Monday, August 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 320

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !

1

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் மோடியின் தேசிய கல்விக் கொள்கை 2019 – ஐ எதிர்த்து போராட்டம் !

ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, பேராசிரியர்களே !

மோடி தற்போது கொண்டுவந்திருக்கும் தேசிய கல்வி கொள்கை 2019 இது பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை பறிக்க கூடிய வகையில் உள்ளது. இதனை, எதிர்த்து தமிழகம் முழுக்க கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர் அமைப்புகள் என தொடர்ச்சியாக கருத்தரங்கம் – அரங்க கூட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் மோடி அரசு கல்வி கொள்கை சம்பந்தமாக இரகசிய கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதையும் பல்வேறு அமைப்புகள் எதிர்த்து போராடி தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் இதனை ஒவ்வொன்றாக மறைமுகமா நடைமுறைப்படுத்தி வருகிறது அரசு. அதில் நீட், கேட் எக்ஸிட் ,TANCET, NTA என பல்வேறு தேசிய தகுதித் தேர்வு வைத்து அதனை நடைமுறையில் படிப்படியாக கொண்டுவருவது.

மேலும் தற்போது இந்திய பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கல்விக் கொள்கையை அமுல் படுத்தும் விதமாக 400 கோடி ஒதுக்கியது. ஆகிய இந்த நடவடிக்கைகள் ஒட்டுமொத்த இந்திய மாணவர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.

ஏனென்றால் ஜூலை 31 வரை கருத்து சொல்லலாம் என சொல்லிவிட்டு, நடைமுறையிலோ இதனை அமுல்படுத்தி பார்ப்பன சூழ்ச்சி புத்தியை காட்டி வருகிறது ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல்.

கல்வியை முழுவதும் தனியார்மயப்படுத்தவும், காவிமயப்படுத்தக் கூடிய வகையில் இருக்கிறது தே.க.கொ 2019. இட ஒதுக்கீடு, உதவித்தொகை என எல்லாவற்றையும் ஒழித்து கட்டக்கூடிய வகையிலும்; 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைத்து ஏழை மாணவர்களை வெளியே தூக்கி எறியவும் போகிறது.

படிக்க :
♦ திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்

பல்கலைக்கழக  மானியக் குழுவை கலைத்துவிட்டு, உயர்கல்வி ஆணையம் அமைகிறது; இதன் தலைவர் பிரதமர் மோடி ஆவார். கல்வியாளர்களுக்கு இதில் இடமில்லை, இவ்வளவு ஆபத்து நிறைந்த நயவஞ்சகமான கல்விக்கொள்கை கூடாது.

இதனை வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கை 2019-யை நிராகரிக்க வேண்டும் என்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் கடந்த 24.07.2019 அன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை பேராசிரியர்களும் ஆதரித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் தொடர் போராட்டம் நடக்கும் என அறிவித்து மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110

நூல் அறிமுகம் : ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்

”பண்ணையடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி” என்கிற தலைப்பில்1993-ல் வெளியான இந்நூல், ”ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்” என்ற தலைப்பில் நான்காம் பதிப்பாக கடந்த டிசம்பர் 2010-ல்  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தென்சென்னையுடன் இணைந்து சவுத்விஷன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

”… அன்றைய ஆரம்ப நாட்களில் சாட்டையடி பெற்று சாணிப்பால் குடிக்கும் கொடுமைகளையே வாழ்வாய்ச் சுவீகரித்துக் கொண்டிருந்த தஞ்சை மாவட்ட மக்களுக்கு ஒளிக்கீற்றாய் – உற்றத் துணைவனாய் – நின்று வழிகாட்டி உடன் நடந்த செங்கொடி இயக்கத்தின் சரிதம்தான் அந்த இயக்கத்தின் ஊனோடும் உயிரோடும் கலந்து நின்ற தோழர் பி.எஸ். தனுஷ்கோடியின் வாழ்க்கைச் சரிதமாகும். ஆகவே தனுஷ்கோடி அவர்களை அறிந்து கொள்வதற்கு மட்டுமின்றி அன்றைய தஞ்சை மாவட்ட மக்கள் வாழ்வையும் – செங்கொடி இயக்கத்தின் அந்த ஆரம்ப நாட்களையும் அறிந்து கொள்ள வகை செய்கிறது.

குறிப்பாக பொருளாதார ரீதியாக மட்டுமின்றி சமூக ரீதியாகவும் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தமிழகத்தில் பற்பல இயக்கங்களால் நடத்தப்பட்ட போராட்ட வரலாற்றில் செங்கொடி இயக்கம் வகித்திட்ட பங்கு எவ்வளவு மகத்தானது என்பதை அறிந்துகொள்ள இந்த நூல் பேருதவியாய் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக அன்றைய போராட்ட அனுபவங்கள் – இன்னும் தொடரும் இன்றைய கொடுமைகளை எதிர்த்திடும் போராட்டத்திற்கு உரமூட்டட்டும்.” (நூலின் அறிமுக உரையில் கி.வரதராசன்)

பண்ணையடிமை முறையானது எத்தகைய கொடூரத்தன்மை வாய்ந்தது என்பதை விளக்க வேண்டுமானால் அந்த அடிமைகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை முறைகளை ஆராய்வதே போதுமானதாகவிருக்கும்.

தினமும் இரவில், நிலப்பிரபுவிடம் அன்றைய தினம் பகலில் நடைபெற்ற வேலைகள் விவரிக்கப்படும். அத்துடன் யார் வேலைக்கு தாமதமாக வந்தார்கள், யார் எதிர்த்துப் பேசினார்கள், யார் வேகமாக வேலை செய்யாததால் தாமதம் ஏற்பட்டது போன்றவைகளும் சொல்லப்படும். சம்பந்தப்பட்ட ஆளை – அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி – அடுத்த நாள் பண்ணை வீட்டுக்கு கொண்டு வரும்படி நிலப்பிரபு உத்தரவிடுவான்.

அடுத்த நாள் தலையாரி போய் சம்பந்தப்பட்டவரை பண்ணை வீட்டிற்கு கொண்டு வருவார். அந்த நபர் பறையராக இருந்தால் பள்ளரைக் கூப்பிட்டு மாட்டுக் கொட்டடித்தூணில் கட்டச் சொல்லுவார்கள். பள்ளராகவிருந்தால் பறையரைக் கொண்டு கட்டச் சொல்லுவார்கள். அவர் படையாச்சி அல்லது தேவராக இருந்தால் பள்ளரையும், பறையரையும் விட்டு கட்டச் சொல்லி புளிய விளாரால், சாட்டையால் அடிப்பார்கள். சாட்டைக்கு ஐந்து பிரிசாட்டை என்று பெயர். ஐந்து பிரியை முறுக்கேற்றி வைத்திருப்பார்கள். சாட்டை முனையில் அந்தப் பிரியை விலக்கி விட்டு கூரான கூழாங்கல்லைச் சொருகி வைத்திருப்பார்கள்.

சம்பந்தப்பட்ட நபரை சாட்டையால் அடித்து இழுக்கும் பொழுது அது ரம்பம் போல் கரகரவென்று அடித்து தோலை இழுத்து வரும். ரத்தம் பீறிட்டோடும். அடிப்பவன் கை சோர்ந்து போகும் வரை அடிப்பான். பின் தலையாரி அடிப்பான். தலையாரி சரியாக அடிக்காவிட்டால், நிலப்பிரபு அந்தச் சாட்டையை வாங்கி தலையாரியை அடிப்பான். அதன் பின் அடிவாங்கி ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் தொழிலாளியை மிருகம் போல் அடிப்பான்,

அடி வாங்குபவன் அந்த வேதனை பொறுக்க மாட்டாமல் தன் முகத்தில் துப்பிவிடக்கூடாது என்பதாலும், உணர்ச்சி வசப்பட்டு “என்னை சாகடி” என்று எதிர்த்துப் பேசிவிடுவான் என்பதாலும் துணியை அவன் வாயில் அடைத்து வைத்து கட்டியிருப்பார்கள். வெறிதீர அடித்து முடித்த பின் அடிபட்டவனை சாக்கு, வைக்கோலில் போட்டு படுக்க வைப்பார்கள். பண்ணை வீட்டு ரசம் சோறு போடுவார்கள். அடிபட்டவன் தன் ரத்தக் காயத்துக்கு மருந்தாக சாணி உருண்டையை வைக்கோல் தீயில் போட்டு ஒத்தடம் கொடுத்துக் கொள்ள வேண்டும். யாரும் உதவி செய்ய இருக்கக்கூடாது. வீட்டிலிருந்து சோறு கொடுக்கக்கூடாது. ஆனால் அடிபட்டுக் கிடக்கும் நாளுக்கு வேலை செய்ததாக கணக்குப் போடப்பட்டு கூலி கொடுக்கப்படும்.

படிக்க:
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !
இந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கை !

வேலைக்கு தாமதமாக வரும் பெண்கள் பழைய சாக்கையோ அல்லது கிழிந்த துணியையோ தொடையைச் சுற்றி கட்டியிருப்பார்கள். பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்படும் அந்தப் பெண்ணை அடிக்க தலையாரி கையில் புளிய விளார் கொடுக்கப்படும். புளிய விளார் முதல் நாளே மரத்திலிருந்து பறிக்கப்பட்டு நெருப்பில் வாட்டப்பட்டு சாட்டையாக இருக்கும்.

‘சுளீர்,’ ‘சுளீர் என்று சாட்டையடி விழுந்து அந்தப் பெண் கதறுவாள். ஆனால் தலையாரி அடிப்பதை நிறுத்தக் கூடாது. இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் அந்தத் தலையாரி என்பவன் அந்தப் பெண்ணின் அப்பனாகவோ, அண்ணனாகவோ, சிற்றப்பனாகவோ, மாமனாகவோ, உறவினனாகவோ இருக்கலாம். ஆனால் அவன் தன் வேதனையை வெளிப்படுத்தக்கூடாது. சரியாக அடிக்கவில்லையென்றால் அவனுக்கும் அதே அடி கிடைக்கும்.

அந்தப் பெண்ணின் உடலிலிருந்து ரத்தம் கொட்டும்வரை அடித்த பின்புதான் அது நிறுத்தப்படும். ரத்தம் சொட்டச் சொட்ட அந்தப் பெண் அழுது கொண்டே நடக்க வேண்டும். அந்தப் பெண்ணுக்கு காயம் இருக்கும்வரை பண்ணை வீட்டில் ரசம் சோறு கிடைக்கும். வீட்டிற்கும் துணியில் கட்டிக் கொண்டு போகலாம்.

ஆணோ, பெண்ணோ அடிபடும்பொழுது யாராவது அவர்களுக்கு பரிந்து பேசினாலோ, அடிக்கவேண்டாம் என்று கெஞ்சினாலோ அவர்களும் ஈவிரக்கமின்றி சாட்டையால் அடிக்கப்படுவார்கள்.

பண்ணைவேலையில் ஏற்படும் ‘தவறுகளுக்கு மட்டும் இந்தத் தண்டனை என்பதல்ல, கிராமத்திற்குள் ஒருவருக்கொருவர் ஏற்படும் சச்சரவுகளும் நிலப்பிரபுவிடம் கொண்டுவரப்பட்டு அதற்கும் இத்தகைய தண்டனை உண்டு.

பண்ணையடிமைகளுக்கு உலகில் வேறெந்தப் பகுதியிலும் தரப்படாத ஒரு ஈனத்தனமான தண்டனை தஞ்சை மாவட்டத்தில் அன்று தரப்பட்டது. அதுதான் சாணிப்பால் குடிக்க வேண்டும் என்ற தண்டனையாகும். மாட்டுச் சாணத்தை மண்குடத்திலிட்டு தண்ணீரை ஊற்றி கரைப்பார்கள். பின்பு அதை துணியால் வடிகட்டி, வடிகட்டப்பட்ட நீரை, தண்டனை விதிக்கப்பட்ட பண்ணயடிமை குடித்தே தீர வேண்டுமென்று நிலப்பிரபு உத்தரவிடுவார். அது மனிதன் செய்யக் கூடிய காரியமா? பண்ணையடிமை தயங்குவான். ஈவிரக்கமின்றி சவுக்கடி அவன் உடல் மீது விழும் வேதனை பொறுக்கமாட்டாமல் சாணிப்பால் என்றழைக்கப்பட்ட அந்த சாணிக்கரைசலை முழுங்குவான். அதன் விளைவு பல நாட்களுக்கு அவனை பாதித்துவிடும், பல சமயங்களில் சவுக்கடி தண்டனையும் சாணிப்பால் தண்டனையும் ஒரு சேர கொடுக்கப்படும். (நூலிலிருந்து பக்.31-33)

நூல் : ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்
ஆசிரியர் : என்.ராமகிருஷ்ணன்.

வெளியீடு : தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தென்சென்னையுடன் இணைந்து சவுத்விஷன்.
132, (புதிய எண் 251), அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 600 086.
மின்னஞ்சல் : southvisionbalaji@gmail.com

பக்கங்கள்: 96
விலை: ரூ 30.00

இணையத்தில் வாங்க : marinabooks

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! – கடலூரில் கருத்தரங்கம்

0

மோடியின் தேசிய கல்விக் கொள்கை 2019-ஐ முறியடிப்போம் !

  • 3, 5, 8 -ஆம் வகுப்புகளுக்கும் தேசிய அளவிலான பொதுத் தேர்வாம் !
  • இது ஏழை, கிராமப்புற மாணவர்களை வடிகட்டும் சதித்திட்டம் !
  • ஆரம்பக் கல்வி முதலே மும்மொழித் திட்டம் கட்டாயம் !
  • தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தேசிய இனங்களின் மொழியை ஒழித்துக்கட்ட இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு !

அரங்கக் கூட்டம்

நாள் : ஜூலை 30, மாலை 4:00 மணி
இடம் : டவுன்ஹால், கடலூர்.

தலைமை :

தோழர். மணியரசன்
மாவட்டச் செயலாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம்.

கருத்துரை :

முனைவர். ஜானகி. இராஜா
மாநில செயலாளர்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம்.

பேராசிரியர் முனைவர். இளவரசன்

முனைவர். க.ரமேஷ்
துணை ஒருங்கிணைப்பாளர்
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு CCCE . சென்னை.

பேராசிரியர் முனைவர். கு.நிர்மல் குமார்
நுண்ணுயிரியல் துறைத் தலைவர்.
பெரியார் அரசு கலை கல்லூரி, கடலூர்.

தோழர். த.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

நன்றியுரை :

தோழர். பால்ராஜ்

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110

கண்டிப்புகளும் தண்டனைகளும் குழந்தைகளைத் திருத்துமா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 12

ண்டிப்புகளும் தண்டனைகளும் குழந்தைகள் மத்தியில் அதிகம் நிலவினால் எப்படியிருக்கும்? கட்டுப்பாடு அதிகமாகும், தப்புகள் குறையுமா? குழந்தைகளிடம் மனச்சாட்சியும் பொறுப்புணர்வும் கூடுமோ? இல்லை, இப்படி நடக்காதென்றே எனக்குத் தோன்றுகிறது. அனேகமாக இதற்கு மாறாக நடக்கக் கூடும். அச்சுறுத்தப்பட்ட குழந்தைகள் ஒழுங்காக நடந்து கொள்வார்கள், ஆனால் யாரைக் கண்டெல்லாம் அவர்கள் அஞ்சுகின்றார்களோ அவர்களுடனெல்லாம் பூசல் மனப்பாங்கில் இருப்பார்கள்; பரஸ்பரம் ஒருவர்பால் ஒருவர் கடுமையாக நடப்பார்கள்; பிறர் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் உணர்வு, மென்மை, உதவும் மனப்பாங்கு முதலியன குறையும்” என்று நான் சொல்லும்போது இப்படிப்பட்ட நிர்ப்பந்தங்களுக்கு மாறாக வேறொரு சூழல் தோற்றுவிக்கப்படலாம் என்பதை மனதில் இருத்தியே இப்படிக் கூறுகிறேன்.

அதில் குழந்தையின் மனச்சாட்சியை தட்டியெழுப்பி, உணர்வுப் பூர்வமான “நான்” எனும் உணர்வை வளரச் செய்து, இரக்கம், அன்பு, பிறர்க்கு செவிமடுக்கும் உணர்வு போன்றவற்றை வளர்க்கும் அக்கறை மேலோங்கியிருக்கும். நிச்சயமாக, ஒரு தனி நபரின் குண நலன்கள் இவற்றுடன் நின்று விடுவதில்லை : அத்தனிநபர் இன்னமும் இறுதியானவராக, செயல்முனைப்பானவராக, ஒரு இலட்சிய அடிப்படையை உடையவராக இருக்க வேண்டும். இந்த ஆசிரியர் பாதையில் செல்லத்தான் நான் விரும்புகிறேன். இதில் பல விஷயங்கள் எனக்குத் தெரியாது, ஏனெனில், இப்பாதையில் இதுவரை யாரும் சென்றதில்லை, எனவே, இதில் சில ஆசிரியர் தவறுகளைச் செய்யும் அபாயத்தை மேற்கொள்கிறேன்.

குழந்தைகளின் முரட்டுத்தனத்தைக் கண்டுதான் நான் எல்லாவற்றிற்கும் மேலாக அஞ்சுகிறேன். சில சமயங்களில் அவர்கள் ஒருவர்பால் ஒருவர் எப்படி இரக்கமற்று நடந்து கொள்கின்றனர்! அதிலும் குறிப்பாக ஒரு தனிப்பட்ட குழந்தைக்கு எதிராகப் பல குழந்தைகள் நிற்கும்போது எப்படியிருக்கும் தெரியுமா! ஒரு சிறுவன் வேண்டுமென்றே தப்பு செய்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம் (குழந்தைகள் எப்போதுமே காரண காரியங்களைப் பார்க்க மாட்டார்கள்). கவனக்குறைவான ஆசிரியர் குழந்தைகளைப் பார்த்துப் பின்வருமாறு கூறுவார்: “அவன் நம்மை எப்படி கஷ்டத்திற்கு உள்ளாக்கி விட்டான் பார்த்தீர்களா? அவனது செயலைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள்? அவனை எப்படித் தண்டிப்பது?”

குழந்தைகளின் மதிப்பீடுகளைக் கண்டு நான் பயப்படுகிறேன். ஏனெனில் இவர்களைப் பொறுத்தமட்டில், வேண்டுமென்றே மேசை விரிப்பின் மீது இங்க் பாட்டிலைக் கொட்டி சிறு கறையை ஏற்படுத்தியவனை விட தற்செயலாக, தெரியாமல் பெரும் கறையை ஏற்படுத்தியவன் அதிகம் குற்றம் செய்தவனாவான். அவன் கெட்டவன், கொடியவன், அவனுடன் நட்புக் கொள்ளக் கூடாது, அவனைப் பள்ளியிலிருந்து கூட விரட்டலாம் என்றெல்லாம் குழந்தைகள் கூறுவார்கள். கவனக்குறைவான ஆசிரியர் இப்படிச் செய்து இதை நியாயப்படுத்தக் கூட செய்வார், கூட்டு வளர்ப்பு என்று இதற்குப் பெயரிடுவார். ஆனால் இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்: இது கூட்டு வளர்ப்பா, கூட்டாக குழந்தையை இழிவுபடுத்தி அழித்தொழிப்பதா?

இல்லை, நண்பர்களின் மெளனமான இரக்கத்தைப் பள்ளிச் சிறுவன் உணருமாறு செய்வதும், அவன் செய்த காரியத்தைப் பற்றிய பொதுவான கருத்தை அவனை நோக்கி தனிப்பட்ட முறையில் கூறாமல் பொதுவாகக் கூறி அவன் அதை உணர உதவுவதும், தான் உடைத்த பூந்தொட்டிக்காக, தன் குற்றத்தால் நண்பனின் காலில் ஏற்பட்ட காயத்திற்காக அவன் வருந்துவதும் நல்லது. இதைத்தான் என்னால் கூட்டு வளர்ப்பு என்று ஏற்றுக் கொள்ள முடியும்.

என் வகுப்பில் இன்னமும் கூட்டு இல்லை. இக்குழந்தைகள் இன்று இருபதாவது தடவையாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு மற்ற அனைவரின் பெயர்கள் கூட முழுமையாகத் தெரியாது, இவர்கள் இன்னமும் எல்லோருடனும் நட்புக் கொள்ளவில்லை, பொது நோக்கத்தை இன்னமும் இவர்கள் உணரவில்லை. கூட்டுணர்வு என்பது கூட்டான, செயல் முனைப்பான நடவடிக்கையில்தான் பிறக்கிறது. நாங்கள் இப்போதுதான் இந்நடவடிக்கையையே துவக்குகின்றோம். எனவே, இவர்களை ஒருவர்பால் ஒருவர் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள வழிகோலுவது சிறந்ததல்ல, அன்பின் அடிப்படையில் இவர்கள் நெருங்கி வரும்படி செய்ய வேண்டுமே தவிர முரட்டுத்தனமான நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அல்ல….

…இதோ அவன் உடைந்து போன பூந்தொட்டியின் முன் நின்று கொண்டிருக்கிறான், மண் தரையில் சிந்திக்கிடக்கிறது, செடி கீழே கிடக்கிறது. கசப்பானதொரு காட்சி! நான் திட்ட வாய்திறந்தாலே போதும், குழந்தைகள் அவன் மீது பாய்ந்து விடுவார்கள். எனது சிறு ஏளனப் புன்னகை போதும், குழந்தைகள் தம் ஏளனத்தால் அவனை அழித்தே விடுவார்கள். ஆனால் இப்படிச் செய்யக்கூடாது. மெளனமான இரக்கம், அக்கறை பற்றிய ஒரு சில பாடங்களை நான் அவர்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறேன். நூற்றுக் கணக்கான இடைவேளைகளில் இன்னமும் இதே போன்ற பிரச்சினைகளை நான் பன்முறை தீர்க்க வேண்டியிருக்குமென எண்ணுகிறேன். நான் செடியைக் குனிந்து எடுக்கிறேன்.

படிக்க:
சீர்காழி போலீசின் கிரிமினல்தனம் : விவசாயிகளுக்காகப் போராடினால் ரவுடிப்பட்டம் !
கழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் !

“இப்படிச் செய்யலாமா, யார் இதைச் செய்தது? இப்போது செடியைக் காப்பாற்றுவது முக்கியம்!” குழந்தைகள் இரைந்து கிடப்பவற்றை அள்ளுகின்றனர்.

“நமது வாளியை எடுத்து வாருங்கள். நாளை வரை செடியை அதில் வைத்திருப்போம்.”

செடியை வாளியில் வைக்கின்றோம்.

““பார்த்தீர்களா, உடைந்த தண்டிலிருந்து எப்படி இரத்தம் வருகிறது. இந்த வெள்ளைத் திரவம்தான் இதன் ரத்தம்!…”

“இது ஒரு மூலிகைச் செடி என்று அம்மா சொல்லியிருக்கிறார்” என்று நாத்தோ சொல்கிறான்.

“தண்டு முறிந்த இடத்தில் அதற்கு வலிக்குமா?”

நான்: “அதற்கு மட்டும் பேச முடிந்தால் அது என்ன சொல்லும்?”

“என் மீது பாவமாயில்லையா?” என்று சொல்லும்.”

“ஏன் ஜன்னல் அருகேயிருந்து கீழே தள்ளினாய்? எச்சரிக்கையாயிருக்க வேண்டும்” என்று சொல்லும்.”

“நான் உங்களுக்கு இனி மருந்துச் செடியாக இருக்க மாட்டேன்” என்று கோபம் கொண்டு சொல்லும்.”

“இல்லை, அது அப்படி சொல்லாது, அது அன்பான செடி.”

நான்: “நாளை பூந்தொட்டி கொண்டு வந்து என்னை அதில் நடுங்கள். விரைவில் எனக்கு சரியாகும்படிப் பராமரியுங்கள்” என்றும் சொல்லும்.”

“அதற்குத் தேவையான பூந்தொட்டியையும் மண்ணையும் நான் கொண்டு வருவேன்.”

“நானும் தொட்டியைக் கொண்டு வருவேன்.”

இதோ மணி அடித்தாகி விட்டது. தரை சுத்தப்படுத்தப் பட்டு விட்டது. செடி வாளியில் உள்ளது. நாளை அதை வேறொரு தொட்டியில் நடுவோம் – அவன் தான் ஒரு தொட்டியையும் மண்ணையும் கொண்டு வருவதாக உறுதி அளித்துள்ளானே. இப்போது வகுப்பறைக்குள் வர வேண்டும்.

“சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவிலிருக்கட்டும்.”

குழந்தைகள் வகுப்பறைக்குள் வந்து கொண்டிருக்கையிலேயே ஒரு வாக்கியத்தைப் பன்முறை திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அப்போது தான் இது மறக்காது, ஏனெனில் எனக்கு ஒரு முது மொழியாகும்:

வளர்ப்புப் பணிக்கு ஆரம்பமோ, முடிவோ, இடைவேளைகளோ இல்லை.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

ஷாங்காய் நகரைக் கட்டமைக்கும் சீனக் குடியேறி தொழிலாளர்கள் | படக் கட்டுரை

1

ஷாங்காய் நகரின் பணக்காரர்களுக்கான அலுவலக வளாகங்கள் மற்றும் ஆடம்பர குடியிருப்புகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள சீன குடியேறி தொழிலாளர்கள் தாங்கள் அங்கம் வகிக்கும் திட்டங்கள் குறித்த விளம்பர பதாகைகள் முன் நிற்பதை படமாக்கியிருக்கிறார் புகைப்படக்காரர் ஜோனதன் பிரவுனிங்.

ஷாங்காயின் மிக வளமான ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு பகுதியான ஷின்சியான்டி-ல் ஒரு ஆடம்பரக் குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழிலாளி, வெளியே வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகை அருகே மதிய உணவை உண்கிறார்.

அன்குய்-யிலிருந்து குடியேறிய ஸு தபெங், லிஃப்ட் இன்ஜினியராகப் பணியாற்றுகிறார். ஒப்பீட்டளவில் நல்ல ஊதியமாக இந்திய மதிப்பில் மாதம் ரூ. 50,000 (¥5,000) பெறும் இவர், வான்கே ஸுகுய் வளர்ச்சி மையத்தின் சுவரொட்டி முன் நிற்கிறார்.

ஜியாங்சி-யிலிருந்து வந்திருக்கும் இவர் சங்ஃபெங் வளர்ச்சி மையத்தில் பெயிண்டராக பணியாற்றுகிறார். நாள் ஒன்றுக்கு 200 யுவான் சம்பாதிக்கிறார்.

தான் பணியாற்றும் இடத்தில் இருக்கும் ஆடம்பர விளம்பரப் பதாகையின் பின்னணியில், தள்ளுவண்டியில் கட்டுமானப் பொருட்களை இழுத்துச் செல்கிறார் இந்தத் தொழிலாளி.

கீழ் தள வெப்ப நிறுவியாகப் பணியாற்றும் இவர், அன்குய் மாகாணத்திலிருந்து வந்து சென்ஃபெங் வளர்ச்சி மையத்தில் பணியாற்றுகிறார். ஆண்டுக்கு ¥50,000 வருமானம் ஈட்டுகிறார் இவர்.

‘கச்சிதமான வாழ்க்கைக்கு சியர்ஸ் சொல்லுங்கள்’ என்கிற ஷின்சியான்டி ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரம். அங்கு பணியாற்றும் இந்தத் தொழிலாளி ஒரு இடைவேளையின்போது சிகரெட் புகைக்கிறார்.

ஹெனான் மாகாணத்திலிருந்து வந்திருக்கும் திரு. வாங், பொது தொழிலாளியாகவும் தூய்மைப் பணியாளராகவும் உள்ளார். சின்சுவா ரெட்ஸ்டார் லேண்ட்மார்க் என்ற கட்டுமான நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு ¥150 சம்பளம் பெறுகிறார் இவர்.

அன்ஹுய்-யிலிருந்து வந்திருக்கும் இந்தத் தொழிலாளி, தோட்ட வடிவமைப்பு மற்றும் புதிய மரங்களை நடும் பணி செய்கிறார். நாள் ஒன்றுக்கு இவருடைய ஊதியம் ¥100.


கலைமதி
நன்றி : த கார்டியன் 

தேசிய கல்விக் கொள்கை 2019  நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்

தேசிய கல்விக் கொள்கை 2019  நிராகரிப்போம் !

தேசிய கல்விக் கொள்கை 2019 (தே.க.கொ.) குறித்த ஒருநாள் தேசிய கருத்தரங்கை பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கம் 20.07.2019 அன்று வினோபா அரங்கம், சென்னையில் நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கிற்கு பேராசிரியர் வீ. அரசு தலைமை தாங்கினார். கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றத்தின் தலைமைக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஹரகோபால் சிறப்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 220 பேர் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கல்வியையொட்டி தேசிய கல்விக் கொள்கை முன்வைத்துள்ள பரிந்துரைகளையும் அதனால் உருவாகப் போகும் பாதிப்புகள் குறித்தும் ஆசிரியர் மூர்த்தி  விரிவாகப் பேசினார். இப்பரிந்துரைகள் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கே வழிவகை செய்யும் என்று குறிப்பிட்டார்.

பேராசிரியர் ஹரகோபால் சிறப்புரையாற்றினார். அவர் தேசிய கல்விக் கொள்கை அரசியல் அமைப்புச் சட்டம் கூறியவற்றிக்கு ஏதிராக உள்ளது, அமெரிக்க பல்கலைக்கழங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு தகுந்தாற் போல் மாற்றங்களை உயர்கல்வியில் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை தே.க. கொ. முன்வைத்துள்ளது எனக் கூறினார்.  உலக வர்த்தக் கழகத்தின் (WTO) ஒப்பந்தத்திற்கு தகுந்தவாறு இந்திய கல்விக் கட்டமைப்பை மாற்றுவதற்கான பரிந்துரைகளையே தே.க.கொ. முன்வைத்துள்ளது. எனவே அதை நிராகரிக்க வேண்டும் எனக் கூறினார்.

அடுத்து பேசிய பேராசிரியர் வீ. அரசு, தற்போதுள்ள உயர்கல்வி கட்டமைப்பைக் கலைத்து விட்டு ஒற்றை அதிகாரம் கொண்ட ராஷ்ட்ரிய சிக்சா ஆயோக் அமைப்பை உருவாக்குவது மற்றும் தரம் என்ற பெயரில் உயர்கல்வி நிறுவனங்களை வகை பிரிப்பது போன்ற பரிந்துரைகளின் நோக்கங்களைப் பற்றி விரிவாகப் பேசினார். உயர்கல்வி மீதான ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மோடி தலைமையிலான சிறு குழுவிடம் கொண்டு செல்கிறார்கள். இதன் மூலம் RSS மொத்த உயர்கல்வியையும் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளாகக் கூறினார்.

படிக்க:
தேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் ! கருத்தரங்கம் | Live Streaming
♦ தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு – செய்தி – படங்கள்

பேராசிரியர் கருணானந்தன் தே.க.கொ முன்வைக்கின்ற  ஹிந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பைப் பற்றி விரிவாகப் பேசினார். பேராசிரியர் கதிரவன் மருத்துவம், விவசாயம், பொறியியல் மற்றும் சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகள் பற்றி தே.க.கொ. கூறியுள்ள பரிந்துரைகளையும் அதனால் உருவாகும் பாதிப்புகள் பற்றியும் விரிவாகப் பேசினார். அடுத்து பேசிய மருத்துவர் எழிலன் கடந்த எழுபது ஆண்டுகாலமாக  இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக் கொள்கையினால் தமிழ்நாடு பெற்றுவந்த பலன்களை தே.க.கொ.-ன் பரிந்துரைகள் எவ்வாறு தகர்த்தெறியப்போகிறது என்பதை  விரிவாகப் பேசினார். முதலாளிகளின் லாபத்திற்காக பெரும்பான்மை மக்களை  ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை தொடர்ந்து வடிகட்டுவதே தே. க. கொ. நோக்கம் என்பதை உதாரணங்களோடும் புள்ளிவிவரங்களோடும் விளக்கினார்.

பேராசிரியர் அமலநாதன் தே.க.கொ.-யை மக்களிடம் கொண்டு செல்வதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அவசியத்தைப் பற்றியும் பேராசிரியர் முருகானந்தம்  உடல் ஊனமுற்ற மாணவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றி தே.க.கொ. புறக்கணிப்பதைப் பற்றியும், முனைவர் ரமேஷ் இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு கல்வி முதலாளிகளின் நலன்களுக்காக எவ்வாறு இந்திய கல்விச் சந்தை உலக சந்தையோடு இணைக்கப்படுவதற்கான பரிந்துரைகளை தே.க.கொ. முன் வைத்துள்ளது என்றும் விளக்கிப் பேசினர்.

 

 

இறுதியாக நீதியரசர் ஹரிபரந்தாமன் நிரைவுரையாற்றினார்.  கல்வி மீதான மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதற்கான அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டமே வழங்கியுள்ளது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டாலும் என்ட்ரி 66-ன் மூலம் கல்வி நிறுவனங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். எனவே நமக்கான கல்வி உரிமைகளை பெற இச்சட்டங்களை மாற்றுவதற்கான போராட்டங்கள் முக்கியம் என விரிவாக பேசினார்.

அனைத்து கருத்துரையாளர்களும் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும் என  வலியுறுத்தி பேசினார். பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை பறிக்கின்ற தேசிய கல்விக்கொள்கை 2019-ஐ அனுமதிக்க கூடாது. முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கான கல்விக் கொள்கையை பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஆதரித்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கையெழுத்திட்டனர்.

தகவல் :
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
(Co-ordination Committee for Common Education)
சென்னை. தொடர்புக்கு : 94443 80211, 72993 61319

திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !

திருச்சி தூய வளனார் கல்லூரியில் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், மோடி அரசுக்கு காவடி தூக்கும் தமிழக அரசு சதித்தனமாக – ரகசியமாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் ஒன்று ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது.

தூய வளனார் கல்லூரிக்கு விடுமுறை அளித்துவிட்டு, கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியாமல் ஊடகங்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என எவருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக தேசிய கல்விக்கொள்கை 2019-க்கான கலந்தாய்வு மற்றும் கருத்துகேட்பு கூட்டம் நடத்தினர்.

அதன் தகவல் அறிந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF), AISF, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்பினர் சென்று விசாரித்தனர். முதலில் மாணவர்களுக்கு அனுமதி உண்டு என்றனர். பின்னர் மாணவர் அமைப்புகள் வந்ததை அறிந்த கல்விதுறையினர் “பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் அனுமதியில்லை. இது துறைசார்ந்த கலந்தாய்வுக் கூட்டம். உங்களுக்கு அனுமதி இல்லை ” என்றனர்.

உள்ளுர் போலீசு அதிகாரிகளுக்கும் என்ன கூட்டம் நடத்துகிறார்கள் எனத் தெரியாமல் “விசாரித்துச் சொல்கிறோம், பிரச்சினை செய்யாதீர்கள்” எனக் கூறியவர்கள்  அதிகாரிகளின் பொய்யையே மீண்டும் கூறினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிலையில் உள்ளே இருந்த நமது தோழர்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கையேட்டில் கலந்தாய்வு மற்றும் கருத்துக்கேட்பு என உள்ளது என்ற தகவலைத் தெரிவித்தனர். இதற்கிடையில் கல்லூரிக்கு வெளியே பிற அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு த.பெ.தி.க, SFI, DYFI, ம.க.இ.க, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் வந்து சேர்ந்தனர்.

போலீசு நின்றுக்கொண்டு உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். ஆனால் உள்ளே விடவில்லை என்றால் சாலை மறியல் செய்வோம் என்றவுடன் வேறுவழியின்றி கல்லூரிக்குள்  செல்ல அனுமதித்தனர்.

அங்கும் கூட்ட அரங்கத்திற்குள் செல்லவிடாமல் வராண்டாவில் போலிசு நின்று கொண்டு தடுத்தனர். வாசலிலேயே அமர்ந்து “நடத்தாதே! நடத்தாதே! இரகசியக் கூட்டம் நடத்தாதே” என அனைவரும் முழக்கமிட்டனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அரங்கத்திற்கு உள்ளே கல்வி அதிகாரிகள் மும்முரமாக கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். நம்மைக் கைது செய்துவிட்டு அதிகாரிகள், “புதிய கல்வி கொள்கை 2019 கருத்துக்கேட்பு கூட்டம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேறிவிட்டதாக” நாடகமாடுவார்கள் விடக்கூடாது என முடிவு செய்து உள்ளே செல்வோம் என கூறிக்கொண்டே கூட்ட அரங்கத்திற்குள் சென்றார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜா.

(படம் – நன்றி : விகடன்)

“கூட்டத்தை நிறுத்துங்க, திருச்சி மக்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்? பேராசிரியர்களே ! பொதுமக்களே ! இந்தக் கூட்டமே சட்டவிரோதமானது. கருத்துகேட்பு என்று கூறிவிட்டு துறைசார்ந்த அறிஞர்கள், பொதுமக்கள் யாரும் இல்லாமல் திருட்டுத்தனமாக நடத்துகிறார்கள் எனவே அனைவரும் வெளிநடப்பு செய்யுங்கள்” என்றார்.  த.பெ.தி.க, SFI, DYFI, ம.க.இ.க, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல அமைப்புத் தோழர்களும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பேராசிரியர் நா.முத்துநிலவன் (த.மு.எ.க.ச) “திருச்சி மக்களின் பங்கேற்பு இல்லாமல் ஊடகங்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என எவருக்கும் அறிவிக்காமல் இப்படி கூட்டம் நடத்துவது முறையல்ல என்றும்,  இந்த தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரே தவறு என்றும்” அதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் அருமையாக விளக்கினார். சிலர் யோசித்தனர். சுயமரியாதையும் மக்களின் மீது அக்கறை கொண்ட பல பேராசிரியர்களும் வெளியேறினர்.

பேராசிரியர் நா.முத்துநிலவன் (த.மு.எ.க.ச), கருத்து கேட்புக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தி பேசினார். (படம் – நன்றி : விகடன்)

வேறு வழியின்றி அந்நிகழ்விற்கு தலைமைதாங்கிய மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் பொன். குமார் அவர்கள் பத்திரிகையாளர்களிடம்,  “இத்துடன் இந்தக் கூட்டம் நிறுத்தப்படுகிறது. நோட்புக்கில் போடப்பட்ட ‘தேசிய கல்விக்கொள்கை – 2019, கருத்துக் கேட்புப் பணிமனை’ என்பதை தவறுதலாக அச்சடித்துவிட்டோம். மேலும் பொதுமக்களுக்கு அறிவித்து விளம்பரம் செய்து பொதுவாக நடத்தப்படும் என அறிவித்தார். அதன் பிறகுதான் தோழர்கள் அரங்கிலிருந்து வெளியேறினர்.

தமிழக அரசு அதிகாரிகளின் துணையுடன் நடத்த இருந்த மோடியின் மக்கள் விரோத, மாணவர் விரோத தேசிய கல்விக்கொள்கை – 2019 கருத்து கேட்பு கூட்டத்தை ஜனநாயக சக்திகள், அமைப்புகள் இணைந்து முறியடித்துள்ளனர். இது அனைவரின் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு சிறு வெற்றி இது.

பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை பறித்து RSS சித்தாந்தத்தை புகுத்த நினைக்கும் தேசிய கல்விக் கொள்கை 2019-ஐ வீழ்த்த ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் மக்களும், ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைந்து எச்சரிக்கையுடன் போராட வேண்டும். பாசிசத்திற்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்பதே நம் அனைவரின் முன் உள்ள கடமையாக உள்ளது.

ரகசிய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலகம் (காணொளிகள்) :

 

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
திருச்சி. 99431 76246.

சீர்காழி போலீசின் கிரிமினல்தனம் : விவசாயிகளுக்காகப் போராடினால் ரவுடிப்பட்டம் !

விவசாயிகளுக்காகப் போராடிய தோழர் ரவிக்கு சீர்காழி புதுப்பட்டினம் போலீசு கொடுப்பதோ ரவுடிப்பட்டம்!

மக்கள் அதிகாரம் கண்டனம்!

25.07.2018

நாகை மாவட்டம், சீர்காழி வட்டார மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி அவர்களை சீர்காழி – புதுப்பட்டினம் போலீசு ரவுடிப் பட்டியலில் சேர்த்து இருக்கிறது. கடந்த 30 வருடங்களாக சீர்காழி விவசாயிகளுக்கு பிரச்சினை என்றால் எப்போதும் முன்னே நிற்கக்கூடிய தோழர் ரவியின் மீது 17-க்கும் மேற்பட்ட வழக்குகள் நாகை மாவட்ட போலீசு நிலையங்களில் மட்டுமே இருக்கின்றன.

தேர்தலுக்கு முந்தைய சில நாட்களுக்கு முன்னர் கூட விளைநிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய்கள் போடும் நாசகார வேலையை மக்களோடு சேர்ந்து தடுத்து நிறுத்தினார். காவிரி டெல்டாவின் முக்கியமான பகுதியான சீர்காழியை குறிவைத்து ஓ.என்.ஜி.சி வாய் பிளந்து நிற்கிறது. மக்களோ எதிர்த்து நிற்கிறார்கள். இந்த நிலையில் மக்கள் போராட்டத்தை நசுக்க போராளிகள் மீது பொய்வழக்குப் போட்டு அச்சுறுத்தி காவலில் வைக்க முயல்கிறது தமிழக அரசு.

படிக்க:
மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி
♦ தமிழகத்தை நாசமாக்காதே ! – திருவாரூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

கடந்த ஜூலை 17-ம் தேதி போராடுவோர் மீது பொய் வழக்குகளைப் போடும் போலீசைக் கண்டித்து சட்டமன்ற முற்றுகையை மக்கள் அதிகாரம் நடத்தியது. அதை சரியென்று நிரூபிக்கிறது சீர்காழி போலீசு! மாபியாக்களின் ஆட்சியில் போராளிகளுக்கு புனிதர் பட்டமா கொடுப்பார்கள்? பொய்வழக்குகளுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை!

எதிர்த்து நிற்போம்!

  • விவசாயிகளுக்காகப் போராடினால் சீர்காழி புதுப்பட்டினம் போலீசு கொடுப்பதோ ரவுடிப்பட்டம்!
  • அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் தொடர்ந்து விவசாயிகளுக்காகப் போராடுவோம்!

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321

சூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 15

ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும்.

“பிராமணனால் சூத்திரப் பெண்ணிற்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை.” (மனு அத். 9 க 155) என்பது மனுதர்ம சாஸ்திரம். இதனை அடுத்து, மற்றொன்று கூறப்பட்டுள்ளதையும் உற்று நோக்க வேண்டும்.

“பிராமணனுக்குச் சூத்திர மனைவியிடத்தில் பிறந்துள்ள புத்திரன் செய்யும் சிரார்த்தமானது பரலோக உபயோகமாகாததால், அத்தகைய பிள்ளை உயிரோடிருந்தாலும் பிணத்திற்கு ஒப்பாவான்” (மனு அத் 9. க. 178) என்று மனுதர்மம் கூறுகிறது.

இந்த மனுதர்ம நீதியே, இன்று ஆரியர் – திராவிடர் கலப்பு மணத்தைச் செல்லாமலடித்ததற்கு காரணம் ஆகும். இக்கருத்துக்களை வெளியிடும் ஆரிய சாஸ்திரங்களே, இன்று ஒரு பார்ப்பனரை மணம் புரிந்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்ற ஒரு திராவிட மாதைச் சோற்றுக்கின்றித் தவிக்க விட்டு விட்டன!

தந்தையின் கருமத்திற்கு உடையவனே புத்திரனாவான். இத்தகைய உரிமையுள்ள புத்திரனுக்குத்தான் தந்தையின் செல்வத்தில் உரிமையுண்டு. இம்மாதிரி கருமஞ் செய்யும் உரிமை பெண்களுக்கில்லாததினால்தான், அவர்களுக்குத் தந்தை சொத்தில் உரிமையில்லை. இக்கருத்துக்களை இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனாலேயே, இன்றும் நம் பெண் மக்கள் சமூகம், சொத்துரிமையின்றி அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இதுவும் ஆரியக் கொடுமையே.

மேலே நாம் எடுத்துக்காட்டிய மனுதர்மத்தில் சூத்திர மனைவியின் மகன் கருமஞ் செய்வதற்கு உரிமை படைத்தவன் அல்லன் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இக்கருத்தின் மீதுதான், சூத்திரமனைவியின் பிள்ளைக்கும் சொத்துரிமையில்லையென்பது மனுதர்மத்தில் எழுதப்பட்டுள்ளது.

இன்று அமைந்துள்ள இந்து சட்டமும் பெரும்பாலும் ஆரிய ஸ்மிருதிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவையே. ஆதலால், இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று, இப்பொழுது பெருங்கிளர்ச்சியும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.

ஒரு பார்ப்பனரல்லாதான், ஓர் ஆரியப் பெண்ணையோ அல்லது ஒரு திராவிடப் பெண்ணையோ மணந்து கொண்டாலும் சரி, மணக்காமல் சேர்த்து வைத்துக் கொண்டாலும் சரி, அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தந்தை சொத்தில் உரிமையுண்டு என்பது சட்டம். இச்சட்டப்படி பல தீர்ப்புகள் ஆகியிருக்கின்றன. ஆனால் பார்ப்பனன் மாத்திரம், மற்ற இனத்துப் பெண்ணிடம் பெற்ற பிள்ளைக்குச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டியதில்லையாம். என்ன அநீதி! இதுவா, திராவிடர் – ஆரியர் வேற்றுமை இல்லை என்பதற்கு அடையாளம்?

ஆரிய அநீதி என்றும் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு, 1939-ம் ஆண்டு நடைபெற்ற வேறொரு வழக்கையும் இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். ஒரு திராவிடர், ஒரு திராவிடப் பெண்ணை மூன்று மாதம் கருவுற்றிருக்கும்போதே தெரியாமல் மணந்து கொண்டார். பிறகு உண்மை வெளிப்பட்டதும் விவாக விடுதலைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால் நீதிபதி, சூத்திரர் விபச்சாரக் குற்றம் கற்பித்து மனைவியை விலக்க உரிமையில்லை என்று தீர்ப்பளித்துவிட்டார். இது ஆரியர் – திராவிடர் பேதமின்மையைக் காட்டுகிறதா?

இத்தகைய அநீதிகளை ஒழிப்பதற்காகத்தான் இன்று ஆரியர் – திராவிடர் கிளர்ச்சி நடைபெறுகிறது; ஆரியர்களின் ஆதிக்கம் ஒழிய வேண்டும்; ஆரியர்களின் அக்கிரமமான ஸ்மிருதிகள் அழிய வேண்டும்; அப்பொழுதுதான் இந்த நாட்டில் நாம் சம நீதியைக் காண முடியும்; உத்தியோகங்களில் திராவிடர்க்குக் கிடைக்க வேண்டிய சரியான பங்கு கிடைக்க வேண்டும் என்பது சமநீதி பெறுவதற்குத்தான்.

ஆரியர் – திராவிடர் வேற்றுமை புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும்? இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுகிறது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா?

உண்மையில் மேற்படி நீலா வெங்கட சுப்பம்மாள் என்னும் மாதின் வழக்கு, திராவிட சட்டதிட்டப்படி நீதிபதிகளால் விசாரணை செய்யப்பட்டிருக்குமானால், முடிவு வேறாக இருக்குமென்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் ஸ்மிருதிகளையும் வேதங்களையும் நம்பிக் கொண்டிருக்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் இத்தகைய தீர்ப்பைத்தான் கூறக்கூடும்.

இனியேனும் திராவிடர்கள் உண்மையை உணருவார்களா? ஆரியர் – திராவிடர் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும்? இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுகிறது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா?

‘பிராம்மணா போஜனப்பிரிய’ என்ற மொழியின் உண்மையை ஊரார் அறிவர். ஆரிய மதக்காரர் தம் இனத்தவர் பாடுபடாது பிழைக்க வழிவகுத்துக் கொண்டு வரதட்சணை காணிக்கை, சமாராதனை முதலியவற்றைச் செய்வது மோட்ச சாம்ராஜ்யத்துக்கு உதவும் என்று கற்பித்து விட்டனர். கள்ளமற்ற உள்ளத்தினரான திராவிட மக்கள், இந்த ஆரியப் பித்தலாட்டத்துக்கு இரையாகிப் பணத்தைப் பாழாக்கிக் கொள்கின்றனர். நம் இனத்தவர் ஒருவேளை உணவுக்கும் வழியின்றி வாடுவது பற்றிக் கண்ணெடுத்தும் பாராதவர்கள், எச்சில் இலைமீது பசியுடன் நாய் பாய, அதன் மீது அதிகப் பசியுடன் பாய்ந்து பருக்கையைத் தின்னும் பஞ்சைப் பராரிகளைப் பற்றிய பரிதாப உணர்ச்சி கொள்ளவில்லை. ‘பிராமணப் பிரீதி’ ‘தேவதா பிரீதி’ என்ற கற்பனையில் சொக்கிப் பிராமணர்களுக்கு வயிறு புடைக்கச் சந்தர்ப்பணை நடத்துவர். இன அன்போ , பகுத்தறிவோ இருந்தால் இது நடக்குமா? ஓர் இனம் பாடுபட்டு வதைகிறது; மற்றோர் இனம் நோகாமல் வாழ்கிறது; ஏய்த்துப் பிழைக்கிறது. இது இந்தக் காலத்திலே கிடையாது என்று இளித்தவாயர் கூறுவர்.

திருவல்லிக்கேணி உத்திராதிமடத்தில் பிருந்தாவனமாயிருக்கும் ஸ்ரீ சத்திய ஞானதீர்த்த ஸ்வாமிகளுக்கு விசேஷ அபிஷேக அலங்காராதிகள் செய்து தூப தீப நைவேத்தியம் செய்து, பிறகு 2000 பேருக்குப் பிராமண சந்தர்ப்பணை நடந்தது என்ற சேதி, “சுதேசமித்திரன்’’ 1941 பிப்ரவரி 11-ம் தேதி இதழில் இருக்கிறது. இது போல் செய்திகள் அடிக்கடி வெளிவருவதுண்டு.

அன்னமிடுவது மக்களின் கருணையைக் காட்டும் செயல் எனில், ஏன் பிராமணருக்கு மட்டும் இடுகின்றனர்? ஏழை எளியவர் எல்லோருக்கும் அன்னமிடுவோம் என்று ஏன் நடத்தவில்லை? ஏட்டிலே எழுதிவிட்டான் ஆரியன், பிராமணனுக்குத்தான் சமாராதனை நடத்த வேண்டும். அதுதான் பகவத் கடாட்சத்தைத் தரும் என்று, ஏமாந்த சோணகிரிகள், இன்னும் அதை நம்பி அழிகின்றனர்.

திராவிட நாடு திராவிடருக்கானால், பாடுபடாத பேர்வழிகளுக்குப் பருப்பும் பாயசமும், பாடுபடும் மக்களுக்குக் கம்புங் கூழும் கிடைக்கும் நிலையா இருக்கும்? ”உழைத்து வாழ, ஊரானை ஏய்க்காதே” என்பதன்றோ நீதியாக இருக்கும்? அந்தக் காலம் வந்தால் ஆரியன் வாழ்வு கெடுமே என்ற அச்சத்தினாலேயே திராவிட நாட்டுப் பிரிவினையை ஆரியர் எதிர்க்கின்றனர். ஊரை ஏய்த்து உண்டு கொழுக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

”பசியோ பசி” எனக் கதறும் மக்கள், பாடுபடாது வாழுபவர் இருக்கும் திக்கு நோக்கித் திரும்பினால், என்ன ஆகும்? அந்நாள் வருவது என்றோ ?

படிக்க:
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !
தகவல் அறியும் உரிமை சட்டத்தை ’ வெளிப்படையான ’ மோடி அரசு திருத்துவது ஏன் ?

அன்னியரான ஆரியன் ஆசாரங்களையும், மதக் கொள்கைகளையும் பண்டிகைகளையும் பின்பற்றுவதாலும், ஆரியரை உயர்ந்த வகுப்பினராகவும் குருக்களாகவும் ஒப்புக்கொள்வதாலும், ஆரியர்கள் மேனி தீமைகளுக்கெல்லாம் பொருள் கொடுத்து ஆரியர் பாதம் பணிவதாலும், ஆரிய ஆதிக்கத்திற்குட்பட்ட கோயில்களுக்குப் பாடுபட்டுத் தேடிய பணத்தைப் பகுத்தறிவில்லாமல் அள்ளிக் கொடுப்பதாலுமே, ஆரிய ஆதிக்கம் வலுக்கவும் திராவிட மக்கள் சிறுமை நிலை எய்தவும் நேரிட்டு விட்டது.

இதைப்பற்றிப் பேசியும் எழுதியும், வாயும், கையும் அலுத்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். அப்படி இருந்தும், தங்களின் சிறுமை நிலைக்காகத் திராவிட மக்களுக்குப் பேருணர்வு தோன்றாதது பற்றி வருந்த வேண்டியிருக்கிறது.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

அடிப்படை வசதிகள் கோரி கடலூர் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

அடிப்படை வசதிகள் கோரி கடலூர் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

கடலூர் நகராட்சியே !

  • நாறும் கடலூர் பேருந்து நிலைய கழிவறைகளை சுத்தம் செய்யாத காண்ட்ராக்டர் உரிமத்தை ரத்து செய் !
  • திருப்பாதிரிப்புலியூர் மீன் மார்க்கெட்டில் உள்ள பெண்கள் ஓய்வறையை உடனே திற!
  • திருப்பாதிரிப்புலியூர் நகராட்சி சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் சென்றுவரும் வழியை திற!
  • மஞ்சக்குப்பம் மின் தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வா!
  • வண்டிப்பாளையம் வழியாக பான்பரி மார்கெட்டுக்கு செல்லும் வழியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்று!

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், 24.07.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்.நந்தா தலைமையேற்றார். ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கடலூர் நகராட்சியில் நீடிக்கும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

படிக்க:
தமிழகத்தை நாசமாக்காதே ! – திருவாரூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்
♦ குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !

இதில் கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வெண்புறா குமார், விசிக மாநில அமைப்புச் செயலாளர் தோழர் திருமார்பன், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் தோழர் சுப்புராயன், தமிழர் கழகம் அமைப்பின் தோழர் பாரதிவானன், வெண்புறா பொது நல பேரவை தோழர் ராஜசேகர் மற்றும் கடலூர் மண்டல மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
கடலூர். தொடர்புக்கு : 81108 15963

களிப்பையும் துயரையும் தந்த காதலியின் நினைவுகள் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 10-அ

ரு ஞாயிறன்று அவர்கள் வோல்காவின் அக்கரையிலிருந்த புல்வெளிக்குச் சென்றார்கள்.

பூத்த புல்தரையில், விண்மீன்கள் போல ஒளிர்ந்த வெண் சாமந்தி மலர்களுக்கு இடையே அவளை நிழல்படம் பிடித்தான் அலெக்ஸேய். அப்புறம் அவர்கள் நீந்திக் குளித்தார்கள். பின்பு அவள் ஈர நீச்சல் உடையைக் களைந்து மாற்றுடை அணிந்து கொள்ளும் வரை அவன் கரையோரப் புதருக்கு அப்பால் பணிவாக மறுபுறம் திரும்பி நின்றுகொண்டிருந்தான்.

அவள் கூவி அழைத்ததும் அவன் திரும்பினான். மெல்லிய உடை அணிந்து, வெயிலில் பழுப்பேறிய கால்களை மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் அவள். பூந்துவாலையைத் தலைமீது சுற்றிக் கட்டியிருந்தாள். சுத்தமான கைத்துவாலையைப் புல் மேல் விரித்து, அது பறந்து விடாமல் ஓரங்களைக் கற்களால் அழுத்தி, வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தை அவிழ்த்து அதன் மேல் ஒழுங்காகப் பரப்பினாள். உருளைக் கிழங்குக் கூட்டும் எண்ணெய்க் காகிதத்தில் கச்சிதமாக வைத்துச் சுற்றப்பட்டிருந்த மீனும் வீட்டில் செய்த பிஸ்கோத்துகளுங்கூட பொட்டலத்தில் இருந்தன. உப்பும் கடுகு துவையலையுங்கூட மறக்காமல் கொண்டு வந்திருந்தாள் ஓல்கா. குதூகலமும் விளையாட்டும் கொண்ட அந்த பெண் இவ்வளவு அக்கறையுடன் திறைமையாக வீட்டுக் காரியங்கள் செய்வது பார்க்க இனிமையாகவும் நெஞ்சைத் தொடுவதாகவும் இருந்தது. “இழுத்தடித்தது எல்லாம் போதும். இன்று மாலையே இவளுக்கு எல்லாவற்றையும் சொல்கிறேன். இவள் கட்டாயமாக என் மனைவி ஆக வேண்டும் என்பதை அவளது மனதில் பதியும்படி சொல்லிவிடுகிறேன்” எனத் தீர்மானித்துக் கொண்டான் அலெக்ஸேய்.

சற்று நேரம் கரையில் படுத்திருந்த பின் மீண்டும் நீந்திக் குளித்துவிட்டு, மாலையில் ஓல்கா வீட்டில் சந்திப்பதாக முடிவு செய்து கொண்டு வீடு திரும்பும் பொருட்டுப் படகுத் துறைக்கு மெதுவாக நடந்தார்கள். களைத்துப் போயிருந்தாலும் அவர்கள் உள்ளங்களில் இன்பம் அலை மோதியது. துறையில் எதனாலோ படகையே காணோம். கதிரவன் ஸ்தெப்பி வெளியில் படிந்து விட்டான். மறு கரையில் செங்குத்தான மேட்டின் வழியாக ஊர்ந்து பளிச்சிடும் ரோஜா நிறக் கதிர்க் கற்றைகள் நகர வீடுகளின் முகடுகளுக்குப் பொன்முலாம் பூசின. ஜன்னனல் கண்ணாடிகள் குருதிச் செம்மையுடன் ஒளிர்ந்தன புழுதிபடிந்த அசைவற்ற மரங்கள். கோடைக்கால மாலை வெக்கை நிறைந்து அமைதியாக இருந்தது. எனினும் நகரில் எதுவோ நிகழ்ந்துவிட்டது. இந்த வேளையில் வழக்கமாக வெறிச்சோடிக் கிடக்கும் வீதிகளில் ஏராளமான ஆட்கள் பரபரப்புடன் நெரிந்தார்கள். செம்மச் செம்ம ஆட்களால் நிறைந்த இரண்டு லாரிகள் விரைந்து சென்றன. சிறு கூட்டம் அணிவகுத்து நடந்தது.

“இக்கரையிலேயே இரவைக் கழிக்க நேர்ந்தால் என்ன செய்வது?” என்றான் அலெக்ஸேய்.

கதிர் வீச்சும் பெரிய கண்களால் அவள் அவனை நோக்கி, “நீ உடன் இருக்கையில் எனக்கு ஒரு பயமும் கிடையாது” என்று கூறினாள்.

அவன் அவளைத் தழுவி முத்தமிட்டாள், முதல் தடவை, ஒரே தடவை முத்தமிட்டான். துடுப்புக் கொண்டிகளின் சத்தம் ஆற்றின் மீது மந்தணமாகக் கேட்டது. அளவுக்கு மேல் ஆட்களை ஏற்றுக் கொண்டு மறுகரையிலிருந்து புறப்பட்டது ஒரு படகு. அலெக்ஸேயும் ஓல்காவும் இப்போது அதைப் பகைமையுடன் நோக்கினார்கள், எனினும் அது என்ன செய்தி கொண்டுவருகிறது என்று முன்னுணர்ந்தவர்கள் போன்று பணிவுடன் அதை எதிர் கொள்ளச் சென்றார்கள்.

படிக்க:
#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !
மோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி

ஆட்கள் பேசாமல் படகிலிருந்து கரையில் குதித்தார்கள். எல்லோரும் உல்லாச உடைகள் அணிந்திருந்தார்கள். எனினும் அவர்களுடைய முகங்களில் கவலையும் சோர்வும் ததும்பின. ஆழ்ந்த தோற்றம் கொண்ட பரபரப்புள்ள ஆடவர்களும் கிளர்ச்சி பொங்கும் அழுத முகங்கள் உள்ள மாதர்களும் நடைப் பலகைகள் வழியே அவர்கள் இருவரையும் கடந்து சென்றார்கள். ஒன்றும் விளங்காதவர்களாக ஓல்காவும் அலெக்ஸேயும் படகில் தாவி ஏறிக்கொண்டார்கள். நொண்டிப் படகோட்டி அர்க்காஷா மாமா, அவர்களுடைய களி பொங்கும் முகங்களைப் பார்க்காமலே, “யுத்தம்…. இன்று வானொலியில் செய்தி அறிவிக்கப்பட்டது…..” என்றான்.

“யுத்தமா?… யாருடன்?” என்று அலெக்ஸேய் இருக்கையிலிருந்து திடுக்குற்றுத் துள்ளி எழுந்தான்.

“எல்லாம் அந்த பாழாய்ப் போகிற ஜெர்மன்காரர்களோடுதான், வேறு யாரோடு?” என்று கோபத்துடன் துடுப்புக்களை வலிப்பதும் வெடுக்கென்று அவற்றைத் தள்ளுவதுமாக விடையிறுத்தான் அர்க்காஷா மாமா. “ஆட்கள் ஏற்கனவே படைதிரட்டு நிலையங்களுக்குப் போகத் தொடங்கி விட்டார்கள். படை திரட்டல் நடக்கிறது” என்றான்.

உலாவிலிலிருந்து வீட்டுக்குக்கூடப் போகாமல் நேரே படை திரட்டு நிலையம் சென்றான் அலெக்ஸேய். இரவு 12.40-க்குப் புறப்பட்ட ரயிலில், தனக்கெனக் குறித்த விமானப் படை பிரிவுக்குப் புறப்பட்டு போய்விட்டான் அவன். நடுவில் வீட்டுக்கு ஓடிப்போய் பெட்டியை எடுத்து வரத்தான் அவனுக்கு ஓரளவு நேரம் கிடைத்தது. ஓல்காவிடம் அவன் பிரிவு சொல்லிக்கொள்ளக் கூட இல்லை.

அவர்கள் ஒருவருக்கொருவர் எப்போதாவதுதான் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள். ஆனால் அவர்களுடைய பரஸ்பர அன்பு குறைந்துவிட்டது; அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்கத் தொடங்கி விட்டார்கள் என்று இதற்கு அர்த்தமல்ல. மாணவருக்குரிய குண்டு குண்டான எழுத்துக்களில் வரையப்பட்ட அவளுடைய கடிதங்களை அவன் ஆவலே வடிவாக எதிர்பார்த்தான், அவற்றைச் சட்டைப் பையிலேயே வைத்திருந்தான், தனிமையில் விடப்பட்டதுமே மறுபடி மறுபடி படித்தான். காட்டில் திரிந்த துன்ப நாட்களில் இந்தக் கடிதங்களையே அவன் மார்புற அழுத்திக் கொண்டான், அவற்றையே பார்த்தான். எனினும் அந்த இரு இளம் வயதினரின் உறவு நிச்சயமற்ற ஒரு கட்டத்தில் திடீரென அறுந்து போய்விட்டது. ஆகையால் இந்தக் கடிதங்கள் மூலம் அவர்கள் நெடுங்காலம் நன்கு பழகியவர்கள், நண்பர்கள் என்ற முறையிலேயே ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். இன்னும் பெரிய எதையும் இதனுடன் பெரிய எதையும் சேர்க்க அவர்கள் அஞ்சினார்கள். எனவே அது மனம் விட்டுச் சொல்லப்படாமலே இருந்துவிட்டது.

இப்பொழுது மருத்துவமனையில் படுத்துக் கிடக்கையில் ஒரு விஷயத்தைக் கண்டு அலெக்ஸேய் திகைப்பு அடைந்தான். இந்தத் திகைப்பு கடிதத்துக்குக் கடிதம் மிகுந்து கொண்டு போயிற்று. ஓல்கா தானே மனதைத் திறந்து பேச முன்வந்ததுதான் அவனுக்குத் திகைப்பூட்டிய விஷயம். தான் அவனுக்காக ஏங்குவதை ஓல்கா கூச்சமின்றித் தன் கடிதங்களில் இப்பொழுது விவரித்தாள். அன்றைய தினம் அர்க்காஷா மாமா வேண்டாத நேரத்தில் தங்களை மறு கரைக்கு இட்டுச் செல்ல வந்தது குறித்து வருந்தினாள். அலெக்ஸேய்க்கு என்ன நேர்ந்தாலும் சரியே, தான் எப்போதும் நம்பத்தக்க ஒரு நபர் இருப்பதை அவன் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், வேற்றிடங்களில் சுற்றித் திரிகையில், போர் முடிந்ததும் சொந்த வீடு திரும்புவதற்கு ஓர் இடம் இருப்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

இவ்வாறெல்லாம் எழுதுபவள் யாரோ புதிய, வேறொரு ஓல்கா என்பதுபோல் தோன்றியது. அவளுடைய நிழற் படத்தை பார்க்கும் போதெல்லாம், ஒரு காற்று வீச வேண்டியது தான், முதிர்ந்த சிறகு விதை போல அவள் தன் பூத்துணி உடையுடன் பறந்துபோய் விடுவாள் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகும். இந்தக் கடிதங்களை எழுதியவளோ, நல்லவள், காதலிப்பவள், காதலுனுக்காக ஏங்குபவள், அவனை எதிர்பார்த்துக் காத்திருப்பவள். இந்த நினைப்பால் அவனுக்கு மகிழ்ச்சியும் குழப்பமும் ஒருங்கே உண்டாயின. மகிழ்ச்சி அவன் வசமின்றியே உண்டாயிற்று. தான் இத்தகைய உறவுக்கு உரியவன் அல்ல; இவ்வளவு ஒளிவு மறைவற்ற உறவாடலுக்குத் தக்கவன் அல்ல என்று அலெக்ஸேய் எண்ணியபடியால் அவனுக்கு மனக்கலக்கம் ஏற்பட்டது.

தான் முன்போன்ற வலிமை நிறைந்த இளைஞன் அல்ல, கால்களற்ற அங்கவீனன், அர்க்காஷா மாமாவை ஒத்தவன் என்று ஆரம்பத்திலேயே எழுத அவனுக்குத் துணிவு வரவில்லையே. நோயாளித் தாயார் அதிர்ச்சியால் இறந்து போய் விடுவாளோ என்ற பயத்தால் உண்மையை எழுதத் தயங்கிய அவனுக்கு இப்போது ஓல்காவைக் கடிதங்களில் ஏமாற்றுவது வலுக்கட்டாயம் ஆகிவிட்டது. இந்த ஏமாற்றுச் சிடுக்கில் நாளுக்கு நாள் அதிகமாகச் சிக்கிக் கொண்டு போனான்.

இந்தக் காரணத்தால் கமிஷினிலிருந்து வந்த கடிதங்கள் அவனுக்கு முற்றிலும் எதிரெதிரான உணர்ச்சிகளை – களிப்பையும் துயரையும், நம்பிக்கையையும் கலவரத்தையும் ஏற்படுத்தின. அவை ஏககாலத்தில் அவனுக்கு உற்சாகமூட்டின. அவனைத் துன்புறுத்தி வதைத்தன.

எனினும், தனது கனவை நனவு ஆக்கிக்கொண்டதுமே, அதாவது படையணிக்குத் திரும்பித் தனது செயல் திறனை மீண்டும் அடைந்ததுமே, ஓல்காவிடம் காதலைப் பற்றி மறுபடி பேசுவது என்று அவன் ஆழ்ந்த சங்கற்பம் செய்துகொண்டான். இவ்வாறு நிச்சயித்து, தனது இந்தக் குறிக்கோளை அடைவதற்கு முன்னிலும் அதிக விடாப்பிடியாக முயன்றான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !

நெருங்கி வரும் இந்துராஷ்டிரா :

குஜராத்தில் 10 சதவீத மக்கள்தொகை கொண்ட முஸ்லீம்களில் இருந்து ஒருவர் கூட மக்களவை உறுப்பினராக இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. “இந்து ராஷ்டிரம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதற்கு குஜராத் ஒரு உதாரணம்” என்கிற விஷயத்தை இது நமக்கு உணர்த்துகிறது.

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பிரச்சினையில்லை. அவர்கள் உருவாக்கிருக்கும் மனநிலைதான் பிரச்சினை. கடந்த 17 வருடங்களில் மக்களின் சிந்திக்கும் முறையை முற்றிலும் மாற்றியிருக்கிறார்கள். இதன் விளைவுதான் பா.ஜ.க-வின் வெற்றி” என்கிறார் 2002 குஜராத் கலவரத்தில் தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரான ஷாரிஃப் மாலிக்.

குஜராத்தி மொழியில் உள்ள பலகை கூறுவதாவது:- “ஹல்வத் நகரின் இந்துராஷ்ட்ரம் வரவேற்கிறது – விஷ்வ இந்து பரிஷத் – பஜ்ரங் தள். (புகைப்படம் – நன்றி : அல்ப் சன்க்கிய அதிகர் மன்ச்)

நரோதா காம் வழக்கில் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் குழுவில் இருக்கும் மாலிக்,  “காங்கிரஸ் ஒரு சில இடங்களைக் கைப்பற்றும் என நம்பிக்கொண்டிருந்த எங்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியளித்தது. வேறு வழி இல்லாமல் இந்த நிலைமையை எதிர்கொள்கிறோம். இந்த புதிய இந்தியாவில் எங்கள் வாழ்க்கையைக் கடத்த ஏதேனும் வழிகள் உள்ளதா என கண்டுபிடிக்க வேண்டும்” என்றார். சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கும் ஒன்பது குஜராத் கலவர வழக்குகளில் நரோதா காம் வழக்கும் ஒன்று. இவ்வழக்கின் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த நாடே மோடியின் இரண்டாவது வெற்றியை கொண்டாடும் போது, தொடர்ச்சியான இன்னல்களை அனுபவித்து வரும் குஜராத்  முஸ்லீம்களின் நிலை நம்மை எச்சரிக்கிறது. 2002-ல் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து, முஸ்லீம்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை சந்தித்தது மட்டுமல்லாமல் அந்த தாக்குதல்கள் இந்துத்துவ முனைவாக்கத்தின் பகுதியாவும் இருந்தது. இப்போது அந்த முனைவாக்கம் கிட்டத்தட்ட முழுமையடைந்து இருக்கிறது.

இந்துத்துவத் திட்டத்தின் வெற்றிக்கு குஜராத் ஒரு உதாரணம் என அவர்கள் கருதுகின்றனர். சாதிரீதியான, மதரீதியான பாகுபாடுகள் இனி இருக்காது என மோடி கூறினாலும் குஜராத் முஸ்லீம்களிடம் அது செல்லுபடியாகவில்லை. “எங்களுக்கு என்ன நிகழ்கிறதோ அதுவே இந்நாடு முழுக்க நிகழலாம்” என்கிறார் மாலிக்.

படிக்க:
அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி
♦ நரோடா பாட்டியா கலவரம் : முன்நின்று நடத்திய பாபு பஜ்ரங்கி பிணையில் விடுதலை !

மோடியும்  புதிதாக பதவியேற்றுள்ள அமித்ஷாவும் 2002 கலவரத்திற்கு உடந்தையாக இருந்துள்ளனர் என குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தனர். இவர்களின் கண்காணிப்பில் குஜராத் முழுவதும் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலில் 1043 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்; நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர்; இன்றுவரை பலபேரைக் காணவில்லை.

17 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இத்தகைய அரசியல் பிரச்சாரத்திற்கு பயனாக, இன்று அந்த இரட்டையர்கள் நாட்டின் சக்திவாய்ந்த பதவிகளை வகிக்கின்றனர். கொடூரமான படுகொலைகளை இந்த இருவர் கூட்டணி நினைவூட்டுவது மட்டுமல்லாமல், குஜராத்தை முழுக்கக் காவிமயமாக்கும் அவர்களின் நிகழ்ச்சிநிரலும் நிறைவேறியுள்ளது. மேலும், இந்த இனப் படுகொலையை அம்மாநில வரலாற்றின் மீதான ஒரு சிறிய களங்கமாக பார்க்கும்படி செய்துள்ளனர். காலபோக்கில் அதுவும் கண்ணுக்கு தெரியாமல் மறைந்துவிடும்.

“இந்த திட்டமானது நாடு முழுக்க விரிவடையாதா? மக்கள் அது குறித்து பயப்படவில்லையா?” எனக் கேட்கிறார் இம்தியாஸ் குரேஷி. இவர் நரோதா காம் கலவரத்தில் தப்பிப்பிழைத்தவர்களில் ஒருவர். “2002-ல் நடந்ததை இந்நாடு மறந்துவிட்டதா? இந்த அரசியல்போக்கு மேலும் தொடர்ந்தால், இது எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். மேற்கு வங்கத்தில் இது ஏற்கெனவே நிகழத் தொடங்கிவிட்டது. நான் கூறுவதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இந்துராஷ்டிரம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதற்கு குஜராத் ஒரு உதாரணம். ஆபத்து இன்னும் சூழ்ந்துள்ளது. அவர்கள் எங்களை கொடுமைப்படுத்த பலவழிகளைக் கண்டுபிடித்துள்ளனர்” என்கிறார்.

முஸ்லீம் பிரதிநிதிகள் யாருமில்லை

குஜராத்தில் பா.ஜ.க. அனைத்து 26 இடங்களையும் கைப்பற்றிய பின்னர், கலவரத்தில் பிழைத்தவர்கள் சிலரிடமும் நீதிக்காக தைரியமாக போராடி வரும் செயல்பாட்டாளர்கள் சிலரிடமும் பிரண்ட்லைன் பத்திரிகை பேசியது.

“பா.ஜ.க. எங்களை தேவையற்றவர்களாக ஆக்கியபோது, காங்கிரஸ் மிகவும் பலவீனமான எதிர்ப்பையே காட்டியது. அதன் மூலம் முஸ்லீம்களை மட்டுமல்ல எல்லா சிறுபான்மையினரையும் கைவிட்டது. எங்களுக்கு ஒரு அரசியல் பிரதிநிதிகூட இல்லை. இது முஸ்லீம்களை மேலும் ஒடுக்கும்” என்கிறார் குரேஷி. காங்கிரஸ் இத்தேர்தலில் ஒரேயொரு முஸ்லீமுக்கு மட்டுமே சீட்டு வழங்கியது. அக்கட்சியின் முஸ்லீம்கள் மீதான அர்ப்பணிப்பு குறைந்து வருவதையே இது காட்டுவதாக குரேஷி கூறுகிறார்.

ஷாரிப் மாலெக், நரோதா காம் வழக்கில் நீதிக்காக போராடும் செயல்பாட்டாளர். நரோதா காமில் குடியிருப்பவர், 2002 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர். புகைப்படம் – அனுபமா கடகம்.

வரலாற்றுரீதியாகவே, குஜராத் இரு கட்சிகளின் மாநிலமாகவே இருந்துள்ளது. பா.ஜ.கவும், காங்கிரஸும் எல்லா தேர்தல்களிலும் மோதிக்கொள்ளும். ஆனால் 2000-த்தின் ஆரம்பத்தில் இருந்து மாநில அளவிலும் தேசிய அளவிலும் காங்கிரஸ் தனது தடத்தை இழந்து வருவதோடல்லாமல், அந்த தோல்வியில் இருந்து இன்னும் மீளவுமில்லை. சிறந்த தலைவர்களின் போதாமை, உட்கட்சிப் பூசல், சிறுபான்மை தலைவர்களை ஒடுக்குவது, கட்சியினர் பா.ஜ.க-வில் இணைவது போன்றவை இப்பழம் பெரும் கட்சியை மோசமான சீர்கேட்டுக்கு இட்டுச் சென்றுள்ளது. 2017 மாநிலங்கவை தேர்தலில் காங்கிரஸ் 182-ல் 77 இடங்களில் வெற்றி பெற்றப்போது நம்பிக்கையின் கீற்று தெரிந்தது. ஆனால் இப்போது காங்கிரஸ் அடைந்த படுதோல்வியால் தேசிய மற்றும் மாநிலங்களின் நலன்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஆச்சிரியப்படும் வகையில், 42 முஸ்லீம்கள் குஜராத் மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். பா.ஜ.க எந்த முஸ்லீம்க்கும் சீட்டு வழங்கவில்லை. சிறு அரசியல் கட்சிகள் சார்பாக 8 முஸ்லீம்களும், 34 பேர் சுயேட்சையாகவும் போட்டியிட்டனர். மோடி ‘அலை’யின் தாக்கத்தால் ஃபாருச் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஒரேயொரு முஸ்லிமான ஷேர்கான் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். ஃபாருச் தொகுதிதான் மாநிலத்திலேயே அதிக முஸ்லீம் ஓட்டுகள் உள்ள தொகுதியாகும் (அந்த தொகுதியின் மக்கள்தொகையில் 22 சதவீதம் முஸ்லீம் மக்கள் உள்ளனர்). 1984-ல் ஃபாருச் தொகுதியில் வெற்றி பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவரான அகமது படேல்-தான் குஜராத்திலிருந்து பாராளுமன்றம் சென்ற கடைசி முஸ்லீம் ஆவார்.

“முதல் படி ஏறும்பொழுது அவர்கள் எங்களை எறும்புகளை போல் நசுக்கினர். இப்பொழுது அவர்கள் உச்சியில் உள்ளனர், நாங்கள் அவர்களுக்கு தேவையற்றவர்களாக இருக்கலாம். இனிமேல் வன்முறையை தூண்டிவிடமாட்டார்கள் என நம்புகிறேன். மற்ற பிரச்சினைகளை நாங்கள் சமாளித்துக் கொள்வோம்” என்கிறார் குரேஷி.

படிக்க:
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !
♦ குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை !

2002-ல் நடந்ததுபோல், சிறுபான்மையின மக்களுக்கெதிரான வெளிப்படையான வன்முறை குஜராத்தில் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், முஸ்லீம்களுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு ஆதாரம் உள்ளது. அல்ப் சன்க்கிய அதிகார் மன்ச் என்ற மனித உரிமை அமைப்பும் , புனியாத் என்ற சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பும் திரட்டிய தரவுகள் மற்றும் அளித்த அறிக்கை குஜராத் மாநிலத்தின் மதரீதியான முனைவாக்கம் பற்றி கவலைப்படக் கூடிய விவரங்களை வெளிப்படுத்துகிறது.

தேசிய ஊடகங்களின் கவனிப்புக்கு கீழ் வராதபடி சிறு சிறு தாக்குதலை தொடுப்பதே அவர்களின் திட்டம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பிரிவினையும் பாகுபாடும் மாநிலத்தின் சமூக – பொருளாதாரத்தின் அங்கமாகவே மாறிவிட்டது. பல சமயங்களில் அவை கவனிக்கப்படுவதும் இல்லை என்றும் கூறுகிறது. அறிக்கையின்படி சிறு சிறு கலகங்களின் தாக்கம் வீரியமிக்கதாக உள்ளதாகும்; அது மதரீதியாக சமூகத்தை முனைவாக்கம் செய்வதிலும் சகிப்பின்மையை அதிகரிப்பதிலும் சாதித்துள்ளது; குஜராத்தில் மதக் கலவரங்களே நடைபெறுவதில்லை என்கிற பிம்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.யை சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளரான ஷாம்ஸ் தப்ரெஃஸ் திரட்டிய தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து குஜராத்தில் நடந்த கலவரங்கள் குறித்து அவர் திரட்டிய தகவல்கள் கீழ்வருமாறு :-

ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரங்கள் உயிரிழந்தோர் காயமடைந்தோர்
2008 79 5 228
2011 47 3 144
2014 74 7 215
2015 55 8 163

 

கூடுதலாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) மற்றும் ஃபேக்ட் செக்கர் (Fact Checker) என்னும் ஆய்வு நிறுவனத்தின் தரவுகளையும் அந்த அறிக்கை அளிக்கிறது. குஜராத்தில் 1998 முதல் 2016 வரை 35,568 கலவரங்கள் நடந்திருப்பதாகக் கூறுகின்றன அத்தரவுகள்; 2014 -க்கும் 2016 -க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் குஜராத்தில் 164 கலவரங்கள் நடந்துள்ளதாகவும் அதனால் 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.

“தாக்குதல் நடைபெற்ற பெரும்பாலான இடங்கள் 2002-ல் நடந்த கலவரத்தால் பாதிக்கப்படாத பகுதியாகும் என்பது முக்கியமாக குறித்துக்கொள்ள வேண்டியது. மதரீதியில் வெறுப்பை பரப்புவதற்கு சமூக(வலைதள)ஊடங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்றவை கருவியாக பயன்படுத்தப்படுள்ளன. மதச்சடங்குகள், திருவிழாக்கள், ஊர்வலங்கள், கலப்புத் திருமணங்கள், பெண்களை கேலி செய்தல், தரக்குறைவான பாடல்கள், வெறுப்புப் பேச்சுகள் ஆகியவை மதக் கலவரங்களை தூண்டிவிடும் புள்ளிகளாக இருந்துள்ளன என்பது மேம்போக்கான பார்வையிலேயே தெரிகிறது. மதம் தாண்டிய உறவுகளைக் காரணம் காட்டி எழுப்பப்படும் மோதல்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன” என்கிறது அல்ப் சன்க்கிய அதிகார் மன்ச் / புனியாத்-ன் அறிக்கை.

உதாரணத்திற்கு, ஏப்ரல் 2017 -ல், ஒரு கும்பல் படன் மாவட்டத்தை சேர்ந்த வாதவலி கிராமத்தில் உள்ள முஸ்லீம் குடியிருப்பை சூறையாடிய பிறகு எரித்தது. நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வீடற்றவர்களாக்கப்பட்டனர். அரசு இத்தாக்குதலை பதிவு செய்ய முன்வரவுமில்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமும் அளிக்கவில்லை. வக்கீல் ஷம்சத் பதான், மாலெக் போன்ற செயல்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முயற்சித்தனர். ஆனால் ஒரு பயனும் இல்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே பெரும்பாடாகிவிட்டது.

முனைவாக்கத்தின் வடிவம் / மாதிரி

வெற்றிகரமான முனைவாக்க செயலுத்திக்கான உதாரணமாக அகமதாபாத் இருக்கிறது. ஒரு காலத்தில், அந்த நகரம் முழுவதும் முஸ்லீம்கள் பரவியிருந்தனர். இப்பொழுதோ  தனித்தொதுக்கப்பட்ட, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாழ்கின்றனர். நாகரீகமான சுற்றுப்புறங்களில் வாழ பணக்கார முஸ்லீம்களால் கூட முடியவில்லை. முஸ்லீம்கள் அனைவரும் அகமதாபாத்தின் புறநகர் பகுதிகளான ஜுஹபுரா போன்ற சேரிகளில் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகளை செயல்படுத்த மோடி அரசு எப்படி நயவஞ்சகமான வழிமுறைகளைக் கண்டுபிடித்துள்ளது என்பதற்கு இங்கு சில உதாரணங்கள் உள்ளன. பிற மதத்தினரிடமிருந்து சொத்துகளை வாங்கவோ விற்கவோ மாவட்ட ஆட்சியினரின் அனுமதி தேவைப்படும். இந்தியாவின் ஒரே மாநிலம் குஜராத்தான். 2012-ல் மோடி முதலமைச்சராக இருந்தபோது, முஸ்லீம்களை பாதுகாப்பதற்காகவும் தனிச்சேரிகளை தடுப்பதற்காகவும், அசையா சொத்துகளின் பரிவர்த்தனையை தடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறிய குடியிருந்தவர்களை பாதுகாக்கும் சட்டம், 1991 (Gujarat Prohibition of Transfer of Immovable Property and Provisions for Protection of Tenants from Eviction from Premises in Disturbed Areas Act, 1991) சட்டத்தில் மேம்போக்கான திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனினும், ஒரு மதத்தினரின் சொத்தை மற்ற மதத்தினர் வாங்கவோ விற்கவோ முடியாது என்பதுதான் இறுதி விளைவாக ஆகியது.

இச்சட்டம் கலவரங்கள் நடந்த இடத்திற்கு பொருந்துவதால், மற்ற மதத்தினர் பலர் இவ்விடங்களில் உள்ள சொத்துக்களை வாங்க முன்வருவதில்லை. யாரும் இங்கு சொத்துக்களை வாங்க விரும்புவதில்லை. ஆதலால் நாங்கள் வாங்குபவரை தேடி அலைவதை கைவிட்டுவிட்டோம். கலவரங்களுக்கு பின், பல குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எண்ணுவதால் ஜுஹபுரா போன்ற சேரிகளில் தங்குகின்றனர்” என்கிறார் ஷாஹின் ஹுசைன். 2002, பிப் 28 -ல் நரோதா பாட்டியாவில் உள்ள தன் வீட்டை சூறையாடலுக்கும் நெருப்புக்கும் பலி கொடுத்தவர்.

படிக்க:
♦ இறுதித் தீர்ப்பு : 2002 குஜராத் இனப்படுகொலை ஆவணப்படம்
♦ யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?

குடியிருப்பு, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் சிறுபான்மைக்கு எதிரான பாகுபாடு துலக்கமாகத் தெரிகிறது. 2012 – 2013-ம் ஆண்டில் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு பயன்படுத்துவதில்லை என முடிவெடுத்தது. இதற்குக் காரணமாக கூறப்பட்ட வாதம் என்னவென்றால், இது பாகுபாட்டை மேலும் உருவாக்கும், அந்த நிதியைப் பெற தகுதி இல்லாதவர்கள் மத்தியில் மனப் புகைச்சலை உருவாக்கும் என்பதாகும். முஸ்லீம்களுக்கு எதிராக விஷத்தைக் கக்குவது தன்னுடைய தேசிய அரசியல் கனவை அருகில் கொண்டுவரவில்லை என்பதை மோடி உணர்ந்த நேரத்தில்தான் இப்படிப்பட்ட நயவஞ்சக முறைகள் முஸ்லீம்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டன.

2010-ல் சிட்டிசன் நகருக்கு சென்றேன், அவ்விடம் அகமதாபாத்தின் புறநகரில் உள்ள குப்பை கிடங்குக்கு அருகில் உள்ளது. நிவாரண முகாம்களில் வசித்து வந்த, கலவரத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிரந்தர அடைக்கலம் அளிக்க அக்குடியிருப்புகள் அவசரமாக அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பரிதாபமாக அக்குடியிருப்புகள் குடிசைகளாகவும், குப்பைக்கிடங்கிற்கு அருகிலும் இருந்தன. திறந்தவெளி கால்வாய்கள், சகதியான சாலைகள், தெரு விளக்கு இல்லாதது, தண்ணீர் பற்றாக்குறை நிறைந்த அப்பகுதியில் ஒரு மனிதன் வாழ முடியுமா என ஐயம் ஏற்படுகிறது.

சிட்டிசன் நகரில் வாழ்பவர்கள். அவர்களின் குடியிருப்பு அகமதாபாத்தின் குப்பை கிடங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. புகைப்படம் – அனுபமா கடகம்.

மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான நரோதா பாட்டியா கலவரத்தில் தப்பிப் பிழைத்தவரான கத்தூனப்பா, சிட்டிசன் நகரின் ஒரு மூலையில் உள்ள வீட்டில் வசிக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சிறிய குப்பைக் கூளங்களாக இருந்தவை இப்போது பெரிய மலை போல் காட்சி அளிக்கிறது. அங்கே அடிக்கும் துர்நாற்றம் தங்கள் மீதும் ஊடுருவியுள்ளதாக அவர் கூறுகிறார். நீர் முழுக்க அசுத்தப்பட்டுள்ளது, பல பேர் நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடிவந்த 14 வருடத்தில் சிறிய அளவிலான மாற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்கிறார்.

“அவர்கள் (மோடி, அமித்ஷா) முன் என்னை நிறுத்துங்கள். அவர்களுடைய தேர்தல்கள் பற்றி நான் கூறுகிவேன். என்னுடைய புகைப்படம், முகவரியை வெளியிடுங்கள். தோட்டாக்களைக் கண்டு நான் அஞ்சவில்லை” என்று வெளிப்படையான கோபத்துடன் கூறுகிறார்.

“மிருகங்கள் கூட வாழ தகுதியற்ற சூழலில் எங்களை வாழ நிர்பந்தித்துள்ளனர். நாங்கள் குறைந்தபட்சம் சாகடிக்கப்படாமல் இருக்கிறோம். எங்கள் மீதான இந்த வெறுப்பும், கோபமும் ஏன் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் அவர்களுக்கு என்ன செய்தோம்?” என கேட்கிறார் அப்பெண்.

“எங்களை வெறுப்பதற்கு முகலாயர்கள் நம் நாட்டை கொள்ளை அடித்ததையும், கோவில்களை அழித்ததையும் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காக தான் அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள். அவர்களுக்கு (காவிப்படை) நினைவூட்டுகிறேன். அவர்களுடைய வரலாறும் ஒரு நாள் எழுதப்படும். அந்த வரலாறும், முகாலயர்கள் பற்றி வரலாற்றாளர்கள் எழுதியதிலிருந்து வேறுபட்டதாக இருக்காது” என்கிறார் குரேஷி


கட்டுரையாளர் : அனுபமா கடகம்
தமிழாக்கம் : 
– தருண்
நன்றி : ஃப்ரண்ட் லைன்

புகைப் பிடிப்பதை திடீரென நிறுத்தலாமா ? | மருத்துவர் BRJ கண்ணன்

சென்ற காணொளியில் நாம் புகைப்பிடிப்பதனால், என்னென்ன தீங்குகள் என்பதைப் பார்த்தோம். அதாவது புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிக்கும் காரணத்தாலேயே 50% இறப்பை சந்திக்கிறார்கள், அதிகப்படியான புற்றுநோய், புகை பிடித்ததன் காரணமாகவே ஏற்படுகிறது, புகைப்பிடிப்பதனால் மாரடைப்பும் ஏற்படுகிறது, அதைப்போல் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களும் புகைப்பிடிப்பதனால் ஏற்படுகிறது.

இதில் செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங் என ஒன்று உள்ளது. அதாவது, உங்கள் நண்பர் புகைப்பிடிப்பவராக இருந்தால் அது உங்களையும் பாதிக்கும். ஒருவர் புகை பிடித்து விட்டு வீட்டுக்கு செல்கிறார் என்றால், அல்லது வீட்டிற்கு சென்று புகை பிடிக்கிறார் என்றால், அந்தப் புகையின் தாக்கம் அந்த வீட்டில் உள்ள குழந்தைக்கும், தாய்க்கும் இருக்கும்.

இந்த செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங்கினால், பெரியவர்களாக இருந்தால் அவர்களுக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் இதையும் நாம் அனுமதிக்க முடியாது.

ஒருவர் கஞ்சா, அல்லது மதுபானம் அருந்துகிறார் என்றால் அது அவரை மட்டுமே பாதிக்கிறது. இதுவே புகை பிடிக்கிறார் என்றால் அது அவரைச் சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கிறது. உங்களது நண்பர் புகைப்பிடிக்கிறார் என்றால் அவரிடம் நீங்கள் வேண்டுகோள் வைக்கலாம், பிடிக்காதே என்று. இல்லை என்றால் நீங்கள் அந்த இடத்தை விட்டு வந்துவிடலாம். ஏனென்றால், நட்பை விட உயிர் மிகவும்  முக்கியம். இப்படி நாம் நம் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களை புகைப்பிடிப்பதை கைவிடச் செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

புகைப்பிடிப்பதை கைவிடுங்கள் என நாம் கூறினால், பெரும்பாலும் மக்கள் முன்வைக்கும் வாதம், எனது பக்கத்து வீட்டுக்காரர் முப்பது, நாற்பது வருடங்களாக புகைபிடிக்கிறார் ஆனால், அவர் நன்றாகத்தானே இருக்கிறார் என்பதுதான்.  எந்த ஒரு விளைவாக இருந்தாலும் ‘சசஸ்டெபிளிட்டி’ எனும் ஒரு வார்த்தையை நாம் முன்வைக்க வேண்டும். ஏனென்றால், சில பேருக்கு அந்த நோயானது எளிதில் தாக்கும். சில பேருக்கு காலதாமதம் பிடிக்கும். இது அவர்களுக்கான அதிர்ஷ்டம் என்றுதான் நாம் கூற வேண்டும். அதிர்ஷ்டம் என்றாலும், நாளையே அவர் என்ன வகையான நோயினால் பாதிக்கப்படுவார்; அவரது இறப்பு எப்படி இருக்கும் என நம்மால் கூற முடியாது. அந்தப் பக்கத்து வீட்டுக்காரரின் கூடவே, புகைப்பிடிப்போர் பலர் இறந்திருப்பார்கள். அவர்கள் எல்லாம் நமது கண்ணுக்கு தெரிவதில்லை. யார் இறக்காமல் இருக்கிறாரோ, அவர்தான் நமது கண்ணுக்கு புலப்படுகிறார். இப்படி உயிர் பிழைத்திருப்பார் எல்லாம் விதி விலக்குதான். விதிவிலக்குகள் என்றைக்கும் விதி ஆகாது.

படிக்க :
♦ பீடி புகைப்பதால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 80,000 கோடி இழப்பு
♦ புகை பிடிப்பது தீங்கானதா ? | மருத்துவர் BRJ கண்ணன்

நம் கண் முன்னே இன்னொரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு போகும் மாணவர்களை நாம் பார்க்கிறோம். ஆனால், விபத்தானது அன்றாடம் நிகழ்வதில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்ற விதத்தில் தான் படியில் தொங்கி கொண்டு செல்வோரில் சிலர் விழுந்து இறக்கிறார்கள். இதை நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டு, நமது மகனோ அல்லது உறவினரோ படியில் தொங்கி கொண்டு போனால். ‘நீ நன்றாக தொங்கிக் கொண்டு போ’ என நாம் அறிவுரை வழங்குவோமா அல்லது அவர்களை கடினமான முறையில் கண்டிப்போமா? ஏன் இப்படி செய்கிறீர்கள் என கண்டிப்போம் அல்லவா. அதேதான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தான் இறக்கிறார்கள், என்பதற்காக படியில் தொங்கிக் கொண்டு போவதை நாம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது.

இந்த வகையான உரையாடல் எவ்வளவு ஆபத்தானதோ, அதேபோலதான் மேலே கூறிய புகைபிடிப்பதற்கான உரையாடலும் ஆபத்தானது. அதிகம் பேர் புகைப்பிடிப்பதனால் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர் 20 சிகரெட் புகைக்கிறார், நான் 5 சிகரெட்தான் பிடிக்கிறேன் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம். உங்களது நிலைமை மோசமாக இருந்தால் 5 சிகரெட் பிடிப்பதினாலும் உங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

வாரம் இரண்டு சிகரெட் மட்டுமே பிடித்து, அதன் காரணமாக புற்றுநோய் வந்து இறந்தவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர் அல்லது உறவினர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள் என்றால். அவர்களை 2 அல்லது 3 மாதம் கழித்து புகைபிடிப்பதை நிறுத்திவிட்டீர்களா? என கேட்கும்போது, அவர் இல்லை முன்பு 20 சிகரெட் பிடிப்பேன் இப்போது 10 சிகரெட்தான் பிடிக்கிறேன், எனக் கூறினால் அதையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால், புகை பிடிப்பதை நிறுத்துவது என்பது ஒரு கிணறை தாண்டுவதை போன்றது. நாம் 50% தாண்டினாலும் கிணற்றில்தான் விழுவோம் 90% தாண்டினாலும் கிணற்றுக்குள்தான் விழுவோம். நாம் 100% கிணற்றைத் தாண்டினால் மட்டுமே, வெளியே வர முடியும்.

முன்பை விட நான் இப்போது அதிகம் குறைத்துவிட்டேன், என்பதையெல்லாம் கூறி நம்மை ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. இப்படிக் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு, ஒருவர் இன்றே புகைபிடிப்பதை நிறுத்தி விடுகிறார் என்றால், அவர் உடனே இயல்பு நிலைக்கு திரும்பி விடுவாரா என்றால் இல்லை. இத்தனை காலம் புகை பிடித்ததன் விளைவுகளை அவர் சந்திக்கத்தான் வேண்டும். இந்த விளைவுகள் பின்வரும் காலங்களில் அவர்களைத் தாக்கிக் கொண்டே இருக்கும்.

ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்தினாலும், ஒரு மாதம் கழித்தும் அவருக்கு மாரடைப்பு வரலாம், இரண்டு மாதம் கழித்தும் அவருக்கு பக்கவாதம் வரலாம், அதைப்போல் ஒரு வருடம் கழித்து அவருக்கு புற்றுநோயும் ஏற்படலாம்.  புகைபிடிப்பதை நிறுத்துவதால் நமக்கு ஏற்படும் தீய விளைவுகளை, நாம் படிப்படியாகப் குறைக்கிறோம் என்பது உண்மை என்றாலும், நாம் புகை பிடிக்காதவரோடு ஒப்பிடத்தக்க, மாற்றம் அடைய ஐந்து வருடங்களாவது பிடிக்கும். சிலருக்கு பத்து பதினைந்து வருடங்களுக்கும் மேல் கூட காலதாமதம் ஆகும். இவ்வளவு கொடுமைகளை நமது உடலில் விளைவிக்கும் வல்லமை கொண்டதுதான் இந்த புகைப்பிடிக்கும் பழக்கம்.

புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என நாம் கூறினால், அவர்கள் நம்முன் வைக்கும் கேள்வி உடனடியாக கைவிட வேண்டுமா? அல்லது சிறிது சிறிதாக கைவிட வேண்டுமா? என்பதுதான். இத்தகைய உரையாடலில், பலபேர் கூறுவது உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்தக் கூடாது; அது மிகவும் ஆபத்தாகி விடும் என்பதுதான். இது உண்மைக்குப் புறம்பான ஒன்று. ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்துகிறார், அடுத்த வாரமே அவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால், உடனே அவர் புகை பிடிப்பதை நிறுத்தியதால்தான் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது எனக் கூறுவார்கள். இதுதான் மிகவும் தவறான வாதம். இது சம்பந்தமான ஆய்வுகள் எதுவும் இதை நிரூபிக்கவில்லை.

படிக்க :
♦ பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !
♦ அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு

ஒருவர் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்றால்?  மேலே கூறியது போல, ஒருவர் புகைபிடிப்பதை உடனடியாக நிறுத்தக்கூடாது என்ற கூற்று உண்மையானால், இப்போது விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தவர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராயின் அவருக்கு நாங்கள் முதல் நாள் 10 சிகரெட்டும், 4 நாட்கள் கழித்து 5 சிகரெட்டு என படிப்படியாக சிகரெட்டை குறைத்துக் கொண்டே வர வேண்டும். இது மட்டுமல்லாது ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் புகைபிடிக்கும் அறை என தனியாக ஒன்றை வைத்துப் பராமரிக்க வேண்டும். அப்படி ஒன்றை நாம் எங்கும் பார்த்ததில்லை இல்லையா. எனவேதான் கூறுகின்றோம், இது தவறான ஒன்று என்று. மேலும், புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்துவதுதான் சரியான தீர்வும் கூட.

உலகம் முழுவதிலும் புகைபிடிப்பதை நிறுத்துபவர்களில் இரண்டு வகையானவர்கள் உண்டு, ஒருவர் உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்துபவர், மற்றொருவர் படிப்படியாக நிறுத்துபவர். இதில் யாருக்கு வெற்றி வீதம் அதிகம் என்றால், உடனடியாக புகை பிடிப்பதை நிறுத்தியவருக்குத்தான்.

புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு அடிப்படையாக அமைவது, நம் மனதில் நாம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய உறுதிதான். புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு இரண்டு அடிப்படைகள் உள்ளன. ஒன்று மனரீதியானது மற்றொன்று உடல்ரீதியானது. மனரீதியாக நாம் புகை பிடிப்பதை நிறுத்துவதில் உறுதியாக இருந்தோம் என்றால் இரண்டாவது சுலபம்தான்.

எனவே, எதனால் நான் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதை எழுதுங்கள். இந்த இந்த காரணத்தால் நான் புகைப்பிடிப்பதை நிறுத்த போகிறேன் என்று பேப்பரில் எழுதுங்கள். எனக்கு குடும்பம் இருக்கிறது, மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள், நாளை நான் பக்கவாதம் வந்து வீழ்ந்து போனேன் என்றால் அவர்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற காரணங்களை எழுதி உங்கள் வீட்டு சுவற்றில் ஒட்டி வையுங்கள், அதை நீங்கள் திரும்பத் திரும்ப பார்க்கும் போது உங்களுக்கு புகை பிடிக்கும் எண்ணம்  தோன்றாமல் இருக்கும்.

அதைப்போல் எந்தெந்த நிலைமைகளில் உங்களுக்குப் புகை பிடிக்கும் எண்ணம் தோன்றுமோ, அவற்றை கைவிடுங்கள். நண்பர்கள் சிலருடன் சேர்ந்தால் அவர்கள் புகைப்பிடிக்க அழைப்பார்கள் என்றால் அவர்களை தவிருங்கள். முடிந்தவரை அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுங்கள். சில பேர் மது அருந்தும் போது புகை பிடிப்பார்கள், எனவே மது அருந்தாதீர்கள், புகைப்பிடிப்பதையும் கைவிடுங்கள். புகைப்பிடிப்பதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துங்கள். உங்கள் வீட்டிலோ அல்லது காரிலோ எதிலும் வைக்காதீர்கள். அப்படி நீங்கள் எடுக்கும் முயற்சிதான், உங்களை புகைபிடிப்பதில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றும்.

உங்களுக்கு புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றும் போதெல்லாம் வேறு ஒறு மாற்றை தேடுங்கள். உதாரணத்திற்கு ஒரு சூட மிட்டாயை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளலாம்; அல்லது சுவிங்கம்மை  வாயில் போட்டு மென்று கொள்ளலாம். அப்படியும் இல்லையென்றால், அந்த எண்ணம் தோன்றும்போது தனி அறையில் அமர்ந்து ஒரு பாடல் ஒன்றை பாடுங்கள்.  நீங்கள் என்றைக்கு புகைப்பிடிப்பதை நிறுத்துகிறீர்களோ, அன்றிலிருந்து ஒரு வாரத்திற்குத்தான் இந்தக் துன்பம்  எல்லாம். ஒரு வாரத்தைக் கடந்தால், நீங்கள் இயல்பாக புகைபிடிப்பதில் இருந்து வெளியேறி விடுவீர்கள்.

இப்படி ஏதோ ஒரு மாற்றைத் தேடி, ஒரு வாரத்துக்கு மட்டும் நீங்கள் விடாமல் முயற்சிக்க வேண்டும். சிலபேர்  பழச்சாறு அருந்துவார்கள், சிலபேர் புகைபிடிக்கும் எண்ணம் தோன்றும்போது உணவு உண்பார்கள். இது எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைவது, நான் இனி புகைப்பிடிக்க மாட்டேன் என நீங்கள் ஏற்கும் மன உறுதிதான். அந்த மன உறுதி இல்லாமல், நீங்கள் எந்த வகையான நடவடிக்கை மேற் கொண்டாலும், உங்களுக்கு அது உதவியாக இருக்காது.

நிக்கோட்டின் தடவிய துணிகள் அல்லது நிகோடின் கலந்த சுயிங்கம்கள் கடையில் கிடைக்கிறது. அதை நீங்கள் வாங்கிக் கொண்டு உங்களுக்கு தேவையானவாறு உபயோகித்துக்கொள்ளலாம். நீங்கள் அதை வாயில் போட்டு ஒரு அரை மணி நேரம் மென்று கொள்ளலாம். இந்த வகை நிக்கோட்டின் பொருட்கள் கெமிக்கல் பாதிப்புகளில் இருந்து வெளியேற உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.  நிக்கோட்டின் கம்கள் வாயில் போட்டு மெல்ல கூடியவை அதேபோல் நிக்கோட்டின் பேர்ச்சஸ் என்பது கையில் ஒட்டிக் கொள்ளக் கூடியவை. இதேபோல் எப்படி பயன்படுத்த முடியுமோ அப்படி பயன்படுத்தி நாம் உபயோகித்துக் கொள்ளலாம். இதுவும் முயற்சி எடுத்து, இதிலும் உங்களுக்கு எந்த வகைப் உதவியும் கிடைக்கவில்லை என்றால். இதற்கென்றே தனியாக மையங்களும்,  மனோதத்துவ நிபுணர்களும் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் அணுகலாம்.

நான் மீண்டும் வலியுறுத்துவது மேற்கூறிய அனைத்தையும் விட முதன்மையானது, நான் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் என நீங்கள் மேற்கொள்ளும் மன உறுதிதான்.

காரணம் புகை பிடிப்பதை நிறுத்துவதினால், பல்வேறு நோய்களிலிருந்து நாம் தப்பிக்கும் வாய்ப்புகள் உண்டு. மருந்துகள், கெமிக்கல்கள் என பட்டியலிட்டு அதில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என பார்த்தால், அதில் முதலிடத்தைப் பிடிப்பது இந்த புகைப் பழக்கம் தான்.

அமெரிக்காவில் புகைப்பிடிப்பவர்கள் – முன்னாள் புகை பிடித்தவர்கள் என பட்டியலிட்டு பார்த்தோமேயானால், அதில் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள் முன்னாள் புகைப்பிடிப்பவர்கள் தான். இதை ஏன் நாம் கூறுகிறோம் என்றால், புகைப் பிடிப்பதை நிறுத்துவது அவ்வளவு கடினமான காரியம் ஒன்றும் கிடையாது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் நாம் மேற்கூறிய அமெரிக்கர்கள். அத்தகையை எண்ணிக்கையில் புகை பிடிப்பதை  நிறுத்தி உள்ளார்கள் என்றால் நம்மாலும் முடியும்.

உங்களது நண்பரை நீங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்கிறீர்கள் என்றால், அதைவிட அவருக்கு  நீங்கள் செய்யும் உதவி வேறு எதுவும் இருக்க முடியாது.

எனவே நாம் எல்லோரும் சேர்ந்து, இந்த உலகத்தை புகைபிடிப்போர் இல்லாத இடமாக மாற்றுவோம். நன்றி !


நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

கிணற்று உறை தயாரிக்கும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை

பார்ப்பதற்கு விளையாட்டு வீரரை போல் துடிப்போடு வேலை செய்கிறார், 64 வயதான செல்வராஜ். சொந்த ஊர் திண்டிவனம்.

“20 வயசுலேயே சென்னை வந்துட்டேன். இந்த வேலைக்குப் பிறகுதான் கல்யாணம் கட்டிகிட்டேன். இன்னைக்கும் நாள் முழுக்க சளைக்காமல் உழைப்பேன், சோர்வே அண்டாது. காலையிலிருந்து 5 உறையைத் தனியாளா போட்டேன்னா பாத்துக்குங்க. வயசு பசங்கக்கூட இந்த வேலையை செய்ய முடியாது.

சுறுசுறுப்புடன் இயங்கும் திரு செல்வராஜ்

கூலின்னு பாத்தா 1,500 கிடைக்கும். காலை 7 மணிக்கு வேலைய ஆரம்பிச்சேன்னா சாயங்காலம் 7 ஆயிடும். அதன் பிறகு கை கால் கழுவிட்டு வீட்டுக்குப் போவேன். 8 கிமீ தூரத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் நகரில்தான் வீடு. வாடகைதான்.

குனிஞ்சு நிமிறுற வேல. நாள் முழுதும் செய்யும்போது  இடுப்பு நோவும், கால் முட்டியும் ஒடிஞ்சு விடுவதுபோல் வலிக்கும். வீட்டுக்குப் போனா, சுடு தண்ணி வச்சு பொறுக்கக் குளிப்பேன், வலி போயிடும். திரும்பவும் பழைய மாதிரி உடம்பு உழைக்க ரெடியாயிடும். இப்படிதான் எம் பொழப்பு போவுது. வேறெந்த கெட்ட பழக்கமும் எனக்கு இல்ல. குடிப்பது சுத்தமா பிடிக்காது. நல்லா சாப்பிடுவேன். நோய் நொடின்னு டாக்டரிடம் போனதில்ல. கை வைத்தியத்திலேயே சரிபண்ணிக்குவேன்.

சளிக்கு ஆடா தொட இலை, உடம்பு வலிக்கு சுக்கு−மிளகு சூரணம். வயித்து கடுப்பு, வாயுவுக்கு திப்பிலி. இதெல்லாம் நானே ரெடி பண்ணிக்குவேன். இப்பகூட ஸ்டாக் வச்சிருக்கேன். தேவைப்பட்டா ரெண்டு ஸ்பூன், அதான் எனக்கு மாத்திரை.

இப்படி உழைச்சுதான் மூனு பசங்கள படிக்க வச்சேன், கல்யாணமும் செஞ்சி வச்சிட்டேன். அதுல ஒருத்தன் எம்.பி.ஏ படிச்சுட்டு நல்ல வேலையில கொழந்த குட்டியோட இருக்கான். இப்ப நானும் என் பொண்டாட்டியும் தனியாத்தான் இருக்கோம்.

வயசாயும் இப்படி உழைக்கிறியேன்னு நெறைய பேரு பொறாமைபடுற மாதிரி கேப்பாங்க. எனக்கு பெரிய கவலையேதும் இல்ல, அதுவே நான் செஞ்ச பாக்கியமா நெனக்கிறேன். காரணம் என்னன்னா, எந்த வேலய செஞ்சாலும் ரசிச்சு செய்வேன். என் வேலைன்னா அது தனியா தெரியணும், கண்ணாடி மாதிரி இருக்கணும்னு நெனப்பேன். நம்ம வேல நம்ம பேர சொல்லணும். எங்ககிட்ட உறை வாங்குறவுங்க, இந்த பினிஷிங்குல எங்கேயும் கெடக்கிறதில்லன்னு சொல்வாங்க. அதுதான் எனக்குப் பெருமை”  என்றார்.

நெஞ்சை நிமிர்த்தி கூறிய அந்த வார்த்தைகள் உடல் வலிமையால் மட்டுமல்ல, மன வலிமையாலும் தொழில்மீதுள்ள வற்றாத காதலாலும் பிறந்தவை. அதனால்தான் 64 வயது இளைஞனாக இன்னமும் தோற்றமளிக்கிறார்.

***

நாம் ஆவுடையப்பனை சந்திக்கும் போது மாலை 6.30 மணி. மீதமுள்ள சிமெண்ட் கலவையை வீணாக்காமல், நீர்விட்டு கலக்கி சிறிய உறையை (புகைப்போக்கி) தயாரித்துக் கொண்டிருக்கிறார். 60 வயதைக் கடந்த இந்தத் தொழிலாளி தூத்துக்குடி எட்டயபுரத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார். சாதாரண மக்கள் வீட்டுச் சன்னலுக்கு வைக்கக்கூடிய ஜாலி, கிணற்று உரை போன்றவற்றைத் தயாரிப்பதுதான் இவரது வேலை. சிமெண்ட் போன்ற பொருட்களை பாதுகாப்பதற்காக அந்த இடத்திலேயே கட்டப்பட்ட சிறு ஓலைக் கொட்டகைதான் அவர் தங்கியிருக்கும் வீடு.

திரு ஆவுடையப்பன்

“என்ன பெரியவரே… வேலை இன்னும் முடியலையா, ஓவர்டைமா” என்று கேட்டதும்,

“இல்லை இல்லை… நமக்கு ஏது ஓவர் டைமு! வேலையிருந்தா செய்ய வேண்டியதுதானே…!” –என்று தனது தொழில் அனுபவத்தை கூறலானார்.

“30 வருசமா உறை போடுற தொழில் செய்கிறேன். தினமும் காலை அஞ்சு அஞ்சரைக்கு எழுந்திடுவேன். காலைக்கடனை முடிச்சிட்டு, நேரா டீக்கடைதான். அங்க ஒரு டீய போட்டுட்டு,  தவறாமல் பேப்பரும் படிச்சிடுவேன். அங்கிருந்து 6 மணிக்கு திரும்பினா சாயந்திரம் 6 மணி வரைக்கும் இதே வேலைதான்.

காலையிலேருந்து இரண்டு தடவ கட்டங்காப்பி போட்டு குடிச்சேன். அதான் இன்னைக்கு சாப்பாடு. சாயங்காலம் கடையில ஏதாவது சாப்பிடுவேன். வேலை வந்துட்டா வாரத்தில சில நாள் இப்படி சாப்பிடக்கூட நேரம் இருக்காது. வழக்கமா காலையில இட்லி, மதியம் பொட்டலம் சோறு. இதுக்கே தினமும் கொறைஞ்சது 100 ரூபா ஆயிடுது.

வெயில் காலத்துல மட்டும்தான் இந்த வேலை. பொரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை – மழைக்காலம் வந்துட்டா சுத்தமா வேலை இருக்காது. டீக்கே வழியில்லாத உட்கார்ந்திருப்பேன். மொதலாளிங்கதான் ஏதாவது கடன் கொடுப்பாங்க. அத வேலை வரும்போது கழிச்சுக்குவாங்க.

எம் பசங்கள்லாம் கல்யாணம் கட்டிகிணு தனியா போயிட்டாங்க. அவனுங்களும் ஏதோ வேல செஞ்சி காலத்த ஓட்டிகிட்டிருக்காங்க. என்ன மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு ஏன் தொந்தரவு கொடுக்கணுமுன்னு தனியா வந்துட்டேன். ஒடம்பு முடியாம ஊருல இருக்குற என் பொண்டாட்டிக்கு அப்பப்ப ஏதாவது பணம் அனுப்புவேன். மத்தபடி ஒண்டிகட்டதான். இந்த வேலதான் என்னோட வாழ்க்கை; இந்த வீடுதான் என்னோட உலகம்.

லோவின் திட்டங்களின் செயற்களமான பிரான்ஸ் | பொருளாதாரம் கற்போம் – 28

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 28

பாரிசை வெற்றி கொள்ளுதல்

அ.அனிக்கின்

ஸ்காட்லாந்தின் நாடாளுமன்றம் லோ கொடுத்த வங்கி நிறுவும் திட்டத்தை நிராகரித்தது. இங்கிலாந்தின் அரசாங்கம் பத்து வருடங்களுக்கு முன்பு லோ செய்த குற்றத்துக்கு மன்னிப்பு வழங்குவதற்கு இரண்டு தடவை மறுத்தது. இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் இணைப்பதற்குரிய சட்டம் தயாரிக்கப்பட்டு வந்தபடியால் லோ மறுபடியும் ஐரோப்பாவுக்குப் போவது அவசியமாயிற்று.

அங்கே அவர் அநேகமாகச் சூதாட்டத்தையே தொழிலாகக் கொண்டவரைப் போல வாழ்க்கை நடத்தினார். அவர் ஹாலந்து, இத்தாலி, பிளான்டர்ஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சில சமயம் குடும்பத்தோடும் வேறு சமயங்களில் தனியாகவும் வசித்தார்; எல்லா இடங்களிலுமே அவர் சூதாடினார்; பத்திரங்கள், நகைகள், பழைய காலத்து ஓவியங்கள் ஆகியவற்றில் வணிகச் சூதாட்டத்திலும் ஈடுபட்டார்.

மொன்டெஸ்க்யூ (Charles Montesquieu)

மொன்டெஸ்க்யூ தன்னுடைய பாரசீகத்திலிருந்து எழுதிய கடிதங்கள் என்ற புத்தகத்தில் (1721) பின்வரும் கிண்டலான கருத்தைச் சொல்லியிருக்கிறார். ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்கின்ற பாரசீகக்காரர் கூறுவதாக அதை எழுதியிருக்கிறார். “ஐரோப்பாவில் எங்கும் சூதாட்டம் நடக்கிறது; சூதாடியாக இருப்பது ஒரு வகையான அந்தஸ்தாகும். உயர்ந்த குடிப்பிறப்பு, நேர்மை, செல்வம் ஆகியவற்றுக்குப் பதிலாக சூதாடி என்ற பட்டமே போதுமானதாக இருக்கிறது. அந்தப் பட்டத்தைக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் நேர்மையுள்ள மனிதர்களின் வரிசையில் இடம் பெறுகிறார்கள்…”

இப்படிப்பட்ட வழியின் மூலமாகவே லோ சமூக அந்தஸ்தையும் செல்வத்தையும் அடைந்தார். சூதாட்டத்தில் அவருடைய திறமையைப் பற்றி அதிகமான கட்டுக்கதைகள் பரவின. அவருடைய உலையா அமைதி, நுண்ணறிவு, நினைவாற்றல், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் மூலம் பெரும் வெற்றிகள் சிலவற்றை அடைந்தார். அவர் கடைசியாகப் பாரிசில் குடியேறுவது என்று முடிவு செய்த பொழுது தன்னோடு 16 லட்சம் லிவர் பணமும் கொண்டு வந்தார். ஆனால் பாரிஸ் நகரத்தில் நடைபெற்று வந்த சூதாட்டமும் ஊக வாணிகமும் மட்டும் அவரை ஈர்க்கவில்லை.

படிக்க:
தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !
♦ பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் !

பிரான்சில் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்த பொழுது தன்னுடைய திட்டம் அங்கே ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகரித்தது. அங்கே அரசாங்கக் கருவூலங்கள் காலியாக இருந்தன; பெரிய அளவில் தேசியக் கடன் ஏற்பட்டிருந்தது; கடன் வசதி குறைவாக இருந்தது; பொருளாதாரத்தில் தேக்கமும் தாழ்வும் ஏற்பட்டிருந்தது. காகித நோட்டுகளை வெளியிடும் அதிகாரத்தைக் கொண்ட அரசு வங்கியை ஏற்படுத்துவதன் மூலம் இந்தக் குறைகளை நீக்க முடியும் என்ற ஆலோசனையை லோ முன்வைத்தார்.

பதினான்காம் லுயீ

1715 செப்டெம்பர் மாதத்தில் பதினான்காம் லுயீ இறந்த பொழுது அந்தத் தருணம் வந்தது. பழைய அரசர் மரணமடைந்ததால் அவருடைய வாரிசு வயதுக்கு வரும் வரையிலும் அவர் சார்பில் ஆட்சி செய்வதற்கு அதிக வாய்ப்புப் பெற்ற ஒருவரிடம் இதற்கு முன்பே லோ தன்னுடைய கருத்தைச் சொல்லிவந்தார்.

அவர் பழைய அரசரின் மைத்துனரான ஆர்லியானைச் சேர்ந்த ஃபிலீப் கோமகன். இந்த ஸ்காட்லாந்துக்காரரின் பேச்சில் ஃபிலீப்புக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்தது. அரசாட்சி செய்வதற்குத் தன்னோடு போட்டியிட்டவர்களை ஒழித்து விட்டு பொறுப்பு அரசர் பதவியைக் கைப்பற்றியதும் ஃபிலீப் உடனே லோவைக் கூப்பிட்டனுப்பினார்.

ஃபிலீப்பின் ஆலோசகர்களான மேற்குடியினரும் பாரிசிலிருந்த நாடாளுமன்றத்தினரும் அவருடைய திட்டத்தை எதிர்த்தனர். அவர்கள் தீவிரமான நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சினர்; மேலும் லோ அந்நிய நாட்டைச் சேர்ந்தவராதலால் அவர் மீது அவநம்பிக்கை கொண்டிருந்தனர். இத்தகைய எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு அதிகமாயிற்று. அரசு வங்கி என்ற கருத்தைக் கைவிட்டுத் தனியார் கூட்டுப் பங்குகளைக் கொண்ட வங்கியை ஏற்படுத்துவதற்கு லோ இணங்க நேரிட்டது. ஆனால் லோ -வின் செயல் திட்டத்தில் இது ஒரு ஏய்ப்பு நடவடிக்கையே; அந்த வங்கி ஆரம்பத்திலிருந்தே அரசுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தது.

1716 -மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜெனரல் வங்கி அதன் நடவடிக்கைகளின் முதல் இரண்டு வருடங்களில் மாபெரும் வெற்றியடைந்தது. திறமைமிக்க நிர்வாகியும் நுண்ணறிவுடைய வணிகரும், அனுபவமிக்க அரசியல்வாதியும் ராஜ்ஜியப் பிரமுகருமான லோ பொறுப்பு அரசரின் ஆதரவோடு பிரான்சின் மொத்த பணவியல், கடன் வசதி அமைப்பையும் நம்பிக்கையோடு கைப்பற்றினார். இந்த வங்கி வெளியிட்ட நோட்டுகள் – வெளியீட்டின் அளவை இந்தக் கட்டத்தில் லோ வெற்றிகரமாக நிர்வகித்தார் – செலாவணியில் புகுத்தப்பட்டபொழுது அவை பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன; சில சமயங்களில் உலோகப் பணத்தோடு ஒப்பிடும் பொழுது, உயர் மதிப்போடு அங்கீகரிக்கப்பட்டன.

பாரிஸ் நகரத்தின் லேவாதேவிக்காரர்களோடு ஒப்பிடும் பொழுது வங்கி குறைவான வட்டிக்குக் கடன் வழங்கியதோடு, வேண்டுமென்றே தொழில் துறை, வர்த்தகத்துக்குப் பணத்தைக் கொடுத்தது , தேசிய பொருளாதாரத்தில் புது ஊக்கம் ஏற்பட்டது; இதை எல்லோருமே பார்க்க முடிந்தது.

(தொடரும்…)

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983