Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 110

காசா மருத்துவமனைகளில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளைக் கொலை செய்யும் இஸ்ரேல்!

0

காசாவை சுற்றிவளைத்துள்ள இஸ்ரேல் அங்குள்ள மருத்துவமனைகள் மீது தொடர்ந்து குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் கொன்று குவித்து வருகிறது. காசாவின் மிகப்பெரிய மருத்துவ வளாகமான அல்-ஷிஃபா (al-Shifa) மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பட இயலவில்லை. இதனால், இன்குபேட்டருக்குள் வைக்கப்பட்டிருந்த புதிதாகப் பிறந்த இரண்டு குறைப்பிரசவக் குழந்தைகள் இறந்துவிட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் முகமது அபு சல்மியா (Mohammed Abu Salmiya) நேற்று (நவம்பர் 11 அன்று) தெரிவித்துள்ளார்.

பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மேலும் 37 குழந்தைகள் இன்குபேட்டர்களை இயக்குவதற்கு போதுமான மின்சாரம் – எரிபொருள் இல்லாததால் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அல்-ஷிஃபா மருத்துவமனை இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. இன்குபேட்டர்களில் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜனின் அளவை நிலையாகப் பராமரிக்க வேண்டும். ஆனால், மருத்துவமனையில் அதற்குத் தேவையான மின்சாரம் – எரிபொருள் கையிருப்பு இல்லை. இதன் காரணமாக குழந்தைகளை உயிருடன் வைத்திருக்க மருத்துவர்கள் பழங்கால வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

”நாளை (நவம்பர் 12) காலை வரை மின்சாரம் உள்ளது. மின்சாரம் தீர்ந்துவிட்டால், மீதமுள்ள பச்சிளம் குழந்தைகளும் இறந்துவிடுவார்கள்” என்று அபு சல்மியா எச்சரித்தார்.


படிக்க: பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இஸ்ரேல்


அல்-ஷிஃபா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் முகமது ஒபெய்ட், ”புதிதாகப் பிறந்த குழந்தைகள் மட்டுமல்லாமல் மேலும் ஒரு வயது வந்த நோயாளியும் வென்டிலேட்டருக்கு மின்சாரம் இல்லாததால் இறந்துள்ளார். எங்களிடம் சுமார் 600 உள்நோயாளிகள் இருப்பதால், நோயாளிகளை வெளியேற்ற முடியும் என்ற உத்தரவாதத்தை எங்களுக்கு யாராவது வழங்க வேண்டும்” என்று ஆதங்கத்துடன் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நவம்பர் 10 அன்று, ”அல்-ஷிஃபா மருத்துவமனை குண்டுவீச்சுக்கு உட்பட்டுள்ளது. காசா பகுதியில் உள்ள 20 மருத்துவமனைகளும் செயலிழந்து உள்ளன” என்று கூறினார். அதேபோல், அவ்வமைப்பின் இயக்குநர் ஜெனரல் ”காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் நோயாளிகள் மீது 250-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் ஐந்து மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நவம்பர் 3 அன்று, இதே அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்; 60 பேர் காயமடைந்தனர். அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து எகிப்துடனான ரஃபா எல்லைக்கு பலத்த காயமடைந்த நோயாளிகளை ஆம்புலன்ஸ்களில் கொண்டு சென்றபோது, இத்தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.


படிக்க: என் குரல் கேட்கலையா… | காசா | சிவப்பு அலை பாடல்


காசாவில் உள்ள மருத்துவமனைகள் இஸ்ரேலால் தாக்கப்படுவது குறித்து கான் யூனிஸில் உள்ள அல்-நாசர் மருத்துவமனைக்கு வெளியே நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, காசாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், “காசா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர்க் குற்றங்கள் அனைத்தையும் நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். நாங்கள் உலக மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். உங்களுடைய மனசாட்சி விழித்திருக்கிறது என்றால், தயவுசெய்து இதுகுறித்து நடவடிக்கை எடுங்கள். மருத்துவமனைகள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய போர்க் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முன்வராத உலகின் எந்தவொரு அரசியல்வாதியும், அவர்களுடைய கைகளில் இரத்தக்கறை படிந்துள்ளதை மறந்துவிடக் கூடாது” என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

37-வது நாளாக பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அக்டோபர் 7 முதல் நவம்பர் 10 வரை, இஸ்ரேல் 4,506 குழந்தைகள் உட்பட 11,078 பாலஸ்தீனர்களை காசாவில் மட்டும் கொன்று குவித்துள்ளது; மேற்கு கரையிலும் 44 குழந்தைகள் உட்பட 183 பாலஸ்தீனர்களை கொன்று குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தீபாவளி அல்ல தீராவலி | கவிதை

ந்த ஒரு நாளுக்காக
அந்த வாரம் முழுவதுமே ஆரவாரம்…

ஆடை கடைக்கும் ஆபரண கடைக்கும் அணிவகுக்கும் அப்பாக்கள்…

விதவிதமான வெடிகளை வாங்கி குவிக்கும் வேடிக்கை அப்பாக்கள் ஒருபுறம்…

அனைவரும் ஆனந்தத்தில் திளைத்திருக்க… நான் மட்டும் சிந்தனை கடலில் மூழ்கியிருந்தேன்… (தம் தந்தை எங்கே)…

ஆப்பம் சுட்டாச்சா.., ஆடை எடுத்தாச்சா.., பட்டாசு வாங்கிட்டியா…

பாலுவின் கேள்வி அம்புகள்
என்னை நோக்கிப் பாய…

அம்புக்கு பயந்து அம்மாவிடம் கேட்டேன்… அம்மா சொன்னாள் அப்பா வரட்டும்டா கண்ணா என்று…

இரவெல்லாம் இவனின்வசம்…

கதர் சட்டை வாங்கி வருவாரோ…
கலர் சட்டை வாங்கி வருவாரோ…

அட‌ பனியன் வாங்கி வந்தால் கூட பக்கத்துவீட்டுப் பய பாலுகிட்ட காட்டிறுனும்…

எனப் படபடத்தது நெஞ்சு…

விடியற்காலை விண்மீன் தூங்கும் நேரம்…

சேவல் கூவும் வேளை…

ஆடையெல்லாம் அழுக்கு…

அரைநிர்வாண கோலம்…

கையெல்லாம் காயச் சிராய்ப்பு…

சேறுபடிந்த செருப்பு…

சட்டை பாக்கெட்டில் பணத்திற்கு பதில் சாரயஸ்டிக்கர்ஸ்…

வாய் முழுக்க பிராந்தி வாடை…

தட்டுத்தடுமாறி வீடு வந்தடைந்தார் என் அப்பா…

அம்மாவின் கண்களில் அருவியாய் கொட்டும் கண்ணீர்…

இப்படிதான் இருந்தது..,
என் இளமைக்கால பண்டிகை நாட்கள்…

பண்டிகைகள் பல வந்துபோகிறது…

இருந்தாலும் “தீபாவளி” இன்னும் நெஞ்சில் “தீராதவலி”யாகவே இருக்கிறது…..


இந்திரஜித்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்!

ங்கதேச அரசாங்கம் பரிந்துரைத்த ஊதிய உயர்வை நிராகரித்து 25,000-க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் நவம்பர் 9 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் போராட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் முடங்கின. போராட்டத்தை ஒடுக்க முயன்ற போலீசுடன் மோதல்களும் நடைபெற்றன.

அக்டோபர் 23 முதல் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. போராட்டம் தொடங்கியதில் இருந்து நவம்பர் 8 வரை மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் 3500-க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அந்நாட்டின் வருடாந்திர ஏற்றுமதியில் சுமார் 85 சதவிகிதம் ஆடை ஏற்றுமதி தான். லெவிஸ் (Levi’s), ஜாரா (Zara), எச் & எம் (H&M) உள்ளிட்ட உலகின் பல முன்னணி பிராண்டுகளுக்கான ஆடைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆனால் ஆடைத் தொழிலாளர்களோ தங்களின் அன்றாடத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் தான் இருக்கின்றனர். அவர்களின் குறைந்தபட்ச மாத ஊதியமானது வெறும் 8300 டாக்கா (6,250 இந்திய ரூபாய்) தான்.

தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையோ மாதம் 23,000 டாக்கா (17,400 இந்திய ரூபாய்) வழங்கப்பட வேண்டும் என்று. ஆனால் ஷேக் ஹசீனா அரசாங்கமோ 12,500 டாக்கா (9,450 இந்திய ரூபாய்) என்ற சொற்பமான மாதாந்திர ஊதியத்தை வழங்குவதாக நவம்பர் 7 அன்று முன்மொழிந்தது.

இதனை நிராகரித்த தொழிலாளர்கள் வீரியமிக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். போராடிய தொழிலாளர்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீதான அநீதித் தீர்ப்பு!

10.11.2023

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீதான அநீதித் தீர்ப்பு!
கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக மக்களை காவு கொடுக்கும் நீதிமன்றம்!

பத்திரிகை செய்தி

மிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து இயற்றப்பட்ட சட்டத்தின் பல பிரிவுகள் செல்லும், சில பிரிவுகள் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கார்ப்பரேட் ஆன்லைன் ரம்மி முதலாளிகளை காப்பாற்றி அவர்களுக்காக மக்களை காவு கொடுப்பதே இந்தத் தீர்ப்பு.

அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டுகளை தடை செய்யும் சட்டப்பிரிவுகள் செல்லும் என்று தீர்ப்பளித்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றம், அதேநேரத்தில் ரம்மி திறமைக்கான விளையாட்டு என்பதால், ஆன்லைன் ரம்மிக்கான தடை செல்லாது என்று அறிவித்திருக்கிறது. ஆக மொத்தத்தில் ஆப்ரேஷன் சக்சஸ்; பேஷண்ட் டெத்.

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகள் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் பலர் தற்கொலை செய்து மாண்டு போயினர். ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததன் விளைவாக திராவிட முன்னேற்றக் கழக அரசனது ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. எடுத்த உடனே இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்கவில்லை. முதல் முறை திருப்பி அனுப்பினார், ஆளுநருக்கு எதிராக மிகப்பெரிய கண்டனங்கள் எழுந்தன. வேறு வழியின்றி இரண்டாவது முறை மிகவும் தாமதமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே ஆளுநர் ஆர் என் ரவியை கார்ப்பரேட் ஆன்லைன் ரம்மி முதலாளிகள் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலம் மற்றும் அப்பாவிகளின் உயிருடன் தொடர்புடைய இந்த வழக்கினை நீதிமன்றம் அணுகிய விதத்தில் இருந்து மக்களின் உயிரைப் பற்றிய நீதிமன்றங்களின் அணுகுமுறை அம்பலமாகி இருக்கிறது.

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய முடியாது என்றும், மாறாக அதை ஒழுங்குபடுத்தலாம் என்றும் கூறியுள்ள நீதிமன்றம் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டு என்பது திறமை சார்ந்தது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை எடுத்துக்காட்டி உள்ளது.


படிக்க: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு ஓடு! | மக்கள் அதிகாரம் கண்டனம்


ஒரு மாநில அரசு தன்னுடைய மக்களுக்காக கொண்டு வரும் திட்டங்களை அச்சட்டத்தின் நலனிலிருந்து பார்க்காமல், அச்சட்டத்தின் தேவைகளில் இருந்து பார்க்காமல் வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். அதுமட்டுமின்றி மாநில அரசின் உரிமையும் பறிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் மாண்டு போவதை வரவேற்கிறதா நீதிமன்றம்? ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகின்ற போது இத்தகைய தீர்ப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டு மக்களை பலி கொடுத்து வரி பிடுங்கி வாழும் மோடி அரசிடம் வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்?

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உருவாக்கிய இதுபோன்ற நுகர்வு கலாச்சார விளையாட்டுகள் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்று கொண்டிருக்கின்றன. இதற்கு எதிரான அரசியல் மற்றும் பண்பாட்டுப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்.

மேலும் உயர் நீதிமன்றத்தின் இந்த அநீதியான தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை,
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ரசியப் புரட்சி நாள் வாழ்த்துகள்! முதலாளித்துவம் கொல்லும், கம்யூனிசமே வெல்லும்!

ன்பார்ந்த வாசகர்களே!

புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக, புதிய ஜனநாயகம் வாசகர்கள் அனைவருக்கும், உழைக்கும் மக்களுக்கும் எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நவம்பர் 7, 1917 – ரசியாவில் பாட்டாளி வர்க்க ஆட்சி மலர்ந்த நாள். பூமிப் பரப்பில் ஐந்தில் ஒரு பங்கில் உழைக்கும் மக்களின் ஆட்சி நிறுவப்பட்ட நாள். ஏகாதிபத்தியம் காகிதப் புலியே என நிரூபித்துக் காட்டி, ஒடுக்கப்பட்ட நாடுகளின் – மக்களின் மனங்களில் புரட்சிக் கனலை மூட்டிய நாள். முதலாளித்துவ சகாப்தம் முடிந்து சோசலிச சகாப்தம் தொடங்கிவிட்டதை உலகறியப் பறைசாற்றிய நாள். ரசியாவில் முதல் சோசலிச அரசு உதித்த அந்த நவம்பர் புரட்சிக்கு இன்று 108-வது ஆண்டு பிறந்த நாள்.

முதல் உலகப் போருக்குப் பிறகு ஏகாதிபத்திய நாடுகளில் கூட வறுமையும் வேலையின்மையும் தலைவிரித்தாடியபோது, அவற்றின் வாடைகூட இல்லாமல் சோசலிச ரசியா மண்ணுலக சொர்க்கமாக மலர்ந்தது. கொள்ளைச் சுரண்டலும் கொடூர அடக்குமுறையும் முதலாளித்துவ நாடுகளில் தலைவிரித்தாடியபோது, அச்சுரண்டல் அமைப்பை ஒழித்து, பாட்டாளிகளையே நாட்டின் எஜமானர்களாக்கி ஜனநாயகத்தை நிலைநாட்டி வளர்த்தது சோசலிசம். ஏகாதிபத்தியச் சீரழிவுகளுக்கு எதிராக, சமத்துவம், மனிதநேயம், பொதுநலம் என உழைப்பின் உன்னதத்தை, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர கலாச்சாரத்தை சோசலிச ரசியா உலகிற்கு வழங்கியது.

உலகப் புரட்சியின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த சோசலிச ரசியா, தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றிய முதலாளித்துவப் பாதையாளர்களால் சீரழிக்கப்பட்டு பின்னர் சிதைந்து போனது.

இவற்றைக் காட்டி ‘கம்யூனிசம் தோற்றுவிட்டது’ என்று எக்காளமிட்ட ஏகாதிபத்தியவாதிகள், தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகான இத்தனை ஆண்டுகளில் உலகிற்கு வழங்கியவை என்ன? போர்கள், இனப்படுகொலைகள், பஞ்சம், பட்டினி, வேலையின்மை, ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு, வரைமுறையற்ற இயற்கை சுரண்டல், பேரழிவுகள், கொடிய தொற்று நோய்கள், பாலியல் கலாச்சார சீரழிவுகள்… என்று நாம் வாழும் இந்த உலகையே அழியும் நிலைக்குக் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர் ஏகாதிபத்தியவாதிகள்.

இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் என்ன?

உலக மக்களின் எதிரியான அமெரிக்க வல்லரசானது, ஒருபக்கம் உக்ரைனை பதிலியாக வைத்துக் கொண்டு ரஷ்யாவுக்கு எதிரானப் போரை நடத்தி வருகிறது. இன்று, இசுரேலுடன் கூட்டுச்சேர்ந்து கொண்டு காசா மீது ஒரு பயங்கரவாத – இன அழிப்பு, ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்துள்ளது. இந்தியாவும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளும் இஸ்ரேலின் இந்தப் போரை ஆதரிக்கின்றன. ரசியா, சீனா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் பாலஸ்தீன மக்கள் மீதான இப்போரை எதிர்ப்பதாகத் தெரிவித்தாலும், இசுரேலுக்கு நெருக்கடி கொடுத்து, போர் நிறுத்தத்தைக் கொண்டுவர எவ்வித உருப்படியான நடவடிக்கையிலும் ஈடுபடத் தயாராக இல்லை.

பாலஸ்தீன மக்கள் மீது இசுரேல் தொடுத்துள்ள இந்தப் போரை இசுலாமிய நாடுகள் மட்டும்தான் எதிர்ப்பதாக, இந்தியா உள்ளிட்டு பல நாடுகளிலும் உள்ள அமெரிக்க ஜால்ரா ஊடகங்கள் பிரச்சாரம் செய்துவருகின்றன. ஆனால், உண்மை நிலையோ வேறானது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலேயே பாலஸ்தீன மக்கள் மீதான இசுரேலின் போரை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளை நிரப்புகிறார்கள். பல நாடுகளில் அமெரிக்கா, இசுரேல் தூதரகங்கள் முற்றுகையிடப் பட்டிருக்கின்றன; சில இடங்களில் தாக்குதல்களும் அரங்கேறியுள்ளன.


படிக்க: நவம்பர் – 7 ரசியப் புரட்சி நாள்! உலக உழைக்கும் மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய நாள்!


நமது நாட்டிலும் பல்வேறு இயக்கங்களும் மக்களும் போர் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச அளவிலான உழைக்கும் மக்களின் காத்திரமான போராட்டங்கள் மட்டுமே பாலஸ்தீன மக்களைக் காப்பாற்றும் ஒரே அரணாக உள்ளது. இவையனைத்தும் ஏகாதிபத்திய வல்லரசுகளையும் அதன் அடிவருடிகளையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது.

அந்தவகையில், இந்த பச்சை இனப்படுகொலையைக் கண்டித்து, தொடர்ந்து பிரச்சாரம் செய்வதும், ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங்களில் இறங்குவதும் மோடி அரசு இசுரேலுக்குக் கொடுத்துவரும் ஆதரவைத் தடுத்து நிறுத்துவதும் அவசியமானதாக உள்ளது.

இன்னொருபக்கம், ஏகாதிபத்திய உலகக் கட்டமைவு மென்மேலும் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கித் திணறுகிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றன, உலக ஏகாதிபத்தியங்கள். குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளில் உழைக்கும் மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உக்ரைன் போர் தொடங்கிய பிறகு நடைபெற்ற “நேட்டோ கூட்டணி”க்கு எதிரான பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள், இப்போது பாலஸ்தீனத்தின் மீதான போர் விசயத்தில் அமெரிக்காவின் போர்வெறியைக் கண்டித்து நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை சர்வதேச பாட்டாளி வர்க்கத்திற்குப் புதிய தெம்பூட்டும் நிகழ்வுகளாகும்.

மற்றொருபுறம், மோடி-அமித்ஷா தலைமையிலான பாசிசக் கும்பல் தொடர்ந்து அரசியல் ரீதியாக தோல்வி முகத்தில் உள்ளது. குஜராத் படுகொலை தொடர்பான பி.பி.சி. ஆவணப்படம்; அதானியின் பங்குச் சந்தை மோசடியை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கை; 7.5 லட்சம் கோடி ஊழலை வெளிக்கொண்டுவந்த சி.ஏ.ஜி. அறிக்கை; அதைத் தொடர்ந்து சி.ஏ.ஜி. அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது; கடந்த ஒன்பதரை ஆண்டு காலத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு 25 இலட்சம் கோடி ரூபாய் அளவில் பிணையில்லா கடன்களை அள்ளிக் கொடுத்து, அதைத் ‘தள்ளுபடி’ செய்துள்ளது; அதிகரித்துவரும் வேலையின்மை, விலையேற்றம், பொருளாதார திவால் நிலைமை – இவை எதனையும் தீர்க்க வக்கற்றுப்போய் போலியான புள்ளி விவரங்களை அள்ளிவிடுவது – போன்ற பல்வேறு நிகழ்வுகளும் அடுத்தடுத்து அம்பலமாகி மோடி கும்பலின் முகத்திரையைக் கிழிக்கின்றன.

“சனாதனத்தை ஒழிப்போம்” என்று உதயநிதி பேசியது, பீகாரில் வெளியிடப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் ஆகியவை பார்ப்பன பாசிசக் கும்பல் போர்த்திக் கொண்டிருந்த ‘இந்து’ப் போர்வையை அம்பலப்படுத்துவதாக அமைந்தன. சந்திரயான்-3 விண்கலம், ஜி-20 மாநாடு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா – என தனது பிம்பத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பாசிசக் கும்பல் பல வகைகளில் முயற்சித்தாலும், அவை அனைத்தும் பிசுபிசுத்துப் போகின்றன. இதனால் வெறிபிடித்துப்போய், எதிர்க்கட்சிகள், புரட்சிகர இயக்கங்கள், பாசிச எதிர்ப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மீது கொடிய அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவது என்ற உத்தியைக் கையாளுகிறது. “நியூஸ் கிளிக்” செய்தி நிறுவனத்தின் மீதான ரெய்டும் அதன் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா மீது ஏவப்பட்ட ஊபா கருப்புச் சட்டமும் இதற்கான சான்றுகளாகும்.

இச்சூழலில், எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியோ, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது என்ற வரம்பில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தி.மு.க. அவை முன்னவர் துரைமுருகன் சட்டமன்றத்தில் பேசும்போது, ‘பா.ஜ.க.வை வீழ்த்துவதுதான் எதிர்க்கட்சிகளின் குறைந்தபட்சத் திட்டம்’ என்று வெளிப்படையாகக் கூறினார். இதுதான் “இந்தியா” கூட்டணியில் உள்ள பல கட்சிகளின் கருத்துமாகும். ஆக, இவர்கள் மக்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் ஒரு குறைந்தபட்சத் திட்டத்தை முன்வைத்துச் செயல்படப் போவதில்லை. நாளை தேர்தல் நேரத்தில், இந்தக் கூட்டணியினர் ஒரு அறிக்கை வெளியிட்டாலும் அது வெற்று வாக்குறுதிகளாகவே இருக்கும். இத்தகைய கேடுகெட்ட சந்தர்ப்பவாத கூட்டணியாக இருப்பதால், தற்போதைய ஐந்து மாநிலத் தேர்தல்களிலேயே இவர்களுக்குள் சீட்டுப் பிரச்சினை முன்னிலைக்கு வந்து முறுகல் நிலை முற்றிவிட்டது. இவ்வாறாக, பா.ஜ.க.வை அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்துவதற்கும் முடக்குவதற்கும் கிடைத்த வாய்ப்புகளைக்கூட பயன்படுத்தத் தகுதியற்றவையாகவே எதிர்க்கட்சிகள் உள்ளன.


படிக்க: பாரிஸ் கம்யூனின் புரட்சிப்பாதையில் பீடுநடைபோடுவோம்!


மற்றொரு பக்கம், பா.ஜ.க.விற்கு எதிராக, உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து அடையாளப் போராட்டங்களை நடத்திவரும் சி.பி.எம்.யை எதிர்க்கட்சி கூட்டணியினர் ஆதரிக்கத் தயாராக இல்லை. அதேவேளையில், கேரளத்தில் கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்களை சி.பி.எம். கூட்டணி ஆட்சி ஒடுக்கி வருகிறது.

மக்கள் போராட்டங்களின் மூலமாக பா.ஜ.க.விற்கு நெருக்கடி கொடுத்துவிடக் கூடாது; மக்கள் போராட்டங்கள் எந்த வகையிலும் வளர்ந்துவிடக் கூடாது, ஆனால், வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று மிகவும் இழிந்த நிலைக்கு எதிர்க்கட்சிகள் சென்றுவிட்டன.

பா.ஜ.க.வை வீழ்த்துவது இன்று மக்கள் முன் இருக்கும் முதன்மையான கடமையாக இருந்தாலும். எதிர்க்கட்சிகளால் அதனை எந்தவகையிலும் சாதிக்க முடியாது; உழைக்கும் மக்கள், இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தாலும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்குக் கூட இந்தக் கட்சிகள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை நிலைமையாகும்.

இந்த நிலைமையானது, பா.ஜ.க.வை வீழ்த்தும் மொத்தக் கடமை உழைக்கும் மக்களின் தோள்களிலேயே சுமத்தப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, தேர்தலுக்குப் பின்னாலும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிசக் கும்பலைத் தொடர்ந்து தற்காப்பு நிலைக்குத் தள்ளி, அடுத்தடுத்து பின்னடைவுகளை உருவாக்கி, சிதைத்து சிதறடிக்கும் நிலைக்குத் தள்ள வேண்டுமெனில், பாசிச கும்பலுக்கு எதிரான ஒரு உறுதியான மக்கள் எழுச்சி இன்றைய உடனடியான தேவையாக உள்ளது. அந்த மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதும், அதன் வளர்ச்சிப் போக்கில் “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை” அமைப்பதும் நமது கடமையாகும்.

ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்கத்திற்கு எதிராக, அமெரிக்காவின் போர்வெறி, ஆக்கிரமிப்புவெறிக்கு எதிராக போராடும் அதேவேளையில், இன்று, பாலஸ்தீனத்தின் மீதான போரைத் தடுத்து நிறுத்தவும், அதன் விடுதலைக்காகப் போராடுவதன் ஊடாகவும்; நமது நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிக்கப் போராடும் அதேவேளையில், இன்று, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதுடன், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முன்னிலைக்குக் கொண்டுவருவதன் ஊடாகவும் சோசலிசத்தை நோக்கி முன்னேறுவோம்!

உலகில் மீண்டும் நவம்பர்கள் தோன்றும்; ஏகாதிபத்தியம் வீழ்த்தப்படும்; செங்கொடி உயர்ந்தோங்க கம்யூனிசமே வெல்லும்!


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 6

கட்சியின் பங்கு:

புரட்சிக்கான புறநிலையை சரியாக கணக்கிட்டது, அடித்தட்டு மக்களின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து அவர்களை திரட்டியது, அவர்களை ஒழுங்கமைத்து செயலுக்கு வழிகாட்டியது, பரந்த கட்சி வலைப்பின்னலை உருவாக்கி அதை நிறுவன ரீதியாக திறம்பட இயக்கியது, ஊசலாட்டக்காரர்களை வென்றெடுத்தது, சீர்குலைவுவாதிகளை முறியடித்தது என அனைத்தையும் நிறைவேற்றி போல்ஷிவிக்குகள் புரட்சியை சாதித்தார்கள். இதை ஜான் ரீட் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், “போல்ஷிவிக்குகள் ஆட்சியதிகாரம் வென்றுகொண்டது, சொத்துடைத்த வர்க்கங்களுடன் அல்லது பிற அரசியல் தலைவர்களுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலமல்ல. பழைய அரசாங்கப் பொறியமைவுடன் இணக்கம் கண்டதன் மூலமல்ல. குறுங்குழு ஒன்றின் ஒழுங்கமைந்த வன்முறையின் மூலமல்ல. மக்கள் பெருந்திரளினர் ரஷ்யா எங்கும் எழுச்சி நடத்தத் தயாராய் இருந்திராவிடில், அந்த எழுச்சி நிச்சயம் தோல்வியுற்றிருக்கும். போல்ஷிவிக்குகளது வெற்றிக்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். மக்களின் அனைத்துப் பிரிவினரையும் அறைகூவி அழைத்துப் பழையனவற்றை தவிர்த்து ஒழித்திடும் பணியில் ஈடுபடச் செய்ததும், பிறகு இந்தத் தகர்வின் புகையினிடையே புதியனவற்றின் கட்டுமானத்தை எழுப்புவதில் இம்மக்கள் திரளினருடன் சேர்ந்து பாடுபட்டும், இவர்களது மிகப்பரவலான எளிய விருப்பங்களை நிறைவேறச் செய்தனர் என்பதும்தான் காரணம்”.

ஒவ்வொரு முறையும் அவநம்பிக்கையாளர்களால் முட்டுக்கட்டைகள் போடப்படும்போதும் தளராமல் முன்முயற்சி எடுத்து புரட்சியை முன்னெடுத்துச் சென்றார்கள் போல்ஷிவிக்குகள். கம்யூனிஸ்ட்கள் மக்களை சார்ந்து இருக்கவேண்டும். அதேவேளையில், மக்களைவிட முன்னோக்கி சிந்திக்கும் திறனுடையவர்களாக இருக்கவேண்டும் என்பதை நடைமுறையில் நிரூபித்தார்கள்.

“மக்கள் அனைவரது அறிவுத்துறை வளர்ச்சி அனுமதிக்கையில் மட்டும்தான் சோஷலிஸத்தை கைகூடச் செய்யமுடியுமெனில் குறைந்தது 500 ஆண்டுகளுக்கு நம்மால் சோஷலிஸத்தை பார்க்க இயலாது என்றாகிவிடும்… கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படையாகும். மக்கள் பெருந்திரளின் சராசரிக் கல்வி நிலையின் பற்றாக்குறைக்கு தன்னைத் தடுத்து நிறுத்துவதற்கு இக்கட்சி இடந்தரலாகாது” என்றார் லெனின்.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 4


மிக முக்கியமாக முன்னேறிய வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளாற்றலிலும், விவசாயி வர்க்கத்துடனான கூட்டணியிலும் லெனின் முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் உள்ளாற்றலிலும் அதன் வெற்றியின் சாத்தியப்பாட்டிலும் டிட்ராஸ்கி போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. புரட்சியின் யதார்த்த நிலைக்கு ஏற்ப இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பது என்ற லெனினின் முடிவை சந்தர்ப்பவாதிகள் ஏற்கவில்லை. டிட்ராஸ்கி போன்ற சந்தர்ப்பவாதிகளை சோவியத்துகளின் காங்கிரஸிற்காக காத்திருப்பவர்களை, உடனடி எழுச்சியை எதிர்ப்பவர்களை லெனின் சாடினார். சில பிரச்சினைகளை வாக்கெடுப்பின் மூலமாக அல்லாமல், வன்முறையின் மூலம் தீர்மானிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றார் லெனின்.

டிட்ராஸ்கி, ரஷ்ய பாட்டாளி வர்க்கம் மற்றும் பிற உழைக்கும் வர்க்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. ஐரோப்பாவின் பிற நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் உதவியில்லாமல், ஆதரவில்லாமல் ரஷ்யாவில் புரட்சி சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கையை கொண்டிருந்தார். அதற்கேற்பத்தான் மார்க்ஸிய விரோத “நிரந்தரப் புரட்சி” என்ற தனது கோட்பாட்டை முன்மொழிந்தார். ஆனால் ரஷ்ய உழைக்கும் வர்க்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த லெனின், ரஷ்ய தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும், படையாட்களுக்கும் உள்ள அணி சேர்க்கையின் மூலமாக புரட்சியை வெல்லமுடியும் என்பதை நடைமுறையில் சாதித்துக்காட்டினார்.

இவையெல்லாம், நமக்கு விலைமதிப்பற்ற படிப்பினைகளை வழங்குவதாய் உள்ளது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்பது தங்களது சொந்த சித்தாந்த பலத்திலும், புரட்சியாளர்களின்‌ உள்ளாற்றலை அடிப்படையாகக் கொண்டும் நிற்கவேண்டும். பிற கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கை நம்பி இருக்கக்கூடாது. மேலும், நம்பிக்கையற்றவர்கள், ஊசலாட்டக்காரர்களின் செல்வாக்கிற்கு இரையாகக்கூடாது. ஆனால் இந்திய கம்யூனிஸத்தின் வரலாறு நெடுக ஊசலாட்டக்காரர்கள் மற்றும் சந்தர்ப்பவாதிகளின் கை ஓங்கியே இருந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் பங்கேற்பு என்பது மார்க்ஸிய-லெனினிய சித்தாந்தத்தின் பிரயோகமாக இல்லாமல் சந்தர்ப்பவாதமாகவே இருந்திருக்கிறது. ஆளும் வர்க்க கட்சிகளிடம் தங்களது கட்சியையும் சித்தாந்தத்தையும் அடகு வைத்திருக்கின்றனர். எல்லாம் சில சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீட்டுக்காகத்தான். தொழிற்சங்க என்பது வர்க்க ரீதியாக தொழிலாளர்களை திரட்டுவது என்பதை கைவிட்டு, வெறுமனே பொருளாதார கோரிக்கைகளை சாதித்துக் கொள்வது என்ற நிலையில் இருக்கிறது.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 5


கட்சியின் நிறுவன அமைப்புகளை கட்டுவது, அவற்றின் கொள்கைகளை வகுப்பது, மக்கள் போராட்டங்களில் தலையிடுவது, தேர்தலில் பங்கேற்பது என அனைத்து முனைகளிலும் வரலாறு நெடுக இந்திய கம்யூனிஸத்தின் சந்தர்பவதாம் நடந்தேறியிருக்கிறது.

இன்றைய தினத்திலும் கூட இந்த நம்பிக்கையற்ற ஊசலாட்டக்காரர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் மக்களின் உள்ளாற்றலில் நம்பிக்கை இல்லாதவர்கள். நாட்டையே நாசமாக்கி வரும் ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பலின் பாசிசத்தை தேர்தல் மூலமாக மட்டுமே வீழ்த்தமுடியும் என்றும் அப்போதுதான் மூச்சுவிட அவகாசம் கிடைக்குமென்றும் சொல்லி வருகிறார்கள். இவர்களைத்தான் லெனின் சாடுகிறார். இதற்கு மாறாக கம்யூனிஸ்ட் கட்சி என்பது தனது சொந்த சித்தாந்த பலத்தைக்கொண்டு, நிறுவன ஒழுங்கமைப்பைக் கொண்டு, மக்கள் அடித்தளத்தை கொண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று ரஷ்யப் புரட்சியின் வாயிலாக நமக்கு போல்ஷிவிக்குகள் கற்றுத்தந்திருக்கிறார்கள்.

(முற்றும்..)


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 5

அரசதிகாரம் மேற்கொள்ளல்:

ரு அரசு என்பது வெறும் ஆணைகளை வெளியிடும் அதிகாரத்தை மட்டுமல்ல, அதை நடைமுறையில் நிறைவேற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கவேண்டும். போல்ஷிவிக் ஆட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில், பழைய இடைக்கால அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்த, புரட்சியை வெறுத்த அரசு அலுவலக பணியாளர்கள் பல சிக்கல்களை உண்டாக்கினார்கள்.

இப்படிப்பட்ட குழுக்கப்பங்களுக்கு மத்தியிலும், எதிர்புரட்சியின் சதிச்செயல்களுக்கும் மத்தியிலும் சோவியத்து அரசாங்கம் வேலை செய்யவேண்டிய நிலை இருந்தது. மக்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் (உணவு, மருந்து வழங்கல்), அரசியல் மாற்றங்கள் (மக்கள் நீதிமன்றங்கள்) பற்றியும், சமூக மாற்றங்கள் (நிலத்தை பரிமுதல் செய்து மக்களுக்கு ஒப்படைப்பது, தொழிற்சாலைகள் மீது தொழிலாளர்கள் கண்காணிப்பை நிறுவுவது) போன்ற செயல்களுக்கான அரசாணைகளையும் நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்புகளையும் செய்து வந்தது.

ஆட்சியதிகாரப் பிரச்சினைகள் முடிந்ததும், நடைமுறை நிர்வாகப் பிரச்சினை காத்திருந்தது. எதிரிகளிடமிருந்து படைகலன்கள் பறிக்கப்பட்டுவிட்டாலும் கூட நாட்டின் பொருளாதார வாழ்வில் அவர்கள் தீர்மானகரமான பிடியை வைத்திருந்தார்கள். அவர்களால் இயன்ற அளவில் சீர்குலைவு வேலைகளைச் செய்தார்கள். அரசாங்க நிறுவனங்களை போல்ஷிவிக்குகள் கையில் எடுத்துக்கொண்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முற்படும் ஒவ்வொரு முறையும் அரசாங்க ஊழியர்களின் ஒழுங்கமைப்பட்ட வேலை நிறுத்தத்தால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதனால் மக்களுக்காக அடிப்படை தேவைகள் கிடைப்பதிலும், புரட்சியின் மையமான‌ கடமைகளை நிறைவேற்றுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டன.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 3


மக்களுக்கான பொது நலத்துறை, விவசாய அமைச்சகம், உணவு வழங்கல் துறை, நிதி அமைச்சகம் போன்றவற்றில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதும், நிதிப் பெட்டியின் சாவியை ஒப்படைக்காமல் இருப்பதும் தொடர்ந்தது. அவர்களிடமிருந்து சாவியை கைப்பற்றி பெட்டியை திறந்தால் முன்னாள் அமைச்சர்கள் ஏற்கனவே நிதிகளை எடுத்துச் சென்றுவிட்டிருந்தனர். தனியார் வங்கிகள் ஊக வணிகர்களுக்காக மட்டுமே செயல்பட்டது.

மது விற்பனை ரகசியமாக நடத்தப்பட்டு சீர்குலைவுவேலைகள் செய்யப்பட்டது.

சேனைகளுக்கும், மக்களுக்கும் கிடைக்கவேண்டிய பொருட்கள் பதுக்கப்பட்டிருந்தது. இதனை தடுக்கும் படியும் பறிமுதல் செய்யும் படியும் வந்த வேண்டுகோளை ஏற்று பெருந்திரளான தொழிலாளர்களும் படையாட்களும் செயலில் இறங்கினர். ரஷ்யா எங்கும் தேடி பதுக்கல்களை பறிமுதல் செய்து விநியோகம் செய்தனர். மதுக்கிடங்குகள் சூறையாடப்பட்டு மது விற்பனை ஒழிக்கப்பட்டது.

விஷப் பிரச்சாரங்கள் செய்யும் முதலாளித்துவ பத்திரிகைகள் மீதான தடையை அகற்றச் சொல்லி போல்ஷிவிக்கு கட்சியில் உள்ள சிலரே கூச்சலிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு கட்சியின் தலைமை சரியான பதிலடி கொடுத்தது. ”முதலாளித்துவ பத்திரிகைகளை முடூவது எழுச்சியின் போது நடந்த முற்றிலும் இராணுவ ரீதியான காரணங்களால் மட்டுமல்ல. இந்த புதிய ஆட்சிமுறை பத்திரிகைகள் பற்றி கொண்டுள்ள அணுகுமுறைக்கும் இதில் பங்கிருக்கிறது. முதலாளித்துவ பத்திரிகை சுதந்திரம் பற்றிய பிரச்சினையில் கம்யூனிஸ்டுகளுக்கு தொழில் நடத்துவதற்கு உரிய சுதந்திரம் பற்றிய அதே பார்வைதான் இருக்கமுடியும். எப்படி தொழிற்துறையிலும், நிதித்துறையிலும் தனியார் சொத்துகள் ஒழிக்கப்படுகிறதோ அதேபோல் பத்திரிகைத்துறையிலும் தனியார் சொத்துகளின் ஆதிக்கம் ஒழிக்கப்படவேண்டும். ஜாரின் ஒடுக்குமுறை ஆட்சியை வீழ்த்தியபோது முடியரசுவாத பத்திரிகைகள் மூடப்பட்டது போலவே முதலாளித்துவம் வீழ்த்தப்பட்ட போது முதலாளித்துவ பத்திரிகைகள் மூடப்படும்” என்று போல்ஷிவிக் அரசாங்கம் அதன் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்தது.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 4


காமனெவ், ரீக்கவ், ஸினோவியெவ் போன்ற ஓடுகாலிகள் மத்திய கமிட்டியில் இருந்து விலகி ஓடினார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், “ சோவியத்துகளில் உள்ள எல்லாக்கட்சிகளுடனும் சேர்ந்த ஒரு அரசாங்கம் அமைக்கவேண்டும். அப்போதுதான் போரை தவிர்க்க முடியும், பஞ்சம் வராமல் இருக்கும்” என்பது தான். ஆனால் லெனின் இதுபற்றி தெளிவாகவே குறிப்பிடுகிறார். “அரசாங்கத்தில் இடதுசாரி சோஷலிஸ்டு புரட்சியாளர்களை சேர்த்துக்கொள்ள எந்த நேரமும் தயாராக இருக்கிறோம். ஆனால், சோவியத்துகளின் இரண்டாவது அனைத்து ரஷ்ய காங்கிரஸ் போல்ஷிவிக்குகளுக்குதான் பெரும்பான்மை அளித்து ஆட்சியதிகாரத்தை கொடுத்திருக்கிறது. அதனால், அரசாங்கத்தை அமைக்கும் உரிமை போல்ஷிவிக்குகளுக்குதான் உண்டு”. போல்ஷிவிக்குகள் அரசாங்கத்தில் பெரும்பான்மை வகிக்க வேண்டும் என்பது பதவி ஆசையால் அல்ல. மாறாக, அனைத்து ரஷ்ய சோவியத்துகளின் காங்கிரஸ் அவர்களது கொள்கைகளை அங்கீகரித்து அவர்களுக்கு அதில் பெரும்பான்மை வழங்கியிருந்தது என்பதுதான் காரணம். இந்த கொள்கையை, அதன் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத மற்ற கட்சிகளிடம் ஆட்சியை பகிர்ந்து கொள்ளது சோவியத்துகளுக்கு செய்யும் துரோகமாகும்.

இப்படி பிற சிக்கல்களையும் போல்ஷிவிக் கட்சிக்குள்ளேயே இருந்த ஊசலாட்டத்தையும் சித்தாந்த ரீதியாக எதிர்கொண்டு புரட்சியை வழிநடத்திச் சென்றனர் லெனின் தலைமையிலான போல்ஷிவிக் கட்சியினர்.

(தொடரும்..)


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கடமை தவறிய போலீசுத்துறை – உயர் நீதிமன்றம் அதிருப்தி | உதயநிதி சனாதன விவகாரம் | தோழர் மருது

கடமை தவறிய போலீசுத்துறை – உயர் நீதிமன்றம் அதிருப்தி | உதயநிதி சனாதன விவகாரம் | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 4

புரட்சியை தக்கவைத்தல் :

புரட்சியை வெற்றி பெறச் செய்வதைவிட அதை தக்கவைப்பது மிகக் கடினமான ஒன்று என்பதை வரலாறு மீண்டும் நிரூபித்தது. புரட்சி வெற்றி பெற்றாலும், அதை தக்கவைத்துக் கொள்வதும், ஆட்சியதிகாரத்தை நடத்துவதும் போல்ஷிவிக்குகளுக்கு சவாலாக இருந்தது. ஏனெனில், நகராட்சி அலுவலர்கள் போன்ற அரசு இயந்திரத்தின் பணியாளர்கள், போல்ஷிவிக்கு அரசாங்கத்தின் மக்கள் கமிசார்களின் ஆணையை செயல்படுத்த மறுத்தார்கள். இந்த பணியாளர்கள் போல்ஷிவிக்கு அரசாங்கத்தின் செயல் மையமாக இருக்கும் ஸ்மோல்னிக்கு தபால், தந்தி போன்ற தகவல் தொடர்புகள் கிடைக்காமல் செய்தார்கள்.

(ஸ்மோல்னி என்பது 18 ஆம் நூற்றாண்டில் பெத்ரொகிராத் நகரில் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தின் பெயர். இது முதலில் உயர்குல மங்கையர்கள் கல்வி பயிலும் இடமாக இருந்தது. இந்த கட்டிடம் நவம்பர் புரட்சியின் போதும் அதைத் தொடர்ந்த நாட்களிலும் போல்ஷிவிக்குகளின் கூட்டங்கள் கூடுவதற்கும், நிர்வாக செயல்களுக்கும் மையமாக இருந்தது.)

ரயில்வே அமைப்பு அரசாங்கத்தின் ஆணைக்கு பணிந்து நடக்க மறுத்தது.

அரசு வங்கி ஊழியர்கள் போல்ஷிவிக் அரசாங்கத்தின் கமிசார்களுக்கு கீழ் வேலை செய்ய மறுத்தார்கள். தனியார் வங்கிகள் மூடப்பட்டன. தொலைப்பேசி இணைப்பகத்தின் பணியாளர்கள் தொலைப்பேசி இணைப்பை வழங்க மறுத்தார்கள். அயல்துறை அமைச்சக பணியாளர்கள் “போர் நிறுத்தத்திற்கான” சமாதான அரசாணையை பிற மொழிகளில் மொழி பெயர்க்க மறுத்தார்கள். உணவுப்பொருள் வழங்கீட்டுத் துறையின் பணியாளர்கள் வேலை செய்ய மறுத்தார்கள். அரசு வங்கி இடைக்கால அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு மட்டும் பணத்தை கொடுத்தது. பிற்போக்குவாதிகள் அரசு வங்கியை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வந்தார்கள்.

எதிர்புரட்சி சக்தியான கேரென்ஸ்கி பெத்ரொகிராத் நகரை நோக்கி படையை திரட்டி வந்துகொண்டிருக்கிறார்.

(இந்த கேரென்ஸ்கி என்பவர் இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய தலைவராக இருந்தார். சோவியத்துகளை களைத்து முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சியை நிறுவுவதற்காக முழுமூச்சுடன் செயல்பட்டார்.)

ஆக மொத்தத்தில் புரட்சிக்கு பகையாய் இருந்தது நிறுவன ஒழுங்கமைப்பு பெற்ற முதலாளித்துவம் மட்டுமல்ல, கிட்டத்தட்ட ஏனைய எல்லா சந்தர்ப்பவாத சோஷலிஸ்டு கட்சிகளும் புரட்சிக்கு பகையாய் இருந்தன.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி புரட்சியின் வெற்றிக்காக இரவு பகலாக தூக்கம் துறந்து போல்ஷிவிக் கட்சியினர் உழைத்தார்கள்.

போல்ஷிவிக்குகளிலும் ஊசலாட்டக்காரர்கள் இருந்தார்கள். இவர்கள் நிலைமை தீவிரமாகும் போதெல்லாம், நெஞ்சுரத்தோடு போராடுவதற்கு பதிலாக, “விட்டுக்கொடுக்க” நினைத்தார்கள். மற்ற கட்சியினர் கொடுக்கும் நெருக்கடிகளை கண்டு, தனிமைப்பட்டுவிடுவோம் என்று நினைத்து போல்ஷிக்குகளில் கணிசமானவர்கள் கூட சமரசவாதிகளின் வாதங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் கூட்டரசாங்கம் அமைக்கலாம் என்ற அளவுக்கு விட்டுக்கொடுக்க முன்வாந்தார்கள். ஆனால் லெனின் சிறிதும் அசைந்துகொடுக்கவில்லை. லெனின் சொன்னார், “சமரசவாதிகள் நமது வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளட்டும். அவர்கள் அரசாங்கத்தில் இடம் பெறுவார்கள். நாம் ஓர் அக்குலங்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். நாம் துணியும் அளவிற்கு துணிய நெஞ்சழுத்தமும் திடச் சித்தமும் இல்லாத தோழர்கள் இங்கு இருப்பார்களாயின் ஏனைய கோழைகளோடும் இணக்கவாதிகளோடும் சேர்ந்து அவர்களும் போய்ச் சேரட்டும்! தொழிலாளர்கள், படையாட்களது ஆதரவோடு நாம் தொடர்ந்து முன்செல்வோம்.”


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 2


பழைய இடைக்கால அரசாங்கம், அதாவது போல்ஷிவிக்கு நவம்பர் புரட்சியால் கீழிறக்கப்பட்ட அதிகாரத்துவ கோஷ்டி, சோவியத்து காங்கிரஸில் இருந்து வெளியேறிய மென்ஷ்விக்கு கட்சி, சோஷலிஸ்டு புரட்சியாளர் கட்சி, நரோத்னிய சோஷலிஸ்டு கட்சி போன்ற அமைப்புகள் சேர்ந்து எதிர்ப்புரட்சி அணியை ”இரட்சணிய கமிட்டி” என்ற பெயரில் அமைத்துக்கொண்டனர். ஆனால் இவர்களது கூட்ட அரங்குகளில் ஒரு பாட்டாளியைக்கூட காணமுடியவில்லை என்ற உண்மையில் இருந்து இவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களது நோக்கம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இப்படி பல சந்தர்பவாதிகளும், எதிர்ப்புரட்சி சக்திகளும் கூட்டிணைந்து நிறுவனமயமான செயல் மூலமாக புரட்சியை நசுக்க முயன்று கொண்டிருந்த நாட்களில், தொழிலாளர் வர்க்க சோஷலிசமா அல்லது முதலாளித்துவ எதிர்ப்புரட்சியா என்ற நிலையில் வர்க்கப் போராட்டம் அதன் உச்சத்தில் இருந்தபோது, சிலர் தொழிலாளர் படையாட்களின் சோவியத்துகளை “நடுநிலை வகிக்கும்படி” வேண்டிக் கொண்டார்கள். இதனை போல்ஷிவிக்கு தோழர்கள் தங்களது கடுமையான சித்தாந்த ரீதியான எதிர்ப்பின் மூலம் முறியடித்தார்கள்.

“நடுநிலை வகிக்கும்படி உங்களிடம் சொல்கிறார்கள். யூன்கெர்களும், சாவுப் பட்டாளங்களும் (இவை எதிர்ப்புரட்சி இடைக்கால அரசாங்கத்திற்காக சண்டையிட்டது) ஒருபோதும் நடுநிலை வகிப்பதில்லை. இவர்கள் வீதியிலே நம்மை சுட்டு வீழ்த்துகிறார்கள். இவர்கள் கேரென்ஸ்கியை அல்லது இந்த கும்பலைச் சேர்ந்த சேர்ந்தவர்களை பெத்ரொகிராதுக்கு திருப்பிக் கொண்டுவர எத்தனிக்கிறார்கள். இப்போது உள்நாட்டு யுத்தத்தை தடுத்து நிறுத்தும்படி உங்களுக்கு அறைகூவும் இந்த மென்ஷிவிக்குகளும் சோஷலிஸ்டு புரட்சியாளர்களும் உள்நாட்டு யுத்தத்தின் மூலமல்லாது வேறு எந்த வழியில் ஆட்சியதிகாரத்திற்கு வந்தார்கள்?” என்றார் தோழர்.குரிலேன்கோ.

இப்படி “சரணடைவது” என்ற சித்தாந்த பிரச்சாரமும், போல்ஷிவிக்குகளுக்கு விரோதமான பிரச்சாரங்களும், வதந்திகளும் முழு மூச்சில் பரப்பப்பட்டு வந்தது. இதையும் தாண்டிதான் அவர்கள் புரட்சிகர பணியை ஆற்றினார்கள். இவற்றையெல்லாம் தோழர்.குரிலேன்கோ போன்ற அர்ப்பணிப்பு மிக்க கட்சித் தோழர்கள், உணர்வுப்பூர்வமான முறையில் வர்க்க அரசியலையும் புரட்சியின் யதார்த்த நிலையையும் எளிய பாட்டாளிகளுக்கு படையாட்களுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களை போல்ஷிவிக்குகள் புரட்சியின் பக்கம் வென்றெடுத்தார்கள். இதுபோல், பல தோழர்கள், தூக்கமில்லாமல், படைப்பிரிவுகளின் விவகாரங்களை உன்னிப்பாய் கவனித்து வருவதையும், ஒவ்வொரு ஆலைகளுக்கும், படைப்பிரிவுகளுக்கும் விரைந்து ஓடி வாதாடுவதையும், அபாயங்களைச் சுட்டிக்காட்டுவதையும், உடன்பாடு காண்பதையும் கடுமையான இடர்பாடுகளுக்கு மத்தியிலும் செய்தார்கள்.

கேரென்ஸ்கி போன்ற எதிர்ப்புரட்சி கும்பலால் பாட்டாளி வர்க்க அரசின் மையமாக விளங்கும் பெத்ரொகிராதுக்கு ஆபத்து என்றதும், அந்த நகரத்தின் அனைத்து தரப்பு எளிய மக்களும் அவர்களது புரட்சிகர அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து தன்னியல்பான முறையில் திரண்டெழுந்தார்கள். கிடைக்கக்கூடிய எல்லா ஆயுதங்களையும் அவை சிறு முட்கம்பிகளாக இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு, இந்த புரட்சியை பாதுகாக்க புறப்பட்டார்கள்.

”இந்த ரஷ்யர்களை என்னவென்பது! மிகவும் அலாதியானவர்கள்! எப்படிப்பட்ட உள்நாட்டுப் போர் இது, பாருங்களேன்! போர் புரிவதைத் தவிர மற்றவை யாவற்றையும் செய்து கொண்டியிருக்கிறார்கள்.” – பிரெஞ்சுப் படையதிகாரி ஒருவர் ஆச்சரியமாக சொன்னார்.

நேசநாட்டு தூதரகங்களது அதிகாரப்பூர்வமான நிலை எப்படிப்பட்டதாக இருந்திருப்பினும், தனிப்பட்ட பிரெஞ்சு, பிரிட்டிஷ் படையதிகாரிகள் இந்த நாட்களின் போது முன்னின்று செயப்பட்வே செய்தார்கள். எதிர்புரட்சி இரட்சணிய கமிட்டியின் செயற்குழு அமர்வுகளில் வல்லுநர்களாய் ஆலோசனை அளித்திடும் அளவுக்குங்கூட சென்றனர்.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 3


ரயில்வேத் தொழிலாளர்களது தொழிற்சங்கத்தின் அனைத்து ரஷ்ய செயற்கமிட்டியான “விக்ழேல்” நவம்பர் புரட்சிக்கு பிற்பாடு சோவியத்து எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான பிரதான மையமாக இருந்தது. “விக்ழேல்”ல் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் ரயில்வே தொழிலாளர்கள் அனைவரின் சித்தத்தை பிரதிபலிக்கவில்லை. ரயில்வே தொழிலாளர்கள் வெவ்வேறு இடங்களில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடத்தி தமது தலைவர்களது புரட்சிக்கு ஆதரவளிக்காமல் இருக்கும் போக்கை கண்டித்தார்கள்.

புரட்சியின் உக்கிரம் அதிகமாக கூட்டுறவு நிறுவனங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள் செயற்கமிட்டி போன்ற அனைத்து ஜனநாயக நிறுவனங்களும் ஒவ்வொன்றாக பிளவுபட்டுக் கொண்டிருந்தது. இதுபோன்ற அத்தனை அமைப்புகளும், புரட்சிக்கு ஆதரவாக என்றும், பழைய அமைப்புக்கு ஆதரவாக என்றும் தீர்மானகரமான பிளவுகளை சந்தித்தது.

போல்ஷிவிக்குகளிடம் அறிவுத்துறையினர் யாரும் இல்லை. ரஷ்யா ஒரு நகரத்தைப் போன்றதல்ல. அது மிகப்பெரிய நாடு. அவர்களால் ஒரு சில நாட்களுக்கு மேல் நீடிக்கமுடியாது என்று சிலர் ஏளனம் செய்தனர். ஆனால் போல்ஷிவிக் கட்சி தொழிலாளர்கள், படையாட்கள் போன்ற அடித்தட்டு மக்களிடம் வெகுவான அடித்தளத்தை கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு படையதிகாரிகள் இல்லாமல், கட்டுப்பாடில்லாத ஒழுங்கமைப்பற்ற இந்த படையாட்கள் திரள், தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட தலைமையின் கீழ் செயல்படும் சேனையாக உருமாறி வேலைகளை செய்ய வைக்கும் அளவிற்கு போல்ஷிவிக் கட்சியின் வலைப்பின்னல் இருந்தது.

மிதவாத அறிவுத்துறையினர் பெருமளவில் நடுநிலை வகித்தபோதும், குட்டி முதலாளித்துவ பணியாளர்கள் புரட்சிக்கு எதிரான இருந்தபோதும், போல்ஷிவிக் கட்சிக்கு உண்டான பரந்த மக்கள் அடித்தளமும், நிறுவன ஒழுங்கமைப்பும் இந்த குறைபாடுகளை கடந்த புரட்சியை சாதிக்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் உறுதுணையாக இருந்தது.

(தொடரும்..)


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வேண்டும் அமைதி | கவிதை

ழுபது மணிநேர உழைப்புக்குப்பின்
காலையோ மாலையோ என்றறியாமல்
கண்ணயர்ந்தேன் எதோ ஒரு ஞாயிற்றில்!

உலகம் கணினியின் கட்டுப்பாட்டில் இயங்க
அணுகுண்டுகளின் அலையோசை
பற்றிப் படர்ந்து அனைத்து அணுக்களிலும் கேட்டது!

அந்தக் காட்சியை அகோரம் என்பதா?
கோரம் என்பதா?

முலையிழந்த தாயின் மார்பில்
பாலைத் தேடுகிறது பச்சிளம் குழந்தை!

முதுகெலும்பில் கணக்குப் படித்தவர்கள்
இடுப்பெலும்பையும் சேர்த்து கணக்குப் படிக்கிறார்கள்
எழுபது மணிநேர பணி நியமனத்தில்!

உழைத்தே அருகிப்போன பாட்டாளிகளின்
எழும்புகளில் விறகடுக்கிச் சமைக்கிறது
பிணந்திண்ணிக் கழுகுகள்!

ஆற்றுநீர் உபரியாகச் சென்று கலந்த கடலில்
உதிரம் கலக்கிறது இரத்தப் பெருக்கெடுப்பால்!

உதிர்ந்த தாய்ப்பறவையின் இறகுகளில்
கதகதப்பைத் தேடுகிறது கண்சிமிட்டாக் குஞ்சுகள்!

இளஞ்சூட்டின் கதகதப்பில்
அடுப்படியில் இருந்த பூனைகள்
அப்படியே சாம்பலாயிருக்கிறது
அடுத்த நாள் விடியல் அவர்களுக்கானதில்லை என்று தெரியாமல்!

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பெரும் பேதமிராது
இருவரும் வேட்டையாடத் துவங்கியிருந்தனர்!

இரத்தமும் சதையுமான உடல்களை
சேமித்தனர் ஆராய்ச்சியாளர்கள்.
இனி தலைமுறையே வாராத
சமூகத்திற்குக் காட்சிப்படுத்த!

கலையிழந்த காட்சியே
இரவும் பகலும் இருக்கிறது
நாம் இயற்கையை செயற்கையாக்கியதால்!

உயிர்கொல்ல சதித்திட்டம் தீட்டத் தேவையில்லை
ஊதித் தள்ளினாலே உயிர் போய் விடுகிறது!

அரசியல் தலைவர்கள் அன்பர்களாகியிருந்தனர்
எஞ்சியிருக்கும் அற்ப மனிதர்களை
அவர்கள் ஆண்டால் என்ன? ஆளாவிட்டால் என்ன?

சந்திரனுக்கும் சூரியனுக்கும்
இடைவெளி தெரியாது
இந்த இருட்டடிக்கப்பட்ட
மனிதர்களின் வாழ்வினுக்கிடையில்!

அப்பாவிற்காக காத்திருந்த குழந்தைகள்
அனாதையாயிருந்தது
அப்பாவின் வருகை கானல் நீரானதால்!

இலவசங்கள் இனிக்காது அரசிடத்தில்
ஏனெனில் இலவசமாகவே
உயிரையும் பறித்துக் கொண்டிருப்பதால்!

சுயநலம் விடுவிக்கப்பட்டிருந்தது
சுற்றியிருப்பவர்களிடம்
அவர்களின் இரத்தமும் சதையும்
காய்ந்து தோய்ந்ததனால்!

பறவைகள் விடியலை நினைவூட்டாது
உயிரிழப்புகளின் அவலக்குரல்
நினைவூட்டுகிறது விடியலை
பாலஸ்தீனம் இஸ்ரேல் காசா என்று!

சோம்பேறிகளே புத்திசாலிகளாவர்!
சுறுசுறுப்பானவர்கள்
எஞ்சியிருக்கும் கொஞ்சத்தையும் அழிக்க
அளவுகோல் ஊன்றும் அற்பமானவராவர்!

விதைகளே முளைக்காத மண்ணுக்கு
மனிதனே உரமாவான்!

பிறப்புகள் பெரும்பாலும் அதிசயமாகும்
சாதிப் பூசல்கள் சருகாகும்!

எல்லைப் பிரச்சனை இராது
எங்கும் மனிதனு(மு)ம்
இல்லை என்பதனால்!

இத்தனைக்கும் பின்பு
விதிவிலக்காய்
கனவிலாவது
அமைதி வேண்டும்!


மா. தமிழ்ச் செல்வன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 3

புரட்சியின் தருணங்கள்:

நாளுக்கு நாள் இடைக்கால அரசாங்கம் அதன் பிற்போக்குதனமான கொள்கையால் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியது. உணவுப்பொருட்கள் பதுக்கல்காரர்களால் பதுக்கி வைக்கப்பட்டு கொள்ளை லாபத்திற்கு விற்கப்பட்டது. மற்றொருபுறம், மக்கள் உணவிற்காக நீண்ட வரிசையில் தெருக்களில் காத்திருக்கவேண்டிய நிலையிருந்தது. மக்கள் எதைப் பொறுத்துக்கொண்டாலும், நியாயமற்று இந்த யுத்தத்தில் (முதலாம் உலகப் போரில்)  இழுத்துவிடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. படையாட்களிடம் மட்டுமல்ல பொது மக்களிடையிலும் யுத்தத்திற்கு எதிரான மனப்பான்மை தான் இருந்தது. அதனால் தான், “சமாதானம் வேண்டும், நிலம் வேண்டும், ரொட்டி வேண்டும்” என்ற‌ முழக்கம் புரட்சியை ஆக்கிரமித்திருந்தது.

யுத்தத்தை நிறுத்தும்படி சமாதான தூதுக்கான வரையறைகளைக் கொண்ட “நக்காஸ்” என்ற ஆவணத்தை சோவியத்துகள் நேசநாட்டு மாநாட்டிற்கு அனுப்பிவைத்தனர். நேச நாடுகள் என்பது முதலாம் உலகப் போரில் ஜெர்மனியை எதிர்த்து ரஷ்யாவுடன் கூட்டணியில் இருந்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை குறிக்கும். அதை நிராகரித்து, “யுத்தத்தின் நோக்கங்கள் குறித்து விவாதிக்கப்போவதில்லை, யுத்தத்தை நடத்துவதற்கான வழிமுறைகள் பற்றி மட்டுமே விவாதிப்போம்” என்று திமிர்தனமாக பதில் அளித்தது நேச நாடுகளின் மாநாடு. ஏகாதிபத்திய நாடுபிடிக்கும் வெறிக்காக, நேச நாடுகளின் போர் இயந்திரத்தில் ரஷ்யா பிணைக்கப்பட்டிருந்தது.

மசிடோனியப் போர்முனையைச் சேர்ந்த ரஷ்ய துருப்புகளிடமிருந்து  வந்திருந்த சோவியத்து பிரதிநிதி ஒருவர் கூறுகையில்,  “அங்கே நாங்கள் அவ்வளவாய் பகைவர்களினால் அல்ல, நமது நேச நாடுகளது நட்பினால்தான் அதிகமாய் துன்புறுகிறோம்” என்றார். இந்த கூற்று பிரிட்டன் பிரான்ஸ் ஆகிய ஏகாதிபத்திய நாடுகளின் பிடியில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை கொள்கை இருப்பதை தெளிவாக உணர்ந்துகிறது. ஆனால், இதனால் பட்டினி கிடக்கப்போவதும், செத்து மடியப்போவதும் அப்பாவி ரஷ்ய மக்கள்தான்.

நாம் போர் புரிவது எதற்காக? என்பதுதான் ஒவ்வொரு படையாளின் உள்ளக்குமுறலாக இருந்தது. இந்தப் போர்  புரட்சியின் பாதுகாப்பிற்காக என்றால், எந்த விதமான பலவந்தமும்  இல்லாமல்  படையாட்கள் தானே போய் போர் புரிவார்கள். ஆனால், இந்தப் போர் ஜனநாயகத்திற்காக அல்ல, முதலாளித்துவ கொள்ளைக்காகவே   நடத்தப்படுகிறது என்பதை பெரும்பாலான படையாட்கள் புரிந்து வைத்திருந்தனர்.

புரட்சியின் போது தமக்கு கிடைக்கப்போவதாய்  வாக்களிக்கப்பட்ட நிலத்துக்காக காத்திருந்து சலிப்படைந்த விவசாயிகள் கலகம் புரியத் தொடங்கினர். அவர்கள் நிலப்பிரபுக்களின் பண்ணைகளை கைப்பற்றினார்கள்; அவர்களது பண்ணை வீடுகளுக்கு தீ வைத்தார்கள். கிராமப்புறங்களில் எழுச்சி இவ்விதமாய் நடந்திருந்தாலும், ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் போக்கு பெத்ரொகிராத் நகரத்தையே பொருத்திருந்தது.

விவசாயிகளுக்கும் நிலப்பிரபுகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஆலையதிபர்களுக்கும், படையாட்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான போராட்டம் முன்னெப்போதையும்விட கடுமையானதாக, இணக்கம் காண முடியாததாக மாறிவிட்டது. மக்கள் பெருந்திரளினரது ஒருமித்த செயலால்தான், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தால்தான் புரட்சியை நிறைவேற்ற முடியும் என்பதை வெகுமக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தது போல்ஷிவிக் கட்சி.

இதையே வேறு வார்த்தைகளில், “ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் நிலவும் யதார்த்த அரசியல் சூழலானது மிகவும் தீர்மானகரமான, செயல் முனைப்பான கொள்கையை வலியுறுத்துகிறது. அந்த கொள்கை ஆயுதம் தாங்கிய எழுச்சியே அன்றி வேறு எதுவாகவும் இருக்கமுடியாது” என்றார் லெனின்.

இந்தப் புறநிலைமையை சரியாக மதிப்பீடு செய்து, போல்ஷிவிக்கு கட்சி ஆயுதமேந்திய எழுச்சிக்கு ஏற்பாடு செய்யும் படியான தீர்மானத்தை அக்டோபர் 23 கட்சிக் கூட்டத்தில் ஏற்றது. ஸினோவியெ, காமெனவ் போன்ற சந்தர்ப்பவாதிகள் மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தார்கள். மீண்டும் அக்டோபர் 29 ஆம் அன்று போல்ஷிவிக்கு கட்சியின் பெத்ரொகிராத் நகரின் கட்சிக் கமிட்டி, இராணுவ கமிட்டி, பெத்ரொகிராத் சோவியத்து, ஆலைக் கமிட்டிகள் போன்றோரின் விரிவாக்கப்பட்ட கூட்டத்திலும் இந்த தீர்மானம் லெனினால் படித்துக்காட்டப்பட்டு ஏற்கப்பட்டது. காமனெவ், ஸினோவியெவ் பெத்ரொகிராதில் எழுச்சி குறித்த அக்டோபர் 23 மத்திய கமிட்டியின் கூட்டத்தில் எழுச்சியை எதிர்த்து வாக்களித்தார்கள். மேலும், மத்திய கமிட்டியால் தீர்மானம் நிரைவேற்றப்பட்ட பிறகும் தமது கருத்துக்களை கட்சிக்குள் பிரச்சாரம் செய்தனர். இது கட்சி அமைப்புமுறையை மீறிய செயலாகும்.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 1


புறநிலை பற்றிய சரியான மதிப்பீட்டையும், செயலுக்கான சரியான வேலைத்திட்டத்தையும் வகுப்பதில் மட்டுமல்ல, புரட்சியை தொடங்குவதற்காக நேரத்தை கணக்கிடுவதில் கூட போல்ஷிவிக் கட்சி மற்றும் லெனினின் மேதைமையைப் பார்க்கிறோம்.

“நவம்பர் 6-ஆம் நாள் மட்டுமீறி காலத்துக்கு முன்னதான நாளாகும். எழுச்சிக்கு நமக்கு அனைத்து ரஷ்ய அடிப்படை இருப்பது அவசியமாகும். நவம்பர் 6-இல் காங்கிரஸின் எல்லாப் பிரதிநிதிகளும் வந்து சேர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால், மறுபுறத்தில் நவம்பர் 8-ஆம் நாள் மட்டுமீறி காலங்கடந்தாகிவிடும். அதற்குள் காங்கிரஸ் ஒழுங்கமைப்பு பெற்றுக்கொண்டுவிடும். ஒழுங்கமைப்பு பெற்ற ஒரு பெரும் கூட்டத்தார் சீக்கிரமாகவும், தீர்மானகரமாகவும் செயல்படுவது கடினம். காங்கிரஸ் ஆரம்பமாகும் நவம்பர் 7-ஆம் நாளன்றே நாம் செயலை மேற்கொண்டுவிட வேண்டும். அப்போதுதான் நாம், “இதோ இருக்கிறது ஆட்சியதிகாரம்! என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று அதனிடம் சொல்லலாம்” என்றார் லெனின்.

பரந்து விரிந்த ரஷ்ய நாட்டின் வர்க்கப் பிரிவுகள், அவற்றின் பாலபலன்கள், சமூக நிலைமைகள், பிற சமூக இயக்கங்கள், அவற்றின் மக்கள் திரள் அடிப்படை மற்றும் செயல்திறன், அவற்றின் வர்க்க சார்பு, ரஷ்யாவின் அரசதிகார அமைப்பின் தன்மை என இவையனைத்தின் மீதும் துல்லியமான மதிப்பீடுகளும் கருத்துக்களும் கொண்ட ஒரு கட்சியால் தான் இத்தனை தெளிவான ஒரு செயல்திட்டத்தை வகுத்து செயல்படுத்த முடியும். மார்க்ஸிய சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட போல்ஷிவிக் கட்சியால் மட்டுமே இதை சாதிக்க முடிந்தது.

புரட்சி என்பது எதிர்கருத்து கொண்டிருப்பவர்களை எல்லாம் சுட்டு வீழ்த்துவது என்ற பொய்யை முதலாளித்துவாதிகள் நீண்ட காலமாக சொல்லி வருகிறார்கள். ஆனால், உண்மையில் மேலே குறிப்பிட்டவாறு, ஒரு பரந்த நிலப்பரப்புள்ள நாட்டின் மொத்த யதார்த்த புறநிலையையும் கணக்கில் கொண்டு செயல்திட்டம் வகுத்து, அதை ஒழுங்கமைந்த முறையில் செயல்படுத்ததுதான் புரட்சி என்பதை போல்ஷிவிக்குகள் உலகிற்கு காட்டினார்கள்.

“திடுமென ஒருநாள் காலையில் போல்ஷிவிக்குகள் தெருக்களில் தோன்றி வெள்ளைக் காலர் உடுத்தியவர்களை சுட்டு வீழ்த்தப்போகிறார்கள் என்று எல்லோரும் நினைத்திருந்த ஒரு நேரத்தில், மெய்யான எழுச்சியானது முற்றிலும் இயற்கையான முறையில் ஒளிவுமறைவின்றி பகிரங்கமாய் ஆரம்பிக்கலாற்று” என்று எழுதுகிறார், ஜான் ரீட். இந்த ஒரு வாக்கியம் போதும் புரட்சி என்பது இரத்த வெறிபிடித்த ஒன்று முதலாளித்துவாதிகள் கட்டமைத்து வைத்திருக்கும் பொய்யை அம்பலமாக்க.

புரட்சியை நசுக்க இடைக்கால அரசாங்கத்தின் போர்வையில் ஒளிந்திருந்த முதலாளித்துவ வர்க்கம், பல்வேறு சதிச்செயல்களை புரிந்தது. பெத்ரோகிராத் நகர காவல்ப்படைதான் மார்ச் புரட்சி நாட்களின் போது தீர்மானகரமான திருப்பத்தை உண்டாக்கி, படையாட்களது சோவியத்துகளை நிறுவியது. எழுச்சி பெத்ரோகிராத் நகர காவல்ப் படையின் செயல்பாடுகளை பொறுத்துதான் இருக்கும் என்பதால், அவற்றை நகரை விட்டு வெளியெற்றவும், தலைநகரை பெத்ரொகிராதில் இருந்து மாற்றவும் திட்டமிடப்பட்டது இடைக்கால அரசாங்கம். இது புரட்சியை நேசிப்பவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

”வானுயர உயர்ந்துவிட்டார்கள் இந்தப் போல்ஷிவிக்குகள்! நான்குமாதங்களுக்கு முன்பு விலக்கி ஒதுக்கப்பட்டு வேட்டையாட்ப்பட்ட சிறு குழுவாய் இருந்தவர்கள், எழுச்சியின் உச்ச அலையால் உயர்த்தப்பட்டு இந்த உன்னத நிலைக்கு மாபெரும் ரஷ்யாவின் தலைமை நிலைக்கு அல்லவா உயர்ந்துவிட்டார்கள்!” என்று மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு போல்ஷிவிக் கட்சியின் புரட்சிப்பணி இருந்தது.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 2


மக்கள் திரளின் இந்த கொந்தளிப்பு ஒழுங்கமைக்கப்பட்ட வடிவில் போல்ஷிவிக்குகளால் புரட்சியாக மாற்றப்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் படையாட்களின் சோவியத்துகள் இதில் முன்னணியில் இருந்தன. நாடு முழுவதும் உள்ள விவசாய சோவியத்துகளின் பிரதிநிதிகளை பெத்ரொகிராத் நகருக்கு அழைத்து காங்கிரஸை நடத்த இன்னும் நாட்கள் பிடித்தது.

விவசாயிகள் ஆதரவு மிக அவசியமான ஒன்று. விவசாயிகள் காங்கிரஸை உடனே கூட்டுமாறு முடிவுசெய்யப்பட்டது. காங்கிரஸை நடத்துவதற்கு ஐந்து பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

விவசாயிகள் அரசியல் நிலையில் பிற்பட்டவர்களாக இருந்தார்கள். 1917 புரட்சியின் போது ரஷ்யாவின் 80 சதவிகித மக்கள்தொகையினராக இருந்தார்கள். விவசாயிகளின் காங்கிரஸை கூட்ட புரட்சி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை விவசாயிகளது நடப்பு செயற் கமிட்டி தடுத்து நிறுத்த முயன்றது. ஆனால் நவம்பர் மாத இறுதி நாட்களில் விவசாய சோவியத்துகளின் பிரதிநிதிகள் பெத்ரொகிராதுக்கு வந்து சேர்ந்தார்கள்.

விவசாயிகள் சோவியத்துகளின் முக்கிய கோரிக்கையாக இருந்தது “உழுபவனுக்கே நிலம்” என்பதுதான். லெனின் இதுபற்றி குறிப்பிடுகையில், “இத்தருணத்தில் நாம் தீர்வு காண முயல்வது நிலப்பிரச்சினை மட்டுமல்ல, சமுதாய புரட்சி பிரச்சினைக்கும் தீர்வு காண முயல்கிறோம். நிலப்பிரபுக்களுடைய பண்ணைகள் பறிமுதல் செய்யப்படுகையில், அது ரஷ்ய நிலப்பிரபுக்களுடைய எதிர்ப்பை மட்டுமல்லாமல், வெளிநாட்டு மூலதனத்தின் எதிர்ப்பையும் மூளச்செய்யும். பெரிய நிலவுடைமைகள் வங்கிகள் மூலமாக வெளிநாட்டு மூலதனத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன…போல்ஷிவிக்குகளாகிய நாங்கள் எமது நிலத்துறை வேலைத்திட்டதை மாற்றிக்கொண்டுவிடவில்லை. நிலத்தில் தனியார் உடைமையை ஒழிக்க வேண்டுமென்ற எமது திட்டத்தை நாங்கள் கைவிட்டிவிடவில்லை” என்றார்.

உழுபவர்களுக்கு நிலம் பகிர்ந்து தரப்படவேண்டும். ஆனால், பண்ணை நிலங்களை விவசாய மக்கள் திரளினர் பலவந்தமாக கைப்பற்றிக்கொள்வது அராஜகமே ஆகும் என்று இடதுசாரி சோஷலிஸ்டு புரட்சியாளர் கட்சியின் பிரதிநிதி வாதிட்டார். ஆனால், போல்ஷிவிக்குகள் மக்கள் கோரிக்கைகளை மக்கள் சித்தப்படியே நடத்திட வழிவிட்டார்கள். நிலவுடைமை என்பது புரட்சிகர மக்களின் அதிகாரத்தால் பறிமுதல் செய்யப்பட்டு,  விவசாயிகளுக்கு தரப்பட்டது.

போர்முனைகளில் எல்லாம் நல்லபடியாக நடந்துவிடவில்லை. பயற்சி பெறாத செங்காவலர்கள் இருந்த படைகளுக்கு பயற்சி அளிக்க அதிகாரிகள் இல்லாத நிலை இருந்தது. யார் படைத்தலைவராக இருப்பது என்ற குழப்பம் சில ரெஜிமெண்டுகளிடம் இருந்தது. அவை பல நாட்கள் செயல்படாமல் இருந்தன.  ஆனால் இது போன்ற நிலையை சமாளிக்கும் அளவு கட்சிக்கு ஆற்றல் இருந்தது. போல்ஷிவிக் கட்சியின் பரந்த வலைப்பின்னலும், நிறுவன ஒழுங்கமைப்பும், சித்தாந்தப் புரிதல் கொண்ட செயல்திறனும் இந்த நிலமையை வெகு விரைவில் மாற்றியமைக்க முடிந்தது. வெகுமக்களை ஒழுங்கமைப்பு செய்யும் புரட்சிகர கட்சி இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை என்பதை ரஷ்ய புரட்சி நிரூபித்துக் காட்டியது.

(தொடரும்..)


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 2

புரட்சிகர புறநிலை:

ஷ்யப் புரட்சி என்பது 1917ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது என்றே சொல்லவேண்டும். இந்த புரட்சியின் மூலம் இரண்டாம் ஜார் நிக்கோலஸ் என்ற கொடுங்கோல் அரசன் பதவி விலகினான். அதைத்தொடர்ந்து, பெரும்பாலான சோவியத்துகளை மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிசப் புரட்சியாளர்கள் ஆகியோரின் செல்வாக்கில் இருந்ததால், அவர்கள் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்தனர். மென்ஷிவிக்குகள், சோசலிசப் புரட்சியாளர்கள் போன்ற சில சந்தர்ப்பவாத அமைப்புக்கள் ரஷ்ய உழைக்கும் மக்களை நிராயுதபாணியாக மாற்றி, புரட்சியால் வென்ற அதிகாரத்தை – சோவியத்துகளை – முதலாளித்துவாதிகளுக்கு சரணடைய செய்யும் கொள்கைகளை பின்பற்றி வந்தன.

மென்ஷிவிக்குகள் மற்றும் சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் தங்களது கோழைத்தனம் காரணமாக அரசதிகாரத்தை எடுத்துக்கொள்ள மறுத்தனர். அதனால் அந்த அதிகாரம் தவிர்க்க முடியாமல் பிற்போக்கு சக்திகளுக்குச் சென்றது. மார்ச் புரட்சியின் போது ஜார் அரசனின் ஆட்சி தீர்க்கமாக தோற்கடிக்கப்படவில்லை. இடைக்கால அரசாங்கத்தின் மூடுதிரைக்கு பின்னால், ஆளும் வர்க்கம் தன்னை மீண்டும் ஒருங்கிணைத்துக்கொண்டு புரட்சியை ஒழிக்க காத்துக்கொண்டிருந்தது.  இதன் விளைவாக “ஜூலை நாட்கள்” என்ற ஜூலைப் புரட்சி இருந்தது.

இந்த அரசாங்கம் மக்கள் சித்தத்திற்கு விரோதமாக முதல் உலகப் போரில் ரஷ்யாவை தொடர்ந்து ஈடுபடுத்தியது, அரசியலமைப்புச் சபை கூடும் வரை விவசாயிகளுக்கு நிலத்தை கொடுப்பதில் தாமதப்படுத்தியது. ஆனால் இந்த அரசியலமைப்பு சபை என்பது இடைக்கால அரசாங்கத்தால் நீண்டகாலம் ஒத்திப்போடப்பட்டுக்கொண்டே இருந்தது.

ஜூலை மாதத்தில், பெட்ரோகிராட் படையாட்கள், மாலுமிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரை போர்முனைக்கு அனுப்பும் இந்த இடைக்கால அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் கோபமடைந்து, அனைவரும் தலைநகரின் தெருக்களில் திரண்டனர்.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 1


ஜூலை ஆர்ப்பாட்டத்திற்கான முன்முயற்சி கீழிருந்து – பெட்ரோகிராட்டின் தொழிலாளர்கள் மற்றும் படையாட்களிடமிருந்து – வந்தது. இப்போது இந்த எழுச்சி நடந்தால் பெட்ரோகிராட் ரஷ்யாவின் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுவிடும் என்று லெனின் தலைமையிலான போல்ஷிவிக் கட்சி எச்சரிக்கை செய்தது. இதன் பின்னணியில் வரப்போகும் ஆபத்தை போல்ஷிவிக்குகள் சரியாகவே ஊகித்திருந்தனர்.
(ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தான் இங்கே “போல்ஷிவிக் கட்சி” என்று குறிப்பிடப்படுகிறது.)

ஆனால் மக்கள் இந்த எழுச்சியை நடத்துவதில் தீர்மானகரமாக இருந்ததால், இந்த எழுச்சியில் போல்ஷிவிக்குகள் கலந்துகொண்டு அதை ஒழுங்கமைப்பு செய்வது என முடிவெடுத்தனர்.

கசாக்களும் காவல்துறையினரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கூரையிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். எழுச்சி நசுக்கப்பட்டது. இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர் பி.என். பெரெவர்ஸேவ், “லெனின் ஒரு ஜெர்மன் ஏஜென்ட்” என்று பொய் பிரச்சாரம் செய்தார். போல்ஷிவிக்குகளின் பத்திரிகையான “பிரவ்தா”வின் அலுவலகங்கள் அரசாங்கப் படைகளால் அழிக்கப்பட்டன. கிளர்ச்சியில் ஈடுபட்ட படைப்பிரிவுகள் படுகொலை செய்யப்படுவதற்காக போர்முனைகளுக்கு அனுப்பப்பட்டன.

ஆனால் போல்ஷிவிக்குகள், ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான தன்மையைக் கொடுக்கும் வகையில் தங்களது தலைமையை அமைத்துக் கொள்ளவில்லை என்றால், சந்தேகத்திற்கு இடமின்றி விளைவு இதைவிட மோசமானதாக இருந்திருக்கும்.

இதற்கு பிறகு போல்ஷிவிக்குகள் எதிர்ப்புரட்சி அரசாங்கத்தால் வேட்டையாடப்பட்டார்கள். லெனின் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றார். ஆனால் சில வாரங்களில் போல்ஷிவிக்கு கட்சி தனது செல்வாக்கை பெருக்கிக்கொள்ளும் வகையில் வேலைகளில் ஈடுபட்டது. அதற்கான காரணம் மிக எளிமையானது; இடைக்கால அரசாங்கத்தின் கொள்கைகள் அனைத்தும் மக்கள் விரோதமானவையாக இருந்தது. அதை போல்ஷிவிக்குகள் அம்பலப்படுத்தினர்.

ஒரு நெருக்கடி காலத்தின் போது ஒரு அமைப்பு அல்லது நபர் தன்னுடைய உண்மையான பண்பை காட்டுவார்கள் என்பது இயக்கவியல் பூர்வமான உண்மை. அதன்படி, ஜூலை எழுச்சி நசுக்கப்பட்ட பிறகு, இடைக்கால அரசாங்கம் தனது பிற்போக்குத்தன்மையை இன்னும் அப்பட்டமாக காட்டத் தொடங்கியது.

(மார்ச் புரட்சியின் மூலமாக உழைக்கும் மக்கள் சோவியத்துகள் அமைக்கப்பட்டது. சோவியத்துகள் என்பதை தொழிலாளர்கள், விவசாயிகள் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் தங்களது துறை சார்ந்த நிர்வாக அதிகாரங்களை ஒப்படைக்கும் நிறுவன அமைப்பாகும். இந்த சோவியத்து பிரதிநிதிகள், மக்களுக்கு  பதில்சொல்ல கடமைப்பட்டவர்கள். இவர்கள் தவறு செய்தால், இவர்களை பதவியில் இருந்து கீழிறங்கும் உரிமை சோவியத் உறுப்பினர்களுக்கு உண்டு. இவைகளே தொழிலாளர்கள், விவசாயிகள் சோவியத்துகள் என்றும் சேனை வீரர்களுக்கான சோவியத்துகள், படையாட்கள் கமிட்டி என்றும் அழைக்கப்படுகிறது.)


படிக்க: நவம்பர் – 7 ரசியப் புரட்சி நாள்! உலக உழைக்கும் மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய நாள்!


இடைக்கால அரசாங்கத்தின் கொள்கைகளால் நாட்டின் எல்லா அரங்குகளிலும் முரண்பாடுகள் முற்றியது. போர் முனையில் படையாட்கள் கமிட்டிகள் இராணுவ அதிகாரிகளுடன் மோதின. இந்த இராணுவ அதிகாரிகள் ஜார் ஆட்சியில் பதவிக்கு வந்தவர்கள். அவர்கள் படைவீரர்களை மனிதப்பிறவியாய்க் கூட மதித்து நடத்தவில்லை. விவசாயிகள் தேர்ந்தெடுத்த நிலக்கமிட்டிகள், நிலப்பிரபுத்துவ ஆட்களிடம் இருந்து நிலங்களைப் பறித்து விவசாயம் செய்ய முயன்றதற்காக சிறை பிடிக்கப்பட்டன. ஆலைகளில் தொழிலாளர்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்கள். முதலாளிகள் ஆலைகளை கதவடைப்புகள் செய்தார்கள். இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து பட்டினி கிடக்க நேரிட்டது. தங்களது புரட்சிகர செயல்களுக்காக, நாடு கடத்தப்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த போது, விரும்பத்தகாத முறையில் நடத்தப்பட்டார்கள். சிலர் மீது வழக்கு தொடரப்பட்டு, 1905-ஆம் ஆண்டில் செய்த புரட்சிகர செயல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இடைக்கால அரசாங்கத்தின் கொள்கை பயனளிக்காத சீர்திருத்தங்களுக்கும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் இடையில் ஊசலாடிற்று. இடைக்கால அரசாங்கத்தின் கையாலாகாத்தனமும், தீர்மானமின்மையும் பட்டவர்த்தனமாகியது. தொழிலாளர் கமிட்டிகள் வேலை நேரங்களுக்கு பிறகு மட்டுமே கூடலாம் என்றும், போர்முனைகளில் எதிர்க்கட்சிக்காரர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது பத்திரிகைகள் தடைசெய்யப்படுவதும் நடந்தது. செங்காவலர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பறிக்கும் முயற்சிகள் நடந்தன.

ஜெனரல் கர்னீலவ், தான் ரஷ்யாவின் இராணுவ சர்வாதிகாரியாக உருவாகலாம் என்ற எண்ணத்தோடு படைபலம் கொண்டு புரட்சியை நசுக்க முயன்றான். ஆனால் படையாட்களது கமிட்டியால் கைது செய்யப்பட்டான். கர்னீலவ் கலகத்திற்கு பின்னால் முதலாளித்துவத்தின் வலுவான கரம் இருந்தது. சந்தர்ப்பவாத சோஷலிஸ்டுகளின் பங்கும் இருந்தது.

இடைக்கால அரசாங்கத்தில் இருந்தவர்கள், அரசியல் நிர்ணய சபை கூடியதும் சோவியத்துகள் தானாக களைத்துக்கொள்ளவேண்டும் என்று சாடையாய் கூறினர். அப்போது முதலாம் உலகப் போர் நடைபெற்று வந்தது. ஜெர்மனி ரஷ்யாவின் மீது போர் தொடுத்து வந்தது. இராணுவ அதிகாரிகள் படையாட்களது கமிட்டிகளுக்கு ஒத்துழைப்பதைவிட ஜெர்மனியுடனான இராணுவத் தோல்வியே மேல் என்று நினைத்தனர்.

இந்த இடைக்கால அரசாங்கம் புரட்சியின் பலன்களை மக்களுக்கு கிடைக்காமல் செய்து வந்தது. அதனால் அதன் அதிகாரம் பறிக்கப்பட்டு, உழைக்கும் மக்களால் படையாட்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோவியத்துகளே நேரடியாக ஆட்சியதிகாரத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையை முன்வைத்து, “அனைத்து ஆட்சியதிகாரமும் சோவியத்துகளுக்கே” என்று போல்ஷ்விக்குகள் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்கள். இப்படி போல்ஷிவிக்குகள் பிரச்சாரம் செய்தபோது, பெரும்பாலான சோவியத்துகள் அவரது கைகளில் இல்லை. இருப்பினும் ரஷ்ய நாட்டிற்கு எது நல்லதோ அதைச் செய்தார்கள்.

போல்ஷிவிக்குகள் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை மிக எளிமையான முறையில் பிரதிபலித்தார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் வேலைத்திட்டத்தை வகுத்துக் கொண்டார்கள். அதனால் தான் அவர்களால் மக்களை தங்கள் பக்கம் திரட்டிக்கொள்ள முடிந்தது.

மென்ஷ்விக்குகள், சோஷலிஸ்டு புரட்சியாளர்கள் போன்ற சமரசவாதிகளின் கைகளில் இருந்த சில தொழிற்சங்கங்களின் மத்திய கமிட்டிகள், குறிப்பாக தபால், தந்தி, ரயில்வே தொழிலாளர்களது மத்திய கமிட்டிகள், போல்ஷ்விக்குகளை எதிர்த்தன.

புரட்சியை ஒழிக்க நாட்டின் பொருளாதார வாழ்வு சீர்குலைக்கப்பட்டது. நிலக்கரி சுரங்கங்களுக்கு தீ வைப்பது, ஆலைகளின் இயந்திரங்களை சீர்குலைப்பது, ரயில் இஞ்சின்களை முடமாக்கியது போன்ற காரியங்களை சீர்குலைவுவாதிகள் செய்தனர்.

இடைக்கால அரசாங்கம், இப்போது உண்மையில் மக்கள் திரளின் நோக்கத்தை பிரதிபலிக்கவில்லை. செப்டம்பர் மாதம் கூட்டப்படவேண்டிய அனைத்து ரஷ்ய காங்கிரஸை கூட்டாமல் இருந்தது. சோவியத்துகளை ”பொறுப்பற்ற நிறுவனங்கள்” என்றும் அவை களைக்கப்படும் என்றும் கூறி வந்தது.

ஆனால் மக்களின் சித்தத்தை பிரதிபலிக்கக் கூடிய உண்மையான பிரதிநிதிகளை கொண்ட சோவியத்துகள் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ள நவம்பரில் பெத்ரொகிராதில் சோவியத்துகளின் இரண்டாம் அனைத்து ரஷ்ய காங்கிரஸை கூட்ட போல்ஷிவிக்குகள் அழைப்பு விடுத்தார்கள். இது நவம்பர் புரட்சிக்கான தொடக்கமாக இருந்தது.

(தொடரும்..)


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 1

ன்றைய தினத்தில் பிரச்சினை இல்லாத மக்கள் பிரிவினர் என்று யாருமே இந்த நாட்டில் இருக்கமுடியாது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வால் மதவெறி ஊட்டப்பட்ட கும்பல் சிறுபான்மையினரை படுகொலை செய்கிறார்கள். முஸ்லிம்களும், தலித்துகளும் இந்த குடிமை சமூகத்தின் எல்லா அரங்கங்களிலும் ஒடுக்கப்படுகிறார்கள். நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அரைப்பட்டினி கிடக்கிறார்கள். மக்கள் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்திற்காக தங்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப் படுகிறார்கள். அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் செயல்பாட்டாளர்களும், அறிவுத்துறையினரும் அரசு நிறுவனங்களின் மூலமாக வேட்டையாடப்படுகிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழை எளிய  மாணவர்கள் கல்விச் சூழலில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். வேலையின்மை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தொழிலாளர்கள் வரலாறு நெடுக போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன. விலைவாசி உயர்வால் தங்களது ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தமுடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றவாளிகள் எந்தவித பயமுமின்றி நாடாளுமன்றத்தில் சுற்றித் திரிகிறார்கள்.

இவற்றிற்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். இந்த வெவ்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்து இந்திய அளவில் பாசிசத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டமாக வளர்த்தெடுக்கும் கட்சி ஏதுமில்லை. எல்லா கட்சிகளும் தேர்தல் என்ற வரம்பை ஒட்டிய செயல்படுகின்றன. ஆனால் பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு மேற்சொன்ன எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால் இதை எப்படி சாதிப்பது?


படிக்க: நவம்பர் – 7 ரசியப் புரட்சி நாள்! உலக உழைக்கும் மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய நாள்!


வரலாறு காலத்திற்கேற்ப நம்மிடம் மாறுபட்ட கேள்விகளைக் கேட்கிறது. “மாற்றம் வேண்டுமா?” என்ற கேள்விக்கு நாம் எல்லோரும் “ஆம்” என்று பதில் சொல்லிவிட்டோம். ஆனால் “அந்த மாற்றத்தை எப்படி சாதிப்பது?” என்ற கேள்விதான் வரலாற்றில் நமது இடத்தை தீர்மானகரமாக நிர்ணயிப்பதாக இருக்கிறது. இந்த கேள்விக்கு இந்தியா முழுவதும் எத்தனை விதமான கட்சிகள், இயக்கங்கள் இருக்கின்றதோ, அத்தனை விதமான பதில்கள் இருக்கும். ஆனால், புறநிலை யதார்த்தமானது ஒன்றுதான்; தீர்வுக்கான இயக்கவியல் பூர்வமான வழி என்பதும் ஒன்று தான் இருக்க முடியும்.

அந்த வழியென்பது, “இந்த தேர்தல் முறையும் அரசியலமைப்பும் தான்  ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் பாசிசம் வேர்விட்டு வளர வாய்ப்பளித்தது. இந்த ஜனநாயகமற்ற அரசமைப்பு தான் அதைப் பாதுகாக்கிறது. இதற்கு மாற்றாக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து  பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவும் வகையில் பலதரப்பட்ட போராட்டங்களை ஒருங்கிணைந்து நடத்தவேண்டும்” என்பதுதான்.

இந்த தீர்வினை மக்களுக்கு பல்வேறு வகையான பிரச்சாரங்கள் மூலமாக விளக்கி,  தேர்தல் அமைப்பிற்கு வெளியே மக்கள் திரளை அமைப்பு ரீதியாக திரட்டி, நிறுவன ஒழுங்கமைப்புடன் போராட்டங்களை மேற்கொள்ளல் என்பது பெரும் இயக்கப்பணியாகும். இப்படியொரு மக்கள் இயக்கத்தை கட்டியமைக்க சித்தாந்த ரீதியாக வலுவான அமைப்பு என்பது எத்தனை அவசியமானது என்று வரலாற்றில் இதுவரை நடத்தப்பட்ட புரட்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக ரஷ்யப் புரட்சியின் போல்ஷிவிக் கட்சியின் பாத்திரம், அதன் சித்தாந்த‌ வலிமை, லெனினின் மேதமை போன்றவை பற்றிய தெளிவான புரிதல்,  நடப்பு காலத்தில் நமது நாட்டின் நிலையை செழுமையாகப் புரிந்துகொள்ள உதவும்; தேர்தலுக்கு வெளியிலான ஒரு இயக்கம் சாத்தியம் என்பதை உணர்ந்தும்.

அதற்காகத் தான் ரஷ்யப் புரட்சியின் வரலாற்றை பற்றிய இந்த தொடரை கொண்டுவருகிறோம்.

இந்த தொடரை எழுதுவதற்கான பெரும்பாலான விவரங்கள் ஜான் ரீட் எழுதிய “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.

(தொடரும்..)


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மதுரை தங்களாச்சேரி தேவர் ஜெயந்தி வன்முறை: ஆதிக்க சாதி சங்கங்களைத் தடைசெய்! | தோழர் குருசாமி

மதுரை தங்களாச்சேரி தேவர் ஜெயந்தி வன்முறை:
ஆதிக்க சாதி சங்கங்களைத் தடைசெய்! | தோழர் குருசாமி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஏலே இங்க வாங்கலே! நீங்க என்ன சாதிலே! தென்மாவட்டங்களின் ஆதிக்க சாதிய குரல்

வேங்கை வயல், நாங்குநேரி, நெல்லை என தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதிய படுகொலைகள், தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பார்ப்பனீய சாதியக் கட்டமைப்பை எதிர்த்துப் போராடும் தமிழ்நாட்டில், ” எல்லோரும் சமம்” என்ற ஜனநாயக குரல் வலுவிழந்து வருவதையே இச்சம்பங்கள் காட்டுகின்றன. வட மாநிலங்களைப் போல, “தலித்” என்பதற்காகவே குடிக்கும் நீரில் மலம் கலக்கலாம், முகத்தில் சிறுநீர் கழிக்கலாம், அடிக்கலாம், வெட்டலாம், ஆணவப்படுகொலை செய்யலாம் என்றும், அதை இதர பொது சமூகமும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் என்ற புதிய பாசிச சூழல் உருவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

தற்போது நெல்லையில் நடைபெற்ற சம்பவம் என்ன? ஏன் நடந்தது? முன்பகையா? இல்லை, அப்படி எந்த காரணமும் இல்லை. ஆனாலும் நடந்திருக்கிறது. தனக்கு சம்பந்தமே இல்லாத, முன்பின் அறிமுகமே இல்லாத மனோஜ் மற்றும் மாரியப்பன் மீது ஒரு ஆதிக்க சாதி வெறி கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. நடத்தி முகத்தில் சிறுநீர் கழித்து, அந்த இளைஞர்களை நிர்வாணப்படுத்தித் தாக்கி ’அவமான’ப்படுத்தியிருக்கிறது. ஏன்? ஓர் காரணம் அவர்கள் பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் என்பதே. குடி மற்றும் கஞ்சா போதையிலும், தலித் என்ற காரணத்திற்காக அடிக்கிறார்கள் என்றால், சாதிய வெறிதான் அவர்களது மூளையை ஆக்கிரமித்திருக்கிறது. அந்தளவிற்கு அவர்களிடம் ஆதிக்க சாதிவெறி ஊட்டப்பட்டிருக்கிறது என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

இறந்த பசு மாட்டின் தோலை உரித்தார்கள் என்ற காரணத்திற்காக உன்னாவ் மாவட்டத்தில் மூன்று தலித்துகள் கட்டி வைத்துத் தாக்கப்பட்டதை பார்த்து நாமெல்லாம் அதிர்ந்து போனோம். அங்கு சாதி உணர்வு இந்து மத நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு ஊட்டப்படுகிறது. தமிழ்நாட்டிலோ, குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு ஆதிக்க சாதி சங்கங்களால், ஆண்ட பரம்பரை பெருமை, குருபூஜை போன்றவற்றால் சாதி உணர்வு ஊட்டப்படுகிறது. ஆண்ட பரம்பரை பெருமையோ, குருபூஜையோ தமிழ்நாட்டில் நடைபெற்று வந்தாலும், சாதியக் கொலைகள் அதிகரிப்பதற்கும், புதிய இயல்பாக மாறுவதற்கும் ஒரு அடிப்படை இருக்கிறது என்பதே இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயமாகும். சமீப காலங்களில் சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதுதான் அது.


படிக்க: கிருஷ்ணகிரி: சோக்காடி கிராம தலித் மக்கள் மீது ஆதிக்கசாதிவெறித் தாக்குதல்


தமிழ்நாடு முழுவதும் தேவர்கள், யாதவர்கள், வன்னியர்கள், கொங்கு வேளாளர்கள் என ஆதிக்க சாதி வெறி அமைப்புகளில் ஊடுருவியிருக்கிறது. அதுமட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட சாதி சங்கங்களில் ஊடுருவியிருப்பதோடு, ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்றோரைத் தனது ஜந்தாம் படையாக உருவாக்கி வைத்திருக்கிறது.

பட்டியல் சாதியில் இருந்து வெளியேறி தேவேந்திர குல வேளாளர் என தங்களை பாண்டிய வம்சத்து ஆண்டபரம்பரையாக அடையாளப் படுத்திக் கொள்வதன் மூலம், நாங்களும் நாடாண்ட பாண்டிய வம்சத்து ஆண்ட பரம்பரை என கூறிக் கொள்ளும் கிருஷ்ணசாமியும் ஜான்பாண்டியனும் பாசிஸ்டுகளுக்கு சேவகம் செய்து வருகிறார்கள். இந்து மதத்தைச் சீரமைப்பதே எனது வேலை என்ற கிருஷ்ணசாமியும், திருச்செந்தூர் முருகன் கோயில் தெற்கு வாசல் எங்களுடையது என பேசும் ஜான்பாண்டியனும் தேவேந்திர குல வேளாளர் மக்களை பாசிஸ்டுகளிடம் அடகு வைப்பவர்கள்.

சாதி என்றோ சாதி ஆணவப்படுகொலை என்றோ சொல்லக்கூடாது தமிழ் குடிகள், குடிபெருமைக் கொலை என புதிய பரிமாணத்தில் சாதியை உயர்த்தி பிடிக்கும் சீமான் போன்றவர்கள் இந்த சாதிய தாக்குதல்களை பங்காளிச் சண்டையாக பார்க்கின்றனர். ”அட! தமிழ் சாதிகளை தமிழ் தேசியம் என்ற பெயரில் ஒன்றிணைக்க போவதாக பேசுகிறாயே பதில் சொல்” என்றால், ”இது 50 ஆண்டுக்கால திராவிட கட்சிகள் மக்களை சாதி ஓட்டு வங்கிகளாக மாற்றி வைத்திருப்பதன் விளைவு” என தனது திராவிட வெறுப்பைக் கக்குவார்.

சீமான் சொல்வதும் ஒரு வகையில் சரிதான். எனினும், ஓட்டுக்காக திராவிட கட்சிகள் சாதி சங்கங்களை ஊக்குவிப்பதும் சாதி தலைவர்களின் குருபூசை நிகழ்வுகளை அரசே தலைமையேற்று நடத்துவதும், அதில் எத்தனை கலவரங்கள் நடந்தாலும் வருடாவருடம் 144 தடை உத்தரவு போட்டு நடத்தி கொடுப்பதும் என சாதிய உணர்வை வளர்த்து வந்துள்ளது. தற்போதுகூட, திராவிட மாடல், சமூக நீதி அரசின் யோக்கியதையும் இதுவாகத்தான் இருக்கிறது.

ஆனால், சீமான் பேசுவதானது, சாதிக்கு எதிராக அல்ல, திராவிட வெறுப்பு பேசி, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு ஒத்தூதுவது ஆகும். குறிப்பாக, ஒரே நேரத்தில் இம்மானுவேல் சேகரனாருக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கும் எந்த பிரச்சினையும் இன்றி மாலை போடக்கூடிய ஒரே தலைவர் நான் தான் என கூறிக் கொள்ளும் அரசியல் நேர்மையற்ற, குடிப்பெருமை என்று சாதியை வைத்து பிழைப்பு நடத்துகிற அற்ப நபர்தான் சீமான்.


படிக்க: சோத்துக்கு வழியில்ல.. இதுல ஆண்ட சாதி பெருமை | தோழர் அமிர்தா


”சாதிதான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என்றார் அம்பேத்கர். கள்ளர் சாதியை சேர்ந்த சாதிவெறிக் கயவர்கள் சக மனிதனை சாதியை முன்னிட்டு தாக்கினாலும், நிர்வாணப்படுத்தினாலும், கொள்ளையடித்தாலும், முகத்தில் சிறுநீர் கழித்தாலும் அவர்களை கண்டிக்க மாட்டோம் என சுயசாதி பற்றில் வாழும் அற்ப மனிதர்களும் இச்சம்பவத்தில் குற்றவாளிகள் தான். அந்த சாதி வெறிபிடித்த கயவர்களின் சமூக அடித்தளம் இவர்கள்.

இப்பயெல்லாம யாருங்க சாதிபாக்குறாங்க என கூறிக்கொண்டு, சாதியை ஆழ்மனதில் மறைத்து வைத்து கொண்டு ஜனநாயகம் பேசும் தற்குறிகளுக்கு இந்த சம்பவங்கள் நடப்பதே தெரிவதில்லை.

தேவேந்திர குல வேளாளர்கள் மீது தாக்குதல் நடத்த தேவர் சாதியினருக்குக் காரணம் தேவையில்லை; தலித்துகளை தாக்குவதற்கு ஆதிக்க சாதியினருக்கு எவ்விதக் காரணம் தேவையில்லை. இந்த மாற்றம் தான் ஆதிக்க சாதி சங்கங்களில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்ட நடவடிக்கை. இதுபோல் சாதிய கட்டுமானங்கள் அனைத்திலும் இந்துத்துவ சக்திகள் ஊடுருவி வளர்ந்து விட்டது. சாதி வெறிக் கலவரங்களால் தமிழ்நாடு மணிப்பூராகலாம். தமிழ்நாட்டில் நிலவும் இந்த நிலைதான், மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடைபெறுவதற்கு முன்னதான சமூக பக்குவ நிலை. இதை ஒரு எச்சரிக்கையாக தமிழ்நாடு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆதிக்க சாதி சங்கங்களையும், அதில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மதவெறிக் கும்பலையும் தடை செய்யாமல், வருங்காலத்தில் சாதிய வன்முறைகளைத் தடுக்க முடியாது. ஆதிக்கசாதிச் சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் தடை செய்யப் போராடுவோம்!


பு.மா.இ.மு,
தமிழ்நாடு.
94448 36642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube