மக்கள் அதிகாரக் கழகம்
மே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகள் 8-ஆம் ஆண்டு நினைவுநாள்!
ஆண்டுதோறும் தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் தியாகம் நினைவு கூறப்படுகிறது. அந்த வகையில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக தூத்துக்குடி, சாயர்புரம் ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
காளையார்கோவில் உறுதிக்கோட்டை ஊராட்சி நெடோடை கிராவல் குவாரியை மூடு!
நெடோடை உறுதிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மக்களின் போராட்டத்திற்குக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது. இதுவரை கிராவல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்காத ஆட்சியாளர்கள் அரசு அதிகார வர்க்கத்தினர் அனைவரையும் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உளுந்தூர்பேட்டை: இளம்பெண் ஆணவப் படுகொலை | ம.அ.க
நன்றாக நீச்சல் தெரிந்த அபிஷா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவரது தந்தை கூறுவதிலிருந்து இது ஒரு ஆணவப் படுகொலையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். ஆனால் போலீசோ இது ஒரு தற்கொலை என்ற வரம்பில் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளது.
காதலி கண்முன் காதலன்; மகள் கண்முன் தாய் – தொடரும் ஆணவப் படுகொலை பயங்கரங்கள்!
ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டம் இயற்றவும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. இந்துத்துவ கும்பலையும், ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும் தடை செய்ய உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோர் ஒன்றிணைந்து களமிறங்கிப் போராட வேண்டும்.
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு திறமையின் அடையாளமா?
தேசிய தேர்வு முகமை போன்ற ஆணையங்களைக் கலைக்க வேண்டும்; நீட் தேர்வை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் பாசிச மோடி அரசு!
10.25 சதவிகிதம் சர்க்கரைச் சத்து கொண்ட ஒரு டன் கரும்புக்கான சாகுபடி செலவு ரூ.1,820 என்று ஒன்றிய அரசு கணக்கிட்டுள்ளது. ஆனால், ஒரு டன் கரும்பு சாகுபடி செய்ய உண்மையில் ஏறக்குறைய ரூ.3,500 வரை செலவாகிறது என்பதை கரும்பு விவசாயிகளும் உழவர் சங்கங்களும் அம்பலப்படுத்துகின்றன. இம்மோசடியின் மூலம் மோடி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு! பாசிச மோடி அரசின் கையாலாகத்தனத்தை மக்கள் தலையில் சுமத்தும் நடவடிக்கையே!
கடந்த நான்கு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் இருந்த போதெல்லாம் விலையைக் குறைக்காத கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளை அடித்தன. தற்பொழுது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்று சொல்லி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது இந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
கிருஷ்ணகிரி: டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!
ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை “கமிஷன்” என்ற பெயரில் இடைத்தரகராகச் செயல்படும் டி.சி.எஃப்.எம் நிறுவனம் பெற்றுக்கொண்டு தங்களைச் சுரண்டுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக சரியான சம்பளம் வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
கிருஷ்ணகிரி: அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
குழந்தை திருமணம் நடைபெறுவதற்கு பல்வேறு சமூக, பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. இவற்றைக் களையாமல் குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆகையால், குழந்தை திருமணத்தைத் தடுக்க அரசியல் - பொருளாதார மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டிய அவசியம் உள்ளது.
பென்னாகரம் – போடூர்: சந்துக்கடை சாராயக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்!
நமது பிரச்சினையைச் சரிசெய்ய யாரும் வரப்போவதில்லை, நாம்தான் தீர்க்க வேண்டுமென முடிவெடுத்த போடூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு 27.04.2026 மதியம் 12.00 மணியளவில் போடூரில் இயங்கிவந்த சந்துக்கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்; சந்துக்கடை நடத்தும் நபரை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி – போத்தசந்திரம்: சாதி மறுப்பு மணம் புரிந்த பெண்ணை கொடுமைப்படுத்தும் பெற்றோர்!
தேஜாஸ்ரீ மற்றும் அவரது கணவர் தீபக் ஆகியோருக்கு நிரந்தரமாக பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் தேஜாஸ்ரீ யின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
நொய்டா: தொழிலாளி வர்க்கத்தின் மீது பாசிச யோகி அரசு நடத்தும் பயங்கரவாதப் போர்!
கூலி உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களை வரைமுறையின்றி கைது செய்வதும் அவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்துவதையும் கூலி உயர்வு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காகவே நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதையும் மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
2006 மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு: நீதித்துறையின் இந்துராஷ்டிரத்திற்கான தீர்ப்பு!
கடந்தாண்டில் 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேரும் “சந்தேகத்தின் பலனில்” விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில்தான், 2006 மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் வனஜா பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் பலி! அரசே முதல் குற்றவாளி!
அரசின் கண்காணிப்பு தொடர்ந்து இல்லாமல் இருப்பது மற்றும் முதலாளிகளின் அராஜகங்களை அரசு நிர்வாகம் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது, பட்டாசு ஆலை முதலாளிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பது போன்றவைதான் பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கான காரணங்கள். இதில் அரசின் பங்குதான் முதன்மையானது.
2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் | மேட்டுப்பாளையம் | பிரசுரம்
2026 சட்டமன்றத் தேர்தல்:
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி
வேண்டும் ஜனநாயகம்!
பரப்புரை இயக்கம்
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி பொதுமக்களே!
தேர்தல் என்றால் ஓட்டுக் கட்சிகளுக்குத் தான் அது திருவிழா! மக்களாகிய நமக்கு அதுவும் ஒரு போராட்ட களம் தான். இத்தேர்தலில்...















