♦ தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு!
♦ அடித்தட்டு மக்கள், கூலி தொழிலாளிகள், வெளி மாநில தொழிலாளிகளின் உயிரைக் காப்பாற்று!!
***
நான் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். மேலும், மக்கள் கோரிக்கைகளுக்காக சட்டரீதியாக உதவி செய்யும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் எனும் அமைப்பின் சென்னை கிளை செயலாளராகவும் செயல்பட்டு வருகின்றேன்.
தமிழக அரசு கடந்த 24.03.2020 முதல் 14.04.2020 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, தற்போது 30.04.2020 வரை நீட்டித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் ரூபாய்.1000 உதவித்தொகை, அம்மா உணவகங்கள், பொது உணவகங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
ஆனால் அத்திட்டங்கள் குடும்ப அட்டை இல்லாதவர்கள், நடைபாதை வாசிகள், மாற்றுத்திறனாளிகள், வெளிமாநில தொழிலாளர்கள் (குறிப்பாக Migarant Workers Act -ன்படி பதிவு செய்யாதவர்கள்), ஆதரவற்றவர்கள், வயது முதிர்ந்தவர்கள் போன்ற பிரிவினருக்கு முறையாக சென்று சேருவதில்லை.
தமிழக அரசு (தமிழக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்) 24.03.2020 அன்று கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் உதவிப்பணிகளில் ஈடுபட தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனடிப்படையில் இன்றைய தேதிவரை தன்னார்வலர்கள் அரசு இணையதளத்தில் (stopcorona.tn.gov.in) பதிவுசெய்து வருகின்றனர். ஆனால், நாங்கள் அதற்கு முந்தைய நாளான 23.04.2020 அன்றே சென்னை மாநகராட்சிக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் பேசி தன்னார்வலர்களாக எங்களை பதிவுசெய்திருந்தோம். மேலும் கூடுதலாக, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசிடம் இணைய வழியாகவும் பதிவுசெய்திருந்தோம். ஆனால், இது நாள்வரை அரசிடமிருந்து எந்த ஒரு முறையான பதிலும் வரவில்லை. கட்டுப்பாட்டு அறைக்கும், மண்டல அதிகாரி திரு.காமராஜ் (மண்டலம் 4 – 9445190004) அவர்களிடம் நேரில் சென்றபோதும், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோதும் முறையான பதில் இல்லை.
தன்னார்வலர்களாக பதிவு செய்பவர்களுக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறதென்ற தகவலோ, அனுமதி வழங்கப்பட்ட தன்னார்வலர்கள் – அமைப்புகளின் பட்டியலோ இதுவரை குறிப்பிடப்படவில்லை.
இத்தகைய நிலைமையை கருத்தில்கொண்டு 27.03.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் பொதுநல வழக்கு (W.P.No.7414/2020) தொடுத்திருந்தோம். அவ்வழக்கில் “தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அறிவியல் மாணவர்கள் கொண்ட தன்னார்வு குழுக்களை உருவாக்கி, பயிற்சியளித்து வீடு தோறும் COVID-19 தொற்றுநோய் தடுப்பு, மருத்துவ பரிசோதனை, உணவுப்பொருட்கள் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்” என்ற இடைமனுவினையும் தாக்கல் செய்திருந்தோம் (W.M.P.No. 8880/2020). இப்பணிகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை சட்டம் – 2005 ன்படி மாவட்ட வாரியாக தன்னார்வலர்களை உள்ளடக்கிய சிறப்பு “செயல்பாட்டு குழுக்களை” அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தோம். நாங்கள் வைத்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று நடைமுறைப்படுத்த பரிந்துரைப்பதாக கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் திரு.அரவிந்த் பாண்டியன் அவர்கள் நீதிபதிகள் முன்பாக தெரிவித்திருந்தார்.
படிக்க:
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?
♦ கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !
27.03.2020 அன்று தன்னார்வலர்கள் – தொண்டு நிறுவனங்களின் நிவாரணப்பணிகளை ஒருங்கிணைக்க திரு.ச.கிருஷ்ணன் இ.ஆ.ப, டாக்டர். ஜெ.இரதாகிருஷ்ணன் இ.ஆ.ப, திரு.வே.விஷ்ணு இ.ஆ.ப ஆகியோர் அடங்கிய குழு (9 வது குழு – செய்தி அறிக்கை. 235) அமைக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து 27.03.2020 அன்றைய அறிக்கையில் (செய்தி அறிக்கை. 234)” ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்கள் சமைத்த உணவை விநியோகிக்க வேண்டாம். பொருட்களை சென்னையில் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமும் வழங்கலாம். மாவட்ட நிர்வாகம், இவற்றுக்கென ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்பிரிவை தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்தந்த மாவட்ட நிர்வாக தனிப்பிரிவு தொடர்பு எண்கள் கொடுக்கப்படவில்லை. மேலும், உதவிப்பொருட்கள் கொண்டு சேர்க்கும் முறைகுறித்தும் தெளிவாக விளக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றமும் 31.03.2020 அன்று பிறப்பித்த உத்தரவில் தன்னார்வலர்களை உட்படுத்திட பரிந்துரைத்திருந்தது.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அரசின் நலத்திட்டங்கள், செயல்பாடுகள் சென்றடையாத மக்கள் இருப்பதைக்கண்டு பல தன்னார்வ குழுக்கள் உரிய பாதுகாப்போடு உணவு பொருட்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கும் பணிகளில் ஈடுபடத்துவங்கினர்.
அந்த வகையில் நாங்களும் எங்கள் நண்பர்களோடு ஒன்றிணைந்து சென்னை (காசிமேடு, வியாசர்பாடி, முகப்பேர், நொளம்பூர், ஓசாங்குளம்,
சேத்துப்பட்டு, முகப்பேர் கிழக்கு, முகப்பேர் மேற்கு), மதுரை, காஞ்சிபுரம், கடலூர், விருதாச்சலம், நாகை (சீர்காழி), புதுச்சேரி, திருச்சி, நெல்லை, திருப்பூர் (கரைப்புதூர் கிராமம்), தர்மபுரி என தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் முகக்கவசங்கள், கையுறைகள், Sanitizer போன்ற பாதுகாப்பு உபகரணங்களோடும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் நிவாரண பொருட்களை அர்ப்பணிப்போடு வழங்கி வருகிறோம். கூடுதலாக கையுறை, முககவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களையும் வழங்கி வருகிறோம்.
அதிலும், நாங்கள் குறிப்பாக அரசின் பல அறிவிப்புகளில் புறக்கணிக்கப்பட்ட அல்லது அரசின் நடைமுறைப்படுத்துதலில் உள்ள குறைபாடுகளால் நிவாரணங்கள் சென்றடையாத சர்க்கஸ் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், காவலாளிகள் (Wachman), ஆட்டோ ஓட்டுநர்கள், சொந்த ஊர் திரும்பமுடியாத தொழிலாளர்கள், பதிவுசெய்யப்படாத கட்டிடத்தொழிலாளர்கள் & வெளிமாநில தொழிலாளர்கள், நடைபாதையில் வசிப்பவர்கள் என்று பயனாளிகளை கண்டறிந்து கடந்த இருபதுநாட்களாக தமிழகம் முழுவதும் 3000 குடும்பங்களுக்குமேல் உணவுப்பொருட்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுவருகிறது. வடசென்னையில் (காசிமேடு, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, எர்ணாவூர்)மட்டும் இதுவரை 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
எங்களைபோன்றே தமிழகம் முழுதும் தன்னார்வலர்கள் – குழுக்கள், அரசு சென்றடையாத பல இடங்களிலுள்ள மக்களை கண்டறிந்து அவர்களது உணவுத்தேவையை பூர்த்தி செய்துவருகின்றனர். இத்தகைய தன்னார்வலர்களின் உன்னதமான செயல்பாடுகள்தான் இன்றளவும் பெரும் பாதிப்புகளிலிருந்து தமிழக மக்களை பாதுகாத்துவருகின்றது. ஆனால் இன்னுமும் எந்தவித உதவியும் சென்றடையாத மக்கள் வாழும் பகுதிகளும் இருக்கவேசெய்கிறது.
படிக்க:
♦ “கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !
♦ அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !
இந்நிலையில் (12.04.2020) தமிழக அரசு “சில நபர்களும், சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊரடங்கு உத்தரவுக்கு புறம்பாக” செயல்படுவதாகவும் மேலும் அத்தகைய தன்னார்வலர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் வெளியிட்டிருந்த அறிவிப்பானது (அரசு செய்தி அறிக்கை.265) தமிழக அளவில் பெரும் விவாதப்பொருளானது.
அதன்பிறகு, தமிழக அரசனாது (13.04.2020) “தன்னார்வலர்கள் உதவிசெய்ய தடை இல்லை எனவும், மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் “2500-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களும், 58,000 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் பதிவு செய்துள்ளதாகவும், சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படதான் அரசு கேட்டுக்கொண்டுள்ளதே தவிர, யாருக்கும் தடை விதிக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டு, தேவைப்படும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்யதான் அரசு வலியுறுத்தியதே தவிர, தடை விதிக்கவில்லை.” எனவும் தனது அறிவிப்பில் (செய்தி அறிக்கை.266) தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழக முதல்வரே பேரிடர் நிவாரணப்பணிகளில் தன்னார்வலர்களின் பங்கினை வெகுவாக பாராட்டியுள்ளார்.
காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கவேண்டுமென்பது எவ்வளவு அவசியமானதோ அதேபோன்று தன்னார்வலர்களின் நிவாரணப்பணியும் அத்தியாவசியமானதாகும்.
இதனை உணர்ந்து தமிழக அரசானது தன்னார்வலர்கள் ஈடுபடுவதை தடைசெய்வதை கைவிட்டு, ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், எங்களது மேற்கண்ட வழக்கு (W.P.No.7414/2020) கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், நிவாரணப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு அரசு அதிகாரிகளை கொண்டு பயிற்சி வழங்க வேண்டும்.
கட்டுப்பாட்டு அறையினை உருவாக்கி, தன்னார்வலர்கள் தாங்கள் நிவாரணப்பணி செய்யவிருக்கும் இடம், நேரம், பொருட்கள் மற்றும் இதர அவசியமான முன் அறிவிப்பினை (அ) தகவலை வழங்குவதற்கு பொது தொலைபேசி எண்ணை வழங்கவேண்டும்.
நிவாரணப்பணிகள் நடக்கும் இடங்களை மேற்பார்வையிட்டு, பாதுகாப்பான முறையில் நலஉதவிகள் நிறைவேறுவதை உத்திரவாதப்படுத்த வார்டு அளவில் அதிகாரிகளை நியமிக்கவேண்டும்.
இவ்வாறு மக்களுக்கான நிவாரணப்பணியில் அரசு தன்னார்வலர்களை அங்கீகரித்து அவர்களையும் இணைத்து செயல்பட்டால்தான் இந்த பேரிடரிலிருந்து நாம் மீண்டுவர முடியுமென தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி,
வழக்கறிஞர் சு.ஜிம்ராஜ் மில்ட்டன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
சென்னை கிளை செயலாளர்
![]()
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தொடர்புக்கு : 99623 66320.



இப்படைப்பிரிவு 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்படைப்பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் தொற்று நோய் தடுப்பு மற்றும் இயற்கை பேரிடர் போது மருத்துவ பணி செய்வதற்கு பயிற்சி பெற்றவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்பானிய காலனியாதிக்கத்திற்கு எதிராக கியூபர்களோடு சேர்ந்து போராடிய ஹென்றி ரீவ் என்ற இளம் அமெரிக்கரின் நினைவாக இப்படைப்பிரிவுக்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்படைப்பிரிவு கியூப முன்னாள் அதிபர் காஸ்ட்ரோவால் முன்மொழியப்பட்டது.
கியூபப் புரட்சிக்கு பின்னர், கியூப அரசு, உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான மருத்துவர்கள் விகிதத்தை அடைந்தது. அந்நாட்டில் ஆயிரம் பேருக்கு 8 மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்தியா பத்தாயிரம் பேருக்கு ஒரு மருத்துவரை பெற்றிருக்கிறது. தன்னை அனைத்து நாடுகளின் தலைமை என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவால் கூட கியூபா போன்று மருத்துவர்களின் விகிதத்தை அதிகரிக்க முடியவில்லை.
இப்போது தொற்று நோய் பரவி வருவதால் பிரேசில் கடுமையான சுகாதார நெருக்கடியின் கட்டத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியன்று பிரேசிலின் சுகாதாரத் துறை செயலர் ஜோவா கபார்டோ, தங்கள் நாட்டிற்கு கியூப மருத்துவர்களை திரும்ப அனுப்புமாறு கியூப அரசைக் கேட்டுக் கொண்டார். பிரேசிலின் தொழிலாளர் கட்சியின் தலைவர் லூலா டா சில்வா, பிரேசில் அதிபர் பொல்சனோரா கியூப மருத்துவர்களைப் பற்றி முன்பு பொய்க்குற்றச்சாட்டை கூறியதற்காக பிரேசில் மக்களிடமும், கியூப மருத்துவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.


தொழில்நுட்பம் தெரியாத சிலர் தெரிந்தது போல் பேசுபவர் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு வெறுமையில் கிடக்கிறார்கள். நாம் மாறிவிட்டோமா? மீண்டும் பழைய நிலைக்குச் செல்வோமா? என்று யாருக்கும் புரியாத ஒரு மந்த நிலை. ஒரு நாளில் நாற்பது தடவை தொற்று எண்ணிக்கை, சாவு எண்ணிக்கை என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதை விட்டுவிட்டார்கள். பல எழுத்தாளர்களின் பேனா முனைகள் உலர்ந்து கிடக்கின்றன, ஓவியத்திரைகள் வெள்ளையாகவே இருக்கின்றன. எல்லா நாட்களும் இரவின் தூக்கத்தை நோக்கியே நகர்கின்றன.

இது மிக மோசமான சவால் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர், இதற்கான காரணம் என்னவென்பதை கண்டுபிடித்தாக வேண்டும் என்றார். “இப்போதைக்கு இதைக் குறித்து செய்வதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் (கருப்பினத்தவர் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து) மிகவும் கவலை கொள்கிறோம். இப்போதைக்கு அவர்களுக்கு போதிய கவனிப்பை உறுதி செய்தைத் தவிற வேறு வழியில்லை” என்கிறார் ஃபாவ்சி.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவா மேலாண்மை கல்வி நிலைய வளாகத்தில் உள்ள என் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதிலிருந்தே எனது உலகம் தலைகீழாக மாறிவிட்டது.


உ.பி. மாநில இந்து மதவெறி அரசோ ஆட்காட்டி விளம்பரத் தட்டிகளை அகற்றுவதற்குப் பதிலாக, அவற்றை அகற்றச் சொன்ன உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்ததோடு, அந்த 57 பேர் மீதும் குண்டர் சட்டத்தை ஏவித் தனது பாசிச குரூரப் புத்தியை வெளிக்காட்டிக் கொண்டது.
ரிஹாய் மஞ்ச் என்ற பெயரில் மனித உரிமை அமைப்பொன்றை நடத்திவரும் மூத்த வழக்குரைஞரான முகம்மது ஷோயிப்பும் தாராபுரியைப் போலவே, ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாகவே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். உ.பி. போலீசின் போலி மோதல் கொலைகளைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்திவரும் முகம்மது ஷோயிப்பைப் பழிதீர்த்துக் கொள்ளக் காத்திருந்த உ.பி. அரசு இச்சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அவரையும் கைது செய்து சிறையில் தள்ளியதோடு, சுவரொட்டியில் புகைப்படமாக வெளியிட்டும் அவமானப்படுத்தியிருக்கிறது.
தப்லிக் ஜமாத்தை சேர்ந்த சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக செய்திகள் வெளி வந்ததிலிருந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏழை முஸ்லிம்களை குறிவைத்து பல சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.
கொரோனாவை மதத்துடன் இணைக்கும் இதுபோன்ற செயல்கள் இயல்பாக இந்தியாவில் தொடங்கவில்லை. மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட முறையில் போலிதகவல்கள், வீடியோக்கள் பரப்பப்பட்டன. இதற்காக பல போலி மற்றும் தவறாக சித்தரிக்கப்படும் வீடியோக்கள் வைரலாக்கப்படுகின்றன. வேறு எப்போதோ ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை தற்போது கொரோனாவுடன் இணைத்து தவறான செய்திகளை பரப்புவதற்கு பயன்படுத்தி சித்தரிக்கப்படும் வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.






இப்பாசிச ஊபா சட்டத்தின்படி, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஒருவரை எவ்விதக் காரணமும் இன்றி தனிமைச் சிறையில் அடைத்து வதைக்க முடியும். வாரண்டு இல்லாமல் போலீசார் வீட்டைச் சோதனையிட்டுப் பொருட்களைக் கைப்பற்ற முடியும். தீவிரவாதம் என்ற சொல்லுக்கு தெளிவற்ற விளக்கமளிப்பதன் மூலம் அனைத்து அரசியல், பொருளாதார, தொழிற்சங்க போராட்டங்களையும் சட்டத்தின்கீழ் கொண்டுவந்து ஒடுக்க முடியும். அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் நோட்டீசைக் கையில் வைத்திருந்தாலோ, ஒருவரைக் கைது செய்ய முடியும்.
பிணை மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அருண் மிஸ்ரா, முகேஷ் குமார் ரசிக்பாய் ஷா ஆகியோர் சார்பில் பேசிய நீதிபதி மிஸ்ரா, “நாங்கள் மார்ச் 16-லிருந்து ஏப்ரல் 6-ஆம் தேதிவரை இவ்விருவருக்கும் 3 வார கால அவகாசம் அளிக்கிறோம். அதன் பிறகு அவர்கள் சரணடைய வேண்டும். கைது செய்யப்படுவதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொண்டு, கடந்த ஜனவரி 2018 முதலாக ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளை இவர்கள் மகிழ்வுடன் அனுபவித்துள்ளனர்” என்கிறார்.

நெருக்கடி நிலை காலத்தில்கூடத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளும் உரிமை ரத்து செய்யப்படவில்லை. ஆனால், இந்து சாம்ராட் மோடியோ தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராடிவரும் காஷ்மீரிகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதில் புதிய வரலாற்றைப் படைத்து வருகிறார்.
“இணையதளம் வாயிலாகக் கருத்துக்களை வெளியிடுவதற்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கும் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 (1) (ஏ) மற்றும் (ஜி) ஆகியவற்றின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவை போன்ற அடிப்படை உரிமைகள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 (2) மற்றும் (6) ஆகியவற்றுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது கள நிலவரத்துக்கும் கட்டுப்பாடுகளால் ஏற்படும் தாக்கத்துக்கும் இடையிலான மதிப்பீட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.”
இன்றைய நிலையில் 2-ஜி இணைய தள சேவை என்பதே காலாவதியாகிப் போன ஒன்று. மேலும், இந்த சேவை அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் அனைத்து இணைய தளங்களுக்கும் சென்றுவிட முடியாது. மோடி அரசு அனுமதித்திருக்கும் இணைய தளங்களை மட்டுமே பார்வையிட முடியும், பயன்படுத்திக் கொள்ள முடியும். அனுமதிக்கப்பட்ட இந்த இணைய தளங்களில் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் எதுவும் கிடையாது. முகநூல், டிவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாது. அரசின் சேவைகளை வழங்கும் தளங்கள் மற்றும் மோடி அரசைத் துதிபாடும் தளங்கள் ஆகியவற்றை மட்டுமே பார்வையிட முடியும்.






என் வீட்டுக்குள்ளும் வரும், மரணம் என்னைச் சுற்றியும் நிகழும் என்பது கற்பனையல்ல – கடந்த நான்கு நாட்களாக என்னைக் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மெதுவாக தின்று வருகின்றது. இன்று கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்று என்று, மருத்துவரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது வயது மற்றும் வைரஸ் இலகுவாக பலியெடுக்கும் நோய்களைக் கொண்ட எனது உடல், இந்தச் சூழலில் எனக்கான சுயபலம் – கடந்த 40 வருடமாக நான் நேசித்த சமூகத்தைக் குறித்து தொடர்ந்து அக்கறையோடு எழுதுவது மட்டும் தான். அண்மையில் பொதுவில் கொரோனா குறித்த 20க்கும் மேற்பட்ட கட்டுரையில் எதை பேசினேனோ, அதை என்னிலையில் இருந்து எழுதுகின்றேன்.
எனது துணைவியார் கட்டாயம் வேலை செய்ய வேண்டி இருந்தது. சுப்பர்மாக்கற் விற்பனையாளர். இந்தியாவில் ஊரடங்கு அறிவித்த பின் மக்கள் வீதியில் நடந்தது போல், இங்கு சுப்பர்மாக்கற் வைரஸ்சை பரப்பும் இலாப வேட்டையில் இறங்கியது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை என்ற பெயரில் எந்த ஒழுங்குவிதியையும் முன்வைக்காது அரசு, மூடிய கட்டடத்தில் ஒரு சதுர மீற்றருக்கு எத்தனை பேர் என்ற வரப்பைக் கூட போடாது கொள்ளை அடிக்கத் திறந்துவிட்டது. ஒரு விற்பனையாளர் செயின் அறுபடும் அளவுக்கு 2,3 நிமிடத்துக்கு பொருட்களை வாங்குவோர் விற்பனையாளரை கடந்து சென்றனர். இந்தளவுக்கும் துணைவியார் வேலை செய்த இடத்தில் அண்ணளவாக ஐந்து விற்பனையாளர்கள். வழமையான திறந்திருக்கும் நேரமும் கூட. விற்பனையோ முன்பை விட அதிகம். வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகம். அரசு அறிவித்த தனிமைப்படுத்தல் 17.03.2020 முதல் துணைவியார் மருத்துவ விடுப்பெடுத்த 31.03.2020 வரையும் இது தான் நிலை. 31.03.2020 எனது துணைவியார் மருத்துவ வீவு எடுத்தார். அடுத்த நாள் அவருக்கு காய்ச்சல்.
எனக்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன் வரண்ட இருமல். தலையிடி, தலைப்பாரம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடல் உதறல், இருமி துப்பும் போது இரத்தம் கலந்த சளி , உடம்பெங்கும் உளைவு, காய்ச்சல், கண் எரிவு, கண் நோவு, கண்ணீர் வெளியேறல், மூட்டு நோ .. இவை கடந்த 5 நாட்களாக கூடிக் குறைந்தளவில் வெவ்வேறளவில் காணப்பட்டது, காணப்படுகின்றது.