
எனக்கென்னமோ கமலின் அரசியல் வருகை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க கூடாரத்தில் சேதாரத்தை உண்டு பண்ணும்ணுதான் தோணுது..!
கமல் கட்சி ஆரம்பிக்கும்போது இதுவரை உளறியதைவிட பயங்கரமாக உளறுவார் என்று அதற்கு முந்தையைய தினம் நியூஸ் 18 நேரலையில் பதிவு செய்தேன். என் அனுமானத்தை அவர் ஒரு துளிகூட பொய்யாக்கவில்லை. மக்கள் கேட்டதாக பாரதிகிருஷ்ணகுமார் மேடையில் கமலிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்த விதம் ஒரு மாபெரும் அவல நாடகம்.
இவ்வளவு அரசியல் பேசப்படும் ஒரு மாநிலத்தில் எதைப்பற்றியுமே ஒரு குறைந்த பட்ச அறிவும் இல்லாத ஒருவர் முன்னிறுத்தப்படுவது மிகப்பெரிய அவமானம். நீட் பற்றியும் புதிய கல்விக்கொள்கை பற்றியும் நாம் போராடிக்கொண்டிருக்கும்போது ‘நல்ல பள்ளிக்கூடங்கள் வேண்டும்’ என் று பேசுவதற்கு ஒரு அசட்டுத்துணிச்சல் வேண்டும். தமிழகத்தில் காமராஜரும் அதற்கு பின்திராவிட இயக்கமும் வளர்த்த கல்விபற்றி அவருக்கு கைதட்டுபவர்களுக்கு ஏதாவது தெரியுமா?
‘நான் எந்த சித்தாந்தையும் பின்பற்றவில்லை…எல்லா சித்தாந்தத்திலிருந்தும் நல்லதை எடுத்துக்கொள்வேன்’ என்று பேசுகிற ஒருவருக்கு சித்தாந்தம் என்றால் என்னவென்று புரியவைக்க முடியுமா? மோடியையும் பிரனாய் விஜயனையும் சமமாக பாவிக்கும் ஒருவரை தமிழகம் பெற்றதன் தவப்பயனை என்னவென்று சொல்வது?
இலவசங்களை எதிர்த்துப் பேசுகிறார். இலவசங்களுக்கும் சமூக நலக்கோட்பாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி எந்த அறிவும் இல்லாத ஒருவர்தான் இப்படி பேச முடியும். இலவசங்களை எதிர்ப்பவர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள், மானியங்களை எதிர்ப்பவர்கள் அனவருடைய முகமும் வலதுசாரி பொருளாதார முகம்தான்.
‘ தமிழ் நாட்டில் தமிழ் அழிகிறதே ‘ என்று கேட்டால் ‘ எல்லோரும் நல்லா தமிழ் பேசுங்க ‘ என்கிறார். மொழி உரிமைக்காக ரத்தம் சிந்திய மாநிலத்தில் இப்படி ஒரு மொழிக்கொள்கையை ஒருவர் பேசுகிறார். ‘ தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கிறதே? என் று கேட்டால் ‘ எல்லா பெண்களையும் உங்கள் அககா தங்கச்சியா நினைங்க ‘ என்கிறார்.
காவிரி பிரச்சினை பற்றிக் கேட்டால் ‘ கர்நாடகாவில் இருந்து தண்ணீர் என்ன ரத்தமே வாங்கித்தருகிறேன்…ஆள் ஆளுக்கு தூண்டிவிடாதீர்கள்..உட்கார்ந்து பேசுவோம்” என்கிறார். இந்தப்பிரச்சினையில் என்ப நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியாத மூடர்கள் மட்டுமே இப்படி பேச முடியும்.
கமல் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். ஆனால் அவருக்கு நமது சமூகபிரச்சினைகளின் அரிச்சுவடிகூட தெரியாது என்பதன் சாட்சியமே நேற்றைய உரை. கமலஹாசனைபோலவே எந்த புரிதலுமற்ற டுபாக்கூர்கள் வேண்டுமால் இந்த உளறல்களுக்கு கைதட்டலாம்.
கமலை யாரும் எதிர்க்க வேண்டியதில்லை. அந்த வேலையை நம்மைவிட அவரே சிறப்பாக செய்துகொள்வார்…..
- Abdul Hameed Sheik Mohamed
இடதுசாரியா – வலதுசாரியா?
மடிசாரி! ம்ம் சரி சரி!
இந்த #மக்கள் #நீதினு தொடங்குதே!
அவாள்களுக்கான நீதிதான் அது.
அதென்னப்பா #மய்யம்?
நடு செண்டர் – அதாவது நடுநிலை ….க்கி!
நடுநிலைனு ஒண்ணு இல்லவே இல்ல கமல். எல்லோருக்கும் நல்லவனாக இருக்க ஒரு அயோக்கியனால்தான் முடியும்.

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தை வேற யாரையாவது நடத்த சொல்லுங்க ஆண்டவரே. உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.
ரஜினி, கமல், யோகிபாபு, போண்டா மணி என்று யார் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவும், அதிமுகவும் ஏன் பதட்டப்படுகிறது என்று சமூக வலைத்தளங்களில் கேட்கிறார்கள். குறிப்பாக பா.கம்யூவினர். ஆட்சிக்கு வர வாய்ப்பிருப்பவர்கள்தான் இதுபோன்ற சிறு சிறு சலனங்களுக்குகூட ரியாக்ட் செய்வார்கள். அதுதான் இயல்பும்கூட. கடந்த தேர்தலில் மநகூ அமைத்து போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழந்த பா.கம்யூவுக்கு என்ன கவலை?
தூத்துக்குடியில் மாநில மாநாடு நடந்திருக்கிறது. புதிய மாநிலச் செயலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். போலிஸ் வேறு பேரணியில் வெளுத்து வாங்கியிருக்கிறது. இத்தகைய சூழலில் நியாயமாக பேசுப்பொருள் ஆகவேண்டியிருக்க வேண்டிய பா.கம்யூவை பற்றி யாருமே பேசுவதில்லை. மாறாக கமல்ஹாசனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
சூடு, சொரணையோ, சுயமரியாதையோ இருக்கும் பட்சத்தில் பா.கம்யூவினர் இதற்காக கொதித்திருக்க வேண்டும். நம்மூர் கம்யூவினரிடம் இவ்வளவு வீரத்தையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது. அடுத்த தேர்தலில் அடுத்தவன் குடிகெடுக்க ஒரு கூட்டணி அமைக்க அவர்களுக்கு ஓர் இரட்சகன் உருவாகிவிட்டார் என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் ஆவி இவர்களை மன்னிக்காது.
பாரதி கிருஷ்ணகுமாரை அந்த ‘மநிம’ மேடையில் பார்த்து பல தோழர்களுக்கு கடும் கோபமும் அதிர்ச்சியும் ஏற்பட்டு இருப்பது தெரிகிறது. ஒருகாலத்தில் மிக நெருக்கத்தில் இருந்து அறிந்தவன் என்ற முறையில் எனக்கொன்றும் அதிர்ச்சியாக இல்லை. எனக்குள் இடதுசாரி சிந்தனையை, அதன் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்ற முறையில் எப்போதும் அவர் மீது அதற்கான மரியாதை எனக்குண்டு. அவர் விதைத்த மார்க்சீய சிந்தனைகளே அவரிடமிருந்து பின்னர் அவரை விட்டு விலகவும் வைத்தன என்கிற புரிதலும் எப்போதும் உண்டு.
தன்னை சுடர வைத்த சிந்தனைகளுக்கு நியாயம் செய்ய முடியாமல் தோற்றுப்போன ஒரு மனிதராக அவரைப் பார்த்து பரிதாபம் மட்டுமே கொள்கிறேன். பிழைக்க ஒரு வழி தேடி இருக்கும் அவருக்கு வாழ்த்துகள்!

இரண்டு கம்யுனிஸ்டு கட்சிகளும் தமிழகத்தில் தெரிந்தே செய்கிறார்களா? தெரியாமல் செய்கிறார்களா? தெரியவில்லை. திராவிடத்தை ஒழிப்பேன் என்று தேசியம் பேசிய எம்ஜியாரை கொண்டுவந்தார்கள். இப்போ நம்மவா-வைக் கொண்டு வந்துள்ளார்கள். கட்சியை கொள்கை அடிப்படையில் கட்டும் எண்ணமே இல்லை. காரணம் தேசமே அற்ற தேசியத்தை ஏற்றவர்கள் அல்லவா நம்ம ”ஹிந்திய தேசிய கம்யுனிஸ்டுகள்” அதான். ”இடது” மய்யத்தை நோக்கி நகர்கிறதோ?
கமல் மேடையில் மக்கள் கேட்டதாக கேட்கப்பட்ட கேள்விகள் சென்னையில் இருந்து எழுதப்பட்டு ஒரு குழுவால் தெரிவு செய்யப்பட்டு பதிலும் ஸ்கிரிப்ட் படி தயாரானது..! ஆளுக்கு பத்து கேள்வி எழுதியிருக்கிறார்கள்.
கமல் தமிழக மக்களை ஏமாற்ற முனைகிறார் , தமிழகத்தில் உயிர் நாடிக் கொள்கையான இட ஒதுக்கீடு, நீட் தேர்வு அநீதி, காவிரி நீர் விவகாரம், சுற்றுச் சூழல் பிரச்சனைகள் என பேசாமல் அடிப்படையான இந்த விஷயங்களுக்கு பதில் சொல்லாமல் ஊழல்,. ஓட்டுக்கு பணம், கல்வி சரியில்லை, சாக்கடை சரியா ஓட மாட்டேங்குது.. என்று பேசுகிறார்…
என்.ஜி.ஓ பாணி அரசியலை மாற்று அரசியலாக தமிழகத்தில் முன் வைக்கிறார். இவரால் திமுக, அதிமுக வை எதுவும் செய்ய முடியாது. காரணம் இந்தியாவையே நாசக்காடாக்கிக் கொண்டிருக்கும் மோடியின் பேரழிவு திட்டங்கள் பற்றி எதுவுமே வாய் திறக்கவில்லை. பணமதிப்பிழப்பு, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி என மவுனம் காக்கும் கமல் தமிழக அரசியலில் வடை சுட நினைக்கிறார்.
எதிர்பார்த்ததைப்போல ஆங்கில ஊடகங்கள் காலைமுதல் ”நம்மவா” (கடற்கரய் மத்தவிலாச அங்கதம் காப்பிரைட்) கூட்ட வாசலில் கட்டிலைப்போட்டு ஆரம்பித்துவிட்டார்கள்.. விடிவெள்ளி என எம்ஜியார், ஜெ துவங்கி விசயகாந்தவரை சினிமா அரசியல் வரலாறை புலம்பிக்கொண்டுள்ளனர். தமிழ் சேனல்கள் மானத்துடன் (கலைஞர் செய்திகள், சேனல்-18) ஆகியவை காவிரி பிரச்சனை மற்ற செய்திகளை பேசிக்கொண்டுள்ளன. மற்றசேனல்கள் ”செட்டாப் பாக்ஸ்” இல்லாமல் வரவில்லை.
எதிர்பார்த்ததைப்போல, ஆன்மீக அரசியல், திராவிட அரசியல் என எல்லா அரசியலையும் இறங்கி அலசி எப்படியாவது தமிழகத்தில் காவிக் கொடி நாட்ட கங்கணம் கட்டி இறங்கியுள்ளது இந்துத்துவ-பார்ப்பனியக்-காவிப்படை
அடுத்த ”மநகூ”-வின் விஜயகாந்த்-தான் கமல். செங்கொடி தோழர்கள் அதில் உள்ள சிவப்பு கைகள்தான். அவரை தூக்கிச் சுமப்பார்கள் போலிருக்கிறது. இலுமினாட்டிகள் பற்றிய செய்திகளில் அக்கறை இல்லை என்றாலும், இலுமினாட்டிகளின் ஆறுகலை தாவீதின் ஜியோனிச நட்சத்திரம் அந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
கேஜ்ரிவாலுக்குப்பின் உருவாகியிருக்கும் மற்றொரு என்ஜிவோ கட்சி என்பதே ”மக்கள்? நீதி? மய்யம்?” போன்ற சொற்களின் சேர்க்கை. உலகமயமாகிவிட்ட அரசியல் சொல்லாடல்களத்தில் கட்சிகள் என்ஜிவோ சீர்திருத்த இயக்கங்களாக மாறிவருதன் ஒரு வெளிப்பாடு இது. கொள்கை, கோட்பாடு எதுவும் தேவையில்லை. தேவை நீதி, நேர்மை, உண்மை என்கிற விளம்பர வாசகங்கள் மட்டுமே.
அழைக்காவிட்டாலும் வலியச்சென்று கமல்ஹாசனை வாழ்த்துவது. ஆனால் எத்தனையோ போராட்டங்களில் 2009 முதல் அழைத்தும் போகாமல் இருந்ததும், போக வேண்டுமானால் தமிழகத்திற்குள் விமானச்சீட்டு, சொகுசு அறை கேட்டதும், தான் மட்டும் இறுதியில் பேசவேண்டுமென நிபந்தனைகள் வைத்ததும், சில போராட்டங்களில் நுழைந்து ‘முடித்துவிட்டு போங்கள். அண்ணன் நான் பார்த்துக்கிடுதேன். ஆட்சிக்கு வந்ததும் ஒற்றைக் கையெழுத்தில் முடித்துவிடுவேன்.’ என்றெல்லாம் அரசியல்நீக்கம் செய்ததும் யாரப்பா?
பொங்குகிற, மடைமாற்றம் செய்கிற, திரைக்கதை சொல்லுகிற நாதக இதற்கு மறுப்பை சொல்ல முடியாது. காரணம், ஈழத்தை முதலீடாக்கி பதவி கனவில் இருக்கிற தலைமை இவற்றை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாது.
கட்சி பெயரை நம் தலைவர் அறிவிக்கப்போகிறார் எல்லோரும் ஒருமுறை கரவொலி எழுப்புங்கள்.
#ஹெல்லலூயா
ஒருபொழுது தோழர் பாரதி கிருஷ்னகுமாரேதான் இப்படி எழுதினார்.
‘ எப்போதும் நீதி மறுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட கைவிடப்பட்ட மக்களின் பக்கம் நின்று கொள்ளுங்கள். அது நீதியின் பக்கம் நிற்பது மட்டுமல்ல, நீதியாகவே நிலைபெறுவது’
அடிப்பவனுக்கும் அடிபடுபவனுக்குமிடையே நடுநிலைமையென்பதே அயோக்கியத் தனம்.
நடுநிலைமை என்பது
கோழைகளின் முகமூடி…
நடுநிலைமை என்பது
முட்டாள்களின் உளரல்..
நடுநிலைமை என்பது
தேன் பூசப்பட்ட விஷம்..
நடுநிலைமை என்பது
பூசி மொழுகப்பட்ட பக்கச்சார்பு..
MNM = MLM…
பாஜக ஆட்சியின் கூத்துகளில் ஒன்றைக் கூட விமர்சிக்கத் துப்பில்லை…
அதிமுக சரியில்லை எனச் சொல்வது,
அடிமைகள் வேண்டாம் பார்ப்பனியச் சட்டாம்பிள்ளை நான் இருக்கிறேன் என்று சொல்வது தான்.
கற்பைக் கற்பிதம் என்று துணிச்சலுடன் கருத்து சொல்லி அதற்கான கடும் எதிர்ப்புகளைக் கண்ட குஷ்பு இவரை விட எவ்வளவோ நேர்மையான அரசியல்வாதி. மய்யமாம்…
கமல்ஹாசனின் கட்சிக் கொடியில் திராவிட நிறங்களான கறுப்பும் சிவப்பும் அத்தோடு வெள்ளையும் இருக்கின்றது. கறுப்பில் வெள்ளை கலந்தால் அது சாம்பலாகி விடும். சிவப்பில் வெள்ளை கலந்தால் அது காவியாகி விடும்.
கட்சியின் பெயர் பற்றி பல ஊகங்கள் வந்தன. கடைசியில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று ஒரு பெயரை வைத்திருக்கிறார். ‘இலக்கிய குவியம்’ என்பது போன்ற ஒரு பெயராக இருக்கிறது. கொஞ்சம் கூட கம்பீரமாக இல்லை. ‘மையம்’ என்று எழுதாமல் ‘மய்யம்’ என்று பெரியார் தமிழில் இருந்தது ஒரு மகிச்சியான விடயம்.
கமல் என்னப் பேசப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தால், சோறு பருப்பு என்று கவிதை சொன்னார். அவர் தமிழக மக்களுக்கு ஏற்றபடி பேச இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை. கமலுடைய கட்சி உருப்பட்ட மாதிரித்தான்!!!
ஊழலை ஒழிக்கிறதுன்னா…ஊழல் பண்ணவே இல்லன்னு நம்பும்படியா ஏமாத்தறது… சாதி அரசியல் ஒழியணும் அப்படின்னா…
“நாம ரெண்டு பேரும் ஒரே ஜாதி, அதனால உனக்கு சப்போர்ட் பண்றேன்னு சொல்றா…” ந்னு நக்கலா காயத்ரி ரகுராம்(‘சேரி பிஹேவியர்’ டயலாக் புகழ்) கிட்ட சொல்லி அவர் பேந்தப் பேந்த முழிச்ச மாதிரி ஆக்ட் குடுத்ததை ரசிச்சு, “பாருங்க..அவங்க என்ன சொல்றாங்கன்னு கூட உங்களுக்குப் புரியல…அவளோ இன்னசண்ட்” ந்னு புல்லரிச்சாரே… அதான்.
சுருக்கமா சொல்லணும்னா சாதி வெறிக்கு எதிரான குரல்களைப் புறக்கணிக்கிறது… இடதும் இல்ல வலதும் இல்ல அப்படின்னா வாஸ்துப் பிரகாரம் வலது கோடி மூலைன்னு அர்த்தம்.
‘எல்லாருக்கும்’ தரமான கல்வின்னா…’பிம்பிளிக்கி பில்லாபி’ந்னு அர்த்தம்
#முடியல
வணக்கம் கமல் அவர்களே… கொடியைகூட சுயமாக வடிவமைக்கும் பணியை செய்யாத நீங்கள்… நாட்டிற்கு என்ன செய்ய போரீங்க…

நீதிமன்றத்தினால் ஊழல் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு, தண்டிக்கப்பெற்ற ஜெயலாலிதாவை, “அம்மா, அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு” என்று உருக்கமா பாடி துதித்த கவிஞர் சிநேகன்;
அதே ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடச்சொல்லி தமிழகமெங்கும் பிரசாரம் செய்த வையாபுரி இவங்க எல்லாம் யாருன்னு பார்த்தால் இவங்கதான் “ஊழல் ஒழிப்பு” என புறப்பட்டிருக்கும் கமலஹாசனின் பிரசார படை வீரர்கள்.!
#த்தூ
பத்திரிக்கையாளர் — அப்துல்கலாம் இறந்தபோது நீங்கள் ஏன் வரவில்லை…
ஆல்வார்பெட் காட் — பொதுவாக எனக்கு இறுதி ஊர்வலங்களில் கலந்துகொள்வதில் உடன்பாடில்லை…
டியூட்ஸ்…..
ஓ மை காட் … மிக்கமகிழ்ச்சி …. அப்போ நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்துல வண்டில ஏறி … உங்க ஃபிரெண்டு… அதாங்க கொள்க என்னானு கேட்டா தலசுத்துமே அவுருகூட உக்காதுனு போனீங்கலே அது இன்னாது.. ஒரு வேல சூட்டிங்க்னு சொல்லி ஆல்வார்பெட் காட ஃபூலிங்க் பன்னி தள்ளினு போயிருப்பாங்களோ டியூட்ஸ்.
#சமுத்திரக்கனியிடம் உங்களுக்கு பிடித்த தலைவர் யார் என்று கேட்ட போது ஜோதி பாசு, நல்லக்கண்ணு……இப்ப யோகி ஆதித்யநாத் என்று சொன்னார். அதாவது உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் கமல், ரஜினி….. இப்போது பவர்ஸ்டார் சீனிவாசன் என்று சொன்னால் எப்படி இருக்கும்??? எல்லாரும் நம்மை பார்த்து சிரிப்பார்கள். ஏன் சிரிக்கிறான்னா அவனுக்கு அது புரிஞ்சிருக்கு. அதே சமயம் அரசியல் என்று வரும் போது எந்தெந்த பெயர்களை சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று கூட தெரியாது.
ஒரு சினிமாவை டிவிட்டர், பேஸ்புக்கில் விமர்சனம் செய்தால் உடனே “அந்த படத்துக்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருந்துச்சு தெரியுமா….. அதெல்லாம் தெரியாமா விமர்சனம் பண்ணாதீங்க” என்று விஷால் போன்ற நடிகர்கள் கோபப்படுவாங்க. உங்களுக்கு நல்லா தெரிஞ்ச விசயத்தை சரியாக பண்ணாமல் இருக்கும் போது, அதை விமர்சித்தால் உங்களுக்கு தாங்க முடியவில்லை. அரசியலை பற்றி எதுவுமே தெரியாம….படத்துல யாரோ எழுதி கொடுத்ததை வைச்சு பேசுறது மாதிரி மொட்டையா பேசுனா அதுக்கு எங்களுக்கு எவ்வளவு கோபம் வரனும்.
சமுத்திரக்கனி, #விஷால் மாதிரி #கமல் அரைகுறை கிடையாது. அவர் எல்லாவற்றையும் தெரிந்து புரிந்து தான் பேசுவார் என்று பார்த்தால். அம்பேத்கர், நேரு, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் என்கிறார். அதாவது நடிப்பில் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்றால் சிவாஜி, கமல், விக்ரம், ராம்கி, ஜித்தன் ரமேஷ் ரொம்ப பிடிக்கும் என்பது மாதிரி. கமலுக்கு அருகில் உட்கார்ந்த சோம்நாத் பாரதி என்பவர் அதிமுகவில் ரமணா என்று ஒரு அமைச்சர் மாதிரி தான். அதுக்கு பேசாம செல்லூர் ராஜூவை மேடை ஏற்றியிருக்கலாம். “தமிழ்நாட்டில் நல்ல கல்வி, மருத்துவம், சாலை வசதி இல்லை” என்று உத்தர பிரதேசம், பிகார்ல பேசுவதா நினைச்சுக்கிட்டு கேஜ்ரிவால் தமிழ்நாட்டை பற்றி பேசுகிறார். டெல்லியில் இருந்து அரசியல் செய்பவன் அறிவாளி என்று நினைப்பதும்……வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் மாதிரி தான்.
தமிழ்நாட்டில் கலைஞர் ஆக்டிவாக இல்லை, ஜெயலலிதா இல்லை, விடுதலை புலிகள் பிரச்சினை இல்லை, காவிரி விவகாரம் தீர்ப்பு வந்துவிட்டது, அரசியலுக்கு வருவதற்கு முன்பே நீட் அமல்படுத்தியாச்சு, ஓபிஎஸ்-இபிஎஸ் மேல் மக்களுக்கு கோபம்…….. இதெல்லாம் தான் கமல் அரசியலுக்கு வர காரணமே தவிர, மற்றபடி அந்த கால்சென்டர் தொடங்க காரணம் எதுவும் இல்லை.
“நடிகன் நடிகனாகத்தான் இருக்க முடியும். தர்ம உபதேசம், அரசியல், தத்துவ ஞானமெல்லாம் அவனுக்கு இருக்காது, இருந்தால் அதெல்லாம் இரவல் சரக்காகத்தான் இருக்க முடியும்” என்று எம்.ஆர்.ராதா சொன்னது எவ்வளவு பெரிய உண்மை.
இவரே இப்படி ஒளறுறாரே, அடுத்து வரப்போற அவர் கட்சியை நினைச்சாதான்..!
அப்துல் கலாம் ஊர்வலத்தில் ஏன் பங்கேற்கவில்லைன்னு கமலை நோக்கி அரைவேக்காட்டுத்தனமான ஒரு கேள்வி. ஒருவர் பற்றிய மதிப்பை அளவிடுவதற்கான காரணமாய் இறுதிஊர்வல பங்கேற்பை எல்லாம் சொல்ல முடியாது.
அப்படியும் கமலஹாசன் வேறு ஏதாவது சொல்லி சமாளிப்பார்ன்னு பார்த்தா “இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதில் எனக்கு நம்பிக்கையில்லையென” சொன்னார்.
நம்மாளுங்க சும்மா இருப்பாங்களா? சிவாஜி கணேசன் ஊர்வலத்தில் ரஜினிக்கும் இளையராஜாவுக்கும் நடுவுல இத்தா தண்டி குத்துக்கல்லு மாதிரி குந்திட்டு வேன்ல போற போட்டோவை அப்லாட் பண்ணிட்டாங்க.
கமல் சிக்குற இடமே மைக்கை கொடுத்து சுதந்திரமா ஆத்து ஆத்துன்னு ஆத்துற இடமில்லை, rapidfire கேள்விகளில் தான்.
வாடி ராசாத்தி
சினிமா நடிகர்கள் கட்சி துவங்குவதால் சில சாதகங்கள் உண்டு. variety யான புகைப்படங்கள் கிடைக்கும், தீம் ம்யூசிக், பாடல்கள் கிடைக்கும், இருபது வருடம் கட்சி நடத்தினாலும் கிடைக்காத ஊடக வெளிச்சம் free of cost . முரசொலி, கலைஞர் டிவி, மதிமுகம், வெளிச்சம், மக்கள் டிவி போல தன் அரசியலை பேசுவதற்கென்று தனியான ஒரு ஊடகத்தளம் தேவையில்லை, இதற்கெல்லாம் மேல மக்களுடன் உரையாடித்தான் அறிமுகம் செய்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
எம்ஜிஆருக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எம் எஸ் வி, கண்ணதாசன், கேவி மஹாதேவன் ஆகியோரது படைப்புகள் பின்புலமாக இருந்ததை போல, கமலஹாசனுக்கு காலையில் இருந்து ஷங்கர் மஹாதேவன் குரலில் இசையில் காலையில் இருந்து “ஆளவந்தான்” தீம் ம்யூசிக் ஓடிக்கொண்டிருக்கிறது.
ரஜினிக்கு மொத்த இளையராஜா, தேவா பாட்டு, விஜய்க்கு தமிழன் முதல் மெர்சல், சூர்யா ஒருவேளை வந்தால் ஆயுத எழுத்து பாட்டு.
இதையெல்லாம் கலந்துவிட்டு அப்படியே ஒரு ஆடியோ வீடியோ விஷுவல் போடுறப்ப ஜிவ்வுன்னு இருக்கும்பாரு, தமிழ்நாடே மாறி பெரிய புரட்சிக்கு தயாராகுற மாதிரி இருக்கும், அந்த போதையிலையே விழுந்து சாவுங்க
இடதையும் வலதையும் சமமாக நிறுத்தும் தராசு வலதைவிட மோசமானது, இழிவானது.
நான் இடதும் இல்லை வலதும் இல்லை நடு செண்டர் என்பதை இப்படியும் சொல்லலாம்.,.,
நான் ஒழுக்கமாவனும் இல்லை ரேப்பிஸ்ட்டும் இல்லை.
இவுனுக மாற்று அரசியலுக்கு கட்சி ஆரம்பிக்கறானுகளா ?
இல்லை மீம்ஸ்க்கு கட்சி ஆரம்பிக்கறானுகளா?
இல்லை மாற்று அரசியலே மீம்ஸ்க்கானதா ?
டே இதோ பாரு..
நீங்க என்னமோ பண்ணி தொலைங்க..
ஆனா மீம்ஸ் ஸ்லாட் என்பது பாஜகவிற்கானது ..
அந்த உரிமையை தமிழன் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டான். Mind it !
கமல் பேசுவதை நீங்கள் இன்று நீங்கள் கிண்டல் செய்யலாம் … ஆனால் இன்னும் பத்து வருடங்கள் கழித்து எவ்வளவு அட்வான்ஸடாக பேசி இருக்கிறார் என்று புரியும். எதுக்கும் சொல்லிவைப்போம்.. இவுனுக படத்துக்கும் இதான சொல்லுவானுக..
ஆனா ஒன்னு இந்த scriptக்கும் பேசாம crazy மோகனையே எழுத சொல்லிருக்கலாம்..கொஞ்சம் சிரிப்பாச்சி வந்துருக்கும் … வீம்புக்கு நானே எழுதுறேன்னு சொல்லி மொக்க தாங்க முடியலடா சாமி.
கமலின் கட்சி பெயர்- ‘மக்கள் நீதி மய்யம்’
டே என்னடா ?
கட்சிக்கு பேரு வைக்க சொன்னா.. கம்ப்யூட்டர் சென்டெர்க்கு பேரு வெச்சுருக்கீங்க
காரல் மார்க்ஸ்:
மனிதர்கள்தாம் அவர்களுடைய வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்கள் ஆசைப்பட்ட படியும், அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்ட சூழல்களுக்குள்ளிருந்தும் உருவாக்குவதில்லை. ஏற்கெனவே கடந்த காலத்தில் உருவாகி ஏற்கெனவே இருக்கும் சூழலிருந்துதான் செய்கிறார்கள். இறந்துவிட்ட தலைமுறைகளின் பாரம்பரியம் உயிரோடிருப்பவர்களின் மூளைகளை ஒரு கெட்ட கனவு போல் அழுத்திக்கொண்டிருக்கிறது. அவர்கள் தம்மையும் தம்மைச் சுற்றி இருப்பவற்றையும் புரட்சிகரமாக மாற்றுவதாகவும், முன்னெப்போதும் இருந்திராத ஒன்றை உருவாக்கப்போவதாகவும் நினைத்துக் கொண்டு முனைப்புடன் செயல்படும் ஒரு சிக்கலான நேரத்தில், அவர்கள் கடந்தகாலத்தின் ஆவிகளையும், அவற்றின் பெயர்களையும் போர் முழக்கங்களையும், ஆடைகளையும் துணைக்கழைத்துக் கொள்கிறார்கள்; உலக வரலாற்றின் இந்தப் புதிய காட்சியை காலத்தால் நிரூபிக்கப்பட்ட மாறுவேஷத்துடனும் கடன்வாங்கப்பட்ட மொழியுடனும் படைக்கிறார்கள்.
- Vijayasankar Ramachandran
சிஸ்டம் கெட்டுப் போச்சு என்பதை கமல் அவர் பாணியில் பேசுகிறார். ஆசிரியருக்குக் கடிதம் எழுதி, பெயரை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் அனுப்பி வைப்பதையே அதிகபட்ச அரசியல் செயல்பாடாகக் கருதும் மத்தியதர வர்க்கத்தின் திண்ணைப் பேச்சுதான் அது.
- Vijayasankar Ramachandran