கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கோ மீட்பு நடவடிக்கைக்கோ ஆர்வம் காட்டாத தமிழக அரசு, நீதிமன்றத்தில் போராடி டாஸ்மாக்கை மீண்டும் திறந்திருக்கிறது. இந்த அநியாயத்துக்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அச்செய்திகளின் தொகுப்பு…
***
சென்னை வேளச்சேரி, முகப்பேர் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில், டாஸ்மாக் சாராய கடைகள் திறப்பதை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! பெருவளப்பூர் மக்கள் ஆவேசம் !
கொரானா தொற்றின் கோரதாண்டவம் அதிகரித்துள்ளதை அன்றாட செய்திகள் அறிவிக்கின்றன. கொரானா சமூகப் பரவலாகியுள்ளதை கோயம்பேடு சந்தை பறைசாற்றியுள்ளது. மக்கள் முன் எச்சரிக்கை மற்றும் திட்டமில்லாத தான்தோன்றித்தனமான ஊரடங்கில் சிக்கி அல்லல்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சாராய ஆலை அதிபர்களை கட்சி வேறுபாடு இன்றி பாதுகாக்கவும், கொள்ளையடிக்கவும் வசதியாக கஜானாவை நிரப்பிக் கொள்ளவும் டாஸ்மாக் கடையை திறப்பதென பாஜக அடிமை எடப்பாடி அரசு அவசர முடிவெடுத்துள்ளது.
கொரானா பாதிப்பு அதிகமாகி இருக்கும் இந்தநேரத்திலும் 07-05-2020 முதல் டாஸ்மாக் விற்பனை ஆயத்த பணிகள் தொடங்கிய உடனேயே ஆங்காங்கு மக்கள் எதிர்ப்பு வலுப்பெற தொடங்கியது.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பெருவளப்பூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட ஊர் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். டாஸ்மாக் திறப்பு அறிவிப்பு வெளிவந்த உடனேயே முற்றுகை போராட்டத்தை பெருவளப்பூர் மக்கள் அறிவித்தனர்.
முற்றுகை போராட்டத்திற்கு மக்கள் தயாராகி கொண்டிருந்த நிலையில்,
மக்களின் கோபத்தை உணர்ந்த காவல்துறை தண்டோரா மூலமாக காலை 8.30 மணிஅளவில் கடையை திறக்க மாட்டோம் என அறிவித்தது. போராட்டத்திற்க்கு ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், பல்வேறு கட்சியினரும், சாதி, மத வேறுபாடின்றி அணி திரண்டிருந்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
அரசுதரப்பின் அறிவிப்பின் உண்மை தன்மையை அறிய கடை திறக்கும் நேரம் வரை மக்கள் காத்திருந்தனர். என்னதான் இருந்தாலும் காவல்துறையின் பேச்சை நம்ப முடியாது அல்லவா ! கடை உண்மையில் திறக்கப் போவது இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், மக்கள் நம்பிக்கை பெற்றனர். போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்களான பெருவை மணி, இராசேந்திரன் மற்றும் திமுக சார்பில் TKR மோகன் அவர்களும் அனைத்துக் கட்சிகள் அமைப்புகளின் முன்னணியாளர்களும் மீண்டும் கடையை திறந்தால் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளும் போராட்டம் நடைபெறும் என்பதை எச்சரிக்கும் வகையில் ஊராட்சி மன்ற அலுவலகம் இருக்குமிடத்தில் தனி மனித இடைவெளியுடன் கூடி ஆர்ப்பாட்டம் மூலம் எச்சரித்தனர்.
தற்போது காவல்துறை கடையை திறக்க மாட்டோம் என்று கூறியிருப்பது தற்காலிக வெற்றிதான். என்ன இருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்களில் அரசாங்கம் அதிக அளவில் போலீசாரை கொண்டு வந்து கடையை திறக்கும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது.
எனவே ஊர் பொது மக்கள் சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி டாஸ்மாக் கடையை அரசாங்கம் எப்போது திறந்தாலும் இழுத்து மூட போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும் இன்னும் அதிக அளவில் மக்கள் பங்கு பெறுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர்
அது மட்டுமின்றி டாஸ்மாக் சரக்கை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள் சில நபர்கள் அதை கண்டிக்கும் வகையில் இனி பிளாக்கில் விற்றாலோ அல்லது கடையை திறந்தாலோ பாட்டில்களை உடைப்போம் என மக்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
***
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியில், டாஸ்மாக் சாராய கடை திறக்க கூடாது என எதிர்த்து போராடிய தோழர்களை ஆவலூர் காவல் துறை கைது செய்துள்ளது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
விழுப்புரம் மக்கள் அதிகாரம் சார்பில் 07.05.2020 அன்று காலை 10 மணிக்கு சித்திரப் பட்டு கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஒருங்கிணைந்து டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று ஆர்பாட்டம் நடத்தினர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
படிக்க:
♦ திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !
♦ விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !
***
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் காரப்பட்டு, பொய்கை அரசூர் பகுதியில் எடப்பாடி அரசு டாஸ்மார்க் திறப்பதை கண்டித்து கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பொய்கை அரசூரில் தோழர் ஞானஒலி தலைமையிலும் காரப்பட்டில் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது, கொரோனாவில் மக்களை பாதுகாக்காத அரசு டாஸ்மாக்கை திறந்து மக்களை கொல்ல கேவலமாக நடந்து கொள்வதை அம்பலப்படுத்தி தோழர் மாயவனும், தோழர் அம்பேத்கரும் உரையாற்றினார்கள்.
மேலும் மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி போர் குணமான முழக்கம் போடப்பட்டது. 144 தடை உத்தரவு இருந்தும் அதை மீறி ஒவ்வொரு பகுதியிலும் தலா 50 பேர் கூடினர் இந்த ஆர்ப்பாட்டம் சுமார் அரை மணிநேரம் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
கொரோனோ வைரஸ் பரவுதலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. இந்த 40 நாள் ஊரடங்கில் பெருந்திரளான பொதுமக்களுக்கு அரசு கொடுத்த நிவாரண தொகை வெறும் 1000 ரூபாய் ஆனால் வெறும் 50 முதல் 60 வரை உள்ள முதலாளிகளுக்கு அதுவும் வங்கியே திவாலாக காரணமாக இருந்த முதலாளி உட்பட அவர்களுக்கு 60000 கோடி அதாவது ஒரு முதலாளிக்கு தலா 2000 கோடி வரை தள்ளுபடி செய்து இருக்கிறது இந்திய அரசு.
இதை கேள்வி கேட்க கூட திராணி இல்லாமல் நிற்கிறது எடப்பாடி அரசு. மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு தரவேண்டிய GST பணம் பல கோடிகள் இன்னும் வரவில்லை. இதை கேட்க வாய் வராமல் எடப்பாடி அரசு கோமாவில் விழுந்து விட்டது. இப்படிப்பட்ட நேரங்களில் ஒருசில தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு பண உதவியும் உணவு பொருளும் கிடைத்தது.
இக் காலகட்டத்தில் மக்களுக்கு போதிய நிவாரண நிதி மற்றும் மருத்துவ வசதி, இரவும் பகலும் கொரோனோவுடன் போராடும் மருத்துவர்கள் செவிலியர்கள் காவலர்கள் போன்றோர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் சிறப்பு சம்பளத் தொகை இவையேதும் செய்யாமல் ஏற்கனவே அழிவின் விழும்பில் இருக்கும் குடும்பங்களை படுகுழியில் தள்ளும்விதமாக டாஸ்மாக்கை திறந்திருக்கிறது தமிழக அரசு.
குழந்தைக்கு பால் வாங்க பிஸ்கட் வாங்க பணம் இல்லாமல் மணலைத் தின்று இறந்த குழந்தைகள், குழந்தையுடன் கிணற்றில் விழுந்த குடும்பங்கள், குழந்தையுடன் தூக்கில் தொங்கிய குடும்பம் என்று வறுமை நிலை இப்படி இருக்க ஆனால் இந்த வெக்கங்கட்ட அரசு டாஸ்மாக்கை திறந்து மீதமுள்ள குடும்பங்களையும் அழிக்க திட்டமிட்டுள்ளது.
இதனை கண்டித்து “மக்கள் அதிகாரம்” அமைப்பினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் பெண்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசை வீதியில் வைத்து கேள்வி கேட்க வேண்டும்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
கோவையில் டாஸ்மாக்கை திறக்காதே, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
திருப்பூரில் கொரானா-வில் மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் போது டாஸ்மாக்கை திறந்து, மக்களை மரண குழியில் தள்ளும் எடப்பாடி அடிமை அரசை கண்டித்து, மூடு டாஸ்மாக்கை, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் மற்றும் வி. சி. க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
தருமபுரி மாவட்டத்தில், உள்ள கள்ளிபுரம், கரியம் பட்டி மற்றும் கரியம்பட்டி புதூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்ராம்பாளையம் பகுதியில் டாஸ்மாக்கை திறக்காதே, தமிழக பெண்களின் தாலியை அறுக்காதே, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் உடன் இணைந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.




பண்டாரம் பட்டியில் ஸ்டெர்லைட் கைக்கூலிகள் அரசு அனுமதி வாங்காமல், சமூக இடைவெளியின்றி – முகக்கவசமின்றி நிவாரணப் பொருட்கள் வழங்கியதை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய சகாயம், சந்தோஷ் மற்றும் ஊர் நாட்டாமைகள் மீது ஸ்டெர்லைட்டின் மகளிர் சுய உதவி குழு பொறுப்பாளர் என்று அறியப்பட்ட தனலட்சுமி புகார் கொடுக்கிறார். வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அன்று ஏற்பட்ட பிரச்சனையில் மாரியம்மாள் என்பவர் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு கீழே விழுந்து மயக்கமாகியுள்ளார். 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிப்காட் காவல்துறை மாரியம்மாளிடம் புகார் வாங்கவே இல்லை.


மேற்கு வங்கம் கே.ஆர். ஜாம்ஷெட்பூரின் சேவியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் தொழிலாளர் ஆய்வுகள் பேராசிரியர் சியாம் சுந்தர், இந்தியாவில் உள்ள அரசாங்கங்கள் “19 ஆம் நூற்றாண்டின் தொழிலாளர் சுரண்டல் மாதிரியை மீண்டும் கண்டுபிடித்து வருகின்றன” என்கிறார்.







உதாரணத்திற்கு டெல்லி பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில், மார்ச் 2020 ஊதியத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு (PMNRF) வழங்குமாறு கோரி அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரின் ஒருநாள் ஊதியம் சேர்ந்து ரூ. 4 கோடி திரட்டப்பட்டது. ஆனால் PMNRF திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியை பல்கலைகழக துணைவேந்தர் PMCARES திட்டத்திற்கு திருப்பிவிட்டுள்ளார். இதற்கு டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
பிற அரசாங்க நிறுவனத்தின் மூலமோ, லாக்டவுன் சமயத்தில் தொண்டு செய்யும் வேறு ஒரு தன்னார்வ நிறுவனத்தின் மூலமோ கொடுக்க வழியிருக்கும் போது, PM-CARES-க்கு ஏன் நன்கொடை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு அலுவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில் நன்கொடையே அதிகாரத் தொனியில்தான் கேட்கப்பட்டிருப்பதாகவும், நன்கொடை தராதவர்களை மறைமுகமாக மிரட்டும் தொனியிலும் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
பெருமளவிலான தொகையை நன்கொடையாகப் பெறும் PM-CARES அறக்கட்டளையின் அறங்காவலர்களாக இருக்கும் மத்திய நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் யாரைக் கை காட்டுகிறார்களோ அவர்கள்தான் தணிக்கை செய்ய முடியும்.
இந்த நிச்சயமின்மை இதற்கு முன்பும் இருந்ததுதான். இப்போது அது திட்டவட்டமான ஆபத்தாக எழுந்து நிற்கிறது. முன்பு ஓர் ஊழியரை வேலைநீக்கம் செய்வதற்கு நிறுவனத்துக்கு, பெயரளவுக்கேனும் ஒரு காரணம் தேவைப்பட்டது. இப்போது கொரோனா வந்து, எதையும் செய்வதற்கான ‘பிளாங்க் செக்’-ஐ நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. ‘நஷ்டம்.. அதனால் வேலையில்லை’, ‘நஷ்டம்.. அதனால் சம்பளம் குறைப்பு..’.. அவ்வளவுதான். மேலதிகமாக எதுவும் தேவையில்லை. ஆகவே தொழிலாளர்களின் மனம் இயல்பாகவே, ‘சம்பளத்தையாச்சும் குறைச்சுக்க… வேலையை விட்டு தூக்கிராதே..’ என்று சிந்திக்கிறது.


கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ டிஜிட்டல் பைபர் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃப்ராடெல் பிரைவேட் லிமிடெட் (RJIPL) என இரு உட்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனங்களை உருவாக்கியது.
செபி (SEBI) வழிகாட்டுதல்களின்படி தனியார் உட்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து நேரடி முதலீட்டாளர்களோ அல்லது பங்குதாரர்களோ தேவை. அந்த வகையில், ப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் கனடியன் பென்சன் ஃபண்ட், பிரிட்டிஷ் கொலம்பியா இன்வெஸ்ட்மெண்ட் மெனேஜ்மெண்ட் கார்ப்பரேசன், பப்ளிக் இன்வஸ்ட்மெண்ட் ஃபண்ட் ஆஃப் சவுதி அரேபியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜி.ஐ.சி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தனியார் உட்கட்டமைப்பு அறக்கட்டளையில் முதலீடு செய்துள்ளது.


குடும்பத்திற்கு உணவளிக்கவோ அல்லது வாடகை செலுத்தவோ வழியில்லாத நிலையில் தனது 5 வயது மகன் சிவத்தை தோள்களில் ஏற்றிக்கொண்டு 500 கி.மீ (300 மைல்) தொலைவில் உள்ள சொந்த கிராமத்திற்கு தாயாராம் நடக்க தொடங்கினார். வேலை செய்யும் போது இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பது மிகவும் கடினம் என்பதால் வயதான உறவினர்களுடன் கிராமத்தில் விட்டுச் செல்லப்பட்ட தனது மற்றொரு ஏழு வயது மகன் மங்கலைப் பற்றிய நினைவுடன் இருப்பதாக அவர் கூறினார். அவனுடன் இருப்பது தொற்றுநோய்க்கு நடுவில் குறைந்தபட்சம் ஒரு ஆறுதலை கொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ளா ஜுகாய் கிராமத்தில் தாயாராம் கோதுமையை அறுவடை செய்கிறார். அவரது வீட்டின் இருட்டான ஒரு அறையில் தானியங்கள் மற்றும் உடைகள் சாக்குகளால் நிரப்பப்பட்டிருக்கின்றன. ஒரு சட்டமில்லா சுவரொட்டி சுவரில் தொங்குகிறது. ஒரு ஏரியின் மீது சிவப்பு கூரை கொண்ட வீட்டை சித்தரிக்கின்ற அந்த படத்தில் பனி மூடிய மலைகளுக்கு பின்னால் சூரியன் மறைகிறது. ”சின்னஞ்சிறிய கிராமங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்திற்கு கடிகாரத்தைத் திருப்ப நான் விரும்புகிறேன்” என்று அது கூறுகிறது.

தயாராம் தன்னுடைய விதியைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார். அவரது திருமணம், புதுடெல்லிக்கு அவர் சென்றது, வீட்டிற்கு திரும்பிச் செல்வது – எதுவும் விட முடியாத கட்டாயத்தேவைகள். தயாராமின் அத்தை அவருடைய திருமணத்தை நடத்தி வைத்தார். அவரும் கியான்வதியும் தொன்றுத்தொட்டு இந்திய சமூக ஏணிப்படியில் கீழ்மட்டத்திலிருக்கும் பாரம்பரியமாக உழவுத்தொழிலில் ஈடுபட்ட குஷ்வாஹா சாதியைச் சேர்ந்தவர்கள். தங்கள் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் முதன்முதலாக சந்தித்தனர். ”அவர் பொருத்தமாக தான் இருந்தார்” என்று தாயாராம் தனது மனைவியுடனான சந்திப்பை நினைவு கூர்ந்த போது அவரது முகத்தை ஒரு புன்னகை சுருக்கமாக கடந்தது. ”ஆனால் என் தலைவிதியில் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் சரிதான்” என்று கூறினார்.
தயாராம் குஷ்வா மற்றும் கியான்வதியின் இரண்டு அறைகள் கொண்ட கான்கிரீட் வீடு. நான்கு நாட்கள் தொடர்ச்சியான நடைப்பயணம் மற்றும் சரக்குந்துகள் பயணத்திற்கு பிறகு 2,000 மக்கள் வாழும் விவசாய கிராமமான ஜுகாயில் (Jugyai) உள்ள தங்கள் வீட்டை அவர்கள் சென்றடைந்தனர்.
புதுதில்லியில் இருந்து வீடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளி பிரமோத் குஷ்வாஹா மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தன்னுடைய சுராரி (Churari) கிராமத்தில் உள்ளார்.
நாடு தழுவிய ஊரடங்கின் போது வெறிச்சோடிய ஜுகாய் கிராமத்தின் தெரு வழியாக பெண்கள் நடந்து செல்கின்றனர். இந்த ஊரடங்கு தனது குழந்தைகளின் கல்விக்கான எல்லா நம்பிக்கையையும் குழி தோண்டி புதைத்துவிடும் என்று தயாராம் கவலைப்படுகிறார். ”எந்த பெற்றோரும் தங்கள் குழந்தை ஒரு வேலையாளாக பணிப்புரிய விரும்புவதில்லை. ஆனால் வேறு வழியில்லை. நான் செய்வதை தான் அவர்கள் செய்ய வேண்டியிருக்கும்” என்று அவர் கவலையுடன் கூறினார்.
தயாராமின் பெற்றோர்கள்: இடப்புறத்தில் கேஸ்ரா மற்றும் வலப்புறத்தில் தாகூர் தாஸ். இருவரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். வழக்கமாக வீட்டில் இருப்பவர்களின் செலவிற்கு அனுப்பிய பணத்திற்கு பதிலாக வெறுங்கையுடன் தனது கிராமத்திற்கு வந்தவுடன் என்ன நடக்கும் என்பது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று முயற்ச்சி செய்ததாக அவர் கூறினார். குறைந்தது அவருக்கு ஒரு வீடாவது இருக்கிறது என்றார் அவர்.

சீனாவின் வெண்ட்போ நிறுவனத்தின் இந்திய இறக்குமதி நிறுவனமான மேட்ரிக்ஸ் லேப் ஒரு கிட் ரூ 245/- என்ற விலையில்(போக்குவரத்து உட்பட) இறக்குமதி செய்து ரூ 145/- லாபம் வைத்து ரூ 400/- என்ற விலையில் ரேர் மெட்டாபாலிக் நிறுவனத்திற்கு விற்றது. இதன் மீது ரூ 200/- லாபம் வைத்து ஒரு கிட் ரூ 600/- என்ற விலையில் அய்.எம்.சி.ஆருக்கு ரேர் மெட்டபாலிக் நிறுவனம் விற்றுள்ளது. அதாவது ரூ 245/- க்கு வாங்கப்பட்ட கிட் இரண்டு இடைத்தரகர்கள் கை மாறி ரூ 600/-க்கு மக்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு என்ன பங்கு என்பது யாருக்கும் தெரியாது. பங்கு இல்லாமல் இருக்காது என்பது மட்டும் உறுதியாகத் தெரியும். சந்தடிசாக்கில் எடப்பாடி அரசு ஷான் பயோடேக் என்ற நிருவனம் மூலம் இறக்குமதியாளர் மேட்ரிஸ் லேப் இடம் நேரடியாக வாங்கி கணிசமாக சுருட்டியுள்ளது.
ஊரடங்கில் உள்ள மகக்ளுக்கு உரிய நிவாரணமும் வழங்கவில்லை. இந்திய உணவுக்கிடங்கில் 8 கோடி டன் உணவுப் பொருட்கள் நிரம்பி வழிந்த போதும், மத்திய மாநில அரசுகளோ 20 கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், பருப்பு, 1000 ரூபாய் நிவாரணம் என உழைக்கும் மக்களை பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகின்றன. பெருவாரியான உழைக்கும் மக்கள் நோய் அச்சத்தாலும், உணவின்றியும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடைப்பிணமாக வாழ்கிறார்கள்.
நம் நாடு மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே கொரானாவை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்டங்கண்டு போயுள்ளன. அமெரிக்காவில் கொரானா மரணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது. இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி போன்ற முதலாளித்துவ நாடுகளில் நடக்கும் மரணங்களை கண்டு அந்நாட்டு அரசுகளெல்லாம் அலறுகின்றன. “எங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் இருக்கிறோம்’’ என்று இத்தாலி பிரதமர் வெளிப்படையாக சொல்லி கண்ணீர் விட்டு அழுது கொண்டே பேட்டி அளிக்கிறார். காரணம், இத்தாலியில் மருத்துவத்துறையில் 85 சதவீதம் தனியார் கையில் உள்ளது. அங்கு மட்டுமல்ல, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இதுதான் நிலை.
இன்னொரு பக்கம், தனிவுடைமை எனும் முதலாளித்துவக் கொள்கையை சொர்க்கம் என பீற்றி வந்த ஸ்பெயினும், அயர்லாந்தும் இப்போது தனியார் மருத்துவமனைகளை அரசுடைமையாக்கியுள்ளன. 1990 களின் தொடக்கத்தில் புதிய தாராளவாத உலகத்தை முன்னறிவித்த மார்க்கரெட் தாட்சரின் பிரிட்டனில் தனிமையில் வாடும் 15 லட்சம் முதியவர்களைப் பராமரிக்க 5 லட்சம் இளைஞர்கள் தன்னார்வலர்களாக முன் வந்திருக்கிறார்கள். தேசிய மருத்துவ சேவையில் தொண்டர்களாகப் பணியாற்ற 7.5 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்திருக்கின்றனர். மக்களின் தேவைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் பொருட்டு 4300 வட்டார உதவிக்குழுக்களை அந்நாட்டு மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் தோல்விக்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?