Saturday, August 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 646

ஓ.என்.ஜி.சியை எதிர்த்து தஞ்சையில் விவிமு ஆர்ப்பாட்டம்

0
  • ஓ.என்.ஜி.சி யின் எண்ணெய் எரிவாயு துரப்பண பணிகள் மக்கள் எதிர்ப்பையும் மீறி விரிவாக்கம்!
  • அரசின் மனிதகுல விரோத நடவடிக்கை!
  • தலைமுறைகளைக் காக்க தடியெடுப்போம்!

டந்த மாதம் ஆந்திர மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி- யின் ( கெயில் ) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துரப்பண பணிகளின் போது ஏற்பட்ட பெரும் விபத்தினை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் ஓ.என்.ஜி.சி க்கு எதிரான பொதுக்கருத்து வலுவடைந்து வருகிறது. ஓ.என்.ஜி.சி யின் துரப்பண பணிகளால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தல்கள் குறித்து பசுமை விகடனில் கு. ராமகிருஷ்ணன் என்பவர் பல்வேறு ஆதாரங்களுடன் தொடர் கட்டுரைகளாக எழுதிவருகிறார்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சியில் தீபாம்பாள்புரம், நெய்குன்னம் ஆகிய பகுதிகள், திருவாரூர் மாவட்டத்தில் அடியக்காமங்களம், கோவில்களப்பால் உள்ளிட்ட பகுதிகள், மன்னார்குடி வட்டத்தில் கூத்தாநல்லூர் ஆகியவற்றில் ஓ.என்.ஜி.சி யின் துரப்பண பணிகள் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. இது குறித்து மக்களுக்கே தெரியாமல் கண்துடைப்பு நாடகத்திற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட ஆட்சியர்களால் மாவட்ட வாரியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்டன. எமது அமைப்புகள் உள்ளிட்டு பல்வேறு விவசாய சங்கங்கள் அனைத்தும் ஓ.என்.ஜி.சி திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் ஒருமித்த எதிர்ப்பு என்று கூட்ட குறிப்பில் பதிவு செய்துவிட்டு மறுபுறம் போலீசு பாதுகாப்புடன் துரப்பண பணிகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. இனி களத்தில் இறங்கி மக்களைத் திரட்டி தடுத்தாக வேண்டிய நிலையே உள்ளது.

கருத்து கேட்புக் கூட்டங்களில் ஆவேசமாக பேசிய போலி கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய சங்கங்கள் உட்பட பலரும் கூட்டத்திற்கு பிறகு மவுனம் சாதிக்கின்றன. பாதிக்கப்பட உள்ள கிராம மக்களைதிரட்டி எதிர்ப்பு போராட்டங்களை ஒருமுகப்படுத்தும் வகையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக்கலைக்குழுவினருடன் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினரும் களத்தில் இறங்கி செயல்பட துவங்கினோம்.

இதன் முதல் கட்டமாக தஞ்கை மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சியில் தீபாம்பாள்புரம், நெய்க்குன்னம், மலையபுரம், எக்கல், பள்ளியூர், களஞ்சேரி, விண்ணப்புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சார செய்து போராட்டக் கமிட்டிகள் கட்டப்பட்டன. இதில் பெரும்பாலான கிராம மக்கள் ஆரம்பத்தில் இத்திட்டத்தின் பாதிப்புகள் குறித்து ஏதும் அறியாமல் இருந்தனர். ஓ.என்.ஜி.சி சார்பாக தையல்மிசின் வழங்குவதாக கூறி ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யப்பட்டிருந்த காகிதங்களில் கையெழுத்தை ஏமாற்றி பெற்று சென்றதை விளக்கினர் அப்பகுதியில் உள்ள பெண்கள். நமது பிரச்சாரத்திற்கு பிறகு, விரிசல் விட்டு ஆங்காங்கே பிளந்து நிற்கும் தனது வீட்டையும், கரி கலந்து மாசுபட்ட நீரையும் குடித்து தான் வாழ்வதாகவும், எனது வீடு மட்டுமல்ல இந்த கிராமம் முழுவதுமே இதே நிலைதான் என்று தோழர்களை தனது வீட்டிற்குள் அழைத்து சென்று காட்டினார் விவசாயி கணேசன். “ நீங்க வந்து சொன்னதுக்கு அப்புறம் தான் இதற்கான காரணமே புரியுது. எங்க புள்ளைங்களையாவது காவந்து பண்ணுங்க” என்று கையறு நிலையில் கலங்கி நின்ற அவரை தேற்றி போராட்டமே தீர்வு என்பதை உணர்த்தினோம்.

இப்படி திண்ணைப் பிரச்சாரம், இரவு நேரக் கிராம கூட்டங்கள், புரட்சிகர பாடல்கள் என பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளபட்டன.

மையக் கலைக்குழுவினரின் பாடலான “தண்ணீ  வந்தது தஞ்சாவூரு” என்ற பாடல் அங்குள்ள கிராமத்து சிறுவர்களின் சொந்த பாடலாகவே மாறிவிட்டது.

வரப்புகளில் நின்று கொண்டும், கரையில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கும் கூலி விவசாயிகள் மற்றும் பெண்களிடம் “சாமக்கோழி கூவும் நேரத்தில் நாங்கள் சம்பா அறுவடை செய்ய போனோம், விளக்கு வைக்கிற நேரத்திலும் நெற்றி வேர்வையும் காயாம பாடுபட்டோம்” என்று கம்பீரமான குரலில் தோழர்கள் பாடிய போது தம் வாழ்நிலையோடு அதை ஒப்பிட்டு பார்த்து எம்மை நோக்கி ஆர்வமாக திரண்டனர்.

கூலி விவசாயிகள் முதற்கொண்டு குத்தகை விவசாயிகள், பெரு விவசாயிகள் வரை “என்னதான் இருந்தாலும் ஓ.என்.ஜி.சி வந்த பிறகுதானே ரோடு போட்டான், லைட்டு போட்டான். பேக்டரி வந்தா தானே வளர்ச்சி வரும்” என்ற புரிதலில் இருந்தே நம்மிடம் கேள்விகள் கேட்டனர். இத்தனை ஆண்டுகளாக செய்யாதவர்கள் இப்போது மட்டும் ரோடு போடுவது உங்களுக்க வீசப்படும் தூண்டில் புழு என்பதை தாண்டி அவனுடைய லாரிகளும், கண்டெய்னர்களும் தங்கு தடையின்றி வந்து செல்வதற்காகவே போடப்பட்டிருக்கின்றன என்பதை புரிய வைத்தோம்.

“அப்போ பெட்ரோலுக்கு நாம என்ன செய்றது” என்ற போது ஏற்கனவே எடுத்த பெட்ரோலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும், உள்நாட்டு தேவை அதிகரிப்பிற்கும் கூட அரசு போக்குவரத்து கழகத்தின் காலை உடைத்து நொண்டியாக்கி தனியார் வாகன விற்பனையை அதிகரிக்க செய்த அதிகார வர்க்கத்தின் சதி வேலையையும் விளக்கி பேசிய போது அதிகாரிகளை அவர்கள் ஏசிய விதம் தட்டச்சு செய்ய முடியாதவை.

ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனம் என்ற நிலையில் இருந்து மாறி பிரிட்டிஷ் பெட்ரோலியம் உட்பட பல்வேறு தனியார் முதலாளிகள் அதன் பங்குகளை கைப்பற்றி வருகின்றனர். இனி எப்படி அரசு நிறுவனமாக நீடிக்க முடியும் என்று விளக்கியும், யூனியன் கார்பைடு நிறுவனம் போபாலில் உருவாக்கிய பேரழிவோடு ஒப்பிட்டு ஆளும் வர்க்கங்கள் பரப்பிவரும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வல்லரசு என்ற மாயையை தோலுரித்து காட்டினோம். நமது பேச்சின் வர்க்க அரசியலால் ஈர்க்கப்பட்ட மக்கள் தம் உணர்வினை வெளிப்படுத்தும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை அப்பகுதியில் நடத்த திட்டமிட்டோம்.

இதனையொட்டி துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் என பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன்படி 4.8.2014 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சை அம்மாபேட்டை பேருந்து நிலையம் அருகில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர். மாரிமுத்து தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டமாக விவசாயிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.

வலங்கைமான் ஒன்றிய அமைப்பாளர் திரு. சின்னதுரை, தீபாம்பாள்புரத்தை சேர்ந்த திரு. டி.எஸ். சேவியர், முன்னாள் வி.ஏ.ஓ. திரு. தாம்தாஸ் மற்றும் மலையபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இறுதியாக உரையாற்றிய ம.க.இ.க மாநில இணைப் பொதுச்செயலர் தோழர். காளியப்பன், அதிகார வர்க்க முதலாளிகளான ஓ.என்.ஜி.சி அதிகாரிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் எப்படி விவசாயிகள், மக்கள் விரோத தன்மையில் ஊறிப்போயுள்ளன என்பதை நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். மாவட்ட ஆட்சியர், போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட மிகப்பெரிய அரசு எந்திரத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளை அவர்கள் எவ்வளவு துட்சமாக கருதுகிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்தினார். உண்ணாவிரதம் உள்ளிட்ட வடிவங்கள் காலாவதியாகிப் போன ஒன்று, நன்கு உண்டு நம் தலைமுறைகளை காக்க தடியெடுத்து இந்த அரசை விரட்டியடித்தால் ஒழிய விடிவில்லை என்பதை விளக்கி பேசியது விவசாயிகளுக்கு புது நம்பிக்கை அளித்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எதிர்ப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் அடுத்து ஓ.என்.ஜி.சி துரப்பண பணிகளை நேரடியாக தடுத்து நிறுத்தும் வீரியமிக்க போராட்டங்களுக்கு விவசாயிகளை திரட்டும் பணிகளை நோக்கி விரைந்து செயல்பட்டு வருகிறது நமது விவசாயிகள் விடுதலை முன்னணி.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்

பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக அர்ச்சகர் பள்ளி மாணவர்கள்

51

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
பதிவு எண் : 189/09
50, அர்மேனியன் தெரு, பாரிமுனை, சென்னை

வா. அரங்கநாதன்
மாநில தலைவர்

பத்திரிகை செய்தி

கோரிக்கைகள்

1. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்தி முடித்து மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி வழங்க வேண்டி

2. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் பயிற்சி பெற்று 8 ஆண்டுகள் ஓடிவிட்டதால் வயது முதிர்ந்து வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே இடைக்காலமாக மாதம் குறைந்தபட்சம் ரூ.5000 ஊதியமாக வழங்க வேண்டியும் தமிழக அரசை வேண்டுகிறோம்.

அர்ச்சகர் மாணவர்கள்
206 மாணவர்கள் 2007 – 2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம்.

எங்கள் சங்கத்தின் 206 மாணவர்கள் 2007 – 2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம். ஆனால் உடனடியாக எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. காரணம், ‘ஆகமவிதிப்படி பார்ப்பன சிவாச்சாரியார்களைத் தவிர பிற சாதியினர் அர்ச்சகராகி, கருவறையில் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார்’ எனக் கூறி மதுரை சிவாச்சாரியார்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு தடை பெற்றுவிட்டனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக்கியதுடன், உச்ச நீதிமன்றத்தில் தங்களையும் வழக்கில் முக்கிய தரப்பினராக சேர்க்க வேண்டும் என போராடி வெற்றி பெற்றது, வழக்கை மனித உரிமைப்பாதுகாப்பு மையம் நடத்தி வருகிறது.

தமிழக அரசு 1971-ம் வருடம் வாரிசுரிமைப்பபடி அர்ச்சகர் பணி நியமனத்தை ஒழித்து, இந்து சமய அறநிலையச் சட்டத்தில் திருத்தம் செய்தது. இச்சட்டத் திருத்தம் தங்கள் மத உரிமைக்கு எதிரானது என மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச்சேர்ந்த பார்ப்பனர்களும், 2 மடாதிபதிகளும் நேராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ராஜகோபாலாச்சாரியார், சங்கராச்சாரியார், ஜீயர் ஆகியோர் இவர்களுக்கு ஆணை வழங்கியதுடன், பிரபல வழக்குரைஞர் நானி பல்கிவாலாவை வாதாட ஏற்பாடும் செய்து கொடுத்தனர். வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து 14-03-1972 அன்று தீர்ப்பளித்தது. “அர்ச்சகர் என்பவரும் கோயில் ஊழியர்தான். வாரிசுரிமைப்படி அர்ச்சகர் நியமன உரிமையை ஒழித்து தமிழக அரசு இயற்றிய சட்ட திருத்தம் செல்லும். அரசை பொறுத்தவரை, அர்ச்சகர் நியமனம் மதசார்பற்றது, மத நடவடிக்கையாக கருத முடியாது” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

“அதே சமயம் கோயில் பூசகர் தெய்வ வழிபாட்டில் எவ்வளவு வல்லவராக இருந்தாலும், ஆகமங்கள்படி குறித்த வகையைச் (Denomination) சேர்ந்தவராகத்தான் இருத்தல் வேண்டும். எனவே, கோயிலின் மரபு, பழக்கவழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்ட இனத்தைச் சேராத ஒருவர், சாமி சிலையைத் தொட்டால் புனிதத் தன்மை கெட்டுவிடும்” என்பதை அரசு கருத்தில் கொண்டு, அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதை அன்றே தந்தை பெரியார், “ஆபரேசன் சக்சஸ், நோயாளி மரணம்” என நுட்பமாக கண்டித்தார். இன்றுவரை அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடியாமல் இருப்பதற்கு காரணமே, மேற்படி அறிவார்ந்த நீதிபதிகள் வழங்கிய இத்தீர்ப்புதான். அரசியலமைப்புச் சட்டத்தில் பார்ப்பனர்களின் மத உரிமைகளுக்கு பாதுகாப்பாக உள்ள சரத்து 25, 26-ஐ ஒழிக்க வேண்டும் என்று பெரியார் பேசினார், இறுதி மூச்சுவரை கருவறை தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். இதன் விளைவாக தி.மு.க அரசாங்கமும் அதன்பிறகு அ.தி.மு.க அரசாங்கமும் அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்குறிப்பிட்ட சரத்துக்களை திருத்தியமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து பல கடிதங்கள் எழுதின.

தந்தை பெரியார்
தந்தை பெரியார், “ஆபரேசன் சக்சஸ், நோயாளி மரணம்” என நுட்பமாக கண்டித்தார்.

1972-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களையும் மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்த இக்குழு, 1982-ம் ஆண்டு தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அதில் “பூசையின்போது பிராமண அர்ச்சகர்கள் மந்திரத்தை தவறாக உச்சரிப்பது, மாற்றிச் சொல்வது, வேத வழிபாடுடைய ஸ்மார்த்த பிராமணர்கள் நடராசருக்கு பூசை செய்யும் மோசடிகள், முறையாக பயிற்சியின்றி பணியில் இருக்கும் அர்ச்சகர்கள்” என ஆகமத்திற்கு எதிராக நடைபெறும் பல்வேறு மாற்றங்களை பட்டியலிட்டுள்ளது. மேற்கண்ட ஆய்விலிருந்து, “தமிழகம் முழுவதும் முறையாக பயிற்சி வழங்கும் அர்ச்சகர் பள்ளிகளை நிறுவ வேண்டும், இந்து சமய அறநிலையச் சட்டத்தில் பழக்கவழக்கம் என்பதை ஒழித்து திருத்தம் செய்ய வேண்டும்” என அக்குழு பரிந்துரை செய்தது.

கேரளாவில் ஈழவர் சாதியைச் சார்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டதை எதிர்த்து ஆதித்தியன் என்பவர் தொடுத்த வழக்கில், “பார்ப்பனரல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்கவழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது” என உச்ச நீதிமன்றம் 2002–ம் ஆண்டு தீர்ப்பளித்தது. “அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ள பழக்கவழக்கம், மரபுகள் செல்லத் தக்கதல்ல. அதோடு சரத்து 17-ன் படி பிறப்பால் பாகுபாடு பார்ப்பது தீண்டாமைக்குற்றம், மனித உரிமைகளுக்கு எதிரானது” என முற்போக்காக தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டுதான், தமிழக அரசு, இந்து அறநிலையச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த 2006-ம் ஆண்டு, முதலில் அரசாணையையும், பின்பு அர்ச்சகர் பணி நியமனத்தில் பழக்கவழக்கம், மரபு என்பதை ஒழிக்கும் வகையில் அவசரச் சட்டத்தையும் (Ordiance) இயற்றியது. உடனடியாக மதுரையைச் சார்ந்த பார்ப்பன ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம், 1972 உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவசரச் சட்டத்திற்கு தடையாணை பெற்றது. இதனால் திமுக அரசாங்கம் சட்டமன்றத்தில் சட்டமாக கொண்டு வந்தபோது சட்டத்திருத்தத்தில் உள்ள முக்கியப் பகுதியை விட்டு விட்டு சட்டம் இயற்றியது.

“அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்” என 2006-ல் போடப்பட்ட அரசாணையின் மூலம், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைத்து அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக்காலம் மற்றும் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் பூசை முறைகள், பணியிலிருக்கும் அர்ச்சகர்களின் தகுதிகள் என ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கையாக சில பரிந்துரைகளை செய்தது. அதன்படி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய கோயில்களில் வைணவ பயிற்சி பள்ளிகளும், திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி ஆகிய பள்ளிகளில் சைவ பயிற்சி பள்ளிகளும் அமைக்கப் பட்டது. மொத்தம் 206 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி முடித்து, 2008-ல் தீட்சையும் பெற்றனர். ஆனால், தமிழக அரசோ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை.

archakar-bookஆலயத் தீண்டாமை, பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான எமது போராட்டச் சூழலில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவரையும் உச்ச நீதிமன்ற தடையாணையைக் காரணம் காட்டி, தமிழக அரசு கைவிட்ட நிலையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் அதன் வழக்குரைஞர்களின் உதவியால் ( தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று மாணவர்களை சந்தித்தனர். “கருவறைச் தீண்டாமையை ஒழிப்பது என்பது அரசால் மட்டுமே முடியும் காரியம் அல்ல. பணி நியமன பிரச்சனையுமல்ல, இது கருவறைத்தீண்டாமைக்கெதிரான, வரலாற்றுப் போராட்டம்” என்பதை விளக்கிப் பேசினோம். நாம் சங்கமாக ஒன்றுதிரண்டு, “தகுதியுடைய நாங்கள் கடவுள் சிலையை தொட்டால் எப்படி தீட்டாகும்? என மக்கள் கேள்வி எழுப்பும் போதுதான் தீர்வு கிடைக்கும்” என விளக்கினோம்.)

10-10-2009 அன்று திருவண்ணாமலையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் மதுரை சிவாச்சாரியார்களுக்கு எதிராக மாணவர்களையும் ஒரு தரப்பினராக சேர்க்க வழக்காடியதன் பயனாக 8-03-2010 அன்று உச்ச நீதிமன்றத்தில் அதற்கான உத்தரவையும் பெற்றோம். வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், தீண்டாமையை மத உரிமையாக நிலைநிறுத்த முயலும் பார்ப்பனர்களைக் கண்டித்தும் மக்கள் மத்தியில் பிரச்சாரமும் செய்து வருகிறோம்.

இதைத் தொடர்ந்து, அர்ச்சகர் மாணவர் சங்கமும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, மதுரை – திருவண்ணாமலையில் உண்ணாநிலைப் போராட்டங்கள், மீனாட்சி அம்மன் கோயிலை முற்றுகையிட்டுக் கைது, பெரியாரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தல், அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவராகிய நான் இந்து முன்னணி ரவுடிகளால் தாக்கப்பட்டது என தொடர் போராட்டத்தின் மூலமும், தொலைக்காட்சி பேட்டிகள், நாளிதழ், வார-மாத இதழ்களில் கருவறைத் தீண்டாமை குறித்து தொடர்ச்சியாக செய்திகளாக்கி மக்கள் ஆதரவை பெற தொடர்ந்து போராடி வருகிறோம்.

உச்ச நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு 13.12.2012 அன்று இறுதி விசாரணைக்காக வந்த போது தமிழக அரசின் வழக்குரைஞர் இப்பிரச்சனையை சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாகக் கூறி கால அவகாசம் கோரினார். இதையடுத்து, சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஆர்ப்பாட்டத்தை நடத்தி, “கருவறை தீண்டாமைக் குற்றமா? இல்லையா? இதில் சமரசம் எப்படி காண முடியும்” என கேள்வி எழுப்பி மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றோம். இதனை கருவறைத்தீண்டாமைக்கெதிரான சமூக நீதி போராட்டத்தின் பகுதியாக பார்க்க வேண்டுமென்று போராடி வருகின்றோம்.

பெரியார் சிலைக்கு மாலைகடந்த 30.01.2013 அன்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்துவிட்டது. பார்ப்பன அர்ச்சகர்கள் சார்பில் வழக்குரைஞர் பராசரன் தனது வாதங்களை முன்வைக்க தொடங்கிவிட்டார். தமிழக அரசு சார்பில் பி.பி.ராவ் எனும் மூத்த வழக்குரைஞர் நியமிக்கப்பட்டுள்ளார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மூத்த வழக்குறைஞர் காலின் கன்சால்வேஸ் ஆஜராகிறார். இன்று வரை தமிழக அரசு இவ்வழக்கில் வாய்தா வாங்கிக்கொண்டு வருகின்றது. .

மதுரையில் மொத்தம் உள்ள 116 பார்ப்பன அர்ச்சகர்களில் 28 பேரும், மயிலை கபாலீசுவரர் கோவிலில் 41 பேரில் 4 பேரும்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். மற்ற பார்ப்பன அர்ச்சர்கள் முறைப்படி ஆகமம் பயிலாதவர்கள். ஆனால் எங்கள் சங்கத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் முறைப்படி ஆகமம் பயின்றிருந்த போதிலும் பிறப்பின் காரணமாக பாகுபடுத்தப்பட்டு வருகிறோம்.

1972 சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வாரிசுரிமை அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களில் உள்ள 1144 அர்ச்சகர்களில் 574 பேர் வாரிசுரிமைப்படி தான் இன்றுவரை பணி புரிந்து வருகின்றனர். மேலும் 411 பேர் பார்ப்பனர்களின் பரிந்துரையின்பேரில் அர்ச்சகராக பணி நியமனம் பெற்றவர்கள். இது கருவறைத் தீண்டாமையாகும். அர்ச்சகர் பணிக்கான சரியான தகுதி பெற்றிருந்தும் நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக பணி வாய்ப்பு இன்றி தவிக்கின்றோம். எங்கள் அனைவருக்கும் வயது உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகையால் குடும்பம் நடத்த எந்த வழியும் இன்றி தவித்து வருகிறோம். அது மட்டுமல்ல இந்த படிப்பு படித்ததால் வேறு எந்த வேலைக்கும் எங்களால் செல்ல இயலவில்லை.

எனவே எங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக் காலமாக எங்களுக்கு நிவாரண உதவியாக தலா ஒருவருக்கு ரூ 5000 வழங்கி ஆணையிட வேண்டும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள

வா.அரங்கநாதன்

நாள் : 04.08.2014
இடம் : சென்னை.

அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்தி முடிக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட அர்ச்சக மாணவர்களுக்கு இடைக்காலமாக மாதம் ரூ.5000 ஊதியம் வழங்க வேண்டியும் கோரிக்கை மனு.

விடுநர்:
வா.அரங்கநாதன், மாநில தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு,
நெ.128, அரசமரத் தெரு, திருவண்ணாமலை.

பெறுநர்:
1. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தலைமைச் செயலகம், சென்னை.

2. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள்,
தலைமைச்செயலகம், சென்னை.

3. உயர்திரு.இந்து சமய அறநிலையத்துறைச் செயலர் அவர்கள்,
தலைமைச்செயலகம், சென்னை.

பெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.

பொருள்:

1. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்தி முடித்து மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி வழங்க வேண்டி

2. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இடைக்காலமாக மாதம் குறைந்தபட்சம் ரூ.5000 நிவாரண ஊதியமாக வழங்க வேண்டி

பெரியார் சிலை முன் ஆர்ப்பாட்டம்எங்கள் சங்கத்தின் 206 மாணவர்கள் 2007-2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம். ஆனால் உடனடியாக எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. காரணம் மதுரை சிவாச்சாரியார்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் அனைத்து சாதி அர்ச்சகர் ஆக தடை பெற்றுவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு 13.12.2012 அன்று இறுதி விசாரணைக்காக வந்த போது தமிழக அரசின் வழக்குரைஞர் இப்பிரச்சனையை சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாகக் கூறி கால அவகாசம் கோரினார். அதன்பிறகு 30.01.2013 அன்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்துவிட்டது. மதுரை சிவாச்சாரியர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பராசரன் அவர்கள் தனது வாதங்களை முன்வைக்க தொடங்கினார். தமிழக அரசு சார்பில் பி.பி.ராவ் எனும் மூத்த வழக்குரைஞர் ஆஜரானார். ஆனால் வழக்கு அதற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு 08.07.2014 அன்று பட்டிலிடப்பட்டாலும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அர்ச்சகர் பணிக்கான சரியான தகுதி பெற்றிருந்தும் நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக பணி வாய்ப்பு இன்றி தவிக்கின்றோம். எங்கள் அனைவருக்கும் வயது உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகையால் குடும்பம் நடத்த எந்த வழியும் இன்றி தவித்து வருகிறோம். அது மட்டுமல்ல இந்த படிப்பு படித்ததால் வேறு எந்த வேலைக்கும் எங்களால் செல்ல இயலவில்லை.

எனவே எங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக் காலமாக எங்களுக்கு நிவாரண ஊதியமாக ஒவ்வருவருக்கும் தலா ரூ.5000 வழங்கி ஆணையிட வேண்டும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள
வா.அரங்கநாதன்

நாள் : 04.08.2014
இடம் : சென்னை.

தமிழுக்கு பார்ப்பன எதிர்ப்பென்று பேர்!

15

தமிழுக்கு பார்ப்பன எதிர்ப்பென்று பேர்!

சிதம்பரம் நடராசர் கோயிலில் சிவனடியார் ஆறுமுகசாமி
தமிழ் இங்கே கோயில் கருவறைக்குள் நுழையவொண்ணா ‘நீச பாஷை!’ (சிதம்பரம் நடராசர் கோயிலில் சிவனடியார் ஆறுமுகசாமி)

திமொழி தாய்த்தமிழை
அரசுப்பள்ளிவிட்டே அகற்றிவிட்டு
பேதிமொழி சமஸ்கிருதத்திற்கு
கொண்டாட்ட வாரமா?

இந்த, அசிங்கத்தை அனுசரிக்க
தமிழ் நிலம் என்ன சோரமா?

உழைப்பவர் உயிர்த்தசையில்
மெய்சிலிர்க்கும் தமிழ் மணத்தை
தடுத்துவிட்டு,
செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு
எத்தனை சென்ட் அடித்தாலும்
பார்ப்பன நாற்றம்தான் மாறுமா?

மொழிதானே என மொழிய விட்டும்
ஆரியப் பெருக்கை வழியவிட்டும்
வந்தது கேடு,
உழைப்பவர் நானிலம் உறிஞ்சிட்ட பார்ப்பனியம்
திமிரில் சொல்லுது “இது இந்து நாடு!”

ராமலிங்க அடிகளார்
தரணி மொழிக்கெல்லாம் தாய் சமஸ்கிருதம்தான் எனப் பார்ப்பனியம் தண்டத்தை தூக்கியபோது, அவ்வாறாயின் தந்தை தமிழென்று வள்ளலார் மண்டையில் போட்டது மறந்தா போயிற்று?

கருவில் காத்து வளர்ந்து
கண் மலர்ந்து, மண் அளந்து
எம் மழலை இதழ் ஊறும்
மரபின் உயிர் சுரக்கும்
தமிழ் இங்கே
கோயில் கருவறைக்குள் நுழையவொண்ணா
‘நீச பாஷை!’

தெருவில் பிச்சைக்கு வந்து
தெண்டச் சோறில் சதை வளர்த்து
சுரண்டும் வர்க்கத்திற்கு சொறிந்துவிட
உன் சமஸ்கிருதம் தேவ பாஷையா?

கிரந்த லிபியாய் கிறுக்கிப் பார்த்து
மணிப்பிரவாளமாய் கலந்துபார்த்து
கடைசியில்
தரணி மொழிக்கெல்லாம் தாய் சமஸ்கிருதம்தான்
எனப் பார்ப்பனியம்
தண்டத்தை தூக்கியபோது,
அவ்வாறாயின் தந்தை தமிழென்று
வள்ளலார்
மண்டையில் போட்டது மறந்தா போயிற்று?

பரிதிமாற்கலைஞர்
பார்ப்பன மொழித் திரிபை பரிதிமாற்கலைஞர் போட்டுடைத்தார் காரித்துப்பி!

தமிழைப் பார்த்து
சமஸ்கிருதம் அடித்த காப்பி
பசுவுக்கே
பசும்பால் கா(ப்)பி!
பார்ப்பன மொழித் திரிபை
பரிதிமாற்கலைஞர்
போட்டுடைத்தார் காரித்துப்பி!

ஆரிய சுட்டுச் சொற்கள்
தமிழிலிருந்து ‘சுட்டவை’ என
சமஸ்கிருத பாடையை சகித்துக்கொண்டு
பிரித்துக்காட்டினார் கால்டுவெல்!

“ஆரியம் போல் வழக்கொழிந்து சிதையாமல்
சீரிளமைத் திறம் வியந்து”… தமிழே!
எனப் பூரித்து,
வடமொழி சவத்தை
வைக்கவேண்டிய இடத்தில் வைத்தார்
மனோன்மணியம் சுந்தரனார்!

கால்டுவெல்
ஆரிய சுட்டுச் சொற்கள் தமிழிலிருந்து ‘சுட்டவை’ என சமஸ்கிருத பாடையை சகித்துக்கொண்டு பிரித்துக்காட்டினார் கால்டுவெல்!

“தெற்கோதும் தேவாரத் தேனிருக்க
செக்காடும் இரைச்சலென வடமொழியா?” என,
பார்ப்பனத் திமிருக்கு
பதிலடி தந்தார் பாரதிதாசன்!

வழக்காடு மன்றத்தில்
தமிழ் இல்லை…

வழிபாட்டுக் கூடத்தில்
தமிழ் இல்லை…

வளரும் தலைமுறைக்கு
தமிழ் இல்லை…

தமிழே இல்லாத நாடு
தமிழ் நாடா?

எங்கும் தமிழ் வேண்டும்
எதிலும் தமிழ் வேண்டும் என
பொங்க வேண்டிய தருணத்தில்,
கிடப்பது கிடக்கட்டும்
இத்துப்போன சமஸ்கிருத எலும்புக் கூட்டை
இழுத்து வைத்து முத்தம் கொடு என்கிறது பார்ப்பனத் திமிர்!

பார்ப்பன சரடை முறுக்க
இளிச்சவாயன் வாயில் சமஸ்கிருதம் திணிக்க
ஆர்.எஸ்.எஸ். கும்பல்
தேடுது ஆளை!
இது மொழிப்பிரச்சனை அல்ல
பார்ப்பன நரிப் பிரச்சனை,
ஒட்ட நறுக்கிடு வாலை!

– துரை.சண்முகம்.

சிண்டிகேட் வங்கி ஜெயின் கைது – அரசு வங்கி சேவை யாருக்கு?

3

ரூ 50 லட்சம் லஞ்சம் தொடர்பாக மணிப்பால் நகரத்தை மையமாக கொண்டு செயல்படும் பொதுத் துறை சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.ஜெயின் உள்ளிட்ட ஒன்பது பேர் கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 2, 2014) மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்.கே.ஜெயின்
எஸ்.கே.ஜெயின்

மத்திய புலனாய்வுத் துறை பெங்களூரு, போபால், மும்பை, டெல்லி உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை நடத்தி லஞ்சப் பணமாக கொடுக்கப்பட்ட ரூ 50 லட்சத்தை கைப்பற்றியது. மேலும், பல நிதி ஆவணங்களையும், ரூ 21 லட்சம் ரொக்கம், ரூ 1.68 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ 63 லட்சத்துக்கான வைப்புத் தொகை ரசீதுகளையும் கைப்பற்றியிருக்கிறது.

எஸ்.கே.ஜெயினுடன் பூஷன் ஸ்டீல் நிறுவன துணைத் தலைவர் நீரஜ் சிங்கால், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வேத பிரகாஷ் அகர்வால், ஆடிட்டர் பவன் பன்சால், ஜெயினின் உறவினர்கள் வினீத் கோதா, மற்றும் புனீத் கோதா, விஜய் பஹூஜா, புருஷோத்தம் தோட்லானி, மற்றும் பங்கஜ் பன்சால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்கான கடன் உச்சவரம்பை சட்டவிரோதமாக உயர்த்தவும், திருப்பிச் செலுத்தத் தவறிய கடன் தொடர்பாக போலி கணக்கு காட்டவும் லஞ்சம் கொடுத்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், பூஷன் ஸ்டீல்சும் ஏற்கெனவே தலா ரூ 100 கோடி, ரூ 120 கோடி அளவில் சிண்டிகேட் வங்கியிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறார்கள். தமது தொழிலை விரிவுபடுத்துவதற்கு கூடுதல் கடன் பெறுவதற்கு எஸ்.கே.ஜெயினுக்கு லஞ்சம் கொடுத்திருக்கின்றனர்.

மத்திய புலனாய்வுத் துறை இவரது தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக கண்காணித்து வந்தது. பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு கடன் உச்ச வரம்பை உயர்த்த அந்நிறுவன உயரதிகாரிகளுடன் அவர் பேரம் பேசியதும், ஹவாலா முறையில் பணத்தை மும்பையில் உள்ள பவன் பன்சால் என்ற இடைத்தரகர் மூலம் தனது மைத்துனரும், மற்றொரு உறவினருமான வினீத் மற்றும் புனீத் கோதாவிடம் ஒப்படைக்கும்படி பேசியதும் தெரிய வந்தது. அவ்வாறு பணம் கைமாறும் நேரத்தில் சிபிஐ இவர்களை பொறி வைத்து பிடித்தது.

பவன் பன்சால் நீரா ராடியாவைப் போன்ற ஒரு கார்ப்பரேட் தரகர். பெரிய முதலாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகளின் மூலமாக கடன் ஏற்பாடு செய்து தருவது இவரது நிறுவனத்தின் வேலை. இதற்காக பன்சாலின் நிறுவனத்தில் வேலை பார்த்த இருவர் பங்கஜ் பன்சால், முகேஷ் ஜிண்டால் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடனும் நட்புறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். வங்கி விதிகளின்படி ‘தகுதி’ இல்லாத நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்வார்கள்.

கார்ப்பரேட் வங்கிக் கடன்இந்தத் தகுதி என்பது டாடா,அம்பானி போன்ற பெரிய தரகு முதலாளிகளின் நலனுக்கேற்றபடி உருவாக்கப்பட்டவை. அகர்வால் போன்ற சின்ன முதலாளிகள் அந்த விதிகளின்படி கடன் வாங்க முடியா விட்டால் பன்சால் போன்ற இடைத்தரகர்கள் மூலம் வங்கி விதிகளை வளைத்து கடன் பெறுகின்றனர். இதற்கான கமிசனை இடைத்தரகர்கள் வங்கி அதிகாரிகளுடன் பங்கு போட்டுக் கொள்வார்கள். சிண்டிகேட் வங்கியில் மட்டுமின்றி பல அரசு மற்றும் தனியார், பன்னாட்டு வங்கிகளிலும் முதலாளிகளின் சூதாட்டத்திற்காக பன்சால் நிறுவனம் இந்த திருகுதாள வேலையை செய்திருக்கிறது.

பன்சாலின் ஆல்டியஸ் ஃபைன்செர்வ் பி லிட் நிறுவனம் மும்பை நாரிமன் பாயிண்டில் நவீன அலுவலகத்துடன், முறையாக பதிவு செய்து கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பன்சாலின் இடைத்தரகு நிறுவனத்துக்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளதும் மத்திய அரசின் நிதித்துறைதான்.

முதலாளிகள்தான் நாட்டை முன்னேற்றுகிறார்கள், உழைக்கும் வர்க்கத்துக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறார்கள் என்று பிரச்சாரம் செய்கின்றனர் முதலாளித்துவ அறிஞர்கள். ஆனால், முதலாளிகள் தொழில் செய்வதே கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் சேமிப்புகளை வங்கிக் கடன் (அல்லது வேறு நிதிக் கருவிகள் மூலம்) கைப்பற்றிய நிதியின் மூலமாகத்தான்.

டாடா, அம்பானி போன்ற பெரிய நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன், தோல்வியடைந்த திட்டங்களுக்கு கடன் தள்ளுபடி என்று வங்கிகள் அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றனர்.

தங்களை விட ‘தகுதி’ குறைவான அகர்வால், சிங்கால் போன்று நடுத்தர அளவு முதலாளிகள் வங்கிப் பணத்தைக் கைப்பற்ற லஞ்சம் மூலம் முயற்சிப்பதை பெரிய முதலாளிகள் சகித்துக் கொள்வதில்லை. அந்த அடிப்படையில் சி.பி.ஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவின் உத்தரவுப்படி கடந்த ஆறு மாத காலமாக மத்திய புலனாய்வுத் துறை சிண்டிகேட் வங்கியின் ஜெயினின் தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக கண்காணித்து வந்ததில் சிக்கியிருக்கிறார். நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்களில் சிக்கிய ரத்தன் டாடா, அவற்றின் மீதான விசாரணைகளை நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி தடுத்து நிறுத்தியதும் நினைவிருக்கலாம்.

சிண்டிகேட் வங்கிஇவ்வாறு பொதுத்துறை வங்கிகளின் பணத்தை ‘விதிமுறைகளுக்கு புறம்பாக’ முதலாளிகள் கையாட முயற்சிப்பதற்கு உடந்தையாக இருந்ததாக பல அதிகாரிகள் சிக்கியுள்ளனர். 2010-ம் ஆண்டு வெளியான கார்ப்பரேட் கடன் ஊழல் விவகாரத்தில் பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் 8 பேரும், எல்.ஐ.சி நிதி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும் கைது செய்யப்பட்டனர். அதில் மணி மேட்டர்ஸ் இந்தியா என்ற இடைத்தரகு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ராஜேஷ் சர்மாவும் கைது செய்யப்பட்டார்.

1990-களின் தொடக்கத்தில் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் போதுமான பிணை இல்லாமல் கடன் வழங்கியதோடு மட்டுமல்லாமல் அருள் பில்டர்சுக்கு ரூ 64 லட்சம், இன்காம் பில்டர்சுக்கு ரூ 50 லட்சம் கடன் தள்ளுபடி செய்து வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த குற்றங்களுக்காக சுமார் 25 ஆண்டு வழக்கு நடந்த பிறகு அவர் சென்ற ஆண்டு சி.பி.ஐ நீதிமன்றத்தில் 1 ஆண்டு மட்டும் தண்டனை பெற்றார்.

1991-ம் ஆண்டு யூகோ வங்கியின் சேர்மன் கே எம் மார்க்கபந்து ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு வழக்கில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பொதுத்துறை வங்கியின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

இது தவிர பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிர்வாக இயக்குனர் ஷ்யாமல் ஆச்சார்யா மீது ரூ 100 கோடிக்கு அதிக மதிப்பிலான வங்கிக் கடன்கள் வழங்குவதில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. 2010-ம் ஆண்டு கடன் வழங்குவதில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று எல்.ஐ.சி வீட்டுக் கடன் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை செயல் அலுவலர் ஆர் ஆர் நாயர் குற்றம் சாட்டப்பட்டார். 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் கார்ப்பரேஷன் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ராம்நாத் பிரதீப் மீது இதே மாதிரியான குற்றங்கள் சுமத்தப்பட்டன.

இந்தியாவில் வங்கித் துறையின் பெரும்பகுதி பொதுத்துறையின் கைவசம் இருப்பதாலும், தனியார் துறையில் வட்டி வீதம், கட்டணங்கள் அதிகமாக இருப்பதாலும், முதலாளிகள் சாதாரண மக்களின் பணத்தை பொதுத்துறை வங்கிகள் மூலமாகத்தான் கைப்பற்ற முடிகிறது.

2012-ம் ஆண்டு மார்ச் மாத புள்ளிவிபரங்களின் படி இந்திய வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி குழுமம் ரூ 10.21 லட்சம் கோடி, பிற பொதுத்துறை வங்கிகள் 23.72 லட்சம் கோடி, பழைய தனியார் வங்கிகள் – 2.2 லட்சம் கோடி, புதிய தனியார் வங்கிகள் – ரூ 6.5 லட்சம் கோடி, அன்னிய வங்கிகள் – 2.32 லட்சம் கோடி, ஊரக வங்கிகள் – 1.11 லட்சம் கோடி, மாநில கூட்டுறவு வங்கிகள் – 69,000 கோடி, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் – 72,000 கோடி கடன் வழங்கியிருக்கின்றன. அதாவது மொத்த வங்கிக் கடனில் 70% (ரூ 33.9 லட்சம் கோடி) பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்படுகின்றன.

தனியார் வங்கிகளின் இயக்குனர்களாக தமது பிரதிநிதிகளை நியமிப்பது மூலம் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் அவற்றை கட்டுப்படுத்துகின்றனர். உதாரணமாக, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இயக்குனர்களை எடுத்துக் கொள்வோம்.

ஏப்ரல் 2009-ல் இவ்வங்கியின் நிர்வாக இயக்குனராக ஓய்வு பெற்ற கே வி காமத் சேர்மனாக பொறுப்பேற்றார். அதே ஆண்டு  மே மாதம் இன்ஃபோசிஸ் இயக்குனராக பதவியேற்றார். 2011-ல் இன்ஃபோசிஸ் சேர்மனான அவர் 2 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார். 2013-ல் அந்த பதவியிலிருந்து விலகி  ஐ.சி.ஐ.சி.ஐ சேர்மனாகவும், இன்ஃபோசிஸ் மூத்த இயக்குனராகவும் தொடர்கிறார்.

இன்னொரு இயக்குனர் திலீப் சொக்ஸி என்பவர் டிலோய்ட் இந்தியா என்ற நிதி நிறுவனத்தின் கூட்டு நிர்வாக பங்காளியாக இருந்தவர். மற்றொரு இயக்குனர் ஹோமி ஆர் குஸ்ரோ கான் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 2008-ல் ஓய்வு பெற்றவர். முன்னதாக டாடா டீ, கிளாக்சோ இந்தியா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.

இவ்வாறு முதலாளிகள் நேரடியாகவோ, லஞ்சம் மூலமாகவோ தமக்குத் தேவையான வங்கிக் கடனை பெற்றுக் கொள்ள சாதாரண மக்களுக்கோ ஒரு சிறிய கடனுதவி வாங்கக் கூட நடையாய் நடக்க வைக்கின்றன வங்கிகள். வேலை கிடைக்காத காரணத்தால் கல்விக்கடனை தாமதமாக செலுத்த நேரும் மாணவர்கள், பெற்றோர்களின் படங்களை பிளக்சு பேனரில் போட்டு அசிங்கப்படுத்துகின்றன. தனியார் வங்கிகள் தரும் கடனை தாமதமாக கொடுத்தால் அடியாள் படையே வைத்து வீடு புகுந்து அசிங்கப்படுத்துகிறது. அதனால் மானமுள்ள மக்கள் பல இடங்களில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

பயிர்க் கடனை வாங்க அலைந்து திரிந்து, கடைசியில் விவசாயமும் அரசின் கொள்கையால் பொய்த்துப் போய் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளிடமும் பாரபட்சமில்லாமல் கறாராக கடனை வசூலிக்க முயல்கின்றன வங்கிகள். ஆனால் ஊரான் வீட்டு நெய்யே என்ற கதையாக மக்கள் பணத்தை வரைமுறையில்லாமல் முதலாளிகளுக்கு மறுபுறம் தூக்கிக் கொடுக்கவும் செய்கின்றன.

மத்திய நிதித்துறை செயலாளர் சிண்டிகேட் வங்கி தலைவர் ஜெயினை இடைநீக்கம் செய்துவிட்டு, தற்காலிகமாக இரண்டு இயக்குநர்களை வங்கிக்கு நியமித்திருக்கிறார்.

“இதனால் அரசு வங்கிகளின் நம்பகத்தன்மை குறைந்து விடவில்லை” என்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன். “இதன் மூலம் வங்கித் துறையில் களையெடுக்க வேண்டிய சக்திகளை நம்மால் இனம் கண்டுகொள்ள முடிந்துள்ளது” என்கிறார் அவர். அரசு வங்கிகளின் நம்பகத்தன்மையை முற்றிலும் அழித்து விட்டால், வங்கித் துறையை தனியாரிடம் விட்டு விடலாம். ஆனால், தனியார் வங்கிகளின் நடைமுறைகள் சாதாரண மக்களுக்கு நம்பிக்கை அளித்து பணத்தை திரட்ட உதவுவதில்லை. எனவே, மக்கள் இன்னும் பொதுத்துறை வங்கிகள் மீது நம்பிக்கை இழக்காமல் முதலாளிகள் சுரண்டியது போக எஞ்சியதாக தரும் ஊதியத்தில், சேமிக்கும் பணத்தை அவற்றில் போட வேண்டும்; அதன் மூலம் முதலாளிகளின் ‘தொழில் முனைவு’க்கு உதவ வேண்டும் என்பதுதான் ரகுராம் ராஜனின் செய்தி.

“இடைத்தரகர் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வேண்டும்” என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவுறுத்தியிருக்கிறார்.

ஆனால், இவர்கள் அனைவருக்குமே பன்சாலைப் போன்ற ஆடிட்டர்கள் இருப்பது தெரியாத ஒன்றல்ல. பன்சால் போன்ற ஆடிட்டர்கள், தாம் வேலை பார்த்த சிட்டி வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்றவற்றில் இருந்து விலகி சொந்த நிறுவனம் தொடங்குகிறார்கள். இப்போது எசகுபிசகாக மாட்டிய உடன் கூட்டத்தோடு கூட்டமா ஓடுறான் பிடி ஓடுறான் பிடி என்று அருண் ஜேட்லி போன்ற வழக்கறிஞர்கள் கத்துகிறார்கள்.

பன்சாலின் லேப் டாப், இரண்டு செல் பேசிகளை நோண்டினால் இன்னும் முப்பது நிறுவனங்களாவது இப்போதைக்கு மாட்டும் என்கிறார்கள். இவர்ளகோடு, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வங்கிக் கடனை பெறும்  முதலாளிகளும் கடந்த பத்தாண்டுகளில் மொட்டையடித்த வங்கிகளின் கணக்கை யாரிடம் போய் கேட்பது?

மேலும் படிக்க

கேள்வி கேட்க வைப்பதுதான் கல்வி !

2

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனுடன் நேர்முகம் – 2 : மாணவர்களின் மீது கல்வி என்ற ‘சுமை’

ஐடி வரை மாணவர்கள் வகுப்பறையின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வயது, திறமை, விருப்பம் ஆகிய மூன்றின் அடிப்படையில் தான் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதிக பாடத்திட்டத்தை வைத்திருப்பதால் ஒரு அமெரிக்க குழந்தையை விட இந்திய குழந்தை படிக்க கஷ்டப்படுகிறது. ஆசிரியரால் கற்பிக்க இயலாத காரணத்தால் மனப்பாடக் கல்வி முறை இங்கே வளர்கிறது. ஆக்சிஜன் என்ற சொல்லை மட்டும்தான் கற்கிறதே தவிர அதைப் பற்றி வேறு எதுவும் குழந்தைகளுக்கு தெரிவதில்லை. இதுபோன்ற குறைபாடுகளைப் பற்றி யஷ்பால் குழு நிறையவே சொல்லியுள்ளது.

கல்விச் சுமை
ஆக்சிஜன் என்ற சொல்லை மட்டும்தான் கற்கிறதே தவிர அதைப் பற்றி வேறு எதுவும் குழந்தைகளுக்கு தெரிவதில்லை.

வகுப்பறை நடைமுறையில் உள்ள ஆண்டான் அடிமை கட்டுப்பாடு முறைகள் குழந்தையின் இயல்பான விளையாடும் பண்பை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வைத்து, அது சுதந்திரமாக பேசுவதை தடுக்கின்றன.

சுமை அதிகமான கல்வி தருவதுதான் நல்ல தரமான கல்வி என தனியார் பள்ளிகள் சொல்லி வருகின்றன. ஐந்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு செய்தித்தாள்களை படிக்க தெரிவது, கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலை போடத் தெரிவது, நாணய மதிப்புகளை அறிந்திருத்தல் என்பது மட்டுமே போதுமானது. ஆனால் இப்போது அதிகமான கணக்குகளை குழந்தைகளுக்கு கற்றுத் தருவதால் கற்பது என்பதே கடினமான ஒரு விசயமாக குழந்தைகளுக்கு மாறி விடுகிறது. முதலில் பாடச்சுமையை குறைக்க வேண்டும்.

பங்கேற்பு கல்வி இருக்க வேண்டும். போட்டி முறைக் கல்வியால், தான் மட்டும் முதல் ரேங்க் வாங்க வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் முதல் ரேங்க் வாங்க கூடாது என்று சிந்திக்க தொடங்குகிறார்கள். அதாவது தான் வெற்றி பெற மற்றவர்கள் தோற்க வேண்டும் என்ற விஷம் அவர்களிடையே விதைக்கப்படுகிறது. இது அரசு வேலைக்கு செல்லுகையில் தனக்கு பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக பிறர் மீது மொட்டைக் கடிதம் போட வைக்கிறது. போட்டிக் கல்விக்கு பதிலாக தான் கற்றவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதாக கல்வி முறை மாற வேண்டும். குழுவழி கற்றல், விவாத முறையில் கற்றல் போன்றவை இதற்கு அவசியம்.

வரலாற்றுப் பாடம்
மண் வாசனை சார்ந்து வரலாறு எழுதப்பட வேண்டும்.

ஒருமுறை நான் பிரிட்டன் சென்றிருந்தேன். அங்குள்ள ஒரு பள்ளியில் வரலாற்று பாடம் நடத்தப்பட்டது. வாட்டர்லூ யுத்தம் நேற்று நடைபெற்றது என்றால் இன்றைய செய்தித்தாள்கள் எப்படி எப்படியெல்லாம் செய்தி வெளியிடும் என்பதை குழந்தைகள் சொந்தமாக கற்பனை செய்தி அவற்றை எழுதி சுவரில் ஒட்டியிருந்தார்கள். ஆசிரியர் இதனை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு அவற்றை மாணவர்களுடன் விவாதிக்கிறார். இதில் எதனை ஏற்கலாம், ஏற்க முடியாது என்பதை விவாதித்து விட்டு கடைசியில் எது சரியானது என முடிவெடுக்கும் உரிமையை மாணவர்கள் கையில் கொடுத்து விடுகிறார்.

1948-ல் சமூக அறிவியல் பாடத்தை நம் நாட்டில் முன்வைக்கையில் வரலாறு, நிலவியலுடன் குடிமையியலும் இணைத்துதான் கற்பிக்கப்பட வேண்டும் என்று சொன்னார்கள். இங்கே மண் வாசனை சார்ந்து வரலாறு எழுதப்பட வேண்டும். மேட்டுப்பாளையம் துவங்கி ராஜபாளையம் வரை உள்ள கரிசல் காடுகளில் தெலுங்கு பேசும் ஆந்திர மக்கள் பெருமளவு பரவி இருக்கின்றனர். இசுலாமிய படையெடுப்பின் போது தமிழகம் வந்த அவர்கள் தாங்கள் ஏற்கெனவே குடியிருந்த கரிசல் பூமியைத்தான் இங்கும் வசிக்க தெரிவு செய்தார்கள் என்பதை எந்த புத்தகம் நமக்கு வரலாறாக சொல்லித் தருகிறது. பார்ப்பனர்கள் தங்களது அர்த்தமற்ற சடங்குகளுக்காக நதித்தீரங்களை நாடினர். ஆக மக்களின் இடப்பெயர்வில் கூட வம்சாவழியும் சமூகம் சார்ந்த விசயங்களும் உள்ளன. கன்னடம் பேசுபவர்கள் தொண்டாமுத்தூர் துவங்கி கம்பம் வரை உள்ள பள்ளத்தாக்குகளில் தான் குடிபெயர்ந்தார்கள். இதைப் பற்றி சொல்லித் தருவதுதான் சமூக அறிவியல். இதனை தடுத்தவர்கள் சென்னையை சேர்ந்த ஆசிரியர்கள். பிரிட்டிஷார் காலத்தில் படித்த இவர்கள் இப்படி சிந்திக்க விரும்பவில்லை. அதற்கு தகுந்த திறமையும், அறிவும் அவர்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

பள்ளிக் குழந்தைகள்
“உயிருள்ளவை நகரும்” என்று சொன்னார் ஆசிரியர். ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து விட்டு ஒரு மாணவன் கேட்டான். “ஸ்கூட்டர் நகர்கிறதே, அதற்கு உயிர் இருக்கிறதா” என்று.

விவாதித்தல் மூலமாக கற்பதும் கற்றுக்கொள்வதில் முக்கியமான முறை. ஆந்திராவில் குறைந்தபட்சம் ஒரு குழந்தை ஒரு பாட வேளையின் போது ஐந்து கேள்விகளாவது கேட்க வேண்டும் என்று ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். அதனை தனது குறிப்பேட்டில் ஆசிரியர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதனை கண்காணிக்கும் குழுவில் நானும் ஒருவனாகப் போயிருந்தேன்.

“உயிருள்ளவை நகரும்” என்று சொன்னார் ஆசிரியர். ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து விட்டு ஒரு மாணவன் கேட்டான். “ஸ்கூட்டர் நகர்கிறதே, அதற்கு உயிர் இருக்கிறதா” என்று. யோசித்த ஆசிரியர், “அதனை உயிருள்ள ஒருவன் ஓட்ட வேண்டியதாயிருக்கிறது” என்று விளக்கினார். “போன வாரம் மரத்திற்கு உயிர் இருப்பதாக சொன்னீர்களே, அது நகரவில்லையே” என்று கேட்டான் இன்னொருவன். அதற்கு அந்த ஆசிரியரால் பதில் சொல்ல முடியவில்லை. பாவம் அவர் அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருந்தார். பிறகு நாங்கள் குறுக்கிட்டு, “மேல் நோக்கிய வளர்ச்சி கூட நகர்வதைப் போலத்தான்” என்று விளக்கினோம்.

அடுத்து நான்காம் வகுப்பிற்கு சென்றோம். அங்கு ஒரு குழந்தை இப்படிக் கேட்டது. “போன வாரம் எச்சில் ஜீரணத்தை அதிகரிப்பதாக சொன்னீர்கள், இந்த வாரம் எச்சில் நோயை பரப்பும், அதை வெளியே துப்பாதீர்கள் என்கிறீர்கள். நான் எச்சிலை விழுங்கினால் எனக்கு நோய் வருமா வராதா” என்று கேட்டது அந்த குழந்தை. நானும் உயிரியல் மாணவன் இல்லை என்பதால் எனக்கும் சரியான விடை தெரிந்திருக்கவில்லை. உடனே நான் இப்படி சொன்னேன். “நாய் தன்னுடைய உடம்பில் ஏற்படும் காயத்தை தனது எச்சிலை கொண்டு நக்குவதில்லையா, அந்த நாயின் எச்சில் அதற்கு ஏற்படும் காயத்திற்கான எதிர்-உயிரியாக, எதிர்ப்பு சக்தியாக, மருந்தாக பயன்படுகிறது, அது போலத்தான் இதுவும்” என்றேன். “இரண்டாவது எல்லா எச்சிலிலும் நோய்கிருமிகள் இருக்காது, எந்த எச்சிலில் நோய்க்கிருமிகள் இருக்கிறது என்று நமக்கு சரியாக தெரியாது” என்பதால் ஆசிரியர் அப்படி பொதுவாக சொல்லியிருக்கிறார் என்றும் விளக்கினேன்.

பள்ளிக் குழந்தைகள்
வினா எழுப்ப அனுமதி தந்தால் இப்படி அறிவுபூர்வமான கேள்விகள் வரும் என்பதை தவிர்க்கவே நாம் அதனை அனுமதிப்பதில்லை.

ஒரு எட்டாம் வகுப்பு மாணவி, மதம் பற்றிய ஒரு பாடத்தின்போது “இசுலாமியர் குரானை வைத்துள்ளனர், கிறிஸ்தவர்கள் பைபிளை வைத்துள்ளனர், நாம் எதை வைத்துள்ளோம் சார்” என்று கேட்டாள். “பகவத் கீதை” என்று சொன்னோம். “ஆனால் அவர்கள் எல்லாம் தொழுகைக்கு போகும்போதும், சர்ச்சுக்கு போகும்போதும், வீட்டிலும் இவற்றை வைத்துள்ளனரே” என்றும், “எங்கள் வீட்டில் பகவத் கீதை இல்லையே, அதை எப்படி நமது மத நூல் என்று சொல்கிறீர்கள்” என்றும் கேட்கிறாள். வினா எழுப்ப அனுமதி தந்தால் இப்படி அறிவுபூர்வமான கேள்விகள் வரும் என்பதை தவிர்க்கவே நாம் அதனை அனுமதிப்பதில்லை.

இப்போது மாணவர்கள் பிறரை மரியாதையாக விளிப்பதில்லை என்று பல இடங்களிலும் பார்க்கிறோம். பாடத்திட்டங்களிலும், வினாத் தாளிலும் மாணவர்களை மரியாதையாக விளிக்க வேண்டும் என்பதை நான் அதற்கான குழுக்களில் இருந்த போது பலமுறை வலியுறுத்தினேன். எழுது என்பதற்கு பதில் எழுதுக என்று மறைமுகமாவது மாணவனுக்கு மரியாதை தரும் விதத்தில் கேள்வித் தாள்களில் மாற்ற சொன்னேன். அதனை ஆசிரியர்கள் “சின்னப் பையனுக்கு எதற்கு சார் மரியாதை” என்று கூறி தட்டிக் கழித்தனர்.

மனிதர்களுக்கு மரியாதை தருவது நமது சமூகத்தில் எங்குமே இல்லை. உயர் அதிகாரிகள் யாரும் தங்களுக்கு கீழே இருக்கும் அதிகாரிகளை உட்கார வைத்து பேசுவதில்லை. இந்த நிலைமை தான் கல்வித் துறையிலும் இருக்கிறது. சில பள்ளிகளில் ஆசிரியர்களது பாதங்களில் மலர்களை மாணவர்கள் தூவுகின்ற சடங்குகளை எல்லாம் நடத்துகின்றனர். சமூகத்தின் பல இடங்களில் இத்தகைய சமூக பிறழ்வுகள் இருப்பதால் அது கல்வித்துறையிலும் எதிரொலிக்கிறது. அதனை எதிர்த்து கேள்வி கேட்க உத்வேகம் கொடுப்பதுதான் உண்மையான கல்வி.

பள்ளிக் குழந்தைகள்
ஒரே மாதிரியாக தமிழ்வழியில்தான் பாடத்திட்டம் என்பது எப்படி பொருந்தும்

பாடநூல் இல்லாமல்தான் நானெல்லாம் வகுப்பு எடுப்பேன். ஆனால் இப்போது எந்த ஆசிரியரும் அப்படி பாடம் எடுப்பதில்லை. பாடநூலும் கற்பதற்கு ஒரு தடைதான். அதே போல தேர்வும் ஒரு தடை. தேர்வுக்காக படிப்பதை மாற்றி அறிவுக்காகத்தான் படிக்க வேண்டும் என நமது கல்விமுறையை மாற்ற வேண்டும்.

தொடக்கப் பள்ளி ஒன்றுக்கு போயிருந்தேன். அங்கு தலைமையாசிரியரே சந்தோஷமாக பாடம் எடுக்க முன்வந்தார். அவர் எம்.ஏ.பி.டி படித்தவர். பாடம் எடுத்த பிறகு எளிமையாக சில கேள்விகளைத்தான் மாணவர்களிடம் கேட்டார். ஆனால் குழந்தைகள் அனைவரும் மவுனமாக இருந்தனர். சில நொடிகளில் நிலைமையை யூகித்து அவரிடம், “தெலுங்கு உங்களுக்கு தெரியுமல்லவா, தெலுங்கிலேயே கேள்வி கேளுங்கள்” என்று சொன்னேன். தெலுங்கில் அவர் பேசியவுடன் மாணவர்கள் உற்சாகமாக பதில் சொல்ல ஆரம்பித்தனர். காரணம் அது தோட்ட வேலை செய்யும் சக்கிலிய சாதியின குழந்தைகளுக்காக துவங்கப்பட்ட சிறப்பு பள்ளி. அவர்களது பெற்றோர்களாவது வேலைகளுக்காக தமிழில் சமூகத்தில் பிறருடன் கலந்துரையாடுவார்கள். ஆனால் அந்தக் குழந்தைகள் சேரியை விட்டு வெளியே வராதவர்கள். எனவே அவர்கள் தமது தாய்மொழியான தெலுங்கை மட்டும்தான் தெரிந்திருந்தனர்.

ஆனால் அவர்களுக்கும் பிறருக்கும் ஒரே மாதிரியாக தமிழ்வழியில்தான் பாடத்திட்டம் என்பது எப்படி பொருந்தும். நான் “இப்படி ஒரு பிரச்சினையில் எனக்கு உதவ முடியுமா” என்று மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழிகளுக்கான நிறுவனத்திற்கு கேட்டு எழுதினேன். யாருமே இதுவரை அப்படி கேட்டிருக்க மாட்டார்களோ என்னவோ உடனடியாக எனக்கு ஆறு பேரை அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இயக்குநர் பட்நாயக், இணை இயக்குநர் அண்ணாமலை ஆகியோர் அப்போது அங்கிருந்தனர். அண்ணாமலை, திருமலை மற்றும் இப்போது புதுச்சேரியில் அறிவியல் பேரவை தலைவராக உள்ள புருஷோத்தமன் என ஆறு பேரை அனுப்பினர். அவர்கள் தாய்மொழி தெலுங்காக இருப்பவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் முறையை சொல்லித் தர முயன்றார்கள்.

பன்மொழி அறிதல்
குழந்தைகளால் நான்கைந்து மொழிகளை கற்றுக்கொள்ள முடியும் என்ற வாதம் தவறானது. அதில் நடப்பது மொழியை அறிதல் மட்டும்தான்.

தற்செயலாக அப்போது கல்வியமைச்சராக இருந்த அரங்கநாயகம் அங்கு வந்தார். “இதனை மலையாளம், கன்னடம் போன்றவற்றை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு நீட்டிக்க திட்டம் வகுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். இதில் மராட்டியம், சௌராஷ்டிரா, துளு என ஏழு மொழிகளில் பாட நூல்களை தயாரித்து அரசிடம் கொடுத்தோம். ஆனால் அரசு ஒன்றும் செய்யவில்லை. பாட நூல் தயாரிப்பின்போது தமிழாசிரியர்களை அழைத்து வந்து நேரில் பதினைந்து நாள் பயிற்சி வேறு அளித்தோம்.இந்தக் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தைப் போலவே தமிழும் அந்நிய மொழிதான்.

இப்போது ஆங்கிலத்தை கூட ஒன்றாம் வகுப்பிலேயே சொல்லித் தர ஆரம்பித்து விட்டார்கள். இதுவும் கூட எம்.ஜி.ஆர் துவங்கி வைத்தது தான். தனியார் ஆங்கில பள்ளிகளை அனுமதித்த காலத்தில் நம்மவர்கள் கேட்டதற்கிணங்க ஒன்றாம் வகுப்பிலேயே ஆங்கிலம் பாடமாக வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு முதல் மொழியை நன்றாக கற்ற பிறகுதான் இரண்டாம் மொழியை சொல்லித்தர வேண்டும் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல்பூர்வமான நடைமுறை. ஆனால் இப்படி முதலாம் வகுப்பிலேயே இரு மொழிகளை அறிமுகப்படுத்தியதால் தமிழும் சரியாக கற்க முடியவில்லை, ஆங்கிலத்தையும் சரிவர கற்க முடியவில்லை என்பதுதான் நடந்தது. சில குழந்தைகளுக்கு ஆங்கிலம் இங்கு மூன்றாவது மொழியாகவும் இருக்கிறது. பல இடங்களில் தேவையான அளவுக்கு ஆசிரியர்களையே போடாமல் வேறு இருக்கிறார்கள்.

குழந்தைகளால் நான்கைந்து மொழிகளை கற்றுக்கொள்ள முடியும் என்ற வாதம் தவறானது. அதில் நடப்பது மொழியை அறிதல் மட்டும்தான். ஆனால் இப்படி மொழியை அறிவது என்பது புறச்சூழலின் தேவைக்காக மட்டுமே நடப்பது. அவர்களுக்கு இலக்கணப்படி எல்லாம் பேசவோ எழுதவோ முடியாது. ஒரு அடுக்கக குடியிருப்பில் பல்வேறு மொழி பேசும் மக்கள் குடியிருந்தால் அங்கு இப்படி குழந்தைகள் மொழியை அறிவது நடக்கும். அதுவே மொழியை கற்றுக்கொள்வது என ஆகாது.

செயல்முறை கற்றல் என்பது புதிய திட்டம் எல்லாம் இல்லை. பங்கேற்பு கல்வி என்பது நான் பி.டி படித்த அறுபதாண்டுகளுக்கு முன்னரே இருந்த ஒன்றுதான். இதற்கு வட்டாரம் சார்ந்து, தொழில் சார்ந்து வேறுபாடுகள் இருக்க வேண்டும். மீனவர்கள் நிறைந்த பகுதியில் ஒன்றாகவும், நெசவாளர்கள் நிறைந்த பகுதியில் ஒன்றாகவும், விவசாயம் சார்ந்த பகுதிகளில் ஒன்றாகவும் தான் பாடத்திட்டங்கள் தனித்தனியாக வகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கே பொதுவான ஒரு பாடத்திட்டம் வகுத்து அதில் செய்முறை கற்றலை கொண்டு வருவது ஏற்புடையதல்ல. செய்முறை கற்றல் என்பதே குழந்தைகளையும் பங்கேற்க வைக்கும் ஒன்றுதான். இப்போது இதற்கு நிறைய செலவு செய்து விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.

குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார்வதன் மூலம் சமத்துவம் வருவதாக சொன்னார்கள். சமத்துவத்தை இதயத்தில் தர மறுத்து விட்டு ஒன்றாக உட்கார வைப்பதால் வந்து விடுமா? இப்படி உட்காருவது கட்டாயம் என்று சொன்ன போது கர்ப்பிணி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துச் செல்லவே, ஆசிரியர் இல்லாத பள்ளியாக அது மாறியதுதான் கடைசியில் நடைபெற்றது.

(தொடரும்…)
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனுடன் நேர்முகம் – 1 குடந்தை தீ விபத்தா – தனியார்மயத்தின் திட்டமிட்ட சதியா ?

சென்னை, திருச்சி, கோவையில் சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு

1

கோவை

“மோடி அரசின் சமஸ்கிருத வாரம், இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்”

எனும் முழக்கத்துடன் மத்திய அரசின் சமஸ்கிருத வார கொண்டாட்ட அறிவிப்புக்கு எதிராக கோவையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்துடன் இணைந்து செஞ்சிலுவை சங்கம் முன்பு 06-08-2014 அன்று மாலை ஐந்தரை மணிக்கு துவங்கி ஏழு மணி வரை ஆர்ப்பாட்டம் நடந்தது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி தோழர் உமா தலைமையில் ஆர்ப்பாட்டம் முழக்கங்களுடன் துவங்கியது.

தோழர் உமா தனது தலைமையுரையில் சமஸ்கிருத வார கொண்டாட்ட அறிவிப்பு பற்றியும் அந்த அறிவிப்பு எவ்விதத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தின் அடையாளம் எனவும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

அடுத்ததாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தோழர் கோவன் அவர்கள் கண்டன உரையாற்றினார். தோழர் கோவன் சமஸ்கிருதத்தின் உள்ளடக்கத்தையும் பார்ப்பனர்களின் பித்தலாட்டத்தையும் தம்மை எதிர்த்து கேள்வி கேட்டால், பார்ப்பனியத்துக்கு எதிராக குரல் கொடுத்தால், கொலையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதையும் சாருவாகன் கதை மூலம் விளக்கினார். மேலும், தோழர்.கோவன் வேதங்களிலும் உபநிடதங்களிலும் உள்ள சமஸ்கிருத சுலோகங்களை சொல்லி அவற்றின் பார்ப்பன மேலாதிக்க உள்ளடக்கத்தை தமிழில் மொழிபெயர்த்து பேசியவற்றை அருகிலுள்ள கோர்ட் வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்களும் சுற்றி நின்ற காவல் துறையினரும் கூட வியந்து கேட்டனர்.

அடுத்ததாக, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கோவை மாவட்ட செயலர் தோழர் மணிவண்ணன் பேசுகையில் ஜெயலலிதா அரசு எப்படி மோடி அரசுக்கு பார்ப்பன விசுவாசத்துடன் இருக்கிறது என்பதனையும் இந்த இரு அரசுகளுமே எப்படி பார்ப்பன அடிவருடி அரசுகள் எனவும் எடுத்தியம்பினார்.

இறுதியாக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் திலீபனின் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,

கோவை

திருச்சி

ந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற நாளில் இருந்து பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பார்ப்பன கும்பலின் கொள்கையான இந்துத்துவாவை திணிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் பலவழிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாகத்தான் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் (CBSE) சமஸ்கிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் லதா அவர்களின் தலைமையில் மோடி அரசின் சமஸ்கிருத வாரம் கொண்டாடும் உத்தரவு நகலை எரித்து போராட்டம் நடைபெற்றது.

  • “10 கோடி தமிழர்கள் பேசக்கூடிய தமிழ் மொழியை வேசி மொழி என்று பார்ப்பனக் கும்பல் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் செத்த மொழியான சமஸ்கிருதத்தை சிங்காரிப்பது, தமிழ் மொழியை அழிக்கும் நடவடிக்கை. எனவே, இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றும்,
  • “பெரியார் பிறந்த இம்மண்ணில் இந்தி திணிப்பு, சமஸ்கிருத மீட்பு, வரலாற்று திரிப்பு போன்ற மோடி அரசின் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகையில் மோடியின் சமஸ்கிருத வாரத்தை, சமஸ்கிருத எதிர்ப்பு வாரமாக கடைபிடிப்போம்” எனவும்,
  • “பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்” எனவும்

முழக்கமிடப்பட்டது. மேலும், இந்தி – சமஸ்கிருத திணிப்பை கல்வி நிலையங்களில் இருந்து ஒழித்துக்கட்ட கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர போராட வேண்டும் என அம்பலப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. செஞ்சிவப்பு சீருடையுடனும் பார்ப்பனிய எதிர்ப்பாளர்களான பெரியார் அம்பேத்கார் ஆகியோரின் படங்களுடனும், முழக்கப் பதாகைகளுடனும், செங்கொடி ஏந்தியும் விண்ணதிரும் பறை முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இறுதியில் இந்த நகல் எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ம.க.இ.க மற்றும பு.மா.இ.மு தோழர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

முழக்கம்

மக்கள் கலை இலக்கிய கழகம் – வாழ்க!
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – வாழ்க!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க!
பெண்கள் விடுதலை முன்னணி – வாழ்க!

மத்திய அரசு அலுவல்களில்
கட்டாயமாக இந்தித் திணிப்பு!

நோன்பிருந்த முஸ்லீம் வாயில்
கட்டாயமாக சப்பாத்தி திணிப்பு!

ஆட்சிக்கு வந்து அறுபது நாளில்
ஆர்.எஸ்.எஸ் சின் ஆட்டம் பாரு!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
சமஸ்கிருத வாரம் என்ற
மோடி அரசின் மொழித்திணிப்பை
பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

யாரும் பேசாத சமஸ்கிருதம்!
யாரும் எழுதாத சமஸ்கிருதம்!
யாரும் பாடாத சமஸ்கிருதம்!
யாருக்கும் புரியாத சமஸ்கிருதம்!
செத்த மொழிக்கு கொண்டாட்டம்!
செத்த பிணத்துக்கு அலங்காரம்!

கொண்டாட வேண்டுமா சமஸ்கிருத வாரம்!
கூட்டித் தள்ளுவோம் குப்பை ஓரம்!

சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும்
வேசிமக்கள் தமிழர் என்றும்
இழிவு படுத்திய மனு தர்மத்தை
எழுதிய மொழிதான் சமஸ்கிருதம்!

மானமுள்ள தமிழ் மக்களே!
கூடிப் புதைப்போம் சமஸ்கிருதத்தை

வே…தத்தை காதில் கேட்டால்
ஈயத்தைக் காய்ச்சி ஊத்து என்று
சூத்…திரனை தண்டித்த மொழிதான்
பார்ப்பானின் சமஸ்கிருதம்!

இழிவு படுத்தும் மொழியை எதிர்ப்போம்!
தாய் மொழியை உயர்த்திப் பிடிப்போம்!
தமிழ் மொழியை உயர்த்திப் பிடிப்போம்!

இந்தித் திணிப்புக்கு எதிராக
சமஸ்கிருத எதிர்ப்பு வாரம்
கடைபிடிப்போம்! கடைபிடிப்போம்!
பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை
மீட்டெடுப்போம்! மீட்டெடுப்போம்!

சி.பி.எஸ்.ஈ பள்ளிகளில்
சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்தை
தடுத்து நிறுத்துவோம்! தடுத்து நிறுத்துவோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம் – 7373217822;
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – 9943176246
திருச்சி.

சென்னை

சமஸ்கிருத வாரத்தை அனுமதியோம் ! பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்திப்பிடிப்போம்!
– புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புக்களின் சார்பில் சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

“மோடி அரசின் சமஸ்கிருத வாரம் ! இந்துத்துவா திணிப்பே அதன் சாரம் !
செத்த மொழியான சமஸ் கிருதத்தை சிங்காரிக்காதே! தேசிய இனங்களின் மொழிகளை  அழிக்காதே !”

என்ற முழக்கங்களுடன் காலை 11 மணிக்கு வள்ளுவர் கோட்டம் சிக்னலில் இருந்து மாணவர்கள், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள்  பேரணியாக சென்று அப்பள்ளி சாலையை அடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் மாநிலப்பொருளாளர் தோழர். வெங்கடேசன் 1500க்கும் குறைவான மக்கள் கூட பேசாத செத்துப் போன மொழிக்கு மத்திய அரசு விழா எடுப்பதற்கான நோக்கம் என்பது இந்தி – இந்தி – இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ் –ன் கருத்தியலை இந்தியா முழுக்கக் கொண்டு வந்து  இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களையும் அழிக்கும் சதிதான், இந்த மோடி அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயா ஆதரவளித்து சமஸ்கிருத ஓலைச்சுவடிகளை இணையத்தில் தரவேற்றம் செய்வதை சுட்டிக்காட்டி  தமிழையும் மற்ற மொழிகளையும் அழிக்க  நடந்து வரும்  சதிக்கு எதிராக பெரியாரின் வாரிசுகளாக போராட வேண்டும்” என்று பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நக்கீரன் செய்தி

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி

31

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 3

ந்து ஆன்மீக கண்காட்சி என்றால் ஆன்மீகம்தானே முக்கியமான விற்பனை சரக்கு? ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழக மைதானத்தில் நடந்த இந்த கண்காட்சியை ஜூலை 8-ம் தேதி தொடங்கி வைத்தவரோ காஞ்சி சங்கரராமன் கொலை புகழ் காஞ்சி காமகோடி சங்கராச்சாரி ஜெயேந்திரன். ஆன்மீகம் ஒரு ரியல் எஸ்டேட் தொழில் என்றால் அதில் இன்டர்நேஷனல் கட்டப்பஞ்சாயத்து தாதா ஜெயேந்திரன்தான்.

சங்கராச்சாரி
இந்த கண்காட்சியை ஜூலை 8-ம் தேதி தொடங்கி வைத்தவரோ காஞ்சி காமகோடி சங்கராச்சாரி, சங்கரராமன் கொலை புகழ் ஜெயேந்திரன்தான்.

விரிக்கப்பட்டிருந்த ஆன்மீக கடைகளிலேயே ஈஷா யோகா கடை தான் பெரிய கடை. மொத்தம் 11 அரங்குகள். ஆனால் ஆடித் தள்ளுபடி கிடையாது, “பிக்ஸ்ட் ப்ரைஸ்” தான். தொண்டர்கள் என்கிற பெயரில் இளவயது முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை பலவகையான ஆடுகள் ஜக்கியிடம் சிக்கியிருந்தன. இதுவரை பிடிபடாவிட்டாலும் ஜக்கியும் ஒரு நித்தி தான், எனவே இந்த பிடிபடாத நித்தியிடம் நமக்கென்ன வேலை என்று அடுத்த ஸ்டாலை நோக்கி நகர்ந்தோம், ஆனால் வேலியில் போன ஓணானை எடுத்து விட்டுக்கொண்ட கதையாக, நம்மை போகவிடாமல் தடுத்து இழுத்தனர் ஜக்கியின் ஆடுகள்.

“”நீங்க inner engineering course படிக்கலாமே” என்றார் அந்த பெண்.

உண்மையான எஞ்சினியரிங் படித்தவனுக்கே வேலை இல்லாத போது இது என்னடா இன்னர் என்சினியரிங்” என்று அதைப் பற்றி விசாரித்தோம்.

“யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை தான் இன்னர் என்சினியரிங் கோர்ஸ் சார், இதை படித்தால் பட்டம் கிடைக்கும்” என்றார்.

“சரி இதற்கு ஏன் எஞ்சினியரிங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று கேட்டால், நமது உடலே ஒரு பொறியியல் அமைவாக இருப்பதால் அந்த பெயரை வைத்துவிட்டார்களாம்.

பக்கத்து ஸ்டாலில் கிளிப்பச்சை நிறத்தில் பழைய ஜெட்லி பட யூனிபார்மை அணிந்து கொண்டு நின்ற ஞானோதயம் யோகா குழுவினர், “அந்த யோகா வேற, எங்க யோகா வேற” என்று 4000 ரூபாய் மதிப்புள்ள தமது யோகா பாக்கேஜ்களை வெறும் 3,999 ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்தனர். தனது பொருள் மற்றதிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்பதில் ஈஷாவினர் ஸ்டீவ் ஜாப்ஸ் ரகம் போலும்.

“எஞ்சினியரிங் கோர்ஸ் எல்லாம் இருக்கட்டும் ஜக்கி வாசுதேவைப் பற்றி உங்களிடம் சில கேள்விகளை மட்டும் கேட்க வேண்டுமே” என்றோம்.

“கேளுங்கள்” என்றார் அந்த பெண்.

“அரசுக்கு சொந்தமான வெள்ளியங்கிரி மலையை சட்டத்திற்கு புறம்பாக ஜக்கி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாரே..” என்று கேள்வியை துவங்குவதற்குள்ளாகவே “இந்த கேள்விக்கு நான் பதில் கூற முடியாது, நீங்க மேடத்தை பாருங்க” என்று வேறு ஒரு பெண்ணை கை காட்டியதுடன் அவரே அந்த மேடத்திடம் அழைத்துச் சென்றார். அந்த மேடம் எப்போதும் சிரித்துக்கொண்டே தான் இருப்பார் போலிருக்கிறது. கொலையே செய்தாலும் சிரித்தவாறு இருக்கும் ஜெசூட் பாதிரிகள் கூட இந்த விசயத்தில் ஜக்கி கோஷ்டியினரிடம் பிச்சை எடுக்க வேண்டும்.

அருகில் சென்றதும் “யெஸ் சார்” என்றார் அதே புன்னகையுடன்.

“சில கேள்விகள் கேட்க வேண்டும்” .

“கேளுங்க” என்றார் சிரித்துக் கொண்டே.

“ஜக்கி வாசுதேவ் மீது பல குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறதே அதற்கெல்லாம் என்ன பதில்” .

“என்ன.. தெளிவா சொல்லுங்க” சற்று தடுமாறினார்.

“நித்தியானந்தாவை போலவே ஜக்கி மீதும் பல பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறதே, ஆசிரமத்தில் சில கொலைகள் கூட நடந்திருப்பதாக கூறுகிறார்களே” என்றதும் முகத்தில் வழிந்து கொண்டிருந்த புன்னகை சடாரென்று மறைந்து பேயறைந்தது போலானார்.

“எந்த அடிப்படையில் அப்படி சொல்றீங்க” .

“பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்களே அதை வைத்து தான்” .

“பத்திரிகைகள் பலவும் எழுதும் அண்ணா, அதுக்கெல்லாம் நாங்க பதில் சொல்ல முடியுமா” .

sri-saradha-ashram“சரி அதை விடுங்க சட்டத்திற்கு புறம்பாக அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாரே அதற்கு என்ன பதில் சொல்றீங்க?”

“அண்ணா இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது” .

“ஜக்கியை பற்றிய கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுன்னா எதுக்கு அவரோட இவ்வளவு பெரிய படத்தை இங்கே மாட்டி வசிருக்கீங்க, அவர் சொல்றதை எல்லாம் எதுக்கு எங்களை கேட்கச் சொல்றீங்க” .

“அவர் சொல்றதை எல்லாம் நீங்க கேட்கணும்னு நாங்க சொல்வில்லை. யோகாவுக்கு மட்டும் தான் வரச்சொல்கிறோம்” என்றார்.

“அப்படின்னா எதுக்கு ஜக்கியோட படத்தை மாட்டியிருக்கீங்க?”

“அண்ணா தயவு செஞ்சி நீங்க போங்கண்ணா ப்ளீஸ், நீங்க யோகாவுக்கும் கூட வர வேண்டாம்” .

“வாங்க வாங்கன்னு நோட்டீஸ் அடிச்சி கூப்பிடுறீங்க வந்து ஒரு கேள்வியை கேட்டதுமே போங்க போங்கன்னு விரட்டுறீங்களே எப்படி மேடம்” என்றதும் அவர் அடுத்த வாடிக்கையாளரிடம் யோகவை விற்க போய்விட்டார்.

வெள்ளயங்கிரி வனப்பகுதியில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டிவீழ்த்தி சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஜக்கி இன்னொரு புறம் தன்னை பெரிய இயற்கை பற்றாளர் போல காட்டிக்கொள்வதற்காக மரக்கன்றுகளை விற்பதற்கும் ஒரு ஸ்டாலை போட்டிருக்கிறார். நடிகன்டா!

அடுத்த கடை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடையது. அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு ஈராக் மதத்தலைவர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் ரவிசங்கர் கடையில் அறிவுரை பெற உள்ளூரில் ஒரு ஈ காக்கா கூட இல்லை. ஆனால் பானரில் மட்டும் hands up பொசிசனில் சிரித்து கொண்டிருந்தார். ஈயே இல்லாத கடையில் நமக்கு மட்டும் என்ன வேலை என்று அங்கிருந்து கிளம்பினோம்.

ஆன்மீகம் மட்டுமின்றி கல்வி, யோகா, மருத்துவம், என்று சகல சரக்குகளையும் கலந்துகட்டி தள்ளிக்கொண்டிருந்த ஜக்கி, இஸ்கான், வேதாத்ரி, அமிர்தானந்த மயி போன்ற ஆன்மீக கம்பெனிகளிடையே கடுமையான நான்குமுனை போட்டி நிலவிக்கொண்டிருந்ததை கண்கூடாக காண முடிந்தது. நாம் கேள்வியேபட்டிராத மடங்களின் பெயர்களில் எல்லாம் காவி உடை கசங்காத ‘ஆன்மீகவாதிகள்’ அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தனர்.

ஒரு அரங்கில், கும்பமேளாவிற்கு வரும் அகோரிகளின் படங்களை மாட்டி ஒரு பெண் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார், “இவங்களை பத்தி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்ல எல்லாம் தப்புத் தப்பா சொல்றாங்க. சரியான விஷயங்களை தெரிஞ்சிக்கிறது முக்கியம். இவங்க நம்ம போல சாதாரணமானவங்க கிடையாது. சின்ன வயலிருந்தே இறைவனோட ஐக்கியப்பட்டு இருப்பவங்க. அவங்க உடலை ஒரு பொருட்டா மதிக்கறதில்லை அதனால, உடல்மீது துணி இருப்பதோ இல்லாததோ உணர்வதில்லை. அவங்க போதை மருந்து அடிக்கிறாங்கன்னு அவதூறு சொல்றாங்க. அந்த மருந்தை நாம அடிச்சா அது போதை தரலாம். ஆனா, ஆண்டவனோட இணைந்திருக்கிற அவங்களை ஒண்ணும் செய்யாது.

அவங்க செத்த பொணத்தை சாப்பிடறாங்கன்னா அதுக்கும் காரணம் இருக்கு. அவங்க எல்லா பொணத்தையும் சாப்பிடறது இல்ல. சில பேரு செத்த பிறகு அவங்களுக்கு முக்தி கிடைக்கணும்னு இறைவன் கட்டளைப்படி அந்த பொணத்தை மட்டும் தேடி சாப்பிடுவாங்க.

அகோரிகள்
அகோரிகள் பற்றிய உண்மைகள்

கும்பமேளாவில கலந்து கிட்டு அவங்க குளித்த தண்ணீரில் குளிக்க நிறைய மக்கள் கூடுவாங்க. நாம எல்லாம் கங்கையில குளிச்சா நம்ம பாவங்கள் கரைஞ்சு கங்கை அழுக்காகிடும். அகோரிகள் குளிச்சாங்கன்னா, அந்த கங்கை சுத்தமாகிடும்” என்றார். இது தெரியாமத்தான் கங்கையை சுத்தம் செய்ய உமா பாரதி அமைச்சரா போட்டு பல நூறு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியிருக்கிறது மோடி அரசு. நூறு அகோரிங்கள பிடிச்சுப் போட்டு அன்றாடம் கங்கைக்குள்ள குதிக்க வெச்சா தானா சுத்தமாக போகுது.

“இன்னும் சில பேரு இவங்களால என்ன பலன்னு கேக்கிறாங்க. இவங்கதான் நம்ம நாட்டுக்கே பாதுகாப்பு. அன்னிய படையெடுப்பு வரும் போது இவங்க முன்னணியில் இருந்து சண்டை போடுவாங்க. அதைப் பார்த்து மக்களும் தைரியமா சண்டை போடுவாங்க” என்றார்.  இதன்படி இனி இராணுவத்தை கடாசிவிட்டு அகோரிங்கள மட்டும் அதிகம் உருவாக்கி பயற்சி கொடுத்தால் இந்தியா அமெரிக்காவிக்கே பெப்பே காட்டும் போல.

அடுத்தது, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா (ISKON) குழு. இவர்களுடைய பக்தி நூல்களில் உள்ள படங்களை எல்லாம் குழந்தைகள் பார்த்தால் ஒருவேளை பயப்படக்கூடும். அவை கடவுள் படங்கள் என்று கூறப்பட்டாலும் வேற்றுகிரகவாசிகளை போலவே விகாரமாக இருக்கும். இதன் ஸ்தாபகர் பிரபுபாதா கூட அப்படி தான் இருப்பார். அவர் இப்போது உயிருடன் இல்லை.

நாங்கள் அனைவரும் இந்துக்கள் தான் என்று இந்த இந்து கம்பெனிகள் அனைத்தும் எவ்வளவு வெளிப்பூச்சு பூசிக்கொண்டாலும் அரங்கிற்குள் ஒரே அடிதடி ரகளை தான். “மற்ற ஆன்மிக சரக்குகள் எல்லாம் சரியானவை அல்ல, பிரபுபாதா தான் கடவுளை அடைவதற்கான சரியான வழியை காட்டியுள்ளார்” என்று கூறினார்கள். “மற்ற ஹிந்து அமைப்புகள் எல்லாம் ஹிந்து தர்மத்தை காக்கவில்லை, ஹிந்து மக்களை சரியாக வழி நடத்தவில்லை, பிரபுபாதா வெறும் நாற்பது ருபாயை வைத்துக்கொண்டு, நன்கொடையாக கிடைத்த ஒரு பயணச்சீட்டில் அமெரிக்காவிற்கு போய் சேர்ந்தார். குடியும் கூத்துமாய் சீரழிந்து கிடந்த அந்த ஹிப்பிகளை எல்லாம் சொற்பொழிவுகளின் மூலமும், பஜனையின் மூலமும் நல்லவர்களாக மாற்றியதோடு தனது சீடர்களாகவும் மாற்றினார்” என்றார் அங்கிருந்த தொண்டர். பிறகு “பார்ப்பனர்கள் எப்படி வேத காலத்திலிருந்து அறிவாளிகளாகவும், வேதங்கள் அறிந்தவர்களாகவும் இருந்தனர்” என்று பார்ப்பன அடிமைத்தனத்தை போற்றிப் புகழ்ந்தார். பார்ப்பன அடிமைப்புத்தி கீழிருந்து மேலே வரை வைரஸ் போல தாக்கியிருக்கிறதே என்கிற வேதனையோடு அங்கிருந்து நகர்ந்தோம்.

அடுத்து, அய்யாவழி ஸ்டால். அய்யா வைகுண்டர் என்னவெல்லாம் சொன்னாரோ அவற்றை எல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டு அய்யா வழிபாடே முழுமையாக பார்ப்பனமயமாகியிருக்கிறது. “அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்தையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து தானே இந்து மதத்திலிருந்து வெளியே வந்தார்” என்றோம் அந்த ஸ்டாலில் இருந்தவரிடம்

amirtha“அப்படியில்லை நீங்கள் தவறாக படித்திருக்கிறீர்கள். அவர் அதையெல்லாம் ஏற்றுக் கொண்டார்” என்று அதிர்ச்சி கொடுத்தார். மேலும் “பத்து அவதாரங்களும் அவர் தான், தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளை எல்லாம் அவர் ஏற்கனவே பாடல்களாக பாடியுள்ளார்” என்று கூறி சில பாடல்களையும் பாடினார். மட்டுமின்றி கொஞ்சம் கூட சிரிக்காமல் “இந்தியாவிற்கு விடுதலை வாங்கி கொடுத்ததும் அவர் தான்” என்றார். வள்ளலார் பற்றி பேசிய போது, “வள்ளலார் எல்லாம் உண்டு களித்து உறங்கிய ஒரு சாதாரண மனிதர்” என்றும், “எங்கள் அய்யா தான் கடவுளின் அவதாரம்” என்றும் கூறிக்கொண்டிருந்த போது “இன்னொரு அய்யாவழிக்காரர் வந்து இப்படியெல்லாம் வெளிப்படையாக பேசினால் இந்து தர்மத்தை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்” என்று அவரை அமுக்கினார். பார்ப்பனியத்தை எதிர்த்து எழுந்த அய்யா வழிபாட்டையும் பார்ப்பனியம் செரித்து விழுங்கிவிட்டது.

“எட்டும் இரண்டும் பத்து” என்ற தலைப்பில் வள்ளலாரின் படம் போட்டு தனியாக ஒரு மடம் இருந்தது. “நீங்க தனியா யோகா எல்லாம் படிக்க வேண்டாம். வாழ்க்கையே ஒரு யோகமாக இருந்தா போதும். ஜோதி மார்க்கமா இறைவனை தரிசிக்கலாம்னு உலகத்துக்கு சொன்னவர் வள்ளலார். எல்லோரும் ஞானம் பெறலாம் என்பதுதான் இதற்கு பொருள். இந்த உண்மையை மத்தவங்க எல்லாம் வெளியே சொல்றது இல்லை. ரகசியமா வைச்சிக்கிறாங்க” என்றார்.

“அப்போ, அங்க ஈஷா யோகோ, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்ற கடைகளில் யோகா பேக்கேஜ் வாங்க சொல்றாங்களே” என்று கேட்டால்,

“அதெல்லாம் தேவையே இல்லை. அவங்க எல்லாம் வியாபாரத்துக்காக இப்படி செய்றாங்க.”

அப்போதுதான் அந்த கடையில் ஞானசற்குரு சிவ செல்வராஜ் என்பவரின் படம் மாட்டியிருப்பதைப் பார்த்தோம். அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலை, “இவை போன்ற ஞான ரகசியங்களை மேலும் விரிவாக தெரிந்து கொள்ள படித்து அறிந்து கொள்ள, ஞான சற்குரு சிவசெல்வராஜ் அருளிய ஞான நூற்கள்” என்று 25 தமிழ் நூல்கள், 3 ஆங்கில நூல்களின் பட்டியல் கொடுத்திருந்தார்கள். ஜக்கி, ஸ்ரீஸ்ரீ போல பன்னாட்டு வலைப்பின்னல் அமைக்க முடியாத உள்ளூர் வியாபாரி இவர் என்று புரிந்து கொண்டு நகர்ந்தோம். யார் கண்டது, அடுத்த கண்காட்சியில் இவரும் கூட சர்வதேச பிரபலமாக ஆகியிருக்கலாம். மைனர் நித்தியெல்லாம் குருவாக உலாவரும் போது ஞானசற்குருவுக்கு என்ன குறைச்சல்?

அடுத்து அம்மா அமிர்தானந்தமாயியின் அரங்கிற்கு சென்றோம். அங்கிருந்தவர் ஆன்மீக சிரிப்புடன் வரவேற்றார். அம்மாவைப் பற்றி மனப்பாடம் செய்து வைத்திருந்த வாக்கியங்களை நம்மிடமும் கொட்டத் தயாரானார். அதற்குள் “எங்களுக்கு தெரியாத சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க சார்” என்றோம்.

“சொல்லுங்க சார் என்ன கேள்வி”.

“அம்மா அமிர்தானந்தமயி ஒரு சாமியார் தானே?”

“ஆமாம்.”

“வெறும் சாமியாரா அல்லது கடவுளின் உருவமா?”

“கடவுளின் அவதாரம் தான் அம்மா.”

sankarachari“சரி அவர் தான் கடவுள் என்றால் கடவுளுக்கு எதற்கு எஞ்சினியரிங் காலேஜ், ஸ்கூல், கோடிக்கணக்கில் பணம் எல்லாம்” என்றதும் ஒரு கணம் திகைத்து நின்றார். பிறகு ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு “எல்லாம் மக்களுக்காக தான், மக்கள் படிக்க வேண்டும் என்பதற்காக தான் அம்மா எல்லாவற்றையும் செய்கிறார்” என்றார்.

“சரி மக்கள் படிப்பதற்கு என்றால் சும்மா படிக்க வைக்கிறாரா பீஸ் வாங்குகிறாரா?”

“பீஸ் தான்.”

“கடவுளுக்கு எதுக்கு பீஸ், ஃபிரீயா படிக்க வைக்கலாமே” என்றதும் கொஞ்சம் டென்ஷன் ஆனார்.

“சார் இங்கே ஆன்மீகத்தை பற்றி மட்டும் பேசுங்க, வேற விஷயங்களை பேசணும்னா எங்களோட சென்னை ஆபீஸ் விருகம்பாக்கத்தில் இருக்கு அங்கே போய் கேளுங்க” என்றார்.

“என்ன மேடம் ஒருத்தர் படத்தை காட்டி இவர் தான் கடவுள்னு சொல்றீங்க, நீங்க சொல்றதை கேட்கிற நாங்க சரி கடவுளுக்கு காசு எதுக்குங்கன்னு ஒரு கேள்வியை கேட்டா இங்கே பதில் சொல்ல முடியாது, எங்க ஆபீசுக்கு வந்து கேளுங்கிறீங்க, பதில் சொல்ல முடியலைன்னா எதுக்கு இப்படி மார்க்கெட்டிங் பன்றீங்க” என்றதும்.

“சார் உங்ககிட்ட எல்லாம் பேச முடியாது நீங்க எதுவானாலும் ஆபீஸ்ல போய் பேசிக்கங்க” என்றார். சரி எல்லா பிராடு கம்பெனியும் இப்படி தான் பேசும் போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு மேலே நடந்தோம்.

அடுத்து வந்தது வேதாத்ரி மகரிஷியின் மனவளக்கலை. “உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் சார்” என்றோம் ஸ்டாலில் நின்றிருந்தவரிடம்.

“நாங்க கொடுக்கிற பயிற்சி இப்போ அண்ணா யுனிவர்சிடில ஒரு பாடமாவே ஆகியிருக்கு, இதுக்கு பட்டம் இருக்குங்க. எங்களுடையதில் மூன்று பிரிவுகள் இருக்குங்க ஒன்னு தியானம், இரண்டு உடற்பயிற்சி, மூணு காயகல்பம்” என்று விரிவான விளக்கம் அளித்தார்.

“சரிங்க சார் இதனால என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் எப்படி தீரும்?”

“என்ன பிரச்சினைகள்னு சொல்லுங்க.”

“உதாரணத்திற்கு இப்போ மின்கட்டணம் உயர்ந்துகொண்டே போகுது, விலைவாசி அதிகரிக்கிறது. இதை எல்லாம் மூச்சு பயிற்சியின் மூலம் எப்படி சரி செய்ய முடியும்?”

மற்றவர்களை போல இவர் சளைக்கவில்லை, டென்ஷனும் ஆகவில்லை உடனடியாக பதிலளித்தார்.

“மின்கட்டணம் உயர்வதற்கு யார் காரணம், நீங்க தான் காரணம். எதுக்கு அளவுக்கு அதிகமா கரண்ட் யூஸ் பன்றீங்க, குறைவா பயன்படுத்துங்க. அல்லது அதுக்கு ஏத்தமாதிரி பொருளாதாரத்தை அதிகமா ஈட்டிக்கொள்ளுங்கள். அதிகமான நேரம் வேலை செய்ங்க, முடியலைன்னா அளவை குறைச்சிக்கங்க. எட்டு இட்லி சாப்பிடுறீங்கன்னு ரெண்டு இட்லியை குறைச்சிக்கிடுங்க. பிரச்சினை வெளியே இல்லை நம்மகிட்ட தான் இருக்கு, நாம தான் இப்படி எதையாவது அட்ஜெஸ்ட் செஞ்சிக்கனும்” என்றார். நாம் அவரிடம் தர்க்கம் எதுவும் செய்யாமல் ஒரு புதிய மாணவனை போல கேட்டுக்கொண்டிருந்தோம்.

பிறகு வேதாத்ரி மகரிஷியை பற்றி கூறினார். “அவர் 24 முறை அமெரிக்காவுக்கு போனார், ” என்று அதை 24 முறைக்கு மேலேயே சொல்லியிருப்பார்.

“சரிங்க ஏன் எல்லா சாமியார்களும் அமெரிக்காவுக்கே போறாங்க. இந்த நாட்டில் எவ்வளவு மக்கள் இருக்காங்க அவங்களுக்கு ஆன்மீகத்தை போதிக்கலாமே” என்றோம்.

“அமெரிக்காவிலிருக்கும் சீடர்கள் அழைக்கும் போது தட்ட முடியுமா அதற்காக தான் போனார். மற்றவர்கள் எல்லாம் எதற்கு போகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.

அமெரிக்காவிற்கும், பெருநகரங்களுக்கும் போகும் மகரிஷிக்கள் ஏழைகள் வாழும் குடிசைப் பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் வருவதே இல்லையே என்று கேட்டதும், அவங்களுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எகத்தாளமாக கேட்டார். சரிதானே, ஆன்மீக பிசினெசில் ஏழைகளுக்கு இடமில்லையே!

கண்காட்சியில் ஆங்காங்கே சங்கராச்சாரியின் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன, மேலும் அவர் தான் இந்த விழாவை துவக்கி வைத்துள்ளார். நாம் சில கடைக்காரர்களிடம் பேசினோம்.

“என்னங்க இதை இந்து ஆன்மீக கண்காட்சின்னு சொல்றீங்க ஆனா ஜெயேந்திரர் மாதிரி கிரிமினல் கேஸ்ல மாட்டினவரை எல்லாம் வச்சு விழாவை துவக்கியிருக்கீங்க, அதோட அவர் படத்தையும் அங்கங்கே தொங்க விட்ருக்கீங்களே” என்றதற்கு

“அவா தான் அதை பன்னான்னு இன்னும் ப்ரூப் ஆகலையே, இருந்தாலும் இப்படி செய்திருக்கப்பிடாது தான். எல்லாத்திலயும் ஃபிஃப்டி ஃபிஃப்டி தான் இருக்கா, பாதி பேர் ஆதரிக்கிறா, பாதி பேர் எதிர்க்கிறா. இதுல நாம என்ன செய்ய முடியும்” என்றார்.

jayendrasaraswathiswamyvr4மற்றொருவர் “இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு, எல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோட முடிவு குருமூர்த்தி இருப்பார்,அவராண்ட கேளுங்க” என்றார்.

“அப்படின்னா இதுல உங்களுக்கு பங்கில்லையா” என்றோம்.

“நான் எப்படி பொறுப்பாக முடியும்?”

“அவரை அழைத்தது தவறு என்பதில் உங்களுக்கு உடன்பாடா இல்லையா?”

“அதை பத்தி இப்போ பேச முடியாது” என்று கிளம்பினார்.

அடுத்து சிருங்கேரி மடத்தில் உள்ளவரிடம் பேசினோம்.

“நீங்க சொல்றது சரி தான், ஆனா என்ன பண்றது யாரை அழைக்கலாம் கூடாதுன்னு தீர்மானிக்கிறவங்க பெரிய ஆட்களாக இருக்காங்க” என்றார்.

“அவரை அழைத்ததை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

“உடன்பாடு இல்லை தான்.”

“அப்படின்னா நீங்க இதை எதிர்க்க வேண்டாமா?”

“நான் எப்படி சார் எதிர்க்கிறது” என்றவர், “இல்லை இன்னும் முடிவு தெரியாத பிரச்சினையை பற்றி நாம பேச முடியாது” என்று நழுவினார்.

இந்து ஆன்மீக சேவை வழங்கும் இத்தகைய ‘உத்தமர்’களைக் கொண்டு நடத்தப்படும் ஆன்மீக சேவைக் கண்காட்சி இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு நகர்ந்தோம்.

(தொடரும்)

– வினவு செய்தியாளர்கள்.

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 2  வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி 2014  அனுபவங்கள் – 1 ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !

வெடிகுண்டுகளுக்கு மத்தியில் தேநீர்

0

ரச்சேலின் கடிதங்கள் -3 போராடும் உலகம் (இறுதிப் பகுதி)

மெரிக்க ஆதரவுடன் பாலஸ்தீன மக்கள் மீது இசுரேல் நடத்தி வரும் ஆக்கிரமிப்பை எதிர்த்து 10 ஆண்டுகளுக்கு முன்பு போராடி உயிர் நீத்த அமெரிக்க இளம் பெண் ரச்சேல் கோரி காசா முனையிலிருந்து அவரது பெற்றோருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களிலிருந்து : (படங்கள் : இப்போது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பானவை)

அம்மா,

உன்னையும் என்னையும் போன்ற வசதியான நடுத்தர வர்க்கத்தினர், நமது வசதிகளை கட்டமைக்கும் அமைப்புகள் எப்படி உருவாக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை தகர்ப்பதற்கு நம்மைப் போல கொடுத்து வைக்காதவர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

பிப்ரவரி 15-ல் நடந்தது போல குடிமைச்சமூகம் பெருமளவில் விழித்தெழுந்து அதன் மனசாட்சி இருப்பதன் ஆதாரத்தை, ஒடுக்கப்படுவதை எதிர்க்கும் அதன் தன்மையை, பிறரின் துன்பங்கள் குறித்த அதன் கருணையை பெருமளவு காட்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

இசுரேல் தாக்குதலால் சிதைக்கப்படும் பாலஸ்தீனர்கள் வாழ்க்கை(நன்றி : RT.com)

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மேட் கிரான்ட், பார்பரா வீவர், டேல் நுத் போன்று இன்னும் அதிகமான ஆசிரியர்கள் உருவாகி அமெரிக்க குழந்தைகள் மத்தியில் விமர்சன பார்வையை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இப்போது நடக்கும் சர்வதேச எதிர்ப்பு இயக்கம் அனைத்து வகையான பிரச்சனைகளையும் ஆய்வு செய்வதற்கு இட்டுச் சென்று பல்வேறு தரப்பிலான மக்களுக்கிடையே பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஜனநாயக அமைப்பில் இயங்குவதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு புதியவர்களான நாம் இனச்சார்பு, வர்க்கச்சார்பு, ஆணாதிக்கம், பாலியல் சார்பு, வயது சார்பு, திறமை சார்பு இவற்றை நீக்கிக் கொண்டு போராட்டங்களில் ஈடுபடும் திறனை வளர்த்துக் கொள்வோம் என்று எதிர்பார்க்கிறேன்.

இன்னொரு விஷயம், இது பொது எதிர்ப்பை பற்றியது. சில வாரங்களுக்கு முன்பு இங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 150 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஒரு பொது ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் போதோ அல்லது கலந்து கொள்ளும் போதோ, ‘அது உண்மையிலேயே தோல்வியடைந்து விடும், மிகச் சிலரே கலந்து கொள்வார்கள், அவமானப்படும்படியாகி விடும். ஊடகங்கள் நம்மை கிண்டல் செய்யும்’ என்று பயமாக இருக்கிறது.

உண்மையில் பல நேரம் அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் மிகச் சிறிய அளவில் முடிந்து விடுகின்றன. ஊடகங்கள் நம்மை கிண்டல் செய்கின்றன. இந்த வார இறுதியில் நாங்கள் நடத்திய 150 பேர் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு 2,000 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம்.

எங்கள் சிறிய ஆர்ப்பாடம் உலக அளவிலான செய்தியாக மாறவில்லை என்றாலும், அரபு ஊடகங்களுக்கு வெளியில் சில இடங்களில் ராஃபா என்ற சொல் ஒலித்தது.

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட தெருநாடக போராட்டம் (நன்றி : RT.com)

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சியாட்டிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காலின் ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும், “ராஃபா மீதான, இராக் மீதான போரை ஒலிம்பியா (நகரம்) எதிர்க்கிறது” என்ற பதாகையை கொண்டு சென்றிருக்கிறார். அவரது படங்கள் முகமது என்பவர் நடத்தும் “ராஃபா – இன்று” இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. இங்கும் பிற இடங்களிலும் உள்ள மக்கள் அந்த படங்களை பார்த்தார்கள்.

கிளென், 10 ஆண்டுகளாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இராக் மீதான பொருளாதாரத் தடையால் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை காட்டும் பெயர்ப் பலகையுடன் தெருவோரம் ஆர்ப்பாட்டம் நடத்தியதை நினைத்துப் பார்க்கிறேன். சில சமயம் ஒன்றிரண்டு பேர் மட்டுமே அவரோடு சேர்ந்து கொள்வார்கள், பெரும்பாலும் எல்லோரும் அவர்களை பைத்தியம் என்று நினைத்தார்கள். அவர்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள்.

இப்போது வெள்ளிக் கிழமை மாலைகளில் பலர் கலந்து கொள்கிறார்கள். 5-வது தெருவுக்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கும் இடையேயான சந்திப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் நிரம்புகிறது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல கை அசைத்தல்களும், கார் ஒலிப்பான்களும், விரல் உயர்த்தல்களும் கிடைக்கின்றன. மக்கள் தமது எதிர்ப்பை காட்டுவதற்கு ஏதாவது செய்வதற்கான கட்டமைப்பை அவர்கள் அங்கு உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் கிண்டல் செய்யப்படுவதை பார்க்கும் ஒருவர் பிரச்சனை குறித்து பத்திரிகை ஆசிரியருக்கு கடிதம் எழுதுவதையாவது செய்வோம் என்று முடிவெடுப்பதை அல்லது ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் சிறிது நேரம் நின்று போகலாம் என்று நினைப்பதை, அல்லது சாலை ஓரத்தில் நின்று இராக் குழந்தைகள் கொல்லப்படுவதை எதிர்த்து பேசி கிண்டலுக்குள்ளாவதை விட குறைவாக நகைப்புக்குரியதாக தோன்றும் ஏதாவது செய்ய முடிவு செய்வதை எளிதாக்கினார்கள்

நீங்கள் செய்து கொண்டிருப்பது பற்றி தெரிந்து கொள்வது, நான் தனியாக செயல்படுகிறேன் என்ற உணர்வை குறைக்கிறது; நான் பலனற்ற வேலையை செய்கிறேன் என்ற எண்ணத்தை மட்டுப்படுத்துகிறது; யாரும் நாம் செய்வதை பார்க்கப் போவதில்லை என்ற விரக்தியை இல்லாமல் செய்கிறது. ஹாரன் அடிப்பவர்களும் கை அசைப்பவர்களும் உதவுகிறார்கள்; படங்கள் உதவுகின்றன; காலின் செய்வது உதவியாக இருக்கிறது.

சர்வதேச ஊடகங்களும் நமது அரசும் நாம் செய்வது மாற்றத்தை கொண்டு வரும், நாம் முக்கியமானவர்கள், நமது வேலை நியாயமானது, நாம் தைரியமானவர்கள், நாம் புத்திசாலிகள், நாம் மதிப்புக்குரியவர்கள் என்று நம்மிடம் சொல்லப் போவதில்லை. நாம்தான் ஒருவருக்கொருவர் அதை செய்து கொள்ள வேண்டும். அதை செய்வதற்கான ஒரு வழி நமது வேலையைப் பற்றி எல்லோருக்கும் அறியும்படி செய்வது.

குழந்தை பத்திரிகையாளர்
காசாவில் குப்பை பையை மேல் கோட்டாகவும், டி.வி என்று எழுதப்பட்ட ஹெல்மெட்டுடனும், எதிர்காலத்தில் தானும் பத்திரிகையாளர் ஆக விரும்புவதாக படம் எடுக்க நின்ற சிறுவன். இந்தப் படம் டுவிட்டரில் 9,000-க்கும் அதிகமான தடவை டுவீட் செய்யப்பட்டிருக்கிறது. (நன்றி : RT.com)

அமெரிக்காவில் ஒப்பீட்டளவில் வசதியாக வாழும் மக்கள், வசதிகளற்ற மக்கள் இந்த போராட்டத்தை நடத்தியே தீர வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். ஏனென்றால் அவர்கள் தமது வாழ்வாதாரத்துக்காக போராடுகிறார்கள். நாம் அவர்களது போராட்டத்துடன் நம்மை இணைத்து கொள்வதன் மூலம் அவர்கள் பக்கம் நாம் நிற்பதை அவர்கள் தெரிந்து கொள்வர்கள். அல்லது போராட்டத்தை அவர்களே செய்யும்படி விட்டு விடலாம், அதன் மூலம் அவர்கள் கொல்லப்படுவதில், நாம் வகிக்கும் மறைமுக பாத்திரத்துக்காக அவர்கள் நம்மை சபிக்கும்படி விட்டு விடலாம். ஆனால், இங்குள்ள யாரும் நமக்கு சாபமிடுவதாக எனக்கு தோன்றியதில்லை.

இங்குள்ள மக்கள், அவர்களது சார்பாக நமது உயிரை பணயம் வைக்கிறோம் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட, நமக்கு போதுமான வசதிகள் செய்து தருவதற்கும், உடல்நிலையைப் பற்றியும் அதிக கரிசனம் செலுத்துகிறார்கள். குறைந்தபட்சம் எனது அனுபவம் அதுதான். துப்பாக்கிச் சூட்டுக்கும், வெடிகுண்டு வெடிப்புகளுக்கும் மத்தியில் மக்கள் எனக்கு நிறைய தேநீரும் பிஸ்கட்டுகளும் தர முயற்சிக்கிறார்கள்.

நான் உன்னை நேசிக்கிறேன்.

ரச்சேல்.

_________________

(ரச்சேலின் தந்தை ரச்சேலுக்கு எழுதிய மின்னஞ்சல்)

மார்ச் 11, 2003

ரச்சேல்,

உனக்கு கடிதம் எழுதுவது கஷ்டமாகத்தான் இருக்கிறது ஆனால் உன்னைப் பற்றி நினைக்காமல் இருப்பது முடியாத விஷயமாக இருக்கிறது. எனவே, நான் கடிதம் எழுதாவிட்டாலும், நண்பர்களுடன் சாப்பிடும் போது உன்னைப் பற்றிய எனது பயங்களை சொல்லிச்சொல்லி அவர்களை சலிப்படைய வைக்கிறேன்.. உன்னை நினைத்து நான் பயப்படுகிறேன். அதற்கு காரணமும் இருப்பதாக கருதுகிறேன். உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், மிகவும் பெருமைப்படுகிறேன்.

ஆனால், டான் ரெம்ஃபர்ட் சொல்வது போல : நான் இன்னொருவரின் மகளை நினைத்து இவ்வாறு பெருமைப்படுவதைத்தான் விரும்புவேன். அப்பாக்கள் அப்படித்தான். நமது குழந்தைகள், அவர்களுக்கு எவ்வளவு வயதாகியிருந்தாலும், அவர்கள் எவ்வளவு தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு நல்லது செய்து கொண்டிருந்தாலும், இந்த அளவு அச்சுறுத்தலை எதிர் கொள்வதையும், அல்லது இந்த அளவு துயரங்களை பார்ப்பதையும் கூட விரும்பாதவர்களாகத்தான் அப்பாக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறோம்.

நான் இப்படி மணலில் தலையை புதைத்துக் கொள்வது தவறு என்று நீ சொல்லலாம் (சொல்லியிருக்கிறாய்), ஆனால், நான் உன் தலையை மணலில் புதைத்து விட முயற்சிக்கிறேன், அது வேறு விஷயம். மாற்ற முடியாமல் என்னில் புதைந்திருப்பது. இதைப் பொறுத்த வரை மாற்றிக் கொள்ள முடியாதது.

நான் உன்னை நேசிக்கிறேன், கவனமாக இரு கண்ணே.

அப்பா

(ரச்சேலின் கடைசி மின்னஞ்சல்)

அப்பா,

உனது மின்னஞ்சலுக்கு நன்றி. எனது கடிதங்கள் மூலம் அம்மாவிடம் பிரச்சாரம் செய்வதை எல்லாம் அவள் உன்னிடம் சொல்லி விடத்தான் செய்கிறாள் என்று நினைத்து உன்னை முற்றிலும் புறக்கணிக்கிறேனோ என்று சில சமயம் யோசித்திருக்கிறேன்.

என்னைப் பற்றி பெரிதாக கவலைப்படாதீர்கள். இப்போதைக்கு நாங்கள் சரியாக செயல்படுகிறோமா என்பதைப் பற்றித்தான் எனக்கு மிகப்பெரிய கவலை. எனக்கு குறிப்பான அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாக நான் இன்னும் உணரவில்லை. இராணுவம் சுடுவதும், வீடுகளை இடிப்பதுமான ஊடுருவல்களை வடக்கில் நடத்துவதாலோ என்னவோ ராஃபா சமீபகாலமாக அமைதியாக இருப்பது போல தோன்றுகிறது. இந்த வாரத்தில் எனக்குத் தெரிந்த வரை ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது, ஆனால் பெரிய அளவில் எந்த ஊடுருவலும் இதுவரை இல்லை. ஆனால், இராக்கில் போர் மூண்டால் நிலைமை எப்படி மாறும் என்று சொல்ல முடியாது.

உங்களது போர் எதிர்ப்பு பணிகளை அதிகப்படுத்துவதற்கு நன்றி. அதைச் செய்வது எளிதானதில்லை என்று எனக்கு புரிகிறது, குறிப்பாக காசாவில் நான் அதை செய்வதை செய்வதை விட அமெரிக்காவில் நீங்கள் அதை செய்வது இன்னும் பல மடங்கு சிரமம் என்று தெரிகிறது. சார்லட்டில் உள்ள பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கு நான் மிக ஆர்வமாக இருக்கிறேன். அந்த நடைமுறையை துரிதப்படுத்துவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

இங்கிருந்து போன பிறகு என்ன செய்யப் போகிறேன் என்றும் எப்போது இங்கிருந்து புறப்படுவது என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்போதைய நிதி நிலவரப்படி ஜூன் வரை தங்கமுடியும் என்று நினைக்கிறேன்.

உண்மையிலேயே ஒலிம்பியாவுக்கு திரும்பிப்போக எனக்கு விருப்பமில்லை. ஒதுக்கி வைத்திருக்கும் என்னுடைய பொருட்களை எடுத்து சரிசெய்யவும், இங்கு எனது அனுபவங்களைப் பற்றி பேசவும் நான் அங்கு வர வேண்டியிருக்கிறது. ஆனால், அட்லாண்டிக் பெருங்கடலை தாண்டி வந்து விட்ட பிறகு, இந்த கரையின் இந்த பக்கம் இன்னும் கொஞ்ச காலம் தங்க வேண்டும் என்ற உறுதியாக விரும்புகிறேன். ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் வேலை தேடலாம் என்று திட்டமிடுகிறேன். சீரியசாக அரபு மொழியை கற்றுக் கொள்வதில் இறங்க வேண்டும்.

திரும்பிப் போகும் வழியில் ஸ்வீடனுக்கு போவதற்கு ஒரு அழைப்பு கிடைத்திருக்கிறது. அதை குறைந்த செலவிலேயே செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ராஃபாவை விட்டு கிளம்பும் போது திரும்பி வருவதற்கான தெளிவான திட்டத்துடன் போக விரும்புகிறேன்.

எங்கள் குழுவின் முக்கியமான நபர்களில் ஒருவர் நாளை புறப்படுகிறார். அவர் இங்கு இருக்கும் மக்களிடம் விடை பெறுவதை பார்க்கும் போது எனக்கு அது எவ்வளவு சிரமமாக இருக்கப் போகிறது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இங்கிருக்கும் மக்கள் எங்களைப் போல கிளம்பி போய் விட முடியாது. அது விடைபெறுதலை இன்னும் சிக்கலாக்குகிறது. நாங்கள் திரும்பி வரும் போது தாம் உயிரோடு இருப்போமா என்று கூட தெரியாத நிலை குறித்து அவர்கள் இயல்பாக இருக்கிறார்கள்.

இந்த இடத்துக்கு நினைத்த போது எளிதாக வந்து போக முடியக் கூடிய நான், ஆனால் திரும்பிப் போகாமல் இருக்கிறேன் என்ற குற்றவுணர்ச்சியுடன் நான் வாழ முடியாது. இடங்களுடன் நம்மை இணைத்துக் கொள்வது முக்கியமானது என்று கருதுகிறேன். எனவே, ஒரு ஆண்டுக்குள் திரும்பி வருவதற்கான திட்டம் போட்டுக் கொள்வேன்.

என்வசம் இருக்கும் சாத்தியங்களின்படி போகும் வழியில் ஒரு சிலவாரங்களுக்கு ஸ்வீடன் போய் வருவேன் என்று நினைக்கிறேன். என்னுடைய பாரிசிலிருந்து ஸ்வீடன் போய் வர சுமார் 150 டாலர்களில் பயணச்சீட்டுகளை மாற்றி ஏற்பாடு செய்து கொள்ள முடியும்.

பிரான்சில் உள்ள சொந்தக்காரர்களை போய் பார்க்க வேண்டும்தான், ஆனால் அதை நான் செய்யப் போவதில்லை. அப்படி போனால், அவர்களுடன் தங்கியிருக்கும் நாட்கள் முழுவதும் சிடுசிடுவென்றுதான் இருக்க முடியும். அவர்களுக்கு என்னால் எந்த உற்சாகமும் டைக்கப் போவதில்லை. மேலும் இன்றைய நிலையில் ஒரு ஆடம்பர வாழ்க்கைக்குள் குதிப்பது போன்றது அது. அப்படி போனால், பெருமளவு வர்க்க குற்றவுணர்வு என்னிடம் இருந்து கொண்டே இருக்கும்.

என் வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஏதாவது கருத்து இருக்கிறதா என்று சொல்லுங்கள்.

உங்களை மிக மிக நேசிக்கிறேன்.

நான் ஹவாயி என்ற பெரிய தீவுக்கு நெசவு கற்றுக்கொள்ள அல்லது ஏதோ விடுமுறை முகாமுக்கு போயிருப்பது போல நினைத்துக்கொண்டு எனக்கு நீங்கள் கடிதம் எழுத விரும்பினால் எழுதலாம். இங்கு வாழ்க்கையை சகித்துக் கொள்ள நான் செய்யும் ஒரு விஷயம், நான் ஏதோ ஹாலிவுட் திரைப்படத்திலோ அல்லது மிகேல் ஜே ஃபாக்ஸ் நடிக்கும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியிலோ இருப்பதாக கற்பனை செய்து கொள்வதுதான்.

அதனால், ஏதாவது கற்பனை செய்து கொள்ள தயங்காதீர்கள், நானும் அதனோடு ஒத்து போக தயார்.

அன்புகள் அப்பா,

ரச்சேல்

_________________________

தமிழாக்கம்: செழியன்.

நன்றி : theguardian.com

“பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்து!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 31.07.2014 வியாழன் அன்று மாலை 4.30 மணியளவில் விழுப்புரம், இரயில் நிலைய வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

முந்தைய பகுதிகள்

ரச்சேல் – பாலஸ்தீனத்தில் தியாகியான அமெரிக்க மாணவி
ரச்சேலின் கடிதங்கள் – 1 : அம்மா புலம்பலுக்கு மன்னித்துக் கொள் !
ரச்சேலின் கடிதம் – 2 : சாவின் நடுவில் சிரிப்பு , கருணை , குடும்பம்

முதலாளி காதர்பாய், போலீசு கிருஷ்ணகுமாரை முறியடித்த தொழிலாளிகள்

27

மதுரை ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரின் கொட்டத்தை அடக்கிய தொழிலாளர் வர்க்கம்

துரை மாவட்டம், யானை மலை ஒத்தக்கடை சில்வர் பாத்திர உற்பத்தி பட்டறைகள் நிறைந்த ஊர். எந்நேரமும் சம்மட்டி ஒலி கேட்டுக் கொண்டே ஒரு துணை நகரம் போலவே இயங்கி கொண்டிருக்கக்கூடிய இடம். ஒத்தக்கடையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் பாரம்பரியத் தொழிலாக ஊரின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது எவர்சில்வர் பாத்திர உற்பத்தி தொழில். இங்குள்ள பல நூறு குடும்பங்களின் வாழ்வாதாரமாக உயர்ந்து நிற்கின்றன எவர் சில்வர் பட்டறைகள்.

எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்
எவர்சில்வர் பாத்திர தொழிலாளர் (படம் : நன்றி தி ஹிந்து)
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/no-shine-for-workers-of-stainless-steel-utensil-manufacturing-units/article1141581.ece

நாடெங்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிறு தொழில்களும், விவசாயமும் தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளால் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த‌ எவர்சில்வர் தொழிலின் எதிர்காலமும் கேள்விக் குறியாகியிருக்கிறது.

பிளஸ்மா வெல்டிங்கை எதிர்த்து போராட்டம்

இந்நிலையில் தற்போது எவர்சில்வர் தொழிலாளர்களின் வேலையைப் பறிக்கும் எமனாக வந்து நிற்பது பிளாஸ்மா வெல்டிங் மிஷின். இந்த மிசின் மூலம் வெல்டர், டிங்கர் இல்லாமல் ஒரு நாளைக்கு 5,000 பீஸ்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். வெறும் 8 அல்லது 10 பிளாஸ்மா வெல்டிங் மிசின் மூலம் ஒத்தக்கடையில் இப்போது உற்பத்தியாகின்ற அளவு பீஸ்களை உற்பத்தி செய்ய முடியும். இதனால் வெல்டிங் டிங்கர் தொழிலாளர்கள் சுமார் 200-க்கு மேற்பட்டோர் உடனடியாக வேலை இழப்பார்கள். மீதமுள்ள தொழிலாளர்கள் படிப்படியாக வேலை இழப்பார்கள். இது கற்பனையல்ல, ஏற்கனவே “பிளாஸ்மா” வெல்டிங், அனுமதிக்கப்பட்ட மதுரையின் பிறபகுதிகளிலும் மற்றும் காரைக்குடி, கும்பகோணம் திருப்பூரிலும் மற்றும் ஒத்தக்கடையில் வேறு சில பிரிவுகளிலும் வெல்டிங், டிங்கர் தொழிலாளர்கள் வேலையிழந்து தொழிலை விட்டே விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் கும்பகோணம் பகுதி தொழிலாளர்கள் வட்ட பிளாஸ்மா வெல்டிங்கை எதிர்த்து விடாப்பிடியாக போராடி வருகின்றனர்.

வேலையை பறித்து வாழ்க்கையை அழிக்கத் துடிக்கும் சில உற்பத்தியாளர்கள்

ஆலைகள் முதல் சாலைகள் வரை உணவுப் பொருட்கள் முதல் இயந்திரங்கள் வரை அனைத்தையையும் படைத்தளிப்பவர்கள் உழைப்பாளி மக்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை வறுமையில் தள்ளும் எதையும் வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்ல முடியாது. அநாகரிகம், மூர்க்கம் நிறைந்த கொடும் மனம் படைத்தோரின் செயல் என்றுதான் அதை சொல்ல முடியும். மலம் அள்ளுவது, சாக்கடை வாருவது போன்ற தொழில்களில் நவீனத்தை கொண்டுவர துப்பில்லாத, விருப்பமில்லாத ஆட்சியாளர்கள்தான் இன்று வளர்ச்சி முன்னேற்றம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை காடுகளிலிருந்து விரட்டுகிறார்கள். சிறு தொழில்கள் அழிக்கப்படுகின்றன, சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு முதலாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலைத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலையிருந்து விரட்டப்படுகிறார்கள். இந்த அநீதியை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர்.

ஒத்தக்கடையில் பிளாஸ்மா வெல்டிங்கை கொண்டுவந்து எவர்சில்வர் தொழிலாளர்களை வேலையிலிருந்து விரட்டத் துடிக்கிறார்கள் சில உற்பத்தியாளர்கள். அதில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண தொழிலாளியாக இருந்து எவர்சில்வர் தொழிலாளர்களின் உழைப்பால் இன்று கோடீஸ்வரராகிவிட்ட, தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்று ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பதவிக்கு வந்த காதர் பாய் என்பவர் மிகவும் முக்கியமானவர். இவர் தனது மகன் மற்றும் சில எடுபிடிகளின் மூலம் பிளாஸ்மா வெல்டிங் மிசின் கொண்டு வந்து, பல ஆண்டுகள் தன்னிடம் உழைத்த தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தி விட்டார். ஒரு பக்கம் இன்னும் பல கோடிகளை சேர்க்க வேண்டும் என்கின்ற லாப வெறியில் காதர் பாய் எனில் இன்னொரு பக்கம் கேள்விக் குறியாக நிற்கும் பல நூறு தொழிலாளர்களும், அவர்தம் குடும்பங்களும்.

காதர் பாய் முகத்தில் கறி

இந்நிலையில் ஒத்தக்கடை எவர்சில்வர் வெல்டர்‍‍, டிங்கர் சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள், ஒத்தக்கடையில் உறுதியான முடிவோடு பிளாஸ்மா வெல்டிங் மிசினை எதிர்த்து தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் காதர்பாயும் அவரது மகன் ஜாஹீரும் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு அஞ்சி தொழிலையும் தொழிலாளர்களையும் அழிக்க கூடிய பிளாஸ்மா வெல்டிங்கை ஒத்தக்கடையில் வைக்காமல் அதற்கு அருகில் உள்ள திருமோகூரில் குமார், கண்ணன் ஆகிய நபர்களோடு சேர்ந்து வைக்க முயற்சிக்கின்றனர். ராமு, கணேசன் ஆகியவர்களை துணையாக வைத்துக் கொண்டு தொழிலாளர்களின் எதிர்ப்புகளையும் மீறி இந்த துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கேட்டால் எங்களுக்கு பாதுகாப்பாக திருமோகூர் மக்கள் இருப்பார்கள் என்று சொல்லி திரிந்து கொண்டு பிளாஸ்மாவை வைத்து உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள். இந்த அநியாயத்தை எதிர்த்து போராடினால் ஊர்ப்பிரச்சினையை தூண்டிவிட காத்திருந்தார் காதர்பாய். இவரின் நோக்கத்தை உணர்ந்து கொண்ட தொழிலாளர்களும் சங்கமும் காதர்பாயின் லாப நோக்கத்தையும் தொழிலாளர்களின் வாழ்நிலையையும், தொழிலாளர் பக்கம் உள்ள நியாயத்தையும் விளக்கி பிரசுரம் தயாரித்து திருமோகூரிலேயே வீடு வீடாக பொதுமக்களிடம் வினியோகித்தனர். திருமோகூர் மக்களும் தொழிலாளர்களின் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து ” நாங்கள் யாரும் காதர் பாயையும் அவருடைய ஆட்களையும் ஆதரிக்க மாட்டோம், நாங்கள் எல்லாரும் உங்களுடைய பக்கம்தான், நீங்கள் தைரியமாக போராட்டத்தை தொடருங்கள்” என்று கூறி காதர்பாய் மற்றும் அவரது அல்லக்கைகளின் மூஞ்சியில் கரியை பூசினார்கள். ஆனால் ஆத்திரம் தலைக்கேறிய காதர்பாயும் அவரது மகன் ஜாஹீரும் பிளாஸ்மாவை எப்படியும் கொண்டு வந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.

இந்நிலையில் பிளாஸ்மா வெல்டிங் வருவதை கண்டித்து 3‍/7/14 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அனுமதி வேண்டி ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மனு செய்தார்கள் சங்கத் தொழிலாளர்கள். விசயமறிந்த காதர்பாய் உடனே சங்கத்தின் சார்பாக போடப்பட்டிருந்த பிரசுரத்தை எடுத்துகொண்டு வந்து ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரை சந்தித்து “சங்கத்தை சேர்ந்தவர்கள் எனது தொழிலுக்கு தடையாக இருப்பதோடு எனது கௌரவத்தை சீர்குலைத்து வருகிறார்கள் அதனால் இந்த ஆர்ப்பாட்டம் தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக நடத்தப்பட இருக்கிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்” என புகார் அளித்துள்ளார். அதோடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரையும் தனிப்பட்ட முறையில் கவனித்துள்ளார். அதற்கு விசுவாசமாய் “நீங்கள் போய் வாருங்கள் நான் கவனித்து கொள்கிறேன்” என நம்பிக்கையூட்டி காதர்பாயை அனுப்பி வைத்துள்ளார் ஆய்வாளர் கிருஷ்ணகுமார்.

2/7/14 அன்று இரவே, “எவர்சில்வர் தொழிலில் பிளாஸ்மா என்கிற வெல்டிங்கை புகுத்தி பல குடும்பங்களை அழிக்கத்துடிக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காதர்பாயை கண்டித்து ஆர்ப்பாட்டம்” என சங்க சுவரொட்டிகள் பளிச்சிட்டன. சுவரொட்டியை கண்டதும் காதர்பாய் வயிற்றில் புளியும், ஆய்வாளர் கிருஷ்ண்குமாருக்கு காதர்பாயின் பாக்கெட் மீதான விசுவாசமும் சுரந்தது.

3/7/14 அன்று காலை 10 மணி அளவில் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் காவல் நிலையம் வந்தவுடன் இருப்புகொள்ளாமல் சங்க பொறுப்பாளர்களை போனில் தொடர்புகொண்டு ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக பேச உடனே வருமாறு அழைத்தார். உடனே சங்கத்தின் தலைவர் வீரர் அலி, செயலர் மாரிமுத்து மேலும் சில தொழிலாளர்களும் காவல் நிலையத்திற்கு சென்றார்கள்.

ஆய்வாளரை சந்தித்ததும் அவர்களிடம் “பிளாஸ்மா வெல்டிங் என்று கூறிவிட்டு தனிநபரான காதர் பாயை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியிருக்கிறீர்கள். இது சட்டப்படி தவறு” என்று மிரட்டும் தொனியில் பேசினார். எப்படியாவது ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று “என்ன செய்ய போகிறீர்கள் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று திரும்ப திரும்பக் கேட்டுள்ளார் ஆய்வாளர்.

அதற்கு “பிளாஸ்மா வெல்டிங் ஆயிரக்கணக்கான தொழிலாளர் வாழ்வை அழிக்கிறது, அதைக் கொண்டு வருபவர் காதர்பாய் அதனால்தான் அவரையும் பற்றி பேசி வேண்டியுள்ளது” என்று சங்க நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். அதை ஏற்க மறுத்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவது அல்லது கட்டப் பஞ்சாயத்து செய்து காதர்பாயின் நோக்கத்தை நிறைவேற்றி வைப்பது என்ற சீரிய லட்சியத்துடன் தீவிர முயற்சி செய்தார் ஆய்வாளர் கிருஷ்ணகுமார்.

தொழிலாளர்களோ ஆய்வாளரின் நோக்கத்தை புரிந்து கொண்டு பணிய மறுத்தார்கள். உடனே ஆத்திரம் தலைக்கேறிய ஆய்வாளர் எழுந்து கிறுக்கனைப்போல் காவல் நிலைய வாயிலில் ஒட்டப்பட்டிருந்த சங்க சுவரொட்டியை பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே வந்து “என்ன தைரியமிருந்தால் பேரு போட்டு ஒட்டுவீங்க, எல்லோரும் உள்ள தான் போகப்போறீங்க. யோவ் ஏட்டு! எல்லோர்ட்டயும் இருக்கிற செல்போனை புடுங்குய்யா” என்று சொல்லிக் கொண்டே தனது நோக்கத்திற்கு சங்க நிர்வாகிகள் மசியாததால் சங்கத்தலைவர் வீரர் அலியை அடிக்க கை ஓங்கியுள்ளார்.

உடனே “எதுக்கு சார் அடிக்க வர்றீங்க, நாங்க எங்க தரப்பு நியாயத்தை பேசப்போறோம், நீங்க கேசு போடணும்னா போட்டுகொள்ளுங்கள். நாங்கள் பார்த்துகொள்கிறோம்” என ஆய்வாளரை எதிர்த்துப் பேசியுள்ளார் வீரர் அலி. எதிர்கேள்வியை சகித்துகொள்ள முடியாமல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் அருகில் நின்று கொண்டிருந்த சங்க தொழிலாளர்களை மூர்க்கத்தனமாக அடிக்க ஆரம்பித்துள்ளார். ஆய்வாளரின் மூர்க்கத்தனமான இந்த தாக்குதலினால் சங்கத்தை சேர்ந்த படையப்பா செந்தில் என்ற தொழிலாளி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

ஆய்வாளரை சங்க‌ தோழர்கள் சந்திக்க போயிருப்பதை அறிந்த சில தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே காத்திருந்திருக்கிறார்கள். காவல் நிலையத்திற்குள் பேசவேண்டும் என அழைத்து சங்க நிர்வாகிகளையும் தொழிலாளர்களையும் அடித்து உதைத்து ரவுடியை போல் ஆய்வாளர் நடந்து கொள்வதை தெரிந்து கொண்ட அத்தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளையின் இணைச்செயலாளருமான வாஞ்சிநாதனுக்கு தொலைபேசியில் காவல் நிலையத்தில் நடக்கும் விசயங்களை தெரிவித்துள்ளனர்.

உடனே வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு ஆய்வாளர் கிருஷ்ணகுமாரின் அடாவடித்தனத்தை பற்றி தெரிவித்திருக்கிறார். இதனால் தொழிலாளர்கள் ஆத்திரம் கொண்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.  எனவே, உடனே சங்க தோழர்களை வெளியே விடச்சொல்லியும், இதற்கு காரணமான கிருஷ்ணகுமார் மேல் நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் அளித்துள்ளார்.

கண்காணிப்பாளரிடம் தன் மீது புகார் போனதை அறிந்ததும் பம்ம ஆரம்பித்தார் கிருஷ்ணகுமார். காவலர்களிடம் “யோவ் இவங்களோட செல் போனையெல்லாம் திருப்பிக் கொடுத்துடு” என்று ஆணையிட்டார். தொழிலாளர்களை சமாதானம் செய்யும் பொருட்டு சங்க தொழிலாளர்களை பார்த்து ” நீங்க ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டீங்க, கொடுத்திட்டேன், இனியும் ஏதாவது உதவி வேண்டும், அனுமதி வேண்டும் என்றாலும் வாருங்கள், எந்த உதவி என்றாலும் செய்து தருகிறேன்” என நைச்சியமாக பேச ஆரம்பித்துள்ளார்.

சங்க தோழர்களிடம் “உங்க சங்கத்தின் சட்ட ஆலோசகர் யாரு?” எனக் கேட்டுள்ளார் கிருஷ்ணகுமார். தோழர்கள் வாஞ்சிநாதன் என்று சொல்ல, இன்று ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றுவதும் வாஞ்சிநாதன் தான் என்பதை கேட்டு அறிந்து கொண்ட கிருஷ்ணகுமார் “வாஞ்சிநாதன் ஒரு கூட்டத்தில் என்னோட‌ சட்டையை கழட்ட வைப்பேன் என்று சொல்கிறார் . அதை கேட்டதும் எவ்வளவு மனது கஷ்டப்பட்டேன் தெரியுமா? நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன், லஞ்சம் வாங்காமல் நேர்மையாக நடக்கிறவன், என்னை இப்படி பேசலாமா?” என மாலை மாலையாக கண்ணீர் வடித்து அழுது தொழிலாளர்களிடம் சுய பச்சாதாபம் தேட நாடகம் நடத்த ஆரம்பித்துள்ளார்.

விசயம் என்னவெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் புறக்கணிப்பு பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்று பு.ஜ.தொ.மு. தோழர்கள் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தபோது கூட்டத்தன்று காலையில் தோழர்களிடம் வந்து “யாரைக் கேட்டுகூட்டம் நடத்துகிறீர்கள்” என பவுசாக கேட்டுள்ளார்.

தோழர்களோ, “தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்றுவிட்டோம்” என சொல்லியிருக்கிறார்கள். அதற்கு, “எனக்கு தெரியாமல் கூட்டம் நடத்துவீர்களா, உங்களை எல்லாம சுட்டுவிடுவேன்” என்று திமிர்த்தனத்துடன் பேச, “அனுமதி அளித்தவரிடம் போய் கேளுங்கள்” என்று பதிலளித்துவிட்டார்கள். அன்று நடந்த பொதுக்கூட்டத்தில்தான் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆய்வாளரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், “நாங்க நினைச்சா நீ காக்கி சட்டையே போட முடியாது, சட்டையை கழற்றிவிடுவோம்” என்று இவரை கண்டித்தும் பேசியது பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்த சம்பவத்தை மனதில் வைத்து தான் சங்க நிர்வாகிகளிடம் நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார்.

மீண்டும் பிரச்சினைக்கு வருவோம். காவல் நிலையத்திற்கு வெளியே நிற்கின்ற தொழிலாளர்கள் காவல்நிலையத்திற்குள் நடக்கின்ற அசாதாரண சூழலை கணக்கில் கொண்டு தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே அணிதிரள ஆரம்பித்துள்ளார்கள். சில நிமிடங்களில் 200-க்கும் மேலான தொழிலாளர்கள் திரண்டவுடன் நிலைமையை உணர்ந்துகொண்ட ஆய்வாளர் கிருஷ்ணகுமார், ஏற்கனவே தன் மீதுகண்காணிப்பாளரிடம் புகார் போய்விட்டது. தான் அடித்ததில் ஒரு தொழிலாளி (படையப்பா செந்தில்) பாதிக்கப்பட்டுள்ளார். இதையெல்லாம் புரிந்துகொண்டு சங்க நிர்வாகிகளையும் தொழிலாளர்களையும் வெளியில் செல்லலாம் எனச் சொல்லியுள்ளார். எதுவுமே நடக்காதது போல் பல்லைக் காட்டி இளித்து பேசி அனுப்பி வைத்துள்ளார் கிருஷ்ணகுமார்.

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த தொழிலாளர்கள், ஆய்வாளரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட படையப்பா செந்திலை 108 ஆம்புலன்ஸ் மூலம் இராசாஜி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதி செய்துவிட்டு காவல் நிலையத்திலிருந்து பேரணியாக திரண்டுவந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையின் முன் நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போது 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கண்டன உரையாற்றினார். பின்னர் தொழிலாளர்கள் மொத்தமாக சென்று காவல்நலைய கண்காணிப்பாளரை சந்தித்து ஆய்வாளர் கிருஷ்ணகுமாரின் சட்டவிரோத நடவடிக்கைகளை புகாராக அளித்தார்கள்.

தொழிலாளர்கள் அளித்த புகாரின் விளைவாக ஆய்வாளர் கிருஷ்ண்குமார் ஆயுதபடை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் ஒத்தக்கடையில் பணிபுரிந்த காலத்தில் எல்லா சமூக நல அமைப்பை சேர்ந்தவர்களையும் தான் சொல்லி கேட்காவிட்டால் காவல்நிலயத்திற்கு அழைத்து தாராளமாக அடிப்பார். கட்டப்பஞ்சாயத்து செய்து பச்சையாக ரவுடித்தனம் செய்வார். லஞ்ச லாவண்யங்களில் ஊறித்திளைத்து, மக்களின் பிரச்சினைகளை ஒட்டி சுவரொட்டி ஒட்டினால் கூட கூப்பிட்டு வைத்து மிரட்டுவார். சுருக்கமாக சொன்னால் சினிமா போலீசை போல் நடந்து கொள்வார். அப்படியெல்லாம் கொட்டமடித்த ஆய்வாளர் கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டதும் ஒத்தகடையின் சகல பிரிவு மக்களும் நிம்மதி பெரு மூச்சுவிட்டார்கள்.

கிருஷ்ணகுமாரின் தினவெடுத்த அடாவடித்தனங்களால் வெறுத்து போயிருந்த ஒத்தக்கடை பொதுமக்கள், தொழிலாளர்கள், சமூக நல அமைப்புகள் அனைவரும் வெல்டிங்‍‍‍,டிங்கர் சங்கத்தையும் சங்கத் தொழிலாளர்களையும் பாராட்டினார்கள்.

ஒற்றுமையாய், ஒரு அமைப்பாய் தொடர்ச்சியாக போராடினால் தொழிலாளிவர்க்கம் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை சகல தரப்பினருக்கும் ஏற்படுத்தியுள்ளது, முத்தாய்ப்பாக படையப்பா செந்திலை தாக்கியதற்காக ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மீது தனிப்பட்ட வழக்கு நீதிமனற‌த்தில் தொடுக்க இருப்பதை கேள்விப்பட்ட ஆய்வாளர் கிருஷ்ணகுமார் “வழக்கு எதுவும் போட வேண்டாம். நாம் வெளியே பேசித்தீர்த்துக் கொள்வோம்” என்று ஒத்தக்கடையில் தற்போது பணியில் இருக்கும் துணை ஆய்வாளர் மூலம் சமாதானத் தூது அனுப்பியிருக்கிறார்.

தொழிலாளர்களோ முகத்தில் அறையும் வகையில் அதை மறுத்துவிட்டார்கள்.

அதன் பின் 10/7/2014 அன்று காதர்பாயை கண்டித்து தொழிலாளர்களின் நியாயத்தை விளக்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களும் மாற்று சங்க நிர்வாகிகளும் பொது மக்களும் திரளாக வந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகளும் உரையாற்றினார்கள். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் எழுச்சி உரையாற்றினார். இது ஒத்தக்கடை மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

ஒத்த‌க்கடை வாழ் உழைக்கும் மக்களின் நம்பிக்கையின் ஒலிக்கீற்றாய் புரட்சிகர இயக்கங்களும் அதன் தலைமையில் இயங்கும் சங்கங்களும் விளங்கி வருவதை இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

தகவல்
மதுரை மாவட்ட எவர்சில்வர் வெல்டர்‍ டிங்கர் தொழிலாளர் சங்கம்

குடந்தை தீ விபத்தா – தனியார்மயத்தின் திட்டமிட்ட சதியா ?

3

குடந்தை தீ விபத்தா – தனியார்மயத்தின் திட்டமிட்ட சதியா ? – 1  மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன்

2004-ல் நடந்த கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்து வழக்கில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. காலம் தாழ்த்தி வந்துள்ள இத்தீர்ப்பில் உயரதிகாரிகள் பலரை அரசே விடுவித்திருப்பதும், எந்த அதிகாரமும் இல்லாத எழுத்தர்கள், சமையல்காரர் போன்றோர்களுக்கு, பள்ளி தாளாளருக்கு இணையான தண்டனை வழங்கப்பட்டிருப்பதையும் பார்க்கையில் பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஜெயாவின் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு சற்றும் குறையாத வகையில் இழுத்தடிக்கப்பட்டுதான் இந்த தீர்ப்பே நமக்கு கிடைத்துள்ளது.

இந்த விபத்து நடந்த பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் பரிந்துரைகளை எந்த தனியார் பள்ளியும் மயிரளவுக்கு கூட மதிக்கவில்லை என்பதுதான் கடந்த பத்தாண்டு கால அனுபவம். கட்டண நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட சிங்காரவேலர் கமிட்டியையும் தங்களது கால் தூசுக்கு சமமாக கூட எந்த தனியார் பள்ளி முதலாளிகளும் மதிக்கவில்லை. மக்களும் வேறு வழியேயில்லாத காரணத்தால் தனியார்மய மோகத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். “பொதுப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தவும், தாய்மொழி வழிக் கல்விக்கு சாவுமணி அடிக்கவும், கல்வித் தந்தைகள் கண்மூடித்தனமாக மக்களை சுரண்டி கொள்ளையடிக்கவும் வழிவகுக்கும் இந்த தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் வலிய வந்து தங்களது பிள்ளைகளை சேர்ப்பதை இந்த தீர்ப்பு எந்த விதத்திலும் குறைத்து விடாது” என்கிறார் மூத்த கல்வியாளர் திரு. எஸ்.எஸ். ராஜகோபாலன்.

இது குறித்து அவருடன் நடத்திய உரையாடலை கீழே தொகுத்து தருகிறோம்.

ss-rajagopalanகும்பகோணம் தீ விபத்தை ஒரு ஓலைக் கூரை பிரச்சினையாக திசை திருப்பிய அரசு, முதலில் இருந்தே வழக்கில் காலம் தாழ்த்தும் வேலையை செய்து வருகிறது. இப்படி வகுப்பறைக்கு அருகில் சமையற் கூடம் அமைக்க சமூக நலத்துறை ஒப்புதல் கொடுத்திருப்பதால் இதுவும் அரசின் பொறுப்புதான். இச்சம்பவத்திற்கு பிறகு சில அரசுப் பள்ளிகளுக்கு நான் சென்று பார்த்த போது கூரைகளை மட்டும் அகற்றியிருந்தார்கள். பதிலுக்கு எதனையும் கொண்டு மேலே மூடாத காரணத்தால் குழந்தைகள் வெயிலிலும், மழையிலும் துன்பப்படுவதுதான் எல்லா இடங்களிலும் நடைபெற்றது. “ஏன் கூரை போடவில்லை என்று கேட்டால், அரசாங்கம் தான் ஓலை கூரையை எடுக்கச் சொன்னார்கள். அவர்கள்தான் பதிலுக்கு எதைப் போட வேண்டுமோ அதைப் போட வேண்டும், நாங்கள் இதில் என்ன செய்ய முடியும்” என்றார்கள். ஏனென்றால் அது அரசுப்பள்ளி. இதுதான் நிலைமை.

விபத்து நடந்த பள்ளியில் அன்று ஆசிரியர்கள் குழுந்தைகளைப் பூட்டி வைத்து விட்டு கோவிலுக்கு போயிருக்கிறார்கள். பள்ளி நேரத்தில் ஆடி வெள்ளிக்காக ஆசிரியர்கள் சிவன் கோவிலுக்கு போனதை எப்படி அனுமதிக்கிறார்கள். இதில் இசுலாமியர்களுக்கு பிரிட்டிஷ் காலகட்டத்திலேயே விதிவிலக்கு தரப்பட்டிருப்பினும், அவர்கள் மதிய உணவு இடைவேளை போன்ற ஓய்வு நேரத்தில் தான் தொழுகைக்கு செல்கின்றனர். எனவே ஆசிரியர்கள் குழந்தைகளை பூட்டி வைத்து விட்டு சென்றது தவறு.

கீழ்தளம் தமிழ் வழி அரசு உதவி பெறும் மாணவர்களுக்கானது. அப்படி சொல்லித்தான் அரசிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள். ஆனால் ஆங்கில மீடியம் படிப்பவர்கள் படி ஏற முடியாது என்று சொல்லி தமிழ் மீடியம் படிப்பவர்களை இரண்டாவது மாடிக்கு மேலே அனுப்பி இருக்கின்றனர். இது அப்பட்டமான விதிமீறல்

கும்பகோணம் பள்ளி தீவிபத்துஎழுத்தருக்கு தண்டனை என்பது ஏற்க முடியாது. அவருக்கு எந்தவித கருத்து சொல்லும் உரிமையோ, அதிகாரமோ கிடையாது. ஆனால் கல்வி இயக்குநரை அரசே வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது. இவர்தான் 126 ஆசிரியர் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்து அதனால் சுப்ரீம் கோர்ட்டில் கண்டனம் பெற்றவர்; அவர் அந்த அனுமதி கொடுத்த நாள் ஒரு ஞாயிற்றுக் கிழமை. அவரை வழக்கில் இருந்து விடுவித்தது மாபெரும் தவறு.

இந்த சம்பவத்திற்கு பிறகும் கூட உதவி பெறும் பள்ளியின் வளாகத்திலேயே மெட்ரிக் பள்ளிகளையும் இயங்க அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரண்டும் வேறு வேறு கட்டிடங்களில் தான் இயங்க வேண்டும் என்கிறது சட்டம். பள்ளிக்கு ஐந்து ஏக்கர் நிலம் குறைந்தபட்சம் இருக்க வேண்டும் என்பது தனியார் பள்ளி முதலாளிகளின் தொடர்ச்சியான தலையீட்டினால் இப்போது அறுபது சென்டு என்ற நிலைமைக்கு வந்து விட்டது. பள்ளி வளாகத்தில் பிற பள்ளிகளோ அல்லது வணிக நிறுவனங்களோ இருக்க கூடாது என்பது சட்டம். இதனை எல்லாம் தடுத்து நிறுத்தும் விதமாக செயல்பட்டிருக்க வேண்டியவர்களான அரசோ கல்வித்துறையோ இந்த விபத்திற்கு எந்த விதத்திலும் பொறுப்பாக்கப்படவில்லை. என்பதுதான் ஏமாற்றத்திற்குரியது.

இதுதவிர பல விபத்துக்கள் பள்ளிகளுக்குள் நடக்கின்றன. தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தைகள் இறந்து போவது, மூடியில்லாத, சுவரில்லாத கிணற்றில் தவறி இறந்து போவது என பள்ளி வளாகத்திற்குள் விபத்துக்கள் நிறையவே நடக்கிறது. அதில் ஆக மோசமானது குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். பாலியல் தொந்திரவு செய்யும் ஆசிரியர்களை இட மாற்றுதல் மட்டும் செய்கிறார்கள். மாறுதலாகிப் போய் செல்லும் இடத்திலும் அவர் அதே தவறை செய்வார். இது ஒரு குற்ற நடவடிக்கை. எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியரை மனநோய் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பதுதான் நமது தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளி தற்போது இருக்கும் இடம் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தம் என்பதால் தமிழக அரசு அந்த இடத்தை 99 வருசத்துக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. ஒரு குடியிருப்பு உருவாகையில் பூங்கா, பள்ளிக்கூடம், மருத்துவமனை ஆகியன கட்டாயம் அப்பகுதியில் இருக்க வேண்டும் என்பதால் அதற்கான இடம் முறையாக முன்னரே ஒதுக்கப்படுகிறது. அப்படி அரசால் பள்ளிக் கூடத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உருவான பள்ளி தான் பத்மா சேஷாத்ரி பள்ளி. இப்படி ஒதுக்கப்படும் நிலத்தில் பள்ளி நடத்துவதற்கான விண்ணப்பம் கோரும் அரசு விளம்பரம் நீதிமன்ற கண்துடைப்புக்காக மட்டுமே வெளியாகும். இது யாருக்கும் தெரியாத அளவில்தான் பெரும்பாலும் பத்திரிகைகளில் ஒரு ஓரமாக வெளியாகும். அப்படி உருவான பத்மா சேஷாத்ரி பள்ளிதான் கல்விக் கொள்ளையில் முன்னணியில் நிற்கிறது.

கல்வி தனியார்மயம் என்பது மெட்ரிகுலேசனை கொண்டு வந்த எம்ஜியார் காலத்தில் இருந்து துவங்குகிறது. ஆனால் அவர் இன்று விமர்சனத்திற்கப்பாற்பட்டவர் என ஆகி விட்டதால் கருணாநிதி உள்ளிட்ட யாரும் இதைப் பற்றி பேச மறுக்கிறாரகள். தனியார்மயம் என்பது பொதுத்துறையை கழுத்தை நெறிப்பது, தனியாரை அனுமதிப்பது என்ற இருமுனைகளில் செயல்படுகிறது. அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்ற கோயபல்சு பிரச்சாரம் தனியாரால் முன்னெடுக்கப்படுகையில், கல்வித்துறை செயலரும், அமைச்சரும் மவுனம் சாதிக்கிறார்கள். “எனது பள்ளி தரமானது, என்னிடம்தான் தரமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள்” என்று சொல்வது அவர்கள் கடமையில்லையா?

சமச்சீர் கல்வி மாநாடு
2011 சமச்சீர் கல்வி மாநாட்டில் மாணவர்கள் (கோப்புப் படம்)

கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களை சேர்ப்பது என்பது ஒருவகையில் பார்த்தால் கல்வி மறுப்பு சட்டம் தான். இந்த விசயத்தில் நமது இடதுசாரிகளே கொஞ்சம் திசை விலகி விடுகிறார்கள். 25% ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு என்பது நல்ல திட்டமில்லையா என்கிறார்கள். இதில் சில என்ஜிஓக்களும் உடன் நிற்கிறார்கள். உண்மையில் நாம் செய்ய வேண்டியது இந்த இட ஒதுக்கீட்டில் தனியாரில் ஏழை மாணவர்களை சேர்ப்பதல்ல, மாறாக அரசு பள்ளியின் தரமுயர்த்தப்பட போராடுவது, மாணவர்களை அங்கு சேர்க்க வைக்க போராடுவது என்பதுதான். இதை மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ராஜூ வந்துதான் செய்ய வேண்டுமா. இதனை செய்ய வேண்டியவர்கள் அரசு கல்வித்துறை அதிகாரிகள் இல்லையா?

1970 வரை உள்ளாட்சி அமைப்புகள்தான் பள்ளிகளை நடத்தின. அவை அரசு உதவி பெறும் பள்ளிகள்தான். ஆசிரியர் பயிற்சிக் கூடத்துடன் இணைந்திருக்கும் மாதிரி அரசு பள்ளிகள், இசுலாமிய பெண்களுக்கான மூன்று பள்ளிகள் என மொத்தம் இருபது பள்ளிகளை மட்டும்தான் ஒருங்கிணைந்த சென்னை மாகாண அரசு நிர்வகித்து வந்தது. பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசே நேரடியாக நிர்வகிக்க எடுத்துக் கொண்டது. நாற்பதாயிரம் பள்ளிகளை இணைத்து நிர்வாகத்தை அரசு மேற்கொள்வது என்பது எளிதல்ல. முன்னர் உள்ளாட்சி பள்ளியாக இருக்கையில் நமது பள்ளி என்று மக்கள் இப்பள்ளிகளைப் பார்த்தார்கள். இப்போது அரசு பள்ளியாகி விட்டதால் அரசு பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டார்கள். அடுத்து எம்.ஜி.ஆர் செய்த தவறு ஆசிரியர்களை அரசு ஊழியர்களாக்கியது. இதனை மாற்றி இப்பள்ளிகளை மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட அனுமதி தர வேண்டும்.

இப்போது நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஒரு பித்தலாட்டம் தான். ஆசிரியருக்கு ஒரு விசயத்தை குழந்தைகளுக்கு விளக்குமளவுக்கு மொழியறிவு எளிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான தகுதி. இப்போது ஏன் இவ்வளவு மாணவர்கள் தேர்வு பெறவில்லை என்ற கேள்வியை யாராவது சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்கிறார்களா? 37 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இருந்த இடத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள். எப்படி பொறியியல் கல்லூரிகள் அதிகரித்த பிறகு அந்த கல்வியின் தரம் கீழே விழுந்ததோ அதே போன்ற நிலைமைதான் இன்று ஆசிரியர் பயிற்சி நிலையத்திலும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் எதிலும் இணைந்த மாதிரி பள்ளிகள் கிடையாது. துறை போகிய ஆசிரிய பயிற்சி நிலையங்கள் என்று எதுவும் இல்லை. இதில் உருவாகும் அரைவேக்காட்டு ஆசிரியர்களால், இத்தேர்வுக்கு தயாராக்கும் நுழைவுத்தேர்வு ஆயத்த கைடுகளை போடும் நிறுவனங்கள், தனிப்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தான் பயன்பெறுகின்றன. இதனால் இதற்கு வழியில்லாத ஏழை மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள்.

2012 கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
2012 கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

பொதுக்கூட்டம், எழுதுவதை தாண்டி நேரடியாக மக்களிடம் சென்று இந்த கல்வி தனியார்மயம் பற்றி நாம் பேச வேண்டும். பாப்புலிஸ்டு திட்டங்கள்தான் பாசிசத்தின் வருகைக்கான முன்திட்டமிடல் என்று மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதனை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது இடதுசாரிகளின் கடமை. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த உப்புக்கு அதன் பிறகு வந்த பிரதமர்கள் நேரு துவங்கி இந்திரா வரை யாரும் வரி போடவில்லை. இப்போது வரி போட்டு விட்டதுடன் அரசே அதனை மக்களிடம் விற்கவும் துவங்கி விட்டார்கள். குடிநீரை அரசு மலிவு விலைக்கு விற்க துவங்கி விட்டது. அது பாதுகாக்கப்பட்டதா என்பது வேறு விசயம்.

இட ஒதுக்கீடு செய்வதோடு அரசின் கடமை முடிந்து விடவில்லை. இட ஒதுக்கீடு இல்லாமல் முழுமையாக பயன்பெற வேண்டிய நிலைமைக்கு தரமான கல்வியை துவக்க பள்ளியில் இருந்தே அதனை தருவதற்கு முயற்சிக்க வேண்டாமா? மதிப்பெண்களை குறைவாக நிர்ணயித்த காரணத்தால் படிப்பில் சேர்ந்த எத்தனை பொறியியல் கல்லூரி மாணவர்கள் முறையாக அதனை முடித்தார்கள். நிறைய பேர் பாதியிலேயே படிப்பை கைவிட்டனர். அல்லது பதினைந்து அரியரோடு வெளியே வந்தனர்.

நமது நம்பிக்கை மாநில அரசை விட மத்திய அரசு உசத்தி என்று இருப்பதால் அதனைத்தான் நாம் மிகவும் மதிப்போம். தமிழ்நாட்டு போலீசை விட சிபிஐ உசத்தி என்பதுதான் நமது நம்பிக்கை. ஆனால் அங்குதான் ஊழல் அதிகம் என்று நமக்கு தெரியாது. அது போல முன்னர் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த பாலகுருசாமி பொறியியல் கல்லூரிகளின் மதிப்பெண் பட்டியலை வெளியிட சொன்னார். யாரும் அதனை சட்டை செய்யவில்லை. தற்போது நீதிமன்ற உத்திரவுக்கு பிறகு ஏஜசிடிஈ வந்துதான் தரவாரியாக கல்லூரிகளது பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் எல்லோரது லட்சணமும் வெளி வந்து விட்டது.

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளிகளில் முதல்வராவதோ அல்லது தனியாக மெட்ரிக் பள்ளிகளை ஆரம்பிப்பதோ கூடாது என்று அவர்கள் ஓய்வுபெறும் விழாவில் நான் பேசுவேன். எதாவது சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர், தாழ்த்தப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு அவர்கள் உதவ வேண்டும் என்றுதான் சொல்கிறேன். நான் சொல்வதை யாரும் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை.

நாமக்கல் தனியார் பள்ளிகளை துவங்கியவர்கள் அனைவருமே அரசு ஆசிரியர்கள்தான். திருச்செங்கோடு பள்ளியை துவங்கியவர் சங்ககிரி பள்ளியின் தலைமையாசிரியர். அவரைத்தான் பாடத் திட்டக் குழுவிலும் அரசு போட்டது. அவர் பள்ளியில் இருந்து ஆண்டுக்கு நாற்பது பேராவது அரசு மருத்துவ கல்லூரிக்கு போய் விடுகிறார்கள். பாடத் திட்டத்திற்கான ஒரு கூட்டத்திற்கும் அவர் வரவில்லை. நேரில் விசாரித்து பார்த்தால் தனக்கு தகவல் இல்லை என கூசாமல் பொய் சொல்லியிருந்தார். இதனை கூரியர் சர்வீஸ் மூலம் சரிபார்த்துதான் சொல்கிறேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே கடைசி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் நான்கு செல்பேசிகளை வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கூட்டத்திற்கு இடையூறு ஏற்படாதிருக்க அவற்றை அணைத்து விட வேண்டும் அல்லது வெளியில் சென்று பேசுமாறு கூறினேன். இயக்குநர்களுக்கு மதிய உணவை இறைச்சியுடன் ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதாக சொன்னார்.

இந்த அரசு இயக்குநர்கள் அரசு பயணியர் விடுதிகளில் தங்குவதற்கு பதிலாக ஐந்து நட்சத்திர விடுதிகளில்தான் பெரும்பாலும் தங்குகின்றனர். சமச்சீர் கல்வி விசயத்திலேயே அங்கு இருந்த இயக்குநர்களிலேயே தேர்வு கட்டுப்பாட்டு இயக்குநர் ஒருவரை தவிர மற்ற அனைவருமே மெட்ரிக் பள்ளிகளின் ஆட்கள்தான். ஆனால் நமக்கு இவர்கள் கண்ணுக்கு தெரிவது இல்லை. அம்பானி போன்றவர்கள் தெரிவதில்லை. நமக்கு சிறிய அளவில் திருடுபவர்கள் தான் கண்ணில் தெரிகிறார்கள்.

(தொடரும்)

உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை

4

கோலார் : தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் – 2

மது உடலின் இயக்கத்துக்கு ஆக்சிஜன் (பிராணவாயு அல்லது உயிர்வளி) மிக அவசியம் என்பது எல்லோரும் அறிந்த உடற்கூறியல் சார்ந்த அடிப்படை உண்மை. நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து உடலின் இயக்கத்துக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வேலையை நுரையீரல் செய்கிறது.

சுவாச மண்டலம்
மூச்சு மண்டலம்

மூக்கின் வழியே நாம் சுவாசிக்கும் காற்றானது, மூச்சுக் குழாய் (Trachea) வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக் குழாய் மார்புப் பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்குச் செல்கிறது. நுரையீரலுக்குள் நுழைந்தவுடன் மூச்சுக்குழல் ஒவ்வொன்றிலிருந்தும் கிளைகள் பிரியும். பின்னர் அவற்றிலிருந்து இன்னும் சிறு கிளைகள் என நிறைய பிரிவுகள் ஒரு மரத்தின் பெரிய கிளையிலிருந்து பிரிந்து சின்னச்சின்ன தளிர்கள் வருவது போல் பிரிகின்றன. இது மூச்சுமரம் (Respiratory tree) என்று அழைக்கப்படுகிறது.

முதல் நிலை மூச்சுக் குழல் (Primary bronchi), இரண்டாம் நிலை மூச்சுக் குழல், மூன்றாம் நிலை மூச்சுக்குழல், மூச்சுக் குறுங்குழல் (bronchiole) என்று படிப்படியாகப் பிரிந்து கடைசியாக சின்னச் சின்ன பலூன்கள் மாதிரி தோன்றும் குட்டிக்குட்டி அறைகளை இந்தக் குழல்கள் சென்றடையும். இந்த சின்னச் சின்ன பலூன் அமைப்புகள் காற்று நுண்ணறைகள் (Alveoli) என்று அழைக்கப்படுகின்றன. மூக்கின் வழியே உள்நுழையும் காற்று மூச்சு மரம் வழியே பயணித்து இறுதியாக காற்று நுண்ணறைகளுக்குள் வந்து சேர்கிறது.

இவ்வாறு காற்று நுண்ணறைகளுக்குள் வந்து சேர்ந்த உயிர்வளி தான் நமது உடலில் ஓடும் இரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கியமான வேலையைச் செய்கிறது. இது எப்படி நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

உடலில் பல பாகங்களிலும் இருந்து பயன்படுத்தப்பட்ட ரத்தம் மெல்லிய இரத்தக் குழாய்களின் வழியே பயணித்து இதயத்தின் வலது வெண்டிரிக்கிளை அடையும். அங்கிருந்து தமனி மூலம் நுரையீரலுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நுரையீரல் தமனியும், வலது கிளை, இடது கிளை என்று இரண்டாகப் பிரிந்து இரண்டு நுரையீரலுக்கும் செல்கிறது. இதுவும் பலமுறை கிளைகளாகப் பிரியும். இப்படிப் பிரியும்போது காற்று நுண்ணறைகளின் அக்கம் பக்கமாக தமனிகளின் மிக மிகச் சிறிய கிளைகள் அமைந்திருக்கும். இந்தச் சின்ன தமனிக் கிளைகள் நுண்துளை ரத்தக்குழாய்கள் (Capillaries) எனப்படுகின்றன.

மூச்சு விடுதல்
மூச்சு விடுதலின் போது ரத்தத்திலிருந்து கரியமில வாயு பிரிக்கப்பட்டு, உயிர்வளி சேர்க்கப்படுதல்.

காற்று நுண்ணறை மற்றும் நுண்துளை ரத்தக் குழாய்கள் இவற்றின் சுவர்கள் மிக மிக நுண்ணியவையாக இருக்கும். நுண்ணறைக்குள் உயிர்வளி (ஆக்ஸிஜன்) நிறைந்த காற்றும் நுண்துளை ரத்தக் குழாய்களுக்குள் உயிர்வளி குறைந்த கரியமில வாயு (கார்பன் டைஆக்சைட்) நிறைந்த ரத்தமும் இருக்கும். இந்த நிலையில் காற்று நுண்ணறை – நுண்துளை ரத்தக் குழாய் சுவர்களின் வழியாக ஒரு பரிமாற்றம் நடக்கிறது. நுண்ணறை காற்றில் அடர்த்தியாக இருக்கும் உயிர்வளி (ஆக்ஸிஜன்) நுண்துழை குழாய் இரத்தத்துக்குள் பாயும். நுண்துழை குழாய் ரத்தத்தில் அடர்த்தியாக இருக்கும் கரியமில வாயு (கார்பன்டை ஆக்ஸைடு) நுண்ணறை காற்றுக்குள் பாயும். இதுதான் வாயுப் பரிமாற்றம் (Exchange of gases). இப்படித்தான் நமது உடலில் ஓடும் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

நாம் உயிரோடு இருக்க இந்த வேலை ஒழுங்காக நடக்க வேண்டும். இந்த வேலை ஒழுங்காக நடக்க நாம் போதுமான உயிர்வளி (ஆக்சிஜன்) நிறைந்த காற்றை சுவாசிக்க வேண்டும். ஒருவேளை நாம் சுவாசிக்கும் காற்றில் நிறைய மாசு கலந்திருந்தால் என்னவாகும்? ஒருவேளை அந்த மாசுக்கள் உலோகத் துணுக்குகளாக அமைந்து விட்டால் என்னவாகும்?

அவ்வாறு தொடர்ந்து உலோகத் துணுக்கு அல்லது தூசுகளைச் சுவாசிக்கும் ஒருவருக்கு நுரையீரலில் சிறு சிறு பள்ளங்கள் ஏற்படும். அந்நோயின் பெயர் ந்யூமகொனியோசிஸ் (pneumoconiosis). தமிழில் அதை தூசுவளிநோய் என்று சொல்லலாம்.

ந்யூமோகோனியோசிஸ்
ஆரோக்கியமான நுரையீரலும், நியூமோகோனியாசிஸால் பாதிக்கப்பட்ட நுரையீரலும்

ந்யூமகொனியோசிஸ் என்பது ஒரு பொதுப்பெயர். பாதிப்பு ஏற்படுத்தும் தூசு வகை அல்லது உலோகத் துணுக்கின் வகைக்கு ஏற்ப இந்நோய் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிலக்கரி தூசுகளால் உண்டாகும் நோயை கருப்பு நுரையீரல் நோய் (Black lung disease) அல்லது ஆந்த்ராகோசிஸ் என்று அழைக்கிறார்கள். ஆஸ்பெஸ்டாஸ் தூசு மூலம் உண்டாகும் நுரையீரல் நோயை ஆஸ்பெஸ்டாசிஸ் என்றும், பாக்சைட் தூசு மூலம் உண்டாகும் நுரையீரல் நோயை பாக்சைட் ஃபைபரோசிஸ் என்றும், இரும்புத் துகள் மூலம் உண்டாகும் நுரையீரல் நோயை சிடரோசிஸ் என்றும் பருத்தி தூசு முலம் உண்டாகும் நுரையீரல் நோயை பைசினோசிஸ் என்றும் அழைக்கிறார்கள்.

தங்கச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உண்டாகும் ந்யூமகொனியோசிஸ் நோயின் பெயர் சிலிகோசிஸ் – அதாவது சிலிக்கான் (மணல்) துகளை தொடர்ந்து சுவாசிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.

கோலார் தங்க வயல் உலகின் ஆழமான வெகு சில சுரங்கங்களில் ஒன்று. தக்காண பீட பூமியின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் கோலாரின் நிலத்தடியானது கண்ட மேல்தட்டினால் (continental crust) ஆன கடும் பாறைகளைக் கொண்டதாகும். இப்பாறைகளைத் தொழிலாளர்கள் தங்கள் வழக்கில் நிலத்தடி மலைகள் என்கிறார்கள். அப்பாறைகளைக் குறித்த தொழிலாளர்களின் எதார்த்தமான வருணனை மெய்யிலும் மெய்யானதாகும் – ஏனெனில், கோலார் தங்க வயலின் சுரங்கப் பாதைகளில் எதிர்படும் பாறைகள் மலைகளை ஒத்த கனபரிமாணம் கொண்டவை.

ஆக, கோலாரில் சுரங்கம் தோண்டிச் செல்வதை நீங்கள் ஏதோ கிணறு தோண்டும் வேலைக்கு ஒப்பானதாக நினைத்துக் கொள்ளக் கூடாது. இது வெறும் மண்ணைக் கிண்டிச் செல்லும் சில்லறைச் சமாச்சாரம் இல்லை. பாறைகள் கனம் குறைந்த இடங்களில் துளையிட வேண்டும்; கனம் மிகுந்த பகுதிகளிலோ வெடிவைத்துத் தகர்த்து முன்னேற வேண்டும். அவ்வாறு வெடிவைத்துப் பிளப்பது தங்க வயலின் அன்றாட நிகழ்வு- இதற்காக துளையிடுபவர் (Driller) மற்றும் வெடிப்பவர் (Blaster) என்கிற தனித்தனி வேலைப் பிரிவுகளே இயங்குகின்றன.

சிலிக்கோசிஸ் பாதித்த நுரையீரல்
சிலிக்கோசிஸ் பாதித்த நுரையீரல்

கோலார் சுரங்கத்தின் அதிகபட்ச ஆழம் சுமார் 12,000 அடி – அதிகபட்ச வெப்பம் 160 டிகிரி பாரன்ஹீட். இந்த ஆழத்தில் இயற்கையாகவே நிலவும் வெப்பமும், சூழலின் இறுக்கமும் அழுத்தமும் உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்களின் நுரையீரலை இயல்பாக வேலை செய்ய அனுமதிக்காது. மேலும் அந்த ஆழத்தில் இயற்கையிலேயே உயிர்வளியின் (பிராணவாயு / ஆக்சிஜன்) அளவும் குறைவானதாகவே இருக்கும். ஒரு பிரம்மாண்டமான பிரஷர் குக்கருக்குள் தொழிலாளர்கள் நின்று கொண்டிருப்பார்கள் – அந்த சூழலில் தான் பாறைகளைப் பிளக்க டைனமைட்டுகளை வெடிக்க விடுவார்கள்.

வெடிமருந்தின் சிதறல் உண்டாக்கும் புகை மண்டலமும் வெடித்துத் தகர்க்கப்பட்ட பாறைகளில் உறைந்திருக்கும் மணல் (சிலிக்கான் துகள்) நிறைந்த தூசு மண்டலமும் சுரங்க டனலின் வால் பகுதியெங்கும் மண்டிக் கிடக்கும். தொழிலாளர்கள் அந்த தூசு மண்டலங்களின் ஊடாகச் சென்று தான் தங்கப் படிமங்கள் உறைந்த பாறைத் துண்டுகளைச் சேகரித்தாக வேண்டும். அமிலக் குட்டையில் முங்கி முத்தெடுக்கும் வேலை அது.

மூச்சுக் குழாய்களின் வழியே நுரையீரலுக்குள் நுழையும் மணல் (சிலிக்கான்) தூசுகள் நுரையீரலின் உட்புறத் திசுக்களின் மேல் சத்தமின்றி ஒட்டிக் கொள்ளும். நாட்கள் செல்லச் செல்ல மணல் (சிலிக்கான்) தூசு தான் அமர்ந்திருக்கும் நுரையீரல் திசுவின் மேல் சிறிய பள்ளங்களை உண்டாக்கும். இந்தப் பள்ளங்கள் மெல்ல மெல்ல அகன்று பெரிதாகிக் கொண்டேயிருக்கும். மணல் தூசுகளால் நுரையீரலில் ஏற்படும் பள்ளங்களை தொழிலாளர்கள் ‘துளைகள்’ என்கிறார்கள்.

கோலார் தங்க வயலுக்கென்று சில சிறப்புகள் உண்டு. இந்தியாவில் முதன் முறையாக மின்சாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1902-ம் வருடம்; அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் கோலார் தங்க வயல். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவுக்கு அடுத்து ஆசியாவிலேயே இரண்டாவதாக மின்சாரம் அறிமுகம் செய்யப்பட்ட நகரம் கோலார் தங்க வயல். அதே போல், இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டது கோலார் தங்க வயலுக்காகத் தான். இந்த வரிசையில் உலகில் முதன் முறையாக மணல் துகளால் உண்டாகும் ந்யூமகொனோசிஸ் நோய் கண்டறியப்பட்டதும் கோலார் தங்க வயலில் தான்.

சுரங்க மருத்துவமனை
சுரங்க மருத்துவமனை (அன்று)

1880ம்-ஆண்டு ஆங்கிலேய ஜான் டெய்லர் கம்பெனியால் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு சுரங்கப் பணிகள் துவங்கியவுடனே முன்பை விட அதிக தங்கம் வெள்ளை முதலாளிகளுக்கும் சிலிக்கோசிஸ் நோய் இந்தியத் தொழிலாளர்களுக்கும் பரிசாக கிடைத்தது. நோய்க்கு ஆளாகி தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாக செத்து வீழ்ந்த போதும் சுமார் அறுபதாண்டு காலம் வரை – அதாவது 1940-ம் ஆண்டு வரை இந்த உண்மைகள் வெளியுலகை அடையாதவாறு பார்த்துக் கொண்டது சுரங்கத்தின் வெள்ளை நிர்வாகம்.

1940-ம் ஆண்டு இயற்றப்பட்ட மைசூர் சிலிகோசிஸ் சட்டம் தொழிலாளர்களுக்கு ஓரளவுக்காவது நிவாரணம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்தியது. கிடைத்த நிவாரணம் பற்றி சில தொழிலாளர்களிடம் நாங்கள் விசாரித்தோம்.

“அது இன்னா சார்.. ஒரு தொளைக்கு ஆயிரம் ரூவா நட்ட ஈடா குடுப்பான்”

“வெறும் ஆயிரம் ரூபா தானா?”

”ஆமா சார்… வருசா வருசம் பி.ஜி.எம்.எல் ஆஸ்பத்திரில ஸ்கேன் செஞ்சி டாக்டர் ரிப்போர்ட் எழுதுவாரு… அம்பது தொளைக்கு மேல போச்சின்னா கைல சுளையா அம்பதாயிரம் கெடைக்கும்… அப்புறம் கம்பெனி குடுத்த குவாட்டர்ஸ் வீட்டையும் வச்சிக்கிலாம்.. அதோட வியாரெஸ் குடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவான்..” (கம்பெனி கொடுத்த “வீடு” எனப்படும் அந்த கொடூரம் குறித்து பின்னர் வரும் பாகத்தில் விரிவாக சொல்கிறோம்).

”உங்க சர்வீஸ் முடியும் போது எத்தனை துளை இருந்தது?”

“எனக்கு எப்படியும் நூறுக்கு மேல இருந்திருக்கும்….”

“அப்ப.. உங்களுக்கும் அம்பதாயிரமும் வீடும் கிடைச்சிருக்குமே?”

”அய்யே… இல்ல சார். ரிப்போர்ட் படி எனக்கு நுப்பது தான்”

“என்ன சொல்றீங்க, குழப்பமா இருக்கே?”

கோலார் தொழிலாளர்களின் நினைவாக
கோலார் தொழிலாளர்களின் நினைவாக

“அதாவது சார்.. நிறைய துளை இருக்குன்னு ரிப்போர்ட்ல எழுதினா நிறைய நட்ட ஈடு குடுக்கனும்.. அதே மாதிரி அம்பது துளைக்கு மேல போச்சின்னா லேபரு கைல சுளையா அம்பதாயிரம் கொடுத்து வீட்டுக்கும் அனுப்பனும்… அதனால ரிப்போர்ட்ல எப்பவும் கொறைச்சி தான் கணக்கு காட்டுவானுக. இப்ப அம்பது துளை ஒரு ஆளுக்கு இருக்குன்னு ரிப்போர்ட்ல குடுத்துட்டான்னா எப்படியும் நூத்தம்பது இருநூறு துளையாவது இருக்குன்னு அர்த்தம்.. இப்ப புரிஞ்சதா?”

“ஓ… சரி… அப்ப நிரையீரல்ல இருநூறு துளை ஒரு ஆளுக்கு இருந்தா அவரோட கதி?”

“என்னா ஒரு அஞ்சி வருசத்துக்கு வண்டி ஓடும்.. அப்பால இருமியே சாக வேண்டியது தான்…”

கோலார் தங்க வயல் தொழிலாளிகள் அனேகமாக எல்லோருக்கும் சிலிக்கோசிஸ் பாதிப்பு வெவ்வேறு அளவுகளில் இருக்கிறது. சிலிக்கோசிஸ் பாதிப்புக்கு உள்ளான நுரையீரலில் எப்போதும் சளி மண்டிக் கொண்டிருக்கும். இயல்பாக சுவாசிக்க முடியாது. இருமிக் கொண்டே இருக்க இருக்க வேண்டும். ஒவ்வொரு இருமலும் குரல்வளையின் வழியே குடலை உருவியெடுப்பதற்கு ஒப்பான அனுபவமாக இருக்கும்.

ஒவ்வொரு தொழிலாளியும் காலை எழுந்ததும் இருமி இருமி கோழையை வெளியே எடுக்க வேண்டும். இல்லையென்றால் சுரங்கம் என்கிற அந்த பிரஷர் குக்கருக்குள் அவர்களால் சளி மண்டிய நுரையீரலைச் சுமந்து கொண்டு வேலை செய்ய முடியாது. விதிவிலக்கின்றி எல்லா தொழிலாளர்களும் பீடி புகைக்கும் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். பீடியின் காரமான நிக்கோடின் புகை சளியை இளக்கி வெளியேற்றுவதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சாலையில் ஆலைச் சங்கு ஊதும் அதிகாலை வேளையில் குடியிருப்புகளில் இறுமல் சப்தம் கேட்கத் துவங்கும். ஒவ்வொரு முறை அடிவயிற்றை எக்கி பலமாக இறுமும் போதும் கோழையோடு சேர்ந்து புண்பட்ட நுரையீரலில் இருந்து இரத்தத் திவலைகளும் கலந்து வழவழப்பான சிவப்புத் திரவமாக வெளியேறும்.

”அந்த மாதிரி நேரத்துல எங்க புள்ளைங்கள கிட்ட விட மாட்டோம் சார்…”

”ஏன்?”

“பயந்துடுவாங்க சார்.. பொண்டாட்டிங்க வீட்டுக்கு உள்ற குந்திக்கினு கண்ல தண்ணி வுட்னு தேம்பிக்கினு இருப்பாங்க. என்னா செய்யிறது பொழப்பு சார். இந்த சுரங்கம் தான் சார் எங்க வயித்தை ரொப்பினுச்சி. வெளியே சும்மா இருந்து பட்டினில சாவறதுக்கு உள்ளே போனா துட்டாவது கெடைக்கும்.. துண்ணுட்டு சாவறது எத்தினியோ மேல் இல்லையா சார்..”

“…..”

கேஜிஎப் போக்குவரத்து துறை
கேஜிஎப் போக்குவரத்து துறை

”எப்படியாவது சுரங்கத்த திரும்ப தொறக்கனும் . தெனைக்கும் பிச்சகாரங்க மாதிரி பெங்களூருக்கும் மாலூருக்கும் ஓடினு இருக்கோம்.. இது எங்க சுரங்கம் சார்.. நீ பாட்டுக்கு தொழிலாளி அப்டி கஸ்டப்பட்டான் இப்டி கஸ்டப்பட்டான்னு எழுதி கெவருமெண்டு தொறக்காம போயிடப் போறான்… பாத்து எழுது சார்..”

அவர் கண்கள் கலங்கி விட்டது. எம்மைத் தாண்டி எங்கோ வெறித்தவாறே உதடுகளில் வலிந்து வரவழைக்கப்பட்ட செயற்கையான சிரிப்போடு பேசிக் கொண்டே இருந்தார்… அந்த தொழிலாளியின் பெயர் ஜெயக்குமார். பெங்களூருவில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். பெற்றது இரண்டும் பெண் பிள்ளைகள் என்றார். மூத்த மகளை கல்லூரியில் சேர்த்துள்ளார். கல்லூரிக் கட்டணத்திற்காக காசு புரட்ட கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக டூட்டி பார்த்து விட்டு அன்று தான் சம்பளக் காசோடும் இரத்தச் சிவப்பான கண்களோடும் ஊர் திரும்பியிருந்தார். நாங்கள் சென்று திரும்பி இத்தனை நாட்களுக்கு பின்னரும் ஜெயக்குமாரின் முகத்தை எங்களால் மறக்கவே முடியவில்லை.

பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பி தோலைப் பொசுக்கும் என்று தெரிந்தே யாராவது அதைப் பற்றுவார்களா? ஆனால் அது தான் வேலை என்றால்? அப்படித்தான் வயிற்றை நிரப்ப முடியுமென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? கோலார் தங்க வயலின் தொழிலாளர்கள் தகதகக்கும் அந்தக் கம்பியை மார்போடு ஆரத் தழுவிக் கொண்டார்கள்.

கோலார் தங்க வயலின் முன்னாள் தொழிலாளர்கள் எல்லோருக்கும் சுரங்கத்தின் பாடுகள் தெரியும். சொல்லப் போனால் நாம் புரிந்து கொள்வதை விட, அவர்களுக்கே மேம்பட்ட புரிதல் உள்ளது. அது அவர்களின் சொந்த வாழ்க்கை நடத்திக் கற்பித்த பாடம். சிலிகோசிஸ் நோய் பற்றி மருத்துவர்களுக்கு இணையாக விளக்குகிறார்கள். சிலிக்கோசிஸ் பாதிப்புகளைக் குறித்தோ சுரங்க வேலையின் அபாயம் குறித்தோ அவர்கள் சொன்னதில் நூறில் ஒரு சதவீதத்தையாவது எமது எழுத்தினால் மறு உருவாக்கம் செய்ய முடியாது.

கேஜிஎப் மின் துறை
கேஜிஎப் மின் துறை

என்றாலும் அவர்களுக்கு அவர்களது சுரங்கம் திரும்பவும் வேண்டுமாய் இருக்கிறது. ஏன்? அவர்களே சொல்லிக் கொள்வது போல் அவர்கள் சாகசப் பிரியர்களாக இருப்பதினாலா?

நீங்கள் கோலாரின் நண்டு சிண்டுகளிடம் பேசினால் கூட தங்களது தைரியத்தைக் குறித்தும் இயற்கையை அச்சமின்றி எதிர்த்து வெல்லும் தீரம் குறித்தும் உயிரைத் துச்சமாக மதிக்கும் வீரம் குறித்தும் பெருமிதத்தோடு விவரிப்பார்கள். ஆனால், உண்மையை சில நேரங்களில் வாய்வார்த்தைகளில் இருந்து மட்டுமல்ல, அதனையும் கடந்த சமூக எதார்த்தத்திலிருந்தே நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

கோலார் தங்க வயலின் மக்கள் தொகையில் எண்பதுக்கும் அதிகமான சதவீதம் தமிழர்கள். தமிழர்களில் ஆகப் பெரும்பான்மையானோர் தலித்துகள். கோலார் தங்க வயலில் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுரங்கப் பணிகளைத் துவக்கிய ஜான் டெய்லர் முதலில் இங்கிலாந்தில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்க முயன்று தோற்றுள்ளார். பின் அக்கம் பக்கத்தில் இருந்த கிராமங்களான ஊரிகான் மற்றும் மாரிக்குப்பத்திலிருந்து தொழிலாளர்களை வேலைகளுக்கு நிர்பந்தமாக வரவழைத்துள்ளார்.

சுரங்கத்தின் ஆழம் ஆயிரம் அடிகளைக் கடந்தது. 1880-களில் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சொற்ப வசதிகள் கூட இருக்கவில்லை. உள்ளே செல்லும் தொழிலாளர்கள் மூச்சுத் திணறிச் சாவது நிச்சயம் என்கிற நிலைமையில் உள்ளூர் தொழிலாளர்கள் பின்வாங்கினர். அதன் பின்னர் தொழிலாளர்களை வரவழைக்க ஜான் டெய்லர் கங்காணிகளின் வடிவில் அற்புதமான தீர்வு ஒன்றைக் கண்டார்.

கங்காணிகள் எனப்படுவோர் அன்றைய வட ஆற்காடு, தருமபுரி, சித்தூர், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆதி திராவிடர் வகுப்புகளைச் சேர்ந்த அப்பாவி ஏழைகளை ஆசை காட்டி கோலார் தங்க வயலுக்கு வரவழைத்தனர். ஏறக்குறைய கொத்தடிமைகளின் நிலையில், எந்த உரிமையும் இன்றி சுரங்கத்தில் வேலை பார்க்க அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். செத்து விழுந்த தொழிலாளிகளைப் புதைக்க சுடுகாடு கூட அன்றைக்கு இருக்கவில்லை. பிணத்தை ஊருக்கு எடுத்துச் சென்று புதைக்க போக்குவரத்து வசதிகளும் இல்லை.

1930-ம் ஆண்டு தங்க வயலில் நடந்த பொது வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளில் முக்கியமானது தொழிலாளர்களுக்கான சுடுகாடு அமைத்துத் தரக் கோரியது தான். சுமார் ஐம்பதாண்டு காலம் – இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக – சுரங்க விபத்துகளில் மாண்டு போன தொழிலாளர்களின் பிணங்களை கைவிடப்பட்ட சுரங்கங்களில் வீசியெறியப் பணித்துள்ளனர் நிர்வாகத்தில் இருந்த வெள்ளை அதிகாரிகள்.

உங்கள் கழுத்தில், கையில், கைவிரல்களில் மின்னும் தங்கம் பூலோக நரகத்திலிருந்தே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்கிற உண்மை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் – ஆனால், அதை உற்பத்தி செய்த தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த அனுபவத்திலிருந்தே நன்றாகத் தெரியும். எனில், அந்த மக்கள் இப்படி ஒரு நரகத்தை ஏன் விரும்பித் தேர்ந்தெடுத்தார்கள்?

ஏனெனில், வெளியே சமூகத்தில் அன்றைக்கு நிலவிய சாதிக் கொடுமையின் வீரியம் தான் அம்மக்களைப் பிடித்து எரியும் எண்ணெய் கொப்பறைக்கு இணையான கோலாரின் சுரங்கங்களுக்குள் தள்ளியது. இன்றைக்கு நாம் (தர்மபுரி) இளவரசனின் காலத்தில் இருக்கிறோம். இன்றைக்கு சுமார் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஆதிதிராவிட வகுப்பில் பிறந்த ஒருவர் அனுபவித்திருக்க கூடிய கொடுமைகளை நம்மால் நினைத்துக் கூட பார்க்கமுடியாது.

அன்றைய வட தமிழகத்து தலித்துகள் கங்காணிகளிடம் விரும்பியோ விரும்பாமலோ ஏமாறத் தேவையான சகல விதமான சமூக காரணிகளும் இருந்தன. ஆண்டாண்டு காலமாய், செத்த மாட்டை உரிக்கவும், சாவுக்கு சொல்லியனுப்பவும் பணிக்கப்பட்டு ஒட்டு மொத்த சாதிப் படிநிலையின் கடைக்கோடியில் அழுந்திக் கிடந்த அவர்கள் கேடுகெட்ட அந்த நிலையிலிருந்து வெளியேறக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர். அப்படிக் கிடைத்த வாய்ப்பும் அவர்களின் உயிரையே விலையாகக் கேட்டது.

இன்றைக்கு ஆண்ட பரம்பரை வீரம் பேசும்  ஆதிக்க சாதிகளின் வீரமெல்லாம் வெறும் வாய் சொற்கள் தான். சுமார் நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்ச் சமூகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு நிர்கதியாய் கோலார் தங்க வயலில் வந்து விழுந்த தலித்துகளின் வீரமோ ஒப்புவமையற்ற தனித்துவமானது. மரணம் நிச்சயம் என்ற நிலையில் ஆலைச் சங்கு கேட்டதும் துண்டை உதறித் தோளில் போட்டுக் கிளம்பிய தொழிலாளிகளைச் சொல்வதா, இல்லை பூமிக்குள் புதைய கணவனை அனுப்பி விட்டு பிள்ளைகளோடு காத்திருந்த அவரது மனைவியைச் சொல்வதா…?

வீரம் என்பதற்கான புதிய இலக்கணத்தை தொழிலாளர் வர்க்கமாக படைத்துக் கொடுத்துள்ளனர் தங்க வயல் மக்கள். வீரம் என்பது சக மனிதர்களைக் கொல்லத் துணிவதும் கொன்றழிப்பதும் அல்ல, படைத்து உருவாக்குவதும் அதற்காக உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருப்பதுமே வீரம் என்பதை தங்கள் வாழ்க்கையால் இந்த பூமி இருக்கும் மட்டும் அழிக்க முடியாத எழுத்துக்களில் எழுதிச் சென்றுள்ளனர் வீழ்ந்து போன தொழிலாளிகள்.

தங்க வயலின் தலித்துகள் கடந்த நூற்றாண்டு காலமாக தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் இயற்கையின் உக்கிரத்தோடு மோதி வென்றார்கள்; அல்லது வீழ்ந்து வீரமரணம் அடைந்தார்கள். தங்கள் உற்றாரின், ரத்த சொந்தங்களின் மரணங்கள் கூட அவர்கள் நெஞ்சைக் கலக்கவில்லை.. பிணங்கள் வரிசை கட்டி சுரங்கத்தின் கீழிருந்து மேலே வந்த போதும் எஞ்சியவர்கள் மீண்டும் மீண்டும் சுரங்கத்தின் ஆழம் நோக்கிச் சென்றார்கள். சுமார் நூற்றி முப்பது ஆண்டுகள் இயற்கையின் கோபாவேசத்தின் முன் அடிபயணியாமல் நெஞ்சு நிமிர்த்தி நின்ற அந்த வீரம் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் தொழிற்சங்க துரோகிகளாலும் ஆளும் வர்க்க எதிரிகளாலும் முதுகில் குத்தி வீழ்த்தப்பட்டது.

உழைப்பைக் கவிதை என்பார்கள். கவிதையை விட அழகானதொன்றை மொழியால் படைத்துக் காட்ட முடியாது எனில் தவிக்கும் நுரையீரல் காற்றுப் பைகளோடு, உடலின் மேற்தோலை பொசுக்கும் வெப்பத்தில், தலைக்கு மேல் இடிந்து விழக் காத்திருக்கும் பூமியின் கீழ் மரணத்தோடு விளையாடியவாறே தங்க வயல் தொழிலாளர்கள் காட்டிய உழைப்பை என்னவென்பது…? மொழி தோற்றுப் போகும் இடத்தில் மண்வெட்டியை ஆவேசத்தோடு உயர்த்தினர் அந்தத் தொழிலாளிகள்.

மின்னும் அந்த தங்க ஆரத்தை உங்கள் கழுத்துகளில் பூட்டி நீங்கள் மகிழ வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கவில்லை. பார்ப்பனிய சாதியடுக்கின் கீழ்தட்டில் நெறிபட்டு ஆதிக்க சாதித் திமிரில் வதைபட்டு வரலாற்றுப் புறக்கணிப்பில் ஓய்ந்து போன அவர்கள் கடைசியில் தொழிலாளர் வர்க்கமாக நிமிர்ந்தார்கள். சாதி அளித்த இழிவை வர்க்கமாகத் துடைத்தெறிந்தார்கள். ஆயிரம் பொருளாதாரச் சுரண்டல்கள் இருந்தாலும், சுரங்கம் அந்த மக்களின் சமூக இழிவைத் துடைக்க ஒரு வாய்ப்பைக் கொடுத்தது என்பதை மறுக்கவே முடியாது.

அந்த நன்றியை தொழிலாளர்கள் இத்தனை தலைமுறைகளுக்குப் பின் இன்றும் மறக்கவில்லை. தங்கள் முன்னோர்களின் பாடுகளை கதைகளாக நினைவில் பொதிந்து வைத்திருக்கிறார்கள். தங்கள் வரலாற்று இழிவைத் துடைக்க உதவிய அந்தச் சுரங்கம் என்றாவது மீண்டும் திறக்காதா என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.

சுரங்கம் மீண்டும் திறக்குமா? அது மூடப்பட்டதன் பின்னணி தான் என்ன? கோலார் தங்க வயலின் வரலாறு என்ன? அடுத்து வரும் பாகங்களில் பார்க்கலாம்.

(தொடரும்)
கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !
_________________________________________________
–    வினவு செய்தியாளர்கள், கோலாரிலிருந்து…
படங்கள் : இணையத்திலிருந்து

ரத்தம் வழியும் யுத்த பூமி ! – இரா. ஜவஹர்

134

“இன்று 10 குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டார்கள்”

“இன்று 20 குழந்தைகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டார்கள்”

– என்பது போன்ற செய்திகள் நாள்தோறும் வெளியாகின்றன.

பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரமான குண்டுவீச்சில் கொல்லப்படும் பொதுமக்கள்தான் இவர்கள்.

கொல்லப்படும் பொதுமக்கள்

இஸ்ரேலிய இளைஞர்கள் 3 பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் கொல்லப்பட்டார்கள்.  “இவர்களை ஹமாஸ் அமைப்பினர்தான் கொன்றார்கள். எனவே ஹமாஸ் அமைப்பினர் வலுவாக உள்ள காசா பகுதியில் தாக்குதல் நடத்தி அவர்களை அழிக்கப் போகிறோம்” என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

கடந்த ஜூலை 8-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இதனால் கடந்த 22 நாட்களில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் உட்பட 1,250 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். இதற்குப் பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது குண்டு வீசியதில் 50-க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஆயிரம் இல்லை; ஒரு லட்சத்துக்கும் மேல், அங்கே இஸ்ரேல் என்ற நாடு செயற்கையாக உருவாக்கப்பட்ட 1948-ம் ஆண்டு முதல் கணக்கிட்டால்.

அதுமட்டுமல்ல; லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்து ஊனமானார்கள். 70 லட்சம் பேர் வெளி நாடுகளில் அகதிகளாக உள்ளனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே மேற்குக் கரைப் பகுதியில் 25 லட்சம் பேரும், காசா பகுதியில் 15 லட்சம் பேரும் அகதிகளைப் போல் வாழ்கிறார்கள்.

எப்படி ஏற்பட்டது இந்தச் சோகம் ? இதன் வரலாறு என்ன ?

“ஆப்ரஹாமை நோக்கிக் கர்த்தர் சொன்னார். ‘நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனாருடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ”.

கர்த்தர் காட்டிய தேசம், ‘கானான் தேசம்’. அப்போது அந்த தேசத்தில் பிலிஸ்தீனியர்கள், கானானியர்கள், பீனிசியர்கள் உட்படப் பல பழங்குடியினர் இருந்தார்கள். இந்தக் கானான் பிரதேசத்தில் ஆப்ரஹாமும் அவரைச் சார்ந்தவர்களும் குடியேறினார்கள்.

ஆப்ரஹாமின் சந்ததியில் தோன்றிய ஜேக்கப் தனது இனத்தவருக்குப் பெரும் தலைவராக விளங்கினார். ஜேக்கப் பின்னாளில் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டார். அவரது சந்ததியினர் தான் ‘இஸ்ரேலியா’ அல்லது ‘யூதர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த கானான் தேசம் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டது.

எனினும் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து அமைந்த பேரரசுகள் இஸ்ரேலை ஆக்கிரமித்து, யூதர்களைக் கொடுமைப்படுத்தி, விரட்டியடித்தன. இஸ்ரேலின் பெயரும் பின்னாளில் மாற்றப்பட்டு ‘பாலஸ்தீனம்’ என்று பெயரிடப்பட்டது.

எனவே ‘பைபிள்’படி யூதர்களுக்குக் கர்த்தர் – கடவுள் – கொடுத்த தேசமான பாலஸ்தீனத்தில் மீண்டும் யூதர்கள் குடியேறி, இழந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”

–    என்று அறிவித்து, ‘ஜியோனிஸ்ட் இயக்கம்’ தோன்றியது 1897-ம் ஆண்டில்.

சுருங்கி வரும் பாலஸ்தீனம்

[படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது சொடுக்கவும்]

இதை மறுத்தார்கள் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள்.

“பைபிள்படியே பார்த்தால் கூட பாலஸ்தீனத்தின் பழங்குடியினர், மண்ணின் மைந்தர்கள் – பிலிஸ்தீனியர்களும், மற்ற பழங்குடியினரும்தான். பிலிஸ்தீனியர்களின் தேசம்தான் பாலஸ்தீனம் எனப்பட்டது. அவர்களது சந்ததியினர்தான் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களாகிய நாங்கள். மறுபுறம் வரலாற்றின்படி பார்த்தால் சிரியாவின் ஒருபகுதியாகத்தான் பாலஸ்தீனம் இருந்தது. சிரியா, அரபு நாடுதான். எனவே எங்கள் தாயகமான பாலஸ்தீனத்தை வேறு எவரும் ஆக்கிரமிக்க விடமாட்டோம்” என்றார்கள் பாலஸ்தீனியர்கள்.

அப்போது பாலஸ்தீன மக்கள்தொகையில் 92 சதவிகிதம் பேர் பாலஸ்தீனியர்கள், 8 சதவிகிதம் பேர்தான் யூதர்களும், மற்ற இனத்தவர்களும்.

இந்த நிலையில் குறுக்கிட்டது முதல் உலகப்போர்.

போரில் அராபியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக மெக்காவின் ஷெரீஃபுக்கு பிரிட்டன் ஒரு வாக்குறுதி அளித்தது. “மேற்கே மத்தியதரைக்கடல் முதல் கிழக்கே பாரசீக வளைகுடா வரை உள்ள பெரும் நிலப்பகுதிகளில் அரபு மக்கள் தங்களது ‘அகன்ற அரபு தேசத்தை’ அமைத்துக்கொள்ள பிரிட்டன் ஏற்பாடு செய்யும்.”

மறுபுறம் இதற்கு நேர் மாறாக, யூதர்களின் ஆதரவைப் பெற யூதர்களுக்கும் பிரிட்டன் ரகசியமாக வாக்குறுதி அளித்தது. “யூதர்களுக்கு ஒரு தனி நாட்டை பாலஸ்தீனத்தில் அமைக்க பிரிட்டன் ஏற்பாடு செய்யும்.”

இரட்டை வேடம் ? அல்ல ! மூன்று வேடம். மூன்றாவது வேடம் :

பிரான்ஸுக்கும் பிரிட்டன் வாக்குறுதி அளித்தது. “போரில் துருக்கிப் பேரரசு முறியடிக்கப்பட்டதும் அதன் ஆதிக்கத்தில் உள்ள பாலஸ்தீனம் உட்பட அனைத்து நாடுகளையும் பிரான்ஸும் பிரிட்டனும் பங்கு போட்டுக்கொள்ளலாம்.”

போர் முடிந்தது. 1918-ம் ஆண்டில், போரில் துருக்கி தோற்று சரண் அடைந்தது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த சிரியா நாட்டை பிரான்ஸ் ஆக்கிரமித்துக்கொண்டது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனம், ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளை பிரிட்டன் ஆக்கிரமித்தது.

அரபு மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்ட பிரிட்டன், பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதில் தீவிரமாக இறங்கியது.

இதையடுத்து பாலஸ்தீனத்தில் யூதர்களுக்குத் தனி நாடு அமைக்க அனுமதி கோரி ஐ.நா.சபையில் பிரிட்டனின் ஆதரவோடு யூதர்கள் மனுச் செய்தார்கள். இதை ஏற்று பாலஸ்தீனத்தைத் துண்டுபோடும் தீர்மானத்தை ஐ.நா.சபை நிறைவேற்றியது.

“பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டும். ஒரு பகுதியில் யூத இனத்தவர் தங்களது சுதந்திர நாட்டை அமைத்துக் கொள்ளவேண்டும். மறுபகுதியில் அரபு இனத்தவர் தங்களது சுதந்திர நாட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் குறுக்கிடும் சாலைகள், பகுதிகள் – ஐ.நா.சபையின் நேரடி நிர்வாகத்தில் இருக்கும். பாலஸ்தீனத்தில் உள்ள புனித நகரான (முஸ்லீம்கள், யூதர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரின் புனித நகரமான) ஜெருசலேம், ஐ.நா.சபையின் நேரடி நிர்வாகத்தில் இருக்கும்” என்று கூறிய அந்தத் தீர்மானம் ஐ.நா.சபையின் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் 1947 நவம்பர் 29-ந் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்தியா, கியூபா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

யூதர்கள் தங்களுக்கு கிடைத்த பகுதிக்கு ‘இஸ்ரேல்’ என்று பெயர் சூட்டி, 1948 மே 14-ல் சுதந்திர நாடாக அறிவித்தார்கள். அரபு மக்கள் இதை ஏற்க மறுத்தார்கள்.

அன்று தொடங்கியது அரபு – இஸ்ரேல் யுத்தம்.

பாலஸ்தீன எதிர்ப்பு

1948, 1956, 1967, 1973 ஆகிய ஆண்டுகளில் கடும் யுத்தம் நடந்தது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றின் முழு உதவியுடன் போரிட்ட இஸ்ரேல், பாலஸ்தீனம் முழுவதையும் ஆக்கிரமித்து சிரியா, ஜோர்டான், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளின் பல்வேறு பகுதிகளையும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டது.

பின்னர் 1978-ம் ஆண்டில் எகிப்தும் இஸ்ரேலும் சமரசம் செய்து கொண்டதன் அடிப்படையில் எகிப்தின் சினாய் பகுதியை இஸ்ரேல் திருப்பிக் கொடுத்துவிட்டது. இதற்கிடையில் பாலஸ்தீனத்தை விட்டு லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்து பரிதவித்து வருகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை இப்போது சுமார் 70 லட்சம். சுமார் 40 லட்சம் பாலஸ்தீனியர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். சுமார் ஒரு லட்சம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐ.நா.சபை ‘ஆயிரத்தெட்டு’ தீர்மானங்கள் போட்டது. தீர்மானங்கள் எல்லாம் பேப்பரில் மட்டுமே இருந்தன.

இந்தச் சூழ்நிலையில் 1963-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ‘பாலஸ்தீன விடுதலை இயக்கம்’. 1969-ல் யாசர் அராபத் இதன் தலைவரான பின்பு பிரமாண்டமான போராட்டங்கள் நடந்தன. ஆயுதம் தாங்கிய போராட்டமாகவும், ஆயுதமற்ற போராட்டமாகவும் பாலஸ்தீனத்திலும், வெளிநாடுகளிலும் வகைவகையான போராட்டங்கள் நடந்தன.

இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்தன.

ஆனால், “பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்பது ஒரு பயங்கரவாத இயக்கம். அதை அழித்துவிட்டுத்தான் மறுவேலை” என்று அறிவித்துச் செயல்பட்டது இஸ்ரேல் ! அதற்கு ஆதரவளித்தன அமெரிக்காவும் பிரிட்டனும் மற்ற சில ஆதரவு நாடுகளும்.

மறுபுறம், “இஸ்ரேல் அரசு ஒரு சட்டவிரோத அரசு. அதை அழித்துவிட்டுத்தான் மறுவேலை” என்று அறிவித்துச் செயல்பட்டது பாலஸ்தீன விடுதலை இயக்கம்.

இரண்டும் நடக்கவில்லை. மாறாக, பாலஸ்தீனியர்களும், மற்ற அராபியர்களும், இஸ்ரேலியர்களும் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதுதான் மிச்சம்.

இதற்கிடையில் இஸ்ரேல் அரசுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தப் பல முயற்சிகள் நடந்தன. கடைசியில் 1993-ம் ஆண்டில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. முதல் முறையாக இஸ்ரேல் நாட்டையும், அரசையும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. அதேபோல் பாலஸ்தீன விடுதலை அமைப்பையும், பாலஸ்தீனத்தில் சுயாட்சி அதிகார அமைப்பையும் இஸ்ரேல் அரசு அங்கீகரித்தது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சமாதான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கால வரம்புடன் கூடிய திட்டம் உருவாக்கப்பட்டது.

ஆனால் இதற்கு இஸ்ரேலிலும், பாலஸ்தீனத்திலும் தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபின் இஸ்ரேலியத் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாலஸ்தீனத்தில்  ஹமாஸ் என்னும் அமைப்பு செல்வாக்குப் பெற்றது. இப்போது பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதி பாலஸ்தீன விடுதலை அமைப்பின் கட்டுப்பாட்டிலும், காசா பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

சமீபத்தில் இஸ்ரேலிய இளைஞர்கள் மூவர் கொல்லப்பட்டதைச் சாக்காக வைத்து, காசா பகுதியை சுடுகாடாக்கும் கொடூர நடவடிக்கைகளில் இப்போது இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுவருகிறது. நாள் தோறும் படுகொலைச் செய்திகள்………

இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று வழக்கம் போல ஐ.நா. சபைப் பொதுச் செயலாளரும், மற்ற பலரும் வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள்.

இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு 15, ஜூலை, 2014 அன்று இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. “ இரு தரப்பும்  பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். 1967, ஜூன், 4 அன்று இருந்த எல்லைப் பகுதிகளைக் கொண்ட, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனம் அமைக்கப்பட வேண்டும் ……….. “ என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.*

இதுதான் சாத்தியமான சரியான தீர்வு. இதை நோக்கியே உலக ஜனநாயக சக்திகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

–    இரா.ஜவஹர்

* 1967 நவம்பர் 22ல் இயற்றப்பட்ட ஐ.நா பாதுகாப்பு கவின்சில் தீர்மானம்(எண் 242) அடிப்படையிலான இரு நாட்டுத் தீர்வு – வினவு

வினவு ஏழாம் ஆண்டு சிறப்புக் கட்டுரையாக பாலஸ்தீனம் பற்றி மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹர் எழுதிய கட்டுரையை வெளியிடுகிறோம்.

சமஸ்கிருத வாரத்தை கண்டித்து புமாஇமு ஆர்ப்பாட்டம்

4

ந்தித் திணிப்பு, வரலாற்றுத் திரிபு எனத் தொடரும் இந்து மதவெறி பண்பாட்டுத் தாக்குதலின் ஒரு பகுதியாக சி.பி.எஸ்.ஈ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற மோடி அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் “தற்போது மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டுள்ளது, அடுத்த முறை மற்ற மொழிகளுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கலாம். எனவே இந்த உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை” என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு கூறியிருக்கிறது.

செய்தி (தினகரன்)- சமஸ்கிருத வாரம் கொண்டாட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

சமஸ்கிருத வாரம் தடை மனுபடம் : ஓவியர் முகிலன்

மோடி அரசின் சமஸ்கிருத வாரம்!                                                                    
இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாணவர்களே,

  • இந்து-இந்தி-இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியக் கருத்தைத்
    திணிக்கும் சதியே சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம்!
  •  சமஸ்கிருதத்துக்கு கொண்டாட்டமாம் ஒருவாரம்
    தூக்கி எறி அதை மோடி அரசோடு (குப்பை) ஓரம்!
  • என்றோ செத்துப்போன
    சமசுகிருதம் என்ற வட மொழியை
    மக்கள் பேசுவதில்லை, எழுதுவதில்லை, பாடுவதில்லை.
    போற்றுவது இன்னமும்
    ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனர் மட்டுமே –
    பார்ப்பனீயம் சமஸ்கிருதம் இரண்டையும்
    ஒன்றாய்த் தூக்கியெறிவோம்!
  • செத்த பிணத்துக்கு அலங்காரம் செய்வதுண்டோ
    செத்த வடமொழிக்குச் சிங்காரம் செய்யலாமோ!
    வடமொழி – இந்தி மோடியின் கூப்பாடு!
    கல்வியில் இந்துமதவெறி மோடியின் ஏற்பாடு
    இந்த பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பை முறியடிப்போம்!
  • நம் தமிழுக்கு எதிர் சமஸ்கிருத சூழ்ச்சியா
    நம் மக்களுக்கு எதிர் இந்தி ஆட்சியா
    வடமொழி – இந்திக்கு கொண்டாட்டமா
    இவைகளை கூண்டோடு தூக்கியெறிவோம்!
  • இந்தித்திணிப்பு, சமஸ்கிருத மீட்பு,
    வரலாற்று திரிப்பு என்ற
    மோடி அரசின் பார்ப்பன பாசிச
    நடவடிக்கைக்களை முறியடிப்போம்!
  • அன்று இந்தித் திணிப்புக்கு எதிராக
    ஆகஸ்டு 07 முதல் 13 வரை
    சமஸ்கிருத எதிர்ப்பு வாரம் கடைபிடிப்போம்!
    பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்!
  • இந்தி – சமஸ்கிருத திணிப்பை
    கல்வி நிலையங்களில் இருந்து ஒழித்துக்கட்ட
    கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து
    மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப் போராடுவோம்!
  • சி.பி.எஸ்.சி பள்ளிகளில்
    சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்துவோம்!
    மோடி அரசின் உத்தரவை திரும்பப்பெற வைப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

6.8.2014, காலை 11 மணி
பத்மசேஷாத்ரி சி.பி.எஸ்.சி பள்ளி
ஹபிபுல்லா சாலை (நடிகர்சங்க கட்டிடடம் அருகில் ), தி.நகர், சென்னை.

மக்கள் கலை இலக்கியக்கழகம்
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி
சென்னை 9445112675

வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?

21

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 2

ஹிந்து ஆன்மீக கண்காட்சிக்கு சென்று  முதல் அரங்கை பார்த்ததுமே ‘ஆன்மீக’ பரவசம் மெய்சிலிர்க்க வைத்தது.

vanniyar-varalatru-aivu-maiyamநத்தம் காலனியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை கொளுத்தி, சொத்துக்களை சூறையாடிய வன்னிய சாதி வெறியர்களின் அரங்கம் தான் முதல் அரங்கம். இந்துமதவெறி வேறா, வன்னிய சாதிவெறி வேறா என்று எண்ணிக்கொண்டே அரங்கில் நின்று கொண்டிருந்தவர் அந்த அரங்கிற்கு வந்திருந்தவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்ததை கவனித்தோம்.

அக்கினி குண்டத்திலிருந்து பிறந்த வன்னிய குல ஷத்திரியர்களின் ஆண்ட பரம்பரை கதையை பெருமை பொங்க கூறிக்கொண்டிருந்தார். அவர் கூறிய அக்கினி குண்டத்திலிருந்து பிறந்த ஆண்டபரம்பரையினர் நத்தம் காலனியில் எப்படி குக்கர் விசிலைக் கூட விட்டுவைக்காமல் கொள்ளையடித்தனர் என்பதை விளக்குவதற்கும் ஒரு தனி ஸ்டாலை போட்டிருந்தால் இந்து ஆன்மீக சேவை நடைமுறையில் செய்து வரும் சேவை குறித்த பிராடிகல் கிளாசாகா இருந்திருக்கும்.

ஆண்டபரம்பரை பெருமை பீற்றிக்கொள்ளும் இந்த ஷத்திரியர்கள் எத்தகைய பார்ப்பன அடிமைகள் என்பதையும் அவரே உணர்த்தினார். “சிதம்பரம் கோவிலே பிச்சாவரம் ஜமீனோட சொத்து தாங்க ! இப்போ அவங்க செல்வாக்கா இல்லைங்கிறதனால தீட்ஷிதர்கள் சொல்பேச்சு கேட்க மாட்டேங்கிறாங்க, மத்தபடி தமிழில் பாடுற போராட்டத்தை எல்லாம் மனித உரிமை பாதுகாப்பு மையம்ங்கிற அமைப்பு தான் பன்னாங்க. தீட்சிதர்களும் தமிழில் பாடக்கூடாதுன்னு சொல்லலை, மேடையில ஏறக்கூடாது, உள்ள போகக்கூடாது, குறிப்பிட்ட நேரத்துல பாடக்கூடாதுன்னு தான் சொல்றாங்க. மற்றபடி அங்கே வேற எந்த பிரச்சனையும் இல்லைங்க” என்று சற்று நேரத்திற்கு முன்பு ஆண்ட பரம்பரை பெருமை பேசிய ஷத்திரிய வாய், பார்ப்பன அடிமைத்தனத்தை விதந்தோதியது. இத்தகைய சரணடைதலைத்தான் ஆர்.எஸ்.எஸ்-ம் எதிர்பார்க்கிறது.

nagarathar-nattukottaiஇந்து மதம் என்றாலே சாதி தான் என்றார் அம்பேத்கர். அதை வாசல்படியிலேயே நிரூபித்திருக்கிறார்கள், அதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும். சரி சாக்கடை என்றால் நாறத்தானே செய்யும் என்று அடுத்த அரங்கிற்கு நகர்ந்தோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களுக்கும் இந்த ஆன்மீக கண்காட்சியில் அரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சாதி சங்க அரங்கிலும் அந்தந்த சாதியில் பிறந்த கட்டபஞ்சாயத்து ரவுடி முதல் சினிமா வாய்ப்பிற்காக கோடம்பாக்கத்தில் அலைந்து கொண்டிருப்பவர் வரை ஒருவரையும் விட்டு வைக்காமல் அத்தனை பேரின் படங்களையும் தேடிப்பிடித்து ஸ்டால் முழுவதும் ஒட்டி வைத்துக்கொண்டு இவரு எங்க ஆளு என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்தனர். இந்த சாதி சங்கங்களின் அரங்குகளில் எல்லாம் சொந்த சாதிக்குள் வரன் பார்க்கும் வேலை தான் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

ஹிந்து ஆன்மீக கண்காட்சியின் பத்திரிகை தொடர்பாளர், “பல்வேறு இந்து அமைப்புகள் 260 கடைகளை போட்டார்கள்.” என்று கூறியிருக்கிறார். அந்த இந்து அமைப்புக்கள் சாதி சங்கங்கள்தான் என்பதும், சாதிக்குள் வரன் தேடிக் கொடுப்பதுதான் இந்து அமைப்புக்களின் ஆன்மீக சேவைகள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

tambrasஇந்து ஆன்மீகம் என்கிற பெயரில் சாதியை மேலும் இறுக வைக்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்திருக்கும் ஏற்பாடுதான் இந்த கண்காட்சி.

ஒரு ஸ்டாலில் ஒரு மாமியும் மாமாவும் அமர்ந்திருந்தனர். நாம் அருகில் சென்றதும் எழுந்து “வாங்கோ வாங்கோ.. ஐயரா ஐயங்காரா” என்றார் மாமி, அப்போது தான் அது தாம்ப்ராஸ் ஸ்டால் என்று தெரிந்தது. “எதுவும் இல்லை” என்றோம். “அப்படின்னா கிளம்புங்கோ” என்பதை போல எழுந்து நின்ற மாமி உட்கார்ந்தார். வேற்றாள் என்று கண்டு கொண்டதும் அவாள்கள் நம்மை ஒதுக்குவதை எவ்வளவு நாசுக்காக செய்தார்கள் என்பதெல்லாம் மிகப்பெரிய முனைவர் பட்டபடிப்பிற்கு உரியது.

melmaruvathur-1அடுத்து மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சூத்திர   கம்பெனி   வந்தது. பார்ப்பனர்கள் யாரும் இந்த திசைபக்கம் திரும்பகூட இல்லை. இந்து ஒற்றுமைக்கு இது ஒன்றும் சாஸ்திர விரோதமில்லையே? இஸ்திரி பெட்டிகள், சக்கர நாற்காலிகள், தையல் எந்திரங்கள், அண்டா வழங்குதல் என்று நடிகர்கள் பாணியில் நலிந்த இந்துக்களுக்காக சில உதவிகளை செய்து அதை வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தனர் ஓம் பராசக்தி குழுவினர். ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி ஊழலிலிருந்து பாதுகாப்பாக தப்பிப்பதற்கு செவ்வாடை அம்மா கம்பெனிக்கு இந்த அவாள் சேர்க்கை உதவலாம்.

தமிழ்நாடு ரெட்டி நலசங்கம் என்ற கடைக்கு முன் ஒரு வயதான பெரியவர் நின்றிருந்தார். “என்ன சார், இந்து ஆன்மீக கண்காட்சின்னு போட்டுட்டு இந்துக்களை இப்படி சாதி, சாதியா பிரிச்சு வைக்கும் வேலையை செய்றீங்களே, சரியா ” என்று கேட்டோம்.

reddy-nala-sangam-3“அய்யய்யோ, அப்படி எல்லாம் இல்லைங்க, நாங்களும் இந்துக்கள்தான், முஸ்லீம் மாதிரி இல்லை. ரெட்டி குலத்துக்கு சேவை செய்கிறோம். ஒவ்வொரு சாதிக்காரரும் அவங்கவங்க கம்யூனிட்டிக்கு உதவணும். நாங்க ஏழை ரெட்டி சாதி மாணவர்களுக்கு உதவி செய்கிறோம். வேறு சாதி ஏழை மாணவர் யாராவது வந்து கேட்டா, அவங்க சாதி சங்கத்தில கேட்கும்படி சொல்வோம்” என்றவர், கொஞ்சம் யோசித்து, “சில சமயம் தெரிஞ்சவங்கன்னு மத்த சாதிக்காரங்களுக்கும் உதவி செஞ்சிருக்கோம்” என்றார்.

“இப்ப பாருங்க, பக்கத்து ஸ்டால் ரெட்டி இளைஞர் சங்கத்தில உட்கார்ந்திருப்பது ஒரு நாயுடு பையன்தான். வேலைக்கு ஆளு கெடைக்கறதே கஷ்டமா இருக்கு. அதான் நாயுடு பையனா இருந்தாலும், நம்ம ஸ்டால்ல உட்காரச் சொன்னோம்” என்றார். பக்கத்து ஸ்டாலில் வேறு வேலை கிடைக்காத அந்த பையன் ரெட்டி சாதி பெருமையை பரப்பிக் கொண்டிருந்தான்.

இவை தவிர கம்மநாயுடு எழுச்சிப் பேரவை, ஹிந்து நாடார் மகமைகள், நகரத்தார் நாட்டுக்கோட்டை செட்டியார், தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை, வெள்ளாளர், பிள்ளைமார், செங்குந்தர், முதலியார், சேனைத்தலைவர் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்நாடு யாதவ மகாசபை ஸ்டால்களும் போடப்பட்டிருந்தன.

youth-for-dharmaநலிந்து வரும் இந்து தருமத்தை பாதுகாக்க சுவாமி தயானந்த சரஸ்வதி ஆரம்பித்த “தர்ம ரக்ஷண சமிதி” அமைப்பின் இளைஞர் பிரிவு கடையில் அந்த அமைப்பின் நடவடிக்கைகளை நம்மிடம் விளக்கியவர், விவேகானந்தா பள்ளியில் படித்து சின்ன வயதிலேயே இந்து தருமத்தை பாதுகாக்க உறுதி பூண்டாராம். இப்போது ஒரு மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே இந்து ஆன்மீக தொண்டு ஆற்றுகிறாராம்.

மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆன்மீக ஆறுதல் கொடுப்பதைப் பற்றிச் சொன்னார். “கிருத்துவர்கள் பைபிளோடு, பன், பால் என்று கொண்டு போய் கொடுத்து ஜெபம் செய்கிறார்கள். அதன் மூலம் மதம் மாற்ற முயற்சிக்கிறார்கள். அதை முறியடிப்பதற்கு நாங்கள் இந்து ஆன்மீகத்தை நோயாளிகளுக்கு கொண்டு செல்கிறோம்” என்றார். அவர் எழும்பூர் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு ஆன்மீக செய்தி சொல்லிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை காட்டினார். “அதோ அந்தப் பக்கம் நிற்பதுதான் கிருத்துவ மதமாற்றி. நாங்க போனதிலிருந்து அவங்க மதமாற்ற முயற்சி தடைபட்டிருக்கிறது” என்றார்.

yadhava-maha-sabha“நீங்களும் நோயாளிகளுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு போவீங்களா” என்றால் “அதெல்லாம் இல்லை. அவங்க மன ஆறுதலுக்கான ஆன்மீகம் மட்டும்தான் கொடுப்போம்” என்றார்.

அடுத்ததாக தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று அவர்கள் மத்தியில் இந்து மதத்துக்கு உயிர் கொடுக்கிறோம் என்று ஒரு புகைப்படத்தைக் காட்டினார். “அவங்களுக்கு பணமோ, பொருளோ வேண்டியதில்லை. நம்மோட அங்கீகாரம்தான் வேணும். நாங்க போனதும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அந்தப் பகுதியில் ஒரு சில குடும்பங்க மதம் மாறிட்டாங்க. நாங்க போன பிறகு மத்தவங்க நிச்சயமா மதம் மாற மாட்டோம்னு சொல்லிட்டாங்க. திரும்பவும் வரச் சொல்லியிருக்காங்க. நம்ம இந்து பண்பாட்டை அவங்க மறந்துடக் கூடாது” என்றார்.

“தருமபுரியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் ஒருவன் வேறு சாதி பெண்ணை காதலித்து திரும்ணம் செய்ததற்காக அந்த மக்களின் வீடுகளை எல்லாம் அடித்து உடைத்தார்களே, அதற்கு எதிராக உங்கள் இளைஞர் இயக்கத்தினர் ஏதாவது செய்தீர்களா” என்று கேட்டால், “அதிலெல்லாம் நாம தலையிடக் கூடாது சார். அதெல்லாம் அரசியல். அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம். அரசியல்வாதிங்கதான் சாதிகளுக்குள்ள சண்டை ஏற்படுத்துகிறார்கள்”

vellalara-senkunthar-mudhaliyar“அப்போ சாதிகள் இருக்கணும்னு சொல்றீங்களா” என்று கேட்டதும், அதிர்ச்சியடைந்தவராக, “அப்போ சாதி ஒழியணும்னு நீங்க நினைக்கிறீங்களா, வருணாசிரம தருமத்தையே வேண்டாம்னு சொல்றீங்களா” என்று கோபப்பட்டார்.

பெரியார் பிறந்த தமிழகத்தில் இப்படி ஒரு கண்காட்சி நடத்தப்பட்டிருப்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் மிகப்பெரிய அவமானமாகும். இந்து ஆன்மீக கண்காட்சி என்கிற பெயரில் பார்ப்பன சனாதன தர்மத்தையும், சாதி அமைப்பையும் நியாயப்படுத்துகிறார்கள், சிறுபான்மை மக்கள் மீது வெறுப்புணர்வை தூண்டி விடுகிறார்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து சாதி சங்கங்களையும் ஊக்குவிக்கிறார்கள்.

இந்த விழாவின் கடைசி நாளில் விழா ஏற்பாட்டாளர்களில் முக்கியமானவரான குருமூர்த்தி ஜாதி  அமைப்புகள், ஆன்மிக தோற்றம், சமுதாய உருவாக்கத்தில் பங்களிப்பு, பொருளாதார ரீதியாக மற்றும் கலாச்சார ரீதியாக சமூக மூலதனம், ஜாதி  பற்றிய தவறான கோட்பாடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தி பல்வேறு சாதி அமைப்பினரை பேச வைத்திருக்கிறார்.

nadar-peravaiஇந்த கண்காட்சி தமிழகத்தில் ஓரளவு அடித்து வெளுக்கப்பட்ட சாதி உணர்வையும், சாதி அமைப்புகளையும் வளர்க்கின்ற முயற்சியாகும், இது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பாசிச கும்பலை தமிழகத்தில் வளர்த்து விடுவதற்கான புதிய சதி.வட இந்தியா போன்று குறிப்பாக உத்திரபிரதேசத்தில் ஜாட் சாதிவெறியை தூண்டிவிட்டு குளிர் காய்ந்த இந்துமதவெறியர்கள் இங்கே ஆதிக்க சாதிகளை அரவணைத்து திராவிட இயக்கங்களின் செல்வாக்கை குறிப்பாக பெரியாரின் கருத்தை அழிக்க நினைக்கிறார்கள். நேரடியான இந்து ஆதிக்க சாதி வெறிதான் இந்துமதவெறியர்களின் பலம் என்பது பல மாநிலங்களில் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

முற்போக்கான தமிழகத்தை பிற்போக்கான குஜராத்தாகவும் மாற்றுவதற்கான திட்டம். இதற்கு அரசு நிறுவனங்களே உடந்தையாக இருப்பது மற்றொரு அபாயம். இந்த கண்காட்சியில் இந்திய தொல்லியல் துறை, இந்து அறநிலையத்துறை, தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஆகியவையும் பங்கேற்றிருக்கின்றன.

ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் நடத்தப்பட்டிருப்பது இந்து ஆன்மீக கண்காட்சி என்கிற பெயரில் மிகப்பெரியதொரு ஆர்.எஸ்.எஸ் ஷாகாவாகும். பார்ப்பன பயங்கரவாதத்தைவிதைக்கும் இந்த காண்காட்சிதான் உண்மையில் சமூக இணக்கத்தை சீர்குலைத்து சாதிவெறியைத் தூண்டி அதையே இந்துமதவெறியாக மாற்றுவதற்கு துடிக்கிறது.

(தொடரும்)

– வினவு செய்தியாளர்கள்

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி 2014 அனுபவங்கள் – 1 ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !

உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

1

உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே

(2002 குஜராத் முஸ்லீம் இனப்படுகொலையைத் தொடர்ந்து 2003 பிப்ரவரி மாதம் மக்கள் கலை இலக்கியக்  கழகம் மற்றும் புரட்சிகர அமைப்புகளால்  நடத்தப்பட்ட பார்ப்பன பயங்கரவாத ஒழிப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்ட உரை.)

“ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்” என்ற தலைப்பில் முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே  ஆழமான தன் உரையை எளிமையான எடுத்துக்காட்டுகள் மூலம் அளித்திருக்கிறார். தவிர்க்க இயலாத காரணங்களால் அவர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. கீழே அவரது உரையின் சுருக்கம் :

ஆனந்த் தெல்தும்டே
ஆனந்த் தெல்தும்டே

காதிபத்திய உலகமயமாக்கம் ஒரு புறமும், பார்ப்பன பயங்கரவாதம் மறுபுறமும் ஆக இருமுனைத்தாக்குதல் நம் மீது தொடுக்கப்பட்டுள்ளது. உலகமயமாக்கலுக்கு எதிரான மக்கள் இயக்கங்கள் சர்வதேச அளவில் வளர்ந்து வருகின்றன.

உலகமயமாக்கத்திற்கு எதிரான இத்தகைய இயக்கங்கள் வரவேற்கத்தக்கவையே. எனினும் மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட பல்வேறு அமைப்புகள் இத்தகைய எதிர்ப்பியக்கத்தை நடத்துவதால் அவற்றுக்கிடையே இந்த எதிர்ப்பியக்கத்தின் திசைவழி குறித்துத் தெளிவின்மை நிலவுகிறது. இந்த அமைப்புகள் நடத்தும் இயக்கங்கள் அரசு சாரா நிறுவனங்களின் (தன்னார்வக் குழுக்களின்) ஏற்பாடுகளே என்பதைக் கவனிக்கும்போது ஐயம் மேலிடுகிறது. மாற்று உலகை அமைப்பது என்ற அவர்களின் கோட்பாடு ஏகாதிபத்தியவாதிகளின் உதவியோடுதான் செயல்படுத்தப்படும் போலும்! உலகமயமாக்கம் என்பது முதலாளித்துவத்தின் இறுதிக்கட்டம்தான் என்பதிலும் இது தவிர்க்க இயலாமல் சோசலிசத்துக்கு இட்டுச் செல்லும் என்பதிலும் நம்பிக்கை உடைய சக்திகள் தன்னார்வக் குழுக்களின் நடவடிக்கைகளால் திருப்தி அடைந்து விட முடியாது.

இந்தியாவில் நிலைமை பாரதூரமாக உள்ளது. உலகமயமாக்கத் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இந்துத்துவ அமைப்புகளின் தொடர்ச்சியான வெறியாட்டங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர். உலகமயமாக்கத்தை விட அபாயகரமானது இந்துத்துவமே என்று ஒருசாரார் கருதுகின்றனர். இதற்கு மாறாக உலகமயமாக்கமே பேராபத்து விளைவிக்கக் கூடியது என்று கருதுவோரும் உள்ளர்.

உதாரணமாக, இந்துத்துவத்தைத் தீவிரமாக எதிர்த்து வரும் மதச்சிறுபான்மையினர் உலகமயமாக்கத்தை அவ்வளவாக எதிர்ப்பதில்லை. தனியார்மயத்தின் விளைவாக இடஒதுக்கீட்டு வாய்ப்புகளைப் பறிகொடுத்து வரும் தலித்துக்கள் உலகமயமாக்கத்தை எதிர்த்த போதிலும் இந்துத்துவ எதிர்ப்பில் போதிய அக்கறை காட்டுவதில்லை. இதைவிட மோசமானது என்னவெனில், தலித்துக்கள் சங்கப் பரிவாரங்களின் கவர்ச்சிவாத அரசியலுக்கு இரையாகி இந்துத்துவத்தின் காலாட்படையாக மாறி வருவதுதான். பழங்குடியினர் பலரும் மீண்டும் இந்துக்களாக மதம் மாறி வருகின்றனர். உலகமயமாக்கம் பெண்களை அதிக அளவில் பாதிக்கிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. அவர்கள் உலகமயமாக்கத்தை எதிர்க்க முன்வந்த போதிலும் இந்துத்துவத்தை எதிர்க்க முன்வரவில்லை என்பது கவனத்துக்குரியது. இதுபோல் உலகமயமாக்கத்தின் விளைவாகத் தங்களின் கல்வியைப் பறிகொடுத்து வரும் மாணவர்களும் இந்துத்துவத்தின் அபாயம் பற்றிச் சரிவர உணரவில்லை. மறுபுறத்தில், இந்துத்துவ எதிர்ப்பில் முனைப்பு காட்டி வரும் பல மதச்சார்பற்ற சக்திகள் உலகமயமாக்கத்தின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.

உலகமயமாக்கமும் இந்துத்துவமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல; அவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே. இதைப் புரிந்து கொள்ளாத தெளிவின்மை மக்கள் திரள் இயக்கங்களைக் கட்டுவதில் பின்னடைவை ஏற்படுத்தி ஆளும் வர்க்கங்களுக்குச் சாதகமாக முடியும். உலகமயமாக்கமும் இந்துத்துவமும் மட்டுமல்ல, பாசிசமும் இவற்றோடு நெருக்கமான தொடர்பு உடையதாகும். ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் அடிப்படைத் தத்துவம் நவீன தாராளவாதம் ஆகும். இந்துத்துவமோ சங்கப்பரிவாரங்களின் அரசியல் – பண்பாட்டுச் செயல் திட்டம் ஆகும். உலகமயமாக்கம், இந்துத்துவம் இவ்விரண்டும் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் ஊடகமே பாசிசம் ஆகும்.

தனிநபரின் அதீத ‘சுதந்திரம்’ என்பதுதான் நவீனதாராளவாதத்தின் அடிப்படைக் கோட்பாடு, இக்கோட்பாடு எத்தகைய கூட்டுச் செயல்பாட்டையும் கூட்டத் தன்மையையும் அடியோடு நிராகரிக்கிறது; இவ்விதத்தில் இது கம்யூனிசத்துடன் முரண்படுகிறது; இவற்றை எல்லாம் அகற்றிவிட்டு அதனிடத்தில் நபர்களுக்கு இடையிலான போட்டி மனப்பான்மையை உயர்த்திப் பிடிக்கிறது; மானுட முன்னேற்றத்தின் தாரக மந்திரம் இப்போட்டி மனப்பான்மையே என்று கூச்சலிடுகிறது.

மோடி - அம்பானி
உலகமயமாக்கம் தத்துவார்த்த மட்டத்தில் சமத்துவம் என்பது இயற்கைக்கு முரணானது என்று அது வாதாடுகிறது.

நவீன தாராள வாதத்தை அடிப்படையாகக் கொண்ட உலகமயமாக்கத்தில் ஏழை எளியோர் அதிகாரமற்றோர்க்கு இடமே கிடையாது; ‘திறமை’யற்றோர்க்கும் அங்கு இடம் கிடையாது. சந்தைச் செயல்பாடுகளில் சாமர்த்தியம் காட்டத் தெரியாமல் இருப்பதுதான் திறமையின்மையாகும். நவீன தாராளவாதம் சமத்துவத்தை அடியோடு எதிர்க்கிறது; சுதந்திரமான தொழில் முனைவோரின் உரிமைகளை உயர்த்திப் பிடிக்கிறது. தத்துவார்த்த மட்டத்தில் சமத்துவம் என்பது இயற்கைக்கு முரணானது என்று அது வாதாடுகிறது. இக்கோட்பாட்டின்படி, சமத்துவமின்மைதான் மனிதக் குழு முன்னேற்றத்தின் உந்து சக்தி; அதுபோலவே, சகோதரத்துவத்தையும் இது நிராகரிக்கிறது.

இந்துயிசத்தின் அடிப்படையாகவும் தனிநபர்வாதமே இருந்து வருகிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தகுதியின் அடிப்பையில்தான் அவனுகுரிய சாதி அந்தஸ்தை இந்த உலகில் அடைகிறான். தன்னுடைய சாதிக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செவ்வனே செய்வதன் மூலம்தான் அடுத்த பிறவியில் ஒரு மனிதன் உயர் சாதியில் பிறக்கும் வாய்ப்பைப் பெறுகிறான் என்கிறது இந்துயிசம்.

கோட்பாட்டு ரீதியாக மட்டுமின்றி அதைத்தாண்டியும் இந்துத்துவம், நவீன தாராளவாதம் ஆகிய இரண்டுக்குமான ஒப்புமைகள் பரவிக் கிடக்கின்றன. சான்றாக, இவை இரண்டும் சமத்துவத்துக்கு முற்றிலும் எதிரானவை. சமத்துவமின்மை (அசமத்துவம்) என்பதுதான் இயற்கையானது என்று இவை இரண்டுமே கருதுகின்றன.

நவீன தாராளவாதம் வழங்கும் சுதந்திரம் காசுக்கு வாங்கப்படும் ஒரு பண்டமாகும். ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான எதையும் – உணவு, உடை, உறைவிடம் உட்பட எதையும் பணத்தைக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். உங்களிடம் பணம் இல்லையென்றால் உங்களுக்குச் சுதந்திரம் இல்லை. எனவே நவீன தாராள வாதம் வழங்கும் சுதந்திரம் பணத்தில் உள்ளது. அது பணம் படைத்தவர்களின் சுதந்திரம் ஆகும்.

சங்கரமடம்
இரு பிறப்பாளர்களான பார்ப்பன, சத்திரிய, வைசிய வர்ணத்தினருக்கு இந்துத்துவம் போதுமான சுதந்திரத்தை வழங்குகிறது.

“இந்துயிசம் சுதந்திரம் என்பதையே அறியாதது” என்று கருதுவது சரியல்ல. இரு பிறப்பாளர்களான பார்ப்பன, சத்திரிய, வைசிய வர்ணத்தினருக்கு அது போதுமான சுதந்திரத்தை வழங்குகிறது. இவர்களுக்குச் சேவை செய்யப் பிறந்த சூத்திரர்களுக்கு இந்தச் சுதந்திரம் இல்லை. பஞ்சமர்களோடு ஒப்பிடும் வகையில் சூத்திரர்களும் சுதந்திரத்தைக் கோரமுடியும். வர்க்கங்கள் தம் சிறப்புத் தன்மையை இழந்து சாதிகளாக உருமாறிய பின் சுதந்திரம் வாங்கத்தக்கதாகி விட்டன.

அநேகமாக எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் இந்துத்துவத்திற்கும் புதிய தாராள வாதத்திற்குமிடையில் வியக்கத்தக்க ஒத்த தன்மைகள் இருப்பதை நாம் காண்கிறோம்.

இவ்வாறு இந்துத்துவம் என்பது உலகமயமாக்கத்தின் வெறும் பின்தொடர்ச்சி அல்ல; அதன் பண்பு ரீதியான பிரதிபலிப்பும் ஆகும். அரசு மற்றும் குடிமைச் சமூக அமைப்புகள் பாசிசமயமாகி வருவது உலகமயமாக்கத்தின் பின்விளைவு மட்டுமின்றி இந்துத்துவப் பரவலின் இயல்பான விளைவும் ஆகும். ஏனெனில், இந்துத்துவம் தன் பிறப்பிலேயே ஒரு பாசிச ரகம்.

பாசிசப் பண்பு என்பது இந்துத்துவத்தின் பிறவி அடையாளம். மராட்டியத்தில் பூனாவில் பார்ப்பன மன்னர்களான பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மராட்டியத்தின் பார்ப்பனச் சக்திகள் ஒன்று திரண்டு இழந்த ஆட்சியைப் பெறுவதற்கு முயன்றனர். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த பூனா பார்ப்பனர்களின் கலகம் உண்மையில் இந்த வகையைச் சேர்ந்ததுதான். காலனிய எதிர்ப்புப் புரட்சிகரப் போராட்டங்களாக இவற்றைப் பார்ப்பனர்கள் வர்ணித்தபோதிலும், சாராம்சத்தில், அது பழமைவாதப் பிற்போக்கு வகையிலானதே. தங்களுக்கேற்ற ஒரு வலதுசாரிப் பழமைவாதப் புரட்சியைத் தேடிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் முசோலினியின் பாசிசத்தில் புகலிடம் தேடினர்.

சங்கப் பரிவாரங்களின் முழக்கமான “ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே மொழி” என்பது “ஒரே மக்கள், ஒரே தேசம், ஒரே தலைவர்” என்ற நாஜி முழக்கத்தின் எதிரொலியே.

1947-க்குப் பிறகு பல்வேறு வெகுஜன அமைப்புக்களைக் கட்டமைத்த ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார அமைப்புகளை நிறுவியது. கம்யூனிச எதிர்ப்பை லட்சியமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் உள்நாட்டு ‘எதிரிகளா’ன முசுலீம்கள் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்ந்துவிட்டது. சிறுபான்மையினரைப் பற்றி வதந்திகளைப் பரப்பி வெகுஜனங்களிடம் வெறியைக் கிளப்பியது. ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகக் கையாண்ட அதே தந்திரத்தை இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். கையாண்டது. ஆரிய மாட்சிமையை மீட்டெடுப்பதாக ஹிட்லர் கூறியது போல, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்தியாவில் வேதங்களின் மாட்சிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கியது. மேலும் ஆப்கானிஸ்தான், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய தொலைதூர நாடுகளையும் உள்ளடக்கிய அகண்ட பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுவதன் மூலம் மேலாதிக்க விஸ்தரிப்பு வெறியை ஏற்படுத்துகிறது.

ஒன்று தெளிவாகத் தெரிகிறது – சங்கப் பரிவாரங்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்துத்துவம் என்ற போதிலும், அது அவர்களோடு முடங்கி விடவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. இன்று அது இந்திய ஆளும் வர்க்கத்தின் தத்துவமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

பார்ப்பன பயங்கரவாதம்
பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்க்கும் போதே ஏகாதிபத்தியவாதிகளின் உலக மயமாக்கலை எதிர்த்தும் போராட வேண்டும்

இந்திரா காந்தி இரண்டாம் முறையாகப் பிரதமர் ஆன காலந்தொட்டே இந்துத்துவம், ஆளும் வர்க்கத்தின் தத்துவமாகத் திகழ ஆரம்பித்தது என்பதும், ராஜீவ்காந்தியின் பதவிக்காலத்தில் இது குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்பட்டது என்பதும் கவனத்துக்குரியது. இதே காலகட்டத்தில் தான் தாராளமயச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. நரசிம்மராவ் ஆட்சியின்போது உலகமயமாக்கம் திணிக்கப்பட்டபோதே இந்துத்துவச் சக்திகளின் ஏறுமுகமும் தென்படத் தொடங்கியது. பாரதீய ஜனதாக் கட்சி அல்லது காங்கிரசின் மிதவாத, தீவிரவாத, இந்துத்துவ ரகங்களுக்கு இடையில் உண்மையில் எவ்வித வேறுபாடும் இல்லை. திராவிடப் பாரம்பரியத்துக்குச் சொந்தம் கொண்டாடிய போதிலும், ஜெயலலிதா தமது பார்ப்பனியத்தை பாரதீய ஜனதாவுடன் ஐக்கியப்படுத்துகிறார்; கலைஞரோ பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கண்டுள்ளார்.

இவற்றில் எல்லாம் இருந்து கிடைக்கும் படிப்பினை என்ன? இந்துத்துவத்தையும் உலகமயமாக்கத்தையும் எதிர்ப்பது என்பதன் பொருள் என்னவெனில், தேர்தல் அரசியலில் இதற்கான தீர்வு இல்லை என்று உணர்வதே ஆகும். தீர்வு, மக்கள் திரள் போராட்டங்களில் இருக்கிறது – பாசிசச் சக்திகளுக்கெதிரான தெருச்சண்டையில் இருக்கிறது.

பாசிச இந்துத்துவத்தை உலகமயமாக்கலில் இருந்து பிரித்துப்பார்க்க முடியாது. எனவே, ஒன்றுக்கு எதிரான போராட்டம் என்பது மற்றொன்றுக்கு எதிரான போராட்டமாகவும் இருந்தே தீரவேண்டும். எனவே, இவற்றுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் அரசியல் ரீதியானவை மட்டுமின்றி கலாச்சார ரீதியானவை என்பதாகவும் அமைய வேண்டும். உள்ளூர் அளவில் மட்டுமின்றி உலகுதழுவியதாகவும் அமைய வேண்டும். பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்க்கும் போதே ஏகாதிபத்தியவாதிகளின் உலக மயமாக்கலை எதிர்த்தும் போராட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
____________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003
____________________________