Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 452

திருச்சி ஆணையர் அமல்ராஜை பணிநீக்கம் செய் ! PRPC பத்திரிக்கை செய்தி !

1

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

நாள்:09.03.2018

பத்திரிக்கை   செய்தி

  • திருச்சியில் இரட்டைக் கொலை செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்!
  • தடியடி நடத்தி ரவுடித்தனம் செய்த திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜை பணிநீக்கம் செய்!

மார்ச் 07,2018 அன்று திருச்சி கணேஷ் ரவுண்டனா பகுதியில் ஹெல்மெட் வசூலில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், உஷா என்ற கர்ப்பிணியை, இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று உதைத்துக் கீழே தள்ளிக் கொலை செய்துள்ளார். உஷாவின் கணவர் ராஜா காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹெல்மெட் தாக்குதல்கள், கொலைகள் தமிழக காவல்துறைக்குப் புதிதல்ல. கடந்த ஜூலை 1, 2015 முதல் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதனால் மிகப்பெறும் பயனடைந்த ஒரே அரசுத்துறை  காவல்துறைதான். டாஸ்மாக் பார், மணல் கொள்ளை எப்படி கீழ்மட்ட ஆளுங்கட்சி ஊழியர்களுக்கு வசூல் வகையைத் திறந்து விட்டதோ, அதேபோல் ஹெல்மெட் உத்தரவு காவல்துறையின் அன்றாட வருமானத்திற்கான வழியானது. மணல் கொள்ளை, சேகர் ரெட்டி டைரி,குட்கா ஊழல் உள்ளிட்ட பல ஊழல்களில் ஆதாரத்துடன் பிடிபட்ட எடப்பாடி-பன்னீர் கூட்டம், மேல்மட்ட காவல்துறை அதிகாரிகள் இதனைத் தெரிந்தே அனுமதித்தனர்.

மக்களின் உயிரை காப்பாற்றத்தான் ஹெல்மெட் கட்டாயம் என்கிறோம் என்கிறது அரசு. உண்மையில் மக்கள் மேல் அக்கறை இருந்தால் டாஸ்மாக்கைத் திறந்து கோடிக்கணக்கான தமிழ்ப் பெண்களின் தாலியை அறுப்பதேன்? உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் மணல் கொள்ளையில் தமிழகத்தையே சூறையாடுவதேன்? அரசு, காவல்துறை, நீதிமன்றத்தின் மக்கள் மீதான அக்கறை என்பது ஏமாற்றே! கொலையை நேரில் பார்த்துப் பதபதைத்துப் போராடிய மக்களை கொடூரமாகத் தடியடி நடத்தி பொய்வழக்குப் போட்ட அயோக்கியக் கூட்டம்தான் திருச்சி காவல்துறை.

சென்ற வாரம் திருச்சி உய்ய கொண்டான் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளர் கோபாலிடம், ரூ.500/- கொடுத்து, அபராதம் ரூ.100/- போக மீதம் கேட்டதற்கு, கேட்டவரை மட்டுமல்ல, உடன் இருந்தவர்கள் அனைவரையும் தாக்கியுள்ளார். இந்த அநீதியைப் பார்த்து சாலை மறியல் செய்த உய்யகொண்டான் பகுதி மக்கள் மீதும் தடியடி நடத்தியுள்ளார் கமிசினர் அமல்ராஜ்.

தேவேந்திரன் என்ற இளைஞரின் கால் முறிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பு, காவல்துறையின் வசூல்வெறியைக் கண்டித்து மார்ச் 6, 2018 அன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

பாஜக ஹெச்.ராஜா  முதல் தொலைக்காட்சிகளில் கருத்து கூறும் முன்னாள் போலீசு அதிகாரிகள் வரையிலானவர்கள் ஹெல்மெட் போடாதது தவறில்லையா என்று மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். விரட்டிய ஆய்வாளர் காமராஜ் ஏன் ஹெல்மெட்  அணியவில்லை என இவர்கள் கேட்கவில்லை? 83 கோடி மக்கள் தினமும் ரூ.20/- வருமானத்தில் வாழும் நாடு, மோடியின் இந்தியா என்பது இந்த ஏ/சி அறைக் கணவான்களுக்குத் தெரியாதா?

பொதுவாக காவல்துறை என்றால் எதுவும் செய்யலாம் என்பதே இன்றைய நிலை. ஜல்லிக்கட்டில் ஆட்டோவுக்குத் தீவைத்து, கல்லெறிந்து கலவரம் செய்து; தடியடி, பொய் வழக்குப் போட்டது முதல் மதுரையில் சென்ற வாரம் வி.கே.குருசாமி குரூப்புக்கு ஆதரவாக, கூலிப்படை போல, எதிர் குரூப் ஆட்களை கட்டி வைத்துச் சுட்டதுவரை அனைத்துக் குற்றங்களையும் செய்துவிட்டு, காவல்துறை உங்கள் நண்பன் என்கிறார்கள். உண்மையில் திருச்சியில் நடந்த இரட்டைக் கொலை, ஆதாயத்திற்காக நிகழ்த்தப்பட்ட கொலை( MURDER FOR GAIN). செயின் அறுப்பில் கழுத்தை அறுத்துக் கொல்வது போன்றதுதான் இச்சம்பவம்.

ரூ.100/- பைன் கட்டாமல் சென்றதற்காக விரட்டி விரட்டித் தாக்கிக் கொலை செய்யும் காவல்துறை,  11,000 கோடி அடித்த நீரவ் மோடியை என்கவுண்டரில் சுடுமா? சேகர் ரெட்டியை எட்டி உதைக்குமா? மக்கள் போராடி விசயம் வெளியே வந்திருக்காவிட்டால் உஷாவின் கணவர் ராஜா கஞ்சா விற்றதாக பொய் வழக்கு போட்டிருப்பார்கள். காமராஜ் கடமை தவறாத காவல் அதிகாரியாக சித்தரிக்கப்பட்டிருப்பார். குற்ற கும்பலாக மாறியுள்ள காவல்துறைக்கு மாற்று என்ன? இனி தங்களைத் தாங்களே எப்படி பாதுகாத்துக் கொள்வது? என்பதை தமிழக மக்கள் சிந்தித்துச் செயல்படவேண்டிய தருணம் இது.

வழக்கறிஞர் சே.வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தொடர்புக்கு:
அலுவலகம்: 150-இ, ஏரிக்கரை சாலை,
அப்போலோ மருத்துவமனை அருகில்,
கே.கே.நகர், மதுரை – 9865348163,  vanchiadv@gmail.com

இளம் சிந்தனையாளர் குழு : அறிவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்.- இன் ஐந்தாம்படை !

3

டெல்லி அதிகாரம் கையில் இருந்தும், காலால் உத்தரவிட்டால் தலையால் நிறைவேற்றும் மானங்கெட்ட எடுபிடியாக தமிழக அரசு நடந்தும், ஊடகங்களை விரும்பியபடியெல்லாம் ஆட வைக்க முடிந்தும், ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் சங்க பரிவாரத்துக்குத் தமிழகத்தில் அமைதி இல்லை. தமிழகத்தின்  சமூக ஊடகங்கள் ஒவ்வொரு பிரச்சினையிலும் பார்ப்பன பாசிஸ்டுகளைத் தெளியவைத்துத் தெளியவைத்து அடிக்கின்றன.

சமூக வலைத்தளங்கள் குறித்து இளம் சிந்தனையாளர் குழு சென்னையில் நடத்திய கருத்தரங்கம்

“சமூக வலைத்தளங்களைப் பொருத்தவரை தமிழ்நாடு தனித்துவமாக இயங்குகிறது. சமூக வலைத்தளங்களைப் போராட்ட அரசியலுக்குப் பயன்படுத்துவதும், அதில்  இடதுசாரி கருத்துக்கள் ஆதிக்கம் பெற்று வருவதும் அதிகரித்திருக்கிறது. அதை நாம் முறியடிக்க வேண்டும்.”

இந்தக் கருத்து, இளம் சிந்தனையாளர் குழு (Young Thinkers Forum)  என்ற அமைப்பின் சார்பில், சமூக வலைத்தளங்கள் குறித்து சென்னையில் கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசப்பட்டதாகும். இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றினார், அ.தி.மு.க. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். போலீஸ் உளவுத்துறை துணை கமிசனர் திருநாவுக்கரசு ,  தந்தி டி.வி.-யில் விவாத நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் அசோகவர்ஷிணி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சுமந்த் சி.ராமன், பானு கோம்ஸ், ஷ்யாம் சேகர்,  பாடகி சின்மயி,  நியூஸ் மினிட் இணைய இதழின் தலைமை ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் ஆகியோர் இக்கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டடத்திற்கு ஸ்பான்சர் செய்த ஸ்வராஜ்யா என்ற தீவிர வலதுசாரி (அதிகாரபூர்வமற்ற ஆர்.எஸ்.எஸ்.) பத்திரிகையின் சார்பில் பேசிய பிரசன்னா விஷ்வநாதன்,  “தமிழகத்தில் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் பொருளாதார கருத்துகள் இடதுசாரி சார்பாக இருப்பது கவலையளிக்கிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான கருத்துகளும், கெயில், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் எதிர்க்கப்படுவதும், ஜல்லிக்கட்டு பிரச்சினையைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கும் சமூக வலைதளங்கள் களமாகப் பயன்படுவதும் கவலையளிக்கிறது” என்று பேசினார்.   கார்ப்பரேட்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முறியடிக்கவும், பா.ஜ.க. அரசுக்கு எதிராக வைக்கப்படும் சகிப்பின்மை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எப்படிச் செயல்படவேண்டும் என்பதும் இக்கருத்தரங்கில் பேசப்பட்ட விசயங்கள்.

இளம் சிந்தனையாளர்கள் –  ஆர்.எஸ்.எஸ். இன் முகவர்கள்!

2016_-இல் இக்குழுவின் தமிழகப் பிரிவின் தொடக்க நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.-இன்  தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ், ஆர்.எஸ்.எஸ். இணை பொது செயலாளர்  தத்தாத்ரேய ஹோஸபலே, பா.ஜ.க.விற்கு நெருக்கமான ராஜ்யசபா எம்.பி. ஸ்வபன்தாஸ் குப்தா, ஸ்வராஜ்யா  பத்திரிகையின் ஆசிரியர் ஜெகன்னாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பதிலிருந்தே இவர்கள் யார் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வமைப்பைத் தொடங்கிவைத்து உரையாற்றிய  ஆர்.எஸ்.எஸ்.-ன் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே,  அறிவுத்துறையில் தங்களுக்கான போர்வீரர்களை உருவாக்க வேண்டுமென்றார்.   ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை ஆதிக்கம் செலுத்த வைப்பது எப்படி என்பதும் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

கருத்தரங்கின்  ஒவ்வொரு அமர்விலும் ஆர்.எஸ்.எஸ். அரசியலை முன்வைத்து ஒருவர் பேசுவது, மற்றவர்கள் பொதுவாகப் பேசுவது என்று இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் வழியே பொதுவான நிகழ்ச்சி போன்ற தோரணையில் இடதுசாரி அரசியலும் போராட்டங்களும் தீங்கானவை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

இளம் சிந்தனையாளர் குழுக்கள் தமிழகத்தில் மட்டும் உருவாக்கப்படவில்லை. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்டு இந்தியா முழுமைக்கும் உருவாக்கப்பட்டுள்ளன.  காஷ்மீரின் இளம் சிந்தனையாளர் குழுவின் கூட்டத்தில் ராம் மாதவ் உடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காஷ்மீரின் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்  கலந்துகொண்டனர். இவர்கள் நடத்தும் கூட்டத்தில்  ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் ஒருவர்,  உள்ளூர் தலைவர், ஒரு பா.ஜ.க. தலைவர், ஜே.என்.யூ. பேராசிரியர் அல்லது ஆய்வு மாணவர் ஒருவர், ஒரு பத்திரிகையாளர், ஒரு பேராசிரியர் ஆகியோர் கலந்து கொள்வதை  ஒரு முறையாக வைத்திருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.-ன் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே

இளம் சிந்தனையாளர் அமைப்பை இந்தியாவின் அனைத்து  மாநிலங்களிலும் ஆரம்பித்து இயக்கி வருவதும், மேற்கண்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதும் இந்தியா பவுண்டேசன் என்கிற ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சிந்தனைக் குழாம்.  இந்த சிந்தனைக் குழாமின் இயக்குநர்களாக  மோடி அரசில்  தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவலின் மகன்   சவுரியா தோவல், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ஆர்.எஸ்.எஸ். தேசிய செயலர் ராம் மாதவ், மத்திய அமைச்சர்கள் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

தீவிர வலதுசாரி அரசியலுக்கு ஆதரவான ஒரு பொதுமேடையை உருவாக்குவது தான் மேற்கண்ட நிகழ்ச்சியின் நோக்கம்.  இதைத்தான் விவேகானந்தா இன்டர்நேசனல் என்ற பெயரில் அவர்கள்  ஏற்கனவே செயல்படுத்தி வருகிறார்கள்.

அன்னா ஹசாரேயின் பின்னால் !

அஜித் தோவல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆவதற்கு முன்பு வரை விவேகானந்தா இன்டர்நேசனல் பவுண்டேசன் என்ற சிந்தனைக் குழாமை நிறுவி, அதன் இயக்குநராக இருந்தவர். இதன் தளகர்த்தர்களில் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியும் ஒருவர். விவேகானந்தா கேந்திரம் என்கிற ஆர்.எஸ்.எஸ். நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது விவேகானந்தா இன்டர்நேசனல்.

2011 -இல் அன்னா ஹசாரேவை முன்னிறுத்தி ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பொது மேடையை அமைத்து, அதன் கீழ் பா.ஜ.க.வுக்குச் சாதகமான அரசியல் அணி சேர்க்கையை வடிவமைத்துச் செயல்படுத்தியது விவேகானந்தா இன்டர்நேசனல். ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைத் தொடங்கும் முன்னர் அவ்வாண்டு ஏப்ரல் மாதமே விவேகானந்தா இனடர்நேசனல் நடத்திய கருப்புப் பணம் தொடர்பான கருத்தரங்கில் குருமூர்த்தி, பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், சுப்ரமணிய சாமி,  கிரண்பேடி, கோவிந்தாச்சார்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

உலகமயமாக்கல் மற்றும் மறுகாலனியாக்க கொள்கைகள், அதன் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் நடத்தும் சுரண்டல், இயற்கை வளச் சூறையாடல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை மறைத்து, அரசியல்வாதிகளின் ஊழல்தான் மக்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முழுமுதற்காரணம் என்ற கருத்தினை உருவாக்குவது  என்பது உலக வங்கியின் திட்டம். இந்த உலக வங்கித் திட்டத்தை உலக வங்கியின் விருது பெற்ற அன்னா ஹசாரேவை முன்நிறுத்தி தன்னுடைய அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது விவேகானந்தா இன்டர்நேஷனல் அமைப்பு.

அன்னா ஹசாரேவை முன்நிறுத்தி அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம், 2014  நாடாளுமன்றத் தேர்தலின் மையப்பிரச்சினையாக ஊழலை மாற்றியது. மோடியைப் பிரதமராக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது.

பல  தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுமேடை என்கிற முகத்துடன் ஆர்.எஸ்.எஸ்.-, பா.ஜ.க. வின் நிகழ்ச்சி நிரலை முன்தள்ளுவது விவேகானந்தா இன்டர்நேசனலின் செயல்தந்திரத்தில் ஒன்று. மோடி அரசு பதவியேற்றதும் அஜித் தோவல் தேசியப் பாதுகாப்பு ஆலோசராக நியமிக்கப்பட்டார். மோடி அரசின் முதன்மைச் செயலாளராக  விவேகானந்தா இன்டர்நேசனல் செயற்குழு உறுப்பினர் நிருபேந்திர மிஸ்ராவும், கூடுதல் முதன்மை செயலாளராக அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் பி.கே.மிஸ்ராவும் நியமிக்கப்பட்டனர். நிதி ஆயோக்கின் உறுப்பினர்களாக சரஸ்வத் மற்றும் பிபேக் தேப்ராய் ஆகியோரும் விவேகானந்தா இன்டர்நேசனல் அமைப்பைச் சேர்ந்தவர்களே.

பாசிசத்துக்கு ஜனநாயக வேடம் !

நேரடியாக ஆர்.எஸ்.எஸ்.-உடன் உறவு இல்லை, கொல்லைப்புறமாக உறவு கொள்ளும் ’நடுநிலை’ அறிவுஜீவிகள்

இளம் சிந்தனையாளர்கள் என்ற பெயரில் ஒரு பொது அடையாளத்துடன் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலை முன்வைப்பது தான் இந்தியா பவுண்டேசனின் நோக்கமும்.  இந்த அமைப்புகள் பார்ப்பன_பாசிச அரசியலுக்கு ஒரு தாராளவாத ஜனநாயகத் தோற்றத்தை உருவாக்க முனைகின்றன. மேலும்,  நேரடியாக ஆர்.எஸ்.எஸ்.-உடன் உறவு வைத்துக்கொண்டால் மக்கள் மத்தியில் அம்பலமாவோம் என்று அஞ்சும் அளும்வர்க்க ‘நடுநிலை’ அறிவுஜீவிகள், அச்சமின்றி  இக்கள்ளக் குழந்தைகள் மூலம் ஆர்.எஸ்.எஸ். தொடர்பைப் பேணிக்கொள்கிறார்கள்.

உ.பி., ராஜஸ்தானைப் போலத் தமிழகத்திலும் பார்ப்பன பாசிசக் கருத்துகளை மையநீரோட்டக் கருத்தாக மாற்ற முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ். அதற்கான முதல்படி, பார்ப்பன பாசிசமும் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு கருத்தே என்ற மனநிலையை அறிவுத்துறையினர் மத்தியில் உருவாக்குவதாகும். இட்லரின் ஆரியவெறியை விவாதத்துக்குரிய ஒரு கருத்தாக எடுத்துக் கொண்டு மேடையமைத்துத் தருவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ததரினன்னா  என்று தொடங்கியவுடனே தமிழகத்தின் சமூக ஊடகவெளியில் காறி உமிழ்ந்து தனிமைப்படுத்தப்படுகிறது பார்ப்பனியம். ஆனால், எங்கே டெபாசிட் போனாலும், விவாதங்களில் பாதிக்குப் பாதி நாற்காலி போட்டுக் கொடுத்து ஆர்.எஸ்.எஸ். கருத்தை மைய நீரோட்டக் கருத்தாக மாற்ற உதவுகின்றன ஊடகங்கள். இந்த வேலைக்கு அறிவுத்துறையினரைத் தயார்படுத்தும் பட்டறைதான் சிந்தனையாளர் குழுவின் கருத்தரங்கம்.

– ரகு

* * *
பெட்டிச் செய்தி : சிந்தனையாளர் தோற்றமும் மாமாப்பயல் வேலையும்

மோடி அரசின் தேசியப் பாதுகாப்புச் செயலர் அஜித் தோவலின் மகன் சுவுரியா தோவல் (இடது) இயக்குநராக உள்ள ஜெமினி பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களான சவூதி மன்னர் குடும்பத்தின் இளவரசர்களுள் ஒருவரான மிஷால் பின் அப்துல்லா (நடுவில்) மற்றும் சையத் அலி அப்பாஸ் (வலது)

இந்தியா பவுண்டேசன் இளம் சிந்தனையாளர் குழுவை மட்டும் இயக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தரகு வேலையும் செய்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது “தி வயர்” இணையதளம்.

சமீபத்தில் இந்தியா பவுண்டேசன்,  இந்திய முதலாளிகளின் சங்கமான FICCI – உடன் இணைந்து நடத்திய “ஸ்மார்ட் பார்டர் மேனேஜ்மென்ட்” என்ற நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் பின்வருமாறு அச்சிடப்பட்டிருந்தது. “இந்நிகழ்ச்சியில் நீங்கள் சந்திக்க வாய்ப்பிருக்கும் நபர்கள்” என்று தலைப்பிட்டு 7 மத்திய அமைச்சகங்கள், போலீஸ், சுங்கதுறை உள்ளிட்டு பல்வேறு அரசு துறைகள் இடம்பெற்றிருந்தன. பலான தரகர்கள் பெண்களின் புகைப்படங்களை வைத்துத் தனது வாடிக்கையாளர்களைக் கவர்வது போல,  அமைச்சர்களின் பெயர்களைக் காட்டி முதலாளிகளை  நிகழ்ச்சிக்கு அழைக்கிறது இந்தியா பவுண்டேசன்.  இக்கருத்தரங்கிற்கு இராணுவத் தளவாடம் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் நிதியளித்தன.

இந்தியா பவுண்டேசனின் இயக்குநர் என்கிற முறையில்  அந்நிய இராணுவத் தளவாட நிறுவனங்களிடம்  நிதி பெறும் நிர்மலா சீதாராமன்,  பாதுகாப்பு அமைச்சர் என்கிற பெயரில் எந்த நிறுவனத்திடம் கருவிகள் வாங்குவது என்று முடிவும் செய்யும் இடத்திலும் இருக்கிறார் என்கிறது, “தி வயர்” பத்திரிகை.

அதே போன்று, போயிங் நிறுவனம்  ரூ.70,000 கோடி ஆதாயம் அடையும் விதமாக அந்நிறுவனத்திடமிருந்து விமானங்கள் வாங்குவதற்கு மன்மோகன் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சின்ஹா இயக்குநராக இருக்கின்ற இந்தியா பவுண்டேசனுக்கு போயிங்  நிறுவனம் நிதி அளிக்கிறது.

மேலும், அதன் இயக்குநர் சவுரியா தோவல் ஜெமினி ஃபினான்சியல் சர்வீஸ்  என்ற நிறுவனத்தை சவுதி மன்னர் குடும்பத்தின் இளவரசர்களின் ஒருவரான  மிஷால் பின் அப்துல்லாவுடன் இணைந்து நடத்தி வருகிறார். கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு  சப்ளை அண்டு சர்வீஸ்தான் இந்த நிறுவனத்தின் தொழில். ஒருபக்கம் இந்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும் சிந்தனைக் குழாமில் அமைச்சர்களுடன் இயங்கும் சவுரியா தோவல் மறுபக்கம் ஷேக்குடன் சேர்ந்து இயங்குகிறார்.

முன்பக்கம் பார்த்தால் சிந்தனையாளர், பின்பக்கம் பார்த்தால் புரோக்கர். இதுதான்  இந்தியா பவுண்டேசன். இதன் ஒரு பிரிவு தான் இளம் சிந்தனையாளர்கள் குழு.

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

ஆர்.எஸ்.எஸ் கும்பலை அடித்து விரட்டுவோம் ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

0

1. ஓசூர்:

“திரிபுராவில் பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் லெனின் சிலை தகர்ப்பு! திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலை உடைப்பு! உ.பி -யில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு!” சம்பவங்களை நடத்தி பயங்கரவாத வெறியாட்டம் போட்டுவரும் இந்து மதவெறி பார்ப்பன RSS, BJP கும்பலை கண்டித்து  08. 03. 2018 அன்று மாலை 5 மணியளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஓசூரி்ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தோழர் ரவிச்சந்திரன் தலைமைதாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். ” அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சிம்ம சொப்பனமாக இருந்து லெனின் நமக்கெல்லாம் வழிக்காட்டுகிறார். பெரியார் – அம்பேத்கர் பார்ப்பன பாசிஸ்டுகளின் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.

எனவே, உழைக்கும் மக்களின் பொது எதிரிகளான ஆர். எஸ்.எஸ், பி.ஜே.பி காட்டுமிராண்டிகள் நமது உன்னத தலைவர்களை அவமதித்து வெறியாட்டம் போடுகின்றனர். இதனை போராடி முறியடிக்கவேண்டும்” என்றவகையில் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஒரே குரலில் RSS, BJP கும்பல்களை கண்டித்து கண்டன முழக்கங்களை முழங்கினர். பெண்கள், சிறுவர்கள், பெரியோர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். கடை வியாபாரிகள், தேனீர் அருந்தும் பொதுமக்கள் அனைவரும் இறுதிவரை கவனித்து ஆதரித்துச் சென்றனர். தினசரி மற்றும் தொலைக்காட்சி பத்திரிக்கை நண்பர்கள் படம்பிடித்தும் பேட்டிக் கண்டும் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர். தொடர்புக்கு – 97880 11784.

2. சென்னை

உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்! உலக உழைக்கும் மகளிர் தினத்தில் உறுதியேற்போம்!’

பெண்கள் விடுதலை முன்னணி சென்னை கிளை சார்பாக திரிபுராவில் பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் சிலை உடைப்பை கண்டித்தும், தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை உடைப்போம் என்ற எச்.ராஜாவை கண்டித்தும் சென்னை தியாகராயநகரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், எச்.ராஜாவின் படத்தை எரித்தும் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. உலக பெண்கள் தினத்தில் தமிழகத்தில் இருந்து பிஜேபி, ஆர்எஸ்எஸ், சங்பரிவாரி கும்பலை நாட்டைவிட்டே விரட்டியடிக்கவும்,
உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்! உலக உழைக்கும் மகளிர் தினத்தில் உறுதியேற்போம்!’

உலக பெண்களின் நாளான இன்றைய தினத்தை 50% தள்ளுபடியுடன்  கல்லா கட்டுகிறார்கள், முதலாளிகள். குடும்பத்தைக் காக்கும் பெண்கள் நாங்கள் தான் என்பதை நீண்ட நெடிய தொடர்கள் மூலம் நிருபிக்க கண்ணீர் கதைகள், பாட்டுப் போட்டிகள், டான்ஸ் போட்டிகள், ரியாலிட்டி ஷோக்கள்  என டிஆர்பி-யை ஏற்றி, ஊடகமும் கொண்டாடுகிறது. பத்திரிக்கைகளும், பெண்கள் பாதுகாப்பிற்கு என்ன செய்யவேண்டுமென்று பெண்ணியவாதிகளின் கட்டுரை ஒரு பக்கம், நான்கு பக்கத்திற்கு திருமணத்திற்குப் போட வேண்டிய நகைகள் பற்றி நான்கு பக்க விலைப்பட்டியலுடன் விளம்பரம், சத்தான, சுவையான சமையல் செய்து குடும்பத்திடம் பாராட்டு வாங்குவது பற்றி இரண்டுப் பக்கம் என்று கொண்டாடுகிறது.

ஆனால், உலக பெண்கள் நாள் பிறந்து 108 ஆண்டுகளாகியும், பெண்கள் தான் விரும்பியதை படிக்க முடியவில்லை. படித்த, படிப்புக்கேற்ற வேலை இல்லை, வேலைக்கேற்ற கூலி இல்லை. வேலைக்கு சென்று பாதுகாப்பாக வீடு திரும்ப உத்திரவாதம் இல்லை.  தான் விருப்பியவனை மணந்தால், ஆணவக் கொலை. பிடிக்காதவனை வேண்டாமென்றால் ஆசிட் வீச்சு. பச்சிளம் குழந்தைகள் முதல் 90 வயது மூதாட்டியர்கள் வரை தொடரும் பாலியல் வன்முறைகள், குடும்பத்தைக் காக்க வேலைக்கு சென்றால் முதலாளிகள் நமது உழைப்பு சக்தியை அட்டைப் போல உறிஞ்சு எடுக்கின்றனர். உழைப்பு சுரண்டல் போதாதென்று பாலியல் சுரண்டல் வேறு, பட்டினிக்கு தள்ளும் விலைவாசி ஏற்றத்திற்கு எதிராக, தாலி அறுக்கும் டாஸ்மாக் எதிராக வீதியில் இறங்கினால் கடித்துக் குதறும் போலீஸ் வெறிநாய்கள், இவைகள் போதாதென்று தினமும் ஒரு வரி விதிப்பு, பணப் பறிப்பு, எப்ப என்ன திட்டத்தை போட்டு நம்மை வழிப்பறி செய்வார் என அஞ்சும் வகையில் மோடி அரசின் அசத்தல் திட்டங்கள் பெண்களின் தலையில் இடியாய் இறங்குகிறது.

இக்கொடுமைகளுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட விடாமல் ஆணாதிக்கம் அடக்குகிறது. இதற்கு மதங்களும், சாதிகளும், சடங்குகளும், சொந்த பந்தங்களும் ஒத்து  ஊதுகின்றனர்.

இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும், தன் பங்கிற்கான போராட்டங்களை பெண்கள் நடத்திக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்.  பெங்களூரை மிரள வைத்த பெண் தொழிலாளர்கள் போராட்டமானாலும், பணி நிரந்தரம் கோரி செவிலியர் போராட்டமானாலும், டாஸ்மாக்கிற்கு எதிரான பெண்கள் போராட்டமானாலும், கல்வி, மருத்துவம், தண்ணீர், விவசாயம் என்று எந்த போராட்டமானாலும் பெண்களின் பங்களிப்பில்லாமல் இல்லை.

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. குடும்பத்தை காக்க புயலாகும் நாம். நாட்டையும், சமூகத்தின் விடுதலையையும் காக்க சூறாவளியாக மாற ஏன் தயங்க வேண்டும்?

உதாரணமாக, உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்த மெரினாவில் அல்லவா அது சாத்தியப்பட்டது. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. தமிழகத்தின் இளைஞர்களை உலகமே கொண்டாடியது. யார் காரணம்?-  நம் வீட்டு பிள்ளைகளோடு நாமும், இணைந்து சென்றதால்தானே அப்படியான நிகழ்கால சரித்திர மிக்க வரலாற்றை நடத்திக் காட்ட முடிந்தது.

பெண் உரிமைக்கும் விடுதலைக்கும் கிளாரா ஜெட்கினாக, நாட்டைக் காக்க குயிலியாக, ஜாதி ஆணவத்திற்கு எதிராக கௌசல்யாவாக, மதவெறிக்கு எதிராக ஹாதியாவாக, மூடநம்பிக்கைக்கு முடிவு கட்ட பெரியாரின் பேத்திகளாக, முதலாளிகளின் லாபவெறிக்கும், நுகர்வுவெறிக்கும் முடிவு கட்ட மார்க்சின் வாரிசுகளாக வீதியில் இறங்காமல் விடிவு இல்லை என்பதை உணர்ந்து உழைக்கும் பெண்களாய் ஒன்றிணைவோம். சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்.

உலக பெண்கள் நாளில் சூளுரைப்போம்!
பாலியல் சுரண்டலுக்கும் – உழைப்பு சுரண்டலுக்கும் முடிவு கட்டுவோம்!
நுகர்வு வெறியையும்- லாப வெறியையும் அறுத்தெறிவோம்.
ஆணாதிக்கத்தையும் – பெண்ணடிமை தனத்தையும் முறியடிப்போம்!
பெண்ணும் – ஆணும் சமம் என்பதை உயர்த்திப் பிடிப்போம்!
சமூக விடுதலையை முன்னெடுப்போம் – பெண் விடுதலையை சாதிப்போம்!

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னைக் கிளை

3. விழுப்புரம்

பார்ப்பன பொறுக்கி பி.ஜே.பி எச்ச.ராஜா-வை பெரியார் சிலைக்கு செருப்பால் அடித்து இழுத்து வந்து மண்டியிட வைத்த விழுப்புரம் மக்கள் அதிகாரம்.

எச்ச.ராஜா-வை கண்டிக்கும் விதத்தில் 07-03-18 அன்று விழுப்புரம் “மக்கள் அதிகாரம்” சார்பில் மதியம் 12மணியளவில் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திலிருந்து காமராஜர் வீதியிலுள்ள சங்கரமடம் அக்கரகாரத் தெரு பக்கத்திலுள்ள “தந்தை பெரியார்” சிலைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் பேரணியாக சென்று மக்கள் அதிகாரம் தோழர்கள் மாலை அணிவித்தனர்.

பேரணியில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் பெரியாரின் படத்தை முகமூடியாக அணிந்து இருந்தனர். மேலும் இந்து பயங்கரவாதி என்ற எச்ச. ராஜா-வின் முகமூடியை அணிந்து கொண்டும், அவனின் கை, கழுத்தில் கயிரு கட்டி அதை பெரியார் வேடமிட்ட தோழர்கள் கையில் செருப்புடனும், துடைப்பத்துடனும் எச்ச.ராஜா வேடமிட்டவரை அடித்து உதைத்து கண்டன முழக்கங்கள் இட்டவாரே  வீதியில் இழுத்து வந்தனர். இறுதியில் பாஜக- பொறுக்கி எச்ச.ராஜா-வை பெரியாரின் சிலை முன் மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்க வைத்து தோழர்கள் செருப்பால் சாத்தினர். பின் எச்ச.ராஜா, ஆர்.எஸ்.எஸ் –இன் சித்தாந்த குரு கோல்வால்கர் ஆகியோரின் உருவ படங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கண்டன முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

பெரியார் முகமூடி அணிந்து தோழர்கள் வீதியில் முழக்கமிட்டு வந்ததை பார்த்த அணைத்து பொது மக்களும், மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களும், குறிப்பாக மாணவர்- இளைஞர்களும் நின்று ஏய்! பெரியார் பாரு என்று நின்று தாங்கள் வைத்திருந்த கை பேசியில் படம் பிடித்தனர். வாழ்த்து சொன்னார்கள். அவர்கள் முகத்தில் இருந்த பூரிப்பு இது பெரியாரின் பூமி, நாங்கள் பெரியாரின் வாரிசுகள் என்பதை உணரமுடிந்தது.

பின் மக்கள் அதிகாரம் விழுப்புரம் வட்ட ஒருங்கிணப்பாளர் தோழர்.சிவானந்தம் தலைமையில் உளுந்தூர்பேட்டை வட்டம் மக்கள் அதிகார தோழர் ஏழுமலை பேசும்போது ஏய்! BJP பயங்கரவாதி எச்ச.ராஜா-வே! உனக்கு என்ன தைரியம் இருந்தால் சிலையை உடைப்பேன் என்பாய். உனக்கு பெரியார் என்றால் யார் என்று தெரியுமா?  உங்கள் நான்கு வர்ண கொள்கைக்கு எதிராக கலகம் செய்தவர், நீங்கள் பெண்களை போதைப் பொருளாக அடிமைபடுத்தி வைத்து நீங்கள் செத்தால் கூடவே  அவர்களையும் உடன்கட்டை ஏற செய்த மரபை உடைத்து பெண்களின் அடிமை விலங்கை உடைத்தவர், அடிமை பட்டுக் கிடந்த மக்களுக்கு தன்மான உணர்வை ஊட்டியவர். ஆனா நீங்கள் யார்? அன்று முதல் இன்று வரை கோயில் நிலங்களையும், சொத்துக்களையும் கொல்லைப்புறமாக திருடி தின்பவர்கள், காவிரியை தடுத்து விவசாயிகளை கொன்றவர்கள், அனிதா போன்ற மாணவர்களின் படிப்பை கெடுத்து கொன்றவர்கள், உனக்கு என்ன யோக்கியதை இருக்கு பாட்டாளி வர்க்க தலைவர் மாமேதை லெனின் அவர்களின் சிலையை உடைக்கவும்,  பெரியார் சிலையை உடைக்கவும் என்று முடித்தார்.

அடுத்து பேசிய தோழர் ரவிகார்த்திகேயன் (மருதம் ஒருங்கிணைப்பாளர்- விழுப்புரம்) எவ்வளவு திமிரு இருந்தால் தன் சுய சாதி திமிரோடு தந்தை பெரியாரை சாதி வெறியன் என்று அவனால் பதிவிட முடியும். காலம் காலமாக சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் மக்களை பிரித்து சூழ்ச்சியின் மூலம் வாழ்ந்து வருபவர்கள், இன்று தன் ஒரு மொழி, ஒரு பண்பாடு கொள்கையை நிறுவ தாங்கள் பதவியின் மூலமும், அதிகாரத்தின் மூலமும் கட்சிகளை விலைக்கு வாங்கியும். இங்கே அடிமை ADMK எடப்பாடி அரசையும் வைத்து அவர்கள் தாங்கள் திட்டத்தை நிறைவேற்ற நினைக்கிறார்கள். ஆனால் இது பெரியாரின் பூமி. இங்கு உங்கள் கனவு பலிக்காது என்பதற்கு இங்கு கூடியுள்ள மாணவ இளைஞர்களே சாட்சி. இப்படி ஒரு நல்ல போராட்டத்தை நடத்தும் மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு எனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முடித்தார்.

இறுதியாக பேசிய விழுப்புரம் மண்டலம் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் பேசுகையில் தமிழகத்தில் இன்று நாம் பேன்ட்-சட்டை, சூ, போட்டுக்கொண்டு கல்வி அறிவோடு தன்மானத்தோடு வாழ விதை விதித்தவர் பெரியார். வரலாறு முழுவதும் பாசிஸ்டுகள் தாங்கள் அழிவை தாங்களே தேடிக்கொள்வார்கள். எப்படி பாசிஸ்ட் ஹிட்லர் மாமேதை லெனின் சிலையை உடைத்து மாவீரன் ஸ்டாலின் அவர்களால் தன் அழிவை தேடிக்கொண்டானோ அதே போல் இன்று பிஜேபி எச்ச பொருக்கி ராஜாவின் கருத்து என்பதும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பிஜேபி காரன் முத்துக்குமரன் பெரியார் சிலையை உடைத்த நிகழ்வு என்பதும் இந்த RSS -BJP பயங்கரவாத கும்பல் தங்கள் அழிவை இன்று பெரியார் பூமியான தமிழகத்தில் தங்களுக்கான கல்லறையை தாங்களே உருவாக்கிக் கொண்டது. கட்டாயம் அதில் RSS -BJP புதைக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று முடித்தார்.

இதன்  தொடர்சியாக 07/03/2018 அன்று மாலை விக்கிரவாண்டி வட்டம் தொரவி பகுதியில் இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் 50 பேர் மக்கள் அதிகாரம் தோழர் ராஜீவ்காந்தி தலைமையில் இனணந்து ஊர் முழுவதும் எச்ச. ராஜாவின் கழுத்தில் செருப்பு மாலை போட்டு இழுத்து சென்றனர். விக்கிரவாண்டி – புதுச்சேரி பிரதான  சாலையில் அவனது கொடும்பாவியை எரித்து முழக்கம் இட்டனர். பிறகு மக்கள் அதிகார தோழர் ராஜீவ்காந்தி பேசுகையில் பார்ப்பன மதவெறி கும்பலையும் பெரியாரின் மண் இங்கு பார்ப்பான் ஆதிக்கம் செய்ய விடமாட்டோம் என உரையாற்றினார்.

அடுத்து பேசிய விழுப்புரம் பகுதி தோழர் சிவானந்தம் பேசுகையில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கைபர் போலன் கனவாய் வழியாக வந்தேறிய பார்ப்பன கும்பல் இங்கு நமது மொழி, பண்பாட்டை அழித்து பார்ப்பணீய மனித விரோத பண்பாட்டை திணித்து நான்கு வர்ணங்களாக நம்மை இழிவுபடுத்தியது. இந்த இழிவுகளுக்கு எதிராக தமிழகத்தில் பார்பணீயத்தை வீழ்த்தியவர் பெரியார். அது தான் பாஜக- காரர்களுக்கு பெரியார் பெயர் கேட்டாலே சூத்துல பச்ச மிளகாய் வைத்ததுபோல் எரிகிறது.

எனவே தான் பெரியாரை அழிக்க வேண்டும், திராவிட மரபை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே நாம் வந்தோம் சென்றோம் என்று இல்லாமல் இந்துத்துவத்தை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.-வை நாட்டை விட்டு விரட்ட பெரியார், அம்பேத்கர், மார்க்சியம் கற்க வேண்டும். பெரியாரின் வாரிசுகளாக, அம்பேத்கரின் வாரிசுகளாக, மார்க்சியவாதிகளாக களத்தில் இறங்க வேண்டும். அவர்கள் விட்டு சென்ற பணியை நாம் இனி தொடர வேண்டும். அம்பேத்கர் சொன்னது போல் கற்பி- ஒன்றுசேர்- கலகம் செய் என்பதை உள்வாங்கி அரசியலை கற்று, ஒரு அமைப்பாக திரண்டு இந்துத்துவத்துக்கு எதிராக நமது பிரச்சனைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடவேண்டும் என்று முடித்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்

4. பென்னாகரம்

“லெனின் சிலை உடைப்பு! பெரியார் சிலையை உடைப்பு! பாசிச வெறியாட்டம் போடும் பி.ஜே.பி  கொடிக் கம்பத்தை தமிழகம் முழுவதும் மாணவர்கள் அகற்றுவோம்!” என்று பென்னாகரத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்  நடைப்பெற்றது.  தோழர் சத்திய நாதன் தலைமை தாங்கினார். இந்த இந்த ஆர்ப்பாட்டத்தினை விளக்கி  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அன்பு பேசினார்.

மக்கள் அதிகாரம் பென்னாகரம் பகுதி கோபிநாத் பேசினார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கோல்வர்கர், எச்ச ராஜாவின் உருவபடம் எரிக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி.
தருமபுரி, 81480 55539.

5. திருநெல்வேலி

“திரிபுராவில் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் சிலை உடைத்து வெறியாட்டம் போடும் ஆர். எஸ். எஸ். பா.ஜ.க. கும்பலை கண்டித்தும்! தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என சொன்ன எச்ச ராஜாவை கண்டித்தும்!”

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் 07-03-2018 அன்று மாலை 4.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சந்திப்பு பேருந்து நிலையத்தின் உள்ளிருந்து கண்டன முழக்கங்களுடன் ஊர்வலமாக தோழர்கள் வெளிவர ஆரம்பித்தனர்.

அதன் பின்னர் அங்கிருந்த அம்பேத்கர் சிலை முன்பு தோழர்கள் கோல்வால்கர் மற்றும் எச்.ராஜா ஆகியோரின் படத்தை எரிக்க முற்பட்டனர். அப்போது அங்கு வந்த போலீசு படங்களைப் பறித்துக் கொண்டனர். ஆனபோதும் அவற்றை தோழர்கள் மீண்டும் பிடுங்கி கிழித்தெறிந்து காலில் போட்டு மிதித்தனர். இந்நிகழ்வு அங்கு சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

*****

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் எச்.ராஜாவைக் கண்டித்தும்! அவரது உருவப்படத்தை எரித்தும் மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து போராட்டம் நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருநெல்வேலி.

7. கும்பகோணம்

திரிபுராவில் நடத்தப்பட்ட தோழர் லெனின் சிலை உடைப்பை பயன்படுத்தி காவிபரிவாரத்தை உள்நுழைக்க “தந்தைபெரியார் சிலையை உடைக்கவேண்டும்.” என கூறிய எச்(ச).ராஜாவை கைது செய்ய கோரி குடந்தை அரசு கலை கல்லூரி சார்பில் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
குடந்தை, தொடர்புக்கு : 96297 01560.

 

தோழர் லெனினின் சாதனைகள் ! வீடியோ

1

தோழர் லெனின் சிலை இடிப்புக்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. பாஜகவின் ஊடக பேச்சாளர்களும், பொறுப்பில் இருப்போரும், ”லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு?, கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? “ என எக்காளத்துடன் பேசுகின்றனர். பார்ப்பனக் கொழுப்பின் பிண்டமான சுப்பிரமணிய சாமி, லெனின் ஒரு தீவிரவாதி என்றும், பல மக்களைக் கொன்றவர் என்றும் கூச்சநாச்சமில்லாமல் பேசியுள்ளார்.

லெனினைக் கண்டு இக்கும்பல் அலறுவது ஏன்? கொஞ்சம் வரலாற்றுரீதியாகப் பார்ப்போம். தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயர்களை தூங்க விடாமல் செய்த தோழர் பகத்சிங் தனது ஆதர்சன நாயகனாக குறிப்பிடுவது தோழர் லெனினை மட்டுமே. தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு வரை அவர் படித்துக் கொண்டிருந்தது, லெனினுடைய நூல்களைத்தான். சோசலிச புரட்சி ஒன்றே, சகல ஒடுக்குமுறைகளில் இருந்தும் இந்திய மக்களை விடுதலை பெறச் செய்யும் என்றார் பகத்சிங். லெனின் பிறந்தநாளுக்கு சிறையில் இருந்து ரசியாவிற்கு வாழ்த்துத் தந்தி அனுப்பினார் பகத்சிங்.

வெள்ளைக்காரனின் காலை நக்கி அவனிடம் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து, வெளியே வந்த ’வீர்’ சாவர்க்கரின் வாரிசுகளுக்கு, ஆங்கிலேயனின் சிம்ம சொப்பனமான பகத்சிங்கின் ஆதர்சன நாயகனான லெனினை எப்படிப் பிடிக்கும்?

இதோ லெனினின் சாதனைகள் – ரசியப் புரட்சி தோற்றுவித்த உலகளாவிய சாதனைகளை இந்தக் காணொளியில் காணுங்கள் …

 

 

பேருந்துக் கட்டண உயர்வு : தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் பேரிடி !

0

பயணச்சீட்டுக் கட்டணம் இரு மடங்காக உயர்ந்திருப்பதால், கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏழை பெற்றோர் பெண் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
–  பிரியா, கல்லூரி மாணவி, உத்திரமேரூர்.

பா.ஜ.க.வின் தயவிலும் பாதுகாப்பிலும் இருந்துகொண்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக ஆட்சி நடத்திவரும் எடப்பாடி கும்பல் அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வு பகிரங்கமான பகற்கொள்ளை என்பதையும் தாண்டி, தமிழகத்தை ஓர் இருண்ட காலத்திற்குள் இழுத்துச் செல்லும் சதி என்பதைக் கல்லூரி மாணவி பிரியாவின் எதிர்வினை அம்பலப்படுத்துகிறது.

3,600 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ள இக்கட்டணக் கொள்ளை ஏழை மாணவர்களின் படிப்புக்கு வேட்டு வைப்பதோடு, ஏழைகளின் அன்றாடப் பிழைப்பையே சூறையாடக்கூடிய அபாயத்தையும் கொண்டிருக்கிறது. பூ, கீரை, காய்கறிகளை வாங்கி வந்து விற்கும் ஏழைத் தாய்மார்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் ஏழை, ஆதரவற்ற பெண்கள், சித்தாள் வேலைக்குச் சென்று திரும்பும் கூலிகள், கடைச் சிப்பந்திகள் – இப்படியான பல தரப்பட்ட தொழிலாளர்களின் வருமானத்தில், கூலியில் ஏறத்தாழ 30 சதவீதம் வரை பேருந்துக் கட்டணத்திற்கே அழுது தொலைக்க வேண்டிய நிலை, இக்கட்டண உயர்வால் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் வேலைக்குச் செல்வோரில் 23.3 சதவீதம் பேர் அரசுப் பேருந்தை மட்டுமே நம்பியிருப்பதாக 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களுள் ஆகப் பெரும்பாலோர் கூலித் தொழிலாளர்களாக இருப்பது உறுதி. கிடைக்கும் கூலியில் 30 சதவீதத்தைப் பேருந்துக் கட்டணத்திற்கே செலவழித்துவிட்டால், இந்த ஏழைகளால் எப்படி வாழ்க்கை நடத்த முடியும் ?  விலைவாசி உயர்வைச் சமாளிக்க உணவுச் செலவுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டு வாழும் இம்மனிதர்களிடம் இனியும் இழப்பதற்கு என்ன இருக்க முடியும் ?

டீசல் விலை உயர்ந்த அளவிற்குப் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், இது காறும் பேருந்துகளை இயக்கி வந்ததால்தான் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நட்டத்தில் சிக்கிக் கொண்டுவிட்டதாகப் பொருளாதாரக் கணக்கொன்றை எடுத்துவிட்டு, இக்கட்டணக் கொள்ளையை நியாயப்படுத்துகிறது சட்டவிரோத எடப்பாடி அரசு. அதற்கு பொன்னார் உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் பொருளாதார நிபுணர்கள் என்ற போர்வையில் உலவிவரும் மக்கள் விரோதிகளும் ஒத்தூதி வருகிறார்கள்.

இந்தக் கணக்கு பொய்யும் மோசடியும் நிறைந்தது என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்த உண்மை. அது மட்டுமல்ல, ஆற்று மணலையும், தாது மணலையும், கிரானைட் கற்களையும் கொள்ளையடித்த அ.தி.மு.க. கொள்ளைக்கூட்டம் போக்குவரத்துக் கழகங்களையும் விட்டுவைக்கவில்லை என்பதும் தமிழக மக்கள் அறிந்து வைத்திருக்கும் உண்மை. அதனால்தான் எடப்பாடி கும்பலின் வாதத்தைத் தெருநாய்கூடச் சீந்தவில்லை.

ஏதோ மலிவான கட்டணத்தில் அரசு பேருந்துகளை இயக்கி வந்ததாக எடப்பாடி அரசு அளித்துள்ள விளக்கம் ஒரு வடிகட்டிய பொய். அல்ட்ரா டீலக்ஸ் பஸ், பாயிண்டு டு பாயிண்டு பஸ், எக்ஸ்பிரஸ் பஸ், ஒன் டு ஒன், ஒன் டு த்ரீ சர்வீஸ் என விதவிதமான பெயர்களில் இயக்கப்படும் பேருந்துகளிலும், திருவிழா மற்றும் தொடர்விடுமுறை நாட்களையொட்டி இயக்கப்படும் பேருந்துகளிலும் வழமையான கட்டணத்தைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு, மறைமுகக் கட்டண உயர்வு ஏற்கெனவே அமலில் இருந்துவருகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 22,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன; அப்பேருந்துளில் 2 கோடி பேருக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இந்த 22,000 பேருந்துகளில் 70 சதவீதத்துக்கும் மேலான பேருந்துகள் காயலாங்கடைக்குப் போக வேண்டிய நிலையில் உள்ளன என்றால், 2 கோடி பேர் தரும் கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம் எங்கே போனது? இதோடு, தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்களைத் தராமல், 7,000 கோடி ரூபாயை அவர்களிடமிருந்து போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் சுருட்டிக் கொண்டுள்ளன.

இந்தப் பணமெல்லாம் எங்கே போய்ச் சேர்ந்திருக்கிறது, எப்படி மாயமானது என்பதும், எந்தெந்த வழிகளிலெல்லாம் போக்குவரத்துக் கழகங்களில் ஊழல், திருட்டு நடந்திருக்கிறது என்பதும் பொதுமக்களைவிடத் தொழிற்சங்கத் தலைமைக்குத்தான் நுணுக்கமாகத் தெரிந்திருக்கும். பேருந்துக் கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் பள்ளி – கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் தெருவில் இறங்கிப் போராடியபோது, போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள், நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழலையும் கொள்ளையையும் விரிவாக மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்துச்சென்று போராட்டத்தை வலுப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு சட்டவிரோத ஆட்சிக்குப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் முடிவை எடுக்கும் அதிகாரம் கிடையாது எனப் பொதுமக்களிடம் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், தி.மு.க. மற்றும் இடதுசாரி தொழிற்சங்கத் தலைமையோ வெறும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு ஒதுங்கிக் கொண்டன. இத்தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களோ சட்டவிரோத எடப்பாடி அரசு ஏவிவிட்ட கட்டண உயர்வைப் பொதுமக்களிடமிருந்து பிடுங்குவதில் எவ்வித தயவுதாட்சண்யமும் காட்டவில்லை. உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் கொடுக்காமல் கலகத்தில் இறங்கும்படி புரட்சிகர அமைப்புகள் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தபோது,  இந்தக் கட்டண உயர்வை முன்பே, படிப்படியாக அமல்படுத்தியிருக்க வேண்டும் என எடப்பாடி அரசின் குரலில் பேசி, இக்கட்டணக் கொள்ளையைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நியாயப்படுத்தினார்கள். பொங்கலுக்கு முன்பாகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து நின்ற தமிழக மக்களுக்கு இடதுசாரி மற்றும் தி.மு.க., தொழிற்சங்கங்களும் போக்குவரத்துத் தொழிலாளர்களும் செய்திருக்கும் கைம்மாறு இது.

இத்தகைய அநீதியைக் குற்ற உணர்வின்றிச் செய்யத் துணியும் அளவிற்குத் தொழிற்சங்கத் தலைமையிடமும் தொழிலாளர்களிடமும் சுயநல, பிழைப்புவாத தொழிற்சங்கவாதம் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. பொதுமக்களும் தொழிலாளர்களும் இணைந்து போராட உருவாகியிருந்த வாய்ப்பை இந்தத் தொழிற்சங்க பிழைப்புவாதம் ஒதுக்கித் தள்ளியதால் பலன் அடைந்தது எடப்பாடி கும்பல்தான். போராட்டம் வலுவடையாத சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, இக்கட்டண உயர்வை நிரந்தரமாக்குவதில் அது வெற்றியடைந்துவிட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் தழுவிய அளவில் ஓர் எழுச்சி நடைபெற்றதைப் போன்று, இக்கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை உருவாக்கியிருக்க முடியும். அந்தளவிற்குப் பேருந்து கட்டண உயர்விற்கு எதிராகத் தமிழக மக்களிடம் ஆத்திரமும் வெறுப்பும் சூல் கொண்டிருந்தது. மக்கள் எழுச்சியுறும் தருணங்களில் அவர்களுக்கு எதிராகத் தமது துப்பாக்கிச் சனியன்களைத் திருப்ப போலீசும், இராணுவமும் மறுத்திருப்பதை வரலாற்றில் கண்டிருக்கிறோம். போக்குவரத்துத் தொழிற்சங்கத் தலைமையும், தொழிலாளர்களும் மக்களுடன் இணைந்து கட்டண உயர்வை ஏற்கமறுத்துப் பேருந்துகளை நிறுத்திக் கலகத்தில் இறங்கியிருக்க வேண்டும். அத்தகையதோர் ஐக்கியப்பட்ட போராட்டம் வெடித்திருந்தால், அது எடப்பாடி அரசை வீழ்த்தவல்ல ஒரு மக்கள் எழுச்சியாகவும் வளர்ந்திருக்கும். அத்தகையதொரு முன்மாதிரியான அரசியல் எழுச்சி உருவாகாமல் சிதைத்த பழிக்கு  போக்குவரத்துத் தொழிற்சங்கத் தலைமையும், தொழிலாளி வர்க்கமும் பொறுப்பேற்க வேண்டும்.

ரஹீம்

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

பொய்யிலே பிறந்த ராசா நீ செய்யும் உதவி லேசா !

2

எச்சு ராஜாவுக்கு எச்ச கச்ச நன்றி…!

காரைக்குடி சீதனமே
கடிவாய் மோகனமே
தேடினாலும் கிடைக்காத
தில்லுமுல்லு பொக்கிசமே
கழுவி கழுவி ஊத்தினாலும்
சளைக்காத ஜாதகமே,
எங்களாலேயே முடியாததை
எடுத்து செய்யும் கல் மனமே
என்னான்னு  சொல்லுவமே!

ஒரே நாளில்
ஒரே நூலில்
ஊரையே இழுத்துவிட்டாய்
பெரியாரையும், லெனினையும் பேசி, பேசி
நாட்டையே ஒன்ணு சேர்த்தாய்
நீ, நிறுத்தாமல் சொல்லனுமே
நிமிருது தமிழினமே!

பொய்யில் பிறந்த ராசா – நீ
செய்யும் உதவி லேசா
பேசாத நாளெல்லாம் வீண் தானே
பெரியாரின் பெருந்தொண்டன்   நீதானே,
ஒயாமல் உசுப்பிடுது,
உன் வாய் தானே!

ஆண்டாளுக்கு உறுமுனது
ஜீயர் வயிறை தாண்டவில்லை
பெரியாரை பேசுனது
தமிழகமே தாங்கவில்லை
நீ,
பிள்ளையார் சுழி போட்டால்
அது பெரியார் சுழியாய் மாறுது
வேற யாரும் தேவை இல்லை,
வெளங்கிடும் உன் வாயாலே
பி.ஜே.பி   நாறுது!

ஆயிரம் பேர்
ஆயிரம் சொல்லட்டும்
அப்படியே போ ராசா
நீ உதிர்க்கும் முத்துக்களால்
திராவிடமே திரளுதையா
மாஸ்சா!

– துரை. சண்முகம்

 

கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !

3
உஷா தம்பதியினர்.
கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்ற காவல் ஆய்வாளர் காமராஜ்

திருச்சி தெருவெறும்பூரில், ஒரு பெண்ணை கொடூரமாகக் கொன்றிருக்கிறது போலீசு. புதன்கிழமை 07-03-2018 அன்று திருச்சி திருவெறும்பூர் பகுதியில் போக்குவரத்து போலீசு ஆய்வாளர் காமராஜ் தனது பரிவாரங்களோடு வாகன சோதனை என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இரவு 7.30 மணியளவில் தஞ்சை மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ராஜா (தர்மராஜ்) உஷா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

ஹெல்மெட் போடாமல் வந்த ராஜா வண்டியை திருவெறும்பூர் அருகேயே நிறுத்தியுள்ளார் காமராஜ். வண்டியை நிறுத்தி நின்று கொண்டிருந்த ராஜா மனைவியுடன் வந்திருந்ததால், மற்றொரு காவலர் அவரைக் கிளம்பச் சொல்லி இருக்கிறார். அதனை ஒட்டி அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் ராஜா. பிற வாகனங்களில் வசூலை முடித்துவிட்டு வந்த காமராஜ், ராஜா இல்லாததைக் கண்டு உடனடியாக போலீசு ஜீப்பை எடுத்துக் கொண்டு ராஜாவைப் பிடிக்க கிளம்பினார். தனது மனைவி உஷாவுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜாவை வாகனத்தோடு எட்டி உதைத்துள்ளார். இதில் நிலைகுலைந்து ராஜா, உஷா இருவரும் கீழே விழுந்தனர். இதில் கர்ப்பிணிப் பெண் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  ராஜா பலத்த காயமடைந்தார்.

இச்சம்பவத்தை விபத்து போல காட்டுவதற்காகவே ஊடகங்களுக்கு போலீசு தெரிவித்த செய்தியில் வேன் ஏறி உஷா இறந்ததாக செய்தி வெளியிட்டது.
நடந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் சுமார் 3000-க்கும் அதிகமானோர் சாலையில் குவிந்தனர்.

வசூல் ஆய்வாளர் காமராஜைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசு மக்களைக் கலைந்து போகுமாறு எச்சரித்துள்ளது. போக மறுத்த மக்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தியிருக்கிறது கிரிமினல் போலீசு. இத்தாக்குதலை ஏவிவிட்ட திருச்சி போலீசு கமிஷனர் அமல்ராஜ், யார் என்று நினைவிருக்கிறதா ?

திருச்சி போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜ்

கோவையில் கடந்த 2016-ம் ஆண்டு இந்து முன்னணியைச் சேர்ந்த ரவுடி சசிக்குமாரின் மரணத்தையொட்டி இந்து முன்னணிக் கும்பலுக்கு கலவரம் நடத்த ஏதுவாக பேரணிக்கு அனுமதி கொடுத்தவர்தான் இந்த அமல்ராஜ். அது  மட்டுமல்லாது கலவரம் நடத்தப்பட்டபோதும், பிரியாணி அண்டாக்கள் திருடப்பட்ட போதும், போலீசை வேடிக்கை பார்க்க வைத்தவர். கலவரப் பிரியரான அமல்ராஜிற்கு மக்களிடம் பேசப் பொறுமை இருக்குமா என்ன? அதன் காரணமாகவே தடியடி நடத்தி மக்களைக் கலைத்திருக்கிறது போலீசு.

இச்சம்பவம் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக பரவிய பின்னர் வேறு வழியின்றி ஆய்வாளர் காமராஜைக் கைது செய்திருக்கிறது போலீசு. இது திருச்சிக்கோ, தமிழகத்துக்கோ முதல் சம்பவம் அல்ல.

சிறிது நாட்களுக்கு முன்னர், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் வாகனச் சோதனையில் இலஞ்சம் வாங்கிக் கொண்டிருந்த போலீசுக் கிரிமினல்களை வீடியோ எடுத்தவரை மிகவும் மோசமாகப் பேசி அவரி தனியாக இழுத்துச் சென்று இரும்புப் பைப் வைத்து அடித்திருக்கிறது போலீசு. இதனால் மனமுடைந்த அந்த டிரைவர், அதே இடத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

சிறைக்கு ஒய்யாரமாகப் போகும் கொலைகார காவல் ஆய்வாளர் காமராஜ்

திருச்சி, சென்னை கே.கே. நகர் என பல்வேறு சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இது போன்று போலீசு இலஞ்சம் வாங்கிப் பொறுக்கித் தின்ன ஏற்பாடு செய்து கொடுக்கும் வேலையைதான் கிருபாகரன் போன்ற நீதிபதிகள் செய்து வருகின்றனர். அவரவர் நிலைமையைப் பொறுத்து அல்லாமல் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும், ஒரிஜினல் லைசன்ஸ் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற புதுப்புது உத்தரவுகளைத் தலைமயிரை உதிர்ப்பது போல அவ்வப்போது உதிர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த உத்தரவுகளை வைத்துக் கொண்டு போலீசு கும்பல் எந்த வண்டியை நிறுத்தினாலும், பணம் பிடுங்கித் தின்னலாம் என்ற நிலையில் நடுரோட்டில் நின்று அராஜகம் செய்கிறது. பணம் கொடுக்காதவனையும், நிற்காமல் செல்பவர்களையும், இரையை நோக்கிப் பாயும் ஓநாய் போல கொலைவெறியோடு அணுகுகிறது கிரிமினல் போலீசு.

கட்டற்ற அதிகாரம் கைகளில் இருக்கும் திமிரில்தான் இந்த போலீசு கும்பல், மக்களின் உயிரை மயிரினும் கீழாக மதிக்கிறது. போலீசின் கட்டற்ற அதிகாரத்தைப் பறித்து மக்கள் கையில் அதிகாரத்தைக் அளிக்கும் போதுதான் ஜனநாயக முறையில் மக்கள் தாங்களாகவே விதிகளைப் பின்பற்றுவார்கள். அங்கிருந்துதான் சமூக ஒழுக்கம் பிறக்க முடியுமேயன்றி போலீசு கையிலிருக்கும் லத்திக் கம்பிலிருந்து ஒரு போதும் பிறக்க முடியாது.

********

திருச்சியில் போலீசு தாக்கி கர்பிணிப் பெண் படுகொலை ! எதிர்த்து போராடிய மக்கள் மண்டையைப் பிளந்து போலீசார் கொலைவெறியாட்டம் !

மக்கள் எதிரிகளான காக்கிச்சட்டை ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்ட தமிழகம் கிளர்ந்தெழட்டும் !

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு, தொடர்புக்கு : 94451 12675.

__________

லஞ்சம் – வழிப்பறி – படுகொலை… நேற்று… எடத்தெரு சரஸ்வதி… இன்று தஞ்சை உஷா…

கிரிமினல் மயமாகிவரும் போலீசுக்கு எதிராக தமிழக மக்களே அணிதிரள்வோம் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

 

திருச்சியில் மோடி, எச்.ராஜா படம் எரிப்பு – ம.க.இ.க போராட்டம் !

1

பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என்று பேசிய எச்.ராஜா-வை கைது செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் 07.03.2018 புதன் கிழமை அன்று திருச்சியில் மோடி, எச்.ராஜா உருவப் படங்களும் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார், இரண்டாவது தலைவர் கோல்வால்கர் படங்களும் எரிக்கப்பட்டன.இந்த போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
திருச்சி.

*****

ஞ்சையில் 07.03.2018 அன்று பெரியார் – லெனினை உயர்த்திப் பிடிப்போம் ! பார்ப்பனப் பாசிஸ்டு கோல்வால்கரைக் கொளுத்துவோம் ! என்ற முழக்கத்தின் கீழ் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் மற்றும் பெரியார் சிலையை இடிக்கச்சொன்ன எச்.ராஜா உருவப்படத்தை கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.

 

காரைக்குடி எச்சல ! நீ வாங்குனது பத்தல !

4

திரிபுரா மாநிலத்தில், உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் லெனினின் சிலையை, ஏகாதிபத்தியங்களின் அடிமைச் சேவகம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் சில நாட்களுக்கு முன்னர் உடைத்தது. இதே போல தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என திமிராக பேசிய எச்.ராஜா பின்னர் அதை நீக்கிவிட்டு அதை தான் வெளியிடவில்லை என நாடகமாடுகிறார்..

தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் எச்.ராஜாவையும், பா.ஜ.கவையும் கண்டித்து வருகின்றனர். அந்தப் போராட்டத்தில் இணைகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக் குழு தோழர்களின் “காரைக்குடி எச்சல, நீ வாங்குனது பத்தலை” முழக்கப் பாடல்.

முழக்க வரிகள்

காரைக்குடி எச்சல..
நீ வாங்குனது பத்தல ..
உன் காவிக் கொடி பறக்காது ..
எங்க தமிழ்நாட்டுல ..

(காரைக்குடி எச்சல)

எச்சல .. எச்சல ..
காரைக்குடி எச்சில…
பத்தல .. பத்தல ..
நீ வாங்குனது பத்தல …

(எச்சல.. எச்சல..)

காவிக் கொடி பறக்காது …
எங்க தமிழ் நாட்டுல …
எங்க தமிழ் நாட்டுல …
எங்க தமிழ் நாட்டுல ..

 

 

லெனின் – பெரியாரை தொட்டுப் பார் பட்டுப் போவாய் !

1

லெனினும் பெரியாரும் சிலை அல்ல சிந்தனை !

லகெங்கும்
கோடிக்கணக்கான மக்களின்
தலைக்குள் இருக்கிறார்
லெனின்.

சிலைக்குள் தேடும்
முண்டங்களே
எத்தனை புல்டோசரோடு
வந்தாலும்
உங்களால்
தவிர்க்க முடியாது லெனினை.

வளர்ந்து வரும்
வர்க்கப் பகையில்
தொழிலாளி வர்க்கத்தின் மூச்சில்
கலந்துவிட்ட லெனினை
மூலதனம் அடைகாக்கும்
கோல் வால்கர் குஞ்சுகளே
உங்களால்
தடுக்கவும் முடியாது.

எத்தனை பாரதமாதாவுக்கு
நீ, ஜெய்! போட்டாலும்
சா வர்க்க(ர்) கும்பலே
உன்னால் லெனினை
புதைக்க முடியாது
ஏனெனில்
லெனின் என்றால்
எதிர்காலம்.

அன்னிய தேசத்து தலைவருக்கு
இங்கெதற்கு சிலை என்றால்
அன்னிய ‘லோகத்து’ சாமிகளுக்கு
இங்கெதற்கு சிலை?
ஆரிய குடி ராஜாவுக்கு
காரைக்குடியில்
என்னடா வேலை!

ஆரியன் நீதான்
அந்நியன்,
லெனின்
உழைக்கும் வர்க்கத்து மண்ணியன்.

பூவுக்கும் வாசத்திற்கும்
என்ன சம்பந்தம்
பூமிக்கும் காற்றுக்கும்
என்ன சம்பந்தம்
அண்டத்திற்கும்
அணுக்களுக்கும்
என்ன சம்பந்தம்
அறியாத
தறுதலைகள் கேட்கின்றன,
லெனினுக்கும் இந்தியாவுக்கும்

என்ன சம்பந்தம்!
உலகுக்கும்
மின்சாரத்துக்கும்
என்ன சம்பந்தமோ
அதுதான்
லெனினும் இந்தியாவுக்கும்
உள்ள சம்பந்தம்.

வந்தேறி
ஆரிய ஆர்.எஸ்.எஸ். கும்பலே
முதலில்
உனக்கும்
மனித இனத்துக்கும்
என்ன சம்பந்தம்?
குரங்குகள்
வாழ ஆசைப்படலாம்
ஆள ஆசைப்படக் கூடாது.

முன்னேறிய
சிந்துவெளி நாகரிகத்தை
சீரழித்த
ஆரிய சுரண்டல் கும்பலுக்கு
லெனினின் சிவப்படியும்
பெரியாரின் செருப்படியும்
இன்னும் வலிக்கிறது.
சிலையாய் பார்த்தாலும்
பூணூல் எரிகிறது
குடுமி கொதிக்கிறது.

மிச்சமிருக்கும்
எச்சு ராஜாவுக்கும்
எரியத்தான் செய்யும்,
அணு உலைக்கும்
கொடிதான
மனு உலைக்கே
வேட்டு வைத்தவர் பெரியார்.

எங்கள்
நாடி நரம்பெல்லாம்
எழுந்து நிற்கிறார் ப‍ெரியார்.
பெரியார்
சிலை அல்ல
சிந்தனை.
தொட்டுப்பார்
பட்டுப்போவாய்.

– துரை. சண்முகம்

 

ஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால ! கோவன் அதிரடி பாடல் !

0

க்களைச் சுரண்டும் ஏகாதிபத்தியங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் தோழர் லெனின். திரிபுரா மாநிலத்தில், உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் லெனினின் சிலையை, ஏகாதிபத்தியங்களின் அடிமைச் சேவகம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் சில நாட்களுக்கு முன்னர் உடைத்தது.

அதனைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தனது ட்விட்டரில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டுள்ளது, நாளை பெரியார் சிலை என பார்ப்பனக் கொழுப்பால் விசத்தை கக்கியுள்ளார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவினர் தோழர் கோவன் தலைமையில் தங்கள் பாடலின் மூலம் எச்ச ராஜாவின் பார்ப்பனக் கொழுப்புக்கு செருப்படி கொடுக்கின்றனர்.

ஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால ! கோவன் அதிரடி பாடல் வரிகள் !

ஒட்ட நறுக்கணும்…
எச்ச நாயோட வால!
இனி விட்டா பாஞ்சிடும்…
தமிழ் மக்களின் மேல!

நீ ஆடுற ஆட்டம்..
மோடி நிழலுல!
இது அஸ்தமனம்டா..
உன் மண்டையில் ஏறல !

(ஒட்ட நறுக்கணும்)

அம்பானிகளுக்கு…
லெனின் சிம்ம சொப்பனம்!
உங்க அக்கிரகாரத்துக்கு …
பெரியார் சிம்ம சொப்பனம்!

அந்த சிலையைக் கண்டு..
ஏன் கொல நடுங்கணும்?
தமிழன் அடிக்கும் அடியில்…
காவித் திமிரடங்கணும்!

(ஒட்ட நறுக்கணும்)

 

 

 

எச்ச ராஜாவை நெருப்பாய் பொசுக்கும் தமிழ் பேஸ்புக் !

2

பார்ப்பனக் கொழுப்பும் பான்பராக் எச்சிலும் ஒழுக பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற எச்ச ராஜாவுக்கு தமிழகம் சரியான பாடத்தைக் கற்பித்துக் கொண்டு வருகிறது.

எச்ச ராஜாவைத் தாண்டி அவரது முன்னோர்களான ‘குருஜிகோல்வால்கர்’ வரை துடப்பக்கட்டை பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாய் அய்யோ… எனக்கே தெரியாம நடந்துடுச்சி… அட்மின் பய போட்டு வூட்டு போய்ட்டான்… அந்த நேரத்துல நான் டெல்லி ஃபிளைட்ல இருந்தேன்னு… எஸ்கேப்-ஆக முயல்கிறார் எச்சையார்.

மெய்யுலகிலே மரணஅடி என்றால் பாஜகவை புரட்டி எடுக்கும் மெய்நிகர் உலகில் சொல்லவா வேண்டும். அவற்றில் சில….. உங்களுக்காக…

*****

சிவசங்கர் எஸ்.எஸ்

பெரியார் மீது செருப்பு வீசினால், திருப்பி கருத்தை தான் வீசுவார். பெரியாரின் பெயரன்களை அது போல் நினைத்து விட்டார் போலும் ராஜா. நீ செருப்பை வீசினால், திருப்பி நெருப்பாய் வீசுவோம் என நிரூபித்து வருகிறார்கள் பெயரன்கள். இணையம் கொதிக்கிறது. ஊருக்கு ஊர் எச்.ராஜாவின் படம் எரிகிறது. ஊடகங்களில் காறித் துப்பப்படுகிறது. தன் நிலைத்தகவலை தானே நீக்கி விட்டு, தன் முகத்தில் துப்பப்பட்டதை துடைத்துக் கொள்ள முயல்கிறார். இனி உன் வாழ்நாள் முழுதும் துப்பப்படும். துடைக்க, துடைக்க துப்பப்படும்….

Arul Ezhilan

ஆஹா அதற்குள் சிபிஎம் தோழர்கள் பூணூல் அறுப்பை கண்டிக்கத் துவங்கி விட்டார்கள். தோழர்களே இந்துத்துவத்தை எதிர்க்க 30 ஆண்டுகள் பழைய அணுகல் முறையை நீங்கள் இன்னும் வைத்திருக்கின்றீர்கள். அது துருப்பிடித்திருக்கிறது அதனால்தான் அடிக்கடி உங்களுடைய கைகளை அது பழாக்குகிறது…!

Aazhi Senthil Nathan

மமதா அக்கா எனக்கு பிடிக்கிறதுக்கு காரணம் இருக்கு:

“My ideology may differ with the CPI(M) but I will not tolerate it if someone tries to destroy the statues of leaders like Lenin.”

Aazhi Senthil Nathan

பெரியாரைப் போல ஒரு அதிர்ஷ்டக்கார கெழவன் யாரும் இல்லை. அவரால் பலன்பெற்றவர்கள் அவரை மறந்துவிட்டாலும், அவரால் “பாதிக்கப்பட்டவர்கள்” அவரை மறப்பதில்லை. ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் கடவுளைப் பற்றி அதிகம் சிந்திப்பவர்கள், பேசுபவர்கள் என்று கூறுவதுபோல, பெரியாரின் ஆதரவாளர்களைவிட எதிர்ப்பாளர்கள்தான் பெரியாரைப் பற்றி அதிகம் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ராஜா, நீ பேசு ராஜா! நீ ராசிக்கார ராஜா இல்லையா? இன்றைக்கு லட்சம் பேராவது வாட்ஸ்அப்பில் பெரியாரைப் பற்றி தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள்! முகநூலிலிருந்து தொலைக்காட்சிகள் வரை பெரியாரைப் பற்றி பேசுவார்கள். எதற்காக பெரியார் சிலையை நீ உடைக்கணும்னு சொன்னேங்கிறது பத்தி எல்லோரும் பேசணும். அது பத்தி நன்றிகெட்ட இந்த தமிழ்நாட்டுக்கு நல்லா தெரியணுமில்லையா? நல்ல வேலை செஞ்சிருக்க ராஜா! இன்னும் இன்னும் நீ பெரியாரைப் பத்தியும் அண்ணாவைப் பத்தியும் லெனினைப் பத்தியும் நிறைய பேசணும்னு ஸ்ரீராமபிரானை வேண்டிக்கொள்கிறேன்.

நாங்க பெரியாரையும் தன்மானத்தையும் மறந்திடும்போதெல்லாம் உன்னைப் போல ஒரு ராஜா தேவைப்படுது. இதோ பாரு. சமீபத்தில மருத்துவ மேற்படிப்பில பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ரத்து பண்ணீங்க. தமிழ்நாட்டில எதுவும் வெடிக்கல. அங்கே ஒரு முனகல், இங்கே ஒரு முக்கல். தட்ஸ் ஆல். அந்த அளவுக்கு தூங்கிட்டிருக்காங்க எங்க ஆளுங்க. இவங்கெல்லாம் விழிப்புணர்வு அடையணும்னா நீ – சொல்லக் கூடாது – செய்யணும். போய் ரெண்டு பெரியார் சிலையாவது உடைங்க பாக்கலாம். உங்க லெவலுக்கு நீங்கலெல்லாம் ஒடச்சுட்டுத்தான் போஸ்ட் போடணும் ராஜா. போ, போய் ரெண்டு பெரியார் சிலையை உடை. போட்டோ எடுத்து போடு. நாங்க பாக்கணும்.

செய் ராஜா செய். சேவையெல்லாம் செய். ப்ளீஸ் எங்கள ஏமாத்திடாதே.

Arul Ezhilan

பூணூல் அறுக்கப்பட்டது உண்மைதான். அறுத்தவர்கள் 4 பேர் அவர்களாகவே போய் சரணடைந்திருக்கிறார்கள். எச்.ராஜா உருவாக்கிய வன்முறையின் எதிர்வினை இது. பெரியார் சிலையை அகற்றுவோம் என்று எச்.ராஜா பதிவிட்ட உடன் அவனை கைது செய்திருந்தால் இந்த நிலை உருவாகி இருக்காது. இந்த வன்முறைகளுக்கு முழு பொறுப்பும் எச்.ராஜா அந்த பொறுக்கியை குண்டர் சட்டத்தில் கைது செய்! எச்.ராஜா கைதாகும் வரை பிராமணர்கள் கொஞ்ச நாள் பூணூலை கழட்டி வைத்து விட்டு சட்டை போடாமல் வெளியே வரும் படி பிரமாணர் சங்கம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

Gopinath Kubendran

தில் இருந்தால் பெரியார் சிலையை உடைக்கட்டும், அதற்கான விளைவுகளை அவர்கள் அறுவடை செய்ய தயாராக இருந்தால். – ஆசிரியர் கி.வீரமணி.
சேதப்படுத்தும் நோக்கில் பெரியார் சிலை மீது கை வைத்தால் கை துண்டாகும் – வைகோ.
பெரியார் சிலையை உடைக்க எச்.ராஜா அல்ல அவங்க முப்பாட்டன் வந்தாலும் முடியாது. – திருமா.

எச்.ராஜாக்கு பெரியார் சிலையை தொடும் தகுதி கூட இல்லை. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். – ஸ்டாலின்.
நாளை என்ன நாளை இன்றே முடிந்தால் தொட்டு பார்க்கட்டும். – சுப.வீ
எந்த இனத்திற்காக எச்.ராஜா பேசுகிறாரோ அந்த இனத்துக்குதான் இது ஆபத்தாய் முடியும். இதை அவர்கள்தான் ராஜாவுக்கு உணர்த்த வேண்டும். – கொளத்தூர் மணி.

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”. – பாவேந்தர். பாரதிதாசன்.

Suresh Kathan

லெனின் சிலை திரிபுராவில் உடைக்கப்பட்டது போல பெரியார் சிலை தமிழ்நாட்டில் உடைக்கப்படும்.

– H. ராஜா, BJP.

நான் பொதுவாக facebook ல் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. ஆனால், கெட்ட வார்த்தைகள் பேசும்போது தான் நாம் நாமாக இருக்கிறோம் என்று நம்புகிறவன்.

ஏலே… ராஜா…புடுங்கி… டம்மி பீசு… என் டிங்கி…என் டிஸ்க்கு… டாலாலி டொங்கு…
யே…பீக்காலி… டே…சன்னாடிக் கக்கு…யே மிண்டி… சாலி மூளி… சங்கி மங்கி… போடா… கொங்கிரிக் கிண்டி… சென்னெட்டி மொண்டி…
தொட்டுப் பார்றா…

( புள்ளிகள் உங்களுக்குத்தான்… பிடித்த கெட்ட வார்த்தைகளை இட்டு நிரப்பிக் கொள்ளவும்)

Keetru Nandhan

தன்னுடைய படத்தை செருப்பால் அடிக்க விரும்புகிறவர்கள் தொடர்பு கொண்டால், தனது சொந்த செலவில் படங்களை அனுப்புவதாக அறிவித்தவர் தந்தை பெரியார். எதிர்ப்புகளை கொள்கைப் பிரச்சாரத்திற்கான வழியாகப் பார்த்தவர் அவர். ஆனால், அப்படிப்பட்டவர் (நானறிந்த வரையில்) இரண்டு தருணங்களில் வன்முறைக்குத் தயாராகுமாறு தனது தொண்டர்களை அறைகூவி அழைத்திருக்கிறார்.

  1. இராஜாஜி குலக்கல்வி திட்டத்தை அறிவித்தபோது, “பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும். ஒவ்வொருவரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள். நான் நாள் குறித்து அறிவிப்பேன். அக்கிரகாரம் எரிய வேண்டும்” என்று வெளிப்படையாகவே அறிக்கை விடுத்தார்.
  1. காமராஜரைக் கொல்ல முயற்சி நடந்தபோது, அவரைப் பாதுகாப்பதற்காக இயக்கத்தவர்கள் எல்லோரும் 6 அங்குல நீளத்திற்கு கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார்.

இரண்டு முறையும் எச்சரிக்கும் முகமாக இவ்வாறு அறிவித்தாரே தவிர, அதை செயல்படுத்தவில்லை. இந்த இரண்டு தருணங்களில் மட்டும் ஏன் இவ்வளவு கோபத்துக்கு ஆளானார் என்றால், இரண்டும் தமிழர்களின் கல்வியோடு தொடர்புடையவை.

  1. குலக்கல்வித் திட்டம் நம்மை மீண்டும் நிரந்தர அடிமையாக்கிவிடும்.
  2. குலக்கல்வியை ஒழித்து, ஊர்தோறும் பள்ளிகள் திறந்து நமது கல்விக் கண்ணைத் திறந்தவர் காமராஜர்.

கல்வியறிவு கிடைத்தால், நமது மக்கள் பகுத்தறிவு பெற்று, இன இழிவுக்கு எதிராகப் போராடத் தொடங்குவார்கள் என்பதில் பெரியார் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அதற்கு ஊறு வரும்போது துடித்து எழுந்தார். இன்று, நீட் தேர்வினால் நமது பிள்ளைகளின் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. அதோடு, உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடும் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாம் அமைதியாக இருக்கிறோம்.

பெரியார் சிலைகளைக் காப்பதில் தமிழகம் துடித்து எழுந்தது உள்ளபடியே பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தகட்டமாக, அவர் உயிரினும் மேலாக மதித்த கல்வி உரிமையைக் காப்பதிலும் இந்தத் துடிப்பு தொடர வேண்டும்.

Aazhi Senthil Nathan

லெனின், பெரியார், அம்பேத்கர் – மூணு பேருக்கும் சேர்த்து ஓரே இடத்தில் சிலை வைக்கணும்னு ஆசையா இருக்கு. அந்த இடத்துக்கு ‘திரிபுர மைதானம்” என்று கூட பெயர்வைக்கலாம்!

Villavan Ramadoss

எச்சையார் ஒன்றும் ஏமாளியோ, லூசுக்கூமுட்டையோ இல்லை. இன்று ஊடக விவாதமாக இருந்திருக்க வேண்டியது ரஜினி மேட்டர்தான். ஆனால் சுத்தமான அய்யர் வகையறா ராஜா அசால்ட்டாக அந்த வாய்ப்பை அய்யங்கார் மருமகன் ரஜினியிடம் இருந்து பறித்துவிட்டார்.

கூட்டணி வைத்து பாஜகவுக்கு ஓரிரு சீட் கிடைத்தாலும் அது நாடார் லாபிக்கு செல்லவே வாய்ப்பு அதிகம். ஆகவே ஓவராக பேசி அதற்கும் ஆப்பு வைத்தாயிற்று. இரண்டு ஜாதிகளின் ஆதிக்கத்துக்கு ஒரே ட்வீட்டில் சங்கு ஊதும் வல்லமை வேறு யாருக்காவது உண்டா?

இதாண்டா அய்யர் வம்ச ராஜதந்திரம்

Abdul Hameed Sheik Mohamed

சிலைகளை உடை – கவிதை

உடை
சிலைகளை உடை
சிலைகளை உடைக்க
சிலைகள் தோன்றும்
சிலைகள் இடத்தில்
சிலைகள் மீளும்

சிலைகளை உடை
சிலைகளை உடைக்க
சிலைகள் கண் திறக்கும்
சிலைகள் பேசும்

சிலைகளை உடை
சிலைகளை உடைக்க
சிலைகளின் கைத்தடி சுழலும்
சிலைகளின் செருப்பு உயிர்த்தெழும்

சிலைகளை உடை
சிலைகளை உடைக்க
சிலைகளின் நிழல்கள் உடையாது
சிலைகளின் குரல்கள் உடையாது
சிலைகளின் சொற்கள் உடையாது
சிலைகளின் சரித்திரம் உடையாது

சிலைகளை உடை
சிலைகளைக் கண்டால்
உனக்கு துர்கனவுகள் வருகின்றன
உன் குற்றங்கள் உன் நினைவுக்கு வருகிறது
உன் அகங்காரத்தில் விழுந்த அடியை உன்னால் மறக்க முடியவில்லை
சிலைகள் உடைந்தால்
உன் பழம்பெருமைக்கு திரும்பிவிடலாம் என்று
யாரோ சொன்னதை நீ நம்பிவிட்டாய்
சிலைகள் உன்னைப்பார்த்து சிரிப்பது
உன் காதுகளில் விழவில்லை

சிலைகளை உடை
சிலைகள் என்பது சிலைகள் அல்ல
சிலைகள் என்பது கல்லால் ஆனதல்ல
சிலைகள் என்பது உலோகத்தால் ஆனதல்ல
சிலைகள் எமக்கு கும்பிட அல்ல
சிலைகள் எமக்கு களவாட அல்ல

சிலைகளின் அடியில் ஒன்று கூடுகிறோம்
சிலையில் எங்கள் ஆயுதங்களைத்தேய்த்து
கூர் தீட்டுகிறோம்
சிலைகளில் மோதி
எங்கள் பலத்தை சோதித்துக்கொள்கிறோம்
எங்களை வழிநடத்த ஒருவன் தேவைப்படுகிறது
அந்த சிலையை உடை
அந்தச் சிலைக்குள் இருப்பவன்
துயில் கலைந்து எழுந்துவருவான்
எங்கள் படையணியை
வழி நடத்திச் செல்வான்

சிலைகளை உடை
உடைத்துவிட்டு
நீ வீடு திரும்பும் வழியில்
நாங்கள் காத்திருக்கிறோம்
சிலைகள்போல

-மனுஷ்ய புத்திரன்

_______

தந்தை பெரியாரை அவமதித்த எச்.ராஜாவை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்! -மருத்துவர் இராமதாசு அறிக்கை

திரிபுரா மாநிலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் முன்னோடி லெனினின் சிலைகள் அகற்றப்படுவதை சுட்டிக்காட்டி, அதேபோல் தமிழகத்திலும் தந்தை பெரியாரின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று முகநூல் பதிவு ஒன்றில் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.இராஜா கூறியிருக்கிறார். மேலும், தந்தை பெரியாரை சாதிவெறியர் என்றும் கொச்சைப்படுத்தியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

வினாச காலே விபரீத புத்தி என்பார்கள். அதற்கான சிறந்த உதாரணம் தான் எச்.ராஜாவின் முகநூல் பதிவு ஆகும். தமிழ்நாட்டில் கோட்சேக்களின் சிலைகளை திறக்க வேண்டும் என்று கூறியவர்களிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ள எச்.இராஜா போன்றவர்கள் எதையாவது பேசி அரசியல் விளம்பரம் மற்றும் பரபரப்பைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தந்தைப் பெரியாரைப் பற்றிக் அநாகரிகமான விமர்சனங்களை இராஜா முன்வைப்பது இது முதல்முறையல்ல. கடந்த காலங்களில் இதேபோல் பலமுறை பேசியும் அதற்காக அவர் மீது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே இதுபோன்று பேசும் துணிச்சல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. எச்.இராஜாவின் இத்தகைய அநாகரிகமான செயலை இனியும் அனுமதிக்கக் கூடாது; பெரியாரால் சுயமரியாதை பெற்றவர்கள் இனி அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் உரிமைகள் பறிக்கப்பட்டு, அடக்கி வைக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுயமரியாதையையும், சமூக நீதியையும் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். அவர் போராடி இருக்காவிட்டால் தமிழகத்தில் பறிக்கப்பட்ட சமூக நீதி பறிக்கப்பட்டதாகவே இருந்திருக்கும். இந்திய அரசியல் சட்டத்தில் முதலாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்காது. இதற்காக தந்தைப் பெரியாரை கோடிக்கணக்கான கரங்கள் வழிபடுகின்றன; கோடிக்கணக்கான வாய்கள் வாழ்த்துகின்றன. அத்தகைய பெரியாரின் சிலையை எச்.இராஜா போன்றவர்களால் நெருங்கக் கூட முடியாது என்பதே உண்மை.

தந்தைப் பெரியார் சுயமரியாதையின் அடையாளம், சமூக நீதியின் அடையாளம், பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம். இத்தகைய வலிமை மிக்க அடையாளத்தை அழிக்க கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. இனியும் எந்தக் கொம்பனாலும் தந்தை பெரியாரின் சிலையை அகற்றுவதற்கு அல்ல…. அசைக்கக்கூட முடியாது. அதை பாட்டாளி மக்கள் கட்சியும், அதன் தொண்டர்களும் அனுமதிக்க மாட்டார்கள். இதை அறைகூவலாகவே விடுக்கின்றனர்.

தந்தை பெரியார் என்ற ஆலமரத்தின் விழுதுகளின் ஒன்று என்று கூறிக்கொள்ளும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. பெரியாரின் வழி வந்தவர்களின் ஆட்சியில் அவரது சிலையை அகற்றுவோம் என்று கூற எச்.இராஜா போன்றவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது என்பது தான் மிகப்பெரிய வினா. அதிமுக இடம் கொடுத்ததால் எச். இராஜா போன்றவர்கள் ஆட்டம் போடுகின்றனர். தந்தைப் பெரியாரின் சிலையை அகற்றப்போவதாகக் கூறிய எச்.இராஜா அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் நல்லிணக்கத்தையும், சட்டம் & ஒழுங்கையும் குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் எச்.இராஜாவை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

Parimala Rajan

பெரியார் சிலை மீது எவன் கை வைத்தாலும் எங்கள் குறி சங்கர மடத்தின் மீது தான் பாயும் ! ஜாக்கிரதை !

Villavan Ramadoss

எதுக்கு சொறிநாயோட சண்டைன்னு சிலர் ஒதுங்கிப் போகலாம்.
சொறிநாயோடு எப்படி சண்டை போடுவது என சிலர் பயந்து சும்மாயிருக்கலாம்.
சொறிநாய்தானே என்ன பண்ணிடும்னு சிலர் அலட்சியமாக இருக்கலாம்.
போயும் போயும் சொறிநாயோட சண்டை போடனுமா என கூச்சப்பட்டு சிலர் அமைதியாய் இருக்கலாம்.

எதிர்வினையும் உணர்வும் வேறாக இருப்பினும் எங்கள் எல்லோருக்கும் இந்துத்துவ தீவிரவாதிகள் அனைவருமே சொறிநாய்கள்தான். அந்த சொறிநாய்களை கல்லெடுத்து அடிக்கும் காலம் வரும்போது இங்கே எல்லோரும் அதனை ஆதரிப்பார்கள். சுபம்.

Umamaheshvaran Panneerselvam

பெரியார் சிலையை உடைப்பேன் என்று சொன்னதும் கொதித்தெழுந்தது பாதிக்கும் மேல் ஆத்திகர்கள்.
பெரியார் சிலையை உடைத்த கயவனை புரட்டி எடுத்ததில் பாதிக்கும்மேல் ஆத்திகர்கள்..
பெரியாரைப் போற்ற நாத்திகனாய் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.
சமூகநீதிக்கு நன்றியுள்ளவனாய் இருந்தாலே போதும்…

இதெல்லாம் சிலையை பிடித்துக்கொண்டு சித்தாந்தம் என்றால் “கூறு எவ்வளவு ரூபாய் ?” என்று கேட்கும் அற்பர்களுக்கு புரியாது.
பெரியார் என்பவனை ஒற்றைக் கிழவனாக அவர்கள் பார்க்கிறார்கள். பெரியார் இங்கே ஏற்படுத்தியிருப்பது Nuclear Fission. சமூகநீதியின் Chain Reaction.

ஹோமகுண்ட புகையால் Radiation குறையும் என்று நம்பும் ஈத்தரைகளுக்கு ஈ.வெ.ராவை எல்லாம் புரிந்துகொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் சமூகநீதி தான் ஆன்மிகம்.
அதை விஞ்சிய வழிபாடு வேறில்லை.

தமிழகத்தின் அரசியல் என்பது சமூகநீதியை சுற்றி தான்.
ஆன்மிக அரசியல் என்றாலும் அது இது தான்.

Anbe Selva

பலவருடம் முன்னால் சென்னை உயர்நீதி மன்றத்தில் ராமகிருஷ்ணா மெசின் நிறுவனம் ஒரு வழக்கு தொடர்ந்தது தங்கள் நடத்தும் பள்ளியின் முன்னால் இருக்கும் பெரியார்சிலையை அகற்ற உத்தரவிடவேண்டும் என நீதிமன்றத்தில் கோரியது வழக்கானது நீதியரசர் சந்துரு முன்னால் விசாரிக்கபட்டது அப்போது நீதியரசர் சொன்ன வரிகள் இவை;

“ஏன் அவரின் உயிரில்லாசிலை உங்களை பதட்டபடவைக்கிறது அவர் வர்ணாசிரம முறைகளை அடித்து நொறுக்கியதை குழந்தைகளுக்கு கற்பியுங்கள் சாதிமதங்கள் இந்த நாட்டின் பீடித்தநோய் என அவரை அடையாளபடுத்தி குழந்தைகளுக்கு போதியுங்கள் அவர் அகற்றபடவேண்டியவரல்ல நினைவு கூற படவேண்டியவர் என வழக்கை தள்ளுபடி செய்தார் ”அம்பேத்கார் ஓளியில் என் தீர்ப்புகள் புத்தகத்தில் நீதியரசர் சந்துரு

முத்துராமலிங்க தேவரை பின்பற்றுவதாக சொல்லும் எச்ச ராஜா, முத்துராமலிங்க தேவரின் சாதி மக்களுக்கும் உரிமையான மருத்துவ படிப்பில் 27% ஓபிசி இடஒதுக்கீடு நேற்று நீக்கப்பட்டதற்கு எதிராக பேசமாட்டான், மாறாக அவர்களுக்கு அந்த உரிமையை கிடைக்காமல் தடுப்பதையே காலம்காலமாக செய்துவரும் கும்பலாகவும் இருக்கிறான்.

ஆனால் பெரியாரோ, முத்துராமலிங்க தேவரை கடுமையாக விமர்ச்சித்தவராக இருந்தாலும், தேவர் சாதி உள்ளிட்ட BC, MBC, SC, ST மக்களின் கல்வி & வேலை உரிமைக்கும் சாகிற வரைக்கும் போராடியவராய் இருக்கிறார். பார்ப்பனிய நரித்தனம் என்பது நயவஞ்சகமானது என்பதை விளங்கி கொள்ளும் இடம் இதுதான்.

தனது சனாதன தர்மத்துக்கு ஆபத்து என்றவுடன் தாங்கள் மதிக்கும் முத்துராமலிங்க தேவர் சாதியை சேர்ந்த தாயை தேவடியாள் என்று பொதுவில் திட்டியவன், வைரமுத்துவை கீழ்த்தரமாக மிரட்டியவர்கள் இப்போது பெரியார் விஷயத்தில் அரசியல் ரீதியாக கார்னர் செய்யப்பட்டவுடன் பெரியாருக்கு எதிராக தேவர் சாதி மக்களை திரும்புகிறான்.

எவ்வளவு தந்திரமான எங்களையே ஹாண்டில் செய்துட்டாரே என்றுதான் பெரியார் மீது அந்த கும்பலுக்கு வரலாற்று வன்மம்.. அந்த தந்திரத்தை நாமும் கற்றுக் கொள்வோம்..

Villavan Ramadoss

அந்த போஸ்ட் என் அட்மினுக்குத்தான் பிறந்தது. இனிஷியல் மட்டும்தான் என்னுது. – எச்.ராஜா.

அன்சாரி முஹம்மது

காவிகள் ஏதோவொரு மறைமுக சதித்திட்டத்தின் பின்னணியில்தான் விளையாடி பார்க்க நினைக்கிறார்கள். வினையை அறுவடை செய்யப்போகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். இது குஜராத் அல்ல. இது திமுக ஆட்சியாக இருந்திருந்தால் இவன் இதுவரை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்டிருப்பான். ஆனால், நடப்பது காவி அடிமைகளின் ஆட்சி என்பதுதான் இந்த மண்ணின் சாபக்கேடு.

Vikkranth Uyir Nanban

யாருக்கும் தெரியாம நைட்ல சிலைகிட்ட போய் வீரத்தை காட்டுனா அந்த கல் எப்படி தடுக்கும்.. வைகோ காலைலயே சரியா சொன்னாரு யாருக்கும் தெரியாம நைட்லதான் வருவானுங்கன்னு..

அட முட்டா காவி கபோதீஸ்… இந்த சிலையை இந்த நாள்ல உடைக்க போறேன்னு சொல்லிட்டு வா.. நாங்களும் வர்றோம் பாத்துக்லாம்ன்னுதான் சொன்னோம்.. இப்போ என்னடா பொதுமக்கள்ட்ட மாட்டி அடிவாங்கியிருக்கீங்க.. இவனுங்களுக்கு கேம் ரூல்சே தெரியல… விட்டா வீட்டுல பெரியார் சிலை செஞ்சு வீட்லயே ஒடைச்சிப்பானுங்க போல..

Palani Shahan

இந்த நொடி வரை வைரமுத்து மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால் ஹெச்.ராஜா வருத்தம் தெரிவிக்கவேண்டிய சூழல்… திமிறி எழுந்த கிழவனே ராஜாவின் திமிரை அடக்கினார். இப்போது தெரிகிறதா தமிழிசை, இது பெரியாழ்வார் பூமியா, பெரியார் பூமியா என்று?

பதிவை நீக்கியுள்ளார் எச்.ராஜா. நேற்று முன்தினம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி மூக்கறுபட்ட எச்.ராஜா, அந்தப் பதிவை முகநூலில் இருந்து நீக்கினார். இன்று பெரியார் பற்றிய தனது பதிவையும் நீக்கியுள்ளார். அதுவும் சில மணி நேரத்திற்குள்.

ஒரு முகநூல் பதிவையே தாக்குப் பிடிக்க இயலாதவரெல்லாம் மத்தியில் ஆளும் கட்சியின் தேசியச் செயலாளராக இருக்கிறார். இவரையெல்லாம் நம்பி தேசபக்தர்கள் கொஞ்ச நேரத்தில் பொங்கித் தீர்த்துவிட்டார்கள். ஆனாலும் கலங்கவே மாட்டார்கள். ஏனென்றால் ‘துப்பினால் துடைத்துக்கொள்வோம்’ என்கிற ரகம்தானே பா.ஜ.க.வினர்.

Abdul Hameed Sheik Mohame

பிக் ப்ரேக்கிங் நியூஸ்:

தேசிய செயலாளர் பொறுப்பிலிருந்து எச்.ராஜா நீக்கப்பட்டு அந்தப் பொறுப்பில் எச்.ராஜாவின் அட்மின் நியமிக்கப்பட்டார். அமித் ஷா உத்தரவு

ஸ்டாலின் பெலிக்ஸ்

H Raja ஷர்மா ஜி,

லெனினுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கும் நீங்கள், ‘ரஷ்ய தொழில் நுட்பத்துடன் கூடிய அணுவுலை நமக்கு தேவையா?’ என்று ஏன் கேட்கவில்லை? நாக்பூரில் இருக்கும் RSS விஞ்ஞானிகளை வைத்து நாம் ஏன் ஒரு அணுவுலை அயோத்தியில் உருவாக்க கூடாது!!!

AD Bala

முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. இந்த நேரத்தில் ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னருக்கு எதிராக 1917ம் ஆண்டு பிப்ரவரியில் புரட்சி வெடித்தது. முடியரசை வீழ்த்திய கையோடு புரட்சித் தீயை அணைத்துவிடவேண்டும் என்று முதலாளித்துவம் விரும்பியது.

ஆனால், போர் வேண்டாம், சமாதானம் வேண்டும், உழைக்கும் மக்களுக்கு அரசிலும், தொழிற்சாலைகளிலும் உரிமை வேண்டும் என்ற முழக்கத்தோடு புரட்சியின் அடுத்த கட்டத்தை திட்டமிட்டு நடத்தியவர் லெனின். அதன் மூலம் வெற்றிகரமாக உலகின் முதல் உழைக்கும் மக்களின் அரசைப் படைத்தது மட்டுமல்ல, உலகப் போரின் தீ மேலும் பரவாமல் தடுக்க உதவியவர் அவர்.

கம்யூனிசம் பரவும் என்ற அச்சமே உலகில் மக்கள் நல அரசு என்றக் கருத்தாக்கம் பரவவும், தொழிலாளர் உரிமைகளை மதிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகவும் காரணமானது. முதல் உலகப் போரின் போது ஜாருக்கு எதிராக நடந்த மக்கள் புரட்சி கடைசியில் கம்யூனிசப் புரட்சியாக மலர்ந்தது ஆளும் வர்க்கங்களுக்குப் பாடமானது. கம்யூனிசம் உலகம் முழுவதும் பரவும் என்ற அச்சத்தை லெனின் உருவாக்கிய ரஷ்யா தந்துகொண்டே இருந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த நேரம். மேற்கத்திய நாடுகளின் காலனிகளில் எழுந்த நெருக்கடிகளும் அதிருப்தியும் புரட்சிக்கு வித்திட்டு இருந்தால் என்ன ஆகியிருக்கும். அப்புறம் ரஷ்யாவில் நடந்த கதைதான். அது காலனி ஆதிக்க எதிர்ப்போடு நின்றிருக்காது. கம்யூனிசப் புரட்சிகளாகி இருக்கும். இந்த அச்சமே, ஆண்ட நாடுகள் தங்கள் அடிமை நாடுகளில் சாதகமான அரசமைப்பை விட்டுவிட்டு, வெளியேறக் காரணமானது. இந்தியாவும் அப்படியே விடுதலை பெற்றது.

விடுதலை பெற்ற முந்தைய காலனி நாடுகளுக்கு ராணுவத் தொழில் நுட்பங்களையும், அறிவியல், வானியல் நுட்பங்களையும் வழங்கி ஒத்துழைத்தது லெனின் உருவாக்கிய சோவியத் யூனியன்.

முதல் முதலில் இந்தியர் ஒருவரை – ராகேஷ் ஷர்மா – விண்வெளிக்கு இட்டுச் சென்றது ரஷ்ய விண்கலம் சோயுஸ்தான். இன்று ஓங்கி நிற்கும் இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கும், ராணுவ ஏவுகணைத் திட்டங்ககளும் கம்யூனிச ரஷ்யாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு குழந்தையாக நடை பழகியவைதான்.

இப்படி ஏழை நாடுகளின் அறிவியல் வளர்ச்சியில் உறுதுணையாக ரஷ்யா நிற்கக் காரணம் அது கம்யூனிச ரஷ்யாவாக இருந்ததுதான்.

நாம் பெற்றுள்ள குறைந்தபட்ச அரசியல் உரிமைகளுக்கும், பணியிடத்தில் நாம் அனுபவிக்கும் குறைந்தபட்ச தொழிலாளர் உரிமைகளுக்கும், மக்கள் நல அரசு எனும் கருத்தாக்கத்தின் சுகத்துக்கும் பின்னால் லெனின் என்னும் மனிதரின் வியர்வை கொஞ்சம் இருக்கிறது.

அவர் ரஷ்யத் தலைவர் அல்லர். உலகத் தலைவர்.

Parimala Rajan

காவிகளே,

நீங்கள் கை வைப்பது எங்கள் தலைவர்களின் சிலைகள் மீதல்ல, இந்திய ஒன்றியத்தின் இறுக்கத்தின் மீது.

“உடைந்து போகும்”

Villavan Ramadoss

இதுவரைக்கும் கலவர ரிஸ்க்கைதான் சூத்திரவாகிட்ட தள்ளிவிட்டேள்,…இப்போ கருத்தோட ரிஸ்க்கையும் சூத்திரவாகிட்ட தள்ளிவிடறேள்… அட்மின் நீக்கம் – எச்சையார்.

அழகப்பன் அப்துல் கரீம்

அழுத்தமான பதிவு!

”எச்.ராஜா எந்த இனத்திற்காக பேசுகிறாரோ அந்த இனத்திற்கே ஆபத்தாக வந்துவிடலாம் என்பதால் அந்த இனத்தை சார்ந்தவர்களை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து எச்.ராஜாவுக்கு அறிவுரை சொல்லுங்கள், அமைதியாக இருக்கச்சொல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதை அந்த இன மக்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன்.”

– தோழர் கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

Dhalapathi Raj

ஈவெரா சிலைகளை அகற்றுவோம்!
-எச்.ராஜா ட்விட்டர் பதிவு.

‘அவனுக்கு என்ன நாலு செக்யூரிட்டியோட சுத்திண்டு இருக்கன். நம்மவா நாளைக்கு ரோட்டுல நடமாடுறதா வேணாமா?’
-பார்ப்பனர்கள் பீதி!

எச்.ராஜா ட்விட்டர் பதிவு உடனடியாக நீக்கம்!
-தற்போதைய செய்தி.

பாப்பானுக்கு முன்புத்தி கிடையாது!
-பெரியார்.

Arunachalam Elagnairu

லெனின் புரட்சி செய்தார்
சிலை வைத்தார்கள்..

அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்தார்.
சிலை வைத்தார்கள்.

பெரியார் மூடத்தனத்தை எதிர்த்தார்
சிலை வைத்தார்கள்.

காந்தி விடுதலைப்போரில் முன்நின்றார்
சிலை வைத்தார்கள்

அண்ணா திராவிட நாடு என்றார்
சிலை வைத்தார்கள்.

ஒங்க கட்சியில் இப்பிடி ஒருத்தர் இருந்தா சொல்லுங்க..சிலை வைச்சுடலாம். மசூதிய இடிச்சவன் .. பாதிரியார எரிச்சவன்.. தேசத்த காட்டிக்குடுத்தவன், பிரிட்டிஷ்காரன்கிட்ட மன்னிப்பு கேட்டவன் இப்பிடியான ஆளா இருந்தா எப்பிடிப்பா சிலை வைப்பாங்க..

போ..போயி..பெரியார் சிலையாண்ட பத்து தோப்புக்கரணம் போட்டுட்டு போ..

Syed Abdul Kadhar

நபியை கார்ட்டூன் வரைந்து இழிவு படுத்திய போது, கிளர்ந்தெழுந்த தமுமுகவும் தவ்ஹீது ஜமாதும், பெரியாரை இழிவு படுத்தும் போதும் கிளர்ந்தெழ வேண்டும் என்கிற நப்பாசை எழுகிறது. அது தேவையும் கூட.

சிறுபான்மையினர் மீதான ஆர்.எஸ்.எஸ் வன்முறைகளுக்கெல்லாம் ஒரு தடுப்பணையாக பெரியார் இருக்கிறார். அந்த தடுப்பணை உடைக்கப்படும் போது, ஆபத்து யாருக்கு என்று சொல்லித் தெரிய வேண்டுமா?

Vijayasankar Ramachandran

திரிபுராவில் லெனின் சிலையை நான் ஊரில் இல்லாதபோது அட்மின்கள் தகர்த்துவிட்டனர். அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

Vijayasankar Ramachandran

அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் இந்தியாவும் சிரியா மாதிரி ஆகிவிடும் என்று பகிரங்கமாக மதவாத அரசியல் பேசியிருக்கிறார் ஆன்மீகம் பேசும் சிரி சிரி ரவிசங்கர். இரு மதக் குழுக்களிடையே பதட்டம் ஏற்படுத்தும் இந்தக் கருத்து இந்திய தண்டனையியியல் சட்டத்தின் 153A யின் கீழ் தண்டனைக்குரியது.

Section 153A:- Promoting enmity between different groups on ground of religion, race, place of birth, residence, language, etc., and doing acts prejudicial to maintenance of harmony

பாபர் மசூதி இடிப்புக்குப் பின் சண்டே அப்சர்வர் என்கிற பத்திரிக்கைக்கு இந்த சுவாமி அளித்த பேட்டியில் தெய்வீகம் என்றால் என்ன என்று கேட்கப்பட்டது. “தெய்வீகம் எல்லா இடத்திலும் இருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் உள்ளேயும் இருக்கிறது” என்றார்.
இதை அடுத்து அயோத்திப் பிரச்சினையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. சற்றும் தாமதிக்காமல், ‘ராமர் பிறந்த அந்த இடத்தை நாம் எப்படி அவர்களுக்கு விட்டுத்தர முடியும்” என்று பதிலளித்தார். தெய்வீகம எல்லா இடத்திலும் இருக்கிறதென்றால், அயோத்திதான் புண்ணிய பூமி என்று எப்படிச் சொல்லலாம் என்று நிருபர் கேட்கவில்லை.
இது வாழும் கலையா? வம்பு வளர்க்கும் கலையா?

 

விழுப்புரத்தில் பெரியார் கையால் எச்ச ராஜாவுக்கு செருப்படி ! படங்கள்

0

விழுப்புரம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக, திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ். பாஜக கிரிமினல் கும்பல் லெனின் சிலையை இடித்ததைக் கண்டித்தும், பாஜகவின் தேசியச் செயலர் எச்.ராஜா லெனின் சிலையைப் போல் பெரியார் சிலையும் வீழ்த்தப்படும் எனத் திமிரெடுத்துக் கூறியதைக் கண்டித்தும், எச்.ராஜாவை செருப்பல் அடிக்கும் போராட்டம் நடைபெற்றது. எச். ராஜா முகமூடி  அணிந்த நபரை பெரியார் முகமூடி அணிந்தவர்கள் கயிறால் இழுத்துச் சென்று செருப்பால் அடித்தனர்.

மக்கள் அதிகாரம்
விழுப்புரம்

******************

திரிபுராவில் லெனின்  சிலை உடைப்பை கண்டித்தும், முகநூலில் லெனின் சிலை போல பெரியார் சிலையும் உடைக்கப்படும் என பதிவிட்டிருந்த எச்.ராஜாவை கண்டித்தும் விருதை BSNL அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை தோழர் மணியரசன் தலைமையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும் மாணவர்கள் பேரணியாக சென்றனர்.

விருதை பேருந்து நிலையம் நுழைவு வாயில் சென்றவுடன் பேரணியானது முற்றுகை ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 20- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விருத்தாசலம்
தொடர்புக்கு : 9788808110

 

மகஇக அதிரடி – சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை ! கோல்வால்கருக்கு செருப்படி !

1

திரிபுராவில் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் சிலையை உடைத்து வெறியாட்டம் போட்டது பாஜக கும்பல். அதைத்தொடர்ந்து பாஜக -வின் எச்சை ராஜா தமிழகத்திலும் பெரியாரின் சிலை அகற்றப்படும் என பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோட பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். -ன் ‘குருஜி’ என அழைக்கப்படும் அதன் இரண்டாவது அகில இந்தியத் தலைவர் “கோல்வால்கர்” படத்தை எரித்தும் செருப்பால் அடித்தும் நேற்றே மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் சென்னையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று (07.03.2018) பாஜக -வின் அலுவலகத்தை முற்றுகையிட்டு புரட்சிகர அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்வினை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர் முகுந்தன் தலைமையேற்று நடத்தினார்.

இப்போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புத் தோழர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் உங்களது கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் போராட்டத்திற்கு இடம் ஒதுக்கித் தருகிறோம் என நைச்சியமாகப் பேசியது போலீசு. ஒருபக்கம் இவ்வாறு பேசிக்கொண்டே ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யச் சொல்லி  உத்தரவிட்டார் காவல்துறை அதிகாரி AC செல்வம்.

அதைத் தொடர்ந்து அங்கேயே முழக்கமிட்டு தங்களது போராட்டத்தை தொடங்கினர் தோழர்கள். போராட்டத்தில் பங்கு பெற்றவர்களை பெண்கள் கைக்குழந்தைகள் என்றும் பாராது குண்டுக்கட்டாக தூக்கிவீசியது . போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தியது போலீசு.

ஆன போதும் கோல்வால்கர் மற்றும் எச்ச ராஜாவின் படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் இது பெரியார் மண் என்று முழங்கினர் தோழர்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தோழர் முகுந்தன் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்: “தோழர் லெனின் பற்றியும் பெரியார் பற்றியும் பேச எச்.ராஜா -விற்கு எந்த அருகதையும் கிடையாது. லெனின் இந்த நாட்டு தலைவரா? என அவர் கேட்டுள்ளார் உலகப் பாட்டாளிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் தலைவர் தோழர் லெனின். அவரது சிலையை உடைத்து அதைக் கொண்டாடுவதும், தமிழக மக்களின் சுயமரியாதைக்காகவும் பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என சொல்வதும்ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பாசிச மனோபாவத்தைத் தான் காட்டுகிறது. இதனை மக்கள் ஒருபோதும் ஏற்க முடியாது” எனக் கூறினார்.

தற்போது எச்.ராஜா முகநூலில் தவறாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது. நான் அவ்வாறு சொல்லவில்லை எனக் கூறிய பின்னர் ஏன் போராட வேண்டும் என ஒரு ‘பத்திரிக்கையாளர்’ கேட்டதற்கு “பாஜக கும்பலின் வேலையே இதுதான் ஒருவர் கொழுப்பெடுத்து பேசுவார் மற்றொருவர் அது அவருடைய கருத்து எனக் கூறுவார், இதையே இவர்கள் நாடுமுழுவதும் செய்து வருபவர்கள்; கூசாமல் பொய் பேசுபவர்கள். ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் கூட ஆண்டாள் சன்னிதியில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என திமிறாக கூறியது பார்ப்பனக் கும்பல். ஆக வைரமுத்துவிற்கு ஒரு நீதி பார்ப்பனக் கொழுப்பெடுத்த எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா?” என கேட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தொலைக்காட்சிகளில் கூறுகையில் இது பெரியாரின் மண் என்பதை நிரூபிப்போம் ! என்றும் அகற்றப்பட்ட தோழர் லெனின் சிலையை அங்கு மீண்டும் நிறுவ வேண்டும் என்றும் கூறினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி.
தமிழ்நாடு.

 

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் ! பென்னாகரம் – சென்னை நிகழ்வுகள் !

0

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம்!
பொதுக்கூட்டம்

நாள்: 8-3-2018 வியாழன் மாலை 5 மணி
இடம்: டெம்போ ஸ்டேண்டு அருகில், பென்னாகரம்.
தலைமை : தோழர் பழனியம்மாள், பெண்கள் விடுதலை முன்னணி, பென்னாகரம்.

பெண்கள் அடிமையாய் இருந்ததெல்லாம் அந்தக் காலம். பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள், பி.வி.சிந்து, மிதாலிராஜ், இந்திரா நூயி போன்றவர்களைக் காட்டி பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்கிறார்கள். ஆனால் இதே நாட்டில் தான் பெண் குழந்தை என்ற காரணத்திற்காக கருக்கலைப்பு நடக்கிறது. நம் பக்கத்து வீட்டுப் பெண் குழந்தைகள் தொடங்கி, ஐ.டி துறை, காவல்துறையில் பணியாற்றக்கூடிய பெண்கள் என பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. சாதியரீதியாகவும், மத ரீதியாகவும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதைவிடக் கொடுமை, பெற்ற தாயே தன் பெண்குழந்தையை வீட்டில் பூட்டி வைத்துதான் வெளியே செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு என்னாகுமோ? என்று வயிற்றில் நெருப்புக் கட்டிக் கொண்டு பயந்து பயந்து வாழ்கிறோம். இதுவா பெண் சுதந்திரம்?

ஒவ்வொரு நாளும் ஏறுகிற விலைவாசியும் நம் கழுத்தைதானே அறுக்கிறது. தண்ணிரில்லை, விவசாயம் இல்லை, அதனால் விவசாய வேலையும் இல்லை. எனவே பிழைப்பிற்காக திருப்பூருக்கும் பெங்களுரூக்கும் வேலைக்குச் செல்கிறோம். கொளுத்தும் வெயிலில் கட்டிட வேலைசெய்தாலும், கால்கடுக்க பகலில் வேலை செய்தாலும் நமது உழைப்புக்கு நியாயமான கூலிதான் கிடைக்கிறதா? இல்லையே! 10 மணி நேரம் வேலை செய்தாலும் நமக்கு கண்ணீரும், கடன்தானே மிச்சமாகிறது.

இந்தக் கூலியையும், டாஸ்மாக், பேருந்துக் கட்டண உயர்வு என்ற பெயரில் வழிப்பறி செய்கிறது எடப்பாடி அரசு. டாஸ்மாக்கை மூடு என்று போராடினால் போலீசைக் கொண்டு ஒடுக்குகிறது. இதை எல்லாம் மூடி மறைப்பதற்காகத்தான், நாள்தோறும் அரங்கேறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையோ, விலைவாசி உயர்வையோ, டாஸ்மாக்கையோ மூட வக்கில்லாத இவர்கள் நமக்கு 33 % இட ஒதுக்கீடு தருகிறோம் என்கிறார்கள்.

பெண் என்பவள் ஆணின் அடிமை, ஆண்களுக்கான போகப் பொருள் என்பதுதானே இந்த சமூகத்தின் பொதுப்புத்தியாக இருக்கிறது. அவ்வளவு ஏன்? ஆனானப்பட்ட சிவபெருமானே பெண் என்பவள் ஆணுக்கு அடிமை என்றுதானே கூறுகிறார் திருவிளையாடல் புராணத்தில். இதைத்தானே ராஜா ராணி, செம்பருத்தி போன்ற சீரியல்களும், அழகுப்பொருட்கள் விளம்பரங்களும் அன்றாடம் நம் மூளைக்குள் திணிக்கின்றன.

பெண்களைப் பற்றி இப்படிப்பட்ட பொதுப்புத்தியுள்ள சமூகத்தை மாற்றாமல் வெறும் 33% சதவீதத்தால் மட்டும் நமக்கு உரிமைகள் கிடைத்துவிடும் என்று கூறி நம் காதில் பூ சுற்றுகிறார்கள். இந்த ஆணாதிக்க சமூகத்தை மாற்றுவதன் மூலம்தான் நம்முடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இதெல்லாம் சாத்தியமா? என்று நாம் நினைக்கலாம்.

ஏன் முடியாது? பெண்களுக்கு ஜனநாயகம் வழங்கிய ஐரோப்பா போன்ற நாடுகளிலும், ரஷ்யாவிலும், சீனாவிலும் நம்மைப் போன்ற பெண்கள் போராடிதான், ஆண்-பெண் பேதமற்ற, அரசியல் உரிமை, பொருளாதார உரிமைகள் கொண்ட தங்களுக்கான ஒரு புதிய சமூகத்தைப் படைத்தார்கள். நம் நாட்டிலும் தேவதாசி முறை ஒழிப்பு, பெண்கல்வி, சொத்துரிமை என அனைத்தும் பெரியார் -அம்பேத்கர் தலைமையில் பெண்கள் போராடிதானே கிடைத்தன. மூடப்பட்ட டாஸ்மாக்குகளும் பெண்களின் கடப்பாரையால் தானே மூடப்பட்டன.

இந்த சட்டத்தாலோ, போலீசாலோ இன்று நாம் அனுபவிக்கிற பாலியல் பிரச்சினை, விலைவாசி உயர்வு, டாஸ்மாக் பிரச்சினை, ஆணாதிக்க, சாதி மத ஒடுக்குமுறை என ஏதாவது தீர்ந்திருக்கிறதா? இல்லை என்பதுதானே கடந்தகால, நிகழ்கால உண்மையாக இருக்கிறது. எனவே நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியது ஒரு சமூக மாற்றமே என்பதை உணர்வோம். அதற்காக இந்த மகளிர் தினத்தில் பெண்களாகிய நாம் அமைப்பாக ஒன்றிணைவோம்! வாருங்கள்.

டாஸ்மாக், விலைவாசி உயர்வா, பாலியல் பிரச்சனையா ஒரே தீர்வு சமுக மாற்றமே!

சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்!

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

இவண்
பெண்கள் விடுதலை முன்னணி

பென்னாகரம் வட்டம்.

***

உழைக்கும் மகளிர் தினம் – மார்ச் 8

07-03-2018 மாலை 5 மணி
பார்கவுன்சில் கட்டிடம்
சென்னை உயர்நீதிமன்ற வளாகம், பாரிமுனை

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
சென்னை – 9094666320