Wednesday, August 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 285

கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !

“நீங்கள் விலங்குகளை துன்புறுத்துகிறீர்கள், நீங்கள் மீன், கறி, கோழி சாப்பிடுவது விலங்குகளுக்கு எதிரானது” என்ற வாதத்தை முன்னெடுத்து நம்மைச் சுற்றி ஒரு சதிகார கும்பலே இயங்கி வருகிறது. என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நான் மட்டும்தான் முடிவு செய்வேன், வேறு எந்த கொம்பனுக்கும் அந்த உரிமை இல்லை என்பதை தெளிவாகச் சொல்ல நமக்குத் தெரியும். ஆனால் அதே சிறு குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்கு வளைத்தால்?

அதைத்தான் இந்த கும்பல் செய்து வருகிறது. கோவையைச் சேர்ந்த அரவிந்தன், ஹீனா ஆச்சார்யா என்ற நபர்கள் “வீகன்” டயட் என்று கறி கோழி உண்ணக் கூடாது, அது விலங்குகளுக்கு எதிரானது என்று பச்சிளம் குழந்தைகளை தேர்ந்தெடுத்து விஷம் பரப்பி வருகிறார்கள். அதிலும் உண்ண உணவின்றி பள்ளியில் சத்துணவு உண்ணும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளிடம். மிக மிக அயோக்கியத்தனமான முயற்சி இது. ஊட்டச்சத்து சரியாக இல்லாமல், உண்ண உணவு இல்லாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு புரதம் சேர்க்க கிடைப்பதை வசதிக்கேற்ப பாவப்பட்ட மக்கள் வாங்கித் தந்தால், அந்தக் குழந்தைகள் அதை உண்பது கூட இல்லை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

Food chain, nutrition supplement availability, anemia என்று எந்த அறிவும் இல்லாமல் இந்த முட்டாள்தனம் ஏழைக் குழந்தைகள் மேல் அரங்கேறுவது அநியாயம். விலங்குகள் கொடூரமாக துன்புறுத்தப்படும் வெளிநாட்டு காணொளிகள் இந்தக் குழந்தைகளிடம் காண்பிக்கப்பட்டு மனமாற்றம் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இந்தியப் பெண் குழந்தைகள் இரத்த சோகையால் அவதியுறுவது உலகறிந்த செய்தி. அப்படி இருக்க, தான்தோன்றித் தனமாக எந்த அனுமதியும் இன்றி அரசுப் பள்ளிகளில் செய்யப்படும் இந்த பரப்புரைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். ஹேர்பாலைப், பாலியோ, கீட்டோ டயட் வரிசையில் இந்த வீகன் பைத்தியங்கள்.

படிக்க:
கைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் !
♦ என் ஊரு நெல்லை ! ஆனா எனக்கு சொதி குழம்பு தெரியாது !

ஆரோக்கியமாக உண்ண வேண்டும், உண்ணும் உணவு நம் உடலை பாதிக்காமல் இருக்க வேண்டும், சரியான உடற்பயிற்சி வேண்டும், சமச்சீர் டயட் வேண்டும், அவரவர் உடல்நிலை, வாழும் சூழலுக்கேற்ப உண்ண வேண்டும், அவ்வளவுதான். அதை விட்டு என் டயட் சிறந்தது என்று தம்பட்டம் அடிப்பது, இதை உண்ண வேண்டும் என்று அடுத்தவரை கட்டாயப் படுத்துவது என்பதெல்லாம் வன்முறை.

அதிலும் உரிய அனுமதி இன்றி 1.39 லட்சம் குழந்தைகளிடம் பேசி மனம் மாற்றி இருக்கிறேன் என்று இந்த கும்பல் மார்தட்டிக் கொண்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்? சங்கிகளின் இந்த ஆயுதத்தை எப்படி தடுத்து ஆடப் போகிறோம்?

நன்றி : ஃபேஸ்புக்கில் Nivedita Louis 

தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்

மோடி கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குப் பிறகு, சிறு – குறுந் தொழில்கள் அழிந்து நாசமாயின. அதேபோல, சந்தையின் மிக உயரிய இடத்தைப் பிடித்திருந்த ஆட்டோ மொபைல் தொழிலும் மிகப்பெரும் வீழ்ச்சியை அடைந்தது.

ஆட்டோ மார்கெட் என்று அழைக்கப்படும் சென்னை ஜி.பி ரோட்டில் இருக்கும் பல நூறு கடைகளில் கார் சீட் கவர்களை மட்டுமே விற்கும் பிரத்தியேக கடை. அதன் உரிமையாளர் பாலுவிடம் தொழிலைப் பற்றி விசாரித்தோம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோற்றின் பதமாக திரு பாலுவின் மனக் குமுறல்.

பாலு, கடை உரிமையாளர்.

“எனக்கு 50 வயதாகிறது. கடந்த 35 வருசமாக இங்கே வியாபாரம் செய்து பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்து விட்டேன். இப்போது வியாபார நிலைமை தீர்க்க முடியாமல் மிகவும் சிக்கலாகி வருகிறது. கடைக்கு வரும் கஸ்டமர்களும் பாதியாகக் குறைந்து விட்டார்கள். வரும் சில கஸ்டமர்களும் விலையைக் கேட்டு வெறுமனே போய் விடுகிறார்கள். வியாபாரத்தை அனுசரித்து பழைய விலைக்கே கொடுத்தாலும் வாங்கத் தயங்குகிறார்கள்.

(படத்தை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

என்னுடைய வியாபார அனுபவத்தில் இந்த கஷ்டமான சூழலை இதுவரை அனுபவித்ததில்லை.

படிக்க:
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?
♦ மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

இந்த இடம் பல தலைமுறைகளைக் கடந்தது. ஏறக்குறைய 100 ஆண்டுகளாக வர்த்தகம் நடக்கும் இடம். இங்கு முதன்முதலில் சென்னை துறைமுகத்தில் வந்து நிற்கும் கப்பல்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் இருந்தன. கப்பலை நிறுத்தத் தேவையான நங்கூரம், பல நூறு கிலோ எடையுள்ள இரும்பு சங்கிலிகள், கப்பலில் பொருத்தப்படும் ப்ரொபல்லர் (நீர் விலக்கி), அதன் பல பாகங்கள் என்று ஆரம்பித்த இப்பகுதி இன்றைய நிலையை அடைந்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இங்கு ஒரு காருக்குத் தேவையான சீட் கவரைப் பொருத்தவரை ரூ. 2800-லிருந்து அதிகபட்சம் 18 ஆயிரம் ரூபாய் வரை இருக்கிறது. ரெக்சின், ஃபோம், கார்ட்டன், வெல்வெட், லெதர் என்று கால நிலைகளுக்குத் தேவையானதை வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வார்கள். தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று தென்னிந்தியா முழுவதும் இருந்து இங்கே வாங்க வருவார்கள். இப்போ அந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சிறு தொழில் நடத்தி வந்த எங்களை ஜி.எஸ்.டியும், பண மதிப்பழிப்பும் சின்னாபின்னமாக்கி விட்டது. சர்வதேச கார் தயாரிக்கும் கார் கம்பெனிகளுக்கு இலவச மின்சாரம், வட்டியில்லா கடன், வட்டி விடுமுறை அளிக்கும் மத்திய அரசு காரின் உப பொருட்களை ஆடம்பரப் பொருள் என்று வகைப்படுத்தி எங்களுக்கு 28% வரி விதித்திருக்கிறது. இந்த விலையேற்றத்தால் ஏறக்குறைய நாங்கள் அழியும் அபாயத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கிருக்கும் அதிமுக தலைவர்களும், ஆமாம் சாமிகளாகி தமிழ்நாட்டை மொத்தமாக மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள். இதிலிருந்து எப்படி மீள்வதென்றே தெரியவில்லை. இருந்தாலும் வாழ்ந்துதானே ஆக வேண்டும் என்றார்.


வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

அம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் !

கேள்வி : // அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய பிறகு அனைத்து தலித் தலைவர்களும் புத்தமதத்தின் சித்தாந்தங்களை தலித் மக்களுக்கு கற்பிக்காதது ஏன்? இதுதான் உண்மையிலேயே நமது தலித் தலைவர்களின் தோல்வி. ஆகவே தலித் மக்களின் முன்னேற்றம் குறித்த எதிர்காலம் என்ன?//

குபேந்திரன்

ன்புள்ள குபேந்திரன்,

அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிய வரலாற்றுப் பின்னணியை, கீழ்க்கண்ட கட்டுரை விளக்குகிறது. படித்துப் பாருங்கள்!

தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக தளராது பாடுபட்ட அம்பேத்கர் தனது முயற்சிகள் தோல்வியுற்று தளர்ந்த இறுதி காலத்தில்தான் புத்த மதத்திற்கு மாறுகிறார். அது “நான் இந்துவாகச் சாகமாட்டேன்” எனும் எதிர்ப்பின் ஒரு பகுதி.

இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்த மதம் இருபத்தோராம் நூற்றாண்டின் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல. மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு மதம் தேவை எனும் கருத்தைக் கொண்டிருந்த அம்பேத்கர், பார்ப்பனியத்தை எதிர்த்து தோன்றிய புத்த மதத்தை தெரிவு செய்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைப் போராட்டத்தின் மூலம்தான் அவர்களை தீண்டாமைக் கொடுமைகளிலிருந்தும், ஆதிக்க சாதி அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை செய்ய முடியும். அது மதம் எனும் நம்பிக்கையின் பாற்பட்டதல்ல. தலித் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை வாக்கு அரசியலில் சில தொகுதிகளைப் பெறுவதே பிரயத்தனமாக இருக்கிறது. அதன் பொருட்டு அவர்கள் பாஜக, காங்கிரசுடனோ இல்லை அதிமுக, திமுகவுடனோ கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். அவர்களது பிரச்சினை மதம் அல்ல, தேர்தலில் வெற்றி பெறுவது.

பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக மதம் மாறுவது என்பது ஒரு எதிர்ப்பின் அடையாளம் மட்டுமே. அதுவே சமூக ரீதியான விளைவுகளை தோற்றுவிப்பதில்லை. வர்க்க ரீதியான உழைக்கும் மக்களின் அரசியல் – சமூகப் போராட்டம் எந்த அளவுக்கு வீச்சாக நடைபெறுகிறதோ அந்த அளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும்.

பொருளாதார அடக்குமுறை அனைத்து சாதி ஏழைகளையும் பாதிக்கிறது. சமூக ரீதியான அடக்குமுறை தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் பாதிக்கிறது. இந்த இரு அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட ஐக்கியத்தை, உழைக்கும் மக்களை திரட்டும் போக்கில் ஏற்படுத்த முடியும். தலித் அரசியல் கட்சிகளோ தேர்தலில் எத்தனை சீட்டுக்கள் பெற முடியும் என்பதாக சிறுத்துப் போய்விட்டன. தலித் அரசியல் பேசும் சித்தாந்தவாதிகளோ அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் ஐக்கியத்திற்கு ஊறு விளைவுக்கும் வகையில் அடையாள அரசியலை முன்வைக்கின்றனர். இரண்டுமே தவறு என்கிறோம்.

நன்றி!

படிக்க :
♦ ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
♦ சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !

♦ ♦ ♦

கேள்வி : //ஈரான் மீது அமெரிக்கா ஏன் வெறுப்பைக் காட்டுகிறது, எண்ணெய் வளத்தை பெற சவுதியை போல் பயன்படுத்திக் கொள்ளலாமே?//

கண்ணா

ன்புள்ள கண்ணா,

எழுபதுகளில் அமெரிக்க ஆதரவு மன்னனான ஷா, ஈரானில் தூக்கியெறியப்பட்ட நாள் முதல் ஈரான் ஆட்சியாளர்களும், மக்களும் அமெரிக்காவை எதிர்த்து வருகிறார்கள். மாறாக சவுதி மற்றும் இன்னபிற வளைகுடா நாடுகளில் ஜனநாயகவாதிகள் துடைத்தெறியப்பட்டு அமெரிக்க ஆதரவு ஷேக்குகள் ஆண்டு வருகிறார்கள்.

ஈரானில் ஷியா பிரிவு மக்களும், சவுதி முதலான வளைகுடா நாடுகளில் சன்னி பிரிவு மக்களும் வாழ்கின்றனர். இஸ்லாமிய உலகில் இந்தப் பிரிவு மதவாதிகளால் வெறுப்புடன் மேலும் வளர்க்கப்படுகிறது. இந்த வேறுபாட்டை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கிறது.

வளைகுடாவில் தொடர்ந்து பதற்றமும், போரும் இருந்து வருவது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இஸ்ரேலுக்கும் அது நல்லது. ஈரானைப் பயமுறுத்திக் கொண்டே அமெரிக்கா பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை சவுதிக்கு விற்று வருகிறது. அதே போன்று இந்நாடுகளில் தனது இராணுவத் தளங்களையும் பராமரித்து வருகிறது.

இராக் – குவைத் போரையும் அமெரிக்கா அப்படித்தான் பயன்படுத்திக் கொண்டது. ஆரம்பத்தில் அமெரிக்க ஆதரவு அடியாளாக இருந்த சதாம் உசேன் அமெரிக்காவின் ஆசீர்வாதத்தோடு ஈரான் மீது போர் தொடுத்தார். பின்னர் ஒரு பிராந்திய வல்லரசாக வளர்ந்து குவைத்தை ஆக்கிரமித்தார். அதன் போக்கில் அமெரிக்காவையும் எதிர்த்தார். வளர்த்த கடாவை வெட்டும் விதமாக அமெரிக்கா சதாமைக் கொன்று ஈராக்கை ஆக்கிரமித்தது. உள்நாட்டுப் போரில் ஈராக்கை அமிழ்த்தும் விதமாக ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ தோற்றுவித்து பின்னர் அழித்தது.

எனவே இந்த முரண்பாடுகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு ஏராளமான வருமானத்தையும், தொழில் முதலீடுகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. அவ்வகையில் ஈரானை பூச்சாண்டி காட்டி மற்ற வளைகுடா நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

நன்றி!

படிக்க :
♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !
♦ உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் !

♦ ♦ ♦

கேள்வி : //சீனா பொருளாதாரத்தில் வளர்ந்த அளவு ருசியா (russia) 1990-க்கு பிறகு வளர்ச்சி பெற முடியவில்லையே ஏன்?//

ஹரினிவாஸ் வடிவேல்

சியா 1990-க்கு பிறகு இல்லை, 1970-களிலேயே நொடித்துப் போக ஆரம்பித்து விட்டது. 1950-களில் தோழர் ஸ்டாலின் மரணமடையும் போது சோவியத் யூனியன் தனது சோசலிச உற்பத்தியால் பலமான நாடாக இருந்தது. அதற்கு பிறகு பதவியை கைப்பற்றிய திரிபுவாதியான குருசேவ் முதல் பிரஷ்னேவ் வரை சோவியத் யூனியன் போலி சோசலிச நாடாக மாறியது.

அதன் பொருளாதார வளம் அனைத்தும் இராணுவத்திற்கு திருப்பப்பட்டு அமெரிக்காவுடன் கெடுபிடிப் போரில் ஈடுபட்டது ரசியா. இந்தப் பதிலிப் போர் கியூபா முதல் ஆப்கான் வரை உலகெங்கிலும் நடைபெற்றது. இந்த கெடுபிடிப் போரில் ரசியா தோற்றதோடு தனது பொருளாதார வளத்தையும் இழந்தது. இறுதியில் அதனிடம் அமெரிக்காவிற்கு ஈடான இராணுவ பலம் இருந்ததே ஒழிய பொருளாதார பலமில்லை.

மாறாக சீனாவில் 1970-களில் மாவோ மரணமடையும் போது அந்த நாடு பலமான அடிப்படைக் கட்டமைப்பு கொண்ட சோசலிச பொருளாதார நாடாக இருந்தது. அதற்கு பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட டெங்சியோ பிங் தலைமையிலான அதிகாரவர்க்க கும்பல் சீனாவை முதலாளித்துவ பொருளாதார நாடாக மாற்றியது. ரசியா போல எந்தப் பதிலிப் போரிலும் ஈடுபடாமல் தனது வளமனைத்தையும் சந்தைப் பொருளாதாரத்தில் போட்டது. கிழக்கு கடற்கரைப் பகுதியில் உருவான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மேற்குலகின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவான உற்பத்தி பின்னிலமாக விளங்கியன. சீனாவும் போலி சோசலிச நாடாக மாறினாலும் அதன் முதலாளித்துவ பொருளதாரம் சோசலிச சாதனைகளை அடிப்படையாக்கி வளர்ந்தது.

கோர்பசேவ் காலத்தில் சோவியத் யூனியன் தனது இறுதிக் கோவணத்தையும் வீசி விட்டு முழு முதலாளித்துவ நாடாக மாறியது. எனினும் அவருக்கு பிறகு வந்த எல்சின் காலத்தில் ரசியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. பின்னர் விளாதிமிர் புடீன் காலத்தில் அரசின் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டு, இராணுவ பலம் மீட்கப்பட்டு இருந்தாலும் பொருளாதாரத்தில் அடைந்த வீழ்ச்சியில் இருந்து ரசியா எழவே முடியவில்லை.

ரசியா சொல்லில் சோசலிசம் செயலில் ஏகாதிபத்தியம் என்ற சமூக ஏகாதிபத்திய நாடாக மாறி பொருளாதாரத்தை இழந்தது. சீனா சொல்லில் சோசலிசம் செயலில் முதலாளித்துவம் என்று மேற்குல நாடுகளின் உற்பத்தி கூடமாக தன்னை வளர்த்துக் கொண்டது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?

மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன.

அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரித்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும்.

அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவர் இது.

மேட்டுப்பாளையத்தில் ஒரு கூட்டுறவு சங்கம் லேஅவுட் அமைத்த போது பெரும் பணக்காரர்கள் இங்கே வந்து குவிந்தனர். லேஅவுட்டுக்கு அப்பால் இருந்த நடூர் தலித் மக்கள் வாழும் பகுதியாகவும், வறுமை மிகுந்ததாகவும் இருந்ததால் அது தங்கள் கண்ணில் பட்டு இந்தப் பகுதியின் அழகைக் கெடுத்து விடக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் சாலைகளில் நடமாடிவிடக் கூடாது என்றும் 100 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்ட கருங்கல் சுவரை சேரிக்கும், லேவுட்டும் நடுவே துகில் மாளிகையார் உள்ளிட்டவர்கள் எழுப்பினர்.

இது அருந்ததிய மக்களின் சாலையை அடியோடு மறித்தது. இந்தச் சுவரை எடுக்க வேண்டும் என்பது அவர்களது நீண்ட நாள் கோரிக்கையாகும்.

சுவர் எழுப்பிய இந்த பணக்கார லேஅவுட்டானது காம்பவுண்ட் போட்டு தங்கள் பகுதியை மூடி வைக்க அனுமதி பெற்ற கேட்டட் கம்யூனிட்டியோ, தனியார் டவுன்ஷிப்போ அல்ல. அதே போல இந்த லே அவுட்டின் மற்ற சாலைகளை மறித்து சுவர் எழுப்பப் படவில்லை.

மற்றவர்கள் நடமாட்டத்தைத் தடுக்க சுவர் எழுப்பும் உரிமை இவர்களுக்கு இல்லை. சட்டப்படி வீட்டு மனைகள் விற்றுத் தீர்ந்ததும் லேஅவுட் சாலைகளை தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும். பின்பு அந்த சாலைகள் எல்லோருக்கும் பொதுவானவை ஆகிவிடும்.

இங்கே நடூரை மறித்து சட்டவிரோதமாக சுவர் எழுப்புவதை அரசும் நகராட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

இந்த சுவரோரம் 22 செண்ட் மனை சக்ரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளருடையது. எனவே சுவர் எழுப்புவதில் அவருக்கு முக்கிய பங்கிருந்திருக்கலாம்.

படிக்க:
மேட்டுப்பாளையம் தீண்டாமை சுவர் : இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் – நம் மனசாட்சியை உலுக்க ?
♦ தீண்டாமைச் சுவர் : இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் | கருத்துப் படம்

இவர் கருங்கல் சுவர் ஓரம் செடிகள் வளர்த்து நீர் விட்டு அந்தப் பகுதியையே சதுப்பு நிலம் போல ஆக்கிவிட்டார். இது சுவரை பாதித்து சுவருக்கு அப்பால் வாழ்ந்து வந்த மக்களையும் கடுமையாகப் பாதித்தது.

அவர்கள் இது பற்றி முறையிட்டும் துகில் மாளிகை உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.

மழைகாலத்தில் தொடர்ந்து மழை பெய்ததும் வடிகால் இல்லாமல் சுவர் ஓரம் நீர் குளம் போலத் தேங்கியது. சுவர் உடைந்து விடுவதைத் தடுக்கும் கான்கிரீட் பீம்கள் இல்லாமல் நெடுநெடு உயரத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் ஏற்கெனவே பலவீனமடைந்திருந்தது.

கேடுகெட்ட சாதியுணர்ச்சி, சுத்த உணர்ச்சி, அழகுணர்ச்சியால் நரக வேதனை அனுபவித்து வந்த மக்கள் உடமைகளையும் உயிரையும் இழந்து உள்ளனர்.

இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

நன்றி : ஃபேஸ்புக்கில் இரா. முருகவேள். 

இரண்டு போர் விமானங்களை வீழ்த்திய கால்கள் இல்லாத விமானி !

உண்மை மனிதனின் கதை | ஆசிரியரின் பின்னுரை – 01

பின்னுரை

ர்யோல் பிரதேசத்துக்கான போர் சோவியத் சைனியத்தின் வெற்றியில் முடியும் தருவாயில் இருந்தது. வடக்கே இருந்து தாக்கிய முன்னணி ரெஜிமென்டுகள் க்ராஸ்னகோர்ஸ்க்கயா மேட்டிலிருந்து தாங்கள் தீப்பற்றி எரியும் நகரைக் காண்பதாக அறிவித்துவிட்டன. அந்தப் பிரதேசத்தில் நடவடிக்கைகளை நடத்திக் கொண்டிருந்த சண்டை விமான ரெஜிமென்டைச் சேர்ந்த விமானிகள் கடைசி ஒன்பது நாட்களில் நாற்பத்தேழு பகை விமானங்களைச் சுட்டு வீழ்த்தி விட்டார்கள் என்ற தகவல் அப்போது ப்ரியான்ஸ்க் முனைமுக அலுவலகத்துக்கு கிடைத்தது. இந்தக் காலப் பகுதியில் ரெஜிமென்டுக்கு நேர்ந்த இழப்புக்கள் ஐந்து விமானங்களும் மூன்று ஆட்களும் மட்டுமே, ஏனெனில் இரு விமானிகள் சேதமடைந்த விமானங்களிலிருந்து பாராஷூட்டுடன் குதித்து கால்நடையாக ரெஜிமென்டை அடைந்து விட்டார்கள் என்று தகவல் அறிவிக்கப்பட்டது. சோவியத் சைனியத்தின் பிரமாண்டமான தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்த அந்த நாட்களில் கூட இத்தகைய வெற்றி அசாதாரணமாக இருந்தது.

விமானிகளின் இந்த வீரச் செயல்கள் பற்றிப் “பிராவ்தா” செய்தித்தாளுக்கு எழுதும் நோக்கத்துடன் நான் தகவல் தொடர்பு விமானத்தில் இந்த ரெஜிமென்டுக்குச் சென்றேன்.

நாங்கள் விமான நிலையத்தை அடைந்தபோது மாலை ஆகிவிட்டது. ரெஜிமென்டின் கெடுபிடி நிறைந்த வேலை நாள் முடிந்துவிட்டது. அர்யோல் நகரின் அருகே ஜெர்மானியர்கள் விமான நடவடிக்கைகளைச் சிறப்பாகத் தீவிரப்படுத்தியிருந்தார்கள். ரெஜிமென்ட் சண்டை விமானங்கள் அன்று ஏழு முறை சண்டைப் பறப்புகள் நடத்த நேர்ந்திருந்தது. பொழுது சாயும் தருவாயில் கடைசிக் குழுக்கள் எட்டாவது பறப்புக்குப் பின் திரும்பி வந்திருந்தன. ரெஜிமென்ட் கமாண்டர் சிறு கூடான மேனியர். பழுப்பேறிய நிறமுள்ள துடியான மனிதர். புத்தம் புதிய நீல விமானி உடை அணிந்திருந்தார். அவரது முடி கச்சிதமாக நேர் வகிடு எடுத்து வாரிவிடப்பட்டிருந்தது. அன்று எதுவும் உருப்படியாக எனக்கு தெரிவிக்கும் நிலையில் தான் இல்லை என்றும், காலை ஆறு மணிமுதல் விமான நிலையத்தில் இருப்பதாகவும் தாமே மூன்று முறைப் பறப்பு நடத்தியதாகவும் களைப்பினால் இப்போது நிற்பதே தமக்கு அரும்பாடாக இருக்கிறது என்றும் அவர் ஒளிக்காமல் ஒப்புக் கொண்டார். மற்ற ஸ்குவாட்ரன் கமாண்டர்களுக்கும் பத்திரிக்கைப் பேட்டி அளிக்க அன்று நேரமில்லை. பேட்டியை அடுத்த நாளுக்கு ஒத்திப் போட வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன். தவிர நேரமாகிவிட்டபடியால் அன்று திரும்பவும் முடியாது என்பது தெளிவாயிருந்தது. சூரியன் பிர்ச் மர முடிகள் மீது தனது கிரணங்களின் உருக்கிய தங்கத்தை ஊற்றிக் கொண்டிருந்தது.

கடைசி விமானங்கள் தரையில் இறங்கலாயின. எஞ்சின்களை நிறுத்தாமல் அவற்றை ஓட்டப் பாதையிலிருந்து நேரே காட்டோரத்துக்குச் செலுத்தினார்கள் விமானிகள். அங்கே மெக்கானிக்குகள் அவற்றை கைகளால் திருப்பினார்கள். முகட்டின் மேல் புல் பற்றைகள் பரப்பப்பட்டுப் பசேலென்றிருந்த காப்பிடத்துக்குள் விமானம் நின்ற பிறகே, களைத்து வெளிறிய விமானி தன் அறையிலிருந்து மெதுவாக வெளியே வந்தான்.

கடைசியாக நிலையம் சேர்ந்தது மூன்றாவது ஸ்குவாட்ரன் கமாண்டரின் விமானம். விமானி அறையின் ஒளிபுகும் வளைமுகடு திறக்கப்பட்டது. முதலாவது அங்கிருந்து வீசப்பட்டுப் புல் மேல் விழுந்தது பெரிய கருங்காலிக் கைத்தடி. அதன் மேல் தங்கக் கூட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. பிறகு, பழுப்பேறிய அகன்ற முகமும் கரிய முடியும் கொண்ட ஒருவன் வலிய கரங்களால் விளிம்பைப் பற்றிச் சட்டென எழுந்து லாவகமாக மறுபுறம் தாண்டி இறக்கை மேல் நின்றான். அங்கிருந்து சிரமத்துடன் தரையில் இறங்கினான். ரெஜிமென்டிலேயே சிறந்த விமானி என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். மாலை நேரத்தை வீணாக்க விரும்பாமல் அப்போதே அவனிடம் உரையாட நான் தீர்மானித்தேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, உயிரோட்ட முள்ள கரிய ஜிப்ஸிக் கண்களால் அவன் என்னைக் குதூகலம் பொங்க நோக்கினான். அந்த விழிகளில் தணியாத இளமை உற்சாகம் பெருக்கெடுத்தது. அதே சமயம், வாழ்க்கையில் நிறைய அடிபட்டுத் தேறிய அனுபவ சாலியின் அலுப்பும் விவேகமும் தென்பட்டன.

அவன் புன்னகையுடன் சொன்னான்; “கொஞ்சம் கருணை காட்டுங்கள்! மெய்யாகவே சொல்லுகிறேன், நிற்க மாட்டாமல் தள்ளாடுகிறேன். காதுகளில் நொய்யென்று இரைகிறது. நீங்கள் சாப்பிட்டாயிற்றா? இல்லையா? ரொம்ப நல்லதாயிற்று! சாப்பாட்டு அறைக்குப் போய், சேர்ந்து உண்போம். ஒரு பகை விமானத்தை வீழ்த்தியதற்கு இருநூறு கிராம் வோத்கா இரவு சாப்பாட்டின் போது கொடுப்பது எங்கள் ரெஜிமென்டில் வழக்கம். இதன்படி எனக்கு இன்று நாநூறு கிராம் வோட்கா கிடைக்கும். நம் இருவருக்கும் போதும். என்ன, போவோமா? சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம், உங்களுக்கு அவ்வளவு ஆவலாயிருந்தால்.”

நான் இசைந்தேன். கரவற்ற இந்தக் குதூகல இளைஞனை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. காட்டின் ஊடாக நேரே சென்ற ஒற்றையடிப் பாதையில் நாங்கள் நடந்தோம். அந்த இளைஞன் விரைவாக நடந்தான். நடு நடுவே குனிந்து காட்டுப் பெர்ரிப் பழங்களைப் பறித்து உடனே வாயில் போட்டுக் கொண்டான். அன்று அவன் மிகவும் களைத்துப் போனான் போலும், ஏனெனில் சிரமத்துடன் அடியெடுத்து வைத்தான். ஆனால் தனது விந்தைக் கைத்தடியை அவன் ஊன்றிக் கொள்ளவில்லை. கைத்தடி அவன் முழங்கையில் தொங்கிற்று. எப்போதாவது அதை எடுத்து ஈப்பொறிக் காளானை அடித்து முறித்தான், அல்லது ஏதோ புதரின் ரோஜா நிறக் கொண்டை மேல் அடித்தான். பள்ளத்தாக்கைத் தாண்டி வழுக்கலான செங்குத்துக் களிமண் மேட்டில் நாங்கள் ஏறிய போது விமானி புதர்களை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு மெதுவாக ஏறினான். ஆனால் அப்போதும் தடியை ஊன்றிக் கொள்ளவில்லை.

சாப்பாட்டு அறையை அடைந்தோமோ, அவனுடைய களைப்பெல்லாம் எங்கோ பறந்துவிட்டது. அவன் ஜன்னல் அருகே உட்கார்ந்து கொண்டான். குளிரான சிவந்த சூரிய அஸ்தமனம் அங்கிருந்து தெரிந்தது. விமானிகளின் குறிகளின் படி மறுநாள் காற்று வீசும் என்பதை இது முன்னறிவித்தது. இளைஞன் பெரிய குவளை நீரை ஆர்வமாக, ஓசையுடன் பருகினான். அழகிய சுருள் கூந்தல் கொண்ட உணவு பரிமாறுபவளிடம் கேலியாகப் பேசினான். மருத்துவமனையிலிருக்கும் தனது ஒரு நண்பன் மேல் உள்ள காதலால் உணவு பரிமாறுபவள் சூப்பில் அளவு மீறி உப்பு போட்டுவிட்டாள் என்று நகையாடினான். விருப்புடன் நிறைய சாப்பிட்டான், ஆட்டு விலாவெலும்புகளை வலிய பற்களால் ஒட்ட கறுவினான். பக்கத்து மேஜைகளைச் சுற்றி அமர்ந்திருந்த தோழர்களுடன் கேலிப் பேச்சுக்களைப் பரிமாறிக் கொண்டான். மாஸ்கோ செய்திகளை என்னிடம் விசாரித்தான். புதிய இலக்கிய வெளியீடுகள் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினான். மாஸ்கோ தியேட்டர்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்று ஆர்வத்துடன் கேட்டான். தான் அந்தத் தியேட்டர்களுக்கு ஒரு தடவைக் கூடப் போனதில்லை என்று அங்கலாய்த்தான். இங்கே ”புயல் மேகங்கள்” என்று அழைக்கப்படும் பில்பெர்ரி ஜெல்லியை நாங்கள் சாப்பிட்டு இரவில் முடித்ததும் அவன் கேட்டான்:

“நீங்கள் இரவில் எங்கே தங்கப் போகிறீர்கள்? இடம் இன்னும் நிச்சயமாகவில்லையா? நிரம்ப நல்லது. எனது நிலவறையில் தங்குங்கள்!” இவ்வாறு சொல்லிக் கண நேரம் முகத்தைச் சுளித்தான். பின்பு விளக்கினான்: “என் அறைக் கூட்டாளி இன்று பறப்பிலிருந்து திரும்பவில்லை… ஆகவே படுக்கை காலியாக இருக்கிறது. புதிய படுக்கைத் துணிகள் கிடைக்கும். போவோம் வாருங்கள்.”

அவன் எல்லாருடனும் கலகலப்பாகப் பழகுவதை விரும்புவன், புதிய ஆளுடன் உரையாடவும் அவன் அறிந்தவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் அடங்கா ஆர்வம் உள்ளவன் என்பது தெளிவாகப் புலப்பட்டது.

நான் அவன் அறையில் தங்க இசைந்தேன். நாங்கள் பள்ளத்தாக்கிற்கு வந்தோம். அதன் இரு சரிவுகளிலும் மட்கிய இலைகள், ஈரக் காளான்கள் ஆகியவற்றின் மணம் வீசிய காட்டுப் புதர்களின் மறைவில் தோண்டப்பட்டிருந்தன நிலவறைகள்.

விளக்கின் புகையும் சுவாலை எரியத் தொடங்கி நிலவறைக்குள் வெளிச்சம் பரப்பியும் அறை இடமகன்றதாகவும் வசிக்க வசதியுள்ளதாகவும் காணப்பட்டது. மண் சுவர்களில் அமைந்த பிறைகளில், மணம் வீசும் புதிய வைக்கோல், அடைத்த நீர் கவறாத் துணி மெத்தைகள் மேல் கச்சிதமாக விரிக்கப் பட்டிருந்தன இரண்டு படுக்கைகள். அறையின் மூலைகளில் நின்றன இளம் பிர்ச் கன்றுகள். அவற்றின் இலைகள் இன்னும் வாடவில்லை. இந்தக் கன்றுகள் “நறுமணத்திற்காக” வைக்கப் பட்டிருந்ததாக விமானி விளக்கினான். படுக்கைகளுக்கு மேலே மண்சுவரில் ஒழுங்கான குறடுகள் அமைந்திருந்தன. அவற்றில் செய்தித்தாள் விரிப்புக்கள் மேல் புத்தக அடுக்குகளும், குளியல், சவர சாதனங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு கட்டிலின் தலைமாட்டில் ஒளிபுகும் பிளாஸ்டிக் கண்ணாடிச் சட்டங்கள் போட்ட இரண்டு நிழல் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. நேர்த்தியான வேலைப்பாடுள்ள இந்தச் சட்டங்கள் விமானி தன் கைப்பட செய்தது என்பது தெரியவந்தது.

போர் நடவடிக்கைகள் ஓரளவு ஓய்ந்திருந்த நேரங்களில் கைத்தேர்ச்சியுள்ள ரெஜிமென்ட்காரர்கள் பொழுதைக் கழிப்பதற்காக இம்மாதிரிச் சட்டங்களைப் பகை விமானத் துண்டுகளிலிருந்து ஏராளமாக செய்வதுண்டு. மேஜையின் மேல், ராஸ்ப்பெர்ரிப் பழங்கள் நிறைந்த இராணுவ உணவுப் பாத்திரம் புர்டாக் இலையால் மூடி வைக்கப்பட்டிருந்தது. ராஸ்பெர்ரிப் பழங்கள், பசிய பிர்ச் கன்றுகள், வைக்கோல், தரையில் பரப்பப்பட்டிருந்த பிர்ச் மர கிளைகள் ஆகியவற்றிலிருந்து இன்பமான செழு மணம் வீசிக் கிளு கிளுப்பு ஊட்டியது. நிலவறையில் இனிமையும் ஈரிப்பும் உள்ள குளுமை பரவியிருந்தது. வெளியே பள்ளத்தாக்கில் தாலாட்டுவது போலச் சிலம்பின தத்துக் கிளிகள். இதமான சோர்வு உடல் முழுவதிலும் பரவியது. எனவே, ராஸ்ப்பெர்ரிப் பழங்களைத் தின்று கொண்டே உரையாடுவது என்று திட்டமிட்டிருந்த நாங்கள் அந்தத் திட்டத்தை காலை வரை ஒத்திப் போடத் தீர்மானித்தோம்.

படிக்க :
கைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் !
பாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை | காணொளி

விமானி வெளியே போனான். அவன் உரத்த சத்தத்துடன் பல் தேய்த்ததும், காடெல்லாம் ஒலிக்கும் படி தொண்டையை கனைத்துச் செருமியவாறு குளிர் நீரைத் தலையில் கொட்டிக் கொண்டதும் கேட்டது. குதூகலமும் புத்துணர்ச்சியும் சுடர் விடத் திரும்பி வந்தான் அவன். நீர்த் துளிகள் அவனது தலைமயிரிலும் புருவங்களிலும் காணப்பட்டன. விளக்கைச் சற்றுத் தணித்து விட்டு அவன் உடையைக் கலையலானான். ஏதோ பொத்தென்று தரையில் விழுந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். அங்கேக் கண்டதை என்னால் நம்ப முடியவில்லை. தரையில் பொய்க் கால்களை வைத்தான் அவன். கால்கள் இல்லாத விமானி! அதிலும் சண்டை விமானமோட்டி! இன்று மட்டுமே ஏழு போர்ப் பறப்புகள் நிகழ்த்தி இரண்டு பகை விமானங்களை வீழ்த்தியவன்! இது முற்றிலும் நடக்க முடியாததாகத் தோன்றியது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

கைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் !

3

“பரமசிவனின் அருளால் இந்தக் கடவுச்சீட்டை வைத்துள்ளவர்கள் பதினான்கு லோகங்களிலும், பதினோரு பரிமாணங்களிலும், கைலாயத்திலும் நுழைய முடியும்” என்கிறது அந்த “நாட்டின்” இணையதளம்.  “கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களின் பக்தியையும், தனது பூலோக அவதாரத்துடன் ஒன்றியிருப்பதையும் கணக்கில் கொண்டு தன்னோடு ஏற்றுக் கொள்கிறார் பரமசிவன்” என்று மேலும் விவரிக்கிறது “அந்நாட்டின்” அதிகாரப்பூர்வ இணையதளம்.  இது பிற நாடுகளுக்கு பயணம் செய்ய பயன்படும் பாஸ்போர்ட் மட்டுமல்ல – கைலாயத்துக்காக கைலாயமே வழங்கும் பாஸ்போர்ட்.

ஆம் மக்களே, உருவாகிவிட்டது ஒரு புதிய நாடு. இந்துக்களுக்கேயான நாடு.

மேற்படி நாட்டின் பெயர் கைலாஷ். தேசம் என்றால் தேசப்பிதா இல்லாமலா, கைலாய நாட்டின் தேசப்பிதா நித்தியானந்த பரமஹம்ச; தேசத் தாய் ரஞ்சிதா. என்ன, அமிலத்தில் வாய் கொப்புளித்தது போல் இருக்கிறதா? இன்னும் இருக்கிறது மேலே செல்லுங்கள். ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற கனவு எப்போது நித்தியானந்தாவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை இந்த விசாரணையின் போக்கில் நீங்களே புரிந்து கொள்வீர்கள். இந்த விசயம் வெளியே தெரிய வந்தது குஜராத் வழக்கைத் தொடர்ந்து என்பதால் அதை முதலில் பார்த்து விடுவோம்.

***

னார்தன் ஷர்மா என்பவருக்கு நான்கு பெண் குழந்தைகள். நித்தியானந்தாவின் முன்னாள் சீடர். கடந்த 2013-ம் ஆண்டு தனது நான்கு பெண் குழந்தைகளையும் பெங்களூரு, பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்த்துள்ளார் ஷர்மா. அப்போது அவரது மூத்த மகளின் வயது 15தான். பின்னர் ஏதோ காரணங்களுக்காக நித்தியானந்தாவுடன் ஷர்மாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தனது மகள்களை தன்னோடு அனுப்பி வைக்குமாறு ஆசிரமத்தில் கேட்டுள்ளார். ஆனால், அங்குள்ள நிர்வாகிகள் ஷர்மாவின் பிள்ளைகளை அவரோடு அனுப்பாமல் அகமதாபாத்தில் நித்தியானந்தாவுக்கு சொந்தமான யோகினி சர்வக்ய பீடம் என்கிற ஆசிரமத்திற்கு இந்த ஆண்டு (2019) துவக்கத்தில் அனுப்பி வைத்துள்ளனர். குருகுலமாக செயல்பட்டு வந்த இந்த ஆசிரமம், அகமதாபாத்தில் உள்ள “தில்லி பப்ளிக் ஸ்கூல்” வளாகத்தில் நடத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க :
♦ குழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் !
♦ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட SVS கல்லூரி வாசுகி பாஜக-வில் இணைந்தார் !

இதற்கிடையே ஆசிரம நிர்வாகிகளிடம் சண்டையிட்டு தனது பிள்ளைகள் நால்வரில் இளையவர்கள் இருவரை மட்டும் மீட்டு வந்துள்ளார் ஷர்மா. தற்போது 21 வயதாகும் மூத்த மகளும், இரண்டாவது மகளும் ஷர்மாவோடு வர மறுத்துள்ளனர். தன்னுடைய பிள்ளைகள் ஆசிரமத்தில் கொடுமை செய்யப்படுவதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறும் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார் ஷர்மா. இதையடுத்து ஷர்மாவின் மூத்த மகள் பேசுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது நித்தி தரப்பு. அந்த வீடியோவில், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் பாலியல் ரீதியில் உறவு வைத்துக் கொள்ள தனது பெற்றோர் வற்புறுத்துவதாகவும், தாங்கள் ஆசிரமத்திலேயே தங்க விரும்புவதாகவும் அந்தப் பெண்கள் பேசியுள்ளனர்.

இந்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து அகமதாபாத் ஆசிரமத்தில் கடந்த மாதம் (நவம்பர்) 30-ம் தேதி போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது வேறு மூன்று குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆசிரமத்தின் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், நித்தியானந்தா நாட்டை விட்டு சென்றிருக்க கூடும் என்றும், ஷர்மாவின் முதல் இரண்டு மகள்களும் அவருடன் சென்றிருக்க வேண்டும் என்றும் கூறினர். பின்னர் பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் அவ்விரு பெண்களும் நித்தியானந்தாவுடன் கரீபியன் தீவுகளுக்கு அருகே இருப்பதாகத் தெரிவித்தன.

ஏற்கெனவே பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் இருக்கும் நித்தியானந்தா தற்போது பிணையில் இருப்பதாகவும், எந்த நாட்டிற்கு ஓடி ஒளிந்தாலும் அவரை கைது செய்தே தீருவோம் என்றும்  குஜராத் போலீசார் பத்திரிகைகளில் தெரிவித்து வருகின்றனர்.

எந்த போலீசார்?  குஜராத் போலீசார்!! எந்த குஜராத்? பாஜக-வின் குஜராத்!!

ஹிந்து சாம்ராஜ்ஜியத்தின் பரிசோதனைச் சாலையான குஜராத்தின் போலீசார், ஒரு ஹிந்து துறவியின் மீதே நடவடிக்கை எடுக்கத் துணிந்துள்ளது.

வைரமுத்து – ஆண்டாள் விவகாரம் துவங்கி கடந்த காலங்களில் எப்போதெல்லாம் ஹிந்து ’ஸமூகத்திற்கு’ அபாயம் நேரிட்டதோ அப்போதெல்லாம் களமிறங்கி கம்பு சுழற்றுவதில் நித்தியானந்தாவும் அவரது சிஷ்யைகளும் முன்னணியில் நின்றதை யாரும் மறந்திருக்க முடியாது. ரஞ்சிதா விவகாரத்தை அடுத்து ஊரே நித்தியை காறித் துப்பிய நிலையில் அவரது “ஆன்மீக” சொற்பொழிவுகளுக்கு இடம் கொடுத்தது பாஜக ஆதரவாளர் நடத்திய லோட்டஸ் தொலைக்காட்சி என்பதையும் மறந்து விடக்கூடாது.

இந்து சாமியார்களுக்கும் இந்துத்துவ பரிவாரங்களுக்கும் இடையே உள்ள உறவு அப்படியொன்றும் இலைமறை காய் கிடையாது. ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ, பாபா ராம்தேவ், மலையாள தேசத்து கட்டிப்புடி சாமியாரிணி, ராம் ரஹீம், பாபா ராம்பால், அசாரம் பாபு, நாகா சாமியார்கள், கங்கைக் கரையோர கஞ்சா குடிக்கிகள், பிரயாகையின் பிணந்தின்னி சாமியார்கள், பழனி படிக்கட்டில் வீற்றிருக்கும் நட்டு கழண்ட கேசுகள் – இப்படி கார்ப்பரேட் பாரின் சரக்கில் இருந்து லோக்கல் பேட்டரி சரக்கு வரை எல்லா சாமியார் மடங்களிலும் இந்துத்துவ பரிவார அமைப்புகள் துண்டைப் போட்டு வைத்துள்ளது ஊர் அறிந்த ரகசியம் தான். அந்த வகையில் ஆன்மீக ஜோடிகள் நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதாவோடு இந்த கும்பலுக்கு உறவிருந்ததில் ஆச்சர்யமில்லை.

படிக்க :
♦ கதவை திற… நாற்றம் வரட்டும் ! – நித்தியானந்தா கார்ட்டூன்
♦ ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !

நகமும் சதையுமாக, சொறிநாயும் உண்ணியுமாக தொடர்ந்த இந்த உறவில் விரிசல் ஏற்பட்டது ஏன்? நித்தியின் ஆன்மீக ஆராய்ச்சியை தடுக்க குஜராத் போலீசுக்கு துணிச்சல் வந்தது எப்படி? போன்ற விவரங்களெல்லாம் சிவ ரகசியம் என்பதால் நம்மைப் போன்றவர்கள் எந்தக் காலத்திலும் அறிந்து கொள்ளவே முடியாது. ஆனால், நித்தியானந்தா உருவாக்கி இருக்கும் இந்து ராஷ்டிரத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சில சுவாரசியமான தகவல்களைத் தருகின்றது.

***

நித்தியானந்தாவின் கைலாயத்தில் உள்நாட்டு பாதுகாப்பு, உள்துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி, சுகாதாரத் துறை, கல்வித் துறை என பல்வேறு அரசு துறைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் பொறுப்பான அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த நாட்டிற்கென்று இரண்டு நிறங்களில் பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த நாட்டிற்குள் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். மேற்படி “நாட்டை” சட்ட ரீதியாக உலகம் முழுவதும் பிரகடனப்படுத்த தேவையான அனுமதியை ஐ.நா சபையிடம் பெறுவதற்கான புரோக்கர் வேலைகளை  மேற்கொள்ளும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

“கைலாசா என்கிற எல்லைகள் அற்ற இந்த தேசம் உலகெங்கிலும் உள்ள உரிமை பறிக்கப்பட்ட இந்துக்கள் தங்களது மத நம்பிக்கைகளை பின்பற்றவும், உண்மையான இந்து மத கோட்பாடுகளின் படி வாழவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும்” என்று அறிவிக்கின்றது அதிகாரப்பூர்வ இணையதளம். மேலும், இந்துக்கள் தங்களது நம்பிக்கைகளை பின்பற்ற உலகெங்கும் (இந்தியா உட்பட) உள்ள தடைகள், மற்றும் 5000 ஆண்டுகளாக நடந்து வரும் “இந்து ஹாலோகாஸ்ட்” (இன அழிப்பு) குறித்த தகவல்களையும் மேற்படி இணையதளம் பட்டியலிடுகின்றது. “இந்துக்கள்” அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு நித்தியானந்தா தன்னையே ஒரு வகை மாதிரியாக பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ரஞ்சி உடன் நித்தி நடத்திய ஆன்மீக ஆராய்ச்சிகளின் போது கதவைத் திறந்து காமெராவை நுழைத்த மத துரோகிகளுக்கு கைலாயத்தில் இடம் கிடைக்காது என்பது நிச்சயம். எந்த தொந்திரவுகளும் இன்றி நித்தியானந்தா போன்ற இந்துக்கள் தங்கள் மத வழக்கங்களின் படி வாழ ஒரு தேசம் உருவாகி விட்டது – அதாவது இந்து ராஷ்டிரம் அமைந்தே விட்டது. இப்போது ஒரு சிக்கல் எழுகின்றது. இந்து மதத்திற்கு கிறிஸ்தவ, இசுலாமிய, பௌத்த, சீக்கிய மதங்களில் உள்ளதைப் போல் ஒரு சட்டபுத்தகம் இல்லை. அதே போல் எந்த சட்டங்கள் எந்த காலகட்டங்கள் வரை, யாருக்கெல்லாம் செல்லுபடியாகும் என்பதை வரையறுக்கும் நூல்களோ – இவையெல்லாவற்றையும் கண்காணித்து கட்டுப்படுத்தும் ஒற்றை நிறுவனமோ இல்லை.

இந்து மதத்தில் இருப்பதெல்லாம் “மரபுகள்”. சமீபத்திய சபரிமலைத் தீர்ப்பின் படி அந்த மரபுகளைக் கூட யாரும் எப்படியும் எந்தக் காலத்திலும், என்ன நோக்கத்திற்காகவும் உருவாக்கி விட முடியும் என்று தெரிகிறது. உதாரணமாக அசைவம் தின்னக் கூடாது என்பதும் மரபு தான் – கோவிலிலேயே அசைவம் சமைத்து தின்னலாம் என்பதும் மரபு தான். அதிகாரத்தில் இருப்பது யார் என்பதைப் பொறுத்து ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக அமல்படுத்திக் கொள்ளலாம். பாஜக போன்ற கட்சிகள் கையில் அதிகாரம் கிடைக்கும் போது முன்னதே மரபு என அமல்படுத்தப்படும்; அதை உச்சநீதிமன்றமும் அங்கீகரிக்கும்.

சரி, கைலாயம் என்கிற இந்து ராஷ்டிரத்தில் எம்மாதிரியான இந்து மரபுகள் எல்லாம் பின்பற்றப்படும்?

நிச்சயம் “ஆன்மீக ஆராய்ச்சிக்கு” பிரதான இடம் இருக்கும். அந்த “நாட்டின்” ரிசர்வ் வங்கி “க்ரிப்டோ” கரன்சியை ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்திருப்பதால் நிழல் உலக தாதாக்கள், சட்டவிரோத ஆயுத வியாபாரிகள், சர்வதேச மாஃபியாக்கள், விபச்சார கும்பல் போன்றோருக்கு அது திறந்த மடமாக இருக்கும். அதைப் போன்ற தொழில்களே தர்மம், மரபு என்றும் எழுதி வைத்துக் கொள்ளலாம். யாரெல்லாம் இந்துக்களோ அவர்களே அந்த நாட்டின் குடிமக்களாக இருப்பார்கள் என்பதால், யாரெல்லாம் இந்துக்கள் இல்லை என்பதையும் அவர்களே தீர்மானிப்பார்கள் என்பதால் – தீண்டாமைச் சுவர் எழுப்பும் சிரமத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.

படிக்க :
♦ ஜெயேந்திரன் – நித்தியனாந்தா கும்பமேளா சந்திப்பு !
♦ பொறுக்கி நித்தியாவின் புகழ் பாடும் கொலைகார மோடி !

இந்து ராஷ்டிரத்தில் அனைவருக்கும் இலவச கல்வி – அதுவும் வேதங்களை அடிப்படையாக கொண்டது. இந்து ராஷ்டிரத்தின் பள்ளிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து யானை முகமாக மாற்றிக் கொள்வது குறித்த பாடங்கள் இருக்கும். இந்துக்கள் தங்களுடைய பாரம்பரிய கலாச்சாரத்தை அமைதியான முறையில் பின்பற்றுவதற்கு கைலாயம் ஒரு சிறந்த இடம் என்கிறார்கள் – எனவே போலீசு தொந்திரவு இல்லாமல் வேத முறைப்படி சோம-சுரா பானங்களைக் காய்ச்சிக் கொள்ளலாம்.

ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்ல வேதங்களில் சொல்லப்பட்டுள்ளதைப் போன்ற பறக்கும் கம்பளங்கள், ரதங்கள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். மகாரிஷி சுஷ்ருதரின் மருத்துவ முறைகளைப் பின்பற்றி கான்சருக்கும், அல்சருக்கும் பச்சிலை வைத்தியம் செய்யப்படும். பிள்ளைப் பேறு வேண்டி அசுவமேத யாகம் செய்யலாம். கணவனை இழந்த பெண்களை உயிரோடு  தீயிலிட்டு எஞ்சிய சாம்பலை ஒரு சொம்பில் வைத்து அந்த சொம்புக்கு ஒரு கோவில் கட்டிக் கொள்ளலாம்.  பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே திருமணம் செய்து வைத்து விடலாம்.

மொத்தத்தில் செத்து செத்து விளையாடலாம்.

ஆர்.எஸ்.எஸ் கும்பல் பல்லாண்டுகளாக முயன்றும் இந்தியாவில் இன்னமும் முழுமை பெற்று விடாத அவர்களின் “இந்து ராஷ்டிர” திட்டத்தை நித்தியானந்தா “ஜஸ்ட் லைக் தட்” நிறைவேற்றி முடித்துள்ளார். ஒருவேளை குஜராத் போலீசாரின் திடீர் ஆவேசத்திற்கு இதுவே கூட காரணமாக இருக்க கூடும். எனினும், இதுவரை நூற்றி முப்பது கோடி இந்துக்களுக்கென்று ஒரு தேசம் இல்லையே என்ற ஏக்கத்தோடு அலைந்து கொண்டிருந்த பரிவாரங்களுக்கு இப்போது நிம்மதி ஏற்பட்டிருக்கும். இந்துக்களுக்கென்று ஒரு தேசம் உருவாகி விட்டது.

ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் இனிமேல் நிம்மதியாக கைலாயத்திற்கு டிக்கெட் வாங்கிச் சென்று விடலாம். நமக்கும் நிம்மதியாக இருக்கும்.


சாக்கியன்

உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் !

றவுகளுக்குள் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைகளிடம் உடல் குறைபாடு அதிகமாக இருப்பதில், நாட்டிலேயே தமிழகத்திற்கு இரண்டாம் இடம். முதல் இடத்தில் இருப்பது அருணாச்சல பிரதேசம்.

சரி… உறவுகளுக்குள் திருமணம் செய்வது மற்றும் அதனால் என்ன பிரச்சினைகள் எல்லாம் வரலாம் என்பதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

***

லகம் முழுவதும் ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் சொந்தத்தில் திருமணம் செய்வதை வளர்ந்த நாடுகளான அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள், ஐரோப்பா , ஆஸ்திரேலியா காண முடிவதில்லை.

அரேபிய தீபகற்ப நாடுகள், தெற்காசிய நாடுகளில் தான் சொந்தத்தில் திருமணம் செய்யும் சதவிகிதம் மிக அதிகமாக இருக்கிறது

சரி எதற்காக சொந்தத்தில் திருமணம் செய்வது அதிகமாக இருக்கிறது என்று ஆய்வு செய்ததில்- சொந்தத்தில் திருமணம் செய்யும்போது ரிஸ்க் குறைவு;
திருமணம் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் இல்லை; மாப்பிள்ளை பொண்ணு இருவரையும் இருவருக்கும் முன்னமே நன்றாக தெரிந்திருக்கும்; அது போக மாமியார் கொடுமை, வரதட்சணைக் கொடுமை இவையெல்லாம் அந்நிய திருமணங்களை ஒப்பிடும் போது “comparatively” குறைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அடுத்த காரணம் சொத்து வெளியே போகாது. அந்நிய சம்பந்தம் செய்தால் சொத்து வெளியே போகும்.

சில நேரங்களில் குடும்ப மரியாதைக்காகவும் ஏற்கெனவே வாக்கு கொடுத்து விட்டதற்காகவும் சொந்த திருமணங்கள் நடக்கின்றன.

child-marriageபெண் குழந்தை பிறந்தவுடனே இந்த
பொண்ணு என் மகனுக்கு தான் என்று கூறும்
மக்கள் உள்ளனர். சிலர் பெண் பூப்பெய்தும் போது இப்படி கூறுவார்கள்.

இப்படியாக ஒரு சமூக அழுத்தம் காரணமாகவும் சொந்தத்தில் திருமணங்கள் அதிகரிக்கின்றன. யாரோ ஊர் பேர் தெரியாத ஆட்களை ப்ரோக்கர் சொல்கிறார் / மேட்ரிமோனி சொல்கிறது என்று நம்பி ரிஸ்க் எடுக்க யோசிக்கிறோம்.

நமது ஊர்களில் அதிகம் செய்யப்படும் சொந்தத் திருமணம், அக்கா மகள் மாமாவை திருமணம் செய்யும் முறை; அத்தை மகன்; மாமன் மகன்; அத்தை மகள் போன்றவர்களை திருமணம் செய்கிறோம். அக்காள் தங்கைகள் தங்களுக்குள் பெண் கொடுத்து எடுத்து சம்பந்திகள் ஆகுவதையும் பார்க்கிறோம்.

இஸ்லாமிய சமயத்தில் இந்த வகை ரத்த சொந்த திருமண முறை உண்டு. இதுபோன்ற திருமணங்களை ரத்த சொந்தமுள்ள திருமண முறைகள் என்று அழைக்கிறோம்.

சில ஊர்களில் அவர்கள் ஊரை விட்டு வெளியே பெண் எடுக்க மாட்டார்கள். கொடுக்க மாட்டார்கள். சில இடங்களில் தங்களின் கோத்திரத்தை சரியாக கடைபிடிப்பார்கள்.
இவ்வாறு சுய சாதிகளுக்குள்ளும் குலம் கோத்திரம் என்று உண்டு.

சில சாதிகளில் இது போன்ற ரத்த உறவுகளை தவிர்க்க ஒரு குலத்தில் இருப்போர் அதே குலத்தில் பெண் கொடுத்து பெண் எடுக்க மாட்டார்கள். இவ்வாறு அவரவர் நம்பிக்கைப்படி திருமண பந்தம் செய்வதுண்டு.

படிக்க :
கல்விக் கடன் பயனாளிகளில் 10% மட்டுமே பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் | சாதிய அவலம்
குழந்தைத் திருமணம் ஏன் நடைபெறுகிறது?

மிக நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதால் வரும் பிரச்சனைகள் என்னவென்றால் ?

பிறக்கும் குழந்தை பிறவி குறைபாடுடன் பிறக்கும் சதவிகிதம் சொந்த திருமணங்களில் செய்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது.

மேலும், பிறக்கும் குழந்தைகளிடம் மரபணுக்கோளாறால் விளையும் X க்ரோமோசோம் சம்பந்தப்பட்ட ஆட்டோசோமல் ரிசசிவ் வியாதிகள் அதிகமாக தென்படுகின்றன.

பொதுவாக மரபணு ஆராய்ச்சி கருத்துப்படி, ஒரு நோய் உண்டாக்கும் காரணியான ஜீனை நோயை மட்டுப்படுத்தும் ஜீன் வென்று விடும். ஆனால், தாய் தந்தை ஆகிய இருவருமே நெருங்கிய ரத்த சொந்தங்களாக இருப்பதால் அவர்களிடம் மரபணுக்கோளாறுக்கான மரபணுக்கள் வெளிப்படாமல் இருந்த நோய்கள் அவர்களின் வாரிசுகளுக்கு வெளிப்பட வாய்ப்புள்ளது.

சொந்தங்கள் திருமணம் செய்வதால் பிரசவங்களில் அதிக சிசு மரணங்கள் நிகழ்கின்றன என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள செம்புலப் பெயல்நீராரின் (40-வது பாடல்) கொண்டு முடிக்கிறேன்.

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” – என்று பாடுகிறார்

இதன் அர்த்தம் என்ன? தலைவியிடம் தலைவன் கூறுவதாக இந்த பாடல் பதிவாகிறது.

“என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன” என்கிறான்.

இதன் மூலம் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே NON CONSANGUINOUS MARRIAGE அதாவது சொந்தம் தவிர வெளியே திருமணம் செய்யும் வழக்கம் நம்மிடையே இருந்து வந்துள்ளது தெரிகிறது.

Inbreeding எனப்படும் நமது சொந்தங்கள் நமது ஊர் நமது இனம் என்று திருமணம் செய்து கொண்டே சென்றால் பிரச்சனையை உருவாக்கும் மரபணுக்கள் வெளியே வரும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதை நாம் உணரவே இந்த பதிவு.

நன்றி

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

தீண்டாமைச் சுவர் : இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் | கருத்துப் படம்

மேட்டுப்பாளையம் அடூர் : சாதியப் படுகொலை

தீண்டாமைச் சுவர் தானாக இடிந்து விழுந்தால் நாம் அழிவோம்;
இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் !

 

 

கருத்துப்படம் : வேலன்

 

சிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 46

அத்தியாயம் ஒன்பது | டியுர்கோ : சிந்தனையாளர், அமைச்சர், மனிதர்

அ.அனிக்கின்

தினாறாம் லுயீயின் கீழ் நிதித்துறைப் பொறுப்பாளராக டியுர்கோ பணியாற்றிய இரண்டு வருடங்களும் புரட்சிக்கு முந்திய பிரான்சின் வரலாற்றில் உணர்ச்சித் துடிப்புள்ள திடீர்த் திருப்பங்களைக் கொண்ட பகுதியாகும். அவர் செய்த சீர்திருத்தங்கள் வெற்றியடையவில்லை. ஏனென்றால் அன்று புரட்சியால் மட்டுமே திருத்தப்படக் கூடியனவற்றை அவர் சீர்திருத்தங்களின் மூலமாகச் செய்ய முனைந்தார்.

அந்த மனிதரிடம் ஏதோ ஒரு விதமான கற்பனாவாதத் தன்மை இருந்தது. உண்மை என்னவென்றால் அவர் இயற்கையிலேயே கற்பனாவாதி அல்ல, ஆனால் சந்தர்ப்பங்களின் நிர்ப்பந்தத்தினால் அவர் அப்படித் தோன்றினார்; அதிகமான அளவில் பகுத்தறிவுக்குப் பொருந்தக்கூடிய கருத்துக்களும் சாமர்த்தியமான நடவடிக்கைகளும் கூட சில சமயங்களில் கோமாளித்தனமாக முடிவதுண்டு. ஆனால் இந்த உதாரணம் இன்னொரு அம்சத்திலும் பொருத்தமானதே. டியுர்கோ தனிப்பட்ட முறையில் அதிகமான ஆன்மிகச் சிறப்பும் எந்த விதிவிலக்கும் இல்லாத உயர்ந்த கோட்பாடுகளும் அபூர்வமான தன்னல மறுப்பும் கொண்டவர். இவை பதினைந்தாம் லுயீ, பதினாறாம் லுயீயின் அரசவைகளுக்குச் சம்பந்தமில்லாத விசித்திரமான குணங்களாகும்.

சிந்தனையாளர்

டியுர்கோ 1727-ம் வருடத்தில் பாரிஸ் நகரத்தில் ஒரு பழைய நார்மன்டிய மேன் மக்கள் குடும்பத்தில் பிறந்தார். அந்தக் குடும்பம் நெடுங்காலமாக அரசுக்குச் சேவை செய்து வந்திருக்கும் மரபைக் கொண்டது. பாரிஸ் நகரத்தில் அவருடைய தகப்பனார் வகித்த பதவி இன்றுள்ள நகராட்சித் தலைவர் அல்லது மேயர் பதவிக்குச் சமமானதாகும். அந்தக் குடும்பத்தில் அவர் மூன்றாவது மகன்; மரபுப்படி அவர் திருச்சபையில் சேர வேண்டும். எனவே அன்றைய நிலைமைகளுக்கு மிகவும் சிறப்பான கல்வியை அவர் கற்றார். சமயக் கல்லூரியில் உயர்ந்த தகுதிகளோடு படிப்பை முடித்துக் கொண்டு பட்டம் பெறுவதற்காக ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே இருபத்து மூன்று வயது நிரம்பிய மதகுரு, ஸோர்போன் பல்கலைக்கழகத்துக்குப் புகழை ஈட்டித் தந்தவர், கத்தோலிக்க சமயத்தின் எழுச்சிச் சுடர் சமயப் பணிகளை மேற்கொள்வதில்லை என்று திடீரென்று முடிவு செய்தார்.

இது முதிர்ச்சியும் சிந்தனைத் தெளிவும் உடைய ஒரு மனிதரின் முடிவு. இந்தக் காலகட்டத்தில் அவர் ஆங்கிலச் சிந்தனையாளர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தார், தத்துவஞான நூல்களைப் படிப்பதில் அதிகமான நேரத்தைச் செலவிட்டார். புற உலகம் முழுவதுமே மனித உணர்வின் படைப்பு என்று கூறிய அகநிலைக் கருத்துமுதல்வாதத்தை மறுத்துக் கூறுகின்ற பல தத்துவ நூல்களை அவர் எழுதினார். அவருடைய திறமையைக் கண்டு அவரது ஆசிரியர்களும் நண்பர்களும் அதிசயித்தார்கள். அவருக்கு ஆறு மொழிகள் நன்றாகத் தெரியும்; பல விஞ்ஞானங்களை ஆராய்ந்து கற்றிருந்தார்; அவருடைய நினைவாற்றல் குறிப்பிடத்தக்கதாகும். அவருக்கு இருபத்திரண்டு வயதாகும் பொழுது, காகிதப் பணத்தைப் பற்றி ஆராய்ச்சி மிக்க புத்தகத்தை எழுதினார், அதில் லோவின் திட்டத்தையும் அதன் குறைபாடுகளையும் பற்றி விமர்சித்தார். எனினும், இந்தக் காலகட்டத்தில் விரிவான தத்துவஞான வரலாற்றுச் சுற்றுவட்டத்திற்குள்ளாகத்தான் அவர் பொருளாதாரப் பிரச்சினைகளில் ஈடுபாடு காட்டினார்.

1752-ம் வருடத்தில் டியுர்கோ சட்ட ஆலோசகர் பதவியையும் பிறகு பாரிஸ் நாடாளுமன்றத்தின் சட்ட இலாகாவின் துணை சபாநாயகர் பதவியையும் வகித்தார். எனினும் பல துறைகளைப் பற்றியும் அவர் தீவிரமாகப் படிப்பதையோ, பாரிஸ் நகரத்தின் அறிவுலக வாழ்க்கை ஒன்று குவிக்கப்பட்டிருந்த வரவேற்புக் கூடங்களுக்குப் போவதையோ அவருடைய பதவிப் பொறுப்புகள் தடை செய்யவில்லை. இளைஞரான டியுர்கோ வெகுசீக்கிரத்திலேயே சமூகத்தின் மேன்மக்களிடையேயும் தத்துவஞானிகள் குழுவினரிடையேயும் அறிவிற்சிறந்தவர் என்று புகழடைந்தார். டிட்ரோ , ட அலம்பேர் மற்றும் அவர்களோடு கலைக்களஞ்சியத்தை உருவாக்குகின்ற பணிகளில் ஈடுபட்டிருந்த உதவியாளர்களிடமும் அவர் நெருங்கிப் பழகினார். கலைக்களஞ்சியத்துக்குத் தத்துவஞான, பொருளாதார விஷயங்களைப் பற்றி சில கட்டுரைகள் எழுதினார்.

Turgot
டியுர்கோ

முற்போக்கான நிர்வாகி என்று புகழ்பெற்ற வென்சான் குர்னே டியுர்கோவின் வாழ்க்கையில் அதிக முக்கியமான பாத்திரத்தை வகித்தார்; அவர் பொருளாதாரத்துறையில் டியுர்கோவுக்கு ஆசிரியரானார். குர்னே-பிஸியோகிராட்டுகளைப் போலன்றி- தொழில்துறையும் வர்த்தகமும் ஒரு நாட்டின் வளத்துக்கு மிக முக்கியமான தோற்றுவாய்கள் என்று கருதினார். எனினும் அவர்களோடு சேர்ந்து குர்னேயும் கைத்தொழிற் குழுக்களின் மீது விதித்த கட்டுப்பாடுகளைக் கண்டித்தார், சுதந்திரமான போட்டியை ஆதரித்தார். நாம் முன்னர் குறிப்பிட்டது போல “சுதந்திர உற்பத்தி, சுதந்திர வர்த்தகம்” என்ற பிரபலமான கருத்தை அவர் கூறியதாகச் சொல்லுவதுண்டு. டியுர்கோ அப்பொழுது சப்ளை இலாகாவின் அதிகாரி பதவியை வகித்த குர்னேயோடு தொழில், வர்த்தகத் துறைகளை மேற்பார்வையிடுவதற்காக மாநிலங்களில் சுற்றுப் பயணம் சென்றார்.

பாரிசுக்குத் திரும்பிய பிறகு குர்னேயோடு கெனேயின் “மாடியறை மன்றத்துக்கு” அவரும் போவதுண்டு; ஆனால் பிஸியோகிராட்டிய மரபினரின் அதிகத் தீவிரமான கருத்துக்களை அதற்கு முன்பாகவே அவர் ஒதுக்கிவிட்டிருந்தார். அவர் கெனேயின் முக்கியமான கருத்துக்கள் சிலவற்றை ஒத்துக் கொண்டார், தனிப்பட்ட முறையிலும் அவரிடம் அதிகமான மரியாதை கொண்டிருந்தார். எனினும் அந்த விஞ்ஞானத்தின் பல துறைகளில் அவர் தனக்கென்று ஒரு தனி வழியைப் பின்பற்றினார். குர்னே 1759-ம் வருடத்தில் மரணமடைந்தார். அவர் மரணமடைந்தவுடனே டியுர்கோ வெளியிட்ட குர்னேக்கு அஞ்சலி என்ற புத்தகத்தில் அவர் காலஞ்சென்ற தன்னுடைய நண்பரின் கருத்துக்களை விளக்கி எழுதியதோடு, தன்னுடைய பொருளாதாரக் கருத்துக்களையும் முதல் தடவையாக முறைப்படி விளக்கி எழுதியிருந்தார்.

1761-ம் வருடத்தில் லிமோஜ் என்ற நகரத்தில் சப்ளை இலாகாவில் அதிகாரியாக டியுர்கோ நியமிக்கப்பட்ட பொழுது அவருடைய விஞ்ஞான, இலக்கியப் பணிகள் தடைபட்டன. அவர் அங்கே பதிமூன்று வருடங்களைக் கழித்தார்; அவ்வப்பொழுது பாரிஸ் நகரத்துக்குப் போய் வருவதுண்டு. மத்திய அரசின் முக்கியமான பிரதிநிதி என்ற முறையில் அந்த மாநிலத்தின் எல்லாப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் சப்ளை இலாகா அதிகாரியே பொறுப்பாக இருந்தார். எனினும் அரசரின் சார்பில் வரிகளை வசூலிப்பது தான் அவருடைய முக்கியமான வேலையாகும்.

அங்கே நிலவிய கடுகடுப்பூட்டும் யதார்த்தத்தைப் பற்றி டியுர்கோ பின்வருமாறு எழுதினார்: “இங்கே எழுதப் படிக்கத் தெரிந்த விவசாயிகள் அநேகமாக யாரும் இல்லை. இவர்களில் அறிவும் நேர்மையும் கொண்டவர்கள் வெகு சிலரே; தங்களுடைய நன்மைக்காகச் செய்யப்படுகின்ற சீர்திருத்தங்களைக் கூட எதிர்க்கும் முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள்”.(1)

ஆனால் டியுர்கோ மனந்தளரவில்லை. அவர் சுறுசுறுப்பானவர்; சுய நம்பிக்கையும் அதிகார தோரணையும் உடையவர் என்று கூட அவரைச் சொல்லலாம். அதிகமான கஷ்டங்கள் இருந்த போதிலும் அந்த மாநிலத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்யத் தொடங்கினார். வரி வசூலிக்கின்ற முறையை சுலபமாக்குவதற்கு முயற்சி செய்தார்; எல்லோராலும் வெறுக்கப்பட்ட கட்டாயமாக சாலை அமைக்கும் முறைக்குப் பதிலாக வேறு முறையைக் கொண்டு வந்தார். அந்த வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய கூலியுழைப்பின் மூலம் சாலைகளை நன்கு செப்பனிட்டு வைத்திருக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்; நல்ல சாலைகளை அமைத்துக் கொடுத்தார்; கால்நடைகளுக்கு வரும் தொத்து நோய்களையும் பயிர்களை அழிக்கும் கிருமிகளையும் ஒழிப்பதற்குத் தீவிரமான இயக்கம் நடத்தினார்; உருளைக் கிழங்கைப் பயிரிடுமாறு செய்தார்; தனக்கும் தன்னுடைய விருந்தினர்களுக்கும் உருளைக் கிழங்கில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தினமும் பரிமாற வேண்டுமென்று தன்னுடைய சமையற்காரனுக்கு உத்தரவு கொடுத்ததன் மூலம் மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்கினார்.

எல்லாவற்றையும் தனிப்பட்ட முன்முயற்சிக்கும் சுதந்திரமான போட்டிக்கும் சம்பவங்களின் இயற்கையான வளர்ச்சிக்கும் விட்டுவிட வேண்டுமென்பது அவருடைய தத்துவமாகும். ஆனால் அந்த மாநிலத்தில் அறுவடைகள் மோசமாகி மக்கள் உணவு இல்லாமல் கஷ்டப்பட்ட பொழுது, இந்த நெருக்கடிகளைத் துணிச்சலாகவும் திறமையாகவும் சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட பொழுது அவர் தம்முடைய தத்துவக் கோட்பாடுகளை ஒதுக்கி வைக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார். அவர் முற்போக்கும் இரக்க உணர்ச்சியுமுள்ள நிர்வாக அதிகாரியாக நடந்து கொண்டார். ஆனால் பதினைந்தாம் லுயீ ஆட்சி செய்த காலத்தில் அவரால் அதிகமாகச் செய்ய முடியவில்லை.

படிக்க:
உடல் நல ஆய்வு முடிவுகளை நம்பலாமா ?
♦ பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு !

அவர் லிமோஜிலிருந்த காலத்திலும் பாரிஸ் நகரத்துக்குப் போகும் பொழுதும் பிஸியோகிராட்டுகளின் வெற்றிகளைக் கூர்ந்து கவனித்தார். அவர் டுபோனோடு நட்புக் கொண்டு பழகினார்; பாரிஸ் நகரத்தில் ஆடம் ஸ்மித்தின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது. எனினும் இந்தக் காலகட்டத்தின் போது அவர் அறிக்கைகளையும் கணக்குகளையும் அதிகாரபூர்வமான குறிப்புகளையும் சுற்றறிக்கைகளையுமே முக்கியமாக எழுதினார். அவருக்கு அபூர்வமாகக் கிடைத்த ஓய்வு நேரத்தில், எதிர்பார்க்கப்படாத பொழுதுகளில் மட்டுமே அவர் தன்னுடைய ஆழ்ந்த படிப்பைத் தொடர முடிந்தது.

ஆகவே 1766-ம் வருடத்தில் அவர் தன்னுடைய முக்கியமான பொருளாதார நூலாகிய செல்வத்தின் தோற்றம் மற்றும் வினியோகம் பற்றிய சிந்தனைகள் என்ற புத்தகத்தை எழுதிய பொழுது அதை ஒரு தற்செயலான சம்பவம் என்றே கூற வேண்டும். அந்தப் புத்தகத்தின் அடிப்படையான கருத்துக்களை வெகு காலத்துக்கு முன்பே அவர் சிந்தித்து முடிவு செய்திருந்தார்; அவற்றில் சிலவற்றை அவர் அரசாங்க ஆவணங்களில் எழுத்து வடிவத்திலும் குறித்து வைத்திருந்தார்.

இந்தப் புத்தகம் அசாதாரணமான வரலாறு உடையது. ஏசு நாதர் சபையைச் சேர்ந்த பாதிரிமார்கள் இரண்டு சீன இளைஞர்களை படிப்பதற்காகப் பிரான்சுக்குக் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். நண்பர்களுடைய வேண்டுகோளின் பேரில் அந்த சீன இளைஞர்களுக்காக டியுர்கோ எழுதிய பாடபுத்தகம் அல்லது வழிகாட்டியே இந்தப் புத்தகம். டுபோன் இதை 1769-70-ம் வருடங்களில் வெளியிட்டார். அவர் வழக்கம் போல டியுர்கோவை ஒரு பிஸியோகிராட் என்று காட்டுகின்ற வகையில் அந்தப் புத்தகத்தைத் “திருத்தி” வெளியிட்டார்; அதன் காரணமாக அவர்களிருவருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. 1776-ம் வருடத்தில் டியுர்கோ இந்தப் புத்தகத்தின் மறு பதிப்பைத் தானே வெளியிட்டார்..

அவருடைய சிந்தனைகள் மூதுரை வடிவத்தில் மிகவும் சிறப்பான முறையில் எழுதப்பட்டிருந்தது. அவற்றைப் படிக்கும் பொழுது பெட்டியின் மிகச் சிறந்த எழுத்துக்கள் நம் நினைவுக்கு வருகின்றன. அதில் நூறு சுருக்கமான பொருளாதாரத் தேற்றங்கள், ஆராய்ச்சிக் கருத்துக்கள் இருந்தன (இவற்றில் சில என்றுமே ஒத்துக்கொள்ளப்பட்டவை என்பது உண்மையே). டியுர்கோ எழுதிய தேற்றங்களை மூன்று தனிப் பகுதிகளாகப் பிரிக்க முடியும்.

முதல் தேற்றத்திலிருந்து முப்பத்தொன்றாம் தேற்றம் வரையிலும் டியுர்கோ ஒரு பிஸியோகிராட்டாக, கெனேயின் மாணவராக இருக்கிறார். எனினும் நிகரப் பொருள் என்ற தத்துவத்துக்கு அவர் கொடுக்கின்ற புது அர்த்தம் மார்க்சைப் பின்வருமாறு சொல்லத் தூண்டியது: “டியுர் கோவிடம் பிஸியோகிராட்டிய அமைப்பு மிக அதிகமான அளவுக்கு வளர்ச்சியடைந்தது”,(2) பிஸியோகிராட்டுகளின் அமைப்பின் வளர்ச்சி எனப்படுவது அவர்களுடைய போலியான ஆரம்ப முற்கோள்களல்ல, ஆனால் அந்த அமைப்பின் சுற்றுவட்டத்துக்குள் யதார்த்தத்தை மிக அதிகமான அளவுக்கு விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து விளக்குதலே. டியுர்கோ உபரி மதிப்பைப் புரிந்து கொள்வதை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் – உபரி எனப்படுவது “இயற்கையின் பரிசுத்தமான அன்பளிப்பு” என்பதிலிருந்து மாறி அது விவசாயியின் உழைப்பினால் படைக்கப்படுகிறது; முக்கியமான உற்பத்திச் சாதனமாகிய நிலத்தின் உடைமையாளர் அதைத் தனக்கு ஒதுக்கிவிடுகிறார் என்ற கருத்தை நோக்கி மிக நுட்பமான வகையில் முன்னேறி வருகிறார்.

இதற்கடுத்த பதினேழு தேற்றங்களும் மதிப்பு, விலைகள், பணம் ஆகியவற்றை எடுத்துக் கூறுகின்றன. இந்தப் புத்தகத்திலும் டியுர்கோவின் மற்ற நூல்களிலும் நூறு வருடங்களுக்குப் பிறகு முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் அமோகமாகச் செழித்து வளர்ந்த அகநிலைத் தத்துவங்களின் முதல் விதைகளைக் கண்டனர். மொத்த பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தையும் போல டியுர்கோ உழைப்பளவை மதிப்புத் தத்துவத்துக்கு வந்து சேரவில்லை. ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பும் விலையும் தேவைகளுக்கிடையே உள்ள உறவுகளினால், பரிவர்த்தனையில் ஈடுபடுகின்ற நபர்களுடைய, அதாவது விற்பனையாளர், வாங்குபவருடைய விருப்பங்களின் தீவிரத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றன என்பது அவருடைய கருத்து. ஆனால் டியுர்கோவின் இத்தகைய கருத்துக்கள் அவருடைய போதனையின் முக்கியமான அம்சங்களோடு அதிகமான தொடர்புடையவை அல்ல.

கடைசியாக வருகின்ற ஐம்பத்திரண்டு தேற்றங்கள் தான் அரசியல் பொருளாதார வரலாற்றில் மிகவும் கௌரவமான இடங்களில் ஒன்றை டியுர்கோ அடைவதற்கு உரிமையைக் கொடுக்கின்றன.

நாம் முன்னர் குறிப்பிட்டது போல பிஸியோகிராட்டுகள் சமூகத்தை உற்பத்தி செய்யும் வர்க்கம் (விவசாயிகள்), நில உடைமையாளர்கள், மலட்டு வர்க்கம் (மற்ற எல்லோரும்) என்ற மூன்று வர்க்கங்களாகப் பிரித்தனர். இந்தப் பகுப்பு முறையில் டியுர்கோ கூடுதலாக ஒன்றைச் சிறப்பாகச் சேர்க்கிறார். கடைசியாகச் சொல்லப்பட்ட வர்க்கத்தில் “இரண்டு உட்பிரிவுகள், இரண்டு வகைகள் இருப்பதாகச் சொல்லலாம். பட்டறைத் தொழில் அதிபர்கள், தொழிற்சாலை உடைமையாளர்கள் அதிகமான பணத்தை மூலதனமாக வைத்து அந்த முன்பணத்தைக் கொண்டு தொழிலாளர்களை உழைக்குமாறு செய்து லாபம் தேடுபவர்கள் எல்லோரும் முதல் வகையைச் சேர்ந்தவர்கள். தங்கள் கைகளைத் தவிர வேறு எவ்விதச் சொத்தும் இல்லாத சாதாரணமான தொழிலாளர்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் அன்றாட உழைப்பை மட்டும் தொழிலதிபர்களுக்குக் கொடுத்து கூலியைத் தவிர வேறு எந்த லாபமும் அடையாதவர்கள்.”(3) இந்தத் தொழிலாளர்கள் உயிரோடிருக்கத் தேவையான குறைந்தபட்ச அளவுக்குக் குறைவான கூலியே அவர்களுக்குக் கொடுக்கப்படுவதை டியுர்கோ வேறொரு பகுதியில் எடுத்துரைக்கிறார்.

இதே மாதிரியாக ”விவசாயி வர்க்கத்தினரையும் மலட்டு வர்க்கத்தினரைப் போல இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: தொழிலதிபர்கள் அல்லது முதலாளிகளைப் போல எல்லா முன்பணங்களையும் கொடுப்பவர்கள் ஒரு பிரிவிலும் சாதாரணக் கூலி உழைப்பாளிகள் அடுத்த பிரிவிலும் அடங்குவர்” (4)

கெனேயின் மாதிரிப்படிவத்தில் சமூகம் மூன்று வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது; ஆனால் டியுர்கோ சமூகத்தை ஐந்து வர்க்கங்களாகப் பிரித்தார். இந்த மாதிரிப் படிவம் யதார்த்தத்தை அதிகமாக ஒட்டியிருந்தது. பிஸியோகிராட்டுகளுக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த மூலச் சிறப்புடைய பொருளியலாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக டியுர்கோவின் மாதிரிப் படிவம் இருக்கிறது. மூலச் சிறப்புடைய பொருளியலாளர்கள் உற்பத்திச் சாதனங்களோடு கொண்டிருக்கும் உறவை அடிப்படையாக வைத்து சமூகத்தை நில உடைமையாளர்கள், முதலாளிகள், கூலி உழைப்பாளிகள் என்ற மூன்று முக்கியமான வர்க்கங்களாகப் பிரித்தார்கள். பொருளாதாரம் முழுவதையும் தொழில் துறை, விவசாயம் என்ற பிரிவுகளாக நிறுத்திவிட்டார்கள்; ஆனால் டியுர்கோ அவ்வாறு செய்யத் துணியவில்லை.

படிக்க:
நூல் அறிமுகம் : உபரி மதிப்பு என்றால் என்ன ?
♦ மூலதனம் நூலின் அனைத்து பாகங்களும் – PDF வடிவில் !

அவர் மூலதனத்தைப் பற்றிச் செய்த ஆராய்ச்சி அவருடைய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்றாகும். இது கெனே செய்த ஆராய்ச்சியைக் காட்டிலும் ஆழமானது, பலன் கொடுப்பது. மூலதனம் என்பது இயற்கையான வடிவங்களிலுள்ள பலவிதமான முன்பணங்களின் (மூலப் பொருள், கூலி, இதரவை) மொத்தம் என்று தான் கெனே பிரதானமாகக் கருதினார்; ஏனென்றால் அவரிடம் சமூகத்திலுள்ள வர்க்கங்களுக்கிடையே பொருளை வினியோகித்தல் பற்றிய பிரச்சினையோடு மூலதனம் போதுமான அளவுக்கு நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கவில்லை. கெனேயின் அமைப்பில் லாபத்துக்கென்று இடம் கிடையாது; அவருடைய முதலாளி “நிர்வாகம் செய்ததற்காகக் கூலி வாங்கிக் கொண்டார்” என்று சொல்லப்பட்டது; ஆனால் இந்தக் ‘கூலியை’ நிர்ணயிக்கின்ற விதிகள் எவை என்பதைக் கெனே ஆராயவில்லை.

இங்கு தான் டியுர்கோ பெரிய அளவுக்கு முன்னேறிச் செல்கிறார். அவரால் “லாபம்” என்ற இனம் இல்லாமல் சமாளிக்க முடியவில்லை; இயல்பான அறிவுத்திறத்தோடு தொழில் முதலாளியிடமிருந்து தம்முடைய ஆராய்ச்சியைத் தொடங்குகிறார். இங்கே லாபம் எப்படித் தோன்றுகிறது என்பது மிக வெளிப்படையாகத் தெரிகிறது, ஏனென்றால் ”எல்லா உபரியுமே நிலத்திலிருந்துதான் வருகிறது” என்ற பிஸியோகிராட்டுகளின் தவறான எண்ணம் பிரச்சினையை மறைக்கவில்லை.

டியுர்கோ என்ற பிஸியோகிராட் ”இயற்கையான வரிசை முறையை மாற்றுவதற்கு” முன்னேறுகிறார், விவசாயத்தை இரண்டாவதாக மட்டுமே எடுத்துக் கொள்கிறார். ஆனால் அதற்காக அவர் மன்னிப்புக் கோருவது விந்தையானதே. ஏனென்றால் அவர் மன்னிப்புக் கோருவது அவசியமல்ல. இதற்கு மாறாக அவருடைய வாதம் மிகச் சரியானது. கூலி விவசாயிகளை உபயோகிக்கும் முதலாளித்துவ விவசாயி, தொழிற்சாலை உடைமையாளரைப் போலவே தன்னுடைய மூலதனத்தின் பேரில் அதே அளவு லாபமாவது பெற வேண்டும். இதோடு, நிலவுடைமையாளருக்கு வாரம் என்ற வகையில் கொடுப்பதற்காகச் சிறிதளவு உபரியும் சேர வேண்டும்.

இதில் மிகவும் வியப்பைத் தருவது அறுபத்திரண்டாவது தேற்றமே. உற்பத்தியில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் மூலதனம் சுய வளர்ச்சிக்கான திறமையைப் பெற்றிருக்கிறது. இந்த சுய வளர்ச்சியின் அளவை, அளவு விகிதத்தை நிர்ணயிப்பது எது?

மூலதனத்தினால் (உண்மையைச் சொல்வதென்றால் சம்பந்தப்பட்ட மூலதனத்தால் சுரண்டப்படுகிற உழைப்பினால்) படைக்கப்பட்ட பொருளின் மதிப்பு எதிலடங்கியிருக்கிறது என்பதை விளக்குவதற்கு டியுர்கோ முயற்சிகளைச் செய்கிறார். முதலாவதாக, தொழிலாளர்களின் கூலிகளையும் சேர்த்து ஏற்பட்டிருக்கும் மூல தனச் செலவை உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் மதிப்பு ஈடு செய்கிறது.(5) மற்றவை (அடிப்படையில் உபரி மதிப்பு) மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

அந்தப் பண மூலதனத்தின் உடைமையாளர் என்ற வகையில் முதலாளி ”எத்தகைய சிரமமும் இல்லாமல்” பெறக் கூடிய வருமானத்துக்குச் சமமாக இருக்கின்ற லாபம் முதற் பகுதியாகும். இது லாபத்தில் கடன் வட்டிக்குச் சரியாக வருகின்ற பகுதியாகும். தொழிற்சாலையில் அல்லது நிலத்தில் தன்னுடைய பணத்தை முதலீடு செய்ய முடிவு செய்கின்ற முதலாளியின் “உழைப்பு, அபாய நேர்வு, திறமை” ஆகியவற்றுக்குத் தரப்படும் கூலி லாபத்தின் இரண்டாம் பகுதியாகும். இது தொழிலூக்கத்தின் வருமானமாகும். ஆகவே டியுர்கோ தொழில்துறை லாபத்தில் ஒரு பிரிவைக் காண்கிறார் – பணத்தை கடனாகக் கொடுக்கும் முதலாளிக்கும் நிர்வாகம் புரிகின்ற முதலாளிக்கும் இடை யில் அந்தப் பிரிவினை உள்ளது.

நிலவாரம் மூன்றாவது பகுதியாகும். இது விவசாயத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் மூலதனத்துக்கு மட்டுமே இருப்பது. இந்த ஆராய்ச்சி பொருளாதார விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் ஒரு முன்னேற்றம் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் டியுர்கோ உடனே அதை விட்டு விலகிப் போய்விடுகிறார். லாபம் என்பது உபரி மதிப்பின் பிரதானமான, பொதுமையான வடிவம்; வட்டி, வாரம் ஆகிய இரண்டுமே அதிலிருந்து தான் கிடைக்கப் பெறுகின்றன என்ற சரியான கருத்தை விட்டுப் போய்விடுகிறார். முதலில் அவர் லாபத்தை வட்டி என்று வகைப்படுத்துகிறார்; குறைந்த பட்சமாக இதைப் பெறுவதற்கு ஒவ்வொரு முதலாளிக்கும் உரிமை உண்டு என்கிறார். தன்னுடைய நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக தொழிற்சாலையின் புகைக்கும் வியர்வைக்கும் நெருப்பைப் போல எரிக்கும் வெய்யிலில் நடுவே சென்று தன்னுடைய தொழிலாளிகளை மேற்பார்வை செய்வதற்கு அவருக்குக் கொஞ்சம் கூடுதலாகவே கொடுக்க வேண்டும், விசேஷமான கூலி கொடுக்க வேண்டும். வட்டி, அதன் பங்குக்கு, நிலவாரமாக வகைப் படுத்தப்படுகிறது; ஏனென்றால் மூலதனத்தைக் கொண்டு ஒரு வயலை விலைக்கு வாங்கி அதைக் குத்தகைக்கு விடுவது தான் சுலபமாகச் செய்யக்கூடியதாகும். எனவே இப்பொழுது உபரி மதிப்பின் முக்கியமான வடிவம் நிலவாரமே, மற்றவை எல்லாம் அதிலிருந்து கிடைப்பவை மட்டுமே. மேலும் சமூகம் முழுவதுமே நிலத்திலிருந்து மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்ற “கூலிகளைக் கொண்டு உயிர்வாழ்கிறது”, டியுர்கோ இப்பொழுது பிஸியோகிராட்டுகளின் மடிக்குத் திரும்பிவிடுகிறார்.

மாபெரும் சிந்தனையாளர்களின் தவறுகளும் கூட முக்கியமானவை, அவை பலன் தருபவை என்பது நமக்குத் தெரியும். இது டியுர்கோவுக்கும் பொருந்துகின்றது. வெவ்வேறு வகையான மூலதன முதலீடுகளை ஆராய்கின்ற பொழுது அவர் மூலதனங்களின் போட்டி என்ற முக்கியமான பிரச்சினையை எழுப்புகிறார்; ஒரு முதலீட்டுத் துறையிலிருந்து வேறொரு துறைக்கு மூலதனத்தை மாற்றக்கூடிய சாத்தியத்தின் காரணமாக, லாபம் இயற்கையிலேயே சரி மட்டத்தை அடைவதைப் பற்றிய பிரச்சினையை எழுப்புகிறார். அடுத்தபடியாக, இந்தப் பிரச்சினைகளின் தீர்வுக்கு முக்கியமான அடி எடுத்து வைப்பவர் டேவிட் ரிக்கார்டோ. பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இத்தகைய தேடல்கள் படிப்படியாக முன்னேறி மார்க்ஸ் காட்டுகின்ற தீர்வை அடைந்தன. அவருடைய மூலதனம் என்ற நூலின் மூன்றாவது புத்தகத்தில் லாபம் மற்றும் உற்பத்தி விலையின் தத்துவத்திலும் கடன் மூலதனம் மற்றும் வட்டியின் தத்துவத்திலும் நிலவாரத்தைப் பற்றிய தத்துவத்திலும் அவர் இந்தத் தீர்வை எழுதியிருக்கிறார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) D. Dakin, Turgot and the Ancien Regime in France, N.-Y., 1965, பக்கம் 37ல் இந்த மேற்கோள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

(2) K. Marx, Theories of Surplus-Value, Part I, p. 54.

(3) Turgot, Textes choisis et preface par Pierre Vigreux, Paris, 1947, p. 112.

(4) Ibid., p. 114.. 

(5) பொருளின் மதிப்பில் எதிர்பாராத செலவுகளுக்காக (கால்நடை நோய் முதலியன) ஒதுக்கிவைக்க வேண்டிய காப்புத் தொகையை டியுர்கோ விசேஷமாகக் குறிப்பிடுகிறார்.

 

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை | காணொளி

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் குற்றமிழைத்தவர்களுக்கே நிலத்தை வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்பை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த 30.11.2019 அன்று சென்னை சேப்பாக்கத்தில் அரங்கக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

அந்த நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி !

ஆளூர் ஷாநவாஸ் உரை :

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உரை :

பாருங்கள் ! பகிருங்கள் !

மேட்டுப்பாளையம் தீண்டாமை சுவர் : இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் – நம் மனசாட்சியை உலுக்க ?

6

“கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாமாய் இறந்தனர்” – என்கின்றன பத்திரிகை செய்திகள். ஆனால், இது வெறுமனே இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்ட விபத்து மரணம் அல்ல. அரசு நிர்வாகமும், உள்ளூர் சாதி வெறியர்களும் கைகோர்த்துக் கொண்டு நிகழ்த்திய பச்சைப் படுகொலைகள் இவை. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த  நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் அருந்ததிய மக்களின் குடியிருப்புகள் உள்ளன.

பல்லாண்டுகளாக அருந்ததியின மக்கள் வசித்து வந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள நிலத்தில் கூட்டுறவு சங்கம் ஒன்று லே-அவுட் போட்டது. இந்த லே-அவுட்டில் பெரும் பணக்காரர்கள் நிலம் வாங்கி வீடுகட்டினர். நடூர் மக்கள் தலித்துகளாகவும் ஏழைகளாகவும் இருந்ததால் அவர்கள் தங்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது. அவர்கள் யாரும் தங்களது லே-அவுட்டின் சாலையைப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே சுமார் 100 அடி நீளத்திலும், 20 அடி உயரத்திலும் இந்த தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு தங்கள் வசிப்பிடத்தை பெரும் மதில் சுவரின் மூலம் தனிமைப்படுத்திக் கொள்ள ஒன்று தனியார் டவுன்ஷிப்பாகவோ அல்லது கேட்டட் கம்யூனிட்டியாகவோ இருக்க வேண்டும் – அதற்கும் முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த லே-அவுட் அப்படியான அனுமதியைப் பெறவில்லை. லேஅவுட்களில் உள்ள மனைகள் விற்றுத் தீர்ந்தவுடன், சாலைகளை அரசின் வசம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது விதி – ஆனால் இங்கே பெரும் மதில் சுவர் அமைத்து தடுத்துள்ளனர். அதே போல், மதில் சுவர்கள் ஆறரை அடி உயரம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி – இதுவும் மீறப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த சுவரின் மறுபக்கமாக சக்கரவர்த்தி துகில் மாளிகை என்கிற பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியனுக்கு 22 செண்ட் நிலத்தில் பெரிய சொகுசு பங்களா உள்ளது. தீண்டாமைச் சுவர் அனுமதியின்றி 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்டதோடு, அதனைத் தாங்கிப்பிடிக்க கான்க்ரீட் பீம்களும் இல்லாமல் இருந்துள்ளது. ஏற்கனவே மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் அருந்ததிய மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சுவரை ஒட்டிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்று வந்துள்ளது. மழை நீர் தேங்குவதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் தொடர்ந்து தண்ணீர் தேங்குவதால் சுவரின் கட்டுமானம் பலவீனமாவது போன்ற காரணங்களால் சுவர் விழுந்து விடும் என மக்கள் அஞ்சியுள்ளனர். எனவே இச்சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி அரசிடம் மனு அளித்துள்ளனர்.

படிக்க:
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 
♦ தலித் இளைஞர் மீது கொங்கு சாதியினரின் கொலைவெறி தாக்குதல் !

அதே போல் அந்த சுவர் ஆதிக்க சாதித் திமிரில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் என்பதையும் அருந்ததிய மக்கள் சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பலமுறை புகாரளித்துள்ளனர். இந்த காரணங்களுக்காக மேற்படி சுவரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். எனினும், மக்களின் கோரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பெய்து வரும் தொடர் மழை கோவை மாவட்டத்திலும் அடர்த்தியாக பெய்து வந்தது. பல ஆண்டுகளாக மழை பெய்து தண்ணீர் தேங்கி பலகீனமாய் இருந்த சுவர் இந்த மழைக்கு தாக்குப்பிடிக்கவில்லை. திங்கட்கிழமை (02/12/2019) அதிகாலை மூன்று மணிக்கு மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்தது.  இதில் அருந்ததிய மக்களின் குடியிருப்பைச் சேர்ந்த நான்கு வீடுகளை முற்றிலும் சுவரின் இடிபாடுகள் மூடிக் கொண்டது. அந்த வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் உள்ளிட்டு 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகினர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்டு தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு ஜேசிபி இயந்திரத்தோடு வந்து இடிபாடுகளை அகற்றி பிணங்களையே கைப்பற்றினர். சக்ரவர்த்தி துகில் மாளிகையின் முதலாளி மனம் கோணி விடக்கூடாது என்கிற “நல்ல” நோக்கத்தில் அதிகாரிகள் நடந்து கொண்டதன் விளைவு அப்பாவி மக்களின் உயிர் பலிகள். குரு (45), அரிசுதா (16), ராமநாதன் (20), அட்சயா(7), லோகுராம் (7), ஓவியம் மாள் (50), நதியா (30), சிவகாமி (50), நிவேதா (20), வைதேகி (22), ஆனந்தகுமார் (46), திலாகவதி (50), அருக்காணி (55), ருக்குமணி (40), சின்னம்மாள் (70) என 11 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள், மூன்று ஆண்கள் பலியாகியுள்ளனர். மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போராடுபவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் போலீசு.

இதையடுத்து ஊட்டி நெடுஞ்சாலையில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விபத்துக்கு காரணமான சக்ரவர்த்தி துகில் மாளிகையின் முதலாளியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் விபத்தை ஆய்வு செய்ய வந்த ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ. சின்னராஜ் ஆகியோர் போராடும் மக்களால் முற்றுகையிடப்பட்டனர். ஏற்கெனவே கோரிக்கை வைத்த சமயத்திலும் அவற்றைப் புறக்கணித்த அதிகாரிகள் தற்போது மழைக் காலம் என தெரிந்தும் பலகீனமாய் இருந்த சுவரை அகற்ற எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் அவரது தோழர்களை அடித்தே இழுத்துச் சென்று கைது செய்துள்ளது போலீசு. கோகுல்ராஜ்  படுகொலையில் சம்பந்தப்பட்ட யுவராஜை பயபக்தியோடு அழைத்து வரும் ‘காவல்துறை’, அநீதியாய்க் கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டு போராடிய மக்களின் மீது கொலை வெறித் தாக்குதல் செய்துள்ளது.

இந்துக்களுக்காகவே அரசியல் செய்வதாய் சொல்லிக் கொள்ளும் பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் இறந்து போன இந்துக்களுக்கு நியாயம் கிடைக்க இதுவரை எந்த போராட்டமும் அறிவிக்கவில்லை – வாயே திறக்கவில்லை. இந்து புராணங்களில் உள்ள கதைகள் குறித்து ஒரு கூட்டத்தில் பேசினார் இதே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காரப்பன் சில்க்ஸ் என்கிற கடையின் முதலாளி. அப்போது காரப்பன் சில்க்சை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என வரிந்து கட்டிக் கொண்டு வந்தனர் சங்கிகள் – இப்போது இறந்து போன ‘இந்துக்களுக்காக’ சக்ரவர்த்தி துகில் மாளிகையை புறக்கணிக்க வேண்டும் என ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை?

படிக்க:
கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா ?
♦ பயங்கரவாதி பிரக்யாசிங் கோட்சே விவகாரம் | பாஜக-வின் இரட்டை வேடம் !

தலித்தை ஆதிக்க சாதி அடிக்கும் போது ஆதிக்க சாதிக்கு ஆதரவு; கவுண்டர், வன்னியர், நாடார், தேவர் போன்ற ‘ஆதிக்க’ சாதியினரைப் பார்த்து “சூத்திரப்பயலே கருவறைக்கு வெளியே நில்லடா” என்று பார்ப்பான் சொல்லும் போது பார்ப்பானுக்கு ஆதரவு என்பதுதான் இந்துத்துவ அரசியல். இதை மீண்டும் ஒரு முறை தங்களது 17 உயிர்களைக் கொடுத்து நிரூபித்துள்ளனர் நடூர் மக்கள்.

***

வ்வொரு முறை தீண்டாமைச் சுவர் குறித்த செய்திகள் வெளியாகி கடும் போராட்டங்களுக்குப் பின் அது இடிக்கப்பட்ட பின் இதுவே கடைசி தீண்டாமைச் சுவராக இருக்கும் என நமக்கெல்லாம் ஒரு சுயதிருப்தி ஏற்பட்டு விடுகிறது. ஆனால், அந்த சுயதிருப்தியின் மீது திரும்பத் திரும்ப அமிலத்தைக் கொட்டுகின்றது சாதி வெறி. மீண்டும் ஒரு முறை போராட்டம் – மீண்டும் ஒரு முறை சுவர் தகர்ப்பு – மீண்டும் மற்றொரு சுவர் கண்டுபிடிப்பு – என்கிற இந்த நிகழ்ச்சிப் போக்கு மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

மந்தமாய்ப் போன நமது செக்குமாட்டுச் செயல்பாடுகளின் விளைவாய் 17 உயிர்கள் பறிபோய் உள்ளன. சாதிக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை எதார்த்தத்தில் இது போல் இன்னும் நாம் அறியாத இடங்களில் உள்ள தீண்டாமைச் சுவர்கள் குறித்த ஒரு பட்டியலை உருவாக்கி அனைத்துக்கும் எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் நமது மனசாட்சியை உலுக்கி தட்டியெழுப்ப சில உயிர்கள் பலி கொடுக்கப்பட வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள பெரியாரியவாதிகள், அம்பேத்கரிஸ்டுகள், மார்க்சியவாதிகள் உள்ளிட்ட முற்போக்கு ஜனநாயக சக்திகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

சாக்கியன்

திரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் ! வழக்கறிஞர்கள் புகார்

அனுப்புதல்
சு.ஜிம்ராஜ் மில்டன், வழக்கறிஞர்,
த.பார்வேந்தன், வழக்கறிஞர்,
கோ.பாவேந்தன், வழக்கறிஞர்.

பெறுதல்
காவல் ஆணையர் அவர்கள்,
சென்னை மாநகர காவல்துறை,
சென்னை மாநகர காவல் ஆணையரகம்,
வேப்பேரி, சென்னை – 600 006

மதிப்பிற்குரிய அய்யா,

பொருள் : துக்ளக் பத்திரிக்கை நடத்துவது என்ற பெயரில் சட்டவிரோத, தேசத்துரோக, சமூக விரோத, திரைமறைவு வேலைகளைச் செய்யும் திரு.குருமூர்த்தி என்பவர் மீது புகார் கொடுப்பது தொடர்பாக…

♦♦♦

ணக்கம், நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில்புரிந்து வருகின்றோம். எனக்கு whatsapp மூலமாக நேற்று (28.11.2019) காலை திரு குருமூர்த்தி என்பவர் பேசியதாக 45 நொடிகள் கால அளவு கொண்ட வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதில் மேற்படி திரு குருமூர்த்தி, தற்போதைய தமிழக துணை முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களை, தான் ”நீங்க எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க” என்று கேட்டதாக தெரிவித்து பேசியிருந்தார். இதுபற்றி அறிந்து கொள்ள நேற்று (28.11.2019) மாலை youtube-ல் பார்த்த போது மேற்படி திரு குருமூர்த்தி, திருச்சியில் நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கையின் விழாவில் பேசிய 27 நிமிட வீடியோ இருந்தது. மேற்படி வீடியோவில் திரு குருமூர்த்தி பேசியதன் சாரம்சம் பின்வருமாறு;

”சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்று வந்தபொழுது ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் வந்தார். என்னை விழா மேடையில் துப்புரவு பணிகளை சூபர்வைஸ் செய்யச் சொல்லி அவமானப்படுத்துகிறார்கள்; அதிமுகவில் இப்படி எல்லாம் நடக்கிறது என்று சொன்ன பொழுது அவரிடம் நான் கூறியதை அப்படியே கூற முடியாது. நீங்க எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என்று கேட்டேன். அதன் பிறகு போ போய் அந்த அம்மா சமாதியில் தியானம் செய் என்றேன். நான் கூறியதால்தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். அதன்பிறகு தமிழகத்தில் காட்சிகள் மாறின. ஒரு மாற்றம் ஏற்பட்டது.”

”பிரிந்த அதிமுகவை ஒருங்கிணைத்தேன்…”

”எடப்பாடி பழனிச்சாமியின் இந்த ஆட்சி பாவமான, தவறான ஆட்சி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. பா.ஜ.க-விடம் எனக்கு செல்வாக்கு இருப்பதால், அவர்களிடம் சொல்லி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என இங்குள்ளவர்கள் பேசினார்கள்.”

கும்பகோணத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் உரையாற்றும் குருமூர்த்தி.

“அரசியல் சாசனப்படி இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்தால், அடுத்த 6 மாதத்திற்குள் தமிழகத்தை மாற்றிவிட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.”

“அதிமுக-வை டிஸ்மிஸ் செய்தபின்பு நிச்சயம் பா.ஜ.க-வால் ஆட்சிக்கு வர முடியாது. அதே நேரம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது?” – என்று பேசியுள்ளார்.

மேற்படி திரு குருமூர்த்தியின் பேச்சில், தான் நினைத்தால் தனது செல்வாக்கின் மூலம் அரசியலமைப்பு உறுப்பு 356-ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தின் மூலம் தமிழக அரசினை கலைக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த நபர் என்பதையும், அதிமுக கட்சியில் சாதாரண உறுப்பினராகக்கூட இல்லாவிட்டாலும் பிரிந்திருந்த அந்தக்கட்சியினை இணைக்கு அளவிற்கு அதிகார மையமாக செயல்படுவதாகவும், தமிழகத்தின் முதல்வரே தன்னிடம் ஆலோசனை கேட்கும் அளவிற்கு செல்வாக்கு பெற்றுள்ளதுடன், அவ்வாறு ஆலோசனை கேட்க வந்தவரை ”நீங்க எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க” என்று ’உரிமையுடன்’ கூறும் அளவிற்கு நெருக்கமும், அதிகாரமும் படைத்தவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது மேற்கண்ட அரசியல் தரகு, திரைமறைவு வேலைகளைப் பற்றியும், தமிழக முதலமைச்சரையே ”நீங்க எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க” என்று பேசுவதையும் மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆர்ப்பரித்து கைதட்டுகின்றனர்.

அரசியல் தரகர் குருமூர்த்தி.

திரு குருமூர்த்தி, தன்னை ஒரு அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், ஆடிட்டர், தற்போது துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் என்பதாக தமிழக மக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தினை ஏற்படுத்திக் கொண்டு அதிகார மையமாக திரைமறைவு வேலைகளைச் செய்து வருபவர் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாகவே தெரிவித்துள்ளார். குறிப்பாக திரு குருமூர்த்தியின் ஆலோசனையின் பேரில் திரு ஓ.பன்னீர் செல்வம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ’தியானம் செய்ததும்’; அதிமுக கட்சியிலிருந்து வெளியேறியதும்; தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததும்; அதன் பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்ததும்; இதற்கிடையே ஆளுநர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது ஆளுநரின் செயலர் சட்டப்படி செய்ய வேண்டிய நடைமுறைகளை செய்யாமல் தாமதப்படுத்தியதும் ஆகியனவற்றின் பின்னணியில் தான் இருந்தது அவரது பேச்சின் மூலமாகவே பகுதியாக அம்பலமாகியுள்ளது.

திரு குருமூர்த்தி மேற்படியான சட்டவிரோத, திரைமறைவு நடவடிக்கைகள், ஆளுநரின் நேரடியான அதிகாரத்தில் தலையீடு செய்வதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை திரைமறைவு சதிச்செயல்கள் மூலம் தூக்கியெறிய முயற்சிப்பதும், அப்போதைய தமிழகத்தின் முதல்வரை ஆபாசமாக பேசுவதுமான குற்றச்செயல்களாகும்.

படிக்க:
சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !
இஸ்லாமோபோபியா : பாயல் தாத்வி – பாத்திமா லத்தீஃப் மரணத்தின் பொது அடையாளம் !

ஏற்கனவே சென்னை மாநகர சைபர் க்ரைம் பிரிவினரால் சாராயத்தை எதிர்த்து பாடல் பாடியதற்காக திருச்சியைச் சேர்ந்த கோவன் என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124A-ன் கீழும், தமிழக ஆளுநரைப் பற்றி நக்கீரன் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் திரு கோபால் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124A-ன் கீழும் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றுடன் ஒப்பிடும் போது திரு குருமூர்த்தியின் குற்றச்செயல்கள் தீவிரத்தனமையும், மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுமாகும். துக்ளக் பத்திரிக்கை நடத்துவதாக கூறிக்கொண்டு, அதன் ஆசிரியர் என்ற பெயரில் சட்டவிரோத, தேசத்துரோக, சமூக விரோத, திரைமறைவு வேலைகளைச் செய்யும் திரு குருமூர்த்தியின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், உரிய விசாரணை நடத்தி துக்ளக் பத்திரிக்கையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மேற்படி குற்றச்செயல்களில் அவருடன் உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,
சு.ஜிம்ராஜ் மில்டன், வழக்கறிஞர்,
த.பார்வேந்தன், வழக்கறிஞர்,
கோ.பாவேந்தன், வழக்கறிஞர்.

நாள் : 29.11.2019,
இடம் : சென்னை.


தகவல் : வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன்,
தொடர்புக்கு : 9962366320
மின்னஞ்சல் : chennaiprpc@gmail.com

நூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா

9-2-1943 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்குச் சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில் ஆரியச் சுவடிகளான கம்ப இராமாயணம், பெரிய புராணம் பற்றிய ஓர் உரையாடல் (டிபேட்) நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்துமத பரிபாலன நிலையத் தலைவர் தோழர் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார், பி.ஏ., ஆர்.பி.எல்., அவர்கள் தலைமை வகித்தார். உரையாடலில் தோழர்கள் சி.என். அண்ணாதுரை எம்.ஏ., ஈழத்தடிகள் பி.ஏ., பி. சேதுப்பிள்ளை பி.ஏ.,பி.எல்., சீனிவாசன் ஆகியவர்கள் கலந்துகொண்டு தத்தம் கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள்.

கூட்டத்தைப்பற்றிய எவ்விதமான விளம்பரமும் செய்யப்படவில்லை என்றபோதிலும், மக்கள் திரளாக வந்து குழுமியிருந்தனர். தன் மதிப்பு இயக்கத் தோழர்கள் நூற்றுக்கணக்கானவர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும், புலவர்களும், தாய்மார்கள் பலரும் மண்டபம் நிறையக் குழுமியிருந்தனர்.

சட்டக்கல்லூரித் தமிழ்க் கழக அமைச்சர் தோழர் வேணுகோபாலன், தலைவரைப் பிரேரேபிக்கையில் “பெரியோர்களே! தமிழருக்குச் செல்வம் போன்ற கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகிய நூற்களைக் கொளுத்த வேண்டும்; அல்லது அழிக்க வேண்டும் என்று பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் கூறியது கேட்டு தமிழ் மக்கள் கோபம் கொள்வது இயற்கை. ஆனால் சுயமரியாதைக்காரர்களின் தீர்மானத்தைப் புறக்கணிப்பது கூடாது. ஆகவே, அதுபற்றி அவர்களின் கருத்தை அறியத் தோழர் சி.என். அண்ணாதுரை அவர்களை அழைத்துள்ளோம். அவர் இந்திரசித்துக்குச் சமம் என்று கூறுவேன். அவருரையை மறுத்துப் பேசத் திருவாளர் சேதுப்பிள்ளை அவர்கள் இராமபிரான் போல் வந்திருக்கிறார்கள். இதற்கு நடுநிலைமையாளராக இருக்க, ஜனக மகாராஜனைப்போல உயர்திரு இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் வந்திருக்கிறார்கள். விவாதம் மிக மேலான முறையினதாக இருக்கவேண்டுமென விழைகின்றேன் என்று கூறினார். (நூலிலிருந்து பக்.5-6)

கலையை அழிக்கின்றனர், கம்பன் புகழை மறைக்கின்றனர் என்று கூறப்படும் பழிச்சொல்லை நாங்களறிவோம். கலையிலே தேர்ந்து, அதிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, கம்பனின் இராமாயணமும், சேக்கிழாரின் பெரிய புராணமும் கலை என்று கருதும் அன்பர்கள், ஒரு பெரியாரின் பேரால், ஓர் அண்ணாதுரையின் அனலால் அக்கலை அழிந்துவிடும் என்று கருதுவரேல் அவ்வளவு சாமான்யமானது கலையாகாது. அத்தகைய கலை இருத்தலுமாகாது என்றுரைக்க ஆசைப்படுகின்றேன். கலையைக் குலைக்கும் செயலல்ல எமது செயல். கலையிலே புரட்சி உண்டாக்க விழைகின்றோம்…. தக்க காரணங்களோடு.

கலை ஓர் இன மக்களின் மனப்பண்பு. இவ்வின மக்களிடையே தோன்றும் தெளிவு, வீரம் ஆகியவற்றின் எடுத்துக்காட்டு. எனவே, கலை இன வளர்ச்சிக்கு ஏற்றபடி மாறியும் விரிந்தும் வருமென்பதே நுண்ணறிவினரின் துணிபு. கலை உலகில், அவ்வப்போது மாறுதல் உண்டாகும். இனத்துக்கோர் கலையும், இடத்தின் இயல்பு, தட்பவெப்பம் ஆகியவற்றுக்கு ஏற்ற முறையிலும், கலை உண்டாகும், வளரும், மாறும்.

அரபு நாட்டுக் கலையிலே, தென்றலைப்பற்றிய கவிதைகள் அதிகமிருக்க முடியாது. எஸ்கிமோ நாட்டுக் கலையிலே, கதிரோனின் ஒளி பற்றிய கவிகள் அதிகமிராது. ஆப்பிரிக்கா நாட்டு ஜூலு வகுப்பினரின் கலையிலே, அவர்களின் நாட்டியம் கவியிலே இருக்கும், அதுபோலவே ஆரியக் கலையிலே கங்கையின் கவர்ச்சியும், கரையோரக் காட்சியும் சோலை மாட்சியும் என்பன போன்றவைகள் கவிதைகளாக – இலக்கியமாக இருக்கும்.

இந்தியா என்ற இந்த உபகண்டம், பல இனங்கள் வசிக்கும் இடம். ஆகவே இங்கு பல கலைகள் உண்டு. இனத்திற்கோர் கலை என்றுண்டு. எனினும் இரு பெரும் கலைகள் இங்குள்ளன என்று அறிவாளிகள் கூறியுள்ளனர். ஆரியக் கலை ஒன்று; திராவிடக் கலை பிறிதொன்று. இடத்திற்கோர் கலை உண்டென்றும், இனத்திற்கோர் கலை உண்டென்றும் கூறினேன். அவை ஒன்றை ஒன்று தழுவாவிடினும், மோதிக் கொள்ளாமல் இருத்தலுண்டு, அவை தனித்தனி அமைப்புப் பெற்றுத் திகழ்வதால், இந்துக்கலை என்று கூறப்படுவதும், இஸ்லாமியக் கலை என்று கூறப்படுவதும் வேறு வேறு. எனினும் அவை ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாதபடி தனித்தனி அமைப்புக்களாகி விட்டன.

ஆனால், ஆரியக்கலையும் திராவிடக் கலையும் அப்படியின்றி, ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும், மோதிக்கொள்வதாகவும் இருத்தலை, அறிஞர் ஒப்புக் கொள்கின்றனர். இந்நிலையின் பயனாகத் திராவிடர் கலைமீதும், சட்ட திட்டங்கள் மீதும், ஆரியம் ஆதிக்கம் செலுத்தலாயிற்று. இக்கல்லூரியில் பன்னெடு நாட்களுக்கு முன்பு இருந்தவரும், சட்ட நிபுணருமான மிஸ்டர் நெல்சன் என்பார், இந்து சட்டம் என்பது ஆரியர்களின் மனு, பராசரர், யாக்ஞவல்கியர் ஆகியோரின் நூற்களின் அடிப்படைகளின் மீது அமைக்கப்பட்டிருப்பதாலும், தென்னாட்டு மக்களில் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள் ஆரியரல்லாதார் ஆகையினாலும், அவர்கள் மீது இந்து சட்டத்தைத் திணிப்பது தவறு என்று எடுத்துக் காட்டினார். அவரது பேச்சு, காட்டுக் கூச்சலாகி விட்டது. இந்த சட்டமே, ஆரிய நீதியே இன்று நம்மை ஆள்கிறது. தமிழருக்குத் தேவை வளமை போன்ற சட்டமோ அல்லது குறள் நீதியோ இன்று இல்லை. ஆரியமே சட்டத்தை ஆள்கிறது. கலையிலே, ஆரியத்தை ஆதிக்கம் செய்யவிட்டதனால், நாம் கண்ட பலன் இதுவென்றுரைக்க ஆசைப்படுகின்றேன். (நூலிலிருந்து பக்.7-9)

படிக்க :
சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் !

ஆரிய கலை வேறு, திராவிட கலை வேறு. ஆரியக் கலை நம்பொணாக் கருத்துக்களும் ஆபாசமும் நிரம்பியதுடன், திராவிட இனத்தை அடக்கவும் பண்பை அழிக்கவும் பயன்பட்டுப் பாமரரின் மனத்தைப் பாழாக்குகிறது என்ற குற்றச் சாட்டுகளைக் கூறிக் கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் கண்டிக்கிறோம். கொளுத்துக என்று கூறுகிறோம். இவைகட்குச் சேதுப்பிள்ளை சமாதானம் கூறிய பின், எனது மறுப்புரை கூறும் சந்தர்ப்பம் கிடைக்குமென்று நம்புகிறேன். பண்டிதர்கள் எங்களைப்பற்றித் தவறாக எண்ணி வருவது சரியல்ல. அவர்களுக்கு நாங்களே துணை. எமக்கு அவர்கள் அரண். நம்மிருவருக்குள் பகை மூட்டி, இராமன் மரத்தின் மறைவிலிருந்து அம்பு எய்ததுபோலச் செய்ய ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கவனமூட்ட விரும்கிறேன். மக்களிடம் இத்தகைய புராணங்கள் கற்பனை என்பது எடுத்துரைக்காது. அவர்கள் மனப்பாங்கைக் கெடுப்பதன் பலனாக, மக்களின் நிலை கெட்டுவிட்டது. திருமூலர் வேறொரு விஷயத்துக்காகக் கூறினார், “குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளாது; குருட்டுக் குருவைக் கொண்டு, குருடுங் குருடுங் குருட்டாட்டமாடிக் குருட்டில் வீழ்ந்தனர்” என்றுரைத்தார். நமது மக்களின் நிலைமை அதுவாக இருப்பதை உணருங்கள்” என்று பேசி முடித்தார். (நூலிலிருந்து பக்.19)

நூல் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா
ஆசிரியர் : சி.என்.அண்ணாதுரை

வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8163
இணையம் :dravidianbookhouse.com

பக்கங்கள்: 56
விலை: ரூ 20.00 / ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolks | noolulagam | dravidianbookhouse

பரவசமூட்டிய பள்ளிக் குழந்தைகளின் படைப்புத்திறன்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 11

எங்களுடைய கண்காட்சி

தாழ்வாரத்தில் நான்கு மேசைகளைக் கொண்டு வந்து போடுகிறோம். தயாரான பொருட்களைக் குழந்தைகள் வகுப்பறையிலிருந்து வெளியே கொண்டு வந்து மேசைகளில் வைக்கின்றனர். எப்படி வைத்தால் பார்க்க வசதியாயிருக்கும், அழகாயிருக்கும் என்று விவாதிக்கின்றனர்.

முதல் மேசையில் நான்கு அழகிய தொகுப்பேடுகள்: “அறிவின் மூல ஊற்று” (முதல் பிரிவும் இரண்டாவது பிரிவும்); “மக்கள் கவிதை” (முதல் பிரிவும் இரண்டாவது பிரிவும்).

வகுப்பிலும் தாழ்வாரத்திலும் உள்ள கரும்பலகைகளில் நான் குழந்தைகளுக்கு அடிக்கடி பழமொழிகளையும் முது மொழிகளையும் எழுதியிருக்கிறேன். குழந்தைகள் இவற்றை இடைவேளைகளின் போது படிப்பார்கள், பலர் மனப்பாடம் கூடச் செய்து விட்டனர். ஒரு நாள் நான் அவர்களிடம் “வாருங்கள், பழமொழிகளையும் முதுமொழிகளையும் தேடுவோம்! இவற்றில் மக்களின் பகுத்தறிவு உள்ளது” என்று முன்மொழிந்தேன். வீட்டில் பெரியவர்களிடம் கேட்டு தெரிந்த பழமொழிகள், முதுமொழிகளைச் சேகரிக்குமாறு கூறினேன். குழந்தைகள் தாள்களில் எழுதப்பட்டிருந்த பழமொழிகளையும் முதுமொழிகளையும் வகுப்பிற்குக் கொண்டு வரத் தொடங்கினர். சிலர் வாசகத்தின் அருகே மலர்களையும் வேறு பல வடிவங்களையும் வரைந்தனர். ஒரு விசேஷ காலைப் பாடம் நடத்தி அதில் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த பழமொழிகளைப் படிக்கலாம் என்று முன்மொழிந்தேன். இதில் நான் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினேன்:

“வாருங்கள், இப்படிச் செய்யலாம்: நீங்கள் பழமொழிகள், முதுமொழிகளை எழுதியுள்ள தாள்களை எல்லாம் சேர்த்துத் தைப்போம். விக்டர் இவற்றை நாடாவால் கட்டுவான், பழமொழிகள், முதுமொழிகளின் அழகிய தொகுப்பு நூல்கிடைக்கும். இதற்கு என்ன பெயர் வைப்பது?”

“அறிவின் மூல ஊற்று” என்ற பெயரை வைப்பது என்று முடிவு செய்தோம். உடனடியாக அட்டைக்கு ஏற்பாடு செய்யுமாறு நீயாவிடமும் மாக்தாவிடமும் கூறினோம். இவ்வாறாக பழமொழிகள், முதுமொழிகளடங்கிய இரண்டு தொகுப்பு நூல்கள் கிடைத்தன. ஒவ்வொரு தொகுதியிலும் தலா 50 பழமொழிகள் உள்ளன.

இந்தத் தொகுப்பு நூல்கள் தான் கண்காட்சியில் வைக்கப்பட்டன.

பெரியவர்களின் உதவியோடு கிராமியக் கவிதைகளைக் கண்டெடுத்து, மனப்பாடம் செய்து, விசேஷ காலைப் பாடத்தில் படிக்குமாறு ஏப்ரலில் நான் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறினேன். விசேஷ காலைப் பாடம் சுவாரசியமானதாக இருந்தது. பின் இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து, இரண்டு அழகிய அட்டைகளைத் தயாரித்தோம், இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் கிடைத்தன. வீட்டில் உள்ளவர்களுக்குக் காட்டுவதற்காக இவற்றை குழந்தைகள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். இப்படித்தான் இந்த நான்கு புத்தகங்களும் (இவை குழந்தைகளின் சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் உள்ளடக்கியுள்ளன) தோன்றின.

இரண்டாவது மேசையில் ஒரு ஆல்பத்தை வைத்தோம். “விருப்பமிருந்தால் நம்புங்கள், இல்லாவிட்டால் வேண்டாம்!” என்று இதற்குத் தலைப்பு தந்தோம். இதில் அசாதாரண இயற்கைச் சம்பவங்கள் பற்றிப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வந்த பத்து செய்திகள் கத்தரித்து ஒட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் தான் சிறுவர்கள் இதைத் துவங்கினர், அடுத்த கல்வியாண்டில் இதைத் தொடருவார்கள்.

மூன்றாவது மேசையில் “குழந்தைகள் தாமாகவே செய்த வேலைகளின் முதல் தொகுப்புகள்” இருக்கின்றன. ஜனவரியில் என் குழந்தைகளிடம் பின்வருமாறு கூறினேன்:

“நூலாசிரியர்களாக விரும்புகின்றீர்களா?” என்று கேட்டு, இதற்கு என்ன பொருள் என்று விளக்கினேன். “இந்த நூல்களில் உங்களுடைய சிறந்த எழுத்துப் பயிற்சிகளையும், நீங்கள் போட்ட சிறந்த கணக்குகளையும் சேர்க்கலாம். உங்களுடைய கருத்துக்கள், கதைகள், நீங்களே கண்டுபிடித்துப் போட்ட புதிர்கள், உங்களுடைய கணக்குகள், படங்கள், மாடல்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். அதாவது உங்களுக்கு மிகவும் பிடிக்கும் எல்லாவற்றையும் இவற்றில் சேர்க்கலாம். பக்கங்களை நீங்கள் அழகுபடுத்தலாம்… நூலிற்குப் பெயரை நீங்களே யோசித்து முடிவு செய்யுங்கள்!”

எனது முந்தைய ஆறு வயதுக் குழந்தைகளின் ஒரு சில நூல்களை நான் காட்டினேன். “உங்களுடைய நூல்கள் இப்படி இருக்கும்!” இந்நூல்களைக் கண்டு குழந்தைகள் பரவசமடைந்தனர்.

லேரி: “ஏன் இங்கு ‘முதல் தொகுதி’ என்று எழுதப்பட்டுள்ளது?”

“ஏனெனில் தமது இரண்டாவது நூலை, இரண்டாவது தொகுதியை இரண்டாவது. வகுப்பிலும் மூன்றாவது தொகுதியை மூன்றாவது வகுப்பிலும் நான்காவது தொகுதியை நான்காவது வகுப்பிலும் உருவாக்கினார்கள்.”

இந்தத் தடிமனான, அழகிய நூல்களைக் குழந்தைகள் – முன் வைக்கிறேன்.

எனது ஆறு வயதுக் குழந்தைகள் நிச்சயமாக தம் சொந்த நூல்களின் ஆசிரியர்களாக விரும்பினர். எனது “முதுமொழிகளில்” ஒன்று பின்வருமாறு ஒலிக்கிறது:

உடனடியாக செய்யத்தக்க சுவாரசியமான விஷயங்களைத் தான் குழந்தைகளுக்கு முன்மொழிய வேண்டுமே தவிர எப்போதாவது செய்ய வேண்டியவற்றை முன்மொழியக் கூடாது; இந்த விஷயங்களை நிறைவேற்றும் முகமாக இவர்கள் எடுத்து வைக்கும் முதலடிகள் முதல் வெற்றிகளுக்கு இவர்களை இட்டுச் செல்ல வேண்டுமே தவிர முதல் கசப்பான தோல்விகளுக்கு இட்டுச் செல்லக் கூடாது.

“நாங்கள் எப்போது எங்கள் நூல்களைச் செய்வோம்?” இக்கேள்வி உடனேயே வகுப்பின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வந்தது.

“ஏன் தள்ளிப் போட வேண்டும்! இப்போதே துவங்குவோம்!”

குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்கள், ஓவியங்கள், மாடல்கள் அடங்கிய கோப்புகளை ஒவ்வொருவருக்கும் அளித்தேன். அவர்கள் அலமாரியிலிருந்து கோந்து, கத்தரிக்கோல், வண்ணப் பேனாக்கள், காகிதம் முதலியவற்றை எடுத்தனர். எப்படித் தேர்ந்தெடுப்பது, வெட்டுவது, ஒட்டுவது, அழகுபடுத்துவது, காகிதங்களை வரிசைப்படுத்துவது, நாடாவால் கட்டுவது என்றெல்லாம் அவர்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறேன். குழந்தைகள் தங்கள் நூலின் தலைப்பைப் பற்றியும் அட்டையை எப்படி அழகுபடுத்துவது என்பதைப் பற்றியும் என்னுடன் ஆலோசனை செய்தனர். உழைப்புப் பாடவேளையிலும் ஓவியப் பாடவேளையிலும் எல்லோரும் உற்சாகமாக காரியத்தில் மூழ்கினர். அன்று ஒவ்வொருவரிடமும் “தூக்கணாங்குருவி”, “ரோஜா”, “கழுகு”, “சூரியன்”, “மகிழ்ச்சி”, “நட்சத்திரம்”, “வசந்தம்”, “ஓடை”, “மலர் தோட்டம்” என்று தனித் தனி நூல்கள் உருவாயின.

நாங்கள் வகுப்பறையில் இந்த நூல்களுக்காக ஒரு மேசையை ஒதுக்கினோம். ஒவ்வொருவரும் தத்தம் நூல்களை எடுத்து அதில் புதியவற்றைச் சேர்க்கலாம், நண்பரின் நூலை எடுத்துப் பார்க்கலாம்.

குழந்தைகளின் உற்சாகத்தை வழிநடத்தும் அவசியமே எனக்கு இல்லாமல் போயிற்று. நான் மேசையை நெருங்கி ஏதாவது ஒரு நூலை எடுத்துப் புரட்டிப் பார்ப்பேன், பின் எப்போதாவது (இடைவேளையில், உலாவும் போது அல்லது ஒரு வேளை பாடநேரத்தில் அவர்கள் பதில் சொல்லும் போது) “உனது “வசந்தம்” (“நட்சத்திரம்”…) நூலின் புதிய பக்கம் எனக்குப் பிடித்துள்ளது. இன்னும் என்னவற்றையெல்லாம் இதில் சேர்க்கப் போகிறாய்?”

சில சமயங்களில் இடைவேளையின் போது நான் 2-3 நூல்களை எடுத்து வந்து புரட்டிப் பார்ப்பேன். அப்போது குழந்தைகள் என்னைச் சூழ்ந்து நின்று “இது யாருடைய நூல்? உங்களுக்குப் பிடித்துள்ளதா?” என்று கேட்டபடி இருப்பார்கள். சில சமயம் ஒரு நூலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அந்த நூலின் ஆசிரியரிடம் அனுமதி கேட்பேன்: “என் பிள்ளைகளுக்குக் காட்டுவேன்”. யாரை வேண்டுமானாலும் அழைத்து “குழந்தைகளின் இந்த நூல்கள் எவ்வளவு சுவாரசியமானவை பாருங்கள்” என்று கூறுவேன்.

ஆம், எல்லாம் இவ்வளவு எளிமையானவையாக இருந்தன, மழைக்குப் பின் காளான்கள் வளருவதைப் போல் நூல்கள் விரைவாக அதிகரித்தன.

இந்நூல்கள் எல்லாம்தான் இப்போது மூன்றாவது மேசையில் உள்ளன.

நான்காவது மேசையில் சின்னஞ் சிறு நூல்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம். ஒரு பத்திரிகையின் பக்கத்தில் பாதி அளவுள்ள ஒரு தாளில் கதை டைப் செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். 8 பக்கமுள்ள ஒரு நூல்கிடைக்க, தாளை மூன்று முறை மடித்து, பக்கங்களை ஒட்ட வேண்டும், முதல் பக்கத்தில் நூல் ஆசிரியரின் பெயர், கதையின் பெயர், தேதி முதலியவற்றை எழுத வேண்டும்; கதையை கவனமாகப் படித்து உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்; கதைக்கேற்றபடி அட்டையின் மேலும் பின்னும் அலங்கரிக்க வேண்டும்; அட்டையின் இரண்டாவது பக்கத்தில் அலங்கரித்த ஓவியரின் பெயரை எழுத வேண்டும்; பத்திகள் ஆரம்பமாகும் போது முதல் எழுத்துகளை அலங்கரிக்க வேண்டும்; மேற்கோளில் உள்ள வார்த்தைகளின் பொருளை எழுத வேண்டும்; காலியான பக்கங்களில் கதைக்கேற்ற படங்களை வரைய வேண்டும்; கதையின் இறுதியில் கதைப் பொருளுக்கு ஏற்ற சில கேள்விகளை எழுத வேண்டும்; இப்படி வடிவமைக்கப்பட்ட நூலை நண்பர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

இப்படி வடிவமைக்கப்பட்ட நூலைப் பற்றி வகுப்பில் விவாதம் நடத்தினோம். ஓவியங்கள், அட்டைகள், மேற்கோள் வார்த்தைகளின் விளக்கங்கள், கதையின் பொருளுக்கேற்ற கேள்விகள் ஆகியவற்றை, இவ்வாறாக கதையையே விவாதிப்போம். இவ்வாறாக மூன்று கதைகள் உருவாயின. இம்மாதிரியாகப் புதியவற்றை அறிவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று…… கண்காட்சி வேலைகள் முடிந்தன. “வாருங்கள், எல்லாம் சரியாக உள்ளனவா என்று பார்ப்போம்!” என்கிறாள் மாயா.

படிக்க :
ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

நாங்கள் கண்காட்சி அரங்கைச் சுற்றி வருகிறோம். தம் புகைப்படங்களைக் கண்டதும் குழந்தைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. தம் முதல் எழுத்து வேலைகளைக் கண்டதும் இவர்களுக்கு சந்தோஷம், வியப்பு. இவர்களுக்கு தம் கண்காட்சியில் திருப்தி. ஆங்காங்கே சில மாற்றங்களைச் செய்கின்றனர். தமது இசை நாடக அறிவிப்பைத் தொங்க விடுகின்றனர்.

“இப்போது நாம் நம் மரங்களிடம் செல்லலாம்!” என்று நான் சொல்லியதும் வாளியையும் இரண்டு மண்வெட்டிகளையும் எடுத்தபடி நாங்கள் சத்தமிட்டுக் கொண்டு மாடிப்படியில் இறங்குகிறோம்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !

கேள்வி : // சட்டமன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் யாரும் இல்லாமல் இவ்வளவு காலம் வெறும் பேச்சு அரசியல் செய்யும் சீமானின் எதிர்காலம் எப்படி இருக்கும்? //

நவின்

ன்புள்ள நவின்,

எதிர்காலம் சூனியமாகத்தான் இருக்கும். தமிழகம் முழுவதும் ஊருக்கு ஊர் அலைந்து திரிந்து நாம் தமிழர்தான் மாற்று என்று முழங்கிய தனக்கும் 3 சதவீதம், சொகுசாக அரசியல் செய்யும் கமலுக்கும் மூன்று சதவீதம் வாக்குதான் என்ற கேள்வி சீமானிடம் இருக்கிறது. இப்போது கமலோடு ரஜினியும் சேர்ந்தோ தனித்தோ போட்டியிட்டு சும்மா வீட்டுக்கு வெளியே காமெராக்களிடம் நாலு வார்த்தை பேசி பத்தோ பதினைந்தோ சதவீத வாக்கை வாங்கி விட்டால் என்ன செய்வது? இந்தக் கேள்வியும் சீமானின் மனதைக் குடைகிறது. அதனால்தான் மதுரையில் பதட்டத்தோடு வாக்காளப் பெருமக்களை பாய்ந்து குதறும்வண்ணம் அண்ணன் பொங்கியிருக்கிறார்.

ஆளும் வர்க்கங்களும், பார்ப்பனிய ஊடகங்களும் எப்படி மோடியை முன்னிறுத்தி நிலைநாட்டினவோ அப்படி ரஜினிக்கும் முயலும். மேலதிகமாக தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் தத்தமது வாங்கு வங்கிகளை கூட்டியோ குறைத்தோ பராமரித்து வருகின்றன. இந்த சூழலில் ரஜினி, பா.ம.க., அ.தி.மு.க, என்றொரு கூட்டணியை உருவாக்க பாஜக முயலும். இல்லை ரஜினியை தனியே நிற்க வைத்தாலும் அது தி.மு.க வாக்குகளை பிரித்து தனது அடிமைக் கூட்டணியை வெல்ல வைக்கும் என்று அமித்ஷா அணி நினைக்கிறது.

இந்நிலையில் இந்த வாக்கு வங்கி அரசியலில் சீமானுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஏதுமில்லை. மேலும் அவர் வைக்கும் மாற்று அரசியல், திட்டங்கள் அனைத்தும் ஆர்ப்பட்டமான உதார் என்பதைத் தாண்டி இந்த அரசியல் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வரும் தகுதி படைத்தது அல்ல. தனியார்மய – தாராளமய – உலகமய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்க்கும் மருந்து வாக்கு வங்கி அரசியலில் இல்லை. இது சீமானுக்கும் தெரியாமல் இல்லை. அதனால்தான் தமிழ், இனம், சொந்தம், ஆடு, மாடு, கடல் வளம், மலை வளம் என்று உணர்ச்சிகரமான அரசியலை பேசுகிறார். இதில் சிலவற்றை மக்கள் ரசிக்கலாம். பலவற்றை வேலைக்காகாது என்று புறந்தள்ளலாம். பட்டிமன்றப் பேச்சுக்களை ரசிக்கும் தமிழ் மரபும், மனதும் சீமானின் பேச்சையும் ரசிக்கிறது. அதற்கு மேல் அண்ணன் ஊழல் செய்யாதவர், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சில மக்கள் எண்ணினாலும் அந்த எண்ண ஓட்டத்தில் ரஜினியும், கமலும் கூட இன்னும் கொஞ்சம் அதிகமாக மக்களிடம் கலந்து விடுகிறார்கள்.

படிக்க :
♦ சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !
♦ ஓம் சீமான் ! ஜெய் சீமான் !

எனவே காலம் செல்லச் செல்ல சீமானின் பதட்டம் அதிகரித்து அவரது வாய் வீச்சுக்களில் கோபமும், குரோதமும் அதிகரிக்கும். ஒன்று அவரும் கூட்டணி என்று செட்டிலாகி சில எம்.எல்.ஏக்களோடு தானும் ஒரு தலைவரே என்று செட்டிலாகலாம். இல்லை தனித்தே இருப்பதாக வைத்துக் கொண்டாலும் நான்கு கார் பின் தொடர்ந்து, நாற்பது காமெராக்களுக்கு முன்னே நேர்காணல் தரும் தகுதி கொண்ட ஒரு தலைவராக மிச்சமிருக்கும் வாழ்க்கையைக் கழிக்கலாம்.

ஆட்டுக்குட்டி எவ்வளவு துள்ளினாலும் ஆனை உயரம் வருமா?

நன்றி!

+++

கேள்வி: // ஒருவாரமாக பரபரப்பாக பேசப்பட்ட மகாராஷ்டிரா அரசியலைப் பற்றியும், சிவசேனா-வின் காங் – தே.காங் கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன? //

அகிலன்

ன்புள்ள அகிலன்,

சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக் கடிதத்தை திருடிச் சென்ற அஜித் பவாரை நம்பி நள்ளிரவுக் கூத்தை நடத்தி ஒரு நாளிலேயே பாஜக மூக்கறுபட்டது. பதவி வெறிக்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும், பெயரளவில் இருக்கும் அரசியல் சாசன மரபைக் கூட கொல்லும் என்பதற்கு இந்த அதிகாலை பதவியேற்பு ஒரு சான்று. ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர் மூவருக்கும் வெட்கம் மானம் ரோசமில்லை என்பதை இந்நிகழ்வு நிரூபித்திருக்கிறது. அமித்ஷாவின் ராஜதந்திரம் அம்மணமாக அடிபட்டுப் போனது.

பால்தாக்கரே மரணத்திற்கு பிறகு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் சிவசேனா இழந்த நிலையில் பாஜக அந்த இடத்தை நிரப்பியிருந்தது. சிவசேனா – பாஜக இரண்டும் இந்துத்துவ அரசியலை மையப்படுத்திய இயல்பான கூட்டாளிகள் என்றாலும் மகாராஷ்டிராவைப் பொருத்தவரை சிவசேனா பெரிய பங்காளியாகவும், பாஜக சின்ன பங்காளியாகவும் இருந்தன. பிறகு பங்காளிகளின் இடங்கள் தலைகீழாக மாறுகின்றன. பாஜக-வும் மைய அரசாக தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டது. இந்த நிலையில் தேர்தல் கூட்டணியில் சிவசேனாவிற்கு குறைந்த இடங்களே கொடுக்கப்படுகின்றன. ஆனால் தேர்தல் முடிவில் பாஜக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதனால் சிவசேனா சுழற்சிமுறை முதல்வரைக் கோரியது. இதை பாஜக ஏற்கவில்லை. இந்தியாவின் அதிக மாநிலங்களை ஆளும் கட்சி என்ற பெயரை ஈட்ட விரும்பி மூக்கில் கரி பூசிக் கொண்டது.

பாஜக-விற்கு இந்துத்துவ அரசியல் மையமென்றால் சிவசேனாவிற்கு அது இரண்டாம் பட்சமானதுதான். மராத்தா சாதியினரை மையப்படுத்திய மராட்டிய இன உணர்வே முதன்மையானது. கட்சி என்ற முறையில் சிவசேனாவின் தன்மை லும்பன் தன்மையுடையது. கட்சியின் தலைவர்கள், தளபதிகள் பெரும் பணக்காரர்களாகவும், தொண்டர்கள் உதிரிப் பாட்டாளிகளாகவும் இருக்கிறார்கள். சரத்பவாரின் தேசியவாத காங்கிரசு நடுத்தர, பணக்கார விவசாயிகளையும், மராத்தா சாதியினைரையும் மையமாகக் கொண்டது. மாநிலத்தின் சிலபகுதிகளில் சரத்பவாருக்கு இன்னமும் செல்வாக்கு இருக்கிறது. காங்கிரசோ தனது பழைய நிலையின் எச்ச சொச்சங்களை வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

படிக்க :
♦ மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?
♦ ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!

பாஜக எதிர்ப்பு என்ற முறையில் இவர்களை ஒன்றிணைய வைத்ததும் பாஜகதான். அதேநேரம் இவர்களுக்கிடையே தோன்றவிருக்கும் முரண்பாட்டிற்கும் பாஜக-தான் காரணமாக இருக்கும். கர்நாடகாவில் குமாரசாமியை நேரம் பார்த்து உதைத்து வெளியேற்றிய வைபவத்தை இங்கேயும் நடத்த பாஜக நேரம் பார்த்துக் கொண்டிருக்கும். அப்படி ஒரு அனுபவம் இருப்பதால் உத்தவ் தாக்கரே அரசு கொஞ்ச காலம் எச்சரிக்கையுடன் இருக்கலாம். பாஜக-வும் நள்ளிரவு வைபவத்தால் அம்பலப்பட்டு போயிருப்பதால் தனது கவிழ்ப்பு வேலைகளை உடனடியாக நடத்த வாய்ப்பில்லை. இந்நிலையில் சிவசேனா தன்னை மீண்டும் ஒரு ஆளும் கட்சியாக நிறுத்தும் வண்ணம் பண பலத்தையும், அரசியல் பலத்தையும் பெருக்க முயற்சிக்கும். இதைத்தாண்டி நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மராட்டிய மாநிலத்தில் மக்களுக்கு இந்த புதிய அரசு என்ன புதியதாக சாதிக்க முடியும்?

நன்றி!