வங்கதேச மாணவர் எழுச்சி! சர்வாதிகார ஷேக் ஹசினா விரட்டியடிப்பு!
வங்கதேச மாணவர் எழுச்சி!
சர்வாதிகார ஷேக் ஹசினா விரட்டியடிப்பு!
05-08-2024
ஜனநாயகமற்ற தேர்தல், வேலையின்மை, கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான வங்கதேச மாணவர் எழுச்சியால் சர்வாதிகாரி ஷேக்ஹசினா விரட்டியடிப்பு!
மாணவர் எழுச்சியைப் பயன்படுத்தி அரங்கேறியது இராணுவ சர்வாதிகார ஆட்சி!
எதிர்க்கட்சியான...
அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள 295 கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமனம்!
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் ஆய்வின் போது எல்லா பணியிடங்களும் நிரப்பப்பட்டது போல் போலியாக கணக்கு காண்பிக்கிறார்கள். இதை அந்த தொழில்நுட்ப கவுன்சிலும் பணம், பொருள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது ஒரு இயல்பாக மாறிவிட்டது.
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்டில் மேகவெடிப்பு: மக்களைப் பற்றிக் கவலைப்படாத மோடி அரசு
இமாச்சலில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்படுவதும், அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுவதும் போன்ற காட்சிகள் மனதைப் பதற வைக்கின்றன.
இந்தியாவில் 19.46 கோடி பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு: சோஃபி அறிக்கை
2022 நிலவரப்படி, 55.6 சதவிகித மக்கள், அதாவது 79 கோடி பேர், ஊட்டச்சத்துள்ள உணவைப் பெற முடியாத அளவுக்கு இந்தியாவின் விலைவாசியும், வறுமையும் தடுப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு குறித்த 6வது வரைவறிக்கை: மோடி – அமித்ஷா கும்பலின் பித்தலாட்டம்!
மோடி அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டிலிருந்தே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அது எந்த அளவிற்கு அக்கறையாக உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
திருப்பூர்: கழிப்பறைக்குள் தங்கவைக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்!
ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பள்ளியின் கழிப்பறைக்குள் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டிருப்பது மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாது என்பது கேலிக்கூத்தாக உள்ளது.
தொடர்ந்து எச்சரிக்கும் சூழலியலாளர்கள், மதிக்காத ஒன்றிய – மாநில அரசுகள்!
2011-இல் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான “மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு” (WGEEP), 1,29,037 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையை, அதாவது 75 சதவிகித பகுதியை, சுற்றுச்சூழல் கூருணர்வு மண்டலமாக (Eco-Sensitive Zone) அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
திருவாரூர் ஆனைத் தென்பாதி: மக்கள் போராட்டத்திற்குப் பணிந்து பட்டா வழங்க அரசு உத்தரவாதம்
அரசு நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் ஆனைத்தென்பாதி மக்கள் 41 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
“மக்களைத் தேடி மருத்துவ” ஊழியர்களை அராஜகமாகக் கைதுசெய்த திமுக அரசு
தேனி, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை போலீசு 30.07.2024 அன்று மறைமலை நகர், பரனூர் ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது.
டெல்லி: தனியார் பயிற்சி மையத்தின் இலாபவெறியால் 3 மாணவர்கள் படுகொலை!
தனியார் பயிற்சி மையங்கள் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு முறையான வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் தனது கொள்ளை லாபவெறிக்கு மாணவர்களை சித்திரவதை செய்து வருகின்றன.
வயநாடு நிலச்சரிவு: தோண்டத் தோண்ட உடல்கள்
"காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே அடிப்படை பிரச்சனையை சரிசெய்வதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அது கேரளா இழந்த வனங்களை மீட்பது, இருக்கும் வனங்களை பாதுகாப்பது” என்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானி தன்யா.
மூன்று குற்றவியல் சட்டங்கள்: தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் டெல்லியில் போராட்டம்
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் மொழி உரிமை, மாநில அரசுகளின் உரிமை, கூட்டாட்சித் தத்துவம், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானவை.
தடம் புரளும் ரயில்கள்: இவை வெறும் விபத்துகளா?
மேல்தட்டு மக்கள் மட்டும் பயணிக்கும் வந்தே பாரத், கௌரவ பாரத் போன்ற சொகுசு ரயில்களை உருவாக்குவதற்கும், ரயில்களில் ஏசி பெட்டிகளை அதிகப்படுத்துவதற்குமே ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படுகிறது.
உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது: உயர்நீதிமன்றம் கண்டனம்
"ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செயல்படுவது சமூகத்துக்கு மோசமானது; தூத்துக்குடியில் அனுமதி இன்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரியும், இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
கேரளா கனமழை: வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு
இதுவரை ஒரு வயது குழந்தை உட்பட 36 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

























