2014 இல் மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட சில மாதங்களில் ஆர்.எ.ஸ்.எஸ். பிரச்சாரக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ராஜேஷ்வர் சிங், டிசம்பர் 31, 2021 உடன் இந்தியாவிலிருந்து முஸ்லிம்களும் கிறித்தவர்களும் துடைத்தெறியப்படுவார்கள் என்று பிரகடனம் செய்தார். அது உதிரி சக்திகளின் வெறித்தனமான பேச்சு என்றும் பொருட்படுத்தத்தக்கது அல்ல என்றும் அன்று ஒதுக்கித் தள்ளப்பட்டது.

ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, இன்று, மோடி அரசு அந்தப் பிரகடனத்தை உண்மையாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வருவதற்கு முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கிறது. இந்த நாடுகளைச் சேர்ந்த மற்ற சிறுபான்மை மதத்தினர் அனைவருக்கும் அவர்கள் அங்கே மதரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று இச்சட்டத் திருத்தம் கூறுகிறது. அதாவது, மேற்சொன்ன நாடுகளில் இஸ்லாமிய மதத்தில் பிறந்த ஒருவர் வேறு எந்த விதத்தில் துன்புறுத்தப்பட்டாலும், அவர் இந்தியாவுக்குள் நுழையவோ குடியுரிமை பெறவோ முடியாது என்கிறது இந்த சட்டத் திருத்தம்.
1947-இல் நாட்டுப் பிரிவினையின்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பகுதிக்குக் குடிபெயர்ந்த முஸ்லிம்கள், முஜாகிர்கள் (வந்தேறிகள்) என்று பாகிஸ்தானில் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகிறார்கள். இதனை எதிர்த்து அங்கே போராடிவரும் “முத்தா ஹிதா குவாமி” இயக்கம் என்ற கட்சியின் தலைவர் அல்தாஃப் ஹுசேன், பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை காரணமாகத் தலைமறைவாக இருப்பவர். இவர் இந்தியாவில் அடைக்கலமும் குடியுரிமையும் கோரிய அடுத்த சில நாட்களில் இங்கே இந்த மசோதா நிறைவேற்றப் பட்டிருக்கிறது என்பதுதான் ஒரு விசித்திரம்! ஹூசேனுக்கு பிரிட்டன் குடியுரிமை வழங்கி விட்டது. ஆனால், இந்திய அரசு அவருடைய கோரிக்கையை என்ன செய்தது என்று நமக்குத் தெரியவில்லை.
படிக்க:
♦ சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா ?
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்
“குடியுரிமைச் சட்ட திருத்தத்தைத் தேசியக் குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்துத்தான் பார்க்க வேண்டும்” என்று ஏற்கனவே அமித் ஷா தெளிவாகப் பேசியிருக்கிறார். அதாவது, ஒரு இந்தியர் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் தனது குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லையென்றால், திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை பெறுகின்ற வாய்ப்பு அவருக்கு உண்டு. ஆனால், முஸ்லிம்களுக்கு மட்டும் இது பொருந்தாது என்கிறது மோடி அரசின் சட்டத் திருத்தம். அதாவது, தேசியக் குடிமக்கள் பதிவேடும், குடியுரிமைச் சட்டத் திருத்தமும் முஸ்லிம்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்குகின்றன. இந்தியாவில் தற்போது வசித்து வருகின்ற முஸ்லிம்களைத் தவிர்த்த மற்றவர்கள் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் இடம் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களைக் காட்டத் தவறிய போதிலும், அவர்கள் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்படி இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பு முஸ்லிம்களுக்குக் கிடையாது.
யாருக்கெல்லாம் தந்தையர் நாடாகவும், மதரீதியான புண்ணிய பூமியாகவும் இந்தியா இருக்கிறதோ, அவர்கள் மட்டும்தான் இந்தியக் குடிமக்களாக இருக்க முடியும். தந்தையர் நாடாக இந்தியா இருந்த போதிலும், புனித பூமி இந்தியாவுக்கு வெளியில் இருப்பதாக நம்புகிறவர்களை (மெக்காவைப் புனித பூமியாகக் கருதும் இஸ்லாமியர்கள் மற்றும் ஜெருசலேமைப் புனித பூமியாகக் கருதும் கிறிஸ்தவர்கள்) “உண்மையான இந்தியர்களாகக் கருதவியலாது” என்பது கோல்வால்கரின் கருத்து.
மதத்தின் அடிப்படையில் குடிமக்களைப் பாகுபடுத்தி, இஸ்லாமியர்களை இந்தியரல்லாதவர்கள் ஆக்குகின்ற கோல்வால்கரின் கருத்தையும், இந்து மகாசபா தலைவர் சாவர்க்கரின் கருத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வருகிறது மோடி அரசின் குடியுரிமைச் சட்டம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், “செமிட்டிக் மதங்களான கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியர்களாக இருக்க முடியாது என்றும் அவர்கள் பெரும்பான்மை இந்து மதத்தினரின் தயவில் வாழ வேண்டும்” என்பதுதான் இதன் பொருள்.
நாம் அல்லது நமது தேசியத்தின் வரையறை என்ற தலைப்பில் கோல்வால்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “இந்துஸ்தானில் (இந்தியாவில்) வசிக்கும் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கலாச்சாரத்திற்கும் மொழிக்கும் மாறிக்கொள்ள வேண்டும். இந்து மதத்தைப் புனிதமாகக் கருதவும் மதிக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும். இந்து இனத்தையும் அதன் கலாச்சாரத்தையும் போற்றிப் புகழ்வதைத் தவிர வேறு விதமாகச் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். இந்த மண்ணுக்கும் இதன் தொன்மையான பாரம்பரியத்துக்கும் எதிரான சகிப்பின்மையையும் நன்றி கெட்டத்தனத்தையும் கைவிட்டு, இவற்றின்பால் நேசத்தையும் பக்தியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். சுருங்கக் கூறின், வெளிநாட்டுக்காரர்களாக நடந்து கொள்வதை அவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும். அல்லது அவர்கள் இந்து தேசத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக இங்கே தங்கியிருக்கலாம். மற்றபடி, அவர்கள் இங்கே எந்தவித சலுகைகளையும் கோர முடியாது. குடியுரிமையையும் கோர முடியாது. இதைத் தவிர வேறெந்த விதமான வாய்ப்பும் இவர்களுக்கு வழங்கப்படக்கூடாது. நாம் ஒரு புராதனமான தேசம். புராதனமான தேசங்கள் தமது நாட்டில் குடியேறிய அந்நிய இனத்தாரை எப்படி நடத்துகின்றனவோ, எப்படி நடத்த வேண்டுமோ அவ்வாறு நடத்துவோம்.”
அதேபோல, இந்துத்துவா என்ற சொல்லை உருவாக்கிய சாவர்க்கர், “யார் இந்து?” என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்: சிந்து நதியில் தொடங்கி சமுத்திரங்கள் வரை பரவியிருக்கும் பாரத வர்ஷம் எனப்படும் இந்த மண்ணைத் தனது தந்தையர் நாடாகவும், தனது மதத்தின் தொட்டிலாகவும் புனித பூமியாகவும் கருதுபவனே இந்து. ஒரு பொது தேசம் (ராஷ்டிரம்), ஒரு பொது இனம் (ஜாதி), ஒரு பொது நாகரிகம் (கலாச்சாரம்) இவைதான் இந்துத்துவத்தின் அத்தியாவசியமான கூறுகள். இவற்றைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். சிந்துஸ்தானம் என்பது எவனொருவனுக்கு பித்ரு பூமியாக (தந்தையர் நாடாக) மட்டுமின்றிப் புண்ணிய பூமியாகவும் இருக்கிறதோ, அவனே இந்து. இந்துத்துவ தேசத்தின் முதல் இரண்டு கூறுகளான தேசம், இனம் ஆகியவை தந்தையர் நாடு என்பதைக் குறிக்கின்றன. புண்ணிய பூமி என்பது கலாச்சாரத்தைக் குறிக்கிறது. எந்த மதச் சடங்குகளும் புனித நூல்களும் இந்த மண்ணைப் புனித மண்ணாக ஆக்குகின்றனவோ, அவையனைத்தையும்தான் கலாச்சாரம் என்கிற சொல்லால் குறிக்கிறோம்.
படிக்க:
♦ சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் : பல்லிளிக்கும் பொய் வழக்குகள் !
♦ இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை ! வழக்கறிஞர்கள் கோரிக்கை வெற்றி !
பாகிஸ்தான் என்ற கோரிக்கையை ஜின்னா வைப்பதற்குச் சற்று முன்னரே, புண்ணிய பூமி என்ற அடிப்படையில் இந்தியாவைத் துண்டாடும் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டு விட்டது. தங்களது புனித பூமி இந்தியாவுக்கு வெளியில் இருப்பதாகக் கருதுகிறவர்கள் இந்து தேசத்தின் அங்கமாக இருக்க முடியாது என்றால், மற்றவர்களெல்லாம் தனியொரு நாடாக அமைகிறார்களா? அப்படியானால், இந்தியாவுக்குள்ளேயே இரண்டு தேசங்கள் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது என்கிறார் வரலாற்றாய்வாளர் ஆதித்ய முகர்ஜி.
இதற்கான விடை 1937-இல் இந்து மகாசபாவில் சாவர்க்கர் ஆற்றிய தலைமையுரையில் இருக்கிறது என ஆர்.எஸ்.எஸ்ஸும், பள்ளிப் பாடநூல்களும் மகாத்மா காந்தி கொலையும் என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் முகர்ஜி. “இந்தியாவை ஒன்றுபட்ட ஒரு படித்தான தேசமாகக் கருத முடியாது. மாறாக, இந்து – முஸ்லிம் என்று இந்தியாவுக்குள் பிரதானமாக இரண்டு தேசங்கள் உள்ளன” என்று அந்த உரையில் கூறுகிறார் சாவர்க்கர். பண்பாட்டு ரீதியாகவும், மத ரீதியாகவும், தேசம் என்ற அடிப்படையிலும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பல நூற்றாண்டுகளாக முரண்பாடு நிலவி வருவதாகக் கூறி, இரண்டு தேசங்கள் என்ற தனது கருத்தை நிறுவுகிறார், சாவர்க்கர். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே தேசத்தில் வாழ முடியாது என்கிறார். இதே கருத்தைத்தான் குடியுரிமைச் சட்டத் திருத்தமும் வலியுறுத்துகிறது.

பாகிஸ்தானில் ஷியா பிரிவு மற்றும் அகமதியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுவது குறித்து ஊடகங்கள் ஏராளமான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. இந்தச் சட்டத் திருத்தம் மேற்சொன்ன முஸ்லிம் மதப் பிரிவினருக்கு ஆதரவுக்கரம் நீட்ட மறுக்கிறது. அது மட்டுமல்ல, பிரிவினைக் காலத்தில் இந்தியப் பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்றவர்களும், அங்கே முஜாகிர்கள் (வந்தேறிகள்) என இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுபவர்களும், அல்தாஃப் ஹுசேனின் தலைமையில் திரண்டிருப்பவர்களுமான ஏழை முஸ்லிம்கள் யாரேனும் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிவிட விரும்பினால், அவர்களுக்கும் கதவைச் சாத்துகிறது இந்தச் சட்டத்திருத்தம்.
மதத்தின் அடிப்படையிலான தேசியம் என்பது பித்ரு பூமி (தந்தையர் நாடு) புண்ய பூமி என்கின்ற சாவர்க்கரின் கருத்துகளிலிருந்துதான் வருகிறது. இந்தச் சட்டத்திருத்தம் உதவுவதற்கானதேயொழிய, யாரையும் ஒதுக்குவதற்கானது அல்ல என்கிறார் அமித் ஷா. இதை நான் மறுக்கிறேன். குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை மட்டும் பார்த்தால், அதனால் ஆபத்தில்லை என்பது போலத் தோன்றும். ஆனால், அதனைத் தனியே பார்க்கவியலாது. தேசியக் குடிமக்கள் பதிவேட்டுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதன் இலக்கு சமூகத்தில் ஒரு பிரிவினரை நாடற்றவர்களாக மாற்றுவதாகும். அசாமில் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் முடிவுகள் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகப் போய்விட்டன. அவர்களுக்கு வேறு வழியில்லை. இந்துக்களின் குடியுரிமையை அங்கீகரிக்க வேண்டும். முஸ்லிம்களை நிராகரிக்க வேண்டும். அதனால்தான் ஏற்கனவே கிடப்பில் போட்டு வைத்திருந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை புதுப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார் முகர்ஜி.
அசாமில் வாழும் பெங்காலி முஸ்லிம்களைக் கரையான்கள் என்று சாடினார்கள் பா.ஜ.க. தலைவர்கள். அந்தக் கரையான்கள் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் இடம் பிடிக்க முடியாமல் மாட்டிக்கொள்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அசாமில் நடைபெற்ற குடிமக்கள் கணக்கெடுப்பின் முடிவுகள் முற்றிலும் வேறுவிதமாக அமைந்து விட்டன. இந்தக் கணக்கெடுப்பால் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து கரையான்களை மதரீதியாகப் பிரிக்கமுடியவில்லை. “குடியுரிமைச் சட்டத் திருத்தமும் குடிமக்கள் பதிவேடும் ஒரு அபாயகரமான சேர்க்கை. சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் விதைக்கும் கோல்வால்கர் மற்றும் சாவர்க்கரின் சித்தாந்தத்தை இது நடைமுறைக்கு கொண்டு வருகிறது” என்கிறார் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் வரலாற்றாய்வாளர் ரிஸ்வான் குவைசர்.
கோல்வால்கரால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பதுதான் ஒரே ஒரு வேறுபாடு. நாம் இந்த நாட்டை ஆளக்கூடிய காலம் ஒன்று வரும் என்று கூட அவர் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அது அவருடைய கற்பனைக்கு அப்பாற்பட்டதாக மட்டுமல்ல, நம் எல்லோருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டதாகத்தான் இருந்தது. “1952-இல் இந்து மகாசபா சுறுசுறுப்பாக இயங்கி வந்த காலத்திலேயே, அதன் ஆகப் பெரும்பான்மையான வேட்பாளர்களால் தேர்தலில் வெற்றி பெற இயலவில்லை. பிந்தைய நாட்களிலும்கூட தேர்தலில் அவர்கள் தோல்வியைத்தான் தழுவினர். ஏனென்றால், இந்த வெறுப்பரசியலை அன்றைய இந்து சமூகம் அங்கீகரிக்கவில்லை. இன்றைய இந்து சமூகம் வெறுப்பரசியலை அங்கீகரிப்பதோடு நிற்கவில்லை, அதற்கு மேலேயும் சென்று விட்டது” எனக் குறிப்பிடும் ரிஸ்வான் குவைசர், இந்த சட்டத்தை முறியடிப்பதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும். இல்லையேல், இந்தியா என்பது இந்துக்களுக்கு மட்டும்தான் என்ற சாவர்க்கர், கோல்வால்கரின் கனவு நனவாகிவிடும் என எச்சரிக்கிறார்.

கோல்வால்கர்: ஆர்.எஸ்.எஸ். -ஸும் இந்தியாவும் என்ற நூலின் ஆசிரியரான ஜோதிர்மயா சர்மா இது தொடர்பாக ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறார். 1954-இல் சிந்தி இனத்தவர் மத்தியில் பேசிய கோல்வால்கர், நாக்பூரில் அவர் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாராம். பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாருக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்த பிரச்சினைகளைப் பேசுவதற்கு அங்கே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். அந்தக் கூட்டத்துக்கு அவர் சென்றிருந்தாராம். இவர் உள்ளே நுழையும்போது அங்கே ஒரு முஸ்லிம் உரையாற்றிக் கொண்டிருந்தாராம். துணுக்குற்றுப்போன கோல்வால்கர், இந்தக் கூட்டத்திற்கு ஒரு முஸ்லிமை எப்படி அழைத்தீர்கள்? என்று கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் கேட்டாராம். அதற்கு அவர்கள், முஸ்லிம்களும் பார்ப்பனரல்லாதவர்கள்தானே என்று பதிலளித்தார்களாம். பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதவர்களுக்கும் இடையில் பிரச்சனைகள் இருக்கலாம். அது இந்து சமூகத்துக்குள் இருக்கும் பிரச்சனை. ஆனால், முஸ்லிம்கள் பிராமணர்களுக்கு மட்டும் எதிரிகள் அல்ல, மொத்த இந்து சமூகத்துக்குமே எதிரிகள். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், முஸ்லிம்களை மட்டும் விலக்கி வையுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை கூறினாராம் கோல்வால்கர்.
அன்று கோல்வால்கர் எதைச் சொன்னாரோ அதைத்தான் குடியுரிமைச் சட்டத் திருத்தம் இன்று அமல்படுத்துகிறது.
(ஃபிரண்ட்லைன், ஜன.3, 2020 இதழில் ஜியா உஸ் சலாம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)
மொழியாக்கம்: கதிரவன்
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
₹15.00Add to cart |




இந்திய அரசு காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த பிறகு இந்திய விதைச் சந்தையை இந்தியச் சட்டங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறை விதிகளும் கட்டுப்படுத்தி வருகின்றன. இவற்றின் அடிப்படையில், 2001-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “பயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைச் சட்டம்”, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குச் சாதகமான வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துடமை உரிமைகள் மற்றும் புதிய பயிர் வகைகள் பாதுகாப்பு ஒழுங்கு விதிகள் ஆகியவற்றை மறுதலிக்காத அதேசமயம், இந்திய விவசாயிகளின் உரிமைகளையும் ஓரளவு பாதுகாப்பதாக அமைந்தது.




மகாராஷ்டிராவில் மும்பய் நகரிலுள்ள கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஹிஜாப் உடை அணிந்து நெற்றியில் குங்குமமும் இட்டு வந்த இளம் பெண், “உங்களை எது அதிகமாகக் காயப்படுத்துகிறது? எனது ஹிஜாபா, அல்லது நான் ஹிஜாப் அணிந்து நெற்றியில் குங்குமம் இட்டிருப்பதா?” எனக் கேட்க, ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் அக்கேள்வியை எதிரொலித்தார்கள்.
இந்த இந்துத்துவ திரிசூலத்தை எதிர்த்த போராட்டம் முஸ்லிம் மாணவர்கள் பெருவாரியாகப் பயிலும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மட்டும் நடைபெறவில்லை. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், மேற்கு வங்கம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், உ.பி. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் எனப் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் நூற்றுக்கணக்கான கல்லூரிகளிலும் நடைபெற்றிருக்கிறது, நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி போலீசு இந்து மதவெறியோடு நடத்திய தாக்குதல்தான் இப்போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றியது.
குஜராத்தில் பஜ்ரங் தள் உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள் முசுலீம்கள் மீது நடத்திய தாக்குதலை குஜராத் போலீசு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது என்றால், உ.பி.யிலோ போலீசு நண்பர்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்து மதவெறி குண்டர் படையும் போலீசும் இணைந்து முசுலீம்கள் மீது தாக்குதலை நடத்திவருகின்றன. பா.ஜ.க.வைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்களும் அவர்களது கையாட்களும் போலீசு நடத்திய தாக்குதலின் தளபதியாகச் செயல்பட்டுள்ளனர். குறிப்பாக, முசாஃபர் நகரில் முசுலீம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த இடத்திற்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மைய இணை அமைச்சருமான சஞ்ஜீவ் பல்யான் வந்து போலீசைத் தூண்டிவிட்ட பிறகுதான் தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடந்ததாக அவ்வூரைச் சேர்ந்த முசுலீம்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
துப்பாக்கியால் சுடப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்து போகவில்லை. காப்பாற்றுவதற்கு வாய்ப்பிருந்தும்கூட நூர் முகம்மதுவிற்கு முசாஃபர் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டதால், அவரை மீரட் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்து போனார்.
மைய அரசின் துணை நிதியமைச்சர் அனுராக் தாக்குர், “துரோகிகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” என்றும்; பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான பர்வேஷ் வர்மா, “முஸ்லிம்கள் இந்துக்களின் வீடு புகுந்து நமது மகளை, சகோதரிகளைப் பாலியல் பலாத்காரம் செய்வார்கள்” என்றும்; மேற்கு வங்க மாநில பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ், “எமது அரசு ஆர்ப்பாட்டக்காரர்களை நாயைப் போல சுட்டுக் கொன்றது” என்றும் விஷமத்தனமாகப் பேசியிருப்பதெல்லாம், முஸ்லிம்களை வன்முறையில் இறங்கச் செய்து, அவர்களைத் தனிமைப்படுத்திவிட வேண்டும் என்ற தீய நோக்கம் கொண்டவையாகும்.
இந்த வழக்குகள் அனைத்துமே பொய் வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும், போராட முன்வரும் அனைவரையும் வன்முறையாளர்களாகப் பழி சுமத்திச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடுக்கப்பட்டவை என்பது முதல் கட்ட நீதிமன்ற விசாரணையிலேயே அம்பலமாகி வருகிறது.
ஓரிரு மாதங்களுக்கு முன்பாக வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நாடே குமுறிக் கொண்டிருந்த வேளையில், “நான் வெங்காயமும் பூண்டும் அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயம் அதிகம் பயன்படுத்தாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான்” என நாடாளுமன்ற விவாதத்தின்போதே பார்ப்பன சாதித் திமிரோடு பதில் அளித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப் பொருட்களின் விலைகள் ஏறியிருக்கும் நிலையில் உணவு, எரிபொருள் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, கடந்த பட்ஜெட்டைவிட 0.24 சதவீதம் மட்டுமே கூட்டி வழங்கப்பட்டிருக்கிறது.
நரேந்திர மோடி இரண்டாம் முறையாகப் பதவியேற்ற இந்த ஆறேழு மாதங்களுக்குள்ளாகவே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இரண்டு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான வரித் தள்ளுபடிகள், சலுகைகளை வாரிக் கொடுத்திருக்கிறார். மேலும், 2019 நிதியாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வருமான வரியில் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் வரை துண்டு விழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசிற்கு ஏற்படவுள்ள இழப்பை ஈடுகட்ட ஏற்கெனவே ரிசர்வ் வங்கியிடமிருந்து 1.75 இலட்சம் கோடி ரூபாயைப் பிடுங்கிக் கொண்டுவிட்டது மைய அரசு. மேலும், இந்த பட்ஜெட்டில் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு மருத்துவமனைகளைத் தனியாரிடம் ஒப்படைத்தால் சிகிச்சையின் தரம் மேம்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை குஜராத் மாநில அனுபவம் உணர்த்துகிறது. மகாராஷ்டிரா மாநில அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை அறிமுகப்படுத்தியதன் விளைவாக அம்மாநில அரசு மருத்துவமனைகளில் தனியாருக்கு நிகராகக் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டுகிறார், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் பத்திரிக்கையாளர் ரேமா ரங்கராஜன்.
ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை விடுவிக்கவில்லை எனில், நிச்சயமாக இந்தியாவுக்கு உரிய பதிலடி இருக்கும்” என்று மிரட்டியிருக்கிறார். நமது 56 இஞ்ச் இப்போது என்ன செய்யப் போகிறார்?



உள்ளூர் மருத்துவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை வலுப்படுத்த 5811 மருத்துவர்களை நியமிக்கப் போவதாக பிரேசில் நலவாழ்வு அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது. அடுத்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் கியூப மருத்துவர்கள் வேலைக்கு அழைக்கப்படக் கூடும். கியூப மருத்துவர்கள் தங்கள் பகுதிகளை விட்டு நீங்கிய பிறகு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு இச்செய்தி நம்பிக்கை ஒளியை தந்திருக்கிறது. இதுவரை உதவி கிட்டாத மக்களுக்கு உதவி கிடைக்கவும், நலவாழ்வு உத்திரவாதப்படவும் இத்திட்டம் அவசியமானது. திடீரென திட்டம் தடைபட்டதால் பல சமூகக் குழுக்கள் குறிப்பாக உள்நாட்டு மக்கள் மருத்துவ உதவி இல்லாமல் கைவிடப்பட்டனர். அந்த நிலை இன்றுவரை தொடர்கிறது.” என்கிறார் சாவோ பவ்லோ பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் டெனிஸ் பிமென்டா.
வைரஸ் ஒருபுறம் பல்கிப் பெருகிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் நகரங்கள் அனைத்திலும் பறவைகளின் இசை ஓங்கி ஒலிப்பதையும், சாலைச் சந்திகளில் மயில்கள் நடனமாடுவதையும், அமைதியான வானத்தையும் கண்டு மனக்கிளர்ச்சி கொள்ளாதவர்கள் நம்மில் யார்?
இந்தப் பெருந்தொற்று நோயை சமாளிக்கும் அதிகாரத்தில் அமர்ந்திருப்போருக்கு, போர் பற்றிப் பேசுவதுதான் மிகவும் பிடிக்கும். போர் என்ற சொல்லை ஒரு உருவகமாக அவர்கள் பயன்படுத்தவில்லை. உண்மையிலேயேதான் பயன்படுத்துகிறார்கள். இது உண்மையிலேயே ஒரு யுத்தம்தான் என்றால், அமெரிக்காவைக் காட்டிலும் யுத்தத்துக்குத் தயார் நிலையில் இருக்கவல்ல நாடு எது? கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தின் படையணியாய் முன்வரிசையில் நிற்பவர்களுக்குத் தேவைப்படுவன, முக கவசங்களாகவோ கையுறைகளாகவோ இல்லாமல், துப்பாக்கிகள், குறிதவறாக் குண்டுகள், நிலவறை தகர்க்கும் குண்டுகள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள், அணு குண்டுகள் போன்றவையாக இருப்பின் அமெரிக்காவில் அதற்குப் பற்றாக்குறை வந்திருக்குமா என்ன?
இறுதியாக மார்ச் 19 அன்று இந்தியப் பிரதமர் தேசத்துக்கு உரையாற்றினார். அவர் அதிகம் மெனக்கிடவில்லை. பிரான்சும் இத்தாலியும் என்ன செய்தார்களோ அதை அப்படியே கடன் வாங்கிக் கொண்டார். சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். (சாதியப் பண்பாட்டில் ஊறிய இந்த சமூகத்துக்கு சமூக இடைவெளி என்பது எளிதில் புரியக் கூடியதே.) மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு என்று அறிவித்தார். இந்த நெருக்கடியை சமாளிக்க தனது அரசு என்ன செய்யப் போகிறது என்று அவர் எதுவும் சொல்லவில்லை. மாறாக, எல்லோரும் பால்கனியில் நின்று மணியடிக்க வேண்டும் என்றும் பாத்திரங்களையும் தட்டுகளையும் தட்டி மருத்துவப் பணியாளர்களுக்கு தமது மரியாதையைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த ஊரடங்கு ஒரு வேதியல் சோதனையைப் போல வேலை செய்தது. இதுகாறும் கண் மறைவாக இருந்த பல விசயங்களின் மீது அது ஒளியைப் பாய்ச்சியது. கடைகள், உணவு விடுதிகள், ஆலைகள், கட்டுமானத் தொழில்கள் ஆகிய அனைத்தும் இழுத்து மூடப்பட்ட பின், செல்வந்தர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தத்தம் குடியிருப்புகளுக்குள் தம்மைப் பாதுகாத்துக் கொண்ட பின், நமது நகரங்களும் பெரு நகரங்களும் தமது உழைக்கும் வர்க்க குடிமக்களையும், புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களையும், தேவையின்றி சேர்ந்து விட்ட சுமையாகக் கருதி, அவர்களைப் பிதுக்கி வெளியேற்றத் தொடங்கின.
நகரத்திலிருந்து வெளியேறும் மக்கள் இந்த வைரசை கிராமத்துக்குப் பரப்பி விடுவார்களோ என்ற ஐயம் சில நாட்களுக்குப் பின் அரசுக்கு வந்துவிட்டது. உடனே மாநில எல்லைகளை மூடினார்கள். நடந்து செல்பவர்களைக் கூட அனுமதிக்கவில்லை. நகரங்களிலிருந்து கிளம்பி நாள் கணக்கில் நடந்து வந்த மக்கள், எந்த நகரத்தை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டார்களோ அதே நகரத்திற்கு – அங்கு அமைக்கப்பட்ட முகாம்களுக்கு – திரும்பிச் செல்லுமாறு விரட்டப்பட்டார்கள்.
இதோ, ஊரடங்கின் இரண்டாவது வாரம் தொடங்குகிறது. நாடெங்கும் பொருள் விநியோக நடவடிக்கைகளின் சங்கிலி அறுந்து விட்டது. மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்ளின் விநியோகத்தில் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. சோறும் தண்ணீரும் இல்லாமல் ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் நெடுஞ்சாலைகளில் தன்னந்தனியே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அறுவடைக்குத் தயாராக நிற்கும் பயிர்கள் அழுகிக் கொண்டிருக்கின்றன.










யாரால் சேமிக்க முடியும்? யார் சேமிக்க வேண்டும்? முதலாளிகள், பணக்கார விவசாயிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள் ஆகியோர் தான். இது அவர்களுடைய முக்கியமான சமூகக் கடமை என்று ஸ்மித் கருதுகிறார். ஸ்மித் முன்பே தம்முடைய கிளாஸ்கோ விரிவுரைகளில் மூலதனத்தின் உள்ளூர்ப் பிரமுகர்களின் “இன்பமறுப்பைப்” பாராட்டிக் கூறியிருக்கிறார். அந்தப் பெரிய நகரம் முழுவதும் தேடினால் கூட ஒன்றுக்கு மேற்பட்ட வேலைக்காரனை வைத்திருக்






