வங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இத்தகவல் பெறப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வரை வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாத முன்னணி தொழிலதிபர்களின் விவரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் சாகேத் கோகலே கோரியிருந்தார். அதற்கு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.
மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி.
அதில் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, நீக்கப்பட்ட 50 தொழிலதிபர்களின் கடன் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பெற்ற ரூ.5,492 கோடி கடன் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான மற்ற இரு நிறுவனங்கள் பெற்ற ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி கடன்களும் நீக்கப்பட்டன.
ஜுன்ஜுன்வாலா சகோதரர்களுக்குச் சொந்தமான ஆா்இஐ அக்ரோ நிறுவனம் வங்கிகளில் பெற்ற ரூ.4,314 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.
விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான நிறுவனம் பெற்ற ரூ.1,943 கோடி கடன் கணக்கியல் ரீதியாக நீக்கப்பட்டுள்ளது. தொழிலதிபா் விக்ரம் கோத்தாரிக்குச் சொந்தமான ரோடோமேக் குளோபல் நிறுவனத்தின் ரூ.2,850 கோடி கடன் நீக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 50 தொழிலதிபர்கள் பெற்ற ரூ.68,607 கோடி கடன்கள் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டதாக ஆர்பிஐ தனது பதிலில் தெரிவித்துள்ளது.
கணக்கியல் ரீதியில் கடன்களை நீக்குவது என்பது ஒட்டுமொத்தமாகக் கடன்களைத் தள்ளுபடி செய்வது அல்ல. வரவு செலவு கணக்குகளைப் புதுப்பிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்கின்றன. அதே வேளையில் கடன் பெற்றவர்களிடமிருந்து அதைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை வங்கிகள் தொடர்ந்து மேற்கொள்ளும்.
காங்கிரஸ் கண்டனம்
ஆர்பிஐ அளித்துள்ள பதில் தொடர்பாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்களின் பெயர்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதற்கு மத்திய நிதியமைச்சர் பதிலளிக்கவில்லை. தற்போது ஆர்பிஐ அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் பாஜக-வின் நண்பர்களான மெஹுல் சோக்ஸி, நீரவ் மோதி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன் காரணமாகவே , நாடாளுமன்றத்தில் அத்தகவலை வெளியிட மத்திய பாஜக அரசு மறுத்திருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம் ! மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
இந்திய அரசே!
கொரோனா நெருக்கடியை வெல்ல – பசியிலிருந்து மக்களை காக்க…
1) உடனே ஐந்து லட்சம் கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்கு!
2) நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்களை இலவசமாக வழங்கு!
3) ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.6000 என மூன்று மாதங்களுக்கு வழங்கு!
4) தமிழகத்திற்கு தேவையான நிதியை பாரபட்சமின்றி வழங்கு!
5) மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப்பணியாளர்களுக்கு உரியப் போதுமான பாதுகாப்புக் கருவிகள் கொடு!
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் தழுவிய அளவில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்ற ஏப்ரல் 26 ஞாயிறு மாலை 5.00 மணி முதல் 5-30 வரை நடைபெறும் கவன ஈர்ப்பு இயக்கத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பங்கேற்றது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களும், நமது ஆதரவாளர்களும், நண்பர்களும் பங்கேற்ற புகைப்படங்கள்!
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
வீட்டிலிருந்து குரலெழுப்புவோம். திருவண்ணாமலை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்த நிகழ்வு புகைப்படங்கள்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.
மொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் நோய்த் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள மக்கள் தனிமையில் இருக்க வேண்டும் என உலக நாடுகள் அறிவித்திருந்தன. இதை உறுதிப் படுத்த பல்வேறு நாடுகளில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முடக்க நிலை ஒருமாதத்தை எட்டியிருந்தது. மே மூன்றாம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த முடக்கநிலை மேலும் கூட்டப்படும் சூழல் இருப்பதாக பேச்சு பரவி வந்தது.
அன்றாடங்காய்ச்சித் தொழிலாளர்கள் வேலையும் கூலியுமின்றி தவித்துப் போயிருந்தனர்; சிறு குறு தொழில் செய்பவர்களோ முடக்க நிலைக்குப் பிந்தைய நிலைமையை நினைத்து திகைத்துப் போயிருந்தனர்; மாதச் சம்பளக்காரர்களோ இனிமேல் வேலை நிலைக்குமா, சம்பளம் கிடைக்குமா, கடனுக்கு வட்டி கட்டுவதெப்படி என்கிற நிச்சயமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டு மலைத்துப் போயிருந்தனர்.
இந்த சூழ்நிலையில் தான் கொரோனா உண்டாக்கிய பேரிடரை சென்னையில் நடந்த ஒரு திடுக்கிடும் சம்பவம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது.
சம்பவ தினமாம் 27-ம் தேதி அன்று சென்னையைச் சேர்ந்த மொக்கை ஜோக் நடிகர் எஸ்.வீ சேகர் 13 பாக்கெட் ஆவின் பால் வாங்கியுள்ளார். ஒரு குடும்பத்திற்கு 13 பாக்கெட் பாலா?? என்று வாயைப் பிளக்க வேண்டாம். அன்னாரின் வீட்டில் வயதான பிள்ளைகளும், இனிமேல் வயதாகப் போகும் பிள்ளைகளும் உள்ளனர் என்பதை அவரே கூறியுள்ளார். மேலும் ‘அரிய வகை ஏழைகள்’ என்பதால் இந்த 13 பாக்கெட் பாலே கூட குறைவு தான்.
இந்நிலையில் வாங்கிய பால் பக்கெட்டுகளை வெட்டி குக்கரில் இட்டு காய்ச்சும் பணியைத் துவங்கிய போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், நீங்கள் செய்திகளில் படித்தது உண்மை தான். அதில் 9 பாக்கெட்டுகள் திரிந்து போனது. இந்த துயர சம்பவத்தைக் கண்டு கதிகலங்கிப் போன எஸ்.வீ சேகர் அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார். நடந்த பேரிடர் குறித்த தகவலை முதலமைச்சர் அலுவலக ட்விட்டர் முகவரிக்கும், துணைமுதல்வரின் ட்விட்டர் முகவரிக்கும் புகாராக தெரிவித்தார்.
எஸ்.வீ சேகரின் புகாரையடுத்து மொத்த அரசு நிர்வாகமும் பரபரப்புடன் செயல்பட்டது. ஆவின் நிர்வாகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கெட்டுப் போன 9 பாக்கெட்டுகளுக்கு பதிலாக வேறு 9 பாக்கெட் டபுள் டோன் பாலை சேகரின் வீடு தேடி வந்து கொடுத்துள்ளார்.
இத்தனையும் மூன்றே மணி நேரத்துக்குள் நடந்துள்ளதால் சேகரின் வீட்டில் வாழும் அரிய வகை ஏழைகள் பெரும் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.
இந்த அதிரடி நடவடிக்கையில் மாற்றாக கொடுக்கப்பட்டது “டபுள் டோன் பால்” என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி உண்மையில் பல்லாண்டுகள் அரசு பணியில் ஈடுபட்டு பட்டை தீட்டப்பட்டவர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. எனவே தான் அரிய வகை ஏழைகளை டீல் செய்யும் கலையை நன்கு கற்று கடைத்தேறியுள்ளார்.
இதற்காகவே காத்திருந்த திமுகவைச் சேர்ந்த உடன் பிறப்புகள் அம்மாவின் வழியில் ஆட்சி செய்து வரும் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் மாண்புமிகு முதல்வரை ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் “பால்பாக்கெட் பழனிச்சாமி” உள்ளிட்ட ஹேஷ்டேக் போட்டு கேலி செய்யத் துவங்கினர். இன்னும் சிலர் மீம்கள் மூலம் ஒரண்டை இழுத்தனர். (மாதிரிக்கு ஒன்று மட்டும்)
கொரோனா பேரிடர் காலத்தில் செய்வதற்கு உருப்படியான ஆயிரம் வேலைகள் இருக்க, போயும் போயும் ஒரு கொழுப்பெடுத்த பாப்பான் வீட்டுக்கு பால் சப்ளை செய்வது தான் முக்கியமா என்பது திமுகவினரின் கிண்டல்களின் சாரம். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்றி மக்கள் தவித்து வரும் நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மருத்துவர்கள் தவித்து வரும் நிலையில், சோதனைக் கருவிகளையே சோதனை செய்யும் ஒரே கரகாட்ட கோஷ்டியாக தமிழ்நாடு இருக்கும் நிலையில், பொருளாதார மீட்சிக்கான வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் நிலையில் – ஒரு மாநில முதல்வர் திரிந்த பால் விவகாரத்தில் எல்லாம் தலையிட வேண்டுமா? என்பது உடன் பிறப்புகளின் ஆத்திரத்துக்கு காரணம்.
ஒரு முதல்வரை இவ்வாறு விமர்சிக்கலாம் தான், ஆனால், மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இக்கட்டான நிலைமையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பால் திரிந்தது யாரோ வீட்டில் இல்லை – எஸ்.வீ சேகரின் வீட்டில். அவர் ஒரு அரிய வகை ஏழை. சாதாரண அரிய வகை ஏழை என்றால் இந்து பத்திரிகைக்கு “லெட்டர் டூ எடிட்டர்” பகுதிக்கு எழுதுவதோடு அடங்கி விடுவார். ஸ்பெசல் சாதா என்றால் மொட்டை பெட்டிசன். ஆனால் இவர் ஸ்பெசல் ஸ்பெசல் அரிய வகை ஏழை – நடவடிக்கை இல்லையென்றால், பெட்டிசன் நாக்பூருக்கும் டெல்லிக்கும் போகும்.
நாம் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமியின் இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டும். மனசாட்சியின்றி விமர்சிக்க கூடாது.
நாம் புரிந்து கொள்ள வேண்டியது பார்ப்பனியம் எப்படி எளிய மக்களை பார்க்கிறது, பழிவாங்குகிறது என்பதைத் தான்.
சாதாரணமாக நம் வீடுகளில் பால் திரிந்து போனால் திரிந்த பாலை வீணாக்காமல் அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம், ஒரு படி மேல் போனால் நம் அம்மாக்கள் காலையில் யார் மூஞ்சியில் விழித்தோம் என்று யோசிப்பார்கள், கொஞ்சம் விவரமானவர்கள் என்றால் பால் பாத்திரத்தை நாளையில் இருந்து ஒழுங்காக கழுவ வேண்டும் என்று சிந்திப்பார்கள்; அதிகபட்சம் போனால் மறுநாள் பால் பூத் அண்ணாவிடம் ‘நேத்து பால் திரிஞ்சிடிச்சிண்ணே’ என்று ஏக்கமாக சொல்லி விட்டு இனாமாக ஒரு ரூபாய்க்கு மிட்டாயோ கடலை உருண்டையோ கிடைக்குமா என்று பார்ப்போம்.
நம்மில் வெகுசிலருக்குத் தான் கஸ்டமர் கேருக்கு புகார் தெரிவிக்க முடியும் என்பதே தெரிந்திருக்கும். ஆனால், எஸ்.வீ சேகர் நேரடியாக முதல்வர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கிறார். ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாநிலத்தின் முதல்வர்; ஒன்பது கோடி மக்களுக்கு முதல்வர். ஒரு முதல்வருக்கு தினசரி எத்தனை வேலைகள், அக்கப்போர்கள், பஞ்சாயத்துகள் இருக்கும் என்று நாம் யோசிப்போம். இது போன்ற சில்லரை விசயங்களை ஒரு முதல்வர் அலுவலகத்திற்கு எடுத்துப் போக கூச்சப்படுவோம்.
ஆனால், அரியவகை ஏழைகள் கூச்சப்பட மாட்டார்கள். உலகமே அழிந்தாலும் கூட காலையில் பேப்பர் பையன் இந்து பேப்பரை வீசி விட்டுப் போனது குறித்து தான் அரிய வகை ஏழைகளின் மூளை சிந்தித்துக் கொண்டிருக்கும். பேப்பர் பையனின் அடாவடித்தனத்தை அவனது முதலாளிக்கு போட்டுக் கொடுத்து அவன் வேலையை காலி செய்தால் தான் மனம் ஆறும்.
அலுவலகங்களில் அரிய வகை ஏழைகள் சூழ வேலை பார்ப்போருக்குத் தெரியும் – மொட்டை பெட்டிசனின் வலிமை குறித்து. இந்த ஜந்துக்களிடம் எதற்கு வீண் வம்பு என சகித்துக் கொண்டு ஒதுங்கிப் போவோர் தான் அதிகம். சில்லரை விசயங்களில் தனது “கெத்தை” காட்டி மகிழும் குரூர புத்தி அரியவகை ஏழைகளுக்கு உண்டு. ஊரே சுடுகாடானால் என்ன, என் தட்டில் காசு விழ வேண்டும் என்கிற சின்ன புத்தியும் அரியவகை ஏழைகளுக்கே உரியது.
“பிரபல ‘ஊடகவியலாளர்’ அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்டார்” என்ற ‘அதிர்ச்சிகரமான’ சம்பவத்திற்கு இந்திய பிரஸ் கவுன்சில் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வியாழக் கிழமை (23-04-2020) அன்றே இது குறித்து அறிக்கை தருமாறு மராட்டிய அரசின் தலைமைச் செயலரையும் மும்பை போலீசு கமிசனரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22, 2020 அன்று இரவில், அர்னாப் கோஸ்வாமி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தாம் தனது மனைவியோடு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்புகையில் இரண்டு காங்கிரஸ் குண்டர்கள் தமது காரை வழிமறித்து மை பாட்டிலைக் கொண்டு தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்ததாகவும், தமது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்ததாகவும் தெரிவித்தார்.
அண்டப்புளுகன் அர்னாப்
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மும்பை போலீசு விசாரித்து வருகிறது. இந்நிலையில்தான் தாக்குதல் நடந்த அடுத்த நாளே இந்திய பிரஸ் கவுன்சில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருக்கும் தங்களது கருத்தைத் தெரிவிக்க உரிமை உள்ளது. அது பலருக்கும் ஏற்புடையதாக இல்லாத போதும், அத்தகைய ஒரு குரலை நெறிக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. இந்தத் தாக்குதலை இந்திய பிரஸ் கவுன்சில் கண்டிக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மாநில அரசு கைது செய்து, நீதியின் முன் நிறுத்தும் என்று கவுன்சில் எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளது.
இந்திய பிரஸ் கவுன்சிலைப் பொருத்தவரை பிரஸ் கவுன்சில் சட்டம் 1978-ன் படி, அதன் அதிகாரம் செய்தித்தாள்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதுமட்டுமே செல்லத்தக்கது ஆகும். எனில் ஒரு தொலைக்காட்சி ஊடகத்தின் உரிமையாளர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு இந்திய பிரஸ் கவுன்சில் அக்கறை செலுத்துவதன் காரணம் என்ன?
கருத்துரிமைக்கு ஒரு ஆபத்து என்றால் பிரஸ் கவுன்சில் களமிறங்குவது நியாயம் தானே? கடந்த சில ஆண்டுகளாகவே பல பத்திரிகையாளர்கள், அரசாலும், பிற நபர்களாலும் குறிவைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட போதெல்லாம் பிரஸ் கவுன்சில் வாயைத் திறக்கவில்லை. அப்படியே வாயைத் திறந்தாலும், பத்திரிகையாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து பரவலாகப் போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்னர் மட்டும்தான் வாயைத் திறந்திருக்கிறது.
சமீபத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினையில் தப்லிகி ஜமாத் கூட்டத்தைக் காரணம் காட்டி மதவெறுப்புப் பிரச்சாரங்கள் நடத்தப்படுவதற்கு ஊடகங்கள் துணைபோவதை தடுத்து நிறுத்தக் கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் பதிலளித்த உச்சநீதிமன்றம், ஊடகங்களைத் தங்களால் கட்டிப்போட முடியாது என்றும், இது தொடர்பாக பிரஸ் கவுன்சிலையும் இவ்வழக்கிற்குட்படுத்துமாறும், அதன் பின்னர், இவ்வழக்கை விசாரிப்பதாகவும் மனுதாரர்களிடம் தெரிவித்தது.
இதற்கு மறுநாளே இந்திய பிரஸ் கவுன்சில், “மின் ஊடகங்கள், தொலைக்காட்சி செய்தி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவை இந்திய பிரஸ் கவுன்சிலின் அதிகார வரம்புக்குள் வராதவை…” என்று விளக்கமளித்து அந்த வழக்கிலிருந்து நழுவிக் கொண்டது. ஆனால் இப்போது அர்னாப் கோஸ்வாமி பிரச்சினைக்கு மட்டும் தானாக முன் வந்து அறிக்கை விடுகிறது. இது இந்திய பிரஸ் கவுன்சிலின் சார்புநிலையை அப்பட்டமாகக் காட்டுகிறது.
இந்திய பிரஸ் கவுன்சில் இவ்வாறு நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல. பத்திரிகை நடத்தையின் விதிமுறைகளை மீறி பல்வேறு அச்சு ஊடகங்கள் தவறிழைக்கும் போது அது குறித்து வாயைத் திறக்காத பிசிஐ, கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில இதழான தி டெலிகிராப் நாளிதழிற்கு சமீபத்தில் ஒரு கண்டன நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
“இதைச் செய்தது கோவிட் அல்ல கோவிந்த்” (Kovind, not Covid, did it) – என்ற தலைப்பில் முதல் பக்க தலைப்புச் செய்தியை வெளியிட்டிருந்தது, “தி டெலிகிராப்” நாளிதழ். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்-க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கிய செய்தியை விமர்சனப்பூர்வமாக அவ்வாறு தலைப்பிட்டு வெளியிட்டிருந்தது. இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத இந்திய பிரஸ் கவுன்சில், பத்திரிகை நடத்தை விதிமுறையை மீறியதாகக் கூறி அப்பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் தப்லிகி ஜமாத் விவகாரத்தில் பொய்ச் செய்திகளையும் தவறான தகவல்களையும் பரப்பி, பத்திரிகை நடத்தை விதிமுறைகளை மீறிய பிற பத்திரிகைகளை இந்திய பிரஸ் கவுன்சில் கண்டுகொள்ளவுமில்லை, அவ்விவகாரத்தில் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தவும் இல்லை.
இந்தியில் பெருமளவில் விநியோகிக்கப்படும் பத்திரிகையான “அமர் உஜாலா”வில், “சஹரன்பூரில் உள்ள தனிப்படுத்துதல் முகாமில் இருக்கும் தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள், அசைவ உணவுகள் வேண்டும் என பிடிவாதம் பிடித்தார்கள்; திறந்தவெளியில் மலம் கழித்தார்கள்” என்ற பொய்ச் செய்தி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இச்செய்தியை அப்பகுதி போலீசே மறுத்தது. அதே போல, “டைனிக் ஜாக்ரன்” என்ற பத்திரிகையின் மீரட் பதிப்பில் மதவெறுப்பைத் தூண்டும் விதமான விளம்பரம் வந்திருந்தது. அப்போதெல்லாம் இந்திய பிரஸ் கவுன்சில் வாயைத் திறக்கவில்லை.
பத்திரிகைகளைக் கண்டிப்பதற்கும் எச்சரிப்பதற்கும் இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு பத்திரிகை கவுன்சில் சட்டம் – 1978, முழு அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. ஆனாலும் வாய் திறக்கவில்லை.
சமீபத்தில், இதே பிரஸ் கவுன்சிலின் வரம்புக்குக் கீழ் வரும் “தி இந்து” பத்திரிகையின் பத்திரிகையாளர் உட்பட மூன்று பத்திரிகையாளர்கள் மீது காஷ்மீரில் ஊபா சட்டம் பாய்ந்த போதுகூட இந்திய பிரஸ் கவுன்சில் கருத்துச் சுதந்திரம் குறித்து மூச்சுக்கூட விடவில்லை.
இதற்கு முன்னர், ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தொலைதொடர்புக் கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களை அனைத்து பகுதிக்கும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி, காஷ்மீர் டைம்ஸ் நாளிதழின் செயல் ஆசிரியர் அனுராதா பாஷின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த சமயத்தில் இந்த வழக்கில் தாமாக முன்வந்து தனது கருத்தையும் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது இந்திய பிரஸ் கவுன்சில். நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.
நடந்திருக்கும் இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஒரு விசயத்தை மட்டும் உறுதிப்படுத்துகின்றன. கருத்துச் சுதந்திரத்தைவிட தனது எஜமானர்களின் மனத் திருப்திதான் முக்கியம் என்ற வகையில்தான் ஆளும் காவி பாசிச கும்பலுக்குச் சேவை செய்து வருகிறது இந்திய பிரஸ் கவுன்சில்.
வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம் ! – 26.04.2020 ஞாயிறு மாலை 5 மணி
கொரோனா நெருக்கடியை வெல்ல – பசியிலிருந்து மக்களை காக்க.
1) உடனே ஐந்து லட்சம் கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்கு!
2) நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்களை இலவசமாக வழங்கு!
3) ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.6000 என மூன்று மாதங்களுக்கு வழங்கு!
4) தமிழகத்திற்கு தேவையான நிதியை பாரபட்சமின்றி வழங்கு!
5) மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப்பணியாளர்களுக்கு உரியப் போதுமான பாதுகாப்புக் கருவிகள் கொடு!
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நிகழ்வினை தமிழகம் முழுவதும் நடைபெற மக்கள் அதிகாரம், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், திராவிடர் விடுதலைக்கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், தமிழ் புலிகள் கட்சி, தமிழ்த் தேச மக்கள் முன்னணி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம், மா.லெ மக்கள் விடுதலை, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழக வாழ்வுரிமைப் பாதுகாப்பு மக்கள் கட்சி
தமிழர் விடுதலைக் கழகம், மக்கள் சட்ட உரிமை இயக்கம், மக்களரசுக் கட்சி அம்பேத்கர் சிறுத்தைகள் கட்சி, தமிழ் சிறுத்தைகள், வெல்ஃபேர் கட்சி ஆகிய அமைப்புக்கள் அழைப்பு விடுத்தன. அதன் படி தமிழகம் முழுவதும் திரளானவர்கள் இந்த கவன ஈர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் சார்பில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடலூரில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தர்மபுரியில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கோவையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் புதுவையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஆனந்த் டெல்டும்டேவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் “அவர் மீதான வழக்குக்கு போதுமான அடிப்படை (Prima facie) இருக்கிறது” என்று தள்ளுபடி செய்துள்ளது.
ஜாமீன் என்பது ஒருவர் மீதான வழக்குக்கு போதுமான அடிப்படை ஆதாரங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. குற்றம் நிரூபிக்கப் படாதவரை அவர் நிரபராதி என்பதே இந்திய சட்டம். எனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவர் வழக்கு நடத்த ஒத்துழைப்பாரா, ஓடிவிடுவாரா, சாட்சிகளை மிரட்டிக் கலைப்பாரா என்பதையெல்லாம் அடிப்படையாக வைத்தே ஜாமீன் வழங்குவதும் வழங்க மறுப்பதும் நடக்கிறது.
Prima facie என்பதற்கு based on the first impression; accepted as correct until proved otherwise என்பதுதான் பொருள். முதல் பார்வையின் அடிப்படையில் வரும் கருத்து, இல்லையென்று நீருபிக்கப்படும் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த கருத்து என்பதுதான் Prima facie. அது இறுதியானதும், முற்று முடிவானதும் அல்ல.
வழக்கு விசாரணையின் போது சாட்சிகள், நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு, குறுக்கு விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தனது தரப்பு ஆவணங்களையும், சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வாய்ப்பளித்த பின்பே குற்றம் நிரூபிக்கப்படும் அல்லது இல்லை என்பது இறுதியாக முடிவு செய்யப்படும்.
அதுவரை குற்றம் சாட்டப்பட்டவரை வெளியில் இருக்க அனுமதிப்பதே ஜாமீன்.
வழக்கு தொடுக்கப்பட்டு விசரணை நடத்தி முடிக்க இரண்டு ஆண்டுகளாவது ஆகிறது. அதுவரை ஒருவருக்கு ஜாமீன் வழங்கப் படாமல் சிறையில் இருந்து விட்டு பின்பு குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டால் என்னவாவது?
எனவே டெல்டும்டே சாட்சிகளைக் கலைக்கும் பலம் உள்ளவரா, தலைமறைவாகிவிடுவாரா, என்றுதான் பார்க்க வேண்டும்.
இதில் பிரதான சாட்சியம் பிரதமரைக் கொல்ல வேண்டும் என்று அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சல். எனவே டிஜிடல் சாட்சியம்தான். அது போலீஸ் வசம் இருக்கிறது. எனவே சாட்சிகளைக் கலைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த ஓராண்டாக இந்த வழக்கு இருக்கிறது. அவர் நாட்டை விட்டு ஓடவும் இல்லை. பிறகு என்ன?
இதெல்லாம் சட்டத்துறையோடு தொடர்புடைய எல்லோருக்கும் தெரிந்ததுதான். Unlawful Activities Prevention Act (UAPA) படி ஒருவர் மீது குற்றம் சுமத்த அடிப்படை முகாந்திரம் இருந்தால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்யலாம் என்று கூறி உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. ஆனால் ஜாமீன் அளிக்கவும், வேறு கோணத்தில் பரிசீலிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது என்பது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 8 ஆண்டுகள் சிறையில் இருந்த சிலர் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். இவர்களது ஜாமீன் மனு பலமுறை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டது.
ஆனந்த் டெல்டும்டே வழக்கின் தாய் வழக்கான பீமா கொரேகான் வழக்கில் மராத்தா உயர்சாதியினருக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வந்த ஒரு 18 வயது இளம் பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
“வீட்டில் முடங்கச் சொல்லும் அரசே வயிற்றுக்கு சோறு போடு ! செலவுக்கு காசு கொடு !” என்ற முழக்கத்தை முன்வைத்து வீட்டிலிருந்து குரலெழுப்புவோம் ! என்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் அறைகூவலின் அடிப்படையில் கடந்த 26.04.2020, ஞாயிற்று கிழமை அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளிலும், சமூக இடைவெளியுடன் தெருக்களிலும் கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இப்போராட்டத்தில், மே 17, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு ஜனநாயக முற்போக்கு சிந்தனை கொண்ட தோழர்களும் கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டம் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு… பாருங்கள்… பகிருங்கள்…
***
கொரானாவால் சாவா! பட்டினியால் சாவா!!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லுர் வட்டம் மக்கள் அதிகாரம் சார்பாக கொரோனா நிதியாக மாதம் குடும்பத்திற்கு 6000 ரூபாய் வழங்க கோரியும், மக்களுடைய பட்டினியை போக்க இந்திய உணவு கழகத்தில் தேங்கி இருக்கும் உணவு பொருட்களை இந்தியா முழுவதும் இருக்க கூடிய ஏழை குடும்பங்களை தேர்வுசெய்து உணவு பொருட்களை உடனடியாக பகிர்ந்து கொடுக்க கோரியும் கவன ஈர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
மேலும் கொராரோனா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை பாதுகாக்கின்ற பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மேலும் சமூக ஆதரவாளர்களுக்கு போதிய பாதுகாப்பும் நிதியும் ஒதுக்க கோரி, காரப்பட்டு – பொய்கை அரசூர் ஆகிய பகுதிகளில் கோரிக்கையை பதாகைகளில் பதிவு செய்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்சியில் மக்கள் அதிகாரம் தலைமையில் தி.மு.க , வி.சி.க , CPM , போன்ற பல்வேறு கட்சிகளின் முன்னணியாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் கிராம பொதுமக்கள், பெண்கள் குழந்தைகள் உள்பட சாலையின் இருபுறமும் சமூக இடைவெளியை கடைபிடிக்கின்ற வகையில் இரண்டு மீட்டருக்கு ஒரு கட்டம் என்ற வகையில் நின்று காரப்பட்டு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டோரும் , பொய்கை அரசூர் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்டோரும் கலந்துகொண்டு மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த நிகழ்சி சுமார் 20 நிமிடம் நடைபெற்றது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மதுரை யா. ஒத்தக்கடை கொரோனா உதவிக்குழு மூலமாக உலகனேரி, காளிகாப்பான், புதுப்பட்டி, திருமோகூர், ராஜகம்பீரம் மற்றும் ஒத்தக்கடையின் பல பகுதிகள் என ஏழு நாட்களில் 3500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுர குடிநீரும் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சொந்தமாக தைத்து 200-க்கும் மேற்பட்ட மக்களுக்கான முகக் கவசமும் மக்கள் அதிகாரம் தோழர்கள் விநியோகம் செய்தனர்.
மேலும், நலிந்த தொழிலாளர்கள், உடல் ஊனமுற்றோர், கணவரை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற 20 குடும்பங்களுக்கு “மதுரை மாநகர் கொரோனா உதவிக்குழு” ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் மூலமாக பொருட்கள் பெறப்பட்டு முதல் சுற்றாக- ரூபாய் 1000 மதிப்பளவிலான 10 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய், பிரட், பிஸ்கட், நாப்கின் மற்றும் மளிகை பொருட்களும் இரண்டாவது சுற்றாக, அடுத்த 20 தொழிலாளர் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, அரை கிலோ துவரம் பருப்பு, அரை கிலோ உளுந்து மற்றும் மளிகைப் பொருட்களும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மூன்றாவதாக, 5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், பிஸ்கட் மற்றும் மளிகை சாமான் அடங்கிய பொருட்களுடன் 27 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான உதவியை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் மூலமாக பெறப்பட்டு பொருள்கள் வாங்கி விநியோகிக்கப்பட்டது.
யா.ஒத்தக்கடை பகுதியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் துணையோடு நன்கொடை பெற்று தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை சமூக இடைவெளியைக் கடைபிடித்து செய்து வருகின்றனர். ஆகையால், இந்த கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு பட்டினியோடு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி,
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம். தொடர்புக்கு : 98943 12290.
கோவிட்-19 கொள்ளை நோய் எவ்வகையில் முடியும் ? தற்போது பரிசோதனையில் உள்ள ஏதேனும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் வெற்றி பெற்றால், இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும் என்பது பொதுவான ஒரு விருப்பம். இன்னும் சில வருடங்களில் ஒரு தடுப்பூசி கிடைக்கப் பெற்றால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வைரசை ஒழித்துவிடமுடியும்.
எனினும் ஒரு கொள்ளைநோய் உண்மையில் இவ்வாறான வகையில் கடந்து செல்லும் என்பதை சொல்ல முடியாது. கொரோனா வைரஸ் பிரச்சினைக்கான சிகிச்சைகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும், கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக இருப்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. சொல்லப் போனால், முந்தைய பிற கொள்ளை நோய்களுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு மருந்துகள் எவ்வாறு காப்புரிமைகளின் (Patents) கீழ் புதைக்கப்பட்டு, யார் வாழவேண்டும், யார் சாகவேண்டும் என்பது மருந்து நிறுவனங்களால் எப்படித் தீர்மானிக்கப்பட்டு முடிக்கப்பட்டதோ, அவ்வகையிலேயே கோவிட்-19 கொள்ளை நோயும் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
ஒரு விஞ்ஞானி பிரேசில் சவோ பவுல், ஹார்ட் நிறுவனத்தில் கோவிட்-19 எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படம். (படம் – நன்றி : த கார்டியன்)
பொதுவாக, ஒரு சரக்கின் மீது தனிச்சிறப்பான கட்டுப்பாட்டை செலுத்தவல்ல நிறுவனங்களான ஏகபோகங்களை முதலாளித்துவ சந்தையின் தோல்விகளாகவும், இதனை வணிகப் போட்டிச் சட்டங்களின் மூலமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் எண்ணுகிறோம். மருத்துவ காப்புரிமைகளும் சட்டப்பூர்வமான ஏகபோகங்களுக்கு நிகரானவையாகும். மருத்துவக் காப்புரிமைகள், மருத்துவம் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு மூலதனமிடும் மருந்து நிறுவனங்களுக்கான பரிசு.
முக்கியமாக இந்த காப்புரிமைகள் 20 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கக் கூடியவை – தற்காலிகமானவை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் எதார்த்தத்தில் இந்த மருந்துகளின் சூத்திரங்களில் சிறுமாற்றங்களைச் செய்து அதற்குக் காப்புரிமை பதிவு செய்வதன் மூலம் இந்த காலகட்டத்தை அதிகரித்துக் கொள்கின்றன, மருந்து நிறுவனங்கள். இதன் மூலம் சந்தைப் போட்டியை தவிர்த்து விடுவதோடு, பெரும் மருந்து நிறுவனங்களின் கையில் அதன் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அளிக்கின்றன.
1996-ம் ஆண்டு அமெரிக்காவில் எச்.ஐ.வி – எயிட்ஸ் நோய்க்கான சிகிச்சையை சில மருந்து நிறுவனங்கள் ஒன்றிணைந்து சந்தைக்குக் கொண்டு வந்தன. மீளூட்டு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் கலப்பை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைமுறை எச்.ஐ.வி. வைரசால் உண்டாக்கூடிய மரணத்தை நாட்பட்ட பிணியாக மாற்றவல்லவை. இந்த சிகிச்சையை ஒரு நபருக்கு வழங்க ஆண்டுக்கு 6500 பவுண்டுகள். (1996-ம் ஆண்டில் இந்திய மதிப்பின் படி ரூ.4,55,000). உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த விலைக்குத்தான் விற்கப்பட்டது. சிகிச்சையே எடுக்க முடியாதபடிக்கு விலை இருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்த பின்னர், கடந்த 2004-ம் ஆண்டுதான் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் இந்த சிகிச்சையை பயன்படுத்த முடிந்தது.
கொரோனா வைரஸுக்கான சிகிச்சைகளுக்கான வாய்ப்பை மருத்துவ ஏகபோகங்கள் எவ்வாறு தடை செய்துள்ளன என்பதை ஏற்கெனவே நாம் பார்த்து வருகிறோம். சுகாதாரப் பணியாளர்களுக்கு போதுமான N95 முகக்கவசங்கள் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் 3M என்ற நிறுவனம் சுவாசப் பாதுகாப்பு உபகரணங்களுக்கான சுமார் 400க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை வைத்துக் கொண்டு, அதனைப் பிற நிறுவனங்கள் தயாரித்து அமெரிக்காவில் வழங்க முடியும் என்பதை கட்டுப்படுத்துகிறது. இந்த கொள்ளை நோய்ச் சூழலில் காப்புக் கருவிகளின் உற்பத்தியை அதிகரிக்க, 3M நிறுவனம் தனது காப்புரிமைகளை விடுவிக்க வேண்டும் என பல அரசியல்வாதிகள் கேட்டுள்ளனர்.
கோவிட்-19 பரிசோதனைகள் மிகவும் பற்றாக்குறையாக இருப்பதற்கு மத்தியில், ஒரு பிரெஞ்சு பரிசோதனைக் கருவி உற்பத்தியாளர், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அவசர ஒப்புதலுக்காக ஒரு சோதனைக் கருவியை வடிவமைத்து சமர்ப்பித்தார். ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட்பேங்க் குழுமத்தைச் சார்ந்த ஒரு நிறுவனம் அதற்கு எதிராக காப்புரிமை மீறல் வழக்குத் தொடுத்தது. (பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது)
தற்போது பரிசோதனையில் இருக்கக் கூடிய கொரோனா வைரசிற்கான நம்பிக்கைதரக் கூடிய சிகிச்சைகளில் பெரும்பான்மையானவை காப்புரிமையோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்ஃப்ளூவன்சா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஃபாவிபிராவிர் , எச்.ஐ.வி சிகிச்சைக்காக கலெட்ரா என்ற பெயரில் விற்கப்படும் ’இயோப்பினவின் மற்றும் ரிட்டொனவிர் மருந்துகளின் கலவை மருந்து’ ஆகியவை குறைந்த காலகட்ட காப்புரிமையைக் கொண்டுள்ளன. கிலீட் எனும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் வரும் 2038 ஆண்டு வரைக்குமான பல முக்கிய மருந்துகளின் காப்புரிமையைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம்தான் எபோலா வைரசிற்கான மருந்தான ரெம்டெசிவிர்-ஐ உருவாக்கியது.
இந்த ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா வைரசிற்கு மருந்தாக பயன்படுத்துவதைத் தடுக்க இந்நிறுவனம் இம்மருந்திற்கு “ஆதரிக்கப்படவேண்டிய மருந்து” (Orphan Drug) தகுதியைக் கோரியது. “ஆதரிக்கப்படவேண்டிய மருந்து” தகுதியில் உள்ள ஒரு மருந்து என்பது – அரிதான ஒரு நோய்க்கு தயாரிக்கப்படும் மருந்தாகும். அரசாங்க அதனை லாபகரமான முறையில் தயாரிக்க முடியாது என்ற வகையான மருந்தாகும். ஆனால் கோவிட்-19 இதற்கு நேர் எதிரானது. அது அரிதான நோயும் அல்ல. அந்த நிறுவனம் பின்னர் இந்த முயற்சியைக் கைவிட்டது.
கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அது பல காப்புரிமைகளால் அமுக்கப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு. தற்போது தடுப்பு மருந்துகள்தான் மிகப்பெரிய வியாபாரம். உதாரணத்திற்கு நிமோனியாவினால் ஏற்படும் குழந்தை மரணங்களை எடுத்துக் கொள்ளலாம். தற்போது நிமோனியாவிற்கு இரண்டு தடுப்பு மருந்துகள் நடைமுறையில் இருக்கின்றன. அவை ப்ஃபிசர் மற்றும் க்லாக்சோஸ்மித்க்லைன் ஆகிய இருநிறுவனங்களின் காப்புரிமையால் அழுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தியா ப்ஃபிசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை பயன்படுத்துகிறது. ஒரு குழந்தைக்கான முழு திட்டத்திற்கான மருந்தின் விற்பனை விலை $250 (இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ. 19,125) ஆகும். ஆனால் கவி (GAVI) எனும் உலகளாவிய தடுப்பூசி / நோயெதிர்ப்புக் கூட்டணி நிறுவனத்தினால் மானிய விலையில் 8 பவுண்டுக்கு (ரூ. 756) இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கில் இம்மருந்தின் தேவை இருக்கும் சூழலில், இந்த மானியவிலையும் கூட கட்டுப்படியானதாக இல்லை. இதன் காரணமாக குழந்தைகளில் வெகு சிறிய பங்கினரே இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. நிமோனியாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து 40 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய்க்கு 1,27,000 குழந்தைகள் உயிரிழக்கின்றன. நிலைமை இப்படி இருக்கையில் இந்த தடுப்பு மருந்து மட்டும் ப்ஃபிசர் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 4.5 பில்லியன் பவுண்டு (ரூ. 42,562 கோடி) வருமானத்தை ஈட்டித் தந்து கொண்டிருக்கிறது.
மருத்துவ சிகிச்சைகளின் மீதான ஏகபோக கட்டுப்பாட்டைக் கையாளுதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. காப்புரிமைகளுக்கு உரிமம் பெறுதல் கட்டாயமாக்கப்படுவது பிரபலமாகி வருகிறது. சட்டப்பூர்வமான வகையில் அந்த நாடுகள் ஒரு பொருளின் மீதன காப்புரிமையை தற்காலிக ரத்து செய்யலாம். கொள்ளை நோய் சூழல், கட்டாய உரிமத்தை அவசியப்படுத்துவதாக கடந்த மாதத்தில் சிலி அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பிற நாடுகளும் இதைப் பின்பற்றின.
இஸ்ரேல் இயோப்பினவிர் மற்றும் ரிட்டோனவிர் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு கட்டாய உரிமம் வழங்கியுள்ளது. கோவிட்-19 தொடர்பான அனைத்து காப்புரிமைகளுக்கும் சுகாதார அமைச்சர் கட்டாய உரிமம் வழங்கவேண்டும் என ஈக்குவேடார் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. கனடாவும், ஜெர்மனியும் தங்களது காப்புரிமை சட்டத்தில் விரைவான கட்டாய உரிமம் வழங்குவதற்கான திருத்தத்தை மேற்கொண்டுள்ளன. பிரேசில் கட்டாய உரிமத்தகை எளிமைப்படுத்துவதற்கான சட்டத்திருத்தத்தை தனது காப்புரிமை சட்டத்தில் மேற்கொள்வதற்கான வழிமுறையில் உள்ளது.
இந்த நடவடிக்கைகள் பயனுள்ளவைதான் என்றாலும் ஒவ்வொரு நாடும் தனியாகவே இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாகிறது. மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சைகளைப் பெறுவதற்கு காப்புரிமைகள் மட்டும் தடையாக இல்லை. உலகளாவிய கோவிட்-19 தொழில்நுட்ப சேர்மம் (Global Covid-19 Technology Pool) ஒன்றை உருவாக்குவதற்கான முன்மொழிதலை கோஸ்டா ரிகா நாடு உலக சுகாதார நிறுவனத்திடம் முன்வைத்திருக்கிறது. இந்த தொழில்நுட்ப சேர்மத்தில், தேவையான காப்புரிமை, வடிவமைப்புகள், வர்த்தக ரகசியங்கள் மற்றும் மென்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளும் அனைத்தும் உட்கொண்டுவரப்படும். அந்த சேர்மம் தங்களது கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளவும், உலகளாவிய அளவில் அது கிடைக்கச் செய்யவும் அரசாங்கங்களை ஊக்கப்படுத்தும்.
இந்த முன்மொழிதல் திட்டமாக நிறைவேறுவதிலிருந்து வெகுதூரம் பின் தங்கியிருந்தாலும், இதற்கான ஆதரவு வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் இந்த கருத்தாக்கத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். உலக சுகாதார மையத்தின் இயக்குனர் ஜெனரல் கோஸ்டா ரிக்காவின் இந்த முன் மொழிதலை வரவேற்றிருக்க, யூனிடெய்ட் (UNITAID) அமைப்பும் இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறது.
இது ஒரு கொள்ளைநோய் என்ற வகையில், எந்த ஒரு கார்ப்பரேட்டும் தம்மை கோவிட்-19-க்கான ஏகபோகமாக நிலைநாட்டிக் கொள்ள முடியாது. கோவிட்-19 சிகிச்சைகள் ஏகபோக கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டிருந்தால் அனைவருக்கும் சிகிச்சை சென்றடைவதில் நாம் உண்மையில் வெற்றி பெறுவோம். இது ஒருவேளை நடந்தால், கோவிட் 19 மட்டுமல்லாது பிற நோய்களிலிருந்து தப்பிப் பிழைக்க இத்தகைய மருந்தக அமைப்புதான் நமக்குத் தேவை என்பதை நாம் உணர முடியும்.
கட்டுரையாளர்கள் : அச்சல் பிரபலா, எல்லென் டி ஹோயென் தமிழாக்கம்: நந்தன் மூலக்கட்டுரை, நன்றி :த கார்டியன்.
பின்குறிப்பு : இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் UNITAID மற்றும் GAVI ஆகிய அமைப்புகள் பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் துணையுடன் நடத்தப்பட்டு வரும் அமைப்புகள் ஆகும். ஒருபுறம் இதுபோன்ற அறக்கட்டளைகள் மூலம் மருத்துவத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முயற்சிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் பில் கேட்ஸ், இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் மருந்து ஏகபோகங்களையும் கையில் வைத்துக் கொண்டிருக்கிறார். பெரும்பான்மையான மக்களை உயிருடன் மட்டும் வைத்திருப்பது என்ற அளவில் பராமரித்து வரும் இத்தகைய அறக்கட்டளைகளின் புரவலர்கள்தான் மருந்தக ஏகபோகங்களில் முதலீட்டாளர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கொள்ளை நோய் என்ற வகையில் கோவிட்-19-ஐ எதிர்கொள்ள ஒன்றிணைய முனைந்திருக்கும் சில நாடுகளும் கூட சாதாரண நிலைமைகளில் எக்காரணம் கொண்டும் காப்புரிமைகளை ரத்து செய்வது அல்ல, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கூட துணியாது. உலக முதலாளித்துவக் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் மருந்து நிறுவனங்களின் ஏகபோகத்தை ஆதராத்துடன் அம்பலப்படுத்தும் விதமாகவே இக்கட்டுரையை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.
கொரோனா ஊரடங்கால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு அவர்களது வறுமை நிலையை மட்டுமே கருத்தில்கொண்டு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பலசரக்குப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த முத்துப்பட்டி, நைனாகுளம், ஈசனி, மானாமதுரை, மூங்கிலூரணி, மற்றும் சில கிராமங்கள் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த வலையங்குளம், குசவன்குண்டு, குதிரை குத்தி மற்றும் மதுரை நகர் உதிரி தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் மேலவாசல் ஆகிய பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
05-04-2020, 07-04-2020, 13-04-2020, 18-04-2020 ஆகிய நாட்களில் நான்கு கட்டமாக செயற்குழு உறுபினர்கள் வி.அய்யாக்காளை, வெ.பிச்சை, உறுப்பினர்கள் பெ.ரா.பெருமாள், சிதம்பரம், ஆதித்தன் டெய்லர் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் உதவியுடன் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு எவ்வித பாகுபாடும் பாராமல் வழங்கப்பட்டது. கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேரசிரியர்கள் சிலர் மனமுவந்து அளித்துவரும் நன்கொடைகள் மூலமாக இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. துணைத் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் அவர் குடியிருக்கும் திரு நகர் பகுதியில் தன்னார்வலர்களுடன் இணைந்து கப சுரக் குடி நீர் மற்றும் உணவுப்பொருள் வினியோகம் செய்துவருகிறார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், மதுரை மாவட்ட நிர்வாகத்தில் தன்னார்வலராகப் பதிவு செய்து கொண்டதுடன் 20 பேர் கொண்ட “மதுரை மா நகர் கொரோனா உதவிக்குழு” அமைத்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வருகிறார்.
காவல்துறையின் கெடுபிடிகள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காதது, விலைவாசி உயர்வு, போக்குவரத்துப் பிரச்சினை இத்தனையும் தாண்டி பாதிக்கப்பட்டவரை அணுகும் போது அங்கே இருக்கும் தேவையும் நமது உதவியும் எதிர்விகிதத்தில் காணப்படுகிறது. அத்தனை பேருக்கும் எப்படித் தருவது. அரசு என்ன செய்கிறது?
அரசு, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு மட்டும் ரூ.1000/- மற்றும் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை இலவசமாக வழங்கியுள்ளது. கூலி ஏழை மக்கள் நெருங்கி வாழும் சில பகுதிகளில் ரூ.200/- க்கு மற்ற மளிகைப் பொருட்கள் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிற அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்கள் மட்டும் இலவசமாக வழங்கியுள்ளது. நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.1000/- மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு கஷ்டப்படுகிற அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கிவிட்டதாக திருப்தி அடைந்துகொள்கிறது. ஆனால் உண்மை நிலவரம் என்ன? ஒரு மாதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இது போதுமானது தானா என்பது பற்றி அரசு கவலைப்படவில்லை.
வளையங்குளம் பகுதியில் நிவாரணப்பணிகளில் ஈடுபடும் ம.உ.பா.மை. தோழர்கள் :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
குடும்ப அட்டை இல்லாமலும், நலவாரியங்களில் உறுப்பினராக இல்லாமலும் பல ஆயிரம் உள்ளுர் மக்கள், புலம் பெயர்ந்த மக்கள் உள்ளனர். இவர்களைப் பற்றி அரசு கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. எந்த உதவியும் இல்லாமல் பட்டினி கிடப்பவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அப்படிப்பட்ட குடும்பங்களைப் பற்றி நமது மைய உறுப்பினர்கள் தகவல் தெரிவிக்கும் போது அவர்கள் அரசின் எந்த உதவியும் பெறாதவர்கள் என்பதை உறுதி செய்த பின்பே உதவ முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு தெரிந்துகொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் அப்படிபட்டவர்களின் பட்டியல் ஏதாவது வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. தொடக்கத்தில் அழைப்பை ஏற்றுப் பேசிய அதிகாரிகள் தற்போது லைனில் வருவது அரிதாகி வருகிறது. கொரோனாவுக்கு முந்திய அதே அரசு நிர்வாகம் தான் இப்போதும் இருந்துவருகிறது. ‘அதே மணம்; அதே குணம்!’
இவை தவிர நகர்ப் புறங்களில் கவனிப்பாரற்று சுற்றித் திரிந்தவர்கள் பிடிக்கப்பட்டு அரசு நிர்வாகத்துக்குச் சொந்தமான கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவை தவிர அம்மா உணவகங்கள் மூலமாகவும் நீண்ட வரிசையில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அன்றாடம் உழைத்துப் பிழைத்துவரும் கோடிக்கணக்கான மக்களின் பசிப் பிணியைப் போக்க இவை போதுமா என்றால் அரசு இது போதும் என்றுதான் சொல்கிறது. ஆனால் யாரோ சிலருக்கு மட்டுமே இது போதுமானதாக இருக்கலாம். பெரும்பான்மை மக்களுக்கு இது போதுமானது இல்லை. யாருடைய வேண்டுகோளும் இல்லாமல் தாமாக முன்வந்து பிறருக்கு உதவ வேண்டும் என்ற தொண்டுள்ளம் கொண்ட பலரும், பல இயக்கங்கள், நிறுவனங்களும் மனமுவந்து உதவுவதன் காரணமாகவே கொரோனா பசிப்பிணி தமிழ் நாட்டில் ஓரளவு துடைக்கப்படுகிறது. இதையும் பொறுத்துக்கொள்ள முடியாத அரசு அதற்கும் தடைவிதிக்க முயன்று தோற்றுள்ளது.
இந்தச் சூழலில் நம்முடைய இயக்கத் தோழர்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து இப்பணியைத் தொடர்ந்து வருகின்றனர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உறுப்பினர்கள் இவ்வாறு வழிகாட்டப்பட்டுள்ளனர். “அரசு கைவிடும் இடத்தில் மக்களுக்கு கை கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அரசைத் தட்டிக்கேட்க நம்மோடு மக்கள் வரவேண்டும் அல்லவா?”
மானாமதுரை மூங்கிலூரணி பகுதியில் நிவாரணப்பணிகளில் ஈடுபடும் ம.உ.பா.மை. தோழர்கள் :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை. உதவிக்கு : கொடுக்க – வாங்க : 73393 26807.
புதிய கொரோனா வைரஸ் – சார்ஸ்-CoV-2 உலகம் முழுவதும் பரவி வருகிறது. இத்தொற்று நோய் பரவும் வீதத்தை கட்டுக்குள் வைக்க உலக நாடுகள் அனைத்திலும் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
எல்லா வைரஸ்களுமே மனிதர்களை, விலங்குகளை தாக்குவதில்லை. மிகப் பெரும்பாலான வைரஸ்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை மட்டுமே தாக்குகின்றன.
எல்லா நாடுகளிலுமே அன்றாட வாழ்க்கை முடங்கி சாலைகள் தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. இந்நிலையில் கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள், சதிக் கோட்பாடுகள், போலி அறிவியியல் கருத்துக்கள் மற்றும் அபத்தங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு பீதியூட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த எளிமையான அறிவியியல் அறிமுகத்தை அறிந்து கொள்வது அவசியமாகிறது.
வைரஸ் (உயிர்நுண்மம்) என்பது புரதங்கள், நொதிகள் மற்றும் மரபணு பொருட்களை கொண்ட மிகச்சிறிய தொற்று துகளாகும். இவை பாக்டீரியா போன்ற நுண்ணுயிகளை விட மிகச் சிறியவை. உலகில் கோடிக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. இவ்வுலகிலுள்ள வைரஸ்களை வரிசையாக வைத்தால் அது நமது விண்மீன் மண்டலமான பால்வெளி மண்டலத்தின் விட்டம் சுமார் 1 இலட்சம் ஒளியாண்டுகள்களை விட நீளமாக இருக்கும். ஒரு ஒளியாண்டு என்பது 9 இலட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோமீட்டராகும்.
இதனால், கோடிக்கணக்கான வைரஸ்கள் மனிதர்களை தாக்கி அழிக்க காத்துக் கொண்டிருக்கின்றன என்று அச்சப்படத் தேவையில்லை. எல்லா வைரஸ்களுமே மனிதர்களை, விலங்குகளை தாக்குவதில்லை. மிகப் பெரும்பாலான வைரஸ்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை மட்டுமே தாக்குகின்றன.
வைரஸ் தாமாக ஆற்றலை உள்வாங்கி வளரவோ அல்லது இனப்பெருக்கம் செய்யவோ திறனற்றவை. அவை இயங்குவதற்கு ஓம்புயிர்கள் (Host) தேவைப்படுகின்றன. அதாவது மற்றொரு உயிரினத்தின் உயிரணுக்களில் உட்புகுந்து, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி அவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன. இதனால் இவை ஒட்டுண்ணிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
எல்லா ஓம்புயிர் உயிரணுக்களுக்குள்ளும் (செல்கள் – cell) ஒரு வைரசால் உட்புகுந்துவிட முடியாது. செல்களின் வெளிச்சுவர் வைரஸ் உட்புகுவதை தடுத்துவிடும். படையெடுக்கும் எதிரிகளைத் தடுக்கும் கோட்டையைப் போல சுவர் செயலாற்றுகிறது.
வைரஸ் (உயிர்நுண்மம்) என்பது புரதங்கள், நொதிகள் மற்றும் மரபணு பொருட்களை கொண்ட மிகச்சிறிய தொற்று துகளாகும். இவை பாக்டீரியா போன்ற நுண்ணுயிகளை விட மிகச் சிறியவை.
ஆனால் எந்நேரமும் முற்றிலும் பூட்டி சீல் வைக்கப்பட்ட கோட்டை போல செல்கள் இருக்க முடியாது. செல்களின் எல்லா இயக்கத்துக்கும் ஆற்றலும், பல புரதப் பொருள்களும் தேவை. செல்களுக்கு தேவையான, சரியான புரதப்பொருள்கள் வந்து செல் சுவரை அடையும் போது சுவரின் மேல் அவற்றை பற்றி பொருந்தும் வகையில் திருகுவெட்டுப்புதிர் (Jigsaw puzzle) போன்ற ஏற்பிகள் இருக்கின்றன. அந்த புரதங்களின் மேற்பகுதி பகுதி சாவி வடிவில் இருக்கும். செல்சுவற்றில் உள்ள ஏற்பியின் மேல் இந்த சாவி வடிவம் பொருந்தும்போது கதவு திறந்து புரதம் உள்ளே செல்ல முடியும். அதாவது சரியான அடையாள அட்டையோடு சரியான கைரேகையைக் காட்டினால் தான் உட்செல்ல முடியும்.
பாக்டீரியா முதல் மனிதன் வரை ஒவ்வொரு உயிரிலும் உள்ள உயிரணுக்களின் (செல்களின்) பாதுகாப்பு அம்சங்களும் வெவ்வேறானவை. அதாவது வெவ்வேறு பூட்டு – சாவிகள். ஒரு வைரஸ் செல்சுவற்றை ஊருடுவிச் செல்ல அது அந்த செல் ஏற்றுக்கொள்ளும் சரியான புரத வகையையும், ஏற்பியில் சரியாகப் பொருந்தும் வடிவத்தையும் கொண்ட சாவி முட்களை மேற்பரப்பில் கொண்டிருக்க வேண்டும். இது போலி அடையாள அட்டையையும், போலி கைரேகையையும் கொண்டு உள்ளே புகுவது போல.
எல்லா வைரஸ்களாலும் எல்லா உயிரணுக்களையும் தாக்கிவிட முடியாது. ஒரு குறிப்பான கோட்டைச் சுவருக்கு பொருத்தமான போலி கைரேகையும், அடையாள அட்டையையும் கொண்ட வைரஸ்களால் மட்டுமே அந்த சுவரை ஊடுருவ முடியும். அதனால் எல்லா வைரஸ்களுமே மனிதசெல்களில் உட்புகுவதில்லை. சில நூற்றுக்கணக்கான வைரஸ்கள் மட்டுமே மனித செல்களைத் தாக்குகின்றன.
கொரோனா என்பது ஒரு வைரசின் பெயரல்ல. அது ஒரு குடும்பத்தின் பெயர். கொரோனா என்றால் லத்தீன் மொழியில் மகுடம்(கிரீடம்) என்று பொருள்.
கொரோனா என்பது ஒரு வைரசின் பெயரல்ல. அது ஒரு குடும்பத்தின் பெயர். கொரோனா என்றால் லத்தீன் மொழியில் மகுடம்(கிரீடம்) என்று பொருள். பந்து வடிவில் இருக்கும் கொரோனா வைரஸ்கள் மீது குறிப்பிட்ட புரதங்களால் ஆன கொம்புகள் உள்ளன. இவை நுண்ணோக்கி வழியே பார்க்கும்போது மன்னர்கள் சூடிக்கொள்ளும் மகுடத்தைப் (கிரீடத்தைப்) போன்ற தோற்றத்தை தருகின்றன. இப்புரத முனைகளைக் கொண்டே விலங்குகள் மற்றும் மனித செல்களை ஊடுறுவி உள்நுழைகிறது. இக்குடும்பத்தில் மனிதர்களை தாக்கும் வைரஸ், பறவைகளை தாக்கும் வைரஸ், விலங்குகளை தாக்கும் வைரஸ் என பற்பல இனப்பிரிவுகள் உண்டு.
சில வகையான வைரஸ்கள் நேரடியாக மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகின்றன. சில வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு வந்து பின் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகின்றன. சில நேரங்களில் விலங்குகளைத் தாக்கக்கூடிய ஒரு வைரஸ் சடுதி மாற்றத்தால் ஏற்படும் பிறழ்வுகளின் (Random Mutations) மூலம் மனிதர்களை தாக்குபவையாக பரிணமித்து மனிதர்களை தாக்குகின்றன.
இந்த கொரோனா வைரசை சீனா உருவாக்கி பரப்பியுள்ளது; இல்லை அமெரிக்கா உருவாக்கி பரப்பியுள்ளது; இல்லை, இல்லை ரஷ்யா உருவாக்கி பரப்பியுள்ளது என்று பல சதிக் கோட்பாடுகள் வலம் வருகின்றன. ஆனால், இதுவரை ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரஸ்கள் எவையுமே புற உலகின் சூழலுக்கு தாக்குப் பிடிக்கவில்லை. அதிலும் எல்லா நாடுகளின் தட்பவெப்ப சூழலுக்கும் தாக்குப் பிடிக்கும் வைரஸை உருவாக்குவதென்பது அவ்வளவு எளிதானதும் அல்ல.
மரபணுவைப் படியெடுத்தல் (Genome sequencing) மூலம் வைரஸ், பாக்டீரியா முதல் பல்வேறு உயிரினங்களின் மரபணுவை படியெடுத்து மரபணு தொடரை ஒப்பிட்டு ஆய்வுகளைச் செய்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட கொரோனா வைரஸ் வவ்வால்களை தாக்கி வந்தது என்றும், சடுதி மாற்ற பிறழ்வுகள் (Random mutation) மூலம் மனிதனை தாக்கும் பரிணாமமடைந்துள்ளன என்றும் ஆய்வாளர்கள் மரபணுவை படியெடுத்தல் மூலம் நிரூபித்து விட்டனர்.
இந்தக் குறிப்பிட்ட கொரோனா வைரஸ் வவ்வால்களை தாக்கி வந்தது என்றும், சடுதி மாற்ற பிறழ்வுகள் (Random mutation) மூலம் மனிதனை தாக்கும் பரிணாமமடைந்துள்ளன என்றும் ஆய்வாளர்கள் மரபணுவை படியெடுத்தல் மூலம் நிரூபித்து விட்டனர்.
அதாவது வவ்வால்களை தாக்கிய வைரஸ்கும் இப்போது மனிதனை தாக்கும் வைரஸ்கும் இடையிலான மரபணு ஒற்றுமைகளை கொண்டும், அவற்றின் மீதுள்ள புரதக் கொம்புகளின் ஒற்றுமை வேற்றுமைகளைக் கொண்டும் இது ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டது அல்ல என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இந்தப் புதிய கொரோனா வைரஸ் – சார்ஸ்-CoV-2 வுடன் சேர்த்து மொத்தம் ஏழு கொரோனா வைரஸ்கள் உள்ளன. இவற்றில் 229E, NL63, OC43, HK01 ஆகிய நான்கும் ஆபத்தற்ற சளி, காய்ச்சலை உருவாக்கும். MERS-CoV மற்றும் SARS-CoV ஆகிய இரண்டும் விலங்குகளைத் தாக்குபவையாக இருந்து பரிணமித்து மனிதர்களைத் தாக்கின. இவை தொற்று ஏற்பட்ட சிலருக்கு மரணத்தை விளைவிப்பவையாக இருந்தன. இந்த புதிய கொரோனா வைரஸ் சார்ஸ்-CoV-2 வவ்வால்களிடமிருந்து அல்லது எறும்புண்ணியிடமிருந்து மனிதனுக்குப் பரவி பரிணாமம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மனிதரைத் தாக்கும் வைரசாக இருந்தாலும் அது எல்லா செல்களையும் தாக்குவதில்லை. திசு செல், குருதி வெள்ளையணு, சிவப்பணு என்று மனித உடலில் பல்வேறு செல்வகைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட வகை வைரஸ் ஒரு குறிப்பிட்ட செல்வகையை மட்டுமே தாக்கும். கொரோனா வைரஸ்கள் மூச்சுக் குழாய், நுரையீரல் உள்ளிட்ட சுவாச அமைப்பைத் தாக்குகிறது.
கொரோனா வைரஸ் முதலில் மேல் சுவாசக் குழாயையும், பின்னர் அதன் கிளைகளையும் தாக்குகிறது. இதனால் அவை சிதைவுறுகின்றன. இச்சிதைவால் இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன.
எல்லா வைரஸ்களும் ஓம்புயிர் செல்களினுள் சென்ற உடன் அந்த செல்களின் ஆற்றல் மற்றும் உட்கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு தம்மை பல்பிரதி (Multiple Copies) எடுத்துக் கொள்கின்றன. பின்னர் அந்த செல்லை சேதப்படுத்திவிட்டு அல்லது முழுவதுமாக அழித்துவிட்டு மற்ற செல்களைத் தாக்குவதற்கு வெளியேறுகின்றன. ஒரு செல் அல்லது சில செல்களில் வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் அது நோயறிகுறியாக வெளித் தெரிவதில்லை. வைரஸ் தொற்று நோயறிகுறியாக வெளித் தெரிவதற்கு குறிப்பிட்ட அளவு செல்கள் பாதிப்படைந்திருக்க வேண்டும். வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து நோயறிகுறியாக வெளித் தெரிவதற்கு இடைப்பட்ட காலம் நோயரும்பு காலம் (Incubation Period) எனப்படுகிறது.
தொற்றிய வைரஸ் நமது எதிர்ப்பு சக்தியோடு போர் புரியத்தேவையான தனது படைபலத்தை பெருக்க எடுத்துக்கொள்ளும் போருக்குத் தயாராகும் காலம், காத்திருப்பு காலமே நோயரும்பு காலம். சில வைரஸ்கள் நோயரும்பு காலம் முடிந்த பின்னர் தான் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும். சில வைரஸ்கள் நோயரும்பு காலம் முடியும் முன்னரே மற்றவருக்குப் பரவுகின்றன. இந்த புதிய கொரோனா வைரசின் நோயரும்பு காலம் 14 முதல் 21 நாட்கள். ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு 5 முதல் 14 நாட்களுக்குள் மற்றவரைத் தொற்ற ஆரம்பிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புதிய கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் 14 நாட்களுக்குப் பிறகு பின்வரும் நோய்க்குறிகள் தோன்றலாம்.
காய்ச்சல்
தொண்டை வலி
இருமல்
மூக்கடைப்பு
உடல் அசதி
சோர்வு
வயிற்றுப்போக்கு
மூச்சு திணறல்
மூச்சுவிடுவதில் சிரமம், ஆகியவை ஏற்படலாம்.
சுவாச அமைப்பைத் தாக்குவதால் வீசும் காற்றில் இந்த வைரஸ் பரவியுள்ளதென்று பயப்படத் தேவையில்லை
சுவாச அமைப்பைத் தாக்குவதால் வீசும் காற்றில் இந்த வைரஸ் பரவியுள்ளதென்று பயப்படத் தேவையில்லை. நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள நபரிடமிருந்து இருமல், தும்மல் போன்றவற்றால் ஒரு மீட்டர் தொலைவு வரை இந்த வைரஸ் பரவலாம். தொற்றுள்ள நபர் தனது மூக்குப் பகுதியை தொட்டுவிட்டு தொடும் எந்தப் பொருளிலும் வைரஸ் இருக்கலாம். அதை தொட்டு நாம் நமது மூக்கு, வாய், கண் இவற்றைத் தொடும் போது நமக்கும் தொற்று ஏற்படலாம்.
கொரோனா வைரஸ் முதலில் மேல் சுவாசக் குழாயையும், பின்னர் அதன் கிளைகளையும் தாக்குகிறது. இதனால் அவை சிதைவுறுகின்றன. இச்சிதைவால் இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. இதையடுத்து வைரஸ் நுரையீரலில் உள்ள செல்களைத் தாக்கத் துவங்குகிறது. இப்போது நோயெதிர்ப்பு அமைப்பு தூண்டப்பட்டு அது நுரையீரல், சுவாச அமைப்பில் தன் வேலையைத் துவங்குகிறது. இதற்குள் சுவாச அமைப்பில் மிக அதிக சேதத்தை வைரஸ் உருவாக்கிவிட்டதால், நோயெதிர்ப்பு மிகைஇயக்கம் (Hyper Active) செய்யத் துவங்கும். அதனால் அதிகமான திரவங்களை நுரையீரல் பகுதியில் சுரக்க வைக்கும். ஏற்கனவே சிதைவுற்ற சுவாசக் குழாய், நுரையீரல், இப்போது அதைப் பழுது பார்க்க நுரையீரலில் நிறைந்துள்ள நோயெதிர்ப்பு திரவங்கள் ஆகியவற்றால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் குறைகிறது. இதனால், மூச்சு திணறல், நிமோனியா போன்றவை ஏற்படுகின்றன.
இந்த ஆக்சிஜன் குறைபாட்டால் மற்ற உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. ஏற்கனவே நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், மற்ற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் உள்ளுறுப்புகள் செயலிலப்பதன் மூலம் மரணம் வரை செல்கிறது.
இதனால் புதிய கொரோனா நோய்த் தொற்றினாலே மரணம் என்று அச்சப்படத் தேவையில்லை. இந்நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 80% பேர் லேசான காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கத் தேவையின்றியே மீண்டுள்ளனர். 20% பேருக்குத் தான் மூச்சுத் திணறல் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கத் தேவை ஏற்படுகிறது. 6% பேருக்கு மட்டுமே மோசமான நோய்தாக்குக்கு (Critically ill) உள்ளாகி சுவாச அமைப்பு செயலிழப்பு போன்றவற்றால் மிகத் தீவிர சிகிச்சைக்கான தேவை ஏற்படுகிறது. 2.6 முதல் 4% பேர் மட்டுமே மரணமடைகின்றனர். முதலில் நோய்க்குறிகள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்து மோசமான நோய்தாக்கு நிலைக்கு செல்ல மூன்று முதல் ஏழு நாட்கள் ஆகலாம்.
எக்காலத்திலும் சுகாதாரத்துறை / மருத்துவமனை வசதிகளின் திறனளவுக்குள் தொற்றை கட்டுக்குள் வைக்கும் போது மட்டுமே தேவையானவர்களுக்கு மருத்துவ வசதியை அளிக்க முடியும். அந்த அடிப்படையிலேயே உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் அடிப்படையில் உலக நாடுகள் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன.
“அவர்களில் ஒரு மனிதரின் சொற்கள்தான் என்னைப் பெரிதும் துன்புறுத்தின. அவர் ஒரு தச்சர். பெயர் ராம்ஜித். நேபாள எல்லையில் இருக்கும் கோரக்பூருக்கு டில்லியிலிருந்து நடந்தே செல்வது என்ற திட்டத்துடன் கிளம்பியிருந்தார். “மோடிஜி இதனைச் செய்வது என்று முடிவு செய்வதற்கு முன், எங்களைப் பற்றி யாரும் அவருக்கு எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை எங்களைப் பற்றி அவருக்குத் தெரியாமலும் இருக்கலாம்” என்றார் ராம்ஜித்.
“எங்களை” என்று அவர் குறிப்பிட்டாரே, அவர்களின் எண்ணிக்கை சுமார் 46 கோடிப் பேர்.
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில்” அருந்ததி ராய் மேற்கண்டவாறு எழுதினார். அப்படி ஒரு குடும்பத்தினரின் கதை தான் இந்தக் கட்டுரை!
***
புலம்பெயர்ந்த தொழிலாளியான சாபு மண்டல் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனை ரூ. 2500க்கு விற்றார்.
பீகாரில் இருந்து குர்கானில் குடியேறிய 35 வயதான சாபு மண்டல் ஒரு வண்ணம் பூசும் தொழிலாளியாவார். கடந்த வியாழக்கிழமை காலை, தனது செல்பேசியை ரூ. 2,500 க்கு விற்றார். அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு சிறிய மின்விசிறி மற்றும் சில மளிகை பொருட்களை வாங்கினார். அந்த பொருட்களுக்கக அவரது பெரிய குடும்பமான மனைவி, அவரது பெற்றோர், மற்றும் அவரது நான்கு குழந்தைகள் (ஐந்து மாத கைக்குழந்தை உட்பட) காத்திருந்தார்கள்.
அவர் வீடு திரும்பிய போது அவரது மனைவி பூனம் மகிழ்ச்சியடைந்தார். காரணம் குடும்பத்தினருக்கு புதன்கிழமை முழுவதும் சாப்பிட எதுவும் இல்லை. அதற்கு முன்பே, பகுதியில் இலவசமாக விநியோகிக்கப்படும் உணவையும் அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியைத்தான் அவர்கள் நம்பியிருந்தார்கள்.
சாபு மண்டலின் மனைவி பூனம் சமைக்கத் தொடங்குவதற்கு முன்பு, கழுவுதற்குச் சென்றார். அதே நேரத்தில் அவரது தாயார் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மரத்தடியில் உட்காரச் சென்றார். மண்டலின் மாமியார் அருகிலுள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இப்படியாக குடும்பத்தினர் வெளியே இருந்தபோது, மண்டல் தனது குடிசையின் கதவை மூடி, ஒரு கயிற்றைப் பயன்படுத்தி, கூரையிலிருந்து தூக்கில் தொங்கி இறந்து போனார்.
தற்கொலை செய்து மாண்டுபோன வண்ணம் பூசும் தொழிலாளி சாபு மண்டலின் மனைவி அவரது குழந்தைகளுடன் நொறுங்கிப் போய் அமர்ந்துள்ளார்.
“அரசின் கதவடைப்பும், ஊரடங்கும் தொடங்கியதிலிருந்து என் கணவர் மிகவும் பதற்றமாய்த்தான் இருந்தார். வேலையும் இல்லை. பணமும் இல்லை. இலவச உணவைத் தான் முழுமையாக நம்பியிருந்தோம், ஆனால் எல்லா நாளும் இலவச உணவு கிடைப்பதில்லை” என்கிறார் பூனம்.
குர்கான் காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, மண்டல் “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என்று கூறினார்கள்.
“நேற்று பிற்பகல் இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த நபர் புலம்பெயர்ந்த தொழிலாளி, மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த குடும்பம் இந்த விஷயத்தில் மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆகையால், முதல் தகவல் அறிக்கை (FIR) எதுவும் பதிவு செய்யப்படவில்லை” என்று பிரிவு 53 காவல் நிலைய எஸ்.எச்.ஓ தீபக் குமார் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாக அதிகாரிகள் 35 வயதான மண்டலை “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என்று வலியுறுத்தினார்கள். “இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், தொற்று நோய் பரவியதால், அந்த நபர் சற்று கலக்கம் அடைந்தார். உணவு கிடைப்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை, அருகிலேயே உணவு விநியோக இடமும் உள்ளது” என்று ஒரு மாவட்ட அதிகாரி கூறினார்.
சரஸ்வதி கஞ்சில் வசிப்பவர்களுக்கு அருகில் பிரிவு 56-ல் உணவு விநியோகிப்பதற்கான சமூக மையம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“பிரிவு 56 லும், வஜிராபாத்திலும் உணவு விநியோகம் உள்ளது. ஆனால் அவை நடந்துபோய் வாங்க சாத்தியமில்லாத தொலைவில் இருக்கின்றன. நான் ஊனமுற்றவன். எனது துணைவியார் மிக வயதானவர். பிள்ளைகளும் நடந்து கூட்டி செல்லமுடியாத சின்ன குழந்தைகளாக இருக்கின்றார்கள். அதுவும் பசியோடு அழைத்து செல்வது சாத்தியமில்லை.” என மண்டலின் மாமனார் உமேஷ் கூறினார்.
பீகாரைச் சேர்ந்த சரஸ்வதி குஞ்சின் மற்றொரு குடியிருப்பாளரான ஃபிரோஸ், “சில போலீசார் வெளியே செல்பவர்களை மோசமாக நடத்துவதால் குடியிருப்பாளர்கள் வெளியே செல்ல பயப்படுவதாகவும்” கூறினார்.
“உணவு விநியோகத்தில் யாரேனும் விடுபட்டிருந்தால், அது சரிசெய்யப்படும்” என மாவட்ட நிர்வாக அதிகாரி கூறினார். “உணவு விநியோகத்திற்கான முயற்சிகள் அதிகரிக்கப்படும்” என ஒரு அதிகாரி கூறினார்.
15 ஆண்டுகளுக்கு முன்புதான் பீகாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த மண்டல் குர்கானுக்கு குடிபெயர்ந்து வண்ணம் பூசும் தொழிலாளியாக பணிபுரிந்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர் திருமணம் செய்துகொண்டு தனது குடும்பத்தை நகரத்திற்கு மாற்றினார். கடந்த பல மாதங்களாக, அவர்கள் சரஸ்வதி குஞ்சில் வசித்து வந்தனர். இரண்டு குடிசைகளுக்கு தலா ரூ .1,500 வாடகைக்கு செலுத்தினார். கடந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பலிருந்து வேலைகள் கிடைப்பது சிரமமாகிவிட்டது” என்று உமேஷ் கூறினார்.
“மாசு காரணமாக கட்டுமான வேலைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் கட்டுமான நிறுவனங்கள் வேலையை நிறுத்திவிட்டன. அதன் பிறகும், வேலை சிறிதளவே கிடைத்தது. கூலியாக கிடைப்பதை வைத்துக்கொண்டு சமாளித்தோம். ஊரடங்குக்கு முன்பு கடந்த ஒரு மாதமாக, அவருக்கு ஓரிரு நாட்களில் மட்டுமே வேலை கிடைத்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தால், தன்னாலும் வேலை செய்ய முடியவில்லை” என்கிறார் உமேஷ் . தனக்கு கிடைத்த சிறிய வேலைகளால் இரு வீடுகளையும் மண்டல் தான் பராமரித்து வந்தார்.
மார்ச் 22 மாலை குர்கானில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே, குடும்பத்தினர் கையில் பணமில்லாமல் தான் இருந்தோம். வீட்டு உரிமையாளரும், ஒன்று, இரண்டு முறை வாடகை கேட்டார். இது கூடுதல் அழுத்தத்தை தந்தது.
வேலை இழந்த அனைவரும் ஒவ்வொரு நாளும் உணவு விநியோகிக்கப்படுவதை கவனித்து ஓடி ஓடி வாங்க தொடங்கினர். நாங்களும் அப்படித்தான் வாங்கினோம். கொஞ்சம் தாமதித்து போனாலும், எதுவும் கிடைக்காது” என பூனம் கூறினார்.
”வியாழக்கிழமை காலை, என் கணவர் ரூ. 10000-த்துக்கு வாங்கிய தொலைபேசியை விற்க முடிவு செய்தார். அதை விற்று, கிடைத்தப் பணத்தில் கொஞ்சம் உணவுப்பொருட்களும், அதிகரித்து வரும் வெயிலால், வீட்டுக்கூரை தகரம் என்பதால், வீட்டிற்குள் வெக்கையால் இருக்கமுடியாமல் போனது. அதற்காக ஒரு மின்விசிறியும் வாங்கினார்” என்றார் பூனம்.
“நாங்கள் எல்லோரும் மனஅழுத்தத்தில் இருந்தோம். எங்கள் எல்லோரையும் கவனிக்க கூடிய பொறுப்பில் இருந்ததால், அவருக்கு எங்களை விட மனஅழுத்தம் இருந்தது. எங்களுக்கும் அது தெரியும். ஆனால், அவர் தற்கொலை செய்துகொள்வார் என நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.” என்கிறார் பூனம்.
மண்டலின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை காலை குர்கானில் இறுதி சடங்குகளை மேற்கொண்டனர். “டெம்போ, ஆம்புலன்ஸ் மற்றும் பிற சடங்குகளுக்கு என எந்த செலவிற்கும் எங்களிடம் எதுவும் இல்லை. தெரிந்தவர்களிடமும், குர்கானில் உள்ள எங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடமும் நிதி நன்கொடையாகக் கேட்டோம், ரூ.5 ஆயிரம் தான் வசூலிக்க முடிந்தது. எனது மருமகனின் கடைசி சடங்குகள் கூட கடன் வாங்கிய பணத்தில்தான் செய்யப்பட்டது,” என்றார் உமேஷ்.
“மொத்த குடும்பத்தையும் தாங்கிய குடும்பத் தலைவரை இழந்த துக்கம் ஒருபுறம். இனி எங்களுக்காக சம்பாதிக்க யாரும் இல்லை என்ற உண்மையை நாங்கள் எதிர்கொள்ளவேண்டும். நெருக்கடி நிலைமை சரியான பிறகு, வீட்டு வேலைகள் செய்யலாம் என்று இருக்கிறேன். வேலையை தேடவேண்டும். ஆனால் இன்னும் 15 நாட்கள் உள்ளன,” என்று பூனம் கூறினார்.
திருவண்ணாமலை நகருக்கு அருகில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் வசித்துவரும் குடுகுடுப்பைச் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 700 பேர் கரோனா கால ஊரடங்கால் வருவாய்க்கு வழியின்றி பசியால் வாடுவதை அறிந்து அவர்களுக்கு உதவிகள் செய்யும் பணியை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மேற்கொண்டது.
18.04.2020 அன்று நேரில் சென்று உண்மை நிலவரத்தை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யுமாறு சமூக தன்னார்வலர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அம்மக்களின் தேவை குறித்து காணொளி உள்ளிட்ட விவரங்களோடு சமூகவலைதயங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நேரில் சென்று உதவமுடியவில்லை என்றால் பொருளாகவோ, பணமாகவோ தருமாறு பொதுமக்களிடம் கோரப்படது. அதன் அடிப்படையில் பலர் பொருளாகவும், பணமாகவும் கொடுத்து உதவினர்.
19.04.2020 அன்று அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த உதவி குறித்து சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியான பிறகு வழக்கறிஞர் பாசறை பாபு மூலம் தடை சாமிகள் அசிரமத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். திருவண்ணாமலை ஒன்றிய தி.மு.க சார்பிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நகரின் மிக அருகில் வசிக்கும் மக்களுக்குக்கூட மாவட்ட நிர்வாகம் உதவ முன்வராத போது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் முயற்சி எடுத்து பழங்குடி மக்களின் பசியைப் போக்கி உள்ளனர்.
தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் திருவண்ணாமலை.
நாம் பள்ளிகளில் பெறும் கல்வியானது நம்மை கட்டுப்படுத்துகின்றதா அல்லது விடுவிக்கின்றதா என்கிற கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான தருணம் இது. நாம் படைப்பூக்கமுள்ளவர்கள் ஆகிறோமா அல்லது நமது அழகியல், கலை ஆர்வம், மனிதத்தன்மை போன்றவற்றை இழக்கிறோமா?
ஒவ்வொரு நாளும் நமது கல்வி முறை நமக்கு துரோகமிழைக்கிறதா?
நான் முதலில் என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து துவங்குகிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும் ஒவ்வொரு மாணவனும் எதிர் கொள்ளும் தயக்கம், அடுத்து பதினோராம் வகுப்பில் எந்தப் பிரிவை தெரிவு செய்வது என்பது தான். பெரும்பாலும், இந்த முடிவை பெற்றோர் அல்லது குறிப்பிட்ட பாடப் பிரிவுக்கு சமூகம் அளித்துள்ள அந்தஸ்து ஆகியவை தான் தீர்மானிக்கிறது. என்னதான் குறிப்பிட்ட பாடப் பிரிவை மற்றவற்றை விட மேலாக கருதுவது தவறு என்கிற புரிதல் இருந்தாலும் இவ்வாறு தான் நடக்கிறது. சமூகம் வரிசைக்கிரமமான இந்த பாகுபாட்டின் அடிப்படையில் தான் செயல்படுகின்றது.
“எனது நெருங்கிய தோழி”
என்னுடைய நெருங்கிய தோழிக்கு வணிகவியல் பிரிவை தேர்ந்தெடுக்க விருப்பம்; ஆனால் அவளது பெற்றோர் அறிவியல் பிரிவை தெரிவு செய்ய வைத்தனர். “நமது மொத்த குடும்பமும் பள்ளியில் அறிவியல் பிரிவை எடுத்து தான் படித்துள்ளது – எனவே நீயும் அதைத் தான் தெரிவு செய்ய வேண்டும். அறிவியல் பிரிவை எடுத்துப் படித்தால் தான் உனக்கு நல்ல எதிர்காலம் அமையும்” என்பது அவளது தந்தையின் கருத்து. இத்தனைக்கும் அவர் ஒரு பொறியாளர்.
அவளுக்கு அறிவியலின் மேல் ஆர்வம் இல்லை என்பதால் பதினோராம் வகுப்பில் என்ன முயற்சித்தும் சரியாக படிக்க முடியவில்லை. நாட்கள் செல்லச் செல்ல ஆர்வமிழந்து தனிமைப்பட்டுப் போனாள். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது அவளால் தன் பெற்றோரிடம் அது குறித்துப் பேச முடியவில்லை. இத்தனைக்கும் தன்னுடைய ஆசிரியரிடம் அவளால் தனது பிரச்சினைகளைக் குறித்து மனம் திறந்து பேச முடிந்தது.
இறுதியில் அந்த ஆசிரியர் அவளது பெற்றோரை அழைத்து விருப்பமில்லாத பாடப் பிரிவை திணிப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை எடுத்துச் சொல்லி அவள் விரும்பும் பாடப் பிரிவுக்கு மாற அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அந்த தந்தையோ தன் மகளின் ‘தோல்வியை’ தனக்கு நேர்ந்த அவமதிப்பாகவும் இழிவாகவும் கருதினார். குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல தன் மகள் தவறி விட்டதாக கருதினார். அந்த சூழலிலும் அவரது கண்களுக்கு மகளின் “குறைந்த மதிப்பெண்களே” தெரிந்தன – அவளது கண்ணீர் தெரியவில்லை. ஓராண்டாக தன் மகள் அடைந்திருக்க கூடிய துயரங்கள் அவருக்குப் புரியவில்லை.
சிக்கலின் ஆழம் என்னவென்பதை தந்தையால் புரிந்து கொள்ள முடியவில்லை; அவளின் தாயோ அமைதியாக இருந்தார்.
எல்லா முடிவுகளையும் குடும்பத் தலைவரே எடுக்க வேண்டும் என்பது பரவலான நம்பிக்கை என்பதால் அவளது தந்தையே அவளின் தெரிவுகளையும் அவளைக் கேட்காமலேயே தீர்மானித்தார். “உன்னால் அறிவியலைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், நீ கலைத் துறையை எடுத்துப் படிக்கத் தான் லாயக்கு” என்றார்.
ஒவ்வொரு பாடப் பிரிவும் ஒரு ஏணிப்படி போல் அமைந்த வரிசைக் கிரமமான மதிப்பைப் பெற்றுள்ளது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இவ்வாறு பாடப் பிரிவுகளுக்கு இடையே கற்பிக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் எந்தளவுக்கு நமது சிந்தனையை மாசுபடுத்தியுள்ளது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
எனது தோழி அதன் பின் அனைத்திலிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்தாள். 12ம் வகுப்பு முழுவதும் அவளுக்கு கொடுமையான அனுபவமானது. அவள் பள்ளியையும், புத்தகங்களையும்.. ஏன், கல்வியையே கூட வெறுக்கத் துவங்கினாள். கழுத்தை நெறிக்கும் வகுப்புகளுக்கும், புத்தகங்களுக்கும் இடையில் அவள் தனது ஓவிய நோட்டிலும் பென்சிலிலும் ஆறுதல் தேடினாள். எனது தோழி மிகச் சிறந்த ஓவியர்; அவளுக்கு அபாரமான படைப்புத்திறன் இருந்தது. நோக்கமற்ற ஓவியங்களை வரைவதில் இருந்து துல்லியமான உருவப்படங்களை வரைவது வரை அவளது கரங்கள் அற்புதங்களை நிகழ்த்தின.
தனது ஆர்வம் எதில் உள்ளது என்பதை அவள் கண்டு கொண்டாள். 12ம் வகுப்புக்குப் பின் நுண்கலை படிக்க விரும்பினாள். எனினும் அந்தக் கனவை தன் தந்தையிடம் சொல்ல அஞ்சினாள். தனது ஓவியங்களை அவரிடம் காட்டக் கூட பயந்தாள். அவள் பொதுத் தேர்வின் இறுதியில் 75 சதவீத மதிப்பெண் எடுத்த போது அவளது தந்தையின் ஆங்காரம் அதிகரித்தது. தன் குடும்பத்தாரின் முந்தைய சாதனைகளோடு ஒப்பிட்டு இழிவு படுத்தும் போக்கு தொடரத் தொடர, அவள் தன்னையே இழக்கத் துவங்கினாள்.
மீண்டும் அவளது விருப்பத்தைக் கேட்காமலேயே தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிரிவை எடுத்துப் படிக்க அவளது தந்தை வலியுறுத்தினார். பொதுவாக எல்லா மாணவர்களுக்கும் மகிழ்ச்சிகரமாக அமையும் கல்லூரி முதலாம் ஆண்டு அவளைப் பொருத்தவரை பெரும் சித்திரவதையாக அமைந்தது. அந்த சமயத்திலும் தொடர்ந்து வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கச் சொல்லி அவளை நெருக்கிக் கொண்டே இருந்தனர்.
முதலாம் ஆண்டின் இறுதியில் அவளது தந்தை சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதச் சொல்லி வற்புறுத்த துவங்கினார். அந்த சமயம் ஒரு நாள் அவள் மிகுந்த கவலையுடன் என் வீட்டிற்கு வந்தது நினைவில் உள்ளது. வந்ததும் அழத் துவங்கினாள் – அந்தக் கண்ணீரே அனைத்தையும் சொன்னது. அவளது இருதயம் குத்திக் கிழிக்கப்பட்ட வலியை என்னால் உணர முடிந்தது. சிவில் சர்வீஸ் பரீட்சையில் முதல் முயற்சியிலேயே தேர்வாகாவிடில் தனக்கு திருமணம் முடித்து வைத்து விடுவதாக தன் தந்தை கூறியதை உடைந்த குரலில் சொன்னாள்.
பரீட்சைகளின் அழுத்தம், மதிப்பெண்கள், சிவில் சர்வீஸ் தேர்வு, உடைந்து நொறுங்கிப் போன கனவுகள், திருமண அச்சம், தோல்வி குறித்த அச்சம் என எல்லாமாகச் சேர்ந்து அவளது ஆன்மாவை கிழித்துப் போட்டது. ஒரே ஒரு முறையாவது உன் தந்தையிடம் பேசலாமே என்று அவளிடம் சொன்னேன். உன்னுடைய ஆர்வம் குறித்து அவருக்கு தெரியப்படுத்தலாமே என்றேன். தேவைப்பட்டால் உன் சார்பாக நான் அவரிடம் பேசட்டுமா என்று கேட்டேன். “அவர் புரிந்து கொள்ள மாட்டார். எப்போதும் புரிந்து கொள்ள மாட்டார்” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாள். நீ பேசினால் அதற்கும் என்னைத் தான் திட்டுவார் என்றாள். குடும்பத்துக்கு வெளியே இதையெல்லாம் பேசலாமா எனக் கேட்பார் என்றாள்.
சில மாதங்கள் கழிந்தது. ஒவ்வொரு நாளும் அவள் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அவள் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படிக்க முயன்றாள். ஆனால், இந்த முறை அவளால் தன்னையே அதில் திணித்துக் கொள்ள முடியவில்லை. அச்சம் மெல்ல மெல்ல அவளை ஆட்கொண்டது. அவள் இயல்பாக மூச்சு விட முயற்சித்தாள். “இந்த கொந்தளிப்புகளில் இருந்து தப்பிக்க வேண்டும்” என அடிக்கடி என்னிடம் சொல்வாள்.
ஒரு அக்டோபர் மாத மத்தியில் அவள் தூக்கிட்டு செத்துப் போனாள். அவள் தற்கொலை செய்து கொண்டாள்.
அவள் ஒரு விதிவிலக்கு அல்ல. அவளது தற்கொலை அவளுடையது மட்டுமல்ல. அவளும் நம்மைப் போலவே இந்த விஷம் பரவிய, அடக்குமுறை கொண்ட, குறுகலான கல்வி முறையின் ஒரு விளை பொருள் தான். அவளது மரணம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது. இந்தக் கொடூரமான அமைப்புமுறை அவளைத் திட்டமிட்டுக் கொன்றது. இந்த அமைப்பு முறையில் கிஞ்சிற்றும் மனித சாரம் கிடையாது; ‘வெற்றி’ ‘தரவரிசை’ மற்றும் ‘முதலிடம்’ போன்ற குறுகலான கண்ணோட்டத்தின் மூலம் அவளது பெற்றோரை குருடர்களாக்கியது இந்த அமைப்பு முறை.
அவளது மரணத்திற்குப் பின் நான்கு வருடம் கழித்து இன்று பத்தாம் வகுப்பு படிக்கும் அவளது இளைய சகோதரியும் அடுத்து 11ம் வகுப்பில் அறிவியல் பிரிவை எடுத்துப் படிக்க நிர்பந்திக்கப் படுகிறாள். கல்வி குறித்த தங்களது கண்ணோட்டம் ஏற்படுத்திய இழப்பை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்தக் கல்வி முறை எப்படி தங்களை முற்றிலுமாக ஏமாற்றியது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
முற்றிலும் தனிப்பட்ட இந்த தகவல்களை நான் சொல்வதற்கு காரணம், தனிப்பட்ட ஒவ்வொன்றும் அரசியல்மயமானது என்பதற்காகத் தான். நமது தனிப்பட்ட அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மைச் சுற்றியுள்ள சமூக மற்றும் கலாச்சார நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டவையே என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.
என் தோழியின் தற்கொலைக்குப் பின் நமது மொத்த கல்வி முறையும் எந்தளவுக்கு தவறானது என்பதை நான் புரிந்து கொண்டேன். நமக்குள் கருணையை உருவாக்க அது தவறி விட்டது. நமது உணர்வுகளை கூர்தீட்டுவதற்கு பதில் மழுங்கடித்து விட்டது. நம்மைச் சுற்றிலும் உள்ள மனிதர்களைக் குறித்து அக்கறை கொள்ள அது பயிற்றுவிக்கவில்லை. மேலும் இந்த கல்வி முறையானது பொறுப்பற்ற, போலியான, கற்பனையான ‘வெற்றி’ என்கிற கருத்தாக்கத்தைக் கொண்டு நம்மை மொத்தமும் குருடர்களாக்கி விட்டது.
‘தப்பிக்க ஏதும் வழியுண்டா?’
இது போன்ற நெருக்கடியான தருணங்களில் மாற்று கல்வி முறை குறித்து சிந்திப்பது அத்தனை சுலபமல்ல. எனினும் நாம் கல்வியின் இயங்கியல் (dynamics of Education) குறித்த தேடலைத் துவங்க வேண்டும். தனிநபர்களாக நாம் இதுவரை (இந்த கல்வி முறையில் இருந்து) கற்றுக் கொண்டதை மூளையில் இருந்து அழிப்பது அவசியம் என்பதை உணர வேண்டும்.
ஒருமைப்பாடு, அனுசரித்துப் போதல் போன்றவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு கல்வி முறை நமக்குத் தேவையில்லை. மாறாக நமக்குத் தேவையான கல்வி முறையானது பன்முகத்தன்மைக்கு இடமளிப்பதாகவும், படைப்பூக்கம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஓர்முனையிலான உரையாடும் சூழலில் சொல்லிக் கொடுக்கப்பட்டவைகளை தாண்டி ஒவ்வொன்றையும் படைப்பூக்கத்துடனும், விமர்சனப்பூர்வமாகவும் அணுகும் சிந்தனையை வளர்க்க கூடியதாக இருக்க வேண்டும். செயல்முறைக் கற்றலின் வழியே மாணவர்களுக்கு மத்தியில் பரஸ்பர அன்பும் கருத்துப் பரிமாற்றமும் நிகழ்வதை உறுதி செய்யும் விதமான கல்வி முறையே நமக்குத் தேவை – மாறாக, முதலாளித்துவ கல்வி முறையை போல் சந்தைப் போட்டிக்குள் நம்மை அள்ளித் திணிக்க கூடாது.
இது போன்ற ஒரு கல்வி முறைக்கு நாம் போராட வேண்டும், அதை நோக்கி வேலை செய்ய வேண்டும்.
கட்டுரையாளர் : Apoorva Pandey, a masters student at centre for the study of social systems,
Jawaharlal Nehru University.