ஆழ்துளைக் கிணற்றில் 87 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது குழந்தை சுஜித் மீட்கப்படாமல் இறந்து போனது இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நிலவுக்கு சந்திராயன் அனுப்பும் ‘வல்லரசி’டம் கேவலம் 87 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லையா ?
பலரும் பல விதமாகப் பதில் தருகிறார்கள். அரசும் அரசு ஆதரவாளர்களும், 5 நாட்கள் அமைச்சரும் அதிகாரிகளும் உழைத்த கதையைக் கூறுகிறார்கள். ரிக்கை கொண்டுவந்தோம் – நெய்வேலி குழ்வைக் கொண்டுவந்தோம் – இராணுவத்தைக் கொண்டு வந்தோம் என சவடால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
குழியில் விழுந்த குழந்தையை மீட்க என்ன திட்டம் இந்த அரசாங்கத்திடம் இருந்தது ? அதற்கென ஏதேனும் வழிமுறை இருக்கிறதா ? அதற்கான கருவிகள் இருந்ததா ?
ரத்தக் குழாயை அடைத்த கொழுப்பை அகற்றக் கூடிய தொழில்நுட்பமே சர்வ சாதாரணமாக கிடைக்கும் நாட்டில் 6 இன்ச் விட்டம் கொண்ட பள்ளத்தில் இருந்து குழந்தையை மீட்கும் தொழில்நுட்பத்துக்கா பஞ்சம் ?
கண்டிப்பாகக் கிடையாது ! அந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கருவியை வடிவமைக்க விரும்பாத, அதைப் பற்றி இன்றளவும் கூட சிந்திக்காத இந்த அரசுக் கட்டமைப்புதான் பிரச்சினைக்குரியது.
மலக்குழியில் இறங்கி அடைப்பை நீக்கும் தொழில்நுட்பமா இங்கு பிரச்சினை ? அத்தொழிலிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை விலக்க விரும்பாத பார்ப்பனிய, லாபவெறி சிந்தனை தானே பிரச்சினை !
டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் வைக்கும் அரசு ஏழைகளைக் காக்கும் கருவிகளை உருவாக்குவதற்கு என்றும் டார்கெட் வைப்பது கிடையாது.
மக்களுக்கு எதிராக மாறிவிட்ட இந்த அரசு இயந்திரத்தின் தோல்வியை அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு !
இஸ்ரேலிய உளவு மென்பொருளை பயன்படுத்தி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1400-க்கும் மேற்பட்ட வாட்சப் பயனாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தியாவைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களும் இஸ்ரேலிய உளவு மென்பொருளின் உளவுக்கு ஆளானதாகவும் அந்நிறுவனம் கூறியிருந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இதில், சத்தீஸ்கரில் களப்பணியாற்றும் செயல்பாட்டாளர்களும் பீமா கொரேகான் சம்பவத்தில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டப்பட்ட செயல்பாட்டாளர்களுமே அதிகமாக உள்ளனர்.
ஃபேஸ்புக் நிறுவனம், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் லேப் -உடன் இணைந்து இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ. குழுமம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்த விசாரணையில் ஈடுபட்டபோது இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
இந்திய ஊடகங்களிடம் பேசிய சிட்டிசன் லேப்-ஐச் சேர்ந்தவர்கள், பொதுவாக இதுபோன்ற உளவு மென்பொருட்களை அரசாங்கங்கள்தான் வாங்குவது வழக்கம் என தெரிவித்துள்ளனர். செயல்பாட்டாளர் பெலா பாட்டியா, “இந்திய அரசாங்கம் இதில் தொடர்புள்ளதாக” சிட்டிசன் லேப் பிரதிநிதிகள் கூறியதாக சொல்கிறார்.
ஆனால், இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள அந்த அமைப்பு தயாராக இல்லை. அதுபோல, இந்திய அரசாங்கமும் உளவு பார்த்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.
சிட்டிசன் லேப், உளவு பார்க்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு, அந்தத் தகவலைக் கூறியுள்ளது. அதன் அடிப்படையில், இந்த விவகாரம் வெளியான பின், பலர் தாங்கள் உளவு பார்க்கப்பட்ட விசயத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஆனந்த் தெல்தும்டே (பீமா கொரேகான் கலவரத்தில் குற்றம்சாட்டவர்; மக்கள் உரிமைக்காக குரல் கொடுப்பவர், கல்வியாளர்) :
கடந்த ஒரு வாரத்துக்கு முன் சிட்டிசன் லேப்-ஐச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் ஜான் ஸ்கார் ரெயில்டன், தன்னை தொடர்புகொண்டு வாட்சப் தகவல்கள் உளவுபார்க்கப்பட்டதாகத் தெரிவித்ததாகச் சொல்கிறார் ஆனந்த் தெல்தும்டே. கடந்த மே மாதம் இந்த உளவு மென்பொருள் தாக்குதலை நிறுத்திவிட்டதாகவும் அவர் அளித்த தகவல் கூறியிருக்கிறது.
ஆனந்த் தெல்தும்டே
“இதிலிருந்து தப்பிக்க நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. லட்சக்கணக்கான தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. முன்பு, இதற்கெல்லாம் பெரிய வழிமுறைகள் இருந்ததாக முன்பு கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது அப்படியே இல்லை.
நாட்டின் பேரில் அரசாங்கம் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டுள்ளது. அவர்கள் யாருக்கும் எதையும் செய்யலாம். அது நீங்களாகவும் இருக்கலாம். இந்த நாடு போய்விட்டது, இந்த நாட்டை கேடுகெட்ட நாடாக அறிவித்துவிடலாம்” என்கிற ஆனந்த் தெல்தும்டே.
“பீமா கொரேகான் வழக்கில் நான் தேவையில்லாமல் இலக்காக்கப்பட்டேன். அத்தனை கடிதங்களும் ஜோடிக்கப்பட்டவை. அனைவரும் தேவையில்லாமல் இலக்காக்கப்பட்டவர்கள். அதுவே ஒரு அத்துமீறல்தான்.
அவர்கள்தான் கிரிமினல்கள். ஒரு அரசே கிரிமினலாக மாறினால் உங்களால் என்ன செய்ய முடியும்?” எனக் கேட்கிறார்.
பெலா பாட்டியா (மனித உரிமை செயல்பாட்டாளர் மற்றும் சத்தீஸ்கரின் பாஸ்தரைச் சேர்ந்த வழக்கறிஞர்) :
சத்தீஸ்கரில் வசிக்கும் பெலா பாட்டியாவுக்கும் மற்றவர்களைப் போல, தன்னுடைய மொபைல் போன் உளவு பார்க்கப்பட்டது குறித்து எதுவும் தெரியாது.
பெலா பாட்டியா
“விசாரணையில் நம்முடைய அரசாங்கத்துக்கு இதில் தொடர்பிருப்பது தெளிவாகத் தெரிவதாக அவர்கள் தெரிவித்தார்கள். ‘இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என அவர்கள் கேட்டனர். இது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை, ஏனெனில் கடந்த சில வருடங்களாக இதுபோன்ற கண்காணிப்புகளுக்கு ஆளாகியுள்ளதாக நான் தெரிவித்தேன்., அரசாங்கம் இத்தகைய அதிநவீன கண்காணிப்பு முறையை நாடியது ஏன் என்பதுதான் எங்களுக்குத் தெரியாத விசயமாக உள்ளது” என்கிறார் பெலா பாட்டியா.
தனியுரிமை அடிப்படை உரிமை என 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தபோதும்கூட அரசாங்கம் செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் அவர். மில்லியன்கணக்கான வாட்சப் பயனாளர்கள் இருக்கும் நாட்டில் இது கவலைக்குரியதாக உள்ளது” எனவும் அவர் தெரிவிக்கிறார்.
“இந்த உளவு மென்பொருளின் தன்மையே, உங்களுடைய மொத்த வாழ்க்கையையும் அது கண்காணிக்கும் என்பதுதான். உங்கள் பாக்கெட்டுக்குள்ளேயே ஒரு உளவாளியை வைத்திருப்பதைப் போலத்தான். நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும்போது, அதன் மூலம் உங்கள் அறையை பார்க்க முடியும், கேட்க முடியும்; அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிய முடியும். உங்கள் வாழ்க்கையின் தனிப்பட்ட விசயங்களை, பொருளாதார நிலையை அதனால் உளவு பார்க்க முடியும்” என உளவு மென்பொருள் குறித்த சிறு தகவலையும் பெலா பாட்டியா பகிர்ந்துகொண்டார்.
ஆய்வு அமைப்பு சொன்னபடி, மொபைல் போனை மாற்றியிருக்கிறார் அவர்.
சுப்ரான்சு சௌத்ரி (பி.பி.சி. முன்னாள் பத்திரிகையாளர், தற்போது சத்தீஸ்கரில் பணியாற்றுகிறார்) :
CGnet Swara என்ற பெயரில் மொபைல் செய்தி குழு ஒன்றை 2009-ம் ஆண்டு தொடங்கியது முதல் சத்தீஸ்கரில் பணியாற்றுகிறார் சுப்ரான்சு சோதாரி. கடந்த செப்டம்பர் மாதம் சிட்டிசன் லேப் இவரிடன் உளவு பார்க்கப்படும் தகவலைக் கூறியுள்ளது.
சுப்ரான்சு சௌத்ரி
“ஆய்வு தொடர்புடைய நபர் இந்த உளவு மென்பொருள் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது என்றும் இது விலை அதிகமானது என்பதால் அரசாங்கத்தால்தான் வாங்க முடியும் என்றும் சொன்னார்” என்கிறார் சுப்ரான்சு.
“காஷ்மீரில் பணியாற்றும்போது, போன் உரையாடல்கள் பதிவு செய்வது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். வாட்சப் -ஐக் கூட இப்படி பதிவு செய்ய முடியும் என எங்களுக்குத் தெரியவில்லை. நாம் இப்போது மேலும் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறுகிறார்.
சித்தாந்த் சிபல் (Wion செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர்) :
Wion தொலைக்காட்சியில் பாதுகாப்புத் துறை தொடர்பான செய்திகளை அளிப்பவர். அக்டோபர் 30-ம் தேதி இந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தங்களுடைய பத்திரிகையாளர்கள் பலர் இந்த உளவு தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
தற்போது பிரதமரின் வெளிநாட்டு பயணத்தில் செய்தி சேகரிக்கச் சென்றிருக்கும் சிபல், வாட்சப் உளவு குறித்த தகவல் உண்மை எனக் கூறியுள்ளார் .
ராஜீவ் சர்மா (பத்தி எழுத்தாளர்) :
திறனாய்வாளர் மற்றும் பத்தி எழுத்தாளர் ராஜீவ் சர்மா, பொதுத் தேர்தல் நடந்த கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை கண்காணிக்கப்பட்டதாக சிட்டிசன் லேப் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்ததையும் சர்மா கூறுகிறார். மொபைலை மாற்றும்படி அவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
“நான் மொபைல் எண்ணையோ அல்லது மொபைலையோ மாற்றவில்லை. என்னிடம் மறைக்க எதுவுமே இல்லை. இந்த நாட்டுக்கு எதிராகவோ, சமூகத்துக்கு எதிராகவோ அல்லது சட்டவிரோத செயல்கள் எதையும் செய்யவில்லை. எதற்காக என்னுடைய மொபைலை மாற்ற வேண்டும்?” என கேட்கிற அவர், “என்னை யாராவது கண்காணித்தால், அவர் அதைச் செய்யட்டும். நான் எதற்காக வளைய வேண்டும்?” என்கிறார்.
“மார்ச் முதல் மே வரை நான் நிறைய வீடியோ நேர்காணல்களை அளித்தேன். அதை டிவிட்டரில் பகிர்ந்தும் கொண்டேன். நான் சொன்னது அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்திருக்கும். வெளிப்படையாகச் சொல்லப்போனால், நான் சொன்னது அவர்களின் காதுகளுக்கு இசையாக ஒலித்திருக்காது” என்கிறார் சர்மா. தேர்தல் குறித்த தன்னுடைய கருத்து, தன்னை இலக்காக்கியிருக்கும் என்றும் அவர் நம்புகிறார்.
அசோக் சுக்லா (உரிமை செயல்பாட்டாளர்; அதானி குழுமத்துக்கு எதிராக வழக்காடுகிறார்) :
சத்தீஸ்கர் பச்சாவ் அந்தோலன் என்ற பொதுமக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார் அசோக் சுக்லா. வாட்சப் நிறுவனத்திலிருந்து மற்ற செயல்பாட்டாளர்களுக்கு வந்த செய்தியைப் போன்றே தனக்கும் வந்ததாக தெரிவிக்கிறார் சுக்லா.
“மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். கடந்த எட்டு ஆண்டுகளாக சத்தீஸ்கரின் நிலக்கரி சுரங்கங்களில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள அதானிகளுக்கு எதிராக ஒரு வழக்கில் நான் வாதாடிக்கொண்டிருக்கிறேன். அதுபோல, மனித உரிமை மீறல்கள், பழங்குடிகளின் இடப்பெயர்வுக்கு எதிராகவும் நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, சந்தேகத்துக்குரிய சர்வதேச வாட்சப் அழைப்புகள் தனக்கு வந்ததாகவும் அவர் கூறுகிறார். அரசாங்கத்தை மட்டுமல்லாது, அரசாங்கத்தால் கண்காணிக்கப்படும் தகவலை பல மாதங்கள் கழித்து சொன்ன வாட்சப் நிறுவனத்தையும் அவர் கடுமையாக சாடுகிறார்.
இதுவரை ஒருசிலர் தாமாக முன்வந்து மோடி அரசாங்கம் தங்களை உளவு பார்த்ததை சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பட்டியல் மேலும் நீளும் என எதிர்ப்பார்க்கலாம். வழக்கமாக சங்கப் பரிவாரங்கள் யாரையெல்லாம் ‘ஆண்டி -இந்தியன்’ என சுட்டிக்காட்டுகிறார்களோ அவர்கள் நிச்சயம் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள் என யூகிக்கலாம். இன்னமும் இது யாரோ செய்த வேலை, எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என மோடி அரசாங்கம் மழுப்பினால், யார்தான் அதை நம்புவார்கள்?
தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏழாவது நாளாக நடந்து வருகிறது. மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவெடுத்திருக்க வேண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டு சட்டையில் புழுதியை பூசிக் கொண்டிருந்தார். சுஜித் மீட்புப் பணிகளை கவனித்திருக்க வேண்டிய பேரிடர் மீட்புத் துறைக்கான அமைச்சர் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை. விஜயபாஸ்கர் கடந்த வார இறுதியில் வடித்துக் கொண்டிருந்த முதலைக் கண்ணீருக்கு மசியாமல் மருத்துவர்கள் விடாப்பிடியாய் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
போராடும் மருத்துவர்கள் நான்கு கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் அரசுப் பணிகளில் உள்ள மருத்துவர்களுக்கு உயர் கல்விக்கென 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது – இதை மீண்டும் வழங்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை. அடுத்து தமிழக அரசு சுமார் 800 பணி இடங்களை நீக்கியுள்ளது – இந்த பணியிடங்கள் மீண்டும் நிரப்பப்பட வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.
அடுத்ததாக, அரசு மருத்துவர்கள் டைனமிக் அஸ்யூர்டு கேரியர் ப்ரொக்ரெஷன் என்ற விதியின்படி, 20 ஆண்டுகள் பணியை முடித்த பிறகுதான் நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்வுபெற்று, 1.3 லட்ச ரூபாய் சம்பளத்தை எட்ட முடியும். இளநிலை, முதுநிலை, சிறப்புப் படிப்புகளை முடித்து அரசுப் பணியில் சேரவே 30 -32 வயதாகும் நிலையில், இந்த ஊதியத்தைப் பெறும்போது ஐம்பது வயதைத் தொட்டுவிடுகிறார். இதை மாற்றி மத்திய அரசுப் பணிகளில் இருப்பதைப் போல் 13 ஆண்டுகளிலேயே பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பது மூன்றாவது கோரிக்கை.
மேலும், அரசு மருத்துவராக இருந்து கொண்டே முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களை பின்னுக்கு தள்ளி தனியார் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுவதை மாற்ற வேண்டும் என்பது நான்காவது கோரிக்கை.
நியாயமான இந்த கோரிக்கைகளுக்காக கடந்த ஏழு நாட்களாக மருத்துவர்கள் போராடி வரும் நிலையிலும் காய்ச்சல் மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்ட முக்கியமான பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளை நம்பி வரும் நோயாளிகளை தவிக்கவிடவில்லை. எனினும், மற்ற பணிகளை புறக்கணித்துள்ளதால் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் அவதியுற்று வருகின்றனர். மக்கள் படும் துன்பங்களையும் மருத்துவர்களின் கோரிக்கையில் இருக்கும் நியாயங்களையும் கணக்கில் கொண்டு செயல்பட வேண்டிய அரசு தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு பிரேக் இன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் வியாழக்கிழமை (31-10-2019) மதியம் 2 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் அவ்வாறு பணிக்கு வராத மருத்துவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் பணி முறிவில் இருப்பதாகக் கருதப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் 30-ம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர்களது பணியிடங்களுக்கு புதிதாக மருத்துவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அரசுப் பணிக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பதாகவும் தேவைப்பட்டால் உடனடியாக மருத்தவர்களை நியமிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தைப் பொருத்தவரை வட இந்திய மாநிலங்களை விட – குறிப்பாக பசு வளைய மாநிலங்கள் – பொது சுகாதாரக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. இதன் விளைவாகவே மனித வளக் குறியீட்டெண்களில் தமிழகம் பிற இந்திய மாநிலங்களை ஒப்பிடும் போது முதல் இரண்டு இடங்களை பிடித்து வந்தது. எனினும், சமீப ஆண்டுகளில் மெல்ல மெல்ல இந்த கட்டமைப்பு திட்டமிட்டரீதியில் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஜூன் மாதம் மத்திய அரசின் நிதிஆயோக் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தமிழகம் பொதுச் சுகாதாரத் துறையில் பல படிகள் கீழிறங்கியிருப்பதாக சொல்கிறது. பொதுச் சுகாதாரத் துறையில் ஒவ்வொரு மாநிலமும் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்பது தொடர்பான புள்ளிவிவரங்களை National Institution for Transforming India (நிதி ஆயோக்) அமைப்பு வெளியிடுகின்றது. அதன்படி, கடந்த ஆண்டு பொதுச் சுகாதாரத் துறையில் 3-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரத் துறையில் ஒட்டுமொத்தச் செயல்பாட்டில், பெரிய மாநிலங்களின் பட்டியலில் 74.01 புள்ளிகளுடன் கேரளா முதலிடத்திலும் 28.61 புள்ளிகளுடன் உத்தரப்பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளது. பல்வேறு குறியீடுகளில் தமிழகம் பின்தங்கியிருப்பதாக நிதிஆயோகின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குறிப்பாக, குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கு குறைவான எடையுடன்) குழந்தைகள் பிறப்பது கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் அதிகரித்துள்ளது.
குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அளிக்கும் விகிதத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 82.7 சதவீதமாக இருந்து இந்த ஆண்டில் 76.1 சதவீதமாக வீழ்ந்துள்ளது. ஜம்மு – காஷ்மீர், கேரளா, ஆந்திரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 100 சதவீத குழந்தைகளுக்கும் நோய்த் தடுப்பூசிகள் போடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மருத்துவமனைகளில் குழந்தை பிறக்கும் சதவீதமும் 81.8 சதவீதத்தில் இருந்து 80.5ஆகக் குறைந்துள்ளது.
நிதிஆயோக் தவறான புள்ளிவிவரங்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டதாக அப்போதே தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார் – ஆனால், எது சரியான புள்ளிவிவரம் என்றும் சுகாதாரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் உண்மையான நிலை என்னவென்பதைக் குறித்து அவர் வாயே திறக்கவில்லை.
இந்நிலையில் சமீபகாலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் “மர்மக் காய்ச்சல்” என ஊடகங்களால் பெயர் சூட்டப்பட்ட டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் உள்ளதாக மாவட்ட நிர்வகாமே ஒப்புக் கொண்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 5 ஆயிரம் பேருக்காவது டெங்கு காய்ச்சல் பரவியிருக்கும் என நக்கீரன் பத்திரிகையின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது
குடியாத்தம் அரசு மருத்துவமனை, வாணியம்பாடி, திருப்பத்தூர், வாலாஜா மருத்துவனைகளில் மர்ம காய்ச்சலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்வதாகவும், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் ஐம்பதுக்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் பல குழந்தைகள் உள்ளதாகவும் என்கிறது பத்திரிகை செய்திகள். குழந்தைகள் பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
***
தமிழகத்தின் பொது சுகாதார கட்டமைப்பு ஏற்கனவே நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், ஆட்கொல்லி நோய்களும் வேகமாக பரவி வருகின்றது. இந்த சூழலில் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் எடுத்தெறிந்த பாணியில் பேசி வருகிறார்கள் மாநில அமைச்சர்கள்.
“மக்கள் பாதிப்பதைப் பார்த்து சும்மா இருக்கமாட்டோம்” என்கிறார் எடப்பாடி ! டாஸ்மாக் மரணங்கள் முதல் மலக்குழி மரணங்கள் வரை அன்றாடம் மக்களைக் கொல்லும் இந்த எடுபிடி அரசுக்கு இந்த டயலாக்கை பேசும் அருகதை உண்டா ?
வணக்கம் நாம் இப்போது டெங்கு காய்ச்சலை பற்றி பார்ப்போம். டெங்கு என்றால் என்னவென்றால்? ஒரு வைரஸ் கிருமி. அந்தக் கிருமி நம் உடலுக்குள் சென்று ஏற்படுத்தும் காய்ச்சல் சம்பந்தமான வியாதி தான் டெங்கு. இது கொசுவின் மூலம் பரப்பப்படுகிறது. கொசு அந்த கிருமியை நம் உடலுக்குள் செலுத்துகிறது. அதனால் ஏற்படுவது தான் டெங்கு காய்ச்சல்.
நமக்கு சாதாரணமாக காய்ச்சல் ஏற்பட்டால் அது ஒரு நாள், இரண்டு நாள் அல்லது நான்கு நாட்களுக்குள் குணமாகி விடுகிறது அல்லவா? அப்படியும் இல்லை என்றால் ஒரு பாராசிட்டமால் மாத்திரை உட்கொண்டால் குணமாகி விடுகிறது அல்லவா. அது எல்லாமே வைரஸ் கிருமியால் உண்டாகும் காய்ச்சல் தான். அது எப்படி தன்னால் சரி ஆகிறது என்றால். நம் உடலே அந்த வைரஸ் கிருமியை அழித்து விடுகிறது. அந்த கிருமி நம் உடலுக்குள் இருக்கும் வரை காய்ச்சலானது இருக்கும் பிறகு மாத்திரை உட்கொண்டபின் குணமாகும். அதேபோல் நம்மில் பலரும் இந்த டெங்கு கிருமியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அது நாம் பேராசிட்டிரமால் மாத்திரையை உட்கொண்ட பின் குணமாகியும் இருக்கலாம். அது டெங்கு கிருமி தான் என்பதை தெரியாமலேயே இந்த செயலானது நடந்திருக்கும்.
இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்? டெங்கு கிருமி என்றால் குணப்படுத்த முடியாத ஒரு பெரிய பாதிப்பு கிடையாது. நம்மில் பலருக்கும் அந்த கிருமியின் தாக்குதல் ஏற்பட்டு நாம் அதிலிருந்து குணமாகி இருக்கலாம்.
அப்படி என்றால் இந்த பிரச்சனை யாருக்கு ஏற்படும். இந்த பிரச்சனை யாருக்கு வரும்.. வராது.. என்று நம்மால் கூற முடியாது. இது எப்படி என்றால் இந்தக் காய்ச்சல் ஏற்பட்டால் மிகவும் அதிக வெப்ப நிலை நம் உடலில் ஏற்படும், சிலருக்கு தொடர்ச்சியாக வாந்தி இருக்கும், கை கால் மூட்டுகளில் அதிகமாக வலி ஏற்படும். இப்படி பிரச்சனைகளோடு சேர்ந்த காய்ச்சலாக அது இருக்கும். பொதுவாக மூன்று, நான்கு நாட்களில் காய்ச்சலானது குணமாகிவிடும். எப்படி என்றால் நம் உடலானது அந்த கிருமியை அழித்துவிடும். காய்ச்சலும் அதனால், சரியாகிவிடும். இந்தக் காய்ச்சல் குணமாகிய பிறகு தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.
சாதாரண வைரஸ் கிருமியினால் உண்டாகும் காய்ச்சலின் போது, இரண்டு மூன்று நாட்கள் குழந்தைகள் சோர்வாக இருக்கும். ஆனால், காய்ச்சல் குணமாகிய பின், குழந்தை சுறுசுறுப்பாக மாறிவிடும் சாப்பிட ஆரம்பிக்கும், ஓட ஆரம்பிக்கும் இயல்பாக விளையாட பழகிக் கொள்ளும். இதுவே டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தையானால், காய்ச்சல் குறைவான பின்பும் சரியாக சாப்பிடாது, தூங்காது, வாந்தி இருக்கும், சாப்பிட்டது உடலில் தங்காது எப்போதும் சோர்வாகவே இருக்கும். முக்கியமாக சிறுநீர் கழிப்பது மிகவும் குறைந்துவிடும். இது பெரிய பிரச்சினை. இத்தகைய சிறுநீர் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால். உடனடியாக மருத்துவரை அணுகி இது டெங்கு காய்ச்சலா? என பரிசோதித்து அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சல் என்றால், இரத்தத்திலுள்ள தட்டணுக்கள் (Platelets) குறையும். இதனால் பெரிய பாதிப்பு உண்டாகும் என பொதுவாகக் கூறுவார்கள். இது ஓரளவிற்கு உண்மையும்கூட. ஏனென்றால், டெங்கு ஏற்பட்டால் தட்டணுக்கள் குறையும். அந்த தட்டணுக்கள் குறைந்தால், நம் உடலில் எங்காவது ரத்தக்கசிவு ஏற்படும். தானாகவே உடலில் ஏதோ ஒரு பாகத்தில் இரத்த கசிவு அல்லது உண்டாகும். இது மிகவும் அரிதாகத்தான் ஏற்படும். நம் உடலில் மூன்று அல்லது நான்கு லட்சம் அளவுக்கு தட்டணுக்கள் இருக்கும். இந்த டெங்கு கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தட்டணுக்கள் குறையும்.
ஒரு லட்சம், இரண்டு லட்சம் அளவுக்கு கூட குறையும். ஆனால், நாம் அச்சப்படத் தேவையில்லை. இந்த தட்டணுக்கள் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தால் தான். நாம் செயற்கையாக தட்டணுக்களை செலுத்துவோம். கொஞ்சம் குறைய ஆரம்பித்ததும், செயற்கையாக நாம் தட்டணுக்களை செலுத்த தேவையில்லை. இதனால் நன்மை உண்டாகாது, என்பது மட்டுமல்ல தீமை உண்டாக வாய்ப்புள்ளது. அதேபோல் தட்டணுக்கள் சீராக இருந்தால் வைரஸ் தாக்குதல் குறைவு என்றோ, தட்டணுக்கள் குறைவாக இருந்தால், வைரஸ் தாக்குதல் அதிகம் என்றோ நாம் கருதக்கூடாது. நாம் முன்னமே கூறியது போல், வாந்தி, உடல் சோர்வு முதலிய அறிகுறிகள் இருந்தாலே, நாம் வைத்தியம் பார்த்தாக வேண்டும்.
என்ன வைத்தியம் பார்க்க வேண்டுமென்றால், அடிப்படையாக நாம் முதலில் நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் உடலில் ரத்தம் இருக்கிறது, அது பெரும்பாலும் நீர் தான். அதன் பிறகு அதன் மேல் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், புரதம் முதலியவெல்லாம் இருக்கிறது. இதில் நீரை எடுத்துவிட்டால், ரத்தமானது கெட்டியானதாக மாறிவிடும். ரத்தமானது ஓரளவுக்கு நீராக இருந்தால்தான், உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் சீராக செல்ல முடியும். இதில் நாம் நீரை எடுத்து விட்டோம் என்றால், ரத்தமானது சீராக உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்லாது.
இதனால் என்ன நடக்கிறது என்றால் அந்த ரத்தக் குழாய்களில் இருந்து தண்ணீரானது வெளியே சென்று, அந்த இடத்தில் திசுக்கள் போய் அமர்ந்து விடுகிறது. எனவே ரத்தக் குழாய்களில் உள்ள ரத்தம் கெட்டியாகி விடுகிறது. இதை எப்படி விளக்கலாம் என்றால், ஒரு இடத்தில் செம்மண் கலந்த நீர் இருக்கிறது என்றால். அதை நாம் குழாயின் மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பாய்ச்சி விடலாம். இதுவே, நீர் இல்லை என்றால் அல்லது நீர் குறைவாக இருந்தால். குழாயின் உள்ளே அந்தக் கலவை சீராக செல்லாது. அதேபோல்தான் ரத்தமும் சீராக எல்லா இடத்துக்கும் செல்லவில்லை என்றால், திசுக்கள் பலவீனமடையும்.
இந்த பாதிப்புகள் எல்லாம் எப்போது நடக்கும் என்றால், காய்ச்சல் குறைந்த அந்த நான்காவது அல்லது ஐந்தாவது நாளுக்குள் இது நடந்துவிடும். நாம் நினைத்துக் கொண்டிருப்போம், காய்ச்சல் குறைந்து விட்டது, எனவே குழந்தை குணமாகிவிட்டது என்று, ஆனால் பிரச்சனையே அப்போதுதான் ஆரம்பிக்கிறது.
எனவே, நம்மில் யாரேனும் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை எப்படி அறிந்து கொள்ள வேண்டுமென்றால், காய்ச்சலானது தொடர்ந்து இருந்தாலோ, அல்லது காய்ச்சல் குறைந்த பின்பும், உடல் சோர்வாகவோ, சரியாக உணவு உட்கொள்ள முடியாமலோ, குறிப்பாக சிறுநீர் கழிக்காமலும் இருந்தால், நாம் ஒரு பரிசோதனை செய்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை. உடனே இப்படி இருந்தால் டெங்குதான் என்பது கிடையாது. ஆனால், நாம் ஒரு பரிசோதனை செய்து உறுதிபடுத்த வேண்டும்.
இந்த அறிகுறிகளோடு மருத்துவமனைக்குச் சென்றாலும், மருத்துவர்கள் எளிய முறையிலான இரத்தப் பரிசோதனையை மேற்கொள்வார்கள். குறிப்பாக ரத்தம் கெட்டியாக உள்ளதா அல்லது நீர்த்தன்மையோடு உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கான பரிசோதனையை செய்வார்கள். அடுத்ததாக கை கால்களில் ரத்த அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதற்கான சோதனை மேற்கொள்வார்கள்.
உதாரணத்திற்கு கையில் ரத்த அழுத்தம் சீராகவும், கால்களில் ரத்த அழுத்தம் குறைவாகவும் இருந்தால், நம் உடலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அடுத்ததாக நாடித்துடிப்பை பார்ப்பார்கள். அது எழுபது அல்லது என்பதற்குள் இருந்தால் பிரச்சினை இல்லை, அதுவே100 அல்லது 120 என்று இருந்தால் நம் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இது போன்ற எளிய முறைகளை முதலில் பரிசோதித்து தான், நம் உடலில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை அறிவார்கள். இதில் ஏதாவது சீராக இல்லை என்றால் தான், இந்த நபர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பார் என்றுணர்ந்து அதற்கான சிகிச்சையை தொடர்வார்கள்.
இதற்கான சிகிச்சையும் எளிமையானதுதான். உதாரணத்துக்கு ரத்தத்தில் நீர் தன்மை இல்லாமல் உறைந்து இருந்தால், நீர் சத்தை அதிகப்படுத்த சிகிச்சையளிப்பார்கள். நீர்ச்சத்தை அதிகப்படியாக அளித்தாலும் தவறு, அதேபோல் அளிக்காமல் இருந்தாலும் தவறு. சீராக இருக்க சிகிச்சை அளிப்பார்கள். ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு இந்த சிகிச்சையை தொடங்குவார்கள் இதன் மூலமே நாம் பெருவாரியான இறப்புக்களை தடுக்க முடியும்.
மிகவும் சொற்பமான நபர்களுக்குத் தான் நுரையீரலில் நீர் சேர்ந்து மூச்சுவிட முடியாத நிலைக்கு செல்வது, ரத்த அழுத்தம் பாதியாக குறைந்து அதிர்ச்சி நிலையை உண்டாக்குவது, மயக்க நிலைக்கு சென்று வலிப்பு ஏற்படுவது, நுரையீரல் செயலிழந்து போவது மாதிரியான இக்கட்டான நிலைமைகள் ஏற்படும். இவர்களுக்குத்தான் அதிதீவிர சிகிச்சை முறைகள் தேவைப்படுகிறது, இதில் சிலரை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. இது எல்லாமே மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு வருவதினால் ஏற்படும் விளைவுகள்.
டெங்குக்கென்று தனியாக மாத்திரை மருந்துகள் இருக்கிறதா..? கிடையாது, உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருந்தாலே குறிப்பாக அந்த மூன்று அல்லது அந்த ஐந்து நாட்களுக்குள் இதை செய்தாலே பெருவாரியான குழந்தைகளும் பெரியோர்களையும் காப்பாற்றிவிடலாம். இதைவிட பெரிய மருத்துவம் கிடையாது, இதை விட்டு நான் கசாயம் கொடுத்தேன் அல்லது இந்த பழத்தின் விதைகளை சாப்பிட்டேன் அதனால் நானும், குழந்தையும் குணமாகிவிடுவோம் என நினைத்துக் கொள்வதெல்லாம் தவறு. மேலே கூறிய தகவல்களை தொகுத்து பார்த்தோமேயானால், இந்த விதைகளும் அல்லது கஷாயமும் நம் உடலில் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவராது.
எனவே நாம் கூறுவது என்னவென்றால் டெங்கு போன்ற வைரஸ் கிருமிகள் சிலரது உடலில் இருக்கும் பின்பு உடல் சில நாட்களில் தானாக குணமாகிவிடும். சில பேருக்கு குணமாகாமல், உடல் உபாதைகள் தொடரும். அப்படி தொடரும்போது ரத்தத்தில் உள்ள நீரின் அளவை சரியாக பராமரித்து கொண்டோமேயானால் – அதை நாம் செய்ய முடியாது மருத்துவரின் துணையோடு இதை செய்து கொண்டோமேயானால் – பெரும்பாலானவர்கள் இந்த டெங்கு தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன். நன்றி.
வைகை நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட கீழடி அகழாய்வு தமிழர்களின் பண்டைய நாகரிகத் தொன்மைக்கு சான்று பகர்கிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பகுப்பாய்வு செய்ததில் அவை சுமார் 2,600 ஆண்டுகள் பழமையானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
நெசவுத் தொழில், உறைகிணறு, கழிவுநீர் குழாய்கள், உட்புறமும் வெளிப்புறமும் சுட்ட பானைகள் என ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் கீழடியில் கிடைக்கப்பெற்ற பானைகளின் மேலே தமிழி எழுத்துருவில் பெயர்களும் இருக்கின்றன. இது அம்மக்கள் அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பதை நிறுவியது.
முதல்கட்ட அகழாய்வு முடிந்த நிலையில் அங்கு எவ்வித மதம் மற்றும் சாதிய அடையாளங்கள் கிட்டவில்லை என்பதை அறிந்த பாஜக அரசு கீழடி ஆய்வை முடக்க அனைத்து வகை முயற்சிகளையும் எடுத்தது. அதனை எதிர்த்துப் போராடிய தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்தது.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு புரட்சிகர மற்றும் ஜனநாயக அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து வேறு வழியின்றி பணிந்தது மத்திய அரசு. ஆனாலும், இன்றும் வன்மம் தொடர்கிறது. பிற மாநிலங்களில் கண்டெடுத்த பொருட்களில் 20-க்கும் மேற்பட்டவற்றை கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பிய மத்திய அரசு, கீழடியில் கண்டெடுத்த பொருட்களில் வெறும் 2-ஐ மட்டுமே கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பியது.
திராவிடர்களுக்கென்று தனி நாகரிகம் – பண்பாடு கிடையாது என்றும் ஆரிய – வேத நாகரிகம்தான் அனைத்துக்கும் மூத்த நாகரிகம் என்றும் காவிக்கும்பல் பரப்பிய பொய்களை சமீபத்தில் ராகிகரியில் கிடைத்த தொல் குடியின் எலும்பில் செய்யப்பட்ட மரபணு சோதனை தகர்த்தெறிந்துள்ளது. அச்சோதனையின் முடிவுகள், சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதையும், ஆரியர்கள் வந்தேறிகள்தான் என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகால ஆரிய – திராவிடப் போரில், ஆரிய – வேத – சமஸ்கிருத போலி மேட்டிமைத் திமிரை உடைத்தெறிவதற்கான கருத்தியல் ஆயுதக் கிடங்காக இந்த வெளியீடு உங்களுக்குப் பயன்படும்.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
***
கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! – புதிய கலாச்சாரம் நவம்பர் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .
அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.
“கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
கீழடி அகழாய்வு: பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம்!
சிந்து சமவெளி நாகரிகம், வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள்!
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.
வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி:
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்:
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
₹1,500.00–₹6,000.00Price range: ₹1,500.00 through ₹6,000.00
SKU: N/A
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
உபரி மதிப்பை உற்பத்தி செய்தல் : ஓர் உழைப்பாளியின் தினசரி அத்தியாவசியப் பொருள்களின் சராசரி அளவை உற்பத்தி செய்ய ஆறு மணி நேர சராசரி உழைப்பு தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். மேலும், 3 ஷில்லிங் பெறுமான அளவு தங்கத்தில் ஆறு மணி நேரச் சராசரி உழைப்பு செயலாக்கப்பட்டிருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது, 3 ஷில்லிங் என்பது அந்த உழைப்பாளியினுmடைய உழைக்கும் சக்தியின் ஒரு நாள் மதிப்பின் விலையாக அல்லது பணக்குறியீடாக இருக்கும். அவன் தினசரி ஆறு மணி நேரம் வேலை செய்தால் தினமும் தனக்குத் தேவையான சராசரி அளவு அத்தியாவசியப் பொருள் களை வாங்குவதற்கு, அதாவது தன்னை ஓர் உழைப்பாளியாக உயிர்வாழச் செய்து கொள்வதற்குப் போதுமான மதிப்பை தினசரி உற்பத்தி செய்வான்.
ஆனால் நமது உழைப்பாளியோ கூலி உழைப்பாளி. எனவே அவன் தன் உழைக்கும் சக்தியை ஒரு முதலாளிக்கு விற்க வேண்டும். அதை அவன் தினசரி 3 ஷில்லிங்குக்கோ, அல்லது வாரம் 18 ஷில்லிங்குக்கோ விற்றால், அதை அதனுடைய மதிப்புக்கு விற்றவனாகிறான். அவன் ஒரு நூற்பாளி என்று வைத்துக் கொள்வோம். அவன் தினசரி ஆறு மணி நேரம் வேலை செய்தால், பஞ்சின் மீது அனுதினமும் 3 ஷில்லிங் மதிப்பைக் கூட்டுவான். அவனால் தினசரி கூட்டப்படும் இந்த மதிப்பு தினசரி அவன் பெறும் அவனுடைய கூலி அல்லது உழைக்கும் சக்திக்கான விலைக்குத் துல்லியமாகச் சமமானதாக இருக்கும். ஆனால் இந்நிலையில் எந்த அளவு உபரி மதிப்போ அல்லது உபரி உற்பத்திப் பொருளோ முதலாளிக்குப் போகாது. இங்கேதான் நமக்கு உண்மையான சிக்கல் ஏற்படுகிறது.
தொழிலாளியின் உழைக்கும் சக்தியை வாங்கி அதன் மதிப்பைக் கொடுத்துவிடுவதன் மூலம் முதலாளி, மற்றெந்த வாங்குவோரையும் போலவே, வாங்கிய பண்டத்தை உபயோகித்துக் கொள்ளும் அல்லது பயன்படுத்திக் கொள்ளும் உரிமையைப் பெறுகிறான். ஓர் இயந்திரத்தை ஓட வைத்து அதை உபயோகித்துக் கொள்வதை அல்லது பயன்படுத்திக் கொள்வதைப் போலவே ஓர் உழைப்பாளியை வேலை செய்ய வைப்பதன் மூலம் அவனுடைய உழைக்கும் சக்தி உபயோகித்துக் கொள்ள அல்லது பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. எனவே, தொழிலாளியின் உழைக்கும் சக்தியான தினசரி, அல்லது வார மதிப்பைக் கொடுத்து விடுவதன் மூலம் முதலாளி, அந்த உழைக்கும் சக்தியை முழு நாளைக்கும் அல்லது முழு வாரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளும் அல்லது வேலை செய்ய வைக்கும் உரிமையைப் பெறுகிறான். வேலை நாள் அல்லது வாரத்திற்குச் சில குறிப்பிட்ட வரையறைகள் நிச்சயமாக இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைப் பற்றி இன்னும் ஆழமாகப் பின்னால் ஆராய்வோம். (நூலிலிருந்து பக்.5-6)
கூலிக்காக ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் 100 பவுன் என்று வைத்துக் கொள்வோம். உபரி மதிப்பாகச் சிருஷ்டிக்கப்பட்டதும் 100 பவுன் என்று வைத்துக் கொள்வோம். தொழிலாளியின் வேலை நேரத்தில் பாதி ஊதியம் தரப்படாத உழைப்பு கொண்டது என்பதை இது நமக்குக் காட்டும். கூலிக்காக ஈடுபடுத்திய மூலதனத்தின் மதிப்பைக் கொண்டு இந்த லாபத்தை அளவிட்டால், லாப விகிதம் நூறு சதவிகிதம் ஆகிறது என்று நாம் சொல்வோம்; ஏனென்றால் ஈடுபடுத்தப்பட்ட மதிப்பு நுறாகவும் பெறப்பட்ட மதிப்பு இரு நூறாகவுமிருக்கும்.
வேறு வகையில், கூலியாக ஈடுபடுத்தப்பட்ட மூலதனத்தை மட்டுமின்றி, ஈடுபடுத்தப்பட்ட மொத்த மூலதனத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், உதாரணமாக, மொத்த மூலதனம் 500 பவுனில், 400 பவுன் கச்சாப்பொருள்கள், இயந்திரங்கள் முதலியவற்றின் மதிப்பைக் குறிப்பதாக இருக்குமானால், அப்போது லாப விகிதம் இருபது சதவிகிதம் மட்டும்தான் என்று சொல்வோம்; ஏனென்றால் லாபம் ஆகிய நூறு, ஈடுபடுத்தப்பட்ட மொத்த மூலதனத்தில் ஐந்தில் ஒரு பங்காகத்தானிருக்கும்.
லாப விகிதத்தைப் பற்றிக் குறிப்பிட்ட முதல் முறையே ஊதியம் கொடுக்கப்பட்ட உழைப்புக்கும் ஊதியம் கொடுக்கப்படாத உழைப்புக்குமிடையே உள்ள உண்மையான விகிதாச் சாரத்தை, உழைப்பின் exploitation (இந்தப் பிரெஞ்சுச் சொல்லை உபயோகப்படுத்த நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்) உடைய உண்மையான தரத்தை உங்களுக்கு எடுத்துக்காட்டும் ஒரே முறையாகும். இரண்டாவது முறை பொது வழக்கிலிருக்கும் முறை, உண்மையில் சில நோக்கங்களுக்குப் பொருத்தமான முறையே. எவ்வகையிலும், முதலாளி தொழிலாளியிடமிருந்து அபகரிக்கும் இலவச உழைப்பின் அளவை மூடி மறைப்பதற்கு இது மிகவும் உபயோகமாக இருக்கிறது. (நூலிலிருந்து பக்.13)
நூல் : உபரி மதிப்பு என்றால் என்ன ? ஆசிரியர் : கார்ல் மார்க்ஸ்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி., சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098. தொலைபேசி எண் : 044 – 2625 8410 | 2625 1968 | 2635 9906 மின்னஞ்சல் :ncbhbook@yahoo.com
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 02
நவம்பர் 29. யாரை விருந்தினராக அனுப்புவது?
இடைவேளையின் போது மூன்றாம் வகுப்பிலிருந்து குழந்தைகள் வந்து மூன்று அழகிய அழைப்பிதழ்களைத் தந்து சென்றனர்.
“இன்று எங்கள் வகுப்பில் இசை விழா. உங்கள் வகுப்பிலிருந்து மூவரை அழைக்கின்றோம். எல்லோரையும் அழைக்க முடியாதது குறித்து மன்னியுங்கள்! இவ்விழா வகுப்பறையில் நடைபெறுவதால் எல்லோருக்கும் இடம் போதாது.”
இது தான் என் வகுப்புக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் முதல் அழைப்பு.
“நன்றி! எங்கள் சார்பாக மூவரை அனுப்பி வைப்போம்” என்றேன் நான்.
அவர்கள் போனதும் என் வகுப்புக் குழந்தைகள் கேள்விமாரி பொழிந்தனர்.
“என்ன விழா?”
“யாரை அனுப்புவீர்கள்?”
நானாக யாரையும் அனுப்பப்போவதில்லை. தம் பிரதிநிதிகளைத் தாமே தேர்ந்தெடுக்குமாறு குழந்தைகளிடம் சொல்வேன். பாடம் துவங்கியதும் நான் அந்த அழகிய அழைப்பிதழ்களைக் காட்டி, அவற்றில் எழுதியுள்ளதைப் படித்துக் காட்டினேன். இசை விழா இன்னும் 10 நிமிடங்களில் ஆரம்பமாகும்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சில சமயம் என்ன நடைபெறுமென எனக்குத் தெரியும். “யாரை அனுப்புவது” என்று ஆசிரியர் சுற்று முற்றும் பார்க்கிறார். சில குழந்தைகள் மௌனம் சாதிக்கின்றனர், ஆனால் “தயவு செய்து என்னைத் தேர்ந்தெடுங்களேன்! நான் நல்லவன்! பாருங்கள், நான் எப்படி நேராக உட்கார்ந்து உங்களைப் பார்க்கிறேன்!” என்று கண்களால் கெஞ்சியபடி அகக் கிளர்ச்சியோடு அவரைப் பார்க்கிறார்கள். கேட்பவர்களின் மீது ஆசிரியர் இரக்கம் காட்ட மாட்டார் என்று அவர்களுக்கு அனுபவத்திலிருந்து தெரியும். மற்றவர்களால் தம் ஆசையை அடக்க முடியாது. “என்னை! என்னை தயவு செய்து தேர்ந்தெடுங்கள்! நான் ஒரு தடவை கூட விருந்தினராகச் சென்றதில்லை! நீங்கள் ஒரு முறை கூட என்னைத் தேர்ந்தெடுத்ததில்லை!” என்று அவர்கள் கெஞ்சுகிறார்கள். “கத்தாதே! யாரை அனுப்புவது என்று எனக்குத் தெரியும். யார் நன்கு படிக்கிறார்களோ, குறும்பு செய்யாமல் சொன்ன பேச்சைக் கேட்கின்றார்களோ அவர்களை அனுப்புவேன்!” என்று ஆசிரியருக்குக் கோபம் வருகிறது. அவர் யாரை அனுப்புவதென முடிவு செய்து, எப்படி நடந்து கொள்ள வேண்டுமென அவர்களுக்குக் கட்டளைகள் தருகிறார்.
வகுப்புப் பிரதிநிதிகளாக இவர் தேர்ந்தெடுத்த அந்த மூவர் யார்? சாதாரணமாக, இவர்கள் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் சரிப்பட்டு வருபவர், அவருக்குப் பிடித்தமானவர்கள். அவர்களுக்கு இது தெரியும், இதைக் கண்டு அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர். ஏனெனில் இந்த வயதில் குழந்தைகள் மத்தியில் ஆசிரியரின் செல்வாக்கு தான் மிக முக்கியம். அவர்களுக்கு இந்த மனவியல் தன்மை தெரியாது தான். ஆனால் தன் செல்வாக்கால் குழந்தைகளின் விருப்பத்தை, நாட்டத்தை, குழந்தைகள் புரிந்து கொள்ளும் நியாயத்தை அடக்க முடியுமென ஆசிரியருக்குத் தெரியும். ஒருவேளை அவர் தன் செல்வாக்கை குழந்தைகளுடன் தான் கலந்து பழகுவதன் தன்மையாலும் குழந்தைகளுடன் தான் கொண்டுள்ள உறவின் தன்மையாலும் பெறாமல் தான் அவர்களின் முதல் ஆசிரியர் என்பதால் பெற்றிருக்கலாம். குழந்தைகள் தாம் பள்ளிக்கு வரும் முன்னரே இவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றனர். இவரைப் பற்றிக் குடும்பத்தில் என்ன பேசினர் என்பதைப் பொறுத்து இவர்கள் வெவ்வேறு விதமாக, கண்ணை மூடிக் கொண்டு இவரது செல்வாக்கை ஏற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் வேறுவிதமாகத் தீர்க்க வேண்டிய முக்கியப் பிரச்சினைகளைத் தன்னிச்சையாகத் தீர்க்கும் பொருட்டு ஆசிரியர் இச்செல்வாக்கைப் பயன்படுத்தலாமா? (துர்பிரயோகம் செய்யலாமா என்று நான் சொல்லவில்லை). குழந்தைகளின் பிரதிநிதிகளை ஏன் இவர் தேர்ந்தெடுக்க வேண்டும்? “யார் நன்றாகப் படிக்கவில்லையோ, யார் நான் சொல்வதைக் கேட்கப் போவதில்லையோ, யார் நன்றாக நடந்து கொள்ளவில்லையோ, யார் எனக்குக் கோபம் மூட்டுகின்றார்களோ அவர்களை நான் விழாவிற்கு அனுப்ப மாட்டேன்” என்பதை குழந்தைகளிடம் இப்படி மறைமுகமாகச் சொல்லுவதற்காகவா? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள், ஆனால் பலரின் விருப்பங்கள் நிறைவேறாததால் நீதி மற்றும் அநீதி பற்றிக் குழந்தைகளிடம் ஒரு விசேஷக் கருத்து உருவாகும். “ஆசிரியர் யாரை விரும்புகிறாரோ அவரைத் தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு என் மீது விருப்பமில்லை!” தேர்ந்தெடுக்கப்பட்டவனுக்கோ எல்லாம் நியாயமாகப்படுகிறது -”இதிலென்ன தவறு?” தேர்ந்தெடுக்கப்படாதவனுக்கோ ஆசிரியரின் செயல் அநீதியானது – ”ஏன் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை?”
இப்படிப்பட்ட போதனை முறையால் என்ன லாபம்? ஒன்றுமேயில்லை. ஒருவேளை இதனால் குழந்தைகள் மத்தியில் ஆசிரியரின் அதிகாரம் பலப்படலாம். ஆனால் ஆசிரியரின் செல்வாக்கிற்குப் பதில் வகுப்பின் கூட்டுச் செல்வாக்கு ஒரு நாள் வருமே. அப்போது என்ன செய்வது? ஆசிரியரின் அநீதி பற்றிய எண்ணங்களும் சொந்த விருப்பங்கள் புண்பட்ட உணர்வும் குழந்தைகளிடம் எஞ்சும். ஆரம்ப வகுப்பாசிரியருக்குப் பின் கல்வியின் இரண்டாவது கட்டத்தில் வரும் ஆசிரியர்கள், இந்தக் கூட்டு உணர்வை பலப்படுத்தவும், வகுப்பின் கூட்டுச் செல்வாக்கு ஒவ்வொரு குழந்தையின் மன நிலையின் வளர்ச்சி மீதும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துமாறு செய்யவும், இன்னமும் சொந்த செல்வாக்கை வென்று நிலைநிறுத்தவும் எவ்வளவு பாடுபட வேண்டும்! குழந்தைகளின் முதல் ஆசிரியர் தனது அதிகாரபூர்வமான முறைகளால் செல்வாக்கைப் பயன்படுத்தும் போது, வகுப்பின் கூட்டு முடிவைத் தன் முடிவால் மாற்றும் போது இதைப் பற்றி நினைக்கிறாரா? இந்த அதிகாரத் தொனியும் தான்தோன்றித்தனமும் ஆசிரியருக்கு உகந்தவையல்ல.
இல்லை, என் முடிவை இவர்கள் மீது திணிக்க மாட்டேன், யார் போவதென்று தீர்மானிப்பதைக் குழந்தைகளிடமே விட்டு விடுவேன்.
“குழந்தைகளே, நாம் மூவரை அனுப்ப வேண்டும்! பின்னர் அவர்கள் வந்து தாம் பார்த்ததையும் கேட்டதையும் நமக்குச் சொல்லுவார்கள். யாரால் பொறுமையாக இருக்க முடியுமோ, கேட்கும் போது புத்திசாலித்தனமான பதில்களைச் சொல்ல முடியுமோ அவர்களை அனுப்பினால் – நன்றாயிருக்கும். மூன்றாம் வகுப்பு மாணவர்களின் விழாவிற்கு யாரை அனுப்பலாம் என்று யோசியுங்கள்!”
ஒரு நிமிட இடைவெளி. இப்போது எந்த ஒரு குழந்தையின் பெயர் முன் மொழியப்பட்டாலும் அதை ஆதரித்து, நியாயப்படுத்துவது என் கடமை. நான் வாக்குவாதம் நடத்தப் போவதில்லை, யார் ஆதரிக்கின்றனர், யார் எதிர்க்கின்றனர் என்று வாக்கெடுப்பு நடத்தப் போவதில்லை. ஒரு குழந்தையின் பெயர் முன்மொழியப்பட்டு நிராகரிக்கப்பட்டால் அது அவனுக்குக் கடும் தண்டனையாக இருக்கும், அவனோ அச்சமயம் எக்குற்றமும் செய்யவில்லை. குழந்தைகளிடமிருந்து கிடைக்கப் போகும் ஆதரவின் அடிப்படையிலான என் செல்வாக்கு இங்கே செயல்படத் துவங்கும், இத்துடன் விஷயம் முடிவடையும்.
சாஷா: “ஏக்காவை அனுப்பலாம். அவள் எப்போதும் பொறுமையானவள், புத்திசாலி, அன்பானவள். யாருக்கும் இடையூறு செய்ய மாட்டாள். அங்கும் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டாள்.”
“சாஷா, நீ சொல்வது சரி! ஏக்கா, இங்கே வா! எல்லோரும் உன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் பார்!”
விக்டர்: “கோத்தேயை அனுப்பலாம். அவனுக்கு இசை மிகவும் பிடிக்கும். அங்கு இசை விழா அல்லவா நடக்கிறது.”
“விக்டர், நீ சொல்வது சரி! இது பொறுமையாயும், கவனமாயும் இருக்க அவனுக்கு ஒரு சோதனையாக இருக்கட்டும்! கோத்தே, இங்கே வா!”
மாக்தா: “நாத்தோவை அனுப்பலாம்! ஒரு வேளை திடீரென பாடும்படியோ, கவிதை படிக்கும்படியோ சொல்லலாம். நாத்தோ நன்கு கவிதை படிப்பான்.”
“நன்றி, மாக்தா! நாத்தோவும் இதற்குத் தகுதியானவன்! சரி, இப்போது அவர்கள் அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டுமெனச் சொல்லுங்கள்!”
“எல்லோரையும் பார்த்து ‘வணக்கம்!’ சொல்ல வேண்டும்!”
“அழைப்பிற்கு நன்றி சொல்ல வேண்டும்!”
கலை நிகழ்ச்சியின் போது சத்தம் போடக் கூடாது, பேசக் கூடாது!”
“கவனமாகக் கேட்டு எல்லோருக்கும் சொல்ல வேண்டும்!”
“பாடச் சொன்னாலோ, கவிதை வாசிக்கச் சொன்னாலோ தயங்கக் கூடாது!”
ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுப்பதில், யாரிடம் எதைச் செய்யச் சொல்வது என்பதில் (கதை அல்லது கவிதையைப் புத்தகத்திலிருந்து படிப்பது, கரும்பலகைக்குச் சென்று கணக்குப் போடுவது, பிடித்த கட்டுரையைப் பற்றி விவாதிப்பது) இந்த அணுகுமுறையை நான் வசதியான எல்லா சந்தர்ப்பங்களிலும் பின்பற்றுவேன்.
தமிழக அரசு மருத்துவர்கள் அறப்போராட்டம் ! எதற்கு இந்த போராட்டம் ?
கோரிக்கை 1
தமிழ்நாட்டில் வேலை செய்யும் மருத்துவர்கள் வாங்கும் ஊதியத்திற்கும் மத்திய அரசாங்க ஊழியர் வாங்கும் ஊதியத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்து வருகிறது. கீழ்கண்ட படத்தை பார்க்கவும்.
1 of 2
(இதில் தமிழக அரசு நவீன மருத்துவர்கள் பெறும் ஊதியத்தையும் அதன் உயர்வுகளையும் ஏனைய மற்ற அரசு துறை அலுவலர்கள் பெறும் ஊதியத்துடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.)
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஒரு மத்திய அரசு மருத்துவர் 14 வருட அனுபவம் காணும் போது பெறும் ஊதியத்தை, தமிழகத்தில் பணி செய்யும் மருத்துவர் தனது 20 வருட அனுபவத்தில் தான் பெற முடியும் என்பதை காண முடியும்.
எதற்கு இந்த ஊதிய வித்தியாசம் ?
மத்திய அரசு மருத்துவர் செய்யும் எந்த வேலைக்கும் குறைவானதல்ல தமிழக மருத்துவர்கள் செய்யும் வேலை.
டெங்கு, மலேரியா போன்ற தொற்றும் நோய் தடுப்பு; நீரிழிவு, ரத்த கொதிப்பு போன்ற தொற்றா நோய் தடுப்பு முதல் நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தங்கி சிகிச்சை எடுக்கும் அரசு மருத்துவமனைகள்.
வருடம் தோறும் லட்சக்கணக்கில் பிரசவங்கள்.
அறுவை சிகிச்சைகள்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்.
அவசர கால சிகிச்சைகள்.
என்று நாள்தோறும் நிகழ்த்தும் தமிழக மருத்துவர்கள் கேட்பது, எங்களுக்கும் அதே அளவு சமமான ஊதிய உயர்வைத்தான்.
இது ஒரு நியாயமான கோரிக்கை ஆகும். தமிழக அரசாங்கம் செவிமடுத்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
அரசு மருத்துவர்களின் அறப்போராட்டம் கோரிக்கை இரண்டு
நோயாளிகளின் எண்ணிக்கைப்படி மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அதாவது தமிழகம் என்பது பரந்து விரிந்த நிலப்பகுதியாகும்.
ஒரு மாவட்டம் போல் இன்னொரு மாவட்டம் இல்லை. ஒரு ஊர் போல் இன்னொரு ஊர் இல்லை. அதுபோல, ஒரு அரசு மருத்துவமனை போல மற்றொன்று இருக்காது.
ஒரு மருத்துவமனையில் அதிகபட்சம் புறநோயாளிகளாக தினமும் 300 பேர் வருவார்கள். மற்றொரு அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு தினமும் 3000 பேர் வருவார்கள்.
ஆனால் இந்த இரு மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரி எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிப்பது முறையன்று.
ஆகவே நோயாளிகளின் வருகை மற்றும் உள்நோயாளிகளாக எத்தனை பேர் தங்கி இருக்கிறார்கள் ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் எத்தனை செய்யப்படுகின்றன?, அவசர சிகிச்சைகள் எவ்வளவு ?, அந்த மருத்துவமனையின் பிடிமானப்பகுதி (catchment area) எவ்வளவு ?, பிரசவங்கள் எத்தனை நடக்கின்றன?
சிசேரியன்கள் எத்தனை?, பரிந்துரைக்கப்படும் மருத்துவமனையா?, பரிந்துரைக்கும் மருத்துவமனையா? என்று ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு மருத்துவ நியமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை.
இது மருத்துவர்கள் மீது விழும் அதிகமான பாரத்தை குறைக்கும். ஒரு நோயாளிக்கு செலவழிக்கப்படும் நேரம் அதிகமாகும். இதனால் மருத்துவத்தில் தரம் கூடும்.
இதனால் நேரடியாக பயன்பெறப்போவது அரசு மருத்துவமனைகளில் பயன் பெறும் நோயாளிகள் தான். இந்த நியாயமான கோரிக்கையை அரசு ஏற்று உடனே ஆவண செய்ய வேண்டும்.
***
அரசு மருத்துவர்கள் அறப்போராட்டம் கோரிக்கை மூன்று
பறிக்கப்பட்ட உரிமையான முதுநிலைப்படிப்புக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் வழங்குக.
2016 -ஆம் ஆண்டு வரை அதாவது நீட்டின் வருகைக்கு முன்பு வரை தமிழகத்தில் அரசு சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலைப்படிப்பில் சேர 50 சதவிகித இட ஒதுக்கீடு இருந்தது.
இதன் வாயிலாக ஒரு ஊரில் இருந்து படித்து மருத்துவரான ஒருவர், அந்த ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிவார். பிறகு 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் பயின்று மீண்டும் அதே ஊரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வேலைக்கு வருவார்.
இதனால் அந்த ஊர் மக்கள் பயன் பெற்றனர். தன் ஊரைப்பற்றி அதன் பூலோகவியல் பொருளாதார மற்றும் சமூகவியலை அறிந்த ஒருவர் மருத்துவராக வருவதற்கும், அந்த ஊரைப்பற்றி அறியாத ஒருவர் மருத்துவராக வருவதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு.
இந்த 50 சதவிகித இட ஒதுக்கீடைப் பெற கட்டாயம் இரண்டு வருடங்கள் அரசுப்பணியில் இருந்திருக்க வேண்டும் என்று விதி இருந்தது. இதனால் கிராமங்கள் தோறும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் மருத்துவர்கள் முன் எப்போதும் இல்லாத அளவு நிரம்பினர்.
ஆள் அரவமற்ற, ஈ.. காக்கா.. கூட போகாத சாலை வசதிகள் குன்றிய ஊர்களில் எல்லாம் மருத்துவர்கள் பணி புரிகின்றனர்.
மேலும் அந்த இட ஒதுக்கீட்டில் படித்த மருத்துவர்களிடம் இருந்து, முதுமையால் ஏற்படும் பணி மூப்பு வரை அரசுப்பணியில் இருக்க வேண்டும் என்று பத்திர வாக்குமூலம் வாங்கப்படும்.
இதன் மூலம் மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை உறுதி செய்யப்பட்டதன் விளைவாக, தமிழகம் சுகாதாரத்தில் தன்னிறைவு பெற்று ஒரு முன்னோடி எடுத்துக்காட்டு மாநிலமாக இருந்து வந்தது.
ஆனால் நீட் எனும் அரக்கன் வந்த பின், அந்த இட ஒதுக்கீட்டை ஒழித்தபடியால்
இப்போது அரசு மருத்துவர்களுக்கு கிடைத்த முக்கிய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுவிட்டது.
இது நாளடைவில் அரசு மருத்துவமனை நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.
ஆகவே அரசு எங்களின் மூன்றாவது முக்கிய கோரிக்கையான அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை எங்களுக்கு தர வேண்டும்.
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
வாட்சப் செயலியைப் பயன்படுத்துவோருக்கு மாதம் 6 டாலர் கூடுதல் வரியை வசூலிக்கும் அரசுக்கெதிரான போராட்டம் செறிவடைந்து, இப்போது ஊழலுக்கெதிரான போராட்டமாக மாறி உக்கிரமடைந்துள்ளது.
லெபனான் நாடு சிரியா, இசுரேல் நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இங்கு இசுலாமிய, கிறித்தவ மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
மாணவர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் அபகரிப்பதற்காக அரசு மேற்கொண்ட நரித்தந்திரமே இந்த வரி விதிப்பு நடவடிக்கை என்கின்றனர் லெபனான் நாட்டு இளம் தலைமுறையினர்.
தலைநகர் பெய்ரூட்டின் மத்தியப்பகுதியில் அமைந்துள்ள தியாகிகள் நினைவிடத்தில் அரசுக்கெதிரான சுவரெழுத்துக்களைத் தீட்டி, இந்த அரசு பதவியிலிருந்து விலகும் வரை ஓய மாட்டோம் என்று ஆர்ப்பரிக்கும் போராட்டக்குழுவினர்.
“நாங்கள் நடத்தும் போராட்டத்தை வாட்சப் வரி விதிப்புக்கு எதிரானது என்று மட்டும் நீங்கள் புரிந்துகொள்ளக்கூடாது; நெடுங்காலமாக நாங்கள் ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டும், நாடு ஊழல் மயமாகி பொருளாதாரம் நலிந்து வருவதைக் கண்டித்தும் போராடுவதற்கான ஒரு தொடக்கப்புள்ளியாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம்” என்கிறார் போராட்டத்தில் பங்குபெறச் சென்றுகொண்டிருக்கும் மாணவர் ஜெரெமி ஊவே.
தலைநகர் பெய்ரூட்டில், முதல் இரண்டு நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை பாதுகாப்புப் படையினரைக் கொண்டு தடியடி நடத்தி கலைத்தது ஆளும் அரசு. மூன்றாவது நாள் மத்தியில் சுமார் 10 இலட்சம் மக்கள் ஒன்றுகூடிய போது, காவல்துறையினரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த ஒரு புரட்சிகரமான போராட்டமாக மாறிவிட்டது. இனப்பாகுபாடுகளை ஒதுக்கிவிட்டு லெபனான் தேசியக்கொடியின் கீழ் அரசுக்கெதிரான ஒன்றுபட்ட போராட்டக்களமானது லெபனானின் தலைநகரம் பெய்ரூட்.
லெபனானில் நடந்த உள் நாட்டுப் போரின் போது சிதிலமடைந்து பயன்பாட்டில் இருந்திராத கட்டிடங்கள் இப்போது தங்குமிடங்களாகிவிட்டன. பணக்காரக் குடியிருப்புக்கள் நிறைந்த நகர வீதிகளின் வெளிச்சுவர்கள் இப்போது அரசைத் தூக்கியெறிவதற்கான பிரச்சாரக் களமாக மாறி நிற்கின்றன.
வீதியில் இறங்கிப் போராடினால்தான் விடுதலை என்பதற்கு மற்றுமொரு உதாரணமாய் நிற்கிறது லெபனான் மக்களின் போராட்டம்.
எதிர்காலம் என்ற ஒன்றே நிரந்தரமில்லாத நிலையில் கற்ற கல்வியினால் என்ன பலன் ஏற்பட்டுவிடப்போகிறது என்ற பதாகையை ஏந்தி நிற்கும் பெண்மனி ஒருவர்.
சிகப்பும், வெள்ளையும், பச்சையும் இணைந்து மதங்களுக்கு அப்பாற்பட்டு நாங்கள் அனைவரும் லெபனான் குடிமக்கள் என்று ஆர்ப்பரிக்கும் கூட்டம்.
பெரிய மசூதி ஒன்றின் வாசற்பகுதியில் நின்று உரையாற்றுபவர்களைக் காண்பதற்காக, பழுதடைந்த இரும்பு வேலியின்மீது ஏறி நின்று பார்க்கும் இளைஞர்கள்.
அரசுக்கெதிரான முழக்கங்களுடன் நீண்ட லெபனான் கொடியுடன் ஆர்ப்பரித்துச் செல்லும் போராட்டக் குழுவினர் .
தடுப்பரண்களுடன் போராட்டக்குழுவை முன்னேற விடாமல் தடுக்கும் இராணுவ வீரர் ஒருவரின் கைகளை, போராட்டக்காரர் ஒருவர் பிடித்து நிற்கும் காட்சி. இராணுவத்தினரைத் தாக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கல்ல என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என்பதை வெளிப்படுத்துகிறார் போராட்டக்காரர்.
முதல் இரண்டு நாட்களில் யாருமே நுழையாத இடமாக இருந்த இந்த பாழடைந்த கட்டிடங்கள் மூன்றாம் நாளில் நூற்றுக்கணக்கானோரின் புகலிடமாகிவிட்டது
போராட்டக்களத்தில் ஆடல் பாடல்களுக்குப் பஞ்சமா என்ன? முதியவர் ஒருவரின் ஆடல் பாடலுக்கு இசையுடன் கூடிய வரவேற்பு
போராட்டக்காரர்களை நுழைய விடாமல் தடுப்பதற்காகப் போடப்பட்ட முள்வேலிகளில் தங்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்யும் இளைஞர்கள், இளம்பெண்கள். ஆண்-பெண் சமவாய்ப்பு, வாக்களிக்கும் வயதில் மாற்றம், குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள்.
நள்ளிரவிலும் ஓயாத போராட்டம்.
லெபனான் தேசியக்கொடியுடன் முகமூடி அணிந்து நிற்கும் வாலிபர்.
ஊழலைத் தவிர இந்த நாட்டில் வேறொன்றுமில்லை. ஊழலற்ற லெபனான் நாடே எங்கள் கோரிக்கை என்கின்றனர் ஹலா மற்றும் ஓமர்.
ஜெரெமி ஊவேயுடன், மிஷெல் காரா. லெபனானில் சாதாரண வாழ்க்கை வாழ்வதே மிகவும் சிரமமான ஒன்றாகிவிட்டது. உலகத்திலேயே மிகவும் நலிவுற்ற நாடுகளில் ஒன்றாக லெபனான் இருக்கும் அதே தருணத்தில், உலகிலேயே மிகவும் பணக்கார அரசாங்கங்களில் எங்கள் நாடும் ஒன்று. இனியும் இழப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை என்கிறார் ஜெரெமி ஊவே.
உள்நாட்டுப் போர் நடந்த காலம் தொட்டு இன்றுவரை எங்கள் நாடு கிரிமினல்களாலேயே ஆளப்பட்டு வந்துள்ளது. எங்களிடம் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்தனர், எங்களை ஏமாற்றி திருடி விட்டனர். எம் சகோதர சகோதரிகள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தினர்; இனியும் இந்த ஆட்சியாளர்கள் எங்களுக்குத் தேவையில்லை. ஊழலற்ற, ஜனநாயகம் வேண்டுமென்பதற்காகவே போராடுகிறோம்; இங்கிருந்தே மடிவோம்; எங்கள் குழந்தைகளுக்கும் போராடக் கற்றுக் கொடுப்போம் என்கிறார் யாரா-எல்-பன்னா.
உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 04
கூர்ஸ்க் பிரதேசப் போர் தீவிரமடைந்தது. விறல்மிக்க டாங்கிப் படைகளின் சுருக்கமான தாக்குதலால் கூர்ஸ்கின் தெற்கிலும் வடக்கிலும் சோவியத் அரண் அமைப்புக்களைத் தகர்த்து, இடுக்கிப்பிடியை இறுக்கி, சோவியத் சேனையின் கூர்ஸ்க் வியூகங்கள் அனைத்தையும் சுற்றி வளைத்து அங்கே “ஜெர்மானியர் ஸ்தாலின் கிராத்துக்கு” ஏற்பாடு செய்வது ஜெர்மானியர் முதலில் போட்ட திட்டம். ஆனால் சோவியத் தற்காப்பின் நிலையுறுதி காரணமாக இந்தத் திட்டம் எடுத்த எடுப்பிலேயே சிடுக்காவிட்டது. தற்காப்பு அரண் அமைப்புக்களைப் பிளந்து ஊடுருவது தங்களுக்கு இயலாது என்பதும், இது ஒரு கால் இயன்றாலுமே கூட, இதில் ஏற்படும் இழப்புக்கள் மிக மிகப் பேரழிவாகவே இருக்கும் ஆதலால் இடுக்கிப் பிடியை இயக்குவதற்குப் போதிய படைபலம் எஞ்சியிராது என்பதையும் ஜெர்மானியச் சேனைத் தலைவர்கள் ஆரம்ப நாட்களிலேயே தெளிவாக உணர்ந்தார்கள்.
ஆனால் தாக்குதலை நிறுத்துவதற்குக் காலம் கடந்து விட்டது. ஹிட்லரின் எத்தனையோ நம்பிக்கைகள் போர்த் தந்திர வகைப்பட்டவை, செயல் தந்திர வகைப்பட்டவை, அரசியல் வகைப்பட்டவை ஆகியன – இந்த நடவடிக்கையுடன் இணைந்திருந்தன. வெண்பனிச் சரிவு தொடங்கிவிட்டது. அது வர வர அளவில் பெரிதாகி, வழியில் எதிர்ப்பட்டவற்றை எல்லாம் தன்னோடு சுருட்டித் தனக்குள் இழுத்துக் கொண்டு மலை அடிவாரத்தை நோக்கிப் பாய்ந்தது. அதை இடம் பெயரச் செய்வதற்காக இப்போது அதை நிறுத்தும் ஆற்றல் இல்லை. ஒவ்வொரு கிலோ மீட்டர் முன்னேறுவதற்குள் ஜெர்மானியர்கள் அனேகமாக முழு முழு டிவிஷன்களையும் படைப்பிரிவுகளையும், நூற்றுக்கணக்கில் டாங்கிகளையும் படைப் பிரிவுகளையும் ஆயிரக்கணக்கில் லாரிகளையும் மோட்டார்களையும் இழக்க நேர்ந்தது. தாக்கி முன்னேறிய சேனைகள் இடைவிடாத இரத்தப் பெருக்கின் விளைவாக வலுவிழந்தன. ஜெர்மன் படைத் தலைமை அலுவலுகம் இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. எனினும் நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்தும் வாய்ப்பு இப்போது அதற்கு இல்லை. மூண்டெரியும் போர் நெருப்பில் மேலும் மேலும் புதிய சேமிப்புப் படைகளை ஆகுதி செய்வதைத் தவிர அதற்கு வேறு வழியில்லாது போயிற்று.
சோவியத் சேனைத் தலைவர்கள் இங்கே தற்காப்பை மேற்கொண்டிருந்த படையணிகளின் பலத்தாலேயே ஜெர்மன் தாக்குதல்களை எதிர்த்து விலக்கினார்கள். பாசிஸ்டுகளின் சீற்றம் மேலும் மேலும் மிகுந்து கொண்டு போவதைக் கண்டு, அவர்கள் தங்கள் சேமிப்புப் படைகளைப் பின்புலத்தில் தொலைவில் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள் – பகைவரது தாக்குதலின் சடவேகம் தீர்ந்து போகும் நேரத்தை எதிர்பார்த்து. மெரேஸ்யெவின் ரெஜிமென்ட் தற்காப்புக்காக அன்றி எதிர்த் தாக்குக்காக அணி திரட்டப்பட்டிருந்த சேனைக்கு விமானப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை அவன் பின்னர் தெரிந்து கொண்டான். எனவே தான் முதல் கட்டத்தில் டாங்கி வீரர்களும் இவர்களுடன் இணைந்த சண்டை விமானிகளும் மாபெரும் போர் பற்றி வெறுமே சிந்தனை செய்து கொண்டிருந்தார்கள். பகைவர்களின் படைபலம் அனைத்தையும் போரில் ஈடுபடுத்தி விட்டதும் விமான நிலையத்தில் ஆயத்த நிலை இரண்டு ரத்து செய்யப்பட்டது. விமானிகள் நிலவறைகளில் படுத்து உறங்கவும் இரவில் சீருடைகளைக் களையவும் கூட அனுமதிக்கப்பட்டார்கள்.
ஒரு நாள் காலை வேளை. இழுத்து மூடப்படாத வாயில் திரை வழியே பளிச்சென்ற வெயிலொளி ஊசியிலைகள் பரப்பிய நிலவறைத் தரை மீது விழுந்தது. நிலவறைச் சுவர்களில் அமைந்தப் படுக்கைகளில் நண்பர்கள் இருவரும் இன்னும் நீட்டிப் படுத்திருந்தார்கள். அப்போது மேலே பாதையில் யாருடைய காலடி ஒசையோ கேட்டது, போர்முனையில் மந்திர சக்திவாய்ந்த “தபால்காரன்!” என்ற சொல் ஒலித்தது.
இருவரும் போர்வைகளை உதறிவிட்டுத் துள்ளி எழுந்தார்கள். ஆனால் மேரேஸ்யெவ் பொய்க்கால்களைப் பொருத்திக் கொள்வதற்குள் பெத்ரேவ் தபால்காரனை எட்டிப் பிடித்து இரண்டுக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு வெற்றிக் கோலத்துடன் திரும்பிவிட்டான். இரண்டும் அலெக்ஸேய்க்கு வந்திருந்தன. தாயாரிடமிருந்தும், ஓல்காவிடமிருந்தும். மெரேஸ்யெவ் அவற்றை நண்பன் கையிலிருந்து வெடுக்கெனப் பிடுங்கிக் கொண்டான். ஆனால் அதற்குள் விமான நிலையத்தில் தண்டவாளத் துண்டுகள் மீது உரக்கச் சேகண்டி அடிக்கப்பட்டது. விமானிகள் விமானங்களுக்கு அழைக்கப்பட்டார்கள்.
மெரேஸ்யெவ் கடிதங்களைச் சட்டைக்குள் மார்பருகே நுழைத்துக் கொண்டு அக்கணமே அவற்றை மறந்துவிட்டு, விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு இட்டுச் சென்ற காட்டுப் பாதையில் பெத்ரோவின் பின் ஓடினான். கைத்தடியை ஊன்றிக் கொண்டு சற்றே சாய்ந்தாடியவாறு அவன் கணிசமாக விரைந்தோடினான். அவன் விமானத்தை நெருங்குவதற்குள் எஞ்சின் மீதிருந்த உறை கழற்றப்பட்டிருந்தது, அம்மைத் தழும்பிட்ட வேடிக்கைத் தோற்றமுள்ள வாலிபனான மெக்கானிக் விமானத்தருகே பொறுமையின்றித் தவித்துக் கொண்டிருந்தான்.
எஞ்சின் சீறி முழங்கிற்று. ஸ்குவாட்ரன் கமாண்டர் ஓட்டும் “ஆறாவது” விமானத்தின் மீது மெரேஸ்யெவ் கண்ணோட்டினான். காப்டன் செஸ்லோவ் தம் விமானத்தை காட்டோர் வெளிக்குக் கொண்டு வந்தார். இதோ அவர் அறையிலிருந்த படி கையை உயர்த்தினார். “கவனியுங்கள்!” என்பது அதன் பொருள். எஞ்சின்கள் முழங்கின. அவற்றின் காற்று வேகத்தால் தரையோடு தரையாக அழுத்தப்பட்ட புல் வெளிறடைந்தது. பிர்ச் மரங்களின் பச்சைப் பிடரிகள் விமானங்கள் கிளப்பிய சுழல் காற்றில் விரித்து, கிளைகளுடன் மரங்களிலிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பத் தயாரானவைப் போலப் படபடத்தன.
டாங்கிக்காரர்கள் தாக்குதல் தொடங்கப் போவதாக அலெக்ஸேயை முந்திக் கொண்டு ஓடிய விமானிகளில் ஒருவன் வழியிலேயே அவனிடம் சொன்னான். பீரங்கிப்படைகளால் உடைத்துத் தகர்த்தப்பட்ட பகையரண்களின் ஊடாக டாங்கிப் படைகளுக்கு மேலே வானத்தைப் பகை விமானங்களும் இல்லாதவாறு செய்து அதைக் காவல் காப்பது இப்போது விமானிகளின் பொறுப்பு என்றுத் தெரிந்தது. வானத்தைக் காவல் காப்பதா? எல்லாம் ஒன்றுதான். இம்மாதிரி இறுக்கம் நிறைந்த சண்டையில் இந்தக் காவல் வேலையும் வெறும்பறப்பாக மட்டும் இருக்க முடியாது.
அலெக்ஸேய் கிளர்ச்சியுற்றான். ஆனால் இது சாவு குறித்த அச்சம் அல்ல. மிக மிக வீரமுள்ள, பதற்றமற்ற மனிதர்களுக்குக் கூட இயல்பான, ஆபத்து பற்றிய முன்னுணர்வும் இல்லை இது. அவன் கவலைப்பட்டது வேறு விஷயங்கள் பற்றி. மெஷின்கன்களையும் பீரங்கிகளையும் சுடுகருவிப் பணியாளர்கள் சரிப்பார்த்தார்களோ இல்லையோ; போரில் சோதிக்கப்படாத புதிய தலைக்காப்பில் ஒலிபரப்பி பழுதாகிவிடாமல் இருக்க வேண்டுமே; பெத்ரோவ் பின் தங்கி விடாமல் இருக்க வேண்டும்; விமானச் சண்டை நிகழ்த்த நேரிட்டால் அவன் அதிசாமர்த்தியம் பண்ண முற்படாமல் இருக்க வேண்டும். கைத்தடி எங்கே? வஸீலிய் வஸீலியெவிச்சின் அந்தப் பரிசு கெட்டுப் போய்விட்டதா என்ன? பெத்ரோவுடன் தான் பிரிவு சொல்லிக் கொள்ளவில்லை என்பது மெரேஸ்யெவின் நினைவுக்கு வந்தது. அறையில் இருந்த படியே அவனை நோக்கிக் கையை ஆட்டினான். ஆனால் பெத்ரோவ் அதைக் கவனிக்கவில்லை. அந்தப் பின்னோடியின் முகம் செம் புள்ளிகள் நிறைந்து கனல் வீசியது. கமாண்டரின் உயர்த்தப்பட்ட கையைப் பொறுமையின்றி நோக்கிக் கொண்டிருந்தான் அவன்.
இதோ கை தாழ்த்தப்பட்டது. விமானி அறைகள் மூடப்பட்டன.
மூன்று விமானங்கள் கொண்ட அணி புறப்படும் இடத்தில் சீறிற்று, இயங்கத் தொடங்கிற்று, ஓடிற்று, அதன் பின்னே தொடர்ந்தது இரண்டாவது அணி. மூன்றாவது அணியும் இயங்கத் தொடங்கிற்று. முதல் விமான அணி வானில் கிளம்பிற்று. இதன்பின்னே ஓடிற்று மெரேஸ்யெவின் அணி. தட்டை நிலம் கீழே இடமும் வலமுமாக இசைந்தாடிற்று. முதல் விமான அணியைப் பார்வையிலிருந்து நழுவவிடாமல் அலெக்ஸேய் தன் அணியை அதனுடன் ஒத்தவாறு அமைத்துச் செலுத்தினான், அவனது அணியை ஒட்டினாற் போலப் பறந்தது மூன்றாவது அணி.
முனைமுக முன்னணிக்கு மேலே அவை பறந்தன, பகைவரின் பின்புலத்துக்கு மேலே அரைவட்டமிட்டன, மறுபடி முன் வரிசையைத் தாண்டின. அவற்றை எவரும் சுடவில்லை. தரை தனது கடினமான நிலவுலக விவகாரங்களில் மும்முரமாக முனைந்திருந்த படியால் தனக்கு மேலே பறந்த ஒன்பது சிறு விமானங்களைக் கவனிக்க அதற்கு நேரமில்லை. ஆமாம், டாங்கிப் படைகள் எங்கே? ஆகா, இதோ இருக்கின்றன அவை. தழைமரக் காட்டின் தளதளப்பான பசுமையிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக டாங்கிகள் வெளிவந்ததை மெரேஸ்யெவ் கண்டான். மேலிருந்து பார்ப்பதற்கு அவை பாங்கற்ற சாம்பல் நிற வண்டுகள் போலத் தென்பட்டன. நொடிப் பொழுதில் அவை மிகப் பலவாகி விட்டன. எனினும் நுரைத்த பசுமையிலிருந்து மேலும் மேலும் டாங்கிகள் வெளிவந்து பாதைகள் வழியே முன் சென்றன, பள்ளங்களைக் கடந்தன. முன் சென்ற டாங்கிகள் மேட்டின் மேல் ஏறின, குண்டுகளால் உழப்பட்ட நிலத்தை அடைந்துவிட்டன. அவற்றின் பீரங்கிக் குழாய்கள் வழியாகச் செந்தீப் பொறிகள் பறக்கலாயின. இந்தப் பிரம்மாண்டமான டாங்கித் தாக்கு, எஞ்சிய ஜெர்மன் காப்பரண் வரிசைகளின் மீது நூற்றுக் கணக்கான டாங்கிகளின் இந்தப் பாய்ச்சல், ஒரு குழந்தையையோ, பதற்றமுள்ள பெண்களையோ கூட, அவர்கள் மேரேஸ்யெவ் போல வானிலிருந்து அதை அவதானித்திருந்தால், அச்ச மூட்டியிராது. இவ்வாறு அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் தலைக்காப்பின் காதுக் குழாய்களை நிறைத்த இறைச்சலுக்கும் கணகணப்பொலிகளுக்கும் ஊடாக வந்தது காப்டன் செஸ்லொவின் குரல். அது கம்மலாகவும் இப்போது சோர்வுள்ளதாகவும் கூட தொனித்தது.
2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியின் தொன்மை தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாடு! கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள்! பாதுகாப்போம்! பரப்புவோம்! என்ற முழக்கத்தின் கீழ் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் கடந்த அக்-25 அன்று தருமபுரியில் உள்ள பெரியார் மன்றத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
1 of 5
பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் தோழர் பாலன், தனது தலைமை உரையில், ”கீழடி அகழாய்வு பற்றிய உண்மைகளை தமிழ் மொழியின் தொன்மை குறித்து இன்றைய மாணவர்கள் இளைஞர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். கீழடியில் தற்பொழுது தோண்டப்படுவது ஆரியத்தை உயர்த்திப்பிடிக்கும் பேசும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பலுக்கான சவக்குழி” என்றார்.
1 of 4
இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய தமிழ் அறிஞர் தோழர் கிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் மற்றும் பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆகியோர் கீழடி அகழாய்வில் கண்டறிந்த உண்மைகளிலிருந்து கிடைக்கப்பெற்ற தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்துமான தகவல்களையும்; கீழடி அகழாய்வை முன்னெடுப்பதை பல்வேறு வகைகளில் தடுப்பதோடு, இந்தி – சமஸ்கிருதத்தை திணித்துவரும் மோடி – அமித்ஷா கும்பலின் சதித்தனங்களையும் அம்பலப்படுத்திப் பேசினர்.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக அரவிந்த் பாப்டே வை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே (S.A. Bobde) எதிர்வரும் நவம்பர் 18, 2019 அன்று இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நவம்பர் 17, 2019 அன்று முடிவடைய உள்ளது . இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதிக்காக எஸ்.ஏ. பாப்டேவின் பெயரை பரிந்துரை செய்து கடந்த அக்டோபர் 18, 2019 அன்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினார் ரஞ்சன் கோகாய்.
நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே (S.A. Bobde)
இந்தியாவின் தலைமை நீதிபதி பதவி என்பது குடியரசு தலைவர் பதவியின் அளவிற்கு அதிகாரம் மிக்க பதவியாகும். தலைமை நீதிபதி மட்டுமல்ல உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்றாலே பெரும் அதிகாரம் கொண்ட பதவிதான்.
தற்போதைய தலைமை நீதிபதி மற்றும் இதற்கு முந்தைய தலைமை நீதிபதி ஆகியோரைப் போன்றே நமது நீதித்துறைக்கு ஏற்ற ஒருவர்தான் அடுத்த தலைமை நீதிபதி என்பதை வாசகர்களுக்கு எடுத்துக் கூறுவது என்பது மட்டுமே இப்பதிவின் நோக்கம்.
ரஞ்சன் கோகாய்க்கு முன்னால் தலைமை நீதிபதியாக இருந்தவர் தீபக் மிஸ்ரா. குலோக்கல் மருத்துவக் கல்லூரி மோசடி வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தீபக் மிஸ்ரா, தன் மீதான குற்றச்சாட்டை தானே விசாரித்த நீதிபதி இவர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதியதியாகும் முன்னரே போலி ஆவணம் கொண்டு சொத்து வாங்கிய வழக்கு இவர் மீது இருந்தது குறிப்பிடத்தக்கது. அமித்ஷாவை நீதிமன்றத்திற்கு ஒழுங்கு மரியாதையாக வந்து ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிபதி லோயா கொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க தொடுக்கப்பட்ட வழக்கில் அதனை குறிப்பான அமர்வுக்கு விசாரணைக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டார் தீபக் மிஸ்ரா.
இதுபோன்று நீதிமன்றத்தில் ‘முக்கியமான’ வழக்குகளை எல்லாம் குறிப்பான நீதிபதிகள் இருக்கும் அமர்வுக்கு மட்டும் ஒதுக்குவதாக இவர் மீது நீதிபதி செல்லமேஸ்வர் தலைமையிலான நான்கு நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினர்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 12 -ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “நீதிமன்றத்தின் மரபுகளை மீறி எந்த ஒரு நேர்மையான அடிப்படையும் இன்றி தமக்கு விருப்பமான நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதாக” தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மேல் நான்கு மூத்த நீதிபதிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
தீபக் மிஸ்ரா மற்றும் எஸ்.ஏ. பாப்டேவுடன் ரஞ்சன் கோகாய்.
அந்த மூத்த நீதிபதிகளுள், நமது தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் ஒருவர். அச்சமயத்தில் நடுவீதிக்கு வந்து விட்ட நீதிமன்றத்தின் ‘மாட்சிமையை’க் காப்பாற்ற தீபக் மிஸ்ராவுக்கும் அந்த நான்கு நீதிபதிகளுக்கும் இடையில் சமரச நாயகனாக செயல்பட்டுள்ளார் வருங்கால தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே.
ஒரு தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகளே தகுந்த காரணங்களைக் கூறி குற்றச்சாட்டு வைக்கையில் அதை ஏற்றுக் கொள்ளவோ, எதிர்க்கவோ செய்யாமல் நடுநிலையாக இருந்துள்ளார். தீபக் மிஸ்ராவின் சார்பில் நால்வரைச் சந்தித்து சமரசம் பேசியுள்ளார். நீதிபதிகள் ‘நடு’நிலையாக இருக்க வேண்டும் என்பதை இப்படிப் புரிந்து கொண்டுவிட்டார் போலும்.
கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 64 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தீபக் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதனை துணைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை நேரடியாக செல்லமேஷ்வர், கவுல் ஆகியோர் இருந்த அமர்வில் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என கபில் சிபல் கோரிக்கை மனு வைத்தார். அவர்கள் 08-05-2019 அன்று அவ்வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் 07-05-2019 அன்று மாலை திடீரென இம்மனுவிற்கு வழக்கு எண் அளிக்கப்பட்டு நீதிபதிகள் எஸ்.கே.சிக்ரி, .எஸ்.ஏ.பாப்டெ, என்.வி.ரமணா, அருண் மிஷ்ரா, ஏகே கோயல் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது.
தன் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் ஒரு வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என ஒரு தலைமை நீதிபதி முடிவெடுக்கிறார். இதுவே நீதித்துறையின் யோக்கியதையைக் காட்டுகையில், அவர் காட்டிய அமர்வில் அடங்கியிருந்த நீதிபதிகளின் யோக்கியதையும் கூடுதலாக கைகாட்டி விட்டுச் செல்கிறது. அந்த நீதிபதிகளில் ஒருவர் வருங்கால தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே.
2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் பிற மூன்று நீதிபதிகளுடன் தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளை பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பலப்படுத்திய ரஞ்சன் கோகாய், அடுத்த தலைமை நீதிபதியாக தமது பெயர் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் ஒருமுறை தீபக் மிஸ்ரா மீது மூத்த நீதிபதிகள் புகாரளிக்கச் செல்கையில் ‘உடல்நிலை சரியில்லை’ என்று கூறி ஜகா வாங்கிக் கொண்டார் கோகாய்.
அடுத்ததாக தலைமை நீதிபதி பதவியில் அமர்ந்தார் ரஞ்சன் கோகாய். ஆதார் வழக்கில், “ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” என்ற கணக்கில் தீர்ப்பெழுதி மக்களின் அந்தரங்க உரிமைகளைப் பறிக்கும் ஆதார் திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டினார். இடையே சபரி மலையில் பெண்கள் நுழையலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.
சரி, நீதிபதி ஐயா கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும் பெண் உரிமையை மதிக்கிறவர் என்று நினைத்தால், 2019-ம் ஆண்டு மே மாதத்தில் தன் மீது உடன் பணிபுரியும் பெண்ணால் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிக்கதாமே ஒரு அமர்வைக் கைகாட்டினார். அந்த அமர்விலும் நமது வருங்கால தலைமை நீதிபதி பாப்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நீதிபதிகள் அமர்வு எதிர்பார்த்ததைப் போலவே ரஞ்சன் கோகாய் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்தது.
முந்தைய – தற்போதைய – வருங்கால – தலைமை நீதிபதிகளுக்கு இடையிலான உறவு இப்படியிருக்க, எஸ்.ஏ. பாப்டே அவர்கள் விசாரித்துத் தீர்ப்பெழுதிய ஒரு வழக்கைப் பற்றியும் தற்போது விசாரித்து முடித்து தீர்ப்பெழுதக் காத்திருக்கும் ஒரு வழக்கு பற்றியும் மட்டும் சொல்லிவிட்டு இந்தப் பதிவை முடித்துக் கொள்வோம்.
சொரபுதீன் போலி மோதல் கொலை வழக்கில் அமித்ஷா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டு ஹர்ஷ் மந்தெர் என்ற சமூக செயற்பாட்டாளர் தொடுத்த வழக்கை விசாரித்த அமர்வில் எஸ்.ஏ. பாப்டே-வும் ஒருவர். அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன்பே, ”இந்தப் பிரச்சினையால் உண்மையாகவே பாதிக்கப்பட்டவராக இருந்தால் இந்த வழக்கு வேறு விதமாக கருதப்பட்டிருக்கும். ஆனால் வழக்கு தொடுப்பவர் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத சூழலில் வழக்கை திரும்ப விசாரிக்கக் கோருவது வேறு விவகாரம்” என்று கூறி அவ்வழக்கை நிராகரித்தது அந்த அமர்வு.
வழக்கில் பொதிந்துள்ள நியாயத்தின் அடிப்படையில் ஒரு வழக்கை நிராகரிக்கலாம். ஆனால், வழக்கைத் தொடுத்தவர் பாதிக்கப்பட்டவராக இருந்தால்தான் வழக்கை எடுப்பேன் என்றால் செத்துப் போன சொராபுதீனோ அல்லது செத்துப் போன அவரது மனைவியோதான் மேல்முறையீடு செய்ய வேண்டியது இருக்கும்.
சரி பழைய கதை எல்லாம் எதற்கு ? தற்போதைய தலைமை நீதிபதி தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னால் தீர்ப்பு வழங்கத் தயாராக உள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் அமர்விலும் நமது வருங்கால தலைமை நீதிபதி இடம்பெற்றுள்ளார். இந்த வழக்கிலும் இருதரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியே சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வலியுறுத்திக் கூறியவர் நமது பாப்டெ தான்.
தீபக் மிஸ்ரா விவகாரத்திலும் நீதியின் படி நின்று சரி தவறு பேசாமல் சமரசம் செய்யச் சென்ற நீதிபதி பாப்டே, பாபர் மசூதியை இந்துத்துவ வெறியர்கள் இடித்த விவகாரத்திலும் நீதியின் படி நில்லாமல் ‘நடு’நிலையாக ஒரு தீர்வை வலியுறுத்தியிருக்கிறார்.
இப்போது சொல்லுங்கள்! தனக்கு முந்தைய இரண்டு தலைமை நீதிபதிகளைப் போன்றே நமது நீதித்துறைக்கு ‘ஏற்ற’ தலைமை நீதிபதியாகத்தானே எஸ்.ஏ. பாப்டே பதவியேற்க உள்ளார் !
வேதியியல் வகுப்பில் மிகவும் அடிப்படையாகக் கருதப்படும் தனிம வரிசை அட்டவணையை யார் கண்டுபிடித்தார் தெரியுமா ? தனிம வரிசை அட்டவணை என்றால் என்ன என்று கேட்கிறீர்களா ? அதுதாங்க… பீரியாடிக் டேபிள் (Periodic Table)
அதனை அமைத்தவர் ரஷ்ய வேதியியலாளரான திமீத்ரி மெண்டெலீவ். இவர் தனிமங்களின் அணு எடை அடிப்படையிலான நவீன தனிம வரிசை அட்டவணையை (Periodic Table) 150 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைத்தார். அதையொட்டி 2019 -ம் ஆண்டை தனிமவரிசை அட்டவணையின் ஆண்டாக கடைப்பிடிப்பதாக ஐநா சபையும் யுனிசெப் நிறுவனமும் அறிவித்திருக்கின்றன.
தனிம வரிசை அட்டவணையின் வரலாறானது வேதியியலின் வரலாறாகவும் தவிர்க்க இயலாமல் இயற்கை விஞ்ஞானத்தின் (Natural Philosophy) வரலாறாகவும் அமைகின்றது. ஏனெனில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியலானது இன்று இருப்பது போல் இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று பல்வேறு தனித்துறைகளாக இல்லை.
நமது உலகம் எதனால் ஆக்கப்பட்டது என்ற கேள்விக்கு இயற்கை விஞ்ஞானிகள் நீர், நிலம், காற்று, நெருப்பு என்ற அடிப்படைத் துகள்களால் ஆனது என்று கூறி வந்தனர். இதுவே அரிஸ்டாட்டில் காலம் தொட்டு 1000 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த கோட்பாடாகும். பண்டைய இந்தியா மற்றும் கிரேக்க தத்துவவியலாளர்கள் அணு கோட்பாட்டை முன்வைத்திருந்தாலும் அவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இயற்கை விஞ்ஞானத்தில் இரசவாதம் (Alchemy) இன்றைய நவீன வேதியியலின் முன்னோடியாகும். எல்லா இயற்கை விஞ்ஞானங்கள் போலவே இரசவாதமும் இயற்கையை ஆய்ந்தறிவது, அதைப் பயன்படுத்திக் கொள்வது என்ற அடிப்படையில் இயங்கி வந்தது. பண்டைய காலத்தில் வெண்கலம் போன்ற உலோகக் கலவைகள் உருவாக்கப்பட்டது, தாவரங்கள், இதர பொருட்களை மருந்தாக பயன்படுத்தியது முதலாக இரசவாதம் தோன்றியது எனக் கூறலாம்.
இந்திய ரசவாத மரபு.
இந்திய துணைக்கண்டம் உள்ளிட்டு கிரேக்கம், ரோம், எகிப்து, சுமேரியா, சீனா, பாரசீகம் என உலகின் பண்டைய நாகரிகங்கள் அனைத்திலுமே இரசவாத மரபு இருந்தது. உதாரணமாக நமது தமிழகத்திலிருந்த சித்தர்களை ஒருவகையான இரசவாதிகள் (Alchemist) என்று குறிப்பிடலாம்.
இரசவாதம் என்பது மருத்துவம், வேதியியல், இயற்பியல் மட்டுமின்றி கலை, ஆரம்ப கால தத்துவம், ஆன்மீகம், ஒழுக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவர்களுடைய முக்கியமான குறிக்கோள்கள்: 1) இயற்கையை மேலும் அறிந்து இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவைச் புரிந்துகொள்வது, 2) அனைத்து நோய்களையும் குணப்படுத்தக் கூடிய மருந்து அதாவது சர்வரோக நிவாரணியைக் கண்டறிவது, 3) இறவாத் தன்மையை அடையும் மருந்து அதாவது அமிர்தத்தை கண்டறிவது, 4) எளிதில் கிடைக்கும் மலிவான உலோகங்களை அரிதான – மதிப்பு அதிகமான தங்கமாக மாற்றும் வேதிப்பொருளை (philosopher’s stone) கண்டறிவது.
மேற்கூறிய காரணங்களால் பண்டைய இரசவாதிகள் அவர்களுடைய காலத்திற்கேற்ற வரம்புக்குட்பட்ட அளவில் அறிவியலை பின்பற்றி – பயன்படுத்தி வந்தாலும் மறுபுறம் அவர்களுடைய செயல்பாடுகள் தெய்வீகம், மாந்திரீகம், ஆன்மீகம் போன்றவற்றை சார்ந்திருந்தது.
இரசவாதம் (இயற்கை விஞ்ஞானம்) நவீன அறிவியலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகளை செய்திருந்தாலும், அதன் கோட்பாடுகள் நவீன அறிவியலை போல் சோதனைகளால் நிறுவப்படுவதற்கும் பல்துறைகளாக பிரிக்கப்படுவதற்குமான காலம் கனிந்திருக்கவில்லை.
ஜாபிர் இப்னு ஹையான் (Jabir ibn Hayyan)
மத்தியகால இஸ்லாமிய பொற்காலத்தைச் சேர்ந்த ஜாபிர் இப்னு ஹையான் (Jabir ibn Hayyan) என்ற பாரசீக இரசவாதி (Alchemist), நீர்மமாக்குதல்(dilution), தனிமங்களை பிரித்தெடுத்தல், வடிகட்டுதல் (distillation), படிகமாக்கல் (Crystallization) போன்ற வேதியலுக்கான செயல்முறைகளையும், அதன் அடிப்படை பரிசோதனை முறைகளையும் உருவாக்கினார். இதன் மூலம் இரசவாதம் நவீன அறிவியலின் பக்கம் தனது அடியை எடுத்து வைத்தது.
ஆங்கிலேய அறிவியலாளர் ராபர்ட் பாயில் (Robert Boyle) 1661-ம் ஆண்டு வெளியிட்ட ஸ்கெப்டிகல் கெமிஸ்ட் (The Sceptical Chymist) என்ற தனது நூலில் முதன் முதலாக நான்கு அடிப்படை துகள்கள் கோட்பாட்டை நிராகரித்தார். அதில் முதன் முதலாக ’தனிமம்’ என்ற சொல்லை அடிப்படை துகளுக்குப் பயன்படுத்தினார். சில பொருட்கள் (Substances) மற்றவற்றுடன் சேர்ந்து சிதைகின்றன. அவ்வடிப்படை பொருட்களை வேதிவினைகளின் மூலம் மேலும் உடைக்கவோ பிரிக்கவோ இயலாது; அவற்றை தனிமங்கள் (elements) என அழைத்தார்.
ஜெர்மன் இரசவாதி ஹென்னிங் பிராண்ட் (hennig brandt) மதிப்பு குறைந்த உலோகத்தை தங்கமாக மாற்றும் பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தார். 1669-ம் ஆண்டில் மனித சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் அதில் ஏதேனும் கிடைக்கக்கூடும் என்று அதைக் கொண்டு ஆய்வு செய்து வந்தார். சிறுநீரை அது பசையாகும் (paste) அளவுக்கு குடுவையில் விட்டு சூடேற்றும்போது குடுவை வெளிர் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது.
அப்பொருள் அவர் எதிர்பார்த்த தங்கமாக மாற்றும் வேதிப்பொருள் (philosopher’s stone) அல்ல. மாறாக பாஸ்பரஸ் என்ற தனிமம். இக்கண்டுபிடிப்பை சிலகாலம் இரகசியமாக அவர் வைத்திருந்தார்.
சிறுநீரை தங்கமாக மாற்ற முயன்ற, ஹென்னிங் பிராண்ட் (hennig brandt).
இவ்வாறாக இரசவாதிகள் தற்செயலாக தனிமங்களை கண்டறிவதில் பங்களித்திருந்தாலும், 18-ம் நூற்றாண்டில் தான் நவீன வேதியியல் தன் முதலடியை எடுத்து வைத்தது. இவ்வுலகம் அதாவது பொருள் எதனால் ஆக்கப்பட்டது என்ற கேள்வியை தீர்ப்பதற்கான முதல் தடயம் நாம் கண்ணால் காணும் திட அல்லது நீர்மப் பொருட்களை ஆய்தறிந்ததிலிருந்து கிடைக்கவில்லை. மாறாக காற்றை பகுப்பாய்வு செய்ததிலிருந்து வந்தது. பண்டைய காலத்திலிருந்தே காற்றை பற்றி மக்கள் அறிந்திருந்தனர். ஆனால் ஒட்டுமொத்த காற்றென்பதே அடிப்படைத் துகளாக இருந்தது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு இளம் மருத்துவ மாணவரான ஜோசப் பிளாக் 1754-ல் சிறுநீரக கற்களை குணப்படுத்துவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். சிறுநீரக கற்களின் மீது அமிலத்தை ஊற்றும் போது அதில் இருந்து ஒரு வகையான வாயு வெளியானது. ஆனால் அது காற்றின் பண்புகளைப் பெற்றிருக்கவில்லை. அதாவது அவ்வாயுவில் நெருப்பை கொண்டு சென்றபோது அது நெருப்பை அணைத்தது. இதை எரியும் தன்மை இல்லாத நிலையான வாயு என்று பெயரிட்டார்.
இதைத் தொடர்ந்து 1766 இல் ஹென்றி கேவன்டிஷ் ஹைட்ரஜன் வாயுவையும் 1772 இல் டேனியல் ரூதர்ஃபோர்டு நைட்ரஜன் வாயுவையும் கண்டறிந்தனர். இந்தக் கண்டுபிடிப்பை தொடர்ந்து காற்று என்பது அடிப்படைத் துகள் அல்ல அதனுள் பல்வேறு வகையான வாயுக்கள் இருக்கின்றன என்ற கருத்து உருவானது.
சமகாலத்தில் ஜோசப் பிரிஸ்ட்லி (Joseph Priestley) என்ற ஆங்கிலேய விஞ்ஞானி பொருட்களின் மீது அமிலத்தை ஊற்றி அதனுள் அடங்கி இருக்கும் காற்றை வெளியேறச் செய்து அதை குடுவையில் பிடித்துக்கொண்டார். அந்தக் குடுவைக்குள் எரியும் மெழுகுவர்த்தியையும் தாவரங்களையும் வைத்து தனது ஆய்வுகளை நடத்தி வந்தார்.
ஜோசப் பிரிஸ்ட்லி (Joseph Priestley)
தனது ஆய்வுகளின் ஊடாக பிரிஸ்ட்லி நிலையான வாயுவை அதாவது கார்பன்-டை-ஆக்சைடை நீரில் கரைக்கும் முறையை கண்டறிந்தார். உலகின் முதல் சோடா பிறந்தது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட வாயுக்கள், அறிவியல் முன்னேற்றங்கள் உளவாளிகளின் மூலம் பிரான்சிற்கு செல்கிறது. பிரான்சில் புகழ்பெற்ற வேதியியலாளர் அன்டோன் லவாய்சியர் பொருட்களில் ஏற்படும் வேதிமாற்றங்கள் மற்றும் நிறைமாற்றங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். லவாய்சியரின் சிறப்பு அறிவியல் ஆய்வுகளில் துல்லிய அளவீடுகள், சோதனை முறைகள், தரவுகள் அனைத்தையும் முழுமையாக சேகரித்து ஆய்வு செய்யும் நேர்த்தியுமாகும்.
லவாய்சியரின் காதல் மனைவி மேரி ஆன்னி லவாய்சியர், அவரது அறிவியல் ஆய்வுகளில் உற்ற துணையாக இருந்துள்ளார். அவர் லவாய்சியரின் ஆய்வுகளை ஆவணப்படுத்தியதோடு ஆய்வு செய்முறைகளை ஓவியங்களாக தீட்டி வைத்தார்.
லவாய்சியர் பொருட்களிலிருந்து வெளிப்பட்ட அல்லது அவற்றால் உறிஞ்சப்பட்ட வாயுக்கள் குறித்த மற்ற அறிவியலாளர்களின் சோதனைகளை ஒத்திசைவான கோட்பாட்டை உருவாக்கும் நோக்கில் தாமே திரும்ப செய்து பார்ப்பது என்ற முடிவுக்கு வருகிறார்.
அதுவரை நெருப்பு என்பது ஃபிலாஜிஸ்டன் என்ற அடிப்படை துகளால் உருவாகிறது, இந்தத் துகள் எரியும் பொருட்களின் உள்ளார்ந்த இயல்பாக இருக்கிறது. எரியும்போது வெப்பம், ஒளி, புகை ஆகியவற்றை வெளியிடுகிறது என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாக இருந்தது.
லவாய்சியர் தனது மனைவியுடன்.
லவாய்சியர் தனது துல்லியமான ஆய்வுகளின் மூலம் எரியக் கூடிய பொருளை நெருப்பில் இடும்போது அல்லது எரியா பொருளை வெப்பமூட்டும் போது அவற்றின் எடை அதிகரிப்பதை அறிந்தார். உலோகத்தையும் வெப்பமூட்டும் போது காற்றை அது உள்வாங்கி உறிஞ்சிக் கொள்கிறது. அதனாலேயே அந்த உலோகத்தின் எடை உயர்கிறது என்று கண்டறிந்தார். இது ஃபிலாஜிஸ்டன் கோட்பாட்டுடன் முரண்பட்டது. இந்த ஆய்வுகளின் மூலம் லவாய்சியர் நிறை அழிவுறா கோட்பாட்டை நிறுவினார்.
லவாய்சியர் உலோகங்கள் துருப்பிடிக்கும் போது ஒரு பகுதியை காற்றை உறிஞ்சுகின்றது என்பதை கண்டறிந்தார். காற்றின் அந்த ஒரு பகுதி எது?
ஜோசப் பிரிஸ்ட்லி (Joseph Priestley) மற்ற எல்லா காற்றிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட புதிய வகையான வாயுவைக் கண்டறிந்தார். தனது வழமையான சோதனைகளின் போது ஒரு வகையான வாயுவில் எரியும் மெழுகுவர்த்தி கூடுதலான பிரகாசத்துடன் எரிவதைக் கண்டார். அந்தக் குடுவையில் செஞ்சூடான மரக் குச்சியை செலுத்தும்போது அது பற்றி எரிந்தது. பின்னர் பிரான்ஸ் சென்று பிரெஞ்சு அறிவியல் கழக உறுப்பினர்களுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைக்கிறது. அங்கு அவர் லவாய்சியரை சந்தித்து தனது ஆய்வுகளை – புதிய எரியூட்டும் வாயுவை விவரிக்கிறார்.
பிரிஸ்ட்லி சோதனை.
பிரிஸ்ட்லி தனது சோதனைகளை லவாய்சியரிடம் எடுத்துரைத்த பின் இங்கிலாந்திற்கு திரும்பிய பிறகு தனது சோதனையை மேலும் தொடர்ந்தார். அதில் எரிய துணை புரியக் கூடிய வாயுவை உயிருள்ளவற்றின் மீது சோதிக்க தலைப்பட்டார். அவ்வாறு எலியை அந்தக் குடுவையில் இட்டபோது அதிக உற்சாகத்தோடும், மிக அதிகமான நேரம் உயிருடனும் இருந்தது. அவ்வாயு எரிவதற்கு துணை புரிவதோடு மட்டுமின்றி உயிர் வாழ்வதற்கும் (சுவாசத்திற்கும்) ஆதராமானது என கண்டறிந்தார்.
பிரிஸ்ட்லியுடனான சந்திப்பிற்குப்பின் அவரது ஆய்வுகளையும் லவாய்ஸியர் தனது ஆய்வுக் கூடத்தில் திருப்பி செய்து பார்ப்பது என்று முடிவெடுக்கிறார். அவரும் அதே எரியூட்டும் வாயுவைக் கண்டறிந்து அதற்கு ஆக்சிஜன் என பெயரிடுகிறார்.
லவாய்சியர் தனது ஆய்வு முடிவுகளை சமர்பித்த போது அதில் பிரிஸ்ட்லியின் கண்டுபிடிப்பை அங்கீகரித்து குறிப்பிடவில்லை. ஆனாலும் இதை கருத்துத் திருட்டு என்று குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஏனெனில் அதுவரை பிரிஸ்ட்லி உள்ளிட்ட அனைத்து அறிவியலாளர்களும் ஃபிலாஜிஸ்டன் கருதுகோளையே ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் லவாய்சியர் ஃபிலாஜிஸ்டன் கருதுகோளை தனது ஆய்வுகளின் மூலம் தவறென நிரூபித்தார்.
கேவன்டிஷ் ஏற்கனவே கண்டுபிடித்து இருந்த இரண்டு வகையான வாயுக்களின் கலவையே நீர் என்பதை ஆய்வுகூடத்தில் உறுதிப்படுத்தி, கேவன்டிஷ் கண்டறிந்த வாயுவுக்கு ஹைட்ரஜன் என பெயரிட்டார் லவாய்சியர்.
ஆக்சிஜனின் கண்டுபிடிப்பு பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த இயற்கை விஞ்ஞானத்தின் கோட்பாடுகளை தவறென தவிடு பொடியாக்கி விட்டது.
காற்றை பற்றிய இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் காற்று அடிப்படை துகள் அல்ல என்பதை மட்டும் நிராகரிக்கவில்லை. நெருப்பு, நீர், நிலம் ஆகிவற்றைப் பற்றிய கருதுகோளையும் மாற்றியமைத்தது. இவையனைத்தும் அடிப்படை துகள்கள் என்ற நிலையை இழந்தன. 1789-ல் தனது elementary treatise of chemistry என்ற தனது புத்தகத்தை வெளியிட்டார் லவாய்சியர். இந்த புத்தகத்தில் 33 அடிப்படை பொருட்கள் (தனிமங்கள் – elements) பட்டியலிடப்பட்டு இருந்தன.
அதுமுதல் நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகியவை அடிப்படை துகள்கள் என்பது போய் தனிமங்களைக் கண்டறிய உலக அறிவியலாளர்கள் தலைப்பட்டனர். இயற்கைப் பொருள்களில் பொதிந்துள்ள ஆக்சிஜனை வெளியேற்றினால் அடிப்படை பொருட்களை (elements) கண்டறியலாம் என்று பலரும் அறிந்து கொண்டனர். இதையடுத்து உலகம் முழுவதிலும் ஸ்வீடன் – மெக்ஸிகோ – சைபீரியா என உலகம் முழுவதிலும் 15 புதிய தனிமங்கள் குறுகிய காலத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டன.
பிரேசிலின் ரொண்டோனியா, போர்டோ வெல்ஹோ மாகாணத்தில் காடுகளில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. காடுகளை சோயா வயல்களாகவும், கால்நடை மேய்ச்சலாகவும் மாற்றும் நில அபகரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் வேளாண் வணிக நிறுவனங்களால் தான் பெரும்பாலான தீ விபத்து ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (INPE) படி, 2018 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அமேசான் காட்டுத் தீ எண்ணிக்கை 84 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரொண்டோனியாவின் மேற்குப் பகுதி அதிகமான காடுகள் அழிக்கப்பட்ட இடமாகத் தோன்றுகிறது, நிலத்தை சுரண்டுவதே இதற்கான முக்கியக் காரணம்.
ஆகஸ்டில், ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ, எந்தவித ஆதாரங்களும் இல்லாமல், அங்கு களத்தில் சேவையாற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான் இந்த காட்டுத்தீக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அமேசானிய நில அபகரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் வேளாண் வணிக நிறுவனங்கள், அரசாங்கத்தின் சொல்லாட்சியின் ஆதரவுடன், காடுகளுக்கு தீ வைத்ததற்கும், நிலத்தை சுரண்டுவதற்கும் எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
பெருவாரியான நிலத்தில் ஒற்றைப்பயிரான சோயா அல்லது கால்நடைகளுக்கான தீவனங்களே பெரும்பாலும் பயிரிடப்படுகின்றன. சோயா வணிகம், உணவாகவும், தீவிர கால்நடை விலங்குகளின் தீவனமாகவும், ஒரு சில பெரிய நிறுவனங்களின் கைகளில் உள்ளது என்பது மட்டுமல்லாமல் இது உலகில் மிகவும் இலாபகரமான ஒன்றாக மாறியுள்ளது.
“வளர்ச்சியின் பெயரில், அமேசானின் நிலங்களை சுரண்டுவதில் குறைவான கட்டுப்பாடான கொள்கைகளை அமல்படுத்துகிறது, இதனால் காடழிப்பு அதிகரிப்பதை நியாயப்படுத்துகிறது,” என்று சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ரொன்டோனியாவில் உள்ள பூர்வீகக் குழுக்களுடன் இணைந்து செயல்படும் கனிண்டே என்ற அமைப்பை நடத்தி வரும் நெய்டின்ஹா கூறினார்.
கரிட்டியானா மற்றும் உரு-யூ-வாவ்-பழங்குடியினரின் உறுப்பினர்களின் கூற்றுப்படி, பூர்வீக பிரதேசங்களுக்குள் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன.
ஜமாரி கிராமத்தின் தலைவரான ஜூரிப் கூறுகையில், செப்டம்பர் மாதம், தங்கள் நிலத்தை அபகரிப்பவர்கள் சிலர் காட்டில் தீ வைத்தபோது ஒரு குழுவால் அடையாளம் காணப்பட்டு கைதும் செய்யப்பட்டனர்.
“பூர்வீக பழங்குடியினர் மட்டுமே இயற்கை இருப்புக்களில் வாழ முடிகிறது என்றாலும், காடுகளின் சுரண்டலால் இலாபம் ஈட்டுவதற்காக மரங்களை கடத்துபவர்கள் மற்றும் நில அபகரிப்பாளர்கள் தொடர்ந்து எங்கள் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர்” என்று ஜூரிப் கூறினார்.
உரு-யூ-வாவ்-வாவ் இனத்தைச் சேர்ந்த 45 வயதான புருவா, தனது கோத்திரத்தின் இருப்புக்குள் நில அபகரிப்பாளர்களின் குடிசைக்கு தீ வைத்தார். செப்டம்பர் 2019 இல், நிலப்பரப்பைக் கைப்பற்ற காடுகளுக்கு தீ வைக்கும் ஒரு குழு, ஃபனாய்-யால் (பழங்குடியின மக்களைப் பாதுகாப்பதற்கான அரசு நிறுவனம்) தடுத்துநிறுத்தப்பட்டு, உரு-யூ-வாவ்-வாவ் இருப்புக்குள்ளேயே போலீசாரால் கைதும் செய்யப்பட்டது. புருவாவின் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு குழு சம்பவ இடத்திற்குத் திரும்பி அவர்கள் திரும்பி வராமல் இருக்க சட்டவிரோத குடிசைக்கு தீ வைத்தது.
ஆல்டியா ஜமாரேவின் கிராமத் தலைவரான ஜூரிப், நிலத்தை அபகரித்தவர்களால் அழிக்கப்பட்ட காட்டில் நடந்து, பூர்வீகப் பகுதியை எரித்த நிலத்தை உரிமை கோரி அதை சாகுபடி செய்யச் செய்தார். செப்டம்பர் 26 அன்று, ஜூரிப், நில அபகரிப்பாளர்களுக்காக காடுகளுக்கு தீ வைக்கும் கும்பல் வசிக்கும் சட்டவிரோத குடிசைகளை அழிக்கும் ஒரு திட்டத்தை தலைமைதாங்கி வழிநடத்தினார்.
போர்டோ வெல்ஹோ மாகாணத்தில் அண்டை காட்டில் ஏற்பட்ட தீவிபத்தால் எரிந்த தனது கசவா வயலுக்கு முன்னால் ஜெல்சன் நிற்கிறார்.
கரிஷியானா பழங்குடியினரின் சென்ட்ரல் ஆல்டியா, ரொண்டோனியாவின் பூர்வீக பிரதேசத்தில் ஜியோவால்டோவுக்கு சொந்தமான ஒரு வீட்டின் எச்சங்கள். பக்கத்து காட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் இவரது வீடும் தீப்பிடித்தது. பூர்வீக நிலப்பரப்பைச் சுற்றியுள்ள தனியார் பண்ணைகள் கரிட்டியர்களையும் காடுகளையும் அச்சுறுத்துகின்றன.
போர்டோ வெல்ஹோவில் மடிரா ஆற்றைக் கடக்கும் பாலத்தின் கீழ் மீனவர்கள். பின்புறம் உள்ள சாலோஸில் உள்ள குழிகள், உலகின் அதிக சாகுபடி செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் ஒன்றான சோயாவை சேமிக்க பயன்படுத்தப்படுகின்றன.
போர்டோ வெல்ஹோவிற்கு அருகில் கால்நடை மேய்ச்சலாக மாறிய வனப்பகுதி. மாட்டிறைச்சி வர்த்தகம் நாட்டின் மிகவும் இலாபகரமான வணிகங்களில் ஒன்றாகும். மேலும் மேய்ச்சல் நிலத்தின் தேவை காடழிப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சட்டவிரோத விற்பனைக்கு சிறந்த மரத்தை திருடுவதன் மூலம் இந்த செயல்முறை தொடங்குகிறது. பின்னர் நிலங்களும் தொடர்ச்சியாக தீ வைக்கப்படுகிறது. நிலம் அகற்றப்பட்டதும், கால்நடைகளை மேய்ச்சலுக்காகவும், பின்னர் சோயாவை வளர்க்கவும் காடு பயன்படுத்தப்படுகிறது.
ரொண்டோனியாவின் போர்டோ வெல்ஹோவில் உள்ள ஃப்ரிகோ 10 இறைச்சிக் கூடத்தில் மேலாளர் மற்றும் கால்நடை மருத்துவர். மாட்டிறைச்சி வர்த்தகம் நாட்டின் மிகவும் இலாபகரமான வணிகங்களில் ஒன்றாகும்.
ரோண்டோனியாவில் உள்ள பூர்வீக பிரதேசத்தின் மத்திய ஆல்டியாவில் உள்ள கரிஷிய பழங்குடி மக்கள். பூர்வீக நிலப்பரப்பைச் சுற்றியுள்ள தனியார் பண்ணைகள் கரிஷியர்களையும் அந்தக் காடுகளையும் அச்சுறுத்துகின்றன.
அமேசான் ரிசர்வ் பகுதியில் உள்ள உரு-யூ-வாவ்-வாவ் பழங்குடியினத்தைச் சேர்ந்த மேட் (32), புருவா (45), மற்றும் அலெஸாண்ட்ரா (27)
செப்டம்பர் 26 அன்று, மூவரும் அண்டை காடுகளுக்கு தீ வைத்த நில அபகரிப்பாளர்களால் ஒரு தளமாக பயன்படுத்தப்பட்ட ஒரு சட்டவிரோத குடிசையை நோக்கிச் சென்ற பணியில் பங்கேற்றனர்.
பிரேசிலின் ரொண்டோனியா, போர்டோ வெல்ஹோ அருகே ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து புகை எழுகிறது.
ரொண்டோனியா பிராந்தியத்தில் ஜாசி பரணா அருகே தொழிலாளர்கள். அமேசானிய மரங்களை திருடுதல் மற்றும் சட்டவிரோதக் கடத்தல் உலக சந்தையில் 30 சதவீதத்தைப் பிடித்திருகிறது. காடழிப்பு செயல்பாட்டில், காட்டை தீ வைப்பதற்கு முன்பு, நில அபகரிப்பாளர்கள் கறுப்பு சந்தையில் விற்க மிகச்சிறந்த மரங்களை வெட்டுவர்.
அமேசானின் மிகவும் காடழிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பிரேசிலின் ரொண்டோனியாவில் உள்ள போர்டோ வெல்ஹோ மாகாணத்தில் ஏற்பட்ட தீ.
அத்தியாயம் எட்டு | டாக்டர் கெனேயும் அவரது குழுவும்
அ.அனிக்கின்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் புகழ்வாய்க்கிறது. பிரான்சுவா கெனே மருத்துவராகவும் இயற்கை விஞ்ஞானியாகவும் இருந்தார். அறுபது வயதை நெருங்கும் வரையிலும் அவர் அரசியல் பொருளாதாரத்தைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் மருத்துவத் துறையில் பல டஜன் நூல்களை எழுதியிருந்தார். அவர் தன்னுடைய வாழ்க்கையின் கடைசி வருடங்களை நண்பர்கள், மாணவர்கள், தன்னைப் பின்பற்றியவர்கள் ஆகியோரைக் கொண்ட நெருக்கமான வட்டத்துக்குள் கழித்தார்.
லரோஷ் ஃபுகோ “வயோதிகராகும் கலையை நன்றாக அறிந்தவர்கள் வெகு சிலரே” என்று சொன்னதுண்டு. அந்தக் கலையை நன்கு அறிந்திருந்த வெகு சிலரில் கெனேயும் ஒருவர். அவருடைய உடலுக்கு எண்பது வயது, அவருடைய தலைக்கு முப்பது வயது மட்டுமே என்று அவரது நண்பர்களில் ஒருவர் அவரைப் பற்றிக் கூறினார். 18-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தில் மிகச் சிறந்து விளங்கிய பொருளியலாளர் கெனே என்று கூறலாம்.
அறிவியக்க சகாப்தம்
“பிரான்சில் வரப்போகின்ற புரட்சிக்கு மனிதர்களின் உள்ளங்களைத் தயாரித்த மாபெரும் மனிதர்கள் தாங்களும் தீவிரமான புரட்சிக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் எப்படிப்பட்ட அந்நியக் கட்டுப்பாட்டையும் அங்கீகரிக்கவில்லை. மதம், இயற்கை விஞ்ஞானம், சமூகம், அரசியல் முறை – இவை ஒவ்வொன்றும் அதிகக் கறாரான விமரிசனத்துக்கு உட்படுத்தப்பட்டன. பகுத்தறிவு என்ற நீதிபதியின் ஆசனத்துக்கு முன்பு ஒவ்வொன்றும் தான் இருப்பதற்குரிய நியாயத்தை எடுத்துக் கூற வேண்டும்; அவ்வாறு கூற முடியவில்லையென்றால் அழிந்து விட வேண்டும்.(1)
பிரான்சுவா கெனே
18-ம் நூற்றாண்டின் சிறப்பு மிக்க சிந்தனையாளர்கள் வரிசையில் மூலச் சிறப்புடைய பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தை உருவாக்கியவர்களான கெனே, டியுர்கோ ஆகிய இருவருக்கும் மிக மேன்மையான இடம் உண்டு.
கதிரவனின் பிரகாசமான கதிர்கள், விடுதலையடைந்த மனித அறிவின் கதிர்கள் பட்டு நிலப்பிரபுத்துவப் பனி படிப்படியாக உருக ஆரம்பிக்கும் என்று அறிவியக்கத்தினர் நம்பினார்கள். ஆனால் அது நடக்கவில்லை. உறைந்து போயிருக்கும் பனியை உடைப்பதற்குப் புரட்சியைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை மென்மேலும் அதிகரித்தது. பிஸியோகிராட் பொருளியலாளர்கள் உட்பட அறிவியக்கத்தின் இளைய தலைமுறையினர் தங்களுடைய நீண்ட வாழ்க்கையில் இதைப் பார்த்து அஞ்சினர்; மக்களின் ஆவேசம் என்ற பூதம் வாயைப் பிளந்து கொண்டு தயாராவதைப் பார்த்துப் பின்வாங்கினார்கள்.
18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கெனே தன்னுடைய ஆராய்ச்சிகளைத் தொடங்கிய பொழுது பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் நிலை எப்படியிருந்தது?
அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அதைப் பற்றி புவாகில்பேர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் எப்படியிருந்ததோ அந்த நிலையிலிருந்து அதிகமாக மாறாதபடி இருந்தது. பிரான்ஸ் இன்னும் விவசாய நாடாகவே இருந்தது. கடந்த ஐம்பது வருடங்களில் விவசாயிகளின் நிலையில் மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டிருந்தது. புவாகில்பேரைப் போல, கெனேயும் பிரெஞ்சு விவசாயத்தின் சீர்கேடடைந்த நிலையைப் பற்றிய வர்ணனையோடு தமது பொருளாதார நூல்களை எழுதத் தொடங்கினார்.
கடந்த ஐம்பது வருடங்களில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன என்பது உண்மையே. சொந்தமாக நிலம் வைத்திருந்த அல்லது நிலவுடைமையாளர்களிடமிருந்து குத்தகைக்கு நிலம் வாங்கிய முதலாளித்துவ விவசாயிகள் வர்க்கம் தோன்றியிருந்தது; அது குறிப்பாக பிரான்சின் வடபகுதியில் வளர்ச்சி அடைந்திருந்தது. கெனே விவசாய முன்னேற்றத்தைப் பற்றிய தனது நம்பிக்கைகளை இந்த வர்க்கத்தின் மீதே வைத்தார்; அத்தகைய முன்னேற்றமே சமூகமுழுவதிலும் ஆரோக்கியமான பொருளாதார, அரசியல் வளர்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படை என்று அவர் சரியாகவே கருதினார்.
பிரான்ஸ் முட்டாள்தனமான, நாசப்படுத்தும் யுத்தங்களை நடத்திக் களைத்துப் போயிருந்தது. இந்த யுத்தங்களின் விளைவாகக் கடல் கடந்த பகுதிகளில் அதன் பிரதேசங்களையும் அவற்றோடு செய்து வந்த லாபகரமான வர்த்தகத்தையும் அது இழந்திருந்தது. ஐரோப்பாவிலும் அதன் நிலை பலவீனமடைந்திருந்தது. அரசவையினர், மேல்வர்க்கங்கள் ஆகியோருடைய ஊதாரித்தனத்துக்கும் வளமான வாழ்க்கைக்கும் தேவையான பொருள்களையே தொழிற்சாலைகள் பிரதானமாக உற்பத்தி செய்தன; விவசாயிகள் அநேகமாகக் கைத்தொழிற் பொருள்களையே பயன்படுத்தி வந்தார்கள்.
லோவின் திட்டங்கள் பரபரப்பைத் தூண்டும் வகையில் தோல்வியடைந்ததன் விளைவாகக் கடன், வங்கித் தொழிலின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரான்சில் பொதுமக்களது எண்ணங்களைப் பிரதிபலித்த பலருடைய கருத்தில் தொழில்துறை, வர்த்தகம், நிதி ஆகியவை எப்படியோ பலவிதமான சந்தேகங்களுக்கு ஆளாகியிருந்தன. சமாதானம், வளப்பெருக்கம், இயற்கையான தன்மை ஆகியவற்றின் கடைசிப் புகலிடமாக விவசாயம் தோன்றியது.
லோ-வின் திட்டங்கள் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் அமைந்திருந்த் மிசிசிப்பி பங்குசந்தை வீதியை சுட்டிக்காட்டும் ஓவியம்.
லோ கடன் வசதிகளைப் பற்றி புத்தார்வக் கற்பனைகளைக் கொண்டிருந்தாரென்றால், கெனே விவசாயத்தைப் பற்றி அத்தகைய கற்பனைகளை வைத்திருந்தார். இத்தனைக்கும் அவருடைய ஆளுமையிலும் குணத்திலும் புத்தார்வக் கற்பனையாக ஒன்றுமே கிடையாது. ஆசிரியரிடம் இந்த குணம் இல்லையே தவிர அவருடைய மாணவர்களிடம் குறிப்பாக மார்கீஸ் மிராபோவிடம் – அளவுக்கு மீறிய உற்சாகம் ஏற்பட்டு ஆசிரியரிடம் இல்லாததையும் ஈடு செய்தது.
பிரெஞ்சு நாடு முழுவதுமே விவசாயத்தால் ஈர்க்கப்பட்டிருந்தது; ஆனால் வித்தியாசமான வெவ்வேறு வழிகளில் ஈர்க்கப்பட்டிருந்தது. அரசவையில் அதைப் பற்றிப் பேசுவது நாகரிகமான பொழுது போக்காக இருந்தது; வெர்சேய் அரண்மனைத் தோட்டத்தில் மாதிரிப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. மாகாணங்களில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கென்று சில சங்கங்கள் அமைக்கப்பட்டன; அவை “ஆங்கில முறைகளை”, அதாவது அதிக உற்பத்தியைக் கொடுக்கின்ற விவசாய முறைகளைப் புகுத்துவதற்கு முயற்சி செய்தன. வேளாண்மையியல் சம்பந்தமான கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின.
இத்தகைய நிலைமைகளில் கெனேயின் கருத்துக்கள் – விவசாயத்தில் அவர் கொண்டிருந்த அக்கறை வேறு வகையானது என்ற போதிலும் – சிலரிடம் ஆர்வத்தைத் தூண்டின. கெனேயும் அவருடைய மரபினரும் பொருளாதாரத்தில் பயனுள்ள ஒரே துறை விவசாயமே என்ற கருத்தைத் தமக்கு அடிப்படையாகக் கொண்டனர்; நிலப்பிரபுத்துவ எதிர்ப்புத் தன்மையைக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பட்டியலைத் தயாரித்தனர். பிற்காலத்தில் டியுர்கோ இந்த சீர்திருத்தங்களை அமுல்படுத்த முயற்சி செய்தார். புரட்சி அவற்றில் பெரும்பாலானவற்றை அமுலாக்கியது.
டியுர்கோ
டிட்ரோவின் தலைமையிலிருந்த அறிவியக்கவாதிகளின் முக்கியமான உள்மையப் பகுதியாக இருந்தவர்களோடு ஒப்பிடும் பொழுது அடிப்படையாகவே கெனேயும் அவரைப் பின்பற்றியவர்களும் புரட்சி உணர்வு, ஜனநாயகத்தன்மை ஆகியவற்றில் குறைந்தவர்களே; எனவே பிற்காலத்தில் கற்பனா சோஷலிஸ்டுகளைத் தோற்றுவித்த அதன் இடது சாரி அணியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு வரலாற்றாசிரியரான டெ டாக்குவில் எழுதியிருப்பது போல, அவர்கள் ”அமைதியான, நிதானமான மனோபாவம் கொண்டவர்கள், வசதியானவர்கள், நேர்மையான அதிகாரிகள், திறமைமிக்க நிர்வாகிகள்…..”(2)அந்தக் காலத்தில் பிரான்சில் பேச்சுக்கலை என்பது பாஸ்டிலிக்குப் போய்ச் சேர்ந்து விடாமல் எல்லாவற்றையும் சொல்லத் தெரிந்திருப்பது என்று ஒருவர் வேடிக்கையாகச் சொன்னார். அதிகத் தீவிரமான உற்சாகத்தைக் கொண்டிருந்த மிராபோ கூட இந்த மூதுரையைப் பின்பற்றினார். அவர் கைது செய்யப்பட்டுச் சில நாட்கள் சிறை வாசம் செய்ய நேர்ந்தது உண்மைதான். ஆனால் செல்வாக் குள்ளவரான டாக்டர் கெனே அவரை உடனே சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். அந்தக் குறுகிய சிறைவாசத்தின் பலனாக அவருடைய புகழ் அதிகரித்தது; அதன் பிறகு அவர் கவனமாக நடந்து கொண்டார்.
ஆனால் பிஸியோகிராட்டுகளின் நடவடிக்கைகள் யதார்த்த ரீதியில் அதிகப் புரட்சிகரமாகவே இருந்தபடியால் “பழைய அமைப்பின்” அடிப்படைகளைத் தகர்த்தன. உதாரணமாக, “பிரெஞ்சுப் புரட்சியின் உடனடித் தந்தையர்களில் ஒருவராக டியுர்கோ இருந்தார்” (3) என்று மார்க்ஸ் உபரி மதிப்புத் தத்துவங்கள் என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1) பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1979, பக்கங்கள் 31-32 பார்க்க.
(2) A. de Tocqueville, L’ancien regime et la revolution, Paris, 1856, p. 265.
(3)K. Marx, Theories of Surplus-Value, Part I, p. 344
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983