Sunday, June 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 467

சீமான் – கந்து வட்டி அன்புச் செழியனை ஆதரிப்பது ஏன் ? கருத்துக் கணிப்பு

66
கேலிச்சித்திரம்: முகிலன்

டிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான கந்து வட்டி மாஃபியா அன்புச் செழியன் தலைமறைவாகி விட்டார். தலை மறைவானாலும் அவரது காசு செல்வாக்கு அங்கிங்கெனாதபடி சகல இடங்களிலும், ஆட்களிடத்திலும் பகிரங்கமாக வெளியே வருகிறது. சீனு ராமசாமி, வெற்றி மாறன், கலைப்புலி தாணு துவங்கி பலரும் அன்புச் செழியனுக்கு பாராட்டுப் பத்திரம் படிக்கின்றனர்.

முத்தாய்ப்பாக நாம் தமிழர் சீமான் களத்திற்கு வந்து விட்டார். “மலையாளிகள், மார்வாடிகள் கொடுத்தால் ஃபைனான்ஸ், தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா…?” என்று அவர் சாடியுள்ளார்.  “முத்தூட் ஃபைனான்ஸ் என்று போடுகிறீர்களே, முத்தூட் கந்து வட்டி என்றா போடுகிறீர்கள்” என்று கொதிக்கிறார்.

வட்டிக்கு கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை எனும் சீமான் ஏழைகளுக்கு மட்டுமல்ல திரைத்துறைக்கும் இந்த கடன் முறை இல்லாமல் வாழ்வு இல்லை என்று சீறுகிறார்.

2011 தேர்தில் அ.தி.மு.க எனும் கொள்ளைக் கூட்டத்தை ஆதரித்து பேசுவதற்கு காசு இல்லாமல் அவரது ‘தம்பி’ ஒருவரிடம் வட்டிக்கு ஐந்து இலட்சம் கடன் வாங்கித்தான் பிரச்சாரம் செய்தாராம். அதே போல அன்பு செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாத நிலைதான் உருவாகும் என்கிறார்.

வெளிப்படையான ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எவையும் அரசு நிர்ணயத்திருக்கின்ற வட்டியைத் தாண்டி வசூலிக்க முடியாது. அப்படி தாண்டினால் அதுதான் கந்து வட்டி என்பது கூட அறிஞர் சீமானுக்கு தெரியவில்லை. சட்டப்பூர்வமாக கடன் கொடுக்கும் வங்கிகள் மக்களிடம் அடித்து வசூலிப்பதை நாம் எதிர்த்துப் போராடுவதைப் போல அன்புச் செழியன் போன்ற மாஃபியாக்களையும் எதிர்த்துப் போராட வேண்டும்.

சீமானோ முன்னதைச் சொல்லி நியாயம் பேசுவது போல அன்புச்செழியனை விடுதலை செய்கிறார். சீமானின் இந்த நிலை குறித்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக இயக்குநர் அமீர் கூறுகிறார்.

ஆனால் தாதுமணல் மாஃபியா வைகுண்டராசனோ, இல்லை மன்னார்குடி மாஃபியா சசிகலா நடராசனோ அனைவரும் சீமானின் மதிப்பிற்குரிய தமிழர்களாக, புரவலர்களாக இருக்கும் போது அன்புச் செழியனும் ஒரு நல்ல தமிழராகத்தானே சீமானுக்கு இருந்தாக வேண்டும்?

இன்றைய கருத்துக் கணிப்பு :

சீமான், கந்து வட்டி மாஃபியா அன்புச் செழியனை ஆதரிப்பது ஏன்?

  • அன்புச் செழியன் ஒரு தமிழர்
  • அன்புச் செழியனிடம் ஏதேனும் ஆதாயம் அடைந்திருக்கலாம்
  • மார்வாடி – மலையாளி ஃபைனான்சியர்களை ஒழிப்பதற்காக
  • திரைத்துறையை சீர்திருத்துவதற்கு
  • ஏதோ நாக்கு பிறழ்ந்து பேசிவிட்டார்

(இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம்)

 

அமித்ஷா நினைத்தால் கவர்னரும் ஆகலாம் – கண்ணையும் மூடலாம் !

1

அமித்ஷா குற்றமற்றவர் என விடுவித்த ‘நீதியரசர்’ சதாசிவத்துக்கு கேரள கவர்னர் பதவி, அமித்ஷா வழக்கில் நேர்மையாக செயல்பட்ட நீதியரசர் ஹர்கிஷன் லோயாவுக்கு மரணம்.

படம் : வேலன்

இணையுங்கள் :


இன்றைய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன ? நவம்பர் 30 நெல்லை பொதுக்கூட்டம்

1

மக்கள் அதிகாரம் – இன்றைய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன?

பொதுக்கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி

நாள் : 30.11.2017, வியாழக்கிழமை – மாலை 5 மணி.
இடம் : சிந்துபூந்துறை, சாலைத்தெரு, திருநெல்வேலி ஜங்ஷன்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
தொடர்புக்கு : 75989 87316.

 

தொழில்நுட்பங்களின் கண்காணிப்பில் மக்கள் !

6

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 6

ரு குறிப்பிட்ட சூழலை முன்கூட்டியே அனுமானிப்பதும் அதன் அடிப்படையிலான திட்டமிடலும் இன்றைய உலகத்தில் அதிசயிக்கத்தக்க புதிய விசயங்கள் அல்ல. இயற்கைப் பேரிடர்களை முன்னறிந்து அந்த சூழலில் எம்மாதிரியான பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள் என்பதைக் கணித்து அதற்குத் தகுந்த பொருட்களை இருப்பு வைத்துக் கொள்வதும், அவற்றின் விலைகளைக் கூட்டி வைப்பதும் சில பத்தாண்டுகளுக்கு முன்பே வால்மார்ட் கண்டுபிடித்த வியாபார ‘நடைமுறை’ தான்.

அதே போல் சமூக செயல்பாட்டாளர்களை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்வதும் வழக்கமான போலீசு நடைமுறை தான். நவம்பர் 2009 -ல் அமெரிக்காவின் தேசிய நீதி மையமும், நீதி உதவிக்கான பணியகமும் இணைந்து, “வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் முன்னறிப் புலனாய்வுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக” மூன்று நாள் மாநாடு ஒன்றை நடத்தின. எதிர்காலத்தில் போலீசின் பணியானது “என்ன நடந்தது என்பதை ஆராய்வதைத் தாண்டி, என்ன நடக்கவிருக்கிறது என்பதைக் கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவமாக இருக்கும்” என்று இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

இந்த அணுகுமுறையும் போலீசுக்குப் புதியதல்ல – இதில் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு இணைந்திருப்பதும், அதனடிப்படையில் காவல், கண்காணிப்பு அமல்படுத்தப்பட இருப்பதுமே புதிய விசயங்கள். மேற்படி மாநாடு நடப்பதற்கு முன் 2007 -ம் ஆண்டு புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் அமெரிக்க பாதுகாப்புச் சட்டம் (Protect America Act) நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு முகமையால் (NSA) துவங்கப்பட்ட பிரிசம் (PRISM) என்கிற இரகசிய திட்டத்தின் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து மின் தரவுகளைச் சேகரிக்கும் பணியை அமெரிக்க அரசு துவங்கியது.

ஒலிக் கோப்புகள், தொலைபேசி அழைப்புகள், மின் அஞ்சல்கள், மின் கோப்புகள், இணையத்தேடுதல் விவரங்கள், முகநூல் மற்றும் டிவிட்டர் பதிவுகள், கைபேசியில் உள்ள பழைய பதிவுகள், இணைப்பு விவரங்கள் என பகுப்பாய்வு செய்யத்தக்க ஒவ்வொரு மின் தரவும் வெரிசான், கூகுள் போன்ற நிறுவனங்களிடமிருந்து அமெரிக்க அரசால் சேகரிக்கப்பட்டு ஊடா மாகானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மீப்பெரும் மின் தரவுக் கிடங்கிற்கு (Big Data lake) அனுப்பப்பட்டன.

மக்களின் ஒப்புதலின்றி அவர்கள் உற்பத்தி செய்த விவரங்களைக் களவாடிய அமெரிக்க உளவு நிறுவனம், அவற்றைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி மொத்த சமூகத்தையும் கண்காணிக்கத் துவங்கியது. கூகுள், ஃபேஸ்புக், லிங்க்ட்- இன், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களிடமிருந்தும், வெரிசான் போன்ற தகவல் தொடர்பு நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட விவரங்களை மொத்தமாகச் சேமித்து தனித் தனி விவரங்களுக்கு இடையிலான இணைப்புகளை ஆராயும் பணி “பிரிசம்” திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

உதாரணமாக, முகநூலில் அரசுக்கு எதிராகப் பதிவிடும் நபர் அமேசானில் எந்தமாதிரியான நூல்களை வாங்குகிறார் என்பதையும் யூடியூபில் எந்த வீடியோக்களைப் பார்வையிடுகிறார் என்பதையும், அவரது கணினியில் எந்த பத்திரிக்கைகளைப் படிக்கிறார் என்பதையும் இணைத்துப் பார்த்தால் அவருடைய சிந்தனைப் போக்கு குறித்த ஒரு மதிப்பீட்டுக்கு வரமுடியும். இதனோடு அவர் செல்பேசியில் யார் யாருடன் பேசுகிறார், அவர்கள் ஒவ்வொருவரும் இதே போன்ற சிந்தனைப் போக்குகள் கொண்டவரா என்பதை அவர்களுடைய விவரங்களையும் அலசிப் புரிந்து கொள்ள முடியும். தொகுப்பாக, குறிப்பிட்ட சிந்தனைப் போக்கு உள்ளவர் எத்தனை பேர் உள்ளனர், இவர்களுக்கிடையே இணைப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். இந்தப் புலனாய்வு விவரங்களைக் கொண்டு அரசுக்கு எதிரான சிந்தனைப் போக்கு உள்ளவர்களைத் தனியே பிரித்தெடுத்துக் கண்காணிப்பது சாத்தியமாகிறது.

கிடைத்த விவரங்களைச் சலித்தெடுத்து மக்களை வகைபிரிப்பதற்கு இது வகை செய்கின்றது. ஆபத்தில்லாதவர், நுகர்பொருள் மோகம் கொண்டவர், பாலியல் பலவீனம் கொண்டவர், அரசுக்கு எதிரான சிந்தனைப் போக்குள்ளவர், சுதந்திரமான லிபரல் சிந்தனை கொண்டவர், வலதுசாரி சிந்தனை கொண்டவர் என மொத்த சமூகத்தையும் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வின் மூலம் – பிரிசம் திட்டத்தின் மூலம் – தரநிர்ணயம் செய்தது அமெரிக்க அரசு. தனது சொந்த மக்களையே அமெரிக்க அரசு கள்ளத்தனமாக உளவு பார்த்து வந்ததையும், அதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த பிரிசம் திட்டத்தையும் 2012-ம் ஆண்டு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் எட்வர்ட் ஸ்னோடன்.

கைபேசிகள், கணினிகள், மருத்துவ உபகரணங்கள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகள் என உலகம் முழுவதும் சுமார் 4.4 ட்ரில்லியன் மின் தரவு உற்பத்தி மூலங்களில் இருந்து 70.4 ட்ரில்லியன் குறுக்கு இணைப்புகள் உள்ளதாக பிரிசம் திட்டத்தின் வரைபடம் ஒன்று சுட்டிக்காட்டுகின்றது. பிரிசம் தவிர உலகம் முழுவதுக்குமான மின் தரவுப் பரிமாற்றத்தைக் கண்காணிக்கவும், மின் தரவுகளை சேகரிக்கவுமான திட்டங்களை அமெரிக்கா வகுத்து செயல்பட்டு வருவதாகவும் இதன் மூலம் 2013 -ம் ஆண்டு வாக்கிலேயே சுமார் 97 பில்லியன் உளவுத் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனம் சேகரித்துள்ளதாகவும் கார்டியன் பத்திரிகை தெரிவிக்கிறது.

சேமிக்கப்பட்டுள்ள மின் தரவுகளைக் கொண்டு ஒரு நிகழ்வை முன்னறிவது துல்லியமானதா? அல்லது சரியானதா?

மனிதனின் சமூக வலைத்தள செயல்பாடுகள், அவன் பேசும் கருத்துக்கள், விரும்பும் வீடியோக்கள், பகிரும் புகைப்படங்கள், பங்கெடுக்கும் விவாதங்களைக் கொண்டு அவனது ஆளுமையில் விஞ்சி நிற்கும் கூறு என்னவென்பதை ஏறத்தாழ கணிக்க முடியும். ஆனால், அந்த ஆளுமை ஒரு குறிப்பிட்ட தருணத்தில் மேல் கையெடுத்து ஒரு சம்பவத்தை நிகழ்த்துமா இல்லையா என்பதை அது மட்டுமே தீர்மானிப்பதில்லை – அந்த மனிதனின் சமூகச் சூழலும் இன்னபிற காரணிகளும் சேர்ந்தே தான் தீர்மானிக்கின்றன.

உதாரணமாக, தினசரி ஐந்தாறு மணி நேரங்கள் பாலியல் சம்பந்தமான ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர் நிச்சயமாக பாலியல் வல்லுறவுக் குற்றமிழைப்பார் என்று கூறமுடியுமா? அந்த நபரை நம்பி வீட்டில் வயதான பெற்றோர்களோ, கான்சரில் பாதிக்கப்பட்ட மனைவியோ, ஊனமுற்ற குழந்தைகளோ இருக்கலாம் அல்லது, குற்றச்செயலில் ஈடுபடுவதற்கான துணிவு அவருக்கு இல்லாமலிருக்கலாம்.

மேலும், ஒரு நபர் பாலியல் வக்கிரச் செயலில் ஈடுபட ஒரு பொருத்தமான தருணம் அமையாமலே கூட போய் விடலாம். அல்லது அப்படி ஒரு தருணம் அமைந்தாலும் அவரது வக்கிரத்துக்கு இலக்காக கூடிய பெண்ணின் தோற்றம்; சம்பந்தப்பட்ட நபரின் தாயைப் போல அமைந்து அவரைத் தடுமாறச் செய்யலாம்.

ஜெயேந்திர சரஸ்வதியையும், சிம்புவையும் செயற்கை நுண்ணறிக் கணினியின் முன் நிறுத்தினால் முந்தையவரை மகாத்மாவாகவும், பிந்தையவரை காமக் கொடூரனாகவும் அது தீர்ப்பளிக்க கூடும். ஆனால், ஜெயேந்திரன் தான் எழுத்தாளர் அனுராதா ரமணனை பாலியல் துன்புறுத்தல் செய்தார்; சங்கரராமனைக் கொன்று பின் நீதியை விலைக்கு வாங்கினார். சிம்புவோ பீப் பாடலைத் தாண்டியதாகத் தெரியவில்லை.

கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களாகட்டும், ஆளும் வர்க்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருவர் ஈடுபடுவதாகட்டும் – ஒருவர் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவாரா இல்லையா என்பதை சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் அவரது செயல்பாடுகளில் இருந்து பெறப்பட்ட மின் தரவுகளின் பகுப்பாய்வுகளின் மூலம் மட்டுமே கணித்து விடமுடியாது.

தொழில்நுட்பங்களின் மூலம் மக்களை மேலிருந்து கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் தன்னளவிலேயே ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கிறது. எனினும், ஆளும் வர்க்கம் அதைத் தான் விரும்புகின்றது. மந்தையில் உள்ள ஆடுகளுக்கு சூடு வைத்து அடையாளமிடுவது போல் மக்களின் மேல் அடையாளக் குறியிட்டு வகை பிரித்து வைக்கும் இந்நடவடிக்கையின் எதிர்கால சாத்தியங்கள் எவ்வாறானதாக இருக்கும்? இதை உலகின் இன்னொரு கோடியில் உள்ள சீன அரசாங்கம் மேற்கொண்ட முன்னோட்டத் திட்டம் (Pilot Project) ஒன்றின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

***

“இன்னும் மூன்றாண்டுகளில் எமது அரசாங்கம் நம்பகமானவர்களை சொர்கத்தின் கீழ் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும்; அதே நேரம் நம்பகமற்றவர்களை ஒரு அடி கூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம்” என்கிறார் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர். மின் தரவுகளை அடிப்படையாக கொண்டு குடிமக்களுக்கு நன்மதிப்புப் புள்ளிகள் (Rating) வழங்கும் திட்டம் ஒன்று சீனாவில் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்க முதலாளித்துவ அரசின் நிர்வாக எந்திரம் நீண்ட அனுபவம் கொண்டது என்பதால் அதன் கண்காணிப்பும் கட்டுப்படுத்தலும் நுட்பமான முறைகளில் இருக்கின்றது –எதேச்சாதிகார சீனாவிலோ மிகவும் வக்கிரமான முறையில் மேலிருந்து திணிக்கப்பட்டுள்ளது.

மேற்குலகத் தயாரிப்புகளான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசாங்கம், தமது நாட்டுக்குள் சொந்தமுறையில் தயாரித்து வளர்த்தெடுக்கப்பட்ட சமூகவலைத்தளங்களையே ஊக்குவிக்கின்றது. பெரும்பாலான சீனர்கள் வெய்போ, வீசேட், ரென்ரென், டௌபன் போன்ற சமூகவலைத்தளங்களையே பயன்படுத்துகின்றனர். இது போன்ற தளங்களின் மூலம் சீன அரசாங்கம் மின் தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வுக்கு உட்படுத்துகின்றது.

ஜியாங்ஜூ மாகாணத்தில் உள்ள சூய்னிங் கவுண்டியில் முன்னோட்ட திட்டமாக (Pilot project) சமூக நன்மதிப்புப் புள்ளிகள் (Social Credit Rating) அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் செலவழிக்கும் விதம், ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்கிற விவரம், பொது இடங்களில் அவர்களது செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும், சமூக வலைத்தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மின் தரவுகள், வங்கிப் பரிவர்த்தனைகள் என பல்வேறு தகவல் மூலங்களில் பெறப்பட்ட தரவுகளையும் பகுப்பாய்வு செய்து சுமார் 1,200 அம்சங்களில் மதிப்பிட்டு அவர்களுக்கான நன்மதிப்புப் புள்ளிகள் தீர்மானிக்கப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக, சூய்னிங் கவுண்டியில் வாழும் குடிமகன் ஒருவருக்கு 1,000 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட நபர் போக்குவரத்து விதிகளை மீறியதற்கு அபராதம் விதிக்கப்படுவதோடு அவரது 1,000 புள்ளிகளில் இருந்து 20 புள்ளிகள் கழித்துக் கொள்ளப்படும். இணையத்தில் ஒருவரை விமர்சித்தால் 100 புள்ளிகள் கழித்துக் கொள்ளப்படும், அதே போல் குடிப்பழக்கம் இருப்பவர்கள் சில புள்ளிகளை அதற்காக இழக்க வேண்டியிருக்கும். எஞ்சிய புள்ளிகளின் அடிப்படையில் குடிமக்கள் A முதல் D வரை தரநிர்ணயம் செய்யப்படுவார்கள். D என நிர்ணயிக்கப்பட்டவர் அரசின் உதவியையோ, அரசு வேலைகளையோ பெற முடியாது. அவர்கள் சுதந்திரமாக உலவுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

ஏராளமான ஓட்டைகளுடன் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்தது – சீன ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரே கூட இத்திட்டத்தை விமர்சிக்கத் துவங்கினர். சாலையோரம் சிறுநீர் கழிக்கும் ஒருவர், லஞ்சம் கொடுக்க கூடாது எனும் சிந்தனை கொண்டவராக இருக்கலாம். அதே போல், குடிப்பழக்கம் கொண்ட ஒருவர் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவராக இருக்கலாம். ஒரு மனிதனின் மொத்த ஆளுமையின் ஒரு சிறு பகுதி தவறானதாக இருப்பதை வைத்தே அவர் மீதான மதிப்பீட்டைச் செய்ய முடியாது என்கிற அடிப்படை புரிதலின்றி சீன அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் பெரும் தோல்வியைத் தழுவியது.

சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம், மக்களிடையே எதிர்ப்புகள் எழுந்ததை ஒட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாலும், மின் தரவுகளைச் சேகரிப்பதும் அதைப் பகுப்பாய்வு செய்வதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சூய்னிங் கவுண்டியில் கிடைத்த அனுபவங்களைப் படிப்பினையாக எடுத்துக் கொண்டு 2020 -ம் ஆண்டு மேலும் சில திருத்தங்களுடன் நாடெங்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளாதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின் தரவுப் பகுப்பாய்வும் செயற்கை நுண்ணறித் திறனும் கைகோர்க்கும் போது ஒவ்வொரு தனிநபரின் எதிர்கால நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும் என்று கண்காணிப்பதற்கான வாய்ப்பை அது ஆளும் வர்க்கங்களுக்கு வழங்குகிறது. எனினும் சமூகத்தை மேலிருந்து நெட்டித் தள்ளுவது சமூகத்தின் எதார்த்த நிலைமைக்கு பொருத்தமற்றது என்பதும் மக்களின் உணர்வுக்கு எதிரானது என்பதும் ஆளும் வர்க்கம் அறியாததல்ல. இருந்த போதிலும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் என்ற குச்சி தனது கரங்களில் இருப்பதால், மக்களை சுய புத்தியற்ற வாத்துக் கூட்டமாக மேய்த்து விட முடியும் என்று முதலாளித்துவம் கருதுகிறது.

(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

_____________

இதனை முழுமையான புத்தகமாக வாங்க

20.00Read more

அச்சு நூல் தேவைப்படுவோர் மலிவு விலைப் பதிப்பை பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) கெட்டி அட்டை புத்தகப் பதிப்பை பெற ரூ 100-ம் (நூல் விலை ரூ. 60, தபால் கட்டணம் ரூ. 40) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும்.

மின்னஞ்சல்
vinavu@gmail.com

 

ஆண்டவன் சொல்றான் அதானி செய்றான் – கருத்துப்படம்

0

ஆஸ்திரேலியா நிலக்கரி டீல் ஓகே ! நெக்ஸ்ட்டு அமெரிக்கா ஆலிவ் ஆயில ஆயூர்வேத ஆயில்னு விக்கலாமா அதானி ‘ஜி’ !

ஆண்டவன் சொல்றான் அதானி செய்யுறான் !

படம் : வேலன்

இணையுங்கள்:

 

நூல் அறிமுகம் : புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் !

0

புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் !

சந்தத்தின் இடிமுழக்கமாக எழுந்த நக்சல்பாரி எழ்ச்சி உள்ளிட்டு, 1960 -ஆம் ஆண்டுகளின் இறுதியில் நடந்த எண்ணற்ற விவசாயிகள் எழுச்சிகள், இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைவில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தின.

பல்வேறு காரணங்களால் இந்த எழுச்சிகள் முன்னேற முடியாமற் போனாலும், இந்திய விவசாயிகளை விலங்கிட்டுள்ள அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் குறித்து இந்த எழுச்சிகள் எழுப்பிய கேள்விகள் இன்னமுன் தீர்க்கப்படாமலேயே நீடிக்கின்றன.

அதன் பிறகு, ஆட்சியாளர்கள் பின்பற்றிய பல்வேறு கொள்கைகளும் குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளாகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கையும் விவசாயப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமல் தோற்றுப் போய்விட்டன.

50 ஆண்டுகளுக்கு முன்பு, தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினையாக விவசாய எழுச்சிகள் எதைச் சுட்டிக்காட்டியதோ, அந்த அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் எனும் பிரச்சினையானது, இன்று மேலும் தீவிரமடைந்து, நாட்டின் மிக முக்கியப் பிரச்சினையாக வளர்ந்துள்ளது.

இப்பிரச்சினையின் சில கூறுகளையும், புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வியையும், விவசாயிகளை ஏய்க்கும் ஆட்சியாளர்களின் மோசடிகளையும், தீர்வுக்கான வழிகளையும் புள்ளிவிவர ஆதாரங்களுடன் இந்நூல் தொகுத்தளிக்கிறது.

நூல் கிடைக்குமிடம்…

கீழைக்காற்று
சென்னை – 02
044- 28412367.

வெளியீடு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

பக்கம் : 208
விலை : 120/- ரூ


செங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் !

1

செங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் !

முன்னுரை:

ரசிய சோசலிசப் புரட்சியின் நேரடி சாட்சியாக இருந்த அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜான் ரீடு எழுதிய “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற நூலில், புரட்சியின் வெற்றி தோற்றுவித்த மகிழ்ச்சிக்கிடையே, உயிர் துறந்த தொழிலாளர்கள், படைவீரர்களின் உடல்களைச் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்த நிகழ்வினை விவரிக்கிறது இப்பகுதி. உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதற்காகத் தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் இறுதி அஞ்சலியில் பங்கேற்க வாசகர்களை அழைக்கிறார் ஜான் ரீடு.

***

ரவு நெடுநேரம் கழித்து நாங்கள் காலியான சாலைகளில் நடந்தோம். இவேர்ஸ்கி வளைவுக்குள் நுழைந்து கிரெம்ளினுக்கு முன்னால் மாபெரும் செஞ்சதுக்கத்துக்கு வந்து சேர்ந்தோம். வசீலி பிளழேன்னி தேவாலயத்தின் நெடிதுயர்ந்த விசித்திர உருவம் தெரிந்தது. பளிச்சிடும் வண்ணங்களில் முறுக்கி விடப்பட்ட அலை வரிகளுடன் கூடிய புகழ் மண்டிய குவி மாடங்கள் இருட்டிலே மங்கலான உருவரை காட்டி நின்றன. அவற்றுக்கு எந்தச் சேதமும் ஏற்பட்டுவிடவில்லை.

சதுக்கத்தின் ஒரு பக்கத்தில் கிரெம்ளினின் கரிய கோபுரங்களும் சுவர்களும் தெரிந்தன. மறைந்திருந்த கணப்புத் தீக்கொழுந்துகளின் செவ்வொளி அந்த உயரமான சுவர்களில் படபடத்து ஆடிற்று. சுவரின் ஒரத்திலிருந்து பேச்சுக் குரல்களும் மண்வெட்டிகள், குத்துக்கோடரிகளின் ஓசையும் அந்தப் பெரும் பரப்பைக் கடந்து வந்து எங்கள் காதில் விழுந்தன. நாங்கள் அவற்றை நோக்கிச் சதுக்கத்தின் குறுக்கே நடந்தோம்.

சுவரடிக்கு அருகே மலைமலையாய் மண்ணும் கற்களும் குவிந்திருந்தன. இவற்றின் மீது ஏறி கீழே இருபெரும் குழிகளுக்குள் பார்த்தோம். பத்து, பதினைந்து அடி ஆழமும் ஐம்பது கஜம் நீளமுள்ள இந்தக் குழிகளுக்குள் பெரிய சொக்கப்பனைகளை எரிய விட்டு, அவற்றின் வெளிச்சத்தில் நூற்றுக்கணக்கான படையாட்களும் தொழிலாளர்களும் நின்று தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

ஜான் ரீடு

இளம் மாணவர் ஒருவர் ஜெர்மன் மொழியில் எங்களுடன் பேசினார். சகோதரத்துவச் சமாதி இது என்று அவர் விளக்கிக் கூறினார். புரட்சிக்காக உயிரைத் தியாகம் புரிந்த ஐந்நூறு பாட்டாளிகளை நாளைக்கு இங்கே அடக்கம் செய்யப் போகிறோம் என்றார். எங்களைக் குழிக்குள் அழைத்துச் சென்றார் அவர். குத்துக் கோடரிகளும் மண்வெட்டிகளும் வேகம் வேகமாய் வேலை செய்தன, மண் மலைகள் உயர்ந்து சென்றன. யாரும் பேசவில்லை. தலைக்கு மேலே இரவு வானத்தில் வீண்மீன்கள் அடர்ந்திருந்தன. பழம் பெரும் கிரெம்ளின் சுவர் வானைத் தொடும்படி உயர்ந்து சென்றது.

“புனிதமான இடம் இது. அனைத்து ருஷ்யாவிலும் மிகப் புனிதமான இவ்விடத்தில் எமது மிகப்பெரும் புனிதர்களை அடக்கம் செய்யப் போகிறோம்” என்றார் அம்மாணவர். ஜார்களுடைய சமாதிகள் இருக்கும் இவ்விடத்தில் எங்களது ஜாராகிய மக்கள் இங்கே துஞ்சப் போகிறார்கள்…. அம்மாணவரின் கை கவணக் கட்டுக்குள் இருந்தது, போரில் குண்டடிபட்டிருந்தது. அவர் அதைப் பார்த்துக் கொண்டார். மத்திய காலத்திய முடியாட்சியினை நாங்கள் சகித்துக் கொண்டிருந்தோமென்று வெளிநாட்டவர்களாகிய நீங்கள் எங்களை இளக்காரமாய்ப் பார்க்கிறீர்கள் என்றார். ஆனால், உலகிலுள்ள கொடுங்கோலன் ஜார் மட்டுமல்ல, முதலாளித்துவம் இன்னுங்கூட மோசமானது, உலகின் எல்லா நாடுகளிலும் முதலாளித்துவமே பேரரசன் என்பதை நாங்கள் கண்டு கொண்டு செயல்பட்டோம்… ருஷ்யப் புரட்சியின் போர்த்தந்திரம் மிகச் சிறந்தது…

நாங்கள் அவ்விடத்தை விட்டு நகர்கையில், குழியிலிருந்த தொழிலாளர்கள் அந்தக் குளிரிலும் வியர்த்து வழிய ஓய்ந்து போய் மேலே ஏறத் தொடங்கினர். செஞ்சதுக்கத்தின் குறுக்கே கரிய வரிசையில் ஆட்கள் வேகமாக நடந்து வந்தார்கள். அவர்கள் மளமளவென்று குழிக்குள் இறங்கி மண்வெட்டிகளையும் குத்துக்கோடரிகளையும் எடுத்துக் கொண்டு வாய் பேசாமல் தோண்ட ஆரம்பித்தார்கள்…

இவ்விதம் அன்று இரவு முழுதும் மக்களின் தொண்டர்கள் ஒருவரையொருவர் விடுவித்துக் கொண்டு ஓயாமல் முழு வேகத்தில் வேலை செய்தார்கள்; உதயத்தின் குளிர் ஒளி வெண்பனி மூடிய அந்தப் பெரும் சதுக்கத்தின் முழுப் பரப்பையும் தெரியச் செய்தது. சகோதரத்துவச் சமாதியின் பழுப்பு நிறக் குழிகள் தோண்டி முடிக்கப்பட்டுவிட்டன.

விடியும் முன்பே நாங்கள் விழித்தெழுந்து இருண்ட சாலைகளின் வழியே ஸ்கோபெலெவ் சதுக்கத்துக்கு விரைந்தோம். மாபெரும் நகரில் யாரும் கண்ணில்படவில்லை; கடுங்காற்று மூண்டெழப் போவது போல தொலைவிலும்  அருகாமையிலும் ஒருவித சலசலப்பு கேட்டது. மங்கலான வெளிச்சத்தில் சோவியத்தின் தலைமையகத்துக்கு எதிரே ஆடவரும் பெண்டிருமான ஒரு சிறு திரள் பொன்னிற எழுத்துகள் பொறிக்கப்பட்ட செம்பதாகைகளை வைத்து கொண்டு நின்றது தெரிந்தது. மாஸ்கோ சோவியத்துகளின் மத்தியச் செயற்கமிட்டியின் பதாகைகள் அவை. வெளிச்சம் அதிகமாயிற்று. தொலைவிலே சலசலப்பு சப்தம் ஆழமாகி, இடையறாத பேரிரைச்சலாகப் பெருகிற்று. நகரம் கிளர்ந்தெழுந்து கொண்டிருந்தது. தலைக்கு மேலே பதாகைகள் படபடக்க நாங்கள் புறப்பட்டு திவெர் ஸ்காயா சாலை வழியே சென்றோம்.

நாங்கள் சென்ற வழியில் தெருக்களிலிருந்த சிறிய திருக்கோயில்கள் யாவும் இழுத்து மூடப்பட்டு இருட்டாய் இருந்தன. இவேர்ஸ்கயா தேவ அன்னையின் கோயிலுங்கூட மூடப்பட்டிருந்தது. ஒவ்வொரு புதிய ஜாரும் கிரெம்ளினுக்குச்  சென்று முடி சூட்டிக் கொள்ளும் முன்பு இந்தக் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். இரவும் பகலுமாய் எந்நேரமும் இது திறந்தே இருக்கும்; எப்போதும் கூட்டமாகவே இருக்கும்; பக்தர்கள் ஏற்றி வைக்கும் மெழுகுத் திரிகளின் ஒளி தேவ உருவங்களின் தங்கத்திலும் வெள்ளியிலும் மணிக்கற்களிலும் பளிச்சிட்டுத் தகதகத்துக் கொண்டிருக்கும். நெப்போலியன் முன்பு மாஸ்கோ வந்தபோது அணைக்கப்பட்டதற்குப் பிற்பாடு, இப்போதுதான் இந்த மெழுகுத் திரிகள் முதன் முதலாக அணைக்கப்பட்டிருந்ததாய்க் கூறினார்கள்.

புனித சத்திய சமயச் சபை தனது கடாட்சத்தின் ஒளி மாஸ்கோவுக்குக் கிட்டாதபடிச் செய்தது; பீரங்கிக் குண்டுகள் கொண்டு கிரெம்ளினைத் தாக்கியவர்களின், பக்திநெறி அறியாத இந்த விரியன் பாம்புகளின் உறைவிடமாகிவிட்ட இந்த மாஸ்கோவுக்குக் கிட்டாதபடிச் செய்தது. திருக்கோயில்கள் இருண்டு, நிசப்தமும் குளிரும் குடி கொண்டனவாகிவிட்டன: பாதிரிமார்கள் மறைந்து விட்டார்கள். செஞ்சவ அடக்கத்தின் போது சமயச்சபைப் பெரியவர்கள் பிரார்த்தனை நடத்தவில்லை; நீத்தாருக்குச் சமயச் சடங்கு ஏதும் இல்லை; தேவநிந்தனையாளர்களது சமாதியின் முன்னால் பிரார்த்தனைகள் வேண்டியதில்லை. மாஸ்கோவின் தலைமை மேற்றிராணியார் தீஹன் விரைவில் சோவியத்துகளைச் சமய விலக்கம் செய்யவிருந்தார்…

கடைகளும் மூடப்பட்டுதான் இருந்தன, சொத்துடைத்த வர்க்கத்தார் வீட்டிலே இருந்தார்கள் – ஆனால், இதற்குக் காரணம் வேறொன்று. மக்களது தினமாகும் இது.  மக்கள் எல்லாரும் தெருக்களிலே பிரவாகமெடுக்கப் போகிறார்கள் என்னும் செய்தி கடல் அலையென எழுந்து இடி முழக்கமிட்டது…

இவேர்ஸ்கி வளைவு வழியே மக்கள் வெள்ளம் ஏற்கெனவே கரைபுரண்டு ஒட ஆரம்பித்துவிட்டது. ஆயிரம் ஆயிரமாய் மக்கள் திரள் செஞ்சதுக்கத்தின் பெரும் பரப்பெங்கும் குழுமி வந்தது, முன்பெல்லாம் இவேர்ஸ்கி திருக்கோயிலின் எதிரே செல்லும் போது எல்லாரும் சிலுவைக் குறியிட்டுக் கொள்வது வழக்கம். ஆனால், இப்போது கூட்டத்தினர் அதைக் கடந்து சென்றபோது அதைக் கவனித்ததாகவே தெரியவில்லை…

கிரெம்ளின் சுவர் அருகே நெருக்கமாய் நின்றிருந்த கூட்டத்துக்குள் புகுந்து நாங்கள் இடித்துத் தள்ளிக் கொண்டு முன்னே சென்று மண் மலைகளில் ஒன்றின் மீது ஏறி நின்றோம். ஏற்கெனவே அங்கே பலரும் இருந்தார்கள், அவர்களிடையே முராலவும் ஒருவர் – மாஸ்கோவின் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த படையாள் அவர்; தாடியுடைய இதமான முகமும் நெட்டையான எளிய தோற்றமும் கொண்டவர்.

செஞ்சதுக்கத்துக்கு வந்து சேரும் எல்லாத் தெருக்களிலும் மக்கள் பெருக்கெடுத்து வந்து கொண்டிருந்தார்கள். ஆயிரம் ஆயிரமானோர், பஞ்சையருக்கும் உழைப்பாளருக்குமுரிய தோற்றமுடையோர் திரண்டெழுந்து வந்து கொண்டிருந்தார்கள். இராணுவ வாத்தியக் குழு சர்வதேசிய கீதம் இசைத்து நடைபோட்டு நெருங்கி வந்து கொண்டிருந்தது. தன்முனைப்பான முறையில் ஏனையோரும் சேர்ந்து கொண்டு இசைக்க அந்தக் கீதம் மக்கள் வெள்ளத்தின் மீது மெதுவாகவும் இதமான உருக்கத்தோடும் காற்றலைகள் போல் பரவிச் சென்றது. கிரெம்ளின் சுவரின் உச்சியிலிருந்து பிரம்மாண்டமான பதாகைகள் கீழே தரைக்கு விரித்து விடப்பட்டன. அந்தச் செம்பதாகைகளில் பொன்னிலும் வெள்ளையிலுமான எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன: “உலக சோசலிசப் புரட்சியின் முன்னணிப் படையைச் சேர்ந்த வீரத் தியாகிகள்,  உலகத் தொழிலாளர்களது சகோதரத்துவம் நீடுழி வாழ்க!”

சதுக்கத்துக்குள் வீசிய குளிர்காற்று பதாகைகளை விம்மிப் புடைத்தெழச் செய்தது. நகரின் தொலைப்பகுதிகளிலிருந்தும் பற்பல ஆலைகளிலிருந்தும் தொழிலாளர்கள் தமது வீரத் தியாகிகளைச் சுமந்து கொண்டு வந்தார்கள். வளைவின் வழியே அவர்கள் வந்து கொண்டிருந்ததை, அவர்களது பதாகைகள் பளிச்சிட்டதையும், அவர்கள் சுமந்து வந்த சவப்பெட்டிகளின் இரத்தச் சிவப்பையும் பார்க்க முடிந்தது. இந்தப் பெட்டிகள் மட்ட ரகமானவை, இழைக்கபடாத பலகை கொண்டு செய்யப்பட்டு, கருஞ்சிவப்பு வர்ணம் பூசப்பட்டவை. முரட்டு ஆட்கள் அவற்றை உயரத் தம் தோள் மீது தூக்கி வந்தனர்.

முகத்தில் கண்ணீர் வழிந்தோட அவர்கள் நடை போட்டனர், அவர்களுக்குப் பின்னால் வந்த பெண்கள் விம்மியழுது கொண்டும் அலறிக் கொண்டுமிருந்தார்கள் அல்லது உயிரற்று வெள்ளையாய் வெளுத்துப் போன முகங்களுடன் விரைப்பாய் நடந்தார்கள். சில சவப்பெட்டிகள் திறந்திருந்தன; அவற்றின் மூடிகளைப் பின்னால் வந்தவர்கள் எடுத்து வந்தார்கள். ஏனையவை பொன் அல்லது வெள்ளிச் சரிகைத் துணிகளால் மூடப்பட்டிருந்தன, அல்லது உச்சியில் படையாளின் தொப்பி வைத்து அடிக்கப்பட்டிருந்தது. பல பெட்டிகளின் மீது கோரமான செயற்கைப் பூ வளையங்கள் இருந்தன.

கூட்டத்தினர் விலகி நின்று வழிவிட்டனர். இப்படித் தோன்றி பிற்பாடு மூடிக் கொண்டுவிட்ட வளைந்து நெளிந்து சென்ற சந்து வழியே இந்த ஊர்வலம் மெல்ல எங்களை நோக்கி நகர்ந்து வந்தது. வளைவு வழியே முடிவில்லாத நீள் வரிசையில் பதாகைகள் வந்து கொண்டிருந்தன. சிவப்பின் எல்லாவிதமான சாயல்களிலும் அமைந்த இந்தப் பதாகைகளில் வெள்ளியிலும் பொன்னிலுமான எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன, இவற்றின் உச்சியிலிருந்து தோரணங்கள் தொங்கின. கறுப்பில் வெள்ளை எழுத்துகளைக் கொண்ட அராஜகவாதிகளது கொடிகள் சிலவும் காணப்பட்டன. வாத்தியக் குழு புரட்சிகர சவ அடக்க ஊர்வல கீதத்தை இசைத்தது. நெரிசலாய் வெற்றுத் தலையுடன் நின்ற பெருங்கூட்டத்தினர் கனத்த பெருங்குரலில் பாட, ஊர்வலத்தினர் கரகரக்கும் குரலில் விம்மித் திணறியவாறு பாடினர்.

ஆலைத் தொழிலாளர்களது திரள்களுக்கு இடையிடையே படையாட்களது குழுக்கள் தமது சவப்பெட்டிகளைச் சுமந்து கொண்டு வந்தன. குதிரைப் படையினர் குதிரையில் மரியாதை அணி வகுத்து வந்தார்கள். பீரங்கிப் படையினரும் வந்தார்கள். அவர்களுடைய பீரங்கி சிவப்பு, கறுப்புத் துணிகளால் என்றென்றுக்குமாய் என்று நினைக்கும்படி – மூடப்பட்டிருந்தது. “மூன்றாவது அகிலம் நீடூழி வாழ்க!  நேர்மையான, ஜனநாயகமான, பொது சமாதானம் வேண்டும்” – கோஷங்களைக் கொண்ட பதாகைகளை இவர்கள் எடுத்து வந்தார்கள்.

சவப்பெட்டிகளைச் சுமந்து கொண்டு ஊர்வலத்தினர் மெதுவாக நகர்ந்து சமாதியின் ஓரத்தை வந்தடைந்தனர். பெட்டிகளைத் தூக்கி வந்தவர்கள் தமது சுமையுடன் மேட்டின் மீது ஏறிக் குழிக்குள் இறங்கினார்கள். தூக்கி வந்தவர்களில் பலரும் பெண்கள்-கட்டை குட்டையான, வலுமிக்க பாட்டாளி வர்க்கப் பெண்கள். மாண்டோரின் பின்னால் ஏனைய பெண்கள் வந்தார்கள் – உள்ளம் ஒடிந்து போன இளம் பெண்கள், அல்லது வயது முதிர்ந்து சுருக்கங்கள் விழுந்த தாய்மார்கள் இவர்கள்.  அடிபட்ட விலங்குகளைப் போல் இந்தத் தாய்மார்கள் முனகிச் சப்தம் எழுப்பியவாறு தமது புதல்வர்களையும் கணவன்மார்களையும் பின்தொடர்ந்து சகோதரத்துவச் சமாதிக்குள் இறங்கினார்கள். இரக்கங்கொண்ட கரங்கள் அவர்களை அணைத்துத் தடுத்த போது கதறிக் கூச்சலிட்டு அழுதார்கள். ஏழைகள் ஒருவரையொருவர் அப்படி உளமார நேசிப்பவர்கள்!

அன்று பகல் முழுதும் சவ அடக்க ஊர்வலம் ஓயாமல் வந்து சென்றது. இவேர்ஸ்கி வளைவின் வழியே உள்ளே நுழைந்து நிக்கோல்ஸ்கயா வழியே போய்ச் சேர்ந்தது. ஆற்று வெள்ளம் போல் செம்பதாகைகள் சென்று கொண்டிருந்தன. ஐம்பதாயிரம் மக்கள் சதுக்கத்திலே குழுமி நிற்க, அவை நம்பிக்கையையும் சகோதரத்துவத்தையும் மகத்தான தொலைநோக்குடைத்த வாக்குகளையும் வலியுறுத்தும் சொற்களைத் தாங்கிச் சென்றன. உலகின் தொழிலாளர்களும் இனி வருங்காலத்தில் தோன்றப் போகும் அவர்களது சந்ததியினர் எல்லோரும் கண் கொண்டு இக்காட்சியைப் பார்த்திருக்க, சென்றது இந்த ஊர்வலம்….

ஒவ்வொன்றாக ஐந்நூறு சவப்பெட்டிகள் குழிகளினுள் வைக்கப்பட்டன. இருட்டாகி வந்தது, அப்போதும் தொடர்ந்து கொடிகளும் பதாகைகளும் தணிந்து தொங்கியும், படபடத்துப் புடைத்தெழுந்தும் வந்து கொண்டிருந்தன.  வாத்தியக் குழு சவ அடக்க ஊர்வல கீதமிசைத்தது. அம்மாபெரும் கூட்டம் அனைத்தும் சேர்ந்து இசைத்தது.  சமாதிக்கு மேல் இருந்த இலைகளில்லா மரக்கிளைகளில் விசித்திரமான பல்வண்ண மலர்க் கொத்துகள் போல் மலர் வளையங்கள் தொங்கவிடப்பட்டன. இரு நூறு ஆடவர்கள் மண்வெட்டியால் மண்ணைக் குழிகளுக்குள் தள்ள ஆரம்பித்தார்கள். சவப் பெட்டிகள் மீது விழுந்து அது எழுப்பிய ஆழமான தடதடப்பு, கூட்டத்தினர் இசைத்த கீதத்துடன் சேர்ந்து தணிவாய் ஒலித்தது….

விளக்குகள் ஏற்றப்பட்டன. கடைசிப் பதாகைகளும் கொடிகளும் கடந்து சென்றன. அழுது புலம்பிய கடைசிப் பெண்களும் மெல்ல விலகிச் சென்றார்கள். நெஞ்சு பொறுக்காத சோகத்துடன் திரும்பிப் பார்த்தவாறு நடந்தார்கள். பாட்டாளி வர்க்கப் பெருவெள்ளம் அந்தப் பெரிய சதுக்கத் திலிருந்து சிறிது சிறிதாக வடிந்து அடங்கிற்று…

பக்தி உணர்ச்சி வாய்ந்த ருஷ்ய மக்கள் விண்ணுலகை அடைய இனி பாதிரிமார்கள் வந்திருந்து பிரார்த்தனை நடத்தத் தேவையில்லை என்பதை நான் திடுமென உணர்ந்தேன். விண்ணுலகம் வழங்கக்கூடியதைக் காட்டிலும் ஒளி படைத்ததான ஒர் அருளாட்சியை இங்கே இம்மண்ணுலகில் அமைத்திடுகிறார்கள் இவர்கள், இதற்காக இன்னுயிரை அளிப்பது தனிப்பெரும் சிறப்பாகும் என்பது தெரிந்து….

-புதிய ஜனநாயகம், நவம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

 

கடனைக் கட்டாதே ! கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு ! கரூர் ஆர்ப்பாட்டம்

0

கடனைக் கட்டாதே ! கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு !! கண்டன ஆர்ப்பாட்டம்

டந்த 15.11.2017 கரூர் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மேற்கண்ட தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டதிற்கு மக்கள் அதிகாரம் கரூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமையேற்று நடத்தினர். பறையிசையுடன் துவங்கிய ஆர்ப்பாட்டம் மக்களை வரவழைத்தது.

போலீசின் அயோக்கியத்தனத்தை கிழிக்க போறாங்கன்னு தெரிந்து காவல்துறை ஆர்ப்பாட்டத்தை கலைத்து விட சிந்தித்தது. ஆர்ப்பாட்டத்தில் நாற்காலி போடக்கூடாது இதற்கெல்லாம் அனுமதி இல்லை என்றது. பெண்கள்,குழந்தைகள்,பெரியவர்கள் எல்லாம் கால் வலிக்க நிற்க வேண்டுமா சொல்லுங்க என  தோழர்கள், வழக்கறிஞர்கள் கேட்க சரி எப்படியோ செய்யுங்க என்றது.

“நெல்லை இசக்கி முத்து மரணத்துக்கு காரணமான கலெக்டர், எஸ்.பி ஆகியோரை கைது செய்ய வேண்டுமென சுவரொட்டி ஒட்டிய தோழர்களை வழக்கு போட்டு சிறையில் தள்ளியது கரூர் நகர காவல்துறை.”

கருத்து சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை போன்றவை பெயரளவுக்குதான் அதுவும் ஆளும் கட்சிகளுக்குதான்! போராடுகின்ற மக்களுக்கும், அமைப்புகளுக்கும் இல்லை. இந்த அடக்குமுறையெல்லாம் கொஞ்சம் நாள் தான்? மக்கள் தங்கள் அதிகாரத்தை எடுக்கும் போது காவல்துறையின் வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வரும் என்று தலைமையுரையில் தோழர் சக்திவேல் பேசினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய கரூர் பகுதி மக்கள் அதிகாரத்தின் தோழர் இராமசாமி அவர்கள் “கந்து வட்டி கும்பலின் பிறப்பிடம் கரூர் மாவட்டம், அரவாக்குறிச்சி மண்மாரி கிராமம்தான். இந்த கரூர் மாவட்டம்தான் கந்து வட்டிக்கு தாய் வீடு போல உள்ளது. குறிப்பிட்ட சாதியினர் இந்தியா முழுவதும் வட்டிக்கு விட்டு கரூரில் பல மாடி கொண்ட கண்ணாடி மாளிகை கட்டியதுதான் உதாரணம்.

பல குடும்பங்களின் வறுமையை பயன்படுத்தி வட்டி தொழிலில் ஊறி திளைத்து வருகின்றனர் ரவுடிகள். இவர்களுக்கு அதிகாரிகள், போலீசு பாதுகாப்பாக உள்ளது. இவர்களின் கொடுமையால் பலரும் இறந்து உள்ளனர். மக்கள் அமைப்பாக திரண்டு போராடினால் கந்து வட்டி காரர்களை ஒழிக்க முடியும்” என்று பேசினார்.

பிறகு உரையாற்றிய கரூர் பகுதி தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் தோழர் கு.கி.தனபால் “மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர்கள் போஸ்டர்கள் ஒட்டியதற்கு வழக்கு போட்டு சிறையில் தள்ளியதை கண்டித்து பேசினார். வட்டி கொடுமைக்கு முடிவு கட்ட ஒன்று திரண்டு போராடுவோம்” என்றார்.

கரூர் பகுதி CPI(ML) விடுதலை அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் தோழர் மு.ராமச்சந்திரன் “கந்து வட்டிக்கெதிராக இடதுசாரி அமைப்புகள் ஒன்று சேர்ந்துள்ளோம். காவல்துறை நடவடிக்கை கந்துவட்டி நபர்களுக்கு ஆதரவாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கின்றோம். தொழிற்சங்கம் வைத்து போராடினாலும் போலீசு மிரட்டுவதும் உள்ளது. நமது ஒருங்கிணைந்த நடவடிக்கை அடக்கு முறைக்கு எதிராக மாறும். இணைந்து செய்வோம்!” என்று பேசினார்.

கரூர் பகுதி வழக்கறிஞர் தோழர் புகழேந்தி பேசுகையில் “போஸ்டர் ஒட்டிய மக்கள் அதிகார தோழர்களை வழக்கு போட்டு சிறையில் தள்ளியது, “இங்க அடிச்சா அங்க வலிப்பதை” போல நெல்லை சம்பவத்தையொட்டி கலெக்டர், எஸ்.பி -ஐ கைது செய் என்றால் இந்த குற்றவாளிகளுக்கு வலிக்கிது என்றும். கந்துவட்டி கொடுமைக்கு குடும்பமே தீயில் கருகியது கண்டு எந்தவித உணர்வின்றி மனசாட்சி இல்லாமல் வழக்கு போடுவதை கண்டித்தார்.”

ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் முல்லையரசு பேசுகையில் “சாதாரண கூலி தொழிலாளர்கள் கந்து வட்டிக்கு வாங்கி குடும்பங்கள் மிகவும் பாதிக்கிறது பல வட்டிகள் உள்ளது ராக்கெட் வட்டி, ரன்வட்டி, மீட்டர்வட்டி என அட்டைபோல உறிஞ்சுகின்றனர். இந்த கொடுமைக்கு முடிவு கட்ட மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து செயல்படுவோம்!” என்றார்.

கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட கரூர் மாவட்டம் கடவூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கங்கா ஸ்ரீ என்ற பெண்மணி பேசினார். அவர் “இந்த போலீசு கந்துவட்டி பிரச்சனையை தீர்த்து தரவில்லை. பலமுறை புகார் செய்தும் எவரும் கண்டு கொள்ளவில்லை. அதனால்தான் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கிறாங்க. மக்கள் அதிகாரத்தை எடுக்கனுங்க அதான் தீர்வு போலீசு எல்லாம் உதவாது” என்றார்.

அடுத்து பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் பேசுகையில் “கந்து வட்டியை ஒழிக்க கடனைக் கட்டாதே கலகம் செய்! என்ற முழக்கம் அரசுக்கு கோரிக்கை வைப்பதல்ல? மக்களுக்கு வைக்கின்ற முழக்கம். ஏன் என்றால் கந்து வட்டியை இந்த அரசு ஒழிக்காது நெல்லையில் கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இசக்கி முத்து குடும்பம் தீக்கீரையானது. இப்படி பல குடும்பங்கள் பலியாகின்றன.

ஏன் மக்கள் கந்து வட்டி வாங்குகின்றனர். விவசாயம் இல்லை, வேலையில்லை, விலைவாசி உயர்வு, வாழவழியில்லாமல் கந்து வட்டி வாங்குறான் இந்த நிலைக்கு தள்ளியது அரசு. விவசாயிகளின் மொத்த கடன் முதலாளிகளின் கடனில் 1% தான் அதை தள்ளுபடி செய்யவில்லை மோடி – எடப்பாடி அரசு. ஆறு இலட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறது முதலாளிகளுக்கு.

கடன் கொடுப்பது கூட மக்களுக்கு கடன் கட்ட முடியுமா? என்று பார்த்துதான் கொடுக்கிறது வங்கிகள். மக்களை விளிம்பு நிலைக்கு தள்ளியது இந்த அரசுதான் கந்து வட்டி கொடுமையை தடுக்கவில்லை போலீசு. அதிகாரிகள்,போலீசு துறையே ஒரு கிரிமினல் மாஃபியா கும்பலாக உள்ளது. இவர்கள் கந்துவட்டியை ஒழிப்பார்களா?

கரூரில் உள்ள தரைக்கடை முதல் சாதாரண கடை வியாபாரிகளிடம் மாமுல் வாங்குவது, லைசென்ஸ், ஹெல்மெட் பிடிப்பதாக வசூல்வேட்டை நடத்துவது சிவகங்கை சிறுமி பாலியல் கொடுமை என பாதிக்கப்பட்டு புகார் கொடுத்தால் ஏட்டு முதல் ஐ.ஜி வரை பல நாட்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வது. பாண்டிச்சேரியில் கிரிமினல் கும்பலுடன் கூட்டு சேர்ந்து போலீசு கொள்ளையடித்தது.

கரூரில் ஹவாலா ஊழல் பணத்தை காவல் ஆய்வாளர் ஆட்டைய போட்டது. மணல் கொள்ளையர்களிடம் இலஞ்சம் பெறுவது போன்ற பல மோசடி, பித்தலாட்டம் போலீசுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன யோக்கியதை உள்ளது. இந்த கட்டமைப்பு முழுவதும் தோல்வியுற்று, எதிர்நிலையாக மாறிவிட்டது. இதை நம்பி பலனில்லை. மக்கள் அதிகாரத்தில் உறுப்பினராக சேருங்கள் அப்போதுதான் கந்து வட்டியை ஒழிக்க முடியும்” என்று பேசினார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் அவர்கள் பேசுகையில் “கந்து வட்டி கொடுமையால் நெல்லையில் ஒரு குடும்பமே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான அரசை கண்டித்து  போஸ்டர் ஒட்டியதற்காக கரூர் பகுதி தோழர் பாக்கியராஜ் மீது வழக்கு போட்டு சிறையில் தள்ளியது போலீசு.

இந்த நாட்டில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஜனநாயகம் என்ற கொஞ்ச நஞ்ச உரிமை கூட காலில் போட்டு மித்திக்கிறது இந்த அரசு. ஆனால் கவர்னர் கோவையில் திடீர் என்று ஆய்வு செய்கிறார். அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது என்று பேசுகின்றனர். ஆனால் இங்கு போஸ்டர் ஒட்டி ஒரு கருத்து தெரிவிக்க கூட உரிமை இல்லை.

இந்த சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள். மோடி வாய்கிழிய பல வெளிநாட்டு கூட்டங்களில் பேசுகின்றார். ஆனால் அதே சட்டத்தை கரூரில் உள்ள காவல்துறையினர் மதிப்பதில்லை. தோழர் பாக்கியராஜை கைது செய்யும் போது ஆய்வாளர் நீயெல்லாம் ஒரு ஆளு, உன்னை தேடி வந்து கைது செய்ய வேண்டியது உள்ளது. என்று அத்துமீறி வீட்டில் நுழைந்து எளக்காரமாக பேசினார். எங்கள் தோழர் பாக்கியராஜ்  பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

மக்களுக்காக போராட்டம் என தன் வாழ்கையையே தியாகம் செய்கிறார். ஆனால் இந்த காவல்துறை, மாமுல் வாங்கிக் கொண்டு கஞ்சா விற்பவனுக்கும் மணல் கொள்ளையனுக்கு ஆதரவாக இருப்பது தியாகமா? என சாடினார்.

கந்து வட்டிக்கு மக்கள் பணம் வாங்கி விளிம்பு நிலையில் உள்ளனர். மக்களை பாதுகாக்க, ரவுடிகளை ஒழிக்க இந்த அரசு வக்கற்று, தகுதியிழந்து, தோற்றுப்போய் உள்ளது இதை நம்பி எதுவும் செய்ய முடியாது என்றார்.

செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்கள் எல்லாம் கோடி கோடியாய் சொத்து சேர்த்து வைத்துள்ளான். கரூரில் பல வகையில் மோசடியாக சேர்த்த சொத்துக்கள், இவர்கள்தான் கந்து வட்டி கும்பலின் புகலிடம். கந்து வட்டி மட்டுமல்ல பல நிறுவனங்களின் டிவி விளம்பரத்தில் வாட்டிக்கா கோல்டு லோன் என்ற பெயரில் சேமித்து வைத்திருக்கும் தங்க நகைகளை கூட பொது மக்களிடம் விட்டு வைப்பதில்லை. அடகு வைங்க என ஆட்டைய போட விளம்பரம். இதுவும் கந்து வட்டிக் கணக்கில் வராத கருப்பு பணம்தான்.

விஜய் மல்லையா போன்ற முதலாளிகளுக்கு கடன் கொடுத்து ஏப்பம் விட்டு போனவர்களை பிடிக்கவில்லை இந்த அரசு. ஆனால் திருவண்ணாமலையில் கடன் கட்டாத விவசாயியை SBI வங்கி குண்டர்களை வைத்து அடித்தே கொலை செய்து இருக்கிறது. இதுதான் இந்தியாவின் நம்பர் ஒன் வங்கி என பெயர் எடுத்தது. இது தான் மோடி அரசின் யோக்கியதை.
மக்களே தங்கள் அதிகாரத்தை கையிலெடுத்து போராடும்போது மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழமுடியும். இன்று ரெய்டு என்று CBI அதிகாரிகள் 2000 -பேர் வரலாறு காணாத வகையில் அதிரடி ரெய்டு என்று தினகரன், சசிகலா, ஜெயலலிதா வீடுகளில் 1,493 கோடி சொத்துக்களையும், ஆவணங்களையும் கைப்பற்றியதாக கூறுகின்றனர்.

ஆனால் ஜெயாவின் கொடநாடு எஸ்டேட்டின் மதிப்பு 5,000கோடி, சிறுதாவூர் போன்ற பல பங்களாக்களின் மதிப்போ பல இலட்சம் கோடி வரும் இதை யார் பறிமுதல் செய்வது? யாரை ஏமாற்ற மோடி அரசின் ரெய்டு நாடகம்? மோடி அரசு மற்றும் எடப்பாடி அடிமை அரசை எதிர்த்து போராட மக்கள் அதிகாரம் அமைப்பில் இணையுங்கள்!” என்று பேசினார்.

ம.க.இ.க கலைக்குழு தோழர்களின் புரட்சிகர பாடல்கள் மோடி, எடப்பாடி அரசின் அயோக்கியத்தனத்தையும், பித்தலாட்டத்தையும் அம்பலப்படுத்தியது.

இறுதியாக  மக்கள் அதிகாரத்தின் கரூர் பகுதி தோழர் சுதர்சனம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு முழக்கத்தின் மூலம் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கந்து வட்டிக் கொடுமையை முடிவு கட்ட மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கரூர். தொடர்புக்கு : 97913 01097.


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

புரட்சியின் தருணங்கள் – திரைச் சித்திரம் !

4

கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு, ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு சிறப்புக் கூட்டம்,  கடந்த நவம்பர் 19, 2017 அன்று சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் இரசியப் புரட்சியின் சிறப்பு குறித்த இத்திரைச்சித்திரம் வினவு இணையதளத்தின் சார்பில் திரையிடப்பட்டது.

இப்படத்தில் உலகம் முழுவதும் முதலாளித்துவத்தின் அகோர இலாபவெறிக்காக சூறையாடப்படும் உலக மக்களின் நிலை குறித்து விளக்கி அதிலிருந்து தப்புவதற்கான வழி என்ன என்ற கேள்வியை முன்வைக்கிறது. சோசலிசப் புரட்சிக்கு முந்தைய இரசியாவின் நிலையையும் அதன் தொடர்ச்சியாக அங்கு தோழர் லெனின் தலைமையில் நடைபெற்ற புரட்சியையும் கண் முன் நிறுத்துகிறது.

மேலும், இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பாசிசத்திலிருந்து இந்த உலகைக் காத்ததையும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. சோசலிசத்தினால் ஒரு நாட்டில் எத்தகைய சாதனைகளை சாதிக்க முடியும் என்பதையும், சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையும் கண் முன்னே காட்டுகிறது.

இப்படம் நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தி ரசிய சோசலிசப் புரட்சியைப் போன்று நம் நாட்டில் எப்போது வரும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

பாருங்கள் பகிருங்கள் !


இந்த திரைச் சித்திரம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பாலாவின் நாச்சியார் – நக்கலைட்சின் நோச்சியார் !

7

யக்குநர் பாலாவின் நாச்சியார் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. பிதமாகன் விக்ரம் போல ஜி.வி பிரகாஷ் ஓடுகிறார், ஆடுகிறார், பார்க்கிறார். ஜோதிகா கடைசியில் தே … பயலே என்கிறார். இத்தகைய ஆணாதிக்க வார்த்தையை பயன்படுத்தலாமா, ஜோதிகாவுக்கு அடுக்குமா என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடுபிடித்தது.

ஒரு கதையில் அதன் பாத்திரத்திற்கேற்ற உரையாடல்கள் வருவதில் என்ன பிரச்சினை? நடிகர் பிரகாஷ் ராஜ், மோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் இந்துமதவெறி வசனங்களை பேசித்தான் நடிக்க வேண்டும். மோடியை எதிர்க்கும் அவர் இத்தகைய வெறிப்பேச்சுக்களை பேசலாமா என்று கேட்பது அபத்தம்.

ஒரு படத்தில் குறிப்பிட்ட சமூகப் பின்னணியில் ஒரு இயக்குநர் படம் எடுக்கிறார். அதற்கேற்ப பாத்திரங்களையோ, வசனங்களையோ வைக்கிறார். இதில் பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் அந்த சமூகப் பின்னணியோ இல்லை பாத்திரங்களின் வகை மாதிரியோ யதார்த்தமாக இல்லை, தவறாக இருக்கிறது என்று விமரிசிப்போர் இயக்குநரை தாராளமாய் விமரிசிக்கலாம்.

அந்த வகையில் பாலா படங்களில்  நடிப்போரோ இல்லை பேசப்படும் வசனங்களோ பிரச்சினை இல்லை. மாறாக பாலாவின் அகவுலகமே பிரச்சினையாக இருக்கிறது. அதனால்தான் கடைசியாக வந்த தாரை தப்பட்டையில் அவரது ரசிகர்களே வெறுப்படைந்தனர். ஊரோடு முரண்படும் விட்டேத்தி சாமியார்கள் எப்போதும் கஞ்சாவோடும், கடுப்போடும் சுற்றி வருவதைப் போன்ற பாத்திரங்களை வைத்தே பல்வேறு நேரங்களில் பாலா படமாக எடுக்கிறார்.

எந்தக் கதையும் அவரது சன்னிதானத்தில் படைக்கப்படும் போது மேற்கண்டவாறு அரையும் குறையுமாக சமைக்கப்படுகிறது. சமூகத்தோடு முரண்படும் ஒரு கதாபாத்திரத்தை இயல்பாக காட்ட தெரியாத அல்லது விரும்பாத பாலா இப்படி எதிர்மறை வில்லத்தனம் நிரம்பிய சூப்பர்மேன்களாக காட்டுகிறார். அதையே எத்தனை தடவை பார்ப்பது என்பது ரசிகர்களது பிரச்சினை!

இதோ பாலாவின் பாத்திரங்களை ‘அழகாக’ காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் நக்கலைட்ஸ் நண்பர்கள்! வாழ்த்துக்கள்!

இது பாலாவின் நாச்சியார்!

இது நக்கலைட்சின் நோச்சியார்!


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

திரிபுரா : இராணுவ ஊழலை அம்பலப்படுத்தினால் சுட்டுக் கொல்வார்கள் !

1

திரிபுரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 21 அன்று பத்திரிகையாளர் ஒருவர் திரிபுரா மாநில ரைபிள் படையின் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். திரிபுராவில் கடந்த 3 மாதங்களுக்குள் நடைபெறும் இரண்டாவது பத்திரிகையாளர் படுகொலைச் சம்பவம் இது.

திரிபுரா மாநிலத்தில் ‘ஸ்யந்தன் பத்திரிகா’ எனும் நாளேடு வெளிவருகிறது. இந்நாளேட்டின் ஆசிரியர் சுபல் டேய். இங்கு நான்காண்டுகளுக்கு முன்னர் செய்தியாளராக சேர்ந்தவர் சுதீப் தத்தா பௌமிக். புலனாய்வுக் கட்டுரைகள் மற்றும் அம்பலப்படுத்தல்கள் போன்றவற்றில் திறன் மிக்கவர் சுதீப் தத்தா.

சுதீப் தத்தா மூன்று மாதங்களுக்கு முன்பு, திரிபுரா மாநில ரைபிள் படையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புலனாய்வு செய்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய நபரான கமாண்டர் தப்பான் டெபர்மாவை அம்பலப்படுத்தி எழுதியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சுதீப் தத்தா

இந்நிலையில் பொய்க்கணக்கு எழுதி சுமார் ரூ.10 கோடிக்கும் மேலாக முறைகேடு செய்திருந்த கமாண்டர் தப்பான் டெபர்மாவின் புதிய ஊழலை அம்பலப்படுத்தி கடந்த நவம்பர் 2 -ம் தேதியன்று ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார் சுதீப் தத்தா.

இதனையடுத்து கடந்த நவம்பர் 21 -ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் சுதீப் தத்தாவை தொலைபேசியில் அழைத்து, வெளியான கட்டுரை குறித்து தனது விளக்கத்தைக் கேட்க தன்னை நேரில் வந்து சந்திக்கும் படி கூறியுள்ளார் தப்பான் டெபர்மா. சுதீப் தத்தா, ஸ்யந்தன் பத்திரிகாவின் ஆசிரியரான சுபல் டே-க்கு அலைபேசியில் தகவலைத் தெரிவித்திருக்கிறார். சுபல் டே, ஒலிப்பதிவு செய்யும் கருவியை எடுத்துச் செல்லுமாறு சுதீப் தத்தாவிடம் கூறியுள்ளார்.

அகர்த்தலாவின் புறநகர்ப் பகுதியான ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள திரிபுரா மாநில ரைபிள் படையின் இரண்டாவது படையின் கமாண்டர் அலுவலகத்திற்கு காலை 10.30 மணிக்குச் சென்றுள்ளார் சுதீப் தத்தா. இதனை அங்கிருந்த பார்வையாளர் பதிவேடு உறுதி செய்திருக்கிறது.

பின்னர் 11 மணியளவில் பத்திரிக்கை ஆசிரியரின் அலைபேசிக்கு வந்த அழைப்பில் சுதீப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது . உடனடியாக சுதீப் தத்தாவின் உதவி நிருபரான திப்பு சுல்தானை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார் சுபல் டே.

அங்கு சென்ற திப்பு சுல்தானிடம் அப்படி யாரும் இங்கு வரவில்லை என வாயிற்காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சுதீப் தத்தாவின் வண்டி உள்ளே நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார் திப்பு. இதனைத் தொடர்ந்து மற்ற பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் பரவ சுமார் 60 -க்கும் மேற்பட்டவர்கள் கமாண்டர் அலுவலகத்தின் முன்னர் திரண்டுள்ளனர்.

சுதீப் தத்தாவின் நிலை பற்றி அதிகாரப் பூர்வமாக யாருக்கும் எவ்வித தகவலும் தரப்படவில்லை. மதியம் 2.30 மணிக்கு அதிகாரப் பூர்வமாக சுதீப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியிடப்பட்டது.

சுதீப் தத்தா தனது அலுவலகத்தில் இருந்து கிளம்புகையில் சில ஆவணங்களைத் திருடிச் செல்ல முயன்றதாகவும், உடலைப் பரிசோதனை செய்ய வந்த காப்பாளர் நந்தா ரியங்-க்கு  ஒத்துழைக்க மறுத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் நந்தா ரியங், சுதீப் தத்தாவை சுட்டுக் கொன்றதாகவும் தப்பான் டெபர்மா போலீசிடம் தெரிவித்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர் சாந்தனு படுகொலையைக் கண்டித்து கடந்த 20.10.2017 அன்று நடந்த போராட்டம்

போலீசும் பாதுகாவலருடன் ஏற்பட்ட தகராறில் சுதீப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டார் என்றே செய்தியாளர்களிடம் தெரிவித்தது. நந்தா ரீயங் உடனடியாக கைது செய்யப்பட்டு 10 நாள் போலீசு விசாரணைக் காவலில் அடைக்கப்பட்டார்.  இத்தோடு வழக்கை ஊற்றி மூட எத்தனித்தது போலீசு.

இந்நிலையில் ‘ஸ்யந்தன் பத்திரிகா’ நாளேட்டின் ஆசிரியரான சுபல் டே, கமாண்டர் தப்பான் டெபர்மாவின் ஊழலை வெளிக் கொண்டு வந்ததற்காக,  டெபர்மாவால் வரவழைக்கப்பட்ட சூழலில் கொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, இது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை அம்பலப்படுத்தினார்.

பத்திரிக்கையாளர் சங்கங்கள் போராடத் தொடங்கின. இச்சூழல் ஏற்படுத்திய நெருக்குதலின் காரணமாக படுகொலை நடத்தப்பட்ட மறுநாள் (நவம்பர் 22) தப்பான் டெபர்மா கைது செய்யப்பட்டு 10 நாள் போலீசு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுதீப் தத்தாவின் அலைபேசி மற்றும் அவரது சட்டையில் இருந்த பொருட்களும் சம்பவ இடத்திலோ போலீசு வசமோ இல்லை. அவையும் கமாண்டர் தப்பான் டெபர்மாவால் எடுத்து மறைக்கப்பட்டிருக்கலாம் எனத் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர் சுபல் டே-யும் சுதீப் தத்தாவின் சக பத்திரிக்கை நண்பர்களும்.

பாசிச பாஜக ஆட்சியில் இந்தியா முழுவதும் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டு வருவது நாடறிந்த விசயமே. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில் கொல்லப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ்.

தமக்கு எதிரான கருத்துக்களை அதிகாரவர்க்கம் எப்போதுமே விரும்புவதில்லை. அதுவும் தங்களுக்கு ஆதரவாக மத்தியில் ஒரு பாசிஸ்டின் ஆட்சியும், மாநிலத்தில் அதே பாசிசக் கட்சியின் ஆட்சி நீடிக்கும் போது, இது போன்ற இராணுவ ‘தப்பான் டெபர்மாக்கள்’ கொலை செய்வதற்கும் கவலைப்படுவதில்லை.

பாஜக-வையும், இராணுவத்தையும் எதிர்த்து எழுதினால் இதுதான் நிலைமை என்று அவர்கள் பகிரங்கமாக தெரிவிக்கிறார்கள். மக்களும் – மக்கள் நலன் சார்ந்து செயல்படும் பத்திரிகையாளர்களும்  என்ன செய்யப் போகின்றோம்?

மேலும் :


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மூளையைக் கைது செய்யும் மதம் ! கருத்துப்படங்கள்

1

மனித மூளையில் மத நம்பிக்கை இருக்கும் வரை சுதந்திரம் என்பது இருக்கவே இயலாது !

பக்தி உருவாக்குவது கேள்விக்கிடமற்ற நம்பிக்கை பகுத்தறிவு உண்டாக்குவது கேள்வி கேட்க்கும் மனப்பான்மை !


தலைமலையில் கிரிவலம் சென்ற போது 3,500 அடி உயரத்திலிருந்து விழுந்து இறந்த இளைஞர் ஆறுமுகம்.

இருளை சிதறடித்த மெரினா இளைஞர்கள் !


கடவுளை நம்புவதே ஒழுக்கம் என்கிறது ஆத்திகம் !
மக்களை நம்புவதே ஒழுக்கம் என்கிறது நாத்திகம் !

எல்லாம் புனித நூலில் அடக்கம் !


எந்தப் பிரச்சினையையும் ஆய்வு செய்து விடை தேடுவோம் என்று போராடுகிறது மார்க்சியம் !
எல்லாப் பிரச்சினைகளுக்கும் புனித நூல்களில் ஆறுதல் இருப்பதாக முடக்குகிறது மத நம்பிக்கை !

படங்கள் : வேலன்

இணையுங்கள்:


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சத்தியபாமா பல்கலை ராகமோனிகா தற்கொலை ! நிர்வாகத்தை எதிர்த்து மாணவர் கலகம் !

1
ராகமோனிகா விடுதியில் தூக்கில் தொங்கிய போதும், மருத்துவமனையிலும் "நான் ராகமோனிகாவின் தம்பி என்று போட்டோ, வீடியோ ஆதாரங்களை காட்டி பார்க்க அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டபோதும் போலீசார் அனுமதிக்கவில்லை.

சத்தியபாமா பல்கலைக் கழகத்தில் மாணவி ராகமோனிகா படுகொலை !
தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிராக மாணவர்கள் மூட்டிய தீ பரவட்டும் !

தெலுங்கானாவில் இருந்து சத்தியபாமா பல்கலைக்கழகத்தில்  பொறியியல் படிக்க வந்த ராகமோனிகா என்ற மாணவி, நிர்வாகத்தினரில் உளவியல் சித்திரவதை செய்யப்பட்டு பிறகு தூக்கிடடு தற்கொலை செய்திருக்கிறார். மறைந்த சாராய ரவுடி ஜேப்பியாருக்கு சொந்தமான  பல்கலைக்கழகம் உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களிலும் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 30 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர்.

22.11.2017  அன்று  பல்கலைகழகத்தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வில் ராகமோனிகா சக மாணவியின் பேப்பரை பார்த்து எழுதியதாக கூறி (பிட் அடித்ததாக) ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் கேவலாமன வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அறைவாசலுக்கு அழைத்து வந்துள்ளார். அந்த மாணவி தன்னை மன்னித்துவிடுமாறு கெஞ்சியிருக்கிறார்.

இதை காதில் வாங்காத அந்த ஆசிரியர் தேர்வை மேற்பார்வை பார்த்த மற்றொரு ஆசிரியரான விமல் என்பவரையும் அழைத்துக்கொண்டு “உன்னுடைய டிரஸ் மொத்தத்தையும் கழட்டி சோதன போட்டாத்தான் பிட் வைத்திருப்பதை கண்டுபிடிக்க முடியும்’’ என்று வக்கிரமாக மிரட்டியிருக்கின்றனர்.

மாணவி ராகமோனிகா

மீண்டும் தன்னை மன்னித்து விடுமாறு அந்த மாணவி கெஞ்சியிருக்கிறார். ஆசிரியர்கள் போர்வையில் திரியும் அந்த ரவுடிகள் உன்னை எந்த தேர்வையும் எழுதவிட முடியாது,  உன் அப்பா, அம்மாவை வரவழைக்கிறோம், நீ  போதை மருந்துக்கு அடிமையாகிவிட்டாய், நீ கர்ப்பமாக இருக்கிறாய் என்று சொல்லப்போகிறோம் என்று ஆபாசமாகவும், இழிவாகவும் பேசி சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

இறுதிவரை தேர்வு எழுத அனுமதிக்கவே இல்லை. தேர்வு  முடிந்ததும் அதே கல்லூரியில் படிக்கும் ராகமோனிகாவின் தம்பி அக்காவை அடுத்தடுத்த தேர்வு எழுதவிட வேண்டும் என்று கூறி நிர்வாகத்தினரின் காலில் விழுந்து கெஞ்சியிருக்கிறார். எதுவும் ஏற்கப்படவில்லை. பிட் அடித்ததை ஒரு குற்றமாக்கி அந்த குற்றத்திற்காக  விபச்சாரப்பட்டமும் கட்டிவிட்டதால், அவமானம் தாங்க முடியாத மோனிகா பரீட்சை நேரம் முடிந்த பின்னர் காலை 11.45 -க்கு தனது அறையில்  தூக்கில் தொங்கிவிட்டார். இது தற்கொலையல்ல, பல்கலைக் கழக ஆசிரியர்கள் மீனாட்சிசுந்தரம், விமல் மற்றும் நிர்வாகத்தினர்  சேர்ந்து செய்த படுகொலை.

ராகமோனிகா விடுதியில் தூக்கில் தொங்கிய போதும், மருத்துவமனையிலும் “நான் ராகமோனிகாவின் தம்பி என்று போட்டோ, வீடியோ ஆதாரங்களை காட்டி பார்க்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டபோதும் போலீசார் அனுமதிக்கவில்லை.

மாலையில் விசயம் தெரிந்து மாணவர்கள் பதறியடித்து நிர்வாகத்திடம் சொல்லியிருக்கிறார்கள். நிர்வாகத்தினரோ ராகமோனிகாவை  பல்கலைகழகத்திலேயே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அந்த மாணவி இறந்துவிட்டது உறுதிசெய்யப்படுகிறது. ஆனால், பல்கலைக்கழக சேர்மன் மரிய ஜான்சன் உத்தரவின் பேரில் உண்மை மறைக்கப்பட்டு,  உயிர் இருப்பதாகவும் மேல்சிகிச்சைக்கு குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறி அங்கு கொண்டு சென்று இறந்ததை மீண்டும் ஒரு சம்பிரதாயத்திற்காக உறுதிசெய்துவிட்டு  ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கொண்டு போய் போட்டுவிட்டார்கள்.

மாணவி ராகமோனிகா இறந்த தகவலை பல்கலைக் கழக நிர்வாகம் அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கவே இல்லை. தம்பியைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை. போலீசை வைத்து விரட்டியிருக்கிறார்கள். ராகமோனிகா விடுதியில் தூக்கில் தொங்கிய போதும், மருத்துவமனையிலும் “நான் ராகமோனிகாவின் தம்பி என்று போட்டோ, வீடியோ ஆதாரங்களை காட்டி பார்க்க அனுமதிக்க வேண்டும்” என்று அவர் கேட்டபோதும் போலீசார் அனுமதிக்கவில்லை.

மாணவி ராக மோனிகாவின் தந்தை

இதற்கிடையே ஊடகங்களிடம் அப்பெண் கருவுற்றிருந்தார் என்றும் போதைப்பழக்கம் உடையவர் என்றும் அவதூறுளை கிளப்பி வாங்கிய காசுக்கு வேலைபார்க்க ஆரம்பித்தனர் ஜேப்பியார் கல்விக்குழுமங்களின் சட்டப்பூர்வ ரவுடிகளாக செயல்பட்டு வரும்  செம்மஞ்சேரி போலீசார். இந்த அநீதிகளையெல்லாம் பார்த்த மாணவர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். அந்த கொந்தளிப்பில் பற்றி எரிந்தது கல்லூரி வளாகம். பீதியான பல்கலைக்கழக நிர்வாகம் போலீசை குவித்தது, எதற்கும் அஞ்சாத மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடி கல்லூரி வளாகங்களை அடித்து நொறுக்கினார்கள்.

சுமார் 300 -க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து மாணவர்களை அடித்து விரட்டினார்கள். அந்த இடமே போர்க்களம் போல் இருந்தது.

தேர்வில் பிட் அடித்தால் அந்தத் தவறை சுட்டிக்காட்டி அனுப்பி இருக்க வேண்டும், அவ்வளவுதான். அதை விடுத்து மாணவி கல்லூரியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இரவு 3 மணிக்கு பேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். தன்னுடன் படித்த மாணவியைக்கொன்ற நிர்வாகத்தை என்ன செய்வதென்று தெரியாமல் கோபத்துடன் அதிகாலை 4 மணிவரை சாலையில் அலைந்து கொண்டிருந்தார்கள் மாணவர்கள். அவர்களில் பெரும்பாலோர் தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ராஜீவ் காந்தி சாலை முழுவதும் போலீசால் நிரப்பப்பட்டு இருந்தது. கொல்லப்பட்ட மாணவியின் பெற்றோரை வரவைத்து மிரட்டி நிர்வாகம் ராகமோனிகாவின் பிணத்தை வாங்க வைத்துவிட்டது.

மாணவர்களின் கொந்தளிப்பில் பற்றி எரியும் விடுதி.

ஊரைஅடித்து உலையில் போட்ட கிரிமினல் ஜேப்பியாருக்கு தண்டனையாக கல்வித்தந்தைபட்டம் கிடைத்தது. பிட் அடித்தற்காக ராக மோனிகாவுக்கு மரணம் தண்டனையாக கிடைத்திருக்கிறது.

எனில் பொது நிலங்களை ஆக்கிரமித்து, மக்களிடம் கட்டாய நன்கொடை கொள்ளை நடத்தி ஆட்டும் போடும் ஜேப்பியார் கல்லூரி முதலாளிகளுக்கு என்ன தண்டனை?

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் ராகமோனிகா படுகொலை!

மாணவியை இழிவுபடுத்தி, சித்திரவதை செய்ததே மரணத்திற்கு காரணம்!
கொலைகூடாரமான சத்தியபாமா தலைவர் மரிய ஜான்சன்
பேராசிரியர் போர்வையில் திரியும் பொறுக்கிகள்
மீனாட்சிசுந்தரம், விமல் ஆகியோரை கைது செய்!

மாணவர்கள் மூட்டிய போராட்டத் தீ பரவட்டும்!
தனியார் கல்விக் கொள்ளையர்களின் அட்டூழியம் ஒழியட்டும்!

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை. 9445112675


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அப்பல்லோ கார்களுக்காக காலி செய்யப்படும் திடீர் நகர் – படங்கள்

1

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலையில் கூவம் கரையோரம் அமைந்திருக்கும் குடிசைப்பகுதி திடீர் நகர். இப்பகுதி கூவம் கரையின் ஆக்கிரமிப்பு எனவும், இங்கு வாழும் மக்களுக்கு நிரந்தர வீட்டு வசதியை ஏற்படுத்துவதாக கூறியும், 21.11.2017 இரவு எட்டு மணியளவில் திடீர் நகரை தரைமட்டமாக்கும் வேலையை தொடங்கியது தமிழக அரசு.

திடீர் நகரில் கிட்டத்தட்ட 2,500 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றன. இங்கே சுமார் 70 வருடங்களுக்கு மேலாக வசிப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர். 2001 தி.மு.க ஆட்சியில் 800 காங்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அடுத்து வந்த அதே தி.மு.க. ஆட்சியில் தான் சிங்கார சென்னை என்ற பெயரில் இம்மக்களை காலி செய்யத் திட்டமிடப்பட்டதாகவும், போராட்டம் மறியல் என மக்கள் எதிர்ப்பு குரல் எழுப்பவும் காலிசெய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என பேதம் இல்லாமல் உழைக்கும் வர்க்கமாக சேர்ந்து வாழ்கின்றனர் இப்பகுதி மக்கள். திடீர் நகரை சேர்ந்த பெண்கள் அருகாமையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் வீட்டு வேலை செய்வதற்கும், ஆண்கள் துப்புரவு, பெயிண்டிங், கம்பி கட்டுவது, ஆட்டோ ஓட்டுவது போன்ற வேலைகளையும் செய்து வருகின்றனர். பள்ளிப் படிப்பை முடித்த சில இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இவர்களது குழந்தைகள் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர்.

இப்பகுதியை சுற்றியே இவர்கள் வாழ்க்கை தேவைகளுக்கான வேலைகளை அமைத்துக் கொண்டுள்ளனர். இந்த பகுதிக்கு என அங்கன்வாடியும் திருச்சபையும் கோவிலும் இருக்கிறது. நகரின் மையப்பகுதியில் இருப்பதால் பள்ளி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலை என அனைத்து அத்தியாவசிய தேவைகளும் இம்மக்களுக்கு இங்கே கிடைக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்ததற்கு சாட்சியாக அரசு ஆதாரம் அனைத்தும் வைத்துள்ள மக்களை அகதிகளைப் போல் அடித்து துரத்துகிறது அ.தி.மு.க அரசு.

( வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து காலி செய்யும் மக்கள் – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கிரீம்ஸ் சாலையில் பத்தடிக்கு ஒரு போலீசு நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் மறியல் என போய்விட கூடாது என பயம் காட்டும் தோரணையில் கைது செய்து ஏற்ற வண்டிகளையும் ஆங்காங்கே நிறுத்தியிருந்தனர். உடைமைகளை எடுக்கக் கூட அவகாசம் கொடுக்காமல் அவர்களை துரத்துகிறது போலீசு. போலீசே உடைமைகளை தூக்குகின்றனர். மறுபக்கம் ஜே.சி.பி-யை வைத்து  வீடுகளை தரைமட்டமாக்குகின்றனர்.

பெரும்பாக்கம் நகராட்சியை சேர்ந்த அரசு அதிகாரிகள் ஒரு பக்கம் பந்தல் போட்டு அமர்ந்துள்ளனர். திடிர் நகரில் துரத்தப்படும் மக்கள் பெரும்பாக்கம் பகுதியில் கட்டிக் கொடுத்துள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குதான் அனுப்படுகிறார்கள். மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகூட சரிவர செய்யப்படாத அப்பகுதிக்கு துரத்தப்படுகிறோம் என வேதனையில் மக்கள் கண்கலங்குகிறார்கள்.

மக்களே அவரவர் உடைமைகளை கிடைக்கும் கோணிப்பையில் வாரி எடுப்பதும், இங்கும் அங்கும் குழந்தைகள் ஓடுவதும், பொருளை எடுத்துக் கொண்டு ஆசையாக வளர்த்த நம்மை விட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் ஆடுகள் உரிமையாளர்கள் அருகாமையிலேயே இருப்பதும், அப்படியே ஒரு போர்க்களம் போல் இருந்தது அந்த காட்சி. மக்களுக்கு இருக்கும் நெருக்கடியும் அவசரமும் நம்மை யாரிடமும் நெருங்கிப் பேச தயக்கம் கொள்ள செய்தது.

கிரீம்ஸ் சாலை முழுவதையுமே அப்பல்லோ மருத்துவமனை ஆக்கிரமித்து வருகிறது. தற்போது இந்த திடீர் நகரைக் காலி செய்து பிரம்மாண்டமான கார் நிறுத்தம் உருவாக்குவதே அவர்களது நோக்கம் என மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகிறார்கள்.

மங்கலெட்சுமி

“அப்பல்லோ ஆஸ்பத்திரிக்காக அரசாங்கம் எங்கள அடிச்சு தொரத்துறாங்க. நான் சொன்னத அப்படியே டிவில போடுங்க. நாலு நாளைக்கி முன்ன வந்து எல்லா குடும்பத்துக்கும் பெரும்பாக்கத்துல வீடு இருக்கு. தேவைக்கி அதிகமாவே கட்டிருக்கு அரசாங்கம். அங்கப் போயி சந்தோசமா இருக்கலாம் அப்படின்னானுங்க. இப்ப மூணு குடும்பம் இருக்குற வீட்டுக்கு ஒருத்தருக்கு மட்டும் வீடுன்னு அடாவடியா காலி பன்றானுக. குருவி கூடுபோல இருந்தாலும் இந்த குடிசக்குள்ள தாயா பிள்ளையா ஒன்னா இருந்ததுங்க, வீடு டோக்கன் யாரு பேருக்குன்னு இப்ப அடிச்சுகினு சாவுதுங்க.”

ஆரோக்கிய ராஜ்

“நான் ஹாக்கி விளையாட்டு நடுவர். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். வசதி வாய்ப்போடு வாழும் அளவு சம்பளம் இருந்தும் பொறந்து வழந்த எடத்த விட்டு போக மனசில்லாம 9 அக்கா தங்கச்சி அண்ணங்களோட இங்கனக்குள்ளேயே வாழ்ந்துட்டேன். இன்னைக்கி போகச்சொன்னா கண்ணுல தண்ணி அடங்க மாட்டேங்குதேம்மா”

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்துலேயே இதெல்லாம் நடந்துருக்கும் ஓட்டுக்காக விட்டு வச்சானுங்க. இப்ப ஒட்டு மொத்தமா சோலிய முடிச்சுப்புட்டானுங்க. ஏழைங்களுக்கு நாலனா செஞ்சுட்டு அதுல எட்டனா லாபம் பாக்குற ஆளு ஜெயலலிதா. அந்தம்மா போன வருசமே ஆக்கிரமிப்ப அகற்றப் போறேன்னு ஆரம்பிச்சது. ஆனா நோயி வந்து இங்கேயே படுத்துப் போச்சு.”

மாற்றுத் திறனாளி (பார்வையற்றவர்)

“எனக்கு ஆப்ரேசன் பண்ணிருக்கு பார்வை தெரியலங்கம்மா எம்பொண்ணு வீடு டோக்கனு தாராங்கன்னு காலையிலேயே போச்சு இன்னும் வரலைங்க. ஆபீசருங்க வந்து மூட்டைய தூக்குங்க மூட்டைய தூக்குங்கன்னு சத்தம் போடறாங்க. எங்கனக்குள்ள டோக்கனு தாராங்கன்னு பாத்து எம்பொண்ண கொஞ்சம் வீட்டுக்கு வரச்சொல்லுங்க.”

     பெயர் குறிப்பிடாதவர்

“இன்னாமா பேரு பேருனுகிற. ஓட்டு அட்ட ஆதார் அட்ட எல்லாம் வச்சுகினுகிறே என்னோட சீரிலு நம்பரு வர்லே வீடு இல்லேன்றானுங்க. பேற வச்சுகினு இன்னா பன்ன சொல்றே. எம்பொட்டாட்டிக்கி ரெண்டு காலும் ஆப்ரேசன் பன்னி ஒரு மாசம் கூட ஆவுல. இங்கனக்குள்ள இருந்தா யாராச்சும் பாத்துப்பாங்க. பத்தாவது மாடியில வீடு குடுத்தா மேல வந்து பாத்துப்பாங்களா. இந்த ஒங்க கண்ணு முன்னாலேயே கிஸ்னாயல ஊத்திகினு கொழுத்திகினு போப்பறேன் பாரு.” என்று அருகில் மண்ணெண்ணெயுடன் சென்றவரிடம் மற்றொருவர் கேனை புடுங்க முற்பட்டார். மக்கள் சமாதானம் செய்தனர்.

ஜான்சி என்ற குழந்தை

“புது வீட்டுக்குதான் போறோம் ஆனா எனக்கு புது வீடு பிடிக்கல. இங்கதான் புடிச்சுருக்கு. ஏன்னு சொல்ல தெரியல.”

நாகம்மா பாட்டி

“நா இந்த எடத்துக்கு வந்து 66 ஆறு வருசமாகுது. தாயா புள்ளையா பழகிகினு இங்குனக்குள்ளேயே பொழப்பு பாத்துகினு இருந்தோம். எங்கள இட்டுனு போயி எங்கேயோ காட்டுல விடப்போறான்றானுங்க. எப்படிம்மே வாழ்றது. ஆமாம்மாம்மா கெவுருமெண்டுக்கு கொல்ல நோயி வந்துட்டு அதா எங்கள இப்புடி வாரிகினு போறானுங்க. இப்ப இருக்கவனுங்கள்ளாம் கூட்டிக்குடுத்த பயலுகம்மா. அவனுக்கு என்ன ஆதாயம்னு மட்டுத்தான் பாக்குறான். அப்பல்லோ ஆஸ்பத்திரி காரனுங்க காரு நிறுத்தத்தான் இந்தன சனத்தையும் தெரத்துறானுங்க.”

பவானி

“பைத்தியம் புடிச்சாப்போல இருக்கு. வீடு ரெடியாருக்கு எல்லா தட்டுமுட்டு சாமனையும் ஏத்துறாங்க. போயி பாத்தாத்தானே தெரியும் யாருக்கு வீடு, எப்புடி வீடுன்னெல்லாம். புருசன் விட்டுட்டு ஓடிட்டான் ரெண்டு வயசு பையன வச்சுட்டு தெருவுல நிக்கிறேன்.

ஒரு தகவலு சொல்லனும். நோட்டிசு கொடுக்கனும் ஒன்னுமே இல்லாது கைய புடிச்சு இழுத்து தெருவுல தூக்கிப் போட்டா எங்கம்மா போவாம் நாங்க. வீடு குடுத்தா மட்டும் போதுமா பொழப்புக்கு இன்னா செய்வ. அங்க பெரிய பெரிய ஆபீஸுங்க இருக்கு கடை போடலாம், வீடுங்களுக்கு வேலைக்கி போலாம் எல்லாம் இருக்குன்றானுங்க இவனுங்கள நம்ப முடியாது.”

ஜெபாஸ்டின்

“நான் பள்ளி படிப்ப முடிச்சுட்டு இங்க 4 கி.மீட்டருக்குள்ள வேலை பாக்குறேன். என்னப்போலதான் இங்க உள்ள அத்தன பேரும் வேலைக்கி போய் வாரோம். எங்கள கூட்டிப்போயி 30, 40 மைலுக்கு அப்பால விட்டா வண்டி கூட கிடையாது. எப்படிங்க சரியான நேத்துக்கு வர முடியும்.”

கன்னிகா (குழந்தை)

“வீட்ட காலிபன்றாங்க. எனக்கு பரிச்ச நடந்துட்டு இருக்கு ஸ்கூலுக்கு எப்படி போறதுன்னு தெரியல. எங்க அம்மா எம் பொம்மையெல்லாம் எடுக்க மாட்டேங்குது அதுநால நான் எடுத்துகிட்டேன்.”

மேரி

“இங்கன இருக்குற ஆறு ஏழு வீடு மட்டும் கோயிலு எடம். (அறநிலைத் துறை) அதனால எங்கள மட்டும் காலிப்பன்னல. ஊரையே காலிபன்னி அகதிகளாட்டம் ஏத்துறாங்க. நாங்க இங்க அனாதையா இருக்கோம்.”

ராணி

மழை வெள்ளம் வந்தாலும் நீந்திகினே போயி எங்க தேவைங்கள செஞ்சுப்போம். நேத்துதான் போயி பாத்துனு வந்தே பெரும்பாக்கம் வீட்ட. ரமணா படத்துல வராமெரி அம்மாம்பெரிய ஒயரமாக்குது அது. என்னைக்கி தலையில விழுமோன்னுக்குது.

ஆரோக்கிய மேரி

“எங்க ஆயா காலத்துல பர்மாவுலேருந்து வந்தவங்கதான் இந்த குப்பத்து மக்கள். நான் பொறந்து வளந்தது எல்லாமே இங்கதான். எனக்கு இந்த எடத்த விட்டு போக புடிக்கலங்க.”

கன்னியம்மா

“நான் வாடகைக்கி வந்து 22 வருசமாச்சு. எங்களுக்கு வீடு இருக்குன்னு டோக்கனு கொடுத்தாங்க. சொந்த வீடு கெடைச்சது சந்தோசந்தேன். ஆனா என்னால அம்மாம்பெரிய கட்டடத்துல ஏரி ஏறங்க முடியுமா? மிசுனு இருக்குன்றாக ஆனா எத்தன நாளைக்கி ஓடும்.”

அரவிந்த்

“எங்ககிட்ட சாமான கட்றதுக்கு கோணி இல்லைங்க. எல்லாம் அப்படியே அள்ளிப்போட்டதுல பல பொருளு ஒடஞ்சுப்போச்சு. பாத்து ஏத்துங்கன்னு அம்மா சொன்னதால தனி வண்டி புடிச்சு போங்கன்னு திட்றாங்க.”

செய்தி, புகைப்படம் : வினவு செய்தியாளர்


 

திரை விமர்சனம் : அறம் ஒரு வரம்தான் ஆனாலும்….

22

ரக்கமற்ற வாழ்வில் கரை சேர வழியின்றி நீந்திக் கொண்டிருக்கும் எளிய மக்களைக் கூட, ஒரு மேட்டுக்குடி குழந்தையின் மூலம் இரங்க வைத்தார் “அஞ்சலி” திரைப்பட இயக்குநர் மணிரத்தினம். புதிய கலாச்சாரத்தில் அந்தப் படம் குறித்த விமரிசனத்தை படித்த போது, தமிழ் சினிமாவில் இதற்கு நேரெதிரான கதைக்கருவில் ஒரு படம் வருமென்று கற்பனை கூட செய்திருக்க முடியாது.

அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். வாழ்த்துக்கள் கோபி! நிச்சயம் “இது வேற தமிழ்நாடு”!

இரவுப் படுக்கையில் கதை கேட்கும் குழந்தையிடம் போட்டி போட்டுக் கொண்டு அம்மாவும், அப்பாவும் கதை சொல்வதில்லை. முழு உலகின் விசித்திரங்களை கற்கும் வாயிலைத் திறப்பதற்கு கதை ஒரு திறவு கோல் என்றாலும், பெற்றோருக்கு அந்தப் பொறுமையும் அருமையும் ஆற்றலும் இருப்பதில்லை.

ஆனால் அதே பெற்றோருக்கு ஒரு மழலையின் மூலம் வாழ்க்கை குறித்த கதை சொல்லும் போது அனேகமாக நிபந்தனைகள் ஏதுமின்றி ஒன்றிவிடுகிறார்கள். கதை என்று அல்ல, களத்திலும் இந்த விதி அதற்குரிய விளைவுகளை தோற்றுவிக்கவே செய்கிறது.

நெல்லை தீக்குளிப்பில் கையில் தின்பண்டத்தோடு தீயில் வேகும் அந்தக் குழந்தையின் மங்கலான உருவம் தமிழ் சமூகத்தின் ஆத்திரத்தையும், கையறு நிலையையும் தெளிவாகக் கிளப்பி விட்டது.

மத்திய தரைக்கடலில் குப்புற விழுந்து கிடக்கும் அய்லான் குர்தி எனும் ஒரு மழலையின் சடலம் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த வரிசையில் ஆழ்துளைக் குழியில் விழுந்து தவிக்கும் தன்ஷிகா மூலம் பார்ப்போரை பதற வைப்பதில் இயக்குநர் கோபி நயினார் வெற்றி பெற்றிருக்கிறார்.

அந்தப் பதற்றத்தை அதற்குரிய சமூக பின்னணி, இயக்கத்தோடு காட்டியிருப்பதே கோபியின் தனித்துவம். இதை வெறும் சென்டிமெண்டு சரடுகளால் பின்னியிருந்தால் அது மணிரத்தினத்தின் கிராமப்புற அஞ்சலி படமாக சரிந்திருக்கும்.

அரசு, அதிகார வர்க்கம், மக்கள் குறித்து கோபிக்கு ஒரு தெளிவான பார்வை இருக்கிறது. தமிழ் சினிமாவின் புதிய இயக்குநர்கள் பலரிடம் கதையில் நின்று கொண்டு பேசும் அரசியல் புரிதல் மட்டுமே இருப்பதால் கதைக்கு வெளியே பேசும் போது அந்த அரசியல் தெளிவின்றி திகைக்கிறது. கோபியோ இந்தப் படம் குறித்து வெளியே நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எளிமையாகவும், உறுதியாகவும், பெருமளவு சரியாகவும் பதிலளிக்கிறார். இப்படி அரசியலும், கலையும் சங்கமிக்கும் கலைஞர்கள் அபூர்வம்.

இயக்குநர் கோபி நயினார்.

ஏழைகளுக்கு இந்த அரசமைப்பில் இடமில்லை என்பது ஆரம்ப காட்சியான ராக்கெட்  பறப்பதிலிருந்து, கடைசி காட்சியான நயன்தாரா பதவி விலகும் காட்சி வரை கதையிலும், காட்சி அமைப்பிலும், குறியீடுகளிலும், உரையாடல்களிலும் நச்சென்றும், நளினமாகவும் வருகின்றது.

ராக்கெட் பறப்பதற்கு மகிழும் ஏழைகள், காசு இல்லாமல் காது டாக்டரை தவிர்த்து விட்டு மருந்துக்கடைக்கு போவது, 650 ரூபாய் கேக்குக்கு பதில் 250 ரூபாய் கேக்கை தெரிவு செய்வது, கபடி – நீச்சல் திறமைகளின் யதார்த்த நிலை, குடிநீரின் ஏற்றத்தாழ்வுகள், சோம்பிக் கிடக்கும் அதிகார வர்க்கம், கயிற்றைத் தவிர வேறு ஏதுமின்றி மீட்புப் பணிக்கு வரும் படைகள், சோகத்தை பணத்தால் பஞ்சாயத்து பண்ண விரும்பும் சுயநல அரசியல்வாதிகள், கலெக்டரை விசாரிக்கும் மேலதிகாரியின் விசாரணைக் காட்சிகள்…….

இந்தக் கதையை பலரிடம் சொன்னாலும் யாரும் இதை தயாரிக்க முன்வரவில்லை என்று கோபி கூறியிருக்கிறார். இது ஒரு முழு முற்றான சோகம் மற்றும் ஆவணப்படக் கதையாக அந்த தயாரிப்பாளர்களுக்கு தோன்றியிருப்பதில் அதிசயமில்லை. சினிமாவின் மசாலா மட்டுமல்ல, கதை என்ற வஸ்துவில் இடம் பெறக்கூடிய வேகம், முடிச்சு, நகைச்சுவை, துள்ள வைக்கும் பாடல், திருப்பம் போன்றவை கூட இல்லையென அவர்கள் நினைத்திருக்கலாம்.

ஆனால் இந்த ஐயம் நயன்தாராவுக்கு ஏன் தோன்றவில்லை என்பது மற்றொரு அதிசயம். வாழ்த்துக்கள் நயன்தாரா! நம்மைப் பொறுத்த வரை இந்தப்படத்தில் நயன்தாரா சிறப்பாக நடித்திருப்பதாகத் தோன்றவில்லை. இந்தப் படத்தில் அவர் நடிக்க முன் வந்ததே சிறப்பு! எனினும் இந்த மாதிரி படங்களில் நடிக்க கூடாது என திரைத்துறை மேட்டுக்குடி வர்க்கமும், பாரதிய ஜனதாவும் நயன்தாராவை வற்புறுத்தப் போவது உறுதி.

இந்தப் படம் சமூகக் கருத்துக்களை பேசினாலும் ஒரு பிரச்சாரப் படம் போல இல்லாமல் கலை நேர்த்தியோடு இருப்பதாக கூறுகிறார் நியூஸ் 18 தமிழ் குணசேகரன். பிரச்சாரமற்ற கலை ஏதுமில்லை என பலமுறை எழுதினாலும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

உப்பரிகையில் நின்று கொண்டு மேட்டுக்குடி வாழ்வின் மனிதாபிமானப் பார்வை வழி, தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இலட்சிய மாந்தர்களை தேடிக் ‘கண்டுபிடித்து’, அவர்களுக்கு ஒளிவட்டம் போட்டுவிட்டு பிறகு அருகாமையில் இருக்கும் எளிய மாந்தர்களை சராசரியாக இறக்கிவிட்டு தூற்றச் சொல்லும் ஜெயமோகனின் அறம் வரிசைக் கதைகளோ, தூரத்தில் இருக்கும் மனிதர்களின் எளிய வாழ்க்கையை அருகாமையில் உணர்த்தி எவரையும் எளிய மக்களின் வாழ்வியலையோ அழகியலையோ ரசிக்க வைக்கும் கோபியின் அறம் திரைப்படமோ அனைத்தும் பிரச்சாரங்கள்தான்.

ஏற்றத்தாழ்வுகளால் பிரிந்திருக்கும் இச்சமூக்தில் நாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதன்றி பிரச்சாரமின்றி ஒரு பக்கமோ, இலக்கியமோ இல்லை.

இந்தப் படத்தில் பிரச்சாரம் இல்லையென கூறினால் இயக்குநர் கோபியே சிரிப்பார். ஒரு கதையோ கலையோ சொல்ல வந்த பொருளை பேராற்றலுடன் கூறுவதே அதன் வெற்றியே அன்றி மேற்கண்ட பிரச்சாரம் இருக்கிறதா என்ற தவறான ஆய்வு அல்ல. சமூக அக்கறை கொண்ட கதைகளை வெற்றி பெற வைக்க தேவை ஆழமான அரசியல், தத்துவ, கலைப் பார்வையே தவிர பிரச்சாரம் தேவையல்ல என்ற நாசுக்கு அல்ல.

அனேகமாக வெறும் கலையின் பால் நின்று கொண்டு பிரச்சார வாடை அடிக்கிறது என்று தமிழின் சிறுபத்திரிக்கை மரபு செய்த பிரச்சாரத்திற்கு குணசேகரன் போன்றோர் பலியாகக் கூடாது.

நியூஸ் 18 விவாதத்தில் கலந்து கொண்ட இயக்குநர் வசந்தபாலன் இந்தப்படம் திருவள்ளூர் மாவட்ட மக்களின் வாழ்வியல், கலாச்சாரத்தை காட்டுவதாகவும், இத்தகைய எண்ணிறந்த தமிழ் வாழ்க்கையை காட்டும் படங்கள் வரவேண்டும் என அங்காடித் தெருவை சான்று கூறினார். இல்லை, இப்படத்திற்கு சப்டைட்டில் போட்டு உலகமெங்கும் போட்டுக் காட்டினால் கூட சிலியில் இருக்கும் மக்களோ, இல்லை ஈரானில் இருக்கும் மாணவர்களோ அனைவரும் திரைப்படத்தோடு ஒன்ற முடியும். அதாவது தங்களது வாழ்வை திரையில் காணமுடியும்.

இந்தப் படம் உணர்த்தும் ஏழ்மை X அதிகார வர்க்கம் – மேட்டுக்குடி எனும் முரண்பாடு உலகெங்கும் எளிதில் ஒன்றக் கூடிய கரு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பரவி நிற்கும் யதார்த்தமும் கூட.

தன்ஷிகா எனும் அந்தச் சிறுமி கறுப்பாகவோ, சாமுத்ரிகா இலட்சணங்கள் இல்லாதவாளகவோ அழகுப் போட்டிகளை ஆராதிக்கும் பியூட்டி பார்லர் கலைஞர்கள் மதிப்பிடக் கூடும். தன்ஷிகா எனும் குழந்தையை மணிரத்தினம் வகைப்படங்களில் வரும் ஹார்லிக்ஸ், அமுல் பேபி குழந்தைகளுக்கு நேரெதிராக படைத்திருப்பதை வெறுமனே அடையாள அரசியலில் காலம் போக்கும் சில ஓய்வு நேர அரசியல் போராளிகள் பாராட்டியிருக்க கூடும். இரண்டுமே தவறு.

ஆழ்துளையின் கும்மிருட்டில் ஒடுங்கிக் கொண்டு, ஜட்டியோடு சிறுநீர் கழித்தால் அம்மா திட்டும் என்று சொல்வதாகட்டும், அப்பா பயமாயிருக்கு, சீக்கிரம் கூட்டிட்டு போ என்று சொல்வதாகட்டும், இத்தகைய காட்சிகள் மூலம் தன்ஷிகா பார்வையாளர்களை கொள்ளை கொள்கிறாள்.

வேறு வகையில் சொன்னால் ஏழைகளின் வேகமான வாழ்க்கை ஓட்டமும், சோகமோ, காதலோ, வறுமையோ அவற்றில் பல்வேறு உணர்ச்சிகள், உடல் மொழிகள், வழக்குகள் ஏராளம் உண்டு. அவற்றை இன்னும் சினிமா கைப்பற்றவில்லை.  சத்யம் சினிமா வளாகத்தில் வரும் மேன்மக்களின் உடல்மொழிகள், பேசும் பாணிகள் அனைத்தையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அரசுப் பள்ளி ஒன்றின் மாணவர்களிடம் நீங்கள் நூற்றுக்கணக்கான உடல்மொழிகள், வசனங்கள், சேட்டைகளை காணலாம்.

காலம் கடந்தும் எம்.ஆர்.ராதா இன்றும் ஒரு ஹீரோ!

அதனால்தான் சார்லி சாப்ளின், எம்.ஆர்.ராதா போன்றோர் காலம் கடந்தும் இன்றும் ஒரு ஹீரோவாக அறியப்படுகின்றனர். ரஜினியையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரது கண்டக்டர் வாழ்வின் வேகமான உடல் மொழியே அவரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகின்றன. பாட்சா படத்தில் நாற்காலியைத் திருப்பிக் கொண்டு அவர் ஏய்… ஏய்… என்று வில்லனை விசாரிக்கும் “ஸ்டைலை” உலக நாயகனால் ஒரு போதும் செய்ய முடியாது. ஜிகர்தண்டாவில் வரும் அந்த நடிப்பு மாஸ்டரைக் கொண்டு நூறு நாட்கள் பயிற்சி கொடுத்தாலும் கமலால் அப்படி நடிக்கவே முடியாது. காரணம் அவரது மேட்டுக்குடி தந்தையின் வழக்கறிஞர் குடும்பப் பின்னணி!

சிறுமி தன்ஷிகா, அவளது அம்மா, அப்பா, அண்ணன், காட்டூர், காட்டூர் மக்கள் அனைவரும் அச்சு அசலாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் கலெக்டர் என்று வரும் போது நயன்தாரா எனும் வெற்றியடைந்த ஒரு ‘அழகான’ நடிகை தேவைப்படுகிறது. ஒரு அறிமுக இயக்குநருக்கு இத்தகைய முகம் அதுவும் மசாலா அல்லாத ஒரு யதார்த்த பாணி படத்திற்கு தேவை என்றே வைப்போம். அது பிரச்சினை அல்ல.

படம் முழுக்க நயன்தாரா அதிகார வர்க்கத்தின் அலட்சியம், மெத்தனம், மக்கள் விரோத தன்மை அனைத்தையும் பார்க்கிறார், பேசுகிறார் என்றாலும் அவர் ஆரம்பத்திலிருந்தே ஒரு நல்ல கலெக்டர் என்பதாக சித்தரிக்கப்படுகிறார். பாம்புகளில் நல்ல பாம்பு, கெட்ட பாம்பு இல்லை என்பது போல கலெக்டர்களிலும் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடுக்கு அடிப்படையே இல்லை. காரணம் அரசியல் அமைப்புச் சட்டப்படி அவர் அரசு, அரசாங்கங்களின் முடிவுகளை அமல்படுத்தும் நிர்வாகியாகவும், அதற்கான அதிகாரங்களையுமே கொண்டிருக்கிறார்.

ஒரு கலெக்டர் ஊழல் செய்ய மாட்டார், ஏதோ சில ஏழைகளுக்கு சான்றிதழ் வாங்கித் தருவார், சில பல புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பார் என்பதைத் தாண்டி அவர் அரசின் கொள்கைகளையே அமல்படுத்துகிறார். சான்றாக ரேசன் கடைகளில் இனி பருப்பு வகைகள் இல்லை என அரசு உத்திரவிடும் போது, காட்டூர் மக்கள், அம்மா எங்க பிள்ளைகளுக்கு பருப்பு போடுங்கமா என்று கேட்டால் நயன்தாரா தனது ஊதியத்திலிருந்து சில பல கிலோக்களை வாங்கித் தரலாமே அன்றி அதிகாரியாக உத்தரவு போட முடியாது.

எனினும் நயன்தாரா இறுதியில் மக்களுக்கு சேவை செய்ய வழியற்ற இந்த அமைப்பில் இருந்து ராஜினாமா செய்கிறார். ஆனால் அவரது பாத்திரப் படைப்பு ஆரம்பத்தில் இருந்தே இந்த முடிவை நோக்கி பயணிப்பதால் கலெக்டர் எனும் பாத்திரத்தின் சட்டப்பூர்வ பரிமாணங்கள் இக்கதையில் பதிவு செய்யப்படவில்லை. அல்லது ஐ.ஏ.எஸ். பயிற்சி முடித்த ஒரு கலெக்டர் கறாரான வகையில் அரசு கொள்கைகளை அமல்படுத்தும் போக்கில் பிறகு அவர் இந்த அமைப்பே மக்களுக்கு பணியாற்றும் வகையில் இல்லை என்று பட்டுத் தெளிவதோ இல்லை சமரசப்படுத்திக் கொள்வதோ வந்தால் மக்கள் மாவட்ட ஆட்சியரின் இலக்கணத்தை புரிந்து கொள்வார்கள்.

இந்த அரசு செயல்படவில்லை, மக்களுக்கு எதிரானது என்று அதிகாரி வட்டத்தில் ஒரு ஸ்டேட்மெண்ட் தேவைப்பட்டதால்தான் கலெக்டர் பாத்திரத்தை வைத்தேன் என்று இயக்குநர் கூறினாலும், அந்த ஸ்டேட்மெண்ட் நடுநிலையாகவும், யதார்த்தமாகவும் வரவில்லை.

தகழியின் “ஏணிப்படிகள்” நாவலில் நல்லவனாக சேரும் அரசு குமாஸ்தா இறுதியில் தலைமைச் செயலளாராக மாறும் போது பெரும் காரியவாதியாக உருவெடுத்திருப்பான். உண்மையில் அரசு ஊழியர்களின் பரிணாம வளர்ச்சி இப்படித்தான இருக்கின்றது. ஒரு நேர்மையான கலெக்டர் நேரடியாக காசு வாங்க வில்லை என்றாலும் வரும் அரசு அதிகாரிகள் – அமைச்சரின் உண்டு விடுதி செலவுகளுக்காக துறைசார்ந்து மாவட்ட அதிகாரிகள் வசூலிப்பதையோ இல்லை மந்திரி வீட்டு மகளின் திருமணத்திற்கு அளிக்கப்படும் மாவட்ட மொய் தொகையையோ நிறுத்த முடியாது. சகாயமே ஆனாலும் கூடங்குளத்தில் அணு உலையை ஆரம்பிக்க இடிந்த கரை மக்களை ஒடுக்கவே செய்ய வேண்டும்.

அதே போன்று ஊடக விவாதம் படத்தின் சோகக் காட்சிகளிலிருந்து அவ்வப்போது மக்களை விடுவித்து கருத்துக்களை அசை போடும் நல்ல உத்திதான். என்றாலும் அங்கேயும் கலெக்டர் போன்று அனைவரும் மக்கள் சார்பில் நின்று அதுவும் கொஞ்சம் செயற்கையாக விவாதிக்கின்றனர். இதுதான் கொஞ்சம் ‘பிரச்சார’ தொனியில் இருக்கிறது என்பது அண்ணன் குணசேகரனுக்கு தெரியவில்லை.

உண்மையில் இந்த ஊடக விவாதம் பாண்டே தலைமையில், பானு கோம்ஸ், டாக்டர் சுமந்த் சி ராமன், ராமசுப்ரமணியன் போன்ற பாஜக சமூக ஆர்வலர்களோடு நடந்திருந்தால் அதுவும் மக்களுக்கு சார்பாக பேசும் பாணியில் நைச்சியமாக அதிகார வர்க்கத்தை ஆதரித்தும், மக்களின் அறியாமையை விமர்சித்துப் பேசுவதாக இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். கீழே களத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள், தலைமையில் இருக்கும் எடிட்டோரியில் கொள்கையோடு முரண்படாமல் கள நிலவரத்தை சொல்லத் திணறும் பட்சத்தில் அந்த யதார்த்தம் படத்திற்கு வலு சேர்த்திருக்கும்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இப்படிச் சொல்லலாம். இந்தப் படத்தில் அதிகார வர்க்கம், அரசு நிர்வாகம், ஊடக முதலாளிகளுக்கான ‘நியாயம்’ பொருத்தமாக வைக்கப்பட்டிருந்தால், நயன்தாராவின் நல்ல கலெக்டர் பரிமாணம் இன்னும் பல முரண்பாடுகளோடு வெளியே வந்திருக்கும்.

இதனால் இந்தப் படம் தனது பேசுபொருளில் பலவீனமாய் இருப்பதாக பொருளில்லை. அதே நேரம் பலமாக இருப்பதாகவும் தோன்றவில்லை. அடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அரசை செயல்படவைக்க வேண்டும் என்பதைத்தாண்டி ஒரு சிறுவனை குழியில் இறக்குவதை ஒரு  கையறு நிலை என்று குறிப்பிடலாமே அன்றி அதை மக்கள் தமது அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள் என்று பொருளாகாது.

ஏனெனில் அதே சிறுமிக்கு வெறிநாய்க் கடியோ இல்லை, பாம்புக் கடியோ நடந்து ஒரு அரசு மருத்துவமனையில் கதை நடப்பதாக வைப்போம். மருத்துவமனையில் மருந்தில்லை, பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை என்றால் மக்கள், கலெக்டர் தலைமையில் நாட்டு வைத்தியம் செய்வது சாத்தியமில்லையே?

கல்வி, சுகாதாரம், வேலை, விலைவாசி உயர்வு அனைத்திலும் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் கோலொச்சும் நாட்களில் நாம் அரசை தட்டிக் கேட்டால்தான் மேற்கண்ட மூன்று மயங்களில் இருந்து நாட்டை மீட்கும் போராட்டத்தை கண்டுபிடித்துக் கட்டியமைக்க முடியும்.

இல்லையேல் நாமே சாலை போடுவது, பள்ளி நடத்துவது, மருத்துவமனை நடத்துவது என்று என்.ஜி.வோ. டைப்பில் அப்துல் கலாம், சகாயம் பாணியில் அரசியலற்ற முறையில் மக்களை காயடிப்பதாக இருக்கும். இந்தப் படம் அப்படி சொல்லவில்லை என்றாலும், இயக்குநர் கோபிக்கும் இந்த அரசியல் தெரியுமென்றாலும் படத்தின் கதையில் அது வலுவாக வரவில்லை என்பதே நமது தோழமையான விமர்சனம். இந்தக் குறைபாடுகளோடு சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியாதா எனும் பரபரப்பும் மனிதாபிமானமும் சேர்ந்து பார்வையாளர்களை கட்டிப் போடவைக்கிறது. அந்த பரபரப்பு அரசு குறித்த விமர்சனங்களில் எளிமைப்படுத்தப்பட்ட நல்லவன் – கெட்டவனாக மட்டுமே விஞ்சுகிறது.

இருப்பினும் ஒரு சிறுகதை போல ஒரு கிராமத்தின் பார்வையில் இந்த அரசு அமைப்பை இப்படம் சிறப்பாகவே அம்பலப்படுத்துகிறது. இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்!


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி