Friday, June 26, 2026
முகப்பு பதிவு பக்கம் 155

Thriving Fascists: Betrayal of ‘Socialists’!

In the past month or two, we can observe the trend that the fascist forces are gaining strength in the elections held in the USA, Italy, Israel, France, Sweden and Brazil. This trend is terrifying not only to the working class of these countries but also an issue of concern at the international level.

We know that the fascist forces are growing rampantly as a result of crises caused by imperialism. At the same time, the ruling class parties with the ‘democratic’, ‘socialist’ masks were responsible for the gaining of support to the fascist forces among the masses. We can observe this in every country mentioned above!

Italy: Mussolini’s heirs in power!

In October 1922, fascist Mussolini came to power in Italy. Exactly, hundred years later, his heirs have come to power. The results of the general elections were declared on October 2022. The coalition led by Brothers of Italy (Fratelli dItalia, FDI) had won the elections with 46 percent vote share. The party’s President Giorgia Meloni has become the Prime Minister of Italy.

FDI, which got only 4 percent votes in 2018, has now got 26 percent votes. The infiltration of neo-Nazi fascist groups in the State machinery and the society is the reason for their rapid growth. Moreover, Meloni is from the youth wing of Movimento Sociale Italiano (MSI), a direct descendant of Mussolini’s Fascist Party.


Also Read: Har Ghar Tiranga: The patriotic makeover of the fascists!


MSI is full of violent fascists. This party has close ties with neo-Nazi groups such as Casapound.

This fascist mob seized power by utilizing the economic crises which lasted for a long time in Italy, and the anti-incumbency against the ruling party. They hid the truth that the pro-corporate economic policies of the government were responsible for the country’s economic crises, and created and propagated a mirage that the immigrants – refugees were responsible for the crises. The party is maintaining the fascist motto ‘God – Family – Fatherland’, which was used during the times of Mussolini.

The tormenting thing is that a part of the Italian proletariat has fallen prey to the vicious campaign of the fascists. The failure of pseudo-communist parties like Rifondazione Comunista in propagating the class politics among the workers, and indulging in treachery by forming alliances with the ruling class parties form the basis for the growth in sphere of influence of the fascists.

France, Sweden: Emergence of neo-Fascists

Similar to that of France, the influence of the fascist mobs is on the rise in France and Sweden too. Though these mobs failed to capture power in the recently held parliamentary elections, they had increased their sphere of influence among the people. The election results also reflect this.

Sweden Democrats party was established by neo-Nazis. They propagate anti-Semitism to gain foothold. In France, National Rally party led by Marine Le Pen is a fascist party. Its base among the people is on the rise. It is harvesting the anti-Muslim mentality which emerged among the people as a result of 2015 Paris attacks by the ISIS terrorists.

Projecting the immigrants as the reason for the prevailing unemployment is the general tactics employed by the fascists worldwide. Sweden Democrats and France’s National Rally use this tactic well. When a black member of the lower house was speaking about the dangers faced by the migrants, an MP belonging to the fascist far-right shouted “Go back to Africa”. The actions of these fascist mobs indicate us that these hate speeches against the immigrants could soon turn into violent attacks.

Israel: Zionist Fascism!

In the recently held Israeli legislative elections, Benjamin Netanyahu again became the Prime Minister by forging an alliance with the Zionist – Fascist party “Religious Zionism”. Alliance with the fascists will intensify the attack on the Palestinians by the Zionists.

Netanyahu himself is a Jewish fanatic. He retained power for 12 years continuously by using Jewish fanaticism. Bennett and Lapid, who captured power in 2021 also Jewish fanatics.

The Bennett mob, which seized power by forming a potential coalition of colourful arrays with the pseudo-communists, United Arab List and far-right parties, did not last long. The lost Netanyahu indulged in intense Jewish fanatical campaigning. He campaigned against Bennett government’s approval on a plan to employ Palestinian workers. As a result, Knesset (Israeli parliament) coalition whip Idit Silman accused Bennett’s government of “damaging Israel’s Jewish character” and left the coalition government.


Also Read: Saffron Fascism oppressing the Minorities!


No one voted against the dissolution motion in the Knesset. Even the parties in the ruling coalition were in favour of dissolving the government, as they can’t tackle the discontent of the people.

All the regime changes that took place in Israel were expressions of dogfights among the Jewish fanatics. Jewish fanaticism against the Palestinians is averting the people from the real issues like degrading living standards and increasing inequality. This has become a trend.

The fascists, who have now joined hands with Netanyahu, are trying to take over the power of the judiciary by reducing and concentrating power in the hands of the lawmakers by using parliamentary democracy as a means to bring about fascist autocracy.

America: Fascism spreading like raging fire!

Trump-led white racist fascist mob in the United States is waiting like a bloodthirsty wolf in order to seize power once again. Although the Biden-led Democratic Party won the recently held Senate election, the Trump-led Republican Party retained 20 of the 21 seats it had already held. It won more seats than the Democratic Party in the elections to the House of Representatives.

As a result of this, Trump announced that he will be running for the 2024 presidential elections. The democratic tradition followed in the United States is to hold an internal election and announce the presidential candidate. But, Trump has announced himself as the presidential candidate, ahead of the internal election, in order to reap the support he has developed among the people. He has been inducing jingoism and campaigning about his decision to run for president; he said “America’s comeback starts right now”.

Various white supremacist outfits like Proud boys, Ku Klux Klan, Neo-Confederate, Neo-Nazi, Racist Skinhead, Christian Identity are unanimously supporting Trump.

The social media campaigning of the pro-Trump white supremacist fascist mob has increased drastically since the attempted coup in the Capitol in Washington on January 6, 2021. As of August 2022, Meta has announced that it has detected and removed 750 social media accounts, pages and groups that spread fascistic ideas on Facebook and Instagram. But in reality, the activities of fascists cannot be controlled by only imposing restrictions on social media.

Brazil: Lula’s victory is only temporary!

Fascist Bolsonaro’s defeat and Lula’s victory in Brazil’s recently held presidential election is being hailed by pseudo-communists around the world as a significant victory.

However, Bolsonaro received 49.1 percent of the votes, even after his anti-people actions such as negligence in handling the corona pandemic, which has resulted in the deaths of seven lakh people, burning much of the Amazon forests and evicting tribals, and reducing welfare spending.


Also Read: The Working People pushed towards Catastrophe by the Fascist Modi Regime!


Though Lula won the presidential election, Bolsonaro’s party has got the majority in the parliamentary and gubernatorial elections (elections for the post of Governor). In order to regain power, the Bolsonaro clique may use it to block Lula’s election promises from being delivered and cause disaffection with the ruling coalition.

Bolsonaro, who propagates evangelical Christian fanaticism, has a huge support among the evangelical denominations. So, in order to gain the support of the evangelical Christians during the election campaigns, Lula spoke in support of their religious doctrines. This is the true face of the so called ‘leftist’ Lula.

The ruling coalition parties that have joined hands to oppose Bolsonaro are also unprincipled survivalist parties. It is more likely that these political parties would leave the alliance any time.

In addition, there is a possibility that the violent evangelical Christian fanatics, at the instigation of the Bolsonaro mob, may engage in riots against minorities. Following Brazil’s election result, evangelical Christian fanatics called for a military coup and violent upsurge on social media. They indulged in anti-Communist pro-dictatorship campaigns with slogans such as “We are not thugs; We are Brazilians fighting for your freedom”, “Military intervention or communism!”, “Nothing changes in this country without military intervention!” and so on. Therefore, Lula’s success is similar to a bubble!

Let’s tear off fascists’ masks!

Fascist mobs are seizing power in many countries around the world. Whether it is the extreme right-wing reactionary cliques or a section of the ruling class under the guise of socialists, democrats and communists, they have made the recolonizational policies of privatization–liberalization–globalization as their policy.

But with the aggressive implementation of the recolonizational policies, the livelihoods of the people are being further deteriorated. Concealing that the pro-corporate policies are responsible for the deprivation of the people’s livelihoods, far-right fascist cliques are seeking to return to power again by inducing racism, jingoism, religious and ethnic hatred.

The mobs guised as protectors of democracy are implementing these recolonizational policies. But they pretend to be opposing them. Moreover, they are submerged in corruption. It is this degeneration and treachery that forms the basis for the rise and capturing of power by the fascists. Let our fight against fascism begin with tearing off the masks of these opportunistic parties!

Ameer

கோவை சட்டக்கல்லூரி: நிர்வாகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம்!

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர் மீது பொய் வழக்கு!
அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து மாணவர்கள் போராட்டம்!

கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எல்.எல்.எம் படிக்கும் மாணவி ஹரிதா அதே கல்லூரியில் கடந்த மே மாதம் எல்.எல்.பி படிப்பை முடித்தார். எல்.எல்.பி முடித்ததற்கான மாற்றுச் சான்றிதழைக் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். கல்லூரி நிர்வாகம் மாணவியின் மாற்றுச் சான்றிதழை தொலைத்துவிட்டு “மாற்றுச் சான்றிதழ் எங்களிடம் இல்லை உங்களிடம்தான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறது.

ஹரிதாவின் கணவர் சேக் முகமது இதே கல்லூரியில் எல்.எல்.பி படித்து வருகிறார். அவர் தன் மனைவியின் சான்றிதழை நிர்வாகத்திடம் கேட்டதற்கு அவர் மீதும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை வெறி தாக்குதல் நடத்துதல் (இ.பி.கோ பிரிவு 353, 506(1), 109) உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். அதுமட்டுமில்லாமல் ஷேக் முகமது, ஹரிதா தம்பதியைக் கல்லூரி முதல்வர் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.

தங்கள்மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகக் கூறும் இவர்கள் சி.சி.டி.வி ஆதாரங்களைக் கேட்டதற்கு சி.சி.டி.வி செயல்படவில்லை எனக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. ஏற்கனவே ஷேக் முகமது இக்கல்லூரியின் மீது பல ஆர்.டி.ஐ-களை பதிவு செய்துள்ளார்.


படிக்க: கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!


ஷேக்-ஹரிதா ஆகிய இருவரையும் தனிப்பட்ட முறையில் பலி வாங்கும் நோக்கத்தோடு கல்லூரி நிர்வாகம் அவர்கள் மீது அராஜக போக்கைச் செயல்படுத்தி வருகிறது என்று குற்றம்சாட்டி இக்கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி 21.02.2023 அன்று மதியம் 2 மணியிலிருந்து விடிய விடிய நான்கு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர் மீது போட்ட பொய் வழக்கைத் திரும்பப் பெறுதல், இரண்டாம் ஆண்டு எல்.எல்.பி படிக்கும் தரணிஷ் உட்பட மூன்று பேரின் இடைநீக்கம் ரத்து செய்ய வேண்டும், மாணவர்கள் மீது குற்றசாட்டு வந்தால் விசாரணைக் குழுவில் கூற வேண்டும், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் மீது பிற்காலத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் கல்லூரி நிர்வாகம் எடுக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கோவை டி.எஸ்.பி-யுடன் மாணவர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை.

இரவு நடந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை மூடிவிட்டது கல்லூரி நிர்வாகம். கோவை சட்டக்கல்லூரி நிர்வாகத்தில் மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்தும், போராடும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டின் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் குரல் கொடுக்கவேண்டியது அவசியம்.

உலக தாய் மொழி தினம் – இந்தி திணிப்பை எதிர்ப்போம்! | தோழர் செல்வம்

பிப்ரவரி 21 என்பது உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ-ஆல் அறிவிக்கப்பட்ட நாள். பாகிஸ்தானும் வங்கதேச மக்களும் ஒன்றாக இருந்தபோது உருது மொழி ஆதிக்கம் பாகிஸ்தானால் திணிக்கப்படுகிறது. மொழி திணிப்புக்கு எதிராக போராடிய வங்கதேச மக்களை பாகிஸ்தான் அரசு சுட்டுக் கொள்கிறது. அதைப் போற்றும் விதமாகத்தான் உலக தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்களின் எழுச்சி தான் இந்தியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை கற்போம்! | Communist Manifesto | தோழர் ஆ.கா.சிவா

பிப்ரவரி 21 இன்றைக்கு ஒரு மகத்தான நாள். வரலாற்றில் ஏறக்குறைய 175 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (Communist Manifesto) மார்சிய ஆசான்களால் வெளியிடப்பட்டது. தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏனைய உழைக்கும் மக்களுக்கும் விடுதலைக்கான ஒரு கலங்கரை விளக்கம்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.

மேலும்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஏழை மாணவர்களை அச்சுறுத்தும் ஐ.ஐ.டி தொடர் மரணங்கள்!

ந்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT)-களில் தொடரும் சாதியப் பாகுபாடு, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் பார்ப்பனிய திமீரை அடக்காமல் இப்பிரச்சினை தீராது.

சாதியை நேராக சொல்லி தீட்டித்தான் ஒடுக்க வேண்டும் என்பதல்ல. உயர்சாதியினரின் அனுகுமுறை, பழக்கவழக்கம், அன்றாட நடவடிக்கை இவைகளே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மாணவ / மாணவிகளை மன உளச்சலுக்கு ஆளாக்கும்.

தான் ஏதோ ஒரு வகையில் தனிமைப்படுத்தப்படுகிறோம் ஒதுக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொண்டு இப்படி வாழ்வதற்கு தற்கொலையே செய்துகொள்ளலலாம் என முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டவர்கள்தான் இங்கு அதிகம். இப்படி பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினரை தவிர யாரும் படிக்கமுடியாத, படிக்கக் கூடாத இடமாக இந்த தொழில்நுட்ப கழகங்கள் திகழ்ந்து வருகின்றன. இவற்றையெல்லாம் பேசாமல் வெறும் மாணவர்களின் இறப்பை மட்டும் பேசி கடந்துபோவதென்பது நமக்கு எந்த ஒரு இறுதி முடிவையும் தராது.

கடந்த 2014 முதல் 2021 வரை ஐஐடிகள், ஐஐஎம்கள், மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் பிற மத்திய நிதியுதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இப்படி தற்கொலை செய்து கொண்ட 122 மாணவர்களில் 24 பேர் தாழ்த்தப்பட்ட பட்டியல் வகுப்பினர். 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். 3 பேர் பட்டியல் பழங்குடியின மாணவர்கள். மேலும் 10-க்கு மேற்ப்பட்டவர்கள் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள். இப்படி ஒட்டுமொத்த சமுதாயத்தில் ஒரு பாதி பிரிவினரையே கொன்று விட்டு அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு மேலும் பல கொலைகளை அரங்கேற்றி கொண்டுறிக்கிறது பார்ப்பன கும்பல். அந்த வரிசையில் தற்போது ஐ.ஐ.டி.களில் அடுத்தடுத்த தற்கொலைகள் தொடர்ச்சியாக நிகழந்த வண்ணம் உள்ளது.

படிக்க : டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

குறிப்பாக ஒரிரு நாட்களுக்கு முன்பு மும்பை ஐஐடி-யில் பி.டெக் படித்துவந்த தர்ஷன் சோலங்கி(18) என்ற மாணவர், தான் தங்கியிருந்த விடுதியின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பட்டியலின மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஐஐடி-யில் சேர்ந்து படிக்க தொடங்கியிருக்கிறார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தற்கொலை பற்றிய எந்த கடிதமும் எழுதி வைத்திருக்கவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் போலீசு, இத்தற்கொலையை விபத்து மரணம் என்று வழக்கு பதிவுசெய்தன.

ஆனால் ஐஐடி-யில் படிக்கும் சக மாணவர்கள் இங்கு சாதியப் பாகுபாடு அதிகமாக உள்ளது. அந்த மன உளைச்சலின் காரணமாகத் தான் தர்ஷன் தற்கொலை செய்துகொண்டான் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அவனது குடும்பத்தாரிடம் சில நாட்களுக்கு முன்பே விடுதியில் நடக்ககூடிய சாதியப் பாகுபாட்டை கூறி கவலைப்பட்டுள்ளார். இந்நிலையில்தான் தற்போது தற்கொலையும் செய்துகொண்டார் என்பது வெளிப்படையாகவே நமக்கு தெரிகிறது.

இது தொடர்பாக ஐஐடி-யில் செயல்படும் அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டம் வெளியிட்ட அறிக்கையில், “இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஒரு கல்வி நிறுவனப் படுகொலை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் புகார் கொடுத்திருந்த போதிலும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மாணவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை நிர்வாகம் ஏற்படுத்தவில்லை. இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் இவர்கள் தகுதியற்றவர்கள் என்று கூறி முதலாம் ஆண்டு மாணவர்களை மிகவும் துன்புறுத்துகின்றனர். கல்வி நிறுவன வளாகத்தில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் பிரதிநிதித்துவம் மற்றும் கவுன்சிலர்கள் இல்லாததும் இதற்கு ஒரு காரணம். பட்டியலின மாணவர்கள் கல்லூரி வளாகங்களிலேயே பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற உண்மையை மறைக்க முடியாது” என்று அதில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அதற்கு அடுத்தப்படியாக ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.ஐ.டி) மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

படிக்க : ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!

பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவி 13.02.2023 அன்று தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தது மாணவர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் மாணவி மரணம் குறித்து சக மாணவர்களே இது தற்கொலை அல்ல. அந்த மாணவி அவ்வாறு முடிவெடுக்க வாய்ப்புகள் இல்லை என பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கும் நிலையில் போலீசு பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தை உரியமுறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இப்படி தற்கொலைகள் நீண்டு வந்த நிலையில் நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அமைந்தது சென்னை (ஐஐடி) மாணவர்கள் இருவரின் தற்கொலை முயற்சி மற்றும் இறப்பு. மெட்ராஸ்(ஐஐடி) வளாகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்துததும் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

படிப்பில் சிறந்து விளங்கியவரான ஸ்ரீவன் வன்னி என்பவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். பின்பு சக மாணவர்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போலீசுத்துறையினர் அவ்வுடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர்.

இப்படி அனுதினமும் தற்கொலைகள் தொடர்கிறது. இதை சாதாரண செயலாக எண்ணி கடந்து செல்வது என்பது இனி நம் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு அல்ல அதை நினைப்பதற்கே பயம் கொள்ளும் நிலைமையே நோக்கி செல்லும். அதுமட்டுமல்லாமல் கல்வி என்பதோ கல்விக்கூடம் என்பதோ உயர்சாதியினரின் சொத்தாக மாறி, நம்மை போன்ற உழைக்கும் மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும். தொடரும் இத்தகைய போக்கை அனுமதிக்க போகிறோமா அல்லது அவர்களின் உயர்சாதி பார்ப்பன கொட்டத்தை அடக்க போகிறோமா என்பதில்தான் இருக்கிறது இப்பிரச்சினைகளுக்கான தீர்வு.

டேவிட்

பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்! | தோழர் அமிர்தா | வீடியோ

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ் லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்!

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுக் கருத்துக்களை, எதிர்ப்புக் கருத்துக்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே பாசிச ஏபிவிபி குண்டர்கள் மாணவர்களை தாக்கி வருகின்றனர்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

Portraits of Marx, Lenin, Periyar, Phule vandalized in the JNU! | People’s Power Condemns

20.02.2023

Portraits of Marx, Lenin, Periyar, Phule vandalized in the JNU!

Let’s put an end to the atrocities of fascist RSS – ABVP goons!

People’s Power condemns!

The portraits of Marx, Lenin, Periyar, Phule installed at the students’ union office of the Jawaharlal Nehru University in Delhi are vandalized by the RSS’s student arm ABVP. The gathered ABVP members wrote on the wall that “communists be hanged” and “Savarkar”. They attacked the Tamil students who questioned this.

The students of the JNU have been continuously protesting against the fascistic actions of the Modi government. The fascist ABVP goons are attacking the students in order to eliminate the dissent.

The fascist mob which attacked the Kerala students a few days ago is now attacking the Tamil students. The students who propagate leftist thoughts are being threatened and the portraits of Marx, Lenin, Periyar, Phule are vandalized. People’s Power strongly condemns this.


Also Read: Conspiracy to reopen the murderous Sterlite! Let’s support the struggling Tuticorin people! | People’s power


People’s Power is demanding for the dismissal of the goons who attacked the Tamil students, and to ban the fascist ABVP in the JNU.

BJP and the RSS’s student arm ABVP were never ordinary political outfits. They are fascist outfits. Annihilating democratic and revolutionary thoughts is their primary obligation. People’s Power is demanding the Tamil Nadu government to ban the fascist organizations including RSS, BJP and ABVP.

With Comradeship,
Comrade Marudhu,
Spokesperson,
People’s Power.
Contact : 99623 66321

நினைவில் கொள், இது தமிழ்நாடு! தீரனும் திப்புவும்

நினைவில் கொள், இது தமிழ்நாடு! தீரனும் திப்புவும்

மது ஒழிப்பு போராளி தியாகி சசிபெருமாளின் பிறந்த நாளான இன்று பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் தோழர் சுந்தர். அதில் கலந்து கொண்ட பிறகு தாம்பரம் செல்லும்  ரயிலில் ஏறினேன்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆறு பேர் ஏறி எனது இருக்கைக்கு அருகில் அமர்ந்தனர். பொதுவாகவே தமிழர் அல்லாதவர் என்றாலே நான் விரும்பி பேச ஆரம்பிப்பேன். அவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் பண்பாடு, உணவு முறை, தமிழ்நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இப்படி பலவற்றை நான் பலரிடமும் விவாதித்து இருக்கிறேன். இன்றைக்கு கிடைத்தது வித்தியாசமான அனுபவம்.

அந்த ஆறு பேரும் கர்நாடகாவின் மங்களூரைச் சேர்ந்தவர்கள். அனைவரும் சுமாராக 40 வயதுகளில் இருப்பவர்கள். நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். தி நகரில் உள்ள போத்தீஸுக்கு செல்வதற்காக வந்திருக்கிறார்கள்.

படிக்க : இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!

என் எதிரில் அமர்ந்திருந்தவரிடம் “திப்பு சுல்தான் மங்களூரை ஆட்சி செய்தாரா?” என்று கேட்டேன்.

அதற்கு பதில் இன்னொருவர் சொன்னார் “இல்லை. சிவாஜி ஆட்சி ஆட்சி செய்தார்”

அவர்களில் இருந்த இன்னொருவர் “சிவாஜி மகாராஷ்டிராவை ஆட்சி செய்தார்” என்று கூறி யாரோ ஒரு அரசியல் பெயரை சொன்னார்.

மங்களூரை சிவாஜி ஆட்சி செய்ததாக கூறிய நபர், தனது கட்டை விரலை கீழ்நோக்கி காட்டியவாறு “திப்பு கெட்டவர்” என்றார்.

“உனக்குத் திப்புவின் வரலாறு சரியாக தெரியாது” என்றேன்.

“எனக்கு திப்புவின் வரலாறு தெரியும். அவர் கெட்டவர்” என்றார்.

“உன் வரலாறு மட்டும் அல்ல நீயும் சரியானவர் அல்ல” என்றேன்.

“உன்னுடைய பெயர் என்ன?” என்றான்.

என்னுடைய பெயரை சொன்னேன். இரண்டு மூன்று முறை அவன் உச்சரித்துப் பார்த்தான்.

“நீ என்ன இந்துவா? முஸ்லிமா?” என்றான்.

“நான் என்ன மதம் என்று கூறினால்தான் பதில் சொல்வாயா?” என்றேன்.

“திப்பு சுல்தான் நிறைய இந்துக்களை கொன்றிருக்கிறார் உனக்கு தெரியுமா?” என்றான்.

“திப்பு இந்துக்களைக் கொன்றதற்கான சான்றுகளை ஏதாவது இருக்கிறதா? தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் அவர் ஆட்சி செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் அவர் எந்த ஒரு இந்துவையும் கொன்றதற்கான கதைகளும் கிடையாது, சான்றுகளும் கிடையாது. ஏதாவது டாக்குமென்ட்(ஆதாரம்) இருந்தால் கொடு” என்றேன்.

படிக்க : பாசிச எதிர்ப்பு – க்ரியா ஊக்கிகளும், நவீன அராஜகவாதிகளும் – ஒரு பார்வை

“உனக்கு திப்பு சுல்தானையும் தெரியாது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி கொண்டு போய் திப்புவுக்கு ஆதரவாக போர் செய்த தீரன் சின்னமலையையும் உனக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு எல்லாம் தெரியும். அந்த உண்மை தெளிவாக புரியும். திப்பு சுல்தானும் தீரன் சின்னமலையும் எங்கள் தலைவர்கள்” என்றேன்.

வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தான்.

“நினைவில் கொள், இது தமிழ்நாடு!” என்றேன். அதற்குப் பிறகு அவன் என் கண்களை பார்க்கவே இல்லை.

(அவர்களோடு ஆங்கிலத்தில் நடந்த உரையாடல் இது)

– மருது

அருந்ததியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் சீமான்! | தோழர் மருது | வீடியோ

அருந்ததியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் சீமான்!
தேர்தல் ஆணையமே, நாம் தமிழர் கட்சியை தடை செய்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், சாட்டை துரைமுருகனும் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும். அந்த நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைதேர்தலுக்காக திட்டமிட்டு சாதிய வன்முறையை உருவாக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்த கட்சியும் தடைசெய்யப்படவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கூறுகிறது.

அருந்ததியர் சாதி மக்கள் மீது சீமானும் சாட்டை துரைமுருகனும் பாய்ந்திருக்கிறார்கள். தமிழர்களை பிரித்து பிரித்து வேட்டையாடுகிற ஓநாய்களாகவே இவர்கள் இருவரும் செயல்படுகிறார்கள்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

டெல்லி ஜே.என்.யூ.வில் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய, ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!

0

டெல்லி ஜே.என்.யூ.வில்
தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய,
ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!

பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் படங்களை
வைத்துப் போராடினால் உனக்கு ஏன் எரியுது?

ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் பெயரை மாற்றும் என்கிறார்.
ஏபிவிபி கும்பலோ தமிழ்நாட்டு மாணவர்களை தாக்குகிறது.
இந்தத் திமிர் பிடித்த பாசிச கும்பலை விரட்டியடிப்போம்.

காவி பயங்கரவாத குண்டர் படையான
ஏபிவிபி-யை தடை செய்ய போராடுவோம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – 9444836642

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

20.02.2023

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில்
மார்க்ஸ் லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு!

பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்!

கண்டன அறிக்கை!

டெல்லி ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில், ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் பாசிச குண்டர்கள் மாணவர் மன்றத்திலிருந்த மார்க்ஸ், லெனின் மற்றும் பெரியார், பூலே ஆகியோரின் படங்களை உடைத்திருக்கிறார்கள். மேலும் ‘இங்கு கம்யூனிசம் பேசக்கூடாது’ என்றும் ‘சாவர்க்கர்’ என்றும் எழுதி இருக்கிறார்கள். இதனை தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர்களையும் தாக்கியிருக்கிறார்கள்.

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுக் கருத்துக்களை, எதிர்ப்புக் கருத்துக்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே பாசிச ஏபிவிபி குண்டர்கள் மாணவர்களை தாக்கி வருகின்றனர்.

படிக்க : அசைவ உணவு சாப்பிட்ட ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !

சில தினங்களுக்கு முன்பு கேரள மாணவர்களை தாக்கிய பாசிச கும்பல், இப்போது இடதுசாரி கருத்துக்களை பேசக்கூடாது என்றும் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே உள்ளிட்டோரின் படங்களை உடைத்தும் தமிழ்நாட்டு மாணவர்களை தாக்கியும் உள்ளது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டு மாணவர்களை தாக்கிய குண்டர்களை உடனே பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாசிச ஏ.பி.வி.பி அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

வழக்கம் போன்றதொரு கட்சியாக பாஜகவும், மாணவர் அமைப்பாக ஏ.பி.வி.பி.யும் எப்போதும் இருந்ததில்லை. அது ஒரு பாசிச கும்பல், ஜனநாயக மற்றும் முற்போக்கு புரட்சிகர கருத்துக்களை ஒழித்து கட்டுவதே அதன் முதல் வேலை. ஆகவே ஆர்.எஸ்.எஸ், பாஜக, ஏபிவிபி போன்ற பாசிச அமைப்புகளை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது
செய்தி தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

வேங்கைவயல் சம்பவம்: எது தேசிய அவமானம்?

றையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்கத் தொட்டில் சாதி வெறியர்களால் மலம் கலக்கப்பட்ட செய்தி பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. தமிழ்நாடு “பெரியார் மண், சமூகநீதியின் மண்” என்று பேசப்படும் சூழலில் இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற செயல் நடைப்பெற்றிருக்கிறது. இதைப்பற்றி கருத்து தெரிவித்த சனநாயக இயக்கங்கள் யாவும் இதை “மனித தன்மையற்ற செயல்” என்றும் “தேசிய அவமானம்” என்றும் கண்டித்துள்ளனர். ஆனால், இது தமிழகத்தில் நடந்த முதல் தேசிய அவமானம் இல்லை என்பதை நாம் பார்க்கத் தவறக்கூடாது.

2002 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திண்ணியம் கிராமத்தில் முருகேசன் மற்றும் ராமசாமி ஆகிய இருவர் மனித மலத்தை உண்ணும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். மதுரை மேலஊரப்பனூரில் கடந்த 2003-ஆம் ஆண்டு முத்துமாரி என்ற பெண் மீது மலம் கலந்த தண்ணீர் ஊற்றப்பட்டது. 2004-ஆம் ஆண்டு சங்கன் என்ற நபரை சிறுநீர் குடிக்க வைத்தனர். 2019-ஆம் ஆண்டு, திருவாரூர் மாவட்டம் திருவாண்டுதுறை கிராமத்தைச் சேர்ந்த கொல்லிமலை என்ற நபருக்கு மனித மலத்தை வலுக்கட்டாயமாக ஊட்டி, அவரது உடலில் குற்றவாளிகள் சிறுநீர் கழித்தனர். கடந்த 10 ஆண்டுகளில், இதுபோன்ற 20 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் இதுபோன்ற குற்றங்களில் தண்டனை விகிதம் தமிழ்நாட்டில் 5-6% மட்டுமே.

யதார்த்த நிலை இப்படியிருக்க, “சாதி அமைப்பிற்கு எதிரான போராட்ட மரபை கொண்ட தமிழ்நாடு” என்று பெருமை பேசுவதில் எந்தப் பயனுமில்லை. சாதிக்கு எதிரான வலுவான போராட்ட மரபை கொண்ட சமூகத்தில் ஏன் தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கிறது என்பதுதான் கேள்வி.

சாதிய வன்கொடுமைகள் மற்றும் தீண்டாமையின் தீவிரத்தன்மை பற்றி, அது ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்கள் பற்றி இந்த ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் எந்த அக்கறையுமில்லை. அதனால் தான் தொட்டியை சுத்தம் செய்த அதிகாரிகளுக்கு குழாய்களிலும் மலம் கலந்த நீரின் பாதிப்பு இருக்கும் என்ற எளிய உண்மை தெரியவில்லை. குழாய்கள் மாற்றப்பட இரண்டு வாரங்கள் ஆயிருக்கிறது.


படிக்க: வேங்கை வயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு! | மக்கள் அதிகாரம்


“ப்ளீச்சிங் செயல்முறையின் மூலமாக தொட்டி மற்றும் குழாய்களில் உள்ள கிருமிகளை அவர்கள் சுத்தம் செய்ததாக நினைக்கிறார்கள். ஆனால் நான் ஒவ்வொரு முறையும் கோப்பைத் தேநீரை என் வாயில் கொண்டு வரும்போதெல்லாம், அந்த மலம் கலந்த அசுத்தமான தொட்டியும், அதிலிருந்து நான் குடித்த தண்ணீரும் தான் நினைவுக்கு வருகிறது? இதற்கு அரசு என்ன செய்யப் போகிறது?” என்று கேட்கும் எளிய மக்களின் கேள்வி இந்த ஆட்சியாளர்களுக்கு புரிவதே இல்லை‌. அது புரிந்திருந்தால் இந்நேரம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.

மலம் கலந்த மனிதத்தன்மையற்ற குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்க முயற்சிக்கிறது போலீஸ். அதையும் சனநாயக இயக்கங்கள் தான் தங்களின் போராட்டங்கள் மூலம் அம்பலப்படுத்தியிருக்கின்றன. “தேசிய அவமானம்” என்று சொல்லக்கூடிய சம்பவம் பற்றி ஆட்சியாளர்கள் வாய் திறக்கவே இவ்வளவு போராட்டங்கள் வேண்டியிருக்கிறது. அவ்வாறெனில் நீதி கிடைக்க இன்னும் எத்தனை நாள் போராடவேண்டும்?

சமவத்துவ பூமி, சமூக நீதி ஆட்சி, பெரியார் மண் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்ச் சமூகம் இன்னும் வேர்மட்ட அளவில் சனநாயகப்படவில்லை. வெகு மக்கள் திரள் போராட்டங்கள் மூலமாக நடைமுறையில் சனநாயக உரிமைகளை சாதித்த போராட்டங்களை தமிழகம் கண்டதில்லை என்றே சொல்லலாம்.

பெரியாரின் திராவிடர் கழகத்தால் கோவில் நுழைவுப் போராட்டங்கள், தெருக்களில் செருப்பு அணிந்து செல்வது, பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பது போன்ற போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்த போராட்டங்கள் எதுவும் “கோவில் நுழைவு, தெருக்களில் செருப்பு அணிவது, பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பது” போன்றவையாவும் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள் என்ற சமூகநிலையை உருவாக்கவில்லை. அவை யாவும் அரசியல் அமைப்பு சட்டத்தில் கூட காகித சட்டங்கள் என்ற அளவில் தான் இருந்தன. ஆனால் யதார்த்தத்தில் தீண்டாமை உயிர்ப்புடனே இருந்து வந்துள்ளது.

இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்தும் இட ஒதுக்கீடுகள் மூலம் இந்த அரசமைப்பின் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதற்கானவை என்ற அளவில் சுருக்கப்பட்டுவிட்டது. இப்படி சாதி அமைப்பிற்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் இந்த அரசமைப்பிலும் தேர்தல் அரசியலிலும் சாதியை நிறுவனமயபடுத்துவாதவே இருந்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பெரிதும் பயன்பெற்றது இடைநிலை சூத்திர சாதியினர்தான்.


படிக்க: வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு || தோழர் மருது வீடியோ


இதற்கிடையில் பட்டியல் சமூக மேட்டுக்குடியினர் அரசு அதிகாரத்தில் தங்களின் பங்கை கேட்டு 1990-களில் ஏகாதிபத்திய கைக்கூலி அறிவுஜீவிகளின் ஆதரவுடன் அடையாள அரசியலை தொடங்கி வைத்தனர். இந்த அடையாள அரசியல் கட்சிகளும், திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டு வைத்து ஓட்டரசியலில் சாதியை நிறுவனமயப்படுத்துவதில் பங்காற்றின.

குறிப்பாக சாதி அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இயக்கங்களின் தோல்வி என்பது இந்த இயக்கங்களின் கோரிக்கைகள் எதுவும் ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்நிலையில் எந்த சமூக மாற்றத்தையும் உருவாக்கிவிடவில்லை என்பது தான். இந்த இயக்கங்களால் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது என்பது உண்மையே. ஆனால் அப்படி முன்னேறியவர்களில் பெருமளவிலானவர்கள் “புதிய பார்ப்பனர்களாக” மாறி இந்த சாதி அமைப்பை பாதுகாக்கவே நினைத்தார்கள்.

இப்போதுகூட, வேங்கைவயல் சம்பவத்தை “தேசிய அவமானம்” என்று சொல்வதும், “அரசு குற்றவாளிகளை கைது செய்யவேண்டும், மலம் கலந்த குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும், அரசு இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று சொல்லி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்யும் சனநாயக இயக்கங்கள் எவையும், சாதி அரசியல் அமைப்புச் சட்டத்திலும், அரசு அதிகாரத்திலும் நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் யதார்த்த நிலையை கண்டுகொள்வதில்லை.

அப்படி புரிந்து கொண்டிருந்தால், “தேசிய அவமானம்” அந்த தண்ணீர்த் தொட்டி அல்ல; இந்த அரசியல் அமைப்புச் சட்டமும், தேர்தல் அரசியலும், இந்த அரசதிகார அமைப்பும் தான் “தேசிய அவமானம்” என்பது புரிந்திருக்கும். ஆனால் இதனால் இந்த கட்சிகளுக்கு ஓட்டுகள் வந்து சேராது என்பதால் அதைப்பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அதனால்தான் குடிநீர் தொட்டியை ” தேசிய அவமானம்” என்று பொங்கும் இவர்களால் இந்த அரசமைப்புச் சட்டம், அரசதிகாரம் ஆகியவை மக்கள் விரோதமானது என்று சொல்ல முடிவதில்லை.

இப்போது அந்த தொட்டியை இடிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அது இன்னொரு வேங்கைவயல் உருவாவதை தடுக்கப் போவதில்லை. ஏனெனில் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் அதிகாரத்தை ப்ளீச்சிங் பொடி போட்டு கழுவ முடியாது.

ராஜன்

இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!

“முதலிலிருந்தே ஜெயதேவ் என்னைக் காட்டிலும் உடல் வலிமை பெற்றவர். ஆபத்துகளை எதிர்கொள்வதென்பது அவருக்கு மிகச் சாதாரண விஷயம்! அடிதடிச் சண்டைக்கு அவர் எப்போதுமே முன்னே நிற்பார். ஜெயதேவின் இச்சிறப்புக்களைக் கண்ட பகத்சிங், பிஸ்மில்லை விடுவிக்கும் ‘ஆக்சனுக்கு'(Action) ஜெயதேவை அழைத்துச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்தார். ஒரு நாள் மத்தியானம் பகத்சிங் தன் முடிவைத் தெரிவித்தபோது, என் பலவீனமான உடலை வெறுத்தேன். கட்சியின் பணி செய்யத் தகுதியில்லாதவன் என நான் கருதப்பட்டதற்காக மிகவும் வருந்தினேன். அதனால் சற்று நேரமே உட்கார்ந்துவிட்டு தூக்கம் வருகிறதென்று சாக்குக் கூறி ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டுவிட்டேன். நான் உறங்கவில்லை என்பதை பகத்சிங் அறிவார். அவர் கொஞ்ச நேரம் பக்கத்திலிருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்துவிட்டு, என் தோளை மெல்ல உலுக்கி, “சிவா” என்று கூப்பிட்டார்.

“என்ன?” நான் அவர் பக்கம் திரும்பிக் கேட்டேன்.

“ஒரு விஷயம் கேட்கவா?”

“கேளேன்!”

ஒரு நபரின் பெயர் பெரிதா? கட்சியின் வேலை பெரிதா?”

“கட்சி வேலை தான் பெரிது”

“கட்சி வேலை தடங்கலின்றி நடந்து கொண்டே இருக்க வேண்டும். நாம் கைக்கொள்ளும் ’ஆக்சன்’கள் எல்லாம் வெற்றியடைந்து கொண்டிருக்க வேண்டும். நம்மைப் பற்றிய செய்தி நாட்டு மக்களுக்குத் தடையின்றிக் கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த சுதந்திரப் போராட்டத்திலே நாம் ஒவ்வொரு திருப்பத்திலும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்க வேண்டுமல்லவா? இதற்கான முதல் நிபந்தனை என்ன தெரியுமா?”

படிக்க : அஷ்பகுல்லாகான் : பன்முகத்தன்மை கொண்ட ஒரு போராளி !

“வலிமையாகவும், விரிவாகவும் மக்களைத் திரட்டுவதுதான்!”

“மக்களைத் திரட்டுவதும், பிரச்சாரமும் முக்கியம். நாட்டு மக்கள் நமது துணிவையும், செயல்களையும் பாராட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்முடன் நேரடித் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். நாமும் மக்களுக்கு இதுவரை நாம் குறிப்பிடும் சுதந்திரம் எவ்வாறு இருக்கப்போகிறது, வெள்ளையர்கள் வெளியேறிவிட்ட பிறகு ஏற்பட போகும் நமது அரசு எப்படி இருக்கும் என்கிற விஷயங்களை விளக்கிக் கூறவில்லை. நாம் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டி நம்முடைய லட்சியங்களை மக்கள் மத்தியிலே கொண்டு செல்லவேண்டும். காரணம், பொதுமக்களின் ஆதரவைப் பெறாமல் நாம் இதுவரை செய்து வந்ததைப் போல, வெள்ளை அதிகாரிகளையும், அவர்களின் ஏஜெண்டுகளையும், கொன்று குவிப்பதிலேயே இனியும் காலத்தைக் கடத்த முடியாது. நாம் இதுவரை மக்களைத் திரட்டுவதையும், பிரச்சாரத்தையும் அலட்சியப்படுத்தி ’ஆக்சன்’களுக்கே முக்கியத்துவம் அளித்து வந்தோம். இச்செயல்முறையை நாம் விட்டுவிட வேண்டும். நான் உன்னையும், விஜயையும் மக்களைத் திரட்டவும், பிரச்சாரத்தை நிர்வகிக்கவும் விட்டுச்செல்ல விரும்புகிறேன்” என்று கூறி பகத்சிங் சற்று நிறுத்தி,

“நாமெல்லாம் படை வீரர்கள். படைவீரர்களுக்கு எல்லாவற்றையும் விட போர்க்களம் தான் விருப்பமானது. அதனாலேயே எல்லோருமே ’ஆக்சன்’களுக்குப் போகத்துடிக்கிறார்கள். என்றாலும், நம் இயக்கத்தை முன்னிறுத்தி சிலராவது ’ஆக்சன்’கள் மேலுள்ள மோகத்தை விட்டுவிட வேண்டியது தான்; சாதாரணமாக ’ஆக்சன்’களில் பங்கெடுப்பவர்களையும், தூக்குமேடை ஏறுபவர்களையும் தான், புகழ் தேடி வருகிறது. அவர்கள் நிலை ஒரு பெரிய மாளிகையின் தலைவாசலில் பதிக்கபட்ட வைரம் போன்றது; ஆனால் அஸ்திவாரத்திற்குள் விழுந்து கிடக்கும் ஒரு சாதாரணக் கல்லுக்குள்ள முக்கியத்துவம் அந்த வைரத்திற்கில்லை”….

“வைரங்கள் மாளிகையின் எழிலை அதிகரிக்கலாம், பார்ப்பவர்களை வியப்பிலாழ்த்தலாம். ஆனால், அவை மாளிகையின் அஸ்திவாரம் ஆக முடியாது. பல நூறாண்டுகள் தமது தோள்கள் மேல் சுமந்திருக்கமுடியாது. இதுவரையிலும் நம் இயக்கம் வைரங்களைத் திரட்டியதே தவிர, அஸ்திவாரக் கற்களைச் சேர்த்து வைக்கவே இல்லை. அதனால் தான் நாம் இத்தனை மாபெரும் தியாகங்கள் புரிந்தும் மாளிகையைக் கட்டவும் ஆரம்பிக்கவில்லை. இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!”

படிக்க : ஜதீந்திரநாத் தாஸ் : விடுதலை உணர்வை தட்டியெழுப்பிய தியாகம் !

பகத்சிங் மேலும் தொடர்ந்தார்: “தியாகமும், உயிர்ப்பலியும் இரண்டு விதமானவை. ஒன்று, குண்டடிப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் மரணத்தைத் தழுவுவது. இதில் கவர்ச்சி அதிகமிருந்தாலும், கஷ்டம் குறைவு தான்! இரண்டாவது, வாழ்க்கை பூராவும் மாளிகையைச் சுமந்து கொண்டிருப்பது. போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கும் போது நாம் ஒரு சில தேறுதல் வார்த்தைகளுக்காகத் தவிக்கிறோம். அப்படிப்பட்ட நேரங்களிலே தட்டுத்தடுமாறாமல் தமது லட்சியப் பாதையை விட்டு செல்லாதவர்கள், மாளிகையின் சுமையால் அசைந்து கொடுக்காதவர்கள், பளுவுக்குப் பயந்து தோள்களைக் கீழே இறக்காதவர்கள், ஒளி மங்கிவிடக்கூடாதென்பதற்காகத் தம்மைத் தாமே எரித்துக்கொள்பவர்கள், தன்மையான பாதையிலே இருள் சூழ்ந்துகொள்ளக்கூடாதென்று தம்மைத் தாமே மெழுகுவர்த்தியைப் போல் கரைத்துக்கொள்பவர்கள், உயிர்த்தியாகம் புரிபவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லையா?”

-சிவவர்மா

விடுதலைப் பாதையில் பகத்சிங்…. புத்தகத்திலிருந்து… பக் 39 முதல் 41 வரை.

குறிப்பு : “ஆக்சன்” (Action) என்றால்… சிறையிலிருந்து யாரையாவது விடுவிப்பதையும், எந்த அதிகாரியையாவது கொல்வதையும், கொள்ளையடிப்பதையும், போலீசாரை எதிர்த்துப் போராடுவதையும் புரட்சியாளர் மொழியில் “ஆக்சன்”என்பர்.

வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு || தோழர் மருது வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை திட்டமிட்டு கொட்டியவர்களை யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தாங்களே மனிதக் கழிவைக் கொட்டியதாக ஒப்புக் கொள்ளச் சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை போலீசு தொடர்ச்சியாக சித்திரவதை செய்கிறது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிச எதிர்ப்பு – க்ரியா ஊக்கிகளும், நவீன அராஜகவாதிகளும் – ஒரு பார்வை

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தலைமையிலான சங்பரிவார் பாசிச கும்பல் தமிழ்நாட்டில் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்க ஒன்றிய அரசின் துணைகொண்டும், தங்களுக்கேயுரிய கிரிமனல் வழிகளிலும் வெறித்தனத்தோடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அக்கும்பலின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழ்நாடு ஏதோவொரு வகையில் எதிர்வினையாற்றிக் கொண்டே இருக்கிறது.

தமிழ்நாட்டின் இத்தகைய எதிர்ப்புப் போக்கை புரிந்து கொண்டு காவிக்கும்பல் அதற்கேற்றாற்போல் படிப்படியாக காய்நகர்த்திக் கொண்டு வருகிறது என்பது நாம் அறிந்ததே.

குறிப்பாக ஒன்றிய அரசின் கங்காணியான ஆளுநர் ஆர்.என்.ரவி மூலமாக தங்களது தாக்குதலை பாசிஸ்டுகள் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவரை காவிமயமாக்குவது, காசி தமிழ்ச்சங்கமம், தமிழ்நாடு என்று அழைக்க மறுப்பது, அரசுத் துறை செயலாளர்களை மாநில அரசுக்கெதிராக செயல்பட ஊக்குவிப்பது என்று பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்து விட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திமிரோடு செயல்பட்டு வருவதையும் பார்த்து வருகிறோம்.

சட்டமன்றத்தில் ஆளுநர் ரவியின் இழிவான நடவடிக்கையையும், அதற்கான எதிர்வினையையும் நாம் அறிவோம். தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்பதற்காக துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி பாசிச கும்பலின் இழிவான, சதித்தனமான செயல்பாடுகளை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கத் தயாரில்லை என்பதும் கடந்த காலங்களில் பல்வேறு விசயங்களில் நாம் பார்த்த நடைமுறை உண்மை.


படிக்க: இங்கேயும் சில நட்சத்திரங்கள் நகர்கின்றன!


அதே சமயம் இதில் நாம் திருப்தி அடைந்து விட முடியாது. குறிப்பாக, மேற்கண்ட அரசியல் பிரச்சினைகள் குறித்து பொதுவெளியில் வெளிப்பட்ட இரண்டு வகையான போக்குகளைப் பற்றி அம்பலப்படுத்துவதன் ஊடாக நாம் எதை நோக்கி நகரவேண்டும் என்பதை உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலாவது போக்கு, பாசிச எதிர்ப்பு என்பதே, திமுக-வை ஆதரிப்பதுதான் என்ற கோணத்தில் ”எப்புட்றா” வகை வாதப் பிரதிவாதங்களை சமூக ஊடகங்களில் நடத்தி திமுக-வை எப்பாடுபட்டாவது காப்பாற்றத் துணியும் கேடுகெட்ட சந்தர்ப்பவாதப் போக்கைப் பற்றியது. இத்தகைய நபர்கள் முற்போக்கு பேசுவதைப் பற்றி நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இவர்கள் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து போராடும் புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களை கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதுதான் பிரச்சினை.

சமீபத்தில் அப்படியொரு ‘முற்போக்கு’ யூடியூப்பர் ஒரு சமூக ஊடகத்திற்கான பேட்டியில் பேசியிருந்தார். அதில் “ஆளுநரை எதிர்த்து ஜனநாயக இயக்கங்களும், புரட்சிகர இயக்கங்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் அடையாளப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஆளுநர் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்ட வேண்டியது தானே? ஏன் தயங்குகிறார்கள், வழக்கு வந்தால் வரட்டுமே… தொடர்ச்சியாக இதைச் செய்தால் மக்கள் உணர்வு பெற்று தானாக களத்தில் சேர்ந்து கொள்வார்கள்… எழுச்சி தொடங்கும்… ஆளுநர் வெளியேற்றப்படுவார்… ஏன் இதைச் செய்யாமல் இருக்கின்றார்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை” என்று ’புதியதொரு’ கோணத்தில் பேசியிருந்தார்.

சாத்தியமான மாற்றைப் பேசுவோருக்கு (அதாவது திமுக-வின் பின்னால் அணிதிரண்டு பாசிசத்தை வீழ்த்துவது) மிகவும் அலர்ஜியான விசயம் ஒன்று இருக்கிறது. அது மக்களை அமைப்பாக்குவதன் மூலம்தான் எதிரிகளை வெல்ல முடியும் என்பது.

கடந்த காலங்களில் நமது அனுபவம் என்ன? பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்த்தும், மறுகாலனியாக்க சுரண்டலை எதிர்த்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். பார்ப்பன சாதித் தீண்டாமையை எதிர்த்த சீறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், நெல்லை கங்கைகொண்டானில் கோக் எதிர்ப்புப் போராட்டம், தஞ்சை வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம், இறால் பண்ணை அழிப்புப் போராட்டம், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான போராட்டம் இவையெல்லாம் ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் முன்னின்று நடத்திய போராட்டங்கள். மாதக்கணக்கான இந்த இயக்கங்களில் லட்சக்கணக்கான துண்டறிக்கைகள், பல்லாயிரக்கணக்கான சுவரொட்டிகள், ஆயிரக்கணக்கான சுவரெழுத்துக்கள், நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், போராட்டங்கள் என இடைவிடாமல் வேலை  செய்துள்ளோம்.


படிக்க: நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்


நமது பிரச்சாரங்களின் போது நம்மை தார்மீகரீதியாக ஆதரிக்கும் மக்கள் ஏன் இத்தகைய போராட்டங்களில் பெருந்திரளாக கலந்து கொள்ளவில்லை? ஏன் ஒரு எழுச்சியை நோக்கி தொடர்ச்சியாக இந்தப் போராட்டங்கள் நகரவில்லை? என்ற கேள்விதான் மிக முக்கியமானது.

பிரச்சார இயக்கங்களால் மக்களைத் திரட்ட முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. அதற்கு மக்கள் அமைப்பாக்கப்பட்டிருப்பதுதான் அடிப்படையான தேவை. அதுதான் நாம் பரிசீலிக்க வேண்டிய மிக முக்கியமான விசயம். இந்த உண்மையைப் பரிசீலிப்பது க்ரியா ஊக்கிகளுக்கு கசக்கத்தானே செய்யும்?

ஒரு எழுச்சியை உருவாக்குவது மட்டுமல்ல, அதைத் தக்கவைப்பதும், தொடர்ந்து எடுத்துச் செல்வதும்தான் முக்கியம். அதற்கு திரளான மக்கள் அமைப்பாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல் அரிச்சுவடி.

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறிப்பிட்ட அளவு எடுத்துச் செல்லப்பட்டதற்கான காரணம் குறிப்பிடத்தகுந்த அளவு விவசாயிகள் அமைப்பாக்கப்பட்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. அதனால்தான் பஞ்சாப், ஹரியானாவைத் தவிர மற்ற இடங்களில் பெருந்திரளாக திரளவில்லை.

ஆனால், பொதுவில் பார்ப்பன எதிர்ப்பு, தமிழுணர்வு என்ற வகையில் தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பிடத்தகுந்த அளவு உள்ள தார்மீக ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு கனவுக்கோட்டை கட்டச் சொல்கிறார்கள் க்ரியா ஊக்கிகள். அதாவது திமுக-வுக்காக முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களும், புரட்சிகர இயக்கங்களும் தியாகம் செய்ய வேண்டும் என இவர்கள் கூறுகின்றனர். உழைக்கும் மக்கள் தங்களுக்கான சொந்த அடித்தளத்தை உருவாக்கத் தேவையில்லை, திமுக-வின் பின்னால் அணிதிரண்டால் பாசிசத்தை ஒழித்துவிட முடியும் என்று நம்பச் சொல்கின்றனர்.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டுவது, பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய எந்தப் புரிதலுமற்ற முதலாளித்துவ சந்தர்ப்பவாதக் கும்பல்களின் உளறல்களே இவை.


படிக்க: ‘சோசலிச’, ‘ஜனநாயக’ முகமூடிகளின் துரோகத்தில் செழித்துவளரும் பாசிச சக்திகள்!


கார்ப்பரேட் திமுக-வின் பாதந்தாங்கிகளாக இருந்து கொண்டு (இவர்கள் திமுக-வின் தொடர்ச்சியான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள் பற்றி மூச்சு கூட விடமாட்டார்கள்) போகிற போக்கில் ஜனநாயக இயக்கங்களையும், புரட்சிகர இயக்கங்களையும் அவதூறு செய்வது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

மார்க்சிய லெனினியத்தின் மீதும், புரட்சிகரக் கட்சியின் தலைமையில் மக்களைத் திரட்டுவதைப் பற்றியும் நம்பிக்கையிழந்த இவர்களால் வேறு எப்படிப் பேச முடியும்?

இன்னொரு பக்கம் ஆளுநரே வெளியேறு என்று போராடுவதைக் காட்டிலும், ஆளுநர் பதவியே வேண்டாம் என்று போராட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். ஏனெனில் அப்பதவியே பிரிட்டிஷ், பார்ப்பன, பனியா முதலாளிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. எனவே அப்பதவியே வேண்டாம் எனப் போராட வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட தருணத்தில், அச்சூழலுக்கேற்ப முழக்கங்களை முன்வைத்துப் போராடுவதற்கு அதற்கான திட்டமும், அரசியல் முன்முயற்சியும் இன்றியமையாதது. “ஆளுநரே வெளியேறு” என்பது குறிப்பிட்ட சூழலுக்கான முழக்கம் ஆகும்.

உதாரணத்திற்கு காவி – கார்ப்பரேட் பாசிசமானது தற்போதையை சூழலில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இத்தகைய குறிப்பான சூழ்நிலைக்கேற்ப நமது அரசியல் முழக்கங்களை முன்வைத்து, மக்களிடம் கொண்டு செல்கிறோம்.

ஆனால், இப்படிப்பட்ட சிந்தனை முறையோ, நடைமுறையோ இல்லாததன் காரணமாகவே அராஜகவாதமான முறையில் தங்களது அரசியலை வெளிப்படுத்துகின்றனர். ஏனென்றால், இவர்கள் கூறுகின்ற விசயங்களை மக்களிடம் கொண்டு செல்லப்போவதில்லை. போகிற போக்கில் ஒரு அரசியல் பிரச்சினையில் அராஜகமான முறையில் தீர்வைப் பற்றிப் பேசுவது. அதற்கு பொறுப்பாக நடந்து கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் இன்னொரு பக்கம் நடைமுறையில் தங்கள் பகுதியில் ஒரு மருத்துவமனை தொடர்பான பிரச்சினையில் தலையிடும்போது குறிப்பிட்ட பிரச்சினைக்கேற்ப முழக்கம் வைக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் இவர்களை நவீன அராஜகவாத கும்பல் என்று கூறுகிறோம்.

உண்மையில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்கு, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டியமைக்க வேண்டிய பெருந்தேவை நமக்கு முன்னே உள்ளது. இச்சூழலில் பெருவாரியான உழைக்கும் மக்களை அமைப்பாக்குவதைப் பற்றிய எந்தப் பார்வையும் இல்லாத, வாய்ச்சவடால் அடித்துக் கொண்டு கிளம்பியிருக்கின்ற இத்தகைய முதலாளித்துவ சந்தர்ப்பவாத, நவீன அராஜகவாதப் போக்குகளை புரிந்து கொண்டு தொடர்ச்சியாக அம்பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

இனியன்