சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு முன் இலைகளின் சருகுகளும் குச்சிகளும் கொட்டிக் கிடக்கின்றன. மரங்களும் புதர்களும் பராமரிப்பின்றி மண்டிக் கிடக்கின்றன. அங்கே பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள். சிலர் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள், சிலர் குளித்துக் கொண்டிருக்கிறார்கள், சிலர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
யாருமே சும்மா உட்கார்ந்திருக்கவில்லை, ஏதோ ஒரு வேலையை – ஒவ்வொருவரும் நிதானமாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். இரவில் அங்கு சென்றிருந்தால் நிச்சயம் பயம் நம்மைத் தொற்றியிருக்கும். ஆனால், இப்போது பகல் 12 மணி. அது மாதவரம் பால் பண்ணை வளாகம்.
அங்கு இருந்தவர்கள் யாரும் பார்த்துப் பழக்கப்பட்ட முகங்கள் இல்லை. வட இந்தியர்கள் போல் (நமக்கு வடக்கே உள்ளவர்கள் அனைவரையும் அப்படித்தானே அழைக்கிறோம்) தெரிந்தார்கள்.
யார் அவர்கள்? தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது.
நீண்ட நாட்களாக திறக்கப்படாத வாயிற்கதவு. அந்த வளாகத்தைப் பாதுகாக்க ஒரு காவலாளி. “நீங்க தமிழா?” என்ற கேள்வியுடன் உள்ளே நுழைந்தோம். இவர்களிடம் எப்படி பேச்சு கொடுப்பது? யோசித்துக் கொண்டிருக்கும்போதே வேன் ஒன்று உள்ளே நுழைந்தது. வேன் ஓட்டுநரிடம் விசாரித்தோம்.
“இவர்கள் மெட்ரோ ரயில் வேலைக்காக ரோடு அமைத்தல், மண் பரிசோதித்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். தற்போது தசரா பண்டிகைக்கு (அது முடிந்து 4 மாதங்கள் ஆகிறது) ஊருக்குச் செல்ல இருக்கிறார்கள்” என்று தனக்குத் தெரிந்த ஹிந்தி மூலம் நமக்கு மொழி பெயர்த்தார். தொழிலாளிகளிடம் பேசுவதற்கு மொழி ஒரு தடையா என்ன?
மத்திய பிரதேசம் சிங்ரோலி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் கும்ஹியா (Kumhia). ஆயிரத்துக்கும் குறைவானவர்களே இங்கு வாழ்கிறார்கள். விவசாயத்தில் பின்தங்கியுள்ள இக்கிராம மக்களில் சரிபாதி பேர் ஆதிவாசிகள். ஊரில் வேலை இல்லை. போதிய படிப்பறிவு இல்லை (45 சதவீதத்திற்கும் குறைவு). ஆகையால், எங்கேனும் சென்று ஏதேனும் ஒரு வேலையை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி விடலாம் என்று எண்ணி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
தற்போது, காங்கிரசு கைப்பற்றியிருக்கும் மத்திய பிரதேசத்தை இதற்கு முன்பு கிட்டத்தட்ட 14 வருடங்கள் (டிசம்.2003-லிருந்து டிசம்.2018 வரை) பாஜக-வே ஆண்டு வந்தது. மோடியின் ‘வல்லரசு’ இந்தியாவில் ஒரு கிராமத்தின் மொத்த இளைஞர்களையும் பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்குத் துரத்தியிருப்பது பாஜக-வின் மிகப்பெரிய ‘சாதனை’தான்.
இந்தக் குழுவில் உள்ள அனில் நம்மிடம் பேசும்போது,
தொழிலாளி அனில், பி.ஏ. (ஹிந்தி)
“கும்ஹியா கிராமத்தச் சேர்ந்த 22 பேர் இங்கே இருக்கோம். சீகான்ல காண்டிராக்ட் வேல. (SECON – பெட்ரோல் மற்றும் எரிவாயு போன்றவற்றை எடுத்துச் செல்ல பூமிக்கடியில் ராட்சத குழாய்களை பதிக்கும் பன்னாட்டுக் கம்பெனி) மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பள்ளம் தோண்டி மண்ணெடுத்து சோதனைக்கு அனுப்புறதுதான் நாங்க செய்யிற வேல.
எனக்கு மனைவியும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. என்னோட குடும்பத்த அண்ணன்தான் பாத்துக்கிறாரு. அவரு ஒரு தனியார் பள்ளியில ஐயாயிரம் சம்பளத்துக்கு ஆசிரியரா வேலை செய்யிறாரு. நானும் பி.ஏ ஹிந்தி படிச்சிருக்கேன். ஆனா வேலையேதும் கெடக்கல. அதனால இங்கே வந்துட்டேன்.
ஒரு நாளைக்கு 300 ரூபா சம்பளம். எட்டு மணி நேரம் வேலை. மூணு வேளை சாப்பாடு. அப்புறம் வேலை செய்யிற எடத்துலயே கொட்டகை போட்டு தங்க ஏற்பாடும் செஞ்சிருக்காங்க. வேலை முடிஞ்சதும் அப்படியே ஒரு துண்ட விரிச்சு, அங்கேயே தூங்கிடுவோம்” – என்றார்.
தொழிலாளி திலீப்
பேசிக்கொண்டிருக்கும்போதே இளைஞன் திலீப் ஓடி வந்தான். படிய வாரப்பட்ட முடியை மீண்டும் சரி செய்தான். கேமராவைப் பார்த்து புன்னகைத்தான். அவன் மட்டுமல்ல, அங்கிருந்த தொழிலாளர்கள் பலரும் அப்படித்தான், ஏதோவொரு இனம்புரியா மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தார்கள்.
அடுத்த மூன்று வேளைக்கான சப்பாத்தி தயாராகி விட்டது. ரயிலைப் பிடிக்க இன்னும் இரண்டு மணிநேரம்தான் இருக்கிறது. பத்து நாட்கள் விடுமுறை. ஹோலிப் பண்டிகை. மகிழ்ச்சி வராமலா இருக்கும்! பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தாலும், கும்ஹியா கிராமத்தின் மண் வாசனை இவர்களது மனங்களை வாரி எடுத்திருக்க வேண்டும்.
ஊருக்குச் செல்லவிருக்கும் மத்தியப் பிரதேசத் தொழிலாளர்கள், தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள சீகான் (பன்னாட்டு நிறுவனம்) ஒதுக்கித் தந்திருக்கும் ‘ஓய்வு’ வளாகம்.
மோடியின் ‘தூய்மை இந்தியா’ மக்களுக்குத்தான்; கார்ப்பரேட் நிறுவனங்கள் மதிக்க வேண்டும் என்று கட்டாயமா என்ன?
வீண் அரட்டையில்லை, எவ்வித ஓய்வுமில்லை. சொந்த வேலையையும் பொது வேலைகளையும் திட்டமிட்டாற்போல செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள்.
தொழிலாளரும் இயந்திரமும் ஒன்றுதானோ. பயன்பாடு இல்லாததால் குப்பைகளுக்கிடையே நிறுத்தப்பட்டிருக்கும் குழிவெட்டும் இயந்திரம்.
இந்த ரீதியில் மாலை வரை அவன் முன்னே சென்றான். அலெக்ஸேயின் பின்புறம் எங்கோ அஸ்தமிக்கும் சூரியனின் வெப்பமற்ற மாலைச் செங்கதிர் பைன் மர முடிகள் மீது தழல் ஒளி வீசின. காட்டில் மங்கலின் சாம்பல் நிறம் மேலும் அடரலாயிற்று. அந்த வேளையில், பாதைக்கு அருகே, ஜூனிப்பர் புதர்கள் மண்டிய பள்ளத்தாக்கில் அலெக்ஸேயிக்குப் புலனாயிற்று ஒரு காட்சி. அது அவனுடைய முடி சிலிர்த்தது.
இங்கே, பக்கத்தில் எங்கோ சண்டை நடந்திருந்தது. ஜுனிப்பர் புதர் அடர்ந்த பள்ளத்தாக்கில் மருத்துவப் பாசறை இருந்திருக்க வேண்டும். காயமடைந்தவர்கள் இங்கு எடுத்துவரப் பட்டு ஊசியிலைத் தலையணைகள் மீது கிடத்தப்பட்டார்கள். புதர்ப் பந்தர்களுக்கு இடையில் முன்போலவே வரிசைகளாகப் படுத்திருந்தார்கள் அவர்கள். வெண்பனியால் பாதி மூடப்பட்டும் எங்கும் வெண்பனி தூவப்பட்டும் காட்சியளித்தார்கள். அவர்கள் இறந்தது காயங்களினால் அல்ல என்பது முதல் பார்வையிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது. லாவகமான கத்தி வீச்சால் எவனோ அவர்கள் அனைவரது குரல்வளையும் அறுத்துத் துண்டித்திருந்தான். தங்களுக்குப்பின்னே என்ன நடக்கிறது என்று பார்க்க முயல்பவர்கள் போலத் தலைகள் வெகு தூரம் பின் சாய்த்தவாறு ஒரே பாங்கில் கிடந்தார்கள். இந்தப் பயங்கரக் காட்சியின் மர்மம் உடனேயே துலங்கிவிட்டது. ஒரு பைன் மரத்தின் அடியில், வெண்பணி மூடியிருந்த சோவியத் படை வீரனது உடல் அருகே , அவனுடைய தலையைத் தன் மடி மீது வைத்தவாறு இடுப்புவரை பனியில் புதைந்து உட்கார்ந்திருந்தாள் ஒரு மருத்துவத்தாதி. சிறிய, நொய்ந்த இளம் பெண் அவள். காதுகளை மூடும் மென்மயிர்த் தோல் தொப்பியின் நாடாக்களை மோவாயின் அடியில் கட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய தோள் பட்டைகளுக்கு நடுவே துருத்திக் கொண்டிருந்த மெருகினால் பளபளக்கும் கத்திப்பிடி.
லாவகமான கத்தி வீச்சால் எவனோ அவர்கள் அனைவரது குரல்வளையும் அறுத்துத் துண்டித்திருந்தான். தங்களுக்குப்பின்னே என்ன நடக்கிறது என்று பார்க்க முயல்பவர்கள் போலத் தலைகள் வெகு தூரம் பின் சாய்த்தவாறு ஒரே பாங்கில் கிடந்தார்கள்.
எஸ்.எஸ் படையின் கறுப்புச் சீருடையை அணிந்த ஒரு பாசிஸ்டும், தலையில் இரத்தக் கறைபடிந்த பட்டித் துணிக்கட்டு போட்டிருந்த ருஷ்யப் படை வீரனும் ஒருவர் குரல்வளையை ஒருவர் பற்றி நெறித்தவாறு இறுதியான மரணப் போராட்ட நிலையில் உறைந்து கிடந்தார்கள். கறுப்புச் சீருடை அணிந்த பாசிஸ்டு காயமடைந்தவர்களைத் தன் கத்தியால் அறுத்துக் கொன்றான், மருத்துவத் தாதியின் முதுகில் குத்தினான், அவனால் கொல்லப்படாத ஒருவன் அக்கணமே அவனைப் பிடித்து, அணையும் தறுவாயிலிருந்த தன் உயிரின் எஞ்சிய வலியை எல்லாம் திரட்டி, பகைவனின் குரல்வளையை நெரித்திருந்த விரல்களில் செலுத்தினான் என்பதை எல்லாம் அலெக்ஸேய் உடனே புரிந்துக்கொன்டான்.
காயமுற்ற வீரனைத் தன் உடலால் அரவணைத்துக் காக்கும் நொய்ந்த இளம்பெண்ணையும், அகன்ற முழங்கால் முடிகள் கொண்ட பழைய கித்தான் பூட்சுகள் அணிந்த அவனுடைய கால்களின் அருகே ஒருவரையொருவர் இறுகப் பற்றியவாறு கிடந்த கொலைகாரன், பழி தீர்ப்பவன் ஆகிய இவ்விருவரையும் வெண்பனிப்புயல் அதே நிலையில் அடக்கம் செய்துவிட்டிருந்தது. மெரேஸ்யெவ் சில வினாடிகள் பிரமித்துப் போய் நின்றான். அப்புறம் மருத்துவத்தாதியின் அருகே தத்திச் சென்று அவள் உடலிலிருந்து கத்தியை உருவினான். அது எஸ்.எஸ். படையினருக்குரிய கத்தி. பண்டைய ஜெர்மானிய வாளின் வடிவில் செய்யப்பட்டிருந்தது. அதன் கருங்காலிக் கைப்பிடியில் எஸ்.எஸ். படையின் சின்னம் வெள்ளியால் பொறிக்கப்பட்டிருந்தது. து றுவேறிய அலகில் Alles fur Deutch land (எல்லாம் ஜெர்மனிக்கே) என்ற இந்த வாசகம் இன்னும் தெளிவாயிருந்தது. அலெக்ஸேய் வெண்பனியைத் தோண்டி முடமுடத்ததுப் பனிக்கட்டி படிந்திருந்த கூடாரத்துணியை எடுத்து மருத்துவத்தாதியின் உடலை அதனால் கவனத்துடன் போர்த்தி அதற்கு மேல் சில பைன் மரக்கிளைகளை வைத்தான்…
எஸ்.எஸ் படையின் கறுப்புச் சீருடையை அணிந்த ஒரு பாசிஸ்டும், தலையில் இரத்தக் கறைபடிந்த பட்டித் துணிக்கட்டு போட்டிருந்த ருஷ்யப் படை வீரனும் ஒருவர் குரல்வளையை ஒருவர் பற்றி நெறித்தவாறு இறுதியான மரணப் போராட்ட நிலையில் உறைந்து கிடந்தார்கள்.
இதை எல்லாம் அவன் செய்வதற்குள் இருட்டாகிவிட்டது. மேற்கே அந்தியொளி மரங்களுக்கிடையே மறைந்தது. குளிர் நிறைந்த அடர் இருள் பள்ளத்தாக்கில் சூழ்ந்தது.
வோல்காப் பிரதேச ஸ்தெப்பியில் உள்ள கமிஷின் என்னும் இடத்தில் பிறந்த நகரவாசி அலெக்ஸேய், காட்டு விவகாரங்களுக்குப் பழக்கப்படாதவன். எனவே, இரவு தங்க இடவசதி செய்து கொள்வதையையும் நெருப்பு மூட்டுவதையும் பற்றி அவன் உரிய நேரத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. இப்போதோ காரிருள் சூழ்ந்துவிட்டது. அடிபட்டு நொறுங்கிய அவன் பாதங்கள் உழைத்துச் சோர்ந்து தாங்க முடியாதபடி வலித்தன. இந்த நிலையில் விறகுத்தேடச் செல்வதற்கு அவனுக்கு இயலவில்லை. பைன் மரக்கன்றுகள் அடர்ந்தப் புதருக்குள் நுழைந்து, மரத்தின் அடியில் குந்தி, கைகளால் முட்டைகட்டிக் கொண்டு, முழங்கால்களில் முகத்தை புதைத்தவாறு உருண்டைப் போல முடங்கிவிட்டான். தனது மூக்கினால் வெப்பம் ஊட்டப்பட்டு, தொடங்கிய இயக்கமற்ற நிம்மதியை ஆர்வத்துடன் அனுபவித்தவாறு அசைவற்றிருந்தான்.
ரிவால்வர் சுடுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் காட்டில் கழித்த அந்த முதல் இரவில் அலெக்ஸேயால் அதைக் கையாள முடிந்திருக்குமா என்பது சந்தேகந்தான். கற்சிலை போன்று அசைவின்றி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான் அவன். பார்வை புகமுடியாத அடர் இருள் அவனைச் சுற்றி நெருக்கமாகக் குவிந்திருந்து. பைன் மரங்களின் ஒரு சீரான ஓசை, பாதைக்கு அருகே எங்கோ முனகிக் கொண்டிருந்த கோட்டானின் கத்தல், தொலைவில் ஓநாய்கள் இட்ட ஊளை ஆகியவை போன்ற, காட்டுக்கு இயல்பான ஒலிகள் அதில் நிறைந்திருந்தன. இவ்வொலிகளில் எதையுமே அலெக்ஸேய் கேட்கவில்லை.
ஆனால் காலையில், ஏதோ அதிர்ச்சியில் போல அவன் சட்டென விழித்துக்கொண்டான். சாம்பல் நிற வைகறை அப்போது தான் புலரத் தொடங்கியிருந்தது. அருகிலிருந்த மரங்கள் மட்டுமே குளிர்காலப் பனிமூட்டத்திலிருந்து தெளிவற்ற நிழலுருக்களாக வெளித்திருந்தன. அலெக்ஸேய் விழித்ததும் தனக்கு நேர்ந்ததையும் தான் இருக்கும் இடத்தையும் நினைவுப்படுத்திக் கொண்டான். காட்டில் தான் உரிய கவனமின்றிக் கழித்த இரவை அப்போது எண்ணித் திகிலடைந்தான். ஈரக்குளிர் அவனது விமானி உடையின் “பேய்த் தோலையும்” மென் மயிரையும் துளைத்துக்கொண்டு எலும்புகள் வரை ஊடுருவி விட்டது. உடம்பு கட்டிலடங்காமல் விடவிடத்தது. ஆனால் எல்லாவற்றிலும் கோரமாக இருந்தன கால்கள். இப்போது, வெறுமே இருக்கையில் கூட, அவை முன்னிலும் கடுமையாக வலித்தன. எழுந்திருக்க வேண்டும் என்று எண்ணியபோது அவனுக்கு பகீர் என்றது. ஆனால் முந்தின நாள் பூட்சுக்களைக் கழற்றியது போன்றே திட உறுதியுடன் சடக்கென எழுந்து நின்றான் அவன். நேரம் விலைமிக்கதாக இருந்தது.
அலெக்ஸேயைப் பீடித்திருந்த எல்லாத் துன்பங்களுடனும் சேர்ந்து கொண்டது பசி. முந்தைய நாள் கூடாரத் துணியால் மருத்துவத்தாதியின் உடலைப் போர்த்து மூடும் போதே அவளருகே செஞ்சிலுவை அடையாளமிட்ட தார்ச் சீலைப் பையை அவன் கவனித்திருந்தான். ஏதோ ஒரு விலங்கு ஏற்கனவே அங்கே மணியம் பண்ணியிருந்தது. கறவிய துளைகளின் அருகில் வெண்பனி மேல் துணுக்குகள் சிதறிக்கிடந்தன. முந்தின நாள் அலெக்ஸேய் இதை அனேகமாகக் கவனிக்கவில்லை. இன்று அவன் அந்தப் பையை எடுத்தான். அதில் சில போர்க்கள முதலுதவிப் பாக்கெட்டுகளும் பதனிட்ட இறைச்சி டப்பா ஒன்றும் இருந்தன. ரொட்டியோ ரஸ்க்குகளோ பையில் இருந்ததாகத் தோன்றியது. ஆனால் பறவைகளோ விலங்குகளோ அந்த உணவைத் தின்று தீர்த்துவிட்டன. டப்பாவையையும் மருந்துப் பட்டித் துணிகளையும் விமானி உடையின் பைகளில் திணித்துக் கொண்டான். இளம்பெண்ணின் கால்களிலிருந்து காற்றால் பரத்தி ஒதுக்கப்பட்டிருந்த கூடாரத் துணியைச் சரிப்படுத்தினான். மரக்கிளைகளின் வலைப்பின்னலுக்குப் பின்னே இளஞ்சிவப்பாக ஒளிர்ந்த கிழக்கு திசையில் மெதுவாக நகரலானான்.
அவனிடம் இப்போது ஒரு கிலோ கிராம் பதனிட்ட இறைச்சி கொண்ட டப்பி இருந்தது. நாள்தோறும் ஒரு முறை, நடுப்பகலில் சாப்பிடுவது என்று அவன் தீர்மானித்தான்.
இந்த வார வாசகர் புகைப்படத் தலைப்பு – கோடையும் தண்ணீரும் !
வந்து விட்டது கோடை காலம். கூடவே தண்ணீர் பிரச்சினையும். சென்ற வருடம் மழைப் பொழிவும் குறைவு. கூடவே நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. சென்னையின் பாதி அல்லது முக்கால் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை இப்போதே துவங்கி விட்டது. வசதியுள்ள அடுக்கக வீடுகளில் லாரிகள் மூலம் நீர் நிரப்பிக் கொள்கிறார்கள். வசதியில்லாதவர்கள் இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்துகிறார்கள்.
சென்னை நகர் முழுவதும் குடிநீர் லாரிகளின் போக்குவரத்து அதிகரித்திருக்கின்றது. மாநகராட்சி லாரிகளைத் தாண்டி தனியார் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் கிரமமாக சென்று குடிநீரை குடத்திற்கே விற்கிறார்கள். மற்ற மாவட்டங்களைப் பொறுத்த வரை குடிநீர் பிரச்சினை என்பது ஒரு நிரந்தர ஏற்பாடாகி விட்டது. அனைத்து இடங்களிலும் உள்ளூராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தண்ணீருக்காக நமது மக்கள் இக்கோடையில் மிகுந்த நேரம் செலவழிக்க வேண்டும். அலுவல் பணி, உறக்கம், பொழுது போக்கு போக குடிநீருக்காக மட்டும் குறைந்தது 2 மணிநேரம் செலவழிக்க வேண்டும். பெண்கள் என்றால் இன்னும் ஓரிரு மணிநேரங்கள் சேரும்.
ஒருவரே
பல படங்களையும் அனுப்பலாம்.
படங்களை தெளிவாகவும், விவரங்களோடும் அனுப்புங்கள்.
ஏனோ தானோவென்று அனுப்ப வேண்டாம்.
சில நண்பர்கள்
சிரத்தை எடுத்து
அழகுற அனுப்புகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
பிளாஸ்டிக் தடை காரணமாக 2 ரூபாய் தண்ணீர் பாக்கெட் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் அரை லிட்டர் பாட்டில் 7 ரூபாய்க்கு கிடைக்கிறது. குடிநீர் கேன்களின் போக்குவரத்து வழக்கம் போல அதிகரித்து வருகிறது. கேன்களே குடிநீரின் ஆதாரம் என்றாகிவிட்டது. இதிலும் வசதியுள்ளவர்கள் ஆர்.ஓ. சுத்திகரிப்பு எந்திரத்தை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
கோடைகாலம் என்பதால் பழச்சாறு நிறுவனங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன. சோடா மற்றும் குளிர்பானத் துறையில் உள்ளூர் சிறு முதலாளிகளின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கோடையில் துவக்கப்படுவது வழக்கம். ஜி.எஸ்.டி கண்டத்தை மீறி அவர்களுக்கு ஓரளவேனும் இலாபம் கிடைக்குமா?
ஆம். தண்ணீர், குடிநீர், லாரிகள், கேன்கள், பாட்டில்கள், மக்கள், குழாய் என நீர் சார்ந்த எதையும் நீங்கள் புகைப்படம் எடுக்கலாம். ஏப்ரல் 10 வரை அனுப்பலாம். தெரிவு செய்யப்படும் படங்கள் அவ்வப்போது வெளியிடப்படும்.
படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 10.04.2019 மின்னஞ்சல் முகவரி: vinavu@gmail.com வாட்ஸ்அப் எண்:(91) 97100 82506
புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், நாள், அது குறித்த விவரங்கள் கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்! தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும் வெளியிடப்படும். காத்திருக்கிறோம். நன்றி!
நட்புடன்
வினவு
புகைப்படம் எடுப்பது தொடர்பான சில ஆலோசனைகள்:
♦ எந்த ஒரு இடம்/கருத்திற்காக புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் அதன் முழுப் பரிமாணத்தை உணர்த்தும் வகையில் wild ஆக புகைப்படம் ஒன்று எடுக்க முயற்சிக்க வேண்டும். (உ-ம்) மார்க்கெட் கடைவீதியை மையப்படுத்தி கதை சொல்லப்போகிறோம் என்றால், அதன் தெரு அமைப்பு, வாடிக்கையாளர்களின் அடர்த்தி ஆகியவற்றை பதிவு செய்வது.
♦ தனிநபரை புகைப்படம் எடுக்கும் பொழுது, அந்த நபரை மையமாக வைத்து புகைப்படம் எடுப்பதை விட, அந்த நபர் வலது / இடது ஓரத்தில் இருப்பது போல எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்படத்தில் நிறைய Details கொண்டு வர முடியும். (உ-ம்) வியாபாரியை படம் எடுக்கும்பொழுது, அவரது முகம் இடது வலது ஓரத்தில் இருந்தால் மீதமுள்ள இடத்தில் அவரது கடை மற்றும் வாடிக்கையாளர்களின் நடமாட்டம் பதிவாகும்.
♦ எந்த ஒரு இடத்திற்கு சென்றதும் எடுத்தவுடன் புகைப்படம் எடுத்துத் தள்ளிவிடக்கூடாது. முதலில் அந்த இடத்தை அவதானிக்க வேண்டும். கண்ணால் முதலில் காட்சிகளை வகைப்படுத்திக்கொண்டு எந்த Frame இல் எடுக்கப் போகிறோம் என்பதை கூடுமான வரையில் முன்னரே தீர்மானித்து விட்டு அதன்பின்னர் புகைப்படங்களை எடுக்கப் பழக வேண்டும்.
♦ ஏற்கெனவே பல முறை ஒரு இடத்தைப் பலரும் பல விதமாக புகைப்படம் எடுத்திருந்தாலும் அவ்விடத்தில் நாம் புதுமையாக சில படங்களை எடுக்க முடியும். அல்லது அங்கேயே இதுவரை யாரும் செல்லாத புதிய இடம், அல்லது புதிய கோணம் நமக்கு தெரிய வரும். இதற்கு நாம் தேடி அலைய வேண்டும். மெனக்கெட வேண்டும். (உ-ம்) ரெங்கநாதன் தெருவைப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில், குறுக்கு நெடுக்காக சிலமுறை சென்று வந்தால் புதிய கோணம் கட்டாயம் கிடைக்கும்.
♦ புகைப்படம் எடுப்பதில் நேரம் மிக முக்கியமானது. காலை 6 – 9 மற்றும் மாலை 4 முதல் இருட்டும் வரையிலான நேரம் பொருத்தமானது. கண்ணில் காண்பதை அப்படியே காமிராவில் கொண்டு வர முடியும். குறிப்பான சில இடங்களுக்கு இந்த நேரம் மாறுபடலாம். (உ-ம்) தி.நகர் கடை வீதியின் பிரம்மாண்டத்தை அதன் பளபளப்பை காட்ட வேண்டுமென்றால் இரவு 7 மணிக்கு மேல் எடுப்பதே பொருத்தமானது.
♦ ஒரு கதைக்கருவைத் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ற படங்களை எடுக்கும் பொழுது, அதன் ஒட்டுமொத்த கதையையும் ஒரே படத்தில் சொல்வதைப்போல First Photo அமைய வேண்டும். (உ-ம்) காசிமேடு மீன் சந்தையை படமாக்குவது நமது கதைக்கரு என்றால், கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் நின்று கொண்டு கடற்கரையில் காணும் மக்கள் அடர்த்தியைக் காட்சிப் படுத்துவது.
♦ எதையும் நேரடியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இதே இடத்தை இதற்கு முன்னர் பலரும் பலவிதமாக எடுத்த புகைப்படங்களைப் போலவே நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. புதிய கோணத்தில் முயற்சிக்க வேண்டும்.
♦ சில்லவுட் (உருவங்கள் மட்டுமே தெரிவது போன்று) படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லா படங்களும் கலராக இருக்க வேண்டுமென்பதில்லை. உள்ளடக்கத்தைப் பொருத்து கருப்பு வெள்ளைப் படங்களாக இருப்பது சிறப்பு.
♦ இணையத்தில் புகைப்படக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தையும் ரசித்து உள்வாங்க வேண்டும். இந்தப் பயிற்சிதான் புதிய இடத்தில் புதிய கோணத்தில் புகைப்படங்களை எடுக்க நமக்கு கை கொடுக்கும்.
♦ எங்கும் எப்பொழுதும் விதியை மீற வேண்டும் (Break The Rule) . கடை வீதி என்றால் சடங்குத்தனமாக இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. Frame களை மாற்றிப் போட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும்.
♦ சில இடங்களில் staging set பண்ணி புகைப்படம் எடுக்கலாம். அங்கு இருக்கும் நபரை நாம் சொல்லும் விதமாக நிற்க வைத்தோ, நமது frame க்குள் வர வேண்டிய பொருட்களை மாற்றியமைத்தோ எடுக்கலாம். தவறில்லை.
♦ போராட்டக்களத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது, இந்த விதியை எல்லாம் பயன்படுத்திப் பார்க்க போகிறேன் என்று குறுக்கும் நெடுக்குமாக அலையக் கூடாது. போலீசார் குறுக்கீடு செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் காமிராவைத் தட்டிவிட்டாலோ, அல்லது புகைப்படம் எடுக்கக்கூடாதென்று தடுத்துவிட்டாலோ நமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற நேரங்களில் தூரத்தில் நின்று கொண்டே ஆவணப்படுத்தும் நோக்கில் ஒன்றிரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், அங்குள்ள நிலைமையை கணித்து பின்னர் தேவையான கோணத்தில் எடுக்கலாம். ஆனால், மிக முக்கியமாக மொபைலில் புகைப்படம் எடுக்கிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். நமது உடல்மொழி அவற்றை படம்பிடிக்கிறோம் என்று காட்டிக்கொள்ளாத வகையில் சாமர்த்தியமாக புகைப்படம் எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
♦ சில இடங்களில், சிலரை புகைப்படம் எடுக்கும் பொழுது அவர்களது முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். நேர்காணலுக்காக செல்லும் பொழுது, எடுத்தவுடன் அவர்களை புகைப்படம் எடுத்துவிடக்கூடாது. முதலில் அவர்களுடன் நட்புமுறையில் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் மறுப்பின்றி ஒப்புதல் தருவார்கள். நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.
♦ பாதிக்கப்பட்ட மக்களிடமோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையையொட்டி செல்லுமிடங்களிலும் மக்களிடம் மிகவும் அனுசரணையோடும் அமைதியாகவும் அணுக வேண்டும். நான் உங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன் என்ற ரீதியில் மிதப்பாக அணுகக் கூடாது. (உ-ம்: வெள்ளம் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகுவது).
புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
நூலாசிரியர் மாட் விக்டோரியா பார்லோ கனடாவைச் சேர்ந்தவர். 2008-2009 தண்ணீரின் அரசியல், சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பரிமாணங்களை கையிலெடுத்து இந்த உலகத்தின் தண்ணீர் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களால் சூறையாடப்படுவதற்கு எதிராக போராடிவருபவர்.
இவரது Blue covenant என்ற புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம்தான் இந்நூல். இப்புத்தகத்தில், இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவைகள் எவ்வாறு இருந்தன, அவைகளின் தற்போதைய நிலை என்ன, இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர்நிலைகளுக்கு என்ன நேரும், இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சமூக தளங்களில் செய்ய வேண்டியது என்ன என்று ஒரு பரந்த வெளியில் இருந்து இந்தப் புத்தகத்தை வழங்கியுள்ளார் பார்லோ. (நூலிலிருந்து பக்.5-6)
ஒரு பக்கம் வலிமை மிக்க தனியார் நிறுவனங்கள் மற்றும், சர்வதேச நீர் மற்றும் உணவு கழகங்கள், குறிப்பாக முதல் உலகப் போர் அரசுகள், உலக வங்கி, சர்வதேச நிதியகம், உலக வாணிப அமைப்பு, உலக நீர் கவுன்சில் போன்ற சர்வதேச அமைப்புகளின் சொந்த நலம், இந்த சக்திகளுக்கு தண்ணீர் என்பது வெளிச்சந்தையில் விற்று வியாபாரம் பண்ணக்கூடிய ஒரு பொருள். இவர்கள் தண்ணீரின் மீதான தனியார் கட்டுப்பாட்டை அதிகப்படுத்த ஒரு விரிவான உட்கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். மற்றும் இவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக செயலாற்றுகிறார்கள். அவர்களின் கதை இங்கே சொல்லப்படுகிறது.
இன்னொரு புறம், சூழலியலாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், உள்ளூர் ஆண் மற்றும் பெண்கள், சிறிய உழைப்பாளிகள் மற்றும் தொழிலாளிகள், ஆயிரக்கணக்கான அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட போராளிகள். இவர்கள் தங்களது நீராதாரத்தின் மீதான கட்டுப்பாட்டிற்காக தண்ணீருக்கான நீதி கோரும் இயக்கம் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் என்பது மனித இனம் மற்றும் அனைத்திற்குமான பாரம்பரியச்சொத்து என்று நம்புகிறார்கள். மேலும், ஒரு பொதுச்சொத்தை தனி நபரின் சுய நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது மற்றும் கட்டணம் செலுத்த கொடுக்க முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அந்த சொத்தை மறுக்கவும் முடியாது என்றும் இந்த இயக்கத்தினர் நம்புகின்றனர். (நூலிலிருந்து பக்.14)
1989 -ம் ஆண்டு தாட்சர் பிரிட்டன் அரசுக்கு சொந்தமான பிராந்திய நீர் அமைப்புகளை தனியார்மயமாக்கினார். இவைகள் அடிமாட்டு விலையில் விற்கப்பட்டன. ஆன்-கிறிஸ்டின் ஹோலண்ட் (Ann-Christin Holland), தங்களுடைய The Water Business என்ற புத்தகத்தில் குறிப்பிடுவது போல் இந்த விற்பனையில் கலாச்சார மற்றும் இயற்கையின் சொத்துக்களும் சேர்ந்தே விற்கப்பட்டன என்கிறார்கள். இதை வாங்கிய தனியார் நிறுவனங்கள் கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பின் சொந்தக்காரர்களானார்கள். இருபது வருடங்களுக்கு எந்த போட்டியும் இல்லாமல் செயல்பட அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. அவர்கள் விரும்பிய கட்டணத்தை வசூலித்துக் கொள்ளவும், தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கவும், அவர்களால் எவ்வளவு இலாபம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு இலாபம் சம்பாதிப்பதற்குமான சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டார்கள்; தண்ணீர் கட்டணம் கடுமையாக உயர்ந்தது; தனியார்மயமாக்கப்பட்ட பத்தாண்டுகளில் வரிக்கு முந்திய இலாபம் 147 சதவீதம் உயர்ந்தது. தண்ணீருக்கான கட்டணத்தை செலுத்த முடியாத இலட்சக்கணக்கான மக்களுக்கு தண்ணீர் சேவை நிறுத்தப்பட்டது…
இங்கிலாந்தில் தண்ணீரை தனியார்மயமாக்கியது தோல்வி என்பது தெளிவாக தெரிந்தாலும், இந்த அமைப்புமுறைதான் தென்கோளப்பகுதி வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தண்ணீரை தனியார்மயமாக்கியதில் உள்ள அனுபவத்தை வைத்துக்கொண்டு தாட்சர், சர்வதேச தனியார் சந்தையில் குதிப்பதற்காக சூயஸ், வியோலியா உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களுக்கு உதவிகள் செய்தார். குறிப்பாக தேம்ஸ் நதியின் தண்ணீரை சொல்லலாம். இந்நதியின் நீரை ஜெர்மன் நாட்டின் பகாசுர நிறுவனமான RWE 2002 ஆம் ஆண்டு வாங்கியது. RWE உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார்ப்பரேட் தண்ணீர் நிறுவனம் ஆகும். (நூலிலிருந்து பக்.63-64)
உலகவங்கியில் நடப்பது…
முதல் உலக நாடுகளே உலக வங்கியைக் கட்டுப்படுத்துகின்றன. இந்நாடுகள் தாங்கள் முதலீடு செய்திருக்கின்ற தொகைக்கேற்ப ஓட்டுரிமையைப் பெற்றுள்ளன. அதற்கேற்ப, ஏழை நாடுகளுக்கு கடனாக வழங்கப்படுகிற 20 பில்லியன் அமெரிக்க டாலரை பெறப்போவது யார், அதைப்பெற அந்நாடுகள் ஒத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனைகள் என்னென்ன என்பதை முடிவெடுப்பதில் அமெரிக்கா (இதனைத் தொடர்ந்து ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஃப்ரான்ஸ்) ஆதிக்கம் செலுத்துகிறது. தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 3 பில்லியன் அமெரிக்க டாலராகும். வடகோள கார்ப்பரேட் நிறுவனங்கள் தென்கோளப் பகுதியில் சந்தைகளைத் திறக்க உலக வங்கி தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதுதான் தலையாய குறிக்கோள் என்று உலக வங்கியின் குறிப்பு ஒன்று கூறுகிறது. (அமெரிக்கா தனது பங்களிப்பாக கொடுக்கும் ஒவ்வொரு டாலருக்கும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் 1.30 டாலர் அளவிற்கு ஒப்பந்தங்களாகப் பெறுகின்றன என்று நிதித்துறை உயர் அதிகாரி ஒருவர் கிண்டலாக கூறியுள்ளார்)
1993 -ம் ஆண்டுக்கு முந்திய வருடங்களிலிருந்தே உலக வங்கி தண்ணீர் தனியார்மயமாக்கத்தை ஊக்குவித்து வந்தது. அதே வருடம் நீர் ஆதாரங்கள் மேலாண்மை (Water Resource Management) குறித்த திட்டக் குறிப்பை ஏற்றுக்கொண்டது. இக்குறிப்பு ஏழை நாடுகள் தண்ணீர் சேவைகளுக்காக கட்டணம் செலுத்த “விருப்பம் இல்லாமல்” இருக்கின்றன என்று கூறியது. மேலும் தண்ணீர் என்பது திறன் வாய்ந்த, நிதி ஒழுங்கு சார்ந்த, முழு உற்பத்திச் செலவையும் மீட்டுவிடக்கூடிய ஒரு பண்டமென்றும் அந்த அறிக்கை கூறியது. (முதலீட்டுத் தொகையை மீட்டுக் கொள்வதற்காக தன் கட்டணத்தை கடுமையாக உயர்த்துவதோடு மட்டுமல்ல, முதலீட்டாளர்கள் இலாபம் சம்பாதிக்க கட்டணத்தை ஏற்றுகின்ற ஒரு திட்டம்தான் இது.) 1990-2006 -ம் ஆண்டுகளுக்கு இடை பொதுத்திட்டங்களுக்கான கடன் வசதி தனியார் திட்டங்களுக்குச் சாதகமாக தள்ளுபடி செய்யப்பட்டன. உலக வங்கி வளரும் நாடுகளில் 300-க்கு மேற்பட்ட குடிநீர் சார்ந்த திட்டங்களுக்கு நிதி உதவி செய்துள்ளது.
தண்ணீரை தனியார்மயமாக்குவதில் அடிப்படையில் மூன்று வகைகள் உள்ளன. சலுகை அடிப்படையிலான (Concession) ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய உரிமம் வழங்கப்படும். இவர்கள் இலாபம் பெற நுகர்வோர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்றனர். புதிய குழாய்கள் அமைத்தல், வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து முதலீட்டுத் திட்டங்களுக்கும் இந்த நிறுவனங்கள் பொறுப்பு. பிரிட்டிஷ் மாதிரி தனியார்மயம் என்பது இந்த சலுகை அடிப்படையிலான ஒப்பந்தம் ஆகும். ஆனால், இந்தியாவில் தீவிர சலுகை அடிப்படையிலான (Extreme Concession) ஒப்பந்தம் பின்பற்றப்படுகிறது. இதில் ஆறுகள் முற்றிலும் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றன. இதை தனியார்கள் அரசின் தலையீடு இல்லாமல் இலாபத்திற்காக நடத்துகிறார்கள். இருக்கின்ற தளவாடங்களைப் புதுப்பிப்பதற்கும், பழுது பார்ப்பதற்கான முதலீடுகளைச் செய்வதற்கும் தண்ணீரை வினியோகிப்பதற்கும் நிறுவனத்தைப் பொறுப்பாக்கும் ஒப்பந்தம் இது. ஆனால், புதிய முதலீட்டுக்கு அங்கு உள்ள அரசுதான் பொறுப்பு. மேலாண்மை ஒப்பந்தம் (Management) என்பதில் தனியார் நிறுவனம் தண்ணீர் சேவையை நிர்வாகம் செய்வதே அதன் பொறுப்பு. எந்த முதலீட்டையும் செய்யாது.
உலக மேம்பாட்டு இயக்கம் குறிப்பிடுவதுபோல் பொதுச் சொத்துக்களை முழுவதும் தனியாருக்கு விற்பனை செய்யும்போது மட்டுமே உலக வங்கி தனியார்மயமாக்கம் என்ற பதத்தை பயன்படுத்துகிறது. மேலாண்மை ஒப்பந்தங்கள், குத்தகைகள் போன்ற பெரும்பாலான திட்டங்களை விவரிக்க அரசு மற்றும் தனியார் பங்களிப்பு அல்லது தனியார் துறை பங்களிப்பு போன்ற குறைந்தளவிலான அரசியல் தன்மை கொண்ட பதங்களையே உலக வங்கி பயன்படுத்துகிறது. பங்களிப்பு என்பது சரிசமமான பொறுப்பும் மற்றும் ஜனநாயகத் தொனியும் கொண்டது. ஆனால், தனியார் நிறுவனங்களின் இலாபம் அடங்கியுள்ளதால் இந்த ஒப்பந்தங்கள் தனியார்மயமாக்கல் என்றே அழைக்கப்படுகின்றன. மக்கள் இவர்களின் “உற்பத்திப்பொருளுக்கு பணம் கொடுக்கவில்லையென்றால் சேவை துண்டிப்பைப் பெற வேண்டும். இவர்கள் உறுதியளித்ததற்கு மாறாக சேவைக் குறைபாடு இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது; மாற்று வழிகள் இல்லை. ஆனால், இக்கார்ப்பரேட்கள் தங்களது இலாபம் குறைய ஆரம்பித்து விட்டது என்று உணர்ந்தார்களானால் ஒப்பந்தத்தை விட்டுவிட்டு கிளம்பிவிடுவார்கள். (நூலிலிருந்து பக்.65-67)
நூல்:நீராதிபத்தியம் (சர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும்) ஆசிரியர்: மாட் விக்டோரியா பார்லோ (Maude Victoria Barlow) தமிழில்: சா. சுரேஷ்
வெளியீடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002. தொலைபேசி: 04259 – 226012, 98650 05084. மின்னஞ்சல்:ethirveliyedu@gmail.com இணையம்:ethirveliyedu.in
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
கலையரசன்9 நவம்பர் 1918, “ஜெர்மன் சோஷலிசக் குடியரசு” பிரகடனம் செய்யப்பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஜெர்மன் தேசியக் கொடி இறக்கப்பட்டு, செங்கொடி ஏற்றப்பட்டது. அந்த நகரங்களில் “Räte” எனும் தொழிலாளர் மன்றங்கள் (ரஷ்யாவில் சோவியத் மாதிரி) உருவாகி இருந்தன.
நீங்கள் இந்த வரலாற்றுத் தகவல்களை இதற்கு முன்னர் கேள்விப்பட்டிரா விட்டால் ஆச்சரியப்படாதீர்கள். புதிய தலைமுறை ஜெர்மனியர்களுக்கு கூடத் தெரியவிடாமல் மூடி மறைக்கப்படுகிறது. ஜெர்மனியில் கம்யூனிசப் புரட்சி நடந்தது என்ற தகவலே பலருக்கு புதிதாக இருக்கலாம். அந்தப் புரட்சி தோல்வியில் முடிந்திருந்தாலும், முதலாளித்துவ அரசுகளும், ஊடகங்களும் அப்படியான தகவல்களை இருட்டடிப்பு செய்வதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.
நவம்பர் 1918, முதலாம் உலகப்போரில் தோல்வியடைந்த காரணத்தால், ஜெர்மன் சக்கரவர்த்தியின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து வந்த ஜெர்மன் இராணுவம், அப்போது தேசத்தின் எல்லையை பாதுகாப்பதற்கான தற்காப்புப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்நாட்டில் உணவுப் பற்றாக்குறை காரணமாக மக்கள் பசியால் வாடிக்கொண்டிருந்தார்கள். பெரும்பான்மை ஜெர்மன் மக்கள் போரை விரும்பவில்லை. பசி, பட்டினியால் வாடிய மக்களிடம் தேசியப் பெருமிதம், இனவுணர்வு எதுவும் செல்லுபடியாகவில்லை. அதனால், அன்றைய ஜெர்மனி முழுவதும் போருக்கு எதிரான குரல்களே அதிகமாக கேட்டன.
4.11.1918, வட ஜெர்மனியின் துறைமுக நகரமான ‘கீல்” (Kiel) பதற்றமாக காட்சியளித்தது. சுமார் ஐயாயிரம் பேர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களின் கைகளில் செங்கொடிகள் பறந்தன. “சமாதானமும் உணவும் வேண்டும்!”, “அப்பாவிகளை விடுதலை செய்!” போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் காணப்பட்டன. அவர்கள் கீல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தமது தோழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வடக்கே உள்ள கீல் நகரை அண்டிய சர்வதேச கடல் பகுதியில், பிரிட்டிஷ் கடற்படையும், ஜெர்மன் கடற்படையும் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அந்தப் போரில் ஜெர்மனிக்கு தோல்வி நிச்சயம் என்பது தெரிந்தும், பிரிட்டிஷ் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துமாறு ஜெர்மன் தளபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், மாலுமிகள் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தனர். ஊரில் தமது உறவுகள் பசியால் வாடிக் கொண்டிருக்கையில், தாம் இங்கே போரிடுவது யாருக்காக என்று குமுறினார்கள்.
தளபதிகளின் உத்தரவுக்கு கீழ்ப்பட மறுத்த மாலுமிகள், இயந்திரங்களை நிறுத்தி, கப்பல்களை கரைக்கு கொண்டு வந்தனர். கலகம் செய்த குற்றச்சாட்டில், 47 மாலுமிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப்பட்ட மாலுமிகளின் விடுதலையை வலியுறுத்தி, சக மாலுமிகள் மட்டுமல்லாது கப்பல் கட்டும் தளத்தில் இருந்த தொழிலாளர்களும் சேர்ந்து போராடினார்கள்.
தெருக்களில் குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் சோஷலிச அரசியல் ஆர்வலர்கள் அனல் பறக்கப் பேசினார்கள். அவர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியான USPD உறுப்பினர்களாக இருந்தனர். சிறையில் இருந்த 47 மாலுமிகளை விடுதலை செய்வதற்காக, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கடற்படை முகாமை நோக்கி அணிவகுத்து சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய கடற்படை அதிகாரி, கூட்டத்தை கலைப்பதற்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார். அந்த சம்பவத்தில் எட்டுப்பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
ஜெர்மனியில் கம்யூனிசப் புரட்சி நடந்தது என்ற தகவலே பலருக்கு புதிதாக இருக்கலாம். அந்தப் புரட்சி தோல்வியில் முடிந்திருந்தாலும், முதலாளித்துவ அரசுகளும், ஊடகங்களும் அப்படியான தகவல்களை இருட்டடிப்பு செய்வதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.
புரட்சியில் முதல் களப்பலியான தோழர்களின் மரணத்தைக் கண்டு புரட்சியாளர்கள் பின்வாங்கவில்லை. மாலுமிகள் இன்னும் பல போர்க் கப்பல்களின் கட்டுப்பாட்டை கைப்பற்றினார்கள். அங்கிருந்த சிறு ஆயுதங்களைக் கைப்பற்றினார்கள். அந்த ஆயுதங்களை கொண்டு கீல் நகரில் இருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியங்கள் கொள்ளையிடப்பட்டன. ஒரு சில மணிநேரங்களில் கீல் நகரம் முழுவதும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. முன்பு துப்பாக்கிப் பிரயோகம் செய்து தடுத்த கடற்படை முகாம் அதிகாரி, வேறு வழியின்றி சிறை வைத்திருந்த மாலுமிகளை விடுதலை செய்தார்.
அப்போது சமூக ஜனநாயகக் கட்சி தான் ஜெர்மன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், சோஷலிச குறிக்கோள் கொண்ட பாட்டாளி வர்க்கக் கட்சியாக ஆரம்பிக்கப் பட்ட சமூக ஜனநாயகக் கட்சி (SPD), புரட்சி நடந்த நேரத்தில் கொள்கையற்ற முதலாளித்துவ அரசியல் கட்சியாக சீரழிந்து போயிருந்தது. லெனின் அவர்களை “திருத்தல்வாதிகள்” என்று குறிப்பிட்டு பேசினார்.
SPD எப்போதோ தனது கொள்கையை கைவிட்டு விட்டு, சாதாரண அரசியல் கட்சியாகி ஜெர்மன் தேசியத்தை ஆதரித்தது. “தாய்நாட்டை பாதுகாக்கும் போருக்கு” முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது. “ஏகாதிபத்திய போரை ஆதரிப்பது சோஷலிசக் கொள்கைக்கு முரணானது” என்று கூறி போரை எதிர்த்த கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். “நான் இங்கே ஜெர்மானியர்களை மட்டுமே பார்க்கிறேன், கட்சிகளை அல்ல.” என்று சக்கரவர்த்தியால் புகழப்படும் அளவிற்கு, சமூக ஜனநாயக் கட்சி ஆளும் வர்க்கத்திற்கு முண்டு கொடுத்து வந்தது.
ஜெர்மன் அதிகார வர்க்கத்துடன் ஒத்தோடிய சமூக ஜனநாயக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நொஸ்கே, கீல் நகர புரட்சியை அடக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். நொஸ்கே ஒரு முதலாளித்துவ ஆளும் வர்க்க கைக்கூலி என்ற உண்மையை அறியாத தொழிலாளர்கள், அவரை வரவேற்று தோளில் தூக்கி வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதே நொஸ்கே தான் புரட்சியை காட்டிக் கொடுத்து, தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடப் போகிறார் என்ற உண்மையை, அன்றைய தினம் தொழிலாளர்கள் அறிந்திருக்கவில்லை.
ஆரம்பத்தில் தொழிலாளர்கள் பக்கம் நிற்பதைப் போன்று நடித்த நொஸ்கே, புரட்சியை நீர்த்துப் போக வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். “பிரிட்டன் படையெடுக்கும் அபாயம்” இருப்பதாக பயமுறுத்தி, மாலுமிகளை மீண்டும் போர்முனைக்கு அனுப்பும் வகையில் உரையாற்றினார். நொஸ்கேயின் துரோகம் ஓரளவு வெற்றி பெற்றது. ஆனால், அது கீல் நகரில் மட்டுமே சாத்தியமானது. யாரும் எதிர்பாராதவாறு அடுத்த சில நாட்களில் கடலை அண்டிய பிற நகரங்களுக்கும் புரட்சி பரவிவிட்டது.
5 நவம்பர், லுய்பேக் (Lübeck) நகரம் புரட்சிகர மாலுமிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 6 நவம்பர், குக்ஸ்ஹாவன் (Cuxhaven), பிறேமன் (Bremen), அத்துடன் ஜெர்மனியின் மிகப் பெரிய துறைமுக நகரமான ஹம்பேர்க் (Hamburg) ஆகிய நகரங்கள் தொழிலாளர் சோவியத்துகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டன. ஹம்பேர்க் நகரத்தின் பிராந்திய பத்திரிகை “செங்கொடி” என பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது.
புரட்சிகர மாலுமிகளின் கட்டுப்பாட்டின் கீழ் லுய்பேக் (Lübeck) நகரம்.
அடுத்து வந்த சில நாட்களில் இன்னும் பல வட – மத்திய ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்களும், படையினரும் கிளர்ந்தெழுந்து அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றினார்கள். தொழிற்சாலைகளும் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அங்கெல்லாம் தொழிலாளர் மன்றங்கள் (சோவியத்) ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டின. 8 நவம்பர், மேற்கு ஜெர்மன் நகரமான கெல்ன் (ஆங்கிலத்தில்: Cologne) வரை புரட்சி பரவி விட்டது. அதையடுத்து பிராங்க்பெர்ட், மியூனிச், லைப்சிக், மக்டபூர்க் ஆகிய பிற நகரங்களும் புரட்சியாளர்களின் வசமாகின. 9 நவம்பர், ரயில் வண்டிகளில் செங்கொடி ஏந்திய தொழிலாளர்கள் தலைநகர் பெர்லினை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
9.11.1918, பெர்லின் நகரம். ஜெர்மன் புரட்சிக்கு தலைமை தாங்கிய நாயகனை காண்பதற்காக மக்கள் வெள்ளம் கூடி இருந்தது. நகர மத்தியில் இருந்த பெருந்தெரு ஒன்றில், கனரக வாகனம் ஒன்றின் பின்பகுதி பெட்டி மேடை போன்று மாற்றப்பட்டிருந்தது. அதில் தாவி ஏறிய மனிதர் “புதிய ஜெர்மனி உருவாகி விட்டது” என்று முழங்கினார். அவர் பெயர் கார்ல் லீப்னெக்ட். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகர்களில் ஒருவர். “சோஷலிசம் வாழ்க, சர்வதேச பாட்டாளிவர்க்கம் வாழ்க!” கார்ல் லீப்னெக்ட் முழக்கமிட்டதும், ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.
“புதிய ஜெர்மனி உருவாகி விட்டது” என்று முழங்கும் கார்ல் லீப்னெக்ட்.
கார்ல் லீப்னெக்ட், இரண்டரை வருடங்களுக்கு முன்னர் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தவர். அன்று அவர் உறுப்பினராக இருந்த சமூக ஜனநாயகக் கட்சி தான் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. லீப்னெக்ட் மட்டுமல்ல, ரோசா லக்சம்பேர்க், இன்னும் பல கட்சி உறுப்பினர்களும் போர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சிறைக் கைதிகளாக இருந்த காலத்தில், “சுதந்திர சமூக ஜனநாயகக் கட்சி” (USPD) பெயரில் இயங்கினார்கள்.
9 நவம்பர் 1918-ம் ஆண்டு, “ஜெர்மன் சோஷலிசக் குடியரசு” பிரகடனம் செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர் கார்ல் லீப்னெக்ட், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். உண்மையிலேயே அன்று ஜெர்மனியில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து, அரசு இல்லாத வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. இந்த குழப்பகரமான சூழ்நிலையில் இரண்டு அறிவிப்புகள் வந்தன. ஒன்று, கம்யூனிஸ்டுகளின் “சோஷலிச ஜெர்மன் குடியரசு”. மற்றது, சமூக ஜனநாயகவாதிகளின் “சுதந்திர ஜெர்மன் குடியரசு”.
ஜெர்மன் சோஷலிசக் குடியரசு.
சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பிரீட்ரிஷ் எபேர்ட் (Friedrich Ebert), பிலிப் ஷைடேமன் (Philipp Scheidemann) இருவரும் சேர்ந்து இடைக்கால அரசை பொறுப்பேற்பதாக ஜெர்மன் பாராளுமன்றத்தில் அறிவித்தனர். ஜெர்மனியில் “போல்ஷ்விக் தீவிரவாதம்” வருவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைத்தனர். அந்த நேரம், கார்ல் லீப்னெக்ட் போன்ற கம்யூனிஸ்டுகள் சமூக ஜனநாயகக் கட்சிக்குள் “ஸ்பார்ட்டசிஸ்ட் குழு” என்ற பெயரில் இயங்கி வந்தனர். அவர்களுக்கு ரஷ்யாவிலிருந்து லெனினின் போல்ஷெவிக் கட்சியினர் ஆதரவளித்து வந்தனர்.
அடுத்து வந்த இரண்டு மாதங்களும் பெர்லின் நகரில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டன. வன்முறையும், கலவரமும் நாளாந்த நிகழ்வுகளாகின. பல தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. வீதிகளில் தடையரண்கள் போட்டு, கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. அங்கு ஆயுதமேந்திய புரட்சியாளர்கள் காவல் கடமையில் ஈடுபட்டனர். ஜெர்மனியில் உள்நாட்டுப்போர், அதாவது வர்க்கப்போர் நிதர்சனமானது.
புரட்சியாளர்களில் பெரும்பாலானோர் ஸ்பார்ட்டசிஸ்ட் குழுவை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் நடைமுறையில் உள்ள அரசை தூக்கியெறிந்து விட்டு பாட்டாளி வர்க்க அரசை கொண்டு வருவதை குறிக்கோளாக கொண்டிருந்தனர். ஆனால், அது ரஷ்யாவில் நடந்ததைப் போன்று இருக்காது என்றனர். (அதாவது, இடைக்கால அரசை ஆயுதமுனையில் தூக்கியெறிய விரும்பவில்லை.) அவர்களுடன் முரண்பட்ட மாற்றுக் கருத்தாளர்களும் இருந்தனர். அனேகமாக, போரை முடிவுக்கு கொண்டு வருதல், பஞ்சத்தை போக்குதல் போன்ற உடனடி கோரிக்கைகளின் அடிப்படையில்தான் அவர்கள் ஒன்று சேர்ந்திருந்தனர்.
இடமிருந்து : ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட்.
இதே நேரத்தில், பாராளுமன்றத்திற்குள்ளும் முரண்பாடுகள் வெடித்தன. சமூக ஜனநாயகக் கட்சியினர் “போல்ஷ்விக் தீவிரவாதத்தை” ஏற்றுக் கொள்ள முடியாது என்று விடாப்பிடியாக நின்றனர். டிசம்பர் மாதக் கடைசியில், பாராளுமன்ற அரசியலில் இருந்து வெளியேறிய கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பேர்க் போன்றோர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை (KPD) ஸ்தாபித்தனர். அவர்கள் அடிமட்ட மக்கள் திரளில் இருந்து சோஷலிசப்புரட்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அறிவித்தனர். “சோஷலிசத்திற்கான போராட்டம் மக்களால் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் முதலாளிக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டமாக நடக்க வேண்டும்.” என்ற அறைகூவலுக்கு மக்கள் அணிதிரண்டனர். நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. பெர்லின் நகரில் பல இடங்களில் துப்பாக்கிச் சமர்கள் நடந்தன.
1919-ம் ஆண்டு தொடக்கத்தில், ஜெர்மனியிலும் புரட்சி வெடித்து அது விரைவில் சோஷலிச நாடாகும் வாய்ப்புகள் தென்பட்டன. சமூக ஜனநாயகவாதிகளின் பாராளுமன்ற அரசாங்கத்தால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. சமூக ஜனநாயகத் தலைவர்கள் இராணுவ அதிகாரிகளின் உதவியை நாடினார்கள். மேல்தட்டு மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்த தீவிர தேசியவாதிகளான இராணுவ அதிகாரிகள் தமது இருப்புக் குறித்து அச்சமடைந்திருந்தனர். புரட்சி வென்றால் அவர்களது தலைகளும் உருளும் என்று தெரிந்து வைத்திருந்தனர்.
பிரைகொர்ப்ஸ் (Freikorps) கூலிப்படை.
பிரைகொர்ப்ஸ் (Freikorps) எனப்படும் தேசியவெறி கொண்ட கூலிப்படை இராணுவம் பெர்லினுக்கு வரவழைக்கப்பட்டது. அவர்கள் ஆயுதமேந்திய புரட்சியாளர்களுடன் மோதினார்கள். கடுமையான துப்பாக்கிச் சமருக்குப் பின்னர் தொழிற்சாலைகள், அரச கட்டிடங்களில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். செங்கொடிகள் கிழித்தெறியப் பட்டன. இருப்பினும், பல கட்டிடங்களில் மறைந்திருந்த புரட்சியாளர்கள் சினைப்பர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். இதனால், பெர்லின் நகரம் முழுவதும் யுத்தகளமாக காட்சியளித்தது.
10-13 மார்ச், புரட்சியாளர்களின் கோட்டையாக கருதப்பட்ட கிழக்கு பெர்லின் பகுதியை பிரைகொர்ப்ஸ் படையினர் சுற்றி வளைத்தனர். சில அற்பக் காரணங்களுக்காகக் கூட பொது மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு அரசாங்க அலுவலகத்தில் மாதக் கணக்காக கிடைக்காத சம்பளப் பணத்தை கேட்டு தகராறு செய்த முப்பது மாலுமிகள், சுவரில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். பெர்லின் நகரில் மட்டும் ஒரு வாரத்திற்குள் குறைந்தது பத்தாயிரம் பேரளவில் படுகொலை செய்யப் பட்டனர். புரட்சியாளர்கள் மட்டுமல்லாது, வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள், ஆதரவு தெரிவித்த மக்களும் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஏற்கனவே, 15 ஜனவரி 1919 அன்று, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் இருவரும் பிரைகொர்ப்ஸ் படையினரால் கடத்தப்பட்டு, சில மணிநேரங்களின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் கம்யூனிஸ்ட் கட்சி சிதறிப் போனது. தொழிலாளர்களின் புரட்சிக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுத்த சக்தி முற்றாக அழித்தொழிக்கப் பட்டது. இதனால், பெர்லினில் மட்டுமல்லாது ஜெர்மனி முழுவதும் புரட்சி நசுக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் பெருமூச்சு விட்டது. இருப்பினும், கம்யூனிஸ்டுகள் ஓயவில்லை. அவர்கள் தோற்கடிக்கப்படவுமில்லை. தலைநகரை தவிர்த்து, ஜெர்மனியின் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் தொடர்ந்தது.
மிக விரைவில், சமூக ஜனநாயக கட்சி அரசாங்கம் தனது முட்டாள்தனமான செயலுக்கு அல்லது துரோகத்திற்கு விலை கொடுக்க வேண்டிய காலம் வந்தது. 1920-ம் ஆண்டு, பிரைகொர்ப்ஸ் கூலிப்படையினரின் ஆயுதங்களை களையப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரைகொர்ப்ஸ் படையினர் பெர்லின் நகரில் ஒரு சதிப்புரட்சியை நடத்தினார்கள். இதனால், ஜெர்மன் அரசாங்கம் தெற்கே உள்ள ஸ்டுட்கார்ட் நகருக்கு இடம் பெயர்ந்தது.
சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் வீழ்ந்ததும், அந்த வெற்றிடத்தை பயன்படுத்தி கம்யூனிஸ்டுகள் மீண்டும் தலையெடுத்தனர். அவர்களது அறைகூவலை ஏற்று, பன்னிரண்டு மில்லியன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யுமளவிற்கு, அப்போதும் கம்யூனிஸ்ட் கட்சி பலமாக இருந்தது. அதே நேரம், ரோசா லக்சம்பேர்க் போன்ற லெனினுடன் கொள்கை முரண்பாடு கொண்ட தலைவர்களின் மறைவுக்குப் பின்னர், ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி வேறுவழியின்றி ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் தலைமைத்துவ வழிகாட்டலின் கீழ் வந்தது. லெனினிசத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.
ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை என்ற உண்மை வலதுசாரி அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது. நிலைமை இப்படியே நீடித்தால், இன்னும் சில வருடங்களில் ரஷ்ய போல்ஷ்விக்குகளின் உதவியுடன், ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்து விடுவார்கள் என்று அஞ்சினார்கள். அன்று கம்யூனிச அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற வலதுசாரி அரசியல்வாதிகளில் ஒருவர் தான் அடோல்ப் ஹிட்லர். இராணுவத்திற்குள் இருந்த வலதுசாரிகளும், முன்பு புரட்சியை நசுக்கிய பிரைகொர்ப்ஸ் கூலிப்படையினரும் ஹிட்லரை ஆதரித்தார்கள்.
இதற்குப் பிறகு நடந்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஹிட்லர் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், மர்மமான முறையில் பாராளுமன்ற கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. அந்த சம்பவத்திற்கு காரணம் கம்யூனிஸ்டுகள் என்று பழிபோடப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும், ஆதரவாளர்களும் வேட்டையாடப்பட்டனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் பிற்காலத்தில் தடுப்பு முகாம்களில் நச்சுப் புகை அடித்துக் கொல்லப்பட்டனர்.
நாஜி சர்வாதிகார அடக்குமுறை காரணமாக, பல்லாயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் சோவியத் யூனியன், நெதர்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா என்று பல நாடுகளுக்கும் அகதிகளாக சென்று அரசியல் தஞ்சம் கோரினார்கள். குறிப்பாக, சோவியத் யூனியனுக்கு அகதிகளாக சென்றவர்கள் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் திரும்பி வந்தனர். பலர் ஏற்கனவே சோவியத் செம்படையில் சேர்ந்து நாஜிப் படையினருக்கு எதிராக போரிட்டிருந்தனர். அந்த ஜெர்மன் அகதிகள் தான் சோஷலிச கிழக்கு ஜெர்மனிக்கு (DDR) அடித்தளம் இட்டனர்.
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்துராஜ்யம் | நாடகம் | பாகம் – 3
காட்சி – 5 இடம் : நந்தவனம் உறுப்பினர்கள் : சாந்தாஜி, இந்து, மோகன்
(இந்துமதி மாலை தொடுத்துக் கொண்டிருக்கிறாள். சாந்தாஜி வந்து…)
சாந்தாஜி : இந்து இன்னும் மாலை முடியவில்லையா?
இந்து : இதோ, முடிந்து விட்டதப்பா.
(மாலையைத் தருகிறாள். சாந்தாஜி மாலையைப் பார்த்து விட்டு …)
சாந்தாஜி : என்ன இந்து மாலையில் மலரைவிட தழைதான் அதிகமிருக்கிறது. தேவனுக்கு இப்படியாமா மாலை சூட்டுவது?
இந்து : அப்பா நீங்கள் தினம் தினம் தேவனை தரிசிக்கிறீர்களே தவிர அவருடைய திவ்யமான குணத்தை தெரிந்து கொள்ளவில்லையே. பக்தியோடு பச்சை ஓலையை மாலையாகச் சமர்ப்பித்தாலும் பகவானுக்கு அதுவே பாரிஜாதமாயிருக்கும்.
சாந்தாஜி : ஆமாம் பேசத் தெரிந்து கொண்டாய். என்ன இருந்தாலும், இந்து கோவிலுக்குக் கொண்டு போகிற மாலை இப்படி இருக்கக் கூடாது.
இந்து : ஆமாம் கோவிலிலேயே இருந்து விடப்போகிறது, நீங்கள் தேவனுக்கு என்று மாலையைத் தருகிறீர்கள். நீங்கள் தரும் போதே பட்டாச்சாரி அதைத் தன்னுடைய தேவதாசிக்குத் தர தீர்மானிக்கிறான்.
சாந்தாஜி : துஷ்டப் பெண்ணடி நீ!
இந்து : உம்… அப்பா! மாலையைத் தரும்போது தேவனிடம் சொல்லுங்கள். இது, இந்து தயாரித்தது என்று. ஆமாம்! நீங்கள் சொன்னால் எங்கே அவர் காதில் விழப்போகிறது. அர்ச்சகருடைய அபசுரத்தைக் கேட்டு கேட்டு காது செவிடாகி எவ்வளவோ நாளாகிவிட்டது. (என்று கூறிவிட்டு ஓடுகிறாள். இன்னொரு மாலை கீழே விழுகிறது.)
சாந்தாஜி: இந்து இந்த மாலை ஏது : இவ்வளவு கள்ளியாகிவிட்டாயா? நல்ல மாலையை ஒளித்து வைத்து விட்டு, இலையை மாலையாக்கி இறைவனுக்குத் தருகிறாய்! ஏன் இந்த மாலையை ஒளித்து வைத்தாய்?
(இந்து மெளனமாயிருக்கிறாள்)
பதில் சொல்! யாருக்கு இந்த மாலை? யாருக்காக இந்த மாலை சொல்லு?
(சந்திரமோகன் வருகிறான். இந்த வெட்கத்துடன் தலைகுனிகிறாள். சாந்தாஜி அதைக் கவனியாமல் )
தேவனுக்கு மாலை தயாரிக்க சொன்னால் நீ இப்படி திருட்டுத்தனமா செய்கிறாய்? தேவனுக்குத் தழை! யாருக்கு இந்த மாலை? சொல்லு…
மோகன் : எனக்காக…
(சாந்தாஜி திடுக்கிட்டுத் திரும்பிக் கோபமாக)
சாந்தாஜி : என்ன! எனக்காக மாலை என்றா சொல்கிறாய்?
(மோகன் பயந்தவன் போல் பாசாங்கு செய்து)
மோகன் : மாலையா? எனக்காக? ஏன்?
சாந்தாஜி : என்னடா மோகன் என்னிடமா வேடிக்கை செய்கிறாய். நான் யாருக்கு மாலை என்று இந்துவைக் கேட்டால், நீ எனக்காக என்று சொல்லிவிட்டு…
மோகன் : ஓ.. அதுவா? நான் மாலை எனக்காக என்று சொல்லவில்லையே. எனக்காகத் தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான் சுந்தர், அதற்காக வந்தேன் என்று சொல்ல ஆரம்பித்தேன்.
(சாந்தாஜி மாலையை அவனிடம் வீசி எறிந்து)
சாந்தாஜி : இந்தா! நீ கேட்டாயோ இல்லையோ! இந்து இந்த மாலையை உனக்காகத்தான் தயாரித்திருப்பாள். நான் தேவனுக்கு மாலை தயாரிக்கச் சொன்னால்…
(மோகன் மாலை அணிந்து கொள்ள, இந்த அவனை வணங்குகிறாள். சாந்தாஜி பார்த்து விடுகிறார். மோகன் அப்படியே பாம்பு போல கையை ஆட்டுகிறான்)
என்னடா மோகன் கையை ஆட்டுகிறாய்?
மோகன் : பாம்பாட்டம் காட்டுகிறேன்.
சாந்தாஜி : பாம்பாட்டமல்ல; நீங்கள் இரண்டு பேரும் வரவர, குரங்காட்டம் ஆடுகிறீர்கள்.
இந்து : அப்பா! பாதி ராமாயணமே அது தானே.
(இந்துவை அடிக்க சாந்தாஜி ஓடுகிறார். இந்து ஓடிவிடுகிறாள். சாந்தாஜி சிரித்துக் கொண்டே)
சாந்தாஜி : இந்து மகா குறும்புக்காரி. அவள் அம்மாவும் அப்படித்தான். சரி, சந்திரமோகன்! உன்னை ஏன் வரச் சொன்னேன் தெரியுமா?
மோகன் : தெரியாதே
சாந்தாஜி : தெரிந்துக் கொள். இனி இந்துவை நீ பார்க்கக்கூடாது. அவளைப்பற்றி நினைக்கவும் கூடாது.
(மோகன் திகைத்து, பிறகு விளையாடுகிறார் என்று எண்ணி )
மோகன் : கனவிலே அவள் வந்தால்…?
சாந்தாஜி : அது கனவாகவே போகும்!
(மோகன் பயந்து)
மோகன் : தாங்கள் என்ன பேசுகிறீர்கள்?
சாந்தாஜி : பேசுவது புரியாத நிலை பிறந்து விட்டது உனக்கு… புரியும்படி சொல்லுகிறேன் கேள்! நீயும் இந்துவும்
மோகன் : நானும் இந்துவும் கண்ணும் ஒளியும் போல.
சாந்தாஜி : பேசுவது நான் மோகன்… சகுந்தலையிடம் பேசும் துஷ்யந்தனாக இராதே இந்துவை நீ கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டேன்.
மோகன் : ஏன்?
சாந்தாஜி : அவளுடைய தகப்பனாக நானிருப்பதால்
மோகன் : குமரியைக் கொடுமை செய்வது தந்தையின் கடமைகளிலே ஒன்றா?
சாந்தாஜி : கடமைகள் எனக்கு மறந்து போகாததால் தான் என் மகளை … அவளை ரட்சிக்கக்கூடிய ஒருவனுக்குத் தாரமாக்கத் தீர்மானித்து விட்டேன்! உனக்கு எதற்கப்பா மனைவி … மக்கள். குடும்பம்? எதுவும் உனக்கு வேண்டியதில்லை நீ வீரன் மகா வீரன் போர் வீரன் போர் வீரனுக்கு மனைவி எதற்கப்பா?
மோகன் : மராட்டிய மண்டலத்திலேயே யாரும் பேசாத மொழி பேசுகிறீரே! நான் போர் வீரன் என்பதற்காகவா எங்கள் புனிதக் காதலை தடை செய்கிறீர்கள்? தாங்கள் பூஜிக்கும் ராமன் ஓர் போர்வீரன்.
சாந்தாஜி : நான் மட்டும் ஜனகனாக இருந்திருந்தால்; ராமனுக்குச் சீதையைக் கொடுத்திருக்கவே மாட்டேன். போர் வீரனை மணந்து கொண்டதால் ஜானகி கண்ட பலன் என்ன? ஆரண்யவாசம் இராவணனிடம் சிறைவாசம்! கர்ப்பிணியாகவே கானகவாசம். பிறகு பாதாளப் பிரவேசம். இதுதானே? இது தெரிந்துதான் சொல்கிறேன். இந்துவை உனக்குக் கல்யாணம் செய்து தர முடியாது என்று.
மோகன் : விசித்திரமான பேச்சாக இருக்கிறதே! – வீரர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருந்துவிட வேண்டுமா? கோழைகளுக்குத்தான் கோமளவல்லிகள் வேண்டுமா? தங்கள் சித்தாந்தமே எனக்குப் புரியவில்லையே.
(மோகன் அருகே சென்று, தோள் மீது கை வைத்து அமைதியாக)
சாந்தாஜி : மோகன் கிழவன் நான். என் கிளி இந்து. அடேயப்பா! நீ சதா போர், போர் என்று போர்க்களத்திலேயே திரிய வேண்டும் என்கிறாயே. அவளை நான் உனக்குத் தந்துவிட்டு ஒவ்வொரு கணமும் உயிர் வேதனை அடைய வேண்டுமா?… நீயே சொல்லு! போர் வீரனுடைய வாழ்க்கை ஆபத்து நிறைந்தது. பயங்கரமானது. அவள், இந்து, பூங்கொடி நீ புயல் காற்று. அவள் மெழுகு ; நீ அனல் …
மோகன் : அவள் மலர்; நான் மந்தி. அதையும் கூறிவிடுமே.
சாந்தாஜி : கோபிக்காதே மோகன் நீ மந்தியா? மந்தகாசமான முகம். மராட்டிய தேஜஸ் உடையவன். இந்துவுக்கேற்ற இளவரசன் எல்லாம் சரிதான். ஆனால் நீ போரிடப் போய்விடுவாயே அதை நினைத்தால் நெஞ்சம் நடுங்குகிறதே.
மோகன் : வீணான பயம் வேண்டாம். நான் போர் வீரன் என்று தெரிந்த பிறகுதான் இந்து என்னைக் காதலித்தாள். அவளுடைய சுகத்திலே தங்களுக்கு அக்கரை இல்லையா? போர் வீரன் என்ற பட்டம் புகழின் சின்னம். அதைப் பெற எத்தனையோ குடும்பங்கள் தவம் கிடக்கின்றன.
சாந்தாஜி : என்னமோ, அப்பா உன் சொல் என் செவி புகாது. இந்துவின் தகப்பன் வீட்டோடு – குடும்பத்தோடு, சுத்தி கட்டாரி தூக்காத கண்யமாக வாழும் ஒரு மருமகனைத் தேடுகிறேன். அவ்வளவுதான் தெரியும் எனக்குப் பேச . நான் சொல்வதைக் கேளடா மோகன். சண்டாளத் தொழிலடா இந்தச் சண்டை போடும் தொழில், கொலை வேலை! ரத்தக்கறை படிந்த கையால் இந்த ரதியைத் தொடலாமா? போனது போகட்டும். அவளைத் தொட்டுத் தாலி கட்டிய பிறகாவது நீ இந்தத் தொழிலை விட்டு விடுகிறேன் என்று சத்தியம் செய்.
மோகன் : எந்தத் தொழிலை ?
சாந்தாஜி : பட்டாளத்து வேலையை.
மோகன் : அதுதான் தொழிலா? என் கடமை மராட்டிய வாலிபன் மராட்டியப் படையிலே சேர்ந்து பணியாற்றுவது, தொழிலல்ல; அவன் பிறப்புரிமை. நாட்டுத் தொண்டு ; ராஜ சேவை, தேசபக்தி.
சாந்தாஜி : அப்படியென்றால் இந்துவிடம் உனக்கிருக்கும் அன்பு வெறும் வேஷம். அவளுக்காக நீ வாளைத் துறந்து விடக் கூடாதா என்ன?
மோகன் : மராட்டிய நாட்டிலே இப்படி ஒரு முதியவர் இருப்பது தெரிந்தால் சிவாஜி ரத்தக் கண்ணீர் சொரிவார்.
சாந்தாஜி : சொரிவார் சொரிவார் ஜீஜி பாயின் கண்களிலே. ரத்தக் கண்ணீர் சொரிந்ததை அவர் அறியார். என் போன்ற ஏக்கங்கொண்ட கிழவர்களின் கண்ணீரையும் அவர் பார்த்ததில்லை .
மோகன் : நல்ல வேளையாகப் பார்த்ததில்லை. எதிரியின் வாள் உண்டாக்கிய காயத்திலிருந்து ஒழுகும் ரத்தத்தைத் துடைக்கவும் நேரமின்றி போரிட்ட வீரர்களையே அவர் பார்த்தார். இந்துமதியைக் கேளுங்கள், வாளை நான் அவளுக்காகத் துறந்துவிட வேண்டுமா என்று?
(சாந்தாஜி மகிழ்ச்சியுடன் இந்துமதியைக் கூப்பிட, அவள் வீரன் உடையை அணிந்து வருகிறாள், மோகன் சிரிக்க..) (கோபத்தோடு)
சாந்தாஜி : இந்து ! இது என்ன கோலம் போ, உள்ளே .
மோகன் : மராட்டிய மாதாவின் போர்க்கோலம் அது.
சாந்தாஜி : போதும்! நீயும் போ இருவரும் சேர்ந்து எனக்குப் பைத்தியம் உண்டாகும்படி செய்து விடுவீர்கள் போலிருக்கிறது …. மோகன் போ நான் கோவிலுக்குப் போகவேண்டும் நாளைக்கு வா நாளைக்கு வேண்டாம்; நான்கு நாள் பொறுத்து வா வேண்டாம்; நீ வரவே வேண்டாம். என் மகளை நான் போரில் ஈடுபட்டு சதா ஆபத்தோடு விளையாடும் உனக்குக் கண்டிப்பாய் தரமுடியாது.
இந்து : அப்பா!
சாந்தாஜி : ஆமாம் யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும்?
மோகன் : சாந்தாஜி இந்துமதி உமது மகள். நீர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டவள். நான் நாட்டு விடுதலைப் படையில் ஓர் வீரன். நீ வீரத்தைப் பழித்துப் பேசிக் கொண்டிருப்பதை என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இந்துமதியின் பேரழகுக்காக நான் பேடியாகி விட வேண்டுமென்று எண்ணாதீர். அவளை எனக்குத் தாரமாக்கினால் என் மாளிகையில் வசிப்பாள். எங்கள் காதலை உணராமல் அவளை வேறு யாருக்கேனும் திருமணம் செய்து கொடுத்தால், இந்து என் மாளிகையில் உலவ முடியாது. அப்போதும் என் மன மாளிகையில் வேறு மங்கை உலவமாட்டாள். நான் வருகிறேன். (கோபமாகப் போகிறான்.)
நம் சமூகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினைகள் நம்மைக் கடந்து செல்கின்றன. அதில் பெண் சார்ந்த பாலியல் வன்முறைகள் கடக்க முடியாத ஒன்றாகின்றன. பெண் என்ற ஒரே காரணத்தாலேயே அவள் மேல் விழும் தாக்குதல்கள் இச்சமுகத்தின் தற்போதைய சீழ்பிடித்த நிலையை தெளிவாகக் காட்டுகிறது. இன்றைய சூழலில் போலீசு, ஊடகம் என அனைத்தும் பெண்ணின் உடலை சந்தைப் பொருளாக்கி தமது இறையாக்கியிருக்கின்றன.
நான் எனது பள்ளிக் கல்வி முதல் முதுகலைப்பட்டம் வரை மகளிர் கல்வி நிறுவனங்களில்தான் படித்து முடித்தேன். கல்லூரி முடித்து விட்டு இச்சமுகத்தை எதிர் கொள்வதில் பெரும் தயக்கமும், பயமும் எப்போதும் என்னில் உண்டு; அது இன்றுவரையிலும் தொடர்கிறது. ஆண் என்பவன் வேற்றுக்கிரகவாசி போன்று பலமுறை தோன்றியதுண்டு. இது வாழ்க்கையில் எனது விருப்பத்தை நான் தேர்வு செய்ய முடியாதவாறு என்னை முடக்கியது. கல்லூரியில் கூட எனக்கு பிடித்த துறையை எடுக்காமல் ஏதோ ஒரு துறையை எடுத்து படித்து ஆசிரியர் ஆகிவிட்டேன்.
ஆனால், இப்போதும் நினைப்பது உண்டு. என்னுடைய வாழ்க்கையில் ஆண் சகாக்கள் என்பதையே சமூக இயக்கங்கள்தான் அறிமுகம் செய்தன. ஆனால், அப்போதும் கூட இடைவெளி தேவை என கருதும் சாதாரணப் பெண்ணாகவே இருந்தேன். ஆண், பெண் என இருபாலருமின்றி அனைத்து உயிர்களுக்கும் இவ்வுலகம் சமமானதுதான். ஆனால் இச்சமூகம் அப்படி கட்டமைக்கப்படவில்லை. இச்சமுகத்தின் நான் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளில் எப்போதுமே எனது அண்ணன் அல்லது அப்பாவைச் சார்ந்தே கடந்து செல்கிறேன். இப்படி எல்லா நேரங்களிலும் பிறரை சார்ந்து பயணிப்பது மிகவும் கடினமானது.
அதாவது, “உன்னை போன்றுதான் நானும் ஆனால், நான் ஒரு பெண் என்பதால் என்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்றுதான் கற்பிக்கப்படுகிறது. இந்த கற்பிதங்கள் பெண்களுக்கு மட்டுமே. ஆணின் நுகர்வு பொருளாய் மட்டுமே பெண்ணைப் பார்க்கப் பழகிக் கொடுத்த இச்சமூகம் இப்படித்தான் இயங்கும். பெண்ணின் உடலை ஒரு பொருளாய் உணரும் யாரும் மனித, மிருக இனத்தில் சேர்ந்தவர் இல்லை.
ஒருமுறை டில்லி சென்று இருந்தேன். வேலை முடிந்து ரயில் ஏற டில்லி ஸ்டேஷனில் இரவு 11.30 மணிக்கு தனி பெண்ணாய் நின்று கொண்டிருந்தேன். இப்போதும் நினைக்கையில் அவ்வளவு பயம். முதல்முறை தனியாக செய்த பயணம் அது. என்னைச் சுற்றிலும் குடும்பத்துடன் யாரும் தென்படவில்லை. தனிமையில் நிற்கையில் ஒருவன் இடையூறு செய்தவாரே நின்று கொண்டிருந்தான். அப்போது ரயில் இன்னும் இரண்டு மணிநேரம் தாமதம் என குறுஞ்செய்தி. கையில் பெரிய கனத்துடன் பையை வைத்துக்கொண்டு பயணிகள் ஓய்வறைக்குச் செல்ல சுமை தூக்குபவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். யாரும் தென்படவில்லை. போலீசும் இல்லை.
நேரம் செல்லச் செல்ல பயம் அதிகரித்தது. என்ன செய்ய என்றும் தெரியவில்லை. கண்களில் கண்ணீர் வந்துவிடக்கூடாது; அழக்கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டேயிருந்தேன். பேசக்கூட வாயில் வார்த்தைகள் இல்லை. அருகில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் டெல்லியிலிருந்து ஹைதராபாத் செல்வதற்காக படுத்துக் கொண்டிருந்தனர். இரவு மணி 1.30 இருக்கும். அந்த என்.எஸ்.எஸ். மாணவர்களை எழுப்பி விட்டு இந்தியில் பிரச்சினையை சொன்னேன். அவர்கள் இடையூறு செய்த நபரை தட்டிக் கேட்டு அங்கிருந்து விரட்டி விட்டனர். இதை ஏன் சொல்கிறேனெனில், ”ஒரு பெண்ணாக தனியே செல்லக்கூடாது” என என்னையே மிரட்டுகிறது என் உடல். அது ஆண்களின் ஆயுதங்களாக மாறி எங்களையே கொலை செய்கிறது. இங்கு தவறு ஏதேனும் நிகழ்ந்தால் ஒரு பெண்ணாய் பல கேள்விகள் என்னை நோக்கியே பாய்ந்திருக்கும்.
இங்கு ஆண்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல. எனக்கு தெரிந்த சகாக்கள் பலர் பெண்ணை புரிதலுடன் பார்க்கத் தெரிந்தவர்கள். டில்லி இரயில்வே ஸ்டேஷனில் முன் பின் தெரியாத அந்த உறவுகள் உதவி செய்து என்னை நெகிழ வைத்தன. இங்கு ஆண் பெண் குறித்த புரிதலுடன் பிள்ளைகளை வளர்க்க மறந்து விட்டோம். ஆணை நெடிலாகவும், பெண்களை குறிலாக வளர்த்து வரும் சமூகம்தான், பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்களின் மீதான தாக்குதலுக்கான அடிப்படை. இங்கே பாதிக்கப்பட்ட பெண்ணை சாடும் சமூகம் அதற்கான காரணத்தை அறிய முயல்வதில்லை. இப்போதுதான் கிராமத்துப் பெண்கள் வெளியே வருகின்றனர். அதற்குள் இப்படிப்பட்ட விசயங்கள் பெண்களை பாதுகாப்பு என்ற பெயரில் இருளுக்குள் வைத்திடும்.
பெண் என்பவள் அன்பு, நம்பிக்கை, பாசம் இவற்றை எதிர்பார்த்து காதல் கொள்கிறாள். ஒரு பெண் ஒருவனுடன் செல்ல அவன் அதை பயன்படுத்தி வல்லுணர்வு செய்வான் எனில் அவனைத்தான் சமூகம் தூற்ற வேண்டும். ஆனால் இங்கு பெண் குற்றவாளியாக்கப்படுகிறாள். அதனை வைத்து ஊடகங்களும் பணம் சம்பாதிக்கின்றன. இந்தியா போன்ற நாடுகள்தான் கலாச்சாரம் என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு மறுபுறம் AIDS-ல் முதலிடம் வகிக்கிறது.
இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டுதான் ஆசிபா என்ற 12 வயது சிறுமியின் மீதான பாலியல் வன்முறை நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில் தேசிய குற்றவியல் ஆவண மையம் (National Crime Record Bureau) வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2017-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் மீதான தாக்குதல் 82 சதவிதம் அதிகரித்துள்ளது என்கிறது. இதில் 95% தெரிந்தவர்கள் மூலமே நடக்கிறது என்கிறது ஆய்வு. ஒரு பக்கம் பெண்கள் தெய்வம் என்ற போலித்தனத்தைக் கற்பித்துக் கொண்டே மறுபுறம் பெண்கள் மீது பாலியல் வன்முறையைச் செலுத்துகிறது இச்சமூகம். நாம் இன்று இதை சரி செய்ய வேண்டிய தருவாயில் நின்று கொண்டிருக்கிறோம். இதை சரி செய்ய கடுமையான சட்டங்கள் மட்டும் போதாது. மாறாக சமூகத்தில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வும் அவசியம் தேவை. சரி செய்ய பயணிப்போம் மாற்றங்களை நோக்கி …
கடந்த பிப்ரவரி 23, 2019 அன்று திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய ”கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் “ மாநாட்டில் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் நிறுவனர் தோழர் தியாகு ஆகியோர் உரையாற்றினர்.
ஆளூர் ஷாநவாஸ் தனது உரையில் “சனாதன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை விசிக கடந்த ஜனவரி மாதம் நடத்தியது. பிப்ரவரியில் மக்கள் அதிகாரம், காவி கார்ப்பரேட் பாசிசம் என இந்தச் சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் அபாயத்தைப் பற்றி மாநாடு போட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், பலரும் மோடி ஆட்சிக்கு வந்தால் முசுலீம்களுக்கு ஆபத்து என்றனர். மக்கள் கலை இலக்கியக் கழகம் மட்டும்தான், மோடி ஆட்சிக்கு வந்தால் பெரும்பான்மை இந்துக்களுக்கும் ஆபத்து என்று கூறியது.
மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீது பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. என தொடர்ச்சியான தாக்குதலைத் தொடுத்துள்ளது மோடி அரசு. பணமதிப்பழிப்பு சமயத்தில், அதானி , அம்பானி, முதல் சேகர் ரெட்டி ஓபிஎஸ் வரைக்கும் இவர்களிடத்தில் புதிய பணம் கட்டுக்கட்டாக குவிந்தது எப்படி?
விவசாயிகள் டெல்லியில் போராடிய போது, அவர்களைத் திரும்பிக் கூட பார்க்க மறுத்தார் மோடி. தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஒரு போராட்டத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதை தூத்துக்குடியில் மக்கள் அதிகாரம் சிறப்புறச் செய்திருக்கிறது. தூத்துக்குடியில் போராட்டத்தைத் தூண்டினார்கள் என்கிறார்கள். ஆம் தூண்டுவதுதான் எங்கள் வேலை. அது மக்களை விழிப்புணர்வு பெறச் செய்வதற்கு அவசியமானது.
இந்த கார்ப்பரேட் காவி பயங்கரவாத சூழலை எதிர்கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து காவிக் கும்பலை எதிர்க்க வேண்டும்.” என்றார். (முழுமையான உரையைக் காண )
இம்மாநாட்டில் பேசிய தோழர் தியாகு, தனது உரையில், சங்க பரிவாரத்தினர் எவ்வாறு புல்வாமா தாக்குதல்களை தங்களது தேர்தல் பிரச்சார யுத்தியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் என்பதை அம்பலப்படுத்தி பேசினார். மேலும் காஷ்மீர் சிறுமி ஆசிபாவை பாலியல் வன்முறை செய்து கொன்ற கயவர்களைக் காக்க பாஜக நேரடியாக களத்தில் இறங்கியதைக் குறிப்பிட்டு, காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறிக்க இத்தாக்குதலை ஆளும் பாஜக அரசு பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
காஷ்மீர் மக்களின் போராட்ட வரலாறு குறித்தும், இந்தியா சுதந்திரம் அடைந்த போது காஷ்மீர் அதன் தலையில் இல்லை என்பதையும் நினைவூட்டினார்.
காஷ்மீர் மக்களின் உரிமைகளை ஒடுக்குவதில் பாஜக, காங்கிரசு, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நிற்கின்றன என்றார். ஒடுக்கப்படும் மக்களின் உரிமையைக் காக்க நாம் அனைவரும் உயிர் பயம், சிறை பயமின்றி ஓரணியில் நிற்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். (முழு உரையைக் காண)
நாடு முழுவதும் ரயில்வே துறையில் 62, 907 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு குரூப் டி பிரிவில் எழுத்து தேர்வு நடைபெற்றது. 16 மண்டலங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இதில் தமிழகத்தில் மட்டும் 1,765 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடந்தது. தமிழகத்தில் எவ்வளவு பேர் இத்தேர்வை எழுதினர் எனும் தகவல் தெரியவில்லை. இத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் நான்காம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் தமிழகத்தில் உள்ள 1600 பணியிடங்களுக்கு தமிழகம் அல்லாத பிற இடங்களில் (வட மாநிலங்களில்) தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இம் முடிவுகளைக் கண்டு தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குளறுபடிகளிலும், பங்கு பிரிப்புச் சண்டைகளிலும் தீவிரமாக உள்ளதால் இந்த தேர்வு முறைகேடுகள் அவர்களின் கவனத்தைப் பெறும் தகுதியை அடையவில்லை. ஊடகங்கள் பார்ப்பனியத்தின் வளர்ப்பு விலங்குகளாக இருப்பதால் இலேசாக தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு, ஆழ்ந்த அமைதியை கடைப்பிடிக்கின்றன. அதேநேரம் இவைகள் தங்கள் தகுதியை உயர்த்தும் தேர்வுகள்(!) என நம்பி, ஆண்டுக் கணக்காக பல தேர்வுகளை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் முதிர் பட்டதாரிகளோ மூச்சுவிட நேரமின்றி அடுத்த தேர்வை துரத்த தொடங்கி விட்டார்கள்.
90 விழுக்காடு தேர்ச்சி வடமாநிலத்தவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்பது எளிதாக கடந்து போகக்கூடிய ஒன்றல்ல. ஏனென்றால் தமிழக பிரிவின் எழுத்துத் தேர்வு என்பது தமிழர்களின் பண்பாடு பழக்க வழக்கங்கள் புவியியல் சிறப்புத் தன்மைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இதில் வடமாநிலத்தவர்கள் 90 விழுக்காடு தேர்ச்சியடைவது என்பது நிச்சயம் இயல்பை மீறிய ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் இதை விட ஆபத்தான இன்னொன்று, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்குவது தான். அதாவது, போதிய கவனமின்றி தமிழக மாணவர்கள் இதில் கோட்டை விட்டுவிட்டார்கள் என போகிற போக்கில் எழுதிச் செல்கின்றனவே ஊடகங்கள். இதை என்னவென்பது? இதைவிட அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியுமா?
இந்த தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 100 தான். ஆனால் அகமதாபாத், சண்டிகர் போன்ற பகுதிகளிலிருந்து தேர்வெழுதியவர்களின் மதிப்பெண்களோ 105, 120, 138 என்று இருக்கின்றன. இது எப்படி சாத்தியம்? இப்படி மொத்த மதிப்பெண்களை மீறிய மதிப்பெண்கள் சமூக வலை தளங்களில் மீம்ஸ்களாகவும், இன்னும் பல வழிகளிலும் கிண்டலும், நக்கலுமாக பறந்த பிறகு இரயில்வே அமைச்சகம் விளக்கமளிக்க முன்வந்தது.
கிரிக்கெட் வெறியர்களால் கூட புரிந்து கொள்ள முடியாத, இன்னும் நட்சத்திர விளையாட்டு வீரர்களால் கூட தெரிந்து கொள்ள முடியாத டக்வொர்த் லூயிஸ் என்றொரு விதி கிரிக்கெட்டில் உண்டு. மழையோ வேறு ஏதாவது காரணங்களினாலோ ஆட்டம் இடையில் தடைப்பட்டால் கூட்டிக் கழித்துப் பார்த்து கடைசி ஒரு பந்தில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்று கூறும் டக்வொர்த் லூயிஸ் விதியைப் போல ரயில்வே அமைச்சகமும் நார்மலைஷேசன் என்றொரு விதி முறையை கூறுகிறது.
அதாவது வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு மொழிகளில் நடக்கும் இத்தேர்வில் கடினமானதாகவும், எளிதாகவும் இருக்கும் வினாத்தாள்களின் இடையேயான வேறுபாட்டை நீக்குவதற்காக நார்மலைஷேசன் என்ற விதி கடைப்பிடிக்கப்படுவதாகவும், இந்த விதியின் அடிப்படையில் 100க்கு 126 மதிப்பெண்கள் வரை பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் கூறுகிறது அந்த ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கை.
அது என்ன நார்மலைஷேசன் விதி என்று கேட்டால் தேர்வு எழுதிய ஒருவருக்கும் அந்த விதி குறித்தோ, அதில் எப்படி முடிவை வந்தடைகிறார்கள் என்பது குறித்தோ ஒன்றும் தெரியவில்லை. ரயில்வே அமைச்சகத்தின் அந்த அறிக்கையில் மேலும் இந்த விதியின்படி 126 மதிப்பெண்கள் வரை தான் பெற முடியும் அதற்கு மேல் பெறப்பட்டதாக உலவும் படங்கள் எல்லாம் போட்டோஷாப்பில் திருத்தப்பட்ட படங்கள். எனவே முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி கடந்த 19 ஆண்டுகளாக இந்த முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றும் திமிராக கொக்கரிக்கிறது அந்த அறிக்கை.
இந்த அறிக்கையைப் பார்த்ததும், அவர்கள் ஏதோ ஒரு விதிமுறை வைத்திருக்கிறார்கள். அது நமக்கு சரியாக புரியவில்லை. வேறென்ன செய்வது, அடுத்த நல்வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியது தான் என்பதாக விரக்தியுடன் கடந்து செல்கிறார்கள் மாணவர்கள். இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த பல ஆண்டுகளில் இப்படி முறைகேடுகள் நடந்திருக்கின்றன. வழக்குகளும் தொடரப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகள் சொகுசாக தூங்கிக் கொண்டிருக்க முறைகேடுகள் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
2014 நடந்த குரூப் டி தேர்வில், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும்போது போது அரசு அதிகாரிகளின் கையொப்பம் (அட்டஸ்டேசன்) பெற தேவையில்லை என தமிழில் வெளியான செய்திகளில் கூறப்பட்டது. ஆனால், ஆங்கிலத்தில் வெளியான செய்திகளில் இணைக்க வேண்டும் என கூறி இருந்தனர். இதனால், கையொப்பம் இன்றி விண்ணப்பித்த லட்சக்கணக்கான தமிழக விண்ணப்பங்கள் குப்பைக் கூடைக்குச் சென்றன.
இதே 2014 நவம்பரில் நடைபெற்ற தேர்வில் ஹால் டிக்கட்டுகளில் தேர்வர்களின் புகைப்படங்கள் இடம்பெறாமல் வெறும் பெயர் பதிவு எண் போன்ற விபரங்கள் மட்டும் இடம்பெற்று இருந்தது. இது விதிமுறைகளுக்கு முரணானது எனக் கூறி பன்னீர் செல்வம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லை ஆனால் உயர் அதிகாரிகள் மட்டம் வரை தமிழே தெரியாதவர்கள் பணிகளில் அமர்ந்து விட்டார்கள்.
2016-ல் தபால் துறையின் தமிழ் தேர்வில் தமிழே தெரியாத ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை விட அதிக மதிப்பெண்கள் எடுத்த அதிசயம் நடந்தது.
இது போன்று தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே இப்போது கூறப்படும் நார்மலைஷேசன் என்பது விதிமுறைகளோடு தொடர்புடையது அல்ல, அது பார்ப்பனியத்தோடு தொடர்புடையது. பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வுகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பல மாநிலங்கள் அரசாணை நிறைவேற்றியுள்ளன. தமிழகத்தில் அப்படியான அரசாணை எதுவும் போடப்படவில்லை, போடவும் மாட்டார்கள். ஏன் என்பதை தனியே சொல்லவும் வேண்டுமோ.
அதேநேரம் இதை தமிழ் தேசியப் பிரச்சனையாக சுருக்கிக் கொள்ளவும் முடியாது. எவ்வாறென்றால் இது போன்ற முறைகேடுகளில் பலனடைந்தவர்கள் யார் என்பது குறித்து கணக்கெடுப்புகளோ, புள்ளிவிவரங்களோ அரசிடம் இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் பார்ப்பனர்களும் ஆதிக்க ஜாதியினருமே அரசு வேலைகளில் அதிகம் அமர்கிறார்கள் என்பது கண்கூடு. இப்போது கூட கல்வி வேலை வாய்ப்புகளில் 10 விழுக்காடு சிறப்பு இடஒதுக்கீடு சட்டமாக்கப் பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்று கூறிக் கொண்டு ஆண்டு வருமானம் 8 லட்சம் என்றும் வரையறுத்துள்ளார்கள். இது யாருக்கானது என்பதில் மறைபொருள் எதுவும் மிச்சமிருக்கிறதா? எனவே, இதை தமிழ்நாடு எதிர் வடமாநிலங்கள் என்று பார்ப்பதை விட, அரசு தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிப்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன? என்பதைச் சிந்திப்பதே சரியானது.
காவிரி ஆற்றின் தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க விடக் கூடாது என்பதற்கு டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுப்பது எப்படி காரணமாக இருக்கிறதோ, ஒக்ஹி புயலில் கடற்படை மீனவர்களைக் காப்பாற்றாமல் விட்டதற்கு சாஹர்மாலா எப்படி காரணமாக இருக்கிறதோ, 600க்கும் அதிகமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், இன்றுவரை மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் தங்கள் படகுகளையும் அதன் மூலம் வாழ்வாதாரங்களை இழப்பதற்கும் அதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு அனுமதி எப்படி காரணமாய் இருக்கிறதோ அதேபோல தொடர்ச்சியாக அரசு வேலை வாய்ப்புகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கும் குறிப்பான காரணம் ஒன்று கண்டிப்பாக இருந்தாக வேண்டும்.
பொதுவாக பார்ப்பனிய எதிர்ப்பு மரபு என்பது தமிழகத்தின் அடையாளமாக, மதிப்பாக, அங்கீகாரமாக இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்கு இதுவே முதன்மையான காரணம். இது பார்ப்பனியத்தோடு தொடர்புடையது. அதேநேரம் கார்ப்பரேட்டுகளின் நலனும் இதில் அடங்கியிருக்கிறது. உலகின் அதிகமான பணியாளர்களை பெற்றிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் முதன்மையானது இந்திய இரயில்வே துறை. இந்த துறை முற்றுமுழுதாக தனியார் மயப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. அப்படி ஒரு நிலை வரும் போது அந்தத்துறையில் அதிக அளவில் தமிழர்கள் இருப்பது ஆபத்தானது என்பது கூட காரணமாக இருக்கலாம். அல்லது வேறொன்றாகவும் இருக்கலாம். ஆனால் அதை கண்டுணர்ந்து எதிர்த்து முறியடிப்பதற்கு இதை தமிழ்தேசியப் பிரச்சனையாக மாற்றுவது இடையூறாக இருக்கும் என்பது உணரப்பட வேண்டும்.
ஒரு தடவையில் எடுக்கப்படும் 1,765 பணியிடங்களில் 1,600 பேர் தமிழே தெரியாத வட மாநிலத்தவர்கள் என்பது எவ்வளவு கொடுமையானதோ அதைவிட இதில் முறைகேடு ஒன்றுமில்லை. 19 ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறை தான் இது என திமிராக பதில் கூறுவது கொடூரமானது. பொறியாளர்கள் முதல் முதுநிலை வரை படித்து பட்டம் பெற்று விட்ட பிறகு, பத்தாம் வகுப்புக் கேள்விக்கு பதில் எழுதுவது தனக்கான தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு என்று நம்ப வைக்கப்பட்டிருக்கும் வேலை தேடும் பட்டதாரிகளிடம் இந்தக் கொடூரத்தை புரிய வைக்க வேண்டும். அது தான் இது போன்ற முறைகேடுகளுக்கும், அதற்கு பின்புலமாக இருக்கும் பாசிசங்களுக்கும் வேட்டு வைக்கும்.
அதுவரை தனக்கு இருக்கும் நீரிழிவிற்கு சரியான மருந்து உட்கொண்டு சரியான உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவர், பக்கத்தில் ஒருவர் கூறினார் என மருந்துகளை எடுப்பதை நிறுத்திவிடுகிறார்.
நீரிழிவு முற்றுகிறது. காலில் புண் ஏற்பட்டு அது ஆறாமல் சீழ் வைக்கிறது. அடுத்த சில மாதங்களில் கால் அகற்றப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இறக்கிறார் அவர் இன்னும் ஒரு டைப் ஒன்று டயாபடிஸ் நோயாளி..
இருபது வருடங்களாக சரியாக இன்சுலின் போட்டு சக்கரை அளவுகளை ஓரளவு சரியாக வைத்திருக்கிறார். ஆனால் பக்கத்துல ஒருத்தர் சொன்னார் என்று மருந்தில்லாமல் வைத்தியம் செய்யும் போலியிடம் சென்று இன்சுலின் போடுவதை பதினைந்து நாட்கள் நிறுத்துகிறார். நண்பர் வீட்டு விசேசத்தில் வைத்த பாயாசத்தை குடிக்கிறார். வீட்டுக்கு வந்தால் வயிறு சரியில்லை.
அதற்காக அவருக்கு மருந்தாக பவண்டோ தரப்படுகிறது. மீளாக் கோமா நிலைக்கு செல்கிறார். அத்தோடு அவர் கண் விழிக்கவே இல்லை.
இன்னும் ஒருவர் தனக்குண்டான ரத்த கொதிப்பு நோய்க்கு சரியாகவே ஆறு வருடங்களாக என்னிடம் மருந்துகள் எடுத்து பிரதிமாதம் காட்டி வந்தார்.
ஆனால் திடீரென அவர் என்னிடம் வருவது இரண்டு வருடங்களாக நின்றுவிட்டது.
சரி வேறு சிறந்த மருத்துவர் என்று தான் எண்ணும் மருத்தவரிடம் சென்றிருப்பார் என்றே நானும் நினைத்தேன். ஆனால் மீண்டும் இரண்டு வருடங்கள் கழிந்த பின் கால்கள் முகம் வீங்கி வந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இது போன்று முகம் கால் வீங்கி மயக்கம் வந்து விட்டதாம். மதுரையில் பெரிய மருத்துவமனைக்கு சென்றால் கிட்னி செயலிழந்து விட்டது என்கிறார்களாம்.
நான் கேட்டேன் “ஏனய்யா நீங்கள் ரத்த கொதிப்புக்கு மருத்துவம் சரியாக பார்த்தீர்கள் தானே ?”
“இல்லை சார். ரத்த கொதிப்பு ஒரு நோயே இல்லை. அதற்கு மருத்துவம் தேவை இல்லனு பக்கத்துல ஒரு நண்பர் சொன்னாரு. அதோட உங்ககிட்ட வர்றத நிறுத்திட்டேன். வேற யாருகிட்டையும் போகல…”
அடுத்து இரண்டு வருடம் முன்பு இறந்த குழந்தையின் கதை.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வயது குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வர அதை மருத்துவரிடம் காட்டாமல் வயிற்றம்மை என்று வீட்டிலேயே வைத்து சோறு தண்ணி கொடுக்காமல்.. குழந்தை தீபாவளி அன்று இறந்தது.
கேட்டால்.. வீட்டிற்கு பக்கத்தில் இருப்பவர்கள் இது அம்மை என்றும் இதற்கு வைத்தியம் பார்க்கக் கூடாது என்று கூறினார்களாம்.
இன்னும் பக்கத்து வீட்டு காரர்கள் கூறும் பல அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையை முடித்து விடக்கூடியதாகி விடும். ஆனால் எந்த கொலைக்கேசும் அந்த ஓசி அறிவுரை வழங்குவோர் மீது வருவதில்லை. ஆனால் இது போன்றவர்கள் தங்களால் இயன்றவரை மக்கள் தொகையை குறைத்து வருகிறார்கள்.
தங்களிடம் இருக்கும் முட்டாள்தனத்தை பிறரிடம் பரப்பிவிட்டு சமுதாயத்தை சிந்திக்கும் திராணியற்றதாக மாற்றுவதையே முழுநேர வேலையாக செய்து வருகிறார்கள்.
இவர்களிடம் இருந்து உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களது மருத்துவம் சார்ந்த முடிவுகளை உங்கள் குடும்ப நல மருத்துவரிடம் / உங்கள் சிறப்பு நிபுணரிடம் கேட்டு முடிவு செய்வதே பாதுகாப்பானது. அறிவுக்கு உகந்தது.
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
புத்தளம் குப்பைத் திட்டத்துக்கு எதிராக மார்ச் -19 நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு.
தோழர்களே,
புத்தளத்தை குப்பைக் கிடங்காக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆபத்துக்களை நன்குணர்ந்த மக்கள் பல மாதங்களாக அத்திட்டத்தை நிறுத்தக்கோரி அங்கே போராடி வருகிறார்கள். சீமெந்து தொழிற்சாலை, நுரைச்சோலை அனல் மின் நிலையம் என தொடர்ச்சியாக புத்தளம் மக்களுடைய சுற்றுச் சூழலும் ஆரோக்கியமும் அரசின் திட்டங்களால் சிதைக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது குப்பை கொட்டும் திட்டமும் அவர்கள் மீது அடாத்தாக திணிக்கப்படுகிறது.
புத்தளத்துக்குள்ளேயே போராடிக்கொண்டிருந்த மக்கள் எதிர்வரும் 19-ம் திகதி காலை 9:00 மணிக்கு கொழும்பில் காலிமுகத்திடலில் போராட்டமொன்றினை ஒழுங்கு செய்துள்ளார்கள்.
சமூக நீதிக்கான வெகுசன இயக்கம் இப்போராட்டத்தினை ஆதரித்து கலந்துகொள்கிறது.
இப் போராட்டத்துக்கு இடதுசாரி முற்போக்கு சனநாயக அமைப்புகளும் மக்கள் அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும்.
தங்களையும் தங்கள் அமைப்பு சார்ந்த தோழர்களையும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு போராடும் மக்களுக்கு தோள்கொடுக்க வருமாறு தோழமையுடன் அழைக்கிறோம்.
சுத்தமான இலங்கைக்காக புத்தளம் மக்களுக்கு தோள் கொடுப்போம்!
தோழமையுடன்,
மு. மயூரன்,
சமூக நீதிக்கான வெகுசன இயக்கம்
இலங்கை எனும் குட்டித்தீவின் இயற்கை வளங்களையும் எதிர்கால சந்ததியையும் நேசிக்கும் தேசபக்தர்களே…
உண்மையில் உழைக்கும் எளிய மக்கள் தான் தேசபக்தர்கள்; அவர்களை தான் இயற்கை வளங்களை சூறையாடுவதில்லை; மிதமிஞ்சி நுகர்வதில்லை; அந்நிய சக்திகளுக்கு விலை பேசி விற்பதில்லை;
இவற்றையெல்லாம் செய்யும் நாசகார சக்திகளை எதிர்த்து அவர்கள் தான் போராடுகிறார்கள்.
அவ்வாறான தேசப்பற்று கொண்ட புத்தளம் மக்கள் கொழும்பு நோக்கி வருகிறார்கள். இதோ அவர்களின் அழைப்பு!!
சில உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதால், குப்பை பிரச்சனை ஓர் இனத்தின் பிரச்சினையாய் காட்ட முயற்சிக்கப்படுவதால்,
கொழும்பு Vs புத்தளம் என்ற மாகாண இடைவெளி வெட்டி சிலர் தன் வாக்கு வயிறுகளை நிரப்பிக்கொள்ளத் துடிப்பதால்…
இந்த அவசர அழைப்பு…
தோழர்களே… இந்த தாய் நாட்டை நேசிப்பவர்களே…
இது புத்தளப் பிரச்சினை அல்ல.. தேசியப் பிரச்சினை..! இந்த 200 நாளைத் தொடும் போராட்டம் இலங்கையின் ஒவ்வொரு உடன்பிறப்பினதும் உயிரோடு சம்பந்தப் பட்ட பிரச்சினை…!!
உண்மையில் உழைக்கும் எளிய மக்கள் தான் தேசபக்தர்கள்; அவர்களை தான் இயற்கை வளங்களை சூறையாடுவதில்லை; மிதமிஞ்சி நுகர்வதில்லை; அந்நிய சக்திகளுக்கு விலை பேசி விற்பதில்லை; இவற்றையெல்லாம் செய்யும் நாசகார சக்திகளை எதிர்த்து அவர்கள் தான் போராடுகிறார்கள்.
இந்தத் திட்டம் இவர்கள் சொல்வதுபோல், அருவக்காலு என்ற இடத்தில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா..?
அருவக்காலு என்ற இடத்தில் செய்ய முட்பட்டபோது, “காட்டு வன விலங்குகளுக்கு” ஆபத்தானது என நிராகரிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா..?
அக்காட்டு விலங்குகளைவிட மிக அண்மையில் மனிதர்கள் வாழும் “சேரக்குழி” என்னும் மனிதக் குடியிருப்பில் தான் இது இப்போது அரங்கேறுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா..?
அதிர்வில் வெடிக்கும் வீடுகளோடும்… பதறிக் கண்விழிக்கும் சிறார்களோடும்… அக்கிராமம் போலீசில் போட்டிருக்கின்ற புகார்கள் உங்களுக்குத் தெரியுமா..?
இத்திட்டத்திற்கு பணம் கொடுத்த உலக வாங்கி அதனை கோபத்துடன் திருப்பி வாங்கிக்கொண்ட கதை..!
எந்த முன் அனுபவமும் அற்ற, ஒரு Black listed கம்பெனி (China Harbour Eng.co) இதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்ற கதை..!
குப்பையை எடுத்துவர மட்டும் வருடாந்தரம், 1,572 மில்லியன் (2012 கணிப்பு) தொடர்ந்து செலவாகப்போகும் கதை..!
இதற்கான ரயில் பாதைக்கு மாத்திரம் 52,060 மில்லியன் ரூபாய் கரையப் போகும் கதை…!!
தூரம் அதிகம் என்பதால், இடையில் அமையப்போகும் களனி – கரவெலபிடி Transition Center க்கு எத்தனை பில்லியன் என இன்னும் சொல்லப்படாத கதை..!!
இவை அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் தான்…!! தூரம்..!!
பிணத்தை அங்கேயே அடக்கம் செய்யாமல் 170 Km தாண்டி மையவாடி அமைக்கும் கொடூரம்..!!
இத்திட்டத்தின் பின்னால், தேச நலனுமில்லை, தேசிக்கயுமில்லை..!! பணம்..!! ,
Project என்பது, இப்போது பணம் சுருட்டும் விஷேட வடிவம்…!!
பதவியும், ஒரு Black listed கம்பெனியும் கிடைத்துவிட்டால்… அனைத்தும் அங்கீகாரத்துடன் நடக்கும்..!!
பாவம், இந்தப் பணப்பசிக்கு பலிக்கடாவாகப்போகும் இலங்கையின் பரிதாப நிலம் தான் “புத்தளம் – சேரக்குழி”
கடலிலிருந்து 175 m ,
கல்பிட்டியிலிருந்து 4 km,
வில்பத்துவிலிருந்து 5.67 km,
காலா ஓயா ஆற்றிலிருந்து 5 km,
காரைதீவிலிருந்து 400m
சேரக்குளிய வீடுகளிலிருந்து வெறும் 250 மீட்டர்..!!
இவற்றுக்கு மத்தியில்தான், இந்த அணுகுண்டு புதைக்கப்படுகிறது…!!
இலங்கை வாழ் நல்லுள்ளங்களே, வந்து பாருங்கள்…!
நிலக்கீழ் நீரும், இயற்கை காடுகளும், உயிரோடு மனிதர்களும், உலகே மறுக்கின்ற (land fill அமைக்க) சுண்ணக்கல் நிலமும் உள்ள இடத்தில் தான் இத்திட்டத்தை திணிக்கிறார்கள் என்பதை உணர்வீர்கள்..!!
இவைகள் வெளிச்சத்துக்கு வராது…!
கொழும்பிலே உச்சரிக்கப்படாது…! Media conference இல் பேசப்படாது…!!
உண்மைகளை மறைக்க உறக்கக் கத்துகிறார்கள்..!!
“மீதொட்ட முல்ல” மீதேன் வெடிப்புக்கும் – 31 உயிரிழப்புக்கும் அவர்களே காரணமாக இருப்பதும்..!!
“அதற்கு ஏன் ஹர்த்தால் நடத்தவில்லை” என அடுத்தவனைக் கேற்பதும்..!!
வருடங்கள் தாண்டி வழியப்போகும் “லீச்செட்” டை, சில வாரங்களில் வருகிறதா என வந்து பார்க்கச் சொல்வதும்..!!
இல்லாத பொய் இணைத்து animation காட்டுவதும்…! கடைசி ஆயுதமாய் இனவாதத்தை இயக்க முயற்சிப்பதும்…!!
இந்த மண்ணை நேசிக்காத மடையர்களிடம் மட்டுமே எடுபடும்..!!
தரம் கெட்ட தலைவர்களின் இருப்புக்காய்…! மக்கள் நரகத்தை சுவைக்க முடியாது…!!
இந்த நிஜங்களைச் சொல்ல கொழும்பு வருகிறோம்…!
இந்த நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு ஆத்மாவினதும் ஆதரவை எதிர்பார்த்து வருகிறோம்..!
இனம், மதம், மொழி கடந்து சந்ததி காக்கும் ஓர் சரித்திரப்போரை சத்தமாகச் சொல்ல வருகிறோம்…!!
கொழும்பில் எம்மோடு நீங்களும் கரம் சேருங்கள்..!
எங்கோ ஒரு மூலையில் இருந்து எமக்காக பிரார்தித்தவர்கள்கூட 19-ம் திகதி பக்கத்தில் வந்து நில்லுங்கள்..!
புத்தளம், அரசியலால் அநாதை ஆனாலும்.. எமக்கு சகோதரர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதை நிரூபியுங்கள்..!!
செவ்வாய் கிழமை 19.03.2019 காலை 9.30 மணியளவில் காலி முகத்திடலில் உங்களை எதிரபார்த்தவர்களாய்…
காலில் குத்திய முள்ளுக்கு கண்களும் அழும் என்ற எதிர்பார்ப்போடு,
புத்தளம் மக்கள்…
அதிமுகவின் பொல்லாத ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க முடியுமா ?
ஆட்சியாளர்களும் அதிகாரிகளும், கிரிமினல்களோடு கூட்டுக் களவாணிகளாக மாறி விட்டார்கள்!
சகோதரிகளே, பாலியல் குற்றவாளிகளை முச்சந்தியில் நிறுத்துங்கள்…
மக்கள் பார்த்துக்கொள்வார்கள்!
1 of 2
பொள்ளாச்சி கொடூரம் … ஒருத்தனையும் தப்ப விடாதே !
நேர்மையான நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை நடத்து !
உடனே தண்டனை வழங்கு!
பாலியல் வக்கிரங்களை உற்பத்தி செய்யும் ஆணாதிக்க பாலியல் நுகர்வு வெறி, ஆபாச இணைய தளங்களை தடுக்கமுடியாத அரசே குற்றவாளி !
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு தொடர்புக்கு : 9962366321
மதுரை :
“விட்டுடுங்கண்ணா…” நெஞ்சை அறுக்கிறது… நம் பிள்ளைகளின் கதறல். அதிமுக பொறுக்கிகளை பாதுகாக்கும் அரசு ஒழிக ! கிரிமினல் அரசிடம் நீதி கேட்டுக் கெஞ்சாதே! அதிகாரத்தை கையில் எடு.. !
அதிமுக பார் நாகராஜ், துணை சபாநாயகர் மகன்கள் பிரவீன், முகுந்தனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஏன் கைது செய்யவில்லை ? என்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 16.03.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான உழைக்கும் மக்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
1 of 10
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் ) தகவல் :
மக்கள் அதிகாரம்
கடலூர் :
பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக குற்றக் கும்பலை தூக்கிலேற்றவேண்டும் என்று கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 15.03.2019 அன்று (புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி) சார்பாக கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான மாணவ – மாணவிகள் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களையும், கையெழுத்தையும் பதிவு செய்தனர்.
1 of 6
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தொடர்புக்கு : 97888 08110
கும்பகோணம் :
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 of 2
முழக்கமிடும் மாணவர்கள்
மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம்
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
பொ. வேல்சாமி தமிழ் நூல்களில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள் நம்முடைய கல்விபுலத்தின் தகுதியை இழிவுபடுத்துகின்றது. இப்பொழுது நான் கொடுத்துள்ள இந்தப் பதிவில் திருபனந்தாள் காசிமடம் வெளியிட்ட திருக்குறள் உரைக்கொத்து மூன்று பாகங்களும் வை.மு.கோ வெளியீடான திருக்குறள் முழுமையும் சில மாற்றங்களுக்குள்ளாகி இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இதில் என்ன பிழை நிகழ்ந்து விட போகிறது என்று நீங்கள் கருதலாம்.
நண்பர்களே பல்கலைக் கழக வட்டாரங்களில் மேற்குறிப்பிட்ட நூல்களின் முதற்பதிப்புக்களைப் பற்றிய விழிப்புணர்வு பேராசிரியர்களில் பலருக்கு இல்லாமல் போனது. இதன் விளைவாக அண்மையில் வந்துள்ள புத்தகங்களை வைத்து தங்களுடைய ஆராய்ச்சி மாணவர்களை வழிநடத்தி விட்டனர். அவர்களில் பலர் பிற்காலங்களில் வந்த நூல்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து தங்களுடைய ஆய்வுகளை நிகழ்த்தி விட்டனர். பட்டங்களும் பெற்று விட்டனர் என்ற தகவல்களும் உலவுகின்றன.
1 of 4
அதாவது பட்டுச்சாமி ஓதுவார் பதிப்பித்த நூலினுள் கடுகளவு கூட மாற்றம் செய்யாமல் “மதுரகவி திருமுறைச்செம்மல் புலவர் பேராசிரியர் தா.ம. வெள்ளைவாரணம்” (செந்தமிழ்க் கல்லூரி, திருபனந்தாள்) அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு ஆய்வை நிகழ்த்தியுள்ளனர். நிகழ்த்தி வருகின்றனர். திருக்குறள் பரிமேலழகர் உரைவிளக்க பதிப்பில் மிகச் சிறந்த நூலாகிய வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பில் 133 அதிகாரங்களில் அறத்துபாலுக்கும் பொருட்பாலில் இரண்டொரு அதிகாரங்கள் தவிர பிற எல்லாவற்றுக்கும் வை.மு. கிருஷ்ணமாச்சாரியாரின் உறவினர் சடகோப ராமானுஜாச்சாரியாரும் சே. கிருஷண்மாச்சாரியாரும் உரை விளக்கம் எழுதியுள்ளனர். காமத்துப் பாலுக்கு வை.மு.கோ. உரை எழுதியிருக்கிறார். இதனை வை.மு.கோ. தன்னுடைய முகவுரையில் தெளிவாக விளக்கி எழுதியும் உள்ளார்.
ஆனால், வை.மு.கோ வின் மகன் திரு நரசிம்மன் காலத்தில் வந்த பதிப்பில் திருக்குறள் முழுமைக்கும் உரை விளக்கம் எழுதியது வை.மு.கோ என்று பதிப்பித்து விட்டார். இதனை நம்பி வை.மு.கோ எழுதாத விளக்கத்தை அவர் எழுதியதாக ஆராய்ந்த நூல்களுக்கு M.Phil.,Ph.D., போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டு விட்டன என்றும் சொல்லப்படுகின்றது. இத்தகைய பிழையான நிகழ்வுகளுக்கு இடம் தருவது தமிழ்மொழியின் சிறப்பை உலகளவில் குறைத்து விடும். இத்தகைய கல்வித்துறை நிகழ்வுகளை அறிந்தால் உலகறிஞர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்….? என்பது தான் கவலையாக இருக்கிறது.
இருபது வருடங்களுக்கு முன்பு களைகட்டியிருக்கும் கிண்டி மடுவங்கரையில் உள்ள ஸ்டீல் மார்கெட், தற்போது ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.
படிக்கட்டு கைப்பிடிகள், பால்கனி தடுப்புகள், ரசாயனத் தொட்டிகள் மற்றும் மேசை – நாற்காலிகள் போன்றவை தயாரிக்கத் தேவையான SS ஸ்டீல், பைப், இரும்பு தகடுகளின் விற்பனைச் சந்தை, கிண்டி காந்தி மார்கெட்டில் உள்ளன.
இரும்பு, எஸ்.எஸ் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளிலிருந்து கழிவுகளைச் சேகரித்து, அதிலிருந்து நல்லவற்றைச் சேகரித்து, அதுகூடவே மேலும் சில புதிய பொருட்களையும் வாங்கி விற்பனை செய்து வந்தார்கள். ஜி.எஸ்.டி வரி அமுலாக்கத்திற்கு பிறகு தொழிலையே கைவிட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், சிறுவியாபாரிகள்.
கிண்டியில் கிருஷ்ணா ஸ்டீல்ஸ் கடையை நடத்திவரும் கிருஷ்ணசாமியை சந்தித்தோம்.
தொழில் எப்படி இருக்கு? என்று கேட்டதுமே “எங்க தொழில பத்தி என்னத்த சொல்லச் சொல்றீங்க, அந்தக் கேள்வியே எங்கள எரிச்சலூட்டுது. முன்னல்லாம் வந்தீங்கன்னா இப்படி உட்காந்து பேசிகிட்டிருக்க முடியாது. இப்போ சும்மா உக்காந்துகிட்டிருக்கோம். இதுதான் எங்களோட நிலைமை” – என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டு, தொடர்ந்தார்.
திரு கிருஷ்ணசாமி
“படிக்கட்டுகளுக்குத் தேவையான SS கைப்பிடி, பைப்புன்னு விக்கிறோம். நம்மிடம் சின்ன சின்ன வியாபாரிகள் வாங்குவாங்க. அப்புறம் சொந்தத் தேவைகளுக்காக வீடு, கடைகளுக்கு நேரடியாகவும் வாங்கிப் போறாங்க.
ஒரு பொருள கம்பெனியிலிருந்து டீலர் மூலமாத்தான் வாங்க முடியும். இதுல கம்பெனிக்குத் தேவையான ஜி.எஸ்.டி வரிய டீலர்கிட்டே புடிச்சுக்குவான், டீலர் எங்ககிட்டே புடிச்சுக்குவாங்க. நாங்களும் நட்டத்துக்குக் கொடுக்க முடியாதே, அது சின்ன அளவில வாங்கக்கூடிய பொதுமக்கள் தலையிலதான் விடியுது. அதனால, எங்ககிட்டே நேரடியா வாங்கக்கூடிய வாடிக்கையாளர்களும் படிப்படியா கொறைஞ்சிட்டாங்க.
எந்த ஒரு தொழிற்கூடமும் கச்சாப்பொருட்களை வாங்கும்போது அதுக்கு ஜி.எஸ்.டி கட்டித்தான் வாங்க முடியும். உற்பத்தி செய்த ஒரு பொருளை விற்கும்போது, மொத்த கச்சாப் பொருளுக்கும் சேர்த்து வரி வாங்க முடியாது. காரணம், தொழிற் போட்டியினால் குறைவான விலை வைத்தால்தான் வாடிக்கையாளர்களை தக்கவைக்க முடியும். மீதமுள்ள கச்சாப் பொருளின் கழிவில் அதன் விலையும் ஜி.எஸ்.டி-யும் அடங்கியிருக்கு. அந்தக் கழிவை நாங்கள் எடுக்கும்போது, அது எங்க தலையிலதான் விடியுது.
இந்த நடைமுறையினால், சிறிய வியாபாரிகளான எங்களால் தாக்குபிடிக்க முடியல. சரி, அதையே கொஞ்சம் பெருசா செய்யலாமுன்னு நெனச்சா, கழிவ சேர்த்து வைக்க குடோன் வசதியும் கெடயாது. அதனால, வர்ற பொருள உடனே கைமாற்றிக் கொடுத்தாகணும். இதையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஸ்கிராப்பின் விலையை அதிகப்படுத்துகிறார்கள். குடும்பம் வாழனுமுன்னா வேறு வழியில்லாமல் அதிக வெலகொடுத்து வாங்க வேண்டியிருக்கு. ஆதலால், எங்கள மாதிரி சிறிய வியாபாரிகள் படிப்படியாக அழிஞ்சுகிட்டிருக்கோம்.
முன்னெல்லாம் கம்பெனிகாரங்க, அவங்க எடத்திலிருந்து ஸ்கிராப்ப எடுத்துப்போனா போதுமுன்னு தள்ளிவிடுவாங்க. ஆனா, இப்போ தொழில் போட்டி அதிகமானதுனால, ஸ்கிராப் போடுற கம்பெனிகாரனே ரேட்ட.. தீர்மானிக்கிறான்.
அதுமட்டுமல்ல, சேகரித்த இந்த உலோகக் கழிவுகளை நாங்கள் நேரடியாக உருக்காலைக்கு அனுப்ப முடியாது. முதலில் மும்பை மற்றும் வட இந்தியாவில் உள்ள மார்வாடி சேட்டுகளுக்கு கொடுப்போம். அதை அவர்கள் உருக்காலைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். காரணம் அவர்களுக்குத்தான் டை-அப் உள்ளது. மாதத்துக்கு 300 டன் அனுப்புனாத்தான் அவங்களுக்கு சர்வீஸ் செய்ய முடியும். அதுமட்டுமல்ல, முதல் பேமெண்டே 60 நாட்களுக்குப் பிறகுதான் நம்ம கைக்கு வரும். அதையும் தொடர்ச்சியா அனுப்பும்போதுதான் அதில் நீடிக்க முடியும். நம்மால செய்ய முடியுமா?
இனி, என்ன செய்யப் போறோமுன்னு எதுவும் புரியல. சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டேன் தம்பி. ஊருல மூட்ட தூக்குனேன். அப்புறம் நல்லா சம்பாதிக்கனுமுன்னு சென்னை மும்பைன்னு அலைஞ்சி ஸ்கிராப் எடுக்குற கடையில வேலைக்குச் சேர்ந்து படிப்படியா முன்னேறினேன்.
செழிப்பா வாழ்ந்த நேரம் அது. அப்பப்போ ஊருக்கு போயி வருவேன். கோயில்… கொளமுன்னு செலவு பண்ணுவேன். ஒரு அம்மன் கோயிலயே கட்டிக்கொடுத்திருக்கேன்னா பாருங்களேன். அப்படி சொந்த ஊருக்கு போகும்போது, சின்ன வயசுல என்கூடவே மூட்ட தூக்குன சொந்தக்காரன்தான் இப்போ ஞாபகத்துக்கு வர்றான். “நாம எவ்வளவோ முன்னேறி வந்திருக்கோம், இவன் பொழைக்க வழியில்லாம கிராமத்துல மூட்ட தூக்கியே செத்துடுவான்போலன்னு…” அவன நெனச்சி கவலப்பட்டிருக்கேன். ஆனா, இப்போ நான் அந்த மூட்டயக்கூட தூக்க முடியாது மூப்படைஞ்சி நிக்கிறேன்.” என்றார் சோகமாக…