Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 383

இம்மாதிரி சமயங்களில் அவளது உள்ளத்தில் பெருமையும் அன்பும் பெருகி வழியும்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 42

மாக்சிம் கார்க்கி
சோபியா அதற்குள்ளாகவே வீடு வந்து சேர்ந்துவிட்டாள். அவள் உத்வேகமும் குழப்பமும் கொண்டவளாகத் தோன்றினாள். அவளது பற்களுக்கிடையில் ஒரு சிகரெட் இருந்தது.

அவர்கள் இந்தக் காயமுற்ற பையனை ஒரு சோபாவிலே படுக்கப் போட்டார்கள். பிறகு அவள் லாவகமாக அவனது கட்டை அவிழ்த்து சிகரெட் புகை கண்ணில் படியாதபடி கண்ணைச் சுருக்கி விழித்துக்கொண்டே உத்தரவிட்டுக்கொண்டிருந்தாள்:

“இவான் தனீலவிச்! அவனை இங்குக் கொண்டு வந்துவிட்டார்கள். நீலவ்னா, களைத்துப் போய்விட்டீர்களா? பயந்துவிட்டீர்களா? சரி, கொஞ்சநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். நிகலாய்! நீலவ்னாவுக்கு ஒரு கிளாஸ் ஒயின் கொடு.”

கொஞ்ச நேரத்துக்கு முன்னர் தான் அனுபவித்த சங்கடத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் தாயை வாட்டிக்கொண்டிருந்தது. அவளுக்கு மூச்சுவிடவே சிரமமாக இருந்தது. நெஞ்சில் குத்தலான வேதனை எடுத்தது.

”என்னைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிராதே” என்று அவள் முனகினாள். என்றாலும் அவளது உடல் முழுவதும் யாருடைய பணிவிடையையாவது எதிர்நோக்கித் தவித்தது. அன்பாதரவின் சுகத்தை நாடியது.

அடுத்த அறையிலிருந்து நிகலாய் கட்டுப்போட்ட கையோடு வந்து சேர்ந்தான். அவனோடு டாக்டர் இவான் தனீலவிச்சும் முள்ளம் பன்றியைப் போல் சிலிர்த்துக் கலைந்த தலைமயிரோடு வெளி வந்தார். விருட்டென்று இவானின் பக்கம் ஓடிச்சென்று அவனைக் குனிந்து பார்த்தார்.

”தண்ணீர்!” என்றான் அவன். ”நிறையத் தண்ணீர் கொண்டுவா. அத்துடன் கொஞ்சம் பஞ்சும், சுத்தமான துணியும் கொண்டுவா.”

தாய் சமையலறையை நோக்கி நடந்தாள். ஆனால் அதற்குள் நிகலாய் அவளது கையைப் பிடித்து அவளைச் சாப்பாட்டு அறைக்குள்ளே அழைத்துச் சென்றான். .

”அவன் சொன்னது சோபியாவிடம், உங்களிடமல்ல” என்று மெதுவாகக் கூறினான் அவன். “ரொம்பவும் நிலைகுலைந்து போய்விட்டீர்கள் என்று அஞ்சுகிறேன். அப்படியா, அம்மா?”

அவனது அன்பு ததும்பும் ஆர்வம் நிறைந்த கண்களைக் கண்டதும் தாயினால் தனது பொருமலை அடக்கி வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை.

“ஓ! என்னவெல்லாம் நடந்துவிட்டது” என்று அவள் கத்தினாள். ”அவர்கள் மக்களை அடித்தார்கள், வெட்டினார்கள்……..”

”நானும் பார்த்தேன்’ என்று கூறிக்கொண்டே, அவளுக்கு ஒரு கோப்பை ஒயினைக் கொடுத்தான் நிகலாய். “இருதரத்தாருமே தங்கள் மூளையைக் கொஞ்சம் பறிகொடுக்கத்தான் செய்தார்கள். ஆனால் நீங்கள் அதை எண்ணி அலட்டிக்கொள்ளாதீர்கள். அவர்கள் தங்கள் கத்திகளின் பின்புறத்தால்தான் தாக்கினார்கள். ஒரே ஒருவனுக்குத்தான் படுகாயம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. அதையும் அவர்கள் என் கண்முன்னாலேயே செய்தார்கள். நான் அவனைக் கூட்டத்தைவிட்டு வெளியே இழுத்து வந்துவிட்டேன்.”

நிகலாவின் குரலாலும் அந்த அறையின் வெதுவெதுப்பாலும் வெளிச்சத்தாலும் தாயின் உள்ளம் ஓரளவு அமைதி கண்டது. நன்றி உணர்வோடு அவனைப் பார்த்துக்கொண்டே அவள் கேட்டாள்.

”அவர்கள் உங்களையும் தாக்கினார்களா?”

”இது என்னால்தான் விளைந்தது. நான்தான் அஜாக்கிரதையாய் என் கையை எதன்மீதோ ஓங்கி மோதிவிட்டேன். அதனால், அந்த அடி என் கைச் சதையைப் பிய்த்தெறிந்துவிட்டது. சரி, கொஞ்சம் தேநீர் குடியுங்கள். வெளியே ஒரே குளிர். நீங்களும் மெல்லிய உடைகள்தான் அணிந்திருக்கிறீர்கள்.”

அவள் கோப்பையை எடுப்பதற்காகக் கையை நீட்டினாள். அப்போது தனது கைவிரல்களில் காய்ந்துபோன ரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டாள். தன்னையறியாமலே அவள் கையை தன் மடிமீது தளரவிட்டாள். அவளது உடுப்பு ஒரே ஈரமாயிருந்தது. அவள் தன் புருவங்களை நெரித்து உயர்த்திக் கண்களை அகலத்திறந்து, தனது கை விரல்களையே பார்த்தாள். அவளது இதயம் படபடத்தது. கண்கள் இருண்டு மயக்க உணர்ச்சி ஏற்பட்டது.

“பாவெலுக்கு கூட – அவர்கள் அவனுக்கும் இப்படித்தான் செய்யக்கூடும்!”

இவான் தனீலவிச் தனது சட்டைக் கைகளைத் திரைத்துச் சுருட்டியவாறே அந்த அறைக்குள் வந்தார். வந்த விஷயத்தைக் கேட்பதற்காக வாய் பேசாமல் ஏறிட்டு நோக்கிய நிகலாயைப் பார்த்து உரத்த குரலில் பேசினார் அவர்:

”முகத்திலுள்ள காயம் ஒன்றும் மோசமாக இல்லை. ஆனால், அவனது மண்டையெலும்பு நொறுங்கியிருக்கிறது. படுமோசமாக இல்லை. இவன் ஒரு பலசாலியான பையன்; இருந்தாலும். நிறைய ரத்தத்தை இழந்துவிட்டான். நாம் இவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுவோமா?”

“ஏன்? அவன் இங்கேயே இருக்கட்டுமே!” என்றான் நிகலாய்.

“இன்று இல்லாவிட்டால் நாளையாவது அவனை அனுப்பி வைத்தால்தான் நல்லது. ஆஸ்பத்திரியில் இருந்தானானால் என்னால் இன்னும் மிகுந்த செளகரியத்தோடு அவனைக் கவனித்துப் பார்க்க முடியும். அடிக்கடி வந்து கொண்டிருக்க எனக்கு நேரம் கிடையாது. நீ இந்த இடுகாட்டு சம்பவத்தைப் பற்றி ஒரு பிரசுரம் எழுதி வெளியிடுவாயல்லவா?”

“நிச்சயமாய்!” என்றான் நிகலாய்.

தாய் அமைதியுடன் எழுந்து சமையலறையை நோக்கிச் சென்றாள்.

”எங்கே போகிறீர்கள். நீலவ்னா?’ என்று ஒரு விசித்திரச் சிரிப்புடன் கூறினாள் அவள்.

அவள் தன்னறைக்குள் சென்று உடை மாற்றிக்கொள்ளும்போது, இந்த மனிதர்களின் அமைதியைப் பற்றியும், இந்த மாதிரியான பயங்கர விஷயங்களைக்கூட அநாயாசமாக ஏற்றுத் தாங்கும் அவர்களது சக்தியைப் பற்றியும் எண்ணி எண்ணிப் பார்த்துத் தனக்குத்தானே வியந்து கொண்டாள். இந்தச் சிந்தனைகள் அவளுக்குத் தெளிவையுண்டாக்கி அவளது உள்ளத்தில் குடிகொண்டிருந்த பயத்தை விரட்டியடித்தன. அந்தப் பையன் படுத்திருந்த அறைக்குள் அவள் நுழைந்தபோது, சோபியா பையனுடைய படுக்கைக்கு மேலாகக் குனிந்து ஏதோ பேசுவதைக் கண்டாள்.

”அபத்தம், தோழா!” என்றாள் சோபியா.

“நான் போகிறேன், உங்களுக்குத்தான் தொந்தரவு” என்று பலவீனமான குரலில் அவன் எதிர்த்துப் பேசினான்.

”பேச்சை நிறுத்து. அதுவே உனக்கு ரொம்ப நல்லது…”

தாய், சோபியாவுக்குப் பின்னால் வந்து அவளது தோளில் கையைப் போட்டுக்கொண்டு நின்றாள். அந்தப் பையனின் வெளுத்த முகத்தைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்; வண்டியில் வரும்போது அவன் முனகிய பயங்கரமான விஷயங்களை கேட்டு அவள் எப்படிப் பயந்து போனாள் என்பதையும் அவளிடம் சொன்னாள். இவானின் கண்கள் ஜூர வேகத்தோடு பிரகாசித்தன. அவன் தன் நாக்கைச் சப்புக் கொட்டிவிட்டு, வெட்கம் கவிந்த முகத்தோடு பேசினான்:

”நான் எவ்வளவு பெரிய முட்டாள்!”

“சரி. நாங்கள் போகிறோம்” என்று கூறிக்கொண்டே அவனது போர்வையைச் சரி செய்தாள் சோபியா, ”நீ தூங்கு.”

அவர்கள் சாப்பாட்டு அறைக்குள் வந்தார்கள். அங்கு உட்கார்ந்து அன்று நடந்த சம்பவங்களைப் பற்றி வெகுநேரம் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அன்றைய நிகழ்ச்சியை என்றோ வெகு காலத்துக்கு முன் நடந்த சம்பவத்தைப் போலக் கருதி அவர்கள் தங்களது எதிர்காலத்தை, வரப்போகும் நாட்களுக்குரிய வேலைத் திட்டத்தை வகுப்பது பற்றி மிகுந்த ஈடுபாட்டுடன் விவாதித்துக்கொண்டார்கள். அவர்களது முகங்கள் களைத்துத் தோன்றின. எனினும் அவர்களது எண்ணங்கள் மட்டும் துணிவாற்றலோடு விளங்கின. தங்களது வேலைத் திட்டத்தைப் பற்றி அவர்கள் பேசும்போது தங்களுக்குள் எழுந்த அதிருப்தியுணர்ச்சிகளை அவர்கள் மூடி மறைக்கவில்லை. அந்த டாக்டர் நாற்காலியில் நிலைகொள்ளாமல் உட்கார்ந்து நெளிந்து கொடுத்துக்கொண்டிருந்தார்.

“பிரசாரம், பிரசாரம்தான் ஒரே வழி. அது இப்பொழுது குறைச்சல்” என்று அவன் தனது கூர்மையான மெல்லிய குரலைத் தணிக்க முயன்றவாறே கூறினான். “வாலிபத் தொழிலாளிகள் சரியாக இருக்கிறார்கள். நாம்தான் பிரசாரத்தை விரிவாக்க வேண்டும். தொழிலாளர்கள் சரியாகத்தானிருக்கிறார்கள். அதுமட்டும் எனக்குத் தெரியும்.”

நிகலாய் முகத்தைச் சுழித்தவாறே அந்த டாக்டர் பேசிய மாதிரியே பேசத் தொடங்கினான்.

“ஒவ்வொரு இடத்திலிருந்தும் போதுமான புத்தகங்கள் கிடைக்கவில்லையென்று நமக்குப் புகார்கள் வருகின்றன. நமக்கோ ஒரு நல்ல அச்சகம் வைப்பதற்குக்கூட வழியைக் காணோம். லுத்மீலாவோ நாளுக்குநாள் பலவீனப்பட்டு வருகிறாள். நாம் அவளுக்கு ஏதாவதொரு வகையில் உதவாவிட்டால், அவள் பாடு மோசமாகிவிடும்.”

”நிகலாய் வெஸோவ்ஷிகோவ் என்ன ஆனான்?” என்று கேட்டாள் சோபியா.

”அவனால் நகருக்குள் வாழமுடியாது. புதிய அச்சகம் வைத்தால்தான் அவன் அதில் வேலை செய்யத் தொடங்கலாம். ஆனால், அதற்கு முன்னால், நமக்குத் தற்சமயத்துக்கு இன்னொரு ஆள் தேவை.”

”நான் செய்யமாட்டேனோ?” என்று அமைதியாகக் கேட்டாள் தாய்.

அவர்கள் மூவரும் ஒன்றும் பேசாமல் தாயையே சில கணநேரம் பார்த்தார்கள்.

“அதுவும் ஒரு நல்ல யோசனைதான்!” என்றாள் சோபியா.

”அது உங்களுக்கு மிகுந்த சிரமமான காரியம், நீலவ்னா” என்றான் நிகலாய். ‘நீங்கள் நகருக்கு வெளியே வசிக்க நேரிடும். அதனால், பாவெலைப் பார்க்க முடியாது போகும். பொதுவாகச் சொன்னால்……..”

“பாவெலை இந்தப் பிரிவு ஒன்றுமே பாதிக்காது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் அவள். ”உண்மையைச் சொல்லப்போனால், எனக்குக் கூட அவனைச் சந்தித்துவிட்டு வருவது என் இதயத்தையே பிழிந்தெடுப்பது மாதிரி இருக்கிறது. அவர்கள் ஒன்றுமே பேசவிடுவதில்லை. சும்மா வெறுமனே போய் முட்டாள் மாதிரி மகனையே பார்த்துக் கொண்டிருப்பதும், நாம் அவனிடம் ஏதாவது பேசிவிடப் போகிறோமோ என்ற பயத்தில் அவர்கள் நம் வாயையே பார்த்துக்கொண்டிருப்பதும்………”

கடந்த சிலநாட்களில் நடந்துபோன சம்பவங்களால் அவள் மிகவும் சலித்துவிட்டாள். எனவே நகரத்தின் நாடகம் போன்ற வாழ்வைவிட்டு வெகுதூரம் ஒதுங்கிச் சென்று வாழ்வதற்கு இதுதான் சந்தர்ப்பம் என அவளுக்குத் தோன்றியது. எனவே அதைக் கேட்டவுடன் அவள் ஆசையோடு துள்ளியெழுந்தாள்.

ஆனால் நிகலாயோ பேச்சின் விஷயத்தையே மாற்றிவிட்டான்.

“இவான். நீ என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாய்?” என்று அந்த டாக்டரின் பக்கம் திரும்பிக் கேட்டான் அவன்.

அந்த டாக்டர் தனது குனிந்த தலையை நிமிர்த்தியவாறே சோகத்தோடு பதில் சொன்னார்:

“நம்மோடிருப்பவர்கள் எவ்வளவு குறைந்த தொகையினர் என்பதை நினைத்துப் பார்த்தேன். நாம் இன்னும் மிகுந்த உற்சாகத்தோடு உழைக்க வேண்டும். பாவெலும் அந்திரேயும் உள்ளிருந்து தப்பியோடி வரத்தான் வேண்டும். அதற்கு அவர்களைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும். அவர்களைப் போன்ற உழைப்பாளிகள் உள்ளே சும்மா முடங்கி உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடாது.”

நிகலாய் முகத்தைச் சுழித்தான். தாயைப் பார்த்தவாறே தலையை ஆட்டினான். தன் முன்னிலையிலேயே தன் மகனைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது அவர்களுக்குச் சிரமமாயிருக்கிறது என்பதைத் தாய் கண்டுகொண்டாள். எனவே அவள் எழுந்து அந்த அறையை விட்டுத் தன் அறைக்குச் சென்றாள். அவளது மனத்தில் அவர்கள் தன்னுடைய விருப்பத்தை நிராகரித்துத்தான் விட்டார்கள் என்ற வேதனையுணர்ச்சி ஏற்பட்டு அவளை வருத்தியது. அவள் படுக்கையில் படுத்தவாறே, அந்தக் குரல்களின் உள்ளடங்கிய முணுமுணுப்பைக் கேட்டாள்; தன்னை மறந்து ஒரு பயபீதி உணர்ச்சிக்கு அவள் அடிமையானாள்.

அன்றைய தினம் முழுவதுமே அவளுக்கு ஒரே புரியாத இருள் மண்டலமாகவும், தீய சொரூபமாகவும் தோன்றியது, ஆனால் அதைப்பற்றி அவள் சிந்திக்க விரும்பவில்லை. தனது மனத்தை அலைக்கழிக்கும் எண்ணங்களை உதறித் தள்ளிக்கொண்டே, அவள் தன் சிந்தனையையெல்லாம் பாவெலை நோக்கித் திருப்பினாள். அவன் விடுதலை பெற்று வருவதைப் பார்க்க அவள் ஆவல் கொண்டாள். ஆனால் அதேசமயத்தில் அவள் பயப்படவும் செய்தாள். தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களெல்லாம் ஓர் உச்சநிலைக்கு ஆரோகணித்துச் சென்று கொண்டிருப்பதாக அவள் உணர்ந்தாள். அந்த உச்சநிலையில் ஏதோ ஒரு பெரும் மோதல் ஏற்படும் என்ற பயமும் அவளுக்கு எழுந்தது. ஜனங்களின் மெளனம் நிறைந்த சகிப்புத்தன்மை எதற்காகவோ விழிப்போடு காத்து நிற்கும் பரபரப்புக்கு இடம் கொடுத்தது. அவர்களது உத்வேகம் நன்கு மேலோங்கியிருக்கிறது. ஒவ்வொருவரும் கூரிய வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டாள். எல்லாமே பொறுமையிழந்து புழுங்குவதாக உணர்ந்தாள்.

ஒவ்வொரு அறிக்கை வெளிவரும்போதும், சந்தையிலும், கடைகளிலும், வேலைக்காரர்களிடமும் தொழில் சிப்பந்திகளிடமும் உத்வேகமான வாதப்பிரதிவாதங்கள் கிளம்பி ஒலிப்பதைக் கேட்டாள். ஒவ்வொருவர் கைதியாகும் போதும், மக்களிடையே அந்தக் கைதுக்குரிய காரணத்தைப் பற்றிப் பயமும் வியப்பும் தன்னுணர்வற்ற அனுதாப வார்த்தைகளும் பரிமாறப்பட்டன. ஒருகாலத்தில் அவளை எவ்வளவோ பயமூட்டிய வார்த்தைகளை இன்று சாதாரண மக்கள் பிரயோகித்துப் பேசுவதையும் அவள் கேட்டாள். எழுச்சி, சோஷலிஸ்டுகள், அரசியல் முதலிய வார்த்தைகள். அவர்கள் அந்த வார்த்தைகளை ஏளனபாவத்தோடு சொன்னாலும், அந்த ஏளன பாவத்துக்குப் பின்னால் ஒரு தனி குறுகுறுப்புணர்ச்சியும் தொனித்தது; குரோத உணர்ச்சிக்குப் பின்னால் பய உணர்ச்சியும் தொனித்தது. அந்த வார்த்தைகளை அவர்கள் சிந்தனை வசப்பட்டவாறு பேசும்போது, அந்தச் சிந்தனையில் நம்பிக்கையும் பயமுறுத்தலும் நிறைந்து ஒலித்தன. அவர்களது அசைவற்ற கட்டுக்கிடையான இருண்ட வாழ்க்கைத் தடாகத்தில் வட்டவட்டமாக அலைகள் பெருகி விரிந்தன. தூங்கி விழுந்த சிந்தனைகள் துள்ளியெழுந்து விழிப்புற்றன. அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை வழக்கம்போல் ஏற்றுக்கொள்ளும் அமைதி கலகலத்துச் சிதற ஆரம்பித்தது. இந்த மாறுதல்களையெல்லாம் அவள் மற்றவர்களைவிடத் தெளிவாக உணர்ந்தறிந்தாள். ஏனெனில் மற்றவர்களைவிட வாழ்க்கையின் துயர முகத்தை அவள்தான் நன்கு அறிந்திருந்தாள். அம் முகத்தில் சுருக்கங்கள் விழுவதையும், சிந்தனையும், எழுச்சியார்வமும் ஏற்படுவதைக் கண்டு அவளுக்கு மகிழ்ச்சியும் பயபீதியும் கலந்து ஏற்பட்டன. அவற்றில் தன் மகனது சேவையைக் கண்டதால் அவள் ஆனந்தம் அடைந்தாள். அவன் சிறையிலிருந்து தப்பி வந்தால், இவர்களுக்கெல்லாம் தலைமை வகிக்கும் ஆபத்தான பொறுப்புக்கு அவன் ஆளாவான் என்று அவள் அறிந்திருந்ததால், அவள் பயபீதியும் அடைந்தாள். அதனால் அவன் அழிந்தே போவான் என்று அஞ்சினாள்.

படிக்க:
கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ?
எங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க | சத்துணவு டீச்சருடன் உரையாடல்

சமயங்களில் தன் மகனது உருவம் ஒரு சரித்திர புருஷனின் உருவம்போல் வியாபகம் பெற்று விரிந்து அவளுக்குத் தோன்றும். தான் இதுவரை கேள்விப்பட்ட நேர்மையும் தைரியமும் நிறைந்த சகல வார்த்தைகளின் உருவமாக, தான் இதுவரை கண்டு வியந்து போற்றிய சகல மக்களின் கூட்டுத் தோற்றமாக, தான் இதுவரை அறிந்திருந்த வீரமும் பிரபலமும் நிறைந்த சகல விஷயங்களின் சம்மேளனமாக, அவன் அவளுக்குத் தோற்றமளித்தான். இம்மாதிரி சமயங்களில் அவளது உள்ளத்தில் பெருமையும் அன்பும் பெருகி வழியும். அவனைப் பற்றி ஆனந்தம் கொண்டு நம்பிக்கையோடு தனக்குத்தானே நினைத்துக் கொள்வாள்:

“எல்லாம் சரியாகிவிடும் – எல்லாம் சரியாகிவிடும்!” அவளது அன்பு அவளது தாய்மைப் பாசம் ஓங்கியெழுந்து அவளது இதயத்தை வேதனையோடு குன்றிக் குறுகச் செய்யும். தாயின் பாச உணர்ச்சி தனது தீப ஒளியால் மனித உணர்ச்சியின் வளர்ச்சியைத் தடை செய்து, அதனை ஆட்கொண்டு எரித்துச் சாம்பலாக்கும். அந்த மாபெரும் உணர்ச்சியின் இடத்திலே, அவளது பயவுணர்ச்சியின் சாம்பல் குவியலுக்கிடையே அவளது மனம் ஒரே ஒரு சிந்தனைக்கு ஆளாகி உள்ளூரப் போராடிக்கொண்டிருக்கும்:

“அவன் செத்துப் போவான்… அவன் அழிந்து போவான்.”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

கேள்வி – பதில் : பாஜக – மாற்று ஊடகம் – வாசிப்பு – போலி ஜனநாயகம் – கம்யூனிசக் கல்வி !

கேள்வி பதில் பகுதிக்கு நண்பர்கள் பலரும் கேள்விகளை கிரமமாக அனுப்பி வருகிறார்கள். வாழ்த்துக்கள்! முடிந்த மட்டும் உடனுக்குடன் பதில் அளிக்க முனைகிறோம். அசை போட்டு எழுத வேண்டிய கேள்விகளுக்கு சற்று காலம் பிடிக்கும். இங்கே 5 கேள்விகள் இடம்பெறுகிறன.  நன்றி.

நட்புடன்
வினவு

*****

கேள்வி : பாஜக-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணி உதவுமா? மேலும் எதிர்க்கட்சிகளிடம் காணப்படும் ஒற்றுமை இறுதி வரை  நீடிக்குமா?

-ஷாஜகான்

ன்புள்ள ஷாஜகான்,

பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணி ஓரளவிற்கே உதவும். இந்தி மாநிலங்கள் மட்டுமல்ல, கேரளா போன்ற முன்னேறிய மாநிலங்களில் கூட ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் பார்ப்பனியக் கருத்துக்கள் செல்வாக்கோடு இருக்கின்றன. இன்று வரையிலும் கூட அங்கே  சபரிமலையில் பெண்கள் நுழைய முடியவில்லை.

சங்க பரிவாரத்தின் செல்வாக்கு வளர்வது என்பது தேர்தல் அரசியலை மட்டும் நம்பி இல்லை. அதற்கு வெளியே அவர்கள் மக்களிடையே கற்பனையாக முசுலீம் மக்கள் மீதான துவேசம், சாதி வெறி, பசுப் புனிதம், பாக் பயங்கரவாதம், வங்க தேச அகதிகள் என தொடர்ந்து அவதூறுகளையும் விசமப் பிரச்சாரத்தையும் திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

இறைவழிபாடு செய்வதோ ஒரு மதத்தை பின்பற்றுவதோ ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை அங்கீகரிப்பதைத் தாண்டி அரசு, அரசாங்கங்களில் மதத்திற்கு எந்த இடமும் இல்லை. இதுதான் மதச்சார்பற்ற அரசின் இலக்கணம். அதை ஒழித்துக் கட்டி நேரடியாக இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ்-இன் குறிக்கோள்.

படிக்க:
கேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா?
♦ ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

பார்ப்பனியம் என்பது சாதி, பாலினம், மத, வர்க்க ரீதியாக மக்களை பிரித்து ஒடுக்குகிறது. இதை எதிர்த்து புத்தர், சித்தர்கள், பெரியார், அம்பேத்கர், பொதுவுடமைக் கட்சிகள், திராவிட இயக்கம் என பலர் வரலாறு நெடுகிலும் போராடினர் – போராடி வருகின்றனர். இத்தகைய கருத்து ரீதியான தொடர் பிரச்சார இயக்கம், உழைக்கும் மக்களின் வாழ்வில் தலையிடும் பார்ப்பனியத்தை எதிர்த்து நடக்கும் அரசியல் ரீதியான போராட்டம். இவை எவ்வளவு அதிகம் நடக்கின்றதோ அந்த அளவுக்கு இந்துத்துவத்தின் செல்வாக்கு அகற்றப்படும். இதன் கீழ் தேர்தல் அரசியலுக்கு ஒரு பங்குண்டு அவ்வளவே.

பாஜக-விற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கண்ட கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்தால் மட்டுமே கூட்டணி ஒற்றுமை வலுவாக இருக்கும். இவர்களில் பலர் கடந்த காலங்களில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்திருக்கின்றனர். மேலும் பாஜக உருவாக்கியிருக்கும் ‘இந்து’ உணர்வை இவர்களும் அங்கீகரித்து அதற்கு பலியாகியும் இருக்கிறார்கள். ஆகவே மக்கள் அரங்கில் இந்துத்துவத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள்தான்  ஓட்டுக் கட்சிகளின் இந்துத்துவ எதிர்ப்பு கொள்கையையும் வலுப்படுத்தும்.

♦ ♦ ♦

கேள்வி : வினவு தளம் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக முன் வைக்கும் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வினவு ஜனநாயக முறைப்படி போராடுவது ஏன்?
நீதிமன்றங்களை குறை சொல்லும் வினவு நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பது ஏன்?
அரசியல் கட்சிக்கும் வினவு போன்ற மாற்று ஊடகத்திற்கும் என்ன வேறுபாடு?

-ஸ்டீபன்

ன்புள்ள ஸ்டீபன்,

இப்போதிருப்பது போலி ஜனநாயகம். ஆகையால் உண்மையான ஜனநாயகத்தை வேண்டி அதை எதிர்க்கிறோம். இங்கு தாய் மொழிக்கு இடமில்லை, ஒரு கார் ஆலையில் சங்கம் கட்டக் கூட அனுமதியில்லை, கோக்கோ கோலாவை எதிர்த்து பிரச்சாரம்  செய்யத் தடை, மக்களின் நிலங்கள் கார்ப்பரேட்கள் எடுப்பதை தடுக்க உரிமையில்லை, தெரிவு செய்யப்படும் எம்.எல்.ஏ, எம்.பி போன்றோருக்கு சட்டத்தை அமல்படுத்தும் உரிமையில்லை, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நடத்திய போலீசு குற்றவாளிகளை தண்டிப்பதற்கு சட்டப்படி வழியில்லை…….. இவையெல்லாம் போலி ஜனநாயகத்திற்கு சில சான்றுகள்.

ஜனநாயக முறைப்படி நாம் நடத்தும் போராட்டங்கள் இந்த அரசியல் சட்டப்படியே அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களோ சில நேரம் அனுமதிக்கிறார்கள். பல நேரம் கைது செய்கிறார்கள். போராட்டங்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதும் இந்த அரசமைப்பு வழங்கியிருப்பதாக சொல்லப்படும் உரிமைகள். அதை நாம் உருவாக்கவில்லை. அந்த உரிமைகள் போலியாக இருக்கிறதென்றே சொல்கிறோம். அடுத்து இந்த போராட்டங்களும், நீதிமன்ற வழக்குகளும் நாம் எதிர்பார்க்கும் உண்மையான ஜனநாயகத்தை வழங்கிவிடாது என்பதையும் சேர்த்தே மக்களிடம் கொண்டு செல்கிறோம். இது உண்மைதான் என்பதை மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதன் மூலம் அரசும் உறுதி செய்கிறது.

அப்போது சட்டத்தை மீறியும் போராடுகிறோம். தூத்துக்குடியில் 144 தடைச்சட்டம் போடப்படுகிறது. மக்கள் அதை மீறுகிறார்கள். சாலையில் போக்குவரத்தை மறிக்க கூடாது என்று சட்டம் சொல்கிறது. மக்களை அதை மீறி போராடுகிறார்கள். டாஸ்மாக் போராட்டத்தின் போது பல கடைகளை மக்கள் தீயிட்டு கொளுத்தியதை சட்ட உரிமை மீறலாக பார்க்க கூடாது என உயர்நீதிமன்றமே சட்டவிரோதமாக விளக்கம் கொடுத்தது. ஆகையால் தேவைப்பட்டால் சட்டவிரோதமாக போராடுவோம் என மக்களே உணர்ந்து விட்ட காலமிது.

வினவு ஒரு மாற்று ஊடகம் என்று சொல்லும் போதே அது ஒரு மாற்று அரசியலையும் முன்வைக்கிறது, ஆதரிக்கிறது. கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் பெரிய கட்சிகள் மற்றும் முதலாளித்துவ உலகின் அரசியலை முன்வைக்கின்றன. அரசியலே இல்லாமல் எந்த ஊடகமும் இல்லை. அரசியல் கட்சிகளிலும் கூட முதலாளிகளின் நலனைப் பேசும் கட்சிகள், உழைக்கும் மக்களின் விடுதலையைப் பேசும் கட்சிகள் என்று பிரிந்தே இருக்கின்றன. வினவு உழைக்கும் மக்களின் அரசியலை ஆதரிக்கும் ஒரு மாற்று ஊடகம்.

♦ ♦ ♦

கேள்வி: பத்திரிக்கை துறையில் (வினவு)வலை பின்னலை உருவாக்க ஏதெனும் வடிவம் உண்டா?

– வெங்கடேஷ்

ன்புள்ள வெங்கடேஷ்,

பத்திரிகை துறையில் ஒரு வலை பின்னலை கண்டிப்பாக உருவாக்க வேண்டும். இது காலத்தின் தேவையும் கூட. நாடு முழுவதும் மக்கள் பத்திரிகையாளர்கள் – புகைப்படக் காரர்கள் உருவாக வேண்டும். இது சாத்தியமானால் பெரும் ஊடகங்கள் செய்ய முடியாத பணியினை மாற்று ஊடகம் செய்ய முடியும்.

படிக்க:
மாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி
♦ கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ?

பத்திரிகைத் துறையில் இருக்கும் பத்திரிகையாளர்கள் கருத்து ரீதியில் மக்களுக்கு பணியாற்ற விரும்புவோர் தமது ஓய்வு நேரத்தில் இத்தகைய மாற்று ஊடகங்களுக்கு தோள் கொடுக்க வேண்டும். அதே போன்று கல்வி- சினிமா – இலக்கியம் என அனைத்து துறைகளிலும் மக்கள் நலன் பாற்பட்டு சிந்திப்போர் பணிபுரிந்தால் மீடியாவில் நாம் ஒரு வலைப்பின்னலை நிச்சயம் உருவாக்க முடியும்.

இதை எப்படி சாதிப்பது, என்ன வடிவில் என்பதெல்லாம் உங்களைப் போன்ற வாசகர்களின் பங்கேற்போடுதான் செய்ய முடியும். ஆலோசனைகளைத் தெரிவியுங்கள்.

♦ ♦ ♦

கேள்வி : இப்போதைய தலைமுறை, பெரிய கட்டுரைகளை, நூல்களை படிப்பதில் ஆர்வம், ஆற்றல் இல்லாமல் உள்ளதே, இதற்கு மாற்று என்ன?
வினவு போன்ற மாற்று ஊடகங்கள், இதை எப்படி கையாளப் போகிறார்கள்?

– வசந்தன்

ன்புள்ள வசந்தன்,

முந்தைய தலைமுறை காலத்தில் எழுத்தறிவின் சதவிதமே குறைவு. இப்போதைய தலைமுறையில் எழுதப்படிக்க தெரிந்தோர் அதிகம் என்றாலும் கூடவே திசைதிருப்பும் அறிவியல் வளர்ச்சியும் அதிகம். இணையத்தில் அதிகம் உலாவுவோர் கூட அவர்கள் நீண்ட கட்டுரைகள் படிக்கும் வழக்கும் விருப்பம் உள்ளவராக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் அவர்களது இணைய டி.என்.ஏ-விலேயே தொடர்பற்று திரியும் நிலை உருவாகிவிடுகிறது. வேலை நிமித்தமாக இணையத்தில் இருப்போரின் கவனக்குவிப்பும் வெகுவாக குறைந்து விடுகிறது. இதை பல ஆய்வுகள் சுட்டுகின்றன.

இன்னொரு பக்கத்தில் இன்று படிக்கும், கேட்கும், பார்க்கும் தலைப்புகள் எண்ணிக்கை பிரம்மாண்டமாய் அதிகரித்திருக்கின்றன. முன்பு நாளிதழ் மட்டும் படிக்கும் வழக்கம் கொண்டிருப்போர் கூட இன்று ஒரு செய்தியை மேற்கண்ட மூன்று வடிவங்களிலும் பின் தொடர்கிறார்கள். இத்தோடு விவாதம் செய்யும் வழக்கமும் அதிகரித்திருக்கிறது.

மெரினா போராட்டத்தின் போதும் அடுத்து வந்த சில மாதங்களிலும் தமிழக மக்களிடையே அரசியல் விவாதங்கள் அதிகம் நடந்தன. தொலைக்காட்சிகளில் கூட செய்தி பார்ப்பதும், விவாதங்களை கவனிப்பதும் சற்றே அதிகரித்தன. தற்போது அந்த மாற்றம் முடிந்து இயல்பு நிலை அதாவது பொழுது போக்கு அம்சங்களை கவனிப்பது மீண்டும் வந்தாலும் முன்பிருந்ததை விட அரசியல் செய்தி படிப்போர் அதிகரித்திருக்கின்றனர்.

ஆகவே ஒரு நாட்டில் நடக்கும் போராட்டங்களும், மக்களின் வாழ்வை தீர்மானிக்கின்ற அரசியல் அம்சங்களும் கூட நீங்கள் சொல்லும் நீண்ட கட்டுரைகளை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேற்குலகில் தற்போது மார்க்சிய நூல்களை படிப்போர் அதிகரித்து வருகின்றனர். அவர்கள் இன்றைய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், ஃபேஸ்புக் தலைமுறையானாலும் அவர்களது போராட்டச் சூழல் அத்தகைய படிப்பை கோருகிறது. மார்க்சை படிப்பது என்பது நீண்ட கட்டுரைகளை படிப்பதை விட கடிமானது.

மேலும் எல்லா விசயங்களையும் நீண்ட கட்டுரைகளாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. யூ-டியூபில் பொழுது போக்கு விசயங்களே அதிகம் பார்க்கப்படுகின்றன. ஆனால் பணமதிப்பழிப்பின் போது தோழர் மருதையன் பேசிய கருப்புப்பணம் குறித்த நீண்ட உரைகள் பெரும் வரவேற்பு பெற்றன. இன்றும் கூட அந்த வீடியோக்கல் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படுகின்றன. குறிப்பிட்ட அரசியல் சூழல், அதன் தேவையை ஒட்டி இந்த ஆழமான உரைகளோ, நீண்ட கட்டுரைகளோ மக்கள் படிப்பார்கள்.

படிக்க:
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்
♦ நூல் அறிமுகம் : இசை போதை பொழுதுபோக்கு போராட்டம்

வினவு தளத்தைப் பொறுத்த வரை குறுஞ்செய்திகள், நடுத்தரமான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள், கள ஆய்வுகள், படக் கட்டுரைகள், வீடியோ செய்திகள், உரைகள் என எல்லா வடிவங்களிலும் செயல்பட வேண்டுமென்கிறோம்.

இன்னொரு புறம் மக்களிடையே இலக்கியம், அரசியல் போன்ற துறைகளில் ரசனை, தெளிவு, விவாத அடிப்படையில் விவாதக் குழுக்கள் ஆங்காங்கே கட்டப்பட்டு அதை வளர்க்கவும் முயல வேண்டும். ஒரு நூலைப் பற்றியோ, ஒரு திரைப்பட்த்தைப் பற்றியோ தொடர்ந்து விவாதிக்கும் வழக்கத்தின் மூலமாக மக்கள் அடுத்த கட்டமாக பெரிய நூல்களை படிக்கும் மனத்திண்மையினை அடைகிறார்கள்.

சமீபத்திய ஆண்டுகளாக தமிழில் நல்ல மொழிபெயர்ப்பு  நூல்களும், பொதுவான நூல்களும் அதிகம் வந்திருக்கின்றன. ஆனால் இலக்கிய எழுத்தாளர்கள் கூட சினிமா விமர்சனங்களைத்தான் அதிகம் எழுதுகிறார்கள், நல்ல நூல்களை அறிமுகப்படுத்துவதில்லை என்கிறார் முனைவர் ஆ.இரா. வெங்கடாசலபதி. உண்மைதான்.

வெண்டி டோனிகரின் “இந்துத்துவம் ஒரு மாற்று வரலாறு” நூலினை ஒவ்வொரு நகரத்திலும் ஒரு வருடம் விவாதிக்கலாம். அறிமுகப்படுத்தலாம். இது போன்று பொருளாதாரம், மார்க்சியம், வரலாறு என தமிழில் இருக்கும் நூல்களை படிக்குமாறு ஒரு அறிவியக்கம் பரவலாகாமால் மக்கள் படிப்பதற்கு முன்வரமாட்டார்கள். எதிர்காலத்தில் இந்த ஆலோசனைகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

♦ ♦ ♦

கேள்வி : Need audio file for communism education ஆடியோவில் கம்யூனிச கல்வி தேவை!

– தீபக்

ன்புள்ள தீபக்,

நிச்சயம் செய்கிறோம். மார்க்சிய பாடங்களை நடத்துவதை நீண்டகாலமாக ஒத்திப் போட்டு வந்துள்ளோம். கூடிய விரைவில் உரை வடிவில் செய்ய முயல்கிறோம். தற்போது பொருளாதரம் தலைப்பில் ஒரு தொடரை வெளியிட்டு வருகிறோம்.

நன்றி.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

கஜா புயல் நிவாரணத்திற்குப் போராடிய இனியவனை வேட்டையாடும் போலீசு !

‘என் சாவுக்கு காரணம் எடப்பாடி அரசும், தமிழக போலீஸும்தான்’ – ’கஜா’ புயலில் பாதிக்கப்பட்ட இளைஞரின் ஃபேஸ்புக் வீடியோ வாக்குமூலம்!

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் (தி.மு.க) ராஜேந்திரனின் மகன், இனியவன். இதழியல் படித்த இவர், தலைஞாயிறு பகுதியில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்வந்து செயல்படக்கூடியவர்.

கஜா புயலால் தலைஞாயிறு பேரழிவை சந்தித்த அந்த இரவில், அந்தந்தப் பகுதி இளைஞர்கள்தான், துடிப்புடன் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றினார்கள். அதில் இனியவனும் ஒருவர். புயல் அடித்து பல நாட்களாகியும் உணவின்றி, நீரின்றி, வசிப்பிடமின்றி மக்கள் பரிதவித்து நின்ற வேலையில், நிவாரணம் வழங்காத தமிழக அ.தி.மு.க. அரசை கண்டித்து பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி, தலைஞாயிறு பகுதியிலும் நடந்தது. அதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றதைப் போலவே இனியவனின் பங்கேற்றார்.

ஆனால், அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள் விரட்டி அடித்தப் பிறகு, நிவாரணம் கேட்டு போராடிய அத்தனை மக்களையும் மிக மோசமாக தாக்கியது தமிழக காவல்துறை. அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் மக்களை நள்ளிரவில் தேடிப்பிடித்து கைது செய்வது, அவர்களை திருச்சி உள்ளிட்ட நெடுந்தொலைவு சிறைகளில் அடைப்பது… என இன்றுவரை சித்திரவதை தொடர்கிறது. நேற்று கூட தலைஞாயுறு அருகே உள்ள லிங்கத்தடி என்ற ஊரில் ஓர் இளைஞரை கைது செய்துள்ளனர்.

இதில் இளைஞர் இனியவனின் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பதுடன் தினம்தோறும் அவரைத் தேடிச்சென்று, ‘வந்தால் என்கவுண்டரில் போட்டுவிடுவோம்’ எனவும் போலீஸ் மிரட்டி வருகிறது. ஏற்கெனவே இவரது அப்பா ராஜேந்திரனையும், அண்ணனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவரைத் தேடி வருகின்றனர். இதனால் அவர் ஒரு மாதத்தும் மேலாக தலைமறைவாகவே சுற்றி வருகிறார். இந்நிலையில்தான், டிசம்பர் 24-ம் தேதி, இன்று இரவு 8 மணி அளவில் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

படிக்க:
கஜா புயல் : நின்று கொல்கிறது அரசு ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு
♦ கஜா புயல் நிவாரணம் : மோடியிடம் பிச்சை எடுக்காதே ! தமிழகத்தின் உரிமையைக் கேள் !!

அதில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தன்னையும், தன் குடும்பத்தையும், தங்களைப் போன்ற பலரையும் இந்த தமிழக அரசும், காவல்துறையும் தீவிரவாதிகளைப் போல தேடி வருவதாகவும், இந்த வேதனை தாங்காமல் தான் விஷம் குடித்துவிட்டதாகவும் கூறுகிறார். கண்ணீர் மல்க பேசும் அவர், தன் மரணத்தின் மூலமாகவேனும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்.

இனியவன் எந்த ஊரில் இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், அவரது தற்போதைய உடல்நிலை என்ன என்பது குறித்து உடனடி விவரங்கள் கிடைக்கவில்லை. தற்போது அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தகவல் வந்திருக்கிறது. இதையும் உறுதிப்படுத்த வேண்டும். போலீசோ அவரை கைது செய்து கடுமையான பிரிவுகளில் வழக்குப் போட காத்திருக்கிறது. அவரது பெற்றோருக்கு கூட அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. புயல் நிவாரணப்பணிகள் சரியாக நடக்கவில்லை என்றது கூட இந்நாட்டில் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது என்றால் இதை விட இழிவு வேறு என்ன வேண்டும்?

*****

தலைஞாயிறு இனியன் உயிருக்கு ஆபத்து ?

தலைஞாயிறு இனியன் தலைமறைவாக இருக்க நேர்ந்துள்ளது குறித்து எங்கள் அறிக்கையில் விரிவாக எழுதியுள்ளேன். சுற்றியுள்ள மூன்று தலித் குடியிருப்புகளும் இன்று கடும் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளன. நாங்கள் சென்றிருந்தபோதே 40 க்கும் மேற்பட்டவர்கள் கைதாகியிருந்தனர். நள்ளிரவுக் கைதுகளுக்குப் பயந்து ஆண்கள் ஊரிலேயே இருக்க முடியவில்லை. பெண்களும் இரவுகளில் கோவிலில் சென்று தஞ்சமடையும் அவலம்.

தலைஞாயிறு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ராஜேந்திரன் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றவர். இன்று அவரது குடும்பத்தில் அவரும் அவரது மூத்த மகனும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இன்னொரு மகன் இனியவன்மீது ஏகப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்யத் தீவிரமாகத் தேடப்படுவதால் அவர் தலைமறைவாகி உள்ளதையும் எங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

அவர் அகப்பட்டால் என்கவுன்டர் செய்து கொன்றுவிடுவார்கள் என்கிற அச்சமும் பீதியும் ஊர் மக்கள் மத்தியில் பரவி இருந்ததையும் குறிப்பிட்டிருந்தோம்.

நேர்றிரவு அந்த ஊரிலிருந்தும் இதழாளர் கவின்மலரிடமிருந்தும் வந்த தொலைபேசிச் செய்திகளிலிருந்து இனியன் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிய வந்தது. ஆனால் அவர்களுக்கும் அவர் இருப்பிடம் தெரியவில்லை. வழக்குரைஞர்கள் தனசேகர், தை.கந்தசாமி முதலானோரும் பிற நண்பர்களும் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரை நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சியில் உள்ளனர்.

இனியவன் மீது ஏன் இந்த ஆத்திரம்? உள்ளூர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் குறித்து கஜாபுயலை ஒட்டி இனியவன் பேசிய ஒரு உரை பெரிய அளவில் வைரலாகப் பரவியதுதான் காரணம் எனச் சொல்கின்றனர். அந்த உரையை நீங்கள் கவின்மலர் முகநூல் பக்கத்தில் காணலாம்.

இனியனின் உரை – சன் நியூஸ்

முன்னாள் அரசு ஊழியரும் சமூகநலச் செயல்பாட்டாளரும் உள்ளூர் CPI கட்சியின் செயலருமான சோமு.இளங்கோ அவர்களும் கூட கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் தொடர்பில் இல்லாமல் உள்ளார்.

புயலால் ஏற்பட்ட பாதிப்பைவிடக் கொடும் பாதிப்பாக இது உள்ளது. அரசியல் கட்சிகளும் இதைக் கண்டிக்க வேண்டும்.

நன்றி -Marx Anthonisamy

திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை | வி.இ. குகநாதன்

லகிற்கே அறத்தைக் கற்பித்த திருக்குறளானது தமிழ் உலகின் இணையில்லாப் படைப்பாகும். இத்தகைய பெருமை மிகு குறளினை மறைக்கும் / எதிர்க்கும் முயற்சியினைப்  பார்ப்பனியமானது காலகாலமாக மேற்கொண்டுவருகின்றது.  `கடவுள்`  என்ற சொல்லே இல்லாத திருக்குறளினை `கடவுள் வாழ்த்து` என அதிகாரம் அமைத்து தொடங்குவதிலிருந்து இந்த அரசியல் தொடங்குகின்றது (அதிகாரங்கள் எல்லாம் பின்நாளில் வகுக்கப்பட்டதே).  வள்ளுவன் குறிப்பிடுவது எல்லாம் இறைவன், தெய்வம் ஆகிய இரு சொற்களே.  இங்கு `இறைவன்`  என்பது இறை (வரி) அறவிடும் தலைவனை / அரசனையே குறிக்கின்றது (மக்களை இறுக்குவதால் இறை) .  தெய்வம் என்பது ஒரு பாலறியாக் கிளவி. இங்கு இயற்கையோடு ஒன்றிய மூத்தோர் வழிபாடு, இயற்கை போன்றவற்றையே தெய்வம் என்பது குறிக்கும்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” – (குறள்50)

இங்கு மூத்தோர் வழிபாடே ஒரு வகையில் தெய்வமாகக் காட்டப்படுகின்றது. இத்தகைய இயற்கையோடு ஒன்றிய இறைவன், தெய்வம் என்பவற்றைப் பின்நாளில் கடவுள் வாழ்த்தாக்கியதே முதல் புரட்டு ஆகும்.

பரிமேலழகரின் உரைப்பாயிர அரசியல்:

திருக்குறள் குறிப்பிடும் அறத்துப்பாலில் அறம் என்ற சொல் முதன்மையானது. அறம் என்ற சொல்லானது அறுத்தல் என்ற வினைச்சொல்லினை அடிப்படையாகக்கொண்ட ஒரு சொல்லாகும் (அறு+அம்=அறம்). எவற்றை அறுக்க (விட்டொழிக்க) வேண்டும். இதோ வள்ளுவனே கூறுகின்றார்.

“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.” – (குறள்:35)

அதாவது அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) ஆகிய நான்கையும் அறுப்பதே அறம் எனப்படும் என்கின்றார் வள்ளுவர்.

இன்னொரு இடத்தில் வள்ளுவன் “மனத்தின்கண் குற்றம் இல்லாது இருத்தலே அறவழியில் செல்லுதலாகும்” என்கின்றார். இதனையே பின்வரும் குறள் காட்டுகின்றது.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.” – (குறள்:34)

மணிமேகலையும் அறத்திற்கு விளக்கம் கொடுக்கின்றார்.

“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்”.

இந்த `அறம்` என்ற சொல்லிற்கு ஓரளவிற்கு சரிநிகரான சொல்லாக கிரேக்கச் சொல்லான `Ethics` காணப்படுகின்றது. `தர்மம்` என்ற வடசொல்லிற்கு நிகராக அறத்தை கருதுவது தவறு, ஏனெனில் தர்மம் ஆட்களிற்கேற்ப வேறுபடும். அதாவது ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரரிற்காகப் பொய் சொல்லுவது தொழில் தர்மம் என்பார்கள். ஆனால், அது அறமாகாது. அறம் எப்பொழுதும் பொது நன்மை கருதியே காணப்படும். எமக்கு எது தேவையோ அதுவே தர்மமாகும் எனக் கூறுவதுபோல அறத்தை வளைக்க முடியாது. அதனால்தான் மனு சுமிர்தியினை (Manusmriti ) மனுதர்மம், மனுநீதி என்றெல்லாம் அழைப்பார்கள். ஆனால் `மனு அறம்` என அழைக்க அவர்களிற்கே நா கூசும் (அதேபோன்றே சனாதன தர்மமும்).

பரிமேலழகர் இத்தகைய சிறப்புவாய்ந்த சொல்லான அறம் என்பதற்குப் பொருந்தா விளக்கம் கொடுக்கின்றார். பரிமேலழகர் தனது உரைப்பாயிரத்தில் “அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கின ஒழித்தலும் ஆகும்” என்கின்றார். அதாவது மனுதர்மத்தில் கூறப்பட்டவையே அறம் என வேண்டுமென்றே பொய் சொல்லுகின்றார். திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க; மறுபுறத்தே மனுதர்மத்திற்கும், குறள் விளக்கும் அறத்திற்குமிடையே மலைக்கும் மடுவிற்குமுள்ள வேறுபாடுகள் உண்டு. பிறப்பினடிப்படையிலான வர்ணாச்சிரம சாதிக் கோட்பாட்டினை வலியுறுத்தும் மனுநீதி எங்கே? பிறப்பொக்கும் எனப் பாடி பிறப்பிலடிப்படையிலான வேறுபாடுகளை அறவே களையும் குறள் எங்கே?

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.” – (குறள் :972)

அதுமட்டுமல்ல, கொல்லாமையினை வலியுறுத்தும் குறள் எங்கே?

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”. – (குறள் :260)

பார்ப்பனர்களை பசுக்களை கொன்று உண்ணுமாறு கூறும் மனுநீதி எங்கே?

“சிராத்தத்தில் வரிக்கப்பட்ட பார்ப்பனன், புலால் உண்ண மறுத்தால், 21 பிறவிகள் பசுவாய்ப் பிறப்பான்”. – (மனுநீதி சுலோகம்:35).

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”. – (குறள் : 1039)

என வேளாண்மையினைப் (கமத்தினை) புகழும் குறள் எங்கே? பயிர் செய்தலைப் பாவகரமாகப் பார்க்கும் மனுநீதி எங்கே?

இவ்வாறு திருக்குறள் குறிப்பிடும் அறத்திற்கு முற்றிலும் முரணாக மனுநீதி காணப்பட, எவ்வாறு மனுநீதி முதலிய நூல்கள் விதித்ததுதான் அறம் என பரிமேலழகர் கூறுகின்றார்? வேறு ஒன்றுமில்லை, அவருடைய  பார்ப்பனச்சாதிப் பற்றே அவ்வாறு பச்சைப்பொய் சொல்லவைத்தது. இந்த பரிமேலழகர் கக்கிய நஞ்சின் நீட்சியே இன்றைய நாகசாமியின் ` Tirukkural – An Abridgement of Shaastras ` என்ற புத்தகம் ஆகும்.

திருக்குறளை திரிக்க முயலும் ஒரு ஆங்கில நூல் –
` Tirukkural – An Abridgement of Shaastras`

நாகசாமி என்பவர் Tirukkural – An Abridgement of Shaastras என்றொரு (புத்தகத்தினை) புரட்டினை எழுதியுள்ளார். அதில் மனுதர்மம் முதலிய சமசுகிரத நூல்களின் பிழிவிலிருந்தே (சாரம்சம்) திருக்குறள் தோன்றியதாக வழமையான பார்ப்பன புரட்டினை கூறியுள்ளார். மனுதர்மம் காலத்தால் திருக்குறளிற்குப் பிற்பட்டது என்று ஏற்கனவே அறிஞர்களால் சான்றுபடுத்தப்பட்டதனை அவர் கவனத்திற்கொள்ளவில்லை. நூலின் தலைப்பிலும், நூல் முழுவதுமே திருக்குறள் வடமொழி சாத்திரங்களின் வழிவந்ததே என அழுத்திக் கூறும் இவர், ஓரிடத்தில் மட்டும் இது எதிர்கால ஆய்விற்குரியது என்கின்றார்.

திருக்குறள் மீது பார்ப்பனர்களின் ஒவ்வாமை வரலாறு அறிந்ததே. “தீக் குறளை சென்று ஓதோம்” (கோள் சொல்லுதல் கூடாது) என்ற ஆண்டாள் பாடலிற்கு “திருக்குறளை ஓதவேண்டாம்” என வலியப் பொய் சொன்ன மூத்த சங்கரச்சாரியார் முதல் “முதல் பத்து குறள்களை மட்டுமே பயன்படுத்தலாம்” என்று சொன்ன செயேந்திர சங்கரச்சாரியார் ஈடாக இன்றைய நாகசாமியின் இப் புத்தகம் வரை இந்த தமிழ் வெறுப்பினைக் காணலாம். இப் புத்தகத்தின் பொய்மையினை உடைக்க சங்கரச்சாரியார் விரும்பும் முதல் பத்து குறள்களிலேயே சில குறள்களை முதலில் நாமும் அவர் விருப்பப்படி எடுத்துக்கொள்வோம்.

மனுநீதி முதலான பார்ப்பனிய சாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வர்ணாச்சிரம கோட்பாடே ஆகும். ரிக்வேத புருச சூத்திரத்தின் 10 வது சுலோகமான பிரம்மனின் படைப்புக் கோட்பாடே  சாத்திரங்களின் அடிப்படை. இதன்படி சூத்திரன் காலிலிருந்தே பிறந்தவர்கள் எனக் கூறி தமிழர்களை இழிவுபடுத்துகின்றது ரிக்வேதம். இக் கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. இப்போது முதல் பத்து குறள்களில் (பின்நாளில் கடவுள் வாழ்த்தாக்கப்பட்ட) குறள்களில் 7 குறள்களை எடுத்து, அதற்கு முனைவர் மறைமலை இலக்குவனார் கொடுத்த விளக்கங்களையே துணையாகக் கொள்ளப்போகின்றேன். இங்கு நீங்கள் கவனிக்கவேண்டிய விடயம் பின்வரும் 7 குறள்களிலும் காலின் பெருமையினைப் பேசியே வள்ளுவன் ரிக்வேத புருச சூத்திரத்திற்குப் பதிலடி கொடுக்கின்றார்.

“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்” – (குறள் 2)

{தூய அறிவுடைய ஆசிரியரின் தாளை – (காலை) வணங்காவிட்டால் கற்றதனால் பயன் ஒன்றும் இல்லை என்கிறார்.}

“மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்” (குறள் 3)

{திருவள்ளுவர். மாண்பு உடையவர்களின் – சிறப்பு உடையவர்களின் – அடிகளைப் பொருந்தி வாழ்பவர்களே நீடு வாழ்பவர்களாம் எனவே தலையில் பிறந்ததாக ஆணவம் கொள்ளாமல் காலை வணங்க வேண்டும்}

“வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார்க் கு
யாண்டு மிடும்பை மில” (குறள் 4)

{துன்பம் இல்லாது வாழ என்ன செய்ய வேண்டும் என்கிறார்? விருப்பு வெறுப்புடன் எதையும் – யாரையும் பார்க்காத – அணுகாத கண்ணோட்டம் உடைய விருப்பு வெறுப்பு அற்றவர்களின் அடியை ( பாதம்)வணங்க வேண்டும்}

“தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது”. (குறள் 7)

{மனத்துன்பத்தை யாரால் போக்க முடியும்? ஒப்பு நோக்குவதற்கு இணையற்ற ஆற்றோர்  திருவடிகளைப் பற்றினால் அன்றி மனக்கவலைகளை மாற்ற இயலாது எனத் திருவள்ளுவர்}

“அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது” (குறள் (8)

{பொருட்கடலிலும் இன்பக்கடலிலும் திளைக்க வேண்டும் என்றால் அழகிய பண்புநலன்கள் உடைய அறவோர்களின் தாள் ( கால் ) பணிதல் வேண்டும் என்கிறார்} (அந்தணர் = அறவோர், பார்ப்பனரல்ல)

தலையில் பிறந்ததால் உயர்வு என்போரை அடிசாய்க்கும் வகையில் திருவள்ளுவர் மற்றொரு கருத்தைக் கூறுகிறார். என்னவென்று?

“கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”. (குறள் 9)

{எண்ணிப் போற்றும் குணம் உடையவனின் தாளை வணங்காத தலை பயன் அற்றது }

“பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்”. (குறள் 10)

{நல்ல பண்புகளை உறைவிடமாகக் கொண்டவர்கள் – கல்விச் செல்வம் தங்கியிருப்பவர்கள் – அதிகார ஆளுமை தங்கியிருப்பவர்கள் ஆகிய இறைமையாளர்களின் அல்லது இறைவனின் அடி  சேர்ந்தவர்களால் மட்டும் அவர்கள் வழிகாட்டுதலில் துன்பக்கடலைக் கடக்கமுடியும்}.

நாகசாமி .

பார்த்தீர்களா! வள்ளுவன் எவ்வாறு முதல் அதிகாரத்திலேயே ரிக்வேத புருச சூத்திர படைப்புக் கோட்பாட்டினை காலின் பெருமை பேசி தகர்த்து எறிந்துள்ளார். இங்கு வள்ளுவன் காலின் பெருமைகளைப் பேசி சூத்திரர்களை உயர்ந்தவராகக் காட்டமுயல்கின்றார் என்பதல்ல, மாறாக முள்ளை முள்ளால் எடுப்பதுபோல கால்களின் பெருமையினை உவமையாகக் கையாண்டு புருச சூத்திர படைப்புக் கோட்பாட்டினைத் தகர்த்து எறிகின்றார். இவை எல்லாவற்றிற்றிற்கும் முத்தாய்ப்பாக அமைந்த குறள் வருமாறு

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”. (குறள் 972)

மேற்கூறிய குறளில் `எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே` என மேற்குறித்த குறளில் வர்ணாச்சிரமக் கோட்பாட்டினையே தகர்த்து எறிகின்றார்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று” (குறள் 259)

என்ற குறளின் மூலம் பார்ப்பனச் சடங்கான வேள்வியினையே (யாகம்) ஏளனம் செய்கின்றார் வள்ளுவன்.

“மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்” (குறள் 134)

என்ற குறள் வேறு  பார்ப்பனர் என்ற சொல்லையே பயன்படுத்திச் சாடுகின்றார் வள்ளுவர்.

படிக்க:
திருக்குறளும் எளிமையான தமிழ் இலக்கணமும் | பொ வேல்சாமி
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

இவ்வாறு குறள்களை அடுக்கிக்கொண்டே போகலாம், விரிவஞ்சி நிறுத்துகின்றேன். இத்தகைய முழுவதும் பார்ப்பன – ஆரிய எதிர்ப்பாக அமைந்த திருக்குறளை `ஆரிய சாத்திரங்களின் சாரம்` என நூல் எழுதுபவர்களை என்ன சொல்லுவது!

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”. (குறள் : 423)

வி.இ. குகநாதன்

பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 3

இத்துடன் ஆசிரியர் அனிக்கினின் முன்னுரை முடிகிறது. இந்த நூல் முதலாளித்துவம் தோன்றி நிலைப்பட்ட மூன்று நூற்றாண்டுகளில் அரசியல் பொருளாதாரம் எனும் துறையின் அடிக்கற்கள் எப்படி தோற்றுவிக்கப்பட்டன என்பதை விவரிக்கிறது. இந்த காலகட்டத்தின் நடை உடை பாவனைகள் மட்டுமல்ல பொருளாதரத்தின் குறிப்பிட்ட நிலையும் கூட ஆரம்ப கால பொருளாதார அறிஞர்களின் சிந்தனையில் செல்வாக்கு செலுத்தின. இப்பகுதியில் ஆரம்ப ஆண்டுகளில் எந்தெந்த நாடுகளில் இருந்து அறிஞர்கள் பொருளாதாரத்தை பேசினர், அவர்களின் பங்கு என்ன என்பதை சுருக்கமாக அறியத் தருகிறார் ஆசிரியர். இதை நூலில் விரிவாக காண இருக்கிறோம். இதற்கு அடுத்த பகுதியில் இருந்துதான் இந்த நூலின் முதல் அத்தியாயம் துவங்குகிறது. அதில் பூர்வீக மனிதன் செய்த முதல் கோடரி, வில்லிலிருந்து ஆசிரியர் கதை சொல்ல துவங்குகிறார்.

மூன்று நூற்றாண்டுகள்

அ.அனிக்கின்
 பொருளாதார அறிஞர்களின் கருத்துக்கள் தங்கள் நாடுகளின் சமூக மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சி மட்டத்தினால் மிகப் பெரிய அளவுக்கு நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே இந்தப் புத்தகத்தில் அவர்களுடைய வாழ்க்கை மற்றும் பணிகளைப் பற்றிய வர்ணனையில் அந்தக் காலகட்டத்தில் அந்த நாடுகளில் நிலவிய பொருளாதாரக் கூறுகளைப் பற்றிய சுருக்கமான உருவரையை வாசகர் காண்பார்.

பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அரசியல் பொருளாதாரத்தின் முன்னேற்றம் ஒரு புதிய சமூக அமைப்பின் வளர்ச்சியினால், அதாவது அந்த சமயத்தில் முற்போக்குடையதாக இருந்த முதலாளித்துவம் என்ற சமூக அமைப்பினால் முன்நிர்ணயம் செய்யப்பட்டது. சிறந்த திறமையும் சக்தி மிக்க ஆளுமையும் கொண்ட நபர்கள் மாபெரும் சிந்தனையாளர்களாகத் தோன்றினார்கள்.

மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் ஒரு காட்சியை நாம் ஒரு வினாடி கற்பனை செய்து பார்ப்போம். அவர்களிடம் எவ்வளவு வேறுபாடுகளைக் காண்கிறோம்!

அவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பிரெஞ்சுக்காரர்களும் ஓரளவுக்கு இருக்கிறார்கள். இது ஆச்சரியமல்ல. அன்று இங்கிலாந்து முன்னணியிலிருந்த முதலாளித்துவ நாடு; மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் கூட அரசியல் பொருளாதாரம் என்பது மிகவும் அதிகமான அளவுக்கு இங்கிலாந்தின் விஞ்ஞானமாகவே கருதப்பட்டது. பிரான்சிலும் கூட மற்ற நாடுகளைக் காட்டிலும் சீக்கிரமாகவே முதலாளித்துவம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது; ‘அரசியல் பொருளாதாரம்’ என்ற வார்த்தையே முதலில் பிரெஞ்சு மொழியில்தான் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்களில் அமெரிக்கர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்; ஆனால் அறிவுசான்ற மேதையான பிராங்கிளின் அவர்களில் ஒருவர்.

முதல் பொருளாதார நிபுணர்கள் மார்க்சின் வார்த்தைகளில் ”தொழில் செய்பவர்களும் இராஜீயவாதிகளுமாக” இருந்தது வழக்கமானதே. பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் அரசு நிர்வாகத்தின் செய்முறைத் தேவைகளே பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்குமாறு அவர்களைத் தூண்டின.

மான்கிரெட்டியேன் (வலது) ஜார்ஜ் வாக்கர் மற்றும் வில்லியம் லெவிஸ் (இடது)

அங்கே ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவர்கள் இருக்கிறார்கள். நீண்ட தலை முடியோடு சரிகை உடையணிந்த பெருந்தகையினரையும் கச்சிதமாகவும் கண்ணியமாகவும் உடையணிந்த, முதலாளித்துவத் திரட்டலின் ஆரம்பக் காலத்தைச் சேர்ந்த வியாபாரிகளையும் பார்க்கிறோம். இவர்கள் அரசர்களுக்கு ஆலோசனை சொல்கின்றவர்கள் – வாணிப ஊக்கக் கொள்கையினரான மான்கிரெட்டியேன், தாமஸ்மான் ஆகியோர்.

இன்னொரு கோஷ்டி, இவர்கள் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைத் தோற்றுவித்தவர்களான பெட்டி, புவாகில்பேர் மற்றும் ஆடம் ஸ்மித்தின் இதர முன்னோடிகள். தலையில் பெரிய டோபாவும் நீண்ட கோட்டும் உள்ளே திருப்பிவிடப்பட்ட அகன்ற கைகளும் கொண்ட உடைகளை அணிந்திருக்கிறார்கள். இவர்கள் தொழில்முறையில் அரசியல் பொருளாதாரத்தில் ஈடுபடவில்லை; ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு தொழில் இன்னும் தோன்றவில்லை. பெட்டி – ஒரு மருத்துவர்; தோல்வியடைந்த அரசியல்வாதி. புவாகில்பேர்  -ஒரு நீதிபதி. கான்டில்லான் – ஒரு வங்கி முதலாளி. லாக் – ஒரு பிரபலமான தத்துவஞானி. அவர்கள் அரசர்களிடமும் அரசாங்கங்களிடமும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள். இப்பொழுது அறிவு வளர்ச்சிபெற்று வருகின்ற பொதுமக்களுக்காகவும் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் இந்தப் புதிய விஞ்ஞானத்தைப் பற்றிய தத்துவப் பிரச்சினைகளை முதல் தடவையாக எழுப்புகிறார்கள். இவர்களில் பெட்டி குறிப்பிடத்தக்கவர். அவர் சிறந்த சிந்தனையாளர் மட்டுமல்ல; தெளிவும் முனைப்பும் கொண்ட தற்சிந்தனையாளர்.

ஜான் லோ

இதோ சுறுசுறுப்புமிக்க ஜான் லோ. இவர் திட்டங்கள் தயாரிப்பதில் நிபுணர்; வீர சாகசக்காரர்; காகிதப் பணம் வெளியிடலாம் என்பதை முதலில் ” கண்டுபிடித்தவர்”; பணவீக்கத்தின் முதல் தத்துவாசிரியர் மட்டுமல்ல, அதை நடைமுறையில் பிரயோகித்தவர். லோவின் முன்னேற்றமும் வீழ்ச்சியும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு வரலாற்றின் உயிர்க்களை ததும்பும் பக்கங்களில் ஒன்றாகும்.

மோலியேர் அல்லது ஸ்விப்டின் படங்களில் நாம் காண்பது போன்ற பெரிய டோபாக்களுக்கு பதிலாகக் குட்டையான, முகப் பூச்சு தடவிய டோபாக்களைப் பார்க்கிறோம். இவற்றில் நெற்றியின் மீது இரண்டு முடிச்சுருள்கள் தொங்குகின்றன. பின்னங்காற் சதைகளை வெண்மையான பட்டுக் காலுறைகள் மூடியிருக்கின்றன. இவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்த பிரெஞ்சுப் பொருளாதார நிபுணர்களான பிஸியோகிராட்டுகள், அறிவியக்கத்தின் மாபெரும் தத்துவஞானிகளின் நண்பர்கள். பிரான்சுவா கெனே அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர். அவர் தொழிலால் மருத்துவர்; விருப்பத்தினால் பொருளாதார நிபுணர். இன்னொரு சிறந்த அறிஞர் டியுர்கோ ; புரட்சிக்கு முந்திய பிரான்சின் மிகச்சிறந்த முற்போக்கான அரசியல்வாதிகளில் ஒருவர்.

ஆடம் ஸ்மித்… அவர் புகழ் ருஷ்யாவில் மிக அதிகமாகப் பரவியிருந்தது. அதனால்தான் புஷ்கின் தன்னுடைய எவ்கேனிய் ஒநேகின் என்ற கவிதை நாவலில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருபதுகளில் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனைச் சித்திரிக்கும் பொழுது பின்வருமாறு எழுதினார்:

ஆடம் ஸ்மித்திடம் அறிவைத் தேடினார்
பொருளியலில் அவர் புலியானார்.
தங்கத்தின் பேருதவி இல்லாமல்
அரசுகள் வளமாக ஆரோக்கியமாக
இருப்பது எப்படி என்பதை
அவர் அழகாகச் சொல்லுவார்.
அந்த இரகசியம் என்ன?
ஆதாரமான மூலப்பொருட்கள்; அவை
அங்கே செல்வத்தைக் குவிக்கின்றன.(1)

ஸ்மித்தின் வாழ்க்கை அநேகமாக நியூட்டனின் வாழ்க்கையைப் போன்றதாகும். அதில் வெளியே நடைபெறுகின்ற சம்பவங்கள் குறைவு; ஆனால் அதிகத் தீவிரமான அறிவுசார்ந்த வாழ்க்கை உள்ளே இருக்கிறது.

ஸ்மித்தைப் பின்பற்றியவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அரசியல் பொருளாதாரத்தில் ஈடுபடுவது என்றால் ஸ்மித்தைப் பின்பற்றுவது என்றுதான் அர்த்தம். அந்த மாபெரும் ஸ்காட்லாந்துக்காரரை ”சரி செய்ய” (அதாவது குறைகளை அகற்றுவது என்ற அர்த்தத்தில் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகச் “சரியான து” என்ற அர்த்தத்தில்) ஆரம்பித்திருந்தார்கள். இந்தப் பணியை பிரான்சில் ஸேய், இங்கிலாந்தில் மால்தஸ் போன்றவர்கள் செய்தனர். பல்கலைக் கழகங்களில் அரசியல் பொருளாதாரத்தைக் கற்பிக்கத் தொடங்கினர்; பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கு அது ”அவசியமானது” என்ற நிலை ஏற்பட்டது.

இப்பொழுது செல்வம் படைத்த வங்கிக்காரரும் சுயமாகக் கல்வி கற்ற மேதையுமான டேவிட் ரிக்கார்டோ காட்சியில் தோன்றுகிறார். இது நெப்போலியன் யுகம். எனவே அவர் தலையில் டோபா காணப்படவில்லை. பழைய காலத்து நீளமான கோட், முழங்கால் வரை கால் லேசு களுக்கு பதிலாக அவர் உள்கோட்டும் நீளமான, உடலுடன் ஒட்டிய குறுங்கால் சட்டையும் அணிந்திருக்கிறார். முதலாளித்துவ மூலச்சிறப்பான அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ரிக்கார்டோ முடித்து வைத்தார். முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகள், தொழிலாளர்கள் என்ற இரண்டு முக்கியமான வர்க்கங்களின் நலன்களுக்கிடையே உள்ள போராட்டத்தை அவர் சுட்டிக் காட்டினார். ஆனால் அவருடைய வாழ்நாளுக்குள்ளாகவே அவர்மீது தாக்குதல்கள் தொடங்கிவிட்டன.

படிக்க :
♦ கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்
♦ சோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு !

ரிக்கார்டோவைப் பின்பற்றியவர்களை வெவ்வேறான பல குழுக்களாகப் பிரிக்கலாம். ஒரு பக்கத்தில் சோஷலிஸ்டுகள் அவருடைய போதனையை முதலாளி வர்க்கத்துக்கு எதிராக உபயோகிப்பதற்கு முயற்சித்தார்கள். மறுபக்கத்தில் முதலாளித்துவ விஞ்ஞானத்தில் ரிக்கார்டோவின் போதனையின் மிச்சத்தில் கொச்சையான அரசியல் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்சின் பணிகள் ஆரம்பமான பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாற்பதுக்களை நாம் நெருங்கி வருகிறோம்.

மூலச்சிறப்புடைய பொருளாதார அறிஞர்கள் முதலாளி வர்க்கத்தின் மிக முற்போக்கான பகுதியின் கருத்துக்களை எடுத்துக் கூறும்பொழுது இங்கிலாந்தில் உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இடம் பிடித்திருந்த, பிரான்சில் பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசியில் ஏற்பட்ட புரட்சி வரை மேலாதிக்கம் வகித்த நிலப்பிரபுத்துவ, நிலவுடமையாளர்களான பிரபுக்களோடு மோதிக்கொண்டார்கள். பிரபுக்களின் நலன்களுக்குத் துணையாக இருந்த அரசுடனும் நாட்டிலிருந்த திருச்சபையோடும் மோதிக் கொண்டார்கள். முதலாளித்துவ அமைப்பிலிருந்த ஒவ்வொன்றையும் அவர்கள் அங்கீகரித்தார்கள், ஏற்றுக் கொண்டார்கள் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. எனவே பல பொருளாதார நிபுணர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்ப்பு, கலகம், போராட்டம் ஆகியவற்றைச் சந்தித்தனர். ஸ்மித் எவ்வளவோ ஜாக்கிரதையானவர்தான்; ஆனால் அவரும் பிற்போக்கு சக்திகளால் தாக்கப்பட்டார். மார்க்சுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த சோஷலிஸ்டுகளில் உயர்ந்த கொள்கைகளையும் தனி முறையாகவும் பொது வாழ்க்கையிலும் அதிகமான துணிச்சலையும் கொண்ட பலரைச் சந்திக்கிறோம்.

இங்கே பரிசீலிக்கப்படும் காலகட்டத்தின்போது ருஷ்யாவில் சில துணிச்சலான தற்சிந்தனையாளர்கள் தோன்றினார்கள் என்ற போதிலும், இந்தப் புத்தகத்தில் ருஷ்யாவின் பொருளாதாரத் தத்துவத்தின் முன்னோடிகளைப் பற்றிச் சொல்லப் போவதில்லை. ருஷ்யாவில் மாபெரும் பீட்டர் காலகட்டத்தைச் சேர்ந்த அருமையான எழுத்தாளரும் விஞ்ஞானியுமான இவான் பொசோஷ்கோவை (1652-1726) மட்டும் இங்கே குறிப்பிடுவது போதுமான து. ருஷ்யாவில் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி விசேஷமான கவனம் செலுத்தி எழுதப்பட்ட முதல் கட்டுரையை இவர் எழுதினார்; புரட்சிகரமான அறிவியக்கத்தினரும், “பீட்டர்ஸ் பர்க்கிலிருந்து மாஸ்கோவுக்கு ஒரு பயணம்” என்ற பிரபலமான புத்தகத்தின் ஆசிரியரும், அந்தப் புத்தகத்தில் நிலவுடமையாளர்களையும் முடியாட்சியையும் கூட விமர்சனம் செய்திருந்தவருமான அலெக்ஸாந்தர் ராடிஷெவ் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளில் அதிகமான கவனம் செலுத் தினார்.

ருஷ்யாவின் புரட்சிகர இயக்கத்தில் பங்கு கொண்டவர்களான டிசம்பரிஸ்டுகள் 1825 டிசம்பர் மாதத்தில் ஜாருக்கு எதிராக எழுச்சியை ஏற்படுத்த முயற்சித்தார்கள். இவர்கள் சில முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களை எழுதினார்கள். இவற்றில் நிக்கலாய் துர்கேனிவ் (1789 – 1871), பாவெல் பெஸ்டெல் (1793-1826), மிஹயீல் ஒர்லோவ் (1788-1842) எழுதிய புத்தகங்கள் குறிப்பிடத்தக்க வகையில் சிறந்து விளங்கின. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரும் புரட்சிகரமான ஜனநாயகவாதியுமான நிக்கலாய் செர்னிஷேவ்ஸ்கி (182 8-1889) மிகவும் ஆழமான பொருளாதாரச் சிந்தனையாளர்; முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் சிறப்புமிக்க விமர்சகர். அவருடைய விஞ்ஞானக் கட்டுரைகளையும் நடைமுறைப் பணிகளையும் மார்க்ஸ் மிகவும் உயர்வாகக் கருதினார்.

எனினும் பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ருஷ்யா பொருளாதார வளர்ச்சியில் மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட மிகவும் பின்தங்கியிருந்தது. பண்ணையடிமை முறை இன்னும் நீடித்தது; முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் இன்னும் கருவடிவத்தில் மட்டுமே உருவாகியிருந்தன. எனவே ருஷ்ய பொருளாதாரச் சிந்தனை வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்குத் தனித்தன்மையைக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் என்ற விதை ருஷ்யாவின் செழிப்பான மண்ணில் விழுந்து சீக்கிரமாக வேரூன்றியது. “மூலதனம்” முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது ருஷ்ய மொழியில்தான். கீவ் நகரத்தைச் சேர்ந்த பேராசிரியர் என்.லீபெர் (1844-1888) மார்க்சின் போதனைகளுக்கும் ஸ்மித் மற்றும் ரிக்கார்டோவின் கோட்பாடுகளுக்கும் உள்ள தொடர்பை முதலில் ஆராய்ந்த சிலரில் ஒருவராவார்.

அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி ஆழமாக எழுதப்பட்டிருக்கும் சில புத்தகங்களைப் படிப்பதற்கு ”ஒட்டகத்தின் சகிப்புத் தன்மையும் ஞானியின் பொறுமையும்” அவசியம் என்று ஹெய்ல்ப்ரோனர் கூறுவார். வாசகர் இந்தப் புத்தகத்தைப் படிக்க அந்த அளவுக்குப் பாடுபடத் தேவையிருக்காது என்று நான் நம்புகிறேன்.

எனவே அடிமைகளை உடைமையாகக் கொண்டிருந்த சமூகத்தின் அரசியல் பொருளாதாரத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் அரசியல் பொருளாதாரம் வரையிலும் நமது ஆராய்ச்சிப் பயணத்தைச் செய்வோம். இந்த நீண்ட பயணத்தில் முக்கியமான இடங்கள் சிவற்றில் நாம் தங்கிச் செல்ல வேண்டியிருக்கும்.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : அத்தியாயம் ஒன்று: தோற்றுவாய்கள்

அடிக்குறிப்பு:
(1) A. Pushkin, Eugene Onegin, N.Y., 1963, p.8

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

தோழர்களே ! உங்கள் சக்தியை ஏன் விரயம் செய்கிறீர்கள் ?

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 41 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
தாய் ஒருபுறமாக நெருக்கித் தள்ளப்பட்டாள். அவள் பயத்தால் ஒரு சிலுவையின் மீது போய்ச் சாய்ந்து ஏதோ ஓர் அடியை எதிர்நோக்கி கண்களை மூடி நின்றாள். குழம்பிப்போன குரலோசை அவளது காதுகளைச் செவிடுபடச் செய்தது. பூமியே அவளது காலடியை விட்டு அகன்று செல்வதாக ஒரு பிரமை. பயத்தினால் அவளுக்கு மூச்செடுக்கவே முடியாமல் திக்குமுக்காடியது. போலீஸ் விசிலின் சப்தம் ஆபத்தை அறிவித்து ஒலித்தது. முரட்டுக் குரல்கள் உத்தரவு போட்டன. பெண்களின் கூச்சல் பீதியடித்துக் கதறின; வேலிக் கம்பிகள் முறிந்து துண்டாயின. கனத்த பூட்ஸ் காலடிகள் வறண்ட பூமியில் ஓங்கியறைந்து ஒலித்தன. இந்தக் களேபரம் அதிக நேரம் நீடித்தது. எனவே அவள் இந்தப் பயபீதியால் அஞ்சி நடுங்கிப்போய் கண்களை மூடியவாறே அதிக நேரம் நின்று கொண்டிருக்க இயலவில்லை.

அவள் ஏறிட்டுப் பார்த்தாள். கூச்சலிட்டுக் கொண்டும் தன் கைகளை முன்னே நீட்டிக்கொண்டும் பாய்ந்து ஓடினாள். கொஞ்ச தூரத்தில், சமாதிக் குழிகளுக்கு இடையேயுள்ள குறுகிய சந்தில், போலீசார் அந்த நீண்ட கேசமுடைய இளைஞனைச் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றார்கள். அவனைக் காப்பாற்றுவதற்காக நாலாபுறத்திலிருந்தும் சாடி முன்னேறி வரும் ஜனங்களை அடித்து விரட்டிக் கொண்டிருந்தார்கள். உரிய வாள்கள் மனிதத் தலைகளுக்கு மேலாகப் பளபளத்து மின்னி திடீரெனக் கூட்டத்தினர் மத்தியில் குதித்துப் பாய்ந்தன. ஒடிந்த வேலிக் கம்பிகளும், கம்புகளும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. கூச்சலிடும் ஜனங்கள் வெளுத்த முகமுடைய அந்த இளைஞனைச் சுற்றிலும் வெறியாட்டம் ஆடிக்கொண்டு குமைந்து கூடினார்கள். இந்த வெறியுணர்ச்சிக் களேபரப் புயலுக்கு மத்தியில் அந்த இளைஞனது பலம் வாய்ந்த குரல் ஓங்கி ஒலித்தது:

”தோழர்களே! உங்கள் சக்தியை ஏன் விரயம் செய்கிறீர்கள்?”

அவனது வார்த்தைகள் தெளிவு தருவனவாக ஒலித்தன. ஜனங்கள் தங்கள் கைகளிலிருந்த கழிகளையும் கம்புகளையும் விட்டெறிந்துவிட்டு, ஒருவர் பின் ஒருவராக ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் தாயோ ஏதோ ஒரு தடுக்க முடியாத சக்தியால் தூண்டப்பெற்று முன்னோக்கி முண்டிச் சென்று கொண்டிருந்தாள். பின்னால் சரிந்துபோன தொப்பியோடு நிகலாய் இவானவிச் அந்த வெறிகொண்ட ஜனக்கூட்டத்தை விலக்கித் தள்ளிக் கொண்டிருப்பதை அவள் கண்டாள்.

”உங்களுக்கு என்ன பைத்தியமா? அமைதியாயிருங்கள்!” என்று கத்தினான் அவன்.

அவனது ஒரு கை செக்கச் சிவந்து காணப்படுவதாகத் தாய்க்குத் தோன்றியது.

“நிகலாய் இவானவிச் இங்கிருந்து போய்விடுங்கள்” என்று அவனை நோக்கி ஓடிக்கொண்டே கத்தினாள் தாய்.

“நீங்கள் எங்கே போகிறீர்கள்? அவர்கள் உங்களைத் தாக்குவார்கள்”

அவளது தோள்மீது ஒரு கரம் விழுந்தது. திரும்பினாள்; அவளுக்கு அடுத்தாற்போல் தலையிலே தொப்பியற்றுக் கலைந்துபோன தலைமயிரோடு சோபியா நின்றுகொண்டிருந்தாள்; அவள் ஒரு பையனைத் தன் கையில் பிடித்துக்கொண்டு நின்றாள். அந்தப் பையன் இன்னும் வாலிப வயதை எட்டிப்பிடிக்காத, பால்மணம் மாறாதவனாயிருந்தான். அவன் தன் முகத்திலுள்ள ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே, துடிதுடிக்கும் உதடுகளால் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்:

”என்னைப் போகவிடுங்கள் …… எனக்கு ஒன்றுமில்லை …..”

”இவனைப் பார்த்துக்கொள்ளுங்கள், நம் வீட்டுக்குக் கொண்டு போங்கள். இதோ கைக்குட்டை; அவன் முகத்தில் ஒரு கட்டுப்போடுங்கள்’ என்று படபடத்துக் கூறினாள் சோபியா. பிறகு அவள் அந்தப் பையனின் கையைத் தாயின் கையில் பிடித்து ஒப்படைத்துவிட்டு ஓடினாள். ஓடும்போதே சொன்னாள்:

“சீக்கிரமாகப் போய்விடுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களைக் கைது செய்துவிடுவார்கள்”

இடுகாட்டின் நாலாபுறங்களிலும் ஜனங்கள் சிதறியடித்து ஓடினார்கள், போலீஸ்காரர்கள் சமாதி மேடுகளின் மேலெல்லாம் ஏறிக் குதித்து ஓடினார்கள். அவர்களது நீண்ட சாம்பல் நிறச் சட்டைகள் முழங்கால் வரையிலும் தொங்கி, முட்டிக் கால்களைத் தட்டின, அவர்கள் தங்கள் வாள்களைச் சுழற்றிக்கொண்டும். வாய்க்கு வந்தபடி சத்தமிட்டுக்கொண்டும் தாவித் தாவிப் பின்தொடர்ந்தார்கள். அந்தப் பையன் அவர்களை உர்ரென்று முறைத்துப் பார்த்தான்.

”சீக்கிரம், சீக்கிரம், புறப்படு” என்று அவனது முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே கத்தினாள் தாய்.

“என்னைப் பற்றிக் கவலைப்படாதே — இது ஒன்றும் வலிக்கவில்லை” என்று முணுமுணுத்துக்கொண்டே அவன் வாயிலிருந்த ரத்தத்தைக் கக்கினான். “அவன் வாளின் கைப்பிடியால் என்னை ஓர் அடி கொடுத்தான். ஆனால் பதிலுக்கு என்னிடம் அவனும் வாங்கிக் கட்டிக்கொண்டான். நான் ஒரு கழியினால் அவனை ஒரு விளாசு விளாசினேன்; பயல் கதறி ஊளையிட்டான். நீங்கள் கொஞ்சம் பொறுங்கள்” என்று அவன் தனது ரத்தம் தோய்ந்த முஷ்டியை உலுக்கியாட்டிக் கொண்டே கத்தினான். “வரப்போகிற சண்டையை நினைத்துப் பார்த்தால், இது என்ன பிரமாதம்? நாங்கள் —- தொழிலாளர்களாகிய நாங்கள் அனைவரும் கிளர்ந்தெழும்போது, உங்களையெல்லாம் சண்டை போடாமலே துடைத்துத் தூர்த்துவிடுகிறோம்!”

”புறப்படு சீக்கிரம்” என்று அவனை அவசரப்படுத்திக்கொண்டே, இடுகாட்டின் வேலிப்புறமாகவுள்ள சிறு வாசலை நோக்கி நடந்தாள் தாய். வெளியேயுள்ள பரந்த வயல்வெளியில் போலீஸ்காரர்கள் பதுங்கிக் காத்திருந்து, ஜனங்கள் இடுகாட்டைவிட்டு வெளியே வந்ததும், பாய்ந்து தாக்குவதற்குத் தயாராக இருப்பார்கள் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், அவள் அந்த வாசலுக்கு வந்ததும், ரொம்பவும் ஜாக்கிரதையோடு இலையுதிர்காலத்தின் இருள் போர்வை போர்த்திருந்த வெளியைப் பார்த்தாள். அங்கு யாரையும் காணோம், மெளனமே நிலவியது. அவளுக்குத் தைரியம் வந்தது.

“சரி, இப்படி வா. முகத்தில் ஒரு கட்டுப் போடுகிறேன்” என்று சொன்னாள் தாய்.

”அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் — இதைக் கண்டு நான் ஒன்றும் வெட்கப்படவில்லை” என்றான் அவன். “இது ஒரு சரியான நேர்மையான சண்டை. அவன் என்னை அடித்தான். பதிலுக்கு நானும் அவனை அடித்துவிட்டேன்!”

ஆனால் தாய் விறுவிறென்று அவனது முகத்திலிருந்த காயத்துக்குக் கட்டுப்போட்டாள். ரத்தத்தைக் கண்ணால் கண்டதும் அவள் மனத்தில் ஓர் அனுதாப உணர்ச்சி ஏற்பட்டது. அவளது கைவிரல்கள் வெதுவெதுப்பான அந்தச் செங்குருதியின் பிசுபிசுப்பை உணர்ந்தபோது, அவளது உடம்பெல்லாம் ஒரு குளிர்நடுக்கம் பரவிச் சிலிர்த்தோடியது. அவசர அவசரமாக, வாயே பேசாமல் அவள் அந்தச் சிறுவனை வயல்வெளியின் குறுக்காக இழுத்துக்கொண்டு ஓடினாள்.

“தோழரே, என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்?” என்று தன் வாயின்மீது போட்டிருந்த கட்டை அவிழ்த்துக்கொண்டே கிண்டலாகக் கேட்டான். அவன். “உங்கள் உதவியில்லாமலே, நான் போய்விடுவேனே.”

ஆனால் அவனது கரங்கள் நடுநடுங்குவதையும், கால்கள் பலமிழந்து தடுமாறுவதையும் அவள் கண்டாள். பலமற்ற மெல்லிய குரலில் அவன் பேசிக்கொண்டும் கேள்விகள் கேட்டுக்கொண்டும் விரைவாக வந்தான். தான் கேட்கும் கேள்விகளின் பதிலுக்காகக் கூட அவன் காத்திராமல் பேசினான்:

“நீங்கள் யார்? நான் ஒரு தகரத் தொழிலாளி. என் பேர் இவான். இகோர் இவானவிச்சின் கல்விக்குழாத்தில் நாங்கள் மூன்று பேர் இருந்தோம். மூன்று பேரும் தகரத் தொழிலாளிகள். ஆனால் நாங்கள் மொத்தத்தில் பதினோரு பேர். எங்களுக்கு அவர் மீது ஒரே பிரியம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் – எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட ……”

ஒரு தெருவுக்கு வந்ததும் தாய் ஒரு வண்டியை வாடகைக்கு அமர்த்தினாள். இவானை அதில் ஏற்றி உட்காரவைத்தவுடன் அவள்: ”இனிமேல் ஒன்றும் பேசாதே” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு மீண்டும் அந்தக் கைக்குட்டையால் அவனது வாயில் ஒரு கட்டுப்போட்டாள்.

படிக்க:
மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட்
1984 சீக்கியர் படுகொலைகளில் ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. வின் பங்கு !

அவன் தன் கையைத் தன் முகத்துக்குக் கொண்டு போனான். அந்தக் கட்டை அலைத்து அவிழ்க்கச் சக்தியற்று மீண்டும் தன் கையை மடிமீது நழுவவிட்டான். இருந்தாலும் அந்தக் கட்டோடேயே அவன் முணுமுணுத்துப் பேசத் தொடங்கினான்:

”அருமைப் பயல்களா, இதை மட்டும் நான் மறந்துவிடுவேன் என்று நினைக்காதீர்கள்…… முன்னால் தித்தோவிச் என்ற ஒரு மாணவர் எங்களுக்கு வகுப்பு நடத்தினார். அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிப் பாடம் சொன்னார்……… பிறகு அவர்கள் அவரையும் கைது செய்துவிட்டார்கள்………”

தாய் இவானைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு, அவனது தலையை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். திடீரென அந்தப் பையன் கிறங்கி விழுந்து மெளனமாகிக் கிடந்தான். பயபீதியால் செய்வது இன்னதென்று அறியாமல் திகைத்தாள் தாய். ஒவ்வொரு பக்கத்திலும் பார்த்துக்கொண்டாள். எங்கோ ஒரு மூலையிலிருந்து கிளம்பி, போலீஸ்காரர்கள் தன்னைப் பின்தொடர்ந்து வருவதாக அவளுக்குத் தோன்றியது. அவர்கள் ஓடோடியும் வந்து, இவானின் கட்டுப்போட்ட தலையைப் பிடித்து இழுத்துப்போட்டு அவனைக் கொல்லப் போவதாகத் தோன்றியது.

“குடித்திருக்கிறானா?” என்று வண்டிக்காரன் தன் இடத்தைவிட்டுத் திரும்பி புன்னகை செய்து கொண்டே கேட்டான்.

“ரொம்ப ரொம்பக் குடித்துவிட்டான்” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய்.

“இது யார் உங்கள் மகனா?”

“ஆமாம். ஒரு செருப்புத் தொழிலாளி. நான் ஒரு சமையற்காரி.”

”கஷ்டமான வாழ்க்கைதான், இல்லையா?”

அவன் தன் சாட்டையை ஒரு சுண்டுச் சுண்டி வாங்கினான். மீண்டும் அந்த வண்டிக்காரன் திரும்பவும் பேசினான்:

”கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இடுகாட்டில் நடந்த கலவரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டீர்களா? அவர்கள் யாரோ ஓர் அரசியல்வாதியை, அதிகாரிகளுக்கு எதிராக வேலை செய்த ஓர் அரசியல்வாதியைப் புதைக்கச் சென்றார்கள் போலிருக்கிறது. அங்கு அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சண்டை. அந்த அரசியல்வாதியைச் சேர்ந்த நண்பர்கள்தாம் அவனைப் புதைக்கப் போனார்களாம். அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள். ‘மக்களை ஏழைகளாக்கும் அதிகாரிகள் ஒழிக’ என்று அவர்கள் கத்தினார்களாம். உடனே போலீஸார் வந்து, அவர்களை அடிக்கத் தொடங்கினார்களாம். சிலர் படுகாயம் அடைந்ததாகக் கூடச் சொல்லிக் கொள்கிறார்கள். போலீஸ்காரர்களுக்கும் அடி விழுந்ததாம். அவன் ஒரு கணநேரம் மெளனமாயிருந்தான். பிறகு விசித்திரமான குரலில் வருத்தத்துடன் தலையை ஆட்டிக்கொண்டே பேசத் தொடங்கினான். “செத்தவர்களை அடக்கம் செய்வதோ இப்படி இருக்கிறது! செத்தவர்களுக்கோ அமைதியே கிடையாது!”

வண்டிச் சரளைக் கற்களில் ஏறி விழும்போது, இவானின் தலை தாயின் மார்போடு மெதுவாக மோதிக்கொண்டது. வண்டிக்காரன் பெட்டியில் பாதி திரும்பியவாறு உட்கார்ந்து ஏதேதோ பேசி வந்தான்.

“ஜனங்களுக்குப் பொறுமையின்மை ஏற்பட்டுவிட்டது. உலகில் எங்கு பார்த்தாலும் ஒரே களேபரம்தான் தலைதூக்கி வருகிறது. நேற்று ராத்திரி என் அடுத்த வீட்டுக்காரன் வீட்டுக்குப் போலீஸார் வந்து, விடியும் வரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுச் சோதனை போட்டார்கள். அப்புறம் ஒரு கொல்லுலைத் தொழிலாளியைத் தங்களோடு கொண்டு போய்விட்டார்கள். அவனை இரவு வேளையிலே ஆற்றங்கரைக்குக் கொண்டுபோய் நீரில் அமுக்கிக் கொன்றுவிடுவார்கள் என்று ஜனங்கள் பேசிக்கொள்கிறார்கள். அந்தக் கொல்லன் ரொம்ப நல்லவன்.”

“அவன் பேர் என்ன?” என்று கேட்டாள் தாய்.

அந்த கொல்லன் பேரா? சவேல். சவேல் எவ்சென்கோ. சிறு வயசுதான். இருந்தாலும், அவனுக்கு நிறைய விஷயம் தெரியும். விஷயங்களைத் தெரிந்துகொள்ளவே இங்கே அனுமதி கிடையாது என்றுதான் தோன்றுகிறது. அவன் எங்களிடம் வந்து பேசுவான். வண்டிக்காரர்களே உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது? என்பான். ‘உண்மையைச் சொல்லப்போனால் எங்கள் வாழ்க்கை நாயினும் கேடான வாழ்க்கைதான்’ என்று நாங்கள் சொல்லுவோம்.”

“நிறுத்து’ என்றாள் தாய்.

வண்டி நின்றதால் ஏற்பட்ட குலுங்கலில் இவான் விழித்துக்கொண்டு லேசாக முனகினான்.

“விழித்துக்கொண்டானா?” என்றான் வண்டிக்காரன்: “தம்பி, ஓட்கா வேணுமா. ஓட்கா!”

மிகுந்த சிரமத்தோடு இவான் நடந்துகொண்டே தன்னைத் தாங்கிப் பிடிக்கும் தாயை நோக்கிச் சொன்னான்:

“பரவாயில்லை. என்னால் முடியும்.”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

ஸ்டெர்லைட்டை விரட்டுவோம் | சென்னையில் டிசம்பர் 29 மக்கள் அதிகாரம் கூட்டம்

14 பேரின் உயிர்த்தியாகம் வீண்போகலாமா?
தனிச்சட்டம் இயற்று – ஸ்டெர்லைட்டை விரட்டு !
மே-22 துப்பாக்கிச்சூடு படுகொலை – போலீசாரை கைது செய்!

அரங்கக் கூட்டம்
டிசம்பர்-29, 2018 மாலை 4 மணி
சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.

பல்வேறு கட்சி மற்றும் அமைப்புத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்! அனைவரும் வாரீர்!

ன்பார்ந்த தமிழக மக்களே!

டெல்லி தேசிய பசுமைத்தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீ்ண்டும் திறக்கலாம் என உத்திரவிட்டுள்ளது. இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். பசுமைத் தீர்ப்பாயம்  தனது அதிகார வரம்பை மீறி தமிழக அரசின் ஆணையை ரத்து செய்தது. மக்கள் தரப்பில் வாதிட அனுமதி மறுத்தது. ஆய்வுக்குழுவில் தமிழக நீதிபதிகளை நியமிக்ககூடாது என்ற ஸ்டெர்லைட் வாதத்தை ஏற்றது. தீர்ப்பாய நீதிபதி உத்திரவிடும் முன் அதன் நகல் ஸ்டெர்லைட் இணைய தளத்தில் வெளியானது. இப்படி ஆரம்பம் முதலே ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பாயம் செயல்பட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கோயல் ஆர்.எஸ்.எஸ். சார்பாளர் மட்டுமல்ல. பா.ஜ.க அரசின் ஆசி பெற்றவர். ஆய்வுக்குழுவில் இருந்த நீதிபதி தருண் அகர்வால் பி.எப். பணம் கையாடல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். ஸ்டெர்லைட் வழக்கை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரிக்காமல் டெல்லி அமர்வில் விசாரித்தார்கள். எனவேதான் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட பசுமைத்தீர்ப்பாயத்தின் உத்திரவு அநீதியானது அதை ஏற்க கூடாது என்கிறோம்.

போலீசு எத்தகைய அடக்குமுறைகள் செலுத்தினாலும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் என எச்சரிக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். மக்கள் அதிகாரம் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் மறியல் செய்தது. பசுமைத்தீர்ப்பாய உத்திரவை கண்டித்தும், தனிச்சட்டம் இயற்றக்கோரியும் தூத்துக்குடியில் பிரசுரம் கொடுத்ததற்காக மக்கள் அதிகாரம் தோழர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் போலீசாரின் தடைகளைத் தாண்டி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். அனைத்துக் கட்சிகளும் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என குரல்  கொடுக்கின்றன. இந்நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்ற உத்திரவிற்கு நான்கு வார காலம் தடைவிதித்துள்ளது. ஆனால், தமிழக அரசோ கள்ள மவுனம் சாதிக்கிறது.

ஏன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் மட்டுமே வெளியிடப்படும்  ஆர்சனிக், காரியம் போன்ற ஆபத்தான நச்சு கழிவுகள், காற்றில் பரவுகிறது. நிலத்தடி நீரில் கலக்கிறது. இதனால் சுவாசக்கோளாறு, சிறுநீரகக் கோளாறு, கேன்சர், கர்ப்பப்பை சிதைவு போன்ற கோடிய நோய்கள் ஏற்பட காரணமாகிறது. ஆர்சனிக், காரியத்தால் நிச்சயமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலையை மே மாதம் மூடிய பிறகு தூத்துக்குடியில் காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது என ஆய்வறிக்கை சொல்கிறது.

படிக்க:
கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !
ஸ்டெர்லைட் போராட்டம் : கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இராஜு | காணொளி

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அறுபது சதவீதத்திற்கு மேல் காப்பர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டுத்தேவை குறைவுதான். இலாப வெறிக்காக தரம் குறைந்த நச்சுத்தன்மை அதிகம் வாய்ந்த மூலப்பொருள்கள் தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அபாயகரமான இந்த நச்சுக் கழிவுகளை யாரிடம் எவ்வளவு விற்றார்கள்? எந்த விபரமும் தமிழக அரசுக்கு இதுவரை தெரியாது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் 5 ஆண்டுகள் சட்டவிரோதமாக இந்த ஆலை இயங்கியுள்ளது. 25 மீட்டருக்கு பசுமையை ஏற்படுத்த வேண்டும், ஜிப்சம் பாண்டு கட்ட வேண்டும், காற்று, நீரில் மாசு கலந்திருப்பது குறித்த ஆய்வை அரசு ஆய்வகத்தில் செய்து காட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட எந்தவொரு விதிமுறையையும் இதுவரை ஸ்டெர்லைட் கடைபிடிக்கவில்லை.

இப்போது, ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று மக்களை கேட்கிறது.  சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஸ்டெர்லைட்தான் எங்களால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். தவறினால் ஆலையை மூடலாம். இதுதான் சட்டம். ஆனால், இந்த சட்டத்தை அமுல்படுத்த  வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையோடு கூட்டு சேர்ந்து விதிமுறைகளை மீறியுள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியுமா? ஸ்டெர்லைட் ஆலை தொழில் முறை தொடர் குற்றவாளி. இனி மன்னிப்பே கிடையாது. தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கப்பட வேண்டும்.

துப்பாக்கிச் சூடு படுகொலையை கண்டிக்காத, ஸ்டெர்லைட்டை ஆதரிக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. பிரதமர் மோடி இலண்டன் சென்ற போது அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து கொண்டவர் வேதாந்தா நிறுவனத்தின் முதலாளி அனில் அகர்வால். இவர் பா.ஜ.க. விற்கு பெரும் தொகையை தேர்தல் நிதியாக கொடுத்துள்ளார். அந்த பி.ஜே.பி யின் ஆசிபெற்றதுதான் தமிழக எடப்பாடி அரசு.

தமிழக போலீசார் அருகிலிருந்து தலையின் பின்பக்கத்தில் குறி பார்த்து அதிநவீன துப்பாக்கியால் சுட்டு கொன்றார்கள். இது திட்டமிட்ட படுகொலை என போஸ்ட் மார்ட்டம் அறிக்கை சொல்கிறது. இதுவரை எந்தப் போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. கைது செய்யப்பட வில்லை. எந்த போலீசார் மீதும் கொலை வழக்குக்கூட பதிவு செய்யப்படவில்லை.

பிரசுரத்தை  தரவிறக்கம் செய்ய  இங்கே அழுத்தவும்.

ஸ்டெர்லைட்டு ஆலைக்காகத்தான் நம் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். பெண்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என 14 பேரை உயிர்த்தியாகம் செய்துள்ளோம். ஆலையை மீண்டும் திறக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. கூடவே கூடாது.

இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு கொடுத்த இருபது இலட்சம் இழப்பீடு தொகையை நாங்களும் தர தயாராக இருக்கிறோம் என ஸ்டெர்லைட் சி.இ.ஓ. சொல்கிறார். தூத்துக்குடி மக்களின் மேம்பாட்டிற்காக, மருத்து செலவிற்காக, குடிநீர் தேவைக்காக நாங்கள் செலவு செய்ய தயாராக இருக்கிறோம் என அறிவித்து பணம் திண்ணி கழுகுகளை உருவாக்க முயல்கிறான். மக்கள் கோரிக்கை பணம், நிவாரணம் அல்ல. மக்களை கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றுவதுதான். தமிழக சட்ட மன்றத்தில் இதற்கான சிறப்புச்சட்டம் இயற்றும் வரை நந்திகிராம் சிங்கூர் போல் மக்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றிப் படர வேண்டும்.

மக்கள் அதிகாரம் – சென்னை மண்டலம்,
தொடர்புக்கு: 91768 01656.


இதையும் பாருங்க:

லட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்

புதைந்தது உடலல்ல விதையான வீரமடா

ஏத்திவிடு ஐயப்பா … தூக்கிவிடு ஐயப்பா … கோவன் பாடல்

க்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் 15-ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு கடந்த டிச 16 அன்று மதுரையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ம.க.இ.க. மையக் கலைக்குழுத் தோழர்களின் கலைநிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதைத் தடுக்கும் பாஜக உள்ளிட்ட சங் பரிவார கும்பலை அம்பலப்படுத்தி கலைக்குழுவினர் பாடிய பாடல்…

பாருங்கள்! பகிருங்கள்!!

பாடல் வரிகள்:
ஏத்திவிடு ஐயப்பா… தூக்கிவிடு ஐயப்பா..!
எலக்சனுல பி.ஜே.பி.ய ஐயப்பா…
நீ இல்லேன்னா… டெபாசிட் நையப்பா…

டீமானிடேசன் பெயிலியராச்சி…
ஜி.எஸ்.டி. கொண்டுவந்து உள்ளதும் போச்சி…
ரஃபேலுல இமேஜி டேமேஜி ஆச்சி…
வார்டு எலக்சனுல அஞ்சே ஓட்டு மானமே போச்சி…

மாட்டுக்கறி மேட்டரு போனியாகல…
மாவோயிஸ்டுனு ஊதினாலும் புகையவே இல்லை..
மேக் இன் இந்தியா யாரும் நம்பல…
இப்ப நாப்கின்தான் கிடச்சிருக்கு மோடி கையில…

ஆர்.பி.ஐ.ய தொடச்சாலும் பணமதிப்பு சரியிது…
சி.பி.ஐ. ய உடச்சாலும் பழைய கேசு தொரத்துது…
98 எலக்சனுக்கு அயோத்தி கிடைச்சது…
இப்போ 2019க்கு சாமிசரணம் மன்னிச்சிரு…

தொகுப்பு: வினவு களச்செய்தியாளர்.


இதையும் பாருங்க:

சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா

45 -ஆவது பெரியார் நினைவுநாள் தொடரும் நினைவுகள்… | துரை சண்முகம்

5
trichy periyaar rally

நினைத்தாலே
இயக்கும்!
பெரியார் சிந்தனை.

நினைத்தாலே
முடிக்கும்
பெரியார் செயல்.

Thanthai Periyarநினைத்தாலே
பூக்கும்
பெரியார் கேள்விகள்.

நினைத்தாலே
இணைக்கும்
பெரியார் பதில்கள்.

நினைத்தாலே
வலிக்கும்
பெரியார் பாடுகள்.

நினைத்தாலே
சிலிர்க்கும்
பெரியார் தேடல்கள்.

நினைத்தாலே
அணைக்கும்
பெரியார் வார்த்தைகள்.

நினைத்தாலே
கட்டுடைக்கும்
பெரியார் கருத்துகள்.

நினைத்தாலே
அச்சம் அறும்
பெரியார் பேச்சு.

நினைத்தாலே
நமதாகும்
பெரியார் மூச்சு.

நினைத்தாலே
மதம் உடையும்
பெரியார் பாதை.

நினைத்தாலே
சாதி கூசும்
பெரியார் பார்வை.

நினைத்தாலே
காதல் வரும்
பெரியார் அறிவு.

நினைத்தாலே
உறவாகும்
பெரியார் தெளிவு.

நினைத்தாலே
பனிக்கும்
பெரியார் அன்பு.

trichy periyaar rallyநினைத்தாலே
பிறக்கும்
பெரியார் தெம்பு.

நினைத்தாலே
பலர்க்கும்
பெரியார் சுயமரியாதை.

நினைத்தாலே
வெளுக்கும்
பெரியார் தர்க்கம்.

நினைத்தாலே
சுரக்கும்
பெரியார் மனிதநேயம்.

நினைத்தாலே
துளிர்க்கும்
பெரியார் உணர்வு நயம்.

நினைத்தாலே
அழைக்கும்
பெரியார் களம்.

நினைத்தாலே
தொடரும்……
இது
பெரியார் நிலம்!


கவிஞர் துரை. சண்முகம்

கேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா?

கேள்வி: இந்த நவீன அறிவியல் யுகத்தில் இனிமேலும் புதிய மதங்கள் தோன்றி பெரும்பாலான மக்களை ஆட்கொள்ளுமா?

– சத்யன் கோபிநாதன்

ன்புள்ள சத்தியன் கோபிநாதன்,

புதிய மதங்கள் தோன்றுவதை பார்ப்பதற்கு முன்னால் இருக்கின்ற மதங்களின் நிலவரத்தை பார்ப்போம். பொதுவான புள்ளிவிவரங்களின்படி உலக மக்கள் தொகையில் கிறித்தவ மதத்தை சார்ந்தோர் 33%, முஸ்லீம்கள் 24%, இந்துக்கள் 16%, புத்த மதத்தினர் 7%, நாட்டுப்புற மதங்களை சார்ந்தோர் 6 சதவீதமாகவும் இருக்கின்றனர். மதம் சாராதோர் 16% பேர் இருக்கிறார்கள். இந்த புள்ளிவிவரம் தோராயமானது தான்.

உலக மக்கள் தொகையில் மதரீதியான இந்த விகித்தை வைத்து எதிர்காலத்தில் எந்த மதம் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்று பலர் கணிக்கின்றனர். அமெரிக்கா தோற்றுவித்த இசுலாமிய பயங்கரவாதம் எனும் வகையினத்திற்கு பின்னர் முசுலீம்கள் குறித்த கட்டுக்கதைகள் அதிகம் பரப்பப்படுகிறது. அதன் பொருட்டு முசுலீம் மதத்தினர் எதிர்காலத்தில் அதிகரித்தால் என்ன செய்வது என்ற ‘பயத்தில்’ மேற்கண்ட ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. மறுபுறம் இசுலாமிய மதவாதம் பேசுவோர் தங்களது மதம் பரவுகிறது என்ற கோணத்தில் அதை பெரிதுபடுத்துகின்றனர்.

கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவோர் வளர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் இஸ்லாம் வளரும் நாடுகளில் இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி குறைவாகவும், வளரும் நாடுகளில் அதிகமாக இருப்பதால் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவோர் 2050 ஆம் ஆண்டில் முதல் இடத்திற்கு வருவார்கள் என்று குத்து மதிப்பாக கணிக்கிறார்கள் அல்லது ‘எச்சரிக்கை’ செய்கிறார்கள்.

superstitions in religionஅதே நேரம் அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மக்கள் மரித்துப் போவது வளரும் நாடுகளில் அதிகம் என்பதால் இந்த முன்கணிப்பு வரம்பிற்குட்பட்டதே எனவும் சொல்கிறார்கள்.

ஏனெனில், வளருகின்ற நாடுகள் பிரிவில்தான் ஈராக், பாலஸ்தீனம், சிரியா லெபனான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கின்றன. இங்கே கடந்த 30 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். மாறாக, வளர்ந்த மேற்குலக நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் அப்படி மரிப்பதில்லை. கல்வியறிவு காரணமாக மக்கள் தொகை அதிகரிப்பும் குறைவாக இருக்கிறது.

பின்தங்கிய பொருளாதாரம், கல்வியறிவு இன்மை, வேலையின்மை காரணமாக ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பு அதிகமாக இருக்கிறது. கூடவே இந்நாடுகளில் பிரசவ கால மரணங்களும், குழந்தை மரணங்களும், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சினைகளும் அதிகம்.

நீங்கள் குறிப்பிடும் நவீன அறிவியல் யுகம் என்பதை அறிவியல் தொழில்நுட்ப புரட்சியின் காலம் என வைத்துக் கொள்ளலாம். அதன்படி தொழிற்சாலைகளில் தானியங்கி உற்பத்தி முறையும் செயற்கை நுண்ணறிவும் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் இணையதளங்கள் சமூக வலைதளங்கள் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகின்றன. மக்களிடம் கருத்துருவாக்கம் செய்யும் ஊடகங்களும் மேற்கண்ட இணைய வகைப்பட்ட வழியிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கின்றன.

அமெரிக்க தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் எப்படிப் பணியாற்றியது என்பதறிவோம். சமூக வலைத்தளங்களின் மூலம் சரியான கருத்துக்களைவிட தவறான கருத்துக்களை அதிக வேகத்தில் பரவச் செய்ய முடியும். இந்தியாவில் வாட்ஸ் அப் வதந்திகள் மூலமாக கும்பல் கொலைகள் சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கின்றன. முந்தைய காலத்தில் பார்ப்பனிய சமூக அமைப்பின் படிநிலை காரணமாக இந்த கும்பல் கொலைகள் நடந்தன.

மேலும் ஒரு நாட்டில் இருக்கும் ஆளும்வர்க்கத்தின் அரசியலை எதிர்த்துப் போராடும் முற்போக்கு அரசியலை விட பிற்போக்கு அரசியல் வளர்வதற்கு இந்த நவீன யுகம் அதிகம் பயன்படுகிறது. அது மதம், சாதி, இனம் என தலை எடுத்து வருகின்றது. அரசியலில் மட்டுமல்ல மருத்துவம், உடல்நலம், தொழில்துறை, இயற்கை, சூழலியல், கல்வி என பல துறைகளிலும் முற்போக்கு மற்றும் பிற்போக்கு கருத்துக்கள் மக்களிடையே செல்கின்றன. ஆயினும் வாழ்க்கைப் பிரச்சினை காரணமாக மாற்றுக்களை தேடி ஓடும் மக்களை திசை திருப்புவதற்கு பிற்போக்கு கருத்துக்கள் கணிசமாக பயன்படுகின்றன.

முதலாளிகளின் சம்மேளனத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்
முதலாளிகளின் சம்மேளனத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்

நிறுவனமயமான மதங்களின் பணிகள் பல காலாவதியாகி வரும் நிலையில் மதங்களிலும் பல்வேறு மாற்றங்கள் நடக்கின்றன. ஒரு மதத்திற்குள்ளேயே பழைய ஆதீனங்கள் பழைய மடங்கள் பழைய சிந்தனைகள் காலாவதியாகி புதிய நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. சங்கர மடம் பழைய மரபு என்றால் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கிவாசுதேவ், பாபா ராம்தேவ் போன்றோர் புதிய ஆதினங்களாய் தலையெடுத்து பன்னாட்டு நிறுவனங்களைப் போல சந்தைப்படுத்துகின்றனர்.

சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு அமெரிக்கா உதவியுடன் சவுதி அரேபியா தோற்றுவித்த வகாபிய முசுலீம் கடுங்கோட்பாட்டு வாதம் இன்று பல நாடுகளில் பல குழுக்களை தோற்றுவித்திருக்கிறது. நம்மூர் தவ்ஹீத் ஜமாஅத் முதல் பாரசீகத்தில் மக்களை பாடுபடுத்தும் ஐ.எஸ். வரை அத்தகைய குழுக்கள் இன்னமும் செல்வாக்கோடு இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தில் பெந்தகோஸ்தே வகையிலான கடுங்கோட்பாட்டு குழுக்கள் வளரும் நாடுகளில் பிரபலமாகி வருகின்றனர். பெந்தகோஸ்தே மற்றும் பல்வேறு பிற்போக்கு மதக்குழுக்கள் அமெரிக்காவிலும் பிரபலம்.  இவர்களன்றி அந்தந்த மரபு சார்ந்து இயற்கை, சுகாதாரம், மனநலம் பேசும் குழுவினரும் புதிய மதங்கள் போல இருக்கின்றனர். சான்றாக தமிழகத்தில் ஹீலர் பாஸ்கர்.

90களின் தீவிரமான உலகமயத்திற்கு பின்னர் உலகில் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. சுவாசிக்கும்  காற்று முதல், தூக்கி எறியப்படும் வேலை முதல் அன்றாடம் பிரச்சினைகள் வரிசை கட்டி வீட்டுக் கதவை தட்டி வருகின்றன. அடிப்படை சமூக மாற்றம் என்பது மக்களின் கண்ணுக்கு எட்டிய  வரை இல்லாத போது அவர்கள் தங்கள் அருகாமையில் இருக்கும் இத்தகைய புதிய அப்போஸ்தலர்களை நாடிப் போகின்றனர். ஒரு அப்போஸ்தலர் காலாவதியானால் புதியவர் உடன் வருகிறார். பழையை வெர்சனை மேம்படுத்தி அதற்கடுத்த வெர்சன் வரும் வரை இவர் இருப்பார்.

முதல் உலகப் போர் தோற்றுவித்த பெரும் அழிவு, உயிர்ப்பலிக்கு பிறகு உலக மக்களின் நம்பிக்கையின்மை அதிகரித்தது. அதன் வழியில் புதுப்புது சித்தாந்தங்கள், கலை முயற்சிகள் அனைத்தும் மக்களின் விரக்திக்கு வடிகாலைத் தேடின. நேரெதிராக ரசியாவில் கம்யூனிஸ்டுகள் நடத்திய புரட்சி நேர்மறையில் உலக மக்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேற்குலகில் முதலாளித்துவதற்கு தீர்வு என பல்வேறு “கல்ட்” எனப்படும் தீவிர வழிபாட்டுக் குழுக்கள் உருவாகின. 1960-களில் உலக அளவில் தோன்றிய முதலாளித்துவ நெருக்கடிக்கு பிறகு இத்தகைய முயற்சிகள் கொஞ்சம் நடைமுறைக்கு முயன்றன. இயற்கையை ஆராதிப்பது, இயற்கை சாகசம், ஹிப்பிக்கள், ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என இவர்கள் விதவிதமாக தோன்றினார்கள். அதே காலகட்டத்தில் ஓஷோ ரஜ்னீஷை நோக்கி மேற்குலகினர் நாடி வந்தனர்.

எனினும், இந்த பரிசோதனை முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. கற்பனையான தீர்வுகளும், கனவில் முன்வைக்கப்படும் ஆசைகளும் மண்ணில் வெகுகாலம் நீடித்திருப்பதில்லை. இன்றைக்கு உலகமயம் தீவிரமடைந்திருக்கும் காலத்தில் வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் மேற்குலகை நோக்கி அகதிகளாய் பெரும் எண்ணிக்கையில் ஓடுகின்றனர். மேற்குலகிலோ வேலை வாய்ப்பு இன்மை, விலை வாசி உயர்வு, நலத்திட்டங்கள் பறிப்பு என நடுத்தர மக்களும் போராடுகின்றனர்.

படிக்க:
கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?

புதிய அப்போஸ்தலர்களின் பலம் என்ன? வாழ்க்கைப் பிரச்சினைகளை விரிவாக விளக்கி அதற்கு ஒரு தீர்வு இருப்பதாக கற்பனையில் நம்ப வைக்கிறார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது இசுலாத்திற்கு விரோதமானது இல்லை என ஜைனுலாபிதீன் சுற்றி வளைத்து சொல்வார். விலைவாசி உயர்வுக்கு எதிராகவோ, பரீட்சையில் தேர்வாகவோ ஆண்டவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்களென நாலுமாவடி லாசாரஸ் கூறுகிறார். இந்து மத நவீன சாமியார்களோ யோகம், தியானம், வாழ்வியல் கலை என வேறு கற்பனை உலகத்தை முன்வைக்கின்றனர்.

முற்போக்கு அரசியல் முகாம் செய்கின்ற பிரச்சாரத்தை விட இவர்களது பிரச்சாரம் வலுவாக இருக்கிறது. காரணம் முற்போக்கு அரசியல் முகாம் உண்மையான தீர்வுகளை முன்வைப்பதால் அவை உடனுக்குடன் ஆத்ம சாந்தியை அளிப்பதில்லை. அப்போஸ்தலர்களோ இன்ஸ்டன்ட் தீர்வினை மனதில் காட்டுகிறார்கள்.

பெந்தகோஸ்தே பாதிரியார்கள் நள்ளிரவில் கண்ணீர் விட்டு அழுமாறும், முஸ்லிம்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் விடுதலையை தேடுமாறும், இந்து மத சாமியார்களோ கர்மவினை விதியை காட்டி கடமையை செய்யுமாறும் கோருகிறார்கள்.

இதனாலேயே இந்த புதிய இறைத்தூதர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தழைத்தோங்குவது சாத்தியமில்லை. வாழ்க்கைச் சிக்கலே மதத்தை நோக்கி ஓடவைக்கிறது. வாழ்வியல் வரம்புகளுக்குட்பட்டதே மதத்திற்கான இடம்.  அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் ஒரு தொழிலாளி புனிதப்பயணம் என்பதற்காக மெக்காவிற்கோ வாடிகன் நகரத்திகோ காசி ராமேஸ்வரத்திற்கோ சென்று விட முடியாது.

தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கைப் பிரச்சனைகள் முற்றும் போது மக்கள் இரண்டில் ஒன்று பார்ப்போம் என போராடுகிறார்கள். இன்று பிரான்சில் நடக்கும் மஞ்சள் சட்டை போராட்டம் அத்தகையதுதான். பூலோக சொர்க்கமாக கருதப்படும் அமெரிக்காவில் கூட முதலாளித்துவம் ஒழிக என வால்வீதியிலேயே முழங்குகிறார்கள் மக்கள். அத்தகைய நேரங்களில் எவரும் தேவாலயங்களை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

சபரிமலை , அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள் !

மிழகத்தில் செயல்பட்டுவரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் 15-ஆம் ஆண்டு விழா கடந்த டிசம்பர் 16 அன்று மதுரையில் நடைபெற்றது.

சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்!”, ” சமூக சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலையும் ‘சத்ர தர்மா சாதனா’ கொலை நூலும்!” என்பது உள்ளிட்ட தலைப்புகளில் அறிவுத்துறையினர் பங்கேற்று கருத்துரையாற்றினர்.

பார்ப்பன இந்து மதவெறி பாசிசம் அதிகாரத்தில் இருந்து வரும் சூழலில் அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கொள்கைகளுக்கு பேரபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கை என்ற அடிப்படையில் சங்கப் பரிவாரங்கள் நேரடியாக அரசியல் சட்டத்தின் மீது தாக்குதல் தொடுப்பதும் அதனை மோடி அரசு ஆதரித்து ஊக்கமளிப்பதும் வேகமாக வளர்ந்து வருகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்த பின்பும் இன்று வரை அதை அமல்படுத்தவிடாமல் ஆட்டம் போடுகிறது ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்.

மோடியை விமர்சிக்கும் அல்லது அவர்களின் ஊழல் முறைகேடுகளை அம் பலப்படுத்தும் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ‘சொல் பேச்சைக் கேட்க மறுக்கும்’ லோயா போன்ற நீதிபதிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படிக்க:
ஏண்ணே கொரங்குலேந்து மனுசன் வந்தானா சாதி வந்துச்சா ?
பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?

இந்திய ஜனநாயகத்திற்குப் பார்ப்பன இந்து மதவெறி பாசிச சக்திகளால் பேராபத்து ஏற்பட்டுள்ள இந்தச்சூழலில் அறிவுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மக்களின் வாழ்வுரிமை காக்க என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அமைந்திருந்தது இக்கருத்தரங்கம்.

இக்கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் தி. லஜபதிராய் ஆகியோரின் உரை இப்பதிவில் இடம்பெறுகிறது.

சபரிமலை : தீண்டாமை!
வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்!
கருத்துரை: வழக்கறிஞர் தி. லஜபதிராய், உயர்நீதிமன்றம், மதுரை.

தொகுப்பு: வினவு களச்செய்தியாளர்கள்.

மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்

சிய பெண்களுக்கான கபடிப் போட்டியில் 28 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது ஈரான். பெண்களின் விளையாட்டு உரிமைகளை வென்றெடுக்கும் விதமாக, தற்போது கால்பந்து விளையாடும் உரிமைகளையும் வென்றுள்ளனர் ஈரானிய பெண்கள்.

உலகில் உள்ள அனைத்து மதங்களையும் ஆணாதிக்கத்தையும் பிரித்துப் பார்க்க இயலாது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில் கூட கிறித்தவ மதம் கேள்விக்குள்ளாக்கப்பட்டதின் விளைவாகவே பெண்களுக்கான சமத்துவம் கிடைக்கப் பெற்றது. இந்திய அளவில் பார்க்கும்போது பார்ப்பனிய இந்து மதத்தை எதிர்த்து  பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதாலேயே பெண்கள் விளையாட்டு மற்றும் கல்வித் துறைகளில் பங்கேற்க முடிந்தது.

சமீப ஆண்டுகளில்தான் ஈரான் நாட்டு அரசாங்கம் ஆண்கள் கால்பந்து சாம்பியன்ஸ் லீக் போட்டி நடைபெறும் அரங்குகளில் பெண்களும் அமர்ந்து பார்க்கலாம் என்ற அனுமதியை வழங்கியிருந்தது. தற்போது அந்த சாம்பியன்ஸ் லீக் விளையாட்டையே விளையாடலாம் என்ற அனுமதி கிடைத்த நிலையில் வீரர்களின் (பெண் வீரர்கள்) மகிழ்ச்சி பெரும் கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது.

படிக்க:
சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !
மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட்

கடந்த நவம்பர் (13.11.2018) மாதம், ஈரானிய பெண்கள் கால்பந்து அணி தாய்லாந்து நாட்டில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று ஒன்றில் வெற்றி பெற்றிருக்கிறது.

19 வயதினருக்குட்பட்ட ஈரான் பெண்கள் கால்பந்து அணியினர், ஆசிய கால்பந்து சாம்பியன் போட்டிகளுக்காக நடைபெறும் ஆட்டங்களில், அவர்கள் இடம் பெறும் குழுக்களில் முதலிடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 16 வயதினருக்குட்பட்ட ஈரான் பெண்கள் கால்பந்து அணியினரும் தங்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆசிய கால்பந்து சாம்பியன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

ஈரான் போன்ற இசுலாமிய நாடுகளில் மத அடிப்படைவாதமே ஆட்சியில் இருந்து வரும் நிலையிலும், விளையாட்டின் போது அணியக்கூடிய உடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவையனைத்துக்கும் அப்பாற்பட்டு ஈரானிய பெண்கள் விளையாட்டுத்துறைகளில் சாதித்து வருகின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகிறது.

கட்டாயூன் கொஸ்றோயர் (Katayoun Khosrowyar):

இவர் ஈரானிய அமெரிக்க வேதிப் பொறியியல் வல்லுனர். தற்போது 19 வயதுக்குட்பட்ட ஈரானிய பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார். பிஃபா (FIFA) நிர்வாகம் ஈரான் பெண்கள் கால்பந்து அணிக்காக இவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டியிருக்கிறது.

கால்பந்து லீக் போட்டிகளில் விளையாடி தேசிய அளவில் இடம்பெற வேண்டும் என்ற ஆர்வம் ஈரானிய பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

ஈரானின் வடக்கு பிராந்தியத்தில் காஸ்பியன் கடலையொட்டி அமைந்துள்ள பந்தார் அன்சாலி  என்ற நகரத்திலுள்ள மலாவன் பெண்கள் கால்பந்து அணியினர்தான், அந்நாட்டு அரசின் அறிவிப்பால் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். ஏனென்றால் இந்த கால்பந்து அணி கடந்த 2016-ம் ஆண்டு முதல் லீக் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. ஒரு கப்பல் எதிர்பாராத புயலால் தாக்கப்படும் நிலையில் தேவையில்லாதவற்றை வீசி எறிந்தால் தான் கப்பல் அழிவிலிருந்து பாதுகாக்கப்படும் என்று கூறி கால்பந்து அணியில் பெண்கள் நீடிக்கக்கூடாது என்று தடைவிதித்திருந்தார் அப்போதைய  மலாவன் அணியின் தலைமை செயல் அதிகாரி.

இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது இந்த அணியை முன்னாள் கால்பந்து வீராங்கனையான மரியம் இராண்டூஸ்ட் வாங்கியதோடன்றி தானே அந்த அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். தடை விதிக்கப்பட்டிருந்த காலத்திற்கு முன்பும் இவரே பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

அல்ஜசீரா இணையதளத்திற்கு மரியம் இராண்டுஸ்ட் அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் ’ இந்த அணி கடந்து வந்த பாதை என்பது மிகக்கடினமான ஒன்று; ஒரு சிறைக்கைதிக்கு என்ன சுதந்திரம் கிடைக்குமோ அந்த அளவு சுதந்திரம் தான் எங்களுக்கும் கிடைத்தது. இங்கு விளையாடும் பெண்களில் அனேகமானோர் படித்துக் கொண்டே விளையாட்டிலும் ஈடுபடுகின்றனர். ஆண்களைப் போன்றே எங்களாலும் கால்பந்து விளையாட்டை சிறப்பாக விளையாட முடியும் என்கிறார்.

ரம்மியமான இயற்கைச் சூழலில் மலாவன் கால்பந்து அணியினர்.

25 வீரர்களைக் கொண்டு 2002-ம் ஆண்டு வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட மலாவன் கால்பந்து அணி பல தடைகளைத் தாண்டி இப்போது மறுபடியும் விளையாட்டுக் களத்தில்.

ஈரானியப் பெண்கள் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிப்போட்டிகளில் முன்னேறுவது இளம் வீரர்களிடையை மிகப்பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லீக் போட்டிகளுக்கான தயாரிப்பில் மலாவன் அணியினர்

பந்தார் அன்சாலி பகுதியில் மிகவும் பிரபலமான விளையாட்டாக அறியப்படுவது கால்பந்து விளையாட்டு.  அனுமதித்தால் சாதிக்க முடியாதவர்களா பெண்கள்?

தேசிய அணிக்காக விளையாடிய பல ஆண்கள் பயிற்சியாளர் மரியம்-இன் தந்தை உட்பட இந்த விளையாட்டு மைதானத்தில் கால்பதித்தவர்கள் தாம்…

ஊதா நிற உடையில் இருப்பவர் தான் பயிற்சியாளர் மரியம். தன் அணியின் வீராங்கனைகளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

1976-ம் ஆண்டு நடைபெற்ற ஹஃப்சி கோப்பை கால்பந்து போட்டியில் மலாவன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துசென்றதும் இதே மரியம் தான்.

சிறுவயது முதலே தனது தந்தை விளையாடும் போட்டிகளை ஆர்வமுடன் இரசித்ததால் தான் இந்த விளையாட்டு மீது ஆர்வம் வந்தது என்கிறார்.

மலாவன் அணியின் பயிற்சியாளராக 14 வருடங்களாகப் பணியாற்றி வரும் மரியம் இளம் தலைமுறை வீரர்களுடன்…

தடை நீங்கியதால் ஏற்படும் உற்சாகத்தை வெற்றிகளாய் மாற்றிடுவோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறார் மரியம்….

நன்றி: அல்ஜசீரா
தமிழாக்கம்: வரதன்

பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 2

நூலாசிரியர் அறிமுக உரையின் இரண்டாம் பாகம் இங்கே இடம்பெறுகிறது.  மார்க்சை முதலாளித்துவ கல்வி உலகம் நிராகரிப்பதற்கு பெரு முயற்சி செய்தாலும் தவிர்க்கவியலாமல் அவர்கள் மார்க்சை படித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சில உண்மைகைள மறுக்க முடியாமலும் இருக்கிறார்கள். இந்த முரண்பாடு இப்பகுதியில் விளக்கப்படுகிறது. அறிமுக உரையின் இறுதி அடுத்த பாகமாக வர இருக்கிறது. அதில் 17 – 19 -ம் நூற்றாண்டுகளில் அரசியல் பொருளாதார வரலாற்றின் சுருக்கத்தை ஆசிரியர் விளக்குகிறார்.

மார்க்சும் அவருக்கு முன்பிருந்தவர்களும் !

அ.அனிக்கின்
த்துவஞானம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் ஆகியவை மார்க்சியத்தின் மூன்று உட்கூறுகளாகும். மார்க்சியத் தத்துவம் என்பது இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதமாகும். சமூக வளர்ச்சி அதன் பொருளாதார அடுக்கமைவில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பது வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முக்கியமான கோட்பாடாகும்.

அரசியல் பொருளாதாரம் இந்த அடுக்கமைவை ஆராய்ந்து, சமூக பொருளாதார உருவமைப்புகளின் இயக்கத்தின் விதிகளையும் ஒரு உருவமைப்பிலிருந்து மற்றொரு உருவமைப்புக்கு மாறுகின்ற விதிகளையும் வெளிக்காட்டுகிறது. விஞ்ஞான கம்யூனிசம் என்பது சோஷலிசப் புரட்சி, புதிய கம்யூனிஸ்ட் சமூகத்தை நிர்மாணிக்கின்ற முறைகள், இந்த சமூகத்தின் ஆதாரக் கட்டங்களையும் கூறுகளையும் எடுத்துரைக்கும் போதனையாகும்.

மார்க்சியத்தின் மூன்று உட்கூறுகளில் ஒவ்வொன்றும் முந்திய சிந்தனையாளர்களின் முற்போக்கான கருத்துக்களின் வளர்ச்சியாகவும் ஒரு உலக விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகவும் இருக்கிறது. இந்த மூன்று உட்கூறுகளும் மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களோடு பொருந்துகின்றன. வி.இ.லெனின் எழுதியதுபோல, ”பத்தொன்பதாம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவை மனிதகுலத்தின் மிக முன்னேற்றமடைந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம், மூலச்சிறப்புள்ள ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பொதுவாக பிரெஞ்சு புரட்சிப் போதனைகளுடன் இணைந்த பிரெஞ்சு சோஷலிசம் என்பவையாகும். இந்த மூன்று தத்துவப் போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றிற்கு முழு நிறைவை அளித்த மேதை மார்க்ஸ் .”(1)

ஆடம் ஸ்மித் – காரல் மார்க்ஸ் – டேவிட் ரிக்கார்டோ

இந்தப் பிரபலமான கருத்துரை – அதன் சகலவிதமான ஆழத்திலும் ஸ்தூலத்தன்மையிலும் – பிரதானமாக மார்க்ஸ் எழுதிய புத்தகங்களிலேயே வெளிப்படுகிறது. ஹெகல் மற்றும் ஃபாயர்பாஹ், ஸ்மித் மற்றும் ரிக்கார்டோ, சான் – சிமோன் மற்றும் ஃபூரியே ஆகியோரிடமிருந்து தான் பெற்றிருக்கும் ஒவ்வொரு கருத்தையும் மார்க்ஸ் சிறந்த ஆராய்ச்சி நுட்பத்தோடு விவரமாக எழுதியிருக்கிறார். மார்க்சிடம் இருந்த பல குணங்களில் ஆராய்ச்சி நேர்மை குறிப்பிடத்தக்க அளவுக்கு முக்கியமானதாகும். குறிப்பாக, பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற் பாதியிலும் வெளிவந்திருந்த எல்லாப் பொருளாதார நூல்களையுமே அவர் நன்கு படித்திருந்தார்.

மார்க்ஸ் எழுதிய முக்கியமான விஞ்ஞான நூலாகிய மூலதனம் ”அரசியல் பொருளாதாரத்துக்கு ஒரு விமரிசனம்” என்ற துணைத் தலைப்பைக் கொண்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் நான்காவது பகுதிக்கு ”உபரி மதிப்புத் தத்துவங்கள்” என்று பெயர்; இதில் முந்திய அரசியல் பொருளாதாரம் அனைத்துமே விமரிசன ஆய்வுக்கு உட்படுத்தப் படுகிறது. இங்கே ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்தும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் முக்கியமான கடமையைத் – முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயக்க விதியை வெளிப்படுத்துவது – தீர்ப்பதற்கு ஏதாவதொரு அளவுக்கு உதவி செய்கின்ற விஞ்ஞானக் கூறுகளைப் பிரித்தெடுப்பது மார்க்சின் முக்கியமான முறையாக இருந்தது. அதே சமயத்தில் சென்ற காலத்தைச் சேர்ந்த இந்த அரசியல் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களில் இருந்த முதலாளித்துவக் குறைபாடுகளையும் மாறுபாடுகளையும் அவர் விளக்கினார்.

மார்க்ஸ் ஒரு வகையான அரசியல் பொருளாதார விமரிசனத்துக்குக் கணிசமான இடம் ஒதுக்கினார்; ஏனென்றால் அதன் நோக்கம் உண்மையான விஞ்ஞானப் பகுப்பாய்வு அல்ல; முதலாளித்துவ அமைப்பை நியாயப்படுத்துவதும் பகிரங்கமாக ஆதரிப்பதுமே. அவர் அதைக் கொச்சையானது என்று குறிப்பிட்டார். முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் இந்தப் போக்கின் முக்கியமான பிரதிநிதிகளுக்கு இந்த நூலில் கணிசமாக இடம் கொடுக்கப்பட்டிருப்பது இயற்கையானதே. முதலாளித்துவப் பொருளாதார  நிபுணர்கள் முதலாளித்துவ சமூகத்தைப் பற்றிப் பறைசாற்றிய கருத்துக்களை விமரிசனம் செய்யும்பொழுது மார்க்ஸ் பாட்டாளி வர்க்க அரசியல் பொருளாதாரத்தை வளர்த்துச் சென்றார்.

படிக்க:
♦ கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
♦ மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !

மார்க்ஸ் எழுதிய மூலதனத்தையும் மற்ற பொருளாதார நூல்களையும் படிக்கின்ற வாசகருக்கு சென்ற காலத்திய விஞ்ஞானப் பிரமுகர்களின் காட்சிக்கூடம் முழுவதுமே காட்டப்படுகிறது. மற்ற விஞ்ஞானங்கள் ஒவ்வொன்றையும் போல, அங்கீகரிக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமல்லாமல், அதிகமாக வெளியே தெரிந்திராத பல அறிஞர்களின் முயற்சிகளும் அரசியல் பொருளாதாரத்தை வளர்த்தன் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரம் என்பது ஒன்றரை நூற்றாண்டுக் காலத்துக்கு மிக விரிவான ஒரு போக்காக இருந்தது; அதனுள் அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட பல அறிஞர்கள் ஆராய்ச்சிகளைச் செய்தார்கள்; தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை எழுதினார்கள். உதாரணமாக, ஆடம் ஸ்மித்துக்கு முன்பிருந்த பல தலைமுறைகளைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள்தான் அவருக்குத் தளத்தை நன்றாகத் தயாரித்துக் கொடுத்தார்கள். எனவே இந்த நூலின் ஆசிரியர் மிகச் சிறப்புடைய அறிஞர்களின் வாழ்க்கை மற்றும் கருத்துக்களில் முக்கியமாக கவனம் செலுத்துவதோடு, அதிகமாக வெளியில் தெரியாத ஆனால் முக்கியத்துவமுடைய பல சிந்தனையாளர்களின் பங்கையும் குறிப்பிட்ட அளவுக்காவது எடுத்துக் கூற முயன்றிருக்கிறார்.

ஒரு விஞ்ஞானம் என்ற வகையில் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் உருவரையை இன்னும் முழுமையாகக் கொடுப்பதே அதன் நோக்கம். இந்த அறிஞர்கள் வாழ்ந்து பாடுபட்டு உழைத்த காலத்தையும், சமூக மற்றும் அறிவுத்துறைச் சூழலையும் விளக்குவது அவசியமாகும்.

அரசியல் பொருளாதார வரலாற்றை ஸ்மித், கெனே, ரிக்கார்டோ ஆகியோரின் நூல்களோடு நிறுத்திவிடுவது கணிதத்தின் மொத்த வரலாறுமே டெகார்ட், நியூட்டன், லப்ளாஸ் ஆகியோரது கண்டுபிடிப்புகளில் அடங்கியிருக்கிறது என்று சொல்லுவதைப் போன்று தவறுடையதாகும். பதினேழாம் நூற்றாண்டின் ஓவியக் கலை வரலாற்றை எழுதுபவர்கள் மாபெரும் ஓவியரான ரெம்பிரான்ட்டைப் பற்றி எழுதுவதோடு “சிறிய டச்சுக்காரர்கள்” எனப்படும் ஓவியர்களின் பங்கையும் அங்கீகரிக்கிறார்கள்.

முதலாளித்துவ விஞ்ஞானமும் பிரச்சாரமும் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கும் அதிகமாகவே விஞ்ஞானி என்ற முறையில் மார்க்சின் வரலாற்றுச் சிறப்பான பாத்திரத்தைச் சிதைப்பதற்கு முயன்று வந்திருக்கிறது. இங்கே இரண்டுவிதமான அணுகுமுறைகளை ஒருவர் தெளிவாக வேறுபடுத்திக்காண முடியும். முதல் அணுகுமுறை மார்க்சையும் அவருடைய புரட்சிகரமான போதனையையும் புறக்கணிக்கிறது; அவர் மிகக் குறைவான விஞ்ஞான முக்கியத்துவம் கொண்டவர் அல்லது “மேற்கத்திய கலாச்சார மரபுக்கு” வெளியே உள்ளவர், எனவே “உண்மையான” விஞ்ஞானத்துக்கு வெளியே இருப்பவர் என்று எடுத்துக் காட்டுகிறது. இங்கே மார்க்சுக்கும் அவருக்கு முந்தியவர்களுக்கும், குறிப்பாக மூலச்சிறப்புடைய முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களுக்கும் இடையே உள்ள இணைப்பு அலட்சியப் படுத்தப்படுகிறது, குறைவாக மதிப்பிடப்படுகிறது.

எனினும் சமீபகாலங்களில் இரண்டாவது அணுகுமுறையே அதிகம் பின்பற்றப்படுகிறது. இதன்படி மார்க்ஸ் ஒரு சாதாரணமான (அல்லது அசாதரணமானவராகக் கூட) ஹெகல் ஆதரவாளராக அல்லது ரிக்கார்டோவாதியாகக் காட்டப்படுகிறார். ரிக்கார்டோவுடனும் மொத்த மூலச்சிறப்பு மரபோடும் மார்க்ஸ் கொண்டிருந்த நெருக்கம் வன்மையான அழுத்தத்தோடு எடுத்துக் கூறப்படுகிறது; அரசியல் பொருளாதாரத்தில் மார்க்ஸ் ஏற்படுத்திய திருப்புமுனையின் புரட்சிகரமான தன்மை மழுப்பப்படுகிறது. ஜே.ஏ.ஷும்பீட்டர் இத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார்; இவர் பொருளாதாரச் சிந்தனையின் வரலாறு பற்றி இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்திருக் கும் முதலாளித்துவப் புத்தகங்களில் மிகப் பெரியதொரு புத்தகத்தை எழுதியவர். இவர் மார்க்சை ரிக்கார்டோவாதி என்று கூறுகிறார்; மார்க்சின் பொருளாதார போதனை ரிக்கார்டோவின் போதனையிலிருந்து சிறிதும் வேறுபட்டிருக்கவில்லை; எனவே அதிலுள்ள அத்தனை குறைபாடுகளும் இதிலும் உள்ளன என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவர்கூட மார்க்ஸ் “இந்த (ரிக்கார்டோவின் – ஆசிரியர்) வடிவங்களை மாற்றியமைத்துக் கொண்டார்; கடைசியில் மிக அதிகமாக வேறுபடக் கூடிய முடிவுகளுக்கு வந்தார்”(2) என்று எழுதுகிறார்.

மார்க்சியத்தை நவீன முதலாளித்துவ சமூகவியலோடும் அரசியல் பொருளாதாரத்தோடும் சமரசப்படுத்த முடியும்; ஏனென்றால் அவை அனைத்தும் ஒரே தோற்றுவாயிலிருந்து புறப்பட்டவை என்று அடித்துச் சொல்லப்படுகிறது. இந்த நம்பிக்கையை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். பிரிட்டிஷ் லேபர் கட்சியின் பிரபலமான தத்துவாசிரியரான ஜான் ஸ்ட்ரேச்சி, ”மார்க்சியம் மேற்கத்திய கலாச்சார மரபுகளிலிருந்து தோன்றிய போதிலும், அதிலிருந்து வெகுதூரத்துக்கு விலகிப் போய்விட்டது. எனவே அந்த மேற்கத்திய கலாச்சார மரபுகளோடு மார்க்சியத்தை மறு இணைப்புச் செய்கின்ற அத்தியாவசியமான போக்கில் அது ஒரு ஆரம்ப நடவடிக்கை”(3) என்று தன்னுடைய புத்தகத்தைப் பற்றித் தான் கருதுவதாக எழுதுகிறார்.

சமீப வருடங்களில் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் மார்க்ஸ் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் கணிசமான அளவுக்கு அக்கறை பெருகியிருப்பது நமக்குத் தெரிந்ததே. மார்க்சின் போதனையில் உள்ள தனிக் கூறுகளைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது அநேகமாக அவர்கள் எல்லோரிடமும் உள்ள பொதுவான அம்சமாகும். அடிப்படையான வளர்ச்சிப் பிரச்சினைகளில் (பொருளாதார வளர்ச்சி, குவிப்பு, தேசிய வருமானத்தைப் பகிர்ந்தளித்தல்) பின்பற்றப்பட வேண்டிய பொருளாதாரக் கொள்கையைப் பற்றித் தம்முடைய சிபாரிசுகளைத் தயாரிக்கும்பொழுது, அன்றுள்ள நிலைமைகளைப் பற்றி யதார்த்தரீதியாக மதிப்பிடுவது அவசியமாவதால், அதிகமான தொலைநோக்குடைய அறிஞர்கள் மார்க்சிய ஆராய்ச்சியின் முறைகளாலும் முடிவுகளாலும் அடிக்கடி கவரப்படுகிறார்கள்.

ஆர்.எல்.ஹெய்ல்ப்ரோனர்

மார்க்சியம் பற்றிய அக்கறை இப்படி வளர்ச்சி அடைந்திருப்பதற்கு உதாரணமாக ஆர்.எல்.ஹெய்ல்ப்ரோனர் எழுதிய, இன்றுவரையிலுமுள்ள பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியைப் பற்றிய வரலாற்று நூலைக் கூறலாம். இந்தப் புத்தகத்தில் மார்க்சின் வாழ்க்கை மற்றும் அவருடைய பணிகளைப் பற்றி சுவையான வர்ணனையுடன் எழுதப்பட்டிருக்கிறது. இதுவரை முதலாளித்துவ அமைப்பைப் பற்றிச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் மார்க்சியப் பொருளாதார ஆராய்ச்சியே மிகத் தீவிரமானது, மிகவும் ஊடுருவிச் செல்வது என்று அவர் குறிப்பிடுகிறார். ”இது தலையை ஆட்டிக் கொண்டு, நாக்கைச் சப்பிக் கொண்டு தார்மிக அடிப்படையில் செய்யப்படும் ஆராய்ச்சி அல்ல…. அது அதிகமான உணர்ச்சியைக் கொண்டிருந்தபோதிலும் விருப்பு வெறுப்பற்ற மதிப்பீட்டைச் செய்கிறது. இந்தக் காரணத்துக்காகவே அதனுடைய சோர்வூட்டுகின்ற முடிவுகளைப் பற்றி நாம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.”(4)

சமீப காலத்தில் மேற்கு நாடுகளில் தோன்றியிருக்கும் “தீவிரமான” அரசியல் பொருளாதாரம் மரபுவழிப்பட்ட கோட்பாடுகளின் ஏற்றுக் கொள்ளப்பட்ட தன்மைகளுக்கு மறுப்பைத் தெரிவிக்கிறது. சமூக – பொருளாதார ஆராய்ச்சியை நிராகரித்ததற்காகவும் வடிவங்களையே முக்கியமாகக் கொண்டதற்காகவும் அவற்றின் மலட்டுத் தன்மைக்காகவும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் பொருளாதாரத்தின் முக்கியமான மரபுகளை இந்தப் போக்கின் பிரதிநிதிகள் குறிப்பிடத்தக்க வகையில் விமர்சிக்கிறார்கள். மார்க்சை ரிக்கார்டோவுடன் இணைக்கின்ற – சமூகத்தில் வருமானங்கள் பகிர்ந்து கொடுக்கப்படுவது பற்றிய பிரச்சினையை வர்க்க ஆய்வு செய்கின்ற அணுகுமுறையின் வன்மையை அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இவ்விதமான நிகழ்வுப் போக்குகள் இயற்கையாகவே வரவேற்கப்பட வேண்டியவை. எனினும் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தையும் ஒரே விஞ்ஞான முறையாக “இணைக்கின்ற” கருத்து கண்டிப்பாக நிராகரிக்கப்பட வேண்டும். மார்க்சியவாதிகளுக்குப் பொருளாதாரத் தத்துவம் என்பது சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றி அமைப்பதற்கான அவசியத்தை வாதிடுகின்ற அடிப்படையாக இருக்கிறது; ஆனால் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் இவர்களில் தீவிரவாதிகளும் அடங்குவர் – இந்த முடிவுகளுக்கு வருவதில்லை.

கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளி வர்க்க இயக்கத்திலுள்ள சீர்திருத்தவாதமும் அதனோடு தொடர்புடைய வலதுசாரி சந்தர்ப்பவாதமும் மார்க்சியத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகச் சிந்தனையின் மனிதாபிமான, மிதவாத மரபில் மட்டுமே வேரூன்றியிருக்கின்ற போக்காகக் கருதுவதற்கு முற்படுகின்றது. மார்க்சியம் பிரதானமாகத் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான சித்தாந்தம் என்பதும் மிதவாதத்தின் எந்த வடிவத்திலிருந்தும் கோட்பாட்டளவில் முற்றிலும் வேறாக இருப்பது என்பதும் மழுப்பப்படுகிறது. மார்க்சியத் தத்துவம் அதன் புரட்சிகரமான நடவடிக்கையிலிருந்து அடிக்கடி பிரிக்கப்படுகிறது.

பெருந்திரளான மக்களிடம் மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளைப் பரப்புவதில் “இடதுசாரி” திருத்தல்வாதத்தையும் வறட்டுச் சூத்திரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவது அதிக முக்கியமானது. இந்தப் போக்குகளின் பிரதிநிதிகள் மார்க்சியத்துக்கு முந்தியவர்களின் கொள்கைகளையும் கருத்துக்களையும் புறக்கணிக்க முயல்கிறார்கள். சமூக வளர்ச்சி என்பது புறவயமான விதிகளுக்கு ஏற்ப நடைபெறுகின்ற நிகழ்வுப் போக்கு என்ற மார்க்சியக் கருத்தை, அதன் விஞ்ஞான ஆராய்ச்சிப் பகுதியின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டுவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள். பொருளாதாரத்தில் மனம்போனவாதமும் அரசியலில் வீரசாகசமும் “இடதுசாரி” திருத்தல்வாதத்தின் குறியடையாளங்களாகும்.

புரூதோன்

மார்க்சியத்தை புரூதோன், கிரொபோட்கின் ஆகியோரது – இவர்களுக்கும் மார்க்சுக்கும் பல அம்சங்கள் ஒத்துவருவதாகச் சொல்லப்படுகிறது – அராஜகவாதக் கருத்துக்களோடு இணைப்பவர்களைப் ”புதிய இடது” அணியினரிடம் பார்க்கிறோம். ஆனால் மார்க்சும் எங்கெல்சும் புரூதோனையும் அவருடைய போதனையையும் எதிர்த்துப் பல வருடங்களுக்கு மேல் உக்கிரமான போர் நடத்தியது எல்லோரும் அறிந்த உண்மையாகும்.

முதலாளித்துவக் கலாச்சாரத்தின் எல்லா அம்சங்களையும் கூறுகளையும் நிராகரிக்கும்பொழுது ”எதிர்க் கலாச்சாரம்” என்ற கருத்து சில சமயங்களில் வளர்ச்சி அடைகிறது. ஒரு புதிய, முதலாளித்துவ எதிர்ப்புக் கலாச்சாரத்தை வெறும் காற்றைக் கொண்டு நிர்மாணிப்பதற்குச் செய்யப்படுகின்ற முயற்சிகளின் பொருந்தாத் தன்மையையும் தீமைகளையும் மார்க்சிய லெனினியம் தத்துவத்திலும் நடைமுறையிலும் விளக்கிக் காட்டியிருக்கிறது. புதிய கலாச்சாரம் பழையதை ஒரரேயடியாக நிராகரித்துவிடுவதில்லை, ஆனால் அதிலுள்ள மிகச் சிறந்த, முற்போக்கான கூறுகளைப் பயன்படுத்துகிறது.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் முதலாளித்துவ அமைப்பு சரியானதே என்று காட்டும் நோக்கத்தைக் கொண்ட முதலாளித்துவப் பொருளாதாரத் தத்துவங்களை அம்பலப்படுத்தி விமரிசனம் செய்தார்கள்; அவற்றின் சமூகத் தோற்றுவாய்களையும் நோக்கங்களையும், பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய விதிகளையும் நிகழ்வுப் போக்குகளையும் பற்றி அவர்களுடைய மேலெழுந்தவாரியான, விஞ்ஞானத்துக்குப் புறம்பான கருத்துக்களை வெளியே கொண்டு வந்தார்கள்.

தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு ஆபத்தேற்படுத்துகின்ற, அதன் புரட்சிகரமான கடமைகளிலிருந்து தைத் திசை திருப்புகின்ற சித்தாந்தத்தின் மீது அவர்களுடைய தாக்குதல் எத்தகைய சமரசத்துக்கும் இடமில்லாத வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் முதலாளித்துவப் பொருளாதாரக் கருது கோள்களிலிருந்து புறவய யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்ற பகுத்தறிவுக்கு ஏற்ற கூறுகளைத் தேர்ந்தெடுப்பதை மார்க்சிய மூலவர்கள் தங்களுடைய விமரிசனத்தின் நோக்கமாகக் கொண்டிருந்தனர். முதலாளித்துவ அறிஞர்களின் ஸ்தூலமான பொருளாதார எழுத்துக்களைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் குறிப்பிட்ட விதத்தில் வற்புறுத்தினார்கள்.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : மூன்று நூற்றாண்டுகள் 

அடிக்குறிப்பு:
1) V.I. Lenin, Collected Works, Vol. 21, p.50
2) J.Schumpeter, History of Economic Analysis, N.Y., 1955, p.390.
3) J.strachey, Contemporary capitalism, London, 1956, pp. 14-15.
4) R.Heilbroner, The Worldly Philosophers. The Lives. Times and Ideas of the Great Economic thinkers, 3rd ed., N.Y., 1968, p. 153.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

உங்களில் அநேகர் சத்தியத்துக்காகப் போராடவே இல்லை !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 41

மாக்சிம் கார்க்கி
றுநாள் காலையில் ஆஸ்பத்திரியின் வெளிவாசலுக்கருகே சுமார் முப்பது நாற்பது பேர் நின்றுகொண்டிருந்தார்கள். தங்கள் தோழனின் சவப்பெட்டியைப் பெற்றுத் தூக்கிச் செல்வதற்காக அவர்கள் காத்து நின்றார்கள். அவர்களைச் சுற்றிலும் உளவாளிகள் திரிந்து கொண்டிருந்தார்கள். ஜனங்கள் பேசுகின்ற பேச்சையும், முகபாவங்களையும் நடவடிக்கைகளையும் அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். தெருவுக்கு அப்பால் எதிர்த்திசையில் ஒரு போலீஸ் படை இடைகளிலே ரிவால்வர்கள் சகிதம் நின்று கொண்டிருந்தது. அந்த உளவாளிகளின் துணிச்சலைக் கண்டும், போலீஸ்காரர்களின் ஏளனமான புன்னகையைக் கண்டும் ஜனங்களுக்கு ஆத்திரம் மூண்டு கொண்டு வந்தது. போலீஸ்காரர்கள் எந்த நிமிஷத்திலும் தம் சக்தியை வெளியிடத் தயாராய்த் துடிதுடித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் தங்களது ஆத்திரத்தைக் கேலியும் கிண்டலுமாகப் பேசி மறைக்க முயன்றார்கள். சிலர் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருக்க விரும்பாமல், தங்கள் தலைகளைத் தொங்கவிட்டு, தரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வேறு சிலர் தங்களது உணர்ச்சிகளை அடக்க முடியாமல், வாய்ச் சொல்லைத் தவிர எந்தவித ஆயுதமுமற்ற மக்களைக் கண்டு பயந்து நடுங்கும் அதிகாரிகளை நோக்கிக் குத்தலாகப் பேசினார்கள். மக்களது காலடியிலே காற்றினால் பறந்து வந்து விழுந்த பழுத்து வதங்கிய இலைகள் பரவிக்கிடந்த தெருவின் சாம்பல் நிறச் சரளைகளின் மீது இலையுதிர்காலத்தின் வெளிறிய நீலவானம் பளபளத்து ஒளிர்ந்தது.

தாய் கூட்டத்தினிடையே நின்று, தன்னைச் சுற்றியுள்ள பரிச்சயமான முகங்களைக் கண்டு வருத்தத்தோடு நினைத்துக் கொண்டாள்.

”நீங்கள் ஒன்றும் அதிகம் பேர் வரவில்லை. தொழிலாளர்களே ரொம்ப ரொம்பக் குறைச்சல்……..”

கதவுகள் திறந்தன. சிவப்பு நாடாக்களால் கட்டப்பெற்ற மலர் வளையங்கள் சுற்றிய சவப்பெட்டியின் மேற்பகுதியைச் சிலபேர் வெளியே கொண்டுவந்தார்கள். குழுமி நின்ற ஜனங்கள் உடனே தங்கள் தொப்பிகளை அகற்றி அதற்கு மரியாதை செலுத்தினார்கள். அவர்கள் செய்த இந்தச் செய்கை ஒரு பறவைக் கூட்டம் திடீரென கணத்தில் சிறகை விரித்துப் பறக்கத் தொடங்குவது போலத் தோன்றியது. சிவந்த முகத்தில் கறுத்த பெரிய மீசை கொண்ட ஒரு நெட்டையான போலீஸ் அதிகாரி விறுவிறென்று கூட்டத்தினரை நோக்கி நடந்து வந்தான். அவனுக்குப் பின்னால் ஜனங்களைப் பிளந்து தள்ளிக்கொண்டும், தங்களது பூட்ஸ் கால்களை ஓங்கி மிதித்துக்கொண்டும் சிப்பாய்கள் சிலர் வந்தார்கள்.

“அந்த நாடாக்களைத் தூர எடு!” என்று கரகரத்த குரலில் உத்தரவிட்டான் அந்த அதிகாரி.

ஆணும் பெண்ணும் அவனைச் சுற்றி நெருங்கிச் சூழ்ந்தார்கள். ஆத்திரத்தோடு பேசினார்கள். தங்கள் கைகளை அசைத்து வீசி ஒருவரையொருவர் முண்டியடித்து முன்னேறினார்கள். தாயின் கண் முன்னால் உணர்ச்சி வசப்பட்டு வெளுத்துப்போன முகங்களும் துடிதுடிக்கும் உதடுகளும் பிரகாசித்தன. ஒரு பெண்ணின் கன்னங்களில் அவமானத்தால் ஏற்பட்ட கண்ணீர் பொங்கி வழிந்து உருண்டோடியது.

”அடக்குமுறை ஒழிக!” என்று ஒரு இளங்குரல் கோஷமிட்டது. எனினும் அந்தக் கோஷம் அங்கு நடந்துகொண்டிருந்த வாக்குவாதத்தில் அமிழ்ந்து அடங்கிவிட்டது.

தாயின் உள்ளத்தில் சுருக்கென்று வேதனை தோன்றியது. அவள் தனக்கு அடுத்தாற்போல் நின்றுகொண்டிருந்த எளிய உடைதரித்த இளைஞனைப் பார்த்தாள்.

”சவச் சடங்கைக்கூட தோழர்களின் இஷ்டம்போல் நடத்துவதற்கு விடமாட்டேனென்கிறார்கள்” என்று அவள் ஆக்ரோஷத்தோடு சொன்னாள். “இது ஓர் அவமானம்!”

வெறுப்புணர்ச்சி மேலோங்கியது, ஜனங்களது தலைகளுக்கு மேலாகச் சவப்பெட்டியின் மூடி அசைந்தது. அதிலுள்ள சிவப்பு நாடாக்கள் காற்றில் அசைந்தாடின. அந்தப் பட்டு நாடாக்கள் ஜனத்திரளுக்கு மேலாகப் படபடத்து ஒலித்தன.

போலீசாருக்கும் ஜனக்கூட்டத்துக்கும் கலவரம் ஏற்படக்கூடும் என்ற பயம் தாயின் மனத்தில் ஏற்பட்டது. எனவே அவள் ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டே அங்குமிங்கும் விறுவிறென நடந்து திரிந்தாள்.

படிக்க:
கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ?
ஸ்டெர்லைட் போராட்டம் : கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இராஜு | காணொளி

”அவர்கள் அப்படி விரும்பினால் அவர்கள் இஷ்டப்படியே நடந்து தொலையட்டுமே! வேண்டுமானால், அவர்கள் அந்த நாடாக்களை எடுத்துக்கொள்ளட்டுமே! நாம்தான் கொஞ்சம் விட்டுக்கொடுப்போமே!”

யாரோ ஒருவனின் கூர்மையும் பலமும் கொண்ட குரல் அங்கு நிலவிய சப்தத்தை விழுங்கி மேலோங்கி ஒலித்தது:

”எங்களது தோழனை, உங்களது சித்திரவதையால் உயிர் நீத்த எங்களது தோழனை கல்லறைக்கு வழியனுப்பி வைக்கும் எங்கள் உரிமையைத்தான் நாங்கள் கோருகிறோம்…”

ஓர் உரத்த பாட்டுக்குரல் ஒலிக்க ஆரம்பித்தது:

இணையும் ஈடும் இல்லாத
இந்தப் போரில் நீங்களெல்லாம்
பணயம் வைத்தே உம்முயிரைப்
பலியாய்க் கொடுத்தீர் கொடுத்தீரே!

“நாடாக்களை எடு! அவற்றை வெட்டித்தள்ளு, யாகவ்லெவ்!”

உருவிய வாள்வீச்சு ஒலித்து இரைந்தது. கூச்சல்களை எதிர்பார்த்து தாய் தன் கண்களை மூடிக்கொண்டாள். ஆனால் ஜனங்களோ முணுமுணுக்கத்தான் செய்தார்கள். சீற்றங்கொண்ட ஓநாய்களைப்போல் உறுமினார்கள். பிறகு அவர்கள் மெளனமாகத் தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டவாறே விலகி நடந்தார்கள். அவர்களது காலடியோசை தெரு முழுதும் நிரம்பி ஒலித்தது.

அலங்கோலமாக்கப்பட்ட சவப்பெட்டியின் மேலிருந்து கசங்கிப்போன பூமாலைகள் ஜனக்கூட்டத்தின் தலைகளுக்கு மேலாக உதிர்ந்து மிதந்தன. அவர்களுக்குப் பக்கத்தில் குதிரைப் போலீஸ்காரர்கள் பாராக் கொடுத்து உலாவிக் கொண்டிருந்தார்கள். தாய் நடைபாதை வழியாக நடந்து வந்தாள். அவளால் இப்போது சவப்பெட்டியைக்கூடக் காண முடியவில்லை. அந்தச் சவப்பெட்டியைச் சுற்றிலும் தெரு முழுவதுமே முன்னும் பின்னும் ஜனத்திரள் பெருகி வந்தது. சாம்பல் நிறம் படைத்த குதிரைப் போலீஸ்காரர்கள் பின்புறத்திலும் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அதே சமயம் இருமருங்கும் போலீஸ்காரர்கள் தங்களது உடைவாளின் கைப்பிடியில் கைகளைப் போட்டவாறே நடந்து வந்துகொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் துப்பறிபவர்களின் கூரிய கண்கள் ஜனங்களின் முகங்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே வருவதைத் தாய் கண்டாள்.

சென்று வாராய், தோழனே!
சென்று வாராய். தோழனே!

என்று இரு சோகக் குரல்கள் பாடின.

”பாட்டில்லாமலே போகலாம்” என்று யாரோ கத்தினார்கள். “பெரியோர்களே, நாம் மௌனமாகவே செல்வோம்.”

அந்தக் குரலில் ஏதோ ஓர் உறுதியும் அழுத்தமும் இருந்தது. அந்தச் சோக கீதம் திடீரென்று நின்றது. பேச்சுக்குரல் அடங்கியது. சரளைக் கற்கள் பாவிய தெருவில் ஒரே கதியில் செல்லும் மங்கிய காலடியோசை மட்டுமே கேட்டது. இந்த ஓசை ஜனங்களுக்கு மேலாக எழுந்து நிர்மலமான வானமண்டலத்தில் மிதந்து, எங்கோ தூரத் தொலைவில் பெய்யும் புயல் மழையின் இடியோசையைப் போல், காற்றை நடுக்கி உலுக்கியது. ஒரு பலத்த குளிர்காற்று உரத்து வீசி, தெருப்புழுதியையும் குப்பை கூளங்களையும் வாரியள்ளி ஜனங்களின் மீது எரிச்சலோடு வீசியெறிந்தது. அவர்களது தலைமீதும், சட்டை துணிமணிகள் மீதும் வீசியடித்து கண்களை இறுக மூடச் செய்தது. மார்பில் ஓங்கியறைந்தது, காலைச்சுற்றி வளைத்து வீசியது…….

அந்த மெளன ஊர்வலம் பாதிரிகள் யாருமின்றி, இதயத்தைக் கவ்வும் இனிய கீதம் எதுவுமின்றிச் சென்றது. அந்த ஊர்வலமும், ஊர்வலத்தில் தோன்றிய சிந்தனை தோய்ந்த முகங்களும், நெரிந்த நெற்றிகளும் தாயின் உள்ளத்தில் பயங்கர உணர்ச்சியை நிரப்பின. மெது மெதுவாகப் பல சிந்தனைகள் அவள் மனத்தில் வட்டமிட்டான். அந்தச் சிந்தனைகளை அவள் சோகம் தோய்ந்த வார்த்தைகளால் பொதிந்து தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

“உங்களில் அநேகர் சத்தியத்துக்காகப் போராடவே இல்லை…”

அவள் குனிந்த தலையோடு நடந்து சென்றாள். அவர்கள் இகோரைப் புதைக்கச் செல்வதாகவே அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் தனக்கு மிகவும் அத்தியாவசியமான அருமையான நெருங்கிய ஏதோ ஒன்றைத்தான் அவர்கள் புதைக்கப் போவதாக அவளுக்குப்பட்டது. அவள் நிராதரவான உணர்ச்சிக்கு ஆளானாள். அந்தக் காரியத்துக்கு, தான் அன்னியமாகப் போனது மாதிரி உணர்ந்தாள். இகோரை வழியனுப்பும் இந்த மனிதர்களுடன் ஒத்துப்போகாத ஒரு சமனமற்ற கவலையுணர்ச்சி அவள் இதயத்தில் நிரம்பி நின்றது.

“உண்மைதான். இகோர் கடவுள் இருப்பதாக நம்பியதில்லை. இந்த மனிதர்களும்தான் நம்பவில்லை……..” என்று அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள்.

அந்த எண்ணத்தையே மேலும் மேலும் தொடர விரும்பவில்லை. தனது இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பெரும் பார உணர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு முயன்றவாறே அவள் பெருமூச்செறிந்தாள்.

‘கடவுளே! அருமை ஏசுநாதரே! நானும் கூடவா இப்படி இருப்பேன்……”

அவர்கள் இடுகாட்டை அடைந்தார்கள். சமாதிகளுக்கு மத்தியில் செல்லும் ஒடுங்கிய நடைபாதைகளைச் சுற்றி வளைத்து நடந்து, கடைசியாக, சிறு வெள்ளைநிறச் சிலுவைகளாகக் காணப்படும் ஒரு பரந்த வெட்டவெளிக்கு வந்து சேர்ந்தார்கள். சவக்குழியைச் சுற்றி அவர்கள் மெளனமாகவே குழுமினார்கள். சமாதிகளுக்கு மத்தியில் வந்து சேர்ந்த அந்த உயிருள்ள மனிதர்களின் ஆழ்ந்த மெளனம். வெகு பயங்கரமாக தோன்றியது. இந்தப் பயங்கரச் சூழ்நிலை தாயின் இதயத்தை நடுக்கியது. அந்தச் சிலுவைகளுக்கு ஊடாகக் காற்று ஊளையிட்டு, இரைந்து வீசிற்று: சவப்பெட்டியின் மீது கிடந்த கசங்கிய மலர்களை உலைத்தெறிந்தது.

போலீஸ்காரர்கள் அணிவகுத்து நின்று தங்கள் தலைவனையே பார்த்தவாறு நின்றார்கள். கரிய புருவங்களும், நீளமான தலைமயிரும், நெடிய தோற்றமும் கொண்ட ஒரு வெளிறிய வாலிபன் சவக்குழியின் தலைமாட்டருகே போய் நின்றான். அதே சமயத்தில் அந்தப் போலீஸ் அதிகாரியின் முரட்டுக் குரல் சத்தமிட்டது:

”பெரியோர்களே…..”

“தோழர்களே!” என்று அந்தக் கரிய புருவமுடைய இளைஞன் தெளிந்த உரத்த குரலில் பேசத் தொடங்கினான்.

“ஒரு நிமிஷம்” என்றான் அதிகாரி: ”இங்கு நீங்கள் எந்தவிதமான பிரசங்கமும் செய்ய நான் அனுமதிக்க முடியாது. எனவே உங்களை எச்சரிக்கிறேன்.”

“நான் ஒரு சில வார்த்தைகள் மாத்திரம் கூறி முடித்துவிடுகிறேன்” என்று அந்த இளைஞன் அமைதியாகச் சொன்னான். பிறகு பேசத் தொடங்கினான். “தோழர்களே! நம்முடைய நண்பனும் நல்லாசிரியனுமாக விளங்கிய இந்தத் தோழனின் சமாதியருகே நாம் ஒரு பிரதிக்ஞை செய்வோம். அவனது கொள்கைகளை நாம் என்றும் மறக்கமாட்டோம். நாம் அனைவரும் நம்மில் ஒவ்வொருவரும் நமது தாய்நாட்டின் சீர்கேட்டுக்கெல்லாம் மூலகாரணமான இந்தத் தீமையை, இந்த அடக்குமுறை ஆட்சியை, ஏதேச்சதிகார ஆட்சியை சவக்குழி தோண்டிப் புதைப்பதற்கே நமது ஆயுட்காலம் முழுவதும் என்றென்றும் இடையறாது, போராடிப் பாடுபடுவோம்”

“அவனைக் கைது செய்” என்று அதிகாரி கத்தினான். ஆனால் அவனது குரல் அப்போது எழுந்த கோஷப் பேரொலியில் முங்கி முழுகிவிட்டது.

“ஏதேச்சதிகாரம் அடியோடு ஒழிக”

போலீஸ்காரர்கள் ஜனக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு அந்தப் பிரசங்கியை நோக்கிச் சென்றார்கள். அவனோ தன்னைச் சுற்றிச் சூழ்ந்து நெருங்கி நின்று தனக்குப் பாதுகாப்பளித்துக்கொண்டிருக்கும் ஜனக்கூட்டத்துக்கு மத்தியிலிருந்து கைகளை வீசி ஆட்டிக் கோஷமிட்டான்.

‘சுதந்திரம் நீடூழி வாழ்க!

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ?

வணிக பத்திரிகையில் வேலை பார்க்கும் பத்திரிகையாளருக்கும், வினவு மாதிரி மாற்று பத்திரிகையில் வேலை பார்க்கும் பத்திரிகையாளருக்கும் என்ன வேறுபாடு?

– ஜேம்ஸ்

ன்புள்ள ஜேம்ஸ்,

வணிக பத்திரிகையில் சேர பட்டப் படிப்போ அல்லது பத்திரிகைத் துறையிலோ படித்திருக்க  வேண்டும். மாற்று ஊடக பத்திரிகையாளராக பரிணமிப்பத்தற்கு ஆர்வமும் பொதுநல நாட்டமும் வேண்டும். வணிக ஊடக பத்திரிக்கையாளர் துறை சார்ந்த திறமை அடிப்படையிலும் மாற்று உலக பத்திரிகையாளர் குறைந்தபட்ச திறமையோடு ஆர்வம் அர்ப்பணிப்பு அடிப்படையிலும் பணியாற்றுகிறார்கள். முன்னவருக்கு இது தொழில். பின்னவருக்கு இது கடமை.

ஸ்டெர்லைட் விளம்பரம்.

கார்ப்பரேட் ஊடகங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து விளம்பரம் பெறுகின்றன. கடந்த சில தினங்களாக “உண்மை வென்றது” என்ற முதல் பக்க விளம்பரத்தை ஸ்டெர்லைட் நிறுவனம் எல்லா தமிழ் ஊடகங்களுக்கும் அளித்திருக்கிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து தூத்துக்குடியில் நடக்கும் போராட்டத்தை வணிக ஊடகங்கள் பெயருக்கு காட்டுவார்களே அன்றி முக்கியத்துவம் கொடுத்து காட்ட மாட்டார்கள். காலம் செல்லச் செல்ல இந்த விதிகள் – கட்டுப்பாடுகள் வணிக ஊடக பத்திரிகையாளர்களின் ஆழ்மனதில் டிஎன்ஏ போல பதிந்து விடும்.

வணிக ஊடக பத்திரிக்கையாளர் தனது நிர்வாகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு இடையில் எழுதும் ’கலை’யை பயில்கிறார். மாற்று ஊடக பத்திரிகையாளரைப் பொறுத்த வரை அரசும், போலீசுமே அதிகம் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் அவற்றை உடைப்பதே அவரது முதன்மைப் பணி. கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியில் ஒரு பத்திரிகையில் பணியாற்றும் போது வனத்தில் சுள்ளி சேகரிக்கும் மக்களை ஒடுக்கும் அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து எழுதியதால் கைது செய்யப்படுகிறார். கவுரி லங்கேஷோ சுட்டுக் கொல்லப்படுகிறார். எனவே முன்னவரின் கட்டுப்பாடு என்பது ஆளும் வர்க்கம் வேண்டுகின்ற சுயதணிக்கையாக அவருடைய பணியில் இருக்கிறது. பின்னவரின் கட்டுப்பாடு என்பது அவரது பணியை முடக்கும் வண்ணம் அரசால் ஏவப்படுகிறது.

ஸ்டெர்லைட் விளம்பரத்திற்கு முன்னே, பெட்டி செய்தியாக சுருங்கிப் போன கடையடைப்பு போராட்டப் பதிவு.

கார்ப்பரேட் ஊடகங்களின் பாலபாடம் பொதுமக்களுக்கு புரியும் படியும் எளிமையாகவும் கவர்ச்சியாகவும் எழுத வேண்டும். மாற்று ஊடக பத்திரிக்கையாளர்கள் மக்களுக்கு எது தேவையோ அதை அவர்களிடம் கொண்டு செல்லும் வகையில் எழுத வேண்டும். முன்னவர் நிலவும் பொதுப்புத்தியை வைத்துக் கொண்டு அதனோடு முரண்படாமல் எழுதிச் செல்வார். பின்னவர் பொதுப்புத்தியை எதிர்த்து எழுத வேண்டியிருப்பதால் அவரது எழுத்து நிறைய சர்ச்சைகளை எதிர் கொள்ளும். முன்னவர் மக்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது எப்படிச் சொல்லவேண்டும் என்பதில் தேர்ந்தவராக இருப்பார். பின்னவர் மாற்றத்தை நோக்கி எழுதுவதால் மக்களின் மனநிலை குறித்த பிடிமானம் ஓரளவிற்கே இருக்கும். அதனால் இவர் மக்கள் விரும்பும் வகையில் எழுதுவதை தொடர் முயற்சியில் கற்றுக் கொள்வார்.

வணிக ஊடக பத்திரிக்கையாளர் தனது எழுத்து திறமையால் ஊடக உலகில் பிரபலமாகி தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடியும். அதன் மூலம் அடுத்தடுத்த உயர்பதவிகளையோ அல்லது சினிமா வாய்ப்புகள், தனி ஊடக நிறுவனத்தை ஆரம்பிப்பது என பயணிக்க முடியும். மாற்றுப் பத்திரிகையாளர் தனது ஊடகம் முன்வைக்கும் கருத்து – இலட்சியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளார். அவருக்கு தனிப்பட்ட பிரபலம், புகழ், அடுத்தடுத்த உயர்பதவிகளுக்குச் செல்லுதல் போன்றவை தேவையும் இல்லை – வாய்ப்பும் இல்லை. அவருக்கும் அதில் பெரிய விருப்பம் இருக்காது. முன்னவர் தன் எழுத்து மக்களால் பாராட்டப்படுவதை அதிகம் விரும்புவார். பின்னவருக்கும் அந்த விருப்பம் இருந்தாலும் முதன்மையாய் தன் எழுத்து மக்களிடம் உரிய மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே மகிழ்வார்.

வணிக ஊடக பத்திரிகையாளர் நிர்வாக வரம்புகளுக்கு உட்பட்டு தனது எழுத்தை நேர்த்தியாக எழுதும் கலையில் முன்னேறுவது சில காலம் மட்டுமே இருக்கும். பிறகு அந்த தனித்திறமை கார்ப்பரேட் ஊடகங்களின் சமரசத்தோடு இணைந்து பயணிப்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவரது எழுத்து தேங்கி விடுகிறது. மாற்றுப் பத்திரிகையாளருக்கு நிர்வாக சமரச வரம்புகள் இல்லை என்றாலும் அவர் பொதுமக்களிடம் தனது கருத்தைக் கொண்டு செல்வது என்ற முறையில் அமெச்சூராக ஆரம்பித்து  பிறகு தொழில்முறை பத்திரிகையாளர் என்ற நிலையை நோக்கி பயணிப்பார். இந்த அம்சத்தில் இவர் வளர்கிறார். முன்னவர் தேய்கிறார்.

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.

வணிக ஊடக பத்திரிகையாளர் தனது செய்திகளுக்கான மூலாதாரங்களைப் பெரும் செய்தி நிறுவனங்கள், போலீஸ், நீதிமன்றம், அரசுத்துறைகள், பெரிய கட்சிகள், பிரபலங்கள் போன்றோரிடமிருந்து பெறுவார். மாற்றுப் பத்திரிகையாளர் ஒரு போலீசு தரும் செய்தியை மூலாதாரமாக வைத்துக் கொள்ள மாட்டார். நேரடியாக மக்களிடம் சென்று விசாரிப்பார். அல்லது ஊடகங்களில் வரும் செய்திகளை பகுத்தாராய்ந்து உண்மையை கண்டுபிடிப்பார்.

கார்ப்பரேட் ஊடக பத்திரிகையாளர் தனது தொழில் நிமித்தமாக கட்சித் தலைவர்கள் உயர் அதிகாரிகள் திரை நட்சத்திரங்கள் ஆகியோரை அடிக்கடி சந்திப்பார். இந்த சந்திப்பின் மூலமாக அவர் மெல்லமெல்ல ஆளும் வர்க்க அரசியல் சட்டகத்தில் நுழைந்து இந்த அமைப்பில் தானும் ஒர் அங்கம், பெரிய அளவில் முரண்பட முடியாது என ’தெளிவு’ பெறுவார். பிரபலங்களை பார்க்க வேண்டிய தேவை மாற்று ஊடக பத்திரிக்கையாளருக்கு அதிகம் இல்லை. ஏனெனில் மேற்கண்ட நபர்கள் அனைவரும் முன்வைக்கும் கருத்துக்களை விமர்சனப் பார்வையோடு ஆய்வு செய்து உண்மையை கண்டுபிடிப்பதுதான் அவரது பணியாக இருக்கிறது.

மாற்று ஊடக பத்திரிகையாளர் தனது எழுத்துப் பயணத்தில் பொதுவான பார்வையிலிருந்து குறிப்பான பார்வையை நோக்கி பயணிப்பார். சமூகம் பற்றிய அவரது பொதுக்கருத்துக்கள் பின்பு சமூக மாற்றம் என்ற நிலையில் குறிப்பான கருத்துக்களை நோக்கி பயணிக்கும். ஆனால் வணிக பத்திரிகையாளரோ வேலையில் சேரும் போது இருக்கும் குறிப்பான அவரது பார்வையை கருத்தை பணிக்காலத்தில் இழந்து வணிக ஊடகங்களின் பொதுவான பார்வை எனும் பொதுத்தன்மையை ஏற்பார்.

ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனும் இடம் உருவாக்கியிருக்கும் பல்வேறு சலுகைகள் உரிமைகளை வணிக பத்திரிகையாளர் பயன்படுத்திக் கொள்வார். அவரது இரு சக்கர வாகனத்தில் மீடியா என்ற பெயரை வைத்துக் கொண்டு அவர் பல இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும். மற்ற சாதாரண மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத சிவில் சமூக மற்றும் அரசு தொடர்புடைய பணிகள் பலவற்றை எளிதில் செய்து விட முடியும். வீடு ஒதுக்கீடு முதல் ரயில் முன்பதிவு வரை அனேக சலுகைகளை அவர் எளிதில் பெற முடியும்.

தஞ்சை ம.க.இ.க. சார்பில் பத்திரிகையாளர்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கௌரிலங்கேஷ் நினைவேந்தல் நிகழ்வு.

மாறாக, மாற்று ஊடக பத்திரிகையாளர் ஒரு ஊடகவியலாளர் எனும் தகுதிகள் கிடைக்கும் சலுகைகள் உரிமைகள் எவற்றையும் பயன்படுத்த முடியாது. அவர் அரசு, அதிகார வர்க்கம் போட்டிருக்கும் தடுப்பரண்களை தாண்டித்தான் செய்தி சேகரிக்க முடியும். பத்திரிகையாளர் எனும் பதவி வணிக ஊடகங்களில் ஒரு அதிகாரம் என்றால் மாற்று ஊடகங்களில் அது அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் எனலாம்.

தனது சொந்தப் பார்வையை இழக்காமல் கார்ப்பரேட் உலகின் சமரசங்களால் வெறுப்படையும் ஒரு வணிக பத்திரிகையாளர் மாற்று ஊடகங்களை நோக்கி வரும்போது ஒரு வைரம் போல மிளிர்வார், பணியாற்றுவார். மாற்று ஊடகங்கள் கோரும் அர்ப்பணிப்பை தர முடியாமல், மக்கள் நலனிலிருந்து பின்வாங்கும் ஒரு மாற்று ஊடக பத்திரிகையாளர், வணிக ஊடகங்களை நோக்கி  பயணித்தால் விரைவிலேயே சமரசங்களில் சாதனை படைத்து ஆளும் வர்க்கம், பத்திரிகை நிர்வாகம் கோரும் ’திறமையினை’ அடைவார்.

வணிகப் பத்திரிகையில் சேரும் ஒருவர் அடிப்படை வர்க்கத்தினராக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் தனது வர்க்கப் பார்வையை இழந்து ஆளும் வர்க்க பார்வைக்கு தயாராகி விடுவார். மாறாக வசதியான நடுத்தர வர்க்கத்தில் இருந்து மாற்று ஊடகங்களில் சேரும் ஒருவர் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பார்வையை மெல்ல மெல்ல பெறுவார்.

கார்ப்பரேட் ஊடகங்களுக்கு பெரும் வலைப்பின்னல் இருப்பதால் நேரடி செய்திகள், நேரடி நிகழ்வுகள், நேரடி கள அறிக்கைகள் அனைத்தையும் ஒரு ஊடகவியலாளர் செய்ய முடியும். மாற்று ஊடகங்களுக்கு அந்த வலைப்பின்னல் இல்லை என்பதால் ஒரு பத்திரிகையாளர் பெரும் ஊடக செய்திகளைப் படித்து தனது கண்ணோட்டத்தில்  மறு ஆக்கம் செய்ய வேண்டியிருக்கும்.

வணிகப் பத்திரிகையில் சேரும் ஒருவர் பத்திரிகைத் துறையின் அனுபவங்கள், நேர்த்தியினைக் கற்றுக் கொள்வதற்கு துறை சார்ந்த சூழலில் நிறைய வாய்ப்பு இருக்கிறது. மாற்று ஊடகங்களில் அவை ஒருவரது தனிப்பட்ட முயற்சியாக மட்டுமே இருக்கிறது, சூழலில் இல்லை.

படிக்க:
ஊடகங்களை மிரட்டுகிறது காவிக் கும்பல் – குரல் பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம் !
மாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி

இங்கே நாம் பார்த்திருக்கும் ஒப்பீடு இந்தியா போன்ற இன்னமும் ஜனநாயகம் முழுமையடையாத நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். முதலாளித்துவ நாடுகளில் இந்த ஒப்பீடு சிறிதோ கணிசமாகவோ வேறுபடும்.

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும்  கேட்கலாம்:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்