மாருதி தீர்ப்பை கண்டித்தும் விவசாயிகளை ஆதரித்தும் BHEL PPPU தொழிற்சங்கம் போராட்டம் !
பருவமழை பொய்த்ததாலும் வழக்கம் போல் காவிரி நீர் திறக்க கர்நாடகம் மறுத்தாலும் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதை எல்லாம் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
தனியார் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உரிமைகள் வழங்கு !
தனியார் கல்வி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்களில் பேருந்து ஒட்டும் தொழிலாளிகள் பேருந்துகளிலேயே வாழ்க்கை நடத்தும் கொத்தடிமை முறை நீக்கப்பட்டு முறைப்படுத்திய பணி தொழிலாளர் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.
திருச்சியில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் !
இயற்கை வளங்கள் அனைத்தையும் சூறையாடப்படுகின்றது. இதனை வளர்ச்சி என சொல்கின்றார்கள். இதனை எதிர்ப்பவர்களை போலீசை வைத்து நசுக்குகின்றார்கள். இந்த போலீசு - நீதி மன்றம் - அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளார்களோடு ஒன்றிணைவோம்
BEML : தேசத்தின் சொத்தை விற்கும் மோடி அரசு !
பிராசிஞ்சித் போஸ் என்கிற பொருளியலாளர், "ஒருமுறை வருகின்ற வருமானத்திற்காக எல்லா வகையிலும் லாபம் தரும் பிஇஎம்எல் பங்குகளை விற்பது பொருளாதார ரீதியில் அர்த்தமற்ற செயல்" என்கிறார்.
சத்தியபாமா பல்கலைக் கழக தொழிலாளிகளின் போனஸ் வழக்கு வெற்றி !
ஜேப்பியாரின் குழுமம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு சேவை என்றதின் பேரில் அனைத்து கல்வி முதலாளிகளும் தொழிலாளர் உரிமைகளை மறுத்து வருகின்றனர். தொழிலாளர்களை உரிமைகளற்ற கொத்தடிமைகளாகவே இந்தக் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறது.
மாருதி தொழிலாளிகளை விடுதலை செய் ! புதுவை ஆர்ப்பாட்டம் !
அரசு நினைப்பதைப் போல், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என உழைக்கும் மக்களின் போராட்டங்களை கண்டும் காணாமல் புறக்கணிப்பதன் மூலமோ, போலீசு, நீதிமன்றங்களின் மூலமோ, நசுக்கி ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்பது அறிவியலுக்கு புறம்பானது.
ஆவாஸ் தோ… ஹம் ஏக் ஹே – சலோ மானேசர் நேரடி ரிப்போர்ட்
மாருதி ஆலையில் இருந்து வந்த தொழிலாளர்கள் உற்சாகமாக இருந்தனர். அந்த பூங்கா முழுவதிலும் நிறைந்திருந்த தொழிலாளர்களிடம் ஒருவிதமான அச்சமற்ற களிப்பைக் காண முடிந்தது.
மாருதி தொழிலாளர்களை மீட்போம் ! ஒசூர் – திருவள்ளூர் ஆர்ப்பாட்டம்
பொய்வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை அனுபவித்து வருகின்ற மாருதி ஆலைத்தொழிலாளர்களது சிறை மீட்புக்காக 4.4.2017 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
மாருதி தொழிலாளர்களை மீட்போம் – நாடு தழுவிய போராட்டம்
ஏப்ரல் 4 மற்றும் 5 ம் தேதிகளில் இந்தியா மற்றும் உலக நாடுகளின் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாருதி தொழிலாளர்கள் சிறை மீட்புக்கான போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது, மாருதி தொழிலாளர் சங்கம்.
கோவை – புதுச்சேரி பகத்சிங் நினைவு நாள் ஆர்ப்பாட்டம்
பல்லடம் செம்மிபாளையத்தில் அமைந்துள்ள ஜிடிஎன் கம்பெனியில் 31.03.2017 அன்று காலை 11 மணி அளவில் தோழர்கள் பகத் சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புதுச்சேரியில் புஜதொமு மற்றும் புமாஇமு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கும்மிடிப்பூண்டி : பாரத் நிறுவனத்தின் அடாவடி !
பாரத் டெக்ஸ்டைல்ஸ் & புரூஃபிங் லிமிடெட் ஆலை நிர்வாகம் எந்தவித சட்ட – திட்டங்களையும் மதிக்காமல் காவல் துறையின் உதவியோடு தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறையையும், பழிவாங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
வழக்கறிஞர் ஹர்ஷ் போரா நேர்காணல் – அவசியம் படியுங்கள் !
தொழிலாளிகள் தீ வைப்பதை சி.சி.டி.வி மூலம் பார்த்ததாக சொல்லும் அவரால் ஒருவரையும் அடையாளம் காட்ட முடியவில்லை. மேலும், சி.சி.டி.வி பதிவுகள் நெருப்பில் சேதமாகி விட்டதாகவும் தெரிவித்து விட்டார்கள்”
அரசு ஆசியுடன் ஜப்பான் மாருதி நடத்தும் கொத்தடிமைத் தொழில்
அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தனர். நாங்களோ நிராயுதபாணிகளாக நின்றோம். எனவே அனைவரும் சிதறி ஓடிப் போனோம். மறுநாள் சுமார் 91 பேரைக் கைது செய்தார்கள்.
மாருதி தொழிலாளர் நிலைமை – நேரடி அறிக்கை
மாருதி ஆலையில் பற்றிய நெருப்பு என்று குறிப்பிட்டீர்கள் – முதலில் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். அது பற்ற வைக்கப்பட்ட நெருப்பு. அடுத்து, அது முதன் முதலாக நிகழ்ந்த ஒரு தனித்துவமான சம்பவமும் அல்ல. அதற்கு முன்னும் வெவ்வேறு அளவுகளில், வடிவங்களில் இதே போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன...
சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் நேர்காணல்
நல்லா கவனிங்க.. மல்லையா, அம்பானி, அதானி மாதிரி பெரிய முதலாளிகள் வங்கிகள்ல கடன் வாங்கிட்டு நாமம் போட்டுட்டு போறான். நாங்க முறையா வட்டி கட்டிட்டு வர்றோம்.
























