மொறம் பூசும் பாப்பாத்தியின் பொங்கல் !
மழலை அப்பாவிடம் போனில், '' அம்மா ஊசிப் போட்டீச்சி, பொங்கலுக்கு வா, வண்டி வாங்கினு வா.... அண்ணா அழுவுது, சாப்பிட்டியா, பொங்கலுக்கு வா. வண்டி வாங்கினு வா....ன்னு பேசிக்கொண்டே அப்பா குரலைக் கேட்டு அழ ஆரம்பித்துவிட்டான்.. அம்மாவை அடித்தான்.
பேருந்து தொழிலாளிகளை ஆதரித்தால் போலீசு சுட்டுத் தள்ளுமாம் !
இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் “இன்னொரு நாளக்கி பர்மிஷன் கொடுக்காம ஆர்ப்பாட்டம் செஞ்சிங்கன்னா அள்ளிக்கிட்டு வந்து உள்ளத்தள்ளிருவன், சுட்டுத் தள்ளிருவேன்.” என்று வழக்கறிஞரையும், தோழர்களையும் மிரட்டியுள்ளார்.
நீதிபதிக்கும் எம்.எல்.ஏ.-வுக்கும் சம்பள உயர்வு ! தொழிலாளிக்கு கிடையாதா ?
தொழிலாளர்களுக்குக் கொடுக்கப் பணமில்லை என்று சொல்லிவிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வை அமல்படுத்தியுள்ளது எடப்பாடி அரசு.
பேருந்து தொழிலாளிகளுக்காக தமி்ழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
போக்குவரத்து கழகம் நட்டமடைந்ததற்கு இரவு பகலாக உயிரை பணயம் வைத்து பணி செய்த தொழிலாளிகள் எந்தவிதத்திலும் காரணமல்ல. ஊழல் - முறைகேடு நிர்வாகம் செய்த அதிகாரிகள் மற்றும் அரசுதான் காரணம்.
திருடிய பணத்தை திருப்பிக் கொடு ! பேருந்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – படங்கள் !
“எங்களிடம் இருந்து திருடிய பணத்தை திருப்பி கேட்கிறோம். எவ்வளவு திருடப்பட்டுள்ளது என்பது வரை எங்களிடம் கணக்கு உள்ளது” என்று இந்த எருமைத்தோல் அரசுக்கு உறைக்கும்படி கேட்கிறார்கள் தொழிலாளர்கள்.
தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்தால் வழக்கு போடும் போலீசு !
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை ஆதரித்து சுவரொட்டி ஒட்டிய சீர்காழி பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது மயிலாடுதுறை போலீசு.
இப்டியே போனா கழகம் என்ன ஆகும் ? தொழிலாளிகள் என்ன ஆவாங்க ? நேர்காணல் – படங்கள்
பொண்டாட்டி புள்ளைங்கள பார்க்காம, தூங்காம மக்களுக்காக உழைக்கிறோம். நாங்க வீட்டுக்கு போகும்போது அவங்க தூங்கிடுவாங்க. அவங்க முழிச்சிகிட்டு இருக்கும் பொது நாங்க டூட்டிக்கு வந்துடுவோம். இந்த மக்களோட தான் எங்க வாழ்க்க. அதனால எங்களுக்கு கடமை இருக்கு சார்..
கரூர் : அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்தில் தீவிரமாகும் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் !
உண்மையில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்சமயம் கரூரில் இயங்குவதாக கள ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும் பெரும்பான்மையாக நகரப் பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது.
ஜேப்பியார் நிர்வாகத்திற்கு தரகுவேலை செய்யும் நீதிமன்றம் !
“நீங்கள் ஏன் தொழிலாளர் நீதி மன்றம் போகக்கூடாது. தொழிலாளர் நீதி மன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றதோடு, தொழிலாளர் வங்கிக் கணக்கில் நிர்வாகம் பணம் செலுத்திவிட்டது. பிறகு ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்? வேண்டுமானால், மேலும் ஒரு நெகோஷேசன் (பேரம்) செய்து, கொஞ்சம் கூட்டி வாங்கிக் கொள்ளுங்கள்”
போக்குவரத்துத் தொழிலாளிகளை வஞ்சிக்கும் அரசு – பத்திரிக்கை செய்தி
குற்றவாளி ஜெயாவிற்கு நினைவிடம், தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என கோடிகளை கொட்டி இறைக்கும் எடப்பாடி அரசு, போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்க முயற்சிக்கிறது.
போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !
ஒரு சதவீதம் பேர் இருக்கும் அதிகாரிகளுக்கு 45% - ஊதிய செலவினத்தை பெறும் அதிகாரிக்கு 7வது ஊதிய விகிதத்தின் படி 2.72 காரணியில் அமல்படுத்த முடியுமாம், 99% பேர் இருந்தும் கழக ஊதிய செலவினத்தில் 55% ஐ மட்டும் பெற்றுக் கொண்டுள்ள போதும் 2.57 பெருக்கு காரணியில் வழங்க நிதி இல்லையாம்.
மீண்டும் வருகிறது அடிமைமுறை – ஆர்ப்பாட்டங்கள் !
"தற்போது கார்ப்பரேட்களின் நலனுக்காக ஏற்கனவே தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளான 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டு விதிமுறைகளாக மாற்றப்படவுள்ளன"
புழுவல்ல தொழிலாளி வர்க்கம், கோடிக்கால் பூதம் – ஆர்ப்பாட்டங்கள் !
தீவிரமாகிறது, கூலி அடிமைமுறை! தொழிலாளிவர்க்கம் புழுவல்ல, கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அடிமை முறை திரும்புகிறது ! என்ன செய்யபோகிறோம்?
நம்முடைய முன்னோர் உயிர்த்தியாகம் செய்து நிலைநாட்டிய உரிமைகளை இழந்து கூலி அடிமையாக இருக்கப்போகிறோமா ? பெயரளவில் எதிர்ப்புகளை தெரிவித்துவிட்டு, எந்திரத்தோடு எந்திரமாய் தேய்ந்து மடியப்போகிறோமா?
காவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி !
பிற்போக்குத்தனத்தையும் ஏகாதிபத்திய அடிமைதனத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்கினால் அதனை வன்முறையாக எதிர்கொள்வதும், அந்த வன்முறையை எதிர்த்தால் அதனை பெரும் கலவரமாக மாற்றுவதுமே இவர்களின் செயல்முறையாக இருக்கிறது.
























