Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 318

மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

நாள்: 07.11.2019

பத்திரிகை செய்தி

  • மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை வெளிப்படைத்தன்மையோடு, நேர்மையாக நடத்துக!
  • யாரை நியமிக்க சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுகின்றன?
  • முந்தைய துணைவேந்தர் திரு. செல்லத்துரை காலத்தில் நடந்த முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

1. கடந்த 31.05.2019 அன்று வெளியான அறிவிப்பின்படி மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளருக்கான விண்ணப்பங்கள் 21.06.2019-க்குள் அளிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. விண்ணப்பப் படிவத்தில் தங்கள் மீது குற்ற/துறை ரீதியான நடவடிக்கைகள் நிலுவையில் இல்லை என விண்ணப்பதாரர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும். விண்ணப்பங்களை பரிசீலிக்கக் குழு அமைக்கப்பட்டு 25.07.2019 அன்று 20 பேராசிரியர்கள் நேர்காணலுக்கு வரத் தகுதியானவர்கள் எனப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலே குளறுபடியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. Dr.Paul Mary Deborrah என்பவர் பெயர் இருமுறை(1,7) இறுதி செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் திரு.ஓ.ரவி மற்றும் கர்ணமகாராஜன் ஆகியோர் “தற்காலிகமாக இறுதி செய்யப்பட்டுள்ளனர்” (Provisionally Shortlisted) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகச் சட்டப்படி தற்காலிகமாக இறுதி செய்தல் சட்டவிரோதம்.

மேலும் பல்கலைக் கழகத் தேர்வாணையர் திரு.ஓ.ரவி மீது துறைரீதியான நடவடிக்கையும், ரூபாய் 40 லட்சம் அரசுப் பணத்தை மோசடி செய்ததாக கு.எண்.09/2017 என்ற கிரிமினல் வழக்கு 21.06.2019-ல் உசிலம்பட்டி தாலுகா காவல்நிலையத்தில் நிலுவையிலிருந்தது. பேராசிரியர் திரு.கர்ணமகாராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தது. சட்டப்படி இவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏற்கப்பட்டு, இவர்களில் திரு.ஓ.ரவி மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதற்குரிய காரணத்தை துணைவேந்தர் விளக்க வேண்டும்.

2. செப் 23, 2019 அன்று பதிவாளர் நேர்காணல் (Interview) என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்பு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காரணம் அறிவிக்கப்படவில்லை. 23.09.2019 அன்று நடந்த பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் அரசின் பிரதிநிகளை நேர்காணல் குழுவில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிண்டிகேட் உறுப்பினர்களின் எதிர்ப்பால் நேர்காணல் குழு உறுப்பினர்கள் குறித்த அஜண்டா (Item no.65) ஒத்திவைக்கப்பட்டது.

3. உச்சகட்ட விதிமீறலாக MKU ACT-CHAPTER VI- SEC.1-ன்படி நேர்காணல் குழுவை சிண்டிகேட் இறுதி செய்யாமலே, நவம்பர் 7, 2019 அன்று நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதனை சிண்டிகேட் உறுப்பினர்கள் எதிர்த்ததால் இன்று நடைபெற இருந்த நேர்காணலும் சந்தேகத்திற்கிடமான முறையில் ரத்து செய்யப்பட்டது.

4. மேற்கண்ட நடைமுறைகள் துணைவேந்தருக்கோ, அதிமுக அமைச்சர்களுக்கோ வேண்டிய நபரை பதிவாளராக்குவதற்கான வேலைகள் நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. இதற்கு துணைவேந்தர் விளக்கமளிக்க வேண்டும்.

படிக்க:
கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !
♦ காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

துணைவேந்தரின் செயல்பாடுகள் பல்கலைக் கழகத்தை மேம்படுத்துமா?

02.01.2019 அன்று பொறுப்பேற்ற துணைவேந்தர் திரு.கிருஷ்ணன், பத்து மாதங்களை  நிறைவு செய்துள்ளார். பல்கலைக் கழகத்தில் நிலவிவரும் முறைகேடுகளை அகற்றுவதே தனது முக்கியப் பணி என்றார். இன்று நிலைமை என்ன?

1. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிர்மலாதேவி பிரச்சனையில் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்பும், சம்மந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க, குழு கூட அமைக்காததேன்?

2. செனட், சிண்டிகேட்டிற்கான Academic council- தேர்தல்கள் நடத்தப்படாதது ஏன்?

3. பல்கலைக் கழக சட்டப்படி உதவிப் பதிவாளர் தகுதியில் உள்ள ஒருவரே, பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்க வேண்டும். ஆனால், கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள அறிவழகன் என்பவர் தனது அரசியல் செல்வாக்கால் தொடர்ந்து 5 ஆண்டுகள் மக்கள் தொடர்பு அலுவலராக உள்ளார். துணைவேந்தர் மவுனம் காப்பதேன்?

4. நிர்மலாதேவி பிரச்சனையில் விசாரிக்கப்பட்ட பேராசிரியர் கலைச்செல்வன், தற்காலிகப் பதிவாளர் பேராசிரியர் சுதா, பல்கலை ஊழியரை மிகவும் தரக்குறைவாகப்பேசி மிரட்டியது தொடர்பாக பதிவாளர் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை ஏன்? பதிவாளர் நிலைமையே இதுதான் என்றால் நிர்வாகம் எப்படி நடக்கும்?

மேற்கண்ட கேள்விகளுக்கு துணைவேந்தர் உரிய விளக்கமளித்து அறிக்கை வெளியிட வேண்டும். 31.05.2019 தேதிய பதிவாளர் தேர்வு அறிவிக்கையை ரத்து செய்து, புதிதாக வெளியிட வேண்டும். தேர்வுமுறை, தேர்வு நடவடிக்கைகள் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். பல்கலைக் கழக சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
முகவரி:384, முதல் தளம்,
கிழக்கு 8-வது தெரு,
கே.கே.நகர், மதுரை-20.  
தொடர்புக்கு : 98653 48163.

வழக்கறிஞர் சே. வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்

பேரா.அ. சீனிவாசன்,
தலைவர்

ம. லயனல் அந்தோணிராஜ்,
செயலர், மதுரைக் கிளை

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !

நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள் : பா.ஜ.க.வின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !

ருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்டிருப்பதை ஆதரிக்கும் அனைவரும், “தகுதி இல்லாதவர்கள்” மருத்துவர் ஆவதைத் தடுப்பதற்காகத்தான் தேசிய அளவிலான ஒரே தேர்வு கொண்டுவரப்பட்டிருப்பதாக நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால், அத்தகுதித்  தேர்வின் நோக்கம் பொருளாதாரரீதியாகவும், சாதிரீதியாகவும் பின்தங்கிய மாணவர்கள் –  கவனிக்க, தகுதி மற்றும் திறமை அடிப்படையில் பின்தங்கியவர்கள் அல்ல –  மருத்துவர் ஆவதைத் தடுப்பதுதான் என்பது நீட் அமலுக்கு வந்த அதே ஆண்டில் நடந்த அனிதாவின் தற்கொலை மூலம் அம்பலமானது.

வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு ஒரே தேர்வுமுறை அநீதியானது என ரத்தத்தால் எழுதிப் போராடும் மாணவர்கள். (கோப்புப் படம்)

நீட் தேர்வு முறை அதன் தன்மையிலேயே ஒருதலைபட்சமானது. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றபடி மாநிலப் பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்துவரும் நிலையில், அவையெல்லாம் புறக்கணிக்கப்பட்டு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அடிப்படையில் மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படுவது; நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துத் தயாரிக்கப்படுவது; தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் அவ்வினாத்தாள் வழங்கப்பட்டாலும், அவற்றில் ஏதாவது தவறுகள் நேர்ந்தால் ஆங்கில வினாத்தாள்தான் இறுதியானது என நியாயத்திற்குப் புறம்பான முறையில் மட்டையடியாக ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது; மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு +2 மதிப்பெண்களைக் கணக்கிலே கொள்ளாமல், நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்ணை மட்டுமே தகுதியாகக் கொண்டிருப்பது ஆகிய இவை அனைத்துமே இத்தேர்வு முறையின் ஓரவஞ்சனையை எடுத்துக்காட்டுகின்றன.

இவை காரணமாக அத்தேர்வு, அதன் இயல்பிலேயே அரசுப் பள்ளிகளில், அதுவும் தாய்மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு எதிராக அமைகிறது.  மேலும், தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆங்கில் வழியில் பயிலும் மாணவர்கள்கூட நீட் தேர்வு எழுதுவதற்குத் தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லுவதைக் கட்டாயமாக்கி, +2 பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டது.

படிக்க:
நீட் : தோண்டத் தோண்ட வெளிவரும் முறைகேடுகள் !
♦ கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து ! 

இத்தனியார் பயிற்சிப் பள்ளிகளும்கூட ஒருபடித்தானவை கிடையாது. பத்தாயிரம், இருபதாயிரம் கட்டணம் வசூலிக்கும் தனிப் பயிற்சிப் பள்ளிகளும் உண்டு. இலட்சக்கணக்கில் வசூலிக்கும் தனிப் பயிற்சிப் பள்ளிகளும் உண்டு. மேலும், இத்தனிப் பயிற்சிப் பள்ளிகளில் அளிக்கப்படும் பயிற்சிகளை எடுத்துக்கொண்டால், அவை ஒரு வருட பயிற்சித் திட்டம், இரண்டு வருட பயிற்சித் திட்டம், எட்டாம் வகுப்பு தொடங்கியே நீட் தேர்வுக்குப் பயிற்சி கொடுக்கும் திட்டம் என காசுக்குத் தக்கபடி விதவிதமாக உள்ளன.

நீட் தேர்வு வந்த பிறகு அத்தேர்வை மூன்று முறை எழுதவதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருப்பதால், +2 முடித்த பிறகும்கூட ஓரிரு ஆண்டுகள் நீட் தேர்வுக்காகத் தனிப் பயிற்சி எடுத்துக்கொண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பு பொருளாதார வசதி படைத்த மாணவர்களுக்குக் கிட்டியிருக்கிறது.

ஏழை மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் தமது பள்ளிகளில் நடத்தப்படும் வகுப்புக்களையும் அரசு நடத்தும் தனிப் பயிற்சி வகுப்புக்களையும்தான் நீட் தேர்வு எழுதுவதற்கு நம்பியிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களால் நீட் கோச்சிங்கிற்காக பல பத்தாயிரக் கணக்கில் பணம் செலவு செய்யக்கூடிய பணக்கார மாணவர்களோடு எப்படிப் போட்டியிட முடியும்?

ஆள்மாறாட்டம் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த உதித் சூர்யா (இடது) மற்றும் இர்ஃபான்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுள் பெரும்பாலோர் ஆதிக்க சாதியினராகவும், உயர் நடுத்தர வர்க்கப் பிரிவினராகவும் இருப்பது எதார்த்தமான உண்மை. அது போல சாதிரீதியாகவும் பொருளாதார ரீதியாவும் பின்தங்கிய மாணவர்கள்தான் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். எனவே, நீட் தேர்வு அதன் தன்மையிலேயே அடித்தட்டு வர்க்கத்தினரைப் புறக்கணிப்பதாகவும், உயர்சாதி, பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்குச் சாதகமாகவும் அமைகிறது. மேலும். இட ஒதுக்கீடு பெறும் சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகளிலும் கூடப் பத்தாயிரக் கணக்கில் பணம் செலவழித்துத் தனிப்பயிற்சிக்குச் செல்லக்கூடிய மாணவர்கள்தான் மருத்துவராகும் கனவைக்கூடக் காண முடியும்.

இவை ஒருபுறமிருக்க, மிக மிக வசதியான குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய தேவையும் கிடையாது. அவ்வாரிசுகள் நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்திருந்தாலே போதும். தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் அல்லது தனியார் மருத்துவப் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பல இலட்சங்களை வீசியெறிந்து இடத்தைப் பிடித்துவிட முடியும்.

ஆகவே, நீட் தேர்வு எதிர்பார்க்கும் தகுதி என்பது பிரதானமாகப் பணம்தான். தற்பொழுது தமிழகத்தில் அம்பலமாகியிருக்கும் ஆள் மாறாட்டங்கள், பாதாளம் வரை பாயக்கூடிய பணபலத்தின் முன் நீட் தேர்வெல்லாம் சப்பை மேட்டர் என்பதை நிரூபித்திருக்கிறது. மேலும், நீட் தேர்வை நடத்துவதற்குத் தேசியத் தேர்வு முகமை என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய அமைப்பும் இம்மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் தோற்றுப்போய்விட்டது.

♦ ♦ ♦

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா, இர்ஃபான், ராகுல், பிரவீன், பிரியங்கா ஆகிய ஐந்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இம்மாணவர்களுள் உதித் சூர்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரியிலும்; இர்ஃபான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும்; மற்ற மூன்று பேர் வெவ்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆள் மாறாட்டத்தின் மூலம் சேர்ந்து படித்து வந்தனர்.

உதித் சூர்யாவிற்குப் பதில் வேறொரு நபர் நீட் தேர்விலும், மருத்துவக் கலந்தாய்விலும், பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த மாணவர் சேர்க்கையின் போதும் கலந்து கொண்டுள்ளார். ஆனால், அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் உதித்சூர்யாவினுடையது. கல்லூரி தொடங்கிய பிறகு உதித்சூர்யா வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

மாணவிகளின் துப்பட்டாவையும், கொண்டை ஊசியையும் கூட பிடுங்கிக் கொண்டு ‘கடுமையாகச் சோதித்த’ நீட் தேர்வு அதிகாரிகள். பேனைத் தேடி பொருச்சாளியை விட்ட கதை.

பிரவீனும் ராகுலும் சென்னையில் நீட் தேர்வு எழுதிய அதேசமயத்தில், அவர்களது பெயர் மற்றும் முகவரியில் போலி நபர்களும் வடநாட்டு மையங்களில் அவர்களுக்காகத் தேர்வு எழுதியிருக்கிறார்கள். பிரவீனும் ராகுலும் குறைவான மதிப்பெண் எடுத்ததால், அவர்கள் இருவரும் போலியான நபர்கள் எடுத்த அதிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பயன்படுத்தித் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் கண்காணிப்பு, கெடுபிடிகள் நடத்தப்படும்போது, வடநாட்டு மையங்களில் ஆள்மாற்றாட்டம் சர்வசாதாரணமாக நடைபெற்றிருக்கிறது. தமிழகம் மைய அரசால் ஓரவஞ்சனையாகவும் சந்தேகக் கண்ணோடும் நடத்தப்படுகிறது என்பதை இந்தப் பாரபட்சமான அணுகுமுறை நிரூபிக்கிறது.

படிக்க:
நீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் ! புமாஇமு கருத்தரங்கம் !
♦ நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !

இந்த ஆள்மாறாட்டத்தை நீட் தேர்வை நடத்தும் அதிகாரம் கொண்ட தேசியத் தேர்வு முகமையோ, மருத்துவ மாணவர் சேர்க்கையைக் கண்காணிக்கக்கூடிய இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளிட்ட வேறு அதிகார அமைப்புக்களோ கண்டுபிடிக்கவில்லை. மேலும், அரசு நடத்தும் கலந்தாய்வு உள்ளிட்ட இடங்களிலும் இந்த மோசடி கண்டுபிடிக்கப்படவில்லை.

மாறாக, படிப்பில் மிகவும் பின்தங்கிய மாணவனான உதித் சூர்யா பற்றிய விவரங்கள் சமூக ஊடகம் வழியாகக் கசிந்து வெளியில் வர, அதன் பிறகுதான் இந்த ஆள்மாறாட்ட மோசடி அம்பலமானது.

♦ ♦ ♦

திகார வர்க்கத்திற்கு இலஞ்சம் கொடுத்து போலியான இருப்பிடச் சான்றிதழைப் பெற்று தமிழகத்தைச் சேராத 150 மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த ஆள்மாறாட்ட மோசடி அம்பலமாகியிருக்கிறது. மேலும், இம்மோசடியில் ஈடுபட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் இந்த ஐந்து பேர் மட்டும்தானா,  மற்ற மாநிலங்களிலும் இது போன்ற மோசடி நடைபெற்றிருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஏனென்றால், இந்த ஆள்மாறாட்ட மோசடி அம்பலமாவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த ரியாஸ் மற்றும் பீகாரைச் சேர்ந்த நிதிவர்மன் என்ற இரண்டு மாணவர்கள் போலியான மாணவர் சேர்க்கைச் சான்றிதழ் கொடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முயன்று பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தில்லியில் உள்ள கும்பல் ஒன்றிடம் பணம் கொடுத்து இந்தப் போலிச் சான்றிதழ்களை வாங்கியதாக ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

போலி சேர்க்கைச் சான்றிதழ், போலி இருப்பிடச் சான்றிதழ், ஆள் மாறாட்டங்கள் என்பவையெல்லாம் அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆள் மாறாட்டங்களில் ஈடுபட்டு நீட் தேர்வை எழுதிய நபர்கள் கேரளாவையும் வட மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. உதித் சூர்யாவும் இர்ஃபானும் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்ற சென்னை அண்ணா நகரிலுள்ள கிரீன் பார்க் நீட் கோச்சிங் சென்டருக்கும் இம்மோசடியில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகத் தமிழக போலீசு கூறியிருக்கிறது.

இந்த ஆள் மாறாட்ட மோசடிக்குப் பிறகு நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் குழும அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் 30 கோடி ரூபாய் ரொக்கமும் 150 கோடி ரூபாய்க்குக் கணக்கில் வராத ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீட் மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் கிரீன் பார்க் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் 30 கோடி ரூபாய் பணமும், 150 கோடி ரூபாய் பெறுமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இவை ஒருபுறமிருக்க, 2017-ம் ஆண்டு ஆள்மாறாட்டம் செய்த நான்கு மாணவர்கள் கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 2018-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சீதாதேவி என்ற மாணவி குறுக்கு வழியில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விவகாரம் அம்பலமானது. 2013-ம் ஆண்டிலிருந்தே வட இந்திய மாநிலங்களில் நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பே வினாத்தாள் கசிவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் ஒரு கிரிமினல் கும்பல் இந்தியா முழுமைக்கும் வலைப்பின்னலை ஏற்படுத்திக் கொண்டு, அதிகார வர்க்கம், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், கோச்சிங் சென்டர்கள் ஆகியோரைக் கையில் போட்டுக்கொண்டு நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளை நடத்தி வருவது தெளிவாகிறது.

தமிழக போலீசு விசாரித்து வரும் இந்த ஆள்மாறாட்ட மோசடி வழக்கு அக்கிரிமினல் கும்பலை, அதற்குத் துணையாக நிற்கும் அதிகார வர்க்கத்தைக் கைது செய்யும் திசையில் இதுவரை நகரவில்லை. உதித் சூர்யா உள்ளிட்ட ஐந்து மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் கீழ்மட்டத்திலுள்ள மூன்று தரகர்கள் கைது செய்யப்பட்டதற்கு அப்பால், இந்த மோசடியின் சூத்திரதாரிகள் யார் என்று இதுவரையிலும் விசாரணையில் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழக அரசோ, இது மைய அரசின் பிரச்சினை என ஒதுங்கிக் கொள்கிறது. நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை உள்ளிட்ட மைய அரசின் நிறுவனங்களோ இம்மோசடி பற்றி வாயே திறக்க மறுக்கின்றன. இவை யாவும் கைது செய்யப்பட்டிருக்கும் இவர்களோடு வழக்கை முடித்துவிடுவார்களோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.

♦ ♦ ♦

மோடி அரசு நீட் தேர்வைத் தமிழகத்தின் மீது திணித்தபோதே, இது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழலைத் தேசியமயமாக்குவதில்தான் முடியும் என அம்பலப்படுத்தி எழுதியிருந்தோம். அது இப்பொழுது உண்மையாகியிருக்கிறது.

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வின் போது காப்பியடிக்க உதவுவது, விடைத்தாளை மாற்றுவது, தேர்வுக்கு முன்பே வினாத்தாளை வெளியிடுவது, போலியான ஆவணங்கள் சமர்ப்பிப்பது எனப் பல வகைகளில் பல ஆண்டுகளாக வியாபம் முறைகேடு மத்தியப் பிரதேசத்தில் நடந்து வந்தது. அம்முறைகேட்டின் பின்னே ஒரு பெரிய மாஃபியா கும்பல் இருந்ததும், மாநில ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பேராசிரியர்கள் என அதிகாரம் படைத்த பலருக்கும் அம்முறைகேட்டில் நெருங்கிய தொடர்பிருந்ததும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

வியாபம் ஊழலை விசாரித்து வரும் சி.பி.ஐ., 2000-க்கும் அதிகமானவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்திருப்பதைத் தாண்டி, வேறெதையும் இதுவரை சாதிக்கவில்லை. இம்முறைகேடுகளை அம்பலப்படுத்தி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர்களுள் ஒருவரான ஆனந்த் ராய், “விசாரணையைத் தாமதப்படுத்துவதன் மூலம், வழக்கை நீர்த்துப் போகச் செய்ய சி.பி.ஐ. முயலுகிறது” எனக் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட, உச்ச நீதிமன்றக் கண்காணிப்பு வரை சென்ற வியாபம் ஊழலின் விசாரணைக்கே இதுதான் கதி எனும்போது, தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த மினி வியாபம் ஊழலின் விசாரணை மட்டும் ஐந்து மாணவர்கள், அவர்களது பெற்றோர்களையும் தாண்டி, இந்த ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் கிரிமினல் கும்பலையும் அதிகார வர்க்கத்தினரையும் தண்டித்துவிடும் என நம்புவதற்கு இடமில்லை.

இந்த ஆள்மாறாட்ட முறைகேடு அம்பலமான பிறகு, நீட் தேர்வில் பயோ- சோதனையைப் புகுத்த வேண்டும் எனக் கோரியிருக்கிறது, தமிழக அரசு. இது கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா என்ற விவாதத்திற்கு வேண்டுமானால் பயன்படலாம்.

நீட் தேர்வு பலி கொண்ட மாணவிகள் அனிதா மற்றும் பிரதீபா.

இம்முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் தொடங்கி குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எந்தளவிற்கு அவசியமானதோ, அதனைவிடப் பலமடங்கு அவசியமானது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை. ஏனென்றால், நீட் தேர்வு அதன் தன்மையிலேயே ஏழை மாணவர்களின், தாய்மொழியில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களின் மருத்துவக் கனவுகளை முளையிலேயே நசுக்கிவிடும் ஓரவஞ்சனைமிக்கது. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் பணம் படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமானது. தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரி இடங்களைத் தமிழகத்தைச் சேராத மாணவர்கள் குறுக்குவழியில் அபகரித்துக்கொள்ளும் அபாயமிக்கது.

மேலும், ஊழல், முறைகேடுகளால் புரையோடிப் போயிருக்கும் இந்த அமைப்பு முறை எத்தனை கண்காணிப்புகள், சோதனைகளைக் கொண்டுவந்தாலும், அதிலெல்லாம் ஓட்டைபோட்டுப் பணத்தை வீசியெறிபவர்களுக்குச் சாதகமாகச் செயல்படவே செய்யும்.

எனவே, இனியும் அனிதா போன்ற மருத்துவராகும் தகுதி படைத்த ஏழை மாணவ – மாணவிகள் நீட்டால் ஏமாற்றமடைந்து தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க வேண்டும் என்றால், நீட்டை அடியோடு ரத்து செய்யக் கோரும் போராட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் எழ வேண்டும்.

அழகு

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

இந்த நாளைப் பற்றி எத்தனை எத்தனை முறைகள் அவன் கனவு கண்டிருந்தான் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 04b

மெரேஸ்யெவின் விமானம் ஒரு புறம் தள்ளப்பட்டது. அது நெருப்புப் பிழம்பு ஒன்றின் அருகாகப் பாய்ந்து சென்றது. விமானத்தைச் சமநிலையில் திருப்பியவாறு மெரேஸ்யெவ் வானத்தை அண்ணார்ந்து பார்த்தான். அவனது பின்னோடி வெள்ளைச் சோப்பு நுரையை ஒத்த மேகப் படிவுகளுக்கு மேலே எல்லையற்ற நீல வானில் தொங்கியபடி வலப்புறமாக அவனைத் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தான். சுற்றிலும் வெறுமையாக இருந்தது. தொடுவானில் மட்டுமே, தொலைதூர மேகங்களின் பின்னணியில் நாற்புறமும் சிதறி ஓடிய “செருப்புக்காலிகள்” வரையுருக்கள் தென்பட்டன. மெரேஸ்யெவ் கடிகாரத்தைப் பார்த்தவன் ஆச்சர்யம் அடைந்தான். சண்டை குறைந்தது அரை மணி நேரம் நீடித்திருக்க வேண்டும் என்றும் பெட்ரோல் தீர்ந்து போகும் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவனுக்குத் தோன்றியது. உண்மையிலோ, எல்லாவற்றிற்கும் மூன்றறை நிமிடங்களே பிடித்திருக்கின்றன என்று கடிகாரங்கள் காட்டின.

வலப்புறம் சம மட்டத்துக்கு வந்து அருகாகப் பறந்த பின்னோடியைப் பார்த்து, “உயிரோடு இருக்கிறாயா?” என்று கேட்டான் மெரேஸ்யெவ்.

பல்வகை ஒலிகளின் குழப்பத்தினூடாக, எங்கோ தொலைவிலிருந்துபோல் ஒலித்தது வெற்றிக் குரல்.

“உயிரோடிருக்கிறேன்!… தரை… தரையில் பாருங்கள்…..”

கீழே, மிதித்துத் துவைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டிருந்த கல்லுங்கடுரடுமான பள்ளத்தாக்கில் புகைமண்டிய பெட்ரோல் நெருப்புக்கள் சில இடங்களில் மூண்டெரிந்தன. வீசாமல் அசைவற்றிருந்த காற்றில் அவற்றின் கொழும் புகை தூண்களாக எழுந்தது. ஆனால் மெரேஸ்யெவ் பகை விமானங்களின் இந்த எரியும் பிணங்களைப் பார்க்கவில்லை. போர்க்களம் அனைத்திலும் விரிவாகப் பரவி ஓடிக் கொண்டிருந்த சாம்பல் – பசுமைநிற வண்டுகளையே அவன் நோக்கினான். இரு குறுகிய பள்ளங்கள் வழியே அவை பகைவர்களின் இடங்களைத் தாக்கிப் புகுந்து விட்டன. ஜெர்மன் பீரங்கிகளின் குண்டுகள் அவற்றின் பின்னே இன்னும் வெடித்துக் கொண்டிருந்தன, எனினும் அவை ஜெர்மன் அரண்வரிசைகளைக் கடந்து மேலே முன் சென்றன.

பகைவர்களின் தகர்ந்த அரணிடங்களுக்கு உள்ளே நூற்றுக் கணக்கான இந்த டாங்கிகள் புகுந்து தாக்குவதன் அர்த்தம் என்ன என்பதை மெரேஸ்யெவ் புரிந்து கொண்டான்.

படிக்க:
அரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு !
கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! புதிய கலாச்சாரம் நூல்

அன்று நிகழ்ந்ததைப் பற்றி மறுநாள் சோவியத் மக்களும், விடுதலை விரும்பும் உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துடன் செய்தித்தாள்களில் படித்தனர்.

கூர்ஸ்க் பிரதேசத்தின் ஒரு பகுதியில், இரண்டு மணி நேரம் பலத்த பீரங்கித் தாக்குதலுக்குப் பிறகு சோவியத் சேனை ஜெர்மானிய அரண்வரிசையை உடைத்து எல்லாப் படைகளுக்கும் வழியைச் செப்பம் செய்தன.

காப்டன் செஸ்லோவின் ஸ்குவாட்ரனில் இருந்த ஒன்பது விமானங்களில் இரண்டு அன்று விமான நிலையம் திரும்பவில்லை. விமானச் சண்டையில் ஒன்பது “செருப்புக் காலிகள்” சுட்டு வீழ்த்தப்பட்டன. ஒன்பதுக்கு இரண்டு என்பது விமானங்களைப் பற்றிப் பேசுகையில் சந்தேகமின்றி நல்ல கணக்குத் தான். எனினும் இரண்டு தோழர்களை இழந்தது வெற்றிக் களிப்பில் துயர நிழல் படியச் செய்தது. விமானங்களிலிருந்து வெளியே குதித்த விமானிகள் ஆரவாரிக்கவில்லை, கத்தவில்லை, சண்டையின் சிக்கல்களைப் பற்றி உற்சாகத்துடன் விவாதித்து, கடந்துவிட்ட அபாயத்தை மீண்டும் அனுபவித்தவாறு கைகளை வீசி ஆட்டவில்லை. வெற்றிகரமான சண்டைக்குப் பின் வழக்கமாகச் செய்யும் இந்தக் காரியங்களை அன்று அவர்கள் செய்யவில்லை. அலுவலகத் தலைவரைச் சுளித்த முகங்களுடன் அணுகி, விளைவுகள் பற்றிய வரையறுத்த, சுருக்கமான தகவலைக் கொடுத்துவிட்டு ஒருவரை ஒருவர் நேரிட்டு நோக்காமலே பிரிந்து சென்றார்கள்.

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் ரெஜிமென்டுக்குப் புதியவன். கொல்லப்பட்டவர்களின் முகங்கள் கூட அவனுக்குப் பழக்கமில்லை. எனினும் பொதுவாக எல்லோருக்கும் ஏற்பட்டிருந்த சோகம் அவனையும் தொற்றிக் கொண்டது. எதற்காகத் தனது சித்தவுறுதி முழுவதையும் மனோபலம் அனைத்தையும் ஈடுபடுத்தி முயன்றானோ, அவனது வாழ்க்கையிலேயே மிக மிக முக்கியமான அந்த நிகழ்ச்சி நடந்தேறிவிட்டது. அவனது அடுத்துவரும் வாழ்க்கை முழுவதையும் நிர்ணயிப்பது இந்த நிகழ்ச்சி, உடல் நலமுள்ள முழு மதிப்பு வாய்ந்த மனிதர்களின் அணிகளில் அவன் மீண்டும் சேரப் புரிவது. மருத்துவமனைக் கட்டிலிலும், பிறகு நடக்கவும் நடனமாடவும் கற்றுக்கொள்ளும் போதும், இழந்துவிட்ட விமானமோட்டும் தேர்ச்சியை விடாப்பிடியான பயிற்சிகளால் மீண்டும் பெற்ற போதும் எத்தனை எத்தனை முறைகள் அவன் இந்த நாளைப் பற்றிக் கனவு கண்டிருந்தான்! இப்போது, அந்த நாள் வந்துவிட்டது. இரண்டு ஜெர்மன் விமானங்கள் அவனால் சுட்டு வீழ்த்தப்பட்டன. சண்டை விமானமோட்டிகள் குடும்பத்தில் அவன் சமஉரிமையுள்ள உறுப்பினன் ஆகிவிட்டான். அவன் எல்லோரையும் போலவே அலுவலகத் தலைவரை அணுகி, தான் வீழ்த்திய விமானங்களின் எண்ணிக்கையைக் கூறி, நிலைமைகளை விவரித்து, பெத்ரோவைப் புகழ்ந்து விட்டு அப்பால் போய், அன்று திரும்பாத விமானிகளைப் பற்றிச் சிந்தித்தவாறு பிர்ச் மரப்பந்தரின் கீழ் நின்றான்.

பெத்ரோவ் மட்டுமே தலைக்காப்பு இன்றி, வெளிர் முடிகள் கலைந்து பறக்க, விமானத் திடலில் ஓடி, வழியில் எதிர்ப்பட்டவர்கள் எல்லாருடைய கைகளையும் பற்றிக் குலுக்கி, விமானச் சண்டையை விவரிக்கலானானன்:

“..பார்க்கிறேனோ, பகை விமானங்கள் பக்கத்தில் வந்து விட்டன., கையை நீட்டினால் பிடித்துவிடலாம் போல! கேளு…. பார்த்தேன்: சீனியர் லெப்டினன்ட் முன் விமானத்தைக் குறிவைத்துத் தாக்கிவிட்டார். நான் பக்கத்து விமானத்தைக் குறிவைத்தேன். ஒரே அடி, விமானம் கயா!”

அவன் மெரேஸ்யெவிடம் ஓடி அவன் காலருகே மென்மையான புல்லடர்ந்த பாசி மீது விழுந்து கால்களை நீட்டிக் கொண்டான். இந்த அமைதியான கிடை அவனுக்குச் சகிக்கவில்லை. எனவே உடனே துள்ளி எழுந்தான்.

“நீங்கள் தாம் இன்று எப்பேர்பட்ட வளையங்கள் இட்டீர்கள்! வெகு நேர்த்தி! என் கண்கள் அப்படியே இருண்டு விட்டன….. ஜெர்மன்காரனை இன்று எப்படி அடித்து வீழ்த்தினேன் தெரியுமா? கேளுங்கள்…. உங்கள் பின்னாலேயே பறந்தவன் திடீரென்றுப் பார்த்தேன், அவன் கிட்டே வந்துவிட்டான், கையை நீட்டித் தொட்டுவிடலாம் போல. இதோ, நீங்கள் நிற்கிறீர்களே, இதே மாதிரி…. ”

அலெக்ஸேய் தன் சட்டைப் பைகளைத் தட்டிப் பார்த்தவாறு அவன் பேச்சை இடை முறித்தான்: “பொறு, தம்பி. கடிதங்கள், கடிதங்கள்… அவற்றை எங்கே வைத்துவிட்டேன்?”

தனக்கு அன்று கிடைத்த, தான் இன்னும் படிக்காத கடிதங்களை அவன் நினைவு கூர்ந்தான். பைகளில் அவற்றைக் காணாமையால் அவனுக்கு உடல் முழுவதும் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. அப்புறம் சட்டைக்குள் மார்பின் மீது சரசரத்த உறைகளைத் தொட்டுணர்ந்து அவன் அப்பாடா என்று பெருமூச்சுவிட்டான். ஓல்காவின் கடிதத்தை எடுத்து, பிர்ச் மரத் தடியில் உட்கார்ந்து, வெற்றிக் கிளர்ச்சி கொண்ட தன் நண்பனின் சொற்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், உறையை ஜாக்கிரதையாகப் பிரிக்கலானான்.

அந்தச் சமயத்தில் வாணக்குழல் டப் பென உரக்க ஒலித்தது. சிவப்புப் பொறிகள் சிந்திய பாம்பு விமானத் திடலுக்கு மேலே வானில் நெளிந்து சென்று, மெதுவாகக் கலைந்து சிதறிய சாம்பல் தடத்தை விட்டுவிட்டு அணைந்தது. விமானிகள் துள்ளி எழுந்தார்கள். போகிற போக்கிலேயே அலெக்ஸேய் கடித உறையைச் சட்டைக்குள் மார்பருகேச் செருகிக் கொண்டான். கடிதத்தின் ஒரு வரியைக் கூட படிக்க அவனுக்கு வாய்க்கவில்லை. உறையைப் பிரித்த போது அதற்குள் காகிதங்கள் தவிர ஏதோ கடினமான ஒன்றும் அவனுக்கு தட்டுப்பட்டது. ஏற்கனவே பழக்கமாகிவிட்ட வழியில் அணிக்கு முன்னே பறந்தவாறு அவன் அவ்வப்போது உறையைத் தொட்டுப் பார்த்தான். அதில் என்ன இருந்தது?

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

ண்மைக் காலத்தில் பார்ப்பனியமானது வள்ளுவரை இந்துத்துவாவிற்குள் உள்வாங்கும் முயற்சியில்  முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாரதீய சனதா கட்சியானது  காவி உடையுடனும், பட்டைப் பூச்சுடனும் வள்ளுவரின் உருவத்தினையே மாற்றி வெளியிட்டு, அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பார்ப்பனியமானது நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கும் ஒரு முறை ஒன்றுள்ளது. அதாவது தன்னால் எதிர்த்து நின்று அழிக்க முடியாத ஒன்றினை உள்வாங்கி அழிப்பது என்பதே அந்த முறையாகும். இதனை அவர்கள் தங்களது புராணங்களிற்கேற்ப ‘திருராட்டிர ஆலிங்கனம்’ என்பார்கள் {போரில் தோற்கடிக்க முடியாத வீமனைத் துரியோதனின் தந்தையான திருராட்டிரன்  ஆசி வழங்குவது போல அணைத்துக் கொல்ல முயன்ற கதை}. இத்தகையவர்களிடம் எச்சரிக்கையாகவிருக்க வேண்டும் என்பதனையே வள்ளுவன் பின்வரும் குறளில் கூறியிருப்பார்.

‘தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து”.  –குறள் 828

இன்றைக்குத் திருக்குறளைத் தனதாக்கும் முயற்சியிலீடுபடும் பார்ப்பனியமானது கடந்த காலத்தில் எவ்வாறு எல்லாம் திருக்குறளை எதிர்த்து வந்துள்ளது எனப் பார்ப்போம்.

திருக்குறளை காலகாலமாக எதிர்த்துவந்த பார்ப்பனியம் :

அண்மையில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் எச்.ராஜா திருக்குறளினை மேற்கோள் காட்டி, குறளானது ஒரு வைதீக நூலாகும் எனக் கூறியிருந்தார்.

‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்,
நிலமிசை நீடுவாழ் வார்.’ (குறள் 3)

என்ற குறளில் வள்ளுவன் வீடு பேறு (மோட்சம்) பற்றிப் பேசியிருப்பதால், இது ஒரு இந்து நூலாகும் என்கின்றார். இதற்கான பதிலாக  இந்துக்களின் உலகக்குருவான (ஜகத் குரு) சங்கராச்சாரியாரது (சந்திரசேகரேந்திர சரசுவதி) முன்பொரு முறை கூறிய  கூற்றினையே பதிலாகக் கொடுக்கலாம்.

“திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன.  வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாது” என்கின்றார்.  இதோ உலகக்குருவே ‘திருக்குறள் வீடுபேறு பற்றிப் பேசவில்லை’ என்று கூறிவிட்டார்.  இது தெரியாமல் எச்.ராஜா ஏதோ கதை விடுகின்றார்.

சங்கராச்சாரியார் தனது திருக்குறள் மீதான வெறுப்பினை இதனுடன் நிறுத்தவில்லை. கீழுள்ள ஆண்டாள் பாடலைக் கேள்விப் பட்டிருக்கலாம்.  திருப்பாவையின் இரண்டாவது பாடல், ‘வையத்து வாழ்வீர்காள்’ எனத் தொடங்கும்.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட்காளே நீராடி மையிட்டெழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம்
தீக்குரலை சென்றோதோம்

இப் பாடலின் இறுதி வரியான ‘தீக்குரலை சென்றோதோம்’ என்ற வரிகளின் பொருள் ‘கோள் (தீக்குரல்) சொல்ல மாட்டோம்’ என்ற பொருளிலேயே வருகின்றது. இதனை மாற்றித் ‘தீக்குறளை (தீய குறளான திருக்குறளை)’ ஒதோம் என ஆண்டாள் குறிப்பிட்டதாகப் பொய் விளக்கம் வேறு கொடுத்திருந்தார்.

படிக்க:
கோகிலாம்மாவின் பாவமும், சங்கராச்சாரியின் புண்ணியமும் !
♦ கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

இவ்வாறான ஒரு புரட்டினை சங்கராச்சாரியார் ஆத்திசூடியிலும் செய்துள்ளார்.  ஆத்திசூடி ‘அறம் செய விரும்பு’ , ‘ஆறுவது சினம்’  என அ, ஆ, இ… என எழுத்துவரிசையில் இடம்பெறும்.

இந்த எழுத்து வரிசையில் ய, ர, ல, வ –க்கு

இயல்பு அலாதன செய்யேல்’

அரவம் ஆட்டேல்’

இலவம் பஞ்சில் துயில்’

வஞ்சகம் பேசேல்’

வரிகள் வந்துவிட்டன (ட,ண .. போன்ற எழுத்துகள் முதலெழுத்தா வராத போது, இரண்டாம் எழுத்தா வரும்).

அடுத்த எழுத்து ‘ற’. இது (ற) முதல் எழுத்தாக வரமுடியாது என்பதால் இரண்டாம் எழுத்தாகவே வரும்.

‘அறனை மறவேல்’ என்பதே எழுத்துவரிசைப்படி சரியாக அமையும்.

அறனை மறவேல் = அறம் (Ethics) மறக்காதே!

இங்குதான் சங்கராச்சாரியார் புகுந்து விளையாடினார். ‘ற’ வினை ‘ர’ ஆக மாற்றி, “அறன்” -> “அரன்” எனக் கடவுளாக மாற்றிவிட்டார். இவரது தில்லுமுள்ளினை அடுத்த வரியான ‘அனந்தல் ஆடேல்’ (ன) காட்டிக்கொடுத்துவிட்டது.  இவ்வாறு மதத்தின் பெயரால் பல தமிழ்க்கொலைகள் நடந்துள்ளன. இலக்கணப்படி ‘அறனை மறவேல்’ என்பதே சரியானது என வெளிப்படையாகத் தெரிந்தபோதும், தெய்வத்தின்_குரல் முன்னால் தமிழ் எல்லாம் எடுபடவில்லை.

‘திருக்குறள் வைத்திருக்கும் வீடு உருப்படாது’ என்றொரு புரளியும் இவர்களால் பரப்பப்பட்டது. திருக்குறளில் முதல் பத்துக் குறள்கள் மட்டுமே படிக்கக்கூடியவை என்றும், ஏனையவை எல்லாம் கவர்ச்சி மிகு திரைப்படங்கள் போலானவை (காமத்துப் பால் குறித்து) என்றெல்லாம் காலத்திற்கு காலம் சங்கராச்சாரியார் குறள் மீது குறை பட்டுக்கொண்டே வந்துள்ளார்.  இத்தகைய பார்ப்பனர்களின் முந்திய கால ஒவ்வாமையே திருக்குறள் ஒரு வைதீக நூலன்று என்பதனைத் தெளிவாக்கும்.

திருக்குறளிற்கான பொய் விளக்கவுரைகள் :

வைதீக மதத்தினர் ஒரு புறத்தே திருக்குறளினை எதிர்த்துக் கொண்டே, மறுபுறம் குறளிற்கான வைதீகம் சார் பொய் உரைகளை எழுதிக்கொண்டுமிருந்தார்கள். கடவுள் வாழ்த்து எனப் பின்நாளில் பெயரிடப்பட்ட முதல் பத்துக் குறள்களை தமக்குச் சார்பாகப் பயன்படுத்தவும் முனைந்தார்கள். இது பற்றி ஏற்கனவே வினவுத் தளத்தில் நான் ஒரு கட்டுரை  (திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம்: பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) எழுதியுள்ளதால் அதனைக் கடந்து விடுகின்றேன்.

அவற்றினை விட ‘வாமண அவதாரம்’ பற்றி வள்ளுவர் கூறியுள்ளார் என்கின்றார்கள். எங்கே எனப் பார்த்தால் பின்வரும் குறளினைப் பாருங்கள்.

“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு”- (610)

இதில் எங்கே வாமண அவதாரம். ‘அடி அளந்தான்’ என்றாலே வாமண அவதாரமா?  எனது  பாட்டி முன்பு,  நான் சிறுவனாகவிருக்கும் போது அருகிலிருக்கும் கடையில் போய் பொருட்களை வாங்கி வா என்பதனை ‘ஒரு நாலடி நடந்து வாங்கிட்டு வா’ என்பார். நல்லவேளை இதனையே 4 இற்குப் பதில் 3 அடி எனக் கூறியிருந்தால், அதனையும் வாமண அவதாரம் எனப் பொருள் கொண்டிருப்பார்கள். மன்னன் திருமாலின் மூன்றடி போல உலகினையே பெறுவான் எனில் இரண்டாவது அடியாகத் திருமால் வானிலே கால் வைத்த மாதிரி மன்னன் வானையும் கைப்பற்றுவானா!

இன்னொரு இடத்தில் ஊழ் என்று வருகின்றதாம். வரட்டுமே அதனால் என்ன.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” .  (குறள் 619)

இங்கு வள்ளுவர் தெய்வத்தால் முடியாததும் உன் முயற்சியால் முடியும் என்கின்றார்.  உடனே மற்றொரு குறளைக் காட்டுவார்கள்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்”.  (குறள் 380).

இங்கு ஊழ் எல்லாவற்றையும் விடப் பெரியது எனப்படுகின்றதே! இந்த ஊழ் தொடர்புடைய செய்திகளைச் சங்ககாலப் பாடல்களிலும் காணலாம்.  இந்த ஊழினை அடிப்படையாகக் கொண்டே ஆகூழ் (நல்லூழ்)=Good luck , போகூழ் (தீயூழ்)= Bad luck போன்ற சிறப்பான தமிழ்ச் சொற்கள் உருவாகின (அதிஸ்டம், துரதிஸ்டம் என்பன தமிழ்ச் சொற்களல்ல என்பன மட்டுமல்லாமல், அவை ஆகூழ்-போகூழ் போன்ற ஆழமான பொருளுடையனவல்ல).

படிக்க:
திருவள்ளுவரை  அவமதித்த  கா(வி)லி  கும்பலை  கண்டித்து  ஆர்ப்பாட்டம் !
♦ திருவள்ளுவரை  விழுங்கத்  துடிக்கும்  காவிப் பாம்பு  !

மேலே  வள்ளுவர் முரண்பட்ட குறள்களை கூறுவது சூழல் வேறுபாடே. அதாவது ஒருவர் கடுமையாக முயற்சிசெய்து கமஞ்செய்து பயிர்கள் வளரும்போது, ஒரு இயற்கைப் பேரிடர் மூலம் எல்லாம் அழிந்துவிடுகின்றது என வைப்போம், அவரிற்கு ஊழை வலியுறுத்தும் குறள்கள். அவரினை ஆறுதல்படுத்த அக் குறள்கள். அதற்காக ஒருவர் ஊழ் வழியேதான் எல்லாம் நடக்கும் என நினைத்து செயற்படாமலேயே இருந்தால், முயற்சிக்கும் ஏற்ற பலன் உண்டு, ஊழின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும் (மெய்வருத்தக் கூலி தரும்) என்ற குறள்.  வள்ளுவன் முரண்படவில்லை. சூழல்தான் வேறுபடுகின்றது. சூழலிற்கேற்ப குறளைப் பயன்படுத்துவது எங்களது பொறுப்பு. எனவே குறளில் குறிப்பிடப்படும் ‘ஊழ்’ என்பது பார்ப்பனியம் குறிப்பிடும் ‘விதி’ அன்று.

அடுத்ததாக வள்ளுவர் மறுபிறப்பு பற்றிக் குறிப்பிடுவதாக ஒரு கதை விடுகின்றார்கள்.  அதற்காக அவர்கள் காட்டும் குறள் இதோ.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து” (குறள்  398)

இதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம் யாதெனில் ஒருவருடைய கல்வியானது ஏழு பிறப்புக்களிற்கும் (ஜன்மங்களிற்கும்) தொடர்ந்து வரும் என்பதாகும். யாராவது பிறக்கும் போது ஏதாவது முற்பிறப்புக் கல்வி அறிவுடன் பிறக்கிறார்களா என்ன!  எல்லோருமே அ, ஆ இலிருந்து தானே தொடங்குகின்றார்கள். அவ்வாறாயின் அதன் உண்மையான விளக்கம் என்ன?

இவை ஒரு வகைச் சித்தர்களின் கோட்பாடு அல்லது ஆசிவகக்கோட்பாடு.  அங்கு அவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் உள்ள ஏழு நிலைகளைக் குறிக்கின்றனவே தவிர, ஆன்மாவுடன் தொடர்புடையதல்ல. இதனையே களவாடி ஆன்மாவுடன் தொடர்புபடுத்தி, ஏழு பிறப்புக்களாக்கி, இப் பிறப்பில் சூத்திரனாகப் பிறந்தாலும் அதனையேற்று உனது கடமையினைச் செய்தால் மறுபிறவியில் உயர்நிலையினை அடையலாம் (கீதை) எனக் கதை கட்டிவிட்டனர்.

ஆசிவகத்திலோ சித்தர்களை அவர்களின் அறிவுவளர்ச்சிக்கேற்ப அவர்களது நிலைகளை கறுப்பு, நீலம், பச்சை, சிகப்பு, மண்ணிறம், வெள்ளை, நீர்வண்ணம் என 7 நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதில் நீர்வண்ணம் என்பது அதியுயர் முத்தி நிலை. இதில் ஒவ்வொரு நிலையினை அடைதலும் ஒவ்வொரு பிறப்பு ஆகும்.  இக் கோட்பாட்டினை இன்றும் தமிழ்நாட்டின் ஊர்களிலுள்ள ஐயனார் சிலைகளின் நிறங்களை கூர்ந்து பார்ப்பதனூடாக விளங்கிக்கொள்ளலாம் {சில ஊர்களில் காலப்போக்கில் இடைநிலை நிறங்கள் மாறுபட்டிருக்கலாம்}.

இந்த சித்தமரபுக் கோட்பாட்டினை வலியுறுத்தி வள்ளுவனும் ஆறு குறள்களைத் தந்துள்ளார். அவையாவன;

♦ “எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்” (குறள் -62)

♦ “எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு ”(107)

♦ “ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து” ( 126)

♦ “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து” ( 398)

♦ “புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்”- (538)

♦ “ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான் புக்கழுந்தும் அளறு”- (835)

இக் குறள்களிற்கும் பரிமேலழகர் போன்ற வைதீகச் சார்பாளர்கள் மனிதனின் ஏழு ஜன்மக்கோட்பாட்டிற்கு ஆதரவாக உரை எழுதிவைத்துவிட்னர். ஆனால் ஆன்மா மூலம் ஒருவர் பெற்ற கல்வி அடுத்த பிறவிக்குப் பயன்படுமா எனில் இல்லை. மறுபுறத்தே இக் குறள்களை சித்தமரபுக் கோட்பாட்டிற்குப் பொருத்திப் பாருங்கள், அச்சொட்டாகப் பொருந்தும் அல்லவா!!!

இவ்வாறு வைதீகப் புரட்டுக்களைத் தோலுரித்துக் கொண்டே போகலாம். அது மிக நீண்டு செல்லும் என்பதனால் இத்துடன் முடிக்கின்றேன்.

படிக்க:
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !

குறள்களிற்கு  சங்கிகள் சொல்லும் விளக்கங்களைக் கேட்டால், எனக்கு கவிக்கோ எழுதிய ஒரு கவிதைதான் நினைவிற்கு வருகின்றது.

வள்ளுவரும் மாணவரானார்
திருக்குறளில் தேர்வு எழுதப்போனார்
முடிவு வெளியாச்சு பெயிலானார்
காரணம் அவர் படிக்கவில்லை கோனார்”.

–கவிக்கோ

{கோனார் உரை = குறளிற்கு எழுதப்படும் உரைகள். வள்ளுவனிற்கே இவர்கள் எழுதிய உரைகள் விளங்காது ஏனெனில் அவர் எழுதியது அறம்+பொருள்+காமம் என்பனவே. வீடு (ஆன்மீகம்) அல்ல. இக் கவிதை பரிமேலழகர் உரைக்கும் பொருந்தும்}

குறளிற்கு வள்ளுவனே ஒரு உரை எழுதியுள்ளான் தெரியுமா!  என்ன வள்ளுவனே தனது குறளிற்கு உரை எழுதினாரா! என வியக்கவேண்டாம். ஒரு குறள்தான் அந்த உரை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”. (423)

வள்ளுவரின் உடையின் நிறம் :

இப்பொழுது கட்டுரை தொடங்கிய இடத்திற்கே வந்தால் வள்ளுவனின் வடிவம் கற்பனை என்ற போதிலும், அவனது உருவத்திற்குப் பொருத்தமான உடை நிறம் வெள்ளையே ஆகும்.  நாம் மேலே பார்த்த நிறக் கோட்பாடுகளிற்கமைய அறிவின் உச்சியிலிருக்கும் வள்ளுவனைக் குறிக்க வெள்ளையே பொருத்தமான நிறமாகும்.  மேலும் தமிழர்களின் மரபுரீதியான ஆடையாகவும் வெள்ளை நிற வேட்டியே காணப்படுகின்றது.

இதனாலேயே ‘வெளிது’ என்ற பெயரில் சங்க காலத் தமிழரின் ஆடை அடையாளங் காட்டப்படுகின்றது {வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து டீஇப் பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி` – புறநானூறு 279}. இதுவே தமிழக அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவமும் ஆகும். இதனைக் காவியாக்குவதோ அல்லது கருப்பு ஆக்குவதோ தேவையற்ற வேலை.

வி.இ.  குகநாதன்

டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0

டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து 5.11.2019 அன்று கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய அரசின் அடியாளான காவல்துறையை கண்டித்து, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக போலீஸாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் நேற்று முன்தினம் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. இதன் விளைவாக வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர்.

காயமடைந்த வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி. கார்கையும் நியமித்தது. 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று (05.11.2019) வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டெல்லி உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் தெரிவித்தது. இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படிக்க :
♦ கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் – CCCE அரங்கக்கூட்ட செய்தி – படங்கள்
♦ திருவள்ளுவரை அவமதித்த கா(வி)லி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

இதன் ஒரு பகுதியாக கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு தங்களது கண்டனக் குரல்களை எழுப்பினர். மேலும் “காவல்துறையினரால் படுகாயமடைந்த வழக்கறிஞர்களுக்கு உரிய நிதி உதவியையும், இந்த சலசலப்புக்கு காரணமாக இருந்த காவல்துறையினரை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை ( protection of advocates act ) அமல்படுத்த வேண்டும்.” என்று மாணவர்கள் தங்களது போராட்டத்தின் வாயிலாக கூறினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதுபோன்ற சம்பவம் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் உள்ளே திட்டமிட்டு தாக்கப்பட்டனர். பல விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் காவல்துறைக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை. விசாரணைக் கமிஷன்கள் மூலமாக எந்த ஒரு தீர்வையும் அடைய முடியாது. இதுபோல சம்பவம் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கும். இதற்கான ஒரேவழி மாணவர்கள், மக்கள், மற்றும் பல தரப்பினர் காவல்துறையின் அராஜகத்துக்கு எதிராக, அவர்களின் காட்டுமிராண்டி தனத்திற்கு எதிராக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
கோவை மாவட்டம்.

கெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42

2

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 42

பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர்

அ.அனிக்கின்

ரசரின் ஆசை நாயகிக்கு வயது முப்பதுக்கு மேல் சற்று அதிகமாகியிருந்தது. அவள் உல்லாசப் பிரியரான அரசரின் தயவை இழந்து கொண்டிருந்தாள். பிறகு அவள் அரசரின் அந்தப்புர நிர்வாகத்தை எடுத்துக் கொண்டு அதன் மூலம் தன்னுடைய செல்வாக்கான நிலையைக் கடைசிவரையிலும் காப்பாற்றிக் கொண்டாள்.

பிரான்சில் அதிகமான அதிகாரத்தை வகித்த இந்த இருவருக்கும் அடுத்தபடியாக சீமாட்டி பாம்பதூரின் சொந்த மருத்துவரும் அரசரின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் கெனே இருந்தார். அவர் உருண்டையான தோள்களைக் கொண்டவர், எளிமையான உடையணிந்தவர், எப்பொழுதும் அமைதியாகத் தோன்றுவார்; ஆனால் அவரிடம் லேசான ஏளனம் இருந்தது. அவர் அரசாங்க இரகசியங்கள் பலவற்றை அறிந்திருந்தார். ஆனால் அவற்றை யாரிடமும் சொல்லாமல் காப்பாற்றுவதற்கும் அவருக்குத் தெரியும். மருத்துவத் தொழிலில் அவருடைய திறமையைப் போல இந்த குணமும் பாராட்டுதலைப் பெற்றது.

அரசருக்கு போர்டோ மதுவின் மீது ஆசை அதிகம்; ஆனால் அரசருடைய வயிற்றுக்கு அது ஒத்துவராது என்பதால் அதைக் குடிக்கக் கூடாது என்பது கெனேயின் உத்தரவாகும். அரசர் வேறு வழியில்லாமல் அந்த மதுவைக் குடிப்பதை நிறுத்தியிருந்தார். எனினும் இரவு உணவின் போது அரசர் அதிகமாக சாம்பேன் மதுவைக் குடித்து விட்டு கால்கள் தள்ளாட சீமாட்டி பாம்பதூரின் இருப்பிடத்தை நோக்கிச் செல்வார். அவர் பல தடவை மயங்கி விழுவார்; டாக்டர் கெனே அவருக்கு உடனே மருந்து கொடுப்பார்.

பாம்பதூர் சீமாட்டி

சாதாரணமான மருந்துகளைக் கொண்டே நோயாளியை உடனே குணப்படுத்திவிடுவார். தன்னுடைய படுக்கையில் அரசர் மரணமடைந்துவிடுவாரானால் அடுத்தாற் போல என்ன நடக்கும் என்பதை நினைத்து நடுங்கிக் கொண்டிருக்கும் சீமாட்டி பாம்பதூருக்கும் அவர் தைரியம் சொல்லுவார். அரசர் மரணமடைந்தால் அந்தச் சீமாட்டியே அதற்குப் பொறுப்பு என்பது நிச்சயம். அந்த ஆபத்து ஏற்படாதென்று கெனே அவளிடம் உறுதியளித்தார். அரசருக்கு வயது நாற்பது; அவருக்கு அறுபது வயதாகியிருக்குமானால் கெனேயால் அவருடைய உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. அவர் அறிவாளி, அனுபவம் மிகுந்தவர்; அரசவைப் பிரமுகர்களுக்கும் விவசாயிகளுக்கும், இளவரசிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் சிகிச்சை அளிப்பவர்; சீமாட்டி பாம்பதூரை அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.

அவர் மருத்துவத் துறையில் அதிகமான அளவுக்கு இயற்கையில் நம்பிக்கை கொண்டவர்; சாதாரணமான இயற்கை மருந்துகளையே அவர் அதிகம் உபயோகித்தார். அவருடைய சமூக, பொருளாதாரக் கருத்துக்கள் அவருடைய குணத்திலிருந்த இந்த அம்சத்தோடு முழுமையாகப் பொருந்தியிருந்தன. ஏனென்றால் “பிஸியோக்ரஸி” என்ற சொல்லுக்கு “இயற்கையின் சக்தி” என்பது பொருள் (கிரேக்கச் சொல்லான “பிஸிஸ்” என்றால் இயற்கை; ”கிராடோஸ்” என்றால் சக்தி).

பதினைந்தாம் லுயீ கெனே மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார்; அவரை ”என்னுடைய சிந்தனையாளர்” என்றே கூப்பிடுவார். அவர் தன்னுடைய மருத்துவருக்கு ஒரு பட்டத்தைக் கொடுத்தார்; அதற்குரிய இலச்சினையையும் அவரே தேர்ந்தெடுத்தார். அரசரின் உடற்பயிற்சிக்காகக் கையால் அச்சிடுகின்ற சிறு இயந்திரத்தை கெனே ஏற்பாடு செய்திருந்தார். அதில் கெனே எழுதிய பிரசுரத்தின் முதல் பிரதிகளை அரசர் தாமே கைப்பட அச்சிட்டார். பொருளாதார அட்டவணை என்ற பெயரைக் கொண்ட அந்தப் பிரசுரம் கெனேக்கு அதிகமான புகழைத் தேடித் தந்தது. ஆனால் கெனேக்கு அரசரைப் பிடிக்காது; தன் மனதில் அவரைப் பற்றி ஆபத்தான அனாமதேயம் என்று நினைத்திருந்தார்.

பிஸியோகிராட்டுகளின் பார்வையில் இலட்சிய அரசர் என்பவர் அறிவாளியாக இருக்க வேண்டும்; அரசுச் சட்டங்களை மதிநுட்பத்தோடு பயன்படுத்துகின்ற நாட்டின் பாதுகாவலர் அவர். இந்த இலட்சியத்துக்கும் பதினைந்தாம் லுயீக்கும் எத்தகைய ஒற்றுமையும் கிடையாது. கெனே அரண்மனையில் நிரந்தரமாக இருந்தார்; அரசவையில் தமக்கிருந்த செல்வாக்கை உபயோகித்து பதினைந்தாம் லூயீயின் மகனும் வாரிசுமான இளவரசரை அப்படிப்பட்ட அரசராக மாற்றுவதற்குப் படிப்படியாக முயற்சி செய்தார்; இளவரசரின் மரணத்துக்குப் பிறகு அரசரின் பேரனும் புதிய இளவரசரும் எதிர்கால பதினாறாம் லுயீயுமான இளைஞரை மாற்றுவதற்கு முயற்சி செய்தார்.

படிக்க :
♦ வெண்பனியை உருட்டி வீசி விளையாடலாம் வருகின்றீர்களா ?
♦ பொருளாதார வீழ்ச்சி : மோடியை விமர்சிக்கும் நோபல் பரிசு தம்பதி !

1694 -ம் வருடத்தில் வெர்சேய்க்கு அருகிலுள்ள கிராமத்தில் நிக்கோலஸ் கெனே என்பவரின் எட்டாவது மகனாக அவர் பிறந்தார். அவர் தந்தைக்கு மொத்தம் பதிமூன்று குழந்தைகள். நிக்கோலஸ் வழக்குரைஞராக அல்லது நீதித்துறை அதிகாரியாக இருந்ததாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. டாக்டர் கெனேயின் மரணத்துக்குப் பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்றை முதலாவதாக எழுதியவரும் அவருடைய மருமகனுமான எவேன் என்ற மருத்துவர் இந்தக் கட்டுக் கதையைப் பரப்பினார் என்று பிற்காலத்தில் தெரிய வந்தது; டாக்டர் கெனேக்கு அதிக கௌரவமான குடும்பப் பின்னணியைக் கொடுப்பது அவருடைய நோக்கம். நிக்கோலஸ் ஒரு சாதாரண விவசாயி; எப்பொழுதாவது சிறு அளவுக்கு வர்த்தகத்திலும் ஈடுபடுவதுண்டு என்ற விவரங்கள் இன்று ஆதாரத்தோடு தெரியவந்திருக்கின்றன.

Doctor-Quesnay_Political-economy
பிரான்சுவா கெனே

பதினொரு வயது வரை கெனே எழுதப் படிக்கத் தெரியாமலிருந்தார். பிறகு ஒரு அன்பான தோட்டக்காரர் அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார். இதன் பிறகு கிராமத்தின் குருவிடம் பாடங்களைக் கேட்டார்; பக்கத்திலிருந்த சிற்றூரில் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலும் போய்ப் படித்தார். இந்தக் கால கட்டம் முழுவதிலும் அவர் வயலிலும் வீட்டிலும் கடுமையாகப் பாடுபட்டார்; அவருக்குப் பதிமூன்று வயதாகிய பொழுது அவருடைய தகப்பனார் இறந்துவிட்டதனால் அவர் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது என்று எவேன் எழுதுகிறார். புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு அதிகமான ஆர்வம் இருந்தது; அவர் அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பி பாரிசுக்கு நடந்தே போவார், அங்கே புத்தகத்தை வாங்கிக் கொண்டு மறுபடியும் நடந்து இரவு நேரத்தில் வீட்டுக்குத் திரும்புவார். இத்தனைக்கும் அவர் கிராமத்திலிருந்து பாரிஸ் பல டஜன் கிலோ மீட்டர் தொலைவிலிருந்தது. கிராமவாசிகளைப் போல அவர் ஆரோக்கியமும் உடல் வலிமையும் கொண்டிருந்தார். இளம் வயதிலிருந்தே கீல்வாதம் அவரைத் துன்புறுத்திவந்தது என்பதை ஒதுக்கிவிட்டால் கடைசி வரையிலும் அவர் ஆரோக்கியமான உடலைக் கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

கெனே தனக்குப் பதினேழு வயதாகும் பொழுது, அறுவை மருத்துவராக வேண்டுமென்று முடிவு செய்து உள்ளூர் மருத்துவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் உடலிலிருந்து இரத்தத்தை எடுப்பது தான் சர்வரோக நிவாரணியாக இருந்தது. அவரும் அதையே முக்கியமாகக் கற்றுக் கொண்டார். அவருக்குச் சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லை என்றாலும் அவர் தீவிரமாக உழைத்துப் படித்தார். 1711 முதல் 1717 வரை அவர் பாரிசில் இருந்தார்; ஒரே சமயத்தில் உலோகத்தில் படம் செதுக்கும் கடையில் வேலை செய்து கொண்டும் மருத்துவ நிலையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டுமிருந்தார். இருபத்து மூன்று வயதுக்குள்ளாகவே அவர் வேரூன்றிவிட்டார் என்று சொல்ல வேண்டும்; ஏனென்றால் அவர் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த பலசரக்குக் கடைக்காரரின் மகளை அதிகமான சீதனத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

அறுவை மருத்துவர் தகுதிச் சான்றிதழ் பெற்றதும் பாரிசுக்கு அருகில் மான்ட் என்ற நகரத்தில் தொழில் செய்ய ஆரம்பித்தார். அவர் அங்கே பதினேழு வருடங்கள் இருந்தார்; அவருடைய திறமையும் உழைப்பும், நோயாளிகளின் நம்பிக்கையைப் பெறுவதில் அவர் கொண்டிருந்த விசேஷமான ஆற்றலும் அந்த மாவட்டத்திலேயே சிறந்த மருத்துவர் என்ற பெயர் அவருக்குக் கிடைக்குமாறு செய்தன. அவர் பிரசவம் பார்த்தார் (பிரசவ வைத்தியத்தில் அவர் குறிப்பிடக் கூடிய புகழடைந்திருந்தார்), இரத்தத்தை வெளியேற்றினார், பல் வைத்தியம் செய்தார்; அந்தக் கால நிலைமைகளை நினைக்கும் பொழுது சில சிக்கலான அறுவைச் சிகிச்சைகளையும் செய்தார். அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மேன்மக்களும் படிப்படியாக அவரிடம் சிகிச்சை பெற ஆரம்பித்தார்கள்; பாரிஸ் நகரத்தில் பிரபலமானவர்களோடு பழகினார்; மருத்துவத் துறையில் சில புத்தகங்களை வெளியிட்டார்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : கோயில்கள் இங்கு கொள்ளையடிக்கப்படும் | தந்தை பெரியார்
♦ கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை

1734-ம் வருடத்தில் கெனே – அவர் இப்பொழுது மனைவியை இழந்தவர், இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனார் – மான்டை விட்டுப் போய் வில்லெருவா கோமகனின் குடும்ப மருத்துவரானார். அந்த நூற்றாண்டின் முப்பதுக்களிலும் நாற்பதுக்களிலும் அரசாங்கச் சட்டத்துக்கு எதிராக அறுவைச் சிகிச்சையாளர்கள் நடத்திவந்த போராட்டத்தில் அதிகத் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு பழைய சட்டத்தின் படி அறுவைச் சிகிச்சையாளர்கள் நாவிதர்களைப் போன்றவர்களே; எனவே அவர்கள் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கக் கூடாது என்று விதிக்கப்பட்டிருந்தது. “அறுவைச் சிகிச்சையாளர்கள் கட்சிக்கு” கெனே தலைவரானார்; இறுதியில் அவர்கள் வெற்றி பெற்றனர். இந்தக் காலத்தில் அவர் தமது முக்கியமான இயற்கை விஞ்ஞானப் புத்தகத்தை எழுதினார். அது அடிப்படையான மருத்துவப் பிரச்சினைகளை, தத்துவத்துக்கும் மருத்துவ நடைமுறைக்கும் உள்ள உறவை, மருத்துவ ஒழுக்கம் முதலியனவற்றைப் பற்றி எழுதப்பட்டிருந்த மருத்துவத் தத்துவஞான ஆராய்ச்சி நூலாகும்.

1749-ம் வருடத்தில் பாம்பதூர் சீமாட்டி கெனேயைத் தனக்குக் கொடுத்து உதவுமாறு கோமகனிடம் “இரந்து” வாங்கிக் கொண்டாள். அது கெனேயின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான நிகழ்ச்சியாகும். வெர்சேய் அரண்மனையின் மாடியில் ஒரு பகுதியில் கெனே தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தது. அவர் இப்பொழுது பெரும் பணக்காரராகியிருந்தார்.

அவருடைய வாழ்க்கையிலும் பணிகளிலும் மருத்துவம் அதிகமான இடத்தைப் பெற்றிருந்தது. மருத்துவத்திலிருந்து தத்துவஞானம் என்ற பாலத்தின் வழியாக அரசியல் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறினார். மனித அமைப்பும் சமூகமும். இரத்தத்தின் சுற்றோட்டம் அல்லது வளர்சிதை மாற்றமும் சமூகத்தில் ஒரு பொருள் செலாவணியாவதும். உயிரியல் தொடர்புடைய இந்த ஒத்த உறவு கெனேயின் சிந்தனையைக் கிளறிவிட்டதோடு இன்றைய நாள் வரையிலும் முக்கியமானதாக இருந்து வருகிறது.

வெர்சேய் அரண்மனை.

வெர்சேய் அரண்மனையின் மாடியின் ஒரு பகுதியிலிருந்த அறைகளில் கெனே இருபத்தைந்து வருடங்கள் வசித்தார். பதினைந்தாம் லுயீ மரணமடைந்தவுடன் புது அரசர் இறந்தவருடைய ஆட்சியின் ஒவ்வொரு எச்சத்தையும் அரண்மனையிலிருந்து அகற்றிய பொழுது அவரும் அரண்மனையை விட்டுப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது; அது கெனேயின் மரணத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. தணிவாகவும் ஓரளவுக்கு இருட்டாகவும் இருந்த ஒரு பெரிய அறை, இதைத் தவிர சாமான்கள் வைத்திருக்கும் இரண்டு இருட்டறைகள் – இவை தான் அந்த அரண்மனையில் கெனேக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதி. எனினும் அந்த அறை வெகு சீக்கிரத்திலேயே “இலக்கியக் குடி யரசு” விரும்பிக்கூடும் அறையாக மாறியது.

18-ம் நூற்றாண்டின் ஐம்பதுக்களின் ஆரம்பத்தில் “கலைக் களஞ்சியத்தைச்” சுற்றித் திரண்டிருந்த எழுத்தாளர்கள், அறிவாளிகள், தத்துவஞானிகள் அங்கே வழக்கமாகக் கூடினார்கள். டாக்டர் கெனே தன்னுடைய கருத்துக்களை முதலில் பத்திரிகைகளில் வெளியிடவில்லை, இந்த அறையில் கூடிய நெருக்கமான நண்பர்கள் மத்தியில் தான் வெளியிட்டார். அங்கே அவரோடு ஒத்த கருத்துடையவர்களும் மாணவர்களும் மட்டுமல்லாமல், எதிர்க் கருத்துடையவர்களும் வருவது வழக்கம். கெனேயின் இருப்பிடத்தில் நடைபெற்ற கூட்டங்களைப் பற்றிய தத்ரூபமான வர்ணனையை மார்மன்டெல் எழுதியிருக்கிறார்:

“அந்த மாடி அறைக்குள் புயல் மேகங்கள் திரண்டு வரும்; கலைந்துபோகும். அந்த நேரத்தில் கெனே விவசாயப் பொருளாதாரத்தைப் பற்றித் தனது கருதுகோள்களையும் கணக்குகளையும் தயாரித்துக் கொண்டிருப்பார். அரசவையின் நடவடிக்கைகளிலிருந்து நூறு மைல்களுக்கு அப்பால் தள்ளியிருப்பவரைப் போல அவர் அமைதியோடும் அலட்சியத்தோடும் நடந்து கொள்வார். கீழே அரசவைப் பிரமுகர்கள் யுத்தம், சமாதானம், தளபதிகளை நியமித்தல், அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களை முடிவு செய்து கொண்டிருப்பார்கள்; ஆனால் அவருடைய அறையில் நாங்கள் விவசாயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்போம், நிகர உற்பத்தியை மதிப்பிடுவோம் அல்லது சில சமயங்களில் டிட்ரோ , ட அலம்பேர், டுக்ளோ, ஹெல்வெடிய ஸ், டியுர்கோ, புஃபான் ஆகியோரோடு ஆனந்தமாக விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்போம். இவ்வளவு தத்துவஞானிகளையும் தன்னுடைய வரவேற்பு அறைக்குள் ஈர்க்க முடியாமற்போன பாம்பதூர் சீமாட்டி தானே அங்கு வந்து அவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்ச்சியடைவாள்.”  (1)

பிற்காலத்தில் கெனேயின் குழு அங்கே கூடிய காலத்தில் அந்தக் கூட்டங்களின் தன்மை சற்று மாறியிருந்தது. அங்கே அமர்ந்திருப்பவர்கள் பிரதானமாக கெனேயின் மாணவர்களாக, அவரைப் பின்பற்றுவோராக இருந்தனர் அல்லது ஆசானுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காகக் கூட்டிக் கொண்டு வரப்பட்ட நபர்களாக இருந்தனர். 1766-ம் வருடத்தில் ஆடம்ஸ்மித் இங்கே வந்து சில மாலைப் பொழுதுகளைக் கழித்தார்.

கெனே எப்படிப்பட்டவர்?

அவருடைய சமகாலத்தவர்கள் எழுதியுள்ள அநேகமாக ஒன்றுக்கொன்று முரண்படுகிற வர்ணனைகளிலிருந்து சூழ்ச்சியான ஒரு அறிவாளியைப் பற்றிய சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. அவர் தன்னுடைய ஆழமான அறிவை எளிமையான தோற்றத்திலே மறைத்துக் கொண்டார்; பலர் அவரை சாக்ரடிசோடு ஒப்பிட்டனர். அவர் எளிதில் புலப்படாத ஆழமான உட்பொருளைக் கொண்ட உருவகக் கதைகளை விரும்பினார் என்று சொல்லப்படுகிறது. அவர் அதிகமான எளிமையுடையவர்; தன்னுடைய சொந்த முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்; தன்னுடைய கருத்துக்களைத் தன் மாணவர்கள் தங்களுடைய கருத்துக்கள் என வெளியிட்டு கௌரவமடைவதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை.

அவருடைய தோற்றம் சாதாரணமாக இருந்ததனால் அந்த அறைக்கு முதன் முறையாக வருபவர்கள் அங்கே விருந்தளித்து விவாதங்களுக்குத் தலைமை வகிப்பவர் யார் என்பதை உடனே கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுவதுண்டு. அவரோடு பேசிய மிராபோ பிரபுவின் சகோதரர் “பேய்த்தனமான அறிவுடையவர்” என்று அவரைப் பற்றிச் சொன்னார். அவர் கூறிய கதையைக் கேட்ட அரசவைப் பிரமுகர் ஒருவர் ”குரங்கைப் போலத் தந்திரமானவர்” என்று அவரைப் பற்றி அபிப்பிராயம் கூறினார். 1767-ம் வருடத்தில் வரையப்பட்ட அவருடைய ஓவியத்தில் ஒரு அவலட்சணமான சாதாரண முகத்தைக் காண்கிறோம்; அந்த முகத்தில் உலகத்தைப் பார்த்து ஏளனமான புன்சிரிப்பு தவழ்கிறது; கண்கள் அறிவுக் கூர்மையோடு ஊடுருவிப் பார்க்கின்றன.

கெனே “அரண்மனையில் வாழ்ந்தாலும் தத்துவஞானி; அவர் படிப்பதிலும் தனிமையிலும் பொழுதைக் கழித்தார்; அங்கே பேசப்படுகின்ற மொழியை (2)  அவர் அறியார், அதைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று சிறிதளவு கூட முயற்சி செய்ததில்லை, ஏனென்றால் அங்கே இருந்தவர்களோடு அவருக்கு எத்தகைய தொடர்பும் கிடையாது; அவர் எவ்வளவு அதிகமான அறிவு கொண்ட நீதிபதியாக இருந்தாரோ அந்த அளவுக்குப் பாரபட்சம் இல்லாத நீதிபதியாகவும் இருந்தார்; அரண்மனையில் அவர் பார்த்தவையும் கேட்டவையும் அவரைச் சிறிது கூட பாதிக்காதபடி இருந்தார்” (3) 

அரசர் மீதும் சீமாட்டி பாம்பதூர் மீதும் அவருக்கு இருந்த செல்வாக்கை, இப்பொழுது அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்த காரியங்களின் நன்மைக்காகப் பயன்படுத்தினார். அவரும் டியுர்கோவும் சேர்ந்து செய்த முயற்சிகளின் பலனாகச் சட்டங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. தன்னோடு ஒத்த கருத்துடைய நண்பர்களின் புத்தகங்களை வெளியிடுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்தார்; லெமெர்ஸியேவை ஒரு முக்கியமான பதவியில் நியமிக்குமாறு செய்தார், அந்தப் பதவியிலிருக்கும் பொழுது தான் லெமெர்ஸியே முதல் தடவையாக பிஸியோகிராட் பரிசோதனையைச் செய்ய முயன்றார். 1764-ம் வருடத்தில் பாம்பதூர் சீமாட்டியின் மரணம் இந்தப் பொருளியலாளர்களின் நிலையை ஓரளவுக்கு பலவீனப்படுத்தியது; ஆனால் கெனே அரசரின் சொந்த மருத்துவராக நீடித்தார், அரசரும் அவரைத் தொடர்ந்து ஆதரித்தார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) Oeuvres completes de Marmontel, t. I, Paris, 1818, pp. 291-92.

(2) அரண்மனைகளில் வழக்கமாக நடைபெறும் சூழ்ச்சி களும் வம்புப் பேச்சும் இங்கே குறிப்பிடப்படுகின்றன.

(3) Francois Quesnay et la Physiocratie, Paris, 1958, t. 1, p. 240.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

திருவள்ளுவரை அவமதித்த கா(வி)லி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

ஞ்சை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய வன்முறைக் கும்பலை கண்டித்தும், உலகப் பொதுமறை திருக்குறளை பகவத் கீதையுடன் ஒப்பிட்ட எச். ராஜா, திருக்குறளை வைத்து அரசியல் நடத்துவதை கண்டித்தும், 05.11.2019 அன்று விருத்தாசலம் பாலக்கரையில் காலை 11.30 மணி அளவில் திருமுதுகுன்றம் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் தலைவர் பெரும் புலவர் சிவராம சேது அவர்கள் ஆர்ப்பட்டத்துக்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி. ராஜு அவர்கள் கண்டன உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் திருவள்ளுவர் அறக்கட்டளை இல. சிறுத்தொண்ட நாயனார், வி. நாராயணன், சா. குப்புசாமி, மக்கள் அதிகாரம் விருத்தாசலம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் கு. முருகானந்தம், மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் வா. அன்பழகன், விவசாய சங்கத்தின் சார்பில் M.G. பஞ்சமூர்த்தி, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் கதிர்காமன் மற்றும் CP-ML மக்கள் விடுதலை அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும், தமிழ் உணர்வாளர்கள் பொது மக்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் : மந்திரத்தால் மாங்காய் விழாது !

தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் தினந்தோறும் நடைபெறுவதும் அவற்றுள் ஒரு சில பத்திரிகைகளில் வெளியாகி விவாதப் பொருளாவதும் புதிய செய்தி அல்ல. எனினும், தற்பொழுது, அதாவது இந்து மதவெறிக் கும்பல் மைய அரசு அதிகாரத்தில் அமர்ந்த பிறகு நடைபெறும் தாக்குதல்கள், முன்னைக் காட்டிலும் வக்கிரத்தோடும், எவ்விதமான கூச்ச, குற்ற உணர்வின்றியும், தண்டிக்கப்பட மாட்டோம் என்ற திமிரோடும் தொடுக்கப்படும் புதிய சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த வகையான மிகவும் வெளிப்படையான வன்கொடுமைத் தாக்குதல் குஜராத் மாநிலம் உனாவில் நடந்தபோது நாடெங்கும் அதிர்ச்சியும் எதிர்வினைகளும் ஏற்பட்டன. ஆயினும், இந்த வகையான தாக்குதல்கள் தற்பொழுது இயல்பாகி வருவதை மத்தியப் பிரதேச மாநிலம் பாவ்கேதி கிராமத்திலும், தமிழகத்தில் மதுரை மாவட்டத்திலும் நடந்திருக்கும் வன்கொடுமைகள் எடுத்துக்காட்டுகின்றன.

caste-violence-in-india-(2)
வன்கொடுமை தாக்குதலுக்குப் பலியான குழந்தைகள் அவினாஷ் மற்றும் ரோஷிணியின் சடலங்கள்.

மத்தியப்பிரதேச மாநிலம், ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள பாவ்கேதி கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதியைச் சேர்ந்த 12 வயது ரோஷ்ணி, 10 வயது அவினாஷ் ஆகிய இரு குழந்தைகளும் அவ்வூரின் ஊராட்சி அலுவலகம் அருகே திறந்தவெளியில் மலம் கழித்தார்கள் என்ற அற்பமான காரணத்திற்காக, யாதவ் சாதியைச் சேர்ந்த சகோதரர்கள் ஹக்கீமும், ராஜேஷ்வரும் அவ்விருவரையும் குழந்தைகள் என்றுகூடப் பாராமல் மிருகத்தனமாகத் தாக்கியதில், அவ்விரு குழந்தைகளும் இறந்து போனார்கள்.

தமிழகத்தில், மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும், மறவப்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சரவணக்குமார் என்ற மாணவனின் புத்தகப்பையைத் தேவர் சாதியைச் சேர்ந்த மகா ஈஸ்வரன் என்னும் சக வகுப்பு மாணவன் ஒளித்து வைத்திருக்கிறான். ஏண்டா, என் பையை ஒளிச்சு வச்ச? என்று சரவணக்குமார் கேட்டதற்காக, அவனின் சாதியைச் சொல்லித் திட்டி, நீயெல்லாம் என்னை எதுத்துப் பேசறயா? என்று அவமானப்படுத்தி, சரவணக்குமாரின் முதுகுப் பகுதியில் கழுத்து முதல் இடுப்பு வரை பிளேடால் பிளந்திருக்கிறான் மகா ஈஸ்வரன்.

படிக்க :
♦ திறந்தவெளியில் மலம் கழித்த ‘குற்றத்திற்காக’ இரு தலித் சிறுவர்கள் அடித்துக்கொலை !
♦ மதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை ! – ம.உ.பா.மையம் கள அறிக்கை !

திறந்தவெளியில் மலம் கழிப்பது இந்தியாவில் பரவலாக நடந்துவரும் விடயம்தான். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த அநாகரிகத்தை ஒழிக்கப் போவதாக நரேந்திர மோடி பீற்றிவரும்போது, ஆதிக்க சாதிவெறியர்களோ இதனை வன்கொடுமை மூலம் ஒழித்துக்கட்ட முனைகிறார்கள் போலும்.

“எப்படியோ இந்தியா சுத்தமானால் சரி” என்று இந்த வன்கொடுமைக்கு ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் ஆதரவுகூடக் கொடுக்கலாம். இது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு அல்ல. காஷ்மீர் மாநிலம், கதுவாவில் முசுலீம் மதத்தைச் சேர்ந்த பழங்குடியினச் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்த குற்றவாளிகளை ஆதரித்து ஊர்வலம் போனவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்கள்.

மேலத் தெருக்களிலும் அக்ரஹாரத்திலும் ஆடு மாடுகளும் நாயும் மூத்திரமும் மலமும் கழிப்பதைச் சகித்துக்கொண்டு போகும் ஆதிக்க சாதி இந்து மனம், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குழந்தைகள் திறந்த வெளியில் மலம் போனதைப் பொறுத்துக் கொள்ள மறுக்கிறது. அக்குழந்தைகளைக் கொன்றுபோடும் அளவிற்கு மிருகத்தனமாகத் தாக்குகிறது. எனில், இந்து சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை ஆடு, மாடுகளைவிடக் கீழானது என்பதுதான் இக்கொலை உணர்த்தும் பொருள்.

அதனால்தான் இத்தாக்குதலைக் குற்றமாகவோ அநாகரிகமானதாகவோ கருத மறுக்கிறது ஆதிக்க சாதி மனோபாவம். மேலும், இதற்காகத் தம்மை யாரும் தண்டித்துவிட முடியாது என்ற சாதி ஆணவத் திமிரில் இதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிடுகிறார்கள். இதன் வழியாக தாழ்த்தப்பட்டோர் மத்தியில் அச்சத்தை விதைக்க முயலுகிறார்கள்.

சரவணக்குமாரின் முதுகில் தெரியும் “ஆதிக்க சாதிவெறி”க் காயம்!

“ஏன்டா, என் பையை ஒளிச்சு வச்ச?” என்பது விளையாட்டுப் பருவத்தைத் தாண்டாத மாணவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளும் மிகச் சாதாரணமான கேள்வி. இக்கேள்வியால் கேள்விக்குள்ளானவனின் கௌரவம் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடப் போவதில்லை. ஆனால், இங்கோ கேள்வி கேட்ட சரவணக்குமார் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சாதியைச் சேர்ந்தவன் என்பதாலேயே ஆதிக்க சாதியைச் சேர்ந்த மகாஈஸ்வரனால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறான். ஆதிக்க சாதியினரின் எந்தவொரு செயலையும் தாழ்த்தப்பட்டவர்கள் கேள்விக்குள்ளாக்கக்கூடாது என்பதுதான் இத்தாக்குதல் உணர்த்தும் செய்தி.

ஆதிக்க சாதியினரின் முகம் சுளித்துவிடாதபடி, மனம் கோணாதபடி தாழ்த்தப்பட்டோர் நடந்துகொள்ள வேண்டும். அவர்களை எதிர்த்தோ, கண்டித்தோ சுண்டுவிரலைக்கூட அசைத்துவிடக் கூடாதென்றால், தாழ்த்தப்பட்டோர் சுயமரியாதையற்ற சதைப் பிண்டங்களாகத்தான் வாழ வேண்டும்.

மத்தியப் பிரதேசத்தில் நடந்திருக்கும் அவ்வன்கொடுமைக்கு, அம்மாநிலம் பின்தங்கிய மாநிலம், சமூக சீர்திருத்த இயக்கங்கள் எதுவும் நடைபெற்றிராதா மாநிலம், மிக முக்கியமாக  ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினரின் கோட்டை எனக் காரணங்களை அடுக்கலாம்.

ஆனால், தமிழ்நாடு அப்படியா? பெரியார் மண், சமூக நீதி பூமி என்றெல்லாம் தமிழ்நாட்டிற்கு ஒளிவட்டம் போடப்படுவதெல்லாம் வெற்றுக் கோஷம்தானா என்றால், இந்தக் கேள்விக்கு இல்லை என்று உறுதியாகப் பதில் சொல்ல முடியாது.

சரவணக்குமாரின் சொந்த ஊரான மறவப்பட்டியில் இன்றும்கூட தாழ்த்தப்பட்டவர்கள் செருப்பு அணிந்துகொண்டு ஊர்த் தெருவுக்குள் செல்ல முடியாத தீண்டாமை தாண்டவமாடுவதாகக் கூறுகிறார்கள், அவ்வூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள்.

படிக்க :
♦ தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !
♦ சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?

இத்தகைய தீண்டாமைக் கொடுமை இன்னமும் தமிழ்நாட்டில் நிலவுகிறதா என நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் புருவத்தை உயர்த்தக்கூடும். எனினும், சந்தேகமே கொள்ளமுடியாத அளவிற்குத் தீண்டாமையும் வன்கொடுமைகளும் தமிழகத்தில் நடைபெற்று வருவதற்கு ஆணவக் கொலைகளும், இரட்டைக் குவளை முறை, தீண்டாமைச் சுவர், தனிச் சுடுகாடு உள்ளிட்டவையும் சாட்சியங்களாக உள்ளன.

சரவணக்குமார் மீது மகாஈஸ்வரன் நடத்திய வன்கொடுமைத் தாக்குதலை விதிவிலக்கானதாகப் பார்க்க முடியாது. ஆதிக்க சாதிவெறி தென் தமிழகப் பள்ளி மாணவர்களைக் கபளீகரம் செய்திருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறது, அத்தாக்குதல். 1990-கள் தொடங்கியே தென் தமிழக மாவட்டங்களில் ஆதிக்க சாதிவெறி மனோபாவமும் சாதிவெறியர்களின் கொட்டமும் அதிகரித்து வருவதன் விளைவுதான் மகா ஈஸ்வரன் சரவணக்குமாரைத் தாக்கியதன் பின்னே இருக்கும் சூழல்.

இந்தச் சூழலைத் தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறது, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தென் தமிழகப் பள்ளிகளில் மாணவர்கள் தத்தமது சாதிகளைக் குறிக்கும் வண்ணக் கயிறுகளைத் தமது கைகளில் கட்டிவருவதை ஆதரித்து எச்ச.ராசா அறிக்கைவிட்டது ஒரு தனிப்பட்ட பார்ப்பன வெறியனின் கருத்து மட்டுமல்ல. சாதியுணர்வைத் தனது சமூக அடித்தளமாகப் பயன்படுத்திக்கொண்டுவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் அரசியல் நோக்கமும் அதன் பின்னே  உள்ளது.

எச்ச.ராஜா அறிக்கை வந்தவுடன் அ.தி.மு.க. அரசு அவ்விவகாரத்தில் பின்வாங்கிக் கொண்டது அதனின் அடிமைத்தனத்தை மட்டும் காட்டவில்லை. அ.தி.மு.க. அரசு அதன் தன்மையிலேயே பார்ப்பனர், தேவர், கவுண்டர் உள்ளிட்ட ஆதிக்க சாதிவெறியர்களுக்கு அனுசரணையான அரசுதான் என்பதையும் உறுதிப்படுத்திக் காட்டியது.

ஆதிக்க சாதிவெறியை அரவணைத்துக் கொம்பு சீவிவிடுவதற்கு மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதற்கும் ஏற்ற அரசியல் சூழல் தமிழகத்தில் நிலவுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன. இச்சூழலுக்கு முகங்கொடுக்காமல், அதனை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடாமல், பெரியார் மண், சமூக நீதி பூமி என்று மட்டும் கதைத்துக் கொண்டிருப்பதால் எந்தவொரு ஆக்கபூர்வமான பயனும் விளைந்துவிடாது.

தமிழ்ச்சுடர்
– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை !

தலையங்கம் : மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை!

ந்த வருட தீபாவளி போனசாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு வேலையிழப்பு என்ற தண்டனையையும்; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பங்குச் சந்தை சூதாடிகளுக்கும் வரிக் குறைப்பு, வரித் தள்ளுபடி உள்ளிட்டப் பலவிதமான சலுகைகளையும் வழங்கியிருக்கிறது, நரேந்திர மோடி அரசு.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த 34.94 சதவீத வரியை 25.17 சதவீதமாகக் குறைத்தது உள்ளிட்டுப் பெருநிறுவன வரிவிதிப்பில் செய்திருக்கும் மாற்றங்களின் மூலம் அந்நிறுவனங்களுக்கு 1,45,000 கோடி ரூபாய் பெறுமான வெகுமதி; ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகள்; ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தமது கட்டுமானத் திட்டங்களை முடிப்பதற்காக 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு; பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் அந்நிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரி நீக்கம்; தொழில் முனைவோர் மீது விதிக்கப்பட்டு வந்த ஏஞ்செல் வரி ரத்து எனச் சலுகைக்கு மேல் சலுகையாக அறிவித்து வருகிறது, மத்திய பா.ஜ.க. அரசு.

கார்ப்பரேட் வரிக் குறைப்பு மற்றும் வரித் தள்ளுபடிகளுக்கு அப்பால், வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி 5.15 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிக் கடன் கிடைக்காமல் தவிக்கக்கூடாது என்பதற்காகவே, பொதுத்துறை வங்கிகளுக்கு அரசின் நிதியிலிருந்து 70,000 கோடி ரூபாய் வரை கூடுதல் மூலதனமும் வழங்கப்பட்டிருக்கிறது.

stop PSU bank Stop merger
பொதுத்துறை வங்கிகள் இணைப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் புதுதில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இந்தச் சலுகைகளையெல்லாம் மோடி அரசு புதிய நோட்டுக்களை அச்சடித்து வழங்கப் போவதில்லை. அரசின் கஜானாவிலிருந்துதான் தூக்கிக் கொடுக்கவுள்ளது. இதன் காரணமாக இந்த நிதியாண்டில் மட்டும் மைய அரசிற்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பு 2.85 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அபரிமிதமான சலுகைகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இந்த வரிக் குறைப்பால் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கிடைக்கும் பணத்தை அவர்கள் தொழிலில் முதலீடு செய்வார்கள், அதனால் வேலைவாய்ப்புகள் பெருகும்” என்று நியாயப்படுத்துகிறார்கள் நிபுணர்கள் என்ற போர்வையில் உலவும் முதலாளி வர்க்கக் கைத்தடிகள்.

உற்பத்தி செய்யப்பட்ட ஐந்து ரூபாய் பிஸ்கெட்டுகள்கூட விற்பனையாகவில்லை எனப் புலம்பிவரும் முதலாளித்துவ வர்க்கம், இம்மந்த நிலையிலும் புதிய முதலீடுகளைச் செய்ய முன்வரும் என முட்டாள்கூட நம்பமாட்டான். ஆனால், மோடி அரசோ கேப்பையில் நெய் வழியும் என நம்பச் சொல்கிறது.

இவ்வரி குறைப்புக்கு முன்பாக கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது 30 சதவீதம் அளவிற்கு வருமான வரி விதிக்கப்பட்டிருந்தது. அந்த முப்பது சதவீத வரி மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிகள், செஸ் வரிகளையும் சேர்த்து அவ்வரி 34.94 சதவீதமாக இருந்தது. எனினும், இந்தளவிற்கான வரியை கார்ப்பரேட் முதலாளிகள் ஒரு நாளும் முழுமையாகச் செலுத்தியதில்லை. அந்நிறுவனங்களுக்குச் சட்டப்படியாகவே வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளால் அவை குறைந்த வரியைத்தான் செலுத்தி வந்தன. இவ்வரிச் சலுகைகளால் சிமெண்ட் நிறுவனங்கள் 20.74 சதவீதமும், இரும்புப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் 17.80 சதவீதமும், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் 18 சதவீதமும்தான் வரி செலுத்தியதாக அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகைகளை, அதாவது கார்ப்பரேட் மானியத்தைக் கணக்கிட்டால் நமக்கு மயக்கமே வந்துவிடும். 2005 ஆண்டு பட்ஜெட் தொடங்கி 2013-  ஆண்டு பட்ஜெட் முடியவுள்ள ஒன்பது ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வருமான, சுங்க, உற்பத்தி வரித் தள்ளுபடிகளின் மொத்த மதிப்பு ஏறத்தாழ 36 இலட்சம் கோடி ரூபாய்” எனக் குறிப்பிடுகிறார், பத்திரிகையாளர் சாய்நாத்.

மோடி ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் (2015 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட மொத்த வருமான வரித் தள்ளுபடி 2.48 இலட்சம் கோடி ரூபாய்; அதே ஆண்டுகளில் வழங்கப்பட்ட சுங்க வரித் தள்ளுபடி 1.80 இலட்சம் கோடி ரூபாய்; உற்பத்தி வரித் தள்ளுபடி 1.50 இலட்சம்  கோடி ரூபாய்.

இவ்வளவு சலுகைகளையும் பெற்றுக்கொண்டு தமக்கு ஒரு பைசாகூட இலாபமே கிடைக்கவில்லை எனக் கணக்கு எழுதி வரியே கட்டாமல் தப்பித்துக்கொள்ளும் நிறுவனங்களும் உண்டு. அப்படி இலாபமே காட்டாத நிறுவனங்களும் குறைந்தபட்ச வரி கட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட குறைந்தபட்ச மாற்று வரி விதிப்பையும் 18 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைத்திருக்கிறது, மோடி அரசு.

ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனமும் தான் போட்டிருப்பதாகக் கூறும் மூலதனத்தைவிடப் பல மடங்கு அதிகமாகவே வரிச் சலுகைகளையும் இலாபத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடுவதை நோக்கியா விவகாரம் அம்பலப்படுத்தியிருக்கிறது. வெறும் 600 கோடி ரூபாய் முதலீடு செய்து சென்னையில் தொழிலைத் தொடங்கிய பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அத்தேசங்கடந்த நிறுவனம், வரி ஏய்ப்புகளின் மூலம் மட்டும் 25,000 கோடி ரூபாயைத் தனது நாட்டிற்குக் கடத்திச் சென்றதாக வருமான வரித்துறையே குற்றஞ்சுமத்தியது.

6,100 கோடி ரூபாய் முதலீடு செய்து சென்னைக்கு அருகே ஒரகடத்தில் கார் தொழிற்சாலை அமைத்திருக்கும் நிஸான் நிறுவனம், மைய அரசும், தமிழக அரசும் தனக்கு 5,390 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சலுகைகளை அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாகவும், அதனை உடனே அளிக்க வேண்டுமெனக் கோரிப் பன்னாட்டு நடுவர் மையத்தை அணுகியிருக்கிறது. (திஇந்து, அக்.18)

இச்சட்டபூர்வ வரித் தள்ளுபடிகள், சலுகைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்திவரும் பல்வேறு விதமான வரி ஏய்ப்புகளைக் கணக்கில் கொண்டால், அம்மோசடிகளின் மதிப்பு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டும். பல்வேறு நாடுகளில் கிளைகளைப் பரப்பிக்கொண்டு செயல்பட்டு வரும் நவீனத் தகவல் தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு 50,000 கோடி டாலர் அளவிற்கு – ஏறத்தாழ 35 இலட்சம் கோடி ரூபாய் – வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக”க் குறிப்பிடுகிறார், ஜே.என்.யு. பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் ஜெயதி கோஷ். (திஇந்து, அக்.14)

சில ஆயிரம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மொய்யாக எழுதப்பட்டு வரும் இத்துணை இலட்சம் கோடி ரூபாய்களும் மைய, மாநில அரசுகளின் வழியாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களின் மூலமும்; விவசாயம், எரிபொருள், போக்குவரத்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மானியங்கள் மூலமும் மக்களைச் சென்றடைந்திருக்க வேண்டும்.

மோடி அரசோ இதனைத் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது. மக்களிடமிருந்து பிடுங்கி கார்ப்பரேட்டுகளின் கஜானாவை நிரப்புகிறது.

இப்பொருளாதார நெருக்கடி எந்தவொரு கார்ப்பரேட் முதலாளியையும் வாழ வழியற்ற நிர்க்கதியான நிலைக்குத் தள்ளிவிடவில்லை. தொழிலாளர்களும், சிறு விவசாயிகளும், சிறுதொழில் முனைவோரும்தான் அத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்திலும் ஒரு ரூபாய் அளவிற்குக்கூடச் சலுகை அளிக்க மோடி அரசு முன்வரவில்லை.

ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் தடவும் மோடியின் இந்த நடவடிக்கையைக் கூச்சமின்றி ஆதரிக்கும் பொருளாதார நிபுணர் கூட்டம், இச்சலுகைகளால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?” என நரித்தனமாகக் கேள்வி எழுப்புகிறார்கள். இதன் பொருள், இதனை ஈடுகட்ட மக்களை எந்தெந்த வழிகளில் கொள்ளையிடப் போகிறீர்கள்?” என்பதுதான்.

அக்கொள்ளைக்கான முன்னேற்பாடுகளில் மோடி அரசு ஏற்கெனவே இறங்கிவிட்டது என்பதே உண்மை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 1.45 இலட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகையை அளித்திருப்பதை ஈடுகட்டும் நோக்கத்தோடுதான் ரிசர்வ் வங்கியிடமிருந்து 1.76 இலட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை அபகரித்திருக்கிறது, மோடி அரசு. மேலும், இலாபமீட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்று ஒரு இலட்சம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. இது முதலாளிகளுக்கு இட்ட படையலை பொதுச்சொத்தை விற்று ஈடு செய்வதாகும்.

கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு வரிக் குறைப்பு அறிவித்த அதேநேரத்தில்தான் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 வரை அதிகரிக்கப்பட்டன. நல்ல வருமானம் தரக்கூடிய ரயில் வழித்தடங்களைத் தனியாருக்கு விற்கும் அரசின் முடிவு, மக்களை கார்ப்பரேட் முதலாளிகள் நேரடியாகக் கொள்ளையிடுவதற்குச் செய்து கொடுக்கப்படும் ஏற்பாடாகும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

எதிர்வரும் ஐந்து மாதங்களுக்குள் சந்தையிலிருந்து மேலும் 2.68 இலட்சம் கோடி ரூபாய் கடனாகப் பெறுவது, வங்கி சேமிப்புகளுக்கான வட்டியைக் குறைப்பது, சிறு சேமிப்புத் துறை மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலுள்ள மக்களின் சேமிப்பைக் கடன், பொதுத் திட்ட முதலீடுகள் என்ற போர்வையில் உருவிக் கொள்வது என இந்தக் கொள்ளை பல வழிகளில் நடைபெறவிருக்கிறது.

வரிக் குறைப்பால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைச் சமாளிக்க சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை வெட்டப் போவதில்லை” எனக் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பாசிஸ்டுகளின் மொழியில் இதன் பொருள் என்ன வென்பதை விளக்க வேண்டிய தேவையில்லை.

இப்பொருளாதார மந்த நிலையிலும் உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வீதம் சரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே வருமான வரிச் சட்டம் திருத்தப்பட்டு, வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தை சூதாடிகள் மீது விதிக்கப்பட்டிருந்த சூப்பர் ரிச் வரி கைவிடப்பட்டிருக்கிறது.

மோடி அரசு மக்களுக்கு எதிரான, கார்ப்பரேட் அடிவருடி அரசு எனப் புரிந்துகொள்ளுவதற்கு இதனைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. இந்த அரசை மட்டுமல்ல, மக்களைக் கொள்ளையிட்டு முதலாளிகளின் இலாபத்தைப் பன்மடங்கு பெருக்கும் தனியார்மய  தாராளமயக் கட்டமைப்பையும் வீழ்த்துவதற்கு மக்களை அணிதிரட்டுவதுதான் நமது உடனடியாகக் கடமையாக அமைய வேண்டும்.

அவ்வாறு மக்கள் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக அணிதிரண்டுவிடக் கூடாது என்பதற்காகவே, காஷ்மீரை முன்வைத்து தேசிய வெறியையும் ராமர் கோவிலை முன்வைத்து இந்து மதவெறியையும் கிளறிவிட்டு, மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களைத் திசைதிருப்ப முயலுகிறது, பார்ப்பன பாசிசக் கும்பல்.

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய கீழடி ! ஓசூர் அரங்கக் கூட்டம்

கீழடி

2600 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியின் தொன்மை. தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாடு! கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள்! பாதுகாப்போம்! பரப்புவோம்!

கீழடி

என்ற தலைப்பில் ஒசூர்-சாந்திநகர் பிரபா செலிபிரேசன் ஹாலில் காலை 10 மணியளவில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இவ்வரங்கக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் தோழர் வனவேந்தன், தமிழகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் தமிழரசன், சமூக விஞ்ஞான ஆய்வரங்கத்தை சேர்ந்த தோழர் ரகுவரன் ஆகியோர் உரையாற்றினர்.

கீழடி பற்றி கவிதை

பள்ளி மாணவி புனிதா கீழடியை வரவேற்று கவிதை வாசித்தார்.  தொல்லியல் துறை ஆய்வாளர் தோழர் சாந்தலிங்கம் அய்யா அவர்கள் விரிவான அளவில் சிறப்புரையாற்றினார். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினை சேர்ந்த தோழர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.

கீழடி அகழாய்வு

தோழர் பரசுராமன் தனது தலைமையுரையில், கடந்த 12 ம்தேதி கீழடிக்கு சென்று வந்த தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள் கீழடி விசயத்தில் அக்கறைக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை விளக்கிப்பேசினார். இந்துக்களின் நலனுக்காக உள்ளதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி கும்பல் அவர்களால் சொல்லிக்கொள்ளப்படும் அந்த பெரும்பான்மை ‘இந்து’-க்களின் நலனுக்கே அவர்கள் எதிரானவர்கள் என்பதை அம்பலப்படுத்திப் பேசினார்.  வேதகால எச்சங்கள் வேற எங்கு தோண்டினாலும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆதலால் கீழடியைக்கண்டு அவர்கள் பதறுகிறார்கள். நாம் கீழடி தரும் சான்றுகளை பாதுகாப்போம்! பரப்புவோம்! என்று தனது தலைமை உரையை முடித்தார்.

கீழடி அகழாய்வு முடிவுகள்

திரு. தமிழரசன் தனது உரையில், நாம் இதுவரையில் வரலாறு என்று பாடப்புத்தகங்கள் வாயிலாக கஜினி முகம்மது 18 முறை படையெடுத்தான் என்று மனனம் செய்துவந்துள்ளோம். இதனால் எள்முனையளவாவது நமக்கு பயன் உண்டா? என்று கேள்வி எழுப்பி ஒரு 40 வருட அத்திவரதரை வைத்துக் கொண்டாடுகிற மனநிலை அளவிற்கு 2600 ஆண்டுகளுக்கு முன் உள்ள பழமையான நமது கீழடி நகர நாகரிகத்தை நம் மக்கள் கொண்டாடுகிறார்களா என்றால்..? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

நம்மைப்போன்ற முற்போக்கு இயக்கங்கள் மட்டுமே இதனை கையிலெடுத்துக் கொண்டாடும் நிலையில் உள்ளோம். இதே கீழடியில் தோண்டும்போது பானையிலிருந்து ஒரு பூணூலோ அல்லது விநாயகர்-  பெருமாள் சிலைகளில் ஏதாவது ஒன்றோ கிடைத்திருந்திருந்தால் அதனை உலகம் முழுவதும் பரப்பியிருப்பான் நம் எதிரிகள். ஆனால் நமக்கு சாதி-மதம்-கடவுளுக்கான அடையாளங்கள் எதுவும் இல்லை, வேதகால நாகரிகத்துக்கும் நமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற நமக்குக் கிடைத்த சான்றுகளை இப்படியாக கூட்டம் போட்டும் பேசும் நிலையிலேதான் நாம் உள்ளோம். உண்மையில் நிச்சயம் ஒரு திருவிழாவைப்போல மக்களை அணிதிரட்டி இதையெல்லாம் பேசவேண்டியிருக்கிறது. அந்தவகையில் பட்டித்தொட்டியெல்லாம் இந்த கீழடியின் பெருமையை கொண்டுச் சென்றுகொண்டிருக்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணிக்கு நன்றி பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார்.

கீழடி அகழ்வாரய்ச்சி

அடுத்ததாக பேசிய தோழர் வனவேந்தன் தனது உரையில், கீழடி தொடர்பாக பெரும் பங்களிப்பு செலுத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன், சு. வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு நன்றி கூறியும், கீழடியிலே என்ன நடந்தது, அது நாளை என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதையெல்லாம் பட்டியலிட்டு விழிப்புணர்வு கொள்ளும் வகையில் எடுத்து சொல்ல வந்திருக்கும் தோழர் சாந்தலிங்கம் அய்யா அவர்களுக்கு பெரியார் ஆயிரம் எனும் நூலை தந்து சிறப்பித்தும் தனது உரையை தொடங்கினார்.

தனது பள்ளிப்படிப்பின் போது ஆரிய நாகரிகத்திற்கும், திராவிட நாகரிகத்திற்கும் உள்ள வேறுபாட்டை அட்டவணைப்படுத்தி படித்ததை நினைவுகூர்ந்து சிந்துசமவெளி நாகரிகம் என்பதே திராவிட நாகரிகம்தான் என்றும் அதன் தொடர்ச்சி்யை கீழடியில் உறுதி செய்யப்பட்டுள்ளதை கண்டு நெகிழ்ந்ததாக பதிவுசெய்தார். கீழடிக்கு தான் சென்று வந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். இன்றைக்கு வாட்சப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் நமது இளைஞர்கள் விழிப்புடன் பதிவிட்டிருப்பதை பார்க்கும்போது இதுபோன்ற விழிப்புணர்வுதான் நம்மை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள செய்கிறது. இந்த விழிப்புணர்வு சுடரை நாம் அணையாமல் ஏந்தி நிற்போம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அருமைத்தோழர்கள் தமிழ் சார்ந்த மற்ற அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இதுபோன்ற நிகழ்வை நடத்துவது மிகவும் வரவேற்ககூடியதாக உள்ளது. இதுபோன்ற முயற்சிகளை மேலும் மேலும் தொடரவேண்டும் என்றும், இதற்கு நாங்கள் எப்போதும் துணைநிற்போம் என்று சொல்லி தனது உரையை முடித்தார்.

கீழடி தமிழர் நாகரிகம்

திரு. ரகுவரன் தனது உரையில், நாம் தமிழ் இனம் என்றவகையில் இனம் சார்ந்து பார்ப்பதோடு மட்டும் நில்லாமல் சர்வதேசிய கண்ணோட்டத்தோடு இதனை அணுகவேண்டும் என்ற தனது கருத்தை மையமாக முன்வைத்துப்பேசினார். அடுத்ததாக பள்ளி மாணவி புனிதா, கீழடி அகழாய்வு முடிவுகள் பற்றி ஊடகங்களில் படித்தது மற்றும் தோழர்களின் பிரச்சாரத்தின்போது ஊக்கத்தோடு கவனித்ததை வைத்து உணர்வோடு கவிதை எழுதிக்கொண்டுவந்து அரங்கக்கூட்டத்தில் கூட்டத்தலைவரிடம் அனுமதி கேட்டு வாசித்தது பரவலான வரவேற்பைப் பெற்றது.

பார்ப்பனிய எதிர்ப்பு கீழடி

திரு. சாந்தலிங்கம் அய்யா தனது சிறப்புரையில், நாம் இன்று கீழடி அகழாய்வு முடிவுகளை மட்டும் உங்கள் இடத்திலேயே வந்து சொல்வதற்கு காரணம் இந்த கீழடி அகழாய்வு வந்த பிறகு நமது தமிழ்ச் சமூகம் பலதரப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது.

இந்த எதிர்ப்புகள் தலைமையுரையாற்றிய தோழர் பரசுராமன் சொன்னது போல குஜராத்தில் எப்படி 40 ஆண்டு காலம் தயாரிக்கப்பட்டதோ அதைப் போல தமிழகத்திலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு களத்தை தயாரித்து வைத்துக்கொண்டு, நமக்கு சவாலாக பல காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். கீழடி முடிவுகள் அவர்களது கண்களை உறுத்துகின்றன. இதுவரை பல காலமாக சொல்லிக்கொண்டு வந்த கருத்தாக்கங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி விட்ட காரணத்தாலேயே இப்படிப்பட்ட ஆய்வுகள் தொடரக் கூடாது என்பதற்காகவே எந்தெந்த வழிகளிலெல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அதற்கான வேலைகளிலேயே அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். எனவேதான் இதை நாம் இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக படித்த சமூகத்தின் மத்தியில் கொண்டுச் செல்ல வேண்டியது உடனடி கடமையாக  இருக்கிறது.

தோழர் பரசுராமன் பிரச்சாரத்தின்போது ஒரு வழக்கறிஞர் எதிர்நிலையில் நின்று விவாதித்த விசயத்தை இங்கே பதிவு செய்தார் அல்லவா? அதாவது, தமிழுக்கு என்று தனித்த நாகரிகம், எழுத்து, இலக்கண, இலக்கிய வரலாறு இல்லை எல்லாமே சமஸ்கிருதத்தின் தழுவல் என்று சொல்லியதோடு மட்டுமின்றி திருக்குறளே தமிழ் தானா என்று சந்தேகம் இருக்கிறதாகவும் சொன்னாரல்லவா? அது அந்த வழக்கறிஞரின் சொந்த கருத்து அல்ல. அவரை சொல்ல வைத்திருக்கிறது ஒரு நூல். திரு. நாகசாமி என்ற தொல்லியல் வல்லுநர், என்னுடைய ஆசான்தான் அந்த நூலை வெளியிட்டார். வெளியிட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே அவருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது.

இப்போதெல்லாம் விருதுவேண்டும், பட்டம், பதவி வேண்டும் என்று சொன்னால் சமஸ்கிருதத்தின் பெருமையை தூக்கிப் பிடித்தால் உடனடியாக கவனிக்கப்படும். அதற்கு எதிராக பேசினால் கௌரி லங்கேஷ் மாதிரி வேறு வகையாக கவனிக்கப்படும் அதுதான் இன்றைய காலச் சூழல்.புத்தக கடை

நான் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுமைக்கும் சுற்றுப் பயணம் செய்து வந்து இருக்கிறேன். இதுவரை கிட்டத்தட்ட 75% இந்தியாவை பார்த்துவிட்டேன். தமிழ்நாட்டை போன்ற ஒரு வளர்ந்த சமூகம் படிப்பறிவு பெற்ற சமூகம் பல்வேறு துறைகளிலும் பல்வேறு வகையான வளர்ச்சிகளை அடைந்த சமூகம் இந்தியாவில் வேறு எங்குமே இல்லை. இப்படிப்பட்ட வளர்ச்சி என்பது இன்று நேற்று ஏற்பட்ட வளர்ச்சி அல்ல என்பது தான் கீழடி நமக்கு அடையாளப்படுத்தி இருக்கிறது.

கீழடியில் இப்போது கிடைத்து இருக்கக்கூடிய மிகத் தொன்மையான சான்று என்பது கிமு ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்து குறித்த ஒரு பானை ஓடு.  அசோகரின் பிராமி எழுத்துக்களைவிட தமிழ் 300 ஆண்டுகள் தொன்மையானது என்று சான்றுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலரால் மட்டுமல்ல, பரவலாக சாமானிய மக்களிடத்தில் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் எழுத்தறிவு இருந்தது என்பதை இது நிரூபிக்கிறது. இந்த அகழாய்வில் 1001 ஓடுகள் எழுத்துவரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன. இது சிந்துசமவெளி நாகரிகத்திற்கும் திராவிட தமிழ் நாகரிகத்திற்கும் இடையிலான தொடர்பையும் காட்டுவதாக உள்ளது.

நெசவு, உழவு, வணிகம், கட்டிடம், தொழில் நுட்பம், அழகியல், விளையாட்டு என்றெல்லாம் தமிழர் நாகரிகத்தின் தொன்மை பற்றி சங்ககால இலக்கியங்களில் எல்லாம் சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனை அல்ல, உண்மையே என நிரூபிக்கும் வகையில் ஆய்வுமுடிவுகள் வந்துள்ளதை கோடிட்டிக் காட்டி வேதகாலத்தில் குறிப்பிடப்படும் புராண கதைகள், அதனடிப்படையிலான கடவுள், மதம், சாதி போன்றவை இருந்ததற்கான எந்த அறிகுறியும் கீழடியில் கிடைக்கவில்லை. இதிலிருந்து தமிழக மக்கள் சமத்துவமாக வாழ்ந்துள்ளனர் என்பதை புரிந்துக் கொள்ளும் வகையில் சான்றாக அமைகிறது.

ஆரிய கருத்தாக்கங்கள்தான் இந்திய வரலாறாக நாம் இதுவரை படித்துவந்துள்ளோம். இனி அவற்றை மறுபரிசீலனை செய்து திருத்தி எழுதப்படவேண்டும். அது ஒன்றுதான் விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறையாக இருக்கமுடியும். இதற்கு நம்மை ஆள்வோர்கள் அவ்வளவு எளிதாக சம்மதிக்கமாட்டார்கள் என்ற எச்சரிக்கையை மனதில்கொண்டு அதனை முறியடிக்கும் வகையில் கீழடி அகழாய்வு முடிவுகளை நாம் மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சென்று விழிப்புணர்வூட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று சொல்லி தனது உரையை நிறைவுச்செய்தார்.

கீழடி அகழாய்வு அரங்ககூட்டம்

இக்கூட்டத்தில் திரளான அளவில் தமிழ் உணர்வாளர்கள், தொழிலாளர்கள், முற்போக்கு ஜனநாயக சக்திகள் கலந்துக்கொண்டனர். புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் உள்ளிட்ட புரட்சிகர முற்போக்கு அமைப்புகளின் வெளியீடுகள் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கீழடி குறித்து சிறப்பு கட்டுரைகளை தாங்கி வெளிவந்த புதிய கலாச்சாரம் இதழ் அனைத்தையும் வாங்கிச்சென்றனர். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் வெங்கடேசனின் நன்றியுரையோடு கூட்டம் நிறைவுற்றது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
ஒசூர்.

நூல் அறிமுகம் : இந்தியக் கல்வியின் இருண்டகாலம் ?

ந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள பேராசிரியர், முன்னாள் துணைவேந்தர் மற்றும் கணையாழி ஆசிரியர் ம.ராசேந்திரன் அவர்கள் கட்டுரை எதிர்கால இந்தியக் கனவை இந்தியா சந்திக்க இருக்கும் சவால்களை ஆற்றலை அபிவிருத்தி செய்ய ஒற்றுமையை வளர்த்தெடுக்க மொழியை முக்கிய கருவியாக ஆட்சியாளர்கள் கட்டமைக்க முனைவது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை விளக்குகிறது.

… பேராசிரியர் மாடசாமி, பாலகர்கள் பத்திரம் என்ற தன் கட்டுரையில் பாடத்திட்டத்தில் அமைந்துள்ள இந்துத்துவ அரசியலை அதன் ஆபத்துகளை பழமையை விதந்து ஓதுவதில் பொதிந்து கிடக்கும் மநுதர்ம சூழ்ச்சிகளை பட்டியலிடுகிறார். … வயது வந்தோருக்கான கல்வியை பாடத்திட்டத்தை எப்படி அணுகுவது மற்ற பாடத்திட்டங்களில் இருந்து எப்படி வேறுபட்டு இருக்கிறது. அதற்கு தக்கவாறு அதனை அணுகாமல் அந்தப் பிரச்சினையின் தன்மையே புரியாமல் எந்திரத்தனமாக உள்ள முன் மொழிவுகளை விமர்சிக்கிறார்.

… மனித உரிமைகள் செயல்பாட்டாளரும் கல்வியாளரும் மதுரைக் கல்லூரி முன்னாள் முதல்வருமான என்.முரளி அவர்கள் புதிய கல்விக் கொள்கை ஓர் தேன் தடவிய விஷம் என்கிறார். … இந்த கல்விக் கொள்கை அமுலாக்க பெற்றால் இனி எந்தக் காலத்திலும் கல்விக் கொள்கை தேவை இருக்காது என்கிறார்.

பேராசிரியர் ஆர்.இராமானுஜம், இந்த வரை கல்விக் கொள்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் – போன்று காட்சியளிப்பவற்றை முதலில் சிலவற்றை பட்டியல் இடுகிறார். பின்னர் தனக்கேயுரிய ஆழ்ந்த கல்விப் புல தெளிவ செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு “இந்த வரைவு ஆவணத்தின் குறைபாடுகள்/ தோல்விகள் என்று பட்டியிலிட்டதைப் படிக்கும் போது இந்த புதிய கல்விக் கொள்கை கொடுங்கனவு பலித்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறது.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களின் நேர்காணல் இதில் இடம் பெற்றுள்ளது. அது இந்தித் திணிப்பின் பல்வேறு நியாயங்களை கேள்விகளாக அடுக்கிய போதும் அதன் தேவை இன்மையையும் வலுக்கட்டாயமாக திணிக்கும் அத்தியாவசியங்களையும் மிகவும் நுணுக்கமாக தோலுரித்து காட்டுகிறார். நேர்காணலின் இரண்டாம் பகுதியில் பள்ளிக் கல்வி உயர், கல்வி ஆகியவற்றில் நிகழவிருக்கும் ஆபத்துகளை நேர்பட எடுத்துக் கூறுகிறார். வரைவு கல்விக் கொள்கை எப்படி இந்திய அரசியல் சாசனத்திற்கு சமூக நீதிக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ள பயன்படுகிறது.

ஆயிஷா நடராசன் கட்டுரை இந்திய கல்வி வரலாற்றை மட்டுமல்ல அடிமை இந்தியாவில் எப்படி இருந்தது? உழைப்பாளி மக்கள் பார்வையில் கல்விக் கொள்கையை எப்படி அணுகுவது? முதலாளித்துவம் எவை எவற்றையெல்லாம் கல்விக் கொள்கை என்று மக்கள் தலையில் திணிக்கும் என்பதையும் முன் பகுதியில் கூறிவிட்டு, வரைவு கல்விக் கொள்கை முன் வைக்கும் முக்கிய பரிந்துரைகளை தனித்தனியாக எடுத்துக் காட்டி அதன் விளைவுகளை பொருத்தமான கேள்விகளாக வாசகர்கள் முன் வைக்கிறார்.

… கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் குடியாத்தம் அரசுக் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் ப.சிவக்குமார் கட்டுரையும் ஓர் முக்கிய பங்களிப்பு. இந்துத்துவவாதிகள் நாலந்தா பல்கலைக்கழகம் மற்றும் தக்க்ஷசீலா ஆகிய பல்கலைக் கழகங்களை வைத்து பேசி வரும் பழம் பெருமையை உடைத்தெறிகிறார்.

… ஏற்கனவே உயர் கல்வி துறையில் இருந்த குறைந்த பட்ச ஜனநாயக நிறுவனங்கள் கூட வரைவு கல்விக் கொள்கை வழியாக மூடப்பட்டு சர்வ அதிகாரங்கள் மிக்க இரண்டு நிறுவனங்கள் அமைக்கப்பட இருக்கிறது. அது எவ்வாறு உயர் கல்வியை மக்கள் நலனை பாதிக்கும் என்பதையும் இந்திய உழைப்பாளி மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் தன் ஆலோசனைகளை தருகிறார்.

கலகல வகுப்பறை சிவாவின் கட்டுரை இந்த வரைவு கலவிக் கொள்கையின் ஓர் முக்கிய முரண்பாடை சுட்டுகிறது. இந்தியா முழுவதும் விரவிக் கிடக்கும் எழுத்தறிவு எண்ணறிவு இன்மையின் பரிதாபகரமான நிலைய வரைவு கொள்கையே சுட்டிக் காட்டி விட்டு ஏற்கெனவே உள்ள நிலைக்கு தாரம் தேடாமல் இன்னும் ஏராளமான மொழிகளை கற்கும் திறன் குழந்தைக்கு உண்டு என்று கூறுவது நகைமுரண் என்கிறார்.

சுமார் தொண்ணூறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த கல்வியாளர் கல்விச் செயல்பாட்டாளர்களின் ஆகர்ஷ சக்தி எஸ் எஸ் இராச கோபாலன் அவர்கள் கட்டுரை மிக மிக சுருக்கமானது ஆனால் மிக்க ஆழமானது. இந்த வரைவுக் கல்விக் கொள்கையின் உள்ளடக்கத்தை சுருக்கமாக குப்பை என்கிறார். இதை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பதற்க தகுந்த ஆதாரங்களுடன் கூறுகிறார்.

அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் இராஜமாணிக்கம் வரைவுக் கல்விக் கொள்கையின் அறிவியல் தொழில்நுட்ப அறிவியல் மனப்பாங்கு ஆகிய பகுதிகளில் உள்ள அபத்தங்களின் மூலம் எது என்பதை தொட்டுக் காட்டுகிறார். ஆபத்துகளை கூறி எச்சரிக்கை செய்கிறார்.

தொகுப்பாளனாகிய எனது கட்டுரை இந்த வரைவுக் கல்விக் கொள்கை இந்திய கல்விக் கொள்கையாக வடிவாக்கம் பெற்றால் என்ன நடக்கும் என்பதை சித்தரிக்கிறது. அத்தோடு ஏன் இந்த வரைவுக் கல்விக் கொள்கை அறிவியல் பூர்வமானது அல்ல என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் நிறுவ முயன்றுள்ளேன். அரசியல் பின் புலத்தையும் அடையாளம் காட்ட முனைந்து உள்ளேன்.  (தொகுப்புரையிலிருந்து…)

படிக்க:
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்
அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !

அரசியல் சட்ட முகமனில் கூறப்பட்டுள்ள சோசலிசத்திற்கு முற்றிலும் மாறுபட்டது வரைவறிக்கை. சமத்துவம், சமநீதிக் கொள்கைகளை முற்றிலும் நிராகரிப்பதே பல தேர்வுகள். தேர்வுகளின் முக்கிய நோக்கம் விலக்கலே என்பதை கடந்த கால அனுபவங்களினின்று அறிகின்றோம். உயர்கல்வியில் சேர பரிந்துரைக்கப்பட்ட அனைத்திந்திய நுழைவுத் தேர்வு பெரும்பாலான மாணவர்க்கு உயர்கல்வியை மறுக்கக்கூடும். படித்த பெற்றோரோ, வீட்டில் கல்விச்சூழலோ இல்லாத மாணவர் கடும் உழைப்பின் மூலம் முன்னேறுகின்றார். அவர் ஓட்டத்திற்குத் தடைக்கல்லாகும் நுழைவுத் தேர்வுகள்.

ஒட்டுமொத்தமாக அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறாக உள்ள இவ்வரைவினைக் குப்பைக்கூடையில் வீசுவதே நமது கடமை. (நூலிலிருந்து பக்.36-37)

நூல் : இந்தியக் கல்வியின் இருண்டகாலம் ?
(தேசிய கல்விக் கொள்கை குறித்த கட்டுரைகள்)

ஆசிரியர்கள் : எஸ்.எஸ். ராஜகோபாலன், ச. மாடசாமி, பொ.இராஜமாணிக்கம், ப.சிவகுமார், ஆர்.ராமானுஜம், நா.மணி, இரா.முரளி, ம.ராசேந்திரன், சிவா, பிரின்ஸ் கஜேந்திரபாபு, ச.தமிழ்ச்செல்வன், ஆயிஷா இரா.நடராசன், அ.மார்க்ஸ்

தொகுப்பு : பேரா.நா.மணி

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424 | 2433 2924 | 2435 6935
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 120
விலை: ரூ 80.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolksthamizhbooks

ஆண் பெண் பேதமின்றி தோழமையாய் பழகும் குழந்தைகள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 03

டிசம்பர் 4. ரகசியக் கூட்டங்கள்

“சிறுவர்களே, எல்லோரும் எழுந்திருங்கள்.”

சிறுவர்கள் எழுந்திருக்கின்றனர்.

“நீங்கள் இன்று சீக்கிரம் கீழே சென்று சாப்பிடும் இடத்தில் சாப்பிட்டு விட்டு உடனே மேலே வாருங்கள்! இன்று நமக்கு ஒரு ரகசிய பேச்சு இருக்கும். புரிந்ததா? உட்காருங்கள்!“

“எதைப் பற்றி? என்ன ரகசியம்?” என்று சிறுமிகளுக்குத் தெரிந்து கொள்ள ஆர்வம்.

”இந்த ரகசியத்தைப் பற்றி நான் சிறுவர்களுடன் மட்டுமே பேசுவேன்! உங்களுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியக் கூடாது! மேற்கொண்டு கேட்காதீர்கள்! எப்படியிருந்தாலும் சொல்ல மாட்டேன்…”

நான் சிறுவர்களுடன் என்ன ரகசியமாகப் பேச விரும்புகிறேன்?

சிறுமிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நான் பேச விரும்புகிறேன்.

அதுவரை ஒவ்வொரு முறையும் பாடம் துவங்கவோ முடியவோ மணியடிக்கும் போது, “சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!” என்று கூறி, இதன் மூலம் எப்போதும் சிறுமிகள் முன் செல்ல வழி விட வேண்டும், அவர்களைப் பிடித்துத் தள்ளக் கூடாது என்று நினைவுபடுத்தினேன். சிறுமிகளுக்குத் தொந்தரவு தரக் கூடாது, இப்படிச் செய்தால் யாரையும் நான் மன்னிக்க மாட்டேன் என்பதை மூன்று மாதப் பள்ளி வாழ்க்கையில் சிறுவர்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். ஆனால் சிறுவர் சிறுமியர் உறவை ஒழுங்கு படுத்தும் விஷயத்தில் இதோடு நின்றுவிடுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. மேற்கொண்டு எப்படிச் செல்வது? “ஏல்லா மேல் கோட்டைக் கழற்ற உதவு! நீயாவிற்கு மேல்கோட்டை எடுத்துக் கொடு!” என்று ஒவ்வொரு முறையும் அந்தந்த சிறுவனிடம் கூறுவதா, அல்லது சிறுமிகளுக்கு உதவுவதை வகுப்பில் ஒரு பழக்கமாக்குவதா? சில சிறுவர்களுக்கு, சிறுமிகளுக்கு உதவப் பிடிக்கவில்லையென எனக்குத் தெரிகிறது.

”இயாவிற்கு மேல்கோட்டை எடுத்துக் கொடு!” என்று நான் கியோர்கியிடம் சொல்கிறேன்.

கியோர்கி இடத்தை விட்டு அசையவில்லை.

“சிறுமிக்கு மேல்கோட்டை எடுத்துத் தா!” என்று நான் திரும்பச் சொல்கிறேன்.

அவன்: ”அவளே எடுத்துக் கொள்ளட்டும்!”

“அவளாகவே எடுத்து அணிந்து கொள்ள முடியும். ஆனால் நீ உதவினால் நன்றாயிருக்கும்.”

அவன்: “உதவ மாட்டேன், அவளே எடுக்கட்டும்!..”

எலேனா தாழ்வாரத்தில் கீழே விழுந்து அழுதாள். “அவள் எழுந்திருக்க உதவு!” என்று நான் தீத்தோவிடம் சொல்கிறேன்.

தீத்தோ மெதுவாக நகர்ந்து, அழும் சிறுமியிடம் சென்று எவ்வித இரக்கமும் இல்லாமல் சொல்கிறான்: “எழுந்திரு, என்ன புலம்புகிறாய்!”

”சிறுமி எழுந்திருக்க உதவு, அவளைச் சாந்தப்படுத்து!” என்று சூரிக்கோவை அனுப்புகிறேன்.

சூரிக்கோவும் அவசரப்படாமல் எலேனாவிடம் சென்று முரட்டுத்தனமாக கையைப் பிடித்துத் தூக்குகிறான்.

“சரி, சரி, எழுந்திரு” என்கிறான்.

இப்படிப்பட்ட உதவியில் அச்சிறுமியால் எழ முடியவில்லை போலும். சூரிக்கோ இரண்டு கைகளையும் விட்டு விட, அவள் மீண்டும் தரையில் விழுந்து இன்னமும் உரக்கக் கத்துகிறாள். அவன் என்னிடம் திரும்பி வந்து அவள் மீது குற்றஞ் சாட்டுகிறான்:

“ ‘எழுந்திரு’ என்று சொல்லி நான் உதவுகிறேன். அவளோ எழுந்திருக்க விரும்பாமல் அழுகிறாள்!”

இறுதியாக, நான் சொல்லாமலேயே சாஷா அவளிடம் ஓடிச் சென்று, முழங்காலிட்டு அருகே அமர்ந்து, தலை முடியைத் தடவியபடி ஏதோ அன்பாகச் சொன்னான். சிறுமி மௌனமானாள். சாஷா இரண்டு கைகளையும் நீட்ட, அவள் அவற்றைப் பற்றிக் கொண்டு எழுந்தாள். அவள் கண்ணீரைத் துடைக்கக் கூட சாஷா உதவினான்.

என் வகுப்புச் சிறுவர்கள் அனைவரும் மென்மையான உணர்வுடையவர்களாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன், சக மாணவ மாணவியர் மீது இவர்கள் அக்கறை காட்ட வேண்டுமென விரும்புகிறேன். இவர்களை இப்பாதையில் அழைத்துச் செல்வதற்காக ரகசியப் பேச்சு நடத்துவதென முடிவு செய்தேன்.

ஏன் ரகசியப் பேச்சு? இதற்கு சில காரணங்கள் உண்டு.

முதலாவதாக, சிறுவர்களிடம் நான் என்ன சொல்கிறேன் என்று சிறுமிகள் தெரிந்து கொள்ளும் அவசியம் எதுவும் இல்லை. இல்லாவிடில், ”சிறுமிகளுக்கு மேல் கோட்டு எடுத்துத் தரும்படி சொல்லியிருக்கின்றார்கள் இல்லையா? எங்கே சீக்கிரம் தா!” என்றெல்லாம் அவர்கள் சொல்லக் கூடும். சிறுவர்களின் அன்பான அக்கறையை அவர்கள் கண்டிப்பான கடமையாக மாற்றுவார்கள். அப்போது ஆண்களின் அக்கறை எனும் நீதி நெறி தன் அழகியல் சேவையையும் தார்மிக அடிப்படையையும் இழந்து விடும். சிறுமிகளுக்கு நாங்கள் என்ன பேசினோம் என்று தெரியாவிடில், தம் சிறுவர்களின் ஒவ்வொரு செயலையும் நன்றியுணர்வோடு ஏற்பார்கள்.

இரண்டாவதாக, கதவு மூடியிருக்கும் போது சிறுவர்களுடன் அதிக வெளிப்படையாகப் பேசி, ஆண்களின் மேன்மையைப் பற்றி நன்கு விளக்க முடியும். இந்தப் பேச்சின் ரகசியத் தன்மை, தம்மை வேறு – விதமாகப் பார்க்கும்படி சிறுவர்களைக் கட்டாயப்படுத்தும்; ஏனெனில் இவர்களுடன் முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கருத்தாழத்தோடு பேசுகின்றனர், இவர்களை நம்புகின்றனர், எனவே இவர்கள் பெரியவர்களாகி விட்டனர் என்று பொருள்!

மூன்றாவதாக, குழந்தைகளுக்கு எப்போதுமே ரகசியங்கள் பிடிக்கும். இம்மாதிரியான நடவடிக்கை – இவர்களது செயற்பாட்டை ஊக்குவிக்கும். இது நம் ரகசியம்” என்றால் இது மிக முக்கியம்” என்று பொருள். அது தவிர ரகசியம் குழந்தைகள் விளையாட்டின் மிக அழகிய அம்சங்களில் ஒன்று. குழந்தைகள் ரகசியம் பேசுகின்றனர். எதைப் பற்றி? உலகம் பூராவிற்கும் தெரிந்ததை அவர்கள் ரகசியமாகப் பேசலாம். விஷயம் என்னவெனில், ரகசியத்தின் உட்பொருள் என்ன என்பதல்ல, ரகசியம் உள்ளதுதான் முக்கியம். என் வகுப்புச் சிறுவர்களுக்கு ரகசியம் வேண்டும், சிறுமிகள் பால் அவர்கள் ஆண்களுக்கு உரிய அக்கறை காட்ட வேண்டுமென நான் விரும்புகிறேன். இப்படியாக எங்கள் ஆசைகள் சந்திக்கின்றன- நான் அவர்களுக்கு ரகசியக் கட்டளைகளை இட, அவர்கள் அவற்றை நிறைவேற்றட்டும்.

சிறுவர்கள் வகுப்பறையில் நுழைந்ததும் நான் கதவை மூடி விட்டு அவர்களை என்னருகே அமரச் செய்து மெதுவான குரலில் விளையாட்டுத் தொனியின்றி, உறுதியோடு பேசலானேன்:

”நான் நம் வகுப்பில் உண்மையான ஆண் பிள்ளைகள் சங்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். யாருக்கெல்லாம் உண்மையான ஆண் பிள்ளையாக ஆசையோ கையைத் தூக்குங்கள்!”

சிறுவர்கள் பிரமித்துப் போயுள்ளனர். முதலில் சாஷா கையைத் தூக்கினான். பிறகு எல்லோரும் கைகளை உயர்த்தினர்.

“அப்படியெனில், உங்களில் ஒவ்வொருவரும் உண்மையான ஆண் பிள்ளையாக விரும்புகின்றீர்கள், இல்லையா?” என்று கேட்டபடி நான் ஒரு நிமிடம் ஒவ்வொருவரின் கண்களையும் உற்று நோக்குகிறேன். ”உண்மையான ஆண் பிள்ளை எப்படியிருக்க வேண்டுமெனத் தெரியுமா?” என்று நான் அவர்களைக் கேட்கவில்லை. எனது வகுப்புச் சிறுவர்களுக்கு இது நிச்சயமாகத் தெரியாது. பதில் எங்களைக் குழப்ப மட்டுமே செய்யும். கூட்டங் கூடிப் பேசுவதற்காக அவர்களை நான் அழைக்கவில்லை, நிபந்தனைகளைக் கூறி அவற்றை நிறைவேற்றுமாறு கோரவே நான் அவர்களை அழைத்தேன். அடுத்த கூட்டங்களில் நாங்கள் கலந்து பேச முடியும்; அனேகமாக அவற்றில் சிறுவர்கள் ஏதாவது பழகும் விதிகளை மீறினால் அது பற்றி விவாதிக்க வேண்டியிருக்கும், அல்லது எங்கள் சிறுமிகள், அம்மாக்கள், பாட்டிமார்கள், சகோதரிகளுக்கு மகிழ்ச்சிகரமான அதிசயங்களைத் தயார்ப்படுத்த வேண்டியிருக்கும். பெண்மணியின் பால் முரட்டுத் தனமாக நடக்கும் வயது வந்த மனிதனை, பெண்மணிக்கு உதவாமல், அக்கறை காட்டாமல் தொந்தரவு செய்பவரை உண்மையான ஆண்மகன் என்று சொல்லலாமா என்பது குறித்து இப்போது பேசுவோம். குழந்தைப் பருவத்திலிருந்து தான் உண்மையான ஆண் பிள்ளையாக வளர முடியுமெனக் குழந்தைகள் புரிந்து கொள்ளட்டும்.

“உண்மையான ஆண் பிள்ளைகள் சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக இருக்க விரும்பினால், இன்று முதல் நீங்கள் நமது சங்க விதிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்கின்றீர்களா?”

”சரி!” என்று சன்னமான குரலில் சிறுவர்கள் கூறுகின்றனர்.

“இன்று இரண்டு விதிமுறைகளை மட்டும் கூறுவேன். முதலாவது: ஒவ்வொரு சிறுமியின் விஷயத்திலும் கவனமானவர்களாக, மென்மையானவர்களாக, அக்கறை காட்டுபவர்களாக இருக்க வேண்டும். இந்த விதியை திருப்பிச் சொல்லுங்கள் பார்க்கலாம்!” குழந்தைகள் திரும்பச் சொல்கின்றனர்.

இரண்டாவது: ”சிறுமிகள் மேல்கோட்டு அணியவும் கழட்டவும் உதவ வேண்டும். இதை திருப்பிச் சொல்லுங்கள் பார்க்கலாம்!”

பின்னர் சிறுமிகளுக்கு எப்படி மேல் கோட்டை எடுத்துத் தருவதென்று பயிற்சி செய்து பார்க்கும்படி சிறுவர்களிடம் கூறினேன்.

“இதோ, சிறுமிகளின் மேல்கோட்டுகள் தொங்குகின்றன. அவசரப்படாமல், இழுத்துத் தள்ளாமல் நீங்கள் அந்த இடத்தை நோக்கி செல்கின்றீர்கள்.”

எப்படி மேல் கோட்டுகள் உள்ள இடத்திற்குச் சென்று, அவற்றைக் கழட்டுவது என்று நான் செய்து காட்டுகிறேன்.

“மேல்கோட்டை எடுங்கள்… சிறுமியை நெருங்குங்கள்… சிறுமி தன் கரங்களை நீட்டி அணிய வசதியாக இருக்கும்படி அதைப் பிடியுங்கள்… புரிந்ததா? எங்கே, சாஷா, நீ எப்படிச் செய்கிறாய் காட்டு!” சாஷா சந்தோஷமாகச் செய்து காட்டுகிறான். ”கியோர்கி, தீத்தோ, சூரிக்கோ, இப்போது நீங்கள் மூவரும் செய்து காட்டுங்கள்!”

சாஷாவும் நானும் அவர்களைத் திருத்துகிறோம், மேல் கோட்டை எப்படிப் பிடிக்க வேண்டும், எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனக் காட்டுகிறோம்.

“இப்போது எல்லோரும் மேல்கோட்டுகள் மாட்டப்பட்டுள்ள இடத்திற்கு இடித்துத் தள்ளாமல் செல்லுங்கள் பார்க்கலாம். மேல்கோட்டைக் கீழே போடாமல் இருப்பதும், குழப்பாமல் இருப்பதும் மிக முக்கியம்.”

இதை சிறுவர்கள் சில தடவைகள் செய்து பார்த்துக் கற்றுக் கொண்டனர், இறுதியில் அமைதியாக, சரிவரச் செய்ய ஆரம்பித்தனர். “உட்காருங்கள்!”

மீண்டும் அருகருகே உட்கார்ந்தோம். சிறுமிகள் கதவைத் தட்டுகின்றனர்: “கதவைத் திறவுங்கள்!” “உண்மையான ஆண் பிள்ளை ரகசியத்தை வெளியிடக் கூடாது” என்று நான் சொல்கிறேன். நாம் எவ்வளவு பேர் என்று எண்ணுங்கள்!” அவர்கள் எண்ணினர். என்னையும் சேர்த்து 22 பேர்கள். 23-வது நபருக்கு நம் ரகசியம் தெரியக் கூடாது!” மௌனம். நாங்கள் ஒருவரையொருவர் ஏதோ முக்கியமானதை, தீவிரமானதைப் பற்றிச் சிந்திக்கும் சதிகாரர்களைப் போல் பார்க்கிறோம். சிறுமிகளுக்கோ பொறுமையில்லை. “திறவுங்கள், எங்களை உள்ளே விடுங்கள்!” நான் கதவைத் திறக்கிறேன்.

படிக்க:
பாலியல் குற்றங்கள் பெருகும் நிலையில் பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?
சிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? | தோழர் ராஜு உரை | காணொளி

“என்ன பேசினீர்கள்?” என்று என்னை நோக்கி கேள்விகளைத் தொடுக்கின்றனர்.

நாங்கள் தீவிர முகபாவத்தோடு இருக்கிறோம். ரகசியத்தை வெளிவிடவில்லை.

“எதைப் பற்றியுமில்லை!”

பாடவேளை முடிந்து, சிறுமிகளுக்கு மேல் கோட்டுகளை எடுத்துத் தரும் நேரம் வந்த போது எல்லா சிறுவர்களும் உண்மையான ஆண் பிள்ளைகளாவதில் ஒரு மனதான முனைப்பைக் காட்டினர். ஆனால் ஒரு சில சிறுமிகளுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை, எப்படி நடந்து கொள்வதென அவர்களுக்குத் தெரியவில்லை. இதைப் பார்க்க வருத்தமாயிருந்தது.

பரவாயில்லை, சிறுமிகளே! விரைவிலேயே உங்களுடனும் இது போன்ற கூட்டம் நடத்துவேன். சிறுவர்கள் மீது எப்படி அக்கறை காட்ட வேண்டும், ஆண்களின் கவனத்தை எப்படி மதிக்க வேண்டும் என்பதை நீங்களும் உணர வேண்டுமல்லவா?

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

“வெறித்தனம்” – முதலாளித்துவம் திணிக்கும் சீரழிவு ! | கலையரசன்

0

கலையரசன்

ளம்தலைமுறை சினிமா இரசிகர்கள் அடாவடித்தனம் பண்ணுவது தமிழர்களுக்கு மட்டுமேயான “சிறப்புரிமை” அல்ல. இது உலகம் முழுவதும், மேற்கத்திய நாடுகளிலும் நடக்கும் விடயம் தான். என்ன வித்தியாசம்? இங்கே சினிமா பைத்தியம் என்றால் அங்கே கால்பந்து பைத்தியம். அவ்வளவு தான். இரசிகர்களின் வெறி மனநிலை எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாகத் தானிருக்கும். முதலாளித்துவ சமுதாய அமைப்பைக் கொண்ட நாடுகளில், இந்த வெறியுணர்வு திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது.

உலகிற்கே முதலாளித்துவம் போதித்த நாடு, தொழிற்புரட்சி நடந்த இங்கிலாந்து அல்லவா? அதனால் இந்த “வெறித்தனம்” கூட அங்கே தான் தோன்றியுள்ளது. பொது இடங்களில் அடாவடித்தனம் செய்யும் விளையாட்டு இரசிகர்களை ஆங்கிலத்தில் ஹூலிகன் (Hooligan) என்பார்கள். அந்தச் சொல் அதே உச்சரிப்புடன் பிற ஐரோப்பிய மொழிகளும் உள்வாங்கப் பட்டுள்ளது.

Hooligan
விளையாட்டின் பெயரில் வெறித்தனம் செய்யும் ‘இரசிகர்கள்’. (மாதிரிப் படம்)

இங்கிலாந்து கால்பந்து இரசிகர்கள் செய்யும் அடாவடித்தனம் உலகப் பிரசித்தமானது. எங்காவது ஓர் ஐரோப்பிய நகரத்தில் இங்கிலாந்து டீம் விளையாடும் மேட்ச் நடந்தால், அங்கு இங்கிலாந்து விளையாட்டு இரசிகர்களும் வந்து குவிந்து விடுவார்கள். மேட்ச் நடக்கும் நாள் முழுவதும், மதுபான விடுதிகள் நிரம்பிய நகர மத்திய பகுதி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட இடம் போல காட்சியளிக்கும்.

சாதாரண பொதுமக்கள் அந்த இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்வார்கள். இங்கிலாந்து கால்பந்து இரசிகர்கள் குடித்து விட்டு ரகளை செய்வதும், பொதுச் சொத்துக்களை அடித்துடைத்து நாசம் விளைவிப்பதும் வழமையானவை. இதனால் சில நேரம் பிற ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்து இரசிகர்களுக்கு பிரயாணத் தடை விதித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

படிக்க:
வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்
♦ மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! புதிய ஜனநாயகம் நவம்பர் இதழ் !

நெதர்லாந்தில் உலகப் புகழ் பெற்ற இரண்டு விளையாட்டுக் கழகங்கள் உள்ளன. ஆம்ஸ்டர்டாம் நகருக்குரிய ஆயாக்ஸ் (Ajax) ரொட்டர்டாம் நகருக்குரிய பையனோர்ட்(Feyenoord). பிற உலக நாடுகளிலும் இவ்விரண்டையும் பற்றி அறிந்திராத விளையாட்டு இரசிகர்கள் கிடையாது.

நெதர்லாந்து ஆயாக்ஸ் – பையனோர்ட் கால்பந்து விளையாட்டு இரசிகர்களை, நம்மூரில் விஜய் – அஜித் (அல்லது அந்தக் காலத்து எம்ஜிஆர் – சிவாஜி) சினிமா இரசிகர்களுடன் ஒப்பிடலாம். அந்தளவு வெறித்தனம். கிட்டத்தட்ட பிரதேசவாதம் போன்று காணப்படும் இந்த பிரிவினை மூன்றாவது தலைமுறை இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. இரண்டு பக்க இரசிகர் பட்டாளங்கள் வாய்த்தர்க்கம் செய்வதும், அது முற்றி கைகலப்பு நடப்பதும் வாடிக்கையானது.

ஆம்ஸ்டர்டாம் அல்லது ரோட்டர்டாம் நகரில் ஆயாக்ஸ் – பையனோர்ட் உதைபந்து போட்டி நடந்தால் சொல்லவே தேவையில்லை. இரு பக்க ஹூலிகன் பட்டாளங்களும் கத்தி, பொல்லு, வாள்களை மறைத்து வைத்து கொண்டு வந்திருப்பார்கள். ஒரு தடவை ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். அந்தளவுக்கு மோசமாக நடந்து கொள்வார்கள். மேட்ச் நடக்கும் நாட்களில், கவச உடை அணிந்த போலீசார் குவிக்கப்பட்டு, அந்த இடம் ஒரு யுத்தகளம் போன்று காட்சியளிக்கும்.

ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில், சினிமா அல்லது விளையாட்டு மீதான இரசிகர்களின் வெறித்தனம், ஆள்வோரால் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது. சினிமா / விளையாட்டு பைத்தியம் இளையோரின் மனநிலையை சீர்குலைக்கிறது. இதன் மூலம் அவர்களை அரசியல் நீக்கம் செய்யப்பட்ட தலைமுறையினராக வளர்க்க முடிகிறது.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! புதிய ஜனநாயகம் நவம்பர் இதழ் !

மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

  1. பி.எம்.சி. வங்கி முறைகேடு: வெளியே தெரியும் பனிமுகடு!
    இந்திய வங்கித் துறை எந்தளவிற்கு கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக இயங்கி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது, பி.எம்.சி. வங்கியில் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள்.
  2. மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை!
    2005-06 ஆம் ஆண்டு பட்ஜெட் தொடங்கி 2017 – 18 ஆம் ஆண்டு பட்ஜெட் முடியவுள்ள பதிமூன்று ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வருமான, சுங்க, உற்பத்தி வரித்தள்ளுபடிகளின் மொத்த மதிப்பு ஏறத்தாழ 42 இலட்சம் கோடி ரூபாய்.
  3. தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள்: மந்திரத்தால் மாங்காய் விழாது!
    வட இந்திய மாநிலங்களுக்கு இணையாகத் தமிழகத்திலும் தீண்டாமைக் குற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இது சமூக நீதி பூமி எனக் கதைப்பதால் மட்டுமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்திவிட முடியாது.
  4. கீழடி:”ஆரிய மேன்மைக்கு” விழுந்த செருப்படி!
    கீழடியில் கிடைத்திருக்கும் தொல்லியல் ஆதாரங்கள் தமிழகத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர நாகரிகம் நிலவி வந்ததை நிரூபிக்கின்றன.
  5. நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள்: பா.ஜ.க.வின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது!
    நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்துத் தேர்ச்சி பெறவும் பணம் வேண்டும்; அல்லது, அத்தேர்வில் மோசடி செய்யவும் பணம் வேண்டும். இனி மருத்துவராவதற்கு அடிப்படைத் தகுதி பணம்தான்!
  6. தரம், தகுதி, பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள்!
    ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கங்களைச் சேர்ந்த பிள்ளைகள் ஆரம்பக் கல்வி பெறுவதைக்கூடக் கொல்லைப்புற வழியில் தடுக்கும் சதியாகும்.
  7. காஷ்மீர்: இதன் பெயர்தான் இயல்பு நிலையாம்!
    துக்கமென்றால் அழ முடியாது; மகிழ்ச்சியென்றால் கொண்டாட முடியாது. – இதுதான் மோடி உருவாக்கியிருக்கும் புதிய காஷ்மீர்.
  8. காஷ்மீர் போர் குறித்த பா.ஜ.க.-வின் வரலாற்று மோசடி!
    பட்டேல் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்ற அமித்ஷாவின் கூற்று பொய் என்பதை பட்டேலின் கடிதப் போக்குவரத்துகள் தொகுதி-1 தெளிவாக்குகிறது.
  9. பா.ஜ.க.-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடம் !!
    ஊழலைச் சட்டபூர்வமாக்கி வருவதோடு, அ.தி.மு.க., உள்ளிட்ட ஊழல் கட்சிகளோடு கூட்டணியும் வைத்திருக்கும் பா.ஜ.க., ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசுவதற்குத் தகுதியற்றது.
  10. மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம்: அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை!
    ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே அடையாள அட்டை, ஒரே வரி என்ற வரிசையில் இந்திய மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம்.
  11. பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !
    பகவத் கீதையைப் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது சாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் குற்றங்களைக் கருத்தியல்ரீதியாக நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.
  12. மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !
    மோடியின் பிறந்த நாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதற்காக நர்மதை நதிக் கரையோர விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டது, குஜராத் மாநில அரசு.
  13. த்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா?
    இந்தக் கொள்ளை சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை விற்பது தொடங்கி அர்ச்சகர்கள் தட்டில் விழுந்த காணிக்கை வரை பல வழிகளில் நடந்திருக்கிறது.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

செருப்புக் காலிகளை சுட்டு வீழ்த்திய சோவியத் படையணிகள் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 04a

“கவனியுங்கள்! நான் சிறுத்தை மூன்று, நான் – சிறுத்தை மூன்று, நான் – சிறுத்தை மூன்று. வலப்புறம் ‘செருப்புக் காலிகள்’, ‘செருப்புக் காலிகள்’!”.

முன்னே எங்கோ கமாண்டரது விமானத்தின் சிறுவரையுரு அலெக்ஸேய்க்குப் புலனாயிற்று. வரையுரு அசைந்தாடிற்று. “நான் செய்கிற படிச் செய்” என்று இதுகுறித்தது.

மெரேஸ்யெவ் தனது குழுவினருக்கு அதே உத்தரவை அளித்தான். அவன் பின்னே பார்த்தான். பின்னோடி அவனை விட்டு விலகாமல் அருகாகத் தொடர்ந்தான் பெத்ரோவ். சபாஷ்!

“உறுதியாயிரு, தம்பி! என்று அவனைக் கத்தி உற்சாகப்படுத்தினான் மெரேஸ்யெவ்.”

“உறுதியாயிருக்கிறேன்!” என்ற பதில் குழப்பத்துக்கும் கீச்சொலிகளுக்கும் இரைச்சலுக்கும் ஊடாக அவனுக்குக் கேட்டது.

“நான் – சிறுத்தை மூன்று, நான் சிறுத்தை மூன்று. என்னைத் தொடர்க!” என்ற உத்தரவு ஒலித்தது.

பகை விமானங்கள் அருகே இருந்தன. ஜெர்மானியருக்குப் பிடித்த இரட்டைத் தாரா வரிசையில் அணிவகுத்து சோவியத் விமானங்களுக்கு சிறிது கீழே பறந்தன. “யூ-87” ரக ஒற்றை எஞ்சின் முக்குளி வெடி விமானங்கள். இவற்றின் சக்கரச் சட்டங்கள் மடிந்து கொள்ளக் கூடியவை அல்ல. பறக்கும் போது இந்தச் சட்டங்கள் விமானத்தின் வயிற்றுக்கு அடியில் தொங்கும். சக்கரங்கள் காற்று வழிவு மூடியினால் காக்கப்பட்டிருக்கும். விமானத்தின் வயிற்றிலிருந்து மரவுரிச் செருப்புக்கள் அணிந்த கால்கள் தொங்குவது போலத் தோன்றும். எனவேதான் எல்லாப் போர்முனைகளிலும் விமானிகள் வழக்கில் இவற்றுக்குச் “செருப்புக்காலிகள்” என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது.

போலந்து, பிரான்ஸ், ஹாலாந்து, டென்மார்க், பெல்ஜியம், யூகோஸ்லோவியா ஆகியவற்றிற்கு மேலே நடந்த சண்டைகளில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களுக்குரிய அபகீர்த்தியைப் பெற்று விட்ட இந்தப் பிரபல முக்குளி வெடி விமானங்கள் குறித்து எத்தனையோ பயங்கரக் கதைகள் போர்த் தொடக்கத்தில் உலகச் செய்தித்தாள்கள் அனைத்தாலும் பரப்பப்பட்டிருந்தன. ஆனால் சோவியத் யூனியனின் பரந்த வானில் அவை மிகு விரைவிலேயே பழையதாகி விட்டன. பற்பல சண்டைகளில் சோவியத் விமானிகள் இவற்றின் பலவீமான இடங்களை சோதித்து அறிந்து கொண்டார்கள். சிறப்பான திறமை எதுவும் இன்றியே வேட்டையாடக் கூடிய காட்டுக் கோழிகளையோ முயல்களையோ போன்றே “செருப்புக் காலிகளைத்” தாக்கி வீழ்த்துவதும் தேர்ந்த சோவியத் விமானிகளால் அற்பமாக மதிக்கப்பட்டது.

காப்டன் செஸ்லோவ் தமது ஸ்குவாட்ரனை நேரே பகை விமானங்களை நோக்கிச் செலுத்தாமல் ஒதுக்குப் புறமாக இட்டுச் சென்றார். முன்ஜாக்கிரதையுள்ள காப்டன் “சூரியனுக்கு அடியில்” போய், கண்களை குருடாக்கும் அதன் கிரணங்களின் முகமூடி மறைவில் பார்வைக்குப் புலப்படாது இருந்து திடீரெனப் பாய்ந்து தாக்கத் திட்டமிடுகிறார் என மெரேஸ்யெவ் தெரிந்து கொண்டான். அவனுக்குச் சிரிப்பு வந்தது. இவ்வளவு சிக்கலான பாய்ச்சல் காட்டுவது “செருப்புக் காலிகளுக்கு” மட்டுமீறிய மரியாதை செய்வது ஆகாதா? ஆனால் ஜாக்கிரதை கெடுதல் அல்ல. மெரேஸ்யெவ் மறுபடி பின்னேப் பார்த்தான். பெத்ரேவ் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். வெண் முகிலின் பின்னணியிலிருந்து அவனது விமானம் நன்றாக தென்பட்டது.

இப்போது பகைவிமானங்கள் சோவியத் விமானங்களின் வலப்புறம் தாழப் பறந்தன. ஜெர்மன் விமானங்கள் அழகாக, நேர் வரிசையாக, கண்ணுக்குத் தெரியாத நூல்களால் இணைக்கப்பட்டவை போலப் பறந்தன. அவற்றின் மேற்பகுதிகள் மேலிருந்து பட்ட வெயிலொளியில் கண்கள் கூசுமாறு மின்னின.

“…சிறுத்தை மூன்று. தாக்கு!” கமாண்டரது வாக்கியத்தின் துணுக்கு மெரேஸ்யெவின் காதுகளில் பாய்ந்தது.

செஸ்லோவும் அவருடைய பின்னோடிகளும் பனிக்கட்டி மலையிலிருந்து வெறியுடன் வழுகுவது போல, வலப்புறம் உயரேயிருந்த பகையணியின் விலாப்புறத்தில் பாய்ந்ததை அவன் கண்டான். எல்லாவற்றிலும் அருகிலிருந்த “செருப்புக்காலி” மீது குண்டு வரிசைகள் தாக்கின. அது உடனே குப்புற வீழ்ந்தது. செஸ்லோவும் அவருடைய பின்னோடிகளும் இவ்வாறு ஏற்பட்ட இடைவெளியில் புகுந்து ஜெர்மானிய அணியைக் கடந்து பறந்து போய் விட்டார்கள். ஜெர்மன் விமான வரிசை அவர்கள் பின்னே நெருக்கமாயிற்று. “செருப்புக்காலிகள்” முன்போலவே சிறந்த ஒழுங்குடன் தொடர்ந்து சென்றன.

தனது அழைப்புக் குறிப்பெயரைச் சொல்லிவிட்டு, “தாக்கு!” என்று கத்த வாயெடுத்தான் மெரேஸ்யெவ். ஆனால் உணர்ச்சிப் பெருக்குக் காரணமாக அவன் குரலிலிருந்து “தா-ஆ-ஆ!” என்ற சீழ்கையொலி மட்டுமே வெளிப்பட்டது. அதற்குள் அவன் ஒழுங்காகப் பறந்த பகை விமான அணி தவிர வேறு எதையும் காணாதவனாகக் கீழ் நோக்கிப் பாய்ந்தான். செஸ்லோவால் வீழ்த்தப்பட்ட விமானத்தின் இடத்தில் இப்போது பறந்த ஜெர்மன் விமானத்தை அவன் தன் இலக்காகக் கொண்டான். அவனுடைய காதுகளில் பொய்யென்ற ஒலி கனத்தது. இருதயம் தொண்டை வழியாக வெளியே வந்துவிடும் போல் இருந்தது. பகை விமான இலக்கு மையத்துக்கு வந்ததும் மெரேஸ்யெவ் சுடு விசைகளை இருகைப் பெரு விரல்களாலும் பற்றியவாறு அதை நோக்கிப் பாய்ந்தான். சாம்பல் நிறத் தூவியடர்ந்த கயிறுகள் அவனுக்கு வலப்புறம் பளிச்சிட்டனபோல் இருந்தது. ஓகோ! சுடுகிறார்கள்! குறி தவறிவிட்டார்கள். மறுபடியும், இன்னும் அருகாக. மெரேஸ்யெவ் சேதமின்றித் தப்பிவிட்டான். பெத்ரோவோ? அவனும் சேதமடையவில்லை. அவன் இடப்புறம். அப்பால் விலகிவிட்டான். பையன் கெட்டிக்காரன்! இலக்குக் காட்டியின் மையத்தில் “செருப்புக்காலியின்” சாம்பல் நிறப் பக்கப் பகுதி பெரிதாகிக் கொண்டுபோயிற்று. மெரேஸ்யெவின் விரல்கள் சுடுவிசைகள் சில்லென்ற அலுமினியத்தை உணர்ந்தன. இன்னும் கொஞ்சம்…..

தனது விமானத்துடன் தான் முற்றிலும் கலந்து ஒன்றாகி விட்டதை அப்போது தான் அலெக்ஸேய் முற்றிலும் உணர்ந்தான். விமான எஞ்சின் தன் நெஞ்சில் துடிப்பது போல அவனுக்குப்பட்டது. விமான இறக்கைகளையும் வால் சுக்கானையும் அவன் தன் உடல், உள்ளம் அனைத்தாலும் உணர்ந்தான். பாங்கற்ற பொய்க்கால்கள் கூட நுண்ணுணர்வு பெற்றுவிட்டன போன்றும், வெறிப் பாய்ச்சல் கொண்ட இயக்கத்தில் விமானத்துடன் தான் ஒன்றாகிவிடுவதற்குத் தடையாக இல்லை போலவும் அவனுக்குத் தோன்றியது. பாசிஸ்ட் விமானம் இலக்குக் காட்டியின் மையத்திலிருந்து நழுவியது, பின்பு அகப்பட்டுவிட்டது. அதை நோக்கி நேரே பாய்ந்த படியே மெரேஸ்யெவ் சுடுவிசையை அழுத்தினான். வெடியோசைகளை அவன் கேட்கவில்லை. குண்டு வரிசைகளையும் அவன் காணவில்லை.

எனினும் குண்டுகள் இலக்கில் பட்டுவிட்டன என்பதை உணர்ந்தான். எனவே பகை விமானம் விழுந்து விடும், தான் அதனுடன் மோத நேராது என்று உறுதியுடன் நிற்காமல் நேரே பகை விமானத்தை நோக்கிப் பறந்தான். இலக்குக் காட்டியிலிருந்து விலகிவிட்ட மெரேஸ்யெவ் பக்கத்தில் இன்னும் ஒரு விமானம் அடிபட்டு விழுவதைக் கண்டு வியப்படைந்தான். அதையும் அவனே தற்செயலாக அடித்து வீழ்த்திவிட்டானா என்ன? இல்லை. இது பெத்ரோவின் வேலை. அவன் வலப்புறமிருந்து திரும்பினான். சபாஷ், புதியவனே! தனது இளம் நண்பனின் வெற்றியால் மெரேஸ்யெவ் தன் சொந்த வெற்றியால் அடைந்ததைக் காட்டிலும் அதிகக் களிப்பு அடைந்தான்.

இரண்டாவது அணி ஜெர்மன் விமான வரிசையில் ஏற்பட்ட பிளவு வழியாகப் பறந்து போயிற்று. ஜெர்மன் விமான வரிசையில் அதற்குள் பெருங் குழப்பம் ஏற்பட்டது. இரண்டாவது வரிசை விமானங்களை ஓட்டியவர்கள் அனுபவம் குறைந்த விமானிகள் போலும். அவை சிதறி ஓடின, வரிசை கலந்து விட்டது. செஸ்லோவ் அணியின் விமானங்கள் இவ்வாறு சிதறிக் கலைந்த “செருப்புக் காலிகளுக்கு” இடையே பாய்ந்தன, பகை விமானங்கள் தங்கள் சொந்தக் காப்பகழ்கள் மீதே வெடிகுண்டுப் பெட்டிகளை மளமளவென்று காலியாக்குமாறு செய்தன. ஜெர்மானியர் தங்கள் காப்பு அரண்களைக் குண்டுகளால் தகர்க்கும் படி செய்வதே காப்டன் செஸ்லோவ் கணக்கிட்டுத் தயாரித்திருந்த திட்டம். சூரியனுக்கு அடியில் சென்றது இதற்கு ஒத்தாசையாக இருந்தது.

ஆனால் ஜெர்மன் விமானங்களின் முதல் வரிசை மறுபடி குறுகி ஒன்று சேர்ந்துவிட்டது. “செருப்புக்காலிகள்” சோவியத் டாங்கிகள் உடைத்துப் புகுந்த இடத்தை நோக்கி முன்னேறின. மூன்றாவது சோவியத் சண்டை விமான அணியின் தாக்கு பயன் அளிக்கவில்லை. ஜெர்மானியர் ஒரு விமானத்தை கூட இழக்கவில்லை. ஒரு சோவியத் சண்டை விமானம் பகைக் குண்டுத்தாக்குக்கு இலக்காகி விழுந்துவிட்டது. டாங்கித் தாக்கு தொடங்கிய இடம் அருகே வந்துவிட்டது. மறுபடி உயரே எழ நேரமில்லை. ஆபத்தை மதியாமல் கீழிருந்துத் தாக்குவது என்று செஸ்லோவ் தீர்மானித்தார். மெரேஸ்யெவ் மனதுக்குள் அவரை ஆதரித்தான். செங்குத்துப் பாய்ச்சலில் “லா-5 ரக விமானத்திற்கு உள்ள போர்ப் பண்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வயிற்றில் ‘குத்த’ அவனுக்கே ஆசையுண்டாயிற்று. முதல் அணி மேல் நோக்கிப் பாய்ந்தது. பீரங்கிக் குண்டுகள் ஊற்றுக்களின் கூரிய பீச்சு நீர்த் தாரைகள் போல கிழித்துச் சென்றன. இரண்டு ஜெர்மன் விமானங்கள் சரிந்து விழுந்தன. ஒன்று இரு பாதிகளாக வகிரப்பட்டது போலும், திடீரென வானில் உடைந்து சிதறியது. மெரேஸ்யெவின் விமான எஞ்சின் அதன் வாலினால் நசுக்கப்படாமல் மயிரிழையில் தப்பிற்று..

“பின் தொடர்!” என்று கத்தினான் மெரேஸ்யெவ். பின்னோடி விமானத்தின் நிழலுருவை ஒரு பார்வை பார்த்து விட்டு இயக்கு விசைப்பிடியைத் தன் பக்கம் இழுத்தான்.

படிக்க:
சிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? | தோழர் ராஜு உரை | காணொளி
வாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு !

தரை குப்புறக் கவிழ்ந்தது. கனத்த அடி அவனை இருக்கையில் நெரித்து அதோடு அழுத்தியது. வாயிலும் உதடுகளிலும் இரத்தத்தின் சுவையை அவன் உணர்ந்தான். அவன் விழிகளில் செந்திரை படர்ந்தது. விமானம் அநேகமாகச் செங்குத்தாய் நின்றவாறு மேல் நோக்கிப் பாய்ந்தது. இருக்கையின் முதுகுப் பாகத்தில் கிடந்தபடியே மெரேஸ்யெவ் இலக்குக் காட்டியில் “செருப்புக்காலியின்” புள்ளிகளிட்ட வயிற்றையும் பருத்த சக்கரங்களை மூடியிருந்த நகைப்புக்கிடமான “செருப்புகளையும்” அவற்றில் ஒட்டியிருந்த விமானநிலையக் களிமண் கட்டிகளைக் கூடக் கண்டான்.

இரண்டு சுடுவிசைகளையும் அவன் அழுத்தினான். அவன் சுட்ட குண்டுகள் பெட்ரோல் கலத்திலா, எஞ்சினிலா, வெடி குண்டுப் பொட்டிலோ எதில் பட்டனவோ அவனுக்குப் புரியவில்லை. ஆனால் வெடிப்பின் பழுப்புப்படலத்தில் ஜெர்மன் விமானம் மறைந்துவிட்டது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை