Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 283

மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கோ மீட்பு நடவடிக்கைக்கோ ஆர்வம் காட்டாத தமிழக அரசு, நீதிமன்றத்தில் போராடி டாஸ்மாக்கை மீண்டும் திறந்திருக்கிறது. இந்த அநியாயத்துக்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அச்செய்திகளின் தொகுப்பு…

***

சென்னை வேளச்சேரி, முகப்பேர் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில்,  டாஸ்மாக் சாராய கடைகள் திறப்பதை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! பெருவளப்பூர் மக்கள் ஆவேசம் !

கொரானா தொற்றின் கோரதாண்டவம் அதிகரித்துள்ளதை அன்றாட செய்திகள் அறிவிக்கின்றன. கொரானா சமூகப் பரவலாகியுள்ளதை கோயம்பேடு சந்தை பறைசாற்றியுள்ளது. மக்கள் முன் எச்சரிக்கை மற்றும் திட்டமில்லாத தான்தோன்றித்தனமான ஊரடங்கில் சிக்கி அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சாராய ஆலை அதிபர்களை கட்சி வேறுபாடு இன்றி பாதுகாக்கவும், கொள்ளையடிக்கவும் வசதியாக கஜானாவை நிரப்பிக் கொள்ளவும் டாஸ்மாக் கடையை திறப்பதென பாஜக அடிமை எடப்பாடி அரசு அவசர முடிவெடுத்துள்ளது.

கொரானா பாதிப்பு அதிகமாகி இருக்கும் இந்தநேரத்திலும் 07-05-2020 முதல் டாஸ்மாக் விற்பனை ஆயத்த பணிகள் தொடங்கிய உடனேயே ஆங்காங்கு மக்கள் எதிர்ப்பு வலுப்பெற தொடங்கியது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பெருவளப்பூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட ஊர் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். டாஸ்மாக் திறப்பு அறிவிப்பு வெளிவந்த உடனேயே முற்றுகை போராட்டத்தை பெருவளப்பூர் மக்கள் அறிவித்தனர்.

முற்றுகை போராட்டத்திற்கு மக்கள் தயாராகி கொண்டிருந்த நிலையில்,
மக்களின் கோபத்தை உணர்ந்த காவல்துறை தண்டோரா மூலமாக காலை 8.30 மணிஅளவில் கடையை திறக்க மாட்டோம் என அறிவித்தது. போராட்டத்திற்க்கு ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், பல்வேறு கட்சியினரும், சாதி, மத வேறுபாடின்றி அணி திரண்டிருந்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அரசுதரப்பின் அறிவிப்பின் உண்மை தன்மையை அறிய கடை திறக்கும் நேரம் வரை மக்கள் காத்திருந்தனர். என்னதான் இருந்தாலும் காவல்துறையின் பேச்சை நம்ப முடியாது அல்லவா ! கடை உண்மையில் திறக்கப் போவது இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், மக்கள் நம்பிக்கை பெற்றனர். போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்களான பெருவை மணி, இராசேந்திரன் மற்றும் திமுக சார்பில் TKR மோகன் அவர்களும் அனைத்துக் கட்சிகள் அமைப்புகளின் முன்னணியாளர்களும் மீண்டும் கடையை திறந்தால் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளும் போராட்டம் நடைபெறும் என்பதை எச்சரிக்கும் வகையில் ஊராட்சி மன்ற அலுவலகம் இருக்குமிடத்தில் தனி மனித இடைவெளியுடன் கூடி ஆர்ப்பாட்டம் மூலம் எச்சரித்தனர்.

தற்போது காவல்துறை கடையை திறக்க மாட்டோம் என்று கூறியிருப்பது தற்காலிக வெற்றிதான். என்ன இருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்களில் அரசாங்கம் அதிக அளவில் போலீசாரை கொண்டு வந்து கடையை திறக்கும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது.

எனவே ஊர் பொது மக்கள் சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி டாஸ்மாக் கடையை அரசாங்கம் எப்போது திறந்தாலும் இழுத்து மூட போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும் இன்னும் அதிக அளவில் மக்கள் பங்கு பெறுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர்

அது மட்டுமின்றி டாஸ்மாக் சரக்கை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள் சில நபர்கள் அதை கண்டிக்கும் வகையில் இனி பிளாக்கில் விற்றாலோ அல்லது கடையை திறந்தாலோ பாட்டில்களை உடைப்போம் என மக்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

***

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியில், டாஸ்மாக் சாராய கடை திறக்க கூடாது என எதிர்த்து போராடிய தோழர்களை ஆவலூர் காவல் துறை கைது செய்துள்ளது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

விழுப்புரம் மக்கள் அதிகாரம் சார்பில் 07.05.2020 அன்று காலை 10 மணிக்கு  சித்திரப் பட்டு கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஒருங்கிணைந்து டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று ஆர்பாட்டம் நடத்தினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

படிக்க:
♦ திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !
♦ விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !

***

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் காரப்பட்டு, பொய்கை அரசூர் பகுதியில் எடப்பாடி அரசு டாஸ்மார்க் திறப்பதை கண்டித்து கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பொய்கை அரசூரில் தோழர் ஞானஒலி தலைமையிலும் காரப்பட்டில் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது, கொரோனாவில் மக்களை பாதுகாக்காத அரசு டாஸ்மாக்கை திறந்து மக்களை கொல்ல கேவலமாக நடந்து கொள்வதை அம்பலப்படுத்தி தோழர் மாயவனும், தோழர் அம்பேத்கரும் உரையாற்றினார்கள்.

மேலும் மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி போர் குணமான முழக்கம் போடப்பட்டது. 144 தடை உத்தரவு இருந்தும் அதை மீறி ஒவ்வொரு பகுதியிலும் தலா 50 பேர் கூடினர் இந்த ஆர்ப்பாட்டம் சுமார் அரை மணிநேரம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கொரோனோ வைரஸ் பரவுதலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. இந்த 40 நாள் ஊரடங்கில் பெருந்திரளான பொதுமக்களுக்கு அரசு கொடுத்த நிவாரண தொகை வெறும் 1000 ரூபாய் ஆனால் வெறும் 50 முதல் 60 வரை உள்ள முதலாளிகளுக்கு அதுவும் வங்கியே திவாலாக காரணமாக இருந்த முதலாளி உட்பட அவர்களுக்கு 60000 கோடி அதாவது ஒரு முதலாளிக்கு தலா 2000 கோடி வரை தள்ளுபடி செய்து இருக்கிறது இந்திய அரசு.

இதை கேள்வி கேட்க கூட திராணி இல்லாமல் நிற்கிறது எடப்பாடி அரசு. மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு தரவேண்டிய GST பணம் பல கோடிகள் இன்னும் வரவில்லை. இதை கேட்க வாய் வராமல் எடப்பாடி அரசு கோமாவில் விழுந்து விட்டது. இப்படிப்பட்ட நேரங்களில் ஒருசில தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு பண உதவியும் உணவு பொருளும் கிடைத்தது.

இக் காலகட்டத்தில் மக்களுக்கு போதிய நிவாரண நிதி மற்றும் மருத்துவ வசதி, இரவும் பகலும் கொரோனோவுடன் போராடும் மருத்துவர்கள் செவிலியர்கள் காவலர்கள் போன்றோர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் சிறப்பு சம்பளத் தொகை இவையேதும் செய்யாமல் ஏற்கனவே அழிவின் விழும்பில் இருக்கும் குடும்பங்களை படுகுழியில் தள்ளும்விதமாக டாஸ்மாக்கை திறந்திருக்கிறது தமிழக அரசு.

குழந்தைக்கு பால் வாங்க பிஸ்கட் வாங்க பணம் இல்லாமல் மணலைத் தின்று இறந்த குழந்தைகள், குழந்தையுடன் கிணற்றில் விழுந்த குடும்பங்கள், குழந்தையுடன் தூக்கில் தொங்கிய குடும்பம் என்று வறுமை நிலை இப்படி இருக்க ஆனால் இந்த வெக்கங்கட்ட அரசு டாஸ்மாக்கை திறந்து மீதமுள்ள குடும்பங்களையும் அழிக்க திட்டமிட்டுள்ளது.

இதனை கண்டித்து “மக்கள் அதிகாரம்” அமைப்பினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் பெண்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசை வீதியில் வைத்து கேள்வி கேட்க வேண்டும்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கோவையில் டாஸ்மாக்கை திறக்காதே, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திருப்பூரில் கொரானா-வில் மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் போது டாஸ்மாக்கை திறந்து, மக்களை மரண குழியில் தள்ளும் எடப்பாடி அடிமை அரசை கண்டித்து,  மூடு டாஸ்மாக்கை, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் மற்றும் வி. சி. க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

ருமபுரி மாவட்டத்தில், உள்ள கள்ளிபுரம், கரியம் பட்டி மற்றும் கரியம்பட்டி புதூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்ராம்பாளையம் பகுதியில் டாஸ்மாக்கை திறக்காதே, தமிழக பெண்களின் தாலியை அறுக்காதே, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் உடன் இணைந்து மக்கள் அதிகாரம்  தோழர்கள் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !

டலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள (பெண்களின் தாலியறுக்கும்) டாஸ்மாக் கடையை மூடக்கோரி, மக்கள் அதிகாரம் தோழர்கள் 15 பேர் எடப்பாடி அரசை கண்டித்தும், டாஸ்மாக்கை மூடக் கோரியும் பதாகைகளுடன், முழக்கங்களை எழுப்பி டாஸ்மாக் கடை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்தை கவனித்தனர், சிறிது நேரம் கழித்து காவல் துறையினர் தோழர்களை கைது செய்தது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
கடலூர், தொடர்புக்கு : 81108 15963.

படிக்க:
♦ கொரோனா முடக்கத்தில் சொத்துக்களை பெருக்கும் அமெரிக்க பில்லியனர்கள்
♦ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?

***

கொரானாவில் மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் போது, டாஸ்மாக்கை திறந்து மக்களை மரண குழியில் தள்ளும் வேலையை செய்கிறது அடிமை எடப்பாடி அரசு. இதனை கண்டித்து, விருத்தாசலம் கடலூர் சாலையில் (ஸ்டேட் பேங்க் எதிரில்) மூடு டாஸ்மாக்கை, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்திய தோழர்களை தற்போது போலீசு 20 க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம். தொடர்புக்கு : 97912 86994.

***

டாஸ்மாக்கை இழுத்து மூடுபோராட்டம் நடத்திய திருச்சி மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது!

குடும்பத்தை சீரழிக்கும் –
டாஸ்மாக்கை மூடு

மக்களிடம் வழிப்பறி செய்யும் –
டாஸ்மாக்கை மூடு

கொரனா தொற்றை உருவாக்கும் –
டாஸ்மாக்கை மூடு

குழந்தைகள் கல்வியை பறிக்கும் –
டாஸ்மாக்கை மூடு
மன நோயாளியாக்கும் –
டாஸ்மாக்கை மூடு!

வருமானம் முக்கியமா?
மக்களின் வாழ்க்கை முக்கியமா?

வருமானம் பெருக்க டாஸ்மாக்கு திறப்பாம்
சொல்லுறாறு முதல்வரு
உண்மையா?உண்மையா?

எடப்பாடி கூறுவது
உண்மையா?உண்மையா?

வருமானம் வர வழி சொல்லுறோம்.
கடைய மூடுவியா? எடப்பாடி அரசே ?

G ST பங்கு நிதிய
கொரோனா தடுப்பு நிதிய ….
மத்திய அரசிடம் வசூல் செய்!

மாணவர் நடத்திய ஜல்லிக்கட்டை
மறந்து போனதா தமிழகம்.
மெரினாவை திறந்து விடு
மோடி அரசை பணிய வைப்போம்.

கல்வி கொடுக்க வக்கில்ல….
வேலை கொடுக்க துப்பில்ல….
நோய் பரப்பும் டாஸ்மாக்கை
திறக்கப் போற ஊருக்குள்ள….

சசிபெருமாள் உயிர் நீத்ததை,
பச்சையப்பன் கல்லூரி மாணவர் இரத்தம் சிந்திய
போராட்டத்தை விரயமாக விடமாட்டோம்!

காவல்துறையே காவல்துறையே
சாராயம் காய்ச்சினால் கைய உடைக்கிற…
சவுக்கு தோப்புல ஊரல் அழிக்கிற…
கொரோனா தடுக்கும் பணிய விட்டு
சரக்குக்கு காவல் காக்குற ….

மேற்கண்ட முழக்கங்களை எழுப்பி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி உறையூர் கடைவீதியில் இன்று காலை மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஊரடங்கையும் காவல் துறை தடையையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் அமைபின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ந.க. தமிழாதன் , தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகர தலைவர் வின்சென்ட் | ம க .இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா, பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் முன்னாள் பொதுச் செயலர் தோழர் சுந்தர ராசு மற்றும் தோழர்கள் கைது செய்யப்பட்டு புத்தூர் முகூர்த்தம் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக உறையூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தோழர் சம்சுதீன், தோழர் வின்சென்ட் தந்தை பெரியார் திராவிடர் கழகம்.மா. தலைவர் வாழ்த்தி பேசினார். தோழமை அமைப்பினர் இசுலாமிய நண்பர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோசமிட்டனர். ஏராளமான பொதுமக்கள் கூடி ஆதரவளித்தனர். பல காவலர்கள் இவ்வளவு நாள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வாங்கிய நற்பெயர் கெட்டு போய் விட்டதாக நொந்து கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் கட்சிகள் – இயக்கங்கள் – சங்கங்களின் மௌனம் கலையட்டும் !

குமரெட்டியாபுரத்தில் வெள்ளத்தாயம்மாள் ஸ்டெர்லைட் நிவாரண பொருட்கள் வேண்டாம் என்று கையெழுத்து வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் கடந்த 25-04-2020 அன்று சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவர் மீது பிப்ரவரி 2018-ல் ஸ்டெர்லைட் விரிவாக்க இடத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாக ஒரு வழக்கு இருப்பதாகவும் அது சம்பந்தமான விசாரணைக்கு 26-04-2020 அன்று சிப்காட் காவல் நிலையத்திற்கு ஆஜராகுமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் ஆஜரான இவரை ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெறக் கூடாது என்று காவல் ஆய்வாளர் மிரட்டியுள்ளார். குமரெட்டியாபுரத்தில் பெரும்பாலானோர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளராக இருந்தாலும் வெள்ளத்தாயம்மாள் முன்னணியாளராக இருப்பதால் காவல்துறை மூலம் இவ்வாறு ஒடுக்கப்படுகிறார். ஆனால் அதேவேளையில் தெற்கு வீரபாண்டியபுரத்தில் ஸ்டெர்லைட் கைக்கூலிகள் நிவாரணப் பொருள் வழங்குவதை தடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை.

பண்டாரம் பட்டியில் ஸ்டெர்லைட் கைக்கூலிகள் அரசு அனுமதி வாங்காமல், சமூக இடைவெளியின்றி – முகக்கவசமின்றி நிவாரணப் பொருட்கள் வழங்கியதை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய சகாயம், சந்தோஷ் மற்றும் ஊர் நாட்டாமைகள் மீது ஸ்டெர்லைட்டின் மகளிர் சுய உதவி குழு பொறுப்பாளர் என்று அறியப்பட்ட தனலட்சுமி புகார் கொடுக்கிறார். வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அன்று ஏற்பட்ட பிரச்சனையில் மாரியம்மாள் என்பவர் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு கீழே விழுந்து மயக்கமாகியுள்ளார். 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிப்காட் காவல்துறை மாரியம்மாளிடம் புகார் வாங்கவே இல்லை.

சந்தோஷ் கல்லூரி மாணவர்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டதில் வீரியமாக கலந்து கொண்டவர். ஊர் நாட்டாமைகள் கிராம மக்கள் எதிர்ப்பு போராட்டத்திற்கு இன்றுவரை தோள் கொடுக்கிறார்கள்.

மீளவிட்டானில் முத்து அவர்கள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்கனவே சிறை சென்றவர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இன்றுவரை உறுதியாக இருப்பவர். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் எந்த உதவிகளையும் வாங்குவதில்லை என்ற கிராம மக்களின் முடிவில் துணை நிற்பவர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றுபவர் ஸ்டெர்லைட் ஆதரவாளராக இருப்பதாகவும், தண்ணீர் ஏற்றாமல் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே உருவாக்குவதாகவும் அவர் மீது ஊர் மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். குற்றச்சாட்டு அடிப்படையில் டேப் இன்ஸ்பெக்டர் வரும் போது அவரை பணிசெய்ய விடாமல் முத்து உட்பட நால்வர் தடுத்ததாக புகார் செய்து அதனடிப்படையில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் பணியை சரிவர செய்யவில்லை என்பது தான் ஊர் மக்களின் உண்மையான குற்றச்சாட்டு.

படிக்க:
♦ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?
♦ கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் !

முத்து அவர்களை சிறை வைக்க காவல்துறை கொடுக்கும் விண்ணப்பத்தினை நீதித்துறை நடுவர் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் பிணையில் விடுவதற்கு தான் உத்தரவிடுவார் என்று எதிர்பார்த்தோம். ஏனெனில் உயர் நீதிமன்ற வழி காட்டுதல்படி கொடுங்குற்றம் புரிவோர் மட்டுமே சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஆனால் இந்த வழக்கில் முத்து அவர்களை நீதித்துறை நடுவர் ரிமாண்ட் செய்தது ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஒருவேளை ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்தாலும், கொலை குற்றத்துக்கு சமமாக பாவிக்கப் படுகிறதோ என்னவோ?

இப்போது இந்த மூன்று வழக்குகளிலும் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். முதலாவதாக குமரெட்டியாபுரம் வெள்ளையம்மாள் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலைய ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. 2- வதாக பண்டாரம்பட்டியில் சகாயம், சந்தோஷ், ஊர் நாட்டாமைகள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆனால் காவல் நிலைய ஜாமினில் விடாமல் கைது செய்ய காத்திருக்கிறார்கள். மூன்றாவது முத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளார்கள்.

ஊரடங்கு நேரத்தில் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியே வருகிறார்களா? இல்லையா? என்று மக்களுடைய நாடித்துடிப்பை அறிந்து, கடைசியில் முத்து அவர்களை கைது செய்வது வரை காவல்துறை சென்றுள்ளது.

தமிழக அரசிற்கு 5 கோடியை ஸ்டெர்லைட் நிறுவனம் கரோனா நிவாரண நிதியாக கொடுத்த பின்பு ஸ்டெர்லைட்டின் அதிகாரம் கேள்விக்கு அப்பாற்பட்டதாக மறு அவதாரம் எடுத்துள்ளது.

இவ்வளவு செல்வாக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இருந்தும் அவர்கள் நினைத்ததை அத்தனை சுலபமாக நடத்தி முடிக்க வெள்ளத்தாயம்மாக்களும், சந்தோஷ்களும், முத்துக்களும் பெரும் தடையாக இருப்பதால் வழக்கு, ஜெயில் என ஒடுக்கப்படுகிறார்கள்.

ஸ்டெர்லைட் விவகாரம் தற்போது பத்திரிக்கை – ஊடகங்களில் பேசும் பொருளாக இல்லை என்பதால், நாங்கள் எங்களுடைய உரிமைகளுடனும், சட்டத்திற்குட்பட்டும் நடத்தப்படுகிறோம் என்று நீங்கள் எண்ண வேண்டாம்.

பலம் வாய்ந்த வேதாந்தா கார்ப்பரேட்டுடன் நாங்கள் தினமும் போராடுவது சுகாதாரமாக வாழ்வதற்காக! நம்மை நம்பி போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக! சல்பர் சனியனிலிருந்து நமது சந்ததிகளை நிரந்தரமாக வாழ வைப்பதற்காக!

எனவே,
தூத்துக்குடி மக்களுக்காக குரல் கொடுங்கள்!

தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் காரப்பட்டு கிராமம் சார்பாக கோவில் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றினைந்து “நமக்கு நாமே கரம் கோர்ப்போம்! கொரோனா வறுமையை பகிர்ந்து கொள்வோம்!!” என்ற பதாகையின் கீழ் 05.05.2020 காலை 10 மணியளவில், 10 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் கடலை எண்ணை என வீடு வீடாக சென்று கொடுக்கப்பட்டது.

இதற்கான தொகை அரசு உதவியோ அல்லது தனிநபர் மூலம் நன்கொடை பெற்றோ செய்யவில்லை, மாறாக காரப்பட்டு கிராமத்தில் வசிக்கும் மக்கள், கோவில் திருவிழாவிற்காக சேமித்துவைத்த சுமார் 1-லட்சம் ரூபாய் வீணாக முடங்கி கிடப்பதைவிட அல்லது திருவிழா என்ற பெயரில் அதிக ஆடம்பரம் செய்வதைவிட இந்த கொரோனா வறுமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு முற்போக்கான விசயத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

குறிப்பாக காரப்பட்டு மாரியம்மன் கோவில் நிர்வாக குழுவில் உள்ளவர்கள் கடவுள் பக்தி என்று இருந்தாலும், பகுத்தறிவோடு இந்த தருணத்தில் செயல்பட்டது மக்கள் மத்தியிலும் முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியிலும் அக்கம் பக்கத்து கிராமங்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
காரப்பட்டு.

தொழிலாளர்களுக்கு இது ஒரு கடினமான மே நாள் !

0

வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட இந்த மே தினத்தை சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான மே தினம் என கல்வியாளர்களும் தொழிற்சங்க இயக்கங்களும் குறிப்பிடுகின்றன. பணியமர்த்துதல் மற்றும் பணிநீக்கத்தை எளிதாக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் நிலையில், ஐந்து மாநிலங்கள் சத்தமில்லாமல் பணி நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக சட்டப்பூர்மாக மாற்றியுள்ளன.

மே தினம் தொழிலாளர்களின் உரிமைகள் கொண்டாடப்படுவதைக் குறிக்கிறது. ஆனால் இந்த மே 1, கோவிட் -19 நெருக்கடியால் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை மட்டுமல்ல, பல தசாப்த கால போராட்டத்தின் மூலம் அவர்கள் பெற்ற சில உரிமைகளையும் இழந்துள்ளனர்.

மேற்கு வங்கம் கே.ஆர். ஜாம்ஷெட்பூரின் சேவியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் தொழிலாளர் ஆய்வுகள் பேராசிரியர் சியாம் சுந்தர், இந்தியாவில் உள்ள அரசாங்கங்கள் “19 ஆம் நூற்றாண்டின் தொழிலாளர் சுரண்டல் மாதிரியை மீண்டும் கண்டுபிடித்து வருகின்றன” என்கிறார்.

ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு தொழிலாளர்கள் தொழிற்சாலைகளுக்குத் திரும்பும்போது, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வைக்கப்படலாம்.

குஜராத்தில், முதல் எட்டு மணிநேரங்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியத்தையே கூடுதலாக பணியாற்றும் நேரத்துக்கும் அவர்களுக்கு வழங்கப்படும். தொழிற்சாலைகள் சட்டம் கூடுதல் மணிநேரங்களுக்கு இரண்டு மடங்கு ஊதியத்தை கட்டாயம் தர வேண்டும் என்கிறது.

1940களில் அம்பேத்கரின் முயற்சியின் மூலம்தான் தொழிலாளர்களின் அன்றாட பணி நேரம் 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேர வேலையும், வாரத்தில் 48 மணிநேரமும் நிர்ணயித்தது, வாரத்திற்கு அதிகபட்சம் 60 மணிநேரம் கூடுதல் பணி நேரத்திற்கான ஊதிய விகிதத்தில் இரட்டிப்பாக செலுத்த வேண்டும் என சொல்கிறது..

படிக்க:
♦ மே நாள் சூளுரை : நிதியை ஒதுக்க அரசு மறுத்தால் போராடுவோம் !
♦ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?

தொழிலாளர் பொருளாதார நிபுணர் அமிதாப் குண்டு, ஐந்து மாநிலங்கள் அனைத்து துறைகளிலும் வேலை நேரத்தை அதிகரிக்கும் முடிவை கேள்வி எழுப்பினார்.

“ஒரு அவசர நடவடிக்கையாக, குறிப்பிட்ட துறைகளில் மாநிலங்கள் வேலை நேரத்தை அதிகரிக்க முடியும், ஓய்வு, சுகாதாரம், உணவு, தங்குமிடங்கள் போன்ற சில சலுகைகள் பணியிடங்களில் தருவதன் மூலம் வேலை நேரத்தை அதிகரிக்கலாம். ஆனால் அனைத்து துறைகளிலும் வேலை நேரம் அதிகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை” என்கிறார் அவர்.

சுரங்க மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் அதிகரித்த வேலை நேரமும் கவனிக்கத்தக்கது. வேலை நேரத்தை அதிகரிக்கும் போது, பணியிட சூழலை மேம்படுத்த மாநிலங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உள்ள தொழில்சாலைகள் தொழிலாளர்களை குறைந்தபட்ச ஊதியத்தில் நீண்ட நேரம் வேலை செய்யும் வியர்வை உழைப்பை சுரண்டிய மாதிரியைப் போல, ஐந்து மாநில அரசாங்கங்கள் முதலாளிகளைச் செய்ய அனுமதிக்கின்றன” என்கிறார் சியாம் சுந்தர்.

பொது அவசரத்தை முன்வைத்து வேலை நேரத்தை அதிகரிக்கலாம் என தொழிற்சாலைகள் சட்ட பிரிவு 5 கூறுவதை குஜராத் அரசு முறையற்ற முறையில் பயன்படுத்துவதாகவும் அவர் விமர்ச்சிக்கிறார்.

“சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, ஒரு பொது அவசரநிலை என்பது போர் போன்ற இந்தியாவின் பாதுகாப்புக்கு வெளிப்புற அல்லது உள் அச்சுறுத்தலை தரக்கூடிய சூழல் என சொல்கிறது. கோவிட் -19 தொற்றுநோய் இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு பொது அவசரநிலை அல்ல” என அவர் கூறுகிறார்.

ஜேஎன்யூ-வின் அமைப்புசாரா துறை மற்றும் தொழிலாளர் ஆய்வுகள் மையத்தின் தலைவர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா, இந்த ஆண்டின் மே தினம் நிச்சயமாக சமீபத்திய ஆண்டுகளில் மிக மோசமானது என்கிறார்.

ஏற்கனவே, மோசமான வேலையின்மை பிரச்சினை இருந்த நிலையில், கோவிட் -19 பிரச்சினையால் அது இன்னும் மோசமடைந்துள்ளது என்கிறார் அவர்.

படிக்க:
♦ உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !
♦ மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !

“அமெரிக்காவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 25 மில்லியன் மக்கள் வேலையின்மை காப்பீட்டிற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் இதே நிலைதான் உள்ளது. 2018 ஆம் ஆண்டில், இந்தியா 45 ஆண்டுகளில் இல்லாத மிக அதிகமான வேலையின்மை விகிதத்தைக் கண்டது; தொற்றுநோய் காரணமாக இப்போது நிலைமை மோசமடைந்துள்ளது” என்கிறார் மெஹ்ரோத்ரா.

காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவு அசோக் சிங், மோடி அரசாங்கம் தொழிலாளர் விரோதமாக நடந்து கொள்கிறது என குற்றம்சாட்டுகிறார். கடந்த குளிர்கால கூட்டுத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்துறை உறவுகள் வழிகாட்டு மசோதாவை அவர் குறிப்பிட்டு பேசுகிறார்.

இந்த மசோதா 100 ஊழியர்கள் வரை அரசின் எந்தவொரு அனுமதியும் இன்றி பணிநீக்கம் செய்ய முதலாளிக்கு அனுமதி அளிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“இந்த அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய தொழிலாளர் மாநாட்டின் ஒரு கூட்டத்தை கூட அழைக்கவில்லை. இது ஒருபோதும் ஆலோசனையை நம்பவில்லை. நீண்ட போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் அடைந்த சலுகைகள் திரும்பப் பெறப்படுகின்றன. நாங்கள் அனைத்து தொழிலாளர் சங்கங்களும் ஏப்ரல் 21 அன்று சமூக ஊடகங்கள் வழியாக நாடு தழுவிய போராட்டத்தை நடத்தினோம்” என்கிறார் அவர்.

சிபிஎம் ஆதரவு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தபன் சென், “கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு அதிக நிதி தருவதால், அவர்களாக தொழிலாளர் சட்டங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்.

“தனியார் முதலாளிகள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவோ அல்லது சம்பளத்தை குறைக்கவோ கூடாது என அரசாங்கங்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால் இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை. நிச்சயமாக, இது நூற்றாண்டின் கடுமையான மே தினம் என்று நான் நினைக்கிறேன்” என்கிறார் சென்.


– கலைமதி

நன்றி :  டெலிகிராப் இந்தியா. 

கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள். சாதாரண நாட்களிலேயே போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள் கொரோனா தொற்று காலகட்டத்திலும் அதே நிலையில்தான் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இது குறித்து சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் சீனிவாசலுவிடம் தொலைபேசி வழியாக வினவு செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு சீரிய விளக்கமளித்தார்.

***

மிழகத்திலேயே கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் சென்னையில், துப்புரவு பணியாளர்களின் நிலைமை எப்படி இருக்கிறது ?

கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர்.

தோழர் சினிவாசலு (கோப்புப் படம்)

சென்னையில் பதினைந்து மண்டலங்களில் மட்டும் 6,401 பேர் நிரந்தர தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிகின்றனர். இது போக ஒப்பந்தப் பணியாளர்கள், என்.யு.எல்.எம் தொழிலாளர்கள், டி.பி.சி மற்றும் ராம்கி ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிகமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் என சுமார் 22,430 பேர் பணியாற்றுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் சந்திக்கும் அவலங்களை சென்னையின் சில உதாரணங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
தற்போது சென்னை முழுவதும் நோய் தொற்று பரவாலாக அதிகரித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தூய்மைப் பணி தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. அவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அக்கறை கொள்வதில்லை.

தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிய வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும் என்கிறார்கள். ஆனால் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர், வாரத்திற்கு ஒரு மாஸ்க், சில இடங்களில் வாரத்திற்கு 2 மாஸ்க் மட்டுமே தருகின்றனர். இவர்களைப் பொருத்த வரையில் ஒரு மாஸ்க்கை ஆறு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது தூய்மை பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தாது. அதேபோல் அவர்களுக்கு சானிடைசர், சோப் என எதுவும் தரப்படவில்லை. தொழிலாளர்கள் பணி முடிந்து வந்தால் கூட வெறும் தண்ணீரில்தான் கையைக் கழுவுகின்றனர். இதனால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

படிக்க:
♦ நீடிகப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன ? வாஞ்சிநாதன் | காணொளி
♦ மே நாள் சூளுரை : நிதியை ஒதுக்க அரசு மறுத்தால் போராடுவோம் !

கொரோனா தொற்று இல்லாத காலங்களிலும் பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல் ஏமாற்றினார்கள். அப்போதே பலமுறை வலியுறுத்தி மனு கொடுத்தோம். அதனை கிடப்பில் போட்டார்கள். இவ்வசாதாரண அபாய காலத்திலாவது முறையாக கொடுக்க வேண்டாமா?

துப்புரவுப் பணியாளர்களின் வேலை நிலைமைகள் எவ்வாறு உள்ளது ?

கொரோனா தொற்று தடுப்புப் பணியில் தூய்மைப் பணியாளர்கள்தான் முதன்மையானவர்கள். அதிகாலை 5 மணிக்கு பணிகளை தொடங்க வேண்டும். எந்த பாதிப்பாக இருந்தாலும் முதலில் தூய்மை பணியாளர்தான் சந்திக்க நேரிடும். இது போன்ற பேரிடர் காலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களும் மனமுவந்து அவர்களும் பணியாற்றுவார்கள்.
அவர்களுக்கு அவ்வப்போது கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளோம்.

தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யாவிட்டால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தோம். தொற்று பரவியியுள்ள வீடுகளில் உள்ள குப்பையை அகற்றுவதற்குகூட போதிய பாதுகாப்பு உபகரணம் இல்லை. “தூய்மைப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எங்கள் கடமை. எல்லோருக்கும் போதுமான அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்துள்ளோம்” என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால், ஊழியர்களிடம் கேட்டால் தரவில்லை என்று கூறுகின்றனர்.

அப்படியானால் பாதுகாப்பு உபகரணங்கள் எங்கே சென்றன?

லாக்டவுன் அறிவித்த பிறகு, மார்ச் மாத அறிக்கையின்படி சுமார் 17,944 பேர் அதாவது 80 விழுக்காட்டினர் வேலைக்கு வந்துள்ளனர். இதுபோக மண்டலங்களில் உதிரியாக பணியாற்றுபவர்கள் 2,250 என மொத்தம் 20,194 பேருக்கு கணக்கீடு செய்து, ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு ரூ.100 வீதம், 15 நாட்களுக்கு ரூபாய் மூன்று கோடியே மூன்று லட்சத்து இருபதாயிரம் தேவைப்படும் என்று (ரூ.303,20,000) 28.03.2020 அன்று ஒரு எஸ்டிமேட் கொடுக்கிறார்கள்.

இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை குறித்து கேட்கப்பட்ட போது 20.04.2020 அன்று ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். அதில் 15 மண்டலங்கள், 3 வட்டார அலுவலகம், எலட்ரிகல், மெக்கானிகல், திடக்கழிவு மேலாண்மை துறை, கட்டிட பராமரிப்பு, மற்றும் சுகாதாரம் என்று பெரிய பட்டியலே போட்டு 17 கோடியே 99 லட்சத்து 19 ஆயிரத்து 726 ரூபாய் செலவாகி இருப்பதாக சொன்னார்கள்.

இவற்றில் திடக்கழிவு மேலாண்மைத் துறைக்கு மட்டும் 10 கோடியே 33 லட்சத்து 13 ஆயிரத்து 732 ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். பில்டிங் பராமரிப்பு செலவு 76 லட்சத்து 34 ஆயிரம். ஆனால் 20,194 தூய்மைப் பணியாளர்களின் சுகாதாரத்திற்கு செய்த செலவு வெறும் 85 லட்சம்தான். ஒரு கட்டிடத்திற்கு கொடுக்கும் மதிப்பு கூட பணியாளர்களின் சுகாதாரத்திற்கு இல்லை. இவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

லாக்-டவுன் சமயத்தில் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து, உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றதா ?

ஊரடங்கு அமலில் உள்ளதால் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வருவது சிரமம். 100 பேருந்து மட்டும் விட்டிருக்கிறார்கள். அதில்தான் பல தடங்களில் பயணிக்க வேண்டியுள்ளது. அங்கே சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான சூழலே இல்லை. பலர் குப்பை வண்டி, லாரிகளில் பணிக்கு வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளிகள்.

படிக்க:
♦ PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்
♦ உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !

தன்னார்வலர்கள் கொடுத்தது போக, மாநகரட்சியிலிருந்து காலை, மதியம் இரண்டு வேளை உணவு தருகிறார்கள். உண்மையில் சாப்பிட முடியவில்லை என்கிறார்கள் தொழிலாளர்கள். ஆனால், அதனை பெரிய குறையாக சொல்லவில்லை. இந்த சூழலில் பசிக்கு தருகிறார்களே… அதுபோதும் என்ற மன நிறைவு மட்டுமே பணியாளர்களிடம் உள்ளது. மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்க களத்தில் நமது பணி பிரதானமானது என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. அதற்காக எங்களுக்கு அச்சம் இல்லை என்பதல்ல. அதனைவிட, நாங்கள் முடங்கினால் பலரும் தொற்றுக்கு பலியாகி விடுவார்களே என்ற கவலை எங்களை களப்பணியை நோக்கி தள்ளுகிறது.

தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புப் பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா ? எத்தனை தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ?

எங்களில் எத்தனை பேருக்கு தொற்று உள்ளது என்பது கூட தெரியாது. எங்களிடமிருந்து மற்றவர்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் பரவி விடக்கூடாது என்பதாலேயே தொடர்ந்து சோதனை செய்ய வலியுறுத்தினோம்.

சில இடங்களில் தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்றும் புனிதமானவர்கள் என்றும் கூறி வருகிறார்கள். பாத பூஜையும் கூட செய்கிறார்கள். இதெல்லாம் வெற்று ஜாலம்.

தூய்மைப் பணியாளர்கள் வாழும் பகுதிகள் மிகவும் அடர்த்தியானவை. சென்னையில் சுமார் 16 இடங்கள் தூய்மைப் பணியாளர்கள் அடர்த்தியாக வாழும் பகுதியாகும். பத்துக்கு பத்து குடிசையில் 4, 5 பேர் வசிக்கிறார்கள். இங்கெல்லாம் தொற்று பரவினால் மிக மோசமான சூழலை சந்திக்க நேரிடும் என்பதால் பாதுகாப்பை அதிகப்படுத்தக் கோரினோம். ஆனால் துப்புரவு பணியாளர்களுக்கோ, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

சென்னை மாநகராட்சி நிர்வாகம் முறையான பாதுகாப்பு வசதியை செய்யாததன் விளைவாக தற்போது நான்கு தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு சுமார் 30 பேர் வரை பரவியிருக்கலாம் என்றும் தெரியவருகிறது. உடனடியாக அனைவருக்கும் சோதனையை தீவிரப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் மட்டுமே மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். ஆனால் சோதனை செய்வதில் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

இவர்களிடம் போதிய சோதனைக் கருவியும் இல்லை. தற்போது பாதிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியில் உள்ளனர். நாங்கள் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷை சந்தித்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதியுதவி தர வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தோம். தொற்று இருப்பது தெரிய வந்தால் மருத்துவ செலவு மற்றும் நிவாரணத் தொகை வழங்க நேரிடும் என்பதால்தான் இவர்கள் சோதனை செய்ய மறுக்கிறார்களோ அல்லது உண்மையை சொல்ல தயங்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

தூய்மைப் பணியாளர்கள் பற்றிய பார்வை இந்த கொரோனா காலகட்டத்தில் மக்களிடையே மாறியிருக்கிறதா ?

சில இடங்களில் தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்றும் புனிதமானவர்கள் என்றும் கூறி வருகிறார்கள். பாத பூஜையும் கூட செய்கிறார்கள். இதெல்லாம் வெற்று ஜாலம். அதனால் எங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. இதே கொரோனா காலகட்டத்தில் தான் நாட்டின் பல இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் மீது தாக்குதல்களும் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை யாரும் கண்டித்ததாக தெரியவில்லை.

சுனாமி, புயல், மழை வெள்ளம் என பல பேரிடர் காலங்களில் நாங்கள் பணியாற்றியுள்ளோம். அவற்றில் மக்களை காப்பதில் முதன்மையான பங்கு தூய்மைப் பணியாளர்களுக்கு இருந்தது. மோடி, எடப்பாடி உட்பட எல்லோரும் எங்களைப் போற்றலாம். மக்களும் எங்களைப் புகழலாம். பாத பூஜை செய்யலாம். அதனால் எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதுமில்லை.
எங்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தால் எங்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் எங்களோடு கைகோர்த்து நில்லுங்கள் !

– வினவு செய்தியாளர்

மே நாள் சூளுரை : நிதியை ஒதுக்க அரசு மறுத்தால் போராடுவோம் !

மிழகத்தின் பல பகுதிகளில் உழைப்பாளர் தினமாம் மே 1 அன்று, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மக்கள் அதிகாரம் உள்ளிட்டு பல்வேறு புரட்சிகர அமைப்புகள் சார்பில் ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்படும் மக்களின் துயர் துடைக்கும் வகையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மட்டுமல்லாது, அவர்களின் கோரிக்கையை பிரதிபலிக்கும் வகையிலும் போராட்ட நிகழ்வுகளையும் மேற்கொண்டனர்.

***

மே தினத்தில் மதுரை ஒத்தகடை பகுதி வாழ் எவர்சில்வர் தொழிலாளர்கள் மற்றும் அபே ஆட்டோ தொழிலார்கள் வீட்டிலிருந்தே குரலெழுப்பினார்கள். கொராவினாலும் அரசின் புறக்கணிப்பிற்கும் ஆளாகியிருக்கும்  இவர்கள் மாதம் ஆறாயிரம் நிதி வழங்கு!! மக்களை பாதுகாத்திடு!! என்ற பதாகைகளுடனும்.

அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் 40 நாட்களாக முடங்கியிருக்கும்  மக்களை எப்படி பாதுகாக்கும் என்ற கேள்வியுடனும் பரவலாக குடும்பமாக கலந்து கொண்டார்கள். முன்மாதிரியாக போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் குடும்பங்கள் மற்ற மக்களுக்கும் ஒரு தூண்டுதல்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அதே போல மதுரை பகுதி பு.மா.இ.மு மற்றும் ம.க.இ.க தோழர்களும் மே தினத்தில் தோற்றுப்போன முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்ற முழக்கங்களுடனும் வீட்டிலிருந்தே குரலெழுப்பினார்கள்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை, தொடர்புக்கு : 82200 60452, 97916 53200.

***

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லுர் வட்டம் சார்பில் பொய்கையரசூர் பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பில் மே-1 நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தோழர்கள் மக்கள் என 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மே-நாள் போராட்டத்தை நினைவு கூர்ந்து ஊரடங்கு உத்தரவு என்ற பெயரில் மக்கள் உரிமையை பறிக்கும் இந்திய அரசை கண்டித்து காட்டமான முழக்கமும், உரையும் பதிவு செய்யப்பட்டன.

இறுதியில் பொய்கையரசூர் பகுதியில் இருக்க கூடிய ஜனநாயக சக்கிகளிடம் மக்களை கொரோனா நெருக்கடியிலிருந்து உணவு ரீதியாக பாதுகாக்கும் வகையில் நிதிஉதவி பெற்று குறிப்பாக 45 அரிசி மூட்டை பெற்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ என்ற அடிப்படையில் வீடு வீடாக சென்று வினியோகம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் மேலும் நமது அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்பட்த்தும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இப்படிக்கு
மக்கள் அதிகாரம்,
திருவெண்ணைநல்லுர் வட்டாரம்.

தஞ்சை : நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் !

ஞ்சை மானோஜிப்பட்டியில் உள்ள ஐயந்திருவள்ளுவர் நகர்,உப்பரிகைத்தெரு, வனதுர்கா நகர், சரஸ்வதி நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்ற பெண்கள் கொண்ட எழுபது குடும்பங்களுக்கு அரிசி, மசாலாப் பொருட்கள் கொண்ட தொகுப்பு மக்கள் அதிகாரத்தின் சார்பில் கொரோனா நிவாரண உதவியாக 01.05.2020 அன்று வழங்கப்பட்டது.

மக்கள் அதிகாரத்தின் தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தேவா, பாலாஜி, பொறியாளர் சந்திரமோகன் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
காளியப்பன்,
மாநிலப்பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்

2

கொரோனா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து மீள, இந்திய அளவில் நிதியைத் திரட்ட “பிரதம மந்திரி – அவசரகால நிலைமைகளுக்கான குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி (Prime Minster Citizens Assistance and Relief in Emergency Situations fund – PM CARES)” எனும் தனியார் அறக்கட்டளையை மத்திய அமைச்சரவை உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மத்திய மாநில அரசு ஊழியர்கள், பெரும் முதலாளிகள், நடிகர் – நடிகைகள் பொதுமக்கள் என பல தரப்பினரிடமிருந்து பணம் பெறும் இந்த அறக்கட்டளை மத்திய தலைமைக் கணக்காளரின் கண்காணிப்பின் கீழ் வராது என்று தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. மேலும் இத்தகைய வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் தனியார் அறக்கட்டளைகள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வருமா என்பதும் தீர்க்கப்படாத பிரச்சினையாக நீதிமன்றத்தில் தேங்கி நிற்கிறது.

PM CARES திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்தி, கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தாராளமாக நிதி உதவி செய்து துணை நிற்குமாறு கோரியிருந்தார். அதைத் தொடர்ந்து சினிமா நட்சத்திரங்கள், முதல் கார்ப்பரேட் முதலாளிகள் வரை அனைவரும் வாரி வழங்கினர். பே-டிஎம் போன்ற செயலிகளின் வழியே சிறிய அளவிலான தொகைகளையும் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதுபோக அனைத்து அரசு மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்திலிருந்தும் இந்த நிதிக்கு பெரும் தொகைகள் செலுத்தப்பட்டன. பல இடங்களில் இது நிர்பந்திக்கப்பட்டும் மிரட்டியும் பெறப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு டெல்லி பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில், மார்ச் 2020 ஊதியத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு (PMNRF) வழங்குமாறு கோரி அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரின் ஒருநாள் ஊதியம் சேர்ந்து ரூ. 4 கோடி திரட்டப்பட்டது. ஆனால் PMNRF திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியை பல்கலைகழக துணைவேந்தர் PMCARES திட்டத்திற்கு திருப்பிவிட்டுள்ளார். இதற்கு டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்திலிருந்து வந்த நெருக்குதலின் பெயரிலேயே PMNRF-க்கு ஒதுக்கப்பட்ட பணம் PM-CARES திட்டத்திற்கு திருப்பிவிடப்பட்டது என தி ஹிந்து நாளிதழுக்கு அடையாளத்தை தெரிவிக்க விரும்பாத டெல்லி பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே போல டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பயிற்சி மருத்துவர்களின் ஒருநாள் சம்பளத்தை கட்டாயப் பிடித்தம் செய்து பிரதமரின் PM CARES நிதிக்கு அளிக்கும்படி சுற்றறிக்கை அனுப்பியதை பயிற்சி மருத்துவர் சங்கம் நிராகரித்துள்ளது. மேலும் இந்த நிதிக்குத்தான் நன்கொடை வழங்க வேண்டும் என்று வற்புறுத்துவது தவறானது என்பதையும், ஏற்கெனவே மருத்துவர்கள் பலரும் தாமாகவே பல்வேறு அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மற்றும் PMNRF ஆகியவற்றின் மூலம் நன்கொடை வழங்கியிருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

படிக்க:
♦ உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !
♦ ஜியோ நிறுவனம் செல்பேசி கோபுரங்களை விற்கத் தடை – ஏன் ?

ஆகையால் தானாக முன் வந்து யாரேனும் கொடுக்க விரும்பினால் மட்டுமே கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நிவாரண நிதி பங்களிப்பை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யும் தங்களது உரிமையை பறிக்கக் கூடாது என்றும் பயிற்சி மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

டெல்லி பல்கலை, எய்ம்ஸ் மருத்துவமனை வரிசையில் வருவாய்த்துறை ஒரு படி மேலே சென்றிருக்கிறது. இங்கு பணிபுரியும், அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ஏப்ர்ல 2020-லிருந்து மார்ச் 2021 வரை ஒவ்வொரு மாதமும் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து 1 நாள் ஊதியத்தை PM-CARES திட்டத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 17 அன்று வருவாய்த்துறையின் இயக்குனர் மற்றும் தலைவரிடமிருந்து அனுப்பப்பட்ட அந்த சுற்றறிக்கையில் முன் வைக்கப்பட்ட இந்த கோரிக்கைக்கு ஆட்சேபணை ஏதும் இருந்தால் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் அதனை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது அந்த சுற்றறிக்கையைப் படித்துவிட்டு அமைதியாக இருந்தால், PMCARES நிதிக்கு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதாமாதம் நிதி தானாக எடுத்துக் கொள்ளப்படும். மறுப்பு இருந்தால், தனிக் கடிதத்தில் பெயரையும் பணியாளர் அடையாள எண்ணையும் சேர்த்து எழுதித் தர வேண்டும்.

பிற அரசாங்க நிறுவனத்தின் மூலமோ, லாக்டவுன் சமயத்தில் தொண்டு செய்யும் வேறு ஒரு தன்னார்வ நிறுவனத்தின் மூலமோ கொடுக்க வழியிருக்கும் போது, PM-CARES-க்கு ஏன் நன்கொடை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு அலுவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில் நன்கொடையே அதிகாரத் தொனியில்தான் கேட்கப்பட்டிருப்பதாகவும், நன்கொடை தராதவர்களை மறைமுகமாக மிரட்டும் தொனியிலும் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இங்கு மட்டுமல்ல, பல இடங்களில் நீதிமன்றங்களே இது போன்று PM CARES நிதிக்கு ஆள் சேர்த்துவிடும் வேலையைச் செய்திருக்கின்றன. ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் பிணை வழங்குவதற்கான நிபந்தனையில் PM-CARES நிறுவனத்திற்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என்றும் அரசின் ஆரோக்ய சேது நிரலை கைபேசியில் தரவிறக்கம் செய்து அதற்கு ஆதாரம் காட்டிய பின்னரே பிணை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் ஒரு நீதிபதி.

அரசாங்கம் இவ்வாறான சூழலில் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாகக் கேட்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இந்த நிதி பொதுத் தணிக்கைக்கு உட்படுத்தப்படாது என்பதுதான் பிரச்சினையே! PMCARES பொதுத்துறை நிதி அல்ல என்பதை இதுகுறித்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

படிக்க:
♦ கொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை
♦ விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !

இதற்கு முன்னர், இயற்கைப் பேரிடர் காலங்களில் நன்கொடை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட PMNRF பணத்தை இயற்கைப் பேரிடருக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், PMCARES என்ற தனியார் அறக்கட்டளை துவங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது அரசு. ஆனால், PMNRF உருவாக்கபட்ட நோக்கம் அதுவாக இருந்தாலும், “மருத்துவ ரீதியான அவசரத் தேவைகளுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றும் அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது. அந்த விதியைப் பயன்படுத்தியோ, அல்லது அதன் விதிகளில் கொள்ளை நோய்க் காலங்களிலும் இந்தப் பணத்தைப் பயன்படுத்தலாம் என்று மாற்றம் செய்வதன் மூலமோ அப்பணத்தைப் பயன்படுத்த முடியும். அப்படி செய்யாமல் PMCARES என்ற புதிய நிதி அறக்கட்டளையை மோடி அரசு துவங்கியிருப்பதன் பின்னணி என்ன ?

இயற்கைப் பேரிடர் நிவாரணத்துக்காக உருவாக்கப்பட்ட PMNRF மூலம் வரும் பணமும் கூட பொதுப்பணக் கணக்கில் வருமா வராதா என்பது குறித்த வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் வெள்ள சமயத்தின் போது தொடுக்கப்பட்டது. அதே போல, அதன் கணக்கு வழக்குகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டிருந்தது. அந்த வழக்கின் மேல் முறையீட்டு மனு 2018 முதல் இப்போது வரை தீர்வு காணப்படாமல் நீதிமன்றத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள PM CARES திட்டமும் இது போன்று எதற்குக் கீழும் வராத போது, வெளிப்படைத்தன்மை என்பது இங்கு எவ்விதத்திலும் உறுதி செய்யப்படவில்லை. தனியார் அறக்கட்டளைகளை தணிக்கை செய்ய தமக்கு அதிகாரம் இல்லை என மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) தெரிவித்துள்ளார்.

பெருமளவிலான தொகையை நன்கொடையாகப் பெறும் PM-CARES அறக்கட்டளையின் அறங்காவலர்களாக இருக்கும் மத்திய நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் யாரைக் கை காட்டுகிறார்களோ அவர்கள்தான் தணிக்கை செய்ய முடியும்.

கார்கில் போரில் மரணமடைந்த இராணுவ வீரர்களின் சவப்பெட்டி தொடங்கி ரஃபேல் உள்ளிட்ட இராணுவத் தளவாடங்கள் கொள்முதல் வரை அனைத்திலும் ஊழல் செய்த ஒரு கட்சியின் அமைச்சர்களின் கீழ் செயல்படும் இந்த PMCARES அறக்கட்டளைக்கு மக்கள் வழங்கும் கோடிக்கணக்கான நன்கொடைத் தொகை, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கவும், மருத்துவ சேவையை செழுமைப்படுத்தவும் பயன்படுமா? அல்லது கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப் பயன்படுமா?

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளைக் கையாளும் PM-CARES அறக்கட்டளை, அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அல்லது குறைந்தபட்சம், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு அமைக்கப்பட்டு அவர்களின் கண்காணிப்பிலாவது கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் இவை எதற்கும் மோடி அரசு தயாராக இல்லை. கடந்த ஏப்ரல் 21 அன்று விக்ராந்த் தொகாட் என்ற சுற்றுச் சூழல் ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் PM-CARES நிதி தொடர்பான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனக் கேட்டதற்கு, சப்பைக் காரணங்களைக் கூறி அந்த விவரங்களை வெளியிட மறுத்துள்ளது பிரதமர் அலுவலகம்.

வெளிப்படைத்தன்மை என்றால் கிலோ என்னவிலை எனக் கேட்கும் மோடி அரசு, நிதி கையாளுதலில் மட்டும் கண்காணிப்புக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளுமா என்ன ?


நந்தன்

செய்தி ஆதாரம் :
♦ DU Teachers Allege VC Diverted Rs 4-Crore Staff Donations From PMNRF to PM CARES, 
♦ FinMin Tells All Staff, Officers to Donate One Day’s Salary Per Month to PM-CARES.
 

உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !

‘40 ஆயிரம் சம்பளம் வாங்கின இடத்துல 30 ஆயிரம் குடுத்தா கூட போதும். மொத்தத்துல வேலைன்னு ஒண்ணு இருந்தாலே பெரிய விசயம்’ – என்றார் ஓர் ஊடக நண்பர். அவர் ஊடகத் துறைக்கு வந்து 8 வருடங்களாகிறது. எட்டு வருடங்களில் அவர் சம்பளம் 40 ஆயிரம். அதை நம்பி திருமணம் முடித்து ஒரு குழந்தையாகி, குடும்பமாகி நிற்கையில் இப்போது அவரது ஊதியம் 40-ல் இருந்து கீழே இறங்கப் போகிறது. எவ்வளவு என்று அடுத்த மாதம் தெரிந்துவிடும். வேலையே நிலைக்குமா என்பது அதற்கும் அடுத்த மாதம் தெரிந்துவிடும்.

இவரைப் போல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஊடகங்களில் சராசரியாக 30-40 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிகிறார்கள். அனைவரின் மனதிலும் இப்போது கவ்வியிருக்கும் அச்சம், ‘இந்த வேலை நிலைக்குமா?’. ஊடகம் மட்டுமல்ல… பெரும்பான்மையான துறைகளில் பணிபுரியும் அனைவரது மனதிலும் இந்த கேள்வி பூதாகரமாக எழுந்துள்ளது.

இந்த நிச்சயமின்மை இதற்கு முன்பும் இருந்ததுதான். இப்போது அது திட்டவட்டமான ஆபத்தாக எழுந்து நிற்கிறது. முன்பு ஓர் ஊழியரை வேலைநீக்கம் செய்வதற்கு நிறுவனத்துக்கு, பெயரளவுக்கேனும் ஒரு காரணம் தேவைப்பட்டது. இப்போது கொரோனா வந்து, எதையும் செய்வதற்கான ‘பிளாங்க் செக்’-ஐ நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. ‘நஷ்டம்.. அதனால் வேலையில்லை’, ‘நஷ்டம்.. அதனால் சம்பளம் குறைப்பு..’.. அவ்வளவுதான். மேலதிகமாக எதுவும் தேவையில்லை. ஆகவே தொழிலாளர்களின் மனம் இயல்பாகவே, ‘சம்பளத்தையாச்சும் குறைச்சுக்க… வேலையை விட்டு தூக்கிராதே..’ என்று சிந்திக்கிறது.

‘வேறு என்ன செய்வது? இது வரலாறு காணாத நோய்த்தொற்று. பழைய மாதிரி நிறுவனம் இயங்க முடியாது. பழைய மாதிரி சம்பளம் மட்டும் எப்படி வழங்க முடியும்?’ என்பது நியாத்தோற்றம் கொண்ட விளக்கம்தான். ஒருவகையில் இந்த விளக்கம், முதலாளிகளின் கையறு நிலையை புரிந்துகொள்ளும்படி தொழிலாளிகளிடம் கோருகிறது. அதாவது, ‘கொடுக்க மனம் இருக்கிறது. ஆனால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறதே… என்ன செய்வது? புரிந்துகொள்ளுங்கள்’ என்று பாவனை செய்கிறது.

உண்மை என்னவெனில், கம்பெனி நன்றாக நடந்த காலங்களிலும் இத்தகைய ஊதியக் குறைப்பையும், ஆள்குறைப்பையும் இவர்கள் செய்தார்கள் என்பதுதான். அப்போது வேலை கொடுக்கப்பட்டது. மூவர் செய்யும் வேலை ஒருவருக்கு வழங்கப்பட்டு அதன்மூலம் மறைமுக ஆட்குறைப்பு நடந்தது. அப்போது ஊதியம் கொடுக்கப்பட்டது. அது, கம்பெனியின் லாபத்துக்கேற்ற ஊதியமோ, தொழிலாளியின் வேலைக்கேற்ற ஊதியமோ அல்ல… மிக சொற்ப சம்பளம். அதன்மூலம் ஊதியக் குறைப்பு செய்யப்பட்டது. ஆகவே, ‘நாங்க அந்த காலத்துல நல்லவங்களா இருந்தோம்’ என்ற பாவனை, ஒரு பம்மாத்து.

படிக்க:
♦ கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்
♦ உலக சுகாதார மையத்துக்கான நிதியை அமெரிக்கா வெட்டியது ஏன் ?

நிறுவனம் லாபத்தில் இருக்கும்போதும் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டார்கள். நிறுவனம் நஷ்டத்தில் இருக்கும்போதும் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள். லாபத்தில் இருந்தபோது நீங்கள் சேர்த்து வைத்த சொத்து உங்களுக்கு இருக்கிறது. தொழிலாளிக்கு, சேர்த்து வைத்த கடனைத் தவிர என்ன இருக்கிறது?

‘சரி நீங்களே சொல்லுங்க.. என்ன செய்வது?’

என்ன செய்வது என்றால், இத்தனை நாளாய் தொழிலாளியின் உழைப்பில் சேர்த்த உபரி சொத்து, எல்லா முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது. இந்த உபரி இல்லாத நிறுவனம் எது? முதலாளி யார்? அதை வெட்டி எடுத்து வெளியே கொண்டு வாருங்கள். இத்தனை நாள் உங்களுக்காக உயிரைக் கொடுத்து உழைத்த தொழிலாளியை இந்த நேரத்தில் கைவிடாமல் தொடர்ந்து வேலை கொடுங்கள்; ஊதியம் கொடுங்கள். நாளை நிலைமை சரியாகும்போது, இந்த உபரி உங்களிடம் வந்து சேரத்தானே போகிறது? உங்களுக்கு குறையப்போவது லாபவிகிதம்தானேயன்றி, லாபமே அல்ல.

இத்தனை தூரம் நீட்டி முழக்காமல், யாரும் எடுத்துச் சொல்லாமல் நிறுவனங்களின் கஷ்டத்தை தொழிலாளிகள் புரிந்து கொள்கிறார்கள். எந்த தொழிலாளியை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். ‘பாவம், கம்பெனியே நஷ்டத்துல ஓடுது..’ என்று இயல்பாக சொல்வார்கள். அது, பிறர் துன்பத்தை தனதாக கருதும் தொழிலாளி வர்க்கத்தின் குணம்; உங்களிடம் இல்லாத குணம்.

பஞ்ச காலத்தில் இருப்பதை பகிர்ந்து உண்ணும் எளிய பண்புதான் இப்போதைய தேவை. உங்களிடம் உபரி செல்வம் இருக்கிறது. அப்படி ‘இருப்பது’ எதுவும் உங்கள் சொந்த உழைப்பினால் மட்டும் விளைந்தது அல்ல. அதில் தொழிலாளிகளின் உழைப்பும், உதிரமும் கலந்திருக்கிறது. அதை பெறுவது தொழிலாளியின் உரிமை. அதை வழங்குவது உங்களின் பெருந்தன்மை அல்ல… கடமை.

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி

விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !

கொரோனா நிவாரண – மக்கள் உதவிக்குழு – விழுப்புரம் !

ணக்கம்,

கொரோனா நோய் தொற்றின் காரணமாக அரசு அமுல் படுத்தியுள்ள ஊரடங்கால் முடங்கிப்போய் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவிக்கின்றனர்.

மத்திய மாநில அரசுகள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அளவில் நிதியும், உணவு பொருட்களும் வழங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைத்து போராடுவது தங்களுக்கு தெரியும். அதே வேளையில் கொரோனா நிவாரண உதவி குழுவின் சார்பில் முடிந்த அளவில் நண்பர்கள், ஆதரவாளர்களிடம் நிவாரண பொருட்களை திரட்டி தமிழகம் முழுவதும் மக்களுக்கு உதவி வருகிறோம். அதன்படி 30.04.2020 அன்று மாலை 5.00 மணியளவில் விழுப்புரம் பகுதியில் 38 – வது வார்டு M. குச்சிபாளையத்தில் உள்ள குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை பொருட்கள் 60 குடுபங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நிவாரண வேலையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு அவரவர் இல்லங்களுக்கே சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கபட்டது. அப்போது அப்பகுதி மக்கள் நாங்கள் நகரத்தை ஒட்டிய பகுதியில் இருந்தாலும் அனைவரும் தினக்கூலிகள் தான் எங்கள் பகுதி மக்கள் எந்த வருமானமும் இன்றி மூன்று வேளை உணவுக்கே வழி இல்லாமல் தவித்து வருகின்றோம். எனவே நாங்கள் நிவாரண பொருட்களை எதிர் நோக்கி காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசும் எங்களுக்கு போதுமான உதவிகளை செய்ய வேண்டும் என எதிர் பார்த்து காத்திருக்கின்றோம் என்று தங்களின் நிலைமைகளை கூறி ஆதங்கப்பட்டனர்.

மேலும் சில பகுதி பொதுமக்கள் எங்களிடம் உதவி கோரியுள்ளனர். அவர்களிடம் வரும் நாட்களில் எங்களால் முடிந்த உதவிகளை தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் பெற்று செய்வதாக கூறியுள்ளோம். எனவே போதுமான உணவு பொருட்கள் இன்றி தவிப்பவர்களுக்கு உதவ தயாராக உள்ளவர்கள் தங்களால் முடிந்த அரிசி, மளிகை பொருட்களையோ, நிதியாகவோ வழங்குமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு;

1.தோழர். மோகன்ராஜ்‌,
மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள்அதிகாரம், விழுப்புரம் ,
போன்: 99949 79490.

2. தோழர். ஞானவேல், அமைப்பாளர்,
புரட்சிகரமாணவர் – இளைஞர்முன்னணி (RSYF), விழுப்புரம்.
போன் : 7358869232

3. தோழர், திலீபன், பொருளாளர்,
புரட்சிகரமாணவர் – இளைஞர்முன்னணி (RSYF), விழுப்புரம்.
போன் : 82203 00906

4. தோழர், ராஜீவ்காந்தி,
மக்கள்அதிகாரம், விக்கிரவாண்டி, வட்டாரம்,
போன் : 96262 76877

தகவல் :
மக்கள்அதிகாரம்,
விழுப்புரம்.

ஜியோ நிறுவனம் செல்பேசி கோபுரங்களை விற்கத் தடை – ஏன் ?

0

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த உட்கட்டமைப்பு நிதி மூலதன நிறுவனமான ப்ரூக்ஃபோர்ஸ் நிறுவனம் செய்யவிருக்கும் ரூ.25,215 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு கடந்த ஒன்பது மாதங்களாக ஒப்புதல் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது.

அம்பானியின் நெருங்கிய நண்பரான மோடி ஆட்சியில் இருக்கும் போது, இப்படி எல்லாம் நடப்பது சாத்தியமா என்ற சந்தேகம் வரலாம். அதுவும் சுமார் 25,000 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மோடி அரசு எப்படி ஒப்புதல் கொடுக்காமல் மறுத்திருக்கும் ?

இது குறித்து தி வயர் இணையதளம் உள்துறை அமைச்சகம் மற்றும் தொலை தொடர்புத்துறையைச் சார்ந்த அதிகாரிகளிடமிருந்து பல்வேறு தகவல்களைத் திரட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ டிஜிட்டல் பைபர் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃப்ராடெல் பிரைவேட் லிமிடெட் (RJIPL) என இரு உட்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனங்களை உருவாக்கியது.
இதில் அலைபேசி கோபுரங்கள் அனைத்தையும் நிர்வகிப்பது RJIPL நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக தற்போது 1,06,000 கோபுரங்கள் இருக்கின்றன. தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 39, 920 கோடி ரூபாயாகும். மேலும் சுமார் 68,000 கோபுரங்கள் கட்டப்படவுள்ளன. அதன் பின்னர் இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 60,600 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் மற்றொரு துணை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட் (RIIHL) எனும் நிதி மூலதன நிறுவனம், டவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ட்ரஸ்ட் (TIT) எனும் உட்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனத்தைத் துவக்குகிறது.

இந்த TIT நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃப்ராடெல் பிரைவேட் லிமிடெட் (RJIPL) நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 51% பங்குகளை வாங்குகிறது. அதாவது தனது துணை நிறுவனத்தைக் கொண்டே மற்றொரு துணை நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குகுறது. இந்த நிறுவனத்திலிருந்து (TIT) தனக்கான கோபுரங்களை வாடகைக்குப் பெற்றுக் கொள்ள 30 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை ஜியோ நிறுவனம் போட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2019, ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கனடாவைச் சேர்ந்த ப்ரூக்ஃபீல்ட் என்ற உட்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது.

படிக்க:
♦ மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !
♦ ரேபிட் கிட் : வெறும் ஊழல் அல்ல மக்களின் உயிரோடு விளையாடும் விளையாட்டு !

இந்த ஒப்பந்தத்தின் படி TIT நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RIIHL) நிறுவனத்தோடு கனடாவின் ப்ரூக்ஃபீல்ட் நிறுவனத்தின் துணைநிறுவனமான BIF IV Jarvis India Pvt. Ltd என்ற நிறுவனமும் பங்குதாரராக இணைந்து கொள்ளும். பங்குச்சந்தை கட்டுப்பாட்டு நிறுவனமான செபி (SEBI), நிறுவனப் போட்டி கட்டுப்பாட்டு நிறுவனமான CIC, மற்றும் உள்துறை அமைச்சகம், தொலைதொடர்பு ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் கிடைத்த பின்னர், TIT நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை BIF IV Jarvis நிறுவனம் ரூ. 25,215 கோடி கொடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கிக் கொள்ளும். இதுதான் அந்த ஒப்பந்தத்தின் சாரம்.

செபி (SEBI) வழிகாட்டுதல்களின்படி தனியார் உட்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து நேரடி முதலீட்டாளர்களோ அல்லது பங்குதாரர்களோ தேவை. அந்த வகையில், ப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் கனடியன் பென்சன் ஃபண்ட், பிரிட்டிஷ் கொலம்பியா இன்வெஸ்ட்மெண்ட் மெனேஜ்மெண்ட் கார்ப்பரேசன், பப்ளிக் இன்வஸ்ட்மெண்ட் ஃபண்ட் ஆஃப் சவுதி அரேபியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜி.ஐ.சி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தனியார் உட்கட்டமைப்பு அறக்கட்டளையில் முதலீடு செய்துள்ளது.

கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் செபி (SEBI) இதற்கான ஒப்புதலை அளித்துவிட்டது. ஜனவரி 2020-ல் CIC-யும் இந்த இணைப்பிற்கான ஒப்புதலை வழங்கிவிட்டது. இறுதியாக தொலைதொடர்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்து நிற்கிறது. இந்த ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் மொத்த தொகையான ரூ. 25,215 கோடி அந்நிய நேரடி முதலீடு இந்தியாவிற்குக் கிடைக்கப் பெறும்.

உட்கட்டமைப்புத் துறையில் ஒரே நிறுவனத்தின் மூலம் வரும் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு இது. அப்படியிருக்கையில் தொலை தொடர்புத்துறையும் உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் வழங்க தயக்கம் காட்டுவது ஏன் ?

ப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் தனது மூலதனத்தைக் கொண்டு வரும் வழிமுறையும், அம்மூலதனத்திற்கான வட்டியாக ஒவ்வொரு ஆண்டும் இந்நாட்டில் இருந்து வெளியேற்றப்படப் போகும் அந்நியச் செலாவணியும்தான் இந்த தயக்கத்துக்குக் காரணம் என்கிறது தி வயர் இணையதளம்.

முதல் விசயம், இந்த முதலீடு சிங்கப்பூர், பெர்முடா போன்ற வரியில்லாச் சொர்க்கங்களின் மூலம் கொண்டு வரப்படுகிறது. சிங்கப்பூரில் மட்டும் மூன்று அடுக்குகளாக கைமாறி இந்த மூலதனம் கொண்டு வரப்படுகிறது. அந்நிய மூலதனம் வரியில்லாச் சொர்க்கங்களின் மூலம் வருவது இந்தியாவில் சட்டப்படியாக செல்லுபடியாகும் என்ற போதிலும், இந்த பணப் பரிவர்த்தனையில், பணம் எங்கிருந்து உள்ளே நுழைகிறது என்பது குறித்து துளியும் வெளிப்படைத் தன்மை இல்லாத காரணத்தால் தொலைதொடர்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கத் தயங்குவதாகத் தெரிவிக்கிறது வயர் இணையதளம்.

மேலும் இந்தியாவிற்குள் இம்மூலதனம் வந்த பின்னர், இந்த நிறுவனத்தின் (TIT) நிர்வாகம் சிங்கப்பூருக்கு மாற்றப்படவிருப்பதால், வழக்குகள் அனைத்தும் சிங்கப்பூர் நீதிமன்றத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

இரண்டாவது விசயம், உள்ளே கொண்டு வரப்படும் மூலதனமான ரூ.25,215 கோடியில் பெரும்பகுதி 15% வட்டிக்குப் பெறப்பட்ட கடனாகக் காட்டப்பட்டு உள்ளே கொண்டு வரப்படுகிறது. இந்தக் கடனுக்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டி இந்தியாவில் இருந்து அந்நியச் செலாவணியாக வெளியேறும். இந்த வட்டி விகிதமும் வரம்புமீறி இருப்பதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடன் மற்றும் வட்டி விகிதம் குறித்து தொலைதொடர்புத்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், நிர்வாக அமைச்சக அதிகாரிகளும் தயக்கம் காட்டியுள்ளனர். நிதியமைச்சகத்தின் ஒரு பிரிவாகிய வெளி வர்த்தகக் கடன் குழுவால் இந்தக் கடன் விவகாரம் பரிசீலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிர்வாக அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

தொலை தொடர்புத்துறை மற்றும் நிர்வாகத்துறை அமைச்சகம் ஆகியவை முன்வைத்த விவகாரங்களை உள்துறை அமைச்சகமும் சுட்டிக் காட்டியுள்ளது. அதன் பின்னரே ரிலையன்ஸ் நிர்வாகம் இந்த வட்டிவிகிதத்தை 15%-லிருந்து 9%-மாக குறைத்து தனது முன்மொழிதலை வைத்துள்ளது என்கிறது தி வயர் இணையதளம்.
அந்நிய நேரடி முதலீடு எனும் பெயரில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் வரியில்லாச் சொர்க்கங்களின் மூலம் பணப் பரிமாற்றம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? ப்ரூக்ஃபோர்ஸ் நிறுவனம் செய்யப் போகும் முதலீட்டிற்கான கடனுக்கான வட்டியாக 15%-ஐ முதலில் தெரிவித்துவிட்டு, பின்னர் 9%-மாக மாற்றியதன் பின்னனி என்ன ?
இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் கேட்டுள்ளது தி வயர் இணையதளம். ஆனால் அதற்கும் அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

எது எப்படி இருந்தாலும், விரைவில் அதிகாரிகளோ, சட்ட வரம்புகளோ மாற்றப்பட்டு அந்த அந்நிய முதலீடு உள்ளே வந்துவிடும் என்பது உறுதிதான். ஆனால் இது போன்ற சிறிதளவு கேள்விகளும், கட்டுப்பாடுகளும் கூட இருக்கக்கூடாது என்பதுதான் அம்பானிகளின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது. ‘ஆப் கி பார்’ மோடி சர்க்கார் அதனையும் நிறைவேற்றும்.


நந்தன்

நன்றி :  எக்கனாமிக் டைம்ஸ்,  த வயர். 

கொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை

0

மார்ச் – 24 ஊரடங்கிற்குப் பிறகு இந்தியாவெங்கிலும் சாலைகளில் சாரைசாரையாக இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பி சென்றனர். பிரிவினைக்குப் பிறகு நாடு முழுதும் நடக்கும் நீண்ட பயணமிது. தொடர்ந்து சில பத்தாண்டுகளாக இந்தியாவின் விவசாய கிராமங்கள் வெறிச்சோடி வருகின்றன. இந்திய அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கையே இதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தாலும் மக்கள் சொல்லும் ஒரே காரணம் – கிராமத்தை விட நகரங்களில் கூலி அதிகம். தாயாராம் வாழும் மத்தியப்பிரதேசத்தின் பண்டல்காந்த் பகுதியும் இதற்கு விதிவிலக்கல்ல.

தயாராமும் அவரைப்ர போன்ற சமூகத்தின் கீழ்மட்டத்தில் வாழும் மக்களுக்கும் நம்பிக்கை என்று ஏதாவது இருக்க முடியுமா? தாயாராம் போன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தாம் இந்திய நகரங்களின் முதுகெலும்பாக உள்ளனர். ஒரு பகுதியினர் பெரும் நகரங்களையும் அவற்றை இணைக்கும் சாலைகளையும் மேம்பாலங்களையும் கட்டியெழுப்புகிறார்கள். இன்னொரு பகுதியினர் கழிப்பறைகளை தூய்மை செய்கின்றார்கள், வாடகை மகிழுந்து ஓட்டுகிறார்கள். இவர்கள் அனைவரும் தினக்கூலிகள். ஆண்டுதோறும் சுமார் 228,840‬ கோடி இந்திய ரூபாயை தத்தமது கிராமங்களுக்கு எடுத்து சென்று குற்றுயிராய் கிடக்கும் கிராம பொருளாதாரத்திற்கு பேருதவி செய்கின்றனர்.

ஊரடங்கு, மறு ஊரடங்கு அப்புறம் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என்று உலகின் மிகப்பெரிய ஊரடங்கு சோதனைக்களமாக கைதட்டியும், தட்டாலடித்தும், விளக்கேற்றியும் ஒரு சாரார் கொண்டாடிக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஆலைகளிலும் சாலைகளிலும் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு அகதிகள் தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்வதற்கான ஒரு நீண்ட பயணத்தை தொடங்கினார்கள்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கின் போது புலம் பெயர் தொழிலாளர்களான குஷ்வாஹா (Kushwaha)குடும்பத்தின் நண்பர்களும் உறவினர்களும் தங்கள் கிராமங்களுக்கு திரும்ப புது தில்லியில் ஒரு சாலையில் நடந்து செல்கின்றனர்.

குடும்பத்திற்கு உணவளிக்கவோ அல்லது வாடகை செலுத்தவோ வழியில்லாத நிலையில் தனது 5 வயது மகன் சிவத்தை தோள்களில் ஏற்றிக்கொண்டு 500 கி.மீ (300 மைல்) தொலைவில் உள்ள சொந்த கிராமத்திற்கு தாயாராம் நடக்க தொடங்கினார். வேலை செய்யும் போது இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பது மிகவும் கடினம் என்பதால் வயதான உறவினர்களுடன் கிராமத்தில் விட்டுச் செல்லப்பட்ட தனது மற்றொரு ஏழு வயது மகன் மங்கலைப் பற்றிய நினைவுடன் இருப்பதாக அவர் கூறினார். அவனுடன் இருப்பது தொற்றுநோய்க்கு நடுவில் குறைந்தபட்சம் ஒரு ஆறுதலை கொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ளா ஜுகாய் கிராமத்தில் தாயாராம் கோதுமையை அறுவடை செய்கிறார். அவரது வீட்டின் இருட்டான ஒரு அறையில் தானியங்கள் மற்றும் உடைகள் சாக்குகளால் நிரப்பப்பட்டிருக்கின்றன. ஒரு சட்டமில்லா சுவரொட்டி சுவரில் தொங்குகிறது. ஒரு ஏரியின் மீது சிவப்பு கூரை கொண்ட வீட்டை சித்தரிக்கின்ற அந்த படத்தில் பனி மூடிய மலைகளுக்கு பின்னால் சூரியன் மறைகிறது. ”சின்னஞ்சிறிய கிராமங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்திற்கு கடிகாரத்தைத் திருப்ப நான் விரும்புகிறேன்” என்று அது கூறுகிறது.

படிக்க:
♦ ரேபிட் கிட் : வெறும் ஊழல் அல்ல மக்களின் உயிரோடு விளையாடும் விளையாட்டு !
♦ “ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு !

தயாராம் மற்றும் அவரது மனைவி கயன்வதி ஆகியோர் கோதுமை அறுவடைக்கு இடையில் ஓய்வு எடுக்கும் நேரத்தில் தங்கள் மகன்கள் மங்கல் மற்றும் சிவம் ஆகியோருடன் விளையாடுகிறார்கள். ”நான் டெல்லியை நேசிக்கிறேன் என்பதல்ல. பிழைப்பதற்கு எனக்கு பணம் தேவை. எங்களிடம் அது இருந்திருந்தால் நாங்கள் இங்கே தங்கியிருப்போம். இது தான் எங்களது வீடு” என்று கூறினார்.

மங்கல் பிறந்த பிறகு, அவனைப் பார்த்துக் கொள்ள ஜுகாயிலேயே கயன்வதி தங்கியிருந்தார். அவன் மட்டும் இருந்தபோது அவனையும் புதுதில்லிக்கு அழைத்து வந்தார். ஆனால் சிவம் பிறந்த பிறகு, ஒரு முடிவெடுக்க வேண்டியிருந்தது: மங்கலையும் அழைத்துச் செல்வதா அல்லது கிராமத்திலேயே அவனை விட்டு விடுவதா. ”வேலையின் போது ஒரு குழந்தையை சுமப்பது எளிது. ஆனால் இருவரை சுமப்பது மிகவும் கடினம். எனவே நாங்கள் அவனை விட்டு வெளியேற வேண்டியிருந்தது” என்று கயன்வதி கூறினார். ‘

தயாராம் தன்னுடைய விதியைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார். அவரது திருமணம், புதுடெல்லிக்கு அவர் சென்றது, வீட்டிற்கு திரும்பிச் செல்வது – எதுவும் விட முடியாத கட்டாயத்தேவைகள். தயாராமின் அத்தை அவருடைய திருமணத்தை நடத்தி வைத்தார். அவரும் கியான்வதியும் தொன்றுத்தொட்டு இந்திய சமூக ஏணிப்படியில் கீழ்மட்டத்திலிருக்கும் பாரம்பரியமாக உழவுத்தொழிலில் ஈடுபட்ட குஷ்வாஹா சாதியைச் சேர்ந்தவர்கள். தங்கள் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் முதன்முதலாக சந்தித்தனர். ”அவர் பொருத்தமாக தான் இருந்தார்” என்று தாயாராம் தனது மனைவியுடனான சந்திப்பை நினைவு கூர்ந்த போது அவரது முகத்தை ஒரு புன்னகை சுருக்கமாக கடந்தது. ”ஆனால் என் தலைவிதியில் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் சரிதான்” என்று கூறினார்.

தயாராம் குஷ்வா மற்றும் கியான்வதியின் இரண்டு அறைகள் கொண்ட கான்கிரீட் வீடு. நான்கு நாட்கள் தொடர்ச்சியான நடைப்பயணம் மற்றும் சரக்குந்துகள் பயணத்திற்கு பிறகு 2,000 மக்கள் வாழும் விவசாய கிராமமான ஜுகாயில் (Jugyai) உள்ள தங்கள் வீட்டை அவர்கள் சென்றடைந்தனர்.

புதுதில்லியில் இருந்து வீடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளி பிரமோத் குஷ்வாஹா மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தன்னுடைய சுராரி (Churari) கிராமத்தில் உள்ளார்.

நாடு தழுவிய ஊரடங்கின் போது வெறிச்சோடிய ஜுகாய் கிராமத்தின் தெரு வழியாக பெண்கள் நடந்து செல்கின்றனர். இந்த ஊரடங்கு தனது குழந்தைகளின் கல்விக்கான எல்லா நம்பிக்கையையும் குழி தோண்டி புதைத்துவிடும் என்று தயாராம் கவலைப்படுகிறார். ”எந்த பெற்றோரும் தங்கள் குழந்தை ஒரு வேலையாளாக பணிப்புரிய விரும்புவதில்லை. ஆனால் வேறு வழியில்லை. நான் செய்வதை தான் அவர்கள் செய்ய வேண்டியிருக்கும்” என்று அவர் கவலையுடன் கூறினார்.

தயாராமின் பெற்றோர்கள்: இடப்புறத்தில் கேஸ்ரா மற்றும் வலப்புறத்தில் தாகூர் தாஸ். இருவரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். வழக்கமாக வீட்டில் இருப்பவர்களின் செலவிற்கு அனுப்பிய பணத்திற்கு பதிலாக வெறுங்கையுடன் தனது கிராமத்திற்கு வந்தவுடன் என்ன நடக்கும் என்பது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று முயற்ச்சி செய்ததாக அவர் கூறினார். குறைந்தது அவருக்கு ஒரு வீடாவது இருக்கிறது என்றார் அவர்.


தமிழாக்கம்: -சுகுமார்
நன்றி: அல்ஜசீரா

 

ரேபிட் கிட் : வெறும் ஊழல் அல்ல மக்களின் உயிரோடு விளையாடும் விளையாட்டு !

PP Letter head

பத்திரிக்கை செய்தி

29.04.2020

கொரோனாவை விடக் கொடியவை மத்திய மாநில அரசுகள் என்பதை அன்றாடம் மக்கள் உணர்ந்து வருகின்றனர். இழவு வீட்டில் கூட களவாடும் கேவலத்திற்கு மத்திய அரசின் மருத்துவ ஆய்வு நிறுவனம் உதவி செய்திருக்கிறது. கொரோனா அச்சத்திலும் வாழ்வாதார நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கும் நிலையில், மக்கள் வரிப்பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுத்து கீழ்த்தரமான ஊழலில் ஈடுபட்டிருக்கிறது இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் விரிவான சோதனைகளை வேகமாக மேற்கொண்டு வரும் வேளையில், விரைவு சோதனை கிட் வாங்குவதில் ஊழல் செய்து வாங்கிய கிட்டையும் பயன்படுத்த முடியாமல் முடக்கி வைத்துள்ளது. விரைவு சோதனை கிட் என்பது சமூகத்தில் மக்களிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அளவிடும் கருவிதான், இது ஆய்வுக்கான கருவியே தவிர கொரோனா தொற்றைக் கண்டறியும் கருவியல்ல என்பதை கடந்த மார்ச் மாதமே உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தி விட்டது. ஆயினும் மத்திய அரசும், தமிழக அரசும் விரைவு சோதனைக் கருவி இதோ வருகிறது, அரை மணி நேரத்தில் முடிவு தெரியும் என்றே ஏமாற்றி வந்தன. இப்போது அவற்றை வாங்கியதில் ஊழல் அம்பலமாகி உள்ளது.

இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனமும், புனேயிலுள்ள தேசிய தீநுண்மி ஆய்வகமும் சீனாவிலிருந்து வந்த மாதிரிகளை கள ஆய்வு செய்து தரத்தை உறுதிப்படுத்திய பின்னரே 5 லட்சம் கிட்டுகள் வாங்க அய்.சி.எம்.ஆர் அனுமதியளித்துள்ளது. இதில் ஊழல் மட்டுமல்லாது வேறு சில பிரச்சனைகளும் இருப்பது உறுதியாகிறது. சீனாவிலிருந்து இறக்குமதியான விரைவு கிட்டுகளின் சோதனை முடிவுகள் 5% மட்டுமே சரியாக இருக்கின்றன என ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையிலும், இறக்குமதியாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இவ்வூழல் இப்போது அம்பலமாகியுள்ளது.

சீனாவின் வெண்ட்போ நிறுவனத்தின் இந்திய இறக்குமதி நிறுவனமான மேட்ரிக்ஸ் லேப் ஒரு கிட் ரூ 245/- என்ற விலையில்(போக்குவரத்து உட்பட) இறக்குமதி செய்து ரூ 145/- லாபம் வைத்து ரூ 400/- என்ற விலையில் ரேர் மெட்டாபாலிக் நிறுவனத்திற்கு விற்றது. இதன் மீது ரூ 200/- லாபம் வைத்து ஒரு கிட் ரூ 600/- என்ற விலையில் அய்.எம்.சி.ஆருக்கு ரேர் மெட்டபாலிக் நிறுவனம் விற்றுள்ளது. அதாவது ரூ 245/- க்கு வாங்கப்பட்ட கிட் இரண்டு இடைத்தரகர்கள் கை மாறி ரூ 600/-க்கு மக்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு என்ன பங்கு என்பது யாருக்கும் தெரியாது. பங்கு இல்லாமல் இருக்காது என்பது மட்டும் உறுதியாகத் தெரியும். சந்தடிசாக்கில் எடப்பாடி அரசு ஷான் பயோடேக் என்ற நிருவனம் மூலம் இறக்குமதியாளர் மேட்ரிஸ் லேப் இடம் நேரடியாக வாங்கி கணிசமாக சுருட்டியுள்ளது.

விநியோகஸ்தரான ரேர் மெட்டபாலிக் நிறுவனத்திற்கும் இறக்குமதியாளரான மேட்ரிக்ஸ் லேப் நிறுவனத்திற்கும் இடையிலான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கிட்டின் விலை ரூ 400/- என சமரசம் செய்து வைத்துள்ளது. இது குறித்து அய்.எம்.சி.ஆரும், மத்திய சுகாதாரத் துறையும் கொடுக்கும் விளக்கங்கள் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அரசே துணை போனதை உறுதிப்படுத்துகின்றன.

படிக்க:
♦ மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !
♦ இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் – கொரோனா பரிசோதனை கருவிகள் 145% இலாபத்திற்கு விற்பனை !

நமது கேள்விகள்:

  • மத்திய அரசின் வர்த்தக நிறுவனம் (State Trading Corporation) இருக்கும் இருக்கும்போது தனியார் நிறுவனத்தை நாடியது ஏன்?
  • 100% முன்பணம், காலக்கெடு உத்தரவாதம், டாலர் விலை காரணமாக ஏற்ற இறக்கம் குறித்து விதி இல்லாதது ஆகிய காரணங்களால் தான் நேரடியாக இறக்குமதி செய்வதைக் கைவிட்டதாக அய்.எம்.சி.ஆர் கூறுகிறது. அப்படியானால் இந்த உத்தரவாதங்களை தனியார் நிறுவனம் எப்படிப் பெற்றது? இந்திய அரசுக்கு உத்திரவாதம் கொடுக்க மறுத்த வெண்ட்போ நிறுவனம் அந்த உத்தரவாதத்தை தனியாருக்குக் கொடுத்த போது அரசு ஏன் கேள்விக்குள்ளாக்கவில்லை?
  • ரூ.600க்கும் குறைவாக விலைப்புள்ளி கொடுத்த கேட் இன் பயோ டெக் நிருவனத்தை காரணமின்றி நிராகரித்ததேன்?
  • கிட்டின் தரம் பற்றி மாநிலங்கள் புகார் கூறியும் அது குறித்து அய்.எம்.சி.ஆர் கருத்து தெரிவிக்காதது ஏன்?
  • தகுதியான மருத்துவ நுட்புநர்கள்தான் விரைவு சோதனை கிட்டை கையாண்டார்களா என சீனா எழுப்பும் கேள்விக்கு என்ன பதில்?
  • தனது கிட்டின் தரத்திலும், செயல்பாட்டிலும் எந்தக் குறையுமில்லை; இந்தியாவில் கையாண்ட விதம், சரியாகப் பாதுகாக்காதது ஆகிய காரணமாக இருக்கலாம். எந்த விசாரணைக்கும் தயார் என்ற வெண்ட்போ நிறுவனத்தின் அறிக்கை, அதை உறுதிப்படுத்தும் சீனத்தூதரின் கருத்து இவை குறித்து அய்.எம்.சி.ஆர் மத்திய சுகாதாரத்துறை ஏன் கருத்து கூறவில்லை? மீண்டும் புதிய கொள்முதலை சீனாவிடமே மேற்கொள்வதேன்?
  • விரைவு சோதனை கிட் தயாரிப்பு ராக்கெட் விஞ்ஞானமல்ல. உள்நாட்டில் தயாரிக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை?
  • ரேர் மெட்டபாலிக் பெரிதும் அறியப்பட்ட நிறுவனமல்ல. அதன் உரிமையாளர் கிருபா சங்கர் குப்தா, மேட்ரிக்ஸ் லேப் நிறுவனம் ஆகியோரின் அரசியல் தொடர்பு என்ன?

மேற்கண்டவற்றை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரக்கூடும். தடுப்பில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு உணவு கூட கொடுப்பதிலும் படுதோல்வி அடைந்து நிற்கின்றன மத்திய மாநில அரசுகள். நிராதரவாக நிற்கும் மக்களை மேலும் மேலும் வீட்டுக்குள் முடக்கி பட்டினியில் தள்ளிக் கொல்கின்றன மத்திய மாநில அரசுகள். மேக் இன் இந்தியா (உள்நாட்டில் தயாரிப்போம்) என்று சவடால் வசனம் பேசிய மோடி அரசு சாதாரண மருத்துவ சாதனங்களைக் கூட உற்பத்தி செய்ய முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியவுடன் தடையை நீக்கி மருந்தை அனுப்பிய மோடி அரசு உள்நாட்டு மக்களையும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களையும் கொரோனாவிலிருந்து காக்க எந்த வேகமும் காட்டாமல் தற்புகழ்ச்சியிலும், சுய திருப்தியிலும் காலம் கடத்துகிறது.

நடைபெற்றிருப்பது வெறும் ஊழல் மட்டுமல்ல; மக்கள் உயிரோடு விளையாடும் குற்றமுறு அலட்சியம். விரைவு சோதனை கிட்டை மாநிலங்களுக்கு அனுப்பிவிட்டு பத்து நாட்களுக்குப்பிறகே கிட்டை பயன்படுத்தும் வழிமுறைகளை ஐ சி எம் ஆர் அனுப்பியுள்ளது.

மக்களுக்கு தேவையான உணவு உடை இருப்பிடம் மருத்துவம் என அனைத்தையும் வழங்கவேண்டிய அரசே இன்று மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிப்போயிருப்பதையே இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

மருத்துவத்துறை மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பே
தோற்றுப்போய் திவாலாகிப் போயிருக்கிறது. கொரோனாவின் தாக்குதல் ஒரு கட்டத்தில் நிச்சயம் நிற்கும். ஆனால் இந்த அரசின் தாக்குதல் நிற்கப்போவதில்லை. நமக்குப் போராடுவதைத்தவிர வேறு வழியேயில்லை.

தங்கள்

தோழர் காளியப்பன்
மாநில பொருளாளர்
மக்கள் அதிகாரம்
தமிழகம் மற்றும் புதுவை

மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !

மே நாளில் சூளுரைப்போம்!
மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானாபொருளாதார நெருக்கடி!
தோற்றது முதலாளித்துவம்! மாற்று சோசலிசமே!

 அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

கொரானா வைரஸ் தாக்குதலால் இன்று உலகமே உறைந்து கிடக்கிறது. 184 -க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை வைரஸ் தொற்றியுள்ளது. இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டிவிட்டது. பொருளாதர நெருக்கடி கொள்ளைநோய் கொரானாவைவிட பல மடங்கு அச்சுறுத்திக் கொண்டுள்ளது.

நாட்டின் மருத்துவத்துறையில் சுமார் 80% தனியார்மயம். அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. விரிவான பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கான மையங்கள் இல்லை. மருத்துவப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள், வசதிகள் இல்லை.

ஊரடங்கில் உள்ள மகக்ளுக்கு உரிய நிவாரணமும் வழங்கவில்லை. இந்திய உணவுக்கிடங்கில் 8 கோடி டன் உணவுப் பொருட்கள் நிரம்பி வழிந்த போதும், மத்திய மாநில அரசுகளோ 20 கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், பருப்பு, 1000 ரூபாய் நிவாரணம் என உழைக்கும் மக்களை பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகின்றன. பெருவாரியான உழைக்கும் மக்கள் நோய் அச்சத்தாலும், உணவின்றியும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடைப்பிணமாக வாழ்கிறார்கள்.

கொரானாவை கட்டுப்படுத்துவதை விட ஊரடங்கை பயன்படுத்தி மக்கள் உரிமையை மறுப்பதிலும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதிலும்தான் தீவிரம் காட்டி வருகிறது மோடி அரசு. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை உரிமையை பறித்து 12 மணி நேரமாகவும், 44 தொழிலாளர்நல சட்டங்களை வெட்டிச்சுருக்கி நான்கு தொகுப்புகளாக மாற்றவும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வேலையின்மையும், ஏற்றத்தாழ்வும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 70 சதவீத (95 கோடி) மக்களின் சொத்து மதிப்பைவிட நான்கு மடங்கு அதிகமாக ஒரு சதவீத பணக்காரர்களிடம் சொத்து குவிந்துள்ளது என்கிறது சமீபத்தில் வெளிவந்த ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. வேலையற்றவர்கள், வாங்கும் சக்தியற்றவர்கள்  ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் அம்பானி – அதானிகளின் எண்ணம். இப்போது கொள்ளை நோய் கொரானாவும் இவர்களுக்கு துணை சேர்ந்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி – பட்டினிச்சாவையும் கொரானா கணக்கில் எழுதி விடுவார்கள். தோற்று, திவாலாகிப் போனதுடன் மக்களுக்கு எதிரானதாகவே மாறிப் போயுள்ள இந்த அரசுக் கட்டமைப்பில் மக்களின் எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்பது கொரானாவிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நம் நாடு மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே கொரானாவை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்டங்கண்டு போயுள்ளன. அமெரிக்காவில் கொரானா மரணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது. இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி போன்ற முதலாளித்துவ நாடுகளில் நடக்கும் மரணங்களை கண்டு அந்நாட்டு அரசுகளெல்லாம் அலறுகின்றன. “எங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் இருக்கிறோம்’’ என்று இத்தாலி பிரதமர் வெளிப்படையாக சொல்லி கண்ணீர் விட்டு அழுது கொண்டே பேட்டி அளிக்கிறார். காரணம், இத்தாலியில் மருத்துவத்துறையில் 85 சதவீதம் தனியார் கையில் உள்ளது. அங்கு மட்டுமல்ல, பிரிட்டன்,  ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இதுதான் நிலை.

அரசாங்கம் எல்லா விசயங்களிலும் தலையிடக்கூடாது; சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வியை பளிச்சென்று காட்டியுள்ளது கொரானா. பொதுசுகாதாரம், மருத்துவம், பொதுக்கல்வி, பொது விநியோகம் போன்றவைகளை எல்லாம் மக்களுக்கு கொடுப்பது அரசுகளின் வேலை இல்லை. அதை தனியார்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவால் முதலாளித்துவ நாடுகளில் மக்கள் சேவைகள் அனைத்தும் தனியார் கையில் உள்ளது. இதனால் தான் தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியாமல் முதலாளித்துவ அரசுகள் தோல்வியடைந்துள்ளன.

கொரானா வைரஸ் தாக்குதல் குறித்து உலக சுகாதார நிறுவனமும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த போதும் பல முதலாளித்துவ நாடுகள் அதை அலட்சியம் செய்தன. ஊரடங்கை அறிவித்த பின்பும் பொருளாதார நெருக்கடியைக் காட்டி பெரிய பெரிய வணிக நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், மதுபான கடைகள், பல தொழிற்சாலைகளை இயங்க அனுமதித்தன. இதன் விளைவாக வைரஸ் தொற்று வேகம் அதிகரித்தது.

ஆனால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ கட்டமைப்பு அந்நாட்டு அரசுகளிடம் இல்லை. வெண்டிடேட்டர், மாஸ்க், பாதுகாப்பு உடைகள் போன்ற அடிப்படையான மருத்துவ உபகரணங்கள் கூட இல்லை. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் சாகிறார்கள். அவர்களை புதைக்கக்கூட இடுகாட்டில் இடமில்லை. இத்தாலியின் வீதிகள் எங்கும் பிணங்கள்,  யாரும் எடுத்து அடக்கம் செய்யவும் முன் வருவதில்லை.

படிக்க:
மே – 1 தொழிலாளர் தினத்தில் இணையவழி பொதுக்கூட்டம் !
♦ “ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு !

முதலாளித்துவ நாடுகளில் மருத்துவச் செலவு அதிகம் என்பதால் கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு மருத்துவம் பார்ப்பதில்லை. குறிப்பாக, 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டாம் என இத்தாலியும், பிரான்சும் கைவிடுகின்றன. அமெரிக்காவில் ஏழை கருப்பின மக்கள் தான் அதிகம் சாகிறார்கள் என்பதில் இருந்தே ஏழைகளில் நிலையை புரிந்து கொள்ளலாம்.

உலக  முதலாளித்துவ கட்டமைப்பில் எந்த ஒரு தயாரிப்புகளும் கண்டுபிடிப்புகளும் சந்தையின் தேவையைப் பொறுத்தே முக்கியத்துவம் பெறுகின்றன. புதிய தாராளவாதக் கொள்கை நமது அனைத்து தேவைகளையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து விட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நோய் தடுப்பு மருந்து தயாரிப்பதை விட அதிக லாபம் கொண்ட அழகு சாதன பொருட்களை தயாரிப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றன. பெரிய வல்லரசு என பீற்றிக் கொண்ட நாடுகளுக்கு சொந்த நாட்டு மக்களை தொற்றுநோயில் இருந்து காக்க வழியுமில்லை; சோறு போடவும் வக்கில்லை. முதலாளித்துவத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்து கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கி அழுகி நாறிக்கொண்டுள்ளதை கொரானா வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

உலகளவில் சீனா போன்ற முன்னாள் சோசலிச நாடும் மற்றும் கியூபா போன்ற மக்கள் நல அரசுகளும் மட்டுமே கொரானாவை கட்டுப்படுத்துவதில் முன்நிற்கின்றன. இதற்கு காரணம் அந்நாட்டு புரட்சிகளின் போது ஏற்படுத்தப்பட்டிருந்த சோசலிச கட்டமைப்பு. உலகையே  ஆண்ட பிரிட்டன் தனது நாட்டு மக்கள் 600 பேரை காக்கும்படி கியூபாவிடம் கைகூப்பி  உதவி கோரியது. கியூபாவும், தென்கொரியாவும் மருத்துவர்களை பிறநாட்டு மக்களைக் காப்பற்ற அனுப்பிக் கொண்டுள்ளன. கொரானா நோயை கண்டறிந்தவுடன் 10 நாட்களில் 1200 படுக்கை வசதி கொண்ட இரண்டு மருத்துவமனையை கட்டி முடித்து கொரானாவைக் கட்டுப்படுத்தியது சீனா.

இன்னொரு பக்கம், தனிவுடைமை எனும் முதலாளித்துவக் கொள்கையை சொர்க்கம் என பீற்றி வந்த  ஸ்பெயினும், அயர்லாந்தும் இப்போது தனியார் மருத்துவமனைகளை அரசுடைமையாக்கியுள்ளன. 1990 களின் தொடக்கத்தில் புதிய தாராளவாத உலகத்தை முன்னறிவித்த மார்க்கரெட் தாட்சரின் பிரிட்டனில் தனிமையில் வாடும் 15 லட்சம் முதியவர்களைப் பராமரிக்க 5 லட்சம் இளைஞர்கள் தன்னார்வலர்களாக முன் வந்திருக்கிறார்கள். தேசிய மருத்துவ சேவையில் தொண்டர்களாகப் பணியாற்ற 7.5 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்திருக்கின்றனர். மக்களின் தேவைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் பொருட்டு 4300 வட்டார உதவிக்குழுக்களை அந்நாட்டு மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் தோல்விக்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?

தொற்றுநோய் அபாயங்களில் இருந்தும், பொருளாதார நெருக்கடியில் இருந்தும் மனிதகுலத்தைக் காக்க முதலாளித்துவ சந்தைக்கான உற்பத்தி, அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பதை சமூகத்தின் தேவைக்கானதான மாற்றியமைக்க வேண்டும். அதற்கு தோற்றுப்போன முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, சோசலிசத்தை படைக்க வேண்டும். நம் நாட்டில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சியை  நடத்தி முடிக்க மே நாளில் சூளுரைப்போம்!

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு.