Wednesday, August 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 319

10 % இடஒதுக்கீடு : திருச்சி – SBI வங்கி தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் !

1

“SBI வங்கியில் காலி பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்வில் பொருளதாரத்தில் நலிந்த பிரிவினர், என 10% இடஒதுக்கிடுமுறை அமல்படுத்துவதை கண்டித்து திருச்சி ஜங்ஷன் தலைமை SBI வங்கி முற்றுகை போராட்டம் !”

10% இடஓதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் திருட்டுத்தனமாக SBI வங்கி அதிகாரிகள், மோடி , பாஜக ஆட்சிக்கு, காவடி தூக்குகின்றனர். பார்ப்பனர்களுக்கு சேவை செய்து, தாழ்த்தப்பட்ட மக்களின் இடஓதுக்கீடு உரிமையை பறிக்கும் வகையிலும் சமூக நீதிக்கு அநீதி இழைக்கும் வகையிலும் BC கட்-ஆப் 61.25, MBC கட்-ஆப் 61.25, ST கட்-ஆப் 53.75, EWS பார்ப்பனர் / உயர் சாதியினர் 28.5 – கட் -ஆப் என மதிப்பெண் மோசடியை செய்கின்றனர்.

சாதாரண மக்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 72 ஆயிரம்; ஆனால் உயர் சாதி பார்ப்பனர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 8 லட்சம்; இருந்தாலும் அவர்கள் சட்டப்படி ஏழைகள் என்று மோடி அரசு வரையறை செய்து, உழைக்கும் மக்களுக்கு ஏதிரான பாசிசத்தை கட்டமைக்கின்றது.

இந்நிலையில் SBI வங்கியில் காலி பணியிடங்கள் நிரப்ப நடைபெறும் தேர்வில் பொருளாதார நலிந்த பிரிவினர் என 10% இடஒதுக்கீடுமுறையை அமல்படுத்துவதைக் கண்டித்து, 31.07.2019 அன்று திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள தலைமை SBI வங்கி முற்றுகை போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலர் சீனி விடுதலை அரசு தலைமையில் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதில் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், மக்கள் கலை இலக்கியக் கழக திருச்சி மாவட்ட செயலர் தோழர் ஜீவா, த.பெ.தி கழக உறுப்பினர்கள், திராவிடர் விடுதலை கழகம் மாவட்ட அமைப்பாளர் தோழர் புதியவன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலர் தோழர் வை.சரவணன், மே 17 இயக்கம் திருச்சி பொறுப்பாளர் தோழர் பாலாஜி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி திருச்சி மாவட்ட தலைவர் சம்சுதீன், உழைக்கும் மக்கள் சேவைக் கட்சி திருச்சி மாவட்ட தலைவர் Ac ராமலிங்கம் மற்றும் மக்கள் உரிமை கூட்டணி நகர தலைவர் முகம்மது காசிம், நிர்வாகி ஜோசப், தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர் ரகு, என பல அமைப்பு தோழர்கள், கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈட்பட்ட தோழர்கள் பேரணியாக சிறிது தூரம் முழக்கமிட்டு வந்து SBI வங்கியை முற்றுகையிட்டனர். போராட்டத்தை காண பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கூடினர். தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசு கைது செய்து வேனில் ஏற்றியது. தோழர்கள் முழக்கமிட்டவாறே கைதாகினர். மத்திய அரசைக் கண்டித்து நடந்த ஜனநாயக சக்திகளின் ஒன்றிணைந்த முற்றுகை போராட்டம், மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் :
மக்கள் அதிகாரம்.
திருச்சி.

ஆரியர்க்குத் தமிழக வளத்தைச் சுவைக்க கிட்டிய வாய்ப்பு !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 17

ரண்டாம் நூற்றாண்டிலே (கி.பி. 114) சேர நன்னாட்டில் ஆண்ட சேரன் செங்குட்டுவன், வடநாட்டில் கனகன், விசயன் என்ற அரசரிருவர் விருந்திடைப் புகன்ற பொருந்தாமொழி கேட்டு, கண்ணகிக்குக் கற்சிலை எடுக்க எண்ணியதுடன், ஆரியர்க்கும் தம் வலிமை காட்டக் கருதி, வடநாடு சென்று வாகை சூடி வட இமயத்தில் கற்கொண்டு கனக விசயர் தலைமீது ஏற்றி கங்கை கடந்து கான் நடந்து, மலை பல கடந்து, தென்னாடு கொண்டு வந்த செய்தி, ஏன் வரலாற்றில் இடம் பெறவில்லை? வரலாற்றுக் காலத்தில் நடைபெற்ற செங்குட்டுவனின் உடன் பிறந்த இளவல் ‘இளங்கோ’ சிலப்பதிகாரம் என்ற முத்தமிழ்க் காப்பிய காலத்தில் இட்டுத் தந்த உண்மை நிகழ்ச்சியன்றோ அஃது?

தமிழில் கூறப்பட்டுள்ளதாலும், தென்னாட்டார் வட நாட்டாரை வென்றது என்பதாலுமே இது வரலாற்றில் இடம் பெறவில்லை என்பதை உணர்ந்தும், இனியும் திராவிட இனம் தனியிடம் கேட்பதற்குத் தயங்குமா? திருமாவளவனும் கரிகால்வளவனும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும், பெருஞ்சோற்றுதியன் சேரலாதனும், பிறரும் வாகையுடன் வாழ்ந்ததை நாம் அறிவோம். ஆதாரமுண்டு. சேரலாதன் அளித்த பெருஞ்சோறு, வட நாட்டில் வாடிய ஆரியர்க்குத் தமிழக வளனைச் சுவைக்க வாய்க்கு வாய்ப்புக் கிடைத்ததால் வாழ்வுக்கு வாய்ப்புக் கிடைத்ததென்று தென்னாடு நுழையத் தூண்டியதோ என்ற ஐயமும் உண்டு. வள்ளற்றன்மை தமிழரின் வாழ்வைப் பாழாக்கவா பயன்பட வேண்டும்? என்ற வருத்தமும் உண்டு.

இராசராச சோழனின் வெற்றியும், இராசேந்திரனின் பர்மா படையெடுப்பும் கங்கை கொண்ட சோழனின் வரலாறும் மறந்தோமில்லை. இவையெல்லாம் போரிலே கண்ட வெற்றிகள்! பற்பல வேல்கள் பாய்ந்ததால் விளைந்த வாகைகள்! ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை ஆரியத் தொடர்பால் தமிழரின் வெற்றி இடம் பெறாத அளவுக்கோ இடம் பெற முடியாத அளவுக்கோ அல்ல, இடம் பெறத் தகுதியற்ற அளவிற்குத் தமிழர் அறிவிழந்துள்ளனர். ஆரியர் அனைவரும் கற்றவர், தமிழர் யாவரும் கல்லாதவர் (100க்கு 95) என்ற நிலை. பேதமற்ற மனமும், காதல் கனிவும், வீரமும் – ஈரமும் நிறைந்த போதே அறிவினை ஆண்டவன் பேரால் அடகு வைத்து விதியின் விளையாட்டிலே ஈடுபட்டனர்.

போர் முனையிலே வாளுடன் வாள் பேச, ஈட்டிக் குத்தைக் கேடயந் தடுக்க, தைத்திட்ட வேலினைப் பறித்து எதிரியின் உயிரினைப் போக்கி நகைத்து அஞ்சா வன்மையுடன் வெற்றி கொண்ட தமிழர், பஞ்சாங்கப்படை முன் மண்டியிட்டு, வேதியக்கூட்டம் ஓதியவற்றை நம்பி தர்ப்பைப் புல்லிற்குத் தலை வணங்கி நின்றனர்.

இனிக் கலையென்னும் பெயரால், ஆரியம் வீசிய வலையில் வீழ்ந்திடும் தமிழர் நிலையும், ஓவியத்தின் அழகுச் சிலையின் நேர்த்தி, காவியத்தின் அமைப்பு. இலக்கியத்தின் போக்கு, சொல்லினிமை, பொருள் நயம் என்று பற்பல கூறி மயக்கிடும் மனக்குலைவும், வருத்தத்தையும் விளைவிப்பன. கம்பராமாயணமும், பெரிய புராணமும் இலக்கியப் பெயரால் மதக்கருத்தை மக்களுக்கு ஊட்ட முற்பட்டு, ஆரிய அடிமை ஏடுகளாய் தமிழர் தலைமீது தாங்கும் நிலை பெற்று, தமிழர் விலை கொடுத்து வாங்கும் உணர்வைக் கொலை புரியும் நஞ்சாய் அமைந்துள்ளன. மதமெனும் முள்ளில், கலையெனும் ஊன் அமைக்கப்பட்டிருப்பதறியாது உணவெனக் கருதிச் சுவைத்திடச் சென்று, அவ்வழி ஆரியத் தூண்டிலிற் சிக்கி வாழ்வினைப் பறிகொடுக்கின்றனர் தமிழர். பழந்தமிழ்ப் பனுவலாம் புறநானூற்றில், ஆரியமும் நுழைந்துள்ளது என்பது எவரும் மறுக்க முடியாது.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வெற்றிச் சிறப்புக் காணப்படும் ஒரு புறம். பல யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல் மற்றொருபுறம். இன்னும் பற்பல காட்சிகள் உண்டு. அவற்றிலே பூஞ்சாற்றூர்க் கௌணியன் என்னும் பார்ப்பான் வேள்வியைச் சிறப்பிக்கும் காட்சியுமுண்டு. இவையன்றி வடநாடு வென்ற செங்குட்டுவனும், மாடலமறையோன் என்னும் பார்ப்பனன் சொல்லினை ஏற்று வேள்வி செய்துள்ளான் என்று சிலப்பதிகாரத்தில் (காதை 28) நடுகற்காதையில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. வேள்வி ஆரியர்க்குரியதென்பதும், அவர்கள் வாழ்வுக்குத் துணையென்பதும் உணருங்கால், ஆரியரை ஆரிய நாட்டில் வென்று, திராவிடத்தில் ஆரியத்துக்கு அடிமையாய் வாழ்ந்தான் சேரன் என்பதை எவ்வாறு மறுக்க முடியும்? தன்னுணர்வு பெற்றாலன்றித் தமிழன் அடிமை மயக்கம் நீங்கித் தன்னுரிமையாய் வாழ்வதற்கு வேறு வழியேது? ஆரிய ஆட்சி ஆட்டம் கொடுத்ததுதான் எதனால்?

திராவிட நாட்டின் தமிழ்ப் பகுதியில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி (300 முதல் 700) 7-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவர்களைப் பற்றிப் பலரும் படித்திருக்க முடியும். வடமொழியும் நாலு வேதமும் இந் நாட்டில் ஒழுங்காக வளர்க்கப்படுவதற்குத் துணை புரிந்தார்கள் என்பதன்றி வடநாட்டிலிருந்து கூட்டங் கூட்டமாகப் பார்ப்பனர்களை அழைப்பித்துத் தமிழகத்தில் பல இடங்களில் குடியேற்றி, பிரமகானம், தேவகானம் முதலிய பெயரால் பல கிராமங்களை முற்றூற்றுகளாக (வரியின்றி) வழங்கினராதலின், தமிழகத்தின் பல பகுதியும் இன்று சதுர்வேதி மங்கலங்களாகக் காட்சியளிக்கின்றன.

திராவிடத்தில் தமிழர் வரலாறின்றித் தெலுங்கர் வரலாற்றைக் கண்டாலும் இது விளங்கும். இங்கு நான்காவது நூற்றாண்டில் நுழைந்த கூட்டம் ஆந்திர நாட்டில் 2 -ஆம் நூற்றாண்டில் நுழைந்துள்ளது. ஆந்திர நாட்டை ஆண்ட இச்சுவாகு , சாதவாகனர் என்ற இரு பரம்பரையினரும் தங்களை உயர்ந்த சாதியராக்கிக் கொள்ள ஆரியத்திடை, அடைக்கலம் புகுந்துள்ளனர். இச்சுவாகு வழியினரான மகாசாந்தமூலர் கி.பி. 200 – 218 வரை ஆண்ட போது, பார்ப்பனர்களை வடநாட்டிலிருந்து அழைத்துத் தானங்கள் பல புரிந்து, யாகங்கள் பல நடத்தித் திராவிடத்தை ஆரியக்களமாக மாற்றினார். (P.44 Early Dynasties of Andra Desa By B.V. Krishna Row M.A., B.L.)

“His regin was responsible for a greatwave of a immigration particularly of Brahmana settlers in Andhra desa from the north and north west. The immigrants came in all probability, at the invitation of the Emperer Santamula who after a lapse of more than a century revived the Vedic sacrifices and particularly the celebrated Vajabeya and Aswamedhe… Thus new villages were founded and Brahmana settlements established.”

மகாசாந்த மூலரின் மகன் வீரபுருடதத்தன் என்பவன், (கி.பி. 218-239) தன் காலத்தில் ஆரிய நுழைவால் தன் நாட்டிற்கு வந்த கேட்டினை உணர்ந்து அதனை  நீக்க முற்பட்டான். அவன் புத்தமத்தைத் தழுவியதன்றித் தன் நகரில் அமைத்த புத்த விகாரங்களின் பார்வைச் சுவரில் பார்ப்பனீயத்தை வெறுப்பதைக் காட்ட ஓர் லிங்க உருவத்தை உதைத்துத் தாழ்த்துவது போல் லிங்கத்தின் உச்சியில் தம் குதிகாலை வைத்துக் கொண்டுள்ள நிலையில் பல கற்பதுமைகள் செதுக்கிப் பதிய வைத்திருந்தவை இன்றும் காணப்படுகின்றன. அவற்றில் பெரிய இரண்டு சிலை உருவங்கள் மேற்கண்ட நூலில் படமெடுத்தும் காட்டப்பட்டிருக்கின்றன.

படிக்க:
மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

“The Ikshavahu king who was till then a follower of vedic Brahmanism and a worshipper of Siva in the form of linga renounced faith and became a true convert to Buddhism. (P.58)

In this panel there is a representation of monarch crushing with his right heel, a stone linga, which is encircled by many headed serpant. The linga and the serpent apparently symbolise Brahmanism and worship of Maheswara. The Brahamanism is denounced by the king in the presence of his ministers and hig diginitaries of State…

It is probable that “Sri Virapurushadatha” attempted to crush the tide of Brahmanism which received great impetus and revival under the aegis of his llustrious father Santhamula the great, only, two decades ago” (pages 59-60)

ஆந்திராவானாலும் அங்கும், ஆரியப் படையெடுப்பு கி.பி. 200-ல்தான் வெற்றி பெற்றதென்பதும் அஞ்ஞான்றும் அவர்களுக்கு எதிர்ப்பு இருந்ததென்பதும் தெரியவருகின்றது. திராவிட நாட்டுப் பிரிவினைக்கு ஆந்திர வரலாறு ஆதாரம் பல தருகின்றது. ஆந்திரத் தோழர்கள் இதனை உணரும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

அங்கே அடக்கம் செய்யப்படுபவர் உண்மை மனிதர் … போல்ஷ்விக் …

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 11-அ

ஸ்த்ருச்கோவ் குதூகலமுள்ளவர், கலகலப்பாக பழகுபவர். வார்டு நிலைவாயிலில் புகுந்ததுமே இங்கே, மருத்துவமனையில் சாப்பாடு எப்படி, சிகிச்சை முறைகள் கண்டிப்பானவையோ, கண்ணுக்கு இலட்சணமான நர்ஸ்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் மற்ற நோயாளிகளிடம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார் அவர். காயங்களுக்குக் கட்டு மாற்றப்படுகையில் க்ளாவ்தியா மிஹாய்லவ்னாவுக்கு ஒரு வேடிக்கைக் கதை சொன்னதுடன், இடையே அவளுடைய தோற்றக் கவர்ச்சி பற்றி வெகு துணிவுடன் பாராட்டுரையும் பகர்ந்து விட்டார். நர்ஸ் அறைக்கு வெளியே போனதும் ஸ்த்ருச்கோவ் அவள் பின்னே கண் சிமிட்டினார்.

“அழகானவள். கண்டிப்பு உள்ளவளோ? ஒருவேளை உங்களை நடுநடுங்க வைக்கிறாளோ? பரவாயில்லை, பயப்படாதீர்கள். உங்களுக்குச் செயல் தந்திரம் போதிக்கப்படவில்லை போலிருக்கிறது, ஊம்? கைப்பற்ற முடியாத அரண் எப்படிக் கிடையாதோ அப்படியோ அடைய முடியாத பெண்ணும் கிடையாது!” என்று கூறி உரக்க அதிர் வேட்டுச் சிரிப்பு சிரித்தார்.

ஸ்த்ருச்கோவ் வார்டுக்குக் களிபொங்கும் ஆரவாரத்தைக் கொண்டுவந்தார். ஆனால் இதற்காக ஒருவரும் தம்மீது மனத்தாங்கல் கொள்ளாத விதத்தில் அவர் ஆரவாரம் செய்தார். அவர் தங்களுக்கு வெகு நீண்ட காலமாகப் பழக்கமானவர் என்று எல்லோருக்கும் தோன்றியது. இந்தப் புதிய தோழரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. மேஜர் ஸ்த்ருச்கோவ் பெண்கள் விஷயத்தில் வெளிப்படையாகக் காட்டிய ஆர்வந்தான் மெரேஸ்யெவுக்குப் பிடிக்கவில்லை. ஸ்த்ருச்கோவோ இந்த ஆர்வத்தை மறைக்காதது மட்டும் அல்ல, உவப்புடன் பறைசாற்றவும் செய்தார்.

மறு நாள் கமிஸார் அடக்கம் செய்யப்பட்டார். பீரங்கிப் படைக் குதிரைகள் பீரங்கி வண்டியை முகப்பு வெளிக்கு இழுத்து வந்ததையும் இராணுவ இசைக் குழுவினர் வாத்தியங்கள் வெயிலில் மின்னக் குழுமியதையும், படைவீரர்கள் பிரிவு அணிவகுத்து வந்ததையும் ஜன்னல் குறட்டின்மேல் உட்கார்ந்து பார்த்தார்கள் மெரேஸ்யெவும் குக்கூஷ்கினும், க்யோஸ்தியேவும். க்ளாவதியா மிஹாய்லவ்னா அறைக்குள் வந்து நோயாளிகளை ஜன்னலிலிருந்து அகற்றினாள். அவள் எப்போதும் போலவே அமைதியுடனும் சுறுசுறுப்புடனும் விளங்கினாள். எனினும் அவள் குரல் மாறிவிட்டதையும் அது நடுங்குவதையும் தழுதழுப்பதையும் மெலேஸ்யெவ் கவனித்தான். புது நோயாளிகள் உடற்சூட்டை அளவெடுக்க அவள் வந்திருந்தாள். அந்தச் சமயத்தில் முகப்பு வெளியில் இசைக் குழு இறுதிச் சடங்கு அணிநடை இசையை வாசித்தது. நர்ஸ் வெளிறிப் போனாள். தெர்மாமீட்டர் அவள் கைகயிலிருந்து நழுவி விழுந்தது. பளிச்சிடும் பாதரசத் துளிகள் பிளாச்சுத் தரையில் சிதறியோடின. முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு க்ளாவ்தியா மிஹாய்லவ்னா வார்டுக்கு வெளியே ஓடி விட்டாள்.

“இவளுக்கு என்ன வந்துவிட்டது? அந்த ஆள் இவளுடைய அன்பரோ?” என்று சோக இசை வந்த ஜன்னல் பக்கம் தலையசைப்பால் ஜாடை காட்டி வினவினார் ஸ்த்ருச்கோவ்.

ஒருவரும் அவருக்குப் பதில் சொல்லவில்லை.

எல்லோரும் ஜன்னல் குறட்டின் வழியாக வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தார்கள். அங்கே, பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டிருந்த சிவப்புச் சவப் பெட்டி வாயிலை கடந்து மெதுவாக வெளியே நகர்ந்தது. பசுந்தழைகளில், மலர்களில் கிடந்தது கமிஸாரின் உடல். அவருக்குப் பின்னே சிறு பஞ்சணையில் குத்தப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன் விருதுகள் – ஒன்று, இரண்டு, ஐந்து, எட்டு…. யாரோ ஜெனரல்கள் தலையைக் கவிழ்ந்தவாறு நடந்தார்கள். அவர்களுக்கு நடுவே, தாமும் ஜெனரலுக்கு உரிய மேல்கோட்டு அணிந்து, எதனாலோ தொப்பி இன்றி நடந்தார் வஸீலிய் வஸீலியெவிச். பின்னால், மற்றவர்களிலிருந்து தொலைவில் ஒதுங்கி, மெதுவாக அடி வைத்து நடந்த படைவீரர்களுக்கு முன், கால்கள் இடற, எதிரே எதையும் நோக்காமல் வெறுந்தலையும் வெள்ளை அங்கியும் தானுமாகச் சென்றாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா. வாயிலில் யாரோ ஒருவர் அவள் தோள்கள் மீது மேல்கோட்டைப் போர்த்தார். அவளோ தொடர்ந்து நடந்தாள், மேல்கோட்டு தோள்கள் மேலிருந்து நழுவி விழுந்தது. படைவீரர்கள் அணி இரு கூறுகளாகப் பிரித்து அதைச் சுற்றிக் கடந்து சென்றார்கள்.

“அன்பர்களே, அடக்கம் செய்யப்படுபவர் யார்?’ என்று கேட்டார் மேஜர். அவரும் ஜன்னல் புறம் எம்பிப் பார்க்க விரும்பினார். ஆனால் சிம்புகளால் இறுக்கப்பட்டுப் பிளாஸ்டரில் வைக்கப்பட்டிருந்த அவருடைய கால்கள் அவருக்கு தடையாக இருந்தன. அவரால் ஜன்னலை எட்ட முடியவில்லை.

ஊர்வலம் அப்பால் போய்விட்டது. சோக இசை ஒலிகள் வீடுகளின் சுவர்களில் எதிரொலித்து தொலைவிலிருந்து ஆற்றின் வழியே மந்தணமாகக் கேட்டன. நொண்டி முகப்புப் பணிமகள் வாயிலிலிருந்து வெளியே போய் இரும்புக் கதவுகளை ஒலிப்புடன் இழுத்து மூடிவிட்டாள். ஆனாலும் நாற்பத்து இரண்டாவது வார்டுக்காரர்கள் கமிஸாரைக் கடைசிப் பயணத்தில் வழியனுப்பியவாறு இன்னும் ஜன்னல் அருகே நின்றார்கள்.

“யார் அடக்கம் செய்யப்படுகிறார்? சொல்லுங்களேன்? நீங்கள் என்ன இப்படி, மரங்களாக நிற்கிறீர்கள்?” என்று பொறுமை இழந்து வினவினார் மேஜர். ஜன்னல் குறட்டை எட்டும் முயற்சியை அவர் இன்னும் நிறுத்தவில்லை.

“அடக்கம் செய்யப்படுபவர் உண்மை மனிதர்… போல்ஷ்விக்…” என்று துயரந்தோய்ந்த தணிந்த குரலில் அவருக்கு விடையளித்தான் கன்ஸ்தாந்தீன் குக்கூஷ்கின்.

“உண்மை மனிதர்” என்ற இந்தச் சொற்கள் மெரேஸ்யெவின் நினைவில் பதிந்து விட்டன. கமிஸாரை இன்னும் சிறந்த சொற்களில் குறிக்க முடியாது. இறுதிப் பயணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த மனிதர் போன்றே தானும் உண்மை மனிதனாக விளங்க மெரேஸ்யெவுக்கு விருப்பம் உண்டாயிற்று.

சிகிச்சையும் காலமும் பயன் விளைத்தன. எல்லோரும் விரைவில் குணம் அடைந்தார்கள். மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நாள் நெருங்க நெருங்க, நாற்பத்து இரண்டாவது வார்டுக்காரர்கள் தங்கள் உடல்நலக் கேடு பற்றிக் குறைவாகவே எண்ணலானார்கள். வார்டுக்கு வெளியே தங்களுக்கு என்ன காத்திருக்கிறது, சொந்தப் படைப்பிரிவில் தங்களுக்கு எத்தகைய வரவேற்பு அளிக்கப்படும், எத்தகைய காரியங்கள் தங்களை எதிர்நோக்கி இருக்கின்றன என்பவற்றைப் பற்றி அவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். பழக்கமான இராணுவ வாழ்க்கைக்கு எல்லோருமே ஏங்கிக் கொண்டிருந்தார்கள். புதிய தாக்குதல் தொடங்குமுன் தாங்கள் உடல் நலம் அடைந்து படைப்பிரிவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்ற ஆர்வம் அவர்கள் உள்ளங்களில் கிளர்ந்து எழுந்தது. இந்தத் தாக்குதல் பற்றி எதுவும் இன்னும் எழுதப்படவில்லை, அது பற்றிய பேச்சு கூட இல்லை, எனினும் சூழ்நிலையில் அதை உணர முடிந்தது மழைப் புயலுக்கு முன் நிலவும் அமைதியை போலப் போர் முனைகளில் திடீரெனக் குடிகொண்ட சந்தடியின்மையைக் கொண்டு அதை அனுமானிக்க முடிந்தது.

மருத்துவமனையிலிருந்து இராணுவ வேலைக்குத் திரும்புவது படைவீரனுக்குச் சர்வ சாதாரணமான காரியம். அலெக்ஸேய் மெரேஸ்யேவுக்கு மட்டுமே அது பிரச்சினையை முன் வைத்தது; சாமார்த்தியத்தாலும் பயிற்சியாலும் கால்கள் இல்லாக் குறையை நிறைவுபடுத்த அவனுக்கு இயலுமா? சண்டை விமான ஓட்டியாக மீண்டும் பணியாற்ற அவனால் முடியுமா? குறித்த நோக்கத்தை அடைவதற்கு மேலும் மேலும் விடாப்பிடியாக முயன்றான் அவன். பயிற்சி நேரத்தைப் படிப்படியாக அதிகப்படுத்தி, காலையிலும் மாலையிலும் கால்களைப் பழக்கப்படுத்துவதையும் பொது உடற்பயிற்சியையும் இரண்டு மணி நேரம் வரை செய்யலானான். ஆனால் இது கூட அவனுக்குக் குறைவாகப்பட்டது. பகல் சாப்பாட்டுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யத் தொடங்கினான்.

கால்கள் இல்லாமல் விமானம் ஓட்ட முடியும் என்பதை வார்டில் ஒருவரும் நம்பவில்லை. ஆயினும் தோழனின் விடாப்பிடியான முயற்சியை எல்லோரும் மதித்தார்கள்.

மேஜர் ஸ்த்ருச்கோவ் முழங்கால் சில்லுகளில் ஏற்பட்டிருந்த பிளவுகள் ஆரம்பத்தில் நினைத்ததை விட அதிக மோசமானவை எனத் தெரியவந்தது. அவை மெதுவாகவே ஆறின. கால்கள் இன்னும் சிம்புக் கட்டிலேயே இருந்தன. மேஜர் குணமடைவது பற்றி எவ்விதச் சந்தேகமும் இல்லைதான். ஆயினும் தனக்கு இவ்வளவு தொல்லை விளைத்த “பாழாய்ப் போகிற முழங்கால் சில்லுகளை” வாய் ஓயாமல் திட்டி நொறுக்கினார் மேஜர். அவருடைய இந்தத் தொண தொணப்பு நிரந்தரமான சிடு சிடுப்பாக மாறத் தொடங்கிற்று. ஏதேனும் அற்ப விஷயத்துக்காக அவர் ஒரேயடியாக வெகுண்டு எல்லோரையும் எல்லாவற்றையும் வைது நொறுக்க ஆரம்பித்துவிடுவார்.

இரகசியமாகப் புகைபிடிப்பதற்குக் கூட தமக்கு வாய்ப்பு இல்லை என்றும், அறுவைக் கூடத்தைச் சேர்ந்த செம்பட்டை முடி நர்ஸை ஆளோடியில் கூடக் கண்டு பேசத் தமக்கு முடியவில்லை என்றும், வர வர அதிகரிக்கும் தமது பொறுமையின்மைக்கு இவையே காரணங்கள் என்றும் விளக்கினார் ஸ்த்ருச்கோவ். ஒருவேளை விஷயம் ஓரளவுக்கு இப்படி இருக்கலாம். ஆனால் மாஸ்கோவுக்கு மேலாகப் பறந்து செல்லும் விமானங்களை ஜன்னல் வழியே கண்டபோதும், அக்கறைக்குரிய புதிய விமானச் சண்டை பற்றியும் தமக்கு அறிமுகமான விமானியின் வெற்றி குறித்தும் வானொலி அல்லது செய்தித்தாள் வாயிலாக அறிந்த போதும் மேஜருக்கு எரிச்சல் பீறிடுவதையும் எள்ளும் கொள்ளும் வெடிப்பதையும் மெரேஸ்யெவ் கவனித்தான். ஸ்த்ருச்கோவ் போலவே மெரேஸ்யெவையும் இவை பொறுமை இழந்து சிடுசிடுக்க வைத்தன. ஆனால் அவன் அந்த சிடுசிடுப்பை வெளிக் காட்டுவதே இல்லை. இப்போது ஸ்த்ருச்கோவுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கையில் அவன் உள்ளுற மகிழ்ச்சி அடைந்தான். தான் தெரிந்தெடுத்துக் கொண்ட “உண்மை மனிதனின்” பண்பை, ஓரளவு தான் எனினும், நெருங்கத் தொடங்கியிருப்பதாக அவனுக்குப் பட்டது.

படிக்க:
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்
தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

கமிஸாரின் மரணத்துக்கு சில நாட்களுக்கொல்லாம் கன்ஸ்தாந்தீன் குக்கூஷ்கின் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறினான். எவ்வத உணர்ச்சி வெளியீடும் இன்றி அவன் வெளியேறினான். மருத்துவம் தனக்கு ஒரேயடியாக அலுத்துப் போய்விட்டது என்று விடை பெறுகையில் பிரகடனம் செய்தான். அசட்டையாகவே பிரிவு சொல்லிக் கொண்டான். தாயாரிடமிருந்து தனக்குக் கடிதங்கள் வந்தால் அவற்றைத் தவற விட்டுவிடாமல் பத்திரமாக வைத்திருந்து தனது ரெஜிமெண்ட் முகவரிக்குக் கட்டாயம் அனுப்பும்படி மெரேஸ்யெவிடமும் நர்ஸினிடமும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டான்.

“உன்னை அங்கே எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள், எப்படி வேலையில் மறுபடி சேர்கிறாய் என்பதை எல்லாம் எழுது” வழியனுப்புகையில் அவனிடம் சொன்னான் மெரேஸ்யேவ்.

“நான் உனக்கு எதற்காக எழுத வேண்டும்? உனக்கும் எனக்கும் என்ன உறவு பாழ்போகிறது? நான் உனக்கு எழுதிக் காகிதத்தை வீணாக்கப் போவதில்லை….”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்

2

ச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மாணவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடைந்துவிட்டதாகக் கூறியது போலீசு. அவர்களை வரிசையாக நிற்க வைத்து புகைப்படமும் எடுத்து வெளியிட்டது போலீசு. சட்டவிரோதமாக மாணவர்களின் கையை உடைத்தது மட்டுமல்லாமல், அவர்களைக் காட்டி மற்றவர்களை மிரட்டுகிறார்களாம். அதுமட்டுமல்லாமல், கல்லூரிக்குள் சென்று மிரட்டுவது, பெற்றோர்களை வரவழைத்து மிரட்டுவது என போலீசு அராஜகம் தொடர்கிறது. மாணவர்களிடம்  இனி ”சாப்ட் கார்னர்” அணுகுமுறையை கடைபிடிக்க மாட்டோம்; குற்றவாளிகளைப்போல இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்கிறார் போலீசு உயர் அதிகாரி.போலீசின் இந்த நடவடிக்கைகளை ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே பேசப்படுகின்றன.

இவ்விவகாரம் குறித்து டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம், சமச்சீர் கல்விப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் என்ன சொல்கிறார்? அவரிடம் நடத்திய நேர்காணலில் இருந்து சில பகுதிகள் :

♦ சமீபத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், நடுரோட்டில் வீச்சரிவாள்களுடன் மோதிக்கொண்ட சம்பவத்தை ஒரு மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?

◊ ஒரு சில ரூட் மாணவர்கள் எந்த ரூட் பெரிது என்று கெத்து காட்டுவதற்காக வழமையாக ஒவ்வொரு ஆண்டும் இப்படி மோதிக் கொள்கிறார்கள். இப்படி மோதலில் ஈடுபடும் மாணவர்கள் படுகாயம் அடைவதோடு, படிப்பும் எதிர்காலமும்கூட பாதிக்கப்படுகிறது. இவையெல்லாம் ஒரு சில மாணவர்கள் செய்யும் ரவுடித்தனம். மாணவர்கள் இத்தகைய ரவுடித்தனத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எமது பு.மா.இ.மு. அமைப்பு இதை ஏற்கவில்லை. கண்டிக்கிறது. இது மக்களிடையே மாணவர்களைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை உருவாக்குகிறது. அதுமட்டுமல்ல வெறுப்பையும் தோற்றுவிக்கிறது. அதே சமயம் இத்தகைய தவறான சம்பவத்தில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு குற்றவாளிகளாக மாறுகிறார்கள்.

♦ ”பஸ் டே” – ”ரூட் தல” போன்றவை எல்லாம் சீரழிவுக் கலாச்சாரமாக பொதுமக்களிடையே பார்க்கப்படுகிறது அல்லவா? அதை எதிர்க்க வேண்டாமா?

◊ ஒரு சில மாணவர்கள் செய்யும் ரவுடித்தனத்தை இயல்பாக கடந்து செல்லச் சொல்லவில்லை. இத்தகைய ரவுடி கலாச்சாரத்தை மாணவர்களிடம் இருந்து முற்றிலும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒருசில மாணவர்களுடைய இத்தகைய ரவுடித்தனமான செயல்பாட்டை நாங்கள் ஆதரிக்கவுமில்லை. ஆனால், இதை ஒட்டுமொத்த சென்னை மாணவர்களும் செய்வதாக பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் மற்றும்  அரசும்  சித்தரிப்பதைதான் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

அதேசமயம் மாணவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வரும் பஸ்டே மற்றும் மாணவர்கள் தினந்தோறும் கல்லூரிக்கு வரும் ரூட் ஆகியவற்றையெல்லாம் சீரழிவு  என்று யார் சொன்னது? நான் மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவன். அந்த கல்லூரியில் எம்.ஃபில் வரை ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் படித்து இருக்கிறேன்.  பஸ் டே, ரூட் போன்றவை எல்லாமே மாணவர்கள் தங்களுடைய ஒற்றுமையின், தங்களுடைய ஜனநாயக உரிமையின் அடையாளமாகத்தான் பார்க்கிறார்கள்.

சமீப ஆண்டுகளாக சகிக்க முடியாத அளவிற்கு பேருந்துகளிலும் இரயில்களிலும் மாணவர்களின் ரவுடித்தனம் மக்கள் முகஞ்சுழிக்கும் வண்ணம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே?

◊ ரவுடித்தனம் செய்யும் சில மாணவர்களும் கூட இப்படி நடந்து கொள்வதற்கும் ஒரு சமூக அடிப்படை இருப்பதை முதலில் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்கு சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் தாக்கம்தான் மாணவரிடம் அதிகமாக இருக்கின்றது என்பதை நீங்கள் மறுக்க முடியுமா? சினிமாவும் தொலைக்காட்சி சீரியல்களில் மாணவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுக்கிறது? மாணவ சமூகம் மூடித்தனமாக பொறுக்கித்தனமாக இருப்பதுதான் கெத்து என்று மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறது.

எத்தனையோ சினிமா படங்கள் ஹீரோ என்றால் இப்படி ரவுடியாக இருக்க வேண்டும் என்று சொல்வதை நீங்கள் பார்க்கவில்லையா? படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதையும் பட்டா கத்தியுடன் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்வதையும் சினிமாக்கள்தானே மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தது? இது தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் தெரிந்த உண்மை. சினிமா படங்களில் வந்தால் அதை ரசிக்கிறார்கள். அதனுடைய பிரதிபிம்பமாக அதற்கு ஆட்பட்ட மாணவர்கள் பேருந்தில் செய்தால் வெறுக்கிறார்கள். மக்களுடைய இந்த பத்தாம்பசலித்தனமான செயலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ரவுடித்தனத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கையை உடைத்த போலீசின் நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் ”சரிதான்” என்றுதானே கூறுகின்றனர்?

◊ ஒரு சில மாணவர்கள் செய்யும் ரவுடித்தனத்தை நாங்களும் ஏற்கவில்லை. யாரையும் ஏற்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதேநேரத்தில் இப்படிப்பட்ட ரவுடித்தனத்தில் ஈடுபடுபவர்கள் நிரந்தரமான ரவுடிகளாக மாற வேண்டும் என்று நினைக்கிறோமோ? அல்லது இவர்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோமா? இதைப் புரிந்து கொள்வதில் தான்  வேறுபாடு உள்ளது.

போலீசின் பொறுக்கித்தனம் : கை முறிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள்.

பெற்றோர்கள், தமது சொந்த மகன் ஒரு தவறான செயலில் ஈடுபடும் பொழுது கூட அவனை ஆத்திரத்தில் அடிக்கிறார்கள் உதைக்கிறார்கள் வீட்டை விட்டு வெளியே போ என்று அனுப்புகிறார்கள். ஆனால், அதை நிரந்தரமாக அவனை ஒரு எதிரியைப் போல நடத்துவதே இல்லை. இதையெல்லாம் அவர்கள் செய்வதற்கு காரணம் அந்த தவறின் மீது அவருடைய கோபம் ஆத்திரம் மட்டுமல்ல அவனை மாற்றியமைப்பதற்காக, திருத்தி அமைப்பதற்காக அந்த பெற்றோர்கள் எடுக்கின்ற முயற்சி என்ற வகையில் தான் பார்க்கவேண்டும். அப்படித்தான் சமுதாயத்தில் நடக்கிறது. ஆனால், இங்கு மட்டும் கல்லூரியில் ஒரு சில மாணவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டு இதைப் போன்ற ரவுடித்தனத்தில் ஈடுபடும் பொழுது, அவனை எதிரியைப் போல சித்தரித்து நிரந்தரமாக குற்றவாளியாக மாற்றுவதற்கு போலீசுக்கு அதிகாரத்தை கொடுப்பதை எந்த வகையில் சரி என்று பார்க்க முடியும்?

இந்த அதிகாரத்தை எந்த சட்டம் போலீசுக்கு கொடுத்தது? குற்றம் செய்திருக்கிறார்கள் என்றால், கைது செய்யுங்கள். வழக்கு போடுங்கள். சிறையில் தள்ளுங்கள். நீதிமன்றம் கொண்டு செல்லுங்கள். தீர்ப்பு எழுதுங்கள். ஆனால், அதற்கு முன்னதாகவே பிடித்த பொழுது அடித்து கையை காலை உடைப்பது, சுட்டுக் கொல்வது, என்பது எந்த வகையில் ஜனநாயகம்? இதுதான் சர்வாதிகாரம். இதுதான் போலீசின் ஆட்சி.

கல்லூரிக்கு வருகின்ற அனைத்து மாணவர்களும் ஏதோ ஒரு இலட்சியத்திற்காக அல்லது ஏதோ ஒரு பிழைப்பிற்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் படிக்க வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்படி ரவுடிகளாக மாறி இருக்கிறார்கள் என்பதையும் நாம் சேர்த்து பார்க்க வேண்டும்.

கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழையும் போலீசு.

ரவுடித்தனம் பொறுக்கித்தனம் கொலை கொள்ளை குடித்தனம் செய்பவர்கள் தான் இந்த சமுதாயத்தில் அரசியல்வாதிகளாக, அமைச்சர்களாக, முதல்வர்களாக, அதிகாரிகளாக, கௌரவமான மனிதர்களாக வலம் வருகிறார்கள். அவர்கள் எல்லாம் விஐபிகள் ஆக பார்க்கப்படுகிறார்கள். நல்லவன் ஒழுக்கமானவன் என்பதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது. அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்பதைத்தான் இந்த சமூகம் மீண்டும் மீண்டும் கற்றுத்தருகின்றது.

சகிக்க முடியாத குற்றங்களுக்கு எல்லாம் இது தான் தீர்வு என்று சொன்னால், இந்த மாநிலத்தின் முதல்வர் கொடநாடு கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார். இந்த மாநிலத்தில் முன்னாள் டிஜிபி குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டிருந்தார். இன்னும் பல அமைச்சர்கள் பல்வேறு விதமான ஊழல்களில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அனைத்தும் ஆதாரங்களோடு குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றன.

அமைச்சர் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார். இன்னும் எத்தனை அமைச்சர்களை சொல்ல வேண்டும்? இன்றைய துணை முதலமைச்சர் அவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டிருக்கிறார். மாணவர்களின் கை கால்களை உடைத்தது போலவே, இவர்கள் விசயத்திலும் செய்வார்களா?

ஒருகாலத்தில் அண்ணா போன்ற அரசியல் தலைவர்களையும், அறிவுத்துறையினரையும் உருவாக்கிக் கொடுத்த பச்சையப்பன் கல்லூரி இன்று, ”பொறுக்கிகளையும், ரவுடிகளையும்” உருவாக்கிக் கொண்டிருக்கிறதா?

◊ நிச்சயமாக இல்லை.  ”பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்; அந்தக் கல்லூரி இப்படிப்பட்டவர்களை மட்டும்தான் உருவாக்குகிறது” என்ற தோற்றத்தை போலீஸும், பத்திரிகைகளும் அரசும் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடுகின்றது. இன்றளவும் அந்தக் கல்லூரியில் பல மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். சென்னை ஐஐடி போன்றவற்றில் நடக்கின்ற இன்டர்காம் பட்டியலில் இன்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நாடகம், பேச்சுப்போட்டி, உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கி வருகிறார்கள். அதே போல் கால்பந்து கபடி கிரிக்கெட் போன்ற விளையாட்டிலும் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பாக மாநில அளவில் விளையாடி பரிசுகளை வென்று வருகிறார்கள். சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடும் போராளிகளை உருவாக்கும் இடமாக இன்றளவும் பச்சையப்பன் கல்லூரி திகழ்ந்து வருகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புப் போருக்கு எதிராக, டாஸ்மாக் சாராயக்கடைக்கு எதிராக முன்னுதாரணமான போராட்டங்கள் பல நடத்தியவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள். சமீப ஆண்டுகளாக அதுபோன்ற சமூக அவலங்களுக்கு எதிராகவோ, மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டங்களோ எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லையே? காரணம் என்ன?

◊ இதையெல்லாம் நீங்கள் முன்னுதாரணமான போராட்டங்களாக குறிப்பிடுகிறீர்கள். ஆனால், இத்தகைய சமூக அவலங்களுக்கு எதிரான போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுத்த காரணத்தினால்தான் போலீசும் பச்சையப்பன் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக பலரை சஸ்பெண்ட் செய்தது. சில மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்கியே தீருவோம் என்று பிடிவாதமாக நீக்கியது. குறிப்பாக, இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்த எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவரை கல்லூரியை விட்டு  நீக்கியது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். ”அந்த மாணவர் எங்கள் கல்லூரியில் இருந்தால் அனைத்து மாணவர்களையும் அரசியல்படுத்தி போராட்டங்களில் ஈடுபடுத்தி விடுவார். இதனால் மாணவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டு விடுவார்கள். எனவே, இவரை எங்கள் கல்லூரியில் நாங்கள் சேர்த்துக் கொள்ள மாட்டோம்” என்று நேரடியாக நீதிமன்றத்தில் தெரிவித்தார், கல்லூரி முதல்வர். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அந்த மாணவரை வேறொரு கல்லூரிக்கு மாற்றி சேர அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.

சமூக அநீதிக்கு எதிராகப் போராட முன்வரும் மாணவர்கள் இத்தகைய சம்பவங்களை பார்க்கின்ற போது அவர்கள் எப்படி மேலும் மேலும் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவார்கள்? அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பார்கள்? சமூக அக்கறை உள்ள மாணவர்களை கண்டறிந்து கல்லூரியைவிட்டு வெளியேற்றுவதற்கு என்றே 10-க்கும் மேற்பட்ட உளவு போலீசாரும் கியூ பிராஞ்ச் போலீசாரும் கல்லூரிக்குள் சுற்றி வருகிறார்கள்.  முதல்வருக்கு மாணவர்களை அடையாளம் காட்டி அவர்களை கல்லூரியைவிட்டு அனுப்புகின்ற வேலையை தினமும் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் கல்லூரிக்கு வெளியே பத்துக்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து வைத்து மாணவர்களை, குற்றவாளிகளைப் போல, முழுக்க சோதித்து கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். கிரவுண்டில் விளையாடக்கூடாது; ஐந்து ஆறு மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பேசிக் கொள்ளக் கூடாது; இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள். மாணவர்களுடைய ஜனநாயகத் தன்மையை, பொது விஷயங்களை கலந்து பேசுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை அறவே ஒழித்துக் கட்டுவது போலீசும் கல்லூரி நிர்வாகமும்தான். இவர்கள்தான் மாணவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். இப்படி தவறாக வழி நடத்தப்படுவதால்தான் மாணவர்கள் சமூக விஷயங்களில் தலையிட்டு போராடுவதற்கு பதிலாக சுயநலமாக காரியவாதமாக பிழைப்புவாதமாக சரியாக சொல்லப் போனால் தைரியமில்லாத கோழைகளாக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறார்கள்.

மாணவர் அமைப்புகள் போராட்டங்களுக்கு ”மாஸ்” காட்டத்தான் மாணவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனவா? மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பு மாணவர் அமைப்புகளுக்கு இல்லையா?

◊ போராட்டங்களுக்கு மாஸ் காட்ட மாணவர்களை திரட்டி செல்வதால் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் என்ன இலாபம்? கல்வி உரிமை பறிக்கப்படுகிறது; ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாயம் அழிக்கப்படுகிறது; இன்னும் பல்வேறு வகையில் இந்த மக்கள் பாதிக்கப்படும்போது, மாணவர்கள் பாதிக்கப்படும் போது அதற்கு எதிராக மாணவர்களை களத்தில் நிறுத்தி போராட வைப்பதுதான் ஒரு மாணவர் அமைப்பின் மிக முக்கியமான கடமையும் பொறுப்பும். இதனூடாகத்தான் கரடுமுரடாக வருகின்ற மாணவர்களை நெறிப்படுத்தி சமூக அக்கறையோடு பொறுப்புடன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கின்ற வாய்ப்பை மாணவர்களுக்கு உருவாக்கித் தர முடியும். இதைத்தான் முற்போக்கு மாணவர் அமைப்புகள் செய்து வருகின்றன.

எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பச்சையப்பன் கல்லூரியில் செயல்பட்டு வந்த வரையில் மாணவர்களை அவர்களது ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் பல்வேறு சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் களத்தில் முன்னிறுத்தி அவர்களை ஹீரோவாகக் காட்டியிருக்கிறோம்.

குற்றவாளிகளைப்போல கல்லூரிக்குள் நுழையும் மாணவர்களை சோதனையிடும் போலீசு.

ஆனால், இப்பொழுது கல்லூரிக்குள் மாணவர் அமைப்புகள் செயல்பட நிர்வாகமும் போலீசும் அனுமதிப்பதே இல்லை. சரியாக சொல்வதென்றால் கல்லூரிகள் கல்லூரிகளாகவே இல்லை. சிறைச்சாலைகளை விட கொடுமையாக இருக்கின்றன. மாணவர்கள் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதைபோல் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் மாணவர் அமைப்புகள் கலந்து பேசுவதற்கான வாய்ப்பு அறவே ஒழிக்கப்பட்டது. ஒரு மாணவர் கல்லூரியில் மாணவர் அமைப்பில் இருக்கிறார் என்று தெரிந்தாலே அவர் உடனடியாக கல்லூரியை விட்டு தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார் அல்லது நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுகிறார். இது இரண்டாண்டுகளுக்கு முன்பு மாநிலக் கல்லூரியில் படித்த எமது மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கே நடந்தது. மீறி சட்டரீதியாகப் போராடி மீண்டும் கல்லூரியில் சேர்ந்தாலும் அவரை ஒதுக்கி வைப்பது, மற்ற மாணவர்களை அவர்களுடன் சேரவிடாமல் செய்வது என அந்த மாணவர்களை வதைக்கிறது நிர்வாகம். அதனூடாக போலீசுக்கு அதிக அதிகாரத்தை கொடுத்து கல்லூரி வாயிலில் நின்று மாணவர்களை நோட்டீஸ் கொண்டு வருகிறார்களா என்று சோதித்து அறிந்து அவர்களை சிறைப்படுத்துகின்ற வேலையை கல்லூரி நிர்வாகங்கள் செய்கின்றன. இப்படி இருக்கின்றபட்சத்தில் எப்படி மாணவர் அமைப்புகள் கல்லூரி மாணவர்களை ஒழுங்குபடுத்த, நெறிப்படுத்த முடியும்?

போலீஸும் கல்லூரி நிர்வாகமும் அரசும் மாணவர்கள் ஒழுங்கில்லாத நிலையில் இருக்கிறார்கள் அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்; நெறிப்படுத்த வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், மாணவர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டவர்களாக நெறிப்படுத்தப்பட்டவர்களாக இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய விருப்பமாக உள்ளது. ஏனென்றால், கடந்த ஆண்டுகளில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளில் மாணவர்கள்தான் முயற்சியோடும் அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் பொது விசயங்களுக்காக தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்கள் முன் நின்று நடத்திய போராட்டம். ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் மக்கள் போராடிய போது அதற்கு எதிராக தமிழகம் முழுவதும் குரல் கொடுத்து போராடியவர்கள் யார் மாணவர்கள்தானே? தற்போது பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக களத்தில் நின்று போராடி அந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்க காரணமாக இருந்தவர்கள் யார்? மாணவர்கள்தானே? மறுக்க முடியுமா?

டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டதோடு, மாதக்கணக்கில் சிறைவைக்கப்பட்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் தான் அதிகப்படியான மாணவர் போராட்டங்கள் நடந்து இருக்கின்றது. இதைக்கண்டு மோடி அரசு அஞ்சுகிறது. இங்குள்ள எடப்பாடி அரசு அஞ்சுகிறது. தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் எதுவும் நடைபெறக்கூடாது அப்படி நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் மாணவர் அமைப்புகள் கல்லூரிக்குள் செயல்படக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதனால்தான் தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்கள் ஜனநாயக உரிமைகள் இன்றி அடக்கி ஒடுக்கி சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதனால்தான் மாணவர் அமைப்புகளை தமிழக அரசும் மோடி அரசும் எதிரிகளாக பார்க்கிறது. இந்த மாணவர் அமைப்புகளை முதலில் களை எடுத்து விட்டால் பின்னர் மாணவர்களுடைய சமூகப்பற்றை நாட்டுப்பற்றை அறுத்தெறிந்து போர் முனை மழுங்கச் செய்து அவர்களை சீரழிவில் தள்ளி அந்த அரசை தாங்கள் விரும்புகின்ற படி நடத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள்.

படிக்க:
நொறுங்கியது டாஸ்மாக் – பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போர் !
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

இந்த நிலைமையை மாற்றி அமைப்பது மாணவர்கள் அமைப்புடைய பொறுப்புகள் கடமைகள் தான். அதை நாங்கள் மறுக்கவில்லை. அதைத்தான் நாங்கள் தினந்தோறும் செய்ய முயற்சித்து வருகிறோம். அர்ப்பணிப்போடு தியாகத்தோடு இந்தப் பணியில் எங்களை ஈடுபடுத்தி இருக்கிறோம். எந்த சுயநலமும் இலாப நோக்கமும் இல்லாமல் பல்வேறு வழக்கு கைது சிறை அனைத்தையும் சந்தித்து இதற்காக மாணவர் மத்தியில் போராடி வருகிறோம்.

இந்த சூழலை மாற்ற வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

◊ இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று சொன்னால் மாணவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்கப்படவேண்டும். கல்லூரி சூழ்நிலையை மாணவர்கள் படிப்பதற்கான, மாணவர்கள் ஜனநாயகத்தை உணர்வதற்கான சூழலாக மாற்றி அமைக்க வேண்டும். ஆண்டுதோறும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கலாச்சார நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல மாணவர்களுடன் ஆசிரியர்கள் ஜனநாயகபூர்வமாக கலந்துரையாட வேண்டும். மாணவர்களுடைய பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு தீர்வு சொல்ல வேண்டும். பேராசிரியர்கள் மாணவர்களின் சக நண்பனாக இருக்க வேண்டும். மாணவர் அமைப்புகள் செயல்படுவதை அனுமதிக்க வேண்டும். சமூக விஷயங்களில் மாணவர்கள் தலையிடுவதை ஊக்கப்படுத்தவேண்டும். சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு மாணவருடைய பங்களிப்பை கோரவேண்டும். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை உருவாக்குவது தான் மாணவர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபடுவதை தடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்படவைக்க நிரந்தரவழி.

நேர்காணல் : இளங்கதிர்

NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு!
– பேராசிரியர் கருணானந்தன் !

பேராசிரியர் கருணானந்தன், சென்னையிலுள்ள விவேகானந்தா கல்லூரியில் வரலாற்றுத் துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பணியில் இருந்த சமயத்தில் அரசுக் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கத் தலைவராகச் செயலாற்றியிருக்கிறார். தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியபொழுது, சமச்சீர் பாடத் திட்ட நூல் ஆசிரியர் குழு தலைவராகப் பணிபுரிந்திருக்கிறார்.

பேராசிரியர் கருணானந்தன்.

கருணானந்தன் ஆசிரியர் பணியில் இருந்துதான் ஓய்வு பெற்றுவிட்டாரே தவிர, மக்கள் பணியிலிருந்து ஓய்வு பெறவில்லை. மக்கள் கல்வி மற்றும் ஆசிரியர், மாணவர் உரிமைகள் ஆகிய தளங்களில் இன்று வரையில் ஊக்கமுடன் பணியாற்றிவருகிறார். பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக இருக்கும் அவர், வரலாற்றுப் புலத்தில், குறிப்பாக இந்து மதவெறி பாசிஸ்டுகள் வரலாற்றைக் காவிமயமாகத் திரித்துப் புரட்டிவருவதற்கு எதிராகப் போராடிவருகிறார்.

மைய அரசு தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வெளியிட்டிருப்பதை அடுத்து, அக்கொள்கையின் கார்ப்பரேட்  காவி சார்பை அம்பலப்படுத்தி கடந்த இரண்டு மாதங்களில் தமிழகமெங்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார்.

புதிய ஜனநாயகம் வாசகர்களுக்காக, தேசியக் கல்விக் கொள்கை- வரைவு குறித்துப் பேராசிரியர் கருணானந்தன் அவர்களிடம் நேர்காணல் ஒன்றை ஒழுங்கு செய்தோம். அந்நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இவ்விதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் குழு.


 

♦ கல்வி முறையில் மாற்றம் தேவை என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வரும் வேளையில் தேசியக் கல்விக் கொள்கை (வரைவு) 2019 வெளியிடப்பட்டிருக்கிறது. அக்கோரிக்கையை நிறைவுசெய்யும் விதத்தில் இந்த வரைவு அறிக்கை அமைந்திருக்கிறதா?

◊ இந்தக் கல்விக் கட்டமைப்பு மாற வேண்டும் என நாம் மட்டுமல்ல, வியாபார நோக்கில் கல்வியைப் பார்க்கிறவர்களும் விரும்புகிறார்கள். உலகத்திலேயே கல்வி பெற்ற நடுத்தர வர்க்கம் அல்லது கல்வி பெறுகிற நடுத்தர இளைஞர் சமுதாயம் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிற நாடு இந்தியா. இந்நிலையில் அவர்கள் கண்ணோட்டத்தில் இலாபம் ஈட்டக்கூடிய கல்வி வியாபாரத்துக்கு பொருத்தமான இடமிது. தங்கள் இலாபத்தை உறுதிப்படுத்துகிற வகையில், அதிகப்படுத்துகிற வகையில் மாற்றங்களைக் கொண்டுவர (கல்வி வியாபாரிகள்) விரும்புகிறார்கள்.

நம்மைப் பொருத்தவரை கல்வி என்பது மக்கள் முன்னேற்றத்துக்கான ஒரு கருவி. சிந்தனை மற்றும் பொருளியல், சமூக முன்னேற்றத்துக்கான கருவி. அதை நோக்கிய பயணத்தில் இருக்கிற குறைகளைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம்.

அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது, இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது கல்வி வியாபாரத்துக்கு மிகப் பொருத்தமான சீர்திருத்தங்களை கொண்டு வருகிறது. ஆனால், மக்கள் கல்விக்கு இது முரண்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கல்வி முறையாக இருக்கிறது. ஆகவே, இந்தக் கல்விக் கொள்கை ஏமாற்றத்தை மட்டுமல்ல, எதிர்ப்பை விளைவிக்கக்கூடிய கல்விக் கொள்கை.

♦ பொதுவெளியில் பின்லாந்து மாதிரி பற்றிப் பேசப்படுகிறது. அந்நாட்டில் 6 வயதுக்கு மேல்தான் கல்விக்கூடங்களில் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆயின், தேசியக் கல்விக் கொள்கை மூன்றாவது வயதிலேயே இந்தியக் குழந்தைகளைக் கட்டாயக் கல்வி வளையத்திற்குள் கொண்டு வருகிறது. மேலும், அவ்விளம் பருவத்திலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை அக்குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று பரிந்துரைப்பதோடு, இதற்கு அறிவியல் அடிப்படை இருப்பதாகவும் கூறுகிறது. இப்பரிந்துரையை நேர்மறையாகப் பார்க்க இயலுமா?

◊ அறிவுள்ள யாரும் நேர்மறையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், மனித வாழ்க்கையில் சில பருவங்கள் உண்டு. மழலைப் பருவம், குழந்தைப் பருவம், விடலைப் பருவம், அதன் பிறகு வாலிபப் பருவம் என்றவாறு… அந்தப் பருவத்துக்கு ஏற்பத்தான் செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டும். கல்விக்காக மனிதன் கிடையாது. மனிதனுக்காகத்தான் கல்வி.

மழலைப் பருவக் கல்வி (Pre Education) என்பது கார்ப்பரேட்டுகளின் சதி, கார்ப்பரேட்டுகளின் வியாபாரம். பிரீ பிரைமரி, பிரீ ஸ்கூல் என்பவையெல்லாம் வணிக நோக்கத்துக்காக கார்ப்பரேட்டுகள் உருவாக்கியவை. சொல்லப்போனால், 1985 பிறகுதான் இவையெல்லாம் வருகின்றன.

இந்த கார்ப்பரேட் யுகம் வரவர, தனியார்மயம் (LPG) பெரிதாகப் பெரிதாகக் கல்வியை அதற்கு ஏற்றாற்போலக் கொண்டுவருகிறார்கள்.

உடல் பக்குவத்தோடுதான் அறிவுப்  பக்குவம் வருகிறது. கையைச் சரியாக மடிக்க வராத குழந்தைக்கு, பேனாவைக்கூடப் பிடிக்க முடியாத குழந்தைக்கு முறைசார்ந்த கல்வியைத் தொடங்குவது எந்த விதத்தில் நியாயம்? எதைச் சொல்லியாவது குழந்தையை இந்த வணிகத்துக்குள் கொண்டு வந்துவிடப் பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு அது தேவையில்லை. மழலைப்பருவம் மகிழ்வான பருவம். அந்த மகிழ்வு உறுதியாக வேண்டுமென்றால், குடும்பப் பிணைப்புடன் பெற்றோர் பிணைப்புடன் அதை இணைத்துப் பார்க்க வேண்டும்.

அதனாலேயே முன்னேறிய நாடுகள் மழலைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. குழந்தைக் கல்வியின் தொடக்கம் என்பது, முறைசார்ந்த கல்வியின் தொடக்கம் என்பது மழலைப் பருவம் கடந்த பிறகுதான் வரவேண்டும். இது உலகளாவிய உண்மை. இவன் வியாபாரத்துக்காக (அவ்வுண்மையை) மாற்ற முடியாது.

மழலைப் பருவத்திலேயே பல மொழிகளை கற்றுக்கொள்ளும் திறமை இருப்பதாகச் சொல்வது, இவர்களது வேறு உள்நோக்கத்துக்கு இசைவாகப் புதிய கற்பிதங்களை உருவாக்கி வருகிறார்கள். இதற்கு எந்தவிதமான சயின்டிபிக் எவிடென்ஸ்” (அறிவியல் ஆதாரம்) கிடையாது.

♦ முந்தைய காங்கிரசு அரசு கொண்டுவந்த கல்வி உரிமைச் சட்டம், இடைநிற்றலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எட்டாவது வரையிலும் எந்தவொரு மாணவனையும் ஃபெயிலாக்கக்கூடாது எனக் கூறியது. பின்னர் வந்த மோடி அரசு அக்கொள்கை மாணவர்களின் கல்வித் திறனைப் பாதிப்பதாகக் கூறி ரத்து செய்தது. தேசியக் கல்விக் கொள்கையோ 3, 5, 8- வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப் பரிந்துரைப்பதோடு, ஒன்பதாம் வகுப்பு தொடங்கி 12-ம் வகுப்பு வரையிலும் நான்கு ஆண்டுகளில் எட்டு பருவத் தேர்வுகளைப் பரிந்துரை செய்கிறது. இது பள்ளிக் கல்வியில் எந்தவிதமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்?

◊ இடைநிற்றலுக்கான காரணங்கள் ஒன்று அல்ல, பல உண்டு. முக்கியமான காரணம் வறுமையாக இருந்தது. அதற்காகத்தான் மதிய உணவுத் திட்டத்தை காமராஜும், அதற்கு முன்னர் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்களும் கொண்டுவந்தார்கள்.

இரண்டாவது, மனதில் ஏற்படக்கூடிய அழுத்தம். கூண்டுக்குள் இருப்பது போன்ற மனநிலை. அந்த மன அழுத்தத்தில் மாணவர்கள் வெளியேறுகிறார்கள்.

மூன்றாவதாக, இந்த வறுமைதான் அங்கேயும் வருகிறது. ஏதோ ஒன்று செய்து நமது குடும்பத்திற்கு உதவியாக இருப்போம், ஏதாவது ஒரு தொழில் செய்வோம் என எண்ணிப் படிப்பைக் கைவிட்டுச் சாதாரண பெட்டிக் கடைகளிலும் போய்ப் பணிபுரிகின்றனர். படிப்பைக் கைவிடும் மாணவனைப் பொருத்தவரை என்ன மனநிலை என்றால், ஏதாவது ஒரு வகையில் நமது பெற்றோருக்கு நாம் உதவியாக இருக்கிறோம் என்பதுதான். இப்படிப் பல காரணிகள் உண்டு.

மற்றொரு காரணி என்னவென்றால், சமூகத்தின் பன்முகத் தன்மை. அங்கே வரக்கூடிய குழந்தைகளின் சமூக, பொருளியல், பண்பாட்டுக் களங்கள் வேறுவேறானவை. குறிப்பாக, இந்தியாவில் உள்ளது போன்ற சமூக ஏற்றத்தாழ்வு நாம் வேறு எங்கும் காண முடியாது.

சாதி உணர்வோடு ஆசிரியர் இருந்தாலோ, பள்ளி நிர்வாகம் இருந்தாலோ நிச்சயமாக அதனுடைய விளைவுகள் மாணவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒற்றைச் சமூகமாக மாறுவதற்குப் பதிலாக சமூக இடைவெளிகள் நிலைப்படுத்தப்படுவதையும் இறுகிப்போவதையும் இந்தக் கல்விக்கூடங்களில் பார்க்கிறோம்.  இதன் விளைவாகவும் இந்த இடைநிற்றல் ஏற்படுகிறது.

நிதி ஆயோக்கின் பரிந்துரைப்படி ஜார்கண்டு மாநிலத்தில் பள்ளிகளை இணத்ததால், புதிய பள்ளிகளுக்குச் செல்ல வழியின்றிப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட பழங்குடியினக் குழந்தைகள் பூல்மதி (இடது படம்), சுமித் (வலது படத்தில் இடது ஓரம்) மற்றும் அவனது கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள்.

இந்த இடைநிற்றலை மாற்றுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒன்று மதிய உணவு. அடுத்து சீருடை போன்ற பல விடயங்கள். இவையெல்லாம் மருந்துதான். இறுதியாக கல்விச்சுமை. கல்வியைச் சுமையாக மாற்றக்கூடாது. இங்குதான் சீர்திருத்தம் வேண்டும் என்கிறோம். நிறைய பளுவைச் சேர்த்து எம்.எஸ்சி., படிக்கக்கூடிய பையனின் பளுவை மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு திணித்துவிட்டு, அதில் தேறி வந்தால் சிறப்பான கல்வியுடைய மாணவன் என்று சொல்வது, வயதுக்கு ஏற்ற கல்வி என்பதையும் மறந்துவிட்டார்கள். சமூகச் சூழலுக்கு ஏற்ற நிலைமை என்பதையும் மறந்துவிட்டார்கள்.  இதைச் சீர் செய்வதற்கு ஒற்றைக் கல்வி கொள்கையால் முடியாது. இதனை அந்தந்தப் பகுதிகளில் உள்ள அமைப்புகள் மூலம்தான் சீர்செய்ய முடியும்.

ஒருமைப்படுத்தப்பட்ட கல்விமுறையில் இவையெல்லாம் தீர்க்கப்படாத பிரச்சினைகளாகவே மாறிவிடும். இவர்களின் திட்டத்தில் 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு என்கிறார்கள். நாம் முன்னரே கூறியது போன்று பொதுத்தேர்வு என்று ஒன்று வந்தாலே, அதற்கான தயாரிப்பு முறை என்று வந்துவிடும். சிறு வயதில் பொதுத்தேர்வு என்பது பெரும் மனச்சுமை. அப்புறம் இதை வியாபாரமாக ஆக்குவார்கள். சாதாரண ஆசிரியராக இருந்தால், இதற்காக டியூசன் ஆரம்பிப்பார். பின்பு இது நிறுவனமயப்படும். இது கல்வியை வியாபாரம் ஆக்குவதற்கு மேலும் துணை செய்கின்ற அமைப்பு.  இது மழலைக் கல்வியைக்கூட வியாபாரமாக ஆக்குவதற்குத் துணை செய்கின்ற அமைப்பு.

குழந்தைகளுக்குக் கல்வியை புகுத்துவது என்பது, தேனில் மருந்து கொடுக்கும்படிதான் இருக்க வேண்டும். அந்தச் சுமை தெரியக்கூடாது. இந்த இடத்தில்தான் ஆசிரியர் – விகிதம் என்பது மிக முக்கியமான விசயம். 40 மாணவர்களை வைத்துக்கொண்டு ஒரு ஆசிரியர் தாக்குப் பிடிக்கணும் என்றால், அவரால் எப்படிச் சீர்படுத்த முடியும்? இவையெல்லாம் இப்புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்படவில்லை. மாணவர் விகிதம் 1:30 என்ற அளவிலேயே நிற்கிறார்கள்.

இதைச் சரி செய்வதை விட்டுவிட்டு, மேலும் பளுவைச் சேர்ப்பதனால், இந்த இடைநிற்றல் அதிகமாகும். ஏற்கனவே இந்த இடைநிற்றல் படிப்படியாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. மேலும், இந்த கல்விக் கொள்கையிலேயே வெளியேற்றம் – மல்டிபில் எக்சிட்” குறித்துப் பேசப்படுகிறது. இந்தத் தேர்வுகள் எல்லாமே வெளியேற்றத்திற்கான, இடைநிற்றலுக்கான கதவுகள்.

இதில் 9,10,11,12 வகுப்பை ஒரு யூனிட்டாக வைத்துவிட்டு, அதனை secondary education எனக் கூறுகிறார்கள். இதில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு செமஸ்டர்கள் (பருவத் தேர்வு); கிட்டத்தட்ட 8 செமஸ்டர்கள். இந்த எட்டு செமஸ்டரிலும் வொகேஷனல் (vocational)- தொழில் பாடமும் வருகிறது.

தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கை குழுத்தலைவர் கஸ்தூரிரங்கன்.

ஐந்தாம் வகுப்பிலிருந்தே  தொழில் பாடத்தைக் கொண்டுவருகிறது, வரைவு அறிக்கை. ஒன்பதாம் வகுப்புக்கு வரும் மாணவன் பருவத் தேர்வுகளால் அயர்ச்சியுற்றோ, வேறு காரணங்களாலோ வெளியேறினால் (exit), அம்மாணவன் அதுவரை படித்துவந்த தொழில்கல்வியை அடிப்படையாக வைத்து, நல்லது செய்வதைப் போல ஒரு சான்றிதழை வழங்கி அனுப்பிவிடுவார்கள்.

எனில், கட்டாயப் பள்ளிக்கல்வி என்பது என்ன ஆகிறது? இலவசப் பொதுக்கல்வி, கட்டாயக் கல்வி 18 வயது வரைக்கும் வந்திருக்க வேண்டும்; வரவில்லை. 13 வயதிலேயே வெளியே போய்விடுகிறோமே? அப்படியென்றால், கட்டாயப் பள்ளிக்கல்வி என்பது கேள்விக்குறியாகி விடுகிறது. அப்படியென்றால், மாணவர் சேர்க்கை விகிதம் General Enrollment  ratio (GER)” என்பது குறையக்கூடிய வாய்ப்பு உள்ளதேயன்றி, கூடக்கூடிய வாய்ப்பு இல்லை.

♦ பள்ளிகளை ஒருங்கிணைத்துப் பள்ளி வளாகங்களை உருவாக்க வேண்டும் என்கிறது, வரைவு அறிக்கை. இப்பரிந்துரை, குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளைப் பக்கத்திலுள்ள பள்ளிகளோடு இணைக்க வேண்டும் என்ற நிதி ஆயோக் ஆலோசனையின் நீட்சியா?

◊ இரண்டுக்கும் ஒரு இணைப்பு இருக்கிறது. நிதி ஆயோக் புதிய பள்ளிகளைத் திறப்பதற்கோ, மேம்படுத்துவதற்கோ எந்த நிதியும் ஒதுக்கத் தயாராக இல்லை.

இவர்கள் சொல்கிறபடி ஸ்கூல் காம்ப்ளக்ஸ்” (பள்ளி வளாகம்) என்பது செகண்டரி எஜூகேசன்”  இருக்கின்ற பள்ளி. அந்தப் பள்ளியோடு, பிரைமரி மற்றும் பிரீ பிரைமரியை இணைக்கிறார்கள். வொகேஷனலைசேஷனைச் (Vocationalisation) சேர்க்கிறார்கள். பல்வேறு மொழிகள் கற்பதைத் திணிக்கிறார்கள்.

ஒரு தாலுக்காவில் 16 பள்ளிகள் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். 16 பள்ளிகளை பிசிக்கல்லா” – அப்படியே பெயர்த்து வேறொரு இடத்துக்குக் கொண்டுபோக முடியாது. ஆசிரியரை அங்கே, இங்கே எனச் சுழற்சி முறையில் அனுப்பப் போகிறார்களா? இல்லை, மாணவர்களை ரொட்டேட்” செய்யப் போகிறார்களா? இல்லை, இந்தக் கல்விக்கான சாதனங்களை ரொட்டேட்” செய்யப் போகிறார்களா? சாதனங்களையும் ஆசிரியர்களையும் உரிய அளவுக்குப் பெருக்குவதற்குப் பதிலாக, இருக்கின்ற ஆசிரியர்களை வைத்துக்கொண்டு மேனேஜ் செய்யப் போகிறார்கள். அதற்கு வசதியாகத்தான் ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சிஸ்டம்” இருக்கிறதே தவிர, மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல.

இந்த காம்ப்ளக்ஸ் ஸ்கூல் சிஸ்டம் புதிய கல்வி நிறுவனங்களை உருவாக்குவதிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொள்ளும் ஏற்பாடு.

இருக்கின்ற பள்ளிகளை மேம்படுத்துவது, சீர்படுத்துவது, வசதிகளைத் தருவது, அதன் தரத்தை மேம்படுத்துவது, எண்ணிக்கையை அதிகப்படுத்துவது – இவைதான் நமது தேவையே!

♦ தமிழகத்தில் மேநிலைப் பள்ளிக் கல்வியில் நடைமுறையில் இருக்கும் தொழிற்கல்விக் கட்டமைப்பும், வரைவுக் கொள்கை பரிந்துரைக்கின்ற பொதுக்கல்வியோடு தொழிற்கல்வி என்பதும் ஒரே அடிப்படையைக் கொண்டிருக்கின்றனவா? அல்லது வேறுபட்ட பார்வையைக் கொண்டவையா?

◊ இந்த Vocationalization எத்தனை வொக்கேஷன்ஸ் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.  நிச்சயமாகப் பாரம்பரியத் தொழில்களை இதில் கொண்டுவரக்கூடாது, முடியாது.

இந்த வொக்கேஷனலைசேஷனுக்கு இன்வெஸ்மென்ட் அதிகம் தேவைப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வகம் வேண்டும்; தொழிற்கூடம் வேண்டும்; தொழில்கருவிகள் வேண்டும்; தொழில்கல்வி ஆசிரியர் வேண்டும்; தொழில்படிப்புகளைப் பட்டியலிட வேண்டும். அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். அந்தச் சுமையை மாணவர்கள் மேல் திணிக்கக்கூடாது. அரசு இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், மாணவனுக்கு பொதுக்கல்வியோடு திறன் கல்வியும் கிடைத்துவிடும். நாம் விரும்புவது அதைத்தான். அத்தகைய எந்தவிதமான ஒரு அறிவியல்பூர்வமான திட்டத்தையும் கல்விக்கொள்கை தரவில்லை.

தொழில் கல்வியைப் பொதுப்படையாக வைத்துள்ளார்கள். மாணவனின் விருப்பம் எனப் பொதுவாகக் கூறுகிறார்கள். எட்டு வயது மாணவனுக்கு என்ன விருப்பம் இருக்க முடியும்? அறிதலுடன் கூடிய விருப்பமா? புரிதலுடன் கூடிய விருப்பமா? அந்த விருப்பம் மாயையின் அடிப்படையில்கூட வரலாம், இல்லையா? ஆடு-மாடு மேய்ப்பதுகூட அவனுடைய விருப்பத்தின் பேரில் வந்துவிடலாம். இதனால் வரைவு அறிக்கை கூறும் தொழில் கல்வி, திறன் கல்வி என்பதெல்லாம் ஏறக்குறைய ராஜாஜியின் (குலக்கல்வி) கொள்கையை வலியுறுத்துவது போலத்தான் இருக்கிறது.

♦ கல்விக்கொள்கை திறனை வளர்ப்பது பற்றிப் பேசுகிறது. தொழில்துறை முதலாளிகளின் தேவைகளை ஈடுசெய்யும் வண்ணம் மாணவர்களைப் பயிற்றுவிப்பது, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது என்ற பரிந்துரைகள் கல்வி புலத்திலும், மாணவர்களின் அறிவுத் திறன், பண்பாடு ஆகியவற்றிலும் என்ன மாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்?

◊ முன்பு வேலைக்குச் சென்றவர்களெல்லாம் பொதுக்கல்வித் திட்டத்தில் பயின்றவர்கள் தான். திறன் கல்வி அடிப்படையில் போகவில்லை. ஒருவருடைய திறன் எங்கே வளர்ச்சி பெறுகிறது? படிக்கும் இடத்தில் அல்ல, பயிற்சிகளின் மூலமாகத்தான் திறன் வளர்ச்சி பெறுகிறது.

இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் தமக்குத் தேவையான தொழிலாளிகளுக்குப் பயிற்சி அளிக்கும் செலவையும் மிச்சம் பண்ண விரும்புகின்றன. ஒரு குறிப்பிட்ட துறையில் ஆட்கள் தேவை என்றால், அதைக் கல்வி நிறுவனங்களையே தயார் செய்து கொடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார்கள். இன் சர்வீஸ் டிரைய்னிங்” கிடையாது. வேலையில் சேரும்போதே பயிற்சி கொடுக்கும் முறையெல்லாம் இப்போது கிடையாது. எல்லாச் செலவையும் செய்து கல்வி நிறுவனங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். அதில் சில பேரை கார்ப்பரேட்டுகள் வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள், வேண்டாமென்றால், தூக்கியெறிந்துவிடுவார்கள். கார்ப்பரேட் இலாபத்திற்காக அளவுக்குமீறி வற்புறுத்தப்படுகின்ற ஒன்றுதான் திறன் மேம்பாடு.

♦ பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு அப்பால் தன்னார்வலர்களை வகுப்பெடுக்க அனுமதிக்கலாம் எனப் பரிந்துரை செய்யப்படுகிறது. இத்தன்னார்வலர்களைப் பயிற்றுவிக்க தேசிய விரிவுரையாளர் திட்டம் என்றொரு அமைப்பை உருவாக்கக் கோருகிறது. இது ஆர்.எஸ்.எஸ். கும்பலைப் பள்ளிக்குள் திணிக்கும் சதி என விமர்சிக்கப்படுவது குறித்துத் தங்களின் கருத்தென்ன?

◊ தன்னார்வலர்கள் என்பது கல்விக்குப் புறம்பான சக்திகளைக் கல்விக்கூடங்களில் நுழைய வைப்பது என்று அர்த்தம். கல்விக்கூடங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதைத்தான் நாமும் விரும்புகிறோம். அந்நியர்கள் ஆசிரியர்கள் என்ற போர்வையில் உள்ளே நுழையும்போது எப்படிக் கல்விக்கூடங்கள் சுதந்திரமாக இயங்க முடியும்? அவர்களைக் கண்டு அஞ்சுகின்ற சூழல் தானே இருக்கும்.

அந்நிய சக்திகள், இன்னும் சொல்லப்போனால் உள்நோக்கம் கொண்டவர்கள் கல்விக்கூடங்களில் நுழைந்து மாணவர்களை மனமாற்றம் அல்லது மூளைச்சலவை செய்வதற்கு அல்லது முரட்டுத்தனமாகத் தங்கள் பால் இழுப்பதற்குமான வழி இது. கல்விக்கூடங்களை மோசமான சமூக அரசியலுக்குப் பயன்படுத்துவதற்கான வேலை இது.

♦ கட்டணங்களைத் தீர்மானிப்பதற்கு கமிட்டிகள் அமைக்கப்படுவதைப் போல, இந்த வரைவு அறிக்கையில் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா?

◊ இவர்கள் நேரடியாக அதில் வரவில்லை. கட்டணங்களைச் சீரமைப்பது என்றால், அதற்கு அறிவியல்பூர்வமான அடிப்படைகள் இருக்க வேண்டும், இல்லையா? இரண்டாவது, என்ன கட்டணம் வேண்டுமானாலும் சீரமைத்துக் கொள்ளட்டும். பத்து ரூபாய்கூட வைத்துக்கொள்ளட்டும். பத்து ரூபாய் கொடுக்கமுடியாத அளவிற்குக்கூடப் பையன் இருக்கிறான் என்றால்,  அவனுக்கு என்ன ரெமிடி- (தீர்வு)? இதில் சமூகநீதி பற்றி எதுவுமே பேசவில்லை. புறக்கணிக்கப்பட்ட, இயலாத வர்க்கத்தினர் கல்வியை எட்டுவதற்குக் கூடுதல் உதவி என்பதைப் பற்றியும் எந்தக் குறிப்பும் கிடையாது.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தேசியக் கல்விக் கொள்கை குறித்து இரகசியமாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் மாணவர்களின் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தப்பட்டது.

தேசிய ஆராய்ச்சி அமைப்பு (நேஷனல் ரிசர்ச் பவுண்டேஷன்) – குறித்துப் பேசப்படுகிறது. ஆய்வுகள்  அதன் கீழே இருக்குமாம். அதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் போவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாராய்ச்சி அமைப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தகுதி, திறமை பற்றிப் பேசுகிறார்களே தவிர, சமூக நீதி (இட ஒதுக்கீடு)பற்றிச் சொல்லவில்லை. இன்குளுசிவ் பற்றி, அனைவரையும் உள்ளடக்குவது பற்றிப் பேசாமால், அயல்நாட்டு மாணவர்கள் இந்தியாவிற்கு வந்து ஆய்வு செய்வதற்கு இந்த நிதி பயன்படும் எனக் கூறப்படுகிறது.

ஸ்டடி இன் இந்தியா” இந்தியாவில் கல்வி பயிலுவோம் என ஆவணம் பேசுகிறது.  அதற்கு ஒரு உள்நோக்கம் இருக்கிறது. இயற்பியல் படிப்பதற்கோ, தொழில்நுட்பம் படிப்பதற்கோ எந்தவொரு அந்நிய மாணவனும் இந்தியாவிற்கு வரப்போவது இல்லை. இங்கே வருபவர்கள் பெரும்பாலும் சமூக அறிவியல் தொடர்பாக, மொழியியல் தொடர்பாக, பண்பாடு கல்வி தொடர்பாகத்தான் வருகிறார்கள்.

இவர்கள் சமஸ்கிருதத்திற்குக் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம், இந்திக்குக் கொடுக்கும் 50 கோடி வைத்துப் பார்த்தால், அயல்நாட்டிலிருக்கும் உயர் வர்க்க இந்தியர்கள் அல்லது இந்திய மாயைக்கு உட்பட்ட வெள்ளைக்காரர்களின் பிள்ளைகளை இந்திய மோகத்தில் ஈடுபடுத்துவதற்காக, இங்கே இண்டாலஜி படிங்க, சமஸ்கிருதம் படிங்க” எனத் தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் இந்த ரிசர்ச்சைக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் அடிமட்ட மக்கள் ஆய்வுப் படிப்பிற்கு வருவதைப் பற்றி அக்கறை கொள்ளவேயில்லை.

♦ டெல்லி பல்கலைக்கழகம் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்பு என்ற முறையைப் புகுத்த முயன்றபோது, அது மாணவர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. வரைவு அறிக்கை மீண்டும் அதனைப் பரிந்துரைப்பது ஏன்?

◊ முன்பு ஹானர்ஸ் என்று இருந்தது. பி.ஏ. (ஹானர்ஸ்) என்பார்கள். பி.ஏ. மூன்றாண்டுகள் படிப்பார்கள். ஒரு வருடம் கூடுதலாக ஒரு சப்ஜெக்டை எடுத்து படித்தால் ஹானர்ஸ் என்பார்கள். இந்த மூணு நாலு, அல்லது நாலு மைனஸ் ஒன்னு என்பது எல்லாம் நம்மை ஏமாற்றுவதற்கான தகிடுதத்தங்கள். நான்கு ஆண்டு பட்டப்படிப்பு என ஆண்டைக் கூட்டுகின்றபொழுது சாதாரண பொருளாதார வசதிகூட இல்லாத மாணவர்கள் அயர்ச்சி அடைந்து விடுவார்கள். இன்னொருபுறம் அவர்கள் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டு வெளியேறுவதற்காக எக்ஸிட்” என்ற வாய்ப்பு. ஆக, இறுதி நிலைக்குச் செல்பவர்கள், இவர்கள் விரும்புகின்ற, இவர்களுக்கு அக்கறையுள்ள சமூகப்பிரிவினராக மட்டுமே இருப்பார்கள். எனவே, இதுவொரு சதி.

மைய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நிலவுகின்ற தீண்டாமைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த முதுகலை மருத்துவ மாணவி மருத்துவர் பாயல் தாத்வி (இடது) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் கல்வி மாணவ் செந்தில்குமார்.

♦ உயர்கல்வி வளாகங்களில் நிலவுகின்ற சாதியப் பாகுபாட்டை நீக்குவதற்கு, அவ்வளாகங்களில் வன்கொடுமைகளில் ஈடுபடுவோரைத் தண்டிப்பதற்கு வரைவு அறிக்கை ஆலோசனைகள் கூறியிருக்கிறதா?

◊ சமூக நீதி, இன்க்லுசிவ்னஸ் பற்றி இது பேசவில்லை. இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசவில்லை. நீங்கள் யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று சில இடங்களில் சொல்கிறார்கள். மொழிச் சிறுபான்மையினர் பற்றி வரும் போது மாநில அரசு அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால், இந்தச் சட்டவரைவில் சமூக இடைவெளிகள், சமூக மோதல்கள் இவற்றை எப்படித் தீர்க்க வேண்டும் என்பது குறித்து எந்தக் கருத்தும் வரவில்லை. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதைக் குறிப்பிடும் இந்த ஆவணம், மைய அரசின் கல்வி நிறுவனங்களில் சமூக நீதி முறையாக அமல்படுத்தப்படாமல் இருப்பது பற்றிய கேள்வியை எழுப்பவில்லை.  சமூக நீதியைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத ஒரு ஆவணம் இது.

♦ தனியார் கல்லூரிகள், தமது நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களைச் சேர்ப்பதில்லை. அனைத்துக் கல்லூரிகளையும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளாக மாற்ற வேண்டும் என வரைவு அறிக்கை பரிந்துரைத்திருக்கும் நிலையில் இட ஒதுக்கீடு கொள்கையின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

◊ இப்போதைய சூழலில் தன்னாட்சி நிறுவனங்களுக்கும் சமூக நீதிச் சட்டங்கள் பொருந்தும். ஆனால், இதனை நெடுநாளாகவே நீர்த்துப்போகச் செய்துகொண்டிருக்கிறார்கள். (அரசு) உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உதவி பெறாத பாடத்துறைகள் அல்லது மாலை நேர வகுப்புகளில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவது கிடையாது. இட ஒதுக்கீட்டைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று 1993 கல்வித்துறையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. ஒரு நிதி உதவி பெறும் கல்லூரி நிதி உதவி பெறாத துறைகளுக்குக்கூட இட ஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார்கள். ஆனால், யாரும் அதைப் பின்பற்றுவது கிடையாது. யாரும் அது குறித்துக் கவலையே பட்டது கிடையாது. அரசுத்துறையும் அதில் தலையிட்டது கிடையாது.

இந்தச் சூழ்நிலையில்தான் அப்சொல்யூட்” – முற்றொருமை கொண்ட தன்னாட்சி எனக் கல்விக் கொள்கை கூறுகிறது. உங்களை மாநிலச் சட்டங்கள் கட்டுப்படுத்தாது என்று சொன்னால்,  என்ன அர்த்தம்? இனி, 42,000 கல்லூரிகள் என்பது 42,000 தனி நிறுவனங்கள். உங்களை எந்த ரெகுலேசனும் கட்டுப்படுத்தாது.  நேரா” – உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் மட்டுமே கட்டுப்படுத்தும் எனக் கூறுகிறார்கள். இன்றைக்கும் கொஞ்சமாவது இடஒதுக்கீடு இருக்கிறது என்றால், அதற்கு யார் காரணம்? மாநிலச் சட்டங்கள்தான் காரணம். அந்த மாநிலச் சட்டங்களைக் காலி செய்து விட்டு, சமூக நீதியை எப்படிக் கொண்டு வர முடியும்? கிடைத்து வருகின்ற சமூக நீதிக்கான வாய்ப்புகளைக்கூட மறுக்கின்ற வரைவு இது.

♦ இந்த அறிக்கை Philanthropist  கொடையாளர்கள் பற்றிப் பேசுகிறதே ….

◊ பச்சையப்பன் கல்லூரிகள் பச்சையப்பன் முதலியாருடைய கொடைத்தன்மையால் வந்தன. புதுக் கல்லூரியை இசுலாமியப் பெருமக்களில் வசதியானவர்கள் பணம் கொடுத்து ஆரம்பித்தார்கள். அந்த கல்வியெல்லாம் இலாப நோக்கமில்லாமல் தரப்பட்ட கல்வி. குறைந்த கட்டணம் அல்லது அரசு மானியத்தில் கட்டணமில்லாமல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், கார்ப்பரேட் யுகத்தில் Philanthropy  கிடையாது. Philanthropy is a business commodity. கொடை என்பது இன்று ஒரு வணிகச் சரக்கு. கொடை என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் எல்லா வரியிலிருந்தும் விலக்குப் பெறுகிறார்கள். அண்ணாமலைச் செட்டியார், வேந்தர் என்ற முறையில் கார்ப்பரேட் வரிகூடக் கொடுக்கக்கூடாது என்று உட்கார்ந்திருந்தார். சொத்தைச் சம்பாதிக்க தான் கல்வி நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். அதை எப்படி நாம் Philanthropy  கொடை  என்று சொல்ல முடியும்? பண முதலைகளுக்குக் கொடையாளர்கள் என்று பேர் கொடுப்பதால், தேவனாகிவிட மாட்டார்கள். அம்பானியும் அதானியும் நுழைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். கல்விக் கொடையாளர்கள் என்ற முகாந்திரத்தில் எல்லா வரிகளிலிருந்தும் அவர்களுக்கு விலக்குக் கொடுக்கப் போகிறார்கள்.

♦ அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழி வழியில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவரும் வேளையில், வரைவு அறிக்கை தாய்மொழி வழிக் கல்வி குறித்து என்ன பார்வையை, ஆலோசனைகளை முன்வைக்கிறது?

◊ எட்டாவது வரைக்கும் தாய்மொழியில் கல்வி வழங்க வேண்டுமென்றும், வட்டார மொழிகளிலும் வழங்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால், தாய்மொழியோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மும்மொழி என்று கூறப்படுவதோடு,  நான்காவது மொழியை வேறு வடிவில் திணிக்கிறார்கள். தாய்மொழியைப் பற்றி சொல்லும்போது பீடிகையில் ஆரம்பித்துவிட்டு, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது சமஸ்கிருதம் என்றும் இந்திய மொழிகளெல்லாம் சமஸ்கிருதத்தால் வளம் பெற்றுள்ளதாகவும் சொல்கிறார்கள். இவ்வாறான வரைவுக்கொள்கை எப்படி நியாயமான வரைவுக்கொள்கையாக இருக்க முடியும்?

எந்தவொரு இடத்திலும் தமிழின் சிறப்பைக் குறிப்பிட்டுப் பேசவில்லையே? கௌடில்யன் பற்றிப் பேசுபவன் திருவள்ளுவரைப் பற்றிப் பேசவில்லையே, ஏன்? அவர்களுக்கு முன்னோடிகளெல்லாம் அவர்கள் தான். இந்தியாவில் பல பண்பாடுகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், பண்பாட்டு மோதல்கள் நடந்து வருகின்றன. ஒரு பண்பாட்டுத் திணிப்பை எதிர்த்து மற்றொரு பண்பாடு போராடிக்கொண்டேயிருக்கிறது. இதையெல்லாம் பிரதிபலிக்க வேண்டும் கல்விக்கொள்கை. அதைவிட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட தரப்பை மட்டும் பெருமைப்படுத்துவதென்பது பிறரைச் சிறுமைப்படுத்துவதற்கு ஒப்பாகும். எனவே, தாய்மொழியைப் பற்றிய விருப்பம் என்பது நியாயமான முறையில் அமையவில்லை, அறிவியல்பூர்வமாக அமையவில்லை. வட்டார மொழிகளை மேம்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் வரைவு அறிக்கையில் இல்லை.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை வளர்ப்பதெற்கென்று 50 கோடி கொடுத்தார்கள் அல்லவா? அதைப் போன்றே சமஸ்கிருதத்திற்கும் தனித்தொகையை ஒதுக்கியிருக்கிறார்கள் அல்லவா? ஆனால், வட்டார மொழிகளை நவீன பாடங்களுக்கு இசைவாக முன்னேற்றுவதற்காக ஒரு பைசாகூட ஒதுக்காத மைய அரசு, தாய்மொழியைப் பற்றி பேசவில்லை என்று நாம் வருத்தப்படுவதில் பொருள் கிடையாது. இதில் கொஞ்சம்கூட நேர்மையையும் பார்க்க முடியவில்லை.

♦ பிரதம மந்திரி தலைமையில் ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக். அதனை மாதிரியாகக் கொண்டு மாநிலங்களில் முதலமைச்சர்கள் தலைமையில் மாநில சிக்ஷா ஆயோக்குகள் அமைக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது வரைவு அறிக்கை. கல்வி அமைச்சகங்களுக்கு மேலாக இத்தகைய அமைப்புகளை அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

◊ ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக் (தேசியக் கல்வி கமிசன்) தான் இனி கல்வி குறித்த கொள்கை முடிவெடுக்கும் ஒரே அமைப்பு. பிரதம அமைச்சர் மற்றும் சக அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட அமைப்பாக இது உருவாக்கப்படுகிறது.

நாடெங்கும் உள்ள 820 பல்கலைக்கழகங்கள் 42,000 கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இவர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். ஒற்றைக் கட்டுப்பாடு.

உயர்கல்வியை பொருத்தவரைக்கும் நேஷனல் ஹையர் எஜூகேஷன் ரெகுலேட்டரி அத்தாரிட்டி  தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம். இது மைய அரசால் உருவாக்கப்படுகின்ற, அதிகாரிகளை அதிகமாகக் கொண்ட அமைப்பு. புதிய கல்வி நிறுவனங்களைத் தொடங்கவிருக்கும் தனியார்கள், இனி, பல்கலைக்கழக இணைப்புக்குப் போக வேண்டாம். மாநில அரசின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டாம். மாநில அரசு புதிய கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அதிகாரத்தை இழக்கிறது. அந்த அதிகாரத்தை நேரா என்கிற தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் எடுத்துக்கொள்கிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் உள்ள அத்துணை கல்வி நிறுவனங்களையும் மைய அரசின் அதிகாரிகள் அமைப்பான நேராவுக்கு கொண்டு போவதால், மாநில அரசிற்கு உயர்கல்வி மீது எவ்வித உரிமையும் பொறுப்பும் இருக்காது.

இனி, ரெகுலேஷன்ஸ் இருக்காது, ஒழுங்காற்று விதிகள் இருக்காது. ஆனாலும், ஒழுங்கான ஒழுங்காற்றுதல் (light, but tight) இருக்கும் என்கிறார்கள்.  தனிநபர்கள்தான் ஒழுங்காற்றுதல் செய்வார்கள் என்கிறார்கள். ஆக, விதிகள் மூலமாகக் கட்டுப்படுத்துவதை விட்டுட்டுத் தனி நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே இனி இது நடக்கும்.

♦ பாடத்திட்டங்களையாவது மாநில அரசுகள்  வடிவமைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா?

◊ மாநிலத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்படுகின்ற மாநிலக் கல்வி கமிசன் என்பது மைய அரசின் ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக் அமைப்பிற்குக் கட்டுப்பட்ட ஒன்றே தவிர, சுதந்திரமாக இயங்க முடியாது. மாநில அமைப்புக்கள் மத்திய அரசின் கிளை அங்கமாகும்போது பாடத்திட்டத்தை அவர்களின் வரையறைக்குட்பட்டு அமைக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆரம்பக்கல்வித் திட்டத்தில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்று மைய அரசு சொல்கிறதோ, அதை மீறி மாநில அரசுகள் வேறெதுவும் சொல்லிக்கொடுக்க முடியுமா? செகண்டரி எஜுகேஷனைப் பொருத்தவரை

8 செமஸ்டர், 4 வருடங்கள் என்பதை மாநில அரசுகள் மாற்றமுடியுமா? கூடுதலாகத் தொழிற்கல்வி வரவேண்டுமென்பதை, மாநில அரசுகளால் மாற்றமுடியுமா? கூடுதல் மொழிப்பாடம் என்பதை மாநில அரசுகளால் நிராகரிக்க முடியுமா?

தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கையின் கார்ப்பரேட் – காவி சார்பை அம்பலப்படுத்தி பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் ஜூலை-20 அன்று நடத்தப்பட்ட கருத்தரங்கம்.

இவையனைத்தையும் எதிர்க்கின்ற, மறுக்கின்ற மாநில அரசு ஒன்று இருந்தால்தான் நல்லது. துரதிருஷ்டவசமாக அப்படி ஒரு அரசை நாம் பார்க்கவில்லை. உரிமைகளை யாரும் நீங்கள் கேட்காமல் தருவதில்லை, நாமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித் துணிச்சலில்லாத அரசுகள் எப்படி மாநில அமைப்புக்களைப் பாதுகாக்க முடியும்? எனவே, மாநில பாடத்திட்டங்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியுமா என்பது ஐயத்திற்குரியதாக அமைந்துள்ளது. ஏனென்றால் இது ஒற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

மேலும், இந்த வரைவு அறிக்கை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே அதனின் ஆலோசனைகள் கொல்லைப்புற வழியில் நடைமுறைக்கு வந்துவிட்டன. உதாரணமாக, யு.ஜி.சி. அமைப்பு முன்பெல்லாம் தனது பரிந்துரைகளை மாநில அரசிற்குதான் அனுப்பி வைக்கும். இப்பொழுது ஒவ்வொரு கல்லூரியிலும் சமஸ்கிருத வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்ற பரிந்துரையை மாநில அரசிற்கு அனுப்பாமல், நேரடியாகக் கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது, யு.ஜி.சி.

♦ இந்தியாவைப் பொருத்தவரை பல்வேறு தேசிய இனங்கள், பண்பாடு எனப் பன்முகத்தன்மையுடையதாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தேசியக் கல்விக் கொள்கை என்ற ஒற்றைக் கல்விக்கொள்கையை அறிவியல்பூர்வமானதாகப் பார்க்க முடியுமா?

◊ மத்திய அரசு சீரான ஒற்றைக் கல்விக்கொள்கை வேண்டும் எனச் சொல்கிறது. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதை நம் போன்றவர்கள் ஏற்றுக்கொள்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்று இந்த தேசத்தின் மூத்த தலைவர்கள் சொல்லிவிட்டுப் போனார்கள். ஆனால், மத்திய அரசின் கல்விக்கொள்கை இதை மறுத்துவிட்டு யூனிட்டி த்ரூ யூனிஃபார்மிட்டி” என்கிறார்கள். அதாவது ஒற்றைக் கல்வித்திட்டத்தின் மூலம் ஒற்றுமை! இதற்குத் திணிப்பு என்றுதானே அர்த்தம். இது தேசிய இனங்களின் உரிமை மறுப்பு ஆகும்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை 1967- இருந்து அமல்படுத்தி வருகிறோம். இதனால் நமக்கு என்ன இழப்பு ஏற்பட்டது? வெளிநாடுகளில் ஆராய்ச்சித்துறை, உயர்பதவிகள் வகிப்போரில் பெரும்பாலானோர் இருமொழித் திட்டத்தில் பயின்றவர்கள்தான்.

படிக்க:
கல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு! – பேரா அ. கருணானந்தம்
தேசிய கல்விக் கொள்கை 2019  நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்

மும்மொழி என்று வந்துவிட்டால் சமனற்ற தளம் உருவாக்கப்படுகிறது. இந்தி பேசுபவர்களுக்கு அதிக ஆதாயம், இந்தி தெரியாதவர்களுக்குச் சற்றுப் பின்னடைவு ஏற்படக்கூடிய சூழல். இது ஒரு சமனற்ற சூழல். மும்மொழி என்பது சமன் தன்மையைச் சமனற்றத் தன்மையாக மாற்றிவிடுகிறது. எனவே, ஒரே தேசியக் கல்விக் கொள்கை என்பது ஏற்கமுடியாதது, நடைமுறை சாத்தியமற்றது.

கல்விக்கொள்கையைப் பெரும்பாலும் மக்களுடன் நெருக்கமாக உள்ள மாநில அரசுகள் தான் உருவாக்க வேண்டும். மத்திய அரசின் பொறுப்பு ஒருங்கிணைப்பது, ஆலோசனைகள் தருவது, உதவி செய்வது என்ற அளவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். இப்போது அப்படி கிடையாது. இப்பொழுது சோல் அத்தாரிட்டி.” அனைத்தையும் ஒற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றனர். இது வரம்பு மீறிய செயல், இந்தியாவையே சீரழிக்கக்கூடிய செயல்.

நேர்காணல் : பிரகாஷ், இளங்கதிர்.


புதிய ஜனநாயகம் மின்னூல் வாங்க :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும்தான் இந்த பொழப்பு !

”இருபது வருசத்துக்கு முன்னாடி எங்க அப்பாவோட இங்க பொழைக்க வந்தேன். எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். சொந்த ஊரு தேவகோட்டை. சொந்தத்துலேயே கல்யாணம் பண்ணிகிட்டேன். ரெண்டு புள்ளங்க இருக்காங்க. கவர்மெண்டு ஸ்கூல்ல தான் படிச்சிட்டிருக்காங்க” தன்னைப் பற்றிய அறிமுகத்தை இவ்வாறு கொடுத்தார் கரும்பு ஜூஸ் கடை வைத்திருக்கும் முருகவேல்

“ஊர விட்டு எதுக்காக இங்க வந்தீங்க ?”

“ஊர்ல சொந்தமா நெலமெல்லாம் இருக்குது. ஆனா விவசாயத்துக்கு தண்ணி இல்ல அதான் இங்க வந்துட்டோம். எங்க ஊரு ஆளுங்க பாதி பேரு சென்னையிலதான் பொழக்க வந்துருக்காங்க. நெறையா பேரு மிலிட்டிரில இருக்குறாங்க. தண்ணி இருந்துச்சுன்னா நாங்க ஏன் இங்க வந்து கஷ்டப்பட போறோம்.” என்றவாறு கத்தையான கரும்புத் துண்டுகளை மிஷினின் உருளைகளுக்கு இடையே திணித்தார்.

“கரும்பு ஜூஸ், கொஞ்ச நல்ல வருமானம் கெடைக்கிற தொழிலுதான். ஆனா பாதிநாள் கடை போட விட மாட்டேங்குறாங்க. இந்த ரோடு முக்கியமானதுங்குறதுனால வாரத்துல ரெண்டு மூணு நாளு விஐபி-ங்க போவாங்க, அப்பல்லாம் நாங்க கட போடக்கூடாது. ஒருவாட்டி ரிப்போர்ட்டரு ஒருத்தரு வந்து போட்டோ பிடிச்சிட்டு போயி சாலையை ஆக்கிரமிச்ச கடைன்னு நியுஸ்-ல போட்டு கடைய காலி பண்ண சொல்லிட்டாங்க. மாசக்கணக்கா கடை போட முடியாம கட்டிட வேலைக்கு போயிதான் சமாளிக்க வேண்டியதாயி போச்சு. பின்ன எப்படி காசு சம்பாதிக்க முடியும். ரேசன்ல அரிசி, பருப்பு கெடைக்கிறத வெச்சு சமாளிச்சிகிட்டு இருக்கோம்.” என்றார் கரும்பை வெட்டிக் கொண்டே..

“தனியா எப்படி கடைய சமாளிக்கிறீங்க ?”

“கரும்பு, ஐஸ் எல்லாமே ஆர்டர் குடுத்தா இங்க வந்துடும். அதுக்குன்னு தனித்தனியா ஆளுங்க இருக்காங்க. நம்மளாவே எல்லாத்தயும் போயி தனித்தனியா வாங்கிட்டு வரனும்னா முடியுமா? ஒருத்தர நம்பி ஒருத்தருன்னு தான் இந்த தொழில் ஓடிக்கிட்டிருக்கு” என்றவரிடம் “சரி, வியாபாரமெல்லாம் எப்படிண்ணே போகுது ?” என்று வினவினோம்.

“ஒரு நாளைக்கு 3-லேருந்து 5 லிட்டர் டீசல் செலவாகுது. மிஷினு ஓடிக்கிட்டேயிருந்தா-தான் வர்றவங்க நின்னு ஜூஸ் குடிப்பாங்க. இல்லன்னா பழைய சரக்குன்னு நெனச்சுகிட்டு குடிக்காம போயிடுவாங்க. ஐஸ் போட்டது 15 ரூவா, ஐஸ் இல்லாமன்னா 20 ரூவா. புள்ளங்கள எப்படியாவது படிக்க வெச்சுட்டா அதுங்க பின்னாடி எங்கள பாத்துக்குங்க, இதுல வர்ற காச வெச்சு வேற ஒன்னும் பண்ண முடியாதுங்க.”

“காலைல 10 மணிக்கு வந்து கடை போட ஆரம்பிச்சா, சாயங்காலம் வரைக்கும் ஓடும். ஒடம்புல தெம்பு இருக்குற ஆளுங்களாலதான் கரும்ப உள்ள தள்ளி எடுக்க முடியும். கரும்ப சீவி சுத்தம் பண்ணி கையெல்லாம் காப்பு காச்சு போயி கெடக்கு. ஒரு கத்தி வாங்குனா ஒரு வருசத்துக்கு தாக்கு புடிக்கிறதே செரமம்தான். 6 தண்ணி கேன் பக்கத்துல போயி தூக்கிட்டு வரணும். எலுமிச்சம் பழம், இஞ்சி இதெல்லாம் கைக்காசு போட்டுதான் வாங்கிட்டு வரணும். கரும்பு சக்கையெல்லாம் குப்ப வண்டியில நம்மதான் போயி போடனும். முக்கியமான ரோடுல்ல… சுத்தமா வெச்சுக்காட்டி கடை போட விடமாட்டாய்ங்க…”

படிக்க:
வாகன விற்பனையில் மந்த நிலை :  32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் !
உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ?

“குடிக்க வர்றவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா எதிர்பார்ப்பாங்க. ஏன் இனிப்பா இல்லன்னு கேப்பாங்க. ரொம்ப இனிப்பா இருந்துச்சுன்னா சக்கர போட்டியான்னு கேப்பாங்க. கேன்சர் ஆஸ்பத்திரி பக்கத்துல இருக்கதுனால நெறையா பேரு இஞ்சி வேணாம்னு சொல்லுவாங்க. அதனால கேக்குறவுங்களுக்கு ஏத்த மாதிரி போட்டுக்கொடுத்தாதான் வியாபாரம் ஓடும். புள்ளங்க தல தூக்குற வரைக்கும் இதுதான் எங்க வாழ்க்கை, அதுவரைக்கும் இத நம்பித்தான் வாழணும்.” என்றவாறு அதிரும் கரும்பு மிஷினுக்குள் கரும்புத் துண்டுகளை நுழைக்கத் தொடங்கினார்.


வினவு புகைப்படச் செய்தியாளர்

தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

  1. அணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை: தமிழகத்தை நாசமாக்காதே!
    கார்ப்பரேட் கொள்ளைக்கான அழிவுத் திட்டங்களை எதிர்த்துப் போராடுவதுதான் நாட்டுப் பற்று. அத்தகைய போராட்டங்களைக் காட்டிக் கொடுப்பவன்தான் மக்கள் விரோதி எனப் பிரகடனப்படுத்துவோம்.
  2. ஒரு நாடு ஒரு தேர்தல்: இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி!
    பிற முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவோடு இத்தாலியில் ஆட்சியைப் பிடித்த முசோலினி, பின்னர் கூட்டணிக் கட்சி, எதிர்க் கட்சி என்ற வேறுபாடின்றி அனைத்து முதலாளித்துவக் கட்சிகளையும் அமைப்புகளையும் தடைசெய்துவிட்டு, ஒற்றைக் கட்சி, ஒற்றை ஆட்சியை அந்நாட்டில் ஏற்படுத்திய வரலாற்றை, ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. நாளை இந்தியாவிலும் செயல்படுத்தக் கூடும்.
  3. என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள்: சட்டபூர்வமாகிறது பாசிசம்!
    ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வித் திட்டம், ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே ரேஷன் கார்டு ஆகியவற்றின் வரிசையில் ஒரே போலீசைக் கொண்டுவரும் திட்டம்தான் என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம்.
  4. குஜராத்: இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை!
    2002-இல் நடைபெற்றதைப் போன்ற வெளிப்படையான வன்முறை மீண்டும் ஒரு முறை குஜராத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதைச் சான்றுகள் காட்டுகின்றன.
  5. போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்!
    தமிழக மக்களின் ஜனநாயக உரிமைகளைச் சட்டவிரோதமாக மறுப்பதையும் அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு பணிந்துபோவதையும் இயல்பான ஒன்றாக மாற்ற முயலுகிறது, தமிழக போலீசு.
  6. வரைவு தேசியக் கல்விக் கொள்கை 20I9 : மனுநீதியின் புதிய பதிப்பு ! – பேராசிரியர் கருணானந்தன்
    பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக இருக்கும் அவர், வரலாற்றுப் புலத்தில், குறிப்பாக இந்து மதவெறி பாசிஸ்டுகள் வரலாற்றைக் காவிமயமாகத் திரித்துப் புரட்டிவருவதற்கு எதிராகப் போராடிவருகிறார்.
  7. தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது!
    கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் 180-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடந்திருக்கும்போது, தமிழகத்தைச் சமூக நீதியின் பூமியென்று பெருமை பாராட்டிக் கொள்வது அவமானகரமானது.
  8. மோடியின் ஆட்சியில்… அம்பானியின் சொத்து வீங்குகிறது! குழந்தைகள் சோறின்றி, மருந்தின்றிச் சாகிறார்கள்!
    பீகார் மாநில அரசு முசாஃபர்பூர் மாவட்டக் குழந்தைகளின் பட்டினியையும் போக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் அம்மலிவான மருந்தையும் வாங்கி வைக்க வில்லை. விளைவு, கொத்துக்கொத்தாக சிறுவர்களின் அகால மரணங்கள்.
  9. வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கையின் மருந்து !
    நேற்று இந்த வேலை, நாளை அந்த வேலை என்று மிதந்துகொண்டு இருக்கின்ற ஒரு உழைப்பாளியை எப்படிச் சங்கமாக சேர்ப்பது என்பதுதான் இன்றைய காலக்கட்டத்தின் சவால்!
  10. குடி கெடுக்கும் எடப்பாடி!
    “டாஸ்மாக் கடைகள் கள்ளச் சாராயச் சாவுகளை ஒழித்துவிட்டதாக” வெட்கமின்றி பெருமை பாராட்டிக் கொண்டது அ.தி.மு.க. அரசு.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

பங்கு சந்தை : காசேதான் கடவுளடா ! | பொருளாதாரம் கற்போம் – 29

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 29

மாபெரும் வீழ்ச்சி – பாகம் 1

அ.அனிக்கின்

லோ எந்த ஒரு நாட்டுக்கும் விசுவாசமானவரல்ல; ஒரு கருத்துக்கே விசுவாசமாக இருந்தார். அவர் தம்முடைய கருத்தை முதலில் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, ஜினோவா குடியரசு ஆகிய நாடுகளிடமும் ஸவோய் கோமகனிடமும் கூறினார்; ஆனால் பலனில்லை. கடைசியில் பிரான்ஸ் அவருடைய கருத்தை ஏற்றுக்கொண்ட பொழுது அவர் தன்னை ஒரு பிரெஞ்சுக்காரராகவே மனப்பூர்வமாக நினைத்துக் கொண்டார். அவர் உடனே பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெற்றார். பிறகு தன்னுடைய திட்டம் வெற்றியடைவதற்கு அவசியமானதாகக் கருதியதால் கத்தோலிக்கராகவும் மதம் மாறினார்.

இந்தக் கருத்தின் மீது லோ உண்மையான நம்பிக்கை கொண்டிருந்தார்; பிரான்சில் அது வெற்றி பெற வேண்டுமென்பதற்காக தன்னிடமிருந்த எல்லாப் பணத்தையும் கொடுத்ததோடு இதயத்தையும் கொடுத்தார். இயன்றவரை சுருட்டிக் கொள்வது, பிறகு திருட்டுப் பணத்தோடு ஓடிப் போய்விடுகின்ற சாதாரணப் போக்கிரியோடு லோவை ஒப்பிட முடியாது.

பிற்காலத்தில் அவர் எழுதிய “சுயவிளக்க அறிக்கைகளில்”, என்னுடைய நோக்கம் அப்படி இருந்திருக்குமானால் என் சொத்து முழுவதையும் பிரான்சுக்குக் கொண்டு வந்திருக்க மாட்டேன், அதிகாரத்தில் இருந்து கொண்டிருந்த பொழுதே சில சொத்துக்களையாவது வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்திருப்பேன் என்று திரும்பத் திரும்ப எழுதியிருந்தார். “அவருடைய இயல்பில் பேராசையோ, போக்கிரித்தனமோ இல்லை” என்று சான்-சிமோன் கோமகன் எழுதியிருப்பதை நாம் நம்பலாம். அவருடைய திட்டத்தின் தவிர்க்க முடியாத, தர்க்க ரீதியான விளைவினால் அவர் போக்கிரியாக்கப்பட்டார்!

1715 டிசம்பர் மாதத்தில் பொறுப்பு அரசருக்கு எழுதிய கடிதத்தில் லோ மறுபடியும் தன் கருத்துக்களை விளக்குகிறார். அதில் காணப்படுகின்ற ஒரு மர்மமான பகுதி மோசடியைப் போலத் தோன்றுகிறது. “இந்த வங்கி என்னிடமிருக்கும் ஒரே ஒரு கருத்து அல்ல; அது என்னுடைய மிகப் பெரிய கருத்துமல்ல. என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது; அதைச் செயல்படுத்தும் பொழுது பிரான்சுக்குச் சாதகமான முறையில் ஏற்படப் போகின்ற மாற்றங்களைக் கண்டு ஐரோப்பாவே திகைத்து நிற்கும். இந்தியாவிற்குக் கடற்பாதையைக் கண்டு பிடித்ததைக் காட்டிலும், கடன் வசதியைப் பின்பற்றியதைக் காட்டிலும் மிக முக்கியமான மாற்றங்கள் அதனால் ஏற்படும். மாட்சிமை பொருந்திய அரசுப் பிரதிநிதி அவர்கள் இந்தப் பணியைச் செய்வதன் மூலம் இன்று இந்த ராஜ்யம் இருக்கின்ற வருந்தற்குரிய நிலையிலிருந்து அதை உயர்த்த முடியும்; இதுவரையில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமான பலமுள்ளதாக ஆக்க முடியும்; நிதித் துறையில் ஒழுங்கை ஏற்படுத்தி விவசாயம், தொழில்கள், வர்த்தகம் ஆகியவற்றுக்குப் புத்துயிரளித்து ஆதரவு கொடுத்து வளர்க்க முடியும்.” (1)

திட்டங்களைத் தயாரிப்பவர்கள் எப்பொழுதுமே ஆட்சியாளர்களிடம் தெருவெல்லாம் தங்கம் கொழிக்கச் செய்வோம் என்று வாக்குறுதிகள் கொடுப்பதுண்டு. ஆனால் இங்கே ஒரு பொருளாதார இரஸவாதி ஏதோ ஒரு வகையான “மந்திரக் கல்லை” ஏற்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இந்தத் தெளிவற்ற வாக்குறுதிகளுக்குப் பின்னர் இருந்த திட்டம் என்ன என்பது இரண்டு வருடங்களுக்குப் பிறகு தெளிவாகத் தெரிந்தது. 1717-ம் வருடத்தின் கடைசியில் லோ தனது இரண்டாவது பிரம்மாண்டமான நிறுவனத்தை, இந்தியத் தீவுகள் கம்பெனியை ஏற்படுத்தினார். அப்பொழுது பிரான்சுக்குச் சொந்தமாக இருந்த மிலிஸிப்பி பள்ளத்தாக்கில் மக்களைக் குடியேற்றுவதை நோக்கமாகக் கொண்டு முதலில் தொடங்கப்பட்டபடியால் அது மிஸிஸிப்பி கம்பெனி என்று வழக்கமாகச் சொல்லப் பட்டது .

இதில் குறிப்பிடத்தக்க புதிய அம்சம் ஏதும் இருப்பதாக வெளியே தெரியவில்லை. இங்கிலாந்தில் ஒரு நூற்றாண்டுக்கு மேல் கிழக்கிந்தியக் கம்பெனி வளங்கொழித்துக் கொண்டிருந்தது. ஹாலந்திலும் அதைப் போன்று ஒரு கம்பெனி இருந்தது. ஆனால் லோ தொடங்கிய கம்பெனி இவற்றி லிருந்து வேறுபட்டிருந்தது. கம்பெனியின் பங்குகளைத் தமக்குள்ளாகவே பிரித்துக் கொண்டுள்ள வர்த்தகர்களின் குறுகலான கோஷ்டியின் சங்கம் அல்ல அது.

மிஸிஸிப்பி கம்பெனியின் பங்குகளை முதலாளிகளில் சற்று அதிகமான பகுதியினருக்கு விற்பனை செய்யவும் பங்குச் சந்தையில் தீவிரமாக விற்பனை செய்யவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்தக் கம்பெனி அரசுடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தது. இது அரசிடமிருந்து பல துறைகளில் அதிகமான சலுகைகளையும் ஏகபோக வர்த்தகம் செய்வதற்குரிய அதிகாரத்தையும் பெற்றிருந்தது என்பது மட்டும் இதன் அர்த்தமல்ல. அதன் தலைமையிடத்தில், அமைதியே உருவெடுத்த ஸ்காட்லாந்துக்காரருக்கு அருகில் பிரான்சின் பொறுப்பு அரசர், ஆர்லியானைச் சேர்ந்த ஃபிலீப் அமர்ந்திருந்தார்.

படிக்க:
♦ மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?
♦ தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

1719-ம் வருடத்தில் ஜெனரல் வங்கியை அரசு எடுத்துக் கொண்டபடியால் அது ராயல் வங்கி என்று அழைக்கப்பட்டது. அந்த வங்கியோடு இந்தக் கம்பெனி இணைக்கப்பட்டது. மிஸிஸிப்பி கம்பெனியில் பங்குகள் வாங்குவதற்காக இந்த வங்கி முதலாளிகளுக்குக் கடன் கொடுத்தது. அந்தக் கம்பெனியின் நிதிப் பொறுப்பையும் வங்கி கவனித்துக் கொண்டது. இரண்டு ஸ்தாபனங்களின் நிர்வாகப் பொறுப்பையும் லோ தன்னிடமே வைத்துக் கொண்டார்.

ஆகவே, லோவின் இரண்டாவது “மாபெரும் கருத்து” என்பது மூலதன மத்தியப்படுத்துதல், மூலதனக் கூட்டமைப்புக் கருத்தாகும். இங்கும் லோ ஒரு தீர்க்கதரிசியாக, தன்னுடைய காலத்தைக் காட்டிலும் ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கு மேலும் முந்தியிருப்பவராகத் தோன்றுகிறார். மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் கூட்டுப் பங்குக் கம்பெனிகளின் வேகமான வளர்ச்சி தொடங்கவில்லை. இன்று வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரம் முழுவதிலுமே, குறிப்பாக பெரும் அளவில் உற்பத்தி நடைபெறும் துறையில், அவையே இருக்கின்றன.

பெருந்தொழில்களை ஒரு முதலாளி – சில முதலாளிகள் கூட – அவர் எவ்வளவு பணக்காரராக இருந்த போதிலும் தனியே ஆரம்பிக்க முடியாது. அத்தகைய தொழில்களில் பல முதலாளிகளின் மூலதனத்தையும் ஒன்று சேர்ப்பது அவசியமாக இருக்கிறது. சிறு பங்குதாரர்கள் பணத்தை மட்டுமே கொடுக்கிறார்கள், அங்கே நடைபெறும் காரியங்களில் அவர்களுக்கு ஒரு வகையான செல்வாக்கும் கிடையாது. மேலே உட்கார்ந்திருக்கும் சிலர் தொழிலை நடத்துகிறார்கள். மிஸிஸிப்பி கம்பெனியைப் பொறுத்த வரையிலும், லோவும் அவருடைய கூட்டாளிகளான சிலரும் அப்படிப்பட்ட நிலையில் இருந்தார்கள். இத்தகைய கூட்டுப் பங்குக் கம்பெனிகள் வகித்த முற்போக்கான பாத்திரத்தைப் பற்றி மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: ”ஒரு ரயில்வே அமைப்பை நிர்மாணிப்பதற்குப் போதுமானதாக இருக்கும் அளவுக்குச் சில தனிப்பட்ட மூலதனங்கள் வருகின்ற வரை மூலதனத் திரட்சி காத்திருப்பதென்றால் உலகத்தில் இன்னும் ரயில்வேக்கள் ஏற்பட்டிருக்காது. இதற்கு மாறாக, மத்தியப் படுத்துதல் கண்ணைச் சிமிட்டும் நேரத்தில் கூட்டுப் பங்குக் கம்பெனிகள் மூலம் இதைச் செய்து முடித்தது”. (2)

கூட்டுப் பங்குக் கம்பெனிகளின் நடவடிக்கைகளில் பங்குகளை வாங்குவதிலும் விற்பனை செய்வதிலும் மோசடிகளும் ஊக வாணிகமும் தவறாமல் உண்டு. லோவின் திட்டம் இது வரையிலும் அறிந்திராத அளவுக்குப் பங்கு மோசடி நடைபெற உதவியது. கம்பெனி ஒரு வருட காலத்துக்குப் பிறகு உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டதும் லோ பங்குகளின் விலையை அதிகப்படுத்துவதற்கும் அவற்றின் விற்பனையைப் பெருக்குவதற்கும் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தார். அவர் ஒரு ஆரம்பம் என்ற வகையில் 500 லிவர் பங்குகளில் இரு நூறு பங்குகளை வாங்கினார். அப்போது இவை ஒவ்வொன்றுக்கும் 250 லிவர் தான் விலை. ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு பங்குக்கும் அன்றைக்கு அது என்ன விலைக்குப் போனாலும் கூட அதன் அறிவிக்கப்பட்ட மதிப்பான 500 லிவர் கொடுப்பதாக அவர் உறுதியளித்தார். இது பலருக்கும் பொருளற்ற காரியமாகத் தோன்றியது. ஆனால் இதற்குப் பின்னால் நுண்ணறிவு கொண்ட ஒரு திட்டம் இருந்தது. அது வெகுசீக்கிரத்தில் நிறைவேறியது , ஆறு மாதங்களில் ஒவ்வொரு பங்கின் மதிப்பும் அதன் அறிவிக்கப்பட்ட மதிப்பைப் போல பல மடங்கு அதிகமாயிற்று; லோ ஏராளமான லாபத்தை ஒதுக்கிக் கொண்டார்.

ஆனால் அது அவ்வளவு முக்கியமல்ல. இப்பொழுது அவருக்குச் சில நூறாயிரங்கள் அத்தனை முக்கியமல்ல. பங்குகளை விளம்பரப்படுத்த வேண்டும், வாங்குபவர்களைக் கவர வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். அதே சமயத்தில் அவர் கம்பெனியின் வர்த்தகத்தை மிகவும் பெரிய அளவுக்கு, மிக அதிகமான வேகத்தோடு விரிவாக்கிக் கொண்டிருந்தார். அவர் உண்மையான வர்த்தகத்தைத் திறமைமிக்க விளம்பரத்தோடு இணைத்தார். இந்த விஷயத்திலும் பிற்காலத்தில் நடக்கப் போவதை அவர் முன்கூட்டியே செய்து காட்டினார்.

misisipi company political economy
மிஸிஸிப்பி குறித்த கதைகள் லோ -வின் வார்த்தை ஜாலத்தால் செல்வம் கொழிக்கும் இடமாக புனையப்பட்டது.

லோ மிஸிஸிப்பி பள்ளத்தாக்கில் மக்கள் குடியேறுவதற்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். அங்கே ஒரு நகரத்தை ஏற்படுத்தினார்; பொறுப்பு அரசரை கௌரவிக்கின்ற வகையில் அதற்கு நியூ ஆர்லியான் என்று பெயரிட்டார். அங்கே குடியேறுவதற்கு சொந்த விருப்பத்தின் பேரில் வந்தவர்களின் எண்ணிக்கை போதுமான அளவுக்கு இல்லாதபடியால் கம்பெனியின் வேண்டுகோளின் படி அரசாங்கம் திருடர்களையும் போக்கிரிகளையும் விபசாரிகளையும் கட்டாயப்படுத்தி அங்கே அனுப்பியது. அதே சமயத்தில் லோ பலவிதங்களிலும் கவர்ச்சிகரமான பிரசுரங்களை அச்சிட்டு வினியோகிக்க ஏற்பாடு செய்தார். இந்தப் பிரசுரங்களின் படி அது கற்பனையையும் மிஞ்சும் வகையில் வளங்கொழிக் கும் நாடு; அங்கே வசிப்பவர்கள் பிரெஞ்சுக்காரர்களைச் சந்திப்பதில் பேரானந்தம் அடைகின்றவர்கள்; நம்முடைய அற்பமான சிங்காரப் பொருள்களுக்குப் பரிவர்த்தனையாக அவர்கள் தங்கம், வைரம், இன்னும் பலவிதமான விலையுயர்ந்த பொருள்களைக் கொடுக்கிறார்கள். அங்கே இருக்கும் சிகப்பு இந்தியர்களைக் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றுவதற்காக ஏசு சபையைச் சேர்ந்த பாதிரியார்களைக்கூட அவர் அங்கே அனுப்பி வைத்தார்.

அப்பொழுது மோசமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சில பிரெஞ்சுக் காலனி கம்பெனிகளை லோவின் கம்பெனி விழுங்கி அது சக்தி மிக்க ஏகபோகக் கம்பெனியாக மாறியது. அந்தக் கம்பெனிக்குச் சொந்தமான சில டஜன் பழைய கப்பல்கள் லோவின் சொல் வன்மையாலும் அவருடைய உதவியாளர்களின் பேனா வன்மையாலும் வெள்ளியையும் பட்டுத் துணிகளையும் வாசனைத் திரவியங்களையும் புகையிலையையும் பிரான் சுக்குக் கொண்டு வருகின்ற மாபெரும் கப்பல் படையாக மாறின.

பிரான்சிலும் கூட அந்தக் கம்பெனி வரி வேட்டையை மேற்கொண்டது; நியாயமாகச் சொல்வதென்றால் தனக்கு முன்பு கொள்ளையடித்த பலரைக் காட்டிலும் அதிகமான அறிவோடும் திறமையோடும் இந்த வேலையைச் செய்தது. பொதுவாக, இவை அனைத்தும் சிறப்பான ஸ்தாபன ஏற்பாடுகளும் துணிச்சலான தொழிலூக்கமும் கட்டுக்கடங்காத வீரசாகஸமும் கேவலமான மோசடியும் சேர்ந்த விசித்திரமான கலவையாக இருந்தன.

இந்தக் கம்பெனி மிகவும் குறைவான லாப ஈவுத் தொகையையே கொடுத்து வந்த போதிலும், 1719-ம் வருட வசந்த காலத்தின் போது அதன் பங்குகளின் விலை பலூன்களைப் போல மேலே ஏறின. இதற்காகத்தான் லோ காத்துக் கொண்டிருந்தார். சந்தையைத் திறமையோடு பயன்படுத்திக் கொண்டு அவர் புதிய பங்குகளை வெளியிட்டார்; அவற்றை மேலும் மேலும் அதிகமான விலைகளில் விற்பனை செய்தார். வெளியிடப்படும் பங்குகளைக் காட்டிலும் தேவை அதிகரித்தது; புதிய பங்குகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டதும் கம்பெனியின் தலைமை நிலையத்துக்கு முன்பு ஆயிரக் கணக்கானவர்கள் இரவு பகலாகக் காத்துக் கொண்டு நின்றனர்.

படிக்க:
♦ பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு நிறுவனம்
♦ பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக் கட்டுரை

இத்தனைக்கும் 1719 செப்டெம்பர் மாதத்திலேயே கம்பெனி 500 லிவர் மதிப்புள்ள பங்குகளை 5,000 லிவர் தொகைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தது. செல்வாக்கு மிக்கவர்கள், பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தலைமை நிலையத்துக்கு முன்னால் காத்திருக்கவில்லை; அவர்கள் லோவையும் மற்ற இயக்குநர்களையும் சூழ்ந்து கொண்டு தாங்களும் பணம் கட்ட அனுமதிக்கப்பட வேண்டுமென்று கெஞ்சினார்கள். ஏனென்றால் வெளியிட்டதும் 8,000 லிவர் விலை சொல்லப்படுகிற ஒரு பங்கை மறு நாளே பங்குச் சந்தையில் 7,000 அல்லது 8,000 லிவர் தொகைக்கு விற்பனை செய்துவிடலாம்! இது பற்றிக் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பலர் புகைபோக்கியின் வழியாக இறங்கி லோவின் அலுவலகத்துக்குள் நுழைவதற்கு முயன்றிருக்கின்றனர்; ஒரு சீமாட்டி லோவின் வீட்டுக்கு முன்னால் தன்னுடைய கோச் வண்டியைக் கவிழ்க்குமாறு தன்னுடைய வண்டிக்காரனுக்கு உத்தரவிட்டாள்; வண்டி கவிழ்ந்து கிடப்பதைப் பார்த்துக் கருணை மிக்க லோ உதவி செய்ய வருவார்; அப்பொழுது அவரிடம் தன்னுடைய கோரிக்கையைச் சொல்லலாம் என்று நினைத்தாள்.

லோவைச் சந்திப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள் கொடுத்த லஞ்சப் பணத்தின் மூலம் அவருடைய செயலாளர் பெரும் பணக்காரரானார். பொறுப்பு அரசருடைய தாயார் குத்தலாகப் பேசக் கூடிய, வயோதிகப் பெண்மணி. அவர் ஜெர்மனியிலிருந்த தன்னுடைய உறவினர்களுக்கு எழுதிய கடிதங்களில் இந்த நம்ப முடியாத விசித்திரமான காலத்தைப் பற்றிய பதிவுக் குறிப்பைத் தந்திருக்கிறார். ”அவர்கள் எப்பொழுதும் லோவுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இரவிலும் பகலிலும் அவருக்கு ஓய்வே கிடையாது. ஒரு கோமகள் பகிரங்கமாக அவர் கையில் முத்தமிட்டிருக்கிறாள். ஒரு கோமகள் அவர் கையை முத்தமிடுகிறாளென்றால் மற்ற பெண்கள் அவருடைய உடலின் எந்த பாகங்களையெல்லாம் கெளரவிக்கத் தயாராயிருக்கிறார்களோ?” என்று எழுதினாள்.

1719 நவம்பர் 9-ம் தேதி எழுதிய கடிதத்தில் அவள் பின்வரும் நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறாள்: “சமீபத்தில் சில பெண்கள் அவரைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்த பொழுது அவர் அறையிலிருந்து வெளியே போக விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். அவர்கள் அவரைப் போக விடவில்லை. அவர் வேறு வழியில்லாததால் என்ன காரணத்துக்காகப் போக வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறார். ‘பூ! இது ஒரு கஷ்டமா? நீங்கள் இங்கேயே செய்யுங்கள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பெண்கள் அவரோடு தொடர்ந்து இருந்திருக்கிறார்கள்” (3)

misisipi bubble political economy
பங்குசந்தை அமந்துள்ள தெருவை சுட்டும் ஓவியம்.

பங்குச் சந்தை இருந்த கென்காம்புவா வீதியில் இன்னும் விசித்திரமான காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. அதிகாலையிலிருந்து அந்தி நேரம் வரையிலும் அங்கே பெருந் திரளான மக்கள் நின்று கொண்டு பங்குகளை வாங்குவதும் விற்பனை செய்வதும் விலைகளைப் பேசிக் கொண்டும் கணக்குப் போட்டுக் கொண்டும் நின்றனர். ஐந்நூறு லிவர் மதிப்புள்ள பங்குகள் பத்தாயிரத்துக்கு உயர்ந்தன; பிறகு பதினையாயிரத் துக்கு மேலே போய் இருபதாயிரத்தில் நின்றன. திடீரென்று பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற வெறி எல்லா வகுப்பினரையும் ஒன்றுபடுத்தியது. இதற்கு முன்பு மாதாகோவில் வழிபாட்டில் கூட அவர்கள் ஒன்று சேர்ந்ததில்லை. சீமாட்டி வண்டியோட்டியோடு நெருக்கி நின்றாள்; கோமகன் காவற்காரனோடு வாய்ச்சண்டை போட்டார். மதகுரு பெட்டிக் கடைக்காரனோடு கூட்டுச் சேர்ந்து கணக்குப் போட்டார். காசே கடவுளடா!

பங்குகளின் விலைக்காகக் கொடுக்கப்பட்ட தங்கம், வெள்ளியை வாங்குவதற்கு மக்கள் தயங்கினார்கள். இந்த திடீர் உயர்வின் போது பத்து பங்குகள் 1.4 அல்லது 1.5 டன் வெள்ளியின் விலைக்குச் சமமாக இருந்தன! அநேகமாக எல்லா வழங்கீடுகளுமே காகிதப் பணத்தில் தான் செய்யப்பட்டன. இந்தக் காகிதச் செல்வம் – பங்குகளும் வங்கி நோட்டுகளும் – நிதி மாயாவி லோவின் படைப்பாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  J. Law, Oeuvres complètes, Vol. 2, Paris, 1934, p. 266.

(2) K. Marx, Capital, Vol. 1, Moscow’, 1972, p. 588.

(3) C. Kunstler, La vie quotidienne sous la Régence, Paris, 1960, p, 121.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக் கட்டுரை

0

சென்னை அடையாறு காந்தி மண்டபம் அருகே இருக்கும் புற்றுநோய் மருத்துவமனையின் நுழைவாயிலில் சாலையோர இளநீர்க்கடை வைத்திருக்கிறார் சவுந்தர்ராஜன். 

இளநீர் கடை வைத்திருக்கும் சவுந்தர்ராஜன்.

“மயிலாடுதுறையிலிருந்து பஞ்சம் பொழக்க 40 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தேன். தூரத்து உறவினர்கள் ஆரம்பத்தில் எனக்கு சிறு உதவிகள் செய்ய, பல வேலைகளுக்குப் பிறகு இளநீர்க்கடையை நிரந்தரமாக்கிக்கொண்டேன்.” என்றவரிடம் “வியாபாரம் எல்லாம் எப்படிப் போகுது?” என்று கேட்டோம்.

“சாலையோர ரவுடிகள், கார்ப்பரேசன் அதிகாரிகள் மற்றும் போலீசு இவர்களின் அடி, உதை, மிரட்டல் எல்லாத்தையும் பாத்துட்டேன். துணிந்து நின்ன பிறகுதான் ஏதோ அரைவயிறு கஞ்சியாவது குடிக்க முடியுது. இதுவும் மாதத்தில் 10 நாள் , பக்கத்தில் காந்தி மண்டபம், கவர்னர் மாளிகை இருப்பதால் விஜபிக்கள் வருகிறார்கள் என்று எல்லாக் கடைகளையும் போலீசு துரத்திவிடும். பொழப்பு கெடும். அந்த நாட்களில் கை செலவுக்கு டீக்குக்கூட வழியில்லாமல் திண்டாடுவோம். கடன் வாங்கி ஓட்டுவோம்.” என்றவாறு அடுத்து வந்த வாடிக்கையாளருக்கு இளநீரை சீவிக் கொடுத்தார்.

“உங்க வீடு எங்கைய்யா.. குடும்பமெல்லாம் எங்க இருக்காங்க?” என்றதும் சற்று சலிப்போடு தொடர்ந்தார், “ இந்த சிரமத்திற்கு மத்தியில் எனக்கு பொறந்தது மூனும் பொண்ணு. அதுங்கள கட்டிக்கொடுத்து சீர்சனத்தி செய்வதற்குள் என் வயசு முடிந்துவிட்டது. இப்போது என் பொண்டாட்டிக்கு வயதானதால் உடல்நிலை சரியில்லை. குறைகாலத்தில் அதை வைத்து கஷ்டப்படுறேன்.

இந்தத் தள்ளுவண்டியை ரெடி செய்வதற்கு 30 ஆயிரமாச்சு. சரக்குப் போடுவதற்கு 10 ஆயிரம். முன்பெல்லாம் நாளொன்றுக்கு 200 காய் போவும். இப்போ வெறும் 50 காய் போறதே பெரும்பாடாயிருக்கு.

தினமும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். கோயம்பேடு போயி வண்டி நிறைய சரக்கு போட்டுகிட்டு காலை 7 மணிக்கு திரும்புவேன். அந்நேரத்திலேயே கடை திறந்தால்தான் நாளு காய் விக்கும். காலை, மதியம் சாப்பாடெல்லாம் வெளியிலதான். வீட்டுல உடம்பு சரியில்லங்கிறதால நேரத்துல எழுந்து சமைக்க முடியாது.

பக்கத்தில் இருக்கிற சாப்பாடு தள்ளுவண்டிக்காரர்களிடம் வாங்கி சாப்பிடுவேன். நாள் முழுதும் வெயிலிலேயே நிப்பதால் உடம்பு அநியாயமா சூடாகும். ஓயாமல் சாலையில் வண்டி போவதால் புகை மூக்கையும் கண்ணையும் ரொப்பும். அதனாலே எப்போதும் பாதி கண்ணுலதான் பாக்குற மாதிரி இருக்கும். கண் பார்வையும் மோசமாகிட்டு வருது. ஏதோ ஒரு பழக்கத்தில் காயை சீவுகிறேன். எப்போ கைமேல் கத்திய போடுவேன்னு எனக்கே தெரியாது. அந்த பயம் வேறு. பயத்தை வெளியில் காட்ட முடியாது.

இளநீர் குடிப்பவர்கள் சீக்கிரம் வெட்டவில்லை என்று பக்கத்து கடைக்குப் போய் விடுவார்கள், அதனால் வியாபாரம் படுத்துவிடும். ஏதோ என்னோட காலமும் ஓடுது.

இப்போது இளநீர் விலையும் ஏறிவிட்டது என்று குடிப்போர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள். புயலால் தஞ்சாவூர் வரத்து நின்று விட்டது. லாபமும் முன்பு மாதிரி இல்லை. எல்லா பணமும் சரக்கு வாங்குவதற்கே சரியாக இருக்கிறது. மார்கெட்டில் நாளுக்கொரு விலை சொல்கிறார்கள். மீதி காலத்தை எப்படி ஓட்டப் போகிறேன் என்றே கவலையாக இருக்கிறது., படுத்தால் தூக்கம் வருவதில்லை.” என்று கூறி முடித்தார்.

“உடம்பு சூட்டுக்கு நடுவுல ஒரு இளநீரக் குடிச்சுக்க வேண்டியதுதானே?” என்றோம். நம்மை வித்தியாசமாகப் பார்த்தார். நாங்க தினமும் இளநீர் குடிச்சா குடும்பம் நடத்த வேண்டாமா? ஒவ்வொரு பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல. இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? என்று நம்மைப் பார்த்தார்.

மேலும் படங்களுக்கு :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


வரதன்

தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

தருமபுரியில் மீண்டும் அரங்கேறும் ஆதிக்க சாதி தாக்குதல்கள் : சாதி மறுத்து திருமணம் செய்து கொண்டதற்காக பெற்றோரைக் கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

ருமபுரியில், இளவரசன் திவ்யா காதல் திருமணத்தைத் தொடர்ந்து நத்தம் காலனி எரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இளவரசனின் மரணமும் நிகழ்ந்தது. அப்போது இது அநீதி என்று பலராலும்  பரபரப்பாக பேசப்பட்டது. எழுதப்பட்டது. ஆனால் இது போன்ற சம்பவங்கள் இன்று குறைந்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும்.

சொல்லப்போனால், தமிழகம் சாதி வெறியர்களின் சொர்க்க புரியாக மாறிவருகிறது. சாதி மறுப்பு திருணங்கள் செய்து கொள்வோர் இன்று ஆணவக்கொலை செய்யப்படுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 180-க்கும் மேற்பட்ட ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன. சாதிவெறியர்கள், தமிழகத்தை வட மாநிலங்களாக மாற்றி வருகிறார்கள்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகில் உள்ள பிக்கம்பட்டி கிராமத்தில் நாவிதர் சமூகத்தை சேர்ந்த 10 குடும்பங்கள் வசித்துவருகின்றனர். அந்த ஊரில் அந்த  சமூகத்தை சேர்ந்த  காளிதாசின் மகன் அஜித்குமார் (23) ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங்க் படித்துவிட்டு பெங்களூரில் வேலை செய்து வருகிறார். இவர், பிக்கம்பட்டிக்கு அருகில் உள்ள  தாளப்பள்ளம் கிராமத்தில் உள்ள வன்னிய சமூகத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் பிரியாவை(22)  காதலித்து 35 நாட்களுக்கு முன்பு  இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் உயிருக்கு பயந்து வெளிமாநிலம் சென்றுவிட்டனர். பெண்ணின் பெற்றோர் அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் புகார் தரவே போலிசு அஜித்குமாரின் பெற்றோரை அழைத்து பையனையும், பெண்ணையும் அழைத்துவரும்படி கூறியுள்ளனர்.

பின்னர் விசாரணையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகியுள்ளனர் என்று போலிசு கூறியதைத் தொடர்ந்து சாதிவெறி தலைக்கேறிய பெண் வீட்டார் உறவினர்களை வைத்து பல இடங்களில் அஜித்குமாரை தேடினர். எங்கும் கிடைக்காத ஆத்திரத்தில் வன்னிய சமூகத்தை சேர்ந்த சில ஆதிக்க சாதி வெறியர்கள் பிக்கம்பட்டியில் உள்ள நாவிதர் சமூகத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அருகில் உள்ள செக்காரப்பட்டியில் நாவிதர் சமூகத்தினரின் வீடுகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அவர்கள் ஊரைவிட்டு வெளியேறி பெங்களூர் சென்று விட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிலையில் கடந்த  24.07.2019 அன்று ஆதிக்க சாதி வெறியர்களான பாஸ்கர், செந்தில், தர்மலிங்கம், பென்னாகரம் முனியப்பன் உள்ளிட்டவர்கள் கும்லாக காரில்   பெங்களூர் சென்று அஜித்குமாரின் தந்தை காளிதாஸ், தாய் வித்யா(40) மற்றும் அஜித் குமாரின் உறவினர்களான காளிதாசின் சகோதரி சின்னக்கா, காளிதாசின் தம்பி ஹரிகரன், இவரது மகன் மஞ்சுநாத், உறவினர்கள் சரஸ்வதி, கிருஷ்ணமூர்த்தி, நாகராணி, செல்வம் ஆகியோரை நைச்சியமாக பேசி; “கூ.கீ. அன்பழகனெல்லாம் (அதிமுக முன்னாள் மாநில நிர்வாகி) ஊரில் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நாம் ஊரில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்..” என்று கூறி காரில் அழைத்துவந்தனர்.

இரவு தாளப்பள்ளத்திற்கு அழைத்து வந்த அவர்கள் நேரடியாக பிரியாவின் வீட்டிற்கு அழைத்து சென்று இரவு முழுதும் அவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கினர். ஓஸ் பைப், பெல்ட், (பச்ச) தேங்காய் மட்டை போன்றவற்றால் நாக்கூசும் வார்த்தைகளால் திட்டிக்கொண்டே கடுமையாக தாக்கியுள்ளனர். ஊரில் உள்ள ஆண்கள், பெண்கள் என பலரும் கூட்டமாக சேர்ந்து அவரவர் கையில் கிடைத்ததை கொண்டு தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த மாநில துணைச்செயலாளர் தவமணியும் ஈடுபட்டதாகவும்,  அவர் தனது செருப்பு காலால் எட்டி உதைத்ததாகவும், அவருடைய ஆட்கள்தான் இதில் முக்கியமாக ஈடுபட்டார்கள் என்றும் கூறுகிறார்கள் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்.

படிக்க:
பூங்கொடி கொலை : வன்னிய மக்களே சிந்திப்பீர் !
♦ மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?

இதில் அஜித்குமாரின் தந்தை காளிதாஸ், தாய் வித்யா(40), காளிதாசின் சகோதரி சின்னக்கா, காளிதாசின் தம்பி ஹரிகரன், இவரது மகன் மஞ்சுநாத், நாகராணி, உறவினர்கள்  சரஸ்வதி, கிருஷ்ணமூர்த்தி, செல்வம் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர். பெண்களை மார்பில் கைவைத்து பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தியுள்ளனர். சீமண்ணெயை உடலில் ஊற்றி தீப்பந்தம் எடுத்து வந்து பெண்ணையும் பையனையும் எங்கே வைத்திருக்கிறீர்கள், சொல்லுங்கள் இல்லையென்றால் கொளுத்திக் கொன்று விடுவோம் என்று கூறி தாக்கியுள்ளனர்.. அடிதாங்க முடியாமல் தப்பியோடிய செல்வத்திற்கு கீழே விழுந்து எலும்பு முறிந்துவிட்டது.

இரவு 12 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணிவரை ஓடிபோனவர்கள் எங்கே இருக்கிறார்கள்  என்று கேட்டு, விடாமல் தொடர்ந்து தாக்கியுள்ளனர். இதில் அஜித்குமாரின் தந்தை காளிதாஸை மறுநாள் காலை 9 மணிக்கு பென்னாகரம் அருகில் உள்ள தாசம்பட்டியில் அவர்களின் உறவினர் ஒருவருடைய வீட்டில் வைத்து நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். காளிதாசின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சுட்டுள்ளனர். மாலை வரை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

மற்றவர்களை 25.07.2019 அன்று  காலை பத்து மணிக்கு,  தாக்கப்பட்டவர்களை ஒகேனக்கல் ஃபாரஸ்ட் ஆபிசில் வைத்து பூட்டிவிட்டு காவலுக்கு சிலரை வெளியே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இறுதியாக,  மாலை நேரத்தில் காரில் ஏற்றிச்சென்று ஒசூர் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு, போலிசுக்கோ, கவர்மென்ட்டுக்கோ புகார் கூறினால் குழந்தை குட்டிகளையெல்லாம் கொன்றுவிடுவோம், உங்கள் வம்சமே இல்லாமல் செய்துவிடுவோம் என்று மிரட்டி, ரூ 100 பாண்டு பேப்பரில் கையெழுத்து பெற்றுக்கொண்டு  அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள்  நேரடியாக  பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சென்று சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஜெயின் மருத்துவமனையிலும் மருத்துவம் பார்க்கின்றனர். இதில் ஏற்கெனவே நோயாளியாக இருந்து மருந்து மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருந்த அஜித் குமாரின் தாய் வித்யா(40) தாக்குதலில் படுகாயமடைந்து சுயநினைவு இன்றி உள்ளார்.

சாதி வெறியர்களின் கொலை மிரட்டலைக் கண்டு அச்சம் அடைந்து பாதிக்கப்பட்டவர்கள் இன்றுவரை புகார் ஏதும் தரவில்லை. வாட்ஸ் அப்பில்,  பாதிக்கப்பட்டவர்கள் காயங்களுடன்  உள்ள புகைப்படம் வெளியாகி பரவியதை தொடர்ந்து இக்குற்றச் செயலை இண்டூர், பாப்பாரப்பட்டி, அதியமான் கோட்டை போலிசு விசாரிக்க கிளம்பியுள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கூட இல்லாதொழிக்க திட்டம் போடும் காவி பாசிஸ்டுகள் ஆளும் நாட்டில், “ஆணவப்படுகொலைகள் எனது ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா?” என்று பொறுப்பற்ற முறையில் பேசும் எடப்பாடி ஆட்சிசெய்யும் மாநிலத்தில் சாதிவெறியர்கள் தண்டிக்கப்பட வாய்ப்பே இல்லை.

இச்சாதி வெறி தாக்குதல் இறுதியானதும் அல்ல.  மக்களும், ஜனநாயக சக்திகளும் இந்த அரசு கட்டமைப்புக்கு வெளியே தீர்வை தேடி, ஒன்றிணைந்து போராடுவதை தவிர வேறு வழியும் இல்லை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு : 9790138614

மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?

1
  • “பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட்’ பிரச்சினையில் வெட்டிக்கொண்டார்கள்”
  • இனி வன்முறையில் ஈடுபட மாட்டோம் – ரூட் தல மாணவர்கள் உறுதிமொழி
  • ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது – காவல் இணை ஆணையர் சுதாகர்

♣ 2011-ல் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக தங்கள் கல்லூரி அழிக்கப்படுவதற்கு எதிராகப்போராடிய மாணவர்களைப் பார்த்து சோ சொன்னார் “இந்த பச்சப்பாஸ் பசங்கள இராணுவத்தை வச்சு அடக்கணும்” அவர் அடக்கமாகிவிட்டார். அவரின் கருத்துக்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து நிற்கின்றன.

♣ ரூட் சண்டையில் ஈடுபட்டவர்கள் இவர்கள்தானா என்று விசாரணை செய்து முடிவெடுப்பதற்கு முன்னால் அத்தனை பேரும் கீழே ‘வழுக்கி விழுந்து’ கை உடைந்து போயிருக்கிறார்கள். ஆனால் திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷாவை உதைத்துக்கொன்ற காமராஜின் பாத்ரூம் மட்டும் வழுக்காமல் இருக்கிறது என்றால் அது ஆச்சரியம் தானே!

chennai pachaiyappa college 2ஜல்லிக்கட்டு முதல் ஹைட்ரோகார்பன் வரை மக்கள் பிரச்சினைக்காக எப்போதும் முன்னே நிற்கக்கூடிய மாணவர்கள் மீது இப்போது மிகப்பெரிய வன்முறை ஏவிவிடப்பட்டு இருக்கிறது. “ஆமா, ரோட்ல பட்டாக் கத்தியில வெட்டிக்கிட்டா போலீசு சும்மாவா இருக்கும்” “பேனா பிடிக்கும் கையில் அருவா பிடித்தால் அவன் மாணவனா?” என்றும் பலரும் கேட்கிறார்கள். ஹீரோவாக இருந்த மாணவர்கள் வில்லன்களாகிவிட்டார்கள். மாணவர்களை கிண்டல் செய்தும் கேவலப்படுத்தியும் பல மீம்ஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எல்லோரும் திட்டிக்கொண்டு இருக்கும் மாணவர்கள் யார் ? அவர்கள் எல்லாம் அந்தரத்தில் இருந்து குதித்தார்களா? நம் வீட்டிலிருக்கும் பிள்ளைகள்தானே அவர்கள்?

“இவர்களை எல்லாம் ஸ்டூடண்ட்ஸாக பார்க்காதீர்கள்? கிரிமினல்களாக பாருங்கள்” என்கிறார் இணை ஆணையர். போலீசில் லஞ்சம் வாங்கியும்; கிரிமினல் குற்றம் செய்தும் மாட்டிக்கொண்டவர்களிடம் குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 107ன் கீழ் எப்போதும் ‘எதுவும் வாங்கிவிடவில்லை’. அதிகபட்ச தண்டனையே ஆயுதப்படைக்கு மாற்றுவதும் காத்திருப்போர் பட்டியலில் வைப்பதும்தானே!

படிக்க:
பச்சையப்பன் கல்லூரி : கல்விக் கூடமா மாட்டுத் தொழுவமா ?
♦ உங்கள் ரயில் பயணங்களைப் பதம்பார்க்கக் காத்திருக்கும் அம்பானிகள் !

லஞ்ச ஒழிப்புத்துறையின் ஐஜி, பெண் எஸ்பியிடம் தவறாக நடந்து கொண்டாராமே அவரிடம் கு.ந.ச. பிரிவு 107ன் கீழ் உறுதிப்பத்திரம் வாங்குவீர்களா? அமைதியைப் பேணுவதற்கான பிணையம் வாங்குவது என்ற பெயரில் கல்லூரி மாணவர்களிடம் உறுதிப்பத்திரம் வாங்கும் போலீசு, சீரழிவுகளோடு இருக்கும் தங்கள் பிள்ளைகளிடம் என்ன பத்திரம் வாங்கப்போகிறீர்கள்?

சொல்லப்போனால் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த ரூட் சண்டையானது நடப்பதற்கு முன்னரே கல்லூரி நிர்வாகத்துக்கும், போலீசுக்கும் தெரிந்து இருக்கிறது. இதை போலீசும் நிர்வாகமும் தடுக்கவில்லை. இப்படி ஒரு பிரச்சினையை நடக்கவிட்டு வேடிக்கைப்பார்த்து அதன் மூலம் மொத்த மாணவர்களையுமே கிரிமினல்களாக்குவதுதான் போலீசின் நோக்கம்.

ஈழம் மாணவர் எழுச்சி
ஈழம் மாணவர் எழுச்சி

பச்சையப்பன் கல்லூரியில் போலீசு சுதந்திரமாக திரிகிறது. எந்த வகுப்பறையிலும் போலீசு வந்து ‘பாடம் கேட்கும்’ நிலைதான் இப்போதும் இருக்கிறது. நேர்மையான ஆசிரியர்களையும்; மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் ஆசிரிரியர்களையும்; கண்காணித்து அவர்களை ’போட்டு’க்கொடுப்பதற்கென்றே போலீசு தனியாக இருக்கிறது. ஒரு வகுப்பில் யார் யார் எந்த அமைப்பில் இருக்கிறார்கள், அவர்களை எப்படி வெளியேற்றுவது என்பதுதான் போலீசு கல்லூரி நிர்வாகங்களுக்கு கொடுத்த அசைன்மெண்ட்.

போலீசுக்கு எப்போதும் எத்தனை பேரை கிரிமினலாக்கினோம்; ரவுடி லிஸ்டில் கொண்டுவந்தோம்; எத்தனை பேரை ரிமாண்ட் செய்தோம் என்பதுதான் இலக்கு. வேறெதையும் சிந்திக்க முடியாது. ஏனென்றால் போலீஸ் உருவாக்கப்பட்ட ‘டிசைன்’ அப்படி. மொத்த சமூகத்திற்கும் போலீசுதான் அத்தாரிட்டி என்பது போல ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. மொத்த சமூகத்தையும் இயக்குவது கட்டிக்காப்பது உழைப்பாளி மக்கள்தான். பத்து நாள் குப்பையள்ளாமல் விட்டால், சாக்கடை அடைப்பு எடுக்காவிட்டால், மருத்துவம் பார்க்கா விட்டால் தெரியும் எது சமூகத்திற்கு தேவை என்பது. போலீசுதான் ஏதோ சமூக மாற்றத்திற்கு வித்திடுவது போல கதையளந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதுவரை உலகம் முழுவதும் நடைபெற்ற சமூக மாற்றங்களுக்கு யார் காரணம் போலீசா? மாணவர்களா? போலீசு எப்போதும் நிலவுகின்ற அரசை காப்பதையே கடமையாகக் கொண்டவர்கள். அதனால்தான் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் “நாங்க என்ன சார் பண்றது, அது எங்க டியூட்டி” ஆனால் மாணவர்கள் சமூக மாற்றத்தை நோக்கி சிந்திக்கக்கூடியவர்கள். அதனால்தான் தங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் கல்லூரிக்கு ஒரு பிரச்சினை என்றாலோ, மாணவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலோ, மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலோ முன்னேவந்து நிற்பவர்கள். அவர்களை, அவர்களில் தவறான எண்ணங்களை அழிப்பதற்கு அரசியல்தான் சிறந்த மருந்து. அதை ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலேயே பார்த்து இருப்போம்.

அத்தனை லட்சம் பேர் திரண்டு இருந்தபோதும் மக்களுக்கான அரசியல் அவர்களை நல்வழிப்படுத்தியது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் கல்லூரியில், சண்டைகளைக்கூட தடுக்க வக்கற்றுப்போயிருக்கிறது இந்த கார்ப்பரேட்டுக்கான அரசு. மக்களுக்கான அரசாக இருந்தால் ஒரு பிரச்சினை என்றால் அது உருவாகக்காரணம் என்ன? எப்படி களைவது? அதன் சமூகத்தாக்கம் என்ன? என்பதையல்லவா யோசித்திருக்கும்.

ஒரே ஒரு மெரீனா போதும் மாணவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் போலீசு எப்படிப்பட்டது என்பதையும் நிரூபிப்பதற்கு.

chennai pachaiyappa college 1

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு) பல கல்லூரிகளிலும் ரூட் சண்டைகளை தடுத்து நிறுத்தி மாணவர்களை நல்வழிப்படுத்தி இருக்கிறது. அதன் தலைமையில்தான் ஈழப்போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் எல்லா ரூட் மாணவர்களும், அனைத்துக்கல்லூரி மாணவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் சண்டை வந்ததில்லை. அவர்களை மக்களுக்கான அரசியல் ஒன்றுபடுத்தியது. இப்போது அரசியலை போலீசு வெளியேற்றிவிட்டது. அதனால் மீண்டும் ரூட் சண்டைகள் தொடங்கிவிட்டன.

பு.மா.இ.மு தலைமையில் மாணவர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து தமிழகத்துக்கே முன்மாதிரியாக இருந்தார்கள். அப்போது போலீசும் நிர்வாகமும் என்ன செய்தார்கள் ? டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடியவர்களுக்கு ஆதரவா கொடுத்தார்கள்? அத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்தனர். முன்னணியாளர்களை டிஸ்மிஸ் செய்தனர். இப்படி படிப்படியாக மணவர்களிடம் துண்டுப்பிரசுரம் கூட கொடுக்கவிடாமல் தடுத்து மாணவர்களை அரசியலற்றவர்களாக்கி இன்றைக்கு அவர்களை கிரிமினல் போல கத்தியோடு திரிய வைத்தது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?

படிக்க:
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!!
♦ குழந்தைகளே ! தாய் மொழி உங்கள் மனதின் தொட்டில் !

அன்றாடம் டிவி-யும் , சினிமாவும் என்ன கற்றுக்கொடுக்கிறதோ அதைத்தானே செய்வார்கள் குழந்தைகள். எப்படிப்பட்ட இழிவு வேலை செய்தாலும் சரி, எப்படி மானங்கெட்ட அடிமையாக இருந்தாலும் சரி, சம்பாதித்தால் போதும் என்ற மன நிலையில் இருக்கும் சமூகத்திற்கு மாணவனை கிரிமினல் என்று பேசத் தகுதி இருக்கிறதா என்ன? ஏன் போலீசுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் எனத் தெரியாதா? அடிதடி சண்டையில் ஈடுபடாமல் பவுசாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களா? பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருப்பவன் கையில் கத்தி எடுக்காமல் என்ன செய்வான் என்பதை யோசிக்க முடியுமா போலீசால்? சமூகத்தை நேசிக்காத எந்திரமாகக் குழந்தைகள் மாற்றப்பட்டுக் கொண்டிருப்பது பெற்றோர்களான போலீசுக்குத் தெரியாதா?

மாணவர்கள் இன்று கத்தியைப்பிடித்துக் கொண்டு திரிகிறார்கள் என்றால் அதற்கு போலீசும், ஆசிரியர்களும் முக்கியக்காரணம். பலருக்கும் இது அதிர்ச்சியாக இருக்கலாம். பச்சையப்பன் கல்லூரி அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் ஈழப்பிரச்சினை வரை மொத்தத் தமிழகத்திற்கே வழிகாட்டியாக இருந்த அக்கல்லூரியை யாராவது நேரில் சென்று பார்த்து இருக்கிறீர்களா? மாணவர்களுக்கு போதிய அளவு குடிநீர் வசதி உள்ளதா? கழிவறை ஏதாவது இருக்கிறதா? விளையாட்டு உபகரணங்கள் இருக்கிறதா? பல்கலைக்கழக விதிகளின்படி ஆண்டுதோறும் அனைத்து விழாக்களும் நடத்தப்பட்டு இருக்கிறதா?

அங்கு மாணவர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கிறதா என்ன? ஜே.என்.யூ. -வில் தேர்தல் நடக்கிறது, டெல்லி பல்கலை கழகத்தில் தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் ஏன் தேர்தல் நடப்பதில்லை? மாணவர்களுக்கு நியாயமான ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும்போது அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேட்டால் மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்பதையே காரணமாகச்சொல்கிறார்கள். சட்டமன்ற – பாராளுமன்ற தேர்தல்களில் நடக்காத சண்டையா – தில்லுமுல்லுகளா – பிராடுத்தனங்களா- மொள்ளமாரித்தனங்களா? அதற்காக பொதுத்தேர்தலை ரத்து செய்ய போலீசு சொன்னால் கேட்டுக்கொண்டு போவார்களா? சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட – சரி செய்யத்தான் போலீசு! இதெற்கெல்லாம் ஆசிரியர் சங்கங்கள் போராடியதோ – பேசியதோ இல்லை. மாணவனுக்கு கொடுக்க வேண்டிய எவ்வித உரிமையும் இல்லாமல் வைத்திருக்கக்கூடிய இந்த அரசுக்கு என்ன தண்டனை கொடுப்பது?

சென்னையில் எந்தக் கல்லூரியிலும் மாணவர் அமைப்பு என்ற ஒன்றே இருக்கக்கூடாது என்பதை கடந்த 10 ஆண்டுகளாக சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றி இருக்கிறது போலீசு. அதற்கு கல்லூரி நிர்வாகங்களும் உடந்தையாகத்தான் இருந்திருக்கின்றன. அப்போதைய பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர் ஒருவரே போலீசு இன்பார்மர் போல செயல்பட்டு எந்தெந்த மாணவர்கள் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியில் இருக்கிறார்கள் என்று போலீசுக்கு காட்டிக்கொடுக்கும் வேலையை கச்சிதமாகச் செய்தார்.

மாணவர்கள் மக்கள் பிரச்சினைக்காகப் போராடினால் காட்டிக்கொடுக்கும் வேலையை கல்லூரி முதல்வர் தெளிவாக மேற்கொள்வார். ஏன் சில நாட்களுக்கு முன்னர் கூட மாநிலக்கல்லூரியின் வாசலில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக துண்டறிக்கை விநியோகம் செய்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச்சேர்ந்த ஒருவரை பேராசிரியர்களும், கல்லூரி அலுவலர்களும் தாக்கி போலீசிடம் ஒப்படைத்து இருக்கின்றனர்.

மாணவர்களிடம் புதிய கல்விக்கொள்கை பற்றிபேசினால் பேராசிரியருக்கும் அலுவலர்களுக்கும் என்ன கேடு? அப்படிப்பேசினால் மாணவர்கள் சண்டையின்றி ஒற்றுமையாக இருப்பார்கள். நிர்வாகம் ஊழல் செய்து பொறுக்கித்தின்ன முடியாது, போலீசுக்கு வேலையில்லாமல் போய்விடும், அதை எப்படி அனுமதிப்பார்கள்?

chennai pachaiyappa college route thalaமாணவர்களிடம் 107-ன் படி பிரமாணப்பத்திரம் வாங்கினால் பிரச்சினை தீரும் என்று நினைத்தால் அது முட்டாள்த்தனமே. பச்சையப்பன், மாநிலக்கல்லூரி, நந்தனம் போன்ற அரசு – அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மட்டுமல்ல தனியார் கல்லூரிகளிலும் மாணவர்கள் சண்டையிட்டுக்கொள்ளாமல் இல்லை. இப்பிரச்சினையை எப்படி சரி செய்வது என்ற அறிவியல்பூர்வமான விவாதமே தேவை. கல்வியை மொத்தமாக தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, மொத்தமும் கிரிமினல்மயமாகிப்போன இந்த அரசு அதைச்செய்யுமா என்ன?

நிர்பயா வழக்குக்குப்பின் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் கடுமையான சட்டம் – தண்டனை என்று எத்தனையோ ஜாலங்கள் சொல்லியபோதும் பாலியல் குற்றங்கள் பெருகிக்கொண்டேதான் செல்கிறது. (இரு வாரங்களுக்கு முன்பு கூட முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் திருமுல்லைவாயலில் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறார்.) ஆணாதிக்க – நுகர்வு வெறியே அடிப்படையாக இருக்கும் இச்சமூகத்தை அகற்றாமல் கடுமையான சட்டப்பிரிவுகளை உருவாக்குவதன் மூலம் எதுவும் செய்ய முடியாது. சாக்கடையை தூர்வாராமல் கொசு மருந்து அடிப்பதால் பயனேதும் இருக்கப்போவதில்லை.

படிக்க:
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாய் புதிய கலாச்சாரம் நூல்கள் !
♦ நூல் அறிமுகம் : டி.டி.கோசாம்பியின் வரலாற்று ஆய்வு

மணல் கடத்தல் தொடங்கி எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு மையம் வரையிலான திட்டங்களை மேற்கொள்வதில் மாபியாத்தனமான கிரிமினல் கும்பலாக அரசு இருக்கும் இச்சமூகத்தில், குற்றவாளிகள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள். கிரிமினல் அரசு, மாணவர்களின் நலனை ஒருபோதும் சிந்திக்காது. மாணவர்கள் ரவுடிகள்தான் என்று பட்டம் கொடுத்து எதிரியிடம் பலிகொடுப்பதை நிறுத்திவிட்டு அவர்களிடம் உள்ள குறைகளை நீக்குவது என்பது பற்றிய அறிவுப்பூவமான அறிவியல் பூர்வமான விவாதத்துக்குத் தயாராக வேண்டும்.

அநியாயத்துக்கு எதிரான போராட்டங்கள் முதல் சமூக மாற்றம் வரை மாணவர்களால்தான் எப்போதும் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்வதுதான் போலீசும் அரசும் செய்யும் வேலை. மாணவனை ஒடுக்கும் அதே கைகள்தான் ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட மக்கள் விரோதத் திட்டங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன. இப்போது சொல்லுங்கள் . நீங்கள் யார் பக்கம்?

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு, தொடர்புக்கு : 94451 12675.

நூல் அறிமுகம் : டி.டி.கோசாம்பியின் வரலாற்று ஆய்வு

தொன்மவியல், இனவரைவியல், மானிடவியல், தொல் பொருளியல் ஆகியவற்றில் ஒருவர் எந்த அளவு புலமையாளரோ அந்த அளவு அவர் வரலாற்றில் பயணித்தல் சாத்தியமானது. கோசாம்பி இந்த எல்லைகளையெல்லாம் பொருள்முதல்வாத வழிமுறையால் அதிரடியாக உடைத்தெறிந்தார். அவர் அணுகுமுறையில் ஆய்வு செய்யப்பட முடியாத, தேடியடைய முடியாத மறைஞானம் ஒன்றுமில்லை. நன்கறியப்பட்ட தொன்மவியல் ஆர்வலர் மிர்ஸியா இலியாட் சொல்வதைப் பார்ப்போம்.

“உலகின் படைப்பு என்பது ஒப்புயர்வற்ற படைப்பு நிகழ்வு தான் என்ற வகையில் அண்டப் பிறப்புக் கோட்பாடு, எல்லாப் படைப்புகளுக்கும் பின்பற்றத்தக்க முன்மாதிரி ஆகிறது.”

எல்லாவற்றிற்கும் முதலில் குறிப்பிடப்பட வேண்டியது, மனிதனாலோ தெய்வீக முகமையினாலோ படைக்கப்பட்டது என்பதற்கு எந்தவொரு சான்றும் இல்லை. ஆனால், இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் உண்டு. மனித வாழ்வில் படைப்புக் கான முன்மாதிரி,  அவர்கள் அறிந்த படைப்புக்கான முன்மாதிரி பெண் தான் என்பதுதான் முக்கியமான விஷயம். கடந்த காலத்தில் அறியப்படாதது ஒன்றுமில்லையென்றால், நாம் அறிவதற்கும் ஒன்றுமில்லை. அறியப்படாததன் முன்மாதிரியைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு பாசாங்கு வேலைதான்! அறியப் படாத ஒன்றுக்கு முன்மாதிரி இருக்கலாம். ஆனால், அது என்ன என்பது நமக்குத் தெரியாத ஒன்றே! எனவே, அதைப் பற்றிப் பேச முனைவது என்பது எலியாட் சொன்னதைப் போல மறை ஞானத்தைத் தேடும் நிலைதான். ஆராய்ச்சிக்கு உட்படாத தளங்களிலிருந்து தொடங்கி உள்நோக்கிப் பார்த்துவிட்டுச் சொல்வதைவிட மனித அனுபவத்துடன் தொடங்கிச் சொல்வது மிகவும் விரும்பத்தக்கது.

இவற்றில் மனிதர்கள் எதை நோக்கிச் சொல்வது?

உற்பத்தித் திறமுடைய மனித வாழ்க்கைதான் படைப்புத் தொன்மங்களுக்கான நல்ல துவக்கம். கருத்து முதல்வாத விளக்கம் என்பது மிக முக்கியமானதொரு மானிட முயற்சியே! ஆனால், அதை இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பயன் படுத்தும்போதுதான் தவறுகளுக்கு இட்டுச்செல்கிறது.

இதைப் பற்றிய விழிப்புணர்வினை, தன்னுடைய பிற்கால எழுத்துகளில் கோசாம்பி வெளிப்படுத்தியுள்ளார்.  (நூலிலிருந்து பக்.3-4)

கோசாம்பி உற்பத்தி முறையை அடியொற்றி, சமூக வரலாற்றின் உண்மைகளைப் பற்றிக்கொண்டு புராணங்கள், மதம், தத்துவம் ஆகியவற்றைப் பற்றி உருப்படியான விளக்கங்களை நமக்கு அளித்துள்ளார். ”தொன்மமும் உண்மை நிலையும்; இந்தியப் பண்பாடு உருவாக்கம் பற்றி ஆய்வு” என்னும் நூலில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“நாகரிகம் துவங்கிய காலத்திலிருந்து இன்று வரைக்கும் எஞ்சியிருக்கும் இந்தியத் தொன்மங்கள், சடங்குகளின் மூல முதலான அடிப்படைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இது, ஏறத்தாழ ஒவ்வொரு வரலாற்றுக் காலத்திலும் அழியாமல் நிலைத்து நிற்கும் தன்மைகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ள சமகால சமூகம் நிலவிவரும் ஒரு நாட்டில் மிகவும் சிரமமான காரியமன்று. இதுபோன்ற பகுப்பாய்வைப் புறக்கணிப்பது என்பது, இந்திய வரலாற்றினை மூடத்தனமான உருக்குலைப் பதற்கும், இந்தியப் பண்பாட்டைப் பற்றிய தவறான புரிதலுக்கும் இட்டுச்செல்லும். இதை நுட்பமான இறையியலோ அல்லது வறட்டுத்தனமான பொருள் முதல்வாத பெருமைகளோ ஈடு செய்ய முடியாது.” (நூலிலிருந்து பக்.6-7)

பகவத் கீதையின் சமூக, பொருளியல் கோட்பாடு

கோசாம்பியின் ஆய்வுமுறை “பகவத்-கீதையின் சமூக பொருளியல் கோட்பாடு” என்னும் நூலில் மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றுப் பொருள்முதல்வாத  ஆய்வு தெளிவுநிலையைக் கொண்ட தலைசிறந்த சிறுபடை ஆகும். அது, பத்தொன்பதாம் நூற்றாண்டைய கருத்தியல்வாத வரலாற்றுருவாக்கம் முடிந்த நிலையில், மறைஞானத்தை எந்திர வியல் தெளிவுபடுத்த முனைந்தது; வரலாற்றை இயங்கியல் பொருள்முதல்வாதம் தெளிவுபடுத்தியது. இச்சிறு ஆய்வில், கிருஷ்ணன் அனைத்தையும் படைப்பவனும், அழிப்பவனும் ஆவான். அத்துடன் அனைத்து வீரர்களையும் சண்டையிடச் செய்து அழித்திருக்கிறான். கீதையின் தர்மம் என்பது ‘என் மீது நீ நம்பிக்கை வைக்கிற வரை, உன்னுடைய எல்லாப் பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு. கடமை உனக்கு ஆணையிட்டால், நீ உன் சொந்த சகோதரனையே கருணையின்றிக் கொன்று அழி.’ இப்படி முன்பே திட்டமிடப்பட்ட துரோக வேலைகள், டெய்லர் எழுதிய புனித வாழ்வும், புனித இறப்பும் (Holy Living and Holy Dying) மாக்கிய வல்லியின் ‘இளவரசனை’ப் போலப் பழங்காலத்தில் புகழ்பெற்று விளங்கியதும் இந்திய அரசியல் நூலுமான அர்த்தசாஸ்திரத்தில் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது” என்று கோசாம்பி மெய்ப்பிக்கிறார்.

கீதை மகாபாரதத்தின் முதலிடத்தில் வைக்கப்பட்டது ஏன் என்று கேட்கிறார் கோசாம்பி. அதற்கு அவர் சொல்லும் பதில்: “பழங்காலப் போரைப் பற்றிய வீரயுகக் கதைப்பாட்டுகளை ரசித்துக் கேட்கக்கூடியவர்கள் கீழ்நிலை வர்க்கத்தினரே. மேலும், காவியமானது, பிராமணர்கள் இடைச்செருக விரும்பிய எந்தக் கோட்பாட்டையும் புகுத்திப் பரப்புவதற்கான சாதனமாகப் பயன்படுத்தப்பட்டது.”

அவர் கேட்கும் இரண்டாவது கேள்வி. ஆளும் வர்க்கத்தின் புது மறை நூலை எடுத்துரைப்பதற்குக் இருஷ்ணன் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அதற்கு அவர் அளிக்கும் பதில்: “மிகச் சரியாக இந்த நேரத்தில்தான் கிருஷ்ணன் பக்தி பண்பாடு மக்களிடையே பரவத் தொடங்கி, ஒன்றிணைந்த நாராயணனுடன் இணைக்கப்பட்டது. தண்ணீருக்கு மத்தியில் உள்ள தன் அறையில் உறங்கும் இந்த நாராயணன் சுமேரியப் பெரு வெள்ள உருவாக்கப் புனைகதைக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் யூதர்களுக்கு நடுவில் நோவாவாகக் காட்சியளிக்கிறார். மற்ற எந்தக் கடவுளையும்விட கிருஷ்ணன் மிகவும் இன்றியமையாதவராகிறார்.

படிக்க:
ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?
கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம் | பெங்களூரு கருத்தரங்கம்

ஏனெனில் இந்திரன் (அதுவரை கடவுள்களுக்கெல்லாம் தலைவன்) யக்ஞங்களை மறுதலித்திருந்த புத்தமதம் குறுக்கிட்டதன் விளைவாக தனது மேன்மையை இழந்திருந்தான். கடவுள்களுக்கெல்லாம் மன்னனான இந்திரன் நாட்டுப்புற வாழ்வு வாழ்ந்த செம்புக்காலத்தின் போதுதான் ஒப்புயர்வற்ற நிலையில் இருந்தான். கிருஷ்ணனின் ஆதிக்கம் கி.மு.800-வாக்கில் பஞ்சாபில் துவங்குகிறது. இந்தக் காலகட்டத்துக்குப் பிறகுதான், அவன் தெற்கிலும் கிழக்கிலும் பயணிக்கிறான். அப்போதுதான் அவன் ஒருங்கிணைக்கும் இயக்கங்களுக்கு மிகவும் பயனுள்ளவன் ஆனான். உதாரணமாக, தக்காண யாதவர்கள் தங்களைச் சுற்றி வாழ்ந்த மக்களுக்கு மேலாக உள்ளூர்க் குலத் தலைவர்களை உயர்வுபடுத்திக் காட்டும் நோக்கத்தில் கிருஷ்ணன் வழியைத் தங்கள் கால்வழி மரபுடன் இணைத்துக் கொண்டனர்.” (நூலிலிருந்து பக்.10-11)

நூல் : டி.டி.கோசாம்பியின் வரலாற்று ஆய்வு
ஆசிரியர் : டேல் ரியபெ
ஆசிரியர் : கீதாபாரதி

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2848 2441, 2848 2971.
மின்னஞ்சல் : aaa.com

பக்கங்கள்: 16
விலை: ரூ 10.00

இணையத்தில் வாங்க : noolulagam

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

குழந்தைகளே ! தாய் மொழி உங்கள் மனதின் தொட்டில் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 13

கலந்து பழகும் மகிழ்ச்சி

ள்ளி வாழ்க்கையின் இரண்டாவது நாளன்று நான் குழந்தைகளைக் கேட்டேன்:

“ருஷ்ய மொழி பயில விருப்பமா?”

அவர்கள் உற்சாகமாக பதிலளித்தனர்:

“ஆம்.”

அவர்கள் “ஆம்” என்று சொல்ல, ஆர்வமும் எதற்கு ஒப்புக் கொள்கிறோம் என்று தெரியாததும் மட்டும் காரணமல்ல, அவர்கள் உண்மையிலேயே ருஷ்ய மொழி பேச விரும்புவதுதான் காரணம். குடும்பத்தில் இவர்கள் ருஷ்ய மொழியின் முக்கியத்துவம் பற்றி நிறையக் கேட்டிருக்கின்றனர், தொலைக்காட்சியில் வரும் ருஷ்ய மொழி நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள இவர்கள் விரும்புகின்றனர், மாஸ்கோவிற்குச் செல்ல வேண்டுமென ஆசைப்படுகின்றனர், ருஷ்ய மொழியில் பேசும் தம் வயதுச்சிறுவர் சிறுமியருடன் கலந்து பழக விரும்புகின்றனர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அவர்களுக்கு ருஷ்ய மொழி போதிக்க எனக்கும் பல காரணங்கள் உள்ளன.

தாய் மொழி உங்கள் மனதின் தொட்டில். ருஷ்ய மொழி உங்களது பன்முக வாழ்வின், நமது மாபெரும் நாட்டுக் குடிமகனின் தொட்டிலாகும்.

ஓ, எனது சொந்த ஜார்ஜிய மொழியே! உனது புதல்வர்கள் பலரைப் போன்றே என்னுள்ளும் எனது மக்களின் மனச்சாட்சி, மகிழ்ச்சி, இன்பம், துன்பம் எல்லாவற்றையும் ஊட்டி என்னை மனிதனாக்கியிருக்கின்றாய்! ஜார்ஜியாவை எனக்குப் பரிசாக வழங்கியிருக்கின்றாய், இதன் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய அக்கறையை என் மீது சுமத்தியிருக்கின்றாய்! தாராள மனப்பான்மை மிக்க, நேர்மையான ஜார்ஜிய மொழியாகிய நீதான், நான் சோவியத் நாட்டின் குடிமகன் என்று பெருமிதமடையக் கற்றுக் கொள்வதற்காக என்னை உன் மாபெரும் சகோதரனாகிய ருஷ்ய மொழியிடம் அனுப்பியிருக்கின்றாய்!

ஓ, மாபெரும் சர்வதேசியமாகிய ருஷ்ய மொழியே, உண்மையான ருஷ்ய மனநிலையைப் பேணிக்காக்கும் மொழியே! கலந்து பழகும் மகிழ்ச்சிக்காக ஏங்கித் தவிக்கும் எண்ணற்ற ஏராளமானோரைப் போன்றே எனக்கும் நம்பகரமான பாலமாக நிற்கிறாய்; இப்பாலம் சகாப்தங்கள், கலாசாரங்களின் ஊடாக ருஷ்யர்களின் இதயங்களை நோக்கி, விரிந்து பரந்த என் தாயகத்தின் பல்வேறு மக்களினத்தவரின் இதயங்களை நோக்கி, நல்லெண்ணம் கொண்ட உலக மக்களின் இதயங்களை நோக்கிச் செல்கிறது.

குழந்தைகளே, நீங்கள் கண்டிப்பாக மாஸ்கோவிற்குச் செல்வீர்கள், லெனின் கல்லறை, கிரெம்ளின் ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பீர்கள், உங்கள் தாயகத்தைப் பற்றிய பெருமிதம் உங்களை ஆட்கொள்ளும். நீங்கள் – அனேகமாக முதன்முதலாக – உங்களில் ஒவ்வொருவரும் மாபெரும் லட்சியங்களை நிறைவேற்றுவதற்காகப் பிறந்திருக்கின்றீர்கள், உங்கள் மீது பெரும் நம்பிக்கைகள் உள்ளன என்பதை உணருவீர்கள். ஒரு வேளை நீங்கள், சோவியத் யூனியனின் குடிமகனாக இருப்பது எவ்வளவு கெளரவமானது, பொறுப்புமிக்கது என்பதை முதன் முதலாக உணருவீர்கள். இன்று குறும்புக்காரச் சிறுவர்களாயிருக்கும் உங்களுக்கு ருஷ்ய மொழியைச் சொல்லித் தருகிறேன், இது உங்களுக்கு நீண்ட, தொலைதூரப் பயணங்களுக்கு இறக்கைகளாயிருக்கும். உங்கள் இறக்கைகளில் நீங்கள் எங்கு பறந்து சென்றாலும், எவ்வளவு தொலைதூர பிரதேசங்களுக்குப் போனாலும், எப்படிப்பட்ட மக்களோடு கலந்து பழகினாலும், எங்கும், எல்லா இடங்களிலும் உங்களது ஜார்ஜிய மனப்பாங்கு, திறமை, படைப்பாற்றல், உழைப்பார்வம், நேர்மை, நட்புக் கொள்ளும் குணம் ஆகியவற்றைக் கண்டு மக்கள் மகிழ வேண்டுமென நான் கனவு காண்கிறேன்.

நான் உங்களுக்கு ருஷ்ய மொழியைச் சொல்லித் தரத் துவங்கும் போது என் முன் உள்ள லட்சியங்கள் இவைதான். இதன் மீது உங்களுக்கு அன்பு பிறக்க நான் பாடுபடுவேன். எப்படிப்பட்ட முறையைப் பயன்படுத்துவது? இந்நோக்கங்களின் அடிப்படையில் இதைத் தேடுவேன். எனது முயற்சிகளில் தோல்விகள் ஏற்பட்டால் மன்னியுங்கள், இவை வேண்டுமென்றே செய்யப்படுபவை அல்ல. லட்சியத்தைத் தேர்ந்தெடுப்பதில் தவறு செய்யாமலிருப்பதுதான் முக்கியம்.

சரி, எந்த முறையைப் பயன்படுத்துவது? இது! எப்படிப் பட்டதாயிருக்க வேண்டும்? நான் பின்வரும் கோட்பாடுகள் முக்கியமெனக் கருதுகிறேன்.

முதலில் ஒரு ஜார்ஜியனுக்கு ருஷ்ய மொழியில் பேசக் கற்றுக் கொள்வது எளிதான காரியமல்ல என்றாலும் இது ஒன்றும் முற்றிலும் கடினமான விஷயமல்ல என்பது குழந்தைகளுக்குப் புரிய வேண்டும். பல குழந்தைகள், தம் தவறுகளைக் கண்டு நண்பர்கள் சிரித்துப் பரிகசிக்கக் கூடாதே என்பதற்காக ருஷ்ய மொழியில் பேச அஞ்சுகின்றனர்; பெரியவர்களான பின் கூட இந்த அச்சம் மறைவதில்லை: ருஷ்ய மொழியில் தப்புந்தவறுமாகப் பேச வெட்கப்படுகின்றனர். என் வகுப்புக் குழந்தைகளுக்கு இந்த அச்சம் இருக்கக் கூடாது. அவர்கள் அடிக்கடி சைகைகள் செய்யட்டும், தாய் மொழிச் சொற்களைப் பயன்படுத்தட்டும், தப்புகள் செய்யட்டும். முக்கியமானது என்னவெனில் ருஷ்ய மொழியில் கலந்து பேசும் நாட்டத்தை, மொழியுணர்வை அவர்களிடம் வளர்ப்பதாகும். குழந்தைகளுக்கு நான் எப்படி ருஷ்ய மொழி போதிக்கிறேன் என்பதை அவர்கள் கிட்டத்தட்ட கவனிக்க மாட்டார்கள், ஏனெனில் இது அவர்கள் கலந்து பேசிப் பழகும் போது நேரிடையாக செய்யப்படும்.

இரண்டாவதாக, தமக்கு ருஷ்ய பேச்சு புரிகிறது, தம்மால் ஏற்கெனவே இம்மொழியில் விளக்க முடியும் எனும் உணர்வு இயன்ற அளவு விரைவாகக் குழந்தைகளிடம் தோன்ற வேண்டும். இது இவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும், மொழியைப் பயிலும் ஆர்வத்திற்கு ஊக்கமளிக்கும். குழந்தை என்னிடம் ஏதோ ருஷ்ய மொழியில் கூறுகிறான், நான் உன்னிப்பாகக் கேட்கிறேன், “ஆமாம், ஆமாம், எனக்கும் புரிகிறது” என்று நான் தலையாட்டுகிறேன். இயன்றவரை அதிகமாக, நீண்ட நேரம் பேசும்படி அவனை ஊக்குவிக்கிறேன், “அப்படியா? என்ன? எப்போது இப்படி நடந்தது?” என்றெல்லாம் ஆச்சரியப்படுகிறேன். ஏதோ ருஷ்ய மொழி மீது எனக்கு அக்கறையில்லாதது போன்றும், அவன் சொல்வதன் மீதுதான் அக்கறையுள்ளது போன்றும் பாவனை செய்கிறேன். கதை, கவிதைகளைப் படிக்கும் போது அவர்களுக்கு நன்கு புரிவதற்காகப் பல சமயங்களில் சைகைகளை, பாவனைகளை, நடிப்பைப் பயன்படுத்துகிறேன். சொற்கள், வாக்கியங்கள், சொற்றொடர்களைப் புரியும்படியும் தெளிவாயும் உச்சரிப்பேன்.

ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்குப் புத்தம் புதியவற்றை படிக்கப் போவதில்லை. 10-12 கதைகள், கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வெவ்வேறு பாடங்களில் படிப்பது சிறந்ததாயிருக்கும். குழந்தைகளுக்கு இவை உடனடியாகப் புரியாமலிருக்கலாம், ஆனால் இவற்றை மீண்டும் மீண்டும் படிப்பது இரண்டு விஷயங்களைச் செய்யும்: ருஷ்ய மொழியின் இனிமை, வார்த்தைகளின் ஒலியமைப்பு குழந்தைகளுக்குப் புரியும்; அந்தந்த வார்த்தைகள், சொற்றொடர்கள் படிப்படியாகப் புரிவதும், உள்ளடக்கத்தில் மூழ்குவதும் மொத்தத்தில் புதியவற்றை அறியும் மகிழ்ச்சியைத் தரும். இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பின் இந்தக் கதைகள், கவிதைகளை இவர்கள் தம் பாடநூல்களில் சந்தித்தால் எவ்வளவு சிறப்பாயிருக்குமென நான் எண்ணுகிறேன். இவ்வாறு படிக்கும் போது முன்னர் கேட்டது புரிந்தும் புரியாதது மாய் நினைவிற்கு வரும். இப்போது எளிதாகப் படித்து, புரிந்து கொள்கையில் குழந்தைக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா! அல்லது இக்கதையை நினைத்துப் பார்க்கையில் ஞாபகத்திலிருக்கும் பல வார்த்தைகள், சொற்றொடர்கள் திடீரெனப் பலவற்றைச் சொல்லும், உடனே குழந்தை “அப்படியா விஷயம், நான் வேறு மாதிரியாக அல்லவா நினைத்தேன்!..” என்று சொல்லிக் கொள்வான்.

படிக்க:
ஏகாதிபத்தியங்களால் வஞ்சிக்கப்படும் தெற்கு சூடான் | புகைப்படக் கட்டுரை
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா !

மூன்றாவதாக, சொல்லிக் கொடுக்கும் போது பாடத்தோடு சம்பந்தப்படாத பேச்சு சூழ்நிலைகளை அடிக்கடி ஏற்படுத்த முயலுவேன். அதாவது, நான் ருஷ்ய மொழியை போதிப்பதைக் குழந்தை உணர மாட்டான், எனக்கு எதையோ சொல்ல விரும்பி, என்னோடு உரையாட விரும்பி பேசத் துவங்குவான். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் விளையாட்டுக்களின் போது தோன்றும். அதுவும் குழந்தைகளே இவற்றைச் சிந்தித்து உருவாக்கும் போது சிறப்பாயிருக்கும். விளையாட்டுக்களின் விஷயத்தில் நான் பின்வரும் முதுமொழியைப் பின்பற்றுகிறேன்:

எந்த விளையாட்டுகள் எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாகச் சேர்த்தும் ஒவ்வொருவரையும் தனித்தனியாயும் சுய கெளரவ மட்டத்திற்கு உயர்த்துகின்றனவோ அவற்றைத்தான் வகுப்பறைக்கேற்ற விளையாட்டுகளாகக் கருத முடியும். வேறு விளையாட்டுகள் குழந்தைகளின் மேன்மைக்கு சிறிதளவு பங்கமேற்படுத்தினாலும் இவை வகுப்பறைக்கு ஏற்றவையல்ல, இவற்றை வகுப்பறையில் அனுமதிப்பது ஒழுக்கக் கேடானது.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

ஏகாதிபத்தியங்களால் வஞ்சிக்கப்படும் தெற்கு சூடான் | புகைப்படக் கட்டுரை

0

லகம் முழுவதும் பருவ நிலை மாற்றத்தால் ஒரு சில இடங்களில் அதீத மழையும், மேற்குலக நாடுகளில் அதீத வெப்பமும், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான வறட்சியும் ஏற்பட்டு வருகிறது. உள்நாட்டுப் போர் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டல் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானும் இதற்குப் பலியாகி வருகிறது.

தெற்கு சூடான் நாட்டில் நிலவிவரும் அரசியல் ஸ்திரமின்மையால், எதிர்வரப்போகும் பஞ்சத்திலிருந்து தங்களின் கால்நடைகள்  மற்றும் தங்களின் உணவுப் பாதுகாப்பைக் குறைந்தபட்சமாவது உறுதிசெய்யும் நோக்கத்துடன் அரசாங்கத்தை எதிர்பாராமல் நீர்நிலைகளைத் தாங்களே தூர்வாரி வருகின்றனர் பொதுமக்கள்.

தெற்கு சூடானின் ஜோங்லே மாநிலத்தில் ருவார் லீக் எனும் கிராமம் தற்போது நிலவிவரும் கடும் வறட்சியின் பாதிப்பில் சிக்குண்டுள்ளது. தண்ணீர் இருந்த இடங்களெல்லாம் பாலம் பாலமாக வெடித்துக் காணப்படுகிறது. கால்நடைகளை வளர்த்து வருபவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் கால்நடைகளை ஓட்டிச்சென்றால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலையில் இருக்கின்றனர்.

படிக்க:
ஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் ! | தாகத்தில் தமிழகம் – ஆவணப்படம் !
பாகிஸ்தான் நிரம்பிவிட்டது நிலவுக்குச் செல்லுங்கள் ! – அடூர் கோபாலகிருஷ்ணனை மிரட்டும் கேரள பாஜக

இப்போது அவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு, குளம், குட்டைகளைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தங்கள் கால்நடைகளுக்கு அருகாமையிலேயே தண்ணீர் கிடைக்கும் என்கிறார் ஜேம்ஸ் ஜாங்கு நியாங்.

தெற்கு சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரின் விளைவாக பாரிய அளவிலான மக்கள் கொல்லப்பட்டதோடன்றி, மருத்துவம், தண்ணீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்துமே சீர்குலைந்துவிட்டன.

(முகப்புப் படம் : ஜோங்லே மாநிலத்தின் ருவார் லீக் கிராமத்தினர் கடுமையான பஞ்சத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள குளம் ஒன்றைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.)

ஜேம்ஸ் ஜாங்கு நியாங், வயது 55 சிறு குட்டையுடன் ஊடாக நடந்து வருகிறார். வறட்சி அதிகமாகி இந்தக் குட்டை வறண்டு போகும்போது, இதை நம்பி வாழும் மக்கள் அனைவரும் தண்ணீரைத் தேடி அலையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஜேம்ஸ் ஜாங்கு நியாங் தன்னுடைய கால்நடைகளின் ஊடாகச் செல்கிறார். உள்ளூரிலேயே அவற்றிற்குத் தண்ணீர் கிடைக்கும்பட்சத்தில் அவை பாதுகாக்கப்பட்டுவிடும் என்கிறார். கடந்த வருடப் பஞ்சத்தில் நிறைய கால்நடைகள் தண்ணீரின்றி மடிந்து விட்டன. என்னிடம் எத்தனை கால்நடைகள் இருக்கின்றன என எண்ணுவதேயில்லை, அப்படி எண்ணும்போது அவற்றில் ஒன்று இறந்துவிடும் என்ற மூடநம்பிக்கை இங்கு நிலவுகிறது என்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்தக் குட்டையைத் தூர்வாரும் பணியைத் தொடங்கிவிட்டோம். இதனால் கூடுதல் தண்ணீர் சேர்ந்து என்னுடைய கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்போகிறது, மேலும் அவை காணாமல் போவதும் தடுக்கப்படுகிறது என்கிறார் ஜேம்ஸ் ஜாங்கு நியாங்.

மண்வெட்டி, கோடரிகளுடன் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 316 பேர் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

கொத்தி எடுக்கப்பட்ட மண்ணை கையாலேயே வாளியில் அள்ளிப்போடும் பெண். 20 நாட்கள், 80 மணி நேர வேலை என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இந்த வேலையை முடிக்கும் பட்சத்தில் 50 கிலோ சோளம், 5 கிலோ பட்டாணி மற்றும் 3 லிட்டர் எண்ணெய் கிடைக்கும்.

ஆன்யீத் காரங் (ஆரஞ்சு நிற உடையணிந்திருப்பவர்) குட்டையில் உள்ள காலி டப்பா ஒன்றை அப்புறப்படுத்துகிறார். 2013-ம் ஆண்டு நடந்த சண்டை ஒன்றில் தன் கணவரை இழந்த தன் போன்ற பெண்களுக்கு இந்தக் குட்டை தூர்வாரப்படுவது ஆறுதலைத் தரும் என்கிறார்.

கால்நடைகள் அடைக்கும் பட்டியில் பொருட்களைக் காய வைக்கிறார் காரங்.  “என்னுடைய மகன்கள் வீட்டைப் பழுதுபார்ப்பதிலும், புணரமைப்பதிலும் குறியாக உள்ளனர். இதனால் என்னுடைய கால்நடைகள் கவனிப்பாரின்றி கிடக்கின்றன.” என்கிறார்

சக கிராமவாசியுடன் உரையாடும் காரங். இந்தக் குட்டையைத் தூர்வாருவதால்   “என்னுடைய கால்நடைகளுக்கு வறட்சி காலத்தில் தண்ணீர் கிடைக்கும். எங்கள் குடும்பத் தேவைகளுக்கும் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வோம்.”

தன்னுடைய பசுமாட்டின் மேல் சாம்பலைத் தடவும் ருவார் லீக் கிராமவாசி ஒருவர். கால்நடைகளை நீண்டதூரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது என்பது இங்கு மிகவும் ஆபத்தான காரியமாகிறது. “திருடர்களால் நீங்கள் கொல்லப்படலாம் அல்லது உங்கள் கால்நடைகள் திருடப்படலாம் என்ற அசாத்திய சூழல் நிலவுகிறது” என்கிறார் சீமோன் அன்யாங் கொர்யோம்.

ஜேம்ஸ் ஜாங்கு நியாங் மாட்டுச் சாணத்தை எரிபொருள் தேவைக்காக வெயிலில் உலர்த்துகிறார். என் கிராமத்திலேயே வைத்துப் பராமரிப்பதையே நான் விரும்புகிறேன். தொற்று நோய் பரவலைத் தடுக்கலாம், ஒருவேளை கால்நடைகள் பாதிக்கப்பட்டாலும் மருத்துவச் செலவுக்குப் பணம் ஏது என்கிறார்.

ருவார் லீக் கிராமத்தில் பால் கறக்கும் பெண் ஒருவர். வங்கிப் பரிவர்த்தனை வசதியேயில்லாத அல்லது மிகக் குறைந்த வசதி கொண்ட கிராமங்களில் கால்நடைகள் தான் ஒருவரின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

மேரி நியாஞ்ஜாக் புயோச்  வயது 35 – ஆறு குழந்தைகளுக்குத் தாயான இவர் தான் வளர்க்கும் ஆடுகள்தான் தன்னுடைய சொத்து. பணப் பரிவர்த்தனைக்கான வங்கி போன்றிருப்பது என்னுடைய ஆடுகள். குழந்தைகளைப் பராமரிக்கப் பணம் தேவைப்படும்போது ஆடுகளை விற்றுத்தான் சமாளிக்கிறேன் என்கிறார்.

தண்ணீர் கேனை சுத்தம் செய்யும் சிறுவன், அருகில் சாக்கடை நீரைப் பருகும் பசு ஒன்று – இடம் தோனவாய் கிராமம், ஜோங்லே மாநிலம்.

தூர்வாரும் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பத் தயாராகும் பெண்கள். “இந்தத் திட்டம் எங்களுக்குப் பல்வேறு வகையில் உதவி புரிகின்றது.  எதிர்காலப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான வேலைகளைச் செய்வது நிறைவைத் தருகிறது. மற்ற கிராமங்களும் இது போன்ற வேலைகளை முன்முயற்சியுடன் செய்கின்றனர்.”


தமிழாக்கம் : வரதன்
மேலும் படிக்க : aljazeera

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் | மதுரை கருத்தரங்கம்

0

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! என்கின்ற தலைப்பில் கடந்த ஜூலை-25, வியாழக்கிழமை அன்று மாலை மதுரை சோக்கோ அறக்கட்டளை அரங்கில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் ஸ்னேகா தலைமை தாங்கினார்.

சிறப்புப் பேச்சாளர்களாக மதுரை காமராஜர் பல்கலையின் மேனாள் பேராசிரியர் சீனிவாசன், பள்ளி ஆசிரியர்கள் சிவா, சரவணன் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்திற்கு திரளான மாணவர்கள் கலந்து கொண்டது ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் இந்த புதிய கல்விக் கொள்கையை முறியடித்துவிட முடியும் என்கின்ற நம்பிக்கையை தருவதாக இருந்தது. அதற்கு தகுந்தாற் போல் இந்த கல்வி கொள்கையை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்துவதாகவும், கருத்தியல் ஆயுதத்தை மாணவர்களுக்கு தருவதாகவும் சிறப்புப் பேச்சாளர்களின் உரைகள் இருந்தது.

முத்தாய்ப்பாக ஆசிரியர் சிவா பேசும்போது “இந்த வரைவு அறிக்கையின் கடைசி பத்தியில் ஒரு ரூபாய் முதல் போட்டால் பத்து ரூபாய் லாபம் கிடைக்கும் கல்வி துறையில் நாம் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது என்று கூறுவது ஒன்றே போதும் இந்த கல்விக் கொள்கை என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்படுகிறது” என்று பேசியது ஒட்டு மொத்தமாக இனி வரும் ஆண்டுகளில் நம்முடைய குழந்தைகளின் கல்வி உரிமை கானல் நீராக மறைந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை பளிச்சென்று புரியவைப்பதாக இருந்தது.

அதே போல் கருத்து கேட்பு கூட்டத்தை பகிரங்கமாக மக்களுக்கு தெரியப்படுத்தி நடத்தாமல் ரகசியமாக நடத்துவது, கோவையிலும், திருச்சியிலும் நடந்தது போல் தோழர்கள் கண்டுபிடித்து வந்துவிட்டால் உடனே “இங்கே நடப்பது கருத்து கேட்பு கூட்டம் அல்ல, துறை ரீதியான கலந்தாலோசனைதான்” என்று சமாளிப்பதையும் இதே போல் கடந்த 22 ஆம் தேதி அன்று மதுரையில் ரகசியமாக நடக்க இருந்த கருத்து கேட்பு கூட்டத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சுவரொட்டி மூலம் மக்களுக்கு பகிரங்கமாக தெரிவித்த பின்னர் உடனே அந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்துள்ளது என்பதையும் பேச்சாளர்கள் அம்பலப்படுத்தி பேசினர்.

கூடுதலாக 26-ம் தேதி அன்று மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியில் நடக்க இருந்த கருத்துக் கேட்பு கேட்பு கூட்டத்தையும் துறைரீதியான கூட்டம் என்பதாக அறிவித்துவிட்டு, மக்கள் யாரும் வர வேண்டாம் என அரசே பத்திரிக்கையில் செய்தி கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டி பேசினர்.

படிக்க:
செய்யாத குற்றத்திற்கு 23 ஆண்டுகள் சிறை ! முசுலீமாய் பிறந்ததுதான் குற்றமா ?
‘சாஹேபுக்காக’ இளம் பெண்ணைக் கண்காணித்த அமித் ஷா பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு தலைவராம் !

இறுதியாக பு.மா.இ.மு. வின் தோழர் ஆனந்த் தனது நன்றியுரையில் இந்த அரங்க கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் மற்றும் மாணவர்கள் இந்த கருத்துக்களை தங்களுடைய நண்பர்கள் உற‌வினர்கள் என அனைவரிடமும் எடுத்து செல்ல வேண்டும்; அவர்களையும் இதை எதிர்த்து போராட தயார்படுத்த வேண்டும். அதுவே இந்த கூட்டத்தை நடத்தியதன் நோக்கம் என்று மாணவர்களை அறைகூவி அழைத்தார்.

தகவல் :
பு.மா.இ.மு,
மதுரை.