Tuesday, August 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 388

ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

9

ந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் “மோடி மேஜிக்” பல்லிளித்து விட்டதைக் காட்டுகின்றன. ராஜஸ்தான், சட்டிஸ்கரில் பாஜக-வின் தோல்வி உறுதியாகிவிட்டது. ம.பி-யிலும் அநேகமாக பாஜகவின்  தோல்வி உறுதி. பார்ப்பன பாசிசம் ஒழியவேண்டுமென்று எண்ணுபவர்கள் அனைவருக்கும் இந்த தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விலை கிடைக்காத வெங்காயத்தை வீசி எரியும் விவசாயிகள்

பாஜக-வின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் விவசாயிகளின் கோபம். புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதிலிருந்தே விவசாயம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்ற போதிலும், மோடியின் ஆட்சிக்காலத்தில் அது ஒரு உச்சத்தை எட்டிவிட்டது. விளைபொருளுக்கு நியாயவிலை கிடைக்காமல் தானியங்களையும், காய் கனிகளையும், பாலையும் வீதியில் கொட்டி விவசாயிகள் நடத்திய போராட்டத்தையும், விவசாயிகள் மீது அரசு ஏவிவிட்ட வன்முறையையும், கந்து வட்டிக் கடனின் விளைவாக அதிகரித்து விட்ட விவசாயிகள் தற்கொலைகளையும் மோடி தனது சவடால் பேச்சை வைத்து சமாளிக்க முடியவில்லை.

படிக்க:
♦ ரஃபேல் ஊழல் : வாய் திறக்காத மோடியின் கருத்தே மெக்ரானின் கருத்தாம் !
♦ பாஜக-வின் நெருங்கிய கூட்டாளி ஜனார்த்தன ரெட்டி தப்பி ஓட்டம் !

நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பில்லை. விவசாயம் நலிவுற்றதால் முன்பு கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வந்த மக்கள், நகரத்திலும் வேலைவாய்ப்பில்லாத காரணத்தால் மீண்டும் கிராமம் நோக்கி செல்வதும், அங்கேயும் விவசாயத்தின் நலிவினால் வேலையில்லை என்ற நிலையும்தான் நகர்ப்புறங்களின் நிலைமை.

பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி யில் தொடங்கி மோடியின் அடுக்கடுக்கான தோல்விகளையும், ஊழல்களையும், கிரிமினல் நடவடிக்கைகளையும் கார்ப்பரேட் ஊடகங்கள் முடிந்த மட்டும் இருட்டடிப்பு செய்தபோதிலும் அவற்றையெல்லாம் மீறித்தான் வந்திருக்கிறது இந்த தேர்தல் முடிவு.

வாய் திறந்தாலே ஜூம்லாக்கள்தான். பின்னர் வெற்றி வராதா என்ன?

“சப் கா சாத், சப் கா விகாஸ்” என்ற 2014 நாடாளுமன்றத் தேர்தல் நடிப்பு இப்போது செல்லாது என்று தெரிந்துதான்,  அயோத்தி விவகாரத்தையும் ஆர்.எஸ்.எஸ் துணைக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களில் மோடியைப் போல இரண்டு மடங்கு அதிகமாக ஆதித்யநாத்தை பிரச்சாரத்தில் இறக்கியிருப்பதும், 2019 தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமே.

ராஜஸ்தானும் மத்திய பிரதேசமும் சாதி – மத உணர்வுகள் பெரும் செல்வாக்கு செலுத்துகின்ற, பண்பாட்டு ரீதியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள். விவசாயிகளின் கோபத்தை திசை திருப்புவதற்காக சாதி, மத உணர்வுகளைத் தூண்டுவதற்கு பல கோணங்களில் பாஜக முயன்றிருக்கிறது. இருப்பினும் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தியிலிருந்து (anti – incumbancy) மக்களைத் திசை திருப்புவதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இன்று மக்களின் அதிருப்தியை அறுவடை செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் தனது வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா? விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர் போன்ற அடிப்படை உழைக்கும் மக்களின் நலனுக்கான திட்டங்களை காங்கிரஸ் அரசு வகுத்து அமல்படுத்துமா? புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தும் மூர்க்கத்தனத்தில் வேண்டுமானால் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் வேறுபாடு இருக்கலாமேயொழிய, இந்த கொள்கைச் சட்டகத்திற்கு வெளியே காங்கிரசோ அல்லது டி.ஆர்.எஸ்  உள்ளிட்ட மாநிலக் கட்சிகளோ இயங்கப்போவதில்லை.

புதிய தாராளவாதக் கொள்கை என்பது இந்தியாவைப் போன்ற நாடுகளை மறு காலனியாக்கும் ஏகாதிபத்தியங்களின் கொள்கை. இயற்கை வளங்களையும், பொதுச்சொத்துகளையும் ஆக்கிரமிக்கும் காலனியாதிக்கத்தையே ஒரு கொள்கையாக அமல்படுத்தும் எந்த ஒரு அரசாங்கமும், ஜனநாயகத்தன்மை கொண்டதாக நடந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.

வீழ்ச்சியின் விளிம்பில் சந்தை

அதிலும் உலக முதலாளித்துவம் மீள முடியாத ஒரு கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கியிருக்கும் காலம் இது. சந்தைகளின் தேக்கநிலையும், தானியங்கிமயமாதல் – செயற்கை அறிவு போன்றவையும் ஏற்கனவே இருக்கின்ற வேலைவாய்ப்புகளையே மென்மேலும் சுருக்கி வரும் காலம் இது. இந்த சூழலில், எத்தகைய ஊழலற்ற நல்லாட்சியை வழங்குவதாக யார் பீற்றிக் கொண்டாலும், இந்தக் கட்டமைப்புக்குள் எந்த ஒரு அரசும் புதிய தாராளவாதக் கொள்கையை அமல்படுத்தும் கங்காணியாக மட்டுமே செயல்பட முடியும்.

ஒரு வலிமையான கங்காணி வேண்டும் என்பதற்காகத்தான் “அண்டர் பெர்ஃபார்மர்” மன்மோகன் சிங்குக்கு பதிலாக, மோடியை ஆளும் வர்க்கம் தெரிவு செய்தது. தான் தெரிவு செய்த அந்த கைப்பாவையை மக்களும் தெரிவு செய்யுமாறு நாட்டையே மூளைச்சலவை செய்தது. இன்று மக்கள் வேறு தெரிவைத் தேடுகிறார்கள் என்பது பாரதிய ஜனதாவை மட்டும் கவலைக்கு உள்ளாக்கியிருக்காது. அம்பானி, அதானி உள்ளிட்ட குஜராத்தி, மார்வாரி தரகு முதலாளிகளையும், வங்கிக் கொள்ளையர்களையும், பன்னாட்டு முதலாளிகளையும் நிச்சயம் கவலைக்குள்ளாக்கியிருக்கும். அந்தக் கவலையின் ஒரு வெளிப்பாடாகத்தான் ராமனுக்கு மீண்டும் மவுசு வந்திருக்கிறது. “அயோத்தியில் கோயில் கட்ட சட்டமியற்று” என்று 2019 தேர்தலுக்கான புதிய நிகழ்ச்சி  நிரலை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கிளப்பியிருக்கிறார்கள்.

படிக்க:
♦ பேரரசரின் நிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் காற்று!
♦ குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் : ஜனநாயகத்தின் மீது இந்துத்துவ மூத்திரம் !

கடந்த 30 ஆண்டுகளில் “வளர்ச்சி – இந்துத்துவம்” என்ற இரண்டு முழக்கங்களையும் தேவைக்கேற்ப மாற்றி மாற்றிப் பயன்படுத்திக் கொண்டு, இதன் ஊடாக, தனது வாக்காளர் அடித்தளத்தையும் அரசியல் அடித்தளத்தையும் பார்ப்பன பாசிஸ்டுகள் மெல்ல மெல்ல விரிவு படுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள். அதிகார நிறுவனங்களையும் கைப்பற்றிக் கொண்டு விட்டார்கள். நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரம் மெல்ல மெல்ல காவிமயமாகி விட்டது. சிறுபான்மை மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை அரசியலிலிருந்தும் மைய நீரோட்டத்திலிருந்தும் ஒதுக்கி வைப்பது ஒரு புதிய எதார்த்தமாகவே மாறிவருகிறது.

இது மட்டுமின்றி, தேர்தல் அரசியலுக்கு வெளியே பல்வேறு அரங்குகளிலும் தமது அமைப்புகளை பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், பாஜக-வை எதிர்க்கும் கட்சிகள் – சக்திகள், தேர்தல் அரசியலின் வரம்புக்கு வெளியே, மக்கள் மத்தியில் அத்தகைய அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவில்லை. இது நம் அனைவரின் கவலைக்குரிய உண்மை.

அனைத்துக் கட்டுமானங்களுக்குள்ளும் புகுத்தப்பட்டிருக்கும் பார்ப்பன பாசிசம்

தேர்தல் அரசியலின் வரம்புக்குள் நின்று பார்க்கும்போது “மோடியை விட காங்கிரசோ மற்ற மாநிலக் கட்சிகளோ பரவாயில்லை” என்ற கருத்துக்கு ஒருவர் வரலாம். பிரச்சினையை “மோடி” என்று மட்டும் சுருக்கிப் பார்க்க கூடாது. மோடி, பார்ப்பன பாசிசத்தின் ஒரு பிரதிநிதி. பார்ப்பன பாசிசம், கடந்த 30 ஆண்டுகளில் இந்திய அரசியிலில் அழுத்தமாக காலூன்றி விட்டது. எனவே, எதிர்க்கட்சிகள் எனப்படுவோர் பார்ப்பன பாசிசத்தை இந்திய அரசியல் அரங்கிலிருந்து நிரந்தரமாக அகற்றும் நோக்கம் கொண்டவர்களா, அத்தகைய ஆற்றல் பெற்றவர்களா என்பதுதான் நாம் அக்கறை செலுத்த வேண்டிய கேள்வி.

தற்காலிகத் தீர்வாக, “பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது” என்பது வேறு. அதையே “நிரந்தரத் தீர்வாக நம்புவது” என்பது வேறு. புதிய தாராளவாதக் கொள்கையையும் மிதவாத இந்துத்துவ கொள்கையையும் பின்பற்றும் கட்சிகள் ஒருக்காலும் பார்ப்பன பாசிசத்தை எதிர்கொள்ள முடியாது. பாஜக-வின் பார்ப்பன பாசிச அரசியலைக் கண்டு அஞ்சியும், அதன் ஆதிக்க சாதி சமூக அடித்தளத்தை திருப்திப்படுத்தவும் ராகுல்காந்தி நடத்தி வரும் கோயில் யாத்திரைகள் இதற்கொரு சான்று.

படிக்க:
♦ ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ?
♦ மோடி அமைச்சரவைக் கமிட்டிதான் ரஃபேல் விமான விலையை உயர்த்தியது !

நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் பாசிசமயமாவது என்பது, புதிய தாராளவாதக் கொள்கையின் தவிர்க்கமுடியாத ஒரு விளைவு. மேலை நாடுகளில் நிறவெறியாகவும், இனவெறியாகவும், பிற நாடுகளில் மதவாத எதேச்சாதிகார ஆட்சிகளாகவும், அமெரிக்காவில் டிரம்ப்பாகவும் இது உருவெடுக்கிறது. இந்தியாவுக்கு – பார்ப்பன பாசிசம்.

புதிய தாராளவாதமும் பார்ப்பனியமும் இணைந்த கலவையே பார்ப்பன பாசிசம். இந்தப் புரிதலுடன் மக்கள் இயக்கங்களையும் போராட்டங்களையும் கட்டியமைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பாஜக வின் இந்தத் தேர்தல் தோல்வியை, பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக மக்களை திரட்டுவதற்குரிய ஊக்க மருந்தாகக் கருதலாமே தவிர, அரசியல் மெத்தனத்தில் வீழ்ந்துவிடக் கூடாது.

சூரியன்

வல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் !

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீஸிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் (ஐ.எல்.எஃப்.எஸ்.) என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் திவாலாகக்கூடிய நிலையில் இருக்கும் உண்மை அம்பலமானதையடுத்து, செப்டம்பர் மாத இறுதியில் மும்பய்ப் பங்குச் சந்தையும் தேசியப் பங்குச் சந்தையும் சரிவைச் சந்தித்தன.

“வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை (Non Banking Financial Companies) நாங்கள் கைவிடமாட்டோம்” என மைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வாக்குறுதி அளித்த பிறகுதான், அப்பங்குச் சந்தைகளில் படுத்த வியாபாரம் சற்றே நிமிர்ந்தது.

ஐ.எல். அண்ட் எஃப்.எஸ். தலைமையகம் : பளபளப்பின் பின்னே மறைந்திருக்கும் மோசடிகள்.

இந்தியாவில் ஐ.எல்.எஃப்.எஸ். போன்று 11,174 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுள் ஒரேயொரு நிறுவனம் திவாலாகப் போகிறது என்ற செய்தி வெளிவந்தவுடன் பங்குச் சந்தை ஏன் சரிவடைகிறது? நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களையும் பங்குச் சந்தையையும் கைதூக்கிவிட ஏன் துடிக்கிறார்?

ஐ.எல்.எஃப்.எஸ். உள்ளிட்ட பல்வேறு வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்குப் பொதுத்துறை வங்கிகள் மட்டும் 4,73,500 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கின்றன. இதில் ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் பங்கு மட்டும் 40,000 கோடி ரூபாய். ஐ.எல்.எஃப்.எஸ்.- ஐத் திவாலாக அனுமதித்தால், அது தனியொரு நிறுவனத்தின் சரிவாக இருக்காது, இருக்கவும் போவதில்லை. அந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள் மற்றும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் எல்.ஐ.சி., உள்ளிட்ட காப்பீடு நிறுவனங்கள், ஓய்வூதிய மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அனைத்தும் நட்டம் என்ற கருந்துளைக்குள் புதைந்து போகும்; ஐ.எல்.எஃப்.எஸ். போன்ற மற்ற மிகப்பெரிய நிதி நிறுவனங்களின் யோக்கியதையும் அம்பலப்பட்டு போகும் என அஞ்சுவதால்தான், அதனைக் காப்பாற்றிவிடத் துடிக்கிறது, மோடி அரசு.

‘‘அமெரிக்க நிதி நிறுவனமான லேமேன் பிரதர்ஸின் வீழ்ச்சி உலகப் பொருளாதார நெருக்கடியின் தொடக்கப் புள்ளியாக அமைந்ததைப் போல, ஐ.எல்.எஃப்.எஸ். – இன் வீழ்ச்சி இந்தியப் பொருளாதாரத்திற்கு அமையக் கூடும்” என ஒப்பிடுகிறார், பொருளாதாரப் பத்திரிகையாளர் ஆண்டி முகர்ஜி.

ஐ.எல்.எஃப்.எஸ். – இன் வீக்கத்தையும், வீழ்ச்சியையும் அறிந்தவர்களுக்கு இந்த ஒப்பீடு அதிர்ச்சி அளிப்பதாக அமையாது. மேலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் திறமை, நேர்மை, நிபுணத்துவம் பற்றிப் பொதுவெளியில் சிலாகித்துப் பேசப்படுவதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என்பதையும் அம்பலப்படுத்துகிறது, ஐ.எல்.எஃப்.எஸ். – இன் வீழ்ச்சி.

*****

ந்தியாவில் தனியார்மயம் – தாராளமயத்தின் தொடக்கமும், ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவப்பட்டதும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் நடந்தன. சாலைகள், துறைமுகங்கள், மேம்பாலங்கள், மின்சாரக் கட்டமைப்பு, தொலைத் தொடர்பு, சுரங்கங்கள் உள்ளிட்ட அடிக்கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்வதுதான் இந்த நிறுவனத்தின் வர்த்தகக் கொள்கை.

ஐ.எல்.எஃப்.எஸ். தனியார் நிறுவனம் என்றபோதும், இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் எல்.ஐ.சி.தான். ஐ.எல்.எஃப்.எஸ். – இன் 25.34 சதவீதப் பங்குகளை எல்.ஐ.சி. வைத்திருக்கிறது. எல்.ஐ.சி.யைத் தொடர்ந்து ஜப்பானைச் சேர்ந்த ஓரிக்ஸ் கார்ப்பரேஷன் 23.54 சதவீதப் பங்குகளையும், அபுதாபி நிதி ஆணையம் 12.56 சதவீதப் பங்குகளையும் ஹெச்.டி.எஃப்.சி., சென்ட்ரல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆகியவை முறையே 9.02, 7.67, 6.42 சதவீதப் பங்குகளையும் வைத்திருக்கின்றன.

இந்நிறுவனத்தின் மூலதனத்தை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அளித்திருந்தாலும், திட்டங்களில் முதலீடு செய்வதற்கான நிதியைப் பொதுத்துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், ஓய்வூதிய நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்துதான் கடனாகப் பெற்றிருக்கிறது. இந்த வகையில், கடந்த மார்ச் 2018 நிலவரப்படி ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவனத்தின் மொத்த கடன் பாக்கி 1,250 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் தோராயமாக 91,000 கோடி).

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தனியொரு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஐ.எல்.எஃப்.எஸ்., இன்று 23 நேரடி சார்பு நிறுவனங்கள், 141 மறைமுக சார்பு நிறுவனங்கள், ஆறு கூட்டு நிறுவனங்கள், நான்கு இணை நிறுவனங்களைக் கொண்ட கார்ப்பரேட் குழுமமாக வளர்ந்திருக்கிறது. இந்தப் பிரம்மாண்டமான வளர்ச்சியைக் காட்டியே, வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்பில்லாத நிறுவனமாக (too big to fail) ஐ.எல்.எஃப்.எஸ்.இன் தரம் (rating) நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.

நிலம் மற்றும் கனிம வளங்களை அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் முதலாளிகள் அபகரித்துக் கொள்ளவும்; வங்கி, காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிறுவனங்களில் சேமிப்பாக இருக்கும் பொதுமக்களின் பணத்தை கார்ப்பரேட் முதலாளிகள் கடன் என்ற பெயரில் சூறையாடவும் அளிக்கப்பட்ட தாராள அனுமதிதான் 2004-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் எட்டு சதவீத வளர்ச்சியை எட்டிப்பிடிக்க முடிந்ததற்குக் காரணம். ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் வளர்ச்சிக்கும் இவைதான் – இந்தக் கொள்ளையும் சூறையாடலும்தான் காரணம்.

ஐ.எல்.எஃப்.எஸ். பகற்கொள்ளையடிப்பதில் எந்தளவிற்கு இரக்கமற்ற நிறுவனம் என்பதற்கு ஒரேயொரு உதாரணம், டெல்லி – நொய்டா விரைவுச் சாலை. இச்சாலையில் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் வழிப்பறியை நடத்தி வந்தது ஐ.எல்.எஃப்.எஸ். இந்த அநியாய கட்டணக் கொள்ளைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்தச் சாலையைச் சுங்கக் கட்டணமில்லா சாலையாக அறிவித்தது, உச்ச நீதிமன்றம்.

ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவனத்தின் பகற்கொள்ளைக்கு உதாரணமான டெல்லி-நொய்டா விரைவுச்சாலை (கோப்புப் படம்)

தனியார்மயத்தை ஆதரிக்கத் தயங்காத உச்ச நீதிமன்ற நீதிபதிகளாலேயே ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் அடாவடித்தனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால், ஐ.எல்.எஃப்.எஸ். எந்தளவிற்கு அச்சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்களைக் கொள்ளையடித்திருக்கும் என்பதை வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுவோம்.

வளர்ச்சி, வளர்ச்சி என மெச்சிக் கொள்ளப்பட்ட இந்த வீக்கம் 2008-க்குப் பின் உடைந்து போனதையடுத்து, ஐ.எல்.எஃப்.எஸ்.-ம் சரியத் தொடங்கியது. ஆனாலும், கடந்த செப்டம்பர் மாதம் வரை தன்னை மீசையில் மண் ஒட்டாத வீரனாகவே நிதிச் சந்தையில் காட்டி வந்தது, ஐ.எல்.எஃப்.எஸ். குறிப்பாக, நட்டமனைத்தையும் சார்பு நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களில் வரவு-செலவு அறிக்கையில் காட்டிவிட்டு, இலாபத்தைத் தாய் நிறுவனத்தின் வரவு-செலவு அறிக்கையில் காட்டும் மோசடியை நடத்தி வந்தது. இம்மோசடிக்கு ஐ.சி.ஆர்.ஏ., கேர் ரேட்டிங்ஸ் ஆகிய இந்தியத் தர நிர்ணய நிறுவனங்களும் ஒத்தூதி, கடந்த செப்டம்பருக்கு முன்பு வரை அதனின் நிதி நிலை நன்றாக இருப்பதைக் குறிக்கும் “ஏஏஏ” தரச் சான்றிதழை ஐ.எல். எஃப்.எஸ்.-க்கு வழங்கி வந்தன.

ஐ.எல். எஃப்.எஸ். நிறுவனத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்திருக்க வேண்டிய ரிசர்வ் வங்கியோ, ஐ.எல். எஃப்.எஸ். – ஐ இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகவே மெச்சி வந்தது.

எனினும், இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியிடமிருந்து பெற்றிருந்த 1,000 கோடி ரூபாய் பெறுமான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவணை கேட்ட பின், ஐ.எல்.எஃப்.எஸ்.-ஐ ஜாக்கி கொடுத்துத் தூக்கி நிறுத்தும் மோசடியைத் தர நிர்ணய நிறுவனங்களால் கடந்த செப்டம்பருக்குப் பிறகு தொடர முடியாமல் போனது. மேலும், அடுத்த ஆறு மாதங்களில் 50 கோடி அமெரிக்க டாலர் பெறுமான கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்திலுள்ள இந்நிறுவனத்திடம் வெறும் 2.7 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே பெட்டியில் இருப்பதாகவும், இதனின் சொத்துக்களை விற்றால்கூடக் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவிற்குப் பணத்தைத் திரட்ட முடியாதென்றும் வணிகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.

*****

டந்த முப்பது ஆண்டுகளாக ஐ.எல்.எஃப்.எஸ்.-ஐ நிர்வகித்து வந்த தலைகள் யாரும் அரசியல்வாதிகளின் சிபாரிசால் பதவியில் திணிக்கப்பட்டவர்கள் கிடையாது. அமெரிக்காவைச் சேர்ந்த தேசங்கடந்த வர்த்தக வங்கியான சிட்டி பேங்கில் பணியாற்றிய அனுபவமிக்க ரவி பார்த்தசாரதி, ஐ.எல். எஃப்.எஸ். தொடங்கப்பட்டபொழுதே, அதன் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1989-இல் ஐ.எல்.எஃப்.எஸ்.இன் மேலாண் இயக்குநராகவும், 1994-இல் துணைத் தலைவராகவும், 2004-இல் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிறகும்கூட, அந்நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராகப் பதவி வகித்தார்.

1987-இல் இந்த நிறுவனத்தில் இணைந்த ரவி பார்த்தசாரதி, 2018-இல் ஜூலையில், அதாவது இந்த நிறுவனம் திவாலாகிவிட்ட செய்தி வெளியாவதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான், உடல் நலக்குறைவைக் காரணம்காட்டி நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

இந்நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் உள்ள ஹரி சங்கரன், கடந்த 28 ஆண்டுகளாக இதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தலைமைச் செயல் அதிகாரியாகவும் இணை மேலாண் இயக்குநராகவும் பணியாற்றி வரும் அருண்குமார் ஸாஹா 1988-ஆம் ஆண்டிலிருந்தே இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இம்முழுநேர அதிகாரிகளுக்கு அப்பால், மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவராக உள்ள ஆர்.சி.பார்கவா, ஐ.எல்.எஃப்.எஸ்.-இல் நிறுவனம் சாராத இயக்குநராக (Independent Director) 1990-ஆம் ஆண்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். முன்னாள் அரசு அதிகாரியான மைக்கேல் பிண்டோ ஜூலை 2004-ஆம் ஆண்டிலும், முன்னாள் எல்.ஐ.சி. தலைவரான சுனில் மாத்தூர் 2005-ஆம் ஆண்டிலும், சிட்டி பேங்கின் முன்னாள் அதிகாரியான ஜெய்தீர்த்த ராவ் 2012-ஆம் ஆண்டிலும் இயக்குநர் குழுவில் இணைந்தார்கள்.

பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என மெச்சப்படும் இத்துணை பேர் இருந்தும் ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பதோடு, நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு இந்த இயக்குநர் கும்பலும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் மூளையாகவும் இதயமாகவும் செயல்பட்ட ரவி பார்த்தசாரதி, நிறுவனத்திலிருந்து வெளியேறிய இரண்டாவது மாதத்திலேயே நிறுவனம் திவால் நிலையில் இருப்பது அம்பலமாகிறது என்றால், இயக்குநர் குழு மொத்தமுமே கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்றுதான் கூற முடியும்.

உதாரணமாக, ஒவ்வொரு வங்கியல்லாத நிதி நிறுவனத்திலும் அதன் நிதி ஆதாரங்களையும், முதலீடுகளையும், அம்முதலீடுகளின் வருவாயையும், சந்தையின் ஏற்ற இறக்கங்களையும் தொடர்ந்து கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு சுதந்திரமான கண்காணிப்புக் குழு இருக்க வேண்டும் என்று கார்ப்பரேட் நிறுவனச் சட்ட விதி கூறுகிறது. ஐ.எல்.எஃப்.எஸ்.-இலும் இப்படிப்பட்ட கண்காணிப்புக் குழு இருக்கிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே அக்குழு சோளக்காட்டு பொம்மையைப் போலக்கூட இயங்கவில்லை.

குறிப்பாக, இந்தக் குழு கடந்த நான்காண்டுகளில் ஒருமுறைகூட கூடவேயில்லை. இந்த நான்காண்டுகளாகத்தான் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமும் கடுமையான தேக்கத்தில் சிக்கியிருக்கிறது என்பதோடு இணைத்துப் பார்த்தால்தான், ஐ.எல்.எஃப்.எஸ்.கண்காணிப்புக் குழுவின் கிரிமினல்தனத்தை (Criminal negligence) புரிந்துகொள்ள முடியும்.

இதுவொருபுறமிருக்க, ஐ.எல்.எஃப்.எஸ்.இன் இயக்குநர் குழுமத்தில் செயல்பட்டு வந்த ஆர்.சி.பார்கவா, மைக்கேல் பிண்டோ, அருண்குமார் ஸாஹா ஆகியோர் கண்காணிப்புக் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். எனில், இதன் பொருள், பாலுக்குப் பூனை காவல் என்பது தவிர வேறென்ன?

நிறுவனத்தின் தலைவர் தொடங்கி அதன் இயக்குநர்கள் ஈறாக உள்ள உயர்மட்ட அதிகாரிகளை நியமிப்பதற்கும், அவர்களது செயல்திறனை மதிப்பிடுவதற்கும் நியமனம் மற்றும் சம்பள நிர்ணயக் குழு என்றொரு கமிட்டியும் செயல்பட்டு வந்திருக்கிறது. இந்தக் குழு நிர்வாக இயக்குநர்களின் செயல்திறனை மதிப்பிட்டதோ இல்லையோ, வருடம் தவறாமல் இயக்குநர்களின் சம்பளத்தையும் சலுகைகளையும் பல மடங்கு உயர்த்திக் கொடுக்கும் காரியத்தை மட்டும் திறம்படச் செய்துவந்திருக்கிறது.

கம்பெனியின் இயக்குநர் குழுவைச் சேர்ந்த மைக்கேல் பிண்டோவும், சுனில் மாத்தூரும், ஹரி சங்கரனும் செயல்திறன் மதிப்பீடு மற்றும் சம்பள நிர்ணயக் கமிட்டியிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். எனில், இதன் பொருள், திருடனும் நானே, போலீசும் நானே, நீதிபதியும் நானே என்பது தவிர வேறென்னவாக இருக்க முடியும்?
கம்பெனி இயக்குநர்களின் இந்த மூன்று முகம் காரணமாக, கம்பெனி நட்டத்தை நோக்கிச் சரிந்துகொண்டிருந்த வேளையில், அவர்களின் சம்பளங்களும் சலுகைகளும் விண்ணை நோக்கிப் பாய்ந்தன.

2015 ஆம் ஆண்டில் 7.28 கோடி ரூபாயாக இருந்த ரவி பார்த்தசாரதியின் ஆண்டு சம்பளம், 2017 ஆம் ஆண்டில் 10.8 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2018-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ரவி பார்த்தசாரதி தனது உடல் நலத்தைக் காரணமாக வைத்து முழுமையாக நிறுவனத்திலிருந்து விலகிக் கொண்டார். அந்த ஏழு மாதங்களில் அவருக்கு அளிக்கப்பட்ட சம்பளம், இதர சலுகைகள் மற்றும் ஓய்வுகால நிதி ஆகியவற்றின் மொத்த மதிப்பு 20.4 கோடி ரூபாய்.

ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் துணைத் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றிய ஹரி சங்கரின் மொத்த சம்பளம் கடந்த நான்காண்டுகளில் 4.8 கோடி ரூபாயிலிருந்து 7.7 கோடி ரூபாயாக அதிகரித்தது. இது போல நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றிய அருண்குமார் ஸாஹாவின் மொத்த சம்பளம் 5.8 கோடி ரூபாயிலிருந்து 6.9 கோடி ரூபாயாக அதிகரித்தது.

இதேகாலக்கட்டத்தில் ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் நிதிநிலையும், அதனின் செயல்பாடும் எப்படி இருந்தன? 2015- ஆம் ஆண்டில் 80 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியதாகக் கூறப்பட்ட அந்நிறுவனம் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே 2,000 கோடி ரூபாய் நட்டமடைந்தது. 2015-ஆம் ஆண்டில் 68,000 கோடி ரூபாயாக இருந்த அந்நிறுவனத்தின் மொத்தக் கடன், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 90,000 கோடி ரூபாயைத் தொட்டது.

ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் இயக்குநர் குழு ஒட்டுண்ணிக் கும்பலாக நடந்து கொண்டிருப்பதை இந்த விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இது மட்டுமின்றி, திட்டங்களுக்குத் தேவைப்படும் மூலதனத்தை ஊதிப் பெருக்கிக் காட்டியே (Gold plating) கடனை வாங்கிக் குவித்து நிறுவனத்தைத் திவாலாக்கிவிட்டதாகப் பழைய இயக்குநர் குழு மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கிறது. அதாவது, அதீதமாகப் பெற்ற கடன்களைத் தின்று தீர்த்த ஊழல் பெருச்சாளியாக இயக்குநர் குழு இயங்கி வந்திருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

மேலும், அரசியல் சார்ந்த நியமனமாக அல்லாமல், நிபுணர்களைக் கொண்டு நிறுவனங்களை நடத்தினால், அவை நட்டமடையாது, அதில் மோசடிகள், ஊழல்கள் நடைபெறாது என்றொரு மாற்றை முதலாளித்துவவாதிகள் பரப்பி வருகிறார்களே, அதுவொரு மூடநம்பிக்கை என்பதையும் அம்பலப்படுத்திவிட்டது, ஐ.எல்.எஃப்.எஸ். இயக்குநர் குழு.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அம்மாநிலத்தில் ஒரு புதிய முதலீட்டு நகரை உருவாக்கும் திட்டத்தை ஐ.எல்.எஃப்.எஸ். – இடம் ஒப்படைத்து, அதற்காக ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டு ரூபாய் விலையில் விற்று, இச்சலுகையின் மூலம் அந்நிறுவனத்திற்கு 440 கோடி ரூபாய் அரசுப் பணத்தை மொய்யாகத் தூக்கிக் கொடுத்தார். அதே மோடி இப்பொழுது பிரதமர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யிலிருந்து 4,000 கோடி ரூபாயை ஐ.எல்.எஃப்.எஸ்.-க்குக் கொடுத்து, அதனைக் காப்பாற்றிவிடத் திட்டமிட்டிருக்கிறார்.

ஜப்பான், அபுதாபி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐ.எல்.எஃப்.எஸ்.-இல் பங்குதாரர்களாக இருந்தாலும், அவைகளெல்லாம் தப்ப வைக்கப்பட்டு, எல்.ஐ.சி. மட்டும் பலியிடப்படுகிறது. இலாபத்தைத் தனியார் பங்கு போட்டுக் கொள்ள, நட்டத்தை இந்திய மக்களின் மீது சுமத்தும் அயோக்கியத்தனம் இது.

மேலும், கார்ப்பரேட் அதிபர்கள், அதிகாரிகளைக் கொண்ட புதிய இயக்குநர் குழுவை அமைத்து, ஐ.எல்.எஃப்.எஸ்.-இல் இனி எல்லாம் ஒழுங்காக நடக்கும் என்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது, மைய அரசு. பழைய பெருச்சாளிகளுக்குப் பதில் புதிய பெருச்சாளிகள் என்பதைத் தாண்டி, இந்த மாற்றத்திற்கு வேறு பொருள் கொள்ள முடியாது.

*****

‘‘நான் உமி கொண்டு வருகிறேன், நீ அவல் கொண்டு வா” என்ற சூதுதான் அடிக்கட்டுமான வளர்ச்சித் திட்டங்களில் நடைபெற்று வருகிறது. பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்டுப் பல்வேறு முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து 90,000 கோடி ரூபாய் அளவிற்குக் கடன் வாங்கியிருக்கும் ஐ.எல்.எஃப்.எஸ். மட்டுமல்ல, அடிக்கட்டுமானத் திட்டங்களைக் குத்தகைக்கு எடுக்கும் எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் தமது மடியிலிருந்து மூலதனத்தைப் போடுவதில்லை. மாறாக, அடிமாட்டு விலையில் நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்கள், குறைந்த வட்டியில் கடன், வரிச் சலுகைகள் அளித்து, கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்கும் நிபுணர் கூட்டத்துக்கும் அரசு ஏற்பாடு செய்து கொடுக்கும் கறி விருந்துதான் வளர்ச்சித் திட்டங்கள்.

பொருளாதார மந்தம் நிலவும் நேரங்களில், கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் தொழிலையும் இலாபத்தையும் காப்பாற்றிக் கைதூக்கிவிடும் நோக்கில்தான் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்ற பெயர்களில் இந்தச் சூதும் திருட்டும் மூடிமறைக்கப்படுகிறது.

இன்று பொதுத்துறை வங்கிகள் எதிர்கொள்ளும் வாராக் கடன் சுமையும், அவை திவாலாகிவிடும் அபாயமும் அடிக்கட்டுமானத் திட்டங்களுக்குக் கோடிகோடியாய்க் கடனாகக் கொடுத்ததன் விளைவுதான் என்பது தெரியவந்துள்ள நிலையில், ஐ.எல்.எஃப்.எஸ். இல் நடந்துள்ள தில்லுமுல்லுகள் அம்பலமாகி வருகின்றன. இதற்குக் காரணமான கனவான்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, மேலும் மேலும் பொதுப்பணத்தை வாரியிறைத்து ஐ.எல்.எஃப்.எஸ். ஐக் காப்பாற்றிவிடத் துடிக்கிறது, மோடி அரசு. நட்டத்தில் நடக்கும் பொதுத்துறை நிறுவனங்களை மூடிவிட வேண்டும் எனக் கறாராக வாதிட்டு வரும் நிபுணர் கூட்டமோ, ஐ.எல்.எஃப்.எஸ். விவகாரத்தில் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறது.

மேலும், 2013-இல் இயற்றப்பட்ட விவசாயிகளுக்குச் சாதகமான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தினால்தான், ஐ.எல்.எஃப்.எஸ். -இன் திட்டங்கள் அனைத்தும் சிக்கலுக்குள்ளாகி, அது நட்டத்தைச் சந்திக்க நேர்ந்தது என்ற சாக்கைச் சொல்லி, ஐ.எல்.எஃப்.எஸ்.-ஐச் சேர்ந்த அதிகார வர்க்கத்தைத் தப்பிக்க வைக்க முயலுகிறார்கள்.

குறிப்பாக, ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, “ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் பிரச்சினை வாராக் கடனுக்குள் வராது” என ஒரேபோடாகப் போட்டு, ஐ.எல்.எஃப்.எஸ்.-க்குக் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள் எதிர்கொண்டுள்ள அபாயத்தைப் பூசிமெழுகிவிட முயலுகிறார்.

இத்தகைய கும்பலிடமிருந்து பொதுத்துறை வங்கிகளையும் எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிதி நிறுவனங்களையும் காப்பாற்றுவதுதான் இப்பொழுது நம்முன் உள்ள மிகப்பெரிய சவால்.

-செல்வம்
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் ?

தெலுங்கானா மாநிலத்தில் இன்று 11.12.2018 தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. டிஆர்எஸ் கட்சி பெரும் வெற்றியடைந்து மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறது. ஒரு மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்ன மாற்றத்தை கொண்டு வந்து விடும் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு சான்று. இதே டிஆர்எஸ் கட்சி மாநிலத்தை சென்ற முறை ஆண்டது. இவர்களோடு மத்தியில் பாஜக அரசு ஆள்கிறது. மத்திய மாநில அரசுகளின் கீழ் வாழும் விவசாயிகள் எப்படி வாழ்கிறார்கள்? வறிய மாநிலமான தெலுங்கானாவின் விவசாயிகள் அவர்களில் பலர் பெண்கள் -தற்கொலை செய்வது அதிகரித்திருக்கிறது. தேர்தல் பரபரப்பில் இந்த தற்கொலைகள் மறக்கப்படலாம். ஆனால் ஒரு விவசாயி தற்கொலை என்பது மறந்துவிடக்கூடிய ஒன்றா?

ல்கொண்டா (Nalgonda ) மாவட்டம், விஞ்சாமுர் (Vinjamur) கிராமத்தில் அந்த ஒரு அறை மட்டுமே கொண்ட அச்சிறிய வீட்டை வெளிச்சம் கொண்டு தீர்க்க முடியா ஒரு இருள் கவ்வியிருந்தது. அங்கு தான் நகிலா யாதம்மா 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

யாதம்மா ஒரு விவசாயி. அவரிடம் இருந்த நான்கு ஏக்கர் நிலத்தில் 20,000 ரூபாய் செலவிட்டு பருத்தி பயிரிட்டிருந்தார். 2016-17-ம் ஆண்டில் பருத்திக்கான குறைந்தபட்ச விலையாக ரூ.4,160 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டில் அது ரூ.3,000-ஆக குறைந்து விட்டது. விளைந்த இரண்டே குவிண்டால் பருத்தியை வைத்து போட்ட முதலீட்டில் பாதியை கூட அவரால் எடுக்க முடியவில்லை. கடனைத் திருப்பி செலுத்த வேண்டுமே என்ற மன அழுத்தத்தில் ஒரு கொடிய காலைப்பொழுதில் ஆர்கனோ – பாஸ்பரஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.

யாதம்மாவின் மகன் யாதம்மா.

அவரது 26 வயது மகனான சங்கர் 80 கிலோமீட்டருக்கு அப்பால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தனது அம்மாவை உடனடியாக கூட்டிச் சென்றார். எனினும் சிகிச்சை பலனில்லாமல் எட்டு நாட்களுக்குப் பிறகு ஆகஸ்டு 28-ம் தேதி அவரது இன்னுயிர் ஓய்ந்து போனது.

நீண்ட நாள் நோயாளியான சங்கரின் தந்தை நிரஞ்சன் 2013-ம் ஆண்டில் இறந்து போனார். அவருக்கான சிகிச்சை செலவு குடும்பத்தை மேலும் கடனுக்குள் தள்ளியது. தனது தாயின் மரணத்திலிருந்து சங்கரால் இன்னும் மீண்டு வர இயலவில்லை. “குடும்பத்தை என் தாயார் கவனித்துக் கொண்டார். நோயாளியான என்னுடைய அப்பா இறந்த பிறகு எங்களுடைய நிலத்தையும் சேர்த்து அவர் பார்த்துக்கொண்டார்” என்று அவர் கூறினார். “அவர் இந்த அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாவார் என்றோ தற்கொலை செய்து கொள்வார் என்றோ நாங்கள் கிஞ்சித்தும் நினைக்கவில்லை” என்றார்.

இந்தியாவில் விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் ஆறு மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக தெலுங்கானாவில்தான் பெண் விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டில் 232 பெண் விவசாயிகளும் 2015-ம் ஆண்டில் 159 பெண் விவசாயிகளும் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர்.

இந்த ஆண்டின் ஜூன் 2 முதல் இன்றுவரையில் 350-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

யாதம்மாவின் வாழ்வும் மரணமும் அவரது மாவட்டத்தின் தனிச்சிறப்பான குணாம்சங்களில் ஒன்று. வானம் பார்த்த பூமியான யாதம்மாவின் நான்கு ஏக்கர் நிலத்திற்கு 300 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று ஒத்தாசையாக இருந்தது. மோசமான பாசன உட்கட்டமைப்பு கொண்ட தெலங்கானா மாநிலத்தில் இப்படி நிலத்தடி நீரை நம்பி இருப்பது பொதுவான ஒன்று. மகபூப் நகருக்கு (Mahabubnagar) அடுத்ததாக நல்கொண்டா மாவட்டத்தில்தான் அதிக அளவில் கிணற்று பாசன முறை இருக்கிறது. கெடு வாய்ப்பாக, மாநிலத்தில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்யும் முதலிரண்டு மாவட்டங்களும் இவைதான்.

யாதம்மாவிற்கு தனியாரிடம் 3 இலட்சம் ரூபாய் கடன் இருந்தது. யாதம்மாவை போலவே கிராமப்புறங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேலான கடனை கந்து வட்டிக்காரரர்களிடம் இருந்துதான் வாங்குகிறார்கள் என்று 2017-ம் ஆண்டிற்கான தெலுங்கானா சமூக மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது.

படிக்க:
அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி !
அறிமுகம் : வினவு வானொலி ! இன்று 4 செய்தி அறிக்கைகள் !

யாதம்மாவிற்கு படிப்பு கிடையாது. ஆனால் அவரது மகள் இரஞ்சிதா 12-ம் வகுப்பு முடித்துள்ளார். எனினும் வேலை எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. திருமணம் முடித்து இல்லதரசியாகவே இருக்கிறார்.

மழையை மட்டுமே நம்பியிருக்கின்றனர் தெலங்கானா விவசாயிகள்.

யாதம்மாவின் இரண்டு மகன்களில் ஒருவரான சீனு ஒன்பதாவது வகுப்பு முடித்துவிட்டு தொழிலாளியாக இருக்கிறார். இன்னொரு மகனான சங்கர் ஓட்டுனராக வேலை செய்கிறார். அவர்களது குடும்பம் விவசாயம் சாரா வருவாயின் மூலமாகத்தான் வாழ்ந்து வருகிறது. விவசாயம் அவர்களை மென்மேலும் கடனுக்குள் மட்டுமே தள்ளிவிட்டதாக சங்கர் கூறினார்.

“இங்கே பாசனத்திட்டம் எதுவும் கிடையாது. மழையை நம்பி மட்டுமே பயிர்கள் உள்ளன. இருக்கின்ற நிலத்தை விற்றுவிட்டு பிழைப்பதற்கு வேறு ஏதாவது வழியை பார்ப்பதுதான் விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே சிறந்த வழி” என்று அவர் கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகளும் தெலங்கானா விவசாயிகளை களைப்படைய செய்து விட்டது.

தேர்தல் வாக்குறுதிகளும் அவரை களைப்படைய செய்து விட்டது. “கடந்த தேர்தல்களில், தெலங்கானா பிறந்து விட்டால் ஆந்திராவுக்கு செல்லும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள்” என்று சங்கர் கூறினார். “ஆந்திராவுக்கு மடைமாறி கொண்டிருக்கும் அத்தனை நிதியும் எங்களுக்கு கிடைக்கும் என்றார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது பிரச்சினைகள் தீரவுமில்லை வேறு எந்த தீர்வுகளும் இல்லை ” என்று அவர் கூறினார்.

யாதம்மா விவசாயத்தை மையப்படுத்தியே குடும்பத்தை நடத்தினார். மேலும் குடும்பத்தினரை விவசாயிகளாகவே அடையாளப்படுத்தினார். அவரது தலைமை இல்லாமல் தடுமாறிய அந்தக் குடும்பம் அக்கிராமத்திலிருந்தும் விவசாயத்திலிருந்தும் வேரோடு கிட்டத்தட்ட நிரந்தரமாகவே பிடுங்கப்பட்டு விட்டது.

அவரது மரணம் வீழ்ச்சியல்ல, அது ஒரு போராட்டம்:

வானபர்த்தி (Wanaparthy) மாவட்டத்தில் ஒரு மலையின் நிழலால் மூடப்பட்டிருக்கும் கானாபுரம் கிராமத்தில் 45 வயதாகும் ஜோகு சவரம்மா தன்னுடைய கணவர் பக்கண்ணாவுடன் வாழ்ந்து வந்திருந்தார். சவரம்மாவின் பெயரில் ஒரு அரை ஏக்கர் நிலமும் அவரது கணவர் பெயரில் ஒரு மூன்று ஏக்கர் நிலமும் இருந்தன.

அவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகின்றன. “வெள்ளாமை பயிர்கள், வயல் வேலைகள், வீடு மற்றும் குழந்தைகள் என அனைத்தையும் அவளே பார்த்து வந்தாள்” என்று பக்கண்ணா கூறினார். “அவளை போல சிறப்பாக நான் வேலை செய்ததில்லை. எங்களது நிலம் வானம் பார்த்த பூமி. எங்களிடம் கிணறோ வேறு எந்த பாசன வசதியோ கிடையாது. மிகக் கடினமான சமயங்களை சமாளித்திருக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

சில ஆண்டுகள் கழித்து பக்கண்ணா நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரது சிகிச்சைக்காக அவர்களின் ஆடுகளை 1 இலட்சம் ரூபாய்க்கு விற்க வேண்டி இருந்தது.

சவரம்மாவின் கணவர் பக்கண்ணா.

2015-ம் ஆண்டு வாக்கில் அவர்களது கடன் தொகை 12 இலட்சமாக இருந்தது என்று பக்கண்ணா கூறினார். “பல ஆண்டுகள் நாங்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை. எங்களுக்கு வெள்ளாமை செய்யவும், குழந்தைகளுக்கு திருமணம் செய்யவும், வீடு கட்டவும் பணம் தேவைப்பட்டது. சில பருவங்களில் நல்ல மகசூலை எடுத்து கடனை திருப்பிக் கட்டி விடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால், அந்த நல்ல மகசூல் ஒருபோதும் எங்களுக்கு கிடைத்ததில்லை” என்று கூறினார்.

சென்ற ஆண்டு (2017) செப்டம்பர் மாதத்தில் பருத்தியை பயிரிடுவதில் சவரம்மா ஈடுபட்டார். இருவரும் சேர்ந்து வயலை பார்த்து வந்த பிறகு ஒரு காலையில் சவரம்மாவை காணவில்லை.

படிக்க:
இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் – பி.சாய்நாத்
சிறப்புக் கட்டுரை : வளர்ச்சியின் பெயரால் பின்னப்படும் சதிவலை !

“நான் அவளை எங்கும் தேடிப்பார்த்தேன்” சொல்லும் போதே அவரது கண்கள் பனித்தன. “பிறகு யாரோ அவளை பார்த்ததாக சொன்னார்கள். நான் அங்கு சென்ற போது முன்பே இறந்துவிட்டாள் என்று எனக்கு தெரிய வந்தது. ஏன் இப்படி செய்தாள் என்று கூட என்னால் கேட்க முடியவில்லை. என்ன விசம் குடித்தாள் என்று கூட எனக்குத் தெரியாது” என்று அவர் கூறினார்.

வெள்ளாமை வீடு வந்து சேராததாலும் கடன் தொல்லையாலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக 6 இலட்சம் ரூபாய் மாநில அரசு கொடுக்கிறது. சவரம்மா இறந்த பிறகு வந்து சேர்ந்த அந்த இழப்பீடு கடன் கொடுப்பதற்கே செலவானது. மேலும் ஒரு 40,000 ரூபாய் கடன் இன்னமும் சவரம்மாவின் பெயரில் உள்ளது.

தற்கொலை செய்து மாண்டு தெலங்கானா பெண் விவசாயியின் உடலைப் பார்த்துக் கதறியழும் உறவினர்கள்.

அவர்கள் இருவரும் நெசவாளர் குடும்பப் பின்னணியை கொண்டவர்கள். அதிலும் சவரம்மா நூல்நூர்ப்பு கொண்டு கொங்காலிஸ் (gongalis) எனும் அப்பகுதியில் தயாரிக்கப்படும் தரை விரிப்புகளை செய்யும் ஆற்றல் படைத்தவர். குளிர் காலங்களில் 800-900 ரூபாய் மதிப்பில் மாதம் மூன்று விரிப்புகளை செய்வார்கள். அந்தத் தறி இப்பொழுது அமைதியாக இருக்கிறது. “அவளை போல நூல்நூற்பு இனி யார் செய்வார்கள்?” என்று பக்கண்ணா கேட்கிறார். அந்த நூற்பு கருவியை கையில் பிடித்திருக்கும் அவர் சவரம்மா தொடுவது போலவே இன்னும் உணர்கிறார். அவரது நிலத்தை குத்தகைக்கு விட்டு விட்டார். “அவள் இல்லாமல் என்னால் விவசாயம் பார்க்க முடியாது” என்று அவர் கூறினார்.

அவரது மரணம் ஒரு பிரியாவிடை :

மன்னே சென்னம்மா நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக திகழ்ந்து வந்தார். அவரது மரணம் ஒரு வீழ்ச்சியல்ல. அது ஒரு போராட்டம்.

லக்ஷ்மிபாலி (Laxmipally) கிராமத்தில் குடிநீர் குழாயருகே பெண்கள் சூழ்ந்து இருக்கின்றனர். ஒரு கொள்கலனில் தண்ணீர் நிறைய ஒரு மணி நேரம் பிடிக்கிறது. தாங்கொணா துயரங்களைச் சந்தித்த சென்னம்மாவின் வலிமையை பற்றி அவர்கள் கூறுகிறார்கள்.

ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த சென்னம்மாவிற்கு படிப்பறிவு கிடையாது. நிலமும் அவரது பெயரில் இல்லை. ஆயினும் எப்படியாவது விவசாயம் செய்வதற்கான பொருளாதாரச் சிக்கலை தீர்ப்பதற்கான வழியை கண்டறிந்தார். அவர் ஆறு ஏக்கர் நிலத்தை குத்ததைக்கு எடுத்து நிலக்கடலை பயிரிடுவதற்காக வட்டிக்கு கடன் வாங்கினார்.

தண்ணீர் பற்றாக்குறையால் குத்தகை மலிவாக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் 180 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்தது. இப்போதோ 230 ஆழம் சென்று விட்டது. கணவன் மனைவி இருவரும் கிணற்றை ஆழப்படுத்த 35,000 ரூபாய் செலவிட்டனர். “அதற்கு பிறகும்கூட குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுக்க அதிக மின்சக்தியை எடுத்துக்கொண்டது” என்று அவரது கணவர் கிருஷ்ணய்யா கூறினார்.

55 வயதான தனது மனைவி வினோதாவை பறிகொடுத்தத் துக்கத்தில், அவரது கணவன்.

நீர்ப் பாசன திட்டம் எதுவும் இல்லாததால் அவர்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது. பாசனத்திட்டங்களின் தாமதத்திற்கு மாநில அரசையே தெலங்கானா தணிக்கை அதிகாரிகள் கை காட்டியுள்ளனர். மேலும் ரிது பந்து (Rythu Bandhu) போன்ற ஒரு நேரடி பணப்பட்டுவாடா திட்டங்களும் (ஏக்கருக்கு 4000 ரூபாய்) பெரிய விவசாயிகளுக்கு தான் பயன்பட்டதே தவிர தடுமாறிக்கொண்டிருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு பயன் தரவில்லை.

“நாங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த பிற்பகலில் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டோம். எனக்கு அது புதிராக இருந்தது. ஏனெனில் முன்பு நாங்கள் அப்படி செய்ததில்லை. அது ஒரு பிரியாவிடை போல இருந்தது” என்று அவர் கூறினார்.

படிக்க:
விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
விவசாயிகள் தற்கொலை :மோடியின் பொய்யும் புரட்டும் !

“மோசமான நிலையில் பயிர் இருந்ததும் மிக குறைவான மகசூலையே அது தரும் என்பதும் எங்களுக்கு முன்னரே தெரியும்” என்று கிருஷ்ணய்யா கூறினார். 1.5 இலட்சத்தை திருப்பி அடைக்க முடியாது என்றும் மேலும் கட்டவே முடியாத அளவிற்கு அது வளர்ந்து விடும் என்பதும் சென்னம்மாவிற்கு தெரியும்.

வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்தடிக்க கிருஷ்ணய்யா கிளம்பிச் சென்றார். சென்னம்மா வீட்டிலேயே அதை குடித்துவிட்டார்.


தமிழாக்கம்: சுகுமார்
நன்றி: The wire

மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 15ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 15ஆம் ஆண்டுவிழா கருத்தரங்கம் !

நாள் : 16.12.2018, ஞாயிறு மாலை 5.00 மனி
இடம் : நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கம்(சோகோ அறக்கட்டளை)
14., ஏரிக்கரை சாலை, கே.கே. நகர், மதுரை-20. (அப்போலோ மருத்துவமனை அருகில்)

தலைமை :

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

வரவேற்புரை :

திரு. அ. சீநிவாசன்,
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.

கருத்துரை :

சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்! என்றதலைப்பில் கருத்துரை:
வழக்கறிஞர் தி. லஜபதிராய், உயர்நீதிமன்றம், மதுரை.

சமூக சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலையும் ‘சத்ர தர்மா சாதனா’ கொலை நூலும் – ஆய்வுரை:
தோழர் எஸ். பாலன், பெங்களூரு.

கலை அரங்கம் :

தோழர் கோவன் ம.க.இ.க. கலைக்குழு

நேருரை :

களப் போராளிகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு.

நன்றியுரை :

திரு. ம. லயனல் அந்தோணி ராஜ், செயலாளர், ம.உ.பா. மையம் மதுரை

நூலரங்கம் :

கீழைக்காற்று வெளியீட்டகம் – சென்னை
முற்போக்கு நூல்களின் முகவரி

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை 384-(மாடி),
கிழக்கு 8வது தெரு, கே.கே. நகர், மதுரை-20.
அலைபேசி : 73393 26807

*****

VINAVU LIVE தொழில்நுட்ப பிரச்சினை இல்லாத பட்சத்தில் இந்த நிகழ்வு மதுரையிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படும் – இணைந்திருங்கள்

ந்திய அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டு முக்கால் நூற்றாண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. நமது அரசமைப்பு இறையாண்மையுடைய ஜனநாயகக் குடியரசு என்று வகுக்கப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார, சமூகநீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாக அடைவதே நமது அரசமைப்புச் சட்டத்தின் இலக்கு என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜனநாயகத்தின் மீது வெறுப்புக் கொண்ட பழமைவாத சனாதன சக்திகள் இந்து மதத்தின் பெயரால் மனுவின் தருமத்தை நமது அரசமைப்புச் சட்டத்தில் அங்கங்கே புகுத்துவதில் அன்றே வெற்றி பெற்று இருந்தனர்.

இந்திய ஜனநாயகம் என்பது அனைத்து மக்களுக்குமான ஜனநாயகமாக இல்லாவிட்டாலும் கூட முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் போராட்டத்தில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

பார்ப்பன இந்து மதவெறி பாசிசம் அதிகாரத்தில் இருந்து வரும் சூழலில் அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கொள்கைகளுக்கு பேரபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கை என்ற அடிப்படையில் சங்கப் பரிவாரங்கள் நேரடியாக அரசியல் சட்டத்தின் மீது தாக்குதல் தொடுப்பதும் அதனை மோடி அரசு ஆதரித்து ஊக்கமளிப்பதும் வேகமாக வளர்ந்து வருகிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மோடியின் பாசிச அரசு தனது அனைத்து அரசியல் சமூகப் பொருளாதார நடவடிக்கைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் மதவெறியை ஆயுதமாகத் தரித்துக் கொண்டு தேர்தலைச் சந்திக்க வருகிறது.

வடக்கே அயோத்தியில் ராமனுக்குக் கோவில் தெற்கே சபரி மலையில் ஐயப்பன் கோவிலில் பெண்களுக்குத் தடை ஆகிய பிரச்சனைகளைக் கையிலெடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு – அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை முன்வைத்து மதக் கலவரத் தீயை வளர்க்கத் தொடங்கி விட்டனர். நவம்பர் 25-ல் அயோத்தியில் திரண்ட மதவெறியர்கள் ‘ராமனுக்கு முதலில் ஆலயம் அதன் பிறகே அரசு’ என்ற முழக்கத்தை முன்வைத்து தடையை மீறி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். ராமர் கோவில் கட்ட தனிச்சட்டம் தயார் என்று ஆர். எஸ். எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் அறிவிக்கிறார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்த பின்பும் இன்று வரை அதை அமல்படுத்தவிடாமல் ஆட்டம் போடுகிறது ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்.

நீதிமன்றங்களை மிரட்டிப் பணியவைக்கும் போக்கில் மோடி அரசு முன்னேறி வரும் சூழலில் கூட மண வாழ்க்கையில் பெண்ணடிமைத்தனம், பெண்களுக்கான வழிபாட்டு உரிமை போன்றவற்றில் தனிநபர் உரிமை சார்ந்த முற்போக்கான தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆனால் மத நம்பிக்கை, மத உரிமை, மத நிறுவனங்களின் உரிமை என்ற போர்வையில் “தீட்டு, தீண்டாமை” என்ற மனுவின் நீதியை அமல்படுத்தக்கோரி போராடி வருகின்றனர் ஆர்.எஸ்.எஸ் – பாரதிய ஜனதா கட்சியினர்.

அரசமைப்புச் சட்டத்துக்கு மேலே சனாதனச் சட்டங்களை ஏற்றி வைக்கின்றனர். தனிநபர் சுதந்திரம், உரிமை, கண்ணியம், அந்தரங்கம், நம்பிக்கைகளை ஏற்க மறுக்கின்றனர்.

ஆர். எஸ் . எஸ் . இந்துமத  ெவறியைத் தூண்டும் சதியை அம்பலப்படுத்திய அறிவுத்துறையினர் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களைத் சனாதன் சன்ஸ்தா என்ற மதவெறி அமைப்பு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

மோடியை விமர்சிக்கும் அல்லது அவர்களின் ஊழல் முறைகேடுகளை அம் பலப்படுத்தும் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ‘சொல் பேச்சைக் கேட்க மறுக்கும்’ லோயா போன்ற நீதிபதிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உ.பி.யில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாகப் புரளி செய்து அக்லக் என்ற இஸ்லாமியரைக் கொலை செய்த வழக்கை விசாரித்த நேர்மையான காவல் அதிகாரி சுபோத்குமார் சிங் சில நட்களுக்குமுன் பசு குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மாட்டேன் என்று வாக்குறுதியளித்துள்ளார். அவ்வாறே உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறைகளும் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்றும் உறுதியளிக்கப்படலாம்.

பழங்குடி மக்கள், தலித்துகள், விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துச் சுற்றுச் சூழலை நாசமாக்கும் கார்ப்பரேட்களுக்கு அரணாக நிற்கும் மோடி அரசு அவற்றை எதிர்த்துப் போராடும் மக்களைக் காவல் படைகளை ஏவிப் படுகொலை செய்கிறது.

தமிழ்நாட்டில் மோடியின் பினாமியாக ஆட்சி நடத்தும் அதிமுக அரசு ஸ்டெர்லைட்டில் 14 உயிர்களைக் காவு வாங்கிய பின்பும் ஆலையைத் திறக்க அப்பட்டமாகத் துணை போகிறது. தமிழ் இனத்தின் மீது பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் மீது நேரடித் தாக்குதல் நடத்தி வருகிறது. 8-வழிச்சாலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் திட்டம் அண்மையில் கஜா புயல் பேரிடர் நிவாரணம் மறுப்பு மூலம் தமிழக விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியும் புதிய சட்டங்களை இயற்றியும் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலமாகவும் தீர்ப்புகள் முரண்படும் போது அவற்றை நடைமுறைப்படுத்த மறுத்து கலவரம் செய்தும் ஆர்.எஸ்.எஸ். தனது செயல் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.

இந்திய ஜனநாயகத்திற்குப் பார்ப்பன இந்து மதவெறி பாசிச சக்திகளால் பேராபத்து ஏற்பட்டுள்ள இந்தச்சூழலில் அறிவுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மக்களின் வாழ்வுரிமை காக்க என்ன செய்யப் போகிறோம் என்று முடிவு செய்தாக வேண்டும்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ? | காணொளி

மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நடந்து வந்த மோதலின் விளைவாக, ரிசர்வ் வங்கியில் கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  தன்னிச்சையான அமைப்பான ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் மோடி அரசு ஆதிக்கம் செலுத்த பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உர்ஜித் பட்டேல் பதவி விலகியிருக்கிறார். இந்த மோதல் வெளிப்படையாக தெரிந்தாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக பட்டேல் தெரிவித்துள்ளார்.

உர்ஜித் பட்டேலின் பதவி விலகல் இந்தியாவின் நிதி கொள்கைகளை செயல்படுத்துவதில் ஆட்டத்தை காணவைக்கும் என்கிறது த வயர் இணைய தளம். வயர் போன்று பல ஊடகங்கள் சொல்லும் கருத்துக்களை பார்ப்போம்.

முதலாவதாக, இந்திய பங்குச்சந்தைகளில் இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? அடுத்து, மத்திய வங்கியின் இடைக்கால கவர்னராக பொறுப்பேற்கப் போவது யார்? இறுதியாக, மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில்,  நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகிகள் கூட்டத்தில் என்ன நடக்கும்?

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 72.50 ஆக சரிந்துள்ள நிலையில், பட்டேலின் ராஜினாமா தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது மெக்லாய் நிதி சேவை நிறுவனம். இந்த சரிவு செயல்பாட்டு அடிப்படையற்றது என்கிற அந்நிறுவனம், அரசியல் காரணங்களால்தான் இந்த சரிவு என்கிறது.  அதுபோல பங்குச் சந்தைகளும் எதிர்மறையாக விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் நிதி சேவை நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. சொன்னதுபோல இன்றைய பங்குச் சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 10400 கீழே சரிந்தும் உள்ளது. ரூபாயின் மதிப்பு 1.5% சரிவைக் கண்டுள்ளது.

படிக்க:
அறிமுகம் : வினவு வானொலி ! இன்று 4 செய்தி அறிக்கைகள் !
அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி !

பட்டேலின் ராஜினாமா அறிவிப்பு மோடி அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்கின்றன ஊடகங்கள். வழக்கமாக, மத்திய அரசின் செய்தி நிறுவனத்தின் வாயிலாக கவர்னர் பதவி விலகல் அறிவிப்பு அறிக்கையாக வெளியிடப்படும்.  பட்டேல் ராஜினாமா திடீரென்று எதிர்கொண்ட மோடி அரசு, தன்னுடைய அதிர்ச்சியை மறைக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவிக்கிறது.

ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, “பட்டேலின் ராஜினாமா வங்கித் துறைக்கு பெரும் இழப்பு” என்கிறார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கிக்காக பட்டேல் செய்த பணிகளை பாராட்டுவதாக ட்விட்டரில் தெரிவிக்கிறார்.  ரிசர்வ் வங்கி இயக்குனராக உள்ள ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, பட்டேலின் ராஜினாமா அதிர்ச்சி அளிப்பதாக தெரிவிக்கிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை கையாளத்தெரியாமல் கீழ் நிலைக்குத் தள்ளியது காவி கும்பல். தன்னிச்சையான அமைப்புகளை சர்வாதிகாரத்தன்மையுடன் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பாஜக அரசு தீவிரமான முயன்றது. அந்த வகையில் உர்ஜித் பட்டேலின் ராஜினாமாவை இவர்கள் எதிர்பார்த்தார்கள் எனலாம்.  மோடி அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசுக்கு ஐந்து விசயங்களில் மோதல் போக்கு நீடித்து வந்தது.

1. ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியை மோடி அரசு கேட்டது. அதைத்தர பட்டேல் மறுத்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் இது குறித்து ஆராய குழு அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

2. பலவீனமான நிலையில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கச் சொன்னது மோடி அரசு. ஆனால், ரிசர்வ் வங்கி அவ்வாறு செய்வது புத்திசாலித்தனம் அல்ல என தெரிவித்தது.

3. வங்கிகளுக்கான மூலதன நெறிகள்: கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் இதற்கு ஆர்.பி.ஐ. ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. சர்வதேச மூலதன நெறிமுறைகளின் ஒரு பகுதியை தளர்த்த ஆர்.பி.ஐ. ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

4. சிறு, குறு தொழில்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு உதவும் விதமாக விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்கிற மத்திய அரசின் கோரிக்கையையும் ஆர்.பி. ஐ. நிராகரித்துவிட்டது.

5. ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கட்டமைப்பு உடைக்க மோடி அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில், மோடி அரசு ரிசர்வ் வங்கி, துணை கமிட்டிகளை அமைக்குமாறு வலியுறுத்தியது. இந்த கமிட்டியில் அரசு நியமிக்கும் உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கியின் பல்வேறு செயல்பாடுகளை கவனிப்பார்கள் என கூறியது.

படிக்க:
ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?
ரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் !

ரிசர்வ் வங்கி கவர்னரின் ராஜினாமா இந்த ஐந்து விசயங்களில் இருந்த முரண்பாட்டில் விளைவாக நடந்திருக்கிறது என ஊடகங்கள் பல கருத்துரைக்கின்றன.

ஆனால் இது வரை மோடி அரசின் தவறுகளுக்கு ரிசர்வ் வங்கி உடன்பட்டு போயிருப்பதை அவர்கள் கணக்கிலெடுப்பதில்லை. இது குறித்து மேலே உள்ள புதிய ஜனநாயகம் கட்டுரை இணைப்பில் நீங்கள் விரிவாக காணலாம். அதிலிருந்து சில பத்திகளை இங்கே நினைவுபடுத்துகிறோம்.

தனியார்மய-தாராளமய காலக் கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் என்பது பன்னாட்டு ஏகபோக முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அன்றி வேறொன்றுமில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பட்ஜெட் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இந்தச் சுதந்திரம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, மோடியின் ஆட்சியில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் எந்த இலட்சணத்தில் இயங்கியது என்பதும் நாம் அறியாத இரகசியமல்ல.

உர்ஜித் படேல் குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதோடு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்ற காரணங்களுக்காகவே ரகுராம் ராஜனுக்கு அடுத்து ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் மோடியின் ஆள் என நம்பப்பட்டதை நிரூபிக்கும் வண்ணம், மோடி அரசு இரவோடு இரவாக இந்திய மக்கள் மீது நடத்திய பணமதிப்பழிப்பு தாக்குதல் நடவடிக்கையை மறுபேச்சின்றி ஆதரித்தார்.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி ஆகியோர் நியமிக்கப்பட்டதையும், அக்கும்பல் மோடியின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததை எதிர்த்துவந்த காரணத்திற்காக நாச்சிகேட் மோர் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப்பட்டதையும் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார்.

எனினும், வாராக் கடன்களை வசூலிப்பதிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதிலும் மோடி அரசோடு ஒத்துழைக்க மறுக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே உர்ஜித் படேல் மீது ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆத்திரம் கொண்டிருப்பதோடு, அவரை மாற்றிவிட்டு வேறொரு தலையாட்டி பொம்மையை ஆளுநராக நியமித்து, ரிசர்வ் வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், ரிசர்வ் வங்கியை, ரிலையன்ஸ் வங்கியாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். அத்திட்டம் நிறைவேறினால், பொதுத்துறை வங்கிகளும், அதிலுள்ள மக்களின் சேமிப்பும் கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக் களமாக மாற்றப்படும். பொதுத்துறை வங்கிகளைச் சட்டபூர்வமாகத் தனியார்மயப்படுத்தாமலேயே, அவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் கைகளில் ஒப்படைத்துவிடும் சதி அரங்கேற்றப்படும்.

மோடி கும்பலால் முன்னிறுத்தப்பட்ட உர்ஜித் பட்டேல் இறுதியில் தனக்குப் பழி வரும் என்பதால் பதவி விலகியிருக்கிறார். ஆனால், நாட்டு மக்கள் தப்பிக்க என்ன வழி?


கலைமதி
செய்தி ஆதாரம்: The wire,
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

நூல் அறிமுகம் : இந்தியா எதை நோக்கி ?

இந்தியா எதை நோக்கி? ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. – இந்துத்துவா

டந்த பாராளுமன்றத் தேர்தலுக்குமுன், 2014 பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு பரபரப்புச்செய்தி புதுடெல்லியை அல்லோல கல்லோலப்பட வைத்தது. ஆங்கிலத்தொலைக்காட்சி ஒன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திடம், ‘உங்கள் ஒப்புதலின்பேரில்தான் சம்ஹுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு முதலான ஐந்து குண்டுவெடிப்புக்கள் நடைபெற்றன என்று சுவாமி அசீமானந்தா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டனர். ‘அது பொய். அம்பாலா சிறையில் இருப்பவர் எப்படி பேட்டி அளித்திருப்பார்? அப்படி ஒருபேட்டி நடக்கவே இல்லை’ என்று பகவத் மறுத்தார். உடனே சங்பரிவாரங்கள் அந்தப் பேட்டியை வெளியிட்ட ‘தி கேரவன்’ ஆங்கில இதழின் அலுவலகத்தைச் சூறையாடப் புறப்பட்டன. ஆனால், தி கேரவன் நிர்வாகமோ அசீமானந்தாவை பேட்டிகண்ட ஆதாரங்களை அவரது கையெழுத்துடன் வெளியிட்டது. அவ்வளவுதான் சங்பரி வாரங்கள் அடங்கிப்போய்விட்டன. குற்றச்சாட்டுக்கள் கூறப்படும்போது வெகுண்டெழுந்து மறுப்பதும், ஆர்ப்பரிப்பதும், அவை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும் போது வாலைச் சுருட்டிக்கொள்வதும் அவர்களுக்குக் கைவந்த கலை. இந்த நிகழ்வுகளைத் தமிழக ஊடகங்கள் எதுவும் கண்டுகொள்ளவே இல்லை .

எனவே, இத்தகைய நிகழ்வுகளைத் தமிழக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியது அவசியம். ஒருகருத்து பல ஆயிரக் கணக்கான நெஞ்சங்களைக் கௌவிப்பிடிக்கும்போது அது ஒரு பௌதீகசக்தியாக மாறுகிறது. இந்த நோக்கத்தில்தான் இந்த நூலில் உள்ள (ராமச்சந்திர குஹா, லீனாகீதா ரெகுநாத், தினேஷ் நாராயணன், வெங்கடேஷ் இராமகிருஷ்ணன் ஆகியோர் எழுதியுள்ள) கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூலை தொகுத்து மொழிபெயர்த்துவருமான ஆசிரியர் செ.நடேசன் உரையிலிருந்து… பக்.09)

அசீமானந்தா, பிரக்யாசிங் இருவரும் என்னிடம் கும்ப மேளாவை எதிர்நோக்கியிருந்த ஆண்டுகளில் அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டதாகக் கூறினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அசிமானந்தா கருதிய முஸ்லீம் மக்கள் தொகை நாட்டில் பெருகி வருவது பற்றி விவாதித்தார்கள். ‘கிறிஸ்தவர்களோடு நாம் எப்போதும் இணைந்து நிற்கமுடியும்; அவர்களை அச்சுறுத்தவும் முடியும். என்று அசீமானந்தா என்னிடம் கூறினார்: ‘ஆனால் முஸ்லீம்கள் வேகமாகப் பெருகிவருகிறார்கள் என்ற அவர், ‘தலிபான்கள் மக்களை வெட்டிக்குவிக்கும் வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆம். நான் இதைப் பற்றிக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன், முஸ்லீம்கள் இவ்வாறு பல்கிப்பெருகினால் அவர்கள் சீக்கிரமே இந்தியாவை ஒரு பாகிஸ்தானாக மாற்றிவிடுவார்கள். இங்கு உள்ள இந்துக்கள் அதேபோன்ற சித்திரவதைக்கு உள்ளாவார்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன்’ என்ற அவர் தொடர்ந்து, ‘அதைக்கட்டுப்படுத்துவதற்கான வழியை இந்தக்குழு கண்டுபிடித்துவிட்டது” என்றார். அவர்கள் குஜராத்தில் கங்காநகரில் உள்ள அக்சர்தாம் கோவில் போன்ற இந்து வழிபாட்டுத்தலங்களில் முஸ்லீம் தீவிரவாதத் தாக்குதல்களால் ஏற்கனவே ஆத்திரம் கொண்டிருந்தார்கள், 2002-ல் நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தப்பிரச்சனைக்கான அசீமானந்தாவின் தீர்வும், அவர் அடிக்கடி வலியுறுத்திவந்ததும், ‘அப்பாவி முஸ்லீம்களுக்கு எதிராகப் பதிலுக்குப் பதில் பழிவாங்கவேண்டும்’ என்பதுதான், அவர் கூறுவது, ‘குண்டுக்குப் பதில் குண்டுதான்’ – (பாம் கா பத்லா பாம்) (தி கேரவன் ஆங்கில இதழின் ஆசிரியர் லீனாகீதா  ரெகுநாத் எழுதியுள்ள ஆர்.எஸ்.எஸ். மதவெறி அடியாள் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – நம்பிக்கையாளர் அசீமானந்தா’’ கட்டுரையிலிருந்து பக்.59)

படிக்க:
அறிமுகம் : வினவு வானொலி ! இன்று 4 செய்தி அறிக்கைகள் !
அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி !

இந்திய தேசிய உணர்வை வளர்த்தெடுக்க – குறிப்பாக காந்திக்கு – இந்து -முஸ்லீம் ஒற்றுமைதான் அடிப்படையாக இருந்தது. முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கைகள் அவரது கருத்தைச் செல்லாததாக ஆக்கவில்லை , 1910-ல் ‘Hind Swaraj’ என்ற நூலில்:

“இந்தியா ஒற்றைக் கலாச்சார நாடாக மிளிர முடியாது. ஏனெனில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் இங்கு வாழ்கிறார்கள். வெளிநாட்டினர் இங்கு வந்ததால் இந்த தேசம் அழிந்து விடவில்லை, மாறாக அவர்கள் இதில் கலந்துவிட்டார்கள். அத்தகைய நிலை உருவாகும்போது ஒருநாடு முழுவதும்தான் ஒரு தேசமாக இருக்கும். இந்தியா எப்போதும் அத்தகைய நாடாகவே இருந்து வருகிறது.”

காந்தி இந்து – முஸ்லீம் முரண்பாட்டை செயற்கையானதாக, பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக உருவாகி ஆழப்படுத்தப்பட்டதாகப் பார்த்தார். படையெடுப்பின் முதல் அதிர்ச்சி ஏற்பட்டவுடன் பிற தேசியவாதிகள் ‘கலாச்சாரக் கலப்பு’ பற்றிப் பேசும் அளவுக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுசேர்ந்து நாட்டை ஆண்டார்கள். மகத்தான கலைப்படைப்புக்கள், கட்டடக்கலை என எல்லாவற்றிலும் இந்திய சாஸ்திரிய சங்கீதம் உட்பட – எல்லாவற்றையும் படைத்தார்கள். இந்தப் பண்பாட்டு இணைப்பு வடஇந்தியா முழுவதும் பரவியது. ‘Ganga Jamni tehzeeb’ என கங்கை – யமுனை ஆற்றுநீர் பாயும் பூமியெங்கும் பல்வேறு சிந்தனைகளை ஒருங்கிணைத்த கலாச்சாரம் மலர்ந்தது.

இந்தக் கொள்கையின் மீதான மிக விரிவான அறிக்கை 1940-ல் ராம்கரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டு அமர்வில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் தலைமை உரையில் இடம்பெற்றது.

“பல்வேறு மனித இனங்கள், கலாச்சாரங்கள், மதங்கள் இந்தியத் தாய்க்குள் பாய்ந்து அவளது ஆதரவளித்து வரவேற்கும் பூமியில் தங்களுக்கு ஒரு வீட்டைக் கண்டன. பல்வேறு வணிகர்களின் கூட்டங்கள் இங்கே இளைப்பாறின. இதுதான் இந்தியாவின் வரலாற்றின் நிகழ்வு. வரலாறு துவங்குவதற்கு முன்பேகூட இத்தகைய வணிகர் குழாம்கள் இந்தியா வழியாக வந்து சென்றன, அலை. அலையாகப் புதிய மனிதர்கள் வந்தார்கள். இந்தப் பரந்துவிரிந்த செழிப்பான பூமி எல்லாரையும் வரவேற்றது. அவர்களைத் தனது மார்பில் அணைத்துக் கொண்டது. இந்தத் தடத்தின் வழியாகத் தங்கள் முன்னோரைப் பின்பற்றிக் கடைசியாக வந்த வணிகர் குழுவினர் இஸ்லாத்தைப் பின்பற்றியவர்கள், இந்தக்குழு இங்கு வந்தது: இங்கேயே நிலை கொண்டுவிட்டது. எல்லாம் நன்மைக்காக”.

“அதற்குப்பிறகு பதினோரு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இந்துயிஸத்தைப் போலவே இந்த இந்திய மண்ணில் இப்போது இஸ்லாத்துக்கும் உரிமை உண்டு. இங்குள்ள மக்களுக்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துயிஸம் ஒரு மதமாக இருப்பதைப்போல இஸ்லாமும் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு மதமாக இருந்து வருகிறது. ஒரு இந்து பெருமையுடன் ‘நான் ஒரு இந்தியன்’ என்றும் ‘நான் இந்து மதத்தைப் பின் பற்றுபவன்’ என்றும் சொல்வதைப்போல நாங்களும் கூடப் பெருமையுடன் சொல்லிக்கொள்வோம்: “நாங்கள் இந்தியர்கள். நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள்”. இந்த வட்டத்தை நான் இன்னும் விரிவுபடுத்துகிறேன். இந்தியக் கிறிஸ்தவர்களும் நமக்குச் சமமாக, “நாங்கள் இந்தியர்கள்: தாங்கள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள்” என்று சொல்லிக்கொள்ள உரிமை படைத்தவர்கள்”.

“பதினோரு நூற்றாண்டுகள் கொண்ட பொதுவரலாறு நமது பொதுச்சாதனைகள் மூலம் இந்தியாவை வளப்படுத்தியிருக்கிறது, நமது மொழிகள், நமது கவிதைகள், நமது இலக்கியங்கள், நமது கலாச்சாரங்கள், நமது கலைகள், நமது ஆடைகள், நமது பாங்குகள், பழக்க வழக்கங்கள், நமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் எண்ணற்ற நிகழ்வுகள் – இவை ஒவ்வொன்றும் நமது ஒன்றுபட்ட முயற்சிகளின் முத்திரைகளைத் தாங்கி நிற்கின்றன.”

படிக்க:
அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா ? அம்பேத்கர்
அசீமானந்தா – ஒரு காவி பயங்கரவாதியின் வரலாறு

“இந்தக் கூட்டுச்சொத்து நமது பொது தேசியத்தன்மையின் மரபுரிமை, நாம் இதை விட்டுவிட்டுக் கூட்டு வாழ்க்கை துவங்கப்படாத பழைய காலத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. இங்கே நம்மிடையே உள்ள ஏதாவது ஒரு இந்து, ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் இருந்த இந்து வாழ்க்கையைத் திரும்பக் கொண்டுவர விரும்பினால் அவர்கள் கனவு காண்கிறார்கள். அத்தகைய கனவுகள் கேலிக்கிடமான வீண்கனவுகள், அதுபோலவே ஏதாவது ஒரு முஸ்லீம் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஈரான் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்த தங்களது கடந்தகால நாகரிகத்தையும், கலாச்சாரத்தையும் மீட்டெடுக்கக் கனவு காண்பாரானால், அவர்களும்கூட விரைவில் விழித்துக்கொள்வது நல்லது”. (ராமச்சந்திர குஹா எழுதியுள்ள, “காணாமல் போன… இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?” என்ற கட்டுரையிலிருந்து… பக்கம் 156-158)

நூல்: இந்தியா எதை நோக்கி ?

ஆசிரியர்கள்: லீனாகீதா ரெகுநாத், தினேஷ் நாராயணன், ராமச்சந்திர குஹா, வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன்.
தமிழில்: செ.நடேசன்.

வெளியீடு: எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002.
பேச: 04259-226012, 99425 11302

பக்கங்கள்: 190
விலை: ரூ.150.00

இணையத்தில் வாங்க: பனுவல் | உடுமலை

வினவு மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

 

செயற்கை நுண்ணறிவு : ஐ.டி ஊழியர்கள் எதிர் கொள்வது எப்படி ?

கட்டுரையின் நோக்கம்

Artificial intelligence அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இயந்திரங்களில் பயன்படுத்துவதன் மூலமாக தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

தொழிலாளர்களுடைய வேலையை இயந்திரத்தின் செயலியே பார்த்துக்கொள்ளும் என்பதை செய்தித்தாளில் அல்லது நண்பர்கள் சொல்ல கேட்டிருப்போம், பார்த்திருப்போம். ஆனால், உண்மையில் நம்முடைய கண்முன்னே இதன் ஆபத்துகளை பார்க்கப் போகிறோம் என்பதை உணர்த்தும் விதமாகவும் அதற்கு நாம் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்வது என்பதை எடுத்துரைக்கும் விதமாகவும் இந்தக் கட்டுரை அமையும் என்று நம்புகிறேன்.

*****

ஐ.டி தொழிலாளி புதிய ப்ராஜெக்ட்-ல் சேர்வது

ழக்கமாக ஐ.டி நிறுவனங்களில் ஒரு தொழிலாளர் ப்ராஜெக்ட்-லிருந்து ரிலீஸ் ஆனதும் பென்ச்-க்கு அனுப்பப்படுவார். பிறகு அவர் மனிதவள அலுவலரிடம் “எனக்கு இந்தத் தொழில் நுட்பம் தெரியும்” என்று முறையிட வேண்டும். பிறகு அதற்கு ஒப்பான ப்ராஜெக்ட் கிடைக்கும்வரை அந்த தொழிலாளி பென்ச்-ல் இருந்து கொண்டு தினமும் மனிதவள அலுவலரிடம் வருகையை பதிவு செய்வார். ஒரு குறிப்பிட்ட நாட்களை தாண்டியதும் மனிதவள அலுவலர் ஏதாவது ப்ராஜெக்ட் எடுத்துக்கொண்டு வேலைக்குள் செல்லும்படி தொழிலாளியை நிர்பந்தம் செய்வார்.

தானியக்கமாகும் வேலைகள்

இதுபோன்ற சூழ்நிலைகளில் குறைந்த அனுபவம் உள்ள தொழிலாளர்களை மனிதவள அலுவலர் பலவகையில் மிரட்டுவதை கண்முன்னே பார்த்திருக்கிறேன். அதனால் வேறுவழியில்லை என்று தொழிலாளர்களும் அந்த ப்ராஜெக்ட்-ல் சேர்ந்து தெரியாத தொழில்நுட்பம் அல்லது புதிய வகையான செயலியை கற்றுக்கொண்டு வேலை பார்க்க வேண்டும். அதற்கு அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். ஒருசில தொழிலாளர்கள் தங்களுடைய நண்பர்கள் வட்டத்தை பயன்படுத்தி ப்ராஜெக்ட்-ல் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

தொழிலாளர் பென்ச்-ல் இருக்கும் காலத்தில் தான் அறிந்த தொழில்நுட்பத்தில் புதியவற்றை கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது அல்லது ஆங்கில புலமையை வளர்ப்பது என்று மற்ற குறைகளை சரிசெய்வதற்கு அந்த நாட்கள் உதவியாக இருக்கும். ஆனால் ஒருசிலர் பென்ச்-ஐ சாதமாக பயன்படுத்தி எந்த வேலையிலும் ஈடுபடுவதில்லை, சும்மா இருந்துவிடுகிறார்கள். ஆனால், இந்த சதவீதம் மிக மிகக் குறைவு.

இந்த நடைமுறை அவஸ்தையாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் இனிமேல் வரப் போவது இதை விட பயங்கரமானதாக இருக்கப் போகிறது.

Artificial intelligence (செயற்கை நுண்ணறிவு) தாக்கம்

ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ப்ராஜெக்ட்-ல் இருந்து ரிலீஸ் ஆனதும் மேலே சொன்னபடி மனிதவள அலுவலரிடம் தனக்கு தெரிந்த அல்லது வேலை பார்த்த தொழில்நுட்பத்தை சொல்லி ப்ராஜெக்ட் தேடுவது வழக்கம். ஆனால், இப்போது மனிதவள அலுவலரின் வேலை இல்லாமல் தானாக இயந்திரமே செயற்கை நுண்ணறிவு மூலமாக தொழிலாளர்களுக்கு ப்ராஜெக்ட்-ல் சேர்வதற்கு இப்போது செயலி உருவாக்கி உள்ளார்கள்.

அதாவது தொழிலாளர்கள் அறிந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு சில ப்ராஜெக்ட்களை தொழிலாளருக்கு அந்த செயலி காட்டும். அதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் இந்தச் செயலி இந்தியாவில் எந்த பகுதியில் அந்த ப்ராஜெக்ட்களை இருந்தாலும் காட்டும். அதில் சேர்ந்து வேலை செய்வதற்கு பல நடைமுறை பிரச்சனைகள் நமக்கு இருக்கலாம். அதாவது தான் ஏற்கனவே சென்னையில் குடும்பத்தோடு இருக்கிறேன், வயதான பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது அல்லது சென்னையில் வேலை பார்க்கத்தான் தகுந்த சூழ்நிலைகள் உள்ளது என்று பல்வேறு  ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக இருக்கலாம். புராஜக்டை ஏற்றுக் கொள்ள முடியாததற்கு காரணமாக அதை பதிவு செய்யலாம். இதை என்னதான் வில்லன் போல நடந்து கொண்டாலும் எச்.ஆர் என்ற மனிதருடன் பேசி போராடி வேறு புராஜக்ட் பெற முயற்சிக்கலாம்.

மனிதர்களின் வேலையை செயலியே பார்த்துக் கொள்ளும் நிலைமை உருவாகி வருகிறது.

புதிய தொழில் நுட்பமான செயற்கை நுண்ணறிவின் அபரீதமான வளர்ச்சியால் மனிதர்களின் வேலையை செயலியே பார்த்துக் கொள்ளும் நிலைமை உருவாகி வருகிறது. அதனை பல்வேறு துறைகளில் அமல்படுத்தி முதலாளிகள் லாபம் சம்பாதித்து வருகிறார்கள். செயற்கை நுண்ணறிவுக்கு முக்கிய புள்ளியாக இருந்து செயலாற்றும் ஐ.டி துறையில்  இதை வேகமாக செயல்படுத்தி வருகிறார்கள். அது முதலாளிகளின் அதாவது கம்பெனியின் லாபத்துக்காக பெரிதும் உதவுவதால் அந்தத் தொழில்நுட்பத்தை மேலும் வலுவாக வளர்த்தெடுக்க பணத்தைக் கொட்டி செய்கிறார்கள் அதனால்தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படித்த தொழிலாளர்களை வலைபோட்டு தேடுகிறார்கள். அந்த ஊழியர்களின் உழைப்பில் உருவாகும் செயலிகளை பயன்படுத்தி ஆட்குறைப்பை அமல்படுத்துகிறார்கள்.

தொழிலாளர்கள் மனிதவள அலுவலரிடம் தன்னுடைய விஷயங்கள் சொல்லி புரியவைத்து தகுந்த ப்ராஜெக்ட்- ல் சேர்ந்து வேலை செய்யலாம். ஆனால் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த செயலியில் நம்முடைய விஷயங்களை கேட்டு அதற்கேற்றவாறு பொருத்தமான ப்ராஜெக்ட்-ல் சேர்வது என்பது சாத்தியம் மிக குறைவு.

ஆனால் செயற்கை நுண்ணறிவு புராஜக்ட்டை ஒதுக்கும் முறையில் இரண்டு மூன்று புராஜெக்ட்களை இதுபோன்று நிராகரித்தால், கொடுக்கப்பட்ட வேலைகளை அதாவது புராஜெக்ட்களை தொழிலாளர் நிராகரித்து விட்டார் என்று கணினியில் தானாக பதிவு செய்துகொண்டு தொழிலாளியை நிறுவனத்தை விட்டு வெளியேற்ற சாதகமாக அமைத்துக்கொள்ள அதிகப்படியான வாய்ப்புகள் நிறுவனத்துக்கு உள்ளது என்பதே இங்கு முக்கியமான விஷயம்.

படிக்க :
♦ செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் நோக்கமும் வளர்ச்சியும்
♦ தானியங்கல் தொழில்நுட்பத்தின் சமூகத் தாக்கம் வேலையிழப்பு மட்டுமல்ல !

மேலும், செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் இந்த செயலி மனிதவள அதிகாரியின் வேலையை செய்வதால் அவர்களின் வேலை பறிபோகும் நிலைமை உருவாகும். எல்லோரையும் வேலையை விட்டு போகச் சொல்லி மிரட்டிய எச்.ஆர் அலுவலர்களுக்கும் இப்போது நெருக்கடி ஆரம்பிக்கும். மனிதவள அதிகாரியை நிறுவனத்தை விட்டு வெளியேற்றிவிட்டு அதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு செயலியை பொருத்துவதால் கோடிக்கணக்கில் வருமானம் முதலாளிக்கு கிட்டும். அதன்படி நிறுவனத்துக்கு லாபம் அதிகரிக்கும் நடவடிக்கையாக இதை பார்க்க வேண்டும்.

ஆனால் ஒருபக்கம் தொழிலாளியை திறமையாக வெளியேற்றுவதற்கு மற்றொரு புறம் மனிதவள அதிகாரிகள் எண்ணிக்கையை குறைப்பது என்ற இரண்டும் உடனடியாகவோ அல்லது குறைந்த கால இலக்குடனோ செயல்பட்டு முடித்துவைப்பார்கள் என்பதுதான் உண்மை.

அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பம் நமக்கு வேண்டாமா?

அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனித குல முன்னேற்றத்துக்கு அவசியமானவை. அவற்றை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், அது மனிதர்களின் பொதுவான வாழ்நிலையை உயர்த்துவதாகவும் சமூகத்துக்கு சமத்துவமாக பயன்படவும் வேண்டும்.

ஆனால் தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது? அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் யாரோ ஒரு சிலரின் லாபத்துக்காக பணத்தை குவித்துக் கொள்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ இன்னும் சில ஐ.டி நிறுவனங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளை புதிய தொழில்நுட்பத்தை, தொழிலாளர்கள் நலன், மக்களின் நலன் என்றெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமது லாபத்தை உயர்த்திக் கொள்வதற்காகத்தான் அவற்றை பயன்படுத்துகிறார்கள்.

நம்முடைய விஷயங்களை கேட்டு அதற்கேற்றவாறு பொருத்தமான ப்ராஜெக்ட்-ல் சேர்வது என்பது சாத்தியம் மிக குறைவு.

“இப்போது பணம்தான் முக்கியம், பணமிருந்தால் தேவையானவற்றை பெற்றுக்கொள்ளலாம்” என்று ஒரு தொழிலாளி நினைப்பது ‘அனைத்தையும் வியாபாரமாக்கி அனைத்தும் காசுக்காக விற்கப்படும்’ என்று மாற்றப்பட்ட இந்த முதலாளித்துவ பணக்காரர்களுக்கான உலகில் ஒன்றும் அதிர்ச்சியான விஷயமல்ல.

சக மனிதர்களை பாதிக்கும் அதாவது லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு நடக்கும் என்று நினைத்தாலும் அதைத் தடுக்க முடியாத சூழ்நிலையிலும் தொழில்நுட்பத்தை சரியான விஷயத்திற்காக பயன்படுத்தச் சொல்ல முடியாத சூழ்நிலையிலும் தொழிலாளிகள் முதலாளிகளால் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் போன்ற தொழிலாளர்களால் உருவாக்கப்பட்டு நிறுவனத்திற்குள் நுழைகிறது. தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கு ஆப்பு வைக்கிறது.

இதை எப்படி எதிர்கொள்வது? தற்போதைய தீர்வு என்ன?

செயற்கை நுண்ணறிவு அல்லது எந்த தொழில்நுட்பம் நிறுவனத்திற்குள் வந்தாலும் தொழிலாளர்களாகிய நம்மால் அதைத் தடுக்க முடியாது அல்லது அந்த தொழில்நுட்பத்தை சரியான விசயத்துக்கு பயன்படுத்துங்கள் என்றும் சொல்லவும் முடியாது. ஏனென்றால் அந்த அதிகாரம் நம்மிடம் இல்லை.

ஆனால் தொழிலாளர்களாய் நாம் ஒன்று கூட முடியும். ஐ.டி தொழிலாளர்கள் தனித்தனியாக அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் நடக்கும் குற்றங்களை கேள்வி கேட்பது கடினம். அவ்வாறு கேட்டாலும் நிறுவனமும் பதில் சொல்லாது, பதில் சொன்னாலும் பேச்சுக்காக நடிக்குமே தவிர லாபம் மட்டுமே நோக்கமாகவே நிறுவனங்கள் இயங்கும். தொழிலாளர்கள் ஒருவேளை கேள்விகேட்க ஆரம்பித்தால் அவர்களை குறிவைத்து தாக்கும் கீழ்த்தரமான நடவடிக்கையில் நிறுவனங்கள் ஈடுபடும்.

எந்த ஒரு நிறுவனத்தில் சாதிமத பேதமற்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்ட யூனியன் நன்றாக செயல்படுகிறதோ அதில் தொழிலாளர்கள் தங்களை முழுமனதுடன் இணைத்துக் கொள்கிறார்களோ அங்குதான் தொழிலாளர்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்படும். அப்படி குறைகள் இருப்பினும் தொழிலாளர்களின் பாதிப்பில்லாமல் அதை சரிசெய்து கொள்ள வழிவகுக்கும். அந்த நிறுவனத்தில்தான் சிறப்பான உற்பத்தியும் நடக்கும்.

ஆதலால் நண்பர்களே தொழிலாளர்கள் நாமெல்லாம் ஒன்றாக இனைந்து யூனியனாய் சேர்ந்து அதன் மூலம் எந்த பிரச்சினையை வேண்டுமானாலும் நிறுவனத்துக்கு கொண்டு செல்லலாம், கேள்விகேட்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதன் மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நிறுவனம் லாப நோக்கத்தில் செயல்படுத்தி தொழிலாளர்களை வேலையை விட்டு வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த முடியும்.

வேலை போன பிறகு சங்கத்தில் இணைந்து வேலையை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது எவ்வளவு சுயநலமோ அந்த அளவுக்கு கம்பெனிகளும் சுயநலமாக செயல்படும் தொழிலாளர்களாகிய நம்மை குப்பை போல வீசியெறிவதை தடுக்க முடியாது. ஆதலால் உடனே பு.ஜ.தொ.மு – ஐ.டி பிரிவு யூனியனில் இணையும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.

– அனுபவமுள்ள ஐ.டி ஊழியர்

நன்றி : new-democrats இணையதளத்தில் வெளியான கட்டுரை.

பு.ஜ.தொ.மு – ஐ.டி பிரிவு யூனியனை தொடர்பு கொள்ள:
தொலைபேசி :9003009641
மின்னஞ்சல்: combatlayoff@gmail.com

நரிக்கு நாட்டாண்மை கொடுத்துவிட்டால் காட்டில் வெறும் இறகுகள்தான் மிஞ்சும், பறவைகள் மிஞ்சாது

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 34 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
வனது முகம் சிவந்து போயிற்று; ஆக்ரோஷம் அவனுள்ளே கொதித்துப் பொங்கியது; அவனது குரலில் தொனித்த ஏற்ற இறக்கங்கள் தாயைப் பயப்படும்படி செய்தன.

“ஆனால், நான் அந்த மத குருவிடம் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?” என்று மேலும் தொடர்ந்தான் ரீபின். “அவர் கிராமத்தில் கூட்டம் முடிந்து திரும்பி வந்து ஓரிடத்தில் அமர்ந்து சில முஜீக்குகளோடு பேசிக்கொண்டிருந்தார். என்ன பேசினார்? சாதாரண மக்களெல்லாம் ஆட்டு மந்தைகள்தாம் என்றும், அவர்களைக் கட்டி மேய்க்க ஒரு இடையன் எப்போதும் தேவையென்றும் அவர் பேசினார். ஹூம்! எனவே நானும் வேடிக்கையாகச் சொன்னேன். ‘வாஸ்தவம்தான். நரிக்கு நாட்டாண்மை கொடுத்துவிட்டால், காட்டில் வெறும் இறகுகள்தான் மிஞ்சும், பறவைகள் மிஞ்சாது” என்றேன். அவர் தம் தலையைச் சாய்த்துக்கொண்டு என்னைப் பார்த்தார். ஜனங்கள் எப்போதும் கஷ்டப்படவே வேண்டியிருக்குமென்றும், எனவே தமது வாழ்க்கையில் நேரும் துன்பங்களையும் சோதனைகளையும் சங்கடங்களையும் பொறுமையோடு தாங்கிக் கொள்வதற்குரிய சக்தியை அருளுமாறு கடவுளிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எனவே நானும் ஜனங்கள் எவ்வளவோ காலமாய்ப் பிரார்த்தித்துக் கொண்டுதானிருக்கிறார்களென்றும், ஆனால், கடவுளுக்கு ரொம்ப ரொம்ப வேலையிருப்பதால், இந்தப் பிரார்த்தனைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க இயலவில்லையென்றும் சொன்னேன். ஹூம்! அப்புறம் அவர் என்னைப் பார்த்து, ‘நீ எந்த மாதிரிப் பிரார்த்திக்கிறாய்’ என்று கேட்டார். நான் சொன்னேன். ‘எல்லாச் சனங்களையும் போல் நானும் ஒரே ஒரு பிரார்த்தனையைத்தான் என் வாழ்நாள் முழுதும் சொல்லி வருகிறேன். கருணையுள்ள கடவுளே எங்களுக்குக் கல்லைத் தின்று வாழவும், கனவான்களுக்காக விறகு பிளக்கவும் செங்கல் சுமக்கவும் கற்றுக் கொடு’, என்றுதான் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், அவரோ என் பேச்சை முடிக்கவிடவில்லை.” திடீரென்று ரீபின் சோபியாவின் பக்கம் திரும்பினான், ‘நீங்கள் ஒரு சீமான் வீட்டுப் பிறவியா?” என்றான்.

“ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?’ என்று வியப்போடு திடுக்கிட்டுக் கேட்டாள் சோபியா.

”ஏனா?” என்று சிணுங்கிக்கொண்டான் ரீபின். ”ஏனென்றால் நீங்கள் அப்படிப்பட்ட குடும்பத்தில்தான் பிறந்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். எவரெவர் எப்படியெப்படிப் பிறந்தார்களோ அப்படித்தான் அவர்கள் விதியும் இருக்கும். ஹூம், நீங்கள் தலையில் கட்டியிருக்கிறீர்களே அந்தத் துணியினால் சீமான்களின் பாபக் கறையையெல்லாம் மூடி மறைத்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா? ஒரு சாக்குக்குள்ளே போட்டுக் கட்டியிருந்தாலும் நாங்கள் ஒரு மதகுருவை அடையாளம் கண்டுகொள்வோம். மேஜை மீது சிந்தியிருந்த எதன் மீதோ முழங்கை பட்டதுமே முகத்தைச் சிணுங்கிக் கூசி நடுங்கினீர்களே. உங்கள் ஒய்யார உடம்புக்கும் தொழிலாளன் உடலுக்கும் சம்பந்தமே இல்லை…”

தாய் குறுக்கிட்டு சொன்னாள். அவனது முரட்டுத்தனமான ஏளனப் பேச்சு சோபியாவின் மனத்தைப் புண்படுத்திவிடக்கூடாதே என அவள் அஞ்சினாள்.

”மிகயீல் இவானவிச்! அவள் என் சிநேகிதி. மேலும் அவள் நல்லவள். நமது கொள்கைக்காகப் பாடுபட்டுத்தான் அவளது தலைகூட நரைத்துப் போயிற்று. நீ ரொம்பவும் கடுமையாக வெடுக்கென்று பேசுகிறாய் …….”

ரீபின் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்.

“ஏன், நான் மனம் புண்படும்படி யாரையாவது எதையேனும் சொல்லிவிட்டேனா?”

“என்னிடம் ஏதோ சொல்ல விரும்பினீர்கள் என்று நினைக்கிறேன்” என்று வறண்ட குரலில் சொன்னாள் சோபியா.

“நானா? ஆமாம். இங்கே சமீபத்தில்தான் ஒரு ஆசாமி வந்திருக்கிறான். யாகவின் சொந்தக்காரன். அவனுக்குக் காசநோய். அவனை அழைத்துவரச் சொல்லட்டுமா?” என்றான் ரீபின்.

”அவசியமாய்!” என்றாள் சோபியா.

பின் அவளைச் சுருங்கி நெரித்த கண்களோடு பார்த்தான், பிறகு எபீமிடம் திரும்பி மெதுவாக சொன்னான்:

”போ. போய் அவனை இன்று மாலை இங்கு வரச்சொல்லிவிட்டு வா.”

எபீம் தன் தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு ஒன்றுமே பேசாமல், எவரையுமே பார்க்காமல், அந்தக் காட்டு வழியில் சென்று மறைந்தான். அவன் செல்வதைப் பார்த்துத் தலையை ஆட்டிக்கொண்டே ரீபின் சொன்னான்:

“இவனுக்கு இப்போது கஷ்ட காலம். சீக்கிரமே, இவனும் யாகவும் பட்டாளத்தில் சேர்ந்துவிடுவார்கள். யாகவுக்கு அதற்குத் தைரியம் கிடையாது. ‘நான் போகமாட்டேன்’ என்கிறான். இவனுக்கும் திராணி இல்லை. இருந்தாலும் இவன் சேர்ந்துவிடுவான். பட்டாளத்தில் சேர்ந்து அங்குள்ள சிப்பாய்களைத் தூண்டிவிட்டுவிட முடியும் என்று இவன் நினைக்கிறான். தலையைக்கொண்டு மோதி, சுவரைத் தகர்த்துவிட முடியுமா? அவர்கள் கையிலும் துப்பாக்கி ஏறிவிட்டால், அப்புறம் அவர்களும் மற்ற சிப்பாய்கள் செல்லும் பாதையில்தான் செல்வார்கள். இக்நாத் என்னவோ அதைப் பற்றியே அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறான். அவன் பேச்சில் அர்த்தமே கிடையாது.”

“இல்லையில்லை” என்று மறுத்துக் கூறிக்கொண்டே ரீபினைப் பார்த்தான் இக்நாத். ”இதையெல்லாம் சொல்லவில்லை என்றால், இவனுக்கு அவர்கள் கொடுக்கிற பயிற்சியில் இவனும் அவர்களைப் போலவே சுட்டுத்தள்ளத் தொடங்குவான்.”

“எனக்கு அதில் நம்பிக்கையில்லை” என்று சிந்தித்தவாறே பதிலுரைத்தான் ரீபின். “அவன் பட்டாளத்தில் சேராமல் ஓடிவிடுவதே ரொம்ப நல்லது. ருஷியா ரொம்பப் பெரிய தேசம். ஓடிப்போய்விட்டால் அவர்கள் அவனை எங்கேயென்று கண்டுபிடிப்பார்கள்? ஒரு கள்ளப் பாஸ்போர்ட் வாங்கிவிட்டால், அவன் ஊர் ஊராய்த் திரியலாம்.”

“அப்படிதான் நான் செய்யப்போகிறேன்” என்று தன் காலை ஒரு கழியால் அடித்துக்கொண்டே சொன்னான் இக்நாத், “விரோதமாகப் போவதென்று தீர்மானித்துவிட்டால், அப்புறம் தயக்கமே இருக்கக்கூடாது. நேராகப் போகவேண்டியதுதான்.”

அவர்கள் பேச்சு நின்றது. தேனீக்களும் குளவிகளும் மொய்த்துப் பறந்து, ரீங்காரித்து இரைந்தன. பறவைகள் கூவின; வயல்வெளியிலிருந்து ஒரு பாட்டுக் குரல் மிதந்து வந்தது. ஒரு கணம் கழித்து ரீபின் பேசத் தொடங்கினான்.

“நல்லது. நாங்கள் வேலைக்குப் போக நேரமாகிவிட்டது. உங்களுக்கும் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கத் தோன்றும். இல்லையா? இந்தக் குடிசைப்புறத்தில் சிறு குடில்கள் இருக்கின்றன. யாகவ், நீ போய்க் கொஞ்சம் காய்ந்த சருகுகளைக் கொண்டுவா. சரி, அம்மா, நீ அந்தப் பிரசுரங்களை எடுத்துக் கொடு.”

தாயும் சோபியாவும் தங்கள் மூட்டைகளை அவிழ்க்க ஆரம்பித்தார்கள்.

”அடேயப்பா எவ்வளவு புத்தகங்கள்?” என்று வியந்துகொண்டே அந்தப் புத்தகங்களைக் குனிந்து நோக்கினான் ரீபின். “இந்த மாதிரிக் காரியத்திலே ரொம்பக் காலமாய் ஈடுபட்டிருக்கிறீர்களா?… ம்… சரி. உன் பேரென்ன?’ என்று சோபியாவிடம் திரும்பக் கேட்டான்.

“ஆன்னா இவானவ்னா” என்றாள் அவள்; “பன்னிரண்டு வருஷ காலமாய் வேலை செய்கிறேன். ஆமாம். எதற்காகக் கேட்டீர்கள்?”

”முக்கிய காரணம் ஒன்றுமில்லை; அது சரி, சிறைக்கும் போயிருக்கிறீர்களா?”

“ஆமாம்.”

”பார்த்தாயா?” என்று கண்டிக்கும் குரலில் சொன்னாள் தாய். ”நீ முதலில் எவ்வளவு முரட்டுத்தனமாய் நடந்து கொண்டாய்………”

“என் பேச்சைக் கண்டு வருத்தப்படாதே, அம்மா” என்று பல்லைக் காட்டிச் சொல்லிக்கொண்டே அவன் ஒரு புத்தகக் கட்டை வெளியில் எடுத்தான்; “சீமான்களுக்கும் முஜீக்குகளுக்கும் ஒட்டவே ஒட்டாது. இரண்டு பேரும் எண்ணெய்யும், தண்ணீரும் மாதிரி.”

“நான் ஒன்றும் சீமாட்டியல்ல. நான் ஒரு மனிதப் பிறவி!” என்று சிரித்துக்கொண்டே மறுத்தாள் சோபியா.

“இருக்கலாம்” என்றான் ரீபின். ”நாய்கள்கூட ஒரு காலத்தில் ஓநாய்களாகத்தானிருந்தன என்று சொல்லுகிறார்கள். சரி, நான் போய் இவற்றை ஒளித்து வைத்துவிட்டு வருகிறேன்.”

இக்நாதும் யாகவும் தங்கள் கைகளை நீட்டிக்கொண்டே அவன் பக்கமாக வந்தார்கள்.

”நாங்களும் அதைப் பார்க்கலாமா?” என்றான் இக்நாத்.

“எல்லாம் ஒரே மாதிரிப் புத்தகம்தானா?” என்று சோபியாவிடம் கேட்டான் ரீபின்.

“இல்லை, வேறுவேறு. சில பத்திரிகைகளும் இருக்கின்றன.”

“அப்படியா?”

அந்த மூன்று பேரும் தங்கள் குடிசைக்குள் விரைந்து சென்றார்கள்.

“இந்த முஜீக் ஓர் உருகிக்கொண்டிருக்கிற பேர்வழி!” என்று ரீபினைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே சொன்னாள் தாய்.

”ஆமாம்” என்றாள் சோபியா. “இவனது முகத்தைப் போன்ற வேறொரு முகத்தை நான் பார்த்ததே இல்லை. ஒரு தியாகியின் முகம் போலிருக்கிறது. சரி, நாமும் உள்ளே போகலாம். நான் அவர்களைக் கவனித்துப் பார்க்க விரும்புகிறேன்.”

“அவனது முரட்டுத்தனமான பேச்சால் நீங்கள் புண்பட்டுப் போகாதீர்கள்” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.

சோபியா சிரித்தாள். ”நீலவ்னா, நீங்கள் எவ்வளவு அன்பானவர்!”

அவர்கள் வாசலுக்குச் சென்றதும், இக்நாத் தலையை உயர்த்தி அவர்களை விருட்டெனப் பார்த்தான். தனது சுருண்ட தலைமயிரைக் கலைத்துவிட்டுக் கொண்டே, மடியில் கிடந்த பத்திரிகையைப் பார்க்கத் தொடங்கினான். பின் கூரை முகட்டிலுள்ள ஒரு கீறல் இடைவெளி வழியாக விழும் சூரிய ஒளிக்கு நேராக, ஒரு பத்திரிகையை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்தான். படிக்கும்போது அவனது உதடுகள் மட்டும் அசைந்தன. யாகவ் முழங்காலிட்டுத் தனக்கு முன்னால் குவிந்துகிடக்கும் பிரசுரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தாய் ஒரு மூலைக்குச் சென்று உட்கார்ந்தாள். சோபியா அவளுக்குப் பின்னால் வந்து நின்று, தாயின் தோள் மீது ஒரு கையை வைத்தவாறே அவர்களது நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

”மிகயீல் மாமா, அவர்கள் முஜீக்குகளான நம்மைச் சீண்டிவிடுகிறார்கள்” என்று எங்கும் பார்க்காமல் யாகவ் அமைதியாகச் சொன்னான். பின் அவனை நோக்கிச் சிரித்தான்.

“அவர்கள் நம்மை நேசிக்கிறார்கள். அதனால்தான்” என்றான் ரீபின்.

இக்நாத் ஆழ்ந்த பெருமூச்சு வாங்கிக்கொண்டே தலையை உயர்த்தினான்.

படிக்க:
கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

“இதோ எழுதியிருக்கிறது கேள்: ‘மனிதனாயிருந்த விவசாயி இப்பொழுது மாறிப்போனான். மனித குணங்களையெல்லாம் இழந்துவிட்டான்.’ ஆமாம், அவன் மனிதனாகவே இல்லைதான்!” அவனது தெளிந்த முகத்தில் திடீரென ஒரு கருமை ஓடிப் பரந்தது. அந்த வாக்கியத்தைக் கண்டு அவனது மனம் சிறுத்ததுபோல் தோன்றியது. “அட புத்திசாலிகளா, என் உடம்புக்குள்ளே புகுந்து கொண்டு நீங்கள் ஒரு நாள் பொழுது சுற்றி வாருங்கள். அப்போது தெரியும் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று.”

”சரி, நான் கொஞ்ச நேரம் படுக்கப்போகிறேன்” என்று சோபியாவிடம் கூறினாள் தாய். ”எனக்குக் களைப்பாயிருக்கிறது. அதிலும் இந்த நாற்றம் என்னைக் கிறக்குகிறது. சரி, நீங்கள் என்ன பண்ணப் போகிறீர்கள்?”

”நான் ஓய்வெடுக்க விரும்பவில்லை.”

தாய் ஒரு மூலையில் முடங்கிப் படுத்தாள். உடனே தூங்கத் தொடங்கிவிட்டாள். சோபியா அவள் அருகில் உட்கார்ந்து அந்த மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள், தாயின் தூக்கத்தைக் கலைக்க வரும் தேனீக்களையோ குளவிகளையோ கையால் விரட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அரைக் கண்தூக்கத்தில் சோபியா தனக்குச் செய்யும் சேவையைக் கண்டு உள்ளூர மகிழ்ச்சியுற்றாள் தாய்.

ரீபின் அங்கு வந்து கரகரத்த குரலில் மெதுவாகக் கேட்டான்.

“தூங்கிவிட்டாளா?”

“ஆமாம்.”

அவன் அங்கு சிறிது நேரம் நின்றவாறே தாயின் முகத்தையே பார்த்தான். பிறகு பெருமூச்சு விட்டுவிட்டு மெதுவாகச் சொன்னான்:

“மகன் சென்ற மார்க்கத்தில் தானும் பின்பற்றிச் செல்லும் முதல் தாய் இவள்தான் போலிருக்கிறது!”

“சரி. அவளைத் தொந்தரவு பண்ணக்கூடாது. நாம் வெளியே போகலாம்” என்றாள் சோபியா.

”சரி. நாங்களும் வேலைக்குப் போக வேண்டியதுதான், உங்களோடு பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்றுதான் விருப்பம். ஆனால், நமது பேச்சை மாலையில் வைத்துக் கொள்ளலாம். டேய், பையன்களா! புறப்படுங்களடா !

அவர்கள் மூவரும் சோபியாவை அங்கேயே விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

“நல்லதாய்ப் போயிற்று. இவர்கள் நட்புரிமையோடு பழகிக் கொள்கிறார்கள்” என்று நினைத்தாள் தாய்.

அந்தக் காட்டுப் பிராந்தியத்தின் நெடிமணத்தோடு தார் நாற்றத்தையும் சுவாசித்தபடி அப்படியே தூங்கிவிட்டாள் தாய்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி !

றிவின் தோற்றம், இருப்பு, வளர்ச்சி என்பது பழைய கருத்துக்கும், அதன் போதாமை காரணமாக பிறக்கத் துடிக்கும் புதிய கருத்துக்கும் இடையே இயங்கிக் கொண்டிருக்கும் மூளையின் போராட்டம். ஆனால் அறிவு என்பது அனைத்தையும் அறிந்து கொண்ட பேரமைதி என்று பலர் கருதுகின்றனர். இப்படித்தான் ஞானிகள், நவீன சாமியார்கள், சூப்பர் ஸ்டார்கள் கொண்டாடப் படுகின்றனர்.

வினவுங்கள் !

 

அனைத்தையும் அறிய முயற்சி செய்கிறேன் என்பது வேறு, அனைத்தையும் அறிந்து கொண்டேன் என்பது வேறு. பின்னது மதவாதமாகவும், முன்னது அறிவியலாகவும் இருக்கிறது. எதையும் அறிய முடியாது என்பதன் மறுபக்கமே எல்லாவற்றையும் அறிந்து கொண்டேன் என்று சொல்வது. இந்த உலகை, மனித சமூகத்தை, மனித சிந்தனையை இயக்கும் விதிகளைப் புரிந்து கொண்டு சமூக நலனுக்காக நடைமுறையை நிபந்தனையாகக் கொண்டு வளரும் அறிவு ஒருபோதும் அமைதியாக இருக்காது. அது கொந்தளிப்புடன் கூடிய பேரரறிவுப் பெருங்கடல்.

எல்லாவற்றையும் சந்தேகப்படு – கார்ல் மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை.  சந்தேகங்கள் கேள்விகளின் முதிர்ந்த வடிவம். கேள்விகள் முதிர்ந்த அறிவின் துவக்கப் பயணம்.

என்சைக்ளோப்பீடியா போன்றதொரு தகவல் பதிவுகளை மனனம் செய்வதெல்லாம் அறிவாக முடியுமா? பிரபல இதழ்களில் என்சைக்ளோப்பீடியாவின் தகவல்களே கேள்வி பதில்களாக வருகின்றன. அதை விட்டால் கடிகள், சினிமா நடிகர் ஒப்பீடு, ஏட்டிக்குப் போட்டி முதலானவை இருக்கும். முத்தத்தின் வரலாறு, உலகிலேயே இனிப்பான மாம்பழம், உள்ளாடைகள் வளர்ந்த வரலாறு…..இவையெல்லாம் இந்த கேள்வி பதில் நாயகர்கள் அதிகம் அலசும் வழமையான விசயங்கள்.

என்சைக்கிளோபீடியா வழங்கும் சுஜாதா பதில்கள்

முன்னர் மதன், சுஜாதா போன்றோர் அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சார வசதிகளையே அறிவியல் என்ற பெயரில் கேள்வி பதில்களாக வெளியிட்டனர். மறுபும் சமூக பயன்பாடு குறித்த விமரிசனம் இல்லாமல் தூய அறிவியலை மட்டும் மர்மம் நிறைந்த பாடு பொருளாக அறிமுகம் செய்வது சுஜாதா பாணி. சமகால அரசியலில் நீர்த்துப் போன நியாயங்களையும், கிளுகிளுப்பூட்டும் நடிகைகளின் சினிமா கிசுகிசுக்களை ஒப்பிடுவது குமுதம் அரசு கேள்வி பதிலின் இலக்கணம்.

பார்ப்பனிய மேலாதிக்கத்தையே நியாயமென பதிலளிப்பார் மறைந்து போன துக்ளக் சோ. இன்றைய குருமூர்த்தியோ அத்தோடு பாஜக-வின் ஊழல் மோசடிகளையும், ஒடுக்குமுறைகளுயும் வெளிப்படையாக ஆதரிக்கும் புரோக்கர் பதில்களை அளிக்கிறார்.

கேள்விகளின் பயன்பாடு எவை? புரிதலை வழங்குகிறது. புரிதல் மீது சவால் விடுகிறது. புரிதலை ஆதரிக்கிறது. அறிவை வளர்க்கிறது. பங்கேற்பதை ஊக்குவிக்கிறது. பொது அரங்கு உரையாடலில் நம்பிக்கையை தருகிறது.

சமகால வாழ்வின் இடர்களை புரிந்து கொள்ளவோ, அதை மாற்றியமைக்கவோ வேண்டுமென்றால் யதார்த்தத்தை கேள்வி கேட்பதிலிருந்தே துவங்க முடியும். புத்தர், ஏசுநாதர், நபிகள் நாயகம் போன்றோரெல்லாம் தமது சமகால சமூக அமைப்பை அந்தந்தக்காலம் விதித்திருக்கும் வரம்புகளுக்குட்பட்டு கேள்வி கேட்டவர்கள். மட்டுமல்ல அதற்கான விடையையும் தேடியவர்கள். பின்னர் அவையே கேள்விகளோ, சந்தேகமோ ஏற்படக்கூடாத மத நிறுவனங்களாக நிலை பெற்றன.

வர்க்க சுரண்டலை கேள்வி கேட்க முடியாத அடிமைகள், மறுமையில் காத்திருக்கும் இன்பத்திற்காக, இம்மையின் துன்பத்தை கேள்விகளின்றி ஏற்றுக் கொள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்டார்கள். அந்த பாத்திரத்தை செம்மையாக நிறைவேற்றிய மதங்கள், ஆண்டைகளுக்கு தேவைப்பட்டன.

ஆன்மீக வழிகாட்டிகள் மோன (சவ) நிலையையே அறிவின் உச்சநிலை என்கின்றனர்.

அந்த வரலாறு இன்றும் மாறிவிடவில்லை. நவீன கார்ப்பரேட் சாமியார்களோ புரிந்து கொள்ள வேண்டிய சமூக இயக்கத்தின் ஆன்மாவை மறைத்து விட்டு, நல்லது – கெட்டது, ஒழுக்கம் – சீர்கேடு என்று அகநிலையை, கற்பனையில் மேம்படுத்தும் இருமை முரண்களாக முன்வைக்கின்றனர். ஆனால் சமூக உலைக்களத்தில் புடம் போடப்படாமல் எந்த மனிதனும் தனது வாழ்க்கைப் பிரச்சினையையும், அதன் தாக்கத்தால் நோயுற்றிருக்கும் சிந்தனையையும் மாற்றிவிட முடியாது.

ட்ரம்ப், மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி, போன்றோர் குழுமியிருக்கும் போது ஊடக அறிவாளிகள் பவ்யமாக, பணிவுடன், பிரச்சினைகளற்ற முறையில் கேள்விகள் கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். உண்மையான கேள்விகளை தணிக்கை செய்து கேட்பதற்குத்தான் நிருபர்கள் பழக்கப்பட்டிருக்கின்றனர். மீறி உண்மையையோ, சொல்லையோ, செருப்பையோ வீசினால் தண்டனை நிச்சயம். எடப்பாடி அரசோ தனக்குப் பிடிக்காத செய்தியை கூறினாலே அரசு கேபிள் இணைப்பிலிருந்து தொடர்புடைய தொலைக்காட்சியை துண்டித்து மிரட்டுகிறது.

ஒரு பிரச்சினையைத் தீர்க்க என்னிடம் ஒரு மணிநேரம் மட்டும் தரப்பட்டால், அதில் 55 நிமிடங்கள் பொருத்தமான கேள்விகளை அறிய செலவழிப்பேன். ஒரு பொருத்தமான கேள்வியை கண்டுபிடித்து விட்டால் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஐந்து நிமிடம் போதும்.  – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ஆம். கேள்விகளே இல்லாத, சந்தேகங்களே தோன்றாத, அறிவின் தேடலோ, சமூக அக்கறையின் வெளிப்பாடோ அற்ற ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த உலகின் அநீதிகளை எதிர்த்துப் போராடுவோர் முதலில் மக்களை கேள்விகள் கேட்க வைப்பதற்கு வற்புறுத்த வேண்டும்.

வினவில் கேள்வி பதில் பகுதியை மீண்டும் ஆரம்பித்திருக்கிறோம். கேளுங்கள். இப்பகுதி ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டாலும் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்திருக்கிறோம். தற்போது சுருக்கமான முறையில் அதிக பதில்கள் அளிக்க முயல்கிறோம்.

அரசியல், சமூகம், பண்பாடு, நடப்பு நிகழ்வுகள், தத்துவம், சித்தாந்தம், மதம், சாதி, காதல், என்று எது தொடர்பாகவும் அவை இருக்கலாம். எங்களால் முடிந்த அளவு, எவை முக்கியமென்று கருதுகின்ற அளவு பதில் அளிக்கிறோம். அதே நேரம் எல்லாக் கேள்விகளுக்குமான பதில்கள் எங்களிடமில்லை. ஆனால் ஒரு கேள்வியை வெறும் கேள்வி என்ற நிலையிலிருந்து மாற்றிவிட்டு, அந்த கேள்வியின் வரலாற்றுக்காலத்தை புரிந்து கொள்ளும்போது நமக்கு தெரியமால் இருக்கும் விடையை கண்டுபிடிக்கும் வழியை அறிந்து கொள்வோம்.

கேள்விகளை இந்தப்பக்கத்தில் மட்டும் அளியுங்கள், பின்னூட்டங்களில் தெரிவிக்க வேண்டாம். கேள்விகள் மிக மிகப் பொதுவாக இல்லாமல் மிக மிகக் குறிப்பானதாக இருந்தால் கேள்விகளைப் புரிந்து கொள்வதற்கு உதவும்.

கேளுங்கள், காத்திருக்கிறோம்!

நட்புடன்
வினவு

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !

பெருநகர சென்னை மாநகராட்சி குப்பைக் கொட்டும் திடக்கழிவு மேலாண்மைத்துறை அலுவலகம். அதன் முன்பு நூற்றுக்கணக்கான கழிவுநீர் அகற்றும் ஊர்திகள் நிறுத்தப்பட்டு, அதன் உரிமையாளர்களும் – ஓட்டுநர்களும் போராடி வருகின்றனர்.

கடந்த 3-ம் தேதி தொடங்கியது காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம். இது குறித்து போராட்டத்தில் இருந்த ஊர்தி  உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூறியது…

“துரைப்பாக்கம் – பெருங்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பதிவு செய்திருக்கக்கூடிய வண்டிங்க மொத்தம் 375. இந்த வண்டிங்க அனைத்தும்  திருவான்மியூர் – கேளம்பாக்கம், கானத்தூர் – ஈ.சி.ஆர் சாலை, தாம்பரம், குரோம்பேட்டை  செம்பாக்கம் – துரைப்பாக்கம் என்று இந்த சுற்றுவட்டாரத்தில இருக்க அனைத்து வீடுகள், கடைகள், ஓட்டல், திருமண மண்டபம், தங்கும் விடுதி, என எல்லா இடத்திலும் இருக்கக்கூடிய கழிவுநீரை கொண்டு வந்து இந்த சுத்திகரிப்பு நிலையத்துல கொட்டுவோம். இதுல என்ன பிரச்சனைன்னா, 30.11.2018 முன்னாடி வரைக்கும் நாங்க கொண்டு வரும் லோடுக்கு 100 ரூபாய் வாங்கினாங்க. இப்போ 250 ரூபாயா உயர்த்தி இருக்காங்க.

ஒரு நாளைக்கு 5 லோடு ஏத்திகிட்டு வருவோம். மேடவாக்கத்துல இருந்து கொண்டு வர 1200 ரூபா. பள்ளிக்கரணை – 1000 ரூபா. குரோம்பேட்டை, தாம்பரம் 1300, துரைப்பாக்கம் 550, சோழிங்கநல்லூர் 650 என்று தூரத்துக்கு ஏத்தமாதிரி கட்டணம் வாங்குறோம். ஈ.சி.ஆர். லைன்ல இருந்து வர வண்டிக்கு அதிகமா வாங்குறோம். காரணம் டோல்கேட்ல தினமும் 350 ரூபா கட்ட வேண்டி இருக்கு. லோக்கல்ல ஓடுற வண்டிக்கு டோல்கேட் பிரச்சனை இல்லை.

இந்த ஐந்து நடைக்கு காலைல 5 மணிக்கு வண்டிய எடுப்போம். இன்னும் சொல்லப்போனா 3 மணிக்கும் எடுப்போம். அது போற இடத்த பொறுத்து. சந்து பொந்தா இருக்கும். டிராபிக் இல்லாத இடமா எல்லாத்தையும் கணக்கு பண்ணுவோம். அதுக்கு ஏத்த நேரமா வண்டிய எடுப்போம். எதுவா இருந்தாலும் காலைல 8 மணிக்குள்ள வண்டிய கழிவுநீர் கொட்ற எடத்துக்கு கொண்டு வந்திடனும். இல்லனா டிராபிக், செம பிரச்சனையாயிடும்.

அதுக்கப்புறம் 11 மணி வரைக்கும் சிட்டிகுள்ள வண்டி ஓட்ட கூடாது. அப்படி மீறி வந்துட்டா போலிஸ்காரங்க புடிச்சி 1500 ரூபா ஃபைன் போட்ருவாங்க. அப்புறம் பதினோரு மணிக்கு வண்டிய எடுப்போம். லோக்கல்ல ஓடுற வண்டியும் அப்பதான் எடுப்பாங்க. அதிலருந்து, சாயங்காலம் 4 மணி வரைக்கும் வண்டி ஓடிகிட்டே இருக்கும். நாலு மணியிலருந்து எட்டு மணி வரைக்கும் வண்டி ஓடக்கூடாது. அதுக்காவே மதிய சாப்பாட சாப்பிடாம தவிர்த்துட்டு வண்டி ஓட்டுவோம். நைட்டு எட்டு மணியிலருந்து பதினோரு மணி வரைக்கும் ஓட்டிட்டு தூங்கவே ஒன்னு ஆகிடும். இதனால தூக்கம் சுத்தமா இருக்காது. அதனால் இந்த டைமிங் முறைய ரத்து பண்ணனும். அதுக்குத்தான் இந்த போராட்டம்.

ஒரு நாளைக்கு எப்படி பார்த்தாலும் 5  நடை ஓட்டினா தோராயமா 5000 ரூபா கிடைக்குது. அதுபோதாதா?

இப்படித்தான் எல்லோரும் நெனக்கிறாங்க. இந்த செப்டிக் டேங்க் உறிஞ்சிர மோட்டார் ஆயில் மோட்டார் அதுக்கு ஒரு நாளைக்கு 700 ரூபா டீசல் போட்டாகனும்.  டோல்கேட் 350, டிரைவர் சம்பளம் 900, கிளினருக்கு 700, கழிவு கொட்டுற இடத்துல 500 ரூபா. ஆக மொத்தம் 3150 ரூபா செலவாகிடும். இடையில போலிசு பிடிச்சா ஃபைன் தனி. இது லாங் வண்டி ஓட்டுறவங்களுக்கு.

மைதீன் அப்துல் காதர், ஓட்டுநர்.

லோக்கல் வண்டி ஓட்டுறவங்களுக்கு மினிமம் 600 ரூபா. ஐந்து நடை 3000 ரூபா. டோல்கேட் தவிர்த்து மற்ற அனைத்து செலவும் ஆகும்.. டிரைவர் – கிளினர் கூலி கொஞ்சம் குறையும்.  கணக்கு போட்டு பாருங்க. இந்த நெலமையில ஒரு லோடுக்கு 250 ரூபா உயர்த்தியிருக்காங்க. அதைக் கட்டினா என்ன மிஞ்சும் சொல்லுங்க?

இந்த வண்டிக்கு அடிக்கடி கிளட்ச் பிளேட் போயிடும். அதுக்கு செலவு 5000. செல்ஃப் மோட்டார் போயிடும் 4500 ரூபா. அடிக்கடி ஆன் பண்ணி ஆஃப் பண்றதால பேட்டரியும் சீக்கிரம் வீணாகிடும். அதுக்கு 6000 ரூபா. ரொம்ப முக்கியமா கட்டு பிளேட். இந்த வண்டிக்கு அதுதான் முக்கியம். அது போயிடுச்சினா சரி பார்க்க 10,000 செலவு ஆகும். இதை எல்லாம் எப்படி ஈடு கட்ட முடியும்?

ஆயில் மோட்டார், பம்ப் இத பராமரிப்பு பண்ணவே வருஷத்துக்கு 12,000 ஆகுங்க. அதுபோக வழக்கமா செய்யிற செலவு எஃப்.சி. 5000; இன்சூரன்ஸ் 39,000;  ஆர்.டி.ஓ ஃபீஸ் 2500; எலக்ட்ரிக்கல் வேலை 3000; டாக்ஸ் 14,000; பெயிண்ட் 15,000.  இந்த செலவெல்லாம் போக கையில ஒரு காசும் மிஞ்சாது. இத்தனைக்கும் எங்க புள்ளைங்கள பெரும்பாலும் கவர்மெண்ட் ஸ்கூல்லதான் படிக்க வக்கிறோம். இதுதான் கழிவுநீர் வண்டியோட இன்னைக்கு இருக்க நிலை’’ என்கிறார்கள் உரிமையாளர்கள்.

மணிகண்டன், கிளீனர்.

இந்த கழிவுநீர் ஊர்தியின் ஓட்டுநர்கள், கிளீனர்கள் கூறும்போது, “நாங்க எல்லாரும் படிக்காதவங்க. பத்து வருஷத்துக்கு மேல இந்த தொழில்ல இருக்கோம். இந்த தொழில்ல இருக்கவங்க யாரும் பெரும்பாலும் இந்த ஊர் கிடையாது. எல்லோரும் வெளியூர்காரங்கதான்.  எங்கள்ல ஒரு சிலருதான் குடும்பத்தோட இங்க இருக்காங்க. மத்தவங்க எல்லாம் சொந்த ஊர்லயே பொண்டாட்டி புள்ளங்கள விட்டுட்டு இங்க வந்து இந்த வேலை செய்யிறோம்.

நாங்க இந்த  வேலை செய்யிறோம்னு மனைவி, மக்களுக்குத் தெரியும். மத்த யாருக்கும் தெரியாது. வெளில சொல்லக்கூடிய தொழிலா செய்யிறோம். அதனால்தான் வீடுகூட வாடகைக்கு எடுக்க முடியல. யாரும் குடுக்க மாட்டாங்க.

நாங்க எல்லோரும் வண்டியிலயே படுத்துக்குவோம். வண்டிதான் வீடு. இன்னொரு பெரிய பிரச்சினை இந்த வண்டிய குடியிருப்புல நிறுத்த முடியாது. கொஞ்சம் ஒதுக்கு புறமாதான் நிறுத்தனும். அதனால் பொருட்கள் திருடு போயிடுது. வாங்குற சம்பளத்தையும் வண்டியிலதான் வச்சிப்போம். அதையும் பத்திரமா பாத்துக்கனும். சிலர் மட்டும் தொழில மாத்தி சொல்லி ரூம் எடுத்து இரண்டு, மூணு பேரா தங்கி இருக்காங்க.

நாங்க ஒரு வீட்டுக்கு செப்டிக் டேங்க் கிளீன் போனோம்னா அந்த வீட்டுக்காரங்களோட நடவடிக்கையே எங்கள அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கும். முதல்ல மூஞ்சில கர்சிப்ப கட்டிகிட்டு, கதவு, ஜன்னல் எல்லாத்தையும் சாத்திக்கிட்டு உள்ள போயிடுவாங்க. எல்லாம் முடிஞ்ச பிறகு வந்து எட்டிப் பார்த்துட்டு, ம்… சரி சரி.. கெளம்புங்கன்னு நம்மள தொரத்துறதுலயே குறியா இருப்பாங்க.

படிக்க:
பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா? மறுக்கிறதா?
சாதீ – முகிலனின் ஓவியங்கள் !

ஒருசிலர் இன்னா பண்ணுவாங்கன்னா, குழாய்ல இருக்க தண்ணிய புடிச்சி அப்படியே டேங்கை எல்லாம் கிளீன் பண்ணுங்கன்னு உள்ள இருந்தே சொல்லுவாங்க. அதெல்லாம் செய்ய முடியாதுன்னு சொன்னா உடனே ஓனர்கிட்ட போட்டு கொடுத்துவாங்க. இன்னா ஆள் வச்சிருக்க, ஒழுங்காவே வேலை செய்யிரதில்லன்னு சொல்லுவாங்க. ஓனரு இன்னா பண்ணுவாரு. அடுத்த முறை ஆர்டர் குடுக்கமாட்டங்கன்னு சரிங்க கேக்குறேன்னு சொல்லிட்டு அமைதியா வந்துடுவாரு.

டேங்கை கிளீன் பண்ணிட்டு டீ செலவு கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தோம்னா. “எதுக்கு நிக்குற, அதான் மொத்தமா வாங்கனிங்கல்ல, உங்க ஓனரு சம்பளம் தர்லயான்னு” மூஞ்சில அடிச்ச மாதிரி கேட்பாங்க.

நாங்க என்ன எங்களுக்காகவா இந்த வேலை செய்யிறோம். உங்க சேஃப்டிக்கு உங்க ‘பீ’ய எங்க கையாள அள்ளுறோம். நாங்க வர்லன்னா உங்க நெலம என்னாகும்னு கொஞ்சமாவது நெனச்சி பாருங்க. நாங்க என்ன தினமுமா உங்ககிட்ட வந்து நிக்குறோம். மூனு மாசத்துக்கு ஒரு முற செலவு பண்றீங்க. அதுக்கு ஒரு பத்து ரூபா கொடுத்து டீ சாப்பிடுங்கன்னு சொல்ல முடியாதா?

கேஸ் சிலிண்டர் எடுத்துட்டு போறவங்களுக்குக் கூட 10 ரூபா தராங்க. ஆனா எங்கள மூஞ்சால அடிச்ச மாதிரி ஒதுக்குறாங்க.  இதெல்லாம்கூட பரவாயில்லங்க.

தண்ணி கொடுக்க மாட்டாங்க. எங்களுக்கு தண்ணி கேட்கவே அவமானமா இருக்கும். நாங்க போற 99% பேர் வீட்டுல எங்களுக்கு கொடுக்கிறது குழாய் தண்ணிதான். கேன் தண்ணி 1% வீட்ல இருந்துதான் வரும்.  மனசாட்சியே இருக்காது. நம்ம கண்ணு முன்னாடியே குழாய் தண்ணிய புடிச்சி கொடுப்பாங்க. அதுவும் எதுல? எதாவது ஜெக்குல. அப்படி இல்லனா வாட்டர் கேன்ல. அந்த கேனைக் கூட திரும்ப வாங்க மாட்டாங்க.

இதனால நாங்க, எங்க வாட்டர் கேன் கொடுத்து தண்ணி கொடுங்கன்னு கேட்டா, அந்தக் கேனை கையால வாங்க மாட்டாங்க, நாமளே புடிச்சிருக்கனும். அவங்க தண்ணிய  கேன்ல படாம மேல இருந்து ஊத்துவாங்க. இதையெல்லாம் பார்த்து பார்த்து எங்களுக்கே சீ…ன்னு போயிடுச்சி. இப்ப எல்லாம் எந்த வீட்டுக்கு போனாலும் தண்ணியே கேக்குறதில்ல.  ரெண்டு ரூபா கொடுத்து வாட்டர் பாக்கெட் வாங்கி குடிச்சிடுவோம்.

படிக்க:
காந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் நாடகம்
சமபந்தி அரசியல் – நூல் அறிமுகம் : எச்சிலைக்குள்ளும் இருக்குதடா சாதி

அப்பார்ட்மெண்ட்ல குடியிருக்கவங்க. ஐ.டி. கம்பனியில வேல செய்யிரவங்க, இவங்கதான் ரொம்ப மோசமா நடந்துப்பாங்க. அந்த வீட்டுல இருக்க வாட்ச்மேன் கூட மதிக்க மாட்டாரு.

சும்மா சொல்லக்கூடாது, ஒரு சில வீட்டுக்காரங்க இருக்காங்க. அவங்க சில்வர் தம்ளர்ல டீ போட்டு கொடுப்பாங்க. அதை வாங்குறதுக்கு எங்களுக்குத்தான் கொஞ்சம் கூச்சமா இருக்கும். ஆனா அவங்க, வற்புறுத்தி கொடுப்பாங்க. அவங்க எல்லாம்  யாருன்னு பார்த்திங்ன்னா. நம்மள மாதிரி கஷ்டபட்ட முன்னேறி வந்தவங்களா இருப்பாங்க.

அப்புறம் குழந்தைங்களுக்கு வாங்கின சாக்லேட், மிக்சர் கொடுப்பாங்க. கிருஸ்துமஸ், தீபாவளிக்கு 100 ரூபா கொடுப்பாங்க.  பொதுவா நாங்க இதெல்லாம் யார்கிட்டயும் எதிர்பாக்குறதில்ல சார்.  எங்களை ஒரு மனுசனா மதிச்சாலே போதும். வேற எதுவும் தர தேவல!

ஒரு தெருவுக்குள்ள போறோம்னா பத்து பைக்கு ரோட்டுலயே நிறுத்தி வச்சிருப்பாங்க. அந்த வண்டிய எடுக்க மாட்டாங்க. நாம போயிட்டு தள்ளி வச்சா, உள்ளயிருந்து ஓடியாந்து, “நீ… எதுக்குடா கைய வச்ச”ன்னு அடிப்பானுங்க. எங்க கை பட்ட இடத்துல தண்ணிய ஊத்தி கழுவானுங்க. அதே மாதிரி ஒரு சில வீட்டுல நாங்க நின்ன இடத்துல தடம் தெரியாம தண்ணி ஊத்தி கழுவாங்க.  அப்ப எங்களுக்கு ரொம்ப அசிங்கமா இருக்கும். அப்படியே பார்த்துட்டே வந்துடுவோம். இது வீட்டுல நடக்குறது.

இப்ப ரோட்டுக்கு வருவோம். எங்க வண்டிய பார்த்தாலே சைக்கிள்ல போறவன்கூட வேகமாதான் போறான். உள்ள இருக்க நாங்களும் மனுசங்கதான்னு நெனக்கவே மாட்றாங்க. அதை எல்லாம் பாக்கும்போது எங்களால அதை தாங்கவே முடியாது. அதனாலயே வண்டிய வேகமா ஓட்டுவோம். அப்பதான் போலீஸ்காரன் புடிப்பான். இத சொல்லவே வேணாம் சார். சுத்த…..மா மதிக்க மாட்டான்.  அவங்க எங்கள கூப்பிடுறதே.. இப்படித்தான் இருக்கும்.. டே….ங்கோத்தா…. அடிங்…..ங்கொம்மாள……. பாடு…… இப்படித்தான் வாயில வருமே…. டே….நாயே… 100 ரூபா கொடுத்துட்டு போடா….ன்னு கேட்பாங்க. எதுவும் பேச முடியாது. இதெல்லாம் யாரு தட்டிக் கேக்குறது?

இதனாலதான் சார், சொந்தகாரன், பந்தகாரன்னு.. எங்க – யார பாக்க போனாலும், என்ன வேலை செய்யிரன்னு கேட்டா யாரும் உண்மையான வேலைய சொல்ல மாட்டாங்க. டிராவல்ஸ் டிரைவர், பஸ் டிரைவர், ஸ்கூல் வண்டி ஓட்டுறோம்னு சொல்லிடுவாங்க. மத்த மனுசங்கள போல எங்களால இயல்பா இருக்க முடியாது.

இந்த வேலையால வரக்கூடிய நோயப்பத்தி சொல்லனுமே, சம்பு ஓப்பன் பண்ணினதும் ஒரு கேஸ் வரும். அது உள்ள போனதும் மாரை அடைக்கிற மாதிரி இருக்கும். இது தொடர்ச்சியா இருக்கதால அட்டாக் வருது. மூச்சித் திணறல், சொரி சிரங்கு, அடிக்கடி வரும். எல்லார் கையில கால்லயும் பாக்கலாம். சிரங்கு வந்துச்சினா சீக்கிரம் ஆறாது. ஸ்கின் பிராபளம் தான் அதிகம். அதே மாதிரி கொசுக்கடி. அதனால வர காய்ய்ச்சல்,  இது எல்லாம் இந்த வேலை செய்யக்கூடியவங்களை பாதிக்கும். முகமே மாறிடும். அந்தளவுக்கு பாதிப்பு இருக்கு.

அப்புறம் ஏன் இந்த வேலைய செய்யனும்?

இந்த வேலை செஞ்சிட்டு வேற வேலைக்கு போக முடியாது. அப்படி போனா இதுக்கு  முன்னாடி எங்க வேலை பார்த்தன்னு கேக்குறாங்க. செப்டிக் டேங்க் வண்டி ஓட்டினேன்னு சொன்னா. மூஞ்சத் திருப்பிக்குவாங்க. யோசிச்சி சொல்றேன்னு சொல்லி அனுப்பிடுவாங்க. அதனால இதுலயே கெடக்க வேண்டியதா இருக்கு.

உங்க போராட்டத்தால எதாவது முன்னேற்றம் இருக்கா?

ஒன்னும் கிடையாது. இதுவரைக்கும் யாரும் வந்து பேசல.  இங்க இருக்க அதிகாரிகிட்ட கேட்டா இன்னா சொல்றாங்ன்னா, “நீங்க கட்டணத்தை உயர்த்திக்கோங்கன்னு” சொல்றாங்க. அது எப்படி சார் முடியும்…? இப்ப ஐ.டி கம்பனி, கவர்மெண்ட்ல வேலை செய்யிரவங்கள கேட்டா கொடுப்பாங்க. ஆனா நம்ம மாதிரி சாதாரண ஜனங்க எப்படி கொடுப்பாங்க? எல்லோரும் 15,000 சம்பளம் வாங்குறவங்க. வீடு வாடகை, கரண்ட் பில்னு எல்லா செலவும் இருக்கும்போது நாங்களும் உயர்த்தினோம்னா ஜனங்க கஷ்டப்படுவாங்க, சார்.

சரி, இப்ப என்ன நெலமை?

எல்லார் வீட்ல இருந்தும் கால் பண்ணிட்டே இருக்காங்க. யாரும் போனை எடுக்கல, ஓ.எம்.ஆர் முழுக்க ஒரே ஓட்டல்தான். அங்க நிறைய வேலை இருக்கும். இப்ப எங்க போராட்டத்தால பாதிக்கப்பட்டிருக்கு. கிராமம்னா வெளில – கொல்லக்கி போகலாம். இவ்ளோ பெரிய நகரத்துல ஒரு ஆப்பிள் வெட்டுறதா இருந்தா கூட நீங்க தண்ணிய பயன்படுத்தனும்.

படிக்க:
வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை
வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!

எல்லாத்துக்கும் தண்ணி. அந்த தண்ணி எல்லாம் செப்டிக் டேங்குக்குதான் போகும். அது நிரம்பி பக்கத்துக்கு வீட்டுக்கு போகும்போது சண்டை வருதுன்னு சொல்லி கால் பண்ணி கூட்டிட்டே இருக்காங்க. இப்ப நாங்க இல்லாத குறைய உணர்ந்திருப்பாங்க.

அரசாங்கம் வீட்டுக்கு வீடு டிரைனேஜ் கனக்சன் கொடுத்திருக்கனும். அதுவும் கொடுக்கல. இனிமே கொடுக்கனும்னா ஐந்து வருஷத்துக்கு மேல ஆகும். பல கோடி செலவாகும். அதை இந்த கவர்ன்மெண்ட் செய்யாது. வீட்டுக்காரங்க எங்ககிட்ட பேசுறதை விட அரசாங்கத்துகிட்ட பேசினாதான் முடிவு கிடைக்கும்! அதுவரைக்கும் போராட்டம் நடக்கும்” என்கிறார்கள் உறுதியாக!

– முகில்

விவசாயிகளின் போராட்டமும் அண்டப் புளுகு அர்னாப் வகை ஊடகங்களின் கூவலும் !

இந்திய விவசாயிகளின் தலைவிதியை விட பூசாரிகளுக்கான ஊதியம் அதிக செய்தி மதிப்பு கொண்டது. ஏன்?

டந்த நவம்பர் 29-ம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தத்தம் குடும்பங்களுடன் தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களை நோக்கி விரைந்தனர். இந்திய கிராமங்களில் வாழும் ஒட்டுமொத்த மக்களில் 70 விழுக்காடு அல்லது 90 கோடி பேர்களின் பிரதிநிதிகள் அவர்கள். சாதாரண நேரங்களில் ஊடகங்களுக்கு இதுவே அன்றைய முக்கியச் செய்தியாக இருந்திருக்கும்.

ஆனால் இன்றைய காலகட்டம் சாதாரண நேரங்கள் அல்ல. காங்கிரசு கட்சியின் தெலுங்கானா தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி விவாதிக்க ‘தேசியவாதிகளா’க  அழைக்கப்படுபவர்கள் மற்றும் இந்திய அரசின் ஆதரவாளர்களை கொண்டு  கடந்த நவம்பர் 29-ம் தேதி இந்திய ஊடகங்கள் பல மணிநேரம் செலவிட்டன. ரோகினி சிங் (தி வயர்) என்ற பத்திரிக்கையாளர் இது பற்றிய ஒரு தொகுப்பை டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

ஆயிரக்கணக்கான விவசாயிகளின் போராட்டத்தைவிட ‘நாட்டிற்கு முக்கியமான விசயம்’ இதுதான்.

காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி, கோவிலில் வழிபடுவது மற்றும் குல்லா அணிந்திருப்பது போன்ற புகைப்படங்களைக் காட்டிக்கொண்டே அவரை இராஜஸ்தானில் ஒரு பிராமணன், தெலுங்கானாவில் ஒரு முஸ்லிம் என்று ஜீ நியூஸ் அலறிக் கொண்டிருந்தது. முசுலீம்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் சிறப்பு கல்வி, இமாம்களுக்கு சிறப்பு ஊதியம், முசுலீம்களுக்கு தனி மருத்துவமனைகள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களுக்கு இலவச மின்சாரம் என்று சிறுபான்மையினருக்கு காங்கிரசு அளித்ததாக கூறப்படும் தேர்தல் வாக்குறுதிகளை மையமாக வைத்து ஏனைய மோடி ஆதரவு ஊடகங்கள் சதிராடி கொண்டிருந்தன.

காங்கிரசு இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் கொடுத்ததா?

உங்களுக்கு உகப்பில்லாத வார்த்தைகளை நீக்கிவிட்டால் காங்கிரசு கூறியது உண்மைதான். போலி செய்திகளை அம்பலப்படுத்தும் ஆல்ட்நியூஸின் படி இலவச மின்சாரம் கோவில்களுக்கும் கொடுப்பதாயும் அரசு அலுவலர் போல கோவில் பூசாரிகளுக்கும் சம்பளம் கொடுக்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதே போல இமாம்களுக்கும் பாதிரிகளுக்கும் ஊக்கத்தொகை கொடுப்பதாகவும் காங்கிரசின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. “சிறுபான்மையினர் நிறைந்துள்ள இடங்கள்” என்ற சொற்களை எடுத்துவிட்டு “முசுலீம்களுக்கு-மட்டுமான மருத்துவமனைகள்” என்று சொற்களை திரித்தால் அப்படியான வாக்குறுதியை காங்கிரசு கொடுத்ததாக கூற முடியும்தான்.

இனி  ஊடகங்கள் கண்காணிப்பாளராக இருக்காதா ?

தொலைக்காட்சி மற்றும் இணையம் இல்லாத காலந்தொட்டே நிகழ்ச்சி நிரலை தீர்மானிப்பதுதான் ஊடகங்களின் பணியாக இருந்து வந்துள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலை தீர்மானிப்பதில் அரிதாக மாற்றம் நிகழ்ந்தாலும் சமூக ஊடகங்களுடன் சேர்ந்து இன்னும் அந்த போக்கு அதிகமாகித்தான் இருக்கிறது. பெரும்பாலான போலி செய்தி மற்றும் தேசியவாத ஊடக அமைப்புகளில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றால் வெளிப்படையான போலி செய்தி இல்லையென்றாலும் திரிக்கப்பட்ட உண்மையை நிகழ்ச்சி நிரலுக்கு அவை கொண்டு வருகின்றன. இந்த திரிக்கப்பட்ட உண்மைகள்  பக்க சார்பை உறுதிப்படுத்துவதாகவும், பக்கசார்பை வலுவாக்குவதற்கேற்ப தகவல்களை விளக்குவதற்கும் வழங்குவதற்கும் சேவை புரிகின்றன.

இது முற்றிலும் புதிய குற்றச்சாட்டு அல்ல. முதல் பத்திரிகை ஆணைக்குழு, சில ஊடகங்கள் தங்கள் கூட்டாளிகளின் பொருளாதார நலன்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் பாகுபாடு காட்டியதாக கடந்த 1955-ம் ஆண்டு குறிப்பிட்டது. ஒரு குறிப்பிட்ட அளவு அதிகாரத்தில் இருப்பவர்களை பற்றி புலனாய்வு செய்ய தயக்கம் காட்டியதாகவும், அவர்களது விருப்பங்கள், பொருளாதார நலன்கள் மற்றும் இன்ன பிறவற்றுக்கு எதிராக இருந்த உண்மைகளை நசுக்கும் போக்கை ஊடகங்கள் கொண்டது பற்றியும் அது குறிப்பிட்டது.

1950-களில் பெரும்பாலான செய்தித் தாள்களின் உரிமையாளர்களாக சணல் பெரு முதலாளிகள் இருந்ததால் அவை சணல் பத்திரிகைகள் என்றே அழைக்கப்பட்டன. எனவே இதற்கு மாற்றாக பெருமுதலாளிகளின் பொருளாதார நலன்களில் இருந்து ஊடகங்களை பிரித்து கண்காணிக்கவும், கண்டிக்கவுமான அமைப்பாக பத்திரிகை கவுன்சில் ஒன்று உருவாக்கப்பட இருந்தது. முதல் பத்திரிகை ஆணைக்குழுவும் நெருக்கடி நிலைக்கு ஓராண்டிற்கு பிறகு 1978-ம் ஆண்டின் இரண்டாவது பத்திரிகை ஆணைக்குழுவும் இதை முன்மொழிந்தன. பத்திரிகை கவுன்சிலும் உருவாக்கப்பட்டது.

ஆனால் நவீன இந்தியாவில் ஊடக தர்மத்தை இது உயர்த்தி பிடிக்கும் என்று எதிர்பார்ப்பது நிலவுக்கு சுற்றுலா செல்ல கேட்பது போல இருக்கிறது.  பொருளாதார நலன்களில் இருந்து ஊடகங்களை பிரிப்பது தற்போது கற்பனையாகவே இருக்கிறது. இலாப நோக்கமற்ற ஊடகங்களும் இருக்கத்தான் (Disclaimer: நானும் அப்படியான பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியர்) செய்கின்றன. ஆனால் அவர்களிடம் சாத்தியமான மற்றும் நிலையான வணிக வடிவமைப்பு எதுவும் இல்லை.

படிக்க:
♦ ஊடகங்கள் – பத்திரிகையாளர்கள் : கருத்துப் படங்கள் 
♦ மோடிக்காக தூதரின் வாயசைவுக்கு டப்பிங் கொடுக்கும் ஊடகங்கள் !

இதுவரை இல்லாத அளவுக்கு ஊடகங்களுக்கு இன்று சவால்கள் இருந்தாலும் அவற்றை சரியாக சந்திப்பதில்லை. மேற்குலகில் கூட இதே போல தேசியவாதிகள் மற்றும் போலி செய்தி அச்சுறுத்தல் இருந்தாலும் முதன்மையான ஊடகங்கள் அங்கே நிலையாக தொடர்ந்து உண்மையை கூறுகின்றன.

அவர்களது மையமான பத்திரிகை தர்மத்திற்கு சிக்கல் வருகிறது என்றால் ஒன்றுகொன்று ஆதரவாக அதை எதிர்கொள்கின்றன. சமீபத்தில் கூட அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து சி.என்.என் பத்திரிக்கையாளரை வெளியேற்றியது தவறு என்று டிரம்புக்கு பிடித்த பத்திரிக்கையான பாக்ஸ்நியூஸ் பத்திரிகையே கூறியது.

கேள்விக்குள்ளாகும் நம்பகத்தன்மை

இந்தியாவின் அதிகாரத்திலிருக்கும் கட்சியிலிருந்து ஊடக முதலாளிகளுக்கும், ஊடக ஆசிரியர்களுக்கும் இடையிலான அழைப்புகளும் சந்திப்புகளும் தற்போது வழக்கமாகி வருகிறது. இது இந்திய அளவில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இந்திய ஊடகங்கள், உண்மையை வெளிக்கொண்டு வர விருப்பமுள்ள பத்திரிகையாளர்களை அனுமதிக்க இயலாத அல்லது விருப்பமற்றதான பொருளாதார நலன்களோடு பிணைந்து இருக்கின்றன.

உண்மையை சொல்வதென்றால் எப்பொழுதும் ஒருவித அழுத்தம் இருந்து வருகிறது. என்னுடைய அனுபவத்தில் பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்த போது எப்போதாவது மறைமுகமாகவும் சில சமயங்களில் வெளிப்படையாகவும் குறிப்பிட்ட பிரச்சினைகள், நலன்கள் மற்றும் மனிதர்கள் குறித்த விவகாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு அழுத்தம் வந்துள்ளது.

பலமுறை வேலையை விட்டுள்ளேன். மேலும் பலமுறை அதிகார வர்க்கத்துடன் முரண்பட்டுள்ளேன். பல நேரங்களில் வேலையற்றும் இருந்துள்ளேன். ஆனால் இன்று ஊடக தர்மத்தை நிலைநாட்ட முடியாத அல்லது விரும்பாத முதலாளிகளிடம் இருந்து அடிக்கடி வெளிப்படையாகவும் கடுமையாகவும் ஊடக ஆசிரியர்களுக்கு அழுத்தம் வருகிறது.

ஊடகத்திற்கு தொடர்பில்லாத சாதாரண நபர்களின் கூட்டத்தில், ஊடக அறத்தைப் பற்றி பேசப் போகிறேன் என்று நீங்கள் சொன்னால் அவநம்பிக்கையைத்தான் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கடந்த 30.11.2018 அன்று விவசாயிகள் நடத்திய பேரணி (கோப்புப் படம்)

ஊடகங்களை கோழையாக்குவதில் இந்தியாவின் ஆளுங்கட்சியான பா.ஜ.க கரைக்கண்டது. ஊடக முதலாளிகளிடம் பேசுவது, வணிக நலன்கள் பாதிக்கப்படும் என்று மிரட்டுவது, அவதூறு வழக்கு தொடுப்பது, விளம்பரங்களை நிறுத்துவது போன்றவை எவ்வளவு எளிதானது என்பதை இதன் மூலம் மாநில அரசுகளும் பெரு நிறுவனங்களும் கற்றுக்கொண்டு வருகிறார்கள். இங்கே அபாயம் என்னவெனில் ஒருமுறை சுதந்திரம் பறிப்போன பிறகு நம்பகத்தன்மையும் உடனே பறி போகிறது. இரண்டுமே மீண்டும் பெறுவது மிகவும் கடினம் அல்லது வாய்ப்பே கிடையாது.

இந்திய ஊடகங்களின் நம்பகத்தன்மை மிகக்குறைவாகவே உள்ளது. போலி செய்திகள் மற்றும் தேசியவாத பிரியர்கள் ’தாராளவாத’ ஊடகங்களை நம்பக்கூடாது என்று கூறலாம். ஆனால் உண்மை என்னவெனில் தங்களது குறிக்கோள்களிலும் ஒருபோதும் சுதந்திரமாக பிரகாசிக்கவில்லை என்றாலும் நாம் தற்போது பார்த்து கொண்டிருப்பது போல மத சார்பு, பொய்கள் மற்றும் அரசாங்கத்துக்கு ஆதரவான பிரச்சாரத்தில் நேரடியாக முன்பு ஈடுபட்டதில்லை.

எனவே இந்திய நகரங்களில் குவியும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பற்றியும் அவர்களது கோரிக்கைகள் பற்றிய விவாதங்களையும் எதிர்பார்க்கிறேன். இந்த பெரும் அணிவகுப்பு, எழுத்தாளர் அமிதவ் கோஷ் குறிப்பிடுவது போல உலகின் தற்போது நடக்கும் மிக இன்றியமையாத நிகழ்ச்சியாகும். நற்பலனாக, அற்பமான மற்றும் போலியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே சமூக ஊடகங்கள் இது போன்ற இன்றியமையாத நிகழ்வுகளையும் கவனத்தில் கொள்கின்றன. இது நல்லது தான். ஆனால் பூசாரிகளுக்கு கொடுக்கும் ஊதியத்தை காட்டிலும் விவசாயத்தில் உள்ள நெருக்கடி அதிக மதிப்பு வாய்ந்தது என்று இந்தியாவிற்கு புரிய வைக்கும் அளவிற்கு போதுமானதாக இல்லை.


நன்றி: Samar Halarnkar, scroll.in
தமிழாக்கம்: சுகுமார்

ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

ந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஏப்ரல் 13, 1919 – இரத்தம் தோய்ந்த கருப்பு தினம். அது ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த நாள்.

அத்துப்பாக்கிச் சூட்டில் 400-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒப்புக்கொண்டாலும், விடுதலை இயக்கங்கள் நடத்திய விசாரணையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த உண்மை அம்பலமானது. அந்த ஈடுஇணையற்ற தியாகத்தின் நூற்றாண்டு இது.

ஜாலியன்வாலா பாக் படுகொலை குறித்த சித்திரம்.

இந்தப் படுகொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான், இந்திய விடுதலைப் போராட்டத்தைக் கொடிய முறையில் நசுக்கும் நோக்கில் ஆள்தூக்கி கருப்புச் சட்டமான ரௌலட் சட்டத்தை இயற்றியிருந்தது, ஆங்கிலேய காலனி அரசு.

இக்கருப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரசு கட்சி மார்ச் 30, 1919 அன்று சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்தது. இப்போராட்டத்தின் முதல் நாளன்றே டெல்லியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சமயத்தில் பஞ்சாப் மாகாணம் முழுவதுமே போராட்டத்தின் கொதிநிலையில் இருந்தது. அம்மாகாணத்தின் அமிர்தசரஸ் நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்தைத் தடுக்கும் திட்டத்தோடு, அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வழக்குரைஞர் சைஃபூதின் கிச்லூ, மருத்துவர் சத்பால் ஆகிய இருவரையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கைது செய்து, இரகசிய மறைவிடத்தில் அவர்கள் இருவரையும் சிறை வைத்தது.

படிக்க:
♦ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !
♦ தம்பி தங்கைகளே ! உங்களுக்கு தோழர் பகத்சிங்கை தெரியுமா ? காணொளி

அத்தலைவர்களை விடுதலை செய்யக் கோரி அமிர்தசரஸ் நகர மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டதால், பஞ்சாபிகள் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது எதிர்த்தாக்குதல் தொடுத்தனர். இந்த எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாத காலனிய அரசு, பஞ்சாப் மாகாணத்தை இராணுவத்திடம் ஒப்படைத்தது.

இந்தப் பின்னணியில்தான், குறிப்பாக கைது செய்யப்பட்ட இரண்டு தலைவர்களையும் விடுதலை செய்யக் கோரி அமிர்தசரஸ் நகரில், ஜாலியன்வாலா பாக் திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டம் நடைபெற்ற நாள், பஞ்சாபி மக்களின் முக்கிய பண்டிகையான பைசாகி திருநாளாகும். பைசாகி பண்டிகை, சீக்கியர்கள், இந்துக்கள், முசுலீம்கள் என்ற மத வேறுபாடுகளின்றி, அனைத்து பஞ்சாபி மக்களும் இணைந்து, ஒரே குவளையில் நீர் அருந்தி, ஒரே தட்டில் உணவருந்திக் கொண்டாடும் மதச்சார்பற்ற திருவிழா. அப்பண்டிகை நாளில் நடந்த ஜாலியன்வாலா பாக் பொதுக்கூட்டத்திலும் மதவேறுபாடின்றி இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கெடுத்தனர்.

பஞ்சாப் மக்கள் மத்தியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கொழுந்துவிட்டு எரிந்த விடுதலை வேட்கையையும், அப்போராட்டத்தில் மதவேறுபாடுகளைக் கடந்து அம்மக்கள் ஒற்றுமையாகத் திரண்டதையும் சகித்துக்கொள்ள முடியாத ஆங்கிலேய காலனிய அரசு, அவ்விடுதலை வேட்கையை ஒடுக்கி, பஞ்சாப் மக்களிடையே அரசு பயங்கரவாத பீதியைக் கட்டவிழ்த்துவிடும் நோக்கிலேயே ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியது.

இப்படுகொலையைத் தலைமை தாங்கி நடத்திய ஜெனரல் டயர் இந்த நோக்கத்தை வெளிப்படையாகவே இப்படுகொலை குறித்து நடந்த விசாரணையில் ஒப்புக் கொண்டான்.

“நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என் பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்த மடைகிறேன். இது என் கடமை”

ஜெனரல் டயர் 1927 ஆம் ஆண்டு இயற்கையாக இறந்துபோனாலும், இப்படுகொலையின்போது பஞ்சாப் மாகாண கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டயரை உத்தம் சிங் என்ற பஞ்சாபைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரன், இலண்டன் நகரிலேயே சுட்டுக் கொன்றான். இந்த மகத்தான வரலாற்றுப் பழி தீர்க்கும் செயலைத் தனியொரு ஆளாகச் செய்து முடித்த உத்தம் சிங் கைது செய்யப்பட்டபோது, தனது பெயரை ராம் முகம்மது சிங் ஆசாத் எனக் கூறினான். உத்தம் சிங் என்ற ராம் முகம்மது சிங் ஆசாத் 1940, ஜூன் 12 அன்று தூக்கிலிடப்பட்டான்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான விடுதலைப் போராட்டங்கள் எதிலும் கடுகளவுகூட பங்கெடுத்துக் கொள்ளாத, அதேசமயம் அப்போராட்டத்தைச் சீர்குலைக்கும் விதத்தில் இந்து மதவெறிக் கலவரங்களை நடத்தி ஆங்கிலேய காலனி அரசுக்குச் சேவை செய்துவந்த ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிசக் கும்பல், அரசு அதிகாரம் கையில் இருக்கும் மமதையில், ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டைத் தனது இந்து தேசியவெறி நோக்கில் கொண்டாட எத்தணிக்கிறது.

வரலாற்றை மறந்துவிட்ட மரக்கட்டைகளா நாம்?

கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு ரௌலட் சட்டம் என்றால், ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஊபா சட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு, இந்து மதவெறி பாசிசத் திட்டங்களையும், கார்ப்பரேட் கொள்ளையையும் எதிர்ப்பவர்கள் மீது கைது, சிறை உள்ளிட்ட அடக்குமுறைகளை ஏவிவிடுகிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஜாலியன்வாலா பாக்-கில் அமைதியாகக் கூடியிருந்த பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது என்றால், மோடி அரசும், அவரது கைக்கூலி தமிழக அரசும் தூத்துக்குடியில் அமைதியான முறையில் ஊர்வலமாகச் சென்ற மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு சிறை, சித்திரவதைகளை ஏவிவிட்டது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தனது காலனிய ஆட்சிக்கு எதிரான இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டது என்றால், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிசக் கும்பல், தமது வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்ள போராடிவரும் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்த ராமர் கோவில், பசுவதை தடை, மாட்டுக் கறி தடை என அடுத்தடுத்து இந்து மதவெறி திட்டங்களைக் கையிலெடுத்து வருகிறது.

அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் விசுவாசத்தைக் காட்டி அமைச்சர் பதவிகள் உள்ளிட்ட அரசு சன்மானங்களைப் பெற்ற ஆர்.எஸ்.எஸ். கும்பல், இன்று பல்வேறு ஏகாதிபத்திய முதலாளிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கு விசுவாசமாக நடந்துகொண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

படிக்க:
♦ தூத்துக்குடி மாடல் வளர்ச்சி ! புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்

இந்தியர்களுக்கு ஜனநாயகத்தைக் கற்றுத் தரப் போவதாகக் கூறித் தனது காலனிய ஆட்சி தொடருவதை நியாயப்படுத்தியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். வலிமையான அரசு, ஊழலற்ற அரசு எனப் பிரச்சாரம் செய்து தனது பாசிச ஆட்சி தொடருவதை நியாயப்படுத்த முயலுகிறது, ஆர்.எஸ்.எஸ்.

இந்திய விடுதலைப் போராட்டம் முடிந்து போன வரலாறு அல்ல. தனியார்மயம்-தாராளமயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனிய கொள்ளைக்கு எதிராகவும் பார்ப்பன பாசிசம் மற்றும் அரசு பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து மக்களின் வாழ்வுரிமையையும் அரசியல் மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் காத்துக் கொள்வதற்காகவும் அப்போராட்டத்தை தொடர வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை !

0

டிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் மக்களின் இடை நிறுத்தமாக இளைப்பாறுதல் தருவது தேநீர்க் கடை! ஒரு கடையில் பதினைந்து நிமிடத்தில் பத்து ரூபாயில் ஒரு தேநீர் அருந்தும் போது நம்மை கொஞ்சம் நிதானப்படுத்திக் கொள்கிறோம்.

இரவு 12 மணிக்கு கடைகள் திறக்கக் கூடாது என போலீசு உத்திரவு போட்டிருப்பதால் தமிழகத்தில் முழு நாளும் திறந்திருக்கும் கடைகளை காண முடியாது.

தமிழகத்தின் ஒவ்வொரு தேநீர்க்கடையிலும் ஒரு  சிறப்பு இருக்கும். கம்பத்தில் கெட்டியான பாலில் மணம் கமழும் தேநீர் கிடைக்கும். ஊட்டியில் செயற்கை மணமற்ற இயற்கையான வாசனையோடு தேநீரும் வர்க்கியும் கிடைக்கும். சென்னை தேநீரில் நூற்றுக்கணக்கான வகைகள் உண்டு. லைட்டான டீ, மீடியம் டீ, ஸ்ட்ராங், டபுள் ஸ்ட்ராங், இதில் சர்க்கரை கொஞ்சம், நிறைய, இல்லாமல், கருப்பு தேநீர் தற்போது நாட்டுச் சர்க்கரையுடன் எலுமிச்சை தேநீர் புதிய வரவு. இரவு நேரங்களில் “டம்” டீக்கள் இப்போது நகரெங்கும் கிடைக்கின்றன.

சென்னை, கோவை தவிர்த்த பல ஊர்களில் ஐந்து ரூபாய் வடைகள் உண்டு. மதுரை பேருந்து நிலைய டீக்கடைகள் காலை நான்கு மணிக்கு பாய்லர் உட்பட அனைத்தும் குளித்து திருநீறு பூசி, டி.எம்.எஸ். பாடலோடு அன்றைய தினத்தை துவங்கும். திருப்பூரில் ஒன் பை 2 – 3 தேநீர்கள் பிரபலம். திருப்பூர் – கோவை டீக்கடைகள் கேரளா கடைகள் போல மினி பேக்கரியாக இருக்கும்.

தமிழகத்தை தவிர முழு இந்தியாவும் தேநீரை சாய் அல்லது சாயா என்று அழைக்கிறது. ஹைதராபாத் ஈரான் தேநீர் கெட்டியாகவும் ஒரு முறை அருந்தினால் நிறைவான அனுபவத்தையும் கொடுக்கும். கேரளாவில் டீ குடிக்க என்றால் கடிக்க இருக்கும் பழபொறி – வாழைக்கப்பம் பிரபலம். ஒரிசாவில் குவளையில் கொதிக்க வைத்த தேநீர் இருக்கும். பெங்களூர், தில்லியில் முக்கியமான பகுதிகளில் தேநீர்க் கடைகளே கிடையாது. தேநீர் வேண்டுமென்றால் மக்கள் குடியிருப்பை நோக்கி பயணிக்க வேண்டும். சென்னையிலும் மேன்மக்கள் வாழும் பகுதிகள் பலவற்றில் தேநீர்க்கடைகள் கிடையாது.

படிக்க:
சொக்கலிங்கம் தேநீர்க் கடை!
மாட்டுக் கொட்டகை மனிதர்களும் தேநீர்க் கடையும் !

சென்னை டீக்கடைகளில் சேட்டன்கள் பிரபலம். தற்போது வடை போடுவதில் வட இந்திய தொழிலாளிகள் நிறைய வந்து விட்டார்கள். இன்னும் இலங்கையில் தேநீர்க் கடை எப்படி இருக்கும், சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளில் எப்படி இருக்கும் தெரியவில்லை.

ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் தேநீர்க் கடை என்றொரு வகையினம் உண்டா என்பது தெரியாது. வெளிநாடுகளில் இருப்போர் தேநீர்க்கடை போன்று மக்கள் அடிக்கடி சந்திக்கும் கடைகள் இருப்பின் அவற்றை படமெடுக்கலாம்.

தேநீர்க் கடைகளில் தொழிலாளிகள், முதலாளிகள், உணவு பதார்த்தங்கள், வாடிக்கையாளர்கள், கடையின் வடிவமைப்பு, அரட்டை, என பல அம்சங்கள் இருக்கின்றன.

அனுப்புங்கள், காத்திருக்கிறோம். புகைப்படங்கள் வரும் 16.12.2018 ஞாயிற்றுக் கிழமைக்குள் அனுப்புங்கள். நன்றி!

புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

 

அவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 34

மாக்சிம் கார்க்கி
வர்கள் தாங்கள் சேரவேண்டிய இடத்துக்கு மூன்றாவது நாளன்று வந்து சேர்ந்தார்கள். தார் எண்ணெய்த் தொழிற்சாலை எங்கே இருக்கிறது என்பதை, தாய் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு முஜீக்கிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டாள். இதன்பின் அவர்கள் மரம் செறிந்த செங்குத்தான பாதையின் வழியே நடந்து சென்றார்கள். அந்தப் பாதையில் மரவேர்கள் படிக்கட்டுகளைப்போல் குறுக்கும் மறுக்குமாக ஓடி, நடப்பதற்கு வசதியளித்தன. நிலக்கரித் தூளும் மரத்துண்டுகளும் தார் எண்ணெயும் படிந்த ஒரு இடத்தில் வந்து அந்தப் பாதை முடிந்தது,

”ஒரு வழியாக நாம் வந்து சேர்ந்துவிட்டோம்” என்று சாவகாசமாகச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு கூறினாள் தாய்.

மரக்கிளைகளாலும், கம்புகளாலும் கட்டப்பட்ட ஒரு குடிசைக்கு முன்னால், ஒரு மேஜை கிடந்தது. மூன்று பலகை கொண்ட அந்த மேஜை தரையோடு அறையப்பட்ட ஒரு மரக்குதிரையின் மீது இருந்தது. உடம்பெல்லாம் தார் எண்ணெய் படிந்திருக்க, தனது சட்டையின் முன்பக்கம் முழுவதும் திறந்துவிட்டவாறு ரீபின் அந்த மேஜையருகே உட்கார்ந்து எபீமோடும் வேறு இரு இளைஞர்களோடும் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தம்மை நோக்கி வந்த அந்தப் பெண்களை முதன் முதல் கண்டவன் பின்தான், அவன் தன் கையை நெற்றிக்கு நேராக உயர்த்திப் பிடித்துக் கூர்ந்து பார்த்துவிட்டு, மெளனமாக அவர்களது வரவை எதிர்நோக்கி இருந்தான்.

“தம்பி மிகயில்! சௌக்கியமா?” என்று தூரத்திலிருந்தவாறே கூறினாள் தாய்.

அவன் தன்னிடத்தை விட்டு எழுந்து அவர்களை நோக்கி நிதானமாக நடந்து வந்தான். தாயை அடையாளம் கண்டு கொண்டவுடன் அவன் சட்டென நின்று, புன்னகை புரிந்தவாறே தனது கரிய கரத்தால் தன் தாடியை வருடிவிட்டுக்கொண்டான்.

“நாங்கள் பிரார்த்தனைக்குப் போகிற போக்கில்” என்று கூறிக்கொண்டே முன்வந்தாள் தாய். “போகிற வழியில் என் சகோதரனைப் பார்த்துவிட்டுப் போகலாமே என்று நினைத்தேன். இவள் என் தோழி ஆன்னா.”

தன்னுடைய குயுக்தியைக் கண்டு தானே பெருமைப்பட்டவளாய், தாய் ஓரக்கண்ணிட்டு சோபியாவின் கண்டிப்பும், ஆழ்ந்த உணர்வும் நிறைந்த முகத்தைப் பார்த்தாள்.

“வணக்கம்!” என்று ஒரு வறண்ட புன்னகையோடு அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான் ரீபின், சோபியாவுக்கு வணக்கம் செலுத்தினான். “பொய் சொல்லாதே, நீ இப்போது ஒன்றும் நகர்ப்புறத்தில் இல்லை. இங்கு நீ எந்தப் பொய்யுமே சொல்லத் தேவையில்லை, எல்லோரும் நம்மவர்கள்.”

தானிருந்த இடத்திலிருந்தே எபீம் அந்த யாத்திரிகர்களைக் கூர்ந்து பார்த்தான். பிறகு தன் பக்கத்திலிருந்த தோழர்களிடம் இரகசியமாக ஏதோ சொன்னான். அந்தப் பெண்கள் இருவரும் அருகே நெருங்கி வந்தவுடன் அவன் தன்னிடத்தை விட்டு எழுந்து, அவர்களுக்கு மெளனமாக வணக்கம் செலுத்தினான். அவனது சகாக்கள் அந்த விருந்தாளிகள் வந்ததையே கவனிக்காதவர்கள் மாதிரி அசைவற்று உட்கார்ந்திருந்தார்கள்.

”நாங்கள் இங்கே பாதிரியார்கள் மாதிரி வாழ்கிறோம்” என்று சொல்லிக் கொண்டே பெலகேயாவின் தோளில் லேசாகத் தட்டினான் ரீபின். ”யாருமே எங்களைப் பார்க்க வருவதில்லை. முதலாளி அயலூருக்குப் போயிருக்கிறார், அவர் மனைவி ஆஸ்பத்திரியிலே கிடக்கிறாள். அதனாலே அநேகமாக இங்கே எல்லாம் என் மேற்பார்வைதான். சரி, உட்காருங்கள். ஏதாவது சாப்பிட விரும்புவீர்கள், இல்லையா? எபீம்! நீ போய் கொஞ்சம் பால் கொண்டுவா.”

எபீம் அந்தக் குடிசைக்குள்ளே நுழைந்தான். அந்த யாத்திரிகர்கள் தங்கள் முதுகில் தொங்கிய பைகளைக் கீழே இறக்கினார்கள். நெட்டையாகவும் ஒல்லியாகவும் இருந்த ஒரு இளைஞன் எழுந்து வந்து, மூட்டையை இறக்கி வைப்பதற்கு உதவி செய்தான். உருண்டு திரண்டு பறட்டைத் தலையுடன் அவனது தோழன் ஒருவன் மேஜையின் மீது முழங்கைகளை ஊன்றியவாறு உட்கார்ந்திருந்தான்; தனது தலையைச் சொறிந்து கொண்டும், ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டும் அவன் அவர்களைக் கூர்ந்து பார்த்தவாறே ஏதோ சிந்தித்தான்.

தார் எண்ணெயின் கார நெடியும், அழுகிப்போன இலைக் குவியல்களின் நாற்றமும் சேர்ந்து அந்தப் பெண்களின் புலன்களைக் கிறக்கின.

”அவன் பேர் யாகல்” என்று அந்த நெட்டை வாலிபனைச் சுட்டிக் கொண்டே சொன்னான் ரீபின். “அடுத்தவன் பெயர் இக்நாத். சரி, மகன் எப்படி இருக்கிறான்?’

”சிறையிலிருக்கிறான்’’ என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“மறுபடியுமா?” என்றான் ரீபின், ‘’அவனுக்குச் சிறைபிடித்துப் போயிற்று போலிருக்கிறது.”

இக்நாத் பாடுவதை நிறுத்தினான்; யாகவ் தாயின் கையிலிருந்து கைத்தடியை வாங்கிக்கொண்டே சொன்னான்:

“உட்காருங்கள், அம்மா”

“ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்கள்” என்று சோபியாவைப் பார்த்துச் சொன்னான் ரீபின். ஒன்றும் பேசாமல் அவள் ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து ரீபினையே கவனித்துக்கொண்டிருந்தாள்.

“அவனை அவர்கள் எப்போதும் கைது செய்தார்கள்?” என்று கேட்டுக்கொண்டே, தாய் உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிராக உட்கார்ந்து தலையை ஆட்டினான் ரீபின். ”நீலவ்னா, உனக்கு அதிருஷ்டமே கிடையாது!”

“ஆமாம், எல்லாம் சரியாய்த்தானிருக்கிறது.”

“பழகிப்போய்விட்டதா?”

“இல்லை. எனக்கு அது ஒன்றும் பழகிப் போய்விடவில்லை. ஆனால், அதை விட்டால் எனக்கு வேறு கதி இல்லை.”

“ஹூம்!” என்றான் ரீபின்; ”நல்லது அதைப்பற்றி எங்களுக்குச் சொல்லேன்.”

அவர்கள் தன்னைத் துப்பாக்கிச் சனியனால் தாக்கக்கூடும், அல்லது சைபீரியாவுக்கு நாடு கடத்தக்கூடும் என்று தெரிந்திருந்தும். அவன் தன் செய்கையை நிறுத்தவில்லை. அவனது பாதையில், தாயே குறுக்கே விழுந்து தடை செய்திருந்தாலும், அவன் இவளையும் மீறித் தாண்டிச் சென்றிருப்பான்.

எபீம் ஒரு ஜாடியில் பால் கொண்டு வந்தான். மேஜை மீதிருந்த கோப்பையை எடுத்து அதை அலம்பிவிட்டு அதில் பாலை ஊற்றினான். பிறகு தாய் கூறிக்கொண்டிருக்கும் கதையையும் அவன் காதில் வாங்கிக்கொண்டே அந்தப் பால் கோப்பையை சோபியாவிடம் நீட்டினான். சத்தமே செய்து விடாதபடி சாமான்களைப் புழங்குவதில் அவன் மிகுந்த ஜாக்கிரதையோடிருந்தான். தாய் அந்த விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லி முடித்த பின்னர் ஒரு மௌன அமைதி நிலவியது. அந்தச் சமயத்தில் யாரும் யாரையுமே பார்க்கவில்லை. இக்நாத் மேஜையின் முன்னிருந்தவாறே மேஜைப் பலகை மீது நகத்தால் கீறிக்கொண்டிருந்தான். எபீம் ரீபினுக்குப் பின்னால் வந்து அவனது தோளின் மீது தன் முழங்கையை ஊன்றியவாறு நின்றான். யாகல் ஒரு மரத்தின் மீது சாய்ந்து, தனது கைகளைக் கட்டிக்கொண்டு தலையைத் தொங்கவிட்டவாறிருந்தான். சோபியா அந்த முஜீக்குகளைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள்…

“ஹூம்…ம்… ம்” என்று மெதுவாகவும் உவகையற்றும் முனகினான் ரீபின். ‘‘அப்படியா? அவர்கள் பகிரங்கமாகவே கிளம்பிவிட்டார்களா?”

“நாமும் அந்த மாதிரி ஒரு அணிவகுப்பை நடத்த முனைந்தால்” என்று ஒரு கசந்த புன்னகையோடு பேசினான் எபீம்: “அப்படிச் செய்தால் முஜீக்குகளே நம்மை அடித்துக்கொன்று தள்ளிவிடுவார்கள்.”

“ஆமாம். நிச்சயம் அவர்கள் கொன்று தள்ளிவிடுவார்கள்” என்று தலையை அசைத்து ஆமோதித்தான் இக்நாத். ”நானும் தொழிற்சாலை வேலைக்கே போகப்போகிறேன். இங்கே இருப்பதைவிட அங்கு நன்றாயிருக்கிறது.”

”பாவெல் மீது கோர்ட்டில் விசாரணை நடக்கும் என்றா சொல்கிறாய்?” என்று கேட்டான் ரீபின். “அப்படியானால் அவனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? அதைப்பற்றி ஏதாவது கேள்விப்பட்டாயா?”

“கடுங்காவல், இல்லாவிட்டால் சைபீரியாவுக்கு நிரந்தரமாக நாடு கடத்தப்படுதல்” என்று அமைதியுடன் கூறினாள் அவள்.

அந்த மூன்று இளைஞர்களும் ஒரே சமயத்தில் அவள் பக்கம் திரும்பினார்கள். ரீபின் மட்டும் தலையைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான்:

“அவன் அதைச் செய்தபோது, இந்த மாதிரி தனக்கு ஏதாவது நேரும் என்று தெரிந்துதான் செய்தானா?”

“ஆமாம். தெரிந்தே செய்தான்” என்று உரத்த குரலில் சொன்னாள் சோபியா.

எல்லோரும் ஒரே சிந்தனையால் உறைந்துவிட்ட மாதிரி அப்படி அசைவற்றுப் பேச்சற்று மூச்சற்று இருந்தார்கள்.

“ஹூம்!” என்று முனகிவிட்டு மெதுவாகவும் வருத்தத்தோடும் பேசினான் ரீபின். ”அவனுக்குத் தெரியும் என்றுதான் நானும் நினைத்தேன். முன் யோசனையுள்ள மனிதன் கண்ணை மூடிக்கொண்டு திடுதிப்பென்று இருட்டில் குதிக்கமாட்டான். பையன்களா! கேட்கிறீர்களா? அவர்கள் தன்னைத் துப்பாக்கிச் சனியனால் தாக்கக்கூடும், அல்லது சைபீரியாவுக்கு நாடு கடத்தக்கூடும் என்று தெரிந்திருந்தும். அவன் தன் செய்கையை நிறுத்தவில்லை. அவனது பாதையில், தாயே குறுக்கே விழுந்து தடை செய்திருந்தாலும், அவன் இவளையும் மீறித் தாண்டிச் சென்றிருப்பான். இல்லையா, நீலவ்னா?”

“ஆமாம், அவன் செய்வான்” என்று சொல்லிக்கொண்டு நடுங்கினாள் தாய். அவள் பெருமூச்செறிந்தவாறு சுற்றுமுற்றும் பார்த்தாள். சோபியா அவள் கையை அமைதியாகத் தட்டிக்கொடுத்துக்கொண்டே, நெற்றியைச் சுருக்கி விழித்து ரீபினையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

”இவன் ஒரு உண்மையான மனிதன்!” என்று அமைதியாகக் கூறிக்கொண்டே, தனது கரிய கண்களால் அங்குள்ளவர்களைப் பார்த்தான் ரீபின். மீண்டும் அந்த ஆறு பேரும் மோன அமைதியில் ஆழ்ந்துவிட்டார்கள். சூரிய கிரணங்கள் தங்கத் தோரணங்களைப்போல் காற்றில் தொங்கி ஊசலாடின. எங்கோ ஒரு அண்டங்காக்கை கத்தியது. தாயின் மனநிலை மே தினத்தின் நினைவாலும், பாவெல், அந்திரேய் இருவரையும் காணாத ஏக்கத்தாலும் குழம்பித் தடுமாறியது. அந்தக் காட்டின் நடுவிலே காலித் தார் எண்ணெய் பீப்பாய்கள் உருண்டு சிதறிக்கிடந்தன. தரையைக் கீறிக் கிளப்பின மரவேர்கள் எங்கு பார்த்தாலும் துருத்தி நின்றன. அந்தக் காட்டின் எல்லையில் ஓக் மரங்களும் பெர்ச் மரங்களும் மண்டிப் பெருகி, அசைவற்று கரிய நிழல்களைத் தரைமீது பரப்பிக்கொண்டிருந்தன.

திடீரென்று யாகவ் அந்த மரத்தடியிலிருந்து விலகி, வேறொரு பக்கமாகச் சென்றான்.

“அப்படியானால், பட்டாளத்தில் சேர்ந்தால் இந்த மாதிரி ஆட்களை எதிர்ப்பதற்காகத்தான் என்னையும் எபீமையும் அனுப்புவார்களோ?” என்று உரத்து, தன் தலையைப் பின்னுக்கு வாங்கி நிமிர்ந்தவாறே கேட்டான் யாகவ்.

“வேறு யார் மீது உங்களை ஏவி விடுவார்கள் என்று நினைத்தாய்?” என்றான் ரீபின். ”அவர்கள் நமது கைகளைக்கொண்டே நம்மை நெரித்துக்கொள்வார்கள் – அதுதான் அவர்களுடைய தந்திரம்!”

“எப்படியானாலும் நான் பட்டாளத்தில் சேரத்தான் போகிறேன்” என்று உறுதியோடு சொன்னான் எபீம்.

படிக்க:
நரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் !
காத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் !

“உன்னை யாராவது தடுக்கிறார்களா?” என்று சத்தமிட்டான் இக்நாத். ”நீ பாட்டுக்குப் போ. ஆனால், நீ ஒருவேளை என்னையே சுட நேர்ந்தால், தயை செய்து என் தலைக்குக் குறிபார்; வீணாக வேறிடத்தில் சுட்டு என்னை முடமாக்கிவிடாதே; சுட்டால் ஒரேயடியாய்க் கொன்று தீர்த்துவிடு” என்று சிறு சிரிப்புடன் சொன்னான் இக்நாத்.

“நீ சொல்வது எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று வெடுக்கென்று பதில் சொன்னான், எபீம்.

“ஒரு நிமிஷம் பொறுங்கள், பையன்களா!” என்று தன் கையை உயர்த்திக்கொண்டே சொன்னான் ரீபின்.

”இதோ இந்த அம்மாளுடைய மகன்தான் இப்போது மடியப்போகிறான்!” என்று தாயைச் சுட்டிக்காட்டினான்.

”நீ அதையெல்லாம் ஏன் சொல்கிறாய்?” என்று வேதனையோடு கூறினாள் தாய்.

“சொல்லத்தான் வேண்டும்” என்று கரகரத்துக் கூறினான் ரீபின். “உன்னுடைய தலைமயிர் ஒன்றுமற்ற காரணத்துக்காக நரை தட்டக்கூடாது. உன்னுடைய மகனுக்கு இந்த மாதிரிக் கொடுமையை இழைப்பதன் மூலம் அவர்கள் அவனைக் கொன்று தீர்க்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? சரி, ஏதாவது புத்தகங்கள், பிரசுரங்கள் கொண்டு வந்தாயா, நீலவ்னா?”

தாய் அவனை லேசாகப் பார்த்தாள்.

”ஆம்…” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னாள்.

“பார்த்தாயா?” என்று மேஜை மீது தன் முஷ்டியைக் குத்திக்கொண்டே சொன்னான் ரீபின். “உன்னைப் பார்த்தவுடனேயே நான் தெரிந்துகொண்டேன். வேறு எதற்காக நீ இங்கு வரப்போகிறாய்? எப்படி? அவர்கள் பிள்ளையைத்தான் பறித்துக்கொண்டு சென்றார்கள் – ஆனால் இன்று அதே ஸ்தானத்தில் தாயே வந்து நின்றுவிட்டாள்!”

அவன் தன் முஷ்டியை ஆட்டியவாறே ஏகவசனத்தில் திட்டினான்.

”நீ பாட்டுக்குப் போ. ஆனால், நீ ஒருவேளை என்னையே சுட நேர்ந்தால், தயை செய்து என் தலைக்குக் குறிபார்; வீணாக வேறிடத்தில் சுட்டு என்னை முடமாக்கிவிடாதே; சுட்டால் ஒரேயடியாய்க் கொன்று தீர்த்துவிடு” என்று சிறு சிரிப்புடன் சொன்னான் இக்நாத்.

அவனது கூச்சலினால் பயந்துபோன தாய் அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் முகமே மாறிப்போய்விட்டதாக அவளுக்குத் தோன்றியது, அது மெலிந்து போயிருந்தது. தாடி ஒழுங்கற்றுக் குலைந்து போயிருந்தது. அந்த தாடிக்குக் கீழாக அவனது கன்ன எலும்புகள் துருத்திக்கொண்டு நிற்பதுகூடத் தெரிந்தன. அவனது வெளிறிய நீலக் கண்களில், அவன் ஏதோ ரொம்ப நேரமாய்த் தூங்காது விழித்திருந்தவன் மாதிரி, மெல்லிய ரத்த ரேகைகள் ஓடிப் பரந்திருந்தன. அவனது மூக்கு உள்ளடங்கிக் கொக்கி போல் வளைந்து ஒரு மாமிச பட்சிணிப் பறவையின் அலகைப்போல் இருந்தது. தனது பழைய சிவப்பு நிறத்தை இழந்து கரிபடிந்துபோன அவனது திறந்த சட்டைக்காலர், அவனது தோள்பட்டை எலும்புகளையும், மார்பில் மண்டி வளர்ந்திருந்த தடித்த கருமயிர்ச் சுருள்களையும் திறந்து காட்டிக்கொண்டிருந்தது. மொத்தத்தில் அவனது தோற்றத்தில் என்னவோ ஒரு சவக்களை படிந்து போயிருப்பதுபோல் தோன்றியது. கொதித்துச் சிவந்த கண்கள் அவனது கரிய முகத்தில் கோபாக்கினி ஒளி வீசக் கனன்று கொண்டிருந்தது. சோபியா முகம் வெளுத்துப்போய்ப் பேசாது உட்கார்ந்திருந்தாள். தன் கண்களை அந்த முஜீக்குகளிடமிருந்து அகற்ற முடியாமல் அப்படியே இருந்தாள். இக்நாத் தலையை அசைத்தான், கண்களை நெரித்துச் சுருக்கிப் பார்த்தான்; யாகவ் மீண்டும் அந்தக் குடிசை நிழலில் ஒதுங்கி, அங்கு நாட்டப்பட்டிருந்த குடிசைக் கால்களின் மரப்பட்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உரித்துக் கொண்டு நின்றான். எபீம் அந்த மேஜையருகே செல்வதும் வருவதுமாக, தாய்க்குப் பின்னால் மெதுவாக உலாவினான். ரீபின் மேலும் பேசத் தொடங்கினான்:

”கொஞ்ச நாட்களுக்கு முன்னால், இந்த ஜில்லா அதிகாரி என்னைக் கூப்பிட்டு அனுப்பி ‘டேய் அயோக்கியப் பயலே! மத குருவிடம் என்ன சொன்னாய்?’ என்ற கேட்டார். நீங்கள் என்னை எப்படி அயோக்கியப் பயலே என்று கூப்பிடலாம்? நான் என் நெற்றி வியர்வையைச் சிந்தி, உழைத்துப் பிழைக்கிறேன். நான் யாருக்கும் எந்தக் கெடுதியும் செய்வதில்லை’ என்று சொன்னேன் நான். உடனே அவர் என்னை நோக்கிக் கர்ஜித்துப் பாய்ந்தார். என் தாடையில் அறைந்தார். என்னை மூன்று நாட்களுக்குச் சிறையில் போட்டு வைத்தார். ‘சரிதான், நீங்கள் ஜனங்களிடம் இப்படித்தான் பேசுவீர்கள் போலிருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டேன் நான். ‘நாங்கள் இதை மறந்துவிடுவோம் என்று எதிர்பாராதே, கிழட்டு ஜென்மமே நான் இல்லாவிட்டால், வேறொருவன், உன்னிடமில்லாவிட்டால் உன் குழந்தைகளிடம் இந்த அவமானத்திற்காக வஞ்சம் தீர்த்துக்கொள்வோம். அது மட்டும் ஞாபகமிருக்கட்டும்! நீங்கள் உங்களது இரும்பாலான கோர நகங்களால் மக்களது மார்பகங்களை உழுது பிளந்தீர்கள். அங்கு பகைமையை விதைத்தீர்கள், எனவே பகைமைக்குப் பகைமைதான் பயிராக விளையும். எங்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள், பிசாசுகளே!’ என்று நான் மனத்துக்குள் கூறிக்கொண்டேன். ஆமாம்!”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

நரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் !

பொதுத்துறை வங்கிகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? – இந்தக் கேள்வி பொருளாதார நிபுணர்கள், வங்கி ஊழியர்கள் மத்தியில் மட்டுமல்ல, அவ்வங்கிகளை நம்பியிருக்கும் சேமிப்புதாரர்கள், சிறுதொழில் முனைவோர், சிறு வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பட்ட மக்கள் பிரிவினர் மத்தியிலும் எழுந்து நிற்கிறது. காரணம், வாராக் கடனால் பொதுத்துறை வங்கிகள் அடைந்துவரும் நட்டம்.

ஜூன் 2014-இல், மோடி அரசு பதவியேற்ற சமயத்தில், 2,19,000 கோடியாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன், அவரது நான்கு ஆண்டு கால ஆட்சியின் முடிவில், மார்ச் 2018-இல் 8,97,000 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
இந்தச் சுமையின் காரணமாக, பொதுத்துறை வங்கிகள் நட்டம் என்ற கருந்துளைக்குள் தள்ளப்படுகின்றன.

2017-18 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன் சுமையைச் சமாளிக்க தமக்குக் கிடைத்த இலாபத்திலிருந்து 2,70,000 கோடி ரூபாய் ஒதுக்கியதன் விளைவாக, அவை அந்த நிதியாண்டில் மட்டும் அடைந்த நட்டம் 85,369 கோடி ரூபாய். கடந்த நான்கு ஆண்டுகளில் வாராக் கடனுக்காகப் பொதுத்துறை வங்கிகள் தமது இலாபத்திலிருந்து 6,67,001 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதோடு, ஏப்.2014 முதல் செப்.2017 வரையிலான மூன்று ஆண்டுகளில் 2,41,000 கோடி ரூபாய் பெறுமான வாராக் கடன்களைத் தள்ளுபடியும் செய்திருக்கின்றன.

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ஒன்பது இலட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் பெருத்துப் போயிருப்பதற்கு முந்தைய காங்கிரசு கூட்டணி அரசுதான் காரணமென்று கூறி, தன்னை யோக்கியனைப் போலக் காட்டிக் கொள்ள முயலும் பா.ஜ.க. கூட்டணி அரசு, புதிய திவால் சட்டத்தின் கீழ் இக்கடன்களைத் தம்பிடி பாக்கியில்லாமல் கறாராக வசூலிப்பது போலக் காட்டி வருகிறது.

மோடியின் ஆட்சியில் நேரடி வரி வருவாய் அதிகரித்துவிட்டது, வேலைவாய்ப்பு பெருகிவிட்டது, வறுமை குறைந்துவிட்டது, கக்கூசுகளின் எண்ணிக்கை கூடிவிட்டது என்றெல்லாம் நடத்தப்படும் பிரச்சாரங்களில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறதோ, அதே அளவு உண்மைதான் வாராக் கடன்களை வசூலிப்பதிலும் காணக் கிடைக்கிறது.

படிக்க:
♦ வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் ?
♦ வங்கி மறுமுதலீடு : தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி !

இந்திய திவால் ஆணையம் ஜூன் 30, 2018 அன்று வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, வங்கிக் கடனைச் செலுத்தத் தவறிய 32 நிறுவனங்களின் வழக்குகள், அந்நிறுவனங்ளை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த 32 நிறுவனங்களும் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் நிலுவை 89,402 கோடி ரூபாய். இந்த நிறுவனங்களை வேறு நிறுவனங்கள் வாங்கியதன் மூலம் வங்கிகளுக்குக் கிடைத்த தொகை 49,783 கோடி ரூபாய். வங்கிகள் தள்ளுபடி செய்த கடன் தொகை, அதாவது இந்த விற்பனை மூலம் வங்கிகள் அடைந்த நட்டம் 39,619 கோடி ரூபாய்.

மேலும், வங்கிக் கடனைச் செலுத்தாத 136 நிறுவனங்களை வேறு எந்தவொரு நிறுவனமும் வாங்கிக் கொள்ள முன்வராததால், அந்த 136 நிறுவனங்களும் திவால் என அறிவிக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டுவிட்டன. இந்த 136 நிறுவனங்களும் வங்கிகளுக்குத் தர வேண்டிய மொத்தக் கடன் நிலுவை 57,646 கோடி ரூபாய். இதில் வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கும் தொகை 44,966 கோடி ரூபாய்.
இவையிரண்டையும் சேர்த்து, திவால் சட்டத்தின் கீழ் வங்கிகள் அடைந்திருக்கும் நட்டம் 84,585 கோடி ரூபாய்.

இந்தத் திவால் சட்டம் வங்கிகளைக் காப்பாற்றும் நோக்கில் கொண்டுவரப்படவில்லை. அதற்கு மாறாக, கடன் வாங்கி ஏப்பம் விட்ட கார்ப்பரேட் முதலாளிகளைக் கடன் நிலுவைகளைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து தப்ப வைக்கவும், கடன்பட்டிருக்கும் நிறுவனங்களைத் தள்ளுபடி விலையில் கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கி, தொழிலில் தமது ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு ஏற்றவகையிலும்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட பல தரகு முதலாளிகள் சட்டவிரோதமான முறையில் வங்கிப் பணத்தை ஏப்பம்விட்டனர் என்றால், திவால் சட்டம் அந்தக் கொள்ளையைச் சட்டபூர்வமாக்கியிருக்கிறது. இந்த வகையில் வங்கிப் பணத்தை ஏப்பம்விட்ட தரகு முதலாளிகளின் ஊழலைவிட மிகப்பெரும் ஊழலை, மோசடியைச் சட்டபூர்வமாகவே நடத்திவருகிறது, மோடி அரசு.

திவால் சட்டம் வங்கிகளைத் திவாலாக்குகிறது

முதலாவதாக, கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ள நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பதற்குத் தரகு வேலை செய்கிறது இச்சட்டம். இதன் கீழ் ஏலத்திற்கு வரும் நிறுவனங்களின் வாராக் கடன் எவ்வளவு இருக்கிறதோ, அதனை ஈடுசெய்யக்கூடிய வகையில் அந்நிறுவனங்கள் விற்கப்படுவதில்லை.

ஏலத்தில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் கூறும் விலையை ஏற்றுக் கொள்வதா, நிராகரிப்பதா என்று மட்டுமே வங்கிகள் தீர்மானிக்கின்றன. குறிப்பாக, கிடைத்தவரை இலாபம் என்பதுதான் இந்தச் சட்டத்தின் அடிப்படை என்பதால், வந்த விலைக்கு நிறுவனத்தை விற்றுவிட்டு, மீதமுள்ள வாராக் கடன் தொகையைத் தள்ளுபடி செய்ய வேண்டிய கட்டாயத்தில் வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன.

உதாரணமாக, 29,500 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்திருக்கும் அலோக் இண்டஸ்ட்ரீஸ் என்ற ஜவுளி உற்பத்தி நிறுவனத்தை, விமல் பிராண்ட் ஜவுளி வணிகத்தை நடத்திவரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், 5,050 கோடி ரூபாய் கொடுத்து கையகப்படுத்தியிருக்கிறது. இந்த விற்பனையில் வங்கிகள் தமது கடன் நிலுவையில் 83 சதவீதத்தைத் தள்ளுபடி செய்தன. (பைனான்சியல் எக்ஸ்பிரஸ், ஜூன் 2018)

பூஷண் ஸ்டீல்ஸ் நிறுவனத்தை டாடா ஸ்டீல்ஸ் 35,200 கோடி ரூபாய் கொடுத்துக் கையகப்படுத்தியது. இந்த ஏல விற்பனையில் வங்கிகள் பூஷன் ஸ்டீல்ஸ் திருப்பிச் செலுத்த வேண்டிய 56,079 கோடி ரூபாய் கடன் நிலுவையில் 37 சதவீதம் தள்ளுபடி செய்தன. (எக்கனாமிக் டைம்ஸ், மே 19, 2018)

13,175 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்திருக்கும் எலெக்ட்ரோ ஸ்டீல்ஸ் நிறுவனத்தை கொலைகார வேதாந்தா நிறுவனம் 5,320 கொடுத்துக் கையகப்படுத்தியதில், வங்கிகள் தள்ளுபடி செய்த தொகை 7,855 கோடி ரூபாய்.

ரிசர்வ் வங்கியால் திவால் சட்டத்தின் கீழ் ஏலத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பூஷண் ஸ்டீல்ஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஸ்டீல்ஸ் உள்ளிட்ட 12 பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் விற்பனை மூலம் வங்கிகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை திரும்பக் கிடைக்கும் எனக் குறிப்பிட்டு, “இனி வங்கிகள் உங்களைத் துரத்தப் போவதில்லை, நீங்கள்தான் வங்கிகளைத் துரத்தப் போகிறீர்கள்” எனப் பீற்றிக் கொண்டிருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி.(இந்து, அக்.29, பக்.15)

இந்த விற்பனையின் மூலம் வங்கிகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கிடைக்கக்கூடும் என்பது உண்மைதான். ஆனால், இந்த 12 நிறுவனங்களின் மொத்த வாராக் கடனில் வங்கிகள் தள்ளுபடி செய்யவுள்ள தொகை என்ன என்பதும், அதனை நிதியமைச்சர் ஏன் சொல்ல மறுக்கிறார் என்பதும்தான் கேள்வி. இந்த 12 நிறுவனங்களில் மொத்த நிலுவையான 2,29,180 கோடி ரூபாயில், வங்கிகள் 47 சதவீதத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிறது. இந்த விற்பனையில் வங்கிகள் பாதிக்குப்பாதி நட்டமடையவுள்ளன எனில், அருண் ஜெட்லி மக்களின் காதில் பெரிய தாமரைப் பூவையல்லவா சுற்றப் பார்க்கிறார்!

வங்கிகளிடம் கடன் வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகள் குண்டர்களாலும், போலீசாலும் தாக்கப்படுகிறார்கள். கல்விக் கடன் வாங்கிய பெற்றோர்களும், மாணவர்களும் வங்கி அதிகாரிகளால் அவமதிக்கப்படுகிறார்கள். கடனில் வாங்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் தூக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் கடன் வாங்கிய சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் இத்தகைய அவமானங்கள், தண்டனைகள் எதையும் கார்ப்பரேட் முதலாளிகள் மீது திவால் சட்டம் திணிக்கவில்லை. மாறாக, திவால் சட்டத்தின் கீழ் ஏலத்திற்கு வரும் நிறுவனங்களைக் கடன்கார முதலாளிகள்கூட அடிமாட்டு விலைக்கு வாங்கிப்போட்டுக் கொள்வதற்கு அனுமதிக்கிறது, இச்சட்டம்.

வாராக் கடனை வசூலிக்கும் பொருட்டு ஏலத்தில் விடப்பட்ட எஸ்ஸார் ஸ்டீல்ஸ் இதற்கொரு உதாரணம். வங்கிகளுக்கு 45,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாத எஸ்ஸார் ஸ்டீல்ஸ் நிறுவனத்தைத் தேசங்கடந்த தொழில் கழகமான ஆர்சலர் மிட்டல் 42,000 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தின் யோக்கியதை என்ன?

அந்நிறுவனம் பங்குதாரராக இருந்த உத்தம் கல்வா ஸ்டீல்ஸ் நிறுவனமும், கஸ்ட்ராய் சர்வீசஸ் நிறுவனமும் இந்திய வங்கிகளிடம் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாததால் வாராக் கடன் நிறுவனங்களாகப் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. மேலும், ஆர்சலர் மிட்டல் பங்குதாரராக உள்ள ஹெச்.பி.சி.எல்.-மிட்டல் எனர்ஜி நிறுவனமும் இந்திய வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வாராக் கடனாளியாக இருந்து வருகிறது.

இதனைவிட அயோக்கியத்தனம் ஒன்றும் எஸ்ஸார் ஸ்டீல்ஸ் ஏலத்தின்போது நடந்தது. அந்நிறுவனத்தை ஏலத்தில் எடுக்க நியூமெட்டல் நிறுவனமும் போட்டியிட்டது. இந்த நியூமெட்டல் நிறுவனத்தின் முக்கியமான பங்குதாரர்களுள் ஒருவர் ரேவந்த் ருயா. இவர் எஸ்ஸார் ஸ்டீல்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவந்த ருயா குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஒருபுறம் எஸ்ஸார் ஸ்டீல்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் ருயா குடும்பம் வங்கிகளுக்குப் பட்டை நாமம் போடுகிறது. இன்னொருபுறத்தில், ஏலத்திற்குக் கொண்டுவரப்பட்ட எஸ்ஸார் ஸ்டீல்ஸ் நிறுவனம் தமது கையைவிட்டுப் போகாமல் இருக்க கொள்ளைப்புற வழியில் மூக்கை நுழைக்கிறது, ருயா குடும்பம்.

பினாமிகளை வைத்து ஏலத்தில் எடுப்பதைவிடக் கேடுகெட்ட சூது இது. ஆனால், திவால் சட்டமோ இந்த சூதைச் சட்டபூர்வ நடவடிக்கையாகக் கருதி அங்கீகரிக்கிறது.
மோடி அரசு வாராக் கடன்களை வசூலிப்பதில் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்குக் காட்டிவரும் இவை போன்ற சலுகைகளெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். வாராக் கடன் குறித்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் கருத்தே கார்ப்பரேட்டுகள் நடத்திவரும் வங்கிக்கொள்ளைக்குச் சாதகமானது.

‘‘தவணை தவறிய கடன்களை வாராக் கடன்கள் என வரையறுப்பதே, மேற்கத்திய நாடுகளின் விதிகளை ஏற்றுத்தான். அதுவே, நம் நாட்டு நிதி, வங்கித் தொழில் சூழலுக்கு ஏற்ற விதிகள் அல்ல” எனக் குறிப்பிடுகிறார், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான குருமூர்த்தி. (துக்ளக், 25.4.2018) வாராக் கடன்கள் குறித்த வரையறையை மட்டுமல்ல, வாராக் கடன்கள் இருப்பதையே இதன் மூலம் மறுக்க முயலுகிறார், குருமூர்த்தி.

படிக்க :
♦ ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?
♦ நரேந்திர மோடி – நீரவ் மோடி : ஹம் ஆப் கே ஹை கோன் ?

மேலும், விஜய் மல்லையா திட்டமிட்டு வங்கிகளை ஏமாற்றவில்லையென்றும், வியாபாரத்தில் நட்டமேற்பட்டதால்தான் அவரது கடன்கள் முடங்கின என்றும் எழுதி விஜய் மல்லையாவிற்கு வக்காலத்து வாங்கும் குருமூர்த்தி, அவர் நம்பும்படியான வங்கி உத்தரவாதம் அளித்தால், அதை ஏற்று, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடனைத் திரும்பப் பெற்று, வழக்குகளை முடித்துக் கொள்வதுதான் உத்தமம் என மோடி அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார். (துக்ளக், 25.7.2018)

இப்படிப்பட்ட உத்தமர்களின் ஆட்சி திருடர்களைத்தான் பாதுகாக்குமேயொழிய, பொதுச் சொத்துக்களையோ, பொதுப் பணத்தையோ நிச்சயமாகப் பாதுகாக்காது. இந்த உண்மையைத் திவால் சட்டத்தைவிட, “விஜய் மல்லையா இலண்டனுக்குத் தப்பிச் சென்ற” கதை துலக்கமாக அம்பலப்படுத்துகிறது.

மல்லையாவை வழியனுப்பி வைத்த மோடி

விஜய் மல்லையா வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்தக் கோரும் நோட்டீசை அனைத்து விமான நிலையங்களுக்கும் கடந்த அக்.16, 2015 அன்று சி.பி.ஐ. அனுப்பி வைத்தது. பிறகு, இந்த நோட்டீஸ் விஜய் மல்லையாவைத் தடுக்கத் தேவையில்லை, அவரது வருகை குறித்துத் தகவல் தெரிவித்தால் போதும் என்றவாறு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த மாற்றம்தான், மார்ச் 2, 2016 அன்று விஜய் மல்லையா தனது சொத்துபத்துக்கள், இத்யாதி, இத்யாதிகளோடு, மிகவும் எளிதாக, சாதாரண பயணியைப் போல விமானம் ஏறி இலண்டனுக்குத் தப்பிச் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது.

‘‘மிகவும் முக்கியமான இந்த வழக்கில், பிரதமர் மோடிக்குத் தெரியாமல், அவரின் ஒப்புதல் இல்லாமல் நோட்டீசில் மாற்றம் நடந்திருக்காது. மோடிக்கு நெருக்கமான, குஜராத் பிரிவைச் சேர்ந்த ஏ.கே.ஷர்மா என்ற சி.பி.ஐ. அதிகாரிதான் நோட்டீசை மாற்றினார்” என வெளிப்படையாகவே குற்றஞ்சுமத்தியிருக்கிறார், ராகுல் காந்தி.

இக்குற்றச்சாட்டுக்கு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறது, சி.பி.ஐ. “ஒரு இளம் அதிகாரி தடுக்கவும் என்பதற்குப் பதிலாகத் தகவல் தெரிவிக்கவும்” எனத் தவறாக நோட்டீசைத் திருத்திவிட்டதாக நகைக்கத்தக்க பதிலை அளித்துப் பிரதமர் அலுவலகத்தைக் காப்பாற்ற முயன்றது, சி.பி.ஐ. இந்தப் பதிலை ஊரே காறித் துப்பிய பிறகு, “விஜய் மல்லையாவைத் தடுத்துக் கைது செய்வதற்கு சி.பி.ஐ.யிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை” என வெளிப்படையாகவே விஜய் மல்லையாவிற்கு ஆதரவான விளக்கத்தை அளித்தது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு தேவையில்லைதானே!

விஜய் மல்லையாவைக் காப்பாற்ற சி.பி.ஐ. எட்டடி பாய்ந்தால், அருண் ஜெட்லியின் நிதியமைச்சகமோ பதினாறு அடி பாய்ந்தது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை விஜய் மல்லையா சந்தித்தது, அப்பொழுது தான் இலண்டனுக்குச் செல்லவிருப்பதை அருண் ஜெட்லியிடம் விஜய் மல்லையா தெரிவித்தது மட்டுமல்ல, இவ்விவகாரத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடந்துகொண்ட விதம் விஜய் மல்லையாவைக் காப்பாற்ற நிதியமைச்சகம் உள்ளடி வேலை செய்திருப்பதைப் பச்சையாகவே அம்பலப்படுத்திவிட்டது.

விஜய் மல்லையா இலண்டனுக்குத் தப்பிச் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, பிப்ரவரி 28, 2016, ஞாயிறு அன்று, ஸ்டேட் பாங்க் அதிகாரிகள், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் துஷ்யந்த் தவேயைச் சந்தித்து, விஜய் மல்லையாவைத் தப்பிச் செல்லவிடமால் தடுப்பது குறித்து ஆலோசனை கேட்டிருக்கிறார்கள்.

“மறுநாளே உச்ச நீதிமன்றத்தை அணுகி, அவரைத் தடுப்பதற்குரிய ஆணையைப் பெறுமாறு” கூறியிருக்கிறார், தவே. ஆனால், வங்கி அதிகாரிகள் உடனடியாக அணுகாமல் தாமதம் செய்ததைப் பயன்படுத்திக்கொண்ட விஜய் மல்லையா, மார்ச் 2 அன்று நாட்டைவிட்டு வெளியேறித் தப்பினார்.

இந்த தாமதத்திற்கும் நிதியமைச்சகத்துக்கும் தொடர்பில்லை; வங்கி அதிகாரிகள்தான் காரணம் என நம்புவதற்குக் காதில் தாமரைப் பூவைத்தான் நாம் சுற்றிக்கொள்ள வேண்டும்.

காங்கிரசை விஞ்சும் மோடி

முந்தைய காங்கிரசு கூட்டணி அரசுதான் வங்கிப் பணத்தைக் கடனாக வாரிவாரியிறைத்து, வங்கிகளின் மீது வாராக் கடன் சுமையை ஏற்றிவைத்தது எனக் குற்றஞ்சுமத்தி வருகிறது, மோடி-அருண் ஜெட்லி கும்பல். இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாதுதான். அதேசமயம், காங்கிரசின் தயவில் கடன் வாங்கிவிட்டு, வங்கிகளை ஏமாற்றி வரும் கார்ப்பரேட் முதலாளிகளை மோடி அரசாங்கம் ஒதுக்கி வைத்துவிட்டதா என்ன?

96,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வைத்திருக்கும் அதானி குழுமம், ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத்தை வாங்குவதற்குத் தரகு வேலை பார்த்த பிரதமர் மோடி, அதற்காக ஸ்டேட் பாங்க் மூலம் அதானிக்கு 100 கோடி டாலர் வரை கடனாகக் கிடைப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்தார்.

1,25,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வைத்திருக்கும் அனில் அம்பானியின் திருபாய் அம்பானி குழுமத்திற்கு 30,000 கோடி ரூபாய் பெறுமான ரஃபேல் போர் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் கிடைப்பதற்குத் தரகு வேலை பார்க்கிறார், பிரதமர் மோடி.

இவை ஒருபுறமிருக்க, மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு அதானி குழுமம், தனது கடன் தவணைகளைச் செலுத்துவதற்காக வங்கிகள் மூலம் 15,000 கோடி ரூபாய் மறு அடமானக் கடன் (refinance) பெற்றது. நாட்டிலேயே முதல் பெரும் கோடீசுவரர் என்ற பட்டத்தோடு வலம் வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கேஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு 4,500 கோடி ரூபாய் மறு அடமானக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.

ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த சமயத்தில், பெருமளவு வாராக் கடன்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் குறித்துப் பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அளித்திருக்கிறார். “இந்த அறிக்கையின் மேல் பிரதமர் அலுவலகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை இதுவரையில் நான் அறியவில்லை” என வாராக் கடன் குறித்த நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார், ரகுராம் ராஜன்.

அவர் அனுப்பிய அறிக்கையில் நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரின் பெயர்களும் இருந்ததாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, காங்கிரசு.

அனுமான ஊழலும் உண்மை ஊழலும்

2ஜி அலைக்கற்றை விற்பனையில் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நட்டத்தை ஊழல் எனக் குற்றஞ்சுமத்தலாம் என்றால், வாராக் கடன் தள்ளுபடியால் பொதுத்துறை வங்கிகள் அடைந்துவரும் நட்டத்தையும் ஊழல் என்றுதான் குற்றஞ்சுமத்த முடியும்.

அரசின் கொள்கை முடிவு என்றாலும், 2ஜி அலைக்கற்றைகளைக் குறைந்த விலைக்கு விற்றது முறைகேடானது என்றால், திவால் சட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்படும் வாராக் கடன்களும் முறைகேடானதுதான்.

படிக்க:
♦ கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை
♦ 2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்

அலைக்கற்றை விற்பனையில் 30,000 கோடி ரூபாய் முதல் 1.76 இலட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட பல நட்டக் கணக்குகளும் அனுமானங்கள்தான். ஆனால், வாராக் கடன் தள்ளுபடியில் அப்படியான அனுமானக் கணக்குகள் எதுவுமில்லை. மோடி அரசு பதவியேற்ற மூன்றே ஆண்டுகளில் 2,41,000 கோடி ரூபாய் பெறுமான வாராக் கடன்களைப் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பதாக நிதியமைச்சகம் நாடாளுமன்ற மேலவையில் ஒப்புக் கொண்டிருக்கிறது. (பிஸினஸ் டுடே, ஏப்.4, 2018).

இதோடு, பொதுத்துறை வங்கிகள் கடந்த நான்காண்டுகளில் வாராக் கடன்களை ஈடுகட்ட தமது இலாபத்திலிருந்து ஒதுக்கிய தொகையும் கணக்கிட்டால், பொதுத்துறை வங்கிகள் அடைந்திருக்கும் நட்டம் ஏறத்தாழ 9 இலட்சம் கோடி ரூபாய்.

அனுமானமாக ஊதிப் பெருக்கப்பட்ட 2ஜி ஊழல் தொகையைக் காட்டிலும் ஐந்து மடங்கிற்கு மேல் பெரியது மோடி ஆட்சியில் நடந்துள்ள வாராக் கடன் ஊழல்.

பிரதமர் நரேந்திர மோடி தன்னை நாட்டின் காவலாளி என அடிக்கடி பீற்றிக் கொள்வார். உண்மையில் அவர் கஜானா கொள்ளையன் என்பதைத் திவால் சட்டமும், வாராக் கடன் தள்ளுபடிகளும் அம்பலப்படுத்திவிட்டன.

– ஆர்.ஆர்.டி.
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart