Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 454

வாலறுந்த பார்ப்பன நரிகள் !

1

வ்வாமை காரணமாகத் தன்னியல்பாக உடல் வெளியேற்றும் உணவுப் பொருளைப் போன்ற நிலையில் இருக்கிறது பாரதிய ஜனதா. இதுதான் தமிழகத்தில் அக்கட்சியின் நிலை. பார்ப்பன பாசிச அரசியலை எத்தகைய இனிப்புக்குள் வைத்து மறைத்துக் கொடுத்தாலும், அதனை உடனுக்குடன் கக்கித் துப்பிவிடுகிறது தமிழகம். பொன்.இராதாகிருஷ்ணனும், தமிழிசையும், எச்.ராஜாவும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அன்றாடம் ஒரு பரபரப்பூட்டும் அறிக்கை கொடுக்கின்றனர். ஒருவரை மிஞ்சி ஒருவர் விளம்பரம் தேடுகின்ற வெறியில் பஞ்ச் டயலாக்குகளையும் எடுத்து விடுகின்றனர். அவை தேடித்தரும் ஊடக விளம்பரம், அவர்களுடைய விருப்பத்துக்கு நேர் எதிரான விளைவுகளையே பெற்றுத் தந்திருக்கின்றது.

தமிழகத்தை வஞ்சிக்கும் எந்த திட்டத்திற்கும் குரலைக்கூட கொடுக்காத வைணவ பார்ப்பனர்கள் கூட்டம் வைரமுத்துவை கண்டித்து கொதித்தெழுந்து வீதிக்கு வந்தது

ஆண்டாள் விவகாரத்தில் எச்.ராஜாவின் பேச்சைத் தூண்டுதலாக வைத்துத் திராவிட இயக்க எதிர்ப்பு இந்து எழுச்சியைக் கிளப்பலாமென்று அவர்கள் கண்ட கனவு பகல் கனவானது. அவர்களால் திரட்டப்பட்ட கூட்டமனைத்தும் வைணவப் பார்ப்பனக் கூட்டமாக மட்டுமே இருந்ததைத் தொலைக்காட்சி காமெராக்கள் அம்பலமாக்கின. வைரமுத்துவுக்கு எதிரான எச்.ராஜாவின் வசைப்பேச்சு மட்டுமின்றி, நித்தியானந்தாவின் பெண் சீடர்களின் வாயிலிருந்து வழிந்த ஆபாசமும், தினமணி வைத்தியநாதன் ஜீயரின் காலில் விழுந்ததும், தொலைக்காட்சி நெறியாளர் செந்திலுக்கு எதிராக எஸ்.வி.சேகர் வெளிப்படுத்திய பார்ப்பனக் கொழுப்பும் மக்கள் மனதில் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் மீதான வெறுப்பைக் கூட்டுவதற்கு மட்டுமே பயன்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரன் அவமதித்ததும், அதை நியாயப்படுத்தி ஆர்.எஸ்.எஸ். கும்பல் வாதிட்டதும், சங்கரமடத்தின் திமிர்த்தனமான அறிக்கையும் பார்ப்பன எதிர்ப்புணர்வைப் பெருமளவில் புதுப்பித்தன.

பாரதிய ஜனதாவின் பார்ப்பனக் கொழுப்பை அம்பலப்படுத்துவதில்  தமிழகத்தின் அரசியல் சமூக அமைப்புகளும், சமூக ஊடகங்களும் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன என்ற போதிலும், எச்.ராஜா, சேகர் முதலானோர் தமது நாக்கினால் பா.ஜ.க.-வுக்கு வெட்டிக்கொண்ட குழிதான் ஒப்பீட்டளவில் ஆழமானது. அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற பா.ஜ.க.-வின் கோரிக்கை, தமிழகத்தில் தீவிரவாதம் என்கிற பூச்சாண்டி, இது பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண் என்ற வசனம் போன்றவையெல்லாம் அவர்களது அடிமனதில் கனன்று கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியை வெளிக்காட்டினவேயன்றி, இவையெதுவும் அவர்கள் எதிர்பார்க்கின்ற மக்கள் ஆதரவைப் பெற்றுத்தரவில்லை. மாறாக, இவற்றுக்குக் கிடைத்த பதிலடி மேலும் அவர்களைத் தனிமைப்படுத்தியிருக்கிறது.

இது பா.ஜ.க. தலைமைக்கும் உரைத்திருப்பதனால்தான், திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று பேசிய பொன்னாரின் வாய், நானும் திராவிடன்தான் என்று சமாளிக்கிறது. சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்பதைத் தனது மூலமுதற் கொள்கையாகக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையான மொழி தமிழ் என்று மோடியை நாடகமாட வைக்கிறது. நரிக்கு வாலறுந்த போதிலும், அது நரிதான். சங்கப் பரிவாரம் தனது உத்தியை மாற்றிக் கொள்ளுமேயன்றி, தனது முயற்சியை அது கைவிடப்போவதில்லை.

பா.ஜ.க.-வின் மதவெறிப் பேச்சையும் நடவடிக்கைகளையும் தனது எதிர்வினையின் மூலம் தமிழகம் முறியடித்துவிடுகிறது என்ற காரணத்தினால் மெத்தனம் கூடாது. தமிழகத்தின் எதிர்வினை பெருமளவில் தன்னியல்பான பதிலடியாகவே இருந்து வருகிறது. அதனை உணர்வுபூர்வமான எதிர்த்தாக்குதலாக வளர்த்தெடுக்க வேண்டும். பார்ப்பன பாசிசம் என்பது வர்க்க, இன, மொழி, சாதி ஒடுக்குமுறைகளை ஒருங்கிணைந்த முறையில் ஏவுகின்ற ஆயுதம். மக்களுக்கெதிரான குத்தீட்டியாகவும், தனது தோல்விகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் கவசமாகவும் மோடி அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் அது பயன்படுகிறது. பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான நமது பதிலடி இத்தகைய புரிதலுடன் அமைவது அவசியம்.

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2018

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

வாலறுந்த பார்ப்பன நரிகள் ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2018 மின்னூல்

0

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1.வாலறுந்த பார்ப்பன நரிகள்!
ஒவ்வாமை காரணமாகத் தன்னியல்பாக உடலால் வெளியேற்றும் உணவுப் பொருளைப் போன்ற நிலையில் இருக்கிறது பாரதிய ஜனதா. இதுதான் தமிழகத்தில் அக்கட்சியின் நிலை.

2.இடைக்காலத் தமிழக வரலாற்றில் கோவில் திருட்டுக்கள்!
மதுரைக் கோயில் தீ விபத்தை / சதியைத் தொடர்ந்து தமிழகக் கோயில்களை அறநிலையத் துறையிடமிருந்து பிடுங்கித் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற பிரச்சாரத்தை பார்ப்பனக் கும்பல் முடுக்கி விட்டிருக்கிறது.

3.காவிரி தீர்ப்பு: இன்னொரு வகை போர்!
பகை நாடுகளை அழிக்கத் தண்ணீரை மறிப்பது, போர்களில் கடைப்பிடிக்கப்படும் தந்திரோபாயம். அது போன்று தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரைத் தட்டிப்பறித்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.

4.பேருந்துக் கட்டண உயர்வு: தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் பேரிடி!
பயணச்சீட்டுக் கட்டணம் இரு மடங்காக உயர்ந்திருப்பதால், கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏழை பெற்றோர் பெண் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. – பிரியா, கல்லூரி மாணவி, உத்திரமேரூர்.

5. பார்ப்பனப் பொறுக்கிகள் !
பார்ப்பனப் பொறுக்கித்தனம், தனது அலங்காரங்களையும் சாத்வீகத் தோற்றத்தையும் களைந்துவிட்டு, தனது கருத்துக்குப் பொருத்தமான மொழியில் வெளிவருகிறது.

6. ஆர்.எஸ்.எஸ். – இன் தொந்தி டி.வி.!
ஆண்டாள் விவகாரத்தை முதலில் கிளப்பியது எச்.ராஜா. பிறகு நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் சமூக ஊடகங்களில் வழங்கிய நாச்சியார் திருமொழி. இந்த வரிசையில் அடுத்து வருவது தந்தி டி.வி. நடத்திய புலனாய்வு.

7. குற்றப் பாரம்பரியம் குரு பரம்பரையான கதை!
ஆழ்வார்கள் எனப்படுவோர் புனிதர்கள் என்றும், உலக மகா உத்தமர்கள் என்றும் பொதுமக்கள் நினைக்கக்கூடும். ஆனால், நித்தியானந்தா, எச்.ராசா போன்றோரையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்ற அளவுக்கு இவர்கள் அயோக்கிய சிகாமணிகள் என்பதை, வைணவப் பார்ப்பனர்கள் எழுதியுள்ள வரலாற்று நூல்களிலிருந்தே வாசகர்கள் அறியத் தருகிறோம்.

8. இந்து அறநிலையத் துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி!
கோவில் சொத்துக்களைக் கொள்ளையடிக்கவும், பக்தி உணர்வை இந்து மதவெறியாக மாற்றும் தனது திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கிலும்தான் கோவில்களைப் “பக்திமான்களிடம்” ஒப்படைக்கக் கோருகிறது, பா.ஜ.க.

9. கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது!
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் 36435 கோயில்கள் உள்ளன. இவற்றுக்கும் மடங் களுக்கும் சேர்த்து மொத்தம் 4,78,000 ஏக்கர் நிலமும் 22,000 கட்டிடங்களும் உள்ளன. இவற்றைக் கைப் பற்றிக் கொள்வதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம்.

10. இளம் சிந்தனையாளர் குழு: அறிவுத்துறையில் ஆர்.எஸ்.எஸ்.-இன் ஐந்தாம்படை!
பார்ப்பன பாசிசமும் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு கருத்தே என்ற மனநிலையை அறிவுத்துறையினர் மத்தியில் உருவாக்குவதுதான் இளம் சிந்தனையாளர் குழுவின் நோக்கமாகும்.

11. சிந்தனையாளர் தோற்றமும் மாமாப்பயல் வேலையும்
இந்தியா பவுண்டேசன் இளம் சிந்தனையாளர் குழுவை மட்டும் இயக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தரகு வேலையும் செய்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது ‘தி வயர்” இணையதளம்.

12. மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம்!
பத்திரிகையாளர்கள் ஜிப்சன் ஜான், பி.எம்.ஜித்தீஷ் ஆகியோர் ஜான் பெலாமி ஃபாஸ்டருடன் நிகழ்த்திய நேர்காணலை ஃபிரண்ட் லைன் ஆங்கில இதழ் (“Socialism a necessity for human survival”, Jan 17, 2018) வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கப்பட்ட மொழியாக்கத்தைத் தருகிறோம்.

13. பட்ஜெட்: கவர்ச்சிகரமான மோசடி!
மோடி அரசின் பட்ஜெட்டைக் கவர்ச்சி பட்ஜெட் என ஒற்றை அடைமொழி போட்டு விமர்சிப்பது பொருத்தமற்றதுதான். அதற்குப் பதிலாக, கவர்ச்சிகர மான மோசடி பட்ஜெட் என்றுதான் இதனைக் குறிப்பிட வேண்டும்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

பூணூல் ஜூம்லா : ஒண்டிக்கு ஒண்டி வாறியா ? டீசர்

1

பூணூல் ஜூம்லா – ஒண்டிக்கு ஒண்டி வாறியா? – டீசர்

மோடியின் தேர்தல் ஜூம்லாவில் இருந்து சமீபத்திய நீரவ் மோடி வங்கிக் கொள்ளை, ஆண்டாள் பிரச்சனை வரை இருவர் விவாதிக்கின்றனர். தொலைக்காட்சி நெறியாளர் கேள்விகளுக்கு காவிப் படையின் பூணூல் தளபதி பதில் அளிக்கிறார்.

ஒண்டிக்கு ஒண்டி வாறியா? – விவாத நிகழ்சசி நாளை 27 .02.2018 பகல் 2.00 மணிக்கு வெளியாகிறது.

 

இணையுங்கள்:

தொடர்புக்கு:
அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876
மின்னஞ்சல் : vinavu@gmail.com

காவிரி நதி யாருக்குச் சொந்தம் ? வீடியோ

1

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையைக் கேலிக்குள்ளானதாக மாற்றி இருக்கிறது இத்தீர்ப்பு. ஏற்கனவே தமிழகத்துக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான பங்கான 192 டி.எம்.சி நீர் அளவை மேலும் குறைத்துத் தீர்ப்பளித்து, தமிழகத்தின் முதுகில் குத்தியிருக்கிறது.

அயோக்கியத்தனமான இத்தீர்ப்பு ஒருபுறம் வரும் போது, மற்றொரு புறத்தில் தமிழகம் காவிரியை நம்பியிருக்கக் கூடாது . கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டமும், தமிழகத்தில் நீர் மேலாண்மைத்திட்டங்களை அமல்படுத்துவதையும் குறித்தும் விவாதத்தை திட்டமிட்டு கிளப்பியிருக்கிறது, பாஜக. சுப்பிரமணியசாமி திமிராகப் பேட்டியளிப்பது மட்டுமல்ல, சாதாரண மக்கள் மத்தியிலும் அத்தகைய கருத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புகின்றது பாஜக கும்பல்.

அதனை மறுத்து, காவிரி நமது உரிமை என்பதை வரலாற்றுத்தரவுகளுடன் நிலைநாட்டுகிறது இந்தக் காணோளி

பாருங்கள், பகிருங்கள்

காவிரி நதி யாருக்குச் சொந்தம்?

1. தென்னிந்தியாவில் ஓடும் கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்குப் பிறகு மூன்றாவது பெரிய நதி காவேரிதான். கர்நாடகா மாநிலத்தில் குடகு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்தான் தலைக்காவிரி எனும் இடத்தில் காவிரி ஆறு பிறக்கிறது

2. கர்நாடகாவில் தோன்றி, தமிழகத்தில் ஓடும் காவிரி நதியோட நீளம் 800 கி.மீட்டர். தமிழகத்தின் பூம்புகாரில்தான் காவிரி கடலில் கலக்கிறது. காவிரி நதி நீர் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுவை ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் சொந்தம்.

3. ஒரு நதி இரண்டு, மூன்று நாடுகளில் ஓடினாலும், அதன் நீரைப் பயன்படுத்தும் முதல் உரிமை என்பது நதியின் கழிமுகப் பகுதிக்குத்தான் சொந்தம். இது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அப்படிப் பார்த்தால் காவிரி நதி மீதான தமிழக உரிமையின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

4. திருச்சிக்கு அருகே இருக்கும் கல்லணையில் கி.பி 2-ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, உலக அளவில் நான்காவது மூத்த அணையும், இந்திய அளவில் முதல் மூத்த அணையுமாகும். இந்த அணையை கி.பி 1804-ம் ஆண்டில ஆங்கிலேய இராணுவ என்ஜினியர் கேப்டன் கால்டுவெல் புதுப்பித்தார். காவிரி நதியின் வெள்ளத்தை திருப்பி விடவும், விவசாய பாசன வசதிக்காகவும்தான் கரிகால் சோழன் இந்த அணையைக் கட்டினார்.

5. காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்ட போது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1892-ஆம் ஆண்டிலேயே மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் முதன் முறையாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இரண்டாவது ஒப்பந்தம் 1924-ஆம் ஆண்டில் போடப்பட்டது. அன்றே ஒப்பந்தைத்த மீறி கர்நாடகா அரசு 11 டிஎம்சி கொள்ளளவில் கட்ட வேண்டிய கிருஷ்ணராஜ சாகர் அணையை 41.5 டி.எம்.சி கொள்ளளவில் கட்டியது.

6. காவிரி போல இந்தியாவில் ஓடும் சில நதிகளை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கல்களை ஒட்டி, நதிநீர்ப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 1956-ம் ஆண்டு சட்டப்பிரிவு 262 இயற்றப்பட்டு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன் படி நதிநீர் சிக்கல் வந்தால் நாடாளுமன்றம் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்.

7. 1990-ம் ஆண்டில்தான் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி “காவிரி நடுவர் மன்றம்” அமைக்கப்பட்டது. இந்த மன்றம் 1991-ம் ஆண்டில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின் படி கர்நாடகம் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு 205 டிஎம்சி நீரை வழங்க வேண்டும். இந்த தீர்ப்பை ஒட்டி கர்நாடகாவில் தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் கலவரத்தை கன்னட இனவெறியர்களும், காங் – பாஜக கட்சிகளும் நடத்தினார்கள்.

8. காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு 16 வருடங்கள் கழித்து 2007-ம் ஆண்டு, பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பின்படி காவரி நதி நீரில் தமிழகத்திற்கு 419 டிஎம்சி நீரும், கர்நாடகாவிற்கு 270 டிஎம்சி நீரும், கேரளாவிற்கு 30 டிஎம்சி நீரும், பாண்டிச்சேரி மாநிலத்திற்கு 7 டிம்சி நீரும் பிரித்துக் கொள்ளப்பட வேண்டும். இத்தீர்ப்பின் படி கர்நாடக மாநிலம் ஒராண்டில் 192 டிஎம்சி நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். ஆனால் கர்நாடகா மாநிலம் இந்த தீர்ப்பை கடுகளவு கூட மதிக்கவில்லை. தமிழகத்திற்கும் நீரை வழங்கவில்லை.

9. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு இந்திய அரசின் அரசாணையாக கெசட்டில் 2013- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இப்படி சட்ட அங்கீகாரம் கிடைத்தும் கர்நாடகம் நீரை திறந்து விடவில்லை. காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் தொடுத்த வழக்கில்தான் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16ம் நாள் அன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதன்படி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீரப்பில் சொல்லப்பட்ட 192 டிஎம்சி நீரை 177.25 டி.எம்.சியாக குறைத்து தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

10. காவிரி நீரை நம்பித்தான் தமிழகத்தில் 24.5 இலட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. காவிரி நீர்தான் தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்குக் குடிநீர் ஆதாரம். டெல்டா மாவட்டங்களில் 15 இலட்சம் ஏக்கரில் பயிரிடப்படும் சம்பா பயிரை நம்பி 40 இலட்சம் விவசாயிகள் உள்ளனர். ஆனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை சாகுபடியே நடைபெறவில்லை. சம்பா பயிருக்குக்கூடத் தண்ணீர் கிடைக்காது என்ற நிலையும் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

11. காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகா அடாவடியாக நடந்து கொள்வதைப் பற்றி முன்னாள் மத்திய நீர்வளத்துறை செயலர் ராமசாமி ஆர். ஐயர் என்ன சொல்கிறார்?

“சம உரிமை என்ற ஹெல்சிங்கி கோட்பாட்டையும், சமத்துவமான பயன்பாடு என்ற ஐ.நா தீர்மானத்தையும் கர்நாடகம் ஏற்க மறுப்பதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்றன. தமிழகத்துடன் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது என்ற சொற்றொடரைப் பயன்படுத்தவே கர்நாடகம் மறுக்கிறது. எங்களுக்குப் போக எவ்வளவு தர முடியும் என்றுதான் பேசுகிறது. அதையும் தாங்கள்தான் தீர்மானிப்போம் என்று கூறுகிறது. அதனால்தான் மேலே உள்ள பகுதிகள் ஒரு ஆற்றின் இயல்பான நீரோட்டத்தை தடுப்பதாக இருந்தால், கீழே உள்ள பகுதிகளின் ஒப்புதல் இன்றி செய்யக்கூடாது என்ற சர்வதேச நெறியை அது மீறுகிறது. இதன்படி பார்த்தால் இந்தியாவைக் கேட்காமலேயே பிரம்மபுத்திராவுக்கு குறுக்கே சீனா அணை கட்டிக்கொள்ளலாம் என்று ஆகிவிடும்.”

12. உச்சநீதிமன்றத்தைப் பற்றியும் ராமசாமி ஆர். ஐயர் என்ன சொல்றாரு பார்ப்போம்.

““நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்தான். ஆனால் நடுவர் மன்றத்தில் தமிழகம் இடைக்கால நிவாரணம் கோரியபோதும் சரி, ஆணையத்தின் இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த கர்நாடகம் மறுத்தபோதும் சரி, தமிழகம் எழுப்பிய சட்டரீதியான கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் பதிலளிக்காமல் நழுவியது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிராக 2007-ல் கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 262 இன் படி தனக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும். மாறாக, மேல்முறையீட்டை அனுமதித்து அதனைக் கிடப்பில் போட்டிருக்கிறது” என்று சாடியிருக்கிறார்.
இன்னைக்கு இந்த தீர்ப்பில்தான் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு எதிரா தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

13. ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் கர்நாடகாவின் நலனுக்கு எதிராக உள்ளதுன்னு கர்நாடக அரசு சொல்கிறது. அது உண்மையா? இதைப் பற்றியும் ராமஸ்வாமி ஆர். ஐயர் சொல்றாரு பாருங்கள்.

“1924 ஒப்பந்தத்தைப் படித்துப் பார்க்கும்போது அது ஒரு நியாயமற்ற ஆவணமாகத் தெரியவில்லை. ஒப்பந்தத்தில் மைசூர் அரசின் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு காரணம் பிரிட்டிஷாரின் வலிமை அல்ல. மாறாக, ஆற்றின் தலைக்கட்டுப் பகுதியில் உள்ளவர்கள் மீதுதான் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சிந்து நதி விசயத்தில் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியா மீது கட்டுப்பாடு அதிகம். அதேபோல கங்கை விசயத்தில் வங்கதேசத்தைக் காட்டிலும் இந்தியா மீதுதான் கட்டுப்பாடு அதிகம். 1924-ல் கர்நாடகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அதற்குப் பின் காவிரியில் வரிசையாக அணைகளைக் கட்டி விட்டனர். இப்போது தமிழகம்தான் பாதிக்கப்பட்ட மாநிலம்.!” என்கிறார் ராமசாமி ஐயர்.

14. தமிழகத்தில ஆறு, ஏரி, குளம்ணு எல்லா நீராதரங்களையும் சேர்த்துப் பார்த்தால் கூட ஒரு வருசத்துக்கு கிடைக்கும் நீரின் சராசரி அளவு 835 டிஎம்சி தான். கர்நாடகாவுல ஆறுகள் மூலம் கிடைக்கும் நீரின் அளவு ஒராண்டிற்கு 3,475 டி.எம்.சி. இதுல கடல்ல 1500 டிஎம்சி நீர் கலக்க, பாசனத்திற்கு 1,872 டி.எம்.சி பயன்படுது. கர்நாடகாவில் 11 பெரிய அணைகளின்கொள்ளளவு 705 டிஎம்சி. தமிழக்தின் 11 பெரிய அணைகளின் கொள்ளளவு 190 டி.எம்.சி.
ஆக இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தால் நீர் வளத்தில் பல மடங்கு வலிமையுடன் கர்நாடக மாநிலம் இருப்பதும் தமிழகம் பலவீனமாய் இருப்பதும் புரியும். எனில் காவிரியும் நமக்கு இல்லை என்றால் தமிழகம் பாலைவனமாகத்தான் ஆக வேண்டியிருக்கும்.

16. இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர்ப் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறைக்கும், காவிரிப் பிரச்சினையில் மைய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறைக்கும் வேறுபாடு இருக்கு. காங்கிரசு பா.ஜ.க., கட்சிகளுக்கு ஆட்சியைப் பிடிக்கின்ற வாய்ப்பு கர்நாடகத்தில் இருப்பதும், தமிழகத்தில் இல்லாதிருப்பதும்தான் தமிழகத்துக்கு எதிரான இந்த ஓரவஞ்சனைக்கு காரணம் என்று இதற்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. இது கொஞ்சம் மேலோட்டமானது.

இந்த தேசியக் கட்சிகள் தமிழகத்தில் செல்வாக்கு பெற முடியாமல் இருக்க என்ன காரணம்? “ஆரிய – பார்ப்பன எதிர்ப்பு, இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு” உள்ளிட்ட திராவிட இயக்கம் சார்ந்த கருத்தியல்கள் மீது இருக்கும் காழ்ப்புதான், இவர்களுடைய தமிழ் வெறுப்புக்கு மிக முக்கியமான காரணம்.

இத்துடன் காவிரி டெல்டா மாவட்டங்களின் அடியில் கொட்டிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட நிலக்கரியையும், மீத்தேனையும் கைப்பற்றும் ஆளும் வர்க்கங்களின் நோக்கமும், விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்த விரும்பும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையும தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்குப் பின்னணியாக உள்ளன.

இப்போது இருக்கம் மோடி அரசுக்கு நம்மீது காழ்ப்பும், பகையும் அதிகம். மெரினாவில ஜல்லிக்கட்டிற்காக நாம நடத்திய டெல்லிக்கட்டை இப்போது காவிரிக்காக நடத்த வேண்டியிருக்கிறது.  இல்லையென்ன்றால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் இனி பாலைவனமாக மாறிவிடும். காவிரிக்காக வீதியில் இறங்குவோம், மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தை தட்டிக் கேட்போம்.

தொடர்புக்கு:
அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876
மின்னஞ்சல் : vinavu@gmail.com

 

அவர்கள் ஒபாமாவுக்கு வேண்டியவர்கள் ! தாமதம் வேண்டாம் !

ஒபாமாவுக்கு வேண்டியவர்கள் !

ழைப்பு வந்தது. வழக்கம்போல இம்முறையும் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக்கிழமை நன்றி கூறல் என்று நாள்காட்டி சொன்னது. ஆரம்பத்தில் ஆப்பிரஹாம் லிங்கன் நன்றி கூறல் நாள் நவம்பர் கடைசி வியாழக்கிழமை என்று அறிவித்திருந்தார். சில வருடங்களில் ஐந்தாவது வியாழக்கிழமையும், சில வருடங்களில் நாலாவது வியாழக்கிழமையும் நன்றிகூறல் நாள் வந்தது. சனங்களின் குழப்பத்தை தீர்ப்பதற்காக ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இனிமேல் நவம்பர் நாலாவது வியாழக்கிழமையில் மட்டுமே நன்றி கூறல் நாள் கொண்டாடப்படவேண்டும் என பிரகடனம் செய்தார்.

மகன் மொன்ரானாவில் இருந்ததால் அங்கே வந்து 24 -ம் தேதி வியாழக்கிழமை வரும் நன்றி கூறல் நாளில் கலந்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தான். மகன் விஞ்ஞானி என்பது தெரியும். ஆனால் அவன் ஒரு தலைசிறந்த சமையல்காரன் என்பது பலருக்கு தெரியாது. சமையல் கலை படித்துப் பட்டம் பெற்றதல்ல. தானாகக் கற்றுக்கொண்டபடியால் சமைக்கும் உணவில் புதுமையும், சுவையும் இருக்கும். சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க தொலைக்காட்சி அவனுடைய நன்றிகூறல் நாள் சமையலை நேரடியாக ஒளிபரப்பியது.

நானும் மனைவியும் அமெரிக்காவுக்கு விருந்துண்ணப் போவதென்று முடிவுசெய்தோம். ரொறொன்ரோவில் ( டொறொண்டோ – கனடா ) இருந்து விமானத்தில் கிளம்பி முதலில் மினியப்பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து மொன்ரானாவின் மிசூலா நகரத்துக்கு போய்ச் சேர்ந்தோம். அந்தப் பயணத்தின்போது அசாதாரண சம்பவம் ஒன்று நடந்தது.

என் மனைவி தன் மடியில் கைப்பையை வைத்திருந்தார். அந்தக் கைப்பையில் காசும், கடன் அட்டைகளும், மருத்துவ அட்டை மற்றும் வாகன ஓட்டுநர் அட்டைகளுடன் வேறு முக்கியமான ஆவணங்களும் இருந்தன. விமானப் பணிப்பெண் கைப்பையை மேலே சாமான் தட்டில் வைக்கச் சொன்னார். மனைவி மறுத்தார். அப்படியிருந்தும் விமானப் பணிப்பெண் விடாமல் தொந்திரவு செய்து அந்தக் கைப்பையை வாங்கி மேலே வைத்து விட்டார். மடியிலே வைக்கக்கூடிய சிறிய கைப்பையை மேலே வைக்கும்படி விமானத்தில் ஒருவரும் இதற்கு முன்னர் கட்டாயப் படுத்தியது கிடையாது.

மாதிரிப் படம்

விமானம் தரையில் இறங்கியதும் நானும் மனைவியும் வெளியேறினோம். கைப்பையை மறந்துவிட்டோம். வெளியே வந்து சூட்கேசுகளைக் காருக்குள் ஏற்றும்போது நினைப்பு வந்தது. திரும்பி ஓடிப்போனபோது அதிகாரிகள் எங்களை விமானத்துக்குள் நுழைய விடவில்லை. அவர்களாகவே தேடினார்கள். கைப்பை அகப்படவில்லை. ஆச்சரியமாக இருந்தது. பதினைந்து நிமிடங்களுக்குள் கைப்பை மறைந்துவிட்டது.

விமானப் பணிப்பெண்ணை தேடினோம். அளவான ஒப்பனையுடன், நாகரிகமாக உடை உடுத்திய மிடுக்கான பெண் அவர். எந்தக் கூட்டத்திலும் அவரை இலகுவாக அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். அவர் ஹொட்டலுக்குப் போய்விட்டார் என்றார்கள். விமான அதிகாரியிடம் முறைப்பாடு எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். கைப்பை வரும் என்ற நம்பிக்கை இல்லை. எங்கள் சந்தேகம் ஏனோ அந்த விமானப் பணிப்பெண்மீது இருந்தது. எப்படி யோசித்தும் கைப்பை மறைவதற்கு வேறு காரணத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நன்றிகூறல் நாள் வியாழக்கிழமை என்பதால் செவ்வாய்க்கிழமையே பொருட்களை வாங்கவேண்டும். காலை ஆறு மணிக்கு புறப்பட்டு சுப்பர்மார்க்கெட் வாசலில் வரிசையில் நின்றோம். முதல் நன்றி கூறல் நாள் 1621 -ம் ஆண்டு நடந்தது. ஆரம்பத்திலே குடியேறியவர்கள் ஒரு வருடம் பூர்த்தியானபோது முதல் அறுவடையில் கடவுளுக்கு விருந்து படைத்து நன்றி கூறிய நாள். 400 வருடங்களாக கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இது. இந்த ஒரு நாளில் அமெரிக்காவில் 51 மில்லியன் வான்கோழிகள் உண்ணப்படும். இரண்டு பில்லியன் டொலர்கள் செலவாகும். வேறு ஒரு கொண்டாட்டமும் அமெரிக்காவில் இத்தனை சிறப்புடன் நடப்பதில்லை.

வரிசை நகர்ந்து உள்ளே நுழைந்ததும் கேக்கும் கோப்பியும் இலவசமாக வழங்கினார்கள். 10 றாத்தல் எடை , 20 றாத்தல் எடை, 40 றாத்தல் எடை என வான்கோழிகளுக்கு பல வரிசைகள் இருந்தன. இந்த சுப்பர்மார்க்கெட்டில் ஹுட்டரைட் வான்கோழிகளுக்கு நல்ல வரவேற்பு. ஜேர்மனியில் 400 வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய ஹுட்டரைட் சமயக்குழு அமெரிக்காவுக்கு 125 வருடங்களுக்கு முன்னர் வந்து மொன்ரானா மாநிலத்தில் குடியேறியது.

இன்றும் அவர்கள் சமுதாயக் குழுவாக விவசாயம் செய்து ஒரு தலைவரின் கீழ் இயங்குகின்றனர். தனியாக ஒருவரிடமும் சொத்து கிடையாது. அனைத்துமே பொதுச் சொத்துதான். கூட்டாக சமைத்து ஒன்றாக உண்பார்கள். அவர்கள் பண்ணையில் திறந்த வெளியில் இயற்கை முறையில் வான்கோழிகள் பராமரிக்கப்படுவதால் மக்கள் நெடுநேரம் வரிசையில் நின்று அவற்றை வாங்கினார்கள். வான்கோழியுடன் இன்னும் பல சாமான்களையும் வாங்கிக்கொண்டு நாங்கள் வீடு திரும்பினோம்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா புதன் இரவு 40 றாத்தல் வான்கோழி ஒன்றை மன்னித்து விடுதலை செய்தார். அது ஒரு குற்றமும் செய்யவில்லை. குற்றம் செய்தது மனிதன்தான். இன்னொரு வான்கோழி சேமக் கையிருப்பாக இருந்தது. முதல் சொன்ன வான்கோழி இயற்கை மரணம் எய்திவிட்டால் மன்னிக்க முடியாதே. அதற்காக இன்னொரு வான்கோழியும் சேமிப்பில் இருந்தது. இரண்டாவது வான்கோழியும் விடுதலை செய்யப்பட்டது. அதே சமயம் மூன்றாவது வான்கோழி ஒன்று சமையல் அறையில் உணவுக்கு தயாரானது.

நன்றி கூறல் நாள் அன்று 16 விருந்தினர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம். வான்கோழியுடன் இன்னும் பல சுவையான உணவுகளும் தயாரிக்கப்பட்டிருந்தன. விருந்தினர்கள் உணவின் சுவையை புகழ்ந்து தள்ளினார்கள். அன்று விருந்தினர்கள் பேசியது மூன்றே மூன்று பொருள்தான். ட்ரம்ப், ஹுட்டரைட் வான்கோழி, தொலைந்துபோன கைப்பை. கைப்பை பற்றிய வாதப் பிரதிவாதங்களும், ஊகங்களும் அதிக நேரத்தைப் பிடித்தன. ட்ரம்ப் பற்றிய நகைச் சுவையில் முதல் இடம் பிச்சைக்காரனுக்கு. அவன் ஒரு பலகையில் இப்படி எழுதி பிச்சை எடுத்து பணக்காரனாகிவிட்டான். ‘எனக்கு ஒரு டொலர் பிச்சை தாருங்கள். இல்லாவிட்டால் நான் ட்ரம்புக்கு வாக்களிப்பேன்.’ இரண்டாம் இடம் மொன்ரானா பத்திரிகையாளருக்கு. ‘ட்ரம்ப் இன்று மொன்ரானா வந்தார். நாளை அவருடைய தலைமுடி வரும் என்று நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.’

கைப்பையை தொலைத்த நாட்கள் கூடக்கூட அது கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. அடுத்த நாள் மாலை ரொறொன்ரோ திரும்பவேண்டும். ஆனால் காலை ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கைப்பை கிடைத்து விட்ட செய்தி வந்தது. சோல்ட் லேக் நகரத்து சலவைக்கூடத்துக்கு, விமானத்தில் உபயோகிக்கும் துணிகளையும் கம்பளிகளையும் சலவைக்கு அனுப்பியிருந்தார்கள். கம்பளிகளுடன் மாட்டுப்பட்டு ஒரு கைப்பை காணப்பட்டது. அந்த சலவைத் தொழிலாளி கைப்பையை மேலதிகாரியிடம் கொடுத்தார்.

மேலதிகாரிக்கு தகவல் ஏற்கனவே போயிருந்ததால் அவர் நடந்ததை ஊகித்துவிட்டார். கைப்பையை திருப்பி அதே விமானத்தில் மிசூலாவுக்கு உடனேயே அனுப்பும்படி கட்டளையிட்டார். அப்படித்தான் கைப்பை திரும்பி வந்தது. நாங்கள் விமான நிலையத்துக்குச் சென்று கைப்பையை மீட்டோம். காசும், கடன் அட்டைகளும் இன்னும் பிற ஆவணங்களும் சரியாக இருந்தன. கைப்பையுடன் ஒரு கடிதமும் வந்திருந்தது. வீடு வந்த பின்னர் அந்தக் கடிதத்தை திறந்து படித்தோம். கைப்பையை கண்டுபிடித்த சலவைத் தொழிலாளி எழுதிய கடிதம் இப்படி இருந்தது.

‘சோல்ட் லேக் நகரத்து சலவைத் தொழிலாளியாகிய நான் எழுதுவது. 3716 பறப்பில் வந்த சலவைத் துணிகளுக்குள் இந்தக் கைப்பை கிடந்தது. ஜோன் வார்னரின் கட்டளைப்படி இதை நான் திரும்பவும் மிசூலாவுக்கு 4742 பறப்பில் அனுப்புகிறேன். கைப்பையின் உரிமைக்காரரிடம் இதை தவறாது சேர்ப்பிக்கவும். மூன்று நாட்களாக அவர்கள் காத்திருக்கிறார்கள். எது காரணம் கொண்டும் தாமதிக்க வேண்டாம். அவர்கள் ஒபாமாவுக்கு வேண்டியவர்கள்.’

கடிதத்தைப் படித்த நான் திகைத்து நின்றுவிட்டென். அந்த பெயர் தெரியாத நேர்மையான சலவைத் தொழிலாளி எங்கள் கையில் கைப்பை எப்படியும் கிடைக்கவேண்டும் என்று மற்ற அதிகாரிகளை வெருட்டுவதற்காக அப்படி ஒரு பொய் எழுதியிருந்தார். சிரிப்பாக வந்தது.

அன்று மாலை ரொறொன்ரோவுக்கு புறப்பட்டோம். மனைவி கைப்பையை இறுக்கிப் பிடித்தபடி வந்தார். ரொறொன்ரோ விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் நெடுநேரம் நின்றோம். ’கைப்பை இருக்கிறதா?’ ‘ஓ, இருக்கிறது.’ கடவுச்சீட்டுடன் குடிவரவு படிவத்தை நிரப்பி கையொப்பம் இட்டு நீட்டினோம். அதிகாரி எங்கள் முகத்தை நிமிர்ந்து பார்க்காமலே மெசினில் இழுத்துவிட்டு திரும்பவும் தந்தார். சூட்கேசுகளுக்காக காத்திருந்து மீட்டு அவற்றை உருட்டிக்கொண்டு வெளியே வந்தோம். ‘கைப்பை இருக்கிறதா?’ ‘ஓ, இருக்கிறது.’ வரவேற்பு கூடத்தில் நிறைய சனங்கள் பயணிகளை வரவேற்பதற்கு நின்றார்கள். பலர் பலவிதமான பெயரட்டைகளைக் காவிக்கொண்டு காத்திருந்தனர். எங்கள் பெயர் அந்த அட்டைகளில் இல்லை. ஒருவரும் எங்களைப் பார்த்து சிரிக்கவில்லை. துள்ளித் துள்ளி கைகளை எட்டி அசைக்கவுமில்லை. ஒருவருக்குமே நாங்கள் ஒபாமாவுக்கு மிகவும் வேண்டியவர்கள் என்பது தெரியவில்லை.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர்
முத்துலிங்கத்தின் இணைய தளம்

ஐ.டி துறை பணிப் பாதுகாப்பு – 2018 நிலவரம்

1

ஐ.டி – இந்தியாவின் மிகப்பெரிய காண்டிராக்ட் உழைப்புத் துறை !

லட்சங்களில் சம்பளம் என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஐ.டி துறையில் நிலவுகின்ற வேலைநிலைமை காண்டிராக்ட் தொழிலாளர்களின் வேலை நிலைமையை ஒத்திருக்கிறது. ஐ.டி துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் தமது பணியிடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் சிலவற்றைப் பாருங்கள்.

  1. அமர்த்து & துரத்து (hire & fire) என்கிற கொள்கைப்படி இஷ்டம் இருந்தால் கொடுக்கின்ற சம்பளத்துக்கு வேலை செய்; இல்லையென்றால் ஓடிப்போ என்று வேலையை விட்டு துரத்துதல்
  2. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு ஷிப்டுகள் அளவுக்கு வேலை செய்வது
  3. கூடுதல் நேரம் உழைப்பது என்கிற பழக்கத்தின் உச்சகட்டமாக வாரத்தின் ஏழுநாட்களும் உழைப்பதாக வளர்ந்து நிற்பது. வாராந்திர விடுமுறை என்பது கேள்விக்குறியாவது.
  4. 8 மணிநேர வேலைக்கு மேல் செய்யப்படுகின்ற வேலைக்கு மிகை நேரப்பணி (ஓவர்டைம்) அடிப்படையில் இரட்டிப்பு சம்பளம் தராமல் ஏய்க்கப்படுவது.
  5. ’எச்.ஆர்’ என்கிற பெயரில் வலம் வருகின்ற அடியாளுக்கு ஊழியர்கள் நடுங்குதல். பெண் ஊழியர்கள் மீது பாலியல் வக்கிரங்கள்

ஐ.டி துறையில் வேலை செய்வது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய இளைஞர்களின் கனவு வாழ்க்கையாக இருந்து வந்தது. டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா முதல் சமீபத்தில் வெரிசான் வரையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை ஒரே இரவில் வேலையிலிருந்து துரத்திய பிறகு அந்த கனவு ஓரளவு மட்டுப்பட்டிருக்கிறது. இருந்தாலும், படித்து முடித்ததுமே 5 இலக்க சம்பளம், குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் வேலை, கையில் அழுக்குப்படாத கணினி வேலை என்ற கவர்ச்சி இன்னும் தொடர்கிறது.

ஓரிரு ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பிறகு “ஆன்-சைட்” என்ற பெயரில் அமெரிக்காவுக்கு போகும் வாய்ப்பு, சமூக கவுரவம் போன்றவை ஓரளவு மங்கி போயிருந்தாலும், புதிதாக அடிபடும் “கிளவுட் (மேகக் கணிமை)”, செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களை படித்து நாமும் அந்தக் கப்பலில் ஏறி விடலாம் என்ற கனவு மறைந்து விடவில்லை. ஆனால், எதார்த்தமோ வேறொன்றாக இருக்கிறது. ஐ.டி துறை வேலை என்பது நித்திய கண்டம்; பூரண ஆயுசு தான். கணினியில் வேலை என்றாலும் அது ஒருவகை காண்டிராக்ட் வேலை தான். காண்டிராக்ட் என்பதற்குப் பதிலாக அயல்பணி ( அவுட் சோர்சிங் ) என்று கவுரவமாக சொல்லிக்கொள்கின்றனர்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விட இந்தியாவில் குறைந்த கூலி என்பதால் இந்த நாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய சேவைகளை செய்வதற்கு இந்திய ஐ.டி நிறுவனங்களுக்கு அயல்பணி ஒப்பந்தங்கள் வழங்கி வந்தன. உதாரணமாக, இந்திய மென்பொருள் துறையின் தொடக்க காலங்களில் ஊழியர்களின் சம்பளம் ஒப்பிடக் கூடிய மட்டத்திலான அமெரிக்க ஊழியர்களின் சம்பளத்தில் 10%-20% ஆக மட்டுமே இருந்தது.

அடிப்படை ஆங்கில மொழித்திறன் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான படித்த இளைஞர் பட்டாளம் இந்தத் துறையின் தேவைக்கு ஏற்ற வகையில் பயிற்றுவித்து பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் வேலை நேரம் இந்திய வேலை நேரத்துக்கு நேர் எதிராக இருப்பதால் அந்நாட்டு நிறுவனங்களுக்கு இரவும் பகலும் பராமரிப்பு சேவை வழங்குவதற்கு ஏற்ப இந்திய நிறுவனங்களும் இரவுப்பணி செய்வதற்கு தோதாக சட்டங்களும் மாற்றப்பட்டன. வேலைமுறையும் மாற்றப்பட்டது.

2018-ம் ஆண்டு உலக அளவில் தலா $10 கோடிக்கு அதிகமான மதிப்புடைய 196 சேவை ஒப்பந்தங்கள் (மொத்த மதிப்பு சுமார் $510 கோடி) புதுப்பிக்கப்பட உள்ளன. இந்த 196 ஒப்பந்தங்களில் வெறும் 4 மட்டுமே இந்திய ஐ.டி நிறுவனங்கள் வசம் உள்ளன. டி.சி.எஸ் தவிர பிற இந்திய நிறுவனங்கள் $100 கோடி+ ஒப்பந்தங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதில்லை. பல ஒப்பந்தங்களில் இந்திய நிறுவனங்கள் இரண்டாம் நிலை பங்காளிகளாக உள்ளனர். அதாவது ஒப்பந்தத்தை வெல்லும் முதல்நிலை சேவை நிறுவனத்திடமிருந்து ஒரு பகுதி பணியை இரண்டாம் நிலை சேவை வழங்குனராக பெற்றுக் செயல்படுத்துகின்றனர்.

காண்டிராக்ட் தொழிலகங்கள் போலவே வாடிக்கையாளருக்குத் தேவையான சேவைகளை குறைந்த கூலியில் அமர்த்தப்பட்ட ஊழியர்கள் மூலமாக செய்து கொடுத்து கொள்ளை இலாபம் சம்பாதிப்பதுதான் இந்திய ஐ.டி துறை முதலாளிகளின் வணிக முறையாக இருந்து வருகிறது. எனவேதான் சமீபத்தில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்ட, அதிக சம்பளம் வாங்கும் இடைமட்ட ஊழியர்கள் டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா போன்ற நிறுவனங்களில் வேலையை விட்டு தூக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் இடத்தில் குறைந்த கூலி பெறும் புதிய ஊழியர்கள் அமர்த்தப்படுகின்றனர்.

இந்தத் துறையின் முன்னணி நிறுவனங்களான 1968-ல் தொடங்கப்பட்ட டி.சி.எஸ் (டாடா கன்சல்டிங் சர்வீசஸ்), 1976-ல் கணினி/கணினி பொருட்கள் (hardware) நிறுவனமாக தொடங்கப்பட்டு 1991-ல் தகவல் தொடர்பு சேவை வழங்க ஆரம்பித்த எச்.சி.எல், 1982-ல் தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ், அதே காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறைக்குள் காலடி எடுத்து வைத்த விப்ரோ டெக்னாலஜிஸ் ஆகியவையும் பிற நடுத்தர, சிறு நிறுவனங்களும் அமெரிக்கமயமாக்கப்பட்ட இந்தியர்களால் தொடங்கப்பட்டன அல்லது நிர்வகிக்கப்படுகின்றன.

உற்பத்தித்துறையில் காண்டிராக்ட் தொழிலாளர்களை முதன்மை வேலையளிப்பவரான வாடிக்கையாளர் நிறுவனமே உற்பத்தி இலக்கு போன்றவற்றை தீர்மானித்து வேலைவாங்குகிறது இதைப்போலவே இந்திய ஐ.டி நிறுவனங்களின் சேவை வழங்கலிலும், வாடிக்கையாளர் நிறுவனம்தான் தரம், செய்முறை ஆகியவற்றை வரையறுத்து, உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது. ஒரு தொழில்நிறுவனம் தொழிலாளியின் உழைப்புச்சக்தியை சுரண்டி இலாபத்தை அதிகரிப்பதைவிட , அயல்பணி அல்லது காண்டிராக்ட் நிறுவனம் உழைப்புச்கக்தியை சுரண்டி இலாபமீட்டுவதில் வேறுபாடு இருக்கிறது. தொழில் நிறுவனத்தின் இலாபத்தில் அதன் உற்பத்திப்பொருளின் விற்பனைக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு இருக்கும். ஆனால், தொழிலாளர்களது உழைப்புச் சக்தியையே சரக்காக விற்கின்ற காண்டிராக்ட் மற்றும் அயல்பணி நிறுவனங்களது இலாபத்தை உழைப்புச்சக்தி என்கிற சரக்கே தீர்மானிப்பதால், அந்த நிறுவனத்தின் இலாபம் அதிகரிப்பு என்றால், உழைப்புச் சக்தி மீதான சுரண்டல் அதிகரித்திருகிறது என்று பொருள்.

இதைப் பற்றி புரிந்து கொள்ள இந்திய ஐ.டி நிறுவனங்களில் மிகப் பெரியதான டி.சி.எஸ்-ஐ எடுத்துக் கொள்ளலாம். இந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 3.87 லட்சம். இந்நிறுவனம் 2016-17 ஆண்டில் மொத்தம் ரூ 1.17 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதில் 59.7% ஊழியர்களின் ஊதியத்துக்கு செலவிடுகிறது. நிறுவனத்தின் மொத்த லாபம் 27.4% ஆக உள்ளது.

2015-16 ஆண்டில் ஊழியர்களுக்கான செலவு 58.6% ஆகவும் லாபம் 28.25% ஆகவும் இருந்தது. முந்தைய ஆண்டை விட 2016-17ல் லாபவீதம் குறைந்ததற்குக் காரணம் அமெரிக்காவில் அதிக சம்பளம் கொடுத்து அந்நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தியதுதான் என்கிறது டி.சி.எஸ்-ன் நிதிநிலை அறிக்கை.

அதாவது ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை குறைத்து உபரி மதிப்பை அதிகரிப்பதுதான் ஒரு இந்திய ஐ.டி நிறுவனத்தின் லாபவீதத்தை உயர்த்துவதற்கான வழியாக உள்ளது. அதனால்தான் உழைப்பு காண்டிராக்டர்கள் என்ற முறையில் உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஐ.டி நிறுவனங்கள் கையாள்கின்றன. நிர்வாகங்களின் நிறுவனங்களின் முழு கவனமும் மனிதவளத்துறை என்று அவர்களால் அழைக்கப்படும் ஊழியர்களை மேலாண்மை செய்வதில்தான் உள்ளது.

வெளிப்படைத்தன்மை இல்லாத அறிவியலுக்கு எதிரான அப்ரைசல் ரேட்டிங், வரம்பற்ற வேலை நேரம், தனித்தனியான ஊதிய விகிதங்கள், வேலை அழுத்தம் என்று ஊழியர்களை உடல் ரீதியிலும், உளரீதியிலும் வதைக்கும் ஐ.டி நிறுவன நிர்வாகங்கள் ஊழியர்களை உபரி மதிப்பை கறப்பதற்கான எந்திரங்களாகவே பார்க்கின்றனர்.

அதாவது உழைப்பை சுரண்டி கொழுக்கும் காண்டிராக்டர்கள்தான் இந்திய ஐ.டி துறை முதலாளிகள்.

எனவே, ஐ.டி ஊழியர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பிற துறைகளிலும் வேகமாக புகுத்தப்பட்டு வரும் காண்டிராக்ட் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு இணையானவையே. அனைத்துத் தொழிலாளர்களுடனும் இணைந்து போராடுவதே தமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான ஒரே வழி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

– குமார்
நன்றி: புதிய தொழிலாளி, ஜனவரி 2018
NEW DEMOCRATIC LABOUR FRONT I.T. Employees Wing

 

கமல்ஹாசனை வறுத்தெடுக்கும் தமிழ் ஃபேஸ்புக் !

6

எனக்கென்னமோ கமலின் அரசியல் வருகை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க கூடாரத்தில் சேதாரத்தை உண்டு பண்ணும்ணுதான் தோணுது..!

  • Arul Ezhilan

கமல் கட்சி ஆரம்பிக்கும்போது இதுவரை உளறியதைவிட பயங்கரமாக உளறுவார் என்று அதற்கு முந்தையைய தினம் நியூஸ் 18 நேரலையில் பதிவு செய்தேன். என் அனுமானத்தை அவர் ஒரு துளிகூட பொய்யாக்கவில்லை. மக்கள் கேட்டதாக பாரதிகிருஷ்ணகுமார் மேடையில் கமலிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்த விதம் ஒரு மாபெரும் அவல நாடகம்.

இவ்வளவு அரசியல் பேசப்படும் ஒரு மாநிலத்தில் எதைப்பற்றியுமே ஒரு குறைந்த பட்ச அறிவும் இல்லாத ஒருவர் முன்னிறுத்தப்படுவது மிகப்பெரிய அவமானம். நீட் பற்றியும் புதிய கல்விக்கொள்கை பற்றியும் நாம் போராடிக்கொண்டிருக்கும்போது ‘நல்ல பள்ளிக்கூடங்கள் வேண்டும்’ என் று பேசுவதற்கு ஒரு அசட்டுத்துணிச்சல் வேண்டும். தமிழகத்தில் காமராஜரும் அதற்கு பின்திராவிட இயக்கமும் வளர்த்த கல்விபற்றி அவருக்கு கைதட்டுபவர்களுக்கு ஏதாவது தெரியுமா?

‘நான் எந்த சித்தாந்தையும் பின்பற்றவில்லை…எல்லா சித்தாந்தத்திலிருந்தும் நல்லதை எடுத்துக்கொள்வேன்’ என்று பேசுகிற ஒருவருக்கு சித்தாந்தம் என்றால் என்னவென்று புரியவைக்க முடியுமா? மோடியையும் பிரனாய் விஜயனையும் சமமாக பாவிக்கும் ஒருவரை தமிழகம் பெற்றதன் தவப்பயனை என்னவென்று சொல்வது?

இலவசங்களை எதிர்த்துப் பேசுகிறார். இலவசங்களுக்கும் சமூக நலக்கோட்பாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி எந்த அறிவும் இல்லாத ஒருவர்தான் இப்படி பேச முடியும். இலவசங்களை எதிர்ப்பவர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள், மானியங்களை எதிர்ப்பவர்கள் அனவருடைய முகமும் வலதுசாரி பொருளாதார முகம்தான்.

‘ தமிழ் நாட்டில் தமிழ் அழிகிறதே ‘ என்று கேட்டால் ‘ எல்லோரும் நல்லா தமிழ் பேசுங்க ‘ என்கிறார். மொழி உரிமைக்காக ரத்தம் சிந்திய மாநிலத்தில் இப்படி ஒரு மொழிக்கொள்கையை ஒருவர் பேசுகிறார். ‘ தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கிறதே? என் று கேட்டால் ‘ எல்லா பெண்களையும் உங்கள் அககா தங்கச்சியா நினைங்க ‘ என்கிறார்.

காவிரி பிரச்சினை பற்றிக் கேட்டால் ‘ கர்நாடகாவில் இருந்து தண்ணீர் என்ன ரத்தமே வாங்கித்தருகிறேன்…ஆள் ஆளுக்கு தூண்டிவிடாதீர்கள்..உட்கார்ந்து பேசுவோம்” என்கிறார். இந்தப்பிரச்சினையில் என்ப நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியாத மூடர்கள் மட்டுமே இப்படி பேச முடியும்.

கமல் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். ஆனால் அவருக்கு நமது சமூகபிரச்சினைகளின் அரிச்சுவடிகூட தெரியாது என்பதன் சாட்சியமே நேற்றைய உரை. கமலஹாசனைபோலவே எந்த புரிதலுமற்ற டுபாக்கூர்கள் வேண்டுமால் இந்த உளறல்களுக்கு கைதட்டலாம்.

கமலை யாரும் எதிர்க்க வேண்டியதில்லை. அந்த வேலையை நம்மைவிட அவரே சிறப்பாக செய்துகொள்வார்…..

  • Abdul Hameed Sheik Mohamed

இடதுசாரியா – வலதுசாரியா?
மடிசாரி!   ம்ம் சரி சரி!
இந்த #மக்கள் #நீதினு தொடங்குதே!
அவாள்களுக்கான நீதிதான் அது.
அதென்னப்பா #மய்யம்?
நடு செண்டர் – அதாவது நடுநிலை ….க்கி!

  • ராஜா ஜி

நடுநிலைனு ஒண்ணு இல்லவே இல்ல கமல். எல்லோருக்கும் நல்லவனாக இருக்க ஒரு அயோக்கியனால்தான் முடியும்.

  • Muthu Ram

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தை வேற யாரையாவது நடத்த சொல்லுங்க ஆண்டவரே. உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.

  • Muthu Ram

ரஜினி, கமல், யோகிபாபு, போண்டா மணி என்று யார் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவும், அதிமுகவும் ஏன் பதட்டப்படுகிறது என்று சமூக வலைத்தளங்களில் கேட்கிறார்கள். குறிப்பாக பா.கம்யூவினர். ஆட்சிக்கு வர வாய்ப்பிருப்பவர்கள்தான் இதுபோன்ற சிறு சிறு சலனங்களுக்குகூட ரியாக்ட் செய்வார்கள். அதுதான் இயல்பும்கூட. கடந்த தேர்தலில் மநகூ அமைத்து போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழந்த பா.கம்யூவுக்கு என்ன கவலை?

தூத்துக்குடியில் மாநில மாநாடு நடந்திருக்கிறது. புதிய மாநிலச் செயலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். போலிஸ் வேறு பேரணியில் வெளுத்து வாங்கியிருக்கிறது. இத்தகைய சூழலில் நியாயமாக பேசுப்பொருள் ஆகவேண்டியிருக்க வேண்டிய பா.கம்யூவை பற்றி யாருமே பேசுவதில்லை. மாறாக கமல்ஹாசனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

சூடு, சொரணையோ, சுயமரியாதையோ இருக்கும் பட்சத்தில் பா.கம்யூவினர் இதற்காக கொதித்திருக்க வேண்டும். நம்மூர் கம்யூவினரிடம் இவ்வளவு வீரத்தையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது. அடுத்த தேர்தலில் அடுத்தவன் குடிகெடுக்க ஒரு கூட்டணி அமைக்க அவர்களுக்கு ஓர் இரட்சகன் உருவாகிவிட்டார் என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் ஆவி இவர்களை மன்னிக்காது.

  • Yuva Krishna

பாரதி கிருஷ்ணகுமாரை அந்த ‘மநிம’ மேடையில் பார்த்து பல தோழர்களுக்கு கடும் கோபமும் அதிர்ச்சியும் ஏற்பட்டு இருப்பது தெரிகிறது. ஒருகாலத்தில் மிக நெருக்கத்தில் இருந்து அறிந்தவன் என்ற முறையில் எனக்கொன்றும் அதிர்ச்சியாக இல்லை. எனக்குள் இடதுசாரி சிந்தனையை, அதன் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்ற முறையில் எப்போதும் அவர் மீது அதற்கான மரியாதை எனக்குண்டு. அவர் விதைத்த மார்க்சீய சிந்தனைகளே அவரிடமிருந்து பின்னர் அவரை விட்டு விலகவும் வைத்தன என்கிற புரிதலும் எப்போதும் உண்டு.

தன்னை சுடர வைத்த சிந்தனைகளுக்கு நியாயம் செய்ய முடியாமல் தோற்றுப்போன ஒரு மனிதராக அவரைப் பார்த்து பரிதாபம் மட்டுமே கொள்கிறேன். பிழைக்க ஒரு வழி தேடி இருக்கும் அவருக்கு வாழ்த்துகள்!

  • Mathava Raj

இரண்டு கம்யுனிஸ்டு கட்சிகளும் தமிழகத்தில் தெரிந்தே செய்கிறார்களா? தெரியாமல் செய்கிறார்களா? தெரியவில்லை. திராவிடத்தை ஒழிப்பேன் என்று தேசியம் பேசிய எம்ஜியாரை கொண்டுவந்தார்கள். இப்போ நம்மவா-வைக் கொண்டு வந்துள்ளார்கள். கட்சியை கொள்கை அடிப்படையில் கட்டும் எண்ணமே இல்லை. காரணம் தேசமே அற்ற தேசியத்தை ஏற்றவர்கள் அல்லவா நம்ம ”ஹிந்திய தேசிய கம்யுனிஸ்டுகள்” அதான். ”இடது” மய்யத்தை நோக்கி நகர்கிறதோ?

  • Jamalan Tamil

கமல் மேடையில் மக்கள் கேட்டதாக கேட்கப்பட்ட கேள்விகள் சென்னையில் இருந்து எழுதப்பட்டு ஒரு குழுவால் தெரிவு செய்யப்பட்டு பதிலும் ஸ்கிரிப்ட் படி தயாரானது..! ஆளுக்கு பத்து கேள்வி எழுதியிருக்கிறார்கள்.

கமல் தமிழக மக்களை ஏமாற்ற முனைகிறார் , தமிழகத்தில் உயிர் நாடிக் கொள்கையான இட ஒதுக்கீடு, நீட் தேர்வு அநீதி, காவிரி நீர் விவகாரம், சுற்றுச் சூழல் பிரச்சனைகள் என பேசாமல் அடிப்படையான இந்த விஷயங்களுக்கு பதில் சொல்லாமல் ஊழல்,. ஓட்டுக்கு பணம், கல்வி சரியில்லை, சாக்கடை சரியா ஓட மாட்டேங்குது.. என்று பேசுகிறார்…

என்.ஜி.ஓ பாணி அரசியலை மாற்று அரசியலாக தமிழகத்தில் முன் வைக்கிறார். இவரால் திமுக, அதிமுக வை எதுவும் செய்ய முடியாது. காரணம் இந்தியாவையே நாசக்காடாக்கிக் கொண்டிருக்கும் மோடியின் பேரழிவு திட்டங்கள் பற்றி எதுவுமே வாய் திறக்கவில்லை. பணமதிப்பிழப்பு, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி என மவுனம் காக்கும் கமல் தமிழக அரசியலில் வடை சுட நினைக்கிறார்.

  • Arul Ezhilan

எதிர்பார்த்ததைப்போல ஆங்கில ஊடகங்கள் காலைமுதல் ”நம்மவா” (கடற்கரய் மத்தவிலாச அங்கதம் காப்பிரைட்) கூட்ட வாசலில் கட்டிலைப்போட்டு ஆரம்பித்துவிட்டார்கள்.. விடிவெள்ளி என எம்ஜியார், ஜெ துவங்கி விசயகாந்தவரை சினிமா அரசியல் வரலாறை புலம்பிக்கொண்டுள்ளனர். தமிழ் சேனல்கள் மானத்துடன் (கலைஞர் செய்திகள், சேனல்-18) ஆகியவை காவிரி பிரச்சனை மற்ற செய்திகளை பேசிக்கொண்டுள்ளன. மற்றசேனல்கள் ”செட்டாப் பாக்ஸ்” இல்லாமல் வரவில்லை.

எதிர்பார்த்ததைப்போல, ஆன்மீக அரசியல், திராவிட அரசியல் என எல்லா அரசியலையும் இறங்கி அலசி எப்படியாவது தமிழகத்தில் காவிக் கொடி நாட்ட கங்கணம் கட்டி இறங்கியுள்ளது இந்துத்துவ-பார்ப்பனியக்-காவிப்படை

  • Jamalan Tamil

அடுத்த ”மநகூ”-வின் விஜயகாந்த்-தான் கமல். செங்கொடி தோழர்கள் அதில் உள்ள சிவப்பு கைகள்தான். அவரை தூக்கிச் சுமப்பார்கள் போலிருக்கிறது. இலுமினாட்டிகள் பற்றிய செய்திகளில் அக்கறை இல்லை என்றாலும், இலுமினாட்டிகளின் ஆறுகலை தாவீதின் ஜியோனிச நட்சத்திரம் அந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

கேஜ்ரிவாலுக்குப்பின் உருவாகியிருக்கும் மற்றொரு என்ஜிவோ கட்சி என்பதே ”மக்கள்? நீதி? மய்யம்?” போன்ற சொற்களின் சேர்க்கை. உலகமயமாகிவிட்ட அரசியல் சொல்லாடல்களத்தில் கட்சிகள் என்ஜிவோ சீர்திருத்த இயக்கங்களாக மாறிவருதன் ஒரு வெளிப்பாடு இது. கொள்கை, கோட்பாடு எதுவும் தேவையில்லை. தேவை நீதி, நேர்மை, உண்மை என்கிற விளம்பர வாசகங்கள் மட்டுமே.

  • Jamalan Tamil

அழைக்காவிட்டாலும் வலியச்சென்று கமல்ஹாசனை வாழ்த்துவது. ஆனால் எத்தனையோ போராட்டங்களில் 2009 முதல் அழைத்தும் போகாமல் இருந்ததும், போக வேண்டுமானால் தமிழகத்திற்குள் விமானச்சீட்டு, சொகுசு அறை கேட்டதும், தான் மட்டும் இறுதியில் பேசவேண்டுமென நிபந்தனைகள் வைத்ததும், சில போராட்டங்களில் நுழைந்து ‘முடித்துவிட்டு போங்கள். அண்ணன் நான் பார்த்துக்கிடுதேன். ஆட்சிக்கு வந்ததும் ஒற்றைக் கையெழுத்தில் முடித்துவிடுவேன்.’ என்றெல்லாம் அரசியல்நீக்கம் செய்ததும் யாரப்பா?

பொங்குகிற, மடைமாற்றம் செய்கிற, திரைக்கதை சொல்லுகிற நாதக இதற்கு மறுப்பை சொல்ல முடியாது. காரணம், ஈழத்தை முதலீடாக்கி பதவி கனவில் இருக்கிற தலைமை இவற்றை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாது.

  • Thiru Yo

கட்சி பெயரை நம் தலைவர் அறிவிக்கப்போகிறார் எல்லோரும் ஒருமுறை கரவொலி எழுப்புங்கள்.

#ஹெல்லலூயா

  • SD Prabhakar

ஒருபொழுது தோழர் பாரதி கிருஷ்னகுமாரேதான் இப்படி எழுதினார்.

‘ எப்போதும் நீதி மறுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட கைவிடப்பட்ட மக்களின் பக்கம் நின்று கொள்ளுங்கள். அது நீதியின் பக்கம் நிற்பது மட்டுமல்ல, நீதியாகவே நிலைபெறுவது’

அடிப்பவனுக்கும் அடிபடுபவனுக்குமிடையே நடுநிலைமையென்பதே அயோக்கியத் தனம்.

நடுநிலைமை என்பது
கோழைகளின் முகமூடி…
நடுநிலைமை என்பது
முட்டாள்களின் உளரல்..
நடுநிலைமை என்பது
தேன் பூசப்பட்ட விஷம்..
நடுநிலைமை என்பது
பூசி மொழுகப்பட்ட பக்கச்சார்பு..

  • Samsu Deen Heera

MNM = MLM…

  • Udayakumar Balakrishnan

பாஜக ஆட்சியின் கூத்துகளில் ஒன்றைக் கூட விமர்சிக்கத் துப்பில்லை…
அதிமுக சரியில்லை எனச் சொல்வது,

அடிமைகள் வேண்டாம் பார்ப்பனியச் சட்டாம்பிள்ளை நான் இருக்கிறேன் என்று சொல்வது தான்.

கற்பைக் கற்பிதம் என்று துணிச்சலுடன் கருத்து சொல்லி அதற்கான கடும் எதிர்ப்புகளைக் கண்ட குஷ்பு இவரை விட எவ்வளவோ நேர்மையான அரசியல்வாதி. மய்யமாம்…

  • Deepa Lakshmi

கமல்ஹாசனின் கட்சிக் கொடியில் திராவிட நிறங்களான கறுப்பும் சிவப்பும் அத்தோடு வெள்ளையும் இருக்கின்றது. கறுப்பில் வெள்ளை கலந்தால் அது சாம்பலாகி விடும். சிவப்பில் வெள்ளை கலந்தால் அது காவியாகி விடும்.

கட்சியின் பெயர் பற்றி பல ஊகங்கள் வந்தன. கடைசியில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று ஒரு பெயரை வைத்திருக்கிறார். ‘இலக்கிய குவியம்’ என்பது போன்ற ஒரு பெயராக இருக்கிறது. கொஞ்சம் கூட கம்பீரமாக இல்லை. ‘மையம்’ என்று எழுதாமல் ‘மய்யம்’ என்று பெரியார் தமிழில் இருந்தது ஒரு மகிச்சியான விடயம்.

கமல் என்னப் பேசப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தால், சோறு பருப்பு என்று கவிதை சொன்னார். அவர் தமிழக மக்களுக்கு ஏற்றபடி பேச இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை. கமலுடைய கட்சி உருப்பட்ட மாதிரித்தான்!!!

  • வி. சபேசன்

ஊழலை ஒழிக்கிறதுன்னா…ஊழல் பண்ணவே இல்லன்னு நம்பும்படியா ஏமாத்தறது… சாதி அரசியல் ஒழியணும் அப்படின்னா…

“நாம ரெண்டு பேரும் ஒரே ஜாதி, அதனால உனக்கு சப்போர்ட் பண்றேன்னு சொல்றா…” ந்னு நக்கலா காயத்ரி ரகுராம்(‘சேரி பிஹேவியர்’ டயலாக் புகழ்) கிட்ட சொல்லி அவர் பேந்தப் பேந்த முழிச்ச மாதிரி ஆக்ட் குடுத்ததை ரசிச்சு, “பாருங்க..அவங்க என்ன சொல்றாங்கன்னு கூட உங்களுக்குப் புரியல…அவளோ இன்னசண்ட்” ந்னு புல்லரிச்சாரே… அதான்.

சுருக்கமா சொல்லணும்னா சாதி வெறிக்கு எதிரான குரல்களைப் புறக்கணிக்கிறது… இடதும் இல்ல வலதும் இல்ல அப்படின்னா வாஸ்துப் பிரகாரம் வலது கோடி மூலைன்னு அர்த்தம்.

‘எல்லாருக்கும்’ தரமான கல்வின்னா…’பிம்பிளிக்கி பில்லாபி’ந்னு அர்த்தம்

#முடியல

  • Deepa Lakshmi

வணக்கம் கமல் அவர்களே… கொடியைகூட சுயமாக வடிவமைக்கும் பணியை செய்யாத நீங்கள்… நாட்டிற்கு என்ன செய்ய போரீங்க…

  • கோ தேவராஜன் சமூக ஆர்வலர்

நீதிமன்றத்தினால் ஊழல் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு, தண்டிக்கப்பெற்ற ஜெயலாலிதாவை, “அம்மா, அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு” என்று உருக்கமா பாடி துதித்த கவிஞர் சிநேகன்;

அதே ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடச்சொல்லி தமிழகமெங்கும் பிரசாரம் செய்த வையாபுரி இவங்க எல்லாம் யாருன்னு பார்த்தால் இவங்கதான் “ஊழல் ஒழிப்பு” என புறப்பட்டிருக்கும் கமலஹாசனின் பிரசார படை வீரர்கள்.!

#த்தூ

  • Gopinath Kubendran

பத்திரிக்கையாளர் — அப்துல்கலாம் இறந்தபோது நீங்கள் ஏன் வரவில்லை…

ஆல்வார்பெட் காட் — பொதுவாக எனக்கு இறுதி ஊர்வலங்களில் கலந்துகொள்வதில் உடன்பாடில்லை…

டியூட்ஸ்…..
ஓ மை காட் … மிக்கமகிழ்ச்சி …. அப்போ நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்துல வண்டில ஏறி … உங்க ஃபிரெண்டு… அதாங்க கொள்க என்னானு கேட்டா தலசுத்துமே அவுருகூட உக்காதுனு போனீங்கலே அது இன்னாது.. ஒரு வேல சூட்டிங்க்னு சொல்லி ஆல்வார்பெட் காட ஃபூலிங்க் பன்னி தள்ளினு போயிருப்பாங்களோ டியூட்ஸ்.

  • Rathna Senthil Kumar

#சமுத்திரக்கனியிடம் உங்களுக்கு பிடித்த தலைவர் யார் என்று கேட்ட போது ஜோதி பாசு, நல்லக்கண்ணு……இப்ப யோகி ஆதித்யநாத் என்று சொன்னார். அதாவது உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் கமல், ரஜினி….. இப்போது பவர்ஸ்டார் சீனிவாசன் என்று சொன்னால் எப்படி இருக்கும்??? எல்லாரும் நம்மை பார்த்து சிரிப்பார்கள். ஏன் சிரிக்கிறான்னா அவனுக்கு அது புரிஞ்சிருக்கு. அதே சமயம் அரசியல் என்று வரும் போது எந்தெந்த பெயர்களை சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று கூட தெரியாது.

ஒரு சினிமாவை டிவிட்டர், பேஸ்புக்கில் விமர்சனம் செய்தால் உடனே “அந்த படத்துக்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருந்துச்சு தெரியுமா….. அதெல்லாம் தெரியாமா விமர்சனம் பண்ணாதீங்க” என்று விஷால் போன்ற நடிகர்கள் கோபப்படுவாங்க. உங்களுக்கு நல்லா தெரிஞ்ச விசயத்தை சரியாக பண்ணாமல் இருக்கும் போது, அதை விமர்சித்தால் உங்களுக்கு தாங்க முடியவில்லை. அரசியலை பற்றி எதுவுமே தெரியாம….படத்துல யாரோ எழுதி கொடுத்ததை வைச்சு பேசுறது மாதிரி மொட்டையா பேசுனா அதுக்கு எங்களுக்கு எவ்வளவு கோபம் வரனும்.

சமுத்திரக்கனி, #விஷால் மாதிரி #கமல் அரைகுறை கிடையாது. அவர் எல்லாவற்றையும் தெரிந்து புரிந்து தான் பேசுவார் என்று பார்த்தால். அம்பேத்கர், நேரு, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் என்கிறார். அதாவது நடிப்பில் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்றால் சிவாஜி, கமல், விக்ரம், ராம்கி, ஜித்தன் ரமேஷ் ரொம்ப பிடிக்கும் என்பது மாதிரி. கமலுக்கு அருகில் உட்கார்ந்த சோம்நாத் பாரதி என்பவர் அதிமுகவில் ரமணா என்று ஒரு அமைச்சர் மாதிரி தான். அதுக்கு பேசாம செல்லூர் ராஜூவை மேடை ஏற்றியிருக்கலாம். “தமிழ்நாட்டில் நல்ல கல்வி, மருத்துவம், சாலை வசதி இல்லை” என்று உத்தர பிரதேசம், பிகார்ல பேசுவதா நினைச்சுக்கிட்டு கேஜ்ரிவால் தமிழ்நாட்டை பற்றி பேசுகிறார். டெல்லியில் இருந்து அரசியல் செய்பவன் அறிவாளி என்று நினைப்பதும்……வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் மாதிரி தான்.

தமிழ்நாட்டில் கலைஞர் ஆக்டிவாக இல்லை, ஜெயலலிதா இல்லை, விடுதலை புலிகள் பிரச்சினை இல்லை, காவிரி விவகாரம் தீர்ப்பு வந்துவிட்டது, அரசியலுக்கு வருவதற்கு முன்பே நீட் அமல்படுத்தியாச்சு, ஓபிஎஸ்-இபிஎஸ் மேல் மக்களுக்கு கோபம்…….. இதெல்லாம் தான் கமல் அரசியலுக்கு வர காரணமே தவிர, மற்றபடி அந்த கால்சென்டர்​ தொடங்க காரணம் எதுவும் இல்லை.

“நடிகன் நடிகனாகத்தான் இருக்க முடியும். தர்ம உபதேசம், அரசியல், தத்துவ ஞானமெல்லாம் அவனுக்கு இருக்காது, இருந்தால் அதெல்லாம் இரவல் சரக்காகத்தான் இருக்க முடியும்” என்று எம்.ஆர்.ராதா சொன்னது எவ்வளவு பெரிய உண்மை.

  • தோழன் பாலா

இவரே இப்படி ஒளறுறாரே, அடுத்து வரப்போற அவர் கட்சியை நினைச்சாதான்..!

  • வாசுகி பாஸ்கர்

அப்துல் கலாம் ஊர்வலத்தில் ஏன் பங்கேற்கவில்லைன்னு கமலை நோக்கி அரைவேக்காட்டுத்தனமான ஒரு கேள்வி. ஒருவர் பற்றிய மதிப்பை அளவிடுவதற்கான காரணமாய் இறுதிஊர்வல பங்கேற்பை எல்லாம் சொல்ல முடியாது.

அப்படியும் கமலஹாசன் வேறு ஏதாவது சொல்லி சமாளிப்பார்ன்னு பார்த்தா “இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதில் எனக்கு நம்பிக்கையில்லையென” சொன்னார்.

நம்மாளுங்க சும்மா இருப்பாங்களா? சிவாஜி கணேசன் ஊர்வலத்தில் ரஜினிக்கும் இளையராஜாவுக்கும் நடுவுல இத்தா தண்டி குத்துக்கல்லு மாதிரி குந்திட்டு வேன்ல போற போட்டோவை அப்லாட் பண்ணிட்டாங்க.

கமல் சிக்குற இடமே மைக்கை கொடுத்து சுதந்திரமா ஆத்து ஆத்துன்னு ஆத்துற இடமில்லை, rapidfire கேள்விகளில் தான்.

வாடி ராசாத்தி

  • வாசுகி பாஸ்கர்

சினிமா நடிகர்கள் கட்சி துவங்குவதால் சில சாதகங்கள் உண்டு. variety யான புகைப்படங்கள் கிடைக்கும், தீம் ம்யூசிக், பாடல்கள் கிடைக்கும், இருபது வருடம் கட்சி நடத்தினாலும் கிடைக்காத ஊடக வெளிச்சம் free of cost . முரசொலி, கலைஞர் டிவி, மதிமுகம், வெளிச்சம், மக்கள் டிவி போல தன் அரசியலை பேசுவதற்கென்று தனியான ஒரு ஊடகத்தளம் தேவையில்லை, இதற்கெல்லாம் மேல மக்களுடன் உரையாடித்தான் அறிமுகம் செய்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

எம்ஜிஆருக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எம் எஸ் வி, கண்ணதாசன், கேவி மஹாதேவன் ஆகியோரது படைப்புகள் பின்புலமாக இருந்ததை போல, கமலஹாசனுக்கு காலையில் இருந்து ஷங்கர் மஹாதேவன் குரலில் இசையில் காலையில் இருந்து “ஆளவந்தான்” தீம் ம்யூசிக் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினிக்கு மொத்த இளையராஜா, தேவா பாட்டு, விஜய்க்கு தமிழன் முதல் மெர்சல், சூர்யா ஒருவேளை வந்தால் ஆயுத எழுத்து பாட்டு.

இதையெல்லாம் கலந்துவிட்டு அப்படியே ஒரு ஆடியோ வீடியோ விஷுவல் போடுறப்ப ஜிவ்வுன்னு இருக்கும்பாரு, தமிழ்நாடே மாறி பெரிய புரட்சிக்கு தயாராகுற மாதிரி இருக்கும், அந்த போதையிலையே விழுந்து சாவுங்க

  • வாசுகி பாஸ்கர்

இடதையும் வலதையும் சமமாக நிறுத்தும் தராசு வலதைவிட மோசமானது, இழிவானது.

நான் இடதும் இல்லை வலதும் இல்லை நடு செண்டர் என்பதை இப்படியும் சொல்லலாம்.,.,

நான் ஒழுக்கமாவனும் இல்லை ரேப்பிஸ்ட்டும் இல்லை.

  • Villavan Ramadoss

இவுனுக மாற்று அரசியலுக்கு கட்சி ஆரம்பிக்கறானுகளா ?
இல்லை மீம்ஸ்க்கு கட்சி ஆரம்பிக்கறானுகளா?
இல்லை மாற்று அரசியலே மீம்ஸ்க்கானதா ?

டே இதோ பாரு..
நீங்க என்னமோ பண்ணி தொலைங்க..
ஆனா மீம்ஸ் ஸ்லாட் என்பது பாஜகவிற்கானது ..
அந்த உரிமையை தமிழன் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டான். Mind it !

  • Thameem Tantra

கமல் பேசுவதை நீங்கள் இன்று நீங்கள் கிண்டல் செய்யலாம் … ஆனால் இன்னும் பத்து வருடங்கள் கழித்து எவ்வளவு அட்வான்ஸடாக பேசி இருக்கிறார் என்று புரியும். எதுக்கும் சொல்லிவைப்போம்.. இவுனுக படத்துக்கும் இதான சொல்லுவானுக..

ஆனா ஒன்னு இந்த scriptக்கும் பேசாம crazy மோகனையே எழுத சொல்லிருக்கலாம்..கொஞ்சம் சிரிப்பாச்சி வந்துருக்கும் … வீம்புக்கு நானே எழுதுறேன்னு சொல்லி மொக்க தாங்க முடியலடா சாமி.

  • Thameem Tantra

கமலின் கட்சி பெயர்- ‘மக்கள் நீதி மய்யம்’

டே என்னடா ?

கட்சிக்கு பேரு வைக்க சொன்னா.. கம்ப்யூட்டர் சென்டெர்க்கு பேரு வெச்சுருக்கீங்க

  • Thameem Tantra

காரல் மார்க்ஸ்:

மனிதர்கள்தாம் அவர்களுடைய வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்கள் ஆசைப்பட்ட படியும், அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்ட சூழல்களுக்குள்ளிருந்தும் உருவாக்குவதில்லை. ஏற்கெனவே கடந்த காலத்தில் உருவாகி ஏற்கெனவே இருக்கும் சூழலிருந்துதான் செய்கிறார்கள். இறந்துவிட்ட தலைமுறைகளின் பாரம்பரியம் உயிரோடிருப்பவர்களின் மூளைகளை ஒரு கெட்ட கனவு போல் அழுத்திக்கொண்டிருக்கிறது. அவர்கள் தம்மையும் தம்மைச் சுற்றி இருப்பவற்றையும் புரட்சிகரமாக மாற்றுவதாகவும், முன்னெப்போதும் இருந்திராத ஒன்றை உருவாக்கப்போவதாகவும் நினைத்துக் கொண்டு முனைப்புடன் செயல்படும் ஒரு சிக்கலான நேரத்தில், அவர்கள் கடந்தகாலத்தின் ஆவிகளையும், அவற்றின் பெயர்களையும் போர் முழக்கங்களையும், ஆடைகளையும் துணைக்கழைத்துக் கொள்கிறார்கள்; உலக வரலாற்றின் இந்தப் புதிய காட்சியை காலத்தால் நிரூபிக்கப்பட்ட மாறுவேஷத்துடனும் கடன்வாங்கப்பட்ட மொழியுடனும் படைக்கிறார்கள்.

  • Vijayasankar Ramachandran

சிஸ்டம் கெட்டுப் போச்சு என்பதை கமல் அவர் பாணியில் பேசுகிறார். ஆசிரியருக்குக் கடிதம் எழுதி, பெயரை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் அனுப்பி வைப்பதையே அதிகபட்ச அரசியல் செயல்பாடாகக் கருதும் மத்தியதர வர்க்கத்தின் திண்ணைப் பேச்சுதான் அது.

  • Vijayasankar Ramachandran

காஞ்சிபுரம் விபத்து : நமது மக்கள் இப்படித்தானா சாக வேண்டும் ?

1

காஞ்சிபுரம் அருகே தாமலில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற டாடா ஏஸ் வாகனம் மீது தனியார் ஆலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து மோதிய விபத்தில் 8 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியை சேர்ந்தவர் தேவன்மணி என்பவரின் மனைவி நளினி குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த சிறுணமல்லியைச் சேர்ந்த சுமார் 25 -க்கும் மேற்பட்டோர் டாடா ஏஸில் தாமல் கிராமத்துக்கு 18 -ம் தேதி மதியம் சென்றிருக்கிறார்கள்.

படம் : நன்றி தினகரன்

இவர்கள் வந்த டாடா ஏஸ், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் இருந்து எதிர்புறம் செல்ல வழி இல்லாததால், சாலையில் உள்ள சென்டர் மீடியனை உடைத்து அந்த வழியை பொதுமக்கள் பைக், கார் போன்ற வாகனங்கள் செல்ல பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

இவ்வழியாக சென்றால் விரைவில் தாமல் கிராமத்திற்கு சென்று விடலாம் என்பதால் சாலையில் இருந்து சற்று உயரமாக இருந்த சென்டர் மீடியன் உடைக்கப்பட்ட பாதை வழியாக டாடா ஏஸ் கடக்க முயன்றது.

அதிக பாரம் மற்றும் மேடான பகுதியாக சென்டர் மீடியன் இருந்ததால், டாடா ஏஸ் வண்டி வேகமாக ஏற முயன்ற போது, சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி எதிர்திசையில் மற்றொரு வாகனம் வந்ததால், டாடா ஏசை பிரேக் போட்டு நிறுத்த டிரைவர் முயற்சி செய்துள்ளார். ஆனால், மேடான பகுதி என்பதால் பிரேக் கட்டுப்பாட்டை இழந்து அவ்வண்டி பின்னோக்கிச் வேகமாக கீழே இறங்கியுள்ளது.

அதே சமயம், பெங்களூரு மார்க்கத்தில் இருந்து காஞ்சிபுரம் மார்க்கமாக ஒரகடம் சென்ற ஒரு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி வந்த டாடா ஏஸ் மீது உரசிவிட்டு சென்றது. இதனால் தடுமாறிய டாடா ஏஸ் நிற்காமல் பின்னோக்கி வந்து கொண்டே இருந்ததை டிரைவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், டாடா ஏஸ் மீது இரண்டாவதாக வேகமாக வந்த மற்றொரு தனியார் பஸ் பயங்கரமாக மோதியது. இதில் டாடா ஏஸ் தூக்கி வீசப்பட்டு, வேனில் இருந்தவர்கள் அலறித்துடித்தனர். இந்த கொடுரமான விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிரார்கள். படுகாயமடைந்த 4 பேர் நிலை கவலைக்கிடமாகவும், 3 பேரை மேல் சிசிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்தை டாடா ஏஸ் டிரைவரின் அஜாக்கிரதையால் நேர்ந்த கோரம் என்கிறார்கள். முக்கியமாக, தேசிய நெடுஞ்சாலையில் வளைவே இல்லாத இடத்தில் விதியை மீறி வலதுபுறமாக திரும்பி கடக்க முயன்றது, பின்னால் பேருந்துகள் வருவது தெரிந்தும் கவனக் குறைவாக சாலையைக் கடக்க முயன்றது, அனைத்துக்கும் மேலாக சரக்குகள் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டிய டாடா ஏஸ் சரக்கு வண்டியில் விதிகளை மீறி ஆட்களை ஏற்றிச் சென்றது ஆகிய காரணிகளே 9 பேரின் உயிரைப் பறித்த கோர விபத்துக்குக் காரணமாக கூறப்படுகிறது.

உண்மையில் எந்த ஓட்டுனர்களும் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வாகனத்தை இயக்குவது இல்லை. அப்படியிருந்தால் தினந்தோறும் லட்சக்கணக்கான விபத்துக்கள், மரணங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். அதனையும் மீறி கன நேரத்தில் நிகழக்கூடும் விபத்தின் சமூகக் காரணிகளை நாம் பரிசிலீக்க வேண்டியது அவசியமாகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு “எங்கேயும் எப்போதும்” என்ற திரைப்படம் விபத்து குறித்த ஓர் மாபெரும் அச்சத்தை நமக்கு ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அப்படத்தில் விபத்துக்கான காரணிகள் குறித்து சிறிதும் பேசாமல் கடந்து சென்றிருக்கும். அத்திரைப்படம் குறித்த விமர்சனம் வினவில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

பொதுவாக கிராமப்புறங்களில் நல்லது கெட்டது, காரியங்களுக்கு மினி வேன்களை ஏற்பாடு செய்து அதில் சென்று வருவது என்பது அதிரித்திருக்கின்றது. நகரமயமாக்கலின் விளைவு மனித உறவுகளை பிரித்து பந்தாடி வருவதால் திருமண நிகழ்ச்சிக்கு கூட ஆட்களை கூப்பிட்டு செல்வது என்பது மிகவும் அரிதாகி விட்டது. பேருந்தில் செல்லலாம் என்றால் அதிக கட்டணம். மேலும், எப்பொழுதாவது வரும் பேருந்து என்றால் ஆட்கள் வருவார்களா? மாட்டார்களா? என்ற கவலை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து துரத்துவதால் மினி வேன்களை ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்.

மினி சரக்கு வேன் ஓட்டுனர்களின் பாடு என்பது பெரும்பாடு. நாள் ஒன்றுக்கு சவாரி கிடைப்பது என்பதே பாலைவனத்தில் தண்ணீருக்கு அலைவதற்கு சமமாக உள்ளது. இதுபோக அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள், டீசல் விலை உயர்வு , போலிசின் வழிப்பறி, மற்றும் குடும்ப பிரச்சனைகள் என்று ஏராளமாக உள்ளது. இதற்கு இடையில் தான் தங்கள் வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எப்படி இருப்பினும் சாலை விதிகளை மீறுவது சரியா? என்று கேள்வி எழலாம். தவறு தான். ஆனால் இந்த இந்தத் தவறுகளின் பின்னே நிறுவனமயமான தவறுகள் பல அடிப்படையாக இருக்கின்றன. அவையெல்லாம் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டும் தொழிலாளர்களது தவறு மட்டுமல்ல.

தேசிய நெடுஞ்சாலைகளைப் பொறுத்த வரையில் சாதாரண மக்கள் நடப்பதற்கு கூட இடமில்லை எனுமளவிற்கு கார்கள், தனியார் ஆம்னி பேருந்துகள், கார்ப்பரேட் முதலாளிகளின் சரக்கை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் என்று இடைவிடாமல் தாறுமாறாக தறிகெட்டு ஓடுகிறது. இந்த தனியார் வாகனங்களின் ஓட்டுநர்க் குறிப்பிட்ட நேரத்தில் டிரிப்பை முடித்தால்தான் ஊதியம் என்பதால் தங்களது உயிரையும் பணயம் வைத்து ஓட்டுகின்றனர். லாரி உரிமையாளர்களுக்கோ அன்றாடம் ஏறும் டீசல் விலையால் குறிப்பிட்ட நாளில் சரக்கை கொண்டு சேர்க்கவில்லை என்றால் முதலுக்கே மோசம். இந்த இக்கட்டான நிலைமைகளில் விபத்துக்கள் ஏன ஏற்பாடாது?

இந்த நெருக்கடியின் துன்பத்திலிருந்து தப்பிப்பதற்கு ஓட்டுநர்கள் மது அருந்துகிறர்கள். அந்த வகையில் இந்த விபத்துக்கள் து தமிழக அரசின் “டாஸ்மாக்” நிகழ்த்தி வரும் சாதனையாகும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பு கட்டண வசூல் என்ற அடிப்படையில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்கிறது. அந்த ஒப்பந்தப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் சாலைகளைப் பராமரிப்பதில்லை. சாலைகளுக்கு இடையே முறையான தடுப்புச்சுவர் இருப்பதில்லை.

பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை பலகையோ,பாதுகாப்பு குறியீடுகளோ இருப்பதில்லை. மேலும், வளைவுகளிலும் மற்றும் தேசிய நெடுஞ்சாலையை பிரிக்கும் பகுதிகளிலும் எச்சரிக்கை பலகைகள் இருப்பதில்லை; இரவு நேரங்களில் எச்சரிக்கை விளக்குகளும் இருப்பதில்லை. அத்துணை விதி முறைகளும் அலட்சியமாகக் காற்றில் வீசப்பட்டுள்ளது.

இதன் விளைவு கடந்த 2017 -ல் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் 5,121 பேரும், மாநில சாலை விபத்துகளில் 4,922 பேரும், மாவட்ட சாலை விபத்துகளில் 2,471 பேரும், கிராம சாலை விபத்துகளில் 1,563 பேரும் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமோ, அரசு உயர் அதிகாரிகளோ எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. வாகனப் பெருக்கத்திற்கு ஏற்றவாறு சாலை விபத்துக்களைத் தவிர்க்க சாலைகளை அகலப் படுத்துவதும் இல்லை; மேம்படுத்துவதும் இல்லை.

மக்களின் உயிர்களைக் காவு வாங்கும் நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு பற்றி கவலைப் படாத அரசும், போலீசும் கார்ப்பரேட்டுகளுடன் கூட்டு சேர்ந்து கட்டணக் கொள்ளையில் மட்டும் கறாராக செயல்படுகிறார்கள். இவர்களை நம்பிய பொதுமக்களை காவு கொடுக்கிறார்கள்!

மேலும் :

தூத்துக்குடி : சி.பி.எம் தோழர்களை தாக்கிய போலீசு ரவுடிகள் !

3
குவித்து வைக்கப்பட்டிருக்கும் விறகு கட்டைகள்

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு கடந்த 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாநில மாநாட்டின் இறுதி நாளான நேற்று (20.02.2018) அன்று மாலை அணிகளின் செங்கொடி அணிவகுப்புப் பேரணி நடைபெற்றது. அனுமதி பெற்று நடைபெற்ற இந்தப் பேரணியில் தூத்துக்குடி ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையிலான போலீசு, அமைதியாக சென்று கொண்டிருந்த பேரணியின் மீது தாக்குதல் நடத்தியது. திட்டமிட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 6 வயது குழந்தை உட்பட 4 பேர் கடுமையாகக் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சி.பி.எம். கட்சியினர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். இப்பேரணி பொதுக்கூட்டத் திடலுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, சாலை சந்திப்பில் நின்று கொண்டிருந்த ஏ.எஸ்.பி செல்வநாகரத்தினம் மற்றும் அவரது போலீசுப் படையினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பேரணியில் சென்று கொண்டிருந்த தோழர்களை கூட்ட நெரிசலை வாய்ப்பாகக் கொண்டு கைகளால் தாக்கியுள்ளனர். இதைப் பேரணியில் சென்ற தோழர்கள் கண்டித்துள்ளனர்.

திட்டமிட்டே குவித்து வைத்த விறகு கட்டைகளை  கொண்டு தோழர்களை தாக்கும் ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம்  மற்றும் போலீசு

பேரணியில் குழப்பத்தை உண்டாக்குவதையே நோக்கமாகக் கொண்ட ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம், அந்த சாலை சந்திப்பில் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த விறகுக் கட்டைகளை எடுத்துப் பேரணியில் நிராயுதபாணியாகச் சென்று கொண்டிருந்த தோழர்கள் மீது தாக்குதல் தொடுத்தார். ஏனையப் போலீசும் விறகுக்கட்டையால் தோழர்களை தாக்கியது.

போலீசின் தாக்குதலைக் கைகளால் தடுத்து போலீசை அமைதிகாக்கும் படி சொன்னார்கள் சிபிஎம் தோழர்கள். எதையும் காதில் வாங்காமல், பேரணியைச் சீர்குலைப்பதிலேயே கவனமாக இருந்தது போலீசு. இதில் 20-க்கும் மேற்பட்ட தோழர்கள் காயமடைந்தனர். 5-க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுதது சி.பி.எம். தோழர்கள் சிலர் போலீசின் கைகளில் இருந்த விறகுக்கட்டையை பிடுங்க ஆரம்பித்தனர்.

தோழர்கள் திருப்பி தாக்கியதும் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடும் ஏ.எஸ்.பி  செல்வநாகரத்தினம்

ஏ.எஸ்.பி செல்வநாகரத்தினமோ, தனது சீர்குலைக்கும் வேலையைச் செய்து முடித்த திருப்தியில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். திருப்பூரைச் சேர்ந்த நவநீதக் கிருஸ்ணன் என்பவரின் 6 வயதுக் குழந்தையான அகிலேஷைப் போலீசு தாக்கி அக்குழந்தைக்கு மண்டை உடைந்து இரத்தம் வந்ததைப் பார்த்த சி.பி.எம். தொண்டர்கள் போலீசு கும்பலை விரட்டினர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினமும், உடனிருந்த காக்கிச் சட்டைக் கும்பலும், பின்வாங்கினர்.

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பேரணிக்குப் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் கொடுக்கும் காவிப் போலீசு, சி.பி.எம். கட்சியினரின் பேரணியை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்பட்டிருக்கிறது. பதிவாகியிருக்கும் வீடியோக்கள் மற்றும் அங்கிருந்த தொண்டர்கள் கூறுவதைப் பார்க்கையில், ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஏதோ மத்திய அரசு சொல்லி அடித்தது போல நடந்து கொண்டிருக்கிறார். ஏனெனில் இவ்வளவு பெரிய ஊர்வலத்தில் எந்த ஊர் போலீசும் அடிப்பதை கனவு கூட காணாது. இவரோ ஏதோ தனிப்பட்ட அஜென்டாவில் செயல்பட்டிருப்பது போல தெரிகிறது.

ஆர்.எஸ்.எஸ் கிரிமினல் போல் செயல்பட்ட ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம்

ஆளும் எடப்பாடி அரசும், அதன் போலீசும் பதில் சொல்லவேண்டிய பல கேள்விகள் இங்கு இந்தக் காணொளிகளில் தொக்கி நிற்கின்றன. ஒரு சாலையின் பெயர்ப்பலகை உள்ள இடத்தில், அப்பெயர்ப்பலகைக்கு கீழே விறகுக்கட்டை குவிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன ? அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் ஊர்வலத்தில் எதற்காக செல்வநாகரத்தினமும் அவரது ஏவல்படையும் தலையிடவேண்டும்?

போராட்டத்தைச் சீர்குலைக்க சட்டவிரோதமாக விறகுக்கட்டையை வைத்து தாக்கி விட்டு, பின்னர் தப்பிச் சென்ற ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினத்தையும், சிறு குழந்தையின் மீது கண்மூடித்தனமாக வெறித் தாக்குதல் நடத்திய கிரிமினல் போலீசின் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

 

கமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்

5

யா, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிகிறார் ஒருவர். திடீரென்று ஒரு நாள் தனது தொழிலை மாற்றிக் கொண்டு தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கப் போகிறேன் என்று அவர் அறிவிப்பதாக வைப்போம். உடனே தொலைக்காட்சி விவாத நெறியாளர்கள் அனைவரும், அவர் பிரபலமான ஆளாக இருப்பதால், மரம் ஏறும் தொழிலுக்கு வருபவர் என்ன செய்வார் என பயங்கரமான விவாதங்களை நடத்துகிறார்கள். சூட்டு கோட்டு போட்டுக் கொண்டு கணினியில் விரல் பிடித்து டேட்டாக்களோடு உறவாடும் ஒருவர் எப்படி தென்னை மரம் ஏறுவார் என்று சிலர் கேட்டால், நமது நெறியாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

படங்களில் நடித்து அலுத்துப் போன காலத்தில் கமலின் அரசியல் அவதாரம்

அவர் இன்னும் தென்னை மரமே ஏறவில்லை, அதற்குள் ஏன் கருத்து சொல்கிறீர்கள், அதற்குள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று பொங்குகிறார்கள், மடக்குகிறார்கள். ஒரு சிஇஓ எப்படி ஐயா நெஞ்சைத் தேய்த்து தினமும் ஐம்பது தென்னை மரங்கள் ஏற முடியும், இதெல்லாம் சாத்தியமில்லையே என்று கேட்டால், மரமேறுவது அவரது உரிமை, மறுப்பது ஜனநாயகமின்மை என்று படுத்தி எடுக்கிறார்கள் நமது பத்திரிகையாளர்கள்.

அப்படித்தான் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கமல்ஹாசன் அறிவித்த போதும் சரி, இன்று அவர் அப்துல் கலாம் சமாதியிலிருந்து தனது அரசியல் பிரவேச நிகழ்ச்சிகளை மார்க்கெட் செய்யும் போதும் சரி, அவருடைய கட்சி, கொள்கை, கொடி எல்லாம் வரப் போகிறது அதன் பிறகு அவருடைய கருத்துக்கள், அரசியல் சரியா என்று விவாதிக்கலாம் என்று உபதேசிக்கிறார்கள்.

களத்தூர் கண்ணம்மாவிலிருந்து, சபாஷ் நாயுடு வரை  கமல்ஹாசனது படங்களும் சரி, படங்களுக்கு வெளியே அவர் பேசியவைகளும் சரி, நடந்து கொண்டவைகளும் சரி அவரது கொள்கைகள் இன்னதுதான் என ஃப்ளூபிரிண்ட் போட்டு காட்டிக் கொண்டிருப்பதை இவர்கள் எவரும் பார்க்கவில்லை. அல்லது உணரவில்லை, கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு திரைப்பட நட்சத்திரமானவர், தன்னைச் சுற்றி மின்னும் ஒளிவட்டத்திலேயே வாழ்வதால், அவருக்கு அந்த ஒளி வட்டத்தைத் தாண்டி இருக்கும் உலகம் பற்றி எதுவும் தெரியாது. அதாவது உலகமே அவரது ஒளிவட்டத்தின் முன் மண்டியிடுவதால் அவர் சொல்வதுதான் உலகம், அவர் விளக்குவதுதான் உலகம். இதை யாராவது மறுக்க முனைந்தால் அவரது தர்பாரில் சாத்தியமே இல்லை. ஏனெனில் கமல்ஹாசனைச் சுற்றியிருக்கும் கிச்சன் கேபினட்டோ இல்லை ரசிகர் மன்ற நிர்வாகிகளோ அனைவரிடத்திலும் அவர்தான் பேசுவார், அவர்தான் கேட்பார், அவர்தான் முடிவெடுப்பார், அவர்தான் தீர்மானிப்பார்.

ஒரு மனிதன் என்ன மாதிரியான சூழலில், வர்க்கப் பின்னணியில் உருவாக்கப்படுகிறான் என்பதை பொறுத்தே அவனது வாழ்க்கை குறித்த கண்ணோட்டமோ இல்லை அரசியல் புரிதலோ, அரசியல் நிலைப்பாடோ இருக்கும். இருந்தே தீரும். அந்த வகையில் பார்த்தாலும் கமல்ஹாசனின் அரசியல் என்ன என்பதை அணுஅணுவாக விளக்க முடியும். இங்கே நாம் கமல்ஹாசனிடம் கொள்கை இல்லை என்று பேசவில்லை. அவர் கொள்கையை இனிமேல் புதிதாக விளக்க வேண்டியதில்லை என்றே கூறுகிறோம்.

வருவாயோடு, அரசியல் விளம்பரத்தையும் தேடிய கமலின் “Big Boss” அவதாரம்

ஒரு திரைப்பட நட்சத்திரமாக, ஒட்டி வரும் மேட்டுக்குடி வாழ்க்கை, தனது பிரபலத்தை வைத்து தயாரிப்பு, திரைப்பட உருவாக்கம், வணிகம் அனைத்தையும் தீர்மானிக்கும் கமல், அரசியல் என்று வரும்போது என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பது அவர் கட்சி அறிவித்துத்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

“நான் வலதுசாரி, இடதுசாரி என எல்லா சாரிகளையும் பார்ப்பேன், பேசுவேன், எந்த சாரியும் எனக்கு அன்னியமில்லை, So, நான் எந்த சாரி என்று கேட்காதீர்கள்  Sorry” என்று உலகநாயகன் பல இடங்களில் சலிப்பூட்டும்படி கூறிவிட்டார். இந்த ஸ்டேட்மெண்டிலேயே அவரது நிலைப்பாடு தெளிவாக இருப்பினும், அரசியல் தெரியாத அம்மாஞ்சிகள் அவர் நடுநிலை இடத்தில் இருப்பதாகவும், புதிய இடம் ஒன்றை உருவாக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

ஆங்கில சேனல்களில் அவர் அளித்த பேட்டியிலும் தான் கம்யூனிசத் தலைவர்களை மட்டுமல்ல, பிரதமர் மோடியையும் பார்ப்பேன் என தெளிவாக கூறியிருக்கிறார்.

ஐயா, உடன்கட்டை ஏறுதல் எனும் ஒரு பிரச்சினையைப் பார்ப்போம். இதில் இடதுசாரிகள் இன்னபிற ஜனநாயக சக்திகள், உடன்கட்டை ஏறுவதை பார்ப்பனியம் உருவாக்கிய கொடூரமான ஆணாதிக்கம் என்று எதிர்க்கிறார்கள். இன்றும் பாஜகவில் இருக்கும் தீவிர பார்ப்பனிய இந்துத்துவவாதிகள் உடன்கட்டை ஏறுவதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கின்றனர்.

இன்று ராஜஸ்தான் மாநில முதல்வராக இருக்கும் வசுந்தரா ராஜேவின் தாயார் விஜயராஜே சிந்தியா 2001-ம் ஆண்டில் இறந்தார். ராஜ வம்சத்து குடும்ப மாதாவான இந்த சிந்தியா, அதே ராஜஸ்தானில் ரூப்கன்வர் எனும் பெண் உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்டபோது பகிரங்மாக ஆதரித்தார். சதிமாதா என்று வழிபடவும் செய்தார்

இப்போது கமல்ஹாசனின் எல்லா சாரிகளோடும் கொஞ்சிக் குலாவும் நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இஸ்லாமிய எதிர்ப்பு, முஸ்லீம் நாடுகளின் விசாக்களை ரத்து செய்தல், ராஜபக்ஷேவின் சிங்கள இனவெறி – தமிழினப் படுகொலை, தருமபுரி இளவரசன் தற்கொலையை மறைமுகமாக ஆதரிக்கும் பா.ம.க, மாட்டுக்கறியின் பெயரில் முஸ்லீம்களைக் கொல்லும் இன்றைய பாஜகவினர், என பல விடயங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். அதன் படி கமல்ஹாசன் எடுக்கவேண்டிய நிலையில் நடுநிலை என்ற வெங்காயம் எங்கேயாவது ஒளிந்து கொண்டிருக்கிறதா?

ஊழல் முதலாளி லைக்காவின் தயாரிப்பில் கமலின் சபாஷ் நாயுடு திரைப்படம்

ஊழல் எதிர்ப்பில் அப்பாடக்கராக காட்டிக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் இலங்கை, காஷ்மீர் பிரச்சினைகளில் இந்திய அரசு – காங்கிரசு – பாஜகவின் நிலைப்பாடுகளைத்தான் எடுத்தார். கங்கை, இந்து என தன்னையும் ஒரு புனித இந்துவாக காட்டிக் கொண்டார். இவரோடு ஆரம்பத்தில் இருந்த யோகந்திர யாதவ், ஒரு கட்சி துவங்கும் போது அதற்கு தெளிவான இடதுசாரி, வலது சாரி என்று கொள்கைகளை தேடவேண்டியதில்லை. அவை காலப்போக்கில் உருவாகும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய தேவையன்றி கொள்கை இன்னதுதான் என வரையறுக்கத் தேவையில்லை. இப்போது அவரே கேஜ்ரிவாலோடு குடும்பம் நடத்த முடியவில்லை, விலகிவிட்டார். ஆம் ஆத்மியின் கொள்கையும் நாகரீகமான காங்கிரசு கொள்கை, நாகரீகமான இந்துத்துவம் என்பதாக வெளிப்பட்டுவிட்டது. இவை ஆரம்பத்தலேயே ஆம் ஆத்மி எனும் என்ஜிவோ பின்னணியிலேயே தெரிந்து போன விசயம் என்பதே முக்கியம்.

ஆகவே கமலைப் போன்ற பெருந்தன மேட்டுக்குடிக்காரர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் பெரும்பாலான பொருளாதார, சமூக, அரசியல் நிலைப்பாடுகளைத்தான் கொண்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக கேட்டால் விளக்கெண்ணெயில் நழுவிப் பேசுவார்கள். ஏனெனினில் ஆளும் வர்க்கத்தின் பழைய முகங்களிலிருநது தம்மை பிரித்துக் காட்ட நினைக்கிறார்கள். அதற்குத்தான் இத்தகைய கொள்கை கோட்பாடு போன்ற மேக்கப் சமாச்சாரம்.

ராமேஸ்வரம் சென்ற திரு கமல்ஹாசனிடம், அங்கேயிருக்கும் மீனவர்கள், இலங்கை – இந்தியக் கடற்படைகள் செய்யும் அட்டூழியம் குறித்து சொன்னால் அவரது பதில் என்ன? அவர்கள் சொல்வதற்கு முன்பேயே இந்தப் பிரச்சினை தீவிரமாக இருக்கும் போது அவரது நிலை என்ன? இதனால் தேசபக்தரான அவர் இந்திய அரசையோ, இல்லை கடற்படையையோ எதிர்ப்பாரா? இல்லை தமிழக அரசுகள் எழுதும் கடிதம் போல மத்திய அரசுகளுக்கு ஐந்து காசு பெறாத கோரிக்கைகளை வைப்பாரா? இதில் என்னய்யா கமலின் ஸ்பெஷல் வந்துவிடப் போகிறது?

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதும் சரி, இன்றளவும் அவர் மோடியையோ இல்லை அவரது கொடுங்கோன்மைக் கொள்கைகளையோ இல்லை சங்க பரிவாரத்தின் கொடூரக் கொலைகளையோ கமல் எதிர்க்காததன் மர்மம் என்ன? இல்லை  எதிர்ப்பதாக இருந்தால் அக்லக் கொலைக்கு நீதி வேண்டும் என அவர் போராடுவாரா? ஜூனைத் கானின் கொலைக்காக ஆர்ப்பாட்டம் செய்வாரா?

எல்லா சாரிகளையும் பார்த்த கமல் அவர்கள், அதிமுக தலைவர்களை மட்டும் பார்க்கமாட்டேன் என கறாராக கூறிவிட்டாராம். கைப்பிள்ளைகளை இப்படி வீரத்துடன் எதிர்க்கும் திருவாளர் கமல் அவர்கள், கையில் தடியுடன் இருக்கும் பாஜக மத்திய அரசை மட்டும் எதிர்க்கவில்லை என்பதோடு போய் பிரதமரை சந்திக்கிறார், சந்திப்பேன் என்று கூறினால் அது அயோக்கியத்தனம் இல்லையா? அந்தப்படிக்கு கமலை விட எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் மோசமில்லை என்பதில் என்னய்யா தவறு?  ஏனெனில் இந்த இரட்டையர் ஜெயா காலந்தொட்டு விசுவாமான அடிமை என்பதை வெளிப்படையாக காட்டிக் கொண்டவர்கள். என்ன இவர்களுக்கு கமலைப் போல ஒரு உடைந்த ஆங்கிலத்தில் பேசத் தெரியாது. அவ்வளவே! கமலைப் போன்றவர்கள் ஆங்கில பீட்டர் பாணியில் ஜெயா, மோடி நாட்டாமைகளின் அடிமையாக கொஞ்சம் ஃபேஷனாக காட்டிக் கொள்கிறார்கள். மற்றபடி சிவப்பாக இருப்பவுனும் அடிமையாக இருக்கமாட்டான் என்று  இந்தநாடு நம்புகிறது என்றால் அது நாசமாகப் போகட்டும்!

அம்பானி உழைத்து முன்னேறியதாக நம்பும் இந்த காரியவாதியின் பொருளாதாரக் கொள்கை எப்படி இருக்கும்? நீரவ் மோடியுடன் பிரதமர் மோடி மட்டுமல்ல, கமல்ஹாசனும் போஸ் கொடுக்காமல் போவாரா என்ன?. இன்னும் விவசாயிகள் தற்கொலை, கல்வி – சுகாதாரம் தனியார் மயம், உலகமயம் என்று இந்தியாவின் அடிப்படையான பிரச்சினைகளில் இவர் அவற்றை எதிர்க்கின்ற பக்கத்தில் நிச்சயமாக இல்லை. வளர்ச்சிக் கொள்கை என்று மோடி பேசி நாட்டை ஏமாற்றியது போல பேசுவது அன்றி வேறு என்ன எதிர்ப்போ, மாற்றோ இருக்க முடியும்?

போத்தீஸ் விளம்பரத்தில் நடித்த கமல் கோ ஆப்டெக்ஸ் மூலம் கைத்தறியை வளர்ப்பாராம்!

நீட் பிரச்சினையில் தமிழகம் நீட்டைத் துரத்த வேண்டும் என்பது போய் இப்போது நீட் தேர்வில் அரசே பயிற்சி கொடுக்க வேண்டும் என்று பல ஓட்டுக் கட்சிகளும் ஒதுங்கிவிட்ட நிலையில் கமல்ஹாசன் என்ன கூற முடியும்? தான் ஆட்சி வந்தால் ஊழல் அற்ற, நல்ல முறையில் பயிற்சி மையங்கள் கொடுக்க முடியும் என்பதுதானே அவரது நிலை?

அப்பல்லோ போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வளர்ச்சியும், அரசு மருத்துவமனைகள் திட்டமிட்டே அழிக்கப்டுவதுமான நாட்டில் திரு கமல் அவர்கள் என்ன செய்வார்? இல்லை ஆண்டுக்காண்டு பச்சமுத்து அல்லது விஸ்வநாதன் பல்கலைகளில் போய் பட்டங்களை கொடுத்தோ, பெற்றோ மகிழும் கமல் அவர்கள், கல்வி தனியார் மயம் எனும் புற்று நோய் குறித்து என்ன சொல்வார்? நல்ல முறையில் தனியார் கல்வியை உயர்த்துவேன் என்று சொல்வார்! அதாவது ஏழைகள் நல்ல முறையில் கல்வியின்றி, வேலையின்றி வாழ்வதற்கு ஆவன செய்வார்!

ஐ.டி, உள்ளிட்டு உற்பத்தி சார்ந்த தொழில்துறைகளில் கூட இன்று தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டு, தொழிற்சங்கங்கள் முடக்கப்பட்டு, நிரந்தர தொழிலாளர்கள் நீக்கப்பட்டு, மலிவு விலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் அமர்த்தப்படும் நிலையில் கமலின் நிலை என்ன? ஏதாவது ஹூண்டாய் காரின் புதிய மாடல் வந்தால் அதற்கு போய் போஸ் கொடுத்து விழாவில் சிறப்பிப்பாரே ஒழிய, ஹூண்டாய் தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கம் கட்டுவதற்கோ இல்லை போராடுவதற்கோ போய் முன்னே நிற்பாரா?

ஆக எப்படிப் பார்த்தாலும் திரு  கமல் அவர்கள் சற்றே மேம்போக்கான தம்மாத்துண்டு முற்போக்கு வேடத்தில் இந்திய ஆளும் வர்க்கம் கொண்டிருக்கும் அத்தனை பிற்போக்கு கொள்கைகளையும் வழிபடுபவரே அன்றி வேறு அல்ல.

அரசியல்படுத்தப்படாத நடுத்தர வர்க்கமோ இல்லை அதன் பார்வையோ சமூகத்தின் பொதுப்புத்தியை தீர்மானிக்கும் காலத்தில் கமலைப் போன்ற புதிய ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் செல்வாக்கு இல்லை என்று நாம் சொல்லவில்லை. ஆனால் தெரிந்த அந்த கொள்கைகளின் படி அவரை மதிப்பிடவதும், கேள்வி கேட்பதையும் விடுத்து அவர் ஏதோ புதிய நிலை, கொள்கை எடுப்பார் என்று ஆய்வு செய்தால் அது காலையில் சிரமத்துடன் போகும் ஆய்-ஐ இழிவு படுத்துவதாகும்.

இன்று இராமநாதபுரம், மதுரையில் கமல் போகும் இடங்களில் அவரது சினிமா பாடல்கள் ஒலிக்கின்றன. அவரது கிச்சன் கேபினட் கூட்டம் எல்லா இடங்களிலும் போற்றிப் புராணம் பாடுகிறது. கமலோ கை காட்டுகிறார். ஓரிரு வார்த்தைகளில் பேசுகிறார். இனி நான் நடிகன் இல்லை, உங்கள் வீட்டு குத்து விளக்கு, அந்த விளக்கை காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு என்கிறார். அல்பத்தனமான சென்டிமெண்டை தவிர இந்த உளறில் ஏதாவது பொருள் இருக்கிறதா?

அப்துல்கலாம் சமாதியை அவர் தேர்ந்தெடுத்திருப்பதே ஒரு நல்ல சான்று. பார்ப்பனியமயத்தை ஏற்றுக் கொண்ட ஆளும் வர்க்க ஊது குழலான அப்துல் கலாமை இந்துத்துவவாதிகள், இடதுசாரிகள், நடுத்தர வர்க்கம், கலெக்டர் ஆபிஸ் சிப்பந்திகளின் ஊழலை எதிர்க்கும் பார்த்தசாரதிககள் என அனைவரையும் கவர் செய்வதே அவரது நோக்கம். அப்துல் கலாம் படித்த பள்ளியில் அவரை விடவில்லையாம். உடனே தான் கலாமிடம் பாடம் கற்பதை யாரும் தடுத்த நிறுத்த முடியாது என்கிறார். இராமநாதபுரத்தில் இல்லாத அரசு பள்ளிகளா? அங்கே வாத்தியார் முதல் கழிப்பறைகள வரை இல்லாத நிலையை தமிழகத்தில் எங்கேயும் பார்க்கலாமே?

இவரது கட்சி ஆரம்பிககும் வைபவத்தை பாராட்டிய சந்திரபாபு நாயுடு, கொள்கைகள் முக்கியமில்லை, மக்களுக்கு சேவை செய்வதே முக்கியம் என்று சொன்னதாக கமல் கூறியிருக்கிறார். கவனியுங்கள், கொள்கைகள் முக்கியமில்லை என்று அவர் ஒத்துக் கொள்கிறார். இந்த இலட்சணத்தில் இந்த கைப்பிள்ளையிடம் கொள்களை கோட்பாடு என்று கும்மியடிக்கும் கூட்டத்தை கொட்டுவது எப்படி?

அதிகபட்சம் அடுத்த தேர்தலில் இவர் யார் ஓட்டுக்களை பிரிப்பார், பாஜகவிற்கு எந்த விதத்தில் பயன்படுவார், போராடும் தமிழக மக்களின் அரசியலை எப்படி நீர்த்துப் போகச் செய்வார் என்பதைத் தாண்டி திரு கமல்ஹாசனுக்கு எந்த முக்கியத்துவமும், எப்படி முக்கி யோசித்தாலும் இல்லை. ஒரு ஓட்டுக் கட்சி தேர்தலில் எவ்வளவு வாக்குகளை பிரிப்பார் எனும் அற்ப விசயத்தற்கு இத்தனை விவாதம், தலைப்புச் செய்திகள், நேரலை காட்சிகள் போன்ற எழவுகள் தேவையா?

லைக்கா கம்பெனியின் தயாரிப்பில் சாபாஷ் நாய்டுவும், எந்திரன் 2.0 படமும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் போது கமல், ரஜினி இருவரும் ஒரே நேரத்தில் கட்சி ஆரம்பிப்பதும் தற்செயலான நிகழ்வுகளல்ல. ஐரோப்பிய நாடுகளில் ஊழல், கருப்புப் பணம், முறைகேடான வர்த்தக நடவடிக்கைள் மூலம் செல்பேசி சாம்ராஜ்ஜியத்தை அமைத்தருக்கும் ஒரு திருட்டு முதலாளியிடம் ஊதியம் என்ற பெயரில் கோடிகளைச் சுருட்டும் இந்த இரட்டையர்களிடம் போய் அரசியல் பேசுவதும், எதிர்பார்ப்பதும் அதை ஒட்டி நமது ஊடகங்களில் பெரும்பான்மை நேரங்கள் திருடப்படுவதும் தமிழ்நாட்டின் சாபக்கேடு அன்றி வேறென்ன?

 

பஞ்சாப் தேசிய வங்கி : நீரவ் மோடியின் கொள்ளை நடந்தது எப்படி?

2

பஞ்சாப் தேசிய வங்கி – கொள்ளை நடந்தது எப்படி?

பஞ்சாப் தேசிய வங்கியில் நடந்த ஊழலை அப்படியே மூடி மறைக்கவும், பழியை காங்கிரசின் மீதோ அல்லது முடிந்தால் வங்கி ஏ.டி.எம்மின் காவலாளி மீதோ சுமத்தி விடும் முனைப்பில் உள்ளது பாரதிய ஜனதா. பாரதிய ஜனதா மற்றும் அதன் அல்லக்கை ஊடகங்களின் மேற்படி முயற்சிகள் எல்லாம் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதை மறக்கடிக்கச் செய்யும் வகையில் இதை விட பெரிய “செய்திகளுக்காக” பாரதிய ஜனதாவும் அதன் ஊதுகுழல்களும் தவமிருந்து வருகின்றனர். வழக்கமான இருகோடுகள் தத்துவம் தான்.

எப்படியாயினும், இந்த ஊழல் எப்படி நடந்தது என்பதையும், யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும், பலனடைந்தவர்களைக் குறித்தும் நாம் விளக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பீரோ புல்லிங் உள்ளிட்ட திருடர்களின் “திறமைகளை” அறிந்து கொள்வது திருட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கு முன் நிபந்தனை அல்லவா?

குற்றம் நடந்தது எப்படி?

நீரவ் மோடி தன் மனைவியுடன், அவர் தம்பி நீஷல் மோடி தன் மனைவியுடன்

நீரவ் மோடி ஒரு வைர வியாபாரி. நீரவ் மோடி, அவரது மனைவி ஏமி, சகோதரர் நீஷல் மோடி மற்றும் இவர்களது மாமா மேகூல் சோக்சி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து டையமண்ட் ஆர் யு.எஸ், சோலார் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டெல்லார் டையமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தனர்.

இவை தவிற பையர்ஸ்டார் டையமன்ஸ் எனும் நிறுவனம் ஒன்றைச் சொந்த முறையில் துவங்கி நடத்தி வந்த நீரவ் மோடி, தில்லி, மும்பை, நியூயார்க், ஹாங்காங் உள்ளிட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 16 பெரு நகரங்களில் வைரக் கடைகளை நடத்தி வருகிறார். நீரவ் மோடியின் மாமா மெகூல் சோக்சி கீதாஞ்சலி குழுமம் எனும் பெயரில் வைர வியாபாரம் செய்து வருகிறார். நீரவ் மோடியின் இளைய சகோதரர் நீஷல் மோடி அம்பானி சகோதரர்களின் மருமகளைத் திருமணம் முடித்துள்ளார் (அம்பானிகளின் சகோதரி மகள்).

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 85-வது இடத்தில் உள்ள நீரவ் மோடியின் சொத்து மதிப்பு 11,245 கோடிகள் (இம்மாதம் 15ம் தேதிக் கணக்குப் படி). 48 வயதாகும் நீரவ் மோடி வளர்ந்ததும் படித்ததும் பெல்ஜியத்தில். 2008ம் ஆண்டு வைர நகை வடிவமைப்புத் தொழிலைச் சிறிய அளவில் துவங்கும் நீரவ் மோடி, 2010ம் ஆண்டு வங்கி வலைப்பின்னல்களிலும் அவற்றின் விதிமுறைகளிலும் உள்ள ஓட்டைகளைக் குறித்து அறிந்து கொள்கிறார்; இதன் பின்னர் தான் இவரது அபரிமிதமான வளர்ச்சியை அடைகிறார்.

நீரவ் மோடி கண்டுபிடித்த வங்கி விதிமுறைகளில் உள்ள ஓட்டைகள் என்ன?

முதலில் வங்கி உத்திரவாதப் பத்திரம் (Letter of Undertaking) என்பது ஒரு வங்கி தனது வாடிக்கையாளருக்காக இன்னொரு வங்கிக்கு அளிக்கும் உத்திரவாதம். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய வங்கி உத்திரவாதப் பத்திரங்களையே அதிகம் நாடுகின்றனர். உதாரணமாக நீங்கள் வெளிநாட்டில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் உங்களது வங்கி அந்தப் பொருளின் மதிப்புக்கு இணையான உத்திரவாதப் பத்திரத்தை வழங்கும். அந்த பத்திரத்தை நீங்கள் வெளிநாட்டில் யாரிடம் இருந்து பொருள் வங்குகின்றீர்களோ அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு அனுப்புவீர்கள்.

அந்த நாட்டில் உள்ள உங்களின் வங்கிக் கிளைக்கு அந்த உத்திரவாதப் பத்திரம் (உங்களுக்குப் பொருள் விற்பவரின் வங்கி) அனுப்ப்பட்டு பணமாக மாற்றிக் கொள்ளப்படும். இப்போது உங்களுக்குப் பொருள் விற்பவரின் வங்கிக் கணக்குக்கு பணம் வந்த பின் உங்களது பொருளை அவர் ஏற்றுமதி செய்வார் – நீங்கள் இறக்குமதி செய்து கொள்வீர்கள். கச்சாப் பொருளைப் பெற்றுக் கொண்ட நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அதைக் கொண்டு பிற பொருட்களை உற்பத்தி செய்து மறுவிற்பனை செய்து விட வேண்டும் (வைரம், மற்றும் அபூர்வ கற்களுக்கு 90 நாட்கள் வரை கால அவகாசம் உண்டு). விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில் உங்களது லாபத்தை எடுத்துக் கொண்டு கச்சாப் பொருளை இறக்குமதி செய்வதற்கு உத்திரவாதப் பத்திரம் வழங்கிய வங்கிக்கு உரிய பணத்தைச் செலுத்தி விடவேண்டும். இந்த இடைப்பட்ட 90 நாட்களுக்கு உங்களுக்கு வழங்கப்பட்ட உத்திரவாதப் பத்திரத்தின் மதிப்புக்கு இணையான தொகையை நீங்கள் அதே வங்கியில் பிக்சட் டெப்பாசிட்டாக இருப்பு வைத்திருக்க வேண்டும்.

இப்படி உத்திரவாதப் பத்திரங்களுக்கு இணையான தொகையை பிக்சட் டெப்பாசிட்டாக வைத்திருப்பதில் வர்த்தகருக்கு என்ன லாபம்? முதலில் குறைந்த வட்டிக்கு அந்நிய செலாவாணி கிடைக்கிறது. இரண்டாவது பிக்சட் டெப்பாசிட்டில் உள்ள பிணைத் தொகை பின்னர் வட்டியுடன் திரும்ப வந்து விடும். அடுத்து இம்முறையில் இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடுவதில் பாதுகாப்பும் உள்ளது – தனது வாடிக்கையாளர் ஏமாந்து விடாமல் இருப்பதில் வங்கிகளுக்கும் அக்கறை இருக்குமல்லவா? எனவே சட்டரீதியான பாதுகாப்பை வங்கியின் தரப்பில் இருந்து உறுதி செய்து கொடுப்பார்கள்.

அடுத்து வங்கிகளுக்குள் உத்திரவாதப் பத்திரங்கள் பரிமாற்றம் நடப்பது தொடர்பான விவரங்கள் SWIFT (Society for worldwide Interbank financial telecommunications) என்கிற முறையில் மேற்கொள்ளப்படும். வங்கியின் பொதுவான பணப்பரிவர்த்தனைகள் மைய வங்கிப் பரிவர்த்தனை முறையின் (Core Banking system) கீழ் மென்பொருட்களாலும் இணையத்தின் வழி இணைக்கப்பட்ட கணிணிகளாலும் செயல்படுத்தப்படுகின்றது. பெரும்பாலான வங்கிகள் ஸ்விப்ட் முறையிலான பணப்பரிவர்த்தனைகளை மைய வங்கிப் பரிவர்த்தனை முறையோடு இணைத்துள்ளனர் – பஞ்சாப் தேசிய வங்கியில் அவ்வாறு இணைக்கப்படவில்லை.

இதை அறிந்து கொண்ட நீரவ் மோடி கும்பல், பஞ்சாப் தேசிய வங்கியின் நடைமுறைகளில் இருந்த ஓட்டைகளை திறமையாகப் பயன்படுத்திக் கொண்டது. பொதுவாக சிவிப்ட் முறையில் நடக்கும் பரிவர்த்தனைகள் நான்கு அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறும்.

பரிவர்த்தனையைத் துவங்கி வைப்பவர் (Maker) : ஒரு பரிவர்த்தனை நடப்பதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் கோரிக்கை மனுவைப் பெற்று அதனைத் துவங்குபவர்.

பரிவர்த்தனையை சோதிப்பவர் (Checker) : இவர் ஸ்விப்ட் முறையிலான பரிவர்த்தனைக்கு வந்துள்ள கோரிக்கையை சோதித்து அனுமதிப்பவர்.

பரிவர்த்தனையை அங்கீகரிப்பவர் (Authorizer) : இவர் ஸ்விப்ட் முறையில் நடக்கும் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிப்பவர்

தகவல் பெறுபவர் (receiver) : வெளிநாட்டில் உள்ள வங்கிகள் தமக்கு வந்து சேர்ந்த கோரிக்கைகள் குறித்தும் அவற்றின் பண மதிப்பு குறித்தும் ஸ்விப்ட் முறையில் (ஸ்விப்டுக்கான பிரத்யேக இணையத் தொடர்பின் வழியாக) அனுப்பும் தகவல்களைப் பெறுகிறவர். பொதுவாக இவ்வாறு தகவல் பெறுபவரின் கணினி உயர் பாதுகாப்பு வளையத்தினுள் (High Security Zone) இருக்கும். ஸ்விப்ட் வலைப்பின்னல் தவிர பிற இணைய இணைப்புகள் இந்த கணினிக்கு மறுக்கப்பட்டிருக்கும்.

நீரவ் மோடி, இந்த பரிவர்த்தனையைக் கையாளும் அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து வளைத்துள்ளார். மேலும், வங்கிகள் வழங்கும் உத்திரவாதப் பத்திரங்களுக்கு இணையான வைப்புத் தொகையையும் அவர் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளார். அடுத்து ஒவ்வொரு குறிப்பிட்ட கெடு காலத்திற்குப் பின்னும் முந்தைய தொகையை அடைப்பதற்கு பதில் அதை விட அதிக மதிப்பு கொண்ட உத்திரவாதப் பத்திரங்களை வாங்கி அவற்றைப் பணமாக மாற்றியுள்ளார். இந்த வகையில் நீரவ் மோடி வாங்கிய உத்திரவாதப் பத்திரங்களின் எண்ணிக்கை – 293.

இப்போது சில கேள்விகள் எழுகின்றன.

நீரவ் மோடி என்கிற தனிநபர், ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை பார்த்த சில அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு கொள்ளையடித்துள்ளார். இதில் அரசாங்கத்தின் பங்கு எங்கே வருகின்றது? மோடியை ஏன் குற்றம் சாட்ட வேண்டும்?

நீமோ(நீரவ் மோடி) ”நமோ”வுடன்

கொள்ளையின் மதிப்பு சுமார் இருபதாயிரம் கோடிக்கும் அதிகம் என்பதால் இதைச் சாதாரண திருட்டாக சுருக்கி விடமுடியாது. வெறும் பத்து அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இருபதாயிரம் கோடிக்கும் அதிகமாக சுருட்டியிருக்கவும் முடியாது. ஒவ்வொரு நாளின் இறுதியிலும்(EOD Process), ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும், ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வங்கிகள் உள்ளிட்டு எல்லா நிதிநிறுவனங்களிலும் வரவு செலவுகள் தணிக்கை செய்யப்படும். மிக கறாராக செய்யப்படும் இந்த தணிக்கை நடைமுறையில் இருந்து பத்து ரூபாய் கூட தப்பிக்க முடியாது எனும் போது கடந்த பல மாதங்களாக ஆயிரக்கணக்கான கோடிகளை யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் ஒருவரால் திருட முடியாது.

எல்லா வங்கிகளின் பரிவர்த்தனைகளும் மத்திய ரிசர்வ் வங்கியின் கவனத்தின் கீழும், பெருமளவில் நடக்கும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் தான் நடக்க முடியும். இத்தனை துறைகள் மற்றும் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஆட்டையைப் போடுவதற்கு இது பேருந்தில் ஐந்து பத்துக்கு நடக்கும் ஜேப்படி திருட்டல்ல. பிரதமரே கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் இவ்வளவு பெரிய திருட்டைச் செய்தவர் அத்தனை சுலபத்தில் கலந்து கொள்ளவும் முடியாது. பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரின் மொத்த ஜாதகத்தையும் தோண்டித் துருவிய பின்னரே பிரதமர் அலுவலகம் அனுமதிக் கடிதமே வழங்கும் – நீரவ் மோடிக்கு அப்படி ஒரு அழைப்பு கிடைத்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் பஞ்சாப் தேசிய வங்கி ஹெச் ராஜா நடத்தி ஊத்தி மூடிய சீட்டுக் கம்பெனி அல்ல. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் ஸ்விப்ட் முறையிலான பரிவர்த்தனையும் மைய வங்கிப் பரிவர்த்தனை முறையையும் இணைக்காமல் விட்டது ஏன் என்பதற்கும், அவ்வாறு விட்டதால் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக கொள்ளைப் புற கதவுகளைத் திறந்து வைத்தது ஏன் என்பதையும் மத்திய நிதியமைச்சகம் விளக்க வேண்டும்.

எனவே இது இன்னும் ஒரு சாதாரண திருட்டல்ல. இந்திய வங்கித்துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மாபெரும் கொள்ளை. இந்தக் கொள்ளைக்கு பொறுப்பேற்க வேண்டியது மத்திய பாரதிய ஜனதா அரசு தான்.

 

ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

1

க்கிப் புயல் பாதிப்பின் தீவிரத்தை; அரசின் அலட்சியமும், பாராமுகமும் ஏற்படுத்திய பேரழிவின் ஆழத்தைப் பேசும், ‘கண்ணீர்க் கடல்’ என்ற திரைச் சித்திரத்தை ‘வினவு’ தயாரித்து உள்ளது. இது, சென்னை, வடபழனி, ஆர்.கே.வி. ப்ரிவியூ அரங்கில் டிசம்பர் 25 -ம் தேதி திரையிடப்பட்டது. 250 -க்கும் அதிகமானோர் அரங்கு முழுவதும் நிறைந்திருந்த நிலையில், ஆவணப்படம் ஏற்படுத்திய பாதிப்பை ஒவ்வொருவரின் முகத்திலும் உணர முடிந்தது.

சோகம், ஏமாற்றம், கையறு நிலை, கோபம்… என ஒவ்வொருவரும் ஓர் உணர்ச்சிநிலையில் இருந்தனர். திரையிடல் நடைபெறும்போதே அரங்கின் உள்ளே அழுகை ஒலிகளும், கண்ணீர்த் துளிகளும் நிறைந்திருந்தன. அதனைத் தொடர்ந்து, மீனவ இளைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்ற உரையாடல் நடைபெற்றது.

குமரிக் கரையில் அரபிக் கடலோரத்தில் உள்ள வள்ளவிளை, சின்னத்துறை, தூத்தூர், நீரோடி உள்ளிட்ட எட்டு கிராமங்கள் பாரம்பரிய ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பெயர்பெற்றவை. ஒக்கி புயலால் நூற்றுக்கணக்கான மீனவர்களை இழந்திருப்பதும் இந்த கிராமங்கள்தான். இதில் வள்ளவிளையில் இருந்து ஆல்பர்ட், டிக்சன் என்ற இரண்டு இளைஞர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் பத்திரிகையாளர் ரகுமான், ம.க.இ.க. பொதுச் செயலாளர் மருதையன் ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று வந்த பத்திரிகையாளர் பாரதி தம்பி இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

*****

ன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று வகையான மீன்பிடி முறைகள் இருக்கின்றன. ஒன்று, பகல் 3 மணிக்கு கிளம்பிச் சென்று காலை 3 மணிக்குத் திரும்பி வருவது. அடுத்தது, காலை 3 மணிக்கு கிளம்பி அதே நாள் மாலைக்குள் திரும்பி வருவது. மூன்றாவது பிரிவினர் ஆழ்கடல் மீன்பிடிப்பவர்கள். இவர்கள் இன்றைக்கு கிளம்பினால் எப்போது திரும்பி வருவார்கள் என்பதே தெரியாது. நான்கு நாட்கள் முதல் அதிகபட்சம் 50 நாட்கள் கூட ஆகலாம்.

நவம்பர் 29 -ம் தேதி இரவு புயல் அடித்தது. அன்று மாலை 3 மணிக்கு கிளம்பியவர்கள் கடலுக்குள் சென்றுவிட்டார்கள். வானிலை ஆய்வு மையம் புயல் அறிவிப்புக் கொடுத்தது நவம்பர் 30 -ம் தேதிதான். ஒரு நாள் முன்பாக சொல்லியிருந்தால், குறைந்தபட்சம் அன்றைய பகலில் கடலுக்குச் சென்றவர்களையேனும் காப்பாற்றியிருக்க முடியும்.

இவற்றை விளக்கிய ஆல்பர்ட், “முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல… அதன்பிறகும் என்ன செய்வது என்று இவர்களுக்குத் தெரியவே இல்லை. அந்த சமயத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அவரிடம் நாங்கள் மீனவர்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ள சில ஜி.பி.எஸ். பொசிசன்களை கொடுத்தோம். அது அதிகபட்சம் 720 நாட்டிகல் மைல் தூரம் இருந்தது. இது நிச்சயம் ஹெலிகாப்டரால் சென்று வரக்கூடிய தூரம்தான். ஒரு ஹெலிகாப்டரின் அதிகபட்ச வேகம் 200 நாட்டிக்கல் மைல். நான்கு மணி நேரத்தில் போகக்கூடிய தூரம். ஆனால், இவர்கள் ஹெலிகாப்டரை வைத்துக்கொண்டு, எங்கள் பார்வையில் படும்படி கடலின் ஓரப்பகுதியையே சுற்றிச்சுற்றி வந்தார்கள்.

இரண்டாவதாக, அமைச்சர் எங்கள் ஊரில் இருந்த சமயத்தில் புயலின் மையப்பகுதி (epicentre) லட்சத்தீவுக்கும், கொச்சினுக்கும் இடையே 13 டிகிரி அட்சரேகை பகுதியில் நிலைகொண்டிருந்தது. கரையை கடந்திருக்கவில்லை. மீனவர்களை மீட்க கப்பல் அனுப்புவதாக சொன்ன அமைச்சரிடம், ‘அந்தக் கப்பலை மகாராஷ்டிராவில் இருந்தோ, கோவாவில் இருந்தோ அனுப்புங்கள். ஏனெனில் மீனவர்கள் சிக்கியுள்ள பகுதி அங்கிருந்து 500 நாட்டிக்கல் மைல் தூரம்தான். மாறாக, கொச்சினில் இருந்து கப்பல் அனுப்பினால், அது 1000 நாட்டிக்கல் மைல் தொலைவு வரும். சரிபாதி தூரமும், நேரமும் குறையும்’ என்று சொன்னோம். ஆனால் அமைச்சரோ, ‘மீட்புப் பணிக்கு கப்பல் அனுப்ப வேண்டும். அதை எங்கிருந்து அனுப்பினால் உங்களுக்கு என்ன?’ என்று கேட்டார்.

ஆல்பர்ட்

நாங்கள் சொன்ன பகுதியில் இருந்து கப்பல்களை அனுப்பி இருந்தால், புயல் அவர்களை நெருங்கும் முன்பே மீட்டிருக்க முடியும். அதைத்தான் செய்யவில்லை என்றால், புயல் சென்ற பாதையிலேயே பின் தொடர்ந்து செல்லுங்கள் என்று சொன்னோம். ஒன்று புயலுக்கு முன்னே செல்ல வேண்டும். இல்லை என்றால் பின்னே வேண்டும். இதுதான் மீனவர்களை மீட்பதற்கு வழி. ஆனால் நிர்மலா சீதாராமன் நாங்கள் சொன்ன எதையும் காதுகொடுத்தும் கேட்கவில்லை’’ என்று ஆல்பர்ட் விவரித்தபோது அரசின் அலட்சியமும், திமிர்த்தனமும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டன.

“சாலையில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவரை யாரோ சிலர் காப்பாற்றாமல் போனால், அது அவர்களின் சுயநலம். அதுவே, ஒரு ஆம்புலன்ஸுக்கு போன் செய்து சொல்லி, ‘போக்குவரத்து நெரிசல். வர முடியாது’ என்று ஏதோவொரு நொண்டிச்சாக்கு சொல்லி மறுத்து, அதன் காரணமாக உயிர் போகிறது என்றால், அதை விபத்து என்று சொல்வதா, கொலை என்பதா? ஒக்கி புயலில் நடந்ததும் இதுதான். எங்கள் மீனவ மக்களை இந்த அரசு இயற்கை சீற்றம் என்ற பெயரால் இனப்படுகொலை செய்திருக்கிறது” என்கிறார் ஆல்பர்ட்.

புயல் முடிந்து 10 நாட்கள் கழித்து, கரைக்குத் திரும்ப வருமாறு மீனவர்களுக்கு அறிவிப்பு விதமாக ஒரு ஆடியோ அறிவிப்பை ஹெலிகாப்டர் மூலம் கடலுக்குள் சென்று ஒலிபரப்பியது கடலோர காவல்படை. கரையிலிருந்து வயர்லெஸ் கிடைக்காது என்பதால் இப்படிச் செய்தார்கள். இதை நவம்பர் 29 -ஆம் தேதியே செய்திருந்தால், கிட்டத்தட்ட அனைத்து மீனவர்களையுமே காப்பாற்றியிருக்க முடியும் என்கிறார்கள் ஆல்பர்ட்டும், டிக்சனும்.

“பொதுவாக ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள், பத்து பதினைந்து படகுகள் சேர்ந்து ஒரு கூட்டாகத்தான் கடலுக்குள் செல்வார்கள். ஒரு படகின் வயர்லஸ் வரம்புக்குள்தான் இன்னொரு படகு இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். ஒரே ஒரு படகுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால், அடுத்தடுத்த படகுகளுக்கு உடனடியாகத் தகவல் சென்று சேர்ந்திருக்கும். அவர்கள் அருகில் உள்ள கரை பகுதியை நோக்கி விரைந்திருப்பார்கள். மிக அதிகபட்சமான மீனவ உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்’’ என அவர்கள் விவரிக்க, விவரிக்க… இது இயற்கை பேரழிவு அல்ல; அரசே செய்த படுகொலைகள் என்பதை அரங்கில் இருந்த ஒவ்வொருவரும் உணர்ந்தனர்.

“கோஸ்ட் கார்டு எங்களில் சிலரையும் மீட்புப் பணிக்கு அழைத்துச் சென்றது. நானும் அதில் சென்றேன். ஆனால், அதிகபட்சம் 50 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு மேல் அவர்கள் போக மறுத்துவிட்டார்கள். எங்கள் மீனவர்கள் தொழில் செய்வதோ குறைந்தது 200 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால். அப்படியிருக்க 50 நாட்டிக்கலில் தேடி என்ன கிடைக்கும்? அதில் ஒரு கோஸ்ட் கார்டு அதிகாரி சொன்னார், ‘நாங்கள் இப்போதுதான் இவ்வளவு தொலைவுக்கே வந்திருக்கிறோம். இதுவரை இங்கெல்லாம் வந்ததே இல்லை’ என்றார். அப்போதுதான் இவர்களால் உடைந்த ஒரு வள்ளத்தின் பலகையை கூட மீட்க முடியாது என்பதை தெரிந்துகொண்டோம்’’ என்று கோஸ்ட் கார்டின் லட்சணத்தை விளக்கினார் மீட்புப் பணிக்குச் சென்றுவந்த டிக்சன். “ஐம்பது நாட்டிகல் என்பது எங்கள் மீனவர்கள் சாதாரணமாக ஃபைபர் படகில் சென்று வரும் தூரம்தான்” என்று அவர் சொன்னவுடன் அரங்கமே கைகொட்டிச் சிரித்தது.

டிக்சன்

ஆனால், அரசோ தாங்கள் துரிதமாகவும், சிறப்பாகவும் மீட்புப் பணிகளைச் செய்து வருவதாகப் பச்சைப் பொய்களை முதல் நாளில் இருந்து சொல்லிவந்தது. “எல்லா கப்பல்களிலும் voyage data recorder என்றொரு கருவி இருக்கும். ஒருவேளை அரசு சொல்வதைப் போல அவர்கள் மீனவர்களைக் காப்பாற்றியது உண்மையாக இருந்தால், எந்த அட்சரேகை, தீர்க்கை ரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அவர்கள் மீனவர்களை மீட்டார்கள் என்ற “பொசிசன்” அந்த கருவியில் நிச்சயம் பதிவாகி இருக்கும். அந்தப் பதிவுகளை வெளியிட அரசு தயாரா? நாங்கள், எத்தனை மீனவர்களை, எந்த இடத்தில் காப்பாற்றினோம் என்பதற்குத் துல்லியமான பொசிசன்களை தருகிறோம். அரசு தருமா?’’ என்று கோபத்துடன் கேட்டார் ஆல்பர்ட்.

இன்னமும் வள்ளவிளையில் இருந்து மட்டும் 67 பேர் கரை திரும்பவில்லை. அதில் தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம் வரை பல மாநிலங்களிலிருந்து வந்த மீனவர்கள் உண்டு. குமரி மீனவர்களின் படகுகளில், ஒரு படகுக்கு ஓரிருவராக ஏராளமான வட இந்தியத் தொழிலாளர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை; பெயர் விவரம் எதுவும் யாரிடமும் இல்லை.

“எங்க ஊர் படகுகள் சிலவற்றுக்கு அரசு distress alert transmitter எனப்படும் கருவியை வழங்கியது. ஆபத்து காலங்களில் அந்த கருவியை அழுத்தினால் அதில் இருந்து மீன்வளத்துறைக்கு சிக்னல் போகும். அவர்கள் ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க வேண்டும். ஒக்கி புயலில் சிக்கிய 123 படகுகள் அந்தக் கருவியை அழுத்தியிருக்கிறார்கள். ஒரு சிக்னல் கூடவா மீன்வளத் துறைக்கு வரவில்லை? யாரேனும் அதைத் தவறுதலாக அழுத்திக் கடற்படையை அலையவிட்டால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று விதியெல்லாம் வைத்திருக்கிறார்கள்’’ என்று நமது அரசின் அணுகுமுறையில் உள்ள அலட்சியத்தையும், புறக்கணிப்பையும், திமிரையும் சுட்டிக்காட்டினார் ஆல்பர்ட்.

இலங்கைக்கும்,கன்னியாகுமரிக்கும் இடையில் மீன்வளம் நிறைந்த wedge bank பகுதியில் முன்பு குமரி மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இப்போது அங்கு மீன்பிடிக்கும் உரிமையை வெளிநாட்டு கப்பல்களுக்கு நம் அரசு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது. இப்போது நம் படகுகள் அங்கு போக முடியாது. ஆகவே, வேறுவழி இல்லாமல் மீனவர்கள் ஆழ்கடலை நோக்கி விரட்டப்படுகின்றனர்.

மேலும், இலங்கையில் மீனவர்களுக்கு சாட்டிலைட் போன் பயன்படுத்த அனுமதி உள்ளது. ஆனால், இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களை சொல்லி அது மறுக்கப்படுகிறது. “நாங்கள் கேட்பது இருவழித் தகவல் தொடர்பு அல்ல. ஒரு வழி தகவல் தொடர்புள்ள சாட்டிலைட் போன் பயன்படுத்த அனுமதி வழங்கினால் போதும். அதை வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று கேட்கிறார் ஆல்பர்ட்.

பத்திரிக்கையாளர் பாரதி தம்பி

மீனவர்களின் இத்தகைய பிரச்னைகளைப் பேச வேண்டிய ஊடகங்களும், அரசும் இழிவான முறையில் அவற்றை இருட்டடிப்பு செய்ததுடன் ஆபாசமான முறையில் அரசுக்கு விளம்பரம் செய்தன. சென்னை மழை வெள்ளத்தில் மக்கள் கொடுத்த நிவாரணப் பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட ‘ஜெயலலிதா லெகசி’யில் வந்தவர்கள், ஒக்கி புயலில் தாங்களாகவே நீந்திக் கரை சேர்ந்த மீனவர்களை அரசுதான் மீட்டது என்று வெட்கமே இல்லாமல் சொன்னார்கள். அதை அப்படியே ஊடகங்கள் வாந்தி எடுத்தன.

“ஒரு ஹெலிகாப்டரில் நான்கு மீனவர்கள் மீட்கப்படும் ஒரே ஒரு வீடியோ காட்சியை 10 நாட்கள் மீண்டும், மீண்டும் ஊடகங்கள் ஒளிபரப்பின. ராபிட்சன் என்பவர் மூன்று இரவு, மூன்று பகல்கள் நீந்தி லட்சத்தீவில் கரையேறினார். மருத்துவமனையில் கண்விழித்துப் பார்த்தபோது அவரையும், அவருடன் நீந்தி கரை சேர்ந்தவர்களையும் கடலோர காவல்படை மீட்டு சிகிச்சை அளித்து வருவதாக செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது’’ என்கிறார் ஆல்பர்ட்.

ஆழக்கடலில் நிராதரவாக கைவிடப்பட்ட அந்த இளைஞர்களுக்கு மரணத்தை விடக் கொடிய வலி அந்தப் பொய்தான். ராபிட்சன், தான் மட்டும் நீந்தி வரவில்லை. தன்னுடன் ஓர் உடலையும் இணைத்துக் கட்டிக்கொண்டு மூன்று நாட்கள் நீந்தி வந்திருக்கிறார். உணவில்லை; நீர் இல்லை; துளி உறக்கம் இல்லை; பகல் எல்லாம் உப்புக்கத்தியாய் குத்தும் கொடும்வெயில்; இரவெல்லாம் கடுங்குளிர்; இரவும், பகலும் முகத்தில் அடிக்கும் அலைகடல். ஒரு நொடி கூட இடைவெளி விடாமல் நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். கண்காணா தூரத்தில் இருக்கும் கரையை நோக்கி நீந்தும் பொழுதில், ‘யாரேனும் ஒருவர் மீட்க வந்துவிட மாட்டாரா?’ என ஒவ்வொரு கணமும் எவ்வளவு எதிர்பார்த்திருப்பார்கள்? கரையில் தவிக்கும் மனைவி, பிள்ளைகளை எண்ணி எவ்வளவு மனம் கலங்கியிருப்பார்கள்? உடன் நீந்தி வந்தவர்கள் ஒவ்வொருவராய் கண் முன்னே மடிந்து வீழும்போது மனதைச் சூழும் அச்சத்தையும், அவலத்தையும் என்னவென்று அழைப்பது?

இத்தகைய நிலையிலும், தன் உடன் வந்த ஒரு மீனவனின் உடலைச் சுமந்துகொண்டு மூன்று இரவும், மூன்று பகலும் நீந்தி ஒரு மீனவர் கரை சேர்ந்திருக்கிறார் என்றால்…. அந்த மன உறுதியும், உடல் வலுவும், சக தொழிலாளி மீதான நேசமும், ஆழ்கடல் மீன் பிடிப்பு எனும் கூட்டு உழைப்பு அளித்த பரிசுகள். “வைராக்கியமா கரையில வந்து நின்னு, அரசாங்கத்தை வெட்கப்பட வைக்கனும்னு நினைச்சேன்” என்று ஒரு மீனவர் சொன்னார். ஆனால் அரசோ, வெட்கம், மானம் எதுவுமின்றி பேரிடர் காலங்களை ஆதாயத்துக்கான வாய்ப்பாகப் பார்க்கிறது.

பத்திரிக்கையாளர் ரகுமான்

“இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ‘சாகர் மாலா’ப் ‘பாரத் மாலா’ ஆகிய இரண்டு திட்டங்களின் மூலம், தனியார் துறைமுகங்கள், சரக்கு பெட்டக முனையங்கள் (container terminals), அனல் மின் நிலையங்கள், அனு மின் நிலையங்கள்… போன்றவற்றைக் கொண்டு வருவது அரசின் திட்டம். இவை எல்லாம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்கள். இவை போக, கடற்கரையோரப் பகுதிகளை, குறிப்பாக குமரி மற்றும் கேரள கடலோரப் பகுதிகளை சுற்றுலாவுக்காக திறந்துவிட வேண்டும் என்பது அரசின் திட்டம். தாஜ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் சொகுசு நட்சத்திர விடுதிகளைக் கட்டுவதற்காகக் காத்திருக்கிறார்கள். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ஒக்கி புயலில் மீனவர்கள் மீதான அலட்சியமும், புறக்கணிப்பும் தற்செயல் நிகழ்வு என்று கருத இடமில்லை. இது திட்டமிட்டுதான் நடந்திருக்கிறது. மீனவர்களைக் கடற்புறத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கம் இதன் பின்னே இருக்கிறது” என்கிறார் ம.க.இ.க. பொதுச் செயலாளர் மருதையன்.

இந்த கருத்தை ஆமோதித்துப் பேசிய பத்திரிகையாளர் ரகுமான், “மீனவர்களை வெளியேற்றிவிட்டு கடல்வளம் முழுவதையும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்குத் திறந்து விடுவதுதான் இவர்கள் நோக்கம். மீனவர்களின் துயரம் அரசின் மனசாட்சியை உலுக்கவில்லை. மீனவர் துயரம் மட்டுமல்ல… கந்துவட்டி கொடுமையில் நெல்லையில் 4 பேர் உடல் கருகிச் செத்துப்போனார்களே.. அது இரக்கம் உள்ள யாருடைய மனதையும் உலுக்கிவிடும். ஆனால், அதுவும் இந்த அரசின் மனசாட்சியை உலுக்கவில்லை.’’ என்றார்.

தென்முனை கடலோரத்தின் சோகம் இன்னும் தீரவில்லை. அவர்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் என்றேனும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் அரபிக்கடலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஏக்கமாகவும், ஆற்றாமையாகவும் மட்டும் இல்லை. அதன் அடியாழத்தில், தங்களை மரணத்தை நோக்கித் தள்ளிய அரசுக்கு எதிரான கோபம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.

அந்த கொந்தளிப்பு விவசாயிகளின் கோபத்துடன்; தொழிலாளர்களின் எதிர்ப்புடன் இணையும்போது, அவர்கள் ஒக்கியை விடவும் வேகமாக இந்த அரசை திருப்பித் தாக்குவார்கள்.

-வினவு செய்தியாளர்.

புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

திருவாரூர் கடம்பங்குடி ஓ.என்.ஜி.சி. காண்ட்ராக்டரை விரட்டிய பொதுமக்கள் !

திருவாரூர் கடம்பங்குடி கிராமத்தில் தொடங்கவிருக்கும் ONGC பணிகளுக்கு எதிராக போராடிய தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது அரசு.

அவர்களுக்கு பிணை மனுவில் ஆஜராக தஞ்சாவூர் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் 4 பேரும் கும்பகோணம் வழக்கறிஞர்கள் 3 பேரும் நாகையிலிருந்து ஒரு வழக்கறிஞரும் ஆஜராகிவிட்டு பின்னர் ஊர் மக்களை சந்திக்கலாம் என்று கடம்பங்குடி கிராமத்திற்கு சென்றோம்.

அதே நேரத்தில் முன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்ததால் எளிதாக பணிகளை தொடங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் ஜே.சி.பி. எந்திரத்துடன் கான்ட்ராக்டர் ஊருக்குள் வந்து பணிகளை தொடங்கியிருந்தார். இதனை அறிந்த ஊர்மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அவர்களை முற்றுகையிட்டு போராடிக் கொண்டிருந்தனர்.

சரியாக அந்த நேரத்தில் நாங்கள் அங்கு சென்றதும் ஊர் மக்கள் மேலும் உற்சாகத்துடன் அவர்களை வெளியேற சொல்லி கெடு விதித்தனர். அந்த ஒப்பந்தக்காரர் தான் மாபெரும் யோக்கியன் என்றும் அரசு ஆணைபடி செயல்படுவதாகவும் பசப்பலாக பேசினார். மக்கள் சார்பில் நாங்கள் (வழக்கறிஞர்கள்) அவர்களிடம் பேசி இதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்கூறி உடனே வெளியேறும்படி கூறினோம். அவர்களும்  வேலையை நிறுத்திவிட்டு வெளியேறினர்.

அதன் பின்னர் அங்கிருந்த ஊர் மக்களிடம் அவர்களுக்கு ஆதரவாக ம.உ.பா.மையம் துணை நிற்கும் என்றும் அஞ்சாமல் போராடும் படியும் போராட்டம் ஒன்றே தீர்வு என்றும் எடுத்துக் கூறினோம்.

ஏற்கனவே வீரமிக்க போராட்டத்திற்கு தயாராக இருந்த மக்கள் உங்கள் உதவியிருந்தால் போதும் இந்த போராட்டத்தில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறினர்.

( படங்களைப்  பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 2000 நோயாளிகள் 2 மருத்துவர்கள் !

0

வேதாரண்யம் அரசு மருத்துவமனையைக் கண்டித்தும், செயல்படாத டெட்பாடி அரசை எதிர்த்தும் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணிக்கு (03.02.18) ஆர்ப்பாட்டம் நடத்து திட்டமிட்டோம். அனைத்து வேலைகளும் முடித்த நேரத்தில் 02.02.2018 அன்று மாலையில் வழக்கம்போல் கா(ஏ)வல் துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வது என 140 க்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர். எதிர்பாராத விதமாகவே பொதுமக்கள் அணி திரண்டு வந்திருந்தது உற்சாகம் அளித்தது. மக்கள் அதிகார கொடிகளுடனும், பிளக்ஸ் உடனும் பேரணியாக செல்ல திடீர் முடிவு செய்து பேரணியை வேதாரண்யம் மேலவீதி பெரியார் சிலை அருகிலிருந்து தொடங்கினோம். காவல் துறைக்கே வியப்பூட்டும் வகையில் பொதுமக்கள் அணி திரண்டு இருந்தனர்.

அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், இப்பகுதியின் தலைமை மருத்துவமனையில் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இரு மருத்துவர்களே உள்ளனர். ஆகவே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும், நோயாளிகளாக வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களை திருவாரூர், நாகை என அலைய செய்து சிகிச்சை செய்ய மறுப்பது ஆகியவற்றை கண்டித்தும், இறந்தவர்களை கொண்டு செல்ல அமரர் ஊர்தி கூட இல்லாமல் சமீபத்தில் 9 கிலோமீட்டர் உடலை கைப்பாடையில் தூக்கி சென்ற அவலத்தை நீக்கி உடனடியாக ஆம்புலன்ஸ் (அமரர் ஊர்தி) ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், உரிய மருந்து மாத்திரைகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியில் வாங்க சொல்லி எழுதி கொடுப்பதும் என்ன கேவலம், இது அரசு மருத்துவமனையா இல்லை தனியார்  கிளினிக்கா என பல்வேறு முழக்கங்களுடன் பேரணி நடத்தப்பட்டது.

வட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்ததும் காவல் துறை அதிகாரிகள் பேரணிக்கு தலைமை வகித்த தோழர் தனியரசை வலுக்கட்டாயமாக கைது செய்ய முற்பட்டனர். மக்களும் தோழர்களும் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு மெகாபோனை பிடுங்கி வைத்துக் கொண்டது காவல்துறை. இதை பல பயணிகளும் அருகிலுள்ள பொது மக்களும் கவனித்தனர். தோழர் கிருஷ்ணமூர்த்தி காவல்துறையை எதிர்த்து ” எதுக்கு எங்கள மறைக்கிற? நாங்க பொதுவான விஷயத்துக்கு போராடுகிறோம். உங்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம்” என கேள்வி கேட்டதும் போலீஸ் கண்டுகொள்ளாமல் நின்றது.

95 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். தோழர் கிருஷ்ணமூர்த்தியை காவல் துறையினர் அதிகப்படியாய் பேசியபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது போலீஸ் பின் வாங்கியது.

கைது செய்து புஷ்பவனம் பெரியகுத்தகை பேரிடர் பாதுகாப்பு மையக்கட்டிடத்தில் தங்க வைத்தனர். 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் 70-க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர். தோழர் காளியப்பன் பொது மக்களிடம் மருத்துவமனை மற்றும் டெட்பாடி அரசின் கையாலாகாததனத்தையும், விமர்சித்து இந்த செத்த அரசை சுமக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கான உரிமைகளை பெற நாம்தான் போராட வேண்டும் என பேசினார்.

தோழர் வெங்கடேசன் மற்றும் வேதாரண்யம் வட்டார அமைப்பாளர், தோழர் தனியரசும் மக்களிடம் போராட்டத்தின்  அவசியம் அதன் நோக்கம் அமைப்பாக இருந்தால் மட்டுமே உரிமையை பெற முடியும். மக்களின் வாழ்வை செழுமையாக்க வேண்டிய அரசு பஸ் கட்டணத்தை அவர்கள் தலையில் சுமத்தி உள்ளது. இதுவா மக்களுக்கான அரசு என பேசினார்.

போலீஸ் பறித்து வைத்திருந்த மெகாபோனை திருப்பி ஒப்படைத்தால் மட்டுமே நாங்கள் பெயர் (ம) முகவரிகளை தருவோம் இல்லையேல் நாங்கள் பெயர் முகவரி கொடுக்க மாட்டோம் என தோழர்கள் காவல் துறைக்கு தெரிவிக்கவும் வேறு வழியின்றி  நம்மிடம் மெகாபோனை ஒப்படைத்தனர். அதிகாரம் மக்கள் கையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் என்னவெல்லாம் நாம் செய்ய முடியும் என மக்களுக்கு வெளிப்படுத்தியது இந்நிகழ்வு. மாலை 6 மணிக்கு தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மக்கள் அதிகாரம்
வேதாரண்யம் பகுதி

 

தன்னுரிமை காக்க தமிழகமே திரண்டெழு ! பிப். 27 சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

2

தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு ! – ஆர்ப்பாட்டம்

  • பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழைப் பயிற்று மொழியாக்கு !
  • அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு !
  • அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு !

நாள் : பிப் 27, 2018, காலை 11 மணி
இடம் : வள்ளுவர்கோட்டம், சென்னை.

*****

அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே!

காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை பறித்து, தமிழகத்தை கார்ப்பரேட்டுகள், பனியா – சேட்டுகள் சுரண்டும் வகையில் வஞ்சகமான தீர்ப்பை, உச்சநீதிமன்றத்தின் மூலம் திணித்திருக்கிறது மோடி அரசு.

காவிரியில் மட்டுமல்ல, தமிழக மருத்துவக் கல்லூரி களை ஆக்கிரமிக்க நீட் தேர்வு; விவசாயத்தை அழிக்க, இயற்கை வளங்களை சூறை யாட – மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் குழாய் பதிப்பு, சாகர்மாலா உள்ளிட்ட நாசா காரத்திட்டங்கள்; தமிழ்மொழி – பண்பாட்டை அழிக்க இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு. ஆரிய – பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு பாரம்பரியம் கொண்ட தமிழகத்தை பணிய வைக்க மோடி அரசு தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் மொழியை அழிக்க சமஸ்கிருதவாரக் கொண்டாட்டத்திற்கு ஆணையிட்ட மோடி, இப்போது சமஸ்கிருதத்தைவிட தமிழ்மொழி பழமையானது என்று கபட நாடகமாடுகிறார். பல தேசிய இனங்களின், மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழிப்பதும், பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநாட்டும் இந்தி – இந்து – இந்தியா எனும் ஒற்றை கலாச்சார நாட்டை கட்டியமைப்பதும்தான் ஆர். எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் உண்மையான நோக்கம். அதைத்தான் மோடி அரசின் வழியாக செய்து வருகிறது.

தமிழகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலய பள்ளிகளில் இந்தி – சமஸ்கிருதம் கட்டாயம்; இந்தியை திணிக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர திட்டம்; அரசு அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவர முயற்சி, தமிழர்களின் தொன்மை வரலாற்றை நிரூபிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சிப் பணியை ஊத்தி மூடுவது. கீழமை நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்கத் தடை.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காமல் தமிழை நீச பாசை என இழிவுபடுத்துகிறான் சங்கராச்சாரி. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயரைக்கூட சகித்துக் கொள்ளாமல் மாற்றிவிட்டது ஆர்.எஸ்.எஸ் – பார்ப்பனக் கும்பல்,

காவிரியில் தமிழகத்திற்கு நியாயமாக வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை குறைத்து தீர்ப்பெழுதுகிறது உச்சநீதிமன்றம்.

கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்க, ஆட்சியதிகாரத்தை தக்க வைத் துக்கொள்ள பல்லிளித்துக் கொண்டு தமிழகத்தின் உரிமையை பி.ஜே.பி யிடம் அடகு வைத்துவிட்டது இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் கிரிமினல் குற்றக் கும்பல்.

கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் அம்மாநில மொழியை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கி சட்டமியற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்திலோ, தாய்மொழித் தமிழை அழிக்க வரும் சமஸ்கிருதத்திற்கும் – இந்திக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது எடுபிடி எடப்பாடி அரசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நாடு முழுவதும் வேலையின்மை வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல் அச்சுறுத்துகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடி பேர் வேலையின்றி தெருவில் நிற்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று வாய்ச் சவடால் அடித்த மோடியோ இன்று பக்கோடா விற்கச் சொல்கிறார். ஒருபக்கம் சொந்த மாநிலத்தில் பிழைப்புக்கு வழியில்லாத வடமாநில இளைஞர்கள் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை குவிந்து வருகிறார்கள்.

மறுபக்கம், வி.ஏ.ஓ, டி.என்.பி.எஸ்.சி போன்ற தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் அகில இந்திய கோட்டா என்ற பெயரில் இந்தி பேசுபவர்கள் திட்டமிட்டே நுழைக்கப்படுகிறார்கள். இதைத்தான் அனைத்து மாநிலங்களிலும் செய்கிறார்கள். இப்படி, தேசிய இனங்களின் உரிமையை – மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து அனைத்தையும் மையப்படுத்துவது கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளைக்காகவே என்றாலும், இதன்மூலம் தனது பார்ப்பன மேலாதிக்கத்தையும் நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறது ஆரிய – பார்ப்பன கும்பல்.

இதை நாம் ஏன் சகித்துக் கொண்டு வாழ வேண்டும்?

இந்தியா என்பது தனி ஒரு தேசம் அல்ல, இந்து என்பது ஒரு மதமும் அல்ல. ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களால் இந்த மக்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் பலவந்தமாக உருவாக்கப்பட்டதுதான் இந்தியா என்ற நாடு. அவன் வைத்த பெயர்தான் இந்து மதம்.

அதற்கு முன்பு பல தேசிய இனங்கள், கலாச்சாரப் பிரிவுகள், பல்வேறு சமயப்பிரிவுகள், பல்வேறு பழங்குடி மக்கள் என பன்முகத்தன்மை கொண்ட தனித்தனி பிரிவுகளாகத்தான் இந்த பிராந்தியம் இருந்தது. ஏகாதிபத்தியங்கள் டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் (சேட்டுகளின்) ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் இந்தி – இந்து – இந்தியா எனும் பூணூலால் கட்டப்பட்டிருப்பதுதான் இன்றைய இந்தியா.

இது தேசிய இனங்களின் சிறைக்கூடம்; ஒடுக்கப்பட்ட மக்களின் வதைக்கூடம். அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய வல்லரசுகள் – பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் வேட்டைக்காக இந்த நாட்டை மறுகாலனியாக்குபவர்கள்தான் ‘தேசபக்த ஆர். எஸ்.எஸ் – பிஜேபி கும்பல்.

இந்த சேட்டுகள் – ஆரிய பார்ப்பனர்களின் கொடுங்கோன்மை ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு எல்லா தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த தேசிய இனத்தின் மொழியே ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற அலுவல் மொழியாக நிலைநாட்டப்பட வேண்டும். விரும்புகின்ற தேசிய இனங்கள் சமத்துவ அடிப்படையில் சேர்ந்து உருவாக்கப்பட வேண்டும் நாடு – இதுதான் சரி!

இந்த அடிப்படையில், நம்மை அடிமைத்தளையில் பிணைத்திருக்கும் இந்தி – இந்து – இந்தியா எனும் பூணூல் அறுத்தெறியப்பட வேண்டும். பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை தமிழகம் பெற வேண்டும்; இது ஒன்றுதான் ஒரே தீர்வு; நிரந்தரத் தீர்வு; பிற தீர்வுகள் எல்லாம் சமரசமும், சந்தர்ப்பவாதமும் ஆகும்.

அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய போதே ஆரிய – பார்ப்பன நச்சுப் பாம்பை நசுக்கி எறிந்திருக்க வேண்டும். தவறினோம், அடிவாங்கி தப்பித்த ஆரிய நச்சுப்பாம்பு பழிவாங்கும் வெறியோடு மீண்டும் படமெடுத்து ஆடுகிறது. இது நீண்ட காலம் நடந்து வரும் வரலாற்று ரீதியான போர். இம்முறையும் தவறினால் தமிழ்நாடு ஆரிய – பார்ப்பன கும்பலின் அடிமை நாடாக மாறிவிடும். எச்சரிக்கிறோம்.

எழுந்து வா! மாணவர், இளைஞர் பட்டாளமே! தன்னுரிமை பெற்ற தமிழகத்தை உயிரைக்கொடுத்தும் அடைவோம்!

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

தொடர்புக்கு :
நெ.41, பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல், சென்னை-95, தொலைபேசி : 94451 12675
மின்னஞ்சல்: rsyfchennai@gmail.com, முகநூல் பக்கம் : rsyf