Sunday, August 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 276

“ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன்

2

கலையரசன்

லகில் அதிகம் அறியப்படாத நாடுகளில் ஒன்று ஜோர்ஜியா. அறிந்தவர்களும் அதை ஒரு “ஐரோப்பிய நாடு” என நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது ஆசியாக் கண்டத்தில் இருக்கிறது! அதன் பூகோள அமைவிடம் காரணமாக அயலில் உள்ள வல்லரசுகளின் மேலாதிக்க வெறிக்குள் அகப்பட்டு நசுக்கப் பட்டு வந்தது. இப்போது தனிநாடாக இருந்தாலும் அயலில் உள்ள ரஷ்யாவுடன் பகைத்துக் கொண்டு, தொலைதூரத்தில் உள்ள அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளது. நேட்டோ படைகளையும் வரவேற்று வைத்திருக்கிறது. இதன் விளைவாக 2008-ம் ஆண்டு நடந்த போர் ஜோர்ஜியா மீது சர்வதேச நாடுகளின் கவனத்தை குவிக்க வைத்தது.

சோவியத் யூனியன் இருந்த காலத்தில், ஜோர்ஜியாவும் ஒரு சோவியத் குடியரசாக பிரகடனப் படுத்தப் பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் உலகில் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய சோவியத் அதிபர் ஸ்டாலின் ஒரு ஜோர்ஜிய இனத்தவர் என்பது பலருக்குத் தெரியாது. சார் மன்னன் காலத்து ரஷ்ய சாம்ராஜ்யத்தில் பிறந்த, அங்கிருந்த சிறுபான்மை மொழிகளில் ஒன்றான ஜோர்ஜிய மொழி பேசும் ஒருவரை, பெரும்பான்மை ரஷ்யர்கள் தமது தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயம் தான். ஆனால், உலக வரலாற்றில் அந்த அதிசயம் நடந்தது. அதற்குக் காரணம், ஸ்டாலினே ஓரிடத்தில் எழுதியது மாதிரி, “இன்றுள்ள தேசிய இன உணர்வுகள் யாவும் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்ட பக்க விளைவுகளே!” அந்த விளைவுகள் என்னவென்பதையும், அவற்றின் இன்றைய நிலைப்பாடுகளையும் இந்தப் பயணக் கட்டுரையில் ஓரளவு அலசி இருக்கிறேன்.

ஜோர்ஜியாவுக்கு சுற்றுலாப் பயணியாக செல்வதற்கு பெருமளவு பணம் வைத்திருக்கத் தேவையில்லை. ஹங்கேரியின் மலிவு விலை விமான நிறுவனமான விஸ் எயர், ஐரோப்பாவின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் பயண சேவைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. நம்பினால் நம்புங்கள், எனக்கு ஏற்பட்ட டிக்கட் செலவு வெறும் ஐம்பது யூரோக்கள் மட்டுமே! பொதுவாக டிசம்பர் மாதத் தொடக்கம் சுற்றுலாக் காலம் இல்லையென்பதால் விலைகள் குறைக்கப் படுவது வழமை.

ஜோர்ஜியாவில் தங்குவதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் அதிக செலவு பிடிக்காது. கடந்த பத்து வருடங்களில் தான் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனை பல இடங்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஹோட்டல்களை தவிர்த்து, ஹொஸ்டலில் தங்குவதற்கு நாளொன்றுக்கு சராசரி பத்து யூரோ போதும். பதிவு செய்வதற்கும் அதிக கேள்விகள் கேட்பதில்லை. ஒரு தடவை, கூட்டைசி எனும் நகரில் ஒரு குடும்பம் நடத்தும் சிறிய ஹொஸ்டல் அறையில் தங்கி இருந்தேன். “பதிவு செய்வீர்களா?” என்று கேட்டதற்கு “அப்படி என்றால் என்ன?” என்று திருப்பிக் கேட்டார்கள். இந்த விடயத்தில் அரசு அதிக கட்டுப்பாடுகள் விதிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

முதலில் ஒரு விடயத்தை சொல்ல மறந்து விட்டேன். ஜோர்ஜியா பயணம் செய்பவர்கள் கையில் யூரோ, டாலர், பவுன் நாணயத் தாள்களை வைத்திருக்க வேண்டும். மூலைக்கு மூலை உள்ள நாணய மாற்று கடைகளில் கொடுத்து உள்ளூர் நாணயமான லாரிக்கு மாற்றிக் கொள்ளலாம். ஒரு யூரோ/டாலர் மூன்று லாரிகள் என்று அண்ணளவாக கணக்குப் போடலாம். அங்குள்ள வங்கி ATM களில் கிரெடிட் கார்ட் தவிர வங்கி அட்டையையும் பாவிக்க முடியாது. சர்வதேச வங்கித் தொடர்புகளில் ஜோர்ஜிய வங்கிகள் இணைக்கப் படவில்லை போலிருக்கிறது. எயர்போர்ட்டில் வந்திறங்கியவுடனேயே குடிவரவு அலுவலகர்கள் எம்மிடம் பணம் இருக்கிறதா என்று விசாரிக்கிறார்கள்.

படிக்க:
வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்
♦ CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !

பல நாடுகளை சேர்ந்த பாஸ்போர்ட்களுக்கு விமான நிலையத்தில் இறங்கியவுடன் இலவச விசா அடித்துக் கொடுக்கிறார்கள். இந்தியா, இலங்கையில் இருந்து வருபவர்களுக்கும் விசா கட்டுப்பாடுகள் குறைவு. தலைநகர் திபிலிசியில் பல இந்திய சுற்றுலாப் பயணிகளை காணக் கூடியதாக இருந்தது. குறைந்த செலவில் படிக்கலாம் என்பதற்காக மாணவர் விசாவில் வந்தவர்களையும் சந்தித்தேன்.

திபிலிசி நகர மத்தியில் இருந்த இந்திய உணவு விடுதிக்கு முன்னால், இரண்டு இந்திய, பங்களாதேஷ் இளைஞர்கள் வாடிக்கையாளர்களை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்த நேரம், அவர்கள் அந்நாட்டில் படிக்கவென வந்து வேலை செய்வதை அறிந்து கொண்டேன். நாளொன்றுக்கு நாற்பது லாரிகள் சம்பளமாக கிடைக்கிறதாம். அந்த ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ஒரு கேரளாக் காரர். அங்கு சென்று பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம் அவரும் வந்து கதைத்தார்.

ஜோர்ஜியாவில், அதுவும் மொழி தெரியாத ஒரு நாட்டில் தனியாகப் பயணம் செய்வது ஒரு பெரிய சாகசம் எனலாம். இங்கே நான் பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றிக் கூறவில்லை. பலர் நினைப்பதற்கு மாறாக பாதுகாப்பாக பயணம் செய்யலாம். நாம் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புடன் இருந்தால் போதும். அது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. லண்டன், பாரிஸ் நகரம் என்றாலும், நாம் தான் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

நான் சென்று இறங்கிய கூட்டைசி (Kutaisi) சர்வதேச விமான நிலையம் பெரும்பாலும் மலிவு விலை விமான சேவைக்காக கட்டப் பட்டிருக்க வேண்டும். அங்கே பெரும்பாலும் ஹங்கேரியின் விஸ் எயர் (Wizz air) தான் வருகின்றது. விமான நிலையத்தில் இருந்து தலைநகர் திபிலிசிக்கு (Tbilisi) எந்நேரமும் பேருந்து சேவைகள் உள்ளன. ஒவ்வொரு விமானமும் வந்திறங்கும் நேரம் பார்த்து பஸ் ஓடுகிறது. திபிலிசி செல்வதற்கு சுமார் நான்கு மணி நேரம் எடுக்கிறது. இடையில் அரை மணித்தியாலம் சாப்பாட்டு இடைவேளை விடுகிறார்கள். டிக்கட் விலை இருபது லாரிகள்.

படிக்க:
சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்
♦ சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்

மொபைல் பாவனையாளர்கள் ரோமிங் செலவுகளை தவிர்க்கும் பொருட்டு, உள்ளூர் சிம் கார்ட் வாங்கிப் போடுவது நல்லது. அதை விமான நிலையத்திலேயே வாங்க முடியும். சிம் காரட்டுடன் 2GB இன்டர்நெட் ஐந்து லாரிக்கு கிடைக்கிறது. Bee line நிறுவனம் வழங்கும் சேவை சிறந்தது என்று சொல்கிறார்கள். மொபைல் தொலைபேசி வணிகத்தை பொறுத்த வரையில் ஜோர்ஜியா மிகவும் பின்தங்கியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னர் பாவனையில் இருந்த தொலைபேசிகளை தான் இப்போதும் அங்கே பலர் பாவிக்கிறார்கள். பெரும்பாலான ஜோர்ஜியர்களின் வாங்கும்திறனும் குறைவு தான்.

மேற்கு ஐரோப்பாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் மூன்று மணிநேர வித்தியாசம். நான் திபிலிசி போய்ச் சேர்ந்த நேரம் அதிகாலை ஏழு மணி. இருப்பினும் ஒன்றரை மில்லியன் சனத்தொகை கொண்ட அந்த நகரம் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தது. ஒரு டாக்சியை பிடித்து நகர மத்தியில் இருந்த புஷ்கின் சாலையில் உள்ள ஹொஸ்டல் ஒன்றில் சென்று தங்கினேன். புஷ்கின் சாலை சார் மன்னன் காலத்தில் இருந்தே இயங்கிக் கொண்டிருக்கும் சுறுசுறுப்பான வீதி. அதற்கு அருகில் தான் திபிலிசி பழைய நகரம் உள்ளது.

திபிலிசி செல்லும் சுற்றுலாப் பயணிகள் யாரும் பழைய நகரத்தை பார்க்காமல் திரும்ப மாட்டார்கள். மிகவும் அழகான இடம். பழைய கோட்டை ஒன்றின் இடிபாடுகளை கொண்ட குன்றின் உச்சியை நோக்கி கேபிள் கார் செல்கிறது. நரிகலா (Narikala) எனும் பெயருடைய கோட்டை ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையானது. அடிப்படை கட்டுமானம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த ஈரானிய- சசானிய சாம்ராஜ்ய காலத்தில் கட்டப்பட்டது. பிற்காலத்தில் ஈரான் பாக்தாத்தை தலைநகராகக் கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த காலத்திலும், ஆட்சியாளர்களின் கைமாறிய போதிலும் நரிகலா கோட்டை பாவனையில் இருந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் பாவனையில் இருந்த கோட்டைக்கு நீர் விநியோகம் செய்வதற்கு ஒரு இரகசிய சுரங்க வழி இருந்ததாம்.

நரிகலா கோட்டைக்கு அருகில், நவீன காலத்தில் கட்டப்பட்ட “சுதந்திர தேவி” சிலை உள்ளது. ஒரு கையில் வாளுடன் குன்றின் உச்சியில் நின்று கொண்டே திபிலிசி நகரை பார்க்கும் வகையில் கட்டப் பட்ட சிலை, ஜோர்ஜிய தேசியவாதத்தை பிரதிபலிப்பதை வேறெந்த விசேடமும் அதில் இல்லை. குன்றின் மறு பக்கத்தில் கீழே இறங்கிச் சென்றால் தாவரவியல் பூங்கா இருக்கிறது. அதிலிருந்து நடந்து சென்றால் மீண்டும் திபிலிசி பழைய நகரத்தை அடையலாம்.

இந்த இடத்தில் திபிலிசி நகரம் பற்றி சில குறிப்புகளை எழுதுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஜோர்ஜியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள திபிலிசி நகரமும், அதை அண்டிய பிரதேசங்களும் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் சுதந்திரமான மன்னராட்சியாக இருந்து வந்தது. அப்போது ஜோர்ஜியாவை ஆண்ட கடைசி மன்னன் இரண்டாம் இராக்லி, இஸ்லாமிய ஓட்டோமான் சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்கு அஞ்சி, கிறிஸ்தவ ரஷ்ய சாம்ராஜ்யத்தின் உதவியை நாடினான். அப்போது மதம் தான் அரசியல் முடிவுகளை தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளது. எது எப்படியோ அன்றிலிருந்து ஜோர்ஜியா ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகி விட்டது.

அயல் நாடான ஆர்மேனியா மாதிரி, ஜோர்ஜியாவில் உள்ளவர்களும் தாமே ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் என்று பெருமை பேசுவதுண்டு. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. கிரேக்க அல்லது ரஷ்ய ஒர்தொடக்ஸ் பாணி கிறிஸ்தவத்தை பின்பற்றும் ஜோர்ஜியாவில், தனித்துவமான திருச்சபை உள்ளது. அதாவது ஜோர்ஜியாவை மட்டும் மையமாகக் கொண்ட மத நிறுவனம். அன்றிருந்த கிறிஸ்தவ மடாதிபதிகள் ஜோர்ஜிய மொழியை மட்டும் வளர்க்கவில்லை. ரஷ்ய மொழிக்கும் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

படிக்க:
சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
♦ மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

அன்றைய ஜோர்ஜியா ரஷ்ய சக்கரவர்த்தியின் ஆளுகையின் கீழ் இருந்தாலும், பிற பிரதேசங்களில் நடந்த மாதிரி அதை ஒரு காலனியாக்கி, ரஷ்யர்களை அங்கு கொண்டு சென்று குடியேற்றவில்லை. ரஷ்ய படையினரை வைத்திருந்து பராமரித்ததை தவிர, ஜோர்ஜியாவின் அரசியலிலோ, அல்லது பொருளாதாரத்திலோ ரஷ்யர்கள் பெருமளவு செல்வாக்கு செலுத்தவில்லை. “ரஷ்ய மயமாக்கல்” என்று சொல்லக் கூடிய அளவுக்கு, ஜோர்ஜியர்கள் ரஷ்ய மொழியை படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கியவர்கள் ஜோர்ஜிய கிறிஸ்தவ மடாதிபதிகள் தான். அதற்குக் காரணம், அன்றைய காலகட்டத்தில் ரஷ்யன் ஒரு வளர்ச்சி அடைந்த, சர்வதேச தொடர்புகளுக்கு உதவும் மொழியாகக் கருதப் பட்டது. அதாவது, இந்தியர்கள், இலங்கையர்கள் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படித்த மாதிரி, ஜோர்ஜியர்கள் ரஷ்ய மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அன்றிருந்த ரஷ்ய சாம்ராஜ்யம் மன்னராட்சியாக இருந்தாலும், அதற்குள் முதலாளித்துவ பொருளாதாரம் சுதந்திரமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஜோர்ஜியாவில் மூலதனத்தை குவித்த பெரும் முதலாளிகள் பெரும்பாலும் ஆர்மேனியர்கள், அல்லது யூதர்களாக இருந்தார்கள். இப்போதும் திபிலிசி நகரில் இலட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் வசிக்கிறார்கள். நான் ஒரு முடிதிருத்தும் கடைக்கு சென்றிருந்த நேரம், எனக்கு முடி வெட்டிய பையன் ஓர் ஆர்மேனியன். தனது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லாம் ஜோர்ஜியாவில் பிறந்து வளர்ந்ததாக கூறினான். அதாவது, தாங்கள் அண்மையில் ஆர்மேனியாவில் இருந்து வந்த வந்தேறுகுடிகள் அல்ல, ஜோர்ஜியாவின் பூர்வ குடிகள் என்பதை அழுத்தமாக சொல்ல விரும்பினான்.

அந்த ஆர்மேனிய முடி திருத்தும் தொழிலாளியுடன் பேச்சுக் கொடுத்த நேரம் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. ஓரளவு சமாளிக்கும் அளவுக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்து வைத்திருந்தான். தனக்கு ஆங்கிலத்தை தவிர, ஆர்மேனியன், ஜோர்ஜியன், ரஷ்யன் ஆகிய நான்கு மொழிகளும் தெரியும் என்றான். தானும் வேறு சிலரும் சேர்ந்து அந்தக் கடையை நடத்துவதாகவும், நாளொன்றுக்கு பதின்மூன்று மணிநேரம் வேலை செய்வதாகவும், அப்போது தான் ஓரளவு சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்தான். ஜோர்ஜிய இனத்தவர்கள் எப்போது பார்த்தாலும் இந்நாட்டில் வேலை இல்லை என்று முறையிடுகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடுவதையும், வைன் குடிப்பதையும் தவிர வேறெந்த வேலையும் தெரியாது. பலர் இங்கே வேறு நாடுகளில் இருந்து வந்து வேலை செய்து நன்றாக சம்பாதிக்கிறார்கள். ஜோர்ஜியர்களுக்கு அந்தத் திறமை இல்லை. இவை அந்த ஆர்மேனிய பையனின் கருத்துக்கள்.

மேற்குறிப்பிட்ட உரையாடலில் தெரிவிக்கப் பட்ட விடயங்கள், நான் அடுத்து எழுதப் போகும் திபிலிசி தேசிய நூதனசாலையின் அரசியலை புரிந்து கொள்ள பெரிதும் உதவும் என நினைக்கிறேன். அங்கு பல அருமையான ஆவணங்கள் சேகரிக்கப் பட்டு பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஜோர்ஜிய மக்களின் ஆடை, அணிகலன்கள், வீட்டில் பாவித்த உடைமைகள் போன்றனவற்றை கண்டு களிக்கலாம். அத்துடன் அன்று வாழ்ந்த மக்களின் பாரம்பரிய வீடுகள், மற்றும் தொழிலகங்களின் மாதிரிகளும் செய்து வைக்கப் பட்டுள்ளன. அவற்றை நேரில் பார்ப்பது போன்று தத்ரூபமாக வடிவமைத்து உள்ளனர்.

இந்த நூதனசாலையை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரம் ஓர் உண்மை மூளைக்குள் பளிச்சிட்டது. இவற்றில் ஏதோ ஓர் ஒற்றுமை அல்லது சிறப்பம்சம் உள்ளது. என்ன அது? அங்கு காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த பொருட்கள், ஆடைகள் எல்லாமே வசதியான மேல்தட்டு வர்க்கத்தினர் பாவித்தவை. அதாவது, அந்தக் காலத்திலேயே ஜோர்ஜிய மேட்டுக்குடியினர் எந்தளவு சிறப்பாக வாழ்ந்தனர் என்பதை காட்டுகிறார்கள். உண்மையில், ஜோர்ஜிய இனத்தவர்களில் வசதி படைத்தவர்கள் ஒன்றில் சிறிய தொழிலதிபராக அல்லது கடை வியாபாரி போன்றவர்கள் தான். அதாவது, இடைத்தர முதலாளித்துவ வர்க்கம். மார்க்சிய சொல்லாடலில் குட்டி பூர்ஷுவா எனப்படுவோர்.

இடைத்தர முதலாளிகள் பெரும்பாலும் தளபாடங்கள் செய்வது, ஆடை தைப்பது, ஆபரணங்கள் செய்வது, நிலவிரிப்பு (Carpet) பின்னுவது போன்ற தொழிற்துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அனேகமாக இவர்களது தொழிலகமும், கடையும் ஒரே இடத்தில் இருக்கும். அவர்களுக்கு கீழே இரண்டு, மூன்று பேர் வேலை செய்வார்கள். அவர்களில் சிலர் நன்றாக சம்பாதித்து பணக்காரர்களாக இருப்பார்கள். “அதிர்ஷ்டம் இல்லாத” பலர் ஏழைகளாக இருப்பார்கள். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்த தனது தந்தையும், இது போன்று தனியாக தொழிலகம் நடத்தும் கனவுடன், குட்டி முதலாளித்துவ சிந்தனையுடன் வாழ்ந்ததாக ஸ்டாலின் தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

அதிகம் பேசுவானேன். நமது இன்றைய சூழலிலேயே இதற்கு உதாரணம் காட்டலாம். தமிழர்களில் தொழில் முனைவோராக உள்ளவர்கள், ஒரு கடை போட்டு, இரண்டு பேரை வேலைக்கு வைத்திருப்பதால் தம்மை முதலாளிகளாக கருதிக் கொள்வார்கள். அப்படித் தான் அன்றிருந்த ஆரம்ப காலகட்ட முதலாளித்துவம் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட, பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அப்படியான சிறு தொழில் முனைவோர் பிற்காலத்தில் பெரும் தொழிலதிபர்களாக வந்ததிருந்தனர். அதே பாணியை பின்பற்றி தாமும் ஒரு வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடாக வந்திருப்போம் என்ற செய்தியை, இந்த நூதனசாலை மூலமாக இன்றுள்ள ஜோர்ஜிய அரசு நமக்கு தெரிவிக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் ஜோர்ஜியாவில் வாழ்ந்த சிறு தொழில் முனைவோரும் தமது நலன் பேணும் சங்கங்களை உருவாக்கி வைத்திருந்தனர். அந்தப் புகைப் படங்கள் எல்லாம் திபிலிசி நூதனசாலையில் வைக்கப் பட்டுள்ளன. கவனிக்கவும், அவை தொழிற் சங்கங்கள் அல்ல. அதாவது, தொழிலாளர்களின் சங்கம் அல்ல. அவர்களை வேலைக்கு வைத்திருந்த முதலாளிகளின் சங்கங்கள். அதே நூதனசாலையில் இன்னொரு பக்கத்தில் பங்குச் சந்தை இருந்தமைக்கான ஆதாரம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதாவது, ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை வாங்கியதற்கான சான்றிதழ். அதில் ரஷ்யன், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. அதாவது, அவை இரண்டும் வர்த்தகத் தொடர்புகளுக்கான சர்வதேச மொழிகளாக கருதப் பட்டன. அதைத் தவிர ஜோர்ஜிய, ஆர்மேனிய, அசேரி மொழிகளில் சுருக்கமான விபரமும் அந்த சான்றிதழில் எழுதப் பட்டுள்ளது.

எனது பயணத் திட்டத்தில் மிகக் குறைந்த நாட்களே இருந்த படியால், அடுத்த நாளே திபிலிசியை விட்டு வெளியேறத் தீர்மானித்தேன். குறிப்பாக ஸ்டாலின் பிறந்த இடமான கோரிக்கு செல்வதே நோக்கம். அங்கு எப்படிப் போகலாம் என்று ஹொஸ்டல் வரவேற்பளராக இருந்த பெண்ணிடம் விசாரித்து விபரங்களை பெற்றுக் கொண்டேன். அருகிலேயே “சுதந்திர சதுக்கம்” எனப்படும் ஐந்து சாலைகள் சந்திக்கும் பெரிய சந்தி உள்ளது. அதில் ஒரு பக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. மெட்ரோ ரயில் பிடித்து, டிடுபே (Didube) எனும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கு தான் பல நகரங்களுக்கும் செல்லும் மினிபஸ் சேவை நடக்கிறது. கோரி எனும் சிறிய நகரம், திபிலிசி மாகாணத்தை சேர்ந்த பகுதி தான். சுமார் எழுபது கிலோ மீட்டர் தூரம். மினிபஸ் கட்டணம் ஐந்து லாரிகள் மட்டுமே.

ஜோர்ஜியாவில் ஸ்டாலின் வாழ்ந்த காலத்திலும் கோரியில் இருந்து வரும் வண்டிகள் டிடுபே தரிப்பிடத்திற்கு தான் வந்து நிற்கும். ஸ்டாலின் கோரியில் பிறந்து வளர்ந்தாலும், பருவ வயதை அடைந்ததும் தந்தையுடன் திபிலிசிக்கு வந்து செருப்புத் தைக்கும் தொழில் செய்துள்ளார். பிற்காலத்தில், ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் பாதிரியாவதற்காக மதக் கல்வி கற்ற காலத்திலும், அங்கிருந்து வெளியேறி புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொழுதும் திபிலிசியில் தங்கி இருந்துள்ளார்.

அப்போது ஸ்டாலின் புஷ்கின் சாலையில் தான் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தார். ஸ்டாலின் படித்த மடாலயம் இப்போதும் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பழைய நகரத்தில் உள்ளது. அது தற்போது மியூசியமாக மாறிவிட்டது. அந்தக் காலகட்டத்தில், திபிலிசி நகர மத்தியில் இருந்த புஷ்கின் சாலை, ஏழை உழைக்கும் வர்க்க மக்கள் வாழ்ந்த அழுக்கான கட்டிடங்களை கொண்ட தெருவாக இருந்தது. இன்று அவையெல்லாம் திருத்தப்பட்டு பணக்காரர்கள் குடியிருக்கும் ஆடம்பர கட்டிடங்களாக மாற்றப் பட்டு விட்டன.

ஜோர்ஜியாவில் “மாட்ரூஷ்கா” என அழைக்கப் படும் மினி பஸ், அல்லது ஷெயர் டாக்சியில் பயணம் செய்வது மிகவும் மலிவானது. நம்ப முடியாத அளவுக்கு செலவு குறைவு. ஆனால், ஒரு பிரச்சினை. இடத்தின் பெயரைக் குறிப்பிடும் மட்டைகளில் ஜோர்ஜிய மொழி மட்டுமே எழுதப் பட்டிருக்கும். கோரி, பாதுமி, கூட்டைசி போன்ற பெரிய நகரங்களுக்கு செல்லும் மினி பஸ்களில் சிலநேரம் ஆங்கில(லத்தீன்) எழுத்துக்கள் காணப்படும். ஆகவே, எந்த இடத்திற்குப் போவது என்றாலும் முன்கூட்டியே அங்கு நிற்கும் டிரைவர்களிடம் விசாரிப்பது நல்லது. இங்கேயும் மொழிப்பிரச்சினை எழும். அவர்களில் யாருக்கும் பெரும்பாலும் ஒரு சொல் கூட ஆங்கிலம் தெரியாது. கொஞ்சம் ரஷ்யன் தெரிந்தால் சமாளிக்கலாம். இருப்பினும், நாங்கள் போக வேண்டிய இடத்தின் பெயரை அழுத்தம் திருத்தமாக உச்சரித்தாலே அவர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களது பாஷையில் ஏதோ சொல்லி எங்களை கூட்டிச் சென்று அந்த இடத்திற்கு செல்லும் மினி பஸ்ஸில் ஏற்றி விடுவார்கள். எம்மூரில் நடப்பது மாதிரி, மினி பஸ் தரிப்பிடத்தில் கூவிக்கூவி ஆட்களை சேர்ப்பதற்கும் சிலர் அங்கே நிற்பார்கள். ஆகவே நாங்கள் எந்தப் பயமும் இல்லாமல் தைரியமாக தனியாகப் பயணம் செய்யலாம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றை அழுத்தவும் )

(தொடரும்)

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் ! சிஏஏ-வுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் !

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் நடைபெற்றுவரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்களும் போராடத்தொடங்கியுள்ளனர். கடந்த ஜனவரி-03 அன்று சென்னை, திருச்சி, கோவை மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

சென்னை:

“மகத்தான நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில், சென்னை வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இணைந்து சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயிலில் 03.01.2020 அன்று காலை 10.30 மனியளவில் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் CAA – NRC – NPR ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்”, ”நான் இந்தியக் குடிமகன்” என்பது உள்ளிட்ட முழக்க பதாகைகளைத் தாங்கி நின்றனர். இதில் மூத்த வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கோவை:

”ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கு” – கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு 03.01.2020 அன்று வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திருச்சி:

”மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தாதே! இந்தியாவை மதவாத நாடாக மாற்றாதே!! மக்களை முள்வேளிக்குள் அடைக்காதே!” – திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கும்பகோணம்:

”2020 – மகிழ்ச்சியில்லா புத்தாண்டு” – கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தொகுப்பு :

சீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்

ரிசிக் கப்பலில் சுட்டது முதல் பன்றி வேட்டைக்குச் சென்றது வரை சீமான் சொல்லும் அத்துணை பொய்களையும் புரட்டுகளையும், சீமானின் அன்புத் தம்பிகள் கண்களை மூடிக் கொண்டு நம்புவதற்கான காரணம் என்ன ? சீமான் தான் தமிழகத்தை காக்க வந்த ஒரே மீட்பர் என அவர்கள் ஏன் நினைக்கிறார்கள் ?

நாம் தமிழர் கட்சியின் அன்புத் தம்பிகளின் சீமான் ஆதரவு மனநிலையின் பின்னணி என்ன ? விவரிக்கிறார் மனநல ஆற்றுப்படுத்துநர் வில்லவன்.

பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு செய்திப் பிரிவு

பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !

பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு  : அமெரிக்காவின் நாட்டாமை!

மெரிக்க ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட தேர்தல் முறைகேடு புகார், கலவரங்கள், இராணுவ நெருக்கடி  ஆகியவற்றால் நிர்பந்திக்கப்பட்ட பொலிவிய இடதுசாரித் தலைவர் ஈவா மொரேலஸ், கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று அதிபர் பதவியிலிருந்து விலகி,  நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஈவா மொரேலஸ்.

பொலிவியாவின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினாரான பூர்வீகப் பழங்குடிகள் மத்தியில் இருந்து அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட முதல்நபர் மொரேலஸ். சோசலிசத்துக்கான இயக்கம் என்ற இடதுசாரிக்கட்சியைச் சேர்ந்த மொரேல்ஸ் 2006-ம் ஆண்டில் முதல்முறை அதிபரானவுடனேயே, சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி எண்ணெய்  எரிவாயு உற்பத்தியை நாட்டுடைமை ஆக்கி, அரசு நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இத்துறையிலிருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான வரி மற்றும் உரிமத் தொகையைக் கடுமையாக உயர்த்தியதன் மூலம் 82% அளவுக்கு அரசு வருமானம் அதிகரித்தது. இதன் மூலம் கிடைத்த பெருமளவு நிதி மக்கள்நலத் திட்டங்களுக்கு செலவிடப்பட்டது. தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு, சமூக நலத்திட்டங்களுக்கான அரசு பங்களிப்பு அதிகரிப்பு ஆகியவை காரணமாக மக்களின் உண்மை ஊதியம் 60% அதிகரித்தது. அதே சமயத்தில் தீவிர வறுமை 60% குறைக்கப்பட்டது. அரசே முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், பெண்கள் குழந்தைகள் பராமரிப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கும் கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிக்கும் முன்னுரிமை கொடுத்தார் மொரேலஸ். கல்வி, சுகாதாரம் சார்ந்த சமூகநலத் திட்டங்களுக்கு கியூபாவும் வெனிசுலாவும் மிகவும் உறுதுணையாக இருந்தன.

நெடுங்காலமாக எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்படாத பெரும்பான்மை பழங்குடி மக்களை சமமாக அங்கீகரிக்கும் விதமாக பொலிவியாவை பல்தேசிய இன நாடாகவும், பழங்குடிகளின் விபாலா கொடியை பொலிவிய தேசியக் கொடிகளுல் ஒன்றாகவும் அறிவித்தார். இனரீதியான ஒடுக்குமுறையை மேற்கொள்வது சட்டவிரோதம் எனவும் அறிவித்து நடைமுறைப்படுத்தினார். அரசு மற்றும் தனியார் கட்டுபாட்டில் இருந்த சுமார் 134 மில்லியன் ஏக்கர் நிலத்தை நிலமற்ற ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். இவை, அதுவரை அரசியல் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்திவந்த நகர்ப்புறங்களைச் சேர்ந்த சிறுபான்மை ஸ்பானிய மேட்டுக்குடிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் வெறுப்பை உருவாக்கியது.

2010-ம் ஆண்டுக்கு முன்பே காஸ்ட்ரோ, சாவேஸ், மொரேலஸ் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இடதுசாரித் தலைவர்கள், தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொண்டு புதிய தாரளாவாதக் கொள்கைகளை நிராகரித்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை எதிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மொரேலஸின் முதல் பதவிக்காலத்தில், முந்தைய ஆட்சியாளர்களது ஒப்பந்தங்களை நிராகரித்து, உலகவங்கி மற்றும் ஐ.எம்.எப்.பின் ஆதிக்கத்தில் இருந்து முதல்நாடாக பொலிவியா விடுவித்துக் கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுதந்திர வர்த்தக வளையத்துக்குள்ளும் பொலிவியா வர மறுத்துவிட்டது. 2008-ல் தனது ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்ட அமெரிக்கத் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியதோடு, அமெரிக்காவுடனான  தூதரக உறவுகளையும் மொரேலஸ் முறித்துக் கொண்டார்.

சமீப ஆண்டுகளில், மின்சாரக் கார்கள் மற்றும் செல்போன் பேட்டரிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் முதன்மையான தனிமமான லித்தியம், உலகின் மொத்த அளவில் 50 சதவீத அளவுக்கு (90 இலட்சம் டன்கள்) பொலிவியாவில் இருப்பது கண்டறியப்பட்டது. மொரேலஸ், தனது நாடு வெறும் மூலப்பொருட்களின் ஏற்றுமதியாளராக மட்டும் இருப்பதை விரும்பவில்லை. மாறாக, லித்தியம் சம்பந்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட செயல்களின் முழு சங்கிலியும் நடைபெறும் மையமாக மாற்ற விரும்பினார். உதாரணமாக, பொலிவியாவில் பேட்டரி ஆலைகள் மற்றும் கார் தொழிற்சாலைகளை உருவாக்குவது இதில் அடங்கும், இது பொலிவியர்களுக்கு வேலைவாய்ப்பையும் செல்வத்தையும் உருவாக்கும் என்று நம்பினார். ஏற்கெனவே, கடந்த 2018 டிசம்பரில் ACISA என்னும் ஜெர்மானிய தயாரிப்பு நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முயற்சியில் இவ்வாண்டு நவம்பர் 4-ம் தேதி இறங்கினார். இதற்கு மாறாக சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுவதில் ஆர்வம் காட்டினார்.

இதையடுத்த ஒருவார காலத்தில்தான் மொரேலஸ் தன் மீதான தேர்தல் முறைகேடு புகார் காரணமாக பதவி விலக நேர்ந்தது. இலத்தீன் அமெரிக்க நாடுகள் மீதான தனது பிடியை இறுக்கவும், கம்யூனிசம் பரவாமல் தடுக்கவும் 1948-ல் அமெரிக்கா உருவாக்கிய “அமெரிக்க அரசுகளின் அமைப்பு”, மொரேல்ஸ் தரப்பு தேர்தலில் முறைகேடுகள் செய்ததற்கான ‘வலுவான’ ஆதாரங்கள்  இருப்பதாகக் குற்றம் சாட்டியது. தேர்தல் ‘முறைகேடு புகார் கிளம்பியவுடன், தமது அரசியல் மேலாதிக்கத்தை மீட்கும் தருணத்திற்காகக் காத்திருந்த வலதுசாரி எதிர்க்கட்சிகள் மறுதேர்தல் நடத்தக் கோரி கலவரங்களைத் தூண்டிவிட்டன. காவல்துறையோ வலதுசாரி கும்பல்கள் நடத்தும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த மறுத்துவிட்டது. பொதுமக்களின் மீதான தாக்குதலை விரும்பாத மொரேல்ஸ், மறுதேர்தல் நடத்துவதற்கு ஒப்புக் கொண்ட நிலையில், எதிர்க்கட்சிகள் அவரை இராஜினாமா செய்யக்கோரி கலவரத்தைத் தொடர்ந்தனர். இறுதியாக இராணுவத் தளபதி வில்லியம்ஸ் கலிமான், பதவி விலகச் சொல்லி வலியுறுத்திய நிலையில், உயிருக்கு ஆபத்தான சூழலில், கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று அதிபர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, மெக்சிகோவில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளார் ஈவா மொரேல்ஸ்.

இடைக்கால அதிபராக ‘அறிவித்துக்கொண்ட ஜீனைன் ஆனெஸ்.

இதையடுத்து உடனடியாக, பழங்குடி மக்களுக்கு எதிரான வெறுப்பை வெளிப்படையாகக் கக்கியவரும் எதிர்க்கட்சி செனட் உறுப்பினருமான ஜீனைன் ஆனெஸ் என்ற பெண்மணி, தன்னைத்தானே இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார். இதை அமெரிக்கா உடனடியாக வரவேற்றுள்ளது. உள்நாட்டுப்போரை பொலிவிய மக்கள் மீது திணித்து, அமெரிக்க ஏகாதிபத்தியமும் உள்நாட்டு மேட்டுக்குடி இனவெறிக் கும்பலும் தமது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள முயன்று வருகின்றன.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள், ஏழை நாடுகளின் மீது திணித்துவரும் தனியார்மயம் என்ற பொருளாதாரக் கட்டுமானம் எந்தளவிற்கு மக்களுக்கு எதிரானது என்பதை உணர்ந்த மக்கள் உலகெங்கும் போராட்டங்களைக் கட்டியமைத்து வருகின்றனர். அப்பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக, மக்கள் நலன் சார்ந்த –  அது சோசலிசப் பொருளாதாரம்கூட அல்ல  – பொருளாதாரத் திட்டத்தை அமல்படுத்த முயன்றார், மொரேலஸ். தனது நலனுக்கு எதிரான இதை அமெரிக்கா விரும்பவில்லை.

அமெரிக்கா விரும்புகிற விதத்தில்தான் எந்தவொரு நாடும் தனது பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்த வேண்டுமென்றால், அந்நாட்டின் சுதந்திரம் அர்த்தமற்றுப் போகிறது. மொரேலஸ் தலைமையிலான பொலிவியா தனது சுதந்திரத்தையும், இறையாண்மையையும் காத்துக்கொள்ள விரும்பியது. இவற்றை அனுமதிக்க மறுத்து சதிவேலைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம், பொலிவியாவில் தனது அடாவடித்தனத்தை மறைத்துக் கொள்ள கையாண்ட வழிமுறைகள்தான் தேர்தல் முறைகேடு, ஊழல் புகார்கள், இறுதியாக ஆட்சிக் கவிழ்ப்பு.

படிக்க:
அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்

பொலிவியாவில் மட்டுமல்ல, வெனிசுலாவிலும் இதே போன்றதோர் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த முயன்று வருகிறது, அமெரிக்கா. மக்கள் நலனை முன்னிறுத்தும் ஆட்சியாளர்களை ஒழித்துக்கட்டுவதன் மூலம் தென்னமெரிக்க நாடுகளை மீண்டும் ‘வாழைப்பழக் குடியரசு’ நாடுகளாக மாற்றிவிட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் இறுதி நோக்கம்.

வசந்தன்

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! மக்கள் அதிகாரம் பேரணி !

NRC -க்கு வழிவகுக்கும் அபாயகரமான தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) தமிழகத்தில் அமல்படுத்தாதே !

சட்டமன்றம் நோக்கிப் பேரணி…

நாள் : 6.01.2020, திங்கள் காலை 11 மணி.
பேரணி தொடங்குமிடம் : சேப்பாக்கம் (விருந்தினர் மாளிகை அருகில்), சென்னை.

அன்பார்ந்த நண்பர்களே!

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) எதிர்த்து இன்று நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நாடு பாசிசத்தை நோக்கிச் செல்கிறது என்ற அபாயத்தை புரிந்து கொண்ட உயர் கல்வி நிறுவன மாணவர்கள், அறிவுத் துறையினர் இன்று வீதியில் இறங்கி ரத்தம் சிந்தி போராடி வருகிறார்கள்.

இதுவரை போலீசு துப்பாக்கி சூட்டிற்கு 25 பேர் பலியாகி உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உறுதியாகப் போராடி வரும் மாணவர்களை போலீசும், சங்பரிவார் கும்பலும் சேர்ந்து கொண்டு தாக்குகின்றன. இவர்களே திட்டமிட்டு கலவரத்தை நடத்தி விட்டு போராடும் மக்களை பார்த்து வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என பச்சையாக பொய் சொல்கிறார்கள்.

காஷ்மீர், முத்தலாக், பாபர் மசூதி, போல் CAA – NRC – NPR-ஐ எளிதில் அமல்படுத்தி விடலாம் என இருமாப்பு கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு மாணவர்களும் மக்களும் சரியான பாடம் புகட்டி உள்ளனர்.

பிரதமர் மோடி NRC பற்றி நாங்கள் கலந்து பேசவில்லை என்கிறார். NPR மூலம் சேகரித்த தகவல்களை வைத்தே NRC முடிவு செய்வோம் என பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகிறார். பாரதத்தை, இந்துத்வாவை ஏற்பவர்கள்தான் இந்தியர்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறு கிறார். இந்துத்வாவையும், கார்ப்பரேட்டுகளையும் எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள், கம்யூனிஸ்டுகள், அறிவு ஜீவிகள், மாட்டுக்கறி உண்பவர்கள் என அனவரையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தேசத்துரோகிககள், அந்நிய கைக்கூலிகள் என்று பேசி வருகின்றனர். இவர்களையெல்லாம் NPR மூலம் சந்தேகத்துக்குரியவர்கள் எனச் சொல்லி நமது மூதாதையர்களின் பிறப்பிடம், வாழ்விடத்தை நம்மையே நிரூபிக்க சொல்வார்கள். இல்லையேல் குடியுரிமையை பறித்து அகதிகள் வதை முகாமில் அடைப்பார்கள்.

NPR-ல் தொகுப்பான அடையாளத் தரவுகள் பெறும் பொருட்டு பெயர், வயது, பாலினம் என வழக்கமாக கேட்கப்படும் 12 கேள்விகளோடு கூடுதலாக, பெற்றோர்கள் பிறப்பிடம், ஆதார் விபரங்கள், செல்போன் எண், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். இதை வைத்து தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், உள்ளூர் அளவிலும் பதிவேடுகள் தயாரிக்கும்போது சரிபார்க்கும் நடைமுறை கடைபிடிக்கப்படும். அப்போது சந்தேகத்திற்குரிய நபர் என யாரையும் தனியாகப் பிரித்து இந்தியர்கள்தான் என்பதை நிரூபிக்க சொல்வார்கள். ஆக, யார் இந்திய குடிமக்கள் என்பதை அதிகாரிகள்தான் தீர்மானிப்பார்கள்.

தேசிய மக்கள் தொகை பதிவேடும், சென்சஸ் கணக்கெடுப்பும் ஒன்று என பேசுவது மக்களை ஏமாற்றும் மோசடி. 1948 சென்சஸ் சட்டப்படி மேற்கொள்ளப்படுகிறது. அதன் விபரங்கள் ரகசியமானவை. வேறு எதற்கும் அதை பயன்படுத்தலாகாது. ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு 1955 குடியுரிமைச் சட்டத்தில் 2003-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் ”சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அல்லது சட்டவிரோதமாக இடம் பெயர்ந்தவர்கள்” என்ற திருத்தத்தை சேர்த்தார்கள். அதன்படி செய்யப்படும் NPR தகவல்களை NRC-யுடன் இணைத்து யாரையும் குடியுரிமையற்றவர்களாக்க முடியும். இது மிகவும் அபாயகரமானது.

படிக்க :
பென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் ! பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி – ஆர்ப்பாட்டம்
♦ இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !

இப்படித்தான் பாசிச ஹிட்லர் ஜெர்மனியில் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் யூதர்களின் குடியுரிமையைப் பறித்தான். மியான்மர் அரசு ரோஹிங்கியா முசுலீம்களை நாடற்றவர்களாக்கியது. அதுபோல் பா.ஜ.க அரசின் இந்த CAA – NRC – NPR ஆகியவை இஸ்லாமியர்கள், இந்துக்களில் உழைக்கும் மக்கள் ஆகியோரின் குடியுரிமையைப் பறித்து வதை முகாம்களில் அடைக்கும் இந்துராஷ்டிர திட்டமேயாகும். ஜெர்மனியில் “யூத இனப்படுகொலைகள், விஷவாயு கூடங்களிலிருந்து தொடங்கவில்லை. வெறுப்பான பேச்சுக்களின் வழியே வெகு காலத்திற்கு முன்பே தொடங்கி விட்டது” என இனப்படுகொலை தடுப்பு நாளில் ஐ.நா. பொதுச்செயலாளர் பேசியுள்ளதை இதனுடன் இணைத்துப் பாருங்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அசாமில் NRC அமல்படுத்தியதில் முன்னாள் ஜனாதிபதி பக்ரூதின் அலி அகமது குடும்பத்தினர், முன்னாள் இராணுவ அதிகாரி குடும்பத்தினர் குடியுரிமை மறுக்கப்பட்டு தடுப்பு முகாமில் இருக்கிறார்கள். மேலும் 19 லட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் . இதில் CAA மூலம் 10 இலட்சம் இந்துக்கள் மட்டும் குடியுரிமை பெற்று விடுவார்கள். மீதி 9 இலட்சம் முசுலீம்களை முதலில் தடுப்பு முகாமில் அடைப்பார்கள். இறுதியில் ஹிட்லரைப் போல் விஷவாயு செலுத்தி கொல்வார்களா?

பா.ஜ.க அரசின் இந்த அபாயகரமான திட்டங்களை மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்கள் அமல்படுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், எடப்பாடி அதிமுக அரசு, அடிமைத்தனத்துடன் பாராளுமன்றத்தில் CAA – வை ஆதரித்து வாக்களித்ததுள்ளது . ஒருவேளை அதிமுக, பா.ம.க இந்த CAA – வை எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தச் சட்டம் தோல்வி அடைந்திருக்கும்.

யார் அகதிகள் ? கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக சொந்த நாட்டில் வாழ வழியின்றி பிற நாடுகளுக்கு ஓடுபவர்கள்தான். இத்தகைய மக்களுக்கு குடியுரிமை கொடுப்பதுதான் மனிதாபிமானம், இயற்கை நீதி. ஆளும் வர்க்கம் தனக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்துக் கொள்ள உழைக்கும் மக்களை தேவையற்றவர்களாக ஆக்குகிறார்கள். அதற்காகத்தான் தீவிரவாத பீதியூட்டி, மத பாகுபாட்டைக்காட்டி குடியுரிமையைப் பறித்து மக்களை அடக்கி ஒடுக்க வருகிறது CAA – NRC – NPR.

இந்தியாவில் பிழைப்புத் தேடி குடும்பத்தோடு பல கோடி பேர் ஊர் ஊராக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் வீடற்று சாலையோரங்களில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஏது ஆவணம் ? ஏது நிலையான முகவரி ? நாடு முழுவதும் இன்று பல மாநகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க இடையூறாக உள்ள பல லட்சம் ஏழை மக்கள் NPR மூலம் குடியுரிமை பறிக்கப்பட்டு தடுப்பு வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். அதிலும் அவர்கள் இஸ்லாமியர்கள், தலித்துகளாக இருந்தால் பா.ஜ.க அரசு – அதிகாரிகள், சங்பரிவார் கும்பல் எப்படி நடத்துவார்கள்? என யோசித்துப் பாருங்கள். பசு மாட்டை வைத்து கும்பல் கொலைகளில் ஈடுபட்டவர்கள் குடியுரிமைச் சட்டத்தை வைத்தும் கொலை அரசியல் செய்யமாட்டார்களா?

NPR தகவல் சேகரிக்க அதிகாரிகள் உங்கள் வீடுகளுக்கு வரும்போது, “இது எங்கள் நாடு, எங்கள் ஊர், ரத்தம் சிந்தி கட்டமைத்தது நாங்கள், கட்டிக் காப்பது நாங்கள் ; நீ யார் எங்களின் குடியுரிமையை கேள்வி கேட்க?” என அடித்துத் துரத்த வேண்டும். இம்முறை விடக் கூடாது. காவி பாசிசத்திற்கு பாடை கட்டியாக வேண்டும். உண்மையான ஜனநாயகத்தை மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் கட்டியமைக்க வேண்டும்.

படிக்க :
நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை அடியோடு அழிக்கின்ற CAA – NRC – NPR-ஐ திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் பல தரப்பினர் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். தீராத பொருளாதார நெருக்கடியால் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு மக்கள் பிரச்சினைகள் எரிபொருளாக போராட்டத்தை உந்தித் தள்ளுகின்றன. மக்கள் எதிர்ப்பின் காரணமாக பல மாநில கட்சிகள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டு இந்தச் சட்டங்களை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன. தமிழகத்திலும் இந்த நிலை வர வேண்டும்.

தமிழக மக்களே!

  • தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு யாரும் எந்த தகவலையும் தரக்கூடாது என உறுதியேற்போம் !
  • “தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்” என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களைத் தொடருவோம் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

நூல் அறிமுகம் : கோபுரத் தற்கொலைகள் | ஆ சிவசுப்பிரமணியன்

காலத்தால் முந்திய தமிழ்நாட்டுச் சமயங்கள் வரிசையில் சைவமும் வைணவமும் இடம்பெறுகின்றன. இவை இரண்டும் வேதங்களின் மேன்மையை ஏற்றுக் கொண்டவை. இதன் அடிப்படையில் இவற்றை வைதீக மரபைச் சார்ந்தவை எனலாம். இவற்றிற்கு மாறான அவைதீக (வைதீகமற்ற) சமயங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம், சாங்கியம், தாந்ரிகம் ஆகிய சமயங்களும் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தன.

பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும் அரசின் ஆதரவைப் பெற்றுத் தம்மைப் பலப்படுத்திக் கொண்டன. பிற்காலச் சோழர் காலத்தில் சைவம், அவைதீக சமயங்களை மட்டுமின்றி, வைணவத்தையும் ஓரங்கட்டிவிட்டுத் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டது. கிட்டத்தட்ட அரசு மதம் என்று சொல்லத்தக்க நிலையை அது பெற்றிருந்தது என்றாலும்; வைணவம் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதில் வெற்றிபெற்றது.

இவ்விரு சமயங்களின் மேல்நிலைக் குழு போன்று விளங்கிய பார்ப்பனர்களைத் தாண்டி பல்வேறு சமூகக் குழுக்களையும் தம்முள் இவை இணைத்துக்கொண்டன.

தமிழ் நாட்டின் சமூக வரலாற்றில் ஆதிக்கம் செலுத்திய சைவம், வைணவம் தொடர்பான நான்கு கட்டுரைகளும் மேட்டிமையோரின் ஆதிக்கம் இவ்விரு சமயங்களில் தொடர்வதை விளக்கும் ஒரு கட்டுரையும் அடித்தள மக்களின் சமய வாழ்வில் அரசின் துணையுடன் இவை தலையிட்ட நிகழ்வு குறித்த ஒரு கட்டுரையும் இவ்விரு சமயங்களும் போற்றி வளர்க்கும் மரபுக்கெதிரான கலகக் குரலாய் ஒலித்த சித்தர் பாடல்கள் குறித்த கட்டுரையொன்றும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

முதற்கட்டுரையான ‘சைவம் உறிஞ்சிய நடுகல் வழிபாடு’ … கொலை அல்லது தற்கொலையின் வாயிலாக இறந்தோருக்கு நடுகல் நாட்டி வழிபடுவது பண்டைத் தமிழர் மரபு. போரில் இறந்துவிட்ட வீரர்கள் நடுகல் நட்டு வழிபட்டமை குறித்த செய்திகள் சங்க இலக்கியத்தில் தொல்காப்பியத்திலும் இடம்பெற்றுள்ளன… தொன்மை வாய்ந்த நடுகல் வழிபாட்டைச் சோழர் ஆட்சியில் ஏற்றம் பெற்றிருந்த சைவம் எவ்வாறு மாற்றியமைத்துக் கொண்டது என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

‘பக்தி இயக்கத்தில் தீண்டப்படாதார்’ என்னும் இரண்டாவது கட்டுரை… வருண வட்டத்திற்கு வெளியே ‘அவருணர்கள்’ (வருண மற்றவர்கள்) என்று முத்திரை குத்தி ஓரங்கட்டப்பட்ட மக்கள் பிரிவை சைவமும் வைணவமும் சில சூழல்களில் ஏற்றுக்கொண்டுள்ளன. இதற்கான காரணத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

மூன்றாவது கட்டுரையான ‘தமிழ் வைணவத்தில் சூத்திரர் நிலை’ … ஏவல் செய்யப் பிறந்தவன் என்று மனுதர்மத்தாலும் பகவத் கீதையாலும் குறிப்பிடப்படும் சூத்திரர்களுக்குத் தமிழ் வைணவத்தில் வழங்கப்பட்ட இடத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

சைவ வைணவக் கோவில்களின் முக்கிய உறுப்பாகக் காட்சிதரும் பிரம்மாண்டமான கோபுரங்களில் ஏறி நின்று, கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டோர் குறித்த செய்திகளைக் கல்வெட்டுகளின் துணையுடன் நான்காவது கட்டுரையான ‘கோபுரத் தற்கொலைகள் ‘ ஆராய்கிறது.

வேத கலாச்சாரம்

… அ.தி.மு.க. ஆட்சியின்போது ‘விலங்கு உயிர்ப்பலித் தடைச்சட்டம்’ தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்க எதிராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக் கிளையின் சார்பில் ‘விலங்கு உயிர்ப்பலித் தடைச்சட்டத்தின் அரசியல்’ என்னும் தலைப்பில் குறுநூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதுவே இங்கு ஐந்தாவது கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. நாட்டார் சமயத்தை வைதீகமயமாக்கும் முயற்சியையும் இதற்குள் ஆதிக்க அரசியல் மறைந்திருப்பதையும் இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

… கோவில் கருவறைக்குள் சென்று பூசை செய்யும் உரிமை அனைத்து சாதியினருக்கும் கிட்டாத நிலை இன்றும் உள்ளது. மறுக்கப்பட்ட உரிமையாக அன்றி பறிக்கப்பட்ட உரிமையாகவே இதைக் கொள்ள வேண்டும். ஆனால் ‘பேர் கொண்ட பார்ப்பனர்கள் ‘ தம் தனி உரிமையாகக் கருவறைக்குள் நுழைவதை வைத்துள்ளனர். அரசு உருவாக்கும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இச் செய்திகளை ‘அர்ச்சகரும் சாதியும்’ என்ற ஆறாவது கட்டுரை விளக்குகிறது.

சமய எல்லைக்குள் இருந்துகொண்டே சமயச் சடங்குகள் – சாதி – துறவு ஆகியனவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்த சித்தர்கள் குறித்து ‘சித்தர்கள்; மீறலே மரபாய்’ என்ற தலைப்பிலான ஏழாவது கட்டுரை பேசுகிறது. (நூலின் முன்னுரையிலிருந்து …)

சித்தர்கள் : மீறலே மரபாய்

எந்தவொரு சமூகமும் தனக்கெனச் சில மரபுகளைப் பாரம்பரியமாகக் கொண்டிருக்கும். மரபு என்பதில் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் தகவுகள் (மதிப்புகள்), நடத்தை விதிகள், மரபுசார் சட்டங்கள் (Customery Laws) நெறிமுறைகள் (Norms) ஆகியன அடங்கும். இவையனைத்தும் ஒரு தலை முறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பெரும்பாலும் நினைவுகளின் வாயிலாக வழங்கப்படுகின்றன.

… மரபு என்று கூறும்போது அது முற்போக்கானதா? பிற்போக்கானதா? என்பதை முடிவு செய்வதவசியம். ஏனெனில், மரபு என்னும் பெயரில் அனைத்தையும் புனிதமானதாகப் போற்றிப் பாதுகாப்பது சமூக வளர்ச்சிக்குப் பொருந்தாத ஒன்று. ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப மரபுகள் மாறும் தன்மையன. என்றாலும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவோர் தம் ஆதிக்கத்திற்குத் துணைபுரியும் என்றால் பழைய மரபுகள் தொடர்வதையே வலியுறுத்துவர். அதனை மீறவிடாது பார்த்துக்கொள்வர். தம் ஆதிக்கத்திற்கு உதவுமென்றால் மரபுகளில் ஏற்படும் மாறுதல்களை ஏற்றுக்கொள்வர். எனவே, மரபுகளுக்குப் பின்னால் ஆதிக்க அரசியல் மறைந்துள்ளது. ஆதிக்க அரசியல் எதிர்ப்பு என்பது, மேட்டிமையோர் போற்றிப் பேணும் மரபுகளுக்கு எதிரானதாகவே அமையும். இந்தியச் சமூக வரலாற்றில் மரபு தொடர்பாகப் பின்வரும் மூன்று நிலைகள் இருந்துள்ளன.

(அ) மாற்றுக் கருத்து (Dissent) (ஆ) எதிர்ப்பு (Protest)  (இ) சீர்திருத்தம் (Reform)

இவை மூன்றும் ஒரு சமூகத்தின் மரபுகளை மாற்றியமைப்பதிலும், அழிப்பதிலும் புதிதாக உருவாக்குவதிலும் துணை நின்றுள்ளன. ஒரு சமூகத்தில் நீண்டகாலமாகப் பேணப்படும் மரபுகள் தம் நலனுக்கு எதிரானவை என்று அடித்தள மக்கள் அல்லது அம்மரபுகளினால் பாதிக்கப்படுவோர் கருதத் தொடங்கும்போது மாற்றுக் கருத்து உருவாகிறது. சமூக நிலைமையைப் பொறுத்து மாற்றுக் கருத்து வளர்ச்சியடைந்து எதிர்ப்பாக வெளிப்படும். சாதகமான சூழல் உருப்பெறவில்லை என்றால் மாற்றுக் கருத்தாகவே தொடரும்.

படிக்க :
நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் !
இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !

மாற்றுக் கருத்து எதிர்ப்பாக வெளிப்படும்போது, எதிர்ப்பாளர்களுடன் சமரசஞ்செய்து கொள்ளும் வழிமுறையாக ஆள்வோரும் அவர்களைச் சார்ந்து நிற்கும் மேட்டிமையோரும் சில சீர்திருத்தங்களை, அறிமுகப்படுத்துவர் அல்லது அடக்கு முறையை ஏவுவர். எனவே, ஒரு சமூகத்தில் சமூக மாறுதல்களுக்கான தூண்டுகோலாக மரபு மீறலும் அதையொட்டி நிகழும் மக்கள் எழுச்சியும் காரணமாக அமைகின்றன. மக்கள் எழுச்சியானது அமைப்பு சார்ந்தும் திட்டவட்டமான கோட்பாடுகள் சார்ந்தும் வெளிப்படாவிட்டால் வெறும் கலகமாக மட்டுமே மடிந்துபோகும்.

ஆ. சிவ சுப்பிரமணியன்.

தமிழ்ச் சமூக வரலாற்றில் மரபு மீறுவதை நோக்கமாகக் கொண்டு, குரல் எழுப்பியவர்களுள் சித்தர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் இறை நம்பிக்கை உடையவர்கள். என்றாலும் அந்த எல்லைக்குள் நின்றுகொண்டே சமூக வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருந்த பல மரபுகளுக்கு எதிராக உரக்கக்குரல் எழுப்பியுள்ளனர். சித்தர்களைப் பொறுத்தளவில் செல்லரித்துப்போன மரபுகளை மீறுவதை அல்லது எதிர்ப்பதை ஒரு மரபாகக் கொண்டிருந்தனர். இச்செயல்தான் ஏனைய சமயவாதிகளிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக்காட்டுகின்றது. அவர்களது மரபுமீறியச் செயல்களாக;

(அ) சாதிய எதிர்ப்பு (ஆ) சமயச் சடங்குகள் எதிர்ப்பு (இ) வடமொழி எதிர்ப்பு – ஆகியன அமைகின்றன. சித்தர்கள் அனைவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களல்லர் என்றாலும் பெரும்பாலான சித்தர்களிடம் மேற்கூறிய மரபுமீறல்கள் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் மரபுமீறலையே மரபாகக் கொண்டவர்கள் என்று இவர்களை அழைப்பது பொருத்தமானதாகும்.

நூல் : கோபுரத் தற்கொலைகள்
ஆசிரியர் : ஆ. சிவசுப்பிரமணியன்

வெளியீடு : பரிசல்,
எண் : 176, Q பிளாக், தொல்காப்பியர் தெரு,
எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை – 600 106.
தொலைபேசி எண் : 9382853646

பக்கங்கள்: 104
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolks | panuval

வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றி விட்டது

0
நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 04

முதல் பாகம்

கடவுள் கருத்தின் துவக்கமும் நாத்திகத்தின் தோற்றமும்

“வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றி விட்டது” என்று கார்பே என்னும் இந்திய ஆய்வாளர் கூறுகிறார். வேதகாலத்தில் ‘சர்வ வல்லமையுள்ள கடவுள்’ என்ற கருத்தே தோன்றவில்லை. “கண்ணால் காணாததை நம்பாதே” என்பது போன்ற கருத்துக்கள் தோன்றிவிட்டன. வேத யக்ஞச் சடங்குகளைப் பல கடவுளர்களுக்குச் செய்து செழிப்பும், செல்வமும் பெற விரும்பிய இனக்குழு மக்களுக்கு லோகாயதர்கள் வருணன், அக்கினி போன்ற தெய்வங்கள் இல்லை என்று சொல்ல இக்கருத்துக்கள் எழுந்தன. இவையே நாத்திகம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. இது சர்வ வல்லமையுள்ள கடவுளை மறுப்பதாக ஆகாது. நமது வரலாற்று முற்காலத்தைப் பற்றி நாம் அறிய அறிய, அக்காலத்தின் ஒரு கட்டத்தில் ‘கடவுள்’ என்ற கருத்தே இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுவோம்.

கார்பே , ரிக்வேதச் செய்யுள் ஒன்றைச் சான்றாகக் காட்டுகிறார். “இந்திரன் என்றோர் தெய்வமில்லை” என்ற கருத்துடைய இச்செய்யுளின் பொருளைப் புரிந்து கொள்ளாமல் இதனை நாத்திக வாதம் ரிக் வேதகாலத்திலேயே தோன்றிவிட்டது என்ற தம் முடிவுக்குச் சான்றாக கார்பே காட்டுகிறார். உண்மையில் இது இந்திரனைப் புகழ்ந்து கூறும் ஒரு செய்யுளாகும். இந்திரனைக் குறை கூறுவதென்பது இந்திரனது இருப்பில் நம்பிக்கையிருந்தால் தானே சாத்தியம்?

இந்திரன் இருப்பையே சந்தேகிக்கிற செய்யுள்கள் ரிக் வேதத்தில் உள்ளன. உதாரணமாக, “வீரர்களே, இந்திரன் இருப்பது உண்மையானால் அவனது புகழைப் பாடுங்கள். நாமா என்னும் ரிஷி,

“இந்திரன் என்று எவரும் இல்லை. யார் அவனைக் கண்டார்கள். யார் புகழை நீங்கள் பாடப் போகிறீர்கள்?” என்று சொல்லுகிறார். (ரிக்வேதம் VIII 100)

இந்தச் சந்தேகம் ‘ஒரு கடவுள்’ என்ற கொள்கைக்கு வழிவகுத்ததா, அல்லது ‘கடவுள் இல்லை’ என்ற கொள்கைக்கு வழிவகுத்ததா என்பதே கேள்வி. வரலாற்று ‘முற்காலக் கடவுளர்களை’ப் பற்றிய நம்பிக்கை மறுக்கப்பட்டு, ‘ஒரே கடவுள்’ என்ற கொள்கை பிறந்தது. ஆகவே இந்த சந்தேகங்கள் முற்கால பல தெய்வ வணக்கத்தை மறுக்கவே பிறந்தது. எனவே இக்கருத்துக்கள் ஆத்திக முற்கால கருத்துக்கள். இவை நாத்திகமன்று.

வேதச் சிந்தனைகள் வளர்ச்சி பெற்று ‘ஒரு கடவுள்’ கொள்கை தோன்றியது. இதற்குக் காரணம் இனக்குழு அமைப்புகள், அழிந்தும், அழிக்கப்பட்டும் அரசுகள் தோன்றியதே. அரசு மக்களை ஒரு வர்க்கத்திற்கு வன்முறையால் பணிய வைக்கும் கருவி. அது மக்கள் மனத்தைப் பணியவைக்கச் சமயங்களைத் துணையாக நாடிற்று. மனத்தில் ‘பல கடவுளர்’ (Polyheism) பக்தி இருந்ததை ஒரே கடவுளாக மாற்ற அது தத்துவத் துறையில் முயற்சி செய்தது. இது ஒன்றேதான் ஒரு கடவுள் வணக்கம் தோன்றக் காரணம் என்று நான் கூறவில்லை. அரசுகள் தோன்றிய பகுதிகளில், ஒரே கடவுள் வணக்கமும் தோன்றியது.

படிக்க :
நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் !
பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !

ரிக்வேதம் 1,000 செய்யுள்கள் கொண்ட ஒரு தொகை நூல். ஒவ்வொரு செய்யுளின் காலமும் இன்னும் ஆராய்ச்சியால் அறியப்படவில்லை. ஆயினும் வேதப் பாடல்களின் உள்ளடக்கத்தைக் கவனித்தால் அவற்றின் வளர்ச்சிமுறைப் போக்கை நம்மால் அறிய முடியும், வேதங்களின் துவக்க காலத்தில் பல்வேறு இயல்புகள் உடையதாக நம்பப்பட்ட பல்வேறு தேவதைகள் வணக்கத்திற்குரியனவாக இருந்தன. இவற்றிற்கு ஆன்மீக முக்கியத்துவம் இல்லை. பண்டமாற்று விவகாரம் போல சில கொடைகளை மனிதர்கள் தெய்வங்களுக்குக் கொடுத்து, சில வரங்களைப் பெற முயன்றார்கள். மாபெரும் ஆற்றல், இத்தேவதைகளுக்கு இருந்ததாக அவற்றை வணங்கும் மக்கள் நம்பவில்லை. இவ்வேதங்களிலேயே, இத்தேவதைகள் முக்கியத்துவம் இழந்து ஒரு தெய்வ நம்பிக்கை தோன்றுகிற கட்டத்தைக் குறிக்கும் பாடல்களும் உள்ளன. ‘ஒரே கடவுள்’ நம்பிக்கை ரிக்வேதச் செய்யுள்களிலேயே முழு உருவம் பெற்றதா என்ற கேள்வி முக்கியமானதல்ல. ரிக்வேதத்தில் இந்த மாற்றத்துக்குரிய முன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கிற நிலைமைகளை வேதப் பாடல்களின் உள்ளடக்கத்தின் வளர்ச்சிப் போக்கு குறிப்பிடுகிறது.

இது குறித்து வின்டர் நிட்ஸ் கூறுகிறார்: “மிகவும் உயர்ந்த, மிகவும் வலிமையுடைய இந்திரன் என்னும் தெய்வத்தின் மீது வேதகால மக்கள் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். அது போன்ற பல தெய்வங்களின் மீதும் நம்பிக்கைக் குறைந்தது. இதனால் யக்ஞங்கள் புரிவது, தேவதைகளைத் தங்களோடு விருந்துண்ண அழைப்பது போன்ற சடங்குகளின் மீது நம்பிக்கை தளர்ந்தது. இந்த யக்ஞங்களையெல்லாம், சர்வ வல்லமை படைத்த ஒரு தெய்வத்துக்காகச் செய்து வரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை புதிதாகத் தோன்றியது. எனவே ‘பிராஜாபதி’ (மனிதனைப் படைத்தவன்) என்ற கருத்து உருவாகியது. படைப்பாளி என்ற கருத்தின் உதயமே, ‘ஒரு கடவுள்’ வணக்கத்தின் துவக்கம். இவருக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டன; பிராமணஸ்பதி, பிருகஸ்பதி, விஸ்வகர்மன் முதலிய பெயர்களில் அவர் இயல்புத் தொகுப்பான கடவுள் எனக் கருதப்பட்டார். இயற்கைத் தெய்வங்கள், அவருடைய பல அம்சங்களாகக் கருதப்பட்டன. ரிக் வேதத்திலேயே இதற்குச் சான்றுகள் உள்ளன.

ராமானுஜர்.

அவரை இந்திரர் என்றும், மித்திரர் என்றும், வருணர் என்றும், அக்னி என்றும் அழைக்கிறார்கள். அவரை கருட் மாத் என்றும் பெயர் சொல்லுகிறார்கள். ஒரே ஒருவருக்குத் தான் கவிகள் பல பெயர்களைக் கொடுத்திருக்கிறார்கள் – அக்னி, யமன், மதாரீஸ்வன்.

இத்தகைய ஒரு கடவுள் கொள்கை பின்னும் வளர்ச்சியடைந்து ரிக்வேதத்தின் பிற்காலச் செய்யுள்களில் ‘பிரம்மம்’ என்ற கருத்தாக உருவாயிற்று. இது குணங்களற்றது. தெளிவற்றது. ஆயினும் இது ஒன்றே உண்மை. இதினின்றும் தோன்றிய மாயையில் பிரம்மம் பிரதிபலிப்பதால் தான் பிரபஞ்சம் தோற்றம் கொள்கிறது. இக்கொள்கை ஒரு கடவுள் கொள்கையின் வளர்ச்சிநிலை.

இதனை ஒரு கடவுள் கொள்கையாக ராமானுஜர் மாற்றினார். குணமற்ற பிரம்மத்திற்கு நற்குணங்களை ஏற்றி அவர் சகுணப் பிரம்மம் என்ற கருத்தைப் படைத்தார்.

‘ஒரு கடவுள்’ என்ற கொள்கையை மறுக்கவே நாத்திகம் தோன்றியது. பின்னர் தோன்றிய பிரம்மம், ஒரே கடவுள் என்ற கொள்கைகளை மறுக்கவும் நாத்திகம் தன் வாதங்களை வளர்த்துக் கொண்டது.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !

PP Letter head தேதி : 02.01.2020

பத்திரிகை செய்தி

திரு. நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதையும், மிகவும் தொலைவில் உள்ள சேலம் சிறைக்கு மாற்றியிருப்பதையும் மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!

திரு. நெல்லைக் கண்ணன்.

மிழகம் நன்கறிந்த இலக்கியக் சொற்பொழிவாளரும், காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைவர்களில் ஒருவருமான நெல்லை கண்ணன் அவர்கள் எவ்வித உள்நோக்கமின்றி மோடி, அமித்ஷா குறித்து வேடிக்கையாகப் பேசியதைக் காரணம் காட்டி குற்றம் புரியத் தூண்டுதல், இருவேறு பிரிவினரிடையே மோதலை உருவாக்குவது ஆகிய பிரிவுகளின் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க பாஜக -வினர் செய்த ரவுடித்தனத்திற்குப் பிறகு பணிந்து தமிழகக் காவல்துறை எடுத்திருக்கும் அநியாயமான நடவடிக்கை.

திரு. நெல்லை கண்ணன் அவர்கள் பேசியதைவிட மிகக் கொடூர வன்மத்துடன் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பாஜக-வினர் பேசி வருவது மட்டுமல்லாது பல கொலைகளையும் பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் அரங்கேற்றி வருகின்றனர். அவ்வாறு கொலை செய்தவர்களுக்கு  பாஜக அமைச்சரே மாலை போட்டு வரவேற்கிறார். தமிழகத்தில் பாஜக-வின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கவிஞர் வைரமுத்துவைக் கொலை செய்ய வேண்டுமென்று பகிரங்கமாகப் பேசினார்.

எச்.ராஜா மாணவர்கள் போராட்டத்தின் போது கல் வீசுபவர்கள் மீது குண்டு வீசுவோம் எனப் பேசினார். மெரினாவில் எவ்விதப் போராட்டமும் நடத்தக் கூடாது என உயர்நீதிமன்றத் தடை இருக்கும் போது அதை துச்சமாக மதித்து எச்.ராஜா, இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இவற்றை காவல்துறை சற்றும் கண்டுகொள்வதில்லை. தமிழகக் காவல்துறை முழுவதும் பாஜக-வின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது.

படிக்க:
நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் !
♦ பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !

திரு நெல்லை கண்ணனைக் கைது செய்யும் போது பாஜக காலிகள் அவரைத் தாக்க முனைந்தபோதும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, திரு நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதையும் அவரை துன்புறுத்தும் நோக்கில் வயது முதிர்ந்த ஒரு தலைவரை தொலைதூர சேலம் சிறைக்கு மாற்றியிருப்பதையும் மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அவர் மீதான வழக்கை உடனே திரும்பப்பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டுமெனெ வலியுறுத்துகிறது.

ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகவும், பாஜகவின் அடியாளாகவும் செயல்படும் தமிழகக் காவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறது.

தோழமையுடன்
தோழர் காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம

பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

வம்பர் – 28, 2019 – பிரெடெரிக் எங்கெல்ஸின் இருநூறாவது பிறந்த தினம். கார்ல் மார்க்சின் இணையபிரியா நண்பராக மட்டுமல்ல, கம்யூனிசத் தத்துவத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலமைந்த அறிவியலாக, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராயுதமாக, மார்க்சுடன் இணைந்து வளர்த்தெடுத்தவர் பிரெடெரிக் எங்கெல்ஸ்.

ஆலை முதலாளியின் மகனாகப் பிறந்த அவர், ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பிதாமகன்களுள் ஒருவராக உருவெடுத்தது வரலாற்றில் நிகழ்ந்த முரண் அதிசயம்.

கம்யூனிஸ்ட் லீக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கம்யூனிஸ்டுகளின் பொது வேலைத்திட்டமாக மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதி முன்வைத்ததுதான், காலத்தால் அழியாத கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை. தொழிலாளி வர்க்கத்தின் பைபிளைப் படைத்தபோது எங்கெல்ஸின் வயது 28.

எங்கெல்ஸ்க்கு முன்பே மிகப் பலர் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களை வர்ணித்து, அதற்கு உதவி புரிய வேண்டியதின் அவசியத்தை எடுத்துச் சொல்லியுள்ளனர். பாட்டாளி வர்க்கம் துன்பதுயரங்களை அனுபவிக்கும் வர்க்கம் மட்டுமல்ல, உண்மையிலே பாட்டாளி வர்க்கத்தின் வெட்கக்கேடான பொருளாதார நிலைமை தடுக்க முடியாத வகையில் அதை முன்தள்ளிச் செல்கிறது, தனது இறுதி விடுதலைக்காகப் போராடும்படி நிர்ப்பந்திக்கிறது என்று எங்கெல்சுதான் முதன்முதலாகச் சொன்னவர் என்கிறார், லெனின்.

படிக்க:
மூலதனம் நூலின் 150 வது ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100 வது ஆண்டு !!
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

எங்கெல்ஸ் தொழிலாளி வர்க்கத்தின் நிலை குறித்து 24 வயதிலேயே செறிவான கட்டுரைகளை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது மட்டுமல்ல; அறிவியலுக்கு புறம்பான வகையிலும், கற்பனையான செயல்திட்டங்களோடும், கருத்துமுதல்வாத – இயக்க மறுப்பியல் சிந்தனைகளோடு முன்வைக்கப்பட்ட சித்தாந்தப் போக்குகளை சமரசமின்றி எதிர்த்துப் போராடியிருக்கிறார்; சளைக்காமல் எழுதியிருக்கிறார்.

புனித குடும்பம் அல்லது விமர்சன பகுப்பாய்வின் மீதான விமர்சனம், ஜெர்மானிய சித்தாந்தம், டூரிங்குக்கு மறுப்பு போன்ற நூல்கள் இத்தத்துவார்த்த போராட்டத்தின் சாட்சியமாக விளங்குகின்றன. இவை தவிர, மானுடவியலையும் அறிவியலையும் நிலைநாட்டுகிற, மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அவரது படைப்புகள் பாட்டாளி வர்க்கத்திற்கு அரசியல் வழிகாட்டும் வரலாற்றுப் பொக்கிஷங்கள்.

மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் மூலதனத்தின் முதல் தொகுதி மட்டுமே வெளியாகியிருந்த சூழலில், எஞ்சிய இரு தொகுதிகளையும் பெரும் இடர்ப்பாடுகளைக் கடந்து வெளியிட்டவர் எங்கெல்ஸ். இதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், மார்க்ஸ் போன்ற மாமனிதரின் ஒவ்வொரு பொன்னான வார்த்தையும் மிகவும் முக்கியமானது. “இவ்வாறு கடினமாக உழைப்பதை நான் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவே கருதுகிறேன். ஏனென்றால், என் நீண்ட நாள் நண்பன் மீண்டும் என்னருகில் இருப்பதாகவே உணருகிறேன்” என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார், எங்கெல்ஸ்.

எங்கெல்ஸை நாம் ஏன் நினைவு கூற வேண்டும்? விடையளிக்கிறார், லெனின். தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் அறிவியலை நிலைநாட்டினார்கள். ஆகவேதான், எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

– ஆசிரியர் குழு.

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மமின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

12 வயது சிறுவன் கைது : மோடி சேவையில் பீகார் போலீசு !

0

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்களின் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீகாரின் அவுரங்காபாத்தில் நடைபெற்ற போராட்டங்களின்போது, போலீசு மிருகத்தனமான தாக்குதல்களை நடத்தியதோடு, முசுலீம்களை தொடர்பே இல்லாமல் வேண்டுமென்றே கைதும் செய்துள்ளது.

டிசம்பர் 21 அன்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் ‘பீகார் முழுஅடைப்புக்கு’ அழைப்பு விடுத்திருந்தது. போராட்டக்காரர்கள் அணிவகுத்து சென்றபோது, அதைத் தடுக்க போலீசு கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது. போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலாக தெருக்களில் நுழைந்து, ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகரத்தின் நியூ காசி மொல்லா, ஷா-கஞ்ச், பதான் டோலி, ஆசாத் நகர், இஸ்மாயில் டோலி மற்றும் ஃபாரூக்கி மொல்லா பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

வழக்கம்போல, போராட்டக்காரர்கள் மீதே அத்தனை பழியையும் போடப்பட்டது போலீசு. ஆனால், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள் பீகார் போலீசு, கார்களையும் பைக்குகளையும் அடித்து நொறுக்குவதைக் காட்டின.

இந்நிலையில் டிசம்பர் 21 முதல் பல்வேறு வழக்குகளில் 45 பேர் கல் வீச்சில் ஈடுபட்டதாக போலீசு தரப்பில் சொல்லப்பட்டது. இதில் பெரும்பாலானோர் அப்பாவிகள் எனத் தெரியவந்துள்ளது.

அவுரங்காபாத் நகரின் காலனியில் இருந்து டிசம்பர் 21 மதியம் ஷாபாஸ் நவாப் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது மூத்த சகோதரர் சாஜிப், கல் வீசியவர்களில் ஷாபாஸ் இல்லை என்று கூறினார்.

ஷாபாஸ் கொடூரமாக தாக்கப்பட்ட காட்சி.

டிசம்பர் 21 அன்று தனது தாயிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், தனது சகோதரர் கைது செய்யப்பட்டதாக சாஜிப் கூறுகிறார். அவர்களது வீட்டின் அருகே அவர்களது காரை நிறுத்தும்போது ஷாபாஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். “என் அம்மா தொலைபேசியில் அழுது, ஷாபாஸ் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறினார். எனது தந்தை ஃபெரோஸ் ஆதில், அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை அவரை விட்டுவிடும்படி அவர்களிடம் கெஞ்சினார்” என்று சாஜீப் கூறுகிறார்.

காட்சி ஆதாரங்களுடன் அவரது குடும்பத்தினர் போலீசை கேட்டபோதும், ஷாபாஸின் பெயர் எஃப்.ஐ.ஆர்.-ல் 25-வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அவரைப் போன்ற பலர் இந்தப் பட்டியலில் இருக்கக்கூடும் என்று அவரது குடும்பம் அஞ்சுகிறது. கல் எறிந்தவர்களாக கைதானவர்களின் புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியாகின.

படிக்க :
பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !
“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !

பதினாறு வயது மசூத் பைசலின் கதை ஷாபாஸின் கதையோடு ஒத்திருக்கிறது. வன்முறை நாளில் குரேஷி நகரில் டியூசனை முடித்து விட்டு வந்த மெஹபூப் ஆலமின் மகன் பைசல் காணாமல் போனார்.

கணினி ஆசிரியராக இருக்கும் பைசலின் மாமா மஹ்மூத் ஆலம், பதான் டோலியில் உள்ள பைசலின் வீட்டிற்கு செல்லும் வழியில் போலீசு தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாக சொல்கிறார். “அவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசியிருந்தார். அவரது அழைப்பு பதிவுகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் இதைச் சரிபார்க்கலாம். ஈ-டிவி பீகார் செய்தி சேனலில், பைசலை காவல்துறையினர் கொடூரமாக தாக்கும் காட்சிகளைக் கண்டோம்” என்கிறார் மஹ்மூத்.

போலீசாரால் தாக்கப்பட்ட ஃபைசல்.

போலீசார் அடித்ததில் அவரது இடது மணிக்கட்டு எலும்பு முறிந்துள்ளது. அவரது உடலில் சித்திரவதை அடையாளங்களையும் காணலாம் என்கிறார் மஹ்மூத். “அவர் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைதானது உறுதிசெய்யப்பட்ட உடனேயே நான் காவல் நிலையத்திற்கு விரைந்தேன், அவர் காயங்களுடன் மயக்கத்தில் கிடப்பதைக் கண்டேன்” என்கிறார் அவர்.

பைசலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், அவர் இன்னும் போலீஸ் காவலில்தான் உள்ளார் என்கிறார் மஹ்மூத்.

அவுரங்காபாத் நகரத்தின் இஸ்லாம் டோலி பகுதியில் சைபர் கபே ஒன்றை நடத்தி வரும் முகமது இனாம் உல்-ரப் இதேபோன்ற அனுபவத்தை விவரிக்கிறார். த வயர் உடனான உரையாடலில் முகமது இனாம், “மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தின் போது பிற்பகல் நேரத்தில், ஒரு சில போலீசார் எங்கள் வீட்டிற்கு அருகில் எங்களை அடிக்கத் தொடங்கினர். எதிர்த்தபோது, அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாகி, வன்முறை சம்பவத்தை காரணம் காட்டி எங்களை வீடுகளுக்குள் தள்ளினர். இரண்டு மணி நேரம் கழித்து, மாலை 5 மணியளவில், 50-60 காவல்துறையினர் எனது இல்லத்திற்குள் நுழைந்து எங்கள் தண்ணீர் குழாயை உடைத்து எங்கள் வீட்டின் வாசல் கதவை உடைக்கத் தொடங்கினர். அவர்கள் என் சகோதரி, தாய் மற்றும் அத்தை ஆகியோரைத் தள்ளி, வன்முறை மற்றும் கல் வீச்சில் ஈடுபட்ட குற்றவாளிகள் யார் எனக் கேட்டார்கள்”.

படிக்க :
இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !

ஒரு பெண் கான்ஸ்டபிள்கூட இல்லாமல், இனாமின் வீட்டை போலீசார் சோதனை எனும் பெயரில் சூறையாடியுள்ளனர். மேலும் அவரது 12 வயது சகோதரர் சதாமை கைது செய்த பின்னரே இதை அவர்கள் நிறுத்தியுள்ளனர். ஆனால் , “எஃப்.ஐ.ஆரில் அவரது வயதை ’19’ என்று எழுதினர்” என்கிறார் இனாம்.

சதாம் உசேனின் பள்ளி சான்றிதழ்.

பள்ளி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை விவரங்களின்படி சதாம் உசேனின் வயது 12 என்பதை த வயர் உறுதி செய்துள்ளது. இனாமின் வீட்டில் இருந்து அவரது மாமா, மைத்துனர் மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, அவுரங்காபாத் வகுப்புவாத கலவரங்களுக்காக தலைப்பு செய்திகளில் வந்தது. டிசம்பர் 21-க்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், குடியுரிமை சட்ட போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. முசுலீம் இளைஞர்களை குறிவைத்தே பீகார் காவல்துறையினர் இந்த வன்முறை சம்பவங்களையும், கைதுகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

CAA-NRC க்கு எதிரான போராட்டங்களின் போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக முசாபர்பூர், கோபால்கஞ்ச், பகல்பூர், பாட்னா, புல்வாரி ஷரிஃப், மற்றும் சிவான் உள்ளிட்ட பீகாரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 1,550 பேர் கைது செய்யப்பட்டதாக மாநில போலீஸ் பதிவுகள் கூறுகின்றன.

போராடும் முசுலீம்கள் மீது பாஜக ஆளும் மாநிலங்களில் கொலைவெறி தாக்குதல் நடத்தி, சுட்டுக்கொல்லப்படுவதை அம்மாநில அரசுகள் திட்டமிட்டே செய்கின்றன. மத்திய பாஜக அரசின் பினாமிகளாக ஆட்சி நடத்தும் பீகார், தமிழகம் போன்ற மாநிலங்களில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதும் – கோலம் போட்டதற்கெல்லாம் கைதுகள் நடத்தப்படுவதும் – கைதானவர்களுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு என போலீசே வதந்தி கிளப்புவதும் நடக்கிறது. பாஜக ஒழிந்தது என தேர்தல் அரசியலை மட்டும் வைத்து மேப் வரைந்து மகிழ்ச்சி கொள்ள ஏதுவுமில்லை.


செய்தி கட்டுரை: சவுரவ் குமார்

அனிதா
நன்றி : தி வயர்

பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !

0

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த டிச-29 அன்று சென்னை பெசன்ட் நகரில் NO CAA, NO NRC, NO NPR என்ற வாசகங்களுடன் கோலம் போட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான காயத்ரி கந்தாதே என்பவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கொளுத்திப் போட்டிருக்கிறார், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.

ஹெச்.ராஜா, அர்ஜூன் சம்பத், கோலாகல சீனிவாசன் போன்றவர்கள் இவ்வாறு கொளுத்தி போட்டிருந்தால் கூட, சங்கிகளோட வேலையே இதுதானே என்று சட்டை செய்யாமல் கடந்து போயிருக்கலாம். போலீசு தரப்பில் வழங்கப்படும் வழக்கமான அறிக்கையாகக்கூட இல்லாமல், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி போலீஸ் கமிசனரே நேரில் தோன்றி பேசியிருக்கிறார். காயத்ரி கந்தாதேவின் முகநூல் பக்கத்தில் அவரே பதிவிட்டிருந்த ஆதாரங்களைக் காட்டியும், சில வீடியோ காட்சிகளை போட்டுக்காட்டியும் பத்திரிகையாளர்களிடம் விளக்கியிருக்கிறார் கமிஷனர்.

ஹெச்.ராஜாவும், ராகவன்களும் பேச வேண்டிய டயலாக்குகளை பிபின் ராவத்தும், விஸ்வநாதன்களும் பேச தொடங்கிவிட்டார்களோ..? என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது !

பத்திரிகையாளர்களிடம் அவர் கொடுத்த விளக்கத்தில், “அவர்களுக்கு பாகிஸ்தான் அமைப்புகளோடு தொடர்பு இருக்கிறது; அவர்கள் பொது இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கோலம் போட்டார்கள்; ஒரு வீட்டின் முன் ஏற்கெனவே போடப்பட்டிருந்த கோலத்தின் அருகே NO CAA, NO NRC, NO NPR போன்ற வாசகங்களை இவர்கள் எழுதியுள்ளார்கள்; இதனை தட்டிக்கேட்ட அந்த வீட்டின் உரிமையாளருடன் இவர்கள் சண்டையிட்டார்கள்… இது தொடர்பான புகாரின் பேரில்தான் அந்த 8 பேர் கைது செய்யப்பட்டார்கள்” என்கிறார் அவர். மிக முக்கியமாக, கோலம் போட்டதற்காக போலீசு கைது செய்தது என பேசுவது சரியல்ல என்பதை அழுத்தம் கொடுத்து பேசி, அதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி !
♦ CAA எதிர்ப்புக் கோலம் : கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் தமிழகப் போலீசு !

பெசன்ட் நகரில் கோலம் போட்ட காயத்ரிக்கு, பாகிஸ்தான் ‘கனெக்சன்’ இருப்பதாக ஏ.கே.விஸ்வநாதன் குறிப்பிடும் அமைப்பான “Bytes for all” என்பது, இணைய சுதந்திரத்துக்கான அமைப்பு. பாகிஸ்தானில் இருப்பவன் எல்லாம் தீவிரவாதிகள் என்று ராம ரவிக்குமார் போன்றோர் நேற்றுவரை தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வந்ததைத்தான், இன்று போலீசாரே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பேசத்தொடங்கியிருக்கின்றனர்.

இதே விவகாரம் தொடர்பாக ஜன-1 அன்று வெளியான தமிழ் இந்து நாளிதழ், கோலம் போடுவது தொடர்பாகக் கைது செய்யப்பட்டது தொடர்பான போலீசு விளக்கத்தை செய்தியாக  வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தியின் தலைப்பாக, “திமுக-வினர் வீட்டில் கோலம் போட எந்தத் தடையும் இல்லை – காவல் துறை அதிகாரிகள் தகவல்” என்று விஷமத்தனமான வகையில் தலைப்பிட்டிருந்தது. போலீசு பொதுவாகக் கொடுத்த விளக்கத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில்  இந்தத் தலைப்பை வைத்துள்ளது தமிழ் இந்து.

இது ஏதோ, கோலம் போடுவது தொடர்பான பிரச்சினை என்பதாகவும், இந்தப் போராட்டம் தி.மு.க.-வினரால் மட்டுமே நடத்தப்படும் போராட்டம் என்பதாகவும் பொருள்படும் வண்ணம் தலைப்பைப் போட்டு பாஜகவின் தமிழக நிகழ்ச்சிநிரலுக்கு ஜிங்ஞ்சா போட்டிருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், அதனைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு என்ற மோடி – அமித்ஷா கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நாடெங்கிலும் நடைபெற்றுவரும் போராட்டத்தின் தொடர்ச்சிதான் பெசன்ட்நகரில் மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் தொடங்கிவைத்த கோலம் போடும் போராட்டம். தீவிரவாதிகளைப் போல, மாணவர்களை போலீசு நடத்திய விதத்தை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சியினரும், ஜனநாயக சக்திகளும் கண்டித்த பின்னரே அவர்களை போலீசு நிலையத்தோடு, விடுவித்தது போலீசு.

8 மாணவர்களோடு, பெசண்ட் நகரோடு முடிந்திருக்க வேண்டிய விவகாரம் இன்று தமிழகமெங்கும் மக்கள் போராட்டமாக மாறியிருப்பதை கண்டுதான் இவர்கள் அலறுகிறார்கள். அந்த செய்தியாளர் சந்திப்பில் ஆதாரம் என்று சம்பந்தப்பட்ட நபர்கள் யாரும் இல்லாத ஒரு காணொளியைக் காட்டியும், பாகிஸ்தான் பூச்சாண்டியைக் காட்டியும் பிறரை பயமுறுத்த எண்ணுகிறார்கள்.

படிக்க:
வீதி தோறும் என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டக் கோலங்கள் !
♦ அமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா ?

மார்கழி மாதம் கோலம் போடுவது ஐ.பி.சி.க்குள் அடங்குமா? கோலத்தை தெருவில் போட்டார்களா? வீட்டில் போட்டார்களா? என்பதா பிரச்சினை?

அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பான வகையில், மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாமானிய மக்கள் தங்களது எதிர்ப்பை – மாற்றுக்கருத்தை முன்வைக்கும் உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதுதானே இங்கே பிரச்சினை.

பாகிஸ்தான் கணெக்சன் எல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும்; தமிழக மக்கள் தங்கள் சொந்தக் கைக்காசை போட்டு … தமது வீட்டுக்கு எதிரிலேயே இருக்கக்கூடிய ஒரு அண்ணாச்சி கடையில் கோலமாவை வாங்கி வந்து … ஏதோ தமக்கு தெரிந்த நாலு புள்ளி கோலத்தை, தன் வீட்டு வாசலில் போட்டு … கோலத்துக்கு நடுவில் ”NO CAA, NO NRC, NO NPR ” என்று எழுதுகிறார்கள் எனில் போலீசார் அமைதியாக இருந்துவிடுவார்களா? கோலம் போட்ட பத்தே நிமிடத்தில் ஏட்டய்யாவுக்கு போட்டியா ஏ.சி., டி.சி. ஐயாக்கள் அவர்கள் வீட்டு கதவை தட்ட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? அப்படிச் செய்வோம் என்று கூறி மிரட்டவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு !

மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டமாகட்டும்; அடுத்தடுத்து அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ள என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற நடவடிக்கைகளாகட்டும் இவையனைத்தும் அரசியல் சாசனத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குபவை; இட்லரின் இனவழிப்பு நடவடிக்கைக்கு சற்றும் குறைவில்லாதவை என்று அறிவுத்துறையினரும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

சாமான்யனின் வாழ்வுரிமையை பறித்து நாடற்றவனாக மாற்றப்படும் அபாயத்தை எதிர்த்து நிற்கும் உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதுதானே இங்கே எழுப்பப்படும் கேள்வி.

இங்கே அரசியல் சாசனத்தை குப்பையில் வீசிவிட்டு, தமது இந்துராஷ்டிர செயல் தந்திரத்தை கையில் வைத்துக்கொண்டு செயல்படும் அமித்ஷா – மோடி கும்பலின் நடவடிக்கைகள்தானே சட்டவிரோதமானவை. நாட்டின் அமைதியை குலைத்து மக்களை போராடத் தூண்டிவிடும் குற்றவாளிகளும் அவர்கள்தானே?

நாட்டின் குடிமகனுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளைப் பயன்படுத்தித்தான், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மாற்றுக் கருத்தை முன்வைத்தாலே தேசவிரோதியென்று முத்திரைகுத்தி கைது செய்து வருகிறது, மோடி – அமித்ஷா கும்பல். இக்கும்பலின் விசுவாசமிக்க அடிமை எடப்பாடி அரசு, தன் பங்கிற்கு தமிழகத்தில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு மக்கள் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது.

”அடிமை எடப்பாடி அரசு” என்ற வார்த்தைக்கும் கீழான தமிழ்ச்சொல்லைத் தேடவைத்துவிட்டார், ஏ.கே.விஸ்வநாதன்.


இளங்கதிர்.

இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !

0

குடியுரிமை பிரச்சினையில் இந்தியாவின் பல பகுதிகளில் திடீரென வெடித்த, திட்டமிடப்படாத சீற்றம் நரேந்திர மோடிக்கு எதிரான முதல் பெரிய போராட்டம் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்,  தமது கழுத்தை இனவாதம் இறுக்குவதையும்; சர்வாதிகாரத்தையும் பார்த்து மவுனமாக இருந்தது. ஆனால், இப்போது அது தனது குரலை மீட்டெடுத்து முழங்கத் தொடங்கியுள்ளது .

பொது நிறுவனங்களின் தொடர் சரிவு, சுதந்திரம் மற்றும் நடுநிலைமை மீது விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றால் மன உளைச்சலுக்கு ஆளான மக்கள், காங்கிரசின் நம்பிக்கை இழப்பு, இடதுசாரிகளின் அழிவு மற்றும் கவனம் ஈர்க்காத எதிர்க்கட்சிகளின் அலட்சியம் ஆகியவற்றால் விரக்தியடைந்த மக்கள் திடீரென்று எழுந்திருக்கிறார்கள்! இந்த தன்னிச்சையான கோபத்திற்கு அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆட்சிக்கு சளைக்காமல் இணக்கத்தை உற்பத்தி செய்யும் பல ஊடக நிறுவனங்களுக்கும் இதை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் வழிநடத்தப்படுவதால், சமீபத்திய கிளர்ச்சி போதுமான பரந்த அடிப்படையிலானதல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்; இது சில நகர்ப்புற மையங்களுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது; மேலும் இது பெரும்பாலும் ஒரு சமூகத்தால் முன்னெடுக்கப்படுகிறது என விமர்சிக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் டிசம்பர் 15 அன்று ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தில் இயக்கம் தொடங்கியபோது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால், போலீசு நடவடிக்கையின் சமமற்ற மிருகத்தனம் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான முசுலீமல்லாதவர்களை ஒன்றிணைத்து போராட்டத்தின் தளத்தை விரிவுபடுத்தியது.

1974-75-ல் இந்தியாவை உலுக்கிய இரண்டு வெகுஜன எழுச்சிகள், ஒன்று குஜராத்தில் நவ் நிர்மன் இயக்கம் மற்றும் இரண்டாவது பீகாரில் ஜெயபிரகாஷ் நாராயணனின் சம்பூர்ண கிராந்தி ஆகியவை. உண்மையில் மொரார்ஜி தேசாய் மற்றும் ஜே.பி. ஆகியோர் இந்த இயக்கங்களை கையில் எடுக்கும் முன், இளைஞர்களாலேயே இவை வழி நடத்தப்பட்டன. மே 2019 வலுவேற்றப்பட்ட மோடி-ஷா ஆகியோர் யாகம் வளர்த்து உருவாக்கிய வெல்லமுடியாத அஸ்வமேத குதிரையை நிறுத்த கட்சியல்லாத, தலைமையற்ற இளைஞர்களின் தைரியமும் ஆவேசமும் தேவைப்பட்டது.

மோடி 2.0-ன் முதல் ஐந்து மாதங்கள் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை பிந்தைய காலங்களில் முன்னெப்போதையும் விட அதிகமான வீழ்ச்சிகளைக் கண்டன. இந்த ஆண்டு பாராளுமன்றத்தின் இரண்டு அமர்வுகள் ஜனநாயகம் என்கிற கருத்தாக்கத்தை கேலி செய்தன. ஏனெனில் மக்களவையில் ஆட்சியின் மிருகத்தனமான பெரும்பான்மை மற்றும் மாநிலங்களவையில் இருந்த செல்வாக்கு ஆகியவை முத்தலாக் மசோதாவுடன் தொடங்கிய குண்டுவெடிப்பு ஒருபோதும் நிறுத்தப்படாமல் தொடர்ந்தது.

சிவில் உரிமைகளைத் தடுப்பதற்கும், தேசிய புலனாய்வு அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் காரணங்களைக் கூறாமல் தடுப்புக்காவலை மேம்படுத்துவதற்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கும் பாராளுமன்றத்தின் மூலம் திருத்தங்கள் செய்யப்பட்டன. அவசர அவசரமாக பிற சட்டங்கள் மருத்துவ கல்வியின் பிரிவுகள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆபத்தான உட்பிரிவுகளை அறிமுகப்படுத்தின. மேலும். ‘பெரிய அண்ணணின்’ ஆதார் அட்டை சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

ஆனால், ஆகஸ்ட் தொடக்கத்தில் அரசியலமைப்பின் 370-வது பிரிவு மத்திய அரசாங்கத்தின் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டபோது தெளிவான அதிர்ச்சி அலை தேசத்தை உலுக்கியது. காஷ்மீர் இந்தியாவுக்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட இயல்பான தன்மை மற்றும் அப்போது வழங்கப்பட்ட சிறப்பு உத்தரவாதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்தப் பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சில சிறப்பு சுயாட்சி தன்மையை வழங்கியது. ஆனால் இது மயக்க மருந்து இல்லாமல் நீக்கப்பட்டு முடமாக்கப்பட்டது. காஷ்மீர் அரசு ‘யூனியன் பிரதேசங்களாக’ வெட்டப்பட்டபோதும், அதன் மதிப்பு குறைக்கப்பட்ட போதும் காஷ்மீரிகளின் எந்தவொரு எதிர்ப்பும் முற்றிலும் அடக்கப்படுவதை உறுதி செய்வதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏராளமான ஆயுதப்படைகள் களத்தில் இறக்கப்பட்டன.

எதிர்க் கட்சிகள் மீதான முடிவில்லாத பழிவாங்கும் வருமான வரி சோதனைகளும் அதற்குப் பிறகான மத்திய புலனாய்வுப் பிரிவினரின் கைது நடவடிக்கைகளும் இந்தியர்களை திகைப்புக்குள்ளாக்கியது.

காஷ்மீரில் பெரும்பாலான சிவில் சுதந்திரங்களை நசுக்கியதிலிருந்து நாடு இன்னமும் மீளாத நிலையில், ஆகஸ்ட் 31 அன்று, அஸ்ஸாமில் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) வெளியிடப்பட்டது. மேலும், இந்தத் திட்டத்துடன் வந்த ஊழல் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து நாம் அமைதியாக இருந்தாலும் இந்தப் பதிவேட்டை தயாரிக்க 50,000 அரசாங்க அதிகாரிகளுக்கு பத்து நீண்ட ஆண்டுகள் பிடித்தன. சுமார் 1,200 கோடி ரூபாய் செலவு பிடித்தது.

படிக்க:
CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !
♦ எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் ?

கடந்த சில ஆண்டுகளில், ஊடுருவல்காரர்களை களைய வழக்கமான கண்காணிக்கும் பணியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால் 19 லட்சம் பேர், அவர்களில் பெரும்பாலோர் இந்து வங்காளிகள், பதிவேட்டில் இருந்து விலக்கப்பட்டபோது அனைவரும் வருத்தப்பட்டனர். ‘வங்கதேச முசுலீம்களை’ குறிவைத்தவர்கள் வலையில் சிக்கிய சிறிய எண்ணிக்கையிலான இந்துக்களால் இவர்கள் ஏமாற்றமடைந்தனர். அதேநேரத்தில் பட்டியலில் விடுபட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர் – குறிப்பாக நாஜி வதை முகாம்கள் பாணியில் உருவாக்கப்பட்ட ‘தடுப்பு மையங்கள்’ அவர்களுக்காக தயாராகிவருவதை நினைத்து அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அசாம் மாநிலத் தலைநகர் கவுஹாத்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

அசாமில் திடீரென ஒரு வெடிப்பு கிளம்பியபோது, அடுத்த கட்ட அமைதியின்மையை அடைவதற்கு முன்னர், ஒரு தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன்னர் அயோத்தியின் மோசமான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உச்சநீதிமன்றம் எவ்வாறு விரைவான விசாரணைகள் மற்றும் சமர்ப்பிப்புகளைக் கொண்டிருந்தது என்கிற முரண்பாட்டை நினைவுபடுத்துவோம். அதே நீதிமன்றம் காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட அரசியலமைப்பு மீதான தாக்குதல் மற்றும் கடுமையான மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து முக்கியமான முடிவுகளை நிறுத்தியது. சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் திறம்பட ஒப்படைத்த நவம்பர் 9-ம் தேதி வழங்கப்பட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு, நிரூபிக்க முடியாத சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் 1992-93 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் இருந்ததைப் போலவே பெரும்பான்மை வன்முறை வெடிக்காமல் இருப்பதை இது உறுதிப்படுத்தியிருக்கலாம். குறிப்பிட்ட கலவரத்தின் குற்றவாளிகள் தங்கள் வாள்களை உயர்த்தி,‘மந்திர் வாகின் பனாய்கே (நாங்கள் அதே இடத்தில் கோவிலைக் கட்டுவோம்)’ என முழங்கியதைப் பார்க்கலாம்.

இயற்கையாகவே, குழப்பமான கிசுகிசுக்களும் எழுந்தன. மேலும் பெரும்பான்மைக்கு முன்னர் அவர்கள் ஒரு சரணடைதல் எனவும் இதை விமர்சித்தனர். எவ்வாறாயினும், கோயிலுக்கும் மசூதிக்கும் நிலத்தை உறுதி செய்வதற்காகவும், கிரிமினல் வழக்குகளின் காலவரையறைக்கு, இழுத்துச் செல்லப்படுவதற்கும், மதிப்பிற்குரிய நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை வழங்கியிருந்தால், நிறைய கோபங்களுக்கு முடிவு கிடைத்திருக்கும். கால் நூற்றாண்டு காலமாக, பாபர் மசூதியை பகிரங்கமாக அழித்தவர்களை தண்டிக்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, உச்ச நீதிமன்றம் அதைக் கடுமையாகக் கண்டித்தது, நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இதையும்விட சிறந்தது என்னவாக இருக்கும்?

ஆனால், டிசம்பர் நடுப்பகுதியில் 1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் திருத்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது குறித்து ஆட்சியாளர்கள் மகிழ்ந்தபோது நாம் ஒரு முக்கிய புள்ளியை நோக்கி நகர்ந்தோம். அன்னை இந்தியாவிடம் அடைக்கலம் தேடிய சிறுபான்மையினரின் கண்ணீரை துடைக்கும் என உணர்ச்சி பெறுக்குடன் பேசப்பட்ட இந்த சட்ட திருத்தம், முசுலீம்களுக்கு எதிரான பாகுப்பாட்டை சட்டபூர்வமாக்கியது. மூன்று முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த இந்து மற்றும் பிற முஸ்லிம் அல்லாத அகதிகள் இந்த ஆதரவுக்கு தேர்வு செய்யப்பட்டனர், மேலும் நான்கு அண்டை நாடுகளும் அதிலிருந்து வெளியேறப்பட்டன.

எவ்வாறாயினும், அஸ்ஸாம் வகை கொடூரமான என்.ஆர்.சி கணக்கெடுப்பு இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று உள்துறை மந்திரி அமித் ஷா மீண்டும் மீண்டும் வெளியிட்ட வாக்குறுதியும் அச்சுறுத்தலும் தான், மக்கள் கோபத்தை திடீரென வெடிக்க வழிவகுத்தது. இந்தக் கட்டத்தில், அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் போராட்டங்களுக்கான காரணங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். NRC ஆல் வெளியேற்றப்பட்ட இந்து வங்காள புலம்பெயர்ந்தோரை ‘முறைப்படுத்த’ முயற்சித்ததற்காக, வங்காளர்களை வெளியேற்றுவதில் தீவிரமாக உள்ள அசாமியர்கள், பாஜக மற்றும் அதன் CAA க்கு எதிராக ஆயுதம் ஏந்தினர். இன்னும் பல வங்க தேச இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அவர்கள் அஞ்சினர். மேலும் அசாமில் ஆபத்தான வகையில் மக்கள்தொகை சமநிலையை இது பாதிக்கும் எனவும் வருத்தத்துக்கு உள்ளாகினர்.

மறுபுறம், இந்த கிறிஸ்துமஸ் பரிசில் இலங்கை தமிழ் அகதிகளைத் தவிர்ப்பதற்கு எதிராக தமிழர்கள் போராடுகிறார்கள். இருப்பினும் சிலர் மத பாகுபாடுகளுக்கு எதிராக இந்தச் சட்டம் இருப்பதற்கு எதிராகவும் போராடுகின்றனர். அனைத்து சமூக எதிர்ப்புக்களையும் ஒருங்கிணைத்த மேற்கு வங்க ஆளும் கட்சி, சிறுபான்மை சமூகங்களிடையே தனது தளத்தை மேலும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிகாரத்துவ துன்புறுத்தல், ஊழல் மற்றும் இரக்கமற்ற தன்மை என பெரும்பான்மையை வென்றெடுக்க என்.ஆர்.சி தூண்டும் பயங்கரவாதத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.

இந்தப் போரின் குறியீடுகள் சுவாரஸ்யமானவை. உதாரணமாக, வெட்கமின்றி தேசிய கொடியை கையகப்படுத்தி வைத்திருந்த தீவிர தேசியவாதிகளிடமிருந்து கிளர்ச்சியாளர்கள் அதைப் பறித்தனர். வரலாற்று ரீதியாக, இந்த சங்க பரிவாரங்கள் நமது சுதந்திரத்தின் போது இந்திய மூவர்ண கொடியைக் கடுமையாக எதிர்த்தனர். சர்தார் படேல் நாட்டின் கொடியை ஏற்கும்படி கட்டாயப்படுத்தும் வரை அதை தொடர்ந்து அவமதித்துவந்தனர். இந்தியாவுடனான விசுவாசத்தைப் பற்றி கடந்த ஐந்து ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் வறுத்தெடுக்கப்பட்டு வந்த முசுலீம்கள், குடியுரிமை போராட்டத்தின் ஒரு பகுதியாக, தங்களுடைய எதிர்வினையாக தேசியக் கொடிகளை இப்போது பெருமையுடன் அசைத்து வருகின்றனர்.

டெல்லி மற்றும் பிற இடங்களில் உள்ள மாணவர்கள் பல காந்திய நுட்பங்களை கண்டுபிடித்து வருகிறார்கள். அதாவது, போலீஸ்காரர்களுக்கு பூக்களை வழங்குவதன் மூலம் அவர்களின் இதயங்களை அடைய முயற்சிக்கிறார்கள். டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடந்த மனிதாபிமானமற்ற தன்மையை கைவிட தேசிய மற்றும் தேசபக்தி பாடல்கள் இப்போது பலவீனமானவர்களின் ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், 2012-13-ல் ஜோதி சிங் மீதான கும்பல் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்குப் பின்னர் டெல்லியில் நடந்த போராட்டங்களில் நாம் கண்ட தேசபக்தியின் இதேபோன்ற வெடிப்புகளை இது நமக்கு நினைவூட்டுகிறது. ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே அழைப்புக்கு எண்ணற்ற இளைஞர்களும் பெண்களும் எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதையும் தலைநகரம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளை அவர்கள் நிறுத்தி வைத்ததையும் நாம் மறக்க முடியாது. அவர்கள் மறந்துபோன காந்தி தொப்பிகளுக்கு புதிய வாழ்க்கையை வழங்கியிருந்தனர். ஆனால் அவர்களின் கிளர்ச்சி மற்றும் தியாகத்தின் நீடித்த விளைவு என்னவென்றால், ஒரு வஞ்சக அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரத்திற்கு வரவழைக்கப்பட்டதும், ஒரு விளம்பரப் பைத்தியமான கிரண் பேடி துணை ஆளுநராக நாற்காலியில் அமர வைக்கப்படவும் மட்டுமே பயன்பட்டது.

ஆனால் இந்தியாவில் ஒரு தாராளவாத-மதச்சார்பற்ற அரசாங்கத்தைத் தாக்குவது, தற்போதைய இரக்கமற்ற, எவராலும் தடுத்து நிறுத்தமுடியாத மெகாலோனியாக்களை (தன்னைத்தானே உயர்வாக எண்ணிக் கொள்பவர்கள்) தாக்குவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பொதுமக்கள் கோபம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும், மோடி-ஷா இரட்டையர்கள் எவ்வாறு பதிலடி கொடுப்பார்கள் என்பதையும், என்னவிதமான மூர்க்கத்தனமான மற்றும் பழிவாங்கும் தன்மையையும் அவர்கள் ஏவுவார்கள் என்பதையும் யாராலும் கணிக்க முடியாது. இந்த சூழ்நிலையில் மத கலவரங்கள் வெடிக்காது என்றும் அப்படியொரு சூழ்நிலையை உருவாக்கக்கூட முடியாது என்றும் ஒருவர் கூறுகிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போர் போன்ற தாக்குதல் உள்நாட்டு எதிர்ப்புகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பக்கூடும் என்று சிலர் கூறுகிறார்கள், ஏனெனில் போர்க்குணம் எப்போதும் தேசபக்தி அட்ரினலைனை அதிகரிக்கச் செய்யக்கூடியது.

இரண்டு மத்திய பல்கலைக்கழகங்களின் மாணவர்களால் பற்ற வைக்கப்பட்ட இந்த எதிர்ப்பு, இந்து தீவிரவாதிகளின் இலக்குகளாக இருந்த முசுலீம்களால் முதலில் இது முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் இப்போது நிச்சயமாக ஒரு பொது கிளர்ச்சியாக உருமாறியுள்ளன. இது இப்போது இளைஞர்களின் இயக்கம். நியாயமற்ற, மத பாகுபாடுகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், சர்வாதிகாரத்திற்கு எதிராகவும், நிதி குறைப்பு மற்றும் கல்வியில் தலையிடுவதற்கும் எதிரானது இது . பொருளாதார தோல்விகள் மற்றும் அதிகரித்த வேலையின்மை ஆகியவையும் இறுதியாக கருத்து வேறுபாட்டைத் தூண்டுகின்றன.

எவ்வாறாயினும், நமது தாராளவாத மதச்சார்பற்ற சக்திகள் நீதி கோரும் மனுக்களில் கையெழுத்திடுவதிலும், வலுவான கட்டுரைகளை எழுதுவதிலும், தொலைக்காட்சியில் அல்லது பாதுகாப்பான சூழலுக்குள் விவாதங்களை நடத்துவதிலும் திருப்தியடைந்துள்ளன என்பதே உண்மை. மறுபுறம், அண்டை நாடான வங்க தேசத்தில் உள்ள தாராளவாதிகள் மிருகத்தனமான சர்வாதிகாரத்தையும் மத வெறியையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. 1989 முதல், அவர்கள் மதச்சார்பற்ற சக்திகளின் எர்ஷாத் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பெரிய அளவிலான மங்கல் ஷோபா-ஜாத்ரா பேரணிகளை ஏற்பாடு செய்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி இஸ்லாமிய தெளிவின்மைக்கு எதிரான அவர்களின் போரின் சான்றாக இந்த மகத்தான ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து கொண்டு வருகின்றனர்.

படிக்க:
CAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !
♦ வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் !

பிப்ரவரி 2013-ல், பல ஆயிரம் அறிவுஜீவிகள், ஆசிரியர்கள் மற்றும் தெருவுக்கு வர வெட்கப்படும் நடுத்தர வர்க்க வல்லுநர்கள் டாக்காவில் உள்ள ஷாபாக்கில் தன்னிச்சையாக கூடி, பல நாட்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கொலை மற்றும் பாலியன் வன்கொடுமை குற்றவாளிகளான இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தூக்கிலிட தங்கள் அரசாங்கத்தை கட்டாயப்படுத்தினர். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் உறுதியால் மத உரிமை திரும்பப் பெறப்பட்டன. மதச்சார்பற்ற இந்த கூட்டுக்குரலில் தைரியமாக இணைந்துகொண்ட இளைஞர் படைக்கு நன்றி.

தற்போதைய CAA-NRC இயக்கத்தின் முடிவுகள் என்னவாக இருந்தாலும், ஏற்படுத்தப்பட்டது முதல் உண்டான வடுக்களை அவ்வளவு எளிதாக மறைக்க முடியாது. பொய்யான, இனிமையான பேச்சின் தொடர் பொய்களின் மூலம் , நல்ல ஊதியம் பெரும் கார்ப்பரேட் மார்க்கெட்டிங் மூலமும் உருவாக்கப்பட்ட மோடியின் ஹிப்னாடிக் வசீகரமும் ஊடக வல்லுநர்கள் மற்றும் அறமற்ற கொள்கை வகுப்பாளர்களின் தந்திரமும் இறுதியாக உடைக்கப்பட்டது. இந்தியாவின் இளைஞர்கள் அவரைப் பின்தொடர்வதைக் கண்டு திகைத்துப்போனவர்கள், இறுதியாக அசுவாசமானார்கள்.

நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இந்தியர்கள் பல்வேறு நோக்கங்கள் வெவ்வேறு மோடிகளுக்கு வாக்களித்தனர் – இந்தியாவின் பல்நோக்கு மீட்பர் அல்லது கல்கி அவதாரம்; சுவிஸ் வங்கிகளிடமிருந்து கறுப்புப் பணத்தை கொண்டு வரும் மிஸ்டர் கிளீன்; மனத்தாழ்மையைக் குறிக்கும் ஏழை தேநீர் கடைக்காரர்; ஒரு எளிமையான சூழலில் வாழ்ந்த உறுதியான வாரிசு அரசியல் எதிர்ப்பாளர்; இந்தியாவின் நிலையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் சிறந்த தேசபக்தர்; பயங்கரவாதத்தை நொறுக்கும் போர்வீரர்; புரட்சிகர தாராளமயமாக்கலுக்கு வழிவகுக்கும் பொருளாதார மிடாஸ்; மில்லியன் கணக்கான வேலைகளை வாரி வழங்கும் சாண்டா கிளாஸ்; இந்து ‘தேசத்தின்’ வீரமிக்க, முசுலீம்களுக்கு தங்களுடைய இடத்தை காட்டும் பழிக்குப் பழிவாங்கும் ஆக்ரோசமான தலைவர் என பல அவதாரங்களுக்காக மக்கள் வாக்களித்தார்கள்.

ஒவ்வொரு முறையும் மோடியைச் சுற்றியுள்ள, இந்தப் பல வேர்களைக் கொண்ட ஆலமரம் போராட்டத்தால் உலுக்கப்படுகிறது. இப்போது வெவ்வேறு சுய-முரண்பாடான கூறுகள் வெளியேற்றப்படுகின்றன. பணம், தொண்டர் படை, பேச்சு மற்றும் செருக்கால் வலுவூட்டப்பட்ட ஒருங்கிணைந்த அதிகாரத்துக்கு எதிராக தங்களை பிரித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.

அடக்குமுறை அதிகரிக்கும்போது, துணிந்த இதயங்கள் நொறுங்கும்போது வேறுபட்ட மற்றும் மாறுபட்ட பன்முகத்தன்மை வாய்ந்த குழுக்கள் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும் வகுப்புவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட்டு போராட நிர்பந்திக்கப்படுகின்றன. நமது ஜனநாயக பாரம்பரியத்தை வலுப்படுத்த இதுபோன்ற மக்கள் இயக்கங்களின் நீடித்த பங்களிப்பும் அதுவாகத்தான் இருக்கும்.


கட்டுரை: ஜவஹர் சர்கார்
தமிழாக்கம் :
கலைமதி
நன்றி: தி வயர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி !

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி !

பாபர் மசூதி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கக்கூடிய சட்டமீறல்”என நீதிபதிகள் ஒருமனதாகக் குறிப்பிட்டதையடுத்து, அக்குற்றச் செயலும், அது தொடர்பான வழக்கும் மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 1980- பிறகு பிறந்த இளம் தலைமுறையினருக்கு பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவரம் தெரிந்திருந்தாலும், அம்மசூதி சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது தொடர்பாக யார் யார் மீதெல்லாம் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது, தற்பொழுது அவ்வழக்கின் நிலை என்ன என்பதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அவ்வழக்கு ஏறத்தாழ மறக்கடிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்றே கூறலாம்.

இட்லரின் நாஜி கும்பல் நடத்திய குற்றச் செயல்களுக்கு இணையான பாபர் மசூதி இடிப்புக் குற்றத்தின் மூளையாகவும் தளபதியாகவும் செயல்பட்டவர் எல்.கே.அத்வானி. அவர் இக்குற்றத்திற்காக நீதிமன்றக் கூண்டில்கூட நிறுத்தப்பட்டதில்லை என்பது ஒருபுறமிருக்க, அக்குற்றச் செயலை நடத்தி முடித்த ஒரு சில ஆண்டுகளிலேயே உள்துறை அமைச்சராகவும் இந்தியத் துணைப் பிரதமராகவும் அமர்ந்தார்.

அவர் மட்டுமல்ல, இக்குற்றச் செயலின் துணைத் தளபதிகளாகச் செயல்பட்ட முரளி மனோகர் ஜோஷியும் உமா பாரதியும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மைய அமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.

முதல்வருக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். குண்டர் படை மசூதியை இடித்துத் தள்ளுவதற்கு முழுப் பாதுகாப்பு கொடுத்த கல்யாண்சிங், மோடியின் ஆட்சியில் இராஜஸ்தான் மாநில ஆளுநராகக் கௌரவிக்கப்பட்டார்.

பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த பஜ்ரங் தள் தலைவரான வினய் கத்தியார் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மற்றும் பெண் சாமியார் ரிதம்பரா, விஷ்ணு ஹரி டால்மியா, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், ராம்விலாஸ் வேதாந்தி, சதீஷ் பிரதான், பைகுந்த் லால் ஷர்மா, சம்பத் ராய் பன்ஸால், நிருத்யா கோபால் தாஸ் ஆகியோர் சங்கப் பரிவார அமைப்பிலும் பொதுவெளியிலும் கௌரவமிக்க தலைவர்களாக வலம் வந்தனர், வந்து கொண்டுள்ளனர்.

பாபர் மசூதி இடிப்புக் குற்றத்திற்குத் தண்டனை அளிப்பது என்றால், அச்சமயத்தில் சங்கப் பரிவாரம் மற்றும் பா.ஜ.க.வில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த அனைவரையுமே தண்டிக்க வேண்டியிருக்கும். மேலும், சங்கப் பரிவார அமைப்புகள் அனைத்தையுமே தடை செய்ய வேண்டியிருக்கும். அப்பொழுது இந்தியப் பிரதமராக இருந்த நரசிம்மராவிற்கும்கூட இக்குற்றத்தில் குறிப்பிடத்தக்க, மறைமுகமான பங்கிருந்தது.

எனினும், அத்வானி உள்ளிட்ட இப்பதினான்கு பேரும் அக்குற்றத்தில் நேரடியாகப் பங்குகொண்ட முதன்மையான சதிகாரர்கள் என்பதற்கு அசைக்கமுடியாத நிரூபணங்களும் சாட்சிகளும் இன்றும்கூட பொதுவெளியில் காணக் கிடைக்கின்றன.

1989- பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவிலைக் கட்டும் திட்டத்தை முன்வைத்து ரத யாத்திரை நடத்திய அத்வானி, நான் அமைதி யாத்திரை நடத்தவில்லை” என வெளிப்படையாகவே பிரகடனம் செய்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங், மசூதி இடிக்கப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக பத்திரிக்கையாளர் களிடம், கோவிலைக் கட்டுவதற்குத்தான் தடை உள்ளது, மசூதியை இடிப்பதற்கு அல்ல” என வெளிப்படையாகவே கூறினார்.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டு இவர்கள் அனைவரும் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, மசூதிக்குச் சற்றுத் தொலைவில் மேடை போட்டு அமர்ந்துகொண்டு, மசூதி இடிக்கப்படுவதை அணுஅணுவாக ரசித்துக் கொண்டாடினார்கள். குறிப்பாக, உமா பாரதி அச்சமயத்தில், இன்னும் ஒரு போடு போடு” என வெறித்தனமாகக் கூச்சல் போட்டு, கடப்பாரையால் மசூதியை இடித்துக் கொண்டிருந்த வானரப் பட்டாளங்களுக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார்.

மசூதி இடிக்கப்பட்ட குற்றச் செயல் குறித்து சி.பி.ஐ. மற்றும் லிபரான் கமிசன் நடத்திய விசாரணைகளில், மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் வினய் கத்தியார் வீட்டில் நடந்த இரகசியக் கூட்டத்தில்தான் மசூதியை இடிக்கும் சதித் திட்டம் தீட்டப்பட்டது; அக்கூட்டத்தில் அத்வானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்ற உண்மைகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

பாபர் மசூதி இடிப்பு : திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட வன்முறை.

மசூதி இடிக்கப்பட்டபோது உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங், மசூதியை இடிக்கும் கரசேவகர்கள் மீது போலீசும் துணை இராணுவப் படையும் தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டு எவ்விதமான பலப் பிரயோகத்தையும் பயன்படுத்திவிடாதபடித் தடுத்து, மசூதி இடிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்தினார் என்பதும் லிபரான் கமிசனின் விசாரணையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கைப்புண் போல, இவ்வளவு தெளிவான ஆதாரங்களும் சாட்சியங்களும் இருந்தும் மசூதி இடிக்கப்பட்ட குற்ற வழக்கு இன்னும் விசாரணை நீதிமன்றத்தில்கூட (trial court) முடிவடையாமல், 27 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, கடந்த 27 ஆண்டுகளில், அத்வானி உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளைக் கடுமையான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கும் சதித்தனங்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதற்கு அரசு, சி.பி.ஐ., உள்ளிட்ட அதிகார அமைப்புகள் மட்டுமல்ல, நீதித்துறையும் உடந்தையாகச் செயல்பட்டிருக்கிறது என்பதுதான் கவனம் கொள்ளத்தக்கது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடனேயே, அக்குற்றம் தொடர்பாக ராம ஜென்மபூமி போலீசு நிலையத்தில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. முதல் தகவல் அறிக்கை பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக, முகம் தெரியாத இலட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது சதிக் குற்றச்சாட்டை சுமத்தியது. இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் அத்வானி, ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், அசோக் சிங்கால் உள்ளிட்டோர் மீது கலவரத்தைத் தூண்டிவிடும்படி பேசினார்கள் என்ற மொன்னையான குற்றச்சாட்டு மட்டுமே சுமத்தப்பட்டது.

இடிக்கப்படும் பாபர் மசூதி. (கோப்புப் படம்)

இவ்விரண்டு வழக்குகளில், முகந்தெரியாத கரசேவகர்கள் மீது சுமத்தப்பட்ட சதிக் குற்றச்சாட்டு வழக்கு சி.பி.ஐ. வசமும், அத்வானி உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட வழக்கு உ.பி. மாநிலக் குற்றப்பிரிவு போலீசிடமும் ஒப்படைக்கப்பட்டன. இந்த இரண்டு வழக்குகளுக்கு அப்பால் மேலும் 47 வழக்குகள் பதியப்பட்டன.

முதலிரண்டு வழக்குகளை விசாரிக்க, லக்னோவிலும், ரேபரேலியிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இதன் பின்னர் அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கும் சி.பி.ஐ.-யிடம் ஒப்படைக்கப்பட்டு, அவ்வழக்கு விசாரணையும் ரேபரேலி நீதிமன்றத்திலிருந்து லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. லக்னோ நீதிமன்றத்தில்தான் அத்வானி உள்ளிட்டோர் மீது சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அத்வானியும் அவரது கூட்டாளிகளும், தம் மீதான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் இன்றி, லக்னோ நீதிமன்றத்திற்கு மாற்றியது சட்ட விரோதமானது” என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, உயர் நீதிமன்றமும் அந்த ஓட்டையை ஏற்றுக்கொண்டு லக்னோ நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டதை ரத்து செய்தது. அதேசமயம், உ.பி. மாநில அரசு புதிதாக ஒரு நிர்வாக ஆணையை வெளியிட்டு வழக்கை லக்னோ நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் கூறியது.

இத்தீர்ப்பு வெளிவந்தபோது (2001) அத்வானி மைய அரசில் உள்துறை அமைச்சராக இருந்தார். சி.பி.ஐ., பிரதமர் வாஜ்பாயியின் வசமிருந்தது. உ.பி.யிலோ பா.ஜ.க.-  பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் ராஜ்நாத் சிங் முதல்வராக இருந்தார். இக்கூட்டணி அரசு புதிய நிர்வாக ஆணையை வெளியிட மறுக்க, லக்னோ சிறப்பு நீதிமன்றம் அத்வானி உள்ளிட்டோர் மீது போடப்பட்டிருந்த சதிக் குற்றச்சாட்டை ரத்து செய்தது. ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி உள்ளிட்டோர் மீது கலவரத்தைத் தூண்டியதாகப் போடப்பட்டிருந்த வழக்கிற்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டது. எனினும், அந்நீதிமன்றம் 2003- அத்வானியை மட்டும் வழக்கிலிருந்து விடுவித்தது.

இடிக்கப்படும் பாபர் மசூதி. (கோப்புப் படம்)

இந்நிலையில் இவ்வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்கள், அலகாபாத் உயர் நீதிமன்றம் என அலைக்கழிக்கப்பட்டு, இறுதியாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், அனைத்துக் குற்றவாளிகளுக்கும் சதியில் பங்கிருப்பதால், இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே குற்றப்பத்திரிகையின் கீழ் கொண்டுவந்து, லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடக் கோரி” 2012- உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்குத் தொடுத்தது.

இந்த முக்கியமான வழக்கைக்கூட விரைவாக விசாரிக்காமல், ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான், அத்வானி உள்ளிட்டோர் மீது மீண்டும் சதிக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரிக்கவும்; அடுத்த இரண்டாண்டுகளில் இவ்வழக்கை முடிக்க வேண்டுமென்றும் ஏப்.2017 உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஏப்ரல், 2019 இவ்வழக்கு முடிவுக்கு வரவில்லை. காரணம், குற்றவாளிகளுள் ஒருவரான கல்யாண் சிங் இராஜஸ்தான் மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்ததால், அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை. அவரது பதவிக்காலம் முடிந்த பிறகுதான் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இத்தாமதம் காரணமாக, விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்குவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

1992- நடந்த ஒரு அசாதாரணமான குற்றச்செயலுக்கு 25 ஆண்டுகள் கழித்து, ஏப்ரல் 2017- குற்றப்பத்திரிக்கையையும் விசாரணை நீதிமன்றத்தையும் இறுதியாக முடிவு செய்ய முடிகிறதென்றால், இந்த இழுத்தடிப்பை நீதி பரிபாலண முறையின் தோல்வி என்று மட்டும் பார்க்க முடியாது. பார்ப்பன பாசிஸ்டுகளின் அல்லக்கையாக நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவதையும் இந்த இழுத்தடிப்பு எடுத்துக் காட்டுகிறது.

அத்வானியின் ‘ரத்த யாத்திரை!

ஒரு தொன்மை வாய்ந்த மசூதியைச் சட்டவிரோதமாக இடித்துவிட்டதாக மட்டும் இவ்வழக்கைச் சுருக்கிவிட முடியாது. மசூதியை இடிப்பதற்கு முன்பாக அத்வானி நடத்திய ரத யாத்திரையின்போதும், மசூதி இடிக்கப்பட்ட பிறகு நடந்த மும்பய்க் கலவரத்தின்போதும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள், குறிப்பாக முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டன. ராம ஜென்மபூமி என்ற இந்து மதவெறி பாசிச அரசியலை முன்வைத்துத்தான் மைய, மாநில ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது, பா.ஜ.க. மேலும், மசூதி இடிப்புதான் மும்பய்க் குண்டுவெடிப்பு உள்ளிட்ட முஸ்லிம் தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாக அமைந்தது. இப்படிபட்டதொரு பின்னணி கொண்ட வழக்கை 27 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதும் மன்னிக்கமுடியாத கிரிமினல் குற்றம்தான்.

படிக்க:
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்

நீதி வழங்க தாமதிப்பது, நீதி மறுக்கப்படுவதற்குச் சமமானது எனக் கூறப்படுவதன்படி, இவ்வழக்கை இருபத்தேழு ஆண்டுகள் இழுத்தடித்ததன் மூலம் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்றே கொள்ளலாம்.

இப்படிப்பட்ட நிலையிலும்கூட, மசூதி இடிப்பு வழக்கிலாவது நீதி கிடைக்காதா என முஸ்லிம்கள் உள்ளிட்டுப் பலரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். அந்நம்பிக்கைக்குச் சிறப்பு நீதிமன்றம் நியாயம் செய்யுமா அல்லது பாபர் மசூதி நில உரிமை வழக்கில் முஸ்லிம்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு உத்தரவிட்டு, உச்ச நீதிமன்றம் ஒரு மோசடியை நடத்தியிருப்பது போல, இந்த வழக்கிலும் இந்திய முஸ்லிம்களுக்குத் துரோகம் இழைக்கப்படுமா?

அழகு

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

ஃபோன்கிட்டேயிருந்து என் மவன காப்பாத்தும்மா… மாங்காட்டு அம்மனிடம் ஒரு தாயின் வேண்டுதல் !

“கைலை மலையில் இருந்தபோது, பார்வதி ஆசையாக சிவபெருமானின் கண்ணை விளையாட்டாக மூடினாள். அதனால் உலகமே இருண்டது. கோபமடைந்த சிவன், பார்வதியை சபித்து தவம் செய்து மீண்டு வருமாறு கூறினார். அன்னை பார்வதி மாங்காடு வந்து நெருப்பில் தவமிருந்து காமாட்சி ஆனார். மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மனின் மகிமை நிகரற்றது. வேண்டும் வரங்களைத் தரும் தாயாகவும், திருமணம் வரம் அருளும் தெய்வமாகவும் அன்னை காமாட்சி அருள்பாலித்து வருகிறார்.” இப்படிப் போகிறது மாங்காடு ஸ்தல புராணம். நாட்டார் தெய்வங்களாக இருந்த அம்மன்கள் இப்படி பார்ப்பனிய கடவுளர்களால் கடத்தப்பட்ட கதைகளைத்தான் ஸ்தல புராணங்கள் என்று கதை விடுகிறார்கள்.

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் வெளிப்புற வளாகம்.

ஆலயத்தில் நுழைந்தவுடனே பக்தர்கள் அங்கிருந்த திருநீறு குங்குமத்தை எடுத்துப் பூசிக்கொள்கிறார்கள். மாங்காடு அம்மனிடம் நிலைகொண்டிருக்கும் பாசிடிவ் வைபரேஷன் குங்குமம் வழியே பக்தர்களுக்குக் கடத்தப்படுகிறது என்றார் அருகிலிருந்த பழம் பக்தர். வாழ்க்கைப் பிரச்சினைகள் பூதாகரமாக அச்சுறுத்தும் போது இத்தகைய வைபரேஷன்கள் கதைகளுக்கு மட்டும் குறைச்சலா என்ன?

மாங்காடு புறநகர்ப்பகுதி என்பதால் பக்தர்கள் பெரும்பாலும் கிராமச் சாயலிலேயே இருந்தார்கள். உயர்ரக கார்களில் வந்திறங்கிய பணக்கார பக்தர்களும் புதிதாக மணம்முடித்த உயர்குடி ஐடி பக்தர்களும் அந்தச் சூழலுக்கு ஒட்டாமல் இருந்தார்கள்.

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் மற்றும் உள் வளாகம்.

டிவி சீரியலின் இடைவேளை விளம்பரங்கள் போல் பக்தர்கள், கோயில் பிரகாரத்தின் குறுக்கும் நெடுக்குமாகப் போய்கொண்டிருந்தனர். சரசரக்கும் பட்டுப்புடவையில் பூ, பழத்தட்டு ஏந்திய குடும்பப் பெண்களும் ஆபீஸ் வேலைக்கு இடையில் அவசர அவசரமாக வந்து செல்லும் ஆண்களுமாக கோயிலைச் சுற்றி ஒரே பக்தி மணம். அங்கிருப்பது என்ன வகையான பக்தி என்று கணிப்பது சிரமம். பலரும் ஏதோ கடமை போலவும், சிலர் அந்தக் கடமையை ஒரு அச்சத்தோடும் அல்லது பக்தியோடும் வலம் வந்தார்கள்.

கூட்டத்தில் நமக்கு எதிரே வந்த இயல்பான கிராமத்தின் பக்த குடும்பத்திற்கு வணக்கம் வைத்து, நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அம்மனிடம் மனம் உருகி என்ன வேண்டிக் கொண்டீர்கள்? என்ன வரம் கேட்டீர்கள்?, கொஞ்சம் சொல்லுங்கள் என்றோம்.

படிக்க:
♦ CAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !
♦ அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை

இதை எதிர்பார்க்காத அவர்கள் நம்மை மிரட்சியாகப் பார்த்தார்கள். பிறகு சிரித்தார்கள். நீண்ட நேரம் தயங்கித் தயங்கி ஒருவருக்கொருவர் நீ சொல்லு, நீ சொல்லு என்று போக்கு காட்டினார்கள்.

வெளியில் சொல்ல முடியாத மோசமான வேண்டுதலையா ஆண்டவனிடம் கேட்டீர்கள்? என்றோம்.

அப்படியெல்லாம் ஏதுமில்லை, எனக்கும் என்னைச் சுற்றியிருக்கிற எல்லோருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாம பார்த்துக்கோ ஆண்டவா என்று வேண்டினேன் என்றார் ராஜகணபதி என்ற இளைஞர்.

அப்படி என்னதான் பிரச்சினையை ஆண்டவனிடம் சொன்னீர்கள்? என்றோம்.

கடன் பிரச்சினைதான்! என்றார்.

ஊரச்சுத்தி கடனவாங்கிட்டு எங்கப்பா ஊட்ட விட்டே ஓடிப் போயிட்டாரு. அதிலேருந்து ஒரு வழி பிறக்காதான்னு ஒவ்வொரு கோயிலா ஏறி எறங்கிட்டு இருக்கேன். – ராஜகணபதி.

“எங்க அப்பா ஊரச்சுத்தி கடன் வாங்கிட்டு காணாமல் போய்விட்டார். எங்களுக்கு அசிங்கமா போச்சு. அத எப்படி தீர்க்குறதுன்னே தெரியல. கடனை அடைக்க ரெண்டு இடத்துல வேல செய்யிறேன். பகல்ல கார்பென்டர், நைட்ல பெட்ரோல் பங்க். பங்குல நைட் 10-லிருந்து காலை 6 மணி வரைன்னு சொல்லிட்டு 10 மணி வரைக்கும் வேலை வாங்குறாங்க. அதனால பகல்ல கார்பென்டர் வேலைக்குப் போக முடியல. காலையில 6 மணிக்கு முடியிற மாதிரி நைட் வேலை இருந்தா நல்லா இருக்கும். அதான் ஆண்டவன்கிட்டே வேண்டிக்கிறேன். 3 லட்சம் கடன் எப்ப முடியுமுன்னு ஒரே கவலையா இருக்கு” என்றார் வயதுக்கு மீறிய சோகத்துடன்.

பக்கத்திலிருந்த அவரது நண்பர் திலீப். நான் மலைக்குப் போறதுக்காக இப்பதான் மாலை போட்டேன். அதனால அம்மாவோட கோயிலுக்கு வந்தேன். +2 படிக்கிறேன். 11-ல ஜஸ்ட் பாசாயிட்டேன். இப்ப நல்ல மார்க் எடுத்து பாசாகணுமுன்னு அம்மன் கிட்டே வேண்டிகிட்டேன் என்றார்.

+1ல ஜஸ்ட் பாசாயிட்டேன். இப்ப +2. டியூசனுக்குப் போனாலும் படிப்பு ஏற மாட்டேங்குது. நல்லா படிப்ப கொடுன்னு சாமிகிட்டே வேண்டிகிட்டேன். – திலீப்

அம்மன்கிட்டே வந்தா அதிகம் மார்க் எடுக்க முடியுமா? என்றோம்.

அவர் சிரித்துகொண்டே, இல்ல டியூசனுக்கும் போகிறேன் என்றார்.

அருகில் இருந்த அவரது அம்மா, பையன் கருத்தா பேசுகிறான் என்றபடி பார்த்து கொண்டிருந்தார். அவரிடம் நீங்கள் என்ன வேண்டிக் கொண்டீர்கள்? என்றோம்.

எப்போதும் ஃபோனும் கையுமாவே என் மகன் சுத்துறான். எது சொன்னாலும் மண்டயில ஏத்துக்க மாட்டேங்குறான். இவனுக்கு ஒரு நல்ல புத்திய கொடும்மான்னு அம்மன்கிட்டே வேண்டிகிட்டேன். – திலீபின் அம்மா.

பையன் செல்ஃபோனே கதியா இருக்கான். அத மறக்கணுமுன்னு சாமிகிட்டே வேண்டிகிட்டேன் என்றார். வேண்டுதலின் நம்பிக்கையற்று அவரே தொடர்ந்தார். வீட்டுல சொல்றது, வாத்தியார் சொல்றது எதுவும் அவன் காதுல நுழைய மாட்டேங்குது. ஃபோன எடுத்து காதுல வச்சான்னா, இந்த உலகத்தையே மறந்துடுறான். மனுசாளுங்க சொல்றது எதுவும் அவனுக்கு புரிய மாட்டேங்குது.

ரெண்டு மூணு தடவ ஃபோன வாங்கி ஒடச்சியும் போட்டுட்டேன். ஒரே கவலையா இருக்குது. கொஞ்சமாவது திருந்தட்டுமேன்னு மாலையும் போட்டு விட்டேன். திருந்துறானா பார்ப்போம் என்றார்.

***

சந்துரி, ஈழம், முல்லைத்தீவு.

பாப்பாவுக்கு 6 மாதம். அம்மன் சந்நிதிக்கு குழந்தையை கொண்டு வந்தோம். இனிப்பு படைச்சி அத பிரசாதமா பக்தர்களுக்குக் கொடுக்குறோம். வேறெதுவும் வேண்டுதல் இல்ல. எல்லோரும் நல்லா இருக்கணும், அதுதான் எங்க வேண்டுதல் என்று சிரித்தார்.

படிக்க:
♦ தொப்புள் கொடி தாயத்து : ஸ்டெம் செல்லின் முன்னோடியா ? | ஃபரூக் அப்துல்லா
♦ பேராசிரியர் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 50

***

ராஜேந்திரன், ரியல் எஸ்டேட்.

ரியல் எஸ்டேட் தொழில் படுத்துவிட்டதாகச் சொல்கிறார்களே, உங்களுக்கு எப்படிப் போகிறது? என்றோம்.

மோசமுன்னு யாரு சொன்னது? தொழில் நல்லாவே போகுது. இப்பத்தான் கும்மிடிப்பூண்டிக்கு பக்கத்துல ரெண்டு இடம் சேல்ஸ் பண்ணியிருக்கேன் என்றார்.

சரி, உங்களோட வேண்டுதல் என்ன? என்றோம்.

வேண்டுதல சாமிகிட்டே மட்டுந்தான் சொல்லணும். வேற யாருகிட்டேயும் சொன்னா அது பலிக்காது. – ராஜேந்திரன், ரியல் எஸ்டேட்

“வேண்டுதல வெளியே சொல்லக்கூடாது, சொன்னா பலிக்காது, அது ஐதீகம். எதுக்கு இந்தக் கோயிலுக்கு வருவாங்கன்னு ஒங்களுக்கே தெரிஞ்சிருக்கணும். இப்படி கேட்கக்கூடாது. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வேண்டுதலுக்கு ஸ்பெஷல். இங்கே தொட்டில் கட்டி குழந்தை வரம் கேட்கிறது, எலுமிச்சை கொடுத்து கல்யாணம் வரம் கேட்கிறது, மாலை சாத்தி தொழில் விருத்தி வேண்டுறது. இப்படி, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேண்டுதலுக்காக வருவாங்க” என்றார்.

தடித்த மாலையை கையில் அணைத்தபடி பக்தியின் சொரூபமாக நின்ற அவரது வேண்டுதல் என்னவாக இருக்கும்? என்று முனகிக்கொண்டே, நிற்க பொறுமையிழந்து மெல்ல நழுவினோம்.

***

பாக்யலட்சுமி

பொண்டாட்டி பேச்ச கேட்டுகிட்டு ரெண்டு புள்ளங்களும் வெளிய போயிட்டாங்க. 8 வருசமா தனியாத்தான் வாழுறோம். இந்த வயசான காலத்தில எங்கள பாத்துக்க நாதியில்ல. காலு கையி நல்லா இருக்கும்போதே போயிறணும். வேற வேண்டுதல் என்ன இருக்கு? – பாக்யலட்சுமி

எந்தக் குறையும் இல்லாம அம்மன் எங்கள நல்லபடியா வச்சிருக்கு. ஏதோ மன நிம்மதிக்காக கோயிலுக்கு வருகிறோம் என்றவரிடம், குடும்பத்தைப் பற்றி விசாரித்தோம்.

எங்க வீட்டுக்காரரு வயசான பிறகும் வேலைக்குப் போறாரு. ஆம்பள பசங்க 2, எதுவும் எங்கள ஏறெடுத்தும் பார்க்குறதில்ல. பேசுனாகூட ஃபோன் எடுக்குறதில்ல. பிள்ளைகளே வேண்டாமுன்னு அவர் தலைமுழுகிட்டாரு. மனசு கேக்கல, வேதனையா இருக்கு. மனச ஆத்திக்கத்தான் அம்மன்கிட்டே வந்தேன். 8 வருசமா தனியாத்தான் வாழுறோம். இந்த வயசான காலத்தில எங்கள பாத்துக்க நாதியில்ல.

காலு கையி நல்லா இருக்கும்போதே போயிறணும். வேற வேண்டுதல் என்ன இருக்கு? என்றவர் நம்மை விட்டுப் போக மனமில்லாமல் சுற்றிச் சுற்றி வந்தார். கொஞ்சம் துன்பத்தை இறக்கி வைத்த நிம்மதியை அவரிடம் பார்க்க முடிந்தது.

***

சிவசங்கரன், இன்டீரியர்

தொழில் மொத்தமும் டல்லா இருக்கு. இங்கே வந்தா கொஞ்சம் நிம்மதி. இதுவும் ஒரு ஏமாத்துதான், வேற வழி! – சிவசங்கரன், இன்டீரியர்

“3 வருசமா தொழில் இல்லே. விழுந்த வியாபாரம் எழுந்திருக்கவே இல்ல. எல்லாம் இந்த மோடி பண்ணின வேல. கருப்புப் பணத்த ஒழிக்கிறேனுன்னு மொத்தமா பணத்தையே ஒழிச்சிட்டாரு. தொழிலுக்கு யாராவது பணத்த வெளிய எடுத்தா ஐ.டி கட்டுன்னு புடுங்கிகிட்டுப் போயிடுறான். எவன் பணத்த வெளியில எடுப்பான்? தொழிலும் வேணாம் தொந்தரவும் வேணாமுன்னு பணத்து மேலே உட்கார்ந்திருக்காங்க. இல்லாத நாங்கதான் சாகுறோம். ஏதோ இங்கே வந்தா கொஞ்சம் நிம்மதி. இதுவும் ஒரு ஏமாத்துதான், வேற வழி?” என்றார் விரக்தியாக..

***

தாங்கல் சுப்பன், பூந்தமல்லி எம்ஜிஆர் மன்ற ஒன்றியச் செயலர்.

எடப்பாடியார் ஆட்சி ரொம்ப நல்லா இருக்கு. இது நீடிச்சு நிக்கணும்.
– தாங்கல் சுப்பன், பூந்தமல்லி எம்ஜிஆர் மன்ற ஒன்றியச் செயலர்.

“அடுத்த எலெக்சன் எங்களுக்குத்தான். பஞ்சாயத்து எலெக்சன்ல மீண்டும் எடப்பாடி ஆட்சிதான். எடப்பாடி ஆட்சி சீரும் சிறப்புமா இருக்கு. அவர் நோய் நொடி இல்லாம இருக்கணுமுன்னு அம்மன்கிட்டே வேண்டிகிட்டேன்.”

“இது எடப்பாடி ஆட்சி இல்ல, பிஜேபி ஆட்சி… ‘ஆமாம் சாமி’ ஆட்சின்னு சொல்றாங்களே” என்றோம்.

“யாரு ஸ்டாலினா, அவரெல்லாம் வேலைக்கு ஆகமாட்டாரு. நான் வர்றேன், தொகுதி எம்.எல்.ஏ வர்றாரு” என்று ஓடினார்.

***

அர்ச்சகர் ஸ்ரீமுரளி.

“பக்தாளெல்லாம் பொறுமை இல்லாம வர்றா. சாமிய ரெண்டு கையால கும்பிடுறதுக்கு பதிலா, ஒத்த விரலால ஒத்தி எடுக்குறா. செத்த ஓரமா நின்னு பாருங்கோ. தீபத்தாண்ட என்னா கூத்து பண்றாள்”னு, என்று விபூதியை வீசிக்கொண்ட நம்மிடம் பேசினார்.

“சிதம்பரம் கோயில் அர்ச்சகருக்கு என்னாச்சு பார்த்தேளா” என்றோம்.

“நாம நேரா பாக்கல. அப்பிடி இப்பிடின்னு சொல்றா. காதாலதான் கேக்குறோம். யாரும் கண்ணால பாக்கல. அது தப்பு. பக்தாள கைநீட்டி அடிக்கப்படாது. இப்ப கேஸ் ஆயிடுச்சு. சந்நிதியில தப்பு பண்ணவாள ஆண்டவன் பாத்துப்பான். எல்லாத்துக்கும் பெரிய ஜட்ஜ் ஆண்டவன் இருக்கான். நாம யாரு? என்று இழுத்தவர், ஆமா… பேப்பர்ல எப்போ போடுவேள். ஃபோட்டோ போட்டா கொஞ்சம் சொல்லுங்கோ” என்றார்.

அர்ச்சகரின் குடும்பம்.

“எங்களுக்கு எந்தக் குறையுமில்லே. ரொம்ப நல்லா இருக்கோம். வெற டீட்டெய்ல் ஏதும் கேக்காதீங்கோ. ஏன்னா, கோயில்ல வேலை செய்யற அர்ச்சகரின் குடும்பம்.”

வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த மணமக்கள். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் வாழ்த்தி மகிழ்கிறார்கள்.
கோவிலின் தூய்மையை காக்கும் பணியாளர்
கடவுளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ, அதைவிட காணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

மேலும் படங்களுக்கு :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகளின் திராவிட மரபணு !

நேஷனல் ஜியோகிராஃபிக்கில் வெளிவந்த இந்தக் கட்டுரை சற்று பழசுதான். ஆனால், இப்பவும் படிக்கத்தக்கது.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய நிலப்பரப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மக்கள் வந்திருக்கிறார்கள் என சமீபத்தில் வெளியான ஆய்வுகளின்படி தெரியவந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக சில ஆஸ்திரேலிய பூர்வகுடி ஆண்களின் ஒய் குரோமோசோம்களை ஆராய்ந்தபோது, அவை இந்திய ஆண்களின் ஒய் குரோமோசோம்களுடன் ஒத்துப்போயின. ஆனால், அதற்கு மேல் அதில் ஏதும் தெரியவில்லை.

Irina Pugach.

Max Planck Institute for Evolutionary Anthropology-ஐச் சேர்ந்த Irina Pugach செய்த தொடர்ச்சியான ஆய்வுகள் இந்தப் புதிரைத் தீர்த்தன. 4,000 ஆண்டுகளுக்கு முன்பாக ஆஸ்திரேலியக் கரைக்கு இந்தியாவிலிருந்து சிலரை ஏற்றிக்கொண்டு முதன்முதலாக கப்பல் ஒன்று வந்திருக்கிறது. அப்படித்தான் திராவிடர்கள் அங்கு குடியேறியிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய பூர்வகுடிகளின் single-nucleotide polymorphisms-ஐ (SNP) ஆராய்ந்தபோது, அவற்றில் நியூ கினியா, ஃபிலிப்பைன்சை சேர்ந்தவர்களின் எஸ்என்பிக்கள் தவிர, வேறு சில எஸ்என்பிக்களும் இருந்தன. அந்த எஸ்என்பிக்கள், இந்திய மரபணுக்களில், குறிப்பாக தென்னியாவைச் சேர்ந்த திராவிட மக்களின் மரபணுக்களில் மட்டுமே இருப்பவை.

இது மட்டுமல்ல, இந்த எஸ்என்பியை வைத்து, இந்தியர்கள் எப்போது ஆஸ்திரேலியாவுக்கு வந்தார்கள் என்பதையும் Irina Pugach கண்டுபிடித்தார்.

நூல் திரிக்கும் மத்திய ஆஸ்திலேயாவின் பழங்குடியினத்தவர்

அவரது கணக்குப்படி, கி.மு. 2217 வாக்கில் திராவிடர்கள் ஆஸ்திரேலியக் கரையை அடைந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இரு பிரதேசங்களுக்குமே அது முக்கியமான ஒரு காலகட்டம்.

சிந்துச் சமவெளி நாகரீகம் கி.மு. 2600-லிருந்து கி.மு. 1900-வரை நீடித்திருந்தது. இந்த காலகட்டத்தில்தான் கடலில் செலுத்தக்கூடிய கலங்களை சிந்துவெளி மக்கள் கண்டறிந்தனர். அதை வைத்து மத்திய கிழக்கு நாட்டினருடன் வணிகம் செய்தனர். அதே கலங்கள்தான் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கும் கொண்டு சேர்த்தன என்கிறார் டாக்டர் Irina Pugach.

படிக்க :
மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா
அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா !

சிந்துவெளி மக்கள்தான் ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் இந்தியர்கள் என்றால், அவர்களுடைய மரபணு எப்படி தற்கால திராவிட மக்களின் மரபணுக்களுடன் ஒத்துப் போகிறது? அப்படியானால், சிந்துவெளி மக்களும் தென்னிந்திய திராவிடர்களும் ஒரே இனக்குழுவா?

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

செய்தி : Four Thousand Years Ago Indians Landed in Australia

disclaimer