Saturday, May 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 360

சிறுநீரகப் பிரச்சினைக்கான உணவு முறை | மருத்துவர் BRJ கண்ணன்

நாம் இதற்கு முன்பு பேசிய உணவுமுறை அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவை அதாவது சர்க்கரை நோய் உள்ளவர்கள், இல்லாதவர்கள் மாரடைப்பு உள்ளவர்கள் இல்லாதவர்கள் என அனைவருக்குமானது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு முறை.

சிறுநீரக பாதிப்பிற்குப்பின் நீங்கள் மருத்துவரிடம் செல்கிறீர்கள் என்றால் உடனே அவர் உங்களுக்கு உப்பு சத்து அதிகமாக உள்ளது என்று கூறுவார், அதைத்தொடர்ந்து நீங்கள் மருத்துவர் கூறி விட்டார் என்பதற்காக உணவில் உப்புச் சுவையை குறைத்துக் கொள்வீர்கள் இது தவறான ஒரு செயல்.

நம் உணவில் இருக்கக்கூடிய உப்பானது சோடியம் ஆகும். இந்த உப்பு சத்து இல்லாமல் நமது உடலில் உள்ள எந்த செல்களும் இயங்காது மருத்துவர் கூறிய உப்பானது இந்த உப்பு அல்ல அவர் கூறியது யூரியா கிரியாட்டினின் இந்த வகையான உப்பு. இந்த வகையான உப்பு நம் உடலில் உண்டாகும் கழிவுகளிலிருந்து உற்பத்தியாகக் கூடியது. இந்த வகையான உப்பை நமது சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியவில்லை. ஆகையால் இது நம் ரத்தத்தில் கலக்கிறது இந்த உப்பு சோடியம் வகை ஆகாது.

இந்த இரண்டையும் பிரித்துப் பார்க்காமல் நம் உணவில் உப்புச் சுவையை சேர்க்காமல் இருப்பது நம் உடலை மேலும் வலுவிழக்கச் செய்யும். இந்த சிறுநீரக நோய்க்கு பல படிநிலைகள் உண்டு. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு வகையான உணவு பழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். அனைத்து படிநிலைக்கும் பொதுவான ஒரு உணவுப் பழக்கம் ஒன்று கிடையாது. உதாரணத்திற்கு கிரியாட்டினின் அளவு இரண்டு புள்ளியை தாண்டினால் மருத்துவர் உணவில் உப்பு சுவை சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவார். அது எந்த அளவு என்று நாம் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

இன்னும் விரிவாக கூற வேண்டுமென்றால் சிறுநீரக கோளாறு உள்ள சில பேருக்கு சிறுநீரானது வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வெளியேறும். அதாவது, உடம்பில் உள்ள சோடியம் அதிக அளவு வெளியேறும். அந்த வகையானவர்கள் உணவில் அதிக உப்பு சுவையை சேர்த்துக் கொள்ள நேரிடும் இது மிகவும் சிக்கலாக தென்படுகிறது அல்லவா. ஆகையால் சிலபேருக்கு உப்பு சுவையை குறைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சிறுநீரகம் மூலம் சோடியம் அதிகம் வெளியேறும் நபர்களுக்கு உப்புச் சுவையை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. நாம் எந்த படிநிலையில் உள்ளோம் என்பதைப் பொறுத்து இது மாறுபடும். ஆகையால் பொதுவாக உப்பில்லாமல் உணவை சேர்த்துக் கொள்வது என்பது தவறான செயல். இது முதலில் நாம் தெளிய வேண்டிய ஒன்று.

இரண்டாவது வகையான உப்பு பொட்டாசியம். இதுவும் நம் உடலில் அவசியமான ஒன்றாகும். ஆனால், குறிப்பிட்ட அளவைவிட இது அதிகமாக இருத்தல் கூடாது. பொட்டாசியமானது நம் உடலில் இருந்து வெளியேற இரண்டு வழிகள்தான் உள்ளது. ஒன்று, சிறுநீரகம் மூலம் வெளியேறுவது மற்றொன்று மலம் கழிப்பதன் மூலம் வெளியேறுவது. நம் உணவில் பொட்டாசியம் எதிலெல்லாம் அதிக அளவு உள்ளதோ அதை நாம் முடிந்த அளவு குறைத்துக் கொள்வது நல்லது. முழுதாக பொட்டாசியம் உள்ள உணவுகளை சேர்க்கக்கூடாது என்று நாம் கூறவில்லை. உதாரணத்திற்கு காய்கறி, பழங்கள், இளநீர் ஆகியவற்றில் கூட பொட்டாசியம் உள்ளது. இதை நாம் முழுவதும் தவிர்க்கப்போவது கிடையாது. எந்த அளவு என்பதைத்தான் நாம் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு மருத்துவர் கூறும் உணவுப் பொருட்களை குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. சிறுநீரகக் கோளாறு கொண்டவர்களுக்கு மலச்சிக்கல் இயல்பாக இருக்கக்கூடியதாகும்.

மலச்சிக்கல் அனைவருக்கும் பொதுவானது எனினும் சிறுநீரக கோளாறு கொண்டவர்கள் அது இயல்பான ஒன்றாக அமையும். ஆதலால் மலச்சிக்கல் நீங்க வேண்டும் என எண்ணி வாழைப்பழம் போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால், அதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. எனவே எவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகம் உள்ளது எவற்றில் குறைவு என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ சர்க்கரையின் அறிவியல்

அடுத்ததாக, பாஸ்பரஸ். இதைப்பற்றி பெரிதும் குழம்பிக் கொள்ள வேண்டாம். எந்த வகை உணவுகளில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளதோ, அதே உணவுகளில் பாஸ்பரசும் அதே அளவு இருக்கும். நாம் உண்ணும்போது நம் உடலானது இதை எந்த அளவுக்கு உள் வாங்கிக்கொள்ளும் என்பதற்கு ஏற்றவாறு மருத்துவர் நமக்கு மருந்துகளை கொடுப்பார். அவற்றை நாம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து நாம் பார்க்கவிருப்பது புரதம். பொதுவாக சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு ஒரு பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. புரதம் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. நாம் அன்றாடம் சொற்ப அளவுதான் உணவில் புரதம் எடுத்துக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, இட்லி – தோசை ஆகியவற்றில் இரண்டு கிராம்தான் புரதம் உள்ளது. அடுத்து அரிசியில் 100 கிராமில் 3 கிராம்தான் புரதம் உள்ளது. சிறுதானியங்கள் 100 கிராமில் 10 கிராம் புரதம் உள்ளது. அசைவ உணவுகளில் இது 25 கிராம் உள்ளது. மாமிச உணவுகளில் அதிக அளவு புரதம் உள்ளது. வெளிநாடுகளில் அவர்களது அன்றாட உணவில் போர்க், முட்டை என மாமிசங்களை சேர்த்துக் கொள்கிறார்கள், ஆகையால் அவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்படும்போது புரதம் குறைவாக எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவது சரிதான். நம்மைப் பொருத்தவரை ஏற்கனவே புரதம் குறைவாக உண்கிறோம் சராசரியாக ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் புரதம் என்ற விகிதத்தில் நம் உடலில் புரதம் சேர வேண்டும்.

ஆனால் நாம் உண்ணும் உணவில் அந்த அளவிற்கு புரதம் இல்லை. ஒரு கை நிறைய பருப்பை உண்டால்தான் அது 40 கிராம் புரதத்தை நம் உடலில் சேர்க்கும். நாம் அவ்வளவு உண்பதில்லை. சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர் என்றால் 60 கிலோ உடலுக்கு 60 கிராம் புரதம் என்பது சராசரியான அளவு. இது இவர்களுக்கு 40 கிராம் என்று குறையும். இந்த 40 கிராம் நம் உடலில் சேர்வது கடினமான ஓர் இலக்கு. இவர்களிடம் இதையும் குறைக்குமாறு அறிவுறுத்துவது சிக்கலை உண்டாக்கும். ஏனென்றால் நாம் ஏற்கனவே குறைவான புரதம்தான் உண்டு வருகிறோம். ஆகவே எந்த அளவிற்கு நம் உடலில் புரதச்சத்து உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறுதான் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு பரிசோதித்த பின் சிலருக்கு புரதச் சத்தானது, மேலும் தேவைப்படுவதாக இருக்கலாம். உதாரணத்திற்கு, நான் மேலே கூறியது போல் ஒரு கிலோ எடைக்கு 1.3 கிராம் புரதம் தேவைப்படலாம்.

ஆனால் சிலர் புரதச் சத்தை குறைத்துக்கொள்ள அறிவுறுத்துவது தவறான செயலாகும். ஆகையால் சிறுநீரகம் பாதிப்படைந்தவராக இருந்தாலும் சராசரியாக 40 கிராம் புரதம் தேவைப்படுகிறது சிறுநீரக நோய் முற்றிப்போய் டயாலிசிஸ் நிலையில், மேலும் புரதம் தேவைப்படுகிறது. நோய் முற்றிப்போய் இறக்கும் நபர்களுக்கு புரதச்சத்து குறைபாடு முக்கியமான ஒன்று என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, தண்ணீர் எந்த அளவிற்கு உட்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம். சாதாரண மக்களுக்கு இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டோர் தன் உடலில் எந்த அளவிற்கு நீர் வெளியேறுகிறதோ அதைவிட 200-300 மில்லி ஏனும் அதிகம் உட்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது என்றால் ஒரு நாளைக்கு அவர் ஒரு லிட்டர், 300 மில்லி தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால், முகம், பாதங்கள் வீங்கி, உடலும் நீர்க்கோர்வையால் பருத்து உள்ளதெனில் அவர்கள் குறைவான அளவு தண்ணீர் பருக வேண்டும். அப்போதுதான் அவர்கள் உடலில் உள்ள நீரானது வெளியேறும். இவ்வாறு உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது என்றால் 700 மில்லி தண்ணீர் அருந்தினால் போதுமானது. இதுவும் மருத்துவர் ஆலோசனைப்படி அமைய வேண்டும்.

நாம் கூறியதை தொகுப்பாகக் கூறவேண்டுமெனில் முதலில் உப்பை தேவை இல்லாமல் குறைக்கக் கூடாது. பொட்டாசியம் அளவு சரியாக உட்கொள்ள வேண்டும். பாஸ்பரஸ் நம் உடலில் சேர்வதை கவனமாக கணக்கில் கொள்ள வேண்டும். புரதச்சத்து உணவுகளை தேவை இல்லாமல் குறைக்கவும் கூடாது, அதிகப்படுத்தவும் கூடாது. தண்ணீர் முறையான கணக்கீட்டின்படி பருக வேண்டும். இதுவும் நாம் எந்த நிலையில் அதாவது எந்த படிநிலையில் உள்ளோம் என்பதை பொருத்து அது அமையும்.

அதை உங்கள் மருத்துவரே தீர்மானிப்பார். இந்த ஒட்டுமொத்த கருத்து உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

காணொளியைக் காண

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

அடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஊழியர் ஆனந்த் நேர்காணல்

ங்கையில் நூற்றுக்கணக்கான மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அதற்கு நேர் திசையில் இருந்த சாலையில் ஒன்றிரண்டு பேர் நடந்து வருவதும் சில வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தது. அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில் இருந்து இறங்கினார் மருத்துவ உதவியாளர் ஆனந்த் குமார். பைசாபத் ஊரை சேர்ந்த ஆனந்த் கவுட் சாதியை சார்ந்தவர்.

ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஆனந்த்.

“பார்ப்பனர்கள் மற்றும் சத்ரியர்களின் வீட்டிற்கு தண்ணீர் கொண்டு போய் கொடுக்கும் சாதியாக இருந்திருக்கிறோம். இப்பொழுதே அந்த முறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு  எல்லோரும் வெவ்வேறு தொழிலுக்கு போயிட்டு இருக்கோம்” என்றார் ஆனந்த்.

பார்ப்பன – சத்ரியர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு சேவகம் செய்வதற்கென ஒரு சாதியை சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள் என்றால் அந்த சமூகம் எந்தளவிற்கு பின் தங்கியுள்ளது என்பதற்கு இதுவே மேலான சாட்சி. அங்கே எந்த சாதியாக இருந்தாலும் தன் சாதியை சொல்லுவதற்கு தயங்குவதே இல்லை. அந்த அளவிற்கு சாதி கட்டமைப்பு இறுக்கமாக இருப்பதை காணமுடிகிறது.

ஆனந்திடம் கும்பமேளா குறித்து கேட்டபோது, “இந்தமுறை சிறப்பாக பண்ணியிருக்காங்க. 108 ஆம்புலன்ஸ் விழாவில் எல்லா இடத்திலயும் நிறுத்தி வச்சிருக்காங்க. எங்க வேலைக்கு சிறப்பு ஊதியமாக ரூ.200 தருவதாக சொன்னார்கள். ஆனால், அது எல்லோருக்கும் கிடைக்கல. எனக்கும் வர்ல. எனக்கு மாத  சம்பளம் ரூ.9500 தர்றாங்க. அதவச்சிதான் எனக்கான செலவை பார்த்துக்கிறேன். இங்க இருக்க எல்லா டிரைவரும் அப்படித்தான் இருக்காங்க.

எங்களுக்கு இந்த இடத்தில் தங்குவதற்கு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. ஏன்னு கேட்டா, “இது எமர்ஜென்ஸி வேலை. அதனால நீங்க வண்டியிலேயே படுத்துக்கொள்ளுங்கள்’னு சொல்றாங்க.

திரிவேணி சங்கமத்திற்கு அருகே, கங்கைக் கரையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ்கள்.

சாப்பாடு, தண்ணீர் உள்ளிட்ட செலவுக்கு அந்த 200 ரூபாயில்தான் பாத்துக்கனும்னு சொன்னாங்க. ஆனா அந்த பணம் கொடுக்கமாட்றாங்க. இது எங்களுக்கு சிரமமா இருக்கு. அதேபோல காலையில எழுந்து குளிக்க கொள்ள எந்த வசதியும் இல்ல. பாத்ரூம் கூட போக முடியவில்லை. அங்க போனா அதுக்கு முறையா பக்கெட் இல்ல. அவசரத்துக்கு வரவங்க சின்ன சின்ன பாட்டில்ல தண்ணி எடுத்துட்டு வந்து வேலையை முடிச்சிக்கிறாங்க. அதை ஒழுங்கா சுத்தம் செய்யிறது இல்ல. அப்புறம் எப்படி நாங்க பயன்படுத்த முடியும்?

கும்பமேளாவுக்காக திரிவேணி சங்கமம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள்: போதிய பராமரிப்பின்றி மூடப்பட்டுள்ளது.

சுத்தம் செய்ய ஆட்கள் இருக்குன்னு சொல்றாங்க. ஆனால், சுத்தம் செய்யிற மாதிரி தெரியவில்லை. எல்லா இடத்துலயும் சுத்தமில்லாத பாத்ரூமை கயிறு போட்டு கட்டி வைச்சிருப்பாங்க. பார்த்திருப்பீங்க.

பயன்படுத்த இலாயக்கற்ற கழிவறை.

இந்த கும்பமேளாவுல எல்லாத்துக்கும் காசுதான்.  பெரிய பெரிய உணவகங்களுக்கு சுமார் 40 லட்சம் வரை கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். எனக்கு தெரியவில்லை. இந்த பணத்தை எல்லாம் அரசு அதிகாரி, காண்ட்ராக்டர்கள்தான் சாப்பிடுகிறார்கள்.

அரசு 100 ரூபாய் ஒதுக்கினால் அதில் 40 தான் மக்களுக்கு கிடைக்கிறது. மீதி எல்லாம் அவர்களே சுருட்டிக் கொள்கிறார்கள். அதுதான் இங்கே நடக்கிறது. இன்னும் சிலர் கடைகளை காண்ட்ராக்ட் எடுத்து அதிக வாடகைக்கு அவர்கள் விடுகிறார்கள். அரசு வாகனத்தில் அதிகாரி வீட்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்து குளித்து விட்டு செல்கிறார்கள்”  என்று பொறிந்து தள்ளினார்.

“சரி, இங்க நீங்க வேறு என்னவெல்லாம் பிரச்சனைய சந்திக்கிறீங்க?”

இங்கே வண்டி ஓட்டுறது ரொம்ப சிரமாக இருக்கு. எல்லா இடத்துலேயும் பேரிகார்டர் தடுப்புக்கள் போட்டு வச்சிருக்காங்க. யாருக்காவது உடம்பு முடியலனா அவசரத்துக்கு கொண்டு போயி சேக்க முடியல. இன்னொரு பக்கம்  போலீஸ் பிரச்சனையா இருக்கு. எப்படி போனாலும் இது வி.ஐ.பி போற வழி. அதனால வேறபக்கமா போ’ன்னு என்று திருப்பி அனுப்பிடுறாங்க. இதுவே எங்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கு.

கோடிகளில் கொட்டி செய்யப்பட்ட கும்பமேளா ஏற்பாடுகள்.

இங்க டூட்டி போட்டதுல இருந்து உடம்பு முடியலன்னு அதிகமா வந்தது பெண்கள் தான். அதிலும் குறிப்பாக வயசானவங்க மற்றும் புதுசா வந்து குளிக்கிறவங்க. பழக்கமில்லாதவர்கள் குளிர் நீரில் இறங்கிடுறாங்க.. அவங்களால குளிர தாக்கு பிடிக்க முடியறதில்ல.  அதேமாதிரி குளிச்ச பின்னாடி ஈரத்துணியோடு இருப்பதால உடல் டெப்ரேச்சர் குறைஞ்சிடுது. அதுவும் இரவு மற்றும் அதிகாலையில்தான்.

போன ஜனவரி 15-ம் தேதி இந்த பிரச்சனையால தூக்கிட்டு வந்த இரண்டு பெண்களை வண்டிக்குள்ளயே வச்சிகிட்டு யமுனா செக்டார்ல 40 நிமிடம் சுத்திக் கொண்டு இருந்தேன். அதுக்கு காரணம் போலீஸ் வண்டிய விடாமா திருப்பி விட்டதாலதான்.

மருத்துவத்தை பொருத்தவரை கோல்டன் ஹவர்னு சொல்லுவாங்க. ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. ஆனால், அதுகுறித்த கவலையே பாதுகாப்புக்கு இருக்கும் போலீசுக்கு இல்லை” என்றார்.

தெரு விளக்குகள் இல்லா இருண்ட அலகாபாத்தின் வீதிகள்.

இந்த விழாவில் எந்த குறையும் வந்துடக்கூடாதுன்னு தாராளமா செலவு பண்ணியிருக்காங்க. ஆனா அலகாபாத்துல அடிப்படை வசதிகள் இல்லை, தெரு விளக்குகள் இல்ல. எப்பொழுதும் வாகனத்துல பயணிக்கும் நீங்க வெளிச்சம் இல்லாததைப் பற்றி என்ன நெனக்கிறீங்க?

இது வெத்து செலவுதான். இந்த காசை உட்கட்டமைப்பை விரிவுபடுத்த செலவிட்டிருக்கலாம்.  தெருவிளக்கு இல்லைங்கிறது பெரும்  குறைதான். ஆனா எங்களுக்கு பழகிடுச்சி.

கும்பமேளாவிற்கு வந்த மக்கள் இந்தமுறை சிறப்பாக செய்திருப்பதாக சொல்கிறார்களே.. அடுத்தமுறை யோகி வருவாரா?

நிச்சயம் இல்லை.

“ஏன்?”

இந்த ஆட்சி மீது விவசாயிகளுக்கு நிறைய வெறுப்பு இருக்கிறது. கடன் தள்ளுபடி செய்வதாக சொல்லி செய்யவில்லை. சமீபமாக கடன் வாங்கிய விவசாயிகள் கடனையும் ரத்து செய்யவில்லை. யார் வாங்கிய கடனை சுத்தமாக கட்டவில்லையோ அவர்களுக்கு தள்ளுபடியாகியுள்ளது. அவர்கள் எல்லாம் பெரிய பெரிய பண்ணையார்கள். மூன்று, நான்கு வருஷமா இவர்கள் கடனே கட்டாதவர்கள்.

படிக்க:
யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !
குழந்தைகள் உலகில் ஆத்திகம் VS நாத்திகம் – ஓர் அனுபவம் !

“கவ் ரக்‌ஷன் திட்டத்தைப் பற்றி என்ன நெனக்கிறீங்க? எந்த அளவிற்கு அதற்கு ஆதரவு உள்ளது?”

அதுவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. மாடு விற்க முடியவில்லை. எங்க ஊர்லயே நிறைய பேருக்கு பிரச்சனையா இருக்கு. மாட்டை அப்படியே விட்டுவிடவும் மனசு வரல. அதேசமயம் வீட்டிலேயே கட்டி பராமரிக்கவும்  முடியல. நிறைய செலவாகுது. அதனால் மொத்தமாக ஒரு தடுப்பு கட்டி அதில் மாட்டை கட்டிவிடுகிறார்கள். யோகி பசு பாதுகாப்பு மையம் வைப்பதாக சொன்னார். அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“ஆண்டி ரோமியோ ஸ்குவாடு இன்னும் இருகிறதா?”

ஆரம்பித்த கொஞ்ச நாள்லயே முடிவுக்கு வந்து விட்டது. காரணம் பொது இடத்தில் அண்ணன் தங்கையாக இருக்கும்பட்சத்தில் அது பிரச்சினையாகி விடுகிறது. அதனால் அது முடிவுக்கு வந்துவிட்டது. இன்னொருபக்கம் காதல் திருமணம் என்பது எங்கள் ஊரில் 10% கூட இருக்காது. கலப்பு திருமணம் சுத்தமாக இல்லை” என்றவரிடம் அடுத்த முறை யோகிக்கு ஓட்டு போடுவீங்களா என்றால்… சிரிக்கிறார்.

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து …


முந்தைய பாகம்:
பாகம் – 1: அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
பாகம் – 2: கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !
பாகம் – 3: கும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன !

இந்தியாவைத் துண்டாட நினைக்கும் இந்தி மேலாதிக்கவாதிகள் !

இந்தி மேலாதிக்கவாதிகள், இந்தியாவைத் துண்டாட நினைக்கிறார்கள் !

“வங்காளிகளின் தேசப் பற்று குறித்து இவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். அவர்கள் அந்தமானுக்குச் சென்று, அங்குள்ள செல்லுலார் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சுதந்திரப் போராட்டம் நடந்தபோது, தொழில்நடத்தி பணம் சம்பாதித்து நிம்மதியாக இருந்தவர்கள் வங்காளிகளுக்கு தேசப் பற்று குறித்து பாடம் நடத்துகிறார்கள்.

இந்தி மேலாதிக்கவாதிகள், இந்தியாவைத் துண்டாட நினைக்கிறார்கள். அரசியலமைப்பை உடைக்க நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது. மிக மோசமான அரசியல்சாஸன நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தால் 2014-ல் நடந்ததுதான் கடைசியாக சுதந்திரமாக நடந்த தேர்தலாக இருக்கும். 130 கோடி மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை இழந்தார்கள் என்றால், அது மனித குலத்திற்கே பிரச்சனை என்று அர்த்தம்.”

நன்றி :முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

*****

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியுரிமைப் போராளி அம்மாநில நிகழ்வுகள் குறித்து BBC -க்கு அளித்த பேட்டி பின்வருமாறு :

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐ. நடவடிக்கைகளுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மத்திய – மாநில அரசுகளின் உறவு குறித்த கேள்விகளை நாடு முழுவதும் எழுப்பியிருக்கிறது.

டாக்டர் கார்கா சாட்டர்ஜி

இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியுரிமை மற்றும் கூட்டாட்சி விவகாரங்களில் ஆர்வம் செலுத்துபவரான டாக்டர் கார்கா சாட்டர்ஜி -யுடன் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன். அவரின் பேட்டியிலிருந்து.

கேள்வி : தற்போது மேற்கு வங்கத்தில் நடக்கும் சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் : மேற்கு வங்கத்தில் இப்போது நடப்பதை புரிந்துகொள்ள, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் தெரிந்துகொள்ள வேண்டும். சாரதா சிட்ஃபண்ட் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட முகுல் ராய், போன வருடம் பா.ஜ.க-வில் சேர்ந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முகுல் ராயும் மாநில பா.ஜ.க பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியாவும் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அதில், சில ஐ.பி.எஸ். அதிகாரிகளை சி.பி.ஐ மூலம் கண்காணிக்கும்படி முகுல் ராய் சொல்கிறார்.

இரண்டாவதாக, பிப்ரவரி மாத துவக்கத்தில் தாக்கூர் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இந்த ராஜீவ் குமாரை எதிரி என்பதைப்போல குறிப்பிடுகிறார்.

அடுத்த இரண்டு நாட்களில், அதுவும் ஞாயிற்றுக் கிழமையன்று ராஜீவ் குமாரை விசாரிக்க வருகிறது சி.பி.ஐ.; 40 பேர் சி.பி.ஐ. அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு எவ்வித தேடுதல் ஆணையும் இன்றி வருகிறார்கள். இத்தனைக்கும் பிப்ரவரி 12-ஆம் தேதிவரை, தன்னை விசாரிக்கக்கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலிருந்து தடை ஆணையைப் பெற்றிருக்கிறார் ராஜீவ் குமார்.

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜுவ் குமார்

ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இந்த சாரதா சிட் ஃபண்ட் வழக்கை மாநில காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ-க்கு நீதிமன்றம் மாற்றியது. அப்போது மாநில காவல்துறை தன் வசமுள்ள ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், ஐந்தாண்டுகளாக சும்மா இருந்துவிட்டு, தேர்தல் நெருங்கும்போது மம்தா பானர்ஜியை குறிவைக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இந்த வழக்கு நிச்சயம் தேர்தலுக்கு முன்பாக முடியாது என எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதற்கு முன்பாக சாரதா வழக்கில் பெரிய ஆட்களைக் கைதுசெய்திருக்கிறோம் என்பதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள்.

நம் கூட்டாட்சி அமைப்பைக் குலைக்கப்படுவதை எதிர்க்கும் ஒரு மாநிலத்திற்கு எதிராக இவர்கள் இந்த யுத்தத்தை துவங்கியிருக்கிறார்கள். இந்த வழக்கில் இதுவரை ஒரு குற்றப் பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஐந்தாண்டுகளாக திருணாமூல் தலைவர்களை, அக்கட்சியின் ராஜ்ய சபா தலைவர் உட்பட, அழைத்துச் செல்வது, விசாரிப்பது, துன்புறுத்துவது என்றே செயல்பட்டுவந்தார்கள். இந்த ஐந்து ஆண்டுகளாக திருணாமூலுக்கு எதிராக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமே இவர்கள் நோக்கமாக இருந்தது.

ஆனால், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் முகுல்ராய், பா.ஜ.க-வில் சேர்ந்த பிறகு அவர் மீது எந்த வழக்கும் இல்லை. ஆக, சி.பி.ஐ. முழுக்க முழுக்க ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சி, ஒரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும்போது, மாநில அரசின் மீது ஊழல் புகார் வந்தால் அதை சி.பி.ஐ. விசாரிக்காது. உதாரணமாக, மத்தியப் பிரதேசத்தில் முதல்வரும் அவர் மனைவியும் வியாபம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால், எந்த விசாரணையும் நடக்கவில்லை.

சாரதா சிட்ஃபண்ட் விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லையென நான் சொல்லவில்லை. ஆனால், மத்திய அரசின் மீது ஊழல் புகார் வந்தால் எந்த அமைப்பிடம் செல்வது? சி.என். அண்ணாதுரை சொன்னதைப்போல, இறையாண்மை என்பது மத்தியில் மட்டும் நிலைகொண்டிருக்கவில்லை. மாநிலங்களிடமும் பகிரப்பட்டிருக்கிறது. மத்திய அரசு தவறு செய்தால் யார் கேட்பது? இதெல்லாம் அரசியல் சாசன சிக்கல்கள்.

சி.பி.ஐ. போன்றவை ஒரு கட்சியின் ஆட்சியே நாடு முழுவதும் இருக்கும் என்ற காங்கிரஸ் காலத்து நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்புகள். ஆனால், மாநிலக் கட்சிகள் அதிகாரத்தையும் வலுவையும் பெற்றிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த சூழலும் மாறியிருக்கிறது. ஆகவே சட்டம் – ஒழுங்கு, குற்றம் போன்றவற்றை புலனாய்வு செய்ய மத்திய அமைப்புகள் தேவையா என மறு பரிசீலனை செய்ய வேண்டும். மாநில அரசுகள், மாநில காவல்துறைகளை கைப்பாவையாக பயன்படுத்துமென்றால், மத்திய அமைப்புகளை மத்திய அரசு கைப்பாவையாக பயன்படுத்தாதா? இப்போது நடப்பது என்னவென்றால், மேற்கு வங்கத்தில் ஆட்சியை கலைக்க ஒரு சாக்கைத் தேடுகிறது பா.ஜ.க. ஏனென்றால் அக்கட்சியால் ஜனநாயக ரீதியாக அங்கு ஒருபோதும் வெல்ல முடியாது.

கேள்வி : சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் கூடாது என்றால், பல மாநிலங்களை இணைத்துச் செயல்படும் குற்றங்களை எப்படி விசாரிப்பது?

பதில் : எந்த அமைப்பாக இருந்தாலும் அது அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் வரக்கூடாது. ஆனால், நம்மைப் போன்ற பரந்துபட்ட அரசியல் கட்சிகளைக் கொண்ட நாட்டில், எந்த அமைப்பாவது அரசியல் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்க முடியுமா? யு.பி.எஸ்.சி, சி.பி.ஐ. போன்றவை விதிப்படி பார்த்தால் சுயாதீனத் தன்மை கொண்டவைதான். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? மத்திய அரசுக்கு கேள்வியே கேட்க முடியாத அதிகாரங்கள் இருக்கும்; ஆனால், மாநில அரசுக்கு அப்படி ஏதும் இருக்காது என்பது எப்படி சரியாக இருக்கும்? உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் தவறுகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகளே பேசுகிறார்களே…

கேள்வி : தற்போதைய சூழலை மம்தா தேர்தலுக்காக பயன்படுத்திக்கொள்கிறார் என்று சொல்லலாமா?

பதில் : ஒரு அரசியல் தலைவர் அப்படித்தான் செய்வார். இப்போது சி.பி.ஐ. அலுவலகங்களுக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சரியா? மாநிலத்தில் யாருக்காவது பாதுகாப்பு வேண்டுமென்றால் மாநில காவல்துறையைத்தானே அணுக வேண்டும்?

மாநிலத்தில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி ஆதாரங்களை அழிக்கிறார் என மத்திய அரசு குற்றம்சாட்டினால், மாநிலத்தில் இருப்பவர்கள் அதை அரசியல் ரீதியாக பயன்படுத்தத்தான் பார்ப்பார்கள். ஆக, தீர்வு என்பது அரசியல் ரீதியான தீர்வாகத்தான் இருக்க முடியும்.

கேள்வி : மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒடுக்க தன் பதவியைப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. குறிப்பாக, எதிர்க்கட்சியினர் வரும்போது அவர்களது ஹெலிகாப்டரை இறங்கவிடாமல் தடுப்பது போன்றவை சரியா?

பதில் : இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று பிரசாரம். மற்றொன்று உண்மை. இந்த விவகாரத்தில், எதிர்கட்சியினரின் ஹெலிகாப்டரை இறங்கவிடாமல் செய்தார் என்பது பிரசாரம். இரண்டுபேரது ஹெலிகாப்டர்கள் இறங்க அனுமதிக்கப்படவில்லையென்பதுதான் பரவலாகப் பேசப்படுகிறது. முதலாவதாக அமித்ஷாவின் ஹெலிகாப்டர். அந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, பராமரிப்புப் பணி நடந்துவந்த ஏர் ஸ்ட்ரிப்பில் அவர் இறங்க விரும்பினார்.

மம்தா பானர்ஜிகூட அங்கே இறங்க அனுமதிக்கப்படவில்லை. அவர் அருகில் உள்ள வேறொரு ஹெலிபேடில்தான் இறங்கினார். அதேபோல, அமித்ஷாவுக்கும் வேறொரு ஹெலிபேடில் இறங்கும்படி சொல்லப்பட்டது. பிறகு, அவர் ஒதுக்கப்பட்ட இடத்தில் இறங்கி, கூட்டத்தை நடத்திவிட்டுத்தானே சென்றார்.

அவர் இறங்க அனுமதிக்கப்படவில்லையென்று பிரசாரம் செய்த தில்லி ஊடகங்கள் அவர் வேறொரு இடத்தில் தரையிறங்கியதை சொல்லினவா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். தில்லி ஊடகங்கள் இயங்கும் விதம் மிக ஆச்சரியகரமானது. அவர்கள் மக்களின் மறதியின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுகிறார்கள்.

ஒரே செய்தியை மக்கள் பின்தொடர்ந்து கடைசிவரை செல்வதில்லை என்பதை மனதில்கொண்டு செயல்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய செய்திகளை வைத்து பிரச்சாரம் செய்வதன் மூலம் அரக்கர்களை உருவாக்குகிறார்கள்.

யோகி ஆதித்யநாத் விவகாரத்திலும் இதேதான் சொல்லப்பட்டது. வேறொரு இடத்தில் இறங்கி காரில் வரும்படி கூறப்பட்டது. பிரதமரெல்லாம் வந்து செல்லவில்லையா? இவர்கள் ஏன் எப்போதும் ஹெலிகாப்டரில் வருகிறார்கள்? ஏன் சாதாரண விமானங்களைப் பயன்படுத்துவதில்லை? அதில் வந்து, காரில் ஒரு மணி நேரம் – இரண்டு மணி நேரம் பயணம் செய்து, சென்றடைய வேண்டிய இடத்திற்குச் செல்லலாமே?

தில்லியிலிருந்து வந்து, ஒரு இரண்டு மணி நேரம்கூட இங்கே செலவழிக்க முடியாது என்றால், வங்க மக்கள் உங்கள் அரசியலை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தீர்களா?

பா.ஜ.க. ஆளும் அசாமில், 38 லட்சம் வங்காளிகள் – இவர்களில் 28 லட்சம் பேர் இந்து வங்காளிகள் – பெயர் இந்தியக் குடிமக்களின் தேசிய பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் குடிமக்கள் இல்லையென ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பகுதியில் வசிக்கும் வங்காளிகளைக் குறிவைத்து இந்த வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. அங்கே வங்காளிகளுக்காக திருணமூல் காங்கிரஸ் கட்சி பணியாற்றிவருகிறது.

ஆகவே தனது கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களை, எம்.எல்.ஏ, அமைச்சர்களை அசாமின் சில்சோருக்கு அக்கட்சி அனுப்பியது. ஆனால், அவர்கள் விமான நிலையத்தைவிட்டு வெளியில் வரக்கூட அனுமதிக்கப்படவில்லை. அப்படியே திருப்பி அனுப்பப்பட்டார்கள். இது தொடர்பாக தில்லி ஊடகங்கள் நாள் முழுவதும் எப்போதாவது செய்தி வெளியிட்டனவா? அசாம் தனி நாடா என்று கேள்வியெழுப்பினவா?

அந்தமான் சிறைச்சாலை

வங்காளிகளின் தேசப் பற்று குறித்து இவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். அவர்கள் அந்தமானுக்குச் சென்று, அங்குள்ள செல்லுலார் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சுதந்திரப் போராட்டம் நடந்தபோது, தொழில்நடத்தி பணம் சம்பாதித்து நிம்மதியாக இருந்தவர்கள் வங்காளிகளுக்கு தேசப் பற்று குறித்து பாடம் நடத்துகிறார்கள்.

இந்தி மேலாதிக்கவாதிகள், இந்தியாவைத் துண்டாட நினைக்கிறார்கள். அரசியலமைப்பை உடைக்க நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது. மிக மோசமான அரசியல்சாசன நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தால் 2014-ல் நடந்ததுதான் கடைசியாக சுதந்திரமாக நடந்த தேர்தலாக இருக்கும். 130 கோடி மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை இழந்தார்கள் என்றால், அது மனித குலத்திற்கே பிரச்சனை என்று அர்த்தம்.

கேள்வி : சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் தற்போதைய ஆணையர் ராஜீவ் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டால், அவரை விசாரிக்க அனுமதிக்க வேண்டியதுதானே முறை? அதற்கு ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனை செய்ய வேண்டும்?

பதில் : அவர் குற்றம்சாட்டப்பட்டவராக இருந்தால், நீதிமன்றத்தில் அனுமதிபெற்று நடவடிக்கை எடுக்கலாமே, யார் தடுத்தது? இதற்கென குற்றவியல் நடைமுறைச் சட்டம் இருக்கிறது. உலகில் எங்கெல்லாம் பாசிசம் ஆட்சிசெய்கிறதோ, அவர்கள் எல்லாம் ஊழல், உடனடி நீதி ஆகியவற்றை சொல்லித்தான் எல்லா அட்டகாசங்களையும் செய்கிறார்கள். எல்லா இடங்களிலும் இதைத்தான் செய்கிறார்கள். குடியரசின் அர்த்தம் அதுவல்ல.

கேள்வி : ஆனால், மத்திய அரசின் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் வரும்போது அவர்களை இவ்வாறு தடுப்பது சரியா?

பதில் : அவர்கள் மத்திய அரசின் காவலர்கள் அல்ல. தில்லி சிறப்பு காவல் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட காவல்துறை அது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தில்லி காவல்துறை, அவ்வளவுதான். மத்திய அரசிலிருந்து யார் வந்தாலும் அவர்கள் புனிதமானவர்களா, மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் புனிதமற்றவர்களா? இந்தச் சிந்தனை எப்படி வருகிறது?

கேள்வி : ஒரு கட்டத்தில் இந்த விவகாரத்தில் மம்தா சி.பி.ஐ. விசாரணையைக் கோருகிறார். பிறகு வேண்டாம் என்கிறார்…

பதில் : மம்தா பானர்ஜி எதிர்க் கட்சியாக இருக்கும்போது சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்றார். அதைத் தன் அரசியலுக்கு பயன்படுத்த விரும்பினார். இப்போது பா.ஜ.க-வும் அதையே செய்கிறது. யார் வேண்டுமானாலும் இப்படி அரசியலுக்கு பயன்படுத்துவார்கள் என்றால் எதற்காக அப்படி ஒரு அமைப்பு இருக்க வேண்டும்? அது ஒரு அரசியல் அமைப்பு. அந்த அமைப்பை மத்தியில் ஆட்சியிலிருக்கும் அரசு பயன்படுத்திவருகிறது. அதன் பற்களை உடைக்க வேண்டும். அவ்வளவுதான்.

கேள்வி : இந்தப் பிரச்சனைக்கு எப்படி முடிவு வருமென நினைக்கிறீர்கள்?

பதில் : இரண்டுவிதங்களில் இருக்கலாம். முதலாவதாக, அவர்கள் நீதிமன்றத்தை அணுகி, ராஜீவ் குமாரை வாக்குமூலம் அளிக்க உத்தரவிடக் கோரியிருக்கவேண்டும். முன்பே அதைச் செய்திருக்க வேண்டும். ராஜீவ் குமார் சாட்சியங்களை அழித்திருந்தால் அது மிகப் பெரிய குற்றம். ஆனால், அதை வைத்து அரசியல் செய்வது அதைவிட மிகப் பெரிய குற்றம்.

நன்றிபிபிசி தமிழ்

மோடியைக் கொல்ல சதியா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி மின்னிதழ் !

புதிய கலாச்சாரம்

ன்முறையை அரங்கேற்றி விட்டு பழியை எதிர்த்தரப்பினர் மீது போட்டு அடக்குமுறையை தொடுப்பது, ஹிட்லர் காலம் தொட்டு பாசிஸ்டுகள் கடைபிடிக்கும் அணுகு முறை. இதில் பார்ப்பன பாசிஸ்டுகளும் விதிவிலக்கல்ல.

2018 ஜனவரி 1-ம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200-ம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சியில், இலட்சக்கணக்கான தலித் மக்கள் கலந்து கொண்டதால், ஆத்திரம் கொண்ட இந்துவெறி அமைப்புகள் திட்டமிட்டே வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன.

அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியவர்கள், மோடியைக் கொலை செய்ய சதி செய்தவர்கள், மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொய்க்குற்றம் சாட்டி, ஜூன் 7-ம் தேதியன்று 5 பேரை கைது செய்தது மகாராட்டிர போலீஸ்.

கைது செய்யப்பட்டவர்களில் தலித் அறிஞர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயற் பாட்டாளர்கள் அனைவரும் இருக்கிறார்கள். முற்போக்கு அறிஞர்களான தபோல்கர், கல்புர்கி, கெளரி லங்கேஷைக் கொன்ற சங்க பரிவாரத்தினர், அடுத்த கட்டமாக செயற் பாட்டாளர்களை கைது செய்து சிறையில் அடைக்க திட்டமிடுகிறார்கள்.

மோடியைக் கொல்லச் சதி எனக் குற்றம் சாட்டி, இந்தக் கைது நடவடிக்கைக்கு அரசு தரப்பு கொடுத்த ஆதாரம் ஒரு மொட்டைக் கடிதம். இதன் நம்பகத்தன்மையை முன்னாள் உயர் போலீஸ் அதிகாரிகளே ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பாஜக செய்தித் தொடர்பாளர்களும், மோடி ஆதரவு ஊடகங்களும் இந்த அபாண்டத்தை முன் வைத்து கூப்பாடு போடுகிறார்கள். ஜனநாயகத்தின் தூண்கள் என்று கூறப்படும் நாடாளுமன்றம், நீதிமன்றம், நிர்வாக எந்திரம், ஊடகங்கள் ஆகியவை அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள்.

கஜா புயலால் வாழ்விழந்த தஞ்சை விவசாயிகள், சாகர் மாலா திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்கள், பண மதிப்பழிப்பாலும், ஜி.எஸ்.டி-யாலும் தொழிலே அழிந்துபோன சிறு உற்பத்தியாளர்கள் – வணிகர்கள், வேலைவாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதியை நம்பி ஏமாந்த இளைஞர்கள், நீட்- தனியார் கல்விக்கொள்ளைக்கு இரையாகும் மாணவர்கள் என மக்களிடம் அம்பலப்பட்டு வருகிறது மோடி அரசு.

இந்நிலையில்தான் பாஜக.வின் வளர்ச்சி சவடாலையும், பார்ப்பனிய பண்பாட்டு தாக்குதலையும் அம்பலப்படுத்தும் அறிவுத்துறையினரை ஒடுக்க, மோடி அரசு முயல்கிறது. நமது நாடு ஒரு பாசிச அபாயத்தை எதிர்கொள்ளும் உண்மையையும், அதை முறியடிக்க வேண்டிய கடமையையும் இந்தத் தொகுப்பு நினைவுபடுத்துகிறது.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
மோடியைக் கொல்ல சதியா ?  – புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ அழுத்துங்கள்

அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

“மோடியைக் கொல்ல சதியா ? “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
  • ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!
  • பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் !
  • ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா சட்டத்தில் கைதா ?
  • மோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்ச நீதிமன்றம்
  • அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ் அன்றும் இன்றும்
  • மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !
  • ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய்! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !
  • அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்
  • தோழர் கோபட் காந்தியை சிறைப்படுத்திக் கொல்லாதே! விடுதலை செய்!
  • தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி !
  • கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்
  • மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா?
  • பிணியொன்று நம்மை பீடித்துள்ளது!
  • கல்புர்கி கொலை : இந்து மதவெறி – ஆதிக்க சாதிவெறியின் அட்டூழியம் !
  • பேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு – பாஜக பாசிசம் !
  • தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் !
  • ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு !! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் ! சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !!

0

தமிழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் இலவசமாய் வழங்க உதவுங்கள் !

மாணவர்களிடம் சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !

சதி வாய்ந்த நடுத்தர வர்க்கத்தின் மாணவர்கள் உயர்கல்வி கல்லூரிகளில் பொறியியல் படிக்கின்றனர். வசதியற்ற தமிழ் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் கலைப் பாடங்களை படிக்கின்றனர். இம்மாணவர்களைத்தான் பொறுக்கிகளாக ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. மக்களும் நம்புகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து சிறை சென்றனர். முள்ளிவாய்க்கால் போரின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக களமிறங்கி தீவிரமாக போராடியவர்களும் இவர்களே!

அரசியல் ஆர்வமும், சமூக அக்கறையும் இம்மாணவர்களிடம் இயல்பாக இருக்கிறது. அதை அறிந்து வளர்த்து அழகான குடிமக்களாக மாற்றுவது நமது கடமை! வினவு சார்பில் மாதம் ஒரு புதிய கலாச்சாரம் நூல் வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 80  பக்கங்களில் அழகிய கட்டமைப்பில் வெறும் 30 ரூபாய்க்கு வெளியிடுகிறோம். இலாப நோக்கமின்றி அடக்கவிலையில்தான் இந்த நூல்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழ் பதிப்பகச் சூழலில் இந்த விலை மலிவான ஒன்று என்பது மிகையல்ல. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்படும் இந்நூல்களில் அரசியல், சமூகம், பண்பாடு குறித்த தலைப்புகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக மாணவர்களுக்கு பொருத்தமான நுகர்வு பண்பாடு, சாதி மதம், கல்வி, சினிமா, காவி அரசியல் போன்ற தலைப்புகளும் உள்ளன.

அரசு கலைக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்நூல்களை இலவசமாக விநியோகிக்க உங்கள் உதவி தேவை! பட்டியலில் உள்ள கல்லூரிகளை தெரிவு செய்து, எவ்வளவு நூல்கள் விநியோகிக்கப்பட வேண்டுமென்ற எண்ணிக்கையை தெரிவு செய்து நீங்கள் பணம் கட்டலாம்.

பட்டியலில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மூலம் நூல்களை விநியோகிப்போம். அது குறித்த புகைப்படம், செய்தி வினவு தளத்தில் வெளியாகும். மாதந்தோறும் குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களுக்கு நீங்கள் நிரந்தரமாகவும் புத்தகம் அளிக்க முடியும்.

உதவுங்கள்!

 


 

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

இளைஞர்களிடம் அதிகரித்து வரும் அரசியல் ஆர்வம் | துரை சண்முகம்

சென்னை 42-வது புத்தகக் காட்சி பற்றியும் கீழைக்காற்று அரங்கிற்கு வருகை தந்திருந்த வாசகர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறார் தோழர் துரை. சண்முகம்.

‘’கீழைக்காற்று அரங்கிற்கு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், திரைத்துறையினர், தோழர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர். ஏதோ புத்தகம் வாங்குவதற்கான வருகையாக என்றில்லாமல், ஒரு புதிய அரசியல் கருத்து உரையாடலை நோக்கி வந்ததாகவே பார்க்கிறேன்.

வாசகர்களை வெறும் நுகர்வோராக மட்டும் கருத முடியாது. அவர்களுக்குத் தேவையான கருத்து நம்மிடம் இருக்கிறதா? என்பதை புத்தக வெளியீட்டாளர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதனை வணிகம் சார்ந்த நடவடிக்கையாக மட்டும் சுருக்கி புரிந்து கொள்ள முடியாது. இது கருத்துலகம். இன்றைய தலைமுறையினருக்கு என்ன மாதிரியான கருத்தும் சிந்தனையும் தேவைப்படுகிறது. அதனோடு தொடர்புடையவர்களாக புத்தக வெளியீட்டாளர்கள் இருக்கிறோமா? என்பதை பரிசீலித்து பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

மார்க்சிம் கார்க்கி சொல்வதைப்போல உலகத்திலேயே சிறந்த கருத்து மனிதன் என்பார். அவர்களது நடைமுறைக்கும் சிந்தனைக்கும் தேவைப்படும் தொடர்புடைய ஒரு கருத்தை தரக்கூடிய இடத்தில் நூல் வெளியீட்டாளர்கள் இருக்க வேண்டும்.

எண்ணற்ற இளைஞர்கள் வருகை தந்திருந்தார்கள். இளைஞர்களுக்குத் தேவைப்படுவோராக நாங்கள் இருந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. விழுப்புரம், விருத்தாசலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் குறிப்பாக முதல் பட்டதாரி மாணவர்கள் பலர் வந்திருந்தனர். நிறைய படிக்க வேண்டும் என்று விருப்பப்படுவர்களுக்கு பொருளாதாரம் இல்லை. புத்தக அலமாரியைப் பார்ப்பார்கள். எல்லாம் நல்ல நூல்களாக இருக்கிறது. இவற்றையெல்லாம் வாங்குவதற்குத்தான் எங்களிடம் பணமில்லை என்று வெளிப்படையாகவே பல இளைஞர்கள் சொன்னார்கள். இந்தக் குழந்தையை  தூக்கி கொஞ்சுவதற்கு வாய்ப்பில்லையே என்ற ஏக்கத்தை அவர்களிடம் உணர முடிந்தது.

படிக்க:
புரட்சியில் இளைஞர்கள் – நூல் அறிமுகம்
இந்து ஆன்மீக கண்காட்சி : விசம் பரப்பும் பார்ப்பனியத்தின் சூப்பர் மார்கெட் !

நிறைய நூலைப் படித்துவிட்டு முதுகுக்குப் பின்னால் அடுக்கி வைத்துவிட்டு உட்கார்ந்து இருப்பதனால் என்ன பயன்? படிப்பின் தேவையை எனக்கானதாக மட்டுமில்லாமல், நான் வாழக்கூடிய சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமென்ற அந்த இளைஞர்களின் புரிதல் முன்னுதாரணமானது.

இன்னொரு சம்பவம், 50 வயதைக் கடந்த முதிய தம்பதியினர் வந்திருந்து நூல்களை தேர்வு செய்தனர். பார்ப்பவர்களுக்கு வயதான காலத்தில் பொழுது போகாமல் நூல் வாங்கிப் படிப்பதாக எண்ணத் தோன்றும். ஆனால், அவர் சொன்னார் “இதையெல்லாம் படிக்க முடிகிறதா? என்று கேட்கிறீர்கள். இதையெல்லாம் இதுவரை நான் படிக்காமல் இருந்திருக்கிறேன் என்றுதான் நான் பார்க்கிறேன் என்றார்.’’

இவை போன்ற இன்னும் பல சுவாரசியமான புத்தகக் காட்சி அனுபவங்களை பகிர்கிறார் தோழர் துரை. சண்முகம்.

அவரது உரையின் முழு காணொளியைக் காண …

பாருங்கள்! பகிருங்கள்!!

இந்து ஆன்மீக கண்காட்சி : விசம் பரப்பும் பார்ப்பனியத்தின் சூப்பர் மார்கெட் !

சென்னை குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10-வது இந்து ஆன்மீகக் கண்காட்சி நடைபெற்று முடிந்திருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மடாதிபதிகள் தொடங்கி சாதி சங்கங்கள் வரை அக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. “இந்து என்றால் சாதி- சாதி என்றால் இந்து” இதுதான் இந்துத்துவத்தின் மூலமந்திரம். அதனால்தான் “ஆன்மீக” கண்காட்சியில் சாதி சங்கங்ளுக்கு பிரதான இடம் ஒதுக்கியிருந்தனர். இவர்கள் சொல்லும் ‘இந்து ஒற்றுமை’ என்பது உண்மையில் சாதிகளின் ஒற்றுமையே!

என்னதான் சாதி வெறியனாக இருந்தாலும் பொதுவில் தன் சாதியை சொல்லத் தயங்கும் ஒரு மாநிலத்தில் சாதி சங்கங்ளுக்கு ஸ்டால் ஒதுக்கித் தரப்படுகிறது என்றால்… இதனை வேறு யாரால் இவ்வளவு அழுத்தமாக செய்ய முடியும்? நிச்சயம் ஆர்.எஸ்.எஸ்தான்.

பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த கண்காட்சியின் புரவலர்கள் யார் தெரியுமா? டாஃபே, ஜி.எம்.ஆர், லார்சன் & டியூப்ரோ, பாரத் ஃபோர்ஜ், அசோக் லேலாண்ட், எஸ்ஸார், ஜெம் கிரானைட், டிவிஎஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் துக்ளக் ஆசிரியர் குருமுரூத்தியின் ஆணைக்கிணங்க நிதியால் கண்காட்சியை ஆசிர்வதித்திருந்தன.

ஆன்மீக கண்காட்சியில் சாதி சங்கங்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழக மண்ணில் காலூன்ற துடிக்கும் சங்க பரிவார் கூட்டம் இதுபோன்ற கண்காட்சியின் மூலம் நடுத்தர இந்துக்களுக்கு வலைவீசி வருகிறது. வட இந்தியாவைபோன்று இங்கு பக்தி மூடநம்பிக்கையில் ஊறித்திளைப்பவர்கள் குறைவு. இங்கே பக்தி-இறை நம்பிக்கை இருந்தாலும் கூடவே பகுத்தறிவும் கொஞ்சமாவது இருப்பதால் ஏமாற்றுவது குறித்து சங்கிகள் தினுசு தினுசாக யோசித்து வருகின்றனர்.

அதனால்தான் “தத்துவார்த்த” ஆன்மீக ஆசாமிகளுக்கும், யோகா மற்றும் தியான பீடங்கள் மற்றும் “உயர்” சாதி சங்களுக்கும் கணிசமான ஸ்டால்களை ஒதுக்கியுள்ளனர். அரங்கத்தில் ஓரளவு அறியப்பட்ட வரலாற்று பிரபலங்களை இந்துவாக மாற்றி அவர்களுக்கு வரலாற்றுக்குறிப்புடன் கூடிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.

எந்த ஸ்டாலை அணுகினாலும் அன்பான அணுகுமுறையும், கனிவான பேச்சும்… நம்மை மென்மையாக இந்துத்துவத்தை நோக்கி இழுக்கும் படியாகவே உள்ளது. யோகா, தியானம், சமஸ்கிருதம், மன நிம்மதியுடன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று டெம்பிளேட் அட்வைசுகள் ஏராளம். “எல்லாம் இலவசம் நீங்க வந்தா மட்டும் போதும்” என்ற ஒரு பேக்கேஜும் கூடவே இருப்பதால் அந்த இலவசத்தில் “இந்து வெறியூட்டும்” ஐட்டங்களை நைசாக சேர்த்திருந்தார்கள்.

அந்த அரங்கத்தில் பகத்சிங் பற்றியும், வேலு நாச்சியார் பற்றியும் ஒளிப்படங்கள் போடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதில் இருந்த பெண்ணிடம் பேசியபோது சொன்னார். “இங்க வரக்கூடிய பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் சுற்றி பார்த்தால் ஒரே ஆன்மீகமா இருக்கேன்னு வெறுப்பாகிடுறாங்க. அதனாலதான் ஒரு மாற்றுக்காக இதை போடுறோம்” என்றார்.

கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு ஸ்டாலில் வரலாற்று விளக்க ஓவியத்தில்  பகத்சிங் படம் இருந்தது. அந்த ஸ்டால் குருநானக் கல்லூரியின் சார்பாக போட்டிருந்தனர். அவர்களிடம், ஆன்மீக கண்காட்சியில பகத்சிங் படம் போட்டிருக்கிங்களே ஆன்மீகத்துக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டோம்

“குருநானக் தான் சீக்கிய மதத்தை தோற்றுவிச்சாரு… முகலாயர்களின் ஆட்சியில சீக்கியர்களை மதம் மாற சொன்னாங்க. அவங்க முடியாதுன்னு சொன்னதால ரொம்ப துன்புறுத்தினாங்க. நெறைய சீக்கியர்களை கொலை பண்ணினாங்க. அதை விளக்கத்தான் இந்த படங்கள் இருக்கு” என்று தடுமாறி சொன்னார். ஒரு கல்லூரியின் ஸ்டாலே இப்படி அப்பட்டமாக வரலாற்றை திரித்து பேசும் போது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டமெல்லாம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும்?

அது இருக்கட்டும் மேடம். இதுல பகத்சிங் எங்க வந்தாரு?

“அவரும் ஒரு சீக்கியர்தான்… இந்திய விடுதலைப் போராட்டத்துல கலந்துகிட்டாரு… இங்க நிறைய படம் இருக்கு. அதை பாத்துகிட்டே வந்திங்கன்னா இதெல்லாம் புரியும். இருங்க சார், இங்க ஒரு சார் இருந்தாரே… ம்… அவர்தான் இதெல்லாம் விளக்குவாரு… அவரையும் காணோம்.” என ஒரு சிரமத்துடன் சொல்லிவிட்டு அமர்ந்தார். பொய்யுரைப்பதற்கு இத்தனை குறைவான பில்டப் வார்த்தைகளே போதுமென்றால், இந்து ஆன்மீகக் கண்காட்சி மூலம் எத்தனை எத்தனை வகை வாட்ஸ் அப் வதந்திகளெல்லாம் செய்தி – வரலாறு – தத்துவமாக மக்கள் காதில் கொட்டப்பட்டிருக்கும்?

இன்னொரு இடத்தில் சென்னை பிரமிட் ஆன்மீக மன்ற இயக்கம் சார்பாக, வரும் போகும் அனைவரையும் இழுத்து இரண்டு நிமிட தியானப் பயிற்சியை அளித்துக் கொண்டிருந்தனர். அருகே நோட்டிசு கொடுத்துக்கொண்டிருந்தவரிடம் கேட்டபோது சொன்னார். “மனம் அமைதியா இருக்கும், நினைவாற்றல் அதிகரிக்கும்.. அதுகுத்தான் சார் தியானம். நீங்க வாங்க.  உங்களுக்கும் சொல்லிக் கொடுப்பாங்க” என்றார்

பிரமிட் ஆன்மீக மன்ற இயக்க அரங்கு

வேற என்ன எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க…

“உங்க ஆரோக்கியத்துக்காக தியானத்தோட சேத்து சைவ உணவு பழக்கத்தையும் சொல்லிக் கொடுப்போம். உலகத்துலேயே சிறந்தது சைவ உணவுப் பழக்கம்தான். அது அகிம்சைய சொல்லித்தருது. எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது சார்… இப்போ நாம காய்கறிய நறுக்குவோம் அது எதுனா சத்தம் போடுதா? இல்ல.. அது சாத்வீகமான உணவு. இதே நான்-வெஜ்லாம் ஒரு உயிர கதற வைக்குது பாத்தீங்களா.. அதனால அதெல்லாம் சாப்பிடக்கூடாது. உடல் ஆரோக்கியத்துக்கு சைவ உணவு பழக்கம், நல்ல மனநலத்துக்கு தியானம்.. இதெல்லாம் கத்துகுடுக்குறோம். தியானத்தால நாம சுத்தமான காத்த சுவாசிக்க முடியும் சார்..” மாட்டுக்கறி மகத்துவங்களை எப்படி நைசாக சைவம் – அசைவம் என்று பேஷாக பேசுகிறார்கள் பாருங்கள்!

இவர்கள் சொல்லும் “மன நிம்மதி” எந்த பிரச்சனையைப் பற்றியும் பேசாமல் –  கண்டுகொள்ளாமல் – இருந்தாலே போதும் என்பது மட்டும் புரிந்தது.

தியானத்தின் மூலம் சுத்தமான காத்து கெடைக்கும், மனசு அமைதியா இருக்கும்னு சொல்றீங்க… சென்னையில எங்க போனாலும் பொல்யூசன்தான் அதிகமா இருக்கு.. இதுவே  பெரும் பிரச்சனையா இருக்கே..?

“அதை எல்லாம் பெரிசா எடுத்துக்கவே கூடாது சார். இப்ப நான் இருக்கேன். இங்க  வந்துதுல இருந்து ஆரோக்கியமாதான் இருக்கேன். நமக்கு நிம்மதிதான் சார் முக்கியம்” என்று திரும்பத்திரும்ப சொன்னார். எப்படி மாற்றிக் கேட்டாலும் அவர் இதையே வேறு வேறு வார்த்தைகளில் கீறல் விழாத ரிக்கார்டாகவே ஓதினார். இவர்கள் சொல்லும் “மன நிம்மதி” எந்த பிரச்சனையைப் பற்றியும் வெளிப்படையாக பேசாமல் – கேள்வி கேட்காமல் –  கண்டுகொள்ளாமல் – இருந்தாலே போதும் என்பது மட்டும் புரிந்தது.

அடுத்த வரிசையில் விலங்குகள் பாதுகாப்பிற்காக இருந்த ஸ்டாலில் ஒரு முதியவர் வருபவர்கள் அனைவரிடமும் நோட்டிசு கொடுத்து விளக்கிக் கொண்டிருந்தார்.

மாட்டு மூத்திர ஆராய்ச்சி அரங்கம்

“நாங்க 800 மாடுகள பராமரிக்கிறோம். நாம மாட்டுகிட்ட இருந்து எல்லாத்தையும் பெறுகிறோம். ஆனா கடைசியில அதை அம்போன்னு விட்டுடுறோம். அப்படி இல்லாம அதையெல்லாம் வச்சு பராமரிக்கணும்… அததான் நாங்க செய்யுறோம் சார்.. இது மாதிரி மாடுகளை பராமரிக்க ஆகுற செலவு வருசத்துக்கு ரெண்டு லட்சம். தினமும் ஒரு மாட்டுக்கு 50 ரூபா. மாசத்துக்கு 1500 ரூபா. வருஷத்துக்கு 18,000 ரூபா ஆகர்..றது சார்” என தொடர்ந்தார்.

சரி நாங்க என்ன பண்ணனும்… அந்த மாடுகளை வாங்கிட்டு போயி வளக்கனுமா?

இல்ல… இல்ல… அதுக்கான செலவுக்கு உங்களால முடிஞ்சத கொடுத்தேள்னா நாங்களே நன்னா பாத்துப்போம்.

உ.பி.-ல யோகி சார் கோசாலை கட்டி தர்ரதா சொன்னாரு. அதே மாதிரி நீங்களும் அரசுகிட்ட டிமாண்ட் வக்கலாமே..

நமக்கு வாய்-வயிறு இருக்க மாதிரி அதுக்கும் இருக்குதானே…ன்னு சொல்லிக்கொண்டே அந்த வழியாக சென்றவரை வம்படியாக இழுத்து அவரிடம் பேச ஆரம்பித்துவிட்டு சாதூர்யமாக நம்மை புறக்கணித்தார் அந்த விலங்கு பாதுகாவலர். முந்தையதில் சைவ உணவின் மகத்துவமாக விஷம் பாய்ச்சியவர்கள் இங்கே கோமாதாவை சென்டிமெண்ட்டாக மார்கெட்டிங் செய்து வந்தார்கள்.

ஈஷா மையம்

ஈஷா மையம் – கர்ம யோகி ஜக்கி வாசுதேவ் கம்பெனி, இரண்டு மூன்று ஸ்டால்களை சேர்த்து எடுத்து பெரிய குடில் போட்டிருந்தார்கள். அந்த அரங்கில் முன்னே இருந்த பெரிய டிஜிட்டல் திரையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் ஜக்கி… அதில் பணியாளர்களே பத்து பேர் இருப்பார்கள். வரிசையாக பள்ளி சிறுவர்கள் இந்த மையத்திற்கு வந்து கொண்டிருக்க அவர்களிடம் நோட்டிசு கொடுத்துக் கொண்டிருந்தனர் ஒரு பிரிவினர். இந்தக் கண்காட்சிக்கு தினசரி பல்வேறு பள்ளிகளின் குழந்தைகள் பள்ளி நிர்வாகத்தின் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர். பள்ளிகளின் மதச்சார்பின்மை எப்படி இளித்துக் கொண்டிருக்கிறது பாருங்கள்!

ஜக்கி கம்பெனியார் “வரும் மஹா சிவராத்திரி அன்னைக்கு எல்லா ஊர்ல இருந்தும் அழைச்சிண்டு போகறதுக்கு பஸ் ஏற்பாடு பண்ணியிருக்கோம். நீங்க அவசியம் வரணும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

என்னடா இது…. பைசா செலவில்லாம கூட்டிட்டு போறதா சொல்றாங்க. என்ன ஏதுன்னு விசாரிக்க அவர்களிடம் சென்றதும்.

நீங்க எந்த ஏரியா? என்றார்கள். ஏரியா பேரை சொன்னதும்.. “ஒன்னும் பிரச்சனை இல்ல. அங்கேயே பஸ் வரும். நீங்க உங்க பேர்,  போன் நம்பர்லாம் கொடுங்க.. நாங்க கூப்பிடுவோம்” என்றார்கள்.

பராவாயில்லை.. அன்னைக்கு போறதா இருந்தா நாங்களே உங்கள காண்டாக்ட் பன்றோம்…. என்றதும்..

“சரி சார்… நீங்க வாங்க. இந்த செலவினங்களுக்கு உங்களால் முடிஞ்ச தொகை எதாவது பண்ணுங்க” என்றார்கள். சிவராத்திரி தரிசனம் இலவசமென்றாலும் தரிசனத்திற்கான நிதியை விலை போல உடனே சொன்னது சுவாரசியமாக இருந்தது. ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம் என்ற வணிகச் சந்தை உத்தி ஆன்மீகச் சந்தையிலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. காசே கொடுக்கவில்லை என்றாலும் ஃபோன் நம்பர் வருவதே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

அதே போல ஆர்.எஸ்.எஸ்-ஸின் சமஸ்கிருத பாரதிக்கும் பெரிய ஸ்டால்  போடிருந்தார்கள். கையில் இருந்த நோட்டிசைக் கொடுத்து சமஸ்கிருதம் சொல்லித்தறோம். 20 நாள்ல பேசக் கத்துக்கலாம். அனைத்தும் ஃப்ரிதான் என்றார்.

சார், இத கத்துக்க கஸ்டமா இருக்கும்னு சொல்றாங்களே?

சமஸ்கிருத பாரதி

“அப்படி எல்லாம் கிடையாது. நானே இங்க வந்துதான் கத்துகிட்டேன். எனக்கு சமஸ்கிருதம் சுத்தமா தெரியாது. இப்ப ஓரளவுக்கு பேசுறேன். படிக்கிறேன்” என்றார்.

ஆக்சுவலா எனக்கு இந்தி கத்துக்கிறதுலதான் விருப்பம், அதெல்லாம் சொல்லிக் கொடுப்பிங்களா?

“அது சொல்லித்தர மாட்டோம். ஆனா இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும். எல்லா மொழியிலும் சமஸ்கிருதம் இருக்கிறதால, அதைவிட இதத்தான் ஈசியா கத்துக்க முடியும். கொஞ்சம் பிக்கப் ஆகிட்டிங்கன்னா உங்களுக்கு அடுத்தடுத்த லெவல்ல எக்ஸாம் வச்சி சர்டிஃபிகேட் கொடுத்துவோம்” என்றார்.

சரிங்க சார். இத கத்துக்கனும்னா எதாவது குறிப்பிட்ட சாதியாதான் இருக்கனுமா?

இல்ல… சாதி எல்லாம் பிரச்சனையே இல்ல. எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கிறோம் என்று நம்மை தொட்டு தட்டிக் கொடுத்தார். செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு கொட்டிக் கொடுக்கும் பல நூறு கோடி ரூபாயில் சங்கிகளின் இந்த சம்ஸ்கிருத பாரதியும் வளமாக வாழ்கிறது. பத்தே நாட்களில் சமஸ்கிருதம் எனும் இன்ஸ்டண்ட் திறமையை பத்தே நாட்களில் ஆங்கிலம் பேசலாம் போல அப்பாவிகளை ஓரளவிற்காவது ஈர்த்திருக்க வாய்ப்புண்டு.

கொஞ்சம் தள்ளி வனவாசி சேவா கேந்திரான்னு  ஒரு ஸ்டால் இருந்தது. இந்த கேந்திரம்தான் ஆர்.எஸ்.எஸ் சார்பாக பழங்குடி மக்களிடம் இயங்குகிற முக்கியமான பரிவார் உறுப்பு.

அந்த அரங்கில் இருந்த அண்ணன் ரொம்ப அமைதியா பேசினாரு. “நாங்க மலைவாழ் மக்கள் மத்தியில வேலை செய்யிறோம். கிரிஸ்டின்காரங்க அந்த மக்கள் கிட்ட போயி மதமாற்றம் செய்யுறாங்க. அப்படி பண்ண முடியாம செய்யிறதுதான் வேலை. அதனால மலைவாழ் மக்களுக்களுக்கான உதவிகளை செஞ்சிட்டு வறோம்” என்றார்.

எனக்கும் இது மாதிரி பன்னனும்னு ஆசைதான். அதுக்கு என்ன பண்றதுன்னு சொல்றிங்களா?

“இதைப் பத்தி பேசனும்னா ஒருத்தரோட காண்டாக்ட் நம்பர் தறேன். அவருதான் ஆற்.எஸ்.எஸ்-சோட பிரச்சாரக். அவர் இதைப் பத்தி முழுசா சொல்வாரு. அவர்கிட்ட பேசுங்க” என்று சொல்லி நம்பரைக் கொடுத்தார்.

சுருங்கச் சொன்னால் பக்தி, ஆன்மீகம், யோகா, சுய முன்னேற்றம், உணவு – உடல்நலம், கல்வி – வரலாறு என்ற பெயரில் வளைத்து வளைத்து பார்ப்பனியத்தின் நிகழ்ச்சி நிரல்கள் அனைத்தும் அங்கே மக்களை வெறியூட்டிக் கொண்டிருந்தன. அங்கே கடை போட்டவர்களுக்கு அரங்குகள் இலவசம் அல்லது மிகக் குறைந்த வாடகை. பணியாளர்களுக்கு பேட்டா, உணவு அனைத்தும் இலவசம். சாதி முதல் ஃபிராடான சித்த வைத்தியர்கள், ஜோசியர்கள் வரை பெட்டிக் கடை முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்தையும் இணைத்திருந்தார்கள்.

ஏதோ ஒரு கண்காட்சி என்று வேடிக்கை பார்க்க வந்த கூட்டம்தான் அதிகம். ஆனால் அந்த வேடிக்கையுணர்வில் கொஞ்சமோ நிறையவோ இந்துத்துவ விசம் கலக்க ஆரம்பித்திருக்கிறது.

நூல் அறிமுகம் : முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும்

சோசலிச அரசுகளின் அரசியல் சார்ந்த சரிவுகளைக் கண்டு மகிழ்ச்சியுற்ற முதலாளிய மீட்பர்கள் அச்சரிவை சோசலிசப் பொருளாதார அமைப்பின் வீழ்ச்சியாக மட்டுமே அதிகம் விமர்சித்தனர். கிழக்கு ஜெர்மனியின் சுவர் உடைப்பு, சோவியத் ஒன்றியத்தின் தகர்வு, சீனாவின் முதலாளிய மீட்பு போன்றவற்றை தூக்கிப் பிடித்துக் கொண்டாடியது ஒருபுறம், மறுபுறம் உலகமயமாக்கல் மூலம் வரப்போகும் செழிப்பான வாழ்க்கை என்கின்ற மாயை. கடந்த 30 ஆண்டுகளாக இதை உருமியடித்த ஊடகங்களும் முதலாளிய அறிஞர்களும் இன்று அமைதியாக முணுமுணுக்கின்றனர்.

அமெரிக்காவும், அய்ரோப்பாவும் முட்டி நிற்கும் சுவர் இரும்பாலானது என்பது இப்பொழுதுதான் அவர்களுக்கு உறைக்கத் துவங்கியுள்ளது. இவர்களால் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட மார்க்சிடம் மீண்டும் அவர்களே தீர்வைத் தேடுகின்றனர். மீண்டும் மார்க்சியத்தை இந்தப் பின்னணியில் பயில்வது அவசியம். (நூலுக்கான பதிப்புரையிலிருந்து)

*****

ஸ்ட்வன் மெசரோசின் மூலதனத்தின் அமைப்பு நெருக்கடி என்னும் நூலில் உள்ள இரண்டு நேர்காணல்களின் மொழியாக்கமே இந்தச் சிறு நூல். முதலாளிய அமைப்பின் நெருக்கடி பற்றி சோசலிஸ்ட் ரெவ்யூ இதழில் வந்த நேர்காணலிலும், இந்தச் சூழலில் நம் முன் உள்ள கடமைகள் பற்றி டிபேட் சோசலிஸ்டா இதழில் வந்த நேர்காணலிலும் அவர் பேசுகிறார்.

…. உலகம் முழுவதும் முதலாளியம் தனது இலாப வெறிக்காக இன்று மனித சமூகத்தை ஓட்டாண்டியாக்கி வருகிறது : பூமியிலுள்ள இயற்கை வளங்களைக் கொடூரமாகவும், வேகமாகவும் அழித்து வருகிறது. அதன் மூலம் எதிர்கால மனித சமூகத்தின் இருப்புக்கான அடிப்படையையே அழித்து வருகிறது. உலக முதலாளியத்திற்குத் தலைமை தாங்கும் அமெரிக்கா தனது இலாபத்திற்காக ஆக்கிரமிப்பு யுத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. தனது இலாபத்திற்காக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் அது தயாராக உள்ளது. இவ்வகையில் முதலாளியத்தின் இலாபவெறி இன்று மனித குலத்தை அழிவின் எல்லைக்குக் கொண்டு சென்றுள்ளது. இவை எல்லாம் முதலாளிய அமைப்பில் உள்ள நெருக்கடியின் விளைவுகள் என்கிறார் மெசரோஸ்.

இந்தப் பின்னணியில்தான் நாம் இந்தியப் பொருளாதாரத்தையும் காண வேண்டும். இந்தப் புவிக் கோளத்தின் மீதுள்ள எந்த ஒரு நாடும் உலகு தழுவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தியா அதற்கு விதி விலக்காக இருக்க முடியாது.

ஏகாதிபத்திய ஆக்டோபசின் கால்களில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியப் பொருளாதாரம் இன்று பெரும் நெருக்கடியில் மாட்டிக் கொண்டுள்ளது. பொதுச் சொத்துக்களைத் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி அவர்களைப் பஞ்சை பராரியாக்குதல், இலாப நோக்கத்திற்காகக் கட்டுப்பாடற்ற பொருள் இறக்குமதி, அந்நிய மூலதனத்திற்கு கதவை அகலத் திறந்துவிட்டதன் மூலம் இந்திய மக்களின் உபரி உழைப்பு இலாபமாக வெளிநாடுகளுக்கு வெளியேறுதல், அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையைக் கொள்ளையடிக்க வழிவகுத்தல், உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி, பண வீக்கம், ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம், நடப்புக் கணக்கில் கடும் பற்றாக்குறை, இலட்சம் கோடிகள் என்ற அளவில் ஊழல் இவைதான் இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் சித்திரம்.

1990-களின் உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும், தனியார்மயமாக்கலும் இந்தியாவைச் சொர்க்க பூமியாக்கிவிடும் என ஒளிமயமான சித்திரங்களைத் தீட்டிய முதலாளிய ஊடகங்கள் இன்று ஒப்பாரி வைக்கின்றன. அழுது புலம்புகின்றன. ஏதாவது அதிசயம் நடந்து இந்த கடுமையான நெருக்கடியிலிருந்து நாம் தப்பிக்க முடியாதா என முதலாளியப் பொருளாதார மேதைகள் ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆட்சியாளர்களோ பொருளாதாரத்தின் இந்தச் சீரழிந்த நிலைக்குக் காரணமான ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு முடிவுகட்டாமல் மேன்மேலும் அந்நிய மூலதனத்திற்கு கதவைத் திறந்து விடுவதன் மூலம் நமது மக்களை மேன்மேலும் அழிக்கவும் வழி வகுத்து வருகின்றனர். மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது எழுந்துள்ள அதிருப்தியையும், கோபத்தையும் திசை திருப்பவும், சாந்தப்படுத்தவும் கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், அம்மா உணவகம் போன்ற கீனிசிய ஒடுக்கு எடுக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர்.

ஆனால், உலகம் தழுவிய அளவில் இன்று முதலாளியம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி ஆழமானது என்கிறார் மெசரோஸ். இது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்பொழுது முதலாளியம் எதிர்கொள்ளும் நெருக்கடி போன்றதல்ல….

படிக்க:
சோசலிச சமூகம் அமைப்பதற்கான போராட்டத்தில் மாவோவின் பங்களிப்பு !
நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் !

…. பாராளுமன்றவாதத்திலும், தொழிற்சங்கவாதத்திலும் வீழ்ந்துள்ள சீர்திருத்தவாதத் தலைமையிலிருந்து பாட்டாளி வர்க்கம் விடுபட வேண்டும். இன்று பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடு தொழிற்சங்கக் கிளை என்றும் அரசியல் கிளை என்றும் இரு பிரிவுகளாக உள்ளன. தொழிற்சங்கக் கிளை கூலி உயர்வுப் போராட்டத்தோடு தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் சீர்திருத்தவாத அரசியல் பிரிவோ முதலாளியப் பாராளுமன்றத்தின் விதிகளுக்கு உட்பட்டு மூலதனத்தின் நலனுக்குச் சேவை செய்வதாக மாறி விடுகிறது. மூலதனத்தின் ஆதிக்கத்திலிருந்து கூலி அடிமைத்தனத்தை விடுவிக்க வேண்டும் என்ற ஒட்டு மொத்த சமூக விடுதலைக்கான இலட்சியம் கை விடப்பட்டுள்ளது….  (இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் குறிப்பிலிருந்து…)

நூல்: முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும்
ஆசிரியர்: இஸ்ட்வன் மெசரோஸ்
தமிழில்: மு.வசந்தகுமார்

வெளியீடு: விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3-வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641015.
தொலைபேசி: 0422-2576772, 9789457941

பக்கங்கள்: 64
விலை: ரூ 35.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

உனக்கு எதிராக ஓடு | அ.முத்துலிங்கம்

உனக்கு எதிராக ஓடு | அ.முத்துலிங்கம்

ப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது மான் எழும்பும். அன்று, வேகமாக ஓடும் ஒரு சிங்கத்திலும் பார்க்க அதிவேகமாக அது ஓடவேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.

ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது சிங்கம் எழும்பும். அன்று, ஆக வேகம் குறைந்த ஒரு மானைக்காட்டிலும் அது வேகமாக ஓடவேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.

நீ சிங்கமோ, மானோ, சூரியன் எழும்போது எழு.
ஓடத்தொடங்கு. –  ஓர் ஆப்பிரிக்க பழமொழி.

*****

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
ர் இளம் அமெரிக்கப் பெண் இந்த வருட ஆரம்பத்தில் எங்களுடன் வந்து இரண்டு நாள் தங்கியிருந்தாள். அவளுடைய பெயர் ஜெனிவீவ் என்று இருந்தபடியால் அவளுக்கு ஒரு பிரெஞ்சு மூதாதை இருந்திருக்கக்கூடும். அவளுடைய ஆங்கில உச்சரிப்பும் தேனில் கலந்ததுபோல ஒரு மிருதுத்தன்மையுடன் கேட்பதற்கு சந்தோசத்தை கொடுத்தது. ஒவ்வொரு வார்த்தையையும் நாக்கினால் தடவி விடுவதால் அந்த வார்த்தையில் ஈரப்பசை இருந்தது. அவள் வந்த காரணம் கனடாவை சுற்றிப் பார்ப்பதற்கு. அதற்கு ஒதுக்கிய காலம் இரண்டு நாட்கள்.

இந்தப் பூமியில் மூன்று சமுத்திரங்களால் சூழப்பட்ட ஒரே நாடு கனடா. உலகத்தின் பரப்பளவில் இரண்டாவது பெரிய தேசம். நான் இருந்த சிறு பிரதேசமான ஸ்காபரோவையே பத்து நாட்களில் சுற்றிப் பார்க்க முடியாது. ஆனால் இந்தப் பெண் இரண்டு நாட்களில் கனடாவைப் பார்க்கவேண்டும் என்று சொன்னாள். இவளுடைய விருப்பத்தை அறியாமை என்று எடுப்பதா அல்லது பேராசை என்று எடுப்பதா என்பதில் எனக்கு திண்டாட்டமிருந்தது.

கனடாவை இரண்டு நாளில் சுற்றிப் பார்க்க வந்த பெண் இன்னும் பல அதிசயங்களையும் தன்னுள் வைத்திருந்தாள். காலை பத்து மணிக்கு வருவதாகச் சொன்னவள் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தாள். என்னவென்று கேட்டால் முதல் பிளேனை தவறவிட்டதால் தான் இரண்டாவது பிளேனை பிடித்து வந்ததாக கூறினாள்.

எப்படி முதல் பிளேனை தவற விட்டாள்?

அவள் மராத்தான் ஓட்டப் பயிற்சியில் இருப்பதாகவும், அன்று காலை இருபது மைல்கள் ஓடியதாகவும், தன்னுடைய ஓட்டத்தில் சில குறைபாடுகள் இருந்ததாகவும், பயிற்சியாளர் திருப்தியடையாமல் தனக்கு சில புதுவிதமான பயிற்சிகளுக்கு ஆலோசனை கூறியதாகவும், அதனால் நேரம் தடைபட்டுப் போய் அடுத்த பிளேனை பிடிக்கவேண்டி வந்ததாகவும் மிகவும் சாதாரணமாகக் கூறினாள். அவளுடைய வாசகமும் ஒரு மராத்தான்போல நீண்டுபோய் கிடந்தது. எந்தப் போட்டிக்கு தயார்ப் படுத்துகிறீர்கள் என்று கேட்டேன். 2008 ஒலிம்பிக் மராத்தான் என்றாள்.

நான் மனைவியைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்தார். இந்தப் பெண் மராத்தான் ஓட்டப் பயிற்சியில் இருப்பது எனக்கோ, மனைவிக்கோ தெரியாது. இவளுடைய பெற்றோர்களும் இதுபற்றி ஒரு வார்த்தை எங்களிடம் சொல்லவில்லை. கனடா பார்க்க வந்த ஒரு சாதாரணப் பெண் என்று நாங்கள் அதுவரை நினைத்திருந்தோம். இவளின் உருவத்தைப் பார்த்தால் ஒரு ஓட்ட வீராங்கனை போலவோ, அன்று காலை இருபது மைல் தூரத்தை கடந்தவள் போலவோ தெரியவில்லை. சந்திர வெளிச்சம் போன்ற சருமம், சாம்பல் முடி, நீலக் கண்கள். இடையை இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ். ஐந்து அடி உயரம், எடை 90 றாத்தல் மதிக்கலாம். ஒரேயொரு வித்தியாசம். மூன்றடி தூரத்திலும் அவள் உடம்பிலிருந்து ஒரு வெப்பம் வீசியது.

எனக்கு ஒலிம்பிக் ஓட்டக்காரர் எப்படி இருக்கவேண்டும் என்பது தெரியாது. நான் என் வாழ்நாளில் ஒருவரைக்கூட நேருக்குநேர் கண்டதில்லை. அப்படிக் கண்டாலும் அது தொலைக்காட்சியில்தான். சரி. ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சி பெறுபவர் எப்படி இருப்பார். அதுவும் தெரியாது. கடைசியாக ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 929 பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதில் அமெரிக்காவுக்கு 103 பதக்கங்கள், கனடாவுக்கு 12, இந்தியாவுக்கு ஒன்றே ஒன்று கிடைத்தது. இலங்கைக்கு அதுவும் இல்லை. இந்த வெட்கம்கெட்ட நிலைமையில் நான் ஓர் ஒலிம்பிக் ஓட்டக்காரர் நேரில் எப்படி தோற்றமளிப்பார் என்பதை ஊகிக்கமுடியும்.

என் வாழ்க்கையில் எனக்கு தெரிந்த ஒரேயொரு ஓட்டக்காரர் ஆறுமுகதாஸ்தான். நான் பிறந்து வளர்ந்த கிராமத்தை சேர்ந்தவர். அங்கே ரயிலுக்காக ஓடியவர்களும், நாய் துரத்தி ஓடியவர்களும்தான் அதிகம். இந்த ஆறுமுகதாஸ் எங்கள் பள்ளிக்கூடத்தில் புகழ்பெற்ற  மைல் ஓட்டக்காரர். அந்தக் காலத்தில் சுற்றுவட்டாரத்தில் இவரை வெல்ல ஆள் இல்லை. எங்கள் பள்ளிக்கூட மைதானத்தை சுற்றி எட்டுத்தரம் ஓடினால் ஒரு மைல் என்பது கணக்கு. இதை தலைமை ஆசிரியர் அறிவித்திருந்தார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

ஓட்டம் தொடங்கியதும் ஆறுமுகதாஸ் ஆற அமரப் புறப்படுவார். மற்றவர்கள் அடித்துப் பிடித்து முன்னே செல்வார்கள். ஆறுமுகதாஸோ, இலையான் ஓட்ட மாடு தலையை ஆட்டுவதுபோல இரண்டு பக்கமும் தலையை ஆட்டிக்கொண்டு, கடைசியாக வருவதற்கு பயிற்சி எடுத்தவர்போல முகத்தை ஆர்வமில்லாமல் வைத்துக்கொண்டே ஓடுவார். எல்லோரையும் முன்னால் விட்டு தனக்கு பின்னால் யாரும் வராமல் பார்த்துக்கொள்வார். ஏழாவது சுற்று முடிந்ததும் மனுசன் அம்புபோல புறப்படுவார். ஒவ்வொருவராக தாண்டி முன்னேறி வருவார். முதலாவதாக ஓடுபவரை ஒரு டிராமா காட்டுவதற்காக கடைசி பத்து செக்கண்டில் முந்தி வெற்றியீட்டுவார். சனங்களின் ஆரவாரம் அப்போது செவ்வாய் கிரகத்தை எட்டும்.

நான் பிற்காலத்தில் ஆறுமுகதாஸிடம் அவருடைய வெற்றியின் ரகசியத்தைக் கேட்டேன். அவர் இரண்டு பக்கமும் திரும்பி பார்த்தார். கடற்கரை மணலில் தான் கால் புதையப் புதைய ஓடிப் பயிற்சி எடுத்ததைச் சொன்னார். போட்டியில் ஒரு மைல் ஓடவேண்டுமென்றால் இரண்டு மைல் தூரம் ஓடிப் பழகவேண்டும். பத்து மைல் என்றால் இருபது. இதுதான் ரகசியம் என்றார்.

ஜெனிவீவைப் பார்த்தேன். அவள் அப்படி ஒடிப் பயிற்சி செய்பவளாகத் தெரியவில்லை. ஏதோ அலுவலகம் போவதற்கு வெளிக்கிட்டதுபோல உடையணிந்திருந்தாள். மேக்கப் என்பதே கிடையாது, ஆனால் முகம் பளிச்சென்று உள்ளுக்கிருந்து யாரோ வெளிச்சம் அடிப்பதுபோல பிரகாசமாக இருந்தது. நான் மராத்தான் ஓட்டத்தைப் பற்றியும், அதன் பயிற்சி முறையயைப் பற்றியும், ஓட்டக்காரர்களைப் பற்றியும் அன்றுவரை அறிந்து வைத்திருந்ததெல்லாம் தவறானது என்பது அந்தப் பெண்ணிடம் பேசிய முதல் மூன்று நிமிடத்திலேயே எனக்கு புரிந்துவிட்டது.

மராத்தான் ஓட்டம் என்பது 26.2 மைல்கள் தூரம் கொண்டது. இந்தப் பெயர் வந்ததற்கு உண்மையான சரித்திர காரணம் உள்ளது. கி.மு 490-ல் மராத்தான் என்ற இடத்தில் கிரேக்கர்களின் படை பாரசீகப் பெரும்படையை போரிலே தோற்கடித்தது. அந்த வெற்றியை சொல்வதற்கு ஃபெய்டிப்பிடீஸ் என்ற வீரன் 26.2 மைல் தூரத்தை நிற்காமல் ஓடி ஏதென்ஸ் நகரத்தை அடைந்து ‘நாங்கள் வென்றுவிட்டோம், கொண்டாடுங்கள்’ என்று தகவல் சொல்லிவிட்டு அப்படியே சரிந்தான். அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அவன் மட்டும் உயிரோடு இருக்கவில்லை.

ஒலிம்பிக் விளையாட்டுகள் 1896-ல் ஆரம்பித்தபோது மராத்தான் ஓட்டமும் சேர்க்கப்பட்டது. 2004-ம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் பெண்கள் மராத்தான் போட்டியில் கலந்துகொண்ட 82 பேரில் மூன்று அமெரிக்கப் பெண்கள். உலகத்தின் அதிவேக ஓட்டக்காரியான போலா ராட்கிளிவ் முதலாவதாக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.  ஆனால் அவர் 23-வது மைலில் போட்டியில் இருந்து விலகி பாதையின் ஓரத்தில் அமர்ந்து விக்கி விக்கி அழுததை உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் பார்த்து திகைத்தது. அந்தப் போட்டியில் முதலாவதாக வந்து தங்கம் வென்றவர் யப்பானியப் பெண் மிசுகி நோகுச்சி. இரண்டாவது கென்யாவின்  காதரின் ண்டெரேபா, மூன்றவது அமெரிக்கப் பெண் டீனா காஸ்டர்.

ஓட்ட வீராங்கனை என்றால் அவர் உயரமாகவும், நீண்ட கால்கள் கொண்டவருமாக அல்லவா இருக்கவேண்டும் என்று ஜெனிவீவிடம் கேட்டேன். அப்படி இல்லை என்றார். மராத்தான் ஓட்டத்துக்கு எடை கூடாமலும், உயரம் குறைவாகவும் இருந்தால் நல்லது. உதாரணம் தங்கம் வென்ற யப்பானிய வீராங்கனையின் உயரம் ஐந்து அடி, எடை 88 றாத்தல் என்றார்.

அவர் சொன்ன விவரங்களைக் கேட்க கேட்க நான் இதுவரை ஓட்டக்காரர்களை பற்றி தெரிந்து வைத்தது எல்லாம் அபத்தம் என்று பட்டது. ஜெனிவீவ் தன் சொந்தச் செலவிலே, ஒரு மராத்தான் ஓட்டப் பயிற்சியாளரிடம், பயிற்சி பெறுகிறார். இவருடைய பயிற்சி திருப்தியாக முடியும் பட்சத்தில் ஒலிம்பிக் ஓட்டக்காரர்களுக்கு நடக்கும் இறுதி பயிற்சிக்கு இவர் தேர்வு செய்யப்படுவார். அங்கே இவருடன் சேர்ந்து அமெரிக்கா முழுவதிலுமிருந்து ஒரு 300 பேர் வந்திருப்பார்கள். ஆறுமாத காலம் இவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி வகுப்பு நடக்கும். முன்னாள் ஒலிம்பிக் ஓட்டக்காரர்களும், அமெரிக்காவின் மிகச் சிறந்த பயிற்சியாளர்களும் இந்த பயிற்சியை கொடுப்பார்கள். இது இலவசம் அல்ல. ஓட்டக்காரர்கள் தாங்களே பணம் கட்டவேண்டும் அல்லது அவர்களை ஸ்பொன்சர் செய்யும் கம்பனிகள் செலவை ஏற்கவேண்டும். ஆறுமாத முடிவில் ஒரு போட்டி நடைபெறும். இந்தப் போட்டியில் தெரிவுசெய்யப்படும் முதல் மூன்று ஓட்டக்காரர்களே ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் சார்பில் கலந்துகொள்வார்கள்.

மிசுகி நோகுச்சி

அவளுடைய பயிற்சி முறைகள் எப்படியானவை என்று கேட்டேன்.

‘நான் படித்த பள்ளிக்கூடத்துப் போட்டிகளில் ஓடும்போது எனக்கு இப்படி பயிற்சிகள் இருப்பது தெரியாது. என் போக்குக்கு ஓடுவேன். என் மனதுக்கு தோன்றிய பயிற்சிகளை செய்வேன். ஆனால் ஒரு பயிற்சியாளரிடம் சேர்ந்த பிறகுதான் நான் செய்ததெல்லாம் தவறானவை என்பது தெரிகிறது. நான் கடைப்பிடித்த பயிற்சி முறைக்கும், பயிற்சியாளர் தரும் பயிற்சிமுறைக்கும் பெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன.’

 எப்படியான வித்தியாசங்கள்?

முதலாவது விதி : நான் இங்கே கற்றுக்கொண்டது என்னுடைய உடல் பற்றி. உங்களிடம் இருப்பது ஒரேயொரு உடம்புதான். இதைப் பத்திரமாக பேணவேண்டும். பயிற்சியின்போது உடம்பிலே காயமோ, அடியோ படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கால்களில் சுளுக்கு வராமலும், மூட்டுகள் பிசகாமலும், தசைநார்கள் விலகாமலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் உங்கள் வருடக்கணக்கான தேகப் பயிற்சியும், உழைப்பும், அர்ப்பணமும் வீணாகப்போய்விடும்.

இரண்டாவது விதி : நான் நினைத்தது 26 மைல்தூரம் ஓடவேண்டுமானால் அதனிலும் கூடியதூரம் ஓடிப் பழகவேண்டும் என்று. ஒரு முப்பது மைலோ முப்பத்தைந்து மைலோ ஓடிப் பழகினால் போட்டியின்போது 26 மைல் ஓடுவது சுலபமாக இருக்கும். ஆனால் அப்படி இல்லை. இன்னும் சொல்லப்போனால் பயிற்சி காலத்தில் ஒருநாள்கூட 26 மைல் நான் ஓடியதில்லை. ஓடக்கூடாது. ஆக முதன்முதல் 26 மைல் ஓடுவது இறுதி நாள் போட்டியின்போதுதான்.

ஆச்சரியமாயிருந்தது. நான் எங்கள் ஊர் ஆறுமுகதாசை நினைத்துக்கொண்டேன்.

முழுத்தூரமும் ஓடாமல் எப்படி ஓட்டக்காரருக்கு நம்பிக்கை பிறக்கும்?

மராத்தான் பயிற்சி என்பது ஓடுவது மட்டுமல்ல. எப்படி உடம்பை பலப்படுத்துவது; பாதுகாப்பது; தயார்ப்படுத்துவது என்று எல்லாம் அடங்கியது. ஓட்டப்பயிற்சி என்பது இதற்குப் பிறகுதான். இந்தப் பயிற்சியில் முக்கியமானது உடம்பை ஏய்ப்பது. ஒருநாள் செய்த பயிற்சிகளை இரண்டாவது நாள் செய்வதில்லை. அப்பியாசம், ஓட்டம், நடை, நீச்சல், சைக்கிள் என்று மாறி மாறி பயிற்சி எடுப்பதுடன் பயிற்சி அளவையும் கூட்டிக்கொண்டே போகவேண்டும். நீங்கள் அடுத்த நாள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பது உடம்புக்கு தெரியக்கூடாது. ஒவ்வொரு நாளும் 10 மைல் ஓடினால் உடம்பு அதற்குப் பழகி தன்னுடைய உச்சக்கட்ட ஒத்துழைப்பை தர மறுக்கும். உடம்பின் வலிமையையும், சேமிப்பு சக்தியையும் கூட்டிக்கொண்டே போவதுதான் உண்மையான பயிற்சி. போட்டி நாளுக்கு முதல் நாள் உடம்புக்கு முழு ஓய்வு தேவை.

அப்படி என்றால் போட்டியன்று உடம்பு தயாராயிருக்குமா?

போட்டி நாள் அன்று உங்கள் உடம்புக்குள் ஒரு மிருகம் புகுந்ததுபோல தேகம் துடித்தபடியே இருக்கும். சேமித்துவைத்த சக்தி அத்தனையும் வெளியேறத் துடிக்கும். ஒரு ரேஸ் குதிரை ஓடத் தயாராவதுபோல கால்கள் பரபரக்கும். அன்றுதான் நீங்கள் மராத்தான் ஓட்டத்தில் முதன்முதலாக முழுமையான 26.2 மைல்களை ஓடி முடிப்பீர்கள்.

களைப்பு வராதா?

எப்படி வரும். ஆறுமாதகால பயிற்சி அதற்குத்தானே. இந்தப் பயிற்சி இருந்திருந்தால் கிரேக்கவீரன் ஃபெய்டிப்பிடீஸ் பாவம் விழுந்து இறந்திருக்கமாட்டானே.

ஒரு பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கிடையில் கனடாவில் எவ்வளவு பகுதியைக் காட்டமுடியுமோ அவ்வளவையும் காட்டினோம். கடைசி நாள் இரவு இவளை யாழ்ப்பாணத்து அப்பம் சாப்பிடுவதற்கு ஒரு உணவகத்துக்கு கூட்டிப் போக முடிவெடுத்தோம். இங்கே சுடும் அப்பத்துக்கு நிகரே இல்லை. நாக்கிலே வைத்தால் பல்லுக்கு ஒரு வேலையும் வைக்காமல் தானாகவே உருகி இறங்கிவிடும். இலங்கை சாப்பாடு பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் அவளிடம் உருவாகும். அதுவும் நல்லது.

ஒலிம்பிக் பதக்கத்தை பெறும்போது அவள் உடம்பின் வலிமையில் ஒரு பகுதி யாழ்ப்பாணத்து அப்பத்தால் உருவாகியது என்று நான் பிறகு பீற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த உணவகத்தில் ஒருசில ஆபத்துக்கள் இருந்தன. குறைந்த பட்சம் நாலு வாடிக்கையாளர்கள் வந்து போனபிறகுதான் மேசையை துடைப்பார்கள். மெனுவிலே குறிப்பிட்டிருக்கும் விலையும், பில்லிலே காணப்படும் விலையும் ஒருபோதும் இணையாது. இங்கே வேலைசெய்யும் பரிசாரகர்கள் கோப்பையை மேசையில் கொண்டுவந்து வைப்பதில்லை. அப்படியே தூரத்திலிருந்து தள்ளிவிடுவார்கள்.

பரிசாரகர் வணக்கம் என்றார். அவருடைய தலை தோள் மூட்டுகளுக்குள் மாட்டுப்பட்டு இருந்ததால் குரல் எங்கேயிருந்து வருகிறதென்று தெரியவில்லை. ஆனாலும் அவர் எங்களை ஆச்சரியப் படுத்தவில்லை; இந்தப் பெண்தான் ஆச்சரியப்படுத்தினாள். உணவுக்கு ஓடர் பண்ணி அப்பம் சுடச்சுட வந்துகொண்டே இருந்தது. எனக்கு முன் சாப்பிட்டவர் என்னுடைய பிளேட்டில் நண்டு சாப்பிட்டிருக்க வேண்டும். இவள் இடம், வலம் பார்க்கவில்லை. சாப்பிட்டுக்கொண்டே இருந்தாள். நானும் மனைவியும் சேர்ந்து உண்டதிலும் பார்க்க இரண்டுமடங்கு அதிகமாகவே சாப்பிட்டாள். ஒரு மராத்தான் ஓடியதுபோல பரிசாரகர்தான் களைத்துப்போனார். இந்தச் சிறிய பெண்ணின் உடம்பில் எங்கே இது போய்ச் சேருகிறது என்று நாங்கள் வியப்படைந்தோம்.

ஓட்டக்காரர்கள் அளவாகச் சாப்பிடவேண்டுமல்லவா? அல்லாவிட்டால் அவர்களுடைய எடை எக்கச்சக்கமாக ஏறி ஓடமுடியாமல் போய்விடுமே.

ஆனால் உண்மை எதிர்திசையில் இருந்தது. மராத்தான் ஓட்டக்காரர்கள் எல்லோருக்குமே உள்ள பெரும் பிரச்சினை உணவுதான். ஒரு சராசரி மனிதனுக்கு நாளுக்கு 2000 கலரி தேவை என்றால் ஒரு மராத்தான் ஓட்டக்காரர்  4000 –  5000 கலரி உணவை தினம் சாப்பிடவேண்டும். இதை எப்படி உண்பது. இந்த அளவு கலரி கொடுக்காவிட்டால் உடம்பு பயிற்சியை தாங்கமுடியாமல் நலிந்து போய்விடும்.

இவள் நாள் தவறாமல் இரவு எட்டுமணிக்கு தூங்கப் போய்விடுவாள். தினமும் அதிகாலை சூரியன் உதயமாகும்போது எழும்புவாள். ஒரு ஆப்பிரிக்க மான்போல ஓடத்தொடங்குவாள். இரண்டு மணிநேரம் பலதரப்பட்ட உடல் பயிற்சி செய்வாள். வாரத்தில் ஆறு நாட்கள் இந்த அப்பியாசம் தொடரும். ஏழாவது நாள் ஓய்வு. ஓய்வு என்றால் உடம்புக்கு மாத்திரமே. நாள் முழுக்க பழைய ஒலிம்பிக் ஓட்டப் பந்தயங்களை வீடியோவில் பார்ப்பாள். சொல்லப்போனால் பயிற்சிக் காலம் முழுக்க உடம்பும், மனதும் மராத்தான் ஓட்டத்திலேயே குவிந்திருக்கும்.

‘ஓடு, மணிக்கூட்டுக்கு எதிராக ஓடாதே. உனக்கு எதிராக ஓடு.’

‘என்னுடைய பயிற்சியாளர் கருணையே இல்லாதவர். இவரை ‘அடிமை விரட்டி’ என்று ரகஸ்யமாக எங்களுக்குள் அழைப்போம். ஓய்வு என்பது களைப்படைந்த பிறகு எடுப்பது. அதற்கு முன் எடுப்பதற்கு பெயர் சோம்பல் என்பார். எங்களுடைய உடம்பின் ஒவ்வொரு உறுப்பையும் வாடகைக்கு எடுத்தவர்போல அதிகாரம் செய்வார். ஆனால் என்னால் அவரை விட முடியாது. அமெரிக்காவின் மிகத்திறமையான பயிற்சிக்காரர். ‘ஓடு, மணிக்கூட்டுக்கு எதிராக ஓடாதே. உனக்கு எதிராக ஓடு.’ இதுதான் அவர் திருப்பி திருப்பி சொல்லும் மந்திரம்.’

கடந்த ஒலிம்பிக் மரதனில் தங்கம் வென்ற யப்பானியப் பெண்ணின் நேரம் 2ம, 26நி, 20செ. ஓடிய பெண்களில் குறைந்த வயது 21, கூடியது 43. அடுத்த ஒலிம்பிக்கின்போது தனக்கு 26 வயது நடக்கும் என்றும் அது தவறினால் 30ல் ஒரு வாய்ப்பு இருக்கிறதென்றும் அதுவும் தவறினால் 34 என்றும் சொன்னாள். அதற்கு பிறகு யாராவது அகப்பட்டால் மணம் முடிப்பதற்கு சம்மதம் என்றாள். அவள் முகத்திலே காணப்பட்ட உறுதி என்னை வியக்க வைத்தது.

இந்தப் பெண்ணைப் பார்க்க சிலசமயம் பரிதாபமாக இருந்தது. ஒரு வெள்ளை ரீ சேர்ட்டும், கணுக்கால் தெரியும் கால்சட்டையும் அணிந்திருந்தாள். நீர்ப்பறவை ஒன்று நீண்ட பயணத்துக்கு பிறகு செட்டைகளை ஒடுக்கி ஓய்வெடுப்பதுபோல தோள்களைக் குறுக்கிக்கொண்டு தரையிலே உட்கார்ந்திருந்தாள். அவள் கைகளிலே ‘தென் அமெரிக்க ஸ்லொத்’ என்ற புத்தகம் இருந்தது. உலகத்திலேயே மெதுவாக நகரும் ஒரு மிருகத்தைப் பற்றி இவள் படிக்கிறாள். ஒரு நிமிட நேரத்தில் ஐந்து அடி நகரும் இந்த விலங்குக்கும், மராத்தான் ஓடும் இவளுக்கும்  என்ன சம்பந்தம் என்று நினைத்தபோது வியப்பாகவிருந்தது. இவள் கண்கள் புத்தகத்தில் இல்லை; எதிரில் இருந்த ஒன்றையும் கவனிக்கவில்லை. 2008-ம் ஆண்டில் இருந்தன என்றே நினைக்கிறேன்.

நீங்கள் எதற்காக உடம்பை இவ்வளவு வருத்திப், பிழிந்து இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும்?  உங்கள் பொழுதுபோக்குக்கு வேறு ஏதாவது  தேர்வு செய்து சேவை செய்யலாமே?

இந்தக் கேள்வி அவளை நிலைகுலைய வைத்துவிட்டது. ஒரு முட்டாளிடம் இத்தனை நாள் தன் அபிலாட்சைகளை சொல்லியதற்காக  அவள் வருத்தப்பட்டாளோ, என்னவோ. ஒரு கணம் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பினாள். அப்பொழுதும் அவள் கண்கள் என்ன உணர்ச்சியை காட்டலாம் என்று முடிவெடுக்க முடியாமல் அங்குமிங்கும் சுழன்றன. கடைசியில் ஒருவாறு நிதானித்து ஒவ்வொரு வார்த்தையாக தேர்வு செய்து பேசினாள்.

‘ஜவலின் எறிபவர்கள், நீச்சல் வீரர்கள், எடை தூக்குபவர்கள், இவர்கள் எல்லாம் தினம் தினம் தங்களை வருத்தி பயிற்சி எடுக்கிறார்கள். போட்டிகளில் பங்குபற்றுகிறார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள். மனித உடம்பை அறிவதுதான் நோக்கம். உடலின் எல்லையை கண்டுபிடிப்பது. அதை சிறிது நீட்டுவது. இதுவும் ஒரு சேவைதான். அடுத்தவருக்கு.’

அவள் முகம் சிவந்துபோய் இருந்தது. என்னை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

விமான நிலையத்தில் மனைவியிடம் பேசியபடியே இருந்தாள்.  கம்புயூட்டர் திரையில் அறிவிப்பு விழுந்ததும் விடை பெற்றுக்கொண்டாள். என்னைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தந்தாள். அடுத்தநாள் காலை முத்தமிடுவதை அரசாங்கம் தடைசெய்துவிடும் என்பதுபோல அது நீண்டதாக இருந்தது. பிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தேன். பேசவில்லை. பயணிகளின் சோதனைக் கூடத்தை தாண்டியதும், தோளிலே மாட்டிய ஒரு நீண்டவார் கைப்பையை சரிசெய்தபடி, ஒரு துள்ளுத் துள்ளி ஓடினாள். அப்போதும் பிடரியை வளைத்துப் பார்த்து கையசைக்க மறக்கவில்லை.

2008 ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் 202 நாடுகள் பங்குபற்றும். பெண்களுக்கான மராத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்ளும் 80 – 90 ஓட்டக்காரர்களில் மூன்று அமெரிக்கப் பெண்கள் இருப்பார்கள். அவர்களில் சாம்பல்முடி, நீலக்கண்கள், ஐந்தடி உயரம், 90 றாத்தல் எடைகொண்ட ஒரு பெண்ணும் இருக்கலாம்; இருக்காமலும் போகலாம். போட்டி முடிவு அறிவித்ததும் மேடை ஏறிய ஒரு பெண் தன் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டு, ஒரு கையால் அதைத் தூக்கிக் காட்டியபடி மறுகையை அசைத்து சுழலுவாள்.

அந்தக் கணம் அவளை கோடி சனங்கள் உலகம் முழுவதும் தொலைக்காட்சி திரைகளில் கண்டு களிப்பார்கள். அவளுடைய சாதனைக்கான சக்தியை அவள் தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் கசக்கி, வருத்தி, உறிஞ்சிப் பறித்திருப்பாள். அவள் கடந்துவந்த மைல்களை, செய்த தியாகங்களை, பட்ட இன்னல்களை, கெடுத்த தூக்கங்களை நான் நினைத்துப் பார்ப்பேன். அப்பொழுது அந்தப் பெண் மனித உடலின் எல்லையை மேலும் ஒரு இன்ச் நகர்த்தியிருப்பாள்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

குழந்தைகள் உலகில் ஆத்திகம் Vs நாத்திகம் – ஓர் அனுபவம் !

3

டவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்ற வழக்கு இன்றைய டிஜிட்டல் உலகத்தில் என்னவாக இருக்கும்? அதற்கு குழந்தைகள் மனதில் கடவுளின் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

நண்பர் ஒருவரது வீட்டுக்கு போயிருந்தோம். அவர் வீட்டருகில் ஐம்பது பேர் கலந்து கொண்ட அல்லேலுயா செபக் கூட்டம் நடந்தது. மாலை ஆறுமணி இருக்கும். டெண்டு கொட்டகை, ஒளி விளக்குகள், மேடை, மைக்செட் சகிதம் கூட்டம் துவங்கியது. முதலில் மெழுகுவத்தி ஏத்துவாங்கன்னு பாத்தா, கொசு வத்திய ஏத்தி மூலைக்கி ஒன்னா வச்சுட்டு கூட்டத்த தொடங்கினாங்க.

“பேய் பிசாசை விரட்டும் வல்லமை வாய்ந்த கர்த்தருக்கு கொசுவ வெரட்ட முடியாம போச்சே பாவம்…” என கூட வந்த நண்பர் நாத்திகத்துக்கான பிள்ளையார் சுழியை போட்டார்.

எதுக்கும் பிரோயோசனம் இல்லாத எங்களை கண் இமைபோல காக்கும் கர்த்தாவே உமக்கு நன்றி, என தொடங்கி பிரசங்கம் ஆராவாரமாக ஓடிக்கொண்டு இருந்தது. கர்த்தர் உயிர்தெழுவார் என்று பொங்கி பொங்கி அடங்கினாரு பிரசங்கம் செய்த ஃபாதர்.

கூட்டத்தை வேடிக்கை பாத்துட்டு இருந்த தோழரின் ஆறு வயதுக் குழந்தை சிரித்துக் கொண்டே வீட்டுக்குள்ள ஓடி வந்தது. தன் அம்மாவிடம் போய் “ஏசு இறந்து மண்ணுக்குள்ள போயி செடியாவே மொளச்சுருப்பாரு. திரும்ப எப்படி உயிரோட வருவாரு. எறந்து போனா யாராலையும் திரும்ப வரவே முடியாது. ஏசு மட்டும் என்ன ஸ்பெசலா… திரும்பி வர்ரதுக்கு. ஒரே மாப்பிள்ளை (நடிகர் வடிவேலுக்கு அந்த குழந்தை வச்ச பேரு) படம் போல பேசுராங்கம்மா” என்றது.

“ஏன் ஒனக்கு சாமின்னா பிடிக்காதா” என்றார் கூட வந்த நண்பர்.   

சாமிய பாத்தாதானே மாமா பிடிக்குதான்னு சொல்ல முடியும். நீங்க உங்க வீட்டுல சாமி கும்பிடுவிங்களா? என எதிர் கேள்வி எழுப்பியது.

கும்பிடுவோமே… ஏன் நீங்க கும்பிட மாட்டிங்களா?

சாமியே இல்ல. இருந்தாதானே கும்புட முடியும்.

சாமி இல்லையா. இப்பதான் நான் டீ கடையில பாத்துட்டு வாரேன் டீ குடிச்சுட்டு போச்சு.

நீங்க பொய் சொல்றீங்க. சாமிக்கி வாயி ஓட்டையாவே இருக்காது. எல்லா சாமியும் லிப்ஸ்டிக் போட்டுகிட்டு ஒதட்ட ம்ம்ம்ம்னு… தான் வச்சுருக்கும். நீங்க கோயில்ல பாத்ததில்ல!

நான் பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். இப்பதான் பாத்து வணக்கம் சொல்லிட்டு வந்தேன்.

அப்பன்னா சாமி எந்த கையால வணக்கம் சொன்னுச்சு.

வலது கையாலதான் வணக்கம் சொன்னுச்சு.

சாமிக்கி நெறையா கையி இருக்கும்ல அதுல எந்த கையில சொன்னுச்சு. அதபோல நாலஞ்சு கையி எனக்கும் இருந்தா ஈசியா வீட்டுப் பாடம் எழுதலாம். சீக்கிரம் சோப்பு போட்டு குளிக்கலாம் சூப்பராருக்கும்…

நண்பர் எதிர்பாக்கல, இருந்தாலும் சமாளிச்சுட்டாரு “ஆமாமா நெறையா கையிருக்கதால ஒரு கையால டீ குடிச்சுட்டே ஒரு கையால வணக்கம் சொல்லிச்சு.

சாமி கல்லுல செஞ்ச சிலை. அப்புடியேதான் கைய வச்சுருக்கும் நான் பாத்துருக்கேன். கல்லுக்கு வணக்கம் சொல்றீங்க என்னா… மாமா நீங்க.

நீ ஒங்க மிஸ்சுக்கு வணக்கம் சொல்வல்ல. அதுபோல சாமின்னா எனக்கு மிஸ்சு மாதிரி. நான் சாமிய எங்க பாத்தாலும் வணக்கம் சொல்வேன்.

நாங்க எங்க மிஸ்சுக்கு வணக்கம் சொன்னா பதிலுக்கு அவங்க குட்மானிங் சில்ட்ரென்னு சொல்வாங்க. உங்க சாமி சொல்லுமா..?

ம்…. சொல்லுமே. குட்மானிங் சொல்லும் சாப்பாடு குடுக்கும் எங்க சாமி எல்லாம் செய்யும்.

அப்ப உங்களுக்கு பசிச்சா சோறு சாமி போடுமா இல்ல உங்க அம்மா போடுவாங்களா?

சரி விடு நீ நம்ப மாட்டேங்குற. நாளைக்கி ஒங்க வீட்டுக்கு கடவுள கூட்டிட்டு வரேன் அப்ப என்ன செய்வ.

கடவுள் இருக்காருன்னு நம்புவேன்.

சின்னப் பிள்ள… யாரோ உன்ன நல்லா ஏமாத்திருக்காங்க. சாமி இல்லேன்னு யாரோ ஒனக்கு தப்பாச் சொல்லியிருக்காங்க.

பெரியார்தான் சாமி கும்பிட்றவங்க முட்டாள்னு சொல்லிருக்காரு. அதனால நான் சாமி கும்பிட மாட்டேன்.

பெரியாரு ஓங்கிட்ட வந்து சொன்னாரா சாமி இல்லேன்னு.

பெரியாரு இறந்து மண்ணுக்குள்ள புதைஞ்சு புல்லா முளைச்சிட்டாரு. அவரு உயிரோட இருந்தப்ப புத்தகத்துல எழுதி வச்சுருக்காரு, நாமதான் படிக்கனும்.

புதைச்சிட்டாங்க… முளைச்சிட்டாருன்னு அறிவியல் விளக்கம் வேற தர்றியா நீ. பெரியாரு எழுதுனத நீ படிச்சியா? எந்த புத்தகத்துல இருக்கு எடுத்துட்டுவா பாப்போம்.

நான் ஒன்னாவதுதான் படிக்கிறேன். எனக்கு அ, ஆ, இ, ஈ… தான் தெரியும். எங்க அம்மாதான் படிச்சுட்டு சொன்னாங்க.

உங்க அம்மா சொல்றதல்லாம் நம்பாதே. உங்க பள்ளிக்கூடத்துல தினமும் பிரேயர் பண்ணி சாமி கும்பிடுறல்ல அதனால டீச்சர் சொல்றத நம்பு.

நான் நம்ப மாட்டேன் அவங்களும் சாமி பத்தி தப்பா சொல்றாங்க.

டீச்சருக்கே பாடம் எடுக்குறியா நீ. சரி அவங்க என்ன தப்பா சொன்னாங்க.

அன்பான இறைவா இந்த காலை பொழுதை எமக்காக தந்தமைக்கு நன்றின்னு சொல்ல சொல்றாங்க. தப்புல்ல…

தப்பில்லையே சரியாதானே சொல்லிருக்காங்க. நமக்கு எல்லாம் கடவுள் தானே தர்ராரு.  

நமக்கு காலை பொழுத தர்ரது சூரியானா? கடவுளா? அப்ப சூரியனுக்குதானே நன்றி சொல்லனும்.

இப்படி ஒரு விவாதம் விறுவிறுப்பா போகும் நேரம் அருகில் நடந்த ஜெபக்கூட்டம் முடிந்துவிட்டது. சிக்கன் பிரியாணி இதர ஐட்டங்கள் மற்றும் ஐஸ்கிரிம் சகிதம் உணவு வேளை ஆரம்பமானது.

அதுவரை கடவுள் மறுப்பு பேசிய குழந்தை, ”நானும் போகணும், பிரியாணி சாப்பிட்டே ஆகணும்” என அடம் பிடித்தது. சிங்கம் போல வாசப்படியை நோக்கி சீறி பாய்ந்த குழந்தையை கட்டுப்படுத்த பெற்றோர் இருவரும் பெரும் பாடுபட்டனர்.

இதுவரைக்கும் கடவுள் இல்லை ஏசு எறந்துட்டாரு திரும்பவும் வரமாட்டாருன்னு வசனமெல்லாம் பேசிட்டு பிரியாணிக்காக கட்சி மார்..றியே இது சரியா? என்றார் நண்பர்.

“பிரியாணி மட்டும் இல்ல, ஐஸ்கிரிமும் தர்றாங்க, என்ன போக விடுங்க ப்ளீஸ்” என்றதும் சிரிப்பொலி அடங்கவில்லை.

அப்ப சாமி இருக்குன்னு ஒத்துகிட்டு சாப்பிட போறியா?

“நீங்க வேணும்னா அங்க எட்டி பாருங்க உண்மையிலேயே சாமி தெரியல.. பிரியாணியும் ஐஸ்கிரிமுந்தான் இருக்கு” என்றது குழந்தை.

அறிவாக விவாதித்த அழகு குழந்தை பிரியாணி வாசத்தால் அழுதழுது அரைமணி நேரம் கடந்தது.

இதுபோல ஒரு வாதம் பள்ளியிலும் நடந்ததாக குழந்தையின் அம்மா கூறினார். கடவுள் பற்றி தன் கூட படிக்கும் பிள்ளைகளுடன் சமயம் வரும் போதெல்லாம் பேசியிருக்கிறாள் அந்தக் குழந்தை. ஒருநாள் பள்ளிக்கூடத்தில் அவள் கூட படிக்கும் குழந்தைகள் சூழ்ந்து கொண்டு அவள் அம்மாவிடம் இப்படி பேசியுள்ளனர்.

ஆண்டி நேத்து இலக்கியா ஏன்னோட புத்தகத்த மிதிச்சுட்டா. தொட்டு கும்பிடுன்னு சொன்னேன், செய்ய மாட்டேங்குறா.

புத்தகத்த மிதிச்சா சாரிதானேம்மா சொல்லனும் எதுக்கு தொட்டு கும்பிடனும்.

“இப்புடி தப்பு செஞ்சா.. தப்பா பேசுனா சாமி கண்ண குத்தும் தானே ஆண்டி.” என்றது இன்னொரு குழந்தை.

“சாமி கும்பிட மாட்டேன்னு நிறையா வாட்டி சொல்லிட்டேன். ஒரு தடவகூட சாமி கண்ண குத்தல” என்றாள் இலக்கியா.

நீ இப்படி பேசினே சாமி பிள்ளையா இல்லாமெ சாத்தான் பிள்ளையா மாறிடுவெ.

நா சாத்தான் பிள்ளை கிடையாது, எங்க அம்மா அப்பா பிள்ளை.

நீங்களே சாமி கும்பிட மாட்டிங்கன்னு சொல்றா இலக்கியா. உண்மையா ஆண்டி?

ஆமாடா கண்ணு நானும் கும்பிட மாட்டேன்.

ஏதாவது ஒரு சாமிய நாம கும்பிடணும். முருகரோ, பிள்ளையாரோ, ஏசுவோ, முஸ்லிமோ கண்டிப்பா கும்பிடணும் ஆண்டி…

சரிடா செல்லம், நீ சொல்றென்னு கும்பிடரேன். நீ சொன்னதுல ஏதாவது ஒரு சாமிய எங்க வீட்டுக்கு வரச்சொல்லு வந்ததும் நான் கும்பிடரேன்.

அய்ய……! சாமி எப்புடி வீட்டுக்கு வரும் நாமதான் கடக்கி போயி வாங்கிக்கனும்.

என்னடா பாப்பா கடையில போயி பிஸ்கெட்டு வாங்கறாப்போல சொல்ற. சாமி என்ன கடையில விக்கிற பொருளா.

ஆமா ஆண்டி கடையில எல்லா சாமி போட்டாவும் இருக்கும். எந்த சாமி  வேணுமோ வாங்கிக்கலாம்.  

நானு கடையில போயெல்லாம் போட்டா வாங்க மாட்டேன். ஒங்க வீட்டுல இருக்குற சாமிய எங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வா. கடையில போட்டோவுக்கு போஸ் குடுத்தாப்போல ஒரு போஸ் குடுக்க சொல்லு. அந்த படத்த வச்சு கும்பிட்டுக்குறேன்.

போங்க ஆண்டி நீங்க ஒரே சிரிப்பு சிரிப்பா பேசுறீங்க. என்று அந்தக் குழந்தை சொன்னதைக் கேட்ட மற்ற குழந்தைகளும் சிரித்தனர். 

குழந்தைகள் உலகில் ஆத்திகமோ நாத்தீகமோ எவ்வளவு இயல்பா இருக்கு பாத்தீங்களா? இவ்ளோ அறிவா இருக்குற நம்ம குழந்தைகளை இன்னும் 5 வருசம் மோடி ஆண்டால் முழு முட்டாளாக்கிடுவாங்களா இல்லையா?

(உண்மைச் சம்பவம் – அடையாளங்கள், பெயர் மாற்றப்பட்டிருக்கின்றன)


– சரசம்மா

சபரிமலை : பாலின ரீதியான ஒடுக்குமுறை | வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

க்கள் உரிமை பாதுகாப்பு மையம் திருச்சி கிளையின் சார்பில் சபரிமலை வழக்கு : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா, தவறா? என்ற தலைப்பில் கடந்த ஜன-23 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் சுமங்கலி  மஹாலில்  நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட செயலர் வழக்கறிஞர் ப.முருகானந்தம் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் T.A.  புனிதன் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்  சே. வாஞ்சிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில், தோழர் கோவன் தலைமையிலான மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை வழங்கிய வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களது உரையின் காணொளி இப்பதிவில் இடம் பெறுகிறது.

அவரது உரையிலிருந்து சில பகுதிகள்…

* சபரிமலை பிரச்சினை என்பது மத நம்பிக்கை தொடர்பான பிரச்சினை அல்ல அது பாலின ரீதியான ஒடுக்குமுறை.

* இஸ்லாமிய பெண்களின் உரிமை பற்றி பி.ஜே.பி. பேசுகிறது. முத்தலாக் பிரச்சினையில் முஸ்லீம் பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று சொல்லி சட்டம் கொண்டு வந்திருக்கிற… பெரும்பான்மை இந்துப் பெண்களின் உரிமை பற்றி பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன?

* தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் வந்தா கோவிலின் புனிதம் கெட்டுடும்னு நீ மனசுல நினைச்சிக்கலாம்… ஆனா, வரக்கூடாதுனு தடுத்தால் அது குற்றம்.

* தனிமனித கண்ணியத்திற்கு தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான எந்தவொரு பழக்க வழக்கம் மரபு எதுவாக இருந்தாலும் அது செல்லாது.

அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

 

என்னுடைய ‘அவ்வா’ கௌரி லங்கேஷுக்கு | இஷா லங்கேஷ்

2

பத்திரிகையாளரும் செயல்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு இந்துத்துவ தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  சாதி ஒடுக்குமுறை, பெண்களுடைய உரிமைகள், குறிப்பாக வலது சாரி இந்துத்துவ தீவிரவாதத்தை கடுமையாக எழுதிவந்தார் கௌரி லங்கேஷ். சனாதன் சஸ்தா என்ற காவி தீவிரவாத அமைப்பால் திட்டமிட்டு சுட்டுகொல்லப்பட்ட கௌரியின் பிறந்த தினமான ஜனவரி 29 அன்று, அவருடைய சகோதரியின் மகள் இஷா லங்கேஷ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே…

லி…நான் அதிகமாக சிந்தித்த உணர்வுகளில் ஒன்று. அது உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக உண்டான வலி அல்ல; ஒருவரை இழக்கும்போது உண்டாகும் ஒருவித வலி அது. என் அன்புக்குரிய ஒருவரை ஒருநாள் இழக்க வேண்டியிருக்குமே என அதிகமாக என்னுடைய சிறுவயதில் சிந்தித்ததுண்டு, பயம் கொண்டதுண்டு. ஆனால், ஒருபோதும் அதை உண்மையாக உணர்ந்ததில்லை; அது உண்மையாக நடக்கும்வரை.

ஒரு மாலைப் பொழுது, என்னுடைய பெரியம்மா விழுந்துவிட்டதாக பாட்டியும் நானும் அறிந்தோம். நாங்கள் அப்போது தனியாக இருந்தோம். என் பெரியம்மாவின் வீட்டுக்கு பாட்டி என்னை அழைத்துச் சென்றார். வழி முழுவதும் பயத்துடன் அழுதபடியே வந்தார் அவர்.  என்ன நடந்திருக்கும் என்பது பற்றி அவர் பயந்தார்.  நாங்கள் பெரியம்மாவின் வீட்டுக்குச் சென்றபோது, அவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியானோம்.

என் அம்மா எங்களுக்கு முன்பே அங்கு இருந்தார், மனமுடைந்து அழுதுகொண்டிருந்தார். நானும் மனமுடைந்துபோனேன்.  நான் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அழுதேன், அந்த வலி நான் உணர்ந்திராதது, அல்லது கற்பனை செய்திராதது.  மேலும், என்ன நடந்தது என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியது, அது நம்ப முடியாததாக இருந்தது. இந்த நாள் வரை, நான் இப்போதும் அவரை இங்கே இருப்பதாக உணர்கிறேன். அவர் இங்கிருந்து என்றென்றுமாக விட்டுச் செல்லவில்லை.

காலம் வலிகளை ஆற்றும் என்பார்கள். ஓராண்டு ஓடிவிட்டது ஆனால், வலி நேற்றையது போலவே உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அழுததைப் போல இப்போது அழாமல் இருக்கலாம். ஆனால், உள்ளே இருக்கும் வெற்றிடத்தில், அந்த நாளில் உணர்ந்ததைப் போல ஆழமாக உணர்கிறேன்.

தொடக்கத்தில், கொலைகாரர்கள் மீது கடும்கோபத்தில் இருந்தேன்.  அவரை தாக்கியதைப் போலவே, அவர்களும் தாக்கப்பட வேண்டும் என விரும்பினேன். நாங்கள் அனுபவித்த வலியை அவர்களும் உணர வேண்டும். இப்போதும் அதை நினைக்கிறேன். கசக்கும் உண்மை என்னவென்றால், அவர்கள் பாதிக்கப்பட்டாலும்கூட என்னுடைய பெரியம்மா திரும்பிவரப் போவதில்லை.  ‘கண்ணுக்கு கண் என்பது, மொத்த உலகத்தையும் குருடாக்கிவிடும்’ என்பதை உணர்ந்தேன்.  நாம் அனைவராலும் செய்ய முடிந்தது, வலி குறையும் வரை காத்திருப்பதுதான். சட்டரீதியாக கொலைகாரர்கள் தண்டனை பெறும்வரை, நீதி கிடைக்கும் வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

நான் அவரை நினைக்காத நாளே இல்லை. என் மீதான அவருடைய அன்பை நினைக்கும்போதெல்லாம், நான் அவரை  இழந்திருப்பதை தீவிரமாக உணர்கிறேன். என்னுடைய பெரியம்மாவுக்கு குழந்தைகள் இல்லை, அதனால் அவர் என்னை மகள் என அழைத்தார். நான் அவரை ‘அவ்வா’ (கன்னடத்தில் அம்மாவை அவ்வா என்பார்கள்) என்று அழைப்பேன். அவர் எனக்கு இரண்டாவது அம்மாவைப் போன்றவர். ஒருவரை இழக்கும்வரை அவருடைய உண்மையான மதிப்பை நாம் உணர மாட்டோம் என சொல்வார்கள். நான் அவரை எவ்வளவு நேசித்தேன் என்பதை அவரை இழக்கும்வரை உணரவில்லை. அவர் இல்லாத உலகை நான் ஒருபோதும் கற்பனை செய்து பார்த்ததில்லை.

நான் சிறுமியாக இருந்தபோது, வார இறுதிகளில் அவருடைய வீட்டுக்குச் செல்வேன். தூங்கும் முன் சிண்ட்ரெல்லா கதைகளை தன்னுடைய பாணியில் அவர் சொல்வார். அவருடைய சிண்ட்ரெல்லா கதைகளில், சிண்ட்ரெல்லா உறுதியான, சுதந்திரமான பெண். சிண்ட்ரெல்லா பணி செய்யும் பெண்ணாக இருப்பார். ஒவ்வொரு முறையும் சிண்ட்ரெல்லாவின் பணியை பெரியம்மா மாற்றிக்கொண்டே இருப்பார். சில நேரங்களில் சிண்ட்ரெல்லா சமையல் கலைஞராக இருப்பார், இன்னொரு நேரத்தில் எழுத்தாளராக இருப்பார்.  ஆனால், அனைத்து சிண்ட்ரெல்லாக்களும் இளவரசருக்காக காத்திருக்கும் சாதுவான பெண்கள் அல்லர்.

ஒவ்வொரு முறையும் இந்தக் கதை கொஞ்சமாவது வேறுபட்டிருக்கும். அவர் சந்தித்த சவால்களும் அதில் இருக்கும். நான் இந்தக் கதைகளைக் கேட்க விரும்பினேன். நான் வயது முதிர்ச்சியடைந்தபோது, ஜிம் கார்பெட், கென்னித் ஆண்டர்சன், பூர்ணசந்திர தேஜஸ்வி போன்றோரின் நூல்களை படிக்கக்கொடுப்பார். அவர் தீவிரவான வாசிப்பாளராக இருந்தார். உண்மையில், என் பெரியம்மா சிறுமியாக இருந்தபோது,  அவருடன் பிறந்தவர்கள் விளையாடப்போவார்களாம். ஆனால்,  பெரியம்மா நூல்களின் உலகத்தில் மகிழ்வுடன் இணைத்துக்கொள்வாராம்.

கவுரி லங்கேஷ் இறுதி ஊர்வலத்தில் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள்.

என் பெரியம்மா என்னை கொண்டாடி மகிழ்வார். அவருடைய நண்பர்களிடம் என்னை அவருடைய தங்கையின் மகள் என ஒருபோதும் சொன்னதில்லை. தன் மகள் என்றே சொல்வார். அவர் பணியில் எவ்வளவு மும்முரமாக இருந்தாலும், என்னைப் பற்றி நண்பர்களிடம் சொல்வதை மட்டும் நிறுத்தியதில்லை.  அவர் எப்போதும் என்னிடம் ”உனக்காக நீதான் பேச வேண்டும்” என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருப்பார்.  தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பற்றி எனக்கு சொல்வார், உரைகளை கேட்க என்னை அழைத்துச் செல்வார்.  கன்னையா குமார் அல்லது ஷீலா ரஷீத் போன்ற இளம் மாணவ செயல்பாட்டாளர்களின் பேச்சுக்களை கேட்கச் சொல்வார். இளைஞர்கள் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் சொல்வார். அவர்களால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் எனவும் சொல்லிக்கொண்டிருப்பார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய பிறந்த நாளில் தாத்தாவின் நாளிதழ் இலட்சிணையான மயில் இறகையும் அதன் கீழே என் பெயரையும் டாட்டூவாக குத்திக்கொண்டார். ஒவ்வொரு வார இறுதியிலும் வீட்டுக்கு வந்து, அம்மாவுடனும் என்னுடனும் நேரத்தை செலவழிப்பார். என்னுடைய பெரியம்மாவுக்கு இறைச்சி உணவுகள் பிடிக்கும். ஆனால், அவர் சமைத்ததில்லை. எப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வருவாரோ, அப்போது என் அம்மா எங்கள் இருவருக்கும் கோழி இறைச்சியை சமைத்து தருவார். அவர்கள் இருவரும் தங்களுடைய கடந்த காலத்தில் நடந்த கேளிக்கையான நிகழ்வுகளை பகிர்ந்துகொள்வார்கள். நாங்கள் அந்த மதியத்தை சிரித்து கழிப்போம்.

சார்பில்லாமலும் சமமாகவும் இருப்பதற்கு என்னுடைய பெரியம்மா முக்கியத்துவம் கொடுத்தார். அது எங்களுக்குள் ஆழமாக பதிந்தது. எங்களுடைய குடும்பம் என்னுடைய மாமா வீட்டில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும். கிறித்துமஸை எங்கள் வீட்டில் கொண்டாடுவோம். ரம்ஜானை எங்களுடைய பெரியம்மாவின் வீட்டில் கொண்டாடுவோம். எனக்கும் என்னுடைய மாமாவின் பிள்ளைகளுக்கும் இந்த விழாக்களில் உள்ள ஒற்றுமையை சொல்வார்.  அவரைப் பொறுத்தவரை அனைத்து மதங்களையும் சாதியினரையும்  புரிந்துகொள்வது உணர்ந்துகொள்வது முக்கியமானது. அவர் பெண்களுக்காகவும் தலித்துகள், முசுலீம்கள், மாற்று பாலினத்தார் மற்றும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்காகவும் போராடினார் என்பதை சொல்லத்தேவையில்லை.  அவர் உறுதியான, அறத்துடன் செயல்பட்ட பத்திரிகையாளர். அடித்தட்டு மக்களுக்காகவும் அவர்களுடைய பிரச்சினைக்காகவும் போராடிய தீவிரமான செயல்பாட்டாளர் அவர். அவர் நக்ஸலைட்டுகளிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, அரசுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி வலியுறுத்தியவர்.

அவர் இரவு பகல் பாராமல், கடினமாக உழைத்தார். எப்போதும் ஓய்வெடுத்ததில்லை. அவருடைய இறப்புக்குப் பிறகு அவர் யார் என்பதையும், அவர் மக்களுக்காக என்ன செய்தார் என்பதையும் உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை அவர் என்னை நேசித்த அவ்வா. ஆனால், ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர் அக்கா, அம்மா, நண்பர், உடன் பணியாற்றியவர். மேலும் பல இளைஞர்களுக்கு அவர் வழிகாட்டியும்கூட.

அவர் என்ன செய்தார் என எனக்குத் தெரியும், அவர் எதை நேசித்தார் என்பது தெரியும். மேலும் அவர் எதை வெறுத்தார் என்பதையும் நான் அறிவேன். ஆனால், அவர் எத்தனை பேருடைய வாழ்க்கையில் தாக்கம் செலுத்தினார், வயதானவர்கள், இளைஞர்கள், வலிமையிழந்தவர்கள், ஒன்றுமேயில்லாதவர்கள் என்பது குறித்து நான் ஏதும் அறியேன். அவருடைய இறுதி நாளில், சில பேர் வருவார்கள் என எதிர்ப்பார்த்தோம். ஆனால், ஆயிரக்கணக்கானவர்கள் வந்ததைக் கண்டு ஆச்சரியமுற்றோம்.

கர்நாடகத்தின் மூலை முடுக்கில் மட்டுமல்ல, இந்தியா, உலகம் முழுமைக்கும் போராட்டங்கள் நடந்தன. இந்தியா கேட் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் போராடினார்கள். அனைத்து நகரங்களிலும் பத்திரிகையாளர்கள் போராடினார்கள். ஓராண்டு கழிந்த பிறகும்கூட, நீதியை வேண்டியும் அதிகாரத்தை நோக்கி உண்மையை பேசுகிற பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்காகவும் பிரான்ஸ், நியூயார்க், ஜெர்மனி, மால்டா ஆகிய இடங்களில் போராடினார்கள். ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ அமைப்பினர் ஃபிரெஞ்சு நகரமான Bayeuxல் அவ்வாவின் நினைவாக தூண் ஒன்றை எழுப்பினார்கள்.

அவரைப் பற்றி பெருமை கொள்ளும்போது, என்னுடைய வலி அனைத்தும் குறைவதை உணர்கிறேன். மேலும், அவரைக் கொன்றவர்கள் அவருடைய குரலை நிறுத்தவில்லை. ஆனால், அவருடைய குரல் இன்னும் வலிமையடைந்திருக்கிறது. அவருக்காக எங்களை நிற்க வைத்திருக்கிறது. அவர் எதற்காக நின்றாரோ அதற்காக எங்களையும் நிற்க வைத்திருக்கிறது.

அவரை இழக்கும்  முன், ஒருவரை இழப்பது எப்படிப்பட்ட உணர்வைத் தரும் என எனக்குத் தெரியாது. நான் ஆழமாக நேசிக்கும் ஒருவரை இழப்பேன் என்கிற பயமும் எனக்கு இருந்தது. அது அனைத்துக்குமான முடிவாக இருக்கும் என நினைத்ததில்லை. பிறகு எல்லாம் இயல்பாகிவிடும் என நினைத்தேன். எதிர்பாராதவிதமாக இது இரண்டுமாக உள்ளது. சில விசயங்கள் திடீர் முடிவுக்கு வந்துள்ளன. சில விசயங்கள் ஒன்றுமே நடக்காததுபோல கடந்து போயிருக்கின்றன.

படிக்க:
மணிப்பூர் : ’பத்ம ஸ்ரீ’ யை தூக்கியெறிந்த சியாம் சர்மா | குடிமக்கள் மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு !
பல்லாயிரம் போராளிகளை விதைத்துச் சென்ற கௌரி லங்கேஷ் !

திரும்பிப் பார்க்கும்போது, நான் அவருடன் அதிகமான நேரத்தை செலவிட்டிருக்க வேண்டுமோ என விரும்புகிறேன். நான் அவரை எவ்வளவு உண்மையாக நேசித்தேன் என்பதை அவருக்கு சொல்லியிருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் எதற்காக நின்றாரோ அதை இன்னும் சிறப்பாக  புரிந்துகொண்டேன் என சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பெரியம்மாவாக மட்டுமல்ல, அதையும் கடந்து அவரை அறிந்திருந்தேன்  என்பதை சொல்ல விரும்புகிறேன்.  நான் அவரை மிகவும் மதிக்கிறேன் என்பதை சொல்ல விரும்புகிறேன்.

இதையெல்லாம் அவரிடம் வெளிப்படுத்தினேனா என்பதை பொருட்படுத்தவில்லை. ஆனால், நான் அவரை எவ்வளவு நேசித்தேன் என்பதை அவர் அறிவார். அவர் என்னை எவ்வளவு நேசித்தார் என்பதை நான் அறிவேன். இப்போது அவரிடம் ஏதாவது சொல்ல விரும்பினால், 13 ஆண்டுகளாக எனக்கு வழிகாட்டியாய் இருந்ததற்காக நன்றி என்று மட்டும் சொல்வேன். ஏராளமான விசயங்களை பகிர்ந்துகொள்ள அவர் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஆனால், அவருடைய மனம் எப்போதும் என்னுடனே இருக்கும்.  குறுகிய காலமே வாழ்ந்த அவருடைய வாழ்க்கையில் அவர் நிறைய செய்தார்.  அவர் என்னுடைய இதயத்திலும் மற்றவர்களிடத்திலும் நீண்ட காலங்கள் வாழ்வார். மிக நீண்ட காலங்கள் வாழ்வார்.


கட்டுரையாளர்: இஷா லங்கேஷ்
தமிழாக்கம்: அனிதா
நன்றி: த வயர்

உடற்பருமன் ஏன் ? புதிய ஆய்வுகளும் கேள்விகளும் !

0

பானை வயிறுகள் இப்போது சாதாரணமாக காணக் கூடியவைகளாகியுள்ளன. காலை நடைப் பயிற்சியின் போது எதிர்வரும் பத்தில் ஒன்பது பேர் அதிக பருமன் பிரிவில் இருக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் உடல் நலம் – அதிலும் குறிப்பாக உடல் எடைக் குறைப்பு – மிகப் பெரிய வணிகச் சந்தையாக இருக்கும் என பலரும் சொல்கின்றனர்.

முன்பெல்லாம் பணக்காரர்களின் பிரச்சினை என்று கருதப்பட்ட அதிக உடல் எடை மற்றும் அதீத உடற்பருமன் நோய் இன்று பரவலாகியிருப்பதற்கு என்ன காரணம்? எல்லோரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்களா? இல்லை. உடல் உழைப்பு செலுத்தும் பிரிவினரான நடுத்தர வர்க்க, கீழ் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் கூட தொப்பையும் தொந்தியுமாக மாறி வருவதை சாதாரணமாக பார்க்க முடிகிறது. உடல் உழைப்பு இன்மை, உடற்பயிற்சி இன்மை, சோம்பேறித்தனம், அளவுக்கதிகமாக தின்பது, சரிவிகித உணவு உட்கொள்ளாதது என இதுவரை உடற் பருமன் பிரச்சினைக்கு தனிநபர்களின் வாழ்க்கைத் தெரிவுகளே காரணமாக சுட்டிக்காட்டப்பட்டு வந்தன. எனினும், புதிய ஆராய்ச்சி முடிவுகள் உடற் பருமன் பிரச்சினைக்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும் என முன்வைக்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த உடற்புள்ளியியல் நிபுணர் (biostatistician) டேவிட் பி அலிசன் உள்ளிட்டோர் 2010-ம் ஆண்டில் அலபாமா பல்கலைக்கழத்தில் முன்வைத்த ஒரு ஆய்வறிக்கையின் படி கடந்த இருபது ஆண்டுகளில் சராசரி அமெரிக்கர்களின் உடல் எடை வேகமாக அதிகரித்துள்ளது. மேலும், மேற்கண்ட காலகட்டத்தில் வீட்டில் வளர்க்கப்படும் பூனை, நாய் மற்றும் வீட்டு எலிகளின் சராசரி உடல் எடையும் அதிகரித்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பரிசோதனைக் கூடங்களில் வளர்க்கப்பட்டு வந்த மர்மோசெட் என்கிற ஒரு வகைக் குரங்குகளும் சிம்பன்சி மற்றும் மக்காவ் இனக் குரங்குகளும் உடல் எடை கூடியுள்ளது. பரிசோதனைக் கூடத்தில் வளர்க்கப்படுபவை என்பதால் இம்மிருகங்களுக்கு மிக நுணுக்கமாக கண்காணிக்கப்பட்டு தேவைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ அல்லாமல் சரியான அளவு உணவு மட்டுமே அளித்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உடற்பருமன் பிரச்சினை குறைந்த வருமானம் கொண்ட பிரிவினரிடையேயும் மிக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதிக உணவை உட்கொள்வது மற்றும் குறைந்த உடல் உழைப்பு மட்டுமே உடல் எடை அதிகரிக்க காரணம் என்கிற கண்ணோட்டத்தையும் புதிய ஆய்வு முடிவுகள் மறுப்பதாக அமைந்துள்ளன. ஒரே வகை உணவை ஒரே அளவில் எடுத்துக் கொள்ளும் வெவ்வேறு நபர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஒவ்வொருவரின் உடலும் அந்த உணவைக் கொழுப்பாக மாற்றும் தன்மையில் வேறுபடுவது தெரியவந்துள்ளது.

அதே போல் வெவ்வேறு உணவுகளின் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் ஆற்றல் (கலோரி) ஒரே தன்மையிலானது அல்ல என்கின்றது சமீபத்திய ஆய்வுகள். லண்டன் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் ஊட்டச்சத்து நிபுணர் பேராசிரியர் ஜொனாதன் வெல்ஸ் சுமார் 68 நாடுகளைச் சேர்ந்த தனிநபர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு, ஆண்களை விட பெண்கள் மத்தியில் உடற்பருமன் பிரச்சினை இருமடங்காக இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் “எல்லா கலோரிகளும், சமமானவை அல்ல” என்று குறிப்பிடுகிறார் ஜொனாதன் வெல்ஸ். அதாவது இறைச்சி, கொழுப்பு, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களின் மூலம் கிடைக்கும் ஆற்றல் அளவு என்கிற முறையில் ஒன்றாக இருந்தாலும், அது உடலுக்குள் ஆற்றும் வினை என்கிற அளவில் மாறுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

அதீத கொழுப்போ சர்க்கரையோ அவற்றில் உள்ள அதிக கலோரிகளால் மட்டும் சிக்கலை தோற்றுவிப்பதில்லை. மாறாக, அவை கொழுப்பு சக்தியை நமது உடல் சேமித்து செலவழிக்கும் முறையை மாற்றியமைக்கிறது; கொழுப்பு செலவழிக்கப்படுவதற்கு பதில் அதிகம் சேமிக்கப்படுகின்றது. மாறுபக்க கொழுப்பு (trans-fats), சர்க்கரை மற்றும் ஆல்கஹால் உள்ளிட்டவை நமது உடலில் நுழைந்த பின் ஒருவகையான இன்சுலின் சமிக்ஞையை எழுப்புவதாகச் சொல்கிறார் ஜொனாதன் வெல்ஸ். இதன் விளைவாக மாவுச்சத்துக்களை (carbohydrates) உடல் கையாளும் முறை மாற்றத்துக்குள்ளாகிறது. இப்புதிய ஆய்வுகள் நாம் உண்ணும் உணவின் அளவை விட எந்த உணவை உண்கிறோம் என்பதே உடற்பருமன் பிரச்சினையும் நெருக்கமாக தொடர்பு கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

நமது உடல் கொழுப்பு மற்றும் மாவுச்சத்துக்களை கையாளும் விதம் உணவுப் பழக்கத்தால் மட்டும் மாற்றமடையவில்லை. இதற்கு வேறு பல சூழலியல் காரணங்களும் உள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை நமது உடலில் சுரக்கும் லெப்டின் என்கிற ஹார்மோனின் அளவை பாதிக்கின்றது. லெப்டின் ஹார்மோன் தான் நாம் போதுமான உணவை உட்கொண்டிருக்கிறோம் என்கிற முடிவை மூளை எடுப்பதற்கு தூண்டுகின்றது. இது பாதிப்புக்கு உள்ளாகும் போது ஒருவர் தேவையின்றி அதிக உணவை உட்கொள்ளத் துவங்குகின்றார்.

சூழலியல் பாதிப்புகள் இத்தோடு நிற்கவில்லை. சிலவகை வைரஸ்கள், பாக்டீரியாக்கள், தொழிற்சாலை இரசாயனங்கள் உள்ளிட்டவைகளும் நமது உடலின் அணுக்கள் ஆற்றலைக் கையாளும் (சேமித்தல் – செலவழித்தல்) முறைகள் மாற்றமடைந்ததற்கு காரணங்களாக இருக்கக் கூடுமென சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

படிக்க:
சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு!

மிசௌரி பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஃப்ரெட்ரிக் வோம் சால் நடத்திய ஆராய்ச்சிகளின் படி, நாம் வீடுகளில் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களில் காணப்படும் பிஸ்ஃபெனோல்-A (bisphenol-A or BPA) என்கிற மூலக்கூறானது உயிரணுக்கள் கொழுப்பைக் கையாளும் விதத்தை பாதிப்பது தெரிய வந்துள்ளது. பேராசிரியர் ஃப்ரெட்ரிக் வோம் சால் தனது சோதனைகளை பரிசோதனைக் கூட எலிகளின் மேல் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதையடுத்து நியூயார்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையைச் சேர்ந்த லியனோர்டோ ட்ரான்சாண்டே, 2838 அமெரிக்க குழந்தைகளின் சிறுநீரைப் பரிசோதித்ததில் உடற்பருமன் இருப்பவர்களிடம் அதிக அளவு பிஸ்ஃபெனோல்-A இருப்பது தெரியவந்தது.

வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர்களின் சிறுநீரில் பிஸ்ஃபெனோல் இருப்பது தெரியவந்துள்ளது. என்றாலும், உடற்பருமனுக்கு பிஸ்ஃபெனோல் மட்டுமே ஒரே வில்லன் என்கிற முடிவுக்கு வருவதும் சரியாக இருக்காது. ஏனெனில், 2004-ம் ஆண்டு பிறந்த பத்து குழந்தைகளின் தொப்புள் கொடிகளை ஆராய்ச்சி செய்து பார்த்த போது அதில் சுமார் 287 வகையான தொழிற்சாலை இரசாயனக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் பிரசவகாலத்தில் தாய்மார்கள் உட்கொண்ட உணவின் மூலம் குழந்தைகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியை பியேட்ரிஸ் கோலோம்ப் உடலின் ஆற்றல் செலவழிக்கும் முறையை பாதிப்புக்குள்ளாக்கும் இரசாயனங்கள் என ஒரு நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த இரசாயனங்கள் அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், குளியல் சோப்பு போன்ற பொருட்களில் கலந்துள்ளன.

குழந்தைகள் கருவில் இருக்கும் போது மட்டுமல்ல, கருவுறும் போதே கூட ஆபத்தான இரசாயனங்களின் தாக்கங்களுக்கும் இன்னபிற சுற்றுச்சூழல் மற்றும் புறநிலைக் காரணிகளால் பாதிப்புக்கு உள்ளாக கூடும் என்பதை புரூஸ் புளூம்பெர்க், டேவிட் ஜே.பி பார்க்கர் உள்ளிட்ட பேராசிரியர்கள் நடத்திய தனித்தனி ஆய்வுகளின் முடிவுகள் காட்டுகின்றன. புறநிலை பாதிப்புகள் என்பவை தாய் உட்கொள்ளும் உணவின் மூலமாகவோ அல்லது அவளது மனநிலை பாதிப்புகளின் விளைவாகவோ கூட ஏற்பட முடியு என்பதை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறான பாதிப்புகள் பின்னர் அந்தக் குழந்தை வளரும் போது அதனுடைய உடலின் உயிரணுக்கள் கொழுப்பை செலவழிக்கும் முறைகளை மாற்றியமைக்கின்றன.

இவை தவிர சில வகை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களும் உடற்பருமனுக்கு காரணம் என்கின்றன வேறு சில ஆய்வுகள். கண்களில் பாதிப்பு ஏற்படுத்தும் ஏடி-36 (Ad-36) என்கிற ஒரு வைரஸ், பரிசோதனைக் கூடங்களில் குரங்குகள் மற்றும் எலிகளின் மேல் சோதிக்கப்பட்ட போது அவைகளின் உடல் எடை அதிகரித்துள்ளது. அதே போல் அதீத உடற்பருமன் நோய் கொண்டவர்களின் இரத்தத்தை சோதித்த போதும் அதில் இதே வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. எனினும் இந்த வைரஸ் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் உடல் எடை கூடுகின்றது என்பது இன்னும் திட்டவட்டமாக கண்டறியப்படவில்லை. இன்னும், அதீத செயற்கை ஒளி, அதிகளவில் குளிரூட்டும் சாதனங்கள் பயன்படுத்துவது போன்றவைகளுக்கும் உடல் எடை அதிகரிப்பதற்குமான தொடர்புகள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

♦ ♦ ♦

டல் எடை அதிகரிப்பிற்கு தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மட்டுமின்றி ஏராளமான சமூக காரணங்களும் இருப்பதை மேலே உள்ள விவரங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இதுவரை உடல் எடை, ஆரோக்கியம் போன்றவை குறிப்பிட்ட தனிநபர்களின் வாழ்க்கைத் தெரிவுகளின் நேரடி விளைவு என்கிற கண்ணோட்டத்தை இந்த ஆராய்ச்சி முடிவுகள் பெருமளவிற்கு கேள்விக்கு உள்ளாக்குகின்றன.

மருத்துவ விஞ்ஞானம் உடற்பருமன் பிரச்சினைக்கு இன்னது மட்டுமே காரணம் என முடிந்த முடிவாக ஒரு பட்டியலை உறுதியாக ஒரே குரலில் ஏற்கவில்லை. அகநிலை மற்றும் புறநிலைக் காரணங்கள் இணைந்து ஒருவரின் உடல் எடையின் மேல் தாக்கம் செலுத்துகின்றன என்கிற அளவுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகளை நாம் புரிந்து கொள்ளலாம். அகநிலையான காரணங்களை நமது பழக்க வழக்கங்களை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலம் சரி செய்யலாம். உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு, சரிவிகித சத்தான உணவு, சரியான ஓய்வு என்பவை ஒருவரின் தனிப்பட்ட தெரிவாக இருந்தாலும் இவற்றை சாத்தியப்படுத்தும் சமூகப் பொருளாதார சூழலை அடைவதற்கு புறநிலையோடு போராடித்தான் ஆக வேண்டும்.

முறைப்படுத்தப்பட்ட தொழில்கள் அனைத்தும் நெருக்கடியில் இருக்கும் நிலையில் அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருபக்கம் மனரீதியான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். இன்னொருபுறம் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள ஆரோக்கியத்தைப் பணயம் வைத்து உழைக்க வேண்டியுள்ளது. எனில், உடற்பருமன் பிரச்சினைக்கு அகநிலையான தீர்வுகளை அமல்படுத்த வேண்டும் என்றாலே புறநிலையோடு மோதுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை.

அதே போல் உடற்பருமனுக்கு கராணம் என புதிதாக பட்டியலிடப்பட்டுள்ள புறநிலையானவைகள் அனைத்துமே நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியலின் துணை விளைவுகள். எனில், இவையனைத்தையும் துறந்து விட்டு காடுகளுக்கு ஓடி விடலாமா? அல்லது நம்மாழ்வார் போன்ற “வில்லேஜ் விஞ்ஞானிகள்” சொல்வது போல் உடல் முழுவதும் சாணியை அப்பிக் கொண்டு “காஸ்மிக் கதிர்களின் பாதிப்பை” எதிர்க்க முனையலாமா?

முதலில், இந்த முறையில் சிந்திப்பதே அடி முட்டாள்தனம். புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொடர்ந்து வந்த தொழிற்புரட்சிகளும், அதன் விளைவாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மனித சமூகத்திற்கு வழங்கியுள்ள கொடைகள் ஏராளம். உடற் பருமன் பிரச்சினை மட்டுமின்றி இன்னும் ஏராளமான புதிய நோய்கள் உருவான அதே காலகட்டத்தில்தான் அதற்கான தீர்வுகளும் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சக்கரம் முன்னோக்கிச் சுழலுமே தவிர மீண்டும் ராம ராஜ்ஜியம் சாத்தியமில்லை. எனவே மாறிய சூழல் உருவாக்கியுள்ள சிக்கல்களை நவீன விஞ்ஞானத்தின் துணை கொண்டு எதிர்ப்பதும், மறுபுறம் சூழலியல் பாதிப்புகளைத் தவிர்த்த முன்னேற்றத்தை விஞ்ஞானப்பூர்வமாக சாதிப்பதுமே தீர்வு.

சாக்கியன்

சோசலிச சமூகம் அமைப்பதற்கான போராட்டத்தில் மாவோவின் பங்களிப்பு !

சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ஃபிரட் எங்ஸ்ட் – உடன் ஓர் நேர்காணல் | பாகம் – 4

ஒனுர்கன் உல்கர்: முதலாளித்துவ பாதையினருக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையில் மாவோ காலத்தில் நடந்த போராட்டத்தைப் பற்றிக் கூறினீர்கள். கட்சிக்குள் இருந்த வலது பாதையாளர்களை முறியடிப்பதற்கு, அதிகார வர்க்க மேட்டுக் குடியினருக்கு எதிராக மக்களைத் திரட்டுவது மாவோவின் வழியாக இருந்தது… இருப்பினும் பிற்காலத்தில், திறந்த பொருளாதாரமும் (முதலாளித்துவ – மொர்) சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பக் கட்டங்களில், மாவோ காலத்திய கொள்கைகளை பாதுகாக்கும் பொருட்டு, சீர்திருத்தங்களுக்கு எதிராக எமக்குத் தெரிந்த வரை உழைக்கும் மக்கள் பரவலான முறையில் எதிர்ப்பு காட்டவில்லையே!

ஃபிரட் எங்ஸ்ட்: டெங் அதிகாரத்திற்கு வந்த போது, நாங்கள் சோசலிசத்திற்கு எதிரானவர்கள் என்று அவர்கள் அறிவித்துக் கொள்ளவில்லை. இது அனேகமாக மக்களை குழப்பியிருக்கலாம். ஆனால், பெரியளவு எதிர்ப்பு இல்லை என்று நீங்கள் சொல்லிவிட முடியாது.

டெங் சியாபெங்

அப்படியென்றால், 1989 -இன் நிகழ்வுகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அன்று புதிதாக உருவாகி வந்த புதிய ஆளும் வர்க்கத்தை மக்கள் எதிர்க்கிறார்கள் என்று காட்டிய போராட்டமல்லவா அது. அந்தப் போராட்டத்தின் முன்னணியில் இருந்த மாணவர் தலைவர்களின் நோக்கம் வேண்டுமானால் மேற்கத்திய ஜனநாயகமாக இருக்கலாம். அவர்களுக்கு ஆதரவளித்த தொழிலாளர்களும் விவசாயிகளும், ஜனநாயகம் என்ற அரூபமான கருத்துக்காக அந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை… எனக்குத் தெரியும்.

ஏனென்றால் 1988-ல் நான் பெய்ஜிங்கில் இருந்தேன். மக்கள் எல்லா விசயங்களைப் பற்றியும் அதிருப்தி கொண்டிருந்தார்கள். சீனத்தில் தாங்கள் உருவாக்கியிருந்த அனைத்தையும் சில பணக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டுவிட்டார்கள் என்ற ஆத்திரத்தில் மக்கள் இருந்தார்கள். ஆய்வாளர்கள் இதையெல்லாம் மிக மேலோட்டமாகப் பார்க்கிறார்கள். மக்கள் எதனால் அதிருப்தி அடைந்திருந்தார்கள் என்ற கேள்விக்கு நீங்கள் விடை தேடவேண்டும்.

ஆகவே, மேலே என்ன நடக்கிறது என்பதை மட்டும் பார்த்து முழு சித்திரத்தையும் புரிந்து கொள்ள முடியாது. என்ன நடக்கிறது என்பது குறித்து கணிசமான காலத்துக்கு எனக்கே தெளிவில்லாமல்தான் இருந்தது. 1976-ல் நடந்தது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு என்ற விசயமே 20 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திடீரென்று எனக்கு உரைத்தது.

ஒனுர்கன் உல்கர்: அப்படியென்றால், அந்த காலத்தில், கட்சிக்குள்ளிருந்த சோசலிசப் பாதையினர் மக்களுடன் உயிரோட்டமான தொடர்பைப் பேணவில்லை என்று கருதலாமா?

ஃபிரட் எங்ஸ்ட்: நான் அப்படிச் சொல்ல மாட்டேன். உழைக்கும் வர்க்கத்தின் பக்குவமின்மைதான் முதன்மையான காரணம். தங்களுக்குள் நிலவிய முரண்பாடுகளைக் கையாள்வதற்கு அவர்களுக்குத் தெரியவில்லை. கோஷ்டித் தகராறுகளை அவர்களால் தவிர்க்கமுடியவில்லை.

கலாச்சாரப் புரட்சியின் தொடக்கத்தில் மக்கள் திரளைத் தட்டியெழுப்புவது எப்படி என்பது சவாலாக இருந்தது. மக்கள் கிளர்ந்தெழுந்த பின், அவர்களுக்கிடையிலான கோஷ்டிவாதத்தை சமாளிப்பது மையப் பிரச்சினையாகிவிட்டது. உழைக்கும் வர்க்கம் பிரிந்து கிடந்தது. முதலாளித்துவப் பாதையினர் ஒற்றுமையாக இருந்தனர்.
நான் ஏற்கனவே கூறியது போல, முதலாளித்துவப் பாதையாளர்கள் தங்களது உண்மை சொரூபத்தை உடனே காட்டிவிடவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தது முதலாளித்துவ மீட்புதான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை.

மார்க்சியத்திற்கும் திரிபுவாதத்திற்கும் இடையிலான முக்கிய வேறுபாடு இதுதான். எந்த திரிபுவாதியும் நான் மார்க்சியத்திற்கு எதிரானவன் என்று வெளிப்படையாகச் சொல்லமாட்டான். “புதிய சூழ்நிலை தோன்றியிருக்கிறது. இதனைக் கையாள்வதற்கு புதிய அணுகுமுறை தேவை” என்பார்கள். பெரும்பாலான மக்களுக்கும் அது சரிதானே என்று தோன்றும்.

அவர்கள் முதலாளித்துவ சீர்திருத்தத்தை முதலில் தொடங்கும்போது முதலில் நகரத்தில்தான் கொஞ்சம் முயற்சி செய்தார்கள். அதற்கு தொழிலாளர்களின் எதிர்ப்பு பலமாக இருந்தது. அதனால் கிராமப்புறத்தை நோக்கிப் போய்விட்டார்கள். கிராமப்புறம்தான் சங்கிலியின் பலவீனமான கண்ணி.

ஆரம்பத்தில், மலைப் பிராந்தியங்களில் பரவிக் கிடக்கும் விவசாயிகள் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களை கூட்டுப் பண்ணைக்கு கட்டாயப் படுத்த வேண்டாம். அவர்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுப்போம் என்றார்கள். அது நியாயம்தானே என்று தோன்றியது. சில ஆண்டுகளிலேயே கூட்டுப்பண்ணைகளின் நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிக்கத்தொடங்கினார்கள். சில ஆண்டுகளுக்குள் எல்லா கூட்டுப்பண்ணைகளையும் இல்லாமல் செய்து விட்டார்கள். என்ன நடக்கிறது என்று நீங்கள் சுதாரிப்பதற்குள், அதிகாரம் உங்கள் கையை விட்டுப் போய்விட்டது.

தொழிலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, முதலாளித்துவப் பாதை என்றால் என்ன, சோசலிசப்பாதை என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்திருக்கவில்லை. தந்திரமான பேச்சுக்கு அவர்கள் மிக எளிதில் பலியாகி விட்டார்கள்.

முதலாளித்துவ பாதையினர், “மாவோ காலத்தில் உங்கள் சம்பளம் உயரவே இல்லை. நாங்கள் உயர்த்தப் போகிறோம்” என்றார்கள். டெங் மென்மேலும் பணத்தாள்களை அச்சிட்டுத் தள்ளினார். கூடுதல் பணம் கிடைத்தது என்று எல்லோரும் மகிழ்ந்தனர். பணவீக்கத்தைப் பற்றி அப்புறம்தான் புரிந்து கொண்டனர். அதற்குள் காலம் கடந்து விட்டது. முதலாளித்துவப் பாதையினர் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் வரை, தற்காலிகமாக, விவசாயிகளையும், தொழிலாளர்களையும், அறிவுஜீவிகளையும் தனித்தனியே விலைக்கு வாங்கினர்.

அவர்களுக்கு கட்சி உறுப்பினர்களில் உண்மையான மாவோயிஸ்டுகள் யார் என்பது தெரியும். அவர்களை வெளியேற்றினார்கள், தனிமைப்படுத்தினார்கள், ஓரங்கட்டினார்கள். அவர்கள் கைதேர்ந்த தந்திரசாலிகள்! தவளையை சமைக்க வேண்டுமானால், தண்ணீரை மெதுவாக சூடேற்று என்றொரு பழமொழி சீனத்தில் உண்டு. தண்ணீரின் சூட்டை தாங்கமுடியாது என்று தவளை உணரும்போது அதனால் குதித்து வெளியேற முடியாமல் போய்விடும்.

படிக்க :
♦ மாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்
♦ விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !

ஒனுர்கன் உல்கர்: கலாச்சாரப்புரட்சி தோல்வியடைவதற்கான காரணங்கள் என்ன? சமூக வர்க்கம் குறித்த மாவோவின் கருத்தாக்கம் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது என்றும், இந்த நிச்சயமின்மை காரணமாக நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்று புரட்சியாளர்களால் சரியாக இனங்காண முடியாமல் போய்விட்டது என்றும் கூறப்படுவதை நீங்கள் ஏற்கிறீர்களா?

ஃபிரட் எங்ஸ்ட்: ஆம். ஆனால் ஏன்? ஏனென்றால், சட்டப்படியும், நடைமுறையிலும், உற்பத்தி சாதனங்கள் தனியாருக்கு சொந்தமாக இல்லை. தலைவர்கள் தம் சொத்துகளை தங்கள் குழந்தைகளுக்கு விட்டுச் செல்லமுடியாது.

சோசலிசத்தின் கீழ் வர்க்கம் என்பதை வரையறுக்கும் போது யாரிடம் முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதையும், அந்த அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பார்ப்பது மிகவும் முக்கியம்.

பில் கேட்ஸ் அல்லது ராக்ஃபெல்லரை எடுத்துக்கொள்ளுங்கள். தங்களது உலகக் கண்ணோட்டத்தின்படி அவர்களால் முடிவெடுக்க முடியும், உலகத்தை மாற்றியமைக்க முடியும் என்பதுதான் அங்கே முக்கியம். இங்கே சோசலிசத்தின் கீழும், முடிவெடுக்கும் அதிகாரத்தை தம் கையில் வைத்துக் கொள்ள முதலாளித்துவ வர்க்கம் முயற்சிக்கத்தான் செய்கிறது.

இரண்டு வகை முதலாளித்துவ வர்க்கத்தினரும் மற்றவர்களின் கருத்துக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதுதான் முதலாளித்துவத்தின் சாரம், அல்லது, டி.என்.ஏ.

ஈக்கள் பறக்கும், புழுக்கள் பறக்காது. பறப்பது என்பது பெரிய வேறுபாடுதான் என்ற போதிலும், இரண்டும் ஒரே இனம்தான். கொஞ்சம் பொருத்திருந்தால் புழுக்கள் ஈக்களாக மாறும். சோசலிச சமூகத்தில் இருக்கும் முதலாளித்துவத்தினர் ஈயாக வளர்வதற்கு முந்தைய புழுவின் நிலையில் இருப்பவர்கள். அவர்கள் ஈக்களின் நிலையை எய்திவிட்ட முதலாளி வர்க்கத்தின் கரு வடிவாக இருப்பவர்கள்.

மாவோவின் அரசியல் பாரம்பரியம் குறித்து

ஒனுர்கன் உல்கர்: மாசேதுங் அவர்களின் மறைவிற்கு 40 ஆண்டுகளுக்குப்பின், மாவோயிசத்தின், குறிப்பாக கலாச்சாரப் புரட்சியின் எஞ்சி இருக்கும் பாரம்பரியம் என்ன?

ஃபிரட் எங்ஸ்ட்: மாவோவின் பாரம்பரியம் அளப்பறியது. உலகில் எந்தப் பகுதியிலும் பழைய அமைப்பு முறையைத் தூக்கி எறிவதற்காகத் திரள்கின்ற மக்கள் அனைவரும் ஒரே பிரச்சனையைத்தான் எதிர்கொண்டார்கள். புரட்சியாளர்கள் புதிய ஆதிக்க சக்திகளாக மாறாமல் தடுப்பது எப்படி? இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மாவோ என்ன முயற்சி செய்தார் என்பதை புரிந்து கொள்ளாதவரை, புரட்சி, எதிர் புரட்சி என்ற இந்த சுழற்சி தொடரத்தான் செய்யும்.

பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு, மார்க்ஸ் அதன் படிப்பினைகளை தொகுத்தார்.
பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதைப் பற்றி மட்டும் அக்கறை செலுத்தினால் போதாது; அது பழைய அரசு எந்திரத்தைத் தகர்த்து புதிய ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார். ஆனால் அதிகாரத்திற்கு வந்த பிறகு உழைக்கும் வர்க்கத்தின் குறிப்பான பாத்திரம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி அவருக்கும் கூட ஒரு தெளிவு கிடைக்கவில்லை. அதைப் புரிந்து கொள்வதற்கு அப்போது காலம் கனியவில்லை.

லெனின், இது குறித்து பல ஆண்டு காலம் சிந்தித்தார். உயர்ந்த அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட, ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கட்பிரிவினரைத் தன் பின்னே திரட்டும் ஆற்றல் பெற்ற, முன்னணிக் கட்சி ஒன்றை பாட்டாளி வர்க்கம் தனக்கென உருவாக்கிக் கொண்டால் மட்டுமே, பொருளாதாரத்திலும், அரசியலிலும், இராணுவபலத்திலும், பண்பாட்டிலும் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற முதலாளி வர்க்கத்தை வெற்றி கொள்ள முடியும் என்று உணர்ந்து கொண்டார்.

அக்டோபர் புரட்சி முடிந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரும், சீன மக்களின் 1919 மே 4 எழுச்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும்தான் சீன கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கப்பட்டது. கட்சியை எப்படி உருவாக்குவது என்று யோசிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்படவில்லை. அந்த வகையில் லெனினுடைய பங்களிப்பு, சீனப்புரட்சிக்கான காலத்தை மிகப்பல ஆண்டுகள் குறைத்துக் கொடுத்தது.

கலாச்சாரப்புரட்சியின் பங்கும் அதே போன்றதுதான். அடுத்த முறை, உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது, அவர்கள் முதலிலிருந்து தொடங்கத் தேவையில்லை. மற்ற புரட்சியாளர்கள் செய்த அதே தவறுகள் மீண்டும் நிகழாமல் தவிர்ப்பது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். அதாவது, சலுகை பெற்ற அதிகாரவர்க்கம் என்ற ஒரு பிரிவு வளர்ந்துவிடாமல் தடுப்பது எப்படி என்பதை அறிந்திருப்பார்கள். முன்னணிக் கட்சியின் மீது மக்கள்திரளின் கண்காணிப்பு இருந்தாகவேண்டும் என்று வலியுறுத்துவது எப்படி என்று அறிந்திருப்பார்கள்.

முன்னணிக் கட்சிக்கும் மக்கள் திரளின் கண்காணிப்புக்கும் இடையிலான உறவு என்பது சோசலிசத்தின் மிகப்பெரிய முரண்பாடாகும். இதிலிருந்து தப்பிக்கவே முடியாது. மாவோவைத் தவிர, சோசலிசம் குறித்த மற்றெல்லா கோட்பாடுகளும் இந்தச் சிக்கலைக் கையாள்வதில் தோல்வியடைந்து விட்டன. ஸ்டாலின் போன்றவர்கள் மக்கள் திரளின் கண்காணிப்பை புறக்கணித்து, கட்சியின் முக்கியத்துவத்தை மட்டுமே வலியுறுத்தினர். சமூக ஜனநாயகவாதிகள் ஜனநாயக அம்சங்களை மட்டும் வலியுறுத்தினர். முன்னணிக் கட்சியின் தேவையை முற்றிலுமாகப் புறக்கணித்தனர். மேற்சொன்ன இரண்டு அணுகுமுறைகளுமே வேலைக்கு ஆகாதவை. இதுதான் இயங்கியல்.

இந்த இரண்டு அம்சங்களையும் இணக்கமாக கையாள்வது எப்படி என்பதை மாவோ முயன்று பார்த்தார். ஆனால், இந்த விசயத்தை அவர் கிரகித்துக் கொள்வதற்குள் பெரிதும் காலங்கடந்து விட்டது. அதற்கு முன்னரே முதலாளித்துவப் பாதையினர் சீனத்தில் பெரிதும் பலம் பெற்றுவிட்டார்கள். முதலாளித்துவப் பாதையாளர்களை அடையாளம் காண்பதற்கே மாவோவிற்கு ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் (1957 முதல் 1962 வரை) ஆகிவிட்டன.

முதலாளித்துவப் பாதையாளர்கள் எனப்படுபவர்கள் வெளியில் வரும்போதுதானே புரட்சியாளர்கள் அவர்களை அடையாளம் காண இயலும்? மார்க்ஸ் காலத்தில் முதலாளித்துவப் பாதையாளர்களைப் பற்றி யோசித்திருக்க முடியாது. இது பற்றி ஆராய்வதற்கு லெனினுக்கு காலம் போதவில்லை. ஸ்டாலினுக்கு வாய்ப்பிருந்தது. ஆனால், அவர் அந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். தவறிழைத்து விட்டார். அவர் நாடு கடத்தினார், மரண தண்டனை விதித்தார். அதெல்லாம் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. இருப்பினும், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஸ்டாலின் பாடுபட்டார். முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டு வர அவர் முயற்சிக்கவில்லை. எனவே சீனக்கம்யூனிஸ்டு கட்சியின் பல ஊழியர்கள் தவறிழைத்ததைப் போலவே அவரும் தவறிழைத்தார். இவர்களை உணர்வுபூர்மற்ற முதலாளித்துவப் பாதையாளர்கள் என்று நான் அழைப்பேன்.

நாம் உணர்வுபூர்மான முதலாளித்துவப் பாதையாளர்களையும், உணர்வுபூர்வமற்ற முதலாளித்துவப் பாதையாளர்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். சிலருடைய வேலைப்பாணி தவறாக இருக்கிறது. சிலர் உணர்ச்சிவயப் படுபவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஆதிக்க மனோபாவம் கொண்டவர்களாக நடந்து கொள்கிறார்கள். இவர்களெல்லாம் உணர்வுபூர்வமாக முதலாளித்துவப் பாதையைத் தெரிவு செய்தவர்கள் அல்ல. ஆனால், மார்க்சிய இயங்கியல் குறித்த அவர்களது பார்வை பலவீனமாக இருந்தது.

எனவே, அவர்களால் முதலாளித்துவ மீட்பை தடுக்கவியலவில்லை. ஸ்டாலின் தெளிவாக இருந்தார். அவர் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. மக்கள் திரள் வழியைப் பின்பற்றவில்லை… மக்களைத் திரட்டவில்லையென்றால், நீங்கள் அதிகாரவர்க்கத்துக்கு உள்ளேதான் தீர்வைத்தேட முடியும். மேலிருந்து திணிக்கப்பட்ட அணுகுமுறை தவிர்க்கவியலாமல் அதிகாரவர்க்க ஆட்சியைத்தான் மீண்டும் உற்பத்தி செய்யும்.

டிராட்ஸ்கி

இதில் டிராட்ஸ்கியவாதிகளின் தீர்வு என்பது சமூக ஜனநாயகவாதிகளின் தீர்வைப் போன்றது. அவர்களது தீர்வு கட்சி என்ற முன்னணிப்படையின் தேவையை நிராகரிக்கிறது. அவர்கள் ஜனநாயகம் என்பதை தொழிலாளர் காங்கிரஸ் என்பதாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கிடையே வெவ்வேறு கருத்துகள் வரும்போது என்ன செய்வது என்று அவர்கள் சொல்வதில்லை. சீனாவில் டிராட்ஸ்கியவாதிகளுடனான விவாதத்தில் நான் இந்த பிரச்சனையைத் தொடர்ந்து எதிர் கொள்கிறேன்.

சோசலிசம் என்பது ஒரு நீண்ட வரலாற்றுக் காலம். இந்தக் காலகட்டத்தில் வர்க்கங்களும் வர்க்கப்போராட்டமும் தொடர்ந்து நிலவவே செய்யும்.

தொடர்ந்து இருக்கும். முதலாளித்துவம் எப்போது வேண்டுமானாலும் மீண்டு வரலாம். அதுதான் சீனத்தில் நடந்திருக்கிறது. இன்று சீனாவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் முதலாளி வர்க்கத்தினர் அல்ல, திரிபுவாதிகள் என்றும், உட்கட்சி போராட்டம் நடத்தி அவர்களை முறியடிக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகிறார்கள். உண்மையில் இன்று சீனா ஒரு தொழில்மயமான முதலாளித்துவ நாடு. இங்கே முதலாளிவர்க்கம்தான் அதிகாரத்தில் இருக்கிறது.

ஒனுர்கன் உல்கர்: என் குறிப்பான கேள்வி இதுதான். மாவோ மறைந்து அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. 21-ம் நூற்றாண்டில் சோசலிசத்தைப் படைக்க விரும்பும் மக்கள் மார்க்சியத்திற்கு மாவோ செய்த பங்களிப்பை இன்று எதற்காக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்?

ஃபிரட் எங்ஸ்ட்: ஏனென்றால், அது ஒரு கட்டாயம். புரட்சிக்காகப் போராடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினையை அவர் ஆராய்ந்திருக்கிறார். முன்னோடியாகத் தீர்வு கண்டிருக்கிறார். குறிப்பான விசயங்களில் சில வேறுபாடுகள் இருக்கலாம்.

அடிப்படைக் கேள்வி இதுதான். உட்கட்சி போராட்டத்தை எப்படி கையாளவேண்டும்? இது குறித்த முழுமையான கோட்பாடும், நடைமுறையும் அவரிடம் இருக்கிறது. மார்க்சியத்தை நடைமுறைப்படுத்துங்கள். திருத்தல்வாதத்தை அல்ல என்கிறார். வெளிப்படையாக இருங்கள், சூழ்ச்சி செய்யாதீர்கள் என்கிறார். ஐக்கியப்படுங்கள் பிளவுபடாதீர்கள் என்கிறார். விமரிசனம் சுயவிமரிசனத்தை திறந்த மனதுடன் எதிர்கொள்ளுங்கள் என்கிறார்.

இவை அனைத்தும் புரட்சிகர அணிகள் மத்தியிலான போராட்டம் தொடர்பானவை. மக்களிடையேயான முரண்பாடுகளைக் கையாள்வது தொடர்பானவை. கோஷ்டிவாதத்தை முறியடிப்பதற்கும் ஐக்கியத்தை சாதிப்பதற்கும் மாவோவின் இந்தக் கருத்துக்கள் புரட்சியாளர்கள் அனைவருக்கும் மிகவும் அவசியமானவை. ஐக்கியம் என்பதன் பொருள் நமது கருத்தை வெளியிடாமல் விழுங்கிக் கொள்வது அல்ல. அது ஒரு ஒத்த கருத்தை எட்டுவதற்கானது. இவையனைத்தும் கலாச்சாரப் புரட்சிக்கு முன்னதாகவே அவரால் கோட்பாடு ரீதியாகத் தொகுக்கப்பட்டு விட்டன.

கோட்பாடு ரீதியாக மட்டுமல்ல, புரட்சிகர நடைமுறையிலும் மாவோ பங்களித்திருக்கிறார். மாவோவை நிராகரிப்பவர்கள் தம் அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். பருண்மையான நிலைமைகள் குறித்த உண்மையான புரிதலின் அடிப்படையில் மாவோவின் மீது விமரிசனம் வைக்கின்ற அர்ப்பணிப்புள்ள அறிஞர்கள் யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கலாச்சாரப் புரட்சி காலகட்டத்தில் செங்காவலர்கள் மத்தியில் பாடியாடும் சிறுமி. (கோப்புப் படம்)

மூன்றுலக கோட்பாடு போன்ற விசயங்களுக்காக மாவோவை சிலர் நிராகரிக்கிறார்கள். சோவியத் யூனியன் உண்மையிலேயே பெரிய அபாயமாக இருந்தது. அது சீனத்துக்கு மட்டும் அபாயமாக இல்லை. சோவியத் யூனியன் சிதறிவிட்டது என்பது உண்மை. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பதை யாராலும் அனுமானிக்க முடியவில்லை… முதலாளித்துவப் பாதையாளர்கள் குறித்தும் ஏகாதிபத்தியம் குறித்தும் மார்க்ஸ் முன்கூட்டியே ஆய்வு செய்திருக்க முடியவில்லை என்பதைப் போன்றதுதான் இதுவும்.

சோவியத் யூனியன் அரசின் பலவீனத்தைப் பார்க்க முடியாத காரணத்தினால், அந்த அபாயத்தைப் பற்றி மாவோ சற்று மிகையாக கவலைப்பட்டிருக்க கூடுமோ என்று இப்போது நமக்குத் தோன்றுகிறது. இதற்காக மாவோவை யாரேனும் குற்றம் சொல்ல முடியுமா? சோவியத் யூனியனுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை யார்தான் முன்கூட்டி அறிந்திருந்தார்கள்? தவறிழைப்பதை யாரும் தவிர்க்கவியலாது. மார்க்ஸ் தவறு செய்திருக்கிறார், லெனின் தவறு செய்திருக்கிறார், ஸ்டாலினும் பல தவறுகள் செய்திருக்கிறார். மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் பல கணிப்புகள் நடக்காமல் போயிருக்கின்றன. அதற்காக அவர்களைக் குற்றம் சொல்வது அபத்தமானது.

ஒனுர்கன் உல்கர்: உங்கள் நேரத்தையும் ஞானத்தையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. நீங்கள் புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.

(முற்றும்)

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

மாணவர்களை அடிமைகளாக்கும் பார்ப்பனிய சதி | முனைவர் ரமேஷ் | வீடியோ

புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, அறிவியக்கத்தின் அவசியம் என்ற தலைப்பில் CCCE அமைப்பைச் சேர்ந்த முனைவர் ரமேஷ் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில், இன்றைய நிலையில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் கூட கட்டாயமாக சமஸ்கிருதம் படித்தாக வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்திருப்பதையும் என்பதையும்  ஐ.ஐ.டி., எய்ம்ஸ்., என இந்தியாவின் எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு சமஸ்கிருதத்தையும் புராணக் குப்பைகளும் கட்டாய பாடமாக திணித்து வருவதையும் அம்பலப்படுத்தி பேசினார்.

மேலும், பள்ளி கல்லூரிகளின் மாணவர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கும், இத்தகைய பாடத் திட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம், மாணவர்களை ஒரு அடிமையாக வளர்த்து, அவர்களின் ஆயுள் முழுவதும் அவர்களைச் சுரண்ட முடியும் என்பதையும், இதற்கு எதிராக பேராசிரியர்களும் மாணவர்களும் கல்வியாளர்களும் பெற்றோர்களும் சேர்ந்து ஓர் அமைப்பை உருவாக்காமல் நமக்கும் நம் தலைமுறையினருக்கு விடுதலை கிடையாது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!