Friday, August 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 317

இராமனும் கிருஷ்ணனும் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்தவர்கள் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 19

முதல் முதல் ஆரியர்களுக்குச் சுவாதீனமான நாடு வடமேற்கு மாகாணமாகும். பிறகு, அங்கேயிருந்து தொடர்ந்து திராவிடர்களைக் கொடுமைப்படுத்தி, அடக்கி வெற்றி பெற்றுக் கொண்டே வந்தார்கள் ஆரியர்கள். இந்தியாவில் ஒரே தடவையில் ஒரே கூட்டமாக வந்து ஜெயித்தவர்களல்லர்! ஆதியில் அவர்கள் தனித்தனி சமயங்களில் தனித் தனிக் கூட்டங்களாக வந்து தனித் தனியாகப் போரிட்டும் தனித்தனியே வெற்றி கொண்டார்கள். ஆதியில் இவர்கள் வந்த விதம் சொல்லவேண்டுமானால், வேவுக்காரர் போலவும், திடீரென்று புகுந்து தாக்கியும், கையில் கிடைத்ததைப் பற்றிக் கொண்டும், பிறகு நிலைத்த ஆதிக்கமும் தேடிக் கொண்டார்கள்.

சில மேன்மையான இடங்களையும், சகல சவுகரியமும் பிரபலமும் உள்ள இடங்களையும், யுத்தம் செய்தும் திராவிடர்களைக் கொன்றும், பலரை அடிமைப்படுத்தியும் சுவாதீனம் செய்து கொண்டார்கள்.

இவை தங்களுக்குப் போதுமான அளவு கிடைத்ததால் அவர்கள் இங்கு நிலைத்தவர்களாகி நாடெங்கும் தங்கள் கலைகளை, பழக்கவழக்கங்களைத் தங்கள் சவுகரியத்துக்கும் மேன்மைக்கும் ஏற்ற கொள்கைகளைப் பரப்ப ஆரம்பித்தார்கள். இங்கு வந்த ஆரியர்களின் சொந்தத் தன்மைகளையும் சரித்திரங்களையும் சொல்ல நமக்குப் போதிய சரித்திரம் இல்லை; என்றாலும் வேதம் ஆகியவற்றாலும் அவர்களது தன்மை , மதம், பாஷை ஆகியவற்றாலும் ஒருவாறு ஊகித்தறியலாம்.

அவர்களுக்குப் புரோகிதமும், சடங்குமே பிரதான மதக் காரியமாகும். அவர்களுடைய கடவுளாகப் பஞ்ச பூதங்களும் இந்திரன் முதலியவையும் இருந்து வந்தன. (இது ஆதியில் ரோம், கிரீஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது போலவே ஆகும்.)

இன்று ஆரியர்கள் கடவுள்களாக வணங்கும் இராமன், கிருஷ்ணன் என்பவர்கள், ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்த வீரர்கள். இராமன் திராவிடர்களை வென்று, தென்னாட்டிலும் இலங்கையிலும் ஆரியர் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தியவன். ஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சக்தி உடையவர்கள்.

‘’ஆரியர்கள் இப்படிப்பட்ட மதத்துக்கு விரோதமாக, யார் யாரோ என்னென்னமோ முயற்சி எடுத்தும், அவை பயனில்லாமல் போய்விட்டன என்றும், புத்த மதத்தை ஆரியர்கள் தங்களுக்கு விரோதமான  மதமென்று கருதியே ஒழித்துவிட்டார்கள் என்றும்; ஜாதி பேதமில்லாத மதத்தையும், மூடநம்பிக்கை இல்லாத வணக்கம், கடவுள் முதலியவற்றையும் ஏற்படுத்திய கிறிஸ்து, முகம்மது, இராஜாராம் மோகன்ராய் போன்றவர்களின் முயற்சிகளையும், கொள்கைகளையும் ஒழித்து அந்த மதங்களையும், மதத்தைச் சேர்ந்த மக்களையும் இழிவு படுத்தி வெறுக்கச் செய்து ஆரியர்களே மனித சமூகத்தில் மேம்பட்டவர்கள்; அவர்களே எஜமானர்கள், குருமார்கள், புரோகிதர்கள், பூஜைக்காரர்கள், உயர்ந்த ஜாதியார்கள் என்று ஆகி மற்ற சமுதாயம் தலையெடுக்கவொட்டாமல் செய்துவிட்டார்கள்.

சென்னையில் 1939 ஏப்ரல் 21 மாலை 6 மணிக்குத் தென்னிந்திய பிரம்ம சமாஜத்தின் ஆதரவில் சென்னை அண்ணாப் பிள்ளைத் தெருவிலுள்ள பிரமசமாஜக் கட்டிடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அறிஞர் S. சோமசுந்தர பாரதியார் MABL தலைமை வகித்துப் “பழந்தமிழர் மணமுறை” என்ற பொருள் பற்றிச் சுமார் 1 மணி நேரம் அரிய சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன் தொகுப்பு வருமாறு:

”தமிழ்ச் சகோதரிகளே! சகோதரர்களே! சாதிமத வேறுபாடு கருதாது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எல்லோரையுமே தமிழர்கள் என்றேன். நான் சென்னைக்கு வந்தபோது இங்குப் பேசுவேன் என எதிர்பார்க்கவில்லை. திடீரென பேச வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட நண்பர்களின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் ஏற்றுக் கொண்டேன்.

பழந்தமிழர் காலம் எது? அதாவது ஆரியர் ஆதிக்கத்தைத் தமிழரிடத்துச் சுமத்த முடியாத காலம் கி.பி. 2, 3-ம் நூற்றாண்டு, அதாவது ஆரியர் வருகையால் தமிழிலுள்ள சில பதங்கள் ஆரியத்திலும், ஆரியப் பதங்கள் சில தமிழிலும் ஏறத் தொடங்கிய காலம். அன்று தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இல்லை. அதன் பின்னர் 3-ம் நூற்றாண்டில்தான், தமிழில் சில ஆரியப் பதங்கள் கலக்க நேரிட்டது. அதாவது சிலப்பதிகாரத்திற்கு முந்திய காலம், ஏன்? சிலப்பதிகாரத்திலேயே ஆரியம் கலந்த முறை வந்து விட்டது.

எனவே சிலப்பதிகாரத்திற்கு முன்புள்ள பழந்தமிழர்களின் மணமுறையைப் பற்றியே ஈண்டு பேசப்படுகிறது. ஆரிய நாகரிகத்திற்கும், தமிழர் நாகரிகத்திற்கும் குடும்பம் பற்றிய அடிப்படையே வேறுபட்டது. குடும்பம் பற்றிய வழக்கில் ஆரிய முறையே இன்று தீர்ப்பாக வந்துவிட்டது. தந்தை சொத்தை – (செல்வத்தைப்) பிள்ளைகள் பிரிப்பது நல்லதென்பர் ஆரியர். அந்த முறை இன்று நமக்கும் வந்துவிட்டது. பொதுக் குடும்ப முறை ஆரியருக்கு அவசியமானது ஏன்? ஆரியர் அந்நிய நாட்டார். இங்கு வந்து குடியேறினர். குடியேறிய இடம் அவர்கள் பழக்கவழக்கங்கட்கு முற்றிலும் மாறுபட்டது. எந்த நாட்டிற்கு வந்தாலும் அந்நாட்டவர்களோடு ஒத்து வாழ்ந்து, தங்களைத் தனிப்பட்ட ஒரு தெய்வப் பிறப்பாகவே கருதுவது ஆரியர் வழக்கம். உதாரணம் பார்த்தால், ஜெர்மனியிலுள்ள ஆரியர்கள் யூதர்களை வெறுத்துத் தாங்கள் ஆரியரெனும் செருக்கால் விரட்டுகின்றனர். இந்த அகம்பாவம் எல்லோருக்கும் உரியது.

ஆரிய நாகரிகத்திற்கும், தமிழர் நாகரிகத்திற்கும் குடும்பம் பற்றிய அடிப்படையே வேறுபட்டது. குடும்பம் பற்றிய வழக்கில் ஆரிய முறையே இன்று தீர்ப்பாக வந்துவிட்டது. தந்தை சொத்தை – (செல்வத்தைப்) பிள்ளைகள் பிரிப்பது நல்லதென்பர் ஆரியர். அந்த முறை இன்று நமக்கும் வந்துவிட்டது.

இந்தச் செருக்கினாலே, பிறரால் ஆரியர்களும் வெறுக்கப்பட்டு வந்தனர் – வருகின்றனர். அவ்வாரியர் ஆதியில் வட நாட்டில் குடியேறிய காலத்து அங்கிருந்த வட நாட்டாரையும் தாழ்வாகக் கருத ஆரம்பித்தனர். வட நாட்டிலிருந்தவர்களும் அறிவிலா கீழ்மக்களாயிருந்ததால், தங்களை இழிவாகக் கருதிய ஆரியர்களை உதைக்க ஆரம்பித்தனர். இதனால் இவர்கட்குத் தற்காப்பு அவசியமாயிற்று. இராமாயணத்தில் பல இடங்களில் அசுரர்கள் உதைத்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறதே.

அதன் பொருள் என்ன? இவ்வாரியர்கள் தங்கள் செருக்கால் பிறரைக் கேவலமாகக் கருதவே அவர்கள் (அசுரர்கள்) இவர்களைச் சரியாக உதைத்தனர். இதுதான் உண்மை . இது நான் கூறுவதல்ல; சரித்திரம் கூறுகின்றது. இவ்வாரியர்கள் இரவு பகலாகக் கண்விழித்துத் தற்காப்புச் செய்து கொண்டனர்; எதிரிகளுடன் ஓயாமற் சண்டை பிடிக்க வேண்டி அதிக செல்வாக்கும் தற்காப்பும் இவர்கட்கு வேண்டியிருந்தது. இதனாலேயே இவர்கள் தங்களுக்கு ஆண் பிள்ளைகள் பிறப்பதை அதிகமாக விரும்பினர். பெண் பிள்ளைகள் பிறப்பதைப் பாவமெனவும் கருதினர். எனவே தற்காப்புக் கருதியேதான் இவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுறவாக வாழ வேண்டி வந்தது.

படிக்க:
நாம் தமிழர் எனும் முள்பொறுக்கிகளின் மற்றுமொரு பலியாடு – வண்டாரி தமிழ்மணி !
தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்

நிற்க, தமிழர்கள் வடமேற்குக் கணவாய், வடகிழக்குக் கணவாய் வழியாக இங்கு வந்து குடியேறினார்களெனச் சில மூடர்கள் கூறுகின்றனர். அது தவறு. உலகம் தோன்றிய காலந்தொட்டே தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கின்றனர். ஏன்? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தக்குடியில் வந்தவர்களன்றோ நம் தமிழர்கள்! தமிழர்கள் அரசியல் காரணமாகத் தங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொண்டிருந்தார்களாயினும், பிறரால் அந்நிய நாட்டாரால் மோதப்படாதவர்கள். ஏன்? இயற்கையிலே முப்புறம் கடலும் ஒருபுறம் மலையும் தமிழர்கட்கு அரணாக இருந்தன. இதனால்தான் தற்காப்பு வேண்டாது தனித்து வாழும் சிறப்பையே வேண்டினான் தமிழன்.

ஆதி முதல் தனிக்குடித்தனம் நடத்துவதே தமிழன் வழக்கம். தந்தை சொத்தை விரும்பினால் தாயும் மனைவியும் வெறுப்பர். தமிழன் திரை கடலோடித் திரவியம் தேடினான். ”உன் முயற்சியால் பொருள் தேடினாயா? தந்தை பொருளால் வாழ விரும்பும் சோம்பேறியை நான் விரும்பேன்” என்பாள் மனைவி. காதலரிருவர் கருத்தொருமித்த பிறகு மணம் செய்து கொள்வதற்கு முன் பொருள் தேடச் செல்வதே தமிழன் வழக்கு.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

தமிழகத்தை நாசமாக்காதே ! சென்னையில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

அணுக்கழிவுகள் – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச் சாலை 

தமிழகத்தை நாசமாக்காதே !

கருத்தரங்கம்

நாள்: 10.8.2019
நேரம்: மாலை 4 மணி
இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்

தலைமை :

தோழர் அமிர்தா
மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
சென்னை

சிறப்புரை :

தோழர் தியாகு,
உரிமை தமிழ் தேசம்,
ஆசிரியர்

திரு. வெற்றிச்செல்வன்,
பூவுலகின் நண்பர்கள்

வழக்கறிஞர் ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு

தமிழகத்தை காக்க ஒன்றுதிரள்வோம்! வாரீர்!

மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
தொடர்புக்கு : 9176801656

காதலனை ஒரு தடவை கூட நேரில் காணாத கடிதக் காதல் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 12-அ

நாற்பத்து இரண்டாம் வார்டில் “ராஜ தோரணையான பொய்க்கால்கள்” வந்திருப்பது பற்றிக் காரசாரமான விவாதம் இன்னும் ஓர் இடத்தில் நடந்தது. மாஸ்கோ அரசாங்கப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவின் மூன்றாம் ஆண்டு வகுப்புதான் அந்த இடம். அந்தக் காலத்தில் இந்த வகுப்பில் மிகப் பெரும்பாலராயிருந்த மாணவிகள் அனைவரும், அன்யூத்தாவின் சொற்படி, நாற்பத்து இரண்டாவது வார்டு விவகாரங்களை நன்கு அறிந்திருந்தார்கள்.

“ராஜதோரணையான பொய்க்கால்களின்” தொடர்பாக மெரேஸ்யெவ் மறுபடி விமானம் ஓட்டுவானா மாட்டானா என்பது பற்றிச் சாப்பாட்டு அறையில் விரிவாக விவாதம் நடந்தது. விவாதத்தில் இளமையும் உற்சாகமும் பொங்கியது. இதில் பங்கு கொண்ட இரு தரப்பினரும் மெரேஸ்யேவ் பால் ஒரே மாதிரி அனுதாபம் காட்டினார்கள். சண்டை விமானம் ஓட்டுவதில் உள்ள சிக்கல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மெரேஸ்யெவால் இயலாது என்றார்கள் நம்பிக்கையின்மைவாதிகள். எதிரியிடமிருந்து தப்பி அடர் காட்டின் ஊடாக இரண்டு வாரங்கள் தவழ்ந்தும் ஊர்ந்தும் எத்தனையோ கிலோ மீட்டர் தொலைவைக் கடந்த மனிதனுக்கு இயலாதது எதுவும் இல்லை என்று வாதித்தார்கள் நம்பிக்கைவாதிகள். தங்கள் வாதங்களுக்கு ஆதாரமாக வரலாற்றிலும் புத்தகங்களிலும் இருந்து உதாரணங்கள் காட்டினார்கள் அவர்கள்.

படிக்க :
♦ ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
♦ காஷ்மீர் மண்ணையும் பெண்களையும் அபகரிக்கத் துடிக்கும் பாஜக !

இந்த விவாதங்களில் அன்யூத்தா கலந்து கொள்ளவில்லை. தனக்கு அறிமுகம் அற்ற விமானியின் பொய்க்கால்களில் அவளுக்கு அதிக அக்கறை ஏற்படவில்லை. அரிதாகக் கிடைத்த ஓய்வு நேரத்தில், கிரிகொரிய் க்யோஸ்தியேவுடனான தனது உறவுகளைப் பற்றியே அவள் எண்ணமிட்டாள். இவை மேலும் சிக்கலாகி வருவதாக அவளுக்குப் பட்டது. இத்தகைய துன்ப வாழ்க்கை கொண்ட வீரக் கமாண்டரைப் பற்றி அறிந்ததும் அவனுடைய துயரத்தை ஓரளவு குறைக்கும் தன்னலமற்ற விருப்பத்தால் தூண்டப்பட்டுத் தொடக்கத்தில் அவள் அவனுக்கு எழுதினாள். ‘அப்புறம், அவர்களுடைய கடித நட்பு வலுவடைய, தேசபக்தப் போரின் அருவ வீரனது உரு அகன்று அதன் இடத்தில், உண்மையான, உயிரோட்டமுள்ள இளைஞன் வந்துவிட்டான். இந்த இளைஞன் பால் அவளது அக்கறை வர வர மிகுந்து கொண்டு போயிற்று.

அவனிடமிருந்து கடிதங்கள் வராவிட்டால் தான் நிம்மதி இழந்து ஏங்கித் தவிப்பதை அவள் கவனித்தாள். இந்தப் புது அனுபவம் அவளுக்கு மகிழ்வு ஊட்டியது, அதே சமயம் அச்சம் உண்டாக்கியது. என்ன, இது காதலா? ஒரு மனிதனை ஒரு தடவை கூட நேரில் காணாமல், அவன் குரலைக் கூடக் கேட்காமல், காதலிக்க முடியுமா? இதே உணர்வு தன்னையும் ஆட் கொண்டிருப்பதாக க்யோஸ்தியேவ் ஒரு முறை அவளிடம் ஒப்புக்கொண்டான் – இந்த உணர்வைத் “தபால் காதல்” என அவன் குறித்தான். தான் காதல் கொண்டுவிட்டதாக, அதுவும் பள்ளிக்கூட நாட்களில் போன்று குழந்தைத்தனமாக அல்ல, உண்மையாகக் காதல் கொண்டுவிட்டதாக, அப்போது முதல் அன்யூத்தாவுக்கு உறுதி ஏற்பட்டது. தான் இப்போது இவ்வளவு பொறுமையின்றி எதிர்பார்க்கும் இந்தக் கடிதங்கள் வருவது நின்றுவிட்டால் வாழ்க்கை தனக்கு அர்த்தம் அற்றதாகி விடும் என்று அவளுக்குத் தோன்றியது.

இவ்வாறு, ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே அவர்கள் தங்கள் காதலை வெளியிட்டார்கள். இதன் பின்பு க்யோஸ்தியேவுக்கு ஏதோ விந்தையானது நிகழ்ந்துவிட்டது. அவனுடைய கடிதங்கள் பதற்றமும் அரைகுறைக் கருத்துக்களும் நிறைந்து விட்டன. பிறகு அவன் துணிவு அடைந்து தன் மனதிலிருப்பதை அப்படியே அவளுக்கு எழுதிவிட்டான். ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே காதலை வெளியிட்டது சரியல்ல என்றும் சூட்டுப்புண் அவனை எப்படி விகாரப்படுத்திவிட்டது என்பதை அவளால் கற்பனை செய்யவே முடியாது என்றும் அவளுக்கு அவன் அனுப்பிய போட்டாவை இப்போது அவன் சிறிதும் ஒத்திருக்கவில்லை என்றும் அவனுடைய கடிதம் கூறியது. தான் அவளை ஏமாற்ற விரும்பவில்லை என்றும், யாருடன் உறவாடுகிறோம் என்று அவள் தன் கண்களால் பார்க்கும் வரை தன் உணர்ச்சிகளைப் பற்றி எழுதுவதை நிறுத்திவைக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் க்யோஸ்தியேவ் எழுதினான்…

அவன் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நாள் நெருங்கியது. அவன் மேலும் அடிக்கடி கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துக் கொள்ளலானான். ஒரு தரம் எட்ட நின்று விரைந்து மேல்நோக்காகத் தன்னைப் பார்வையிடுவான். மறு தரம் தன் விகாரமான முகத்தைக் கண்ணாடிக்கு வெகு அருகே கொண்டுவந்து புண்களையும் தழும்புகளையும் தடவித் தேய்த்துச் சீர்படுத்த முயல்வான். தொலைவிலிருந்து பார்க்க அவன் எவ்வளவோ நன்றாயிருந்தான். அகன்ற தோள்களும், குறுகிய இடையும், நேரான எஃகுத் தடிகள் போன்ற கால்களும் வலிய உடற்கட்டும் வாய்ந்தவனாகக் காணப்பட்டான். ஆனால் அருகிலோ! கன்னங்களிலும் மோவாயிலும் இருந்த சிவந்த காயத் தழும்புகளும் வரிகள் விழுந்து விரைப்பாயிருந்த தோலும் அவனுக்கு ஒரே உளச்சோர்வு ஏற்படுத்தின. அவள் பார்த்தால் என்ன செய்வாள்? அரண்டு போவாளோ? ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பி, தோள்களைக் குலுக்கி விட்டு அப்பால் சென்றுவிடுவாளோ? அல்லது – இது இன்னும் மோசம் உபசாரத்துக்காக அவனுடன் ஓரிரண்டு மணி நேரம், வார்த்தையாடி விட்டு, உணர்ச்சியற்ற சம்பிரதாயச் சொற்களைப் பகர்ந்து விட்டு விடைபெற்றுக் கொள்வாளோ? – இவ்வாறெல்லாம் கலவரத்துடன் எண்ணமிட்டான் க்யோஸ்தியேவ்.

இந்த மாதிரி ஏற்கனவே நடந்துவிட்டதுபோலப் பதற்றமடைந்து மனத்தாங்கலால் வெளிறிப்போனான் அவன்.

உதட்டைக் கடித்துக் கொண்டும் கொடிய வலி காரணமாக விழிகளிலிருந்து கட்டுக்கு அடங்காமல் துளித்த கண்ணீரை அடக்கிக் கொள்ள முயன்றவாறும் இருபத்து மூன்றாவது தடவை ஆளோடியில் நடந்து திரும்பி அன்றையப் பயிற்சியைச் சிரமத்துடன் முடித்தான் சீனியர் லெப்டினன்ட் மெரேஸ்யெவ்.

பிறகு அங்கியின் பையிலிருந்து நிழற்படத்தை எடுத்துக் கூர்ந்து பரிசீலித்தான். படத்தில் இருந்தாள் சதைப்பிடிப்புள்ள கன்னி. அவளுடைய நெற்றி விசாலமாக இருந்தது. அடர்த்தியற்ற, மென்மையான செழுங்கூந்தல் பின்புறமாக வாரிவிடப்பட்டிருந்தது. இயல்பான ருஷ்ய மூக்கு தடித்து, சற்றே மேல் தூக்கியிருந்தது. உதடுகள் குழந்தையினவை போல மென்மையாக இருந்தன. மேல் உதட்டில் அரிதாகவே புலப்படும் கரு மச்சம் இருந்தது. ஓரளவு உப்பிய விழிகள் – அவை சாம்பல் நிறமாகவோ, நீல நிறமாகவோ இருக்க வேண்டும் – கள்ளங் கபடமற்ற அந்த இன் முகத்திலிருந்து ஒளிவு இன்றி நேர்மையுடன் நோக்கின.

“நீ எப்படிப்பட்டவள்? ஊம், சொல்லு: மிரண்டு போய் விட மாட்டாயே? ஓடிவிட மாட்டாயே? என் அலங்கோலத்தைக் காணாதிருக்கும் அளவுக்கு உன் இதயம் விசாலமானதுதானா?” – நிழல்படத்தைத் துரவி ஆராய்ந்தவாறு மனத்துக்குள்ளாகவே அவன் வினவினான்.

அந்தச் சமயத்தில் சீனியர் லெப்டினன்ட் மெரேஸ்யெவ் கவைக் கோல்களை டொக் டொக்கென்று வைத்தவாறு, பொய்க் கால்கள் கறுமுறுக்க அளவாக அடியெடுத்து வைத்து ஆளோடியில் முன்னும் பின்னும் சளைக்காமல் நடை போட்டான். ஒரு முறை, இரண்டு, பத்து, பதினைந்து, இருபது முறைகள் கடந்து சென்றான். காலையிலும் மாலையிலும் தனது ஏதோ திட்டத்தின்படி அவன் நடந்து பழகினான். ஒவ்வொரு நாளும் அவன் தூரம் அதிகமாகிக் கொண்டு போயிற்று.

படிக்க:
போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! புதிய கலாச்சாரம் நூல் !
மோடி – அமித் ஷா கும்பலின் தொழிலாளர் சட்டம் ஒழிப்பு நடவடிக்கையை கண்டித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !

“அருமையான ஆள்! விடாமுயற்சி உள்ளவன், பிடிவாதக்காரன். இவனுக்குத்தான் என்ன சித்தவுறுதி! கவைக் கோல்களின் உதவியால் விரைவாகவும் லாவகமாகவும் நடக்க ஒரு வாரத்தில் பயின்று விட்டான். மற்றவர்களுக்கு இவ்வாறு பழகச் சில மாதங்கள் பிடிக்கும். நேற்று ஸ்டிரெச்சர் வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சிகிச்சை அறைக்கு மாடிப்படி இறங்கித் தானாகவே சென்றான். அங்கே போய்விட்டுத் தானே படிகள் ஏறித் திரும்பி வந்தான். கண்ணீர் முகத்தில் வழிந்தது, ஆனால் அவன் விடாது ஏறினான். உதவிக்கு வந்த தாதியை அதட்டக் கூடச் செய்தான். தானாகவே மேல் மாடியை அடைந்தும் அவன் முகந்தான் எப்படிச் சுடர்ந்தது! ஏதோ எல்ப்ரூஸ் சிகரத்தை எட்டிவிட்டவன் போல.” – இவ்வாறு அவனைப் பற்றிச் சிந்தித்தான் க்யோஸ்தியேவ்.

… மாலைப் பயிற்சிக்காக திரும்பிய அலெக்ஸேய் மெரேஸ்யெவ்வின் உடம்பு களைத்து நொந்துபோயிருந்தது. அடித்தொடைகள் இரத்தம் கட்டிக் காத்துவதையும் கவைக் கோல்கள் அழுத்தியதால் மரத்துப்போன தோள்கள் நோவதையும் அவன் உணர்ந்தான்.

டொக்,டொக். கர்ர், மர்ர். டொக்,டொக். கர்ர், மர்ர்.. உதட்டைக் கடித்துக் கொண்டும் கொடிய வலி காரணமாக விழிகளிலிருந்து கட்டுக்கு அடங்காமல் துளித்த கண்ணீரை அடக்கிக் கொள்ள முயன்றவாறும் இருபத்து மூன்றாவது தடவை ஆளோடியில் நடந்து திரும்பி அன்றையப் பயிற்சியைச் சிரமத்துடன் முடித்தான் சீனியர் லெப்டினன்ட் மெரேஸ்யெவ்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

வியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் ! பயண அனுபவக் கட்டுரை

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீழ்த்திய வியட்நாம் – போராளிகளின் தேசம்…

“உலகின் மிக நீண்ட
போரை தன்
மார்பில் சுமந்து
தன்னை
தொலைக்காமல்
மீட்டு எடுத்திருக்கும்
இயற்கையின் பொக்கிஷம்
வியட்நாம்”

அமெரிக்கா நிலவில் கால் தடம் பதித்த 50 ஆண்டுக்கால கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்தருணத்தில் மனித விடுதலைக்காக போராடிய வியட்நாமை நினைவு கூற மறந்து விட்டோம். “மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள். வரலாறு மக்களுக்கானது, மக்களே அதன் விதைகள்.”

பயணம் என் வாழ்வில் ஒரு அங்கமாய் மாற சே குவேராவின் “மோட்டார் சைக்கிள் டைரீஸ்” ஒரு முக்கிய காரணம். ஆனால் அது என் வாழ்வில் தொடர என் மூத்த சகோதரருக்கும் ஒரு பங்கு உண்டு. இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் சென்று இருக்கிறேன். ஆனால், இதுதான் இரண்டரை மாத கால நீண்ட வெளிநாட்டு பயணம். ஆறு நாடுகள் அறுபது நாட்கள் என என்னை நான் மறந்த நாட்கள். இவற்றில் எல்லா நாடுகளும் பிடித்து இருந்தாலும் வியட்நாம் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று.

அதற்கு காரணம் உலகின் மிக நீண்ட போரை தன் மார்பில் சுமந்து தன்னை தொலைக்காமல் மீட்டு எடுத்திருக்கும் இயற்கையின் பொக்கிஷம் வியட்நாம்! அதனால் அதைப் பற்றி எழுத கடமைப்பட்டிருகிறேன். உலகில் இயற்கை காதலர்கள் அதிகம் படையெடுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வியட்நாமிற்கு தனி இடம் உண்டு. அந்த நாட்டின் பெயரை சொல்லும் போது எப்படி ஒரு உத்வேகம் இருக்கிறதோ அதை போன்றே அழகானதொரு நாடு.

வியட்நாமிய போராளிகள் உலகின் ஏகாதிபத்திய அமெரிக்காவை வீழ்த்தி விடுதலை வேட்கையில் இன்று தனக்கென ஒரு இடத்தை தடம் பதித்து இருக்கிறனர். அதில் சாதித்துக் காட்டியிருக்கிறனர் என்றுதான் சொல்லவேண்டும்.

வியட்நாமும் வாழ்வியலும்

வியட்நாம் தென்கிழக்காசியாவின் இந்தோ சீனாவின் கிழக்கில் உள்ள நாடு. இதன் வரைபடம் ஆங்கிலத்தில் “S” வடிவிலான உருவம் கொண்டது. இந்நாட்டின் வடக்கே சீனாவும், வடமேற்கே லாவோசும், தென்மேற்கே கம்போடியாவும், கிழக்கே தென்சீனக்கடலும் எல்லையாக உள்ளது.

2012-ம் ஆண்டு கணக்கீட்டின்படி 9.30 கோடி ஜனத்தொகையை கொண்டுள்ளது. உலகின் மக்கள் தொகை அடிப்படையில் 13 -வது இடத்திலும், ஆசியாவில் 8 வது இடத்திலும் உள்ளது. இதன் தலைநகரம் ஹனோய். வியட்நாமின் இன்னொரு முக்கிய நகரம் ஹோ சி மின் சிட்டி (சைக்கான்).

இந்த நாடு சீனா, ஜப்பான், பிரெஞ்சு என பலரின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது, அதன் நீட்சி அதன் கலச்சாரத்திலும் தொடர்கிறது. மொத்த மக்கள் தொகையில் 81% பேர் மதமற்றவர்களாகவும், 9% பேர் புத்த மதத்தையும், 7% பேர் கிறிஸ்துவ மதத்தையும், 3% பேர் பிற மதத்தையும் பின்பற்றுகிறார்கள்.

இங்கு ஒரு கட்சி ஆட்சி முறை உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின், மத்திய ஆட்சிமன்ற குழுவே அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இந்த நாட்டின் அதிபர் பாதுகாப்பு படையின் தலைவராவார். பிரதமர் அமைச்சரவையின் தலைவராக உள்ளார். நாட்டின் தலைமை நீதிபதி தேசிய சபையால் நியமிக்கப்படுகிறார்.

இங்கு விவசாயம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நாட்டின் நாணயத்தின் பெயர் டாங். வியட்நாமில் காபி மிகவும் பிரபலம். உலகில் காபி ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நாட்டின் இன்றைய நிலைமை ஒரு குறிப்பிடதக்க அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. வாருங்கள் வரலாற்றை புரட்டிப் பார்ப்போம்.

போர் வரலாற்றில் வியட்நாம்

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இந்தோ சீனா என்று அழைக்கப்பட்ட கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து உள்ளடக்கிய பிராந்தியத்தை பிரான்ஸ் மீண்டும் தன் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி வியட்நாமின் கூட்டுப்படைகள் 1946 முதல் 1954 வரை பத்து ஆண்டுகள் சண்டையிட்டன.

படிக்க:
“ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் !
♦ காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்

வியட்நாமின் விடுதலைக்காக, பிரான்ஸ் அரசுக்கு எதிராக (Battle of Dien Bien Phu) வியட்நாமிய கம்யூனிச படைகள் போரிட்டது. 1955 -ம் ஆண்டு ஜெனிவா மாநாட்டின் மூலம் வியட்நாம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த போரின் முடிவில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் வட வியட்நாம் புரட்சியாளர் ஹோ சி மின் தலைமையில் ஆட்சி அமைத்தது.

HO_CHI_MINH
வியட்நாம் புரட்சியாளர் ஹோ சி மின்

மேற்கத்திய நாடுகளின் ஆதரவில் பிரதமராக Ngo Dinh Diem (ங்கோ டின் டிஎம்) தெற்கு வியட்நாமில் ஆட்சி அமைத்தார். ஆனால் தெற்கு வியட்நாம் மேற்கத்திய பார்வையில் செயல்படும் கைப்பாவை அரசாக செயல்பட்டதன் காரணமாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

“ஒருங்கிணைந்த வியட்நாம் ஒன்றே தீர்வு” என்றார் புரட்சியாளர் ஹோ சி மின். பின் 1960-களில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜான் கென்னடி, கிழக்காசிய கம்யூனிச செல்வாக்கை குறைப்பதற்காக நேரடியாக உள்நாட்டு போரில் தலையிட்டார் .

இதில் வட வியட்நாம் படை சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் பிற கம்யூனிச நாடுகளால் ஆதரிக்கப்பட்டது. தெற்கு வியட்நாமியப் படை அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் பிற கம்யூனிச எதிர்ப்பு அணியால் ஆதரிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகள் பேரழிவு ஆயுதங்களையும், பாஸ்பரஸ் குண்டுகளையும், பாரம்பரிய போர் யுத்திகளையும் கையாண்டபோது கம்யூனிச படைகள் கெரில்லா தாக்குதலைக் கையாண்டன.

கெரில்லா தாக்குதலால் மேற்கத்திய அமெரிக்கப்படை பின்வாங்கியது. இதை அடுத்து 1968-ம் ஆண்டு சோன் மை என்ற கிராமத்தில் குண்டுவீசி பெண்கள், குழந்தைகள், முதியவர்களை என ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது அமெரிக்கப்படை. 1968-ம் ஆண்டில் வியட்நாம் முழுவதும் கடும் குண்டுவீச்சுத் தாக்குதலைச் சந்தித்தது. இதற்கு அடுத்த ஆண்டு இந்த விவரம் வெளிவந்தபோது உலகமே கண்ணீரில் முழ்கியது.

உலக நாடுகள் பலவும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில், அமெரிக்காவிலும் எதிர்ப்பு தொடங்கியது. வியட்நாமிற்கு அமெரிக்க படைகளை அனுப்பியது தவறு என்பது மூன்றில் இருபங்கு அமெரிக்கர்களின் கருத்தாக இருந்தது. வேறு வழியின்றி 1973-ம் ஆண்டு அமெரிக்க படைகள் வியட்நாமிலிருந்து வெளியேறின. அதன் பின்னும் இரண்டு ஆண்டுகள் போர் நீண்டது.

1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெற்கு வியட்நாமின் தலைநகரை கம்யூனிச அரசு கைபற்றியது. அதன்பின் போர் முடிவுக்கு வந்தது. போரில் மொத்தம் வியட்நாமிய போராளிகள், பொது மக்கள் என 38,00,000 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின் 1976-ல் ஒருகிணைந்த வியட்நாமாக விடுதலை பெற்றது.

நாங்கள் எங்கள் பயணத்தை ஹோ சி மின் நகரத்தில் தொடங்கினோம். முதல் நாள் போர் நினைவு அருங்காட்சியம்; போரின் அவலங்களை எங்கள் கண் முன் கொண்டு வந்தது. அந்த அருங்காட்சியகம் சென்றவுடன் முதலில் பார்த்தது அமெரிக்க இராணுவப் படைகள் விட்டு சென்ற போர்க் கருவிகள், ஆயுதங்கள், ஹெலிகாப்ட்டர்கள். போரை நினைவுப்படுத்திய அவற்றைப் பார்த்தபடியே உள்ளே சென்றோம்.

போர் எவ்வளவு கொடூரமானது என்பதை அங்கிருக்கும் புகைப்படங்கள் என் விழிகளில் வழிந்தோடும் கண்ணீரில் சொன்னது. மனதில் பல கேள்விகள் கேட்டவாரே வெளியில் வந்தோம். பின் மறுநாள் கு-ச்சி சுரங்கபாதை (Cu Chi Tunnel) சென்றோம். ஒன்றிணைந்த வியட்நாம் உருவாக்கப்பட இந்த சுரங்கம்தான் பெரும் பங்கு வகித்தது.

கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunnel)

இந்த சுரங்கமானது தற்போதைய ஹோ சி மின் நகரத்திலுள்ள (சைகான்) நதிக்கரை ஓரத்தில் உள்ள கு-ச்சி என்னும் ஊரில் உள்ளது. இந்த கு-ச்சி சுரங்கபாதையானது சுமார் 75 மைல் (121 கி.மீ) நீளம் கொண்ட மிக நீண்ட போர் சுரங்கம். இங்குதான் தெற்கு (Viet Cong ) மற்றும் வடக்கு வியட்நாமிய கூட்டுப்படை தங்களின் தாக்குதலுக்கான இராணுவ அமைப்பை நிறுவியிருந்தது. வியட்நாமிய போராளிகளின் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunnel). இதுதான் தெற்கு மற்றும் வட வியட்நாமிய படைகள் தங்குவதற்கும், ஒளிந்திருந்து தாக்கவும், ஆயுதம் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இதை அமெரிக்க ராணுவம் “Black Echo” என்கிறார்கள்.

நாங்கள் இதில் செல்லும் போது எங்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த சுரங்கமானது மனிதன் தவழ்ந்து செல்லகூடிய மிகவும் சிறிய பாதை, அருகில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாத இருட்டு, தேள், பூரன் என பயமுறுத்த; மறுபுறம் பசி, நீர் பற்றாக்குறை என நாள் முழுவதும் சுரங்கப்பாதையில் உள்ளிருந்த (Viet Cong) வியட்நாமியர்கள் எவ்வளவு மெலிந்த உடலமைப்பைக் கொண்ட வலிமைமிக்கவர்கள் என தெரிந்தது.

போரில் இறந்தவர்களை அடுத்து சுரங்கத்தில் மலேரியா காய்ச்சலால் பாதிக்கபட்டு இறந்தவர்கள் பலர். பகல் முழுவதும் சுரங்கத்திலிருந்து போர் யுத்திகள் வகுப்பது, இரவில் தாக்குதலை மேற்கொள்வது; ஆயுதங்கள் தயாரித்தல் போன்றவற்றை மேற்கொண்டனர். அமெரிக்க ராணுவ படையால் இந்த இடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஜனவரி 7 ,1966 -ம் ஆண்டு Operation Crimp மற்றும் Operation Cedar Falls என்ற இரண்டு மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டது. இதில் B-52 Bombers மூலம் 30 டன் வெடிகுண்டுகள் கு-ச்சி ஊர் முழுவதும் குண்டு மழையை பொழிந்தது. மொத்தம் 38,000 அமெரிக்க ராணுவ படைகள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில் அந்த பச்சை வனம் பாலை நிலமானது. ஆனால் இந்த தாக்குதல் அமெரிக்காவிற்கு பெரும் தோல்வியை தந்தது. இதற்கு வியட்நாமின் போர்ப்படை கையாண்ட போர் யுத்தியும், MACV (Military Assistance Command Vietnam) கொடுத்த பயிற்சியே காரணம் என்றது அன்றைய பெரிய நாளிதழ் ஒன்று. வியட்நாம் வரலாற்றில் அமெரிக்கர்களுக்கு மிகவும் சவாலான இருந்தது இந்த கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunel). சுரங்கத்திலிருந்து வெளிவந்தபோது வியட்நாமிய படை தன் நாட்டின் விடுதைலைக்கு எப்படி போராடியுள்ளனர் என்பதை கண்டு வியந்த இடம் கு-ச்சி சுரங்கம். இந்த இடம் தற்போது போர் நினைவு பூங்காவாக அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. போரில் கு-ச்சி சுரங்கம் போன்றே மற்றொரு இடம் Ho Chi Minh Trial.

ஹோ சி மின் பாதை (Ho Chi Minh Trial)

எப்படி இப்படி ஒரு உழைப்பாளர் நாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியதில் தோழர் ஹோவிற்கு மிகப் பெரிய பங்கு உண்டோ, அதை போன்றே உலகின் மிக நீண்ட போரை வென்றதில் இந்த ஹோ சி மின் பாதை ஒரு மிகப்பெரிய ஆயுதம். இந்த வழியேதான் வட வியட்நாமிய கூட்டுப்படை தெற்கு வியட்நாமுக்கு தனது இராணுவத்தையும், ஆயுதங்களையும் லாவோஸ், கம்போடியா வழியாக கு-சி சுரங்கத்திற்கு எடுத்து சென்றனர். இதனை தொடர்ந்தே தெற்கு வியட்நாமியப்படை (Viet Cong) போரை முன்னெடுத்தது.

படிக்க:
எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!
♦ வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள் !

இதை அறிந்த அமெரிக்கப்படை இந்த பாதைக்கு இப்பெயரை வைத்தது. இந்த பாதையில் லாவோஸ் பெரும் பகுதியை கொண்டுள்ளது. இங்கு தான் வட கம்யூனிஸ்ட் கூட்டுப்படை தனது போர் யுத்திகளை (Strategic Supply Route) வகுத்தனர். அதை அறிந்த அமெரிக்கப்படை லாவோஸ் மீது குண்டுகளை வீசியது. உலகிலேயே மிக அதிக குண்டுகள் வீசப்பட்ட நாடு லாவோஸ்.

1964 முதல் 1973 வரை சுமார் பத்து ஆண்டுகள் 2.1 மில்லியன் டன் வெடிகுண்டுகள் இன்றும் அந்த மண்ணில் புதைந்து மக்களை கொன்று கொண்டுதான் இருக்கிறது. இந்த பாதையை அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை (National Security Agency ) ஆவணத்தில் (“One of the great achievements of Military Engineering of the 20th Century”) இருபதாம் நுற்றாண்டின் போர் வரலாற்றில் மிக உயர்ந்த ராணுவ பொறியியல் கட்டமைப்பு என்றது. இதன் காரணமாகத்தான் போரை வெல்லமுடியவில்லை என்று பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டது

கம்பீரமான கல்லறையில் ஒரு புரட்சியாளரின் உறக்கம்

வியட்நாமின் தேசத்தந்தை, புரட்சியாளர், தொழிலாளர் கட்சியின் தலைவர் என பன்முகம் கொண்ட தோழர் ஹோ சி மினின் சமாதி.

வியட்நாமின் தலைநகரமான ஹனாயில் உள்ள (Ba Dinh Square) பா தின் சதுக்கத்தின் நடுவில் மிக கம்பீரமான கல்லறை உள்ள கட்டிடத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் பிரதமராக, அதிபராக 1954 முதல் 1965 வரை பதவி வகித்தார். பின் உடல் நலக் குறைவால் பதவி விலகினார். ஒருங்கிணைந்த வியட்நாம் உருவாக வித்திட்டவர் ஹோ சி மின். “தன் வரலாறு தெரியாத ஒருவன் பிணத்திற்கு சமமானவன்” என்ற விடுதலை வேட்கையை மக்களின் மனதில் கொண்டு சேர்த்த மாபெரும் மனிதரின் உடல் அங்கு உறங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு சென்றதும் என்னை அறியாமல் என் கைகள் உயர்ந்து லால் சலாம் சொன்னது. அந்த இடத்தை விட்டு வர மனம் இல்லாமல் தவித்தது என் மனது.

வியட்நாம் நிலவியல் அதிசயங்கள்

இந்த பயணத்தில் மிக நீண்ட நாட்கள் பயணித்தது வியட்நாமில் தான். தெற்கு வியட்நாமில் ஹோ சி மின் சிட்டி, ஹோய் அன், கு-சி டனல், ஹேவே, நேத்ரங், டனங் போன்ற பல இடங்களும் சென்றோம். ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது வட வியட்நாம் மலைகளும், வனங்களும், கடலும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பகுதிகள்தான்.

நின் பின், போங்கனா குகை, சபா விவசாயம், ஹனோய் மானுட உலகின் சொர்க்கம் அது. என் வாழ்வில் இன்னொரு முறை செல்ல வேண்டும் என்று நினைத்த இடம் வியட்நாம். வியட்நாமில் மிக பெரிய சிகரம் பான்சிபன் மலைதான். இந்தோ சீன தீபகற்பத்தில் (வியட்நாம், லாவோஸ், கம்போடியா உள்ளடக்கிய நாடுகளில்) உயர்ந்த மலைப்பகுதி. இங்கு நாள்தோறும் 1,000 மலையேறிகள் அதன் அழகைக் காண செல்லுகிறார்கள்.

vietnam
சபா விவசாயம்

இந்த மலையேற்றம் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஆகும். இதன் உயரம் சுமார் 3,143 மீட்டர் (10,326 ft) கொண்டது. இங்கு ஆண்டு தோறும் பூக்கும் பல்வேறு வகை பூக்கள், தாவரங்கள், விலங்குகள் வாழ்வதால் அதை பாதுகாக்கும் நோக்குடன் அந்த நாடு அப்பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்து உள்ளது. அந்த நாட்டின் இன்னொரு அதிசயம் ஹா லாங் பே (காலங் விரிகுடா). இது UNESCO-வினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் மற்றொரு அதிசயம் சபா.

சபா விவசாயம் மலையில் பயிர்விக்கும் முறை அந்த நிலத்தின் அடையாளம். இதைக் காண சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். உலகின் மிக பெரிய குகையும் இங்குதான் உள்ளது. அதன் பெயர் ஹாங் சன் டூங் (Hang Son Doong) இப்படி சொல்லிகொண்டே போக இயற்கையின் அதிசயங்கள் அங்கே கொட்டிக் கிடக்கிறது.

பயணம் சொன்னது

வியட்நாமியர்களிடம் உரையாடியபோது அவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாலும் இயற்கையை பெரிதும் நேசிப்பவர்களாக உள்ளனர். ஆண் – பெண் என்று வேறுபாடு மிகவும் குறைவு.

சமநிலையில் ஒரு சமூகம் பயணிக்கும்போது குடும்ப அமைப்பு உடைகிறது என்பதை பொய்யாக்குகிறது வியட்நாம். அங்கு மக்கள் குடும்ப அமைப்புடனே பெரிதும் வாழ்கின்றனர். எல்லோரும் வாழ்வதற்கான நிலத்தை அரசாங்கம் சமமாக பிரித்து வழங்கி இருக்கிறது. மக்கள் தங்கள் தாய் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இலவச கல்வி, சுகாதாரத்தை அரசு உறுதி படுத்தியுள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரிக்கு சென்றோம் அங்கு ஒரு மாணவனிடம் உரையாடிய போது ஆங்கிலம் தெரியவில்லை. பின் எப்படியோ மொழிபெயர்ப்பளர் உதவி கொண்டு பேசியதில் அவனுக்கு அவனது சமூகம் மற்றும் படிப்பு சார்ந்த விஷயங்கள் நன்றாக தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது. ஆங்கிலம் தொடர்பு மொழியே தவிர வேறு ஏதும் இல்லை என்பதை உணர்த்திய தருணமது.

vietnam
கடைகோடி கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் போய் சேர்ந்துள்ள வியட்நாம்.

அங்கு ஒரு மருத்துவ மாணவனின் படிப்புச் செலவு வெறும் 35,000 டங்கள் மட்டுமே. இது இந்தியாவை காட்டிலும் மிகவும் குறைவு. நாங்கள் சபாவில் ஒரு வீட்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். அந்த அனுபவம் கண்களுக்கு இயற்கை கொடுத்த விருந்து. நாங்கள் மூன்று மலைகளைக் கடந்துதான் அந்த வீட்டிற்கு சென்றோம். மலையின் கடைக்கோடியிலும் மின்சாரம், சாலை, பள்ளி, ஆப்டிக் கேபிளுடன் கூடிய இன்டர்நெட் வசதி என மக்களுக்கு அனைத்தும் சென்று சேர்ந்திருக்கிறது.

இதைப் போன்றே மும்பையில் உள்ள பிரபல மலையேற்றம் ஒன்றிற்கு சென்ற போது அங்கும் மலையில் ஒரு பள்ளி இருந்தது, ஆனால் பத்து ஆண்டுகளாக பூட்டப்பட்ட நிலையில். மக்களுக்கு தேவையான அத்தியாவசியத்தை கொடுப்பதுதான் அரசாங்கத்தின் கடமை. அங்கும் வறுமை இருக்கிறது. ஆனால் அத்தியாவசியங்களை தடுக்கும் நிலைமையில் அல்ல. போரிலிருந்து மீண்ட ஒரு நாடு இன்று இப்படி எல்லா வளங்களுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது என்பது வரலாற்றில் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.

மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள்

வியட்நாம் போராளிகள் அனைவரும் அந்த மண்ணின் மைந்தர்கள். உலகின் மிகப் பெரிய ஏகாதிபத்திய அரசிடம் அடிமைப்படாமல், “சுதந்திரம் மட்டுமே எங்கள் கனவு” என முழங்கிய வியட்நாம் போர், வரலாற்றில் மனித இனத்தை மீட்டு எடுத்து இருக்கிறது.

மக்களின் நம்பிக்கையாய் திகழ்ந்த ஹோ சி மின்-ன் வார்த்தைகள் அவர்களை அதிகாரத்தையும், வன்முறையும் தோற்கடித்து; சமூகநீதியையும், சுதந்திரத்தையும் நிலைநாட்டச் செய்திருக்கிறது. வரலாறு மக்களுக்கானது மக்களே அவற்றை உருவாக்குகிறார்கள். கொண்டாடுவோம் மக்கள் போராட்டத்தின் 50-ம் ஆண்டு வெற்றி விழாவை !

சிந்துஜா சமூக ஆர்வலர்.

தமிழ் மக்கள் வரலாறு – ஆனந்தரங்கன் நாட்குறிப்புகள் – PDF வடிவில் !

4

18-ம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கன் பிள்ளையின் நாட்குறிப்புகள் ( 06.09.1736 முதல் 12.01.1761 வரை ) PDF வடிவில் பனிரெண்டு நூல்கள் உங்கள் கையில்.

நண்பர்களே…

பொ.வேல்சாமி

ம் நாட்டில் படிப்பறிவுள்ளவர்களில் பலர் “வரலாறு” என்பதை சரிவர புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கின்றனர். மக்களை ஏமாற்றும் வஞ்சகர்கள் இந்த இருள்பகுதியை செம்மையாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் நாட்டு மக்கள் ஏமாளிகளாக ஆகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் குறிப்பிட்ட செய்திகளை மக்கள் எவ்விதம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய விவாதம் நம்மிடையே உருவாக வேண்டும். இதற்கு துணை செய்யும் விதத்திலான பல நூல்கள் தமிழில் உள்ளன. இவற்றை படிக்கும் கல்வியாளர்கள் இச்செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

தமிழக வரலாற்றை அறிந்து கொள்வதற்கு கி.மு.500 தொடக்கம் பதிவாகியுள்ள பிராமி எழுத்துக்களில் தொடங்கி சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், காப்பியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், வெளிநாட்டு அறிஞர்களின் பயணக் குறிப்புகள் போன்றவற்றைத் தொடர்ந்து கல்வெட்டுக்கள் செப்புப் பட்டையங்கள் பிற்காலங்களில் தமிழ்நாட்டுக்கு வந்த ஐரோப்பிய பாதிரிமார்கள் பயணிகளின் குறிப்புகள் போன்ற பல தகவல்கள் கிடைக்கின்றன.

ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் எழுதப்பட்ட “புளுடார்க்” போன்ற வரலாற்றுக் குறிப்புகள் நம்மிடையே இல்லை. அதே நேரத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கன்பிள்ளையின் தினசரி நாட்குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன. ரங்கப்ப திருவேங்கடம்பிள்ளை (1760-1766), இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு (1778 -1792 ) போன்றவர்களின் நாட்குறிப்புகளும் நமக்கு கிடைத்துள்ளன. இதில் ஆனந்தரங்கன்பிள்ளையின் நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து “வானம் வசப்படும்” என்ற மிக அருமையான நாவலை எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

பழங்காலத்தில் தமிழ் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் எந்தெந்த வகையான பிரச்சனைகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் பெற்றார்கள் என்பதை இந்த நாட்குறிப்புகள் நமக்கு திரைப்படக் காட்சிகளைப் போன்று காட்டுகின்றன. நமக்கு தமிழ்நாட்டு அறிவை சிறப்பாகக் கொடுக்கும் இந்த நாட்குறிப்பை நீங்கள் எல்லாம் பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அதற்கான இணையதள இணைப்பை இவ்விடம் கொடுத்துள்ளேன். 18ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பேச்சுவழக்குத் தமிழ் உரைநடையாக இருப்பதால் படிப்பதற்கு கொஞ்சம் பொறுமையுடன் முயன்று படிக்க வேண்டும்.

குறிப்பு : இந்தத் தொகுதிகளில் பதினொன்று மட்டும் கிடைக்கவில்லை. கையில் இதன் PDF வைத்திருக்கும் நண்பர்கள் இணைப்பைக் கொடுத்தால் உதவியாக இருக்கும்.

( பிடிஎஃப் டவுண்லோடு செய்ய )

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி ஒன்று

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி இரண்டு

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி மூன்று

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி நான்கு

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி ஐந்து

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி ஆறு

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி ஏழு

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி எட்டு பாகம் – 1

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி எட்டு பாகம் – 2

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு : தொகுதி ஒன்பது

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு : தொகுதி பத்து

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு : தொகுதி பன்னிரண்டு

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்

காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம், 35A நீக்கம் !

அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் காஷ்மீர் ஒரு வேட்டைக் காடு ! இனி பாரு பிஸினெஸ் பிச்சிக்கிட்டு ஓடும் !

கருத்துப்படம் : வேலன்

போலீசு நிலையம் முற்றுகை : அண்ணாமலை பல்கலை மாணவர்கள் அதிரடி !

0

டலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். விடுமுறை காலங்களில் மாணவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டு பகல் – இரவு நேரங்களில் பல்கலைக்கழகத்திற்கு வருவது சகஜமானது. கடந்த 04.08.2019 (ஞாயிறு) அன்று மூன்று மாணவர்கள் – தங்களை பாதிக்கூடிய – மோடியின் புதிய கல்வி கொள்கையைக் கண்டித்து நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இரவு 12:30 மணி அளவில் பல்கலைகழகத்திற்கு வந்தனர்.

அங்கு ரோந்துப் பணியில் இருந்த காவலர் கௌதமன் மாணவர்களைப் பார்த்து உன் பேர் என்ன; என்ன படிக்கிற; உங்க அப்பா என்ன செய்றாங்க; எங்க போய்ட்டு வர; குடிச்சிருக்கியா..? என விசாரித்துள்ளார். போலீசின் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்த அம்மாணவர்களை, என்னடா திமிரா பேசுற என ஆபாச வார்த்தைகளால் மாணவர்களையும், குடும்பத்தினரையும் கடுமையான பேசினார்.

“சார், நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொன்னால் இப்படிதான் பேசிவீங்களா..!” என கேட்டதற்கு. “என்ன திமிருடா உனக்கு.. கேஸ் போட்டா வாழ்க்கையே போயிடும்.. உன் வார்டன் யார்ரா ? தே.. பய…” எனக் கடுமையாக பேசி விடுதி வாசலில் நின்று மீண்டும் மிரட்டினார். சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் யோக்கிய சிகாமணி கௌதமனின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனை கண்டிக்கும் விதமாக மறுநாள் மாணவர்கள் 40 -பேர் திரண்டு சென்று “மாணவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என போலீசு துணை கண்காணிப்பாளரிடம் (DSP) மனு அளித்தனர்.

மேலும் “இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து போலீசு ஈடுபட்டால், பல்கலைக்கழக மாணவர்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (மாவட்ட செயலாளர்) தோழர் மணியரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (மாவட்ட செயலாளர்) தோழர் பால. அறவாழி ஆகியோர் உடனிருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு: 97888 08110

திருவாரூர் : தமிழகத்தை நாசமாக்காதே ! – மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

அணுக்கழிவுகள் – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச் சாலை 

தமிழகத்தை நாசமாக்காதே !

கருத்தரங்கம்

நாள் : 10.08.2019, மாலை 3 மணி,
இடம் : தோழர் கு.ம.பொன்னுசாமி நினைவு அரங்கம், U.P மஹால், திருவாரூர்.

நிகழ்ச்சி நிரல்

தலைமை :

தோழர் தங்க. சண்முகசுந்தரம்
தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்.

வரவேற்புரை :

தோழர் லெ. செழியன்
திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்.

நேருரை :

தோழர் P. ஜானகி ராமன்
நன்னிலம் பாதுகாப்பு இயக்கம், நன்னிலம்.

திரு P. செல்வகணபதி
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், கமலாபுரம்

கண்டன உரை :

தோழர் G. சுந்தரமூர்த்தி
CPI(M) மாவட்ட செயலாளர்.

தோழர் பழனி
பொது செயலாளர், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி.

தோழர் மா. வடிவழகன்
வி.சி.க மாவட்ட செயலாளர் (தெற்கு) திருவாரூர்.

தோழர் V.T. செல்வம்
வி.சி.க மாவட்ட செயலாளர் (வடக்கு) திருவாரூர்.

திரு வாரை. பிரகாஷ்
திமுக நகர செயலாளர், திருவாரூர்.

திரு K.S.S. தியாக பாரி
திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர்.

தோழர் வீ. மோகன்
திராவிடர் கழகம், மாவட்டச் செயலாளர்.

திரு C.A. பாலு
திருவாரூர் வர்த்தக சங்க தலைவர்

சிறப்புரை :

தோழர் G. வரதராஜன்
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில இணை செயலாளர்.

பொறியாளர். கோ. திருநாவுக்கரசு
தலைவர், தாளாண்மை உழவர் இயக்கம்.

தோழர் அய்யநாதன்
பத்திரிக்கையாளர்.

தோழர் காளியப்பன்
மக்கள் அதிகாரம், மாநில பொருளாளர்

காவிரி படுகையில் பூமிக்கு மேலே நெற்பயிர்… கீழே ஹைட்ரோ கார்பன்.. எது நமக்கு தேவை? முடிவு செய்வோம் வாரீர் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை – திருச்சி மண்டலங்கள்.
தொடர்புக்கு : 82207 16242, 94454 75157.

காஷ்மீர் : மக்கள் விரோத நடவடிக்கையை அனுமதிக்க முடியாது | மக்கள் அதிகாரம்

காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும், அவர்கள் ஒப்புதலின்றியும் திணிக்கப்படும் முடிவுகள் ஜனநாயக விரோதமானவை.. ஒருபோதும் அனுமதிக்க முடியாது!

பத்திரிகைச் செய்தி

06.08.2019

காஷ்மீரில் அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்து, பள்ளி கல்லூரி, விடுதிகள் அனைத்தையும் மூடி, தகவல் தொடர்பை முற்றாக முடக்கி முழு ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அரசியல் சட்டப்பிரிவு 35A, 370 ஆகியவற்றை நீக்கி காஷ்மீர் மக்களின் எஞ்சி இருந்த உரிமைகளையும் பறித்திருக்கிறது மோடி அரசு.

காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அதன் மாநிலத் தகுதியை ஒழித்து மத்திய அரசின் நேரடி அடக்குமுறையின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை நிகழ்த்தியிருப்பதன் மூலம் மோசமான விளைவுகளுக்கு வித்திட்டிருக்கிறது மோடி அரசு.

அரசியல் சட்டத்தை திருத்தியது சரியா? தவறா?, அதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்கிற விவாதத்தில் பொருளில்லை. 1947-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் நாள் காஷ்மீர் மன்னர் ஹரிசிங்குக்கும், அன்றைய இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் இடையே ஏற்பட்ட இணைப்பு ஒப்பந்தம்தான் இன்றளவும் செல்லத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தின் படி ராணுவம், வெளியுறவு, நாணயம், தகவல் தொடர்பு தவிர வேறு எது குறித்தும் காஷ்மீர் அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்திய அரசு எந்தச்சட்டமும் இயற்ற முடியாது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஐ.நா-வில் காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாத சிக்கலாக நீடிக்கிறது. ஐ.நா உட்பட எந்த நாடும் காஷ்மீரை இந்தியாவின் பகுதியாக இன்றுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

1971-ல் நிகழ்ந்த இந்தியா, பாகிஸ்தான் போருக்குப் பின் ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தம் (இந்திராகாந்தி – புட்டோ) இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனாலும் இரு நாடுகளுமே உள்நாட்டு பிரச்சினைகளைத் திசை திருப்ப காஷ்மீரை மையமாக வைத்து பகை உணர்வையும், போலி தேச வெறியையும் கிளப்பி வருகின்றன.

படிக்க:
மோடி அரசை விமர்சிப்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள் : கிரண் மஜும்தர் ஷா !
♦ “ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் !

காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நபர் சமரசத்திற்கே இடமில்லை எனப் பேசி வந்தது மோடி அரசு. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் சமரசம் செய்து வைக்குமாறு மோடி கேட்டுக் கொண்டதை ட்ரம்ப் அம்பலப்படுத்தி விட்டார். இதனை மூடி மறைக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எனப் பேசப்படுவதை மறுப்பதற்கில்லை.

உள்நாட்டு பொருளாதார நிலை, முன் எப்போதும் கண்டிராத நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வாகன தயாரிப்புத்துறையில் 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். கட்டுமானத்துறையில் 8 லட்சம் கோடி முதலீடு முடங்கிக் கிடக்கிறது. பெரும் முதலாளிகள் தற்கொலை, நாட்டை விட்டு ஓடுவது என தொழில்துறை நிலை குலைந்து விட்டது. வரி பயங்கரவாதம் என கார்ப்பரேட் முதலாளிகளே அலறுகின்றனர்.

வருவாய் பற்றாக் குறையை ஈடுகட்ட ரயில்வே, விமான நிலையங்கள் சேலம் உருக்காலை ஆகியவற்றை தனியாருக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பாசிச பாஜக அரசு. ஆனாலும் வாங்குவாரில்லை. அகண்ட பாரதக் கனவோடு ஆட்டம் போடும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக, காஷ்மீர் மக்களின் உரிமைகளை நசுக்குவதை வெறியோடு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. காஷ்மீரை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தாரை வார்ப்பது, அம்மக்களை சிறுபான்மையாக்கி குறிப்பாக இஸ்லாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்குவது என்ற திட்டத்துடன்தான் இந்த ஆக்கிரமிப்பை அரங்கேற்றியிருக்கிறது.

ஜி.எஸ்.டி, நீட், தேசிய கல்விக் கொள்கை, அணை பாதுகாப்பு மசோதா என மாநில உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டு தேசிய புலனாய்வு முகமை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் போன்றவற்றை மேலும் கடுமையாக்கி பாசிச ஆட்சியை அரங்கேற்றி வருகிறது மோடி அரசு.

வருங்காலத்தில் வடகிழக்கு மாநில மக்களுக்கு 371 பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளும் பறிபோகலாம். நாடு முழுவதையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. காஷ்மீர் மக்களின் உரிமைப் பறிப்பு என்பது காஷ்மீர் மக்களின் பிரச்சனையோ, அல்லது இஸ்லாமிய சிறுபான்மையினரின் பிரச்சினையோ அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்குமான பிரச்சனை.

காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும், அவர்கள் ஒப்புதலின்றியும் திணிக்கப்படும் முடிவுகள் ஜனநாயக விரோதமானவை. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே மக்கள் விரோத பாசிச பாஜக கும்பலின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் குரலெழுப்புவதோடு பாசிசத்தை வீழ்த்துவதற்கும் அணி திரளவேண்டும்.

காளியப்பன்
மாநில பொருளாளர்
99623 66321

ஜான் லோ : மாபெரும் வீழ்ச்சி | பொருளாதாரம் கற்போம் – 30

0
Political-economy-bubble-slider

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 30

மாபெரும் வீழ்ச்சி – பாகம் 2

அ.அனிக்கின்

1720 ஜனவரி மாதத்தில் லோ அதிகாரபூர்வமாக நிதித் துறையின் பொதுப் பொறுப்பாளரானார். அவர் நெடுங்காலமாகவே நாட்டின் நிதிப் பொறுப்பை கவனித்து வந்தார் என்பது உண்மையானது. ஆனால் இந்த நேரத்தில்தான் அவருடைய மாளிகையின் கீழ் நிலநடுக்கங்கள் ஏற்படுவது முதன் முதலாகத் தெரியவந்தது.

புதிய பங்குகளை விற்பனை செய்ததன் மூலமாகத் திரட்டிய பெரும் பணங்களைக் கம்பெனி எப்படி முதலீடு செய்தது?

அதில் சிறு தொகை கப்பல்கள் வாங்குவதிலும் பண்டங்களிலும் செலவழிக்கப்பட்டது; பெரும் பகுதி தேசியக் கடன் பத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்டது. கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து அவற்றை வாங்கியதன் மூலம் ஏராளமாக இருந்த மொத்த தேசியக் கடன் முழுவதையும் (2,000 மில்லியன் லிவர் வரை) கம்பெனியே சமாளித்தது. நிதித்துறையில் ஒழுங்கைக் கொண்டுவரப்போவதாக லோ உறுதி கூறினாரே, அது இதுதான் போலும். பங்குகளை மேலும் மேலும் வெளியிடுவது எப்படி முடிந்தது? லோவின் வங்கி மில்லியன் கணக்கில் புதிய நோட்டுகளை அச்சடித்து அவற்றைச் செலாவணியில் ஈடுபடுத்திய வண்ணமிருந்தது .

இந்த நிலை அதிக காலத்துக்கு நீடிக்க முடியாது. லோ இதைப் பார்க்க மறுத்தார்; ஆனால் அவருடைய எதிரிகள், அவர் கெட்டுப் போக வேண்டுமென்று ஆசைப்பட்டவர்கள் -இவர்களுடைய எண்ணிக்கை ஏராளம்- இதை முன்பே பார்த்தனர். ஊக வாணிகத்தில் ஈடுபட்டவர்களில் தொலை நோக்குடையவர்களும் இதை முன்பே பார்த்தனர். அவர்கள் தங்களிடமிருந்த பங்குகளையும் வங்கி நோட்டுகளையும் தள்ளிவிடப் பார்த்தது இயற்கையே. இதற்கு எதிர் நடவடிக்கையாக லோ பங்குகளுக்கு நிலையான விலை இருக்குமாறு பின்பலம் கொடுத்தார்; நோட்டுகளைக் கொடுத்து உலோகம் பெறுவதைக் கட்டுப்படுத்தினார். ஆனால் பங்குகளுக்குப் பின்பலம் கொடுப்பதற்குப் பணம் தேவைப்பட்டபடியால் அவர் மேலும் மேலும் நோட்டுகளை அச்சடித்தார். இந்த மாதங்களின் போது அவர் வெளியிட்ட எண்ணற்ற உத்தரவுகள் குழப்பம் ஆரம்பமாகிவிட்டதென்ற அறிகுறிகளைக் காட்டுகின்றன.

லோ போராடிக் கொண்டுதானிருந்தார், ஆனால் யுத்தம் தோல்வி அடைந்து வந்தது; அவருடைய அமைப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. 1720-ம் வருடத்தின் இலையுதிர் பருவத்தின் போதே நோட்டுகளின் மதிப்புக் குறைந்து பண வீக்க காலத்துக் காகிதப் பணமாகி விட்டன; இப்பொழுது அவற்றின் அறிவிக்கப்பட்ட மதிப்பில் கால் பங்கு வெள்ளியின் மதிப்பைக் கொண்டிருந்தன. எல்லாப் பண்டங்களின் விலைகளும் வேகமாக மேலே ஏறின. பாரிசில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. பொது மக்களின் அதிருப்தி பெருகியது. நவம்பர் மாதத்தில் இந்த நோட்டுகள் சட்டபூர்வமான நாணயம் அல்ல என ஆயிற்று: லோவின் திட்டத்தை ஒழித்துக் கட்டுவது ஆரம்பமாகிவிட்டது .

political-economy-John_Law
ஜான் லோ

லோ கடைசிக் கட்டம் வரை உறுதியாகப் போராடினார். ஜூலை மாதத்தில் ஆத்திரமடைந்த மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு மதிப்பில்லாத நோட்டுகளுக்குப் பதிலாக சட்ட பூர்வமான நாணயத்தைக் கொடுக்குமாறு அவரை மிரட்டினார்கள். அவர் உயிர் தப்பியது ஆச்சரியமே. பொறுப்பு அரசரின் அரண்மனைக்குள் அவர் ஒளிந்து கொள்ள முயற்சி செய்த பொழுது அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. அவர் களைத்துச் சோர்ந்துவிட்டாரென்றும் அவருக்கு வழக்கமான தன்னம்பிக்கையையும் நாகரிகப் பண்பையும் இழந்து விட்டாரென்றும் எல்லோரும் குறிப்பிட்டார்கள். அவருடைய நாடி நரம்புகள் வெடிக்கும் நிலைக்கு வந்துவிட்டன.

லோவையும் பொறுப்பு அரசரையும் ஏளனம் செய்து பாட்டுக்களும் கற்பனைக் கதைகளும் கேலிச் சித்திரங்களும் பாரிஸ் நகரத்தில் சுற்றி வந்தன. பூர்போன் கோமகன் பங்கு ஊக வணிகத்தில் மட்டும் 25 மில்லியன் லிவர் லாபமடைந்ததாக வதந்தி; அவர் அவ்வளவு பணத்தையும் ஸ்திரமான பொருள்களில் முதலீடு செய்திருந்தார். அவர் லோவைப் பார்த்து இனி உமக்கு ஆபத்து ஏற்படாது; ஏனென்றால் பாரிஸ்வாசிகள் யாரை ஏளனம் செய்கிறார்களோ அவரைக் கொல்ல மாட்டார்கள் என்றாராம். ஆனால் லோ அப்படி நினைக்க முடியவில்லை. இதற்குக் காரணமும் இருந்தது. அமைச்சர் பொறுப்பிலிருந்து முன்பே விலக்கப்பட்டிருந்த போதிலும் பலமான பாதுகாப்பு இல்லாமல் அவர் வெளியே வருவதில்லை.

படிக்க:
♦ பங்கு சந்தை : காசேதான் கடவுளடா ! | பொருளாதாரம் கற்போம் – 29
♦ “ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் !

லோவை எப்பொழுதுமே எதிர்த்து வந்திருந்த பாரிஸ் நாடாளுமன்றம் லோவின் மீது விசாரணை நடைபெற வேண்டும், அவர் தூக்கிலிடப்பட வேண்டும் என்று கோரியது, பொறுப்பு அரசருடைய ஆலோசகர்கள் குறைந்த பட்சமாக லோவை பாஸ்டிலி சிறையில் கொஞ்ச காலத்துக்கு வைத்திருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள். மக்களுடைய கொந்தளிப்பை அமைதிப்படுத்த வேண்டுமானால் தனது அன்புக்குரிய நண்பரைக் கைவிட வேண்டும் என்பதை ஃபிலீப் உணரத் தொடங்கினார். லோ பிரான்சை விட்டுப் போக அனுமதித்தார்; அது அவர் கடைசியாகச் செய்த உதவி.

1720 டிசம்பரில் ஜான் லோ இரகசியமாக பிரஸ்ஸெல்ஸ் நகரத்துக்குத் தன் மகனோடு சென்றார்; அவர் மனைவி, மகள், சகோதரன் ஆகியோரைப் பாரிசிலேயே விட்டுவிட்டுப் போனார். அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுக் கடன் காரர்களுக்குக் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்டன.

சமூகக் கருத்து நிலையில் லோவின் திட்டமும் அதன் வீழ்ச்சியும் எதைக் குறிக்கின்றன? இந்தப் பிரச்சினையைப் பற்றி சுமார் இருநூற்றைம்பது வருடங்களாக விவாதம் நடைபெற்று வருகிறது.

18-ம் நூற்றாண்டில் பொதுவாக லோவைத் தீவிரமாகக் கண்டனம் செய்தார்கள். ஆனால் இதில் அறநெறியின் அடிப்படையில் ஒரு ஆணவமான போக்கு அதிகமாக இருந்ததே தவிர நிதானமான மதிப்பீடு இல்லை. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் லூயீ பிளாங் (அவருடைய பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு என்ற புத்தகத்தில்) மற்றும் அதே மாதிரியான கருத்துக்களைக் கொண்ட இதர சோஷலிஸ்டுகளும் லோ ”இழந்த பெயரை மீட்டுக் கொடுத்தார்கள்”; அவரை சோஷலிசத்தின் முன்னோடி என்று காட்டுவதற்கு முயற்சி செய்தார்கள். லோ தங்கத்தையும் வெள்ளியையும் “பணக் காரர்களின் பணம்” என்று கண்டித்தார்; ”ஏழைகளின் பணமான” காகிதப் பணத்தைக் கொண்டு செலாவணியை நடத்த விரும்பினார் என்று லுயீ பிளாங் கூறினார்.

எல்லாவற்றையும் கொண்டிருந்த வங்கி, வர்த்தக ஏகபோகம் ஆகியவற்றின் மூலமாக லோ, கொலைகாரத்தனமான முதலாளித்துவப் போட்டிக்குப் பதிலாக சோஷலிசத்தின் இணைப்புக் கோட்பாட்டைச் செயல்படுத்துவதற்கு முயற்சித்தார் என்று சொல்லப்படுகிறது. லோவின் பொருளாதார நடவடிக்கைகளில் சில உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் துன்பத்தைக் குறைப்பதற்காகவே செய்யப்பட்ட நடவடிக்கைகள் என்று லூயீ பிளாங் விளக்குகிறார்.

இது உண்மையிலிருந்து ஓரளவுக்கு மாறானதாகும். லோ எந்த வடிவத்தில் இணைப்புக் கோட்பாட்டைக் கையாள முயன்றாரோ அது கலப்பற்ற முதலாளித்துவக் கோட்பாடாகும். அது முதலாளித்துவத்துக்கு எதிரிடையாக நிற்கவில்லை, ஆனால் சமூகத்தைச் செயலற்றுப் போகும் வகையில் தனிப் பகுதிகளாகப் பிரித்து சமூக மேனிலையாக்கத்தை இல்லாமற் செய்த நிலப்பிரபுத்துவத்துக்கு அது எதிரிடையாக நிற்கிறது. அவர் தன்னுடைய கம்பெனியின் எல்லாப் பங்குதாரர்களையும் வங்கியின் வாடிக்கையாளர்களையும் – பிரபுவையும் முதலாளியையும், கைவினைஞரையும் வணிகரையும் – ஒன்று சேர்த்துச் சமம் என்று ஆக்க விரும்பினார்; ஆனால் அவர்களை முதலாளிகளாகவே ஒன்று சேர்க்க விரும்பினார்.

லோ தன்னுடைய முறையின் மூலம் தயாரிப்பு வேலையைச் செய்தார்; பிற்காலத்தில் முதலாளித்துவம் இதை முழுமையாகச் சாதித்தது: சரித்திர ரீதியாகப் பார்க்கும் பொழுது, முதலாளி வர்க்கம் மிகப் புரட்சிகரமான ஒரு பாத்திரத்தை வகித்துச் செயலாற்றியிருக்கிறது.

”எங்கெல்லாம் முதலாளி வர்க்கத்தின் கை ஓங்கிற்றோ, அங்கெல்லாம் அது சகல நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும் தந்தை வழி உறவுகளுக்கும் சம்பிரதாய உறவுகளுக்கும் முடிவு கட்டியது. தன்னை ”இயற்கையாகவே மேம்பட்டவர்” என்போரிடம் மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த பல்வகை நிலப்பிரபுத்துவத் தளைகளை அது தயவு தாட்சணியமில்லாமல் அறுத்தெறிந்தது. அப்பட்டமான சுயநலத்தைத் தவிர, உணர்ச்சியற்ற “ரொக்கப் பட்டுவாடாவைத் தவிர,” மனிதர்களுக்கிடையே வேறு எந்த உறவும் இல்லாமல் அது செய்துவிட்டது” (1) என்று மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் எழுதியிருக்கின்றனர்.

புவாகில்பேர் அளவுக்குக் குறைவான அர்த்தத்தில் கூட லோ ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஆதரவாளராக இருக்கவில்லை. ருவான் நீதிபதி மக்களிடம், விவசாயிகளிடம் காட்டினாரே உண்மையான பரிவு, அதை லோவின் புத்தகங்களில் சிறிது கூடப் பார்க்க முடியாது. மேலும், வீர சாகஸக்காரர், சூதாடி, லாபவேட்டைக்காரர் என்ற வகையில் லோவின் இயல்புக்கு அது முற்றிலும் பொருந்தாததாகும்.

லோ பெரிய, பணக்கார முதலாளிகளின் நலன்களை எடுத்துரைத்தார், அவர்களின் தொழிலூக்கத் திறமையில் அவர் நம்பிக்கை வைத்தார். அதுவே அவருடைய கொள்கை. அவருடைய கம்பெனியின் பங்குகளைப் பெரிய முதலாளிகள் வாங்கியிருந்தார்கள்; அவர் கடைசி வரை அந்தப் பங்குகளைத் தூக்கிப் பிடித்தார். அவருடைய வங்கி வெளியிட்ட காகித நோட்டுகள் இன்னும் விரிவான அடிப்படையில் பொது மக்களிடையே வினியோகிக்கப்பட்டிருந்தன; அந்த நோட்டுகளின் கதியை விதி எழுதியபடி விட்டுவிட்டார்.

அவருடைய திட்டமும் அதன் வீழ்ச்சியும் செல்வம், வருமானம் ஆகியவற்றைக் கணிசமான அளவுக்கு மறுவினியோகம் செய்தது. அது பிரபுக்களுடைய நிலையை ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும் அதிகமாக அரித்து வீழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர்கள் தங்களுடைய பண்ணைகளையும் மாளிகைகளையும் விற்று இந்த ஊக வாணிகத்தில் கலந்து கொண்டனர். பொறுப்பு அரசர் ஆட்சி செய்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் முடியாட்சி, பிரபுக்கள் ஆகியோருடைய நிலையை பலவீனப்படுத்தின.

படிக்க:
♦ தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !
♦ மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை – 2019 நிராகரிக்க வேண்டும் – ஏன் ? | பு.மா.இ.மு வெளியீடு !

மறுபக்கத்தில், லோ நிதித்துறையில் செய்த மாயவித்தை நகரங்களிலிருந்த ஏழைகளை அதிகமாக பாதித்தது. விலைகள் அதிகரித்த பொழுது அவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள், காகிதப் பணம் செல்லாது என அறிவித்த பொழுது கைவினைஞர்கள், சிறு கடைக்காரர்கள், வேலைக்காரர்கள் – விவசாயிகளும் கூட – சிறு தொகைகளாகக் கணிசமான அளவுக்குக் காகிதப் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தார்கள் என்று தெரியவந்தது. அந்தப் பணத்தை அவர்கள் இழந்தார்கள்.

லோவின் திட்டத்தினாலேற்பட்ட முக்கியமான சமூக விளைவு திடீர்ப் பணக்காரர்கள் முன்னுக்கு வந்ததாகும். இவர்கள் வரைமுறையற்ற ஊக வாணிகத்தின் மூலம் தாங்களுடைந்த செல்வத்தை எப்படியோ காப்பாற்றித் தக்கவைத்துக் கொண்டனர்.

லோ பாரிசை விட்டு ஓடிய பிறகு மேலும் எட்டு வருடங்கள் உயிரோடிருந்தார். அவர் ஏழையாகிவிட்டார். அதாவது பட்டினி கிடந்து மரணமடைகின்ற அளவுக்கு ஏழையல்ல; சொந்தத்தில் கோச் வண்டி வைத்துக்கொள்ள முடியாத ஏழையாக இருந்தார்; மாளிகையில் வசித்தவர் இப்பொழுது சிறு அறையொன்றில் வசித்தார். அவருக்குச் சொந்த நாடு இல்லை; ஆனால் அவர் எப்பொழுதுமே ஊர் ஊராகப் போய் நாடு கடத்தப்பட்டவரின் வாழ்க்கையை நடத்தி வந்தவர். எனவே அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. இதன் பிறகு அவர் தன்னுடைய மனைவியை (அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாகக் கூற முடியாது) அல்லது மகளை மறுபடியும் சந்திக்க முடியவில்லை. அவர் பிரான்சிற்குள் நுழைய அனுமதி கிடையாது; அவர்கள் பிரான்சை விட்டுப் போகக் கூடாதென்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

முதலில் சில வருடகாலம் வரை, சீக்கிரமே பிரான்சுக்குத் திரும்ப முடியும், அங்கே தன்னுடைய நிலையைப் பற்றி விளக்கிக் கூறி தன்னுடைய நடவடிக்கைகளைத் தொடர முடியும் என்று அவர் நம்பினார். பொறுப்பு அரசருக்கு அடிக்கடி கடிதங்கள் அனுப்பினார்; இவற்றில் நடந்த எல்லாவற்றையும் பற்றித் திரும்பத் திரும்ப விளக்கினார்; தான் செய்தவை சரி என்று வாதாடினார். இந்தக் கடிதங்களிலும் அவருடைய பொருளாதாரக் கருத்துக்களின் சாராம்சம் பழைய விதமாகவே இருந்தது. இனிமேல் அதிகமான கவனத்தோடும் பொறுமையோடும் நடந்து கொள்வதாகச் சொன்னதுதான் அவற்றிலிருந்த வேறுபாடாகும்.

1723-ம் வருடத்தில் பொறுப்பு அரசராக இருந்த ஃபிலீப் திடீரென்று மரணமடைந்தார். தன்னுடைய பதவியையும் சொத்துக்களையும் திரும்பப் பெற முடியும் என்று லோ கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் உடனே வீழ்ச்சியடைந்தன. பொறுப்பு அரசர் அவருக்குக் கொடுக்கத் தொடங்கியிருந்த குறைவான ஓய்வூதியமும் நின்று விட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அவருடைய பெயரைக் கூடக் கேட்பதற்கு விரும்பவில்லை. லோ இப்பொழுது லண்டனில் வசித்து வந்தார். ஆங்கில அரசாங்கம் அவரைப் போதுமான செல்வாக்கும் நுண்ணறிவுமுடையவராகக் கருதி அவரை இரகசியமான வேலைக்காக ஜெர்மனிக்கு அனுப்பியது. ஆஹென், மூனிக் ஆகிய ஜெர்மன் நகரங்களில் அவர் ஒரு வருட காலம் இருந்தார்.

ஒரு காலத்தில் மாபெரும் நிதித்துறை வல்லுநராக, எல்லா அதிகாரங்களுமுடைய அமைச்சராகத் திகழ்ந்த லோ. இப்பொழுது அந்தப் பெருமையின் நிழலுருவமாக மட்டுமே இருந்தார். அவர் தன்னுடைய விவகாரங்களைப் பற்றி, தன்னைத் தற்காத்துக் கொண்டும் எதிரிகள் மீது குற்றம் சாட்டியும் எப்பொழுதும் தொண தொணவென்று பேசிக் கொண்டிருக்க ஆரம்பித்தார், அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பதற்கும் ஆட்களுக்குக் குறைச்சலில்லை.

அவர் காகிதத்தைத் தங்கமாக மாற்றக் கூடிய இரகசியம் தெரிந்தவர் என்று பலர் நினைத்தார்கள். அவர் முட்டாளல்ல, எனவே தம்முடைய திரண்ட செல்வத்தில் ஒரு பகுதியையாவது பிரான்சுக்கு வெளியே பத்திரப்படுத்தியிருப்பார் என்று இன்னும் பலர் நினைத்துக் கொண்டார்கள். அந்தப் பணம் இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்ள நினைத்தவர்களும் உண்டு. இவர்களைக் காட்டிலும் அதிகமான மூட நம்பிக்கை உள்ளவர்கள் அவரை ஒரு மந்திரவாதியென்றே நம்பினார்கள்.

லோ தன்னுடைய கடைசி வருடங்களை வெனிஸ் நகரத்தில் கழித்தார். அவர் தன்னுடைய ஓய்வு நேரத்தை சூதாட்டத்திலும் (அவரிடமிருந்த சூதாட்ட வெறியை மரணம்தான் குணப்படுத்தியது) இன்னும் ஏராளமாகத் தன்னைப் பார்க்க வந்து கொண்டிருந்தவர்களோடு பேசிக் கொண்டிருப்பதிலும் பொறுப்பு அரசர் காலத்தில் நிதி விவகாரங்களின் வரலாறு என்ற பெரிய புத்தகத்தை எழுதுவதிலும் செலவிட்டார். பிற்காலத்தினருக்குத் தன்னுடைய நிலையை விளக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. அதற்கு இருநூறு வருடங்களுக்குப் பிறகுதான் அது முதன்முறையாக வெளியிடப்பட்டது.

புகழ் வாய்ந்த மொன்டெஸ்க்யூ ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் வந்தபொழுது 1728-ம் வருடத்தில் அவரைச் சந்தித்தார். லோ ஓரளவுக்கு முதுமையின் தளர்ச்சியை அடைந்துவிட்டதாக அவர் கருதினார். எனினும் தான் செய்தவை சரியானவை என்பதில் அவர் வெறிகொண்ட நம்பிக்கை வைத்திருந்ததோடு எப்பொழுதும் தன்னுடைய கருத்துக்களை ஆதரித்துப் பேசத் தயாராக இருந்தார் என்பதையும் கண்டார். ஜான் லோ 1729 மார்ச்சில் வெனிசில் நிமோனியாக் காய்ச்சலால் இறந்தார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  K. Marx, F, Engels, Selected Works, in three volumes, Vol. 1, Moscow, 1973, p. 111.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! புதிய கலாச்சாரம் நூல் !

மோடியின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில், விவசாயிகள், தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர், படித்து வேலைதேடும் இளைஞர்கள் என அனைவரும் இதுவரை சந்தித்திராத நெருக்கடியை சந்தித்தனர்.

இனி மோடி தலைகீழாய் நின்றாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என ஜனநாயகவாதிகள் பலரும் எண்ணியிருந்த நிலையில் சாதியக் கூட்டு, மதவெறிப் பேச்சுக்கள், புல்வாமா தாக்குதல், ஊடக – கார்ப்பரேட் ஆதரவு, தேர்தல் ஆணையத்தின் துணையோடு தேர்தல் விதிமீறல் என பல்வேறு வியூகங்களை திட்டமிட்டுச் செயல்படுத்தி, இந்தத் தேர்தலில் ஆட்சிக் கட்டிலைப் அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கிறது மோடி – அமித்ஷா தலைமையிலான பாஜக.

தனது தேர்தல் வெற்றி உரையில் சம்பிரதாயப்படி நன்றி தெரிவித்து விட்டுப் போகாமல், மதச்சார்பின்மையை நேரடியாக தாக்கிப் பேசியிருக்கிறார் மோடி. அது மட்டுமல்லாமல், கார்ப்பரேட்டுகள்தான் இந்தியாவின் ஏழைகளைக் காக்க வந்த சேவகர்கள் என்றும் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், இனி வரப்போவது கார்ப்பரேட் காவிப் பாசிசத்தின் ஆட்சிதான் என்பதை முன்னறிவித்தார் மோடி.

முதல் ஐந்தாண்டுகால ஆட்சியில் சுமார் ரூ. 4.3 லட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகையாக அள்ளித்தந்த மோடி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்ற 100 நாட்களுக்குள் 46 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

மற்றொரு புறத்தில் கார்ப்பரேட்டுகளின் இசைவோடு நாடெங்கும் மதவெறித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன. ஜெய் ஸ்ரீராம் என முழங்கக் கூறி முசுலீம்களை நாடு முழுவதும் தாக்கத் தொடங்கியது காவிக் கும்பல். வழக்கம் போல கள்ளமவுனம் சாதித்தார் மோடி.

அதுபோக, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிய வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய் சிங், குரோவர், பேராசிரியர் ராம் புன்யானி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் மீது சட்டரீதியாகவும், சட்ட விரோதமாகவும் ஒடுக்குமுறையை ஏவியிருக்கிறது மோடி அரசு.

இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு உகந்த வகையிலும், கார்ப்பரேட் கொள்ளைகளை சட்டப்பூர்வமாக்கும் வகையிலும், என்.ஐ.ஏ சட்டத் திருத்தம், மாநில உரிமைகள் பறிப்பு, தேசியக் கல்விக் கொள்கை எனப் பலவற்றையும் நாடாளுமன்றத்தில் உள்ள தனது பெரும்பான்மை பலத்தால் சாதித்துக் கொண்டது பாஜக அரசு.

ஏகாதிபத்தியத்திற்குச் சேவை புரியும் இந்து ராஷ்டிரத்தைக் கட்டியமைப்பதற்கான பணியில் சங்க பரிவாரங்கள் எப்படி ஒவ்வொரு அடியையும் அழுந்தி வைக்கின்றன என்பதை விவரிக்கிறது இந்நூல் தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

” போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார்!
  • நாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம்!
  • என்.ஐ.ஏ சட்டத் திருத்தம்: இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது!
  • ஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?
  • ரூ.4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்த மோடி!
  • முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள்: பாஜக தலைவியின் அறைகூவல்!
  • விவசாய வருவாய் இரட்டிப்பு வாக்குறுதி: மோடியின் அண்டப் புளுகுகள்!
  • மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவக் கும்பல்!
  • தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு!
  • விசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர்!
  • அடுத்த மல்லையா: ரூ.47,204 கோடியை அமுக்கிய சஞ்சய் சிங்கால்!
  • வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு!
  • இந்திய மக்களின் மின்தரவுகளைச் சேமிக்கப் போகும் அதானி குழுமம்!
  • கார்ப்பரேட்டுகளின் நன்கொடையில் 93% பெற்றது பாஜக-தான்!
  • நாட்டு மக்களைக் கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா!
  • நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் புராணம்!
  • 100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு!
  • பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல்!
  • இந்தி: இந்தியாவை ஒன்றுபடுத்துமா? பிளவுபடுத்துமா?
  • காஷ்மீர்: பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள்: அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை!
  • ஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு: மிரட்டும் ட்ரம்ப்! பம்மிய மோடி!
  • ‘எளிமையான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் கொலைகார பின்னணி!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

மீ டு இயக்கம்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மனுநீதி 2.0
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

மோடி – அமித் ஷா கும்பலின் தொழிலாளர் சட்டம் ஒழிப்பு நடவடிக்கையை கண்டித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !

labour laws in india is destroyed by modi government ndlf protest

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் “தொழிலாளர் சட்டம் ஒழிப்பு : கூட்டுப்பேர உரிமை, உயிர்வாழும் உரிமையும் பறிப்பு !” என்ற தலைப்பில் கடந்த 02.08.2019 அன்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தனது தலைமையுரையில் “இரண்டாவது முறை ஆட்சி அமைத்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு, தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களையும் வெட்டி சுருக்கி 4 விதிமுறை தொகுப்புகளாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக (WAGE CODE BILL) சம்பளப்பட்டுவாடா சட்டம் 1936, குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948, போனஸ் சட்டம் 1965, சமவேலைக்கு சம ஊதிய சட்டம் 1976 ஆகியவற்றை உள்ளடக்கி ஊதிய மசோதா 2019 என்றும்.

(OCCUPATIONAL HEALTH, SAFETY AND WORKING CONDITION CODE 2019) தொழிற்சாலைகள் சட்டம் 1948, ஒப்பந்த தொழிலாளர் சட்டம் 1970, மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்டம் 1995 உள்ளிட்ட 13 சட்டங்களை உள்ளடக்கி பணியிட பாதுகாப்பு, உடல்நலன், சுகாதாரம் மற்றும் வேலைமுறைகள் குறித்த விதிமுறை தொகுப்பு என்ற பெயரில் இரண்டு மசோதாக்களை நாடாளுமன்றத்தின் மக்களைவையில் 23.07.2019 தேதியில் நிறைவேற்றியுள்ளார்கள்.

மேற்கண்ட இரண்டு சட்ட மசோதாக்களும் தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளையும் கார்ப்பரேட் கொள்ளை கும்பலுக்கு பலியிடுகின்ற ‘திருப்பணியை’ மோடி, அமித்ஷா தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிச கும்பல் நிறைவேற்றியுள்ளது. இதனை முறியடிக்க தொழிலாளி வர்க்கம் வீதியில் இறங்கி போராட வேண்டும்.” என கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் பேசும் போது:

“இரண்டு சட்ட மசோதாக்களில் உள்ள தொழிலாளர்களுக்கு விரோதமான விதிகளை பட்டியலிட்டதுடன், காலனிய ஆதிக்க காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் காலாவதியானது என்றும்; தொழிலை எளிமையாக்குவது என்றும்; புதிய தொழில் நிலைமைகளுக்கு ஏற்ப சட்டங்களை மாற்றியமைப்பதன் மூலம் அன்னிய முதலீடுகளை ஈர்க்கவும்; வேலைவாய்ப்பை பெருக்கவும் தான் இதை நிறைவேற்றுவதாக பொய்யான பரப்புரைகளை செய்து வருகிறது.

உண்மையில் மூலதனத்தின் லாபவேட்டைக்காக ஏட்டளவில் உள்ள சட்டங்களை கூட ஒழித்துக்கட்டி வருகிறது மோடி கும்பல், கடந்த ஆறு மாதங்களில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தின் ராஜ்கோட் தொழிற்பேட்டை பகுதியில் மட்டும் கடந்த மாதம் 20,000 பேர் வேலையிழந்துள்ளார்கள் என்றும், ஒரகடம் பகுதியில் உள்ள நிசான் தொழிற்சாலையில் 1,800 பேர் இந்த மாதத்தில் வேலையிழக்கும் அபாய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. ஆட்டோமொபைல் தொழில் மட்டுமல்லாமல் அதற்கு மூலப் பொருட்களை சப்ளை செய்யும் SRF, TPI போன்ற நிறுவனங்களும் தற்காலிக வேலைமுடக்கம் (LAY-OFF) அறிவித்துள்ளன.

படிக்க:
வாகன விற்பனையில் மந்த நிலை :  32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் !
♦ மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை – 2019 நிராகரிக்க வேண்டும் – ஏன் ? | பு.மா.இ.மு வெளியீடு !

இதன் மூலம் வரும் மாதங்களில் வேலைப்பறிப்பு, லேஆஃப் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஏறக்குறைய 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, தொலைப்பேசி, மின்சாரம் மற்றும் உள்ளிட்ட 46 பொதுத்துறை நிறுவனங்களையும், ராணுவ தளவாட உற்பத்தியையும் தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் உரையில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஆகவே ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் எதிரிகளாய் மாறிப்போன இந்த அரசு கட்டமைப்பை, கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலை வீழ்த்த வேண்டிய வரலாற்று கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது.” இந்த வரலாற்று கடமையை நிறைவேற்ற புரட்சிகர அமைப்புகளில் அணித்திரண்டு போராட வருமாறு அழைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என 200 பேர் கலந்துக் கொண்டு விண்ணதிரும் முழக்கமிட்டனர். அப்பகுதி தொழிலாளர்களும், பாதசாரிகளும், சிறுகடை வணிகர்களும், வாகன ஓட்டிகளும் என மக்கள் ஆங்காங்கே நின்று நமது கருத்துக்களை கேட்டு ஆதரவளித்தனர். இறுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் தோழர் மகேஷ்குமார் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர்
மேற்கு மாவட்டம்

***

வேலூரிலும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் இதே முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வேலூரில் பு.ஜ.தொ.மு. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
வேலூர்

***

கோவையில் தொழிலாளர் நல சட்டங்களை திருத்துகின்ற மத்திய அரசை கண்டித்து, துடியலூர் பேருந்து நிறுத்ததில், கடந்த 02.08.2019 அன்று மாலை ஐந்து மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

மூக நீதி தமிழக அரசியல் அரங்கில் தவிர்க்கவே முடியாத சொல் இது. குறிப்பாக, பா.ஜ.க.வை எதிர்க்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டுக்கட்சிகளுக்கு இந்தச் சொல்தான் பிரம்மாஸ்திரம். மண்டல் கமிசன் அமலாக்கத்திற்குப் பிறகு, கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழக அரசியல் அரங்கில் இந்தச் சொல் வெகுவாகப் புழங்கி வந்தாலும், தமிழகத்தின் சமூகக் கட்டமைப்பில் சமூக நீதி அரசியல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், மாற்றம் என்ன?

சமூக நீதி அரசியல், சாதி ஒழிப்புப் பற்றிப் பேசுவதில்லை. மாறாக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு இடையேயும், அப்பிரிவுகளுக்குள் உள்ள உட்சாதிகளுக்கு இடையேயும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் என நமக்கு உபதேசிக்கப்பட்டது. தேனொழுகக் கூறப்பட்ட இந்த அனுமானம் தோற்றுப்போய் விட்டதற்குத் தமிழகமே பெரும் சாட்சியமாக உள்ளது. கடந்த சில மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்திருக்கும் தீண்டாமைக் குற்றங்கள், தமிழகமும் வட இந்திய மாநிலங்களுக்கு இணையாகச் சமூக அநீதி கோலோச்சும் மாநிலம்தான் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

ஆதிக்கச் சாதிவெறியும் தீண்டாமை என்ற அருவருக்கத்தக்க உணர்வும் பிள்ளைப் பருவத்தைத் தாண்டாத சிறுவர்களிடமும் வேர் விட்டிருப்பதை எடுத்துக்காட்டிய சம்பவம் இசக்கி சங்கர் படுகொலை. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்திற்கு அருகிலுள்ள வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி சங்கர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி ஊழியரான இவரும், அதே பகுதியில் வசித்துவரும் “பிற்படுத்தப்பட்ட” சாதியைச் சேர்ந்த சத்யபாமா என்ற பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் திருமணத்திற்குப் பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இசக்கி சங்கர் கடந்த ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி தாமிரவருணி ஆற்றுக் கரையோரத்தில் மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் இறந்த மறுநாளே சத்யபாமாவும் இறந்து போனார். அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

honor killing in tamil nadu
சிறுவர்களால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இசக்கி சங்கர். (கோப்புப் படம்)

இசக்கி சங்கர் படுகொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையையடுத்து சத்யபாமாவின் தம்பி ஐயப்பனும் அவனது ஐந்து நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். ஐயப்பனும், அவனது நண்பர்களும் பத்தாவது படித்துவரும் பதின்வயதைத் தாண்டாத பள்ளி மாணவர்கள் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க விடயம்.

இசக்கி சங்கர் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பினும், சத்யபாமாவின் அகால மரணத்திற்கு யாரும் குற்றவாளியாக்கப்படவில்லை. உண்மையில் அது தற்கொலைதானா? அப்படியே இருந்தாலும், சத்யபாமாவின் சாவு ஆணவப் படுகொலையின் இன்னொரு வடிவமல்லவா?

இசக்கி சங்கர் ஆணவப் படுகொலையைவிட அதிர்ச்சியூட்டக்கூடியது கனகராஜ் ஆணவப் படுகொலை. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறீரங்கராயன் ஓடைப்பகுதியைச் சேர்ந்த 21 வயதான சுமை தூக்கும் தொழிலாளியான கனகராஜை ஈவிரக்கமின்றி வெட்டிப் படுகொலை செய்தது, வேறு யாரோ அல்ல. அவரது சொந்த அண்ணன் வினோத்குமார்.

கனகராஜ், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சாதியைச் சேர்ந்த துர்கா என்ற பெண்ணைக் காதலித்து வந்ததோடு, வினோத்குமாரின் எச்சரிக்கை, அச்சுறுத்தலையும் மீறி அப்பெண்ணோடு சேர்ந்த வாழத் தொடங்கியதுதான் இந்த ஆணவப் படுகொலைக்குப் பின்னுள்ள காரணம். வினோத்குமாரால் வெட்டப்பட்ட கனகராஜ் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்துவிட, துர்கா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலன் அளிக்காமல் இறந்து போனார்.

இசக்கி சங்கர் வங்கி ஊழியர் என்றாலும், சாதி அடுக்கில் தாழ்த்தப்பட்டவர். ஐயப்பனுக்கும் அவனது நண்பர்களுக்கும் இசக்கி சங்கரை வெட்டிப் படுகொலை செய்ய, அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதைத் தவிர வேறு காரணங்கள் எதுவும் இல்லை.

honor killing in tamil nadu
வர்க்க நிலையில் வேறுபாடு இல்லாத கனகராஜ்-துர்கா தம்பதியினர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதற்கு சாதி ஏற்றத்தாழ்வு காரணமாக அமைந்தது.

கனகராஜ் குடும்பத்திற்கும் துர்கா குடும்பத்திற்கும் வர்க்க நிலையில் எந்த வேறுபாடும் கிடையாது. சாதி அடுக்குதான் அக்குடும்பங்களை மேலே, கீழே எனப் பிரித்து வைத்திருக்கிறது. இந்த வேறுபாடைக் கடந்து வரமுடியாத அல்லது கடந்து வர விரும்பாத வினோத்குமார் தனது தம்பியையும் அவரது காதல் மனைவியையும் வெட்டிக் கொல்கிறார். சாதி இந்து மனோபாவம் என்பது வர்க்கத்தைக் காட்டிலும் சாதியையே முதன்மைப்படுத்திப் பார்க்கிறது என்பதை இப்படுகொலைகள் நிரூபிக்கின்றன.

கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்துள்ள கனகராஜ், துர்கா படுகொலைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்துள்ள “ஆணவப் படுகொலைகளின் எண்ணிக்கை 187- தொடுகிறது. ஆணவப் படுகொலைக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விசாரித்துத் தண்டிக்கத் தனியாகச் சட்டமியற்ற வேண்டும்” எனச் சில ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், சமூக நீதிப் பேசப்படும் மாநிலமான தமிழகத்தில் இதுவரையிலும் அதற்காகத் தனிச் சட்டம் இயற்றப்படவில்லை. மேலும், வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போலத் “தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளே நடப்பதில்லை” என்ற கேடுகெட்ட பொய்யைச் சட்டமன்றத்திலேயே துணிந்து சொன்னார், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க., கவுண்டர், தேவர் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளின் கூடாரம் என்பதால், ஆணவப் படுகொலைகளை மறுக்கும் ஓ.பி.எஸ்.-இன் திமிர் வாதம் ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல. மேலும், அக்கட்சியும், அ.தி.மு.க. அரசும் வெளிப்படையாகவே தீண்டாமை பாராட்டும் பிற்போக்குத்தனம் கொண்டவை என்பதை மதுரை எஸ்.வலையப்பட்டியில் நடந்த சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டியிருக்கிறது.

படிக்க:
ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
♦ தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

அக்கிராமத்திலுள்ள சத்துணவுக் கூடத்தில் சமையல் செய்வதற்கும், சமையலுக்கு உதவுவதற்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டவுடனேயே, உள்ளூர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெற்றோர்கள் தமது குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மறுத்தனர். சட்டப்படிப் பார்த்தால், இத்தீண்டாமைக் குற்றத்திற்காகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சமாக, அப்பெற்றோர்களை அழைத்து எச்சரித்திருக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க. அரசோ அவ்விரு ஊழியர்களையும் பக்கத்து கிராமங்களுக்கு இடமாற்றம் செய்து, ஆதிக்க சாதிவெறியர்களின் எண்ணத்தை ஈடேற்றிக் கொடுத்தது.

Anganwadi-workers-Anna-Lakshmi---Jothy-Lakshmi
வலையப்பட்டி கிராம சத்துணவுக் கூடத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அன்னலெட்சுமி (இடது) மற்றும் ஜோதிலெட்சுமி.

வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த இந்து மதவெறிக் கும்பல் முசுலீம்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்துவதற்கு, அவர்கள் முசுலீம்கள் என்ற ஒரு காரணமே போதுமானது. அது போலவே தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

  • “தீண்டத்தகாதவன் ஏற்றிவந்த புல்லுக்கட்டு ஆதிக்க சாதியினரைத் தீண்டிவிட்டது” என்ற அற்பமான காரணத்திற்காக, திருநெல்வேலி புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞன் ஆதிக்க சாதிவெறிக் கும்பலால் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
  • திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் குரும்பபட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் சுதாகரன், சுபாஷ். இவர்கள் இருவரும் திண்டுக்கல்- நத்தம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஆதிக்க சாதியினர் ஓட்டிவந்த மற்றொரு இரு சக்கர வண்டியை முந்திச் சென்றார்கள் என்பதற்காக ஆதிக்க சாதிவெறிக் கும்பலால் வீடு புகுந்து தாக்கப்பட்டனர்.
  • நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்துள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிச் செல்வம், பிரதீப் இருவரும் ஊர்ப் பொதுக்குளத்தில் குளித்துவிட்டு, குளத்துக்கு அருகே நின்றிருந்த இரு சக்கர வாகனத்தின் கண்ணாடியில் முகம் பா ர்த்துத் தலை சீவியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவன் பொதுக் குளத்தில் குளித்ததோடு மட்டுமின்றி, ஆதிக்க சாதியினருக்குச் சொந்தமான வண்டியின் கண்ணாடியில் முகம் பார்த்துத் தலை சீவிய குற்றத்திற்காக” அவ்விருவரும் ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டனர்.
  • கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் பொது மைதானத்தில் கைப்பந்து விளையாடியதை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தடுத்ததையடுத்து, இரு சாதியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேல்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் குச்சிப்பாளயம் தாழ்த்தப்பட்டோர் காலனிக்குள் புகுந்து கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

*****

த்தீண்டாமைக் குற்றங்களுள் இசக்கி சங்கர் படுகொலை தவிர்த்து, மற்றவையெல்லாம் கடந்த இரண்டு மாதங்களுக்குள் நடந்தவை. இவற்றுக்குத் தமிழக மக்களின் எதிர்வினை என்ன? ஈழப் பிரச்சினை, எழுவர் விடுதலை, கூடங்குளம் அணுக்கழிவு மையம், ஹைட்ரோ கார்பன் அகழாய்வுத் திட்டங்கள் போன்ற தமிழகத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கருதும் தமிழக மக்கள், தீண்டாமைக் குற்றங்களைப் பெரும்பாலும் மௌனமாகவே கடந்து சென்றுவிடுகிறார்கள்.

தாழ்த்தப்பட்டவன் ஏற்றிவந்த புல்லுக்கட்டு தம் மீது உரசிவிட்டது என்பதற்காக ஆதிக்க சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அசோக்.

பா.ஜ.க.- கும்பல் நாடு தழுவிய அளவில் தமது அரசியல் செல்வாக்கையும், அமைப்புப் பலத்தையும் அதிகரித்துவரும் வேளையில், தமிழக மக்கள் ஆதிக்க சாதிவெறித் -தீண்டாமை குறித்து மௌனம் காப்பது அபாயகரமானது.

சமூக நீதி பேசும் திராவிடக் கட்சிகள்கூட இச்சம்பவங்களைக் கண்டித்து அறிக்கைவிடுவதற்கு அப்பால், எந்தத் துரும்பையும் கிள்ளிப்போடுவது கிடையாது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக அறிக்கைவிடுவதற்கு அப்பால் சென்றால், சாதி இந்துக்களின் ஓட்டுக்களை இழந்துவிடுவோம் என்ற அச்சம் மட்டுமல்ல, திராவிடக் கட்சிகளின் தலைமை பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பிடியில் இருப்பதால், அக்கட்சிகள் தமது இயல்பிலேயே தீண்டாமைக் குற்றங்களைக் கண்டித்துக் காத்திரமான எதிர்வினையாற்றுவதை விரும்புவதில்லை.

அதேசமயம், தமிழகத்தில் இயங்கிவரும் ஆதிக்க சாதி அமைப்புகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இடையே வெடிக்கும் எந்தவொரு பிரச்சினையையும் சாதி மோதலாக மாற்றுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முனைப்புடன் முயலுகின்றன. தனிநபர் பிரச்சினைகளைக்கூட தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதிவெறியைத் தூண்டிவிடுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகின்றன. குறிப்பாக, பா.ம.க. இராமதாசு எவ்வித ஒளிவுமறைவுமின்றித் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக வன்னிய சாதிவெறியைத் தூண்டிவிடும் வன்மத்தோடு செயல்பட்டு வருகிறார்.

படிக்க:
தமிழ் எழுத்துக்களில் கூட நால் வர்ண சாதிப் பிரிவினை !
♦ பயத்தை வெல்ல தைரியமே மருந்து ! பேராசிரியர் ராம் புனியானி கூட்ட அனுபவம் !

நெய்வேலி அருகேயுள்ள குறவன்குப்பத்தைச் சேர்ந்த ராதிகா என்ற இளம்பெண்ணின் புகைப்படத்தை பிரேம்குமார் என்ற இளைஞன் ஆபாசமாக கிராபிக்ஸ் செய்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டதையடுத்து அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். பிரேம்குமார் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பா.ம.க. இராமதாசோ, பிரேம்குமார் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன், ராதிகா வன்னிய சாதியைச் சேர்ந்த பெண் என்ற முகாந்திரத்தை வைத்துக்கொண்டு, இத்தனிநபர் பிரச்சினையை வன்னிய,- தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு இடையேயான பிரச்சினையாக மாற்றும் தீயநோக்கில் அறிக்கை வெளியிட்டார்.

caste
ஆதிக்க சாதியினர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தை முந்திச் சென்ற காரணத்திற்காகத் தாக்கப்பட்ட சுதாகரன் மற்றும் சுபாஷ்.

நெய்வேலி விவகாரத்தைவிடக் கேடுகெட்ட, வக்கிரமான பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளிகளின் சாதியை இராமதாசோ, வேறு சாதி அமைப்புகளோ ஆராயவில்லை. காரணம், குற்றவாளிகள் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள். அதேசமயம் தனிநபர் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் குற்றமிழைத்தவர் தாழ்த்தப்பட்டவராக இருந்துவிட்டால், அதனைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக வன்மமாகவும் சாதி மோதலாகவும் ஊதிப் பெருக்குவதற்கு இராமதாசு உள்ளிட்ட ஆதிக்க சாதிக் கட்சி மற்றும் சங்கத் தலைவர்கள் முயலுவதை இளவரசன் திவ்யா, சுவாதி விவகாரங்களில் தொடங்கித் தொடர்ச்சியாகத் தமிழகம் கண்டுவருகிறது.

*****

ந்து மதவெறி அமைப்புகள் தமிழகத்தில் வலுவாகக் காலூன்ற முடியாது எனப் பெருமை பாராட்டிக் கொள்கிறோம். அதேசமயம், தமிழகத்தில் ஊருக்கு ஊர் சாதிச் சங்கங்களும், சாதிக் கட்சிகளும் காலூன்றி வருவதை மௌனமாகப் பார்த்துக்கொண்டு கடந்து போகிறோம். இந்து மதவெறி அமைப்புகளும் சாதிச் சங்கங்களும் வெளித் தோற்றத்தில்தான் வெவ்வேறானவை. ஆனால், சாதி சமூகக் கட்டமைப்பைப் பாதுகாப்பது என்ற இழை அவை இரண்டையும், ஈருடல் ஓர் உயிர் என்றவாறு பிணைத்தே வைத்திருக்கிறது.

சாதி சமூகக் கட்டமைப்பு இல்லாமல் இந்து மதம் இல்லை என்பதால், இந்து மதவெறியும் ஆதிக்கச் சாதிவெறியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக அமைகின்றன. ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும் என்பதை உ.பி. மாநிலத்தில் நடந்த முசாஃபர் நகர் கலவரத்தில் கண்டோம்.

அங்கே ஜாட் சாதியினர் மத்தியில் முசுலீம்களுக்கு எதிராக இந்து மதவெறியைத் தூண்டிவிட, ஜாட் சாதி பெண்களைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது ஆர்.எஸ்.எஸ். முசுலீம் இளைஞர்கள் ஜாட் சாதிப் பெண்களைக் காதலிப்பது போல நடித்து, அவர்களை மதம் மாற்றுவதாகவும்; ஜாட் சாதியினர் தமது கௌவரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முசுலீம்களின் இந்த “லவ் ஜிகாத்” பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும் எனப் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டமைத்து முசாஃபர் நகர் கலவரத்தை நடத்தியது பா.ஜ.க.

பா.ம.க. இராமதாசு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக வன்னிய சாதிவெறியைத் தூண்டிவிட நாடகக் காதல் என்ற அவதூறைக் கட்டமைத்து வருகிறாரே, அதனின் இன்னொரு வடிவம்தான் ஆர்.எஸ்.எஸ்.-இன் லவ் ஜிகாத்.

honor killing in tamil nadu
தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு இடையே காணப்படும் சாதி உணர்வை, ஏற்றத்தாழ்வை எடுத்துக்காட்டியது ஜோதி – சோலைராஜா தம்பதியினர் ஆணவப் படுகொலை.

பசுக் குண்டர்கள் முசுலீம்களை மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களையும் தமது இலக்காக வைத்துத் தாக்கியதை குஜராத் மாநிலம் -உனா நகரில் கண்டோம். தமிழகத்தின் பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பா.ம.க. நடத்திய கலவரத்தில் இந்து முன்னணியும் பங்கெடுத்தது. இவையெல்லாம் இந்து மதவெறிக்கும் ஆதிக்க சாதிவெறிக்கும் இடையேயான பிணைப்பு ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் காலக் கூட்டணி போல் அல்லாமல், வலுவான இயற்கையான கூட்டணியாகும் என்பதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

இந்த இயற்கையான கூட்டணி ஒருபுறமிருக்க, கிருஷ்ணசாமி, ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பல்வேறு தாழ்த்தப்பட்ட கட்சிகள், சங்கங்களின் தலைவர்கள் பிழைப்புவாத நோக்கில் ஆர்.எஸ்.எஸ். காலடியில் வீழ்ந்துகிடக்கும் அரசியல் அசிங்கங்களும் காணக் கிடைக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் மண்ணைக் கவ்வியதை அளவுகோலாகக் கொண்டு, தமிழகத்தில் பா.ஜ.க. ஒருக்காலும் காலூன்ற முடியாது என முடிவுரை எழுதிவிட முடியாது. இன்றில்லாவிட்டால் நாளை பா.ஜ.க. தமிழகத்தில் செல்வாக்கு பெறுவதற்கான வாய்ப்பைச் சாதிக் கட்டமைப்பும், சுயசாதி உணர்வும் வழங்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் – புஜதொமு கண்டனம்
♦ நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு | அ முத்துலிங்கம்

தமிழகத்தின் பெரும்பாலான நாடாளுமன்றத் தொகுதிகளில் இலட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட பா.ஜ.க.- கூட்டணி, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்ததற்கு, வி.சி.க.வேட்பாளர் திருமாவளவனுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் ஓட்டுக்கள் முனைவாக்கம் செய்யப்பட்டதுதான் காரணமாகும். மேலும், சுயசாதி உணர்வும், பெருமையும் தாழ்த்தப்பட்டவர்களைக்கூட விட்டு வைக்கவில்லை என்பதை சோலைராஜா- இணையர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பது எடுத்துக் காட்டுகிறது.

Thirumavalavan
வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்ததற்குக் காரணம் , அவருக்கு எதிராக உருவாக்கப்பட்ட சாதி முனைவாக்கம்.

தமிழகத்தில் இன்று நிலவும் பா.ஜ.க. மீதான வெறுப்பும் எதிர்ப்பும் பார்ப்பன எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் எதிர்ப்பு என்ற அடிப்படைகளைக் கொண்டுதான் எழுந்து நிற்கிறது. அதேபொழுதில் மோடி அரசின் இந்து மதவெறி பாசிச நடவடிக்கைகளான மாட்டுக் கறித் தடை, பசுக் குண்டர்கள் முசுலீம்கள் -தாழ்த்தப்பட்டோர் மீது நடத்திய தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ். உயிர் நாடியான சாதிக் கட்டமைப்புக்கு எதிராகவும் தமிழக மக்கள் மத்தியில் காத்திரமான பிரச்சாரமோ அணி திரட்டலோ நடைபெறவில்லை.

ஒன்றுக்குக் கீழ் ஒன்று எனச் செங்குத்தான அடுக்குகளைக் கொண்டதுதான் சாதிக் கட்டமைப்பு என்பதால், சாதிகளுக்குள் சமத்துவத்தையோ நல்லிணக்கத்தையோ ஒருக்காலும் உருவாக்க முடியாது. மேலும், சமூக நீதி அரசியல் பா.ஜ.க.விடம் தோற்றுப் போய்விட்டதை நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டிவிட்டன.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, விதவிதமான சாதிக் கூட்டணிகளை அமைத்தே சமூக நீதிக் கட்சிகளைத் தோற்கடித்துவிட்டது, பா.ஜ.க.
எனவே, ஆர்.எஸ்.எஸ். அதன் தொங்குதசைகளான சாதி அமைப்புகள், கட்சிகளையும் வீழ்த்த வேண்டுமென்றால் வர்க்க அரசியலை முன்னெடுப்பதுதான் ஒரே மாற்று.

தமிழகத்தை நாசமாக்கக்கூடிய பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிராகவும், தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மக்களை அணிதிரட்டும் அதே சமயம், சுயசாதி உணர்வு, ஆதிக்க சாதிப் பெருமை, தீண்டாமை, மதவெறி-குறிப்பாக இந்து மதவெறி ஆகியவற்றுக்கு எதிராகவும் மக்களை அரசியல்ரீதியில் அணிதிரட்ட வேண்டும்.

இத்தகைய போராட்டங்களின் வழியாக சாதி, மதவெறிக்கு எதிரான ஜனநாயக உணர்வைத் தமிழக மக்களிடம் நாம் வளர்த்தெடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தமிழகமும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் வேட்டைக்காடாக மாறிவிடும்.

– செல்வம்

– புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை – 2019 நிராகரிக்க வேண்டும் – ஏன் ? | பு.மா.இ.மு வெளியீடு !

1

மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை -2019 நிராகரிக்க வேண்டும் – ஏன் ? | பு.மா.இ.மு-வின் வெளியீடு !

nep-wrapper-rsyf-Book-Cover

2019-தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மோடி அரசு வெளியிட்டு கருத்துக்கேட்டு வருகிறது. இதுவே ஒரு நாடகம். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் மத்தியில் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் 100 நாட்களில் கல்வித்துறையில் மிகப்பெரிய சீர்த்திருத்தம் செய்யப்போகிறோம் என்று திட்டவட்டமாக அறிவித்தது. அடுத்த இரண்டு நாட்களில் ஏற்கனவே, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்த தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் வெளியிட்டு ஜூன் 30-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றார்கள்.

தமிழகத்தில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும், கால அவகாசத்தை ஜூலை-31 என்றும், அடுத்து 15 நாட்கள் நீட்டித்தும் அறிவித்து இருக்கிறார்கள். 484 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டால் எப்படி அனைத்து மக்களும் கருத்து சொல்ல முடியும்? யாரும் சொல்ல வேண்டாம் என்பதுதான் அவர்கள் எண்ணம்.

இது ஏதோ புதிதாக தயாரிக்கப்பட்ட கல்விக்கொள்கை அல்ல. ஏற்கனவே 2000-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு கார்ப்பரேட் முதலாளிகளான பிர்லா- அம்பானி தலைமையில் ஒரு கல்வி குழு அமைத்தது. அந்த குழு கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படைகள் இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் மையமாக இருக்கின்றது.

அதன்பின் 2014-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது டி.எஸ் சுரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அது 2016-இல் வரைவு அறிக்கையை வெளியிட்டது. நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் இப்போது கஸ்தூரிரங்கன் குழு தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள பல பரிந்துரைகள் கல்வியை சர்வதேச சந்தைக்கு திறந்துவிட வேண்டும் என்ற காட்ஸ் ஒப்பந்த அடிப்படையில் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டன.

அதுமட்டுமல்ல, இப்போது இந்த அறிக்கையை வெளியிட்டு கருத்துக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே மத்திய பட்ஜெட்டில் அதில் உள்ள சில பரிந்துரைகளை குறிப்பாக, ‘இந்தியாவில் படியுங்கள் திட்டம்’, ‘தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை’ போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டனர். ஆனால் நாட்டு மக்களிடம் கருத்துக்கேட்டுத்தான் முடிவெடுக்கப்படப்போவதைப் போல் பேசுகிறார்கள். இது ஒரு நயவஞ்சக நாடகம். இதற்கு யாரும் பலியாகக் கூடாது. இது அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையல்ல, கார்ப்பரேட்டுகள், காவிகள் நலனுக்கான கல்விக் கொள்கை.

பல்தேசிய இனங்களின் மொழி, இனம், கலாச்சாரம் அனைத்தையும் ஒழித்து கட்டிவிட்டு கல்வியை இந்திய பண்பாடு என்ற பெயரில் சமஸ்கிருதப் பண்பாட்டை புகுத்தி, இந்து – இந்தி – இந்தியா என்ற தனது நீண்ட கால கனவான இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாக கல்வியை பயன்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்.

இன்னொரு பக்கம் பலலட்சம் கோடி வணிகம் புரளும் இந்திய கல்விச் சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாட திறந்து விடுவது. பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கின்ற இந்த தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும். அது எந்த வடிவில் வந்தாலும் சரி முறியடிக்க வேண்டும்.

கார்ப்பரேட்டுகள், காவிகளின் நலனை ஒன்றிணைத்து ஒட்டுரக வீரியத்தன்மையுடன் வரும் இந்த தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து எமது பு.மா.இ.மு –வும், பல்வேறு அமைப்புகள், இயக்கங்களும் போராட்டங்களையும், விவாதக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது. அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கை குறித்து விமர்சனப்பூர்வமான கட்டுரைகளின் தொகுப்பாக இந்த சிறு வெளியீட்டைக் கொண்டு வருகிறோம்.

படிக்க:
கார்ப்பரேட் – காவிமயமாகும் மருத்துவத்துறை ! தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் !!
♦ தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! கடலூர் அரங்கக் கூட்டம்

இந்த வரைவு அறிக்கை வெளிவந்தவுடன் அதற்கெதிராக பொதுக்கல்விக்கான ஒருங்கினைப்பு குழு நடத்திய கூட்டத்தில் பல்வேறு கல்வியாளர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பை கொடுத்து உதவிய பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புகுழு-வுக்கும், கல்வியாளர்களுக்கும் எமது நன்றி.

பல மாநிலங்கள், பல மொழி பேசும் மக்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில் மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற வகையில் ஒற்றைத் தன்மை கொண்ட ஒரு தேசிய கல்விக்கொள்கை என்பது இருக்க முடியாது, இருக்கக் கூடாது. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.

பெரும்பான்மை மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட, தாய்மொழிவழியிலான, அறிவியல்பூர்வமான, இலவச – கட்டாயக் கல்விக்கல்வியை முன்னிறுத்தும் ஒரு மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்கும் போராட்டமாக இதனை வளர்த்தெடுக்க வேண்டும்.

போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களையும், ஆசியர்களையும், உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைக்கும் தொடர் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த சிறுவெளியீட்டை கொண்டு வருகிறோம். படியுங்கள்! பரப்புங்கள்! நன்றி!

வெளியீடு விவரம் : மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை -2019 நிராகரிக்க வேண்டும் – ஏன் ?

விலை : ரூபாய் 25/-

வெளியீடு சென்னையில் கிடைக்குமிடம்:

எண்: 7, மாதா கோவில் நகர்,
முதல் தெரு, நொளம்பூர், சென்னை – 95.
தொடர்புக்கு : 9445112675.

பிற ஊர்களுக்கு :

  • கடலூர் :    97888 08110
  • திருச்சி :    99431 76246
  • மதுரை :    82200 60452
  • நெல்லை : 99448 99190
  • தருமபுரி : 63845 69228
  • கரூர் :      96298 86351

தோழமையுடன் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

கார்ப்பரேட் – காவிமயமாகும் மருத்துவத்துறை ! தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் !!

ருத்துவத்துறையை முழுவதும் கார்ப்பரேட் – காவி மயமாக்கும் நோக்கில், இந்திய மருத்துவ ஆணையத்தைக் (MCI) கலைத்துவிட்டு மோடி அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணையம் (NMC), நெக்ஸ்ட் தேர்வு (NEXT), இணைப்பு படிப்பு (BRIDGE COURSE) ஆகியவற்றை எதிர்த்து சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சிவகங்கை, மதுரை, தஞ்சை, திருவாரூர், தேனி, திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடிவருகின்றனர்.

மருத்துவத்துறையை முழுவதும் தனியார்மயமாக்கும் GATS ஒப்பந்தத்தின் படி மத்திய அரசு விரும்பும் மாற்றங்களைச் செய்ய MCI என்ற தன்னாட்சி அமைப்பு தடையாக உள்ளது. அதைக் கலைத்துவிட்டு நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்கக் கூடிய NMC என்ற அமைப்பை நிறுவுவதற்கான மசோதாவை கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக (02-08-19) நிறைவேற்றியுள்ளது மோடி அரசு.

இந்திய மருத்துவ ஆணையம் ஊழல் மிகுந்த அமைப்பாக மாறிவிட்டதாம்; அதைப் போக்க, மாற்று அமைப்பைக் கொண்டுவருகிறார்களாம். இதையேதான் UGC -யைக் கலைப்பது முதற்கொண்டு அனைத்துத் தனியார்மய நடவடிக்கைகளிலும் கூறிவருகிறார்கள். ஏற்கனவே உள்ள நிறுவனங்களில் உள்ள ஊழல் மற்றும் நிர்வாகச் சிக்கல்களைக் காரணம்காட்டி தாங்கள் கொண்டுவரும் தனியார்மயத்துக்கு ஆதரவான சீர்திருத்தங்களைச் சரியென மக்களை நம்பவைப்பதைப் பாசிஸ்டுகள் ஒரு போக்காவே கடைபிடிக்கிறார்கள்.

MCI மொத்தம் 130 பேரைக் கொண்டது. அதில் 2/3 பங்கு பேர் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பல்கலைக்கழகங்கள் சார்பில் பரிந்துரைக்கப்படுபவர்கள். 8 பேர்தான் மத்திய அரசினால் நேரடியாக நியமிக்கப்படுபவர்கள். ஆனால், இப்போது புதிதாக அமையவுள்ள NMC மொத்தமே 25 பேரைக் கொண்டது. இதில் 80% பேர் மத்திய அரசின் நேரடி நியமன உறுப்பினர்கள். மாநில அரசுகளின் சார்பில் 6 பேர் மட்டுமே சுழற்சி முறையில் (அதாவது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை) பங்கேற்க முடியும். மருத்துவத்துறையில் NMC-யைக் கொண்டுவருவதன் மூலம் மாநிலங்களுக்கு இருந்த பெயரளவிலான உரிமைகள்கூட வெட்டிப்புதைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. இதன் மூலம் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறையில் மத்திய அரசு தான் விரும்பும் மாற்றங்களைச் செய்துகொள்ளும். இந்திய அரசியல் சட்டம், கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றைக் கழிவறைக் காகிதமாகக் கூட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் கருதவில்லை.

படிக்க:
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! கடலூர் அரங்கக் கூட்டம்
♦ நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

மேலும், மத்திய அரசு நேரடியாக நியமிக்கும் இந்த 14 பேரும் யார்..யார்? எந்த அடிப்படையில் அவர்களை நியமிப்போம் என்பதைக் குறிப்பிடவில்லை. அவர்கள் RSS ‘விஞ்ஞானிகளாகவும்’ கார்ப்பரேட்டுகளின் ஏஜெண்டுகளாகவும்தான் இருக்கமுடியும் என்பது இதிலிருந்து புலனாகிறது. இதன்மூலம் மருத்துவத்துறையில் முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் நேரடியாக கார்ப்பரேட்டுகள் காவிகளின் பிடியில் சிக்கிக்கொள்ளவிருக்கிறது. அவர்கள் தங்கள் விருப்பம்போல சந்தைக்கேற்ப பாடத்திட்டங்கள், விதிமுறைகள் முதற்கொண்டு அனைத்தையும் தீர்மானிப்பார்கள்.

Madurai Medical College protest nmc
மதுரை மருத்துவக்கல்லூரி மணவர்கள் மற்றும் மருத்துவர்கள் தேசிய மருத்துவ மசோதாவை எதிர்த்து நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

தனியார் தர நிர்ணய நிறுவனங்கள் கூறும் ஆய்வின்படி MARB என்ற புதிய அமைப்பு புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதியளிக்கும். இதன்மூலம் சட்டவிரோதமாக இயங்கிவரும் SVS இரக மருத்துவக் கல்லூரிகள் நாளை சட்டப்பூர்வமாகும். மேலும், மருத்துவக் கல்லூரிகளே சீட்டுகளைத் தங்கள் விருப்பம்போல உயர்த்திக்கொள்ளலாம். 50% நிர்வாக (Management) சீட்டுகளுக்கு தாங்கள் விருப்பம்போலக் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். பட்டமேற்படிப்புப் (PG) படிப்புகளை கல்லூரிகளே தங்கள் விருப்பம்போல துவங்கி நடத்திக்கொள்ளலாம் என்றெல்லாம் கூறுவதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சட்டவிரோத பகற் கொள்ளையையும் ஊழலையும் சட்ட பூர்வமாக்கியிருக்கிறது மோடி அரசு. இனி கார்ப்பரேட்டுகள் தங்கள் இஷ்டம்போல மருத்துவத்துறையைச் சூறையாட வழிவகை செய்கிறது இம்மசோதா.

மருத்துவக் கல்லூரிகளில் ஏற்படும் குறைகள் மற்றும் தவறுகளுக்கு “அங்கீகாரத்தை இரத்து செய்வது” என்பதெல்லாம் இனி கிடையாது. எத்தகைய தவறாயினும் அதற்கு ஈடாக அபராதம் செலுத்தினால் போதும். இதுதான் இனி அதிகபட்ச தண்டனை.

Madurai Medical College protest nmc 1
மதுரை மருத்துவக்கல்லூரி மணவர்கள் மற்றும் மருத்துவர்கள் தேசிய மருத்துவ மசோதாவை எதிர்த்து நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

மருத்துவம் படித்த மாணவர்கள் ஏற்கனவே உள்ள முறைப்படி 4½ ஆண்டுகள் படிப்பும் ஓராண்டு மருத்துவராகப் பயிற்சியும் பெற வேண்டும். இம்மசோதாவின்படி இனி பட்டம் பெற வேண்டுமானால் “நெக்ஸ்ட்” (NEXT) என்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். இதை MBBS மாணவர்கள் மட்டுமின்றி பல்மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவத்துறைகளிலும் புகுத்துகிறார்கள். “மருத்துவத்தின் தரத்தை உயர்த்துகிறேன்” என்ற பெயரில் இதைக் கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே “தரத்தை உயர்த்துகிறேன்” என்ற பெயரில் +2 முடித்தவர்களுக்கு நீட் என்ற தேசிய அளவிலான தேர்வை நடத்தி நாடு  முழுவதும் உள்ள ஏழைகள் / கிராமப்புற மக்களின் பிள்ளைகள் மருத்துவக் கல்லூரியில் நுழைவதைத் தடுத்துநிறுத்தியது மோடி அரசு. இப்போது அதையும் தாண்டிப் படிக்க வருபவர்களை வடிகட்டி வெளியே எறியும் முயற்சியே இது. மருத்துவம் படிக்கும் ஏராளமான மாணவர்களின் கனவு இதன்மூலம் தகர்க்கப்படவிருக்கிறது. “சூத்திரனுக்குக் கல்வியில்லை என்ற பார்ப்பன நீதியும் காசில்லாதவனுக்குக் கல்வியில்லை என்ற கார்ப்பரேட்டு நீதியும்” ஒருங்கே இணைந்து ஏழைகளை மருத்துவப் படிப்பிலிருந்து வடிகட்டித் தள்ளவிருக்கிறது.

படிக்க:
ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
♦ பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்

“ஆப்ஜெக்டிவ் முறையில் கொண்டுவரப்படவிருக்கும் நெக்ஸ்ட் தேர்வானது இவர்கள் சொல்வதுபோல தரத்தை உயர்த்தாது. மாறாக தாழ்த்தும். மருத்துவப் படிப்பில் செயல்முறைப் (Practical) படிப்புதான் முக்கியமானது. நோயாளிகளைத் தொட்டு சிகிச்சையளிப்பதில் மாணவர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இனிமேல் முதலாமாண்டிலிருந்தே நெக்ஸ்ட் தேர்வுக்காகவே படிக்க மாணவர்கள் பழக்கப்படுத்தப்படுவர். செயல்முறை அறிவு துளியும் இல்லாமல் போகும். நெக்ஸ்ட் முறை அமல்படுத்தப்பட்டால் ஏராளமான மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைவதோடு மருத்துவர்களாக வெளிவருபவர்களும் செயல்முறை அறிவற்றவர்களாகவே இருப்பார்கள்” என்கிறார்கள் மாணவர்கள்.

நவீன மருத்துவத்துக்கு முடிவு கட்டும் சதியை முறியடிப்போம். என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கான மாநில மருத்துவர்கள்.

இப்படி சாதாரணமானவர்கள் படித்து வரமுடியாது. கோச்சிங் செண்டரில் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்திப் படிக்க முடியக்கூடிய மாணவர்களே நெக்ஸ்ட் தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியம் அப்படி வெல்பவர்கள் நிச்சயமாக மருத்துவத்தை சேவையாகக்  கருத மாட்டார்கள். மாறாக முதலீடாகவே கருதுவார்கள். இப்படி இலாபச் சிந்தனையோடு வெளிவரும் மருத்துவர்களால் ஏழை எளிய மக்களுக்கு கிடைத்து வரும் பெயரளவிலான மருத்துவமும் இல்லாமல் போகும்.

மசோதாவின் பிரிவு 32-வின்படி எம்.பி.பி.ஸ் படிக்காத, அலோபதி முறையில் மக்களை குணப்படுத்தும் அனுபவ அறிவு இல்லாத ஆயுர்வேதா, சித்தா, யுனானி (AYUSH, LAB TECHNICIANS, BLOOD SAMPLE COLLECTORS) படித்தவர்களை கிராமப்புற மக்களின் மருத்துவ சேவைக்காக அனுப்பிவைப்போம் என்கிறது மோடி அரசு. அவர்களைக் கொண்டு கிராமப்புற மக்களைப் பாதுகாக்கிறார்களாம். பணமில்லாத கிராமப்புற ஏழை எளிய மக்களைத் தேவையற்றவர்கள் என்று பார்க்கும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் பார்வையும் பார்ப்பனியத்தின் பார்வையுமே இணையும் புள்ளியே இது. இதன் மூலம் கிராமப்புறப் பகுதிகளில் போதிய மருத்துவமனைகளை உருவாக்கவோ மருத்துவர்களை நிரப்பவோ செய்யாமல் மருத்துவ சேவையை முற்றாகக் கைகழுவிவிடுவதுதான் அரசின் நோக்கம். இதற்காக கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியார் பங்களிப்பு செய்வதன் மூலம் இவர்களை 25,000 -க்கும் குறைவான ஊதியத்தில் பணிக்கு அமர்த்தப் போகிறார்கள். இனி மெல்லமெல்ல கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கார்ப்பரேட்டுகளின் பிடியில் ஒப்படைக்கப்போகிறார்கள்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மானவர்கள் நடத்திய போராட்டம் – கோப்புப் படம்.

இணைப்புப் படிப்பு (Bridge Course) மூலம் மேற்கண்ட மருத்துவத்துறைகளில் படித்த மாணவர்கள் MBBS படித்துப் பட்டம் பெற முடியும் என்கிறது மசோதா.  இதன் மூலம் அந்தத் துறைகளில் (ஆயுர்வேதா, சித்தா, யுனானி, நர்ஸிங், பல் மருத்துவம்) இனி நிரந்தரமாக யாரையும் நியமிக்கப் போவதில்லை என்பதே இதன் பொருள். ஏற்கனவே பல்மருத்துவம், நர்ஸிங் உள்ளிட்ட துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாமல் காண்ட்ராக்ட் முறையில் வெறும் 11 மாதப்பணிக்குத்தான் எடுத்துவருகிறார்கள். 11 மாதங்கள் கழித்து அவர்கள் தூக்கியெறியப்படுகிறார்கள். 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல் மருத்துவர்கள் நிரந்தரப் பணிக்கு அமர்த்தப்படவில்லை. இன்றைய நிலையே இப்படி இருக்கையில் இணைப்புப் படிப்பைக் (Bridge Course) கொண்டுவருவதன் மூலம் மலிவான உழைப்புச் சந்தையில் MBBS படித்தவர்கள் கிடைப்பார்கள். அவர்களும் நாளை காண்ட்ராக்ட் முறையில் மாற்றப்படுவார்கள்.

இந்த தேர்வில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் பணியாற்றலாம். இதனால் இந்திய மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படும். இந்திய மக்களை குணப்படுத்தும் அனுபவ அறிவில்லாத மருத்துவர்களை இது உருவாக்கும்.

இவற்றையெல்லாம் எதிர்த்துதான்,

  • NMC யைத் திரும்பப் பெறு!
  • நெக்ஸ்ட் தேர்வை இரத்து செய்!
  • இணைப்புப் படிப்பை இரத்து செய்!
  • கிராமப்புற மக்களின் சுகாதாரத்தைப் பறிக்காதே!

என்ற முழக்கங்களின் கீழ் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகிறார்கள்.

இது ஏதோ போராடுகிற மாணவர்களின் பிரச்சனையோ மருத்துவத்துறை சார்ந்தவர்களின் பிரச்சனையோ மட்டுமல்ல. நம் அனைவரின் பிரச்சனை. மருத்துவத்துறையை கார்ப்பரேட்டுகள் முற்றாக சூறையாட வழிவகுத்திருப்பதன் மூலம் ஏழை எளிய மக்களுக்குக் கிடைத்துவந்த பெயரளவிலான மருத்துவமும் நாளை இல்லாமல் போகும். இந்த அநீதியான NMC-யை  எதிர்த்து போராடும் மாணவர்களுடன் நாமும் களத்தில் இறங்குவோம்!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ மானவர்கள் நடத்திய போராட்டம் :

குமரி மாவட்ட மாணவர் போராட்ட படங்கள் :

திருச்சி மாவட்ட மாணவர் போராட்ட படங்கள் :

தஞ்சை மாவட்ட மாணவர் போராட்ட படங்கள் :

விழுப்புரம் மாவட்ட மாணவர் போராட்ட படங்கள் :


தகவல்:

புமாஇமு