Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 454

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

50

திருப்பூரை அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா, வயது 28. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவர் கார்த்திகேயன் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர்களுக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் கிருத்திகா இரண்டாவது முறையாக கருவுற்றுள்ளார். தமிழகத்தில் சமீபமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்சப் போன்ற ஊடகங்களில் பரவி வரும் ’இயற்கை வாழ்வியல்’ குறித்து இத்தம்பதியினருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது.

திருப்பூர் கிருத்திகா மரணம்
கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியினர்

இந்நிலையில் கார்த்திகேயனின் நண்பர் பிரவீன், தனது மனைவிக்கு இயற்கையான முறையில் மருத்துவ உதவி இன்றி வீட்டிலேயே சுக பிரசவம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். தனது மனைவிக்கு மட்டுமின்றி தனக்குத் தெரிந்த வேறு சிலருக்கும் வீட்டிலேயே இயற்கை முறையில் சுக பிரசவம் மேற்கொள்ள தான் உதவியதாகவும் தெரிவித்துள்ளார். கிருத்திகாவுக்கும் இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் செய்து கொள்ள தான் உதவுவதாக முன்வந்துள்ளார். ஏற்கனவே ’இயற்கை’ முறைகளின் மேல் ஆர்வம் கொண்ட கார்த்திகேயனுக்கு அவரது நண்பரின் ஆலோசனைகள் ஆர்வமேற்படுத்தியுள்ளன. அதைத் தொடர்ந்து தாங்களும் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்வதாக  கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இயற்கை முறையிலான பிரசவம் குறித்து யூ-டியூப் இணையதளத்தில் ஏராளமான வீடியோக்களைப் பார்த்து தங்களைத் ‘தயார்படுத்தி’க் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் தங்களது முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது உடனடியாக கார்த்திகேயன் தனது நண்பரான பிரவீன் – லாவண்யா தம்பதியரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு கார்த்திகேயன், அவரின் தாயார் காந்திமதி மற்றும் பிரவீன் – லாவண்யா தம்பதி சேர்ந்து கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த கிருத்திகாவுக்கு நஞ்சுக் கொடி வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு நிமிடங்களில் கிருத்திகா மயக்கமடைந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கிருத்திகாவை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போனார்.

இது போன்ற கோமாளித்தனங்கள் திருப்பூருக்குப் புதிதல்ல. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருப்பூர் முத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்கிற ’இயற்கை’ ஆர்வக்கோளாறு நபர் இதே போல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். தற்செயலாக அந்தப் பிரசவத்தில் தாய்க்கும் சேய்க்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், இவ்வாறு பிரசவம் நடந்துள்ளதை அறிந்த அரசு மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சதீசின் வீட்டிற்குச் சென்று குழந்தைக்கு தடுப்பூசி போட முயற்சித்துள்ளனர். இதற்கு சதீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும், மருத்துவர்கள் அவரது குடும்பத்திற்கு எடுத்துச் சொல்லி தடுப்பூசி போட்டுச் சென்றுள்ளனர்.

இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கினர் ஹீலர் பாஸ்கரும் பாரி சாலனும். ஆங்கில மருத்துவ சதி, அமெரிக்க சதி போன்ற இத்தியாதிகளோடு இரண்டு அவுன்ஸ் இலுமினாட்டி சதியையும் போட்டுக் குலுக்கி இருவரும் வீடியோக்களை வெளியிட்டனர். நவீன அலோபதி மருத்துவமே கொடூர வில்லன் போலச் சித்தரித்த இவர்கள், குழந்தை பெற்றுக் கொள்வதும், அதை எப்படிப் பெற்றுக் கொள்வது, எப்படி வளர்ப்பது என்றெல்லாம் தீர்மானிப்பதும் தனிமனித சுதந்திரம் என வியாக்கியானம் செய்திருந்தனர்.

தற்போது அந்த ‘தனிமனித சுதந்திரம்’ கிருத்திகா என்கிற பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது. அறிவியலுக்கு முரணான வழியில் மக்களுக்கு வழிகாட்டியதற்கும் அதன் மூலம் ஒரு உயிரைப் பறித்ததற்கும் இவ்விரு முட்டாள்களின் மேலும் வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும். ஒரு புது விதமான ’டிரெண்ட்’ தற்போது பரவி வருகிறது. சாதி அடிப்படையிலான தமிழ் தேசியம், கொஞ்சம் நம்மாழ்வார் மற்றும் இயற்கை வேளாண்மை, சிறுதானிய உணவு, பழந்தமிழர் பண்பாட்டு பகுமானங்கள், அறைகுறையான சூழலியல் புரிதல், குலப்பட்டம் மற்றும் குலதெய்வம், பழைய நிலபிரபுத்துவ குடும்ப உறவுகளைப் புனிதப்படுத்தல் (தாய்மாமன் சடங்கு இத்தியாதி), பசுமை விகடன்.. என்கிற இந்த களேபரமான கூட்டணியோடு இலுமினாட்டி சதி மற்றும் ஆங்கில மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கையும் கை மருத்துவத்தின் மீதான காதலும் சேர்த்து மொத்தமாக டப்பாவில் போட்டு குலுக்கி யூ-டியூப் வீடியோக்களாக இறக்குகின்றனர்.

இந்த மோஸ்தரில் ஹீலர் பாஸ்கர் முதலில் ’பிரபலமானார்’; அடுத்து பாரி சாலன். நவீன மருத்துவம் கார்ப்பரேட்மயமாகவும் ஏகபோகமாகவும் மாறி வருவது; இதன் விளைவாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அது எட்டாக்கனி ஆகி வருவது ஒருபுறமும், நவீன சமூகத்தில் உருவாகும் புதுப்புது வியாதிகள் இன்னொரு புறமும் மக்களை அச்சுறுத்துகின்றன. இது உண்மையின் ஒரு பகுதி – இதே உண்மையின் இன்னொரு பகுதி நவீன மருத்துவமே விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்பதாகும். ஆனால், இலுமினாட்டி பிரச்சாரகர்கள் உண்மையின் முதற்பகுதியை மட்டும் கத்தரித்து எடுத்துக் கொண்டு அதனோடு சதிக் கோட்பாடுகளைக் கலந்து கடை விரிக்கும் போது படித்த இளைஞர்களே கூட அதற்கு பலியாகிப் போகின்றனர்.

இந்த சிக்கலுக்குத் தீர்வு அரசின் சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையாகவும், அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு நவீன மருத்துவத்திலேயே இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யப் போராடுவது என்பதாகவும்தான் இருக்க வேண்டும். மாறாக, மக்களை விஞ்ஞானமல்லாத மருத்துவ முறைகளுக்குள் நெட்டித் தள்ளி சாகடிப்பது தீர்வல்ல. பாரி – ஹீலர் வகையறாக்கள் இதில் இரண்டாவதைச் செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் மருத்துவத்துறை கார்ப்பரேட்மயமாவதற்கு எதிராக மக்கள் போராடுவதைத் தடுத்து மடைமாற்றி அவ்வாறு கார்ப்பரேட்மயமாகும் போக்கை நிலைநிறுத்த துணை போகின்றனர். இப்படி மக்களை சுடுகாட்டுக்கு அனுப்பும் பாதைக்கு ‘தற்சார்பு’ பொருளாதார முறை என்கிற அலட்டலான பெயரையும் சூட்டியுள்ளனர்.

அறிவியலற்ற விஞ்ஞானமல்லாத ஹீலர் – பாரி வகை பித்தலாட்டங்களை யூ-டியூபில் ரசிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது. ஆனால் அவர்கள் சொல்லும் வாழ்வியல் நடைமுறையில் இறங்குவதற்கு ஒரு விதமான முரட்டு முட்டாள்தனம் தேவை. அவ்வாறானவர்கள் கொங்கு பகுதியில் கணிசமாக இருக்கிறார்கள் என்பதையே கிருத்திகாவின் மரணம் உணர்த்தியுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் பாரி சாலனும் ஹீலர் பாஸ்கருமே கூட கோவையைச் சேர்ந்தவர்கள் தாம். கோவையைச் சுற்றி அனேகமாக இந்தியாவில் உள்ள அனைத்து கார்ப்பரேட் சாமியார்களுக்கும் கிளைகள் உண்டு. ஜக்கி, அமிர்தானந்தமயி, மனவளக் கலை வேதாத்ரி போன்றோரின் தலைமையகமே கோவைதான்.

திருப்பூர் கிருத்திகா மரணம்
பித்தலாட்ட ஹீலரும், பாரிசாலனும்

மூட நம்பிக்கைகளுக்கு கொங்கு பகுதியில் ஒரு கொழுத்த சந்தை உண்டு. அது அ.தி.மு.க / பா.ஜ.க ஆதரவு மனநிலையாகட்டும், ஈமு கோழி வகை ரெண்டாம் நம்பர் பிசினஸ் ஆகட்டும், கார்ப்பரேட் சாமியார்கள் ஆகட்டும், இயற்கை வாழ்வியல் ஆர்வக்கோளாறுகள் ஆகட்டும், அனைத்தையும் பரிசோதித்துப் பார்க்க தயாராக இருக்கும் மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினர் கோவையில் அதிகம். மிகப் பிற்போக்கான  நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் திடீர் பணக்காரர்கள் நிறைந்த பகுதி என்பதால் ஹீலர் வகையறாக்கள் கடை விரிக்க ஏதுவாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களின் மூலம் இவ்வாறான அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகளையும், சதிக் கோட்பாடுகளையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எடுக்காது. ஏனெனில், மக்கள் அறியாமை இருளில் மூழ்கிக் கிடப்பது ஆளும் வர்க்கத்துக்கு ஆதாயமானதுதானே. கிருத்திகாவைப் போன்ற ஓரிரு உயிர்கள் அதற்காக கொடுக்கத்தக்க விலை என்பதே ஆளும் வர்க்கத்தின் கணக்காக இருக்க முடியும். எனவே ஹீலர் வகையறாக்களை ஒரு கட்டம் வரை வளர அனுமதிப்பார்கள்; தங்களாலேயே தாங்க முடியாத நியூசென்ஸ் கேசாக மாறும்வரை விட்டு வைத்து விட்டு, தங்கள் மார்பிலேயே பாயும்போது நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்தியாவிலேயே குழந்தை இறப்பு தடுப்பு விகிதத்தில் கேரளத்திற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் தமிழகம் இருப்பதும், இங்கு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினை நாட்டிலேயே குறைவாக இருப்பதும் நவீன மருத்துவத்தால்தான் சாத்தியாமானதே தவிர பாட்டி வைத்தியத்தால் அல்ல. மக்கள் இதை உணர்ந்து கொண்டு அறிவியலுக்குப் புறம்பான வைத்திய முறைகளையும், அதை முன்வைக்கும் அறிவுக்குப் பொருந்தாத இலுமினாட்டி சதிக் கோட்பாடுகளையும் புறம் தள்ளுவதோடு நவீன மருத்துவம் எல்லோருக்கும் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு மருத்துவமனை கட்டமைப்பு மக்களுக்கானதாக நீடிக்கவும் போராட முன்வர வேண்டும்.

– சாக்கியன்

பாகம் 2: பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

பாலியல் குற்றங்கள் பெருகும் நிலையில் பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?

2

சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குதான் ஜூலை 18-ம் நாளின் பிரதான செய்தி. சமூக ஊடகங்களில் கோபமும் பயமும் வழிந்தோடுகிறது. வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அடித்து வெளுத்திருக்கிறார்கள். அவர்களுக்காக வாதாட முடியாது என வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது (இது ஒரு குழந்தைத்தனமான நாடகம்). பாலியல் குற்றங்கள் மீதான இந்த திடீர் உணர்வெழுச்சி பல தருணங்களில் உருப்படியான பலன்களைக் கொடுப்பதில்லை. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், நாம் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறோமே தவிர ஒரு சிக்கலின் காரணிகள் மற்றும் அதன் தீவிரத்தன்மை பற்றியும் அக்கறையின்றி இருக்கின்றோம்.

  • இந்த பாதகத்தை செய்தவனின் குறியை அறுப்போம், விசாரணை ஏதுமின்றி என்கவுண்டர் செய்யலாம் என்பதாக பலர் கொந்தளிக்கிறார்கள்.
  • பெண் குழந்தைகளுக்கு ’குட் டச், பேட் டச் ‘ கற்றுக்கொடுங்கள் என்கிறார்கள் சிலர்.
  • ஆண் குழந்தைகளை ஒழுங்காக வளருங்கள், பெண் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் என எழுதுகிறார் ஒருவர்.

ஏராளமான உளவியல் கண்ணோட்டங்கள் சுற்றுக்கு விடப்பட்டு, அவை சலிக்க சலிக்க விவாதிக்கப்பட்டாயிற்று (ஆனால், அவை எல்லாம் ஒரு நாள் மட்டுமே நீடித்தன). எனவே இந்த செய்தியை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு இதோடு தொடர்புடைய வேறொரு (கவனிக்கப்படாத) செய்தியை விவாதிக்கலாம்.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் 150 பேரிடம் எடுக்கப்பட்ட தரவுகளின் படி அவர்களில் மூவரைத் தவிர ஏனையோர் யூடியூப் செயலியை பாவிக்கிறார்கள். அவர்களில் பலர் எதேச்சையாக பெரியவர்களுக்கான (18+) வீடியோக்களை பார்த்திருக்கிறார்கள் என்பதை தனிப்பட்ட உரையாடல்கள் மூலம் அறிய முடிகிறது (பள்ளி ஆற்றுப்படுத்துனர்களின் பணியிட தரவுகள் மூலம் பெறப்பட்ட செய்தி, மேலதிக தகவல்கள் தருவதற்கில்லை).

செல்பேசிகளில் யூடியூப் செயலியை நீக்கிவிட்டு யூடியூப் கிட்ஸ் செயலியை மட்டுமே நிறுவுமாறு நாங்கள் பெற்றோரை இப்போது வலியுறுத்துகிறோம்.

எட்டாம் வகுப்பில் காதல் எனும் வார்த்தை மிக சகஜமாக புழங்குகிறது. வகுப்பறையில் மாணவர்களிடையேயான முக்கியமான பேசுபொருளாக அது இருக்கிறது. பாதிக்கும் மேற்பட்டவர்கள் தனக்கென ஒரு காதலரையோ அல்லது காதலியையோ (எதிர் தரப்பு ஏற்றுக்கொள்ளாமல் வெறும் விருப்பமாக கொண்டிருப்போர் உட்பட) கொண்டிருக்கிறார்கள். இதற்கான எச்சரிக்கைகள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தரப்படுவது பள்ளிகளில் சகஜமாக இருக்கிறது.

இருபாலரும் பயிலும் பள்ளிகளில் 7 – 10-ம் வகுப்புக்களில் மாணவிகள் விகிதம் ஆரம்பப்பள்ளி எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் எப்போதுமே குறைவாக இருக்கும். பெண் பிள்ளைகளை 5ஆம் வகுப்போடு பெண்கள் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாற்றிவிடுகிறார்கள். அதற்கு பள்ளிகளில் உள்ள காதல் பிரச்சினை மீதான அச்சமும் ஒரு காரணம்

பாலியல் குற்றங்கள்
ஒரு பதின்மூன்று வயது மாணவி, 6 மாத கால இடைவெளியில் அவர் 3 பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டிருக்கிறாள். அதை விட மோசமான விசயம் என்னவென்றால் அந்த சிறுமி இந்த சம்பவங்களை சாதாரண விதிமீறலைப்போல சகஜமான குற்றமாக கருதிக் கொண்டிருக்கிறார்

பதின்மூன்று வயது மாணவி ஒருவரது டைரியை வாசித்தபோது, அதில் 6 மாத கால இடைவெளியில் அவர் 3 பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டிருப்பதை அறிய முடிந்தது. ஒன்று வகுப்பறையில், இன்னொன்று அவரது நெருங்கிய உறவுக்காரரால் நடந்திருக்கிறது. சம்பவங்களைவிட மோசமான செய்தி என்னவென்றால் அந்த சிறுமி இந்த சம்பவங்களை சாதாரண டிராஃபிக் விதிமீறலைப்போல சகஜமான குற்றமாக கருதிக் கொண்டிருக்கிறார். (மாணவி வேறொரு பிரச்சினைக்காக ஆற்றுப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். டைரி அவரது ஒப்புதலோடு பெறப்பட்டது – சமயங்களில் கவுன்சிலிங் செயல்பாடுகளுக்கு டைரி உதவிகரமாக இருக்கும்)

இவை இருபாலரும் பயிலும் பள்ளிகளுக்கான பிரச்சினை மட்டும் என்று சமாதானமடைய வேண்டாம். ஆண்கள் பள்ளிகளில் ஹோமோ செக்ஷுவாலிட்டி ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை. பெண்கள் பள்ளியொன்றில் “ஃபிகர்” என்றொரு நடைமுறை இருக்கிறது. கீழ் வகுப்பு (6, 7 & 8) மாணவிகள் மேல் வகுப்பு மாணவிகளில் தங்களுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து நீ எனது “ஃபிகராக” இருப்பாயா என கேட்பார். அவர் ஒப்புக்கொண்டால் இருவரும் முத்தமிட்டுக்கொண்டு பிரத்தியேக நண்பர்களாக தொடர்வார்கள் (இதில் அச்சமடைய ஒன்றுமில்லை. இது ஒரு வட்டாரத்தில் இருக்கும் கலாச்சார நடைமுறை என கருத எல்லா நியாயமும் இருக்கிறது. சாமியாடுவது, அன்னியபாஷை பேசுவது போன்ற ஆன்மீக கலாச்சாரங்களைப் போல).

ஹோமோ செக்‌ஷுவாலிட்டி ராணுவம் மற்றும் கப்பல் பணிகளில் சகஜம். அவர்களில் பலர் ”இயல்பு” வாழ்க்கைக்கு வந்த பிறகு அப்பழக்கத்தை தொடர்வதில்லை. இது பாலியல் நாட்டத்துக்கான வடிகாலாகவும் ஒருவரால் பயன்படுத்தப்படலாம்

இவை எல்லாம் உங்களை அச்சுறுத்துவதற்காக சொல்லப்படுபவை அல்ல. உங்கள் பார்வை எல்லைக்கு வெளியே உள்ள சிறார்கள் உலகத்தில் பாலுறவு பற்றிய அவர்களது ஆர்வமும், பல வெரைட்டிகளில் கிடைக்கும் போர்ன் வீடியோக்களும் பெருமளவு பாதகங்களை செய்துகொண்டிருக்கின்றன. பதின்பருவத்தின் துவக்கத்தில் பாலியல் ஆர்வம் என்பது மிக இயல்பானது. ஆனால் இன்றைய மாணவர்களுக்கு இருக்கும் நேர நெருக்கடியும் குறைவான விளையாட்டு வாய்ப்புக்களும் அவர்களது இயல்பான பாலியல் ஆர்வத்தை அதிகரிக்கின்றன.

விளையாட்டில் ஈடுபடவும் ஏனைய பொது விசயங்களை பேசவும் நேரம் இருக்கையில் அவர்களுடைய பாலியல் நாட்டம் மட்டுப்பட வாய்ப்புண்டு. அவை இல்லாதபோது உள்ளார்ந்த விருப்பமான பாலுறவு ஆர்வமும் உட்கார்ந்த இடத்தில் கிடைக்கும் போர்ன் வீடியோக்களும் மாணவர்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன.

எல்லா மாணவர்களும் போர்ன் வீடியோ அடிமையாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. ஆனால் வகுப்பறைகளில் பாலுறவு என்பது பேசுபொருளாகும்போது போர்ன் வீடியோ ஆர்வம் மற்றவர்களுக்கு பரவுகிறது. சுய இன்பம் மற்றும் ஆபாசப்படம் பார்க்கும் நாட்டம் ஆகியவற்றின் மீதான குற்ற உணர்வு கொண்ட பல மாணவர்களை பள்ளி ஆற்றுப்படுத்துனர்கள் எதிர்கொள்ள நேர்கிறது.

சமூக வலைதளங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் எந்தவித அச்சமோ தயக்கமோ இல்லாமல் தங்கள் காதலை பகிரங்கப்படுத்துகிறார்கள். நெருக்கமானவர்களுக்கு மட்டுமேயான செய்தி எது எல்லோருக்கும் பகிரங்கப்படுத்த வேண்டிய செய்தி எது என்பதை பிரித்துப் பார்க்க அவர்களுக்கு தெரியவில்லை. இன்ஸ்டாகிராம் ஒரு பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் ஆற்றுப்படுத்துனர்கள் கவனத்துக்கு வந்திருக்கின்றன.

இவை வெறுமனே நகர்ப்புறப் பள்ளிகளில் மட்டும் இருக்கும் பிரச்சினை என கருதவேண்டாம். கிராமப்பகுதி பள்ளிகளிலும் இதனையொத்த பிரச்சினைகள் இருக்கின்றன (இதில் முழுமையான தரவுகள் தரும் ஆட்கள் என் தொடர்பு வட்டத்தில் இல்லை). பாடம் நடத்தும்போது தமது அவயங்கள் குறித்து அசிங்கமாக மாணவர்கள் கிண்டலடிக்கிறார்கள் என்றார் ஒரு பெண் ஆசிரியர், அவர் குறிப்பிட்டது ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலரைப்பற்றி என்பது அவரது குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை உணர்த்தும்.

பாலியல் குற்றங்கள்
பல்வேறு திரைப்படங்களிலும் பெண் ஆசிரியர்கள் ஆபாசப் பண்டமாகவே காட்டப்படுகிறார்கள்.

சிதறலாக கிடைக்கும் இப்படியான பல்வேறு தரவுகளை ஒருங்கிணைத்து பார்க்கையில் அவை பெரிதும் கவலையுற வைக்கிறது. இவற்றை கையாள்வது என்பது ஆசிரியர் மற்றும் ஆற்றுப்படுத்துனரின் சக்திக்கு அப்பாற்பட்டவை என்றாலும் கவலைக்குரிய விடயம் அதுவல்ல.

பள்ளிகளில் இருக்கும் இத்தகைய பிரச்சினை குறித்த எந்த தரவுகளும் நம்மிடம் இல்லை (ஒருகோடி பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்).

அப்படியான தரவுகளை திரட்டுவதற்கான எந்த அமைப்பும் வழிகாட்டும் நெறிமுறைகளும் நம்மிடம் இல்லை. பள்ளிகளில் ஆற்றுப்படுத்துனர்கள் இருக்க வேண்டும் எனும் உயர்நீதிமன்ற உத்தரவு பல ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறது.

மாணவர்கள் பேசவும் செயல்படவும் மிகக் குறைவான வாய்ப்புக்களே அவர்கள் வசம் இருக்கின்றன. அதிலேயே அவர்கள் மீண்டும் மீண்டும் உழல வேண்டியிருக்கிறது. ஒரு சாதாரண அரட்டைக்குரிய நேரமும் விசயங்களும் குறைவாக இருப்பதால் கிடைக்கும் அவகாசங்களில் அவர்களுக்கான பேசுபொருளாக சினிமாவும் காதலும் செக்ஸுமே இருக்கின்றது (இருபாலரிலும்).  எண்ணிக்கையிலோ அல்லது சதவிகிதத்திலோ சொல்ல இயலாது. ஆனால் குறிப்பிடத்தக்க அளவிலான மாணவர்களுக்கு இது பொருந்தும். இவர்களில் சிலரை எளிதாக பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ளவும், பாலியல் குற்றங்களுக்கு கூட்டு சேர்த்துக்கொள்ளவும் முடியும்.

பாலியல்சார் நடத்தை சிக்கல்களை கொண்டிருக்கின்ற அல்லது பள்ளியில் காதல்வயப்படுகின்ற மாணவர்களை பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் முரட்டுத்தனமாக கையாள்கிறார்கள் (பள்ளியை மாற்றுவது மற்றும் கடும் தண்டனைகள் கொடுப்பது). இவ்வகையாக சிக்கல்களை கையாள்வது குறித்த தேர்ச்சி, கல்வித்துறையின் அதிகார அடுக்கில் அனேகமாக எங்கேயும் இல்லை.

இத்தகைய விவகாரங்களில், மூடி மறைக்கும் வேலையையே பள்ளிகளும் பெற்றோர்களும் செய்ய முற்படுகிறார்கள்.

பாலியல் குற்றங்கள்
குழந்தைகளை பாதிக்கின்ற விசயங்கள் மிக இயல்பாக நடந்தேறுகின்ற நாட்டில் “குட் டச், பேட் டச்” சொல்லித் தருவது மட்டும் பிரச்சினையை தீர்த்துவிடப் போதுமானதா ?

இன்னும் பத்தாண்டுகளில் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை செலுத்தப்போகிற இன்றைய மாணவர்கள் மீது நாம் கொஞ்சமும் அக்கறையற்று இருக்கின்றோம் என்பதற்கு இது ஒரு துலக்கமான உதாரணம். இதில் மேற்குறிப்பிட்ட சில தடங்கல்கள் நிலைமையை இன்னும் சிக்கலாக்குகின்றன. இவற்றால் நாம் இத்தகைய சிக்கல்களை முன்கூட்டியே தடுக்கவும் வந்த பின்பு சரிசெய்யவும் உள்ள சாத்தியங்களை இழக்கின்றோம். இதன் பின்விளைவுகளை நம்மால் அனுமானிக்கக்கூட முடியாது என்பதே நிதர்சனம்.

ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வுக்கு அதீதமாக கொந்தளித்து பிறகு களைத்துப்போய் அடுத்த அதிர்ச்சிவரை காத்திருப்பதே நமது செயல்பாடாக இருக்கிறது. இந்த இயல்பினால் பல சிக்கல்களை நம்மால் அடையாளம் காண முடியாமல் போகிறது (குறிப்பாக மாணவர் தொடர்பான விவகாரங்களில்). இதற்கு தீர்வு சொல்வது கட்டுரையின் நோக்கம் அல்ல, அது ஒரு சாமானியனால் ஆகும் காரியமும் அல்ல. ஆனால் இங்கே குறிப்பிட விரும்புகிற செய்தி, ஒரு மாணவியின் துயரத்துக்கு இவ்வளவு தூரம் ஆவேசம் கொள்கிற நம் நாட்டில்தான் பெருந்தொகையான மாணவர்களை பாதிக்கின்ற விசயங்கள் மிக இயல்பாக நடந்தேறுகின்றன. இதற்கான பரிந்துரைகள் தருமளவுக்கு எனக்கு ஞானமில்லை, ஆனால் நாம் இத்தகைய சிக்கல்களை சரிசெய்வதற்கான காலத்தை இழந்துகொண்டிருக்கிறோம் என எச்சரிக்கும் அளவுக்கு அனுபவம் இருக்கிறது. பதிவின் நோக்கமும் அதுதான்.

– வில்லவன் இராமதாஸ்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

ஊடகங்களை மிரட்டுகிறது காவிக் கும்பல் – குரல் பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம் !

புதிய தலைமுறை: ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்

’மாதவிடாய் காலத்தில் பெண் தெய்வங்கள் கோயிலை விட்டு வெளியேறிவிடுகின்றனவா?’ – என பொருள்படும் கவிதையை நிகழ்ச்சி ஒன்றில் மேற்கோள் காட்டியதற்காக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன், பா.ஜ.க., இந்து முன்னணி மதவாத கும்பலால் மிக வெளிப்படையாக மிரட்டப்பட்டு வருகிறார். கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகளில் எவ்வித தவறும் இல்லை எனினும், அவர் அதற்காக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், ‘அவரை பணி நீக்கம் செய்யும் வரையிலும் விடப்போவதில்லை’ என்று மிரட்டுகிறது இந்த காவிக் கும்பல்.

மிரட்டுகிறது காவிக் கும்பல்
புதிய தலைமுறை கார்த்திகேயன்

வளர்த்துவிட்ட நச்சுப்பாம்பு தன்னையே கொத்த வருகிறது என்பதை இப்போதேனும் தமிழ் ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அமைப்பு பலமோ, மக்கள் செல்வாக்கோ துளியும் இல்லாத, வெறும் வாய்ச்சவடால் கும்பலான பாரதிய ஜனதா கட்சியை, எப்போதும் பரபரப்பு செய்தியில் இடம்பெறும் வகையில் பராமரித்தவர்கள் இந்த 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள்தான். தலைப்புக்கு தொடர்பு இருந்தாலும், இல்லை என்றாலும் பா.ஜ.க. சார்பாக ஒருவரை அழைத்து வந்து விவாத நிகழ்ச்சிகளில் கத்தவிடும் கலாசாரத்தை வளர்த்து எடுத்தவர்கள் இவர்கள்.

தெரிந்தே பொய் சொல்வது, பொய் அம்பலப்படும்போது கூச்சமே இல்லாமல் கூச்சலிடுவது, சரக்கே இல்லாமல் சர்வரோக நிவாரணியாக அனைத்துப் பிரச்னைகளிலும் அடித்துவிடுவது, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘நீ மட்டும் யோக்கியமா?’ என திசைதிருப்பல் கேள்விகளில் தந்திரமாக ஒளிந்துகொள்வது.. – இவைதான் பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்களின் தகுதிகள். இருந்தும் இவர்களை விவாத நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பாரதிய ஜனதா கட்சி என்ற செத்துப்போன பாம்புக்கு உயிர்த்தண்ணீர் ஊற்றும் வேலையை செய்து வந்தன ஊடகங்கள். இப்போது அந்த பாம்புகள் கொத்த தொடங்கியிருக்கின்றன.

பார்ப்பனக் கொழுப்பு வழியும் எஸ்.வி. சேகர்

இது கார்த்திகேயன் விவகாரத்தில் தொடங்கவில்லை. ஏற்கெனவே இதே புதிய தலைமுறையில் தீபாவளி தொடர்பான ஒரு விவாதத்திலும் வேண்டும் என்றே சர்ச்சை கிளப்பினார்கள். தாலி தொடர்பான ஒரு விவாதத்தில் புதிய தலைமுறை மீது டிபன்பாக்ஸ் வெடிகுண்டு வீசினார்கள். நியூஸ் 7 விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட பா.ஜ.க-வை சேர்ந்த எஸ்.வி.சேகர், ’நியூஸ் 7 விவாதங்களுக்கு வே.மதிமாறனை அழைக்கக்கூடாது’ என நியூஸ் 7 உரிமையாளர் வைகுண்டராஜனுக்கே போன் போட்டு பேசினார். அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.

தினமணியில் வைரமுத்து எழுதிய ஆண்டாள் கட்டுரைக்கு, தமிழக பார்ப்பனக் கும்பல் தங்கள் இயல்புக்கு பொருந்தாத வகையில் பல போராட்டங்களை நடத்தியது. தமிழ் இதழியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், வைரமுத்து எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்காக தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் திருவில்லிபுத்தூருக்கே நேரில் சென்று மன்னிப்புக் கேட்டார். திருப்பதி நாராயணன் போன்ற பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்கள் ஸ்டுடியோவில் அமர்ந்துகொண்டு சக பங்கேற்பாளர்களையும், நெறியாளரையும் நேரடியாக மிரட்டுவதையும் பார்க்கிறோம். இது ஒரு லைவ் நிகழ்ச்சி; மக்கள் பார்க்கிறார்கள் என்ற அச்சமோ, பதற்றமோ இல்லாமல் இவர்கள் துணிந்து பொய் சொல்கிறார்கள்.

கர்நாடகாவில் கவுரி லங்கேஷையும், எம்.எம்.கல்புர்கியையும், மஹாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கரையும், கோவிந்த் பன்சாரேவையும் கொலை செய்த மரபு கொண்டவர்கள் இவர்கள். ஊடகங்களில் பா.ஜ.க.வை விமர்சித்தும், அந்தக் கட்சியின் பொய்களை அம்பலப்படுத்தியும், இந்த ஆட்சியின் அவலங்களை தோலுரித்தும் எழுதி வரும், இயங்கி வரும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். வட இந்தியாவில் நிகழ்ந்துவரும் இந்த கருத்துலக அடாவடியின் மற்றுமொரு வடிவம்தான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவது தொடர்பான விவாதத்தில்தான் கார்த்திகேயன் அந்த கவிதையை மேற்கோள் காட்டினார். மாதவிடாய் நாட்கள் காரணமாகத்தான் பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்றால், பெண் தெய்வங்களை என்ன செய்வீர்கள் என்ற அந்த கேள்வி மிக இயல்பானது; நியாயமானது. இதை பாரதிய ஜனதாவினர் எதிர்க்கும்போது, நியாயமாக, சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடுத்து வைத்திருக்கும் இந்து மதத்தின் அடிப்படை விவாதப் பொருளாக மாறியிருக்க வேண்டும். கோயிலின் கருவறைக்குள் சூத்திரர்கள் செல்லக்கூடாது; கோயில் வளாகத்துக்குள் தலித்துகள் செல்லக்கூடாது; கோயில் இருக்கும் பக்கமே பெண்கள் செல்லக்கூடாது என்ற இந்து மதத்தின் இழிவான படிநிலை அமைப்பு பேசப்பட்டிருக்க வேண்டும். மாறாக காவிக்கும்பலின் மிரட்டலுக்கு பதில் சொல்வதாக மற்றவர்களின் பணி சுருங்கிவிட்டது.

மிரட்டுகிறது காவிக் கும்பல்
நம்மை தடுத்தாடும் ஆட்டத்திற்குத் தள்ளி விட்டு, அடித்து ஆடும் ஆட்டத்தை ஆடி வருகிறது பார்ப்பனக் கும்பல்

இந்த ’தடுப்பாட்ட’ எல்லைக்குள் நம்மை நிறுத்தி வைத்து காவிக்கும்பல் தாக்குதல் ஆட்டத்தை ஆடி வருகிறது. நாம் மீண்டும், மீண்டும் இவர்களுக்கு விளக்கம் சொல்வோராகவும், இவர்களின் பொய்களை அம்பலப்படுத்துவோராகவும் இருந்து வருகிறோம். அவர்கள் நம்மை மூச்சிரைக்க ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு அடுத்த வதந்தியை ஆற, அமர தயார் செய்கிறார்கள்.

‘கார்த்திகேயனை பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என்ற இந்த பச்சையான மிரட்டலை புதிய தலைமுறை நிர்வாகம் நேரடியாக எதிர்கொண்டிருக்க வேண்டும். முன் எப்போதும் அப்படி நடைபெறாததைப்போலவே இப்போதும் நடைபெறவில்லை. நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர்கள் நிர்வாகங்களால் கைவிடப்படும் தமிழ் இதழியலின் மரபு இப்போதும் தொடர்கிறது. இதன்மூலம், இனிமேல் ’அடக்கி வாசிக்கும்படி’ பத்திரிகையாளர்கள் நேரடியாகவும்; மறைமுகமாகவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த அவலமான சூழலில் நிறுவனம் என்ற குடையின் கீழ் அல்ல.. பத்திரிகையாளர்கள் என்ற பணியின் பொருட்டு நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். இந்த எதிர்ப்பு காவிக் கும்பலின் அடாவடிக்காக அல்ல… பத்திரிகையாளர் என்ற வேலையை மனசாட்சியுடன் செய்வதற்கே அவசியமானது.

நன்றி: குரல்

எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !

0
மார்க்ஸ் பிறந்தார்

மார்க்ஸ் பிறந்தார்

மார்க்ஸ் பிறந்தார் – 16
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

  1. உண்மையான போர் முழக்கத்தைத் தேடல்

…..நாம் ஒரு புதிய கொள்கையுடன், இதுதான் உண்மை, இதற்கு முன்னால் மண்டியிடுங்கள் என்று வறட்டுக் கோட்பாட்டுத்தனமான முறையில் உலகத்தை நோக்கிச் சொல்லவில்லை. உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம். – கார்ல் மார்க்ஸ்(1)

வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தை விரித்துரைப்பதை நோக்கி மார்க்ஸ் எந்த வழிகளில் முன்னேறினார்?

மார்க்ஸ் 1842-ம் வருடத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய கட்டுரைகளில் ஒன்றில் நாத்திகவாதம், பொருள்முதல்வாதம், மனிதாபிமானத்தின் அகத்தூண்டுதலான அறிவிப்பாளரான லுத்விக் ஃபாயர்பாஹை “நம் காலத்தின் பாவம் போக்குமிடம்”, சுதந்திரம் மற்றும் உண்மைக்குப் பாதையில் இருக்கின்ற “நெருப்பு ஆறு” என்று பிரகடனம் செய்தார்.(2)

அவர் “ஊக முறையில் சிந்திக்கின்ற இறையியலாளர்களுக்கும் தத்துவஞானிகளுக்கும்”, அதாவது இறையியலாளர்களுக்கும் கருத்துமுதல்வாதிகளுக்கும் பின்வரும் வேண்டுகோளை விடுத்தார்: “விஷயங்கள் யதார்த்தத்தில் மெய்யாக எப்படி இருக்கின்றன என்பதை நீங்கள் அறிய விரும்பினால் பழைய ஊக முறைத் தத்துவஞானத்தின் கருத்தமைப்புகள் மற்றும் தப்பெண்ணங்களிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.”(3)

லுத்விக் ஃபாயர்பாஹ்

லுட்விக் ஃபாயர்பாஹ் எழுதிய கிறிஸ்துவ சமயத்தின் சாராம்சம் என்ற நூலை மார்க்ஸ் 1841-ம் வருடத்தின் கோடைகாலத்தின் போது படித்தார். அந்தச் சமயத்தில் இளம் ஹெகலியவாதிகள் மீது இந்நூல் ஏற்படுத்திய தாக்கத்தை எங்கெல்ஸ் அழகாக வர்ணித்துள்ளார். இளம் ஹெகலியவாதிகள் சிக்கிக் கொண்டிருந்த எல்லா முரண்பாடுகளையும் இந்நூல் “ஒரேயொரு அடியில்” ஒழித்து பொருள்முதல்வாதத்தின் வெற்றியை நேரடியாகப் பிரகடனம் செய்தது. “எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை. அதன் அடித்தளத்திலே தான் மனித இனத்தவராகிய நாம் – நாமும் இயற்கையின் உற்பத்திப் பொருட்கள்தாம் – வளர்ந்து வந்திருக்கிறோம். இயற்கைக்கும் மனிதனுக்கும் அப்பாற்பட்டதாய் எதுவும் இல்லை.

நம்முடைய சமய வழிப்பட்ட கற்பனைகள் படைத்துள்ள கடவுளர்கள் எனப்பட்டவர்கள் நம் சாராம்சத்தின் விசித்திரமான பிரதிபலிப்பே ஆகும். மந்திரம் என்பது உடைத்தெறியப்பட்டது; ‘அமைப்புமுறை’ தகர்க்கப்பட்டு விட்டது; முரண்பாடு என்பது நம் கற்பனையில் மட்டுமே இருப்பது என்று காட்டப்பட்டுக் கலைக்கப்பட்டது. அறிவுக்கு விடுதலை அளிப்பது போன்ற இந்நூலின் பாதிப்பை அனுபவித்தவர்களுக்குத்தான் அதைக் கற்பனை செய்து பார்க்க முடியும். எங்கும் உற்சாகம் கரைபுரண்டோடியது: நாங்கள் அனைவரும் உடனே ஃபாயர்பாஹ் வாதிகளாகிவிட்டோம்.”(4)

இந்தப் பகுதியை எங்கெல்ஸ் உணர்ச்சியுடன் எழுதியிருக்கிறார். ஆனால் மார்க்ஸ் ஃபாயர்பாஹை ஒரு முறை படித்தவுடனே முன்னாள் கருத்துமுதல்வாதியும் இளம் ஹெகலியவாதியும் குட்டிக்கரணம் போட்டுப் பொருள் முதல்வாதியாகிவிட்டார் என்று சொல்கின்ற முறையில் மேற்கூறிய பகுதியை மார்க்சின் ஆன்மிக வளர்ச்சிக்கு மிகை எளிமையான முறையில் கையாளக் கூடாது.

மார்க்ஸ் தன்னுடைய இளமைப் பருவத்தில் கூட மிகவும் ஆழமான, சுதந்திரமான சிந்தனையாளராக இருந்தபடியால் அவருடைய அடிப்படையான தத்துவ நம்பிக்கைகளில் மாற்றத்தைத் திடீரென்று ஏற்பட்டதாகவோ அல்லது முற்றிலும் அந்நியத் தாக்கத்தினால் ஏற்பட்டதாகவோ கருதிவிட முடியாது.

மார்க்ஸ் பிறந்தார்புதிய கோட்பாடுகளை – அவை நம்பக் கூடிய விதத்திலும் அகத்தூண்டுதலான முறையிலும் விளக்கப்பட்டாலும் கூட – உடனடியாக நம்பிக்கையின் பேரில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற நபர்களில் மார்க்ஸ் ஒருவர் அல்ல. மெய்யான தத்துவ விஞ்ஞானியைப் போல அவர் “மற்றவர்களுடைய” நம்பிக்கைகளை இரவல் பெறவில்லை; தன்னுடைய சொந்த நம்பிக்கைகளைப் படைப்பதற்கு அவற்றை அடிப்படையாகப் பயன்படுத்தினார்.

அவர் ஒரு புதிய தத்துவக் கருத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு தன்னுடைய விமர்சனச் சிந்தனை – அது அதனிடத்தும் இரக்கமில்லாதது – என்ற சோதனைக்கு உட்படுத்துவார். மேலும் புதிய கோட்பாடுகளைப் பழையவற்றோடு அப்படியே “சேர்த்துக் கொள்ளமாட்டார்”. திரட்டப்பட்ட மொத்த ஆன்மிகச் செல்வத்தையும் மறுமதிப்பீடு செய்வார். உலகக் கண்ணோட்டத்தின் மொத்த அமைப்பில் அவை தமக்குரிய இடத்தை அடைய வேண்டும். அவை முற்றிலும் “பொருந்தியிருக்க வேண்டும்” என்பதற்காக அமைப்பும் கோட்பாடுகளும் மறுபடியும் திருத்தியமைக்கப்படும்.

ஒவ்வொரு சிந்தனைச் சாயலுக்கும் – மிகவும் அற்பமானவற்றுக்கும் கூட – இத்தகைய அணுகுமுறை மார்க்சின் குறியடையாளமாக இருந்தது. எனவே அவருடைய தத்துவஞான நம்பிக்கைகளில் மிகவும் முக்கியமான திருப்புமுனையை மதிப்பீடு செய்கின்ற பொழுது இதை நினைவிலிறுத்துவது இன்னும் அவசியமானதாகும்.

மார்க்ஸ் பொருள்முதல்வாதத்தை அடைந்த பாதை எளிமையாக இருக்கவில்லை. அதில் தீர்மானமான பாத்திரத்தை வகித்தவர் ஃபாயர் பாஹ் மட்டுமே என்றும் கூறிவிட முடியாது. மார்க்ஸ் ஒரு நீண்ட, பல்தொகுதியான ஆன்மிக வளர்ச்சியின் மூலமாகவும் முற்காலத்திய அனைத்துத் தத்துவஞானக் கலாச்சாரத்தின் சாதனைகளையும் விமர்சன ரீதியாகத் தன்வயப்படுத்திக் கொள்வதன் மூலமாகவும் மதம் சார்ந்த உலகக் கண்ணோட்டத்துடன் போர் தொடுத்தும் ஹெகலின் கம்பீரமான அமைப்புடன் – முதலில் அதை நவீனப்படுத்துகின்ற நோக்கத்துடனும் பிறகு அதை முறியடிக்கின்ற நோக்கத்துடனும் – தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாகவும் பொருள்முதல்வாதத்தை நோக்கி முன்னேறினார்.

ஹெகலியத் தத்துவஞானத்தின் “ஊக இயல்புடன்” அதிருப்தி, தத்துவஞானத்துக்கும் “உலகத்துக்கும்” இடையில் இன்னும் நெருக்கமான இணைப்பைத் தேடல், தன்னுடைய நாத்திக நம்பிக்கைகளுக்கு முரணில்லாத் தத்துவ அடிப்படையைத் தேடல் – இவை அனைத்தும் ஏற்கெனவே டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில் மார்க்ஸ் பொருள்முதல்வாதத்தை நோக்கித் தன்னுடைய கவனத்தைத் திருப்பும்படி செய்தன. எனினும் இங்கே பண்டைக்கால கிரேக்கப் பொருள்முதல்வாதத்திடம் அவர் காட்டிய அனுதாபம் இன்னும் தத்துவ ரீதியில் நிறுவப்படவில்லை.

ஃபாயர்பாஹ் எழுதிய கிறிஸ்துவ சமயத்தின் சாராம்சம் என்ற நூலும் மற்ற புத்தகங்களும் மார்க்சின் சிந்தனை ஏற்கெனவே முன்னேறிக் கொண்டிருந்த திசையில் கூடுதலான, வன்மையான தூண்டுதல்களாக இருந்தன என்பதில் ஐயமில்லை.

ஆனால் Rheinische Zeitung பத்திரிகையில் மார்க்சின் தீவிரமான கட்டுரைப் பணிகள், ஒடுக்கப்பட்ட மக்களைத் தீவிரமாக ஆதரிப்பவர் என்ற முறையில் அவர் மேற்கொண்ட நிலை, அரசியல் மற்றும் சமூக சக்திகள், வர்க்க விருப்பார்வங்கள் மற்றும் பொருளாயத நலன்களின் சிக்கலான மோதலையும் இடைச் செயலையும் புரிந்து கொள்ள வேண்டுமென்ற அவருடைய விருப்பம் ஆகியவையே இத்திசையில் அவர் முன்னேறுவதற்கு மிகப் பெரிய தூண்டுதலாக ஒருக்கால் இருந்திருக்கக் கூடும்.

இதில் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானம் எப்படிச் சிறிதளவும் உதவவில்லையோ அப்படியே ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதமும் உதவவில்லை. மார்க்ஸ் எல்லாவற்றுக்கும் மேலாக எந்தத் துறையைப் பகுப்பாய்வு செய்வதற்கு விரும்பினாரோ அந்தத் துறையில், சமூக உறவுகள் துறையில் ஃபாயர்பாஹ் ஒரு கருத்துமுதல்வாதியாகவே இருந்தார். இங்கே அவர் ஹெகலுக்கும் தாழ்ந்தவராகவே இருந்தார்.

சமூக உறவுகளைப் பற்றிய விளக்கத்தை நோக்கிச் சென்ற மார்க்சின் சிந்தனை உண்மையின் மணிகளை எப்படிப் பொறுக்கியெடுத்தது என்பதை ஆராய்வது சுவாரசியமானதாகும்.

“பொருளின் மொழியில்” பேசுவது, “ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அதன் சாராம்சத் தன்மைக்கு ஏற்ப(5) புரிந்து கொள்வது அவசியம், பொருள்கள் “அவை மெய்யாகவே இருக்கின்ற முறையில்”(6) புரிந்து கொள்வதில்தான் உண்மை இருக்கிறது என்று மார்க்ஸ் 1842ம் வருடத்தின் தொடக்கத்தில் எழுதினார்.

இக்கூற்றுகளில் பொருள்முதல்வாதப் போக்கு அடங்கியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது மிகவும் சூக்குமமான வடிவத்தில்தான் இருக்கிறது, மேலும் அது சமூகப் பிரச்சினைகளைத் தொடவில்லை.

மார்க்ஸ் 1842ம் வருடத்தின் இலையுதிர் காலத்தில் விறகு திருடப்படுவதைப் பற்றிய கட்டுரையை எழுதிய பொழுது உடைமைக்கும் சட்டத்துக்கும் இடையிலுள்ள உறவைப் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். தனிச் சொத்துடைமை தனிநபர் மீது அதிகாரம் செலுத்துகின்ற உரிமையை, உடைமை இல்லாதவர்கள் மீது சட்டவியல் மற்றும் அரசு-நிர்வாக அதிகாரங்களைப் பிரயோகிக்கின்ற உரிமையைக் கொடுப்பதால் அரசியல் மற்றும் சட்டவியல் அமைப்புகளை நிர்ணயிக்கின்ற காரணி அது தானா? இதற்கு ஆமாம் என்பதே பதில் என்பது வெளிப்படையாகத் தோன்றினாலும் மார்க்ஸ் இன்னும் அதை வெளிப்படையாக வகுத்தளிக்கவில்லை.

1843ம் வருடத்தின் ஆரம்பத்தில் மார்க்ஸ் சமூக உறவுகளின் பொறியமைவைப் பற்றிய உண்மையான விளக்கத்தை இன்னும் திட்டவட்டமான முறையில் நெருங்குகிறார். மோஸெல் பிராந்தியத்தின் திராட்சை பயிரிடுபவர்களை ஆதரித்து எழுதுகின்ற பொழுது சமூக அநீதிகள் தனிப்பட்ட நபர்களுடைய நடவடிக்கைகளினால் ஏற்படவில்லை, இந்த நபர்கள் “தம் காலத்திய உறவுகளின் கொடுமைகள் அனைத்தின்” உருவகமாக இருக்கிறார்கள், இந்த உறவுகள் “பொதுவான பார்க்கவியலாத மற்றும் நிர்ப்பந்திக்கின்ற சக்திகள்”(7) என்று மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார்.

தனிப்பட்ட நபர்களின் சித்தத்துக்கும் “சுவாசித்தலுக்கும்” சம்பந்தமில்லாததைப் போலவே இந்த உறவுகளும் சுதந்திரமானவை. நாம் அதிகாரிகளின் தரப்பில் அல்லது ஏழை மக்களின் தரப்பில் நல்லெண்ணம் அல்லது தீய எண்ணத்தைத் தேடக் கூடாது, ஆனால் “புறநிலை உறவுகளின் விளைவுகளைக் காண வேண்டும்”.(8)

இரசாயன விஞ்ஞானி இரசாயனப் பொருட்களுக்கிடையில் நடைபெறுகின்ற “மோதல்களை” எவ்வளவு துல்லியமாக நிர்ணயிக்க முடியுமோ அப்படி உத்தேசமாகவாவது சிக்கலான சமூக மோதல்களைப் புரிந்து கொள்வதற்கு இத்தகைய அணுகுமுறை உதவும் என்ற கருத்துக்கு மார்க்ஸ் வந்து கொண்டிருக்கிறார். “இருக்கின்ற உறவுகள் ஒரு நிகழ்வை அவசியப்படுத்துகின்றன என்பதை நிரூபித்து விட்டால் எத்தகைய வெளிப்புற சந்தர்ப்பங்கள் அதை மெய்யாகவே தயாரிக்கின்றன என்பதையும் ஏற்கெனவே அது தேவையாக இருந்தாலும் அதைத் தயாரிக்க முடியாதிருக்கின்ற சந்தர்ப்பங்களையும் கண்டறிவது இனியும் கஷ்டமான காரியம் அல்ல.”(9)

பத்திரிகைச் சுதந்திரம் இல்லாதிருப்பது சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பெரிய தடை என்பதை மார்க்ஸ் சிறிது காலத்துக்கு முன்பு கண்டார் என்றால் இப்பொழுது அவர் புதிதாக ஏற்றுக்கொண்டுள்ள பொருள்முதல்வாத அணுகுமுறைக்கு ஏற்றபடி மோஸெல் பிராந்தியத்தின் துன்பகரமான நிலைமையின் பிரத்யேகத் தன்மையிலிருந்து பத்திரிகைச் சுதந்திரத்தின் அவசியம் பிறக்கிறது என்று எடுத்துரைக்கிறார்.(10)

இப்பொருள்முதல்வாத நிலையிலிருந்து மார்க்ஸ் ஹெகலின் “பல கடவுளைக் கொண்ட இறைஞானத்தை” விமர்சித்தார்; அங்கே “சிந்தனை அரசின் தன்மையுடன் பொருந்துவதில்லை, ஆனால் அரசு முன்னரே தயாரிக்கப்பட்ட சிந்தனை முறையுடன் பொருந்துகிறது.”(11) பல்வேறு வடிவங்களைப் பெறுகின்ற அரசின் உள்ளடக்கத்தை அதன் மூலமாக, “அரசு என்ற கருத்தின் மூலமாக” விளக்கமளிக்கக் கூடாது, ஆனால் குடும்பம் மற்றும் “சிவில் சமூகம்” என்ற பொருளாயத உறவுகளின் துறையிலிருந்து விளக்கமளிக்க வேண்டும் என்று மார்க்ஸ் வலியுறுத்துகிறார்.

சமூக உறவுகளை விளக்கக் கூடிய, நெடுங்காலமாகத் தேடப்பட்ட திறவுகோல் அகப்பட்டுவிட்டது. ஹெகல், ஃபாயர்பாஹ் ஆகிய இருவருடனும் ஒப்பிடுகின்ற பொழுது மாபெரும் காலடி முன்னே எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றும். சமூக சக்திகள், அகநிலையான விருப்பார்வங்கள், தனிப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் கருத்துக்களின் போராட்டம் என்ற குழப்பத்துக்கு நடுவில் புறநிலையான தர்க்கவியலின் விளிம்புகளை மார்க்சின் கண்கள் பார்க்கத் தொடங்கிவிட்டன.

ஆனால் அவை விளிம்புகள் மட்டுமே; அதன் உருவரைகள் தெளிவில்லாதவை, திட்டவட்டமாக இல்லாதவை. மக்களுடைய வறுமைக்குக் காரணம் புறநிலையான உறவுகளில் இருக்கின்றது என்று அவர்களிடம் கூறுவது போதுமானதல்ல, அவற்றின் இயல்பையும் வெளிப்படுத்த வேண்டும், சுதந்திரத்துக்கு வழியைச் சுட்டிக்காட்ட வேண்டும், “உண்மையான போர் முழக்கத்தைக்” கொடுக்க வேண்டும். இப்போர் முழக்கம் என்றால் என்ன? “ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினர்” ஆதாரமாகக் கொள்ள வேண்டிய சக்தி எங்கே இருக்கிறது?

மார்க்சின் அறிவு சமூகப் பிரச்சினைகளை விளக்குகின்ற கடமையுடன் தொடர்ந்து போராடுகிறது; ஆனல் ஒரு “உச்சவரம்பு” தடுக்கிறது. அரசியல் பொருளாதாரம், வரலாறு மற்றும் சமூக உறவுகளின் தத்துவம் ஆகிய துறையில், கற்பனாவாத சோஷலிஸ்டுகள் மற்றும் கற்பனாவாதக் கம்யூனிசத்தின் பிரதிநிதிகளுடைய போதனைத் துறையில் அறிவில் இடைவெளிகள் இருப்பதை உணர்கிறார்.

குறிப்புகள்:

(1) Ibid., p. 144.
(2) ஜெர்மன் மொழியில் “ஃபாயர்பாஹ்” என்ற சொல்லை “ஃபாயர்” (நெருப்பு), பாஹ் (ஆறு) என்று பிரிக்க முடியும். மார்க்ஸ் இச்சொல்லின் நேர்ப் பொருளை இங்கே சிலேடையாகக் கையாள்கிறார்.
(3) Marx, Engels, Werke, Bd. 1, Berlin, 1969, S. 27.
(4) பிரெடெரிக் எங்கெல்ஸ், லுத்விக் ஃபாயர்பாகும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும், முன் னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1977, பக்கங்கள் 25-26.
(5) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 113.
(6)Marx, Engels, Werke, Bd. 1, S. 27.
(7) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 354.
(8) Ibid., p. 337
(9) Ibid.
(10) Ibid.
(11) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 19.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : பொது அறிவு வினாடி வினா 13

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் , உலகம் முழுவதும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. ஜனநாயகம் வழிந்தோடுவதாகச் சொல்லப்படும் ஐரோப்பிய –  அமெரிக்க நாடுகளிலிருந்து, மதச்சடங்கின் பெயரால் சிறுமிகளின் பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து விடும் ஆப்பிரிக்க நாடுகள் வரை அனைத்து இடங்களிலும் பல்வேறு வடிவங்களில், அளவுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெண்ணைத் தாயாகப் பார்க்கும் பாரம்பரியம் கொண்டதாகச் சொல்லப்படும் இந்த “பாரத புண்ணிய தேசத்தில்” மத்தியில் ஆளும் பாஜகவின் அடிபொடிகளே, மோடி அரசுக்கு எதிராக எதிர்கருத்தைக் கூறும் பெண்களுக்கு பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுவதும், அடிபொடிகளைக் கண்டிக்காமல் மவுனம் காப்பதுமே, இந்தியாவில் பெண்களின் நிலையை எடுத்தியம்புகிறது.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி இருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நமக்கு எவ்வளவு தெரியும்? சோதித்துத்தான் பார்ப்போமே !

கீழ்கண்ட கேள்விகளுக்கான சரியான விடையை பின் வரும் வினாடி வினா பகுதியில் தேர்ந்தெடுக்கவும். இவை வெறுமனே கேள்வி பதில் மட்டுமல்ல, சரியான பதில்கள் நமது சிந்தனைகளில் நிரந்தரமாய் பதிவாகவும் வேண்டும்.

  1. உலகளவில் எத்தனை சதவீதம் பெண்கள் வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுகிறார்கள்?
  2. பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்முறைகளை முன்னரே தடுப்பது என்பது?
  3. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிக்கப்படவேண்டும் என்று கடைபிடிக்கப்படும் சர்வதேச தினத்தின் வரலாற்று முக்கியத்துவம் என்ன?
  4. உலகளவில் எத்தனை பெண்கள் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளாக இருக்கும் போது மணமுடிக்கப் படுகிறார்கள்?
  5. ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் பெண்கள் சிறுமிகளில் கணிசமானோருக்கு செய்யப்படும் பிறப்புறுப்பு வெட்டும் செயல் எந்த வயதுக்கு முன்பு நடத்தப்படுகிறது?
  6.  “நம்மில் பாதிப்பேர் முடக்கிவைக்கப்படும் போது நம்மால் வெற்றி பெற முடியாது” – இதைச் சொன்னவர் யார்?
  7. உள்நாட்டுப் போர் நடைபெறும் பகுதிகளில் _______ சதவீதம் இளம் பெண்கள், உயர்நிலைப் பள்ளி கல்வியை விட்டு வெளியேறுகிறார்கள்.
  8. யூஸ்ரா மார்டி என்பவர் யார்?
  9. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 28 உறுப்பு நாடுகளில் எத்தனை சதவீதம் பெண்கள் ஏதேனும் ஒரு அளவில் உளவியல் வன்முறைகளை சந்திக்கிறார்கள்?
  10. 2016-ம் ஆண்டின் சர்வே ஒன்றின்படி அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரில் உள்ள பெண்கள் எத்தனை பேர் பொதுப் போக்குவரத்தின் போது பாலியல் வன்முறைகளை சந்திக்கிறார்கள்?
  11. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பத்து பெண்களில் ஒருவர்  _______ வகை பாலியல் தொந்தரவுகளை சந்திக்கிறார்.
  12.  “ரேப்” எனப்படும் பாலியல் வன்புணர்ச்சியை செய்த ஒருவர் அந்தப் பெண்ணை மணம் முடித்திருந்தால் அவரை சட்டப்படி விசாரிக்க முடியாது என எத்தனை நாடுகள் விலக்கு கொடுத்திருக்கின்றன?
  13. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2015-ம் ஆண்டின் தரவுகளின் படி எந்த இந்திய மாநிலம் அதிக எண்ணிக்கை பாலியல் வன்புணர்ச்சி வன்முறையைக் கொண்டிருக்கிறது?
  14. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்புணர்ச்சி வன்முறை நடைபெறும் நகரங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நகரம் எது? முதல் இடத்தை ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் பெற்றிருக்கிறது.

பதிலளிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

செயற்கை முளையம் : தோற்றத்தின் இரகசியத்தை உடைக்கும் விஞ்ஞான வளர்ச்சி

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை உயிர் ஆராய்ச்சியில் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளனர். பேராசிரியை மகதலேனா ஸெர்னிகா கோயெட்ஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு எலிகளின் குருத்தணுக்களில் (Stem Cells) மூன்று வகையான குருத்தணுக்களை இணைத்து ஏறத்தாழ இயற்கையான முளையத்தை (Embryo) ஒத்த செயற்கை முளையம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்பட்ட முளையத்திற்கு ஈரடுக்குக் கருக்கோள (Gastrulation) முறையில் வளர்ச்சியடையும் சாத்தியம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

செயற்கை முளையம்
3 குருத்தணுக்களால் உருவாக்கப்பட்ட கருமுளையத்தை ஒத்த செயற்கை அமைப்பு. (3 வகை குருத்தணுக்களும் மஞ்சள், பிங்க்., பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ள) (நன்றி: படம் – Zernicka-Goetz lab – கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்)

இதற்கு முன்பே பேராசிரியை மகதலேனா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவானது, இரண்டு வகையான குருத்தணுக்களைப் பயன்படுத்தி எலியின் முளையத்தை ஒத்த செயற்கை முளையம் ஒன்றை உருவாக்குவதிலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட செயற்கை முளையத்தை ஒரு முப்பரிமாணக் கருக்கூட்டினுள் (3D Scaffold) வைத்து வளர்த்தெடுப்பதிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியை மகதலேனாவின் ஆராய்ச்சியில் மூன்று குருத்தணுக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு செயற்கையாக உருவாக்கப்பட்ட முளையமானது ஈரடுக்குக் கருக்கோள முறையில் சுயமாகவே வளர்ச்சியடையும் சாத்தியங்களைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இயற்கையான பாலூட்டியினங்களில் கருமுட்டையில் உயிரணு நுழைந்த பின் உயிர் உருவாக்கத்தின் துவக்க கட்டத்தில் என்ன நடக்கிறது? கருத்தரித்த 3-லிருந்து 4 நாட்களுக்குள், கருவின் பிளக்கும் அணுக்கள் ஒரு கோள வடிவத்தை அடைகின்றன. இந்நிலையில் உள்ள கரு, ’மோருலா‘ எனப்படுகிறது. 4-லிருந்து 5 நாட்களுக்குள், மோருலாவிற்குள் ஒரு வெற்றிடம் உருவாகிறது. இந்நிலையில் உள்ள கரு ’பிளாஸ்டோசிஸ்ட்’ எனப்படுகிறது. பிளாஸ்டோசிஸ்டிலுள்ள அணுக்கள் ’உள்ளடங்கிய அணுப் பிண்டம்‘ என்று அழைக்கப்படுகிறது. இது மனிதனுக்குத் தேவையான தலை, உடல் மற்றும் பிற அமைப்புகளை அளிக்கிறது. உள்ளடங்கிய அணுப் பிண்டத்திலுள்ள அணுக்கள் முளையக் குருத்தணுக்கள் (embriyonic stem cells) என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் 200-க்கும் மேற்பட்ட செல் வகைகளை உருவாக்கும் திறமை படைத்தவை.

இதைத் தொடர்ந்து, பிளாஸ்டோசிஸ்டின் வெளிப்புறம் உள்ள அணுக்கள் நஞ்சுக்கொடியின் ஒரு பகுதியை உருவாக்குகின்றன. இது தாய் மற்றும் கருவின் குருதி ஓட்ட அமைப்புகளை இணைக்கிறது. நஞ்சுக்கொடி தாயிடமிருந்து பிராணவாயு, ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள், மருந்துகள் ஆகியவற்றை வளரும் குழந்தைக்கு அளிக்கிறது; கழிவுப் பொருட்களை அகற்றுகிறது; தாயின் குருதி கருவின் மற்றும் சிசுவின் குருதியுடன் கலந்துவிடாமல் தடுக்கிறது. நஞ்சுக்கொடி உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் கருவின் மற்றும் சிசுவின் உடல் வெப்ப நிலையை தாயின் உடல் வெப்ப நிலையை விட சற்று அதிகமாக நிலைப்படுத்துகிறது.

கடந்த 2017 மார்ச் மாதம் பேராசிரியை மகதலேனா வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையின் படி, மரபணு மாற்றப்பட்ட எலியின் முளையக் குருத்தணுக்களை இணைவித்து முப்பரிமாணக் கருக்கூட்டினுள் வைத்து வளர்க்கப்படும் முளையமானது இயற்கையான முளையத்தின் பண்புகளைக் கொண்டிருப்பது விளக்கப்பட்டிருந்தது. செயற்கையான முளையத்தினுள் இருந்த இரண்டு குருத்தணுக்களும் தங்களை வளர்ந்து வரும் முளையத்தின் எந்தப் பகுதிக்குள் நிலை நிறுத்திக் கொள்வது என்கிற தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

எனினும் சென்ற ஆண்டு நடந்த ஆராய்ச்சியில் கருவளர்ச்சிக்கு மிக அடிப்படையான ஈரடுக்குக் கருக்கோள முறையிலான வளர்ச்சியானது இல்லாதிருந்தது. ஈரடுக்குக் கருக்கோள முறையில்தான் முளையமானது ஓரடுக்கில் இருந்து உள்ளடுக்கு (endoderm), இடையடுக்கு (mesoderm), வெளியடுக்கு (ectoderm) ஆகிய அடுக்குகளைப் பெறுகிறது. இந்த வளர்ச்சிப் போக்குதான் எந்த முளையத்தின் அணுக்கள் பல்வேறு உடலுறுப்புகளுக்கான அடிப்படையாக அமைகிறது என்பதைத் தீர்மானிக்கிறது.

”மிகச் சரியான முறையில் நடக்கும் ஈரடுக்குக் கருக்கோள வளர்ச்சியானது மூன்று வகையான குருத்தணுக்களின் இணைவினால்தான் சாத்தியம். உயிரின் இந்த நுட்பமான நடனத்தை மறுகட்டமைப்பு செய்து பார்க்க நாங்கள் விடுபட்டுப் போன மூன்றாவது குருத்தணுவைச் சேர்த்துக் கொண்டோம்” என்கிறார் பேராசிரியை மகதலேனா. ”முந்தைய ஆராய்ச்சிகளில்  முப்பரிமாண கருக்கூட்டினுள் நாங்கள் பயன்படுத்திய ஜெல்லிக்கு பதிலாக மூன்றாவது குருத்தணுவைப் பயன்படுத்தினோம். அதன் பின் நாங்கள் பார்த்த முளையத்தின் கட்டுமான வளர்ச்சியானது ஆச்சர்யமான முறையில் வெற்றிபெற்றது” என்கிறார் மகதலேனா.

செயற்கை முளையம்
7-8 வார வயதுடைய மனிதக் கருமுளையம்

”எங்களது செயற்கை முளையங்கள் இயற்கையான வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டத்தைக் கடந்துள்ளன. இப்போது அவை இயற்கையான முளையங்களுக்கு ஏறத்தாழ மிக நெருக்கமாக வந்து விட்டன. இந்த ஆராய்ச்சிகளின் அடுத்த கட்டமாக இந்த செயற்கை முளையங்களை ஒரு தாயின் உடலிலோ அல்லது செயற்கைக் கருப்பையிலோ வைத்து வளர்த்துப் பார்க்க வேண்டும். அதே போல் மனிதர்களின் குருத்தணுக்களைக் கொண்டும் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் பேராசிரியை மகதலேனா.

தற்போது வெளியாகி இருக்கும் ஆராய்ச்சி முடிவுகளின் படி, முளையத்தினுள் இருக்கும் குருத்தணுக்கள் தங்களுக்குள் எவ்வாறு தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன என்பதும் அதன் மூலம் முளையத்தின் வளர்ச்சி எவ்வாறு நடக்கின்றது என்பதும் தெரிய வந்துள்ளதாக இதே துறையில் உள்ள மற்ற விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனினும் இங்கிலாந்தில் உள்ள சட்டங்கள் 14 நாட்களுக்கு உட்பட்ட வளர்ச்சியுடைய முளையங்களையே ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதாக இருக்கிறது. இந்தத் தடை நீக்கப்பட வேண்டியது கரு வளர்ச்சியின் ஆரம்ப கட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சட்டங்கள் தவிர மதவாதிகளின் குறுக்கீடுகள் இன்னொரு சிக்கல். விஞ்ஞானத்தின் ஒளிக் கதிர்கள் எட்டாத பகுதிகளை எல்லாம் ‘கடவுளின் செயலாக’ சொந்தம் கொண்டாடி வரும் மதவாதிகளின் கையில் எஞ்சி நிற்கும் வாதங்கள் “உயிர்களின் மூலமும் – முடிவும்”தான். தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி இதுகாறும் நிழலாய்த் தோற்றமளித்துக் கொண்டிருந்த ‘மூலத்தையும் முடிவையும்’ விளக்கும் ஆற்றல் பெற்று வருவது மதங்களின் அடித்தளத்தையே அசைத்துப் பார்ப்பதாக உள்ளது.

பல்வேறு நாடுகளில் செயற்கை உயிர்கள் குறித்த ஆராய்சிகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த அறிவியல் கண்டுபிடிப்பு தனது இனத்தின் பிறப்பு மற்றும் இறப்பின் இரகசியங்களை மனித குலம் அறிந்து கொள்வதோடு அவற்றை வெல்வதற்கும் உதவக் கூடும். மெய்யாகவே கடவுள் கல்லறைக்குள் பதுங்கப் போகும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் திண்ணம்.

– வினவு செய்திப் பிரிவு

செய்தி ஆதாரம்:

தென்னிந்தியாவின் உணவு இட்லி தோசையா – இறைச்சியா ? மு.வி.நந்தினி

மு.வி.நந்தினி

ரு தனிமனிதன் என்ன உண்ண வேண்டும் என தீர்மானிக்க நினைக்கிறது ஓர் அரசு. உலகின் எந்த ஒரு அரசும் செய்யாத திணிப்பை இந்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லிக்கொள்ளும் அரசு ஊக்கப்படுத்தி வளர்க்கும் கும்பல் குண்டர்கள், அம்மக்கள் எதை உண்டுகொண்டிருக்கிறார்கள் என சதா கண்காணித்தபடியே இருக்கிறார்கள்.  மக்கள் உண்டது மாட்டிறைச்சியா, ஆட்டிறைச்சியா என குடலைக் கிழித்து பார்க்கவும் இந்த குண்டர்கள் தயங்குவதில்லை.

முன்பொரு காலத்தில் பசுக்களை இவர்களுக்கு கட்டளையிடும் கும்பல் தலைவர்கள் விரும்பி உண்டார்கள் என்கிற வரலாற்றை இவர்கள் ஒருபோதும் அறியப்போவதில்லை. தினம் தினம் மனித உயிர்களை ‘அடித்துக்கொல், அடித்துக்கொல்’ என கிளம்பும் இவர்களுக்கு மட்டுமல்ல, அசைவம் உண்பதை வெளியே சொல்வது கூட கவுரவக் குறைச்சலை ஏற்படுத்தும் என நம்பிக்கொண்டிருக்கும் இந்தியாவின் 70 சதவீதம் பேருக்கும் வரலாற்று-அறிவியல் உண்மைகளை சொல்ல விரும்புகிறோம்.

சைவமா ? அசைவமா ?

சுமார் 2.6 மில்லியன் வருடங்களுக்கு முன், அதாவது மனிதர்களாக பரிணாமம் அடைவதற்கு முன் குரங்குகளாக திரிந்தபோது நம் மூதாதையரின் முக்கியமான உணவு, பூமிக்கடியிருந்து கிடைக்கும் கிழங்கு வகைகள். இந்த கிழங்கு வகைகளை (சமைக்கும் பழக்கமெல்லாம் பின்னாளில் வந்தது) மெல்லுவதற்கு அதிக நேரம் எடுத்தது. ஒரு நாளின் பெரும்பகுதியை மெல்லுவதற்காகவே இவர்கள் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவற்றை ஜீரணிக்கும் குடல் பகுதி பெரிதாக (தாவர உண்ணிகளின் குடல்பகுதி, விலங்கு உண்ணிகளின் குடல் பகுதியைக் காட்டிலும் பெரிதாக இருக்கும். தாவரங்களை எளிதில் ஜீரணிக்க முடியாது என்பதே காரணம்) இருந்தது. சிந்திப்பதற்கோ, செயலாற்றுவதற்கோ பெரும் வாய்ப்பு இல்லாத காரணத்தால் அவர்களின் மூளையும் சிறியதாகவே இருந்தது.

உணவு பற்றாக்குறையின் காரணமாக இறைச்சி உண்ணும் பழக்கம் அவர்களிடம் உண்டாகியிருக்கிறது. மனித பரிணாமத்தின் பாய்ச்சலை ஏற்படுத்திய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. விலங்குகளின் இறைச்சியை வெட்டி உண்ண கற்றுக்கொள்கிறார்கள். வெட்டி உண்பதால் மெல்லும் நேரம் குறைகிறது. கிழங்கு, பழங்களைக் காட்டிலும் இறைச்சியின் மூலம் அவர்களுக்கு கூடுதல் சத்து கிடைக்கிறது. குறைந்தபட்ச இறைச்சிகூட ஒரு நாளுக்கு தேவையான கலோரிகளை தந்துவிடும் என்பதால் அவர்களுக்கு செயலாற்ற நேரம் அதிகம் கிடைத்தது. மெல்லுவது குறைந்ததால் தாடையின் அளவு சிறுத்தது. பேசுவதற்கான உறுப்புகள் உருவாக அது உதவியது.  2 மில்லியன் வருடங்களுக்கு முன், ஹோமோஏரக்டஸ் என்ற நம் மூதாதையரின் மூளை பெரிதாக வளர்ச்சியடைய கலோரிகள் மிக்க இறைச்சியும் எலும்பு மஜ்ஜையுமே காரணம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மற்ற உறுப்புகளைக் காட்டிலும் மூளையின் வளர்ச்சிக்கு கலோரிகள் நிறைந்த உணவு தேவை. அதை அமினோ அமிலங்களும் நுண் சத்துக்களும் நிறைந்த இறைச்சி கொடுத்ததாலேயே ஹோமோஎரக்டஸின் மூளை சிறப்பான, முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியை எட்டியது என்கிறார்கள்.

Homo erectus
ஹோமோஎரக்டஸ்

அப்படியேனில் நாம் மனிதர்களாக பரிமாணம் அடைந்தது முதல், இறைச்சியை மட்டும்தான் உண்டோமா என்றால் இல்லை. எல்லா நேரங்களிலும் வேட்டையாடுதல் சாத்தியமில்லை. இறைச்சி கிடைக்காதபோது, பழங்களும் கொட்டைகளும் கிழங்குகளும் உணவாகின.  வேட்டையாடிகளாகவும் உணவுகளை சேகரிப்பவர்களாகவும் இருந்த மனிதர்கள் மிக சமீபத்தில்தான் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் வேளாண்மையை தொடங்கினார்கள். தானியங்களை இனம்கண்டு பயிரிட்டு உண்ண கற்றுக்கொண்டார்கள். மனிதர்களின் வாழ்வியலை மாற்றியமைக்க இவை அனைத்துமே உதவியிருக்கின்றன.

பின், ஏன் நாம் பொதுவெளியில் நான் அசைவம் உண்பேன் என்பதை சொல்லிக்கொள்ளக்கூட கூச்சப்படுகிறோம்? உலகின் மற்ற எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் மட்டும் ஏன் உணவின் மூலமாக தாழ்ந்தவர் – உயர்வானவர் என கருதும் பழக்கம் இருக்கிறது? மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் விரும்பி உண்ணும், சமைக்கும்  டேவிட் ராக்கோ போன்ற உலகப் புகழ் பெற்ற சமையல் கலைஞர்கள் தென்னிந்தியர்களின் உணவு இட்லியும் சாம்பாரும்தான் என ஏன் சொல்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடும் முன், டேவிட் ராக்கோவுக்கு நடிகர் மோகன்ராமின் மகள் விதுலேகா சொல்லிக்கொடுத்த தென்னிந்திய சமையல் பற்றி பார்ப்போம்.

பல ஆங்கில லைஃப் ஸ்டைல் சேனல்கள் தமிழ் பேசுகின்றன. சதா சாம்பாரும் காரக்குழம்பும் வைக்கக் கற்றுத்தரும் தமிழ் சேனல்கள் போல் அல்லாமல் உவ்வே என ஒதுக்கித்தள்ளும் இறைச்சி ரெசிபிகளை நாள்முழுவதும் இந்தச் சேனல்களில் காண முடியும். மாட்டிறைச்சிக்காக மனிதர்களைக் கொல்லும் இந்த நாட்டில் எப்படி மாட்டிறைச்சி சமையல் குறிப்புகள் வீடு தேடி வர அனுமதிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமூட்டுகிறது. விஷயத்துக்கு வருவோம்.

இத்தாலியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற செஃப்பான டேவிட் ராக்கோ இந்தியாவின் சமையல் வரலாற்றை உலகுக்கு தெரியப்படுத்தும் ஒரு தொடர் நிகழ்ச்சியை செய்கிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டு, சென்னை மயிலாப்பூர் மார்க்கெட்டில் வந்து இறங்குகிறார். டேவிட்டை வரவேற்கும் விதுலேகாவிடம் எனக்காக என்ன இறைச்சி சமைக்கப் போகிறீர்கள் என கேட்கிறார். பதற்றத்தோடு விதுலேகா, நாங்களேல்லாம் ப்யூர் வெஜிடேரியன்ஸ், இங்கே வெஜிடேரியன் உணவு மட்டும்தான் கிடைக்கும் என்கிறார்.

இட்லி-தோசை-சாம்பார் ஆகியவைதான் ஒட்டுமொத்த தென்னிந்தியர்களின் உணவாக உலகின் முன் கட்டமைக்கப்பட்டு விடுகிறது. டேவிட் ராக்கோவுக்கு விதுலேகா தென்னிந்தியர்களின் உணவு கலாச்சாரத்தை சொல்லும் பிரதிநிதியாக உள்ளார். ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பன பனியாக்களின் கலாச்சாரமே ஒட்டுமொத்த கலாச்சாரம்; அவர்களின் உணவே இந்தியர்களின் உணவு. ஆக, அனைத்தையும் பார்ப்பனியமே தீர்மானிக்கிறது.

சைவ உணவு திணிப்பு
உலகின் முன் கட்டமைக்கப்படும் தென்னிந்திய மக்களின் உணவு கலாச்சாரம் இட்லி-தோசை-சாம்பார்

பன்முகத்தன்மை கொண்ட இந்தியர்களின் உணவு பழக்கத்தில் பார்ப்பன பனியா கூட்டம் தன்னுடைய ஊடக-அரசியல்-ஆட்சி பலத்தின் காரணமாக தாக்கம் செலுத்தி வருகிறது. ஊடகங்களில் சைவ உணவு குறிப்புடன், அசைவ உணவுக் குறிப்பு வந்துவிட்டால் கடிதம் எழுதி சண்டை போடும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சி சமையல் குறிப்பு எந்தவொரு தமிழ் வெகுஜன ஊடகத்திலும் இதுவரையிலும் வந்ததில்லை.  இதுவும் ஒருவகை தீண்டாமைதான். நம்மால் கண்டுகொள்ளப்படாத தீண்டாமை.

பெரும்பான்மை சமூகத்தில் சைவமே சிறந்தது என்கிற கருத்தை விதைக்க பார்ப்பன-பார்ப்பனமயமாக்கப்பட்ட ஊடகங்கள் பெரும்பாங்காற்றுகின்றன.  சிறு தெய்வ வழிபாட்டில் ஆடு, கோழி, பன்றியை பலியிடுதல் முக்கியமான சடங்கு. அதை ஒழிக்க சிறு தெய்வங்களை பார்ப்பனமயப்படுத்தினார்கள். கடந்த இருபதாண்டுகளில் வெகுமக்களிடம் பக்தி என்கிற பெயரில் இந்துத்துவத்தை இந்த ஊடகங்கள் பரப்பின; பரப்பிவருகின்றன. பள்ளிக்கு அசைவ உணவு எடுத்துச் செல்வது தடை செய்யப்படும் அளவுக்கு சமூகத்தில் அசைவத்தின் மீதான அசூயை பரப்பப்பட்டுவிட்டது.

ஊட்டச்சத்து குறைபாடு
விட்டமின் பி12 நிறைந்த இறைச்சியை அந்நியமாக்கும் பார்ப்பனியம்

உணவு மீதான தீண்டாமை என நாம் எதிர்க்க காரணமிருந்தாலும், ஒரு சமூகத்தையே நோஞ்சாண் ஆக்கும் உணவின் மூலம் செலுத்தும் வன்முறையை நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டும். வாரத்தின் ஒரு நாள் அல்லது இரு நாள் இறைச்சி உண்பது வளரும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்குமேகூட போதுமான சத்தை வழங்காது.

இந்தியர்களின் சத்து குறைபாடு தொடர்பாக வெளிவரும் அத்தனை ஆய்வுகளிலும் விட்டமின் பி12 மற்றும் இரும்பு சத்து குறைபாடு பிரதானமாக உள்ளதை பார்க்க முடிகிறது. விட்டமின் பி12 இறைச்சியில் மட்டுமே உள்ளது. இரத்த சோகையை தடுக்கவும் நரம்பு மற்றும் இரத்த அணுக்களின் செயல்பாட்டுக்கும் இது முக்கியமானது. சத்து மாத்திரைகள் பின் விளைவுகளை தருமே தவிர, சத்தை தராது. சத்து தரும் இறைச்சி ஒதுக்கப்பட்டுவிடுகிறது.

மாட்டிறைச்சி தடை
மாட்டிறைச்சி

ஹீமோகுளோபின் மற்றும் மைலோகுளோபின் என்ற இரண்டு அத்தியாவசிய புரதங்களை உடலில் உற்பத்தி செய்ய இரும்பு சத்து உதவுகிறது. காய்கறிகளில் உள்ள இரும்பு சத்து, ஹீமோகுளோபின் புரதத்தை உற்பத்தி செய்ய உதவுவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீனில் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது என பரிந்துரைக்கிறார்கள். மாதவிடாய் காரணமாக அதிக ரத்த இழப்பை சந்திக்கும் பெண்கள் இரும்பு சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஆடி, ஆமாவாசை, புரட்டாசி, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை  என காரணம் சொல்லும் விரதம் என்னும் பெயரில் பெண்களை நோஞ்சான் ஆக்குகிறது பார்ப்பன மதம்.

சமணர்களிடமிருந்து சுவீகரித்துக்கொண்ட புலால் உண்ணாமையை பார்ப்பன இந்துமதம், அதை ஒற்றை உணவு பழக்கமாக பெரும்பான்மை சமூகத்தின் மீது திணித்துக்கொண்டிருக்கிறது. இறைச்சி மீதான சுயதடையை செய்துகொள்ள சமூகத்தை அது பழக்கிக்கொண்டிருக்கிறது. சக மனிதர்கள் பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்படும்போது இதே மனத் தடையுடன் சமூகம் தள்ளி நின்று பார்க்கிறது.  விலங்கிலிருந்து பகுத்தறிவு பெற்ற மனிதன் மீண்டும் விலங்காக மாறுவது இங்கிருந்து தொடங்குகிறது. உண்மையில் இது ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒன்று

– மு.வி.நந்தினி.

கட்டுரை ஆதாரங்கள்:
Sorry Vegans: Here’s How Meat-Eating Made Us Human
The Evolution of Diet
Evidence for Meat-Eating by Early Humans

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

எதையும் தாங்கும் இதயம் ஓ.பி.எஸ் – கருத்துக் கணிப்பு !

முதலில் பிளாஷ் ஃபேக்:   தமிழக துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மதுரை மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு வர உதவினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இராணுவத்தின் ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பியதுதான் அவர் செய்த உதவி. ஒக்கிப் புயலுக்கு வராத இராணுவம் இங்கே ஓ.பி.எஸ் குடும்பத்திற்கு ஓடி வருகிறது.

பிறகு தமிழகத்தில் எடப்பாடி பினாமிகள் இடத்தில் வருமானவரித்துறை சோதனை. தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.கவை ஒரு கலக்கு கலக்கி குலுக்கி கக்கத்தில் வைக்க நினைக்கும் பா.ஜ.கவின் இத்தகைய மிரட்டல்கள் ஓ.பி.எஸ் முதல்வராக இருக்கும் போதே துவங்கி விட்டன. ஒவ்வொரு சோதனைக்குப் பிறகும் அந்த செய்திகள் காணாமல் போகும். பணம், தங்கம் இதர பரபரப்புகள் புதைக்கப்படும். விசாரணையும் இருந்த இடம் தெரியாமல் போகும்.

அ.தி.மு.க கும்பலோ மத்தியிலே சரணாகதி, மாநிலத்தில் கமிஷனே கதி என்று படுவேகமாக இயங்கி வருகிறது. துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு மூலம் வந்த ஆணைக்கிணங்க பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக பாராளுமன்ற அணி பா.ஜ.கவிற்கு ஆதரவாக ஓட்டுப் போட்டது. அதில் நாலு ஓட்டு வரவில்லை என காவிகள் உளவுப்படையை முடுக்கி விட்டிருக்கிறார்களாம்.

இந்நிலையில் ஓ.பி.எஸ் அவர்கள், மைத்ரேயன் துணையோடு டெல்லி செல்கிறார். அங்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமனை பார்க்கப் போவதாக தெரிவித்திருந்தார். இதற்காக மைத்ரேயன் மூலம் சந்திப்பிற்கு ஒழுங்கு செய்யப்பட்டதாம். எதற்காக இந்த சந்திப்பு? இதற்கு நேற்று (24.07.2018) காலை வண்டலூர் சென்ற முதல்வர் எடப்பாடி பதிலளிக்கிறார். அங்கு பிறந்த ஒரு புலிக்குட்டிக்கு ஜெயா என்று பெயர் சூட்டியவர், பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஓ.பி.எஸ் டெல்லி சந்திப்பு தனிப்பட்ட முறையிலானது, நிர்மலா சீதாராமன் அனுப்பிய விமான சேவைக்கு நன்றி கூறும் பொருட்டு நடக்கிறது என்று போட்டு உடைத்தார்.

வேறு வழியின்றி தில்லியிலும் இதையே ஓ.பி.எஸ் கூறியிருக்கிறார். நிர்மலா சீதாராமனை சந்திக்கப்போவதாக அவர் கூறியதை சந்தித்து விட்டார் என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டதாம். இதனால் கொதித்தெழுந்த நிர்மலா, தனது இராணுவ விமான உதவி செய்தி வெளியே வந்து, இப்படி சந்திக்காமலேயே சந்தித்துவிட்டதாக செய்தி போடுகிறார்களே என்று சீறினாராம்.

உடனே வெளியே அமர்ந்திருந்தவர்களில் மைத்ரேயனை மட்டும் உள்ளே அனுமதித்தவர், ஓ.பி.எஸ்-ஐ சந்திக்காமல் திருப்பி அனுப்பி விட்டாராம். அதையே டிவிட்டரிலும் போட்டு மானத்தை வாங்கியிருக்கிறார்.  ஓபிஎஸ் அவரைச் சந்திக்கப் போனது அ.தி.மு.க அரசு குறித்த வருமான வரி சோதனைகள், அடுத்த தேர்தலுக்கான கூட்டணி பேரங்கள் மற்றும் இதர மிரட்டல்கள் – சரணாகதிகள், திரை மறைவுப் பேரங்களுக்கு என்பது ஊரறியும். ஜெயா உயிரோடு இருந்த போது இதே மாதிரி பல மத்திய தலைவர்களை சந்திக்காமல் அவமதித்திருக்கிறார். அதனால்தான் போயஸ் தோட்டம் என்றாலே பல தலைவர்களுக்கு அலர்ஜி. எப்படி இருந்தாலும் இந்த மாதிரி அவமானங்கள் எல்லாம் அதிமுகவில் சகஜம்.

தில்லி சென்று வெறுங்கையோடு சென்னை திரும்பிய ஓ.பி.எஸ், நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லையே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும என்று அண்ணா கூறியதாக கூறி தனது தோல் தடிப்பு என்று சென்று விட்டார்.

மாலை டி.வி விவாதத்தில் பங்கேற்ற சில அப்பாவிகள் ஓ.பி.எஸ் எனும் 7.5 கோடி தமிழக மக்களின் துணை முதல்வரை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமதித்து விட்டார் என கண்ணீர் வடித்தனர்.

அய்யா, டயரைத் தொழுதவர்கள், ஹெலிகாப்டர்களை பறக்கும் போதே மண்ணைத் தொட்டு வணங்கியவர்கள், ஜெயா கோட்டைக்கு வரும் போதும், செல்லும் போதும் கும்பல் கும்பலாக தொழுசாசனம் செய்தவர்கள் எல்லாம் இந்த மான அவமானங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பது அவர்களது ஆன்மாவிற்கே தெரியும். ஆனால மைத்ரேயன் போன்ற மயிலாப்பூர் வாசிகளுக்கு மட்டும் இன்னும் முதல் மரியாதை இருக்கிறது என்பதையும் சிலர் புகார் சொல்கின்றனர்.

பா.ஜ.கவோ இந்த அடிமை எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறானே என்று கருணை காட்டுவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடித்து துவைக்கிறார்கள். அடுத்த தேர்தலில் பா.ஜ.க, ரஜினி, அ.தி.மு.க என கூட்டணி பேரம் வைத்து சீட்டுக்களை கைப்பற்றுவதற்கு அ.தி.மு.க-விற்கு அளிக்கும் மோடி அரசின் ட்ரில்தான் இந்த எதையும் தாங்கும் இதயம் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

மூன்று பதில்களைத் தெரிவு செய்யலாம்!

இன்றைய கேள்வி:

ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்காமல் நிர்மலா சீதாராமன் அவமதித்ததன் விளைவு என்ன?
ஒரு மாலைநேர வெட்டி விவாதம்
ரெய்டு பயத்தினால் நடுங்கும் அ.தி.மு.க-விற்கு அடுத்த அடி
தேர்தல் கூட்டணிக்காக பா.ஜ.க மிரட்டுவதன் ஆரம்பம்
தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானம்
எடப்பாடியின் சதியால் அடிவாங்கிய ஓ.பி.எஸ்
பார்ப்பனர்களுக்குத்தான் தில்லியில் மரியாதை

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

டிவிட்டரில் வாக்களிக்க:

காவிரி : தொடருகிறது வஞ்சனை !

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில், தமிழகத்துக்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய 31 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளைக்கூட மதிக்காத கர்நாடக அரசு, ஆணையத்தின் இந்த உத்தரவைப் பிசகாமல் நடைமுறைப்படுத்துமா என்பதுதான் இப்பொழுது தமிழகத்தின் முன்நிற்கும் கேள்வி. ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த மறுத்தால், ஆணையமும் மைய அரசும் உடனடியாகத் தலையிட்டுத் தமிழகத்திற்கு நியாயம் வழங்குமா என்பது மற்றொரு கேள்வி.

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்டிருக்கும் ஆணையம், கர்நாடக அணைகளைத் திறந்துவிடக் கூடிய சுதந்திரமான, தன்னதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்கப்படவில்லை. மைய நீர்ப்பாசன அமைச்சகத்தின் துணை அமைப்புப் போன்று உருவாக்கப்பட்டிருக்கிறது” எனத் தமிழகத்தின் எதிர்க்கட்சிகளும், தமிழ்த் தேசிய மற்றும் புரட்சிகர அமைப்புகளும் அம்பலப்படுத்தியிருக்கும் நிலையில், இந்தக் கேள்விகளை யாரும் புறந்தள்ளிவிட முடியாது.

கடந்த ஜூலை – 2 அன்று தில்லியில் நடைபெற்ற
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம்.

இந்தக் கேள்விகள் அனுமானத்தின் அடிப்படையில் எழவில்லை. ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க கபினி, கிருஷ்ணசாகர் அணைகளிலிருந்து ஜூலை மாதத்திற்குரிய நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிடுவதற்குப் பதிலாக, அதற்கு சவால்விடும் விதத்தில், ஆணையத்தின் உத்தரவு வெளியான ஓரிரு நாட்களிலேயே கபினி அணையிலிருந்து தமிழகத்திற்குத் திறந்துவிடப்பட்ட உபரி நீரின் அளவைக் குறைத்து, ஆணையத்திற்கு பெப்பே காட்டியிருக்கிறது, கர்நாடக அரசு.

கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளை, தீர்ப்புகளை மதிக்காமல் நடந்துகொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பின் நாட்களைக் கடத்தும் சூழ்ச்சியிலும் இறங்கியிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் முன்பே காவிரி ஆணையத்தை அமைத்திட உத்தரவிட்டாலும், கர்நாடகத்தின் சூழ்ச்சியாலும் அதற்கு அணுசரணையாக பா.ஜ.க. அரசு நடந்து கொண்டதாலும் ஆணையம் அமைப்பதும் ஒரு மாதம் தாமதமாகி, அதன் முதல் கூட்டமே ஜூலை 2 நடைபெற்றது. இந்த சூழ்ச்சியின் மூலம் ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை உரிய தேதியில் திறந்துவிடுவதை கர்நாடக அரசு தவிர்த்துவிட்டது.

இன்னொருபுறம், தென்மேற்குப் பருவ மழை அபரிமிதமாகப் பெய்து, கர்நாடகத்தின் அணைகளில் தேக்கி வைக்க முடியாத நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட்டுவிட்டு, ஜூன் மாதத்தில் தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரின் அளவிற்கு மேல் தந்திருப்பதாக ஆணையக் கூட்டத்தில் வாதிட்டிருக்கிறது. ஆணையமும் கர்நாடகத்தின் அந்தச் சூழ்ச்சியான வாதத்தை ஏற்றுக்கொண்டு எவ்வளவு நீர் அதிகமாகத் திறக்கப்பட்டிருக்கிறதோ, அதனை ஜூலை மாதப் பங்கில் கழித்துக் கொள்ள கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பாக கடந்த ஜூன் 17 அன்று மோடியைச் சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி.

இப்படி கர்நாடகத்தின் தார்மீக நியாயமற்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள ஆணையம், ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரை ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பவில்லை. அந்த நீரை இப்பொழுது சேர்த்துக் கொடுக்குமாறு கட்டளையும் இடவில்லை. இந்த ஒருதலைப்பட்சமான அநீதியைக் கேட்டால், ஆணையத்தின் செயல்பாடுகள் ஜூலையில் தொடங்கியிருக்கிறது என்ற சால்ஜாப்பைச் சொல்லவும் தயங்கமாட்டார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவிலும், அதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும்கூட இத்தகைய காலந்தாழ்த்தும் சூழ்ச்சிகளையும் சால்ஜாப்புகளையும் நெடுகக் காணமுடியும்.

முதலாவதாக, நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரில் 14.75 டி.எம்.சி. நீரை அபகரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபரிமிதமாக இருப்பதாக சால்ஜாப்பு சொல்லி, தனது அநீதியை நியாயப்படுத்தியது. மேலும், நடுவர் மன்றத் தீர்ப்பின் உயிர்நாடியையேப் பிடுங்கிப்போடும் வண்ணம், தன்னதிகாரம் கொண்ட வாரியம் அமைப்பது பற்றித் தனது தீர்ப்பில் குறிப்பிடாமல், நதி நீரைப் பங்கிட்டுக் கொள்ளும் செயல்திட்டத்தை 29.03.2018 உருவாக்க வேண்டும் என்ற மட்டோடு நின்றுகொண்டது. யானையைக் குருடர்கள் தடவிப் பார்த்த கதையாக, இந்தச் செயல்திட்டத்திற்கு ஒவ்வொரு விசாரணையின் போதும் விதவிதமான விளக்கங்களை அளித்தது. 

இந்தச் செயல்திட்டத்தை உருவாக்குவதற்கு ஆறு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தபோதும், மைய பா.ஜ.க. அரசு அக்காலக்கெடுவிற்குள் செயல்திட்டத்தை உருவாக்காமல் சண்டித்தனம் செய்தது. மேலும், கால அவகாசம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, 31.3.2018 அன்று செயல்திட்டம் என்றால் என்ன? என விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவிலேயே செயல்திட்டத்தை உருவாக்க மேலும் மூன்று மாத கால அவகாசமும் கேட்டது. தமிழகத்தின் உரிமைகளை கேலிப் பொருளாகக் கருதும் பா.ஜ.க. அரசின் திமிரும் அலட்சியமும் இந்த மனுவின் மூலம் வெளிப்பட்டது.

இந்த மனுக்களை சாவகாசமாக 09.04.2018 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், பா.ஜ.க. அரசின் இழுத்தடிப்பைக் கண்டிப்பது போல ஒருபுறம் பாவனை செய்துவிட்டு, இன்னொருபுறமோ செயல்திட்டத்தைச் சமர்ப்பிக்க மே 3 வரை மீண்டும் கால அவகாசம் அளித்தது. மே 12 அன்று கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடக்கவிருந்த நிலையில் மே 3 வரை அளிக்கப்பட்ட கால அவகாசம், உச்ச நீதிமன்றம் பா.ஜ.க.விற்குக் காலத்தினால் செய்த பேருதவியாகும்.

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்.

உச்ச நீதிமன்றம் அளித்த இரண்டாவது கால அவகாசம் முடிந்த பின்னும் பா.ஜ.க. அரசு செயல்திட்டத்தை உருவாக்கவில்லை. இது தொடர்பாக மே 3 அன்று நடந்த விசாரணையில், ‘‘செயல்திட்டம் உருவாகிவிட்டதென்றும், கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் உள்ளிட்டோர் அம்மாநிலத்திற்குச் சென்றுவிட்டபடியால், வரைவு செயல்திட்டத்தை மைய அமைச்சரவை கூடி விவாதித்து இறுதி செய்ய முடியவில்லை” என்ற சால்ஜாப்பை நீதிபதிகளின் முன்வைத்தது, பா.ஜ.க. அரசு.

இதுவொரு வடிகட்டிய பொய். இந்தக் கெடு தேதிக்கு முதல் நாள்தான் மைய அமைச்சரவை கூடி, சென்னை உள்ளிட்ட மூன்று விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்திருந்தது. கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, அங்கு அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையிலும் செயல்திட்டத்தை உருவாக்கக் கூடாது என்ற தீயநோக்கம் அன்றி இதற்கு வேறு காரணம் கிடையாது. எனினும், உச்ச நீதிமன்றம் செயல்திட்டத்தை வகுப்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மே 8 அன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூறி, வழக்கை ஒத்திவைத்தது. பா.ஜ.க. அரசிற்கு மூன்றாவது முறையாக அளிக்கப்பட்ட சலுகை இது.

செயல்திட்டத்தை உரிய தேதியில் வகுக்காமல் சால்ஜாப்புகளைச் சொல்லிவந்த பா.ஜ.க. அரசு, இன்னொருபுறத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்புப் போராட்டங்களை வேவு பார்ப்பதற்கும், அவற்றை ஒடுக்குவது குறித்துத் திட்டமிடுவதற்கும் ஏற்ப அதிவிரைவுப் படையை அனுப்பி ஒத்திகை பார்த்தது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்து மே 14 அன்று வரைவு செயல்திட்டத்தைத் தாக்கல் செய்த பா.ஜ.க. அரசு, அதன் கீழ் அமைக்கப்படும் ஆணையம் மைய நீர்வளத் துறையின் எடுபிடி அமைப்பாகச் செயல்படும் நோக்கில், ‘‘காவிரி ஆணையத்தின் முடிவை ஒரு மாநிலம் ஏற்கவில்லையென்றால், அதில் இந்திய அரசு எடுக்கும் முடிவே இறுதியானது. இந்திய அரசு எந்தக் கட்டளை இட்டாலும் அதை காவிரி ஆணையம் செயல்படுத்த வேண்டும்” என இரு விதிகளை உருவாக்கியிருந்தது.

1990 தொடங்கி இன்றுவரையிலும் காவிரிப் பிரச்சினையில் இந்திய தேசிய அரசு எப்படி ‘நடுநிலையோடு நடந்து வந்திருக்கிறது என்பதை நினைவுகூர்ந்தாலே, இந்த விதிகளின் பின் ஒளிந்திருக்கும் அபாயத்தை யாரும் புரிந்துகொள்ள முடியும். புதுச்சேரி மாநில வழக்குரைஞர் இவ்விதிகளை நீக்கக் கோரி வாதாடிய பின்தான், தமிழக அரசிற்குச் சொரணை வந்தது.

மயிலாடுதுறையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற
காவிரி நதிநீர் உரிமைப் போராட்ட வெற்றிப் பொதுக்கூட்டம்.

இவ்விதிகள் நீக்கப்பட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரு அமைப்புகளைத் தென்மேற்கு பருவ மழை தொடங்கு முன்பே அமைக்க வேண்டுமென 18.05.2018 அன்று தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம்.

இந்த ஆண்டிற்கான தென்மேற்குப் பருவ மழை மே 29 அன்று தொடங்கியது. இடைப்பட்ட இந்த 10 பத்து நாட்களில் செயல்திட்டத்தை அரசிதழில் வெளியிட்டு, ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுக்களுக்கான உறுப்பினர்களையும் நியமித்து, தமிழகத்தில் குறுவை சாகுபடி தொடங்குவதற்கு ஏற்ப செயல்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், மைய அரசோ வேண்டுமென்றே காலதாமதம் செய்து ஜூன் 1 அன்று இரவில்தான் செயல்திட்டத்தை அரசிதழில் வெளியிட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்கள் அடுத்தடுத்து தமது உறுப்பினர்களை அறிவித்த நிலையில், கர்நாடகம் தனது உறுப்பினர்களை அறிவிக்காமல் சண்டித்தனத்தில் இறங்கியது.

இதனிடையே மைய அரசும் கர்நாடகாவும் பேசி வைத்துக் கொண்டாற்போல ஒரு நாடகத்தை அரங்கேற்றின. ஜூன் 12 கர்நாடகம் தனது உறுப்பினர்களை அறிவிக்க வேண்டும் என மைய அரசு கர்நாடகாவிற்குக் கட்டளையிட்டது. வழமைபோலவே அந்த உத்தரவை கர்நாடக அரசு ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. மைய அரசும் அது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாகப் பெய்யத் தொடங்கும் முன்புகூட அம்மாநில (காவிரி) அணைகள் காய்ந்துபோய்க் கிடக்கவில்லை. விகிதச்சார முறைப்படித் தமிழகத்திற்குத் தண்ணீரை திறந்துவிடும் அளவிற்கு கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டுகளில் நீர் இருப்பு இருந்தது (தினமணி, 9.6.2018, பக்.9). இந்த இருப்பிலிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய பங்கைப் போராடிப் பெறும் வக்கும் தெம்பும் இல்லாத எடப்பாடி பழனிச்சாமி, மழை பெய்து மேட்டூர் நிரம்பினால் தண்ணீரைத் திறந்துவிடுவோம் எனக் கூறி, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார். மதுரைக்குச் சாமி கும்பிட்டுப் போக வந்த கர்நாடக முதல்வரும் இதையே கூறினார். எதிரியும் துரோகியும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி ஒரே படகில் பயணித்ததைத் தமிழகம் கண்டது.

ஜூன் மாத மத்தியிலேயே தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிடக் கூடிய கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டிவிட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பக்கூடிய நிலைக்கு வந்துவிட்டது. மைய அரசு நியாயமாக நடந்திருந்தால், தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில அரசுகள் அறிவித்திருந்த உறுப்பினர்களைக் கொண்டே காவிரி ஆணையத்தை முன்கூட்டியே அமைத்து, அதன் கூட்டத்தை நடத்தி, ஜூன் மாதத்திற்குரிய பங்கைத் தமிழகத்திற்குத் திறந்துவிடும்படி கர்நாடகாவிற்கு உத்தரவிட்டிருக்க முடியும். ஆனால், கர்நாடகம் தனது உறுப்பினர்களை அறிவிக்காததைக் காரணமாகக் காட்டியே ஆணையம் அமைப்பதைத் தள்ளிப்போட்டு தமிழகத்தை வஞ்சித்தது.

ஜூன் மாதத்தில் கபினியிலிருந்து தமிழகத்திற்கு அதிகப்படியாகத் திறந்துவிடப்பட்டதாகக் கூறப்படும் காவிரி நீர், அந்த அணையில் தேக்க முடியாத உபரி நீரேயொழிய, தமிழகத்திற்குரிய சட்டப்படியான பங்கு அல்ல. கர்நாடகம் தமிழகத்தை வடிகால் பூமியாகத்தான் கருதுகிறது, நடத்தி வருகிறது என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உறுதிபட்டிருக்கிறது.

மேலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பத்து நாட்களுக்கு ஒருமுறை கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை அளவிடும் உத்தரவை மாற்ற வேண்டும் எனக் கோரிவரும் கர்நாடக அரசு, இதன் காரணமாக கர்நாடகாவில் சட்டம் பிரச்சினை ஏற்படும் என மிரட்டியும் வருகிறது. கர்நாடக அணைகளில் தேக்கப்படும் காவிரி நீரை ஏரி, குளங்களுக்கு மடை மாற்றிவிட்டுவிட்டு, அணைகளில் போதிய நீரே இல்லை என முதலைக் கண்ணீர் வடிக்கும் நாடகத்தை கர்நாடக அரசு நீண்ட காலமாகவே நடத்தி வருகிறது. ஏறக்குறைய 30 டி.எம்.சி. தண்ணீர் இப்படி மடைமாற்றி விடப்படுவதாகத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர். காவிரியிலிருந்து 30 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் சாமர்த்தியமாகத் திருடி வருகிறது. இந்தத் தண்ணீர் திருட்டைத் தொடரவும், மூடிமறைக்கவும்தான் பத்து நாட்களுக்கு ஒருமுறை அணைகளில் உள்ள நீர்மட்டத்தை ஆய்வு செய்வதை கர்நாடகா எதிர்க்கத் தொடங்கியிருக்கிறது.

இதோடு, காவிரி நீர்ப் பங்கீடு குறித்த செயல்திட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலேயே அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பதால், அது ஏற்புடையதல்ல என்ற முட்டுக்கட்டையையும் போட்டு வருகிறது, கர்நாடகம். ஏறக்குறைய ஓராண்டிற்கு முன்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை மூன்று நாட்களுக்குள் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் பா.ஜ.க. அரசிற்கு உத்தரவிட்டபோது, ‘‘அதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்குக் கிடையாது, நாடாளுமன்றத்திற்குத்தான் உண்டு” என வாதிட்டு, தமிழகத்தை வஞ்சித்தது, மோடி அரசு. அந்த வஞ்சகம் நிறைந்த வாதத்தை இப்பொழுது பா.ஜ.க.விற்குப் பதிலாக, காங்கிரசுமதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

கர்நாடகா மாநில அதிகாரத்தைக் கைப்பற்ற எலியும் பூனையுமாக மோதிக் கொண்ட பா.ஜ.க.வும், காங்கிரசு கூட்டணியும் தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிடக் கூடாது என்பதில் ஒன்றாக நிற்கின்றன. நடுவண் பா.ஜ.க. அரசு ஜூலை 2 இல் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தும் அறிவிப்பை வெளியிடுகிறது. அதேசமயத்தில், கர்நாடக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவும், கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மைய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்தகவுடாவும் கர்நாடகா அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்திற்குத் தண்ணீரைத் தருவதைத் தடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள்.

“ஜூலை 10 அணை திறக்கப்பட்டால்தான், குறுவை சாகுபடியை உத்தரவாதப்படுத்த முடியும்; இல்லையென்றால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாவது நிச்சயம்” என எச்சரிக்கின்றன தமிழக விவசாய சங்கங்கள். டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்வா, சாவா என்ற இக்கட்டில் மீண்டும் நிறுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதன்படி அமைக்கப்பட்டிருக்கும் ஆணையத்தின் அதிகாரம் ஆகியவை சோளக்காட்டு பொம்மைகளா, இல்லையா என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வெகுகாலம் காத்திருக்கத் தேவையில்லை.

மின்னூல்:

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

மோடியைக் கொல்ல சதியாம் !

ன்முறையைத் தாங்களே அரங்கேற்றிவிட்டு பழியை எதிர்த்தரப்பினர் மீது போட்டு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது என்பது  நாஜிகள் காலம் தொட்டு பாசிஸ்டுகள் கடைபிடித்து வரும் அணுகுமுறை. இந்த விசயத்தில் பார்ப்பன பாசிஸ்டுகள் நாஜிகளை விடவும் கைதேர்ந்தவர்கள். தூத்துக்குடியில் மக்களின் அமைதியான போராட்டத்தின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, அதையே காரணம் காட்டி 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, பிறகு போராடிய மக்கள் மீதும் முன்னணியாளர்கள் மீதும் சரம் சரமாகப் பொய்வழக்குகள் போடுகிறார்கள். இது மாநில உளவுத்துறையை கைப்பாவையாக வைத்துக் கொண்டு மத்திய உளவுத்துறை அரங்கேற்றிவரும் நாடகம்.

மே – 22 பின் தூத்துக்குடி பிரச்சினையில் என்ன நடக்கிறதோ அதுவேதான் கடந்த ஜுன் – 7 ஆம் தேதியன்று  மகாராட்டிரத்திலும் நடந்தது. 2018 ஜனவரி – 1 ஆம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200 ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சியில், இலட்சக்கணக்கான தலித் மக்கள் கலந்து கொண்டதால், ஆத்திரம் கொண்ட இந்துவெறி அமைப்புகள் அவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டே வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன.

2018 ஜனவரி 1-ம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200 ஆம் ஆண்டு
நினைவு தின நிகழ்ச்சியில் திரண்ட இலட்சக்கணக்கான தலித் மக்கள்.

தற்போது வன்முறைக்குக் காரணம் மாவோயிஸ்டுகள்தான் என்று பொய்க்குற்றம் சாட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முன்னணியாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் வேட்டையாடி வருகிறது மகாராட்டிர அரசு. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியவர்களே மாவோயிஸ்டுகள்தான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததைப் போல மோடியைக்  கொலை செய்வதற்கு மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறி, மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொய்க்குற்றம் சாட்டி, ஜுன் 7 ஆம் தேதியன்று 5 பேரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) கைது செய்திருக்கிறது மகாராட்டிர போலீஸ்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) கைது செய்யப்பட்ட (இடமிருந்து) சுரேந்திர காட்லிங், சுதிர் தவாலே, மகேஷ் ராவத், ஷோமா சென், ரோனா வில்சன்.

கைது செய்யப்பட்ட சுரேந்திர காட்லிங் (வயது 47) வழக்கறிஞர். நாக்பூரில் பிறந்தவர். 1990 ஆவ்கான் நாட்டிய மஞ்ச் என்ற புரட்சிகர பண்பாட்டு அமைப்பில் செயல்பட்டவர். பிறகு சட்டம் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு  எதிரான வன்கொடுமைகள், அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மக்கள் வழக்கறிஞர்.  முக்கியமாக பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கறிஞர். எளிய வாழ்க்கை வாழ்பவர். சி.பி.டி.ஆர். என்ற சிவில் உரிமை அமைப்பின் செயல்வீரர். பீமா கோரேகான் நிகழ்வு நடைபெற்ற ஜனவரி 1 ஆம் தேதியன்று, கல்கத்தா நீதிமன்றம் ஒன்றில் வழக்கு நடத்திக் கொண்டிருந்த அவரை இவ்வழக்கில் தொடர்புபடுத்தியிருக்கிறது, மராத்திய பா.ஜ.க. அரசு.

சுதிர் தவாலே (54) நாக்பூர் குடிசைப்பகுதி ஒன்றில் தலித் சமூகத்தில் பிறந்த இவர், 2011 இல் மாவோயிஸ்டு தொடர்புக்காக கைது செய்யப்பட்டு 40 மாதங்களுக்குப் பின் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். வெளியே வந்தவுடன் ஏற்கனவே தான் நடத்திவந்த வித்ரோகி என்ற பத்திரிகையை தொடர்ந்து தீவிரமாக நடத்தினார். முக்கியமாக சுமார் 200 தலித் இயக்கங்களை ஒன்றிணைத்து பீமா கோரேகான் வெற்றி விழாவை பிரம்மாண்டமாக நடத்தியதுதான் இவர் செய்த மிகப்பெரிய குற்றம்.

மகேஷ் ராவத் (30)  மராத்திய மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2009 இல் படிப்பதற்காக மும்பையில் உள்ள டாடா சமூகவியல் ஆய்வுக் கழகத்தில் சேர்ந்த பிறகுதான் இவர் சமூக கண்ணோட்டம் பெறத் தொடங்கினார் என்கிறார் இவரது சகோதரி. கட்சிரோலி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் இவர் ஆற்றிய பணியின் காரணமாக, பிரதமரின் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆய்வாளராக அங்கீகரிக்கப்பட்டவர். சூரஜ்கர் இரும்புக் கனிமச் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக பழங்குடி மக்களை திரட்டி பல போராட்டங்களை நடத்தியவர்.

ஷோமா சென் (60) நாக்பூர் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கியத் துறைத் தலைவர். ஒருசில நாட்களில் பணி ஓய்வு பெறவிருந்தவர். பெண் விடுதலை இயக்கங்களிலும் மனித உரிமை அமைப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டவர். அவரது கணவர் துஷார்காந்த் பட்டாசார்யா, 2007 ஆம் ஆண்டில் மாவோயிஸ்டு தொடர்புக்காக நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்து 2011 இல் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டவர்.

ரோனா வில்சன் (47) கேரளத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் வசிப்பவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவராக இருந்தவர். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட எஸ்.ஏ.ஆர். கிலானியுடன் இணைந்து அரசியல் கைதிகளுக்கான விடுதலை இயக்கத்தை நடத்தி வருபவர். இவர் பீமா கோரேகான் நிகழ்வுக்கு செல்லவில்லை என்பதும், அதனை ஏற்பாடு செய்தவர்களுடன்  இவருக்கு எந்தவிதத் தொடர்பும்இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான முறையில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்கை விடுதலை செய்யக்கோரி நாக்பூர் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

மோடியைக் கொல்லச் சதி செய்ததாக குற்றம் சாட்டி, இந்த ஐந்து பேரையும் கைது செய்வதற்கு அரசு தரப்பு கொடுத்த  ஆதாரம் ஒரு மொட்டைக் கடிதம். மாவோயிஸ்டு அமைப்பைச் சேர்ந்த எம் என்பவரால் பிரகாஷ் என்பவருக்கு, ஏப்ரல்,  18,  2017 இல்  எழுதப்பட்ட ஒரு கடிதம்.  ரோனா வில்சனின் வீட்டை ஏப்ரல் 2018 இல் சோதனை செய்தபோது இந்த கடிதத்தின் நகலை அவருடைய கணினியிலிருந்து கைப்பற்றியதாக போலீஸ் கூறுகிறது. இதற்குமேல் அந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மைக்கு வேறு எந்த ஆதாரமும் கிடையாது.

“பிரதமரை கொலை செய்யவிருக்கிறார்கள் என்ற தகவல் அடங்கிய கடிதம் உண்மையானதாக இருக்கும்பட்சத்தில், அக்கடிதத்தினை ஏப்ரல் மாதத்தில் கைப்பற்றிய போலீஸ், ஜுன் மாதம் வரையில் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் அந்தக்  கடிதத்தின் நகலைக் காட்டுகிறாரே, அவர் கைக்கு அது வந்தது எப்படி?” என்று பல கேள்விகளை எழுப்புகிறார் மார்க்சிஸ்டு கட்சியின் புனே நகரத் தலைவர் சுபோத் மோரே.

இது மட்டுமல்ல, ஒரு மாபெரும் கொலைச் சதிக்கு ஆதாரமாகக் காட்டப்படும் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கமே நகைக்கத்தக்க கேலிக்கூத்தாக அமைந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில் எம் என்று கையொப்பமிட்டுள்ளவர் மாவோயிஸ்டு கட்சியின் மராட்டிய மாநிலச் செயலர் மிலிந்த் தெல்தும்டெ என்று கூறுகிறது போலீஸ்.

பீமா கோரேகான் நிகழ்வின் செலவுகளுக்குப் பொறுப்பு சுதிர் தவாலே என்றும், எதிர்கால நிதி தேவைகளுக்கு ஷோமா சென், சுரேந்திர காட்லிங் ஆகியோரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாடெங்கும் தலித் போராட்டங்களை கிளப்பி விடுவதற்கு தோழர்கள் ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோர் உதவுவார்கள் என்றும், இது விசயமாக மாவோயிஸ்டு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியுடனும் தொடர்பில் இருப்பதாகவும் கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  மோடி ஆட்சியை அகற்றியே தீரவேண்டும் என்றும், ராஜீவ் காந்தி சம்பவத்தை போல ஒன்றை நடத்துவதுதான் அதற்கு வழி என்றும் கடிதம் கூறுகிறது. இது மட்டுமல்ல, நான்கு கோடி ரூபாய் பணம், ஒரு எம்-4 ரக துப்பாக்கி, சில இலட்சம் ரவுண்டு தோட்டாக்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வது பற்றியும் அதே கடிதம் குறிப்பிடுகிறது.

நக்சலைட் தீவிரவாத பீதியூட்டும் ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசர் இதழின் அட்டைப் படம்.

அதாவது, போலீஸ் கைது செய்ய விரும்பும் எல்லோருடைய பெயரும் இடம்பெறுகின்ற வகையிலும், ஜிக்னேஷ் மேவானி முதல் காங்கிரசு வரையிலான பா.ஜ.க. அரசியல் எதிரிகள் அனைவரின் பெயரும் இருக்கும் வகையிலும், ஊபா சட்டத்தின் எல்லா குற்றப் பிரிவுகளும் வரும் வகையிலும் தயாரிக்கப்பட்டிருக்கும் கடிதம்தான் இது.

இதன் நம்பகத்தன்மையை முன்னாள் உயர் போலீஸ்  அதிகாரிகளே ஏற்றுக்கொள்ளவில்லை. ‘‘தமது கடிதங்களில் சம்மந்தப்பட்ட நபர்களின் உண்மையான பெயர்களை மாவோயிஸ்டுகள் எப்போதுமே பயன்படுத்த மாட்டார்கள்” என்கிறார் முன்னாள் ஜார்கண்ட் டி.ஜி.பி. ஜி.எஸ்.ராத்.

“இப்படித்தான் குஜராத்திலும் இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 22 பேர் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு போலி மோதலில் கொலை செய்யப்பட்டனர். ஒவ்வொரு வழக்கிலும் இவ்வாறு கொல்லப்படுபவர்கள் லஷ்கர் இ தொய்பா அல்லது ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் மோடியைக் சொல்லச் சதி செய்ததாகவும்தான் சொன்னார்கள். ஆனால் டி.ஐ.ஜி. வன்சாரா கைது செய்யப்பட்டவுடனே இத்தகைய கொலைகள் நின்றுவிட்டன” என்கிறார் குஜராத்தின் முன்னாள் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.  ஆர்.பி.ஸ்ரீகுமார்.

“மோடியைக் சொல்லச் சதி என்ற நாடகம் ஏற்கனவே அரங்கேறிய பழைய நாடகம்தான்.  இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலையில் என்ன நடந்ததோ அதுதான் இதிலும் நடக்கிறது. மோடி கொலைச் சதியில் வழக்கறிஞர் காட்லிங்கை தொடர்புபடுத்துவதென்பது, தலித் மக்களின் போராட்டத்தை மாவோயிஸ்டு சதி என்று  திசைதிருப்புவதற்கான  திட்டமிட்ட முயற்சி” என்கிறார் ஆனந்த் தெல்தும்ப்டெ.

_________________________________________________________________

ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆத்திரம் வருவது ஏன்?

லட்சக்கணக்கில் மக்கள் திரண்ட பீமா கோரேகான் வெற்றியின் 200 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலின் ஆத்திரத்தைக் கிளறியதில் வியப்பில்லை.  ஆர்.எஸ்.எஸ் இன் மூதாதைகளான பார்ப்பன பேஷ்வாக்களின் ஆட்சியின் கீழ் தாங்கொணா சாதிய ஒடுக்குமுறையை சந்தித்து வந்த மகாராட்டிரத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மகர் சாதியினர், கிழக்கிந்தியக் கம்பெனிப் படையின்  சிப்பாய்களாக நின்று போரிட்டு, 1818 இல் பீமா கோரேகானில் பேஷ்வா படையினை முறியடித்தனர். அந்த வெற்றி கிழக்கிந்தியக் கம்பெனியின் வெற்றியாக இருந்த போதிலும், தங்களைக் கொடூரமாக ஒடுக்கி வந்த பேஷ்வாக்களுக்கு எதிரான அந்தப் போரை தமது சொந்தப் போராகவே கருதிப் போரிட்டனர், மகர் சிப்பாய்கள்.

அந்த வெற்றியின் நினைவாக ஆண்டுதோறும் நினைவுநாள் நடத்தப்படுவதும், அந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவதும் வழமையாக நடப்பதுதான். 2018 என்பது 200 ஆம் ஆண்டு என்பதால், எல்லா தலித் அமைப்பினரையும் ஒன்றுபடுத்தி ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக இந்த ஆண்டு ஜனவரி 1 அன்று அது நடத்தப்பட்டது. ஜிக்னேஷ் மேவானி போன்றோர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியால் ஆத்திரமூட்டப்பட்ட இந்து வெறி அமைப்புகள், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். சரத் பவார் உள்ளிட்ட எல்லா கட்சியினரும் இதனைக் கண்டித்தனர்.

பீமா கோரேகான் வன்முறையின் சூத்திரதாரிகளான மிலிந்த் ஏக்போடே மற்றும் சம்பாஜி பிடே.

சமஸ்த இந்து அகாதி என்ற அமைப்பின் தலைவரான மிலிந்த் ஏக்போடே, சிவ் பிரதிஷ்டான் இந்துஸ்தான் என்ற அமைப்பின் தலைவரான சம்பாஜி பிடே ஆகிய இருவர்தான் இந்த வன்முறையின் சூத்திரதாரிகள் என்று அம்பலமான பின்னரும், ஏக்போடேயை மட்டும் கைது செய்து உடனே பிணையில் விடுவித்தது மராத்திய அரசு. குற்றவாளிகளைக் கைது செய்ய மறுக்கும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக தலித் அமைப்புகள் அறைகூவலின் கீழ், ஜனவரி 4 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட மாநில பந்த் பெரும் வெற்றி பெற்றது.

இந்த அரசியல் எதிர்ப்புகளால் ஆத்திரம் கொண்ட பா.ஜ.க. அரசு, சுதிர் தவாலே மற்றும் பலர் மீது 153-ஏ (இரு வகுப்பினரிடையே மோதலைத் தூண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. பின்னர் மற்ற நான்கு பேரையும் இந்த வழக்கில் சேர்த்தது.  ஏப்ரல் மாதம் அனைவரது வீடுகளிலும் சோதனை நடத்தியது. இந்த சோதனையில்தான்,  ரோனா வில்சனின் கணினியில் மாவோயிஸ்டு கட்சியினரின் கடிதத்தையும், அதில் மோடியைக் கொலை செய்வதற்கான சதியையும் ‘கண்டுபிடித்தது மகாராட்டிர போலீஸ்.

__________________________________________________________________

அது மட்டுமல்ல, போராடும் மக்கள் மற்றும் இயக்கங்களின் சட்டபூர்வமான உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அறிவுத்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரைக் கொலை செய்து அத்தகையவர்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்புவது அல்லது அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறை வைப்பது என்பதுதான் இந்துத்துவ பாசிஸ்டுகளின் முதன்மையான திட்டம்.

வழக்கறிஞர் காட்லிங்கின் கைதை எதிர்த்து நாக்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியிருக்கிறது.  ஐ.ஏ.பி.எல். அமைப்பின் சார்பில் காட்லிங்கின் கைதைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் பல முன்னணி வழக்கறிஞர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இத்தகைய எதிர்ப்புகளும்கூட எழும்பாமல் நசுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தனது ஊடகத்துறை வேட்டைநாயான அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டி.வி.யை ஏவி விட்டிருக்கிறது பா.ஜ.க.

கடந்த ஜூலை 4 ஆம் தேதி ‘‘சூப்பர் எக்ஸ்க்ளூசிவ் பிரேக்கிங் நியூஸ்” என்ற பெயரில் ஒரு பொய்ச்செய்தியை பரப்பியது ரிபப்ளிக் டிவி. பி.யு.சி.எல். அமைப்பின் தேசியச் செயலர் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு எழுதிய கடிதம் சிக்கி விட்டதாகவும், அதில் காஷ்மீரைப் போன்ற நிலையை உருவாக்க வேண்டுமென்று அவர் எழுதியிருப்பதாகவும், அவருக்கு மாவோயிஸ்டுகளிடமிருந்து பணம் வந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் அச்செய்தி கூறியது.

சுதா பரத்வாஜைப் பற்றி மட்டுமல்ல, பி.யு.டி.ஆர். என்ற சிவில் உரிமை அமைப்பின் நிறுவனரான கவுதம் நவ்லகாவுக்கும் மாவோயிஸ்டு கட்சியுடன் தொடர்பு இருக்கிறது என்று அடுத்த புரளியை ரிபப்ளிக் டிவி கிளப்பியது. இவை குறித்து  தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறது பி.யு.சி.எல். அமைப்பு. அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக சிவில் மற்றும்  கிரிமினல் மான நட்ட வழக்கு தொடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார், சுதா பரத்வாஜ்.

எல்லா முனைகளிலும் தோற்று, மக்களின் வெறுப்பை மென்மேலும் ஈட்டி வரும் மோடி அரசு, கார்ப்பரேட் கொள்ளையையும் இந்துத்துவ பாசிசத்தையும் எதிர்க்கின்ற முன்னணியாளர்களைக் கொலை செய்வதன் மூலமும், பொய் வழக்குகளில் சிறை வைப்பதன் மூலமும், மக்களின் எதிர்ப்பை நீர்த்துப் போகவைக்க முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. அதன் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை.

  • சூரியன்

புதிய ஜனநாயகம் – ஜூலை 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

தூய்மை இந்தியாவில் துடைப்பம் பின்னும் தொழிலாளிகள் நிலை !

துடைப்பம் பின்னும் தொழிலாளிகள்
வீட்டை கூட்டுவதற்கும் தெருவை சுத்தம் செய்வதற்கும் அவசியமான துடைப்பம், இன்று மோடியின் ஆட்சியில் அதைத் தாண்டிய அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆம், ‘தூய்மை இந்தியா’ என வீதிகளில் குப்பையைக் கொட்டி கவர்னர்களும், பிரபலங்களும் ஆளுக்கொரு துடைப்பத்துடன் போட்டோவிற்கு போஸ் கொடுக்க உதவும் கருவியாக மாறியுள்ளது. இதே வேலையை அன்றாடம் செய்யும் துப்புரவுத் தொழிலாளிகளின் வாழ்க்கை மட்டுமலல, அந்த துடைப்பங்களை பின்னிக் கொடுக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.
ஒரு நாள், சிலநாட்கள் அல்ல தங்கள் வாழ்க்கையையே வீதிகளில்தான் வாழ்ந்து முடிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் சோகம் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. இங்கே சென்னை ஆலந்தூரில் துடைப்பங்களை பின்னி விற்கும் சில தொழிலாளிகளைச் சந்திப்போம்.

அழகர்சாமி, சொந்த ஊர் திண்டுக்கல்.

என்னோட பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து துடைப்பம் வியாபாரம்தான். நாங்க அம்பது வருசமா இதே பிளாட்பாரத்துல இருக்கோம். தொழிலுக்கு பேங்குல லோனு கேட்டா ஆயிரம் கேள்வி, சொத்து பத்து எல்லாம் கேக்குறாங்க. சொத்துக்கு நா… எங்க போவேன்?

பாப்பாத்தி, அழகர்சாமியின் மனைவி.

எங்களுக்கு ரெண்டு பசங்க. ஊர்லயே இருக்காங்க. ஏழாவது வரைக்கும்தான் படிக்க வைக்க முடிஞ்சது. இப்ப ஓட்டல்ல வேலை செய்யுறாங்க. பசங்கள இங்க அழைச்சிட்டு வரலாம்னா வீடு இல்ல. நாங்க குளிக்கிறது, தூங்கறது எல்லாம் பிளாட்பாரத்துல, சாப்பாடு அம்மா ஓட்டல்ல. இப்படியே எங்க பொழப்பு ஓடிட்டு இருக்கு.

மூணு மாசம் வரைக்கும் லோடுவர துடைப்பத்த பின்னி சுத்தம் பண்ணுவோம். அப்புறம் தலை சுமையா தூக்கிட்டு விக்கறதுக்கு கெளம்பிடுவோம். ஒரு துடைப்பம் 15 ரூபா. ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய்க்கு துடைப்பம் வித்தாலே எங்க பாரம் கொறஞ்ச மாதிரி.

திண்டுக்கலைச் சேர்ந்த தம்பதியினர்.

தேனி, வத்தலகுண்டு, உசிலம்பட்டியில இருந்து மொத்தமா துடைப்பம் வாங்குறோம். தமிழ்நாடு முழுவதும் துடைப்பம் பின்னும் வேலை செய்யிறவங்களுக்கு சரக்கை கொண்டு வந்து கொடுப்போம். இந்த தொழில்ல லாரி வாடகை, சாப்பாட்டு செலவுன்னு அதிகம். குடும்பத்துல இருக்கவங்களே சேர்ந்து வேலை செஞ்சாதான் சோறு. சரக்கு எடுக்க கடன் வாங்குறது அதுக்கு வட்டி கட்றதுன்னு வாழ்க்கை ஓடுது.

வீரம்மாள், சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை.

நா… உளுந்தூர்பேட்டை விழுப்புரம் பக்கம். பதினாலு வயசுல இந்த (சென்னை ஆலந்தூர்) ஊருக்கு வந்தேன். என் வீட்டுக்காரு மீன்பாடி வண்டி ஓட்டுனாரு. அவரு போயி சேந்துட்டார். முப்பந்தஞ்சி வருசமா இந்த வேலைய செய்யுறேன். ஒரு நாளைக்கு 100, 150 சம்பாதிக்கிறேன். அதை வச்சிக்கிட்டுதான் ஒப்பேத்துறேன். நோயிங்க அதிகமா வருது. தூசு தும்பு பாடாபடுத்துது. அடிக்கடி தலைவலி, கைகால் நோவு, படபடன்னு இருக்கும். இப்ப கண்பார்வையும் சரியா தெரில.

நல்லதம்பி, முன்னாள் விவசாயி.

சின்ன வயசுல விவசாயம் பண்ணேன். மழை இல்லாததால விவசாயம் பண்ண முடியல. இங்க வந்தா கெடச்சது இந்த வேலைதான். ஒரு நாளைக்கு இருநூறு தருவாங்க. அதுவும் நாலு நாளைக்குதான் வேலை. லோடு வந்தா கூப்பிடுவாங்க. வேற என்ன சொல்ல?

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

ஆன்மீகக் கிரிமினல்கள் ! புதிய கலாச்சாரம் மின்னூல்

மீபத்தில் கிறித்தவப் பாதிரியார்கள் 5 பேர் தம்மிடம் பாவ மன்னிப்பு பெறவந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, கேரளா உள்ளிட்டு முழு இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலியல் வன்முறையையும் சாமியார்களையும் பிரிக்கவே முடியாது எனும் வண்ணம் இந்தக் குற்றங்கள் எல்லா மதங்களிலும் அதிகரித்து வருகின்றன.

மடங்கள் மற்றும் டிரஸ்டுகள் மூலம் கருப்புப்பண பரிமாற்றத்திலும், ஆயுர்வேத வஸ்துகள் விற்பனை, தியானம், யோகா ஆகியவற்றின் மூலம் ஆன்மீகக் கொள்ளையிலும் ஈடுபட்டுவரும் இவர்கள், நவீன ஆன்மீக கார்ப்பரேட்டுகளாக உருவெடுத்துள்ளனர். இவர்களுக்கிடையில் சொத்துக்களை பங்கு பிரிப்பதிலும் வாரிசாவதிலும் நடக்கும் சண்டைகளும் அவ்வப்போது அம்பலமாகின்றன.

வேதாந்தி ஹவாலா புரோக்கராக செயல்பட்டதும், ராம்ரகீம் அரியானா பா.ஜ.க-வின் ஓட்டு வங்கியை தயார் செய்ததும், சங்கராச்சாரி அரசியல் புரோக்கராக செயல்பட்டதும், சங்கரமடத்தை காமக் கூடாரமாக்கியதும், கூலிப்படையை அமர்த்தி சங்கரராமனைப் போட்டுத் தள்ளியதும் தமிழகம் அறிந்த சில உதாரணங்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜக்கி வாசுதேவும், பாபா ராம்தேவும் ஆர்.எஸ்.எஸ்-ன் ஆன்மீக அடியாட்களாக பணியாற்றுகின்றனர்.

இந்தியாவில் 90-களில் விரிவடைந்த மறுகாலனியாக்க சந்தைப் பொருளாதாரம், நடுத்தர வர்க்கத்தின் கைகளில் ஓரளவு பணத்தைக் கொடுத்ததோடு கூடவே வேலை நெருக்கடிகள், நுகர்வு வெறி ஆகியவற்றையும், இவற்றின் உபவிளைவுகளான மன அழுத்தம், நிம்மதியின்மை ஆகியவற்றையும் அள்ளிக் கொடுத்தது.

இங்கேதான் இந்தச் சாமியார்கள் தங்களை யோகா, தியானம் என நிவாரணம் வழங்கும் இரட்சகர்களாக காட்டிக் கொள்கின்றனர். அதன்மூலம் முதலாளித்துவ சுரண்டலோடு ஒத்துவாழ் மக்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றனர். பிரதிபலனாக இவர்கள் முதலாளிகளால் ஆராதிக்கப்படுகின்றனர், ஊடகங்களால் பிரபலப்படுத்தப்படுகின்றனர். அரசுகளோ சொத்து சேகரிப்புக்கு துணைபோகிறது.

தமது ஆன்மீக – பொருளாதார – அரசியல் அதிகாரத்தை உறுதிபடுத்தும் இந்த கிரிமினல் சாமியார்கள், இறுதியில் தம்மிடம் நிவாரணம் தேடிவரும் பக்தர்களையே பாலியல் வன்முறைக்குள்ளாக்கி சிதைக்கின்றனர். ஜெயேந்திரன், ஆசாராம் பாபு, ராம்ரஹீம், நித்தியானந்தா, கிறித்தவ பாதிரியார்கள்… என்று இந்தப் பட்டியில் நீண்டு கொண்டே போகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் பி.ஜைனுலாபிதீனும் சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆன்மீகக் கிரிமினல்களை அடையாளம் காட்டுகிறது இந்த தொகுப்பு!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

ஆன்மீகக் கிரிமினல்கள் ! – புதிய கலாச்சாரம் ஜுலை 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

ஆன்மீகக் கிரிமினல்கள்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

ஆன்மீகக் கிரிமினல்கள் ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • ‘புனிதமும்’ வக்கிரமும் : திருச்சபையின் இரு முகங்கள்
  • 5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன குருக்கள்!
  • தில்லு தொர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!
  • ஞானி விக்ரம் சவுத்ரியின் “ரேப்” யோகா !
  • ஆசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்து வெறியர்கள் !
  • 3-ம் வகுப்பு பாடத்தில் ”ரேப் குரு” ஆசாராம் பாபு !
  • நித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு?
  • போலி சாமியார் – நல்ல சாமியார் பிழையான வழக்கு !
  • குர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ரேப் சாமியார் !
  • விரைவில் வருகிறது ! சாமியார் பட்டத்துக்கு நீட் தேர்வு !
  • சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!
  • அடங்கமாட்டியா நித்தியானந்தா ?
  • பரகால ஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள் !

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் !
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 இதயத்தை மீட்பது எப்படி ?
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

கைதுக்கு அஞ்சாமல் தஞ்சையில் நடந்த அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !

யற்கை வளங்கள் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, போராட்டக்காரர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைப்பது, கருத்துரிமை – எழுத்துரிமையை மறுப்பது என்று தொடரும் மத்திய மாநில அரசுகளின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைந்த குரல் 21-07-2018 சனிக்கிழமை அன்று மாலை 5:30 மணிக்கு தஞ்சை இரயிலடியில் ஓங்கி ஒலித்தது.

கடந்த 08-07-2018 அன்று தஞ்சை பெசன்ட் அரங்கில் அனைத்துக் கட்சிகள் – இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்று தமிழகத்தில் நிலவிவரும் அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டித்தது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டது. ஒருசில பத்திரிகைகள் தவிர வேறு ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை.

அதன் தொடர்ச்சியாக 10-07-2018 அன்று தஞ்சை மண்டல காவல்துறை தலைவரையும், தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோரை அனைத்துக் கட்சிகள் – இயக்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.

மீத்தேன் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளை போலீசு தடைசெய்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 21-07-2018 அன்று தஞ்சை இரயிலடியில் நடைபெறவிருக்கும் தொடர்முழக்கப் போராட்டத்திற்கு அனுமதியளிக்க வலியுறுத்தப்பட்டது.

மனுவை பரிசீலித்து அனுமதி அளிப்பதாக, தஞ்சை மண்டல காவல்துறை தலைவர் வாக்குறுதி தந்தார். பங்கேற்பாளர்கள் விவரங்கள் அடங்கிய துண்டுபிரசுரமும், சுவரொட்டிகளும் நகரில் பரவலாக விநியோகிக்கப்பட்டும், ஒட்டப்பட்டும் மக்களின் கவனத்தை ஈர்த்தன.

வழக்கம்போலவே 20-07-2018 அன்று கேள்விகேட்டு விளக்கம் பெறும் சடங்குகளை முடித்துவிட்டு அனுமதி மறுத்தது காவல்துறை. கேள்விக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்றும் தடைக்குக் காரணம் கூறியது.

20-07-2018 அன்று மாலையே அனைத்துக் கட்சிகள் – இயக்கங்கள் பிரதிநிதிகள் கூடி தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அடக்குமுறை கடுமையாக இருந்தாலும் எதிர்கொளவது சிறைக்குச் செல்ல வேண்டி இருந்தாலும் செல்வது என்ற முடிவோடு கைதுக்குத் தயாராக கைலி, துண்டுடன் பலர் வந்திருந்ததை ஆர்ப்பாட்ட இடத்தில் பார்க்க முடிந்தது. 200க்கும் மேற்பட்டவர்கள், தஞ்சை இரயிலடியில் குவிந்து போலீசின் கட்டளை செல்லுபடியாகாது என்ற நிலையை உருவாக்கத் தயாராகினர்.

போலீசு சற்று பின்வாங்கி கெடுபிடிகளைக் குறைத்துக்கொண்டு 2 மணிநேரம் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்தது. சரியாக 5.30 மணிக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலர் அய்யனாபுரம் முருகேசன் தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் துவங்கியது. ஆர்ப்பாட்ட இடத்தைச் சுற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வமுடன் நின்று ஆதரவு அளித்தனர். கருத்துரிமை பறிப்புக்கு எதிராக விண்ணதிர முழக்கம் எழுப்பப்பட்டது.

கோ.திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர் இயக்கம்), சு.பழனிராஜன் (சமவெளி விவசாயிகள் சங்கம்), மருத்துவர். இளரா. பாரதிச்செல்வன் (மீத்தேன் திட்ட எதிரப்புக் கூட்டமைப்பு), அருண்ஷோரி (தமிழ் தேசிய மக்கள் முன்னணி), வைகறை (மாவட்ட செயலர் – தமிழ் தேசியப் பேரியக்கம்), செல்லப்பா (மனிதநேய மக்கள் கட்சி), ஜீவா (சி.பி.ஐ – எம்.எல் – லிபரேசன்), விடுதலை குமரன் (சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை), காளியப்பன் (மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர்), கோ.நீலமேகம் (மாவட்ட செயலர் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), செந்தில் (மாவட்டக்குழு உறுப்பினர் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியோர் உரையாற்றினர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், நாடு முழுவதும் நடைபெறும் மோடி, எடப்பாடி அரசுகளின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் எழுந்த ஒன்றுபட்ட கண்டனக்குரல் மக்கள் மத்தியிலும், ஜனநாயக சக்திகள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது. தஞ்சையில் அடக்குமுறைக்கு அஞ்சாமல், பதிலடி கொடுத்த ஒற்றுமைக் குரல் எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கையை இந்த ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.

  • வினவு களச் செய்தியாளர்

தயவு செய்து தற்கொலை செய்து கொள் ! சுகிர்தராணி

தயவு செய்து தற்கொலை செய்து கொள்!

நாங்கள்
சமையலராக இருக்கிறோம்

நாங்கள் சமைத்த உணவு
உனக்கு வேண்டாமெனில்…

நாங்கள்
மருத்துவராக இருக்கிறோம்
உனக்கு நீயே வைத்தியம் செய்துகொள்

செவிலியராக இருக்கிறோம்
உன் பிரசவத்தை
நீயே பார்த்துக் கொள்

பிணத்தை எரிப்பவராக இருக்கிறோம்
உன் பிணத்தை
நீயே எரித்துக் கொள்

பொறியாளராக இருக்கிறோம்
உன் கட்டடத்தை நீயே கட்டிக் கொள்.

வழக்கறிஞராக இருக்கிறோம்
உனக்கு நீயே வாதாடிக் கொள்

முடி வெட்டுபவராக இருக்கிறோம்
உன் மயிரை
நீயே வெட்டிக் கொள்

ஆசிரியராக இருக்கிறோம்
உன் பிள்ளைகளுக்கு
நீயே சொல்லிக்கொடு

ஓட்டுநராக இருக்கிறோம்
உன் போக்குவரத்தை
நீயே பார்த்துக் கொள்

கூலிகளாய் இருக்கிறோம்
உன் சுமைகளை நீயே தூக்கிக் கொள்

மலம் அள்ளுபவராக இருக்கிறோம்
உன் மலத்தை நீயே அள்ளிக் கொள்

சாக்கடை வாருபவராக இருக்கிறோம்
உன் சாக்கடையை நீயே வாரிக் கொள்

கலப்புமணம் புரிந்தவராக
இருக்கிறோம்
உன்னையே நீ புணர்ந்துகொள்

நாங்கள்
அரசியலமைப்புச் சட்டத்தை
எழுதியவராக இருக்கிறோம்

இதுவும் உனக்கு
வேண்டாமெனில்

தயவுசெய்து தற்கொலை செய்துகொள்.

***

சுகிர்தராணி

நன்றி: சுகிர்தராணி, எழுத்தாளர், கவிஞர்.

 

 

 

 

செய்தி: அவினாசி திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பாப்பம்மாள் சமைத்த உணவை சாப்பிடுவதா என்று கவுண்டர் சாதிவெறியர்களின் அட்டூழியம் செய்திருக்கின்றனர். பாத்திரங்களை உடைத்து, சமையல் செய்யவிடாமல் செய்தனர். அரசுப் பள்ளி நிர்வாகமும் பாப்பம்மாளை ‘காலனி’யில் செயல்படும் பள்ளிக்கு இடமாற்றம் செய்து விட்டது.
பிறகு பாப்பம்மாளுக்கு ஆதரவாகவும், சாதிவெறியர்களுக்கு எதிராகவும் ஊடகங்கள், சமூகவலைத்தளங்களில் கருத்து வர ஆரம்பித்ததும் அவரை அதே பள்ளியில் பணியில் அமர்த்தியது அரசு. ஆனாலும் சாதிவெறியர்கள் அதை ஏற்பதாக இல்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பது போன்றவை செய்து தமது எதிர்ப்பில் உறுதியாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன்னரும் பாப்பம்மாள் இதே சாதிவெறிக் காரணத்தால் நான்கைந்து பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

கல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா !

0

றுபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் உயர்கல்வி அமைப்பான யூ.ஜி.சி. (UGC) என்ற பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்துவிட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க முன்வரைவுச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம். இதன் மூலம் பெரும்பான்மை மாணவர்களின் உயர் கல்வி கற்கும் வாய்ப்பை அடியோடு ஒழித்துக்கட்ட முடிவு செய்துவிட்டது மோடி அரசு.

நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கவும், கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் 1956 –இல் நாடாளுமன்ற சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதுதான் பல்கலைக்கழக மானியக்குழு. புதிய பல்கலைக்கழகங்களை, உயர்கல்வி நிறுவனங்களை எந்தவொரு மாநிலத்தில் தொடங்குவதற்கும் 60% நிதி உதவி செய்து வருகிறது யூ.ஜி.சி. இதுமட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் அந்த நிறுவனங்களின் தரத்தை ஆய்வு செய்து நிதி உதவியும் செய்கிறது. பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கும் இந்த நிதி உதவி கிடைக்கும். கல்வியாளர்களை அதிகப்படியாக கொண்ட யூ.ஜி.சி, உயர்கல்வி நிறுவனங்களை நேரடி ஆய்வுகள் மூலம் மதிப்பீடு செய்து தரத்தை உத்திரவாதப்படுத்தும் கடமையும், பொறுப்பும் கொண்ட தன்னாட்சி பெற்ற  அமைப்பு. இதனால்தான் அரசுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளால் கடந்த காலங்களில் தரமான கல்வியை கொடுக்க முடிந்தது.

அரிகவுதம், முன்னாள் யூ.ஜி.சி தலைவர்.

கல்வியில் தனியார்மயத்தை புகுத்தி வியாபாரமாக்கப்பட்ட பின்பு, யூ.ஜி.சி யை இடையூறாக பார்க்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். 18 ஆண்டுகளுக்கு முன்பே யூ.ஜி.சி யை கலைத்துவிட முயன்றது கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பி.ஜே.பி அரசு. 2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் உயர் கல்வி சீர்திருத்தத்திற்காக கார்ப்பரேட் முதலாளிகளான பிர்லா – அம்பானி தலைமையில் குழு அமைத்தார்கள். அந்தக் குழு “உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூ.ஜி.சி நிதி வழங்கக் கூடாது, கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவியோடு அந்தந்த பல்கலைக்கழகங்களே நிதி திரட்டிக்கொள்ள வேண்டும்’’ என்று யூ.ஜி.சி யை கலைக்க தூபம் போட்டது. மீண்டும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததும் 2015-இல் முன்னாள் யூ.ஜி.சி தலைவர் அரிகவுதம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு யூ.ஜி.சியை கலைத்துவிட வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிக்கை கொடுத்தது. அதனடிப்படையில்தான் இன்று மோடி அரசு யூ.ஜி.சி யை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை ஏற்படுத்த சட்டம் கொண்டு வருகிறது. நம் கையை முறித்து நமக்கே சூப் வைத்து தருகிறார்கள்.

’தரத்தை’ உயர்த்தவே உயர்கல்வி ஆணையம் கொண்டுவரப்படுகிறது என்கிறார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜவடேகர். இதே காரணத்தைச் சொல்லி கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு தரத்தின் லட்சணம் என்ன? தனியார்பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் தரம் என்ன? பல நிர்மலாதேவிகளையும், மோசடி செய்ததற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட செல்லதுரை போன்ற கிரிமினல் துணைவேந்தர்களையும்தான் உருவாக்க முடியுமே தவிர வேறெதையும் கிழிக்க முடியாது. உன்னதமான சேவையான கல்வியை இலாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றிவிட்டார்கள். இலஞ்சம், ஊழல், முறைகேடு என ஒட்டுமொத்த கல்வித்துறையும் கிரிமினல் மாஃபியாக்கள் பிடியில் சிக்கியிருக்கிறது. இவர்களால் எப்படி தரமான கல்வியை தரமுடியும்? இதை நம்ப நாம் என்ன கேனைகளா?

ஜவடேகர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

கல்வியின் மீதான மாநில அரசுகளின் உரிமையை முழுமையாக பறித்து மையப்படுத்துவது. அதை அப்படியே கார்ப்பரேட் கையில் ஒப்படைப்பது. இது தான் மோடி அரசின் மாஸ்டர் பிளான். இதை செய்வதற்கான அமைப்புதான் உயர் கல்வி ஆணையம்.

உயர்கல்வி ஆணையத்தின் 12 உறுப்பினர்களில் 8 பேர்  மத்திய அரசு உயரதிகாரிகள். இதன் தலைவர் அதிகாரிகளால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் வெளிநாடுவாழ் இந்தியராகவும் இருக்கலாம். அப்படியென்றால், கொலைகார ஸ்டெர்லைட்டின் அனில் அகர்வால்கூட இதன் தலைவராகலாம். ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தையும் மூடும் அதிகாரம் ஆணையத்திற்கு உண்டு. அரசு செலவீனங்களை குறைப்பது என்ற பெயரில் அரசு உயர்கல்வி நிறுவனங்களை எல்லாம் நிச்சயமாக மூடி விடுவார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்கள் மட்டுமே உயர்கல்வி நிறுவனங்களை நடத்துவார்கள்.

பல நூறு அரசு பல்கலைக்கழகங்களுக்கும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கும், ஐ.ஐ.டி-க்கள், ஐ.ஐ.எம்-களை நடத்துவதற்கும் நிதியை நீங்களே கடன் பெற்றுக்கொள்ளுங்கள் என தன்னாட்சியாக்கப்படுகின்றன. ஆனால், இன்னும் ஒரு செங்கல்லைக்கூட வைத்து கட்டப்படாத, வெறும் பேப்பரில் மட்டும் பிளானாக இருக்கும் அம்பானியின் ’ஜியோ பல்கலைக்கழகத்திற்கு’ மேன்மைதகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கி 5 ஆயிரம் கோடியை அள்ளிக்கொடுக்கிறார் மோடி.

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அரசு இதுவரை வழங்கி வந்த ஸ்காலர்ஷிப் (அரசாணை.92 அடிப்படையிலானது) நிறுத்தப்பட்டுவிட்டது. அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்காலர்ஷிப் குறைக்கப்படுகிறது. இவைகளெல்லாம் உயர்கல்வியை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து ஒழித்துக்கட்டுவதன் வெளிப்பாடுகள்தான். ஏற்கனவே நீட் தேர்வை திணித்து மருத்துக்கல்வியை பறித்துக்கொண்டார்கள். பொறியியல் கல்வியும் இல்லை, ஏதாவது ஒரு டிகிரியை வாங்கி முன்னேறிவிடலாம் என நினைக்கும் ஏழை – நடுத்தர வர்க்க மாணவனின் கனவையும் அடித்து நொறுக்குகிறார்கள். தனியார்பள்ளியில் என்னதான் செலவு செய்து படித்தாலும் இனி +2 தாண்ட முடியாது.

ஒருபக்கம், உயர்கல்வியை கார்ப்பரேட் கழுகுகள் சூறையாடப்போகிறார்கள். இன்னொரு பக்கம், தரத்தின் பெயரால் பணக்கார மேட்டுக்குடிகளான ஒரு சிறு கூட்டத்திற்கு மட்டும் உயர்கல்வி, ஏழை – நடுத்தர வர்க்கத்தினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரான பெரும்பான்மையினருக்கு உயர்கல்வியை மறுப்பது சட்டப்பூர்வமாகப்போகிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்? ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவராமல் போனதன் விளைவை இன்று நம் மாணவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டுமொரு அநீதியை சகித்துக்கொண்டு செல்லக்கூடாது. கலை, அறிவியல் கல்லூரி, சட்டம், பொறியியல், மருத்துவம், பல்கலைக்கழகங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒன்றுசேர்வோம். பேராசிரியர்கள், பெற்றோர்களையும் ஒன்றிணைப்போம். கல்வி கற்கும் உரிமையை பறிக்கும் உயர்கல்வி ஆணைய முன்வரைவு சட்டத்தை தகர்க்கும் முன்னுதாரணமான களமாக தமிழகத்தை மாற்றுவோம்.

 கண்டன ஆர்ப்பாட்டம்

ஜூலை 25, 2018 காலை 11 மணி,                        வள்ளுவர்கோட்டம்.

தலைமை:

தோழர்.வா.சாரதி,
மாநகர செயலர், பு.மா.இ.மு.,சென்னை.

கண்டன உரை:

பேரா.ப.சிவக்குமார்,
முன்னாள் முதல்வர், குடியாத்தம் அரசுக்கல்லூரி.

பேரா.அ.கருணானந்தன்,
வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர்,
விவேகானந்தா கல்லூரி.

தோழர். தினேஷ்,
மாநில செயலாளர்,
அகில இந்திய மாணவர் பெருமன்றம்.

தோழர்.பிரின்ஸ் என்னாரசு பெரியார்,
மாநில செயலாளர்,
திராவிடர் கழக மாணவரனி.

வழக்கறிஞர்.தோழர்.கு.பாரதி,
செயலாளர்,
ஜனநாயக வழக்கரிஞர்கள் சங்கம்.

பேரா.சாந்தி,

தோழர்.த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

தகவல்:

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.

நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை -95, 94451 12675.