கல்வித்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம்! | பேராசிரியர் வீ.அரசு
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

கல்வித்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம்! | பேராசிரியர் வீ.அரசு
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

கணிணி அறிவியல் பாட புத்தகங்களை குப்பையில் வீசிட்டாங்க!
| குமுறும் கணிணி அறிவியல் ஆசிரியர்கள்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (ஏ.ஐ.) தொடர்ந்து வேலையிழப்புகள் நடந்து வருகிறது. சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பேசியுள்ளார். அவரின் கருத்துகளை எப்படி பார்க்க வேண்டியுள்ளது?
கடந்த டிசம்பர் மாத இறுதியில் சென்னைக்கு வந்தபோது ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘1980-களில் வங்கிகளில் கணினி அறிமுகமானபோது ஊழியர்களுக்கான மாற்றாக கணினி இருக்குமோ என்ற சந்தேகம் தொழிற்சங்கங்களுக்கு எழுந்தது. இப்போது நாடு எப்படி வளர்ச்சி கண்டுள்ளது என பாருங்கள். இன்று நமது இல்லங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் கணினி உள்ளது. அது வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதா அல்லது பறித்துக்கொண்டதா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை யார் இயக்க உள்ளோம் என்பதை பாருங்கள். அதன் திறனை பயன்படுத்துவதற்கான கருவியை உருவாக்கப்போவதும் நீங்கள்தான். டிஜிட்டல் வளர்ச்சி பணிகளை யாரும் வழிமறிக்க முடியாது. அது பொருளாதாரத்திற்கு கேடு. வளர்ச்சி எனும் நீரோடையுடன் சென்றால் நமக்கும், நாட்டுக்கும் நல்லது’‘ என்று கூறினார். இவை அனைத்தும் அப்பட்டமான பொய்யாகும்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தினால் வேலையிழப்பு ஏற்படுவது குறித்தான செய்திகள் அன்றாடம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கமான ஜனவரி மூன்றாவது வாரத்தில் மட்டும் ஐ.டி. நிறுவனங்களில் இருந்து 5,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ‘‘லேஆஃப்ஸ்’‘ என்ற இணையதளம் கூறுகிறது. கூகுள் நிறுவனம் 1,000 பேரையும், அமேசான் 500 பேரையும், யுடியூப் 100 பேரையும், டிக்டாக் 60 பேரையும், இன்ஸ்டாகிராம் 60 பேரையும் நீக்கியுள்ளன. மொத்தமாக, இந்நிறுவனங்கள் 1,720 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன. மேலும், மென்பொருள் நிறுவனங்களான யூனிட்டி சாஃப்ட்வேர் நிறுவனத்தில் 1,800 (மொத்த ஊழியர்களில் 25 சதவிகிதம்), வேஃபேர் நிறுவனத்தில் 1,650, ரியாட் கேம்ஸ் நிறுவனத்தில் 530, ட்விட்ச் நிறுவனத்தில் 500 (35 சதவிகிதம்), ஃப்ரண்ட்டெஸ்க் நிறுவனத்தில் 200, டிஸ்கார்ட் நிறுவனத்தில் 170 (17 சதவிகிதம்) என 4,850 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 1,190 தொழில்நுட்ப நிறுவனங்களால் 2,62,595 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தொடங்கி ஒரு மாதமே முடிவடைந்துள்ள நிலையில் 31,751 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், நிர்மலா சீதாராமன் போன்ற பார்ப்பன கார்ப்பரேட் தரகர்கள், கணினியும் செயற்கை தொழில்நுட்பமும் ஒரே மாதிரியானவை என்பதாக சித்தரிக்கின்றனர். கணிப்பொறி வந்த பின்னர், பல துறைகள் அழிந்துவிட்டன. அந்தத் துறைகளில் பணிபுரிந்த கோடிக்கணக்கான கலைஞர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் வேலையிழந்து கூலிகளாக்கப்பட்டுள்ளனர். ஆனால், செயற்கை தொழில்நுட்பத்தின் தாக்கம் இதனைக்காட்டிலும் பலமடங்கு அதிகமானதாக இருக்கும்.
அண்மை காலங்களில், பத்திரப்பதிவுத்துறை, நீதித்துறை, கல்வித்துறை, போலீசுதுறை போன்ற பல அரசு அலுவலகங்களில் டிஜிட்டல்மயமாக்கம் நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், எல்.ஐ.சி. போன்றவையும் டிஜிட்டல்மயமாக்கப்படுகின்றன. இத்துறைகளில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்படும் அபாயத்தை எதிர்த்து ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இன்னும், ஐந்து முதல் பத்தாண்டுகளில் கோடிக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் உள்ளது.
ஜூலை 2023 கணக்கின்படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.95 சதவிகிதமாகும். இது, அக்டோபர் மாதத்தில் மட்டும் 10.05 சதவிகிதமாக இருந்தது. நான்கு வாரங்கள் தொடர்ந்து வேலையில்லாமல் இருக்கும் 16-வயதுக்கு அதிகமானவர்களை மட்டுமே கொண்டு இந்த புள்ளிவிரவம் அளவிடப்படுகிறது. உண்மையில், நிரந்த வேலை, உத்தரவாதமான வேலை ஆகியவற்றின் வேலையின்மை விகிதம் இதனைவிட பல மடங்கு அதிகமாகும். பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பின்னர் வேலையின்மை மிக தீவிரமாக அதிகரித்துள்ளது.
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துதான் நிர்மலா சீதாராமன் போன்ற கார்ப்பரேட் தாசர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்றனர்.
மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்துதான் டிஜிட்டல்மயமாக்கமும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் புகுத்தப்படுகின்றன. இந்த மக்கள் விரோதத் தன்மையை எதிர்த்தாலே, செயற்கை நுண்ணறிவையே எதிர்ப்பதாகவும் இந்தியா வல்லரஸ் ஆவதை எதிர்ப்பதாகவும் இந்த கார்ப்பரேட் தாசர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பொய்களை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்; உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமான நிரந்தர வேலை உரிமையை மீண்டும் நிலைநாட்ட போராட வேண்டும்.
![]()
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

RIP ராமா !!!
சீதைக்கு, காலை சமையலுக்கு
காய்கறி வாங்க காசு இல்லை.
1200 கொடுத்து வாங்கின சிலிண்டரும்
நேற்று இரவே தீர்ந்து போக..
நீர் தண்ணி வடிச்சு லவனுக்கும் குசனுக்கும்
ஆளுக்கு ஒரு டம்ளர் கொடுத்தா, சீதா.
எப்போதுமே குடிச்சிட்டு தெருவுல விழுந்து கிடக்கும் ராமனுக்கு,
இன்றைக்கு குடிக்க காசு இல்லை.
வாங்கி கொடுக்க ஆளும் இல்ல.
வீட்டு குண்டாவை திருடி
விற்று குடித்துவிட்டு வந்து
சீதையை தரந்தாழ்ந்து பேசினான் ராமன்.
இருந்த கோவத்துல, ராமன்
நெஞ்சில் எட்டி உதைத்தாள் சீதா.
லவனும் குசனும் ராமனை போட்டு புரட்டி எடுக்க,
அனுமனும் அவன் பங்கிற்கு இராமன் வாயிலேயே எட்டி மிதிச்சான்.
புல்லட்டில் வந்த இராவணன்,
சண்டையை தடுத்து
மண்டை உடைந்த ராமனை
ரத்தம் சொட்ட சொட்ட
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்.
மருத்துவமனைக்கு பூட்டு போட்டு இருந்தது.
ஏன்? என்று அக்கம் பக்கம் கேட்டான் இராவணன்.
ஏதோ, ராமர் கோயில் திறப்பாம்..
அதான் எல்லோருக்கும் விடுமுறையாம்..
இரத்தம் சொட்ட சொட்ட
ராமன் உயிர் பிரிந்தது !!!
RIP ராமா!!!
![]()
கவின்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: ஒருபுறம் நிதிஷ்குமார் “இந்தியா” கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார். மற்றொருபுறம் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடப்போவதாக கூறியுள்ளனர். இது “இந்தியா கூட்டணி”க்குப் பின்னடைவை ஏற்படுத்துமா?
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கேடுகெட்ட பிழைப்புவாதக் கட்சி என்று பீகார் மக்கள் நன்குணர்ந்துள்ளனர். “நிதிஷ்குமாரின் விலகல், இந்தியா கூட்டணிக்கு பெரிய பாதிப்புகளை உருவாக்காது. மாறாக, இந்த எட்டப்பன் வெளியேறியதால், பீகாரில் இந்தியா கூட்டணிக்கு கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்” என்று இந்தியா கூட்டணியினர் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட பிழைப்புவாதியின் தலைமையில், இந்தியா கூட்டணி அமைந்தது சந்தர்ப்பவாதத்தின் கடைகோடித்தனம்! என்பதைதான் நாம் முக்கியமாக எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது.
மேலும், பா.ஜ.க.வுடன் உறவு-முறிவு-உறவு என்று அந்தர்பல்டி அடிப்பது நிதிஷ்குமார் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் அ.தி.மு.க., நா.த.க., பா.ம.க., தே.மு.தி.க., டி.டி.வி. தினகரன், கர்நாடகத்தில் குமாரசாமி, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி போன்றவர்களும் பா.ஜ.க.வின் கடைந்தெடுத்த அடிமைகளாகவே உள்ளனர்.
அதேபோல், இந்தியா கூட்டணி என்பது பாசிச எதிர்ப்பு கூட்டணி அல்ல, பா.ஜ.க. எதிர்ப்பு கூட்டணிதான். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட்டுகளை ஒதுக்குவதிலேயே இக்கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து உருவாகாத போது, இக்கூட்டணியினர் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இடத்தைப் பெற்றுவிட்டால், ஆட்சி அமைப்பதில் எவ்வளவு இழுபறி ஏற்படும் என்பதை இப்போதே அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜியின் அறிவிப்புகள் நமக்கு காட்டுகின்றன. இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை அது ஒரு பொதுத்திட்டத்திற்கு கூட வரவில்லை. பா.ஜ.க. எதிர்ப்பை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் இந்தக் கூட்டணியினரால், பாசிச பா.ஜ.க.வை தேர்தல் அரங்கில் வீழ்த்துவதும் கடினமே.
மேலும், நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளது குறித்தும் புழுத்து நாறும் இந்திய ஜனநாயகத்தின் அவலநிலை குறித்தும் தலையங்கத்தில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
![]()
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கல்விச் சிக்கல்களும் தீர்வுகளும் | ஊடகச் சந்திப்பு
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லிக்குள் நுழைவதற்காக பஞ்சாப், அரியானா எல்லைப் பகுதிகளில் குவிந்துள்ளனர் விவசாயிகள்.
இந்நிலையில், பாசிச மோடி அரசை கண்டித்து அரியானாவில் விவசாயிகள் பிப்.17 அன்று பேரணி நடத்தினர். அதேபோல் பஞ்சாபில் முக்கிய நகரங்களில் உள்ள பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு தர்ணா போராட்டமும் நடத்தியுள்ளனர்.
இதற்கிடையே, ஷம்பு எல்லையில் பேட்டியளித்த விவசாய சங்கத் தலைவர் சர்வன் சிங் பந்தேர் “விசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண நினைத்தால் குறைந்தபட்ச ஆதார விலைக்கான அவசர சட்டத்தை ஒரே இரவில் ஒன்றிய அரசு கொண்டு வரலாம். அதன் பிறகு மற்ற கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்” என்று கூறியுள்ளார். ஒன்றிய அமைச்சர்களுடன் இன்று நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் பந்தேர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியமானது.
வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்படி அமல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 2020 ஆம் ஆண்டில் டெல்லியில் நடத்திய மாபெரும் போராட்டத்திற்கான பிரதான காரணம், அந்தச் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலை எனும் உரிமையை அடியோடு பறித்துவிடும் என்பதுதான்.
படிக்க: விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்
இந்தியாவில் விவசாயிகள் தொடர்ச்சியாக நட்டத்திற்கு ஆளாவதற்கும், அதன் காரணமாக ஏற்படும் நெருக்கடியின் காரணமாக லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்வதற்கும் அடிப்படையான காரணங்களில் மிகவும் முக்கியமானது குறைந்தபட்ச ஆதார விலை எனும் உரிமை விவசாயிகளுக்கு இல்லாததாகும்.
நெல், கோதுமை தவிர மற்ற வேளாண்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உறுதி செய்யப்படாத நிலையே இன்று உள்ளது. அதிலும் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே நெல், கோதுமை ஆகியவை முழுமையாக அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. பெரும்பாலும் இடைத்தரகர்களால்தான் கொள்முதல் செய்யப்படுகின்றன.
ஒரு பக்கம் அதிகமாகிக் கொண்டே செல்லும் மூலதனச் செலவுகள், இன்னொரு பக்கம் விலையேற்றத்தால் ஏற்படும் வாழ்வாதாரச் செலவுகளின் உயர்வு காரணமாக இந்திய விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். விவசாயிகளின் இந்த நெருக்கடியான பொருளாதார நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இடைத்தரகர்களும், கமிசன் மண்டிகளும் விவசாயிகளை சுரண்டுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட விலைக்குக் குறைவாகவே விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். இதையெல்லாம் தடுப்பதற்கு எந்த அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்கிறது. ஆனால் நெல், கோதுமை தவிர மற்ற பயிர்களுக்கு உறுதி செய்யப்பட்ட அரசு கொள்முதல் கிடையாது. இது விவசாயிகளை சந்தை சக்திகளின் பிடியில் விட்டுவிடுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் அரசு நெல் கொள்முதல் செய்வதில் உள்ள ஊழலும், குளறுபடிகளும், அலட்சியமும் அதனால் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாக மாறிப் போய்விட்டது. மற்ற பயிர்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அவற்றுக்கெல்லாம் குறைந்தபட்ச ஆதாரவிலை இருக்கிறதா என்பது பற்றி பெரும்பான்மையான விவசாயிகளுக்கே தெரியாத நிலைதான் உள்ளது.
இந்தியாவின் உணவு தானிய இருப்பை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று உலக வர்த்தகக் கழகம் அழுத்தம் கொடுக்கிறது. இதன் மூலம் கார்ப்பரேட்டுகள் சந்தையில் கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்கேற்பவே ஒன்றிய அரசுகளும் செயல்பட்டு வந்தன. இந்திய உணவுக் கழகத்திற்கான மானியங்களை வெட்டுவது, கொள்முதலை குறைப்பது, மோசமான பராமரிப்பு இவையெல்லாம் உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைக்கு அடிபணிந்தே நடைபெறுகின்றன.
உண்மையில், இதுவரை அரசு கடைப்பிடித்து வந்த குறைந்தபட்ச ஆதாரவிலை என்பதே சந்தையில் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏற்பத்தான் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. சந்தை சக்திகளின் பிடியில்தான் ஏற்கெனவே விவசாயிகள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். எந்த வித சுயசார்பு நிலையிலும் விவசாயிகள் வாழ அரசு உதவி செய்வது கிடையாது.
இதனால்தான் விளைபொருள்கள் அதிகமாக விளையும் போது சந்தை சக்திகளால் குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகள் கடன் நெருக்கடி, தற்கொலைக்குத் தள்ளப்படுவதும், விளைச்சல் இல்லாதபோது பதுக்கிவைக்கப்பட்ட விளைபொருள்களைக் கொண்டு கார்ப்பரேட், சந்தைக் கும்பல் கொள்ளையடிப்பதும் தொடர்ச்சியாக நடக்கிறது.
படிக்க: பாசிச அடக்குமுறைகளைத் தகர்த்து முன்னேறுகிறார்கள் விவசாயிகள்! போராட்டத்தீயை அணையாமல் பாதுகாப்போம்!
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வரத் துடிக்கும் மூன்று வேளாண்திருத்தச் சட்டங்களோ குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற ஒன்றையே இல்லாமல் செய்து கார்ப்பரேட்டுகளிடம் கையேந்துபவர்களாக விவசாயிகளை மாற்றி விடும். மூலப்பொருள்கள், உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம் என எல்லா அம்சங்களிலும் விவசாயிகள் கார்ப்பரேட் கும்பலை நம்பி வாழ வேண்டிய மோசமான நிலைக்கு தள்ளப்படுவர். பன்மடங்கு விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கும். இதனையெல்லாம் தெளிவாக உணர்ந்துதான் விவசாயிகள் தீவிரமாக போராடுகின்றனர்.
குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது விவசாயிகளுக்கு லாபம் தருவதாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம் என அனைத்திலும் அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும். இதை சட்டப்பூர்வமாக உறுதி செய்யும்போதுதான் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி வீசும்.
விவசாயிகளின் போராட்டம் ஏற்படுத்திய நிர்ப்பந்தத்தால் தற்போது ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் என்று கூறுகிறார். அதேபோல் பாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதாக இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது. இவையெல்லாம் போராட்டம் ஏற்படுத்திய நிர்ப்பந்தத்தில் தான் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர முழுமையான தீர்வை அளிக்கப் போவதில்லை. ஏற்கனவே கூறியபடி, கார்ப்பரேட் சந்தையின் ஆதிக்கத்திற்குட்பட்டே, உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இவர்களால் செயல்பட முடியும்.
இதனைக்கூட ஏகாதிபத்திய கார்ப்பரேட் கும்பலும், அதானி – அம்பானி கார்ப்பரேட் கும்பலும் விரும்பாது. இந்த தனியார்மய – தாராளமய பொருளாதார, நிர்வாக கட்டமைப்புக்குள், கார்ப்பரேட்டுகளின் அதிகாரக் கட்டமைப்புக்குள் நின்று கொண்டு இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி எதுவும் இல்லை; ஏமாற்றங்கள்தான் மிஞ்சும்.
அப்படியெனில், தீர்வு தான் என்ன? விவசாயிகளுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கக் கூடிய மாற்றுக் கட்டமைப்பை, அதாவது பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை உருவாக்குவதுதான் ஒரே தீர்வு. விவசாயிகளுக்கு எதிரான அனைத்து சட்டங்களையும் ரத்து செய்வதும், அவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்துவதும், நியாயமான விலை கிடைக்கச் செய்வதும் அப்போதுதான் சாத்தியமாகும். தனியார்மய – தாராளமய கொள்கைகளை முறியடித்து விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்ட கொள்கைகளும், செயல்பாடுகளும் அங்குதான் சாத்தியமாகும்.
விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கான போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் போராட்டத்தை பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான போராட்டத்துடன் அடுத்தக்கட்டமாக இணைத்து எடுத்துச் செல்ல வேண்டும். விவசாயிகளை மட்டுமல்ல, நமது நாட்டின் விடிவிற்கான ஒரே தீர்வும் அதுதான்.
![]()
இனியன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

2014-ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீட்டை 42 சதவிகிதத்திலிருந்து 33 சதவிகிதமாக குறைப்பதற்காக, நிதி ஆணையத் தலைவர் ஒய்.வி. ரெட்டியுடன் சதித்திட்டத்தில் ஈடுபட்டதையும், அதற்கு ஒய்.வி.ரெட்டி அடிபணிய மறுத்ததையும் நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் அம்பலப்படுத்தியிருக்கிறார். ஒய்.வி. ரெட்டியுடனான மோடியின் திரைமறைவு பேச்சுவார்த்தைக்குத் தொடர்பாளராக இருந்த இந்த சுப்ரமணியம், அப்போது பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளர் பொறுப்பு வகித்தவர்.
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் அரசு சாரா சிந்தனைக் குழாம், கடந்த ஆண்டு நடத்திய கருத்தரங்கில் சுப்ரமணியம் கலந்துகொண்டு உரையாற்றிய காணொளி சமூக வலைதளத்தில் வெளியானது. இக்காணொளி வெளியான பிறகு மோடி அரசின் சதித்திட்டம் அம்பலமானது. இதையடுத்து, பிரதமர் அலுவலகத்தின் தொடர் மிரட்டல்களால், அந்தக் காணொளியானது சமூக வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
2013-ஆம் ஆண்டு அக்டோபரில் ஒய்.வி.ரெட்டி தலைமையிலான நிதி ஆணையக் குழு குஜராத் சென்றிருந்த போது, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி மாநில நிதிப்பகிர்வு தொடர்பாக தற்போதைய கருத்திற்கு நேரெதிரான கருத்துகளை முன்வைத்தார்.
‘‘நிதி ஆணையத்தின் தற்போதைய அணுகுமுறை மோசமான நிதி ஒழுக்கம் கொண்ட மாநிலங்களுக்கு சாதகமாக உள்ளது. அதே நேரத்தில், அதிக வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலங்களை ஏமாற்றமடையச் செய்கிறது. ஆணையம் தனது அணுகுமுறையை மாற்றி, வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க உத்வேகம் அளிக்கும் நோக்கில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும்; ஒன்றிய அரசு மாநிலங்களுக்குரிய நிதிப்பங்கீட்டை 42 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்’‘ என்று நிதி ஆணையத்தின் விதிமுறைகளை திருத்த வேண்டுமென்றார் மோடி. ஆனால், பிரதமரான உடன் இதற்கு நேரெதிரான நிலையெடுத்தது மட்டுமின்றி, சட்டத்திற்குப் புறம்பான முறையில் சதித்திட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறார் மோடி.
பட்ஜெட் எனும் மோ(ச)டி வித்தை!
மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டைக் குறைப்பதற்கான திரைமறைவுப் பேச்சுவார்த்தையில் மூக்குடைபட்ட மோடி, நிதிக்குறைப்பை பட்ஜெட் மூலம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார். இரண்டே நாள்களில் தயாரிக்கப்பட்டது என மோடி பெருமையாகக் கூறிய 2015-2016 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டது என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறார் சுப்ரமணியம்.
‘‘ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான நிதி ரூ.36,000 கோடியிலிருந்து ரூ.18,000 கோடியாக சரிபாதி அளவுக்குக் குறைக்கப்பட்டது. இந்தத் துறைதான் அங்கன்வாடிகள் மூலமாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவு வழங்கக்கூடிய திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதேபோல, முந்தைய பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட 18.4 சதவிகித நிதி குறைவாக ஒதுக்கப்பட்டது’‘ என்பதையும் சுப்ரமணியம் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
‘‘ஒன்றிய அரசின் பட்ஜெட்டுகளில் உண்மைத்தன்மையானது பல்வேறு அடுக்குகளால் மூடிமறைக்கப்பட்டிருக்கிறது, ஹிண்டன்பர்க் போன்ற ஒரு நிறுவனம் ஆய்வு செய்தால் மட்டுமே வெளிப்படையான பட்ஜெட் சாத்தியமாகும்’‘ என்றும் சுப்ரமணியம் அக்கருத்தரங்கில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செஸ் மற்றும் கூடுதல் வரிகள் – கொள்ளைக்கான புதிய வழிகள்!
செஸ் மற்றும் கூடுதல் வரிகள் என்பவை வரிக்கு மேல் விதிக்கப்படும் வரிகளாகும். இவை சிறப்புத் தேவைகளுக்காக ஒன்றிய அரசால் வசூலிக்கப்படுபவையாகும். இவ்வாறு வசூலிக்கப்படும் நிதியை ஒன்றிய அரசு மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 271-இல் வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஒன்றிய மோடி அரசானது, தனது விருப்பத்திற்கு ஏற்ப செஸ் மற்றும் கூடுதல் வரிகளை விதித்து மக்களை ஒட்டச் சுரண்டிக் கொழுக்கிறது.
ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு சிகரெட், பான்மசாலா, பெட்ரோலியம், நிலக்கரி, கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நீர், மணமூட்டப்பட்ட-இனிப்புச் சுவையூட்டப்பட்ட குளிர்பானங்கள், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஆகியவற்றின் மீதும், வருமான வரி மீதும், சுகாதாரம் – கல்வி, சாலை மற்றும் உள்கட்டமைப்புகள், தேசிய பேரிடர் தற்செயல் வரி மற்றும் ஜி.எஸ்.டி. விதிப்பால் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடு செய்வது என்ற பெயரில் செஸ் மற்றும் கூடுதல் வரிகளை ஒன்றிய அரசு விதித்து வருகிறது.
படிக்க: நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை!
குறிப்பாக, ‘‘2017-18-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், ஐந்து இலட்ச ரூபாய் வரையிலான தனிநபர் வருமானத்திற்கான வரி 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இதனால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்காக ரூ.50 லட்சம் ரூபாய்க்கு அதிகமான தனிநபர் வருமானத்தின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது; 2018-19 ஆம் நிதியாண்டில், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 9 என குறைத்தது. இந்த இழப்பை ஈடு செய்வதற்காக சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரி அதிகரிக்கப்பட்டது’‘ என்ற பட்ஜெட் மற்றும் நிர்வாகத்திற்கான பொறுப்பு மையம் என்ற சிந்தனைக் குழாமைச் சார்ந்த மாலினி சக்ரவர்த்தியின் புள்ளிவிவரத்தை சுப்ரமணியம் ஆதாரமாகக் காட்டியிருக்கிறார்.
இவ்வாறு விதிக்கப்படும் செஸ் மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றால் ஒன்றிய அரசின் வரி வருவாய் அதிகரித்திருப்பதும் அக்காணொளியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2011-12 ஆம் நிதியாண்டில் காங்கிரஸ் ஆட்சியில் வசூலிக்கப்பட்ட மொத்த வரிவருவாயில் செஸ் மற்றும் கூடுதல் வரிகளின் பங்கானது 10.4 சதவிகிதமாகும். ஆனால், மோடி ஆட்சியில், செஸ் மற்றும் கூடுதல் வரிகளால், 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ. 2.66 லட்சம் கோடியாக இருந்த வருவாயானது 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.4.99 லட்சம் கோடியாக, மொத்த வரி வருவாயில்13.9 சதவிகிதத்திலிருந்து 18.4 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு மோடி அரசு பதவியேற்ற போது 9.48 சதவிகிதமாக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி (மாநிலப் பகிர்வுக்கு உட்பட்டது), 2017-ஆம் ஆண்டு வரை அப்படியே மாற்றமில்லாமல் நீடித்தது, ஆனால் அதன்பிறகு படிப்படியாக 1.9 சதவிகிதமாக மோடி அரசால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய பகிர்வுத் தொகை பாதிக்கு மேலாகக் குறைந்து விட்டது.
அதே சமயத்தில், முழுமையாக ஒன்றிய அரசு மட்டுமே எடுத்துக் கொள்ளும் செஸ் வரி கடுமையாக அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது. 2014-இல் பெட்ரோல் மீது 12 சதவிகிதமாக இருந்த செஸ் வரியானது 2017-இல் 17.46 சதவிகிதமாகவும், 2020-இல் 22.98 சதவிகிதமாகவும், அதே ஆண்டு இறுதியில் 32.9 சதவிகிதமாகவும் மோடி அரசால் அதிகரிக்கப்பட்டது. தற்போது 27.9 சதவிகிதமாக வசூலிக்கப்படுகிறது. செஸ் வரி குறைக்கப்பட்டாலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது, சாலை மற்றும் உள்கட்டமைப்புகள் என்ற வகையில் கூடுதலாக வரி விதிக்கப்படுகிறது.
அந்தவகையில், பெட்ரோல், டீசல் மீதான வரிகளைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்ததன் மூலம் ஒன்பதே ஆண்டுகளில் சுமார் 32 இலட்சம் கோடிகளுக்கும் அதிகமாக மக்களிடமிருந்து மோடி அரசு பிடுங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதிகரிக்கும் கடன் – நிதி ஆயோக்கே அறியாத ரகசியம்!
பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டுவது, செஸ் மற்றும் கூடுதல் வரிகள் விதிப்பது ஆகியவற்றின் மூலம் தனது கஜானாவை நிரப்பிக் கொள்ளும் ஒன்றிய அரசு, கூடுதல் நிதியாதாரங்கள் என்ற பெயரில் பல அரசுத்துறை நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டுக் கடன்களை வாங்கிக் குவித்திருப்பது சுப்ரமணியம் பேசிய காணொளி மூலம் அம்பலமாகியிருக்கிறது. இந்தக் கடன்கள் எதற்காக, எந்தக் காலத்தில், எந்தக் கால வரம்பிற்குள் திருப்பி செலுத்துவதாக வாங்கப்பட்டன, கடன்களுக்கான வட்டிவிகிதம் என்ன எதுவும் தெரியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். நிதி ஆயோக் தலைவருக்கே இந்த நிலைமை என்றால், நாடு எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும்.
கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 100 லட்சம் கோடிகளை கடனாகப் பெற்றிருக்கிறது மோடி அரசு. இதனால் இந்தியாவின் கடன் ரூ. 155 லட்சம் கோடியாக அதிகரித்து மூன்று மடங்கு உயர்வு கண்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இது 174 இலட்சம் கோடியாக அதிகரித்து விடும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
இவைமட்டுமின்றி, பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வது என்ற பெயரில் தேசியப் பணமாக்கல் திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு அம்பானி-அதானி மற்றும் டாடாவிற்கு தாரை வார்க்கிறது மோடி அரசு.
படிக்க: சி.ஏ.ஜி. அதிகாரிகள் இடமாற்றம்: ‘பரிசுத்த ஆவி’யாகிவிட்டது மோடி அரசு!
இத்தனை இலட்சம் கோடிகளை மோடி அரசு என்ன செய்தது? மக்களுக்கும் நாட்டுக்கும் பலனளிக்கக்கூடிய வகையில் எத்தனை தொழிற்துறை, கல்வி, சுகாதார, விவசாய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன? என்ற கேள்விகளுக்கு மதுரை எய்ம்ஸ் திட்டமே சிறந்த சான்று. ஆனால், இதற்கு நேர்மாறாக கடந்த 9 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் முதலைகள் பெற்ற 25 லட்சம் கோடி வாராக்கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது பாசிச மோடி அரசு.
மறுபுறத்திலோ, பேரிடர் நிவாரண நிதியாக தமிழக அரசு கோரிய ரூ 21,692 கோடியில், இரண்டாம் தவணையான ரூ 450 கோடியையும் சேர்த்து ரூ. 950 கோடி மட்டுமே ஒதுக்கியிருந்தது மோடி அரசு. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் சில ஆயிரம் கோடிகளே இருப்பதால் அவ்வளவுதான் ஒதுக்க முடியும் என்றும், மீதமுள்ள தொகையை மாநில அரசுதான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்கிறார் பா.ஜ.கவின் நாராயணன் திருப்பதி. கடந்த எட்டாண்டுகளில் தமிழக அரசு கோரிய பேரிட நிவாரண நிதியில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.எஸ்.டி, செஸ் மற்றும் கூடுதல் வரிகள் என்ற பெயரில் மாநிலங்களுக்கான வரி வருவாயின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொள்ளும் மோடி அரசு, பேரிடர் காலங்களிலும் கூட மாநிலங்களே சமாளித்துக் கொள்ள வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்வதன் மூலம், மாநிலங்களைக் கப்பம் கட்டும் சிற்றரசாக நடத்தி வருவதையே தெளிவாகக் காட்டுகிறது.
வெளிச்சமாகும் மோடி வேடம் – வேடிக்கை பார்க்கும் எதிர்க்கட்சிகள்!
ஒன்றிய அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளில் ஒன்றாக விளங்கும் நிதி ஆயோக்கின் தலைவரே மோடி அரசை இன்று அம்பலப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் கூட, மாநில உரிமைகள் பறிக்கப்படுவதையும், பா.ஜ.க.வையும் எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், மோடியின் திரைமறைவு பேச்சுவார்த்தை அம்பலமானது குறித்து வழக்கம்போல வெறும் அறிக்கையோடு முடித்துக் கொண்டுள்ளன. மோடியின் தோல்வி முகத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் கிடைக்கின்ற எந்த வாய்ப்பையும் பயன்படுத்தவோ, மக்களிடம் அம்பலப்படுத்தவோ செய்யமாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் சபதம் எடுத்துக் கொண்டு இருப்பதைப் போல அவற்றின் செயலற்ற தன்மை இருந்து வருகிறது.
ஏனெனில், மோடியின் தீவிர கார்ப்பரேட் சேவைக்கும் பாசிசத்துக்கும் அடிப்படையான தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற அதே மறுகாலனியாக்கக் கொள்கையைத்தான் இக்கட்சிகளும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது மோடியின் வழியில் சென்றுகொண்டே, ஒன்றிய அரசிடம் மாநில உரிமைகளையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட முடியுமென எதிர்பார்ப்பது முரணானதும், மக்களை ஏமாற்றுவதுமாகும்.
ஆகவே, பாசிசத்தை எதிர்க்கின்ற ஜனநாயக சக்திகள், மோடி அரசின் ஜி.எஸ்.டி, ஒரே நாடு – ஒரே வரி – ஒரே தேர்தல், புதிய கல்விக் கொள்கை, புதிய குற்றவியல் சட்டம் போன்ற இந்துராஷ்டிர கட்டுமானங்களுக்கு மாற்றாக ஜனநாயகப்பூர்வமான, மக்கள் நலன் கொண்ட சமூக-அரசியல்-பொருளாதாரத் திட்டங்களை முன்வைத்து மக்களைத் திரட்ட வேண்டியிருக்கிறது.
![]()
அப்பு
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பாஜக சுருட்டிய 6 ஆயிரம் கோடி கருப்புப் பணம் | தோழர் அமிர்தா
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


17.02.2024
தமிழ்நாடு அரசே!
கொலைகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்று!
மக்கள் அதிகாரம் வலியுறுத்தல்!
பத்திரிகை செய்தி
தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கும் மக்களின் உயிருக்கும் கேடு விளைவித்து வரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம், மீண்டும் தூத்துக்குடியில் செயல்படுவதற்காக மேற்கொள்ளப்படும் சதி வேலையை மக்கள் போராட்டங்கள் மூலமாக முறியடிக்க வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தூய காற்று, நீர், நிலத்துக்காக போராடிய தூத்துக்குடி மக்களை மறைந்திருந்தும், வாகனத்தின் மீது ஏறிநின்றும் கொலைகார வேதாந்தா நிறுவனத்துடன் சேர்ந்து சுட்டுக் கொன்றது தமிழ்நாடு போலீசு. நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர், சிறைப்படுத்தப்பட்டனர். இதில் மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 15 பேர் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்டெர்லைட்டை மூடாமல் உடல்களை பெற மாட்டோம் என்று தியாகிகளின் உறவினர்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர். தமிழ்நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே தூத்துக்குடி மக்களின் தியாகத்துக்கு தலைவணங்கியது. அதன் விளைவாக தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடியது. தனது நிறுவனம் மூடப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம். மக்கள் அதிகாரம் உட்பட பலர் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்து ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர் முறை குற்றவாளியே என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர். 25 ஆண்டுகள் செயல்பட்ட அந்த நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுமதி பெறாமல் இயங்கியதையும் பல அபாயகரமான கழிவுகள் அனுமதிக்கப்பட்டதை விட பல மடங்கு மண்ணுக்குள் ஊடுருவி இருந்ததையும் வாதங்கள் வெளிக்கொண்டு வந்தன.
மக்கள் போராட்டங்களின் நியாயத்தையும் வேதாந்தா ஸ்டெர்லைட்டின் அநியாயத்தையும் ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் அன்றைய நீதி அரசர்கள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு, ஸ்டெர்லைட்டை மூடி தமிழ்நாடு அரசு மேற்கொண்ட செயல் சரியே என்று தீர்ப்பளித்தது.
இன்று வரை ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் கைக்கூலிகளும் அடியாட்களும் தூத்துக்குடியில் போராட்டம் நடத்துகிறார்கள். ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது என்று துண்டு பிரசுரம் கூட கொடுப்பதற்கு தூத்துக்குடியில் போலீசு அனுமதி மறுக்கிறது.
படிக்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட சைலேஷ் குமார் யாதவ் டிஜிபியாக பதவு உயர்வு!
எனினும் என்ன விலை கொடுத்தாலும் ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். இப்படிப்பட்ட சூழலில் தான், ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதன் இறுதி கட்ட விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், தமிழ்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட்டை மூட சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறு என்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒத்துக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம்; அதன் பிறகு ஆலையை திறப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆலை என்றும் காப்பர் நாட்டுக்கு தேவை என்றும் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட்டை மூடியது அரசு அல்ல; வீரம் செறிந்த தூத்துக்குடி மக்களின் தியாகமே ஸ்டெர்லைட்டை மூடியது. உச்ச நீதிமன்றம் அல்லது எந்த ஒரு அதிகார அமைப்பாக இருந்தாலும் சரி மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு முனைந்தால் அது தூத்துக்குடி மக்களின் போராட்டமாக மட்டும் இருக்காது.
உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான முயற்சிகளை தமிழ் நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பாசிச அடக்குமுறைகளைத் தகர்த்து முன்னேறுகிறார்கள் விவசாயிகள்!
போராட்டத்தீயை அணையாமல் பாதுகாப்போம்!
விவசாயிகள் போராட்டம் 4-வது நாளை எட்டியுள்ளது. டெல்லிக்குள் நுழைவதற்காக பல்லாயிரக்கணக்கில் பேரணியாக வந்து அரியானா எல்லையில் முற்றுகையிட்டிருக்கின்றனர் விவசாயிகள்.
பாசிச பாஜக அரசின் அத்துணை அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து விட்டுத்தான் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். புல்டோசர்கள், முள் ஆணி தடுப்புகள், முள்கம்பி வேலிகள், தடுப்பு வேலிகள், டயர் கில்லர்கள், ஒலி (Sonic) ஆயுதங்கள், ட்ரோன்கள் மூலம் தொடர்ச்சியான கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்கள் அனைத்தையும் எதிர்கொண்டுதான் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகள் போராட்டம் நடத்தும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
பாசிச மோடி அரசு தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்காக வெளிப்படையாக ஒரு போரை போராடும் விவசாயிகள் மீது நடத்திக் கொண்டிருக்கிறது.
அரியானா மாநிலம் ஷம்பு எல்லையில் போராட்டத்தில் பங்கேற்ற 63 வயதான விவசாயி கியான் சிங் கண்ணீர் புகைக்குண்டு வீச்சின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். அதேபோல் ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே போலீஸ் அதிகாரியான ஹீரா லால் (65), ஷம்பு எல்லையில் நடத்தப்பட்ட கண்ணீர் புகைக்குண்டுவீச்சு தாக்குதலால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.
From amputations and fractures to corneal and head injuries, nearly 100 protesting farmers have been hospitalised with serious injuries after clashing with the Haryana Police on the Shambhu and Khanauri borders over the last 2 days#farmerprotests2024 #KisanAndolan2024 #Farmers pic.twitter.com/H2l9mnrwK0
— karamprakash (@karamprakash6) February 16, 2024
மேலும் ஷம்பு எல்லையில் ஹரியானா போலீசார் நடத்திய 20 நிமிட கண்ணீர் புகைக்குண்டு மற்றும் பெல்லட் குண்டு தாக்குதலில் 10 க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்த நிலையில், 3 பேரின் கண்பார்வை பறிபோயுள்ளது. 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படிக்க: பாசிச மோடி கும்பலை பணியவைக்கும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது
பிப்.16 அன்று ஹரியானாவில் உள்ள ரேவரியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் பாசிஸ்டு மோடி. “ராமரை கற்பனை என்றவர்கள் தற்போது ஜெய் ஸ்ரீராம் என்கிறார்கள்” என்று அந்தக் கூட்டத்தில் காங்கிரஸை விமர்சித்துப் பேசியுள்ளார். ஆனால் ஒரு வார்த்தை கூட விவசாயிகள் போராட்டம் பற்றியோ, கோரிக்கைகள் பற்றியோ பேசவில்லை. மக்கள் மீது எந்த மனிதாபிமானமும் இல்லாத, கொடூரமான மனநிலை கொண்ட பாசிச சர்வாதிகாரி எப்படி இருப்பான் என்பதற்கு இதை விட சிறந்த சான்று எதுவும் இருக்க முடியாது.
ஒருபக்கம் விவசாயிகள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டே, வக்கிரமாக இன்னொரு பக்கம் பேச்சுவார்த்தை நாடகத்தை பாசிச மோடி கும்பல் விவசாயிகளிடம் நடத்தியது. ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா ஆகியோரும் பங்கேற்றனர். 5 மணி நேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
உலகமே கவனிக்கும் வகையிலான ஒரு போராட்டத்தை விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் கார்ப்பரேட் ஊடகங்களோ விவசாயிகள் போராட்டத்தை ஒரு சாதாரண செய்தியைப் போல ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. செய்தித்தாள்களும் உட்பக்க செய்தி என்ற அளவிற்கே எழுதிக் கொண்டிருக்கின்றன. இது மோடிகும்பலின் மீதான அச்சமும், கார்ப்பரேட் விசுவாசமும் அன்றி வேறென்ன?
பாசிச மோடி கும்பல், வேறு பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டு விவசாயிகள் போராட்டத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சிகளை கண்டிப்பாக எடுக்கும். இதற்குத் தகுந்தாற்போலத்தான் முதுகெலும்பில்லாத கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் விவசாயிகள் உறுதியாக, விடாப்பிடியாக போராடிக் கொண்டிருக்கின்றனர். நாடு முழுவதும் மக்கள் மத்தியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகின்றது.
படிக்க: பிப்.16: விவசாயிகளின் நாடுதழுவிய போராட்டம் வெல்லட்டும்!
ஐக்கிய விவசாயிகள் முன்னணி – அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டாக பிப் 16 அன்று நடத்திய நாடுதழுவிய தொழிலாளர் – விவசாயிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
பாசிச மோடி கும்பலுக்கு விவசாயிகள் போராட்டம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை (பிப்.18) மீண்டும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பாசிச மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை விவசாயிகள் பின்வாங்கப் போவதில்லை.
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி – அம்பானி, அதானி பாசிசம் தான் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் முதன்மையான எதிரி. மக்கள் மத்தியில் இந்தக் கும்பல் அம்பலப்பட்டு விட்டது. இந்த பாசிசக் கூட்டத்தை வீழ்த்துவதற்கான பாதையில் கடும் அடக்குமுறைகளையும் தாண்டி விவசாயிகள் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் போராட்டத்தீயை அணையாமல் பாதுகாக்க வேண்டும். அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் விவசாயிகளோடு ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் இந்தப் பாசிசக் கும்பலை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிய முடியும்.
![]()
இனியன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

🔴LIVE: அரசுப் பள்ளிகளின் கல்வி சிக்கல்களும் தீர்வுகளும்
| நூல் வெளியீடு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்
ஊடகச் சந்திப்பு
இன்று (17/2/2024) முற்பகல் 10.30 மணி,
பத்திரிகையாளர் சங்கம், சேப்பாக்கம், சென்னை.
நூல் வெளியீடு
பிற்பகல் 12 மணி
மாநில கலந்தாய்வரங்கம்
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

இந்திய அரசாங்கத்தின் கொள்கை சிந்தனை குழுவான நிதி ஆயோக் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி இந்தியாவின் வறுமைநிலை சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகையில் 24.82 கோடி பேர் ‘‘பல பரிமாண வறுமையில்’‘ இருந்து மீண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அந்த அறிக்கையில், 2013 – 2014-இல் 29.17 சதவிகிதமாக இருந்த ‘‘பல பரிமாண வறுமை குறியீடு – எம்.பி.ஐ. (Multi-dimensional Poverty Index -MPI)’‘, 2022 – 2024-இல் 11.28 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் சுமார் 24.82 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் வறுமை மிக அதிக அளவில் குறைந்துள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதன்படி, உத்தரப்பிரதேசத்தில் 5.94 கோடி பேரும், பீகாரில் 3.77 கோடி பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2.30 கோடி பேரும் மற்றும் ராஜஸ்தானில் 1.87 கோடி பேரும் வறுமையில் இருந்து மீண்டதாக குறிப்பிட்டுள்ளது.
‘‘உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (National Food Security Act) பொது விநியோக முறையானது 81.35 கோடி பயனாளிகளை உள்ளடக்கி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கி வருகிறது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானிய விநியோகத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பது போன்ற சமீபத்திய முடிவுகள் அரசாங்கத்தின் உறுதிபாட்டை எடுத்துக் காட்டுகின்றன’‘ என்கிறது நிதி ஆயோக் அறிக்கை.
இவ்வாறு, மோடி அரசாங்கம் ‘‘வறுமையை ஒழிப்பதற்கான முன்முயற்சிகளையும், உறுதியான அர்ப்பணிப்புகளையும் மேற்கொண்டு வருவதாக’‘ நிதி ஆயோக் அறிக்கை புகழ் பாடியுள்ளது. மேலும், 2030-க்கு முன் வறுமையை பாதியாக குறைக்கும் ‘‘நிலையான வளர்ச்சி இலக்கை’‘ (Sustainable Development Goal) இந்தியா அடையக்கூடும் என்றும் ‘பெருமிதம்’ கொள்கிறது.
மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘‘நிதி ஆயோக்கின் அறிக்கை, மிகவும் ஊக்கமளிக்கிறது, வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. நமது பொருளாதாரத்தில் மாற்றங்களை செய்வதில் கவனம் செலுத்துகிறது. அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்’‘ என ‘உறுதிமொழி’ பூண்டுள்ளார்.
படிக்க: பாசிச மோடி அரசை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்
இப்படியாக, நிதி ஆயோக் மோடி அரசையும், மோடி நிதி ஆயோக்கையும் மாறி மாறி போற்றி புகழ்ந்து தள்ளியுள்ளனர்! சங்கிகளும் இந்த அறிக்கையை மோடி அரசின் சாதனையாக கொண்டாடி வருகின்றனர்.
மோடி ஆட்சியில் வறுமை ஒழிந்து வருகிறதா? நிதிஆயோக்கின் இந்தக் கட்டுக்கதையை கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறதல்லவா!
நிதி ஆயோக் இந்தக் கட்டுக்கதையை உருவாக்க எடுத்துக்கொண்ட தரவுகள், ஆய்வுமுறை என அனைத்துமே மோசடியானது என்பதனை தற்போது பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
தரவுகளை மூடி மறைத்துவிட்டு, வறுமை ஒழிந்துவிட்டதாம்!
கடந்த ஒன்பது ஆண்டுகளில், கிட்டத்தட்ட 24.82 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று நிதி ஆயோக் தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், இந்த முடிவிற்கு வந்தடைய நிதி ஆயோக் பயன்படுத்திய பல பரிமாண வறுமை குறியீடும், அதற்காக எடுத்துகொள்ளப்பட்ட அல்கிரே ஃபாஸ்டர் (Alkire Foster) என்ற ஆய்வுமுறையும் (Methodology) அடிப்படையிலேயே தவறானது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
‘‘இந்தியாவில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டமிடல்’‘ என்ற புத்தகத்தின் ஆசிரியரும், ஓய்வுபெற்ற இந்திய பொருளாதார சேவை அதிகாரியுமான கே.எல்.தத்தா, ‘‘இந்த எம்.பி.ஐ. முறையானது, இலக்குகளை நிர்ணயிக்க திட்டமிடுபவர்கள் அல்லது கொள்கை வகுப்பாளர்களால் பயன்படுத்தப்படுவதில்லை; வறுமை குறைப்புக்கான திட்டங்களை உருவாக்க உள்ளீடாகவும் பயன்படுத்தப்படுவதில்லை. சுருக்கமாக, எம்.பி.ஐ. வறுமையை பிரதிநிதித்துவப்படுத்தாது. வறுமை விகிதத்திற்கு மாற்றாக எம்.பி.ஐ. மதிப்பீட்டை காட்ட அரசாங்கம் முயற்சிக்கிறது. இது சரியல்ல’‘ என்கிறார்.
எம்.பி.ஐ. மூலம் வறுமையை கணக்கிட முடியாது என்று கூறும் பொருளாதார வல்லுநரான ஜீன் டிரேஸ், ‘‘குறுகிய கால வாங்கும் சக்தியை அளவிட எம்.பி.ஐ-யில் எந்த குறியீடும் இல்லை’‘ என்கிறார்.
பல பரிமாண வறுமை குறியீடு (எம்.பி.ஐ.) என்பது மக்களுக்கான சேவைகளை அளவிடக்கூடிய குறியீடு மட்டுமே. அதாவது, அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய சலுகைகள் அல்லது மக்களுக்கு கிடைக்கக்கூடிய சில வசதிகளை அணுக முடியாதவர்களின் சதவிகிதத்தையே எம்.பி.ஐ. நமக்கு தெரிவிக்கும். ஆனால், வறுமையை அளவிட தனிநபரின் நுகர்வு செலவினங்களும் (வாங்கும் சக்தி) விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதியம் அளிக்கப்படுகிறதா என்பதையும் முதன்மையாக கணக்கிட வேண்டும்.
மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தப்பிறகு, 2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் நுகர்வு செலவினம் குறித்து எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. அப்படியிருக்க மக்களின் வறுமையை கணக்கிட அடிப்படையான நுகர்வு செலவினங்களை பற்றிய தரவுகளே இல்லாமல், எம்.பி.ஐ. தரவுகளை கணக்குக்காட்டி இந்தியாவில் வறுமை ஒழிந்துவருகிறது என்று மோசடியான அறிக்கையை தயாரித்துள்ளது நிதி ஆயோக்.
மேலும், பல பரிமாண வறுமை குறியீட்டை கணக்கிட, தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகளின் (National Family Health Survey) தரவுகளைத்தான் நிதி ஆயோக் பயன்படுத்தியிருக்கிறது. இத்தரவுகளிலும் மிகப்பெரிய குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. பா.ஜ.க. 2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கடைசியாக 2005-06-இல் தான் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 3 (NFHS 3) எடுக்கப்பட்டிருந்தது. எனவே மோடி ஆட்சிக்கு வந்தப்பிறகு 2015-16-இல் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 4-இல் 2006-2016 வரையிலான நிலைமைகளின் தரவுகள் இடம்பெற்றன, அதாவது, காங்கிரஸ் ஆட்சியின் தரவுகளும் இடம்பெற்றிருந்தன.
இதன்காரணமாக தங்களது கணக்கெடுப்பிற்கு தேவையான 2014-2016 வரை ஆண்டுவாரியான தரவுகள் இல்லாததால் மொத்தமாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 4-இல் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கான சராசரியை எடுத்து நிதி ஆயோக் பயன்படுத்தியுள்ளது. மேலும் எம்.பி.ஐ-யின் 12 அம்சங்களுக்கும் தேவையான ஆண்டுவாரி தரவுகள் இல்லாததால் ஆண்டுகளின் தொகுப்பான வளர்ச்சி விகிதத்தை கணக்கில் எடுத்துக் கணக்கிட்டுள்ளது, நிதி ஆயோக். அதாவது, காங்கிரஸ் ஆட்சிகாலத்தின் தரவுகளை எடுத்துக்கொண்டு மோடி ஆட்சியில் வறுமை ஒழிந்துவருகிறது என பொய் கணக்கு காட்டியுள்ளது நிதி ஆயோக்.
இதுபற்றி பேசியுள்ள இங்கிலாந்து பாத் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா, ‘‘விலைவாசி உயர்வுக்கேற்ற ஊதியம் ஆறு ஆண்டுகளாக தேக்க நிலையில் இருந்தது. இது வாங்கும் சக்தியில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது. காங்கிரஸ் அரசாங்கத்தில் 7.9 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் (மோடி ஆட்சியில்) 5.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. இரண்டு ஆட்சிக் காலத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் எப்படி இரண்டையும் தொகுத்து தரவுகள் எடுக்கமுடியும்’‘ என நிதி ஆயோக்கை கேள்வியெழுப்புகிறார்.
அடுத்ததாக, நிதி ஆயோக் ஆய்விற்கு எடுத்துக்கொண்ட 2019 மற்றும் 2021ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5 (NFHS 5)-இன் லட்சணத்தைப் பார்ப்போம். 2020-இல் கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் 22 மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. இதன் காரணமாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5-இல் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான தரவுகள் ஏதும் இடம்பெறவில்லை. கொரோனா காலத்தில் மக்கள் அடைந்த பாதிப்புகள் பற்றிய விவரங்களே இல்லாத ஆய்வின் தரவுகளைதான், நிதி ஆயோக் தனது எம்.பி.ஐ. ஆய்வறிக்கையை தயாரிக்க எடுத்துக்கொண்டுள்ளது. மேலும், கொரோனாவிற்கு பிறகும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் கணக்கெடுப்பு நடத்தப்படாமல் கைவிடப்பட்டதால்,வெறுமனே கொரோனாவிற்கு முந்தைய கால தரவுகளையே 2023 வரை நீட்டித்துக்கொண்டு ஆய்வை நடத்தியுள்ளது, நிதி ஆயோக்.
படிக்க: எது கேலிக்கூத்து? நிதிஷ்குமாரின் ‘பல்டி’யா, இந்திய ‘ஜனநாயகமா’
மொத்தத்தில், கொரோனா பேரழிவாலும், அதனை கையாண்ட மோடி அரசின் பாசிச அணுகுமுறைகளாலும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் எதிரொலிக்காத வகையில்தான் நிதி ஆயோக்கின் இந்த பல பரிமாண வறுமை குறியீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில், கொரோனா பெருந்தொற்றின்போது, எந்தவித திட்டமிடலும் இல்லாமல் மோடி அரசு பிறப்பித்த காலவரையற்ற ஊரடங்கு உத்தரவினால், லட்சக்கணக்கான மக்கள் நோய் தொற்றாலும், பசியாலும் மடிந்து போயினர். புலம்பெயர் தொழிலாளர்கள் நிர்கதியாக்கப்பட்டு பல மைல் தூரம் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றனர். எண்ணற்ற சிறு, குறு தொழில்கள் நலிவடைந்தன. பலர் வேலையிழந்து நிர்கதியாக்கப்பட்டனர். பல குடும்பங்கள் நஷ்டத்தில் இருந்து மீளமுடியாமல் இன்றளவும் தவித்து வருகின்றன. ஏழை-எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் கல்வியை தொடரமுடியாமல் இடைநிற்றலும் அதிகரித்தது. கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில்தான் நமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பின் உண்மை நிலையும் வெளிச்சத்திற்கு வந்தது. உலகளவில் கொரோனா பெருந்தொற்றை மோசமாக கையாண்ட முதல் ஐந்து பேரில் மோடியும் ஒருவராக உள்ளார். மோடி அரசின் இந்த பேரழிவை பற்றிய தரவுகளை மறைத்துவிட்டு, வறுமை ஒழிந்துவருகிறது என்ற அப்பட்டமான பொய்யை தைரியமாக நிதி ஆயோக் கூறியுள்ளது.
உண்மையில், வறுமையில் இருந்து இத்தனை கோடி மக்கள் மீட்கப்பட்டுவிட்டார்கள் என்று நிதி ஆயோக் அறிக்கை கூறுவதற்கு நேர்மாறாக, மோடி அரசின் பொருளாதார பயங்கரவாத தாக்குதல்களால் இந்திய உழைக்கும் மக்களின் நிலைமை மேலும் மேலும் மோசமடைந்துதான் வருகிறது.
இந்தியாவின் உண்மை நிலைமை
தேசிய பல பரிமாண வறுமை குறியீடு என்பது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கை தரம் ஆகிய மூன்று பரிமாணங்களின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. இந்த பரிமாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.ஐ-யின் 12 அம்சங்களான (Indicators) குழந்தைகளின் ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, குழந்தை பிறப்பின்போது தாயின் ஆரோக்கியம், பள்ளிப் படிப்பு ஆண்டு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்து மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவை வளர்ச்சி அடைந்துள்ளன என்று அப்பட்டமாக பொய் கூறுகிறது நிதி ஆயோக் அறிக்கை.
ஆனால், அண்மையில் வெளியான இந்தியாவின் வறுமை நிலை குறித்த பல அறிக்கைகளும் சம்பவங்களும் உண்மை நிலையை பளிச்சென்று எடுத்துக்காட்டுகின்றன.
கடந்தாண்டு அக்டோபர் 12-ஆம் தேதி இரண்டு ஐரோப்பிய நிறுவனங்களால் வெளியிடப்பட்ட உலகளாவிய பசி குறியீட்டு அறிக்கையில், 125 நாடுகளில் இந்தியா 111-வது இடத்தைப் பிடித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஒரே ஆண்டில் நான்கு இடங்கள் பின்னுக்கு சென்றுள்ளது.
மற்றொரு ஆய்வறிக்கையின்படி, ஊட்டச்சத்து குறைபாடு கடுமையாக உள்ள நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம்பிடித்துள்ளது. ஒரு நாட்டில் உயரத்திற்கு ஏற்ப எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகளின் விகிதம் 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்குமானால் அது ‘‘மிக அதிக கவலைக்குரியது’‘ என வரையறுக்கப்படுகிறது. அவ்வாறு வரையறுக்கப்பட்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே. இந்தியாவில் 18.7 சதவிகித குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ப எடை இல்லாமல் இருக்கின்றனர்.
நிதி ஆயோக் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘பிரதமர் மோடியின் தலைமையில் நாடு கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. கிசான் சம்மன் நிதி விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது’‘ என மோடி அரசின் ‘சாதனைகளை’ விவரிக்கிறார். ஆனால் உண்மையில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி 2022 – 2023 ஆண்டுக்கான நிதியாண்டில் ரூ.68,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாலும், இந்த திட்டத்தால் நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடைப்பதில்லை, அவர்களின் தேவைகள் புறக்கணிக்கப்படுகிறது என தரவுகள் கூறுகின்றன.
அதைவிட, விவசாய மானியங்கள் குறைப்பு, விவசாயக் கடன் வழங்காமை, உரம் பூச்சிக்கொல்லி விலை உயர்வு, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குதல் உள்ளிட்ட மோடி அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளால் மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் தற்கொலை 11,290 ஆக அதிகரித்திருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கையும் 6,083 ஆக அதாவது 41 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. மோடி ஆட்சியில் விவசாயிகளின் உண்மை நிலையை உணர்த்த டெல்லியில் அவர்கள் நடத்திய மாபெரும் போராட்டமே போதுமான சாட்சி.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு விகிதத்தை பொறுத்தவரை, கடந்தாண்டு ஜூலை மாத நிலவரப்படி, இந்தியாவில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.95 சதவிகிதமாக உள்ளது. இந்த கொடுமையில் இருந்து மீள எந்த துயரத்தை வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம் என்ற நிலைக்கு இந்திய இளைஞர்கள் வந்துவிட்டார்கள். இதற்கான அண்மைக்கால சான்றுதான், ஹரியானா மாநிலத்தில் நடந்த சம்பவம்.
கடந்த ஜனவரி மாதத்தில், ஹரியானா மாநிலம், ரோதக்கில் இஸ்ரேல் நாட்டில் வேலை செய்ய தச்சர்கள், கட்டுமானப் பணியாளர்கள் என 10,000 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் அரசு சார்பில் நடத்தப்பட்டது. இந்த வேலைகளில் சேர ஒடிசா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் குவிந்த அவலம் அரங்கேறியது.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது கொடூரமான இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் சூழல் நிலவுகின்ற இஸ்ரேலுக்கு செல்வது உயிருக்கு உத்தரவாதமில்லை என்று தெரிந்தும், நம் நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மையால் அவர்களுக்கு வேறுவழி தெரியவில்லை. ’‘இங்கே பட்டினியில் கிடந்து சாவதை விட, இஸ்ரேலில் வேலைபார்க்கும்போது சாவது எவ்வளவோ மேலானது’‘ என்கிறார் முதுகலை பட்டதாரியான ரோஹ்தேஷ்.
மேலும், மோடியின் ஆட்சியில் உழைக்கும் மக்கள் பலர் வீடற்ற அகதிகளாக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இந்த நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. இதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் காணொளி ஒன்று பரவியது. அதில், மும்பை உள்ளூர் ரயில் தண்டவாளங்களில் குடும்பத்துடன் அடுப்பு, பாத்திரங்கள் வைத்து உணவு சமைத்து கொண்டிருந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அருகில் சில சிறுமிகள் தண்டவாளங்களில் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். எப்போது வேண்டுமானாலும் ரயில் வரலாம் என்ற ஆபத்தை உணராமல் குழந்தைகள் தண்டவாளங்களில் விளையாடி கொண்டும்; இன்னும் சிலர் தண்டவாளங்களில் தூங்கிக்கொண்டும் இருந்தனர். வறுமையின் கோரப்பிடியில் ஆபத்தான ரயில் தண்டவாளங்களில் தஞ்சம் புகுமளவிற்கு எண்ணற்ற உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நிலைமை இவ்வாறு இருக்கையில், 2030-க்கு முன் வறுமையை பாதியாகக் குறைக்கும் ‘‘நிலையான வளர்ச்சி இலக்கை’‘ (Sustainable Development Goal) இந்தியா அடையக்கூடும் என்று கூசாமல் கதையளக்கிறது நிதி ஆயோக்.
‘வறுமை ஒழிப்பு’ அல்ல நலத்திட்ட ஒழிப்பு
மோடி அரசின் ஊதுகுழலாக இருக்கும் நிதி ஆயோக், தற்போது வறுமை ஒழிந்து வருவதாக மோசடியான அறிக்கை வெளியிட்டிருப்பது தனித்த நிகழ்வல்ல. இதனை எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்குவதற்கான உத்தியாகவே நிதி ஆயோக் கையாண்டுள்ளது. மேலும், மோடி பிம்பத்தை காப்பாற்றுவதற்காக உண்மையான அறிக்கைகளை மறைக்கும் வேலைகளையும் நிதி ஆயோக் செய்து வருகிறது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறக் குடும்பங்களின் வருமானம் மற்றும் செலவு விவரங்களை சேகரிப்பதற்காக நுகர்வோர் செலவின ஆய்வு (Customer Expenditure Survey) நடத்தப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆய்வு முடிந்துள்ள நிலையில், அதன் முடிவுகளை கடந்த டிசம்பர் மாதமே வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வெளியிடாமல், நிறுத்தி வைத்துள்ள நிதி ஆயோக், 2023-24 க்கான ஆய்வையும் முடித்துவிட்டு, இரண்டு ஆய்வுகளின் முடிவுகளையும் தொகுத்து ஒன்றாக வெளியிடுவோம் என்கிறது. இரண்டு ஆய்வு முடிவுகளையும் ஒரே நேரத்தில் வெளியிடுவதற்கு காரணமாக, ‘முடிவுகளின் நிலைத்தன்மையை’ ஆராயப்போவதாக பொய்சாக்கு சொல்கிறது நிதி ஆயோக்.
உண்மையில், இதில்தான் சூட்சமம் அடங்கியிருக்கிறது. ‘‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’‘-இன் தரவுகளின்படி இந்த ஆய்வு முடிவுகள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் வெளியிடப்படும். அதாவது, நுகர்வோர் செலவின ஆய்வுக் குறித்தான அறிக்கை முடிவு வெளியிடுவதற்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துவிடும். இதன் மூலம், தேர்தல் முடியும்வரை இந்தியாவில் நிலவும் உண்மையான வறுமை விகிதத்தை திட்டமிட்டே மறைக்க முயற்சிக்கிறது மோடி கும்பல்.
இந்தியாவின் அவலநிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் ஆய்வறிக்கைகளை நிதி ஆயோக் முடக்கி வைப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் 2017-18 க்கான நுகர்வோர் செலவின ஆய்வு நடத்தியபோது அதன் முடிவுகள் தரமற்றவையாக உள்ளன என காரணம் காட்டி முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தியது. ஆனால், பின்னர் அந்த ஆய்வு முடிவுகள் கசிந்த போதுதான் இந்தியாவில் வறுமைநிலை தீவிரமாகி இருப்பதை அந்த ஆய்வு அறிக்கை முடிவுகள் பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கிறது என்பது தெரியவந்தது. அப்போதும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காகத்தான் இந்த முடிவுகள் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது.
இவற்றின்மூலம், தற்போது இந்த ஆய்வு வெளியாகியிருப்பது 2024 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தியே என்பது தெளிவாகிறது. இதுமட்டுமின்றி வறுமை ஒழிந்துவருகிறது என்று நிதி ஆயோக் அறிக்கை கொடுத்திருப்பதற்கு பின்னாலும் அந்த அறிக்கையை பூரித்து மோடி கருத்து தெரிவித்ததற்கு பின்னாலும் மிகப்பெரிய பாசிச சதித்திட்டம் ஒளிந்துள்ளது.
தற்போது இந்தியாவில் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நிதி ஆயோக்கின் ஆய்வறிக்கையில் 24.82 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த 25 கோடி பேருக்கான ரேஷன் பொருட்கள் வெட்டப்படுவதற்கான அபாயம் உள்ளது.
கார்ப்பரேட் திட்டங்களை மூர்க்கமாக அமல்படுத்திவரும் பாசிச மோடி அரசு அதற்கு ‘தொந்தரவாக’ உள்ள பல திட்டங்களை ஒழித்து வருகிறது. ஏற்கனவே மாநிலக் கட்சிகள் வழங்கிவரும் மக்கள் நலத் திட்டங்களை ‘‘ரேவ்டி கலாச்சாரம்’‘ என இழிவுப்படுத்தி அத்திட்டங்களை ஒழிப்பதற்கான வேலைகளை செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிதி ஆயோக்கின் இத்தரவுகளை காரணம்காட்டி அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பல நலத்திட்ட உதவிகளை வெட்டி அவர்களை பேரழிவுக்குள் தள்ளுவதற்கான பேரபாயம் உள்ளது.
ஆக மோடி ஆட்சியில் வறுமை ஒழிப்பு என்பதெல்லாம் வெறும் கற்பனை கதைகளாகத்தான் இருக்கும். நிலவுகின்ற அரசு கட்டமைப்பிற்குள் உழைக்கும் வர்க்கத்தைப் பீடித்திருக்கும் வறுமையை ஆளும்வர்க்கம் ஒருபோதும் ஒழிக்காது. அதுவும் மோடி போன்ற பாசிஸ்டுகளின் ஆட்சியில் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக உழைக்கும் மக்கள் மேலும் மேலும் கொடூரமாக சுரண்டப்பட்டு சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.
![]()
வெண்பா
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | மதுரை
இணைப்பு 1:
இணைப்பு 2:
இணைப்பு 3:
இணைப்பு 4:
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

நரேந்திரா கும்பலின் இந்து ராஷ்டிரா கனவில் டிராக்டர்கள் புகுந்துடுச்சி | தோழர் அமிர்தா
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
