Thursday, August 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 283

உள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் !

டந்த ஆகஸ்டு 5-ம் தேதி அரசியல் சாசனத்தின் 370-வது சட்டப் பிரிவின் படி காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபரில் உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

எங்கும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் சிறையில் இருக்கின்றனர். பிரதான கட்சிகளான மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணித்துவிட்டன. இதுவரை வரலாற்றிலேயே இல்லாத நிலைமை இது. அரசியல் கட்சி தலைவர்கள், அவர்களுக்கு வாதாடும் வழக்கறிஞர்கள், வியாபாரிகள், ‘பிரிவினைவாதிகள்’ என ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆள் இல்லாத விளையாட்டு மைதானத்தில் தானே பந்துவீசி தானே பேட்டிங் செய்து ஸ்கோரைத் தட்டிவிடலாம் என கணக்கு போட்டது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல்.

Kashmir-Poll
துப்பாக்கி முனையில் ஓட்டு போடும் காஷ்மீரிகள். இதுவா ஜனநாயகம்…?

370 சட்டப் பிரிவின் படியான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதால் கிடைக்கும் ‘நன்மைகள்’ குறித்து இரண்டு மாதங்களாக காஷ்மீர் முழுவதும் பிரச்சாரம் செய்துள்ளது பா.ஜ.க. பா.ஜ.க.வின் ‘தொண்டர்கள்’ 24X7 என தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தனர். செல்வாக்கில்லாத காங்கிரசு கட்சி மட்டும் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டி இடப் போவதாக அறிவித்தது. இருப்பினும், செல்வாக்குள்ள மாநிலக் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதால் சுயேட்சைகளுக்கும் பி.ஜே.பி.-க்குமான தேர்தலாக இது மாறியது. தனது கட்சியில் கீழ்மட்டத்தில் இருக்கும் ரௌடிகள், குண்டர்கள், பண்டாரம் பரதேசிகளுக்கெல்லாம் கொள்ளையடிப்பதற்கு இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலை ஒரு நல்வாய்ப்பாகக் கருதியது.

ஆனால், “ஆயிரம் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைண்ட்” என்பது போல இத் தேர்தலில் பா.ஜ.க.வின் நிலை மோசமாகிவிட்டது. மொத்தமுள்ள 307 பஞ்சாயத்து தொகுதிகளில் 217 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். ஏறக்குறைய ஒரு மாத காலம் முழுவதும் பா.ஜ.க. மட்டுமே பெரும் பலத்துடன் பிரச்சாரம் செய்த பொழுதும் 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. 81 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது பா.ஜ.க.

குப்வாரா, பாண்டிபோரா, காண்டர்பால், ஸ்ரீநகர், குலகம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. பாரமுல்லா மாவட்டத்தில் பா.ஜ.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

படிக்க:
காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !
♦ ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1

காஷ்மீரில் பா.ஜ.க.-விற்கு கிடைத்த ஒரே ‘வெற்றி’ ஷோபியன் மாவட்டம்தான். அங்குதான் எட்டு இடங்களையும் பா.ஜ.க. வென்றது. ஆனால், அதில் ஆறு இடங்களில் எதிர்த்து யாரும் போட்டி இடவில்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

மற்றொருபுறம், இதுவரை இல்லாத வகையில் 98.3% வாக்குப் பதிவு நடந்ததாக மோடி அரசும், அதன் ஊதுகுழல்களான ஊடகங்களும் கூறுகின்றன. சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டது முதல் மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்; பல எதிர்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. ஆனாலும் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு 98.3% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக மோடி அரசு சொல்கிறது.

யாரையும் போட்டியிட விடாது தடுத்துவிட்டு, அதை ‘போட்டி’ என்கிறது பாஜக.

மோடி அரசு சொல்வது போல இது உண்மையாக இருந்தால் அதன் பொருள் என்ன? அதாவது, மாநிலக் கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. மட்டும் போட்டி இட்டு, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் மக்களை நிறுத்தி நடத்தப்பட்ட தேர்தலில் கூட மக்கள் பா.ஜ.க-வை வெற்றி பெறச் செய்யவில்லை, சுயேட்சையைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மக்கள் தீர்ப்பு என்பது, பா.ஜ.க. முகத்தில் காஷ்மீர் மக்கள் காறி உமிழ்ந்திருப்பதையே காட்டுகிறது.

ஆனால், பா.ஜ.க. சொல்வது போல அங்கு தேர்தலில் 98.3% வாக்குப் பதிவு நடக்கவில்லை என்பதற்கு பல நிகழ்வுகளைச் சொல்ல முடியும். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தொகுதி பக்கமே செல்லவில்லை. பாதுகாப்பு கருதி ஸ்ரீநகரில் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வேட்பாளர் ஊருக்குள்ளே போய் ஓட்டு கேட்கவேமுடியாது என்ற நிலைமை பல இடங்களில் நிலவியது. இதுமட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 137 வட்டாரங்களில் 19,582 இடங்களுக்கு 7,528 இடங்களில் மட்டும் தான் தேர்தல் நடந்துள்ளது. மீதமுள்ள 12,054 (61.5%) இடங்களுக்கு யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதுதான் எதார்த்த கள நிலைமை. இந்த நிலைமை இருந்தபோதிலும் மக்கள் 98.3% மக்கள் வாக்களித்ததாக பா.ஜ.க. சொல்வது எவ்வளவு பெரிய பொய்!

பொய்களின் மூலம் பாசிசம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எத்தனிக்கிறது. ஏனெனில், அதனிடம் உண்மை இல்லை. உண்மை அதனிடம் இருக்கவும் முடியாது. காஷ்மீரை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்திவிட்டதாகவும் பா.ஜ.க. தான் செல்வாக்காக இருக்கும் மாநிலங்களில் ஒரு பொய்யைப் பரப்பலாம். உண்மை அதற்கு நேரெதிரானது, அது அதற்குரிய வினையை ஆற்றியே தீரும். அது மோடியாலோ அவர்களை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிஸ்டுகளாலோ அந்த உண்மையை மறைத்துவிட முடியாது.

படிக்க:
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் ?

இவ்வளவு பேர் சுயேட்சைகள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்ற கேள்விக்கு விடை தேட ஒரு சம்பவத்தை மட்டும் பார்ப்போம். குப்வாரா மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தலில் ஷாடிகாம் கிராமத்தில் இருந்து 41 வயதுடைய நசீமா பானோ போட்டியிட்டார். அவரது ஒரே கோரிக்கை, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (PSA) கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்ற தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே. இதுபோல நூற்றுக்கணக்கானோர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். சுயேட்சைகள் அதிக அளவில் வெற்றிபெற்றதற்கான காரணமும் இதுதான்!

***

ரோடு போடுதல், பள்ளிக்கூடம் கட்டுதல், தெருவிளக்குக் கம்பம் அமைத்தல், உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், பாலம் கட்டுதல் போன்றவற்றில் காண்ட்ராக்ட் எடுத்து கமிசன் பார்ப்பது, டூவீலர் ஸ்டாண்ட், காய்கறி சந்தை போன்றவற்றில் வரும் வருவாயில் கமிசன் அடித்தல், நூறுநாள் வேலைத்திட்டம், மருத்துவ முகாம், விழிப்புணர்வு முகாம் போன்றவற்றிற்கு அரசு ஒதுக்கும் தொகையில் கமிசன் அடித்தல் என பலவகைகளில், உள்ளூர் அளவில் இருக்கும் பண முதலைகள், ரௌடிகள், ஆதிக்க சக்திகள், மாஃபியாக்கள், மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுதான் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்.

அதிகாரப் பரவலாக்கல், வேர்மட்ட ஜனநாயகம், பஞ்சாயத்து ராஜ் என்று பல அலங்காரச் சொற்களால் மறைக்கப்படும் இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றி என்பது சாதி பலம், பண பலம், குண்டர் பலம் ஆகியவைதான் தீர்மானிக்கின்றன. பல கட்சிகள் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது, அது ஏதோ ஜனநாயகத் திருவிழா என்ற ஒரு பொய்யை தொடர்ந்து நிலைநாட்ட முடிகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீர் போன்ற இந்திய அரசின் ஆக்கிரமிப்பில் உள்ள இராணுவ ஆட்சி நடக்கும் பகுதிகளில் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது ஜனநாயகத் திருவிழா என்று யாரும் சொல்வதில்லை. மாறாக, இவற்றை மக்கள் புறக்கணித்தே வந்துள்ளனர். இதுதான் வரலாறு.

இருப்பினும் தற்போது ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட உள்ளாட்சி மன்றத் தேர்தல் இதற்கு விதிவிலக்கில்லை என்றாலும், இது பா.ஜ.க.வால், பா.ஜ.க.வின் கீழ்மட்ட குண்டர்களுக்காக மோடி அரசு நடத்திய தேர்தல் என்பதுதான் முக்கியமானது. என்ன ஒரு வித்தியாசம் என்றால், இதில் வெற்றி கிடைத்தது காஷ்மீர் மக்களுக்குத்தான்.

யாழினி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் ?

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேச நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான இஸ்லாமியரல்லாதவர்கள் இந்தியாவில் குடியேறியிருந்தால், அவர்களை இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

இந்தச் சட்டம் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்துகிறது, பிற அண்டை நாடுகளான இலங்கை, பர்மா ஆகியவற்றில் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களைப் பற்றி சட்டம் ஏதும் சொல்லவில்லை என்ற காரணத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றன.

ஆனால், அசாமில் இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கான காரணமே வேறு..

1971-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர், வங்கதேச விடுதலை போர் ஆகியவற்றின்போது, ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர். காலப்போக்கில் அவர்களுக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன.

இந்தக் குடியேறிகளால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி அசாமை பூர்விகமாக கொண்டவர்கள், பல்வேறு இயக்கங்களின் கீழ் பல வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, 1971-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதிக்கு முன்னதாக அசாமுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை அளிக்க முடிவு செய்து, 1951-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று, அதன் இறுதிப் பட்டியலும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

படிக்க:
குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !
♦ மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

இதையடுத்து, சட்டவிரோதமான முறையில் அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் வெளியேறுவார்கள் என்று அம்மாநிலத்தவர்கள் நினைத்திருந்தார்கள்.

இந்த நிலையில்தான் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் வங்கதேசத்திலிருந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை கிடைத்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான், அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஆக, பொதுவாக எதிர்க் கட்சிகள் காட்டும் எதிர்ப்பு என்பது குடியுரிமை வழங்குவதில் மதரீதியில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதற்காக. அசாமில் நிலவும் எதிர்ப்பு என்பது, யாருக்கும் குடியுரிமை கொடுக்கக்கூடாது என்பதற்காக.

இது முக்கியமான வேறுபாடு.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

மதுரை கருத்தரங்கம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

நாள் : 22.12.2019, ஞாயிறு, காலை 10.30 மணி.
இடம் : நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கம். (சோகோ அறக்கட்டளை), கே.கே. நகர், மதுரை.

தலைமை :

பேராசிரியர் அ. சீநிவாசன்
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.

கருத்தரங்க தலைப்பு :

அயோத்தி – காஷ்மீர் – சபரிமலை – தேசிய குடிமக்கள் பதிவேடு
பறிக்கப்படும் மனித உரிமைகள் தகர்க்கப்படும் அரசியல் சட்டம்.

கருத்தாளர்கள் :

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

திரு ஆளூர் ஷாநவாஸ்
மாநில துணைப் பொதுச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் தியாகு
பொதுச் செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.

நன்றியுரை :

திரு ம. லயனல் அந்தோணி ராஜ்
செயலாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.

நூலரங்கம் :

கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை.
தொடர்புக்கு : 73393 26807.

*****

Vinavu LIVE : தொழில்நுட்ப பிரச்சினை இல்லாத பட்சத்தில் இந்த நிகழ்வு மதுரையிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படும் – இணைந்திருங்கள்

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சுதந்திரம், நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை மீதான மிகப்பெரிய தாக்குதல்.

1992, டிச.6-பாபர் மசூதி இடிப்பு “தேசிய அவமானம்” என்றது உச்சநீதிமன்றம். நவ.9, 2019 தீர்ப்போ மனித குலத்திற்கே அவமானம்! ஆக்கிரமிக்கப்பட்ட ஓர் “அசையாச் சொத்து” தொடர்பான சிவில் வழக்கை – இந்து-முசுலீம் பிரச்சினையாகக் கருதி, அகழாய்வு செய்து, அரசியல் சட்ட அமர்வு விசாரித்ததே அப்பட்டமான அரசியல் சட்ட விரோதம்!

1858-லிருந்து 1885 வரை பாபர் மசூதியின் வெளிப்பகுதி ஆக்கிரமிப்பிற்கு எதிராக 8 வழக்குகள் நடந்து தீர்ப்பு பாபர் மசூதி நிர்வாகத்திற்கு ஆதரவாக வந்துள்ளது. 1934-ல் பாபர் மசூதியின் டூம்கள் சேதப்படுத்தப்பட்டதை, சரிசெய்தது வெள்ளை அரசு. பாபர் காலத்திலிருந்து, வெள்ளை அரசுவரை மசூதிக்கு மானியம் வழங்கப்பட்டது.

1949, டிச.16-வரை பாபர் மசூதியில் தொழுகை நடத்தப்பட்டது; டிச.22-ல் சட்டவிரோதமாக சிலைகள் உள்ளே வைக்கப்பட்டது என்பதை ஏற்கும் நீதிமன்றம் இசுலாமியர்களிடம் தொடர்ந்து அனுபவம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்கிறது!

பிரிட்டிஷ் ஆட்சிவரையிலான பிரச்சினைகளை மட்டுமே இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்க முடியும் என்று சொல்லும் உச்சநீதிமன்றம், 1528-1858 வரை முசுலீம்கள் தொழுகை நடத்தியதற்கு ஆதாரம் கேட்பதேன்? 12-ம் நூற்றாண்டு ராமர் கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை ; 12-16 நூற்றாண்டுகள் (400 ஆண்டுகள்) வரலாறே இல்லை என்று சொல்லும் உச்சநீதிமன்றம், கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டினார் என்று சொல்லி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் – விஎச்பி – பாஜக கூட்டத்தைக் கண்டிக்காததுடன், டிச.6, 1992 மசூதி இடிப்பு வழக்கு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காதது ஏன்?

பாபர் மசூதி பிரச்சனை இந்து-முசுலீம் பிரச்சினை அல்ல. பெரும்பான்மை இந்துக்கள் – பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் பிறந்தார் என நம்பவும் இல்லை. தென்னகம், வட கிழக்கு மாநிலங்களில் இராமனுக்கு கோயிலே இல்லை. 17-ம் நூற்றாண்டுவரை உத்தரப் பிரதேசத்திலேயே ராமனுக்குக் கோயில் இல்லை. இந்த நாட்டின் இந்துக்களும் இசுலாமியர்களும் அமைதியாக வாழவே விரும்புகின்றனர். கலவரம் – வன்முறை செய்வதை தனது தொழிலாகக் கொண்டிருக்கும் பாஜக – ஆர்.எஸ்.எஸ்-தான் பாபர் மசூதி பிரச்சனையை உருவாக்கி நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தியது. மசூதியை திட்டமிட்டு இடித்தது.

மசூதி இருந்திருந்தால், அகழாய்வு நடந்திருக்குமா? மசூதியை இடித்து கோயில் கட்டு, என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? வழக்கு நடக்கும் போது, வழக்குச் சொத்து இடிக்கப்படுகிறது! எந்த நடவடிக்கையும் இல்லை ! வரலாற்றுக் குற்றத்தை சரிசெய்ய உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட வாய்ப்பு வீணடிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பால் தோற்றது இசுலாமியர்கள் அல்ல! நாட்டின் அரசியல் சட்டம், சமத்துவம், மதச்சார்பிமை, உலக அரங்கில் இந்திய மதிப்பு! சாட்சியத்தை நிராகரித்து, நம்பிக்கையின் அடிப்படையிலான பாபர் மசூதி தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் கறுப்பு நாளே!

படிக்க:
Revoke Citizenship Amendment Act, 2019 ! People’s Right Protection Centre – Press Release
♦ குடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு !

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எல்லோரும் ஏற்றே தீர வேண்டும் எனப் பேசும் பாஜக – ஆர்.எஸ்.எஸ் சபரிமலை பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை காலில் போட்டு மிதிக்கிறது. முத்தலாக் பிரச்சனையில் இசுலாமியப் பெண்களின் உரிமை பேசும் பாஜக, சபரிமலை செல்லும் இந்துப் பெண்களை அடித்து விரட்டுகிறது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது தீண்டாமை என்று சொன்ன உச்சநீதிமன்றமோ மவுனம் காக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உலகில் வேறெங்கும் இல்லாதவகையில் 75 லட்சம் காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்டது. ஜம்முகாஷ்மீர் மாநிலம் துண்டாடப்பட்டு, காஷ்மீர் மக்களின் அரசியல் சட்டம் தூக்கி எறியப்பட்டது. காஷ்மீர் இந்திய அரசோடு இணைந்த போது வழங்கப்பட்ட வாக்குறுதி அப்பட்டமாக மீறப்பட்டது.

காஷ்மீர் மக்கள், அரசு, சட்டப்பேரவை, அரசியல் அமைப்பு அவை எல்லாம் மத்திய அரசின் கவர்னருக்குச் சமம் என்ற அரசியல் சட்ட மோசடி அரங்கேற்றப்பட்டது. கடந்த 5 மாதங்களாக காஷ்மீர் மக்கள் திறந்த வெளி சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அநீதிக்கும் உச்சநீதிமன்றம் வாய்திறக்க மறுக்கிறது.

பொருளாதாரம் பாதாளத்தில் சரிந்து, விலைவாசி உயர்ந்து, மக்கள் வேலையிழந்து, வாழ்விழந்து தவிக்கும்போது தேசிய குடிமக்கள் பதிவேடு என்று சொல்லி ஒரே இரவில் 20 லட்சம் அசாம் மக்களை “சட்டவிரோதக் குடியேறிகளாக்கி” நாட்டை விட்டு வெளியேறக் கெடு விதிக்கிறது மோடி அரசு. இப்பாசிசச் சட்டம் இசுலாமியர்கள், தமிழர்களைக் குறிவைத்து நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் 6 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருந்தால் போதும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்கிறது பாஜகவின் புதிய குடியுரிமைச் சட்டம். 40, 50 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்கும் இசுலாமியர்கள், ஈழத்தமிழர்களுக்கு இச்சட்டம் பொருந்தாதாம்! எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? மத, இன அடிப்படையில் பிரிவினை செய்யக் கூடாது என்கிறது இந்திய அரசியல் சட்டம்! ஆனால் பாஜக மீறுகிறது, உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது.

மாற்றுக் கருத்து சொல்லும் அறிவுத்துறையினர், போராடும் மக்கள், அரசியல் சட்டத்தின் ஆட்சி கோருவோரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில், தேசிய புலனாய்வு முகமை மூலம் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கிறது மோடி – அமித்ஷா அரசு. பார்ப்பனீயத்தை எதிர்த்தால் கவுரி லங்கேஷ், கல்புர்க்கி போல சுட்டுத் தள்ளுகிறது. பேச்சுரிமை, கருத்துரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது. பாஜக-வின் பாசிசம் ஒட்டு மொத்த சமூகத்தையும் இருள் போல் சூழ்கிறது.

எனினும் வீழ்த்த முடியாத சக்தி அல்ல பாஜக. வரலாறு மாபெரும் சர்வாதிகாரிகளை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துள்ளது. நாட்டின் பெரும்பான்மை மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை. மகாராஷ்டிரத்தில் மண்ணைக் கவ்வினார் மாவீரர் அமித்ஷா.

சனாதனத்தை வீழ்த்தி, சட்டத்தின் ஆட்சியை உருவாக்கும் சமரை பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம்! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை காப்போம்!

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை.

சோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் !

உண்மை மனிதனின் கதை | ஆசிரியரின் பின்னுரை – 03

“நம்பிக்கைத் துரோகம் செய்து சோவியத் யூனியன் மீது நீங்கள் படையெடுத்தீர்கள். அதன் விளைவாக ஜெர்மனி முறியடிக்கப்பட்டுப் படுதோல்வி அடைந்தது. இவ்வாறு செய்ததன் மூலம் நீங்கள் மிகப் பெரிய குற்றம் இழைத்து விட்டீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கோயெரிங்கிடம் கேட்டார் சோவியத் தரப்பு வழக்குரைஞர் ரொமான் ருதேன்கோ.

“இது குற்றம் அல்ல, அழிவு விளைவிக்கும் தவறு” என்று விழிகளைக் கடுப்புடன் தாழ்த்திக் கொண்டு கம்மிய குரலில் விடையிறுத்தான் கோயெரிங்க். ”ஒன்று மட்டும் நான் ஒப்புக் கொள்ள முடியும்: நாங்கள் ஆய்ந்தோய்ந்து பாராமல் காரியம் செய்துவிட்டோம். ஏனெனில் எத்தனையோ விஷயங்களை நாங்கள் அறியாதிருந்தோம், பலவற்றை அனுமானிக்கவே இயலாதிருந்தோம் என்பது போர் நடக்கையில் எங்களுக்கு விளங்கிற்று. முதன்மையாக சோவியத் ருஷ்யர்களை நாங்கள் அறியவும் இல்லை. அவர்கள் எங்களுக்குப் புதிராக இருந்தார்கள், இருக்கிறார்கள். சோவியத் நாட்டின் உண்மையான போர் ஆற்றலை மிக மிகச் சிறந்த உளவுநிறுவனம் கூடக் கண்டறிய முடியாது. நான் குறிப்பிடுவது பீரங்கிகள், விமானங்கள், டாங்கிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அல்ல. இதை நாங்கள் கிட்டத்தட்டச் சரியாக அறிந்திருந்தோம். இயந்திரத் தொழிலின் திறனையும் இயங்கு ஆற்றலையும் நான் குறிப்பிடவில்லை. நான் கூறுவது மனிதர்களைப் பற்றி. ருஷ்ய மனிதன் வெளி நாட்டினருக்கு எப்போதுமே விளங்காத புதிராக இருந்து வந்திருக்கிறான். நெப்போலியனும் ருஷ்யனை புரிந்து கொள்ளவில்லை. நெப்போலியன் செய்த தவற்றையே திரும்பச் செய்தோம், அவ்வளவுதான்.”

“விளங்காப் புதிரான ருஷ்ய மனிதனை”, “சோவியத் நாட்டின் உண்மையான போர் ஆற்றலைப்” பற்றி கோயெரிங் வேறு வழியின்றி வெளிப்படையாக கூறியதை நாங்கள் பெருமையுடன் செவிமடுத்தோம். எவனது திறமையும் மேதையும் தியாகமும் வீரமும் போர் நாட்களில் உலகம் அனைத்தையும் பிரமிக்கச் செய்தனவோ, அந்தச் சோவியத் மனிதன் இந்த கோயெரிங்க் போன்ற பேர்வழிகளுக்கு நாசம் விளைவிக்கும் புதிராக இருந்தான், இருந்து வருகிறான் என்பதை நம்ப முடிந்தது. ஜெர்மானியர் “ஆளும் வர்க்கத்தினர்” என்ற ”அவலச் சித்தாந்தத்தைக்” கண்டுபிடித்தவர்கள், சோஷலிச நாட்டில் பிறந்து வளர்ந்த மனிதனின் ஆன்மாவையும் ஆற்றலையும் புரிந்து கொள்வது எங்கே? அப்போது நான் சட்டென அலெக்ஸேய் மாரெஸ்யோவை நினைவு கூர்ந்தேன்.

ஓக் பலகை முகப்பிட்ட இந்த ஆடம்பரமற்ற ஹாலில் அவனது பாதி மறந்துவிட்ட உருவம் பளிச்சென, இடைவிடாது என் முன் ஒளிர்ந்தது. கெய்த்தலின் தரைப் படையையும் கோயெரிங்கின் விமானப் படையையும் தகர்த்து நொறுக்கி, ரேடரின் போர்க்கப்பல்களைக் கடலின் அடித்தரையில் புதைத்து, தங்கள் விறல்மிக்க அடிகளால் ஹிட்லரின் கொள்ளைக்கார அரசைத் தூள் தூளாக்கிய கோடானுகோடி சாதாரண சோவியத் மக்களில் ஒருவனைப் பற்றிய கதையை இங்கேயே, நாசிசத்தின் வளர்ப்புப் பண்ணையாக விளங்கிய இந்த நியூரம்பெர்க் நகரிலேயே எழுதிவிட எனக்கு ஆசை உண்டாயிற்று.

மஞ்சள் அட்டை போட்ட நோட்டுப் புத்தகங்களை (இவற்றில் ஒன்றின் மேல் “மூன்றாவது ஸ்குவாட்ரனின் போர்ப் பறப்புகள் பற்றிய நாட்குறிப்பு” என்ற தலைப்பு மெரேஸ்யெவின் கைப்பட எழுதப்பட்டிருந்தது) நியூரம்பெர்க் நகருக்கும் நான் உடன் கொண்டு வந்திருந்தேன் . விசாரணைமன்ற அமர்விலிருந்து திரும்பியதும் பழைய குறிப்புக்களைப் படித்துத் தெளிவுபடுத்திக் கொள்வதில் முனைந்தேன். அலெக்ஸேய் மெரேஸ்யெவின் கதையை அவனுடைய தோழர்களிடமிருந்து கேட்டு அறிந்தவற்றையும் அவனது சொற்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுத முயன்றேன்.

எத்தனையோ விவரங்களை உரிய காலத்தில் குறித்து வைத்துக் கொள்ள எனக்கு இயலவில்லை. இந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ விஷயங்களை அலெக்ஸேய் மெரேஸ்யெவ் அப்போது சொல்லாமல் விட்டுவிட்டான். அரைகுறை விவரங்களை ஊகித்து இட்டு நிரப்ப நேர்ந்தது. அன்று இரவு அலெக்ஸேய் தன் நண்பகளைப் பற்றி எவ்வளவோ கனிவுடனும் விளக்கமாகவும் விவரித்தான். ஆனால் அவர்களது உருவச் சித்திரங்கள் காலப்போக்கில் நினைவிலிருந்து அழிந்து விட்டன. இவற்றைப் புதிதாக தீட்டவேண்டியிருந்தது. மெய் விவரங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற இங்கே எனக்கு வாய்ப்பு இல்லாமையால் நான் கதாநாயகனின் குலப் பெயரைச் சிறிது மாற்றினேன். அவனுக்கு வழித்துணையாக இருந்தவர்களுக்கு, அருஞ்செயலை நிறைவேற்றும் கடினமான பாதையில் அவனுக்கு உதவி செய்தவர்களுக்குப் புதுப் பெயர்கள் இட்டேன். இந்த நவீனத்தில் தங்களை கண்டுகொண்டால் அவர்கள் என்மேல் மனத்தாங்கல் கொள்ளாதிருப்பார்களாக.

நவீனத்துக்கு “உண்மை மனிதனின் கதை” என்று பெயரிட்டேன். ஏனெனில் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தான் உண்மையான சோவியத் மனிதன். எவனை கெர்மன் கோயெரிங்க் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லையோ, வரலாற்றின் படிப்பினை மறந்து விடும் போக்குள்ளவர்கள், நெப்போலியனும் ஹிட்லரும் போன வழியில் செல்ல இப்போதுங்கூட இரகசியமாக ஆசைப்படுவர்கள் அனைவரும் எவனை இன்றளவும் புரிந்து கொள்ளவில்லையோ, அந்த சோவியத் மனிதனே அலெக்ஸேய் மெரேஸ்யெவ்.

படிக்க :
அம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் !
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?

இவ்வாறு பிறந்தது இந்த “உண்மை மனிதனின் கதை.” புத்தகம் எழுதப்பட்டு அச்சிடத் தயாரானதும், அது வெளியாவதற்க்கு முன் கதாநாயகனுக்கு அதைப் படித்துக் காட்ட எனக்கு விருப்பம் உண்டாயிற்று. ஆனால் முடிவற்ற போர்முனைப் பாதைகளின் சிடுக்குப் பின்னலில் எங்கோ அவன் காண முடியாதவாறு மறைந்து விட்டான். எங்கள் இருவருக்கும் பரிச்சயமான விமானி நண்பர்களிடமும் அதிகாரபூர்வமான வட்டாரங்களிலும் விசாரித்துப் பார்த்தேன். அப்படியும் அலெக்ஸேய் மெரேஸ்யெவைத் தேடிக் காண எனக்கு உதவ அவர்களால் முடியவில்லை .

நவீனம் சஞ்சிகையில் வெளியாகிவிட்டது. அப்போது ஒரு நாள் காலை என் வீட்டு டெலிபோன் மணி அடித்தது.

“நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்” என்றது கரகரத்த ஆண்மைக் குரல். அது பழக்கமானது போலிருந்தது, ஆனால் யாருடையது என்பது நினைவில்லை.

“பேசுவது யாரோ?”

“மேஜர் அலெக்ஸேய் மெரேஸ்யெவ்.”

சில மணி நேரத்துக்குப் பின் அவன் என் வீட்டுக்கு வந்தான். முன் போலவே குதூகலமும் சுறுசுறுப்பும் செயலார்வமும் அவனிடம் பொங்கின. ஒரு சிறிது சாய்ந்தாடும் கரடி நடை நடந்தான். நான்கு போர்க்கால ஆண்டுகள் அவனிடம் அநேகமாக ஒரு மாறுதலையும் விளைவிக்கவில்லை.

“நேற்று நான் வீட்டில் உட்கார்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தேன். வானொலி முழங்கிக் கொண்டிருந்தது. ஆனால் என்ன ஒலிபரப்பப்படுகின்றது என்று கவனிக்காமலே நான் படிப்பில் ஆழ்ந்திருந்தேன். திடீரென்று அம்மா கிளர்ச்சி பொங்க ஓடிவந்து வானொலிப் பெட்டியைக் காட்டி, “கேள் மகனே, உன்னைப் பற்றியது தான் இந்த நிகழ்ச்சி” என்றாள். நான் உற்றுக் கேட்டேன். உண்மைதான். இந்த நிகழ்ச்சி என்னைப் பற்றியதே. எனக்கு நேர்ந்தது எல்லாம் விரிக்கப்பட்டது. நான் வியப்படைந்தேன், என்னைப் பற்றி இதை யார் எழுதியிருக்க முடியும் என்று. இதைப் பற்றி நான் யாருக்குமே சொன்னதில்லையே என்று நினைத்தேன். சட்டென்று நினைவு வந்தது நாம் அர்யோல் நகருக்கு அருகே சந்தித்ததும், நிலவறையில் இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் நான் பேசிக் கொண்டிருந்ததும்… இது எப்போதோ, அநேகமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்ததாயிற்றே என்று எண்ணினேன். நவீனத்தின் ஒரு பகுதி படிக்கப்பட்டு, இயற்றியவர் பெயர் கூறப்பட்டதும் உங்களைத் தேடி காண்பது என்று தீர்மானித்தேன்……”

இவ்வாறு அவன் மளமளவென்று விவரித்தான். ஓரளவு கூச்சமுள்ள, மலர்ந்த புன்னகை, மெரேஸ்யெவுக்கு இயல்பான அதே புன்னகை அவன் முகத்தில் தவழ்ந்தது.

நெடுங்காலமாக ஒருவரையொருவர் காணாத இராணுவத்தினர் மறுபடி சந்திக்கும் போது பேசிக் கொள்வது போலவே நாங்கள் போர்களைப் பற்றியும் அதிகாரிகளைப் பற்றியும் இருவருக்கும் பழக்கமான இராணுவ அதிகாரிகள் பற்றியும் வெகு நேரம் உரையாடினோம். அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தன்னைப் பற்றி முன்போலவே விருப்பமின்றி விவரித்தான். அவன் இன்னும் நிறைய வெற்றிகரமாகப் போர் புரிந்தான் என்பதைத் தெரிந்து கொண்டேன். 1943 முதல் 1945 வரை நடந்த தாக்குப் போர் நடவடிக்கைகளில் அவன் தன் ரெஜிமென்டுடன் பங்காற்றினான். எங்கள் முந்திய சந்திப்புக்குப் பிறகு அவன் அர்யோல் அருகே மூன்று பகை விமானங்களை வீழ்த்தினான். அப்புறம் பால்டிக் பிரதேசப் போரில் பங்கு கொண்டு இன்னும் இரண்டு பகை விமானங்களைச் சுட்டுத் தள்ளினான். சுருங்கச் சொன்னால், அவன் தன் கால்களின் இழப்புக்கு ஈடாகப் பகைவர்களிடம் வட்டியும் முதலுமாக கணக்குத் தீர்த்துக் கொண்டான். அரசாங்கம் அவனுக்கு “சோவியத் யூனியனின் வீரன்” என்ற பட்டம் அளித்து கௌரவித்தது.

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தன் குடும்ப விஷயங்களையும் சொன்னான். இந்த அம்சத்தில் நவீனத்தை இன்பியலாக முடிக்க வாய்த்தது குறித்து மகிழ்கிறேன்.

போர் முடிந்த பிறகு அவன் காதலித்த மங்கையை மணந்து கொண்டான். அவர்களுக்கு வீக்தர் என்ற ஒரு மகன் இருக்கிறான். மெரேஸ்யெவின் முதிய தாய் கமீஷினிலிருந்து மகனிடம் வந்து இப்போது மகனையும் மருமகளையும் கண்டு ஆனந்தித்துக் கொண்டு, பேரன் வீக்தரைச் சீராட்டியவாறு வாழ்ந்து வருகிறாள்.

இவ்வாறு, உண்மையான சோவியத் மனிதன் மெரேஸ்யெவின் வரலாற்றை, அயல் நாட்டில் எழுதிய இந்த நவீனத்தை வாழ்க்கையே தொடர்ந்து எழுதிவிட்டது.

மாஸ்கோ , நவம்பர் 28, 1950.

* முற்றும் *

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !

7

நாம் அனைவரும் வரலாற்றை முழுவதுமாக அறிந்தவர்கள் அல்ல. நம்முடைய மறதி அல்லது அறியாமை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மேலும் அதிக பலத்தைக் கொடுக்கிறது. ஹிட்லரை நாம் அறிவோம். அவருடைய இனவெறி நமக்கு மறந்துவிட்டது அல்லது இனவெறி எப்படிப்பட்டது என்பதை நாம் அறியவில்லை. தமிழ் தேசியம் என்னும் பெயரில் ஹிட்லரைக் கொண்டாடும் ஒரு கும்பல் உருவாகியிருக்கிறது. அது ஒரு சிறிய கும்பல்தான் என்றாலும், அது பெரிய பேரழிவு திட்டத்துடன் களமிறங்கியுள்ள இந்து தேசியம் என்ற இனவெறி – மதவெறி திட்டத்துக்கு நம்மை தயார்படுத்துவதாக உள்ளது. பாசிச அரசு அல்லது மதவெறி அரசு என உண்மையை எழுதுவது பலருக்கு உவப்பாக இல்லை. ஆனபோதும் வரலாற்றின் குறிப்புகளோடு பாசிசத்தின் நடைமுறையாக்கலில் நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என நேர்மையாக பரிசோதித்துக் கொள்வோம்.

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி
நாசி கட்சியின் (தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி என்பதன் சுருக்கமே ‘நாசி’) தலைவரான அடால்ஃப் ஹிட்லர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தவர். நாசி கட்சிக்கு சித்தாந்த பின்புலம் கொடுத்தது ‘துலே சமூகம்’ என்ற ரகசிய அமைப்பு. அதாவது தாங்களே ஆரிய இனத்தின் தூய வாரிசுகள் என அறிவித்துக் கொண்டவர்கள் இவர்கள். கிரேக்க புராண கதையில் வரும் துலே என்ற பிராந்தியத்தில் புனையப்பட்ட ‘ஹைபர்போரியா’ என்ற தலைநகரில் வாழ்ந்த ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் என நாசிக்கள் பரப்பினார்கள். தொடக்கத்தில் ரகசிய அமைப்பாக இருந்தது. பரப்புரை, பத்திரிகை போன்றவற்றின் துணையுடன் ஜெர்மானியர் ஏகபோக ஆதரவு பெற்றது. துலே அமைப்பால் வளர்க்கப்பட்டவர் ஹிட்லர். அதன் பின்னணியிலேயே ஸ்வஸ்திக் முத்திரையை நாசி கட்சியின் கொடியாக அவர் வரைந்தார்.

படிக்க :
♦ அரவிந்தன் நீலகண்டன் : ஹிட்லர் காதலை போற்றலாமா ?
♦ ஒரு தேசியத் தலைவரின் தோற்றம் – இது ஒரு ஜெர்மன் கதை !

1920-களில் ஜெர்மனியில் மார்க்சிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருந்தனர். ஹிட்லரின் எதிரிகளாக மார்க்சியர்களும் யூதர்களுமே இருந்தார்கள். அவர்கள் குறித்து அவதூறான அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலம் மக்களை கவர்ந்தார் ஹிட்லர். தனக்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் செல்வாக்கைக் காட்டி, கட்சியில் இருந்த மூத்தவர்களை பின்னுக்குத்தள்ளி முன்னேறினார். கட்சியில் சேர்ந்த பத்தாண்டுகளில் அக்கட்சியின் தலைவரானார்.

ஹிட்லர் தலைமையிலான நாசி கட்சி, தீவிர தேசியவாதத்தை கொள்கையாக அறிவித்தது. தனது அனைத்து கொள்கை அறிக்கையிலும் யூதர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து உறுதியுடன் நின்றது. அடுத்த பத்தாண்டுகளில் நாசி கட்சி படிப்படியாக தேர்தலின் மூலமாக முக்கியமான கட்சியாக வளர்ந்தது. பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து 1933-ம் ஆண்டு ஜெர்மன் அதிபராக ஆனார் ஹிட்லர். இதெல்லாம் நடந்தது பெரும்பான்மை மக்களின் ஆதரவுடனே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுவரைக்குமான வரலாறுகூட நமக்கு இந்தியாவில் பதவியில் அமர்ந்திருக்கும் கட்சியை/பதவியில் அமர்ந்திருப்பவரை நினைவூட்டுவதாக இருக்கலாம். பதவியில் அமர்ந்த பிறகு, யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் செய்தவை, சரியாக இந்தியாவில் முசுலீம்களுக்கு என்ன நடந்துக்கொண்டிருக்கிறதை என்பதை அப்படியே காட்டுகின்றன.

அதுவரை ஜெர்மானிய மக்களை பொதுவாகப் பார்த்த அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்தில் இருந்த அதிகார பலத்தால் ஹிட்லருக்கு கிடைத்தது. யூதர்களின் மத சடங்கு அடிப்படையிலான விலங்குகளை பலியிடும் சடங்குக்கு பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது. ஜெர்மானியர் தூய ரத்தத்தை காக்க, யூதர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கு இனக்கலப்பு அதாவது திருமணம் செய்துகொள்வது தடை செய்யப்பட்டது. மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் உள்ளிட்ட பணிகளுக்கு யூதர்கள் வருவது தடை செய்யப்பட்டது. பள்ளிகளில் அனைவரும் படிக்கக்கூடாது என்பதற்காக சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பள்ளிகளில் தூய இனவாதத்தை போதிக்கும் பாடங்கள் கொண்டுவரப்பட்டன.

உச்சமாக 1933-ம் ஆண்டு குடியுரிமை மற்றும் இயற்கைமயமாக்கல் சட்டம் என்ற பெயரில் யூதர்களை ஜெர்மன் சமூகத்திலிருந்து நீக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே ஒன்றரை லட்சம் யூதர்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. யூதர்கள் விவசாயம் செய்வதைத் தடுக்கவும் சட்டம் கொண்டுவரப்பட்டது. நடிக்கவும் கலாச்சாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடவும்கூட யூதர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன்பின், ‘நூரெம்பர்க் சட்டங்கள்’ என்ற பெயரில் யூதர்களை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை 1935-ம் ஆண்டு கொண்டுவந்தார் ஹிட்லர். இதில் குடியுரிமை சட்டம் முக்கியமானது. ஜெர்மன் ரத்த முறையினர் மட்டுமே குடியுரிமை உள்ளவர்கள். யூதர்களுக்கு முற்றிலுமாக குடியுரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் சொந்த நாட்டிலேயே ‘வெளிநாட்டினர்’ என அழைக்கப்பட்டனர்.

இனியும் ஹிட்லரின் வரலாறு நமக்குத் தேவையில்லை. இந்திய யதார்த்ததுக்கு வருவோம். இங்கே என்ன நடக்கிறது? மதத்தின் பெயரால், முசுலீம்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காகவே பல மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது. மாட்டிறைச்சியின் பெயரால் முசுலீம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், முசுலீம் சமூகத்தை அச்சுறுத்தின; நடுங்க வைத்தன. தூண்டப்பட்ட கும்பலால் நடந்த படுகொலைகளுக்கு ஒன்றுக்குக்கூட நீதி கிடைக்கவில்லை. லவ் ஜிகாத் என்ற பெயரில் புனைகதை கட்டி, முசுலீம் ஆண்கள் இந்து பெண்களை கவர்ந்து திருமணம் செய்து மதமாற்றம் செய்வதாக பரப்பப்பட்டது. இந்தியாவின் ஒரு பகுதியான அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு செயலாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான முசுலீம் மக்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. முசுலீம்களுக்கு முழு உரிமை உள்ளது என்றபோதும், பெரும்பான்மை இந்து மனப்பான்மையின் அடிப்படையில் நாட்டின் உச்சநீதிமன்றமே பாபர் மசூதி உள்ள இடத்தில் கோயில் கட்டலாம் என தீர்ப்பு எழுதியது.

இப்போது முசுலீம்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது ஆளும் இந்துத்துவ அரசு. இச்சட்டப்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறித்தவர், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், டிச.31, 2014-க்குள் வந்து இந்தியாவில் குடியமர்ந்திருந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இச்சட்டம் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இசுலாமிய மக்களுக்குப் பொருந்தாது. இலங்கையிருந்து வந்த ஈழத் தமிழர்கள், மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முசுலீம்களுக்கும் பொருந்தாது.

குடியுரிமை சட்ட திருத்ததின் தொடர்ச்சியாக தேசிய அளவில் குடியுரிமை பதிவேடு செயலாக்கவிருக்கிறது அரசு. அசாமில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை பதிவேடு 20 லட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்றது. இவர்களில் 12 லட்சம் மக்கள் இந்துக்கள். நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் குடியிரிமை திருத்தச் சட்டம் சான்றாவணங்கள் இல்லாத அனைத்து மக்களையும் சட்டவிரோத குடியேறிகள் என வகைப்படுத்தி வதை முகாம்களில் அடைக்கும். முசுலீம் மக்களோடு, வர்ணாசிரமத்தின் படிநிலைப்படி சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்களுமே இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

ஒருவர் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்டவர்தான் இந்தியக் குடிமகன் என தன்னை, குடியுரிமைத் தீர்ப்பாயம் சென்று நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் சாலை ஓரங்களில், நாடோடிகளாக, வெள்ளம், இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களாக, எவ்வித ஆவணங்களும் அற்ற பலகோடி மக்கள் உள்ளனர். இவர்கள் பிறந்த சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், வங்கி கணக்கிற்கு எங்கே போவார்கள்? ஆக, ஒடுக்கப்பட்ட அம்மக்களும் குடியுரிமையை இழப்பார்கள்.

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் அங்கு சிறுபான்மையினர் என்றால் இலங்கையில் இந்து-தமிழ் மக்களும், மியான்மர்-ரோகிங்கியா முசுலீம் மக்களும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது ஆளும் அரசின் இனவாத நோக்கத்தைக் காட்டுகிறது.

படிக்க :
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே – பாசிச பாஜக !
♦ அஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் !

“ஒரு கணம் அரசியலையும், சட்டப்படியான கேள்விகளையும் ஒதுக்கி விடுங்கள். மில்லியன்கணக்கான ஏழை மக்களுக்கு நீங்கள் இரக்கமில்லாமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தியுங்கள். எந்தவொரு முடிவும் இருப்பதாகத் தெரியாத ஒரு பேரழிவை அரசு எவ்வாறு உருவாக்க முடியும்?” முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் மனித உரிமை செயல்பட்டாளருமான ஹர்ஸ் மந்தர் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து எழுப்பிய கேள்வி இது.

பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் விசயங்களாக மக்கள் தொகை பெருக்கமும் அதற்கேற்றபோல அடிப்படைவசதிகள் இல்லாதது, ஏழ்மை நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை போன்ற பல விசயங்கள் இருக்கும்போது ஹர்ஸ் மந்தர் கேட்பதுபோல குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை என்ன நோக்கத்திற்காக, எந்த முடிவுக்காக கொண்டு வரப்படுகின்றன? ‘வளர்ச்சி…வளர்ச்சி..வளர்ச்சி…’ என ஓயாமல் முழங்கிய பாஜக சொல்லும் வளர்ச்சி யாருடையது? யாருக்கானது? 30, 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் குடியுரிமை இல்லை. ஆனால், அமெரிக்கா உள்பட உலகெங்கும் உள்ள நாடுகளில் குடிபெயர்கிறவர்கள் இந்தியர்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றனர். சமகால நிதர்சனத்தோடு ஆட்சியாளர்கள் உருவாக்கிய முரண்பாடு இது. 72 ஆண்டு காலம் சகோதர – சகோதரிகளாகப் பழகிய மக்களை மதத்தின் பெயரால் பிரிப்பது மதவெறி அன்றி வேறென்ன?

அரசியலமைப்பு தத்துவத்தை புதைத்துவிட்ட ஆளும் அரசு, மதவாத தத்துவத்தை கையிலெடுத்துள்ளது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. நாம் வரலாற்றிலிருந்து கொஞ்சமேனும் பாடம் கற்கவேண்டியுள்ளது. மேலும் ஒரு இன அழிப்பை நாம் அனுமதித்தால், வரலாறு நம்மை மன்னிக்காது என்பதை பெரும்பான்மை சமூகம் உணர வேண்டும்.

மு.வி.நந்தினி

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

disclaimer

ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1

ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள முண்டாரி மொழி பேசும் முண்டா பழங்குடி மக்கள் இன்றும் நம்மோடு வாழுகின்ற வட இந்தியத் திராவிடர்கள். கி.பி 250 முதல் 575 வரை தமிழகத்தை ஆண்ட களப்பிரர் ஆட்சிக்காலத்தின் போதே முண்டா பழங்குடி மக்கள் சோட்டா நாக்பூர் பகுதியில் வாழ்ந்ததாக “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்” என்ற நூலை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்.

இவர்களுடைய வரலாறு சுமார் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. வட கிழக்கு இந்தியாவில் குறிப்பாக ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அண்டை நாடான வங்காள தேசத்திலும் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட இப்பழங்குடியினரின் மக்கள் தொகை சுமார் 22 இலட்சம்.

இராவணன் மற்றும் மகிசாசுரன் ஆகியோரை பேயாக சித்தரித்து அவர்களது உருவ பொம்மைகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என இந்துக்களுக்கு இவர்கள் இன்றும்கூட உத்தரவு பிறப்பித்து வருவது, அவர்கள் திராவிட முன்னோடிகள்தான் என்பதை பறைசாற்றுகிறது. அதே போல இராமாயணம், பகவத் கீதை மற்றும் மகாபாரதத்திற்கு எதிராகப் பேசியும் வருகின்றனர்.

இந்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலையில் பிர்சா முண்டா.

இவர்களது வாழ்வாதாரம் காடுகளையும், மலைகளையும் அடிப்படையாகக் கொண்டது. பழங்குடி மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய பிர்சா முண்டா என்கிற பழங்குடித் தலைவரை ஆங்கிலேய அரசாங்கம் 1900 -ஆம் ஆண்டு கைது செய்து சிறையிலடைத்தது. தனது 24 வயதில் சிறையிலேயே அவர் மாண்டு போனார். அவரது போராட்டத்தின் விளைவாக பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்டதுதான் “சோட்டாநாக்பூர் நிலக் குத்தகைச் சட்டம் 1908”. இன்றுவரை அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் இச்சட்டம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. இச்சட்டம் கொண்டுவரக் காரணமாக இருந்ததால்தான் அம்மக்கள், இன்றும் பிர்சா முண்டாவை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

81 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 30 -இல் தொடங்கி டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு சிறிய மாநிலத்தில் ஒரே நாளில் நடத்த வேண்டியத் தேர்தலை ஐந்து கட்டங்களாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்கிற கேள்வி எழுவது இயல்புதான். மாவோயிஸ்ட் பிரச்சனை  மட்டுமல்ல தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள முண்டா பழங்குடி மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதும் ஒரு முக்கியக் காரணம்.

இந்த மக்களின் போராட்டமும் அவர்கள் மீது பா.ஜ.க அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்கு முறைகளும் இந்தியாவில் ஜனநாயகம் நிலவுகிறதா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது. இந்தக் கேள்விக்கான விடை தேடும் முயற்சியில் சுப்ரியா சர்மா தலைமையிலான ஸ்க்ரால் இணைய பத்திரிக்கையாளர் குழு ஜார்கண்ட் மாநிலத்திற்குச் சென்று, “மோடியின் ஆட்சியில் இந்திய ஜனநாயகம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தித் தொகுப்பை தமிழாக்கம் செய்து இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். படியுங்கள்…

படிக்க:
ராவணனை எரிக்காதே – ஓங்கி ஒலிக்கும் அசுரர்களின் குரல் !
♦ டியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி ! | பொருளாதாரம் கற்போம் – 47

பகுதி 1

மோடியின் ஆட்சியில் இந்திய ஜனநாயகம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு சில ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு, இந்தியாவை ஒரு ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் நாடாகக் காட்டிக் கொண்டது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மூலம் பெரும்பான்மையினரின் ஆட்சி இங்கு நடக்கும்; இந்த ஜனநாயகம் விட்டுக் கொடுக்கும் தன்மையிலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான பாதுகாப்பு, வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட பிராந்தியங்களுக்கான ஒப்பீட்டளவிலான சுயாட்சி, இவை அனைத்தும் ஒரு சுதந்திரமான நீதித்துறையால் பாதுகாக்கப்படும்; பத்திரிக்கைத் துறை அதற்கு ஏற்ப துணை நிற்கும் என நம்பப்பட்டது.

ஆனால், கடந்த எழுபதாண்டுகளில், இந்திய ஜனநாயகம் விட்டுக் கொடுக்கும் தன்மையுடன் செயல்படவில்லை. 1970 -களில், இந்திரா காந்தி அரசாங்கம் அவசரநிலையை அறிவித்து மக்களின் சிவில் உரிமைகளை நசுக்கியது. மாநிலங்கள் மற்றும் குடிமக்களின் உரிமைகளை பறிப்பதற்கு இது வழிவகுத்ததாக அரசியல் – வரலாற்றாசிரியர்கள் கருதினர். இத்தகைய அதிகாரங்கள் இதற்கு முந்தி இருந்த அரசாங்கங்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டன.

இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அடிப்படை கட்டமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு,​​ ஜனநாயகத்தை ஒன்றுமில்லாததாக்கி வருகிறது என பலரும் விமர்சிக்கின்றனர். மோடி இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை ஒருதலைப்பட்சமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கும் அதீத நடவடிக்கை எடுத்தது.

மோடி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இந்தியா இந்துக்களின் தேசம் என்கிற; இந்தியாவை மாற்றியமைப்பதற்கான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் கருத்தியலுக்கு வழிவகை செய்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மேலும் முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் அவர்களை திருப்திப்படுத்துவதற்கானவை எனப் பார்க்கிறது மோடி அரசாங்கம்.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதால், அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையை எதிர்கொள்ளத் தவறி விட்டன. பிரதான செய்தி ஊடகங்கள் பெரும்பாலும் மோடியின் தேசியவாதக் கண்ணாடியை அணிந்து கொண்டுவிட்டன. முக்கிய தனியார் தொலைக்காட்சி ஊடகங்கள் அரசாங்க பிரச்சார சேனல்களாக செயல்படுகின்றன.

காஷ்மீரின் அரசியல் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, மொபைல் தகவல் தொடர்புகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றம் கூட விலகி நின்று வேடிக்கைப் பார்க்கிறது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஏழு மில்லியன் மக்கள் வெளி உலகத்தோடு உள்ள தொடர்பை இழந்து நிற்கின்றனர்.

படிக்க:
50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !
♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !

பெரும்பான்மைவாதம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறதா?

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா காஷ்மீரில் எடுத்துள்ள நடவடிக்கை, அதன் பிறகு அங்கு நடைபெறும் மாற்றங்கள் இந்துப் பெரும்பான்மை வாதத்தை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாக ஜனநாயகத்தை நேசிப்போர் கருதுகின்றனர். இந்து தேசியவாத திட்டத்திற்கான மக்களின் ஆதரவு, 25 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொடுத்துள்ளதோடு; இந்திய மாநிலங்கள் பலவற்றில் பா.ஜ.க பெற்றுள்ள செல்வாக்கு என்பது, அடிப்படையில் இந்தியக் குடியரசை மாற்றியமைப்பதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது என அவர்கள் கருதுகின்றனர்.

மோடி அரசாங்கம் அரசியல் எதிரிகளையும், சுதந்திரமான ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவதாகவும், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி நிறுவனங்களை பலவீனப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உலகெங்கிலும் உள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைக் கண்காணிக்கும் அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பு, இந்த ஆண்டு இந்தியாவிற்கான சுதந்திர மதிப்பெண்ணில் இரண்டு புள்ளிகளைக் குறைத்துள்ளது.

அதில் ஒன்று பசு வதை தொடர்பாக இஸ்லாமியர்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைத் தாக்குதல்கள்; மற்றொன்று ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல்கள். ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள் நரேந்திர மோடியின் பிரபலத்தை பாதிக்கவில்லை. உண்மையில், அத்தகைய விமர்சனங்களை திறமையாகப் பயன்படுத்தி தன்னை ஒரு வெகுமக்கள் தலைரவராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

2014 பிரச்சாரத்தில், அவர் குஜராத் மாநிலத்தை மாற்றியமைத்த ஒரு திறமையான நிர்வாகியாக காட்டப்பட்டு, அதே போன்ற பொருளாதார லாபங்களை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் கொண்டு வர முடியும் என்று ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்டார். அதேசமயம், ஒரு சாதாரண, பின்தங்கிய சாதிப் பின்னணியில் இருந்து அவர் எழுந்த கதை, ஊழல் மோசடிகளால் சூழப்பட்டுள்ள பரம்பரைத் தலைமை கொண்ட காங்கிரசுக்கு அவரை ஒரு மாற்று என்று முன்வைவைத்தவர்கள்கூட மோடியின் கண்காணிப்பில் நடந்த முஸ்லீம் எதிர்ப்பு வன்முறையை குறைத்து மதிப்பிட்டனர்.

ஆனால் மோடி அரசாங்கத்தின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் பொருளாதார நலன்கள் எதுவும் மக்களுக்குக் கிடைக்கவில்லை. மாறாக  வேலையின்மை உயர்ந்தது, முதலீடுகள் மூச்சுத் திணறின. பசுப் பாதுகாப்பு, மாட்டிறைச்சி, முத்தலாக் பற்றிய சமூகப் பிரச்சனைகளால் மக்களின் பொருளாதார நலன்கள்  ஒரேயடியாக மூழ்கடிக்கப்பட்டன.

2019 தேர்தலில் தேசியவாதம், சமூக நலன் மற்றும் மோடி வழிபாடு என்பதில் மட்டுமே பா.ஜ.க அதிக கவனம் செலுத்தியது. சமூகத்தைப் பிளவுபடுத்தி பெரும்பான்மை இந்துச் சமூகத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கு எடுத்த முயற்சி, ஊடகங்களிடையே பிளவை ஏற்படுத்தி தனக்கு ஆதரவாக செயல்பட வைத்தது மற்றும் கருத்தியல் ரீதியாக மோடியை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்த எதிர்கட்சிகள் ஆகிய காரணங்களால் 2014 தேர்தலில் பெற்ற வெற்றியைவிட 2019 இல் இரண்டாவது முறையாக பெரிய வெற்றியை பா.ஜ.கவால் பெற முடிந்தது.

படிக்க:
சிறுபொறி… பெருங்காட்டுத்தீ !
♦ ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்

தற்போது நாம் தெரிந்து கொள்ள விரும்புவது என்ன?

ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஜனநாயகத்தை நேசிப்போர் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து அச்சத்துடன் உள்ளனர். ஆனால் பெரும்பாலான இந்தியர்கள் இந்த அச்சத்தைப் பகிர்ந்து கொள்கிறார்களா? அல்லது ஜனநாயகம் குறித்த முற்றிலும் மாறுபட்ட வேறு கருத்து ஏதேனும் அவர்களுக்கு இருக்கிறதா? உலகளவில், மோடி போன்ற பிரபலமான தலைவர்களின் வளர்ச்சி மற்றும் பெரும்பான்மைவாதம் பேசுவோரின் அரசாங்கங்களின் எழுச்சி குறித்து ஜனநாயகத்தை நேசிப்போர் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதன் இந்தியத் தன்மை குறித்து நாம் என்ன செய்யப் போகிறோம்?

தேர்தல்கள் நெருங்க இருக்கும் மாநிலங்களுக்குச் சென்று இந்திய ஜனநாயகம் குறித்த பதில்களைத் தேட முயற்சிக்கிறோம். சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ஜார்கண்டில் இதற்கான விடையைத் தேட முயன்றபோது கிடைத்த விவரங்கள் இதோ.

(தொடரும்)

தொடரின் அடுத்த பாகங்களுக்கு :


கட்டுரையாளர் : சுப்ரியா சர்மா
தமிழாக்கம் :
ஊரான்
நன்றி : ஸ்க்ரால்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் !

கேள்வி : பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்திற்கு அந்தந்த நாட்டின் பணத்தை அனுப்புகிறார்கள். அவற்றின் இந்திய பண மதிப்பின் அளவுகொண்டு அந்த பணம் இந்திய பணமாக மாற்றப்பட்டு தத்தம் குடும்பங்களை சென்றடைகிறது. இந்த பணப் பரிமாற்றம் மூலம் இந்திய அரசிற்கு எவ்வாறு அந்நிய செலவாணி அல்லது டாலர் கிட்டுகிறது? அதாவது இந்தியா இதனால் எவ்வாறு பயனடைகிறது?

S.S.கார்த்திகேயன்

ன்புள்ள கார்த்திகேயன்,

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் வேலை செய்யும் நாட்டின் செலவாணியில் ஊதியம் பெறுகிறார்கள். பிறகு அதை வங்கிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செலவாணி மாற்றும் வணிகர்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள். அப்படி அனுப்பும் போது அந்தப் பணம் அந்தந்த நாட்டின் செலவாணிக்குரிய டாலர் மதிப்பில் மாற்றப்பட்டு டாலராக இந்தியாவிற்கு வந்து சேர்கிறது. அந்த டாலரை வைத்துக் கொண்டு அதற்கேற்ற அன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றப்பட்டு பணம் அனுப்புவோரின் குடும்பத்திற்கு போய்ச் சேருகிறது. இப்படித்தான் ரிசர்வ் வங்கியின் இருப்பில் டாலர் மற்றும் யூரோ அந்நியச் செலவாணியாக இருப்பில் சேர்கிறது.

அதே போன்று வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர், கல்வி படிக்கப் போகும் மாணவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் ஆகியோர் போகும் போது இந்திய ரூபாயை அளித்து அதற்குரிய டாலரை பெற்றுக் கொண்டு செல்கிறார்கள். அப்போது டாலர் இருப்பு ரிசர்வ் வங்கியில் குறையும். அதே போன்று இறக்குமதிக்கான தொகை அனுப்பும் போதும் டாலர் இருப்பு குறையும். ஏற்றுமதி செய்யும் போது பெறப்படும் தொகை டாலராக இருப்பில் அதிகரிக்கும். இதன்றி வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், வெளிநாட்டினர், அந்நிய நிதி நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்வதற்கும், அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கும் ரிசர்வ் வங்கி நிறைய விதிமுறைகளையும் ஏற்பாடுகளையும் வைத்திருக்கிறது.

2017-ம் ஆண்டின் கணக்கின்படி வெளிநாட்டில் இருந்து, அதிக பணம் பெற்ற நாடுகளில், 6,900 கோடி டாலருடன், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய மதிப்பில் இது 4 லட்சத்து, 55 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் ஆகும். அவ்வகையில் வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களால் இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலவாணி இருப்பு கணிசமாக உயர்ந்திருக்கிறது. அந்நியச் செலவாணி எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் இருக்கிறதோ அந்த அளவு அந்த நாடு செல்வ மதிப்பில் உயர்ந்து நிற்கிறது. ஆனாலும் ஒட்டு மொத்த இந்திய பொருளாதார வளர்ச்சியின்மையை பார்க்கும் போது இந்த அந்நியச் செலவாணி இருப்பால் பெரிய பலனில்லை.

இன்றைக்கு இந்தியாவில் இருந்து பணிக்காக புலம் பெயர்ந்தோர் அதிகம் இருக்கும் போது மற்ற நாடுகளை விட தாயகத்திற்கு அதிக பணம் அனுப்பும் நாடாகவும் இந்தியா இருக்கிறது. தற்போது உலக பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் வேளையில் வெளிநாட்டு வேலைகளும், ஊதியமும் குறைந்து இந்தத்தொகை உள்நாட்டிற்கு வரும் அளவு குறையவும் வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் மேற்குலகிற்கும், வளைகுடாவிற்கும் பணியாட்கள் பெரும் எண்ணிக்கையில் தேவைப்படுவதால் இந்த தொகை அவ்வளவு சீக்கிரம் குறையவும் செய்யாது. ஆக இந்திய அரசு தனது சொந்த மக்களுக்கு வாழ்வளிக்காத நிலையில் வெளிநாட்டில் வேலை செய்யும் மக்கள் தமது நாட்டின் அன்னியச் செலவாணி இருப்பை கூட்டி வருகிறார்கள்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : தமிழகம் மற்றும் இலங்கையை தாண்டி பல உலக நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே. ஆனால் என்னுடைய கேள்வி பல நாடுகளில் வாழும் தமிழர்களை இணைத்து இணைப்பு பாலமாக இருக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டுடையதே…. இருந்தும் இதுவரை இந்நாள் முதலவரோ, முன்னாள் முதல்வர்களோ ஏன முயற்சிக்கவில்லை….?

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இருக்கை அமைக்க ஆர்வம் காட்டும் நம் அரசு ஏன் உலகத்தமிழர்களை ஒன்றிணைக்க இதுவரை முயற்சிக்கவில்லை… தொடர்பே இல்லாமல் இருப்பதால் பல நாடுகளில் தமிழை எழுதவும் பேசவும் மறந்து தமிழரின் அடையாளங்களை இழந்து வருகிறார்கள்.. மொரீசியஸ், கயானா, பர்மா, ரீயூனியன், செசெலஸ், பிஜி போன்ற நாடுகளில் தமிழர்கள் பெருமளவு வாழ்ந்தும் தமிழ் நாட்டுடனும் தமிழுடனும் தொடர்பே இல்லாமல் இருக்கிறார்கள்..

சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் கூட தமிழக தொழிலாளர்கள், வேறு நாட்டு பிரஜைகளாக தமிழர் என்ற உணர்வு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்… மத்திய அரசு நடத்தும் பிரேவேசி மாநாடு (வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு) போல் வெளிநாடு வாழ் தமிழர்களின் மாநாடு ஏன் ஆண்டுதோறும் தமிழக அரசின் மூலம் நடத்த கூடாது… உலக தமிழர்களை ஒன்றிணைக்க என்ன வழி ?

சுதாகர் சௌந்திரம்

ன்புள்ள சுதாகர் சௌந்திரம்,

கெடு வாய்ப்பாக சன் டிவி-யின் சீரியல்களும், விஜய் டி.வி-யின் பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள்தான் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கின்றன. இந்த ஒன்றிணைதலில் தமிழுக்கு இடமில்லை. தமிழ் பண்பாட்டிற்கும், மொழிக்கும் கூட இடமில்லை. ஆங்கிலம் கலந்த தமிழில் மேட்டுக்குடி பாங்கு மட்டுமே மின்னுகிறது. இந்நிகழ்ச்சிகளின் நுகர்வுக் கலாச்சார அடையாளத்தைப் பார்த்தால் அது எந்த நாட்டிற்கும் பொருந்தும். அது தமிழுக்கு மட்டுமே உரியது அல்ல.

மாதிரிப் படம்

நீங்கள் சொல்வது போல தமிழ்நாடுதான் உலகத் தமிழர்களை ஒருங்கிணைப்பதில் முன்னணிப் பாத்திரம் ஆற்ற வேண்டும். இன்று தமிழ் மக்கள் இல்லாத இடமே இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., ஆளும் கட்சிகளாய் இருக்கும் போது நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாடுகள் அக்கட்சிகளின் செல்வாக்கை தெரிவிக்கும் வண்ணமாய் மட்டுமே நடத்தப்பட்டன.

மற்ற நாடுகளில் உள்ள அரசு நிர்வாகங்களில் பங்கேற்கும் தமிழ் பிரதிநிதிகள் பெயருக்கு பங்கேற்பார்கள். மற்றபடி இன்றைக்கிருக்கும் எடப்பாடி அரசு போன்ற அடிமைகள், உள்நாட்டிலேயே தமிழ் மக்களுக்கு செல்லாக் காசாக திகழும் போது இவர்கள் எப்படி உலகளாவிய அளவில் தமிழ் மக்களை இணைக்க முடியும்?

தேசிய குடியுரிமை திருத்த மசோதாவில் ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற முடியாது என்பதை அறிந்தும் அதிமுக அரசு அந்த மசோதா திருத்தத்தை ஆதரிக்கிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாய் வாழ்கிறார்கள். இப்படி உள்நாட்டிலேயே தமிழ் மக்களுக்கு வஞ்சகம் புரிகிறது அதிமுக அரசு.

படிக்க:
ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1
♦ வெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் ? | கேள்வி – பதில் !

ஆனால் முள்ளி வாய்க்கால் இனப்படுகொலையின் போதும், ஜல்லிக்கட்டு போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போதும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தமது தோழமையை வெளிப்படுத்தினார்கள். போராட்டம் நடக்காத நாடே இல்லை எனுமளவுக்கு உலக நாடுகளில் தமிழ் மக்களின் போராட்டங்கள் நடந்தன. இன்றைக்கு இணையம் இருக்கிறது. இணையத்தின் மூலம் இந்த ஒன்றிணைதல் ஓரளவுக்கு நடக்கிறது. எனினும் போராட்டத்தின் மூலம் இணையும் தமிழ் மக்களை தொடர்ந்து நீங்கள் சொல்லும் ஆலோசனைகளை கணக்கில் கொண்டும் இணைப்பது, ஒன்றிணைப்பது குறித்து இணையத்தில் இருக்கும் முற்போக்கு தமிழ் நண்பர்கள் ஆலோசிக்க வேண்டும். அரசு செய்ய முடியாத இணைப்பை நாம் செய்ய வாய்ப்பிருக்கிறது.

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை தஞ்சையில் தமிழ் மக்கள் இசை விழா எனும் நிகழ்வை மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தி வந்தது. தற்போது அதை உலகத் தமிழ் மக்கள் இசை விழாவாக நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. தோழர்கள் அது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

மற்றபடி உலகில் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியை சொல்லிக் கொடுப்பது, தமிழின் வரலாறு, தமிழர்கள் சென்ற நாடுகள், அந்த புலம் பெயர்ந்த வரலாறு அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவையெல்லாம் தன்னார்வலர்களால் மட்டும் செய்து விடமுடியாது. தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஓரளவு முயற்சிக்கலாம். இப்போதைக்கு இணையத்தில் அந்த ஒன்றிணைவுக்கான முதல் கட்ட நகர்வை முன்னெடுப்போம்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1

சிரமத்திற்கு மன்னிக்கவும்; இது ஒரு புரட்சி !

வகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக் கட்டண உயர்வுக்கான போராட்டம் 40 நாட்களைக் கடந்த நிலையில், ‘சிரமத்திற்கு மன்னிக்கவும்; இது ஒரு புரட்சி′  என்ற வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் பல்கலைக்கழக வளாகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவி வியாபித்து வருகின்றன. உண்மையில் இது ஒரு புரட்சிதான்.

கல்வியை வியபாரமாக, சந்தையில் வாங்கும் பொருளெனக் கருதி பொதுக்கல்வியின் உண்மையான சமூகப் பங்களிப்பை, தேவையை உள்வாங்காதிருக்கும் நம்மில் பலருக்கு இது ஒரு தேவையற்ற சச்சரவாக, மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் செயல்பாடாகத் தோன்றினால் ஆச்சரியம் இல்லை. ஆனால் சமூக மாற்றம், முன்னேற்றம், பண்பட்ட சமூக வாழ்வு போன்றவற்றை வென்றெடுப்பதற்கு ஒரு தரமான, அனைவரையும் உள்ளடக்கிய, எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய, குறைந்த செலவிலான, ஒரு பொதுக் கல்விமுறையை உறுதிப்படுத்த ஆதாரத் தளமாக இருக்கின்றது என்று கருதுவோர்க்கு இப்போராட்டத்தின் தேவையும் தீவிரமும் எளிதில் விளங்கும்.

கருத்துச் சுதந்திரத்திற்கான வெளி வேகமாகச் சுருங்கி, தனிநபர்களும், சமூக சிந்தைகொண்ட ஊடகங்களும், அரசு நிறுவனங்களும், தன்னாட்சி அமைப்புகளும் அடக்குமுறையாலும், பயத்தின் கோரப் பிடியிலும் சிக்குண்டு கசங்கிய காகிதமாய் உருமாறி வலுவிழந்திருக்கும் இன்றையக் காலக்கட்டத்தில் ஜே.என்.யூ மாணவர்கள் அவர்களது புரட்சியின் ஊடாக ஒரு நம்பிக்கையின் வெளிச்சத்தைக் கொண்டுவந்து நாம் கடக்க வேண்டிய பாதைக்கு வழிகாட்டுகின்றார்கள்.

புரட்சியின் வெவ்வேறு வடிவங்கள் :

மாணவர்களின் கலைத்துவம் வாய்ந்த இந்தப் புரட்சியின் வெவ்வேறு நிலைகளை, வடிவங்களை, பற்றிப் பேசுவதற்கு முன்னால் ஒருசில விடயங்களைத் தெளிவுப் படுத்தவேண்டும். ஒன்று இந்த போராட்டம் வெறும் கல்விக் கட்டண உயர்வு, விடுதி விதிகளிள் மாற்றம் இவற்றிற்கு எதிர்பாகத் திடீரென எழுந்த போராட்டம் அன்று.

மாறாக, கடந்த 50 ஆண்டுகளாக ஜே.என்.யு உள்வாங்கிச் செயல்பட்ட சில மதிப்புகள், சனநாயக விழுமியங்கள், நடைமுறைகள் இவற்றுக்கு எதிராக அவற்றை அழித்தொழிக்க விரும்பும் சில ஆதிக்க சக்திகள் மேற்கொண்ட அத்துமீறிய வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராகத் திரண்டெழுந்த போராட்டம்.

மற்றொன்று, இதுவெறும் ஜேஎன்யு மாணவர்கள் தங்கள் கல்வி உரிமைக்காகப் போராடும் போராட்டம் அன்று. மாறாக, உயர்கல்வியை கனவாய்க் கொண்டிருக்கும் அனைத்து இந்தியப் பொதுக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குமானது. கல்விக் கட்டண உயர்வால் உயர்கல்வி வாய்ப்பை இழந்திருக்கும் அல்லது இழக்கப் போகும் ஒவ்வொரு இந்திய மாணவர்களுக்குமானது. மேலும், கல்வி நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுதலுக்கு எதிராகவும், புதிய கல்வி கொள்கைகளை நடைமுறைப்படுத்தி சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு, நலிவடைந்தோருக்கு இருந்த சிறிதளவிலான வாய்ப்பையும் அழித்தொழிக்க விழையும் முயற்சிகளுக்கு எதிரானது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் என்பது ஒரு புதிய செய்தி அல்ல. இங்கு மாணவர்கள் போராட்டம் அவ்வப்போது வெடித்து அடங்கும். இன்றும் இப்பல்கலைக்கழகத்தின் முதல் தலைமுறை மாணவர்களைச் சந்திக்க நேர்ந்தால், 1970 -களில் இந்திராகாந்தி அரசு நெருக்கடி நிலையைப் பிரகடணப்படுத்தியப்போது, மக்களாட்சியை மீட்டெடுக்கும் பொருட்டு இப்பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக பல்கலைக்கழகம் பல மாதங்கள் மூடப்பட்டதும் போராடிய மாணவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் நெகிழ்ந்து பேசுவார்கள்.

இந்திராகாந்தி, மொராஜி தேசாய், மன்மோகன்சிங் போன்ற இந்தியப் பிரதமர்கள் ஜேஎன்யூ மாணவர் போராட்டங்களை நேரில் எதிர்கொண்டவர்கள். மொரார்ஜி தேசாய் காலத்தில் இப்பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான பரிந்துரையும் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 1970 அவசரகாலநிலை போராட்டங்களுக்குப் பிறகு குறிப்பிடும்படியான போராட்டம் என்றால் அது கடந்த 40 நாட்களாக நடைபெறும் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிரான மணவர்களின் சனநாயகப் புரட்சிதான்.

படிக்க:
ஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் !
♦ என்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் !

தொடக்கத்தில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெவ்வேறு வடிவங்களில் தம் எதிர்ப்பைத் தெரிவித்த மாணவர்கள் போராட்டம், பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது, போராடிய மாணவர்களுக்கு வெவ்வேறு வகைகளில் நெருக்கடியை ஏற்படுத்தியபோது, வளாகத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. காவல் துறையின் அடக்குமுறையின்போதும், கார்ப்பரேட் ஊடகங்கள் போரட்டத்தின் நோக்கத்தைத் திரித்து மாணவர்களின் கோபத்தை தூண்டியபோதும், பல ஆயிரம் மாணவர்கள் எவ்வித வன்முறையும் இன்றி, அமைதியாய், தனக்கே உரித்தான கலைநயம் மிகுந்த கோசங்களுடனும், வாசகங்கள் தாங்கிய அட்டைகளுடனும் தில்லி சாலைகளில் நடந்து சென்றது மக்களின் கவனத்தைக் கவர்ந்திழுத்தது. மாணவர்களுக்கு ஆதரவான, எதிர்ப்பான விவாதங்கள் பொதுமக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து  நிகழ்ந்தன.

ஜே.என்.யூ சுவர்களும் கூட அரசியல் பேசும்

இதுபோல், பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளும் ஒரு தேர்ந்த சனநாயக நெறியிலான போராட்டங்களையே முன்வைத்தனர். கேலிச் சித்திரங்களை வைத்தல், கவிதை வாசிப்பு, பாடல், புத்தகம் வாசித்தல், அறிவுஜீவிகளையும் களப்பணியாளர்களையும் கொண்ட பொதுக்கூட்டங்கள், ‘சுதந்திர சதுக்கத்தை′ மாணவர்கள் தங்களின் போராட்டக் களமாக பயன்படுத்துவதற்கு எதிரான தடையை மீறுதல், பல்கலைக் கழகக் கல்விக்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் நடைபெறும் காலங்களில் இக்குழுக்களின் உறுப்பினர்களுக்குத் தம் கோரிக்கையை எடுத்துச் செல்லும் வகையில் போராடுதல் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுதல், பத்திரிகைகளில் எழுதுதல் என வெவ்வேறு வடிவங்களில் தம் உணர்வை வெளிப்படுத்தினர்.

முக்கியமாக, போராட்டங்களில் பெரிதாக ஆர்வம் காட்டாத அறிவியல் துறை மாணவர்கள், சமூக அறிவியல் மற்றும் மொழியியல் துறையைச் சார்ந்த மாணவர்களுடன் இணைந்து இப்போராட்டங்களில் பங்குகொண்டது கவனிக்க வேண்டியதாக இருந்தது. வகுப்பறைகளைவிட, புரட்சியின்போதே சமூகத்தையும் அரசியலையும், அரசின் அதுபோன்று ஊடகங்களின் வன்முறையைப் பற்றியுமான புரிதல் மாணவர்களுக்கு எளிதாகச் சென்றடைவதைக் காணக்கூடியதாக இருந்தது.

மக்கள் பல்கலைக் கழகம் என்ற பெருங்கனவு !

வேறு எந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இல்லாத அக்கறை, கொதிப்பு, போராட்ட உணர்வு எதற்காக ஜேஎன்யு மாணவர்களுக்கு மட்டும் ஏற்படவேண்டும்? ஆங்கில கார்ப்பரேட் ஊடகங்கள் இதைப்பற்றி விவாதித்தன. அரசின் கைக்கூலியாக மாறிப்போன பல்வேறு தொலைக்காட்சிகள் ஜே.என்.யு.-வை தேசத்துரோகிகளின் இருப்பிடமாகச் சித்தரித்ததுடன், எதிர்ப்புச் சிந்தனை என்பது ஜேஎன்யுவின் டிஎன்ஏ-வில் ஊறிக்கிடப்பது என்றும் இவர்கள் எதையும் எதிர்த்தே பழக்கப்பட்டவர்கள் என்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுபவர்கள் என்றும் வெவ்வேறு தவறான திரிக்கப்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல பெரும்பாடுபட்டன.

உண்மையில், சனநாயக நெறிகளை வென்றெடுக்கவேண்டும் என்ற இந்தச் சிந்தனை, போராட்ட உணர்வு ஜேஎன்யு சமூகத்தினருக்கு எவ்வாறு இயல்பாக இருக்கின்றது என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழக்கூடியதுதான்.  எங்கிருந்து வருகின்றது இது? இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவ நினைத்தவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?  இதற்கான பதில்கள் ஜேஎன்யு மசோதா இந்தியப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டப்போது இதில் ஈடுபட்டோர் முன்வைத்த வாதங்களை வாசித்தால் தெரியவரும்.

படிக்க:
குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு !
♦ JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை

கல்வியறிவு பெற்றோரும், சமூகச் சிந்தனை உடைய அரசியல்வாதிகளும் அதிகளவில் இடம்பெற்றிருந்த அப்போதைய பாராளுமன்றம், ஜேஎன்யு ஒரு பிரசித்தமான, தனித்துவம் வாய்ந்த பல்கலைக்கழகமாக வளரவேண்டும் என்றே எதிர்பார்த்தது. புதிய சிந்தனைகளை வென்றெடுக்கும் வெளியாக, அனைத்துத் தரப்பு மக்களையும் அவர்களது கருத்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தளமாக இருக்கவேண்டும் என எதிர்பார்த்தது.

சுதந்திரமான, நேர்மையான, அறிவியல் பூர்வமான சிந்தனைக்கு ஏதுவாக அரசின் தீவிர கட்டுப்பாட்டில் கண்காணிப்பில் இருந்து விடுபட்டு, போதுமான தன்னாட்சி உரிமைகளுடன் இப்பல்கலைக்கழகம் இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. சுருக்கமாக அப்போதைய அரசியல் தலைவர்களின் எதிர்பார்ப்பை இவ்வாதங்களில் பங்குகொண்ட எம்.சி. சாக்ளா, ‘இது முற்றிலும் மாறுபட்டுப் புதியவகைப் பல்கலைக்கழகமாக இருக்கும்’ என்று சுட்டிக்காட்டினார்.

‘மாணவர்கள் தம் கேள்விகளை, விசாரணைகளை முன்வைப்பதற்கு ஏதுவானதாகவும், ஒவ்வொரு மரபையும் ஒவ்வொரு கோட்பாட்டையும் கேள்விக்குட்படுத்திப் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கிய நீள்பயணத்தைத் தொடங்க ஏதுவாகவும் சுதந்திரமான சூழ்நிலையைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.’ மேலும், ‘ஒரு பல்கலைக்கழகம் வாழ்க்கை அனுபவத்தையும் அதுபோன்று வாழ்விற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும். இதைத்தான் நாம் இத்தகைய பல்கலைக்கழகத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம்’ என்றும் குறிப்பிட்டார்.

எனவே அப்போதைய பாராளுமன்றவாதிகளுக்கு ஜேஎன்யு ஏனைய பல்கலைக் கழகங்கள் போல் இல்லாமல் தனித்துவத்துடன் கூடிய நிறுவனமாக இருக்கவேண்டும் என்பதே பெருங்கனவாக இருந்தது. இதற்குப்பிறகு தொடங்கப்பட்ட பல்வேறு மத்தியப் பல்கலைக் கழகங்கள் ஜேஎன்யுவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இயங்குமுறை, அதிகாரப் பரவலாக்கம் மாணவப் பிரதிநிதித்துவம் :

ஜேஎன்யு-வுக்கான தனிப்பட்ட சட்டவிதிகள் (JNU ordinance) இத்தகைய எதிர்பார்ப்புகளை உள்வாங்கியே எழுதப்பட்டன. இவ்விதிகள் ஏனைய பல்கலைக் கழகங்களுக்குப் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கின்ற நெறிமுறைகளைவிடச் சற்று வேறுபட்டவை. எழுதப்பட்ட விதிகளை தவிர்த்து, கடந்த 50 வருட செயல்பாட்டில்  வெவ்வேறு வழக்கங்கள், மரபுகள், வழக்காறுகள் நடைமுறைக்கு வந்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

எனவே ஜேஎன்யுவின் அமைப்பு மற்றும் இயங்குமுறை  இத்தகைய விதிகள், நெறிமுறைகள் மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சனநாயக மரபுகளை அடிப்படையாகக் கொண்டவை.  இதனுடைய மாணவர் சேர்க்கை முறை மிகவும் வெளிப்படையானது. இட ஒதுக்கீட்டு விதிகளை முழுமையாகக் கடைபிடிப்பதுடன், ஆங்கிலம் தெரியாத மாணவர்கள் தங்கள் தாய் மொழிகளில் நுழைவுத் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆங்கிலத்திலும், ஹிந்தி த‍விர்த்து தமிழ், பெங்காலி, மலையாளம் இன்னும் பிற மொழிகளிலும் நுழைவுத்தேர்வு எழுதுவோரை அவ்வப்போது காணமுடியும்.

ஜே.என்.யூ மாணவர் தேர்தல் கமிட்டி.

பெண்களுக்கு மற்றும் மிகவும் பின்தங்கிய பிராந்தியங்களிலிருந்து விண்ணப்பிப்போருக்கு ஊக்கப் புள்ளிகள் வழங்கப்பட்டன. அனைத்துப் பால், மொழி, சமூக மற்றும் பிராந்தியப் பிரிவினைகளிலிருந்து திறமையான மாணவர்களின் வருகை ஜேஎன்யு மாண்புகளுக்கு அடிப்படையாக நின்று வலுச்சேர்த்தது. ஒவ்வொருவரும் தன் கருத்தைத் தைரியமாகக் கூச்சமின்றித் தனக்குத் தெரிந்த மொழியில் பேசுவதற்கு ஏதுவாக இருந்த எளிமையான சூழல் ஒருவர் மற்றொருவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், ஒரு ஒருக்கிணைந்த கூட்டு வாழ்விற்கு தேவையான வாழ்வியில் நெறிகளைக் ஏற்றுக்கொள்ளவும் வழிவகுத்தது.

சமூகவேறுபாடுகளைக் களைவதற்கான விழைவுகள் போன்று பால் வேறுபாடுகளைக் குறைத்து, பாலியல் வன்முறையற்ற சமூகத்திற்கான முன்மாதரியும் இங்கு வரையப்பட்டது. ஆண்-பெண் இருபால் மாணவர்களும் ஒரே விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு வன்முறையற்று சரிசமமாக இணைந்து வாழ்வதற்கான பரிசோதனையை மேற்கொண்டதை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். இதுபோன்ற சுதந்திரமான இணைந்த வாழ்வியல் நெறிகளை ஊக்குவித்த அதேவேளையில் பால் சார்ந்த வன்முறைகளைத் தடுப்பதற்காகக் கடுமையான விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.

1999-ம் ஆண்டு விசாகா நெறிமுறைகளின் வழிகாட்டுதலின்படி GSCASH (Gender Sensitization Committee Against sexual harassment)  அமைப்பு உருவாக்கப்பட்ட பால் நெறிகளை மீறும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு முறையான விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனை (பொதுவாகப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கம்) வழங்கப்பட்டது. இது பொதுவாக பெண்கள் சுதந்திரமாகச் செயலாற்றுவதற்கும், கல்வி கற்பதற்கும் உதவியது.

படிக்க:
ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
♦ Revoke Citizenship Amendment Act, 2019 ! People’s Right Protection Centre – Press Release

இதுபோன்ற எத்தனையோ தனித்துவம் மிகுந்த நடைமுறைகளைப் பற்றி பேசிக்கொண்டே செல்லலாம். மற்ற எல்லாவற்றையும்விட,  ஜேஎன்யு மாணவர் அமைப்பு தேர்தல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு சனநாயகத் தேர்தல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இது முன்மாதிரியாக உள்ளது.  இது மாணவர்களை மட்டுமே கொண்ட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் குழுவால், எந்தவிதப் பணம் மற்றும் வன்முறையின் ஊடுருவலும் இன்றி, 15 நாட்களுக்கு வெவ்வெறு தளங்களில், நிலைகளில் நடைபெறும் விவாதங்களின் அடிப்படையில், மறைமுக வாக்கெடுப்பு மூலம் நடைபெறுவது.  இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ பிரதிநிதிகளுக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தில், குறிப்பாகக் கொள்கைகளை வகுக்கும் குழுக்களில் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு, மாணவர் உட்பட அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலுடனே ஜேஎன்யு கொள்கை முடிவுகள் உருவக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது வழக்கம். பொதுவாகக் கல்வி, கல்விக் கட்டணம், விடுதி நெறிகள், கட்டணம் போன்றவற்றை நிர்ணயிப்பதில் மாணவர்கள் தங்கள் தரப்புக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தேவையான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.

விரைவில் அடுத்த பகுதி : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம்

(தொடரும்)

சௌ. குணசேகரன்

(ஆசிரியர் பற்றி : ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில், வரலாற்று ஆய்வுகளுக்கான மையத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்)

என்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் !

ன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் சுட்டுக் கொல்லவேண்டும் என சில வெட்டி ஜந்துகள் கூச்சலிடுகின்றன.

பழங்குடிப் பெண் அத்தியூர் விஜயாவை 6 போலீசார் கூட்டு வன்புணர்வு செய்த வழக்கில் 13 ஆண்டுகள் போராடி தண்டனை பெற்றுத் தந்தவர்கள் கல்யாணி உள்ளிட்ட மனித உரிமையாளர்கள்தான். தன்னலமற்று, அஞ்சாமல் வாதாடியவர் திமுக வழக்குரைஞர் எம்.ஆர்.ஷெரீப். (6 பேரையும் உயர்நீதிமன்றம் விடுவித்தது வேறு)

வாச்சாத்தியில் அரசு இயந்திரம் கும்பலாக வந்து வன்புணர்வு செய்த அதிரவைக்கும் நிகழ்வில் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகளும், மனித உரிமையாளர்களும் தான்.

அண்ணாமலை நகர் பத்மினி போலீஸ் நிலையத்தில் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் போராடியவர்கள் கே.பாலகிருஷ்ணன் போன்ற கம்யூனிஸ்டுகளும், மனித உரிமையாளர்களும்தான்.

படிக்க:
குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு !
♦ கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா ?

இந்த பட்டியல் நீளமானது. ஏதிலிகளுக்கு, எளியவர்களுக்கு, விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு வன்புணர்வு நடந்தாலும், எது நடந்தாலும் இவர்களே கதி.

இவர்கள் இனிய வாழ்வை தொலைத்து சட்டத்தீர்வை கோரியே போராடினர். சுட்டுக்கொல்ல வேண்டியல்ல. பரந்துபட்ட மக்களின், பெண்களின் பாதுகாப்பை சட்ட வாழ்வே உறுதி செய்யும் என இவர்கள் ஆய்ந்து, அறிந்து நம்புகின்றனர்.

நூற்றுக் கணக்கான என்கவுண்டர்களை நிகழ்த்தியுள்ள உ.பி போலீசாரின் துப்பக்கிகள் உன்னாவ் குற்றவாளிகளுக்கு எதிராக வெடிக்குமா ?

மற்றவர்கள் பாதுகாப்புக்காக வாழ்வை இழந்தும் இவர்கள் போராடுகிறார்கள்.

அடுத்தவர்களுக்காக விரல் நகத்தைக்கூட இழக்கக் தயாராக இல்லாத, ஒருமுறைகூட வீதியில் நின்று கை உயர்த்தாத நீதிமான்கள் வன்புணர்வு சந்தேக நபர்களுக்கு மட்டுமல்ல, எண்ணற்ற வன்புணர்வு வழக்குகளில் நீதிக்காக போராடிய இந்த மனித உரிமையாளர்களை சுடவேண்டும் என அரசமரத் தீர்ப்புகளை வழங்குகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ‘என்கவுண்டர்’ எனப்படும் போலீஸ் கொலைகள் நடந்த உ.பி.தான், அங்குள்ள ‘உன்னாவ்’தான் இந்தியாவின் வன்புணர்வு சம்பவங்களின் தலைமையகமாக உள்ளது என்பதையும் அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்.

ஆனால் மனித உரிமையாளர்களை (இவர்களில் பலவகை உண்டு. இவர்களோடு உடன்பட, மாறுபட பல உண்டு) சுடவேண்டும் என்போர் உ.பி. உன்னாவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் சுடவேண்டும் என்று கோரி நான் பார்க்கவில்லை.

நான் அப்படி கோரவில்லை என்பது வேறு.

நன்றி : AD Bala
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

Revoke Citizenship Amendment Act, 2019 ! People’s Right Protection Centre – Press Release

People’s Right Protection Centre

Press Release

09.12.2019

Citizenship Amendment Bill, 2019 and National register of Citizens are against Article. 14, 21 and 15(1) of Indian Constitution and secular, anti-racial principles of our Country!

The planned exclusion of Srilankan Thamizhs and Muslims is an act of snatching away of human rights and a move against the entire human society!

Revoke Citizenship Amendment Act, 2019 and National Citizen’s Register!
Grant citizenship to all the people who take asylum of India irrespective of religion, race, caste, place of birth….etc !

***

On 09.12.2019 the Citizenship Amendment Act, 2019 has been put forward and passed by the BJP Government in Parliament. As per this Act, Indian Citizenship will be granted to the Hindus, Christians, Parsis, Jains, and Buddhists from Pakistan, Bangladesh, and Afghanistan settled in India before 31st December 2014.

Advocate S.Vanchinathan at Press meet.

The law does not apply to the Muslims from Pakistan, Bangladesh, and Afghanistan as well as Srilankan Thamizhs from Sri Lanka and Rohingya Muslims from Myanmar.
Citizenship Amendment Bill, 2019-Anti-Constitutional Law

1. Article 5 – 11 of the Indian Constitution deals with citizenship. As per Government of India Act, 1935 the people of British India origin should be granted with Indian Citizenship. Accordingly, Pakistan, Bangladesh were part of British India. Hence who came to India before and after partition ought to have been granted with Indian Citizenship. .

2. From the combined reading of Articles- 14,15, 21,25 and 26 of the Indian Constitution even the foreigner should not be discriminated based on religion, race, caste and sex. Further the amendment is clearly against the “human dignity” and the principal of “Constitutional Morality”- both are enshrined under Article 21 of the Indian Constitution.

3. The present Law enforced by RSS – BJP – Modi – Amit shah government divides Muslims on the basis of religion and Eezham Thamizhs on racial basis.The move is diametrically opposite to the “Secular Fabric Of Our Indian Constitution” which is prohibited under the judgment made law held in “Kesavanatha Bharathi and S.R.Bommai cases by the Apex Court.

4. Citizenship is basic right of all other rights. If a person does not granted with citizenship he cannot avail any other right. Hence it is clear that the people who are denied citizenship right will not have right to freedom of expression, right against exploitation and other valuable rights under part III of the Constitution. They cannot avail for government schemes, employment, education and bank access. Totally crores of people will be announced as illegal immigrants and they will be incarcerated in concentration camps as done to Jews in Germany and to the black African slaves in the United States. They will be left isolated without any right as marked people and will be subjected to the strict surveillance of the state.

5. The Citizenship Record framed in Assam declared two million people as illegal immigrants. Nearly 9-12 lakh people among them are Hindus. Hence the Indian Citizenship Act which is extended to the whole of our country will classify the people who do not have documents to prove their citizenship as illegal immigrants and will shift the to concentration camps.

6. As per this Act if a person’s name is not found in the Citizenship Registry it is his duty to prove himself by approaching the Citizenship Tribunal. In our Country people who have been residing on roadsides, nomads, people affected by floods and other natural calamities are definitely living without documents or lost their documents. Where will they go for their certificates of birth, education and for bank accounts?

7. If Hindus in Pakistan, Bangladesh, and Afghanistan are minorities of those countries then Hindu-Thamizh People from Srilanka and Rohingya Muslims from Myanmar are also minorities of India. Why Citizenship is denied to them?

8. This act of discrimination of people on the basis of religion, place of birth and race is not a reasonable classification and nothing but the Anti-Muslim and Anti-Thamizh politics of RSS – BJP government. It is aimed at Hindu vote bank. People from all corners and all the political parties should reject this Act.

9. The entire exercise of the NATIONAL REGISTER OF CITIZENS is highly expensive and needs at-least Rs.1,50,000 crores and this will put an additional economical burden to the people of India who already suffered lot under the economic crisis

10. The enforcement of this enactment will disrupt India’s global reputation. India will be considered as a barbaric country which turned down from the state of civilisation.
Totally it is a destruction of our secular Constitution and our nation.

Advocate S.Vanchinathan
State Co-ordinator
People’s Right Protection Centre
Mobile : 9865348163 / Email : vanchiadv@gmail.com

டியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி ! | பொருளாதாரம் கற்போம் – 47

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 47

டியுர்கோ – அமைச்சர்

அ.அனிக்கின்

புர்போன் அரசர்கள் பிற்கால சந்ததியினருக்குச் சில பிரபலமான பொன்மொழிகளை விட்டுச் சென்றிருக்கின்றனர். “பாரிஸ் ஒரு பெரும் சொத்து” என்ற சொற்றொடரை நான்காம் ஹென்ரி சொன்னதாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. “நானே அரசு” என்று பதினான்காம் லுயீ சொன்ன பொழுது அவர் வரம்பில்லாத முடியாட்சியை ரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறினார். பதினைந்தாம் லுயீ அதைப் போலவே பிரபலமான, “எனக்குப் பிறகு ஊழிப் பெருவெள்ளம் பொங்கட்டும்” என்ற பொன் மொழியைச் சொன்னார். பதினாறாம் லுயீ ஒரு பொன் மொழியைக் கூட விட்டுச் செல்லவில்லை; சீக்கிரத்திலேயே அவர் சிரச்சேதம் செய்யப்பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம், ஒருவேளை அவர் முட்டாளாக இருந்தது கூடக் காரணமாகலாம். மிராபோ (பிஸியோகிராட்டுகள் குழுவைச் சேர்ந்த பிரபுவின் மகன்) கேலியாகச் சொன்னது போல, பதினாறாம் லுயீயின் குடும்பத்திலிருந்த ஒரே ஒரு ஆண் மகன் அவர் மனைவியான மேரி அன்டுவனேட்தான்.

பதினைந்தாம் லுயீ 1774-ம் வருடம் மே மாதத்தில் அம்மை நோயினால் மரணமடைந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தின் கடைசி வருடங்களில் ஏற்பட்ட நிதித்துறை நெருக்கடியும் குரூரமான அடக்குமுறையும் குறிப்பிடத்தக்கவையாகும். சர்வாதிகாரியான அரசர் மரணமடைந்ததும்அவருக்குப் பிறகு ஒரு கொடுங்கோலர் ஆட்சி பீடத்திலேறினாலும் கூட- மிதவாதப் போக்குகள் வழக்கமாகத் தொடரும். பழைய அரசரின் மரணச் செய்தியைக் கேட்டதும் பிரான்ஸ் நாடு முழுவதுமே நிம்மதியைக் காட்டிப் பெருமூச்சு விட்டது. அவருடைய வாரிசுக்கு இருபது வயதாகியிருந்தது; அவர் கடுமையில்லாதவர், நெகிழ்ச்சியான சுபாவமுடையவர். ஆகவே இனி ”அறிவுயுகம்” தோன்றும், நம்முடைய கருத்துக்கள் நடைமுறைக்கு வரும் என்று தத்துவஞானிகள் நம்பினார்கள்.

டியுர்கோ முதலில் கடற்படை அமைச்சராகவும் அதற்குச் சில வாரங்களுக்குப் பிறகு நிதித் துறையின் பொதுப் பொறுப்பாளராகவும் மிகவும் உயர்ந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பொழுது இந்த நம்பிக்கைகள் வேரூன்றின. டியுர்கோ நாட்டின் உள்விவகாரங்கள் அத்தனைக்குமே நிர்வாகப் பொறுப்பை வகித்தார்.

பதினாறாம் லுயீ

டியுர்கோ தற்செயலாகவே அமைச்சரானார் என்று வழக்கமாகச் சொல்வதுண்டு. அவருடைய நண்பரான அபே ட விரி, மொரெபா சீமாட்டியிடம் சொன்னார்; அந்தச் சீமாட்டி தன் கணவனை வற்புறுத்தினாள்; அவள் கணவர் அரசருக்கு மிக நெருக்கமாக இருந்தார்; இதரவை. இவற்றில் ஓரளவுக்குத்தான் உண்மை உண்டு. அரண்மனைச் சூழ்ச்சியின் விளைவாகவே டியுர்கோவுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அரசவையைச் சேர்ந்தவர்களில் சூழ்ச்சி மிக்கவரான மொரெபா டியுர்கோவின் நேர்மையும் செல்வாக்கும் பிரபலமடைந்திருந்த படியால் அவற்றைத் தன்னுடைய சொந்த நோக்கங்களுக்கு உபயோகித்துக்கொள்ள விரும்பினார். அவருடைய கருத்துக்கள், திட்டங்களைப் பற்றி அவருக்குச் சிறிதும் அக்கறை இல்லை.

ஆனால் இதுதான் முழுக்கதை என்று சொல்ல முடியாது. மாற்றம் அவசியம் என்பதை இதற்கு முன்பு எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு பிரான்ஸ் முழுவதுமே உணர்ந்தது. இதை உச்சியில் உட்கார்ந்து கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ மேன்மக்களும் கூடப் புரிந்து கொண்டார்கள். அரசவையிலிருந்த கும்பலோடு சம்பந்தமில்லாத, பொதுப் பணத்தை ஏப்பமிட்டதாகக் கெட்ட பெயர் வாங்காத ஒரு புது மனிதர் தேவைப்பட்டார். அந்த மனிதரைக் கண்டுபிடித்தார்கள் அவர்தான் டியுர்கோ, பிரான்சின் நிதி, பொருளாதாரத் துறைகளில் யுகக்கணக்காகக் குவிந்திருந்த குப்பைகளை அகற்றுகின்ற பெரும் பொறுப்பை மேற்கொண்ட பொழுது அது சுலபமான வேலை என்று டியுர்கோ நினைக்கவில்லை. அவர் விரும்பியே அந்தப் பொறுப்பை மேற்கொண்டார்; சிறிதும் தளர்ச்சியடையாமல் அந்தப் பணியைச் செய்தார். துணிச்சலான முதலாளித்துவச் சீர்திருத்தங்களைச் செய்கின்ற பாதையை அவர் பின்பற்றினார். மனிதனுடைய பகுத்தறிவு, முன்னேற்றம் என்ற கோணத்தில் பார்க்கும் பொழுது அவை அவசியமானவை என்று டியுர்கோ கருதினார்.

“பழைய ஆட்சியை ஒழித்த அறிவுத்துறையின் வீர புருஷர்களில் அவர் ஒருவர்”(1)  என்று மார்க்ஸ் டியுர்கோவைப் பற்றி எழுதினார்.

படிக்க:
நவீன வேதியியலின் கதை | பாகம் 02
♦ திராவிடம் | திமுக – அதிமுக | பஞ்சமி நிலம் | பாபர் மசூதி தீர்ப்பு | கேள்வி – பதில் !

அமைச்சர் என்ற முறையில் டியுர்கோ செய்தது என்ன? அவர் குறைந்த காலத்துக்கே பதவியிலிருந்தார், அந்தக் குறைவான காலத்திலும் ஏராளமான நெருக்கடிகள் அவருக்கு ஏற்பட்டன என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது அவர் நம்ப முடியாத அளவுக்கு அதிகமானவற்றைச் செய்தார் என்று சொல்ல வேண்டும். ஆனால் நெடுந்தொலைவு நோக்கில் இறுதி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் மிகக் குறைவாகவே சாதித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருடைய தோல்விக்கே புரட்சிகரமான முக்கியத்துவம் இருந்தது. டியர்கோவைப் போன்ற ஒருவரால் கூட சீர்திருத்தங்களைச் செய்ய முடியவில்லை என்றால், இனிமேல் யாரும் சீர்திருத்தங்களைச் செய்ய முடியாது, புரட்சியால் தான் அது முடியும் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும். எனவே டியுர்கோவின் சீர்திருத்தங்களிலிருந்து 1789-ம் வருடத்தில் பாஸ்டிலி கோட்டை தகர்க்கப் பட்டதற்கும் 1792-ம் வருடத்தில் டியுல்லரீ அரண்மனை முற்றுகையிடப்பட்டதற்கும் ஒரு நேர்கோட்டைக் காண முடியும்.

பிரான்சின் நிதி நிலைமையில் ஒழுங்கை ஏற்படுத்துவதை டியுர்கோ மிகவும் அவசரமான வேலையாகக் கருதி அதை முதலில் எடுத்துக் கொண்டார். அவருடைய நீண்ட காலத் திட்டத்தில் நிலவுடைமையிலிருந்து கிடைக்கின்ற வருமானத்துக்கு வரி விதிப்பது, வரிவேட்டையை ஒழிப்பது போன்ற தீவிரமான சீர்திருத்தங்கள் இடம் பெற்றிருந்தன. தன்னுடைய திட்டத்தைப் பொதுவான முறையில் எல்லோருக்கும் அறிவிக்க வேண்டுமென்று அவர் அவசரப்படவில்லை. ஏனென்றால் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் அதற்கு எதிராக என்ன செய்வார்கள் என்பது அவருக்குத் தெரியும். அப்போதைக்கென்று தனிப்பட்ட சில சீர்திருத்தங்களைச் செய்வதில் அவர் அதிகமாகப் பாடுபட்டார்.

டியுர்கோ

வரிவிதிப்பு முறையிலிருந்த அப்பட்டமான கோளாறுகளையும் அநீதிகளையும் அகற்றுவதற்கும் தொழில்துறை, வர்த்தகம் ஆகியவற்றின் மீது விதிக்கப் பட்டிருந்த வரிச்சுமையைக் குறைப்பதற்கும் வரிவேட்டைக்காரர்கள் மீது அதிகமான நிர்ப்பந்தத்தைக் கொண்டு வருவதற்கும் அவர் பாடுபட்டார். மறுபக்கத்தில் வரவு செலவுத் திட்டத்தில் அரண்மனைச் செலவுகள் பிரதான இனமாக இருந்த காரணத்தால் அந்தச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தார். அதன் விளைவாக, ஊதாரிச் செலவுகளைச் செய்து கொண்டிருந்த மேரி அன்டு வனேட்டின் சபலம், ஆத்திரம் ஆகியவற்றோடு அவர் வெகு சீக்கிரத்தில் மோதிக் கொள்ள நேர்ந்தது.

அவருடைய முயற்சிகளின் பலனாக வரவு செலவுத் திட்டத்திலும் அரசுக் கடன் வசதிகளிலும் இலேசான அபிவிருத்தி ஏற்பட்டது. ஆனால் அமைச்சரின் எதிரிகள் வேகமாகப் பெருகிக் கொண்டிருந்தனர், அவர்கள் அதிகமான சுறுசுறுப்போடு வேலை செய்யத் தொடங்கினார்கள்.

டியுர்கோ செய்த பொருளாதார சீர்திருத்தங்களில் தானியம், மாவு வியாபாரத்தில் வர்த்தக சுதந்திரத்தை ஏற்படுத்தியதும் இதற்கு முன்பிருந்த ஒரு அமைச்சரின் உதவியோடு சில சூழ்ச்சிக்காரர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஏகபோகத்தை ஒழித்ததும் முக்கியமாகும். இந்த சீர்திருத்தம் அடிப்படையில் முற்போக்கானதுதான்; எனினும் அதன் காரணமாகப் பெரும் நெருக்கடிகள் அவருக்கு ஏற்பட்டன. 1774-ம் வருடத்தில் அறுவடை மோசமாக இருந்தது . அதனைத் தொடர்ந்து வந்த வசந்த காலத்தின் போது தானிய விலை கணிசமாக அதிகரித்தது. சில நகரங்களில், குறிப்பாக பாரிசில் பொதுமக்கள் கலகம் செய்தார்கள்.

இந்தக் கலகங்களைப் பெருமளவுக்கு டியுர்கோவின் எதிரிகள் தூண்டினர், திட்டமிட்டு நடத்தினர் என்று நிரூபிக்க முடியாவிட்டாலும் அவ்வாறு நம்புவதற்குப் போதிய காரணங்கள் உண்டு. அவருடைய பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது அவர்களுடைய நோக்கம். அமைச்சர் கலகங்களை உறுதியாக அடக்கினார். தங்களுடைய சொந்த நலன்கள் யாவை என்பது மக்களுக்குத் தெரியவில்லை, இந்த நலன்களை வேறு விதமான வழியில் தான் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று அவர் கருதியிருக்கக் கூடும். இவைகளையெல்லாம் டியர்கோவின் எதிரிகள் அவருக்கு விரோதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்பொழுது மொரெபா அவருடைய எதிரிகளோடு இரகசியமாகச் சேர்ந்திருந்தார்; நாளாக ஆக அவர் டியுர்கோவைக் கண்டு அதிகமாக அஞ்சினார், அதிகமாகப் பொறாமைப்பட்டார்.

எனினும் டியுர்கோ சிறிது கூடத் தயங்காமல் காரியங்களைத் தொடர்ந்தார். 1776-ம் வருடத் தொடக்கத்தில் அவருடைய பிரபலமான ஆறு ஆணைகளுக்கு அரசருடைய ஒப்புதலைப் பெற்றார்; இதற்கு முன்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எல்லாவற்றையும் விட இவை நிலப்பிரபுத்துவத்தின் அஸ்திவாரத்தைத் தகர்த்தன. அவற்றில் விவசாயிகள் கட்டாயமாகச் சாலை அமைக்கும் முறையை ஒழித்ததும், தனிச் சலுகைகளைக் கொண்ட நிறுவனங்களான வர்த்தக, கைவினைஞர்கள் சங்கங்களை ஒழித்ததும் முக்கியமான இரு நடவடிக்கைகளாகும்.

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு | ராஜு – கருணானந்தன் – முத்துகிருஷ்ணன் உரை | காணொளி
♦ சிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46

இரண்டாவது ஆணை தொழில் துறை மற்றும் முதலாளித்துவத் தொழில் அதிபர்களின் வேகமான வளர்ச்சிக்கு மிகவும் அவசியமென்று டியுர்கோ கருதினார்; அது நியாயமானதே. இந்த ஆணைகளுக்குக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது; அந்த எதிர்ப்பின் மையமாகப் பாரிஸ் நாடாளுமன்றம் இருந்தது. இவற்றைப் பதிவு செய்வதற்கு நாடாளுமன்றம் ஒத்துக் கொண்டால்தான் அவை சட்டமாக முடியும். இந்தப் போராட்டம் இரண்டு மாதங்களுக்கு மேல் நடைபெற்றது. மார்ச் மாதம் 12-ம் தேதியில் டியுர்கோ அவற்றைப் பதிவு செய்வதில் வெற்றி பெற்றார்; அந்த ஆணைகள் சட்டமாயின.

அது மாபெரும் முயற்சிக்குப் பிறகு கிடைத்த சிறு வெற்றியே. பழைய ஆட்சிமுறைக்கு ஆதரவான சக்திகள், அரசவைக் கும்பல், திருச்சபையின் மேல்தட்டினர், பிரபுக்கள், நீதித் துறையினர், தொழில் நிறுவன முதலாளிகள் அனைவரும் சீர்திருத்தங்களில் குறியாக இருந்த அமைச்சருக்கு எதிராகத் திரண்டெழுந்தனர்.

டியுர்கோ கொண்டுவந்த சீர்திருத்தங்களின் ஜனநாயகத் தன்மையை மக்கள் ஓரளவுக்குப் புரிந்து கொண்டனர். எல்லோராலும் வெறுக்கப்பட்ட கூலி இல்லாமல் சாலை அமைக்கும் கட்டாய முறையிலிருந்து விடுதலையடைந்த விவசாயிகள் அதிகமாக மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் அவர்களுக்கு டியுர்கோவின் பெயர் கூட அநேகமாகத் தெரியாது. பாரிஸ் நகரத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த கைவினைஞர்களும் கைத்தொழிற் பயிற்சியாளர்களும் ஆனந்தமடைந்தனர்; டியுர்கோவைப் புகழ்ந்து பாட்டுக்களை எழுதினார்கள். ஆனால் மக்கள் வெகு தூரம் கீழேயிருந்தார்கள், எதிரிகளோ டியர்கோவுக்குப் பக்கத்திலேயே இருந்தார்கள்.

டியுர்கோவை ஆத்திரமாகக் கண்டனம் செய்த பிரசுரங்களும் ஏளனம் செய்த பாடல்களும் கேலிச் சித்திரங்களும் வெள்ளம் போல வெளிவந்தன, அவற்றில் பாரிஸ் நகரமே மூழ்கியது. டியர்கோவை ஆதரித்துக் கைவினைஞர்கள் எழுதிய உற்சாகமான பாடல்களையும் பிஸியோகிராட்டுகள் எழுதிய செய்முறைக் கட்டுரைகளையும் இந்த வெள்ளம் அடித்துக் கொண்டு போனது. நையாண்டிப் பாடல்களை எழுதியவர்கள் டியர்கோவைச் சில சமயங்களில் பிரான்சின் கெடுதலான மேதை என்றும் சில சமயங்களில் என்ன செய்வதென்று புரியாத, செய்முறை அனுபவமில்லாத தத்துவஞானி என்றும் சில சமயங்களில் “பொருளியலாளர்கள் குழுவின்” கைகளில் அகப்பட்ட பொம்மை என்றும் சித்தரித்தார்கள். டியுர்கோ நேர்மையானவர், எத்தகைய ஊழலும் செய்யாதவர் என்பவற்றை மட்டுமே அவர்கள் சந்தேகிக்கவில்லை. ஆனால் யாரும் அவற்றை ஒருக்காலும் சந்தேகிக்க மாட்டார்கள்.

மேரி அன்டுவனேட்

இந்த எதிர்ப்பு இயக்கம் முழுவதையும் அரண்மனைக் கும்பல் பண உதவி செய்து நடத்தியது. மற்ற அமைச்சர்களும் டியுர்கோவுக்கு எதிராகச் சதிகள் செய்தார்கள். அவரை பாஸ்டிலி சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று அரசி லுயீயிடம் வெறிகொண்டு கத்தினாள். அரசரின் சகோதரர் டியுர்கோவைப் பற்றி மோசமான அவதூறுகளைப் பரப்பியவர்களில் ஒருவர்.

இத்தகைய கொந்தளிப்புக்கு நடுவே டியுர்கோ தன்னந் தனியாக நின்றார்; உறுதியோடும் கௌரவத்தோடும் நின்றார். உண்மையான மாண்பும் அவலத் தன்மையும் சூழ்ந்து புகழோடு நின்றார்.

இனி அவர் வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாததாகும். கடைசியில் பதினாறாம் லுயீ எல்லாத் திசைகளிலுமிருந்தும் வந்த வற்புறுத்தலை ஒத்துக் கொள்ள நேர்ந்தது. டியர் கோவை பதவியிலிருந்து விடுவித்திருப்பதை அவரிடம் நேரில் சொல்ல அரசருக்குத் துணிச்சல் கிடையாது. அந்த உத்தரவை அரண்மனை ஊழியர் மூலம் டியுர்கோவுக்குக் கொடுத்தனுப்பினார். 1776-ம் வருடம் மே மாதம் 12-ம் தேதியன்று இந்த சம்பவம் நடைபெற்றது. டியுர்கோ தொடங்கிய பல நடவடிக்கைகள் குறிப்பாக முன்னர் கூறப்பட்ட ஆணைகள்- சீக்கிரத்திலேயே முழுமையாகவோ, பகுதியாகவோ ரத்துச் செய்யப்பட்டன.

இதன் பிறகு அநேகமாக எல்லாக் காரியங்களுமே பழைய மாதிரியில் நடைபெற்றன. டியுர்கோவின் ஆதரவாளர்களும் அவரால் அரசாங்க வேலைகளுக்கு வந்த உதவியாளர்களும் அவரோடு சேர்த்து ஓய்வு கொடுக்கப்பட்டார்கள்; சிலர் பாரிசை விட்டே போக நேர்ந்தது. பிஸியோகிராட்டுகள், கலைக்களஞ்சியவாதிகளின் நம்பிக்கைகள் அழிந்தன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  K. Marx, F. Engels, Werke, Bd. 15, Berlin, 1969, S. 375.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

வெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் ? | கேள்வி – பதில் !

கேள்வி : உள்நாட்டில் வேலையில்லை வெளிநாடு சென்றால் கடனை அடைக்கலாம், பொருளாதார ரீதியாக முன்னேறலாம் என்ற கருத்தை எப்படி பார்ப்பது, அப்படி சென்றால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா?

கவின்

ன்புள்ள கவின்,

நமது மக்களில் கணிசமானோர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் தனிச்சிறப்பாக வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகமும் உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட அளவில் மூளை உழைப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

உலகளாவிய பொருளதார நெருக்கடி காரணமாக இந்நாடுகளில் வேலை வாய்ப்புகள் அருகி வருகின்றன. உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடுவோர் சுமார் ரூ. 25,000 முதல் 50,000 வரை ஊதியம் பெறுகிறார்கள். இவர்களுக்கான பணிச்சுமை அதிகம், வாழ்வோ! ஒரு சிறையைப் போன்று இருக்கிறது. குவைத், துபாய் போன்ற நாடுகளில் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கட்டுமான தொழிலாளிகள் வேலை இழந்திருக்கின்றனர்.

வளைகுடாவில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் சொற்ப ஊதியம் பெறுவதோடு ஆயுள் தண்டனைக் கைதி போல வாழ்கிறார்கள். வளைகுடா நாடுகளின் செல்பேசி ஆப்-களில் ஆன்லைன் அடிமை விற்பனை புகைப்படம் போட்டே விற்கப்படுகிறது. இது குறித்து பிபிசி ஒரு ஆவணப்படத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது.

சிங்கப்பூரில் பணிபுரியும் வீட்டு வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கையும் குறைந்த ஊதியத்தில் காலத்தை ஓட்டுவதாக இருக்கிறது. இரண்டு முதல் நான்கு இலட்ச ரூபாய் வரை கடன் வாங்கி வெளிநாடு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளிகள் பல்லைக் கடித்து விட்டு நான்கைந்து ஆண்டுகள் பணிபுரிந்தால் கடனை அடைத்து விட்டு ஓரிரு இலட்ச ரூபாயை மட்டும் சேமிக்கிறார்கள். இத்தகைய வேலைகளும் இப்போது அருகி வருகின்றது. பலர் திரும்பியிருக்கின்றனர். அதே நேரம் வெளிநாட்டில் ஒரு சொர்க்கம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதான மாயை காரணமாக திரும்புவோருக்கு இணையாக நாட்டை விட்டு வெளியோருவோரின் எண்ணிக்கையும் இருக்கிறது.

இறுதியில் வெளிநாட்டுக்கு வேலைகளுக்கு ஆள் எடுக்கும் தரகர் நிறுவனங்களே அதிகம் சம்பாதிக்கின்றனர். பலர் திரும்பி இங்கே ஏதாவது ஒரு வேலை பார்த்து மிச்சமிருக்கும் வாழ்க்கையை ஓட்டலாம் என்று எண்ணுமளவு வெளிநாட்டு வேலை அச்சுறுத்துகிறது. தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிப்படைந்தோரில் பலர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். சிறுகச் சேர்த்த பணத்தை வைத்து தென்னந்தோப்பு போட்டு, வீடு கட்டி பின் அனைத்தையும் இழந்து தற்போது திரும்பவும் முதலிலிருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கும் அவலத்தில் இருக்கிறார்கள்.

மேற்குலகில் மூளை உழைப்பு வேலைகளுக்காக செல்வோரின் நிலைமை இவ்வளவு மோசமில்லை என்றாலும் அந்த வாய்ப்பு கிடைப்பது தற்போது கடினமாகி வருகிறது.

எனவே  முதலாளித்துவ நெருக்கடி சூழ்ந்திருக்கும் இந்தக் காலத்தில் கடன் வாங்கி வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்வது அவ்வளவு சிறப்பான யோசனை அல்ல!

♦ ♦ ♦

கேள்வி: “மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் ” என்று ஓபிஎஸ் புதல்வர் கூறியது பற்றி ….?

எஸ். செல்வராஜன்.

ப்புதல்வர் தனது எம்.பி லெட்டர் பேடிலேயே மோடியின் படத்தை பிள்ளையார் சுழி போல போட்டிருக்கிறார். டயரைத் தொழுது அமைச்சாரன ஜந்துவின் வாரிசு, அப்பாவின் டயர் இமேஜுக்கு குறைவில்லாமல் அடிமைத்தனத்தை அம்மணமாக காட்டுவதில் சக்கை போடு போடுகிறார்.

எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு, ஓ.பி.எஸ் குடும்பத்திற்கு ஒரு டயர் உழவு!

♦ ♦ ♦

கேள்வி : இஸ்லாமியர்களை, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அழிக்க நினைப்பதற்கான காரணம் என்ன?

பிரகாஷ்

ன்புள்ள பிரகாஷ்,

பொதுவில் பாசிசக் கட்சிகள் அனைத்தும் தமக்கென நேர்மறையான கொள்கைகளை கொண்டிருப்பதில்லை. எதிர்மறையான கொள்கைகள், கற்பனையான வில்லன்களை உருவாக்கியே அவர்கள் மக்களை திரட்டுகிறார்கள். ஜெர்மனியிலும், ஐரோப்பாவிலும் யூதவெறுப்பை கிளப்பியே ஹிட்லர் ஜெர்மானியர்களின் தேசபக்தியை கிளப்பி விட்டார். அதே போன்று ஆங்கிலேயர்களின் ஆசியுடன் துவங்கப்பட்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ்-ம் இந்துக்களை திரட்ட முசுலீம்கள் எனும் கற்பனையான எதிரிகளை கட்டமைத்து அதற்கு விதவிதமான புனைவுகளை உருவாக்கி மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.

அதனால்தான் 1925-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் துவங்கப்பட்டு செயல்படுவதற்கு ஆங்கிலேயர்கள் அனுமதி அளித்தார்கள். பதிலுக்கு சங்க பரிவாரத்தினரும் சுதந்திரப் போராட்டத்திற்கு நாமம் போட்டுவிட்டு முசுலீம் எதிர்ப்பு கலவரத்தில் ஈடுபட்டு தமது விசுவாசத்தை நிறுவினார்கள். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் இந்து உயர் சாதியினர் விரும்பியே இந்த முஸ்லீம் வெறுப்பை மேற்கொண்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-இன் இரண்டாம் தலைவரான கோல்வால்கரின் உரைகளை ‘ஞானகங்கை” என்றொரு நூலாக தொகுத்திருக்கிறார்கள். அதில் இரண்டாம் பாகத்தில் பக்கம் 159-ல் உள்நாட்டு அபாயங்கள் என்ற தலைப்பில் முதல் அபாயமாக முஸ்லீம்களை குறிப்பிடுகிறார் கோல்வால்கர். பாகிஸ்தான் பிரிந்து போன பிறகும் அந்தக் கோரிக்கையை ஆதரித்த முசுலீம்கள் பலர் இங்கேயே தங்கி பாகிஸ்தான் ஆதரவு சதி வேலையை செய்வதாக அவர் பேசுகிறார். ஒவ்வொரு மசூதியும் ஒரு குட்டி பாகிஸ்தான் போன்று செயல்படுகிறது, அங்கே ஆயுதங்களை பதுக்கியிருக்கிறார்கள், இந்துக்களை கொல்வதற்கு திட்டம் போடுகிறார்கள், மசூதி முன்னே இந்துக்கள் ஊர்வலம் போக முடியாது, வடகிழக்கில் வங்கதேச முசுலீம்கள் ஊடுறுவி இரண்டு மடங்காக பெருகி விட்டனர் என்று தனது துவேசத்தை விலாவாரியாக அடுக்குகிறார் கோல்வால்கர். இதற்கு ஆதரவாக காங்கிரசு ஆட்சியாளர்கள் வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அதுதான் இன்று தேசிய குடிமக்கள் பதிவேடாக முசுலீம்களை அகதிகளாக்கும் அமித்ஷாவின் திட்டமாக பாராளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. சங்க பரிவாரங்கள் தனது முசுலீம் துவேச பிரச்சாரத்திற்கு வரலாறு, அரசியல், புராணம், மத நம்பிக்கைகள், பண்பாட்டு விசயங்கள் என்று பல்துறைகளிலும் பல்வேறு கதைகளை கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதற்கு கணிசமான இந்துக்களும் பலியாகி இருக்கிறார்கள்.

முசுலீம்கள் மட்டும் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள், அதனால் அவர்களது உடலில் ஒருவித நாற்றம் வரும், அதை மறைப்பதற்கு செண்ட் அடிப்பார்கள், நாம் வேட்டி கட்டினால் அவர்கள் லுங்கி உடுத்துவார்கள், நாம் தாடி எடுத்தால் அவர்கள் தாடி வைப்பார்கள், குல்லா போடுவார்கள், கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியினை பாக் அணி வென்றால் பட்டாசு வெடிப்பார்கள், பாகிஸ்தான் கொடியை அவ்வப்போது தமது குடியிருப்புகளில் ஏற்றுவார்கள் என்று இந்த விசமப் பிரச்சாரத்திற்கு முடிவே இல்லை.

முஸ்லீம் கடைகளில் வாங்கக் கூடாது, முஸ்லீம்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க கூடாது என்று அவர்களை ஒதுக்க வேண்டியும் பிரச்சாரம் செய்கிறார்கள். வரலாற்றை பொறுத்த அளவில் முகலாயர் ஆட்சியில் இங்கே வாள் கொண்டு இஸ்லாம் நிலை நாட்டப்பட்டது, இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டன என்று அடித்து விடுகிறார்கள். சொல்லப் போனால் இந்து மன்னர்களால் இடிக்கப்பட்ட கோவில்களை விட முஸ்லீம் மன்னர்கள் இடித்த கோவில்கள் உண்மையில் குறைவு.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பும், ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சிக்கு முன்பும் இத்தகைய இஸ்லாமிய துவேச வெறுப்பு இந்திய துணைக் கண்டத்தில் இல்லை. தற்போது தொட்டதுக்கெல்லாம் முஸ்லீம்களை குற்றம் சொல்லி, பயங்கரவாதம், காஷ்மீர் சிறப்புச் சலுகை, கோமாதவைக் கொல்கிறார்கள், வங்கதேச அகதிகள் பெருத்து விட்டார்கள் என்று ஒவ்வொன்றிலும் சட்டப்படியே அடக்குமுறையை ஏவிவிடுகிறார்கள்.

எனவே இந்துத்துவத்தின் வாழ்வும் இருப்புமே இஸ்லாமிய வெறுப்பில்தான் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. அதை பிடுங்கி விட்டால் அங்கே உருப்படியாக ஏதுமில்லை. கோல்வால்கர் தனது உள்நாட்டு அபாயம் என்ற தலைப்பில் முஸ்லீம்களுக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகளையும் இதே போன்று குறிப்பிடுகிறார்.

இப்படி கற்பனையாக எதிரிகளை உருவாக்கி அவர்களைப் பற்றிய கட்டுக்கதைகளை பிரச்சாரம் செய்து பாசிசம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகளும், நெருக்கடிகளும் அதிகரிக்கும் காலத்தில் மக்களின் போராட்ட உணர்வை திசை திருப்பவும், மழுங்கடிக்கவும் இந்த உத்தி முதலாளிகளுக்கு பயன்படுவதால் அவர்களில் பலர் பாசிசத்தை ஆதரிக்கிறார்கள். அதனால்தான் அம்பானி, அதானி முதல் பலர் சங்க பரிவாரத்தின் புரவலர்களாக இருக்கின்றனர். அப்படித்தான் பாஜகவும் தனது தேர்தல் நிதியாக நூற்றுகணக்கான கோடி ரூபாயை திரட்ட முடிகிறது.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே – பாசிச பாஜக !

1

“எனது மாநிலத்தையும் மக்களையும் எடப்பாடி பழனிச்சாமி பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதற்கு நான் மிக மோசமாக வெட்கப்படுகிறேன். என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரிப்பதில் அவரது சுயரூபம் வெளிப்பட்டு விட்டது. இதற்கு ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதுவரை இந்த தற்காலிக அதிகாரத்தை அனுபவித்துக் கொள்ளுங்கள்.

ஜெயலலிதா இந்த சட்ட திருத்தத்தை நிச்சயம் ஆதரித்திருக்க மாட்டார். அதிமுக தனது அறவிழுமியங்களை ஜெயலலிதா இல்லாத நிலையில் நொறுக்கி விட்டது” – இவ்வாறாக ட்விட்டரில் கொந்தளித்துள்ளார் சமூக செயல்பாட்டாளரும், ட்விட்டர் கருத்துரையாளரும் நடிகருமான சித்தார்த்.

இவர் இயக்குநர் ‘ஷங்கர்’ இயக்கிய “பாய்ஸ்” உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன், தொலைக்காட்சி கருத்துரையாளர் சுமந்த்ராமன், உள்ளிட்ட வேறு சிலரும் கூட “அம்மா இல்லாத நிலையில் அதிமுக ஆட்டுக்குட்டிகள் வழி தவறிப் போனதை” நினைத்து வருந்திக் கொண்டுள்ளனர்.

நிற்க.

எல்லைப் புற நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

நேற்று (09/12/2019) நள்ளிரவு இந்த மசோதா பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறியது. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன.

படிக்க:
தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !
♦ முசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை !

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் (1955) படி, 11 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோர முடியும். ஏற்கெனவே இருந்த இந்த சட்டத்தில் தான் தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கொண்டு வந்துள்ள திருத்தம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த முசுலீம் அல்லாதவர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இவர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியிருந்தால் இந்தியக் குடியுரிமை பெற்றுக் கொள்ளவும் இந்த சட்ட திருத்தம் வகை செய்கின்றது.

மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை மறுப்பது என்பதை சட்டமாக்கியதன் மூலம் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்கிற கருத்தாக்கத்தை குப்பைத் தொட்டியில் எரிந்துள்ளது பாரதிய ஜனதா. மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்துப் பார்க்கலாம், பாரபட்சம் காட்டலாம் என்பதற்கு ஒரு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த சட்ட திருத்தத்திற்கு இந்துத்துவ கும்பல் வேறு வகையாக விளக்கம் அளிக்கிறது. அதாவது, அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் ஒடுக்கப்படும் போது அவர்கள் வாழ்க்கை தேடி இந்தியா வருகின்றனர். இவர்களுக்கான ஒரு பாதுகாப்பு தான் இந்த சட்ட திருத்தம் என்பதே அதை ஆதரிக்க கூடியவர்கள் முன்வைக்கும் வாதம் – அதாவது சிறுபான்மையினரின் உரிமையை இவர்கள் பாதுகாக்கிறார்களாம்.

சரி, அப்படியெனில் இலங்கையில் சிறுபான்மையாக இருக்கும் தமிழர்கள் ஏன் இவ்வாறு குடியுரிமை பெறுவதில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்? மத அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்கள் சிங்களப் பேரினவாத அரசுகள் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்ட இன ஒடுக்குமுறை மற்றும் போரின் விளைவாக அங்கிருந்து தப்பி தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 62 ஆயிரம் ஈழத் தமிழ் அகதிகள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இவர்கள் பல பத்தாண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்; இவர்களில் பலர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர் – பலர் குடியுரிமை பெற முயற்சித்தும் வருகின்றனர்.

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சட்ட திருத்தமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் (என்.ஆா்.சி) ஈழத் தமிழர்கள் இந்தியக் குடியுரிமையை தடுப்பதோடு ஏற்கனவே குடியுரிமை பெற்றிருந்தால் அதை ரத்து செய்து விடுகின்றது.

“ஈழத் தமிழர்கள் அந்நியர்களே” பாஜக-வின் பச்சை துரோகம்.

இந்த சட்டதிருத்தம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்கிற புரிதலில் பலர் எதிர்த்து வருகின்றனர் – ஆனால், சிறுபான்மையிருக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்குமே எதிரானது என்பதே உண்மை.

தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும் அந்நியர்களே என்பது தான் இந்துத்துவா கொள்கை. அதைத் தான் இந்த சட்ட திருத்தத்தில் இருந்து ஈழத் தமிழர்களை விலக்கி இருப்பது நிரூபிக்கிறது. பிரதமர் தனது வெளிநாட்டுப் பயணத்தின் போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற பழந்தமிழ் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார் என்று சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டு காவிகள் புல்லரித்துக் கொண்டிருந்தது நமக்கு மறந்திருக்காது. பாரதிய ஜனதாவுக்கு தமிழர்களின் மேல் உள்ள பாசமும், “கசாப்புக் கடைக்காரனுக்கு ஆட்டின் மீது இருக்கும் பாசமும்” வேறு வேறானது அல்ல.

***

ந்த சட்ட திருத்தத்தை அதிமுக ஆதரித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதாவின் தயவில் காலம் தள்ளும் ஒரு அடிமை என்பது புதிய செய்தி அல்ல. பழனிச்சாமி – பன்னீர் ஜோடியின் அடிமை அரசாங்கம் ஒரு முழு இந்துத்துவ ஆட்சியினால் ஏற்படும் பாதிப்புகளை விட பல மடங்கு அதிக பாதிப்புகளை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

மோடியின் திட்டங்களை பிற பாஜக ஆளும் மாநிலங்கள் அமல்படுத்துவதற்கு முன் முண்டியடித்து அமல்படுத்துவதில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மும்முரம் காட்டி வருவது அனைவரும் அறிந்தது தான். எனவே இதில் நமக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !
♦ அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !

ஆனால், சமூக ஊடக பிரபலங்களுக்கு ‘ஏ1 ஜெயலலிதா’ மீது உள்ள விசுவாசம் தான் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றது. பாபர் மசூதியை இடிக்க ஆள் அனுப்பியது, அன்றைய நிலையில் பாஜகவே தயங்கிய மதமாற்றத் தடைச் சட்டம் நிறைவேற்றியது, கோயில்களில் பலி கொடுப்பதை தடுக்க சட்டம் கொண்டு வந்தது என, மோடியே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்துத்துவ கொள்கைகளை முன்னெடுத்தவர் என்பதை இந்த “அறிவுஜீவிகள்” எப்படி மறந்தார்கள் என்பது தான் நமக்கு புரிபடவில்லை.

கோப்புப் படம்

அடுத்ததாக, தமிழர்களுக்காகவே கட்சி நடத்தி வருவதாக (குறிப்பாக ஈழத் தமிழர்களுக்காக) மேடை தோரும் சண்டமாருதம் செய்து வரும் சீமான் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து இது வரை (டிசம்பர் 10, நேரம் நண்பகல் 12 வரை) வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை ஏற்கனவே திட்டமிட்டு நடத்திய “மனித உரிமை தின விழிப்புணர்வு” கூட்டம் நடந்து கொண்டிருந்த போது இந்த சட்ட திருத்த மசோதா குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம் நடந்து வந்ததால் மிக மென்மையான வார்த்தைகளில் ஒரு கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி தங்களது கடமையை முடித்து கொண்டது அந்த கட்சி. வழக்கமாக சீமானின் வாயிலிருந்து பாயும் தோட்டாக்களோ, போராட்ட அறிவிப்போ இந்த முறை காணவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

***

ழத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியாது என்று சட்டம் போட்டுள்ளது பாரதிய ஜனதா – அதை ஆதரித்துள்ளது எடப்பாடி பழனிச்சாமியின் அரசு. பாரதிய ஜனதா என்பது சிறுபான்மையினருக்கு – குறிப்பாக முசுலீம்களுக்கு – மாத்திரமே எதிரான கட்சி என்றும், அக்கட்சியால் நமக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்றும் தங்களை இந்துக்களாக கருதிக் கொள்ளும் தமிழர்கள் நினைத்தால் அதை விட பெரிய இளிச்சவாயத்தனம் வேறில்லை. “நீ இந்துவாக இருந்தாலும், தமிழன் என்றால் எங்களுக்கு அந்நியனே” என்று அறிவித்துள்ளது பாஜக.

வசதிகளுக்காக போராடிய காலம் போய், வாழ்வதற்கே போராட வேண்டிய ஒரு காலத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இனிமேலும் போராடுவது என்பது நம் முன் உள்ள பல விருப்பத் தேர்வுகளில் ஒன்றல்ல – அது மட்டுமே பிழைத்துக் கிடக்க நம் முன் உள்ள ஒரே வழி.

– சாக்கியன்

நூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்

ந்நூல் பல்வேறு சமயங்களில் பல தினத்தாள்களில் வெளியிடப்பட்ட எனது (ச.சீ.இராசகோபாலன்) கட்டுரைகளின் தொகுப்பே.

பதினைந்து ஆண்டுகட்கு முன் கி.பி.2000-க்குள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற சர்வதேச இலக்கை எய்திட தமிழ்நாடு அரசிற்காக யுனிசெப் ஆதரவுடன் ஒரு செயல் திட்டம் வகுக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிகச்சீரிய முறையில் தயாரிக்கப்பட்ட அவ்வறிக்கையைச் செயல்படுத்த அரசும், கல்வித்துறையும் முனையவில்லை. குறித்த காலத்தில் இலக்கையும் அடையாதது வியப்பில்லை. அரசியலுறுதியும், மக்கள் கிளர்ச்சியும் இல்லையென்றால், அனைவர்க்கும் கல்வி என்பது கனவாகவே இருக்குமென்று கருதிய பொழுது, தினமணியின் அந்நாள் ஆசிரியர் திரு. இராம.சம்பந்தம் அவர்கள் என்னைக் கட்டுரைகள் வாயிலாக மக்களிடம் செய்தி எடுத்துக்கூறுமாறு தூண்டினார். அதுவே எனது ஆக்கப்பணிக்குத் தொடக்கம்.

பின்னர், மனித உரிமை, குழந்தைகள் உரிமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதும், குழந்தை உரிமை மீறல், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றிற்கான பொது விசாரணைகளில் ஒருவராகப் பணியாற்றியதும் எனக்கு ஒரு புதுமையான அனுபவமாக அமைந்தது. நாற்பதாண்டு ஆசிரியப்பணியில் அறிந்திராத பல உண்மைகளும் அறிந்து அதிர்ச்சியுற்றேன். கும்பகோணம் பள்ளித் தீ விபத்திற்கு அரசு பொறுப்பேற்காதது கண்டு வெகுண்டேன். கல்வி மற்றும் பள்ளிய முறைகளில் மனிதநேயத் தன்மை இல்லாது ஒரு இயந்திரத்தனமான செயல்பாடு இருப்பதும், ஏழை எளிய மாணவரிடம் எவ்வித பரிவும் இல்லாமல் இருப்பதும் கண்டு அவற்றை மக்களிடம் தெரிவிக்கும் முறையில் கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் சில மட்டும் இச்சிறு நூலில் இடம் பெறுகின்றன. (நூலாசிரியர் அறிமுகத்திலிருந்து…)

பள்ளிகள் கல்விக்கூடங்களாக மாறிட …

… தற்பொழுது மாணவர் எதிர்கொள்ளும் மன அழுத்தம் அளவிடற்கரியது. படிப்பு, படிப்பு என்றும் தேர்வு தேர்வென்றும் அவர்கள் வாழ்க்கை கழிகிறது. நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளப் பயிற்சி வகுப்புகள், ஆயத்த வழிகாட்டிகள், மாதிரித் தேர்வுகள் முதலியன தமிழ்நாட்டில் பல கோடி வணிகமாகப் பெருகியுள்ளது. பிற மாநிலங்களிலும் இதே நிலைதான். காலை 5 மணிக்கு எழுந்து தனிப்பயிற்சி வகுப்புகள் ஒன்று மாறி மற்றொன்று என இரண்டு மூன்று இடங்களுக்குச் சென்று களைத்துப் பள்ளிவரும் மாணவர் வகுப்பில் கண்திறந்தும் மனம் உறங்கிய நிலையில் பாடத்தில் கவனம் செலுத்த இயலாத நிலையில் உள்ளனர். வசதியற்ற ஏழை மாணவர்க்கு எவ்வித தனிப்பயிற்சியும் கிடையாது. தமது சொந்த முயற்சியிலேயே மற்றவரோடு போட்டி போடுவது ஒரு போராட்டமே.

மாணவரது ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படாது பெற்றோர் விருப்பம் அவர்கள் மீது திணிக்கப்படுகின்றது. மாணவர்கள் தமது திறன்களையும், ஆசைகளையும் வளர்க்க இயலாமல் போவதோடு தாம் சேர்ந்த படிப்பிற்கு ஆற்றலாலும், மனப்பான்மையாலும் அன்னியமாக இருப்பதால் மனச்சோர்விற்கு உட்படுகின்றனர். பல சமயங்களில் தற்கொலைவரை செல்கின்றனர். ஐந்து வருடப் படிப்பை ஏழு ஆண்டானாலும், முடிக்க இயலாமல் திணறுகின்றனர்.

… தேர்வையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதால், கல்வியின் உன்னத நோக்கங்கள் துறக்கப்படுகின்றன. உலகைப் பற்றிய அறிவும், வாழும் திறன்களும், சமூகத்தில் ஒரு நல்ல உறுப்பினராக இருக்கத் தேவையான கூடி வாழும் திறனும் வளர்க்கப்படுவதில்லை. சிந்திக்கும் திறன், வினா எழுப்பும் ஆற்றல், விசாரித்தறிதல் போன்றவை வளர்ந்திட வகுப்பறை முறைகள் உதவுவதில்லை. பகுத்தாய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல், பிரச்சினைகளை உணர்ச்சிபூர்வமாக அல்லாது அறிவார்ந்த நிலையில் அணுகும் திறன் இல்லாது மாணவர் கற்கின்றனர். மனிதநேயம், நல்ல பழக்கவழக்கங்கள், நிறை மனப்பான்மைகள் வளர்க்கப்பட, பள்ளி நடைமுறைகள் உதவுவதில்லை.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !
வெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி ? | கேள்வி – பதில் !

தாமாகக் கற்கும் ஆற்றல் பெறாத காரணத்தால் வளர்ந்துவரும் தொழில்நுட்பச் சமுதாயத்தில் அறிவாலும் ஆற்றலாலும் தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள அறியாதவராக மாணவர்கள் உள்ளனர். மேலும் மாணவரிடம் உள்ள பன்முகத்திறன்கள் பற்றி கவலைப்படாது. நுண்கலை, இசை, விளையாட்டு, இலக்கியம் போன்றவற்றில் திறனுள்ள மாணவர் அவற்றை வளர்த்துக்கொள்ள பள்ளிகள் பெரும்பாலும் தவறுகின்றன. ஓய்வு நேரத்தைச் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதும் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக கைகளையும், உடல் உழைப்பையும் கொண்டு படைப்புச் செயலில் ஈடுபடுத்திக் கொள்ள இயலாது உள்ள இக்கல்வி முறையை மாற்றி அமைக்கவேண்டும். (நூலிலிருந்து பக்.39-40)

ரஷ்யாவில் கல்வி !

ச.சீ.இராசகோபாலன்

… சோவியத் ஒன்றியத்தில் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளையும், ஆசிரியர்களையும் கண்டேன். எனது நல்வாய்ப்பு, பள்ளிகளில் சேர்க்கை நாளன்று ஒரு சிறு கிராமத்திலிருந்தேன். புதிதாகச் சேர்க்க வேண்டிய குழந்தைகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பள்ளியில் பயிலும் குழந்தைகள் பேண்டு வாத்தியத்தோடு வீடு வீடாகச் சென்று புதிதாகச் சேர இருக்கும் குழந்தைகளை அழைக்கிறார்கள். அக்குழந்தைகளும் இவர்களோடு சேர்ந்துகொள்ள வாத்திய முழக்கத்தோடு பள்ளிவந்து சேர்கின்றனர். இந்நடைமுறை பத்து, பதினைந்து நாட்களுக்கு நடைபெறும் என்றும், புதிய குழந்தைகள் பள்ளியை ஏற்கும் வரையில் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்பதையும் அறிந்தேன். தாயார் பள்ளி செல்ல அடம்பிடிக்கும் தனது குழந்தையை அடித்துக் கொண்டே பள்ளிக்கு இழுத்துவரும் நமது ஊர்க் காட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பள்ளிச் சேர்க்கை முறை மிகவும் இனிமையானது.

மழலையர் கல்வி 4 ஆண்டுகளுக்குக் குறையாமல் அளிக்கப்படுகிறது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குத் தனி இல்லம் அமைக்கப்பெற்று, நாடே அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறது. தண்டனைகளில்லாத பள்ளிகளாக அங்கு இயங்குகின்றன. குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடிக் கல்வி கற்கின்றனர். (நூலிலிருந்து பக்.62)

நூல் : தமிழக பள்ளிக் கல்வி
ஆசிரியர் : ச.சீ.இராசகோபாலன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 2433 2424, 2433 2924.
மின்னஞ்சல்: thamizhbooks@.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 40.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolks | panuval |noolulagam

போலீசின் புனைகதை ஒருவரிடம் ஏற்படுத்திய மாற்றம் !

1998-ம் வருடம் டிசம்பர் மாதத்தின் ஒருநாள் அதிகாலையில் எங்கள் வீட்டுத் தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. காலை பதினோரு மணிக்குள் மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்திற்குச் சென்று தலைமைக் காவலர் ஒருவரைப் பார்க்க வேண்டும் என்ற தகவல் அந்த அழைப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

என் நண்பன் ஒருவன் டிசம்பர் 6 -ஐ ஒட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவனது கடைச் சாவியை என்னிடம் கொடுக்கச் சொல்லி அவன் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அவனுக்கும் எனக்கும் பொதுவான நண்பர் ஒருவருக்கு உடனே தொலைபேசியில் அழைத்தேன். “எனக்கும் அழைப்பு வந்தது” என்றார் அவர்.

நான் டிப்ளமா படித்து முடிந்திருந்த சமயம் அது. எனவே இயல்பாகவே எழுந்த பதட்டத்துடன் தெற்கு வாசல் காவல் நிலையத்திற்குச் சென்றோம். “ஒண்ணும் இல்லப்பா, சாதாரண அரஸ்ட்டுதான், நாலு நாள் கழிச்சு வீட்டுக்கு வந்துருவான் உங்க ஃபிரண்டு” என்று சொன்னபடியே அவனது கடைச் சாவியை எங்களிடம் ஒப்படைத்தார் அந்தக் காவலர்.

பிறகு, அவனது வீட்டிற்குத் தகவல் சொல்லிவிட்டு, அவனுக்கு நான்கு நாட்களுக்குத் தேவையான உடைகள், ஐநூறு ரூபாய் பணம், இரண்டு பீடிக் கட்டுகள் வாங்கித் தரச் சொன்னார். அவர் சொன்னதை அப்படியே செய்தோம். பிறகு இரண்டு நாட்கள் கழித்து, மதுரை மத்திய சிறையில் மனு போட்டு அவனைப் பார்க்கவும் செய்தோம். “ஒரு பிரச்சனையும் இல்லை, நன்றாக இருக்கிறேன்” என்றான் அவன். நான்கு நாட்கள் அல்ல, எட்டு நாட்கள் கழித்து எந்த வழக்கும் இல்லாமல் வெளியே வரவும் செய்தான். பீடிக்கட்டும், ஐநூறு ரூபாய் பணமும் அவன் கேட்கவும் இல்லையாம், அவை அவன் கைகளுக்குப் போய்ச் சேரவுமில்லையாம். அந்த ஐநூறைப் புரட்டித் தந்த அவன் அம்மா, சில வீடுகளில் வீட்டு வேலை பார்த்து சம்பாதித்த பணம் அது.

உண்மையில் நடந்தது இதுதான்… டிசம்பர் நான்காம் தேதி இரவு, கடை வேலைகளை முடித்துவிட்டு, நண்பர்களுடன் தெற்கு வாசல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா சாப்பிடப் போனவன் அவன். போனவர்களை வழியில் நிறுத்தி, அவர்களது பெயர்களை மட்டும் விசாரித்திருக்கிறார்கள். இவனது பெயர் இஸ்லாமியப் பெயர் என்பதால் preventive arrest -ல் தூக்கி உள்ளே வைத்துவிட்டார்கள். அவன் உள்ளே இருந்த எட்டு நாட்களுக்குள் மதுரை ஹாஜிமார் தெருவில் கிட்டத்தட்ட அனைத்து மத்திய வயது ஆண்களும் உள்ளே தூக்கி வைக்கப்பட்டார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.

படிக்க:
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !
♦ குற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி !

ஆனால், அவன் மேல் பதியப்பட்ட வழக்கு என்ன தெரியுமா? “டிசம்பர் நான்காம் தேதி இரவு, மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலத்திற்குக் கீழே, இருட்டிற்குள் சில பேர் கூடி நின்று ‘இந்தியா ஒழிக’ என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தனர், மதுரை நகரில் டிசம்பர் ஆறாம்தேதி பல்வேறு வகையிலான கலவரங்களை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சதித் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது, அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் துறையினரைப் பார்த்தவுடன் அவர்கள் கலைந்து ஓடத் துவங்கினர், காவல் துறையினர் வைகை ஆற்றுக்குள் இறங்கி, ஓடிச் சென்று அவர்களை விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர்” என்பதுதான் அந்த வழக்கின் சாரம்.

உண்மைக்கும் இதற்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்று அவனுக்கும் தெரியும், அவனோடு கைது செய்யப்பட்டவர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும், அவனைக் கைது செய்த காவலர்களுக்கும் தெரியும், நீதி வழங்கிய நீதியரசர்களுக்கும் தெரியும். யாரும் ஒரு கேள்வியும் கேட்கவில்லை, கேட்க முடியாது, கேட்கப்போவதுவுமில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.

காவல் துறையினரின் விசாரணை, முதல் தகவல் அறிக்கை, முக்கியமாக காவல் துறை ‘விசாரணையில்’ குற்றவாளிகள் தரும் ‘ஒப்புதல் வாக்குமூலம்’ போன்றவற்றின் உண்மை நிலை இதுதான். அதனால்தான் காவல் துறையின் விசாரணையில் குற்றவாளிகள் கொடுத்த வாக்கு மூலங்களை நீதி மன்றங்களே நம்புவதில்லை.

இந்த லட்சணத்தில் காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தாலே ஒருவர் குற்றவாளிதான் என்று நம்புபவர்களை என்ன சொல்ல? ஒரு நண்பர் எழுதியிருந்தது போலவே, என்னைத் தூக்கிப்போய் நாலு மிதி மிதித்தால், “காந்தியையே கோட்சே சுடவில்லை, நான்தான் சுட்டேன்” என்று கூடச் சொல்லுவேன்.

மேலே சொன்ன இந்த மொத்த சம்பவத்தின் விளைவு என்று நான் அறிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான். பள்ளி வாசல் பக்கத்திலேயே கடை நடத்தினாலும் அதுவரை வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையில் கூட பெரிதாக ஆர்வம் காட்டாமலிருந்த என் நண்பன், அதன் பிறகு இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும், அதீத மத நம்பிக்கையுள்ள ஒருவனாக மாறிப் போனான்.

நன்றி : Elangovan Muthiah
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer