரங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியவர்.

கோவை குண்டுவெடிப்பின் போது போலீசால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளானவர். மக்கள் பிரச்சினைகளுக்காக ஓயாது போராடி பலமுறை சிறை சென்றவர்.

ஒண்டிப்புதூர் பகுதியில் தொழிலாளர்களுக்காகப் பாடுபட்டு அவர்களின் தலைவராக விளங்கியவர்.

தொழிற்சங்கப் பணியில் தொழிலாளர்களுக்காக சமரசமின்றிப் போராடியதால் முதலாளிகளால் பலமுறை தாக்குதலுக்கு ஆளானவர்.

மக்கள் அதிகாரம் நடத்திய முதல் மாநாடான மூடு டாஸ்மாக்கை முதல் எல்லா இயக்கங்களிலும் மாணவர்கள், இளைஞர்களோடு ஒருங்கிணைந்து அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு இயக்க வேலை செய்தவர்.

மறைந்த தோழர் மணிவண்ணனும், தோழர் சம்பூகனும் நக்சல்பாரி இயக்கத்தின் அடையாளமாக கோவையிலும் ஒளிர்ந்தார்கள்.

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் பார்ப்பன பாசிச சக்திகள் மேலோங்கி வந்த சூழலில் கோவையில்  மறுகாலனியாக்க எதிர்ப்பு மாநாட்டினை நடத்திய தோழர்களில் அவரும் ஒருவர்.

தாராளவாதம், கலைப்புவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இறுதிவரைப் போராடி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புதிய மாநில ஒருங்கிணைப்பு குழு உருவாகப் பாடுபட்டவர்.

கடந்த வருடம் ஒரு விபத்தில் நடக்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்ட போதும் அமைப்பு வேலைகளை திறம்பட கொண்டு சென்றவர்.

தன்னுடைய மகளை அரசியல் ரீதியாக வளர்த்தும் சாதிமறுப்புத் திருமணம் செய்துவைத்தும் ஆண் பெண் வேறுபாடின்றி தவறைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற உணர்வோடு வளர்த்தவர்.

இறுதியாக, கடந்த ஏப்ரல் 24 லெனின் பிறந்த நாளை ஒட்டி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட தோழர் சம்பூகன் இன்று உயிரிழந்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி வர்க்க விடுதலைக்காக தன் குடும்பத்தையும் தன் வாழ்வையும் அர்ப்பணித்த தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது  !

கோவை மண்டல மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா அவர்களுக்கும் தோழர் சம்பூகனுடன் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய அனைத்து தோழர்களுக்கும் மக்கள் அதிகாரம் தலைமைக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.


தோழமையுடன்,
தலைமைக்குழு, 
மக்கள் அதிகாரம் 
தமிழ்நாடு – புதுவை
9962366321

அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் !

0

அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்துவிட்டது !
நமது போராட்டக் களம் காத்துக் கிடக்கிறது !

ந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், தமிழகம், மேற்கு வங்கம், கேரளா ஆகியவற்றின் முடிவுகள், அதிலும் குறிப்பாக, மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. சில ஜனநாயக – மதசார்பற்ற சக்திகளும், டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களும், சில ஆங்கில ஊடகத்தினரும் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

சில ஆங்கில ஊடகங்கள், “தீதி”யை (மம்தா பேனர்ஜியை வங்க மொழியில் அக்கா என்று அழைப்பார்கள்) புகழ்வதோடு, “மம்தாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” என்றும், “சரியான தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்பட்டால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையைத் தருவதாகவும்” கூறுகின்றன.

படிக்க :
♦ தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு? || மக்கள் அதிகாரம்

♦ நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

இதேபோல, “தி வயர்” இணைய தளத்தில் வந்த ஒரு கட்டுரை, “தமிழகத்தில் இனி எந்தக் காலத்திலும் இந்துத்துவா வெற்றி பெற முடியாது” என்று கூறுகிறது. “இனமானப் போரில் திராவிடம் வென்றது!”, “மு.க.ஸ்டாலின் உருவாக்கிய வரலாற்று வெற்றி” என்று தி.மு.க. ஆதரவு பத்திரிகைகள் குதூகலிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வியடைந்திருந்தாலும், கேரளாவில் நிபா வைரஸ் தாக்கியது முதல் தற்போது கொரோனா வைரஸ் தாக்கியது வரை மக்களின் நல்வாழ்வில் கேரளத்தின் பினாரயி விஜயன் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே அவரை மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்துள்ளது என்று பலரும் கூறி மகிழ்கின்றனர்.

அஸ்ஸாமிலும் புதுச்சேரியிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தாலும், மற்ற மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள் பா.ஜ.க. எதிர்ப்பாளர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.

இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் தீர்வைத் தேடுபவர்களும், சுவாசிப்பதற்கான அவசாகம் (breathing space) வேண்டும் என்று சொன்னவர்களும் இந்த தேர்தல் முடிவுகளால் பூரித்துப் போயுள்ளார்கள்.

ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள வகையில் பலவாறாக வெளியாகும் கருத்துகள் சரிதானா? இத்தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகள்தானா? இந்த தேர்தல் முடிவுகள் உண்மையில் எதை உணர்த்துகின்றன? பா.ஜ.க.வை தேர்தல் மூலம் வீழ்த்திவிட முடியுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

பாசிச ஜெயாவின் மறுவுருவம்தான் மம்தா !

தமிழகத்தில் தி.மு.க அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. கேரளத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் “நிச்சயம் 200” என சவடாலடித்த மோடி – அமித்ஷா கும்பலின் கனவு பலிக்கவில்லை என்பதோடு, திரிணாமுல் காங்கிரசு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் பா.ஜ.க. ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. மோடி – அமித்ஷா கும்பல் தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்கத்தைக் குறிவைத்துப் பிரச்சாரம் செய்தது. தேர்தல் ஆணையத்தையும் கைக்குள் போட்டுக் கொண்டு 7 கட்டமாக தேர்தல் அட்டவணையைக் கொண்டு வந்தது.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை நன்கு தெரிந்திருந்தும், மக்களைப் பற்றி சிறிதும் கவலையின்றி தேர்தல் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு கடைசி வரை தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது பாசிச பா.ஜ.க.

தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே, திரிணாமுல் காங்கிரசினரை விலைக்கு வாங்கியது, அமலாக்கத் துறையை ஏவியது உள்ளிட்ட அனைத்து அரசியல் சதிராட்டங்களிலும் பட்டவர்த்தனமாக ஈடுபட்டது. ஆள்பலம், பண பலம், அதிகார பலம் – என அனைத்தையும் பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரசுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தது.

“வளர்ச்சி, மதவெறி” என்ற தனது இரட்டை சீட்டை மாற்றி மாற்றிப் போட்டு மோடி மஸ்தான் வேலையைக் காட்டி வரும் பா.ஜ.க, இந்த தேர்தலில் மற்ற மாநிலங்களில் ஊழல் பிரச்சினையை முன்னிறுத்தியது. மேற்கு வங்கத்தில் இந்து மதவெறியைக் கிளறி ஆட்சியைப் பிடிக்கும் வேலையைச் செய்தது. சி.ஏ.ஏ பிரச்சினையை கிளப்பி, அதன் மூலம் முசுலீம் எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டது.

இத்தனை நடவடிக்கைகளையும் மீறி திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றிருப்பதால், ஓட்டுச் சீட்டு அரசியல் எல்லைக்குள் நின்று சிந்திப்பவர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. மாயாவதி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே ஆகியோரெல்லாம் பா.ஜ.க.வை  வீழ்த்துவதற்கு முயற்சித்தும் அவர்களால் முடியவில்லை; ஆனால், மம்தா சாதித்துக் காட்டியுள்ளார் என்று ஊடகங்கள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை.

சி.ஏ.ஏ விசயத்தில் மோடி அரசுக்கு மம்தா எதிர்ப்பு தெரிவித்தார்; மோடி அரசின் பல்வேறு திட்டங்களுக்கும்,  ஜி.எஸ்.டி போன்ற மாநில உரிமைகள் பறிக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார் என்று ஊடகங்களால் சொல்லப்படும் காரணங்களைவிட முக்கியமான ஒரு அம்சம் இருக்கிறது.

மம்தா அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக சாரதா சீட்டுக் கம்பெனி ஊழலை விசாரிக்க மோடி அரசால் சி.பி.ஐ ஏவிவிடப்பட்டபோது, மாநில அரசு விவகாரத்தில் நுழைய அனுமதிக்க முடியாது என்று அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்துவது; தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க. கும்பல் தன்னைத் தாக்கியதால் கால் உடைந்து விட்டது என நாடகமாடி அனுதாபம் தேடிக் கொள்வது – என எதற்கும் துணிந்து களம் காணும் துணிச்சல் ஜெயலலிதாவிற்குப் பிறகு மம்தாவிடம்தான் வெளிப்படுகிறது. ஜெயலலிதாவைப் போலவே, பேறுகால உதவித் தொகை, பெண்களுக்கு கல்வி உதவித் தொகை போன்ற சில நலத்திட்டங்களை அடித்தட்டு  உழைக்கும்  மக்களுக்கு வழங்குவதன் மூலம் சமூக ஆதரவையும் அவர் தேடிக் கொண்டுள்ளார்.

அ.தி.மு.க-விற்கு இருக்கும் அதே வர்க்க அடித்தளம்தான் மம்தாவிற்கான வர்க்க அடித்தளமாகும். தனியார்மயம் – தாராளமயத்தின் விளைவாக உருவான திடீர் அரசியல் பணக்கார ரௌடிகளுக்குப் பழைய பாணியில் இருக்கும் காங்கிரசைவிட பட்டவர்த்தனமான ஒரு கொள்ளைக் கும்பலின் ஆட்சி முறை தேவைப்படுகிறது. தமிழகத்தில் அப்படி ஒரு தேவையை அ.தி.மு.க ஈடு செய்து கொடுத்தது என்றால், மேற்கு வங்கத்தில் அதனை மம்தாவின் திரிணாமுல் காங்கிரசு ஈடு செய்து கொடுத்தது. 34 ஆண்டுகால போலி கம்யூனிஸ்ட் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பைப் பயன்படுத்தி, போலி கம்யூனிஸ்டுகளை விட பலமடங்கு தீவிரமாகக் குண்டாயிசத்தை வைத்துக் கட்சியை நடத்தி, தடாலடியாக ஆட்சியதிகாரத்தைப் பிடித்ததுதான் மம்தாவின் வரலாறு.

ஆளும் வர்க்க அரசியலையே ஒரு தனிநபரின் செல்வாக்கின் கீழ் அதிரடி சர்வாதிகார பாணியில் மேற்கொள்ளப்படும் ஆட்சிக்கு என்ன கதி நேர்ந்தது என்பதை ஜெயலலிதாவிற்கு நேர்ந்த கதியுடனும், பா.ஜ.க-வின் எடுபிடியாக அ.தி.மு.க மாறியுள்ள இன்றைய அதன் நிலைமையுடனும் ஒப்பிட்டால் புரிந்து கொள்ள முடியும். ஆளும் வர்க்க அரசியலில் தனக்கு ஒரு இடத்தைத் தக்க வைக்க ஜெயலலிதாவிற்கு பார்ப்பன சாதி பின்னணியாவது உதவியது; ஆனால், மம்தாவிற்கு அதுவும் கிடையாது.

ஆகையால், தற்போதைய மம்தாவின் வெற்றி என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் கருத்தியல் ரீதியாக மக்களைத் தமது சித்தாந்தத்தின் கீழ் கொண்டு வருவதற்கு, நிரந்தரமான வெற்றியைச் சாதிக்கும் வகையில் களத்தைத் தயார் செய்து கொள்வதற்குக் கிடைத்துள்ள அவகாசமேயாகும். மாறாக, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-விற்கு எதிராக மக்களைத் தயார்ப் படுத்துவதற்கு மம்தா கும்பலுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பல்ல. அப்படி ஒரு நோக்கமும் மம்தா கும்பலுக்குக் கிடையாது.

காங்கிரசின் ‘மென்மையான’ காவி, ‘மனித முகம்’ கொண்ட தனியார்மயம் என்ற கொள்கையுடன் தனிநபர் அதிரடி சர்வாதிகாரம் கலந்த கலவைதான் மம்தா அரசியலே தவிர, அது காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரானதல்ல.

கேரளம் : பா.ஜ.க எதிர்ப்புணர்வே வெற்றியைத் தீர்மானித்தது !

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியும், காங்கிரசும் மாறி மாறி வெற்றி பெற்று வந்த வரலாறு இப்போது மாறிப் போயுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக இடதுசாரி கூட்டணி அரசு அமைந்திருப்பது கேரள வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

கேரள அரசு கொரானா காலத்திலும் நிபா வைரஸ் தாக்கிய காலத்திலும் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஒக்கிப் புயலின்போது மேற்கொண்ட நிவாரணப் பணிகள் ஆகியன மார்க்சிஸ்ட் கட்சியின் மீதான மக்களின் செல்வாக்கை ஓரளவிற்கு அதிகரிக்கச் செய்துள்ளது.

சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் விவகாரத்தில் பா.ஜ.க மதவெறியைக் கிளப்பிவிட்டு ஆதாயம் அடைய முயற்சித்தது. ஆனால், அது எதிர்ப்பார்த்த அளவிற்கு நடக்கவில்லை. இதேபோல, மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக தங்கக் கடத்தல் விவகாரத்தை மோடி அரசு முன்னிலைப் படுத்தினாலும், அதுவும் எடுபடவில்லை.

மோடி அரசின் தொடர்ச்சியான தனியார்மய – தாராளமயக் கொள்கைகளும், அதன் மதவெறி வெறுப்பு அரசியலும் கேரள மக்களிடம் கடுமையான எதிர்ப்பையே ஏற்படுத்தியது. சபரிமலை விவகாரத்தில் காங்கிரசும் பா.ஜ.க-வும் ஒரே நிலையை எடுத்ததால், காங்கிரசின் மீதான நன்மதிப்பும் குறைந்து போனது.

இவையன்றி, கேரளத்தின் பொருளாதாரம், அரபு நாடுகளில் பணிபுரியும் கேரள மக்களைச் சார்ந்திருப்பது; பாரம்பரியமாக பார்ப்பன எதிர்ப்பு மரபைக் கொண்டிருப்பது போன்றவையும் பா.ஜ.க-வின் தோல்விக்கு முக்கியக் காரணங்களாகும்.

அதேவேளையில், மார்க்சிஸ்டு முதல்வர் பினாரயி விஜயனின் ஆட்சியானது, கார்ப்பரேட் சேவை, ஊழல், மக்கள் விரோத செயல்பாடுகளில் பா.ஜ.க-விற்கு சற்றும் சளைத்ததல்ல. மக்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்களைக் கருப்புச் சட்டங்களைக் கொண்டு ஒடுக்குவது, நக்சல்பாரி புரட்சியாளர்களைப் போலி மோதல் கொலைகள் மூலம் சுட்டுக் கொல்வது – என அனைத்து வகையிலும் எதேச்சதிகார ஆட்சியாகவே அது செயல்படுகிறது.

ஆகையால், பா.ஜ.க-விற்கு எதிரான மக்களின் உணர்வுதான் போலி கம்யூனிஸ்டுகளைத் தேர்வு செய்ய வைத்துள்ளது. மக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகளில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யும் ‘உரிமை’யை இந்த ‘ஜனநாயகம்’ மக்களுக்கு வழங்கியிருப்பதால், போலி கம்யூனிஸ்டுகளுக்கு வேறுவழியின்றி மக்கள் வாக்களித்துள்ளனர்.

தமிழகம் : இது திராவிட அரசியலின் வெற்றியா?

தமிழகத்தில் 10 ஆண்டு காலமாக எதிர் கட்சியாக செயல்பட்ட தி.மு.க, தமிழகத்தின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அழிவுத் திட்டங்களுக்கு எந்த வகையிலும் எதிரானதல்ல. ஆளுங்கட்சியாக இருந்தபோது, தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்ட கட்சிதான் அது. மீத்தேன், கூடங்குளம், ஸ்டெர்லைட் – என அனைத்திலும் அதன் கொள்கை, கார்ப்பரேட் கொள்ளையை ஆதரித்து, அனுசரித்துப் போவதுதான்.

மோடி அரசால் தொடுக்கப்பட்ட தாக்குதல்களான ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, புதியக் கல்விக் கொள்கை, நீட் – என அனைத்திலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக தி.மு.க குரல் கொடுத்தது என்பதெல்லாம் வெற்று கண்டன அறிக்கைகள் என்ற வரம்பிலானவை மட்டுமே.

தமிழக மக்களின் வாழ்வுரிமைப் பறிப்புக்கு எதிராக எந்தத் தீவிரப் போராட்டங்களையும் தி.மு.க நடத்தியதில்லை. கருப்புக் கொடி காட்டுதல், மோடிக்கும் பா.ஜ.க-விற்கும் எதிராக ஹேஸ்டேக் உருவாக்கி சமூக ஊடங்களில் கருத்துருவாக்கம் செய்தல் போன்றவற்றையும், தேர்தல் பிரச்சாரத் தரகன் பிரசாந்த் கிஷோரின் உத்திகளையும் நம்பித்தான் தேர்தலை எதிர்கொண்டது.

படிக்க :
♦ கையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் ? || தேர்தல் பாடல் || மக்கள் அதிகாரம்

♦ மக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்? || தோழர் மருது

“ஸ்டாலிந்தான் வாராரு, விடியலைத் தரப் போறாரு” என்று தி.மு.க கவர்ச்சிகரமான பிரச்சாரங்களைச் செய்வதென்பது இப்போது முதல்முறை அல்ல. கவர்ச்சி – பொறுக்கி அரசியலை முன்னிறுத்துவதில் அ.தி.மு.க-விற்கு தி.மு.க எந்த வகையிலும் சளைத்ததுமல்ல. ஆகையால், தமிழக மக்களின் பா.ஜ.க எதிர்ப்புணர்வுதான் தி.மு.க கூட்டணியை வெற்றிப் பெறச் செய்துள்ளதே தவிர, தி.மு.க மீதான மக்களின் நம்பிக்கையால் அல்ல.

முக்கியமாக, 10 ஆண்டுகால அ.தி.மு.க-வின் மக்கள் விரோத ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டது, நீட், புதிய கல்விக் கொள்கை, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, ஏழு பேர் விடுதலை – என அனைத்திலும் அ.தி.மு.க அரசு பா.ஜ.க-விற்கு பக்கத் துணையாக இருந்தது, எங்கும் எதிலும் ஊழல்மயம், தொடர்ச்சியான விலைவாசி உயர்வு, ஸ்டெர்லைட் படுகொலை, மீத்தேன், எட்டுவழிச் சாலை போன்ற அழிவுத் திட்டங்கள், விலைவாசி உயர்வு, லாக்கப் படுகொலைகள்… போன்றவற்றால் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துள்ளனர்.

இன்னொரு பக்கம், ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க கட்சியானது, அ.தி.மு.க, அ.ம.மு.க என பிளவுப் பட்டிருப்பதும் அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப் பூசல்களும் மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையைக் குறைத்துள்ளது. இவ்வளவு இருந்தும் இந்த கும்பலுக்கு தமிழகத்தில் 66 சீட்டுகள் கிடைத்திருக்கிறது என்பது தமிழகத்தின் அவல நிலை.

2011-இல் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து தி.மு.க-வைத் தோற்கடித்தவைதான் சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய போலி கம்யூனிஸ்டு கட்சிகள். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்க கூட்டணி வைத்த கட்சிதான் ம.தி.மு.க. மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைத்த பின்னர், 2016-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க அனைத்தும், கடைசி நேரம் வரை ஜெயா-வின் ஆசிக்காக கூட்டணி அமைக்கச் சொல்லி சீட்டு கேட்டு போயஸ் தோட்டத்திற்குக் காவடி தூக்கியவைதான். ஜெயாவின் ஆசி கிடைக்காமல் போன பின்னர் கூட, மூன்றாவது அணி (மக்கள் நலக் கூட்டணி) அமைத்து, ‘பா.ஜ.க-வின் பி.டீமாக’ செயல்பட்டு தி.மு.க-வைத் தோற்கடித்தவைதான்.

இவர்கள் யாருக்காவது பா.ஜ.க எதிர்ப்புக் கொள்கை இருக்கிறதா? தங்களது அரசியல் வாழ்வே கேள்விக் குறியாக இருந்த நிலையில், பா.ஜ.க எதிர்ப்பலையைப் பயன்படுத்தி, சீட்டுகளை வாங்குவதற்குதான் இக்கட்சிகள் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கின்றன.

இப்படிப்பட்ட தி.மு.க. கூட்டணிக்கு பா.ஜ.க-வின் காவி அரசியலை எதிர்க்கும் அருகதை இல்லை என்பது மட்டுமல்ல, தனது திராவிட அரசியல் மீதும் தி.மு.க-விற்கு நம்பிக்கையிருந்ததில்லை. அதனால்தான் மோடி அரசின் காவித் திட்டங்களுக்கு எதிராக தி.மு.க போராடாதது மட்டுமல்ல, இந்துக்களின் ஓட்டை அறுவடை செய்து கொள்வதற்காக, கோவில்களைப் புனரமைப்பதற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் என தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது.

ஆகையால், “பா.ஜ.க-விற்கு தோல்வி”, “திராவிடம் வென்றது”, “மதசார்பின்மைக்கு வெற்றி, தமிழகம் தலை நிமிர்கிறது” என்று பேசுவதெல்லாம் பச்சையான மோசடிப் பிரச்சாரமாகும்; பிழைப்புவாத அரசியலாகும்.

பிழைப்புவாத அரசியலும் மதவெறி அரசியலும்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் மூலம் பா.ஜ.க தோல்வி அடைந்துள்ளதாக மதிப்பீடு செய்வது, பா.ஜ.க-வை மற்றக் கட்சிகளைப் போல பிழைப்புவாதக் கட்சியாக மட்டுமே கருதும் மனநிலையின் வெளிப்பாடாகும். இது ஆபத்தானதும் கூட.

பா.ஜ.க தனது தேர்தல் வெற்றிக்காக அனைத்து வகை சதி, அதிகார முறைகேடுகள், மதவெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்ட பின்னரும் அது எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை என்று சொல்லலாமே தவிர, பா.ஜ.க படுதோல்வி அடைந்துவிட்டதாக கருதுவது உண்மையைக் காண மறுக்கும் ஒருதலைப்பட்சப் பார்வையே.

ஏனெனில், பிழைப்புவாதக் கட்சிகளைப் போல தேர்தல் வெற்றி என்ற தற்காலிக நலன்களை அடைவது மட்டும் பாசிச பா.ஜ.க-வின் நோக்கமல்ல. அது இந்துராஷ்டிரம் என்ற நீண்ட கால இலக்கும், ஆளும் வர்க்கச் சேவையில் பரம விசுவாசமும் கொண்டது.

இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் என்ற நூற்றாண்டு அனுபவம் கொண்ட பார்ப்பன பாசிச அமைப்பையும், பார்ப்பன சித்தாந்தம் என்ற இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சித்தாந்தத்தையும் கொண்டது.

ஆகையால், குறுகிய தேர்தல் வெற்றியை அடைவதற்காக மட்டுமே பா.ஜ.க தேர்தலில் போட்டியிடவில்லை. எந்தவொரு நடவடிக்கையிலும் தனது நோக்கமான இந்துராஷ்டிரம், பார்ப்பன ஆதிக்கம், கார்ப்பரேட் சேவை ஆகியவற்றை நோக்கி முன்னேறுவதற்குப் பல்முனை தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ் முன்னேறிய அனுபவம் கொண்ட அமைப்பு என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த கண்ணோட்டத்தில் இருந்து பா.ஜ.க-வையும் தற்போதைய ஐந்து மாநிலத் தேர்தல்களையும் சரியாக அலசிப் பார்க்க வேண்டும்.

000

குடியுரிமைச் திருத்தச் சட்டத்தால் பா.ஜ.க பலனடைந்த மாநிலங்களில் ஒன்று அஸ்ஸாம். மக்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்த போதும், பா.ஜ.க தனது மதவெறி அரசியலை சிறிதும் தளர்த்தவில்லை. அஸ்ஸாமிய இனவெறியையும் இந்து மதவெறியையும் இணைத்துப் பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. வங்கதேச முசுலீம்களால் அஸ்ஸாமியர்களுக்கு ஆபத்து என்று அச்சத்தைக் கிளப்பியது. எதிர்கட்சித் தலைவர் வங்கதேச முசுலீம்களை ஆதரிப்பவர் என்று பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

தற்போது இந்த மாநிலத்தில் இரண்டாவது முறையாக பா.ஜ.க வெற்றிப் பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையும் கூட சென்ற தேர்தலைவிட 2.71 சதவிகிதம் உயர்ந்து 32.25 சதவிகிதமாகியுள்ளது. இசுலாமியர் எதிர்ப்புப் பிரச்சாரமும் இந்துமதவெறியும் இங்கு வலுப்பெற்றுள்ளதையே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

புதுச்சேரியில் ரெங்கசாமி கும்பலும் பா.ஜ.க-வும் வெற்றி பெற்றிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. காங்கிரசு அரசின் ஆட்சி காலம் முடியும் வரை காங்கிரசில் இருந்து கொண்டு, ஆட்சி காலம் முடிவடையும் கடைசி நேரத்தில் பா.ஜ.க-விற்கு தாவி, ரெங்கசாமி காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு அந்த மாநிலத்தில் சாதிய, பிழைப்புவாத அரசியல் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில், பிழைப்புவாத அரசியல்தான் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்குக் களத்தை செப்பனிட்டுக் கொடுக்கிறது.

பா.ஜ.க தோல்வியடையவில்லை !

பா.ஜ.க-வும் அதன் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ள இந்த மாநிலங்களில் மட்டுமல்ல, பா.ஜ.க தோல்வியைச் சந்தித்துள்ளதாக சொல்லப்படும் மாநிலங்களில் என்ன நிலைமை ?

மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 3 இடங்களில் இருந்து உயர்ந்து 77 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது. 10.16 சதவிகித வாக்குகளிலிருந்து மிக பிரம்மாண்டமாக வளர்ந்து 38.13 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதைப் பற்றி பேசுகின்ற பா.ஜ.க எதிர்ப்பாளர்களின் கண்களுக்கு இந்த விசயம் ஏனோ தெரிவதில்லை.

போலி கம்யூனிஸ்டுகள் முற்றிலுமாக துடைத்தொழிக்கப்பட்டு, திரிணாமுல் காங்கிரசும் பா.ஜ.க-வும் மட்டுமே அரசியல் அரங்கில் நீடிக்கும் நிலையை ஏற்படுத்தியிருப்பதே பா.ஜ.க-வின் பெரிய வெற்றியாகும். காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் துடைத்தொழிக்கப்பட்டு, இரு துருவ அரசியல் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை உருவாக்கியது யார் ? மம்தா அல்ல, பா.ஜ.க.!

“திரிணாமுல் காங்கிரசின் ரௌடி கலாச்சாரத்தை மார்க்சிஸ்டு கட்சியால் எதிர்கொள்ள முடியாது, அதனை எதிர்கொள்ள சரியான சக்தி பா.ஜ.க தான்” என்று அரசியலற்ற பெரும்பான்மையான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு சக்திகள் பா.ஜ.க-வின் பக்கம் சென்றுள்ளன. ஓரளவு சிந்திக்கும் ஜனநாயக சக்திகளோ, “பாசிச பா.ஜ.க-வை கம்யூனிஸ்டுகளால் எதிர்கொள்ள முடியாது, அதற்கு மம்தாதான் சரியான பதிலடி கொடுப்பார்” என்று திரிணாமுல் காங்கிரசின் பக்கம் சென்றுள்ளன.

சட்டமன்றத்தில் தனது 77 எம்.எல்.ஏ-க்களை வைத்துக் கொண்டு, தான் நினைத்த அனைத்து காரியங்களையும் பா.ஜ.க-வால் அடுத்தடுத்து நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும். மேலும், கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளைப் பேசிக் கொண்டே பா.ஜ.க எதிர்ப்பு என்ற அரசியலில் பயணித்த மம்தாவின் 10 ஆண்டுகால ஆட்சியும், அதே திசையில் இனி நடக்கப் போகிற ஐந்தாண்டுகால ஆட்சியும், ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் உணர்வு வளர்வதைத் தவிர்ப்பது கடினம்.

அதே வேளையில், பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல் மேலும் தீவிரமாக வேலை செய்து, கலவரங்களையும் அரசியல் சதித்தனங்களையும் அரங்கேற்றி மம்தா ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது அடுத்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை தோற்கடிக்கச் செய்வதோ கடினமான காரியமல்ல; இந்தியாவின் பல மாநிலங்கள் இதற்கு சாட்சியாகவும் உள்ளன.

தமிழகத்தின் நிலைமையோ இன்னும் மோசமானது. பா.ஜ.க-வின் பினாமியான அ.தி.மு.க 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் இன்னொரு அடியாள்படை போல செயல்படும் வன்னிய சாதிவெறிக் கட்சியான, பிழைப்புவாதத்தையே தனது கொள்கையாகக் கொண்டுள்ள பச்சையான சந்தர்ப்பவாதக் கட்சியான பா.ம.க, ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஒட்டுண்ணி கும்பல்கள்தான் இன்று பா.ஜ.க-வின் அடியாள் படையாகச் செயல்படுகின்றன.

இதுமட்டுமல்ல; இது பெரியார் பிறந்த மண் என்று திராவிட இயக்கத்தினரால் பீற்றிக் கொள்ளப்படும் தமிழகத்தில் இதுவரை கண்டிராத அளவிற்கு பா.ஜ.க நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

“பா.ஜ.க தனித்து போட்டியிட்டிருந்தால் இந்த வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. பா.ஜ.க-வை முன்னிறுத்தாமல், அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர் என பெரிதாகக் காட்டி வேட்பாளரின் பெயரை முன்னிறுத்தித்தான் வெற்றி பெற்றனர். தாமரை சின்னத்தை ஓரமாக சிறியதாக போட்டுக் கொண்டனர்” என்றும், “இதுதான் தமிழ்நாடு; பா.ஜ.க பேரைச் சொல்லி ஓட்டுக் கூட கேட்க முடியாது” என்றும் மார்த்தட்டிக் கொள்கின்றனர் தி.மு.க ஆதரவாளர்களும், கட்டமைப்பிற்குள் தீர்வைத் தேடும் பா.ஜ.க எதிர்ப்பாளர்களும். இவ்வாறு மார்த்தட்டிக் கொள்வதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை.

தனது பிறப்பிலேயே நயவஞ்சகத்தையும் சதியையும் பயங்கரவாதத்தையும் சாதி – வர்ணாசிரம பார்ப்பன சிந்தனையையும் கொண்டுள்ள பா.ஜ.க-விற்கு எந்த வழிமுறையும் ஒரு பொருட்டல்ல. பா.ஜ.க கையாண்டது நேர்மையான வழிமுறையா, இல்லையா என்பதையெல்லாம் வைத்து, பா.ஜ.க தோல்வியைந்திருப்பதாக மதிப்பீடு செய்வது, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, காவி – கார்ப்பரேட் பாசிசம் போன்றவை குறித்த தவறான சித்தாந்தப் புரிதலாகும்.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை அது முற்றிலும் துடைத்தொழிக்கப் படவேண்டிய கொடிய பாசிச அமைப்பு. தேர்தல் களம் என்பது ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் ஒரு களம் மட்டும்தான். பஜ்ரங் தளம், இந்து முன்னணி, ஏ.பி.வி.பி, விஸ்வ இந்து பரிஷத் போன்று சிறிதும் பெரிதுமாக பல பாசிச குண்டர் படைகள் அதனிடம் உள்ளன. சித்தாந்த ரீதியாக மக்களை ஏமாற்ற பல கலாச்சார அமைப்புகளும் உள்ளன. ஐந்தாண்டு மோடி ஆட்சியில் அரசின் அதிகார அமைப்புகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் மயமாக்கப் பட்டுள்ளன. இராணுவம் முதல் பள்ளிக் கல்வி வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்று கொண்டிருக்கிறது. இப்படி சமூகத்தின் அனைத்து அங்கங்களும் பாசிசமயமாக்கப்பட்டு வருகிறது.

ஆகையால், பாசிச பா.ஜ.க-வை தேர்தல் களத்தில் ஒருக்காலும் முறியடிக்க முடியாது. மக்களைத் திரட்டி, போராட்டக் களத்தில்தான் மோதி வீழ்த்த முடியும். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை எதிர்ப்பதற்கு பலமுனைகளைக் கொண்ட செயல்தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, “பா.ஜ.க தோல்வி”, “தமிழகத்தில் இந்துத்துவா வெற்றி பெறாது”, “தலைவர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார்” என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல, மக்களை பாசிசத்திற்குப் பலி கொடுப்பதில் சென்று முடியும்.

கார்ப்பரேட் சேவையில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, போலி கம்யூனிஸ்டுகள் ஓரணியில் கைக் கோர்த்து நின்றதை, மிக அண்மையில், ஆக்சிஜன் உற்பத்தியை சாக்கிட்டு கொலைகார ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் விவகாரத்தில் பார்த்த பின்னரும், பா.ஜ.க-வை தி.மு.க வீழ்த்திவிடும் என்று கருதுவதில் எந்தப் பொருளும் இல்லை.

உண்மையில், தமிழகத்தில் தி.மு.க பெற்றிருக்கும் வெற்றி என்பது பா.ஜ.க எதிர்ப்புணர்வின் வெளிப்பாடே அன்றி, பா.ஜ.க-விற்கு எந்தத் தோல்வியையும் தி.மு.க கூட்டணி ஏற்படுத்தி விடவில்லை. சென்ற சட்டமன்றத் தேர்தல்களைவிட இந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்குக் கூடுதல் இடங்களும், வாக்குகளும் கிடைத்துள்ளன; ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக்கு அ.தி.மு.க என்ற அடிமை கட்சியும் பா.ஜ.க-வுக்குக் கிடைத்துள்ளது.

மேற்கு வங்கம், தமிழகத்தில் மட்டுமல்ல; கேரளாவிலும் பா.ஜ.க-வின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்ற தேர்தலில் பா.ஜ.க 10.6 சதவித வாக்குகளைப் பெற்றது. இந்த தேர்தலில் 11.30  சதவிகித வாக்குகளை பா.ஜ.க பெற்றுள்ளது. இது குறைவான வாக்கு வளர்ச்சி; மார்க்சிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகளை ஒப்பிடும்போது இதனை வைத்துக் கொண்டு பா.ஜ.க-வால் ஒன்றும் செய்துவிட முடியாது என்று கருதலாம். ஆனால், கேரளத்தில் பா.ஜ.க பலவீனமடைந்துவிடவில்லை, மாறாக, மெல்ல வளர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை.

மொத்தத்தில், ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பார்ப்பன பாசிச பா.ஜ.க-வின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கத்தில் அதன் சீட்டு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

போராட்டக் களம் காத்துக் கிடக்கிறது !

ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு, நமது நாட்டில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் இருந்த கொரோனா நோய்த்தொற்று, இன்று இலட்சக் கணக்கில் உயர்ந்துள்ளது; ஆக்சிஜன் இல்லாமலும், உரிய மருத்துவ வசதி இல்லாமலும் மக்கள் கொத்துக் கொத்தாக மடிகின்றனர்; பிணங்கள் குவிகின்றன; சுடுகாடுகள் கூட வெப்பத்தில் தகிக்கின்றன; மக்கள் சொல்லொணாத் துன்பத்தில் துடிக்கின்றனர்.

கொரோனா நோய்த் தொற்று பரவிய முதல் அலையின்போது கூட, மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் மோடி அரசு அறிவிக்கவில்லை. மக்கள் மத்தியில் எதிர்ப்புக் குரல் வலுத்த பின்னர்தான், கண் துடைப்பாக சில அறிவிப்புகளை வெளியிட்டது. இப்போது தாக்கி வரும் இரண்டாவது அலையோ மேலும் கொடுமையாக இருக்கிறது. ஆனால், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்துப் பேசுவதற்குக் கூட மோடி அரசு தயாராக இல்லை. மொத்தத்தில், மோடி அரசு கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மௌனம் சாதிக்கிறது. அது பாசிஸ்டுகளுக்கே உரிய, கடுகளவும் மனிதாபிமானமற்றக் கொடூர அணுகுமுறையாகும்.

மற்றொரு புறம், மக்களை நிரந்தரமாகப் பிளவுப்படுத்தி இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். போராடியவர்கள் மீது பா.ஜ.க அரசுகளும் காவி பயங்கரவாதிகளும் துப்பாக்கிச் சூடுகளையும், டெல்லியில் கலவரங்களையும் நடத்தின.

அதன் வடுக்கள் மறையாத நிலையில், அடுத்தத் தாக்குதலாக இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிக் கொள்வதற்கு வழிவகுக்கும் வகையில் மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இதற்கு எதிராக டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டுப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஐந்து மாதங்களைக் கடந்தும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

இவை மட்டுமின்றி, புதியக் கல்விக் கொள்கை, தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், சுற்றுச்சூழல் மதிப்பீடு சட்டம், போக்குவரத்துச் சட்டத் திருத்தம் – என மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசு தொடுத்து வருகிறது. பொத்துறைகளைத் தனியார்மயாக்கும் வேலையையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மோடி ஆட்சியில் வீழ்ந்தப் பொருளாதாரம் எழவில்லை; வேலையின்மையும் வறுமையும் தலைவிரித்தாடுகிறது; உழைக்கும் மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரங்கள் அன்றாடம் பறிக்கப்பட்டு வருகின்றன; பெட்ரோல் – டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு, தலித்துகள் – இசுலாமியர்கள் அடித்துக் கொல்லப்படுதல் – என அனைத்து அநீதிகளும் தாண்டவமாடுகின்றன.

படிக்க :
♦ விடியல் வேதாந்தாவுக்கா? || தி.லஜபதி ராய்

♦ தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா ? || வெற்றிவேல் செழியன் || காணொலி

நாளும் அதிகரித்து வரும் காவி – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளால் இந்தப் போராட்டக் களம் பரந்து விரிந்து வருகிறது; தேர்தல் அரசியல் களமோ, இதில் இருந்து மக்களைத் திசைதிருப்புகிறது. நாட்டையும் மக்களையும் கொள்ளையிடுவதற்குப் போட்டிப் போடும் தேர்தல் நாடகம் என்பது, பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கான களம் அல்ல; அது, பாசிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள களம் !

ஆகையால், பா.ஜ.க-விற்கும் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலுக்கும் எதிரான நமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். பாசிஸ்டுகளின் செல்வாக்கிலிருந்து மக்களை மீட்பதும் பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் களத்தில் நின்று வீழ்த்துவதும் நமது உடனடிக் கடமையாகும்.

வினவு

விடியல் வேதாந்தாவுக்கா? || தி.லஜபதி ராய்

கஸ்டு 18, 2020 அன்று நெடிய வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு தமிழகத்தின் மற்றும் தில்லியின் சிறந்த நட்சத்திர வழக்கறிஞர் பட்டாளங்களுடன் நடத்தப்பட்ட வேதாந்தா நிறுவனம் எதிர் தமிழக அரசு மற்றும் பலர் என்ற ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு நீதிபதிகள் திருமிகு டி.எஸ்.சிவஞானம் மற்றும் திருமிகு வி.பவானி சுப்பராயன் ஆகியோரால் வழங்கப்பட்டது.

815 பக்கங்கள் கொண்ட மிக ஆழமான சட்ட மற்றும் சமூகப் புரிதல்களுடன் விளக்கமாக நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அவர்களால் எழுதப்பட்ட அத்தீர்ப்பு சுற்றுச்சூழல் வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகவும்¸ நீதிமன்றங்களது சமூகப் பங்களிப்பில் விதிவிலக்கான ஒரு முக்கிய தீர்ப்பாகவும் விளங்கும். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  பி.என்.பகவதி அவர்கள் ஒருமுறைக் கூறியதைப் போல, இது போன்ற அரிதினும் அரிதான தீர்ப்புகளை ஜூடிசியல் லாட்டரி என்றேக் கொள்ளலாம்.

படிக்க :
♦ ஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு ! | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்

♦ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்

1990-களில் 102.50 ஹெக்டேர் நிலங்கள் சிப்காட் மூலம் செம்பு உற்பத்தி செய்யும் வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது.

ஜனவரி 16, 1995-ஆம் ஆண்டு அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அத்தொழிற்சாலையை தொடங்க அனுமதி அளித்தது. பின்னர் மே 22, 1995-ஆம் நாள் அன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீர் மற்றும் காற்று சட்டங்கள் கீழ் தொழில் தொடங்க அனுமதி அளித்தது.

தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 391 முதல் 900 டன் செம்பு உற்பத்தி திறன் கொண்டதாக அமைக்கப்பட்ட அத்தொழிற்சாலையானது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய உற்பத்தி திறனைப் பெருக்கி 2006-ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 1,200 டன்கள் உற்பத்தி திறன் கொண்டதாகவும்¸ 2009-ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 2,400 டன்கள் உற்பத்தி திறன் கொண்டதாகவும் மாறியது.

செம்பைத் தவிர செம்புக் குச்சிகள்¸ செம்புக் கம்பிகள், கந்தக அமிலம்¸ பாஸ்போரிக் அமிலம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அது விளங்கியது.

ஒருசில நீதிமன்ற வழக்குகளுக்குப் பின்னர் ஜனவரி 14, 2016 அன்று தொழிற்சாலையை நடத்த வழங்கிய ஒப்புதல் 2023-ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்தது. அதை தொடர்ந்து அந்நிறுவனம் நீர் மற்றும் காற்று சட்டங்களின் கீழ் அனுமதியைப் புதுப்பிக்க விண்ணப்பம் செய்தது. மார்ச் 14, 2017-ஆம் நாளில் நீர்ச் சட்டத்தின் கீழ் ஏழு மீறல்களும் காற்றுச் சட்டத்தின் கீழ் ஆறு மீறல்களும் கண்டறியப்பட்டன.

பிப்ரவரி 05, 2018-ஆம் ஆண்டில் தூத்துக்குடி குமாரரெட்டிபாளையம் அருகில் பொதுமக்களின் எதிர்ப்பு தீவிரமாகத் தொடங்கியது. மார்ச் 15, 2018-ஆம் நாளில் போராட்டம் நடத்த அனுமதிகேட்டு மக்கள் விண்ணப்பம் செய்தனர். ஏபரல் 09, 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீர் மற்றும் காற்றுச் சட்டங்களின் கீழான இசைவாணைகளைப் புதுப்பிக்காமல் நிராகரித்தது.

மே 18, 2018-ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர் வேதாந்தா நிறுவனத்தின் ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள் எவ்வித ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாது எனவும், மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு மே 22, 2018-ஆம் நாள் அன்று போராட்டம் ஒன்று நடத்தப்போவதாக எழுந்த சூழல் காரணமாக ஆலையைச் சுற்றி போராட்டங்களுக்கு  தடையாணை வேண்டும் என தங்கள் நீதிப்பேராணை முறையீட்டில்  கூறி இருந்தது. மே 18, 2018-ஆம் நாளன்று உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஒருவர் வேதாந்தா நிறுவனத்தின்  வேண்டுகோளைப் பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட்டார். அவ்வுத்தரவிலேயே தேவை ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் தடை உத்தரவு வழங்கவும் பரிந்துரை செய்திருந்தார்.

மே 22, 2018-ஆம் ஆண்டு அன்று மக்கள் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உழைக்கும் சமூகங்களிலிருந்து 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மறுநாளே மே 23, 2018-ஆம் தேதி அன்று மாசுக்கட்டுபாட்டு வாரியம் ஸ்டெர்லைட்  தொழிற்சாலையின் அனுமதிகளை ரத்து செய்து  மூட உத்தரவிட்டது.

மேற்சொன்ன உத்தரவுகளை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிப்பேராணைகளை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த வழக்குகளைத்  தவிர தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். வேதாந்தா நிறுவன வழக்குகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மக்கள் அதிகாரத்தின் வழக்கறிஞர்  திரு.ராஜூ¸ மறுமலர்ச்சி திராவிட கட்சியின் தலைவர் திரு.வைக்கோ ஆகியோர்களும் எதிர்தரப்பினர்களாக முன்னிலையானார்கள்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் செம்பு உற்பத்தி தொழில், சிவப்புப் பட்டியலின் கீழ் வரும் தொழில்களில் ஒன்று. அத்தொழிற்சாலையானது சட்டப்படி சிறப்பு தொழிற்சாலை மற்றும் இடர்விளையும் பகுதியில் அமைய வேண்டுமே தவிர (Special Industrial and hazardous Zone) பொது தொழிற்சாலைப் பகுதியில் அமையக் கூடாது. இது தொடர்பான உத்தரவு ஜூலை 24, 1974-ஆம் நாள் அரசாணை எண்.1730-இன்படி வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைந்துள்ள மீளவிட்டான் கிராமத்தில் பொது தொழிற்சாலை பகுதி மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இதுதவிர தூத்துக்குடி மாவட்டம் சுவாமிநத்தம் மற்றும் பழைய காயல் பகுதியில் மட்டுமே இடர் விளைய கூடிய தொழிற்சாலைகளை அமைக்க முடியும் என தூத்துக்குடி மாவட்ட பெருந்திட்ட வரைபடம் காட்டுகிறது. அத்திட்டத்தின் பகுதிகளை மாற்றுவது உள்ளுர் மக்களின் கருத்துகளைக் கேட்காமல் செய்யக் கூடியது அல்ல. எனவே, ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைய கூடிய இடம் தகுதி இழப்பிற்கு உள்ளாகிறது.

எம்.சி.மேத்தா வழக்கில் 2004-ஆம் ஆண்டின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சட்ட மீறலை சட்டமியற்றும் அரசு நியாயப்படுத்த இயலாது என்ற கோட்பாட்டை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அவர்கள் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் 09, 2018-ஆம் நாளிட்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்படி ஒப்புதலை புதுப்பிக்க மறுத்தமைக்கு முதன்மைக் காரணங்களாக வெள்ள நீர் ஓடையான உப்பார் மற்றும் பட்டா நிலங்களில் செம்பு கழிவுகளை குமித்தமையும்¸ நிலத்தடி நீர் ஆய்வறிக்கைளை வழங்காமையும்¸ இடர்தரும் கழிவுகளை குவித்து வைத்தமையும்¸ ஜிப்சம் சேமிப்பு குட்டையை அமைக்காமையையும் காரணங்களாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டது.

காப்பர் ஸ்லாக் எனப்படும் செம்பு கழிவுகள் 3,50,000 டன்கள் தனியார் நிலத்தில் சேமிக்கப்பட்டன. இது தவிர பழைய கழிவுகள் 7¸47¸327 மெட்ரிக் டன்கள் அகற்றப்பட்டதாக வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்டது. தொழிற்சாலைக்கு வெளியே 10 இடங்களில் கொட்டப்பட்ட செம்பு கழிவுகளின் எடை மட்டும் 5¸37¸765 மெட்ரிக் டன்கள்.

மேற்சொன்ன கழிவுகள் கொட்டுவதற்கு தனியார் நில உரிமையாளருடன் ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், அக்கழிவுகளை பொது நீர்ஓடைகளில் கலக்கவிடாமல்¸ நிலத்தை மாசுப்படுத்தாமல் வேறு பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் பொறுப்பு ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை செம்பு கழிவுகள் ஆலைக்கு வெளியே 10 கிலோ மீட்டர் தொலைவில் கொட்டப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மேம்பாலம் அருகில் குன்றைப்போல தோற்றம் அளிக்கும் அக்கழிவுகள் தூத்துக்குடியில் 2016-ஆம் ஆண்டில் நடந்த வெள்ள நிகழ்வுக்கு பெரும் காரணமாக அமைந்தது.

மழை நீர்ஓடைகளில் நீரோடுவதை மறிக்கும் விதத்தில் கழிவுகள் கொட்டப்பட்டதால் வெள்ளநீர் தூத்துக்குடி நகருக்குள் புகுந்து மக்களுக்கு பெரும் இடர்விளைவித்தது.

ஜூலை 14, 2016 அன்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஆறு வருடங்களுக்குப் பின்னர் தீடீர் என விழித்துக் கொண்டு சாதாரணமாக யாரும் எளிதாகப் பார்க்க கூடிய கழிவு குவியலைக் கண்டு கொள்ளாமல் போனதும்¸ மாசுக்கட்டுபாட்டு வாரியமும்¸ மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வாளவிருந்ததும்¸ அரசியல் மற்றும் அதிகாரிகளின் தலையீட்டு காரணமாகவா? என்பதையும் ஆய்வு செய்து அத்தவறுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது.

2011-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் உயர்நீதிமன்றத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுடன் இணைந்து அளித்த அறிக்கையில் மீளவிட்டான்¸ தெற்கு வீரபாண்டியபுரம்¸ சங்கரப்பேரி உள்ளிட்ட கிராமங்களையும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் தெற்கு பக்க கால்வாயையும் ஆய்வு செய்த போது 2002-ஆம் ஆண்டிற்கு பிறகு அங்கு கிடைக்கும் நிலத்தடி நீர் குடித்தண்ணீருக்குப் பயன்படுத்த முடியாதபடியும்¸ 2011-ஆம் ஆண்டின் களஆய்வின் போது அப்பகுதி மக்கள் தங்களுக்கு கண் எரிச்சல்¸ மூச்சு திணறல் ஆகியன விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்வதாகவும் அந்நேரத்தில் மாசு ஏற்படுத்தும் வாய்வுகள் காற்று மண்டலத்தில் கலப்பதால் அவ்வாறு நிகழ்கிறது எனவும்¸ கழிவுகள் நீரோடைகள் கலப்பதாலும் கால்நடைகள் அந்நீரை குடித்து இறந்துப் போவதாகவும் தெரிவித்ததை நீதிமன்றம் பதிவு செய்தது.

1998-ஆம் ஆண்டில் நீரி என்ற (NEERI) சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் ஸ்டெர்லைட் நிறுவன கழிவுகளை மறுசுழற்சி செய்யும் சுத்திகரிப்பு நிலையங்களை ஒழுங்காக நிறுவவில்லை எனத் தனது நவம்பர் 07, 1998-ஆம் நாள் அறிக்கையின்படி தெரிவித்தது.

இது தவிர மிக முக்கியமாக ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்த தகவலின்படி செம்பு உற்பத்தியின் போது பாதரசம் எனும் நச்சுத்தன்மை கொண்ட உலோகம் கழிவாக வெளியேறும் எனவும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையின்படி பாதரசம் அகற்றும் கோபுரம் அமைக்கப்பட்டு இருக்க வேண்டுமெனவும் ஆனால், அங்கு கழிவாக உற்பத்தியாகும் பாதரசம் வளிமண்டலத்தில் காற்றோடு காற்றாகக் கலந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணிக்கும் எனவும் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட அப்பாதரசத்தின் அளவானது குறைந்தது 25.91 மெட்ரிக் டன்கள் இருக்குமெனவும் கூறிய 9-வது எதிர்மனுதாரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளரின் கூற்றை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கொடைக்கானல் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் 7.95 கிலோ எடையுள்ளப் பாதரசத்தை விதிகளை மீறி வெளியேற்றி மாசுப்படுத்தியதற்காக மூடப்பட்டதை சுட்டிக்காட்டியதையும் கருத்தில் கொண்டு இது தீவிர விசாரணை செய்ய வேண்டிய கூற்று எனவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதை கருத்தில் கொண்டிருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில் 374 பத்தியில் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் நடைமுறைகளின்படி மாசு அளவீடு செய்யப்படவில்லையெனவும் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ச்சியாக தாங்கள் சர்வதேச விதிமுறைகளை பின்பற்றுகிறோம் எனவும் கூறுவதை நீதிபதி கண்டித்து ஒழுங்குபடுத்துவர்களான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடைமுறை விதிகளைத் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் நிறுவனம் கடைபிடிக்கவில்லையெனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

காற்றில் மாசின் அளவை கண்டறிய அமைக்கப்பட்ட நிலையங்களை மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஒழுங்காக கண்காணிக்கவில்லையெனவும் அந்த அளவுகள் தவறாக இருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரை காற்றின் தரம் முறையாக கண்காணிக்கப்படவில்லையெனவும் அங்குள்ள தொழிற்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையங்களுக்குள் எடுத்ததாகக் கூறப்பட்ட தர அளவுகள் நிலையாக ஒரே அளவில்  இருப்பதையும் அவ்வாறு இருக்க வாய்ப்பில்லையெனவும் அவ்வளவுகள் உண்மைக்கு மாறானவையாக இருக்கின்றன எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 2005-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நீரி (NEERI) நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தணிக்கை அறிக்கையின் படி நிலத்தடி நீரில் ஆர்சனிக் மற்றும் காட்மியம்¸ குரோமியம்¸ செம்பு¸ ஈயம் போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக இருப்பதையும் நீதிபதிகள் கவனத்தில் கொண்டனர்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்குள் அமைக்கப்பட்ட 40 ஏக்கர் ஜிப்சம் குட்டையில் ஒரு லட்சம் டன் ஜிப்சம் சேமிக்கப்பட்டு இருந்தது. இது தவிர நான்கு லட்சம் டன்கள் பழைய ஜிப்சமும் அங்கு சேமித்து வைக்கப்பட்டு இருந்தது. ஜிப்சம் குட்டைக்கு வெளியில் இருந்தக் கண்காணிப்பு கிணறுகளில் இருந்து எடுத்த தண்ணீரின் தரம் மிக குறைவாகவும் அதில் நச்சுத்தன்மை மிகுந்து இருந்ததையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்தது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த வண்ணப் புகைப்படங்களில் ஜிப்சம் குட்டைக் கிணற்றுப் பகுதி பனிப்பொழியும் இடத்தைப்போல் தோற்றமளித்ததை நீதிபதிகள் கண்டனர். நிலத்தடி நீர் மோசமாகப் பாதிக்கப்பட்டதையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போதிய உட்கட்டமைப்பின்றி இயங்குவதையும் நீதிமன்றம் பதிவு செய்தது.

2013-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்க அனுமதித்து இருந்தாலும் கூட 2013-ஆம் ஆண்டுக்கு முன்பாக நிகழ்ந்த நிகழ்வுகளை கருத்தில் கொள்ள முடியாது என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. தொழிற்சாலை இயங்க இசைவாணை வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தொழிற்சாலை இயங்கும் வரை நடப்பில் இருக்குமெனவும் நிபந்தனைகள் நிரந்தரமானவை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ரூ.100 கோடி அபராதம்  எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் ஸ்டெர்லைட் தொழிற்சாலையானது நீர் மற்றும் காற்றை தொடர்ந்து மாசுப்படுத்தி வந்ததாகவும் சாதாரணக் காற்றைவிட தொழிற்சாலையில் 100 மடங்கு அதிகமான மாசு இருப்பதாகவும் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பொதுமக்களுக்குக் கூட கண் எரிச்சல்¸ மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கந்தகவாய்வு வெளியேற்றம் மூச்சு தொடர்பான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துவதையும் நீதிமன்றம் கண்டறிந்து தீர்ப்பின் 408-வது பத்தியில் பதிவு செய்தது.

படிக்க :
♦ ஆய்வுக்குழு முன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட ஸ்டெர்லைட் | காணொளி

♦ வேதாந்தாவின் அனில் அகர்வாலை தோலுரித்து சோஃபியா எழுதிய கட்டுரை

நாளொன்றுக்கு 870 மெட்ரிக் டன்கள் மட்டுமே உற்பத்தி செய்ய இயலும் என்ற காலத்தில் விதியை மீறி அனுமதிக்கப்பட்ட உற்பத்தி திறனுக்கு மேலாகவே ஸ்டெர்லைட் நிறுவனம் உற்பத்தி செய்வதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீர் மற்றும் காற்று சட்டங்கள் மீறல்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பை மட்டும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் அனுப்பிவிட்டு அவ்விதி மீறலுக்கான தண்டனையைப் பெற்றுத்தராததுக் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

செம்பு கழிவு அல்லது ஸ்லாக் ஒரு இடர்தரும் நச்சுப்பொருள் அல்ல என்ற மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்தானது ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கழிவு குவியலுக்குப் பொருந்தாது எனவும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எனும்போது மிகையான செம்பு கழிவுகள் கொட்டப்படும் போது கிணறுகளிலும்¸ நிலத்தடி நீரிலும்¸ ஆர்சனிகழிவு மற்றும் காட்மியம் ஆகியன சேர்வதையும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

தொழிற்சாலை வளாகத்தை சுற்றி 250 மீட்டர் தூரம் பசுமை வளையம் ஏற்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக் காரணமின்றி குறைக்கப்பட்டதையும்¸ 25 மீட்டர் பசுமை வளையமும் ஏக்கருக்கு 1000 மரங்கள் என்ற அளவில் நடப்படவேண்டும் என்ற நிபந்தனையானது மீறப்பட்டதையும் தொழிற்சாலை வளாகத்தை சுற்றி காற்று மாசைத் தடுக்கும் பசுமை வளையத்திற்கு பதிலாக மரங்கள் தீவுகளாக பல ஹெக்டேர்கள் பரப்பளவில் குடியிருப்பு பகுதிகளிலும் பிற பகுதிகளிலும் நடப்படுவது காற்று மாசைத் தடுக்க பசுமை வளையம் அமைக்கப்படுவதின் நோக்கத்தை நிறைவேற்றாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

60,000 பணியாளர்கள் பணிபுரியும் ரஷ்யாவின் இரும்புத் தொழிற்சாலை ஒன்றில் 2 கிலோ மீட்டர் சுத்தமான பகுதித் தொழிற்சாலையை சுற்றி அமைப்பதன் காரணத்தையும் அதை நிறைவேற்ற வழக்கிட்டு வெற்றி பெற்ற பெண்ணின் வழக்கையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக 172.17 ஹெக்டேர் நிலங்கள் இருப்பதாகக் கூறிய வேதாந்தா நிறுவனம் உண்மையில் 102.31 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே வைத்திருந்தது எனவும் அங்குள்ள 60 தொழிற்சாலைகளில் இயங்கக் கூடிய நிலையில் உள்ள 51 சிவப்புப் பட்டியல் தொழிற்சாலைகளில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை போல அதிக நச்சு வாய்வுகளை வெளியிடுவது இல்லையென்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றையும் நீதிபதிகள் பதிவு செய்தனர்.

84 மீட்டர் உயரப் புகைக் கூண்டு அமைப்பதற்குப் பதிலாக இரு கூண்டுகளைச் சேர்த்து 60.38 மீட்டர் கோபுர உயரம் அமைந்ததாக ஸ்டெர்லைட் தொழிற்சாலை கூறுவது சரியல்ல எனவும்¸ புகைக் கூண்டின் உயரம் குறைவாக இருந்தால் கந்தக வாய்வு காற்றில் கலப்பது அதிகமாகும் எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இது தவிர காற்றில் வெளியேற்றப்படும் நச்சு வாய்வின் அளவு அதிகப்படுத்துவதும் அந்த நச்சு வாய்வை வெளியேற்றும் கோபுரத்தின் உயரம் ஒற்றை கோபுரமாக 80 மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் என ஐ.ஐ.டி வல்லுநர் பரிந்துரை செய்ததையும்¸ ஆனால் இரண்டு கோபுரங்கள் சராசரி 60 மீட்டர்களில் அமைந்திருப்பது போதாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

முழுமையாக மூடப்பட்ட லாரிகளில் மூலப் பொருள்களை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 18 கிலோ மீட்டர் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை மீறி திறந்த தார்ப்பாயினால் அல்லது பிளாஸ்டிக் தாள்களைக் கொண்டு மூடிய லாரிகளில் மூலப்பொருள் கனிமங்களைப் பாதுகாப்பின்றி எடுத்துச் செல்வதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

செம்பு மூலப் பொருளில் ஆர்சனிக் நச்சு பொருள் இருப்பதால் அது உடல்நலக் குறைவையும் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதையும் துறைமுகத் தொழிலாளர்களுக்கு உடல்நலக் குறைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதையும் அதன் காரணமாகவே குறைந்த தரமுடைய செம்புக் கனிம மூலப்பொருள் “முட்டாள்களின் தங்கம்” என அழைக்கப்படுவதையும் நீதிமன்றம் பதிவு செய்தது.

வேதாந்தா நிறுவனம் இறக்குமதி செய்யும் செம்புக் கனிமத்தின் தரத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சோதனையிடுவதில்லையெனவும் நீதிமன்றம் கூறியது.

சுற்றுச்சூழல் உணர்வற்ற வேதாந்தா நிறுவனம் இன்று வரையில் பசுமை வளைய நிபந்தனைகளை கடைப்பிடிக்கவில்லையெனவும் 1995-லிருந்து 2018 வரை முறையான அனுமதியில்லாமல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்கியது அதிர்ச்சி தருகின்ற உண்மையெனவும் நீதிபதிகள் குறிப்பிடுகின்றனர். தீர்ப்பின் 516-ஆம் பத்தியில் பல்வேறு நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாய உத்தரவுகளின் அடிப்படையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்கியதையும் இசைவாணை இல்லாமலேயே 01.04.2000 முதல் 18.04.2005 வரை தொழிற்சாலை இயங்கியதையும் 16 வருடங்கள் 92 நாட்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணை இல்லாமல் இயங்கிய ஸ்டெர்லைட் தொழிற்சாலை 10 வருடங்கள் 2 மாதங்கள் 15 நாட்கள் இடர்தரும் கழிவு மேலாண்மை அனுமதி இல்லாமல் இயங்கியதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை கண்காணிக்க வேண்டிய, ஒழுங்குப்படுத்தக்கூடிய¸ சீர்செய்யக் கூடிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒழுங்குப்படுத்துவதற்கு மாறாக கையறு நிலையில் இருந்ததையும்¸ ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் முந்தைய நடத்தைகளை கருத்தில் கொண்டு அரசு அதை மூட உத்தரவிட்டதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

2017-2018-ஆம் ஆண்டுகளில் செம்பு உற்பத்தியின் போது துணைப் பொருளாக உருவான 721.59 மெட்ரிக் டன் ஆர்சனிக் கனிமத்திற்குக் கணக்கு இல்லையென்றும் அந்த ஆர்சனிக்கானது சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் எனவும், வேதாந்தா நிறுவனம் செம்பு கனிமத்தை வேறு வேறு நாடுகளில் இருந்து பெறும் போது அதிலுள்ள ஆர்சனிக் வேதி பொருளின் அளவு மாறுபடும் எனவும் ஆர்சனிக் ஒரு இடர்தரும் கழிவுப் பொருள் எனவும் இடர்தரும் கழிவுப்பொருளின் மேலாண்மை அனுமதியில்லாதப் போதிலும் செம்பு உற்பத்தியின் துணைப் பொருளாக உருவான ஆர்சனிக் எவ்வித கட்டுப்பாடுமின்றி வெளியேற்றப்பட்டதையும் 2004-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலை வளாகத்திலேயே ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள ஆர்சனிக் அடங்கிய செம்பு கழிவுகள் குவித்து வைக்கப்பட்டதையும் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறமாலேயே ஆலை விரிவாக்கப்பட்டு இருந்ததால் நீர் மற்றும் காற்றுச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமென நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.

இடர்தரும் கழிவுகளை கையாளும் உட்கட்டமைப்புகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இல்லையென்பதையும் குவித்து வைக்கப்பட்டுள்ள செம்புக் கழிவுகளிலிருந்து கழிவு நீர் கசிவு ஏற்படுவதால் அவற்றிலிருந்து ஆர்சனிக் கசிந்து நிலத்தை அடைவதையும் மறுக்க முடியாது எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

இடர்தரும் கழிவுகளை மகராஷ்ட்டிராவில் உள்ள திருவாளர் சுகான்ஸ் கெமிக்கல் நிறுவனத்திற்கு  கொடுத்தப் போதிலும்¸ சுகான்ஸ் கெமிக்கல் நிறுவனம் பெருமளவிலான இடர்தரும் கழிவுகளை கையாள அனுமதிப் பெறவில்லையெனவும்¸ தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இடர்தரும் கழிவு மேலாண்மை விதிமுறைகளை பின்பற்றவில்லையெனவும்¸ சுகான்ஸ் கெமிக்கல் நிறுவனத்தின் கழிவு கையாளும் திறன் நிக்கல் கழிவுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்ட கழிவு மேலாண்மை நடைமுறைகள் திருப்தியளிப்பதாக இல்லையெனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மார்ச் 23, 2013 அன்று உருக்காலை கூரையில் குளிரூட்டி குழாயில் ஏற்பட்ட ஓட்டைக் காரணமாக உருக்காலை மூடப்பட்டதாகவும் அதிகாலை 4 மணியளவில் மாற்று வழியில் செம்புக் கரைசல் செலுத்தப்பட்டதாகவும் அந்நேரத்தில் காற்றின் திசையால் கந்தக வாய்வு தூத்துக்குடி நகருக்குள் புகுந்து பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பு தெரிவிக்கிறது. அந்நேரத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றுக் கவனிப்பு மையத்துடன் ஸ்டெர்லைட் ஆலையின் கந்தக வாய்வு வெளியேற்றக் கண்காணிப்பு கருவியுடன் இணைக்கப்படவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையின் காற்று வாய்வு வெளியேற்ற அளவு குறித்த அறிக்கைகள் கையால் எழுதப்பட்டதாக இருப்பது மிகச்சிறந்த தொழில்நுட்பங்களைத் தங்களது தொழிற்சாலையில் புகுத்தியதாகக் கூறியப்போதும் வேதாந்தா நிறுவனத்தின் அறிக்கைகள் கையால் எழுதப்படுதப்பட்டதாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை எனவும் கந்தக வாயு வெளியேறிய நிகழ்வுக்காக 5 நாட்கள் 133 குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி மாவட்ட நிர்வாகத்தால் ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டு இருந்ததையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஸ்டெர்லைட் நிறுவனம் கந்தக வாய்வு கசிவின் போது தங்கள் நிறுவன மென்பொருள் சரிசெய்வதற்காக சில பராமரிப்பு வேலைகளை செய்ய வேண்டிய இருந்ததால் அவ்வாறு சரி செய்வது வரையில் தங்களது மென்பொருளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மென்பொருள் அமைப்புடன் இணைக்க முடியவில்லை என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என்பதும் காற்றின் தர பரிசோதனை கருவியானது கூடுதல் அளவு எதையும் பதிவு செய்யவில்லை என்று கூறுவது ஸ்டெர்லைட் நிறுவனத்தை பொறுப்பிலிருந்து விடுவிக்காது எனவும் 5 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பொது மக்களை கண் எரிச்சல் ஏற்பட்டு அவர்கள் மருத்துவர்களிடம் சென்றதும் பொது மக்களைப் பரிசீலித்த மருத்துவர்களும் வாக்குமூலங்கள் கொடுத்திருப்பது அந்நிகழ்வை உறுதி செய்கிறது எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

ஐந்து நாட்கள் தொழிற்சாலையை மூடி மறுபடியும் தொடங்கியதை மாவட்ட நிர்வாகம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குத் தெரிவிக்கவில்லை என்றும் 2008-ஆம் ஆண்டில் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் சமூக மருந்தியல்; துறையில் நடத்திய ஆய்வறிக்கை ஒன்றில் தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் 80,725 பேர்களைப் பரிசோதனை செய்ததில் மூளைக் கட்டிகள் ஏற்படும் விகிதம் ஆயிரக்கணக்கான மடங்கு தேசிய அளவைவிட அதிகமாகவும் 12.6 விழுக்காடு மரணங்களையும், நரம்பியல் நோய்களையும் பிற நோய்களையும் கண்டறிந்தனர்.

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தங்களது 4,000 தொழிலாளர்களுக்கு எவ்வித சுகாதார இடர்பாடுகளும் நேரவில்லை என்றக் கூற்றை நிராகரித்த நீதிமன்றம் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியின் அறிக்கையை ஏற்றுக் கொண்டது.

எம்.சி.மேத்தா¸ வேலூர் சிட்டிசன் வெல்பர் அசோசியேஷன் வழக்கு¸ இந்தியன் கவுன்சில் பார் லீகல் ஆக்சன் வழக்கு¸ திருப்பூர் டையிங் அசோசியேஷன் வழக்கு போன்ற ஏராளமான வழக்குகளை அலசி ஆராய்ந்த உயர்நீதிமன்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொருளாதார நலன்களை விட மேலானது என கூறியது. முன்னெச்சரிக்கைக் கோட்பாடு தங்கள் வழக்குக்குப் பொருந்தாது என்ற ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வாதத்தை மறுத்த உயர்நீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு மாசுப்படுத்துபவர் காசுக் கொடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டின்படி ரூ.100 கோடி ஸ்டெர்லைட் நிறுவனம் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள்¸ ஆலையை மூடும் உத்தரவு பொது மக்கள் போராட்டத்தின் விளைவால் முழங்காலில் தட்டினால் காலை உதறும் நிலைபோல நிகழ்ந்தவை அல்ல என்றும்¸ ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் உலா வந்த செய்திகளை வதந்திகள் எனக் கூறுவதை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

1997-லிருந்து 2018 வரையில் தொழிற்சாலை வளாகத்தில் நடந்த ஏராளமான விபத்து மரணங்களையும் நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம் நாட்டின் செம்பு தேவையை இறக்குமதியும் உள்நாட்டில் உள்ள வேறு தொழிற்சாலைகளும் நிறைவு செய்யும் என்ற மாநில அரசின் வாதத்தையும், மாநில அரசோ அல்லது மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ கெட்ட நோக்கத்தினால் தொழிற்சாலை மூடி விட்டதாகக் கூறாதாதக் காரணத்தாலும், மாசுக்கட்டுப்பாட்டு  வாரியத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிறுவனங்கள் மீறியதாலும் தூத்துக்குடியைத் தவிர மகாராஷ்டிராவிலும் இதே போல் மாசு ஏற்படுத்தியதால் மக்கள் கிளர்ச்சியால் தொழிற்சாலை அங்கிருந்து அகற்றப்பட்டதையும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பதிவு செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டங்கள் ஒரு சிலரால் மட்டும் எடுக்கப் படுவதாகவும், தூத்துக்குடி சென்னையை விடப் பாதுகாப்பானது என்ற ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பத்தாவது தொகுப்பில் இதுகாறும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொடுத்தப் புகார்களை கருத்தில் கொண்ட நீதிபதிகள் மத்திய அரசின் புள்ளி விவரங்களின் படியே தூத்துக்குடி நகர் இந்தியாவிலேயே மாசுபட்ட நகர்களில் தமிழ்நாட்டிலுள்ள ஒரே நகராக விளங்குவதையும்¸ எனவே தூத்துக்குடி சென்னையை விடப் பாதுகாப்பானது என்ற வாதம் தவறானது எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

திருமிகு.பாத்திமா என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு 21547/2019 ஆலையை முற்றிலுமாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற வேண்டுகோளைக் கொண்டிருந்தது. அந்த நீதிப்பேராணையானது மதுரை உயர்நீதிமன்றத்தில் சிப்காட் நிறுவனம் நில ஒப்படைப்பை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த நீதிப்பேராணையுடன் மதுரையில் விசாரிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

மேலும், காற்று மற்றும் தண்ணீர் சட்டங்களின் கீழ் இசைவாணைகளைப் புதுப்பிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுகள் செல்லும் என உறுதி செய்தது. இது தவிர தொழில் பாதுகாப்பு இணை இயக்குநர்¸ பாய்லர் இயக்குநர்¸ தீயணைப்புத் துறை இயக்குநர் ஆகியோர் ஆலைக்குக் கொடுத்த அனுமதியை ரத்து செய்ததையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.

இறுதியாக  ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்த நீதிப்பேராணையையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

படிக்க :
♦ அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !

♦ ஸ்டெர்லைட் : வேதாந்தாவிற்கு வளைந்து கொடுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் !

இந்தியாவில் 60 விழுக்காடு மருத்துவ உயிர்வளி உற்பத்தி செய்யும் ஐனாக்ஸ் போன்ற தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கும்போது, உயிர்வளி உற்பத்திக்காக 22 வருடங்கள் அனுமதிப் பெறாமல் சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தி காற்றுச்சட்ட விதிமீறலுக்காக மூடப்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலை தற்காலிகமாகத் திறக்கப்பட விடியல் தரப்போகும் கட்சிகளும் ஆதரவளித்தது சரியான முடிவாகத் தெரியவில்லை. விடியல் வேதாந்தாவிற்கா என நான்கு மாதங்களுக்கு ப்பின்னரே தெரியும்.

ஆகஸ்டு 18, 2020 அன்று இந்தியா சுற்றுச்சூழல் சட்ட வரலாற்றில் நிலைத்து நிற்கும் தீர்ப்புகளில் ஒன்றாக உயர்நீதிமன்றம் வழங்கியது. அத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் மாற்றாது என்று நம்புவோமாக!

தி.லஜபதி ராய்
மதுரை-20

30.04.2021

(நன்றி நவிலல் :உதவிய தோழர்கள் புஷ்பவள்ளி, நர்கிஷ், சீனி சையத் அம்மா, பாலமுருகன் ஆகியோருக்கு நன்றி)

நன்றி : Lajapathi Roy முகநூலில்

disclaimer

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், மக்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதைக் காரணமாக வைத்து, ஆக்சிஜன் தயாரித்து தருகிறேன் என்ற பெயரில் தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்படுகிறது வேதாந்த குழுமம். அதற்கு அரசியல் கட்சிகள், உச்ச நீதிமன்றம், மத்திய-மாநில அரசுகள் அனைத்து துணை நிற்கிறது.

தூத்துக்குடி மக்களை கேன்சரில் சாகடித்த, காற்றை நஞ்சாக்கிய, எதிர்த்து போராடிய மக்களை கைக்கூலி அரசை கொண்டு சூட்டுக்கொன்ற ஸ்டெர்லைட் தற்போது மக்களுக்கு ஆக்சிஜன் தருகிறேன் என்று சொல்வது ஏமாற்று என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணில் இருந்து நிறந்தரமாக அகற்ற வேண்டும் என்பதே அவர்களின் போராட்ட முழக்கம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தரமாக அகற்ற கோரும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலம், புரட்சிகர கலைக்குழு தோழர்கள் பாடிய பாடலை காணொளி வடிவில் வெளியிடுகிறோம்!

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !

பாடல்இசை :
புரட்சிகர கலைக்குழு, தருமபுரி
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
செல்: 97901 38614

சமூக மாற்றத்திற்கான புரட்சிகர பாடல்களை தொடர்ந்து கொண்டுவர நிதி கொடுத்து ஆதரவு தாருங்கள் !

பெயர் : Gopinath P
கணக்கு எண் : 6720415617
வங்கி விவரம் : Indian Bank, Pennagaram Branch
IFSC NO : IDIB000P076

பாடல் வரிகள் :

வீரவணக்கம் ! வீர வணக்கம் !
ஸ்டெர்லைட் போரில் உயிர்நீத்த
தியாகிகளுக்கு வீரவணக்கம் ! (2)

விடமாட்டோம் விடமாட்டோம்
ஆலையை திறக்க விடமாட்டோம் (2)

தூத்துக்குடி தியாகிகளின்
உதிரம் இன்னும் காயல
ஸ்டெர்லைட்டை விரட்டாமல்
எதிர்காலமே இல்ல இல்ல (2)
கட்சிகளெல்லாம் ஒரே கூட்டணி
கார்ப்பரேட்டுக்கு கைக்கூலி (2)

மாண்டுப்போன தியாகிகள் உயிறு
கேள்வி கேக்குது பதில்சொல்
பதில்சொல் பதில்சொல்
கேள்வி கேக்குது பதில்சொல் (2)

மீண்டும் வருது நச்சுக்காத்து
நிதீமன்றம் அடிக்குது கூத்து (2)
மக்களுக்கில்ல மக்களுக்கில்ல
கலெக்டரும் போலீசும்
அடியாளு அடியாளு (2)
கார்ப்பரேட்டுக்கு அடியாளு (2)

ஆக்சிஜனை கொடுக்கிறேனு
கதை அலக்கிறான் டி.வி.யில
விஷ காத்துல கொன்னவன்
நல்ல காத்து கொடுக்கிறானாம் (2)
கேலிக்கூத்து கேலிக்கூத்து
கைக்கூலிகளின் கேலிக்கூத்து (2)

உதவது உதவாது
பாராளுமன்றம் உதவாது
இறங்கிடுவோம் இறங்கிடுவோம்
வீதியில் உடனே இறங்கிடுவோம். (2)

வீடியோ ஆக்கம்
வினவு

கொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி? || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கோவிட்டுக்கு பின்னால் உள்ள உளவியல் சிக்கல்
எப்படி மீள்வது ?

ங்கு நம் சமூகத்தில் கொரோனாவை இரண்டு விதமாக அணுகுகிறார்கள். நோய் தொற்று வரும் வரை கொரோனா என்ற ஒன்றே இல்லை என்பது போலவும், கொரோனா வந்து இறப்பவர்களை ஏளனம் செய்தும், கொரோனா நோயை வைத்து கேலி பேசியும், இது இலுமினாட்டி சதி பொய் புரட்டு என்று கண்ட கதைகளையும் படித்து விட்டு அலட்சியத்துடனே பொழுதைக் கழிப்பார்கள். ஒரு நாள் இவர்களின் அலட்சியத்தின் விளைவால் தொற்றை அடைந்த பிறகு, உலகமே இருண்டது போலவும் மரணம் நெருங்கிவிட்டதைப் போலவும் அழுது அரற்றுவார்கள்.

படிக்க :
♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

♦ கோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

நான் கூறுகிறேன். கொரோனா பெருந்தொற்றை அதன் சரியான தன்மையோடு அணுகத் தொடங்கிவிட்டால் நம் மனம் சஞ்சலமடைவதை தவிர்க்கலாம். கொரோனா தொற்று என்பது எளிதில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்பதை மனதார ஏற்க வேண்டும். கோவிட் நோயின் அறிகுறிகள் தோன்றினால் உடனே பரிசோதனை செய்து நோயைக் கண்டறிதல் வேண்டும்.

கோவிட் நோய் ஏற்பட்ட அனைவரும் மரணமடைவதில்லை என்பதையும் மனதில் பதிய வைக்க வேண்டும். கண்டறியப்படும் ஒவ்வொரு 100 கொரோனா நோயாளியிலும் 1.2 பேர் மட்டுமே மரணமடைகிறார்கள். எனவே, நோய் தொற்றும் அனைவரும் மரணமடைந்து விடுவோம் என்று எண்ணுவது தவறான எண்ணமாகும். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு 100 நோய் தொற்றாளரிலும் 80 பேருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாமலோ அல்லது மிகச்சாதாரண அறிகுறிகளுடன் அடுத்த நிலைக்குச் செல்லாமலே எந்த சிகிச்சையும் இன்றி நோய் குணமாகின்றது.

எத்தனை உருமாற்றமடைந்த கொரோனா வந்தாலும் இந்த 80:20 விகிதம் இன்னும் பெரிதாக மாறவில்லை. எனவே தொற்று அடையும் ஐந்தில் இரண்டு பேருக்கு சாதாரணமாக கொரோனா விடைபெற்று சென்றுவிடும். இவர்களுக்கு இலவசமாக கொரோனாவுக்கு நோய் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தந்து சென்று விடுகிறது.

எனவே, கொரோனா ஏற்பட்டவர்கள் சந்தோசமாக இருங்கள். உங்களுக்கு தொற்றுக்கான எதிர்ப்பு சக்தி கிடைக்க இருக்கிறது. பதட்டமடையாதீர்கள். பதட்டமடைவதால் இதயம் அதிகமாக துடிக்கும். மூச்சு விடுவது அதிகமாகும். மூச்சு இரைக்கும். இது ஏதோ மூச்சுத் திணறல் நிலை ஏற்பட்டதைப் போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும். அச்சமின்றி எச்சரிக்கை உணர்வுகள் அறிகுறிகளைக் கவனித்து வாருங்கள் அது போதுமானது.

கொரோனா நோயில் உளவியிலில் இன்னுமொருப் பிரச்சனை “தனிமை”. முதலில் தொற்றை அடைந்தவர்கள் முன்கூட்டியே புரிந்துக் கொள்ள வேண்டியது, தொற்றை அடைந்த உங்களுக்கு அதைப் பிறருக்கு கடத்தி விடக் கூடாது என்பதில் பொறுப்புணர்வு இருக்கிறது. அதனால்தான் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கிறீர்கள். தனிமைப்படுத்தப்படும் போது, பெரும்பாலும் தங்களது அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளுக்கும் தேவைகளுக்கும் மனைவியை தாயை நம்பியருக்கும் ஆண்கள்தான் அதிகம் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

காரணம் தங்களை அன்றாடம் கவனித்துக் கொண்ட அந்த கவனிப்பு இல்லாமல் போய் விடுகிறதல்லவா ? அதுதான் அங்கு மன வலிமையில் முதல் அடியாக விழுகிறது. எனவே, இன்றிலிருந்து அவரவர் வேலையை அவரவர் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். இது கொரோனா தனிமைக் காலத்தில் மனவலிமையுடன் இருக்க உதவும்.

அடுத்து நோய் குறித்த எச்சரிக்கை உணர்வு மட்டும் இருந்தால் போதும். அச்சமின்றி தனிமைக் காலத்தில் தங்களுக்கு விருப்பமான முறையில் காலத்தைக் கழிக்கலாம் விருப்பமான நாவல் / புத்தகங்களைப் படிக்கலாம். விருப்பமான திரைப்படங்களை ஓடிடி தளங்களில் பார்க்கலாம். முகநூலில் அதற்கு ரிவியூ எழுதலாம். விருப்பமான இசை அமைப்பாளரின் பாடல்களை கேட்கலாம். சமய நூல்கள் படிக்க விரும்புபவர்கள் அவற்றை படிக்கலாம்.

முகநூல்/ வாட்சப் செயலிக்கு வருவது மன அமைதியை சீர்குலைப்பதாக தோன்றினால் அந்த செயலிகளை தனிமை காலங்களில் டெலிட் செய்துவிடலாம். தயவு செய்து கூகுள் மூலம் கோவிட் நோய் குறித்த தகவல்களை தேவைக்கு மீறி படித்து மன அமைதி குலையும் நிலைக்குச் செல்ல வேண்டாம்.

வீட்டில் தனிமைப்படுத்திக்  கொள்ளும் போதும் உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருடன் / செவிலியருடன் தொலைப்பேசியில் தொடர்பில் இருப்பது சிறந்தது. தினமும் ஒரு முறை பேசலாம். வீட்டில் உள்ள பிறரிடம் தேவையான இடைவெளியை பேணி பேசிக் கொண்டிருக்கலாம். மருத்துவமனையில் தனிமை படுத்திக் கொண்டிருந்தால் வீடியோ கால் செய்து உறவுகளுடன் பேசலாம்.

இவையனைத்துக்கும் மேல் மன உளைச்சல் / மன அமைதி குலைந்தது போலத் தோன்றினால் உடனே சைக்கயாட்ரிஸ்ட் (மனநல மருத்துவர்) சைக்காலஜிஸ்ட் (மனநல ஆலோசகர்) உதவியை நாடவேண்டும். தேவைப்பட்டால் கட்டாயம் மன அமைதி மருந்துகள் தேவைப்படலாம்.  தன்னை வருத்திக் கொள்ள வேண்டும் / தன் உயிருக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றினால் உடனே மனநல மருத்துவரை அழைத்துப் பேசிட வேண்டும்.

உடனே மருந்துகள் வழங்கினால் இந்த நிலையில் இருந்து சரியாக முடியும். மிகவும் தேவைப்பட்டால் இவர்களுடன் ஒரு உறவினரை போதுமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் இருக்கவும் அனுமதி அளிக்கலாம்.

படிக்க :
♦ விவேக் மரணமும் கோவிட் தடுப்பூசியும் || ஷாஜஹான்

♦ கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம் || ஜயதி கோஷ் || கணியன்

கொரோனா சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்தவர்களை உறவினர்கள் சிறப்பான அன்பைப் பொழிந்து வரவேற்க வேண்டும். அவர்கள் மீது அருவருப்பு செய்து ஒதுக்கக் கூடாது. தனிமைக் காலத்தை முழுமையாக முடித்தவர்களிடம் இருந்து நோய் பரவாது எனவே, ஒதுக்குதல் அவசியமற்றது.

கொரோனா நோயாளிகளை உடலால் தான் தனிமைப்படுத்தி வைக்கிறோமே அன்றி, மனதால் அரவணைப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். மீண்டும் கூறுகிறேன், கொரோனா என்றாலே “மரணம்” என்று அர்த்தம் இல்லை. தயவு செய்து அஞ்சாதீர்கள். எச்சரிக்கை உணர்வு போதுமானது. அலட்சியம் ஆபத்தானது அச்சம் தேவையற்றது. மன நலம் முக்கியமானது.

நன்றி !

முகநூலில் : Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை

கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

கொரோனா தாக்குதல் : அவலத்தின் உச்சத்தில் இந்திய மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி மற்றும் அரசியல் கட்சிகள் !

உலகின் மிகப் பெரிய நாடான இந்தியாவில் தடுப்பூசிகள் மட்டுமல்ல, ஆக்சிஜன், ரெம்டெசிவிர், ஃபாவிபிராவிர், ஐவெர்விமெக்டின், டாகஸ்சைக்ளின், ஆஸித்ரோமைசின், ஸின்க் அடிப்படையாகக் கொண்ட துணைப்பொருள்கள், பி.பி.இ கிட்ஸ், ஆம்புலன்ஸ்கள், மருத்துவனைப் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், RT-PCR பரிசோதனை சக்தி, சுடுகாடுகள் எல்லாமே பற்றாக்குறையாகவே இருப்பதையும், இதன் காரணமாக மக்களின் கொடுமையான அனுபவங்களையும் சமூக ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன.

தினமும் பல்வேறு தரப்பினரிடம் விவாதம் என்ற பெயரில் பேசி வரும் மோடியோ, நாடு எல்லாவற்றிலும் சிறப்பாக இருப்பதாக கூறுவதுடன் பிரச்சனைகளை சந்தித்து வெற்றி பெறப்போவதாக இரண்டு கைகளையும் உயர்த்தி கர்ஜிக்கிறார். ஆனால், அதற்கான எந்த திட்டமும் இதுவரை மோடியிடம் இல்லை என்பது மட்டுமல்ல, இந்தியாவின் இத்தகைய அவல நிலைக்கு காரணமே மோடி தான் என்பதை, டைம்ஸ் பத்திரிக்கை உட்பட அயல்நாட்டு பத்திரிக்கைகள் அம்பலபடுத்தி வருகின்றன.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?
♦ போர்கால அடிப்படையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பொதுத்துறை ஊழியர்கள் !

ஊருக்கே வெளியே இருந்த இடுகாடுகள், பூங்காக்களிலும் மைதானங்களிலும் காலிமனைகள் உட்பட இடம் மாறிவிட்டன. இதுவும் பற்றாக்குறையாக இருப்பதால் எரியூட்டப்படுவதற்குப் பிணங்களை வரிசையாக வழியெங்கும் வைத்திருக்கும் அவலங்களை அனைத்து ஊடகங்களும் காட்டுகின்றன. தகனம் செய்யும் தளங்களில் தொடர்ந்த எரியூட்டுவதன் காரணமாக அதிலிருக்கும் உலோக தளங்கள் உருகி வழிகின்றன.

ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் மருத்துவமனைப் படுக்கைகளுக்காகவும் சுற்றி சுற்றி அலைகையில், நமக்கு அன்பானவர்கள் தெருக்களிலும் சுற்றுச் சுவர்களிலும் எரியூட்டப்படும் இடங்களில் வரிசையில் இடம்பிடித்துப் புதைக்க இடம் இல்லாமல் தூக்கிக் கொண்டு அலையும்போது மனித மாண்புகள் மற்றும் கெளரவங்கள் கிழிந்து கிடக்கின்றன.

இந்தப் பிணக்குவியல்கள் மேலே நின்று கொண்டுதான் ஒரு நபர் ஜனநாயகத்தை காப்பாற்றப் போவதாகப் பேசுகிறார்.

குடும்ப நண்பர்கள், அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் யாராவது சொந்தக்காரர்கள் என ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர்களில் யாராவது ஒருவர் தங்களுடைய உறவினர்களுக்காக, அன்பானவர்களுக்காக, இந்த கொளுத்தும் வெயிலில், உயிர்காக்கும் மருந்துக்காக, ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக, அதிகாலை முதல் நீண்ட வரிசைகளில் கண்களில் ஏக்கத்துடன் நிற்கின்றக் கொடுமையான அவலநிலையை தினம் தினம் ஊடகங்களில் பார்க்கிறோம்.

இந்த அவலங்களில் பெரும்பகுதி தலைநகர் டெல்லியில் மோடியின் கண்களுக்கு எதிராக நடந்து வருகிறது. துல்லியமானத் தாக்குதலை நடத்தியதாகப் பெருமைபட்டுக் கொண்ட மோடி அரசு உயிர்காக்கும்  மருந்துகளை எளிதாகக் கிடைக்க செய்ய அல்லது கள்ளச் சந்தைக்கு கைமாறாமல் இருக்க ஏன் துல்லியத் தாக்குதலைக் கையிலெடுக்கவில்லை ? அதற்கு பதில் தினமும்  ‘வாயால் வடை சுடுகிறார்’ பிரதமர் மோடி.

உலகிலேயே தடுப்பூசிகள் உற்பத்தியில் பெரிய அளவில் இருக்கக் கூடிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றாக்குறை எதனால் ஏற்பட்டது?

கொரோனாவின் முதல்அலை எதிர்பாராதது என்றீர்கள். அதனால், தட்டெடுத்து தாளம் போட சொன்னீர்கள் விளக்கேற்ற சொன்னீர்கள். சங்கு ஊத சொன்னீர்கள். எவ்வித முன்னேற்பாடின்றி திடிரென ஊரடங்கு அறிவித்தீர்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் பிழைப்புக் கெட்டுப்போய் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஆயிரக்கணக்கான மைல்கள் நடக்க நேர்ந்தது.

நடந்தார்கள் என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின்னால் எத்தனை எத்தனை அவலங்கள் ! மாநில எல்லையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் ! அநீதிகள் !  வயதானவர்கள் குழந்தைகள் ! வெட்டவெளியில் ஒதுங்கக் கூட நிழல் இல்லாமல் நடந்தக் கொடுமைகள் ! அதனால் ஏற்பட்ட இறப்புகள் ! தற்கொலைகள் ! சாலை விபத்துகள் ! ரயில்வேப் பாதைகளில் ஓய்வு எடுத்தவர்கள் மருத்துவ உதவி கிடைக்காதவர்கள் ! போலீசின் தாக்குதலால் இறந்தவர்கள் ! பசிப் பட்டினியால் இறந்தவர்கள் ! ஷராமிக் ரயில்களில் இறந்தவர்கள் என ஆயிரக்கணக்கில் அனாதைகளாக இறந்தக் கொடுமை ! இதை விடவும் கொடுமை இந்த புலம்பெயர் தொழிலாளர் பற்றி எவ்வித விவரங்களும் இறப்பு விவரங்கள் புலம்பெயர்ந்த விவரங்கள் மொத்தம் எத்தனை பேர் என்பது உட்பட எந்த விவரத்தையும் தங்களது அரசு பராமரிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் அறிவித்ததுதான்.

ஒரு வைரஸ் பரவலும் அதனால் திடிரென எவ்வித முன்னறிவிப்போ திட்டமோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கும் இந்திய மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு பொருளாதார ரீதியில் பல பத்தாண்டுகள் பின்னோக்கி தள்ளியது. இந்த அனுபவங்கள் எதுவும் மத்திய அரசையோ மோடியையோ சிறிது கூட சிந்திக்க தூண்டவில்லை என்பது இந்தியாவின் துரதிஸ்டம்.

இரண்டாவது அலை மிக வேகமாக உலக நாடுகளில் பரவிய போது இந்தியாவை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் வல்லுநர்கள் மருத்துவர்கள் அபாயத்தை பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தனர். உலக நாடுகள் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துக் கொண்டு மக்களைக் காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருந்த போது, மோடியோ  தேர்தல் திருவிழாவில் நாட்டை மூழ்கடித்து கும்மியடித்துக் கொண்டிருந்தனர். பிணக்குவியல்களின் மேலே நின்றுக் கொணடு ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறேன் என்று தேர்தல் கமிசனும் மத்திய அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த 365 நாட்களும் எந்த அரசியல் கட்சிகளும் மக்களின் துயர் துடைக்க வீதிக்கு வந்துப் போராடவில்லை. அப்பாவி மக்கள் தங்களது பிரச்னைகளுக்காக தாங்களே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்கள் என்பது மிகப்பெரிய அவலம் ! சாவின் வாயிலில் மக்கள் நின்று கொண்டு இருந்த போதும் அவர்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓட்டுகளைப் பறிக்கக் காத்து கிடந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியோ “மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட தேர்தலில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவில் கலந்துக் கொள்ள சொல்லி” ட்வீட் போடுகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் உலகமே கண்டிராத வகையில் 4 லட்சம் புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி எந்த கவலையும் மத்திய அரசாங்கத்தக்கோ அரசியல் கட்சிகளுக்கோ ஏன் மக்களுக்கோ கூட இல்லாமல்தான் இருக்கிறது. இன்றைய தினம் எக்சிட் போல் பற்றிதான் நாடெங்கும் பேச்சாக இருக்கிறது. இந்த நாட்டில் அரசாங்கம் செய்கிறத் தவறுகளைப் பற்றி எந்த விதமான சீரியஸ் நெஸ் சும் மக்களிடம் இல்லாதப் போது இந்த அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றும் வேலையைத்தான் பார்த்து வருவார்கள்.

நாம் எந்தவித கேள்விகளும் கேட்காதபோது தாங்கள் விரும்பும் குரங்காட்டத்தில் தள்ளிவிடத்தனத்தான் பார்ப்பார்கள். இதைத் தாண்டி ஒரு அரசாங்கம் இப்படிப்பட்டதொரு பேரழிவு காலத்தில் மக்களுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் தான் சார்ந்திருக்கக் கூடிய கட்சிக்கு முழுநேரமாக வேலை பார்த்த்தை பற்றி எந்தவித கேள்விகளும் கேட்காமல் அனுமதிக்கிறோம். அவர்களுக்காகவே அவர்களுடன் தேர்தல் களத்திலும் குதித்துவிட்டோம்.

நாட்டில் என்ன நடந்தாலும் பரவாயில்லை அதிகாரத்தில் அமர்வது மட்டுமே லட்சியமாகக் கொண்டு பிரதமர் முதல் பரிவாரங்கள் வரை களத்தில் சுற்றி வந்தார்கள். இப்படிபட்டதொரு அபாயகரமானக் காலத்தில் தேர்தல் அவசியமா என எந்த ஒரு அரசியல்வாதியும் கேட்கவில்லை. தேர்தல் நடக்கட்டும் எனக்கு மக்கள் நலன்தான் முக்கியம் பிரச்சாரக் கூட்டங்கள் பேரணிகள் வேண்டாம் என ஒரு பொறுப்பான பிரதமர் கூறியிருக்க வேண்டாமா? பீகாரில் தேர்தல் நடந்தது. மத்தியபிரதேசத்தில் 28 இடங்களுக்கான உ.ப தேர்தல் நடந்தது.

இந்த 28 எம்.எல்.ஏ-க்களையும் விலைக்கு வாங்கி காங்கிரசு ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றியது பாஜக. இதுவும் இதே காலக் கட்டத்தில்தான். தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி என ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதுவும் மேற்கு வங்கத்தில் எட்டுக் கட்டங்களாக எந்தப் பாதுகாப்பு திட்டங்களும் இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டது. அதனுடைய விளைவுதான் இன்றைக்கு இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது கொரோனா.

பிரச்சாரத்திற்காக மட்டுமே ஒவ்வொரு மாநிலத்திலும் ரூபாய் 400 முதல் 500 கோடிகள் வரை செலவிடப்பட்டுள்ளது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் கூட ரூபாய் 25 முதல் 50 கோடி செலவிடப்பட்டுள்ளது. இப்படி ஆயிரக்கணக்கானக் கோடிகளை வீணாக்கியதற்குப் பதிலாக நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகள் செய்திருக்கலாம். ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தியை பெருக்கி இருக்கலாம். இருக்கும் மருத்துவமனைகளில் வசதிகளை அதிகப்படுத்தி இருக்கலாம். உயிர்காக்கும் மருந்துகளை மக்களுக்கு எளிதாகக் கிடைக்க செய்திருக்கலாம். இப்படி எத்தனையோ ‘லாமை’ செய்திருக்கலாம். செய்திருக்க முடியும்.

இந்த கொரோனாக் காலக்கட்டத்தில் பிரதமரின் வேலை இந்த நாட்டு மக்களின் நலனை காப்பதுதான். அவரது அமைச்சரவை சகாக்களின் வேலையும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவம் உட்பட அனைத்தும் சரியாகக் கிடைக்கிறதா என்பதைக் கண்காணித்து சரிசெய்வதுதான்.

வேறு என்ன வேலைகளுக்கு மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து வரிகள் கட்டி அமர வைத்தனர் ? ஆனால், இவர்களெல்லோரும் கடந்த ஒரு ஆண்டாக என்ன செய்தார்கள் ? தேர்தல் திருவிழாவில் குதித்து விட்டார்கள். இந்த அபாயகரமானக் காலகட்டத்தில் எதை செய்திருக்கக் கூடாதோ இந்த காலகட்டத்தில் எப்படி மக்களைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ அதே காலகட்டத்தில் மக்களை நரபலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இதன் விளைவைத்தான் ஒவ்வொரு மருத்தவமனையின் வாசலிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பீகார் தேர்தலுக்காக 2020 அக்டோபரிலிருந்து நவம்பர் வரை பிரதமர் மட்டுமே 12 பேரணிகளை நடத்தியிருக்கிறார். மேற்கு வங்கத்தில் 18 பேரணிகள், அசாமில் ஏழு. தமிழகத்தில் ஏழு தேர்தல் பிரச்சார கூட்டங்கள். கேரளாவில் ஐந்து. புதுச்சேரியிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள். மொத்தமாகக் கிட்டத்தட்ட 50 பேரணிகள். ஒரு பிரதமர் தனது மக்கள் கொடூரமான நோய் தொற்றில் சிக்கி சீரழிந்துக் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும்போது 50 நாட்களை தான் சார்ந்த கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் செலவழித்திருக்கிறார்.

அதே நாட்களை மக்களைக் காப்பாற்றத் திட்டங்கள் தீட்டி நிறைவேற்ற செலவழித்திருந்தால் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம். உள்துறை அமைச்சர் முதல் பன்னிரண்டு அமைச்சர்கள் வரை தங்களது முழு நேரத்தையும் தேர்தல் வேலைகளுக்கு மட்டுமே செலவழித்துள்ளார்கள். லட்சக்கணக்கில் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்கள் குவிக்கப்பட்டனர். பேரணிகளுக்கும் ஓட்டு வேட்டைக்கும் மக்கள் லட்சக்கணக்கில் அழைத்துவரப்பட்டனர். எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் அவர்கள் திரும்ப சென்ற போது நாடு முழுதும் வைரஸ்களும் பயணித்தன.

அது மட்டுமா? கொரோனா பரவல் உச்சத்தை நோக்கி பயணித்தபோது உத்திரகாண்ட் கும்பமேளாவில் ஒரே சமயத்தில் முதல் நாள் 35 லட்சம் பேர் நதியில் குளிக்கக் கூடினர். மொத்தமாக கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் அங்கே ஒரே இடத்தில் கூடியிருக்கின்றனர்.  மக்கள் கூட்டமாகக் கூடினால் இந்த நோய் தொற்றின் வேகம் அபாயகரமானது கட்டுபடுத்த முடியாதது என்பது தெரிந்தும் நாகரிகமடைந்த எந்த நாடாவது தனது மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் இதை அனுமதித்திருக்குமா?

நெறிபடுத்த வேண்டிய சுப்ரீம் கோர்ட் கடந்த 365 நாட்களாக நாட்டில் நடக்கும் செயல்களை கண்டு கொள்ளவில்லை. இப்படி உலகத் தொற்று அபாய காலத்தில் எப்படி தேர்தல்கள், கும்பமேளாக்கள்  என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்களைக் கூட்டுவதுப் பற்றியெல்லாம் ஒரு கேள்வியைக்கூட சுப்ரீம் கோர்ட், மத்திய அரசாங்கத்தையோ – மாநில அரசாங்கத்தையோ கேட்கவில்லை.

கொரோனோ பரவல் இந்த அளவுக்கு வேகமாக மக்களை தொற்றவும் அதன் விளைவான மரணங்களுக்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

தடுப்பூசிகள் கடந்த 60 நாட்களுக்குள்தான் இந்திய மக்களுக்கு கிடைக்க ஆரம்பித்தது. அதுவும் இந்தியாவில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதித்தது மத்திய அரசு. அதன் விளைவாக உற்பத்தியில் பெரும் பற்றாக்குறை நிலவியது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் வெறும் 10 கோடி பேருக்கு (அதாவது ஒரு சதவீதம் கூட அல்ல) தடுப்பூசி போட்டுவிட்டோம் என்று பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள் மோடியும் பரிவாரங்களும் சங்கிகளும்.

இந்திய மக்கள் தொகையில் 70 சதவிதத்தினருக்காவது தடுப்பூசிகள் போடப்பட்டால்தான் கொரோனா வை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதற்கான நமது தேவை கிட்டத்தட்ட 145 கோடி டோஸ்கள். இப்போதைய நமது உற்பத்தி அளவு மாதத்திற்கே 6 கோடி டோஸ்கள்தான். எல்லாமே நல்ல படியாகப்போனால் 20 முதல் 24 மாதங்கள் ஆகும். அதுவரை மக்களின் உயிரைப் பாதுகாக்கப்போவது யார்? எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம் ! இந்த மலையளவு கடினமானப் பணியை முடிக்க மோடியின் அரசு என்ன தயாரிப்பில் இருக்கிறது?.

விமர்சனம் செய்வோருக்கு இந்தியாவின் எதிரி என்று பட்டம் கட்டி கேவலப்படுத்தவது யோகி போன்றவர்கள் ஆக்சிஜன் இல்லை என்று சொன்னால் தேசப் பாதுகாப்பு சட்டம் பாயும் சொத்துக்களை கைப்பற்றுவோம் என மிரட்டுவது. இப்படித்தான் நடக்கிறது இந்தியாவின் கொரோனாவிற்கு எதிரான இயக்கம்.

இதைப் பற்றி கேள்விகள் எழுப்ப வேண்டிய உள்ளூர் ஊடகங்கள், மெயின்ஸ்டிரீம் ஊடகங்கள் மத்திய அரசாங்கத்துக்கு ஊதுகுழல் வேலை செய்கின்றன. மக்களைப் பார்த்து கேள்வி கேட்கின்றன அறிவுரைகள் சொல்கின்றன !

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நாட்டை நேசிக்கும்படி மோடியின் பரிவாரங்களும் அரசியல்வாதிகளும் நமக்கு அறிவுறுத்துகிறார்கள். ஆனால், இந்த நாடு அவர்களுக்குக் கொடுத்த அன்பின் மற்றும் கண்ணியத்தின் ஒரு பகுதியைக் கூட திருப்பித் தர மறுத்து இழிவுபடுத்துகிறார்கள்.

இன்னும் எத்தனைக் காலத்துக்கு இப்படி ஏமாளிகளாக இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற அக்கறையின்மை மற்றும் அப்பட்டமான அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றுடன் சகித்துக் கொண்டு வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம் ?

படிக்க :
♦ ‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

இத்தனை அனுபவங்களும் நமக்குப் போதிப்பது ஒன்றைத்தான் நமது பிரச்சனைகளுக்கு நாம்தான் போராடியாக வேண்டும். இன்றைக்கு தெருவில் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசைகளில் நிற்கிறோமே இதை விடவாப் போராட்டம் துன்பத்தை தரப்போகிறது ? மாயையைகளை களைந்தெறியுங்கள் !

நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கம் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை  பேசக்கூட அனுமதிக்காது ! அப்போதும், வீதிகளில் நடக்கும் நமது போராட்டங்கள்தான் நமக்கு விடிவை கொடுக்கும் !

உழைக்கும் மக்களுக்குப் போராட்டமே வாழ்க்கை ! வாழ்வதே ஒரு போராட்டமாகத்தான் இருக்கிறது ! இருக்கத்தான் போகிறது ! நாம் என்ன செய்ய போகிறோம் ! ?


மணிவேல்
செய்தி ஆதாரம் : Scroll.in, ROOSTER NEWS

 

கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?

பாரத் பயோடெக்கின் பொது நிதியளிக்கப்பட்ட கோவாக்சின் யாருடைய அறிவுசார் சொத்து ? இந்திய மக்கள் பதில்பெறத் தகுதியானவர்கள்தான்.

ICMR அல்லது அரசாங்கம் அந்த உரிமைகளை வைத்திருக்குமானால் ஒரு உலகத் தொற்று அபாயத்தின் போது, இவை எப்படி தங்களை மதிப்புயர்த்திக் கொண்டன என்பதைப் பற்றி அறிவதற்கான உரிமை இந்திய மக்களுக்கு உண்டு.

சமீபத்தில் பாரத் பயோடெக் மருந்து கம்பெனி அதிகாரப் பூர்வமாக கோவிட்-19 தடுப்பூசி மருந்து கோவாக்சின் விற்பனை விலையை அறிவித்தது. மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 எனவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 எனவும் விலையை நிர்ணயித்து வெளியிட்டது. (கொள்ளை லாபத்தில் ரூ.100 குறைத்துக் கொண்டதாக அறிவித்துள்ளது) சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா தயாரித்து வெளியிட்டிருக்கும் தடுப்பூசி கோவிசீல்டு-க்கு அது நிர்ணயித்திருந்த விலையை விட இது மிக அதிகமாக இருந்தது. விமர்சகர்கள் இந்த விலையேற்றத்தை பல்வேறு கேள்விகளுடன் பார்க்கின்றனர்.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு
♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

சீரம் இன்ஸ்டிட்யூட் தனது தரப்பில் ஸவிடிஸ்-பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்ட்ராஸெனிகா-க்கு ராயல்டியாக நிதி தரவேண்டும். அதனிடமிருந்துதான் தடுப்பூசி தயாரிப்பதற்கான லைசன்ஸ் பெற்றுள்ளது. ஆனால், பாரத் பயோடெக் யாருக்கும் ராயல்டியாக நிதி கொடுக்க தேவையில்லை. கோவாக்சின் பெரிய அளவில் இந்தியாவின் இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற அக்கறையின்மை மற்றும் அப்பட்டமான அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றுடன் சகித்துக் கொண்டு வாழ்வது கடினம்தான். அதுதான் உண்மையில் உள்ளது. பொது நிதியைக் கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும்.

கோவேக்சின் SARS-CoV-2 strain-ஐ அடிப்படையாக கொண்டது. புனேயில் உள்ள தேசிய இன்ஸ்டிடியுட் ஆப் வைராலஜி-யில் பிரித்தெடுக்கப் படுகிறது. இந்த நிறுவனம் இந்தியன் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ICMR இந்த ஸ்ட்ரெயினை பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு வளர்ச்சி மற்றும் உற்பத்திக்காக மாற்றித் தருகிறது.

ICMR 10 மே, 2020-ல் விடுத்த ஒரு அறிக்கை இந்த கூட்டியக்கத்தை பின்வரும் வார்த்தைகளில் விளக்குகிறது.

“தடுப்பூசி மேம்பாட்டிற்கானப் பணி இரண்டு பங்குதாரர்கள் இடையே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ICMR-NIV தனது தொடர்ந்த ஆதரவை BBIL (பாரத் பயோடெக்)-ன் தடுப்பூசி மேம்பாட்டு பணிகளுக்கு வழங்கி வரும். ICMR மற்றும் BBIL தடுப்பூசி மேம்பாடு கூடுதலாக விலங்குகள் பற்றிய ஆய்வு மற்றும் தனிநபர் தடுப்பூசிக்கான மருத்துவ மதிப்பீடு ஆகியவற்றுக்கான பணிகளை துரிதபடுத்தும் விதமாக விரைவுவழி அனுமதியை கோரியிருக்கிறது”.

ஊடகங்களில் ஓரு ICMR அலுவலர் கூறும் போது “ICMR and BBIL ஆகிய இரண்டும் தடுப்பூசியின் முன்-மருத்துவ மற்றும் மருத்துவ மேம்பாட்டிற்காகக் கூட்டாக வேலை செய்கின்றன” என்றார். தடுப்பூசியின் மருத்துவ சோதனைகளுக்காக 12 இன்ஸ்டிடியுட்களை தேர்வு செய்திருப்பதாக ICMR அறிவித்துள்ளது.

ICMR மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலானக் கூட்டு வேலை பற்றி பொதுக் களத்தில் கிடைக்கும் விவரங்கள் இவை மட்டுமே. ஆனால், கோவாக்சின் இரண்டு நிறுவனங்களின் நெருக்கமானக் கூட்டுப் பணியின் விளைவுதான் என்று அவை விளக்குகின்றன.

என்றாலும், SARS-CoV-2 திரட்டை பிரித்தெடுத்தல் மற்றும் இதுதொடர்பான குறுக்கீடுகள் பற்றி இதுவரை நமக்கு எதுவும் தெரியாது. தடுப்பூசியை வடிவமைத்தல் மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்தல் ஆகியவற்றுக்கு செலவிடப்பட்ட மொத்த நிதியில் பொது நிதி முதலீட்டின் அளவை எவராலும் அளவிட முடியாது.

ஆனால், தடுப்பூசியை மேம்படுத்துவதில் ICMR-ன் ஈடுபாடு மற்றும் கட்டுபாடும் உண்மையில் கணிசமானது என்பதை வேறுசில குறிகாட்டிகள் தெரிவிக்கின்றன. முதலில் ஜீலை 3-ல் மருத்துவ சோதனைகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு ICMR இயக்குநர் பல்ராம் பார்கவா எழுதியிருந்தக் கடிதத்தின் அம்சங்கள் – பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ஒரு நகல் என குறிப்பிடப்பட்டிருந்தது – செய்திகளில் வந்திருந்தன.

அந்த கடித்ததில் “அனைத்து மருத்துவ சோதனைகளும் முடிந்த பிறகு, பொதுச் சுகாதாரப் பயன்பாட்டிற்கான தடுப்பூசியை ஆகஸ்ட் 15, 2020-க்குள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. BBIL (பாரத் பயோடெக் இன்டர்நேசனல் லிமிடெட்) இந்த இலக்கை அடைவதற்காகவே துரிதகதியில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. என்றாலும், இறுதி விளைவு இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ சோதனைத் தளங்களின் ஒத்துழைப்பைப் பொறுத்தது.” என்றிருந்தது.

அந்த கடிதம் மேலும், எச்சரித்திருந்தது. “குறிப்பிட்டதற்கு மாறாக நடந்துக் கொள்வது மிகுந்த கண்டனத்துக்குரியதாகப் பார்க்கப்படும் என்பதை அன்புடன் கவனிக்கவும். எனவே, இந்த திட்டத்தை அதி உயர்ந்த முக்கியத்துவம் கொடுத்து எந்தவிதக் காலவிரயமும் இல்லாமல் கொடுக்கப்பட்ட கால அளவுகளை கடைபிடிக்க வேண்டும் என நீங்கள் அறிவுறுத்தப் படுகிறீர்கள்” என்றிருந்தது.

மிக தெளிவாக இந்திய அரசு கோவாக்சினை எந்த வகையிலாவது  2020 சுதந்திரதினத்தன்று அடிப்படை மருத்துவச் சோதனைகளை முடிக்கும் முன்னரே  வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதில் மிகுந்த அவசரம் காட்டியது. தனது தோழமை நிறுவனங்களுக்கும் பாரத் பயோடெக் உட்பட ஒரு குறிப்பிட்ட தேதிக்கு முன்னாலேயே அவர்களது பணியினை முடிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது.

எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ICMR-ன் இயக்குநர் ஜெனரல் இப்படியொருக் கடித்ததை எழுதினார் ? நிச்சயமாக தடுப்பூசி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நடைமுறைகள் மீது ICMR சில கட்டுப்பாட்டை  பெற்றிருக்க வேண்டும். அந்தக் கட்டுப்பாட்டின் சரியான தன்மை என்ன ? துரதிர்ஷடவிதமாக நமக்கு தெரியாது.

இரண்டாவதாக, இந்த ஆண்டு ஏப்ரல்-17 இந்திய அரசு மும்பையிலிருக்கும் ஹாஃப்கின் (Haffkine) உட்பட மூன்று புதிய நிறுவனங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க அனுமதியளித்தது. எந்த அதிகாரத்தின் பேரில் இந்திய அரசு பாரத் பயோடெக்கின் கோவாக்சினை தயாரிக்க இந்த நிறுவனங்களுக்கு லைசன்சுகளை வழங்கியது ? அரசின் சாதாரண நிர்வாக அனுமதியா அல்லது தடுப்பூசியின் அறிவுசார் சொத்துரிமையின் உரிமையாளர் என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்ட அனுமதி கடிதமா ?

நிச்சயமாக இந்திய அரசு இப்படிப்பட்ட அனுமதியைக் கொடுப்பதற்கான சில அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, கட்டாய உரிமம் வழங்கும் எந்த ஏற்பாடுகளையும் செய்திருக்காதபோது. அது என்ன அதிகாரம்? துரதிர்ஷடவிதமாக நமக்கு தெரியாது.

மொத்தத்தில் பாரத் பயோடெக் குடனான ICMR-ன் உறவைச் சுற்றி இருக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகள் ஒளிஊடுருவ இயலாநிலையைக் குறிக்கிறது. கோவாக்சினின் அறிவுசார் சொத்துடமையின் உரிமையை யார் வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் பொதுக்களத்தில் இல்லை. இந்த தலைப்பிலான ஒரு முக்கியமானக் கட்டுரையில் அனுப்பிரியா தோன்சக் மற்றும் அனிக் பாதுரி ஆகியோர் இந்த மையமானக் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் பொதுநிதி விதிகள் 2017-ல் இருக்கும் வழிமுறைகளை உதவிபெறும் திட்டங்களுக்கோ அல்லது செயல்பாடுகளுக்கோ நிதி அளிப்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்கள். அந்த விதிகள் இந்த திட்டங்கள் நிறைவேறியவுடன் “இந்த மாதிரியான விசயங்களில் ஒரு நிபந்தனைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். அந்த மாதிரியான நிதிகளில் உருவாக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட பௌதீக மற்றும் அறிவுசார் சொத்துகளின் உரிமையாளர் பற்றி ஸ்பான்ஸரில் காட்டப்பட வேண்டும்” என்கிறது. ICMR-க்கும் பாரத் பயோடெக்கிற்கும் இடையிலான ஒப்பந்தத்திலிருக்கும் நிபந்தனை என்ன ? துரதிஸ்டவசமாக நமக்கு தெரியாது.

தடுப்பூசியை மேம்படுத்துவதற்கான ஆய்வில் பொதுநிதி ஈடுபடுத்தப் பட்டிருக்கிறதா என்பதை அறிய இங்கு ஒரு மாற்று வழி உள்ளது. தடுப்பூசி சம்பந்தமாக வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வுக் கட்டுரைகளில் இதுவரை நிதி ஆதரவுக் குறித்து கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை நம்மால் ஆய்வு செய்ய முடியும். பாரத் பயோடெக் கூற்றுப்படி இன்று வரை கோவாக்சின் மீதான ஆறு சர்வதேச மதிப்பாய்வு இதழ் வெளியீடுகள் இருக்கின்றன. கீழே இருக்கும் அட்டவணையில் ஆறு வெளியீடுகள் மற்றும் நிதி ஆதாரசீட்டுகள் பற்றிய சுருக்கமான வடிவம் உள்ளது.

ஒன்று சுகாதாரம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் அல்லது புனேயிலிருக்கும் தேசிய இன்ஸ்டிடியுட் ஆப் வைராலஜி அல்லது ICMR ஆகியவற்றிலிருந்து நிதி உதவிப் பெற்றிருப்பதை தனது ஆறு கட்டுரைகளில் நான்கில் தெளிவாக அங்கீகரித்திருப்பதை நாம் அறிந்து கொண்டோம். அந்த ஆறு ஆய்வுக் கட்டுரைகளும் பாரத் பயோடெக் மற்றும்  ICMR/National Institute of Virology ஆகியவற்றிலிருந்து ஸ்காலர்ஸ் இணைந்து எழுதப்பட்டவை. ஆறு கட்டுரைகளில் ஐந்தில் ICMR Director General பலராம் பார்கவா ஒரு இணை ஆசிரியர்.

இந்த ஆறு கட்டுரைகளும் நிதி உதவியின் அளவு குறித்து எந்த விவரங்களையும் தரவில்லை. என்றாலும், தடுப்பூசியின் வெற்றிகரமான உருவாக்கத்திற்குக் காரணமாயிருந்த ஆய்வுகளுக்கு பொதுநிதி உண்மையில் செலவிடப் பட்டிருப்பதைப் பற்றி மறுக்க முடியாத ஆதாரங்களை தருகிறது. (பார்க்க ஆங்கில மூலக்கட்டுரை)

இந்திய மக்களில் வரிக் கட்டுவோரின் பணம் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபடுத்தப் பட்டிருந்தால் மத்திய அரசு இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் பொதுவெளியில் வைப்பதுதான் பொருத்தமானது. அரசு அல்லது ICMR கோவாக்சினின் அறிவுசார்சொத்துடமை உரிமையை வைத்திருப்பது உண்மையாக இருந்தால் இன்னொரு கேள்வி எழுகிறது. அறிவுசார் சொத்துரிமை பொது உரிமையாக இருக்கும் போது பாரத் பயோடெக் என்ற ஒரு கம்பெனிக்கு மட்டும் தயாரிப்புக்கானப் பிரத்யோகமான உரிமம் வழங்கப் பட்டிருப்பது ஏன்? தடுப்பூசி தயாரிப்பதற்கான பிரத்யோகமற்ற உரிமங்களை பல உற்பத்தியாளர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை.

தடுப்பூசிகள் பற்றாகுறை மற்றும் அதன் இமாலய விலை ஆகியவற்றுக்கு இவை முக்கியமான காரணமாகும். குறிப்பிட்ட இரு நிறுவனங்கள் மட்டும் இந்திய மக்களின் சோதனையானக் காலத்தில் கொள்ளை லாபம் அடிக்க மோடி அரசு சேவை செய்கிறது என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா?

பின்னதாக, Ocugen ஆகுஜென் போன்ற பல  நிறுவனங்களுடன் அமெரிக்காவில் 100 மில்லியன் டோஸ்ஸ் கோவாக்சின் தடுப்பூசியை வழங்கிட பாரத் பயோடெக் தனது பிரத்யோகமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பாரத் பயோடெக் இந்த மாதிரியான ஏற்பாடுகள் மூலம் பெற்றிருக்கும் லாபத்தில் அறிவுசார் சொத்துரிமையில் பங்குகள் வைத்திருக்குமானால் ICMR தனதுப் பங்கினைப் பெற்றுக் கொள்கிறதா? துரதிஸ்டவசமாக நமக்கு தெரியாது.

உண்மையில் ICMR மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் அனுபவங்கள் Oxford-AstraZeneca ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிகள் இங்கிலாந்தில் பொது உரிமையாக இருந்து தனியார் உரிமையாக மாறியதை நினைவுப் படுத்துகிறது. ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி தயாரிக்க தேவைப்படும் நிதியில் 97 சதவீதம் இங்கிலாந்து அரசு துறைகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இருக்கும் அறிவியல் நிறுவனங்கள் ஐரோப்பியன் கமிசன் மற்றும் பலவேறு அறக்கட்டளைகள் ஆகியவற்றின் மூலமே வந்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆயினும், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தடுப்பூசிகளுக்கு திறந்த வகை உரிம்மேப் பராமரிக்கப்படும் என்று உறுதியளித்ததிலிருந்து பின்வாங்கியது. அஸ்ட்ரா ஜெனிகாவுடன் பிரத்யோகமான ஒரு உரிமத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

நன்கு அறிந்தபடி அஸ்ட்ரா ஜெனிகா அதே தடுப்பூசிக்காக சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியாவுடன் மற்றொரு பிரத்யோகமான ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது அதன்படி கோவிஷில்டு என்ற பெயரில் இந்தியாவில் விநியோகிக்கப்படும். பொது நிதியில் உருவாக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி தனியார் நிறுவனங்களின் லாபமீட்டும் கருவியாக மாறிவிட்டது.

இந்தியா இதே விதியை கோவாக்சினுக்கு அனுமதிக்கக் கூடாது அப்படி நீடித்தால் இன்றிருக்கும் இதே மோசமான நிலைதான் இந்திய மக்களுக்குத் தொடரும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

இந்தியா உடனடியாக செய்ய வேண்டியது கோவாக்சின் தடுப்பூசி சம்பந்தபட்ட அனைத்து உடன்பாடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை தகவல்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ICMR மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் இந்த விசயத்தில் முன்கையெடுக்க வேண்டும்.

ICMR அல்லது இந்தியா அரசாங்கத்துக்கு கோவாக்சினின் அறிவுசார் சொத்துரிமை, உரிமையானதாக இருந்தால் இந்த உலக தொற்று அபாயகரமான நிலைமையில் இந்த அறிவுசார் சொத்துரிமை பொது மக்களின் நலனுக்கு அந்நியமானது பற்றி அறிந்துக் கொள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது மட்டுமல்ல, அதை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடுவதன் மூலம் தடுப்பூசி பற்றாக்குறையை முற்றிலும் போக்க முடியும்.

படிக்க :
♦ ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி
♦ கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ

இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற அக்கறையின்மை மற்றும் அப்பட்டமான அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றுடன் சகித்துக் கொண்டு வாழ்ந்து என்ன சாதிக்க போகிறோம்.

ஏற்கனவே, மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றுக்காக வீதிகளில், அடிக்கும் வெயிலில் வரிசைகளில்தான் நிற்கிறோம். அதை கலைத்து அப்படியே நம்மை ஏமாற்றி கார்ப்பரேட்களின் கையாளாக செயல்படும் மத்திய அரசுக்கு எதிரானப் போராட்டமாக மாற்றுவோம். இரண்டுக்கும் வித்தியாசம் அதிகமில்லை. விளைவுகளோ மலையளவு மாற்றங்கள் நமது வாழ்வில்.


மூலக்கட்டுரை : R. Ramakumar is Professor, Tata Institute of Social Sciences, Mumbai.
தமிழாக்கம் : மணிவேல்
செய்தி ஆதாரம் :
Scroll.in

இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது? || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு

ரு கடுமையான இரண்டாவது அலையின் மத்தியில், இந்தியா ஆகஸ்ட்-க்கு அப்பால் அதன் 45+ மக்கள் தொகைக்கு தடுப்பூசிப் போடுவதைத் தாமதப்படுத்தும் தடுப்பூசிப் பற்றாக்குறையை வெறித்துப் பார்க்கிறது. அரசாங்கம் தவறாக இருக்கவில்லை என்றும் மற்றும் அதன் திட்டமிடலில் மெத்தனமாக இருக்கவில்லை என்றும் நினைத்துக் கொண்டிருந்ததுதான் இப்போதைய நிலைமைக்குக் காரணம்.

மோசமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் உள்ள ஒரு நாட்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் நடுப்பகுதியில் 100 மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்களுக்கு தடுப்பூசிப் போடுவது சாதாரணமான சிறிய விசயம் அல்ல. ஆனால், இதுவரை இந்தியாவில் தடுப்பூசியின் வேகம் பெருந்தொற்றுநோயின் பேரழிவுகரமான இரண்டாவது அலையாக இருக்கக் கூடியதைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு விரைவாக இல்லை. இப்போது தடுப்பூசிகள் பற்றாக்குறையில் உள்ளன.

படிக்க :
♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

♦ போர்கால அடிப்படையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பொதுத்துறை ஊழியர்கள் !

எண்ணிக்கைகள் கணக்கிடப்படவில்லை

தடுப்பூசிப் பற்றாக்குறைக் கணிக்கக் கூடியதாக இருந்தது. இந்தியாவில் உள்ள இரண்டு உற்பத்தியாளர்களான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் தடுப்பூசிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்தது. இவர்களிடமிருந்து நமது தேவைக்கான தடுப்பூசிகளை விரைவாகப் பெற முடியாது என்பது தெளிவாக தெரிகிறது: 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், அத்துடன் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் தொழில் அவர்களை அதிக ஆபத்தில் ஆழ்த்துகிறது. இது சுமார் 400 மில்லியன் மக்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசிப் போடுவதற்கு 800 மில்லியன் டோஸ் தடுப்பூசி தேவைப்படும். மேலும் 10 சதவீதம் வீணாவதாகக் கணக்கில் கொண்டால் 80 மில்லியன் டோஸ் கூடுதலாகத் தேவைப்படும்.

சீரம் நிறுவனம், அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனவாலா-வின் அறிக்கைகளின் அடிப்படையில், ஒரு மாதத்திற்கு சுமார் 60-65 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்கிறது. பாரத் பயோடெக் ஒரு மாதத்திற்கு சுமார் 5 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பெங்களூருவில் ஒரு புதிய உற்பத்தியை தொடங்கத் திட்டமிட்டுள்ளதையும் கணக்கிலெடுத்தால் அது கோடையில் இயங்கும் போது இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

400 மில்லியன் மக்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் 800 மில்லியன் டோஸ்கள் என்ற இலக்கை இந்தியாவில் தற்போதுள்ள உற்பத்தித் திறனைக் கொண்டுப் பூர்த்தி செய்ய முடியாது.

தற்போதைய உற்பத்தி மட்டங்களில் இது இரு உற்பத்தியாளர்களிம் இருந்தும் ஒரு மாதத்திற்கு 65-70 மில்லியன் டோஸ்களைப் பெற முடியும். இந்த விகிதத்தில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, ஒரு சிறந்த மதிப்பீட்டின்படி சுமார் 350 மில்லியன் டோஸ்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கும். ஜனவரி முதல் ஏப்ரல் 1 வரை ஏற்கனவே நிர்வகிக்கப்பட்ட 80 மில்லியன் டோஸ்களை ஒருவர் சேர்த்தால், ஜனவரி முதல் ஜூலை வரை சுமார் 430 மில்லியன் டோஸ்கள் கிடைக்கும்.

சீரம் நிறுவனம் அதன் உற்பத்தியை மே மாதத்திற்குள் 100 மில்லியன் டோஸ்களாக அதிகரிக்க முடியும் என்று நாங்கள் கருதினால் (இது சில காலமாக செய்ய முயற்சிக்கிறது), இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்திற்குள் 500 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் வரை செல்லலாம். இது இன்னும் தேவைப்படும் 800 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது. 400 மில்லியன் மக்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் 800 மில்லியன் டோஸ்கள் என்ற இலக்கை இந்தியாவில் தற்போதுள்ள உற்பத்தித் திறனைக் கொண்டு பூர்த்தி செய்ய முடியாது.

கடந்த ஆண்டு, மற்ற முக்கிய நாடுகள் தங்கள் உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டுத் தேவைகளை (சீனா செய்தது போல்) உற்பத்தித் திறனை விரிவுபடுத்த உதவியிருந்தாலும் அல்லது தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நிதியளித்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகள் செய்து கொண்டிருந்தது போல் முன்கூட்டியே வாங்கும் உறுதிமொழிகளை அளித்திருந்தாலும், இந்தியா தமது தேவைக்கான இலக்கை அடைந்திருக்கலாம். ஆனால், இந்தியா இவ்வாறெல்லாம் செய்யவில்லை.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உள்நாட்டிலேயேக் கண்டுபிடித்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்ய அந்த அமைப்புடன் இணைந்துப் பணியாற்ற பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனத்தை அரசு ஊக்குவித்தது. ஆனால், இது நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்காது என்பது தெளிவாகிறது. சீரம் நிறுவனம் அஸ்ட்ரா ஜெனிகா மற்றும் கோவாக்ஸ் (உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் அமைக்கப்பட்ட உலகளாவிய தடுப்பூசி விநியோக முறை) ஆகியவற்றுடன் விற்பனை ஒப்பந்தங்களை செய்து கொண்டது. மேலும் சீரம்-இன் உற்பத்தியில் குறைந்தபட்சம் பாதி இந்திய பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படும் என்று கருதப்பட்டது.

ஆனால், அரசாங்கமே அதற்கு எத்தனை தடுப்பூசிகள் தேவைப்படும் என்பதைக் குறித்து எந்த முயற்சியும் செய்யவில்லை. ஜனவரி முதல் வாரத்தில்தான் அரசாங்கம் 45 மில்லியன் டோஸ்களுக்கு கொள்முதல் ஆணையை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 100 மில்லியன் டோஸ்களுக்கு மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுவில் கிடைக்காத, ஆனால் சீரம் இன்ஸ்டிடியூட்டின் அளவை விட கணிசமாக குறைவாக இருக்க வேண்டும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் வழங்கப்பட்டன. தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள 400 மில்லியன் மக்களுக்கு இந்த அளவு தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

தேவையான தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் மூலோபாயமும் ஒருபோதும் முழுமையாக வெளியிடப்படவில்லை. பெருந்தொற்றின் இரண்டாவது அலை தொடங்குவதற்கு முன்பு, தேவையான தடுப்பூசிகளின் எண்ணிக்கை சிறியதாக இருந்தது. தேவை மிகவும் சிறியதாக இருக்கும் என்று கருதப்பட்டதால், தற்போதுள்ள திறனுடன் நிர்வகிக்க முடியும் என்று அரசாங்கம் கருதியிருக்கலாம். இப்போது, தேவை மிக அதிகமாகி, அரசாங்கம் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினாலும், தேவைப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவில்லை.

உத்தியோகபூர்வ அறிவிப்புகள்… இந்திய விதிவிலக்கான தன்மை, தவறே இல்லாத தன்மை, சுயசார்பு மற்றும் உலகளாவிய தலைமையின் உருவப்படத்தை உருவாக்க முதன்மையாக வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இருப்பினும், தடுப்பூசிகளுக்குப் பஞ்சமில்லை என்று அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. “பற்றாக்குறைப் பற்றிய கேள்வி எங்கே எழுகிறது? நாங்கள் தொடர்ந்து கண்காணித்து விநியோகத்தை மேம்படுத்துகிறோம்” என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் ட்வீட் செய்தார். பல மாநிலங்களில் உள்ள தடுப்பூசி மையங்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் இருந்தன. அந்த புகைப்படங்களில் பொதுமக்களிடம் தங்களிடம் இருப்பு இல்லை என்ற தடுப்பூசி மையங்களின் நோட்டீஸ்கள் காட்டப்பட்டிருந்தன.

எந்தவொரு குறைபாடுகளையும் ஒப்புக்கொள்ள மறுப்பது தொற்றுநோய் பற்றிய அரசாங்கக் கொள்கையில் ஒரு நிலையான கருப்பொருளாக இருந்து வருகிறது. அமைச்சர்களிடமிருந்து அல்லது மூத்த அரசு ஊழியர்களிடமிருந்து வரும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் முதன்மையாக இந்தியாவானது விதிவிலக்கான, தவறே இல்லாத தன்மை, சுயசார்பு மற்றும் உலகளாவிய தலைமையின் உருவப்படத்தை உருவாக்க வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. (“இந்தியா மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது,” “இந்தியா உலகின் மருந்தகம்,” “தடுப்பூசிகளுக்காக இந்தியாவுக்கு உலகம் நன்றி தெரிவிக்கிறது.”)

உண்மை சற்றே வேறுபட்டது. உலகளவில் கோவிட் நோயாளிகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்படவில்லை. இந்தியா உலகின் மருந்தகமாக இருக்கலாம், ஆனால் அது அடிப்படை மருந்துகளுக்கான மூலப் பொருட்களுக்கு சீனாவை தீவிரமாக நம்பியுள்ளது. தடுப்பூசி ஏற்றுமதிகளைப் பெற்ற நாடுகள் முதலில் நன்றியுள்ளவையாக இருந்தன, ஆனால் இப்போது அதிர்ப்த்தியாக உள்ளன. ஏனெனில் அரசாங்கம் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்தியுள்ளது. குறிப்பாக சீரம் நிறுவனம் கோவாக்ஸ் (COVAX)-க்கான அதன் ஒப்பந்த கடமைகளை நடைமுறைப் படுத்துவதிலிருந்தும், அத்துடன் தடுப்பூசி விநியோகங்களுக்காக சீரம் நிறுவனத்துடன் நேரடியாக ஒப்பந்தம் செய்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் தடுக்கிறது.

இந்திய அரசாங்கம் இதில் எதிலும் செயலூக்கமானப் பங்கை வகிக்கவில்லை அல்லது கோவிட் தடுப்பூசிகளுக்கான சீரம் நிறுவனத்திற்கு நிதி அளிக்கவில்லை.

சீரம் இன்ஸ்டியூட்டின் கோவிஷீல்ட் தடுப்பூசியை ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசி என்று விவரிப்பதுக் கூட தொழில்நுட்ப ரீதியாக சரியானது என்றாலும், முழு உண்மையையும் வெளிப்படுத்தவில்லை. இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய் தடுப்பூசிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் ஒரு சர்வதேசக் குழுவான தொற்றுநோய் தயார் நிலைக்கானக் கூட்டணியான சி.இ.பி.ஐ-யின் ஆரம்ப நிதியுடன் உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பூசியாகும். அஸ்ட்ரா ஜெனிகா, ஆங்கிலோ-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனம், ஆக்ஸ்போர்டு குழுவுடன் உலகளவில் தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகிக்க ஒரு ஒப்பந்தத்தில் நுழைந்தது.

இதையொட்டி அஸ்ட்ரா ஜெனிகா இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்களிடம் இருந்து உறுதியான விநியோகங்களுக்கு ஈடாக தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கும் சோதிக்கவும் உதவுவதற்கு நிதியைப் பெற்றது. அஸ்ட்ரா ஜெனிகா ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை தயாரிக்க சி.ஓ.வி.ஏ.எக்ஸ் இருந்து நிதி பெற்றது.  அஸ்ட்ரா ஜெனிகா இதையொட்டி ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசியின் நூறு கோடி டோஸ்களை உற்பத்தி செய்து விநியோகிக்க சீரம் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியது. அவற்றில், 400 மில்லியன் டோஸ்கள் 2021-இல் வழங்கப்பட இருந்தன. சீரம் நிறுவனம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் ஒரு சர்வதேச தடுப்பூசி கூட்டணியான கவியிடமிருந்து 300 மில்லியன் டாலர்களைப் பெற்றது. இது அதன் கோவாக்ஸ் கடமைகளை பூர்த்தி செய்ய உற்பத்தி வசதிகளை அமைக்க உதவியது.

இந்திய அரசாங்கம் இதில் எதிலும் செயலூக்கமானப் பங்கை வகிக்கவில்லை அல்லது கோவிட் தடுப்பூசிகளுக்கான சீரம் நிறுவனத்திற்கு நிதி அளிக்கவில்லை. அதன் ஒரே உதவி ஒழுங்குமுறை தடைகளை அகற்றுதல் மற்றும் சீரம் நிறுவனம் நாட்டில் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு உரிமம் பெறுவதற்கு முன்பு, 2020-இல் தடுப்பூசியை உற்பத்தி செய்து சேமிக்க அனுமதித்தது.

தடுப்பூசி மைத்ரி தரையில் இறங்குகிறது

தடுப்பூசி மைத்ரி பிரச்சாரம், அதன் கீழ் உலகெங்கிலும் உள்ள 85 நாடுகளுக்கு 64 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது உத்தியோகபூர்வ அறிக்கைகளில் (செய்தி ஊடகங்களில் மீண்டும் மீண்டும் வந்தது). தடுப்பூசி தேசியவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய தலைமையை வழங்குவதற்கும் ஒரு அரசாங்க முன்முயற்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாடுகளில் இந்த ஏற்றுமதிகளில் பெரும்பாலானவை சி.ஓ.வி.ஏ.எக்ஸ் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகாவுக்கு அதன் ஒப்பந்தத்தின் உறுதிப்பாடுகளின் ஒரு பகுதியாக சீரம் இன்ஸ்டிடியூட் விற்பனை செய்கின்றது. எந்தவொரு இந்திய நிறுவனமும் செய்யும் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் அது கடன் பெறவேண்டுமானால், அரசாங்கம் இதற்கு க்ரெடிட் எடுத்துக் கொள்வது அர்த்தமற்றது.

மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை உண்மையில் நன்கொடையாக வழங்கிய உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்: 10.5 மில்லியன் டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன…

அதே நேரத்தில், மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை உண்மையில் நன்கொடையாக வழங்கிய உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்: அண்டை நாடுகளுக்கும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கும் 10.5 மில்லியன் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நன்கொடைகள், குறிப்பாக தெற்காசியா மற்றும் மியான்மரில், சீனாவுடன் செல்வாக்கிற்காக போட்டியிட வேண்டிய தேவையால் உந்தப்பட்டன என்று வாதிடலாம். ஆனால், இந்த நாடுகளில் உள்ள மக்கள் அவசரமாக தேவைப்படும் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்ற உண்மையிலிருந்து இது திசைதிருப்பவில்லை.

எடுத்துக்காட்டாக, இது அமெரிக்காவிற்கு மாறாக உள்ளது. அங்கு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் 20 மில்லியன் டோஸ்கள் வாங்கி வைத்திருக்கிறது. அது பயன்படுத்த வாய்ப்பில்லை. ஆனால், தேவைப்படும் நாடுகளுக்குக் கொடுக்கத் தயங்குகிறது. ஆனால், இந்தியாவின் தடுப்பூசி நன்கொடைகள் பாராட்டத்தக்கவை. சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் வர்த்தக விற்பனையுடன் அவர்களை கிளப் செய்து, அரசாங்கம் ஒரு முக்கிய உலகளாவிய தடுப்பூசி சப்ளையர் என்றத் தோற்றத்தை உருவாக்குகிறது.

ஏப்ரல் 8 ஆம் தேதி பங்களாதேஷின் டாக்காவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த தடுப்பூசியை ஒரு சுகாதார ஊழியர் தயாரிக்கிறார்.

இரண்டாவது அலையின் பாதிப்பு, உள்நாட்டு தடுப்பூசித் திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் உள்நாட்டில் பயன்படுத்தப்படுவதை விட அதிக தடுப்பூசி அளவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது தெரிய வந்தபோது பொதுமக்களிடம் ஏற்பட்ட அவநம்பிக்கை, ஏற்றுமதியை நிறுத்த அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. சீரம் நிறுவனம் வெளிநாடுகளுக்கான அதன் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்த வேண்டியிருந்தது.

இந்த கோடைக்குள் கோவாக்ஸ்-க்கு 240 மில்லியன் டோஸ் தடுப்பூசி வழங்குவதற்கான அதன் வாக்குறுதிய நடைமுறைப்படுத்தவில்லை. அஸ்ட்ரா ஜெனிகாவுடனான ஒப்பந்தங்களையும் அது கைவிட்டது. இதன் மூலம் சீரம் நிறுவனம் அஸ்ட்ரா ஜெனிகா அதன் உலகளாவிய தடுப்பூசி வழங்கல் உறுதிப்பாடுகளில் சிலவற்றை நிறைவேற்ற உதவுவதாக இருந்ததை கைவிட்டுள்ளது. பொதுவாக, அரசாங்கம் எந்த தடையும் விதிக்கவில்லை என்று மறுத்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியைத் தடுக்கிறது.

தடுப்பூசிப் பரிசுகளைப் பெற்று சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் வாங்க திட்டமிட்டிருந்த அண்டை நாடுகள், திடீரென்று தங்கள் தடுப்பூசி விநியோகம் வறண்டு இருப்பதைக் கண்டுள்ளன. உதாரணத்திற்கு நேபாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய அரசாங்கம் நேபாளத்திற்கு 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டை நன்கொடையாக வழங்கியது, நேபாள அரசாங்கம் சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் 20 லட்சம் டோஸ்களை வாங்கியது. அது வாங்கிய அளவுகளில் (குறைந்தபட்சம் பகுதியளவு முன்கூட்டியே பணம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது) இந்தியா ஏற்றுமதியை நிறுத்துவதற்கு முன்பு சீரம் இன்ஸ்டிடியூட் 10 லட்சம் டோஸ்களை மட்டுமே வழங்கியது.

இது நேபாளம் தங்கள் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ்களை தாமதப்படுத்தவும், இளைய வயதினரை உள்ளடக்கும் வகையில் தடுப்பூசியை விரிவுபடுத்தும் அதன் திட்டங்களை நிறுத்தி வைக்கவும் வழிவகுத்தது. சீனா தனது தடுப்பூசித் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்காக 5,00,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசியை வாங்கிய நேபாளத்திற்குத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கானக் கதவைத் திறந்துள்ளது.

உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா ஒரு தலைவராக உருவெடுக்கும் என்று நம்பியிருந்தால், கொள்கையின் திடீர் மாற்றம் நாட்டின் நற்பெயரை உருவாக்க உதவியிருக்க வாய்ப்பில்லை…

ஏற்றுமதியை நிறுத்துவது, சி.ஓ.வி.ஏ.எக்ஸ் திட்டத்தின் கீழ் ஏழை நாடுகளுக்கு விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இதற்காக சீரம் நிறுவனம் முக்கிய சப்ளையராக உள்ளது. உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா ஒரு தலைவராக உருவெடுக்கும் என்று நம்பியிருந்தால், கொள்கையின் திடீர் மாற்றம், நம்பக் கூடிய தடுப்பூசிகளின் ஆதாரமாக நாட்டின் நற்பெயரை உருவாக்க உதவியிருக்க வாய்ப்பில்லை.

‘ஆத்மனீர்பார்’ல் இருந்து விலகிச் செல்கிறது

தடுப்பூசி பற்றாக்குறையின் யதார்த்தம் அரசாங்கத்தை அதன் ‘ஆத்மனீர்பார்’ அல்லது சுயசார்புக் கொள்கையில் இருந்து பின்வாங்க நிர்ப்பந்தித்துள்ளது.

முந்தைய தசாப்தங்களில் நடந்தது போல், ரஷ்யா இந்தியாவின் தடுப்பூசிப் பிரச்சாரத்திற்கு ஒரு உயிர்நாடியை வழங்கக் கூடும். கடந்த ஆகஸ்டு 2020-ல், ரஷ்ய அதிகாரிகள் அதன் ஸ்புட்னிக் V தடுப்பூசியை நாட்டில் விற்பது பற்றியும், உலகளாவிய ஏற்றுமதிக்கான தளமாக இந்திய நிறுவனங்களைப் பயன்படுத்துவது பற்றியும் இந்தியாவை அணுகினர்.

செப்டம்பர் 2020-ல், ஸ்புட்னிக் V-ல் முதலீடு செய்துள்ள ரஷ்யாவின் இறையாண்மை செல்வ நிதியம் நிறுவனமும் (RDIF) டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களும் இந்தியாவில் ஸ்புட்னிக் V-ஐ சந்தைப்படுத்த ஒப்பந்தம் போட்டன. ஸ்புட்னிக் V தடுப்பூசி அவசரப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் டாக்டர் ரெட்டி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு தேவையான இணைப்பு மருத்துவச் சோதனையை ஏற்பாடு செய்தவுடன், இந்தியாவில் 100 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசியை விற்க ஒரு ஒப்பந்தத்தை அறிவித்தது.

இந்த சோதனைகளின் முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஏப்ரல் 13 அன்று தடுப்பூசிக்கு அவசர கால ஒப்புதல் வழங்கப்பட்டது. தடுப்பூசி விநியோகத்தை 100 மில்லியன் டோஸ்கள் அதிகரித்தது. அரசாங்கம் தடுப்பூசியை வாங்கும் விலையில் உடன்படமுடியும்.

உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இந்தியா இப்போது அந்த வரவேற்பு கம்பளத்தை விரித்துள்ளது. ஆனால், இது தடுப்பூசி விநியோகத்தில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெளிவாக இல்லை…

ஸ்புட்னிக் V வருகையானது, ஆத்மானீர்பார் கொள்கையில் இருந்து விலகிச் செல்வதைக் குறிக்கிறது என்றால், அதே நாளில், வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த அனுமதிக்கப்படுவதற்கு முன்பு இந்தியாவில் இணைப்பு சோதனைகளை நடத்த வேண்டும் என்ற விதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ரத்து செய்தபோது, இரண்டாவது, இன்னும் திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சோதனைகளுக்கான தேவை நீக்கப்படவில்லை என்றாலும், இந்தியாவில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்ட பிறகு இதைச் செய்ய முடியும் (இது உண்மையில் எவ்வாறு அடையப்பட வேண்டும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும்).

அரசாங்க தடுப்பூசி கொள்கையில் ஒரு முக்கிய நபரான வி.கே.பால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஜப்பான் அல்லது உலக சுகாதார அமைப்பில் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் அவசர காலப் பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அகற்றியிருந்தால், அது இந்தியாவில் பயன்படுத்தப்படலாம் என்று செய்தி அறிக்கைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன்&ஜான்சன் போன்ற தடுப்பூசி உற்பத்தியாளர்களை விரைவில் இந்தியாவுக்கு வர தயாராக இருக்கும்படி நாங்கள் நம்புகிறோம், அழைக்கிறோம் என்றார் அவர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபைசர் தனது தடுப்பூசியை இந்தியாவில் சந்தைப்படுத்த அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த போது அரசாங்கத்தின் கொள்கைக்கு மாறாக இது உள்ளது. அந்த நேரத்தில் மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், ஃபைசர் ஒப்புதலுக்குமுன் இந்தியாவில் சோதனைகளை செய்ய வேண்டும் என்று கூறினார், உற்பத்தியாளர் செய்ய தயாராக இல்லை.

உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இந்தியா இப்போது அந்த வரவேற்பு கம்பளத்தை விரித்துள்ளது. ஆனால், இது நாட்டில் தடுப்பூசி விநியோகத்தில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெளிவாக இல்லை. உலகளாவிய தடுப்பூசி வழங்கல்கள் மிகவும் இறுக்கமாக உள்ளன. மேலும், காத்திருப்புப் பட்டியல் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தும் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியை வழங்குவது குறித்து சண்டையிட்டு வருகின்றன.

இந்தியாவிற்கு சமீபகாலத்தில் கிடைக்கும் ஒரே பொருட்கள் ஸ்புட்னிக் V மட்டுமே. அரசாங்கம் அதை வாங்கக் கூடிய விலையில் பெற முடியும் என்றால், தடுப்பூசி வாங்குவதற்கான நிதி ஒரு பிரச்சினை அல்ல என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அது நிச்சயம் ஒரு பிரச்சினையாக இருக்கும். சீரம் நிறுவனம் மீது இந்திய அரசாங்கம் செல்வாக்கு செலுத்துவது போல ரஷ்ய அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்த இயலாது என ஒரு உற்பத்தியாளர் கூறினார்.

படிக்க :
♦ ‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு
♦ ஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு

முடிவுகள்

இரண்டாவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அரசாங்கம் திட்டமிட்டு, நோய்த் தொற்றுகளின் அதிகரிப்பைக் குறைப்பதற்கான வழிகளை சிந்தித்திருந்தால், ஜனவரியில் தொடங்கித் தடுப்பூசிகளை வெளியேற்றுவதை அது கட்டுப்படுத்தியிருக்கும். வெளிநாடுகளில் இருந்து அல்லது பொதுத்துறை உட்பட தனியார்களையும் உற்பத்தியைத் தொடங்க ஊக்குவிப்பதன் மூலம் விநியோகங்களை அதிகரிக்கக் கொள்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.

பின்குறிப்பு

இந்த அறிக்கையில் பாரத் பயோடெக் ஒரு மாதத்திற்கு 5 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்த எண்ணிக்கை அப்போதைக்கு கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு குறைந்த மதிப்பீட்டாக இருந்தது. பாரத் பயோடெக் டாக்டர் கிருஷ்ணா எல்லா, கோடை இறுதிக்குள் மாதாந்திர திறனை 10 மில்லியனில் இருந்து 60 மில்லியன் டோஸ்கள் (ஆண்டுக்கு 700 மில்லியன் டோஸ்கள்) வரை உயர்த்துவது குறித்து பொதுவில் பேசியுள்ளார். இருப்பினும் இது தடுப்பூசி வழங்கல் மற்றும் தேவைக்கு இடையிலான இடைவெளியை இன்னும் நிரப்பவில்லை. (குறிப்பு: ஒரு மில்லியன் – பத்து லட்சம்.  ஒரு பில்லியன் – நூறு கோடி.)


கட்டுரையாளர் : தாமஸ் ஆபிரகாம்
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : The India Forum

கம்போடியா : நாட்டு மக்களின் நிலங்களை அபகரித்து சுற்றுச்சூழலை நாசம் செய்யும் அரசு

‘வேறு எந்த நாடு தனது மக்களுக்கு இதைச் செய்யும்?’ கம்போடிய நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச நீதியை நாடுகிறார்கள்.

“தீடிரென அரசுத்தரப்பிலிருந்து வந்தவர்கள் நாங்கள் ஒரு சமூகமாக வாழும் அந்த இடத்தை சுற்றி வளைத்துக் கொண்டு எங்களிடம் நீங்கள் எல்லோரும் இந்த இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கொண்டிருக்கீறீர்கள்” என்றதில் இருந்து ஆரம்பித்தது எல்லாப் பிரச்சனைகளும்” என்கிறார் 2020 ஜீனில் சாயி கிம்சுரூர்.

“நாங்கள் இங்கே 1995-லிருந்து குடியிருந்து வருகிறோம். ஆனால், திரும்பவும் ஆறுமாதம் கழித்து வந்தவர்கள் எனது ஏரியை தூர்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது “இது எங்கள் நிலம்” என அரசு தரப்பிலிருந்து வந்தவர்கள் அறிவித்தார்கள். அந்தப் பகுதியிலிருந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

படிக்க :
♦ கம்போடியா : மேற்குலகிற்கு நாங்கள் என்ன செருப்பா ?
♦ பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !

அந்த சமயத்தில் அந்த ஏரியில் மீனும் முதலையும் வளர்த்து வந்தார் கிம்சுரூர் பியோங் சாம்ரோங். இது ஒரு சிறிய சமூகமாக குடும்பங்கள் வாழுமிடம். ஃபனாம் பேன் பகுதியின் புறப் பகுதியில் வடமேற்கே இருக்கிறது. ஒரே கூரையின் கீழ் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அவரது மூன்று ஏரிகளில் இரண்டு ஏரிகளை தூர்க்கும் வரை அவரது குடும்பம் வாழ்ந்து வந்ததே இந்த நீராதார வணிகத்தினால்தான் என்கிறார். இந்த நிலம் உண்மையில் அரசு-பொது நிலம் என்று கூறி, அதிகாரிகள் கோருகிறார்கள், ஒரு பூங்காவைக் கட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது.

“அவர்கள் எனக்குச் சொந்தமான இடத்தில் என்னை கேட்காமலே சாலை போட்டனர். அவையெல்லாம் எனது ரத்தத்தை வியர்வையாக்கி நான் உழைத்து சம்பாதித்த எனக்கு சொந்தமான சொத்துக்கள். வேறு எந்த நாடு தனது மக்களுக்கு இது மாதிரியான கொடுமைகளை செய்யும்?” என்கிறார் கிம்சுரூர்.

“முனிசிபல் துறையிலுள்ள நில நிர்வாகம் அமைத்து தந்துள்ள அதிகாரத்துவ நிர்வாக செயல்முறைகளை கடந்துப் போவதற்குள் தனது நிலத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தை இழந்துள்ளதாகவும் அதேசமயம் தனக்காக வாதிட ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொள்ளவும் முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்” என்று மார்ச் 2021-ல் கிம்சருர் உறுதி செய்கிறார்.

“அரசு இழப்பீடு தருவதாக சென்ற ஆண்டிலிருந்து (2020) உறுதியளித்திருந்தது. ஆனால் இதுவரை எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. அந்த நிலம் பல பத்தாண்டுகள் என்னுடையதாக இருந்தது. இழப்பீடு எப்போது வரும்?” என்று ஆற்றாமையுடன் கேட்கிறார்.

2020 ஜூன் மாதம் அவரது அனுமதியின்றி அழிக்கப்பட்ட அவரது நிலத்தை டச் சோயுன் பார்க்கிறார்.

ஜீலை 2020-ல் டச்சோயுன் மக்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் புல்டோசர்கள் தங்கள் பகுதிக்கு வந்துவிடும் என்ற பயத்தில்தான் எழுந்திருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்னதாக அந்த புல்டோசர்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் போலீசு அதிகாரிகள் ஆகியோருடன் வந்தன. தன்னிடம் வடக்கு பேனம்பென்-னின் அருகேயிருக்கும் போயங் சௌக் என்ற குக்கிராமத்தில் அங்கிருக்கும் பெயர் தெரியாத ஒரு சொத்து மேம்பாட்டாளரது நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப் பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

“அந்த சமயத்தில் புல்டோசர்கள் ஆறு வீடுகளின் குறுக்காகக் கிழித்து இடித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வீட்டு சொந்தக்காரருக்கு மாரடைப்பு வந்து விட்டது.” என மக்களின் பரிதாப நிலைகளை சோயுன் விவரித்தார்.

“கடந்த மாதம் (ஜீன்-2020) சிட்டி ஹாலுக்கு நான் சமர்பித்த புகார் மனு பற்றி இதுவரை எனக்கு எந்த பதிலும் வரவில்லை. ஆனால், புல்டோசர்கள் திரும்ப வந்துவிட்டால் என்ன நடக்குமோ எனப் பயத்துடன் வாழ்க்கையை ஓட்டுகிறோம்” என்று ஜீலை மாதம் அவர் தெரிவித்தார். “எங்களது சமூகம் ஒற்றுமையாக இருக்கிறது. எங்களது வீடுகளை அவர்கள் அபகரிக்காமல் தடுக்க நாங்கள் ஒன்றாக தயாராகிக் கொண்டிருக்கிறோம் பார்ப்போம்” என்று மேலும் தெரிவித்தார்.

“ஆனால், இப்போது போயுங் சௌக் கிலுள்ள 22 குடும்பங்களும் பதைபதைப்புடன் முடிவை எதிர்நோக்கிய வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மார்ச் 2021 நிலவரப்படி இவர்களது வழக்கில் எவ்வித முன்னேற்றமில்லாமல் இருக்கிறது. அதோடு, அதிகாரிகள் இவர்கள் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் முரட்டுத் தனமாக இருப்பதோடு காலி செய்தால் இழப்பீடு வழங்கப்படும் என பசப்பிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் சோயுன்.

“இப்போதைய நிலவரப்படி பிரச்னையில்லாமல் வாழ்வதாக நினைக்கிறோம். முதலில் வீட்டைப் பிளந்து நாசப்படுத்திய நிகழ்வு நடந்து ஒன்பது மாதங்களாகிவிட்டது. என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. ஆனால், இங்கிருந்து வெளியேற எங்களுக்கு விருப்பமில்லை” மார்ச் 2021-ல் அவர் சொன்னார்.

சர்வதேச நீதிக்கான சாத்தியம்

கம்போடியாவில் கிம்சருர் சோயுன் ஆகியோரதுப்போன்ற சோகங்களேப் பொதுவாக எல்லோரிடமும் நிலவுகிறது. சர்வதேச மனித உரிமைகள் கழகம் (FIDH) கூறுவது படி 2014-ல் 77,000 மக்கள் இந்த நிலஅபகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 4 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் மக்களிடமிருந்து பிடுங்கியெடுக்கப் பட்டுள்ளதாகவும் அதில், பேனம் பென் பகுதியில் மட்டும் 1,45,000 ஹெக்டேர் நிலங்கள் பறித்தெடுக்கப் பட்டுள்ளன என்றும் தெரிய வருகிறது.

நன்கு ஆவணப்படுத்தப்பட்ட அரசியல்மயமாக்கப்பட்ட கம்போடியாவின் நீதித்துறை நீதி வழங்குவதில் ஏமாற்றத்தையே தருகிறது. நில சம்பந்தமானப் பிரச்னைகள் அடிக்கடி வந்தாலும் நீதிமன்றம் மிக அரிதாகவே விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

FIDH, along with Global Witness and Climate Counsel உலகளாவிய சாட்சி மற்றும் காலநிலை ஆலோசகருடன் ஒரு திறந்த கடிதத்தை மார்ச் 16 அன்று சர்வதேச கிரிமினல் நீதிமன்ற (ஐசிசி) தற்போதைய வழக்கறிஞர் படாவ் பென்சௌடாவுக்கு அனுப்பியுள்ளனர். அதில் கம்போடியாவின் நில அபகரிப்புகள் பற்றி முதல் கட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

கம்போடியாவின் இப்போதைய நிலைமை ஐ.சி.சி-க்கு மனித இனம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற தனிப்பெரும் பயங்கரத்தை (கால நிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசரநிலை) சந்திக்கின்ற ஒருங்கிணைந்த சந்தர்ப்பத்தை தந்திருக்கிறது” என எழுதுகின்றனர்.

மேலும், ”நிலப் பறிப்பு என்பது அங்கிருக்கும் குடியிருப்புவாசிகளைப் பலவந்தமாக மிரட்டி வெளியேற்றுவது பற்றி மட்டுமல்ல அல்லது அவர்களை அடித்தல், கொலை செய்தல் அல்லது நிலப் பாதுகாப்புப் போராளிகளை சட்டவிரோதமாக சிறையிலடைப்பது என்பதோடு முடிவதல்ல” என்று அதில் எழுதுகின்றனர்.

FIDH, Global Witness and Climate Counsel (உலகளாவிய சாட்சி மற்றும் காலநிலை ஆலோசகர்) அக்டோபர் 2014-ல் தனது நடைமுறைகளைத் துவங்கியது. அதன் முதல் தகவல் தொடர்பை ஐ.சி.சி வழக்கறிஞருக்கு அனுப்பிய போது – தொடர்ந்து ஜீலை 2015-ல் இரண்டாவது தகவலை அனுப்பியபோதும் – அது பற்றிய நடவடிக்கை என்னவோ மிக மோசமாக மெதுவாகவே நடந்தது. FIDH சமீபத்தியக் கடித்ததில் பென்சௌடாவின் பதவிக்காலம் முடிவதற்குள்ளாக அதாவது, ஜீன் 15, 2021-க்குள் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

“வழக்கறிஞருக்காக நாம் ஒரு முடிவை எடுக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது” என்ற ஆன்ட்ரியா ஜியோர் ஜெட்டா FIDH-ன் ஆசியப் பகுதிக்கான இயக்குநர்.

“இந்த வழக்கு அவரது கவனத்துக்கு பல ஆண்டுகளாகவேக் கொண்டு செல்லப் படுகிறது. எனவே, அவரது முடிவு ஏற்கனவே கொடுக்கப் பட்டிருக்க வேண்டியது – முடிவு என்பது இதுதான் என தெரியாவிட்டாலும் அதிக பட்சமாக ஒரு வழி அல்லது மற்றொன்று என்றுதான் தரப்படும் என நாங்கள் நம்புகிறோம்” என ஒரு தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்தார்.

“நாம் இது சம்பந்தமாக ஐ.சி.சி வழக்கறிஞர் அலுவலகத்தின் கருத்தை அறிய முயன்றோம். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை. டிசம்பர் 2020 தகவல்படி முதற்கட்ட விசாரணை பற்றிய நடவடிக்கைகளில் பென்சௌடா அலுவலகம் இந்த ஆணட்டில் கம்போடியாவின் நிலப் பறிப்புக் குற்றங்கள் உட்பட மேற்கொண்டு விசாரணை தேவைப் படுகிறவை பற்றி தனது ஆலோசனையைத் தெரிவிக்கும்” என அறிவித்திருக்கிறார்கள்.

உண்மையில், பிப்ரவரி 17-ல் சர்வதேச மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான நிறுவனத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் பென்சௌடா தனது முதன்மை உரையில் கம்போடியா விவகாரத்தில் தனதுப் பணிக்காலம் முடிவடையும் முன் அதாவது ஜீன் 15 2021-க்குள் ஒரு முடிவு எட்டப்படும் என்பதை மறுபடியும் உறுதி செய்தார்.

“நாங்கள் தற்போது கம்போடியாவின் நிலப் பறிப்புப் பிரச்னை குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். வெகுவிரைவில், அதற்கானப் பதிலை தருவோம்” என்று தனது உரையினிடையே குறிப்பிட்டார்

சோயனின் வீட்டையும் அங்கு இருந்த மரங்களையும் அழித்துவிட்டார்கள்

கம்போடியாவில் நிலப் பறிப்புப் பிரச்னையில் நீதிகேட்டு போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு எச்சரிக்கையான நம்பிக்கை ஐ.சி.சி செப்டம்பர் 15, 2016-ல் ஒரு கொள்கை அறிக்கையை வெளியிட்டதன் மூலம் ஏதோ ஒரு வகையில் புதுப்பிக்கப்பட்டது. வழக்குகளை தேர்ந்தெடுப்பதிலும் அதை வரிசைப் படுத்துவதிலும் தங்களது நடைமுறையை விரிவாக்கியிருப்பதை அந்த கொள்கை அறிக்கை விவரித்திருந்தது.

ஆதாரங்களை சட்டவிரோதமாகச் சுரண்டுவது அல்லது எங்களது அலுவலகம் ரோம் சட்டகுற்றங்கள் பற்றி விசாரிக்கக் குறிப்பானக் கவனத்தை தரும். அவை, எதனால் எதன் விளைவாக செய்யப்பட்டன, மற்ற செயல்பாடுகளில் சுற்றுப்புறச்சூழலை அழித்தல் இயற்கை சட்டவிரோதமாக நில உரிமையைப் பறித்தல் போன்றவற்றை விசாரிக்க குறிப்பானப் பரிசீலனைகளை தரும் என்று அந்த கொள்கை அறிக்கை குறிப்பிட்டது.

“அதனால்தான் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம்” என்கிறார் ஜியார் ஜெட்டா. மேலும், அவர் “ஏனென்றால் அவர்களது கொள்கை அறிக்கை எந்த மாதிரியான நிலைமைகளை பரிசீலிக்க வேண்டுமென  விவரிக்கிறதோ, அவற்றுக்குள் எங்களது பிரச்சனையும் வருகிறது” என்கிறார்.

இவ்வாறு கூறப்பட்டால் ஜியார் ஜெட்டா விரைவாக சுட்டிக் காட்டுவது ஐ.சி.சி தனது அடிப்படை நோக்கங்களை விரிவுபடுத்தவில்லை வழக்கறிஞர் அலுவலக தரப்பில் இன்னமும் ரோம் சட்டத்தின் கீழுள்ளக் குற்றங்களைப் புலன் விசாரணை செய்வதில்தான் முழுதும் ஈடுபட முடிகிறது. மாறாக, தற்போது பட்டியலிடப்பட்ட குற்றங்கள் சுற்றுச்சூழல் சீரழிவு, இயற்கை வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவது அல்லது சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு பங்களித்த வழக்குகளுக்கு நீதிமன்றம் முன்னுரிமை அளிக்க முடியும்.

ஐ.சி.சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத்தியில், வழக்கறிஞர் அலுவலகத்திற்கு மட்டுமே தகவல் தொடர்புகளை சமர்ப்பிப்பது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மற்றும் கம்போடியா முழுவதும் நில அபகரிப்பில் ஈடுபடுவோரின் நடத்தையை மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது; ஆனால், ஜியர் ஜெட்டா கவனித்தபடி இது அப்படி இல்லை நடந்தது இதற்கு எதிரானது.

அரசு இந்த தகவல்களை அனுமதிக்கவில்லை இதனைப் புறக்கணிப்பதாகத் தெரிகிறது. அரசியல் உறுதி இருக்கவில்லை என்ற செய்தியை மறுபடி உறுதிபடுத்தியது. குறிப்பாக, இந்த பிரச்சனையின் மீது கவனம் செலுத்துமளவு நீதித்துறை சுதந்திரமில்லாதிருந்தது.

இந்த நிகழ்வுகள் குறித்தும் ஐ.சி.சி-யால் பரிசீலிக்கப்படும் நிலப் பறிப்பு விசாரணை குறித்தும் கருத்துக் கேட்கத் தொடர்புக் கொண்ட போது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நேத் பீகாட்ரா, பதில் சொல்வதற்கு உரிய நபர் தான் அல்ல என்று மறுத்துவிட்டார். நில மேலாண்மை அமைச்சகத்தின் செங்லாட்டை தொடர்புக் கொள்ள முடியவில்லை. அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் கூட இது பற்றி பொதுவெளியில் பேச மறுக்கின்றன.

அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ஃபேசிபான் ஐ.சி.சி-யின் முன்னேற்றம் குறித்து அரசு என்ன நினைக்கிறது என்று பேச மறுத்த்தைப் போல, கம்போடியன் மக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் சாக் எய்சான், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோய்குயான்க் மற்றும் அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர் ஏக்தா ஆகியோரும் ஏற்கனவே மறுத்திருந்தனர்.

எனவே, பிரதம மந்திரி ஹன் செனின் நிர்வாகத்தில் உள்ள எவரும் குறிப்பாக நில அபகரிப்பில் ஈடுபடுவதை இலக்காகக் கொள்வதில் அக்கறைக் கொண்டுள்ளார்களா என்பதை தெரிந்துக் கொள்ள முடியாத நிலையில், ஆனால் ஜியர் ஜெட்டா குறிப்பிட்டது போல, சர்வதேச தடைகளின் எதிர்பார்ப்பில் அரசாங்கம் முன்னதாகச் சற்று முன்னேறியது.

இங்கே நாங்கள் பொருளாதார தடைகளைப் பற்றி பேசவில்லை குற்றவியல் பொறுப்பு கூறலைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறோம் சர்வதேச சமூகம் தனிநபர்களை குறிவைத்து செயல்படும் போது அரசு அதற்கு எதிர்வினை ஆற்றுகிறது. சில அலுவலர்களும் உயர் அதிகாரிகளும் தங்கள் வியாபாரத்தை மறைக்கிறார்கள் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

வரலாற்று சிக்கல்களும் தீர்வுகளின் பற்றாக்குறையும்

கம்போடியாவில் இனப் படுகொலைக்குப் பிறகு கேமர்ருஜ் பகுதியில் நில உரிமைகள் அழிக்கப்பட்டன. நில உரிமை என்பது நீண்ட காலமாக ஒரு உணர்வு பூர்வமான சமுகப் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த நடவடிக்கை நீண்ட காலமாக நீடித்த நில உரிமைகளை 1980-ல் ரத்து செய்வதில் முடிந்தது. ஆனால் 1990-ன் பெரும்பகுதி கம்போடியாவை சூறையாடியக் கசப்பானப் போர் நடந்த போது நிலங்களுக்குத் தரப்பட்ட சலுகைகளின் மதிப்புத் தெளிவாகியது.

கம்போடியாவில் ஐக்கிய நாடுகளின் இடைக்கால அதிகார சபையை அடுத்து, பல்வேறு அரசியல் பிரிவுகள் மேலாதிக்கத்திற்கான ஏலங்களுக்கு நிதியளிக்க முயன்றதால், 1991 மற்றும் 1997-க்கு இடையில், அரசாங்கம் சுமார் 7 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை வன சலுகைகளாக ஒதுக்கியது.

கிம்சருர் சோயுன் போன்றோர்கள் 1995-லிருந்தே பேனம் பென் பகுதியின் புறப்பகுதியில் வந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். 1999 வரை நில மேலாண்மை அமைச்சகம் இருந்ததில்லை. கம்போடியா நில சட்டம் 1992-ன் பதிப்பு, அதன் 2001 சட்டத் திருத்தம், அதன் 2001 திருத்தம் வரை பலவீனமான – எந்தவொரு அமலாக்கத்தாலும் பாதிக்கப்பட்டது.

ஆனால், 1995-ஆம் ஆண்டில் நில நன்கொடைகளை வழங்க சர்வதேச நன்கொடையாளர்களின் ஆதரவைக் கோரியப் போதிலும், 2001-ஆம் ஆண்டில் உலக வங்கி கம்போடியாவின் நிலப்பரப்பில் 80 சதிவீதம் அரசின் சொத்தாகக் கருதப்பட்டதாகவும், நிலப் பட்டாக்களுக்கான 4 மில்லியன் விண்ணப்பங்களில் 6,00,000 மட்டுமே செயல்படுத்தப்பட்டதாகவும் மதிப்பிட்டுள்ளது.

2010-ல் ஐ.நா மூலதன மேம்பாட்டு நிதி கம்போடியாவின் 30 சதவீத நிலங்கள் ஒரு சதவீத மக்களிடம் குவிந்திருந்ததாகக் கண்டுபிடித்தது. 2001-ல் சட்டதிருத்தம்தான் இதற்கு முக்கியமான காரணம். அதுதான் அரசு-பொது நிலங்களை எளிதாக அரசு-தனியார் நிலங்களாக மாற்றிக் கொள்ள வழிவகைகளை ஏற்படுத்தியிருந்தது. ஓரு சில பிரிவுகள் சரியாக இருந்தாலே நிலங்களை விற்பதற்கு அனுமதியளித்தது.

“இப்போது பலவந்தமாக வெளியேற்றலும் நிலப் பறிப்புகளும் விரிவான அளவில் பிரச்சனைகளாக உருவெடுத்ததால், அதன் விளைவாக சர்வதேச கவனத்தை ஈர்த்த்தாலும் அரசாங்கம் நிலச் சலுகைகள் விசயத்தில் தனது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள நிர்பந்தப் படுத்தப்பட்டது” என்கிறார் உள்ளூர் நில உரிமைகளுக்கான என்ஜிஓ ஈக்விடபிள் கம்போடியா வின் இயக்குநர் ஏங்க் வுதி.

2020 செப்டம்பரில் நில மேலாண்மை அமைச்சகத்தின் முன் நடைபெற்ற நில அபகரிப்புக்கு எதிரானப் போராட்டம்.

“மிக அதிகமான அரசு-பொது நிலங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவது. அதோடு, ஆறுகள் ஏரிகள் ஈரநிலங்கள் எல்லாம் தூர்ந்துப்போக வைப்பதையெல்லாம் பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது” என்கிறார். இந்த மாதிரியான தனியாருக்கு தாரை வார்க்கும் நிகழ்வுகள் நகர்புறங்கள் மட்டுமின்றி நாடு முழுக்க குறிப்பாக கடலோரப் பகுதிகளில் நடந்துக் கொண்டிருக்கிறது என்கிறார் கூடுதலாக.

செப் 22, 2020-ல் மூன்று பகுதிகளை சேர்ந்த 400 கம்போடிய மக்கள் பேனம் பென் நில மேலாண்மை அமைச்சகத்தின் வெளியே தீர்க்கப்படாத நிலப் பிரச்னைகளை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரும்பாலானப் பிரச்சனைகள் அரசு மக்களிடம் நிலங்களை திரும்ப ஒப்படைக்கும்படி உத்திரவிட்டதை அடுத்து ஏற்பட்டவை.

“நிலப் பறிப்பு என்பது நில சலுகைகளாக அரசாங்கத்தால் நியாயப்படுத்தப் படுகிறது. வீட்டு வசதி மேம்பாடு அல்லது உள்கட்டமைப்பு திட்டங்கள், ஆனால் மக்களுக்கு இதைப் பற்றிய எந்த புரிதலும் இருப்பதில்லை குறிப்பிடப்பட வேண்டியது கட்டுமானம் ஏதாவது தொடங்கும் போதோ அல்லது இடிக்கப்படும் போதோதான் மக்களுக்கு தெரிய வரும்” என்கிறார் வுதி.

இந்த வழக்குகளில் நீதி கிடைப்பது என்பது அரிதானது அல்லது மிக மெதுவானது. 2010-ல் ஒட்டார் மேன்செய் ஹோகாங் காம்போங் ஸ்பெயு மற்றும் ப்ரே விஹியர் பகுதிகளில் சர்க்கரை தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டதை ஒட்டி எழுந்த நிலப் பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

“”ஒட்டார் மின்சேய் பகுதியில் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களில் பாதிக்கு சற்று மேலானவர்கள் 2 ஹெக்டர் ப்ளாட் நிலம் இழப்பீடாக பெற்றனர். ஹோகான் பகுதியில் 1000 குடும்பங்களுக்கு 1.5 ஹெக்டர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு நிகழ்வுகளிலுமே இடம் மாற்றி தந்தது மற்றும் இழப்பீட்டு தொகுப்புகள் அந்த சமூகத்தின் தேவையை ஈடுசெய்வதாக இல்லை என்பதுதான் உண்மை” என்கிறார் வுதி.

வுதி மேலும் சொல்வது காம்போங்க் ஸ்பியு மற்றும் ப்ரிய விகியர் ஆகிய பகுதிகளில் உள்ள தங்கள் நிலங்களை மிகப்பெரிய செல்வந்தரும் சி.பி.பி செனட்டருமான லி யுங்-க்கு தொடர்புடைய சர்க்கரை ஆலைகளுக்காக இழந்த 2130 குடும்பங்களுக்கு இந்த இழப்பீடுகள் கூட கிடைக்கவில்லை.

ரத்னகிரி பகுதியில் வியாட்நாமிய மிகப்பெரிய ரப்பர் கம்பெனி HAGL அங்கு இருக்கக் கூடிய 2000 உள்நாட்டு பழங்குடியினரின் புனித நிலங்களை சட்டவிரோதமாக பறித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

பூர்வீக சமூகங்கள் நிலப் பறிப்பு மூலமாக எதிர்மறையாக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வூதி மேலும் சொல்கிறார் நிலங்கள் எப்போதுமே அவர்களது ஆன்மிக நம்பிக்கை மற்றும் வாழ்க்கைக்கான ஆதாரங்களின் மையமாக உள்ளது. மேலும், கேமர் பாதிக்கப்பட்டவர்களை விடக் குறைவாக நீதி வழங்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பெரிய பிரச்னைகள் மேலும் நீடித்து போகக் காரணம் போதுமான இழப்பீடு கிடைக்காததுதான். பல ஆண்டுகளுக்கு முன்னால் தங்கள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹோகான் பகுதியிலிருந்த மக்கள் தங்கள் நிலங்களில் சிறிதளவை திரும்பப் பெற்றனர். ஆனால், நிலத்தை திரும்பப் பெற்றதே அவர்களது வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்கவில்லை. அவர்கள் எப்போதும் மிகப்பெரியக் கடனில் சிக்கி தவித்து வந்தனர். அதனால், எந்தவித நிதி ஆதாரமும் இல்லாமல் தங்களது வணிகத்தை மீட்டெடுக்க முடியாமல் தவித்தனர். இதனால், தங்களது நிலங்களையாரிடம் பறிக்கொடுத்து மீட்டெடுத்தார்களோ அதே ஆட்களிடம் விற்கும் நிலைக்கு சென்றனர்.

நிலப் பறிப்பாளர்கள் – சுற்றுச்சூழலை கெடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

ஐ.சி.சி-க்கு அனுப்பப்பட்ட தகவல் தொடர்பில் ஒரு செய்திக் கொண்டு வரப்படாமலேயே இருந்தது. அது கம்போடியாவில் நிலப் பறிப்பு மற்றும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகளுக்கும் சுற்றுச்சூழலை சீரழித்தல் ஆகியவற்றுக்கும் உள்ளுர உண்மையானத் தொடர்பு இருக்கிறது என்பதுதான்.

2016 கொள்கை அறிக்கை மற்றும் சமீபத்தில் டிசம்பர் 2020-ல் ஐ.சி.சி விளக்குவதாக உறுதியளித்திருந்த பிரச்சனை இதுதான் சர்வதேச வழக்கறிஞர் பிலிப்பி சாண்ட்ஸ் மற்றும் ப்ளாரன்ஸ் மும்பா கம்போடியாவின் நீதிமன்றங்களில் சிறப்பு சாம்பர்களில் நீதிபதியாக இருப்பவர் இருவரும் சர்வதேசக் குற்றங்களின் வரிசையில் சுற்றுச்சுழல் மாசுப்படுத்துவர்களை இனப்படுகொலை மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் கொடுமைகள் செய்பவர்களாக பொருள்வருமாறு வரைவறிக்கை தயாரிப்பதாக அறிக்கை விட்டுள்ளனர். அவர்களது விளக்கங்கள் இந்த ஆண்டே வரும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் அப்போது சுற்றுச்சூழலை அழிக்கும் கொடியவர்களை சர்வதேச நீதியின் முன்னால் நிறுத்த முடியும். தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்.

புனோம் சாம்கோஸ் வனவிலங்கு சரணாலயத்திற்குள் சமீபத்திய காடழிப்பு.

தொழில்துறை முன்னேற்றம் என்ற நடவடிக்கை கலாச்சார இனப் படுகொலை மற்றும் சுற்றுச்சூழல் அழித்தல் ஆகிய நிலைமைகளை உருவாக்கும் நிபந்தனை என்கிறார் கர்டினி வொர்க் தேசிய சென்க்சி பல்கலைக் கழகத்தில் மனித இனங்களை பற்றி ஆராயும் அறிவுத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணிப்புரிபவர். கொடுமைகாரர்கள் மக்களை அல்லது சுற்றுச்சுழலை கொலை செய்ய வேண்டுமென்று வெளிப்படையான நோக்கத்துடன் செய்வதில்லை. குறைந்தபட்சம் அவர்கள் செய்வதை நிரூபிப்பது கடினம். ஆனால், தங்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே எதையும் செய்கிறார்கள்.

மார்ச் 12-ல் கெமர் படிப்புகளுக்கான மையம் நடத்திய ஒரு இணையவழிக் கருத்தரங்கத்தில் வொர்க் கூறுகிறார் “2000-ம் ஆண்டில் தீடிரெனப் பொழியப்பட்ட நில சலுகைகள் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் அழிய காரணமாயிற்று”. ஒரு கம்போடியன் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார். அது “கேமர்ருஜ் தலைவர் போல்பாட் மக்களை கொன்றார். தற்போதைய முன்னேற்றங்களோ – நில சலுகைகளுடன் தொடர்புடைய பெரும்பாலான பணிகள் –  மிச்சம் மீதி இருக்கும் எல்லாவற்றையும் கொல்கிறது.”

“தற்போது ஐ.சி.சி-யில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்கள் சில மாறுபாடுகளை கொண்டுவரக் கூடிய சாத்தியக் கூறுகளைத் தெரிவிக்கின்றன. நமக்கு தேவை தற்போது நடைமுறையிலிருக்கும் நிலைமைகளில் மாற்றம் புதிய சட்டம் அல்ல.” என்கிறார் அவர்.

தங்களுக்குள்ளேயே நெருக்கமான தொடர்பும் அதேவிதமாக அரசாங்கத்துடனும் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டப் பொருளாதார நிலச் சலுகைகள் வொர்க்-ன் கவனத்துக்குரியப் பகுதியாக இருக்கும் ப்ரேலாங் வனவிலங்கு சரணாலாயத்தில் பரவலாகப் பதியப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.

ப்ரேலங் என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருக்கும் தங்களது நிறுவனங்களான திங்க் பையோடெக் கின் சேர்மனும் ஆங்கர் ப்ளைவுட் போர்டில் இருப்பவருமான சூ-சங்லு சட்டவிரோத இணைப்பில் தங்கள் நிறுவனங்கள் இருப்பதாக சொல்வதை ஒத்துக்கொள்ளவில்லை. அதேசமயம், கம்போடியாவிலோ சர்வதேச ரீதியிலோ சட்டநடவடிக்கைக்கான வாய்ப்புகளுக்குப் பயப்படவில்லை என்றும் கூறுகிறார்.

திங்க் பயோடெக்கின் மர சலுகையின் உள்ளே முதன்முதலில் பெரிய காடுகளை காடழிப்பதைக் காட்டுகின்றன, இது இரை லாங் வனவிலங்கு சரணாலயத்தை கைவிடுகிறது.

“என்னை ஏன் நிறுத்த வேண்டும்? காற்றில் மாசு ஏற்படுத்துமளவு எல்லாவற்றையும் எரிப்பவன் நான் அல்ல” என்கிறார் லூ. மேலும், சொல்கிறார் “காடுகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு. நாங்கள் வியாபாரிகள். சட்டவிரோதப் பதிவுகளை நிறுத்த இங்கே நாங்கள் இல்லை” என்கிறார்.

2009-ல் கம்போடியாவில் தனது ஆராய்ச்சியை கம்போடியா முழுவதும் நிலச் சலுகைகளின் விளைவாக ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை அவற்றின் பல வடிவங்களில் உள்ளடக்கியது துவங்கினார். வொர்க் புர்சாட் காம்போங், சனாங் காம்போங் ஸ்பெ மற்றும் ஸ்டங் ட்ரங்க் பகுதிகள் உள்ளிட்டு ஒவ்வொரு பகுதியிலும் பொருளாதார நிலச் சலுகைகளுக்குப் பின்னால் நிலம் உரிமைப் பறிக்கப்படுவது மற்றும் சுற்றுச்சூழல் அழிவுத் தொடர்ந்து உள்ளன.

“1990-களின் முந்தைய வனச்சலுகைகளை விட இவை மிகவும் கொடூரமானவை” என்று அவர் கூறினார், மேலும், கம்போடியாவில் 2012-ஆம் ஆண்டில் வழங்கப்படுவதை நிறுத்தும் வரை பொருளாதார நில சலுகைகள் கம்போடியாவில் 2 மில்லியன் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்களை எடுத்துக் கொண்டன.

சர்வதேச வளர்ச்சி கம்போடியாவில் தோல்வியுற்றதா?

பொருளாதார நிலச் சலுகைகள், சமூக நிலச் சலுகைகளுக்கு வழிவகுத்தது. இது உலக வங்கியால் முயற்சியெடுத்து அறிமுகப்படுத்தப்பட்டது. கம்போடியாவில் வளர்ந்து வரும் நிலமற்றோரின் மக்கள் தொகையைக் கணக்கிலெடுத்து அவர்களுக்கு நில அனுபோக காலத்தை உறுதி செய்ய வடிவமைக்கப்பட்டது. ஆனால், உரிமம் பெற்றவர்களின் செயற்பாட்டாளர்கள் ஏறக்குறைய நிலபட்டாக்களுக்கு சம்பந்தமான எல்லா நல்ல நோக்கங்களுடையத் திட்டங்கள் முறைதவறியதென எச்சரித்தனர்.

உள்ளூர் நில உரிமையாளர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்ததிலிருந்து அவர்களது கருத்தாக நில அபகரிப்புகளைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட சமூகத்தினருக்கு முறையான இழப்பீடு வழிமுறைகளுக்குப் பதிலாக சமூக நிலச் சலுகைகள் பயன்படுத்தபடுவதில்லை என்பது மட்டுமல்ல ராணுவ அலுவலர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் சேர்ந்து நிலங்கள் வழங்கப்படுவதன் மூலம் இது தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது எனப் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜீன் (2020) உலக வங்கி 93 மில்லியன் டாலரை கம்போடியா நில அனுபோகக் காலதிட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கென  அறிவித்தது. இந்த முறைமையில் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தப் போதிலும், நில அபகரிப்பு மற்றும் அது ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலக வங்கி உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

“உலக வங்கி எந்த அளவிற்கும் தருமசிந்தனையுள்ளதல்ல என்பதில் வியக்க ஒன்றுமில்லை” என்று வொர்க் தனது இமெயிலில் எழுதுகிறார். கம்போடியா தீவிர பிடுங்குவோராக இருந்தாலும் தொடர்ந்து உலக வங்கியிடமிருந்து நிதிப் பெற்றுக் கொண்டிருப்பதற்கு காரணம் வங்கிகளின் முன்னுரிமை யாருக்கானது என்பதற்கான அடையாளம் ஆகும்.

கம்போடியாவில் இருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் LASED திட்டங்கள் மூலம் நிலம் அளிக்கப்பட்டது தொடர்பாக இவ்வளவு மோசமானப் பிரச்னைகள் இருப்பதை அறிந்திருக்கவில்லை என்கிறார்கள். LASED-1, LASED-2 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறியதால்தான் மூன்றாவது LASED-3வது திட்டத்திற்கு நிதி அதிகரிக்கப்பட்டு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.

SLC நிகழ்வுகளில் நீண்டகாலமாக இணைந்து வேலை செய்ததன் காரணமாக விவரித்தபடி உலக வங்கி எப்போதுமே ஏழை வீட்டுக்காரர்களுக்கு நிலம் சென்று சேருவதற்குப் பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருப்பதாக ஒரு இமெயிலில் எழுதியுள்ளார். நிலப் பாதுகாப்பு ஒரு மதிப்புமிக்கப் பாதுகாப்பு வலைபின்னலை COVID-19  பயமுறுத்தும் காலகட்டத்தில் சாதித்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

முதன்மை வனத்தின் பகுதிகள் சமீபத்தில் பீபிமெக்ஸ் சலுகைக்கு வெளியே மற்றொரு பகுதியில் எரிக்கப்பட்டன. யு.எஸ். விண்வெளி நிறுவனமான நாசாவின் தரவுகளின்படி, சலுகையில் தீ செயல்பாடு தொடங்கியது.

முதல் இரண்டு தவணை LASED திட்டங்களுக்கு இதுவரை 39.86 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இது 2008-லிருந்து செயல்படுகிறது. LASED-3 2021 முதல் 2026 வரை திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு செலவாகும் தொகையாக மொத்தம் 146.8 மில்லியன் டாலர்கள் என திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், இதுவரை 3,362 நிலப் பட்டாக்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் கையகபடுத்தப்பட்ட ஒவ்வொரு நிலப் பட்டாவிற்கும் உலக வங்கி செலவழித்த தொகை 12,000 டாலர்கள்.

மார்ச் 12 அன்று, உலக வங்கி சுற்றுச்சூழல் கணக்கியல் கட்டமைப்பிலிருந்து கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. இது ஒரு டாலர் மதிப்பை சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் அவற்றைப் பாதுகாக்க உதவும் முயற்சியில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கம்போடியா அரசாங்கம் உலக வங்கியிடம் கம்போடியா வனப் பிரதேசங்களில் 65 சதவீதத்தைப் பாதுகாக்கும் முடிவுக்கு ஆதரவாகப் பொருளாதாரத் தரவுகளைக் கோரியதாகக் கூறப்படுகிறது. அந்த ஆய்வு வனப்பாதுகாப்பு மூலம் கிடைக்கும் லாபம் என்பது கரி தயாரிப்புக்காக மரங்களை வெட்டுவதைப் போல 5 மடங்கு அதிகமானது  அல்லது விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வனச் சுற்றுச்சூழல் அமைப்புகள் வனப் பராமரிப்பதற்கான செலவை விட 20 மடங்கு அதிக லாபம் பெறும் என்றும் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது

ஆனால், விமர்சனங்கள் உலக வங்கியின் நோக்கங்கள் குறித்து திருப்தியடையவில்லை மற்றும் கம்போடியாவின் பாதுகாப்புத் தொடர்பான உறவில் மாற்றத்தைத் தூண்டும் ஐ.சி.சி.யின் திறனைக் கூட சந்தேகிக்கிறது.

“நேர்மையாக, அவர்கள் (உலக வங்கி) சுற்றுச்சூழல் மதிப்பை அங்கீகரிப்பது பற்றிப் பேசுகிறார்கள், உண்மையில் சுற்றுச்சூழல் அமைப்புகளை மதிப்பிடுவதற்கு தேவையானதைச் செய்யவில்லை என்பது பயமுறுத்துகிறது என்கிறார் வொர்க். மாற்றம் மற்றும் மதிப்பு குறித்து நிறையப் பேசுகிறார்கள் ஆனால் களத்தில் செயல்பாடுகளில் மிகக் குறைவான மாற்றங்களைத்தான் பார்க்க முடிகிறது. மதிப்பு என்பது பொருளாதாரம் மட்டும்தான். எங்களது கூட்டுத்துவ வாழ்க்கை ஆதரவு அமைப்புகளுக்கு எந்த உள்ளார்ந்த மதிப்பும் இல்லை என்றுதான் தெரிகிறது.

படிக்க :
♦ கம்போடியா – விரட்டப்படும் விவசாயிகள்
♦ கம்போடியா : 4 தொழிலாளிகள் சுட்டுக் கொலை !

அபிவிருத்தி பங்குதாரர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், செயற்பாட்டாளர்கள் அல்லது வலுவான சாத்தியமான ஐ.சி.சி வழக்குப் போன்ற எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் இதுவரை அரசாங்கம் தங்கள் பதிலை மாற்றவில்லை என்று அவர் மேலும் கூறினார். ஆனால், ஐ.சி.சி சில அரசாங்க அதிகாரிகளை “கொஞ்சம் வியர்த்துக் கொள்ளக் கூடும்” என்றுக் கூறினார்.

“முழு உலக முன்னேற்றத்திற்கானத் திட்டம் தனக்கு தானேக் காட்ட வேண்டியது அதிகம் என நான் நம்பவில்லை” என்று அவர் கூறினார். ஆனால் “இது எல்லாமே கம்போடியாவில் தெளிவாகத் தெரிகிறது நமது உலகளாவியப் பொருளாதார அமைப்பில் எல்லாமே தவறு என்பதற்கான எடுத்துக்காட்டாக ஒளிவீசி நிற்கிறது.”


தமிழாக்கம் : மணிவேல்
செய்தி ஆதாரம் : news.mongabay.com