குமரி மீனவர்கள் மீளாத்துயரில் ஆழ்த்திய ஒக்கி புயலின் ஓராண்டு நிறைவில் டெல்டா மாவட்டங்களுக்கு அழிவைக் கொண்டு வந்தது கஜா புயல். இப்புயலில் 64-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். விவசாயிகள், கூலி விவசாயிகள், விவசாயம்சார் சிறுதொழில்கள், முறைசாரா தொழிலாளர்கள், மீனவர்கள் என இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்தன.
வீடுகள் – குடிசைகள், மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தரைமட்டமாகின. புயல் குறித்த முன்னெச்சரிக்கைகளையும் புயல் நிவாரண முகாம்கள் என்ற பெயரில் உணவும் நீரும் கூட இல்லாத கட்டிடங்களில் மக்களை அடைத்து வைத்ததையும் பெரும் சாதனையாக பீற்றியது எடப்பாடி அரசு. இதற்கு ஊடகங்கள் பாராட்டு!
கடன் வாங்கி தென்னை, மா, நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நிற்கதியாக நின்றனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்துக்கே உணவளித்த டெல்டா மக்கள், ஒருவேளை உணவுக்கு ஏதேனும் நிவாரண வண்டி வராதா, என வீதிகளில் காத்து நின்றனர். அப்போது முதலமைச்சர் எடப்பாடி மாமனார் வீட்டில் விருந்துக்கு சென்றிருந்தார். மோடியோ வட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஆத்திரம் கொண்ட மக்களோ மறியல் செய்தும் நேரில் வந்த அமைச்சர்களை விரட்டியடித்தும் போராடினர்.
ஒரு வாரம் கழித்து வந்தது மத்திய ஆய்வுக்குழு புயலைவிட வேகமாக பார்வையிட்டு பறந்து சென்றது. அதன் பிறகு மோடி அரசு வெறும் ரூ.353 கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளது.
கடும் உழைப்பிற்கு பெயர் பெற்ற டெல்டா மாவட்ட விவசாயிகள் இனி என்ன செய்ய முடியும் ? டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக்கி அதானிக்கும் அனில் அகர்வாலுக்கும் தாரைவார்க்கத் துடிக்கும் மோடி அரசிடம் நிலங்களை ஒப்படைத்து விட்டு சொந்த நாட்டில் அகதிகளாக அலைய வேண்டுமா?
கஜா புயலின் அழிவு இயற்கையானது. ஆனால் மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் கூட வழங்கத் தகுதியற்ற இந்த அரசுகள் ஏற்படுத்தியிருக்கும் அழிவுகள் இயற்கையானதல்ல.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
“அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு ! “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
கதவுல தொத்திக்கிட்டிருக்கும் போதே கடலோட போயிருந்திருக்கலாம்…!
தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, கூலி சேமிப்பு எல்லாம் அழிந்தது !
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க.. நாங்க உயிரோட வந்துட்டோம் !
தென்னை விவசாயிகள் மட்டுமல்ல தேங்காய் வியாபாரிகளும் தப்பவில்லை !
வளவன்புரம் : தென்னங்கீற்று பின்னும் வடுவம்மாளின் வாழ்க்கை !
மண்ணில் புதைந்திருந்த மரவள்ளிக் கிழங்குகளும் தப்பவில்லை!
புயல்ல வீடு போனது பிரச்சினையில்லை படகு போனதுதான் கவலையா இருக்கு!
மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்!
மண்ணில் புதைந்த கொல்லுப்பட்டறை !எது முன்னெச்சரிக்கை ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி !
சுனாமியில் பெற்றோரை பலி கொடுத்த பாத்திமா கஜா புயலில் பிள்ளையைப் பறிகொடுத்தார் !
எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்!
எங்க ஓட்டு செல்லும்போது, எங்க உயிர் மட்டும் செல்லாதா ?
புயல் வேகத்தில் சேதங்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழு !
எங்களுக்கு மட்டும் ஆசையா? இப்படி ரோட்டுல நின்னு சாப்பிடுறதுக்கு !
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
ஆணவப் படுகொலைகளை சட்டம் இயற்றித் தடுத்து விடமுடியுமா?
சாதிமறுப்பு திருமணம் செய்வோர்க்கு அரசு, பாதுகாப்பு உணர்வை எந்தளவிற்கு தர முடியும்?
– மா.பேச்சிமுத்து.
அன்புள்ள பேச்சிமுத்து,
ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சட்டம் இயற்றப்படுவது அவசியம்தான். ஆனால் அத்தகைய புதிய சட்டம் மட்டுமே அப்படுகொலைகளை தடுத்து நிறுத்தி விடாது. ஏற்கனவே சிவில் சமூகத்தில் நடக்கும் கொலைகளை தடுப்பதற்கும் சட்டம் இருக்கிறது. இருப்பினும் சமூக வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆத்திரம் அடைந்த நபர்கள் கொலை செய்கிறார்கள். இது ஆணவப் படுகொலைகள் விசயத்திற்கும் பொருந்தும்.
சிவில் சமூக வன்முறைகளுக்கும், சாதி மத கொலைகளுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. முன்னது கணநேரத்தில் அடையும் ஆத்திரம் காரணமாகவும், பின்னது காலம் காலமாய் ஊட்டி வைக்கப்பட்ட சாதி மத ஆதிக்க உணர்வு மற்றும் பிற்போக்கு நம்பிக்கை காரணமாகவும் நடக்கிறது. பின்னதில் தத்தமது சாதி – மத நலனை காப்பாற்ற அவர்கள் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார்கள். பெற்ற மகளைக் கூட வெட்டிக் கொல்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை.
இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வளர்ச்சியடைந்த காலத்தில் சாதிவெறியின் சாதிப் பெருமையும் நாடு தழுவியதாக மாறி இருக்கிறது. உடுமலைப் பேட்டையில் மட்டுமல்ல ஹைதராபாத் நகரிலும் பட்டப்பகலில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இந்தி பேசும் மாநிலங்களில் இவை ஆங்காங்கே நடக்கும் யதார்த்தமாக இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் வெளிப்படும் அதிர்ச்சிகள் கூட அங்கே இருப்பதில்லை.
அதேநேரம் இதே காலத்தில்தான் சாதி மறுப்பு திருமணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தும் வருகின்றன. எதிரும் புதிருமாக உள்ள சாதிகள் கூட சமூக வாழ்வில் சந்தித்து பயணிக்கும் சூழலை இக்காலம் ஏற்படுத்தி தருகிறது. காதலிலும் திருமணத்திலும் சாதி பாராட்டுவதை தவிர்ப்பது என்ற நாகரிக வளர்ச்சியும் பரவி வருவதைப் பார்க்கிறோம். இந்த முரண்பாட்டை எப்படிப் புரிந்து கொள்வது?
காந்தி காமராஜ் காலத்தில் சமூகத்தில் பெரிய அளவுக்கு சாதி கலவரங்கள் இல்லாமல் அமைதியாக இருந்தது என்பார்கள் (இவர்கள் காலத்தில் சங்கபரிவாரங்கள் பல கலவரங்களை நடத்திருக்கின்றன). இதில் பாதிதான் உண்மை. அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மீது ஏவப்படும் தீண்டாமைக் கொடுமைகளை அக்காலத்தில் எதிர்க்க முடியவில்லை. அந்த எதிர்ப்பை சாத்தியமாக்கும் பொருளாதார அடித்தளத்தை அப்போது அவர்கள் பெற்றிருக்கவில்லை.
கொடியங்குளம் கலவரத்திற்கு பிந்தைய காலத்தில் அப்படி எதிர்க்கும் நிலையினை அம்மக்கள் பெற்றிருக்கிறார்கள். அதேபோன்று ஆதிக்கசாதி சமூகத்தை சேர்ந்த மக்களிடத்திலும் சாதி பாராட்டுவது தவறு என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. ஆகவே சாதிவெறிக்கு எதிராக இப்போது தட்டிக்கேட்பது அதிகரித்திருக்கிறது. அதற்கு இணையாக ஆணவப் படுகொலைகளும் அதிகரித்து வருகின்றன.
இதை தடுத்து நிறுத்துவதற்கு சட்டம் மட்டுமல்ல சமூகத்திலும் பல பண்பாட்டு போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் திட்டமிட்டு சாதி தீண்டாமை மறுப்பு மணங்கள் அதிகம் நடத்தப்படவேண்டும். இடதுசாரி முற்போக்கு அமைப்புக்கள் அனைத்தும் இத்தகைய திருமணங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்து நடத்த வேண்டும். அப்படி சில அமைப்புகள் நடத்தியும் வருகிறார்கள். தமிழகத்தில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் அனைத்தும் இத்தகைய திருமணங்களை ஊரறிய அழைப்பிதழ் போட்டு பொதுக் கூட்டமாக நடத்துகின்றன.
தர்மபுரியில் இளவரசன் கொல்லப்பட்ட காலத்திலேயே இந்த அமைப்புகள் சாதி தீண்டாமை மறுப்பு மணம் ஒன்றை ஊரறிய ஊர்வலமாக அதே மண்ணில் நடத்தினர். இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறத்தில் திரைப்படம் ஊடகம் போன்றவற்றிலும் இத்தகைய கருத்துக்கள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். சாதிவெறியை ஊக்குவிக்கும் கலைப்படைப்புகள் தடை செய்யப்பட வேண்டும்.
மேலும் ஆணவப் படுகொலை நடக்கின்ற பொழுது தொடர்புடைய சாதியைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த சாதிவெறியர்களை கண்டிக்கும் நிலையையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.
இப்படித்தான் சாதிவெறி கொண்ட ஒரு தனி மனிதரிடத்திலிருந்தும் சாதி வெறி பிடித்த சில கும்பலிடம் இருந்தும் மற்ற மக்களை பிரித்து தனிமைப்படுத்த முடியும். இவையெல்லாம் தொடர்ந்து நடக்க நடக்க இத்தகைய கொலைகள் நடக்காத வண்ணம் சூழலை உருவாக்க முடியும்.
இரண்டாவதாக சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு அரசு முழுமையாக ஒரு பாதுகாப்பு உணர்வை தந்துவிட முடியாது. இது ஒரு எதார்த்தம். சமூக ஆர்வலர்கள் கூறுவதுபோல சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கலாம். அதேபோன்று அத்தகைய திருமணம் செய்வோருக்கு அரசின் நலத்திட்டங்கள் பலவற்றை அளிக்கலாம்.
தருமபுரி பென்னாகரத்தில் சாதி மறுப்பு மண விழா ஊர்வலம்
கூடுதலாக அப்படி திருமணம் செய்வோர் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு போலீஸ், நீதிமன்றம், இதர அதிகாரவர்க்க துறைகளை பயிற்றுவிப்பது தான் மிகப்பெரிய பிரச்சனை. ஏனெனில் ஆதிக்க சாதிவெறி என்பது பெரும்பான்மை பலத்தை வைத்து ஒரு சிறு கும்பல் நடத்துவது என்பதால் அத்தகைய சாதிக் கண்ணோட்டம் மேற்கண்ட அரசு அமைப்புகளிலும் ஊடுருவி இருக்கின்றது. இதை சரி செய்து திருத்துவது அரசின் கையில் இல்லை. அதை மக்களாகிய நாம்தான் போராடி செய்ய வேண்டும். ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஆதிக்க சாதிகளின் விதிமுறைக்கேற்பவே அரசியல் களத்தில் செயல்படுகின்றன. இதையும் நாம் உடைக்க வேண்டும்.
காதல் மணம் செய்யும் தம்பதியினர் போலீஸ் நிலையம் சென்றால் அங்கே அவர்களுக்கு முழுமுற்றான பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக ஆதிக்கசாதி தரப்பிலுள்ள குடும்பத்தை சமாதானப்படுத்தும் விதத்திலேயே நடந்து கொள்கிறார்கள். இது எல்லா துறைகளிலும் நடக்கிறது.
இதையும் நாம் பொது சமூகத்தின் போராட்டத்தினால் மட்டுமே மாற்ற முடியும். அத்தகைய குற்றங்கள் தவறுகள் செய்யும் அரசு அதிகாரிகள் அனைவரும் பொதுவெளியில் கண்டிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்குமாறு நாம் போராட வேண்டும். இதன்போக்கில் அரசு மட்டத்தில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
இறுதியில் முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் சமூகத்தில் இந்த பிரச்சனையை எப்படி பிரச்சாரம் செய்து கொண்டு செல்கிறார்கள், அதை மக்கள் எப்படி ஏற்கிறார்கள் என்பதை பொறுத்தே ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதில் நாம் முன்னேற முடியும். மேலும் இந்தப் போராட்டம் என்பது தனித்து நடக்கும் ஒன்றல்ல. அரசியல் – பொருளாதாரப் போராட்டங்களின் வீச்சுக்கேற்பவே சமூகரீதியான மாற்றங்களும் போராட்டங்களும் இருக்கும்.
இந்தியர்கள் குறித்து பாகிஸ்தானியர்கள் என்ன நினைக்கிறார்கள்? சமீபத்தில் கர்தார்பூர் புனித யாத்திரை பாதையை திறந்து வைத்த பாகிஸ்தான் அரசு, அந்த நிகழ்ச்சிக்காக இந்திய பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த எகனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் கே. கே. ஸ்ருதிஜித் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பாகிஸ்தானின் இந்தியத் தன்மை!
முதன்முதலாக பாகிஸ்தான் வரும் இந்தியருக்கு, தான் பஞ்சாபின் கிராமப்புறத்தில் இருப்பது போன்ற உணர்வே ஏற்படும். இந்தியாவின் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானில் பஞ்சாபின் அறுவடை முடிந்த நிலங்கள் எரிக்கப்படும் மணத்தை நுகர முடிகிறது. லாகூர் நகரம், இந்தியாவின் லக்னௌ அல்லது சாந்தினி சவுக்-ஐ நினைவுபடுத்துகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் உங்கள் முழங்கையை உரசிக்கொண்டு போவதும் குழந்தைகள் திறந்து கிடக்கும் சாக்கடையில் விழுந்துவிடாதவாறு பார்த்துப் போவதும் இந்தியாவின் பழைய நகரங்களின் சாயலைக் கொண்டுள்ளது. நம்மை போலவே அவர்களும் மற்றொரு நகரத்தின் மீது பொறாமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். கராச்சிக்காரர்களுக்கு லாகூர் நெருக்கடிமிக்க, சிறு சிறு குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரம். லாகூர்காரர்களுக்கு கராச்சியின் உணவு பிடிக்காது.
கர்தார்பூர் புனித யாத்திரைக்காக பாதை திறந்த பாகிஸ்தான் அரசு
இந்திய நகரங்களுக்கும் பாகிஸ்தான் நகரங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம். பாகிஸ்தானில் நிறைந்திருக்கும் பாதுகாப்பு. பாதுகாப்பு என்றால் நம்மூர் கருப்பு உடை அணிந்த கமாண்டோக்கள் அல்ல, இவர்கள் கைகளில் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர். பாதுகாப்புக்காகத்தான் அவர்கள் நிறுத்தப்படுகிறார்கள் என்றாலும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை வெளிக்காட்டிக் கொள்ளவும் அப்படிச் செய்கிறார்கள்.
பயங்கரத்தை நினைவுபடுத்தும் தெருக்கள்!
நகரங்களின் வழியாக நீங்கள் சென்று கொண்டிருக்கும்போது, கடந்த காலத்தின் பயங்கரத்தை உங்களால் உணர முடியும். 2009-ஆம் ஆண்டில் இஸ்லாமாபாத்தின் மெரியாட் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சக பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். லாகூரின் தெருக்களை கடந்து சென்ற போது, ‘நண்பர் ஒருவர் இதோ இங்கேதான் கடாஃபி ஸ்டேடியத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என்றார்.
தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட ஒவ்வொரு இடத்தையும் கடக்கும் போதும், அங்கே பாதுகாப்பு அதிகாரிகள் நின்று கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அவ்வவ்போது ‘இது இங்கே வழக்கமான நிலைமைதான்’ என சொல்லிக் கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில், உலகின் மிக அபாயமான நாடுகளில் ஒன்றில் இருக்கிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நாங்கள் பாகிஸ்தான் சென்றிருந்த வாரத்தில் தாரீக் ஐ லபைக் பாகிஸ்தான் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு அங்கே தலைப்பு செய்தியாக இருந்தது. இந்தக் கட்சியின் தலைவர் மதபோதகர் காதிம் உசைன் ரிஸ்வி, பாகிஸ்தானில் கொண்டு வரப்பட்ட மத நிந்தனை சட்டத்தை ஆதரித்து பேசி மக்கள் செல்வாக்கு பெற்றவர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில கவர்னராக இருந்த சல்மான் தசீர், இந்தச் சட்டத்தை ‘கருப்புச் சட்டம்’ எனக் கூறியதால் கொல்லப்பட்டார்.
தாரீக் ஐ லபைக், மக்கள் செல்வாக்கு (இந்துத்துவ கும்பல் போல, ஆர்ப்பாட்டம் செய்வது, தெருச்சண்டையில் இறங்குவது) பெற்றிருந்த போதும், தேர்தல் அரசியலில் அக்கட்சிக்கு பின்னடைவே கிடைத்தது. இந்த ஆண்டு நடந்த தேர்தலில் மதவாதம் பேசும் கட்சிகள் பின்னடைவை சந்தித்திருக்கின்றன. அதுபோல, ஆயுதம் தாங்கிய அமைப்புகளின் ஆதரவு பெற்ற கட்சிகளுக்கும் இதே நிலைமைதான்.
தாரீக் ஐ லபைக் 150 இடங்களில் போட்டியிட்டு இரண்டே இடங்களில் வென்றது. ஆனால், தொடங்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் பாகிஸ்தானின் ஐந்தாவது பெரிய கட்சியாக அது உருவெடுத்துள்ளது. தற்போதைய பிரதமர் இம்ரான்கான், இதன் தலைவர் மீது தீவிரவாதம் மற்றும் தேச துரோக வழக்கை போட்டிருக்கிறார்.
மக்கள் என்ன சொல்கிறார்கள்?
நான் சொல்வது வழக்கமானதாக இருக்கலாம். ஆனால், இந்தியர்களை பாகிஸ்தானியர்களின் கணிவுடன் வரவேற்கிறார்கள். சக பாகிஸ்தானியரைப் போல அன்பையும், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது தள்ளுபடியும் தருகிறார்கள். நான் பேசிய அத்தனை பாகிஸ்தானியரும் உள் அன்போடு இதை வெளிப்படுத்தினார்கள், அவர்களிடம் உண்மையைக் காண முடிந்தது. ஆனால், இந்திய சமூக ஊடகங்கள் இதை மாற்றிக் கொண்டிருக்கின்றன என்பது வேதனைக்குரியது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஆடை வடிமைப்பாளர் மியான் நோமான் மற்றும் அவரது நண்பர்களை சந்தித்தேன். மியானின் அம்மா இந்தியாவின் லூதியானாவில் பிறந்தவர். மற்ற இரண்டு நண்பர்களின் வேர்களும் இந்தியாவில் இருந்தது. மியானின் நண்பர்களில் ஒருவரான சாபி ஸெக்ரா என்னிடம் மெதுவாக, “சமூக ஊடகங்களில் இந்தியர்கள், ஏன் எங்கள் மீது இவ்வளவு வெறுப்பாக இருக்கிறார்கள்?” எனக் கேட்டார்.
தொடர்ந்த அவர், “நான் அவர்களிடம் பேச முயற்சித்திருக்கிறேன். ஏனெனில் இந்தியாவின் மீது மதிப்பு வைத்திருக்கிறேன், என்னுடைய வேர்கள் அங்கே உள்ளன. ஆனால், அவர்கள் சமூக ஊடகங்களில் வெறுப்பை கக்குகிறார்கள். நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவள் என தெரிந்தவுடன் அவதூறு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்” என்றார். அவர் காயப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. அவரிடம் சொல்ல என்னிடம் நேர்மையான பதில் இல்லை.
இம்ரான் நியாசி
லாகூரில் உள்ள குல்பர்க்-2 குடியிருப்பு அருகே இருந்த சிறிய கடை ஒன்றில் செல்போன் ரீசார்ஜ் செய்யச் சென்றிருந்தேன். அங்கே இருந்த சிறிய குழு, ‘பாகிஸ்தான் – இந்தியா இடையே அமைதி நிலவ வேண்டும்’ என இம்ரான்கான் சொன்னது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். கடை பொறுப்பாளரான் இம்ரான் நியாசி, அதுபற்றி என்னிடம் பேசினார். “இரண்டு நாடுகளுக்கும் எல்லை இருக்கக்கூடாது. நாம் அனைவரும் ஒரே மக்கள்” என பேசியவர், இரண்டு நாடுகளுக்குமிடையே அமைதி நிலவ வேண்டும் என்றார்.
“ஆனால், சமீப நாட்களில் இந்தியாவில் முசுலீம்கள் மோசமாக நடத்தப் படுகிறார்கள். நாங்கள் அந்த வாட்சப் வீடியோக்களை பார்க்கிறோம். அது மிகவும் எதிர்பாராதது. இன்னொரு வீடியோவையும் பார்த்தோம். அதில் சிலர் காசு தருகிறோம் பாகிஸ்தான் கொடியை எரிக்க முடியுமா எனக் கேட்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் அதைச் செய்தார்கள். மற்றவர்கள் எவ்வளவு காசு தந்தாலும் அதைச் செய்யமாட்டோம் என்றார்கள். அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என வெளிப்படையாகப் பேசினார்.
நன்றி: தி எக்னாமிக் டைம்ஸ்
கண்ணுக்குத் தெரிந்த எதிரியை கட்டமைப்பதே தேசியவாதம்-மதவாதம்-இனவாதம் பேசும் வெறியர்கள் செய்யும் அடிப்படையான விசயம். இந்துத்துவா கும்பலுக்கு முசுலீம்களும் பாகிஸ்தானும் எதிரிகள். மோடி தலைமையிலான இந்துத்துவா கும்பல் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த ‘எதிரி’ உணர்வு நஞ்சாக பரப்பப் பட்டது.
முசுலீம்களுக்கு எதிரான கும்பல் கொலைகளை விமர்சித்த முசுலீம் பிரபலங்களை ‘பாகிஸ்தானுக்கு போ’ என்றார்கள். காஷ்மீர் பிரச்சினையை விவாதித்த மாணவர்கள் ‘பாகிஸ்தான் வாழ்கவென கோஷமிட்டார்கள்’ என வதந்தி பரப்பினார்கள். காங்கிரஸ் தேர்தல் வெற்றி களிப்பினால், ‘பாகிஸ்தான் கொடி’ பறந்ததாக வாட்ஸப் வதந்தி பரப்பினார்கள். இந்தியா வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஹோட்டலில் இடம் தரக்கூடாது என போராடி, சுற்றுலா பயணிகளை நடுத்தெருவில் நிறுத்தினார்கள்.
இப்படி இந்துத்துவ கும்பல், செய்துவரும் கீழ்தரமான பிரிவினை அரசியலை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்… ஆனால் பாகிஸ்தான் மக்கள் இந்திய மக்களை எப்படி நேசிக்கிறார்கள் என்பதை அங்கு செல்லும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார்கள். இங்கே இருக்கும் மதவெறி அங்கேயும் இருந்தாலும் அம்மக்கள் இங்கிருப்பது போல நம்மை வெறுக்கவில்லை. பாகிஸ்தான் மக்கள் மீதான துவேசத்தை இந்துமதவெறியர்கள் எப்படிக் கிளப்பினாலும் இதுவரை அம்மக்கள் அந்த வெறிக்கு எதிர்முகத்தை காட்டவில்லை. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் துடைத்தெறியப்படும் போது இந்த ஒற்றுமை உறுதிப்படும்!
எந்த நேரத்திலும், கேரள மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு முல்லைப் பெரியாறு அணை பலவீனமடைந்திருப்பதாகக் கேரள அரசு, உள்நோக்கத்துடன், மக்கள் நம்பும் வகையில் கற்பனையாகப் பிரச்சனையை உருவாக்கியதோடு, தனக்குச் சாதகமானதும், தேசிய நலனுக்குப் பாதகமானதுமான ஒரு தவறான இடைக்காலத் தீர்வைப் பெற்றுச் செயலாக்கி வருவதால், நாட்டின் முக்கியமான நீர்வளம், வறட்சியான பகுதிகளுக்குக் கிடைக்காமல் தொடர்ந்து வீணாக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரச்சினையை இழுத்து, ஒப்புக்கொண்ட பேச்சுவார்த்தைகளின் முடிவுகளுக்கோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கோ, கேரள அரசு கட்டுப்படாமல் இருந்து வரும் நிலையில், பிரச்சனை மீண்டும் உச்சநீதிமன்றம், உயர்மட்டக்குழு என இழுபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் 27.02.2006 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் செயலாக்க முடியாதபடி, கேரள மாநில அரசு தனது 2003-ம் வருட கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர் பாதுகாப்புச் சட்டத்தில், ஒரு முக்கிய திருத்தத்தை அனைத்துக் கட்சிகளின் முழு ஆதரவோடு கேரள சட்ட மன்றத்தில் கொண்டு வந்து இயற்கையான தர்ம நியாயம், மனித நேயம், அண்டை மாநிலத்துடனான இணக்கமான உறவு, தட்டுப்பாடான நீர்வளத்தை வீணாக்காமல் அதிகபட்சப் பலனைப் பெறும் வகையில் பயன்படுத்த வேண்டுமென்கிற தேசிய நலன் ஆகியவற்றை உதறித்தள்ளி விட்டது.
கிடைக்கக்கூடிய நீர்வளத்தை வீணாக விடாமல், திறம்படப் பயன்படுத்தும் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, நாட்டில் ஆங்காங்கே உள்ள உபரி நீர்வளத்தைத் தட்டுப்பாடுள்ள பகுதிகளுக்குப் பங்கிட்டு வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசும், அரசியல் நிர்வாகக் காரணங்களால், இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் உரிய முனைப்புடன் செயல்படாமல் பார்வையாளராக இருந்துவரும் நிலை.
முறை வைத்தாற்போல, கடந்த 40 ஆண்டுகளாக மாறி மாறித் தமிழகத்தை ஆண்டு வரும் பிரதான மாநிலக்கட்சிகளும், மாநில அளவில் குறுகிய நோக்கங்களுடன் சுயநலத்தோடு செயல்பட்டு வந்ததாலும், நமக்குத் தெரியாத பிற காரணங்களாலும் அவர்கள் கேரள அரசின் குறுகிய மாநில நோக்கத்தை முறியடிக்கத் தேவையான உறுதியுடன் செயல்படவில்லை . முல்லைப் பெரியாறு நீர்வளப் பங்கீட்டில் தனது மாநில உரிமையைப் பெறுவதில் ஆரம்பம் முதல் மெத்தனமாக இருந்துவிட்டதாலும், அதனால் ஏற்பட்டு வரும் தொடர் இழப்பையும், தாக்கத்தையும் பொதுமக்கள் சரியாக உணரமுடியாதபடி, அவர்களது இலவசத் திட்டங்கள் அரணாக இருந்து வருகின்றன, இதனால் பிற தன்னார்வ அமைப்புகளின் முனைப்பும், சிறிய அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளும் எடுபடவில்லை . எனவே, பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சார்பாகக் குரல் கொடுக்க வேண்டிய மாநில அரசின் நடவடிக்கைகளில் உரிய அழுத்தமும் வேகமும் இல்லாத நிலை .
விவசாயம்ஒரு நம்பகத் தன்மையற்ற, கட்டுப்படியாகாத தொழிலாக மாறிவிட்டதோடு, சமுதாயப் பார்வையில் விவசாயிகளின் மதிப்பு குறைந்துவிட்டதாலும், அவர்கள் மாற்றுத் தொழிலைத் தேடிக் கொண்டிருக்கும் போக்கு பரவலாகியுள்ளதாலும், முல்லைப்பெரியாறு பிரச்சனையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள பாசன விவசாயிகள்கூட இழந்துள்ள தங்களது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுவதில் மந்தமாக இருந்துவரும் நிலை.
இப்பிரச்சனையால், நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை முன்னிறுத்திப் போராட்ட முனையும் தென் தமிழகத்தைச் சார்ந்த அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுக்கும் விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசின் கவனத்தைச் சுண்டி. ஈர்க்கும் அளவிற்கு ஒட்டுமொத்த விவசாயிகளின் ஒத்துழைப்போ, போராட்டங்களைத் தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான பொருளாதார வசதியோ இல்லாத நிலை.
பத்திரிக்கைகள், அவ்வப்போது முல்லைப்பெரியாறு சம்பந்தப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றில் வெளிப்படும் பரபரப்புக் கருத்துக்களை மட்டும் வெளியிட்டுத் தங்களது கடமையில் திருப்தி அடைந்துவரும் நிலை.
முல்லைப் பெரியாறு : கம்பம், கூடலூர் பகுதிகளிலிருந்து வரும் மக்களை தடுத்த நிறுத்த குமுளி அருகே வேன்களை குவித்திருக்கும் போலீசு! (கோப்புப் படம்)
ஆக, சம்பந்தப்பட்ட முக்கியமானவர்கள் அனைவரும், முல்லைப் பெரியாறு பிரச்சனையின் தேசிய முக்கியத்துவத்தையும், அதன் பின்விளைவுகளையும் சரியாக உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை. அதனால்தான், பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதில் போதிய தீவிரம் காட்டாமல், மிகவும் மெத்தனமான முறையில் செயல்பட்டுப் பல வருடங்களாகத் தீர்வை எட்டமுடியாதபடி, முடக்கப்பட்டுள்ள பிரச்சனையாகி உள்ளது.
முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனையால் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் இழப்பின் தாக்கத்தைப் பொதுமக்கள் தற்போது உணராவிட்டாலும், வரும் காலங்களில், அதன் பின்விளைவுகள் தேசிய அளவில் மிகவும் கடுமையாக இருக்கப் போவது உறுதி என்பதால், இப்பிரச்சனையில் மத்திய அரசு உறுதியான கொள்கை முடிவை எடுத்துக் காலம் கடத்தாமல் ஒரு தீர்வுக்கு வழி செய்தால்தான், நாட்டின் நீர்த்தட்டுப்பாடுள்ள பகுதிகளின் வருங்கால நீர்த் தேவைகளைச் சமாளிக்க முடியும். இதில் மேலும் காலம் கடத்துவது பல பிரச்சினைகளுக்கு வித்தாகிவிடும்.
உண்மைகளின் வெளிச்சத்தில் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாகப் பிரச்சனையை அணுகினால், இரண்டு மாநிலங்களும் பயன்பெறக்கூடிய தேசிய நோக்கிலான ஒரு நடுநிலையான தீர்விற்கு வழியுள்ளது. இப்படிப்பட்ட தீர்வைக் காண்பதற்கு அடிப்படையாக இந்நூலில் தெளிவாக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மத்திய நீர்வள ஆணையத்திற்கோ (Central Water Commission), கேரள அரசு மற்றும் மத்திய அரசின் நீரியல் வல்லுநர்களுக்கோ தெரியாதவையும் அல்ல. அவர்களால் மறுக்கக்கூடியவையும் அல்ல. அவற்றைப் பொதுமக்களும் தெரிந்துகொண்டால்தான் பிரச்சினைக்கான சரியான தீர்வை மத்திய அரசு, அரசியலைக் கடந்த உறுதியுடனும், காலம் கடத்தாமலும் செயல் படுத்துவதற்கான அழுத்தத்தைத் தரமுடியும்.
இதனைக் கருத்தில் கொண்டு, முல்லைப் பெரியாறு சம்பந்தப்பட்ட இன்றைய பிரச்சனைகள், அதற்காகச் சொல்லப்படும் சொல்லப்படாத காரணங்கள் மற்றும் அறிவுப்பூர்வ அணுகுமுறை கொண்ட நடுநிலையான தீர்வு ஆகியவற்றை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக்குவதுதான் இந்நூலின் நோக்கமாகும்.
இதற்கு ஏதுவாக, முதலில், இந்தியா போன்ற பரந்த நாட்டின் நீர்வள வேறுபாடுகளையும் நீர்வளப் பங்கீட்டின் அவசியம் பற்றிய அடிப்படை விவரங்களையும் நூலின் நுழைவாயிலிலேயே தெரிந்து கொள்வது அவசியமாகும். இந்தியாவின் நீர்வள வேறுபாடுகளும் நீர்வளப் பங்கீட்டின் அவசியமும் உலகின் அனைத்து உயிரினங்களும் வாழ நீர் அத்தியாவசியமென்பதால், “நீரின்றி அமையாது உலகு எனப்பட்டது. நீருக்கான ஒரே ஆதாரம் மழை மட்டுமே ஆகும். மழைக்காலங்களில் ஏற்படும் நீரோட்டம் ஒடைகளாகி, பின்பு ஆறுகளாகி, அவை நிலச்சரிவின் போக்கிலேயே பாய்ந்து செல்கின்றன. எனவே, நீரின் ஓட்டம், நமது நிர்வாக எல்லைகளான வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என்பவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்து செல்கிறது. நீர் தேவைப்படும் இடங்கள். நீர் தேவைப்படாத இடங்கள் எனப் பாகுபாடின்றி நிலச்சரிவுகளே நீரின் ஓட்டத்திற்கு வழிசெய்கின்றன.
பன்னாட்டு நீர்வளப் பயன்பாட்டுக் கொள்கையின்படி, நீர்வளமானது மனித குலத்தின் பொதுச் சொத்தாகக் கருதப்படுவதால், நீரோட்டங்களின் மேல் பகுதியில் வாழும் மக்கள். கீழ்ப்பகுதியில் வாழும் மக்களின் நீர்த்தேவைகளையும் (அளவில் மட்டுமல்லாது தரத்திலும்) பூர்த்தி செய்ய வேண்டிய கடமையுடையவர்களாகிறார்கள். (நூலாசிரியரின் உரையிலிருந்து… பக்.6-8)
நூலாசிரியர் திரு.இரா. வெங்கடசாமி அவர்கள், தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றி, கண்காணிப்புப் பொறியாளராக பணி நிறைவு பெற்றவர். அண்ணா பல்கலைக் கழகத்தின் நீர் வள மையத்தில் நான்காண்டு காலம் திட்டப் பொறியாளராகப் பணியாற்றிய போதும், பெரியாறு – வைகை பாசன மேம்பாடு திட்டப் பணிகளின் செயலாக்கத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்தபோதும் பெரியாறு அணை பற்றிய பல விவரங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்.
நூல்: முல்லை பெரியாறு அணை (வரலாறும் தீர்வும்)
ஆசிரியர்கள்: இரா.வெங்கடசாமி
வெளியீடு: தமிழோசை பதிப்பகம், 21, கிருஷ்ணா நகர், மணியகாரம்பாளையம்,
கணபதி, கோவை – 641006. பேச:97884 59063 மின்னஞ்சல்:tamilosai_vijayakumar@yahoo.co.in
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277
மாக்சிம் கார்க்கிதாயின் வாழ்க்கை ஒரு விசித்திர அமைதியோடு நடந்து கொண்டிருந்தது. சமயங்களில் இந்த அமைதி அவளுக்கு வியப்பூட்டியது. அவளது மகனோ சிறையிலிருந்தான், அவனுக்கு ஒரு கொடிய தண்டனை கிடைக்கும் என்பது அவளுக்குத் தெரியும். என்றாலும் அதைப்பற்றி அவள் நினைக்கின்ற வேளையெல்லாம் அவளையும் அறியாது அந்திரேய், பியோதர் மற்றும் எத்தனை பேர்களுடைய முகங்களும் அவளது மனத்திரையில் நிரம்பித் தோன்றும். மகனின் உருவம் அவளது கண்முன்னால் பிரமாண்டமாகப் பெருகி வளர்ந்து, அவனது விதியில் பங்கெடுக்கும் மற்ற அனைவரையும் தழுவி அணைத்து மறைத்து நிற்பதாகத் தோன்றியது. சிந்தனையினூடே தோன்றும் மற்ற எண்ணங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மகனைப் பற்றிய நினைவை மட்டும் வளர்த்துப் பெருக்குவாள். தட்டுத் தடுமாறிச் செல்லும் அந்த மெல்லிய சிந்தனைக் கதிர்கள் எட்டெட்டுத் திசைகளிலும் சென்று, எல்லாவற்றையும் தொட்டு . சகல தத்துவங்களின் மீதும் ஒளிவீசி, சகல விஷயங்களையும் ஒரு தனி உருவமாக ஒன்றுதிரட்டி ஒருமையாக உருவாக்க முயன்று கொண்டிருந்தன. எனவே அவளது மனம் ஒரே விஷயத்தின் மீது மட்டும் நிலைக்கவில்லை. தன்னுடைய மகனைப் பற்றியே ஏக்கத்தையும் பயத்தையும் மட்டுமே அவள் நினைக்கவில்லை.
சோபியா வந்தவுடனேயே எங்கேயோ சென்றுவிட்டு ஐந்து நாட்கள் கழித்துத்தான் திரும்ப வந்தாள். அவள் ஒரே உற்சாகமும் உவகையும் நிறைந்த குதூகலத்தோடு வந்தாள். ஆனால் வந்த சில மணி நேரத்துக்குள்ளாகவே அவள் மீண்டும் போய்விட்டாள். இரண்டு வாரம் கழித்துத் திரும்பவும் வந்தாள். வாழ்க்கையின் விரிவான வட்டத்தில் அவள் சுழலுவது போலத் தோன்றியது. இடையிடையே மட்டும் தனது சகோதரனின் வீட்டை எட்டிப் பார்த்து, அவ்வீட்டை அவள் தனது இசையாலும், உற்சாகத்தாலும் நிறைவுபெறச் செய்வதுபோலத் தோன்றியது.
தாய்க்கு வரவர சங்கீதத்தில் விருப்புண்டாயிற்று. அந்தச் சங்கீதத்தை அவள் கேட்கும்போது இத சுகம் தரும் இனிய அலைகள் அவளது மார்பின் மீது மோதி மோதி, இதயத்தைக் கழுவி விடுவது போலவும், இதயத் துடிப்பை மிகுந்த நிதானத்தோடு சமனப்படுத்துவது போலவும் தோன்றியது. மேலும் நன்றாக நீர் பாய்ச்சியதால், ஆழமாய் வேரோடிப் பாய்ந்த வித்துக்களைப்போல் அவளது சிந்தனைகள் முளைத்துக் கிளைத்துப் பரந்து பரவின. அந்தச் சிந்தனைக் கிளைகள் அந்தச் சங்கீதத்தின் மகிமையால் வார்த்தைகளாகப் பூத்து வெடித்துப் புன்னகை சொரிந்து வெளிப்பட்டன.
சோபியாவின் கச்சிதமின்மையை மட்டும் தாயால் சமாளித்துக் கொண்டு போகமுடியவில்லை. சோபியா எப்பொழுதும் தான் குடிக்கும் சிகரெட்டுத் துண்டுகளையும், தனது துணிமணிகளையும் கண்ட கண்ட இடத்தில் தாறுமாறாய் விட்டெறிந்தாள். அவளது ஆரவாரமான பேச்சுக்களைத் தாங்கிக்கொண்டிருப்பதோ தாய்க்கு இதையும்விடச் சிரமமாயிருந்தது. நிகலாயோ தெளிந்த நிதான புத்தியோடும் ஆழ்ந்த பொருளமைதியோடும் தனது வார்த்தைகளை எப்போதும் அளவிட்டு உயிர்கொடுத்துப் பேசுவான். சோபியாவின் பேச்சோ இதற்கு நேர் எதிர்மறையானதாகத் தாய்க்குத் தோன்றியது. தன்னை மிகவும் பெரியவளாகக் காட்டிக்கொள்ள விரும்பும் ஒரு குமரியைப் போலவே சோபியா நடந்து கொள்வதாகவும், அவள் மற்ற மனிதர்களையெல்லாம் விளையாட்டுச் சாமான்களைப் போலவே கருதுவதாகவும் தாய்க்குத் தோன்றியது. அவள் உழைப்பின் புனிதத்துவத்தைப் பற்றிப் பேசுவாள்; ஆனால் தன்னுடைய கச்சிதமின்மையால், தாய்க்கு எப்போதும் அதிகத் தொல்லை கொடுப்பாள். அவள் சுதந்திரத்தைப்பற்றி காரசாரமாய்ப் பேசுவாள்; என்றாலும் அவள் தனது பொறுமையின்மையாலும், வறட்டு முரண்வாதத்தாலும் பிறரை எப்போதுமே அடக்கியாள விரும்புவதாகவே தாய்க்குத் தோன்றியது. அவளது போக்கு ஒரே முரண்பாடுகள் நிறைந்ததாயிருந்தது, இதைத் தாய் உணர்ந்திருந்ததால், தாய் அவளிடம் எப்போதும் ஜாக்கிரதையாகவே நெருங்கிப் பழகினாள். நிகலாயிடம் எந்தவிதமான நிரந்தரமான அன்புணர்ச்சி கொண்டிருந்தாளோ. அதே உணர்ச்சி அவளுக்குச் சோபியாவின் மீது ஏற்படவில்லை.
நிகலாய்க்கு எப்போதுமே பிறரைப் பற்றிய சிந்தனைதான். அந்தச் சிந்தனையோடுதான், அவன் தனது ஒரே மாதிரியான இயந்திர இயக்கம் போன்ற வாழ்க்கையை நடத்தி வந்தான். காலையில் எட்டு மணிக்கு அவன் தேநீர் குடிப்பான், தேநீர் குடிக்கும்போதே பத்திரிகையைப் படித்துத் தாயிடம் செய்திகளை எடுத்துக் கூறுவான். அவன் கூறுவதைக் கேட்கும்போது, திடீரென ஓர் உண்மை அவள் உள்ளத்தில் புலனாகிச் சிலிர்க்கும். வாழ்க்கை என்னும் இந்த மாபெரும் இயந்திரம் எப்படிக் கொஞ்சங்கூட ஈவிரக்கமின்றி மக்களையெல்லாம் அரைத்து நொறுக்கிப் பணமாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதை அவள் உணருவாள். நிகலாய்க்கும் அந்திரேய்க்கும் பலவிதத்திலும் ஒற்றுமை இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. ஹஹோலைப் போலவே இவனும் மக்களைப் பற்றிக் குரோத உணர்ச்சியற்றுப் பேசினான்.
எதையுமே அறிந்து கொள்ளாமல், தங்களது கண்களைக் குளிரவைக்கும் காட்சிகளைக் காணாமல், அவற்றைத் தெரிந்து கொள்வதற்கு நேரம் இல்லாமல், ஆசை கூட இல்லாமல் மனிதர்கள் பரபரத்துத் திரிகிறார்கள்.
வாழ்க்கை அமைப்பிலுள்ள குறைபாட்டினால்தான் மக்கள் குற்றவாளியாகிறார்கள் என்றே இவனும் கருதினான். ஆனால் புதிய வாழ்க்கை மீது இவன் கொண்டுள்ள விசுவாசம் அந்திரேயினுடையதைப்போல் அவ்வளவு தீவிரமாகவோ தெளிவாகவோ காணப்படவில்லை. இவன் எப்போதும் ஒரு நேர்மையும் கண்டிப்பும் நிறைந்த நீதிபதியைப் போலத்தான் அடங்கி அமைந்த குரலில் பேசினான். மிகவும் பயங்கரமான விஷயங்களைப் பற்றிப் பேசும்போதுகூட அவனது உதடுகளில் ஒரு சிறு அமைதி நிறைந்த வருத்தப் புன்னகையே நிழலிட்டு மறையும். அந்தச் சமயங்களில் அவனது கண்களும் இளக்கமற்று வக்கிரத்தோடு பிரகாசிக்கும். அந்தக் கண்களில் உள்ள ஒளியைக் காணும்போதெல்லாம் அவளுக்கு ஓர் உணர்ச்சி தோன்றும். இந்த மனிதன் யாரையும் எதையும் மன்னிக்கவே மாட்டான். இவனால் மன்னிக்கவே முடியாது என்று கருதத் தோன்றும். அவனுக்கே தனது இரக்கமற்ற இந்தத் தன்மை பிடிக்கவில்லை. எனவே அவனுக்காக அனுதாபப்பட்டாள் தாய். அவன் மீது அவள் கொண்டிருந்த பாசம் நாளுக்குநாள் வளர்ந்து வந்தது.
ஒன்பது மணிக்கு அவன் வேலைக்குப் புறப்படுவான். போன பிறகு, அவள் வீட்டையெல்லாம் சுத்தப்படுத்துவாள். பிறகு மத்தியான உணவைத் தயாரிப்பாள். குளித்துவிட்டு, தூய உடைகள் அணிந்து கொள்வாள். தன் அறைக்குள் வந்து உட்கார்ந்து புத்தகங்களைப் புரட்டி அதிலுள்ள படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் இதற்குள்ளாகவே, புத்தகங்களைப் படிக்கத் தெரிந்து கொண்டிருந்தாலும், மிகுந்த சிரமத்தோடும் அதிக கவனத்தோடும் தான் அவளால் அவற்றைப் படிக்க முடியும். அப்படிப் படித்தாள் அவள் சீக்கிரமே களைப்புற்றுப் போவாள். ஒரு வார்த்தைக்கும் மறு வார்த்தைக்கும் உள்ள தொடர்பைக் கூட அவளால் உணர முடியாது. குழந்தை படங்களைப் பார்த்துக் குதூகலிப்பது போல அவளும் அப்படங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். அந்தப் படங்களில் அவள் ஒரு புதிய அற்புத உலகைக் கண்டாள். தொட்டுணர முடிவது போன்ற அந்தப் புதிய உலகத்தை அவள் அந்தப் படங்களிலிருந்து புரிந்து கொண்டாள். அவளது கண்முன்னால் மாபெரும் நகரங்களும் அழகிய கட்டிடங்களும், யந்திரங்களும். கப்பல்களும், ஞாபகச் சின்னங்களும், இன்னும் மனிதக் கரங்கள் சிருஷ்டித்த எத்தனை எத்தனையோ பொருட்செல்வங்களும் தோன்றின; அந்தப் படங்களில் அவள் இயற்கையின் படைப்பாற்றலைக் கண்டாள். பல்வேறுவிதமான இயற்கைக் காட்சிகள் அவள் மனத்தைத் திகைக்க வைத்தன. வாழ்க்கை என்பது எல்லையற்று விரிந்து பெருகிக் கொண்டிருந்தது. கண்ணின் முன்னால் அவள் இதுவரையில் அறிந்திராத ஓர் அதிசயத்தை ஒரு மகோந்தத்தை எடுத்துக் காட்டியது. அது அவளது விழிப்புற்ற இதய தாகத்திலே தனது குறையாத அழகாலும் அமோகமான வளத்தாலும் நிறைவைப் பொழிந்து கிளர்ச்சியுறச் செய்தது. விலங்கு இனங்களை விளக்கும் சித்திரப் புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்வதில் அவளுக்கு ஒரு தனி ஆனந்தம். புத்தகம் அன்னிய மொழியிலிருந்த போதிலும், அந்தச் சித்திரங்களிலிருந்தே அவள் இந்தப் பூலோகத்தின் விசாலத்தையும், அழகையும் செல்வத்தையும் உணர்ந்தறிய முடிந்தது.
”அம்மாடி! இந்த உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது” என்று அவள் ஒரு நாள் நிகலாவிடம் வியந்துபோய்க் கூறினாள்.
அவளுக்குப் பூச்சி பொட்டுக்களின் சித்திரங்களைப் பார்ப்பதில் பேரானந்தம். அதிலும் வண்ணாத்திப் பூச்சிகளைக் காண்பதில் ஓர் அலாதி ஆசை. அவற்றின் சித்திரங்களை வியப்போடு பார்த்துக்கொண்டே அவள் பேசுவாள்.
“நிகலாய் இவானவிச்! இவை அழகாயில்லை? இந்த மாதிரியான அற்புத அழகு எங்கெங்கெல்லாம்தாம் பரந்து கிடக்கிறது. ஆனால் நமது கண்ணுக்கு அவை படுவதேயில்லை; நாம் அவற்றைக் கவனிக்காமலேயே விட்டுவிடுகிறோம். எதையுமே அறிந்து கொள்ளாமல், தங்களது கண்களைக் குளிரவைக்கும் காட்சிகளைக் காணாமல், அவற்றைத் தெரிந்து கொள்வதற்கு நேரம் இல்லாமல், ஆசை கூட இல்லாமல் மனிதர்கள் பரபரத்துத் திரிகிறார்கள். இந்த உலகத்திலே எத்தனை செல்வங்கள் இருக்கின்றன. எத்தனை எத்தனை அற்புதமான உயிரினங்கள் இருக்கின்றன என்பதை மட்டும் நாம் தெரிந்து கொண்டால் நமக்கு எவ்வளவு ஆனந்தம் ஏற்படும்? ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவருக்காக இருக்கிறது. ஒவ்வொன்றும் எல்லோருக்காகவும் இருக்கிறது – நான் சொல்வது சரிதானே?”
“ஆமாம் ரொம்ப சரி” என்று புன்னகை செய்துகொண்டே கூறிய நிகலாய் தாய்க்கு இன்னொரு படப் புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்தான்.
இரவு நேரங்களில் அவனைப் பார்க்க எத்தனையோ பேர் வந்து போவார்கள். அவனது விருந்தாளிகளில் சிலர் முக்கியமானவர்கள். அலெக்சி வசீலியவிச் – அவன் வெளுத்த முகமும் கறுத்த தாடியும் கொண்டவன். அழகானவன்; ஆனால் மிகுந்த அழுத்தமும் அடக்கமும் கொண்ட ஆசாமி. ரமான் பெத்ரோவிச் – பருக்கள் நிறைந்த உருண்ட முகத்தை உடையவன். எதற்கெடுத்தாலும் கசந்துபோய் நாக்கை அடிக்கடி சப்புக் கொட்டுவான். இவான் தனீலவிச் – மெலிந்து ஒடுங்கிய குள்ளப் பிறவி. கூரிய தாடியும் மெலிந்த குரலும் உடையவன்; அவசரமாக கீச்கீச்சென்றும் குத்தலாகத் துளைத்துத் துளைத்தும் பேசுவான். இகோர்மூமூ – இவன் தன் உடம்பிலே வளர்ந்துவரும் நோயை நினைத்தும், தன் தோழர்களைப் பார்த்தும், தன்னைப் பார்த்ததுமே எப்போதும் சிரித்த வண்ணமாயிருப்பான். எங்கெங்கோ தூரத்தொலை நகரங்களிலிருந்தெல்லாம் பலரும் அங்கு வந்து போவதுண்டு. நிகலாய் அவர்களோடு நெடுநேரம் அமைதியாகப் பேசுவான். ஆனால் அவன் பேசுவதோ ஓரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான் – உலகத் தொழிலாளி மக்கள் பற்றித்தான்! அவர்கள் விவாதிப்பார்கள், விவாத வேகத்தால் உத்வேகம் பெற்றுக் கைகளை ஆட்டிக்கொள்வார்கள், அமிதமாகத் தேநீர் பருகுவார்கள். ஒருபுறத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நிகலாய் என்னென்ன அறிக்கைகள் வெளியிட வேண்டும் என்பதை யோசித்து எழுதுவான். பிறகு அவற்றைத் தன் தோழர்களிடம் வாசித்துக் காட்டுவான். அவர்கள் உடனே அந்த அறிக்கையினைப் பிரதி எடுத்துக்கொள்வார்கள். அதன்பிறகு அவனால் கிழித்துப் போடப்பட்ட நகல் காகிதப் பிரதிகளின் துண்டு துணக்குகளையெல்லாம் பொறுக்கியெடுத்து அவற்றை எரித்துப் பொசுக்கிவிடுவாள் தாய்.
அவர்களது விவாதங்கள் அவளுக்குப் புரியாவிட்டாலும் அவள் அவற்றைக் கவனமாகக் கேட்டாள். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உணர்ச்சியைத்தான் அவள் உணர முயன்றாள்.
அவர்களுக்குத் தேநீர் பரிமாறும்போதே தாய் அவர்களைப் பார்ப்பாள். தொழிலாளி மக்களின் வாழ்க்கைப் பற்றியும், விதியைப் பற்றியும், அவர்களுக்கு எப்படி உண்மையை மேலும் சிறப்பாகவும் விரைவாகவும் உணர்த்தி, அவர்களது உள்ளங்களை ஒன்றுபட்டு ஓரணியில் நிற்கச் செய்வது என்பதைப் பற்றியும் அவர்கள் உற்சாகத்துடன் பேசுவதைக் கண்டு தாய் வியப்படைவாள். அவர்கள் அடிக்கடி கோபாவேசமடைந்து பல்வேறு அபிப்பிராயங்களையும் ஆதரித்துப் பேசுவார்கள். ஒருவரையொருவர் கடுமையாகவும் கண்டிப்பாகவும் குறை கூறிக்கொள்வார்கள். ஒருவருக்கொருவர் மனம் புண்படும்படி பேசுவார்கள், காரசாரமாக விவாதிப்பார்கள்.
அவர்கள் அறிந்து கொண்டதைவிட, தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றித் தனக்கே அதிகம் தெரியும் என்று உணர்ந்தாள் தாய். அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பணியின் மகத்துவத்தை அவர்களைவிடத் தானே தெள்ளத் தெளிவாகக் காண்பது போல அவளுக்குத் தோன்றியது. இந்த உணர்ச்சியால். கணவன் – மனைவிக்கிடையே நிலவும் உறவு என்னவென்று அறியாத குழந்தைகள், கணவன் – மனைவி விளையாட்டு விளையாடுவதைப் பார்ப்பதுபோலத்தான் அவள் அவர்களைப் பார்த்தாள். தன்னையுமறியாமலே அவள் அவர்களது பேச்சை பாவெல், அந்திரேய் முதலியோரது பேச்சுக்களோடு ஒப்பிட்டுப் பார்த்தாள். அந்த ஒப்பு நோக்கினால் இரண்டுக்கும் ஏதோ வித்தியாசம் இருப்பதுபோலத் தோன்றினாலும், அது என்ன என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை. சமயங்களில், தான் குடியிருந்த தொழிலாளர் குடியிருப்பிலுள்ள வீட்டில் பேசுவதைவிட, இவர்கள் ஒரேயடியாய் உரத்துக் கூச்சலிட்டுப் பேசுவதுபோல் அவளுக்குத் தோன்றியது. அதற்குத் தனக்குத் தானே விளக்கமும் கூறிக்கொண்டாள்.
”இவர்களுக்கு அதிக விஷயம் தெரியும்; எனவே அதிகமாகச் சத்தம் போட்டுப் பேசுகிறார்கள், அவ்வளவுதான்.”
ஆனால் அடிக்கடி அவள் மனத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. அந்த மனிதர்கள் வேண்டுமென்றே ஒருவரையொருவர் கிண்டிக் கிளறிவிட்டுப் பேசுவதாகவும், தங்களது ஆர்வத்தை வேண்டுமென்றே பெரிதாக வெளிக்காட்டிக் கொள்வதாகவும். ஒவ்வொருவனும் மற்றவனைவிட, நான்தான் உண்மையை நன்கு உணர்ந்து அதைச் சமீபத்துவிட்டதாக நிரூபிக்க முயல்வது போலவும், அப்படி ஒருவன் பேசும்போது, மற்றவர்கள் ஒவ்வொருவரும் தாம்தான் உண்மையை நெருங்கி, அதை தெளிவாக உணர்ந்துவிட்டதுபோல் காரசாரமாக, உத்வேகத்தோடு பேசிக்கொள்வது போலவும் தாய்க்குத் தோன்றியது. ஒவ்வொருவனும் அடுத்தவனைவிட ஒருபடி மேலே தாவிச் செல்ல விரும்புவதுபோல் அவள் மனத்தில் பட்டது. இந்த உணர்ச்சி அவளது மனத்தில் ஒரு சோகச் சலனத்தை ஏற்படுத்தியது. துடிதுடிக்கும் புருவங்களோடும் இரங்கிக் கேட்கும் கண்களோடும் அவர்களைப் பார்ப்பாள். பார்த்தவாறே தனக்குத் தானே நினைத்துக் கொள்வாள்.
”இவர்கள் அனைவரும் பாஷாவையும், அவனது தோழர்களையும் மறந்தே போய்விட்டார்கள் ……”
அவர்களது விவாதங்கள் அவளுக்குப் புரியாவிட்டாலும் அவள் அவற்றைக் கவனமாகக் கேட்டாள். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உணர்ச்சியைத்தான் அவள் உணர முயன்றாள். எது நல்லது என்பதைப் பற்றித் தொழிலாளர் குடியிருப்பில் பேச்செழுந்த காலங்களில் ஏதோ ஒரு முழு உருவம் போல் கருதி அனைவரும் அதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் இங்கு இவர்கள் அதைப் பற்றிப் பேசும்போதோ அந்த நல்ல தன்மை துண்டுபட்டுச் சிதறி, சிறுமையடைந்து போவதுபோல் அவளுக்குத் தோன்றியது. அங்கு அவர்களது உணர்ச்சிகளோ ஆழமும் உறுதியும் வாய்ந்தனவாயிருந்தன; இங்கோ, இவர்களது உணர்ச்சியோ வக்கிர புத்தி படிந்து, எதையுமே வெட்டிப் பேசுவதாக இருந்தது. இங்கு இவர்கள் பழமையைத் தகர்த்தெறிவதைப் பற்றித்தான் அதிகமாகப் பேசினார்கள். அவர்களோ புதுமையை உருவாக்குவதைப் பற்றியே அதிகமாகக் கனவு கண்டார்கள். இந்தக் காரணத்தினால்தான் அவளது மகனது பேச்சும் அந்திரேயின் பேச்சும் மிகுந்த ஆழம் பொருந்தியதாகவும், அவளுக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் இருந்தன.
தொழிலாளர்களிடமிருந்து யாரேனும் நிகலாயைப் பார்க்க வந்தால் அவன் அவர்களிடம் மெத்தனமாகவும் அநாயாசமாகவும் நடந்து கொள்வதையும் அவள் கண்டாள். அவனது முகத்தில் இனிமை ததும்பும் ஒரு நயபாவம் தோன்றும், அவனும் ஏதோ இயற்கைக்கு மாறான மாதிரி அவர்களிடம் இஷ்டப்படியெல்லாம் சில நேரங்களில் கவனக்குறைவாகவும் சில நேரங்களில் கொச்சையாகவும் பேசுவான்.
”இப்படிப் பேசினால்தான் அவர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறான் போலிருக்கிறது” என்று அவள் தனக்குள் நினைத்துக் கொள்வாள்.
அவள் பெருமூச்செறிந்தவாறே தன் கையினால் சாஷாவின் கையை அழுத்திப் பிடிப்பாள். தனக்குள்ளாகவே நினைத்துக் கொள்வாள். ”அடி, என் கண்ணே நீ ஒரு துர்ப்பாக்கியசாலி…..”
ஆனால் இந்த எண்ணம் மட்டும் அவளைத் திருப்திப்படுத்தவில்லை. அவனைப் பார்க்க வந்த தொழிலாளியும் அவனிடம் மனம்விட்டுப் பேசாமல், எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டே போவதாக அவளுக்குத் தோன்றியது. சாதாரணத் தொழிலாளி குடும்பப் பெண்ணான அவளோடு எவ்வளவு லகுவாகவும் தாராளமாகவும் அந்தத் தொழிலாளி பேசினானோ, அதே மாதிரி நிகலாவிடம் அவன் மனம்விட்டுப் பேசக் காணோம். ஒரு தடவை நிகலாய் அந்த அறையை விட்டுச் சென்ற சமயத்தில் அவள் வந்திருந்த இளைஞனைப் பார்த்துப் பேசினாள்.
”நீ எதற்காகப் பயப்படுகிறாய்? நீ என்ன உபாத்தியாயரிடம் பாடம் ஒப்புவிக்கின்ற சிறுவனா? இல்லையே!”
அந்த இளைஞன் பல்லைக் காட்டிச் சிரித்தான்.
“பழக்கப்படாத இடத்தில் நண்டும்கூட முகம் சிவக்கும். என்ன இருந்தாலும், இவர் நம்மைப் போன்றவரில்லையே.”
சமயங்களில் சாஷா வருவாள். அவள் வந்தால் வெகுநேரம் தங்க மாட்டாள். சிரிப்பே இல்லாமல் வந்த விஷயத்தைப் பற்றி மட்டுமே அவள் எப்போதும் பேசுவாள். போகும்போது தாயிடம் மாத்திரம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுப் போவாள்.
”பாவெல் மிகலாய்லவிச் எப்படியிருக்கிறான்?”
“செளக்கியமாய்த்தானிருக்கிறான், சந்தோஷமாகத்தான் இருக்கிறான். எல்லாம் கடவுள் அருள்!”
”நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு, உடனே மறைந்து விடுவாள் சாஷா.
ஒருமுறை, பாவெலை விசாரணை செய்யாமலே அவனை அதிக காலமாகக் காவலில் வைத்திருப்பதைப் பற்றி அவளிடம் தாய் புகார் கூறினாள். சாஷா முகத்தைச் சுழித்தாள். எதுவும் பேசவில்லை. எனினும் அவளது கை விரல்கள் மட்டும் முறுக்கிப் பிசைந்து கொண்டன.
தாய்க்கு அவளிடம் அந்த விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
“அடி கண்ணே, நீ அவனைக் காதலிப்பது எனக்குத் தெரியும்.”
ஆனால் அதைச் சொல்வதற்கு அவளுக்குத் துணிவில்லை. அந்தப் பெண்ணின் அழுத்தம் நிறைந்த முகமும், இறுகிய உதடுகளும், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக விஷயத்தைப் பற்றி மட்டும் பேசும் அவளது பேச்சும் தாயின் மனத்தில் எழும் அன்புணர்ச்சியை எதிர்த்துத் தள்ளின. எனவே அவள் பெருமூச்செறிந்தவாறே தன் கையினால் சாஷாவின் கையை அழுத்திப் பிடிப்பாள். தனக்குள்ளாகவே நினைத்துக் கொள்வாள்.
”அடி, என் கண்ணே நீ ஒரு துர்ப்பாக்கியசாலி…..”
ஒரு நாள் நதாஷா வந்தாள். வந்த இடத்தில் தாய் இங்கு வந்திருப்பதைக் கண்டு அவளுக்கு ஒரே பேரானந்தம். அவள் தாயை அணைத்து முத்தமிட்டாள். பிறகு திடீரென்று அமைதி நிறைந்த குரலில் பேசினாள்.
அவள் தன் தலையை நிமிர்த்திச் சிலுப்பிவிட்டு, கண்களை விருட்டென்று துடைத்துவிட்டுக்கொண்டு பேசினாள்.
“பாவம் அவளுக்கு இன்னும் ஐம்பது வயதுகூட நிறையவில்லை, அவள் இன்னும் ரொம்ப நாளைக்கு உயிர் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவள் வாழ்ந்து வந்த வாழ்க்கையைவிட, அவள் செத்துப்போனதே நல்லது என்றுதான் எனக்குப்படுகிறது. அவள் தன்னந்தனியாளாக. பக்கத்திலே யார் துணையுமின்றி யாருக்கும் தேவையற்றவளாக எப்போது பார்த்தாலும் என் தந்தையின் அதட்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளானவாறே வாழ்ந்தாள். இந்த மாதிரிப் பிழைப்பை வாழ்வென்று சொல்ல முடியுமா? மற்றவர்கள் ஏதோ நல்லகாலம் வரத்தான் போகிறது என்ற நம்பிக்கையிலாவது வாழ்கிறார்கள். ஆனால் என் தாயோ நாளுக்கு நாள் அதிகப்படியான வசவுகளைக் கேட்டுக்கொண்டிருப்பதைத் தவிர, வேறு எதையுமே எதிர்பார்க்க முடியவில்லை. அந்த நம்பிக்கை அவளுக்கு இல்லை.”
“நீங்கள் சொல்வது உண்மை, நதாஷா!” என்று சிந்தித்தவாறே சொன்னாள் தாய். “நல்லகாலத்தை எதிர்பார்த்துத்தான் ஜனங்கள் வாழ்கிறார்கள். எந்தவித நம்பிக்கையுமே இல்லாவிட்டால், அது எந்த வாழ்வோடு சேர்த்தி?” அவள் அந்தப் பெண்ணின் கையைத் தட்டிக் கொடுத்தாள்; ”அப்படியென்றால் நீங்கள் இப்போது தனியாகத்தான் இருக்கிறீர்கள். இல்லையா?”
”ஆமாம். தன்னந் தனியாகத்தான்” என்று லேசாகச் சொன்னாள் நதாஷா.
”அது சரி” என்று ஒரு கணம் கழித்துப் புன்னகை புரிந்தவாறே சொன்னாள் தாய். “நல்லவர்கள் என்றுமே அதிக நாட்கள் தனியாக வாழ்வதில்லை. நல்லவர்களோடு மற்றவர்கள் வந்து எப்போதுமே ஒட்டிக்கொள்வார்கள்.”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டத்திற்கு கேட்கப்பட்டிருந்த அனுமதியை திடீரென ரத்து செய்தது அரசு. எனினும் திட்டமிட்டபடி திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியது மக்கள் அதிகாரம்.
மக்கள் அதிகாரம் திருச்சி மண்டலம் சார்பாக ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகில் இன்று (13.12.18) காலை 11.15 மணியளவில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கொடி, பேனர், பதாகைகளை உயர்த்திக் கொண்டு முழக்கமிட்டு ஊர்வலமாக வந்து ஆர்பாட்டம் செய்தோம். இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் மற்றும் தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னதுரை மற்றும் ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா முன்னிலையில் போராட்டம் நடத்தப்பட்டது.
1 of 7
சிறது நேரம் கூட பேசவிடாமல் போலிசு மைக்கை பிடிங்கியது. அதைத் தொடர்ந்து தோழர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தோழர்களை அப்புறப்படுத்த முயற்சித்த போலிசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் தோழர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது போலீசு.
புயல் பாதித்த மக்களை பாதுகாக்காத அரசு, அவர்களின் கோரிக்கையை கூட பேசக் கூடாது என தடுக்கிறது. நம்மை தடுக்கும் இந்த அரசுதான் கார்ப்பரேட்டுக்கு வளத்தை கொள்ளையடிக்க கொடுக்கிறது. தோற்றுப்போன இந்த அரசு அமைப்பை வீழ்த்தாமல் நாம் இயற்கை பேரிடர்களை எதிர் கொள்வது எப்படி?
தகவல்: மக்கள் அதிகாரம்
திருச்சி மண்டலம்.
9445475157.
“கூகிளாண்டவர்” இது தமிழ் வலை உலகில் பதிவர்கள் செல்லமாக அழைக்கும் ஒரு வார்த்தை. அந்த அளவுக்கு கூகிள் தேடுபொறி மக்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து விட்டது. எதையும் எப்போதும் எங்கும், தேடலாம் என்ற ’நம்பிக்கை’யை இணையப் பயன்பாடும் கூகிளும் ஏற்படுத்தியிருக்கின்றன. இது சரியா தவறா என்பது இங்கே விவாதப் பொருளல்ல.
கூகிள் தேடுபொறியில் எந்த வாரத்தை அதிகம் தேடப்படும் என்பது அடிக்கடி செய்தி ஊடகங்களில் பேசப்படுகிறது. இந்தியா என்றல்ல உலகளவில் சினிமா, பொழுது போக்கு, மருத்துவம், உடல்நலம், உணவு, நுகர்வுப் பொருட்கள், போர்னோ போன்றவை முன்னணி தேடலில் இருக்கும். செய்தி – அரசியலைத் தேடுவோர் 2 அல்லது 3 சதவீதம் வந்தால் அதிகம். தேர்தல் போன்ற பரபரப்பான காலத்தில் அது 5 அல்லது பத்து சதவீதத்தை தொடலாம்.
கூகிள் ஆண்டவர்
தற்போது வேலை தேடும் இளைஞர்கள் பயன்படுத்தும் “Job near me” (என்னருகில் வேலை) எனும் வார்த்தையே அதிகமாக தேடப்படுகிறது. இந்த வார்த்தைதான் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் தேடப்படுகின்ற வார்த்தைகளில் பல மடங்கு வளர்ந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கூகிள் தேடுபொறியில் வார்த்தைகள் அதிகம் தேடப்படுவதை எப்படி மதிப்பிடுகிறார்கள்? ஒரு வார்த்தையை லட்சக்கணக்கானோர் தேடும் போது அது நூறு எனும் மதிப்பை அடையும். ’நூறு’ எனும் மதிப்பை அடையும் பட்சத்தில் அதன் பிரபலம் மிக அதிகம் எனப் பொருள். இதை தேடுபொறியின் மென்பொருள் அமைப்பே கண்டுபிடித்து சொல்லி விடும். அதே வார்த்தை 50 எனும் மதிப்பைப் பெற்றால், அது பாதியளவில்தான் பிரபலமாகியிருக்கிறது என்று பொருள். பிரபலமற்ற வார்த்தையின் மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும். அதாவது அதை சிலரே தேடுகிறார்கள் என்பதால்.
இந்தியாவைப் பொருத்தவரை கூகிள் தேடுபொறியில் “என்னருகில் வேலை” என்ற வார்த்தைதான் கடந்த நான்கரை ஆண்டுகளாக அதி வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த வார்த்தை தேடுபொறியில் மிக அதிகமாக தேடப்படுகிறது.
தேடுபொறியில் பிரபலமாகும் வார்த்தைகளை அந்தந்த வகையில் வைத்து மதிப்பிடுகிறார்கள். சான்றாக டீசர் (Teaser) எனும் தேடல் சினிமா எனும் வகையில் வரும். அது போல ’என்னருகில்’ (Near ME) என்ற இணைப்போடு தேடப்படும் வார்த்தைகள் தனி வகையாக மதிப்பிடப்படுகிறது. இந்த வகையில் ’என்னருகில் வேலை’ (Jobs Near Me) என்பதும் சேர்கிறது. 2018-ம் ஆண்டில் இந்த “என்னருகில்” வகையில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 தேடல் வார்த்தைகளில் “என்னருகில் வேலை” எனும் தேடல் வார்த்தை இடம் பிடித்திருக்கிறது.
2004 ஜனவரியிலிருந்து 2014 மே வரை என்னருகில் வேலை என்ற வார்த்தை அவ்வளவு அதிகமாக தேடுபொறியில் வரவில்லை. அதன் பிறகு அதன் தேடல் சூடு வைத்த மீட்டர் போல அதிவேகமாக வளர்ந்திருக்கிறது.
மே மாதம் 2014 -ம் ஆண்டில் “என்னருகில் வேலை” என்ற வார்த்தையின் மதிப்பு ஒன்றாகும். ஜூன் மாதம் 2014-ல் இரண்டாகவும், ஏப்ரல் 2017-ல் அதன் மதிப்பு 17 ஆகவும் உயர்ந்தது. ஏப்ரல் 2018 -ம் ஆண்டில் அதன் மதிப்பு 88-ஆகவும், ஜூலை 2018-ல் அதன் மதிப்பு 100 ஆகவும் உயர்ந்திருக்கிறது.
உள்ளூர் அளவில் தகவல்களை தேடுவது இணையத்தில் மிகவும் பிரபலம். அதில் என்னருகில் வேலை என்ற வட்டார தேடல் நகரப் பகுதிகளிலும் தொழில்துறை மண்டலங்களிலும் பிரபலமாக இருந்திருக்கிறது. குறிப்பாக செகந்திராபாத், தானே, மும்பை, ஃபரிதாபாத், காஸியாபாத், பிம்ப்ரி சிஞ்ச்வாத், விசாகப்பட்டினம், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் குர்கான் நகரங்களில் இந்த தேடல் அதிகம் நடந்திருக்கிறது.
பொதுவில் கடந்த நான்கு ஆண்டுகளாக ’என்னருகில்’ என்ற தலைப்பில் தேடுகின்ற பழக்கம் அதிகரித்திருக்கிறது. சான்றாக என் அருகில் இருக்கும் செல்பேசி கடைகள், என் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகள், என் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் என்பதாக அந்த தேடல் வழக்கம் அதிகரித்திருக்கிறது.
இதை அடுத்து கூகிள் நிறுவனம் ஏப்ரல் 2018-ம் ஆண்டில் அதன் இணையதளத்தில், வேலை தேடுவதற்காக தனியான வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
இந்த புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்த உடன் நடந்த மாற்றத்தை கூகுள் நிறுவனமே தெரிவிக்கிறது. அதன்படி 2017-ம் ஆண்டின் இறுதி காலாண்டில் வேலை தேடுகின்ற இந்த தேடல் முயற்சி முந்தைய வருடத்தோடு ஒப்பிடும்போது 45% வளர்ந்திருக்கிறது. அதிலும் 50 % மேற்பட்ட வேலை தொடர்பான விசாரணைகள் செல்பேசியிலிருந்து செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வருடத்தை முழுமையாக வைத்துப் பார்த்தால் 90 % வேலை தேடுகின்ற விசாரணைகள் செல்பேசியில் மட்டும் நடந்திருக்கின்றன. இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையோர் செல்பேசி மூலமாகவே செய்கிறார்கள் என்பதால் இது ஆச்சரியம் இல்லை.
இந்த சொற்றொடரின் தேடல் கடந்த 15 ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த 4, 5 ஆண்டுகளாக அதிகரித்திருப்பது, வெறுமனே தேடல் அதிகரித்திருப்பதை மட்டும் நமக்குத் தெரிவிக்கவில்லை. நாட்டில் அதிகரித்திருக்கும் கைபேசி மற்றும் இணைய பயன்பாடு வளர்ந்திருப்பதையும் காட்டுகிறது. இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி செப்டம்பர் 2018 வரையிலுமான நாட்டின் ஒட்டுமொத்த தொலைதொடர்பு அடர்த்தி, 89.51%-ஆக உயர்ந்துள்ளது. இது 2013-ம் ஆண்டில் இருந்த 70.63%-ஐ விட அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளில் கிராமப்புறங்களில் அதிகரித்திருக்கும் தொலைதொடர்புப் பயன்பாடே இந்த உயர்வுக்கு அடிப்படையாகும்.
ஜூம்லாக்களை அள்ளி விடும் மோடிஜி
சரி இப்போது விசயத்திற்கு வருவோம். இந்த ஆய்வு முடிவிலிருந்து என்ன தெரிகிறது? செல்பேசி பழக்கம், மக்களிடம் இணையப் பழக்கம், தேடுபொறியை அதிகம் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது என்கிறீர்களா? இல்லை. மோடியின் ஆட்சியில் இங்கே வேலையில்லாத பட்டாளம் பெருமளவு சேர்ந்ததையே இது காட்டுகிறது. அனைவரும் வேலையில் இருந்தால் இந்த தேடல் என்னருகில் சினிமா தியேட்டர், என்னருகில் உணவகம், பொழுதுபோக்கு என்றிருந்திருக்கும். ஆனால் என்னருகில் என்ன வேலை இருக்கிறது என்பதே இளைஞர்களின் கவலை!
ஆக என்ன வேலை, என் அருகே எதாவது வேலை இருக்கிறதா என்ற கவலையோடுதான் இளைஞர்கள் ஆன்ட்ராய்டு ஃபோனோடு திரிகிறார்கள். ஒருவேளை மோடி சொன்ன டிஜிட்டல் இந்தியா என்பது இதுதானோ?
சென்னை பாரீஸ் கார்னர் ஆண்டர்சன் மற்றும் மலையபெருமாள் வீதியின் உள்ளே நுழைந்தால் பெண்கள் கூடையிலும், தரையிலும் மலைபோல் அடுக்கிய பழங்களை கூவிக்கூவி விற்றுக் கொண்டிருப்பார்கள்… கடுமையான நெரிசல்.. அந்த நேரத்தில் ஏதெனும் வாகனம் வந்து விட்டால் கூடையில் உள்ள பழங்களை எல்லாம் கையில் தூக்கி வைத்துக் கொண்டு வாகனங்களுக்கு வழிவிட வேண்டும். தப்பித்தவறி அந்தச் சூழலை புகைப்படம் எடுத்தால் அவர்கள் தடுமாறி விடுகிறார்கள்.
“ஏற்கனவே இந்த இடத்தில் கடை போட்டு பிழைப்பது இங்கே இருப்பவர்களுக்கும் போலிசுக்கும் பிடிக்க வில்லை… நீங்கள் எதாவது எழுதி விட்டால் நாங்கள் வேறு எங்கு செல்வது?” என்று உடன் கேட்கிறார்கள். ஏற்கனவே சாலையோர கடைகளை எல்லாம் தூக்கி வீசியிருக்கிறது அரசு. அவர்களெல்லாம் என்ன ஆனார்கள் என்பது நமக்கு தெரியாது.
இந்த பாதை வியாபாரிகளை கடந்து உள்ளே சென்றால் கடைகளுக்கு செல்ல முடியாதவாறு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பார்கள். மற்றொருபுறம் கடைகளே தெரியாத வண்ணம் பல பொருட்களை மாட்டியும், கீழே கொட்டியும் வைத்திருக்கிறார்கள்.
திருமண அழைப்பிதழ் கார்டுகள், எழுதுபொருட்கள், ப்ளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், பைகள், கட்சிக்கொடிகள், திருமண பைகள், அலங்கார பிளாஸ்டிக் பூக்கள் என்று விதவிதமாக கண்ணில்படும். மொத்த விற்பனையிலிருந்து சில்லரை விற்பனை வரை உண்டு. இன்றைக்கு 3டி ப்ரிண்டிங் வளர்ச்சி, சமூக வளைதளங்கள் மூலம் அழைப்பு விடுப்பது, பிளாஸ்டிக் மீதான தமிழக அரசின் தடை, ஜி.எஸ்.டி என்று பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்தச்சூழலில் இதனையெல்லாம் எப்படி சமாளிக்கிறார்கள்…?
ஜேம்ஸ்,ஹிந்துஸ்தான்பேப்பர்– ஸ்டேசனரி.
நாங்க இங்க 1964-இல் இருந்து கடை வைத்துள்ளோம். அப்பொழுதிருந்தே ஒலிம்பிக் மற்றும் ஸ்டார் போன்ற கடைகள் இங்கு பிரபலம்தான். ஆரம்பத்தில் இங்கே ஸ்டேசனரி பொருட்கள்தான் பிரபலம். இப்பொழுதுதான் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள் அதிகரித்துள்ளன. ஆரம்பத்தில் பாக்கிஸ்தான் மற்றும் சிந்தி ஆட்கள் வந்து கடை வைத்திருந்தார்கள் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.
இப்பொழுது எல்லாம் மாறி விட்டது. ஸ்டேசனரி கடைகள் அதிகம் இருப்பதால் விற்பனை மந்தமாக இருந்ததால் 1988 -க்கு பிறகு நானும் தொழிலை மாத்தி விட்டேன். பேக்கிங் மெட்டிரியல் அயிட்டதிற்கு மாறிவிட்டேன். இங்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்த 1500 பொருட்களுக்கு மேல் உள்ளது. இதனை எல்லாம் திருச்சி, செங்கல்பட்டு, வேலூர், போன்ற ஊர்களில் இருந்து வந்து மொத்தமாக வாங்குவார்கள். ஆனால் முன்புபோல் இப்பொழுது யாரும் வருவதில்லை. ஜி.எஸ்.டி. பணமதிப்பு நீக்கம் வந்த பிறகு தொழில் பாதிப்படைந்துள்ளது.
முன்பு ரூ.15,000 வரும் என்றால் இப்பொழுது ரூ.10,000 மட்டுமே வருகிறது. ஒரு காலத்தில் இங்கே மட்டுமே கிடைத்த பொருட்கள் இப்பொழுது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. அதற்காக பாரீஸின் மதிப்பு குறைந்து விடவில்லை…
சித்திக்,வெட்டிங்கார்டு. (புகைப்படம்தவிர்த்தார்)
“வெட்டிங் கார்ட் ஒரு பாரம்பரிய வியாபரம். இது வருஷத்துல ஒரு முறை பன்னுற செலவு. எல்லோரும் பாத்துபாத்துதான் செய்வாங்க. பழகுன இடத்துக்குதான் வருவாங்க. இங்க வரும்போதே, எங்க அப்பா இங்க தான் கார்டு அடிச்சார்… நானும் வறேன்னு சொல்லுவாங்க. பொண்ணு, பேத்தி, என்று வழி வழியா வரவங்கதான் என் கஸ்டமர். என்கிட்ட 2 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரைக்கும் வெட்டிங் கார்டு இருக்கு. இருந்தாலும் பாக்சு டிசைன் தான் இப்ப லெக்சுரியா வாங்குறாங்க… அதுதான் பேஷன். உலகம் வேற மாதிரி மாறி போயிடுச்சி..
டிஜிட்டல், 3டி ப்ரிண்டிங்’னு வேகமா முன்னேறி கிட்டே போகுது. அதுக்கு ஏத்த மாதிரி நாங்களும் அப்டேட் பன்னிக்கிறோம். அடாப்ட் ஆயிடுறோம். பிசினஸ் எப்பவுமே வெளியே போவுதுன்னா அடுத்தவன் சரியா இருக்கான்னு அர்த்தம் இல்ல. நாம சரியா செய்யலன்னுதான் அதுக்கு அர்த்தம். கஸ்டமர் சர்விஸ் தான் இந்த பிசினசுக்கு ரொம்ப முக்கியம். சமூக வலைத்தளம் வந்தாலும் இதனோட மதிப்பு குறைவதில்லை. அதன் மூலம் அழைப்பு கொடுக்கிறவங்களோட நிகழ்ச்சிக்கு யாரும் போக மாட்டாங்க. இதுதான் உண்மை. அதேமாதிரி, அமேசான். பிளிப் கார்டு எது வந்தாலும் இந்த பிசினசை எதுவும் பன்ன முடியாது.” என்கிறார்.
ராம்நாத்…
“திருமண அழைப்பிதழை எங்கயோ வாங்குற சாதாரண பொருள் இல்ல. ஒரு மரியாதைக்குறிய பொருள்…. இது மரியாதைக்குறியவங்களுக்கு கொடுக்கிற அயிட்டம். அதால இந்த பிசினஸ் நிக்கிது. எங்களுக்கு தமிழ்நாடு முழுக்க கஸ்டமர் இருக்காங்க. இங்க இருந்து மதுரை, திருவனந்தபுரம் கூட அனுப்புறோம். வெட்டிங் கார்டுல நாங்க ஸ்பெசலிஸ்ட். எங்க டிசைன நீங்க வேற எங்கயும் பார்க்க முடியது.”
வசந்த்மாலே,பிளாஸ்டிக்தட்டு–கப்விற்பனை.
“இங்க பிளாஸ்டிக் அயிட்டமான கப், பிளேட், டிஸ்யு பேப்பர், கல்யாணம், பார்ட்டி எல்லாத்துக்கும் தேவையானது கிடைக்கும். ஆனா, பிசினஸ்தான் டல்லா இருக்குது, காரணம் இந்த அமேசான், பிளிப் கார்ட் இவனுங்க தான். இவனுங்களை அடக்கி வைக்கனும். இவனுங்க நேரா கஸ்டமருக்கு பொருள் கொடுப்பதை மோடி நிறுத்தனும். எங்களைப் போன்ற டீலர் ஷிப்புக்கு தான் பொருட்கள் தரனும். அப்ப தான் வியாபரிங்க பொழக்க முடியும். நானும் பத்து பேருக்கு வேலை கொடுக்க முடியும். இப்ப என்ன நடக்குது? மொத்தமா அவனே சுருட்டிக்கிறான். குறுக்க எவனும் இல்ல. பணம் இங்க ரொட்டேசன் ஆகவே இல்ல.
1 of 3
வியாபாரிங்ககிட்ட வந்தா, சின்ன வியாபாரில இருந்து பெரிய வியாபாரிங்க வரைக்கும் கை மாறும். பணம் புரளும். எல்லாருக்கும் வேலை கிடைக்கும். ஆனா அதுவா நடக்குது…? அவனோட கொள்ளைதான் நடக்குது. எப்படி இருந்தாலும் அடுத்த வாட்டி மோடிஜி தான் ஆட்சிக்கு வரனும்.
இந்த ஆட்சியில கஸ்டம் இருக்கத்தான் செய்யுது.. ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம் இதனால பாதிப்பு இருக்கதான் செய்யுது. அதெல்லாம் மோடி திருத்திக்கனும். திருத்திக்குவாரு. நாட்டுக்கு ஒரு மரியாதை இருக்குன்னா அது மோடியால தான். நம்ம நாட்ட வெளி நாட்டுகாரன்கிட்ட தூக்கி நிறுத்திட்டாரு. இப்ப நம்மளப் பார்த்தாலே எல்லாம் பயப்படுறாங்க.”
மிட்டாலால்,பிளாஸ்டிக்தட்டு–கப்விற்பனை.
“15 வருஷமா இங்க கடை போட்டிருக்கேன். இப்ப மாதிரி கஸ்டம் எப்பவும் இல்ல. இதுக்கே லைன் பிசினசுக்குத்தான் நான் பொருள் கொடுக்கிறேன். சிறு வியாபாரிங்க தான் என் கஸ்டமர். அவங்களுக்கு வியாபரம் இல்லன்னு வாங்குறதை குறைக்கிறாங்க.
1 of 2
இன்னொருபக்கம் வேலைக்கு ஆள் பிரச்சனை பெரிசாகி விட்டது. யாரும் வேலைக்கு கிடைக்கிறது இல்ல. எல்லாரும் லைட் வெயிட் வேலைக்கு போயிடுறாங்க. துணிக்கடை, மொபைல் கடைன்னு போறாங்க. மூட்ட தூக்க யாரும் ரெடி இல்ல. இந்த வேலை கொஞ்சம் கஸ்டம்தான். உள்ள நின்னா உடம்பு கொதிக்கும். சூடு… ஆஸ்துமா பிரச்சனை வரும். அதனாலயே பசங்க வந்த பத்து நாள்ல போயிடுறாங்க. பேஜாராக்கீது.”
அப்பாஸ்,பைகடை.
“எங்க பிசினஸ் எல்லாம் ரொம்ப சின்ன பிசினஸ் சார். 50,100,150 இந்த ரேஞ்சிக்குதான் விக்கிறோம். வேற எந்த பொருளும் இல்ல. இது கிஃப்டு பேக்… மொத்தமா வாங்கிக் கொடுக்கும் போது, பரிசு பொருள் போட்டு கொடுக்க இந்த பை வாங்குவாங்க. விக்கிற விலைவாசியில உள்ளதையே வாங்க முடியல. இதுல கிஃப்டு எங்க வாங்குறது. ஜனங்க தடு மாறுராங்க. வியாபரிங்க நாங்களே இன்னும் கொஞ்ச நாள்ல பிச்ச எடுக்க தான் போவனும்.
1 of 2
மோடி எங்க கிட்ட எதையும் மிச்சம் வைக்க மாட்டார்போல. நம்மளுக்கு பேங்குல போடுரேன்னு நம்ம பணத்தையே அபராதம்னு கோடி கோடியா வாங்கிக்கிறானுங்க… ஊரெல்லாம் கொள்ளை பெருகி போச்சின்னு சொல்லுறோம். ஆனா இதைவிட மோடி அடிக்கிற கொள்ளைதான் பெரிசா ஆயிடுச்சி. அதுவும் சவுத் இண்டியன்னா சுத்தாமா ஒதுக்குறாங்க…. அதுக்கு இன்னும் எவ்ளோ நாள் தாங்கனும்னு தெரியல. அடுத்த எலக்சன் வரைக்குமா..?”
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 35 (தொடர்ச்சி)
மாக்சிம் கார்க்கிசாப்பாடு முடிந்தவுடன் அவர்கள் அனைவரும் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள். தீ நாக்குகள் விறகுக் கட்டைகளைப் பேராசையோடு நக்கிக் கொடுத்தான். அவர்களுக்குப் பின்னால் இருள் திரைபோலத் தொங்கி, வானத்தையும் தோப்பையும் மறைத்து நின்றது. அந்த நோயாளி தனது அகன்று விரிந்த கண்களால் நெருப்பையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இடைவிடாது இருமினான். அவனது உடம்பே குலுங்கியது. நோயினால் பாழ்பட்டுப்போன உடம்பிலிருந்து அவனது வாழ்வின் மிச்ச சொச்சங்கள் அனைத்தும் பொறுமையிழந்து விடுபெற முயன்று போராடுவதுபோல இருந்தது. நெருப்பின் ஒளி அவனது முகத்தில் விளையாடியது. எனினும் அவனது உயிர்ப்பற்ற சருமத்தில் அந்த ஒளி எந்த உணர்ச்சியையும் உருவேற்ற இயலவில்லை. அவனது கண்கள் மட்டும் அணையப்போகும் நெருப்பைப்போல் பிரகாசித்தன.
”சவேலி, நீ உள்ளே போய்ப் படுத்துக்கொள்வது நல்லது” என்று அவன் பக்கமாகச் சாய்ந்தவாறு சொன்னான் யாகவ்.
“ஏன்?” என்று அந்த நோயாளி சிரமத்தோடு கேட்டான். ”நான் இங்கேயே இருக்கிறேன். மனிதர்களோடு இருப்பதற்கு எனக்கு அதிக காலமில்லை.”
அவன் தன்னைச் சுற்றிலும் பார்த்தான். சிறிது நேரம் கழித்து வெளுத்துப்போன புன்னகையுடன் பேசினான்:
“உங்களோடு இருப்பதே எனக்கு நல்லது. உங்களைப் பார்க்கும்போது, பேராசையின் காரணமாகக் கொல்லப்பட்டவர்களுக்காக, கொள்ளையிடப்பட்டவர்களுக்காக நீங்கள் பழிக்குப்பழி வாங்குவீர்கள், வஞ்சம் தீர்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.”
அவனுக்கு யாருமே பதில் சொல்லவில்லை. அவனது தலை பலமற்றுச் சோர்ந்து மார்பின் மீது சரிந்தது. சீக்கிரமே அவன் தூங்கிப் போய்விட்டான். பின் அவனைப் பார்த்துவிட்டு அமைதியாகக் சொன்னான்.
”இவன் எப்போதும் இங்கே வந்து உட்கார்ந்து இதையே, இந்த மனிதனின் ஏமாற்றத்தைப் பற்றியே பேசுவான். அவனது இதயம் முழுவதிலும் இந்த ஏமாற்றம்தான் நிரம்பியிருக்கின்றது. அந்த உணர்ச்சி அவனது கண்களையே திரையிட்டுக் கட்டிவிட்ட மாதிரி அவனுக்குத் தோன்றுகிறது. அதைத் தவிர வேறு எதையுமே அவன் பார்ப்பதில்லை உணர்வதில்லை.”
“அவன் வேறு என்னத்தைத்தான் பார்க்க வேண்டும்?” என்று ஏதோ சிந்தித்தவளாய்க் கேட்டாள் தாய். ”தங்களது முதலாளிகள், மானாங்காணியாகவும் துராக்கிரமமாகவும் பணத்தைச் செலவிட்டுக் கொண்டிருப்பதற்காக, தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் உழைத்து உழைத்து, அந்த உழைப்பினாலேயே கொல்லப்பட்டுச் சாகிறார்கள் என்றால், இதைவிட உனக்கு வேறு என்ன விஷயம்தான் வேண்டும் என்கிறாய்?”
“ஆனால் இவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பது எரிச்சலாயிருக்கிறது” என்றான் இக்நாத். “இவன் பேச்சை ஒரு தடவை கேட்டுவிட்டாலே அதை மறக்க முடியாது; மறக்க முடியாத அதே விஷயத்தையே அவன் திருப்பித் திருப்பித் தினம் பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறானே.”
”ஆனால், இந்த ஒரே விஷயத்தில் சகல விஷயங்களுமே, வாழ்க்கை முழுவதுமே அடங்கிப் பொதிந்திருக்கிறது!” என்று சோகத்தோடு கூறினான் ரீபின். ”அதைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். நானும் இந்தக் கதையை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். இருந்தாலும்கூட, எனக்குச் சமயங்களில் சில சந்தேகங்கள் கூடத் தோன்றுவதுண்டு. பணக்காரர்களையும் ஏழைகளையும், – எல்லோரையுமே ஒரு மாதிரியாகவே எண்ணிப் பார்ப்பதற்கும், மனிதனது தீய குணங்களையும் முட்டாள்தனங்களையும் நம்ப விரும்பாதிருப்பதற்கும் சில சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும். பணக்காரர்கள்கூடத் தம்மை மறந்து செல்ல முடியும். சிலர் பசியால் குருடாகிப் போகிறார்கள். சிலர் தங்கத்தால் குருடாகிப் போகிறார்கள். அதுதான் சங்கதி! ‘ஓ மனிதர்களே, சகோதரர்களே! உதறியெழுந்து வாருங்கள். தன்னலம் கருதாது நேர்மையோடு சிந்தியுங்கள்’ என்று நினைக்கத் தோன்றும்.”
அந்த நோயாளி அசைந்து கொடுத்தான், கண்களைத் திறந்தான், பிறகு தரையில் படுத்துவிட்டான். யாகவ் வாய் பேசாது எழுந்திருந்து வீட்டிற்குள் சென்று ஒரு கம்பளிக்கோட்டைக் கொண்டுவந்து அந்த நோயாளியைப் போர்த்தி மூடினான்; மீண்டும் சோபியாவுக்கு அருகில் சென்று உட்கார்ந்துகொண்டான்.
நெருப்பால் ஒளிபெற்று, வியப்பும் வெறுப்பும் நிறைந்த நிழலுருவங்கள் சூழ்ந்த அந்த இடத்திலே உண்டு கொழுத்து உறங்கும் பேராசைக்காரர்களின் உலகை அசைத்து ஆட்டி உலுப்பிய சம்பவங்களைப் பற்றிய விவரங்கள் உயிர்பெற்று ஒலித்தன.
குதூகலம் நிறைந்து கும்மாளியிடும் நெருப்பு தன்னைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த கரிய உருவங்களை ஒளிரச் செய்தது. நெருப்பின் இரைச்சலோடும், வெடிக்கும் சத்தத்தோடும், அந்த மனிதர்களின் குரல்களும் சேர்ந்து கலந்து ஒலித்துக்கொண்டிருந்தன.
உயிர் வாழும் உரிமைக்காகச் சகல தேசத்திலுமுள்ள மக்கள் அனைவரும் நடத்துகின்ற போராட்டங்களைப் பற்றியும், ஜெர்மனி தேசத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சிகளைப் பற்றியும், அயர்லாந்து நாட்டு மக்களின் பஞ்ச நிலையைப் பற்றியும், இடைவிடாது அடிக்கடி நடத்தப்படும் பிரெஞ்சுத் தொழிலாளர்களின் சுதந்திரப் போராட்டங்களைப் பற்றியும் சோபியா அவர்களுக்கு எடுத்துச் சொன்னாள்.
இருள் திரை படிந்து கவிந்த அந்தத் தோப்பு வெளியிலே, மரங்கள் அடர்ந்து செறிந்த அந்த வெட்ட வெளியிலே, இருண்ட வானமே மேல் முகடாக விளங்கும் அந்த அத்துவானப் பிரதேசத்தில், நெருப்பால் ஒளிபெற்று, வியப்பும் வெறுப்பும் நிறைந்த நிழலுருவங்கள் சூழ்ந்த அந்த இடத்திலே உண்டு கொழுத்து உறங்கும் பேராசைக்காரர்களின் உலகை அசைத்து ஆட்டி உலுப்பிய சம்பவங்களைப் பற்றிய விவரங்கள் உயிர்பெற்று ஒலித்தன. சத்தியத்துக்காகவும் சுதந்திரத்துக்காகவும் பாடுபட்ட வீரர்களின் திருநாமங்கள் உச்சரிக்கப்பட்டன. போராட்டங்களால் களைத்து, போராட்டங்களால் ரத்தம் சிந்தித் தோய்ந்த ஒவ்வொரு நாட்டு மக்களும் வரிசை வரிசையாக அங்கு வந்து சென்றார்கள்.
அந்தப் பெண்ணின் அடங்கிய குரல் மெதுவாக ஒலித்தது. கடந்த காலத்தின் எதிரொலி போன்ற அந்தக் குரல் அவர்களது நம்பிக்கைகளைக் கிளறிவிட்டது; தீர்மானங்களைத் தூண்டிவிட்டது. பிற தேசங்களிலுள்ள தங்கள் சகோதரர்களைப் பற்றிய கதைகளைக் கேட்டவாறே அந்த மனிதர்கள் அசையாது வாய் பேசாது உட்கார்ந்திருந்தனர். உலகத்தின் சகல மக்களும் எந்த ஒரு புனித லட்சியத்துக்காகப் போராடுகிறார்களோ, அந்த லட்சியம் – சுதந்திரத்துக்காக நடைபெறும் இடையறாத முடிவற்ற போராட்டம் – அவர்களுக்கு வரவரத் தெளிவாகியது. அந்தப் பெண்ணின் மெலிந்த வெளுத்த முகத்தைப் பார்க்கப் பார்க்க அந்தப் போராட்டமும் போராட்ட லட்சியமும் அவர்களுக்குப் புரிந்து வரலாயின. அவர்கள் தங்களது சொந்த எண்ணங்களையும், விருப்பங்களையும், தம்மால் அறிய முடியாத வேற்று இன மக்களிடம் கண்டார்கள். அந்த மனிதர்களிடமிருந்து தங்களை ஒரு கரிய ரத்தம் தோய்ந்த கடந்த காலத்தின் இருள் படிந்த திரை பிரித்து நிற்பதாகவும் கண்டார்கள்; தங்களது மனத்தாலும் இதயத்தாலும் அவர்கள் இந்தப் பரந்த உலகம் முழுமையோடும் தொடர்பு கொண்டார்கள்.
ஒரு புதிய ஒளி நிறைந்த ஆனந்த வாழ்க்கைக்காக, தங்களது ரத்தத்தையே சிந்தி அர்ப்பணித்து, உலகத்திலே சத்தியத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற உறுதியான கொள்கைக்காக, வெகுகாலமாக ஒன்றுபட்டு நின்று, அந்த லட்சியத்தின் வெற்றிக்காக சகலவிதமான பெருந்துன்பங்களையும் தாங்கிச் சகித்து நின்ற பல்வேறு நாட்டு மக்களினத்திலும் அவர்கள் தங்கள் தோழர்களைக் கண்டார்கள். சகல மக்கள் மீதும் உளப்பூர்வமாகத் தோன்றும் ஒரு புதிய பந்தபாச உணர்ச்சி சுடர்விட்டு எழுந்தது. உலகத்துக்கே ஒரு புதிய இதயம் – எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும், எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தீராத ஆவலுணர்ச்சியால் துடிதுடிக்கும் ஒரு புதிய இதயம் – பிறந்துவிட்டது!
“சர்வ தேசங்களிலுமுள்ள சகல தொழிலாளர்களும் நிமிர்ந்து நின்று, “போதும் போதும் இது போன்ற வாழ்க்கை இனி எமக்குத் தேவையில்லை’ என்று கோஷித்து விம்மும் காலம் ஒருநாள் வரத்தான் போகிறது” என்று நிச்சய தீர்க்கத்தோடு கூறினாள் சோபியா. “தங்களது பேராசையின் பலத்தைத் தவிர, வேறு எந்தவிதமான நிஜ பலத்தையும் பெற்றிராத இன்றைய உலகின் ‘பலசாலிகள்’ அன்றைய தினத்தில் அழிக்கப்படுவார்கள். இந்த உலகம் அவர்களது காலடியை விட்டு நழுவி மறையும். அவர்களுக்குத் தப்பிப் பிழைப்பதற்கு எந்த உதவியும், எந்த மார்க்கமும் இருக்கவே இருக்காது!”
“அவ்வாறு நேரப்போவது உறுதி!” என்று தலைதாழ்த்திச் சொன்னான் ரீபின். “நாம் மட்டும் நம்மிடமுள்ள சகலவற்றையும், நம்மையுமே கொடுக்க, தியாகம் செய்யத் தயாராயிருந்தால், நம்மால் செய்ய முடியாத காரியம் எதுவுமே இருக்க முடியாது!”
தாய் தன் புருவங்களை உயர்த்தி, உதடுகளிலே வியப்பு நிறைந்த ஆனந்தப் புன்னகை தவழ, அந்தப் பேச்சைக் கேட்டாள். இயற்கைக்கு முற்றும் பொருந்தாதது போலத் தோன்றிய சோபியாவின் குணம் – எதையுமே அளவுக்கு மீறிய அநாயாசத்தோடு வெடுக்கென்று தூக்கியெறிந்து வெட்டிப் பேசுவதாகத் தோன்றிய அவளது குணம் – அவள் கூறிய ஆர்வமிக்க, தங்கு தடையற்ற கதையின் போக்கிலே அழிந்து மறைந்துபோய்விட்டது என்பதைத் தாய் கண்டுகொண்டாள். அன்றைய இரவின் அமைதியும், நெருப்பின் விளையாட்டும், சோபியாவின் முகமும் அவளுக்குப் பிடித்துப்போய்விட்டன; ஆனால் அவளுக்கு மிகவும் பிடித்துப்போன விஷயம், அந்த முஜீக்குகள் அனைவரும் காட்டிய பரிபூரணமான ஈடுபாட்டு உணர்ச்சிதான்! அவர்கள் அசைவற்று உட்கார்ந்திருந்தார்கள். சர்வதேசங்களோடும் தங்களை இணைத்துப் பிணைக்கும் பட்டுக்கயிறு போன்ற அந்தக் கதை. இடையிலே அறுந்துவிடக்கூடாதே என்ற பயமும் அந்த இடையறாத கதையின் போக்குத் தடைப்பட்டு நின்றுவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்புமே அவர்களை அப்படி அசையாதிருக்கச் செய்தன. இடையில் மட்டும் அவர்களில் யாராவது ஒருவன் எழுந்திருந்து அரவமே இல்லாமல் ஒரு விறகுக்கட்டையை எடுத்து நெருப்பில் மெதுவாகப் போடுவான். உடனே தீப்பொறிகள் தெறித்துச் சிதறும்; புகைச் சுழல் மண்டியெழும்பும். உடனே அவன் தன் கைகளை வீசி அந்தத் தீப்பொறிகளை விலக்குவான். அந்தப் பெண்கள் பக்கமாகப் புகை மண்டாதபடி விசிறிவிடுவான்.
இடையிலே யாகவ் எழுந்திருந்து அமைதியாகச் சொன்னான்:
“கொஞ்ச நேரம் பேச்சை நிறுத்தி வையுங்கள்.”
இப்படிக் கூறிவிட்டு அவன் வீட்டுக்குள்ளே ஓடிப்போய் சில துணிமணிகளைக் கொண்டு வந்தான், பிறகு அவனும் இக்நாதுமாக, அந்தத் துணிகளைத் தங்கள் விருந்தாளிகளின் தோள்மீதும் கால்மீதும் போர்த்தி மூடினார்கள். பிறகு சோபியா மீண்டும் பேசத் தொடங்கினாள். தங்களது வெற்றி தினத்தைப் பற்றிய நினைவுச் சித்திரத்தை வருணித்தாள்; தமது சொந்த பலத்தின்மீது அவர்கள் நம்பிக்கை விசுவாசம் கொள்ளும்படி தூண்டிவிட்டாள்; உண்டு கொழுத்து மதர்த்துப்போன உதவாக்கரை மனிதர்களின் முட்டாள்தனமான நப்பாசைகளையெல்லாம் பூர்த்தி செய்து வைப்பதற்காக, தங்களது உழைப்பையும் வாழ்வையும் விழலுக்கு இறைத்துக்கொண்டிருக்கும் உலக மக்களோடு, இவர்களும் ஒன்றுகலந்து ஏகத்தன்மை பெற வேண்டும் என்ற அந்தரங்க உணர்ச்சியைக் கிளறித் தூண்டிவிட்டாள். சோபியாவின் வார்த்தைகளால் தாய் உணர்ச்சிவசப்பட்டு விடவில்லை. ஆனால், அவள் சொல்லிய விவரங்களால் அவர்கள் அனைவரது உள்ளத்திலும் எழும்பிய ஆழ்ந்த உணர்ச்சி தாயின் உள்ளத்திலும் நிறைவைப் பொழிந்தது. அன்றாட உழைப்பினால் அடிமைப்பட்டுத் தளையிட்டுக் கிடக்கும் மக்களுக்கு நேர்மையான சிந்தனையையும், சத்தியத்தையும், அன்பையும் பரிசாகக் கொண்டு வந்து தர வேண்டும் என்ற காரணத்துக்காக, தங்களது வாழ்க்கையையே துயரத்துக்கும் துன்பத்துக்கும் ஆளாக்கி அர்ப்பணித்தவர்களின்மீது ஒரு மனப்பூர்வமான நன்றியுணர்ச்சி அவள் உள்ளத்திலே நிரம்பி நின்றது.
”கடவுள் அவர்களுக்கு அருள் செய்யட்டும்” என்று தன் கண்களை மூடித் தனக்குள்ளாகச் சிந்தித்துக்கொண்டாள் தாய்.
அருணோதயப் பொழுதில் தான் களைத்து ஓய்ந்துபோன சோபியா தன் பேச்சை நிறுத்தினாள். நிறுத்திவிட்டு, தன்னைச் சுற்றி சிந்தனையும் பிரகாசமும் தோன்றும் முகங்களோடு இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.
அந்த இளைஞர்களில் ஒருவன் உரத்துப் பெருமூச்செறிந்தான். ”நீங்கள் போவது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது” என்று வழக்கத்துக்கு மாறான மெல்லிய குரலில் சொன்னான் ரீபின்; ”நீங்கள் நன்றாகப் பேசுகிறீர்கள். அது ஒரு பெரிய விஷயம் – மக்களுக்கு ஒருமையுணர்ச்சியை ஊட்டுவது பெரிய விஷயம்! லட்சோப லட்சமான மக்களும் நாம் என்ன விரும்புகிறோமோ, அதையே விரும்புகிறார்கள் என்பதை அறிய நேரும்போது, அந்த உணர்ச்சி நம் இதயத்தில் அன்புணர்ச்சியே ஒரு மாபெரும் சக்திதான்!”
“ஆமாம். நீ அன்பு செய். அவன் உன் கழுத்தை வெட்டட்டும்” என்று கூறிச் சிரித்துக்கொண்டே எழுந்தான் எபீம். “சரி, மிகயீல் மாமா, யார் கண்ணிலும் படுவதற்கு முன்பே இவர்கள் போய்விடுவதுதான் நல்லது. அப்புறம் நாம் இந்தப் பிரசுரங்களைப் பரப்பிவிடத் தொடங்கியவுடனேயே அதிகாரிகள் இவற்றைக் கொண்டு வந்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முனைவார்கள். ‘இங்கே வந்தார்களே, அந்த இரு யாத்திரிகர்கள், ஞாபகமிருக்கிறதா?’ என்று பிறகு யாராவது கண்டவர்கள் சொல்லித் தொலைக்கப் போகிறார்கள்……”
“அம்மா, நீ எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு நன்றி” என்றான் ரீபின். “உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பாவெலைப் பற்றியே ஞாபகம் வருகிறது; நீ எவ்வளவு நல்ல சேவை செய்கிறாய்!”
இப்போது ரீபின் சாந்த குணத்தோடு இருந்தான். மனம்விட்டுப் புன்னகை புரிந்தான். காற்று குளிர்ந்து வீசியது. இருந்தாலும், அவன் கோட்டுக்கூடப் போடாமல், சட்டையைக்கூடப் பொத்தானிட்டு மூடாமல், திறந்த மார்போடு நின்றான். அவனது பெரிய தோற்றத்தைப் பார்த்தவாறே தாய் அன்போடு கூறினாள்.
“நீ உன் உடம்பில் ஏதாவது போர்த்திக்கொள். ஒரே குளிராயிருக்கிறது.”
அந்த மூன்று இளைஞர்களும் நெருப்பைச் சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்; அவர்களது காலடியிலே அந்த நோயாளி கம்பளிக் கோட்டினால் போர்த்தப்பட்டுக் கிடந்தான். வானம் வெளிறிட்டது. இருட்படலம் விலகிக் கரைந்தது. சூரியனின் வரவை நோக்கி இலைகள் படபடத்தன.
“நல்லது. நாம் விடை பெற்றுக்கொள்ள வேண்டியதுதான்” என்று கூறிக்கொண்டே தன் கரத்தை சோபியாவிடம் நீட்டினான் ரீபின். ”சரி, நகரில் உங்களை எங்கு கண்டுபிடிப்பது?”
”நீ என்னைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்றாள் தாய்.
அந்த இளைஞர்கள் மூவரும் மெதுவாய் சோபியாவிடம் வந்து, அசடு வழியும் நட்புரிமையோடு அவளது கரத்தைப் பற்றிக் குலுக்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அருமையான, அன்பான, அந்தரங்கமான இன்ப உணர்ச்சிக்கு ஆளானார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்த உணர்ச்சி அதனது புதுமையினால் அவர்களைக் கலங்கச் செய்வது போலத் தோன்றியது. அந்த இளைஞர்கள் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் தூக்கம் விழித்துச் சிவந்துபோன தன் கண்களால் சோபியாவைப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டார்கள்.
“போவதற்கு முன்னால், கொஞ்சம் பால் சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டான் யாகவ்.
”பால் இருக்கிறதா?” என்றான் எபீம்.
“இல்லை” என்று கூறிக்கொண்டே, தலையைத் தடவினான் இக்நாத்: ”நான் அதைச் சிந்திவிட்டேன்.”
அவர்கள் மூவரும் சிரித்தார்கள்.
அவர்கள் பாலைப் பற்றித்தான் பேசினார்கள். என்றாலும் அவர்கள் வேறு எதைப்பற்றியோ சிந்தித்துக்கொண்டிருப்பதாக, தன் மீதும் சோபியா மீதும் மனம் நிறைந்த பரிவோடும் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதாகத் தாய்க்குத் தோன்றியது. இந்த நிலைமை சோபியாவின் உள்ளத்தைத் தொட்டுச் சிறு குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. அவளும் அந்த இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க முடியாமல், குன்றிப்போனாள். அவளால் பின்வருமாறுதான் சொல்ல முடிந்தது.
“நன்றி, தோழர்களே!”
அந்த இளைஞர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவள் தங்களைப் பார்த்துச் சொன்ன அந்த வார்த்தை ஓர் ஊஞ்சலைப் போன்று கொஞ்சங் கொஞ்சமாக ஆகாயத்தில் தூக்கிச் செல்வதுபோல் அவர்களுக்குப் பட்டது.
அந்த நோயாளி திடீரெனப் பலத்து இருமினான். அணைந்து கொண்டிருந்த நெருப்பில் கரித்துண்டுகள் கனன்று மினுமினுக்கவில்லை.
“போய்வாருங்கள்” என்று அமைதியாகக் கூறினார்கள் முஜீக்குகள். அந்தச் சோகமயமான வார்த்தை அப்பெண்களின் காதுகளில் வெகுநேரம் ஒலித்துக்கொண்டிருந்தது.
அவர்கள் மீண்டும் அந்தக் காட்டுப்பாதை வழியாக அருணோதய காலத்தின் பசப்பொளியில் அவசரமேதுமின்றி நிதானமாக நடந்து சென்றார்கள்.
“இங்கு, எல்லாம் எவ்வளவு அருமையாயிருந்தது!” என்று சோபியாவுக்குப் பின்னால் நடந்து கொண்டே வந்த தாய் சொன்னாள்!” எல்லாம் சொப்பனம் மாதிரி இருக்கிறது. மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்! உண்மையைத் தெரிந்து கொள்ளத் துடியாய்த் துடிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒரு பெரிய திருநாளன்று மக்களெல்லாம் அதிகாலைப் பிரார்த்தனைக்காகத் தேவாலயத்தில் கூடியிருப்பது போலவும், மதகுரு இன்னும் வராதது போலவும், எங்குமே இருளும் அமைதியும் சூழ்ந்திருப்பது போலவும், அப்போது நம் உடம்பு தவியாய்த் தவிப்பது போலவும், மக்கள் வந்து நிறைந்து கொண்டே இருப்பது போலவும் தோன்றுகிறது. அந்தத் தேவாலயத்திலுள்ள விக்ரகத்தின் முன்னால் யாரோ விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள்; கடவுளின் இல்லத்துக்கு ஒளி வருகிறது. இருள் கொஞ்சங் கொஞ்சமாக விலகியோடுகிறது.”
”எவ்வளவு உண்மை என்று உவகையோடு சொன்னாள் சோபியா. “இங்கு மட்டும்தான் கடவுளின் இல்லம் உலகம் முழுவதையுமே தழுவி நிற்கிறது!”
“உலகம் முழுவதையுமா?” என்று தலையை அசைத்துச் சிந்தித்துக்கொண்டே சொன்னாள் தாய். “நம்புவதற்கே முடியாத அவ்வளவு பெரிய உண்மை இது. சோபியா! நீங்கள் எவ்வளவு நன்றாகப் பேசுகிறீர்கள். அருமையாயிருந்தது. உங்களை அவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்று நான் பயந்திருந்தேன்.”
சோபியா ஒரு கணம் மெளனமாக இருந்தாள்; பிறகு அமைதியோடும் சோர்வோடும் சொன்னாள்.
அவர்கள் இருவரும் ரீபினைப் பற்றியும் அந்த நோயாளியைப் பற்றியும், கவனம் நிறைந்த மெளனமும், விருந்தாளிகளுக்கு வேண்டிய சின்னஞ்சிறு சேவைகளில்கூட மிகுந்த ஈடுபாடும் நன்றியுணர்ச்சியும் கொண்டிருந்த அந்த இளைஞர்களைப் பற்றியும் பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள். அவர்கள் காட்டுப் பிராந்தியத்தைக் கடந்து வயல்வெளிக்கு வந்தார்கள். சூரியன் அவர்களுக்கு எதிராக மேலெழுந்தது. எனினும் சூரியனின் முழு உருவமும் வெளியே தெரியவில்லை. செக்கச் சிவந்த கதிர்களை மட்டும் விசிறி மாதிரி வான மண்டலம் முழுவதும் விரிந்து ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தது. புல் நுனிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் பனித்துளிகள் சூரிய கிரணம் பட்டவுடன் வானவில்லின் வர்ண ஜாலம் சிதறி, வசந்தத்தின் கோலாகலத்தோடு புன்னகை புரிந்தன. பறவைகள் விழித்தெழுந்து உற்சாகமயமான கீதக் குரலை எழுப்பி, அந்தக் காலை நேரத்துக்குக் களிப்பூட்டி ஜீவனளித்தன. பெரிய பெரிய காக்கைகள் தங்களது இறக்கைகளைப் பலமாக அடித்து வீசிக்கொண்டும், ஆர்வத்தோடு கத்திக்கொண்டும் வான மண்டலத்தில் பறந்து சென்றன. எங்கிருந்தோ ஒரு மஞ்சலாத்திக் குருவியின் சீட்டிக் குரல் ஒலித்தது. தூரவெளிகள் கண்ணுக்குத் தெரிந்தன. குன்றுகளின் மீது படிந்திருந்த இருட்திரைகள் சுருண்டு மடங்கி மேலெழுந்து மறைந்தன.
”சமயங்களில் ஒருவன் பேசிக்கொண்டே இருப்பான்; அவன் எவ்வளவுதான் வளைத்து வளைத்துப் பேசினாலும் அவன் சொல்லுகின்ற விஷயம் புரிபடுவதேயில்லை. திடீரென அவன் ஒரு சாதாரண வார்த்தையைக் கூறிவிடுவான். உடனே எல்லாமே விளங்கிவிடும்” என்று ஏதோ நினைத்தவளாய்ப் பேசினாள் தாய். அதுபோலத்தான் அந்த நோயாளியின் பேச்சும் இருந்தது. நானும் எவ்வளவோ கேட்டிருக்கிறேன். எவ்வளவோ பார்த்திருக்கிறேன். அவர்கள் எப்படித் தொழிலாளர்களைத் தொழிற்சாலைகளிலும், வேறிடங்களிலும் விரட்டி விரட்டி வேலை வாங்குகிறார்கள் என்பதை நானும் அறிந்திருக்கிறேன். ஆனால், சிறுவயதிலிருந்தே இதெல்லாம் பழகிப்போய்விடுவதால், அதைப் பற்றிய சுரணையே நம் மனத்தில் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் அத்தனை வேதனையையும் அவமானத்தையும் தரும் அவன் சொன்ன அந்த விஷயம் இருக்கிறதே! கடவுளே! தங்களது முதலாளிகளின் சில்லறை விளையாட்டுகளுக்காக மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்து உழைத்துக்கொண்டிருக்க முடியுமா? அதிலே என்ன நியாயம் இருக்கிறது?”
அந்த மனிதனின் நிலையைப் பற்றியே அவளது சிந்தனைகள் வட்டமிட்டன. இந்த மனிதனின் வாழ்க்கையைப் போலவே ஒரு காலத்தில் அவளுக்குத் தெரிந்திருந்த பலபேருடைய வாழ்க்கைகளைப் பற்றிய நினைவுகளும் அவள் மனத்தில் மங்கித் தோன்றின.
“அவர்களிடம் அனைத்தும் இருக்கிறது. எல்லாம் திகட்டிப்போய் உமட்டுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு கிராம அதிகாரியைத் தெரியும். அவன் தனது குதிரை கிராமத்து வழியாக எப்போதெப்போது சென்றாலும், கிராம மக்கள் அந்தக் குதிரைக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தான். வணங்காதபேர்களை அவன் கைது செய்து கொண்டுபோய்விடுவான். இந்த மாதிரிக் காரியங்களை அவன் எதற்காகச் செய்ய வேண்டும்? இந்த மாதிரியான செய்கையிலே ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?”
அருணோதய வேளையைப் போலவே குதூகலம் தொனிக்கும் ஒரு பாட்டை மெதுவாகப் பாட ஆரம்பித்தாள் சோபியா……
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
பாஜக-வின் தோல்வியை சிறுபான்மையினருக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாமா? கேள்வி பதில் – ஷாஜகான்.
அன்புள்ள ஷாஜகான்,
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் படி பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. குறிப்பாக மத்திய பிரதேசம் ராஜஸ்தான் சட்டீஸ்கர் ஆகியவற்றில் பாஜக தோல்வி அடைந்திருப்பது முக்கியமானது. இந்த தோல்வியின் அடிப்படை என்ன?
இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிரான கட்சிகள், மக்கள் அனைவரும் இந்தத் தோல்வி குறித்து மகிழ்கின்றனர். ஆனால் இந்த தோல்வி உண்மையிலேயே முற்போக்கு பிரிவினரின் கொள்கையால் கிடைத்த ஒன்றா என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்தியாவின் மாநிலங்களில் பரப்பளவில் இரண்டாவது பெரிய மாநிலமும் மக்கள் தொகையில் ஐந்தாவது பெரிய மாநிலமான மத்திய பிரதேசத்தை எடுத்துக் கொள்வோம். இங்கே கிட்டத்தட்ட ஏழரை கோடி மக்கள் வாழ்கின்றனர். 70% அளவுக்கு கல்வியறிவுள்ள இம்மாநிலத்தில் இந்திதான் ஆட்சி மொழி
மாநில மக்கள் தொகையில் பழங்குடி மக்கள் கணிசமான அளவுக்கு இருக்கிறார்கள். அதேபோன்று தாழ்த்தப்பட்ட மக்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வாழ்கிறார்கள். 2011 சென்சஸ் கணக்குப்படி மத்திய பிரதேச மக்கள் தொகையில் ஆதிவாசி மக்களின் விகிதம் ஏறக்குறைய 21% இருக்கிறது. இந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டது. இதை எதிர்த்து தலித் மக்கள் நடத்திய போராட்டத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் முக்கிய பங்கு வகித்தது.
பொதுவில் பழங்குடி மக்கள் மதம் என்ற அளவில் இந்து மதத்திற்குள் வரமாட்டார்கள். பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பண்பாடு பார்ப்பனிய சடங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தாலும், இவர்களையெல்லாம் ஏதோ ஒரு வகையில் இந்துக்கள் என்ற வகையில் மோசடியாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். மத்திய பிரதேசத்தை பொருத்தவரை அரசு தந்திருக்கும் புள்ளிவிவரப்படி மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் இந்துக்கள். முஸ்லிம்கள் 6.5% இருக்கின்றனர். மற்ற மதங்கள் சொல்லிக்கொள்ளும் விகிதத்தில் இல்லை.
பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் ராஜஸ்தான். மக்கள்தொகையில் ஏழாவது பெரிய மாநிலமும் ஆகும். ஏறக்குறைய ஏழு கோடி மக்கள் வாழும் ராஜஸ்தானில் இந்திதான் அதிகாரபூர்வமான ஆட்சி மொழி. கல்வியறிவு சதவீதம் 66. மக்கள் தொகையில் மதத்தை பொருத்தவரை இந்து மதத்தினர் 88.1 சதவீதம், முஸ்லிம்கள் 9%, சீக்கியர்கள் 1.27 சதவீதம் என வாழ்கின்றனர்.
மத்திய பிரதேசத்தில் இருந்து 2000-ம் ஆண்டில் இருந்து பிரிந்தது சட்டீஸ்கர் மாநிலம். இம்மாநிலத்தில் இரண்டரை கோடி மக்கள் வாழ்கின்றனர். மின்சாரம் மற்றும் இரும்பு உற்பத்தியில் இம்மாநிலம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.
சட்டீஸ்கர் மாநிலத்தின் மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் சுமார் 50 சதவீத அளவுக்கு இருக்கின்றனர். அவர்களையும் இந்துக்களாக கணக்கில் கொண்டு, 2011 சென்சஸ் கணக்கின் படி இந்துக்கள் 93 சதவீதமும், முஸ்லீம்கள் 2 சதவீதமும், கிறித்தவர்கள் 2 சதவீதமும் வாழ்கின்றனர்.
அடிப்படையில் மூன்று மாநிலங்களும் விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட மாநிலங்கள்தான். அதாவது மாநில மக்களில் பெரும்பான்மையினர் விவசாய வேலைகளால்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். கனிமவளத்திற்கு பெயர் போன சட்டீஸ்கரில் கூட வேலை வாய்ப்பு என்பது விவசாயத்தில்தான்.
இந்தி மாநிலங்கள் மற்றும் பசு மாநிலங்களின் படுகை என்றழைக்கப்படும் இம்மாநிலங்களில் பண்பாட்டு ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் பார்ப்பனியம் வலுவாக இருக்கிறது. அதாவது ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பும் அது சார்ந்த சடங்கு, சம்பிரதாயங்கள், தண்டனைகளும் இங்கே ஆழமாக வேரூன்றியிருக்கின்றது. பெண்ணடிமைத்தனம், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறை, முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறி போன்றவற்றில் இந்த மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.
இத்தகைய பின்னணியில்தான் பாரதிய ஜனதா இங்கே வலுவாக காலூன்றியிருக்கிறது. இம்மாநிலங்களில் ஆட்சியில் இல்லாத முந்தைய ஆண்டுகளில் கூட பாரதிய ஜனதா இங்கே பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டிருக்கிறது. சங்க பரிவாரங்களின் அத்தனை உறுப்புகளும் இங்கே பீடு நடை போட்டு வளர்ந்திருக்கின்றன. 2014-ம் ஆண்டில் மோடி ஆட்சி ஏற்ற பின்னர் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் கணிசமான அளவு இந்த மாநிலங்களில் நடந்திருக்கின்றன.
மேலும் இங்கே இந்துத்துவ பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக எவரும் அவ்வளவு சுலபமாக பிரச்சாரம் செய்து விட முடியாது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது ராகுல்காந்தி என்ன சொன்னார் நினைவிருக்கிறதா? ஆர்.எஸ்.எஸ் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழக மக்களை மோடி அரசு ஒடுக்குகிறது என்று அவர் டிவிட்டரில் சொன்னார். அதே ராகுல் காந்தி இந்த தேர்தலின் போது இம்மாநிலங்களில் கோவில்களுக்கு சென்று வந்தார். காங்கிரசின் தேர்தல் அறிக்கைகளிலும் சில பார்ப்பனியக் கொள்கைகளை ஆதரிக்கும் வாக்குறுதிகள் உள்ளன.
சட்டீஸ்கரிலும் மத்தியப் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா 15 ஆண்டுகளாக ஆண்டதற்கு பிறகு இங்கே இந்துத்துவா அமைப்புகள் மேலும் வலுவாக இருக்கின்றன. இந்நிலையில் இம் மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்றாலும் அதை முற்றிலும் பின்னடைவு என்று கூறிவிட முடியாது
பதிவான வாக்குகளை வைத்துப் பார்த்தால் ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 38.8% வாக்குகளை பா.ஜ.க-வும், காங்கிரஸ் கட்சி 39.2 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. வேறுபாடு மிகவும் சொற்பம். அதே போன்று மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் 41.3 ஆகும். காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 41.4. இங்கே கிட்டத்தட்ட இரு கட்சிகளும் ஒரே அளவில்தான் வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. சட்டீஸ்கர் மாநிலத்தின் பொருத்தவரை பாரதிய ஜனதா 32.9 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி 43.2 சதவீத வாக்குகளையும் பெற்றன.
இதை வைத்து பார்க்கும்போது சத்தீஸ்கர் மாநிலத்தை தவிர ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜகவும் காங்கிரசும் கிட்டத்தட்ட சம அளவில்தான் வாக்குகளைப் பெற்று இருக்கின்றன.
கடந்த கால தேர்தல் வரலாறுகளைப் பார்த்தால் ராஜஸ்தானில் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் மாறி மாறி வென்றிருக்கின்றனர். அதன்படி பார்த்தால் இப்போது பாரதிய ஜனதாவின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள் என்றும் சொல்லலாம். மத்தியப் பிரதேசத்திலும் மூன்று முறை ஆட்சியில் அமர்ந்த பாரதிய ஜனதாவிற்கு எதிரான போக்கு மக்களிடையே இருந்திருக்கும்.
மத்திய பிரதேசத்தில் மோடி அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டிபோன்ற கொள்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டது வெளிப்படை. இரண்டாவதாக மத்திய பிரதேசத்தில் நடந்த விவசாயிகளது போராட்டங்களும் அதை ஒடுக்க மாநில அரசு நடத்திய துப்பாக்கி சூடு வன்முறைகளும் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
வர்க்கம் என்ற அளவில் விவசாயிகள், வணிகர்கள் போன்றோர் பாஜக மீது அதிருப்தியில் இருந்தனர். தலித் மக்கள், பழங்குடி மக்கள், சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை அவர்களும் பாஜகவின் மீதான கோபம் ஒரு நிதர்சனம். சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது அம்மக்களிடையே ஒரு எதிர்ப்பை கண்டிப்பாக உருவாக்கியிருக்கும்.
இத்தகைய காரணங்களால் பாஜக இதற்கு முன்னர் வாங்கிய வாக்கு சதவீதத்தை இழந்திருக்கின்றது. அதே நேரம் இந்த எதிர்ப்பு வாக்குகள் அலை அலையாய் காங்கிரசிற்கும் கிடைத்து விடவில்லை. மாற்று ஏதுமில்லை என்பதால் வேறு வழியின்றி மக்கள் காங்கிரசை ஆதரித்திருக்கின்றனர்.
ஆகவே இந்த தேர்தல் முடிவுகளால் பாஜக தோல்வி அடைந்தது என்பதை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருத முடியாது.
மேலும் இந்தியத் தேர்தல்களில் சிறுபான்மை மக்கள் தமது எண்ணிக்கையின் படியும் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. இந்துக்களில் ஊரகப்பகுதிகளில் வாழும் விவசாயிகள் பாஜகவை எதிர்ப்பது போல நகரப் பகுதிகளில் உள்ள நடுத்தர வர்க்கம் எதிர்க்கவில்லை, ஆதரிக்கிறது.
தேர்தல் முறைகளை தாண்டி பார்ப்பனியம் என்பது இந்நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்த்த வேண்டும்.
தமிழகம் போல இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிராக ஒரு பிரச்சார இயக்கத்தை இந்த இந்தி மாநிலங்களில் யாரும் நடத்தி விட முடியாது. அந்த அளவுக்கு மக்கள் பார்ப்பனியத்தால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனர். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வளர்ச்சி என்ற பெயரில் காங்கிரசு மீதான அதிருப்தியை அறுவடை செய்தது பாஜக. அதற்கு பின்னர் வந்த உ.பி தேர்தலில் தெளிவாக மதவெறியை பிரச்சாரம் செய்தது. அடுத்த வருடம் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அவர்கள் இப்போதே ராமன் கோவில் என்று பேரணிகளை நடத்த துவங்கியுள்ளனர்.
மோடியின் பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை திசை திருப்ப அவர்கள் இன்னமும் மதவெறிக் கொள்கைகளை கையில் எடுப்பார்கள். மேலும் ஆத்திரத்தில் உள்ள வணிகர்கள், தொழிலாளிகள், விவசாயிகளை தணிப்பதற்கு நிச்சயம் முயல்வார்கள். அதன்படி பார்த்தால் அடுத்த தேர்தலில் பாஜக தோற்றுவிடும் என்று அறுதியிட்டு சொல்லும் நிலைமை இல்லை.
மேலும் தேர்தல் முறைகளை தாண்டி வலுவாக இருக்கும் பார்ப்பனியம் என்பது இந்நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்த்த வேண்டும். பொருளாதார அடக்குமுறைகளில் இருந்து திசை திருப்பும் வண்ணமே இங்கு ராமன் கோவில், பசுவதை போன்றவை பேசப்படுகின்றன என்பதையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்த போராட்டங்கள் நாடாளுமன்ற – சட்ட மன்றங்களுக்கு வெளியே எவ்வளவு அதிகமாய் நடக்கிறதோ அந்த அளவுக்கு பாஜக தனிமைப்படும்.
ஆகவே இந்துத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் வெல்வதற்கு அனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டும். இந்தப் பாதையில்தான் சிறுபான்மை மத மக்களும் பாதுகாப்பாக சமத்துவமாக வாழும் நிலை ஏற்படும். இந்தப் பாதையை உடைப்பதுதான் பாஜக-வின் குறி!
சலம்பல் 1 இயல்பாகவே இந்துத்துவாவை ஆதரிக்கும் ரஜினிகாந்த் !
நேற்று 11.12.2018 அன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பதிலளித்தார். அதில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது; மேலும் பாரதிய ஜனதா செல்வாக்கை இழந்திருப்பதைது இந்த முடிவுகள் காட்டுகின்றன என அவர் கூறினார்.
உடனே ஊடகங்கள் அனைத்தும் பாஜகவின் ஆதரவு நிலையிலிருந்து ரஜினி பின்வாங்கியதாக தொலைக்காட்சி விவாதங்களில் எடுத்துவிட்டனர். அது உண்மையா என்றால் நிச்சயம் இல்லை. ஏனெனில் இங்கே ரஜினி கூறியிருப்பது வெறுமனே தேர்தல் முடிவுகள் பற்றிய எதார்த்தமான நிலவரத்தை மட்டுமே. அதில் அவர் கருத்து எதையும் கூறவில்லை. பாஜக தோல்வி அடைந்ததற்கு காரணம் இந்தந்த பிரச்சனைகள் என்று அவர் எதையும் பட்டியலிட்டு சொல்லவில்லை. அந்த அளவு அவருக்கு அறிவில்லை என்பது வேறு விசயம்.
சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைகிறது என்று கூறுவதெல்லாம் ஒருவர் எடுக்கும் நிலைப்பாடு பற்றியதல்ல. அவை இயற்கை குறித்த உண்மை மட்டுமே. விமான நிலையத்தில் கேட்ட கேள்வியை சற்று நீட்டித்து பாரதிய ஜனதா ஏன் தோல்வி அடைந்தது என ரஜினியிடம் கேட்டால் அவர் என்ன கூறுவார்? இன்றைக்கு தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக ஆதரவாளர்கள் எப்படி புதிது புதிதாக காரணங்களை கண்டுபிடித்து கூறுகிறார்களோ அதைப் போன்று அவரும் கூற முயற்சிப்பார். அதுவும் கூட அவருக்கு யாராவது மண்டபத்தில் எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் மண்டப டிப்ஸ் இல்லையென்றால் இதெற்கெல்லாம் கருத்துக் கூற முடியாது, நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை என்று எஸ்கேப் ஆவார்.
ஏற்கனவே எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து பாரதிய ஜனதாவை எதிர்ப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டபோது அவர் என்ன கூறினார்? 10 பேர்கள் இணைந்து ஒருவரை அடிக்கிறார்கள் என்றால் பலசாலி யார்? அந்த 10 பேரா? அடிகளை துணிவாக எதிர்கொள்ளும் அந்த ஒருவரா? இதன்படி அவர் வெளிப்படையாகவே மோடியையும் பாஜகவையும் ஆதரிக்கிறார்.
இந்த தேர்தல் முடிவுகள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கலாம் ஆனால் இயல்பாகவே இந்துத்துவாவை ஆதரிக்கும் ரஜினிகாந்த் ஒருபோதும் பாரதிய ஜனதாவை விட்டுக்கொடுக்க மாட்டார். மேலும் இது மாநில பிரச்சினைகள் சார்ந்து மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பு என நடுநிலையாளர்கள் என்ற பெயரில் சில பாஜக ஆதரவாளர்கள் கூறுவது போல அவரும் கூறலாம்.
சலம்பல் 2 தேர்தல் முடிவு குறித்து வாய் திறக்காதாம் அதிமுக !
பாரதியாரின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்தனர் தமிழக அமைச்சர்கள். இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்று பாரதியார் படத்திற்கு மலர் தூவினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூற முடியாது என்று ஒரேயடியாக மறுத்துவிட்டார். தோல்வியை வைத்து பாஜகவிற்கு பின்னடைவா என்பதை கணிக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சி, அதிமுக-விற்கு மாமனோ மச்சானோ கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தலைமை முடிவு செய்யும். எதிர்க்கட்சிகள் என்னதான் ஒரு வலுவான கூட்டணி அமைத்தாலும் அதிமுக-தான் வெற்றி பெறும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்பதற்கு கூட பதிலளிக்க முடியாத அடிமை நிலையில் அதிமுக இருப்பது ஆச்சரியம் இல்லை. சில ஊடகங்கள் ஆனானப்பட்ட ரஜினிகாந்த் கூட பாரதிய ஜனதாவிற்கு பின்னடைவு எனக் கூறியிருக்கும்போது அதிமுக ஏன் வாய் திறக்க மறுக்கிறது என கேட்கின்றனர். ஜெயலலிதா இறந்த பிறகு முதலில் ஓபிஎஸ் பிறகு எடப்பாடி என்று அதிமுக ஆட்சி தொடர்ந்தாலும் இவர்களை பாரதிய ஜனதா இயக்குகிறது என்பது உலகறிந்த உண்மை.
அவ்வப்போது அதிமுக-அமைச்சர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்யும். இதையே வேறு வேறு வார்த்தைகளின் மூலம் பாஜக-வினர் அதிமுகவை செல்லமாக மிரட்டுவார்கள். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வாக்குகளே இல்லாத பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக-வை விட்டால் ஆள் இல்லை. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கேட்காமலேயே தங்கள் வாக்குகளை அள்ளிக் கொடுத்த அதிமுக இங்கே பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரு சொல்லைக்கூட கூறாது.
நேற்று தேர்தல் முடிவு தொடர்பாக நடந்த விவாதங்களில் அவ்வப்போது அதிமுகவினர் வந்தாலும் வரும் வாய் திறக்கவில்லை ஜெயக்குமார் போல நாங்கள் ஏன் கருத்துரைக்க வேண்டும் என தப்பிக்கப் பார்த்தார்கள். விடாமல் கேட்டீர்களென்றால் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம் தான் புரட்சித்தலைவி அம்மா செய்த சாதனைகள் இன்னும் தொடர்கின்றது எங்களை யாரும் வெல்ல முடியாது என்பதையே கிளிப்பாட்டு போல பாடுகிறார்கள்.
அடிமை என்பதால் ஒரே மாதிரிதான் இந்த இத்துப் போன பாட்டு வருகிறது. என்ன செய்வது மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்தாலும் அதை படிப்பதற்கு கூட அதிமுகவில் யாருக்கும் தைரியம் இல்லையே?
சலம்பல் 3 பாஜக-வின் இளைய பங்காளி சிவசேனா கேலி செய்கிறது.
பாரதிய ஜனதாவின் தோல்வியை அதன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா கொண்டாடுகிறது. இதுகுறித்து அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் நாட்டுக்கு புதிய பாதையை காட்டிவிட்டனர். தங்களுக்கு வேண்டாதவர்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு மக்கள் துணிந்து விட்டனர். மக்களின் துணிச்சலான இந்த முடிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
உத்தவ் தாக்கரே.
மேலும் இந்த 5 மாநிலங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான சர்ச்சைகள், வாக்காளர்களுக்கான பண விநியோகம், குண்டர்கள் அச்சுறுத்தல் போன்ற எந்த ஒரு காரணத்தையும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் ஆளுங்கட்சியை நிராகரித்துள்ளனர். இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரேவும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், அடக்கு முறையை கையாளும் அரசின் முகத்தில் விழுந்த அடியாகும். தனி மனிதராக இருந்து போராடி பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். என்று ராஜ்தாக்கரே தெரிவித்திருக்கிறார்.
சிவசேனாவை பொறுத்தவரை அக்கட்சி பாரதிய ஜனதாவின் இயல்பான இந்து மதவெறி கருத்துடைய இளைய பங்காளி ஆகும். காலஞ்சென்ற பால்தாக்கரே இந்து மதவெறியின் தளபதியாக பணியாற்றினார். அப்போது அரசியலில் செல்வாக்கை அதிகரித்து வந்த பாரதிய ஜனதா மெல்ல மெல்ல மராட்டிய மாநிலத்தில் சிவசேனாவின் இடத்தைக் காலி செய்தது. அப்போதைய தேர்தல்களில் அதிக இடங்களில் சிவசேனாவும் குறைவான இடங்களில் பாஜக-வும் போட்டியிடும். பின்னர் இது தலைகீழாக மாறியது.
பால் தாக்கரேர இறந்த பிறகு சிவசேனா இரண்டாக உடைந்தது. அதன்பிறகு சிவசேனாவிற்கு அரசியலில் எதிர்காலம் இல்லை என்று ஆனது. இப்படித்தான் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைந்தது. அதன் பிறகு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிவசேனா தலைவர்கள் இப்படி புலம்பியவாறு தங்களது அவல நிலையை சமாதானம் செய்து கொள்கின்றனர்.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. இதை வெற்றிகரமான தோல்வி என திருவாய் அருளியிருக்கிறார் தமிழிசை. பா.ஜ.க ஆதரவாளர்களோ இந்த தோல்வியில் இருந்து மோடியை காப்பாற்றுவதற்கு ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள்.
இம்மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக-வின் ஓட்டு வங்கி சரிந்திருக்கிறது. பொதுவில் விவசாயம் முதன்மையாக உள்ள இம்மாநிலங்களில் ஊரகப் பகுதிகளில் பாஜக கணிசமாக தோற்றிருக்கிறது. ஆதித்யநாத் போன்ற இந்துமதவெறியர்களை இறங்கி மதவெறியை பிரச்சாரம் செய்தாலும் பெரிய பலனில்லை.
இன்றைய கேள்வி:
பாஜக-வின் தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? * மோடி அலை வீழ்ச்சி
* காங்கிரசின் எழுச்சி
* விவசாயிகளின் கோபம்
* எடுபடாத இந்துமதவெறி
(பதில்களில் இரண்டை தெரிவு செய்யலாம்.)
டிவிட்டரில் வாக்களிக்க :
பாஜக-வின் தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன?
* மோடி அலை வீழ்ச்சி * காங்கிரசின் எழுச்சி * விவசாயிகளின் கோபம் * எடுபடாத இந்துமதவெறி
பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாகவும் உடல்ரீதியாகும் துன்புறுத்திய சம்பவத்தில் ஒரு புதிய செய்தி. ‘தேசபக்தி’ புகழ் ரிபப்ளிக் டிவியின் செய்தியாளரான அனிருத்தா பாகத் சூட்டியா என்பவர் இதற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் ‘மேலிடத்து’ அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ‘தி வயர்’ இணையதளம் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம் பேசுகையில், நடந்த சம்பவம் குறித்து அவர் விவரித்தார். வழக்கமாக பணியிலிருந்து வீட்டிற்குச் செல்கையில் அருகில் உள்ள வீதியில் தனது கூட்டாளி ஒருவனுடன் அனிருத்தா நின்று கொண்டிருந்ததாகவும், அவ்வழியே தாம் செல்கையில் கத்தியை தன் கழுத்தில் வைத்து மிரட்டி, பலவந்தப்படுத்தி அவரது வீட்டிற்கு தன்னை இழுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
‘தேசபக்தி’ புகழ் ரிபப்ளிக் டிவியின் செய்தியாளரான அனிருத்தா பாகத் சூட்டியா
மேலும் இது குறித்துக் கூறுகையில், “வீட்டிற்குள் இழுத்துச் சென்றதும் எனது கைகளை நாற்காலியில் கட்டி வைத்து என்னை தாக்கத் தொடங்கினார் அனிருத்தா. அதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததும், பாலியல் ரீதியாக என் மீது தாக்குதலைத் தொடுத்தார். அவரது தாயாரும் அந்த வீட்டில் அனிருத்தாவுக்கு உடந்தையாக இருந்தார். அதன் காரணமாகத்தான் அவரது பெயரையும் நான் புகாரில் சேர்த்திருக்கிறேன்.
சில நேரத்துக்கு பின் எனது கைகள் விடுவிக்கப்பட்டன. அச்சமயத்தில் நான் உடனடியாக எனது பையில் இருக்கும் அலைபேசியை எடுத்து என்னுடன் பணிபுரியும் நண்பர்களுக்கு தகவலை கூறினேன். அவர்கள் பிரதான வாயில் வழியாக வந்து ஒரு வழியாக என்னை மீட்டனர்” என்கிறார், அந்த பத்திரிகையாளர்.
அதன் பின்னர், அருகில் உள்ள திஸ்பூர் போலீசு நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த பெண் பத்திரிகையாளர். அசாம் உள்ளூர் ஊடகங்கள் அளிக்கும் தகவலின்படி இந்திய தண்டனை சட்டம் 354, 341, 392, 323, 506 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ரிபப்ளிக் டிவி பத்திரிகையாளரை விசாரிக்க, கைது செய்து அழைத்துச் சென்றது போலீசு. ஆனால் மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக டிசம்பர் 3-ம் தேதி அவரை வெளியே விட்டது.
புகார் அளித்த பெண் பத்திரிகையாளர் இது குறித்து, ‘தி வயர்’ இணையதளத்திடம் பேசுகையில், “போலீசு மேலிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகத்தான் குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்தாமல், விடுவித்திருக்கிறது.” என்றார்
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-ன் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தால் குற்றம் சாட்டப்பட்ட நபரை முறையாக நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக போலீசார் அவரை விடுத்திருக்கின்றனர். முறையாக பின்பற்றப்பட வேண்டிய எந்த ஒரு நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர் இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
புகார் கொடுப்பதில் போலீசு தமக்கு தவறான வழிகாட்டுதல் கொடுத்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார், பாதிக்கப்பட்ட பெண் பத்திரிக்கையாளர். மேலும் அவர் கூறுகையில், “என்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள், அன்று இரவு என்னை அனிருத்தா வீட்டிலிருந்து மீட்ட பிறகு நாங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் பதிவு செய்தோம். நான் கடத்தப்பட்ட அதிர்ச்சியில் இருந்தேன். புகார் வாக்குமூலத்தை அளிக்கும் நிலையில் நான் இல்லை. ஆகவே எனக்கு பதிலாக என்னுடன் பணிபுரியும் நண்பரை புகார் எழுதுமாறு போலீஸ் நிலையத்தில் கேட்டுக் கொண்டனர்.
அனிருத்தா தனது கூட்டாளியுடன் சேர்ந்து என்னை கத்திமுனையில் கடத்தியதை அவர்கள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யவில்லை. என் உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதனை அவர்களுக்கு எடுத்துக் கூறியும் அதை கண்டுகொள்ளவில்லை. அதன் காரணமாகவே கொலை முயற்சி மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதன்மூலம் இந்த வழக்கை பலவீனப்படுத்தி இருக்கிறது போலீசு.” என்றார்.
மேலும், அங்கிருந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு தவறான வழக்கு எண்ணை கூறியிருக்கின்றனர். 3637 என்ற எண்ணிற்கு பதிலாக 3636 என்ற எண்ணை கூறியிருக்கின்றனர்.
திஸ்பூர் போலீஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி பிரேன் பருவா இது குறித்துக் கூறுகையில், “சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட அனிருத்தாவை திங்கள் கிழமை அன்று விடுவித்துவிட்டோம். அவரை நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்தவில்லை. அவர் எங்களது விசாரணைக்கு ஒத்துழைப்பார். நாங்கள் அவரை போலீஸ் நிலையத்திற்கு வரக் கூறியிருக்கிறோம்.” என்று அப்பெண் பத்திரிகையாளர் கூறிய தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். குறிப்பான ஏதேனும் தேதியில் அவர் போலீஸ் நிலையத்திற்கு வருவாரா என தி வயர் இணையதளம் கேட்டபோது, அது குறித்து தனக்குத் தெரியாது என்றும் விசாரணை அதிகாரி மட்டுமே அதை அறிவார் என்றும் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ரிபப்ளிக் டிவியின் ‘சவுண்ட்’ அர்னாப் கோஸ்வாமியிடம் ‘தி வயர்’ இணையதளம் கேட்ட விளக்கத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
“விசாரணை அதிகாரி, இதுகுறித்து கருத்து எதுவும் கூற மறுத்து விட்டார். மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக மேலதிக தகவல்கள் எதுவும் தர முடியாது என்றும் அவர் கூறினார்.” என்கின்றன உள்ளூர் ஊடகங்கள்.
இதுவரையிலும், புகார் அளித்த பெண் பத்திரிகையாளரின் வாக்குமூலத்தை போலீசு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து ரிபப்ளிக் டிவியின் ‘சவுண்ட்’ அர்னாப் கோஸ்வாமியிடம் ‘தி வயர்’ இணையதளம் கேட்ட விளக்கத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
மாக்சிம் கார்க்கிஅந்தத் தார் எண்ணெய்த் தொழிலாளிகள் தங்களது அன்றைய வேலை முடிந்த உற்சாகத்தோடு திரும்பி வந்தனர்.
அவர்களது பேச்சுக் குரல் தாயை எழுப்பிவிட்டு விட்டது. அவள் எழுந்திருந்து, புன்னகை செய்து கொண்டும் கொட்டாவி விட்டுக்கொண்டும் வெளியே வந்து சேர்ந்தாள்.
“நீங்களோ வேலைக்குப் போனீர்கள். நானோ அங்கே சீமாட்டியைப் போல் செல்லமாகத் தூங்கினேன்” என்று கூறிக்கொண்டே அவர்களை வாஞ்சையோடு பார்த்தாள்.
“அதற்காக உன்னை மன்னித்து விடலாம்” என்று சொன்னான் ரீபின். அவனது அமித சக்தியைக் களைப்பு ஆட்கொண்டு விழுங்கிவிட்டது. எனவே அவன் சாந்தமாக இருந்தான்.
”இக்நாத்! கொஞ்சம் தேநீர் சாப்பிட்டால் என்ன? நாங்கள் இங்கே, எங்கள் வீட்டு வேலைகளை ஒவ்வொருவராக முறை வைத்துச் செய்கிறோம். சாப்பாடும் தேநீரும் தயாரிப்பது இன்று இக்நாத்தின் வேலை, அவனது முறை.”
“இன்று நான் என் முறையை யாருக்காவது தாராளமாக சந்தோஷமாக விட்டுக் கொடுக்கிறேன்” என்று கூறிக்கொண்டே அவன் அடுப்பு மூட்டுவதற்காகச் சுள்ளிகளையும் சிராத்துண்டு விறகுகளையும் சேகரிக்க ஆரம்பித்தான்.
இது என் பாட்டல்ல. துர்ப்பாக்கியம் நிறைந்த தங்கள் வாழ்க்கை எத்தனை பேருக்கு ஒரு பெரிய பாடமாக விளங்கக்கூடும் என்பதையே அறியாத பல்லாயிரம் மக்களின் பாட்டு இது.
”நமது விருந்தாளிகளோடு இருப்பதற்கு நீ ஒருவன் மட்டுமே விரும்பவில்லை” என்று கூறிக்கொண்டே எபீம் சோபியாவுக்கு அருகில் உட்கார்ந்தான்.
“நான் உனக்கு உதவுகிறேன், இக்நாத்” என்றான் யாகவ். அவன் அந்தக் குடிசைக்குள்ளே சென்று ஒரு ரொட்டியை எடுத்து வந்து, துண்டு துண்டாக நறுக்கி மேஜை மீது வைத்தான்.
”கேட்டாயா? யாரோ இருமுகிறார்கள்” என்றான் எபீம்.
ரீபின் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டு கூர்ந்து கேட்டான், தலையை அசைத்துக்கொண்டான்.
“அவனேதான். அந்த உயிருள்ள சாட்சியம்தான் வருகிறது” என்று சோபியாவிடம் சொன்னான் அவன். “என்னால் மட்டும் முடியுமானால், நான் அவனை ஊர் ஊராக அழைத்துச் சென்று, ஒவ்வொரு சந்தியிலும் அவனை நிறுத்தி, அவன் பேச்சை எல்லா ஜனங்களும் கேட்கும்படி செய்வேன்; அவன் எப்பொழுதும் ஒரே விஷயத்தைத்தான் சொல்லிக்கொண்டிருப்பான். ஆனால் அவன் பேச்சு எல்லோரும் கேட்க வேண்டிய பேச்சு.”
மஞ்சள் வெயில் கறுத்தது; அமைதியும் அதிகமாகியது; அவர்களது பேச்சுக் குரலும் தணிந்தது. சோபியாவும் தாயும் மிகுந்த களைப்பினால் மெல்ல மெல்ல அசைந்து வேலை செய்யும் அந்த முஜீக்குகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்களும் பதிலுக்கு அந்தப் பெண்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
காட்டுக்குள்ளிருந்து ஒரு நெடிய கூனிப்போன உருவம் கம்பை ஊன்றிக்கொண்டே வந்தது. அந்த மனிதனின் சிரமம் நிறைந்த சுவாசத்தை அவர்கள் அனைவருமே கேட்க முடிந்தது.
“வந்துவிட்டேன்” என்று சொல்லி முடித்தான் அவன். அதற்குள் அவனைக் குத்திருமல் அலைத்துப் புரட்டியது.
அவன் ஒரு பழங் கந்தையான நீளக்கோட்டை அணிந்திருந்தான்/ அந்தக் கோட்டு கால் வரையிலும் தொங்கிக்கொண்டிருந்தது. அவனது அமுங்கிப்போன வட்டமான தொப்பிக்குக் கீழே சிலிர்த்துக் குத்திட்டு நிற்கும் மஞ்சள் நிற ரோமங்கள் தெரிந்தன. அவனது மஞ்சள் பாரித்த ஒட்டிய முகத்தில் மெல்லிய தாடி அழகு செய்து கொண்டிருந்தது. அவனது உதடுகள் நிரந்தரமாகத் திறந்து காணப்பட்டன. அவனது கண்கள் ஆழ்ந்து குழிந்து இருண்டு பள்ளத்தில் பதிந்து ஜூரத்தில் பிரகாசித்தன.
”நீங்கள் புத்தகங்கள் கொண்டு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்று ரீபின் சோபியாவை அறிமுகப்படுத்தி வைத்தபோது அவன் சொன்னான்.
“ஆமாம்” என்றாள் அவள்.
“ரொம்ப நன்றி – எல்லா மக்களின் சார்பாகவும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் இன்னும் உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், எனக்கு அது தெரியும். எனவே அவர்கள் சார்பில் நான் நன்றி கூறுகிறேன்.”
அவன் பரபரவென்று சுவாசித்தான். அவனது சுவாசம் ஆசுவாசமின்றி ஆழமின்றிப் பதைபதைப்போடு இயங்கியது. அவனது குரல் அடிக்கடி தடைப்பட்டது. பலமற்ற கரங்களின் எலும்பு விரல்கள் கோட்டுப் பித்தான்களை மாட்டுவதற்காக நெஞ்சுத் தடத்தில் தடுமாறித் தடவின.
”இந்த நேரத்தில் நீங்கள் காட்டுப் பக்கம் வருவது உங்கள் உடல்நிலைக்கு நல்லதல்ல. காட்டில் ஈரமாயும் புழுக்கமாயும் இருக்கிறது.” என்றாள் சோபியா.
“எனக்கு இனி எதுவுமே நல்லதல்ல” என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு சொன்னான் அவன், “சாவு ஒன்றுதான் இனி எனக்கு நல்லது!”
அவனது குரலைக் கேட்டாலே நெஞ்சில் வேதனை உண்டாயிற்று. அவனது தோற்றம் முழுவதும் ஓர் அத்தமான அனுதாப உணர்ச்சியையே கிளறிவிட்டது. அந்த அனுதாப உணர்ச்சியால் எந்தப் பலனும் இல்லாததோடு, வெறும் கசப்புணர்ச்சியே மிஞ்சி நிற்கும் என்பது தெரிந்திருந்தும்கூட அனுதாபம் உண்டாகத்தான் செய்தது. அவன் ஒரு பீப்பாயின் மீது அமர்ந்து தனது முழங்கால்களை மிகவும் நிதானமாக மடக்கினான், அந்தக் கால்களை ஒடிந்துவிடாதபடி பதனமாக மடக்குவது மாதிரி இருந்தது அவனது செய்கை. வியர்த்திருந்த நெற்றியைத் துடைத்தான். அவன் முடியோ சருகுபோல் உயிரற்றிருந்தது.
நெருப்புப் பற்றியெரிந்தது. சுற்றியுள்ள பொருள்கள் எல்லாம் அசைந்தாடும்படியாக அனல் அடித்தது. காட்டுக்குள் இருள் கவிந்து நிழலாடியது. நெருப்புக்கு மேலாக, உப்பிய கன்னங்களோடு விளங்கும் இக்நாத்தின் உருண்ட முகம் பிரகாசித்தது. நெருப்பு மீண்டும் அணைந்துவிட்டது. புகை நாற்றம் மண்டியது. மீண்டும் இருளும் அமைதியும் நிலவியது. எனவே அந்த நோயாளி மனிதனின் கரகரத்த குரலை அப்போது தெளிவாகக் கேட்க முடிந்தது.
”நான் இன்னும் சாதாரண மக்களுக்கு உதவ முடியும். ஒரு பெரிய குற்றத்தின் உயிருள்ள ஞாபகச் சின்னமாக நான் விளங்க முடியும்….. இங்கே, என்னைப் பாருங்கள்….. இருபத்தெட்டு வயதிலேயே நான் செத்துக்கொண்டிருக்கிறேன். பத்து வருஷங்களுக்கு முன்னால், நான் ஐநூறு பவுண்டுக் கனமுள்ள சாமான்களைக்கூடக் கொஞ்சமும் முக்கி முனகாமல் சுமந்து சென்றுவிடுவேன். அந்த மாதிரியான உடல் வளம் மட்டும் இருந்திருந்தால், என்னால் எழுபது வயது வரை கூடச் சுலபமாக உயிர்வாழ முடியும் என நான் நினைத்தேன். ஆனால், நானோ மேற்கொண்டு பத்தே பத்து வருஷங்கள்தான் உயிர்வாழ முடிந்தது. இப்போதோ – இதுதான் என் அந்திம காலம், என்னுடைய முதலாளிகள் என்னைச் சுரண்டிக் கொள்ளையிட்டுவிட்டார்கள்; என்னுடைய வாழ்நாளின் நாற்பது வருஷ காலத்தை, நாற்பது வருஷ வாழ்வையே அவர்கள் பறித்துக்கொண்டுவிட்டார்கள்!”
“இதுதான் அவன் பாடுகிற பாட்டு!” என்றான் ரீபின்.
மீண்டும் நெருப்புப் பற்றிக்கொண்டு முன்னைவிடப் பிரகாசமாகவும் பெரிதாகவும் எரிய ஆரம்பித்தது. மீண்டும் அங்கு சூழ்ந்து நின்ற இருள் தோப்பைப் பார்க்க விலகியோடியது. மீண்டும் அந்த நெருப்பை நெருங்கி வந்து ஊமையாக, வெறுப்போடு நடமிட்டு அசைந்தாடத் தொடங்கியது. ஈர விறகு இரைச்சலோடு வெடித்தது. வெது வெதுப்பான காற்று வீசியபோது மரத்திலைகள் சலசலத்தன. சிவப்பும் மஞ்சளும் கலந்த தீ நாக்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி உற்சாகமாக விளையாடின; அவை மேலோங்கி எரியும்போது தீப்பொறிகள் உதிர்ந்து பொறிந்தன. நெருப்புக்கனலும் ஒரு தீச்சருகும் பறந்து சென்று அணைந்து செத்தன, வானத்துத் தாரகைகள் பூமியை நோக்கிப் புன்னகை பூத்தன; அந்தத் தீப்பொறிகளைத் தமது நட்சத்திர மண்டலத்துக்குக் கவர்ந்திழுக்க முயன்றன.
“இது என் பாட்டல்ல. துர்ப்பாக்கியம் நிறைந்த தங்கள் வாழ்க்கை எத்தனை பேருக்கு ஒரு பெரிய பாடமாக விளங்கக்கூடும் என்பதையே அறியாத பல்லாயிரம் மக்களின் பாட்டு இது. எத்தனை மக்கள் தங்களது உழைப்பினால் முடமாகிறார்கள், எத்தனைபேர் வாய் பேசாது பட்டினிக்சாவு சாகிறார்கள்…..” அவன் மீண்டும் இருமலினால் குனிந்து குலுங்கினான்.
யாகவ் மேஜை மீது ஒரு பாத்திரம் நிறைய ‘க்லாஸ்’ பீரும், வசந்த காலத்து வெங்காயம் சிலவற்றையும் கொண்டுவந்து வைத்தான்.
”சவேலி, இங்கே வா. நான் உனக்குக் கொஞ்சம் பால் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான் அவன்.
சவேலி தலையை ஆட்டினான். ஆனால் யாகவ் கக்கத்தில் கை கொடுத்து அவனை மேஜையருகே கூட்டிச் சென்றான்.
“அவனை ஏன் இங்கு வரவழைத்தீர்கள்? அவன் எந்த நிமிஷத்திலும் சாகக்கூடிய நிலைமையிலிருக்கிறானே” என்று ரீபினை நோக்கிக் கண்டிக்கும் தோரணையில் சொன்னான் சோபியா.
“எனக்குத் தெரியும்” என்றான் ரீபின், “ஆனால் அவனால் முடிந்த மட்டும் அவன் பேசிக்கொண்டிருக்கட்டும். அவனது வாழ்க்கை எந்த நல்ல காரணத்துக்காகவும் தியாகம் செய்யப்படவில்லை. அந்தக் கடைசிக் காலத்தையாவது அவன் நல்லபடியாய்ச் செலவழிக்கட்டுமே. எல்லாம் சரியாய்ப் போகும் – நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்!”
“இதில் என்ன, நீங்கள் ஆனந்தம் காண்கிறீர்கள் போலிருக்கிறதே” என்றாள் சோபியா.
ரீபின் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விரக்தியோடு சொன்னான்.
“சீமான் வீட்டுப் பிறவிகளான நீங்கள் சிலுவையில் அறையப்பட்டு முனகித் தவிக்கும் ஏசு சிறிஸ்துவைக் கண்டாலும் கூட ஆனந்தம் கொள்வீர்கள். ஆனால் நாங்களோ இந்த மனிதனிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ள விரும்புகிறோம்; நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று கருதுகிறோம்………”
தாய் பயத்தோடு தன் புருவத்தை உயர்த்தியவாறே சொன்னாள்:
”சரி, சரி. இது போதும்.”
மீண்டும் அந்த நோயாளி மேஜையருகே தானிருந்த இடத்திலிருந்தே பேசத் தொடங்கினான்.
“அவர்கள் ஏன் மக்களை வேலையால் சாகடிக்கிறார்கள்? ஒரு மனிதனின் வாழ்நாளை அவர்கள் ஏன் கொள்ளையிட்டுப் பறிக்கிறார்கள்? எங்கள் முதலாளி – நான் நெபியோதவ் தொழிற்சாலையில் வேலை பார்த்தேன் – ஒரு பாட்டுக்காரிக்குக் குளிப்பதற்காக தங்கப் பாத்திரம் ஒன்றைப் பரிசளித்தான், அவளது படுக்கைக்குக் கீழே போடுவதற்கு ஒரு தங்கத்தாலான மூத்திரச் சட்டியைக்கூடப் பரிசளித்தான். என்னுடைய பலமும் என்னுடைய வாழ்க்கையும் அந்தப் பாத்திரத்துக்குள்ளேயே போய்விட்டது. அதற்காகத்தான் நான் என் வாழ்க்கையைப் பறிகொடுத்தேன். என்னை வேலையைக் கொடுத்தே கொன்றுவிட்ட அந்த மனிதன் என்னுடைய வாழ்க்கையின் ரத்தத்தைக் கொண்டு தன் வைப்பாட்டியைக் களிப்பூட்டினான். என்னுடைய ரத்தத்தைக் கொண்டு அவன் அவளுக்குத் தங்கத்தாலான மூத்திரச் சட்டியை வாங்கி கொடுத்தான்!”
”கடவுளின் அம்சமாகவும் கடவுளின் பிம்பமாகவும்தான் மனிதன் பிறந்தானாம். அந்த உருவத்துக்கு அவர்கள் செய்த உபகாரத்தைப் பார்த்தீர்களா?” என்று கசந்து போய்ச் சொன்னான் எபீம்.
“பின்னே, சும்மா இராதே’ என்று தன் கையை மேஜை மீது தட்டி, அறைந்து கொண்டே சொன்னான் ரீபின்.
”அத்துடன் நிறுத்திவிடாதே” என்றான் யாகவ்.
இக்நாத் ஒரு சிரிப்புச் சிரித்தான். பின் எப்போதெப்போது பேசினாலும் அடங்காத அகோரப்பசி கொண்ட மனிதனின் பரபரப்போடு அந்த மூன்று இளைஞர்களும் அவனது பேச்சைக் காது கொடுத்துக் கேட்கத் துடிப்பதைத் தாய் கண்டறிந்தாள். சவேலியின் பேச்சு அவர்களது முகத்தில் ஒரு விசித்திரமான ஏளன பாவத்தைப் படரச் செய்தது. அந்த பாவம் துல்லியமாகவும் வெளியே தெரிந்தது. அந்த நோயாளிக்காக அவர்கள் கொஞ்சம்கூட அனுதாபப்பட்டதாகத் தெரியவில்லை.
”அவன் சொல்வதெல்லாம் உண்மைதானா?” என்று சோபியாவின் பக்கமாகச் சாய்ந்துகொண்டு மெதுவாகக் கேட்டாள் தாய்.
“ஆமாம் உண்மைதான்” என்று உரத்த குரலில் பதில் சொன்னாள் சோபியா. ”இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி மாஸ்கோ பத்திரிகைகளில்கூட எழுதினார்கள்.”
”ஆனால் குற்றவாளிதான். தண்டிக்கப்படவே இல்லை” என்று சோர்ந்துபோய்ச் சொன்னான் ரீபின். “அவனைத் தண்டித்தே இருக்க வேண்டும். அவனை ஜனங்களுக்கு மத்தியில் உருட்டித் தள்ளி, கண்டம் கண்டமாக, துண்டம் துண்டமாக வெட்டித் தறித்து, அவனது அழுகிப்போன மாமிசத்தை நாய்களுக்கு விட்டெறிந்திருக்க வேண்டும்! ஜனங்கள் மட்டும் விழித்தெழுந்துவிட்டால், அவர்கள் கொடுக்கின்ற தண்டனை மகாப்பெரிய தண்டனையாகவே இருக்கும். தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கழுவுவதற்காக அவர்கள் எவ்வளவு ரத்தத்தைச் சிந்தித் தீர்ப்பார்கள்! அந்த ரத்தம் அவர்களது சொந்த ரத்தம்தான் அவர்களது ரத்தக் குழாயிலிருந்து உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கப்பட்ட ரத்தம்தான்! எனவே தங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை அகற்றுவதற்காக பெருமளவு ரத்தம் சிந்துகிறார்கள்.
‘குளிருகிறது” என்றான் அந்த நோயாளி.
அவனை எழுந்திருக்கச் செய்து நெருப்பருகே கொண்டுபோய் உட்கார வைப்பதற்கு யாகவ் உதவி செய்தான்.
இப்போது நெருப்பு பிரகாசமாக எரிந்தது. உருவமற்ற நிழல்கள் அதற்கு மேலாக நடுங்கியாடிக்கொண்டே தீ நாக்குகளின் உற்சாகம் நிறைந்த விளையாட்டை வியந்து நோக்கிக்கொண்டிருந்தன. சவேலி ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து, மெலிந்து வெளுத்துப்போன தனது கரங்களை நெருப்பு வெக்கையை நோக்கி நீட்டினான். பின் அவனை நோக்கித் தலையை அசைத்துவிட்டு சோபியாவிடம் பேசத் தொடங்கினான்.
”இவன் புத்தகங்களைவிட, தெளிவாகக் கூறிவிட்டான். ஒரு யந்திரம் ஒரு தொழிலாளியைக் கொன்றால், அல்லது அவனது கையைத் துண்டாக்கி, அவனை முடமாக்கினால், அது அவன் குற்றம்தான் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு மனிதனின் ரத்தத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக உறிஞ்சித் தீர்த்து, அவனைக் குப்பைத் தொட்டியில் எறியும் சக்கைபோல் விட்டெறிந்தால், அதற்கு மட்டும் விளக்கம் கிடையாதாம்! ஒருவனை ஒரேயடியில் படுகொலை செய்வதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதனைச் சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்து அவனைக் கொல்வதும், அதிலே ஆனந்தம் பெறுவதும்தான் எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஏன் மக்களை வதைக்கிறார்கள்? அவர்கள் ஏன் நம்மையெல்லாம் வாட்டி வதைபுரிகிறார்கள்? அந்தச் சித்திரவதையில் ஆனந்தம் காண்பது அவர்களது சொந்த சுகானந்தத்துக்காக! அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கு; தாங்கள் விரும்புவதையெல்லாம் மனிதத்தையே விலையாகக் கொடுத்து வாங்கி அனுபவிப்பதற்கும் பாட்டுக்காரிகளை, பந்தயக் குதிரைகளை, வெள்ளிக் கத்திகளை, தங்கத் தட்டுகளை, தங்கள் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த விளையாட்டுச் சாமான்களையெல்லாம் வேண்டுமட்டும் வாங்கிக் குவிப்பதற்குத்தான்! “நீ பாட்டுக்கு வேலையைச் செய். கொஞ்சம் சிரமப்பட்டு வேலையைச் செய்; அப்படிச் செய்தால்தான் உன் உழைப்பின் மூலம் நான் பணத்தை மிச்சம் பிடிக்க முடியும்; மிச்சம் பிடித்து என் வைப்பாட்டி மூத்திரம் பெய்வதற்குத் தங்கப்பாத்திரம் வாங்கிக் கொடுக்க முடியும்! என்கிறார்கள் அவர்கள்.”
தாய் கவனித்துக் கேட்டாள். அவளது கண் முன்னால், அந்த இரவின் இருளுக்கு ஊடே, தனது மகன் பாவெலும் அவனது தோழர்களும் தேர்ந்தெடுத்துள்ள புனித மார்க்கம் பிரகாசமாக ஒளிவிட்டுத் தெரிந்தது.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
புதிய ஜனநாயகம் இதழின் ஆண்டுத் தொகுப்புகள் விற்பனைக்கு உள்ளன.
34 ஆம் ஆண்டாக வெளிவரும் மார்க்சிய – லெனினிய அரசியல் பத்திரிக்கையான புதிய ஜனநாயகம் தமது சேகரிப்பில் உள்ள இதழ்களைத் தொகுத்து ஆண்டுத் தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறது.
தனிச்சிறப்பாக முதலாம் ஆண்டிலிருந்து 22-ஆம் ஆண்டுகள் வரையிலான இதழ்கள் தற்போது தொகுக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது இருப்பிலுள்ள ஆண்டுத் தொகுப்புகளின் விவரம்: 1, 3, 7, 9, 10,11, 13,16,18, 19, 20, 21 மற்றும் 22- ஆம் ஆண்டு. முதல் 20 ஆண்டுகளில் வெளியான இதழ்களின் தொகுப்புகள் வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்த வாசகர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோருகிறோம். மிகக்குறைவான பிரதிகளே கைவசமிருக்கின்றன.
தனியொரு ஆண்டுத் தொகுப்பின் விலை ரூ 200.00 (அஞ்சல்/கூரியர் கட்டணம் தனி)
ஆண்டுத் தொகுப்பு வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
புதிய ஜனநாயகம்,
கடை எண்.110, மாநகராட்சி வணிக வளாகம் (இரண்டாம் தளம்),
63, என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை-600 024.
கைபேசி எண்: 94446 32561