Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 282

டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !

மிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் போராட்டங்கள் நடைப்பெற்றன. ராணிப்பேட்டை அவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடையின்முன் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தோழர் மோகன் மற்றும் அவரின் தந்தையான தோழர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அரக்கோணம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். ஐந்து நட்கள் கழித்து வெளிவந்துள்ளனர். அவர்களோடு ஒரு உரையாடல்….

என் பேரு மோகன் விவசாயக்கூலியாக வேலை செய்யறேன். மாசம் 8000 ருவா வரும் அத வச்சுக்கிடுதான் குடும்பத்தை ஓட்டுரேன். வீட்டுக்கு தேவைங்குற பொருளெல்லாம் வாங்கிப்போடுவேன். அதால இந்தக்காசு போதும். ஆடம்பரமா செலவு பண்றதில்ல. போதும் இதுவே.

அன்னைக்கு என்ன நடந்துச்சு சொல்லுங்க?

ஏழாம் தேதி காலைல வீட்டுக்கு 8 மணிக்கு போலீஸ் வந்துருச்சு. இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியும் வந்தாரு 2 ஜீப் 6 போலீசுக்காரங்க இருந்தாங்க. ஏரியாவயை விட்டு இன்ஸ்பெக்டர் என்னை வெளியே அழைச்சுக்கிட்டு வந்து பேசினாரு. அப்போ மற்ற போலீஸ் எல்லாம் “ஓ மோகனா….” எனக்கு தெரியுமே சொன்னாங்க.

எத்தனை மணிக்கு போராட்டம் பண்ணப் போறீங்கன்னு மேல இருந்து கேக்குறாங்கன்னு இன்ஸ்பெக்டர் கேட்டாரு. நான், பத்து மணிக்கு வந்து முழக்கம் போட போறேன்னு சொன்னேன்.

எத்தனை பேர் வருவீங்கன்னு கேட்டாரு. நாங்க மூணு பேரும்னு சொல்லி அப்பாவையும் அண்ணனையும் காட்டுனேன். அவங்க யாருன்னு கேட்டாரு. அவங்க மக்கள் அதிகாகரம் உறுப்பினர்னேன்.

திமுக எல்லாம் வீட்ல தானே பண்றாங்க நீங்களும் அப்படியே பண்ணலாம் இல்ல அப்படின்னு கேட்டாரு.

அது அவங்க கொள்கை பிரச்சனை. நான் என்ன பண்ண முடியும் அவங்ககிட்ட கேளுங்க. மக்கள் பார்வையில முழக்கம்போட்டாத்தான் தான் மக்களுக்கு தெரியும் சொன்னேன். அப்புறம் என் வீட்டுக்கு வெளியே போலீச நிறுத்திட்டு அவர் போய்ட்டாரு.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தொடர்ச்சியா பல இடங்கள்ல இருந்தும் போன். எப்போ வரீங்க எப்போ வரீங்கன்னு. பத்துமணிக்கு நான், அப்பா வெங்கடேசன், அண்ணன் எழில் மூணு பேரும் போனோம். எழில் போட்டோ எடுத்தார். நானும் அப்பாவும் கொஞ்சநேரம் முழக்கம் போட்டோம். போலீசு வந்து சுத்தி சுத்தி ரெண்டு பேரையும் போட்டோ எடுத்தாங்க.
அப்போ ஒரு போலீசுகாரர் வந்து நீ என்ன ஜாதின்னு அப்பாவை பார்த்து கேட்டாரு, எதுக்கு கேக்குறீங்க , அதெல்லாம் சொல்ல முடியாது -ன்னு சொன்னேன். உளவுத்துறை போலீசு வந்து அது மோகனோட அப்பா என்று சொன்னார்.

மேல இருந்து எந்த உத்தரவும் வரவில்லைன்னு சொல்லி வண்டியில் கூட்டிக்க்கிட்டு போய். அவலூர் காவல்நிலையத்தில் உட்கார வைத்தார்கள். மாலை வரைக்கும் ஆனது. என்ன செய்ய போறீங்கன்னு லட்சுமி இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன். எனக்கு மேலிடத்து உத்தரவு வரவில்லை என்று சொன்னார்.

அப்புறம் கூப்பிட்டு ரிமாண்ட் செய்யப்போறோம்னாரு. தமிழ்நாடு முழுக்க போராடுன எல்லோரையும் விடுதலை செஞ்சுட்டாங்க. எங்கள விட வேண்டியதுதானே என கேட்டேன். நீ உன்னோட கொள்கையில உறுதியா இருக்கும் போது நான் என் டியூட்டியில உறுதியா இருக்க வேண்டாமா , மேலிடத்து உத்தரவு நான் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சொன்னாரு.

போலீசுகாரர் ஒருவர் மீண்டும் நீ என்ன ஜாதி என்று கேட்டார். எனக்கு ஜாதின்னா என்னன்னு தெரியாது என்று சொன்னேன் . அவர் உன் ஜாதி ஜாதி என்னன்னு தெரியும் என்று கூறினார்.

படிக்க:
டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
♦ மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !

நான் சாதி இல்லாத அமைப்பு என்னால் எதுவும் சொல்ல முடியாது. உனக்கு தெரிஞ்ச நீ வைச்சுக்கோங்க என்ன ஏன் கேக்குறீங்க அப்படீன்னு சொன்னேன்.

வாலாஜா கோர்ட்டுக்கு கூட்டிட்டுபோனாங்க. மேஜிஸ்ட்ரேட் அம்மா வந்தாங்க. என்ன விஷயம்னு கேட்டாங்க. நான் கொரோனா பிரச்சனையில ஆயிரக்கணக்கான ஜனம் திண்டாடிக்கிட்டு இருக்கு. அந்த நேரத்தில் டாஸ்மாக் கடை தொறந்தது தப்புன்னு நாங்க ரெண்டு பேரும் முழக்கம்போட்டோம்னு சொன்னேன். எங்கள உடனே ஜாமீன்ல விடுங்க நீங்க சொல்லும் போது ஆஜராக தயார்ன்னு சொன்னோம். தோழர்கள் தயாரித்துக் கொடுத்த மனுவை கொடுத்தேன். நீங்கள் வெயிட் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். இன்ஸ்பெக்டரை கூப்பிட்டுட்டு என்ன பேசினாங்கன்னு தெரியல.

கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிட்ட மாஜிஸ்திரேட் 21ஆம் தேதி வரை ரிமாண்ட் என்று சொன்னாங்க.

ஜெயில்ல ஒரு பிரச்சினையுமில்லை. அப்பாவும் பையனும் டாஸ்மாக் போராட்ட கேஸ்ல வந்ததா சொன்ன வுடனே நல்ல மரியாதை. நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க நாங்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்கறோம்னாங்க.

சிறை அனுபவம் எப்படி இருந்தது? தோழர் வெங்கடேசனிடம் கேட்டேன்.

அமைப்பு போராட்டம்னு இதுவரைக்கும் பத்து முறை ஜெயிலுக்கு போயிருக்கேன் ஒண்ணும் பெருசா பிரச்சினையில்லை. தன்னோட கழனியில குடிச்சுட்டு சண்டை போட்டவங்களை விலக்கி விட்டதுக்காக ஜெயிலுக்கு வந்தவங்க. கள்ளச்சாராயம் குடிக்கப்போய் 30 லிட்டர் சாராயம் காய்ச்சுனதா உள்ள வந்தவங்க, லாரி லாரிய மணல் அடிச்சவனை விட்டுட்டு மாட்டு வண்டியில மணல் எடுத்ததுக்கு கைதாகி உள்ள வந்தவங்கன்னு பலரை பார்த்தோம். டாஸ்மாக்கை எதிர்த்து வந்தீங்களான்னு மரியாதையா நடந்துக்குறாங்க. ஜெயிலுக்கு போன உடனே சோப்பு, பத்திரிக்கைன்னு வாங்கிக்கிட்டோம். ஜெயில்ல சோப்பு தருகிற விசயமே மற்றவங்களுக்கு அப்பத்தான் தெரியும்.

ரெண்டு பேர் மட்டும் போய் என்ன ஆகப்போவுதுன்னு கேட்டா என்ன சொல்வீங்க?

தோழர் ராஜூ வீட்டிலிருந்து முழக்கம் போட்டா வேலைக்காகாது சொன்னாரு. சொன்னது சரிதானே. நாங்கள் ரோட்டுக்கு போனோம். ஆளு கம்மியா இருக்குதுன்னு விட்டு போக முடியுமா? ஆள் இல்லைன்னு சொல்லிட்டு அப்படி எல்லாம் இருக்க முடியாது. இந்த அமைப்புல இரண்டு பேராவது உறுதியாக நின்று போராட்டம் நடத்தினார்கள் என்று தெரியணும்.

வயசான காலத்துல எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுறீங்கன்னு யாராவது ஜெயிலுக்கு போயிட்டுவந்த உடனே கேட்டாங்களா?

ஜனமெல்லாம் கொரோனாவுல சாவுது, பசியிலே லோல் படுது. எல்லோரும் சொந்த வேலையை பாத்தா ஆவுமா என்னா?அப்போ எதுவும் நடக்காது. யாராச்சும் வயசான காலத்துல ஏன் கஷ்டபடுறீங்கன்னு கேட்டா. சின்னப்பயன் தான… நீ போக வேண்டியதுதானேன்னு கேப்பேன்.

வேலூர் மாவட்டத்துல போராட்டம் எதுவும் நடக்குலன்னு பேர் வந்தா நமக்குத்தானே கவுரவக்குறைச்சல். யார் வந்த என்ன ? எப்பவும் சாவு வரப்போறதுதான். உணர்வுதான முக்கியம்.

உண்மைதான் உணர்வுதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது…

தகவல் :
மக்கள் அதிகாரம்.

கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?

கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கிய பின்னர் கடந்த மார்ச் 24-ம் தேதி மோடி அரசு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியது. கோடிக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்புவதற்கு அவகாசம் கொடுக்காமல் அவர்கள் பட்டினிக்கு தள்ளிவிடப்பட்டனர். இதற்கு எதிராக கண்டனக் குரல்கள் நாடெங்கும் எதிரொலிக்கத் தொடங்கின; மக்களின் அவலக்குரல் ஊடங்களில் வெளிவந்த பின்னரே மோடி அரசு அவசர அவசரமாக மக்களுக்கு உதவித் திட்டத்தை அறிவித்தது.

ஒரு இலட்சத்து 75 ஆயிரம் கோடியில் மக்களுக்கு உதவிகள் வழங்குவது; வீட்டிற்கு ஒரு கிலோ பருப்பு; 20 கிலோ அரிசி, ஒரு குடும்பத்திற்கு ரூ.1000; கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 என பலவிதமான அறிவிப்புகள் வெளிவந்தன. இந்த திட்டங்கள் உண்மையில் மக்களுக்கு பலனளித்ததா?

சான்றாக ஒரு ரேசன் கார்டுக்கு ஒரு கிலோ பருப்பு என்று நிர்மலா சீத்தாராமன் அறிவித்த திட்டம்த்தை பார்க்கலாம்.

மார்ச் 26-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ஒரு கிலோ பருப்பு மாதத் தொடக்கத்தில் வழங்குவதாக உறுதியளித்தார். இது பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் ஒரு அங்கம் என்றார். ஏப்ரல் 20ம் தேதி மீண்டும் மத்திய அரசாங்கம் இதை உறுதிப்படுத்தியது. இதில் 1,07,077 மெட்ரிக் டன் பருப்பு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியது.

நமது நாட்டில் 23.6 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன. ஒரு கார்டுக்கு ஒரு கிலோ ஒரு மாதத்திற்கு வழங்க வேண்டும் என்றால் 2,36,000 டன்கள் பருப்பு ஒரு மாதத்திற்கு மட்டும் தேவைப்படுகின்றது. ஆனால் மாநிலங்களுக்கு இந்தத் திட்டத்தின்படி தேவையான பருப்பில் சுமார் 21 சதவீதம் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், ஏப்ரல் 25-ம் தேதி வரை மாநிலங்களுக்கு 44,932 டன் பருப்பு மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பருப்பில் இந்த நாள் வரை 8.2 சதவீதமே வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்தத் திட்டம் அமுலுக்குச் சென்ற யோக்கியதை.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில், இது கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சமயத்தில் கொடுப்பதற்கானது மட்டுமே. அதாவது, இதனை ஒரு வாரத்திற்குள் மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதுதான் மக்களுக்கு பயனளிக்கும். ஆனால், ஒரு மாத காலமாகியும் இந்த வினியோகம் 8.2 சதவீதம் என்றால் மத்தியில் ஆளும் மோடி ஆட்சியின் யோக்கியதையை என்னவென்று சொல்வது?

இந்தியாவில் 95 கோடி மக்கள் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும்பட்டினியால் பாதிக்கப்பட்ட 117 நாடுகளில் இந்தியா 95-வது இடத்தில் இருந்து 102-வது இடத்திற்கு சென்றுள்ளது. இது மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி.

படிக்க:
♦ விசாகப்பட்டிணம் விசவாயுப் படுகொலைகள் : குழந்தையை இழந்த தாய் மீது வழக்கு !
♦ ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு !

நிர்மலாவின் “ஒரு கார்டுக்கு ஒரு கிலோ பருப்பு” என்ற திட்டம் எந்த அளவிற்கு பயனளிக்கிறது என்பதை பாருங்கள். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை ஒரு பொதுவான அளவீடாக எடுத்துக் கொண்டால், ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு வழங்குவதன் மூலம் ஒரு நபருக்கு 200 கிராம் பருப்பு தான் கிடைக்கும். இதுவும் ஒரு மாதத்திற்கான அளவு. ஆக, இந்தத் திட்டம் என்பது பட்டினியிலும் சத்துக் குறைபாட்டிலும் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு ‘ஒரு சோளப்பொறி’ அளவிற்குதான் பயனளிக்கும்.

அப்படி ஒரு சிறிய உதவியில்தான் 8.2 சதவீதத்தை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.

ஆக, இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதற்கும் பொது வினியோக முறையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு என்ற இந்த வாக்குறுதி முற்றிலும் தோல்வியடைந்து விட்டது.

***

நிர்மலா சீத்தாராமன் மெத்தப் படித்தவர்; பார்ப்பன சமூகத்தில் இருந்து வந்தவர்; அவர் அமெரிக்காவில் இருந்தவர்; சிந்தனைக் குழாம் போன்றவற்றில் எல்லாம் பங்குவகித்தவர் என்று அவரது பெருமைகளை பார்ப்பன ஊடகங்கள்  ஊதிப் பெருக்கலாம். ஆனால், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED) அதிகாரிகள் இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி சொன்னால், நிர்மலாவைப் பற்றிய பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கும் பிம்பம் காற்றில் கூட நிற்காது.

பருப்பு வினியோகத்தை இரண்டு வகையில் செய்யலாம். அதில் ஒரு வகை, அரசு நேரடியாக விவசாயிகள் இடம் இருந்து பருப்பு தானியங்களை (பதப்படுத்தப்படாதவை) அரசு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்து, அவற்றை அரசு மற்றும் தனியார் பதப்படுத்தும் ஆலைகள் (மில்கள்) மூலம் பதப்படுத்தி, அவற்றை லாரிகள், இரயில் மூலமாக மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து, அங்கிருந்து மாவட்டங்களுக்கு தேவையான அளவு பிரித்துக் கொடுத்து, அவற்றை ரேசன் கடைகள் மூலமாக வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு வினியோகம் செய்வதற்கு அந்தந்த மாநிலங்கள் மத்திய அரசின் உத்தரவை ஏற்றுக்கொண்டு உடனடியாக தங்களது மாநிலத்திற்கு தேவையான பருப்பின் அளவை மத்திய அரசுக்கு சொல்ல வேண்டும்.

இந்தத் திட்டத்தை அமுல்படுத்த விவசாயிகளிடமிருந்து பருப்பு கொள்முதல் செய்யாமல் தனியார் நிறுவனங்கள்  கையிருப்பாக வைத்துள்ள தானியங்களை வாங்கி வினியோகம் செய்யலாம். இதுதான் அவசர காலத்தில் சாத்தியமான எளிய வழி. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி பதுக்கி வைத்துள்ள பருப்புகளை அரசுக்கு வழங்க அவை தயாராக இல்லை. அரசுக்கும் தனியார் நிறுவனங்களை நிர்பந்திக்கவில்லை. இந்த நிலையில் தான் முதல் வழிமுறையை அமுல்படுத்த முடிவு செய்துள்ளது.

***

NAFED அதிகாரிகள் தெரிவிப்பதைப் பாருங்கள்: ஊரடங்கு நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பருப்பு வினியோகம் என்பது பெரிய வேலை. இந்திய உணவுக் கழகத்தில் (FCI) உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் வேலையுடன் இந்த பருப்பு வினியோகம் செய்யும் வேலையை ஒப்பிடக்கூடாது.

இந்தியாவில் உ.பி., ம.பி., இராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்களில்தான் பருப்பு வகைகள் அதிகமாக விளைகின்றன. அதனால், அந்த குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்துதான் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. பருப்பு பதப்படுத்தும் ஆலைகளும் அந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன.

படிக்க:
♦ நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?
♦ அவுரங்காபாத் விபத்து மட்டுமல்ல, கொரோனா ஊரடங்கால் 383 பேர் இறந்திருக்கிறார்கள் !

இராஜஸ்தானுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் 11,000 டன் பருப்பு தேவைப்படுகிறது. ஆனால் அது மத்திய அரசிடம் இருந்து பெற்றது 2,000 டன் பருப்புதான். அதேபோல, உ.பி. தேவை 35,000 டன் பருப்பு. பெற்ற பருப்பின் அளவோ வெறும் 10 சதவீதம்தான்.

பருப்பு விளையும் முதன்மையான இந்த மாநிலங்களேயே இன்னமும் பருப்பு வினியோகத்தைத் தொடங்கவில்லை என்றால் மற்ற மாநிலங்களில் என்ன நிலைமை என்பது தனிக்கதை. பருப்பு விளையும் மாநிலத்திலேயே அந்த மாநில அரசுகளுக்கு முழுமையாக பருப்பு சென்று சேராததற்கு காரணம் என்ன? மக்களுக்கு எதிராக கட்டியமைக்கப்பட்டிருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பின் அதிகார வர்க்கத் தடைகளான இலஞ்சம், ஊழல், கமிசனும் மக்களுக்கு எதிரான அதிகார வர்க்க மனோபாவமும் தான் இதற்கு காரணம்.

***

மேலே சொன்னபடி பருப்பு விளையும் மாநிலங்கள் என்பது குறிப்பிட்ட சில வடமாநிலங்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் தான். இங்குதான் பதப்படுத்தும் ஆலைகளும் உள்ளன. இந்த மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து விளைவித்த பருப்பு கொட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். இந்த தானியங்களை ஆலை மில்களில் அறைக்க வேண்டும். இங்கிருந்து பதப்படுத்தப்பட்ட (உடைக்கப்பட்ட) பருப்புகளை மாநிலங்களுக்கு லாரி மற்றும் இரயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இது மிகவும் சுருக்கமாக சொல்லப்பட்ட வினியோகச் சங்கிலி.

இந்த சங்கிலி இயங்க வேண்டும் என்றால் தொழிலாளர்கள் எல்லா இடங்களிலும் வேலை செய்ய வேண்டும். லாரிகள் இயங்க வேண்டும். சுமார் 2,46.000 டன் பருப்பு வினியோகம் என்றால் இதனைவிட அதிக எடை கொண்ட பருப்புகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இவை குறைந்தபட்சம் 6 பிரதானமான பரிமாற்றங்கள் நடத்தப்பட வேண்டும். (விவசாயி – கொள்முதல் நிலையம் – ஆலைகள் – மாநில அரசுகள் – ரேசன் கடைகள் – மக்கள்) அதாவது இந்த கொள்முதல் செய்யப்படும் தானியங்களைப் போன்று ஐந்து மடங்கு எடுத்துச் செல்லும் வகையில் லாரிகள் தேவை; அதற்கு தேவையான தொழிலாளர்கள்; லாரி சர்வீஸ் தொழில்கள் போன்றவை கணிசமாக இயங்க வேண்டும்.

நாடுதழுவிய ஊரடங்கினால் நிலைமை என்ன? தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். லாரி ஓட்டுனர்களில் கணிசமான பேர் தொடர்ந்து லாரி ஓட்டும் வேலைக்கே வருவார்கள் என்று சொல்ல முடியாது. மில்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை ஆலை முதலாளிகள் கிராமங்களில் இருந்து அழைத்து வர முடியாது. இது மிகப்பெரிய பிரச்சினை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்காமல் கொள்முதலோ வினியோகமோ முற்றிலும் சாத்தியமில்லை.

ஆனால், விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து செல்ல இயலாமல் தவிக்கின்றனர். சில இடங்களில் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாலும் கொண்டு செல்ல முடியவில்லை.

இத்தனையையும் மீறி கொள்முதல் செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்றால் அதுவும் இல்லை. கொள்முதல் செய்த தானியங்களை பதப்படுத்தும் ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். திடீரென இத்தனை லட்சம் டன் பதப்படுத்துவதை ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும் அளவிற்கு நமது நாட்டில தனியார் ஆலைகள் தயார் நிலையில் இல்லை.

கொள்முதல் செய்து, ஒப்பந்தங்களும் போட்டு தொழிலாளர்களும் கிடைத்தாலும் இவ்வளவு பருப்புகளை பதப்படுத்த குறைந்தது சில வாரங்கள் ஆகும்.

இந்த வினியோக சங்கிலியை உயிரூட்டுவதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று அரசு தரப்பில் செய்ய வேண்டிய பணிகள், மற்றொன்று தேவைக்கேற்ப மக்களை (தொழிலாளர்களை) ஈடுபடுத்துவது. இந்த இரண்டில் பிரதானமானது அனைத்து மட்டத்திலும் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான். இதற்கு, நாடு தழுவிய அளவில் குறைந்தபட்சக் கொள்கை முடிவு தேவை.

***

ரு கொள்கை முடிவு இல்லாமல் பருப்புகளை எடுத்து வருவதும், பருப்பு ஆலைகளை இயக்குவதும் சாத்தியமில்லை என்று அகில இந்திய பருப்பு ஆலை சங்கத்தின் தலைவர் சுரேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒரு பதப்படுத்தும் ஆலைகள் கூட கிடையாது. அங்கு பருப்பு வகைகள் உற்பத்தியும் கிடையாது. அங்கு இருக்கும் ஆலைகள் எல்லாம் கொல்கத்தாவில் தான் உள்ளன. அந்த மாநிலங்கள் ரோஸ் பருப்புகளைக் மக்களுக்கு கொடுக்கின்றன. அந்தப் பருப்புகள் உ.பி. அல்லது ம.பி.யில் இருந்து செல்ல வேண்டும். இது மிகப்பெரிய சவாலான திட்டம். இதற்கான கட்டமைப்பு நடைமுறையில் கிடையாது என்று NAFED (தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனம்) அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“நிர்மலா சீத்தாராமன் சொல்வது போல செய்ய முடியாது. தானியங்களை முதல்நாள் இரவு ஊறவைத்து காலையில் விதவிதமாக சமைத்துவிட முடியாது. பதப்படுத்தப்படாத பருப்புகளை வாங்குவதற்கு எந்த மாநிலங்களும் தயாராக இல்லை” இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார். “பருப்புகளை வாங்கிக் கொள்வதாக சொன்ன மாநிலங்கள் பதப்படுத்தப்பட்ட பருப்புகளைத்தான் கேட்கின்றன. சாதாரண சூழல்களிலேயே பருப்புகளைப் பதப்படுத்த 10 நாட்கள் தேவைப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்கின்றனர் அந்த அதிகாரிகள்.

அகர்வாலோ, “சொல்வதற்கும் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் ஏதோ சொல்கிறார்கள் ஏதோ செய்கிறார்கள். எந்த ஆலைகளும் அவர்களுடன் இணைந்து வேலையில் இறங்க தயாராக இல்லை. அரசு தரப்பில் ஆயிரக்கணக்கான கட்டுப்பாடுகளை சொல்கின்றனர், இதுபோன்ற காலங்களில் அதிகாரிகள் மிகவும் அதிகாரத்துவப் போக்கு கொண்டவர்களாக உள்ளனர். எங்களை அவர்கள் திருடர்கள் போல நடத்துகின்றனர். 20 சதவீத ஆலை முதலாளிகள் மட்டுமே அவர்கள் கொடுத்த வேலையைச் செய்கின்றனர்” என்கிறார்.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சிரஜ் ஹூசைன், “நிர்மலா சீத்தாராமன் சொல்கின்ற திட்டத்தை நிறைவேற்றும் கட்டமைப்பு நமது நஃபீட்-இடம் இல்லை. குறைந்தப் பட்ச ஆதார விலையில் அடிப்படையில் தான் மாநிலங்கள் பருப்பு வகை தானியங்களை விவசாயிகள் இடமிருந்து கொள்முதல் செய்கின்றன. இவற்றை நஃபீட் மில்களுக்கு அனுப்பி பதப்படுத்த வேண்டும் என்றால் அதற்காக அந்த ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். மூலப் பருப்புகள் கொள்முதல் நிலையங்களில் இருந்து அரவை மில்களுக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் பின்னர் அங்கிருந்து அரைக்கப்பட்ட பருப்புகள் மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். உணவுப் பாதுகாப்புக் கழகத்தைப் போன்று இந்த ஒப்பந்தங்களையும் கட்டமைப்புகளும் நஃபீட்-இடம் இல்லை” என்கிறார்.

இந்தத் திட்டத்தை முறையான காலங்களில் அமுல்படுத்த வேண்டும் என்றால் ஒரு மாதத்தில் கூட முடியாது. அதற்கு முக்கியமான காரணம் இவ்வளவு வேகமாக பதப்படுத்தும் திறன் நம்மிடம் இல்லை என்கிறார்.

அரசுக்கு உண்மையிலேயே வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு வழங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், இந்நேரத்தில் வெளிச்சந்தையில் இருந்து பருப்புகளை வாங்கி வினியோகம் செய்திருக்க முடியும். அப்படி ஒரு விருப்பம் அரசுக்கு இல்லை என்கின்றார் அதிகாரிகள்.

தேசிய அவசர நிலையை அறிவித்துவிட்டு, எங்களிடம் அது இல்லை, இது இல்லை என்று சொல்வதன் பொருள் என்ன? அரசிடம் எந்தக் கட்டமைப்பும் இல்லை. இருப்பதையும் செயல்படுத்தும் வகையில் அரசு கட்டமைப்பும் இல்லை. எல்லாம் செயலிழந்து நிற்கின்றன. இதுதான் இன்றைய நிலைமை.

இந்த உண்மையை மறைப்பதில் மட்டும் தீவிரமாக செயல்படுகிறது மோடி அரசு. ஆந்திரா, சட்டிஸ்கர், குஜராத் ஆகிய  மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் பருப்பு வினியோகம் முழு வீச்சில் நடப்பதாக தெரிவித்தது. ஆனால், அந்த மாநிலங்கள் பருப்பு வகைகளை சொந்தமாக வாங்கி வினியோகம் செய்து வருகின்றன என்று மத்திய அரசு அதிகாரிகள் அறிவிக்கின்றனர். உண்மையில் அந்த மாநில அரசுகள் ஏற்கெனவே வினியோகம் செய்து வந்த பருப்புகளைத் தான் தற்போது இலவசமாக வினியோகம் செய்துள்ளன. இதனையும் மத்திய அரசின் திட்டத்தில் கீழ் செயல்படுத்தியதாக சொல்கின்றர் மத்திய அரசின் அதிகாரிகள்.

மக்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும் போது இந்த அரசும் அதன் கட்டமைப்பும் தோல்வியுற்று நிற்பதையும் பாஜக அரசு அதனை மூடி மறைத்து மோசடிகள் செய்வது மீண்டும் மீண்டும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பாசிச கும்பல் தனது செயலின்மையை ஒப்புக்கொள்ளாது; இதனை நாம்தான் அம்பலப்படுத்த வேண்டும்.

– புதியவன்


செய்தி ஆதாரம் :
Why Sitharaman’s ‘Pulses For All’ Promise Still Hasn’t Been Implemented

Sitharaman’s Promise of Pulses Through PDS Unlikely to See Fruition Anytime Soon 

விசாகப்பட்டிணம் விசவாயுப் படுகொலைகள் : குழந்தையை இழந்த தாய் மீது வழக்கு !

0

விசாகப்பட்டிணம் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் லாபவெறியால் நிகழ்ந்த விசவாயுக் கசிவுப் படுகொலைகளுக்குப் பின்னரும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த எந்த அதிகாரிகளும் கைது செய்யப்படவில்லை. மேலும் அந்த நிறுவனத்தை உடனடியாக மூடவேண்டும் எனப் போராட்டம் நடத்திய அப்பகுதி மக்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தது மட்டுமல்லாமல், தனது குழந்தையின் உயிரைப் பறிகொடுத்த ஒரு தாயின் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது ஆந்திர போலீசு.

விசாகப்பட்டிணம் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் லாபவெறியால் ஏற்பட்ட விசவாயுக் கசிவில் படுகொலை செய்யப்பட்ட 12 பேரில் 9 வயது சிறுமி கரிஷ்மாவும் ஒருவர். விச வாயுக் கசிவு ஏற்பட்ட அன்று அதிகாலையில் சிறுமி கரிஷ்மா மற்றும் அவளது 11 வயது அண்ணன் பார்தா ஆகியோரை அழைத்துக் கொண்டு அவர்களது பெற்றோர் அப்பகுதியிலிருந்து வெளியேறிச் சென்றனர். போகும் வழியிலேயே அதிகமான விசவாயுவை நுகர்ந்ததால், குழந்தைகள் இருவரும் மயங்கிச் சரிந்துள்ளனர். அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது சிறுமி கரிஷ்மா இறந்துவிட்டதாக தெரிவித்தனர் மருத்துவர்கள்.

கடந்த மே 9 அன்று (சனிக்கிழமை) கரிஷ்மாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. விசவாயுக் கசிவில் உயிரிழந்தவர்கள் வேறு சிலரின் உடலும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேராக எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவன வாயிலுக்குச் சென்று அந்நிறுவனத்தை உடனடியாக மூடி சீலிட வேண்டும் என்ற போராட்டத்தில் அப்பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

எல்.ஜி. ஆலையைச் சுற்றி போலீசு படை குவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்று முழங்கினர். அந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த லட்சுமி, போலீசு உயரதிகாரிகளிடம், அந்த ஆலையை எப்படியாவது மூடிவிடும்படி கைகூப்பிக் கெஞ்சினார்.

தனது மகளின் உயிரைப் பறித்த இந்த ஆலையின் அதிகாரிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

அவருடன் அப்பகுதி மக்களும் இதே கேள்வியை எழுப்பினர். அவர்களிடம் சமாதானம் பேசிய போலீசு அதிகாரி, கலைந்து செல்லும்படியும், அப்பகுதி மக்களுக்குப் போதுமான நிவாரணத் தொகை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள், “எங்களுக்கு ஒரு பைசா கூட நிவாரணம் தேவையில்லை. உடனடியாக ஆலையை மூடி சீலிடு” என்று கூறி போராட்டத்தைத் தொடர்ந்தனர். லட்சுமி மூடப்பட்டிருந்த எல்.ஜி பாலிமர்ஸ் ஆலையின் கதவின் மீது ஏறிக் குதித்து உள்ளே இறங்கி, உட்பக்கமாக பூட்டியிருந்த கதவைத் திறந்து விட்டார். அதனைத் தொடர்ந்து பகுதி மக்களும் ஆலை வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத்தை நடத்தினர். அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தது போலீசு.

இதனைத் தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை (11.05.2020) அன்று காலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடிக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. அன்று மாலையே, எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தை மூடக் கோரி சனிக்கிழமை (09-05-2020) போராட்டம் நடத்திய அப்பகுதி மக்களின் மீது வழக்குப் பதிவு செய்ததோடு கைதும் செய்துள்ளது ஆந்திரப் போலீசு.

படிக்க:
♦ பிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா ? | பொ.வேல்சாமி
♦ விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !

பகுதி மக்கள் 5 பேர் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் 7 பேர் உள்ளிட்டு 12 பேர் மீது பிரிவு 147 (கலவரம் செய்தல்), 447 (குற்ற நோக்கோடு அத்துமீறி நுழைதல்), 353 (அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தது), 188 (அரசு ஊழியர்களின் உத்தரவிற்கு அடிபணிய மறுத்தது), 271 (தனிமைப்படுத்தலை மீறியது) மற்றும் 51(A) (அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கத் தவறியது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டன.

மேலும் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவன வாயிற்கதவின் மீது ஏறிக் குதித்த ‘ஒரு பெண்’ என்று குறிப்பிடப்பட்டு அவரின் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த நாசகார நிறுவனத்தின் கோரத் தாண்டவத்தால் உயிரை இழந்த கரிஷ்மாவின் தாயான லட்சுமிதான் வாயிற்கதவின் மீது ஏறிக் குதித்த ‘அந்தப் பெண்’. ஆனால் இந்தச் சூழலில் லட்சுமியின் மீது நேரடியாக வழக்குப் பதிந்தால் பிரச்சினையாகும் என்பதை உணர்ந்த ஆந்திர போலீசு நயவஞ்சகமாக ‘ஒரு பெண்’ என மட்டும் குறிப்பிட்டுள்ளது.

டில்லியில் இருக்கும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், ஸ்டைரினைத் தேக்கி வைத்திருக்கும் உருளைகள் மிகவும் பழையவையாகவும், பராமரிப்பற்றும் இருந்ததுதான், விபத்துக்கான காரணம் என்று அறிக்கை வெளியிட்டது.

இந்திய ஒன்றிய ஆற்றல்துறையின் முன்னாள் செயலரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஈ.ஏ.எஸ். சர்மா, இந்த விபத்துக்கு முறையற்று இயங்கும் அந்த நிறுவனமும், அதற்கு அனுமதியளித்த அதிகாரிகளும்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

நடந்த படுகொலைக்கு எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் லாபவெறிதான் முதன்மைக் காரணம் என்று அம்பலப்பட்டுள்ள நிலையிலும், அந்நிறுவனத்தைச் சேர்ந்த யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால், அந்நிறுவனத்தின் நச்சுச் சூழலால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் அப்பகுதி மக்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைதும் செய்துள்ளது போலீசு. பெற்ற பிள்ளையை இழந்த பெண்ணின் மீது வழக்குப் போட்டுள்ளது.

இவ்விவகாரத்தை ஓரிரண்டு நாட்களில் அப்படியே கைவிட்டு அடுத்த விவகாரங்களுக்குத் தாவி விட்டன ஊடகங்கள். எல்.ஜி குழுமத்தின் விளம்பரத்திற்காக நாவில் நீர்வடியக் காத்திருக்கும் இத்தகைய ஊடகங்களிடம் அறத்தை எதிர்பார்க்க முடியாது.

அன்று வாரன் ஆண்டர்சன் தொடங்கி, நேற்று அனில் அகர்வால், இன்று எல்.ஜி நிறுவன தலைமைச் செயலதிகாரி வரை அனைவரும் கைது செய்யப்படாமல் இந்த அரசால் பாதுகாக்கப்பட்டே வந்திருக்கின்றனர். இந்தப் படுகொலைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மரணம் நம் வீட்டு வாசல் வரும்வரையில் அமைதிகாக்கப் போகிறோம் எனில், அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.


நந்தன்

செய்தி ஆதாரம் :
♦ Cops book cases against gas leak victims, arrest 5 villagers, 7 CPI activists
♦ Mother of Deceased 9-Yr-Old Demands Closure of LG Polymers

பிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா ? | பொ.வேல்சாமி

பிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா ?

நண்பர்களே…

பொ.வேல்சாமி

ங்களைச் சந்தித்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. திராவிடச் சிறகுகள் என்ற அமைப்பின் சார்பில் கோவையில் நடைபெற்ற நிகழ்வில்
தோழர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் காணொளிப் பேச்சை இன்று பார்த்துக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பேச்சில் அவரால் குறிப்பிடப்படுகின்ற அடிப்படைத் தரவுகளில் பல சரியானவைகளாக இல்லாமல் பிழையாக இருந்தன. சிறந்த வரலாற்று அறிஞர் என்று நண்பர்களால் பாராட்டப்படுகின்ற தோழர் செந்தலை ந கவுதமன் பேச்சைக் கேட்டு அதிர்ந்தேன். ஆதாரம் இல்லாத இத்தகைய பேச்சுகளை ஐயா அவர்கள் பேசுவது நியாயமா?

1. சர் வில்லியம் ஜோன்ஸால் (28.09.1746 – 27.04.1794) வடமொழி நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் அவரால் செய்யப்பட்ட அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு உடனடியாக ஜெர்மன் மொழியிலும் இத்தாலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இவற்றின் விளைவாக வடமொழி பற்றிய அறிவு ஐரோப்பா முழுமையும் பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றார். வில்லியம் ஜோன்ஸ் வடமொழி நூல்கள் எல்லாவற்றையும் மொழிபெயர்க்கவில்லை. அந்தக் காலத்தில் வேதங்கள் உள்பட பல முக்கியமான வடமொழி நூல்களைப் பற்றி ஐரோப்பியர்களுக்கு எதுவும் தெரியாது.

வடமொழி நூல்கள் எல்லாவற்றையும் பற்றி ஐரோப்பியர்கள் தெரிந்துகொள்ள தொடங்கிய காலம் என்பது 1847 க்கு பின்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லியம் ஜோன்ஸால் மொழிபெயர்க்கப்பட்ட வடமொழிகள் நூல்கள் 3 மட்டுமே. அவை 1. காளிதாசரின் சாகுந்தலம். 2. கீத கோவிந்தம். 3. மாளவ தரும சாத்திரம் ஆகும். இவருக்கு வடமொழியைக் கற்றுக் கொடுத்த இவருடைய நண்பர் சார்லஸ் வில்கின்சன் “பகவத் கீதை“ மற்றும் “இதோபதேசம்“ என்ற இரண்டு நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்தக் காலக்கட்டத்தில் ஐரோப்பியர்கள் அறிந்துகொள்ளத் தொடங்கிய இன்னொரு மொழிபெயர்ப்பு நூல், அவுரங்கசீப்பின் அண்ணன் “தாராசுகோ”வின் முயற்சியால் வடமொழியில் இருந்து பாரசீக மொழியில் மொழிபெயர்க்ப்பட்ட 50 உபநிடதங்கள் ஆகும். இந்த உபநிடதங்கள் முழுமையும் 1801 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது என்றும் இதன் விளைவாக ஐரோப்பா முழுமைக்கும் வடமொழி பற்றிய ஆர்வம் உண்டானதாகவும் “வியத்தகு இந்தியா” (பக்.5 மற்றும் பக்.6) என்னும் நூலில் பேராசிரியர் A.L.பசாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். நூலின் அந்தப் பகுதியை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

2. 1812 இல் எல்லீஸால் திருக்குறள் “முழுமையும்” அச்சிட்டு வெளியிடப்பட்டதாக செந்தலை கவுதமன் கூறுகின்றார். எல்லீஸால் வெளியிடப்பட்டது திருக்குறளின் அறத்துப்பால் மட்டுமே. முழுநூலும் அல்ல என்பது குறி்ப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல திருவள்ளுமாலையையும் நாலடியாரையும் இணைத்து எல்லீஸ் வெளியிட்டதாகத் தோழர் கூறுகின்றார். அப்படி எல்லீஸ் வெளியிடவில்லை.

திருக்குறளின் 110 வது பாடலாகிய “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்..” என்று தொடங்கும் குறளுக்கு விரிவுரை எழுத வந்த பரிமேலழகர் 34 புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டுகின்றார். அந்த மேற்கோளில் பார்ப்பார் தப்பிய என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பை எல்லீசும் மேற்கோள் காட்டி பிராமணர்களை ”the murder of Brahmans” என்று ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதியை விளக்குவதற்கு புறநானூறு 34 வது பாட்டை மேற்கோள் காட்டுகிறார். அந்த மேற்கோள் உள்ள புறநானூற்று பாடல் வரிகளில் “குரவர் தப்பிய” என்ற வரிகள் உள்ளன. இதே பாடலுக்கு (புறநானூற்றில் 34 வது பாட்டுக்கு) உரை விளக்கம் கூற வந்த “உரைவேந்தர் அவ்வை துரைசாமிபிள்ளை” அவர்கள்,
“குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்குமெனத் திருத்தப்பட்டிருக்கிறது. இத்திருத்தம் பரிமேலழகர் காலத்தேயே செய்யப்பட்டுளதென்பது திருக்குறளுரையாற் காணப்படுகிறது.” என்று கூறுகின்றார். இப்படியான தரவுகள் இருக்கின்ற போது புறநானூற்றுப் பதிப்பில் 34 வது பாட்டில் “பார்ப்பார் தப்பிய” என்று உ.வே.சா திருத்தி விட்டார் என்று செந்தலை கவுதமன் கூறுவதை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது.?

படிக்க:
♦ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

3. செந்தலை கவுதமன் அவர்களின் பேச்சில், ஆறுமுக நாவலர் திருக்குறளைப் பதிப்பிக்கவில்லை என்று கூறுகிறார். 1861 இல் பாண்டித்துரை தேவரின் தந்தையார் பொன்னுசாமி தேவரின் உதவியாலும் வேண்டுகோளின்படியும் திருக்குறள் பரிமேலழகர் உரையின் பிழைநீக்கி பதிப்பித்துள்ளார். தொடர்ந்து அவர் காலத்திலேயே (1875) இரண்டாம் பதிப்பாகவும் திருக்குறள் வெளிவருகிறது. ஆறுமுகநாவலின் மறைவுக்கு பின்னர் (1879) பல பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 1861 இல் ஆறுமுகநாவலரால் முதன் முதலாக வெளியிடப்பட்ட இந்நூலின் 110 பாட்டின் பரிமேலழகர் உரை விளக்கத்தின் புறநானூறு 34 வது பாடல் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் “பார்ப்பார் தப்பிய” என்ற வரிதான் உள்ளது. அதன் அடிக்குறிப்பில்தான் பாடபேதமாக “குரவர் தப்பிய” என்ற வரியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லீஸ் அவர்களும் ஆறுமுகநாவலர் அவர்களும் சமகாலத்தவர்கள் என்பதுபோல தோழர் பேசுகின்றார். எல்லீஸ் மறைந்தது 1819 ம் ஆண்டு. எல்லீஸ் மறைந்து 3 ஆண்டுகள் கழித்து 1822 இல் ஆறுமுகநாவலர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்னல் மெக்கன்சியை எல்லீஸ் தமிழ்ச் சுவடிகளைத் திரட்டுவதற்குப் பணி அமர்த்தினார் என்று குறிப்பிடுகின்றார். கர்னல் மெக்கன்சி எல்லீஸால் பணி அமர்த்தப்படவில்லை. கர்னல் மெக்கன்சி தமிழ் ஏட்டுச்சுவடிகள் மட்டுமல்லாது வடமொழிச் சுவடிகள் தெலுங்குச் சுவடிகள் கல்வெட்டுகள் என்று பலவற்றையும் தொகுத்தவர். அவர் தொகுத்த தெலுங்குச் சுவடிகள் தமிழ்ச் சுவடிகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னால் குறிப்பிடப்படும் செய்திகளுக்கான ஆதாரங்களின் படங்களை இணைத்துள்ளேன். தோழர்கள் கவனமாகப் பார்க்கவும்.
தோழர் செந்தலை கவுதமன் அவர்களின் காணொளிப் பேச்சையும் இணைத்துள்ளேன்.

நம்முடைய அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்புகளைக் காட்டுவதற்காக இப்படி ஆதாரம் இல்லாமல் பிழையாகச் சிலர் பேசுவதைக் காண முடிகின்றது. ஆய்வின் அடிப்படையிலான பேச்சுகளை அவதூறுகளைக் கொண்டு நிரப்புவது என்பது தமிழ் ஆய்வுக்கும் தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வுக்கும் நன்மை பயக்குமா? தீமை பயக்குமா? என்பதைத் தோழர்கள் விவாதிக்க வேண்டும்.

***

04.05.2020 எனது பதிவில் தோழர் மே.து.ராசுகுமார் அவர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு…

நண்பர்களே…

புறநானூறு 34 வது பாடலின் 3வது வரியாக “பார்ப்பார் தப்பிய” என்ற தொடர் வருகின்றது. இந்த வரியை பரிமேலழகர் 110 வது திருக்குறள் உரையில் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகின்றார். பரிமேலழகர் உரையை 1861 இல் பதிப்பித்த ஆறுமுகநாவலர் இப்பாடலின் அடிக்குறிப்பில் “குரவர் தப்பிய” என்ற பாடபேதத்தைக் குறிப்பிடுகின்றார். ஆனால் 1840 இல் துரு பாதிரியாரும் இராமானுஜகவிராயரும் இணைந்து முதன்முதலாக வெளியிட்ட திருக்குறள் பரிமேலழகர் உரைப் பதிப்பில் “பார்ப்பார் தப்பிய” என்ற பாடம் மட்டுமே உள்ளது. “குரவர் தப்பிய” என்ற பாடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூல் உ.வே.சாமிநாத அய்யர் பிறப்பதற்கு 15 வருடங்களுக்கு முன்பே வந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். இவ்வாறு இருக்கையில் பார்ப்பார் தப்பிய என்ற திருத்தத்தை உ.வே.சா செய்தார் என்று சிலர் பல காலமாக சொல்லி வருவதன் மர்மம் என்ன?

படிக்க:
டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
♦ குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்

தெ.பொ.மீ., பேராசிரியர் துரை அரங்கனார் போன்ற பல பேராசிரியர்களுக்கு ஆசானாக விளங்கிய கோ.வடிவேல் செட்டியார் 1904 இல் திருக்குறள் பரிமேலழர் உரையை தன்னுடைய விளக்கத்துடன் இரண்டு பாகமாக வெளியிட்டுள்ளார். அந்த நூலிலும் பார்ப்பார் தப்பிய என்ற பாடம்தான் உள்ளது.

அடுத்த வந்த காலங்களில் 34 வது புறநானூற்றுப் பாடலை நாம் தொல்காப்பியம் புறத்திணையியல் இளம்பூரணர் உரையில் மேற்கோளாகக் காண்கிறோம். தொல்காப்பியம் அகத்திணையியல் புறத்திணையியல் ஆகிய இரண்டு பகுதிகளையும் பேராசிரியர் நமச்சிவாய முதலியார் 1920 லும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை 1921 லும் முதல்முதலாக அச்சில் கொண்டு வருகிறார்கள். அந்த நூல்களில் இந்தப் புறநானூற்றுப் பாடல் மேற்கோளாக வருகின்றது. பேராசிரியர் நமச்சிவாயர் பதிப்பிலும் தேசபக்தர் வ.உ.சி பதிப்பிலும் “பார்ப்பார் தப்பிய” என்ற பாடம்தான் உள்ளது. “குரவர் தப்பிய” என்ற பாடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகச் சிறந்த பழந்தமிழ்நூல்கள் பலவற்றை, அன்றைய காலத்தில் தமிழ்நாட்டு அறிஞர்களால் மதிக்கப்பட்ட பேராசிரியர்களைக் கொண்டு பதிப்பித்து வெளியிட்டதனால் புகழ்பெற்ற “மர்ரே” நிறுவனத்தார் வெளியிட்ட புறநானூற்றுப் பதிப்பிலும் “பார்ப்பார் தப்பிய” என்ற பாடமே உள்ளது

இந்த செய்திகளுக்கு ஆதாரமான நூல்களின் பக்கங்களை இணைத்துள்ளேன்

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– பொ. வேல்சாமி

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

கார்ப்பரேட் கடன் : தள்ளுபடியா தள்ளி வைப்பா ?

தள்ளுபடியா தள்ளிவைப்பா ?

கார்ப்பரேட்டுகளுக்கு 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த செய்தி வெளியானதிலிருந்து, அது தள்ளுபடி இல்லை. தள்ளிவைப்புதான் என்று பொருளாதார வள்ளுநர்கள் கூவிக் கொண்டிருக்கிறார்கள். கடனைத் திரும்பப் பெறும் முயற்சிகள் தொடரும் என்பதே அவர்கள் முன்வைக்கும் வாதம். உண்மையில் அப்படித் திரும்பக் கிடைத்துள்ளதா? கடந்த காலத்தின் வரலாறு என்ன? ஒரு பொருளாதார வல்லுநரே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். (இது ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

(write-off மற்றும் waiver இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்துத்தான் பொருளாதார வள்ளுநர்கள் கம்பு சுத்துவார்கள். எனவேதான் write-offம் தள்ளுபடிதான் என்று இந்தப் பதிவு நிரூபித்தாலும், write-offக்கு ரத்து என்ற சொல்லையே இங்கே பயன்படுத்துகிறேன். write-offக்கு ஆங்கிலத்தில் பொருள் – Cancel (a debt) ரத்து செய்தல்; Concede the loss நஷ்டத்தை ஏற்றுக் கொள்ளுதல்; reduction in the book value of an asset ஒரு சொத்தின் புத்தக மதிப்பைக் குறைத்தல்; The act of cancelling from an account a bad debt. ஆக, write-offக்கு தள்ளிவைப்பு என்ற பொருள் கிடையவே கிடையாது.)

***

பொதுத்துறை வங்கிகள் ‘தள்ளி வைத்த’ கடன்களில் 89% வசூலிக்கப்படவே இல்லை.

என் நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன் கேட்டார் – “பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் குறித்து எழுதி எழுதி உனக்கு சலிப்பே வரவில்லையா?”

இல்லை என்ற உண்மையைச் சொன்னேன். காரணம், புதிய புதிய விவரங்கள் வந்து கொண்டே இருக்கும்போது, நாமும் புதிது புதிதாய் எழுத வேண்டியிருக்கிறது. அத்துடன், இந்தப் புதிய விவரங்கள் வாராக்கடன் விவகாரம் எத்தனை குழப்படியாக ஆகிக்கொண்டிருக்கிறது என்பதையும் காட்டுகிறது.

மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளைப் பற்றித் தோண்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில், இன்னுமொரு சுவாரசியமான தரவு கிடைத்தது. அது, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விவகாரம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதையும், அரசியல்வாதிகளும் வல்லுநர்களும் அதைப்பற்றி என்ன சொன்னாலும் சரி, அண்மைக்காலத்தில் அந்தப் பிரச்சினை ஏன் முடியப் போவதில்லை என்பதையும் காட்டியது.

வாராக் கடன் (Bad loans) என்பது என்ன? 90 நாட்கள் அல்லது அதற்கும் மேலாக திருப்பிச் செலுத்தப்படாத தொகை வாராக் கடன் ஆகும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வங்கிகள் அதை ரத்து (write-off) செய்து விடும். அதாவது, வங்கிகள் எப்பாடு பட்டாலும் திரும்பப் பெற முடியாத கடன்கள் இவை.

வங்கிகள் இப்படி வாராக்கடன்களை ரத்து செய்யும்போது, அந்த வங்கியின் வாராக்கடன் மொத்தத் தொகை குறைவாகும். அதே நேரத்தில், வங்கிகளின் லாபத்திலிருந்துதான் இந்த வாராக்கடன்கள் கழிக்கப்படும்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கடந்த சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரத்து செய்த வாராக் கடன்களின் விவரங்களை அரசு அளித்தது. அட்டவணை 1 காண்க.

அட்டவணை 1:

ஆண்டு ரத்து செய்த கடன் (கோடி)
2014-2015 49,018.00
2015-2016 57,585.00
2016-2017 81,683.00
2017-2018* 84,272.00
மொத்தம் 2,72,558.00

* 2017 டிசம்பர் 31 வரை.
Source: மாநிலங்களவை
குறியிடப்படாத கேள்வி எண்: 3600
பதிலளிக்கிற தேதி 27 மார்ச், 2018

2014 ஏப்ரல் 1 முதல் 2017 டிசம்பர் 31 வரை பொதுத்துறை வங்கிகள் ரத்து செய்த கடன்களின் தொகை ரூ. 2,72,558 கோடி (இரண்டு லட்சத்து எழுபத்திரண்டாயிரம் கோடி). எனவே, அந்த வங்கிகளின் லாபத்திலும் இதன் பாதிப்பு ஏற்பட்டிருக்கும், அதன் விளைவாக ஆண்டுதோறும் வங்கிகள் அரசுக்குத் தரும் லாபப் பங்கும் (டிவிடெண்ட்) குறையும். (அதாவது, அரசுக்கு, பங்குதாரர்களுக்கு வருவாய் குறையும்.)

படிக்க:
பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது !
♦ வங்கி மோசடியாளர்களது ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி !

பொதுத்துறை வங்கிகளை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்பதற்கு பலிகடா ஆகிறவர்கள் சாமானிய மக்கள்தான் என்ற தலைப்பில் நான் இதற்கு முன்பே எழுதிய கட்டுரையிலும் இதைபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தக் கட்டுரையில் இன்னுமொரு விஷயத்தைப் பார்ப்போம்.

ரத்து செய்யப்பட்ட கடன்கள் என்பவை வசூலிக்க முடியாத கடன்கள் என்று பார்த்தோம். ஆனாலும், (கடனுக்கு ஈடாக ஜாமீன் சொத்துகளை வைத்திருந்தால்) வங்கிகள் இந்தக் கடனை வசூலிக்கக் கூடிய சாத்தியமும் கொஞ்சம் உண்டு. அப்படியானால், இப்படி எவ்வளவு வசூலானது என்று பார்ப்போமா? கீழே உள்ள அட்டவணை 2 பாருங்கள்.

அட்டவணை 2:

ஆண்டு வசூலான கடன் (கோடிகள்)
2014-2015 5,461.00
2015-2016 8,096.00
2016-2017 8,680.00
2017-2018* 7,106.00
மொத்தம் 29,343.00

* 2017 டிசம்பர் 31 வரை
Source: மாநிலங்களவை
குறியிடப்படாத கேள்வி எண்: 3600
பதில் அளிக்கிற தேதி 27 மார்ச், 2018

இந்த இரண்டு அட்டவணைகளையும் கொண்டு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் – கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளால் ரத்து செய்யப்பட்ட கடன் தொகை 2,72,558 கோடி. அதில் வசூலிக்கப்பட்ட தொகை 29,343 கோடி. அதாவது, வசூலானது வெறும் 10.8%. வசூலிக்க முடியாமல் ஊத்திக்கொண்டு போன தொகை 89.2%.

ஆக, அகராதிப்படி பார்த்தால் ரத்து – தள்ளுபடி (write off and a waive off) இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் ஏதும் கிடையாது. வாராக் கடன்களை வங்கிகள் வசூலிக்க முடியாத வரையில் ரத்து செய்த கடனும் தள்ளுபடி ஆன கடன்தான். அது தவிர, கடன் தள்ளுபடி செய்தால் வங்கிக்கு அரசு அந்தத் தொகையை ஈடு செய்யும். மொத்த வாராக் கடன்களில் பொதுத்துறை வங்கிகள் தொழில்துறைக்குக் கொடுத்த கடன்கள் 73% சேவைத் துறைக்குக் கொடுத்த கடன்கள் 13%. ஆக, வங்கிகளின் வாராக் கடன்களுக்குக் காரணமே இந்தக் கார்ப்பரேட்டுகள்தான். அதனால்தான், ரத்து செய்த கடன்களை வங்கிகள் வசூல் செய்ய முடிவதே இல்லை.

வாராக் கடன்களில் பெரும்பாலானதை வசூலிக்க முடியாதது ஏன் என்றால், கார்ப்பரேட்டுகளால் மிகச்சிறந்த வழக்குரைஞர்களை வைத்துக் கொள்ள முடிகிறது; அரசியல்வாதிகளின் அணுக்கம் இருக்கிறது. இந்தக் கடன்களுக்கு ஈடாக வைக்கப்பட்ட சொத்துகளை விற்று கடனை திருப்பி வசூலிக்க முடிவதில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் 2,72,558 கோடி கடன்களை தள்ளுபடி (ரத்து) செய்தன என்றால், 2017 டிசம்பர் 31 உடன் உண்மையில் நிலுவையில் உள்ள வாராக்கடன்களின் தொகை 7,77,280 கோடி. ஆக, வங்கிகள் முழுவதையும் இன்னும் தள்ளுபடி செய்துவிடவில்லை. இன்னும் நிறையவே தள்ளுபடி செய்வார்கள்.

குறிப்பு : இந்தக் கட்டுரையை எழுதிய விவேக் கவுல்,. விவேக் கவுல் டயரி என்ற தலைப்பில் தெளிவான, ஆதாரபூர்வமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். மோடி சொல்லாத 25 விஷயங்கள் என்ற தலைப்பில் இவர் எழுதிய மற்றொரு கட்டுரையை ஓராண்டு முன் தமிழில் தந்திருக்கிறேன்.

மூலக்கட்டுரைக்கான இணைப்பு : 

நன்றி : ஃபேஸ்புக்கில் ஷாஜகான்

மதுரை ஒத்தக்கடை எவர்சில்வர் பட்டறை தொழிலாளர்களின் வாழ்க்கை அவலம் !

0

துரை ஒத்தக்கடை பகுதியில் எவர்சில்வர் பட்டறை தொழில் பல நூறு குடும்பங்களுக்கு வாழ்க்கையை வழங்கி வருகிறது. இன்று உலகம் முழுவதும் கொரானா வைரஸின் தாக்கம் அதன் தொடர்ச்சியாக 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருக்கும் இத்தகைய நிலைமையில் எவர்சில்வர் தொழிலாளிகளின் வாழ்க்கை நிலைமையை அறிய அவர்களின் வீடுகளுக்கு சென்றோம்.அதன் அனுபவம்.

எவர்சில்வர் தொழிலில் உற்பத்தி செய்யப்படும் பாத்திரம் பல பிரிவு தொழிலாளர்களின் கையில் சென்றுதான் முழுமையான பொருளாக உருவாகிறது. அதில் வெல்டர் – டிங்கர், பாலிசர், கட்டர், ஸ்பின்னர், ப்ரோக்கன் என பிரிந்து தொழிலாளர்களாகவும், தொழிற்சங்கங்களாகவும் செயல்படுகின்றனர். ஒவ்வொரு பிரிவு தொழிலாளர்களையும் பார்ப்பதற்கு திட்டமிட்டுக்கொண்டோம். முதலில்
வெல்டர் – டிங்கர் தொழிலாளர்களையும் அதன் பின் ஒவ்வொரு பிரிவு தொழிலாளர்களையும் சந்தித்தோம்.

முதல் சந்திப்பே ஒரு தொழிலாளி நகையை அடகு வைத்ததாகவும் வீட்டில் குழந்தைகளுக்கு வாங்கக் கூடிய பாலின் அளவை குறைத்துவிட்டதாகவும் கூறினார். அடுத்து வந்தவர் நகையை அடகு வைத்த கையோடு பணத்துடன் வந்தார் “இது தான் என் மனைவியிடம் இருந்த கடைசி தோடு இன்னும் சில மாதங்கள் ஊரடங்கு நீடித்தால் நானும் எனது குடும்பமும் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்” என கூறி கவலையுடன் சென்றார். பல தொழிலார்களின் நிலைமையும் அடகு வைப்பது கடன் வாங்குவது என சித்தரவதையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சில தொழிலாளர்களை பார்க்கும் போது காய்கறி விற்பது, டீ விற்பது என மாற்று வேலையை உருவாக்கியுள்ளனர். 100, 200 சம்பாதிக்கவே படாத பாடு படுகின்றனர்.

ஒரு குடும்பம் தினசரி முட்டை வியாபாரம் செய்ய 30கிலோமீட்டர் வரை தள்ளு வண்டியை இழுத்துக்கொண்டு 150ரூ சம்பாதிக்க நடையாய் நடக்கிறார்கள்.
மாற்று வேலை இல்லாதவர்கள் வேலை கேட்டு அலைகின்றனர். சமீபத்தில் அரசின் சில ஊரடங்கு தளர்வுகளால் கட்டிட வேலை ஏதாவது கிடைக்குமா என தவியாய் தவித்து அழைகின்றனர். எல்லோரிடத்திலும் உள்ள ஒரே ஒற்றுமை தங்கள் வயிற்றை சுறுக்கிக்கொள்வது மட்டுமே.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அரசின் புழுத்துப்போன அரிசியும், 1000ரூ பணமும் எப்படி எங்களை காப்பாற்றும் என பலரும் கேள்வியெழுப்பினர். வேலையிழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு 1000-ரூ நிதி வழங்கப்படும் என அறிவித்தார்கள். நலவாரியத்தில் பதிவு செய்து புதுப்பிக்காதவர்களுக்கு நிவாரணம் இல்லை என சொல்லிவிட்டார்கள். புதுப்பித்து வைத்துள்ளவர்களுக்கும் பணம் கொடுக்க 30 நாட்களாகுமாம் அதிலும் 500ரூ தான் வருமாம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அரசின் அடாவடித்தனத்தை பாருங்கள்.

மக்கள் கடன் வாங்கி, அடகு வைத்து, அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் பணமும் போதாமல் திண்டாடும் போது அரசோ 68 ஆயிரம் கோடி பணத்தை 50 கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்தது மக்கள்மனதில் விழுந்த பெரிய இடி. இப்போது தெரிகிறது இந்த அரசுக்கு வேண்டியவர்கள் யார்? வேண்டாதவர்கள் யாரென்று?

இந்த ஊரடங்கு முடிந்தால் கூட பட்டறை தொழிலின் நிலைமை மோசமாக இருக்கும் என்கிறார்கள். தொழிற்சங்கங்களின் உரிமைக்கான வேலை நிறுத்தங்கள் 2 மாதம் நடந்தால் அதன் பிறகு வேலை மீண்டும் சரியாக இயங்க 2மாதம் ஆகும் என்கிறார்கள். ஆனால் கொரானா பிரச்சனை முடிந்த பிறகும் வேலை சரியாக இயங்க எவ்வளவு மாதங்கள் நீடிக்கும் என்பது தெரியவில்லை என்கிறார்கள். காரணம் கேட்டால் “பாத்திரங்கள் செய்வதற்கான உலோகங்கள் சென்னை, மும்பையிலிருந்து தான் வர வேண்டும். பாத்திரம் செய்ய பயன்படும் கார்ப்பேட் கல் சீனாவிலிருந்து தான் வர வேண்டுமாம். இது போக திருவிழாக்கள் திருமணங்கள் என்றால் தான் அதிகமான பாத்திரங்கள் சந்தையில் விற்பனையாகும் கொரானா முடியும் வரை அதற்கும் வழியில்லை. ஏற்கனவே உள்ள திறமையான தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு செல்கிறார்கள். வேலை ஆரம்பித்தால் கூட சரியான வருமானம் இருக்காது. அதனால் வேலைகளுக்கு வர மாட்டார்கள். புதியவர்களும் வர வாய்ப்பில்லை ஒட்டுமொத்த தொழிலும் முடங்கிவிடும்” என கூறுகிறார்கள் பட்டறை நடத்தும் நிர்வாகிகள்.

படிக்க:
♦ டாஸ்மாக் கடையை மூடச் செய்த மதுரை பெண்கள் !
♦ இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா

இது போக தொழிலாளர்களின் வீட்டு வாடகை பிரச்சனை உருவெடுத்து வருகிறது. சில வீட்டுக்காரர்கள் கொரானா பிரச்சனை முடிந்தவுடன் வாடகையை வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளனர். சிலரோ நகையை அடகு வைத்தாவது இப்போதே கொடுங்கள் என நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். எப்படியும் கொரானா பிரச்சனை முடிந்தவுடன் இந்த வீட்டுவாடகை பிரச்சனையுடன் கடன்காரர்கள் பிரச்சனை, தொழில் முடக்கம் என தீரா நெருக்கடியை நோக்கி தொழிலாளர்களை இழுத்துச் செல்கிறது.

இப்படிப்பட்ட நிலைமையில் மக்களை பாதுகாக்க இந்த அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்ற கேள்வி நம்மை அச்சுருத்தும் அதே வேளையில் மோடிக்கு வழி சொன்ன 50 வருமான வரித்துறை அதிகாரிகளின் கதை நம்மை மேலும் கடும் கோபத்திற்கு உள்ளாக்கும். 50 வருமான வரித்துறை அதிகாரிகள் 1கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களிடமிருந்து 40%வரி வசூலிக்கலாம், கார்ப்பரேட்களிடமிருந்து கூடுதலாக 4%வரி வசூலிப்பதன் மூலமாக வரும் பணத்தை வைத்து கொரானா பிரச்சனையை சரி செய்யலாம் என சொன்னதற்கு மோடி அரசு “நீங்கள் தவறான கருத்துக்களை மக்கள் முன்பு தூண்டுகிறீர்கள் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவித்திருக்கிறார்கள். இருப்பவர்களிடமிருந்து கொஞ்சம் அதிகமாக வாங்கி மக்களை காப்பாற்ற வக்கற்ற இந்த அரசு இருப்பவர்களுக்கே 68,000கோடி பணத்தை தள்ளுபடி செய்ததை என்னவென்று சொல்வது?

மக்கள் பசியால் செத்தாலும் பரவாயில்லை. கார்ப்பரேட் முதலாளிகள் தங்கள் ஒரு மயிரைக்கூட இழக்க விடாமல் பாதுகாக்கிறது இந்த அரசு. மக்கள் கொடும் துன்பத்தை அனுபவித்து வரும் நேரத்திலும் அரசின் நிலை இதுவென்றால் சாதாரண நாட்களில் யோசித்துப்பாருங்கள்.

இதையெல்லாம் விட ஒருபடி மேலே போய் இந்த அரசு செய்யும் கொடுமை மிக கொடூரமானது. காய்கறி மளிகைப்பொருட்களின் விலை உயர்வு, டோல்கேட் கட்டணம் உயர்வு, சிறப்பு ரயிலில் வெளியூர் செல்லும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூல். டாஸ்மாக் சாராய வசூல் என மக்களை கொள்ளையிட தீவட்டிக்கும்பலைவிட மோசமாக களத்தில் இறங்கியுள்ளது இந்த அரசு.

இந்த நிலைமையில் எவர்சில்வர் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

  • கேரளா, டில்லியைப்போல் மாதம் நிவாரணத்தொகை வேண்டும். கொரானா பிரச்சனை முடிந்த பிறகும் 6 மாதம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்கின்றனர்.
  • அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ. -களின் பாதி சொத்துக்களை பிடுங்கி மக்களை பாதுகாக்க பயன்படுத்த வேண்டும்.
  • பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும்.
  • ரேசனில் முறையாக நல்ல அரிசி வழங்க வேண்டும். முறைகேடில்லாமல் மற்ற பொருட்களையும் வழங்க வேண்டும் என்கின்றனர்.

மக்கள் பொது இடங்களில் எப்போதும் வாழ்வாதாரப்பிரச்சனையைப் பற்றித்தான் விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற்றத்துடன் உள்ளனர். தன்னார்வளர்கள் மட்டும் உதவி செய்து மக்களை காப்பாற்ற முடியுமா என கேட்டால்; அரசு நினைத்தால் மட்டும் தான் மக்களை காப்பாற்ற முடியும் என தடுமாறாமல் கூறுகின்றனர். அரசை பணிய வைக்காமல் நமக்கு வாழ்க்கை இல்லை அதற்கு போராட்டமே ஒரே மருந்து.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மதுரை. தொடர்புக்கு : 82200 60452.

டாஸ்மாக் கடையை மூடச் செய்த மதுரை பெண்கள் !

சி பட்டினியோடு குடிமக்கள் துயரப்படுகிறார்கள் என்று ரேஷன் கடைகளில் அரிசி கூடுதலாக வழங்க உத்தரவிடவில்லை, மாறாக குடிமகன்கள் துயரப்படுகிறார்கள் என்று டாஸ்மாக் கடையைத் திறக்க மத்திய அரசுடன் அனுமதி வாங்கி உத்தரவிடுகிறார் ‘தாயுள்ளம் கொண்ட ஆட்சி’யின் தனயன் எடப்பாடி அவர்கள்.

மே 7 ந் தேதி சென்னை மாநகராட்சி தவிர தமிழகம் முழுமைக்கும் டாஸ்மாக் கடைகள் நெஞ்சில் ஈரமின்றி திறக்கப்பட்டன. ‘கொரோனா வீரர்களின்’ துணையோடு “கடமை, கண்ணியம், கட்டுபாடு” குறையாமல் 40 நாட்களுக்கு மேலாக இவர்களின் அனுமதியில்லாமல் எந்த வீட்டு வாசலிலும் கூட்டிப் பெருக்கி வாசலில் தண்ணிர் தெளிக்க முடியாத அளவுக்கு அதிகாரமும் தடிக்கம்பும் கொஞ்சம் நீண்டதாகவே இருந்ததை அனைவரும் பார்த்தோம்.!சரிதானே???

சேர் போட்டு, குடைப்பிடித்து, ஆறு அடி இடைவெளியை உறுதிசெய்தல் தொடங்கி கிட்டிவாசல் (டாஸ்மாக் வாசலில் கம்பு கட்டி கடையை சீரோடு நடத்துவதற்கு) கட்டி குடிமக்களின் ஜனநாயகப் பூர்வமான வரிசையை ஒழுங்கு படுத்துதல் வரை கூடுதல் அதிகாரமாக (ஸ்பெஷல்பவர்) வழங்கும் அதிகாரமும் கொரோனா வீரர்களுக்கு அரசு கண்ணியத்துடன் வழங்கியது. அவர்களும் கடுகளவுகூட கெளரவம் குறையாமல் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் இவர்களின் மொய்க் கணக்கு பொய்க்கணக்காக போகும் விதமாக தாய்மார்கள் தயாராகினார்கள். தமிழகமே தயாரானது. தாய்மார்கள் தலைமையில் ஆங்காங்கே போராட்டம் தன்னெழுச்சியாக விழாக்கோலம் பூண்டது. அதில் மதுரை செல்லூர் பகுதி மக்களின் போராட்டம் ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்தது.

மதுரை மக்களை விழாக்கோலத்திலும் சரி போராட்டக் களத்திலும் சரி சற்றும் பின்னுக்கு தள்ளி பார்க்க முடியாது என்றே சொல்லலாம். 2019 பிக்பாஸ் தேர்தலும் (பாராளுமன்றத் தேர்தல்) அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் ஒரேநாளில் வந்தது. பதறிப்போன சில தேர்தல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தேர்தலைத் தள்ளிவையுங்கள் யாரும் வாக்களிக்க வரமுடியாத போக்குவத்து சிரமும் வரும். இதையெல்லாம் தாண்டி மக்கள் வாக்களிக்க வர ரிஸ்க் எடுக்க மாட்டார்கள் என்று முறையிட்டார்கள். ஆனாலும் இரண்டும் ஒரே நாளில் நடந்தது. மக்கள் அனைவரும் ஆத்துக்குப் போனார்களே தவிர பூத்துக்குப் போகவில்லை. வாக்கு சதவீகிதம் சற்றுக் குறையத்தான் செய்தது. தேர்தல் நம்பிக்கையை விட திருவிழா நம்பிக்கை ஓரளவுக்கு வென்றது எனச் சொல்லலாம்.

சரி சங்கதிக்கு வருவோம். இப்போதும் கொரோனாவை அடக்கி ஒடுக்கிக் கட்டுப்படுத்த தடிக்கம்பில் அதிகாரம் தரிக்க முச்சந்தியில் நின்றார்கள் கொரோனா வீரர்கள். கையில் கிடைக்கும் முள்ளுக்கம்பையெல்லாம் உடைத்து வைத்துக்கொண்டு பால், தண்ணி, பலசரக்கு வாங்கப் போனவர்கள் எல்லாரிடமும் அதிகாரம் செலுத்தி அவமானப்படுத்திய துன்பங்களையெல்லாம் மக்கள் கொரோனாவிற்காகக் பொறுத்துக் கொண்டார்கள்.

வீட்லயிருக்கச் சொன்ன ‘தாயுள்ளம் கொண்ட’ ஆட்சியாளர்கள் ரேஷனில் போட்ட அரிசியில் புழுத்துப்போன அரிசிக்கும் புழுவுக்கும் பஞ்சமில்லை. கையில காசுமில்ல. நல்லது பொல்லது வாங்கித் திண்ணவும் கடையில்ல. யார்கிட்டையும் கைய நீட்டி கடனும் கேட்க முடியல. அக்கம் பக்கத்துலயும் அதே நிலைதான். தன்மானம் தடுக்குது. பிள்ளைக ஆசப்பட்டுக் கேட்டத எதுவும் வாங்கிக் கொடுக்க காசுமில்ல கடையுமில்ல. புள்ளைக மூஞ்சி வீங்கிப் போறதையும் பாக்க முடியல.
இந்த துயரப் பட்டியல் நீண்டது. பட்டப்பாடும் கொடியது. தீப்பட்டு வெந்துப்போன நிலையில் உள்ள மக்களிடம் சிறிது மகிழ்ச்சின்னா அது வூட்ல உள்ள ஆளுக தான். குடிக்காமல் சண்டை தண்ணியில்லாமல் இருப்பதே போதும் என்கிற நிம்மதியில் மக்களின் துயரம் சற்று இளைப்பாரியது.

படிக்க:
♦ இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா
♦ மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !

வெந்தப்புன்னுல வைக்கல வச்சுத் தேச்சு விடுவது போல இருந்தது டாஸ்மாக் திறப்பதற்கான அறிவிப்பு.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் அலங்காநல்லூரை மையம் கொண்டு தமிழத்தை பற்றிய போது மதுரை செல்லூர் பகுதி மக்களும் ஓடும் ட்ரெயினில் ஏறிக்கொண்டு ரயிலை நிறுத்தி மறியல் செய்தார்கள்.

அதே செல்லூர் பகுதியில்தான் டாஸ்மாக் போர் எந்த இயக்கங்களின் தூண்டுதலுமில்லாமல் தன்னெழுச்சி என்பதைவிட, தன்னுணர்வோடு தயாராகினாா்கள். கடை திறக்கும் முதல்நாள் இரவே கர்ணன் என்பவரும் மற்றொருவரும் இணைந்து பகுதி மக்களிடம் கூடிப் பேசி முழக்கங்கள் தயாராகின. “உணவு கொடு, மருந்து கொடு, போதையை கொடுக்காதே! இளைஞர்களை சீரழிக்காதே!” எனும் முழக்க அட்டைகளுடன் டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே முற்றுகையிட்டனர். முன்னணியில் நின்ற பெண்கள் 55 வயதுக்கு மேலான முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள்தான் ஷட்டரை இழுத்து சாத்தியவர்கள்.

சிறிது நேரத்தில தனி அதிகாரமும் அடாவடித்தனமும் நிறைந்த “டெல்ட்டா போர்ஸ்” டீம் வந்தது. ஆம் புதியதாக திருமணம் முடித்திருந்த டயர் தொழிலாளி விவேகானந்தனை கொன்ற அதே டெல்ட்டா தான். “மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின்” வழக்கறிஞர் தோழர்கள் போராடியும், மேநாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்களும் இணைந்து கொண்டு டெல்ட்டா போர்ஸ் ஒரு ‘சட்ட விரோத துறை’ இதை நீக்குங்கள்! என்று குரல் கொடுத்தார்களே! அதே டெல்ட்டா கும்பல்தான்.

பேச்சுவார்த்தையில் ஒரு போலிசுமட்டும் பழைய உளுத்துப்போன டயலாக்கைப் பேசினார். “ஏம்மா இங்கே வந்து போராடுரீங்க, உங்க பிள்ளைகளையும் வூட்டுக்காரனையும் ஒழுங்கா குடிக்க வராம வூட்லயே இருக்கச் சொல்லுங்கம்மா” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே இரு ஆண்களை மட்டும் நேக்கா கைது செய்கிறோம் என வண்டியில் ஏத்த, அங்கேயிருந்த மக்கள் “எங்களையும் கைது செய்யுங்கள்” என்று வண்டியில் ஏற அது ஒரு போராட்டமாக மாறி டெல்ட்டா பின்வாங்கியது. “அனைவரும் கலைந்து செல்லுங்கள்… கடையைத் திறக்க மாட்டார்கள்..” என வாக்குறுதியோடு மக்களை மடைமாற்றியது.

ஒரு நெல்லிக்காய் வியாபாரம் பார்க்கும் பெண் தொழிலாளி கூறினார். நெல்லிக்காய் வியாபாரத்தை ஒரு ஓரத்தில எங்க வண்டியை (இருசக்கர வாகனம்) நிறுத்தியிருந்ததற்கு போலீசு புடிச்சுட்டுப்போய் ஊரடங்குப் போட்ருக்கோம் உங்கள யாரு வண்டிய ரோட்ல நிறுத்தச் சொன்னது என்று பேசி 2000 ரூபாயை புடுங்கிகிட்டுத்தான் விட்டாங்கப்பா., ஏன் இந்த சாராயக் கடைய திறந்து எல்லாரும் முண்டியடிச்சிட்டுத்தான் நிக்கிறாங்க இங்க கொரோனா வராதா என்னா?? நம்மள எல்லாப்பேரும் ஏமாத்துறாங்கப்பா என்றார். ஒட்டு மொத்த அரசின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையின் மீது நம்பிக்கையற்றுப் பேசினார் அந்தப்பெண் தொழிலாளி.

அவன் 40 நாள் வூட்லையே கிடந்தான். கடை திறந்ததுலயிருந்து போனவன்தான் இன்னமும் ஆளேக்காணோம். எப்ப வருவானோ எப்புடி வருவானோ என்று வயித்தெறிச்சலுடன் புலம்பினாா். வருமானமில்லை இருந்த காசும் வூட்டு செலவுக்கே காலியாப் போச்சு. கடையத் திறந்தா குடிக்க காசு குடுன்னு கேப்பானுக. நான் எங்கேயிருந்து கொடுக்குறது. காசு இல்லையின்னா வூட்ல சாமான்களை எடுத்துட்டுப் போயி வித்து குடிப்பாங்க. எதிர்த்து கேட்டா அடிப்பானுக..
என்றார்.

யாரும்மா உங்கப் பையனா? என்று கேட்டதற்கு இல்லப்பா வூட்டுக்காரர் என்றார் அந்தம்மா. மேலும், அலங்காநல்லூர்ல தாயும் பிள்ளையும் மண்ணெண்ணெய ஊத்திக் கொளுத்திக்கிட்டாங்களாமே? இனி எல்லா வூட்லையும் அதானப்பா நடக்கப்போகுது என்றார். சமூகப் பதற்றத்தை உருவாக்கிய அரசின் டாஸ்மாக் ஏற்படுத்திய விளைவுகளை, கவனித்த துயரத்தை கவலையுடன் தாய் உள்ளத்துடன் பகிர்ந்தார் அந்தப் பெண் தொழிலாளி.

இதே ஏரியாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர், வான்புகழ் பெற்ற செல்லூர் ராஜூ உள்ளார். அவர்தான் ‘தாயுள்ளம் கொண்ட’ அம்மாவின் புனித ஆத்மாவின் ஆட்சியை நேரடியாக வைகை ஆத்துக்கே இறக்கி வந்து ஆட்சி செய்பவர். அவர் டாஸ்மாக் திறக்கும் முடிவு குறித்த பேட்டியில் “இந்த முடிவை அரசு விரும்பி செய்யவில்லை, மதுப்பிரியர்களின் நலன்கருதியும் பொருளாதாரத்தை சரிசெய்யவும் எடுத்த முடுவு” என சிலாகித்துப் பேசிவிட்டு, கொரோனா சமூகப் பரவுதலை தடுக்கும் நோக்கத்துக்கு தடை போட்டுள்ளோம். ஆகையால் தனித்திருங்கள், வீட்டிலேயேயிருங்கள், ஊரடங்கு நீட்டிக்கக் கூடாதென்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று கொரோனா போதனை வேற கூறிவிட்டு பாதுகாப்பாக வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

ஆனால் மக்கள் கண்ணை மூடிக் கடவுளை வேண்டவில்லை, கண்ணைத் திறந்து விழிப்புடன் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டு சொல்கிறார்கள் “மூடு டாஸ்மாக்கை!” என்று. இந்த விழிப்புதான் டாஸ்மாக்கை மூடும். இந்த விழிப்பைப் பற்றிப் படரச்செய்வோம்!ஆட்சியாளர்களின் உறக்கத்தைக் கெடுப்போம்! விழிப்பை விரிவுப்படுத்துவோம்!

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை ஒத்தக்கடைப்பகுதி.

அவுரங்காபாத் விபத்து மட்டுமல்ல, கொரோனா ஊரடங்கால் 383 பேர் இறந்திருக்கிறார்கள் !

1

டந்த வெள்ளிக்கிழமை, மத்திய பிரதேசத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்கு ரயிலில் செல்லலாம் என்ற நம்பிக்கையுடன் அவுரங்காபாத் ரயில் நிலையத்திற்கு செல்ல முயன்றபோது 16 இடம்பெயர் தொழிலாளர்கள் சரக்கு ரயில் மோதி கொல்லப்பட்டனர்.

சாலைகளில் சென்றால் காவல்துறையினரால் தாக்கப்படுவோம் என்கிற அச்சத்தில் ரயில்கள் ஓடவில்லை என்ற அறிவோடு அவர்கள் ரயில் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள். பல மணி நேரம் நடந்த பிறகு, தொழிலாளர்கள் களைத்துப் போன நிலையில், அவர்கள் ஓய்வெடுக்க அமர்ந்து அப்படியே தூங்கியும் விட்டார்கள். அதிகாலை 5.20 மணியளவில் அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ரயில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது.

இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவின் ஜல்னாவில் உள்ள ஒரு தனியார் எஃகு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள், மார்ச் 24 முதல் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து அவர்களது சம்பளம் பெறப்படவில்லை. அவநம்பிக்கையான சூழ்நிலையையும், அவர்கள் எப்போது மீண்டும் வேலை செய்ய முடியும் என்று தெரியாமலும், தங்கள் குடும்பங்களுடன் இருக்க வீடு திரும்ப விரும்பினர். வீடு திரும்ப ஒரு ரயிலைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் நடக்க முடிவு செய்தனர்.

சனிக்கிழமை இரவு நடந்த மற்றொரு விபத்தில், மத்தியப் பிரதேசத்தின் நர்சிங்பூர் மாவட்டத்தில் 18 இடம்பெயர் தொழிலாளர்கள் பயணித்த லாரி கவிழ்ந்ததில் ஐந்து தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் ; 13 பேர் காயமடைந்தனர். தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரத்திலிருந்து உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்கு மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரியில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

கோவிட் – 19ஐத் தவிர ஊரடங்கு காலத்தில் மற்ற காரணங்களுக்காக உயிர்களை இழந்தவர்கள் இந்த இரண்டு விபத்துக்களில் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல…

படிக்க:
♦ இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா
♦ விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !

உண்மையில், ஆய்வாளர்கள் தேஜேஷ் ஜி.என்., கனிகா சர்மா மற்றும் அமன் ஆகியோரின் கூற்றுப்படி, சனிக்கிழமை வரை, நோய்த் தொற்று தவிர மற்ற காரணங்களால் ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்து 378 பேர் இறந்துவிட்டனர். அவர்களில், 69 பேர் தங்கள் வீடுகளுக்கு நடந்து செல்லும் போது ரயில் அல்லது சாலை விபத்துக்களில் இறந்தவர்கள் – கிடைக்கக்கூடிய ஒரே பயண முறையான பொதுப் போக்குவரத்து பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இது முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

மே 10-ஆம் தேதி வரையான கணக்குப்படி,

  • நிதி நெருக்கடி மற்றும் பட்டினியால் இறந்தவர்கள் 47 பேர் நடந்ததாலும்,
  • வரிசையில் நின்றதாலும் களைத்து இறந்தவர்கள் 26 பேர்,
  • போலீசு அராஜகத்தாலும் அரசு வன்முறையாலும் கொல்லப்பட்டவர்கள் 12 பேர்
  • முதியோர் அல்லது நோயாளிகளுக்கு போதிய மருத்துவ கவனிப்பின்மையால் உயிரிழந்தோர் 40 பேர்
  • தொற்று அச்சம், தனிமை, ஊரடங்கால் சுதந்திரமாக இயங்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டவர்கள் 83 பேர்.
  • மதுவை நிறுத்தியதால், மது பழக்கம் தொடர்பான மரணங்கள் மற்றும் தற்கொலைகள் 46
  • நடப்பதாலும், இடம்பெயர்வதாலும் சாலை அல்லது ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் 74 பேர்.
  • ஊரடங்கு தொடர்புடைய குற்றங்களால் (மதம் அல்லாத) நிகழ்ந்த மரணங்கள் 14.
  • காரணம் கண்டுபிடிக்கமுடியாத உயிரிழப்புகள் 41.

செய்தி ஊடகங்களில் வந்த தகவல்களைத் தொகுத்து, குழுவால் ஒன்றிணைக்கப்பட்ட தரவுத்தளம், ‘சுயாதீன அறிஞர்கள் மற்றும் மாணவர் சார்ந்த தன்னார்வலர்கள் நடவடிக்கை சார்ந்த ஆய்வு, சமூக-பொருளாதார உரிமைகள் மற்றும் தொடர்புடைய சிக்கல்களில் ஆர்வமுள்ளவர்கள்’ என்ற குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது சாலை விபத்துக்கள், பட்டினி கிடத்தல், மருத்துவ பராமரிப்பு மறுப்பு, போலீசின் மிருகத்தனம், சோர்வு, தற்கொலைகள் போன்ற காரணங்களுக்காக ஏராளமான மக்கள் இறந்துவிட்டனர் என்பதைக் காட்டுகின்றன.

“ஊரடங்கு தொடங்கப்பட்ட உடனேயே, இறப்புகள் பற்றிய பல செய்திகளைப் பார்க்கத் தொடங்கினோம். வீட்டிற்கு திரும்பிச் செல்லும்போது மக்கள் இறக்கின்றனர், சுகாதாரப் பாதுகாப்பு மறுக்கப்பட்டதால் பெண்கள் இறக்கின்றனர். இந்த மரணங்கள் மிகவும் வேதனையளித்தன” என்கிறார் அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் பி.எச்டி படித்து வரும் கனிகா சர்மா.

அவர்களின் தொகுப்பின்படி, அவுரங்காபாத்தில் குடியேறிய 16 தொழிலாளர்களின் மரணமே, அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்ட ஒற்றை நிகழ்வு. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 28 க்குப் பிறகு, வீடு திரும்பிய 8 குடியேறிகள் கர்நாடகாவின் ராய்ச்சூரில் சாலை விபத்தில் கொல்லப்பட்டனர்.

கொரோனா வைரஸ் அல்லாத இறப்புகளில் (83) இதுவரை அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் தொற்று பயம், மதுவை நிறுத்தியதற்கான அறிகுறிகள் மற்றும் வேலை இழப்பு போன்ற காரணங்களுக்காக நிகழ்ந்தன. பட்டினி, மருத்துவ கவனிப்பு மறுப்பு மற்றும் வீட்டிற்கு நடந்து செல்லும்போது அல்லது ரேஷன் அல்லது பணத்திற்காக வரிசையில் நிற்கும்போது ஏராளமான மக்கள் இறந்துள்ளனர்.

தகவல்களை ஒன்றாக இணைக்க, ஆராய்ச்சியாளர்கள் கன்னடம், மராத்தி, ஒடியா, தெலுங்கு, பெங்காலி, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கூகிள் அலர்ட்களை அமைத்துள்ளனர். “நாங்கள் கூகிள் தேடல்களைச் செய்கிறோம், மேலும் மக்கள் எங்களுக்கு செய்திகளை அனுப்புகிறார்கள். நாங்கள் அவற்றை சரிபார்க்கிறோம், அவற்றை மொழிபெயர்க்க தன்னார்வலர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள்” என்கிறார் கனிகா.

‘நம்பகமான’ செய்தி ஆதாரங்களால் அறிவிக்கப்பட்ட இறப்புகளை மட்டுமே ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். “இதில் வரம்புகள் உள்ளன. நாங்கள் நேரடியாக சரிபார்க்க முடியாது. நாங்கள் நிறைய இறப்புகளை கணக்கில் கொள்ளவில்லை. உள்ளூர் ஊடக செய்திகள் எங்களை அடையவில்லை. மேலும், நிறைய இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை” என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வசித்து வந்த, உணவுக்காக பயணிகளை நம்பியிருந்த 80 வயது நபர் ஊரடங்கு விதிக்கப்பட்ட பின்னர், பயணிகள் யாரும் இல்லை என்பதால் இறந்தார். முதல் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு புறப்பட்ட பெற்றோருடன் 100 கிலோமீட்டர் தூரம் நடந்து 12 வயது சிறுமி சோர்வு காரணமாக இறந்தார்.

சர்மாவின் கூற்றுப்படி, தரவுகளிலிருந்து வெளிவந்த ஒரு தெளிவான முறை என்னவென்றால், இறப்பவர்கள் விளிம்பு நிலையில் வாழ்கிறார்கள். “இவர்கள் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் புலம்பெயர்ந்தோர் மற்றும் தொழிலாளர்களாக உள்ளனர். பதிவான மரணங்களில் பெண்களைவிட அதிகமான ஆண்கள் அதிகமாக உள்ளதை நாங்கள் கண்டோம், ஏனெனில் ஆண்கள் வேலைக்குச் செல்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

ஏராளமான பெண்கள் தற்கொலை செய்து கொண்டதையும் பார்க்க முடிகிறது. உதாரணமாக, பெற்றோரின் வீட்டிற்கு செல்ல முடியவில்லை என்ற காரணத்தால்…
“இவை அந்த பெண்கள் புண்படுத்தக்கூடிய உறவுகளில் இருந்ததால் விளைந்த நிகழ்வுகளாக இருக்கலாம்” என கனிகா யூகிக்கிறார்.

COVID-19 பயத்தால் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் சிகிச்சை மறுக்கப்படுவது மற்றொரு வகையான மரணங்களுக்குக் காரணம். தெலுங்கானாவில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஆறு மருத்துவமனைகளால் திருப்பி விடப்பட்டதாக ஏப்ரல் மாதம் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அவர் COVID-19 க்கு பரிசோதிக்கப்பட்டு, முடிவுகள் எதிர்மறையாக வந்த பின்னரே அரசாங்க மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாமதம் காரணமாக, குழந்தை சிக்கல்களுடன் பிறந்து இறந்தது. ஒரு நாள் கழித்து, அந்தப் பெண்ணும் இறந்தார்.

இதேபோன்ற மற்றொரு நிகழ்வில், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இரட்டைக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சரியான நேரத்தில் மருத்துவ வசதி மறுக்கப்பட்டதால் இறந்தார். உள்ளூர் நிர்வாகத்தால் ‘சிவப்பு மண்டலம்’ என வகைப்படுத்தப்பட்ட ஒரு பகுதியில் வசிப்பவர், அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் தயங்கினர்.

ஊரடங்கின் விளைவாக நிகழ்ந்த அனைத்து மரணங்களும் தங்களுடைய தொகுப்பில் இல்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“இந்த மரணங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும்: இறப்புகளில் ஒரு பகுதியே ஊடகங்களில் பதிவாகியுள்ளன, உள்ளூர் ஊடகங்களிலும் பதிவான சில மரணங்களை நாங்கள் தவறவிட்டிருக்கலாம்” என அவர்கள் கூறுகின்றனர்.


செய்தி கட்டுரை: கபீர் அகர்வால்
கலைமதி

நன்றி : த வயர்

இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா

ன்றரை மாதங்கள் ஆகப்போகிறது இந்த ஊரடங்கை அறிவித்து. வெறும் நான்கே நான்கு மணிநேரங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டு எல்லோரும் கூடடையுங்கள் என விரட்டியடித்த உலகின் மிகப்பெரிய நிகழ்வு. டீமானிடைசேஷன் என்ன செய்ததோ அதையேதான் இந்த ஊரடங்கும் இந்தியாவுக்கு செய்துகொண்டிருக்கிறது. இனியும் செய்யும்.

ஊரடங்கால் தொழில் அகதிகள் எல்லாம் வருமானத்திற்கு வழியில்லாமல் உணவுக்காக அலைந்து திரிந்து தவித்தபோது… பசியோடு ஒருவரைக் கூட தவிக்க விடமாட்டோம்… என்கிற சூளுரைகளை நிதி அமைச்சர் நமக்கு வழங்கினார். ஆனால் நாற்பது நாள்களா நாடே பசியின் கொடுமையால் துடித்தது. இப்போதும் துடித்துக்கொண்டிருக்கிறது. எத்தனையோ பேர் பசியால் செத்துப்போனார்கள். தொழில் நசிந்து தற்கொலை செய்துகொண்டார்கள்.

பொருளாதார பின்னடவை சமாளிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு கையாளப்படும் என்றார் பிரதமர். இன்றுவரை அந்த குழு என்ன புடுங்கிக்கொண்டிருக்கிறது… அதனால் விளைந்த பயன் என்ன யாருக்கும் தெரியாது. வீட்டிற்குள் இருந்து தன்னுடைய தட்டுகளால் சத்தமெழுப்பியதை தவிர நிதியமைச்சர் செய்த உருப்படியான காரியம் என்னவென்று யாருக்காவது தெரியுமா…

தொழில்கள் நசிந்துவிட்டன. வேலை இழப்புகள் கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவுக்கு எட்டியிருக்கிறது. சம்பளத்தை குறைக்காதீர்கள், வேலையை பறிக்காதீர்கள் என்று சொன்ன அரசு… ஆனால் யாருமே செய்யவில்லை. எப்படி செய்ய முடியும். என்னதான் மோடி ஆதரவு சங்கியாகவே இருந்தாலும் நஷ்டத்தில் இயங்கும்போது யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியும் மீறி தொழிலாளர் நலனை காக்கிற நிறுவனங்களுக்கு உரிய நிதிபாதுகாப்பை இந்த அரசுகள் அளித்திருக்க வேண்டாமா… இதுவரை அப்படி எதாவது அறிவிப்புகளை நீங்கள் கண்டீர்களா? அதையும் செய்யவில்லை. வருமானமில்லாமல் தொழில் நடக்காமல் எந்த சிறுகுறு தொழில் முதலாளியும் தொடர்ச்சியாக சம்பளம் கொடுக்க முடியாது. காரணம் இங்கே சிறுகுறு மைக்ரோ லெவல் தொழில் நடத்துகிறவனும் ஒருவகையில் தொழிலாளிதான். அவனுடைய நிதிநிலைக்கு உதவிக்கரம் நீட்டாமல் வெறும் வாய்ஜாலாங்களால் நிகழ்த்தி காட்ட இது என்ன மதக்கலவரமா… சாதிக்கலவரமா… சொன்னதும் ஆளுக்கு ஒரு அரிவளோடு சென்று கண்டவனையும் வெட்டித்தள்ள.. இது உயிர்காக்கும் நடவடிக்கை. இங்கே சொல்லைவிட செயல்தான் பேசும்.

படிக்க:
♦ பசியை போக்குவோம் ! விழுப்புரம் மக்கள் அதிகாரம் முயற்சியில் கரம் சேருங்கள் !
♦ குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்

கொரானாவுக்கு எதிரான போரில் அனைவரும் கைகோர்ப்போம் என்றார் பிரதமர். இந்தியாதான் கொரானாவை மிகச்சரியாக கையாளுகிறது. உலக நாடுகளே மோடிதான் சிறந்த பிரதமர் என்கிறார்கள் என்று வாட்ஸ் அப் வட்டாரங்கள் எல்லாம் கொண்டாடித்தீர்த்தன. சொல்லப்போனால் கொரானாவை வைத்து தன்னுடைய கட்அவுட்டை இன்னும் நான்கு அடி உயர்த்திக்கொள்ளத்தான் பார்த்தார் பிரதமர். இதை மிகச்சரியாக கையாண்டிருந்தால் அது நாற்பதடி கூட உயர்ந்திருக்கும். ஆனால் அதை செய்ய மிகுந்த பொருப்புணர்வும் ஆளுமையும் வேண்டும். வெற்று உதார்களால் உதவாது. அவர் கைதட்டசொன்னார்… விளக்குப்பிடிக்க சொன்னார்… ஹெலிகாப்டர் வைத்து பூத்தூவசொன்னார். ஒரு கொள்ளைநோயை கையாளும் விதம் இதுதானா.

இதுபோன்ற வெத்து பம்மாத்துகள் எதுவும் ஒரு கொள்ளைநோயை கட்டுப்படுத்துவதில் உதவாது. முறையான திட்டமிடலும் அறிஞர்களின் சரியான வழிகாட்டுதல்களும் அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிற அதிகாரிகளும்தான் தேவை. தொடர்ச்சியாக பல்வேறு அரசு நிறுவனங்களும் ஆய்வு நிறுவனங்களும் இந்த ஊரடங்கு காலத்திலும் கூட எச்சரிக்கைகளை கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால் அதை காதுகொடுத்து கேட்பதற்கு அரசு தயாராக இல்லை. இந்த அரசுக்கு காதுகள் கிடையாது.

ஜெயலலிதா காலத்தில் எப்படி ஒருநபர் ஆட்சி தமிழகத்தில் நடந்ததோ அதுபோல இன்று இந்தியாவில் நடப்பது இருநபர் ஆட்சி. எல்லா முடிவுகளுக்கும் இந்த இருவர் அனுமதிக்காக காத்திருக்கவேண்டும். காத்திருந்து காத்திருந்து மக்கள் செத்துக்குவிந்தாலும் காத்திருக்கவேண்டும். அவர்கள் தூங்கி எழுந்து வரும் வரை காத்திருக்க வேண்டும். அவர்களுடைய கழிவறை வாசலில் தவமிருக்கவேண்டும். இந்திய விஞ்ஞானிகளும் அறிஞர்களும் அப்படித்தான் இன்று காத்திருக்கிறார்கள். மேமாதம் அறிவித்த மூன்றாவது ஊரடங்கிலும் கூட இதே மெத்தனம் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு ஜோசியக்காரர்கள் மீது இருக்கிற மரியாதை கூட அறிவியலாளர்கள் மீது இருக்கிறதா என்று தெரியவில்லை.

இன்று மற்ற நாடுகளில் எல்லாம் கொரானா ஒரளவு கட்டுக்குள் வரத்தொடங்கி இருக்கிறது. பலி எண்ணிக்கை குறைகிறது. பாதிப்பு எண்ணிக்கை பன்மடங்கு குறைந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது. கொரானா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கவேண்டிய அரசோ… போர் உச்சத்தை எட்டுகிற சமயத்தில் நம்மை சானிட்டைசர் போட்டு கைகழுவிவிட்டது. இனி நாம் கொரானாவோடு வாழப்பழகவேண்டும் என்று அறிவிக்கிறார் சுகாதார செயலாளர்.

படிக்க:
♦ டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

இந்தியா இன்று இரண்டு விதமான சிக்கல்களை எதிர்கொள்கிறது. ஒன்று கொரானாவை இந்தியா நினைத்தபடி வெறும் ஊடரங்கால் மட்டுமே கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் தாக்கம் நினைத்துப்பார்க்கவும் முடியாத அளவில் வளர்ந்துகொண்டே செல்கிறது. இரண்டாவது இந்தியாவை சூழும் வறுமை. ஒருபக்கம் வேலையிழப்பால் அவதிறும் மக்கள். தொழில்நசிந்து போனதால் திண்டாடும் முதலாளிகள். அதன் தொடர்ச்சியாக வீழும் இந்திய பொருளாதாரம்.

அதோடு இந்தியாவின் பிரதான சாலைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் இடம்பெயருகிறார்கள். இந்த தொழில் அகதிகளை மீட்கவோ அவர்களை உரிய இடத்தில் சேர்க்கவோ அவர்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவோ அரசு எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. போர்க்கதைகளில் மட்டுமே படித்த பசியோடு குடும்பம் குடும்பமாக நிகழும் இந்த இடப்பெயர்வுகளை முதன்முறையாக நாம் வாழும் காலத்தில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு நிர்கதியாக விடுகிற போர்ச்சூழலும் இங்கே இல்லை. அரசு நினைத்தால் வாகனங்களை ஏற்பாடு செய்து இந்த அகதிகளை மீட்கவும் முடியும். ஆனால் இவர்கள் அடையாளமிலிகள். இவர்களுக்கு ஆதார் அட்டையோ வாக்களர் அட்டையோ வாக்குகளோ கூட இருக்குமா தெரியாது. இவர்களுடைய வாக்குகளால் ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்புகளில்லை. கிரிகெட் ஸ்கோர் போல அன்றாடம் வந்து விழும் கொரானா பட்டியல்கள் போல இந்த நீண்ட பயணங்களில் பசியால் பிணியால் சோர்வால் இறந்துபோகிறவர்கள் எண்ணிக்கைகள் எங்கும் வரக்காணோம்.

ஊரடங்கை திட்டமிடும்போது ஒழுக்கமாக திட்டமிட்டிருந்தால் இன்று இந்த நிலை உருவாகி இருக்காது. ஆனால் அவசரம். அதில் ஒரு விளம்பரம் தேடவேண்டும். ஒரு ஹீரோயிசம் காட்டவேண்டும். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபர் உரையாற்றுவது போல டிவியில் முகத்தை காட்டி பேசவேண்டும். பிரதமரின் இந்த முட்டாள்தனங்களுக்கு சப்பைக்கட்டு கட்ட பெரும்பான்மை ஆதரவு என்கிற ஊரில் பிணந்தின்னிகளுக்கு கொண்டாட்டம்தான்.

கொரானாவை இந்தியாவிலேயே சிறப்பாக கையாண்டது கேரளா மட்டும்தான். அவர்களால்தான் உருப்படியாக இந்த கொள்ளை நோயை கையாள முடிந்தது. ஆரம்பத்தில் அதிக கேஸ்கள் கொண்டிருந்த மாநிலம் இன்று பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவ வசதிகளை மருத்துவர்ளை கொண்ட தமிழ்நாடே திணறிக்கொண்டிருக்கிறது. காரணம் என்ன? முடிவெடுக்கும் திறன். ஆரம்பத்திலேயே பினராயி விஜயன் செய்தது ஒன்றுதான்… தன்னை இந்தியா என்கிற கூட்டமைப்பிலிருந்து விலக்கிக்கொண்டு அதன் உதவிகளுக்கோ முடிவுகளுக்கோ காத்திருக்காமல் அவர்களாகவே கொரானாச்சூழலை கையாளத்தொடங்கியதுதான். நம்முடைய அடிமை அரசோ இப்போதும் மேலிடத்து உத்தரவுக்காக டயர்களை வணங்கி காத்திருக்கிறது. பழக்கப்படுத்தப்பட்ட மிருகம் அப்படித்தான் சவுக்கு சத்தமில்லாமல் அதனால் இயங்க முடியாது. ஆனால் அறிவற்ற சவுக்குகள் அடுத்து என்ன செய்வது என்பதைக் குறித்து எந்த திட்டங்களுமற்றவை. கலவரங்களை உருவாக்குவதை மட்டுமே அறிந்தவை. யோசித்துப்பாருங்கள் இந்த ஆட்சியாளர்கள் ஏன் எதை முன்னெடுத்தாலும் அது ஒரு கலவரச்சூழலுக்கே நம்மை தள்ளுகிறது.

மக்களுடைய உயிர்குறித்து எந்தவொரு அக்கறையும் இல்லாத அரசு இது. அதிலும் அகதி உழைப்பாளர்களின் உயிருக்கெல்லாம் மயிரளவுக்குகூட இங்கே மதிப்பு கிடையாது. அதனால்தான் கர்நாடகாவில் கட்டுமான நிறுவனம் கேட்டுக்கொண்டது என்று ஊருக்கு திருப்பி அனுப்பவேண்டிய தொழிலாளர்களை அனுப்பாமல் பிடித்து வைக்கிறார்கள். ரயில்தண்டவாளங்களில் சாலைகளில் மனிதர்கள் செத்துவிழுகிறார்கள். அதைப்பற்றி எங்காவது பிரதமரோ அவரை இயக்கும் நிழல்பிரதமரோ அமைச்சரவையின் வேறுயாருமோ எதாவது அறிவித்து பார்த்தீர்களா… செத்துப்போகிறவன் எவனோ ஏழை என்கிற மெத்தனத்தில்தானே நாம் இருக்கிறோம். இந்த அரசு இந்த நாற்பது நாள்களில் அந்த அகதி தொழிலாளர்களை எப்படி கையாண்டதோ அப்படித்தான் அடுத்த நாப்பது நாள்களும் நம்மையும் கையாளப்போகிறது. சாலைகளில் நடக்கும் அகதிகளின் நிலை நமக்கும் நாளை வரக்கூடும். நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த நீண்டசாலைகளில் வறண்ட நாவுகளோடும் பசித்த வயிறுகளோடும் நடப்பதை தவிர…

முகநூலில்:Athisha Vino(அதிஷா)

disclaimer

பசியை போக்குவோம் ! விழுப்புரம் மக்கள் அதிகாரம் முயற்சியில் கரம் சேருங்கள் !

ணக்கம்,

கொரோனா நோய் தொற்றின் காரணமாக அரசு அமுல் படுத்தியுள்ள ஊரடங்கால் முடங்கிப்போய் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவிக்கின்றனர்.

மத்திய மாநில அரசுகள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அளவில் நிதியும்,  உணவு பொருட்களும் வழங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைத்து போராடுவது தங்களுக்கு தெரியும். அதே வேலையில் கொரோனா நிவாரண உதவிக்காக பசியைப் போக்குவோம் குழுவின் சார்பில் முடிந்த அளவில் நண்பர்கள், ஆதரவாளர்களிடம் நிவாரண பொருட்களை திரட்டி தமிழகம் முழுவதும் மக்களுக்கு உதவி வருகிறோம். அதன்படி 08.05.2020 அன்று  காலை 11.00  மணியளவில் விழுப்புரம்  9- வது வார்டு முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியில் உள்ள  குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நிவாரண பணியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு அவரவர் இல்லங்களுக்கே சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கபட்டது. அப்போது அப்பகுதி மக்கள்  அனைவரும் தினக்கூலிகள் தான் என்றும் நாங்கள் எந்த வருமானமும் இன்றி  மூன்று வேலை உணவுக்கு வழி   இல்லாமல் தவித்து வருகின்றோம். எனவே நாங்கள் நிவாரண பொருட்களை எதிர் நோக்கி காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே அரசும் எங்களுக்கு போதுமான உதவிகளை செய்ய வேண்டும் என எதிர் பார்த்து காத்திருக்கின்றோம் என்று தங்களின் நிலைமைகளை கூறி ஆதங்கப்பட்டனர்.

மேலும் சில பகுதி பொது மக்கள் எங்களிடம் உதவி கோரியுள்ளனர். அவர்களிடம்  வரும் நாட்களில் எங்களால் முடிந்த உதவிகளை தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் நிவாரண பொருட்களை பெற்று செய்வதாக கூறியுள்ளோம்.

படிக்க:
♦ மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !
♦ விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !

எனவே போதுமான உணவு பொருட்கள் இன்றி தவிப்பவர்களுக்கு உதவ தயாராக உள்ளவர்கள் தங்களாலும்  தங்கள் நண்பர்கள் மூலமாகவும் முடிந்த அரிசி, மளிகை பொருட்களையோ, நிதியாகவோ வழங்குமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புக்கு : 99949 79490 / 73588 69232

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !

TASMAC கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு ! மக்கள் போராட்டத்தால் மாறிய தீர்ப்பு !!

கொரோன நோய்த் தொற்று காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, மக்கள் அத்தியாவசிய நிகழ்வுகளான திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு, வேலை – தொழில் இல்லை, உணவு தவிர்த்த அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு கூட அரசு தடை விதித்திருந்தது.

பெறுபான்மையான மக்கள் வருமானம் இல்லாத இந்த சூழலில், அதிக அளவில் கூட்டம் சேரும்மென்ற அடிப்படையில் ஏற்கனவே டாஸ்மாக் மூடப்பட்டிருந்தது. வருமானம் ஈட்டுவதற்காக டாஸ்மாக்கை திறப்பார்களேயெனில் கோயம்பேடு போல நோய் தொற்று பரவும் இடமாக டாஸ்மார்க் மாறும் என்று 06.05.2020 அன்று மக்கள் அதிகாரம், மக்கள் ஆயம் சார்பாக நாம் வழக்கு தாக்கல் செய்திருந்தோம். நமது சார்பாக மூத்த வழக்கறிஞர் வைகை மற்றும் பாலன் ஹரிதாஸ் அவர்கள் வாதாடினார்.

நமது தரப்பில் பல்வேறு வாதங்களை முன்வைத்தாலும், அவற்றிற்கு எந்தவித பதில்களையும் எடுத்துரைக்காமல் மதுபானக்கடைகள் மூடலால் ஒரு நாளைக்கு 90 கோடி இழப்பு ஏற்பட்டு வருவது, உட்பட சில விசயங்களை அரசு தரப்பில் முன் வைத்தனர். நீதிமன்றமும் டாஸ்மார்க்கை திறக்க தடைகோரிய வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல் சில ஆகாத கட்டுப்பாடுகளை விதித்து திறக்க அனுமதி அளித்தது.

ஆனால், நேற்றைய ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பெண்கள், வீதியில் இறங்கி ஆவேசத்துடன் போராடினர். சில இடங்களில் கடையை மூடவும் வைத்தனர். அமைப்புகள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நீதிமன்றமும் மக்களின் விமர்சனத்திலிருந்து தப்பவில்லை.

இப்படி இருக்கக்கூடிய சூழலில் மீண்டும் மக்கள் நீதி மய்யம் சார்பாக மனு தாக்கல் செய்திருந்தார்கள். ஏற்கனவே மனு தாக்கல் செய்து வழக்கு நடத்திய வழக்கறிஞர் G.ராஜேஷ் இணையவழியில் விற்பனை செய்வதை அரசு தொடங்கவில்லை. அதுவரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று ஒரு இடைநிலை மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த இடைக்கால மனுவுடன் நாம் தாக்கல் செய்த வழக்கு உட்பட அனைத்து வழக்குகளும் அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டு லாக் டவுன் முடியும் வரை டாஸ்மாக் நேரடி விற்பனைக்கு தடை விதித்தது நீதிமன்றம்.

படிக்க:
♦ டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
♦ மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !

பொதுமக்கள், எதிர்கட்சிகள், அமைப்புகளின் களப்போராட்டம் தான் இன்று நீதிமன்ற தீர்ப்பை மாற்றி இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யபோவதாக அறிந்தோம். உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

40 நாட்கள் தந்த இடைவெளியை பயன்படுத்தி டாஸ்மாக்கை முழுமையாக மூட வேண்டும் என்பதே தமிழக மக்களின் – பெண்களின் கோரிக்கை.

தற்போது கொரானா காலத்திலாவது மூட வேண்டும் என்பதே வழக்கு. மக்களின் கோப ஆவேசத்தை பார்த்துதான் உயர்நீதிமன்றம் தீர்ப்பை மாற்றி டாஸ்மாக்கை மூடியுள்ளது. பொறுக்க முடியாமல் மேல்முறையீடு செய்ய துடிக்கிறது குடி கெடிக்கும் அரசு.

உச்ச நீதிமன்றத்திலும் நமது சட்டப் போராட்டத்தை தொடர்வோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பும் அரசுக்கு சாதகமாக அமையலாம். ஆனால் டாஸ்மாக் கொடுமைக்கு பலியான மக்களின் போராட்டம் அதற்கு எதிராகவும் பொங்கி எழும் என்பது நிச்சயம். மக்களின் வேதனை, வலியின் உணர்வோடு வழக்கை நடத்தி டாஸ்மாக்கை மூடும் உத்தரவை பெற நாமும் சட்டப் போராட்டத்தை நடத்திடுவோம்.

தோழமையுடன்,
சு. ஜிம்ராஜ் மில்ட்டன்
வழக்கறிஞர்
மக்கள்‌ உரிமை பாதுகாப்பு மையம்.

தகவல் :
மக்கள்‌ உரிமை பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !

PP Letter head

பத்திரிக்கை செய்தி

நாள் : 08.05.2020

144 தடை உத்தரவு போட்டது எதற்காக, கொரோனாவிலிருந்து எங்களை காக்கவா டாஸ்மாக் வியாபாரத்தை நடத்தவா என்று கேட்பதற்கு உரிமை இல்லையா? கோர்ட் இல்லை, கோவில் இல்லை, ஆஸ்பத்திரி இல்லை, பள்ளி, கல்லூரி இல்லை, டாஸ்மாக் திறக்க என்ன அவசரம்? என கேட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 45 வயதான தோழர் மோகன், அவருடைய 72 வயது தந்தை வெங்கடேசன், ஆகிய இருவர் மீதும் வாலஜாபாத் – ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியால் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டு (இ.த.ச. பிரிவுகள் 144,188,269,270) அரக்கோணம் கிளைச்சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

மக்கள் அதிகாரம் சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறோம். சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதுடன், சம்பந்தபட்ட காவல் ஆய்வாளர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிக்க:
♦ திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !
♦ மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !

டாஸ்மாக் திறக்கும் முடிவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் செய்திருக்கிறது. பல இடங்களில் பெண்கள் ஆத்திரம் பொங்க கடைமுன் போராடியதால் பல டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வில்லை. ஆனால் ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதிக்கு சட்டமும் தெரியவில்லை, கொரோனா நோய் தொற்றைப் பற்றியும் அறிவில்லை. வக்கிர புத்தியுடன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். மனித உரிமை தொடர்பாக, கைது தொடர்பாக போலீசுக்கு சொன்ன உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி தனது பூட்ஸ்காலில் போட்டு மிதித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக்கை திறக்ககூடாது என மக்கள் அதிகாரம் உட்பட பலர் பொதுநல வழக்கு தாக்கல் செய்து விசாரணையில் இருந்து வருகிறது. (அதில் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என தீர்ப்பளித்துள்ளது) சமூக இடைவெளி, ஒருவருக்கு ஒரு பாட்டில், ஆதார் அட்டை பதிவு ஆகிய நீதிமன்ற உத்திரவுகளை கட்டாயம் அமல்படுத்துவோம் எனச் சொல்லிய எடப்பாடி அரசாங்கம் ஏன் செய்யவில்லை?. பல ஆயிரம் மக்கள் நெருக்கி அடித்துக் கொண்டு நின்றார்கள்.

சமூக இடைவெளி என்பது அறவே இல்லை. ஒவ்வொருவரும் பல பாட்டில்கள் வாங்கி சென்றார்கள். இதன் மூலம் பல ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

கொரோனாவால் சிறையில் உள்ள தண்டனை கைதிகளையே விடுதலை செய்து வரும் நிலையில், மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரை எதற்கு சிறைபடுத்த வேண்டும்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் வேண்டாம் என சொன்னால், சிறை தண்டனை என்றால் என்ன ஜனநாயகம் இருக்கிறது?

தங்கள்
அமிர்தா
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
9176801656

விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !

0

நின்று கொண்டு இருக்கும்போதே ஒரு பெண் மயங்கிச் சரிகிறார். பேச்சுமூச்சின்றிக் கிடக்கும் சிறுவர்களும், சிறுமிகளும் அவசரஊர்தியில் ஏற்றப்படுகின்றனர். மயங்கிக் கிடக்கும் தனது தாயின் முகத்தைத் தட்டி எழுப்பப் போராடுகிறாள் ஒரு சிறுமி. நாய்களும் கால்நடைகளும் வாயில் நுரைதள்ளி துடித்துச் சாகின்றன. பார்க்கும்போதே குலைநடுங்கி நம்மை பதட்டம் கொள்ளச் செய்கிறது விசாகப்பட்டிணம் விசவாயுக் கசிவு தொடர்பான காட்சிகள்.

விசாகப்பட்டிணத்தின் புறநகர்ப்பகுதியான கோபாலப்பட்டிணத்தில் இயங்கிவரும் LG பாலிமர்ஸ் நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை (07.05.2020) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்த விசவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விசவாயுக் கசிவில் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஒரு சிறுமி உட்பட 12 பேர் இறந்துள்ளனர்.
மூச்சுவிடுவதில் சிரமம், கண் எரிச்சல், தொடர் வாந்தி, சுயநினைவற்ற நிலை (கோமா), மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தன்னார்வலர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ஆந்திர மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வீட்டிற்குள் பாதிப்புக்குள்ளாகி மயங்கிக் கிடந்த மக்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். சுற்றுப்பகுதி கிராமத்தில் இருக்கும் வளர்ப்புப் பிராணிகளும், கால்நடைகளும் மரணமடைந்துள்ளன.

ஆலைகளுக்கு அருகிலேயே குடியிருக்கும் நவீன் என்ற இளைஞர், நடந்த சம்பவங்களைக் கூறுகிறார். “அதிகாலை 2.30 மணியளவில், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதையடுத்து முழிப்பு தட்டியது. வீதிக்கு வந்து பார்த்த போது பெரும் புகைமூட்டம் சூழ்ந்திருந்தது. வீட்டிலிருக்கும் அனைவரும் முகக்கவசம் மாட்டிக் கொண்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டோம். நாங்கள் கிளம்பிச் செல்கையிலேயே பகுதியிலிருந்து வெளியேறிச் சென்ற மக்கள் பலரும் மயக்கமடைந்து விழுந்தனர். ஆலையின் அதிகாரிகள் தங்களது கார்களில் மக்களை மீட்டுச் செல்ல வாய்ப்பிருந்தும் அமைதி காத்தனர்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் ”இரண்டாண்டுகளுக்கு முன்னரே இதைப் போன்ற ஒரு வாயுக் கசிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதை மூடி மறைத்து விட்டனர். இந்த ஆலை உடனடியாக மூடப்பட வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.

காற்றில் பரவிய “ஸ்டைரின் மோனோமர்” என்ற வாயுவைக் குறைவான அளவில் சுவாசித்தால் அது கண்களிலும், தோல்களிலும் சுவாசக் குழாயிலும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகளையும் ஏற்படுத்தும். அதிகமான அளவில் சுவாசிக்கப்பட்டால், மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். கோமா நிலை ஏற்படுத்தும். தொடர்ச்சியான சுவாசம் மரணத்திற்கு இட்டுச் செல்லும். இதன் பின்விளைவுகளாக, சிறுநீரகப் பிரச்சினை, புற்றுநோய் போன்றவை ஏற்படும்.

படிக்க:
♦ புதிய ஜனநாயகம்,போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
♦ மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமான LG பாலிமர்ஸ் நிறுவனம், தென்கொரியாவைச் சேர்ந்த LG (மின்னணு சாதன உற்பத்தி) குழுமத்தைச் சேர்ந்தது. இந்நிறுவனம் பாலி-ஸ்டைரீனால் உருவாக்கப்படும் நெகிழி, நாரிழைக் கண்ணாடி உள்ளிட்டவற்றைத் தயாரித்து வருகிறது. உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களில் முக்கியமானது ஸ்டைரீன் மோனோமர் எனப்படும் இரசாயனம். தீப்பற்றத்தக்க, திரவ நிலையிலான இந்த இரசாயனம்தான், அதிக வெப்பத்தில் வாயுவாக மாறி அழுத்தம் தாளாமல் வெளியேறி பலரது உயிரையும் வாழ்வாதாரத்தையும் பறித்துள்ளது.

இந்த விசவாயுக் கசிவு எப்படி ஏற்பட்டது ? LG பாலிமர்ஸ் நிறுவனம் விட்டுள்ள அறிக்கையில், ஸ்டைரீன் மோனோமரைத் தேக்கி வைத்துள்ள தொட்டியில் ஏற்பட்ட வெப்ப மாற்றம், அதனை மீச்சேர்மமாக்கலுக்கு (Polymerization) உள்ளாக்கி வாயுவாக மாற்றியிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. விசவாயுக் கசிவு சமயத்தில் சுமார் 1800 டன் ஸ்டைரீனை அந்த நிறுவனம் தேக்கியிருக்கிறது.

இந்நிறுவனம், ஆபத்துமிக்க இந்த இரசாயனத்தைத் தேக்கி வைக்க முறையான அனுமதியும், மாசுக் கட்டுப்பாட்டு மற்றும் சுற்றுச் சூழல் அனுமதி என எதுவும் பெற்றதாகத் தெரியவில்லை. கடந்த 1997 முதல் 2019 வரை, இவ்வளாகத்தில் இயங்கி வந்த பெட்ரோ கெமிக்கல் ஆலைக்கு எந்தவித சுற்றுச் சூழல் அனுமதியும் பெறாமலேயே செயல்பட்டிருகிறது என்பதை அந்த நிறுவனமே கடந்த மே 10, 2019 அன்று தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் ஒத்துக் கொண்டுள்ளது.

தனது உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 415 டன்னில் இருந்து 655 டன்னாக உயர்த்திக் கொள்ள அனுமதி வேண்டி முன் வைத்த கோரிக்கை மனுவில் தான் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்து, “இனி அதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.

யுனைடெட் ப்ரூவெரீஸ் குழுமத்தைச் (UB Group) சேர்ந்த மெக்டவல் நிறுவனம், கடந்த 1982 முதல் 1997 வரை இந்நிறுவனத்தை நடத்திவந்தது. அந்தப் பகுதியில் மக்கள் தொகை நெருக்கம் அதிகரித்து வந்த சூழலைக் கணக்கில் கொண்டு, ஸ்டைரீன் மற்றும் சாராய உற்பத்தியை நிறுத்திக் கொள்ள அந்நிறுவனம் முடிவெடுத்தது. கடந்த 1997-க்குப் பிறகு இந்த நிறுவனத்தை தென் கொரிய நிறுவனமான எல்.ஜி கெமிக்கல்ஸ் (LG Chem) வாங்கியது. இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டைரீனைக் கொண்டு பாலி-ஸ்டைரீன், விரியத்தக்க பாலி-ஸ்டைரீன் மற்றும் அல்பெய்ட் உள்ளிட்ட பொருட்களைத் தயாரிக்கத் துவங்கியது.

இந்த ஆலையின் பிரதான மூலப் பொருளாகிய ஸ்டைரீன், “ஆபத்துமிக்க மற்றும் விசத்தன்மை வாய்ந்த இரசாயனம்” என்று இந்திய அரசால் வகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஸ்டைரீன் மோனோமெர் என்ற இரசாயனத்தை 17 டிகிரி செல்சியசுக்குக் குறைவான வெப்பநிலையில்தான் சேமித்து வைக்க வேண்டும். அப்படி இல்லாத சமயத்தில் இதன் அழுத்தம் அதிகமாகி கொள்கலன்களை வெடிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

கோவிட்-19 நோய்த்தொற்றை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து ஆலைகளும் செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்த நிலையில், இந்நிறுவனம் இந்த இரசாயனத்தி பாதுகாப்பிற்குத் தேவையான குளிர்ச்சியான வெப்பநிலையை தக்கவைக்கத் தவறியிருக்கலாம். அதன் காரணமாகவே இந்தக் கசிவு ஏற்பட்டிருக்க முடியும். ஏனெனில் திரவ நிலையில் உள்ள இந்த இரசாயனம் வாயுநிலைக்கு மாறுவதற்கு அடிப்படையான தேவை அதிகரித்த வெப்பம்தான்.

படிக்க:
♦ முப்பதாம் ஆண்டில் போபால் படுகொலை – துரோகத்தின் விலை
♦ ஸ்டெர்லைட் விவகாரத்தில் கட்சிகள் – இயக்கங்கள் – சங்கங்களின் மௌனம் கலையட்டும் !

ஆனால் ஆந்திர தொழில்துறை அமைச்சர் மேகாபதி கவுதமனோ, அந்நிறுவனம் ஒழுங்குமுறையை மீறியதாக விசாரணையில் தெரியவந்தால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச போலீசும், பிரிவு 278, 284, 285, 337.338 மற்றும் 304(II) போன்ற பல மொன்னையான (கவனக் குறைவால் ஏற்பட்ட குற்றம், காற்று, சுற்றுச் சூழல் மாசுபாடு, கொலையல்லாத நிகழ்ந்த மரணம் விளைவிக்கும் குற்றம் உள்ளிட்ட) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் மத்திய ஆற்றல்துறை செயலர் ஈ.ஏ.எஸ். சர்மா, ஆந்திர மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் இவ்வளவு நாட்களாக எவ்வித ஒழுங்குமுறையும் அற்று இந்நிறுவனம் செயல்பட அனுமதியளித்துள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார். அந்த நிறுவனத்தின் மீதும் அதற்கு அனுமதியளித்த அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு அனுப்பியுள்ள தனது கடிதத்தில், இந்த நிறுவனம் ஆட்சிக்குவரும் அனைத்து அரசாங்கங்களாலும் தொடர்ந்து பாதுக்காப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், நூற்றுக்கணக்கான கோடி மதிப்பிலான அரசாங்க நிலத்தின் மீது தனது ஆலையை விரிவுபடுத்தியிருக்கும் இந்நிறுவனத்திடமிருந்து அந்த நிலங்களை மீட்க அரசு முயற்சிக்கையில், அதனைக் கொடுக்காமல் அரசாங்கத்தை நீதிமன்றத்திற்கு இழுத்துள்ளது இந்நிறுவனம் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைப் பற்றி துளியும் அக்கறையில்லாமல் இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கான அனைத்து ஒப்புதல்களையும் அதிகாரிகள் வழங்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டுகிறார் சர்மா.

“இந்தச் சம்பவம் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும், அதிகாரிகளுக்குமிடையிலான கூட்டை சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய மாசுபடுத்துவோர், அனைத்து மட்டங்களிலுமுள்ள அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெற்றிருப்பார்கள் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் சர்மா.

மேலும் இரண்டாம் கட்ட லாக்-டவுனிற்குப் பிறகு இந்நிறுவனம் இயங்க மத்திய அமைச்சரகத்திலிருந்து தடையில்லாச் சான்றையும் இந்நிறுவனம் பெற்றுள்ளதாகவும், “அவசியமான தொழிற்சாலை” என்ற அடிப்படையில் இந்த அனுமதி கொடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார் சர்மா.

டில்லியில் செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், “ஸ்டைரீனை அதற்குப் பொருத்தமான வெப்ப நிலையில் வைக்கத் தவறியதே இந்தப் பிரச்சினையின் காரணமாகும். அதிக வெப்பம், அதிக அழுத்தத்தை கொள்கலன்களில் ஏற்படுத்தியதன் விளைவாக, பாதுகாப்பு வால்வுகள் உடைந்து ஸ்டைரீன் வாயு வெளியேறியுள்ளது. மேலும் ஸ்டைரீனை சேமிக்கப் பயன்படுத்திய கொள்கலன்கள் பழையனவாகவும், முறையாகப் பராமரிக்காமலும் விடப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.

மேலும், கொள்கலனில் உள்ள ஸ்டைரீனின் நிலையை கண்காணிக்கும் பொறிமுறை எதுவுமே அந்த ஆலையில் நிறுவப்பட்டிருக்கவில்லை என்கிறது அந்த அறிக்கை.
“மீண்டும் ஆலையைத் துவக்கும் அவசரத்தில், பராமரிப்புக்கான முன்னெச்சரிக்கை செயல்முறைகளை ஆலை நிர்வாகம் பின்பற்றத் தவறியதும், போதுமான வெப்பநிலையில் ஸ்டிரைன் கொள்கலன்களை பராமரிக்காததும் இந்த பாதிப்பிற்கு முக்கியக் காரணம்.” என்று தெரிவிக்கிறது இந்த அறிக்கை.

அறிவியல் துறைசார் வல்லுனர்கள் மற்றும் சுற்றுச் சூழலியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, இந்த ஆலை போதுமான அனுமதியில்லாமல், போதுமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல், செயல்பட்டு வந்ததே 13 அப்பாவிகளின் மரணத்திற்கு அடிப்படைக் காரணமாகும். விசவாயுக் கசிவு, விபத்து என்றெல்லாம் அழைக்கப்பட்டு வரும் இந்த நிகழ்வை சரியாகக் குறிப்பிடவேண்டுமெனில், LG பாலிமர்ஸ் நிறுவனத்தின் இலாப வெறிக்காக நிகழ்த்தப்பட்ட படுகொலை என்றுதான் குறிப்பிட முடியும்.

1984-ல் நடந்த போபால் விசவாயுப் படுகொலைக்குச் சற்றும் குறைவில்லாத நிகழ்வு இது. போபாலை ஒப்பிடுகையில் அங்கு கசிந்த மெத்தில் ஐசோ சையனைட் (methyl isocyanate) என்ற இரசாயனத்தின் நச்சுத் தன்மையை விட ஸ்டைரீன் மோனோமெர் (Styrene Monomer) ஒப்பீட்டளவில் குறைவான நச்சுத்தன்மை கொண்டதாக இருந்ததால் மட்டுமே மரணம் 13-ஆக இருந்தது. இல்லையெனில் போபாலைப் போல இங்கும் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்திருப்பர்.

இன்னும் இரண்டு வாரங்களில் (மே 22) ஸ்டெர்லைட் நிறுவனத்தின் லாபவெறியாட்டத்தின் குறியீடான தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நினைவுநாள் அனுசரிக்கப்படவிருக்கும் நிலையில், LG பாலிமர்ஸ் நிறுவனத்தின் லாபவெறியாட்டத்தின் குறியீட்டை மே 7-ல் விசாகப்பட்டிணம் சந்தித்திருக்கிறது.

போபால் தொடங்கி தற்போது விசாகப்பட்டிணம் வரை கார்ப்பரேட் லாபவெறியின் குறியீடுகள் கெக்கலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. நாமும் சில வாரம் அவற்றை அங்கலாய்த்துவிட்டுக் கடந்து கொண்டுதான் இருக்கிறோம். கார்ப்பரேட் – அரசு கூட்டு அவ்வப்போது கோரமாக அம்பலமான பின்னரும், இந்த அரசு நம்மைக் காப்பாற்றத்தான் இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் நம்புகிறோமெனில் கசாப்புக் கடைக்காரன் தன் பசியைப் போக்கத்தான் தீனி போடுகிறான் என நம்பும் ஆட்டுக்கும் நமக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.


நந்தன்

செய்தி ஆதாரம் :
♦ Vizag gas leak: Don’t have green nod, company told state last May
♦ Vizag gas leak: Company compromised safety standards, activists allege

மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கோ மீட்பு நடவடிக்கைக்கோ ஆர்வம் காட்டாத தமிழக அரசு, நீதிமன்றத்தில் போராடி டாஸ்மாக்கை மீண்டும் திறந்திருக்கிறது. இந்த அநியாயத்துக்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அச்செய்திகளின் தொகுப்பு…

***

சென்னை வேளச்சேரி, முகப்பேர் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில்,  டாஸ்மாக் சாராய கடைகள் திறப்பதை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! பெருவளப்பூர் மக்கள் ஆவேசம் !

கொரானா தொற்றின் கோரதாண்டவம் அதிகரித்துள்ளதை அன்றாட செய்திகள் அறிவிக்கின்றன. கொரானா சமூகப் பரவலாகியுள்ளதை கோயம்பேடு சந்தை பறைசாற்றியுள்ளது. மக்கள் முன் எச்சரிக்கை மற்றும் திட்டமில்லாத தான்தோன்றித்தனமான ஊரடங்கில் சிக்கி அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சாராய ஆலை அதிபர்களை கட்சி வேறுபாடு இன்றி பாதுகாக்கவும், கொள்ளையடிக்கவும் வசதியாக கஜானாவை நிரப்பிக் கொள்ளவும் டாஸ்மாக் கடையை திறப்பதென பாஜக அடிமை எடப்பாடி அரசு அவசர முடிவெடுத்துள்ளது.

கொரானா பாதிப்பு அதிகமாகி இருக்கும் இந்தநேரத்திலும் 07-05-2020 முதல் டாஸ்மாக் விற்பனை ஆயத்த பணிகள் தொடங்கிய உடனேயே ஆங்காங்கு மக்கள் எதிர்ப்பு வலுப்பெற தொடங்கியது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பெருவளப்பூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட ஊர் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். டாஸ்மாக் திறப்பு அறிவிப்பு வெளிவந்த உடனேயே முற்றுகை போராட்டத்தை பெருவளப்பூர் மக்கள் அறிவித்தனர்.

முற்றுகை போராட்டத்திற்கு மக்கள் தயாராகி கொண்டிருந்த நிலையில்,
மக்களின் கோபத்தை உணர்ந்த காவல்துறை தண்டோரா மூலமாக காலை 8.30 மணிஅளவில் கடையை திறக்க மாட்டோம் என அறிவித்தது. போராட்டத்திற்க்கு ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், பல்வேறு கட்சியினரும், சாதி, மத வேறுபாடின்றி அணி திரண்டிருந்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அரசுதரப்பின் அறிவிப்பின் உண்மை தன்மையை அறிய கடை திறக்கும் நேரம் வரை மக்கள் காத்திருந்தனர். என்னதான் இருந்தாலும் காவல்துறையின் பேச்சை நம்ப முடியாது அல்லவா ! கடை உண்மையில் திறக்கப் போவது இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், மக்கள் நம்பிக்கை பெற்றனர். போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்களான பெருவை மணி, இராசேந்திரன் மற்றும் திமுக சார்பில் TKR மோகன் அவர்களும் அனைத்துக் கட்சிகள் அமைப்புகளின் முன்னணியாளர்களும் மீண்டும் கடையை திறந்தால் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளும் போராட்டம் நடைபெறும் என்பதை எச்சரிக்கும் வகையில் ஊராட்சி மன்ற அலுவலகம் இருக்குமிடத்தில் தனி மனித இடைவெளியுடன் கூடி ஆர்ப்பாட்டம் மூலம் எச்சரித்தனர்.

தற்போது காவல்துறை கடையை திறக்க மாட்டோம் என்று கூறியிருப்பது தற்காலிக வெற்றிதான். என்ன இருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்களில் அரசாங்கம் அதிக அளவில் போலீசாரை கொண்டு வந்து கடையை திறக்கும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது.

எனவே ஊர் பொது மக்கள் சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி டாஸ்மாக் கடையை அரசாங்கம் எப்போது திறந்தாலும் இழுத்து மூட போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும் இன்னும் அதிக அளவில் மக்கள் பங்கு பெறுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர்

அது மட்டுமின்றி டாஸ்மாக் சரக்கை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள் சில நபர்கள் அதை கண்டிக்கும் வகையில் இனி பிளாக்கில் விற்றாலோ அல்லது கடையை திறந்தாலோ பாட்டில்களை உடைப்போம் என மக்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

***

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியில், டாஸ்மாக் சாராய கடை திறக்க கூடாது என எதிர்த்து போராடிய தோழர்களை ஆவலூர் காவல் துறை கைது செய்துள்ளது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

விழுப்புரம் மக்கள் அதிகாரம் சார்பில் 07.05.2020 அன்று காலை 10 மணிக்கு  சித்திரப் பட்டு கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஒருங்கிணைந்து டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று ஆர்பாட்டம் நடத்தினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

படிக்க:
♦ திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !
♦ விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !

***

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் காரப்பட்டு, பொய்கை அரசூர் பகுதியில் எடப்பாடி அரசு டாஸ்மார்க் திறப்பதை கண்டித்து கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பொய்கை அரசூரில் தோழர் ஞானஒலி தலைமையிலும் காரப்பட்டில் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது, கொரோனாவில் மக்களை பாதுகாக்காத அரசு டாஸ்மாக்கை திறந்து மக்களை கொல்ல கேவலமாக நடந்து கொள்வதை அம்பலப்படுத்தி தோழர் மாயவனும், தோழர் அம்பேத்கரும் உரையாற்றினார்கள்.

மேலும் மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி போர் குணமான முழக்கம் போடப்பட்டது. 144 தடை உத்தரவு இருந்தும் அதை மீறி ஒவ்வொரு பகுதியிலும் தலா 50 பேர் கூடினர் இந்த ஆர்ப்பாட்டம் சுமார் அரை மணிநேரம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கொரோனோ வைரஸ் பரவுதலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. இந்த 40 நாள் ஊரடங்கில் பெருந்திரளான பொதுமக்களுக்கு அரசு கொடுத்த நிவாரண தொகை வெறும் 1000 ரூபாய் ஆனால் வெறும் 50 முதல் 60 வரை உள்ள முதலாளிகளுக்கு அதுவும் வங்கியே திவாலாக காரணமாக இருந்த முதலாளி உட்பட அவர்களுக்கு 60000 கோடி அதாவது ஒரு முதலாளிக்கு தலா 2000 கோடி வரை தள்ளுபடி செய்து இருக்கிறது இந்திய அரசு.

இதை கேள்வி கேட்க கூட திராணி இல்லாமல் நிற்கிறது எடப்பாடி அரசு. மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு தரவேண்டிய GST பணம் பல கோடிகள் இன்னும் வரவில்லை. இதை கேட்க வாய் வராமல் எடப்பாடி அரசு கோமாவில் விழுந்து விட்டது. இப்படிப்பட்ட நேரங்களில் ஒருசில தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு பண உதவியும் உணவு பொருளும் கிடைத்தது.

இக் காலகட்டத்தில் மக்களுக்கு போதிய நிவாரண நிதி மற்றும் மருத்துவ வசதி, இரவும் பகலும் கொரோனோவுடன் போராடும் மருத்துவர்கள் செவிலியர்கள் காவலர்கள் போன்றோர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் சிறப்பு சம்பளத் தொகை இவையேதும் செய்யாமல் ஏற்கனவே அழிவின் விழும்பில் இருக்கும் குடும்பங்களை படுகுழியில் தள்ளும்விதமாக டாஸ்மாக்கை திறந்திருக்கிறது தமிழக அரசு.

குழந்தைக்கு பால் வாங்க பிஸ்கட் வாங்க பணம் இல்லாமல் மணலைத் தின்று இறந்த குழந்தைகள், குழந்தையுடன் கிணற்றில் விழுந்த குடும்பங்கள், குழந்தையுடன் தூக்கில் தொங்கிய குடும்பம் என்று வறுமை நிலை இப்படி இருக்க ஆனால் இந்த வெக்கங்கட்ட அரசு டாஸ்மாக்கை திறந்து மீதமுள்ள குடும்பங்களையும் அழிக்க திட்டமிட்டுள்ளது.

இதனை கண்டித்து “மக்கள் அதிகாரம்” அமைப்பினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் பெண்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசை வீதியில் வைத்து கேள்வி கேட்க வேண்டும்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கோவையில் டாஸ்மாக்கை திறக்காதே, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திருப்பூரில் கொரானா-வில் மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் போது டாஸ்மாக்கை திறந்து, மக்களை மரண குழியில் தள்ளும் எடப்பாடி அடிமை அரசை கண்டித்து,  மூடு டாஸ்மாக்கை, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் மற்றும் வி. சி. க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

ருமபுரி மாவட்டத்தில், உள்ள கள்ளிபுரம், கரியம் பட்டி மற்றும் கரியம்பட்டி புதூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்ராம்பாளையம் பகுதியில் டாஸ்மாக்கை திறக்காதே, தமிழக பெண்களின் தாலியை அறுக்காதே, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் உடன் இணைந்து மக்கள் அதிகாரம்  தோழர்கள் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !

டலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள (பெண்களின் தாலியறுக்கும்) டாஸ்மாக் கடையை மூடக்கோரி, மக்கள் அதிகாரம் தோழர்கள் 15 பேர் எடப்பாடி அரசை கண்டித்தும், டாஸ்மாக்கை மூடக் கோரியும் பதாகைகளுடன், முழக்கங்களை எழுப்பி டாஸ்மாக் கடை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்தை கவனித்தனர், சிறிது நேரம் கழித்து காவல் துறையினர் தோழர்களை கைது செய்தது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
கடலூர், தொடர்புக்கு : 81108 15963.

படிக்க:
♦ கொரோனா முடக்கத்தில் சொத்துக்களை பெருக்கும் அமெரிக்க பில்லியனர்கள்
♦ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?

***

கொரானாவில் மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் போது, டாஸ்மாக்கை திறந்து மக்களை மரண குழியில் தள்ளும் வேலையை செய்கிறது அடிமை எடப்பாடி அரசு. இதனை கண்டித்து, விருத்தாசலம் கடலூர் சாலையில் (ஸ்டேட் பேங்க் எதிரில்) மூடு டாஸ்மாக்கை, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்திய தோழர்களை தற்போது போலீசு 20 க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம். தொடர்புக்கு : 97912 86994.

***

டாஸ்மாக்கை இழுத்து மூடுபோராட்டம் நடத்திய திருச்சி மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது!

குடும்பத்தை சீரழிக்கும் –
டாஸ்மாக்கை மூடு

மக்களிடம் வழிப்பறி செய்யும் –
டாஸ்மாக்கை மூடு

கொரனா தொற்றை உருவாக்கும் –
டாஸ்மாக்கை மூடு

குழந்தைகள் கல்வியை பறிக்கும் –
டாஸ்மாக்கை மூடு
மன நோயாளியாக்கும் –
டாஸ்மாக்கை மூடு!

வருமானம் முக்கியமா?
மக்களின் வாழ்க்கை முக்கியமா?

வருமானம் பெருக்க டாஸ்மாக்கு திறப்பாம்
சொல்லுறாறு முதல்வரு
உண்மையா?உண்மையா?

எடப்பாடி கூறுவது
உண்மையா?உண்மையா?

வருமானம் வர வழி சொல்லுறோம்.
கடைய மூடுவியா? எடப்பாடி அரசே ?

G ST பங்கு நிதிய
கொரோனா தடுப்பு நிதிய ….
மத்திய அரசிடம் வசூல் செய்!

மாணவர் நடத்திய ஜல்லிக்கட்டை
மறந்து போனதா தமிழகம்.
மெரினாவை திறந்து விடு
மோடி அரசை பணிய வைப்போம்.

கல்வி கொடுக்க வக்கில்ல….
வேலை கொடுக்க துப்பில்ல….
நோய் பரப்பும் டாஸ்மாக்கை
திறக்கப் போற ஊருக்குள்ள….

சசிபெருமாள் உயிர் நீத்ததை,
பச்சையப்பன் கல்லூரி மாணவர் இரத்தம் சிந்திய
போராட்டத்தை விரயமாக விடமாட்டோம்!

காவல்துறையே காவல்துறையே
சாராயம் காய்ச்சினால் கைய உடைக்கிற…
சவுக்கு தோப்புல ஊரல் அழிக்கிற…
கொரோனா தடுக்கும் பணிய விட்டு
சரக்குக்கு காவல் காக்குற ….

மேற்கண்ட முழக்கங்களை எழுப்பி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி உறையூர் கடைவீதியில் இன்று காலை மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஊரடங்கையும் காவல் துறை தடையையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் அமைபின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ந.க. தமிழாதன் , தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகர தலைவர் வின்சென்ட் | ம க .இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா, பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் முன்னாள் பொதுச் செயலர் தோழர் சுந்தர ராசு மற்றும் தோழர்கள் கைது செய்யப்பட்டு புத்தூர் முகூர்த்தம் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக உறையூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தோழர் சம்சுதீன், தோழர் வின்சென்ட் தந்தை பெரியார் திராவிடர் கழகம்.மா. தலைவர் வாழ்த்தி பேசினார். தோழமை அமைப்பினர் இசுலாமிய நண்பர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோசமிட்டனர். ஏராளமான பொதுமக்கள் கூடி ஆதரவளித்தனர். பல காவலர்கள் இவ்வளவு நாள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வாங்கிய நற்பெயர் கெட்டு போய் விட்டதாக நொந்து கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.