திரிபுராவில் லெனின் சிலை பாஜக கிரிமினல்களால் உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலைகளை இடிப்போம் என எச்.ராஜா கூறியதைக் கண்டித்தும் சென்னை நேரு பார்க்கில் இன்று மாலை 5.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் போராட்டம் நடத்தியது. இதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரின் படம் எரிக்கப்பட்டது. ம.க.இ.க. சென்னைக் கிளையின் செயலாளர் தோழர் வெங்கடேசன் இப்போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினார்.
போராட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே மாலை 5.30 மணிக்கு நேரு பார்க் அருகில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசாரும் 3 போலீசு வாகனங்களும் குவிக்கப்பட்டன. லெனின் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்தும், பாசிச பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பலைக் கண்டித்தும் தோழர்கள் முழக்கம் எழுப்பினர். இதில் பேசிய தோழர் வெங்கடேசன், திரிபுராவில் கிடைத்த வெற்றியில் ஆணவம் தலைக்கேறி தோழர் லெனினின் சிலையை இடித்துள்ளனர். அதே திமிரில்தான் தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைப்போம் என கூறியிருக்கிறார் எச்.ராஜா. இது பெரியார் பிறந்த மண். இங்கு பார்ப்பனியத்திற்கு சவக்குழிதான் மிஞ்சும் எனப் பேசினார்.
சிறுவர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் கோல்வால்கரின் படம் எரிக்கப் பட்ட போது, பாஜகவின் அடிமைப் போலீசு, அவசர அவசரமாக தண்ணீரை தோழர்கள் மீதும், கோல்வால்கர் படத்தின் மீதும் ஊற்றியது. கோல்வால்கர் படம் தீயிடப்பட்டு, பின்னர் கிழித்தெறியப்பட்டது. உடனடியாக அங்கிருந்து தோழர்களை கைது செய்து இழுத்துச் சென்றது போலீசு.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் காவிரி நீரில் தமிழகத்தின் பங்காக 192 டி.எம்.சி நீரை வழங்குமாறு உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கு நிலுவையிலிருந்த காலத்தில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையோ, உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகளையோ கர்நாடக அரசு ஒருமுறை கூட முழுமையாக அமல்படுத்தவில்லை. உச்சநீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை.
தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், நிலத்தடி நீரைக் காரணம் காட்டி, தமிழகத்துக்கான நீர்ப்பங்கீட்டு அளவை 177.25 டி.எம்.சி.-யாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் டெல்டா விவசாயிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
இத்தீர்ப்பில், காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்று ரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டு வந்திருப்பதாகக் கூறி கன்னட இனவெறியர்களின் குரலை எதிரொலித்திருக்கிறது உச்சநீதிமன்றம். மேலும் தமிழகத்திற்கான நீர் அளவைக் குறைக்க, நிலத்தடி நீரைக் காரணம் காட்டிய உச்சநீதிமன்றம், கர்நாடகத்தின் நிலத்தடி நீரை மட்டும் கணக்கில் கொள்ளவில்லை.
பதினோரு ஆண்டுகளாக நிலுவையில் கிடந்த இவ்வழக்கில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கர்நாடகத்துக்குச் சாதகமாக இத்தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இதனாலேயே காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டுமல்ல, ஒப்புக்கு சப்பாணியாக ஒரு அமைப்பைக் கூட உருவாக்க மோடி அரசு விரும்பாது. பா.ஜ.க. விற்கு போட்டியாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்ப்போம் என அறிவித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெறும் வெத்து வேட்டுதான் எனக் காட்டிவிட்டார்.
கெயில் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, நீட் தேர்வு அமலாக்கம் அனைத்திலும் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்புகளை திணித்த உச்சநீதி மன்றத்திடம் நடுநிலைமையோ, நியாயமோ கிடையாது. இழந்துபோன உரிமைகளை மீட்கும் அவசரமான காலத்தில் தமிழகம் நின்று கொண்டிருக்கிறது. காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையையும், நீரின்றி அழியும் விவசாயிகளின் வாழ்வையும் ஆவணப்படுத்துகிறது, இத்தொகுப்பு.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் ! – புதிய கலாச்சாரம் மார்ச் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
காவிரி : கர்நாடகத்தின் அடாவடி ! மைய அரசின் நழுவும் தீர்வு !!
தமிழகத்தின் நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது !
அரசு கெசட்டில் காவிரி தீர்ப்பு ! ஆவதென்ன ?
காவிரி ஓரம் குடிநீர் இல்லா துயரம் !
மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி !
காவிரிப் பிரச்சினையை இனவாத அரசியல் தீர்க்குமா ?
காவியைக் கரைக்கும் காவிரி !
காவிரி பிரச்சினை : மோடி அரசே முதன்மை குற்றவாளி !
காவிரி : தத்துவஞானி சமஸ் சாப்பிடுவது சோறா கழிவா ?
என்னிக்கு வயக்காட்டுல விழுந்து கிடப்பனோ தெரியலை !
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன ? – நேரடி ரிப்போர்ட்
சில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது – கள ஆய்வு
தரணிக்கு சோறிடும் தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா ?
காவிரி : முதுகில் குத்திய உச்சநீதிமன்றம் ! மீண்டும் தொடங்குவோம் டில்லிக்கட்டு !
காவிரி நீர் மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம் – பத்திரிகை செய்தி
பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
“தஞ்சாவூர் சிண்டிகேட் வங்கி டெய்லி டெபாசிட் வசூல் முகவர் பெர்னாண்ட்ஸ் கோடிக்கணக்கில் மோசடி !
பொருப்பேற்க மறுத்து மோசடிக்குத் துணைபோகும் வங்கி நிர்வாகம்!”
என்ற முழக்கத்தை முன் வைத்து மக்கள் அதிகாரம் சார்பில் 03.03.2018 சனிக்கிழமை மாலை ரயிலடியில் மக்கள் அதிகாரம் தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையில் நடைப்பெற்றது.
பாதிக்கப்பட்ட சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் திருவாசகம் கிருஷ்ணன், மேனகா, தனலட்சுமி மற்றும் வழக்கறிஞர் முத்துமாரியப்பன் ஆகியோர் வாடிக்கையாளர்களின் அவலத்தையும் பாதிக்கப்பட்டவர்களின் கையறுநிலையையும் தங்களது உரையில் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினர். உணர்ச்சிபூர்வமாக பேசிய அம்சவள்ளி பேசி முடித்தவுடன் ஆர்ப்பாட்ட இடத்திலேயே மயங்கி விழுந்தார். தோழர்கள் அவருக்கு முதலுதவி செய்து உதவி செய்தனர். நிறைவுரையாற்றிய மக்கள் அதிகார மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் வங்கி மோசடிகளை அம்பலப்படுத்தி உரையாற்றினர்.
வாடிக்கையாளர்களின் சேமிப்பை பாதுகாப்பது வங்கியின் அடிப்படை கடமை!
வாடிக்கையாளர்கள் கட்டிய பணத்தை வங்கி நிர்வாகமே வட்டியுடன் திருப்பி கொடு!
முகவர் பெர்னான்ட்ஸ், துணைபோன அதிகாரிகள் அலுவலர்களை கைது செய்து தண்டனை வழங்கு!
குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்!
ஆகிய கண்டன முழக்கங்களை நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் எழுப்பினர்.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
“பள்ளி ,கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு!
அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு!
அலுவல் மொழியாக ,நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!
தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு !”
விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக 27.02.2018 அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாணவர்கள் ,இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் புமாஇமு அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் மனோகரன் தலைமை தாங்கிப் பேசினார்.
அவர் பேசுகையில், இன்றைக்கு மாணவர்கள் ஆகிய நாம் படித்துவிட்டோம், வேலைக்கு போய்விட்டோம் என்றால் வாழ்க்கை இப்படியே சுமுகமாக இருக்குமா என சிறிது யோசிக்க வேண்டும். மோடி அரசு நீட் தேர்வை திணிப்பது, காவேரி தீர்ப்பு, விவசாயத்தை அழிக்க ஹட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், சாகர்மாலா திட்டம் போன்ற பேரழிவு திட்டத்தை திணிப்பது, கல்வி நிலையங்களில் சம்ஸ்கிருத திணிப்பு போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. கேரளா,மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் தனது தாய்மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கி இருக்கின்றன என்று முடித்தார்.
கானை வட்டார மக்கள் அதிகாரம் அமைப்பாளர், தோழர் இளவேந்தன் பேசுகையில், மக்கள் பிரச்னைக்கு நாம் போராடினால் அரசும் ,போலீசும் ஒடுக்குகிறது . அது மட்டும் இல்லாமல் ஜனநாயகப்பூர்வமாக ஒரு ஆர்பாட்டம் நடத்தக் கூட அனுமதி மறுக்கும் இந்த அரசை நாம் நம்பலாமா? ஓநாய் கிட்ட போய் ஆடு நீதி கேட்டால் என்ன நடக்கும்? ஆட்டையே சாகடிக்கும். ஆகவே இந்த அரசமைப்பு மக்களுக்கு எதிராக போய்விட்டது.இதற்கு தீர்வு மக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதுதான் என்று பேசி முடித்தார்.
விழுப்புரம் புமாஇமு-வின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் திலீபன் பேசுகையில், இந்த ஒட்டுமொத்த அரசும் மக்களை நாயினும் கீழாய் நடத்துகிறது. மாணவர்கள்,இளைஞர்கள் இதை எதிர்த்து நாம் ஒரு புரட்சிகர அமைப்பாக ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்று கூறினார்.
தோழர் இரவி கார்த்திக் பேசுகையில், ஒரு மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம். ஒரு மொழியின் மூலமாகதான் நாம் தகவலையும், நம்மை சுற்றி நடக்கும் வரலாற்று நிகழ்வுகளையும் பேச முடியும். அப்பொழுது அவர்கள் கலாச்சாரம், பண்பாடு மேம்படும். ஆனால் ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழியும், கலாச்சாரம் அழியும். அதை நோக்கிதான் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறது. சமீபத்திய உதாரணம் ஆண்டாள் பிரச்சினையை தமிழகத்தில் கிளப்பி இதன் மூலம் தனது செல்வாக்கை உயர்த்த முயற்சி எடுத்தது. இந்த அபாயத்தை உணர்த்து நாம் போராட வேண்டும் என்று முடித்தார்.
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் பேசுகையில், இந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி கும்பலுடைய இந்த விரோதம் என்பது நீண்ட நாள் பகை, குறிப்பாக இந்தி எதிர்ப்பில் தமிழகத்திடம் அடிவாங்கிய இந்த ஆர்.எஸ்.எஸ்., நச்சுப் பாம்பை அன்றைக்கே நசுக்கி இருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு விட்டதன்,விளைவாக அடிவாங்கிய பாம்பு மீண்டும் படமெடுத்தது வருகிறது. காவேரி தீர்ப்பில் மட்டும் தமிழகத்தை வஞ்சிக்கவில்லை, தமிழ் தாய் வாழ்த்துக்கு அவமரியாதை, சென்னை IIT- யில் நடந்த நிகழ்சிகளில் தமிழ் அவமதிப்பு, தமிழகத்தில் விவசாய நிலங்களை நாசமாக்கும் அழிவுத் திட்டம் திணிப்பு, என அனைத்திலும் வஞ்சித்து வருகிறது. ஆண்டாள் விவகாரத்தில் பாஜக நடத்திய போராட்டத்தில் பார்ப்பன கும்பலை தாண்டி யாரும் பங்கேற்க வில்லை. இருந்தாலும் அதைவைத்து இந்துமதவெறியை கிளப்பி இந்துகளை திரட்ட முயற்சி செய்தது. இதை நாம் அனுமதிக்கலாமா ? இதை முறியடிக்க ஒரு புரட்சிகர அமைப்பாக திரளவேண்டும் என்று முடித்தார்.
இறுதியாக விழுப்புரம் பு.மா.இ.மு அமைப்பாளர் தோழர் ஞானவேல் பேசுகையில், அந்த காலத்தில் ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போர் தொடுக்கும் போது இரண்டு விதமாக மனிதர்களைப் பார்க்கலாம். ஒன்று தனது நாட்டைக் காக்கவும், தனது பண்பாடு கலாச்சாரத்தை காக்கவும், வளங்களை காக்கவும் எதிரி நாட்டு படையோடு போரிடுவது, மற்றொன்று அவனிடம் அடிபணிந்து அவன் கொடுக்கும் பதவிக்கும் ,பொருளுக்கும் விலைபோவது. இன்றைக்கு தமிழகத்தின் மீது ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி கும்பல் ஒரு போரை தொடுத்து இருக்கிறது. இந்த போரில் நாம் வெற்றி பெறவில்லை என்றால்,நமது பண்பாடு,கலாச்சாரம்,மொழி,இயற்கை வளம் எல்லாம் அழியும். நாம் என்ன செய்ய போகிறோம்? எதிர்த்து போரிடப் போகிறோமா? அல்லது இணங்கிப் போகப் போகிறோம். மாணவர்கள் இளைஞர்கள் எதிர்த்துப் போராட வேண்டும். புரட்சிகர அமைப்புகளில் இணைந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்
ஆண்டாள் விவகாரத்தை முதலில் கிளப்பியது எச்.ராஜா. பிறகு நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் சமூக ஊடகங்களில் வழங்கிய நாச்சியார் திருமொழி. இந்த வரிசையில் அடுத்து வருவது தந்தி டி.வி. நடத்திய புலனாய்வு.
வைரமுத்து மேற்கோள் காட்டியிருந்த ஆய்வாளர் நாராயணனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ”ஆண்டாளைத் தேவதாசி என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்களே, என்ன சூழலில் அவ்வாறு கூறியுள்ளீர்கள்?” என்று கேட்கிறார் அசோகவர்ஷிணி.
”8, 9-ஆம் நூற்றாண்டு காலங்களில் தீவிர பக்தைகளாக இருந்த இத்தகைய பெண்கள் தேவதாசிகள் பிரிவைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தங்களைப் பெருமாளின் மனைவியாக ஒப்படைத்துக் கொண்டவர்கள். அதனால்தான் ஆண்டாள் தனது உண்மை வாழ்க்கையிலும் தேவதாசியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன்” என்று இதற்குப் பதிலளிக்கிறார் நாராயணன்.
அடுத்து, ”இலக்கியங்களிலோ, திருப்பாவையிலோ, கல்வெட்டுகளிலோ ஆண்டாளைத் தேவதாசி என்று கூறும் வரிகள் உள்ளனவா?” என்று கேட்கிறார் அசோகவர்ஷிணி.
”அந்தக் காலகட்டம் சார்ந்த கல்வெட்டுகளே குறைவு. பாசுரங்கள் போன்றவையெல்லாம் வாய்மொழியாக வழங்கப்பட்டவை. பின்னாளில்தான் அவை எழுதப்பட்டன. ஆய்வுகள் எனப்படுபவையெல்லாம் நவீன காலத்தைச் சேர்ந்தவை. எனவே, நாம் இவற்றை ஊகிக்கத்தான் முடியும்” என்று ஒரு ஆய்வாளருக்குரிய அடக்கத்துடன் பதிலளிக்கிறார் நாராயணன்.
உடனே ஆண்டாளைத் தேவதாசி என்று சொல்வதற்கு முதன்மை ஆதாரம், Primary evidence ஏதும் இல்லை என்று நாராயணனே ஒப்புக்கொண்டுவிட்டது போல தந்தி டி.வி. பிரகடனம் செய்கிறது. நித்தியானந்தா வீடியோக்களைக் காட்டிலும் ஆபாசமானது இந்த அசோக வர்ஷிணி வீடியோதான்.
இதில் தந்தி டி.வி. இன்னொரு தில்லுமுல்லும் செய்திருக்கிறது. ஜனவரி 14-ஆம் தேதியன்று வெளியிட்ட பேராசிரியர் நாராயணன் பேட்டியில் (https://www.youtube.com/watch?v =ASUAnINMjw)
சாய்வெழுத்தில் காட்டப்பட்டுள்ள வாக்கியங்கள் உள்ளன. ஜனவரி 17-ஆம் தேதியன்று, ”ஆண்டாள் சர்ச்சை – ஆவணங்கள் சொல்வதென்ன?” என்று தலைப்பிட்டு மீண்டும் தந்தி டி.வி. அதனை ஒளிபரப்பியிருக்கிறது.(https://www.youtube. com/watch?v=H0vLUrn5eAA) சாய்வெழுத்தில் காட்டப்பட்டுள்ள வரிகள்தான் நாராயணன் கூறும் விளக்கத்தில் முக்கியமானவை. அவற்றை அவரது தொலைபேசிப் பேச்சிலிருந்து வெட்டியிருக்கிறது தந்தி டி.வி.
* * *
இனி தந்தி டி.வி. எழுப்பிய பிரைமரி எவிடென்ஸ் விவகாரத்துக்கு வருவோம். பொதுவாக ஆய்வுக்குரிய காலத்தைச் சார்ந்த நூல், சுவடி, கல்வெட்டு போன்றவற்றை பிரமைரி சோர்ஸ் என்று கூறுவர்.
”ஆண்டாள் தேவதாசி என்ற முடிவுக்கு வருவதற்கு பிரைமரி எவிடென்ஸ் இருக்கிறதா?” என்று கேட்கிறார் அசோக வர்ஷிணி. ஆண்டாள் என்றொரு பெண் இருந்ததற்கோ, அவள் துளசிச் செடிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதற்கோ, அவள் அரங்கநாதனிடம் ஐக்கியமானதற்கோ பிரைமரி சோர்ஸ் அல்லது கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா? அல்லது வைணவர்களுக்குப் பெருமாள் சிபாரிசு செய்திருப்பது ஸ்டாண்டு வைத்த நாமம்தான் என்பதற்கு கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா? இதையெல்லாம் ஜீயரிடம் தந்தி டி.வி. கேட்டதுண்டா?
எந்தக் காலத்திலும் கேட்க மாட்டார்கள். ஆண்டாள் கதை முதல் பசுமாட்டு மூத்திரத்தைக் குடிப்பது வரை அனைத்தும் நம்பிக்கை என்பார்கள். ”சரி, எதையோ குடித்து நாசமாய்ப் போ” என்று நாம் வேண்டுமானால் அவாளை விட்டுவிடலாம். ஆனால், அவாள் நம்மை விடுவதில்லை. ”நீ குடிக்காமல் இருப்பது எங்கள் மனதைப் புண்படுத்துகிறது” என்கிறார்கள்.
வேடிக்கையல்ல, நடப்பது அதுதான். ”நீ சூத்திரன் – தாசி மகன் என்பது எங்கள் நம்பிக்கை. நீ சாமி சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டு, சாமியே செத்து விடும் என்பது எங்கள் நம்பிக்கை” என்றார்கள். இந்த நம்பிக்கையை உச்ச நீதிமன்றமும் அங்கீகரிக்கிறது. விளைவு – அர்ச்சக மாணவர்கள் தெருவில் நிற்கிறார்கள்.
”40 ஏக்கர் நடராசர் கோயிலும் அதன் சொத்துகளும் எங்களுடையதென்பது எம் நம்பிக்கை” என்றார்கள் தீட்சிதர்கள். அந்த நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு மக்கள் சொத்தான கோயிலை அரசிடமிருந்து பிடுங்கி தீட்சிதனுக்கே எழுதிக்கொடுத்து விட்டது உச்ச நீதிமன்றம். பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்பது எங்கள் நம்பிக்கை என்றார்கள். மூன்றில் இரண்டு பங்கு மசூதியைக் கொடுக்கச் சொல்லி முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
அதாவது அவாளுடைய நம்பிக்கையை அவாளுடன் வைத்துக் கொள்வதில்லை. அதை நம் மீதும் ஏவுகிறார்கள் என்பதுதான் பிரச்சினை. ஆண்டாளை அவர்கள் என்னவாக வேண்டுமானால் கருதிக்கொள்ளட்டும். அவர்களுடைய கருத்துக்கு நாம் அடங்க வேண்டும் என்பதுதான் அவர்கள் போடும் உத்தரவு.
நாச்சியார் திருமொழியின் வரிகளில் சொட்டுவது பக்திரசம் என்பது அவர்கள் நம்பிக்கை. அந்த வரிகளுக்கு தமிழ் அகராதியில் பொருள் தேடிச் சொல்ல முயன்றாலே, நீங்கள் ஹிந்து மத உணர்வைப் புண்படுத்திய குற்றத்துக்கு ஆளாவீர்கள்.
இதைத்தான் புதிய தலைமுறை டி.வி. பேட்டியில் எஸ்.வி. சேகர் செந்திலிடம் சொல்கிறார். ”இந்தப் பேனா தெய்வம் என்று சொன்னால், இது தெய்வம். இதை விமரிசிக்க உனக்கு அருகதை கிடையாது. இது பேனா, இதுக்குள்ள இங்க் இருக்கு என்ற வாதமே வேண்டாம்” என்கிறார் எஸ்.வி.சேகர்.
டி.கே. நாராயணண்
அதாவது, ஆண்டாள் பிராமணரின் பெண், கோமியம் புனிதம் என்பதெல்லாம் அவாள் நம்பிக்கைகள். ஒருவேளை, மாட்டு மூத்திரத்தில் என்ன இருக்கிறது என்பதை லேப் சர்டிபிகேட், கல்வெட்டு ஆதாரம் உள்ளிட்ட பிரைமரி எவிடென்ஸ்களுடன் அசோக வர்ஷிணியிடம் சமர்ப்பித்தாலும், நீங்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.
பாண்டே வருவார். ”நீங்க சொல்றா மாதிரி இது மாட்டு மூத்திரமாகவே இருந்தாலும், அதை நீங்க மனசில வச்சிக்கலாம் சார். இப்படி மேடையில பேசுவதன் மூலமா இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்த உங்களுக்கு யார் உரிமை கொடுத்தாங்க? செக்சன் 153-அ பிரிவுல இது தண்டனைக்குரிய குற்றம்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்பார்.
எனவே, அவாளுடைய நம்பிக்கையை நீங்கள் ஆய்வுக்கு உட்படுத்தும் பட்சத்தில், அவாளுக்கு திருப்தி ஏற்படும் விதத்தில் நீங்கள் எவிடென்ஸ் தரவேண்டும். அதே நேரத்தில உங்களுடைய எவிடென்ஸ் அவாளுடைய உணர்வைப் புண்படுத்தாமல் இருக்கும்படியும் பார்த்துக் கொள்ளவேண்டும்.
ஜீயர் அல்லது சின்ன பெரியவாள் போன்ற அறிஞர்களை ரிசர்ச் கைடாக வைத்துக் கொண்டால் தண்டனையிலிருந்து நாம் தப்பலாம். உண்மையிலிருந்து அவாள் தப்புவார்கள்.
– தொரட்டி
* * *
பெட்டிச் செய்தி
“குலசேகர ஆழ்வார் மகள் தேவதாசியாம்!
பெரியாழ்வார் மகள் ஆண்டாள் தாயாராம்!!”
தந்தி டி.வி.யின் புலனாய்வுப் புலிகளின் காமெரா, வைரமுத்து மேற்கோள் காட்டிய எம்.ஜி.எஸ். நாராயணனின் கட்டுரையில் ஆண்டாளைப் பற்றிக் குறிப்பிடும் வரிகளை வட்டமிட்டுக் காட்டுகிறது. அந்த வட்டத்திற்குள் இருக்கும் மற்ற வரிகள் என்ன கூறுகின்றன என்பதை அவர்கள் கவனிக்கவில்லை போலும்!
”பக்தி இயக்கத்தின் குறிப்பிடத்தக்க நடவடிக்கை தேவதாசிகளை ஊக்குவித்ததாகும். கோயிலுக்கு மக்களின் செல்வாக்கைக் கூட்டுவதில் தேவதாசிகளின் பாடலும் அழகும் நடனமும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒரு தேவதாசியுடன் தொடர்பு இருந்தது. திருக்கைலாயத்தின் வீதிகளில் ஊர்வலம் சென்றபோது தேவதாசிகள் சிவபெருமானுக்கு அளித்த வரவேற்பைத் தான் கண்டதாக சேரமான் பெருமாள் குறிப்பிடுகிறார். மேலும், ஆண்டாளும் ஸ்ரீரங்கம் கோயிலில் வாழ்ந்து மறைந்த ஒரு தேவதாசிதான். குலசேகர ஆழ்வார் தன் மகள் நிலாவைத் தேவதாசியாக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அளித்தார் என்றொரு மரபும் உள்ளது. அவள் சேரகுல நாச்சியார் என்றழைக்கப்பட்டு, அவள் பெயரில் இக்கோயிலில் ஒரு சந்நிதியும் இருக்கிறது” என்று தந்தி டி.வி.யின் காமெரா காட்டுகின்ற நாராயணனின் கட்டுரை குறிப்பிடுகிறது.
பவுத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்துவதற்கு எப்பேர்ப்பட்ட அறிவாயுதங்களைப் பார்ப்பனியம் பயன்படுத்தியிருக்கிறது என்பது இதைப் படிக்கும்போது நமக்குத் தெரியவருகிறது. அது ஒருபுறமிருக்கட்டும்.
பெரியாழ்வார் வளர்த்த மகள் ஆண்டாளுக்காகப் பொங்கிய ஜீயர், எச்.ராஜா போன்றோரின் ஹிந்து உணர்வு, அடுத்த வரியிலேயே குலசேகராழ்வார் தனது சொந்த மகளைத் தேவதாசியாக அரங்கனுக்குக் கொடுத்ததாகக் கூறுகிறதே, அதற்காக ஏன் பொங்கவில்லை? குலசேகராழ்வார் தன் மகளை அரங்கனுக்கு கொடுத்தால், அவளைத் தேவதாசி என்று அழைக்கலாம். ஆனால், பெரியாழ்வார் தன் மகளைக் கொடுத்தால், அப்படிச் சொல்லக்கூடாதா? குலசேகராழ்வாரின் மகள் நாச்சியார் ஆக இருக்கும்போது, பெரியாழ்வாரின் மகள் மட்டும் தாயார் ஆகிவிடுவது எப்படி?
இதற்குப் பெயர் ஹிந்து உணர்வா, சாதி உணர்வா? ஆண்டாள் விவகாரத்தில் தலைவிரித்தாடுவது பார்ப்பன வெறிதான் என்பதற்கு இதைவிட வேறு என்ன பிரைமரி எவிடென்ஸ் வேண்டும்?
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
பகை நாடுகளை அழிக்கத் தண்ணீரை மறிப்பது, போர்களில் கடைப்பிடிக்கப்படும் தந்திரோபாயம். அது போன்று தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரைத் தட்டிப்பறித்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.
காவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில், ஓராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தஞ்சை டெல்டா விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்தும் நோக்கில் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். காவிரி டெல்டா பகுதியைப் பெட்ரோலிய மண்டலமாக மாற்றத் துடிக்கும் மைய அரசின் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் தமிழகம், குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகள் இந்தத் தீர்ப்பை வேறெப்படிக் கருத முடியும்?
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, குறுவைச் சாகுபடிக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தமிழக அரசு. குறுவைச் சாகுபடிக்கு ஜூன் 12 அன்று மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது தமிழகத்தில் நிலவிவரும் நடைமுறை மட்டுமல்ல, அறிவியல்பூர்வமான அணுகுமுறையும்கூட. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, இதற்கு இப்பொழுதென்ன அவசரம் எனக் கேட்டு, அந்த வழக்கை ஒத்தி வைத்தார்கள். டெல்டா விவசாயம் குறித்து உச்ச நீதிமன்றம் கொண்டிருக்கும் அக்கறையை மட்டுமல்ல, அவர்களின் அறிவையும் இந்த வழக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இப்படிப்பட்ட நீதிமன்றத்திடமிருந்து காவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில் தமிழகத்திற்கு நியாயம் செய்யக்கூடிய தீர்ப்பு கிடைத்திருக்க ஒருக்காலும் வாய்ப்பு இல்லை.
காவிரி நடுவர் மன்றம் கர்நாடக அரசு தனது அணைகளிலிருந்து ஆண்டொன்றுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்திற்குத் தர வேண்டும் என அளித்த தீர்ப்பில், 14.75 டி.எம்.சி. நீரைப் பிடுங்கி கர்நாடகாவிற்குக் கொடுத்துவிட்டு, இது சமநிலையான தீர்ப்பு என நாக்கூசும் பொய்யைக் கூறியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். காவிரி டெல்டா பகுதியில் 20 டி.எம்.சி. அளவிற்கு நிலத்தடி நீர் இருக்கிறதென்றும், அதில் 10 டி.எம்.சி. நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியும் எனக் கூறி, இத்திருட்டை நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.
”காவிரி கிடைக்காது; கடல் தண்ணிய வாங்கிக்க..” என சுப்பிரமணிய சுவாமி கொழுப்பெடுத்துப் பேசியதற்கும், ”காவிரிக்குப் பதிலாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துங்கள்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிகாரத்தோடு உத்தரவிட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடில்லை. தமிழகத்தை வஞ்சிப்பதில் சு.சாமியைப் போலவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் சிந்திக்கிறார்கள்.
காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நிலத்தடி நீர்மட்டம் தரைமட்டத்திலிருந்து 21.5 மீட்டருக்குக் கீழும், கடலூர் மாவட்டத்தில் 25.5 மீட்டருக்கும் கீழும் சென்றுவிட்டது. இம்மட்டம் நாகை மாவட்டத்தில் 6.5 மீட்டருக்குக் கீழும், திருவாரூர் மாவட்டத்தில் 9.2 மீட்டருக்கும் கீழும் உள்ளது. தஞ்சை, கடலூர் மாவட்டங்களைவிட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் தரைமட்டத்திலிருந்து அதிக ஆழத்தில் இல்லையென்றாலும், இம்மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்தத் தகுதியற்ற நிலையை எட்டியிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆழ்குழாய் மூலம் சாகுபடி நடந்துவந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதிகளில் தற்பொழுது நிலத்தடி நீர் உவராகிவிட்டது. வெண்ணாற்றுப் பாசனப் பகுதியில் அமைந்துள்ள நன்னிலம், திருமருகல், திருவாரூர், திருத்துறைப்பூண்டி வட்டாரங்களிலும்; கல்லணைக்கு அருகேயுள்ள பூதலூர், மாரனேரி, விண்ணமங்கலம், கள்ளப்பெரம்பூர், சக்கரசாமந்தம் வட்டாரங்களிலும் கிடைக்கும் நிலத்தடி நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியாது.
கல்லணை கால்வாய் பாசனப் பகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசமுத்திரம் உள்ளிட்ட வட்டாரங்களில் நிலத்தடி நீர் 120 மீட்டருக்குக் கீழாகச் சென்றுவிட்டது. இப்பகுதிகளில் ஒரு ஆழ்குழாய் கிணறைத் தோண்டுவதற்கு ஏறத்தாழ 8 இலட்சம் வரை செலவு செய்ய வேண்டுமென்பதால், குறு, சிறு விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.
இதுதான் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவிவரும் எதார்த்த நிலை. டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுத்துச் சாகுபடிக்குப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்குமானால், 2016-ஆம் ஆண்டு வறட்சியின்போது அம்மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்? இந்த உண்மைகளை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளிவிட்டு, சாகுபடிக்கு நிலத்தடி நீரை எடுத்துக்கொள்ளுங்கள் என உத்தரவிடும் நீதிபதிகளின் மண்டையில் இருப்பது மூளையா அல்லது களிமண்ணா?
தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் (இடமிருந்து) தஞ்சை செல்வராஜ், திருவாரூர் கோவிந்தராஜ்
சாகுபடிக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூறும் இத்தீர்ப்பு அறமும், அறிவும் அற்றது மட்டுமல்ல, ஒருபக்கச் சார்பான ஓரவஞ்சனை கொண்டதாகும். தமிழகத்திற்கு ஒதுக்கும் நீரைக் குறைக்க வேண்டும் எனக் கோரிய கர்நாடகா அரசுதான் தமிழகத்தின் டெல்டா பகுதியில் ஏராளமான நிலத்தடி நீர் இருப்பதாக வாதாடியது. நடுவர் மன்றத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட கர்நாடகா அரசின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடகா மாநிலத்தில் கிடைக்கும் நிலத்தடி நீர் இருப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை.
கர்நாடக அரசு நிலத்தடி நீர் குறித்து 2016-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையொன்றில், அம்மாநிலத்தில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் 66 சதவீதம் உயர்ந்திருக்கிறது; 97 சதவீத நிலத்தடி நீர்க் குடிப்பதற்கு உகந்தது எனக் கூறியிருக்கிறது. இதில் ஒரு சதவீதம்கூட எடுத்துப் பயன்படுத்துமாறு உத்தரவிடாத நீதிபதிகள், தமிழகத்திடமிருந்து 14.75 டி.எம்.சி. நீரைத் தட்டிப் பறித்து, இந்த ஓரவஞ்சகமான நடவடிக்கையை பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவை என்ற பெயரில் நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.
பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்கு ஏற்கெனவே தினமும் 140 கோடி லிட்டர் நீர் காவிரியிலிருந்து எடுக்கப்படுகிறது. இப்படி எடுக்கப்படும் நீரில் 52 சதவீத நீர் தேவையற்ற விதத்தில் வீணடிக்கப்படுவதாக பெங்களூரு சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகம் கூறியிருக்கிறது.
இந்தக் குற்றத்தைச் செய்யும் கயவர்கள் யார்? பெங்களூருவைச் சுற்றி அமைந்துள்ள ஷாப்பிங் மால்கள், நீர்ப் பூங்காக்கள், கோல்ஃப் மைதானங்கள், குதிரைப் பந்தய மைதானங்கள், செயற்கை கடல்கள், ஆடம்பர ரிசார்ட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள். இக்கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் பெங்களூரு குடிநீர்த் தேவையின் பெயரில் எடுக்கப்படும் நீரில் 50 சதவீதத்திற்கும் மேலாக, 72 கோடி லிட்டர் நீரைப் பெறுகிறார்கள்.
இந்த கார்ப்பரேட் கும்பல் அடைந்திருக்கும் வளர்ச்சியைத்தான் பெங்களூரு நகர உலகத்தர அந்தஸ்தாக நீதிபதிகள் காட்டுகிறார்கள். இவர்களின் நீர்த் தேவைக்காகத் தமிழக விவசாயிகளின் நீர்த் தேவையைப் பலியிட்டிருக்கிறார்கள்.
* * *
உச்ச நீதிமன்றத்தின் ஓரவஞ்சனை இதோடு மட்டும் நின்றுவிடவில்லை. காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்றுரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது எனத் தீர்ப்பில் எழுதி, கன்னட இனவெறியர்களின் குரலை எதிரொலித்திருக்கிறது. கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரிப்பதற்கு விதிக்கப் பட்டிருந்த வரம்பை ரத்து செய்துவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என உத்தரவிட்டு தமிழகத்தின் மீது இரட்டைத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
கர்நாடக இனவெறியர்களின் குரலில் உச்சநீதிமன்றம் பேசுகிறது
கர்நாடகத்தின் இழப்பு குறித்து மூக்கைச் சிந்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், 1974 தொடங்கி தமிழகத்திற்கு கர்நாடகம் இழைத்து வரும் அநீதி குறித்து வாய்திறக்கவில்லை. தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மூன்று அணைகளைச் சட்டவிரோதமாகக் கட்டி இயக்கிவருகிறது, கர்நாடகம். நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, அதன் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இவை எதனையும் நடைமுறைப்படுத்தாமல், தமிழகத்தின் டெல்டா பகுதியை உபரி நீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாக மாற்றிவிட்டது. கர்நாடகம் இழைத்துவரும் இந்த அநீதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிலாவது முடிவு வரும் என எதிர்பார்த்திருந்த தமிழக மக்களின் முதுகில் குத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த வரம்பை நீக்கியதன் மூலமும், கர்நாடகத்திற்கு 14.75 டி.எம்.சி. நீர் அதிகரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாலும், அம்மாநிலத்தில் மேலும் 1 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு காவிரி பாசனப் பரப்பின் வரும் எனக் கூறப்படுகிறது. அதேபொழுதில் தமிழகத்தின் பங்கு குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஏறத்தாழ 88,500 ஏக்கர் நிலப்பரப்பு தரிசாகும் அபாயம் எழுந்து நிற்கிறது.
சாகுபடி பரப்பு குறைவதோடு, காவிரியின் கடைமடை பகுதிகளில் கடல் நீர் உட்புகுவது மேலும் அதிகரித்து, சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு ஏற்படும் என எச்சரிக்கிறார், நீரியல் நிபுணர் ஜனகராஜ்.
இந்த வஞ்சனைகளை மூடிமறைத்துத் தமிழகத்திற்கு ஏதோ நியாயம் வழங்கிவிட்டது போலக் காட்டுவதற்காகவே, காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக காலனிய ஆட்சிக் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களும் செல்லத்தக்கவைதான், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் மைய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் உதார்விட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மைக் குற்றவாளி ஜெயா இறந்துபோனதைச் சாக்காகக் கொண்டு அவரை வழக்கிலிருந்தே விலக்கிவைத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஊழல் குறித்து தத்துவஞான உபதேசமொன்றைப் பொளந்து கட்டியிருந்தார், நீதிபதி அமித்வா ராய். அதே நீதிபதி காவிரி வழக்கை விசாரித்த அமர்விலும் இருந்ததால், காவிரி நதி எந்தவொரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல, அது தேசியச் சொத்து என்ற உபதேசம் தமிழகத்திற்கு இலவச இணைப்பாகக் கிடைத்திருக்கிறது. இலவசங்கள் என்பதே வாடிக்கையாளனை ஏமாற்றும் வியாபாரிகளின் தந்திரம்தானே.
* * *
இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதற்கு, ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும், ஊடகங்களும் பொழிப்புரை எழுதுகின்றன. இந்தப் பொய்யுரையின் மூலம் வஞ்சனை நிறைந்த இத்தீர்ப்பைத் தமிழக மக்களும் விவசாயிகளும் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையை உருவாக்க முயலுகின்றன.
கடந்த ஆண்டில் இவ்வழக்கு விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதனை மறுத்து, ”அதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது, நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” என வாதிட்டு, கர்நாடகாவிற்குச் சாதகமாக நடந்து கொண்டது பா.ஜ.க. கூட்டணி அரசு. மைய அரசின் இந்த அடாவடித் தனத்தைக் கேள்விக்குள்ளாக்காமல் உச்ச நீதிமன்றமும் சமரசமாகிப் போனது.
இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதை நிரந்தரமாகவே முடமாக்கும் நோக்கில், ஒவ்வொரு நதி நீர்ப் பிரச்சினைக்கும் தனித்தனி மேலாண்மை வாரியங்களை அமைப்பதற்குப் பதிலாக, அனைத்திற்கும் பொதுவான பல்மாநில நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் சட்டவரைவை தயாரித்து, அதனை நிறைவேற்றிவிடத் திட்டம் போட்டது மோடி அரசு.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு ஒப்புக்குச் சப்பாணி அமைப்பை உருவாக்கக்கூட மோடி அரசு விரும்பாது. மேலும், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தீர்ப்பில் உள்ள உத்தரவை முடக்குவதற்குத்தான் பா.ஜ.க. முயலுமேயொழிய, அதனை அமல்படுத்த ஒருபோதும் சம்மதிக்காது. இன்னொருபுறமோ, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ”மேலாண்மை வாரியம் அமைப்பதை நாங்கள் எதிர்ப்போம்” என அறிக்கைவிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவு வெறும் வெத்துவேட்டு எனக் காட்டிவிட்டார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது கர்நாடகத்தை ஆண்ட, ஆளும் முதல்வர்கள் சாணியடிப்பது இது முதன்முறையல்ல. நடுவர் மன்றம் தனது இடைக்கால உத்தரவை அறிவித்த காலந்தொட்டு இதுதான் நடந்துவருகிறது. நீதிமன்ற உத்தரவுகளை கால் தூசுக்கும் கீழாக மதித்து, அவற்றை மலக்காகிதம் போலத் துடைத்த போட்ட கர்நாடக மாநில முதல்வர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகூட உச்ச நீதிமன்றம் எடுத்ததில்லை. எனவே, இப்பொழுதும் தமது உத்தரவின் மீது வீசப்பட்டிருக்கும் சாணியைத் துடைத்துவிட்டு, மேலும் அவகாசம் கொடுப்பார்கள் அல்லது கண்டிப்பது போல நடிப்பார்கள். உச்ச நீதிமன்றம் நடத்திவரும் இந்த நாடகத்தைத் தமிழகம் இன்னும் எத்தனை காலத்துக்கு சகித்துப் போவது?
கெயில் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் தொடுத்திருந்த வழக்குகளிலெல்லாம், தமிழத்துக்கு எதிராகத் தீர்ப்பெழுதி, அதனை அதிகாரத்தோடு தமிழகத்தின் மீது திணித்த உச்ச நீதிமன்றம், காவிரி பிரச்சினையில் தனது உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசிடம் மென்மையாக நடந்துகொண்டிருப்பதோடு, இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அபரிதமான சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. தமிழகத்தின் நலன் தொடர்பான வழக்குகள் என்றாலே, அதனைக் காழ்ப்புணர்ச்சியோடும், ஓரவஞ்சனையோடும்தான் உச்ச நீதிமன்றமும் அணுகி வருகிறதே தவிர, அதனின் தீர்ப்புகளில், உத்தரவுகளில் நேர்மையோ, நியாயமோ, நடுநிலையோ இருந்ததே கிடையாது.
தமிழக விவசாயிகள் வறட்சியால் நட்டமடைந்தால் அதற்குரிய இழப்பீடு வழங்க மாட்டார்கள், தமிழக மீனவர்கள் இலங்கையால் சுடப்படுவதை, தாக்கப்படுவதை, கைது செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பார்கள், நீட் தேர்வின் மூலம் தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரி இடங்களை அபகரித்துக் கொள்வார்கள், ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்தின் உரிமையைத் தட்டிப் பறிப்பார்கள், மைய அரசின் நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் தமிழகத்துக்குரிய பங்கைத் தர மறுப்பார்கள், இந்தியைத் திணித்துத் தமிழை இரண்டாம்பட்சமாக்கி இழிவு செய்வார்கள், தமிழகத்திலிருந்து மின்சாரம், நிலக்கரி, மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துச் செல்வார்கள். இவை அனைத்தையும் தமிழகம் சகித்துக்கொண்டு இருந்துவருவதைப் பார்த்துதான், துணிந்து காவிரித் தீர்ப்பில் தமிழகத்துக்கு மாபெரும் அநீதியை இழைத்திருக்கிறார்கள்.
காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் படிப்படியாகக் குறைப்பது, அதனையும்கூட வழங்காமல் டெல்டாவைப் பாலைவனமாக்குவது, அதன் மூலம் டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக மாற்றியமைப்பது என்ற திட்டத்தின் ஒருபகுதியாகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் தமிழகத்தின் மீது திணிக்கப்படும் அநீதிகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிகொடுத்துக்கொண்டே, ஒருமைப்பாட்டுக்கு ஜே போட்டுக்கொண்டிருக்க முடியாது என்பதை இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு, அவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டிய தருணத்தில் தமிழகம் நின்று கொண்டிருக்கிறது.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் 36,435 கோயில்கள் உள்ளன. இவற்றுக்கும் மடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 4,78,000 ஏக்கர் நிலமும் 22,000 கட்டிடங்களும் உள்ளன. இவற்றைக் கைப்பற்றிக் கொள்வதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம்.
கேரளத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் பரம்பரை அறங்காவலர்கள் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர். 2011-இல் அங்கே கோயிலுக்கடியில் இருந்த சுரங்கங்களில் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்க நகைகளும் தங்கப்பாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை மக்கள் சொத்து என்றும் அவற்றை அரசுடைமையாக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்த போது அதனை பா.ஜ.க. கடுமையாக எதிர்த்தது. அவை மன்னரின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று கூறியது.
ஆனால் உச்ச நீதிமன்றம் நியமித்த குழு, மன்னர் குடும்பம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை களவாடியிருப்பதைக் கண்டுபிடித்தது. மறைக்கவோ மறுக்கவோ முடியாமல் மன்னர் குடும்பம் சிக்கிக் கொண்ட காரணத்தினால், மன்னர் குடும்பத்தை நிர்வாகப்பொறுப்பிலிருந்து வெளியேற்றி விட்டு மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். இது சமீபத்திய எடுத்துக்காட்டு.
சாலையோரக் கோயில்களின் கடவுளர்கள் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை காசில் தான் கஞ்சி குடிக்கிறார்கள். பழைய கடவுளற்க்கு மட்டும் எதற்கு சொத்து?
தமிழக கோயில்களின் பல லட்சம் ஏக்கர் நிலமோ, திருவனந்தபுரம் கோயிலின் பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்கமோ எப்படி வந்தன? மன்னராட்சிக் காலத்தில் விவசாயிகளை கசக்கிப் பிழிந்து வரியாக வசூலித்தும், வரி கட்டாதவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்தும் பெறப்பட்டவை அல்லது மக்களைச் சுரண்டிச் சேர்த்த பணத்திலிருந்து நிலவுடைமையாளர்களும், வணிகர்களும் காணிக்கையாக கொடுத்தவை அல்லது போர்களின் போது ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டு மக்களிடம் கொள்ளையிடப்பட்டவை.
கோயில்களின் சொத்துகள் மட்டுமல்ல, மசூதிகளின் சொத்துகளும் இத்தகையவைதான். தேவாலயங்களின் சொத்துகள் எனப்படுபவை காலனியாதிக்கவாதிகளால் அவர்களுக்கு வழங்கப்பட்டவை. அரசியல் சட்டத்தின் பிரிவு-26 தான் மத நிறுவனங்களின் இந்த சொத்துகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.
கடவுளுக்கும் முற்றும் துறந்த சாமியார்களின் மடங்களுக்கும் எதற்கு சொத்து என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி. சாலையோரக் கோயில்களின் கடவுளர்கள் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை காசில் தான் கஞ்சி குடிக்கிறார்கள். இது புதிதாக கட்டப்படும் தேவாலயங்களுக்கும் பொருந்தும். அவ்வாறிருக்க பழைய கடவுளற்க்கு மட்டும் எதற்கு சொத்து?
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை அரசு பராமரிக்கட்டும். மற்றப்படி கோயில்கள் மதநிறுவனங்களின் நிலங்களாகட்டும், மனைகளாகட்டும் அவை நிலமற்ற விவசாயிகளுக்கும் வீடற்ற மக்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே நமது கோரிக்கையாக இருக்க வேண்டும். கோயில் சொத்துகளை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த வருவாய் சிறிதளவேனும் மக்களுக்குப் பயன்படுகிறது. அதுவும் கூடாது. எல்லா சொத்துக்களையும் எங்களிடம் ஒப்படை என்று கோருகிறது சங்க பரிவாரம்.
இது சொத்துக்களைக் கைப்பற்றும் பிரச்சினை மட்டுமல்ல. மக்களின் மனங்களைக் கைப்பற்றும் பிரச்சினை. கோயில்களைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் மக்களின் பக்தி உணர்வை எளிதில் மதவெறியாக மாற்றிவிட முடியும் என்பதுதான் இவர்களது திட்டம். விநாயகர் ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ். எப்படி மாற்றியிருக்கிறது என்பதை நாம் கண்ணெதிரே காண்கிறோம். எல்லாக் கோயில்களும் அப்படி மாற்றப்படும் சூழலை எண்ணிப்பாருங்கள். எனவேதான் இந்தப் பேரபாயத்தை அலட்சியப்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கிறோம்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
“பள்ளி ,கல்லூரிகளில்,பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!”
ஆகிய முழக்கங்களை முன்வைத்து 27.2.18 அன்று திருச்சியில் மாலை 5.00 மணி அளவில் தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு, என்ற முழக்கத்துடன் மத்திய பேருந்து நிலையம்,விக்னேஷ் ஹோட்டல் அருகில் 80 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது. இதில் பல்வேறு மாணவர் அமைப்பு தோழர்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் துவக்கமாக தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்துடன் துவங்கியது. ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாக முதலில் AISF தோழர் சூர்யா “இன்று ஆளும் மத்திய அரசினால் நீட் தேர்வு திணிக்கப்பட்டு தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்து – இந்தி – இந்தியா என்ற கொள்கையை அமல்படுத்த தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டத்துடன் இப்போ இருக்கிற வேலையும் உறுதியில்லாமல் இருக்கிறது. இந்த பி.ஜே.பி அரசு தொடர்ந்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரியார் பிறந்த மண் நம் தமிழ்நாடு ஆதலால் தொடர்ந்து நம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
அடுத்ததாக ஆக்ஸ்ஃபோர்ட் கல்லூரி மாணவர் தர்மராஜ், “தமிழ்நாட்டில் மாணவர்களின் போராட்டம் தொடந்து நடந்து கொண்டே இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும். மீனவ மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் விதமாக சாகர் மாலா திட்டம் மத்திய அரசினால் திணிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. சென்னை ஐஐடி யில் அறிமுக நிகழ்ச்சியில் தமிழ்மொழி அவமானப்படுத்தப்பட்டது.
சங்கராச்சாரிகளும், காவி மையங்களும், இந்த BJP கும்பலும் தமிழ்மொழியையும், தமிழ் பண்பாட்டையும் அழிக்க கூடிய வேலையை செய்கிறார்கள். இதை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்” என கூறினார்.
அடுத்ததாக முற்போக்கு மாணவர் கழகம் தோழர் மதன், “இன்று மொழி உரிமையை நிலைநிறுத்த வேண்டிய போராட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் அரசானை 92 -ன் படி கல்வி உதவித் தொகையை இந்த அரசு நிறுத்தியுள்ளது. இதனால் 1 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது. பெரியார் மண்ணில் காவி கும்பலை அனுமதிக்க முடியாது. இது போன்ற புரட்சிகர மாணவர்கள் உள்ளவரை தொடந்து எல்லா பிரச்சனைக்கும் எதிராக போராடுவோம்” என்று கூறினார்.
போராசிரியர் ஸ்டீபன் என்பவர் கலந்து கொண்டு மொழி உரிமைக்கான நமது கோரிக்கைகளை நிறைவேற்ற நாம் எவ்வாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே முக்கியம். சமூக நீதி, சமூக பொருளாதாரம், இந்தியாவின் அனைத்து இனங்களுக்கும் சமமாக கொடுக்கப்பட வேண்டும் என்கிற சட்டம் உள்ளது. ஆனால் இது இப்போது இல்லை. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஆகிய ஆகியோர்களிடம் நமது கோரிக்கைகளை அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என கூறினார்.
அடுத்ததாக பு.மா.இ.மு தோழர் சுரேந்தர் “தமிழ்நாட்டில் நவோதயா பள்ளி திணிப்பு, NEET அனிதா கொலை, GST -யால் சிறு தொழில் வீழ்ச்சி என அனைத்து திட்டங்களும் மக்களுக்கு எதிராக உள்ளது. எடப்பாடி தன்னுடைய சொத்துக்களை பாதுகாக்க மோடி காலை நக்கி பிழைக்கிறார். இங்கு மக்களுக்காக அரசா? அரசிற்காக மக்களா? அதிகாரிகள், அரசியல்வாதிகள் மக்களின் சேவர்கள், ஆனால் அப்படியா உள்ளது. ஆகையால் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு இந்த அரசு கட்டமைப்பில் இல்லை. இந்த அரசு கட்டமைப்பு அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. மக்கள் போராட வீதியில் இறங்கினால் மட்டுமே பிரச்சனைகளை சரி செய்ய முடியும்” என்று கூறினார்.
கடைசியாக பு.மா.இ.மு தோழர் மணிமாறன் “இன்றைக்கு ஆளும் BJP அரசு 16 மாநிலங்களின் வெற்றியையும் அதன் அனுபவங்களையும திரட்டி, தமிழ்நாட்டை நோக்கி வந்துள்ளனர். இதை நாம் ஒன்று சோ்ந்து முறியடிக்க வேண்டும். அதிகார வர்க்கம், என்பது கண்ணுக்கு தெரிந்தவா்கள் மட்டுமல்ல. அரசு துறை அதிகாரிகள், பல்கலைகழகங்கள், NGO போன்று பல்வேறு வடிவங்களிலும் நம்முடன் கலந்துள்ளனர். பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் போராட்டத்திற்காக தீர்வு ஏன் கிடைக்கவில்ல என்று மாணவர்கள் கேட்கின்றனர். போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கும் போலிஸ்காரர்கள், போராசிரியர்கள் போன்றவர்களையும், கண்ணுக்கு தெரியாத பகட்டான பொறுக்கிகளையும் அடையாளம் காண வேண்டும். அரசியல்வாதிள் பேருந்தில் உள்ள டயரே. அடிக்கடி காற்று அடிச்சு கொஞ்ச காலம் ஓடும். ஆனால் வண்டியில் உள்ள இன்ஜின்தான் முக்கியம். அதுதான் அரசு அதிகார வர்க்கம். அதைத்தான் நாம் மாற்ற வேண்டும். ரஜினி, கமல் போன்ற கோமாளிகள் எல்லாம் இங்கே தேவையில்லை. மேலும் நாம் போராடுவதில் உற்சாகம் குறையாமல், தொடர்ச்சியாக போராட வேண்டும், மெரினா போன்ற எழுச்சியை மீண்டும் நாம் நிகழ்த்திக் காட்டுவோம்” என்று கூறினார்.
மகஇக தோழர்கள் கல்வி சார்பாகவும் பார்ப்பனியத்திற்கு எதிராகவும் பாடல்கள் பாடியது மாணவர்களுக்கு மேலும் உற்சாகம் அளித்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருச்சி.
*****
குடந்தை காந்தி பூங்கா அருகில் பு.மா.இ.மு சார்பாக தோழர் பகத் தலைமையில் 27, பிப்ரவரி காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை “பள்ளி ,கல்லூரிகளில்,பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!” என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது….
தோழர்கள் தமிழ் அமுதன், எழிலன், தஞ்சை அமைப்பாளர் குஸ்த்தினா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி குடந்தை, தொடர்புக்கு : 96297 01560.
‘‘மரியாதைக்குரிய ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யர் மறைவின் காரணமாக காலா திரைப்படத்தின் டீசர் நாளை மார்ச் 2 (நாளை) வெளியிடப்படும். டீஸருக்காக ஆர்வமாக காத்திருந்த அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்புக் கோருகிறேன்”
– இது காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் டிவிட்டரில் கூறிய அறிவிப்பு!
காமாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு
ரஜினி நடிக்கும் “காலா” படத்தை இயக்குநர் ரஞ்சித் இயக்குகிறார். “காலா” திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் காஞ்சியில் ஜெயேந்திரர் இறந்து போக இன்று வெளியாக இருந்த டீசர் ஒரு நாள் தள்ளி நாளை வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அதற்கு மன்னிப்பும் கேட்கிறார் தனுஷ்.
ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் என்றாலும் அவரது கிச்சன் கேபினட் முழுவதும் துக்ளக் சோ, குருமூர்த்தி, லதா ரஜினி காந்த், ஒய்.ஜி.மகேந்திரன், பாஜக, மோடி, என பார்ப்பனிய மாந்தர்கள் நிறைந்திருக்கின்றனர். அவரது அரசியல் பிரவேசம் பாஜகவின் பி, சி, டி பிளான் என்றால் அவரது சொல்லும் செயலும், படமும், அதன் வெளியிடலும் கூட பார்ப்பனியத்தின் ஆசிர்வாதத்தோடு கூடவே நடைபெறும்.
காஞ்சியில் ஜெயேந்திரன் இறந்து போனதால், சங்கர மட பள்ளிகளுக்கு விடுமுறை, சங்கர மட கோவில்களின் சடங்குகள் ரத்து, சங்கர மட தெருவில் கடைகள் விடுமுறை போன்றவற்றை புரிந்து கொள்ள முடிகிறது. இவையெல்லாம் கம்பெனியின் தயவில் நடப்பவை. இதைத்தாண்டி காலா படம், ரஜினி ரசிகர்கள் எல்லாம் சங்கர மடத்தின் எல்லையில் எப்படி வரும்? இவ்வளவிற்கும் ஜெயேந்திரனது மரணத்திற்காக காஞ்சிபுரத்தில் சுமார் 2000 பேர் திரண்டிருந்தால் அதிகம். அதில் பார்ப்பனரல்லாதோரின் சதவீதம் பத்தைத் தாண்டாது. எனினும் லோககுருவின் மரணத்திற்கு லோகமே சோகம் கொண்டிருப்பதைப் போன்று ரஜினி எண்ணுகிறார் போலும்.
ஆன்மிக ஜெகத்குருவும் சினிமா ஜெகத்குருவும்
ரஜினியின் பாபா படத்தின் ஆன்மீகத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அடி பலமாக இருக்கும் போது ஜெயேந்திரன் மரணமெல்லாம் எப்படி ஐயா கணக்கில் வருகிறது? எந்த ரஜினி ரசிகர் ஜெயேந்திரனை “மரியாதைக்குரிய ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யர்” என்று விளிக்கிறார்?
ரஜினி படத்தின் டீசர் வெளியாகும் போது ரஜினி குடும்பமும், ரஜினியின் பார்ப்பனிய சுற்று வட்டமும் பரிதவித்திருக்கிறது என்றால் அந்த உண்மையை வெளிப்படையாக கூற வேண்டியதுதானே?
கொல்லப்பட்ட மரியாதைக்குரிய சங்கர்ராமனோ, இல்லை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான எழுத்தாளர் மரியாதைக்குரிய அனுராதா ரமணனோ இவர்களெல்லாம் மரியாதைக்குரியவர்கள் இல்லையா? ஜெயேந்திரனது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என்று மோடியோ எஸ்.வி.சேகரோ கூறுவது போல நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார்.
காலா படத்தில் அம்பேத்கர் குறியீடு, தலித் மக்களின் வாழ்க்கை, போராட்டம், அரசியல் எல்லாம் இருப்பதாக ஏற்கனவேயும், இனியும் பேசும் சில ஃபேஸ்புக் புரட்சிப் போராளிகள் இனிமேலும் திருந்துவார்களா?
சென்ற மாதத்தில் மட்டும் எத்தனை கொலைகள், கொடூரங்கள் நடந்திருக்கின்றன? கேரளாவில் செஃல்பி வெறியர்களால் ஒரு பழங்குடி இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். விழுப்புரத்தில் ஒரு தலித் குடும்பம் சூறையாடப்பட்டிருக்கிறது. இன்னும் பல தற்கொலைகள், ஒரு தலைக் காதல் கொலைகள்… இவையெல்லாம் அசைக்காத உள்ளத்தை ஜெயேந்திரனது சாவு உலுக்கியிருக்கிறது என்றால் அந்த உள்ளத்தை வியந்தோதும் அற்பத்தனத்தை எப்படிக் கண்டிப்பது?
ரஜினியின் மகள் ஐ.நா சபையில் கோமாளி ஆட்டம் ஆடும் வாய்ப்பு பெறுவதையோ, ரஜினியின் கட்சி பாஜகவின் ஆசிர்வாதத்தோடு ரிலீஸ் செய்யும் காலத்தையோ, காலா படத்தின் டீசர் ஜெயேந்திரனது சாவிற்காக ஒத்தி வைக்கப்படுவதையோ, காலா படமே ஏப்ரலில் வெளியாவதையோ வேறு வேறு விசயங்கள் என்று எண்ணமுடியுமா?
இன்றைய கருத்துக் கணிப்பு கேள்வி:
ஜெயேந்திரன் மறைவை ஒட்டி காலா திரைப்பட டீசர் ஒத்திவைக்கப்பட்டது எதைக் காட்டுகிறது? (மூன்று பதில்களைத் தெரிவு செய்யலாம்)
ரஜினியின் பார்ப்பனிய பாசம்
சங்கராச்சாரியார் மறைவை மதிக்கும் நாகரீகம்
ரசிகர்களை இந்துத்துவா பக்கம் திருப்பும் முயற்சி
ரஞ்சித் பேசும் தலித் அரசியல் பாஜக-விற்கு பயன்படும் அவலம்
தமிழகம் முழுவதும் வாகன சோதனை எனும் போலீசாரின் அத்துமீறலால் பொதுமக்கள் சொல்லிமாளாத்துயரத்திற்கு ஆளாகின்றனர். நள்ளிரவில் கூட குடும்பத்துடன் வருபவர்கள், அவசர அவசரமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகத்துக்கு செல்பவர்கள் என பொதுமக்களை வழிமறித்து இடையூறு செய்கின்றனர்.
மேலும், சந்துக்கு சந்து நின்று கொண்டு வழிப்பறி செய்யும் வகையில் நடந்து கொள்வதுடன் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் வாகன சோதனையின் போது எடத்தெருவைச் சேர்ந்த 25 -வது வார்டு திமுக வட்டச் செயலர் முகேஷ்குமாரின் மனைவி சரஸ்வதி மீது பைக் மோதியதில் பின் தலையில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 26.02.18 அன்று மரணமடைந்தார்.
காவல்துறையினர் ஏற்படுத்தும் விபத்துக்களையும், உயிழப்புகளையும் மற்றும் பொதுமக்களிடம் அத்துமீறி வழிப்பறி செய்வதையும் உடனடியாக நிறுத்தக்கோரி பொதுமக்கள் மத்தியில் 27.02.18 காலை 11 மணியளவில் புத்தூர் நான்கு ரோடு சிக்னலில் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் குமார் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
பொதுமக்கள் உற்சாகமாக கையெழுத்திட்டதுடன், உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும், இதற்க்கெதிராக போராட்டம் நடந்தால் நாங்கள் வருவோம் என்றனர். ஒருவர் தன் கையெழுத்துக்குக் கீழ் “கொள்ளைக்காரனை பிடி அப்பாவி மக்களை தொந்தரவு பண்ணாதே” என எழுதிச் சென்றார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம் திருச்சி, தொடர்புக்கு : 94454 75157
ஐ.டி துறை வேலைன்னா வெளிநாட்டு பயணம், 6 இலக்க சம்பளம், மேட்டுக்குடி வாழ்க்கைன்னுதான் கேள்விப்பட்டிருக்கிறார், ஆனந்த். முதல் முறையாக ஐ.டி கம்பெனி வேலைன்னா “பவுன்சர்களும்” உண்டுன்னு அவருக்கு தெரிய வந்தது.
ஹைதராபாதில் உள்ள வெரிசான் நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்த ஆனந்த், டிசம்பர் மாதம் 12 -ம் தேதி வழக்கம் போலத்தான் வேலைக்குப் போனார். நிறுவனத்துக்குள் நுழைந்ததும், அவரது பொருட்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு தனது அலுவலகத்தில் சந்திக்குமாறு எச்.ஆர் அதிகாரி சொல்லியிருக்கிறார்.
ஏற்கனவே காக்னிசன்ட், விப்ரோ, டெக் மகிந்த்ரா, ஐ.பி.எம் என்று பல ஐ.டி நிறுவனங்களில் ஊழியர்களை கட்டாய ராஜினாமா செய்ய வைத்து ஆட்குறைப்பு நடந்து வருவது பற்றிய செய்திகளை படித்திருந்த ஆனந்த், நமக்கும் ஏதோ நடக்கப் போகிறது என்று ஊகித்துக் கொண்டார். “என்ன ஆனாலும் ராஜினாமா செய்யக் கூடாது,” என்று நினைத்துக் கொண்டு, இருந்தாலும் “எச்.ஆர் என்னதான் சொல்றான்னு பார்க்கலாம்” என எச்.ஆர் அறைக்குள் சென்றிருக்கிறார்.
அங்கு போன பிறகுதான் தெரிந்தது, ‘ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மறுப்பதற்கெல்லாம் இடம் இல்லை’ என்று. எச்.ஆர் அதிகாரியுடன் ஒரு “பவுன்சரும்”, மனோதத்துவ ஆலோசகரும் உட்கார்ந்திருந்தார்கள்.
ராஜினாமா செய்யப் போவதாக எழுதப்பட்ட தாளில் கையெழுத்திட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறார்கள். தாளில் என்ன எழுதியிருக்கிறது என்று முழுதாக படித்துப் பார்க்கக் கூட அனுமதிக்கவில்லை. “கொஞ்சம் நேரம் வேணும். யோசிச்சுதான் முடிவு எடுக்கணும்” என்று கையெழுத்திட மறுத்து விட்டு எழுந்திருக்க முயற்சித்திருக்கிறார் ஆனந்த். “பவுன்சர்” அவரை எழுந்திருக்க விடாமல் வலுக்கட்டாயமாக நாற்காலியில் உட்காரச் செய்து தோளை பிடித்து அழுத்தியிருக்கிறார்.
“வீணா டென்ஷன் ஆனா உன்னோட உடலுக்குத்தான் நல்லது இல்ல” என்று கடன் வசூலிக்கும் மாஃபியா தலைவரை போல ‘அறிவுரை’ கூறியிருக்கிறார் மனோதத்துவ ஆலோசகர். அதாவது, டென்சன் ஆகாம கையெழுத்து போட்டாதான் உருப்படியா வெளிய போகலாம் என்பது அதில் அடங்கியிருக்கும் மிரட்டல்.
வேறு வழியில்லாமல் கையெழுத்து போட்ட பிறகு ஆனந்தை கையோடு அழைத்துக் கொண்டு போய் கட்டிடத்துக்கு வெளியில் கார் பார்க்கிங்-கில் விட்டு இடத்தை காலி செய்யும்படி அறிவுறுத்தியிருக்கின்றனர்.
ஹைதராபாதிலும், சென்னையிலும், பெங்களூருவிலும் 993 ஊழியர்கள் இப்படி வேலையை விட்டு துரத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 500 பேர் சென்னையிலும், 200 பேர் ஹைதராபாதிலும் பணி புரிபவர்கள். சென்னை வளாகத்தில் எச்.ஆர், பவுன்சர், மனோதத்துவ ஆலோசகர் அடங்கிய 50 குழுக்கள் இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
“பவுன்சர்கள்” என்பவர்கள் நைட் கிளப் அல்லது மதுபான விடுதியில் அல்லது விபச்சார விடுதிகளில் நிர்வாகத்தின் விதிகளுக்கு மாறாக நடந்து கொள்ளும் அல்லது நிர்வாகத்துக்கு ஒப்புதல் இல்லாத வாடிக்கையாளர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியில் எறிவதற்காக அமர்த்தப்பட்டிருக்கும் குண்டர்கள். முதலாளிகளை பொறுத்தவரை மதுபான விடுதியாக இருந்தாலும் சரி, தொழிற்சாலையாக இருந்தாலும் சரி, ஐ.டி நிறுவனமாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றுமே மூலதனம் போட்டு லாபம் சம்பாதிப்பதற்கான இடங்கள். அதற்கு இடையூறாக வரும் எதையும் குண்டு கட்டாக தூக்கி எறிவதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை.
தமது மிரட்டலுக்கும், ஏமாற்று வார்த்தைகளுக்கும் மயங்கி எந்த எதிர்ப்பும் காட்டாமல் சுரண்டலுக்கு தொழிலாளர்கள் அடிபணிவது வரை முதலாளிகளின் உண்மை முகம் தெரிவதில்லை. தமது லாப இலக்கை எட்டுவதற்காக தொழிலாளர்களை சுரண்டுவதற்கும், வேலையை விட்டு தூக்கி எறிவதற்கும் தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது என்று தெரிந்தவுடன் முதலாளிகள் தமது உண்மை முகத்தை காட்டி விடுகின்றனர்.
குறிப்பாக தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்து தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் துணியும் போது அவர்களது குரல்வளையை நெரிக்கத் துவங்குகின்றனர்.
தொழிலாளர்களை பவுன்சர்கள் மூலம் அடக்குவது என்பது இந்தியத் தொழில்துறையில் முதன்முறையாக நடக்கவில்லை. டெல்லி மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் 2012 -ம் ஆண்டில் நடந்த வன்முறையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
நிர்வாகத்தின் கைக்கூலி சங்கத்துக்கு மாற்றாக தொழிலாளர்களை உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கத்தை அமைப்பதற்காக தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக மாருதி நிர்வாகம் தனது பணபலத்தையும், நிர்வாக அமைப்பையும், செக்யூரிட்டி என்ற பெயரில் கூலிப்படைகளையும், கூடவே போலீசையும் களத்தில் இறக்கியது.
பெயரளவுக்கு ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து அதில் வன்முறையை ஏவி விட்டது, நிர்வாகம். இந்த வன்முறையின் போது எச்.ஆர் பொது மேலாளர் அவனிஷ்குமார் தேவ் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். 148 தொழிலாளர்கள் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 117 பேர் விடுதலை செய்யப்பட்டனர். சங்க நிர்வாகிகள் 13 பேருக்கு ஆயுள் தண்டனையும், 18 பேருக்கு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை வேரோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் மாருதி நிர்வாகத் தெளிவாக இருந்தது. அரியானா மாநில அரசும், நீதிமன்றமும் மாருதி நிர்வாகத்தின் கூட்டாளியாகவே செயல்பட்டன.
இதே போல, கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிர்வாகம் 2009 -ம் ஆண்டு செப்டம்பர் 21 -ம் தேதி அடக்குமுறைக்கு எதிராக போராடிய 42 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய உணர்வுபூர்வமான போராட்டத்தை ஒடுக்குவதற்கு நிர்வாகம் கூலிப்படையை ஏவியதில் எச்.ஆர் அதிகாரி ராய் ஜார்ஜ் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து போனார்.
இந்த வழக்கிலும் 27 தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தொழிற்சங்க முன்னோடிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நிர்வாகத்மான் கொலை வழக்கை சோடித்தது என்பது அம்பலமான போதிலும், விடுவிக்கப்பட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு போயிருக்கிறது, நிர்வாகம்.
தொழிற்சங்கம் என்று வந்தாலே முதலாளிகளுக்கும் அவர்களது நீதிமன்றங்களுக்கும் கொலை வெறி ஏற்படுகிறது. இந்த கொலைவெறி முதலாளித்துவத்தின் இரத்தத்திலேயே இருக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் பல ஆண்டுகளாக சட்ட ரீதியாகவும், குண்டர் படையை பயன்படுத்தியும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதை தடுத்து வந்தது. 1937 டிசம்பர் மாதம் ஃபோர்ட் வாக்னர் சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொண்டதாக கண்டறியப்பட்டு நிர்வாகம் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் தலையிடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
அமெரிக்காவின் பொருளாதார பெருமந்தத்தின் உச்சத்தில் டெட்ராய்ட் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்தனர். அதே நேரம் ஹென்ரி ஃபோர்ட் உலகின் முதல் பணக்காரராக இருந்தார். 1932 -ம் ஆண்டு மார்ச் 7 -ம் தேதி டெட்ராய்ட் வேலை இல்லாதோர் சங்கம் 5,000 தொழிலாளர்களையும், இளைஞர்களையும் பேரணியாக நடத்திச் சென்று ஃபோர்ட் தொழிற்சாலைக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பேரணியை போலீசும், ஃபோர்டின் தனியார் கூலிப் படைகளும் தாக்கியதில். 5 தொழிலாளர்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர்.
தொழிற்சங்கத்தை அனுமதிக்காமல் இருக்க வன்முறையை பயன்படுத்த தயங்கப் போவதில்லை என்பதில் ஹென்ரி ஃபோர்ட் தெளிவாக இருந்தார். 1937 மே மாதம் 26 -ம் தேதி யுனைட்டட் ஆட்டோ வொர்க்கர் தலைவர் வால்டர் ராவ்தரும் பிற தொழிற்சங்க நிர்வாகிகளும் கூலிப்படைகளால் தாக்கப்பட்டனர்.
இத்தகைய பாரம்பரியத்தில் வந்தவர்கள்தான் மாருதிகளும், பிரிக்கால்களும், வெரிசான்களும். ஐ.டி சேவை அயலகப் பணிக்கு அமெரிக்க / ஐரோப்பிய சம்பளத்தை விட குறைந்த சம்பளத்தில் இந்திய ஊழியர்களை அமர்த்தி லாபம் சம்பாதித்தன இந்திய ஐ.டி சேவை நிறுவனங்கள். இப்போது அந்த சாதகம் குறையத் தொடங்கி தமது லாபம் பாதிக்கப்படும் போது ஊழியர்களை தூக்கி எறிய முயற்சிக்கின்றன. அதை எதிர்த்து தமது சட்டப்படியான உரிமைகளுக்காக தொழிலாளர்கள் போராட ஆரம்பிக்கும் போது முதலாளிகள் “பவுன்சர்களை” களம் இறக்குகின்றனர்.
நேற்று ஃபோர்ட், மாருதி, பிரிக்கால்; இன்று வெரிசான் என்று அடுத்தடுத்து தொடரும் முதலாளிகளின் பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிக்க ஐ.டி ஊழியர்கள் தொழிலாளி வர்க்கமாக இணைந்து முதலாளித்துவ சதியை முறியடிக்க அணிதிரள வேண்டும்.
சென்னை மாநகரத்தில் 2012 -ம் ஆண்டு 5 பேர் கொண்ட வடநாட்டு கும்பல் இரண்டு வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்துச் சென்றது. முதலாவதாக நான்கு பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் ஜனவரி 23 அன்று பெருங்குடியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளையில் 19 லட்சம் ரூபாயை துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்தது. சென்னை மாநகர போலீசார் இந்தக்
கொள்ளைக் கும்பலை விரைவாக பிடிக்க 30 தனிப்படைகளை அமைத்தனர்.
மீண்டும் பிப்ரவரி 20 அன்று கீழ்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நான்கு பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் 14 லட்சம் ரூபாயைக் கொள்ளை அடித்தது. அதைத் தொடர்ந்து இந்தக் கும்பல் வேளச்சேரியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சென்னை போலீசார் பிப்ரவரி 23 அன்று அவர்கள் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்து என்கவுண்டர் நடத்தி 5 நபர்களை சுட்டுக் கொன்றனர். வங்கிக் கொள்ளையர்களை உயிரோடு கைது செய்யாமல் போலீஸ் முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்து விட்டது எனவும், துப்பாக்கிச் சண்டை என்பது போலீசார் நடத்திய நாடகம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தினர். என்றாலும் 33 லட்சம் ரூபாய் வங்கிப் பணத்தை கொள்ளை அடித்த அந்தக் கும்பலை நமது போலீசார் விரைவாக பிடித்து 14 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டதை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
*****
சமீபத்தில் பஞ்சாப் தேசிய வங்கியில் நீரவ் மோடி என்பவர் தலைமையிலான கும்பல் 11,500 கோடி ரூபாய் ஏமாற்றி விட்ட விபரங்கள் சூடான செய்தியாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிதி மோசடியை விஜய் மல்லையாவுடன் ஒப்பிட்டும் பெரும் பணக்காரர்கள் வங்கிகளை ஏமாற்றுவதாகவும் பல ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது. நமது வினவு தளத்தில் இந்த மோசடி எப்படி நடந்தது என்று விரிவான கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
மோசடிகள் பலவிதம். மல்லையா, ரோட்டோமேக் (பான்பராக்) கோத்தாரி போன்ற முதலாளிகள் வங்கிகளுக்கு ஏற்படுத்திய இழப்புக்கும், நீரவ் மோடி கும்பல் செய்த மோசடிக்கும் தன்மையில் வேறுபாடுகள் உள்ளன. ஒரு நிதி நிறுவனத்திற்கோ, வங்கிக்கோ நிதி அபாயம் என்பது 3 வழிகளில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த மூன்று முறைகளை ஆராய்ந்தால் இந்த வேறுபாடு உங்களுக்கு தெளிவாக புரியும்.
சந்தை அபாயம்
நிதி நிறுவனங்களில் முதலாவதும் பிரதானதுமான அபாயம் சந்தை அபாயம் (market risk) என்பதாகும். நாம் பல விளம்பரங்களில் இந்த வாசகங்களை பார்த்து இருப்போம் “உங்களுடைய முதலீடானது சந்தை அபாயத்திற்கு உட்படுத்தப்பட்டது” என்பது சந்தை அபாயம் பற்றியது ஆகும்.
எடுத்துக் காட்டாக நாட்டில் நிலவும் பணமதிப்பு மாறுவதால் ரிசர்வ் வங்கி வட்டி வீதங்களை மாற்றலாம்; அதன் மூலம் வங்கி/நிதி நிறுவனம் முதலீடு செய்த அரசு கடன் பத்திரங்களின் விலை குறைந்து இழப்பு ஏற்படலாம். வங்கி பங்குச் சந்தையில் அல்லது ஊக வணிகத்தில் முதலீடு செய்திருந்தால் பங்குகள் அல்லது ஊக வணிக பத்திரங்களின் மதிப்பு ஏறி இறங்கலாம். இவற்றை சந்தை அபாயம் (market risk) என்று குறிப்பிடுகிறோம்.
இரண்டாவது, கடன் கட்டும் அபாயம் (credit risk) என்பதாகும். கடன் வாங்கியவர் கடனை கட்ட முடியாமல் போகும் அபாயம். உதாரணமாக, வீட்டுக் கடன் வாங்கிய ஐ.டி ஊழியருக்கு வேலை போய் விட்டால் கடன் கட்ட முடியாது. கல்விக் கடன் வாங்கிய மாணவருக்கு வேலை கிடைக்கா விட்டால் கடன் கட்ட முடியாது. வணிகக் கடன் வாங்கிய முதலாளியின் தொழில் நொடித்து போய் விட்டால் கடன் கட்ட முடியாது.
மல்லையா போன்ற முதலாளிகள் வங்கிக் கடனிற்கான ஈடாக தமது சொத்துக்களையோ, பங்குகளையோ (மல்லையாவின் விஷயத்தில் கிங் ஃபிஷர் பிராண்டையும் சொத்தாக காட்டியிருக்கிறார்) வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெறுகிறார்கள். தொழில் நஷ்டம் காரணமாகவோ, ஊதாரித்தனமாக செலவழித்தது காரணமாகவோ தொழில் நொடித்து போனால் வங்கிக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பு ஏற்படும் போது வங்கி தன்னிடம் ஈடாக வைக்கப்பட்ட சொத்தினை விற்று தனது கடன் பணத்தை மீட்டுக் கொள்ளலாம். இந்த முறையில் இந்திய தவங்கிகளுக்கு 9 லட்சம் கோடி வரை வாராக்கடன் உள்ளது.
சந்தை அபாயம், கடன் கட்டுவதில் அபாயம் என்ற இந்த இரண்டு அபாயங்களையும் தனிப்பட்ட வங்கியின் தவறுகள் என்று நேரடியாக குற்றம் கூற முடியாது. ஒட்டுமொத்த வங்கித் துறையின் செயல்பாடே சந்தை அபாயத்தையும், கடன் கட்டும் திறன் அபாயத்தையும் உள்ளடக்கி உள்ளது. எனவே, எவ்வளவுதான் வங்கி எச்சரிக்கையாக இருந்தாலும், வங்கி செயல்பாட்டு முறையாலும் முதலாளித்துவ முறையின் உள்ளார்ந்த அராஜகத் தன்மையாலும் வங்கியால் இந்த இரண்டு அபாயத்தில் இருந்தும் தப்பவே முடியாது.
ஆனால் நீரவ் மோடி ஏற்படுத்தி இருக்கின்ற நட்டமானது மேற்கூறிய இரண்டு அபாயங்களால் ஏற்பட்டது இல்லை. ஒரு வங்கியூ நடத்தும் போது அதன் செயல்பாட்டு முறைகளில் இருக்கும்
ஓட்டைகளினாலோ, பாதுகாப்பு குறைபாடுகளாலோ அபாயங்கள் ஏற்படலாம். அந்த அபாயம் செயல்பாட்டு அபாயம் (operational risk) என்று அழைக்கப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் ஒரு செயல்பாட்டு அபாயம் ஆகும். வங்கியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த சில ஓட்டைகளை கண்டுபிடித்து கொள்ளைக் கும்பல் கைவரிசையை காட்டியது. அதே போல நீரவ் மோடி விவகாரத்தில் சில வங்கி ஊழியர்கள் வங்கி நடைமுறைகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நீரவ் மோடி கும்பல் பஞ்சாப் தேசிய வங்கியின் பொறுப்பில் வெளிநாட்டில் கடன் பெறுவதற்கு வசதி செய்து கொடுத்துள்ளனர். அதாவது நீரவ் மோடியின் கடனிற்கு பஞ்சாப் நேசனல் வங்கி உத்திரவாதம் (surety) தருவதற்கு இவர்கள் உதவியுள்ளனர். இதனால் வங்கிக்கும், நாட்டிற்கும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த நட்டம் நீரவ் மோடியால் மட்டும் வந்தது அல்ல. வங்கிக் கொள்ளையர்களை போல வங்கியின் நடைமுறையில் இருந்த ஓட்டையை பயன்படுத்தி கன்னமிட்டு நீரவ் மோடி கும்பல் திருடியிருக்கிறது. அதற்கு உள்ளிருந்து உளவு சொல்பவர்களாக வங்கி ஊழியர்கள் சிலர் செயல்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளை பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்திருக்கிறது. வங்கி ஊழியர்கள் தமக்கு நீரவ் மோடி கும்பல் கொடுத்த கையூட்டுக்காக இதைச் செய்திருக்கின்றனர்.
இந்த மூன்று வகை அபாயங்களை புரிந்து கொள்ள அமெரிக்காவில் ஏற்பட்ட சப்-பிரைம் வீட்டுக் கடன் நெருக்கடியை எடுத்துக் கொள்ளலாம். அங்கு கடன் கட்டும் அளவு போதுமான வருமானம் இல்லாத தரப்பினருக்கு (இதைத்தான் சப் பிரைம் – அதாவது முதன்மையான வாடிக்கையாளர் அல்லாத – என்று குறிப்பிட்டனர்) வங்கிகள் வீட்டுக் கடன் வழங்கின. ரியல் எஸ்டேட் துறையில்
விலைகள் ஏறிக் கொண்டே போவதால், வீட்டை வாங்கியவர்கள் கடன் தவணை கட்டமுடியாவிட்டாலும், ஓரிரு ஆண்டுகளுக்கு பிறகு சந்தையில் அதிக விலைக்கு வீட்டை விற்று கடனை அடைத்து விடலாம் என்று ஆசை காட்டி இந்தக் கடன்கள் வழங்கப்பட்டன. அதாவது, வங்கிகள் வாங்குபவரின் கடனை திரும்பிக் கட்டும் திறனை (வருமானத்தை) நம்பியிருக்காமல் வீட்டின் சந்தை மதிப்பை நம்பி கடன் கொடுத்தனர்.
2007-ம் ஆண்டு வீட்டு விலை குமிழி வெடித்து அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதனால் வீடுகளின் விலை பெருமளவு குறைந்தது.
வீட்டுக் கடனாக வங்கியிடம் இருந்து 50 லட்சம் பெற்றிருக்கும் ஒரு சப்-பிரைம் கடனாளியை எடுத்துக் கொள்வோம். விலை வீழ்ச்சியால் அந்த வீட்டின் மதிப்பு 30 லட்சம் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது மக்கள் (சப் பிரைம் கடன் கொடுக்கப்பட்டவர்கள்) 50 லட்சம் கடனை கட்டுவதற்கு வழியில்லாமல் கடன் கட்டுவதை நிறுத்தி வீட்டு வீடுகளை விட்டு
வெளியேறி விட்டனர். வங்கிகள் கடனுக்கு ஈடாக வீடுகளை கைப்பற்றினாலும் வீட்டை விற்று கடன் தொகையை திரும்பப் பெற முடியவில்லை. அதனால் அவை மிகப்பெரிய இழப்பினைச் சந்தித்தன.
இதில் வாடிக்கையாளர் மீதான கடன் கட்டுவதில் அபாயம் என்ற போர்வையில் சந்தை அபாயத்தை வைத்து வங்கிகள் சூதாடியிருந்தன. இத்தகைய “சப்-பிரைம்” கடன் வழங்கும் செயல்பாட்டை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வங்கிகளின் செயல்பாட்டு அபாயமும் இதில் அடங்கியிருந்தது.
பஞ்சாப் தேசிய வங்கிக்கு செயல்பாட்டு அபாயத்தினால் நீரவ் மோடி கும்பல் ஏற்படுத்தியுள்ள நட்டம் நமது நாடு வங்கிச் சேவையில் எவ்வளவு பின் தங்கி உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது போன்று செயல்பாட்டு அபாயத்தினால் உலகில் எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய ஊழல் நடந்தது கிடையாது. மோடி அரசு digital money என்றும் வங்கிச் சேவையை எல்லா விஷயங்களுக்கும்
பயன்படுத்தப் போவதாக கூறினாலும், நமது வங்கிகள் முதலாளிகளின் பல்வேறு வகைப்பட்ட ஊழல்களால் எவ்வளவு புரையோடி உள்ளன என்பதை நீரவ் மோடி கும்பல் அம்பலப்படுத்தியிருக்கிறது.
அதாவது மோடி அரசின் digital முகத்தை மோசமாக கிழித்திருக்கிறது நீரவ் மோடி – சோக்சி கும்பல். ஆனால், மோடி அரசும் பா.ஜ.க-வினரும் இந்த ஊழலுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பழி போடும் அரசியலை செய்கின்றனர். ஆனால், இத்தகைய ஜேப்படி நபருடன்தான் டாவோசில் நரேந்திர மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார், இன்னொரு ஜேப்படி பேர்வழியை சோக்சி பாய் என்று நெருக்கமாக குறிப்பிட்டார்.
நீரவ் மோடி பஞ்சாப் நேசனல் வங்கிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது நிறுவனத்தின் நற்பெயரை கெடுத்து விட்டதாக குறை கூறி இருக்கிறார். அவர்களின் செயலால் தனது நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சரிந்து விட்டதாகவும், அதனால்தான் தன்னால் கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இது ஒரு திருடன் திருட்டுக் கொடுத்தவனை கேலி செய்யும் நடவடிக்கை.
மேலும் இந்தக் குற்றச்சாட்டில் தனது சகோதரருக்கோ, மனைவிக்கோ, மாமாவிற்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று குறிப்பிடுகிறார். அவருடைய சகோதரர் சோக்சியோ இந்தக் கடனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் ஊழியர்கள் வேறு வேலையை
தேடிக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது, நீரவ் மோடி கும்பல் திருடிய பணத்தை வெவ்வேறு பெயர்களில் மாற்றி வெளிநாட்டு சொத்துக்களாக நீரவ் மோடி மனைவி பெயரிலும், அவரது தம்பி பெயரிலும், மாமா பெயரிலும் பதுக்கி விட்டனர்.
எனவே சோக்சியும் மோடியும் கூறுவது முற்றிலும் உண்மை. சோக்சி பெல்ஜியம் நாட்டின் குடியுரிமை பெற்றவர். மோடியின் மனைவியோ அமெரிக்க குடியுரிமை பெற்றவர். எனவே, மோசடி நடந்திருக்கிறது என்று நிரூபித்தாலும் சட்டரீதியாக இந்திய அரசாங்கத்தால் இந்தக் கொள்ளையின் எந்த சொத்துக்களையும் கைப்பற்றி கொண்டு வர முடியாது.
33 லட்சம் கொள்ளையில் ஈடுபட்ட வங்கிக் கொள்ளையர்களை சென்னை போலீசார் சுட்டுக் கொன்று பணத்தை கைப்பற்றியதோடு, வங்கிகளுக்கான எதிர்கால செயல்பாட்டு அபாயத்தை (operational risk) குறைத்துள்ளனர். மோடி அரசு நீரவ் மோடி கும்பலை சுற்றி வளைத்து இந்த 11,500 கோடி ரூபாயை எப்படி கைப்பற்றும், அவர்களை என்கவுண்டர் செய்வதன் மூலம் வங்கிகளுக்கான எதிர்கால அபாயத்தை எப்படி குறைக்கும் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
கேரளா, கர்நாடக, மேற்கு வங்க மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் மொழிகளை கட்டாய பயிற்று மொழியாக அறிவித்திருக்கிறது அந்த மாநில அரசுகள். பச்சைத் தமிழர்கள், மறத் தமிழர்கள் என்று பேசக் கூடிய தமிழகத்தில் தமிழுக்கு இடமில்லை என்பது மிகப்பெரிய அவமானம்.
ஐ.ஐ.டி-யில் 26-2-2018 அன்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்தாய் வாழ்த்து பாடப்படவில்லை, அதற்கு பதிலாக கணபதி வந்தனம் என்ற சமஸ்கிருத பாடலைப்பாடி நிகழ்ச்சியை தொடங்கியிருக்கிறார்கள். “தமிழை வளர்த்தால் ஆண்டாள்” “ஆண்டாள் தேவதாசியாக இருக்கலாம்” என்று ஒரு ஆராய்ச்சி நூலின் மேற்கோளை வைரமுத்து கூறினார். உடனே ‘எங்க ஆண்டாள வேசின்னு அவமதித்துவிட்டார்’ என கொதித்தெழுந்தார்கள் பார்ப்பனர்கள்.
ஆரிய பார்ப்பனக் கூட்டம், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கூட்டம் தமிழகத்தில் காலுன்றுவதற்காக இந்தியை, சமஸ்கிருதத்தை திணிக்கிறவர்கள் இப்படி மேலெழுந்து பேசுகிறார்கள்.
ஆனால், தாய் மொழி, முதுமொழி, செம்மொழியாகவும் இருக்கக் கூடியது தமிழ் மொழி. அந்த தமிழ் மொழிக்கு தமிழ்நாட்டில் பயிற்று மொழியாகவோ, அலுவல் மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ இருக்க இடமில்லையென்றால் இதை நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது. காவிரியில் கூட தற்போது உரிமையை இழந்து நிற்கிறோம். எனவே தமிழர்கள் தன்னுரிமைகளுக்காக திரண்டெழ வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு இயக்கமாக தொடங்கி வைக்கிறோம்.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு!
அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு!
அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!
தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு!
ஆகிய முழக்கங்களை முன்வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 27.2.2018 அன்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை பு.மா.இ.மு வின் சென்னை கிளை செயலாளர் தோழர் சாரதி தலைமை தாங்கினார். பு.மா.இ.மு -வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், பேராசிரியர் சிவக்குமார், வாலாசா வல்லவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க பாடல்கள் பாடப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை, தொடர்புக்கு : 94451 12675 மின்னஞ்சல் : rsyfchennai@gmail.com, facebook : rsyftn
*****
“பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழை பயிற்று மொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்றம் மொழியாக தமிழை நிலைநாட்டு!” – என்ற தலைப்பில் விருத்தாசலம் பாலக்கரையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் உட்பட 70-வதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்.
*****
விழுப்புரம் பகுதி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக “பள்ளி ,கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு! தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு !” – என்ற தலைப்பில் 27.02.2018 அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்பாட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விழுப்புரம் அமைப்புக்குழு உறுப்பினர். தோழர் மனோகரன் தலைமை வகித்தார். அவரது உரையில் “இன்றைக்கு மாணவர்கள் நாம் படித்துவிட்டோம், வேலைக்கு போய்விட்டோம் என இருந்துவிட்டால் வரும் தலைமுறையின் வாழ்க்கை எப்படி சுமுகமாக இருக்கும். கொஞ்சம் யோசிங்க, மோடி அரசு நீட் தேர்வை திணிப்பதாகட்டும், காவேரி தீர்ப்பு, விவசாயத்தை அழிக்க ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், சாகர்மாலா திட்டம் போன்ற பேரழிவு திட்டத்தை திணிப்பது. கல்வி நிலையங்களில் சமஸ்கிருத திணிப்பு என இருக்க நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்.
கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் தனது தாய்மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கி இருக்கிறது, தமிழகத்தில் நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என்று முடித்தார்.
அவரைத் தொடர்ந்து விழுப்புரம் – கானை வட்டார மக்கள் அதிகாரம் அமைப்பாளர், தோழர் இளவேந்தன் பேசுகையில்; “மக்கள் பிரச்னைக்கு நாம் போராடினா அரசும், போலீசும் ஒடுக்குவது மட்டும் இல்லாமல் ஜனநாயகபூர்வமாக ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க கூட அனுமதி மறுக்கும் அரசை நாம் நம்பலாமா. ஓநாய் கிட்ட போய் ஆடு நீதி கேட்டால் என்ன நடக்கும், ஆட்டையே சாகடிக்கும் அது போலதான் தமிழக எடப்பாடி அரசு மத்திய அரசிடம் நீதி கேட்குது. ஆகவே இந்த அரசமைப்பு மக்களுக்கு எதிராக போய்விட்டது. இதற்க்கு தீர்வு மக்கள் அதிகாரமாக மக்கள் மாறுவதுதான் தீர்வு” என்று பேசி முடித்தார்.
அதன் பின் தோழர் திலீபன், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி விழுப்புரம் அமைப்பு குழு உறுப்பினர் பேசுகையில்; “இந்த ஒட்டுமொத்த அரசும் மக்களை நாயினும் கீழாய் நடத்துகிறது. மாணவர்கள், இளைஞர்கள் இதை எதிர்த்து ஒரு புரட்சிகர அமைப்பாக ஓன்று சேர்ந்து போராடவேண்டும்” என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து தோழர் இரவிகார்த்திக், மருதம் ஒருங்கிணைப்பாளர். பேசுகையில்; “ஒரு மொழிதான் ஒரு இனத்தின் அடயாளம் ஒரு மொழியின் மூலமாகதான் நாம் தகவலையும், நம்மை சுற்றி நடக்கும் வரலாற்று நிகழ்வுகளையும் பேச முடியும். அப்பொழுது அவர்கள் கலாச்சாரம், பண்பாடு மேம்படும். ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழியும், கலாச்சாரம் அழியும் அதை நோக்கிதான் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறது.
சமீபத்திய உதாரணம் ஆண்டாள் பிரச்சனையே தமிழத்தில் கிளப்பி இதன் மூலம் தனது செல்வாக்கை உயர்த்த முயற்சி எடுத்து. இந்த ஆபாயத்தை உணர்த்து நாம் போராட வேண்டும். இன்றைக்கு ஆர்ப்பாட்டத்தில் இவ்வளவு மாணவர்கள், இளைஞர்கள், பார்க்கும் பொழுது எனக்கு சந்தோசமாக இருக்கு” என்று முடித்தார்.
பின்னர் தோழர் அம்பேத்கர் , விவசாயிகள் விடுதலை முன்னணி, விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் பேசுகையில்; “இந்த RSS – BJP கும்பலுடைய தமிழ் விரோதம் என்பது நீண்ட நாள் பகை, குறிப்பாக இந்தி எதிர்ப்பில் தமிழகத்திடம் அடிவாங்கிய இந்த பார்ப்பன நச்சு பாம்பை அன்றைக்கே காலால் நசுக்கி கொன்று இருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு கொல்லாமல் விட்டதன், விளைவாக அடிவாங்கிய பாம்பு மீண்டும் படமெடுத்தது வருகிறது.
காவேரி தீர்ப்பில் மட்டும் தமிழகத்தை வஞ்சிக்க வில்லை, தமிழ் தாய் வாழ்த்துக்கு அவமரியாதை, சென்னை IIT- யில் நடந்த நிகழ்சிகளில் தமிழ் அவமதிப்பு, விவசாய நிலங்களை நாசமாக்கும் அழிவு திட்டம் தமிழகத்தில் திணிப்பு, ஆண்டாளை ஒரு புனிதராக சித்தரித்து நடந்த போராட்டத்தில் பார்பன கும்பலை தாண்டி யாரும் பங்கேற்க வில்லை, இருந்தாலும் அதைவைத்து இந்துமதவெறியை கிளப்பி இந்துகளை திரட்ட முயற்சி செய்தது. இதை நாம் அனுமதிக்கலாமா இதை முறியடிக்க ஒரு புரட்சிகர அமைப்பாக திரளவேண்டும்” என்று முடித்தார்.
இறுதியாக தோழர் ஞானவேல், அமைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, பேசுகையில்; “அந்த காலத்தில் போர் நடக்கும் ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போர்தொடுக்கும் அபொழுது தனது நாட்டை காக்கவும், தனது பண்பாடு கலாச்சாரத்தை காக்கவும், வளங்களை காக்கவும் எதிரி நாட்டு படையோடு போரிடுவது, மற்றொன்று அவனிடம் அடிபணிந்து அவன் கொடுக்கும் பதவிக்கும், பொருளுக்கும் விலை போவது.
இன்றைக்கு தமிழகத்தின் மீது R.S.S , BJP கும்பல் ஒரு போரை தொடுத்து இருக்கிறது. இந்த போரில் நாம் வெற்றி பெறவில்லை என்றால், நமது பண்பாடு, கலாச்சாரம், மொழி, இயற்கை வளம் எல்லாம் அழியும்! அபொழுது நாம் என்ன செய்ய போகிறோம். மாணவர்கள், இளைஞர்கள் ஒரு புரட்சிகர அமைப்பாக ஓன்று திரளவேண்டும்” என பேசி முடித்தார்.
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.
“காவிரித் தீர்ப்பு! டெல்டாவை பாலைவனமாக்கும் டெல்லியின் சூழ்ச்சி !” என்கின்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி தபால் அலுவலகம் அருகில் 23-02-2018 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் விவசாய சங்க தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜனநாயக சக்திகள் கலந்துக்கொன்டு உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தினை தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக, வழக்கு வாய்தா என்று வந்துக் கொண்டு இருக்கிறது, ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் வந்துபாடு இல்லை, நீண்ட நெடிய காலமாக தீர்க்காமல் இந்த அரசு துருப்பிடித்துக்கொண்டு இருக்கிறது.
தமிழக மக்களின் வாழ்வில் ஜீவாதாரமாக இருக்கும் காவிரி பிரச்சனையை சில பேரால் மட்டும் தீர்க்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து ஜல்லிகட்டு போராட்டம் போல போராடுவது தான் தீர்வு” என்றார்.
அடுத்ததாக தமிழக விவசாய சங்க மாநில தலைவர் எஸ்.ஏ .சின்னசாமி பேசுகையில் உச்சநீதி மன்ற தீர்ப்பு 192 டிஎம்சி தண்ணீரை 177.25 டிஎம்சியாக குறைத்துள்ளது. இதனால் 88 ஆயிரம் ஹெக்டர் பாசனம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் உணவு களஞ்சியத்தை பாலைவனமாக்கி, விவசாயிகளை வெளியேற்றி, அங்குள்ள கனிமவளங்களை கொள்ளையடிக்கும் நோக்கம் கொண்டுள்ள கார்ப்பரேட்டுகளின் நலன் அடங்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது ‘குரங்கு ஆப்பத்தை பங்கிட்டுது போல’ ஒரு தூரோகத்தனமான தீர்ப்பாக உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியும் மத்திய அரசும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அன்றைக்கு 2013 மன்மோகன் சிங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் போராட்டமே இவர்களை அடிபணிய வைக்க முடியும்.
அடுத்தது விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் அர்ச்சுனன் பேசுகையில் ”வெள்ளகாரன் ஆட்சியில் தான் மேட்டூர் அணையும், கர்நாடகவில் கிருஷ்ணசாகர் அணையும் காவிரி பாசனத்துக்கு கட்டப்பட்டது”. 1990-யில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று மனித சங்கிலி போராட்டம் நடத்தியதன் விளைவாக நடுவர் மன்ற தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த தீர்ப்பை காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கட்டுபடமாட்டோம் என்று அடாவடித்தனம் செய்கிறது.
இதன் விளைவாக டெல்டா பகுதியில் 8 இலட்சம் விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து, நூறு நாள் வேலையும் இல்லாமல் மொத்த பொருளாதாரத்தையும் அடித்து நொறுக்கியதன் விளைவாக நகரங்களுக்கு தினக்கூலிகளாக குடிபெயர்ந்து வருகின்றன. இப்படி மக்கள் பிரச்சனை முன்னுக்கு வரும் போது எல்லாம் ராமனை தூக்குவது, மதத்தை தூக்குவது, திசை திருப்புவது தான் பாஜக-வின் திட்டம். எனவே ஒருங்கிணைந்த போராட்டம்தான் தீர்வு என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குமரேசன் பேசுகையில், ”காவிரி தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டும்தான் பொருந்தும் ஏனெனில் கர்நாடகாவில் சாதி மதம் பார்க்காமல் ஒன்றிணைகின்றனர். ஆனால் தமிழகத்தில் அவ்வாறு ஒன்றிணைவது இல்லை. டெல்லியில் நல்ல வழக்கறிஞர்களை வைத்து வாதாடி தண்ணீரை பெற ஆட்சியாளர்கள் கருதுவது இல்லை. ஏனெனில் இவர்கள் ஊழல் பேர்வழிகளாக இருக்கின்றனர். இதில் இருந்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் திருந்த வேண்டும். இருப்பினும் சாதி மதம் விட்டு மக்கள் அதிகாரம் போல் பொது வெளியில் போராடினால் தான் தீர்வு” என்றார்.
அடுத்து பேசிய புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு பேசுகையில், ”காவிரி தீர்ப்பு மீண்டும் தமிழகத்தின் மீது தாக்குதல். இது தமிழகத்துக்கும், கன்னட மக்களுக்கும் எதிரானது. இவை கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு வந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பின் வாயிலாக விவசாயிகளை சாகடிக்கிறார்கள். நீட்டைகொண்டு வந்து மாணவர்களை சாகடிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் ஒரு கோடி பேருக்கு வேலை என்றார் மோடி, ஆனால் இன்று பக்கோடா விற்க சொல்கிறார் இப்படி சொல்ல ஒரு அரசு தேவையா?
நீதித்துறையும், மத்திய அரசும் தமிழகத்துக்கு எதிரானவையே. மத்தியில் இருக்கும் பாஜக அரசு பக்கோடா விற்க சொல்கிறது. மாநிலத்தில் இருக்கும் அரசு மிக்சர் தின்கிறது. இவர்களுக்கு நம்மை ஆள என்ன அருகதை இருக்கு. இப்படி தன்னுரிமையை இழந்துக்கொண்ட அரசை நம்பி இருந்தால் நமது பிரச்சனைகளை தீர்க்க முடியாது எனவே தன்னூரிமையை நிலைநாட்ட தமிழகமே தீரண்டுவா” என அறைகூவல் விடுத்தார்.
மக்கள் அதிகாரம் பென்னாகரம் பகுதி தோழர் கோபிநாத் பேசுகையில், ” காவிரி தீர்ப்பு வந்ததும் தமிழகத்தை வஞ்சிப்பது எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராடுகிறார்கள். இதனை எப்படி ஒடுக்குவது என்பதையே அரசு செய்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமைய்யா சொல்கிறார் அதனை வேடிக்கை பார்க்கிறது உச்சநீதி மன்றம்.
உச்சநீதி மன்ற தீர்ப்பையும் கர்நாடக அரசு மதித்தது இல்லை. இந்த நீதி மன்றம் நமக்கானது என்று நம்ப முடியுமா ? பிலிகுண்டு பகுதிக்கு தண்ணீர் வருவதற்கு முன்பே பெரிய குழாய்கள் மூலமாக தண்ணீரை எடுக்கின்றன. கர்நாடக விவசாயிகளுக்கு தண்ணீர் என்பது ஒரு பகுதிதான். ‘சோறுடைத்த சோழமண்டலம் டெல்டாவை அழித்தால் நமக்கு எப்படி சோறு வரும்’ வளமிக்க சோமலியாவை முதலாளிகள் கொள்ளையடித்தததை போல டெல்டாவை அழிக்கும் சதிதிட்டம் வைத்திருக்கும் அரசிடம் பிரச்சனையை சொன்னால் தீர்ந்திடுமா? மாற்று மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும். அதுதான் தீர்வு” என்றார்.
இதனை நூற்றுக்கணக்கானோர் கவனித்தனர் காவிரி தீர்ப்பு தமிழகத்துக்கு வஞ்சகம் என்று விளக்கும் வகையிலும், இந்த துரோகத்துக்கு எதிராக போராட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் ஆர்ப்பாட்டம் அமைந்தது.
தகவல் : மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம் – 81485 73417
தமிழக செய்தி ஊடகங்களில் அன்றாடம் பல்வேறு நேர்காணல்கள் மற்றும் விவாதங்களைப் பார்த்திருக்கலாம். வினவு இணையதளத்தின் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி ”ஒண்டிக்கு ஒண்டி வாறியா?”
ஒண்டிக்கு ஒண்டி வாறியா? நிகழ்ச்சியில் இந்த வாரம் திரு வேலன், நமது ’சிறப்பு’ விருந்தினர் எஸ்.வி.எஸ். சேகரை புரட்டியெடுக்கிறார் மன்னிக்கவும் பேட்டியெடுக்கிறார். மோடி அரசின் ஊழல்கள், மோடியின் கல்விச் சான்றிதழ் மோசடி, ஆண்டாள் விவகாரம், என தற்போதைய நீரவ் மோடி மோசடி வரையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் எஸ்.வி.எஸ். சேகர். கண்டு மகிழுங்கள் “பூணூல் ஜூம்லா!”. அனைவருக்கும் பகிருங்கள்!