Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 317

கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் ? கேள்வி – பதில்

கேள்வி: // சமீப காலங்களில் கம்யூனிசத்தை முன் நிறுத்துவதை காட்டிலும் இடதுசாரிகள் திராவிட சிந்தனையை தீவிரமாக முன்னிருத்துகின்றார்களோ? கம்யூனிசத்தில் சாதியை ஒழிப்பதற்கான வழிமுறை இல்லை என்ற முடிவுக்கு இடதுசாரிகள் வந்துவிட்டார்களா? CPI,CPI(M) யை கேட்கவில்லை. //

– அகிலன்

ன்புள்ள அகிலன்,

திராவிட சிந்தனை என்று நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்? இட ஒதுக்கீடு, சமூகநீதி, நாத்திகப் பிரச்சாரம், மகளிர் விடுதலை, பார்ப்பனிய எதிர்ப்பு … இவற்றைத்தானே? இவற்றை திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகளை உள்ளிட்டு பொதுவில் முற்போக்கு அமைப்புகள் அனைவரும் ஆதரிக்கிறார்கள். அதே நேரம் இந்தக் கோரிக்கைகளில் எவை தற்காலிகமான தீர்வைத் தரும், இந்த பிரச்சினைகளுக்கு நீண்ட காலத் தீர்வு என்ன என்பதை வைத்து கம்யூனிஸ்டுகள் திராவிட சிந்தனைகளிலிருந்து வேறுபடுகிறார்கள் அல்லது ஒன்றுபடுகிறார்கள்.

சாதியை ஒழிப்பதற்கு இந்தியாவில் வர்க்க ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்படுவது ஒரு முன்னிபந்தனை. உழுபவனுக்கு நிலத்தை சொந்தமாக்காமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்த பொருளாதார வலிமையை கொடுக்காமல் தீண்டாமை, சாதி ஒழிப்பிற்கான போராட்டத்தை  தீவிரமாக நடத்த முடியாது. அதே போன்று ஆதிக்க சாதிகளில் வாழும் நிலமற்ற அல்லது சிறு விவசாயிகளின் ஏழ்மையும் தாழ்த்தப்பட்ட மக்களின் ஏழ்மையும் வேறு வேறு அல்ல. இரு பிரிவினரையும் பொருளாதாரப் போராட்டங்களில் இணைத்து அதன் வலிமை கொண்டு சாதி தீண்டாமை ஒழிப்பிற்கான போராட்டங்களை இணையாக முன்னெடுக்க வேண்டும். இதுவே கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு.

படிக்க:
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 
அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?

திராவிட இயக்க சிந்தனைக்கோ, தலித் இயக்க சிந்தனைக்கோ இப்படி அறிவியல் பூர்வமான சாதி ஒழிப்புத் திட்டம் இல்லை. அவர்கள் பொதுவில் சாதி சமத்துவம், சாதி ஒழிப்பு என்று பேசுகிறார்கள். அதை வெறும் கருத்துப் பிரச்சாரம் செய்வதன் மூலம் அடைய முடியும் என்று கருதுகிறார்கள். மோடி அரசின் தலைமையில் பாசிச அரசு படர்ந்து வரும் நிலையில் இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இயங்க வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரம் சமூக மாற்றம் என்று வரும் போது கம்யூனிஸ்டுகள் தமது கொள்கைப்படியே அரசியல் இயக்கத்தை கொண்டு செல்ல விரும்புகிறார்கள். இப்படி இருக்கையில் சாதி ஒழிப்பதற்கான வழிமுறை கம்யூனிசத்தில் இல்லை என கம்யூனிஸ்டுகள் ஏன் நினைக்க வேண்டும்?

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : // ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலன் இருவரின் சொத்து மதிப்பை வெள்ளை அறிக்கைப் போன்று வெளியிட தங்களால் முடியுமா? உங்களது வினவு செய்தி தொகுப்பின் சொத்து மதிப்பை வெளியிட முடியுமா? வணிகம், சேவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? //

– ஜோஸ்

ன்புள்ள ஜோஸ்,

ஹீலர் பாஸ்கர்.

பொதுவில் வெள்ளை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை, திட்டம் பற்றி அரசு அமைப்புகளால் வெளியிடப்படும் ஒன்று. அதை தனியார் நிறுவனங்களோ நபர்களோ சட்டப்படி வெளியிடும்படி யாரும் கூற முடியாது. அவர்களால் வெளியிட்டால்தான் உண்டு. அல்லது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ஏதாவது பண மோசடி மூலம் கசிந்தால்தான் தெரிய வரும். ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் இருவரது சொத்து மதிப்பு குறித்து எங்களுக்குத் தெரியாது. ஹீலர் பாஸ்கரது வீடியோக்களைப் பார்க்கையில் அவரது நிறுவனங்கள், சிகிச்சை மையங்கள், அவற்றுக்கான கட்டணங்கள் எல்லாம் சேர்ந்து அவரை பெரும் பணக்காரராய் காட்டுகின்றன. பாரிசாலனும் அந்த அளவு இல்லை என்றாலும் சிறு அளவு தமிழ் பெயரில் பொருட்கள், நாய்கள், சேவைகளை விற்பனை செய்வதற்கு உதவுகிறார். இவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களே இவர்களது சொத்து மதிப்பினை கூற முடியும். நாங்கள் சொல்வது ஒரு பொதுவான மதிப்பீடு.

படிக்க:
நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? அச்சுநூல்
வினவை ஆதரிப்பது உங்கள் கடமை ! ஒரு நிமிடம் ஒதுக்குங்கள் !!

வினவு செய்தி தொகுப்பிற்கு சொத்து மதிப்பே கிடையாது. கிட்டத்தட்ட இலவச சேவை போன்றுதான் நடத்தப்படுகிறது. வாசகர்கள் சிலர் தரும் குறைந்தபட்ச சந்தா, நன்கொடை, தோழர்கள் தரும் உதவி நிதி கொண்டு வினவு குறைந்த பட்ச செலவுகளோடு நடத்தப்படுகிறது. உண்மையில் எங்களது நிதி நெருக்கடியால் எங்களது செயல்பாடுகளை பாரிய அளவில் விரிவுபடுத்த இயலவில்லை.

பாரி சாலன்.

வணிகம் என்பது இலாபத்தை முதன்மையாகக் கொண்டு நடத்தப்படும் தொழில். சேவை என்பது இலாப நட்டத்தை தவிர்த்து மக்களது நலனுக்காக நடத்தப்படும் சேவைத் தொழில். எந்த ரூட்டில் அதிக பணம் கிடைக்கும் என்பது ஆம்னி பேருந்து நிறுவனங்களின் குறிக்கோள். நட்டமே ஆனாலும் போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் செய்ய வேண்டும் என்பது அரசு பேருந்து கழகத்தின் நிலை. தற்போது இந்த நிலைமை மாறி வருகிறது. அரசும் இலாப நட்டத்தை கணக்கிற்கொண்டு செயல்பட வேண்டும் என்பதை உலக வங்கி, பன்னாட்டு நிதி முனையம், உலக வர்த்தகக் கழகம் ஆகியவை உலக நாடுகளின் அரசுகளை ஏற்கச் செய்து வருகின்றன. அதனால்தான் தனியார் பள்ளிகளும், தனியார் கல்லூரிகளும், தனியார் மருத்துவமனைகளும் பெருகி வரும் நேரத்தில் அரசு நிறுவனங்கள் அருகி வருகின்றன.

நன்றி !

♦ ♦ ♦

கேள்வி : // இப்பொது இருக்கும் நிதி நெருக்கடி சரியாகுமா? //

பாலா p

ன்புள்ள பாலா,

நிதி நெருக்கடி என்ற பதத்தை விட பொருளாதார நெருக்கடி என்ற பதமே பொருத்தமானது. இந்தியாவில் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி இப்போதைக்கு சரியாகும் வாய்ப்பில்லை. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் உள்நாட்டு நுகர்வு குறைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக உற்பத்தி குறைந்து தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. இன்னொரு புறம் விவசாயிகளின் வருமானமும் பாரிய அளவுக்கு குறைந்து கிராமப்புற நுகர்வு தேய்ந்து வருகிறது.

இதனால்தான் இந்தியாவில் புதிய தொழில் துவங்குவதோ, அன்னிய முதலீடுகளின் உதவியுடன் தொழில் துவங்குவதோ காகித அளவிலேயே இருக்கிறது. உற்பத்தி செய்த பொருட்களை வாங்குவதற்கு இல்லாமல் சந்தை சுருங்கி வருகிறது. இந்த இலட்சணத்தில் ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தை கொண்டு வருவோம் என மோடி அரசு கேழ்வரகில் நெய் வடிவதாக அடித்து விடுகிறது. பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. இரண்டும் சேர்ந்து சிறு – குறு தொழில்களை சுனாமி போல ஒழித்து விட்டன – ஒழித்தும் வருகின்றன. இந்தியா ஒரு பெரிய நாடு, பெரிய பொருளாதார அமைப்பைக் கொண்ட நாடு என்பதால் இந்த பாதிப்புகள் குவிந்து பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு துறை சார்ந்து பரிசீலித்து பார்த்தோமானால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை புரிந்து கொள்ளலாம்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : // இந்தப் பொருளாதார மந்தம் (தேக்கம்) உலகம் தழுவி உள்ளது. அப்படியிருக்கையில் இந்தியாவில் மோடியைப்பற்றி மட்டுமே பேசுவது என்பது எப்படி? பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. இரண்டும் இல்லையென்றால் இந்தியா வல்லரசு ஆகமுடியுமா? //

– உடுமலைப்பேட்டை சண்முகவேல்

ன்புள்ள சண்முகவேல்,

முன்னர் கண்ட பதிலின் தொடர்ச்சியாக உங்கள் கேள்வியை பரிசீலிக்கலாம். உலகு தழுவிய பொருளாதார மந்தம் என்று பேசப்படும் விசயம் உண்மையில் முதலாளித்து கட்டமைப்பு நெருக்கடியாக இருக்கிறது. இந்த நெருக்கடியின் பாதிப்பில் இருந்து எந்த நாடும் தப்பித்துக் கொள்ள முடியாது. உலகமே ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் வலைப்பின்னலில் சிக்கியிருப்பதால் இந்த நெருக்கடி எந்த ஒரு நாட்டையும் நகரத்தையும் கிராமத்தையும் விட்டு வைக்காது என்பது உண்மைதான். அமெரிக்க – சீன வர்த்தக போர், அமெரிக்க – ஐரோப்பிய ஒன்றிய முரண்பாடு, வளைகுடாவில் நடக்கும் போர்கள் – உள்நாட்டு சண்டைகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையில் ஏகாதிபத்திய உலகமும் தனது நிதி மூலதனத்தைக் கொண்டு தொடர்ந்து உலகை சுரண்ட முடியாத அளவில் நெருக்கடியில் தத்தளிக்கிறது. உற்பத்தி அதிகரித்து நுகர்வு குறைந்து சந்தை சுருங்கி அதன் விளைவாக வேலையின்மை அதிகரித்து என ஒரு தொடர் விளைவாக இந்த நெருக்கடி பரவி வருகிறது.

படிக்க:
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! அச்சுநூல்

இந்தியாவிலும் இதன் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. ஏற்றுமதி குறைகிறது, இறக்குமதிக்கு வரி போடக்கூடாது என வல்லரசு நாடுகள் வற்புறுத்துகின்றன. மலிவான உழைப்பிற்காக ஆயத்த ஆடைத் தொழில் இந்தியாவில் இருந்து வங்க தேசத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சுதேசி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வண்ணம் இந்திய அரசு செயல்பட வேண்டும். ஆனால் மோடி அரசோ தனியார்மயம், தாராளமயம், உலக மயக் கொள்கைகளை முன்னிலும் மூர்க்கமாக அமல்படுத்தி சுதேசி பொருளாதாரத்தை சாகடித்து வருகிறது. கூடுதலாக பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. மூலம் சிறு குறு தொழில்கள், விவசாயம் அழிக்கப்பட்டு வேலையின்மையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோடி அரசு உருவாக்கி விட்டது. இந்த இலட்சணத்தில் வல்லரசு, சந்திராயன், அயோத்தி கோவில், கோமாதா என்று நடுத்தர வர்க்கத்தை திசை திருப்புகிறார்கள்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

நூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு

மானுட மரபணு வரலாறு இரண்டு பாதைகளில் பயணிக்கின்றது. ஒன்று மிட்டாகோன்ட்ரியா டி.என்.ஏ (mitochondria DNA mtDNA) அடிப்படையிலானது. மற்றது Y குரோமோசோம் அடிப்படையிலானது. இது நியூக்கிளியர் டி.என்.ஏ (Nuclear DNA – nDNA) எனவும் குறிப்பிடப்படுகின்றது. ஒரு கட்டிடத்திற்கு செங்கல் எப்படி அடிப்படைக் கட்டுப்பொருளோ அப்படி மானுட உடலுக்கும் ஏனைய உயிர்களின் உடலுக்கும் செல் அடிப்படைக் கட்டுப்பொருள். உயிர்களது உடலின் செல்கருக்களில் குரோமோசோம்கள் உள்ளன. மானுட உயிர்ச்செல்லில் 23 இணை (ஜோடி) குரோமோசோம்கள் உள்ளன. குரோமோசோம்கள் டி.என்.ஏக்களால் ஆனவை. டி.என். ஏ.வின் பகுதிகள் தாம் மரபணுக்கள். (மேற்கொண்டு விவரம் வேண்டுவோர் பார்க்க: அத்தியாயம் 18, புரட்சியில் பகுத்தறிவு ப.கு.ராஜன் : பாரதி புத்தகாலய வெளியீடு) மிட்டாகோன்ட்ரியா என்பது, மானுட செல்களில் செல்கருவிற்கு வெளியே இருக்கும் ஒரு தனிச்செல். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி உயிர். அநாதிகாலத்திற்கு முன்பு உயிர்ச்செல் உருவாகி வளர்ந்த காலத்தில் செல்லில் வந்து ஒட்டுண்ணிபோல குடியேறிய செல். அதற்கென்று தனித்த டி.என்.ஏ உள்ளது.

செல்கருவில் உள்ள குரோமோசோம்களின் ஒரு இணைதான் ஆண்பாலா பெண்பாலா என்பதைத் தீர்மானிக்கின்றது. இந்த இரு குரோமோசோம்களும் XX என இருந்தால் பெண்பால்; XY என இருந்தால் ஆண்பால். உடலின் எல்லா செல்களிலும் குரோமோசோம்கள் இப்படி 23 இணைகளாகத்தான் இருக்கின்றன. ஆனால் காமித்துகள் எனப்படும் ஆணின் விந்தணு மற்றும் பெண்ணின் கருமுட்டை இரண்டிலும் மாத்திரம் 23 இணைகள் இருப்பதில்லை. காமித்து செல் ஒவ்வொன்றிலும் 23 குரோமோசோம்கள் மட்டும் இருக்கும். 23 குரோமோசோம்கள் கொண்ட ஒரு விந்தணுவும் 23 குரோமோசோம்கள் கொண்ட ஒரு கருமுட்டையும் இணைந்து உருவாகும் கரு மறுபடி மற்ற எல்லா செல்களும்போல 23 இணை குரோமோசோம்கள் உள்ளதாக உருவாகின்றது. இந்தக் கருவிலும் ஒரு குறிப்பிட்ட இணை குரோமோசோம்கள் தாம் உருவாகும் கரு ஆணா பெண்ணா என்பதை தீர்மானிக்கிறது. பெண் உடலின் செல்லில் Y குரோமோசோம் கிடையாது. பெண்ணின் பங்களிப்பு எப்போதும் X குரோமோசோம்தான். ஆணின் பங்களிப்பு X அல்லது Y குரோமோசோமாக இருக்கலாம். பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனத் தீர்மானிப்பதில் பெண்ணுக்குப் பங்கேதுமில்லை. இவன்தான் காரணம்; ஆனால் இந்த முறையும் பெண்ணா என அவளைப்போய் அடிப்பான். (நூலிலிருந்து பக்.7-8)

திராவிடர்களும் தமிழர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள் ; ஆரியர்கள் மட்டும் தான் வந்தேறிகள் எனும் கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நவீன ஹோமோசேப்பியன்கள் இருந்ததற்கான புதைபடிவச்சான்றுகள் ஏதுமில்லை. ஆனால் மரபணுச்சான்றுகள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மானுடக்கூட்டம் (M130) தெற்குப்பாதை எனக் குறிக்கப்படும் கடலோரமாகவே பயணித்து இந்தியாவிற்குள் வந்தது என்பதையும், இந்த மக்கட்கூட்டத்தின் வழித்தோன்றல்கள் இப்போதும் தென் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதையும் நிறுவியுள்ளது. இந்த முதல் அலைக்குப் பிறகு சுமார் 30 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இரண்டாம் அலையும்(M20) மிக நீண்டகாலத்திற்குப் பிறகு சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் அலையும் இந்தியாவிற்குள் வந்துள்ளது. இன்றைக்கு ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம், சிரியா, ஈராக், ஈரான் நாடுகளில் விரிந்து அடங்கியிருக்கும் வளமிகு சந்திரப்பிறை (Fertile Crescent) பகுதியிலிருந்து வந்தது இந்த மூன்றாம் அலை.

படிக்க:
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்
கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல் !

குறிப்பாக, இன்றைய ஈரானின் தென்மேற்கு கோடியிலுள்ள ஈளம் (Elam) இந்த மக்கள் நீண்டகாலம் தங்கி வாழ்ந்த பகுதி எனக் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகத்தின் வெளிவிளிம்பு என ஈளத்தைக் கூறலாம். சுமேரிய நாகரிகத்தின் சில அம்சங்கள் திராவிட நாகரிகத்தில் கலங்கலாகவேணும் தெரிவதைக் குறிப்பிட வேண்டும். சுமேரியர்களின் பெருநகரின் பெயரான ‘ஊர்’, அங்கிருந்த கோவிலின் அமைப்பு ஆகியவற்றின் சாயல் திராவிடப்பகுதியில் இருப்பது போன்றவற்றை தற்செயலான ஒற்றுமை எனத் தள்ளிவிடமுடியும் எனத் தோன்றவில்லை. ஈளமைட் மொழி திராவிடமொழிகளின் மூதாதை எனும் ஒருகருத்து இருந்தது. ஆனால் அது இப்போது இல்லையென ஆகிப்போனது.

ஆய்வும், ஆய்வுப்பரப்பும் அதிகம் ஆக ஆக சிந்து சமவெளி நாகரிகத்தின் மேற்கெல்லையும் அவற்றின் காலக்கணக்குகளும் சுமேரிய, மெசபடோமிய நாகரிகத்தினை நோக்கிச் செல்வதை அனுமானிக்க முடிகிறது. பாகிஸ்தானின் மெஹர்கர் (Mehrgarh) பகுதியில் நடந்த ஆய்வுகள் சிந்துச் சமவெளி நாகரிகத்தை ஹரப்பாவிலிருந்து மேற்கே சுமார் 1000 கி.மீ தொலைவுவரை நீட்டிக்கிறது. ஹரப்பா, மொகஞ்சதாரோ காலம் கி.மு.4500-1500 என்றால் மெஹர்கர் காலம் சுமார் கி.மு.7000. சுமேரிய மெசபடோமிய நாகரிக நீட்சியின் தளமும் காலமும் இதனை ஒட்டியதாகவே உள்ளது. மெஹர்கர் பகுதியை ஒட்டிய சமவெளிப்பகுதியில்தான் இன்றைக்கும் முற்றிலும் அழிந்துவிடாத வட திராவிடமொழியான பிருகு வழங்கி வருகிறது. இந்தச் சான்றுகளும் மரபணுரீதியான சான்றுகளும் பெரிதும் ஒத்துப்போகின்றன.

சுமார் 60 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தெற்குப்பாதை வழியே வந்தவர்களும் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகள் முன்பும், 6 ஆயிரம் ஆண்டுகள் முன்பும் வடகிழக்கிலிருந்து வந்தவர்களும் இணைந்துதான் திராவிடமொழிகள் பேசும் மக்கட்பகுதிகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், திராவிடமொழிகள் பேசுவோரும் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் தாம் என்பது தெளிவு. ஆனால் ஆரியர்கள் வரவிற்கு பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே இந்தியாவில் குடியேறியவர்கள் என்பதும் தெளிவு. (நூலிலிருந்து பக்.10-12)

ஆரியப்படையெடுப்பு எனும் கோட்பாட்டை நிர்மூலமாக்கிவிட்டதாகக் கூறப்படும் முதலிரு மரபணுக் கட்டுரைகளுக்கு முன்பும் பின்பும் பல கட்டுரைகள் இந்திய சமூகக் கட்டமைப்பையும், சாதியின் தோற்றம் குறித்தும் மரபணு அடிப்படையில் ஆய்வு செய்துள்ளன. இவை இந்தியாவில் வர்க்கரீதியாகவும் சாதியரீதியாகவும் மேல்தட்டு ஆதிக்கத்திலுள்ள ஊடகங்களில் பெருமளவு இருட்டடிப்பு செய்யப்பட்டவைதான். ஆரிய திராவிடப் பிரிவினைக்கெல்லாம் அப்பாற்பட்ட உலகக் குடிமக்களாகவும் 120 கோடி இந்தியர்களையும் தம் சகோதரர்களாகவும் தமக்கு இணையானவர்களாகவும் கருதுவதுபோல பாவனை செய்யும் மேட்டுக் குடிகளாலும் கண்டும் காணாமல் விடப்பட்டவைதான். (நூலிலிருந்து பக்.18)

இந்தக் கட்டுரைகளும், ஆய்வுகளும் காட்டுவதுதான் என்ன? நம்முடைய தொல்பழங்காலம் குழப்பமானது. ஆய்வுகள் தொடர்கின்றன. ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட பல்துறை ஆய்வு மட்டுமே இந்த வினாவிற்கு நியாயம் செய்யும். இதுவரை தனித்தனியாய் நடந்துள்ள வெவ்வேறு துறை ஆய்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நோக்கினால், இடதுசாரி வரலாற்று அறிஞர்களான ரோமிலா தப்பார், டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா போன்றோர் கூறிவரும் கருத்துகளை நிராகரிக்க ஏதும் முகாந்திரம் இல்லை. உயர்சாதி உயர்தட்டு ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் ஆய்வுமுடிவுகளைத் திரித்தும், வடிகட்டியும் தங்கள் ஆதிக்க இருப்பினை மறைக்கவும் அதற்கெதிரான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தவும் முயற்சிக்கின்றன. அவர்களது சுயநலமான செயலை எதிர்ப்பது, வேறுபாடுகளை விரும்புவதுபோல தோற்றம் கொண்டுவிடும் அபாயமுள்ளது. மேலும் மரபணு அடிப்படை இருந்தால் அது மாற்றமுடியாத இயற்கை என்பதுபோன்ற ஒரு தவறான புரிதலுக்கு வந்துவிடும் அபாயமும் உள்ளது. ஆனாலும், இவற்றைக் கையாளாது விடுவது அநியாயத்திற்கு துணைபோவதாகவே அமையும். (நூலிலிருந்து பக்.36-37)

நூல் : சாதி வர்க்கம் மரபணு
ஆசிரியர் : ப.கு.ராஜன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424 | 2433 2924
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : periyarbooks | thamizhbooks | panuval

தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !

தரம் தகுதி பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !

“5-ம் வகுப்புக்கும், 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த வருடம் மட்டுமல்ல, எந்த வருடமும் கிடையாது” என்று 2019 பிப்ரவரியில் திட்டவட்டமாகச் சொன்னார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அதே நபர், அதே வாய், அதே பிரச்சினை. ஆனால், இப்போது 2019 செப்டம்பரில், “5 மற்றும் 8- வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு” என்கிறார்.

இந்த அறிவிப்பு வந்து இவ்வளவு நாட்களாகியும் இப்போது வரை, பள்ளிக்கூடங்களுக்கோ ஆசிரியர்களுக்கோ இது குறித்த அரசாணை, அறிவுறுத்தல் எதுவும் அளிக்கப்படவில்லை. அப்படியே வந்தாலும், “1 முதல் 8 வகுப்புகளுக்கு முப்பருவத் தேர்வுமுறையை வைத்துக்கொண்டு பொதுத் தேர்வை எப்படி நடத்துவது?” என்று எத்தனை யோசித்தாலும் ஆசிரியர்களுக்கு விளங்கவில்லை. மேலும், இந்தக் கல்வியாண்டில் முப்பருவத்தின் முதல் பருவத் தேர்வு ஏற்கெனவே முடிந்துவிட்டது. “அது பொதுத் தேர்வின் ஓர் அங்கமா? மீதமுள்ள இரு பருவத் தேர்வுகளும் பொதுத் தேர்வாகக் கருதப்படுமா?” என்பதும் ஆசிரியர்களுக்கு விளங்கவில்லை.

ஏற்கெனவே 10, 12- வகுப்புகளுக்கு நடைபெற்று வரும் பொதுத் தேர்வு; கடந்த கல்வியாண்டிலிருந்து இதனுடன் சேர்ந்துள்ள 11 வகுப்புக்கான பொதுத் தேர்வு. இரண்டுக்கும் கல்வியாண்டின் இரு மாதங்களை ஆசிரியர்கள் ஒதுக்க வேண்டியுள்ளது. இதில் புதிதாக 5, 8-ம் வகுப்புகளும் சேரும்போது, அதுவும் முப்பருவத் தேர்வு முறையே பொதுத் தேர்வு என்றானால், ஆண்டு முழுவதும் ஆசிரியர்கள் தேர்வு மட்டுமே நடத்திக் கொண்டிருக்க வேண்டிய சூழல் ஏற்படும். பாடம் நடத்த முடியாது. இவையெல்லாம் நிர்வாகம் சார்ந்த நடைமுறைச் சிக்கல்கள்.

இவற்றைக் கடந்த முதன்மையான சிக்கல் என்பது, அவ்வளவு இளம் வயதில் பொதுத் தேர்வு என்பது மிகப்பெரிய உளவியல் வன்முறை. கல்வியின் மீதும் படிப்பின் மீதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது. நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட கட்டமைப்புடன் இயங்கும் பின்லாந்து போன்ற முதலாளித்துவ நாடுகள் 7 வயதில்தான் குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வியைத் தொடங்குகின்றன. 10 வயது வரை தேர்வு என்பதே கிடையாது. ஆனால், இங்கு 4 வயதில் பள்ளிக்கு அனுப்பப்பட்டு, 5 வயதில் முறைப்படியான தேர்வுகள் தொடங்குகின்றன. அது போதாதென்று, 10 வயதில் பொதுத் தேர்வு என்பது நினைத்துப் பார்க்க முடியாத மன நடுக்கத்தைக் குழந்தைகளிடம் உருவாக்கும். தரமான கல்விமுறையில் தேர்வுகள் குறைவாக இருக்க வேண்டும். இவர்களோ தரம் என்ற பெயரில் மேலும், மேலும் தேர்வுகளை அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.

இந்தத் தேர்வு வன்முறைக்கு இலக்காகப் போகும் குழந்தைகள் யார் என்ற கேள்வி முக்கியமானது. கடந்த 30 ஆண்டுகளாக இங்கே ஊதி உருப்பெருக்கப்பட்டிருக்கும் தனியார் கல்வி மோகத்தின் விளைவாக, மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். அடகுவைக்க ஒரு குண்டுமணி தங்கம் இல்லாதவர்கள்தான் அரசுப் பள்ளிகளை நோக்கி வருகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட உதிரித் தொழிலாளிகள், வீட்டு வேலைக்குச் செல்லும் கைம்பெண்கள் –  இப்படிப்பட்ட வர்க்கப் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்தான் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் கணிசமானோர் தாழ்த்தப்பட்ட குழந்தைகள். அரசுப் பள்ளிகளுக்கே உரிய அனைத்து வசதிக் குறைவுகளையும், தடைகளையும் எதிர்கொண்டு இவர்கள் கல்வியின் கரம் பற்றி மேலெழும்பி வந்தாக வேண்டும். இவர்களின் தலையில்தான் தரம் என்ற பெயரில் புதிய பொதுத் தேர்வுகளை சுமத்துகிறது அரசு.

படிக்க :
♦ திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்
♦ தன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் !

2009-ம் ஆண்டு, அப்போது இருந்த காங்கிரஸ் அரசு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தது. இதன்படி நாடு முழுவதும் 1 முதல் 8 வகுப்புகள் வரையிலும் யாரையும் “ஃபெயில்” ஆக்கக்கூடாது, அனைவரும் தேர்ச்சி என்பது நடைமுறைக்கு வந்தது. இந்த முறையானது, கல்வியின் தரத்தை அதிகரித்துள்ளதா, குறைத்துள்ளதா என்பது ஆய்வுக்குரியது. ஏனெனில், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களால் உயிர் எழுத்துக்களைக்கூட வாசிக்க, எழுத முடியாத சூழல் நிலவுகிறது. நாம் படிக்காவிட்டாலும் “பாஸ் ஆகிவிடுவோம்” என்ற மனநிலை மாணவர்களிடமும், “பாடம் நடத்தினால் என்ன, நடத்தாவிட்டால் என்ன? எல்லோரையும் பாஸ் போடத்தானே போகிறோம்?” என்ற மனநிலை ஆசிரியர்களிடமும் கணிசமாக உருவாகியிருக்கிறது. இதை மாற்றிக் கல்வித் தரத்தின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும்; தேர்வுகளற்ற முறையிலும் தரமான கல்வி சாத்தியம் என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஆனால், இதற்கான வழிமுறை புதிய பொதுத் தேர்வுகள் அல்ல. அதேநேரம், இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறையானது, பள்ளி இடைநிற்றலை மிகக் கணிசமாகக் குறைத்திருக்கிறது என்பதும் உண்மை. 2009-ல் இச்சட்டம் அமலுக்கு வந்தபோது 11.21 சதவீதமாக இருந்த தேசிய இடைநிற்றல் விகிதம், 2017-ம் கல்வி ஆண்டில் 3.61% ஆகக் குறைந்துள்ளது.

மரத்தடியில் பாடம் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் அவலநிலை. இவர்களுக்குத் தேவை வகுப்பறையா, பொதுத்தேர்வா ?

2019 பிப்ரவரியில் கட்டாயத் தேர்ச்சி சட்டத்தில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டது மத்திய பா.ஜ.க. அரசு. அப்போதே இதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தாலும், அடுத்து வந்த தேர்தல் பரபரப்பில் அது அத்தோடு அமுங்கிப்போனது. பின்னர் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., தேசியக் கல்விக் கொள்கை 2019 அறிமுகப்படுத்தியது. அக்கொள்கையோ 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்துத் திட்டவட்டமாக எதையும் சொல்லாத தமிழக அரசு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது. எட்டையும் ரெண்டையும் கூட்டினாலும், ரெண்டையும் எட்டையும் கூட்டினாலும் விடை என்னவோ பத்துதான். மொத்தத்தில் சின்னஞ்சிறு பிஞ்சுகளை பொதுத் தேர்வு என்னும் சித்திரவதைக் கூடத்துக்குள் அனுப்பி வைப்பதில் மோடி அரசும், எடப்பாடி அரசும் போட்டிப் போடுகின்றன.

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். ஆனால் முதல் மூன்று ஆண்டுகளுக்கு “ஃபெயில் இல்லை” என்பது தமிழக அரசின் அறிவிப்பு. அதாவது, முதலில் பொதுத் தேர்வு என்ற பழக்கத்துக்குப் பயிற்றுவிப்பது; பின்னர், இறுக்கிப் பிடிப்பது.

நமது கல்விமுறையில் அடிப்படையிலேயே உள்வாங்கும் தன்மை இல்லை. வடிகட்டுவதே இதன் பண்பு. 100 பேர் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தால் 10-ம் வகுப்பில் வெளிவரும்போது, அது 60 பேராகச் சுருங்கிவிடுகிறது. மீதமுள்ள 40 பேர் வெவ்வேறு காரணங்களால் கல்வியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

படிக்க :
♦ 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE
♦ திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !

ஒரு வறிய குடும்பத்தின் பெற்றோர், “நாம்தான் இப்படி லோல்படுகிறோம். பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்துவிடுவோம்” என்றெண்ணிப் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்றால், அவன் படிப்பில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பும் ஊக்கத்தை பெற்றோர் பெறுவர். மாறாக, 5-ம் வகுப்பில் பொதுத் தேர்வு வைத்து அவனை ஃபெயில் ஆக்கினால், “நீ படித்துக் கிழித்தது போதும், வேலைக்குப்போ” என்றுதான் யோசிப்பார்கள். இது ஒரு யதார்த்தம். பெண் குழந்தைகள் ஃபெயிலானால் சர்வ நிச்சயமாக அத்தோடு அவர்களின் கல்வி காலி.

மொத்தத்தில் இந்தப் புதிய பொதுத் தேர்வு அறிவிப்பானது, பெரும் தொகையிலான மாணவர்களைப் பள்ளியில் இருந்து வெளியேற்றும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. “அனைவருக்கும் கல்வி தேவையில்லை” என்பதே இந்த அரசின் மறைமுகச் செயல்திட்டம். அப்படிப் பள்ளியில் இருந்து வெளியே வருவோரை என்ன செய்வது?

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்து பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டால், குழந்தைகள் போய் விழும் இடம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

அதற்குத்தான் பள்ளிக்கூடத்திலேயே தொழிற்கல்வியைப் பரிந்துரைக்கிறது தேசியக் கல்விக் கொள்கை. 2015-ல் மத்திய அரசு கொண்டுவந்த திறன் இந்தியா (Skill India) திட்டத்துக்குத் தேவையான உடல் உழைப்புத் தொழிலாளர்களை அணிதிரட்டும் நோக்கமும் இந்தப் பொதுத் தேர்வின் பின்னே இருக்கக்கூடும். மேலும், இப்படி கீழ் மட்டத்திலேயே ஏழைகளையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் கொஞ்சம், கொஞ்சமாக வடிகட்டுவதன் மூலம் உயர் கல்வி என்பதை உயர்சாதியினருக்கு மட்டும் பாத்தியப்பட்டதாக மாற்றிக்கொள்ள முடியும். இடமும் இருக்கும், ஒதுக்கீடும் இருக்கும், படிக்க ஒடுக்கப்பட்ட சாதி-யை சேர்ந்த மாணவர்கள்தான் இருக்க மாட்டார்கள். அப்படியொரு மீண்ட சொர்க்கத்தை சனாதன ராஜ்ஜியத்தை அரசியல் சாசனச் சட்டத்தின்படியே நம் கண் முன்னே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேநேரம், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கும் பெற்றோர், இந்தச் சுழலில் இருந்து தப்பித்துவிட முடியும் என்று கனவு காண முடியாது. 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்பது தனியார் பள்ளிகளையும் சேர்த்துதான். ஏற்கெனவே 10-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பிலும் அதிக தேர்ச்சி விகிதம் காட்டவேண்டும் என்பதற்காக 9-ம் வகுப்பிலும் 11-ம் வகுப்பிலும் சுமாராக படிக்கும் மாணவர்களை வெளியேற்றுகிறார்கள். இனிமேல் அதை 4-ம் வகுப்புக்கும் 7-ம் வகுப்புக்கும் நீட்டிப்பார்கள். தங்கள் பள்ளியின் ‘தரத்தை’க் காப்பாற்றிக்கொள்ள இதை நிச்சயமாக செய்வார்கள். இத்தகைய “மறைமுக இடைநிற்றலில்” இருந்து தமது பிள்ளைகள் தப்பிக்க நடுத்தர வர்க்கப் பெற்றோர் தனிப் பயிற்சியை நோக்கி ஓடுவது இன்னும் விரிவாகும், தவிர்க்க முடியாததாக மாறும். அந்த வகையில் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் இந்தப் புதிய பொதுத் தேர்வு அறிவிப்பு கூடுதல் தலைவலிதான்.

மொத்தத்தில் மைய அரசும், மாநில அரசும் அனைவரும் படித்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. ஏற்கெனவே பல தலைமுறையாகக் கல்வி பெற்ற உயர்வர்க்கப் பிரிவினர் மட்டும் படிக்கும் வகையில் கல்விமுறையை மாற்றி அமைப்பது, மற்றவர்களை வடிகட்டி வெவ்வேறு உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபடுத்துவது, குலத்தொழில் நோக்கிச் செல்வதற்கு ஊக்குவிப்பது என்பதுதான் இந்த இந்துத்துவக் கும்பலின் சிலபஸ்.

 பி.டி.

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

சிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது ! திருத்துவதில்லை !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 05

பிப்ரவரி 20. தனிநபரும் பேனா மையின் நிறமும்

குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்களை எந்த மை நிரப்பிய பேனாவால் திருத்துவது என்பது பற்றி முன்னர் நான் யோசித்ததில்லை. சிவப்பு மையால் திருத்தினால் என்ன? சமீபத்தில் லேலா இந்த மையின் நிறத்தை ஒரு வளர்ப்புப் பிரச்சினையாகப் பார்க்கும்படி செய்தாள்: நான் திருப்பித் தந்த கணிதப்பாட நோட்டுப் புத்தகத்தைத் திறந்த அவள் அழத் துவங்கினாள்.

“என்ன விஷயம் லேலா?” நான் கவலையோடு கேட்டேன்.

பாடம் தடைப்பட்டது. லேலா அழுகிறாள், திறந்துகிடக்கும் நோட்டுப் புத்தகத்தின் மீது கண்ணீர் துளிகள் விழுகின்றன. அவள் செய்த தப்புகளைத் திருத்திய சிவப்பு மை அழுகிறது.

“என்னால் கணிதப் பாடத்தைப் படிக்க முடியாது!.. என்னால் கணக்குகளைப் போட முடியாது!.. நான் என்ன செய்வது? நான் எப்போதும் தப்பு செய்கிறேன்!.. என் நோட்டுப் புத்தகத்தில் வெறும் சிவப்பு மை மட்டுமே உள்ளது!..”

நான் சிறுமியை சாந்தப்படுத்தி, உற்சாகப்படுத்தினேன். ஆனால் என் முன், மையின் நிறத்திற்கும் குழந்தையின் மனநிலை வளர்ப்பிற்கும் இடையில் இருக்கக் கூடிய தொடர்பு பற்றிய பிரச்சினை தோன்றியது. அதாவது எழுதும் போது குழந்தை செய்யும் தப்புகளைச் சுட்டிக் காட்டித் திருத்த ஆசிரியர் சிவப்பு மையைப் பயன்படுத்துகிறார். நான் எனது பள்ளி நாட்களில் ஆசிரியர் திருப்பித் தரும் நோட்டுப் புத்தகத்தை எப்படிக் கவலையோடு திறந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன். அதிலிருந்த சிவப்புக் கோடுகள் என்றுமே எனக்கு சந்தோஷத்தை அளித்ததில்லை. “மோசம்! தப்பு! உனக்கு வெட்கமாயில்லையா!” என்றெல்லாம் என் ஆசிரியரின் குரலில் இவை என்னைப் பார்த்துக் கூறியதைப் போலிருக்கும். என் நோட்டுப் புத்தகத்தில் ஆசிரியர் சுட்டிக் காட்டிய தவறுகள் என்னை எப்போதுமே அச்சுறுத்தின, இந்த நோட்டுப் புத்தகத்தைத் தூக்கியெறிய அல்லது என்னை இழிவுபடுத்தியதாக எனக்குப்பட்ட அக்குறிகளடங்கிய பக்கத்தைக் கிழித்தெறியக் கூட நான் விரும்பினேன். சில சமயங்களில் நான் நோட்டுப் புத்தகத்தைத் திரும்பப் பெறும் போது அதில் சிவப்பு மையால் இடப்பட்ட குறிகளைத் தவிர ஒவ்வொரு வரியின் கீழும் வளைகோடுகளும் இடப்பட்டிருக்கும். இந்த வளைகோடுகள் கோபம் கொண்ட எனது ஆசிரியரின் நரம்புகளாக என் கண்களுக்குப் பட்டன.

ஆனால் நான் மாணவன் தானே, எல்லாவற்றையும் பிழையின்றி செய்ய என்னால் முடியாதே! “மோசம்! தப்பு! வெட்கமாயில்லையா!” என்ற இந்தப் பயங்கர சமிக்கைகளைக் கண்டு, என்னால் இந்தப் பிழைகளைத் தவிர்க்க இயலவில்லையே (அதுவும் எளியவற்றை) என்று என் மீது நானே கோபப்படுவேன். இந்த சிவப்பு மையை விரும்பும் ஆசிரியர் மீதும் எனக்குக் கோபம் வரும். “நில்! பிழைகளைத் திருத்தாவிடில் மேற்கொண்டு முன்னால் செல்ல முடியாது!” என்று இந்த சிவப்பு வளைகோடுகள் என்னிடம் கூறின. எனக்கோ முன்னால் செல்ல அவ்வளவு விருப்பம்! பிழைகள் இருக்கட்டுமே, என்னைத் தடுத்து நிறுத்தாதீர்கள்! ஓ, சிவப்பு மையே நீ இல்லாமலிருந்தால், இன்னும் நூறு ஆண்டுகள் விஞ்ஞானிகள் உன்னைக் கண்டுபிடிக்காமலிருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!

இந்த சிவப்புக் குறிகள் எப்படி என் மனநிலையைப் பாழ்படுத்தியிருக்கின்றன, பல சமயங்களில் எப்படிக் கண்ணீரை வரவழைத்துள்ளன! உலகில் உள்ள எல்லா ஆசிரியர்களும் மாணவர்களின் பிழைகளை வேட்டையாடிக் கண்டுபிடித்து அதில் மகிழ்ச்சியடைவதென சதித் திட்டம் தீட்டியுள்ளனர்! இப்படி இருந்தால், நாம் அவர்களுக்கு இவ்வளவு திருப்தி தந்திருக்கலாம்: அனேகமாக நாம் நமது நோட்டுப் புத்தகங்களில் எவ்வித கஷ்டமும் இன்றி ஒரு சில மில்லியன் பிழைகளைச் செய்திருக்கின்றோம்! நமது எழுத்து வேலைகளில் உடனடியாகப் பிழைகளைக் கண்டுபிடிப்பதைத் தவிர வேறு எதையும் பார்ப்பது ஆசிரியர்களின் வேலையில்லையோ என்று எனக்குத் தோன்றும். அதனால் தான் நோட்டுப் புத்தகங்களில் பிழைகளைத் “திருத்துவது” என்று கூறுகின்றார்களோ! “திருத்துவது” என்பது இந்தச் செயலின் சாரத்தை சரிவர வெளிப்படுத்தவில்லை; “பிழைகளைக் கண்டுபிடிப்பது” என்று கூறுவது தான் சரியாக இருக்கும். ஏனெனில் இவர்கள் எதையும் திருத்தவில்லை.

அப்போது இந்த சிவப்புக் குறிகளை நான், எனது எதிர்காலம் பற்றிய அக்கறையால் எனது ஆசிரியர் எனக்களிக்கும் “ஊக்கமாக” பார்த்தேன். ஆனால் அவருக்கு எத்தகைய நல்ல நோக்கங்கள் இருந்த போதிலும் இந்த சிவப்புக் குறிகள் என்னை வருத்தமடையச் செய்தன. ஏனெனில் ஒரு பிழை கூட விடாமல் வேலையை சரிவர நான் செய்யாததால் ஆசிரியருக்கு ஏற்பட்ட எரிச்சலை நோட்டுப் புத்தகத்தில் பார்க்க நான் விரும்பவில்லை, ஆசிரியருடைய அன்பு, மென்மை, பாசம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் அடையாளங்களையே நான் பார்க்க விரும்பினேன். சிவப்புக் குறிகள் என் தோல்விகளைச் சுட்டிக் காட்டின, நானோ எனது முன்னோக்கிய பாதையில் ஆசிரியருக்கு என்ன பிடித்துள்ளது என்றறியத் துடித்தேன்.

ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது, நான் ஒரு ஆசிரியராக இருக்கும் போது அதைப் பற்றியெல்லாம் மறந்து விட்டேன். நானும் மாணவனாயிருந்தேன், இந்த சிவப்பு மையை நினைத்து கஷ்டப்பட்டிருக்கிறேன் என்பதை மறந்து விட்டு அதே சிவப்பு மையால் என் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களில் பிழைகளைக் கோடிட்டுக் காட்டுகிறேன். எழுத்து கோணலாக, சாய்வாக எழுதப்பட்டுள்ளதா -அதனடியில் சிவப்புக் கோடு, வாக்கியம் தவறா அதனடியில் சிவப்பு வளைகோடு. எவ்வளவு கவனக் குறைவு, விஷயம் தெரியாமை, திறமையின்மை என்று எண்ணிக் கோபப்படுகிறேன், பதட்டப்படுகிறேன், உணர்ச்சி வசப்படுகிறேன். நானும் ஒரு சமயம் மாணவனாக இருந்தேன் என்பதையும், ஆசிரியரின் சிவப்பு மையை அவள் எப்படிப் பார்க்கிறாள் என்பதற்கும் நான் குழந்தைப் பருவத்தில் எப்படிப் பார்த்தேன் என்பதற்கும் சிறிது கூட வித்தியாசமில்லை என்பதையும் சமீபத்தில் லேலா எனக்கு நினைவுபடுத்தினாள். இதே மாதிரியான சிவப்புக் குறிகளால், கோடுகளால் நான் இவர்களைப் பதட்டமடையச் செய்கிறேன், அழச் செய்கிறேன். நானோ எல்லாம் வேறு மாதிரியாக இருக்க வேண்டும் என்றல்லவா விரும்புகிறேன்.

என்னை இச்சிந்தனைக்கு இட்டுச் சென்ற சிறுமிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இது பின்வரும் “முதுமொழிக்கு” வழிகோலியது:

மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் என் முறையை நான் மேம்படுத்த விரும்பினால், நானும் ஒரு சமயம் மாணவனாக இருந்தேன் என்பதை மறக்கக் கூடாது, அன்று என்னைத் துன்புறுத்திய அதே உணர்வுகள் எனது இன்றைய சிறுவர் சிறுமியரைத் துன்புறுத்தாமலிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறாக குழந்தையைத் தனி நபராக வளர்ப்பதில் என் முன் மையின் நிறம் பற்றிய பிரச்சினை தோன்றியது.

குழந்தை செய்யும் பிழைகளை அடிக்கடி சுட்டிக் காட்டுவது குழந்தைக்கு அதிகம் உதவுமா, அல்லது அவனது வெற்றிகளைக் குறிப்பிடுவது அதிகம் உதவுமா? எப்படிச் செய்யக் கூடாது என்பதன் மீது குழந்தையின் கவனத்தை அதிகம் திருப்ப வேண்டுமா, அல்லது எப்படிச் செய்ய வேண்டும் என்பதன் மீது கவனம் செலுத்த வேண்டுமா? தோல்வி குறித்த வருத்தமா அல்லது வெற்றியின் மகிழ்ச்சியா, எது அவன் வளர்ச்சிக்கு அதிகம் உதவும்? இக்கேள்விகள் அனைத்தையும் ஒரு பிரச்சினையாக ஒன்றிணைத்தால் அது பின்வருமாறு ஒலிக்கக் கூடும்: “மோசம்! தப்பு! வெட்கமாயில்லையா!” என்பது போன்ற எண்ணற்ற குறிப்புகளாக மாறும் சிவப்பு மைக்குப் பதிலாக, “நல்லது! மகிழ்ச்சி! அப்படியே இரு! அற்புதம்!” என்பன போன்ற எண்ணற்ற ஊக்குவிப்புகளாக மாறும் பச்சை மையைப் பயன்படுத்தலாமா?

நிச்சயமாக, இப்பிரச்சினையை ஒரு தலைப்பட்சமாகத் தீர்க்க முடியாது. மையின் நிறத்தின் பின் ஆசிரியரின் கருத்து நிலைகள் உள்ளன, இவற்றில் எதையாவது தேர்ந்தெடுக்க, அல்லது வேறொன்றைத் தேடத் தீவிர சிந்தனை அவசியம். லேலாவுடன் நடந்த சம்பவம் குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்களில் மையின் நிறத்தை மாற்றும்படி செய்தது. இப்போது என் மேசையில் சிவப்பு மை நிரப்பப்பட்ட பேனாவும் பச்சை மை நிரப்பப்பட்ட பேனாவும் உள்ளன. நோட்டுப் புத்தகங்களைத் திருத்தும் போது எனக்குப் பிடித்தவற்றைச் சுற்றி, நான் வெற்றி என்று கருதுவதைச் சுற்றி பச்சை மையால் கோடிடுகிறேன். இந்தப் பச்சைக் குறிகள் குழந்தைகளின் முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்குமான என் பாராட்டுகள். ஒவ்வொரு முறை நோட்டுப் புத்தகங்களைத் திருத்தும் போதும் நான் பச்சை மையைப் பயன்படுத்தினால், என் மனநிலை மேம்படுவதையும் அவர்களுக்கு என்ன தெரியும், அவர்களால் என்ன முடியும் என்று அதிகம் அறிய முடிவதையும் உணர்ந்தேன். நான் சிவப்பு மையால் எழுதும் போது வருவதை விட பச்சை மையால் எழுதும் போது கோடுகளும் வட்டங்களும் அடைப்புக் குறிகளும் நன்கு துல்லியமானவையாக வருவதை உணர்ந்தேன்.

அனேகமாக, எரிச்சலை விட சந்தோஷம் அழகானதாயிருக்க வேண்டும், எனவே குழந்தைகளுக்கு சந்தோஷம் தர வேண்டிய மையால் செய்த குறிகள் அழகானவையாக வருகின்றன. சரி, பிழைகளை என்ன செய்வது? குழந்தைகள் எழுதும் போது செய்யும் பிழைகளை முதலில் கல்வி போதனையின் முறையியல் மேம்பாடின்மையின் விளைவாக நான் கருதுவதால், இவற்றை என் பிழைகளாக ஏற்று, தனி நோட்டுப் புத்தகத்தில் சிவப்பு மையால் எழுதுகிறேன். கவனக் குறைவு, கவனமின்மையால் ஏற்படும் பிழைகளை, அதாவது இயந்திரகதியான பிழைகளை ஒரு பிரிவாகச் சேர்க்கிறேன். இத்தகைய பிழைகள் அதிகமிருந்தால் இந்த இயந்திரகதியான பிழைகளைத் திருத்துவதில் பயிற்சியளிக்காமல் கவனத்தை, செயல் முனைப்பை வளர்க்கும் பயிற்சிகளைத் தருகிறேன். திறமையில்லாததால், தெரியாததால், புரியாததால் செய்யும் பிழைகளை வேறு விதமானவையாகக் கருதுகிறேன். இந்தப் பிழைகளுக்கு ஏற்ப புதிய பயிற்சிகளைத் தருகிறேன், எழுத்து வேலைகளைக் கொடுக்கிறேன், அல்லது பாடத்தை மீண்டும் விளக்குகிறேன்.

படிக்க:
அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

பிழைகளைத் திருத்துவதை புதிய பாடத்தை கிரகிக்கும் நிகழ்ச்சிப் போக்கில், புதிய வேலைகளைச் செய்வதில் சேர்ப்பது எனும் கோட்பாட்டைப் பின்பற்றுகிறேன். பாடங்களை மேற்கொண்டு படிக்கும் போக்கில் பிழைகளைத் திருத்தும் வாய்ப்பு இருந்தால், குழந்தைகளுக்கு மிக சலிப்பேற்படுத்தும் பிழைத் திருத்தம் என்றழைக்கப் படுபவற்றில் நேரத்தை வீணாக்குவதில் பொருள் இல்லை. இப்படியாக இந்தப் பழக்கமான வேலை என் பாடங்களிலிருந்து மறையும், ஆனால் இதனால் என் வகுப்புக் குழந்தைகளின் வெற்றி ஒரு சிறிதும் குறையாது.

இன்று லேலா என்னிடமிருந்து கணித நோட்டுப் புத்தகத்தைப் பெற்றதும், “இதோ, எவ்வளவு கணக்குகளை நான் போட்டிருக்கிறேன், கணிதப் பாடம் எனக்குப் பிடிக்கும்!” என்று மகிழ்ச்சியாகக் கூறிய போது இந்தப் புதிய அம்சத்தைப் பற்றிய குழந்தைகளின் மதிப்பீட்டை அறிந்தேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி ! கருத்துப்படம்

அயோத்தி இறுதித் தீர்ப்பு ! கோர்ட்டாவது மயி@#வது… இந்த விசயத்துல நான் ராசா ஆளு…

***

கண்ணீர் அஞ்சலி – இந்திய ஜனநாயகம்

***

கருத்துப்படம் : வேலன்

நவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2

கடலூர் டவுன்ஹாலில் ரஷ்ய புரட்சியின் 102 – ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ”சோசலிசப் புரட்சியா மனிதகுல அழிவா” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்க பாடலுடன் நிகழ்வு தொடங்கியது. அரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட கலைநிகழ்ச்சிகளில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தலைமை உரையாற்றிய தோழர் பால்ராஜ், தனது உரையில் ”இன்று சமூக சூழல் என்பது சுயநலம் மிக்க சமூகமாக அதிகரித்து வருகிறது. அதற்கு உதாரணமாக கடைகளிலே குடிநீரை பெரும்பாலும் வைத்திருப்பார்கள். ஆனால் இன்றோ அந்த சேவை மனப்பான்மை அற்று போய் குடிநீர் குடிப்பதற்குக் கூட குடம் இல்லாத நிலை உருவாகி வருகிறது. கல்வி பயிலக் கூடிய மாணவர்கள் தாங்கள் தன் குடும்பம், தன் வேலை மட்டும் போதும் என்ற சுயநல மன நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. படித்த மாணவர்களுக்கான வேலை என்பது இல்லாத சூழல் உள்ளது. கிடைக்கும் வேலையை பயன்படுத்தக் கூடிய நிலைக்கு இன்றைய இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதுதான் இந்த அரசின் அவலமாக இருக்கிறது. இதற்கு அடிப்படையான காரணம் முதலாளித்துவம் தான். அதை பாதுகாக்கக்கூடிய அரசு தான். அதை வீழ்த்தாமல் நமக்கான தீர்வு என்பது கிடையாது” என்ற வகையில் பேசினார்.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் ராமலிங்கம் பேசுகையில், ”இன்று எடப்பாடி மோடி அரசு மக்களுக்கு எதிரான கொள்கைகளை தினசரி அமுல்படுத்தி வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் பெரும்பான்மையான சிறு, குறு வணிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடியின் காவி கொள்கையால் நாடு முழுக்க சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் பாசிச ஹிட்லர் போல நடவடிக்கை எடுத்து வருகிறது. ஹிட்லர் தனக்கு எதிரானவர்களை யாராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் கொன்றுவிட வேண்டும். அவர்கள் இறப்பதை நின்று ரசித்து அனுபவிக்கக் கூடிய ஒரு கொடூர பாசிஸ்ட்தான் ஹிட்லர்.

அந்த ஹிட்லருக்கு முடிவு கட்டியது யார் என்றால் ரஷ்யாவில் தோழர் ஸ்டாலின் தலைமையில் செம்படை அவனது மாளிகையில் முடிவு கட்டியது.  ரஷ்ய சோசலிச புரட்சியின் விளைவாக உலக மக்கள் நன்மையாக அந்த செயல் இருந்தது. அது போன்ற ஒரு புரட்சியை முன்னெடுத்தால் தான் இந்தியாவிலேயே மோடி எடப்பாடி எடுக்கும் மக்களுக்கு எதிரான கொள்கைகளை பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து நின்று போராடி முறியடிக்க முடியும்” என்று பேசினார்.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் வெங்கடேசன் உரையாற்றும் பொழுது, ” இன்றைக்கு உலக முதலாளித்துவம் மீளமுடியாத ஒரு பொருளாதார நெருக்கடிக்கு வந்து இருக்கிறது. உலகத்திலுள்ள 99 சதவீத சொத்துக்களை 1 சதவீத  பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள். மீதமுள்ள 99% மக்கள் நடுவீதியில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆக இந்த நெருக்கடியை சமாளிக்க முதலாளித்துவ அரசு கட்டமைப்பு முன்வைக்கக்கூடிய தீர்வு முதலாளிகளை பாதுகாக்கக்கூடிய வகையில் உள்ளது.

பாசிசம் உலகம் முழுவதும் இன்று வளர்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள மோடியும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் இன்று பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. மூன்று ரூபாய் பார்லேஜி பிஸ்கட் வாங்க ஆளில்லாமல் அந்நிறுவனமே இழுத்து மூடப்பட்டுள்ளது. அரசினுடைய கவலைகள் எல்லாம் கார் விற்பனை ஆகவில்லை, ஆடம்பர செல்போன், விலைமதிப்புள்ள பொருட்கள், விற்பனை ஆகவில்லை என்பதுதான். அந்த வகையில் கார்ப்பரேட் தரகு முதலாளிகளுக்கு ஒரு இலட்சத்து 45 ஆயிரம் கோடி வரி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. பதவி ஏற்று 3 ஆண்டில் 2.48 இலட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராடினால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இன்னொருபுறம் மக்கள் பிரச்சனைகளை பேசக்கூடிய சமூக செயல்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

முற்போக்கு எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள், அல்லது கைது செய்யப்படுகிறார்கள். தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளால் மக்கள் பிரச்சனையை தீர்க்க முடியாது. புதிய ஜனநாயக புரட்சிதான் தீர்வு. புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் நிலங்களை விவசாயிகளிடம் பகிர்ந்தளித்து உழுபவனுக்கே நிலம் சொந்தம் உழைப்பவனுக்கு அதிகாரம் என்ற கோட்பாட்டை உருவாக்கும் போதுதான் சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வு பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படும். இதனை நூறு ஆண்டுக்கு முன் ரஷ்யாவில் தோழர் லெனின் தலைமையில் நடந்த புரட்சியின் மூலம் இதைத்தான் செய்து காட்டினார்கள். இதன் பிறகுதான் அங்கே ஏற்றத்தாழ்வு சரி செய்யப்பட்டது. உலகமே கண்டு நடுங்கிய ஹிட்லரை அவனிடத்தில் சென்று சமாதி கட்டியது. சோசலிச ரஷ்யாவின் மக்கள் செம்படை  இன்றைக்கும் அதே சூழல் இந்தியாவில் நிலவுகிறது. ஆக நாம் இப்படிப்பட்ட தியாக உணர்வோடு நாட்டு மக்களின் உரிமையை பாதுகாக்க அர்ப்பணிப்போடு இறுதிவரை போராட வேண்டும்.  இதனை தேர்தல் அரசியல் கட்சிகள் பின்சென்று போராடுவது தீர்வல்ல. ஒரு புரட்சிகர அமைப்பின் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடித்து சோசலிசப் புரட்சிக்கு நாம் முன்னேறி செல்லும்போது தான் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுகட்ட முடியும் ஒரு சுதந்திரமான, சமத்துவமான, ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்.” என்றார்.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலர், தோழர் மணியரசன், ”சோசலிச புரட்சி நடந்தால் எத்தகைய நன்மைகள் விளையும் என்ற அடிப்படையில் பேசினார். இந்தியாவில் ஏற்றத்தாழ்வான சமூகம் உள்ளது குறிப்பாக ஒரு ஏழை வீட்டில் இரண்டு அல்லது மூன்று இலட்சத்தில் தங்களுக்கான திருமணத்தை நடத்தி முடிக்க முடியும் இன்னொரு வர்க்கம் ஐந்து லட்சத்தில் கார் வாங்கி அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்க முடிகிறது.

இந்தியாவில் விவசாய நிலங்களை கோவில்கள், மடங்கள், மத நிறுவனங்களிடம் இலட்சக்கணக்கான ஏக்கர் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு நிலம் இல்லாமல் கூலி அடிமைகளாக இருக்கும் சூழல் உள்ளது. தரமான தண்ணீர், மருத்துவம், கல்வி, சுகாதாரம் அனைத்தும் தனியாரிடம் உள்ளது. காசிருந்தால் தான் வாழ முடியும் என மிகப்பெரிய ஒரு பொருளாதார நெருக்கடியை இந்திய மக்களின் வாழ்நிலையாக இன்றையசூழல்இருக்கிறது.

இதனை மாற்றியமைக்க சோசலிச புரட்சி தான் தீர்வு. ஆனால் ரஷ்யாவில் சோசலிச புரட்சியின் மூலமாக விளைந்த நன்மைகளாக, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தரமான இலவசக் கல்வியை உறுதிப்படுத்தியது. எழுத்தறிவின்மையை முற்றிலுமாக ஒழித்தது. மருத்துவம் நகரங்கள் கிராமங்கள் எந்தவித வேறுபாடு இன்றி தரமான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்தியது.

பெருமுதலாளிகள் தரகு முதலாளிகள் அனைவருடைய நிலங்கள், நிறுவனங்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்டது. சிறு தொழில், குறுந்தொழில், தேசிய தொழில் ஜனநாயக அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது.

விவசாயம் கூட்டுப்பண்ணை அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட்டு இலாபகரமான விவசாய முறையை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் அறிவியல் விஞ்ஞானம் என்ற அடிப்படையில் விவசாயிகளும் விஞ்ஞான ரீதியில் விவசாயத்தை வளர்த்தெடுக்க முன்னெடுக்கப்பட்டன.

பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம ஊதியம், சம உரிமை, பேறுகால விடுமுறை, ஆடைத் தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு நிகரான முக்கிய பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டனர். குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையங்கள், பொது சமையலறைகள், பொது போக்குவரத்து நிறுவனங்கள் பாட்டாளி வர்க்கம் இயக்கக்கூடிய தன்மையை வடிவமைத்தார்கள். முதலாளிகள் இல்லாத ஒரு நிலையை உருவாக்கியதான் ரஷ்ய சோசலிச புரட்சி. அதனை நடைமுறை சாத்தியமாக்கியது சோவியத்து அரசாங்கம்.

படிக்க:
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !

இது போன்ற செயலை இந்தியாவில் ஆளும் வர்க்க முதலாளிகளின் மீறி தேர்தல் அரசியல் கட்சிகளால் செயல்பட முடியுமா என்ற கேள்வியை தான் நாம் அனைவரும் கேட்க வேண்டியுள்ளது. இந்தியாவில் சொல்லக்கூடிய  ஜனநாயகம் என்பது ஒழிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக முறையில் நாம் வாழ்வது என்பது சாத்தியமில்லை. ஆகையால் ரஷ்யாவில் நடந்த சோசலிசப் புரட்சியை போன்று இந்தியாவிற்கு தேவையான ஒரு புதிய ஜனநாயக புரட்சிதான் தீர்வு. அதனை முன்னெடுக்கும் புரட்சிகர அமைப்புகள், புரட்சிகர கட்சிகளோடு பெரும்பான்மையான பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அப்படி செய்தால் ஒழிய முதலாளித்துவத்தை அழித்து மனித குலத்தை பாதுகாக்க முடியும் என்று கூறி முடித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியாக காவி கும்பல் இன்றைய சூழலில் திருக்குறளை, திருவள்ளுவரை காவிமயப்படுத்துவதற்கு எதிராக பள்ளி மாணவர்களுக்கும், பு.மா.இ.மு. தோழர்களுக்கும் திருக்குறள் புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

நன்றியுரையாற்றிய, பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் பூங்குழலி, ”முதலாளித்துவம் அதன் நெருக்கடியால் செத்துக் கொண்டிருக்கிறது. அதை நாம் சவக்குழிக்கு அனுப்பவேண்டிய கட்டாயத்தில் நாம்  ஒவ்வொருவரும் உள்ளோம். அதற்கான பணிகளில் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் ஒன்றுபட வேண்டும். அதுதான் இந்த இந்த நிகழ்ச்சியின் நோக்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவரும் மக்கள் மத்தியில் சென்று பேச வேண்டும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கான புதிய மாற்றத்தை புதிய ஜனநாயக சமூகத்தை படைப்பதற்கு ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்” என்று கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர்.


வம்பர் 7 சோசலிச புரட்சி, 102-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் பூவனூரில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில்  தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர் ஜ. கணேஷ் பாபு தலைமை உரையை நிகழ்த்தினார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் தோழர் ச. மணிவாசகம் இன்றைய இளைய தலைமுறை கலாச்சார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதையும், தொழில்நுட்ப ரீதியில் மாணவர்கள் சீரழிந்து கொண்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி விளக்கினார். குறிப்பாக கல்வி, மருத்துவம், சேவை துறையில் அனைத்தும் தனியார் துறையிடம் சென்று கொண்டிருப்பதை விளக்கிப் பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த மக்கள் அதிகாரம், விருதை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் கு. முருகானந்தம் அவர்கள் பேசுகையில்: “இந்த அரசு நம்மை ஆள தகுதி இழந்து இருப்பதை மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் வெளியிடும் அறிக்கைகளே சான்றாக உள்ளது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது பொருளாதார நிலையில் அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது. வளர்ச்சி வேலை இல்லாத் திண்டாட்டம் பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்….” என்றும் “இதற்கு ஒரே தீர்வு மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்து மக்களுக்கான அரசை அமைப்பது மட்டுமே தீர்வாக அமையும்” என்றார்.

படிக்க :
சிவக்க வைப்போம் இந்தியாவை ! காரப்பட்டு நவம்பர் புரட்சி தின நிகழ்வு !
♦ சுருக்கப்படும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் !

இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கிளை உறுப்பினர் தோழர் வல்லரசு நன்றி உரை ஆற்றினார்.

இதில் சிறப்பு நிகழ்ச்சியாக புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. இதை தோழர் ஞானமணி, தோழர் ஷகீலா, தோழர் சத்தியா ஆகியோர் பாடல்கள் பாடினர். இக்கூட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள் – இளைஞர்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
விருத்தாசலம், தொடர்புக்கு : 97888 08110


வேலூரில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பாக நவம்பர் இறுதி நிகழ்ச்சி கொடியேற்றம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

கிளை சங்க இணைச் செயலாளர் தோழர் சேட்டு தலைமை தாங்கினார். கிளை சங்க பொருளாளர் தோழர் குமார் கொடியேற்றினார். பு.ஜ.தொ.மு. மாவட்ட தலைவர் தோழர் சரவணன், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் உறுப்பினர் தோழர் ஆல்வின் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த தோழர் மன்னாரு மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உரையாற்றினர்.

தகவல்: பு.ஜ.தொ.மு., வேலூர்.

கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! | மதுரை அரங்கக் கூட்டம்

கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! பாதுகாப்போம் ! பரப்புவோம் ! – மதுரை அரங்கககூட்டம்

  • 2600 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியின் தொன்மை, தமிழ்சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாடு!
  • கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள்! பாதுகாப்போம்! பரப்புவோம்!

என்கின்ற தலைப்பில் கடந்த 21-ம் தேதி அன்று மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் மதுரையில் அரங்கக்கூட்டம் நடந்தது.

இந்நிகழ்விற்கு தோழர். ராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தன்னுடைய தலைமையுரையில்;

“அத்திவரதரை பார்க்க சென்றதை போன்று கூட்டம் கூட்டமாக தமிழக மக்கள் கீழடிக்கு சென்று பார்க்கின்றனர். ஒரு தொல்லியியல் ஆய்வை இவ்வளவு மக்கள் சென்று பார்ப்பது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தருகிறது. ஆனால் எதிரிகளுக்கு அச்சத்தை தருகிறது. ஏனென்றால் தமிழன் என்றாலே இந்துதான் என்று சொல்லித்திரியும் பார்ப்பன பிஜேபி கும்பலுக்கு அவர்களுடைய வேத மரபுக்கான எந்த ஆதாரமும் கீழடியில் கிடைக்க வில்லை எனும் போது அச்சம் வரத்தானே செய்யும். அதனால்தான் கீழடியை இந்த அரங்கக்கூட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சுவரொட்டியை ஒட்டிய தோழர்களை கூட காவல்துறையை விட்டு கைது செய்கிறது அரசு.

அதேபோல் பகவத்கீதையை அண்ணா பல்கலை பாடத்திட்டத்தில் சேர்த்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்க சென்ற போது காவல் ஆய்வாளர் “குரான், பைபிள் சேர்த்தால் இப்படி எதிர்ப்பீர்களா” என்று பிஜேபி உறுப்பினர் போல பேசி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தார். எனவே இந்து பார்ப்பன பாசிசம் நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் இந்த சூழலில்தான் கீழடியில் தொல் தமிழர் நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது. எனவேதான் அத்தகைய அடையாள சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என்கிறோம்” என்று பேசினார்.

படிக்க :
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !
♦ திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். கதிரவன் “2600 வருடங்களுக்கு முன்னரே ஒரு நகர பண்பாட்டை தமிழர்கள் பெற்று இருந்தனர் என்பதை தமிழக மக்கள் அனைவரும் பெருமையோடு பார்க்கின்றனர். மேலும் அபோதே எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழகம் இருந்திருக்கிறது. எனவே மார்க்சியத்தின் அடிப்படையிலேயே பார்த்தால் கூட கீழடி போன்ற கண்டுபிடிப்பு ஆவனங்களை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழ் இலக்கிய ஆளுமைகள் அனைவரும் சொன்னதை போல சங்க கால இலக்கியங்கள் வெறும் கற்பனை அல்ல என்பது கீழடியின் மூலமாக இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்போது திடீரென மகாபாரத போரை பற்றி ஏதோ தடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெரிய அளவில் விளம்பரப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த கண்டுபிடிப்பை பற்றி இந்திய தொல்லியியல் ஆய்வு நிறுவனம் இதுவரை கால கண்டுபிடிப்பை உறுதி செய்யவில்லையாம். இப்படி உறுதிபடுத்தப்படாத தகவல்களை வைத்துக்கொண்டுதான் இவர்கள் கீழடியை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறார்கள். வெறும் 50 சென்ட் நிலத்தில் மட்டும்தான் தற்போது கீழடியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 100 ஏக்கர் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பல் இந்த ஆய்வை தடுத்து நிறுத்தாமல் பார்த்துகொள்வது நம் அனைவரின் கடமையாகும்” என்று பேசினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்ததாக சிறப்புரையாற்றிய ஓய்வு பெற்ற‌ தொல்லியல் ஆய்வாளர் திரு. சாந்தலிங்கம் அவர்கள் தன்னுடைய உரையில்

“தானும் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் மொழியின் வரலாறு கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்றுதான் இருந்தேன். ஆனால் அது சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஆசானாக நினைத்திருந்த திரு. நாகசாமி அவர்களால் தவறு என்பதை உணர்ந்தோம். அவர் தமிழ் மொழியை சமஸ்கிருந்தத்திற்கு அடுத்தநிலையில் வைத்து ஒரு புத்தகம் எழுதினார், அடுத்த சில வாரங்களில் அவருக்கு மத்திய அரசின் விருது கொடுக்கப்பட்டது. இப்போது அறிவுஜீவிகள் என்பவர்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றனர். விருதிற்காக தங்களையும் தங்களுடைய அறிவையும் விற்றுவிடுகிறார்கள்.

பொதுவாக பிராமி என்ற ஒரு எழுத்து வடிவ பெயரே கிடையாது, பம்மி என்றுதான் முன்பு இருந்தது அதுதான் மருவி பிராமி என்று வந்தது. அதே போல் அசோகர் காலத்தில் இருந்த எழுத்து வடிவங்களை பற்றி ஒரு பழைய புத்தகம் இருக்கிறது, அதில் திராவிடி என்ற எழுத்து வடிவமும் இடம் பெற்றிருக்கிறது. எனவே அப்போதே திராவிடி என்று தனி எழுத்து வடிவம் கொண்டிருந்ததை எதற்காக தமிழ் பிராமி என்று அழைக்க வேண்டும்? தமிழி என்றே அழைக்கலாம்.

படிக்க :
♦ கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !
♦ பாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் ! மருமகள் உடைத்தால் பொன்குடம் !

மேலும் ‘திராவிட நாகரிகம் அல்ல சுத்தமான தமிழர் நாகரிகம்தான்’ என்று சொல்பவர்களுக்கும் இதுவே பதில் கொடுத்துவிடுகிறது. தமிழ் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்றுதான். இதற்காகத்தான் தமிழ் மொழியின் மேல் குறிப்பாக வட இந்தியர்கள் மற்றும் பிராமணர்கள் வெறுப்பாக இருப்பதற்கு காரணம். ஏனென்றால் தற்போதையநிலையில் அவர்களுடைய அத்தனை புராண கதைகளையும் ஒவ்வொன்றாக பொய்யாக்கும் விதமாக தமிழ் சமூக வரலாறுகள் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழாய்வுகள் மூலமாக வெளிச்சத்திற்கு வருகின்றன” என்று பேசினார்.

மேலும் அவர் தன்னுடைய பணிக்கால அனுபவங்களிலிருந்து தமிழ் மற்றும் இந்திய சமூக வரலாறுகள் பலவற்றை குறிப்பிட்டு அதிலிருந்து கீழடியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக பேசியதும். இறுதியாக நடந்த கேள்வி பதில் கூட்டத்தில் கலந்துகொண்டோர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததும் ஒட்டு மொத்தமாக இந்திய சமூக மற்றும் எழுத்து வரலாற்றின் அடிப்படையை புரிந்து கொள்வதாக இருந்தது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.
தொடர்புக்கு : 97916 53200.

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் எப்போதும்
ஒரு வேட்டையாடப்படும் மிருகமாக இருக்கிறேன்

மனுஷ்ய புத்திரன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நீதி என்ற ஒன்று இருக்கிறது என
இவ்வளவுக்கும் பிறகு நம்பிக்கொண்டிருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
இணக்கமாக வாழும் பொறுப்பு
எனக்குத்தான் முழுமையாக தரப்பட்டிருக்கிறது

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
எப்போதும் ஒரு அன்னியனின்
கடவுச் சீட்டுடன் நின்றுகொண்டிருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
எப்போதும் நிபந்தனையற்று
விட்டுக்கொடுப்பவனாக இருந்திருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் பேச வேண்டிய நேரத்தில் எல்லாம்
மெளனமாக இருக்க
நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
என் தேசபக்தியை நிரூபிக்க
எப்போதும் என் நெஞ்சைப்பிளந்து
காட்டி வந்திருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
பயங்கரவாதிகளைத் தேடுபவர்களால்
முதலில் ஆடை கழற்றிப்பார்க்கப்படுபவனாக இருந்திருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் எனறால்
வேறு யாராகவும் இருக்க
நான் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கிறேன்

படிக்க :
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
♦ அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் !

ஆயினும் நான் ஒரு இஸ்லாமியனாகவே
இருக்க விரும்புகிறேன்
என் நெஞ்சில் நீங்கள்
கடைசியாகப் பாய்ச்சப்போகும்
ஈட்டியின் கூர்மையை
நான் காண விரும்புகிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நீங்கள் அதை ஒவ்வொரு கணமும்
நினைவூட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்

உங்களை முகம் சுழிக்க வைக்கும்
அத்தரை உடலெங்கும் பூசிக்கொண்டு
ஒரு இஸ்லாமிய கதகதப்போடு
உங்களை அணைத்து
முகமன்கூற விரும்புகிறேன்

ஒரு போதும் நாங்கள் சண்டையிட வரவில்லை
இஸ்லாமியர்கள் அமைதியை விரும்புகிறோம்
பிரார்த்தனையின் அமைதியை
கபர்ஸ்தான்களின் அமைதியை
ஒரு தரப்பான நீதியின் அமைதியை

ஒரு இஸ்லாமியனாக வாழ்வது
மிகவும் கடினமானது நண்பர்களே
அவன் எப்போதும் உலகத்தின் சமாதானத்திற்காக வாழவேண்டும்
பிறகு தன்னைத்தானே
சமாதானப்படுத்திக்கொண்டு வாழ வேண்டும்

மேலும் ஒரு இஸ்லாமியனாக இருப்பது
தனியனாக இருப்பதல்ல
அது
ஒரு கூட்டு மனம்
ஒரு கூட்டுக் காயம்
ஒரு கூட்டுத்தண்டனை
ஒரு கூட்டுத் தனிமை
அதை இன்றுதான் அறிந்து கொண்டேன்

நன்றி: மனுஷ்ய புத்திரன்

disclaimer

செருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் !!

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 04c

லெக்ஸேய் இப்போது பணியாற்றிய சண்டை விமான ரெஜிமெண்டுக்கு, டாங்கிச் சேனை பகையணிகளைப் பிளந்து முன்னேறத் தொடங்கியது முதல் போர்வேலை இடைவிடாது நெரித்தது. பகையணி பிளக்கப்பட்ட இடத்துக்கு மேலே ஸ்குவாட்ரன்கள் ஒன்று மாற்றி ஒன்றாகப் பறந்த வண்ணமாக இருந்தன. சண்டையிலிருந்து ஒரு ஸ்குவாட்ரன் திரும்பி தரையில் இறங்கியும் இறங்காததுமாக இன்னொரு ஸ்குவாட்ரன் அதற்கு மாற்றாகப் பறந்தது. இறங்கிய விமானங்களுக்குப் பெட்ரோல் நிரப்பப் பெட்ரோல் லாரிகள் விரைந்தன. காலிக் கலங்களில் பெட்ரோல் களகளவென்று தாரையாய்க் கொட்டியது. விமானிகள் தங்கள் அறைகளிலிருந்து இறங்கவில்லை. சாப்பாடு கூட, அலுமினியப் பாத்திரங்களில் அவர்களுக்கு இங்கே கொண்டு வந்து தரப்பட்டது. ஆனால் எவருமே அதைச் சாப்பிடவில்லை. அன்றைய தினம் சாப்பாட்டில் யாருக்குமே புத்தி போகவில்லை. கவளம் தொண்டையில் சிக்கிக் கொண்டது.

காப்டன் செஸ்லோவின் ஸ்குவாட்ரன் மறுபடி தரையில் இறங்கி, விமானங்கள் காட்டு மறைப்புக்கு இட்டுச் செல்லப்பட்டுப் பெட்ரோல் நிறைக்கப்படுகையில் மெரேஸ்யெவ் இன்பமான சோர்வினால் மூட்டுகளில் வலியை உணர்ந்தவனாக, பொறுமையின்றி வானத்தை நோக்குவதும் பெட்ரோல் நிரப்புவர்களிடம் கத்திப் பேசுவதுமாகப் புன்னகையுடன் விமானி அறையில் உட்கார்ந்திருந்தான். மீண்டும் மீண்டும் விமானச் சண்டையில் கலந்து கொள்ளவும் தன்னைச் சோதித்துப் பார்க்கவும் அவனுக்கு அடங்கா ஆசை உண்டாயிற்று. மார்பை ஒட்டினாற்போல் சட்டைக்குள் இருந்த சரசரக்கும் கடித உறையை அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டான். ஆனால் இவன் இத்தகைய சூழ்நிலையில் கடிதத்தைப் படிக்க அவன் விரும்பவில்லை.

மாலையில், சேனையின் தாக்கு வட்டாரத்தை மங்கல் நம்பகமாக மறைத்துவிட்ட பின்பே விமானிகள் இருப்பிடம் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். வழக்கமாகச் செல்லும் காட்டுக் குறுக்கு வழியில் போகாமல், சுற்று வழியாக, களைகள் மண்டிய ஊடே நடந்தான் மெரேஸ்யெவ்.

திடீரென எதிர்பாராத வகையில் ஜீப். சக்கரங்கள் கீச்சிட அது பாதையில் நிறுத்தப்பட்டது. திரும்பிப் பாராமலே அது ரெஜிமென்ட் கமாண்டர் என மெரேஸ்யெவ் ஊகித்துக் கொண்டான்.

“விமான நிலையம் முழுவதையும் சுற்றிப் பார்த்து விட்டேன்: எங்கே நம் வீரர்? எங்கே மறைந்து விட்டார் வீரர்? என்று. அவரோ, இங்கே உழாவுகிறார்” என்றார் கமாண்டர்.

ஜீப்பிலிருந்து குதித்து இறங்கினார் கர்னல். அவர் தாமே அருமையாகக் கார் ஓட்டுவார். ஒழிவு நேரத்தில் அதில் நேரத்தை செலவிடுவதை விரும்புவார். அவ்வாறே கடினமான வேலைகளில் தாமே ரெஜிமென்டைத் தலைமை வகித்து நடத்திச் செல்வார். பிறகு மாலை வேளையில் எண்ணெய் வழியும் எஞ்சின்களைச் செப்பம் செய்வதில் மெக்கானிக்குகளுடன் பாடுபடுவார். வழக்கமாக அவர் நீலப் பறப்பு உடை அணிந்து வளையவருவார். அவருடைய மெலிந்த முகத்தில் காணப்பட்ட அதிகார தோரணையுள்ள மடிப்புகளையும், புத்தம், புதிய, பகட்டான விமானித் தொப்பியையும் கொண்டே அவரை மெக்கானிக்குகளிலிருந்து தனிப்பிரித்து அறிய முடியும்.

எங்கோ நினைவாகக் கைத்தடியால் தரையைக் கிளறிக் கொண்டிருந்த மெரேஸ்யெவின் தோளைப் பற்றினார் கமாண்டர்.

“எங்கே, உங்களைப் பார்ப்போம்? சைத்தானுக்கே வெளிச்சம் – சிறப்பானது எதையும் காணோமே! இப்போது நான் ஒப்புக் கொள்ளலாம்: நீங்கள் இங்கு அனுப்பப்பட்டபோது, சேனையில் உங்களைப் பற்றிக் கூறப்பட்டவற்றை நான் நம்பவில்லை. சண்டையில் தாக்குப் பிடிப்பீர்கள் என்று நான் நம்பவில்லை. நீங்களோ, என்னமாய்ச் சண்டை செய்திருக்கிறீர்கள்! இது தான் ருஷ்ய அன்னையின் மகிமை! வாழ்த்துகிறேன். வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்” என்றார்….

அலெக்ஸேய் நிலவறைக்குள் போகவில்லை. பிர்ச் மரத்தின் அடியில் காளான் மணம் வீசும் ஈரக் கம்பளி போன்ற பாசியில் படுத்து, ஓல்காவின் கடிதத்தை உறையிலிருந்து பதபாகமாக வெளியே எடுத்தான். ஒரு நிழல்படம் கையிலிருந்து நழுவிப் புல்மேல் விழுந்தது. அலெக்ஸேய் அதை எடுத்தான். அவன் நெஞ்சு படபடத்தது.

நிழல் படத்திலிருந்து அவனை நோக்கியது பழக்கமான, ஆனால் அதே சமயம் இனங்காண முடியாத அளவுக்குப் புதிய முகம். இராணுவச் சீருடை அணிந்த ஓல்காவின் சீருடை அது. இராணுவ உடுப்பு, இடுப்புவார். செந்நட்சத்திர விருது ஆகியவையும் அவளுக்கு மிகவும் இசைந்தன. இராணுவ அதிகாரி உடுப்பு அணிந்திருந்த ஒடிசலான அழகிய பையன் போல இருந்தாள் அவள். ஒரே விஷயம் என்னவென்றால் இந்தப் பையனின் முகம் களைத்துச் சோர்ந்து இருந்தது, ஒளி வீசும் பெரிய, வட்ட விழிகள் சிறுவனுக்கு இயல்பு அல்லாத ஊடுறுவும் நோக்குடன் பார்த்துக் கொண்டிருந்தன என்பதே.

அலெக்ஸேய் அந்த விழிகளை நெடு நேரம் நோக்கியவாறு இருந்தான். அவன் உள்ளம் இனந்தெரியாத இனிய சோகத்தால் நிறைந்தது. விருப்பத்துக்கு உரிய பாட்டொலி மாலை வேளையில் தொலையில் இருந்து கேட்கும் போது உணர்வது போன்ற சோகம் இது. பையிலிருந்து பழைய ஓல்காவின் நிழல்படத்தை எடுத்துப் பார்த்தான் அலெக்ஸேய். அதில் அவள் பல்வண்ண உடை அணிந்து விண்மீன்கள் போல் செறிந்திருந்த வெண் சாமந்த மலர்கள் பூத்துக் குலுங்கிய புல் தரை மேல் உட்கார்ந்திருந்தாள். வேடிக்கை என்னவென்றால் இராணுவ உடையும், களைத்த விழிகளுமாக இருந்த, அவன் முன் கண்டிராத பெண் பழக்கமான பெண்ணைவிட அவனது அன்புக்கு உரியவளாக இருந்தாள். நிழல்படத்தின் மறுபக்கம், “மறந்து விடாதே” என்று எழுதப்பட்டிருந்தது.

– கடிதம் சுருக்கமாக, உற்சாகம் பொங்கித் ததும்புவதாக இருந்தது. ஓல்கா இப்பொழுது சேப்பர் பிளாட்டூன் தலைவி. அவளுடைய பிளாட்டூன் இப்போது சண்டையில் பங்கு கொள்ளவில்லை. அது அமைதி நிறைந்த ஆக்க வேலையில் ஈடுபட்டிருந்தது. ஸ்தாலின் கிராத் நகரை மீண்டும் நிறுவிக் கொண்டிருந்தார்கள் பிளாட்டூன்காரர்கள். ஓல்கா தன்னைப் பற்றிக் கொஞ்சந்தான் எழுதியிருந்தாள். மாபெரும் ஸ்தாலின் கிராத் நகரைப் பற்றியும், அதன் உயிர்த்தெழும் இடிபாடுகள் பற்றியும் மிக ஆர்வமுடன் விவரித்திருந்தாள்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் இப்போது அங்கு வந்துள்ள மாதர்களும் மங்கையரும் சிறுமிகளும் போருக்குப்பின் எஞ்சியிருக்கும் நிலவறைகளிலும் காப்பரண்களிலும் காப்பகழ்களிலும் ரெயில் பெட்டிகளிலும் மண்காப்பறைகளிலும் வசித்துக்கொண்டு நகரைப் புதுப்பித்து நிறுவுவது பற்றி பரவசப்பட்டு எழுதியிருந்தாள். நன்றாக வேலை செய்யும் ஒவ்வொரு பணியாளுக்கும் புதுப்பித்து அமைக்கப்பட்ட ஸ்தாலின்கிராதில் பின்னர் இருப்பிடம் தரப்படுமாம். இது உண்மையானால் போர் முடிந்த பிறகு தங்கி இளைப்பாறத் தனக்கு இடம் இருக்கும் என்பதை அலெக்ஸேய் தெரிந்து கொள்ளட்டும்.

கோடைகால வழக்கப்படி விரைவாக இருட்டாகி விட்டது. கடைசி வரிகளை டார்ச் விளக்கு வெளிச்சத்தில்தான் அலெக்ஸேய் படித்தான். படித்து முடித்ததும் டார்ச் வெளிச்சத்தில் நிழல் படத்தை மறுபடி பார்த்தான். படைவீரப் பையனின் விழிகள் கண்டிப்பும் நேர்மையும் ஒளிர நோக்கின. அன்பே, அன்பே, உன் பாடு எளிதல்ல… போர் உன்னை விடவில்லை, எனினும் உன் உளவுறுதியைச் சிதைக்கவில்லை! எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாயா? எதிர்பார் எதிர்பார்! காதலிக்கிறாயா? காதலி, காதலி, அருமையானவளே! அவளிடமிருந்து, ஸ்தாலின் கிராத் போரில் பங்கு கொண்ட வீரப் பெண்ணிடமிருந்து தனது துர்ப்பாக்கியத்தை இந்த ஒன்றரை வருட காலமாகத் தான் மறைத்துவருவது குறித்து அவனுக்குத் திடீரென வெட்கம் உண்டாயிற்று. அப்போதே தன் அறைக்குப் போய் எல்லா விஷயங்களையும் உள்ளபடியே, ஒளிவு மறைவின்றி எழுதிவிட விரும்பினான். அவள் தீர்மானிக்கட்டும். எவ்வளவு சீக்கிரம் விஷயம் முடிவாகிறதோ அவ்வளவு நல்லது. எல்லாம் தெளிவுபட்டதும் இருவருக்கும் மனச்சுமை குறைந்துவிடும்.

இன்றையச் செயலுக்குப் பின் அவன் அவளோடு சமமாக உரையாட முடியும். அவன் வெறுமே விமானம் ஓட்டவில்லை, போரும் புரிகின்றான். தன்னுடைய எதிர்பார்ப்புகள் வீணாகி விட்டாலோ அல்லது தான் போரில் மற்றவர்களுக்கு ஒப்பாகப் பங்கு கொள்ளத் தொடங்கினாலோ அவளுக்கு எல்லா விஷயங்களையும் தெரிவித்துவிடுவதாக அவன் உறுதி பூண்டிருந்தான், சபதம் ஏற்றிருந்தானே. இப்போது அவன் நோக்கம் ஈடேறி விட்டது. அவனால் வீழ்த்தப்பட்ட இரண்டு பகை விமானங்கள் எல்லோர் கண்களுக்கும் முன்பாகப் புதரில் விழுந்து எரிந்து போயின. முறை அதிகாரி இன்றுப் போர்க்களச் செய்தித் தாள்களில் இந்தத் தகவலைப்பதிப்பித்து விட்டான்.

படிக்க:
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !
கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து !

டிவிஷனுக்கும் சேனைக்கும் மாஸ்கோவுக்கும் இது பற்றிச் செய்தி அனுப்பப்பட்டுவிட்டது.

இதெல்லாம் மெய்யே. அவன் சபதம் நிறைவேறிவிட்டது. இப்போது எழுதலாம். ஆனால் கண்டிப்பாகச் சீர்தூக்கிப் பார்த்தால் “செருப்புக்காலி” சண்டை விமானத்துக்குச் சரியான பகைவன்தானா? நல்ல வேட்டைக்காரன் தன் வேட்டைத் திறமைக்குச் சான்றாக, தான், ஒரு பேச்சுக்குச் சொன்னால், முயலைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூ்றுவானா?…

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !

PP Letter head ராமர் கோயில் கட்டும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். சார்பாக
உச்சநீதிமன்றமே சிரமேற்கொண்டு இருப்பதுதான் தீர்ப்பின் சாரம் !

ட்டத்தின் ஆட்சி, மதச்சார்பின்மை மட்டுமல்ல சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையும் நொறுக்கப்பட்டு இருக்கிறது. அரசின் அனைத்து அதிகார பீடங்களும் பாசிசமயமாகிக்கொண்டு இருக்கும் இச்சூழலில், இந்த  நாட்டில் நீதியை நீதிமன்றம் பெற்றுத்தரும் என்று 70 ஆண்டுகளாக வழக்காடியவர்களுக்கும் அதை நம்பியவர்களுக்கும் தான் இத்தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து இருக்கும். மோடியின் 2.0 பாசிச ஆட்சியில் இதை விட வேறு  நியாமான தீர்ப்பை எப்படி எதிர்பார்க்க முடியும்? இனி சிறுபான்மை மக்களுக்கான இடம் எது என்பதை இத்தீர்ப்பின் மூலம் அரசு நிறுவியிருக்கிறது. நவம்பர் மாதம் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று சுப்ரமணியசாமி கூறியது போலவே தீர்ப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.

 அயோத்தி பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம்  என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்த இடத்திலேயே  இராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். விரும்பிய தீர்ப்புதான் வரும் என்பதற்கான எல்லா அறிகுறிகளையும் மோடி அரசும் யோகி அரசும் சில நாட்களாகவே வெளிப்படுத்தி வந்ததை அனைவராலும் எளிதில் உணர முடிந்தது.

உ.பி. யோகி அரசு பெருமளவு போலீசை குவித்தது மட்டுமின்றி எட்டு தற்காலிகச் சிறைகளையும் உருவாக்கியது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே உ.பி. காவல்துறை தலைவர்களை அக்டோபர் மாதம் அழைத்துப் பேசினார். நவம்பர் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தீர்ப்பு வரலாம் என்று செய்தி பரப்பப்பட்டதற்கு மாறாக திடீரென ஒன்பதாம் தேதி என அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இஸ்லாமியர்களை அச்சத்தில் உறைய வைத்துவிட்டு இத்தீர்ப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

பாபர் மசூதி இருந்த இடமான 2.77 ஏக்கர்  (1500 சதுர மீட்டர்) நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் வழக்கு. ஆனால் அதை விட்டுவிட்டு ராமர் கோயில் கட்ட உத்தரவிட்டிருக்கிறது. இந்த இடத்தை யாரும் உரிமை கோர முடியாது, அது அரசுக்குச் சொந்தம் என்று கூறிவிட்டு, மூன்று மாதத்திற்குள் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி அந்த மொத்த இடத்தையும் அதனிடம் ஒப்படைத்து ராமர் கோயில் கட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பு அளிப்பது என்ன நியாயம்? ‌ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதுதான் இந்துக்களின்  நம்பிக்கையே தவிர, பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் பிறந்தார் என்பது அல்ல. அயோத்தியில் இன்றும் பல ராமர் கோயில்களில் பூசாரிகள் தங்கள் கோயிலில்தான் ராமன் பிறந்தான் என்று கூறிவருகின்றனர். ராமன் அயோத்தியில் பிறந்தான் என்பது அடிப்படையற்ற நம்பிக்கை. ஆனால் பாபர் மசூதி 450 ஆண்டு ஆதாரத்துடன் கூடிய உண்மை வரலாறு.

இந்துக்களின் தரப்புக்கு இவ்வளவு தெளிவாக உத்தரவிட்ட நீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கு வேறு இடத்தில் ஐந்து ஏக்கர் ஒதுக்க வேண்டும் அதில் சன்னி வக்பு வாரியம் மசூதி கட்டிக் கொள்ளலாம் என ’கருணை’ காட்டி பாதிக்கப்பட்ட இசுலாமியர்களுக்கும் நியாயம் வழங்கியிருப்பதாக பாசாங்கு செய்திருக்கிறது. இத்தீர்ப்பு. ராமர் கோயில் கட்டும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். சார்பாக உச்சநீதிமன்றமே சிரமேற்கொண்டு இருப்பதுதான் தீர்ப்பின் சாரம். பாபர் மசூதி இரண்டாவது முறையாக உச்ச நீதிமன்றத்தால் கரசேவை செய்யப்பட்டிருக்கிறது.

படிக்க:
அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

ஓராண்டுக்கு முன் இப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட நான்கு மூத்த நீதிபதிகள் அரசியல் அழுத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆட்பட்டிருப்பதை அம்பலப்படுத்தினர். அது உண்மைதான் என்பதை இந்தத் தீர்ப்பு மூலம் மெய்ப்பித்திருக்கிறார்கள். தனது அரசியல் எதிரியான ப.சிதம்பரத்தை பழிவாங்க மொத்த நீதித்துறையையும் எப்படி மோடி அரசு ஆட்டி வைக்கிறது என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.-வின் விருப்பங்களை மீறி எந்த நீதிமன்றமும் செயல்பட முடியாது என்பதுதான் இன்றைய எதார்த்தம். நாடு முழுவதும் தனது பாசிச அதிகாரத்தை நிலைநாட்ட தேர்தல் உள்ளிட்ட அனைத்து பெயரளவு ஜனநாயகத்தையும் ஒழித்து வருகிறது  பார்ப்பன  – பா.ஜ.க. கும்பல்.

இன்று மராட்டியத்தில் வெட்கமற்ற முறையில் குதிரை பேரத்தில் இறங்கி இருக்கிறது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் அது பற்றி மூச்சுவிடாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கல்வித் திட்டம், தேசப்பாதுகாப்புக்கு ஆபத்து, பயங்கரவாத அச்சுறுத்தல் என்று பீதியூட்டி  பாசிச ஒடுக்குமுறைக்கான அடித்தளத்தை உருவாக்குகின்றனர். மக்களின் அடிப்படை உரிமைகளை நீதிமன்றங்கள் பாதுகாக்கும் என்பதற்கான அடிப்படை தகர்ந்து கொண்டே வருகிறது. இது அபாயத்தின் அறிகுறி. அயோத்தியோடு இது ஒரு போதும் நிற்கப்போவதில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். – இந்துமதவெறி பாசிஸ்டுகளை எதிர்த்து முறியடித்துத்தான் நியாயத்தை நிலைநாட்ட முடியும்  என்பதையே  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது.

தோழமையுடன்,
தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

பாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் ! மருமகள் உடைத்தால் பொன்குடம் !

பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடம்!!

முன்னாள் மைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுத் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியாவும், ராகுல் காந்தியும் பிணை பெற்றிருக்கிறார்கள். பிணை ரத்து செய்யப்பட்டால், திகார்தான்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் “சாரதா சிட்பண்ட்ஸ்”, “ரோஸ் வேலி” நிதி நிறுவன மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மைய அமைச்சர் ப.சிதம்பரம்.

தமிழகத்திலோ தி.மு.க. மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குகள் பாயப்போவதாகவும் முக்கியத் தலைவர் கைது செய்யப்படலாம் என்றும் எச்.ராஜா நேரடியாகவே மிரட்டுகிறார். கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் மீதான 2 ஜி ஊழல் வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, ப.சிதம்பரத்திற்குப் பிணை வழங்க மறுத்த நீதிபதி அஜய் குமார் குஹார் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர்கள், மற்ற எதிர்க்கட்சியினர் மீது ஊழல் குற்றஞ்சுமத்திக் கைது செய்வதன் மூலம், மோடியும் பா.ஜ.க.வும் தங்களை ஊழலுக்கு எதிரானவர்களாக, அதனைச் சகித்துக் கொள்ளாதவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

பா.ஜ.க., 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே ஊழல் எதிர்ப்புப் போராளி என்ற முகமூடியை மாட்டிக்கொண்டுவிட்டது. தனது இப்புதிய வேடத்திற்கு 2ஜி அலைக்கற்றை விற்பனை வழக்கு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கு ஆகியவற்றை கார்ப்பரேட் ஊடகங்களின் ஒத்துழைப்போடு பயன்படுத்திக் கொண்டது.

“எனது அமைச்சரவையில் யாராவது ஒருவர் ஊழல் செய்தார் எனக் காட்ட முடியுமா?” எனச் சவால்விடுகிறார், மோடி. “தேனை எடுத்தவன் புறங்கையை நக்கத்தான் செய்வான்” என ஊழலுக்கு நியாயம் கற்பித்த காலம் பா.ஜ.க. ஆட்சியில் மலையேறிப் போய்விட்டதா, என்ன?

பா.ஜ.க. ஆட்சியில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழலும், கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது நடந்த நில பேர ஊழலும், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழலும் பா.ஜ.க.வின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் பழைய புராணங்கள். இனி உத்தமர் மோடி ஆட்சியில் நடந்து வரும் புதிய ஊழல் புராணத்திற்கு வருவோம்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார்.

அரசுத் திட்டங்களில் சட்டத்தை மீறிக் கையூட்டுப் பெற்றால்தானே ஊழல், ஊழலையே சட்டபூர்வமாக்கிவிட்டால்..? பா.ஜ.க. ஆட்சியில் நடப்பது இத்தகைய சட்டபூர்வ ஊழல்கள்தான். இதற்குப் பணமதிப்பழிப்பு தொடங்கி நாட்டின் சர்வதேச விமான நிலையங்களை இயக்கும் உரிமத்தை அதானிக்கு வழங்கியது வரையிலான மோடி அரசின் பல்வேறு பொருளாதார முடிவுகளை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்களையும் வழக்குகளையும் தனது அரசியல் இலாப நோக்கில்தான் நகர்த்தி வருகிறது, மோடி அரசு.

நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கத்தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்ததாகப் பீற்றிக் கொண்டார் மோடி. ஆனால், அச்சட்டபூர்வ நடவடிக்கை, மோடியே கூறிய மூன்றரை இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்குத்தான் பயன்பட்டது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய சுமார் 8 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கடன்கள் பா.ஜ.க ஆட்சியின் கடந்த ஆறு ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  பா.ஜ.க. அளித்த இந்தச் சட்டபூர்வத் தள்ளுபடியின் காரணமாக இந்திய வங்கித்துறையே இன்று திவால் நிலையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. அரசுக்கு நட்டமேற்படுத்திய 2ஜி விற்பனையை ஊழல் என்றால், இந்திய வங்கிகளைத் திவால் நிலைக்குத் தள்ளிய வாராக் கடன் தள்ளுபடியை என்னவென்பது?

படிக்க:
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
♦ கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !

காங்கிரசு அரசு 2ஜி அலைக்கற்றைகளைக் குறைந்த விலைக்கு விற்றதை ஊழல் எனச் சாடும் மோடி, தனது அரசு ரஃபேல் போர் விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்கியதைத் தேசப் பாதுகாப்பு என நியாயம் கற்பிக்கிறார். மாமியார் உடைத்தால் மண் குடமாம், மருமகள் உடைத்தால் பொன்குடமாம். ரஃபேல் கொள்முதல் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ப.சிதம்பரம், டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலரை ஊழல் வழக்கில் உள்ளே தள்ளிய மோடி அரசுதான், இந்திய வங்கிகளை ஏமாற்றிய விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் பத்திரமாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்தது. நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுத்தான் விமானம் ஏறியதாக வாக்குமூலமே அளித்தார் விஜய் மல்லையா.

தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு, எந்த முதலாளி எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளித்தார் என்பதைக் கணக்குக்காட்டத் தேவையில்லை என்பது சட்டபூர்வமானது. அதாவது இதுநாள் வரை கார்ப்பரேட் முதலாளிகள் இரகசியமாக ஓட்டுக்கட்சிகளுக்கு அளித்துவந்த கருப்புப் பண நன்கொடையை இத்தேர்தல் பத்திரங்கள் மூலம் சட்டபூர்வமாக்கினார் மோடி. இதற்குப் பிரதிபலனாக கார்ப்பரேட் முதலாளிகள் பா.ஜ.க.விற்குத் தமது நன்கொடைகளை வாரி வழங்கினார்கள்.

இது மட்டுமின்றி, ஊழல் ஒழிப்புச் சட்டத்திலும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவந்ததன் மூலம் அதிகார வர்க்க ஊழல்கள் அம்பலமாவதையும் அதிகாரிகள் விசாரணைக் கூண்டில் ஏற்றப்படுவதையும் தடுத்தாண்டிருக்கிறார், உத்தமர் மோடி.

ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. முன்னெடுக்கும் நடவடிக்கைகளோ ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற தார்மீக நோக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. மாறாக, ப.சி. போன்ற தனது நேரடி அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும், எதிர்க்கட்சிகளை அடக்கி வாசிக்க வைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ப.சிதம்பரத்தையும், டி.கே.சிவக்குமாரையும் உள்ளே தள்ளியிருக்கும் மோடியின் சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் எடப்பாடியையும், விஜயபாஸ்கரையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் இந்த அரசியல் சுயநலம்தான்.

தமிழகத்தில் கூவத்தூரில் தொடங்கிய எடப்பாடி அரசின் ஊழல்களும் முறைகேடுகளும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதை அம்பலப்படுத்தி செய்திகள் வெளிவராத நாட்களே இல்லை. இவற்றையெல்லாம் அமித் ஷா கண்காணித்துக் கொண்டிருப்பதாக கிசுகிசுச் செய்திகள் வெளிவருவதைத் தாண்டி, இவை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவுமில்லை. அ.தி.மு.க.விற்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளோ, ஒன்று ஊறுகாய்ப் பானைக்குள் உறங்குகின்றன; அல்லது குற்றவாளிகளுக்கு விசாரணை அமைப்புகளே நற்சான்றிதழ் கொடுத்து அவ்வழக்குகளை ஊத்தி மூடிவிடுகின்றன.

மணல் மாஃபியா சேகர் ரெட்டியுடன் தமிழகத் துணை முதல்வர் ஓ.பி.எஸ். (கோப்புப் படம்)

பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக, ஓ.பி.எஸ்.-இன் நெருங்கிய கூட்டாளி சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 34 கோடி ரூபாய் பெறுமான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. ஊரே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு அலைந்துகொண்டிருந்த வேளையில் சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களே ஊழல் –  முறைகேட்டின் அழிக்கமுடியாத சாட்சியமாக அமைந்தன.

இந்த வழக்கை விசாரித்து வந்த வருமான வரித்துறை இப்பொழுது சேகர்ரெட்டியை விடுவித்துவிட்டது. கட்டுக்கட்டாகக் கைப்பற்றப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் சேகர் ரெட்டி நேர்மையான வழியில் சம்பாதித்தவை என நற்சான்றிதழும் வழங்கிவிட்டது. இந்தத் தலைகீழ் மாற்றத்துக்குக் காரணம் என்ன? ரெய்டு நடந்தபோது ஓ.பி.எஸ். சசிகலா கோஷ்டியில் இருந்தார். அதன் பின் அவர் பா.ஜ.க.வின் தீவிர விசுவாசியாக மாறினார். அந்த மாற்றத்திற்குக் கிடைத்த மரியாதைதான் சேகர்ரெட்டி மீதான வழக்கு வாபஸ்.

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் கோஷ்டி, ஓ.பி.எஸ். கோஷ்டி என இரண்டாகப் பிரிந்து நின்றபோது, தினகரன் கோஷ்டிக்கு எதிராக வருமானவரிச் சோதனை நடத்தி, பணப்பட்டுவாடா செய்ததாகக் குற்றஞ்சுமத்தி வருமான வரித்துறையினர் கொடுத்த பட்டியலில் விஜயபாஸ்கருடன் எடப்பாடியின் பெயரும் இருந்தது. பா.ஜ.க. மத்தியஸ்தம் செய்துவைத்து, ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடியும் ஒன்று சேர்ந்த பின்னர் ஓ.பி.எஸ். துணை முதல்வரானார். ஆர்.கே. நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கிலோ வருமான வரித்துறை விசாரணை என்ற பம்மாத்துதான் நடந்து வருகிறது.

படிக்க:
குட்கா ஊழல் : தமிழகத்தை ஆள்வது அம்மாவின் ஆவிதான் !
♦ அமித்ஷாவின் கூட்டுறவு வங்கி மோசடி செய்தியை மறைத்த ஊடகங்கள் !

2016-ஆம் ஆண்டு சென்னை நகரில் பல இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் சென்னை போலீஸ் கமிசனர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களுக்கு குட்கா ஊழலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்தது. அவ்வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விசாரணை என்ற பூச்சாண்டியைத் தாண்டி அந்த வழக்கில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் நடந்துவிடவில்லை.

அதேசமயம், தமிழ்நாடு முழுவதும் குட்கா விற்பனையோ கொடிகட்டிப் பறக்கிறது. இதற்கென அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீசார் என அனைத்து மட்டத்திலும் மாதம் ஒன்றுக்கு கொடுக்கப்படும் இலஞ்சம் மட்டும் 300 கோடி ரூபாய் என ஜூனியர் விகடன் இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ‘குட்கா’ விஜயபாஸ்கர்.

இவை தவிர, பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு முட்டை வாங்கியதில் ஊழல், அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வில் ஊழல், சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில் ஊழல், போக்குவரத்துத் துறையையே முற்றிலும் முடக்கிப் போட்டுள்ள போக்குவரத்து ஊழல், அரசு கட்டிடங்களுக்கு முறுக்குக் கம்பி வாங்கியதில் ஊழல், ஏரி மணல் அள்ளுவதில் ஊழல் என திரும்பிய பக்கமெல்லாம் ஊழல் செய்து தமிழகத்தையே கொள்ளையடித்து வருகிறது ஆளும் அ.தி.மு.க. இந்தக் கொள்ளைக்கூட்டத்தோடு கூட்டணி கட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க. மேலிடத்திற்கு, அ.தி.மு.க. கட்டும் கப்பம் எவ்வளவு என்பதுதான் இவ்வூழல்களில் பொதிந்திருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

அ.தி.மு.க. என்று மட்டுமல்ல, தனக்கு ஆதாயம் என்றால் எத்தகைய கிரிமினல் பேர்வழிகளையும் காத்து இரட்சிக்க பா.ஜ.க. தயங்குவதேயில்லை.

எடுத்துக்காட்டாக, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் நான்கு பேர் மீது வருமான வரித்துறைச் சோதனைகள் நடத்தப்பட்டு, வருமான வரி மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், அப்பொருளாதாரக் குற்றவாளிகளை மோடி எவ்விதக் கூச்சமும் இன்றித் தனது கட்சியில் சேர்த்துக்கொண்டு, நாடாளுமன்ற மேலவையில் தனது பலத்தைக் கூட்டிக்கொண்டுவிட்டார். இனி அந்த வழக்குகளின் கதி அதோகதிதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை உள்ளே தள்ளிய மோடி – அமித் ஷா இணை, பொருளாதாரக் குற்ற வழக்குகளைச் சந்தித்துவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகுல் ராயை பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக்கி அழகு பார்த்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான முகுல் ராய் பா.ஜ.க.விற்குத் தாவியதற்கு அளிக்கப்பட்டிருக்கும் பரிசுதான் இந்தத் தலைவர் பதவி.

எனவே, பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு என்பதெல்லாம் ஈயத்தைப் பார்த்துப் பித்தளை இளித்த கதை போன்றதுதானே தவிர, அக்கட்சிக்கோ, தனிப்பட்ட விதத்தில் மோடிக்கோ ஊழலை எதிர்த்து சவுண்டு விடுவதற்குக் கடுகளவும் தகுதி கிடையாது.

அழகு

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !

கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !!

2011 -ம் ஆண்டில் ஒரு இரவு. அயோத்தியாவைச் சேர்ந்த நாக வைராகியான ராம் அசாரே தாஸ் தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொல்லப் பார்த்தார்கள்.

கிட்டத்தட்ட செத்தே போய்விட்டோம் என்று நினைத்த நேரத்தில், தன் வலுவையெல்லாம் திரட்டி அந்த கொலைகாரனைத் தள்ளிவிட்டார் ராம் அசாரே. தன்னைக் கொல்ல வந்தவன் யாரென அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த முயற்சிக்குப் பின்னால் இருந்தது தன் சீடனான பிரிஜ்மோகன்தாஸ் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை.

ராம் அசாரே தாஸ் அயோத்தியாவில் உள்ள சௌபுர்ஜி கோவிலின் மகாந்த். அதாவது தலைவர். ஒரு நாள், அதையும் ராம் அசாரேவிடமிருந்து எழுதி வாங்கிவிட்டு, அவரைத் தெருவில் விட்டுவிட்டார் பிரிஜ்மோகன் தாஸ்.

மேல் இருப்பது அயோத்தியாவில் கோவில்களை அடைய நடக்கும் போட்டியின் ஒரு சிறு துளி. அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலின் மகந்த்தும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். அதுவும் தனது அடுத்த மடாதிபதியை நியமித்துவிட்டால் உயிர் எப்போது போகுமெனத் தெரியாது.

அதேபோல, சில மடங்களின் தலைவர்கள் இன்னொரு மடத்தையும் அதன் சொத்துகளையும் அபகரிப்பதும் நடக்கும். சீடர்களை நியமிக்காமலேயே சீடர்கள் தோன்றுவார்கள். இது எல்லாம் அயோத்தியில் நடக்க ஆரம்பித்தது 1980-களில்.

இதன் பின்னணியில் இருப்பது வி.எச்.பி என்கிறது தீரேந்திர கே. ஜா எழுதியுள்ள Ascetic Games: Sadhus, Akharas and the making of the Hindu Vote என்ற புத்தகம்.
அயோத்தியில் உள்ள கோவில்களும் மடங்களும் எப்படி முழுமையாக ஒரு அரசியல் கட்சியின் எடுப்பார் கைப்பிள்ளையாக்கப்பட்டிருக்கின்றன என்பதோடு, அலகாபாத் கும்பமேளா எப்படி ஒரு அரசியல் கருத்துருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் சொல்கிறது இந்தப் புத்தகம்.

உத்தரப்பிரதேசத்திற்கு வெளியில் இருப்பவர்கள் ஒரு போதும் கற்பனைகூட செய்திருக்க முடியாத பல தகவல்களை தீரேந்திர ஜா இந்தப் புத்தகத்தில் கொட்டியிருக்கிறார்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்
♦ சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

வைணவ, சைவ அகாராக்களுக்கிடையிலான மோதல், மகாமண்டலேஸ்வர் போன்ற அர்த்தமில்லாத பட்டங்களின் விற்பனை, கும்ப மேளாவுக்காக போலியாக நாகா சாதுக்கள் பணத்திற்காக அணிவகுப்பது, அந்த நகரமே கிரிமினல்களின் கூடாரமாகியிருப்பது என திகைக்கவைக்கிறது புத்தகம்.

கோவில்களும் மடங்களும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்தால் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

புத்தக ஆசிரியரான தீரேந்திர கே. ஜா பத்தாண்டுகளுக்கு மேல் ஆய்வுசெய்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதை எழுத ஏன் இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டன என்பது புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது. இவர் ஏற்கனவே, Shadow Armies: Fringe Organizations and Foot Soldiers of Hindutva, Ayodhya: The Dark Night ஆகிய நூல்களை எழுதியவர். தி கேரவான், ஓபன், ஸ்க்ரால், தி டெலகிராஃப் ஆகிய பத்திரிகைகளில் எழுதிவருகிறார்.

புத்தகத்தை Westland பதிப்பகத்தின் இம்ப்ரிண்டானா Contxt வெளியிட்டிருக்கிறது. 218 பக்கங்கள். விலை ரூ. 599/-

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

நூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்

1990 – பிப்ரவரி 10-ல், வாரங்கல் ககாதியா பல்கலைக் கழகத்தில் நடந்த ஆந்திரப்பிரதேச வரலாற்றுக் காங்கிரசில், “வகுப்புவாதமும் இந்தியாவின் பழமையும்” என்ற தலைப்பில் பேசப்பட்ட மமிடிப்புடி வெங்கிட ரங்கையா நினைவுச் சொற்பொழிவின் விரிவே இந்த வெளியீடு.

… வகுப்பு, வகுப்புவாதம் ஆகியவற்றை வரையறுத்துச் சொல்லுவது சிரமம். இனத் தன்மை, தொழில், வாழும் இடம், ஜாதி கடைசியாக மத நம்பிக்கைகள் ஆகியவற்றால் வகுப்பு உருவாகலாம். ஆனால் வகுப்புவாதம் எனும் பொழுது நாம் மத சமூகங்களையே மனதில் கொள்கிறோம். இந்தியாவில் சமீப காலங்களில் சீக்கிய மத அடிப்படையில் அமைக்கப்பட்ட சமூகத்திற்கு ஒரு மூர்க்கத்தனமான தனித்தன்மை கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் பொதுவாக இந்தியாவில் வகுப்பு வாதமானது இந்துக்கள் முஸ்லீம்கள் ஆகியோரிடையேயுள்ள உறவின் தன்மையிலேயே பார்க்கப்படுகிறது.

அடிப்படையான மத நம்பிக்கைகள், சடங்குகள், நடைமுறைகள், ஆகியன இயற்கை ஏற்படுத்தும் தடங்கல்களை மனிதன் வெற்றி கொள்ளவும், சமூகப் பிரச்சினைகளில் சகமனிதன் ஏற்படுத்தும் பிரச்சினைகளை வெற்றி கொள்ளவு மான தொடர்ச்சியான போராட்டத்தில் தோன்றி வளர்கின்றன. இயற்கை தரும் சிரமங்களை அறிவுப்பூர்வமாக விளக்குவதற்கு மக்கள் சிரமப்படும்போது, அவர்கள் தெய்வீகமான, மத நம்பிக்கையான விளக்கங்களில் இறங்குகின்றனர். இவை பெருந்திரளான ஆண் பெண் கடவுள்களை உருவாக்கியுள்ளன. நமக்கு அனுகூலமான அல்லது எதிரான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மாதிரியான தெய்வீக சக்திகளே ரிக் வேதத்தில் காணப்படுகின்றன. (நூலிலிருந்து பக். 3 – 4)

… மதங்களை அவை தோன்றிய சமூகச் சூழல்களிலிருந்து தனிமைப்படுத்திப் பார்க்க இயலாது.

காலந்தோறும் மாறி வரும் சமூக பொருளாதாரச் சூழ்நிலைக்குப் பொருத்தமற்றதாக மதக் கொள்கைகள் ஆகும் போது மதத்தைச் சீர்திருத்தவும், மதத்தைப் பின்பற்றுவோருக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அதை மாற்றவும் இயக்கங்கள் நடத்தப்படுகின்றன. ஆரிய சமாஜம், பிரார்த்தனை சமாஜம், பிரம்ம சமாஜம் ஆகியவை தற்காலத்தின் முக்கிய உதாரணங்கள். இவற்றில் ஆரிய சமாஜ இயக்கம் மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. வேதக் கல்வியிலிருந்து விலகி வைக்கப்பட்ட சூத்திரர்கள், குழந்தை மணம், வாழ்க்கை முழுவதும் விதவை நிலை ஆகிய கொடுமைகளுக்கு இரையானோரின் கொடுமைகளை நீக்க அது இயக்கம் நடத்திற்று. விக்கிரக வழிபாட்டையும் இவ்வழிபாட்டினால் தோன்றிய தீமைகளையும் அது எதிர்த்துப் போராடியது.

… ஆனால் இன்றோ இந்து சமூகத்தைச் சீர்திருத்த வேண்டும் என்று ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த மூலவர்களின் ஆர்வங்கள் இஸ்லாம் எதிர்ப்புப் போராட்டங்களாகத் தரந்தாழ்ந்து போகும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதைவிட மோசமானது என்னவென்றால், உலகத்தின் எல்லா ஞானமும், சாதனைகளும் வேதங்களில் உள்ளன என்ற தான்தோன்றித் தனமான கருத்தால் அது தாக்குதல் தொடுக்கவும் தொடங்கியுள்ளது. விவரங்களையும் தடயங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வரலாற்றாளர்கள் இம்மாதிரிப் பிரச்சாரங்களை ஜீரணித்துக் கொள்ள இயலாது.

பண்டைய நூல்களில் பஞ்சமின்றிக் கிடக்கின்ற உண்மைச் செய்திகளாலும், விவரங்களாலும் இந்த விஷமப் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடா விட்டால் அது எழுத்தறிவு பெற்ற மக்களை மத வெறியர்கள் ஆக்கி விடும். அவர்களோ சாதாரண மக்களிடம் மத வெறி என்னும் விஷக் கிருமியைப் பரப்பி விடுவார்கள். இடைக்காலத்தில் சிலுவை யுத்தமும், கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்தாண்டுகளுக்கும் இடையில் நடந்த போர்களும் இம்மாதிரி விஷப்பிரச்சாரங்களும் இதர காரணங்களும் சேர்ந்ததினால் ஏற்பட்ட பைத்தியக் காரத்தனமான போர்களே. தற்காலத்தில் இந்தியாவில் இம்மாதிரியான விஷமப் பிரச்சாரம் தேச ஒருமைப்பாட்டுக்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது. (நூலிலிருந்து பக். 6-7)

படிக்க:
அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

இந்து மதத் தலைவர்களின் வறட்டுத்தனமான சகிப்பின்மைக்கு அயோத்தியின் இடைக்கால வரலாற்றிலிருந்து உதாரணம் காட்டலாம். அவுரங்கசீப் ஆட்சி செய்யும் வரை அவருடைய வலிமையான கை அயோத்தியின் விவகாரங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்தது. ஆனால் 1707-ல் அவர் இறந்த பின், அங்குள்ள சைவ சன்னியாசிக் கூட்டத்துக்கும், வைணவ வைராகிக் கூட்டத்துக்கும் இடையே பயங்கரமான மோதல்கள் நிகழ்ந்ததை நாம் காணுகிறோம். இருவரிடையே உள்ள பிரச்சினையின் அடிப்படையே மத முக்கியத்துவமுள்ள இடங்களையும் புனித யாத்திரீர்களின் கட்டணங்களையும் காணிக்கைகளையும் யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதே! இந்த இரண்டு கூட்டத்தினருக்கும் இடையே நடந்த பயங்கரமான மோதலை விவரித்து 1804-1805-ம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு மூல நூலின் ஒரு பகுதியை இங்கே அப்படியே தருகிறேன்:

“ராமர் பிறந்த தினத்தன்று ஜனங்கள் கோசலாபுரிக்குப் போய் அங்கே கூடினார்கள். அந்தப் பெருங்கூட்டத்தை யாரால் விவரிக்க இயலும்! அந்த இடத்தில் சன்னியாசி உடையில் எண்ணிக்கையிலடங்காத வலுவான போர் வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள். சடைமுடி தரித்திருந்தார்கள். கை கால்களில், திருநீறு பூசியிருந்தார்கள், யுத்தத்தில் மகிழ்ச்சி கொள்ளும் போர்வீரர்கள் அவர்கள். எண்ணிக்கைக்கோ கணக்கில்லை. வைராகிகளுடன் அவர்களுக்கு போர் மூண்டது. வைராகிகளால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. போர்த் தந்திரம் அவர்களுக்குப் போதாது. அவர்கள் சன்னியாசிகளை நோக்கிப் போனது ஒரு தவறு. வைராகி உடை துயரத்தின் அடையாளமாயிற்று. வைராகியுடையணிந்திருந்தவர்கள் சன்யாசிகளைத் தாண்டி ஓடினார்கள். அவத்பூர் வெறிச் சோடிற்று, வைராகியுடையணிந்தவர்களைக் கண்டபோது அவர்கள் (சன்யாசிகள்) பயங்கரமான அச்சுறுத்தினார்கள், அவர்களுடைய அச்சுறுத்தலால் எல்லோரும் அச்சமடைந்தார்கள் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவர்கள் ரகசிய இடங்களில் மறைந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டார்கள். தங்கள் வைதீக அடையாளங்களையும் மறைத்துக் கொண்டார்கள். யாருமே தங்கள் அடையாளத்தைக் காட்டவில்லை (ரகுநாதபிரசாதின் ஸ்ரீமகராஜ சரித்திரம், பக்கம் 42; ஹான்ஸ் பேக்கரின் அயாத்தியா, கார்னிங்னன், 1986, பக்கம் 149-இல் எடுத்துக் காட்டப்பட்டபடி).

இடைக்கால இந்து மதத் தலைவர்கள் கடைப்பிடித்த சகிப்புத் தன்மை என்னும் புனைச்சுருட்டை வெளிப்படுத்த மேலே கொடுக்கப்பட்ட பகுதியே போதுமானது. (நூலிலிருந்து பக். 21-22)

… 1980-ல் உத்தர பிரதேசத் தொல்பொருள் துறையினரால் பெரிதும் சிறிதுமாகக் கிட்டத்தட்ட 6000 கோயில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த ராமபக்தர்களுக்கு எப்போதும் சுதந்திரம் உண்டு. ஆனால் சர்ச்சைக்குரிய இடத்தில், அதிலிருந்து மசூதியை இடித்துவிட்டு ஒரு கோயில் கட்ட மதவெறியர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பாபர் மசூதியை ஒரு தேசியக் கலைச் சின்னமாக்குவதே மிகச்சிறந்த வழி. பலர் இதைத்தான் சொல்லுகிறார்கள். (நூலிலிருந்து பக். 36)

நூல் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்
ஆசிரியர் : ஆர்.எஸ். சர்மா
தமிழில் : பொன்னீலன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 40
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : marinabooksperiyarbooks

குழந்தைகள் மகிழ அவர்களுடன் விளையாட ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 04

டிசம்பர் 6. பிறந்த நாள்

குழந்தைக்கு சந்தோஷம் தர நிறைய சாக்லேட்டு தர வேண்டுமென்றோ, நூற்றுக் கணக்கான விளையாட்டுச் சாமான்களைப் பரிசளிக்க வேண்டுமென்றோ, எண்ணற்ற முறை முத்தமிட வேண்டுமென்றோ, இடையறாது ஏராளமான அன்பு வார்த்தைகளைப் பேச வேண்டுமென்றோ அவசியமில்லை. உண்மையான மகிழ்ச்சியைப் பெற, சந்தோஷமாக இருக்க அவனுக்கு சிறிதளவே போதும். ஒரு மணி நேரம் அவனுடன் விளையாடுங்கள் – அவன் சந்தோஷமடைவான்; சாதாரண தாளையும் எளிய பென்சிலையும் தாருங்கள் – அவன் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சியென பாருங்கள்; வீட்டிற்கு சீக்கிரம் வாருங்கள்- அவனுடைய மகிழ்ச்சிகரமான குதிப்பால் வீடே அதிரும்; இரவு அவனுக்கு ஒரு கதை சொல்லுங்கள் – அவன் உலகிலேயே மிக சந்தோஷமான மனிதனாக உறங்குவான்.

உங்களுடைய மென்மையான, அக்கறை மிக்க உணர்வுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்துங்கள், அவன் எப்போதும் சந்தோஷமானவனாக இருப்பான் என்று என்னால் உறுதி கூற முடியும், இது அவனது அன்றாட மகிழ்ச்சிகளின் தீரா மூல ஊற்றாகும். ஆண்டிற்கு ஒரு முறை, அவனுடைய பிறந்த நாளன்று, தனக்கு நெருக்கமானவர்களின் மத்தியில் தனது தனித்துவம் உயர்ந்துள்ளதை, தான் பெரியவன் ஆனதை உணரும்படி ஏதாவது செய்யுங்கள். அவனுடைய மகிழ்ச்சிக்கு முடிவே இருக்காது.

ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாளையும் வகுப்பில் கொண்டாடுகிறோம். குடும்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது பற்றிய இந்தச் சிந்தனைகள் இதன் தொடர்பாக என் மனதில் உதித்தன.

இன்று நாங்கள் மாரிக்காவின் பிறந்த நாளைக் கொண்டாடினோம். காலையில் குழந்தைகளுக்கு முகமன் கூறிய பின் நான் கம்பீரமாக அறிவித்தேன்:

“உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இன்று நம் மாரிக்காவிற்குப் பிறந்த நாள்!”

குழந்தைகள் சந்தோஷமாகக் கை தட்டுகின்றனர்.

“நீங்கள் அவளுக்கு என்ன வாழ்த்து சொல்ல விரும்புகின்றீர்கள்?”

சான்த்ரோ: “மாரிக்கா, எப்போதும் அன்பான சிறுமியாக இரு!”

தாம்ரிக்கோ: “உன் தாய் நாட்டை விரும்பு!”

தீத்தோ: “உன் பெற்றோர்களை மதித்து நட. படிப்பில் உன் வெற்றிகளால் அவர்களுக்கு சந்தோஷம் தா!”

விக்டர்: “மாரிக்கா, நான் உன்னைத் தொந்தரவு செய்தேன், ஞாபகம் உள்ளதா? இனி அப்படிச் செய்ய மாட்டேன்.”

தேக்கா: “ உன் அறிவால் நீ புகழ் பெற வேண்டும்!”

கோச்சா: ”துணிவுடைய பெண்ணாயிரு!”

ஏக்கா: “நன்கு, அழகாக எழுது!”

நீக்கா: ”நன்கு ருஷ்ய மொழி பேசக் கற்றுக் கொள்!”

லாலி: ”நீ ஒருமுறை கூட உடல் நலம் குன்றி பள்ளிக்கு வராமல் இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.”

இராக்ளி: “மிகச் சிக்கலான கணக்குகளை நீ முதலில் போட வேண்டும்!”

எல்லோரும் வாழ்த்துகளைக் கூறினர். அந்த நேரத்தில் மாரிக்கா கரும்பலகையருகே நின்று புன்முறுவல் பூக்கிறாள், தலையை ஆட்டுகிறாள், ”நன்றி” என்று சன்னமான குரலில் கூறுகிறாள். கண்களில் மகிழ்ச்சி ஒளி.

“குழந்தைகளே! உங்கள் சார்பாக மாரிக்காவை வாழ்த்தி, அவளுக்கு இந்தக் கதைப் புத்தகத்தைப் பரிசளிக்கிறேன். அதில் ‘எங்கள் அன்பு மாரிக்கா! உனக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்! நாங்கள் அனைவரும் உன்னை மிகவும் விரும்புகிறோம். நீ அன்பானவள்! உன் வகுப்பு மாணவர்கள்’ என்று எழுதினேன்.”

புத்தகத்தை மாரிக்காவிற்குத் தருகிறேன். குழந்தைகள் கை தட்டுகின்றனர், மாரிக்காவிற்கோ மகிழ்ச்சி பொங்குகிறது.

”மாரிக்காவிற்காக இன்று எந்த மாதிரி கேள்விகளைத் தயாரித்திருக்கிறேன் பாருங்கள்!”

கரும்பலகையை மூடியிருந்த திரையை திறக்கிறேன். தாய் மொழிப் பாடத்திற்கான பயிற்சியில் வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும் புதிரில் உரிய எழுத்துகளை எழுதினால் “மாரிக்கா” என்ற பெயர் வரும். குழந்தைகள் இதை விரைவிலேயே கண்டுபிடிக்கின்றனர். எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் இதைச் சொல்லுமாறு சைகை செய்கிறேன்.

”மாரிக்கா!” என்று வகுப்பு முழுவதும் உரக்கக் கூவுகிறது.

மற்ற சாதாரண கேள்விகள் அனைத்திற்கும் மாரிக்காவை கௌரவிக்கும் முகமாக பதில் சொல்கின்றனர்.

இடைவேளையின் போது இவளை ஒரு ஸ்டேன்ட் அருகே இட்டுச் செல்கிறோம். இது இரண்டு மீட்டர் அகலமும் ஒன்றரை மீட்டர் உயரமும் உடைய ஒரு மரப்பலகை. இதில் குழந்தைகளுக்கு ஒரு வயது கூட நிரம்பாதபோது எடுத்த புகைப்படங்கள் உள்ளன. அப்படங்கள் வேடிக்கையாக இருக்கின்றன. குழந்தைகள் குறும்புத்தனமாகப் பார்க்கின்றனர். குழந்தைகள் இவற்றைப் பார்த்து மகிழ்கின்றனர். இப்புகைப்படங்கள் ஸ்டேன்டின் மேல் பகுதியில் உள்ளன, கீழ்ப் பகுதிக்கு ஒரு விசேஷம் உள்ளது. பிறந்த நாளன்று குழந்தையை இந்த ஸ்டேன்டின் அருகே அழைத்துச் சென்று, அவனை அருகே நிறுத்தி, உயரத்தை அளக்கிறோம், தேதியை அருகே எழுதி, பெற்றோர்கள் கொண்டு வரும் புதிய புகைப்படத்தை ஒட்டுகிறோம். ஸ்டேன்டில் பல குழந்தைகளின் பிறந்த நாள்களும் குறிக்கப்பட்டு விட்டன. இப்போது மாரிக்காவின் உயரத்தை அளந்து, அருகே தேதியை எழுதி, புகைப்படத்தை ஒட்ட வேண்டும். இந்த வைபவத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. இன்னும் மூன்று முறை மாரிக்காவின் உயரத்தை அளந்து அவள் எப்படி வளர்ந்திருக்கிறாள், எல்லாக் குழந்தைகளும் எப்படி வளர்ந்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

கணிதப் பாடத்திலும் மிகச் சிக்கலான கணக்குகளை மாரிக்காவை கௌரவிக்கும் முகமாகப் போடுகிறோம்.

ஓவிய வகுப்பிலும் ஒவ்வொருவரும் மாரிக்காவிற்காக வரைகின்றனர். ஒரு அழகிய அட்டை தயாராக உள்ளது, குழந்தைகள் தாம் வரைந்தவற்றின் பின் வாழ்த்துகளை எழுதி இதில் வைக்கிறார்கள் (எல்லா எழுத்துகளையும் தெரிந்தவர்கள் எழுதுகிறார்கள்). பின் கர ஒலியோடு மாரிக்காவிற்கு இதை வழங்குகிறோம்.

கடைசிப் பாடவேளையின் போது கலை நிகழ்ச்சியை நடத்துகிறோம். மாரிக்காவை கௌரவிக்கும் முகமாக நடக்கும் அதில் சிலர் கவிதை வாசிக்கின்றனர், சிலர் நடனமாடுகின்றனர், சிலர் பாடுகின்றனர்.

நாள் இறுதியில் சிறுமி அடையாளம் தெரியாதபடி மாறியிருப்பாள். அவள் வேறு ஏதோ மாதிரியானவளாக, நாணம் உள்ளவளாக, சிந்தனையுள்ளவளாக மாறியிருக்கிறாள். அவளிடம் மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் மிகுந்திருக்கும்.

நாள் முடிகிறது. ஒவ்வொருவராக மாரிக்காவை நெருங்கி, மீண்டும் புன்முறுவல் பூத்து, வாழ்த்துக் கூறி விடைபெறுகின்றனர். வீட்டிற்குச் சென்று தம் மகிழ்ச்சியை உற்றார் உறவினருடன் பகிர்ந்து கொள்ள அவள் அவசரப்படுகிறாள்.

மாரிக்காவின் பிறந்த நாளை இப்படித்தான் கொண்டாடினோம்.

“அதிகாரத் தொனியுள்ள அம்மாவின்” மகனின் பிறந்த நாளையும் இதே போல் கொண்டாட நான் சமீபத்தில் திட்டமிட்டிருந்தேன். அன்று அவன் விசேஷ அலங்காரத்துடன் வந்திருந்தான், எல்லோர் கவனத்தையும் கவர்ந்தான்.

“இது அயல்நாட்டுக் காலணி; இதுவும் அயல் நாட்டுக் கோட்டு! இன்று மாலை எங்கள் வீட்டிற்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள். எனக்கு நிறைய பரிசுகள் கிடைக்கும்.”

இவ்வாறாக அவன் வகுப்புகள் துவங்கும் முன்னரே தம்பட்டம் அடிக்கத் துவங்கினான், அவனது பிறந்த நாளைப் பற்றிச் சொல்லி குழந்தைகளை மகிழ்விக்கும் சந்தர்ப்பத்தையே அவன் எனக்குத் தரவில்லை.

குழந்தைகளும் விசேஷமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. “அவனுக்கு என்ன சொல்லி வாழ்த்துவது?”

குழந்தைகள் சொன்னார்கள்: “தம்பட்டம் அடித்துக் கொண்டு திரியாமலிருக்கட்டும்!”

“சிறுமிகளுடன் எப்படிப் பழகுவது என்று தெரிந்து கொள்ளட்டும்!”

“புத்திசாலியாகட்டும்!”

“அவன் நாகரிகமாக நடக்கக் கற்றுக் கொண்டால் நாங்கள் அவனை விரும்புவோம்!”

“அவன் கத்துகிறான்! தன் குற்றத்தை மற்றவர்கள் மீது சுமத்துகிறான்!”

“பொய் பேசாமலிருக்கக் கற்றுக் கொள்ளட்டும்!”

இந்த வாழ்த்துகளை நான் தடுத்து நிறுத்த வேண்டிவந்தது. ஏனெனில் சிறுவன் தலையைக் குனிந்தபடி அழத் தயாரானான்.

“குழந்தைகளே, அவனுடைய மனது அன்பானது என்று எனக்குத் தெரியும், அவன் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறான். அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாருங்கள்!”

குழந்தைகள் கர ஒலி எழுப்பினர். நான் புத்தகத்தைப் பரிசளித்தேன்.

கரும்பலகையை மூடியிருந்த திரையை விலக்கி, அன்றைய பாடங்கள் முழுவதையும் அவனுக்கு அர்ப்பணித்து, குழந்தைகள் சற்று முன் அவன் மனதில் ஏற்படுத்திய காயத்தை சரி செய்யத் தயாரானேன். அறுவைச் சிகிச்சை மருத்துவர் “இதயத்தைத் திறந்து” காயத்தை சரி செய்ய நுண்ணிய உபகரணங்களை எடுத்துக் கொண்டு தயாராவதைப் போல் நான் தயாரான போது, எச்சரிக்கையின்றி கதவை ஒரு தட்டுத் தட்டி உள்ளே எட்டிப் பார்த்த அந்த “அதிகாரத் தொனியுள்ள அம்மா” என்னை ஒரு நிமிடம் வகுப்பறையிலிருந்து வெளியே வருமாறு அழைத்தாள்.

“கதவை மூடுங்கள், இப்போது பாடம் நடக்கிறது!” என்றேன் நான்.

“ஒரு நிமிடம் தான், நீங்கள் என்ன பயப்படுகின்றீர்கள்?”

குழந்தைகள் முன் தாறுமாறாக எதுவும் நடந்து விடக் கூடாதே என்பதற்காக நான் வெளியே தாழ்வாரத்திற்கு வந்தேன்.

இருதய அறுவை சிகிச்சையை துவங்குவதற்காக மேசையருகே இருக்கும் மருத்துவரை பல இனிப்புப் பண்டங்களை காட்டுவதற்காக இதுவரை யாரும் வெளியே அழைத்ததில்லை.

“இங்கே கேக் உள்ளது, எல்லோருக்கும் போதும், சாக்லேட்டுகள், பணியாரம், நாற்பது பாட்டில்கள் லெமனேட். இன்று என் மகனுக்குப் பிறந்த நாள்! குழந்தைகள் கொண்டாடட்டும்! நீங்களும் அவனிடம் அன்பாக இருங்கள்!”

“ஒன்றும் வேண்டாம்! எல்லாவற்றையும் திரும்ப எடுத்துச் செல்லுங்கள்!” என்று நான் கண்டிப்புடன் கூறுகிறேன்.

அவளோ: “பயப்படாதீர்கள், இவையெல்லாம் வீட்டில் செய்தது, ஒன்றும் ஆகாது!”

“எது எப்படியானாலும் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவதென எங்களுக்கு ஒரு முறை உள்ளது. இவையெல்லாம் இல்லாமலேயே கொண்டாடுவோம்.”

அவள்: “அநாவசியம். குழந்தைகளுக்கு இனிப்பு பிடிக்கும், அவர்கள் சந்தோஷப்படுவார்கள். நீங்களும் அவர்களுக்கு சந்தோஷம் தரத்தானே விரும்புகின்றீர்கள்! இதோ உங்கள் வகுப்புக் குழந்தைகள் அனைவருக்கும் சந்தோஷம்!”

மணியடித்து, குழந்தைகள் அனைவரும் வகுப்பறையிலிருந்து வெளியே வந்தனர். “அதிகாரத் தொனியுள்ள அம்மா” உடனேயே அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினாள். குழந்தைகள் முன் அந்த அம்மாவுடன் சச்சரவை வளர்க்க நான் விரும்பவில்லை. குழந்தைகள் கேக், சாக்லேட் ஆகியவற்றோடு அந்த “அதிகாரத் தொனியுள்ள அம்மாவின்” மகனுடைய பிறந்த நாளையும் “சாப்பிட்டனர்”, ஆம், அச்சிறுவனின் பாலான தம் உறவையோ, அவனைப் பற்றிய கருத்தையோ சிறிது கூட மாற்றவில்லை.

படிக்க:
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

இதைப் பற்றி நான் நிறைய நினைக்கிறேன். அப்போது தாழ்வாரத்தில் நான் எப்படி நடந்திருக்க வேண்டும்? இன்னும் கடுமையாக, உறுதியாக, முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்க வேண்டுமோ? குழந்தைகள் இனிப்புகளை வாங்கக் கூடாதென தடுத்திருக்க வேண்டுமோ? ஆனால் இப்போது இது முக்கியமல்ல, குழந்தையின் தன்மையை மேற்கொண்டு எப்படி உருவாக்குவது என்பது தான் முக்கியம்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !

7

ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கு திடீரென திருவள்ளுவர் பாசம் பொங்கிப் பீறிடுகிறது. தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளை தாய் மொழியில் வெளியிட்டார். அதே நேரத்தில் திருவள்ளுவர் படத்திற்கு காவி வண்ணம் பூசி அவர் கழுத்தில் கொட்டையும் நெற்றியில் பட்டையும் பூசி சமூக வலைத்தளங்களில் அலப்பறையை ஆரம்பித்து வைத்தது தமிழக பாஜக-வின் ஐ.டி விங். பக்கவாத்தியமாக மைலாப்பூர் பார்த்தசாரதிகள் குடுமியை இழுத்துக் கட்டிவிட்டு களத்தில் இறங்கினர்.

“வேதங்களில் சொல்லப்பட்டுள்ள தர்ம, அர்த்த, காம, மோட்ச…  ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் தான் திருவள்ளுவர் அறம் பொருள் இன்பம் என தனது குறளை எழுதினார். சொல்லப் போனால் பிராமனிய விழுமியங்களின் படி திருக்குறள் எழுதப்பட்டுள்ளதால் திருவள்ளுவர் நிச்சயம் ஒரு பிராமனராகத் தான் இருந்திருக்க வேண்டும்” என்பது மையிலை மாமா ஒருவரின் துணிபு. மேற்படி பதிவின் பின்னூட்டங்களில் பல்லக்குத் தூக்கிக் கொண்டிருந்த சூத்திர சம்பத்துகளில் ஒருவர் “சாமி, காமத்துக்கு பின்னே மோட்சம் ஏன் திருக்குறளில் இல்லை?” என கேட்டு மண்டையைச் சொறிந்தது தனிக் கதை.

சமீப நாட்களாக ராஜராஜ சோழனின் பெருமை, அங்கோர்வாட் சூரியக் கோயில், தமிழின் பெருமைகள் என காக்கி டவுசர்கள் சப்பளாக் கட்டைகளைத் தூக்கிக் கொண்டு அலைவதை நாம் எல்லோரும் அறிவோம். இதனால் பிஜேபியின் “பி” டீமான சீமானின் திருவோட்டில் விழுந்த ஓட்டையின் விட்டம் எவ்வளவு என்பது  தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று.

நிற்க.

நமது மாமாக்களும் மாமிகளும் கருவாட்டை கடித்துக் கொண்டு பஞ்சாமிர்தம் சாப்பிடத் துணிவானேன்?

***

ற்கெனவே பல மாநிலங்களிலும் தேசிய அளவிலும் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்த்த ஒரு உத்தியை கையிலெடுத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. அதாவது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் பெருமையும் இந்துப் பெருமையும் வேறு வேறல்ல என இரண்டையும் முடிச்சுப் போடுவது; பின்னர் இந்துத்துவத்தை எதிர்த்தால் அதை இந்துமத எதிர்ப்பாக மடைமாற்றி அப்படியே அந்த குறிப்பிட்ட மாநிலப் பண்பாட்டுக்கு எதிரானதாக நிறுவுவது. இந்த அடிப்படையிலான முழக்கங்கள் தான் “குஜராத்தி அஸ்மிதா” மற்றும் “மராத்தி மானூஸ்” போன்ற முழக்கங்கள். இந்த வரிசையில்தான் தற்போது தமிழுக்கு பூணூல் மாட்டும் முயற்சி.

படிக்க:
திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்
♦ எச்ச ராஜாவுக்கு ஃபேஸ்புக்கில் சில அறிவார்ந்த செருப்படிகள் !

ஒருபக்கம் தமிழுக்கு காவி வண்ணம் பூசி அதை இந்துமயமாக்குவது – பின்னர் அப்படியே இந்துத்துவ போர்வையால் மூடுவது. இன்னொரு பக்கம் இதற்கு எதிர்ப்பு வரும் திசையில் இருப்பவர்களை கேலி கிண்டல் செய்து முடக்குவது. இப்போதைக்கு பாஜக தமிழகத்தில் வகுத்திருக்கும் தேர்தல் உத்திகளுக்கு குறுக்கே நிற்பது திமுகதான். திராவிட முன்னேற்றக் கழகம் பெரியாரியத்தில் இருந்து கணிசமாக விலகிச் சென்று விட்டாலும் தேர்தல் அரசியல் நலன் என்கிற வரம்புக்குள் நின்று பாஜக – இந்துத்துவ எதிர்ப்பை மேற்கொண்டு வருகிறது. ஓட்டுக்கட்சிகளுக்கே உரிய சமரங்கள் மற்றும்  போதாமைகள் ஒருபுறம் இருக்க தமிழகத்தைப் பொருத்தவரை தேர்தல் அரசியலில் இந்துத்துவத்தின் நேரடி வெற்றியை தாமதப்படுத்தும் காரணிகளில் பிரதானமாக திமுக இருக்கிறது.

காங்கிரசு மற்றும் ராகுல் காந்தியை கையாள தேசிய அளவில் பாஜக எந்த ஆயுதத்தை பயன்படுத்தியதோ அதே அயுதத்தை திமுக மற்றும் முக ஸ்டாலினை நோக்கி நீட்டியுள்ளது. முதலில் திமுக என்கிற கட்சியின் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்ப்பது – இரண்டாவது அதன் தலைவரை காமெடியன் போல காட்டுவது – மூன்றாவது கலாச்சார பண்பாட்டுத் தளங்களில் திமுக ஏற்படுத்தி வைத்துள்ள அடையாளங்களை கைப்பற்றுவது.

இதில் முதல் அம்சமாக திமுக-வின் மேல் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்த பல்லாண்டுகளாக பார்ப்பன லாபி திமுகவை நோக்கி கட்டமைத்து வந்த “ஊழல் கட்சி” என்கிற பிம்பத்தை ஊதிப் பெருக்குவது. இதற்கு துணை செய்யும் விதமாகத் தான் முரசொலி பத்திரிகையின் கட்டிடம் பஞ்சமி நிலத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்கிற புகார். கடந்த சில மாதங்களாக (வருடங்களாகவே) தொலைக்காட்சிகளில் நடக்கும் அனைத்து விவாதங்களும் திமுகவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரணை செய்யும்  விதமாகவே நடந்துள்ளன என்பதை இந்த பின்னணியில் புரிந்து கொள்ளலாம். இத்தனைக்கும் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளையோ அரசுகளையோ நோக்கி இந்த ஊடகங்கள் சிறிய முணுமுணுப்பைக் கூட எழுப்பவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இரண்டாவது அம்சமாக ராகுல் காந்தியை “பப்பு” என கிண்டல் செய்ததைப் போலத் தான் முக ஸ்டாலினை கிண்டல் செய்யத் துவங்கியுள்ளனர். மூன்றாவது அம்சத்தில் தான் திருவள்ளுவர் வருகிறார். திமுகவின் அடையாளங்களில் முக்கியமானது அந்தக் கட்சியின் மீது இருக்கும் தமிழ் அடையாளம் – குறிப்பாக திருவள்ளுவர். திருவள்ளுவருக்கு கன்யாகுமரியில் கற்சிலை, வள்ளுவர் கோட்டம், பேருந்துகளில் திருக்குறள், கலைஞர் எழுதிய குறளோவியம் என தமிழ்சார்ந்த (குறிப்பாக திருக்குறள் சார்ந்த) கலாச்சார அடையாளங்களை திமுக நிறுவியுள்ளது. இந்த அடிப்படைகளை தகர்ப்பதன் மூலம் திமுகவை பலகீனப்படுத்துவது அந்த இடைவெளியில் தமிழகத்தின் அதிகாரத்தை நேரடியாக கைப்பற்றுவது என்பதுதான் பாஜகவின் வியூகம்.

***

தேர்தல்களை மைக்ரோ அளவிலும் மேக்ரோ அளவிலும் அணுகி வியூகம் வகுப்பது; அதில்  வெற்றி பெறுவது என்பதில் பாஜகவுக்கு நிகரான கட்சி இன்றைய தேதியில் இந்தியாவில் இல்லை. வரலாற்றுரீதியில் இந்துத்துவ அரசியல் நுழையவே முடியாது என்று நம்பப்பட்ட மாநிலங்கள், பிரதேசங்களில் எல்லாம் பாரதிய ஜனதா வெற்றிகரமாக நுழைந்து வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு சவாலான மாநிலங்களின் பட்டியலில் முன்னணியில் நிற்கின்றன கேரளமும், தமிழகமும். இதில் குறிப்பாக தமிழகத்தின் மீது பாஜகவுக்கும் அதன் மூளையாகச் செயல்படும் பார்ப்பனர்களுக்கும் இருக்கும் தீராத ஆத்திரத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.

படிக்க:
மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !
♦ #GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

வடக்கில் பாரதிய ஜனதா பரீட்சித்துப் பார்த்த இந்த உத்திகள் தமிழகத்தில் செல்லுபடியாகுமா?

மேலே குறிப்பிட்டுள்ள மூன்றம்ச அணுகுமுறையில் ஒவ்வொன்றிலும் பாரதிய ஜனதா கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. முதலில் திமுகவை ஊழல் கட்சியாக காட்டி மக்களின் அவநம்பிக்கையை அக்கட்சியின் மீது திருப்பும் முயற்சிக்கு முதல் தடையாக இருப்பது இங்கு நடக்கும் அதிமுக ஆட்சி. கடந்த ஒன்பதாண்டுகளாக மாநில நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் அதிமுகவின் ஆட்சி ஊழல் முறைகேடுகள், பாலியல் குற்றங்கள் என மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடைபெற்றுள்ளது.

முரசொலி அலுவலக கட்டிடம் பஞ்சமி நிலமா இல்லையா என்பதைப் பொறுத்தவரை சாதாரண மக்களின் கேள்வி “அதிகாரத்தில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்காமல் பத்திரிகைகளில் அறிக்கை மட்டும் விடுவது ஏன்?” என்பதாகத்தான் உள்ளது.

ஸ்டாலினை கேலிக்குரியவராக காட்டும் உத்தியின் விளைவாக அவர்கள் எதிர்பார்ப்பது “நம்பிக்கைக்குரிய மாற்று யாரும் இல்லை” (TINA – There Is No Alternative) என்பதை நிறுவுவதே. தேசிய அளவில் மோடி Vs ராகுல் காந்தி என்கிற தெரிவுகள் மக்கள் முன் இருந்த நிலையில் ராகுலை “பப்பு” என கிண்டல் செய்தது பாஜகவுக்கு நல்ல பலனைக் கொடுத்தது – இதற்கு முக்கிய காரணம் ராகுலுக்கு எதிரே நின்றது நரேந்திர மோடி.

மக்களை சிந்திக்கவிடாத வகையில் பேசுவது, சவடால், கண்ணீர் காட்சிகள் என பிரச்சார மேடைகளில் மோடி நடத்திய நாடகங்கள் ஒருபுறம் என்றால், “சின்ன வயதில் முதலையைப் பிடித்து விளையாடிய வீரன், ராஜாவீட்டு கன்றுக்குட்டி ராகுலை எதிர்க்கும் எளிய டீக்கடைக்காரரின் மகன்” போன்ற பிம்பங்களை ஊடகங்களின் உதவியோடு பல ஆண்டுகால முயற்சியில் கட்டமைத்திருந்தது பாஜக. “மோடி என்கிற விண்ணை முட்டும் ஒரு ஆளுமையை எதிர்க்கும் ராகுல் என்கிற கற்றுக்குட்டி” என்ற இந்த உத்தி மிகச் சிறப்பாக பலனளித்தது.

ஆனால், தமிழகத்தின் நிலை வேறு. கலைஞர் அளவுக்கு மு.க. ஸ்டாலின் பேச்சாற்றல் இல்லாதவர் என்பது எந்தளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை திமுகவுக்கு எதிரணியில் நிற்கும் கட்சிகளிலும் அவ்வாறான பேச்சாளர்கள் இல்லை என்பது. பழனிச்சாமி சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தையே கரைத்துக் குடித்த அறிவாளி என்றாலும் சேர்ந்தாற் போல் நான்கு வரிகளை பேசும் ஆற்றல் அவருக்கு இல்லை.

தர்மயுத்த்தம் தோற்ற அன்றே ஓபிஎஸ்-ன் பிம்பமும் தகர்ந்தது. இவர்களைத் தவிர்த்து பார்த்தால், ஜெயக்குமார் போன்றோர்தான் உள்ளனர். தன்னை விட கட்சியில் எவனும் / எவளும் அறிவாளியாக இருந்து விடக்கூடாது என்கிற புரட்சித் தலைவி அம்மாவின் கொள்கையின் வளர்க்கப்பட்ட இயக்கம் என்பதால் அண்ணா திமுக மேலிருந்து கீழ் வரை செல்லூர் ராஜூக்களால் நிரம்பி உள்ளது.

பாரதிய ஜனதா தானே நேரடியாக ஹெச்.ராஜா, நாராயணன், எஸ்.ஆர் சேகர் உள்ளிட்ட தன்னுடைய ஆளுமைகளை தேர்தல் பிரச்சார களத்தில் இறக்கி விடலாம். ஆனால், அப்படி மட்டும் நடந்து விட்டால் திமுக பிரச்சாரத்திற்கே போகாமல் வென்று விடும் – தன்னைப் பற்றிய இந்த உண்மை பாஜகவுக்கும் தெரியும். இப்போதைக்கு ரஜினியை நம்பிக் கொண்டுள்ளனர். இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. ரஜினியின் வாயைத் தைத்து மண்டையின் இருபுறமும் மிச்சமிருக்கும் முடியைக் கோதுவதோடு நிறுத்திக் கொள்ள வலியுறுத்த வேண்டும். மீறி ரஜினி வாயைத் திறந்து பேசி விட்டால் திமுகவுக்கு பிடி கிடைத்து விடும் – ரஜியைப் பற்றிய இந்த உண்மையும் பாஜகவுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

இறுதி அம்சமாக வருகிறார் திருவள்ளுவர். திருவள்ளுவருக்கு பட்டையும் கொட்டையும் சாட்டியாகி விட்டது – ஆனால், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற குறளின் சாராம்சத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பிறப்பினடிப்படையில் வேற்றுமை பாராட்டும் இந்துத்துவத்தை கைவிட வேண்டியிருக்கும். இந்துத்துவம் தமிழை வரித்துக் கொள்வதை அரசியல் உத்தியாக கையில் எடுத்தால் இந்தித் திணிப்பையும் சமஸ்கிருதமயமாக்களையும் கைவிட வேண்டி வரும்.

எனினும் ஒரு குறைந்தபட்ச அளவில் “திருவள்ளுவர் ஒரு துறவி”, “தமிழின் பெருமை அதன் பக்தி இலக்கியங்கள்” என ஜல்லி அடிக்கும் வாய்ப்பு பாஜகவுக்கு உள்ளது. ஆழ்ந்த வாசிப்பறிவற்ற இளம் தலைமுறையினரில் ஒரு சிறிய பிரிவினர் இதற்கு பலியாவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதை வெறுமனே திமுக எதிர்கொள்ளும் சவால் என்று மட்டும் குறுக்கிப் பார்த்து விடக்கூடாது. தமிழகம் பல நூற்றாண்டுகளாக கட்டிக் காப்பாற்றி வந்த ஒரு சகிப்புத் தன்மை மற்றும் மனிதநேயத்தை வேரறுக்கும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளதை முற்போக்காளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்துத்துவ பாசிஸ்டுகள் நம் கலாச்சாரத்தை கைப்பற்ற வருகிறார்கள். அவர்களிடம் கேட்பதற்கு நம்மிடம் சில கேள்விகள் உண்டு.

  • வாழும் மொழியான தமிழை கருவறைக்கு வெளியே நிறுத்தி விட்டு செத்த மொழி சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது ஏன்? கருவறைக்குள் தமிழை எப்போது அனுமதிப்பீர்கள்?
  • திருக்குறளை சொந்தம் கொண்டாடும் பாசிஸ்டுகளே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவரின் வாக்கிற்கு எதிராக சாதியை தூக்கிப் பிடிக்கும் மனுசாஸ்திரத்தையும் பகவத் கீதையையும் கொளுத்துவோம் வருகிறீர்களா?
  • கீழடியில் இல்லாத, திருக்குறளில் இல்லாத மதமான இந்து மதத்தை கைவிடத் தயாரா ஆர்.எஸ்.எஸ் அம்பிகளே?
  • சங்க இலக்கியங்களிலும் பண்டைய தமிழகத்திலும் இல்லாத சாதியை கைவிடத் தயாரா? நாமெல்லாம் தமிழர்கள் தானே, சேரித் தமிழனிடம் திருமண சம்பந்தம் செய்து கொள்ள அக்கிரகாரம் தயாரா?
  • தமிழ் உலகின் மூத்த மொழி என தேனொழுக பேசுகிறார் உங்கள் பிரதமர், அந்த தமிழை அலுவல் மொழியாக அறிவிக்குமா மத்திய அரசு?
  • உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பீர்களா பாஜகவின் திடீர் தமிழ் ஆர்வலர்களே?
  • சமஸ்கிருதத்தை விட தமிழ் தான் மூத்த மொழி என்பதை ஏற்றுக் கொண்டு அறிவிப்பீர்களா?
  • தமிழில் எழுத்துருவான தமிழியில் இருந்து தான் சமஸ்கிருதம் பெற்றுப் போட்ட குட்டிகள் எல்லாம் எழுத்துருக்களைப் பெற்றன என ஒப்புக் கொள்வீர்களா?
  • இனிமேல் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் “நமஸ்தே சதா வத்சலே…” எனத் துவங்கும் பிரார்த்தனைப் பாடலுக்கு பதிலாக தமிழ்தாய் வாழ்த்து பாடத் தயாரா?
  • தமிழ் வாழும் தமிழ்நாட்டில் இருக்கும் சங்கர மடம் உள்ளிட்ட மடங்களில் சமஸ்கிருதத்தை தடை செய்ய போராடுவோம் வருகிறீர்களா?

இந்தக் கேள்விகளை திடீர் தமிழ் வேடம் போட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் கேட்க வேண்டும்.


சாக்கியன்