Thursday, June 25, 2026
முகப்பு பதிவு பக்கம் 131

மணிப்பூர் கொடூரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள்!

மணிப்பூர் கொடூரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ரோஹிங்கியா அகதிகளை சித்திரவதை செய்யும் பாசிச மோடி அரசு!

0

ம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிரா நகர் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளான நுமினா பேகம் மற்றும் அவரது கணவர் முகமது சலீம் ஆகியோர் ஜூலை 19 அன்று தங்களது குழந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கைவிலங்குடன் அழைத்துவரப்பட்டனர்.

ஜூலை 18 அன்று தடுப்பு மைய அதிகாரிகள், தங்களது அவல நிலையை எதிர்த்துப் போராடிய ரோஹிங்கியா அகதிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். அந்தப் புகையின் காரணமாக பிறந்து 40 நாட்களே ஆன நுமினாவின் குழந்தை இறந்துவிட்டதாக அங்கிருந்த ரோஹிங்கியா மக்கள் தெரிவித்தனர்.

ஆனால், தடுப்பு மைய அதிகாரிகள் அக்குழந்தை பிறந்ததுமுதலே உடல்நலம் குன்றி இருந்ததாகத் தெரிவித்தனர். இது ஹிரா நகர் தடுப்பு மையத்தில் நடைபெறும் இரண்டாவது மரணமாகும்.

இறுதிச் சடங்கில் பங்கேற்க நுமினா பேகம் மற்றும் அவரது 17 வயது மகன் ஆகியோர் கைவிலங்குடன் அழைத்துவரப்பட்ட காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. மற்றொரு காணொலி ஒன்றில் நுமினா பேகம் கைவிலங்குடன் பெண் போலீசு ஒருவரால் அழைத்துவரப்படுவதும் சில ரோஹிங்கியா பெண்கள் அவருக்கு ஆறுதல் கூறுவதும் பதிவாகியுள்ளது.


படிக்க: காஷ்மீர் தடுப்பு மையம்: தீவிரமாகப் போராடும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்!


“அவர்களை கைவிலங்குடன் பார்த்ததும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். சலீம் மற்றும் அவரது மூத்த மகன் ஆகியோரின் கைவிலங்குகள் இறந்த குழந்தையின் இறுதிச்சடங்கு பிரார்த்தனையின் போதுகூட அகற்றப்படவில்லை. அவர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கைவிலங்குடன் வைக்கப்பட்டிருந்தனர். பின்பு, தடுப்பு மையத்திற்குத் திருப்பி அழைத்துச் செல்லப்பட்டனர்” என்று ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த மூத்த நபர் ஒருவர் கூறினார்.

“கடுமையான குற்றவாளிகளைக் கூட இவ்வாறு நடத்த மாட்டார்கள். ரோகிங்கியாக்களான நாங்கள் மனிதர்கள் இல்லையா? இந்தியாவில் இப்படி நாங்கள் மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்படுவோம் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. இப்படி இழிவாக நடத்தப்படுவதை எதிர்த்து எங்களால் போராடக்கூட முடியவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

“ரோஹிங்கியா அகதிகள் அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களின் நடமாட்டத்திற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், அவர்களைக் கைதிகளைப் போல நடத்தக்கூடாது. கைதிகளாக இருந்தாலும் கூட, அவர்கள் தப்பிவிடுவார்கள் என்ற அச்சம் இருந்தாலோ அல்லது அபாயகரமானவர்களாக இருந்தாலோ மட்டுமே அவர்களுக்குக் கைவிலங்கிடப்படும்” என்று முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி-யான எம்.எஸ். லோன் கூறினார். போலீசு அதிகாரி ஒருவரே ரோஹிங்கியாக்களை இவ்வாறு நடத்துவது தவறு என்று கூறுகிறார்.

ஜம்மு-காஷ்மீரின் சிறார் நீதி சட்டவிதிகள், 2021 பதினெட்டு வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு கைவிலங்கிடுவதைத் தடை செய்கிறது. ரோஹிங்கியா தம்பதியின் மூத்த மகனுக்கு 17 வயது மட்டுமே ஆகியுள்ளதால் இந்திய சட்டப்படி அவர் மைனராகக் கருதப்படுவார்.

2012-ஆம் ஆண்டு மியான்மரில் ரோஹிங்கியாக்களுக்கு எதிராக பெரிய அளவில் வன்முறைகள் நடந்ததால் அங்கிருந்து உயிர் தப்பி சலீம் மற்றும் அவரது சகோதரர் பரீத் ஆலம் ஆகியோர் இந்தியாவுக்கு வந்ததாக சலீம் தம்பதியின் உறவினர்கள் தெரிவித்தனர்.


படிக்க: இரக்கமின்றி ரோஹிங்கியாக்களை திரும்ப அனுப்பியது இந்தியா!


“மியான்மரில் உள்ள படைகள் எங்களை கொன்று சித்ரவதை செய்து வருகின்றன. எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு ஓடிவந்தோம்” என்று சலீமின் அண்ணி பாத்திமா பேகம் கூறினார்.

“சலீம் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ஜம்முவில் சிறு வேலைகளை செய்து வந்தார். நாங்கள் இங்கே பாதுகாப்பாக உணர்ந்தோம். ஆனால் அதே ஆண்டில் சலீம் போலீசால் கைது செய்யப்பட்டார். எங்கள் துயரங்களுக்கு முடிவே இல்லை. அப்போது அவரிடம் அகதி அட்டை (refugee card) இல்லை. எனவே, நாங்கள் உடனடியாக டெல்லி சென்று அகதி அட்டைகளைப் பெற்றோம்” என்று அவர் மேலும் கூறினார்.

அகதி அட்டைகள் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையரால் (U.N. High Commissioner for Refugee) வழங்கப்படும்.

“2021-ஆம் ஆண்டில், சலீமின் மனைவி மற்றும் மூத்த மகன் உட்பட ஜம்முவில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட அகதிகள் சரிபார்ப்புக்கு (verification) அழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் போலீசால் கைது (detained) செய்யப்பட்டனர்” என்று பாத்திமா கூறினார்.

அச்சமயம் கைது செய்யப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் அனைவரும் ஹிரா நகர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அந்த சிறை மார்ச் 5, 2021 அன்று தடுப்பு மையமாக அறிவிக்கப்பட்டது.

பின்பு, ஜம்மு காஷ்மீர் அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் “சட்ட அமலாக்க நிறுவனங்களால் கண்டறியப்பட்ட அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் அந்த தடுப்பு மையத்தில் தங்கவைக்கப்படுவார்கள். மேலும், இந்த நபர்களின் குடியுரிமை சரிபார்க்கப்பட்டு பயண ஆவணங்கள் வழங்கப்பட்டவுடன் விரைவாக நாடு கடத்தப்படுவார்கள். அதற்கு அவர்கள் எல்லா நேரங்களிலும் உடல் ரீதியாக தகுதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

“சலீம் ஜம்மு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். நுமினா கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியிருந்த போது சலீமும் ஹிரா நகர் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டார்” என்று பாத்திமா கூறினார்.

அவர்கள் இருவரும் ஹிரா நகர் தடுப்பு மையத்தில் 2021-ஆம் ஆண்டில் ஒன்றிணைந்தனர். இந்த தம்பதியினருக்கு ஜூலை 19 அன்று இறந்த குழந்தை உட்பட மேலும் இரண்டு குழந்தைகள் தடுப்பு மையத்தில் பிறந்தது.

இந்தியாவில் ரோஹிங்கியா அகதிகளின் அவல நிலைக்கு சலீம் – நுமினா தம்பதியினரின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.

ரோஹிங்கியா அகதிகளால் ஜம்மு பகுதி முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்டதாக மாறிவிடும் என்று கூறி, பா.ஜ.க-வும் சங்க பரிவார கும்பல்களும் ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

மியான்மரில் ஒடுக்குமுறைக்கு அஞ்சி உயிர் தப்பி வந்த ரோஹிங்கியா அகதிகளை முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக காவி பயங்கரவாத அரசு மனிதாபிமானமின்றி – தீவிரவாதிகள் போல் சித்தரிக்கிறது – அடிமைகளாக சித்திரவதை செய்கிறது. பாசிஸ்டுகளிடம் எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்!


பொம்மி

விளை நிலங்களில் புல்டோசர்: NLC அடாவடித்தனம்! | தோழர் துணைவேந்தன்

விளைச்சலுக்கு காத்திருக்கும் நெற்பயிற்களை புல்டோசர் வைத்து நாசம் செய்யும் என்.எல்.சி – கடலூர் மாவட்ட ஆட்சியரின் 30 புல்டோசர்கள்!

நிலமாஃபியாக்கள் செய்யும் வேலையல்லவா இது!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!

ர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் கிளைகளைப் பரப்பி அம்மாநில அரசுகளின் பால் கூட்டுறவு உற்பத்தி நிறுவனங்களை ஒழித்துக்கட்ட முயற்சிக்கும், குஜராத் மாநில அரசின் பால் கூட்டுறவு உற்பத்தி நிறுவனமான அமுல், தமிழ்நாட்டின் பக்கமும் தலையைக் காட்டியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் போச்சம்பள்ளி சிப்காட் அருகேயுள்ள ஓலப்பட்டி பகுதியில் தன்னுடைய முதல் பால் குளிரூட்டும் நிலையத்தை தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஏழாயிரம் லிட்டர் பால் கொள்முதலில் ஈடுபடுவதோடு, அதில் கிட்டதட்ட மூவாயிரம் லிட்டரை ஆந்திராவில் உள்ள தனது நிறுவனத்திற்கும் அனுப்பி வருகிறது.

தமிழ்நாட்டின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவினை ஒழித்துக்கட்ட வேலை செய்யும் அமுல் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கடந்த மே மாதத்தில், அமுல் நிறுவனத்தை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாகக் கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல்செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும்” என சுட்டிக்காட்டி இருந்தார். அக்கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் வந்ததாகத் தெரியவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதும்போது, பால் கொள்முதல் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த அமுல், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில கிராமங்களில் பால் கொள்முதலில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களிலும் தனது கொள்முதலை விரிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஆவின் கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் உள்ள பால் உற்பத்தியாளர்களை தன் பக்கம் கவர்ந்து இழுப்பதற்காக, நயவஞ்சகமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.


படிக்க: அமுல் மூலம் ஆவினை அழிக்கத்துடிக்கும் மோடி அரசு – பின்னணியில் அம்பானி!


பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு ஆவின் வழங்கும் கொள்முதல் விலையை விட அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது அமுல். அதை அமுல் நிறுவனம் மறுத்தாலும், தரத்தைப் பொறுத்து ஆவின் லிட்டருக்கு ரூ.28 முதல் ரூ.32 வரை கொடுத்து கொள்முதல் செய்யும் பாலை, அமுல் நிறுவனம் ரூ.34 முதல் ரூ.38 வரை கொடுத்து கொள்முதல் செய்வதாக அப்பகுதி விவசாயிகளே தெரிவிக்கின்றனர். மேலும் அமுல் தனது கொள்முதல் பாலுக்கான தொகையை வாரந்தோறும் வழங்கிவிடுவதால், பால் உற்பத்தியாளர்கள் இயல்பாக அமுலை நாடிச் செல்ல விரும்புகின்றனர்.

அமுல் நிறுவனத்தின் நுழைவும் இதுபோன்ற அதன் நடவடிக்கைகளும் ஆவின் நிறுவனத்தை ஒழித்துக்கட்டும் உள்நோக்கம் கொண்டது என்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.

ஆவினின் நிர்வாகச் சீர்கேடுகளுக்காக அமுலை வரவேற்க முடியுமா?

தமிழ்நாட்டில் அமுல் பால் கொள்முதல் செய்வதை ஒரு சிலர் ஆதரிக்கின்றனர். இது ஆக்கப்பூர்வமான தொழில்போட்டியை ஏற்படுத்தும் என்றும், விவசாயிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஊடகங்களில் கருத்துசொல்லும் சிலர் தேன்சொட்டப் பேசுகின்றனர்.

“ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள இத்துறையில், கூடுதலாக அமுல் நிறுவனமும் வருகிறது என்பதைத் தவிர அதனால் பெரும்பாதிப்பு நிகழ்ந்துவிடும் எனச் சொல்ல முடியாது. அதைவிடவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நடைமுறைப் பிரச்சினைகளை அரசு முதலில் கவனிக்கட்டும்” என்று கூறியுள்ளார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம்.

ஆவினில் ஊழலும் நிர்வாகச் சீர்கேடுகளும் நிலவுவது உண்மைதான். பால் உற்பத்தியாளர்களுக்கு பாலின் தரத்தை காரணம்காட்டி அரசு நிர்ணயித்த விலையைக் கூட அதிகாரிகள் கொடுப்பதில்லை; கொள்முதல் செய்த பாலுக்கான பணத்தையும் இழுத்தடித்து இரு மாதங்களுக்கு பிறகே கொடுக்கின்றனர். மேலும் பால் உற்பத்தியாளர் சங்கங்களும் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்காரணங்களால் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கையும், தினசரி பால் கொள்முதலும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. 12 ஆயிரமாக இருந்த கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கையானது 9 ஆயிரத்து 673 ஆகக் குறைந்துள்ளது.

பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டரில் இருந்து 30 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. ஆனால் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கான பால் தேவை 38 லட்சம் லிட்டர். எனவே பற்றாக்குறையைப் போக்க, மகாராஷ்டிராவில் இருந்து பால் பவுடரை இறக்குமதி செய்து, அதைப் பாலாக மாற்றுகின்றனர். தமிழ்நாட்டிற்குள் ஆவினின் நிர்வாகச் சீர்கேடுகளையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுதான் அமுல் நுழைகிறது.

ஆனால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் பால் கொள்முதலில் ஈடுபடும் ஆரோக்கியா, ஹட்சன் போன்ற நிறுவனங்களைப் போல நாம் அமுல் நிறுவனத்தையும் கருத முடியாது. ஆவினில் நிலவும் பிரச்சினைகளால் அமுலை ஆதரிக்கவும் முடியாது. ஏனெனில் அமுலின் வரவு ஆவின், நந்தினி போன்ற மாநில பால் உற்பத்திக் கூட்டுறவு நிறுவனங்களை ஒழித்துக்கட்ட விழையும் ஒன்றிய அரசின் சதியாகும்!

பிற மாநில பால் உற்பத்தி நிறுவனங்களை கழுத்தறுக்கும் ஒன்றிய அரசு!

இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் ஐஸ்கிரீம் போன்ற பால் சார்ந்த பொருட்களை மட்டும்தான் அமுல் விற்பனை செய்தது. தற்போதுதான் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களைக் கட்டியமைத்து அதன் மூலம் பால் கொள்முதல் செய்யும் வேலையில் இறங்கியுள்ளது. அதாவது ஒன்றிய அரசு அமுல் மூலம் ஆவினை அழிக்கும் வேலையை துவங்கியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பல மாநில கூட்டுறவுச் சங்கங்கள் (Multi State Co-operative Society Act) சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மோடி அரசு. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மீதிருக்கும் உரிமைகளைப் பறித்துள்ளது.

இதற்கு முன்னர், அமுல் போன்ற பல மாநில கூட்டுறவுச் சங்கத்துடன் வேறு ஏதேனும் கூட்டுறவு சங்கத்தை இணைப்பதாக இருந்தால் மாநில கூட்டுறவுச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தற்போது கூட்டுறவு சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பெரும்பான்மை அடிப்படையில் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் எந்த ஒரு கூட்டுறவு சங்கத்தையும் பல மாநில கூட்டுறவு சங்கத்துடன் இணைக்க முடியும் என்று திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மோடி அரசு.

மேலும் “கூட்டுறவு தேர்தல் ஆணையம்” என்ற புது அமைப்பை உருவாக்கியிருக்கிறது மோடி அரசு. இதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களுக்கான நிர்வாகிகளை ஒன்றிய அரசே நியமிக்கிறது. இச்சட்டத் திருத்தங்களுக்கு பிறகுதான் கர்நாடக மாநிலத்தின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான நந்தினியை பல மாநில கூட்டுறவு அமைப்பான அமுலுடன் இணைக்க முயற்சி எடுத்தது மோடி அரசு. ஆனால் கர்நாடக மக்களின் எதிர்ப்பால் அது தற்காலிகமாகப் பின்வாங்கப்பட்டுள்ளது.

எனவே, ஆவினை அழிக்கும் வேலையை செய்து வரும் அமுலை மற்ற தனியார் நிறுவனங்களோடு ஒப்பிட முடியாது. ஆவினின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்ளும் அதேநேரம், ஆவினை ஒழித்துக்கட்ட முயற்சிக்கும் அமுல் நிறுவனத்தின் சதிகளையும் முறியடிக்க வேண்டும்.

அமுல் வரும் முன்னே, அம்பானி வருவார் பின்னே!

மாநில அரசுகளின் பால் கூட்டுறவு உற்பத்திச் சங்கங்களை அழித்து, ஒன்றிய மோடி அரசு எந்த அமுலை ஏகபோகமாக வளர்ப்பதற்குத் துடிக்கிறதோ அந்த அமுல் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்தியாவில் மற்ற பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தேசிய பணமாக்கல் திட்டம், உட்கட்டமைப்புத் திட்டம், தனியார்-அரசு கூட்டுறவு போன்ற பல பெயர்களில் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, அமுலை மட்டும் வளர்த்தெடுப்பதும் – விரிவுபடுத்துவதும் ஏன்? இந்திய பால் சந்தையை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றி, மிகப்பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனத்தை கட்டியமைக்க முயல்கிறதா மோடி அரசு?

அப்படியொரு ‘அதிர்ச்சி’ நமக்கு வேண்டாம். அமுலை ஏகபோகமாக வளர்ப்பதற்குப் பின்னே, இந்திய பால் உற்பத்தித் துறையையும் சந்தையை கைப்பற்றுவதற்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கும் அம்பானியின் லாபவெறி ஒளிந்திருக்கிறது!

000

இந்தியாவின் முதல் பால் உற்பத்தி கூட்டுறவு நிறுவனமான அமுல் குஜராத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டதைத் தொடர்ந்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் கூட்டுறவு சங்கங்களை கட்டியமைப்பதற்காக, “தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்” உருவாக்கப்பட்டது. பால் உற்பத்தி, மாடு வளர்ப்பு போன்ற பணிகள் இதன் வழிகாட்டுதல்களின்படிதான் நடக்கிறது. பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் வெண்மைப் புரட்சி இவ்வமைப்பின் மூலம்தான் இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தில் கார்ப்பரேட்டுகளை நுழைக்கும் வகையில் மோடி அரசு சட்டத்திருத்தம் மேற்கொண்டுள்ளது.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக தனியார் நிறுவனங்களைச் சார்ந்தவர் இடம்பெறலாம் என்றும், கூட்டுறவுச் சங்க அமைப்பு முறையோடு கூடுதலாக வேறு நிறுவன அமைப்பு முறைகளைக் கூட கொண்டுவரலாம் என்றும், தே.பா.மே.வாரியத்தின் துணை நிறுவனங்களான மாட்டுத் தீவன உற்பத்தி மற்றும் பால் குறித்து ஆய்வு செய்யக்கூடிய நிறுவனங்களின் பங்குகளை ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் விற்கலாம் என்றும் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இச்சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, அம்பானி பால் மற்றும் தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் சந்தையில் நுழைய உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் அமுல் நிறுவனத்தில் கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்ற, பல ஆண்டுகளாக மேலாண்மை இயக்குனராக பணியாற்றிய ஆர்.எஸ்.சோதி தன் பதவியை ராஜினாமா செய்து அமுல் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்துள்ளார்.

மேலும் ரிலையன்ஸ் குழுமம், பால் மற்றும் பதப்படுத்தபட்ட உணவுப் பிரிவின் வணிகத் தலைவராக சந்தீப் கோஷ் என்பவரை நியமித்துள்ளது. இவர் மில்க் மந்திரா (milk mantra) மற்றும் லாக்டலிஸ் இந்தியா (lactalis india) ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவராவார்.


படிக்க: தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை அழிக்கத் துடிக்கும் குஜராத்தின் அமுல்! | மக்கள் அதிகாரம்


ஒருபுறம் பால் மற்றும் பால் பொருட்கள் வர்த்தகத்தில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை தன் நிறுவனத்தில் இணைப்பதும், மறுபுறம் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையைத் தொடங்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் ரிலையன்ஸ் குழுமம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் சந்தையைக் குறிவைத்து வேலை செய்வதை உறுதியாக்குகிறது.

இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது, மோடி அரசின் சட்டத்திருத்தங்களின் நோக்கம் தனியார் – அரசு கூட்டுறவுக் கொள்கையின் (Public-Private Partnership) மூலம் அமுலின் கட்டமைப்புக்குள் அம்பானியை நுழைப்பதன் ஒருபகுதியாக இருக்கலாம் என்று கருதத்தோன்றுகிறது.

2007-ஆம் ஆண்டு தொடங்கி சுமார் பத்து ஆண்டுகள், “டெய்ரி லைஃப் மற்றும் டெய்ரி ப்யூர்” என்ற பிராண்டின் கீழ் ஏற்கெனவே பால் பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்ட வந்த அம்பானி, பின்பு தன் கட்டமைப்புகளை 2016ஆம் ஆண்டு மொத்தமாக “ஹெரிடேஜ் ஃபுட்” நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். தற்போது சில்லறை வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துவது பற்றி திட்டமிட்டுவரும் அம்பானி, மீண்டும் பால் துறைக்குள் அடியெடுப்பதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார்.

இந்தியாவின் பால் பொருட்கள் துறையின் சந்தை, ஒவ்வொரு ஆண்டும் ஆறு சதவிகிதம் அதிகரித்துவருகிறது ஆகவே ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி தொலைத்தொடர்புத் துறையில் ஏகபோக நிறுவனமாக வளர்ந்தது போல, பால் பொருட்கள் சந்தையையும் ஆக்கிரமிக்கத் துடிக்கிறார் அம்பானி.

பால் உற்பத்தித் துறையில் எவ்வகையான கட்டமைப்புகளையும் கொண்டிராத அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை, 28 மாநிலங்களின் 222 மாவட்டங்களில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 903 கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய பால் உற்பத்திக் கட்டமைப்பைக் கொண்டுள்ள அமுல் நிறுவனத்தில் நுழைப்பதன் மூலம் அம்பானியை பால் துறையில் ஏகபோகமாக உயர்த்துவதற்கு திட்டமிடுகிறது மோடி அரசு.

அம்பானியின் இந்த ஏகபோக நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் அமுல் நிறுவனம் விரிவாக்கப்படுகிறது. எனவே, ஆவின் நிறுவனம் ஊழலும் முறைகேடுகளும் கொண்ட நிறுவனம்தானே அமுல் போட்டிக்கு வந்தால் பால் உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைக்குமே என்று நாம் கருத முடியாது. விசயத்தை அரசியல் ரீதியாக அணுகாமல் பொருளாதாரவாதக் கண்ணோட்டத்தில் இருந்து பரிசீலித்தால், அது ஒன்றிய மோடி அரசின் சதித்திட்டங்களுக்கு பலியாவதாகவே முடியும். அது அதானியின் ஏகபோக வெறிக்கு வழிவிடுவதிலேயே போய்முடியும்.

சிவராமன்
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

மீறிவந்தால் நிம்மதியாக செல்லமுடியாது | கொலைகாரன் அகர்வால் | தோழர் மருது | தோழர் புவன்

மீறிவந்தால் நிம்மதியாக செல்லமுடியாது | கொலைகாரன் அகர்வால் | மருது

ஸ்டெர்லைட் அகர்வாலை அனுமதித்தால் மக்கள் திருப்பி அனுப்புவார்கள்! | தோழர் புவன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அனில் அகர்வாலின் வருகை தூத்துக்குடி தியாகிகளை இழிவுபடுத்தும் | தோழர் திருமுருகன் காந்தி | வெற்றிச்செல்வன்

தூத்துக்குடி மக்களை படுகொலை குற்றவாளி ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் சென்னை வருகையைக் கண்டித்து மே 17 இயக்கம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம், எஸ்.டி.பி.ஐ கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தமிழர் விடுதலை கழகம், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, உள்ளிட்ட ஜனநாயக அமைப்பினர் இணைந்து கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

அனில் அகர்வாலின் வருகை தூத்துக்குடி தியாகிகளை இழிவுபடுத்தும் | தோழர் திருமுருகன் காந்தி

அனில் அகர்வாலை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது! | வெற்றிச்செல்வன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

 

நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!

ண்மையில் 2023-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720/720-க்கு பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றிருந்தார். அம்மாணவனின் வெற்றியை “ஆளப்போறான் தமிழன்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுக் கொண்டாடியது தமிழ் முரசு நாளிதழ். “நீட் தேர்வில் முதலிடம் பிடித்து பிரபஞ்சத்தை திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டு மாணவன் பிரபஞ்சன்” என்பது போன்ற இடுகைகளையும் பெருமிதத்துடன் சமூக ஊடகங்களில் பலர் பகிர்வதைப் பார்க்க முடிந்தது.

பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, அம்மாணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதோடு, பரிசுப் பொருட்களையும் வழங்கியுள்ளார். மேலும், “மருத்துவப் படிப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பை உருவாக்கிய நீட் தேர்வை அரசியலாக்கிய தி.மு.க.விற்கு நீட் முடிவுகள் தகுந்த பாடத்தைக் கற்பிக்கும் என்று நம்புவோம்” என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

நீட் தேர்வை எதிர்க்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்கூட தங்களது அறிக்கைகளில் பிரபஞ்சனை பாராட்டிவிட்டுத்தான் நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பற்றி பேசியுள்ளனர். இது நம்மையும் அறியாமல் பாசிசக் கும்பல் தோற்றுவிக்கும் மாயையில் நீட் எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்வதாகவே அமைந்துள்ளது.

பிரஞ்சனை வாழ்த்துவதும் அனிதாவை தூற்றுவதும் ஒன்று!

நீட் தேர்விற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற்றிருக்கிறார் என்று பலரும் பிரபஞ்சனைப் பாராட்டுகிறார்கள். அம்மாணவனைப் பாராட்டுவது அவர்களது தனியுரிமை. ஆனால், பிரபஞ்சனைப் பாராட்டுவதன் மூலம் “நீட் தேர்வையும் தாண்டி தமிழனால் சாதிக்க முடியும்” அல்லது “மருத்துவம் படிப்பதற்கு நீட் ஒரு தடையில்லை” என்ற பொதுக்கருத்து உருவாக்கப்படுவதை நம்மால் அனுமதிக்க முடியாது. இத்தகைய பொதுக்கருத்தை திட்டமிட்டு உருவாக்குவதன் மூலம் தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்புணர்வை நீர்த்துப் போகச் செய்கிறது பா.ஜ.க. கும்பல். இவற்றுக்கு நாம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.

அனிதா உள்ளிட்டு நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 20க்கும் மேல். இவ்வாறு தங்களது மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களைப் பார்த்து நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசம் கொள்வதைவிட, இரங்கல் தெரிவிப்பதும் நம்மை நாமே தேற்றிக்கொள்வதும் மட்டுமே நடந்துவருவது அவலமானது.


படிக்க: ‘நீட் விலக்கு மசோதா’ எனும் ஓட்டுக் கட்சிகளின் நாடகம் ! – தீர்வு என்ன?


இந்த பிரபஞ்சன் யார்? விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த மேல ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன். தாய், தந்தை இருவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். 10ஆம் வகுப்பு வரை தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்துவிட்டு, 11 மற்றும் 12ஆம் வகுப்பை சென்னை மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர். மேலும், அதே நிறுவனத்தின் துணை நிறுவனமான “வேலம்மாள் நெக்சஸ்” என்ற  நீட் மற்றும் ஐ.ஐ.டி. பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்.

நீட் தேர்வில் தான் வெற்றி பெற்றது குறித்து ஊடகங்களுக்கு பிரபஞ்சன் கொடுத்த பேட்டியில், “நீட் தேர்வைப் போன்ற கிராண்ட் டெஸ்ட் என்ற தேர்வை 50-க்கும் மேற்பட்ட முறை எழுதியிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 2 ஆண்டுகளாக நீட் தேர்வில் எவ்வாறு கேள்வி கேட்பார்கள், அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றதோடு, நீட் தேர்வுக்கான பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும் படித்திருக்கிறார். இதுவே பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பெற முடிந்ததற்கு காரணம்.

பிரபஞ்சன் மட்டுமல்ல, நீட் தேர்ச்சியில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்களைப் பெற்றதாகக் கூறப்படும் தமிழ்நாட்டு மாணவர்களான கவுஸ்டவ் பவுரி, சூர்யா சித்தார்த், வருண் ஆகியோரும் பிரபஞ்சனைப் போல தனியார் பயிற்சி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் கொட்டிப் பயிற்சிப் பெற்றவர்கள்தான். ஆகவே நீட் என்பது  லட்சக்கணக்கில் பணம் கொட்டிப் படிக்க வாய்ப்பிருக்கிற மாணவர்களுக்கு மட்டுமே ‘வரப்பிரசாதம்’ என்பதே உண்மை. அதனால்தான் பிரபஞ்சன் “நீட் மிகவும் நல்ல தேர்வு, தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய நீட் அவசியம்” என்று பேட்டி கொடுக்கிறார்.

12ஆம் வகுப்பில் 1176\1200 எடுத்தபோதும், பிரபஞ்சன் போன்ற மாணவர்களுக்கு இருக்கும் “தகுதி” – அதாவது அரசு வேலைசெய்யும் பெற்றோர், சி.பி.எஸ்.சி.யில் படிக்கவும் பல லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து நீட் பயிற்சி பெற குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இல்லாத காரணத்தால்தான் அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

இத்தகைய ‘தகுதி’யை முன்வைக்கும் நீட் தேர்வை நாம் நியாயப்படுத்துகிறோமா. பிரபஞ்சனுக்கு வாழ்த்துச் சொல்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதைத்தான் செய்கிறார்கள்!


படிக்க: நீட் என்னும் அயோக்கியத்தனம்


இன்னும் சொல்லப்போனால், லட்சக்கணக்கான அனிதாக்களின் மருத்துக்கல்வி கனவை பறித்தெடுப்பதன் மூலம்தான் பிரபஞ்சன்கள் முதலிடம் பெறுகிறார்கள். இது தனிப்பட்ட ஒரு மாணவன் மீது காழ்ப்புகொண்டு முன்வைக்கும் வாதமல்ல; ஒரு சமூகப் பிரச்சினை! நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை யாருக்கானது என்பது பற்றிய பிரச்சினை.

பொத்தாம் பொதுவாக இது தமிழ் மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு எதிரானது என்பதல்ல பிரச்சினை. சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமையை நீட் தேர்வு பறித்துள்ளது என்பதுதான் பிரச்சினை. ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் நீட் தேர்வின் முடிவுகளும் இதை நமக்கு துலக்கமாகக் காட்டுகின்றன.

நீட் முன்வைக்கும் ‘தகுதி’: மீண்டும் அம்பலமானது!

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படிக்கின்ற அரசுப் பள்ளி மாணவர்களது நீட் தேர்வு பங்கேற்பும், தேர்ச்சி விகிதமும் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய 12,997 தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களில் 3,982 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதுகூட தமிழ்நாடு அரசு வழங்கிவரும் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு கிடைத்த பலனாகும். இந்த தேர்ச்சியும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டில், 12,840 அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 4,447 மாணவர்கள் வெற்றிபெற்றிருந்தனர். இதிலும்கூட வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிடுவதில்லை. அரசுக் கல்லூரிகள் கிடைக்கப்பெறாத பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தங்களது கனவுகளை தலைமுழுகுகின்றனர்.

பின், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் முன்னேறிவருவது யார்? இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று இந்திய அளவில் முதல் 50 இடங்களைப் பிடித்த 39 மாணவர்களிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய ஆய்வானது இந்த கேள்விக்கு பதில் வழங்குகிறது.

இந்த ஆய்வானாது நீட் தேர்வு பிரபஞ்சன் போன்ற மேட்டுக்குடி வகையறாக்களுக்கானதுதான் என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. அந்த ஆய்வின்படி, பிரபஞ்சனையும் சேர்த்து மொத்தம் 29 மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள். மேலும், 39 மாணவர்களில் 38 மாணவர்கள் நீட் தேர்விற்காக தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள்; ஒருவர் தனியாகப் பயிற்சி பெறவில்லையென்றாலும் டெல்லியின் புகழ்பெற்ற தனியார் பள்ளியொன்றில் படித்தவர்.

இந்த 39 மாணவர்களும், டெல்லி, புனே, சென்னை, கொல்கத்தா, நாக்பூர், கோட்டா, விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற பெரும் நகரப் பகுதிகளைச் சார்ந்தவர்கள். பணக்காரக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள். சாதிரீதியாகவும் இவர்களில் 29 மாணவர்கள் பொதுப் பிரிவைச் சார்ந்தவர்கள், 8 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், 2 மாணவர்கள் மட்டுமே பட்டியலின வகுப்பையும் சார்ந்தவர்கள்.

நீட் பறிப்பது மருத்துவக் கல்வியை மட்டுமல்ல!

எல்லாவற்றையும் தாண்டி நீட் தேர்வு என்பது அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, அரசு மருத்துவக் கட்டமைப்பை பாதுகாப்பது தொடர்பானது, மக்கள் நலன் மீது அக்கறைகொண்ட மருத்துவர்களை உருவாக்குவது தொடர்பானது.

இன்று நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டதாக தமிழ்நாடு விளங்குவதற்கும், சமூக ரீதியாக பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு கல்வியை கொண்டுபோய் சேர்ந்த தமிழ்நாட்டின் மக்கள் நல அரசுக் கொள்கைக்கும் தொடர்பிருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவக் கல்வியை தேர்வுசெய்த கடந்த தலைமுறைகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் உழைப்பினால்தான் இன்று தமிழ்நாட்டில் பெரும்பான்மை கிராமப்புறங்களிலும் ஆரம்ப சுகாதார சேவை கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், பல லட்சம் ரூபாய் முதலீடுசெய்து நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களால், மருத்துவத்தை சேவையாக கருத முடியுமா? அவர்கள் மலைக்கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவார்களா? தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஒரு செங்கலை நகர்த்தும் வகையிலாவது இவர்களின் செயல்பாடு இருக்குமா? நிச்சயமாக இருக்கப்போவதில்லை.

நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களின் கொள்ளைக்கானது மட்டுமல்ல, மக்கள் நல அரசு என்ற கொள்கையை கைவிட்டுவிட்டு 90களுக்கு பின்பு தனியார்மய – தாராளமயக் கொள்கையை பின்பற்றத் தொடங்கியுள்ள இந்திய அரசு, அரசு மருத்துவக் கட்டமைப்பை ஒழித்துக்கட்ட மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒருபகுதிதான் நீட் தேர்வு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

நீட் தேர்வு என்பதை தவிர்க்க முடியாது, அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்வதுதான் ஒரே தீர்வு என்பது இன்று ஏறத்தாழ அனைத்து நடுத்தர வர்க்கப் பெற்றோர்களது கருத்தாகவும் உள்ளது. நீட் தேர்வை எதிர்ப்பவர்கள்கூட, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், அரசு நீட் பயிற்சி மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைக்கத் தொடங்கிவிட்டார்கள். ‘வேறு வழியில்லை’ என்பதுதான் அவர்களது கருத்தாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டமும் முடிவில்லாத தொடர்கதையாகச் சென்றுகொண்டிருக்கிறது. 2017இல் அனிதா மரணத்தை ஒட்டி நடைபெற்ற மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைப் போல, மீண்டும் ஒரு மாணவர் எழுச்சி திட்டமிட்டு கட்டமைக்கப்பட வேண்டியிருக்கிறது. அதுதான் இந்த கையறுநிலையை முடிவுக்கு கொண்டுவரும்.


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

கலவரத்திற்கு பாஜக அரசுதான் காரணம்: மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ

1

ணிப்பூரில் மே 3-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்தக் கலவரம் தவிர்த்திருக்கப்படக்கூடியது. அரசு உடந்தையாக இருப்பதால்தான் இத்தனை நாட்களாகத் தொடர்கிறது” என்று மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ பாவோலியன்லால் ஹாக்கிப் (Paolienlal Haokip) கூறியுள்ளார். மணிப்பூர் பிரச்சினை குறித்து இந்தியா டுடே பத்திரிகையில் எழுதியுள்ள அவர் இதை வெளிப்படுத்தியுள்ளார்.

“முற்றிலும் இன-வகுப்புவாத கலவரமாகத் தொடங்கிய மணிப்பூர் வன்முறையை ’நார்கோ பயங்கரவாதிகளுக்கு’ (போதைப்பொருள் கும்பல்களுக்கு) எதிரான அரசின் போராக’ சித்தரிக்க முதல்வர் முயற்சி செய்தார். இதன்மூலம் இந்தக் கலவரத்துக்கு அரசும் உடந்தையாக இருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது” என்று ஹாவோகிப் தனது இந்தியா டுடே கட்டுரையில் எழுதியுள்ளார்.

”இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலையடிவாரத்தில் உள்ள குக்கி – ஜோ குடியிருப்புகளைத் தாக்கி எரிப்பதில் தீவிரமாகச் செயல்படும் மைதேயி வன்முறை குழுக்களுக்கு உதவுவதற்காக அரசுப் படைகளைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தவே ’நார்கோ பயங்கரவாதிகள்’ கதையாடல் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை” என்று பாவோலியன்லால் ஹாக்கிப் எழுதியுள்ளார்.

”இந்த இன வன்முறை, பழங்குடி குக்கி – சோ மக்களால் இத்தகைய கடுமையான அநீதிகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராகக் கருதப்படுகிறது; அதே நேரத்தில் மைதேயி பிரிவினர் இதைப் பழங்குடி நிலத்தை உரிமை கோருவதற்கான போராகப் பார்க்கிறார்கள்” என்று ஹவோகிப் மேலும் கூறியுள்ளார்.


படிக்க: மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தான் குற்றவாளிகள்!


“மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மைதேயி லீபுன் மற்றும் ஆரம்பாய் தெங்கோல் போன்ற பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ளார். இந்தக் குழுக்கள் குக்கி இன மக்களைத் துடைத்தெறிவதற்காகச் செயல்படும் குழுக்கள். ஒரு பக்கச்சார்பான அரசாங்கம் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும். மணிப்பூரில் இதுபோன்ற பாரபட்சம் எப்போதும் ஓரளவு இருந்தபோதிலும், தற்போதைய முதல்வரின் கீழ் அது அதிகரித்தது” என்றும் ஹாக்கிப் எழுதியுள்ளார்.

முன்னதாக, கடந்த மே மாதம் ஹாக்கிப் உள்ளிட்ட மணிப்பூரின் 10 பழங்குடி எம்.எல்.ஏ-கள் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கிற்குக் கடிதம் ஒன்றை எழுதினர். கடிதம் எழுதிய 10 பேரில் 7 பேர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள். அதில் அவர்கள், பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக இருக்கும் மைதேயி சமூகத்தால் இந்த வன்முறை நிகழ்த்தப்படுவதாகவும், ஆளும் மாநில பா.ஜ.க அரசாங்கத்தால் மறைமுகமாக ஆதரிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

அந்தக் கடிதத்தில் அவர்கள் குக்கி மக்கள் பெரும்பான்மை வகிக்கும் மாவட்டங்களுக்குத் தனி நிர்வாகத்திற்கான உரிமை வழங்கப்படவேண்டும் என்று கோரியிருந்தனர். அக்கோரிக்கையை நிராகரித்த முதல்வர் பிரேன் சிங், ”மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும்” என்று கூறியிருந்தார்.


படிக்க: மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!


நார்கோ பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளதாகக் கூறும் முதல்வர் பிரேன் சிங்கின் யோக்கியதையை முன்னாள் மணிப்பூர் போலீசு அதிகாரியான தௌனோஜம் பிருந்தாவின் (Thounaojam Brinda) நீதிமன்ற ஆவணம் அம்பலப்படுத்துகிறது. 2020-ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டிருந்த போதைப்பொருள் கும்பலின் தலைவரைக் (drug lord) காவலில் இருந்து விடுவிக்க பிரேன் சிங்கிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவர் அந்த ஆவணத்தில் கூறியிருந்தார். மேலும், பிரேன் சிங் அரசு தனக்கு வழங்கிய வீரதீர செயலுக்கான மாநில போலீஸ் பதக்கத்தை அவர் திருப்பி அளித்துவிட்டார்.

ஆளும் பாஜக அரசு குக்கி மக்களைத் திட்டமிட்டுத் தாக்கி வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு என்பதை மூடுதிரையாகப் பயன்படுத்தி காடுகளிலும் மலைகளிலும் இருந்து குக்கி மக்களை அகற்றும் பணியைச் செய்து வருகிறது. இதற்கான கருவியாக குக்கி மற்றும் மைதேயி மக்களுக்கு இடையிலான முரண்பாட்டை பயன்படுத்திக் கொண்டது. மேலும், குக்கி மக்களைக் கொன்று குவிக்கும் மைதேயி லீபுன் மற்றும் ஆரம்பாய் தெங்கோல் ஆகிய பயங்கரவாதக் குழுக்கள் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்டவை. இதன்மூலம், மணிப்பூர் கலவரம் என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலால்தான் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது.

மணிப்பூரில் ஆட்சி புரியும் பாசிச பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரே கலவரத்திற்கு பா.ஜ.க தான் காரணம் என்று கூறியிருக்கிறார். இனிமேலும் இந்த காவி கும்பலால் தனது கைகளில் இரத்தம் படிந்திருப்பதை மறைக்க முடியாது.


பொம்மி

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | திருவாரூர் – கோவை – விருதாச்சலம்

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

பற்றி ஏரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! என்ற தலைப்பில் மெய்தி இன வெறியர்களால் குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், மெய்தி – குக்கி ஆகிய இரு இன மக்களுக்கிடையே மத கலவரத்தை துண்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடைசெய்ய வேண்டும் என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 25) நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருவாரூர் மக்கள் அதிகாரத்தின் மாவட்ட பொருளாளர் தோழர் முரளி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்ட மக்கள் அதிகாரம், இந்திய பொதுவுடைமைக் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்,  SDPI,  மே 17 இயக்கம்,  M.C.ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு கண்ட உரையாற்றினார். 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இறுதியாக, திருவாரூர் மாவட்ட  மக்கள் அதிகாரத்தன் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசாத் அவர்கள் கண்டனம் உரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை வீழ்த்தாமல் வாழ்வில்லை என்பதை மீண்டும் மணிப்பூர் நிரூபிக்கிறது என்றார்.

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை உருவாக்க போராடுவோம்!

தகவல்:
மக்கள் அதிகாரம், திருவாரூர் மாவட்டம்

000

பற்றி எரியும் மணிப்பூர்; பற்றவைத்தது காவி;
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தடை செய்! |கோவையில் ஆர்ப்பாட்டம்

பாதிக்கபட்ட மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக கோவை மக்களிடம் பிரச்சாரம் செய்து,  மக்களுடன் இணைந்து கண்டனம் தெரிவிக்கபட்டது.

தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை- 94889 02202

000

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | விருதாச்சலத்தில் ஆர்ப்பாட்டம்

விருதாச்சலம் பாலக்கரையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக (21.07.2023) மாலை 5:30  மணி அளவில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் மோடி அரசை பதவி விலகக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் தோழர் அசோக் குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் மோகன்ராஜ், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ராஜேந்திரன், சி.பி.ஐ.எம்.எல் மற்றும் தோழர் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை என்று ஆர்ப்பாட்டம் முழங்கியது.

தகவல்:
மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம்.

பற்றி எரிகிறது மணிப்பூர் – கவர்மண்ட் வேடிக்கை பாக்குது! கொந்தளிக்கும் மக்கள்

பற்றி எரிகிறது மணிப்பூர் – கவர்மண்ட் வேடிக்கை பாக்குது! – கொந்தளிக்கும் மக்கள்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மணிப்பூர் கொடூரத்திற்கு எதிராக மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ந்தியாவையே உலுக்கிய கொடூரச் செயல்தான் மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த மனித தன்மையற்ற கொடூர சம்பவம். இந்த சம்பவமானது கடந்த மே நான்காம் தேதி மணிப்பூர் கலவரம் தொடங்கிய நாளன்று நிகழ்ந்தேறியது. தற்போது இந்த கொடூர சம்பவமானது 77 நாட்கள் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொடூரச் செயலை நிகழ்த்திய மெய்தி இனவெறியர்கள் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் கைக்கூலிகள்.

இக்கொடூர சம்பவத்திற்கு மணிப்பூர் மாநில போலீசு உடந்தையாக இருந்தது அம்பலமாகியுள்ளது. மூன்று மாதங்களாக பற்றி எரியும் மணிப்பூர் கலவரம் குறித்து பாசிஸ்ட் மோடி வாயைத் திறக்கவில்லை. 77 நாட்கள் பிறகு வெளிவந்த வீடியோவை கண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.

மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல ஜனநாயக சக்திகளும் பல கல்லூரி மாணவர்களும் போராட்ட தொடங்கியுள்ளனர்.

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மணிப்பூர் வன்முறைக்குக் காரணமான பாசிச மோடி அரசை எதிர்த்து இன்று (25.07.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பாசிச மோடி அரசைப் பதவி விலகுமாறு முழக்கமிட்டனர்.

தகவல்:
வினவு களச்செய்தியாளர்

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | மக்கள் நேர்காணல்

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | மக்கள் நேர்காணல்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சுங்கச்சாவடி நிர்வாகிகளை பணிய வைத்த திருமங்கலம் நகர மக்கள்

துரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் பெங்களூரு –  கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில், கடந்த 13 ஆண்டுகளாக சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. திருமங்கலம் நகர் எல்லையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் விதிமுறைகளை மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து, இந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்தது.

இந்த சுங்கச்சாவடி வந்ததிலிருந்து வாகன ஓட்டிகளுக்கும்  சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது மாதாந்திர அனுமதி சீட்டு (பாஸ்) எடுக்க வேண்டும் என தொடர்ந்து நிர்ப்பந்திக்கப்படுவதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. பொதுமக்கள் கட்டணம் செலுத்த மறுத்தால் திமிர்த்தனமாகவும், அடாவடியாகவும் நடந்து கொள்கின்றனர்.

மேலும் வேலையாட்கள் என்ற பெயரில் குண்டர்களை வைத்து ரவுடித்தனமாக நடந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு சுங்கச்சாவடியை வேறு நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் எடுத்தது. இந்த நிறுவனம் வந்ததிலிருந்து இந்த சுங்கச்சாவடி பிரச்சனை மீண்டும் அதிகமாகி உள்ளது. இதனைக் கண்டித்து 22/11/2022 அன்று திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் முழு கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அதன் விளைவாக உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை என நிறுவனம் ஒப்புக்கொண்டது.


படிக்க: பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! | ஆர்ப்பாட்டம் | மதுரை


சுங்கச்சாவடியில் இதற்கு பிறகு கடந்த சில மாதங்களாக மீண்டும் இப்பிரச்சனை தலைதூக்கியது. மீண்டும் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதனைக் கண்டித்து சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் வருகின்ற மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவித்தனர்.

அது தொடர்பாக இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சு வார்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் மு. சாந்தி தலைமை வகித்தார். சுமார் 2:30 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், கோட்டாட்சியர் ஆதார் அட்டையை காட்டி சுங்க கட்டணம் இல்லாமல் உள்ளூர் வாகனங்கள் செல்லலாம் என தெரிவித்தார். இது தவறும் பட்சத்தில் வருகிற மக்களவை தேர்தலை புறக்கணிப்போம், ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றுவோம் என்றனர் பொதுமக்கள்.

இந்த கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சனையில் நிரந்தரத் தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு, உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதே காரணம் எனக் கூறி வாகன ஓட்டிகள் ஆவேசம் அடைந்தனர். மேலும் பேச்சுவார்த்தை இழுபறியாக சென்று கொண்டு சுங்கச்சாவடி நிர்வாகம் இந்த பேச்சுவார்த்தைக்கு ஒத்து வராமல் இருந்ததால், பேச்சுவார்த்தை நிறைவடைந்து வெளியே வந்து வாய்மொழியாக அறிவித்து விட்டு வெளியேற முயற்சித்தனர்.

வாய்வழியாக வந்த எந்த உத்தரவையும் இந்த சுங்கச்சாவடி நிர்வாகம் மதித்ததேயில்லை. எனவே வெளியே  வந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் நாகராஜனின் காரை போராட்டக் குழுவினர் சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது இதை எடுத்து திட்ட இயக்குனர் மீண்டும் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குள் சென்றனர் இதனைத் தொடர்ந்து காரை சிறைப் பிடித்தவர்களிடம் திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கார் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து திட்ட இயக்குனர் மற்றும் சுங்கச்சாவடி மேலாளர் புறப்பட்டு சென்றனர்.


படிக்க: பற்றி எரிகிறது மணிப்பூர் | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நேரலை!


மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது பொதுமக்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் வெளியில் இருந்து தொடர் முழக்கம் போடப்பட்டது. இது கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகத்தையும், அதிகாரிகளை கோரிக்கைக்கு பணிய வைக்கும் வகையில் அமைந்தது. இதில் எஸ் கே எம், சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் நாகராஜ் மற்றும் தோழர் பரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாலைகளை தனியார்மயப்படுத்தி நாடெங்கும் உள்ள சாலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதால் அன்றாடம் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். அடிக்கடி வரும் இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு மக்கள் போராட்டங்களால்  அவ்வப்போது தீர்வுகள் கிடைத்தாலும், சாலைகளை தனியாரிடமிருந்து அரசு கட்டுப்பாட்டிற்கு வந்தாலொழிய இம்மாதிரியான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது.

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

24.07.2023

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்ளிட்ட
24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

மக்கள் அதிகாரம் கண்டனம்

2019-ல் கும்பகோணம் மாவட்டம் திருபுவனம்  ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்று கூறி நேற்றைய தினம் தமிழ்நாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக்  – இன் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை செய்துள்ளது .தேசிய புலனாய்வு முகமை நடத்திய இந்தச் சோதனையின் போது பாசிச பாஜக ஆர் எஸ் எஸ் – க்கு எதிராக செயல்படுபவரை அச்சுறுத்துவதற்காக மட்டுமே.

அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட துறைகள் பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிரானவர்களை ஒழித்துக் கட்டுவதற்காகவே இயங்குகின்றன. 2019 இல் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக தற்பொழுது 24 இடங்களில் சோதனை செய்வது என்பது தேசிய புலனாய்வு முகமையின் அடுத்த கட்ட சதித்திட்டமாகும். இதனை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

மேலும் தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய தேசிய புலனாய்வு முகமை அலுவலகங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321

ஜூலை 23: மாஞ்சோலை படுகொலை நாள் | தோழர் ராமலிங்கம்

ஜூலை 23: மாஞ்சோலை படுகொலை நாள் | தோழர் ராமலிங்கம்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!