Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 285

ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் ! இணையவழி பொதுக்கூட்டம் !

5

ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் ! இணையவழி பொதுக்கூட்டம் !

  • மனிதகுலத்தை அழித்து வரும் ஏகாதிபத்திய வைரஸ்களிடமிருந்து உலகத்தைப் பாதுகாப்போம் !

நாள் : 22.04.2020, மாலை 6 மணி முதல் 7:15 வரை.
இடம் : பு.மா.இ.மு முகநூல் பக்கம்.

தலைமை :

தோழர் த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு.

சிறப்புரை :

தோழர் சுதேஷ்குமார்
மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு.

தோழர் காளியப்பன்
மாநில இணைச் செயலாளர், ம.க.இ.க.

ம.க.இ.க-வின் புரட்சிகர பாடல்கள்.

அனைவரும் பாருங்கள் ! பகிருங்கள் !!

தோழமையுடன் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு. 94451 12675.

***

ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் ! 

  • மனிதகுலத்தை அழித்து வரும் ஏகாதிபத்திய வைரஸ்களிடமிருந்து உலகத்தைப் பாதுகாப்போம் !

♦ கொள்ளைநோய் கொரோனா கொலைகள் பொருளாதார நெருக்கடி பட்டினிச்சாவுகள் !
♦ இது தோற்றுப்போன உலக முதலாளித்துவத்தின் கோரவிளைவு !
♦ உலகமயமான உற்பத்தி – நிதிமூலதன லாபவெறி – சுற்றுச்சூழல் நாசம் !
♦ இவையே பெருந்தொற்றின் மூல ஊற்று ! சோசலிசமே ஒரே மாற்று !

உழைக்கும் மக்களே !

♦ ஊரடங்கையும், பட்டினிச்சாவையும் திணிக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிப்போம் !
♦ லெனின் பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் !

தோழமையுடன் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு. 94451 12675.

குடியுரிமை திருத்தச் சட்ட வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் !

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில் தம்மை நீதிமன்ற நண்பனாக (அமிகஸ் கியுரி – amicus curiae) இணைத்துக் கொள்ளக் கோரும் மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது, ஐ.நா. மனித உரிமை ஆணையம்.

“இச்சட்டம் பாரபட்சம் காட்டும் கருவியாகப் பயன்படுத்தப்படும் என்பதால், இதன் காரணமாக நாடற்றவர்கள் உருவாகும் அபாயமிருப்பதாக” ஐ.நா. மன்றப் பொதுச் செயலர் ஆண்டனியோ குடேரஸ் குடியுரிமை திருத்தச் சட்டத்தை விமர்சித்திருந்தார். “இச்சட்டம் அடிப்படையிலேயே பாரபட்சமானது” என ஐ.நா. மனித உரிமை ஆணையம் இச்சட்டத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த விமர்சனங்களின் தொடர்ச்சியாக சர்வதேச அமைப்பான ஐ.நா. மனித உரிமை ஆணையம், தானே முன்வந்து, தன்னை நீதிமன்ற நண்பனாக இணைத்துக் கொள்ளக் கோரும் மனுவைத் தாக்கல் செய்திருப்பது எதிர்பாராத அதிர்ச்சியை பா.ஜ.க. அரசிற்கு ஏற்படுத்தியிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்சேல் பேச்லெட்.

“இந்திய உச்ச நீதிமன்றத்தின் விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டே இந்த மனுவைத் தாக்கில் செய்திருப்பதாக”க் கூறியிருக்கிறது ஐ.நா. மனித உரிமை ஆணையம். மேலும், “ஐ.நா. மன்றப் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் எண்.48/141, மனித உரிமைகளைக் காக்கவும், அவற்றை வளர்தெடுக்கவும் மற்றும் உலக நாடுகளுக்கு இது குறித்து ஆலோசனைகளை வழங்கவும் தமக்குப் பொறுப்பும் கடமையும் அளித்திருக்கும் அடிப்படையிலும்; சர்வதேச மனித உரிமை நியதிகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்றத்திடம் விளக்கிக் கூறும் வகையிலும் மட்டுமே இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாகவும்” அவ்வாணையம் விளக்கமும் அளித்திருக்கிறது.

“இந்திய ராஜதந்திர வரலாற்றிலேயே இது நிச்சயமாக முன்னேப்போதும் கண்டிராத ஒன்று” என முன்னாள் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் குறிப்பிட்டிருப்பதிலிருந்தே, ஐ.நா. மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்திருக்கும் மனுவின் முக்கியத்துவத்தை யாரும் உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு அசாதாரணமான சட்டத்திற்கு எதிராக அசாதாரணமான முறையில் தொடுக்கப்பட்டிருக்கும் மனு இது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்படமால் நிராகரிக்கப்பட்டாலும்கூட இது நரேந்திர மோடி அரசுக்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருக்கும் முக்கியமானதொரு பின்னடைவாகும்.

படிக்க:
♦ உ.பி., குஜராத்தை பின்பற்ற வேண்டுமா அல்லது தமிழ்நாடு, கேரளாவை பின்பற்ற வேண்டுமா ?
♦ நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

இந்திய அரசின் வெளியுறவுத் துறை, “குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். சட்டங்களை இயற்றும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்தின் இறையாண்மையோடு தொடர்புடையது. எந்தவொரு வெளிநாட்டு அமைப்பிற்கும் இந்திய இறையாண்மை தொடர்பான விவகாரங்களில் தலையிடுவதற்கான அங்கீகாரமோ தகுதியோ கிடையாது” என எச்சரித்து இம்மனுவிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஐ.நா. மன்றப் பொதுச் செயலர் ஆண்டனியோ குடேரஸ்

ஐ.நா. மனித உரிமை ஆணையம் இந்த வழக்கில் தன்னை மனுதாரராகச் சேர்த்துக்கொள்ளக் கூறவில்லை. நீதிமன்ற நண்பனாக, மனித உரிமை குறித்து சர்வதேச நியதிகளும், ஒப்பந்தங்களும் கூறுவதென்ன என விளக்கும் அடிப்படையில் மட்டுமே வழக்கில் சேர்த்துக் கொள்ளக் கூறியிருக்கிறது. வலதுசாரி நரேந்திர மோடி அரசால் மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் பலராலும்கூட ஐ.நா. மனித உரிமை ஆணையம் இவ்வழக்கில் இம்மட்டில் தலையிடுவதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“இந்த வழக்கின் மனுதாரர்களுள் ஒரு பிரிவினரே சர்வதேச மனித உரிமை நியதிகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பார்கள் என்பதால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மனு அவசியமற்ற ஒன்று” எனக் கூறுகிறது, தி இந்து நாளிதழ்.

“குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் பரிசீலிக்கப்பட வேண்டுமெயொழிய, அதனைச் சர்வதேச ஒப்பந்தங்கள் அடிப்படையில் பரிசீலிக்கத் தேவையில்லை” எனக் கூறியிருக்கிறார், மூத்த வழக்குரைஞர் மோகன் பராசரன். சுருக்கமாகச் சொன்னால், ஐ.நா. மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்திருக்கும் இந்த மனு ஆளும் இந்துத்துவக் கும்பலுக்கு மட்டுமின்றி, நடுநிலையாளர்கள் பலருக்கும்கூட தொண்டையில் சிக்கிய முள் போலாகிவிட்டது.

***

இந்தியாவின் போலி சுதந்திரம் போன்றே, சொல்லிக் கொள்ளப்படும் இந்திய இறையாண்மையும் போலியானதுதான். இதுவொருபுறமிருக்க, உலகமயக் காலக்கட்டத்தில் எது உள்நாட்டு விவகாரம், எது சர்வதேச விவகாரம் என்பதைக் கறாராகப் பிரிக்கும் எல்லைக்கோடு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும், அவர்களின் அறிவார்ந்த பிரதிநிதிகளும் தமது நலனுக்கு ஏற்றாற்போலத் தான் இதற்கு வியாக்கியனம் அளித்து வருகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து அறிவிக்கும் பட்ஜெட் இறையாண்மை மிக்கதொரு நடவடிக்கையாகும். ஆனாலும், அப்பட்ஜெட்டில் எந்தளவிற்குப் பற்றாக்குறையை அனுமதிப்பது என்பதையும் கல்வி, சுகாதாரம், உணவு உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு எவ்வளவு மானியம் ஒதுக்கீடு செய்வது என்பதையும் உள்நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்ப மைய அரசு தன் விருப்பப்படித் தீர்மானித்துவிட முடியாது. மாறாக, ஏகபோக நிதி நிறுவனங்களும், சர்வதேச அமைப்புகள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் உலக வங்கி உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் கைத்தடி அமைப்புகளும் விதிக்கும் நிபந்தனைகளுக்கு ஏற்றபடிதான் இந்த ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுகின்றன.

குறிப்பாக, மைய அரசின் நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்பதுதான் மேற்கூறப்பட்ட ஏகபோக நிதி மூலதனக் கும்பலின் நிபந்தனை. இதனை ஏற்று நிறைவேற்றும் விதத்தில் 2003-ஆம் ஆண்டிலேயே நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் சட்டமொன்றை இயற்றி, அதற்கேற்பவே பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்றை எதிர்கொள்ள மைய அரசு ஒதுக்கியிருக்கும் 1.70 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான ஒதுக்கீடுகளும்கூட, இந்தச் சட்டத்திற்குட்பட்டுத்தான் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது, இந்து நாளேடு.

இந்திய மக்கள் ஒரு பேரபாயத்தை எதிர்கொண்டுவரும் துயரமான நிலையிலும்கூட, அந்நிய ஏகாதிபத்திய நிறுவனங்கள் விதித்திருக்கும் பற்றாக்குறை விதியை மீறாமல், அதற்குப் பணிந்து நடந்துகொண்டுள்ள மோடி அரசுதான், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மனுவிற்கு எதிராக இறையாண்மை என்ற பூச்சாண்டியைத் தூக்கிக் காட்டுகிறது.

உலகமயமும், உலக வர்த்தகக் கழகமும் நடைமுறைக்கு வந்த 1990-களிலேயே,  ஒரு தேசத்தின்/நாட்டின் இறையாண்மை என்ற கருத்து காலாவதியாகிவிட்டதாக ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களின் உள்ளூர் கைத்தடிகளும் அறிவித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் ஒரு நாட்டினுள் நுழைந்து இலாபம் ஈட்டுவதற்கு அந்நாட்டின் சட்டங்கள் எந்தவிதத்திலும் தடையாக இருக்கக்கூடாது. அப்படியிருப்பின் அதற்கேற்ப அந்நாட்டின் சட்டங்கள் கைவிடப்பட்டோ, திருத்தப்பட்டோ, ஏகபோக நிதிமூலத்தின் இலாபத்தைப் பாதுகாக்கும் அடிப்படையில் மட்டுமே சட்டங்களும் விதிகளும் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

படிக்க:
♦ குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் !
♦ நெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை !

ஒரு தேசத்தின், நாட்டின் இறையாண்மை என்பது அந்நாட்டு மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதைத் தவிர வேறு எதுவுமாக இருக்க முடியாது. இந்த வரையறையின்படி பார்த்தால், இந்திய நாட்டின் போலித்தனமான இறையாண்மையும்கூட முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் பலிபீடத்தில் படையலாக வைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை. எனவே, ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் மனுவை இறையாண்மையின் அடிப்படையில் எதிர்ப்பதற்கு மைய அரசிற்கு அறம் சார்ந்த அடிப்படை எதுவும் கிடையாது.

மேலும், குடியுரிமைச் சட்டத் திருத்த விவகாரத்தில் அந்நிய அமைப்பு தலையிட அனுமதிக்க முடியாது எனச் சவால்விட்டு வரும் மோடி அரசுதான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புரிமைகளை வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்த விவகாரத்தில் மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக, அந்நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ஜம்மு காஷ்மீருக்கு அழைத்து வந்து, சுற்றிக் காண்பித்து அறிக்கைவிடச் செய்தது. மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா?

உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளுள் ஏதாவது ஒன்றை இந்திய அரசு மீறிவிட்டதாக அக்கழகத்தின் உறுப்பு நாடுகள், குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகள் குற்றஞ்சுமத்தினால், அதற்கான விசாரணையும், தீர்ப்பும் இந்தியச் சட்டங்களின்படி இந்திய நீதிமன்றங்களில் நடைபெறுவதில்லை. உலக வர்த்தகக் கழகத்தின் தீர்ப்பாயங்களில்தான் வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. அப்பொழுதெல்லாம் இந்திய அரசோ, ஆளும் வர்க்க அறிவுஜீவிகளோ இந்திய இறையாண்மை குறித்து மூக்கைச் சிந்துவதில்லை.

ஐயா, பயப்படாதீங்க… இது வரைவுதான்….

இந்திய அரசு சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் மட்டும் கையெழுத்திட்டிருக்கவில்லை. சமூக மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் குறித்த சர்வதேசிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டிருக்கிறது. ஒரு சாதாரண வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறும்போது, உலக வர்த்தகக் கழகத் தீர்ப்பாயம் அதில் தலையிட்டு இந்திய அரசு மீது வழக்குத் தொடுத்து விசாரிக்கலாம் எனும்போது, சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களை இந்திய அரசு மீறும்போது அவ்விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஏன் தலையிடக் கூடாது? உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளாலோ, வழக்கு விசாரணைகளாலோ பாதிப்புக்குள்ளாகாத “இந்திய இறையாண்மை”யின் புனிதம்,  ஐ.நா. மனித உரிமை ஆணையம் நீதிமன்ற நண்பனாகத் தலையீடு செய்வதால் பாதிப்புக்குள்ளாகிவிடுமா?

குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டிருந்தாலும், அச்சட்டத் திருத்தம் பாகிஸ்தான், ஆப்கான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவிற்குள் தஞ்சமடைந்திருக்கும் அகதிகளின் குடியுரிமையைத் தீர்மானிப்பதில் முசுலிம் மதத்தினரைப் பாகுபடுத்தும் வண்ணம் மதத்தை அளவுகோலாகப் பயன்படுத்துவதால், இப்பிரச்சினையில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் தலையிடுவதற்கு நியாயம் உண்டு. அம்மன்றம் தலையிடுவதை இறையாண்மை என்ற பூச்சாண்டியைக் காட்டி தடுத்து நிறுத்த மோடி அரசு முயலுவதை நாம் அனுமதிக்க முடியாது.

இதுவொருபுறமிக்க, இந்திய உச்ச நீதிமன்றம் ஆளும் இந்து மதவெறிக் கும்பலின் கைத்தடியாகச் செயல்பட்டு வருவது பல்வேறு வழக்குகளில் அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்புகள், உத்தரவுகள் – ரஃபேல் ஊழல் வழக்கு, பாபர் மசூதி நில உரிமை வழக்கு, அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபடும் வழக்கு உள்ளிட்டவை – வழியாக அம்பலமாகிவிட்டது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமெனக் கோருவதுகூடத் தவறாகிவிடாது.

– செல்வம்

உ.பி., குஜராத்தை பின்பற்ற வேண்டுமா அல்லது தமிழ்நாடு, கேரளாவை பின்பற்ற வேண்டுமா ?

ந்த ஊரடங்கால் கீழ்நடுத்தரவர்க்கத்தினரும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களும் கடுமையான துன்பத்தில் இருக்கிறார்கள். இதனை எதிர்கொள்ள வேண்டுமென்றால், நாட்டு மக்கள் அனைவருக்குமே ரேஷன் அட்டை தர வேண்டும்; இந்திய உணவுக் கழக கிடங்குகளில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தானியங்களை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என பலரும் சொல்லிவிட்டார்கள்.

மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவிகளை அளித்தாலும் அவை ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். நியாயவிலைக் கடைகளை நடத்துவதில் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டிலும் அரிசி வாங்கக்கூடிய கார்டுகளுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.

இப்படி தெரிவுசெய்து உதவிகளை வழங்குவதால் உதவிகளைப் பெற வேண்டிய பலர், உதவி கிடைக்காமல் போகிறார்கள் என அமர்த்தியா சென், ஷான் த்ரே, அபிஜித் பேனர்ஜி, ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார நிபுணர்களிலிருந்து சோனியாகாந்தி வரை பலரும் சொல்லிவிட்டார்கள்.

இந்தியாவில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் இருந்தாலும்கூட, நகர்ப்புறத்தில் 50 சதவீதம் கிராமப் புறங்களில் 75 சதவீதம் மக்களையே அது பாதுகாக்கிறது. அதாவது ஒட்டுமொத்தத்தில் 67 சதவீதம் பேர் மட்டுமே அந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் வருகிறார்கள்.

இந்த 67 சதவீதம் பேரிலும் கிட்டத்தட்ட 11 கோடிப் பேருக்கு ரேஷன் கிடைக்காது என்கிறது தி வயர் இணையதளத்தில் வந்துள்ள ஒரு கட்டுரை.

காரணம், இந்தச் சட்டம் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து உணவு தானியத்தைப் பிரித்தளிக்கிறது. 2011ல் மக்கள் தொகை 121 கோடி. ஆனால், 2020ல் இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடி. இதில் 67 சதவீதம் பேருக்கு உணவு தானியங்களை வழங்க வேண்டுமென்றால் 92.1 கோடி பேருக்கு வழங்க வேண்டும். ஆனால் வழங்கப்படுவதென்னவோ, முந்தைய கணக்குப்படி 81.3 கோடி பேருக்குத்தான். ஆக, ரேஷன் பொருள் கிடைக்க வேண்டிய 10.8 கோடி பேருக்கு, பொருட்கள் கிடைக்காது.

இதில் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் வெளிமாநிலத் தொழிலாளர்கள்.
இந்தப் பிரச்சனைக்கு அமர்தியா சென், அபிஜித் பேனர்ஜி, ரகுராம் ராஜன் போன்றவர்கள் ஒரு தீர்வை வழங்குகிறார்கள். அதாவது ஆறு மாதங்களுக்கு செல்லத்தக்க ரேஷன் அட்டைகளை வழங்கி, அவற்றின் மூலம் உணவு தானியங்களை வழங்குவது.

படிக்க:
♦ நெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை !
♦ உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது ?

இப்படி வழங்குவதற்குத் தேவையான உணவு தானியங்கள் இந்திய உணவுக் கழக கிடங்குகளில் தேங்கிக் கிடக்கின்றன. தற்போது 7.7 கோடி மெட்ரிக் டன் தானியங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. வரும் அறுவடை சீசனில் 4 கோடி டன்கள் கொள்முதல் செய்யப்படும். 110 கோடி மக்களுக்கு மாதம் 10 கிலோ அரிசியை கொடுத்தால்கூட, 6.6 கோடி டன் தானியம்தான் தேவைப்படும்.

சமாளிக்க முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்குக் கொடுப்பதால் ஏற்படும் கூடுதல் செலவைவிட, விலையில்லா அரிசி இல்லாவிட்டால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் சிலர் விட்டுப்போனால் ஏற்படும் சமூகச் செலவு அதிகம் என்கிறார்கள் ரகுராம் ராஜன், அமர்தியா சென், பேனர்ஜி ஆகியோர்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வராதவர்களின் சதவீதம் நாட்டிலேயே பிஹாரில்தான் அதிகம். 14.17 சதவீதம். அதற்கு அடுத்த இடம் உத்தரப்பிரதேசத்திற்கு. நமக்கெல்லாம் முன்மாதிரியாக வைக்கப்படும் குஜராத்தில் 7.46 சதவீதம் பேர் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வருவதில்லை.

இதில் சிறப்பாக செயல்படுவது தமிழ்நாடும் கேரளாவும். கேரளாவில் 2.82 சதவீதம். தமிழ்நாட்டில் 3.72 சதவீதம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது ?

ண்மையில் நாம் காணும் காட்சிகள் நம்ப முடியாமல் திகைக்க வைக்கின்றன. ‘ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அமெரிக்கர்கள் கையேந்தி சாலையில் நிற்பார்கள்’ என்று சில மாதங்களுக்கு முன்பு யாரேனும் சொல்லியிருந்தால் நாம் நம்பியிருப்போமா? ஆனால், இன்றைய நிஜம் இதுதான்.

அமெரிக்காவில்… கொரோனா வைரஸால் வேலையிழந்தோர், வீடற்றோர் என லட்சக்கணக்கானோர் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். இவர்களுக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இலவச உணவு விநியோகம் செய்கின்றன. இவற்றை வாங்குவதற்காக மக்கள் பல கி.மீ. தூரத்துக்கு வரிசையில் நிற்கிறார்கள்.

ஏப்ரல் 21 நிலவரப்படி அமெரிக்காவில் சுமார் 7,87,901 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40,000 பேர் இறந்து போயிருக்கின்றனர்.

பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, நியூயார்க், கலிஃபோர்னியா, ஃப்ளோரிடா என பெரும்பான்மையான மாகாணங்களில்.. இலவச உணவுக்காக மக்கள் மணிக்கணக்காக காத்துக்கிடக்கின்றனர். இந்திய நிலைமைக்கும் அவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, இங்கே நம் மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டு கூட்டமாக நிற்கிறார்கள். அங்கு கார்களில் நிற்கிறார்கள். நியூயார்க் போன்ற நகரங்களில் இத்தகைய கார்களையும் காண முடியவில்லை. Food bank line-களில் பெரும் மனிதர் கூட்டம் வரிசையில் நிற்கிறது. வாங்கிய வேகத்தில் பசி பொறுக்க முடியமால் அங்கேயே சாப்பிடுகின்றனர்.

அமெரிக்கா பற்றி நமக்கு இருக்கும் மனச் சித்திரம் வேறு. ஆனால், ஒரு சின்னஞ்சிறு வைரஸ் அமெரிக்காவை பிய்த்து சிதைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் கொரோனாவின் உச்சத்தை இன்னும் அமெரிக்கா தொடவில்லை. இப்போதே இந்த நிலைமை என்றால், உச்சத்துக்குப் போகும்போது என்னவாகும்? இத்தகைய இக்கட்டான நிலைமைகளில் மக்களின் உணவை கூட உத்தரவாதப்படுத்த இயலாத நிலையில்தான் இருக்கிறது அமெரிக்க வல்லரசு.

குறைந்தபட்சம் ஒவ்வொரு மாகாணத்திலும் 10 ஆயிரம் பேர் இத்தகைய Food bank line-களில் நிற்பதாக செய்திகள் சொல்கின்றன. “நாங்கள் வாரம் 60 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறோம். ஆனால், எங்களின் சேவை பகுதியில் மட்டும் 12 லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுகிறது.’’ என்கிறார், The San Antonio Food Bank என்ற தன்னார்வ நிறுவனத்தின் சி.இ.ஓ., எரிக் கூப்பர்.

படிக்க:
♦ நீடிகப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன ? வாஞ்சிநாதன் | காணொளி
♦ உலக சுகாதார மையத்துக்கான நிதியை அமெரிக்கா வெட்டியது ஏன் ?

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள San Antonio என்ற இடத்தில் இலவச உணவு பொருட்களை பெறுவதற்காக சுமார் 6,000 கார்கள் ஏழு கிலோமீட்டர் நீளத்துக்கு வரிசையில் நின்றன. சில குடும்பங்கள் 12 மணி நேரம் முன்னதாகவே வந்து வரிசையில் காத்திருந்தனர். ஏப்ரல் 10-ம் தேதி கலிஃபோர்னியாவில் உணவுப் பொருட்களை பெறுவதற்கு 5,000 கார்கள் வரிசையில் நின்றன.

இவ்வாறு உணவு வாங்க வரிசையில் நிற்கும் இவர்கள் அனைவரும் ஏழைகள் என்று சொல்ல முடியாது. பெரும்பான்மையானோர் பணிபுரியும் பிரிவை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு நிலை தங்களுக்கு ஏற்படும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்த்திராதவர்கள். “வரிசையில் நிற்பவர்களில் சுகாதாரத் துறை ஊழியர்கள் முதல் ஊபர் ஓட்டுனர் வரை பலரும் இருக்கின்றனர். பெரும்பாலும் வேலையிழந்தவர்கள்” என்கிறார் எரிக் கூப்பர்.

ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தன்னார்வ குழு உணவு விநியோகம் செய்கிறது. பெரும்பாலும் வாரம் ஒருமுறைதான் உணவு விநியோகம். அந்த தகவலை அறிந்துகொண்டு அங்கு மக்கள் கூட்டம் குவிகிறது. ஆனால், உணவு போதவில்லை. பல மணி நேரம் வரிசையில் நின்றவர்கள் உணவு கிடைக்காமல் ஏமாந்து திரும்புகின்றனர்.

***

1930-களில் கிரேட் டிப்ரஷன் என்று சொல்லப்படும் உலகப் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது. அப்போது அமெரிக்கர்கள் ரொட்டித் துண்டுகளுக்காக வீதிகளில் வரிசையில் நின்றார்கள். அவை, breadlines என்று அழைக்கப்பட்டு பின்னர் கிரேட் டிப்ரஷ்னனின் குறியீடாகவும் அச்சொல் மாறியது. அந்த breadlines இப்போது neo-breadlines ஆக, food lines- என்ற பெயரில் உருவம் எடுத்துள்ளது.

உண்மையில் அமெரிக்காவில் காணப்படும் இந்தப் பட்டினிக் காட்சிகள் நம்மை திகைக்க வைக்கின்றன. இத்தனை நாள் நாம் கண்ட செல்வ செழிப்பான அமெரிக்கா எங்கே போனது? எல்லோரிடமும் கார் இருக்கிறது. அடுத்த வேலை உணவுக்கு காசு இல்லை; இருப்பது கை நிறைய கடன் அட்டைகள் மட்டுமே.

இனி என்ன செய்வது? இந்த நிலைமை எப்போது சரியாகும்? சரியாகும் வரையிலும் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? குடும்பத்தை எப்படி ஓட்டுவது? தவணைகளை எப்படி கட்டுவது? பைத்தியம் பிடித்தது போல் திரிகின்றனர். பி.பி.சி. வெளியிட்டுள்ள பல வீடியோக்களில் வேலையிழந்தோர், சில வார்த்தை பேசுவதற்குள் உடைந்து அழுகிறார்கள்.

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் அமெரிக்காவில் 1 கோடியே 70 லட்சம் பேர் வேலையில்லாதோருக்கான உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இதுவரை அரசின் உதவிகள் சென்று சேர்ந்துள்ளன. மீதியுள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்குப் பதிலாக வேலைக்குச் செல்வதற்கு மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறார்கள்.

வேலைக்குச் சென்றால் நோய் தாக்குமே? அதைப்பற்றி அரசுக்கு என்ன கவலை? உற்பத்தி பாதிக்கப்படக் கூடாது, அவ்வளவுதான்.

“தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்காக நாம் ஊதியம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்” என்று ட்ரம்ப் ‘கணத்த’ மனதுடன் கூறியதை இணைத்து இதைப் புரிந்துகொள்ள முடியும். அதிகாரிகள் மட்டத்தில் இதை வெளிப்படையாக கூறவும் செய்கின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக வேலைக்குச் செல்லாதோருக்கான வேலையின்மை உதவித் தொகையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. ‘செத்தாலும் பரவாயில்லை; வேலைக்குப் போ..’ என்கிறார்கள்.

இந்த நிலைமை தொடரும்போது, மிக விரைவில் சமூக அமைதியின்மை உருவாகும். உலகிலேயே குடிமக்கள் அதிகம் பேர் துப்பாக்கி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. இப்போதுவரை துப்பாக்கி கடைகள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டுவரப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. அங்கு வாங்கிக் குவிக்கப்படும் லட்சக்கணக்கான துப்பாக்கிகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.

இந்த துப்பாக்கிகளைக் காட்டிலும், பெரும்பகுதி மக்களை சூழ்ந்திருக்கும் வறுமை, வேலையின்மை, நிச்சயமற்ற நிலை… போன்றவை உருவாக்கும் சமூகக் கொந்தளிப்புதான் தீவிரமான பங்காற்றப் போகிறது.

“இத்தகைய நிலை தொடர்ந்தால் ஒரு சமூக புரட்சியை எதிர்கொள்ள வேண்டிய நிலை அரசுகளுக்கு ஏற்படும்” என்று ‘எச்சரிக்கிறார்’ புகழ்பெற்ற பொருளாதார ஊடகமான Bloomberg-ன் ஆசிரியர் குழுவில் இருக்கும் Andreas Kluth.

“இந்த கொந்தளிப்பானது, அமெரிக்காவை விட மக்கள் அடர்த்தி மிகுந்த ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக ஏற்படும்’’ என்று சொல்லும் Kluth, “இந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்ததும் உலகம் முன்பு போலவே இயங்கும் என எண்ணுவது அப்பாவித்தனமானது. இப்போது உருவாகியுள்ள இந்த கோபமும், கசப்பும் நாம் யூகிக்கவியலாத புதிய வழிமுறைகளில் வெளிப்படும். அவை, பெருந்திரள் மக்கள் இயக்கங்களாக அல்லது கிளர்ச்சி இயக்கங்களாக மாறக்கூடும். பழங்கால ஆட்சி முறைகளை எதிரி என கருதி மக்கள் ஒதுக்கி வைத்ததைப் போன்ற நிலைமை இன்றைய அரசுகளுக்கு உருவாகக்கூடும்” என்கிறார்.

வரப்போகும் நிலைமைகளை Andreas Kluth முன்னறிவிக்கிறார். அதேசமயம் கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தில் தொழிலாளர்களின் கொந்தளிப்பை கையாள்வதற்கு முதலாளிகளுக்கு புதிய வழிமுறைகள் எதுவும் தேவைப்படாது. அதற்கு இவ்வுலகின் ஆகப்பழைய ஆயுதம் ஒன்றே போதுமானது. அதன் பெயர் பட்டினி.

பசியுடன் பரிதவிக்கும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு வேலைக்கு எடுத்து, விட்டதை பிடிக்க மேலும் வெறியுடன் சுரண்டுவார்கள். மிச்சமிருக்கும் வளங்களை மானியங்களின் பெயரால்; சந்தையை ஸ்திரப்படுத்துவதன் பெயரால் அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும்.

அரசு என்பது பெரும் நிறுவனங்களின் திட்டவட்டமான அடியாளாக மாறும். கொரோனாவால் பிழைத்தவர்கள் யாரும் இவர்களிடம் தப்பிக்க முடியாது. அதற்கு மாஸ்க் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக இருக்கும் ‘மாஸ்க்’ கழட்டப்பட வேண்டும். இது மக்களுக்கான அரசு என்ற மாஸ்க்கையும், அப்படியான நம் நம்பிக்கைகளையும் கழற்றினால், அதன் பின்னே தென்படும் உண்மை நம் கண்களுக்கு புலப்படலாம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வடசென்னை மக்கள் உதவிக்குழு !

கொரானா நோய்த் தொற்றை முன்வைத்து மக்கள் எந்தவித முன் தயாரிப்பையும் செய்யவிடாமல் அரசு ஊரடங்கை அறிவித்துவிட்டது. பெரும்பான்மையான மக்கள் அன்றாட கூலிக்கு வேலை செய்து, அதுவே பற்றாக்குறையாக வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது, இவர்களைப் பற்றிய கவலை இல்லாமல் அரசு ஊரடங்கை அமுல்படுத்துகிறது.

பகுதிகளில் இளைஞர்களிடம் மக்களின் நிலையை விசாரிக்கும் பொழுது, மக்கள் வருமானமில்லாமல் கடும் போராட்டத்துடன் தான் இருக்கிறார்கள் என தெரிவித்தார்கள். இதை நண்பர்களிடம் தெரிவித்த பொழுது, மக்களின் நிலை குறித்து நிறைய வருத்தம் இருந்தாலும், நோய்த் தொற்றும், ஊரடங்கு அமுலில் இருக்கும் பொழுது எப்படி செயல்படுவது என தயங்கினார்கள். இதே நண்பர்கள் தான் சென்னை மழை வெள்ளத்தின் பொழுது கழுத்தளவு தண்ணீரில் கடந்து போய் மக்களுக்கு பொருட்கள் விநியோகித்தவர்கள், கஜா புயலின் பொழுது மக்களிடம் இருந்து நன்கொடையாக பணத்தையும், பொருட்களையும் திரட்டி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தவர்கள்.

கொரானா காலத்தில் பெரும்பான்மையான மக்கள் நெருக்கடியில் வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது, அதை எப்படி நம்மால் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கமுடியும்? இதே நெருக்கடி காலத்தில் தான், மருத்துவர்கள், மருத்துவ துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இயங்கிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். ஆகையால் நம்மால் முடிந்ததை செய்வோம். அது நமது கடமை என பேசிய பொழுது ஏற்றுக்கொண்டார்கள். ஐந்து வழக்கறிஞர்கள், ஒரு எழுத்தாளர், சில சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து வடசென்னை மக்கள் உதவிக்குழு என்ற பெயரில் வாட்சப் குழுவை ஆரம்பித்தோம். அவரவர் கையிலிருந்த பணத்தை முதலில் தந்தார்கள். பிறகு நண்பர்களுக்கு வாட்சப் மூலம் செய்தி அனுப்பினோம். நல்லதொரு செயலை முன்னெடுத்துள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார்கள். தங்களால் இயன்ற தொகையை தர துவங்கினார்கள். சிறுக சிறுக பணம் சேரத்துவங்கியது.

புதுவண்ணை பகுதியில் அன்னை இந்திரா நகர் பகுதியில் நம்முடன் ஏற்கனவே சமூக செயல்பாடுகளில் நம்மோடு வேலை செய்திருந்த சமூக அக்கறை கொண்ட இளைஞர்களை தொடர்பு கொண்டு பேசினோம். தங்கள் பகுதிகளில் மிகவும் சிரமப்படுகிறவர்களை கண்டறிந்து தெரிவியுங்கள் என்றோம். அவர்களும் பொறுப்பாக ஒரு பட்டியல் தயாரித்து அனுப்பினார்கள். சில மூட்டை அரிசியை வாங்கினோம். அதை ஐந்து கிலோ, ஐந்து கிலோவாக 100 பண்டல்களாக மாற்றினோம். பட்டியலில் உள்ளவர்களுக்கு இளைஞர்கள் மூலம் டோக்கன் வழங்கினோம். குழுவில் உள்ள வழக்கறிஞர்களின் அலுவலகத்திற்கு நேரம் சொல்லி ஐந்து ஐந்து பேர்களாக வரவழைத்தோம். சானிடைசர் வழங்கி, பொருட்களை வழங்கினோம்.

படிக்க:
♦ கொரோனா ஊரடங்கு : வழியும் களஞ்சியம் ! வறுமையில் மக்கள் !!
♦ கொரோனா நிவாரண நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் ! செய்திகள் படங்கள்

இப்படி நிவாரண உதவி வழங்கிய செய்திகளை வாட்சப்பில் மீண்டும் நண்பர்களிடம் தெரிவித்தோம். குழுவில் உள்ள எழுத்தாளர் திரைத்துறையில் சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கும் ஒரு திரை இயக்குநரிடம் நன்கொடை கேட்டதற்கு, தன் பெயரை வெளியில் சொல்லவேண்டாம் என ரூ. 10000 தந்தார். நண்பர்களின் நண்பர்களும் உதவிகள் தந்தார்கள். கூகுள் பே மூலம் பணமும் அனுப்பிவைத்தார்கள்.

புதுவண்ணை சுனாமி குடியிருப்பு, சிவன் நகரில் வாழும் மக்களுக்கு இந்த முறை அரிசியோடு பருப்பும் வாங்கி 100 குடும்பங்களுக்கு கொடுத்தோம். அடுத்து, ராயபுரம், காசிமேடு பகுதிகளில் மிகவும் சிரமப்பட கூடிய மக்களை இளைஞர்கள் மூலம் கண்டறிந்து 100 குடும்பங்களுக்கு பொருட்கள் விநியோகித்தோம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்தமுறை அரிசி, பருப்பும் கூடுதலாக சமைப்பதற்கு எண்ணெயும் வாங்கி திருவெற்றியூர் டோல்கேட் பகுதிகளில் வாழும் தூய்மை பணி (துப்புரவு வேலை) செய்பவர்களுக்கும், ஆட்டோ தொழிலாளிகளுக்கும், இன்னும் சில குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 குடும்பங்களுக்கு விநியோகித்தோம்.

ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து ஏப்ரல் 15 வரை வட சென்னை பகுதிகளில் வாழும் 400 குடும்பங்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை இந்த குழு மூலம் செய்திருக்கிறோம்.

வடசென்னை மக்கள் உதவிக்குழு வாட்சப் குழுவில் உள்ள நாங்கள் நேரில் சந்திக்காமல், அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறோம். ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்கிறோம். பேசி, முறையாக திட்டமிட்டுக்கொள்கிறோம். பொருட்களை வாங்குவதிலும், விநியோகிப்பதிலும் முறையாக செயல்படுகிறோம். தன்னார்வத்துடன் இளைஞர்களும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். மக்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுபட ஈடுபட நமக்கு அனுபவமும், மக்களுடைய பணத்தை கையாள்வதால் பொறுப்பும் அதிகரிக்கிறது.

தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவோம். கொரானாவிலிருந்து நம் மக்களை காப்போம்.

மக்கள் பணியில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.

தொலைபேசி எண்கள்:

9941314359
8825643335
7397468117

இப்படிக்கு,
வடசென்னை மக்கள் உதவிக்குழு,
சென்னை.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

நீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன ? வாஞ்சிநாதன் | காணொளி

கொரோனா தாக்குதலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு குறித்தும், இத்தருணத்தில் அரசு செய்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும். எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியவை குறித்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் அளித்துள்ள பேட்டியின் காணொளி. பாருங்கள்… பகிருங்கள்…

நன்றி : அறக்கலகம்.

உலக சுகாதார மையத்துக்கான நிதியை அமெரிக்கா வெட்டியது ஏன் ?

“எனது நிர்வாகத்திடம் உலக சுகாதார மையத்துக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை நிறுத்தி விடுமாறு நான் இன்றைக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா வைரஸ் பரவலுக்கு அதன் மோசமான நிர்வாகம் எந்தளவுக்கு காரணமாக இருந்தது என்பதைக் குறித்த விசாரணை நடந்து வருகிறது. எல்லோருக்குமே இதில் என்ன நடந்தது என்று தெரியும்” என ஏப்ரல் 14ம் தேதி அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவுக்கெல்லாம் கொரோனா வராது என்று முதலில் சவடால் பேசி வந்த டிரம்ப், பிறகு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து தற்போது பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் சீனா தான் அனைத்துக்கும் காரணம் எனப் பேசி வருகிறார். ஜனவரி மாதத்தின் மத்திய பகுதி வரை இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என சீன அரசு சொல்லி வந்ததை உலக சுகாதார மையம் ஏற்று பிரச்சாரம் செய்ததாகவும், அந்நிறுவனத்தின் இது போன்ற சீனச் சார்பு நடவடிக்கைகளே வைரஸ் பரவலுக்கு காரணமாகி விட்டது என்றும் டிரம்ப் குற்றம் சுமத்துகிறார்.

மேலும் சீனாவில் வைரஸ் தொற்று அறியப்பட்டதும் அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள உலக சுகாதார மையம் தவறி விட்டது என்றும், சீன அரசின் இரும்புத் திரையைக் கடந்து தணிகை செய்யப்பட்டு வரும் செய்திகளை அப்படியே நம்பியது எனவும் குறிப்பிட்டுள்ளார். சீன அரசு சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்க தேவையில்லை என்று சொன்னதையும் உலக சுகாதார மையம் அப்படியே ஏற்றுக் கொண்டதாக டிரம்ப் சுட்டிக்காட்டுகிறார்.

டிரம்பின் இந்த முடிவை பல்வேறு சர்வதேச நாடுகளும் கடுமையாக எதிர்த்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் டிரம்பின் முடிவை விமரிசித்துள்ளன. குறிப்பாக ஜெர்மன் அரசு மிகக் கடுமையாக எதிர்த்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் ஒரு பேரழிவை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதோ மற்றவரை பலிகடா ஆக்குவதோ பலனளிக்காது என்றும் இந்த சூழலில் உலக சுகாதார மையம் போன்ற ஒரு பொதுவான அமைப்பை முடக்குவது சரியல்ல என்றும் இந்நாடுகள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்காவிற்கு உள்ளேயே டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. சில முதலாளித்துவ பத்திரிகைகள், பிப்ரவரி மாத இறுதி வரை டிரம்ப் சுமார் 14 முறை சீனாவின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதை மேற்கோள் காட்டி, தற்போது அமெரிக்க கொரோனா நிலவரம் கைமீறிப் போவதை உணர்ந்த டிரம்ப் பழியை சீனாவின் மீது போட முயல்வதாக குற்றம் சாட்டுகின்றன. உலக சுகாதார மையத்துக்கு நிதிப் புரவலராக உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சும் டிரம்பின் முடிவு தவறானது என விமரிசித்துள்ளார்.

உலக சுகாதார மையத்திற்கான நிதியை அமெரிக்கா வெட்டவுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளது அந்நிறுவனத்தின் உதவியை பெரிதும் சார்ந்துள்ள இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளை கடுமையாக பாதிக்கும். எனினும், இவ்விசயத்தில் இந்தியா மிக மென்மையான எதிர்ப்பை பதிவு செய்துள்ள அதே சமயம், பல்வேறு ஆப்ரிக்க நாடுகளோ மிகக் கடுமையாக சாடியுள்ளன.

படிக்க:
♦ கொரோனா – கருத்துப்படங்கள் !
♦ அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !

உலக சுகாதார மையத்திற்கு அதன் உறுப்பு நாடுகளும் நிதி உதவி அளிக்கின்றன. கடந்தாண்டு இந்தியா சுமார் 4.1 மில்லியன் டாலர் நிதி அளித்துள்ளது. அதே ஆண்டில் அமெரிக்கா சுமார் 500 மில்லியன் டாலர் நிதியளித்துள்ளது.

கொரோனா வைரசின் தோற்றம் என்னவென்பதைக் குறித்து இன்னமும் ஒரு தெளிவான முடிவுக்கு விஞ்ஞான உலகம் வந்தடையவில்லை. வௌவால்கள் மூலம் பரவியிருக்கலாம் அல்லது வேறு மிருகங்கள் மூலம் பரவி இருக்கலாம் என்பதெல்லாம் ஒரு கருதுகோள் அளவிலேயே உள்ளது. அதன் தோற்றம் குறித்தும், அதை வெல்வது எப்படி என்பதைக் குறித்தும் அறிவியல் உலகம் ஒரு முடிவுக்கு வர மேலும் சில காலம் ஆகலாம். எனினும், அது சீனத்துப் பரிசோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட உயிரி ஆயுதம் என்று வாட்சாப் விஞ்ஞானிகளும் இன்னபிற சதிக் கோட்பாட்டாளர்களும் பரப்பி வருகின்றனர்.

உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோசையும், சீனாவையும் டிரம்ப் குறிவைப்பதற்கு மேற்படி வில்லேஜ் விஞ்ஞானிகளின் கற்பனைக் கதைகள் மட்டும் காரணங்களாக இல்லை. டிரம்பின் முடிவின் பின் அவரது அரசியல் நலன் ஒளிந்துள்ளது. எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட இருக்கிறார் டிரம்ப். இந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வருகின்றது. மொத்த நாடும் முடங்கியுள்ள நிலையில் நோயால் அதிகரித்து வரும் மரணங்களும், அது உண்டாக்கும் அச்சமும் ஒரு புறம் என்றால் நொறுங்கிச் சரிந்து வரும் பொருளாதாரம் இன்னொரு புறம் மக்களை நெருக்கி வருகிறது. கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நிலவரம் மிக மோசமாக இருக்கும் என்றும், வேலையிழப்புகள் அதிகரிக்கும் என்றும் பல்வேறு பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

படிக்க:
♦ குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !
♦ கொரோனா நிவாரண நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் ! செய்திகள் படங்கள்

எனவே இதற்கெல்லாம் காரணமாக ஒரு எதிரியை சுட்டிக்காட்ட வேண்டிய அரசியல் தேவை டிரம்புக்கு உள்ளது. பல பத்தாண்டுகளாக “ரஷிய அரக்கனிடம்” இருந்து உலகைக் காக்கும் பொறுப்பை தலையில் சுமப்பதாக அமெரிக்க மக்களை வெறியூட்டி தமது ஏகாதிபத்திய சுரண்டலையும், ஆக்கிரமிப்புப் போர்களையும் நியாயப்படுத்திக் கொண்டனர் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினர். இப்போது “ரஷிய அரக்கனின்” இடத்தை “சீன டிராகன்” பிடித்துக் கொண்டுள்ளது.

தனது தோல்விக்கான காரணத்தை ஒரு அந்நியரின் மேல் சாட்டி அந்த அந்நியருக்கு எதிரானதாக தேச வெறியை கட்டமைப்பது பாசிஸ்டுகளின் வழக்கமான தந்திரம் – இந்தியர்களாகிய நாம் இந்த தந்திரத்தை பார்த்து வருகிறோம். அதன் அமெரிக்க வடிவம் தான் டிரம்பின் சீன எதிர்ப்பு அரசியல். ஆனால், பாசிஸ்டுகளின் இடம் எது என்பதை வரலாறு தொடர்ந்து பதிவு செய்தே வந்துள்ளது – இந்த முறை அதை கொரோனா வைரஸ் செய்யும்.


– தமிழண்ணல்
நன்றி :  த வயர். 

ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு !

ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு!

டந்த டிசம்பர் 15 தேதியன்று குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகப் போராடிய டெல்லி  ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்திய போலீசும், ஏ.பி.வி.பி. குண்டர்களும், இப்படியோர் எதிர்வினையைக் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். டிசம்பர் அன்றே, பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் கூடித் தொடங்கிய போராட்டம் 50 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பெண்களால் தலைமை தாங்கப்படும் இப்போராட்டத்தில் சாதி  மதத்திற்கு அப்பாற்பட்டு பல்லாயிரம் ஆண்களும், பெண்களும் தினமும் கலந்து கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகிய இந்துத்துவ திரிசூலத்திற்கு எதிராகக் கண்டனங்களை முழங்குகின்றனர்.

ஷாஹீன் பாக்கை முன்னுதாரணமாகக் கொண்டு ஜார்க்கண்டின் வசேபூர், இராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உத்தரபிரதேசத்தின் அலகாபாத், கான்பூர், எட்டாவா மற்றும் லக்னோ, பீகாரில் பாட்னா மற்றும் கயா, மும்பையின் ஆசாத் மைதானம், கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் மைதானம் என நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பெண்கள் கூடித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பீகாரின் கிஷன்கஞ்ச், கோபால்கஞ்ச், பகதூர்கஞ்ச் போன்ற இதுவரை அறியப்படாத சிறுநகரங்களிலும், சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் புனேவிலும் பெண்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். அனைவரின் கோரிக்கையும் ஒன்றுதான், சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யைக் கைவிடு!”

ஷாஹீன் பாக்கில் போராடிக் கொண்டிருக்கும் பெண்களில் ஆகப் பெரும்பான்மையானோர் தச்சர், வெல்டர், வாட்ச்மேன், பெயிண்டர், டிரைவர் வேலைகளில் ஈடுபடும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களோடு வியாபாரிகள் உள்ளிட்ட பிற வர்க்கத்தினரும் சேர்ந்து பங்களிப்பும் ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.

மும்பையிலோ நான்கில் மூன்று பங்கு பெண்கள் நன்கு கல்வியறிவு பெற்ற, வசதியான குடும்பப் பிண்ணனி கொண்டவர்கள், தொழில் வல்லுநர்கள், மேலாண்மைப் பட்டதாரிகள், மென்பொருள் வல்லுநர்கள், சுயதொழில் செய்வோர், பன்னாட்டு நிறுவன நிதி ஆலோசகர்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டம் சாதி, மதம் வர்க்கங்களைத் தாண்டி, ஆண் வித்தியாசங்களைக் கடந்து இந்திய மக்களை ஒன்றிணைந்திருக்கிறது என்பதற்கு இந்தப் போராட்டக் களங்கள் கட்டியம் கூறுகின்றன.

பணமதிப்பு நீக்கத்தைக் கொண்டு வந்து எங்களது பணத்தைப் பறித்துக் கொண்டபோதுகூடப் பொறுத்துக் கொண்டோம். ஆனால், எங்களது குடியுரிமையைப் பறிப்பதை எப்படிப் பொறுக்க முடியும்?” எனக் கேள்வியெழுப்புகிறார் ஒரு பெண்மணி. மோடி  அமித் ஷா கும்பல் கடந்த ஆறாண்டுகளாக உருவாக்கி வரும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பையும், மாட்டுக் கறி தடை, பசுப் பாதுகாப்பு என்ற முகாந்திரத்தில் முஸ்லிம்களின் மீது ஏவிவிட்டுவரும் வன்முறையையும், பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பொருளாதாரரீதியான தாக்குதல்களையும் கண்டு மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பின் மூலமாக வெடித்திருக்கிறார்கள்.

ஜாமியா மிலியா மாணவர்கள் மீதான தாக்குதலைத் தமது சொந்தக் குழந்தைகள் மீதான தாக்குதலாகவே, தமது குழந்தைகளின் எதிர்காலத்தின் மீதான தாக்குதலாகவே உணர்ந்திருக்கிறார்கள் ஷாஹீன் பாக்கில் போராடும் தாய்மார்கள். மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, பிழைப்பு தேடி வந்த இக்குடும்பங்களின் குழந்தைகள் படிக்க விரும்பும் இடமாகவும், கனவுக் கல்வி நிறுவனமாகவும் இருக்கிறது ஜாமியா மிலியா பல்கலைக்கழகம். இவர்களோடு ஏதாவொரு வகையில் தொடர்புடையதாக, இவர்களது பிள்ளைகளோ, உறவினர் பிள்ளைகளோ படிக்கும் இடமாக ஜாமியா பல்கலை இருந்து வருகிறது. இம்மாணவர்கள் மீதான தாக்குதல் அனைவரையும் உலுக்க, எந்தவொரு முறையான அணிதிரட்டலும் இல்லாமலேயே, அக்கம் பக்கத்தாரை அழைத்து போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். என் குழந்தைகள் சிறியவர்கள், ஆனால், அவர்கள் வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு ஒருநாள் செல்வார்கள். எதிர்காலத்தில் இது போன்று ஏதாவது நடக்கும் நாளைப் பற்றி சிந்திக்கவே நடுக்கமாக இருக்கிறது” எனத் தனது உணர்வை வெளிப்படுத்துகிறார் அஃப்ரீன்.

படிக்க :
தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !
♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !

தமது புத்தகப்பைகளுடன் வரும் கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பப் பெண்கள் என ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகின்றன போராட்டக் களங்கள். இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெரும்பான்மை இஸ்லாமியப் பெண்களுக்கு இதுதான் முதல் போராட்டம். முதலில் முழக்கம் போடுவது, தேசிய கீதம் பாடுவது என ஆரம்பித்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் கவிதை படித்தல், பாடல்கள் பாடுதல், வீதி நாடகங்கள் நடித்தல், ஷயாரி (கஸல்) பாடல்கள் இசைத்தல், ஓவியங்கள் வரைதல் மற்றும் பொது சமையலில் ஈடுபடல் எனப் படைப்பூக்கம் கொண்டதாகப் போராட்டத்தை மாற்றியிருக்கின்றனர். போராட்டம், எங்களுக்குத் திருவிழா போல இருக்கிறது என்கிறார் மும்பை போராட்டக் களத்தில் நிற்கும் ஒரு பெண்மணி.

பொதுவாக, முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள், அரசியல் பேசமாட்டார்கள் என்ற பின்தங்கிய நிலையை இப்போராட்டங்கள் உடைத்திருக்கின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமாக அரசியல்ரீதியாக மாபெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறார்கள் என்பதை அவர்களது வார்த்தைகளே காட்டுகின்றன.

இங்கு நாங்கள் 38 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகிறோம். போராட்டம் என்றால் என்னவென்றே இதற்கு முன்னர் வரை எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” எனும் நஸ்ரின் பேகம், இப்போராட்டத்தால் நாங்கள் படைவீரர்களைப் போன்று உணர்கிறோம்” என்கிறார் உற்சாகம் ததும்ப. அரசியல் நம்மை பாதிக்காது என்று நினைத்து, குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு அரசியலை விட்டுவிட்டோம். நான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே என் சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவேன் என்ற அச்சம், இன்று செய்தித்தாள்களில் அச்சிடப்பட்ட அரசியலைப் படித்துப் புரிந்துகொள்ளச் செய்துள்ளது” என்கிறார் பன்னாட்டு நிறுவனத்தின் நிதி ஆலோசகரான நாசியா.

இந்த எதிர்ப்பு முஸ்லிம் சமூகம் தங்களுக்குள்ளும் முஸ்லிமல்லாதவர்களுடனும் ஒன்றிணைய உதவியுள்ளது” என்கிறார், நாக்பாடாவில் உள்ள பத்லுபுராவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஜூவேரியா கான். மேலும், ஷாஹீன் பாக் போராட்டம் தொடங்கிய பின்னர், உள்துறை அமைச்சர் மற்றும் மோடியின் உரைகளை நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். மோடி ஏன் உண்மையை வெளிப்படுத்தவில்லை? நாங்களும் இந்த நாட்டின் ஒரு பகுதி. எனவே, மோடி ஏன் எங்கள் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை? என்று கேள்வியெழுப்புகிறார்.

தன்னுடைய பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஒரு வார காலத்திற்குள் நடக்கவிருக்கும் நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்த நாட்டின் குடிமக்களாக இருக்க எங்களுக்கு அனுமதி இல்லை என்றால், இந்தத் தேர்வுகளால் என்ன பயன்?” என்று நெஞ்சைத் துளைக்கும் பார்வையுடன் கேட்கிறார் 16 வயது மாணவி அல்வீனா ஆஃப்ரீன்.

நாங்கள் கல்வி, வேலைகள், சிறந்த சுகாதாரம் ஆகியவற்றைத் தான் விரும்புகிறோம். சி.ஏ.ஏ. அல்ல” என்கிறார் கொல்கத்தாவில் போராட்டத்தைத் தொடங்கிய திருமதி ஜமீல். மேலும், இப்போது நகரத்தின் பேசுபொருளாக மாறியுள்ள போராட்டத்தைத் தனிநபராக எப்படித் தொடங்கினார், அதற்கான தைரியம் அவருக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜமீல், ஜே.என்.யு. நடத்தப்பட்ட தாக்குதல், நாடு ஆபத்தில் இருப்பதை எனக்கு உணர்த்தியது. நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தைரியத்தைத் தந்தது. சுமார் 60 பெண்களை ஒன்றாக இணைத்தேன், எங்களுடன் பல்வேறு கல்லூரி  பல்கலைக்கழக மாணவிகள் 15 பேர் இணைந்தார்கள், நாங்கள் இங்கே அமர்ந்தோம்” என்கிறார்.

லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் போராட்ட முன்னணியாளர்கள் மீதும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மீதும் வழக்கு போட்டுள்ளது, போலீசு. எந்த நேரத்திலும் போலீசால் தாங்கள் தாக்கப்படலாம் என்பதை போராட்டக் களத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். இருப்பினும் பெண்கள் மனவுறுதியுடன் தங்கள் போராட்டத்தைத்  தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சி.ஏ.ஏ. ஓர் இன்ச்கூடப் பின்வாங்க முடியாது என்று சொன்ன அமித்ஷாவிற்குப் பதிலடியாய், சி.ஏ.ஏ. திரும்பப்பெற வைக்காமல், இங்கிருந்து ஒரு மில்லி மீட்டர்கூட நகரமாட்டோம்” என்கிறார் ஷாஹீன் பாக் போராளி.

இஸ்லாமியப் பெண்களின் இத்தகைய உணர்வும், காவி கும்பல்களின் மிரட்டலுக்கு எதிரான போராட்ட உறுதியும் பலதரப்பட்ட மக்களின் ஆதரவை வென்றெடுத்துள்ளது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் போராட்டங்களில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வதோடு, தங்களது பங்களிப்பையும் செய்து வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த விவசாயிகள், 9 பேருந்துகளில் உணவுப் பொருட்களை எடுத்துவந்து, சமூக சமையல் கூடத்தை நிறுவி, ஷாஹீன்பாக்கில் போராடும் பெண்களுக்கு தினமும் இருவேளை உணவளித்து வருகின்றனர்.

எந்தவித அரசியல் கட்சிகளின் தலைமையுமின்றி இஸ்லாமியப் பெண்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மக்கள் திரள் போராட்டமாக இந்தியாவெங்கும் பரவி வருகிறது. தமிழகத்திலும் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு, கோலப் போராட்டமாக வடிவம் பெற்றது. பொது மக்களின் இத்தகைய எதிர்ப்புகளைக் கண்டுதான் காவி கும்பலும் அஞ்சுகிறது. அதனால்தான் நாங்கள் டெல்லியில் ஆட்சி அமைத்தால் ஒரே நாளில் போராட்டத்தை ஒடுக்கிவிடுவோம் என்றும், துப்பாக்கியால் சுட்டும் போராட்டத்தில் ஊடுருவி பாகிஸ்தான் வாழ்க என முழக்கமிட்டுப் போராட்டத்தைச் சீர்குலைக்கவும் முயற்சிக்கிறது, காவி கும்பல்.

ஒரு கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் பௌதீக சக்தியாக மாறும் என்ற மார்க்சின் வார்த்தைக்குச் சான்றாக அமைந்துள்ளன நாடெங்கும் சி.ஏ.ஏ. எதிரான போராட்டங்கள்!

வசந்தன்

(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழில் வெளியான கட்டுரை)


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கொரோனா நிவாரண நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் ! செய்திகள் படங்கள்

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்களுடனும், ஜனநாயக சக்திகளுடைய ஒத்துழைப்புடனும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கால் துயருற்று வரும் மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

***

சென்னை முகப்பேர்- நொளம்பூர் கொரோனா ஒழிப்பு உதவிக்குழு சார்பில்
முகப்பேர் – கெங்கையம்மன் நகர் பகுதியில் கபசுரக் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. 200 பேர் வரை மக்கள் ஆர்வமுடன் வாங்கி குடித்தனர்.

நொளம்பூர் பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளர்களுக்கு 9 நாட்கள் உறவுகள் என்ற டிரஸ்ட் மூலம் உணவு பெற்று வழங்கப்பட்டது. 150 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

சென்னை, ஓசாங்குளம், புதிய பூபதி நகர் மற்று புல்லாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் 400-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

சென்னையில் தங்கியுள்ள தெலுங்கு பேசும் கட்டிட தொழிலாளர்களுக்கு 200 பேருக்கு பத்து நாட்களாக உணவு விநியோகிக்கப்பட்டது.

சென்னை சேத்துப்பட்டு பகுதிக்கு அரசு சார்பில் நடமாடும் காய்கறி வண்டி தெருவிற்கு வந்தது. பகுதி குழு சார்பில் அது ஒழுங்குபடுத்தப்பட்டது.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் வசிக்கும் மாற்று திறனாளிகள் 20 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் 10 நாட்களுக்கு பயன்படும் வகையிலானவை “முகப்பேர்- கொரோனா உதவிக்குழு”வின் சார்பாக வழங்கப்பட்டது.

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். 350 மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். அவர்கள் கடந்த 20 நாட்களாக வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு ரகுநாத் என்பவர் மதிய உணவு ஏற்பாடு செய்துவருகிறார்.

முகப்பேர் – நொளம்பூர் பகுதி கொரோனா- உதவி குழு உறுப்பினர்கள் மூலமாக மூன்றாவது நாளாக மக்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. மக்கள் வரிசையில் நின்று 200 பேர்வரை வாங்கிச்சென்றனர்.

மேற்கு வங்கம், அசாம், போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் சென்னை முகப்பேர் கலெக்டர் நகர் பகுதியில் வசித்து வருக்கின்றனர். இவர்கள் அனைவரும் உணவகத்தில் வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக உணவகம் மூடிய நிலையில், ஊருக்கு திரும்பி போக முடியாத நிலையில் உள்ளனர்.
இவர்களுக்கு கோதுமை, அரிசி, எண்ணெய் போன்ற உணவு பொருட்கள் முகப்பேர் பகுதி கொரோனா – உதவி குழுவின் சார்பாக வழங்கப்பட்டது.

சென்னை, சேத்துப்பட்டில் உள்ள பள்ளி கூடச்சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் உள்ள ரெயின்போ பெண்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கும் மற்றும் மாணவர்களின் இல்லத்திற்கும் மக்கள் அதிகாரம் சார்பாக உணவு பொருட்கள் பருப்பு, எண்ணெய், சோப்பு மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டது.

முகப்பேர் பகுதியில் வசிக்கும் நேபாளத்தை சேர்ந்த 4 குடும்பங்களுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக அரிசி வழங்கப்பட்டது.

சென்னை மக்கள் அதிகாரத்தின் சார்பாக முகப்பேர் மேற்கு பகுதியில் மாநகராட்சி தொழிலாளர்கள், தெலுங்கு பேசும் தொழிலாளர்கள், ATM காவலாளர்கள், சாலை ஓர கடை வியாபாரிகள் என 100-க்கும் மேற்பட்டோர்க்கு முககவசம் அளிக்கப்பட்டது

காஞ்சிபுரம் மக்கள் அதிகாரம் சார்பில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு காவல் அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள், பாதுகாவலர்கள் என 200 பேருக்கு கொடுக்கப்பட்டன.

காஞ்சிபுரம், அய்யங்கார்குளம் பகுதி ஊராட்சி மன்றத்தின் கிளர்க் புவனா அவர்களிடம் மக்கள் அதிகாரம் சார்பாக 75 முககவசம் ஒப்படைக்கப்பட்டது.

சைதாப்பேட்டை பகுதியில் துப்புரவு தொழிலாளர்கள், காய்கறி வியாபாரிகள், சிறு வணிகர்கள் முதியோர்கள், மற்றும் பொது மக்களுக்கு முக கவசம் (துணி வாங்கி தைத்த) வழங்கப்பட்டது.

நொளம்பூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தின் வாசலில் கபசூர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. 200 மேற்பட்டோர் வாங்கி குடித்து பயனடைந்தனர்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தினக்கூலியாக வேலை செய்யும் 6 நபர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டு (4000 ரூ பெருமானமுள்ள) மளிகை பொருட்கள் பொருட்கள் சைதை – கொரோனா தடுப்பு உதவிக்குழு மூலம் விநியோகிக்கப்பட்டது.

ஆரணி பகுதியில் மக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

முகப்பேர் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர், விதவை பெண்கள், ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் 500க்கு மேற்பட்ட வீடுகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

விருத்தாச்சலத்தில் 1000 வீடுகளுக்குகிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

விருத்தாச்சலத்தில் 500க்கும் மேற்பட்டோர்க்கு கபசுர குடி நீர் வழங்கப்பட்டது.

விருத்தாச்சலத்தில் ஆட்டோ தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர்க்கு அரிசி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டன.

விருத்தாச்சலம் கோ. பூவனூர் கிராமம் முழுவதும் கிருமிநாசினி எல்லா இடங்களிலும் தெளிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டணர். சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கிருமிநாசினி தெளித்தனர், இப்பணியை ஊர் பொது மக்கள் வரவேற்றனர். மேலும் இதேபோன்று தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

நாகை – சீர்காழி தாலுக்கா எடமணல். கிராமத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் எடமணல் கிராம இளைஞர்களும் சேர்ந்து கரோனா வைரஸ். தொற்று ஏற்படாமல் தடுக்க கிருமிநாசினியை 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் தெளித்தனர்.

புதுச்சேரி மதகடிபட்டு பகுதியில் உள்ள சிறு கடை வியாபாரிகள் மற்றும் மக்களுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் துணியால் தயாரிக்க பட்ட முக கவசம் (மாஸ்க்) 400 எண்ணிக்கையில் வழங்கபட்டது.

புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சின்னபாபு சமுத்திரம் கிராம மக்களுக்கு இயற்கை கிருமி நாசினி வழங்கபட்டது.

திருச்சி – கொரனோ வைரஸ் தாக்குதல் 144 தடை உத்தரவையொட்டி, திருச்சி, துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் பிகார் மாநிலத்தை சேர்ந்த தினக்கூலிக்கு வேலைக்கு செல்ல கூடிய தொழிலாளர்கள்; இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் 20 பேர் மற்றும் BHELஆர்டர் பெற்று இயங்கும் சிறு தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் பெயிண்டர், கொத்தனார், சித்தாள், வேலை உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் வேலையின்றி அன்றாட வயிற்று பிழைப்புக்கே வழியின்றி தவித்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு நிதி சேகரித்து 31/03/2020 அன்று அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் , காய்கறி உள்ளிட்ட 9 வகையான(1000 ரூபாய் மதிப்புள்ள) உணவு பொருட்களை நாற்பது குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது உதவிகளை பாய்லர் பிளாண்ட் ஓர்க்கர்ஸ் யூனியன் மற்றும் SDPI, இசுலாமிய அமைப்புகள் மற்றும் நண்பர்கள் செய்து வருகின்றனர்.

மதுரை – உசிலை முண்டு வேலம்பட்டியில் 400 முகக்கவசங்ககள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

நெல்லை பகுதியில் தொடங்கப்பட்ட கொரோனா மக்கள் பாதுகாப்பு குழுவின் சார்பாக திரட்டப்பட்ட நிதியில் இருந்து முதல்கட்டமாக ஆரோக்கியநாதபுரம் பகுதியில் கபசுர குடிநீர் இளைஞர்களின் பங்களிப்புடன் 1000-க்கு மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் கிராமத்தில் கொரோனா தடுப்புக் குழு சார்பாக கபசுர குடி நீர் 400 பேருக்கு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொரோனா தடுப்புக் குழு சார்பாக 100 முதியோர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. கரைப்புதூர் கிராமத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களுடன் அவ்வூர் இளைஞர்களும் இணைந்து கொரோன தடுப்புக் குழு ஏற்படுத்தியுள்ளனர். 1000 வீடுகளுக்கும், ஊர் முழுக்கவும் கிருமி நாசினி தெளித்துள்ளனர்.

தருமபுரியில் 200 முககவசங்கள் தயாரித்து முதல் கட்டமாக தருமபுரி மாவட்ட தலைமை அரசு மருந்துமனை பணியாளர்கள், மற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டது.

கொரானா ஒழிப்பு நிவாரண பணிகுழு, மற்றும் கள்ளிபுரம் பகுதி இளைஞர்
சார்பாக, கொரானா தடுப்பு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீர் கள்ளிபுரம் பகுதியில் 1000 பேருக்கு மூன்று நாட்கள் கொடுக்கப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !

எட்டு மணி நேர வேலை கிடையாது! குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் கிடையாது! நிரந்தர வேலை, பணிப்பாதுகாப்பு கிடையாது! தொழிற்சங்க உரிமைகள் கிடையாது!

தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது
புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு!

டைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை  ஊதியம் குறித்த தொகுப்பு, தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, பணியிடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு  இயற்றி, அவற்றைச் சட்டமாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது, மோடி அரசு.  இவற்றுள் ஊதியம் குறித்த தொகுப்பு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அரசுத் தலைவரின் அனுமதியுடன் சட்டமாக்கப்பட்டுவிட்டது. மற்ற மூன்று தொகுப்புகளும் மக்களவையில் நிலுவையில் உள்ளன.

மேற்குறிப்பிடப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களும் தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை மட்டும் வரையறுக்கவில்லை. தொழில் நிறுவனங்கள் அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறும்பட்சத்தில், ஆலை நிர்வாகம் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனைகள், அபராதங்கள் குறித்தும் அவற்றில் கூறப்பட்டிருக்கிறது. இதனுடன் இச்சட்டங்களின் அமலாக்கம் குறித்துக்  கண்காணிக்கவும், தொழிலாளி தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முறையிடும்போது அதனை விசாரிப்பதற்கு முறையாக இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளையும் அவற்றின் அதிகாரங்களையும் வரையறுத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் நீக்கி விட்டு, அதனிடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கு அநீதி இழைக்கக்கூடிய அம்சங்களை, வழிகாட்டுதல்கள் என்ற பெயரில் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. இந்த வழிகாட்டுதல்களை முதலாளிகள் மீறும்போது அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து எந்தவொரு விளக்கமும் இத்தொகுப்பில் சொல்லப்படவில்லை. முந்தைய சட்டத்தில் கூறப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளைக் கலைக்கச் சொல்லும் இத்தொகுப்புகள், அவற்றுக்கு மாற்று குறித்துப் பேசாமல், தொழிலாளி வர்க்கத்தைக் கைவிடுகின்றன.

உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் ஊதியத் தொகுப்பு

தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948; ஊதிய வழங்கல் சட்டம், 1936; சம ஊதியச் சட்டம், 1976 மற்றும் போனஸ் பட்டுவாடா சட்டம் 1965 என நான்கு சட்டங்கள் இருந்துவரும் இடத்தில், அவற்றுக்குப் பதிலாக ஊதியம் குறித்த தொகுப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஊதியம் குறித்தும், தொழிலாளர் நல அதிகாரிகள் குறித்தும் பல்வேறு சட்டங்களில் காணப்படும் குழப்பமான வரையறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் ஊதியம் வழங்குவதில் தற்போது உள்ள நெருக்கடிகளைப் புதிய ஊதிய தொகுப்பு நிவர்த்தி செய்யும்” என்று மைய அரசு புதிய ஊதியத் தொகுப்பை வியந்தோதுகிறது.

ஆனால், இப்புதிய ஊதியத் தொகுப்பு ஊதியம் குறித்த வரையரைகளைத் தெளிவாகக் கூறாமல்,  நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் தமது விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை வியாக்கியானம் செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கு ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களையும், அதிகாரிகளையும் நீக்கியிருக்கும் இத்தொகுப்பு, அதனிடத்தில் புதிதாக எந்தவொரு அமைப்பையும் உருவாக்காமல் சூன்யமாக விட்டிருக்கிறது.

குறைந்தபட்ச ஊதியத்தை எதன் அடிப்படையில், எவ்வாறு நிர்ணயம் செய்வது என்ற கேள்விக்கு, தொழிலாளர்களின் திறன், வேலையின் தன்மை ஆகியவற்றை மட்டும் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வழிகாட்டுகிறது இத்தொகுப்பு.

படிக்க :
சிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…
♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !

ஒரு தொழிலாளி எவ்வளவு திறமையானவர் என்பதை வைத்து அவருக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கக் கூறும் இவ்வழிகாட்டுதலைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு தொழிலாளியைத் திறமையற்றவர் என்று முத்திரை குத்தி, அவரது ஊதியத்தை வெட்டிவிடுவது ஆலை நிர்வாகத்திற்கு இனி எளிமையாகிவிடும்.

1957 நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாடு சம்பள விகிதத்தைக் கணக்கிடுவதற்குப் பல்வேறு அளவுகோல்களை வகுத்துத் தந்தது. அவற்றின்படி, போதுமான அளவு ஊட்டச்சத்து, துணிகள், எரிபொருள், மின்சார வசதி, கல்வி, சுகாதாரம், முதியோர் நலன் ஆகியவற்றோடு திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட சமூகச் செலவுகள் ஆகிய அனைத்தையும் மூன்று பேருக்கு வழங்கும் விதத்தில் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்தது.

மேற்சொன்ன கணக்கீட்டு முறையின் அடிப்படையில்தான் ஏழாவது சம்பளக் கமிசன் மைய அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு 18,000 ரூபாய், அதாவது நாள் ஒன்றுக்கு 600 ரூபாயைக் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால், மைய அரசோ தேசியக் குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு 178 ரூபாய் என அடிமாட்டுக் கூலியை நிர்ணயம் செய்திருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், இந்த தேசியக் குறைந்தபட்ச ஊதியம் இரண்டு ரூபாய் மட்டுமே அதிகரித்திருப்பது குரூர நகைச்சுவையாகும்.

ஒவ்வொரு தொழில்துறைக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாறுபட்டு இருக்கும் என்றும் மைய அரசு கூறியிருப்பதால், இந்த தேசியக் குறைந்தபட்ச ஊதியமும் நாடெங்கும் ஒரே சீராக அமல்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும், இவ்வூதியத்தை யார், எந்த அளவுகோலின்படி நிர்ணயம் செய்வார்கள் என்பதையும் தெளிவாகக் கூறாமல், அதனை நிர்ணயம் செய்வதை நடைமுறைப்படுத்தும் அதிகாரியின் முடிவுக்கு விட்டுவிட்டது.

இதற்கு முன்பு இருந்த ஊதியச் சட்டங்களின்படித் தொழிலாளர் நல ஆய்வாளர்கள் ஊதியம் வழங்கப்படுவது குறித்து தங்களுக்குப் புகார் வந்தால், சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள். ஆனால், தற்போது தொழிலாளர் நல ஆய்வாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒருங்கிணைப்பாளர்” என்ற பொம்மை பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒருங்கிணைப்பாளர் ஊதியம் குறித்து முதலாளிக்கும், தொழிலாளிக்கும் வகுப்பெடுத்துப் புரிய வைப்பாராம். நிறுவன முதலாளி ஊதியம் குறித்த நடைமுறைகளைத் தான் முறையாகப் பின்பற்றுவதாகத் தனக்குத்தானே சான்றளித்து, அந்த ஆவணத்தை இணையத்தில் பதிவேற்றினால், அதற்கு ஒப்புதல் அளிக்கும் வேலையைச் செய்வாராம். நேரடி ஆய்வு என்பதெல்லாம் இனிமேல் கிடையாதாம். எனில், ஒரு ரப்பர் ஸ்டாம்பிற்கும் ஒருங்கிணைப்பாளர் என்ற இந்த அலங்காரப் பதவிக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

இதற்கு முன்பு ஒரு முதலாளி தனது தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக சம்பளம் வழங்கினால், அவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை மட்டுமன்றி, கொத்தடிமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முடியும். புதிய ஊதியத் தொகுப்பில் அத்தண்டனை சட்டப்பிரிவு எவ்வித மாற்றும் இன்றி நீக்கப்பட்டுள்ளது.

இது போன்று ஊதியம் குறித்த பிரச்சினைகள், சர்ச்சைகளுக்காகத் தொழிலாளர்கள் இனி நீதிமன்றத்தை நாட முடியாது. அதற்கென இருந்த சட்டப்பிரிவுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதில் தொழிலாளர்கள் தங்களது தாவாக்களை இதற்கென அமைக்கப்படும் அதிகாரம் ஏதுமற்ற அமைப்புகளில் சென்று பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்த நிறுவனம் அத்தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்காமல் ஏமாற்றினால், அதனை அந்தத் தொழிலாளி வேலை செய்யும் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என வரையறுத்திருந்த முந்தைய ஊதிய பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்தி வரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொறுப்பும் கடமையும் தட்டிக் கழிக்கப்பட்டுவிட்டது.

படிக்க :
கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !
♦ பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் !

தகவல் தொழில்நுட்பத் துறையில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது தொழிலாளார்களது சம்பளத்தில் ஒரு பகுதியைச் செயல்திறன் என்ற அடிப்படையில் பிடித்துவைத்து வருகின்றன. இச்சட்டவிரோத நடைமுறையைப் புதிய ஊதிய தொகுப்பு சட்டபூர்வமாக மாற்றியிருப்பதோடு, பிற தொழில் பிரிவுகளுக்கும் இச்சுரண்டலை நீட்டித்திருக்கிறது.

நவீன கொத்தடிமை ஆகிறது தொழிலாளி வர்க்கம்

சங்கமாக அணி திரளும் உரிமை, 8 மணி நேர வேலை உரிமை, சட்டவிரோதக் கதவடைப்பு மற்றும் வேலை நீக்கம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் உரிமை உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க மூன்று முக்கிய தொழிற்சங்கச் சட்டங்கள் உள்ளன. அவை, தொழிற்தகராறு சட்டம் 1947, தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழிற்சாலை வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம், 1946 ஆகியன. இந்தச் சட்டங்கள் மூன்றும் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

தொழிலாளர்களது சங்கம் சேரும் உரிமையை ரத்து செய்வது, நினைத்த மாத்திரத்தில் தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவது அல்லது நிறுவனத்தைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மூடுவதற்கு அனுமதி அளிப்பது, வேலை நேர வரம்புகளை உயர்த்தவது என முதலாளிகளுக்குச் சாதகமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் இந்த நடைமுறைத் தொகுப்பு செய்து கொடுக்கிறது.

முதலில் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் குறித்த  வரையறைகள் இத்தொகுப்பில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சேவைத் துறைகளைத் தொழிற்சாலை என்ற வரையறைக்குள் வராமல் விலக்கி வைக்கும்படி தொழிற்சாலைக்கான வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், எந்தவொரு தொழில்துறையையும் சேவைத் துறை என வரையறுக்கும் அதிகாரத்தை மைய அரசிற்கு இச்சட்டத் தொகுப்பு வழங்குகிறது.

ஒரு நிறுவனத்தில் 15,000 ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறுபவரையே தொழிலாளி என வரையறுக்கிறது இத்தொகுப்பு. அதற்கும் அதிகமாக ஊதியம் பெறுபவர் கண்காணிப்பாளர் அல்லது மேலாளர் என வரையறுக்கப்படுவதால், அவருக்குத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் எதுவும் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. அத்துடன் இந்த 15,000 ரூபாய் ஊதியம் என்ற வரையறையைக் கூட்டவோ குறைக்கவோ மைய அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு 15,000 ரூபாய்க்கு அதிகமாக ஊதியம் வாங்கும் அனைவரும் தொழிலாளர்களே அல்ல என்று வரையறை செய்வதன் மூலம், ஏற்கெனவே சங்கமாக அணிதிரண்டுள்ள தொழிலாளர்களைத் தொழிலாளர்களே அல்ல என்று தகுதி நீக்கம் செய்கிறது, இத்தொகுப்பு. இதன் வழியாகத் தொழிற்சங்கங்கள் அனைத்தையும் காலி செய்து முடக்குகிறது.

பதிவாளர் என்ற அதிகாரியின் கருணை, தயவைப் பெற்றால்தான் தொழிற்சங்கத்தைச் சட்டப்படி பதிவு செய்ய முடியும் என்றவாறு காலனிய காலத்தில்கூட இல்லாத எதேச்சதிகாரத்தை இச்சட்டத் தொகுப்பு உருவாக்கியிருக்கிறது. அதாவது, எந்தவொரு நியாயமான காரணமும் இன்றித் தன் விருப்பப்படி ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யாது பதிவாளர் மறுக்கலாம் எனக் கட்டைப் பஞ்சாயத்து அதிகாரத்தைப் பதிவாளருக்கு வழங்குகிறது, இத்தொகுப்பு. இதனால் நிர்வாகங்களுக்கு எதிரான தொழிற்சங்கங்களைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்வது இனி குதிரைக் கொம்புதான்.

மேலும், புதிதாகத் தொழிற்சங்கம் தொடங்க குறைந்தபட்சம் 100 தொழிலாளர்கள் சங்கத்தில் இருக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே இருக்கும் தொழிற்சங்கங்களில் 100 தொழிலாளர்கள் இல்லையென்றால், அவர்களது பதிவு ரத்து செய்யப்படும் என்றும் தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் வகையில் இத்தொகுப்பில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகளை முன்னறிவிப்பின்றி மூடுவதற்கான நிபந்தனைகள் இத்தொகுப்பில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 100 தொழிலாளர்களுக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மட்டுமே முன்னறிவிப்பின்றி மூடமுடியும் என்பதை மாற்றி, அந்த எண்ணிக்கையை அந்தந்த மாநில அரசுகள் அவ்வப்போது முடிவு செய்யலாம் எனச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு” (fixed term employment) என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதன்படி, மிகுஉற்பத்தி தேவைப்படும் காலத்தில் அதிகத் தொழிலாளர்களை பணிக்கமர்த்தி, அத்தேவை முடிந்த பிறகு அவர்களை எந்தச் சட்டச் சிக்கலும் இன்றி வேலையை விட்டு நீக்கிவிட முடியும். இவ்வேலைவாய்ப்பு முறை மூலம் நிரந்தரத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க விரும்பும் கார்ப்பரேட்டுகளின் கனவை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது, இத்தொகுப்பு.

ஏற்கெனவே நீம் திட்டம் மூலம் (தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டம்) கல்லூரியிலிருந்து வெளிவரும் இளம் பட்டதாரிகளை, பட்டயப் பொறியாளர்களைத் தொழிற்பழகுனர்களாக (Apperentice, Trainee) உபயோகித்து கொண்டு மொத்த ஆலையையும் இயக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இச்சட்டத் தொகுப்போ இனி யாரும் நிரந்தரத் தொழிலாளி இல்லை, யாருக்கும் பணிப் பாதுகாப்பு இல்லை என்ற நவீனக் கொத்தடிமை நிலையை ஏற்படுத்துகிறது.

இவையெல்லாம் போதாதென்று 8 மணி நேரம் என்று இருந்த வேலை நேரத்தை நாள் ஒன்றுக்கு 9 மணி நேரம் எனக் கூட்டுவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஒரு மணி நேர கூடுதல் உழைப்பு சக்தியை, திறனை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவசமாக வாரிக் கொடுக்கும் அயோக்கியத்தனத்தைச் சட்டமாக்கிவிட முயலுகின்றனர்.

***

பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வர்க்கத் தட்டும் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வரப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு இலாபம் தரத்தக்க விலையை நிர்ணயம் செய்யவும் கடன் தள்ளுபடியும் கோருகின்றனர். தொழிலாளர்கள் பணிப் பாதுகாப்பு வழங்கவும், குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட்டித் தரவும் கோருகின்றனர். சிறு முதலாளிகள் ஜி.எஸ்.டி.யை நீக்கவும், குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் கோருகின்றனர்.

கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் இப்பொருளாதார மந்தத்திலிருந்து மீள தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம், நிலச் சீர்திருத்தம், வங்கித் துறை சீர்திருத்தம், வரி சீர்திருத்தம்  உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத மோடி அரசு, முதலாளித்துவ வர்க்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்குத் தீயாய் வேலை செய்வதை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு அம்பலப்படுத்துகிறது.

அழகு

(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழில் வெளியான கட்டுரை)


பிப்ரவரி மாதம் வெளியான புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இக்கட்டுரையை மிகவும் தாமதமாக ஏப்ரல் மாதத்தில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டமைக்காக மிகவும் வருந்துகிறோம். இவ்விதழில் வெளியான கட்டுரைகள் காலம் கடந்தவையாக இருப்பினும், அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டே வெளியிடுகிறோம்.

– வினவு


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் !

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல்மயம்!

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய தொகுதி பிரிவுத் தேர்வில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி, தரகர்கள், கீழ்மட்ட ஊழியர்கள், மோசடியாக வேலைபெற்றவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளனர். இம்முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எனக் கண்டறியப்பட்ட 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு போட்டித் தேர்வுகளை எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, ஆதார், விரல்ரேகை பதிவு உள்ளிட்ட புதிய கண்காணிப்பு வழிமுறைகளைப் பின்பற்றப் போவதாகத் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இவ்விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் சரியான திசையில்தான் செல்கின்றன என்பதைப் போன்றதொரு தோற்றம் இதன் மூலம் வலிந்து உருவாக்கப்படுகிறது.

தொகுதி 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமானதைத் தொடர்ந்து, வட்டாட்சியர், துணை ஆட்சியர், போலீசு துணைக் கண்காணிப்பாளர், சார்பதிவாளர்  உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும்  தொகுதி 1, 2 மற்றும் 2-ஏ தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதும் அம்பலமாகியிருக்கின்றன. டி.என்.பி.எஸ்.சி. மட்டுமல்லாது, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டி.ஆர்.பி. தேர்வுகள், கணினி ஆசிரியர் தேர்வுகள் ஆகியவற்றிலும், தட்டச்சுத் தேர்வுகளிலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவலர் பணிக்கான தேர்வுகளிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் நியமனத்திலும் மோசடி  முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

எனினும், அரசுப் பணியாளர் தேர்வு முறைகேட்டில் தேர்வாணைய உறுப்பினர்கள், உயரதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் பங்கு குறித்து கேள்வி எழுப்புவோரின் வாயை அடைக்கும் நோக்கில், வதந்திகளைப் பரப்புவோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்பும் என மிரட்டுகிறார் தேர்வாணையத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஜெயக்குமார். சுண்டெலிகளைப் பலியிட்டுவிட்டு, பெருச்சாளிகளைக் காப்பாற்ற  அ.தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டது என்பதற்கான அடையாளமே இந்த மிரட்டல்.

படிக்க :
கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !
♦ TNPSC மோசடி : இது வெறும் ஊழல் அல்ல ! உங்கள் உழைப்பை அழிப்பது !

***

ஒப்பீட்டு அளவில் பணிப் பாதுகாப்பும், ஊதிய உத்தரவாதமும், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பும் மட்டுமின்றி, சமூகத் தகுதியும் அரசு வேலைகள் மூலம் கிடைப்பதால்தான், தனியார் துறை வேலைகளைவிட அரசு வேலைகளுக்கு இளைஞர் பட்டாளம் ஆளாய்ப் பறக்கிறது. துப்புரவுப் பணியாளர் வேலைக்கும்கூட எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ. உள்ளிட்ட உயர் படிப்புகளை முடித்த இளைஞர்களும் விண்ணப்பிக்க முன்வருவது வேலையில்லா திண்டாட்டத்தின் கோர முகத்தை மட்டும் காட்டவில்லை. அரசு வேலை குறித்து இளைஞர்கள் மத்தியில் உள்ள மயக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த மயக்கத்தைத்தான் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள், தரகர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மோசடிக் கும்பல் தூண்டில் முள்ளாய்ப் பயன்படுத்திக் கொள்கிறது.

தொகுதி 4 தேர்வின் விடைத்தாட்களைத் திருத்துவதற்கு நடந்த அத்துமீறல்கள், முறைகேடுகள்; 2017 நடத்தப்பட்ட தொகுதி 2ஏ தேர்வில் “வெற்றி” பெற்றுப் பணியில் சேர்ந்த 26 அதிகாரிகள் திடீரெனத் தலைமறைவாகியிருப்பது; 2008 நடந்த தொகுதி 1 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் சென்னை  தி.நகரிலுள்ள பயிற்சி மையத்திற்கு இருந்த தொடர்பு; தேர்வாணையத்தில் உறுப்பினராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராமின் மகன் தனது முதல் முயற்சியிலேயே தொகுதி 1 தேர்வில் தேர்வாகி வணிக வரித்துறையில் துணை ஆணையர் ஆனது உள்ளிட்ட பல முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. இவையாவும் இம்முறைகேடுகளின் பின்னே அமைச்சர்- அதிகார வர்க்கம் –  பயிற்சி மையம் – என்றொரு வலைப் பின்னல் இருப்பதை அம்பலப்படுத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால், இது தமிழகத்தில் அ.தி.மு.க. நடத்தியிருக்கும் “வியாபம் ஊழல்!”

2011-ஆம் ஆண்டில் ஜெயா தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு தேர்வாணையம் கிரிமினல் கூடாரமாக மாற்றப்பட்டது. குறிப்பாக, 2016-ஆம் ஆண்டில், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்கு கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுத்தது அம்பலமாகி, ஜெயா அரசால் நியமிக்கப்பட்ட 11 தேர்வாணைய உறுப்பினர்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. எனினும், நீதிமன்றத்திற்கே சவால் விடும் வகையில் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுள் 5 பேரை மீண்டும் உறுப்பினராக நியமித்தது,  ஜெயா அரசு. சம்பளமில்லாத கவுரவப் பதவியான டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் ஆவதற்கு, இலட்சங்களில் சம்பளம் வாங்கிய நீதிபதி பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற இராமமூர்த்தி, “நீதிபதிக்கான சம்பளத்தைவிட இதில் எத்தனை மடங்கு சம்பாதிப்பார்?” எனக் கேள்வியெழுப்பியது உச்ச நீதிமன்றம்.

படிக்க :
TNPSC ஊழல் – பின்னணி என்ன ? | பேரா ப.சிவக்குமார் | காணொளி
♦ நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !

தொகுதி 1 முதன்மைத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக அத்தேர்வில் பங்கேற்ற ஸ்வப்னா என்ற திருநங்கை பொதுநல வழக்கு தொடர்ந்தார். குறிப்பாக, அத்தேர்வில் சென்னை மனிதநேயம், அப்பல்லோ பயிற்சி மையங் களிலிருந்து மட்டும் 62 பேர் (மொத்த வெற்றியாளர்கள் 74 பேர்) வெற்றி பெற்று அதிகாரிகளாகி இருக்கிறார்கள். அத்தேர்வே மிகப்பெரும் மோசடி என்பதை இந்த 62 பேரின் தேர்வு எடுத்துக் காட்டுகிறது. இதனைத் தொடர்ந்து பயிற்சி மைய இயக்குநர் சாம் மற்றும் தேர்வாணையத்தைச் சேர்ந்த ஓரிரு கீழ்நிலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். எனினும், சாம் சிறைக்குச் செல்லும் முன்பே முன் பிணை கொடுத்துக் காப்பாற்றப்பட்டார். மேலும், விசாரணை மனித நேயப் பயிற்சி மையத்தை நடத்திவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சைதை துரைசாமி உள்ளிட்டு மேல்மட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளை நோக்கி நகருகிறது எனப் புரிந்துகொண்ட அ.தி.மு.க. அரசு 2018-இல் விசாரணை அதிகாரிகளை அதிரடியாக மாற்றி, அவ்விசாரணையை முடக்கிப் போட்டுவிட்டது.

முறைகேடுகளின் மூலம் நிரப்பப்படும் நியமனங்கள் நியாயமான முறையில் தேர்வெழுதிக் காத்திருக்கும் இளைஞர்களை மட்டும் ஏமாற்றவில்லை. அதனைவிட முக்கியமாக, மோசடிகளின் மூலம் அரசுப் பதவிகளைப் பெறுபவர்கள், குறிப்பாக வட்டாட்சியர், போலீசு துணைக் கண்காணிப்பாளர், வணிக வரி அதிகாரிகள் என அதிகாரமிக்க பதவிகளைப் பெறுபவர்கள் சட்டப்படியும் நியாயப்படியும் நடந்துகொள்வார்கள் என்பதற்கு அடிப்படையே கிடையாது. இப்படிப்பட்ட நியமனங்கள் சிவில் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் குரூரத் தாக்குதலாகும். இப்படிப்பட்ட அதிகாரிகள், அவர்களது மோசடி நியமனங்கள் அம்பலமாகி பிற்பாடு பதவி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர்கள் பதவியில் இருந்த காலத்தில் போட்ட உத்தரவுகள், எடுத்த நடவடிக்கைகள் செல்லுபடியாகும் என்றால், அதனைவிட குரூர நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது.

படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாதவர்கள், அதற்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்தும் திராணியற்றவர்கள் தமது தோல்வியை மறைக்கவே போட்டித் தேர்வு முறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். வேலை தேடும் இளைஞர்களுள் தகுதியும் திறமையும் கொண்டவர்களைக் கண்டுபிடிக்கத்தான் போட்டித் தேர்வுகளை நடத்துவதாக அவர்கள் கூறுவதெல்லாம் நாடகம், மோசடி என்பது தேர்வாணையத் தேர்வுகளில் நடந்திருக்கும் முறைகேடுகளின் வழியாக மட்டுமல்ல, வியாபம் ஊழல், நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள், மத்தியப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வினாத்தாட்கள் வெளியானது என வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

இவையாவும் இந்தக் கட்டமைப்பு எவ்வளவு தூரத்திற்குத் திருத்த முடியாத அளவிற்குச் சீரழிந்து நிற்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றன. இந்த நிலையில் முறைகேடுகளைத் தடுப்பதற்கு புதிய புதிய கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கி இந்த அமைப்பு முறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த முனைகிறார்கள். அவையெல்லாம் புற்று நோய்க்கு பாரசிட்டமால் மாத்திரை கொடுப்பதைப் போன்றதாகும்.

கைகளில் புத்தகக் கட்டுகளோடும், கண்களில் கனவுகளோடும், மனதில் நம்பிக்கையோடும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களே, இனி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். பாரசிட்டமால் மாத்திரை போதுமா, அல்லது அறுவைச் சிகிச்சை தேவையா என்பதை!

தமிழ்ச்சுடர்

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கொரோனா பொருளாதார நெருக்கடியில் மோடி அரசின் 12 மணி நேர வேலை யோசனை !

அருண் கார்த்திக்
12 மார்ச் அன்று செய்தித்தாள்களில் ‘ஊரடங்கு முடிந்ததும் தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை!’ என்பது போன்ற தலைப்பிட்ட செய்தி வந்தது. தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை அதிகரிக்க அரசு அமைத்த குழு பரிந்துரை செய்ததாகவும் அந்தப் பரிந்துரையை ஏற்று சட்ட திருத்தங்களை மோடி அரசு கொண்டு வரப் போவதாகவும் அந்த கட்டுரை கூறியிருந்தது. இதனால் உற்பத்தி செலவு குறையும் என்றும் அதனால் தொழிற்சாலைகள் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் விளக்கம் கூறியிருந்தது.

இந்த மாதிரி அறிவுரைகளைக் கூறும் பொருளாதார வல்லுனர்கள் என கூறப்படுபவர்கள் கண்டிப்பாக மூளையை முதுகில் வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும்! நடப்பதைப் பற்றி எந்த புரிதலும் இல்லாதவர்கள் மட்டுமே இவ்வாறு யோசனை கூற முடியும்.

கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பாகவே பொருளாதாரம் மந்த நிலையில் தான் இருந்தது. Consumption எனப்படும் நுகர்வு சமீபத்திய வரலாற்றில் காணப்படாத அளவு குறைந்திருந்தது. நடுத்தர மக்கள் வாங்கும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் கீழ்தட்டு மக்கள் வாங்கும் பிஸ்கட், பற்பசை முதல் உள்ளாடை வரை அனைத்தும் விற்பனை சரிவை சந்தித்து இருந்தது. பொருளாதாரம் ஒரு சங்கிலித்தொடர் என்பதால் இந்த சரிவு மற்ற துறைகளையும் பாதித்தது. எடுத்துக்காட்டாக சரக்கு வாகனங்களின் விற்பனை 50 சதவீதத்துக்கு மேல் சரிவை கண்டது. இந்த தேக்க நிலையினால் நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை கட்ட முடியாமல் வராக்கடனாக மாறியது. வங்கிகளின் கணக்குகளில் வராக்கடன் அதிகரிப்பதால் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைக்க தொடங்கின. இவ்வாறு நீண்டு கொண்டே சென்றது.

இவை அனைத்துக்கும் காரணம் அடித்தட்டு மக்களால் பொருட்களை வாங்க முடியாமல் போனதுதான். பொருளாதாரத்தில் இதற்கு demand side constraint என்று கூறுவார்கள். அதாவது சந்தையில் பொருட்கள் இருக்கின்றன ஆனால் அதை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை, அதாவது தேவை இல்லை, என்பதுதான் இதற்குப் பொருள். பொதுவாக இந்த விற்பனை குறைவுக்கு பொருளாதாரத்தில் இன்னொரு காரணம் கூறப்படுவது உண்டு. அதற்குப் பெயர் supply side constraint. அதாவது, போதுமான அளவு பொருட்கள் சந்தையில் இல்லாததால் விற்பனை குறைவது. எந்த வகையில் விற்பனை குறைகிறதோ அதற்கு ஏற்றாற்போல் அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொருட்கள் சந்தையில் இல்லாமல் இருப்பதனால் விற்பனை குறைகிறது என்றால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களால் வாங்க முடியாமல் விற்பனை குறைகிறது என்றால் மக்களின் வாங்கும் திறனை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிக்க:
♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !
♦ கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !

இப்போது இந்தியா சந்தித்து வரும் சரிவு மக்களின் வாங்கும் திறன் குறைந்து இருப்பதால் இருக்கும் சரிவு. இதுதான் சரிவுக்குக் காரணம் என்று நம்மால் எப்படி உறுதியாக கூற முடிகிறது? அனைத்து துறைகளிலும் உள்ள தொழிற்சாலைகள் அவை உற்பத்தி செய்யக்கூடிய அளவில் எத்தனை சதவீதத்திற்கு உற்பத்தி செய்கின்றன என்பதை வைத்து இதை முடிவு செய்வார்கள். இதை திறன் பயன்பாடு (capacity utilisation) என்று சொல்வார்கள். தற்போதைய நிலையில் இந்தியாவில் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் தொடங்கி பல துறையில் செயல்படும் தொழிற்சாலைகள் மிகவும் குறைந்த திறன் பயன்பாட்டில் இயங்குகின்றன.

இதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான குறியீடு ஒன்று உள்ளது. நாட்டிலுள்ள மின்சார உற்பத்தி ஆலைகள் அவர்களுடைய உற்பத்தி அளவில் எத்தனை சதவீதம் உற்பத்தி செய்கின்றன என்பதுதான் அந்தக் குறியீடு. இதற்கு plant load factor என்று பெயர். எடுத்துக்காட்டாக, 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு ஆலை 50 மெகாவாட் உற்பத்தி செய்கிறது என்றால் அந்த ஆலை 50% plant load factor-இல் இயங்குகிறது என்று பொருள். கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி ஆலைகளிலும் இந்த plant load factor வரலாறு காணாத அளவு குறைவாக இருந்துள்ளது. இதற்குப் பொருள் என்னவென்றால் நாட்டில் மின்சார உற்பத்தி திறன் இருக்கிறது ஆனால் அந்த மின்சாரத்தை வாங்கி உபயோகப்படுத்த ஆர்வமில்லாமல் இருக்கிறது. இன்னும் அனைத்து வீடுகளும் மின்சார மயமாக்கப்படாத ஒரு நாட்டில் மின்சாரத் தேவை குறைவது என்பது வேறு ஏதோ பெரிய பிரச்சனையை காட்டுகிறது.

இதற்கும் அதே பொருள் தான். மக்களிடம் வாங்கும் திறன் இல்லை அதனால் உற்பத்தியாளர்கள் பொருட்களை உற்பத்தி செய்வதில்லை. அதனால் உற்பத்தியாளர்கள் மின்சாரத்தை பயன்படுத்துவது குறைந்துள்ளது.

பிரச்சனை இவ்வளவு பெரிதாக இருந்தாலும் இதற்கு தீர்வு மிக எளிதானது. மக்களின் வாங்கும் திறனை அதிகரித்தால் இந்த பொருளாதார சுழற்சி என்பது மீண்டும் நகர தொடங்கிவிடும். எளிதாக சொல்ல வேண்டுமென்றால் சாதாரண மக்களின் கைகளில் அதிகப்பணம் புழங்கினால் அவர்கள் இயல்பாகவே அதிக பொருட்களை வாங்குவார்கள். அது அதிக உற்பத்திக்கு வழிவகுக்கும். அது வேலைவாய்ப்பை சிறிதளவேனும் அதிகரிக்க வழிவகை செய்யும். இதை demand side intervention என்று கூறுவார்கள்.

இது ஒன்றும் கம்யூனிச அல்லது சோசலிச கொள்கை அல்ல, முதலாளித்துவ அறிஞர்கள் கூறும் தீர்வு தான் இது. ஜான் மேனார்டு கீன்ஸ் என்ற பொருளாதார அறிஞர் வகுத்த கொள்கைகள் தான் இது. முதலாளித்துவத்தின் சொர்க்க பூமி என்று கருதப்படும் அமெரிக்காவிலேயே 1930களில் பொருளாதார தேக்க நிலை வந்த பொழுது பிராங்க்ளின் ரூசவெல்ட் என்ற அதிபரால் அமல் படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற கொள்கைகள் தாம் இவை!

ஆனால், இந்திய அரசு இதை எதையும் செய்யாமல் நேரெதிரான வேலைகளை செய்து வருகிறது. வாங்கும் திறனை அதிகரிப்பதற்கு பதிலாக உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேலைகளை செய்கிறது. அதாவது குறைந்த வட்டியில் கடன்கள் கொடுப்பதன் மூலமும் வருமானவரி விலக்கு அளிப்பதன் மூலமும் மற்ற முறைகளில் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும் உற்பத்தியை அதிகரிப்பார்களாம். உற்பத்தி அதிகரித்தால் விலை குறைந்து மக்கள் வாங்கத் தொடங்கி விடுவார்களாம். Supply side intervention என்று இதற்குப் பெயர்.

இவ்வாறு உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிப்பதன் ஒரு அங்கம்தான் தொழிலாளர்களுடைய சம்பளத்தை குறைப்பது. சம்பளத்தில் நேரடியாகவும் குறைக்கலாம் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலமும் மறைமுகமாக குறைக்கலாம். கடந்த காலங்களிலும் பெருநிறுவனங்களுக்கு வருமான வரி சலுகை, குறைந்த வட்டியில் கடன் போன்றவற்றை மோடி அரசு கொடுத்து பொருளாதாரத்தை நிமிர்த்தும் முயற்சி செய்தது. ஆனால் அவை எதுவும் எடுபடவில்லை.

இவர்கள் கையாலாகா தனத்திற்கு பாவப்பட்ட கொரோனா பழியை ஏற்றுக் கொண்டது. சாதாரண காலங்களிலேயே செயல்படாத இந்த முயற்சிகள் இப்போது நாம் சந்திக்கும் இக்கட்டான சூழலில் எப்படி செயல்படும் என்று இவர்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாம் செயல்பட்டுக் கொண்டிருந்த பொழுதே சாதாரண மக்களிடம் பணம் இல்லாமல் இருந்தது. அதனால் அவர்கள் பொருட்களை வாங்காமல் இருந்தனர். இப்போது எல்லாம் ஸ்தம்பித்து போன பிறகு அவர்கள் கையில் சுத்தமாக காசே இருக்காது, பட்டினி கிடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்த சமயத்தில் ஒரு முதலாளித்துவ பொருளாதார அறிஞரை கேட்டாலும் கூட மக்கள் கையில் பணம் போய் சேர வேண்டும் என்று தான் கூறுவார்கள். பொருளாதார வலதுசாரிகள் என்று கருதப்பட்ட டிரம்ப் முதல் போரிஸ் ஜான்சன் வரை அனைவரும் மக்களிடம் ‘நீங்கள் வீட்டிலேயே இருங்கள், உங்களுக்கு தேவையானதை அரசு செய்யும், உங்களுக்கு மாதம் இவ்வளவு என்று பணத்தையும் நாங்கள் தருகிறோம்’ என்று கூறுகிறார்கள். ஆனால் இந்திய அரசு மட்டும் அறிவாளி தனமாக வேலை நேரத்தை எப்படி அதிகரிப்பது என்று பேசிக் கொண்டிருக்கிறனர்.

அரசு இவ்வாறு செய்வதன் மூலம் வரப்போகும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்க போகின்றது. ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு இல்லாததால் வன்முறையில் ஈடுபட்டதாக குஜராத்திலிருந்து செய்தி வந்துள்ளது. நிலைமை மோசமாக ஆக இது நாடு முழுதும் பரவும் அபாயம் உள்ளது.

வேதனை என்னவென்றால் இந்த நிலையிலும் கூட அமெரிக்க எஜமானர்கள் எப்படி திருப்தி செய்வது என்றே நமது ஆட்சியாளர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மண்ணில் தலையை புதைத்துக்கொண்ட நெருப்புக்கோழி என்று ஒரு எடுத்துக்காட்டு சொல்வார்கள், நம்ம ஆட்சியாளர்களோ மண்ணில் தலையை புதைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் கண்ணையும் மூடிக்கொண்டு இருப்பது போல் தெரிகிறது.

நாம் இதை எல்லாம் சொன்னால், இப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களில் கூட அரசை குறைகூறுவதிலேயே குறியாக உள்ளீர்கள் என்று நடுநிலையாளர்கள் நம்மை குறை கூறுகிறார்கள்.

அய்யன் திருவள்ளுவரே எப்போதும் போல இதற்கும் பதில் சொல்லியுள்ளார்!

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

அருண் கார்த்திக்

கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !

கொரோனோ பிரச்சனை காரணமாக ஊரடங்கு. மக்கள் பலரும் வீட்டில் இருக்க அவர்களைப் பாதுகாக்க மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் .
மற்ற அனைவரையும் விட சுகாதாரப் பணியாளர்கள் வேலை என்பது கடினமானது மட்டுமல்ல போராட்டமானதும்கூட.

அவர்களோடு இணைந்து வேலை செய்யும் போது அவர்களுடைய வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. ஊரடங்கு காரணமாக ஊரே தாமதமாக எழுவதை வழக்கமாக கொண்டிருக்கும்போது,
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக நகராட்சி துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் காலை ஐந்தரை மணிக்கு எல்லாம் அலுவலகம் வர வேண்டும். அப்படி வரவேண்டும் என்றால் அவர்கள் எத்தனை மணிக்கு எழுந்திரிக்க வேண்டும்?

அதிகாலையே கண்விழிக்க வேண்டும். அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் சுமார் மூன்று கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கிறது. காலை 5.45 மணிக்குள் அனைவரும் கையெழுத்திட வேண்டும். ஆறு மணிக்கு தங்களுக்கான பாதுகாப்பு (அதன் தகுதியை பற்றி பின்னர் பேசலாம்) கவசங்களை மாட்டிக்கொண்டு மண்மவெட்டி, கடப்பாரை சாக்கடையை சுத்தம் செய்வதற்கு தேவையான இழுப்பான், பிளிச்சிங் பவுடர் மூட்டை அதை தெளிக்கும் பாண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதிகாரிகள் சொல்லும் வார்டுகளுக்கு செல்ல வேண்டும். சுமார் 6.30 மணியிலிருந்து 7.30க்குள் வேலைகளைத் தொடங்க வேண்டும்.
அப்படி அவர்களோடு நாம் பல இடங்களில் வேலை செய்தோம் அவர்களோடு ஒரு சிறிய நேர்காணல்….

தொற்றுநோய் பரவ காலத்திலே வேலை செய்றீங்களே! உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையா?

பிளிச்சிங் பவுடர் தெளிக்கும்போது வியர்வை வரும். சுண்ணாம்பும் வியர்வையும் சேர்வதால் கை எல்லாம் ஏரிய ஆரம்பிச்சிடும். கொளுத்தற வெயில்ல வேர்வையும் சேர்ந்துக்கும். கண்களும் எரியும் பிளிச்சிங் பவுடர் அலர்ஜியால கையிலேர்ந்து இருந்து அரிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். அதிலே வேர்வையும் உப்பும் சேர்ந்து எரிச்சலும் அரிப்பும் சேர்ந்தா சொல்லவா வேணும் வேலை செய்யவே முடியாது.
காலையிலேயே சீக்கிரம் எந்திரிக்கறதால பசி வந்து அதிகமாயிடும். ஆனால் உடனே சாப்பிட முடியாது .

வேலை செஞ்சுட்டு அலுவலகத்திற்கு போய்தான் சாப்பிட வேண்டும். அதுக்கே மணி பத்தரை ஆயிடும். வேற வழியில்ல மூக்கு, வாய் எல்லலாம் எரியும். வேலைகள் முடியலன்னா மேஸ்திரி சத்தம் போடுவார். இன்ஸ்பெக்டர் மிரட்டுவார். அதிகாரி பேனாவை எடுப்பார். வேலைக்கு சிக்கலாக்கும், சொல்றத செஞ்சுதான் ஆகணும்.

சரி எல்லாம் எங்கே தங்கி இருக்கீங்க? எல்லா வசதிகளும் சரியா செய்து இருக்கா ?

சரியான தூக்கம் இல்ல. அந்த குப்பை வண்டியிலே வச்சி கூட்டிக்கிட்டு போவாங்க.
சத்தான உணவு சாப்பிட்டால் தான் நோய் வராதுன்னு சொன்னாங்க. மருந்தடிக்கும் எங்களுக்கு எப்படி சோறு போடுறாங்க தெரியுமா? தயிர் சோறு போடுறாங்க அது கஞ்சி சோத்தை விட மோசமா இருக்கு ஊறுகா கூட கிடையாது .

நோய் எதிர்ப்பு ஊசி எங்களுக்கு போடணும்னு சொல்றாங்க அதுவும் கிடையாது. மருந்து அடிக்கறதால கையெல்லாம் புண்ணாகிவிடும். குடிக்க டீ தர மாட்டேங்குறாங்க; சுத்தமான தண்ணி கொடுக்க மாட்டேங்கிறாங்க ஆனால் வேலை செய்யாமலா இருக்கிறோம்? சாக்கடைய, குப்பையை வராமலா இருக்கோம்… ப்ளீச்சிங் பவுடர் போடாம இருக்கோமா?

படிக்க:
♦ கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !
♦ தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு ! தமிழக தலைமை செயலாளருக்கு PRPC யின் மனு !

ஒவ்வொரு வீட்டுக்கும் காலையில் மருந்து அடிச்சு முடிக்கிறதுக்கு காலைல பத்தரை மணி ஆயிடும். அப்புறம் சாப்பாடு சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்டு. அதுக்கு அப்புறம் கவர்மெண்ட் ஆபீஸ் எல்லாம் போய் மருந்து அடிக்கணும். அப்புறம் ஆஸ்பத்திரிக்கு போகணும்.

அப்புறம் கார்பரேஷன் ஆபீஸிர்ங்க வீட்டுக்கு போகணும். கலெக்டர் வீட்டுக்கு போகணும். நீதிபதி வீட்டுக்கு போகணும். போலீஸ் வீட்டுக்கு போகணும் எஸ்.பி. வீட்டுக்கு போகணும்.

இதெல்லாம் முடிச்சிட்டு தான் மதிய சாப்பாடு. அதான் சொன்னேனே தயிர் சோறு போடுவான் கஞ்சி மாதிரி இருக்கும். ஒரு ஊருகா இருக்காது. அப்புறம் கொஞ்ச நேரம் ரெஸ்ட்.

இரண்டு மணிக்கு வேலைக்கு கிளம்ப வேண்டும். மீண்டும் அதே மாதிரி வேலை. ஐந்து ஆறு மணிக்கு தான் கடைவீதியில குப்பையை அள்ளணும். சாக்கடை அள்ளணும். அங்கே கடையில நிக்கறவங்களுக்கு எல்லாம் வட்டம் போடணும். இந்த வேலை செஞ்சு முடிக்கிறதுக்கு ஏழு எட்டு மணி ஆயிடும். அப்புறம் வீட்டுக்கு போயி
படுத்தால் உடனே தூக்கம் வருமா கைகால் அசதியா இருக்கும். லேட்டா தூக்கம் வரும் காலை நாலு மணிக்கு போகணும் .

பாதுகாப்பு கவசம் எல்லாம் கரெக்டா கொடுத்து இருக்காங்களா?

அதெல்லாம் குடுத்தாங்க… அடுத்த நாளே கிழிஞ்சு போச்சு. இருபது ரூவா கொடுத்து ஓரம் அடிக்க மாட்டியான்னு திருப்பி நம்மலே கேக்குறாங்க. கை உறையெல்லாம் கிழிஞ்சு போச்சு இப்போதைக்கு இது தேவலாம். என்ன பண்ண முடியும்?

டெய்லி வீட்டுக்கு போய்ட்டு வந்துருவீங்களா ?

இந்தப் பில்லுகடை சந்து இருக்குல்ல. அங்கதான் அரங்கம் எடுத்து கொடுத்திருக்காங்க. அங்க தான் பகல்ல போய் 40 பேர் தங்கி இருக்கோம்.

அங்க தண்ணி போக மாட்டேங்குது கக்கூஸ் சரி கிடையாது எங்க ஆபீஸ்ல பிளம்பர் எல்லாரும் இருக்காங்க. அவங்கள வச்சு எந்த வேலையும் செய்யறதுல்ல.
அத விடுங்க இதுவரைக்கும் டாக்டர் கூட வந்து காய்ச்சல் அடிக்குதா ? தலைவலிக்குதான்னு எங்களை செக்கப் செஞ்சதே கிடையாது. கேட்டா நீ ஒழுங்கா வேலைசெய்யுறீயான்னு கேக்குறாங்க.

பேர்தான் தூய்மைப் பணியாளர், நல்ல கக்கூசு உண்டா? தண்ணித்தொட்டி உண்டா ?
நாங்க அம்பது பேரு பகல்ல அந்த இடத்தில் தான் தங்கி இருக்கோமே. அந்த இடத்துக்கு வந்து பாருங்க கக்கூஸ வந்து பாருங்க. தண்ணீ டேங்க்க வந்து பாருங்க. நாங்களாவது ஆம்பளைங்க பரவாயில்லைங்க. 33 பொம்பளைங்க இருக்காங்க எப்படிங்க ஒன்னுக்கு ரெண்டுக்கு போவாங்க. நீங்களாவது பார்த்து ஏதாவது செய்யுங்க

இப்படி தொற்றுநோய் பரவ காலத்தில் நீங்க வரிங்களே உங்களுக்கு பிரச்சனை இல்லியா வீட்டில் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா ?

வேற என்ன பண்றது வேலை செஞ்சுதான் ஆகணும். ஒரு சில பேர் இந்த வேலைக்கு புதுசா வந்து இருக்காங்க. அவங்க இதுக்கு முன்னாடி பல இடங்களில சாக்கடை அடைப்பு எடுக்குறவங்க தான், இங்க அதேபோல வேலைகளத்தான் செய்றாங்க. பெர்மணண்ட் ஆக்குவாங்கன்னு ஒரே ஆசைதான் வேற என்ன இருக்கு.

சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி சொல்கிறோமென்று கை தட்டுவதும் சங்கு ஊதுவதும் மணியடிப்பதும் பயனளிப்பதில்லை. பஞ்சாபின் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மலர் தூவினார்களாம். அதைப்பற்றி நான் ஒருவரிடம் கேட்ட போது, அவர் சொன்னார் “அந்த குப்பையையும் நாங்க தான் அள்ளணும்”

சுகாதாரப் பணியாளர்கள் சாதாரண காலங்களில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் போது திமிர் புடிச்சவங்க ஒழுங்கா வேலைய பார்க்குறாங்களா பாரு என்று ஏளனமாகவும் கேவலமாகவும் பேசும் சமூகம் தான் இன்றைக்கு அவர்களை வாழ்த்துகிறது என்றால் அது நம்பவா முடிகிறது ? அப்படி அவர்களுடைய சேவைக்காக அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றால் அவர்கள் பணி நிரந்தரமாகவும் அவரது உரிமைகளுக்காக தோள் கொடுப்பதும் தான் ஒரே வழி.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நேர்காணல் : தோழர் பாலு, மண்டல ஒருங்கிணைப்பாளர், கடலூர்.

***

க்கள் அதிகாரத்தின் சார்பில் கடலூர் நகராட்சி தொழிலாளர்களுடைய வேலை மற்றும் வாழ்விடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த வகையில் நகராட்சி அதிகாரிகள் முன் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றில் கடுமையாக வேலை செய்யும் இந்த நகராட்சி தோழர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை, என்ற அடிப்படையில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும், அனைவருக்கும் முகக் கவசம், கையுறை கொடுக்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் நல்ல முறையில் உணவு கொடுக்க வேண்டும். பெண்கள் தங்குகின்ற டிவிஷன் 3 மஞ்சக்குப்பம் பில்லு கடை சந்தில் உள்ள கலைஞர் மண்டம் பழுதடைந்துள்ளது. இங்கு அனைத்தும் இருக்கிறது எதுவும் இயங்கவில்லை. கழிவறை உள்ளது அவை பயன்படுத்த இயாலாத வகையில் உள்ளது. தண்ணீர் வருகிறது அதை முறையாக பயன்படுத்த முடியாது, பெரிய அளவில் மண்டபம் இருக்கிறது அங்கு மின்விசிறி இல்லை. குறிப்பாக கழிவறை இல்லாமல் பெண்கள், சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக நாம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பேசியதன் அடிப்படையில் தற்போது அப்பகுதியில் உள்ள அனைத்து நகராட்சி ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட்டுள்ளார்கள். மேலும் முககவசம் மற்றும் கையுறைகளை கொடுத்துள்ளார்கள்.

This slideshow requires JavaScript.

இவை மட்டுமின்றி அதிகாலையில் “ஒரு டீ கிடைக்குமா தம்பி…” என்று நம்மிடம் உரிமையாக கோரிக்கை வைத்தார்கள் தூய்மைப் பணியாலார்கள், இதனை மஞ்சக்குப்பம் பகுதியிலுள்ள இஸ்லாமிய நண்பர்கள் மத்தியில் கோரிக்கை வைத்தோம் திரு நஸ்ருதீன், திரு ஷேர் அலி, திரு மாலிக் ஆகியோர் கடந்த ஐந்து நாட்களாக அவர்களுக்கு காலையில் தேனீர் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். அந்த நண்பர்களுக்கு மக்கள் அதிகாரத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

அதேபோல தற்காலிக பணியாளர்கள் ஏற்கனவே தினக் கூலிகளாக வேலை செய்து வந்தவர்கள், எனவே அவர்களுக்கான ஊதியத்தை வாரத்தில் ஒரு நாள் என்று கொடுக்க வேண்டும் என்பதையும் ஏற்று அதயும் கொடுத்துள்ளார்கள். மேலும் தூய்மைப் பணியாலர்களின் பல்வேறு நியாயமான கோரிக்கைகளையும் மெல்ல மெல்ல அமல் படுத்துவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள நகராட்சி தொழிலாளர்கள் மற்றும் மேஸ்திரிகள் அனைவரும் மக்கள் அதிகாரம் தோழரிடம் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர். தொடர்புக்கு : 81108 15963

கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !

கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !

சுமார் ஒரு வாரத்திற்கு முன்னதாக முத்து மாவட்டம் ஆப்’பில் தன்னார்வலராக பணி செய்ய பெயர் பதிவு செய்தோம்.

தேவைப்படும்போது அழைப்பதாக அதில் பதில் வந்தது. பதிவு செய்ததற்கான வரிசை எண்ணும் தரப்படவில்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து, தூத்துக்குடி தாலுகா அலுவலகம் சென்று “தன்னார்வலராக மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணி செய்ய விருப்பம், இதனால் ஆன்லைனில் பதிவு செய்தோம், ஆனால் எந்த ஒரு தகவலும் இல்லை” என்றோம். அங்கு இருந்த பணி அலுவலர்கள் “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தான் ஒரு பெயர் பட்டியல் வந்தது அதில் உங்கள் பெயர் இல்லை, தேவைப்பட்டால் கூப்பிடுவோம்” என்றனர். “அப்படியானால் எங்கள் பெயர் மற்றும் செல்போன் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்” என்றோம். அவர்கள் “இல்லை நாங்களே கூப்பிடுகிறோம்” என்றனர்.

“எங்கள் பெயர், செல்போன் எண் இல்லாமல் எங்களை எப்படி நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்?, எங்கள் அமைப்பின் சார்பில் தான் அரசு, தன்னார்வலர்களை  நிவாரணப் பணிகளில் இணைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம், அதனால் நாங்களும் நிவாரணப் பணி செய்ய விரும்புகிறோம்”  என்று தெரிவித்தோம்.

அதன்பிறகு “பலர் பெயர் பதிவு செய்கிறார்கள், கூப்பிட்டால் வர மறுக்கிறார்கள், சார்” என்று கூறியவாறு அவர்களின் பராமரிப்பில் இருந்த ஒரு நோட்டில் எனது பெயரையும் PRPC செயற்குழு உறுப்பினர் மைக்கேல் பெயரையும் பதிவு செய்தனர்.

11-04-2020 அன்று மதியம் 12.00 மணிக்கு “இரண்டு போட்டோக்களை எடுத்துக் கொண்டு  தாலுகா அலுவலகத்திற்கு உடனே வாங்க”என்று தாலுகா அலுவலகத்திலிருந்து அழைத்தார்கள். அங்கு சென்ற நாங்கள் தலா இரண்டு போட்டோக்கள் கொடுத்ததும் ஐந்து நிமிட நேரத்தில் தன்னார்வலர் அடையாள அட்டை கொடுத்தார்கள்.

அடையாள அட்டை பெற்ற பிறகு நாங்கள், எங்கே போகவேண்டும்?, என்ன வேலை? சார்… என்று கேட்டோம்.

“போல்டன்புரம் போனும்”,

“அங்க உள்ள ரேஷன் கடை பொருட்களை பொதுமக்களுக்கு வீடு வீடாக போய் கொடுக்கனும்” என்றனர்.

போல்டன்புரம் பகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் “ரெட் அலர்ட்” அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதி. மாநகரத்தின் கிட்டத்தட்ட மையப் பகுதி. அந்தோணியம்மாள் என்ற 65 வயது பெண்மணி இறந்து இதற்கு முந்தைய நாள் தான் அடக்கம் செய்யப்பட்டார். மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பலமான போலீஸ் பந்தோபஸ்து. வெளியாட்கள் யாரும் செல்ல முடியாத அளவில் பாதுகாப்பாக இருந்தது.

நாங்கள் போலீசாரிடம் விவரம் தெரிவித்து, ரேஷன் பொருள் விநியோகிக்கும் பகுதிக்கு சென்று விட்டோம். ரேஷன் கடை ஊழியர் பில் போடும் முனீஸ் என்பவரிடம் “எங்களை தாசில்தார் ஆபீஸிலிருந்து அனுப்பியுள்ளார்கள், நாங்கள் தன்னார்வலர்கள்” என்ற விவரம் கூறி அறிமுகப்படுத்தினோம். “என்ன வேலை எங்களுக்கு”? என்றோம். அவர் “இப்பகுதியில்  ரேஷன் கடைக்கு மக்கள் வந்தால் கூட்டமாகிவிடும், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், நாமே ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பொருட்களை விநியோகிக்க வேண்டும், நீங்கள் மக்களை கூட்டமாக  சேராமல் ஒழுங்குபடுத்துங்கள்” என்றார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நமக்கு முன்பாகவே ராஜுவ் நகரை சேர்ந்த ராஜா (தி.மு.கவை சேர்ந்தவர்) டூவிபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் மற்றும் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த பவர் ராஜேந்திரன் தன்னார்வலராக பணியை சிறப்பாக செய்து கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் சேர்ந்து “ரேஷன்கடை ஜாமான் வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கொஞ்சம் சத்தமாக ஒவ்வொரு வீட்டு முன்பும், காம்பவுண்ட் முன்பும் தகவலை தெரியப்படுத்தினோம். குரலை கேட்டு வெளியே மக்கள் வந்தனர். போல்டன்புரம் பகுதி அதிமுக பிரமுகர் இளையராஜாவும் எங்களுடன் வந்து உதவி செய்தார்.

நாங்கள் இந்த (ஏப்ரல்) மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களிடம் அவர்களின் கார்டை வாங்கி என்ன வேண்டும்? என்று கேட்டு, பில் போடும் முனீஸிடம் கொடுத்து பதிவு செய்து, பதிவு செய்த ரேசன் பொருட்களை எடை போட்ட பின்பு ஊழியர்கள் வீட்டின் முன்பு தூக்கிக் கொண்டு போய் சேர்த்தோம். சிலர் எங்களுக்கு சிரமம் என்று கருதி, லோடு ஆட்டோவில் எடைபோட்ட இடத்திற்கு வந்து சமூக விலகளை  கடைப்பிடித்து அமைதியாக, பொறுமையுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

“இதோ… அந்த வீடுதான் கொரோனாவில் இறந்த பெண்ணின் வீடு என்று ஒருவித அச்சத்தோடு சிலர் எங்களிடம் காண்பித்தனர். அந்தத் தெருவில் தான் முதல் நாள் நாங்கள் விநியோகித்தோம். நாங்கள் அந்த தெருவில் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்த ஒரு சில மணி நேரங்களில் இருமுறை மாநகராட்சி வாகனத்தில் கிருமிநாசினி தெளித்துச் சென்றார்கள் சுகாதாரப் பணியாளர்கள்.

எங்களுடன் வந்த இளையராஜா (அ.தி.மு.க பிரமுகர்) என்பவர் தான் நாங்கள் கையுறை இல்லாமல் இருப்பதை பார்த்து அவர் வீட்டிலிருந்து எனக்கும், மைக்கேலுக்கும் மற்ற தன்னார்வலர்களுக்கும் எடுத்துத் தந்தார். மாஸ்க் நாங்களே கொண்டுவந்திருந்தோம். ஏற்கனவே 15 ரூபாய்க்கு வாங்கினோம். அது பாதுகாப்பான மாஸ்க் இல்லை என்பது தெரியும். ஆனால் மருந்துக் கடைகளில் போதுமான அளவு உயர்தர பாதுகாப்பான மாஸ்க்குகள் ஸ்டாக் இல்லை.

படிக்க:
♦ பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் !
♦ தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு ! தமிழக தலைமை செயலாளருக்கு PRPC யின் மனு !

ரேஷன் கடை ஊழியரும், எடை போடுபவருமான தமிழ் என்பவருக்கு வயது சுமார் 56க்கு மேல் இருக்கும். அரிசியை அள்ளுவது, நிறுத்தி எடை போடுவது, குனிந்து பையில் தட்டுவதும் என நூற்றுக்கணக்கான முறை குனிந்தும், நிமிர்ந்தும் ஒரு நொடி கூட வீணாக்காமல் வெயிலில் வியர்வை சிந்தி, சிரித்தபடியும், நகைச்சுவை உணர்வுடனும் மக்கள் பணி செய்தார்.

பில் போடும் முனீஸ், யாராவது ஒருவர் பொருள் வாங்காமல் கால தாமதமாக வந்தாலும், அந்த ஒருவருக்காக தனது டூவீலரை திருப்பி கொண்டு போய் பில் போட்டு வருவார். கொரோணா நிதி வாங்காத கார்டுதாரர்களை, அவர்களே மறந்தாலும் இவர் நினைவுபடுத்தி ரூ. 1000/- வழங்கிக் கொண்டும் வந்தார். “அரசு ஊழியர்கள் ஒழுங்காக வேலையை செய்ய மாட்டார்கள், ஒப்பேத்துவார்கள்” என்ற பொதுக்கருத்தை இந்த கடைநிலை ஊழிர்கள் இருவரும் உடைத்துக் கொண்டே வந்தனர்.

போல்டன் புரம், ஒடுக்கப்பட்ட மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் அநேக குடும்பங்கள் உள்ள பகுதியானாலும், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வழக்கறிஞர்கள் எனவும் கணிசமானவர்கள் வசித்து வருகின்றனர். பல குடும்பத்தினர்கள் சுய தொழில் செய்தும் பெரிய காங்கிரீட் வீட்டில் வசித்து வருகின்றனர். இது ஒரு கலவையான பகுதி.

“போல்டன்புரம் சொன்னா கேட்க மாட்டாங்க, ரப்சர் பண்ணுவாங்க” இப்படி ஒரு பிம்பம் உள்ள பகுதி. ஆனால் நாங்கள் ஒழுங்குபடுத்தாமல் அவர்களே பெரும்பாலும் சமூக இடைவெளியை கடைபிடித்தார்கள். முகக்கவசம் அணிந்து வந்து வாங்கினார்கள். ஒரு சிலர் அணியாமல் அப்படியே வந்தாலும் நாங்கள் சுட்டிக்காட்டியபிறகு உடனே அணிந்து வருவார்கள்.

வீட்டிற்கு முன்பு ரேஷன் பொருட்களை நாங்கள் சுமந்து இறக்கி வைத்தால் வாஞ்சையோடு நன்றி கூறுகிறார்கள். “தண்ணீர் குடிக்கிறீர்களா?” என்று பாசம் காட்டுகிறார்கள். இறந்த அந்தோணியம்மாள் வீட்டில் அருகே வசிக்கும் நடுத்தர வயதை சேர்ந்த ஆண்கள் சிலர் “ரெட் அலர்ட் பகுதி என்று தெரிந்தும் எங்க மக்களுக்கு வீடுவீடாக பொருட்கள் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி” என்று கூறி இரு கைகளை கூப்பி நன்றி தெரிவிக்கிறார்கள்.

11, 12-ம் தேதிகளில் அரிசி கோதுமை, பாமாயில், சீனி பருப்பு விநியோகிக்கப்பட்டது. இதில்லாமல் பிற பொருட்கள் கேட்டு வரும் பொதுமக்களிடம் “மற்ற பொருட்கள் இருப்பில் இல்லை” என்று ரேஷன் ஊழியர்கள் கூறுகிறார்கள். “சரி வந்தால் போடுங்கள்”, என்று கூறி மக்கள் நகருகின்றனர். யாரும் கோபப்படவில்லை. காரணம் அந்த ரேஷன் கடை எழுத்தர் மீதிருந்த நம்பிக்கைதான். அரசு பணியாளர்கள் நேர்மையாக இருந்தால் மக்கள் ஒத்துழைக்கின்றனர் என்பதை காண முடிந்தது.

இதற்கு (கொரோனாவுக்கு) முன்பு ரேஷன் அரிசி வாங்காத பல நடுத்தர குடும்பங்கள் ரேஷன் அரிசி வாங்குவதை அறியமுடிந்தது. அவர்களை மாடியிலிருந்து கீழே இறங்கியுள்ளது ஊரடங்கு. மக்களை சுகாதார பாதுகாப்பு கருதி கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் அதே வேளையில், அரசாங்கம் அவர்கள் பசியை போக்க வேண்டும். ஏனைய நாடுகளைப் போல கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

பல குடும்பங்கள் எங்களிடம் “கொரோனா கூட எங்களை கொல்லாது, பசியில தான் நாங்க செத்துப் போவோம்” என்று ஒட்டிய வயிறை மறைத்து நிற்கிறார்கள்.
கண் கலங்கினால் கையறு நிலைமை வெளியில் தெரியும் எனக் கருதி வழக்கம்போல் இயல்பாய் இருக்க முயற்சி செய்கிறார்கள்.

முதல் நாளில் மாலை 6.00 மணிக்கு பணி முடிந்தது. லோடு ஆட்டோவில் இருப்பு உள்ள அரிசி மூட்டைகளையும், பருப்பு பைகளையும் ரேஷன் கடையில் இறக்கி வைத்து விட்டுத்தான் வீடு திரும்பினோம்.

வீடு கிளம்ப தயாரானபோது எங்களை ரேஷன் கடை ஊழியர் முனீஸ் அழைத்து, லோஷன் கொடுத்து கைகளை கழுவ சொன்னார். அதற்கு முன்பாகவே நாங்கள் அணிந்திருந்த பாலித்தின் கையுறை கிழிந்து தொங்கி விரல் வழி வியர்வை வழிந்து கொண்டிருந்தது.

2ம் நாளான 12-04-2020 அன்று KSPS ரோடு, கக்கன் பூங்காவிற்கு வடக்கு பக்க தெருவில் உள்ள வீடுகளில் மதியம் சுமார் 1.45 மணிக்குள் ரேடின் பொருள் கொடுத்து முடித்து விட்டோம். ரேஷன் பொருட்களை லோடு ஆட்டோவில் ஓட்டி வந்த அதன் டிரைவர்கள் பரமசிவன் (அ.ம.மு.கவைச் சேர்ந்தவர்) இன்னொருவர் பெயர் நினைவில் இல்லை. சலிப்புத் தட்டாமல் வண்டியை நிறுத்த, திருப்ப, மூவ் செய்யவும், ஓட்டுநர் பணி போக அரிசி, சீனி மூட்டைகளை நகர்த்துவது, ரேஷன் பொருட்களை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பது என பணி செய்தனர்.

ஆனால் 2ம் நாள் நாங்கள் மூடைகளைத் தூக்கவில்லை. கான்ட்ராக் வேலையில் லோடுமேனாக வந்த  பார்ப்பதற்கு படித்த இளைஞரைப்போல இருந்தவர் எங்களை மூடைகளைத் தூக்க விடாமல் அவரே எல்லா வேலைகளையும் சுறு சுறுப்புடனும் செய்தார்.

விநியோகம் முடிந்து, ரேஷன் கடைக்கு வந்து, உடன் பணி செய்த ரேஷன் கடை ஊழியர்களிடம்  விடை பெறும் போது தான்,  நான் ஒரு வழக்கறிஞர் என்றும், மைக்கேல் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் எனது ஜூனியர் என்றும், எனது அலுவலகமும் போல்டன் புரத்தில் தான் இருக்கிறது என்றும், அவர்களுடன் பணிபுரிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் நான் கூறி எனது விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்து முனீஸிடம் கொடுத்து வந்தோம். அதுவரை எங்களை நாங்கள் சுய அறிமுகம் ரேஷன் கடை ஊழியர்களிடம் செய்யவில்லை. ஒருவேளை வழக்கறிஞர் என்று முன்பே தெரிந்தால் அவர்கள் எங்களை எப்படி வேலை வாங்குவதென்று யோசிப்பார்கள், வேலை செய்ய சொல்ல கூச்சப்படுவார்கள் என்றும் கருதியதால் விடைபெறும்போது தெரிவித்து, வேறு வேலை ஏதும் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறி விடை பெற்றோம்..

முதல் நாள் (11.04.2020) மதிய சாப்பாடு ஓய்வில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் எங்களுக்கு அறிமுகமான சமூக அக்கறையுள்ள ஒரு சில நண்பர்களிடம் “தன்னார்வலராக பணி செய்ய நீங்கள் ஏன் வரவில்லை?, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணி செய்யலாமே?” என்று கேட்டோம். “கண்டிப்பாக செய்யலாம். இப்பொழுதும் உணவு தயார் செய்து தாசில்தாரிடம் கொடுத்து விநியோகம் செய்து வருகிறோம். ஃபீல்ட் ஒர்க் வேலைக்கு வந்தால் கை – முகக்கவசங்கள், மருத்துவ பரிசோதனை உட்பட எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலையை உணர்கிறோம். அதனால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. வர்ற பசங்க குடும்பத்துக்கும் நம்ம ரெஸ்பான்ஸா இருக்கணும் சார்… ஏதாவது ஒண்ணுன்னா அவங்க பேரண்ட் நம்ம கிட்ட தான் கேப்பாங்க” என்றனர். அவர்கள் சொன்னது சரிதான். நாம் தன்னார்வலராக பணி செய்வதால் இதை உணர்ந்து கொண்டுள்ளோம்.

இதை  மனதில் வைத்து இரண்டாவது நாளான 12-04-2020 அன்று மதியம் சுமார் 2.00 மணிக்கு தன்னார்வலர் வேலை முடிந்த பின்பு தாசில்தார் செல்வகுமார் அவர்களை தாலுகா அலுவலகத்தில் சந்தித்தோம். தன்னார்வலராக வந்து வேலை செய்யும் இளைஞர்களின் பாதுகாப்பிற்காக தாங்கள் பாதுகாப்பு கவசங்கள்- மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அவர் கண்டிப்பாக இதை சரி செய்வதாக கூறினார். தொடர்ந்து நாங்கள் வேலை செய்ய எங்களுக்கு கையுறை முக கவசம் கிருமிநாசினி கொடுத்ததோடு நாங்கள் பசியில் இருந்ததை பார்த்து கடலை பாக்கெட்டுகள் கொடுத்தார். வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொண்டு நன்றி கூறி வந்தோம்.

வரும் வழியில் தன்னார்வலராக பதிவு செய்து தொடர்ந்து 10 நாட்களாக  SFI பொறுப்பாளர் ஜாய்சன், கரிக்களம் காலனி மாரி மற்றும் இவர்களின் நண்பர்கள் பலர் மாவட்ட சொஸைட்டி தலைமை அலுவலகத்தில் காய்கறி எடை போட்டு – பேக்கிங் வேலை செய்து கொண்டிருக்கின்றவர்களை பார்த்ததும் வண்டியை நிறுத்தி பேசினோம். இப்படி பணி செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என அவர்களின் பணிச்சுமையால் ஏற்பட்ட முதுகுவலியை கூட வெளிக்காட்டாமல் புன்முறுவலித்தனர்.
இப்படி காணும் இளைஞர்கள் அனைவரும் தன்னார்வலராக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.

மாவட்ட – மாநகர நிர்வாகம் தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் மருத்துவ உதவிகளும் செய்ய வேண்டும். அந்த நம்பிக்கையை ஏற்படுத்தினால் ஏராளமான இளைஞர்கள்  கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன் பயமின்றி கரம் கோர்த்து துணை நிற்பார்கள்.

கெ. அரிராகவன், (வழக்கறிஞர்)
13-04-2020
செயலாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC)
தூத்துக்குடி மாவட்டக் கிளை.


தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தொடர்புக்கு : 99623 66320.

பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் !

ப்ரல் ஏழாம் தேதி நிலவரப்படி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அளித்திருக்கும் தகவல்களின்படி, கொரோனாவினால் நோயாளிகள் இருக்கும் விகிதாச்சாரம் இந்தியாவிலேயே குஜராத்தில்தான் அதிகம் என்கிறது Thewire.inல் வந்திருக்கும் ஒரு கட்டுரை.

குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது 7.88 சதவீதம். இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 2.87 சதவீதம்தான்.

இந்தியாவுக்கே முன்னுதாரமாக குஜராத் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அந்த மாநிலத்தில் பொது சுகாதாரத்தின் நிலை இவ்வளவு மோசமாக இருக்கிறது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டப் பிறகுதான் குஜராத் அரசு கொரோனாவுக்கென மருத்துவமனைகளை ஒதுக்கீடு செய்ய ஆரம்பித்தது. பிறகுதான் 156 வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டன. அதற்குப் பிறகுதான் 9000 சுகாதாரப் பணியாளர்களுக்கு அதை எப்படி இயக்குவது என்று சொல்லித்தரப்பட்டது.
பொது சுகாதாரத் துறையில் நீண்டகாலமாகவே மோசமாக இருக்கும் மாநிலம் குஜராத். இம்மாதிரி ஒரு நிலையை உருவாக்கியதில் 4 முறை முதல்வராக இருந்த மோதியின் பங்கு மிக முக்கியமானது என்கிறது இந்தக் கட்டுரை.

2001-லிருந்து 2014 வரை 13 ஆண்டுகள் முதல்வராக இருந்த மோதி, குஜராத் பாணியிலான வளர்ச்சி என்பதை முன்னிறுத்தினார்.

குஜராத்தில் ஆயிரம் பேருக்கு 0.33 படுக்கைகளே உள்ளன. இந்த அளவுக்கு மோசமான நிலையில் இந்தியாவில் இருக்கும் மற்றொரு மாநிலம் பிஹார்தான். தேசிய அளவில் 1000 போருக்கு 0.55 படுக்கைகள் இருக்கின்றன.

சமூக ரீதியில் செலவழிப்பதில் இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் குஜராத் 17வது இடத்தில் இருக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. தன் மொத்த பட்ஜெட்டில் வெறும் 31.6 சதவீதத்தையே சமூக ரீதியில் செலவழிக்கிறது குஜராத்.

படிக்க:
♦ மனித குல சேவையில் கியூப மருத்துவ அறிவியல் !
♦ குடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை ! இதுதான் குஜராத் மாடல் வளர்ச்சி !

தனிநபர் சுகாதரத்திற்கு செலவழிப்பதில் 1999 – 2000ல் நாட்டில் நான்காவது இடத்தில் இருந்த குஜராத் 2009 – 10ல் 11வது இடத்திற்குப் போய்விட்டது. இந்த காலகட்டத்தில் அசாம், உத்தரப்பிரதேசம்கூட மேலே வந்தன. 99 – 2000ல் தன் பட்ஜெட்டில் 4.39 சதவீதத்தை சுகாதரத்திற்கு செலவிட்டுவந்த குஜராத், 09-10ல் வெறும் 0.77 சதவீதத்தையே செலவிட்டது.

தமிழ்நாடும் அசாமும் இந்த காலகட்டத்தில் தங்கள் சுகாதாரத்துறைச் செலவுகளை இரட்டிப்பாக்கியிருக்கின்றன.

குஜராத்தில் அரசு மருத்துவமனைக்குச் செல்பவர், செய்யும் சொந்தச் செலவு பிஹாரில் அரசு மருத்துவமனைக்குச் செல்பவர் செய்யும் செலவைவிட அதிகம். 2001ல் மோதி முதல்வரானபோது அங்கு 1,001 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 244 சமூக சுகாதார மையங்களும் 7,274 துணை மையங்களும் இருந்தன. பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1158 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 318 சமூக சுகாதார மையங்களும் இருந்தன. துணை மையங்களின் எண்ணிக்கை சுத்தமாக அதிகரிக்கவில்லை.

ஆரம்ப சுகாதார நிலையைப் பொறுத்தவரை, இப்போதும் பிஹாரைவிட மோசமாக இருக்கிறது குஜராத். குஜராத்தில் உள்ள கிராமப்புற மருத்துவமனைகளைவிட பிஹாரில் மூன்று மடங்கு அதிகமாக மருத்துவமனைகள் உள்ளன.


கட்டுரையை எழுதியவர் டாடா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்சின் ஆய்வாளரான சஞ்சீவ் குமார். லிங்க் கீழே.

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன்