தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் போராட்டங்கள் நடைப்பெற்றன. ராணிப்பேட்டை அவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடையின்முன் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தோழர் மோகன் மற்றும் அவரின் தந்தையான தோழர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அரக்கோணம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். ஐந்து நட்கள் கழித்து வெளிவந்துள்ளனர். அவர்களோடு ஒரு உரையாடல்….
என் பேரு மோகன் விவசாயக்கூலியாக வேலை செய்யறேன். மாசம் 8000 ருவா வரும் அத வச்சுக்கிடுதான் குடும்பத்தை ஓட்டுரேன். வீட்டுக்கு தேவைங்குற பொருளெல்லாம் வாங்கிப்போடுவேன். அதால இந்தக்காசு போதும். ஆடம்பரமா செலவு பண்றதில்ல. போதும் இதுவே.
அன்னைக்கு என்ன நடந்துச்சு சொல்லுங்க?
ஏழாம் தேதி காலைல வீட்டுக்கு 8 மணிக்கு போலீஸ் வந்துருச்சு. இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியும் வந்தாரு 2 ஜீப் 6 போலீசுக்காரங்க இருந்தாங்க. ஏரியாவயை விட்டு இன்ஸ்பெக்டர் என்னை வெளியே அழைச்சுக்கிட்டு வந்து பேசினாரு. அப்போ மற்ற போலீஸ் எல்லாம் “ஓ மோகனா….” எனக்கு தெரியுமே சொன்னாங்க.
எத்தனை மணிக்கு போராட்டம் பண்ணப் போறீங்கன்னு மேல இருந்து கேக்குறாங்கன்னு இன்ஸ்பெக்டர் கேட்டாரு. நான், பத்து மணிக்கு வந்து முழக்கம் போட போறேன்னு சொன்னேன்.
எத்தனை பேர் வருவீங்கன்னு கேட்டாரு. நாங்க மூணு பேரும்னு சொல்லி அப்பாவையும் அண்ணனையும் காட்டுனேன். அவங்க யாருன்னு கேட்டாரு. அவங்க மக்கள் அதிகாகரம் உறுப்பினர்னேன்.
திமுக எல்லாம் வீட்ல தானே பண்றாங்க நீங்களும் அப்படியே பண்ணலாம் இல்ல அப்படின்னு கேட்டாரு.
அது அவங்க கொள்கை பிரச்சனை. நான் என்ன பண்ண முடியும் அவங்ககிட்ட கேளுங்க. மக்கள் பார்வையில முழக்கம்போட்டாத்தான் தான் மக்களுக்கு தெரியும் சொன்னேன். அப்புறம் என் வீட்டுக்கு வெளியே போலீச நிறுத்திட்டு அவர் போய்ட்டாரு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தொடர்ச்சியா பல இடங்கள்ல இருந்தும் போன். எப்போ வரீங்க எப்போ வரீங்கன்னு. பத்துமணிக்கு நான், அப்பா வெங்கடேசன், அண்ணன் எழில் மூணு பேரும் போனோம். எழில் போட்டோ எடுத்தார். நானும் அப்பாவும் கொஞ்சநேரம் முழக்கம் போட்டோம். போலீசு வந்து சுத்தி சுத்தி ரெண்டு பேரையும் போட்டோ எடுத்தாங்க.
அப்போ ஒரு போலீசுகாரர் வந்து நீ என்ன ஜாதின்னு அப்பாவை பார்த்து கேட்டாரு, எதுக்கு கேக்குறீங்க , அதெல்லாம் சொல்ல முடியாது -ன்னு சொன்னேன். உளவுத்துறை போலீசு வந்து அது மோகனோட அப்பா என்று சொன்னார்.
மேல இருந்து எந்த உத்தரவும் வரவில்லைன்னு சொல்லி வண்டியில் கூட்டிக்க்கிட்டு போய். அவலூர் காவல்நிலையத்தில் உட்கார வைத்தார்கள். மாலை வரைக்கும் ஆனது. என்ன செய்ய போறீங்கன்னு லட்சுமி இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன். எனக்கு மேலிடத்து உத்தரவு வரவில்லை என்று சொன்னார்.
அப்புறம் கூப்பிட்டு ரிமாண்ட் செய்யப்போறோம்னாரு. தமிழ்நாடு முழுக்க போராடுன எல்லோரையும் விடுதலை செஞ்சுட்டாங்க. எங்கள விட வேண்டியதுதானே என கேட்டேன். நீ உன்னோட கொள்கையில உறுதியா இருக்கும் போது நான் என் டியூட்டியில உறுதியா இருக்க வேண்டாமா , மேலிடத்து உத்தரவு நான் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சொன்னாரு.
போலீசுகாரர் ஒருவர் மீண்டும் நீ என்ன ஜாதி என்று கேட்டார். எனக்கு ஜாதின்னா என்னன்னு தெரியாது என்று சொன்னேன் . அவர் உன் ஜாதி ஜாதி என்னன்னு தெரியும் என்று கூறினார்.
படிக்க:
♦ டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
♦ மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !
நான் சாதி இல்லாத அமைப்பு என்னால் எதுவும் சொல்ல முடியாது. உனக்கு தெரிஞ்ச நீ வைச்சுக்கோங்க என்ன ஏன் கேக்குறீங்க அப்படீன்னு சொன்னேன்.
வாலாஜா கோர்ட்டுக்கு கூட்டிட்டுபோனாங்க. மேஜிஸ்ட்ரேட் அம்மா வந்தாங்க. என்ன விஷயம்னு கேட்டாங்க. நான் கொரோனா பிரச்சனையில ஆயிரக்கணக்கான ஜனம் திண்டாடிக்கிட்டு இருக்கு. அந்த நேரத்தில் டாஸ்மாக் கடை தொறந்தது தப்புன்னு நாங்க ரெண்டு பேரும் முழக்கம்போட்டோம்னு சொன்னேன். எங்கள உடனே ஜாமீன்ல விடுங்க நீங்க சொல்லும் போது ஆஜராக தயார்ன்னு சொன்னோம். தோழர்கள் தயாரித்துக் கொடுத்த மனுவை கொடுத்தேன். நீங்கள் வெயிட் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். இன்ஸ்பெக்டரை கூப்பிட்டுட்டு என்ன பேசினாங்கன்னு தெரியல.
கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிட்ட மாஜிஸ்திரேட் 21ஆம் தேதி வரை ரிமாண்ட் என்று சொன்னாங்க.
ஜெயில்ல ஒரு பிரச்சினையுமில்லை. அப்பாவும் பையனும் டாஸ்மாக் போராட்ட கேஸ்ல வந்ததா சொன்ன வுடனே நல்ல மரியாதை. நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க நாங்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்கறோம்னாங்க.
சிறை அனுபவம் எப்படி இருந்தது? தோழர் வெங்கடேசனிடம் கேட்டேன்.
அமைப்பு போராட்டம்னு இதுவரைக்கும் பத்து முறை ஜெயிலுக்கு போயிருக்கேன் ஒண்ணும் பெருசா பிரச்சினையில்லை. தன்னோட கழனியில குடிச்சுட்டு சண்டை போட்டவங்களை விலக்கி விட்டதுக்காக ஜெயிலுக்கு வந்தவங்க. கள்ளச்சாராயம் குடிக்கப்போய் 30 லிட்டர் சாராயம் காய்ச்சுனதா உள்ள வந்தவங்க, லாரி லாரிய மணல் அடிச்சவனை விட்டுட்டு மாட்டு வண்டியில மணல் எடுத்ததுக்கு கைதாகி உள்ள வந்தவங்கன்னு பலரை பார்த்தோம். டாஸ்மாக்கை எதிர்த்து வந்தீங்களான்னு மரியாதையா நடந்துக்குறாங்க. ஜெயிலுக்கு போன உடனே சோப்பு, பத்திரிக்கைன்னு வாங்கிக்கிட்டோம். ஜெயில்ல சோப்பு தருகிற விசயமே மற்றவங்களுக்கு அப்பத்தான் தெரியும்.
ரெண்டு பேர் மட்டும் போய் என்ன ஆகப்போவுதுன்னு கேட்டா என்ன சொல்வீங்க?
தோழர் ராஜூ வீட்டிலிருந்து முழக்கம் போட்டா வேலைக்காகாது சொன்னாரு. சொன்னது சரிதானே. நாங்கள் ரோட்டுக்கு போனோம். ஆளு கம்மியா இருக்குதுன்னு விட்டு போக முடியுமா? ஆள் இல்லைன்னு சொல்லிட்டு அப்படி எல்லாம் இருக்க முடியாது. இந்த அமைப்புல இரண்டு பேராவது உறுதியாக நின்று போராட்டம் நடத்தினார்கள் என்று தெரியணும்.
வயசான காலத்துல எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுறீங்கன்னு யாராவது ஜெயிலுக்கு போயிட்டுவந்த உடனே கேட்டாங்களா?
ஜனமெல்லாம் கொரோனாவுல சாவுது, பசியிலே லோல் படுது. எல்லோரும் சொந்த வேலையை பாத்தா ஆவுமா என்னா?அப்போ எதுவும் நடக்காது. யாராச்சும் வயசான காலத்துல ஏன் கஷ்டபடுறீங்கன்னு கேட்டா. சின்னப்பயன் தான… நீ போக வேண்டியதுதானேன்னு கேப்பேன்.
வேலூர் மாவட்டத்துல போராட்டம் எதுவும் நடக்குலன்னு பேர் வந்தா நமக்குத்தானே கவுரவக்குறைச்சல். யார் வந்த என்ன ? எப்பவும் சாவு வரப்போறதுதான். உணர்வுதான முக்கியம்.
உண்மைதான் உணர்வுதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது…
தகவல் :
மக்கள் அதிகாரம்.



சான்றாக ஒரு ரேசன் கார்டுக்கு ஒரு கிலோ பருப்பு என்று நிர்மலா சீத்தாராமன் அறிவித்த திட்டம்த்தை பார்க்கலாம்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில், இது கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சமயத்தில் கொடுப்பதற்கானது மட்டுமே. அதாவது, இதனை ஒரு வாரத்திற்குள் மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதுதான் மக்களுக்கு பயனளிக்கும். ஆனால், ஒரு மாத காலமாகியும் இந்த வினியோகம் 8.2 சதவீதம் என்றால் மத்தியில் ஆளும் மோடி ஆட்சியின் யோக்கியதையை என்னவென்று சொல்வது?
இந்தத் திட்டத்தை அமுல்படுத்த விவசாயிகளிடமிருந்து பருப்பு கொள்முதல் செய்யாமல் தனியார் நிறுவனங்கள் கையிருப்பாக வைத்துள்ள தானியங்களை வாங்கி வினியோகம் செய்யலாம். இதுதான் அவசர காலத்தில் சாத்தியமான எளிய வழி. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி பதுக்கி வைத்துள்ள பருப்புகளை அரசுக்கு வழங்க அவை தயாராக இல்லை. அரசுக்கும் தனியார் நிறுவனங்களை நிர்பந்திக்கவில்லை. இந்த நிலையில் தான் முதல் வழிமுறையை அமுல்படுத்த முடிவு செய்துள்ளது.

டில்லியில் இருக்கும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், ஸ்டைரினைத் தேக்கி வைத்திருக்கும் உருளைகள் மிகவும் பழையவையாகவும், பராமரிப்பற்றும் இருந்ததுதான், விபத்துக்கான காரணம் என்று அறிக்கை வெளியிட்டது.



மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளைப் பற்றித் தோண்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில், இன்னுமொரு சுவாரசியமான தரவு கிடைத்தது. அது, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விவகாரம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதையும், அரசியல்வாதிகளும் வல்லுநர்களும் அதைப்பற்றி என்ன சொன்னாலும் சரி, அண்மைக்காலத்தில் அந்தப் பிரச்சினை ஏன் முடியப் போவதில்லை என்பதையும் காட்டியது.
ஆக, அகராதிப்படி பார்த்தால் ரத்து – தள்ளுபடி (write off and a waive off) இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் ஏதும் கிடையாது. வாராக் கடன்களை வங்கிகள் வசூலிக்க முடியாத வரையில் ரத்து செய்த கடனும் தள்ளுபடி ஆன கடன்தான். அது தவிர, கடன் தள்ளுபடி செய்தால் வங்கிக்கு அரசு அந்தத் தொகையை ஈடு செய்யும். மொத்த வாராக் கடன்களில் பொதுத்துறை வங்கிகள் தொழில்துறைக்குக் கொடுத்த கடன்கள் 73% சேவைத் துறைக்குக் கொடுத்த கடன்கள் 13%. ஆக, வங்கிகளின் வாராக் கடன்களுக்குக் காரணமே இந்தக் கார்ப்பரேட்டுகள்தான். அதனால்தான், ரத்து செய்த கடன்களை வங்கிகள் வசூல் செய்ய முடிவதே இல்லை.

ஆனால் இவர்களின் மொய்க் கணக்கு பொய்க்கணக்காக போகும் விதமாக தாய்மார்கள் தயாராகினார்கள். தமிழகமே தயாரானது. தாய்மார்கள் தலைமையில் ஆங்காங்கே போராட்டம் தன்னெழுச்சியாக விழாக்கோலம் பூண்டது. அதில் மதுரை செல்லூர் பகுதி மக்களின் போராட்டம் ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்தது.
இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவின் ஜல்னாவில் உள்ள ஒரு தனியார் எஃகு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள், மார்ச் 24 முதல் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து அவர்களது சம்பளம் பெறப்படவில்லை. அவநம்பிக்கையான சூழ்நிலையையும், அவர்கள் எப்போது மீண்டும் வேலை செய்ய முடியும் என்று தெரியாமலும், தங்கள் குடும்பங்களுடன் இருக்க வீடு திரும்ப விரும்பினர். வீடு திரும்ப ஒரு ரயிலைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் நடக்க முடிவு செய்தனர்.

இதுபோன்ற வெத்து பம்மாத்துகள் எதுவும் ஒரு கொள்ளைநோயை கட்டுப்படுத்துவதில் உதவாது. முறையான திட்டமிடலும் அறிஞர்களின் சரியான வழிகாட்டுதல்களும் அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிற அதிகாரிகளும்தான் தேவை. தொடர்ச்சியாக பல்வேறு அரசு நிறுவனங்களும் ஆய்வு நிறுவனங்களும் இந்த ஊரடங்கு காலத்திலும் கூட எச்சரிக்கைகளை கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால் அதை காதுகொடுத்து கேட்பதற்கு அரசு தயாராக இல்லை. இந்த அரசுக்கு காதுகள் கிடையாது.


நமது தரப்பில் பல்வேறு வாதங்களை முன்வைத்தாலும், அவற்றிற்கு எந்தவித பதில்களையும் எடுத்துரைக்காமல் மதுபானக்கடைகள் மூடலால் ஒரு நாளைக்கு 90 கோடி இழப்பு ஏற்பட்டு வருவது, உட்பட சில விசயங்களை அரசு தரப்பில் முன் வைத்தனர். நீதிமன்றமும் டாஸ்மார்க்கை திறக்க தடைகோரிய வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல் சில ஆகாத கட்டுப்பாடுகளை விதித்து திறக்க அனுமதி அளித்தது.


விசாகப்பட்டிணத்தின் புறநகர்ப்பகுதியான கோபாலப்பட்டிணத்தில் இயங்கிவரும் LG பாலிமர்ஸ் நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை (07.05.2020) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்த விசவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விசவாயுக் கசிவில் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஒரு சிறுமி உட்பட 12 பேர் இறந்துள்ளனர்.
ஆலைகளுக்கு அருகிலேயே குடியிருக்கும் நவீன் என்ற இளைஞர், நடந்த சம்பவங்களைக் கூறுகிறார். “அதிகாலை 2.30 மணியளவில், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதையடுத்து முழிப்பு தட்டியது. வீதிக்கு வந்து பார்த்த போது பெரும் புகைமூட்டம் சூழ்ந்திருந்தது. வீட்டிலிருக்கும் அனைவரும் முகக்கவசம் மாட்டிக் கொண்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டோம். நாங்கள் கிளம்பிச் செல்கையிலேயே பகுதியிலிருந்து வெளியேறிச் சென்ற மக்கள் பலரும் மயக்கமடைந்து விழுந்தனர். ஆலையின் அதிகாரிகள் தங்களது கார்களில் மக்களை மீட்டுச் செல்ல வாய்ப்பிருந்தும் அமைதி காத்தனர்” என்று கூறியிருக்கிறார்.
அறிவியல் துறைசார் வல்லுனர்கள் மற்றும் சுற்றுச் சூழலியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, இந்த ஆலை போதுமான அனுமதியில்லாமல், போதுமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல், செயல்பட்டு வந்ததே 13 அப்பாவிகளின் மரணத்திற்கு அடிப்படைக் காரணமாகும். விசவாயுக் கசிவு, விபத்து என்றெல்லாம் அழைக்கப்பட்டு வரும் இந்த நிகழ்வை சரியாகக் குறிப்பிடவேண்டுமெனில், LG பாலிமர்ஸ் நிறுவனத்தின் இலாப வெறிக்காக நிகழ்த்தப்பட்ட படுகொலை என்றுதான் குறிப்பிட முடியும்.
