முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு மூன்று தொழிலாளர்கள் பலி !
மோஷி மோஷி ரெஸ்டாரான்ட்
திருபெரும்புதுரில் இருந்து ஒரகடம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போந்துர் கிராமம் அருகே உள்ளது ” மோஷி மோஷி “ என்ற ரெஸ்டாரான்ட். இந்த பகுதியில் பல பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரியும் உயர் அதிகாரிகள், HR – கள் மற்றும் கொரிய சீன ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் வேலை நிமித்தமாக வந்தால், தங்குவதற்கும் தின்பதற்குமான இடமாக இந்த ஒட்டல் செயல்படுகின்றது.
ஒட்டல் அமைந்துள்ள இடத்தை யாராவது பார்த்தால் இங்கு என்ன வியாபாரம் ஆகும் எனத் தோன்றும். ஏனெனில் ஆள் ஆரவமற்ற தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பொட்டல் காடான விளைநிலங்கள், கண்ணுக்கு எட்டிய துரத்தில் சில அடக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. உழைப்பை சுரண்டும் கும்பல் கூடி கும்மாளம் அடிப்பதும் இது போன்ற ஒட்டலில்தான். இப்படிப்பட்ட ஒட்டல் முதலாளியின் இலாப வெறி மூன்று தொழிலாளர்களின் உயிரை பறித்திருக்கின்றது.
மேற்படி ஒட்டலில் கழிவு நீர் தொட்டியை கடந்த புதன் (14.02.180) அன்று சுத்தப்படுத்துவதற்கான வேலையை துவங்கியுள்ளனர். 28 வயதான மாரி மற்றும் 36 வயதான முருகேசன் இருவரும் தொட்டிற்குள்ளே இருக்கும் படிகள் வழியாக உள்ளே இறங்கும்போது இருவரும் அடுத்தடுத்து மயக்கம் அடைந்து தொட்டிற்குள்ளேயே விழுகின்றனர். இதனை பார்க்கும் ரவி (எலக்ட்ரிசியனாக பணி புரிபவர்) என்பவர் தொழிலாளர்களை காப்பாற்ற போய் அவரும் பலியாகின்றார். இதன் பிறகே தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மூன்று பேரையும் மீட்டு திருபெரும்புதுர் அரசு மருத்துவமனையில் சேர்க்கும் போது அவர்கள் இறந்து விட்டனர்.
இதன் பிறகு RDO, DSP, சிலம்பரசன், திருபெரும்புதுர் தொகுதி MLA ஆகியோர் பேச்சு வார்த்தை என்ற பெயரில் நடத்திய கட்ட பஞ்சாயத்தில் இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்து லட்சம் பேரம் பேசப்பட்டு பெயரளவிற்கு வழக்கு பதியப்பட்டு வேலையை முடித்துக் கொண்டுள்ளனர்.
இது போன்ற கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துவது என்றால், அதற்குறிய சாதனங்களை கொண்டும், சுத்தப்படுத்துவதற்கு முன்பாக குறிப்பிட்ட தொட்டிற்குள் இருக்கும் விஷ வாயுவின் வீரியத்தை குறைக்கும் கெமிக்கல் மருந்துகளை தொட்டிற்குள்ளே போட்டு பிறகு பாதுகாப்பு கவசங்களை அணிந்த பிறகே கழிவு நீர் தொட்டிற்குள் இறங்க வேண்டும். இதில் எந்த பாதுகாப்பு விதிமுறையையும் பின்பற்றப்படவில்லை. எனவே இது படுகொலைதான்.
தலைகவசம் உயிர் காக்கும் என்ற பெயரில் வண்டியின் பின்னால் அமர்ந்து போகின்றவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவதாக சொல்லிக் கொண்டு, அதை கண்டு கொள்ளாமலும் அல்லது கலக்சனுக்காக போலீசு நடந்து கொள்வதைப் போலத்தான் அரசின் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமும், முதலாளியின் இலாப வெறியும் தொழிலாளர்களின் உயிரை பறித்திருக்கின்றது.
இறந்து போன முருகேசன் என்ற தொழிலாளியின் மூன்று வயது பெண் குழந்தை அப்பா இறந்து போனது தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தது, மாலை நேரம் ஆக ஆக குழந்தை அப்பாவை கேட்டபோது முருகேசனின் மனைவி கதறி அழுதது, இறந்த மற்ற தொழிலாளர்களின் உடன் பிறந்தோரும் உறவினர்களும் கதறி கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்தது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.
இறந்த தொழிலாளர்களின் உறவினர்களிடத்தில் பேசுகையில் எங்கும் நிலையான வேலை இல்லை கிடைக்கிற வேலைக்கு போன போதுதான் இந்த நிலைமை என்றார். காண்டிராக்ட் வேலை என்ற பெயரில் கொத்தடிமையான வாழ்க்கை முறை பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாதது என்பது எங்கும் நிறைந்திருக்கின்றது. இந்த நிச்சயமற்ற வாழ்க்கையில் மரணமும் நிழலாக பின் தொடர்கின்றது. தொழிலாளி வர்க்கம் எதிர் கொண்டிருக்கின்ற வாழ்நிலைமை இதுதான். இதைத்தான் வளர்ச்சி என்கிறார் மோடி ! அ.தி.மு.க கும்பலோ அமைதி, வளம், வளர்ச்சி என்கிறது.
சொல்லிக் கொள்ளப்படும் வளர்ச்சிக்கு பின்னால் முதலாளிகளின் இலாப வெறிதான் அரசின் கொள்கையாக இருக்கின்றது. இதுவே நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உரிமை – உயிர் பறிப்பிற்கும் அடிப்படையாக இருக்கின்றது என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும் காலத்தில் கலகம் வெடிக்கும். தற்போது இருக்கின்ற அரசு கட்டமைப்பு தகர்க்கப்படும், மக்களை – தொழிலாளர்களை கொல்லும் சுரண்டலும் ஒழிக்கப்படும். சமூக மாற்றத்திற்கு தொழிலாளி வர்க்கம் தயாராக வேண்டும் என்பதுதான் இது போன்ற படுகொலைகள் நமக்கு உணர்த்தும் செய்தியாகும் !
தகவல் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்,
தொடர்புக்கு: 8807532859
என்கிற முழக்கத்தை முன்வைத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 13.02.2018 அன்று மதுரை தெற்குவாசலில் உள்ள பள்ளிவாசல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை பு.மா.இ.மு-வைச் சேர்ந்த தோழர் இரவி தலைமை ஏற்று நடத்தினார்.
அவர் தனது தலைமையுரையில், பேராசிரியர் நியமனத்தில் ரூ.30 லட்சத்திலிருந்து 60 இலட்சம் வரை இலஞ்சம் பெற்றதன் அடிப்படையில் பாரதியார் பல்கலையின் துணைவேந்தர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆளும் கட்சிக்கும் கணபதிக்கும் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகத்தான் இந்த ஊழல் முறைகேடு வெளியே வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இதுதான் நிலைமை. கடந்தாண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடு வெளிவந்தது. கிட்டத்தட்ட ஐயாயிரத்திற்கும் மேலான பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை முறைகேடாக நியமித்து ரூபாய் பத்தாயிரம் கோடிக்கும் மேல் சுருட்டியவர் இராமசாமி செட்டியார்.
நியாயப்படி அரசு, செட்டியாரையும் இலஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியர்களையும் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. மாறாக மற்ற கல்லூரிகளில் நடக்கவிருந்த பேராசிரியர் நியமனங்களை நிறுத்தி வைத்து இந்த ஊழல் ஆசிரியர்களை பணியில் சேர்த்தனர். இப்படி கேடுகெட்ட ஆசிரியர்களைப் பணியில் சேர்த்தால் இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.
இதற்கு எதிராக நேர்மையான பேராசிரியர்கள், பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் ஆற்றிய கண்டன உரையில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிட்டு உழைக்கக் கூடிய மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது அரசு. அதற்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கிறது.
தற்போது புதியதாக மதுரை மீனாட்சிக்கு ஆபத்து எனப் புதிய பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார்கள் இந்துத்துவவாதிகள். மீனாட்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இந்த இந்துத்துவ பாசிஸ்டுகளாலதான் ஆபத்து.
மற்ற நகரங்கள விட மதுரையில்தான் பேருந்து கட்டணம் அதிகம். ஏழு கிலோ மீட்டர் போவதற்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கு.
இந்த சூழ்நிலையில்தான் துணைவேந்தர் பிரச்சினை. மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. பல்வேறு சுமைகளுக்கு இடையிலதான் மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த சூழலில் கல்வித்தரம் எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? கணபதி போன்ற ஆட்களை நாம் விட்டு வைக்கலாமா? மாணவர்களிடம் சுயநலமும் காரியவாதமும் மேலோங்கி இருப்பதற்கு காரணமே இவர்கள்தான்.
ஒரு அம்மாவிடம் செயினைப் பறித்து தரதரவென்று இழுத்துச்செல்லும் இளைஞனின் மனநிலை எப்படி குரூரமாக மாறியிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தாலே நமக்கு உள்ளம் கூசுகிறது. இது போன்ற சம்பவங்கள் இனி தொடர்ச்சியாக நடக்கும் அபாயம் உள்ளது. செயினைப் பறித்த இளைஞனைப் பிடித்தால் பொதுமக்கள் என்ன செய்வார்களோ அதே போலத்தான் இந்த இலஞ்ச ஊழல் பேர்வழிகளை நடுத்தெருவில் கட்டிவைத்து தோலுறிக்க வேண்டும் என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர். இரா.முரளி அவர்கள் தனது கண்டன உரையில், கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தை கொஞ்சம் கொஞ்சமாக பீடித்துக் கொண்டிருந்த ஒரு நோய் தற்போது முற்றிலுமாக பரவியிருக்கிறது. படிக்க நினைக்கும் அனைவரும் பணம் கொடுக்காமல் படிக்க முடியாது என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
படித்து ஆசிரியராக வேண்டுமென்றால் அதன் விலைப்பட்டியல் ஏற்கனவே போடப்பட்டிருக்கும். நான் மதுரை கல்லூரியில் ஐந்தாண்டுகள் முதல்வராக இருந்தவன். எங்கே போனாலும் வெட்கப்படாமல் இதைக் கூறுவேன். ஒரு சீட்டு வேணும்னா என் ரூமில் வந்து நிக்கனும். அங்கு அதிகாரத்தின் உச்சக் கட்டத்தில் உட்கார்ந்திருப்போம். அப்போது சொல்லுவார்கள் பத்தாயிரம் இருபதாயிரம் கொடுக்கிறேன் பி.காம் சீட் கொடு என்று.
இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டமிட்ட ஊழல் என்றால் அது உயர்கல்வித் துறையில் தமிழகத்தில் நடந்த ஊழல்தான். காசு கொடுக்கலைனா வேலை எப்படிக் கிடைக்கும் என்று மக்களையே பேச வச்சுட்டாங்க. சொத்தை வித்து நாற்பது ஐம்பது இலட்சம் கொடுத்துவிட்டுத்தான் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். இதை யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
நான் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் அப்போதிருந்த கல்வி அமைச்சர் எல்லாக் கல்லூரி முதல்வர்களையும் கூப்பிட்டு ‘ஒரு பேராசிரியருக்கு ஏழு இலட்ச ரூபாய் கொடுத்திருங்க மீதி எவ்வளவுனாலும் நீங்க வித்துருங்க” என்று கூறினார். நான் கோபமாகி ”உங்களுக்கு வெட்கமில்லையா?”னு கேட்டேன் ”இதுக்குப் போயி எதுக்கய்யா வெட்கப்படனும்?. இது கட்சி வளர்ச்சி நிதி. நானா எடுத்திட்டுப் போகப் போறேன். எனக்கு அரை சதவீதம் தான் கிடைக்கும்” என்று கூறினார்.
கடந்த இரண்டாண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்நிலை. கமலும் ரஜினியும் சிஸ்டம் சரியில்லைனு சொல்லுறாங்க. உண்மையிலே சிஸ்டம்னா என்ன? அது எப்படி சரியில்லாமப் போச்சுனு தெரியுமான்னு தெரியல. அமெரிக்கன் கல்லூரி, மதுரைக் கல்லூரி, மன்னர் கல்லூரி, சரசுவதி நாராயணன் கல்லூரி என அனைத்துக் கல்லூரியிலும் பேராசிரியர் பதவிக்கு இலஞ்சம் வாங்கப்படுகிறது. இதை அவர்களால் மறுக்க முடியுமா? இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் என்ன செய்ய முடியும்? இவர்களை மக்கள் விரட்டி விரட்டி அடிக்கிற வரைக்கும் போராட்டம் பண்ண வேண்டியிருக்கு.
இன்று ஆளுநர் புரோகித் தமிழகத்தையே சுத்தி வந்து “ஸ்வச் பாரத்”- திற்கு வேலை செய்கிறார். ஆனால் அவர் அதிகாரத்தின் கீழ் இருக்கும் துணைவேந்தர் ஊழலை கவனிக்க மறுக்கிறார். அவர்தான் பல்கலை வேந்தர். தூத்துக்குடியில் குழந்தைகள் உட்பட விவசாயிகள், பொதுமக்கள் என ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்கிறார்கள். எத்தனை பேரைத்தான் இவர்களால் கைது செய்ய முடியும்?
எத்தனை கோடி ரூபாய் உயர்கல்வித் துறையில் அதிமுக அரசு ஊழல் செய்து குவித்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதே நேரத்தில் சில பத்துபேர் நடத்தும் இந்தப் போராட்டத்தை பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் போராட்டமாக மாற்ற வேண்டும் என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
அடுத்து பேசிய மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவையின் முன்னாள் தலைவர் பேராசிரியர். அ. சீனிவாசன் அவர்கள் தனது கண்டன உரையில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முப்பதாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவன். அந்தப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணனின் ஊழலை எதிர்த்துக் கேட்டதற்காக ஒரு பேராசிரியரை அடித்து அவரது கையை முறித்தார்கள். ஊழலை எதிர்த்தால் கை முறிக்கப்படும் என்கிறார்கள் ஊழல்வாதிகள்.
இதுவரை துணைவேந்தர் பதவிகள் சாதிரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் வலுவான பணக்காரர்கள்தான் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். தற்போது கணபதி மாட்டிக் கொண்டார். அவரை நியமித்தவர்கள் யார்? அவரை இந்தப் பதவிக்கு பரிந்துரை செய்தொர்கள் யார்?. தற்போது நிர்வாகக் குழுவில் இருக்கும் மூன்று பேரில் ஒருவர் தானே அவரைப் பரிந்துரைத்திருப்பார். பணம் கொடுத்துத்தான் பதவியில் சேர்ந்தேன் அதனால்தான் பணம் வாங்கினேன் என்கிறார் கணபதி. அப்படியானால் நேர்மையானவர்கள் இப்பதவிக்கு வர முடியாது என்பதே உண்மை.
இதனால் பாதிப்பு யாருக்கு என்பதைப் பார்ப்பதுதான் முக்கியம். ஒன்றுமே தெரியாத ஒரு மாணவன் கல்வி கற்க வந்தால் அவனுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால் இலஞ்சம் கொடுத்து பதவியில் சேர்ந்த ஆசிரியரின் தரம் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும். மாணவர்களுக்கு பாடம் நடத்த இவர்களுக்கு அருகதை இருக்கிறதா?
நம்முடைய வரிப் பணத்தில் தான் பல்கலைக் கழகங்கள் நடைபெறுகின்றன. ஆனால் நமது சந்ததியினருக்கு தரமான கல்வி தரும் தகுதி இவர்களுக்கு இல்லை. மக்களாகிய நாம் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தால் நம்முடைய எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை பாழாகிவிடும் என்பதில் எள் முனை அளவுகூட சந்தேகம் இல்லை என்று பேசினார்
அடுத்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலர் தோழர் லயனல் அந்தோணி ராஜ் பேசினார். கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மட்டும் தான் ஏதோ லஞ்சம், ஊழல் செய்து பிடிபட்டுவிட்டார் என்று இல்லை. தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களும் கணபதியைப் போன்றவர்கள் தான்.
கோடிகோடியாக லஞ்சம் கொடுத்துப் பதவிக்கு வந்தார்கள். இப்போது கொடுத்ததை வசூல் செய்கிறார்கள். அவர்களுக்கு உயர்கல்வியைப் பற்றியோ தரத்தைப் பற்றியோ நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது. போட்ட பணத்தை பல மடங்கு லாபத்துடன் எப்படி சம்பாதிப்பது என்பதுதான் அவர்களது ஒரே நோக்கம்.
இந்த நிலை எதனால் வந்தது? பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பல்கலை வேந்தராகிய ஆளுநரிடமும் உயர்கல்வித்துறை அமைச்சகத்திடமும் இருக்கிறது. இவர்கள்தான் லஞ்சம் வாங்கிக்கொண்டு தகுதி இல்லாத நபர்களை நியமிக்கின்றனர். தகுதி இல்லாதவர்கள் மட்டும் இல்லை. அவர்கள் கிரிமினல் பேர்வழிகளாகவும் இருக்கிறார்கள்.
ஏற்கனவே அமைச்சர்களும் அதிகாரிகளும் அப்படிப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனவே இனம் இனத்தோடு சேர்கிறது. மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பி.பி. செல்லத்துரை துணைவேந்தர் பொறுப்புக்கு உரிய தகுதி இல்லாதவர். எப்படி நியமிக்கப்பட்டார்? எப்படி பதவியில் நீடிக்கிறார்? அவரது நியமனத்தை எதிர்த்து நான் உயர்நீதி மன்றத்திலே வழக்குப் போட்டுள்ளேன். ஆனால் அவர் பதவியில் இருப்பது மட்டுமல்லாமல் பல லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவரைப் போன்ற கிரிமினல்களை உயர் பதவிகளில் நியமிக்கிறார்.வழக்கு நீதிமன்றத்திலே தூங்கிக்கொண்டிருக்கிறது.
இன்றைக்கு இதேபோல முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ள தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கரனை எதிர்த்துப் போராட்டம் நடக்கிறது. கணபதி மீது மட்டும் நடவடிக்கை பாய்ந்தது எதனால்? ஆளுநர் புரோகித்துக்கு மற்ற பல்கலைக் கழகங்களின் நிலைமை தெரியாதா? வாங்கிய கொள்ளையில் உரிய பங்கு போய்ச் சேரவில்லை என்பது தான் பிரச்சினை என்று சொல்லப்படுகிறது.
மேலும் சசிகலாவிடம் லஞ்சம் கொடுத்து பதவியைப் பெற்றவர்களை மட்டும் குறிவைத்து நடவடிக்கை பாய்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆளுநர் புரோகித் சாட்டையைச் சுழற்றுகிறார் என்றெல்லாம் சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பங்கு போகாததுதான்.
அதற்கு மேல் அது ஒரு கண்துடைப்பு நாடகமே. தமிழ் நாட்டின் அனைத்துக் கனிம வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு பங்கு போய்க்கொண்டிருந்த நிலையில் கிரானைட் பி.ஆர்.பி.மீது தனிப்பட்ட காரணங்களால் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததுபோலத்தான் இதுவும். பஸ் கட்டண உயர்வு போன்ற பல பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சிதான் இது.
கணபதி மீது நடவடிக்கை எடுத்துள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அவரிடம் லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கவர்னரும் ஏன் மவுனம் காக்கிறார்?
உயர்கல்வித்துறையின் இந்த சீரழிவிற்குக் காரணம் எது? கல்வி தனியார் மயம் ஆக்கப்பட்டு, வியாபாரம் ஆனதுதான். தனியார் வசம் கல்வியை ஒப்படைப்பதுதான் மத்திய மாநில அரசுகளின் நோக்கம். பல்லாயிரம் கோடி புரளும் இந்தத் துறையில் பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்துள்ளனர். காசு உள்ளவனுக்கு மட்டும் தான் கல்வி என்பது இன்று பா.ஜ.க. ஆட்சியில் எழுதப்பட்ட விதியாகிவிட்டது.
இந்த நிலையை யார் மாற்றுவார்கள்? மக்கள்தான் இந்த நிலையை மாற்ற வேண்டும். தகுதியற்ற இந்தக் கொள்ளையர்களை விரட்டிவிட்டு மக்கள் அனைத்துக் கல்வி நிலையங்களையும் கைப்பற்றி தாங்களே நடத்த வேண்டும்.
பு.மா.இ.மு. தோழர் சேகரன் நன்றி சொல்ல ஆர்ப்பாட்டம் முடிந்தது.
காவிரி நீர் பங்கீட்டில் தற்போது வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்தின் உரிமையை மறுத்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி இருக்கிறது. கர்நாடக தேர்தல் அரசியல் ஆதாயம், டெல்டாவில் மீத்தேன், ஓ.என்.ஜி.சி எரிவாயு திட்டம், ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் பா.ஜ.க அரசின் அரசியல் முடிவாகவே இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
இரு மாநிலங்களை சேர்ந்த துறை சார் வல்லுநர்கள் மூலம் களத்தில் ஆய்வு செய்து பல ஆண்டுகள் விசாரித்து வழங்கப்பட்ட, காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை இருமாநிலங்களுக்கிடையில் முறையாக அமுல்படுத்துவதில் பொறுப்போடு கவனம் செலுத்தாமல் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பின் மூலம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.
கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீரை உரிய பருவத்தில் தருவதில்லை. தரவேண்டிய அளவையும் தராமல் பாக்கி வைத்துள்ளது. தமிழக விவசாயிகள் பயிர் கருகி தற்கொலைக்கு தள்ளப்படும் நிலையில் போராடும் போதெல்லாம், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் தூண்டப்படுகிறது. இதில் பா.ஜ.க சங்பரிவார் அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கர்நாடக அரசு எந்த உத்தரவையும் அமுல்படுத்தாமல் அடாவடி செய்வதை உச்சநீதிமன்றம் கண்டு கொண்டதே இல்லை.
அது போல் மத்திய அரசும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் ஆறு ஆண்டுகள் வெளியிடாமல் காலம் தாழ்த்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது. இவ்வாறு மத்திய அரசு கர்நாடகாவிற்கு சாதகமாக தேர்தல் அரசியல் ஆதாயம் கருதி செயல்பட்டு வருகிறது.
காவிரி டெல்டாவை எதிர்காலத்தில் பாலைவனமாக மாற்றி, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டமும் இந்த தீர்ப்பின் பின் உள்ள டெல்லியின் சூழ்ச்சியாகும்.
தமிழகத்தில் நிலத்தடி நீர் இருக்கிறது என ஒருதலைப்பட்சமாக காரணம் காட்டி 192 டி.எம்.சி. அளவிலிருந்து 177.25 டி.எம்.சியாக குறைத்து அதை கர்நாடகாவிற்கு உயர்த்தி வழங்கியது, தமிழகத்தை திட்டமிட்டு டெல்லி வஞ்சிக்கும் செயலாகும்.
காவிரி உரிமைக்காக தமிழகம் தழுவிய அளவில் 17-2-18 அன்று மக்கள் அதிகாரத் தோழர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரையில் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் போராடியவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதுடன் பொய் வழக்கு பதிவு செய்து மத்திய சிறையலடைத்துள்ளார். இதன்மூலம் மோடிக்கு தனது விசுவாசத்தை எடப்பாடி அரசு காட்டியுள்ளது.
அதுபோல் திருவாரூர் கடமங்குடியில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் மக்கள் அதிகார தோழர்கள் ஏழு பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழகத்தில் எடப்பாடி அரசு பா.ஜ.க.வின் கிளை அமைப்பாக செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்து வருகிறது. பிரசுரம் கொடுத்தால் போஸ்டர் ஒட்டினால்கூட போலீசு வழக்கு போடுகிறது. மக்கள் பிரச்சினைகளுக்காக பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கிறது. மத்திய மாநில அரசுகள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை பரவலாக தமிழகத்தில் அமுல்படுத்தி வருகின்றன. இத்தகைய ஜனநாயக விரோத போக்கை கண்டித்து அனைவரும் போராட வேண்டும்.
தமிழகத்தின் உரிமையை பறிக்கும் டெல்லிக்கு ஆதரவாக செயல்படும் முதல்வர் எடப்பாடி உடனே பதவி விலக வேண்டும்.
டெல்லிக்கு எதிரான போராட்டத்தில் தமிழக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
திருவாரூரில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடி சிறையில் உள்ள மக்கள் அதிகார தோழர்கள் ஏழுபேரை விடுதலை செய்யவும்
காவிரி நீர் உரிமைக்காக போராடி மதுரை சிறையில் உள்ள மக்கள் அதிகார தோழர்கள் இருபது பேரை விடுதலை செய்யவும் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்..
இப்படிக்கு காளியப்பன் மாநில பொருளாளர் மக்கள் அதிகாரம்
காவிரி நீர்ப்பங்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தீர்ப்பு வழக்கம்போல தமிழகத்தை வஞ்சிப்பதாகவே வந்துள்ளது. 27 ஆண்டுகால நெடிய,சலிப்பும் களைப்பும் ஊட்டக்கூடிய இழுத்தடிப்புக்குப்பிறகும் தமிழகத்தின் நலனையும், நியாயத்தையும் புறக்கணித்துவிட்டு மோடி அரசின் விருப்பத்தை தீர்ப்பாக அறிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
நீண்ட விசாரணை, ஏராளமான புள்ளிவிவரங்கள், வல்லுனர் கருத்துகள் யாவற்றையும் ஆய்ந்து 2007 -ல் வழங்கப்பட்ட 192 டிஎம்சி நீர் பதினோறாண்டுகளுக்குப்பிறகு 177.25 டிஎம்சி என குறைக்கப்பட்டிருக்கிறது. மருமகளால் இல்லை என விரட்டப்பட்ட பிச்சைக்காரரை மாமியார் அழைத்து அவள் என்ன சொல்வது, நான் சொல்கிறேன் ‘இல்லை போ’ என விரட்டியது போல் உச்சநீதிமன்றம் தமிழகத்தை விரட்டியிருக்கிறது.
கர்நாடகத்தின் தேவையை, பெங்களூர் நகரின் குடிநீர்த்தேவையை அங்கீகரித்து அவர்களுக்கு பரிவு காட்டிய உச்சநீதிமன்றம் தமிழக மக்கள் அத்தகைய பரிவுக்கு தகுதியற்றவர்கள் எனக்கருதுகிறது போலும். தமிழ்நாட்டில் நிலவும் கடும் குடிநீர்ப்பற்றாக்குறை, தொடர்ந்து குறைந்துவரும் பருவமழை இவற்றை சற்றும் கவனத்தில் கொள்ளாது நிலத்தடி நீர் பொங்கி வழிவதைப்போல் எண்ணி தமிழகத்தில் நிலத்தடி நீர்வளம் இருப்பதால் 14.75 டிஎம்சி நீரைப் பறிப்பதாகத் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக்கூறியிருப்பதையும் காவிரி எந்த மாநிலத்திற்கும் தனி உரிமை அல்ல எனக்கூறியிருப்பதையும் கண்டு சிலர் ஆறுதல் அடையக்கூடும். காவிரி நீர் தொடர்பான எந்த உத்தரவையும் கர்நாடக அரசு கடுகளவும் மதித்ததில்லை. மத்திய அரசுகளோ தமிழகத்தின் நியாயத்தை சற்றும் கண்டுகொண்டததில்லை.
கடந்த ஐந்தாண்டுகளில் உச்சநீதிமன்றம் போட்ட எல்லா உத்தரவுகளையும் காலில் போட்டு மிதித்ததை உச்சநீதிமன்றத்தால் கைகட்டி வேடிக்கைதானே பார்க்க முடிந்தது. மோடி அரசும், ஆர்எஸ்எஸ் பார்ப்பன இந்துமதவெறிக்கும்பலும் அனைத்து அரசு நிறுவனங்களையும் தமிழக மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கும், ஒடுக்கவதற்குமே பயன்படுத்தும் நேரத்தில் உச்சநீதிமன்றமும் அதேவேலையைச் செய்திருக்கிறது.
தமிழகத்தை குறிப்பாக காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி நிலக்கரி,பெட்ரோல், எரிவாயு இவற்றைக் கொள்ளையடிக்கத்துடிக்கும் மோடியின் எஜமானர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் கைகோர்த்து நிற்கிறது. பத்து நாட்களுக்கு முன்பு சுப்ரமணியசாமி காவிரி நீர் கிடைக்காது எனத் தீர்ப்பெழுதினார். இப்போது உச்சநீதிமன்றம் அதை வழிமொழிந்திருக்கிறது.
வஞ்சகத்தில் வீழ்வதா இல்லை எதிர்த்து நின்று வீழ்த்துவதா என்பதை தமிழக மக்கள் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.
தங்கள் காளியப்பன் மாநிலப்பொருளாளர், மக்கள் அதிகாரம்
*****
காவிரித் தீர்ப்பில் வஞ்சகம் ! மீண்டும் தமிழகத்தின் மீதான டெல்லி தாக்குதல் !
தமிழக அரசே, சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களே உடனே ராஜினாமா செய்யுங்கள் ! தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை !
நாள் : பிப்ரவரி 17, நேரம் : காலை 11.30 மணி
தகவல் : மக்கள் அதிகாரம், விருதை – கடலூர் மண்டலம்.
*****
காவிரியில் தமிழகத்தின் உரிமை பறிப்பு!
காவிரி நீரில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி யாக குறைத்தும், கர்நாடகத்திற்கு 284.75 டி.எம்.சி யாக அதிகரித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அயோக்கியத்தனமானது ! தன்னுரிமையை நிலைநாட்ட தமிழகமே திரண்டெழு!” என்ற ழுழக்கங்களை முன்வைத்து இன்று 16.2.2018 மாலை 3.00 மணியளவில், மத்திய அரசு நிறுவனமான நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு பு.மா.இ.மு தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களையும், பு.மா.இ.மு தோழர்களையும் உடனே கைதுசெய்து மண்டபத்தில் அடைத்தது போலிசு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இந்த வினாடி வினாவில் காவிரி குறித்த கேள்விகள். முயன்று பாருங்கள்!
காவிரி ஆற்றின் நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள் எவை?
காவிரி நீர் பிணக்கில் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் இடையே எந்த ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது?
மைசூர் அரசு கண்ணாம்பாடியில் கட்டிய அணையை மேற்கண்ட ஒப்பந்தத்தின் படி 11 டிஎம்சி கொள்ளளவில் கட்டமால் 41.5 டி.எம்.சி கொள்ளளவிற்கு கட்டியது. அந்த அணை இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மைசூர் அரசிற்கும், சென்னை மாகாண அரசிற்கும் இடையே இரண்டாவது ஒப்பந்தம் எந்த ஆண்டில் போடப்பட்டது?
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 1956-ஆம் ஆண்டில் ஒரு பிரிவு (262) இயற்றப்பட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது? அதன் விளக்கம் என்ன?
காவரி நதிநீர் சிக்கலை தீர்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட “காவிரி நடுவர் மன்றம்” எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?
1991-இல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின் படி தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவு என்ன? இந்த தீர்ப்பை ஒட்டித்தால் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான பெரும் கலவரம் நடந்தது.
2007-ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பு (ஆயிர்த்திற்கும் அதிகமான பக்கங்கள்) தமிழகம் – கர்நாடகாவிற்கு ஒதுக்கிய நீரின் அளவு என்ன?
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு இந்திய அரசின் அரசாணையாக (கெசட்டில்) எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
தமிழ்நாட்டில் பாயும் காவிரி நதி கீழ்க்கண்ட மாவட்டங்களில் எதில் ஓடவில்லை?
பிப்ரவரி 14 வந்தாலே காவி வானரங்களின் கத்தல் அதிகமாகி விடுகிறது! தொலைக்காட்சிகளும் ஒருபக்கம் காதலர் தின சிறப்பு நிகழ்வுகளை காட்டிக் கொண்டே மறு பக்கம், அர்ஜுன் சம்பதையும், ‘பல அவதாரம்’ ராம சுப்புரமணியன் ஆகியவர்களைக் கொண்டு காது அலறும் வண்ணம் விவாதங்களை நடத்துகிறது.
நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்து வைத்தல், பல இடங்களில் கையில் தாலியுடன் வில்லன்களாக வலம்வருதல், பொது இடங்களில் இருக்கும் காதலர்களை மிரட்டுதல், அடித்தல், விரட்டுதல், படம் எடுத்தல் என எல்லா அநாகரீகங்களையும், அத்துமீறல்களையும் செயகின்றனர், இந்துமதவெறி கூட்டத்தினர்.
காதலர் தின எதிர்ப்பு: நாய்களுக்கு திருமணம் செய்த சக்தி சேனா!
காதலர் தினத்தை எதிர்த்து இந்து மஹா சபை, ஸ்ரீராம் சேனா, பாரத் சேனா, சக்தி சேனா, பஜ்ரங்க தல் உள்ளிட்டவை இளம் ஜோடிகளைக் கண்டால் அவர்களை இப்போதே தாலி கட்டுங்கள் என்று கூறி அட்டூழியம் செய்து வருகின்றனர்.
காதலர் தின எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் சில இடங்களில் பொது சொத்துகளுக்கும் அவர்கள் சேதம் ஏற்படுத்தி வருகின்றனர். ஏன் எதிர்க்கிறார்கள்? காதலர் தினம் குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆர்எஸ்எஸ், பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு மேற்கத்திய கலாச்சாரமான காதலர் தினம் கொண்டாடுவதும் ஒரு காரணம் என்று சொல்லி வருகிறது.
இதற்காகவே கலாச்சார பாதுகாவலர்களான தாங்கள் ஒவ்வோர் ஆண்டும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருவதாக கூறி வருகின்றனர். இந்நிலையில் குஜராத் எம்எல்ஏவும் இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தை ஒட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான “மணிக்யா மலரயா பூவி” பாடல் வைரலாகியுள்ளதே காதலர் தினத்தை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்க்கான பதிலடி என்றும் அவர் கூறியுள்ளார். வெறுக்கக்கூடாது ஒருவரை வெறுப்பதை விட அவரை அதிகமாக நேசிக்க வேண்டும் என்பதை இந்தியர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்றும் ஜிக்னேஷ் தெரிவித்துள்ளார். இதோடு பிரியா பிரகாஷ் வாரியரின் வீடியோவையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஜிக்னேஷ் இணைத்துள்ளார்.
*****
மண் குதிரைக்கு திருமணம் செய்து வைக்கும் போராட்டம்! – தினமணி பத்திரிக்கை செய்தி
காதலர் தின எதிர்ப்பு: நாய்க்குத் திருமணம்!
உலகமெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் வேளையில், தமிழ்நாட்டிலும் காதலர்கள் பலரும் இந்த நாளை சிறப்பித்து வரும் நேரத்தில், குமரி மாவட்டத்தில் காதலை எதிர்த்து இந்து மகாசபா கட்சியினர் காதலர் தினத்தன்று நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் கடற்கரை சாலை சந்திப்பில் இன்று 2 நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை இந்து மகாசபா கட்சியினர் நடத்தினர். அவர்கள் 2 நாய்களை நாற்காலியில் அமர வைத்து அவற்றிற்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து இந்து மகாசபா தலைவர் சுரேஷ் கூறும் போது, காதலர் தினம் கலாச்சார சீரழிவின் அடையாளம். இது போன்ற தினங்களை கொண்டாடுவதால் டெல்லியில் மாணவி கற்பழிப்பு, காரைக்காலில் மாணவி மீது ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதைத் தடுக்கத்தான் காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.
ஒரு அறிவார்ந்த சமூகம் என்பது ஜாதி, மத, இனம், ஏன் தேச எல்லை கடந்த ஒற்றுமையயும், உறவு மேம்பாட்டையும் விரும்பும். மனிதர்கள் ஒன்றுபடுதலை விரும்பாதவர்கள், அதாவது ஜாதியாக, மதமாக, குலமாக பிரிந்து பிரிந்து வேற்றுமை பாராட்ட விரும்புகிறவர்கள் காதலையும், அதன் வினை ஊக்கியான காதலர்தினத்தையும் எதிர்க்கிறார்கள்.
இந்து முன்னணி போன்ற மத அமைப்புகள் காதலர் தினம் கலாச்சார சீரழிவு என்றும், இது இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாட்டிற்கு உகந்ததல்ல என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் இன்று காலை 11 மணியளவில் நாய் – கழுதைக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நாய் மற்றும் கழுதை அழைத்துவரப்பட்டன. இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தாமு வெங்கடேஷ்வரன், கோவை கோட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர், நாய் – கழுதைக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் முடிந்ததும் உணவு மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மொய் எழுதப்பட்டது. இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிந்ததும் திருமணத்தை நடத்தி வைத்த மற்றும் கலந்து கொண்ட 63 இந்து முன்னணியினரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல கோவை கவுண்டம்பாளையம் பேருந்து நிலையத்தில் இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்டம் சார்பாக பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் என்ற பகுதியில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழுவாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள், தெருவில் நாங்கள் எந்த ஒரு தம்பதியையும் கண்டால் அவர்களை வன்மையாக கண்டிப்போம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
காதலர் தினத்துக்கு மாணவர்கள் வளாகத்துக்குள் வரக்கூடாது: லக்னோ பல்கலை உத்தரவால் சர்ச்சை!
லக்னோ பல்கலைக் கழகம் அளித்துள்ள சுற்றறிக்கை
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லக்னோ பல்கலைக்கழகம், காதலர் தினத்தன்று மாணவ, மாணவிகள் வரக்கூடாது, கல்லூரி வளாகத்துக்குள் சுற்றித்திரியக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 10-ம் தேதி பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி வினோத் சிங் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பிப்ரவரி 14-ம் தேதிவரும் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால், வரும் 14-ம் தேதி மஹா சிவராத்திரி பண்டிகை வருவதால், அன்றைய தினம் பல்கலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்படும்.
அன்றைய தினம் மாணவர்கள் யாரும் எந்தவிதமான கலாச்சார நிகழ்ச்சிகள், சிறப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யக்கூடாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்குள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 14-ம் தேதி எந்தவிதமான வகுப்புகளும், செய்முறைத் தேர்வுகளும், கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்காது. ஆதலால், மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் வரக்கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெற்றோர்களும் பல்லைகழகத்துக்கு பிள்ளைகளை அனுப்பவேண்டாம். இந்த உத்தரவை மீறி பல்கலைகழகத்துக்குள் சுற்றித் திரியும் மாணவ, மாணவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழகத்தின் இந்த உத்தரவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்கலையின் உத்தரவை மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். “ பல்கலைக்கு விடுமுறைவிடப்பட்ட நிலையில், மாணவர்களை பல்கலைக்கு உள்ளே நுழையக்கூடாது எனக் கூறுவது சரியில்லை. பல்கலைக்கு செல்லாமல் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அற்பத்தனமான சிந்தனை ” என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காதலர் தினத்துக்கு லக்னோ பல்கலைக்கழகம் எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவில், மாணவர்கள் யாரும் காதலர் தினத்தன்று பூக்கள், பரிசுகள், ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது இது மாணவிகளின் நலனுக்காக செய்யும் நடவடிக்கை எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்திற்கு இந்துமுன்னணிஅமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபடுவதுடன் இந்நாளில் பொது இடங்களில் சந்தித்து காதலர் தினக்கொண்டாட்டத்தில் ஈடுபடும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி காதல் ஜோடிகள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடி வேரியில் ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் செல்வக்குமார் தலைமையில் நாய் மற்றும் ஆட்டுக்கு திருமணம் செய்து வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும், ஆட்டிற்கும், நாய்க்கும் மாலைகள் அணிவித்து திருமணத்தை இந்து முறைப்படி நடத்தினர். முன்னதாக நாய்க்கும் ஆட்டுக்கும் அலங்காரம் செய்து கொடிவேரி அணைப் பகுதியிலிருந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
காதலர் தினக்கொண்டாட்டம் என்பது வெளிநாட்டுக் கலாச்சாரம் மட்டுமல்ல நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் அதனால் தான் காதலர் தினக்கொண்டாட்டத்திற்கு ஆண்டு தோறும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
______________________
இப்படி இந்தியாவெஙகும் பார்ப்பனிய இந்துமதவெறி அமைப்புக்கள் காதலர் தினத்தன்று காட்டுமிராண்டித்தனமாக வேலைகளை செய்தனர். இவர்கள் காதலர் தினத்தை எதிர்ப்பதற்கு சீரழிவுதான் காரணமென்று குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இவர்கள் கருதும் அந்தச் சீரழிவு ஆதிக்க சாதி, மதவாத சிந்தனைகளுக்கு காதல் இடையூறாக இருக்கிறது என்பதே. சாதி மறுப்பு – தீண்டாமை மறுப்பு திருமணங்கள் சமூகத்தில் நடப்பதை பொறுக்க முடியாத இந்த சாதி-மதவெறியர்கள் தடியின் துணைகொண்டு காதலை முறிக்க நினைக்கிறார்கள். அதே தடியை இளைய தலைமுறை கையெலெடுக்கும் போது இந்துமதவெறி இந்தியாவில் இருந்து துடைத்தெறியப்படும்.
காதலர் தினத்திற்கு எதிராக அட்டூழியம் செய்யும் சங்கப்பரிவார கும்பலை விரட்ட வேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது நக்கலைட்ஸ் நண்பர்களின் இந்த வீடியோ…
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த மொங்கோலியா, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. பெருமளவில் நாடோடி இடையர்களை கொண்ட மக்கள் சமூகத்தில் இருந்து சோஷலிசப் புரட்சி வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
(மார்க்சிய – லெனினிய பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள். தகவல்: Mongolia Today, January 1963)
முதலில், மொங்கோலிய சோஷலிசப் புரட்சிக்கு காரணமாக இருந்த, டம்டின் சுக்பதார் பற்றி சில குறிப்புகள். டம்டின் சுக்பதார் ஒரு சாதாரண ஏழை இடையர் குடும்பத்தில் பிறந்தவர். இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய காலத்தில், முகாமில் நிலவிய ஊழல், வசதிக் குறைபாடுகளுக்கு எதிரான சிப்பாய்க் கலகத்தில் பங்கெடுத்தவர். பிற்காலத்தில் பௌத்த மத நூல்களை அச்சிடும் அரசு அச்சகத்தில் வேலை செய்த பொழுது மார்க்சியத்தை அறிந்து கொண்டார்.
அப்போது தலைநகர் உலான் பட்டாரில் தங்கியிருந்த ரஷ்ய மார்க்சிஸ்டுகள் மூலம் மார்க்ஸிய நூல்கள் படிக்கக் கிடைத்திருக்கலாம். டம்டின் சுக்பதார் பிற மார்க்ஸிய புரட்சியாளர்களுடன் சேர்ந்து, மக்கள் புரட்சிகர கட்சியை உருவாக்கினார். மொங்கோலிய நாடோடி இன மக்களை அணிதிரட்டி, கெரில்லாப் படை ஒன்றை அமைத்தார்.
இதே நேரம், ரஷ்யப் புரட்சியின் தாக்கம் மொங்கோலியாவில் எதிரொலித்தது. போல்ஷெவிக் செம்படைகளால் தோற்கடிக்கப் பட்ட ஸார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள், மொங்கோலியாவுக்குள் நுழைந்து பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்தினர். அதற்கெதிராக மொங்கோலிய மக்கள் கிளர்ச்சி செய்தனர். டம்டின் சுக்பதார் தலைமை தாங்கிய மொங்கோலிய நாடோடிகளின் கெரில்லா இராணுவம், ரஷ்ய செம்படை உதவியுடன் போராடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
மொங்கோலியாவில், 1924 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக, அந்த நாடு கம்யூனிசப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. உலகில் சோவியத் யூனியனுக்கு அடுத்ததாக தோன்றிய, இரண்டாவது சோஷலிசக் குடியரசு அதுவாகும்.
அதுவரை காலமும், திபெத்திய பௌத்த மதத்தை பின்பற்றும் மதத் தலைவர்களாலும், சீன மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்த மொங்கோலியா நாட்டில், எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது. பெரும்பாலான மொங்கோலிய மக்கள், நாடோடி கூட்டங்களாக வாழ்ந்ததால், பாடசாலைகளும் கட்டப் படவில்லை. பௌத்த துறவிகளும், மேட்டுக்குடியினரும் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.
மொங்கோலியா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், மாலை நேர பாடசாலைகள் அமைக்கப் பட்டன. பகலில் வேலை செய்து விட்டு வரும், தொழிலாளர்கள், விவசாயிகள், இடையர்கள் அந்த மாலை நேரப் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி கற்றனர். உழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் “மார்க்சிய-லெனினிய பல்கலைக்கழகம்” அமைக்கப் பட்டது.
இது பிற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்டது. கல்வி கற்கும் வயதில் உள்ள சாதாரண மாணவர்களுக்காக அமைக்கப் படவில்லை. வறுமை காரணமாக இளம் வயதில் வேலைக்கு போக வேண்டியிருந்த இளம் வயதினர் முதல், முதுமையிலும் அறிவைத் தேடுபவர்கள் வரையிலான பலதரப் பட்டோர் அங்கே கல்வி கற்றனர். மாலை நேர பாடசாலைகளில் சித்தி பெற்ற தொழிலாளர்களும் மேற்படிப்புக்காக வந்தனர்.
மார்க்சிய – லெனினிய பல்கலைக்கழகத்தில், வெறும் கம்யூனிச சித்தாந்தம் மட்டுமே போதிப்பார்கள் என்று, தவறாக நினைத்து விடக் கூடாது. சாதாரண பல்கலைக் கழகத்தில் போதிக்கப் படும் அனைத்து பாடங்களையும் அங்கே பயில முடியும். அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பலர், பொறியியலாளர்களாக, பொருளியல் நிபுணர்களாக, விவசாய நிபுணர்களாக, பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றனர். 1953 ம் ஆண்டு, உலான் பட்டார் நகரில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, பத்து வருடங்களுக்குள் 900 பேர் பட்டதாரிகளாக வெளியேறினார்கள்.
திருவாரூரில் 14.02.2018 அன்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக போராடி கைதாகியுள்ள மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் வழக்கறிஞர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட 6 பேர்களையும் விடுதலை செய்ய கோரி 15.02.2018 அன்று குடந்தை அரசு கலைக்கல்லூரியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தகவல் : புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, குடந்தை.
*****
ஓ.என்.ஜி.சி. -க்கு எதிராக போராடிய தோழர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக்கோரி குடந்தை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை செய் !
டெல்டா மாவட்டத்தை பாதுகாக்காபட்ட வேளாண் மண்டலமாக அறிவி !
ONGC -யே வெளியேறு ! என ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தகவல் மக்கள் அதிகாரம் குடந்தை, தொடர்புக்கு : 97892 61624.
வினவு தளம் சார்பாக தயாரிக்கப்படும் குறும்படங்கள், நகலடி (ஸ்பூஃப்) மற்றும் பாடல் வீடியோக்களில் நடிப்பதற்கு தயாரா?
சமூக அக்கறையுடன் நடத்தப்படும் வினவு தளத்தின் வீடியோக்களில் ஊதியமின்றி தன்னார்வத்தோடு நடிக்க விரும்புகிறீர்களா?
உங்களைத்தான் தேடுகிறோம்!
மிமிக்ரி – நடிப்பு – நடனம் துறைகளில் திறமையும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் தோள் கொடுங்கள்!
இதுவரை நடிப்பு அனுபவமில்லாமல் இருப்பினும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். நடிப்பதற்கு விருப்பமும், அர்ப்பணிப்புமே தேவை.
தொழில்முறை அனுபவம் உள்ள நண்பர்களும் தன்னார்வத்தோடு நமது படைப்புகளில் பங்கேற்கலாம்.
தெரிவு செய்யப்படும் (புதியவர்கள்) நண்பர்களுக்கு, நடிப்பு பயிற்சி பட்டறை நடத்துவதில் அனுபவம் உள்ள எமது தோழர் பயிற்சி கொடுப்பார். நடிப்பில் அனுபவம் உள்ளவர்கள் நேரடியாக பொருத்தமான பாத்திரங்களில் நடிக்கலாம்.
வாருங்கள்,தோள் கொடுங்கள்.
தற்போது சென்னையில் உள்ள நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். எதிர்காலத்தில் பிற மாவட்டங்களுக்கும் வருகிறோம்.
கீழ்க்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். 97100 82506
எழுத்தாளரும் வாசகரும் வெவ்வேறு ரயில்களில் பயணிக்கிறார்கள். வெவ்வேறு திசைகளில். அவர்கள் அநேகமாக சந்திப்பதேயில்லை.
அஞ்செலாவின் சாம்பல் (Angela’s Ashes) நாவல் சிலகாலத்துக்கு முன் வெளிவந்து பரவலாகப் பேசப்பட்டது. இதை எழுதியவர் ஃபிராங் மக்கோர்ட் என்ற அமெரிக்கர். 66 வயதில் அவர் எழுதிய முதல் நாவல். இதற்கு புலிட்ஸர் பரிசு கிடைத்து அவர் உலகப் பிரபலமானார். நகைச்சுவையாக எழுதுவார், ஆனால் சிடுசிடுக்காரர். அவரை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு பத்திரிகைக்காரர் மக்கோர்ட்டை பேட்டி கண்டார்.
‘உங்களுடைய Angela’s Ashes புத்தகத்தை உயர்நிலை பள்ளிக்கூடத்தில் பாடப்புத்தகமாக வைத்திருக்கிறார்கள். தெரியுமா?”
‘நல்லது. தயவுசெய்து அவர்களிடம் சொல்லுங்கள் அதில் பரீட்சை வைக்கவேண்டாம் என்று. அது ஒரு சித்திரவதை ஆயுதம் அல்ல; மகிழ்ச்சியூட்டும் புத்தகம்.’
‘உங்கள் புத்தகத்தை மேலோட்டமாகப் படிக்கக்கூடாது. நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பதை அடி ஆழத்தில் கண்டுபிடிக்கவேண்டும்.’
“அப்படியா? அதைக் கண்டுபிடித்ததும் எனக்கும் சொல்லுங்கள்.”
எழுத்தாளர் எழுதாத ஒன்றைக் கண்டுபிடிப்பதே வாசகருக்கும், பத்திரிகைக்காரருக்கும் வேலை. இதை மக்கோர்ட் பல தடவைகள் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
ஜேம்ஸ் ஜோய்ஸ் என்ற எழுத்தாளர் ‘இரண்டு பகட்டுக்காரர்கள்’ என்ற சிறுகதை எழுதியிருக்கிறார். கோர்லி தன் காதலியை அழைத்துக்கொண்டு உல்லாசமாக பொழுதுபோக்கப் போகிறான். அவனுடைய நண்பன் காத்திருக்கிறான். இவர்களுடைய தொழில் பணக்கார வீடுகளில் வேலை செய்யும் பெண்களைக் காதலித்து அவர்களை எசமானிகளிடம் திருடச்சொல்லி வரும் அந்தப் பணத்தில் வாழ்க்கையை ஓட்டுவதுதான். கோர்லி தன் காதலியுடன் சென்ற பின்னர் நன்பன் தனிமையை போக்க ஓர் உணவகத்துக்குள் நுழைகிறான். மலிவாகக் கிடைக்கும் பச்சைப் பட்டாணியை சாப்பிட்டு இஞ்சிச் சோடா குடிக்கிறான்.
இந்தக் கதையை விமர்சித்து வாசகர் ஒருவர் இப்படி எழுதுகிறார். ‘பட்டாணி பச்சை நிறத்தில் இருக்கிறது. இஞ்சிச் சோடாவின் நிறம் செம்மஞ்சள். இவை அயர்லாந்து கொடியின் வர்ணங்கள். அயர்லாந்தையும் அதன் வறுமையையும் கோடிகாட்டுவதற்குத்தான் இந்தச் சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது.’
நம்ப முடிகிறதா?
நான் யோசித்துப் பார்த்தேன். இலங்கையில் நடப்பதாக இப்படி ஒரு கதையை எழுதியிருக்கலாம். ‘இன்று மங்களா உணவகத்துக்குப் போனேன். நல்ல பசி. மதிய உனவு நேரம். வாழை இலையில் மஞ்சள் சோறு பரிமாறினார்கள். அதற்குமேல் குழம்பு ஊற்றினார்கள். சாப்பிட்டு முடித்த பின்னர் orange barley குடித்தேன்.’ உணவில் பச்சை, மஞ்சள், சிவப்பு, செம்மஞ்சள் எல்லாமே வந்துவிட்டன. தேசியக்கொடியின் வர்ணங்கள். அப்படியாயின் இலங்கையின் வறுமையை கோடிகாட்டுவதற்கா அந்தச் சம்பவம் எழுதப்பட்டது.
ரஸ்ய எழுத்தாளர் கோகொல் எழுதிய ஒரு கதை. மூக்கு (Nose) என்று பெயர். ஒருவருடைய மூக்கு காணாமல் போய்விடுகிறது. அவர் அதை தேடித் திரிகிறார். மூக்கும் வீதிகளிலே அலைகிறது. போலீசிலே முறைப்பாடு செய்கிறார். மூக்கை ஒருவராலும் கைதுசெய்ய முடியவில்லை. ஒருநாள் அதுவாகவே வந்து முகத்தில் ஒட்டிக்கொள்கிறது. இந்தக் கதை ஒருவருக்குமே புரியவில்லை. ஒரு வாசகர் மட்டும் அருமையான விளக்கம் கொடுத்தார். ரஸ்ய மொழியில் மூக்கு என்பதை மாற்றிப்போட்டால் கனவு என்று வரும். ஆகவே இது கனவுதான் என்று தீர்மானமாகச் சொன்னார். எழுத்தாளர் என்ன எழுதினாலும் வாசகர் தன்பாட்டுக்கு ஒரு விளக்கம் கொடுத்தபடியே இருப்பார்.
‘அகதியே!
நில், நில்,
உள்ளே நுழையாதே.
உனக்கு அனுமதி இல்லை.
சுபிட்சமான வாழ்க்கை காத்திருக்கிறது.
ஒரேயொரு கேள்விக்கு பதில் சொல்
யட்சன் கேட்டான்.
‘உலகத்தில் நீ வெறுப்பது என்ன?’
‘உடம்பில் உள்ளே ஓடும் ரத்தம் வெளியே ஓடுவதை.’
சரியான பதில்… உள்ளே வா.
கவிதையை படித்துவிட்டு ஒருவர் சொன்னார். ‘கனடா இமிகிரேசனை இந்தக் கவிஞர் அப்படியே கண்முன்னே கொண்டு வந்துவிட்டார்.’. இந்தக் கவிதைக்கும், கனடாவுக்கும் என்ன சம்பந்தம்?
சரி, விசயத்துக்கு வருவோம். சமீபத்தில் நான் ‘சின்ன ஏ, பெரிய ஏ’ என்று ஒரு சிறுகதை எழுதினேன். நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து ‘பார்த்தேன்’ என்று சொன்னார்கள். படித்தேன் என்று ஒருவரும் சொல்வதில்லை. நான் என்ன படமா வரைந்து பத்திரிகையில் வெளியிட்டேன்?. ஒன்றிரண்டு பேர் கதையை பாராட்டவும் செய்தார்கள். ஆனால் ஒருவராவது அந்தக் கதை எழுத என்ன காரணமாக அமைந்தது என்பதை சிந்தித்தாக தெரியவில்லை. அதுதான் மனதுக்கு வருத்தம்.
நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒருவரைச் சந்தித்தேன். அவர் தன் இளவயது சம்பவத்தை சொன்னார். அவருடைய தாய் கிறிஸ்தவர். தந்தை முஸ்லிம். இவர் சிறுவயதாயிருந்தபோதே தந்தை இறந்துவிட்டார். இவரை வளர்க்க தாயார் மிகவும் கஷ்டப்பட்டார். செல்வந்தர் வீடுகளுக்குப் போய் முழங்காலில் இருந்து அவர்கள் தரையை துடைத்தார். அந்தக் காட்சியை நினைக்கும்போது எல்லாம் அவர் அழுவார். அவர் சொன்னார், ‘என்னுடைய அப்பா முஸ்லிம், இன்னும் மூன்று பெண்களை அவர் மணம் செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை? அப்படிச் செய்திருந்தால் எனக்கு நாலு அம்மாமார் இருந்திருப்பார்கள். என் அம்மா தனியாக இத்தனை சிரமப்பட்டிருக்கத் தேவை இல்லை.’
எனக்கு அதிர்ச்சி. சிறுகதைக்கு இந்தச் சம்பவம்தான் அடிப்படை ஆனால் ஒருவருமே இதைக் கவனிக்கவில்லை. எழுத்தாளரும் வாசகரும் சந்திப்பது அபூர்வம். என்னைக் கேட்டால், அவர்கள் சந்திப்பதே இல்லை என்றுதான் சொல்வேன்.
தனியார் நிறுவனங்கள் லஞ்ச, ஊழலில் ஈடுபடுவதில்லை என்று நம்பும் அப்பாவிகளின் கவனத்திற்கு:
இஸ்ரேலிய கோடீஸ்வரர் Dan Gertler நடத்தும் Fleurette Group என்ற நிறுவனம், ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் வைரக் கல் ஏற்றுமதி செய்து வருகின்றது. அந்தத் துறையில் ஏகபோக உரிமை பெறுவதற்காக, அந்நாட்டு சர்வாதிகாரி கபிலாவுக்கு 20 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்துள்ளது. ஆனால், வைரக் கல் ஏற்றுமதியால் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் வருடாந்த இலாபம்
600 மில்லியன் டாலர்கள்!
நெதர்லாந்து நிதி அமைச்சில் பணியாற்றிய முன்னாள் அரச ஊழியரான Rob Drieduite யும் இந்த லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இவர் முன்பு அரச வரித் திணைக்கள அதிகாரியாக பணிபுரிந்த இவர், அப்போது பெரிய நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை மேற்பார்வை செய்து வந்தார்.
***
பிரித்தானியாவின் ஆதி மனிதர்கள் கறுப்பர்களே! சூரிய ஒளியில் இருந்து விட்டமின் D தயாரிப்பதற்காக பிற்காலத்தில் அவர்களது தோலின் நிறம் வெள்ளையாக மாறியிருக்கலாம். ஆதி மனிதர்கள் மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பா ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்திருக்கலாம்.
இது தான் பிரித்தானிய முதலாளித்துவம்!
ஆண், பெண் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் பாகுபாடு!!
Tesco equal pay claim could cost supermarket up to £4bn
பிரித்தானியாவின் பெரிய சூப்பர் மார்க்கட் நிறுவனங்களில் ஒன்றான டெஸ்கோ (Tesco) தனது ஊழியர்களுக்கு சமமான சம்பளம் வழங்குவதில்லை. இப்போதும் ஆண் – பெண் பாகுபாடு காட்டப் படுகின்றது. அங்கு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள், சக ஆண் தொழிலாளர்களை விட மணித்தியாலத்திற்கு £3 பவுன்கள் குறைவாக சம்பாதிக்கின்றனர்.
களஞ்சிய அறையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் சம்பளப் பாகுபாடு காரணமாக வழக்குத் தொடுத்தனர். Leigh Day எனும் சட்ட நிறுவனம், சுமார் இருநூறு தொழிலாளர்களின் பெயரில் வழக்குத் தொடுத்தது. நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தால், டெஸ்கோ நிறுவனம் நான்கு பில்லியன் பவுன்கள் நஷ்டஈடு கட்ட வேண்டியிருக்கும். அதாவது, அங்கு வேலை செய்யும் 200.000 பெண் தொழிலாளர்களின் குறைக்கப் பட்ட சம்பளத் தொகையை செலுத்த வேண்டும்.
பிரித்தானியாவில் தற்போது ஆண் – பெண் சம்பளப் பாகுபாடு தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளன. இதே மாதிரியான இன்னொரு வழக்கு Asda என்ற இன்னொரு சூப்பர் மார்க்கெட் நிறுவனம் மீது தொடுக்கப் பட்டுள்ளது. 2014 ம் ஆண்டு, பேர்மிங்ஹாம் நகர சபை நிர்வாகம் பத்தாயிரம் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு பில்லியன் நஷ்ட ஈடு செலுத்த வேண்டி இருந்தது. அங்கு சுகாதரத் துறையிலும், துப்பரவுப் பணியாளர்களாகவும் வேலை செய்து வந்த பெண் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கப் பட்டு வந்தது.
ஆண் – பெண் சம்பளப் பாகுபாடு பல மேற்கைரோப்பிய நாடுகளில் இருந்து வருகின்றது. இதை நியாயப் படுத்துவோர், “வெவ்வேறு தொழில்களுக்கு வித்தியாசமான சம்பளம் நிர்ணயிக்கப் படுவதாக” காரணம் கூறுகின்றனர். அதாவது, “ஆண்கள் செய்யும் வேலை”, “பெண்கள் செய்யும் வேலை” என்று தொழில்களை வகைப் படுத்துகின்றனர்.
இங்கே குறிப்பிடப் பட்டுள்ள டெஸ்கோ விடயத்தை எடுத்தால், களஞ்சிய அறையில் பெரும்பாலும் ஆண் தொழிலாளர்களே உள்ளனர். அதே போன்று, கடைகளில் பெண் தொழிலாளர்களை போடுகின்றனர். “பாரமான வேலையை” ஆண்களும், “இலகுவான வேலையை” பெண்களும் செய்வதாக நியாயம் கற்பிக்கின்றனர்.
கறுப்பர்களே பிரித்தானியாவின் பூர்வ குடிகள்! வெள்ளையர்களே வெளியேறுங்கள்!!
(பிரிட்டிஷ்- ஆங்கிலேய நிறவெறியர்களுக்கு பதிலடி)
***
மேற்கு ஐரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் இருப்பதாக சொன்னவங்க யாரு?
நெதர்லாந்து மன்னரை அல்லது அரச குடும்பத்தை அவமதித்தால், அதிக பட்சம் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படலாம்! அரச குடும்பத்தினரை “F**K” என்று திட்டுவதோ, அல்லது நிர்வாணமாக கார்ட்டூன் வரைவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
அரச குடும்பத்தை அவமானப் படுத்திய குற்றம் சிறிதாக இருந்தால் சில நூறு யூரோக்களும், பெரிதாக இருந்தால் இருபதாயிரம் யூரோவும் தண்டமாகக் கட்ட வேண்டி இருக்கும். இன்று கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அதிக பட்சத் தண்டனையான ஐந்தாண்டு சிறைத் தண்டனையை இரத்து செய்வது குறித்து விவாதிக்கிறார்கள்.
(தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பத்துமணி செய்தியான Netwerk இல் சொல்லப் பட்ட தகவல்.)
***
குர்திஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி
Kurdistan Communist Party
***
சோஷலிசப் புரட்சிக்கு முந்திய சீனாவில், குறிப்பாக முப்பதுகளில், கிராமங்களில் உள்ள மதில் சுவர்களில் கம்யூனிஸ்டுகள் இரவிரவாக கோஷங்களை எழுதி விட்டுச் செல்வார்கள். அவற்றில் ஒன்று “சோவியத் வாழ்க!”
பெரும்பாலான கிராமிய மக்களுக்கு சோவியத் என்றால் என்னவென்று தெரியாது. கிராமங்களை ஆட்டிப் படைத்த உள்ளூர் யுத்த பிரபுவுக்கும் குழப்பமாக இருந்தது.
என்ன இருந்தாலும் இந்த சோவியத்தை சும்மா விடக் கூடாது என்று நினைத்த யுத்த பிரபு, ஒரு துண்டுப்பிரசுரம் அடித்து கிராம மதில்களில் ஒட்டுவித்தார். அதில் பின்வருமாறு எழுதி இருந்தது:
“திருவாளர் சோவியத்தை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடித்துத் தருபவருக்கு தகுந்த சன்மானம் வழங்கப் படும்!”
(Source: The Long March, Sun Shuyun)
***
ஜெகோவாவின் சாட்சியங்கள் மதப் பிரிவில் நடக்கும் பாலியல் துஸ்பிரயோகங்கள் வெளியே வராத வண்ணம் மூடி மறைக்கப் படுகின்றன. அவர்களுக்கென தனியான நீதிமன்றங்கள் இயங்குகின்றன. தேவாலய உறுப்பினர்கள் செய்யும் குற்றங்கள் அங்கு தான் விசாரிக்கப் பட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
ஜெகோவாவின் சாட்சியங்கள் சபைகளில் உறுப்பினராக இருப்பவர்கள், தமக்கு எந்தக் குற்றம் இழைக்கப் பட்டாலும் வெளியே சென்று போலீசில் முறைப்பாடு செய்யக் கூடாது என்ற சட்டம் உள்ளது. அதனால், பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமாக இதுவரை எந்த முறைப்பாடும் வரவில்லை. தேவாலயங்களும் இது தொடர்பான கோப்புகளை பொலிசுக்கு காட்டாமல் மறைத்து வைக்கின்றன.
(நெதர்லாந்தில் மேற்குறிப்பிட்ட கிறிஸ்தவ சபைக்குள் நடக்கும் பாலியல் துஸ்பிரயோகங்கள் பற்றி RTL4 தொலைக்காட்சி வழங்கிய தகவல்.)
பத்து வருடங்களுக்கு முன்னர், லண்டனில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் “காலனிய இனப்படுகொலையாளி” முன்னாள் பிரதமர் சர்ச்சிலின் சிலைக்கு சிவப்பு பெயின்ட் பூசினார்கள். அதே மாதிரி புரசெல்ஸ் நகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இன்னொரு “காலனிய இனப்படுகொலையாளி” முன்னாள் பெல்ஜிய மன்னர் லெயோபால்ட் சிலைக்கு சிவப்பு பெயின்ட் பூசினார்கள்.
பிரித்தானியாவிலும், பெல்ஜியத்திலும் இன்னமும் இனப்படுகொலையாளிகள் தேசிய நாயகர்களாக போற்றப் படுகின்றனர். அதை விமர்சிப்பது கூட குற்றமாகும். அப்போதெல்லாம் “அரசுத் தலைவர்களை அவமானப் படுத்திய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” என்று பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும் பேசப் பட்டது. யாரும் அதை கருத்துச் சுதந்திரம் தானே என்று நியாயப் படுத்தவில்லை. கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்கள்.
நெதர்லாந்தில் ஒரு தடவை மன்னரை “f**k” என்று சொன்னவரை பிடித்து சிறையில் அடைத்தனர். இப்போதும் அந் நாட்டு சட்டப் படி அரச குடும்பத்தை அவமானப் படுத்தினால் அதிக பட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம். இதுவே சாதாரண மனிதர் என்றால் 3 மாதங்கள், அரச அதிகாரி என்றால் 5 மாதங்கள், அவமதிப்புக் குற்றத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கலாம்.
முன்னாள் சோஷலிச நாடுகளில் “அரசுத் தலைவரை f**k என்று சொல்லித் திட்ட முடியாது. கைது செய்து சிறையில் போட்டு விடுவார்கள். அதனால் அங்கு கருத்துச் சுதந்திரம் கிடையாது” என்று பிரச்சாரம் செய்தனர். அங்கிருந்த நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும் அது மட்டுமே தமது பிரச்சினை என்றார்கள்.
அந் நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயகம் வந்ததும் அவர்கள் சொல்லி மகிழ்ந்த “சுதந்திரமும்” இது தான். அதாவது, “இப்போது எமது அரசுத் தலைவரை f**k என்று திட்டினாலும் ஒன்றும் நடக்காது….” இதே மாதிரி, “கியூபாவிலும், வட கொரியாவிலும் அரசுத் தலைவரை f**k என்று சொல்லித் திட்டும் சுதந்திரம் இன்னும் இல்லையே!” என்று மேற்கத்திய ஊடகங்களில் புலம்புகிறார்கள்.
பல மேற்கத்திய நாடுகளில் மன்னர் குடும்பங்களை நிரந்தரமான அரசுத் தலைவர்களாக வைத்திருக்கிறார்கள். அதனால் தான் பிரதமரை கேலி செய்து நிர்வாணக் கோலத்துடன் கார்ட்டூன் போட்டாலும் மன்னரை அப்படி வரைய முடியாது. பிடித்து ஜெயிலுக்குள் போட்டு விடுவார்கள்.
இதற்குத் தான் தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். “மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.” நவீன காலத்தில் இப்படியும் சொல்வார்கள் “தனக்கு வந்தால் இரத்தம் மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னி.”
***
இஸ்ரேலில் எத்தியோப்பியாவில் இருந்து வந்து குடியேறிய கறுப்பின யூதர்கள், குழந்தை பெறுவதை தடுக்கும் நோக்கில் கட்டாய கருத்தடை ஊசி போடப் பட்டுள்ளது. சுகாதார அமைச்சு அதை இப்போது ஒத்துக் கொள்கிறது.
இது தான் முதாலாளித்துவ ஜனநாயகத்தின் யதார்த்தம். வலதுசாரிக் கட்சிகளுக்கு ஓட்டுப் போடும் வாக்காளர்கள் குடிசைகளில் வாழும் பொழுது, அந்த மக்களால் தெரிவு செய்யப் பட்ட வலதுசாரிகள் மாளிகைகளில் வாழ்கிறார்கள்.
இங்கு “வலதுசாரிகள்” என்பது, தமிழ்த் தேசியவாதக் கட்சிகள், திராவிடக் கட்சிகள், சிங்களப் பேரினவாதக் கட்சிகள், இந்துத்துவா கட்சிகள் எல்லாவற்றையும் குறிக்கும். இவர்கள் எல்லாம் வலதுசாரிகள் தான். இது உங்களுக்கு புரியாவிட்டால், உங்களுக்கு எதுவுமே புரியாது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தில் பணியாற்ற மறுத்து சிறைக்கு செல்லும் இளம் கம்யூனிஸ்ட் தோழர்.
Comrade Saar from the Young Communist League of Israel is going to jail for refusing to serve in the occupation army.
Saar just entered the Israeli military base to be jailed for army-refusal. The Young Communist League escorted him to the base with the YCLI drum-orchestra, sang revolutionary Palestinian communist songs and chanted slogans.
வட கொரியா அணு குண்டு போடவில்லை. எந்த நாட்டின் மீதும் படையெடுத்து கொள்ளையடிக்கவில்லை. சதிப்புரட்சிகளை நடத்தவில்லை. ட்ரோன் குண்டு போடவில்லை. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லவில்லை. சர்வதேச பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. அமெரிக்காவால் உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று எப்போது சொல்லி இருக்கிறீர்கள்?
***
புட்டினின் ரஷ்ய விஸ்தரிப்பு பற்றி பொய் சொல்லி மாட்டிக் கொண்ட நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் ஹல்பெ சைஸ்திரா உண்மையை ஒத்துக் கொண்டார். 2006ம் ஆண்டு பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சைல்ஸ்திரா, “புட்டின் அகண்ட ரஷ்யாவை உருவாக்கும் திட்டம் பற்றி பேசியதை” தான் நேரில் கேட்டதாக கூறினார். ஆனால், புட்டினது பேச்சைக் கேட்டதாக சொன்ன கூட்டத்திற்கு டச்சு அமைச்சர் சென்றிருக்கவில்லை என்று இப்போது தெரிய வந்துள்ளது. இது தெரிய வந்ததும் தான் பொய் சொன்னதாக அமைச்சர் ஒத்துக் கொண்டார். மேற்குலக நாடுகளில் ரஷ்யாவை காட்டிப் பயமுறுத்தி பனிப்போர் கால சூழ்நிலை உருவாக்கப் பட்டுள்ளது. அமைச்சரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புளுகுக் கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.
வாள் உலாம் எரியும் அஞ்சேன்
வந்திட்ட பட்ஜெட் அஞ்சேன்
தகையிலா விலையை அஞ்சேன்
தறியிலா ஆட்சி அஞ்சேன்
வாடிய பயிரை அஞ்சேன்
வளர்ச்சியின் பக்கோடா அஞ்சேன்
மோடியின் அறிவு வேகம்
அம்ம நாம்! அஞ்சு மாறே!
நிலையிலா வேலை அஞ்சேன்
நெறியிலா சம்பளம் அஞ்சேன்
உயிரிலா ஆற்றை அஞ்சேன்
பயிரிலா நிலத்தை அஞ்சேன்
செடியிலா ஊறை அஞ்சேன்
சிதறிய உறவை அஞ்சேன்
மோடியின் வளர்ச்சிப் பாதை
அம்ம நாம்! அஞ்சு மாறே!
ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது பிளாண்ட்டின் கட்டுமான வேலைகளை எதிர்த்து அ.குமரட்டியாபுரம் பொதுமக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நடக்கிறது. 1996 முதல் இயங்கிவரும் இந்த ஆலையில் வெளியேறும் நச்சு வாயுக்களாலும், நிலத்திற்குள் செலுத்தப்படும் அமிலக்கழிவுகளாலும் தூத்துக்குடி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஸ்டெர்லைட்டை அடுத்துள்ள அ.குமரட்டியாபுரம் கிராம மக்கள் நேரடியாக தன் ஊர் அழிவதைக்கண்டு பொறுக்கமுடியாமல் குமுறி வெடித்துள்ளனர். இங்கு 40 வயதான சண்முகத்தாய் கேன்சருக்கு பலி! கருப்பை புற்றுநோயும் பரவுகிறது! ஆலையின் சுற்றுச்சுவர் வரை சென்று ஆடுமேய்த்து வந்த மாடசாமியின் கண் குருடானது!
கருவுரும் பெண்களுக்கு 3 மாதத்திலேயே கருச்சிதைவு தொடர்கதையாகிவிட்டது; தோலில் ஒவ்வாமை; 15 ஆண்டுக்கு முன்பு வரை குடிநீர் தந்த கிணறுகளில் இன்று அமிலநீர்தான் சுரக்கின்றன! இதை குடிக்க முடியாது. குடித்தால் தலைசுற்றும், மயக்கம் வரும். தண்ணீரை விட அடர்த்தியான இந்நீரை கால்நடைகள் குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது, அதன் காரணமாக அவை இறக்கின்றன.
இரவில்தான் அதிக அளவு உற்பத்தியும் நடக்கிறது. சல்பர் டை ஆக்சைடும் வெளியேற்றப்படுகிறது. இவ்வளவும் வருடத்திற்கு 1 லட்சம் டன் உற்பத்தி செய்யும் பிளாண்ட்- 1 வாரி வழங்கியவை! இந்நிலையில் 4 லட்சம் டன் உற்பத்தி செய்யும் இலக்குடன் பிளாண்ட் – 2 -ன் கட்டுமானத்தை எப்படி அனுமதிப்பது? உயிரைக்கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என களமிறங்கியுள்ளனர் கிராம மக்கள்.
“ஆளுக்கொரு புதுவீடு, 5 லட்சம் பணம்” என்று ஆலை நிர்வாகம் தனது ஆட்களை வைத்து பஞ்சாயத்தும் பேசியது. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் ஊரா? – ஊரை அழிக்க கம்பெனி போடும் பிச்சையா? எதுமுக்கியம் என்பதில் அ.குமரட்டியாபுரம் கிராம மக்கள் தெளிவாக சிந்தித்து சரியான முடிவெடுத்தனர்.
ஆலை விரிவாக்கப்பணிகளை தடுக்க கோரி 05.02.2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்தனர். மத்திய அரசால் தேசிய அளவில் சிறந்த நிறுவனம் என்று பல துறைகளில் பரிசளிக்கப்படும் ஸ்டெர்லைட்டை மூட அரசிடமே மனு தருவது தீர்வைத் தருமா? காற்றும், நிலமும், நிலத்தடி நீரும் கெட்டு, கேன்சரும் சிறுநீரக செயலிழப்பும் ஆஸ்துமாவும் தோல் நோய்களும் பெருகியுள்ள தூத்துக்குடிக்கு தூய்மையான நகரம் என்ற விருது தந்து அழகுபார்க்கிறது அரசு! எனினும் போராட்டத்தை முறைப்படி அரசுக்கு மனுகொடுத்து தொடங்கினர் மக்கள்.
06.02.18-ல் ஸ்டெர்லைட் கட்டுமான வேலை நடக்கின்ற இரண்டாம் வாயிலில் முற்றுகை. நிலத்தடி நீரை விசமாக்கிவரும் ஸ்டெர்லைட் தரும் லாரி குடிநீரை வாங்க மறுத்தனர். 07.02.18-ல் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சிப்காட் காவல்நிலையத்தில் வைத்து DSP யின் மிரட்டல் “கோர்ட்டுக்கு போங்கள்.இப்படி எல்லாம் கேட்டில் நிற்கக்கூடாது. அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டுருவோம்”. ஊர்மக்களோ “எங்க குடிதண்ணில பாலிடால கலந்துவுட்டுருங்க. ஊர் மொத்தமா செத்துடுறோம்.நீங்கல்லாம் கம்பெனிக்கு காவலா நின்னுக்கங்க” என்று முகத்தில் அறையும்படி சொல்லியுள்ளனர்.
08.02.18-ல் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். “போராட்டம் முடியும்வரை ஊரிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள் ” ஊர்சார்பாக பள்ளிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை. “போராட்டம் என்று வந்து பெட்டி வாங்கிகொண்டு நம்மை ஏமாற்றியதே கட்சிகளின் வரலாறு! நாம் இனி கட்சிகளின் பின் செல்லக்கூடாது. ஊர்தான் சுயமாக போராடனும். ஊர்தான் தலைமை தாங்கனும். எந்த முடிவாக இருந்தாலும் ஊர்க்கூட்டம் மூலம்தான் எடுப்பது” என்று முடிவெடுத்தனர்.
தலைக்கு 500 ரூபாய் என்று போராட்ட நிதி திரட்டினர். உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டனர். மறுத்தது ஸ்டெர்லைட்டின் ஏ(கா)வல்துறை! 12.02.18 அன்று 2மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைத்தது. அதையே வாய்ப்பாக்கி மையவாடி பேருந்து நிறுத்தம் எதிரில் உண்ணாவிரதத்தை நடத்தினர் கிராம மக்கள். மாலை 5.00 மணி ஆகியும் கலையாத உறுதியை கண்டு கொதித்த அரசு பந்தல் போட்டவரை மிரட்டி பிரிக்க வைத்தது. மைக்செட்காரரை மிரட்டி எடுக்க வைத்தது.
ஓரமாக அமைதியாக உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தவர்களை கலைத்து சாலைக்கு விரட்டியது போலீசு. MGRபூங்கா வாயிலை ஒட்டி அமர்ந்து விட்டனர் மக்கள். பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் கொட்டும் பனியில் சாலையோரம் போராட்டத்தை தொடர்ந்தனர். மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்களும் அவர்களுடன் இரவில் தங்கினர்.
13.02.18 அன்று காலை போராட்டம் தொடர் முழக்க ஆர்ப்பாட்ட வடிவத்தை எட்டியது. பல்வேறு அமைப்புகளின், கட்சிகளின் பிரதிநிதிகள் சமூக அக்கறை கொண்டவர்கள் வர ஆரம்பித்தனர். கல்லூரி மாணவர்களும் வந்து பார்த்தனர். எங்கே இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டமாகி விடுமோ என்ற அச்சம் ஸ்டெர்லைட்டுக்கு உண்டு. ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இக்கம்பெனி தந்த உணவை திருப்பி அனுப்பியதும், அடுத்த போராட்டம் உனக்கெதிராகத்தான் இருக்கும் என்று எச்சரித்ததும் மறந்திருக்குமா? மாணவர்கள் வந்துவிடக்கூடாது என்று கல்லூரிகளில் கண்காணித்தது மாவட்ட நிர்வாகம்.
மதியம் 11 மணியளவில் போராடியவர்களை தாக்கி கைது செய்ய ஆரம்பித்தது அரசு. இதில் ஒரு மாணவன் உட்பட மூவர் காக்கிகளால் அடிபட்டு சாலையில் சரிந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஊர்மக்களை இரண்டு மண்டபத்தில் ஆண்கள், பெண்கள் என்று பிரித்து அடைத்தனர்.
வாழ்வுரிமைக்காக அமைதியாக எதிர்ப்பை தெரிவித்து போராடிய தங்களை அடிக்கும் போலீசை வெறுப்புடன் பார்த்தனர் மக்கள். அவர்கள் தந்த உணவையும் தொடவில்லை. இத்தகவல் தெரிந்தவுடன் குழந்தைகளுக்கு மட்டும் வெளியிலிருந்து உணவு தயாரித்து தந்தனர் சமூக ஆர்வலர்கள்.
மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்களை பார்க்கவிடாதது மட்டுமல்ல, வெளியேயும் நிற்கக்கூடாது என்று கலைத்தனர். அருகிலுள்ள தெருவில் சற்று தள்ளியிருந்த ஒரு கட்டிடத்தின் படியில் அமர்ந்தவர்களிடம் மீடியாவினர் பேட்டி எடுக்க ஆரம்பிக்கவே ASP தலைமையிலான கடமை தவறா காவலர்கள் அங்கும் ஓடிவந்து தடுத்தனர்.
“இங்கே உட்காரக்கூடாது. ரோட்டில் பேட்டி தர காவல்துறையிடம் அனுமதி வாங்கனும். இல்லை பத்திரிக்கை ஆபீஸ்ல போய் கொடுங்க” என்று தன் ‘கடமையை’ செய்தார் ASP. “போராட்டத்தை ஆதரிப்பதும், கூடி நிற்பதும், பேட்டி கொடுப்பதும் எங்கள் உரிமை. நீங்கள் தடுக்க முடியாது” என்று மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் எதிர்த்து பேசவே போலீசார் பின்வாங்கினர். எனினும் ஊடக நண்பர்கள் தமது உரிமை பற்றி வாய் திறக்கவில்லை. எதற்கு வம்பு என்பதைபோல் PRPC தோழர் அரிராகவனை அங்கிருந்து மேலும் தள்ளி அழைத்துச்சென்று பேட்டி எடுத்தனர்.
அதே நேரம் பெண்கள் அடைக்கப்பட்ட மண்டபத்தில் ஆய்வாளர் ஹரிகரனோ “உங்களை கோவை, சேலம், வேலூர்னு கொண்டுபோய் ஜெயில்ல போடப்போறோம். ஒழுங்கா நாங்க சொல்றத கேளுங்க” என்றிருக்கிறார். தாளமுத்துநகர் காவல்நிலைய ஆய்வாளரான இவரின் மனைவியோ “இவளுங்க பேசுனதையே திரும்பதிரும்ப சொல்றாளுங்க. நம்ம பேச்ச கேக்கறமாதிரி தெரியல்ல” என்று ஆத்திரமடைந்துள்ளார். “டெல்லி திகாருக்கே அனுப்பினாலும் சரி, போராட்டம் தொடரும்” என்று பெண்கள் பதிலடி தந்துள்ளனர்.
இரவு 8 மணியளவில் பேச்சுவார்த்தைக்கு என்று 10 பேரை தனியாக அழைத்துச்சென்று அவர்களை தெற்கு காவல் நிலையத்தில் வைத்தனர். நள்ளிரவில் 9 பேரை ரிமாண்ட் செய்தனர். மறுபுறம் மண்டபத்தில் இருந்தவர்களை போகும்படி அறிவித்தனர். எங்களையும் ரிமாண்ட் செய் அல்லது அவர்களையும் வெளியே விடு என்று அறிவித்தனர் ஊர்மக்கள்.
ஆண்கள் வீட்டிற்கு போய்விட்டனர் என்று பெண்களிடமும்,பெண்கள் போய் விட்டனர் என்று ஆண்களிடமும் கூறி சதி செய்தனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட தனிநபர்களாக உடன் கைதான சிலர் வெளியே வந்துவிடவே, கிராம மக்களும் குழப்பத்திற்குள்ளாகி வெளிவந்தனர். வெளிப்படையாக அரசு எந்திரம் ஸ்டெர்லைட் பக்கம் நிற்கும் சூழலில், கம்பெனி வேண்டும் என்று சுய உதவிக்குழு மூலம் முத்தையாபுரம் பெண்களை கலெக்டரிடம் மனுகொடுக்க வைத்துள்ள நிலையில், கம்பெனி கையாட்கள் போராட்டத்தில் ஊடுருவி சீர்குலைக்கவும் கூடும். இந்த முதல்சுற்று அனுபவத்தை கணக்கிலெடுத்து அடுத்தகட்ட போராட்டத்தை தொடரவேண்டிய நிலையில் உள்ளனர் அ.குமரட்டியாபுரம் கிராம மக்கள்.
அரசிடம் கெஞ்சியோ மனுகொடுத்தோ கார்ப்பரேட்டுகளைக் விரட்ட முடியாது! அனைத்து கிராமங்களும் ஒன்றிணைந்து மக்களே அதிகாரத்தை கையில் எடுத்து விரட்டியாக வேண்டும்! இணைந்து போராட தயாராக வேண்டும் தூத்துக்குடியின் இளைஞர் படை!
தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி.
இந்த அரசுக்கட்டமைப்பு ஆளத்தகுதியற்றதாக மாறிவிட்டது என்பதை சமீபகாலமாக நடந்து வரும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. அதற்குச் சிறந்த உதாரணமாக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும், வேலைநிறுத்தங்களும் அன்றாடம் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்த அரசமைப்பின் தோல்வியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதில் மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதை தமிழகத்தில் யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக கோத்தகிரி பகுதியில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காகவும், மதவெறியர்கள் மற்றும் சாதிவெறியர்களின் கலவரங்களுக்கு எதிராகவும், அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து கோத்தகிரி மக்கள் அதிகாரம் செயல்பட்டு வருகிறது.
கோத்தகிரியில் நடந்த மூடு டாஸ்மாக் போராட்டம் – கோப்புப் படம்
மக்களுக்காக போராடி, அடிபட்டு சிறைகுச் சென்று பல வழக்குகளைச் சந்தித்து வருகிறது கோத்தகிரி மக்கள் அதிகாரம். கடந்த இரண்டரை (2.5) ஆண்டுகளாக டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
விவசாயிகள் பிரச்சினை, ஜல்லிக்கட்டுப் போரட்டம், மற்றும் நீதிமன்ற ஊழலுக்கு எதிராக வழக்கறிஞர்களின்போராட்டம் ஆகியவற்றுக்காக அவர்களுடன் இணைந்து போராடியது மக்கள் அதிகாரம்.
கார்ப்பரேட் கைக்கூலி, மத வெறியன் மோடி தமிழகத்திற்கு வந்த போது அவருக்கு எதிராக கோத்தகிரி மக்கள் அதிகாரத்தின் சார்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் பணமதிப்பழிப்பு, நீட் தேர்வு, கோகுல்ராஜ், உடுமலை சங்கர் படுகொலை ஆகியவற்றிற்கு எதிராக போராடினோம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்தை ஆதரித்தோம்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் வைப்புத் தொகையை இந்த அரசு சூறையாடியதைக் கண்டித்தும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் மக்களிடம் “ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்” எனப் பேட்டி அளித்ததை ஆதரித்தும், தூய்மை இந்தியா எனக் கூறிக் கொண்டு பொதுக் கழிப்பறை கூட கட்டித்தர வக்கற்ற அரசைக் கண்டித்தும் சுவரொட்டி மற்றும் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
100 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருக்கும் மக்களை வனத்துறைக்கு சொந்தமான இடம் எனக் கூறி அவர்களது விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து விரட்டியடிக்கும் அரசையும் அதற்கு துணை நிற்கும் நீதிமன்றத்தையும் கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் செய்து, போராடும் மக்களுக்கு கடைசி வரை துணை நின்று வழிகாட்டினோம்.
அடிமேல் அடிவாங்கிக் கொண்டு இருந்த கோத்தகிரியை போராடும் களமாக மாற்றியதில் மக்கள் அதிகாரத்திற்கு பெரும் பங்கு உண்டு என்பது உரிமைக்காக போராடும் பலருக்கும் தெரியும்.
கோத்தகிரியில், இலஞ்சம், ஊழல், கட்டப்பஞ்சாயத்தும் பொது சொத்தை சூறையாடி சொத்து குவிப்பது, உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை ஆதரித்து வரும் அரசின் அனைத்து உறுப்புகளும், மக்கள் அதிகாரத்தின் செயல்பாடுகளால் மக்கள் முன் அம்பலப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் அதிகாரத்தின் செய்ல்பாடுகளை முடக்க அரசின் ஏவல்படையான போலீசை வெறி பிடித்த மிருகம் போல அரசின் அத்தனை உறுப்புகளும் கட்டவிழ்த்து விடுகின்றன.
கந்துவட்டி, லாட்டரி, குட்கா விற்பனை, பொதுச்சொத்து ஆக்கிரமிப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத கும்பல்களிடம் மாதம் ஒருமுறை, வாரம் ஒருமுறை, மற்றும் தினமும் என இலஞ்சம் வாங்கும் போலீசுக்கும் மக்கள் அதிகாரத்தின் செயல்பாடுகள் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. அதன் காரணமாக, மக்கள் அதிகாரத்தின் செயல்பாடுகளை முடக்க அனைத்துவகையான முயற்சிகளையும் செய்து வருகிறார் கோத்தகிரி போலீசு ஆய்வாளர்.
போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, எந்த விதமான பிரச்சாரங்களுக்கும் அனுமதி மறுப்பது, வழக்கு போடுவது, தோழர்களைத் தனியாகப் பார்த்து மிரட்டுவது, புகார் கொடுத்தால் ஏற்க மறுப்பது என ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் ஆய்வாளர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக கோத்தகிரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
சுவரொட்டி வாசகங்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகக் கூறியும், கலகத்தைத் தூண்டுவதாகக் கூறியும், பொது இடங்களை அசுத்தம் செய்வதாகக் கூறியும் இதுவரை 11 வழக்குகளை மக்கள அதிகாரம் தோழர்கள் மீது போட்டுள்ளது.
சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களை காப்பாற்றாமல், லஞ்சலாவண்யத்தில் ஊறித்திளைக்கும் போலீசு, மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் சுவரொட்டி ஒட்டினால் வழக்கு போடுகிறது. போராட்டங்களுக்கு அனுமதி மறுத்து மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்கப் பார்க்கிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும், அதனை மக்கள் அதிகாரம் சந்திக்கத் தயார். அடக்குமுறைக்கோ, அதிகாரத் திமிருக்கோ அடங்கப் போவது இல்லை. தொடர்ந்து, வீரியமாக இயங்கிக் கொண்டே இருப்போம்.
ஒட்டுமொத்தத் தமிழகமும் மக்கள் அதிகாரத்தின் களம். போலீசின் வழக்குகள் மக்கள் அதிகாரத்தின் களத்தினை உறுதி செய்யும் என்பதை கோத்தகிரி ஆய்வாளர் புரிந்து கொள்ளட்டும்.
இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழியில்லை. அனைத்து வழிகளும் ஆள அருகதையற்ற இந்த அரசால் அடைக்கப்பட்டுவிட்டது. மக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுப்பது தான் ஒரே தீர்வு. அதனை மக்கள் அதிகாரம் முன் நின்று செய்துவருகிறது.
இன்றே மக்கள் அதிகாரம் அமைப்பில் இணையுங்கள் ! நன்றி !
திருவள்ளுர் மேற்கு மாவட்டம் ” மோடி-ஜெட்லி 2018 பட்ஜெட், மோசடி பட்ஜெட்! முதலாளிகளுக்கு கல்லா, மக்களுக்கு குல்லா!”என்ற தலைப்பில் ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் 10.02.2018 (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணிக்கு விண்ணதிர முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.
ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் தோழர் ம.சரவணன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். மோடி – ஜெட்லி கூட்டணியில் போடப்பட்டுள்ள இந்த பட்ஜெட் உழைக்கும் மக்களுக்கானது அல்ல, கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கானது என்றும், இதனால் நாடு வளர்ச்சிப்பாதை நோக்கி செல்லும் என்று கூறும் மோடி, மக்கள் மத்தியில் மேலும் மேலும் பொய்யான வாக்குறுதிகளை கூறுவது ஒரு ஏமாற்று வேலை என்று உரையாற்றினார்.
பிறகு கண்டன உரையாற்றிய மாவட்ட செயலாளர் தோழர் மு.முகிலன் கார்ப்பரேட்களின் நலனுக்காக போடப்பட்ட பட்ஜெட் என்றும், மோடியின் தேர்தல் வாக்குறுதிகளும், வளர்ச்சி, வல்லரசு என்ற கோஷங்கள் எல்லாம் கார்ப்பரேட்களின் நலன் சார்ந்தது என்பது நிரூபணமாகி வருகிறது. தொழிலாளர்களின் தொடர் வேலை பறிப்பு, சிறுகுறு தொழில்கள் மறுகாலனியாக்க நடவடிக்கையின் விளைவாக அழிக்கப்படுகிறது, பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்ப்பதின் நோக்கம் குறித்தும், விவசாய பட்ஜெட் என்பது விவசாயத்துறையை கார்ப்பரேட்டின் வசம் ஒப்படைக்கும் முயற்சி என்றும் இந்த பட்ஜெட் முழுவதும் வெற்று சவடால்களும், வாய்ஜாலங்களால் அலங்கரிக்கப்பட்டு நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிரான பட்ஜெட் என்பதை தனது கண்டன உரையில் விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட கிளை/இணைப்பு சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர். அப்பகுதியின் வியாபாரிகள், பாதசாரிகள் மாற்று அமைப்புகளை சேர்ந்தவர்கள் என அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கவனித்துக் கொண்டு இருந்தனர்.
இறுதியாக மாவட்ட இணைச் செயலாளர் தோழர் து.லெட்சுமணன் நன்றியுறையுடன் கூட்டம் முடிவுற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இவன்
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
***
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ” மோடி – ஜெட்லி 2018 பட்ஜெட் மோசடி பட்ஜெட் ! முதலாளிகளிக்கு கல்லா! மக்களுக்கு குல்லா! “ என்கிற தலைப்பின் கீழ் 10.02.18 மாலை கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் தோழர் ஹரிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் தோழர் சதிஷ், அரசால் திட்டமிட்டு சீரழிக்கப்படும் போக்குவரத்து துறை குறித்தும், அதனால் பாதிப்படையும் தொழிலாளர்களை குறித்தும் உரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய இணைச் செயலாளர் தோழர் சுதேஷ்குமார் மோடி அரசின் பட்ஜெட் மோசடியான பட்ஜெட் என்றும், அது மக்களுக்கானது அல்ல, முதலாளிகளின் நலனுக்கானது என்பதை விளக்கிப் பேசினார்.
SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் மெய்யழகன் நன்றியுரையாற்றினார்.
100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த கண்டக் கூட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.
இவன்
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
***
” மோடி – ஜெட்லி 2018 பட்ஜெட் மோசடி பட்ஜெட்! முதிலாளிகளுக்கு கல்லா, மக்களுக்கு குல்லா! ” என்ற முழக்கத்தை முன்வைத்து ஒசூரில் செயல்பட்டுவரும் புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக (10.02.2018 சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில் ஓசூர் ராம் நகர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியோர் தற்போது மத்திய அரசால் போடப்பட்டுள்ள 2018 பட்ஜெட் என்பது நம் நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் பிரிவை சேர்ந்த விவசாயி, தொழிலாளி, சிறு- குறு வணிகம் மற்றும் சிறு-குறு தொழில் முனைவோர் அனைவருக்கும் எதிராகவும், அதே சமயம் இன்னொருபுறம் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் தங்குதடையற்ற சுரண்டல் நலனுக்காவே போடப்பட்ட பட்ஜெட் என்ற உண்மையை பல்வேறு விவரங்களுடன் தரவுகளோடு அம்பலப்படுத்திப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவரும் ஒரே குரலாய் மோடி – ஜெட்லியின் கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டிற்கு எதிராக விண்ணதிர முழக்கங்களை முழங்கினர். திரளான மக்கள் இவ்வார்ப்பாட்டத்தை கேட்டு வாழ்த்தி ஆதரித்துச் சென்றனர்
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்,
செல் – 9788011784.
***
” மோடி – ஜெட்லி 2018 பட்ஜெட் மோசடி படஜெட்! முதலாளிக்கு கல்லா ! மக்களுக்கு குல்லா ! ” என்ற முழக்கத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் துண் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு – வின் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்க மாவட்ட செயலாளர் தோழர் சிவா தனது கண்டன உரையில் “ மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் அறிவித்த திட்டங்களும் அரசின் நடவடிக்கைகளும் கார்ப்ரேட்டுகளுக்காக நடக்கும் ஆட்சி என்பதை தினந் தோறும் நிருபித்தார் மோடி !
GST வரி விதிப்பும் பண மதிப்பு இழப்பு ஆகியவை மக்களின் துயரத்திற்கு அடிப்படையாக இருக்கின்றன. பொதுத்துறையை 80,000 கோடிக்கு விற்பது முதல் இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய அம்பானிக்கு அனுமதி வரை தற்போதைய பட்ஜெட்டும் கார்ப்ரேட் முதலாளிகளுக்கானதுதான் என்பதை அம்பலப்படுத்தி இந்த அரசமைப்பில் உழைக்கும் மக்கள் வாழ முடியாது. மக்களுக்கு அதிகாரம் உள்ள புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள வேண்டும்” அறை கூவினார்.
இடையிடையே மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள அறிவிப்புகளை அம்பலப்படுத்தி முழக்கம் இட்டது மக்களை ஈர்க்கும் வகையிலே இருந்தது.
தோழமையுடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞசிபுரம் மாவட்டம் – 8807532859
***
மோடி – ஜெட்லி 2018 பட்ஜெட், மோசடி பட்ஜெட்! முதலாளிகளுக்கு கல்லா! மக்களுக்கு குல்லா! என்ற தலைப்பின் கீழ் வேலூர் மாவட்டம், மண்டி வீதியில் ஆர்ப்பாட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் நடத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், தோழமை அமைப்பான ம.க.இ.க. தோழர்கள் என மொத்தம் 80க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமையேற்று நடத்தினார். மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர் சிறப்புரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் தோழர் மணி நன்றியுரையாற்றினார். இவ்வார்ப்பாட்டம் அனைத்து துறைகளும் கார்ப்பரேட் மயமாவதை அம்பலப்படுத்தும் விதமாகவும், இதற்கு தீர்வு புதிய ஜனநாயக புரட்சிதான் என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்தது.
மண்டி வீதியில் வியாபாரிகள், தள்ளு வண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர் என நூற்றுக்கணக்கானோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. கூட்டம் கட்டுப்கோப்புடன் நடந்தது. மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தோழமையுடன் புதிய ஜனநாகத்தொழிலாளர் முன்னணி
வேலூர்
***
” மோடி–ஜெட்லி 2018 -19 பட்ஜெட் : முதலாளிகளுக்கு பட்டுக்கம்பளம்! மக்களுக்கோ பட்டை நாமம்!“ என்கிற முழக்கத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக பென்னாகரத்தில் பிடிஓ அலுவலகம், டெம்போ ஸ்டேண்ட் ஆகிய இரண்டு இடங்களில் 07.02.2018 அன்று மாலை 4 மணி அளவில் தோழர் சத்தியநாதன் தலைமையில் தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது. அவரது உரையில் ஆண்டு தோறும் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள். அதேபோல தான் இந்த ஆண்டும் தாக்கல் செய்துள்ளனர். விவசாயம், கல்விக்கு பட்ஜெட் கிடையாது. ஒட்டுமொத்தமாக மக்களுக்கு அல்வா கொடுக்கும் பட்ஜெட்டாக இருக்கிறது. 8 கோடி மக்களுக்கு சிலிண்டர் மானியம் ரத்து . எனவே நம்முடைய பிரச்சினையை தீர்க்க வேண்டுமானால் நாம்தான் போராடவேண்டும். முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆயிரம் ஜெட்லி வந்தாலும் தூக்கி நிறுத்த முடியாது என்று அம்பலப்படுத்தி பேசினார்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் தோழர் ஜானகிராமன் பேசுகையில் ,மோடி பட்ஜெட் என்பது வரபோகும் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து போடப்பட்டுள்ளது. இவர்கள் போடக்கூடிய வரி எல்லாமே மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதாயமடைவது தனியார் மருத்துவ முதலாளிகள்தான் லாபமடைய போகிறார்கள்.
விவசாயத்திற்கு 11 லட்சம் கோடி மானியம் வழங்கப்படும் என்கிறார்கள் . இது விவசாயத்தை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு கொடுக்க போகிறார்கள். இதில் விவசாயிகளுக்கு இடைதரகனாக இருந்து கொள்ளையடிப்பது, தனியார் கார்ப்பரேட் நிறுவனம். எனவே இந்திய விவசாயத்தையும், கல்வியையும் தனியாருக்கு கொடுக்கும் பட்ஜெட். மேலும் குடியரசு தலைவருக்கு ரூ.5 லட்சம் சம்பளம், அமைச்சர்கள், நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு இதற்காக மக்களின் மீதான வரியை அகலப்படுத்துகிறார்கள். எனவே எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பிரச்சினை தீரப்போவது இல்லை, மாற்றாக தனியார்மயம், தாராளமையம் , உலகமய எதிராக போராடுவதுதான் ஒரே தீர்வு.
மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் பேசுகையில், அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது விவசாயம். அதற்கு மானியமாக 11 லட்சம் ஒதுக்கியுள்ளதாக கூறுகின்றனர். இது விவாசாயிகளு போய் சேரபோவது இல்லை, விவசாயத்தை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு, அம்பானி, அதானிக்கும் போய் சேரபோகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று சொல்கிறார்கள். எப்படி இரட்டிப்பாக்க முடியும். நெல்லுக்கான ஆதார விலை கிடைக்கவில்லை, எங்களுக்கு உரிய விலை வேண்டும் என்று போராடிய மத்திய பிரதேச விவசாயிகளை சுட்டுத்தள்ளுகிறார்கள். விவசாயத்திற்கு அடிப்படையாக இருப்பது தண்ணீர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று சொன்ன மோடியால் எப்படி விவசாய பிரச்சினையை தீர்க்க முடியும். தஞ்சையில் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. அங்கு குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடையாது.
மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடுகிறார்கள் அப்பகுதி மக்கள். எனவே விவசாய பிரச்சினை என்பது வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து இன்று வரை விவசாயத்தை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே விவசாயிகளின் அழிவு சமூகத்தின் பேரழிவு என்பதை விளக்கி மக்கள் அதிகாரம் தொடர் இயக்கமாக நடத்திகொண்டு இருக்கிறது. எனவே அனைவரும் ஒன்றிணைவதுதான் தீர்வு.
தோழர் பழனியம்மாள் பேசுகையில், பட்ஜெட் தாக்கல் செய்த அடுத்த கணமே பங்குச்சந்தை 5 லட்சம் கோடி ரூபாய் சரிவை கண்டுயிருக்கிறது. அடுத்து 5 லட்சம் சரிவு ஏற்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவே காலியாகிவிடும். எனவே முதலாளித்துவ பொருளாதாரம் மக்களை மரணக்குழியில் தள்ளும். மார்க்சிய பொருளாதாரமே மக்களை காக்கும். அதனால்தான் 2009 அமெரிக்க நெருக்கடியின் போது, அந்த மக்கள் மார்க்கிய பொருளாதாரத்தை தேடினார்கள். பல நாடுகளில் மார்க்சின் மூலதனத்தை தேடுகிறார்கள்.
மேலும் இந்த பட்ஜெட் குடியரசுதலைவருக்கு 5 லட்சம் சம்பளம், துணை குடியரசு தலைவருக்கு 4 லட்சம் என்று பல மடங்கு சம்பளத்தை உயர்த்திவிட்டு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்கிறார் ஜெட்லி. அதற்கான அடிப்படை என்ன இருக்கிறது.
ஒருபக்கம் மீத்தேன், போன்ற கனிமவளங்களை கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு திட்டமிட்டே விவசாயத்தை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். விவசாயத்தை இரட்டிப்பாக்குவேன் என்றால் விவசாயிகளுக்கு விலை சொல்லும் அதிகாரத்தை கொடுப்பாரா? இப்படி பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் பிஜேபியின் திட்டம். கிராமங்களில் 5 லட்சம் இணையம் வசதி செய்து கொடுக்கபடும் என்கிறார்கள் .
கிராமங்களில் உள்ள 100 நாள் வேலைத்திட்டத்தையும் ஒழித்துக்கட்டிவிட்டு யாருக்கு வேண்டும் இணையம். எனவே மீனவர்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, தொழிலாளர்கள் பிரச்சினை எதையும் தீர்த்துக்கொடுக்க துப்பில்லாமல் இருக்கிறார்கள். 1% அமைச்சர்கள் அதிகாரிகள் தின்று கொழுப்பதற்காக 99% மக்களின் இரத்தத்தையும், வேர்வையையும் உறுஞ்சுகிறார்கள். அதை ஏன் அனுமதிக்கவேண்டும் 99% மக்கள் உழைக்கவில்லை என்றால் இந்த சமூகம், அரசு, அமைச்சர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
எனவே அநீதீயை வேடிக்கை பார்க்காம்ல 99% மக்கள் வீதியில் இறங்கி அதிகாரத்தை கையிலெடுப்பதுதான் தீர்வு என்று அறைக்கூவி அழைத்தார். இதனை நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கவனித்தனர். பார்த்த அனைவருக்கும் இந்த பட்ஜெட் எப்படி மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என்பதை புரியவைக்கும் படியும், போராடுவதுதான் தீர்வு என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தெருமுனைக்கூட்டம் அமைந்தது.
தகவல் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
தருமபுரி. தொடர்புக்கு-8148055539.