Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 323

இசை நடனம் பொம்மலாட்டம் கலை வழி கல்விப் பயணம் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 08

கலைப் பாடம்

டுத்தபடியாக எனது பாடத் திட்டத்தில் கலைப் பாடத்தின் உள்ளடக்கமும் இதை எப்படி நடத்த வேண்டும் என்பதும் எழுதப்பட்டுள்ளன. இப்பாடத்தை நான் மாதத்தில் 2-3 முறை நடத்துகிறேன். நுண் கலை, இசை, நடனம், ஒப்பனை, பொம்மலாட்டம், தாள இசை, இசை நாடகங்களை அமைத்தல், பாடங்களுக்குப் பின் படித்தல், உழைப்பு ஆகிய பாடங்களுக்கு முன் அல்லது இவற்றின் சாரத்தை செழுமைப்படுத்தும் வகையில் கலைப் பாடங்களை நடத்துகிறேன். கலை, மக்களின் வாழ்வில், நம் ஒவ்வொருவரின் வாழ்வில் இதன் முக்கியத்துவம் பற்றிய பொதுவான கருத்தை இப்பாடங்களில் தர முயலுகிறேன். எனது ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கிட்டக்கூடிய கலைப் படைப்புகளில் ஆசிரியரின் உணர்வுகள், உறவுகள், சிந்தனையைப் “படிக்கும்” திறமையை அவர்களிடம் வளர்க்கவும், தமது சிந்தனைகள், இன்ப துன்பங்களின் எதிரொலியைக் காண அவர்களுக்குச் சொல்லித் தரவும் இப்பாடங்கள் எனக்கு உதவுகின்றன.

சின்னஞ்சிறு பள்ளி மாணவர்களின் வாய்ப்புகள் கலையின் உச்சியிலிருந்து இப்படித் தள்ளியிருப்பதைப் போன்ற ஒரு உணர்வைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வரும் ஒரு பெரிய மரத்தின் கீழ் விளையாடும் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள். குழந்தைகள் ஒரு வேளை மர உச்சிக்கு ஏற விரும்பினாலும் அவர்களால் முடியாது. ஆனால் கிளைகளில் ஏறி விளையாட அவர்களால் முடியும். இவ்வாறாக இவர்கள் இந்த மரத்தின் கீழ் (இதைக் கலையுடன் ஒப்பிடலாம்) வளருகின்றனர். அவர்கள் மரக் கிளைகள் வரை, அதாவது கலையின் தனிப்பட்ட பிரிவுகள் வரை எட்டிப் பிடிக்கின்றனர். இதை இவர்கள் அருகிலிருந்தும் தொலைவிலிருந்தும் பார்த்து யோசிக்கின்றனர், படிப்படியாக – ஆனால் இளம் வயதிலேயே – கலையின் பன்முகத் தன்மையின் முழுமையை அறியத் துவங்குகின்றனர், மரத்தின் மீதேறி உச்சியிலிருந்து உலகைப் பார்த்து, மக்களின் வாழ்வையும் தம் வாழ்வையும் அறியக் கற்றுக் கொள்ள சக்தியைத் திரட்டுகின்றனர்.

எனது பாடத் திட்டத்தின்படி இன்றைய கலைப் பாடத்தில் குழந்தைகளுக்குப் பின்வருமாறு சொல்வேன்: “சவ்ராசவ் எனும் ஓவியர் வரைந்த ‘ரூக் பறவைகள் பறந்து வந்தன’ எனும் ஓவிய மாதிரியை உங்களுக்கு காட்டுவேன், பின் லாடோ அசாதியானியின் ‘வசந்தம்’ எனும் கவிதையைப் படிப்பேன், பின் இசையமைப்பாளர் செர்கேய் ரஹ்மானினவின் ‘வசந்தம் நடைபோடுகிறது’ எனும் இசை நாடகத்தைச் சேர்ந்து கேட்போம். வசந்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மூன்று படைப்புகளிலும் ஒரு ஓவியர், ஒரு கவிஞர், ஒரு இசையமைப்பாளர் ஆக மூவர் ஒரே உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் தம் படைப்புகளில் எந்த மன நிலையை வெளிப்படுத்த விரும்பினார்கள், இவர்கள் என்ன சொல்ல விரும்பினார்கள் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும்.”

முதலில் ஓவிய மாதிரியைக் காட்டுவேன், கவிதையைப் படிப்பேன், பின் வகுப்பில் இசை ஒலிக்கும். குழந்தைகள் தம் உணர்வுகளில் ஆழமாக மூழ்கவும், இதன் மூலம் படைப்பாளர்களின் உணர்வுகளில் மூழ்கவும் உதவும் பொருட்டு, அவர்களுக்கு ஓவியத்தை இன்னுமொரு முறை காட்டுவேன், கவிதையைப் படிப்பேன், இசையை ஒலிக்கச் செய்வேன். பின் ஓவியர், கவிஞர், இசையமைப்பாளர் பற்றி பேசுவேன். முந்தைய கலைப் பாடங்களில் குழந்தைகள் பல்வேறு ஓவிய மாதிரிகளையும் படங்களையும் பார்த்தனர், இசையைக் கேட்டனர், கவிதைகளைப் படித்தனர். “இவற்றின் ஆசிரியர்கள் தம் படைப்புகளில் எந்த மனநிலையைப் பிரதிபலித்துள்ளனர்? இவர்கள் சொல்ல விரும்பியது என்ன?” என்ற என் கேள்விக்குப் பின்வரும் பதில்கள் கிடைத்தன:

“’அழகாயிருக்கிறது, இல்லையா!’ என்கிறார் ஓவியர்.”

“இசையமைப்பாளர் தனக்கு மிகவும் சோகமாயிருப்பதாகக் கூறுவதைப் போல் உள்ளது. நான் இந்த இசையைக் கேட்ட போது எனக்கும் சோகமேற்பட்டது.”

“’எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்!’ என்கிறார் கவிஞர்.”

படிக்க:
சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் !
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் !

“ஓவியர் அனேகமாக அன்பானவராக இருந்திருக்க வேண்டும். அவருடைய படங்கள் என்னிடம் சோகத்தை ஏற்படுத்துகின்றன.”

இதற்கு மேல் என் வகுப்புக் குழந்தைகள் இதுவரை செல்லவில்லை.

நீண்ட இடைவேளை

நாங்கள் கீழிறங்கி முற்றத்திற்குச் செல்வோம், சுவரில் இலக்கை மாட்டிவிட்டு, பத்தடி தள்ளி நின்று வில்லிலிருந்து அம்பெய்ய ஆரம்பிப்போம். ஒவ்வொருவரும் எப்படி இலக்கில் படுகின்றனர் என்ற விவரங்களைப் போட்டி அட்டவணையில் எழுதுவோம்; ஐந்து நாட்களாக நடக்கும் இப்போட்டி அடுத்த வாரம் முடிவடையும். சிறுவர்கள் மத்தியில் சாஷா முன்னணியில் இருக்கிறான், அவனுக்கு அடுத்த படியாக தாத்தோ, நான் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் இருக்கிறேன். சிறுமிகள் மத்தியில் எலேனா, ஏக்கா, மாக்தா ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

உழைப்புப் பாடம்

இப்பாடவேளையின் போது பள்ளிக்கு அருகில் உள்ள நர்சரிப் பள்ளியிலிருந்து சிறு குழந்தைகளைக் கவனித்து கொள்ளும் பெண்மணி எழுதிய கடிதத்தைப் படித்துக் காட்டுவேன். கெட்டியான காகிதத்திலிருந்து 40 சிறு பெட்டிகளைச் செய்து தருமாறு இவர் கடிதத்தில் என் வகுப்புச் சிறுவர் சிறுமியரைக் கேட்டிருக்கின்றார்; இப்பெட்டிகளில் எண்ணுவதற்காகச் சிறு கற்களைப் போட்டு வைக்கலாம். அவர் எப்படிப்பட்ட சிறு பெட்டி செய்ய வேண்டுமென காட்டுவதற்காக ஒரு மாதிரி பெட்டியையும் அனுப்பியிருக்கின்றார். குழந்தைகள் இந்த வேண்டுகோளை மகிழ்ச்சியோடு நிறைவேற்றுவார்களென நம்புகிறேன். அவர்கள் பின்வருமாறு சொல்லும்படி நான் பேச்சு கொடுப்பேன்:

“இந்த மாதிரிப் பெட்டியை விட அழகான பெட்டிகளைச் செய்வோம்!”

“வரைதல் பாடத்தில் கற்றுக் கொண்டபடி இவற்றைச் சுற்றி அலங்கரிப்போம்!”

“ஒவ்வொருவரும் தலா 2-3 பெட்டிகளைச் செய்யட்டும். அப்போது தான் அழகான 40 பெட்டிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.”

பின்னர் இவற்றை எப்படிச் செய்வதென நான் சொல்லித் தருவேன். நானும் எப்படிச் செய்கிறேன் என்று வாய் விட்டு சொல்லியபடியே குழந்தைகளோடு சேர்ந்து பெட்டியைச் செய்வேன், அது எப்படியுள்ளது என்று மதிப்பிடும் படி குழந்தைகளிடம் சொல்வேன். 35 நிமிடப் பாடவேளையின் போது இவ்வேலையை முடிக்க முடியாது. எனவே இதை வீட்டில் தொடருமாறு குழந்தைகளிடம் சொல்வேன். “மூன்று நாட்கள் கழித்து இவற்றை நர்சரிப் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென” அவர்களிடம் கூறுவேன்.

பாடங்களுக்குப் பின்

பின்னர் கூடுதல் பள்ளி நேரம் துவங்கும். இந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பெண்மணிகளும் குழந்தைகளோடு பல விதமான வேலைகளில் ஈடுபடப் போகும் பெற்றோர்களும் சேர்ந்து முடிவு செய்கின்றனர். குழந்தை வளர்ப்பு பற்றி நாங்கள் கூட்டாக வகுத்த திட்டத்தின் பொது லட்சியங்களும் கோட்பாடுகளும் தான் இங்கும் அடிப்படையில் உள்ளன. ஒவ்வொரு வார இறுதியிலும் நாங்கள் சந்தித்து ஒவ்வொருவரும் செய்து வரும் காரியத்தை ஒத்திசைவிக்கின்றோம். இன்று இசை நாடக ஒத்திகை, பூங்காவில் உலாவுதல், புத்தகம் படித்தல், கார்டூன் படம் பார்த்தல் முதலியன எங்கள் திட்டத்தில் உள்ளன.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை

யூப்ரடிஸ் ஆற்றின் கிழக்குப் பகுதியில் நுழைந்த துருக்கிய படைகள், வடகிழக்கு சிரியாவில் தரைப்படை நடவடிக்கைகளை தொடங்கின என்று துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

சிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலின் இரண்டாம் நாளில், தன் படைகள் குறிப்பிட்ட இலக்குகளை கைப்பற்றியுள்ளன என்று துருக்கி அறிவித்துள்ளது, இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொண்டதும், எட்டு ஆண்டு கால மோதலானது ஒரு ஆபத்தான புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

யூப்ரடீஸ் நதியின் கிழக்கே துருக்கியின் சிறப்புப் படைகள் வடகிழக்கு சிரியாவிற்குள் முன்னேறியுள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

அங்கு வசிக்கும் மக்கள் தல் அபியத்துக்கு தப்பியோடி வருகின்றனர்.
அவர்களில் சிலர் டி.பி.ஏ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இன்னும் நகருக்குள் இருக்கும் குடிமக்களை வெளியேற விடாமல் குர்திஷ் போராளிகள்
தடுத்துவைத்துள்ளனர் என்றனர்.

துருக்கியின் தாக்குதலுக்கு இலக்கான பல்லாயிரக்கணக்கான மக்கள் “பெரும் ஆபத்தில்” உள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவைக் குழு எச்சரித்துள்ளது.

சிரியா நிலவரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் குழு வியாழக்கிழமை கூடுகிறது.

வடகிழக்கு எல்லைப்புற நகரங்கள் மீது துருக்கியர்களின் குண்டுவீச்சுத் தாக்குதலை அடுத்து, சிரிய, அரபு மற்றும் குர்திஸ் குடிமக்கள் சிரியாவின் வடமேற்கு ஹஸகாஹ் மாகாணத்தில் உள்ள டால் டம்ஹர் என்ற நகரத்திற்கு வந்துள்ளனர்.

சிரிய, அரேபிய, குர்திஷ் குடிமக்கள் துருக்கிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிரியாவின் வடகிழக்கு நகரமான ரஸ் – அல் – ஐயின் மீது துருக்கியக் குண்டுவீச்சிற்கு இடையே தப்பியோடுகிறார்கள்.

சிரியாவின் ரஸ் – அல் – அய்ன் கிராமப்புறங்களில் உள்ள டெல் அரகம் கிராமத்தில் இருந்து புகை கிளம்பியது.

துருக்கி எல்லையில், துருக்கி ஆதரவு பெற்ற சிரிய எதிர்த்தரப்பாளர்கள், சிரியாவின் சாலிஜுஃபா மகாணத்தில் உள்ள அக்காகேளிலிருந்து, டால் அபேட் என்ற இடத்தை நோக்கி விரைகின்றனர்.

படிக்க:
HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் !
வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா

துருக்கி எல்லையில், சிரியா பகுதியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தங்கள் வீட்டை தாக்கியதையடுத்து சாலிஜுஃபா மகாணத்தின், அக்காகேளிலுள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறும் குடிமக்கள்.

கடந்த வியாழனன்று ரஸ் – அல் – அய்ன் என்ற இடத்தில் துருக்கியப் படைகள் தங்கள் இலக்குகளை தாக்கியழித்தனர். இதற்கு எஸ்.டி.எஃப். போராட்டப் படையினரும் பதிலடி கொடுத்தனர் என்று அந்தப் பகுதியை சேர்ந்தவர் தெரிவிக்கிறார்.

துருக்கியின் ஆதரவு பெற்ற சிரிய எதிர்ப்பு போராளிகள், சிரியாவின் அல் அகடேல் என்னும்  நகரத்தில் இருந்து, துருக்கியின் சாலிஜுஃபா மாகாணத்தில் உள்ள அக்கோலே பகுதியை நோக்கி செல்லும் போது, ஒரு நபர் கையசைக்கிறார்.

சிரியாவின் ஹஸகாஹ் மாகாணத்தில் உள்ள, வடகிழக்கு நகரமான ரஸ் அல் – ஐயினில், துருக்கிய குண்டுவீச்சிற்கு இடையே ஒரு சிரிய பெண்மணி தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடுகிறார்.

துருக்கி – சிரிய எல்லை அருகேயுள்ள அக்கோலே என்ற இடத்தில், துப்பாக்கி ஏந்திய துருக்கி படையினர் பாதுகாப்பிற்கு நிற்கின்றனர்.

வடகிழக்கு சிரியாவில் உள்ள ரஸ் அல் – ஐயினில், துருக்கிப் படைகள் நடத்திய தாக்குதலால், சிதறியோடும் சிரியர்கள்.


தமிழாக்கம் : மூர்த்தி
நன்றி :aljazeera


படிக்க:
வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்
சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி !

கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் !

  • கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள்!
  • ஆயிரங்கால் மண்டப திருமணம் – கின்னசு நாட்டியாஞ்சலி
    கணக்கில்லா வசூல் வேட்டை தீட்சிதர்கள் மீது சி.பி.ஐ ரெய்டு நடக்குமா?
  • தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு!

ஆர்ப்பாட்டம்

நாள்: 14-10-2019
திங்கள் காலை 10 மணி,
காந்தி சிலை, சிதம்பரம்.

ன்பார்ந்த பெரியோர்களே!

சிதம்பரம் நடராசர் கோவிலில், தீட்சிதப் பார்ப்பனர்களின் பித்தலாட்டம் என்பது நூற்றாண்டு கால வரலாறு உடையது. கடந்த 11-9-2018 அன்று நடைபெற்ற ஆடம்பர திருமணத்திற்காக கையூட்டாக தங்கம், பட்டு புடவை, பட்டு வேஷ்டி மற்றும் பல கோடிகள் தீட்சிதர்களிடம் கைமாறி உள்ளது என சிதம்பரம் மக்கள் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார்கள். காவல் துறையிடமும், அரசிடமும் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல தரப்பினர் புகார் மனு அளித்து வருகின்றனர். இதுவரை தீட்சிதர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

பொற்கூரைமீது ஏறி

கோவிலில் திருட்டுத்தனமாக வெளியூர் ஆட்களை தங்கவைத்து ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் ஐந்து நட்சத்திர விடுதி போல ஆடம்பர ஏற்பாடு செய்துள்ளனர். பொற்கூரை மீது ஏறி வேலை ஆட்கள் அலங்கரித்துள்ள புகைப்படத்தை பார்க்கும்போது பக்தர்களின் நெஞ்சம் பதறுகிறது. திருமண வீட்டார் தந்த பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வந்த பிற பக்தர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளி தீட்சிதர்களே நீதிபதிகளாக :

நடராசர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது என பத்திரிகை அடித்துதான் சிவகாசி தொழிலதிபர்கள் வீட்டுத் திருமணம் நடைபெற்றுள்ளது. கவனக்குறைவாக நடந்துவிட்டது என ஆயிரம்கால் பித்தலாட்டம் செய்கின்றனர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்று தோற்று போனதால் பட்டு தீட்சிதர் என்பவரை இரண்டு மாதம் சஸ்பெண்ட் செய்து ஆயிரத்து ஒரு ரூபாய் அபராதம் விதித்து தீட்சிதர்களே தீர்ப்பளித்துள்ளார்கள். குற்றவாளியும் தீட்சிதர்கள், விசாரணை அதிகாரியும் நீதிபதியும் தீட்சிதர்களே, என்ன கேலிகூத்து? அரசுக்கு கொஞ்சம்கூட சொரணை வரவில்லை. சினிமா கொட்டகைக்கு உள்ள கட்டுப்பாடு கண்காணிப்பு சிதம்பரம் நடராசர் கோவில் மீது அரசுக்கு இல்லை.

மெகாவசூல் கின்னசு நாட்டியாஞ்சலி

ஏற்கனவே நடராசர் கோவில் உள்ளே தீட்சிதர்கள் பீர், பிராந்தி, சிக்கன், மட்டன் அருந்தினார்கள். பெண்கள் சகவாசம், மர்ம மரணங்கள், சாமி நகை களவு, கோவில் சொத்தை முறைகேடாக விற்றது, கோவில் வருமானத்தை யாருக்கும் கணக்கு காட்டாமல் தங்களுக்குள் பிரித்து கொள்வது,  வெளியூர் பக்தர்களிடம் பணம் பறிப்பது. பணம் தரமுடியாத பக்தர்களை அவமானப்படுத்துவது என்ற பல குற்றச்சாட்டுக்கள் இன்னும் முடிவு காணாமல் உள்ளது. கோவில் உள்ளே பல ஆண்டுகள் நடந்து வந்த நாட்டியாஞ்சலி விழாவை, தீட்சிதர்கள் தங்கள் ஏகபோகத்தை நிறுவுவதற்காகவும் மெகா வசூல் செய்யவும் தடை செய்து தாங்களே நடத்தி வருகின்றனர்.

கோவில் வருமானம் – தீட்சிதர்களின் அண்ட புளுகு

சிதம்பரம் கோவிலின் ஆண்டு வருமானம் வெறும் ரூ. 30,000 மட்டுமே. கையிருப்பு வெறும் ரூ. 199 மட்டுமே என நா கூசாமல் தீட்சிதர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணையில் புளுகினார்கள். இதே கோவிலில் அரசு  உண்டியல்கள் வைத்ததில் வசூலான தொகை சுமார் இரண்டு கோடி ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை தீட்சிதர்களிடமே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருப்பிக் கொடுத்தனர். நடராசர் கோவிலில் பிரசாத கடை மட்டும் ஆண்டுக்கு 35 இலட்சத்திற்கு  ஏலம் போனது.  இன்று உண்டியல்கள் இல்லை, பிரசாதக் கடை ஏலம் இல்லை. வருகின்ற வருமானம் எவ்வளவு? என்பதை தமிழக அரசு மக்களுக்கு சொல்ல வேண்டும். இனியும் தீட்சிதர்கள் வசம் கோவில் நிர்வாகம் இருக்கக் கூடாது. சிதம்பரம் கோவிலை நிர்வகிக்கும் அருகதையை தீட்சிதர்கள் இழந்து பல காலம் ஆகிவிட்டது.

சிதம்பரம் கோவிலில் கட்டண விபரங்கள் அறிவிப்பு பலகையாக :

இனி சிதம்பரம் நடராசர் கோவிலில் தீட்சிதர்களால் வசூலிக்கப்படும் கட்டண விபரங்கள் வெளிப்படையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அனைத்திற்கும் இனி தீட்சிதர்களிடம் பக்தர்கள் ரசீது கேட்க வேண்டும். சிதம்பரம் நடராசர் கோவில் எந்த விதிமுறைகளின்படி எப்படி நிர்வாகம் செய்யப்படுகிறது? இந்து சமய அறநிலையத் துறையின் கண்காணிப்பு கட்டுப்பாடு என்ன என்பதை வாதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தீட்சிதப் பெண்கள், குழந்தைகளின் தனி நபர் சுதந்திரம் :

சிதம்பர நடராசர் கோவிலில் எத்தனை தீட்சிதர்கள் என்னென்ன பணிகள் செய்கிறார்கள். எந்த வேலைக்கு எந்த தீட்சிதர் பொறுப்பானவர்? இத்தகைய பணிகளுக்கு யாருக்கு எவ்வளவு சம்பளம் எடுத்துக் கொள்கிறார்கள். கோவிலின் மொத்த பணத்தையும் தீட்சிதர்கள் தங்களுக்குள் சமமாக பிரித்து கொள்கிறார்களா? அல்லது ஏமாளி தீட்சிதர்கள் இருக்கிறார்களா? கோவிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு அதன் வரவு செலவு கணக்கை தமிழக அரசு தணிக்கை செய்கிறதா? என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தீட்சிதர் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள்? தாங்கள் விரும்பியவரை திருமணம் செய்ய, விரும்பிய , படிப்பை படிக்க அவர்களுக்கு தனி நபர் சுதந்திரம் உண்டா? அல்லது சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கி மிரட்டப்படுகிறார்களா?. இவ்வாறான கேள்விகளுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.

சிதம்பரம் கோவில் நிலங்களை பராமரிக்கும் கோவில் தாசில்தார் கோவில் நிலத்திலிருந்து வரும் வருமானத்தின் மூலம் நடராசர் கோவிலின் மின்சார கட்டணத்தை இன்றுவரை செலுத்தி வருகிறார். தற்போது நடந்த ஆடம்பர திருமணத்தால் ஏற்படும் மின் செலவை யார் கட்டுவார்கள்.?

சிவனடியார் ஆறுமுகசாமி :

சிற்றம்பல மேடையில் அனைவரும் தேவாரம் பாடி வழிபட வேண்டும். தில்லைக் கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை பெரும் மக்கள் திரள் போராட்டத்தில் சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் வெற்றி அடைந்தோம். மறைந்த முதல்வர் ஜெயாவை சந்தித்து கெஞ்சியும், அரசியல் தரகன் சு.சாமியை வழக்கில் உள்ளே நுழைத்தும், உச்சநீதிமன்ற வழக்கில் தீட்சிதர்கள் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பற்ற இருமாப்பில் இருக்கிறார்கள்.

2008-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டுவதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை கோயிலில் அழைத்துச் செல்லப்படுகிறார். (கோப்புப் படம்)

அப்போதைய நமது மக்கள் போராட்டங்களுக்கு எதிராக பிராமணர் சங்கம், பா.ஜ.க விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி, ஆகிய அமைப்புகளை தங்களுக்கு ஆதரவாக களத்தில் இறக்கினர். இவ்வாறு அதிகாரத்திலும் அரசியலிலும் தீட்சிதர்களின் செல்வாக்குதான் இன்று வரை சிதம்பரம் கோவில் மீட்கப்படாமல் இருக்கிறது. கிரிமினல் ஊழல் மயமாக மாறி மக்களுக்கு விரோதமாக அனைத்திலும் செயல்படும் இன்றைய அரசு கட்டமைப்பு தீட்சிதர்களின் ஊழல் முறைகேட்டை,  கூட்டுக் கொள்ளையை தானாக தட்டி கேட்காது. மக்கள் போராடினால் மட்டுமே எதுவும் நடக்கும்.

சிதம்பரம் நகர மக்களே, பக்தர்களே ,

தீட்சிதர்களை கேள்வி கேளுங்கள், தில்லைக்கோவில் பொதுமக்கள் சொத்து நாம்தான் கண்காணிக்க வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சிற்றம்பல மேடையில் தமிழ் உரிமைக்காகவும், கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் தங்களின் ஆதரவுடன் நாங்கள் நடத்திய இடைவிடாத போராட்டம் தாங்கள் அறிந்ததே 14-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துகொள்ளுங்கள். நிதி உதவி செய்யுங்கள்.

பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம், நம்மோடு தொடங்கவுமில்லை, நம்முடன் முடியப்போவதும் இல்லை. சிதம்பரம் கோவில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து கோவில்களையும் அர்ச்சக பார்ப்பனர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

படிக்க:
தில்லைக் கோயில் தீர்ப்பு: பார்ப்பன “காப்” பஞ்சாயத்து!
தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

தில்லை நடராசர் கோவிலை கையகப்படுத்த தனிச்சட்டம் இயற்று!
கோவில் மூலம் ஆண்டுதோறும் முறைகேடாக பல லட்சம் வசூல் செய்து வரும் தீட்சிதர்களின் சொத்துக்கள் மீது விசாரணை நடந்தது!
சிதம்பரம் நடராசர் கோவில் வருமானம் வரவு செலவு மீது விசாரணை நடத்து!
நடராசர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடு!

ஒருங்கிணைப்பு:
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 98423 96929, 98423 42583, 93600 61121.

தமிழ் பண்பாட்டில் மோடி ! உலக மகா நடிப்புடா சாமி … ! கருத்துப்படம்

உலக மகா நடிப்புடா சாமி …!

  • கீழடியை இருட்டடிப்பு செய்த மோடி!
  • இந்தியைத் திணித்த மோடி!
  • நீட் : அனிதாக்களைக் கொன்ற மோடி!
  • விவசாயிகளை அவமானப்படுத்திய மோடி!
  • ஒக்கி – கஜா புயல் : சாவை எட்டிப் பார்க்காத மோடி!
  • ஹைட்ரோ கார்பன் : விவசாயத்தை நாசமாக்கிய மோடி!

கருத்துப் படம் : வேலன்


தமிழ் பண்பாட்டில் மோடி!
ஒன்னுமில்லீங்கோ… மக்களோட மக்களா ஒன்றிடுவாராம்!

கருத்துப் படம் : வேலன்

படிக்க:
டிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் !
சொந்த ஊரிலேயே வீதியில் வசிக்கும் தலித்துகள் ! இந்திய அவலம்

அட ! பயல்கள் எரிகுண்டால் தாக்குகிறார்கள் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 1

1943-ம் ஆண்டு கோடைகாலம். வெக்கை மிகுந்த பகல். முன்னேறிச் சென்ற சோவியத் சேனை டிவிஷன்களின் வண்டிகளால் தடம் பட்டிருந்த போர்முனைப் பாதையில், பண்படுத்தப்படாமல் சிவப்புக் களைச் செடிகள் செழித்து மண்டியிருந்த விசாலமான வயலின் ஊடாக முனைமுகத்தை நோக்கி விரைந்தது ஒரு பழைய லாரி. நொடிகளில் அது அசைந்தாடி எகிறிக் குதித்தது, அதன் மரச்சட்டங்கள் பொருந்திய அற்றலைந்த பின் பகுதி கடகடத்தது. அடிபட்டு, புழுதி படிந்திருந்த அதன் விளிம்பில் வெள்ளைக் கோடுகளும் “போர்க்களத் தபால்” என்ற குறிப்பும் அரிதாகவே கண்ணுக்குப் புலப்பட்டன. அது கிளப்பிய சாம்பல் நிறப் புழுதிப் படலம் பிரமாண்டமான வால் போல, இறுக்கம் நிறைந்த அசைவற்ற காற்றில் மெதுவாக மிதந்தவாறு அதன் பின்னே நீண்டது.

கடிதங்கள் அடங்கிய கோணிப் பைகள் செம்மச் செம்ம நிறைந்திருந்த அதன் பின்பகுதியில் புதிய செய்தித்தாள் கட்டுகளின் மேல் சாமான்களுடன் அசைந்தாடியவாறு உட்கார்ந்திருந்தார்கள் இரண்டு படைவீரர்கள். கோடைகால உடுப்புக்களும் நீல ரிப்பன்கள் சுற்றிய தொப்பிகளும் அணிந்திருந்தார்கள் அவர்கள். அவர்களில் இளையவன் விமானப்படை சீனியர் சார்ஜென்ட் என்பது அவனுடைய புத்தம் புதிய, கசங்காத பதவிச் சின்னங்களிலிருந்து தெரிந்தது. ஒடிசலான வடிவமைந்த மேனியும் வெண்முடியும் கொண்டவன் அவன். அவனுடைய முகம் பெண்ணினது போன்ற மென்மை உள்ளதாக இருந்தது. அதன் வெண் தோல் வழியே இரத்தம் ஒளிர்வது போலத் தோன்றியது. பார்வைக்கு அவனைப் பத்தொன்பது வயதுக்கு மதிப்பிடலாம். அவன் பற்களின் இடுக்குவழியே துப்பினான், கரகரத்த குரலில் வசவு மொழிகள் பகர்ந்தான், விரல் பருமன் சிகரெட் சுருட்டினான், எதுவுமே தனக்கு ஒரு பொருட்டில்லை போலப் பாவனை செய்தான் – இவ்வாறு அனுபவம் முதிர்ந்த படை வீரனாகத் தோற்றமளிக்க எல்லா வகையிலும் முயன்றான். ஆயினும் இப்போது தான் முதல் தடவையாக அவன் முனை முகத்துக்குப் போகிறான் என்பதும் தெளிவாகப் புலப்பட்டன.

அவனுடன் பயணம் செய்த சீனியர் லெப்டினன்டோ, போர்முனை அனுபவம் மிக்கவன் என்பதைத் தவறின்றி ஊகிக்க முடிந்தது. முதல் பார்வைக்கு அவன் வயது இருபதுக்கு மேல், இருபத்து நான்குக்கு உள்ளாகவே இருக்கும் என்று தோன்றியது. ஆனால், வெயிலிலும் காற்றிலும் அடிபட்டிருந்த அவன் முகத்தையும், கண்களின் அருகிலும் நெற்றியிலும் வாயின் பக்கங்களிலும் நுண்ணிய இழைகளாக விழுந்திருந்த சுருக்கங்களையும், சிந்தனையில் ஆழ்ந்த, களைத்த கருவிழிகளையும், உற்றுக் கவனித்த பின் அவனது வயதில் இன்னும் பத்து ஆண்டுகளைக் கூட்டலாம் போலிருந்தது. அவன் பார்வை எதிலும் – நிலைக்காமல் சுற்றிலும் வழுகிச் சென்றது.

செய்தித்தாள் கட்டுக்களைப் பரப்பி வசதியாகச் சாய்ந்து – உட்கார இடம் செய்து கொண்டு சீனியர் லெப்டினன்ட் உறங்கிவழிந்தான். பொற் கூட்டெழுத்துச் சின்னம் பொறித்த விந்தையான கனத்த கருங்காலி கைத்தடி மீது மோவாயை அழுத்தியவாறு கண்ணயர்வதும், எப்போதாவது இந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டவன் போல மகிழ்ச்சியுடன் சுற்றிலும் கண்ணோட்டுவதும், வெதுவெதுப்பான நறிய காற்றை ஆர்வத்துடன் மூச்சிழுத்து நெஞ்சில் நிறைத்துக் கொள்வதுமாக இருந்தான் அவன். பாதையிலிருந்து எங்கேயோ ஒரு புறத்தில் தொலைவில் அரிதாகவே தென்பட்ட இரண்டு மங்கிய புள்ளிகளை அவன் திடீரென்று கண்ணுற்றான். கவனமாக உற்று – நோக்கிய பின் அவை விமானங்கள் என்பது தெரிந்தது. ஒன்றையொன்று துரத்தி விளையாடுவது போல, அவசரமின்றிக் காற்றில் நீந்தின அவை. அப்போது சீனியர் லெப்டினன்ட் சுறுசுறுப்பு அடைந்து அந்த மங்கிய புள்ளிகளிலிருந்து பார்வையை அகற்றாமலே, காரோட்டி அறை முகட்டை உள்ளங்கையால் தடதடவென்று தட்டினான்.

“பகை விமானங்கள்! லாரியை ஒருபுறம் திருப்பி ஒதுக்கு!” என்று கத்தினான்.

அவன் எழுந்து நின்று, பழக்கமான பார்வையால் அந்த இடத்தைச் சீர்தூக்கிப் பார்த்து ஓர் ஓடையின் களிமண் கரைச்சரிவைக் டிரைவருக்குக் கையால் காட்டினான். பல்வகைக் காட்டு மலர்ச் செடிகள் அங்கே பூத்து மண்டியிருந்தன.

படிக்க:
உழைக்கும்போதே இந்த உசுரு போகணும் | ஒரு உழைப்பாளி காதல் ஜோடி !
ஜம்மு காஷ்மீர் : இரும்புத்திரையை கிழிக்கும் இளைஞர் !

இளையவன் அசட்டைத் தோன்ற முறுவலித்தான். விமானங்கள் ஒரு தீங்கும் செய்யாமல் எங்கோ தொலைவில் கரணமடித்துக் கொண்டிருந்தன. ஏக்கந்ததும்ப வெறிச்சோடிக் கிடந்த வயல்களுக்கு மேலே பிரமாண்டமான வால் போலப் புழுதிப் படலத்தைக் கிளப்பியபடி சென்ற தன்னந்தனி லாரி மேல் அவற்றுக்கு எவ்வித அக்கறையும் இல்லை போலத் தோன்றியது. ஆனால் அவன் எதிர்த்து எதுவும் சொல்வதற்குள் காரோட்டி லாரியை பாதையிலிருந்து திருப்பிவிட்டான். பின்பகுதி தடால் தடால் என்று தூக்கிப்போட, லாரி ஓடைக் கரைக்கு விரைந்தது.

சீனியர் லெப்டினன்ட் அக்கணமே லாரியிலிருந்து இறங்கி, புல்லில் உட்கார்ந்து பாதையைக் கூர்ந்து நோக்கலானானன்.

“அட நீங்கள் என்ன இப்படி… ” என்று அவனைக் கேலியுடன் பார்த்தவாறு சொல்லத் தொடங்கினான் இளையவன்.

அதற்குள் சீனியர் லெப்டினன்ட் புல்லில் விழுந்து, “படு!” என வெறிக் கூச்சலிட்டான்.

நொடிப் போதில் விமான எஞ்சின்களின் இறுக்கம் நிறைந்த முழக்கம் கேட்டது. இரண்டு பிரமாண்டமான நிழல்கள் காற்று அதிர்ந்து நடுங்க, விந்தையாகத் தடதடத்தவாறு அவர்களது தலைகளுக்கு நேர் மேலாக விரைந்தன. இளையவனுக்கு இதுவும் பெருத்த அச்சந்தருவதாகப்படவில்லை. சாதாரண விமானங்கள், ஒரு வேளை நம்மவை போலும் என்று நினைத்தான் அவன். சுற்றுமுற்றும் பார்வை செலுத்தியவன், பாதையின் அருகே குப்புறக் கிடந்த துருப்பிடித்த லாரி ஒன்று புகைந்து மளமள வென்று மூண்டு எரிவதைக் கண்டான்.

குண்டால் தகர்க்கப்பட்ட எரிந்து கொண்டிருந்த லாரியை நோட்டமிட்டு, “அட பயல்கள், எரிகுண்டால் தாக்குகிறார்கள். லாரிகளை வேட்டையாடக் கிளம்பியிருக்கிறார்கள்” என்று வறட்டுப் புன்னகை செய்தான்.

“வேட்டை விமானங்கள்” என்று புல்லில் செளகரியமாக நீட்டிப்படுத்தபடி அமைதியாகக் கூறினான் சீனியர் லெப்டினன்ட். “நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். அவை இதோ திரும்பும். தாழப் பறந்து பாதையைக் கண்காணிக்கின்றன. லாரியை இன்னும் அப்பால் கொண்டுபோ, தம்பீ. அதோ அந்த பிர்ச் மரம் வரையிலாவது.”

ஜெர்மானிய விமானிகள் தங்கள் திட்டத்தை அப்போதுதான் அவனுக்குத் தெரிவித்தது போல அவ்வளவு நிச்சயத்துடனும் அலட்சியமாகவும் இவ்வாறு சொன்னான் சீனியர் லெப்டினன்ட். சார்ஜென்ட் மிகவும் கூச்சப்பட்டானாயினும் அசட்டையாகக் கூறினான்:

“நாம் மேலே போவதே நல்லது. நேரத்தை வீணாக்குவது எதற்காக? தூக்கில் மடிய விதிக்கப்பட்டவன் மூழ்கிச் சாக மாட்டான் என்று ருஷ்யப் பழமொழி உண்டே”

நிம்மதியாகப் புல்லைக் கடித்துக் கொண்டிருந்த சீனியர் லெப்டினன்ட், கோபத் தோற்றம் காட்டிய கரு விழிகளில் அரிதாகவே புலப்பட்ட நேயம் ததும்பும் கேலிப் புன்னகையுடன் இளையவனை ஏறிட்டுப் பார்த்தான்.

“கேள், நண்பா. இந்த மட்டிப் பழமொழியை, நேரம் கடந்து விடுவதற்குள் மறந்துவிடு. இதையும் கேள், சீனியர் சார்ஜன்ட். போர்முனையில் மேலதிகாரிகள் சொற்படி நடக்க வேண்டும் என்பது சட்டம். ‘படு’ என்று அவர்கள் உத்தரவிட்டால் படுக்க வேண்டியது தான்.”

இப்படி சொல்லிவிட்டு அவன் புளியாரைக் கீரையின் சாறு நிரம்பிய தண்டைப் புல்லில் கண்டெடுத்து அதன் நார்த்தோலை நகங்களால் உரித்து அகற்றிவிட்டு, அதைக் கறுக்குக் கறுகெனக் கடித்துச் சுவைத்துத் தின்னலானான். மறுபடி விமான எஞ்சின்களின் கடகடப்பு கேட்டது. இறக்கைகள் இடமும் வலமுமாக முறையே சாய, பாதைக்கு மேலே தாழப் பறந்து சென்றன சற்றுமுன் வந்த அதே விமானங்கள். அவற்றின் இறக்கைகளது மஞ்சட் பழுப்பு வண்ணப்பூச்சும், வெண்கறுப்புச் சிலுவைகளும், கிட்ட இருந்த விமானத்தின் உடலில் தீட்டப்பட்டிருந்த இஸ்பேட்டு ஆஸின் சித்திரமும் துலக்கமாகத் தெரியும் படி அவ்வளவுதாழ்வாக பறந்தன அவை. சீனியர் லெப்டினன்ட் இன்னும் சில புளியாரைத் தண்டுகளைச் சோம்பலுடன் கிள்ளி எடுத்துக் கொண்டு கடிகாரத்தைப் பார்த்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு ! PRPC ஆர்ப்பாட்டம்

தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு !

ஆர்ப்பாட்டம்

நாள் : 14.10.2019 திங்கள், காலை 10 மணி.
இடம் : காந்தி சிலை, சிதம்பரம்.

  • கருப்புப் பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் !
  • ஆயிரங்கால் மண்டப திருமணம் – கின்னசு நாட்டியாஞ்சலி கணக்கில்லா வசூல் வேட்டை!
  • தீட்சிதர்கள் மீது சி.பி.ஐ ரெய்டு நடக்குமா ?

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
கடலூர் மாவட்டம்.
விருதை : 9360061121.
சிதம்பரம் : 9842341583.
கடலூர் : 9842396929.

டிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் !

11

மோடியின் மாமல்லபுர வருகையை தொடர்ந்து ஊடகங்கள் அனைத்தும் ஜால்ரா அடித்துவரும் நேரத்தில், தமிழக மக்கள் வழக்கம் போல #GoBackModi ஹேஸ்டேக்கை டிரண்ட் செய்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இங்கே…

***

கப்பார் :

1.25 கோடி இந்தியர்கள் காஷ்மீரில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 10 லட்சம் இந்தியர்கள் அஸ்ஸாமில் தங்களது குடியுரிமையை இழந்துள்ளனர். “நான்தான் பாசிசம்” என்று சொல்லிக் கொண்டே பாசிசம் என்றும் வருவதில்லை. அதன் குறியீடுகளை நாம்தான் புரிந்து கொள்ளவேண்டும்,
#GoBackModi #回到莫迪

அடுத்த முதல்வர் NTK :

தொடங்கட்டும் மீண்டும் தொல்குடிபந்தம். தொன்மையான இனத்தின் பிரதிநிதியாக சீன அதிபர் இன்னொரு தொன்மையான தமிழர் நிலத்திற்கு வருகை தருகிறார். வாருங்கள் சீசின்பிங் வாருங்கள். (Please Share) #வாருங்கள்சீசின்பிங் #泰米尔欢迎吉平 #TamilsWelcomeXiJinping #ஓடிப்போமோடி #GoBackModi

காயத்ரி அருண்பிரசாத் :

மோடியைப் புறக்கணிக்கும் இடத்தை சீனா உள்நோக்கத்தோடு தேர்ந்தெடுத்திருக்கிறதோ ?
#GoBackModi

தமிழ் ராட்சசி :

#GoBackModi வெளிநாடான சீனா தமிழை விரும்புகிறது. சீனாவின் முக்கியமான இரண்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கு கவுரவம் வழங்கியுள்ளது. நூற்றுக்கணக்கான சீனர்கள் தமிழ் கற்று வருகின்றனர். அதே சமயம் மோடியின் கீழ் ஹிந்தியா, தென்னிந்தியாவின் மீது இந்தியைத் திணிக்க எத்தனிக்கிறது. சீனா தமிழகத்தை விரும்புகிறது. ஆகையால்தான் சீனர்கள் தமிழகத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.

ஜெர்ரி சுந்தர் :

கிபி 1281-ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துக்கள் சீனாவின் குவான்சௌ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதனை அங்கீகரித்திருக்கும் சீனாவை நாங்கள் மதிக்கிறோம். எங்கள் மீது இந்தியைத் திணிக்கும் மோடியை நாங்கள் உதைத்து அனுப்புகிறோம். #GoBackModi

சுந்தர்ராஜன் :

கிமு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழகத்தின் நகர நாகரிகத்தை வெளிக் கொண்டுவந்த கீழடி நாகரீகத்தை மூடி மறைக்க முயலும் மோடி அரசின் தலைவரை தமிழகத்தின் கலாச்சார நகரான மகாபலிபுரத்திற்கு வரவேற்க முடியாது. #gobackmodi

வில்லவன் :

சங்கிஸ் நவ் : இவன் சும்மா இருந்திருந்தாக்கூட ரெண்டாயிரம் போஸ்ட் கம்மியா இருந்திருக்கும்.. ஹோமகுண்ட வாயன் சும்மா இருந்தவனை எல்லாம் கிளப்பி விட்டுட்டானே. நம்ம கூட்டிக்கிட்டு வர்றது எல்லாமே உள்ளதையும் குட்டிச்சுவராக்குற கேசாத்தான் இருக்கு. #GoBackModi

பிரதாப் :

ஒரே நாடு .. ஒரே ட்ரெண்டிங் = #GoBackModi

ஷைனி மிராகுலா :

பாசிசத்திற்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள். #GoBackModi. எனக் கூறுங்கள் !

காண்டிராக்டர் நவீன் :

மோடியேதிரும்பிப்போ #回到莫迪 #GoBackModi
தமிழகம் ஏற்கெனவே மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்டது. தமிழ், ஆங்கிலம், சைனிஸ்

தாஜ் மீடியா :

இது புலிகளின் மண் ! #gobackmodi #泰米尔纳德邦欢迎习近平

அயாஸ் ஷைல் :

#GoBackModi முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தால் மோடி தமிழகத்தில் இருக்கிறார் என்று பொருள்

ஜோக்கர் :

சை ஜின்பிங் – மோடி – இருவருக்குமான தமிழகத்தின் வரவேற்பு
#TN_welcomes_XiJinping #回到莫迪 #gobackmodi

சுரேஷ் :

#GoBackModi மோடி எப்போது தமிழகத்திற்கு வந்தாலும் !

சுந்தர் ஜெர்ரி :

ஏன் #GoBackModi ?

  • சிறுபான்மையினர் மீது குறிவைத்து தாக்குதல்
  • பொருளாதாரக் கொள்கைகள்
  • தேசிய குடிமக்கள் பதிவேடு
  • இந்தி திணிப்பு
  • நீட்
  • வேலைவாய்ப்பின்மை
  • விவசாயிகளை முதுகில் குத்தியது
  • ரஃபேல் ஒப்பந்தம்
  • நீதித்துறை, ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. உள்ளிட்ட நிறுவனங்களை பலவீனப்படுத்தியது
  • காஷ்மீர்…. (இன்னும் பல)

தந்திரன் :

இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையும் கூட சொல்கிறன #GoBackModi

கெளதம் :

#GoBackModi நாளை இதுதான் தமிழகத்தில் நடக்கப் போகிறது. பசங்களா ! தயாராகிக்குங்க !

#泰米尔纳德邦欢迎习近平 #TN_welcomes_XiJinping #回到莫迪 #GoBackModi

நகர்ப்புற சைக்கிளிஸ்ட் :

எனது இந்திக்கார நண்பனுக்கு #GoBackModi என ட்ரெண்டிங் செய்ய பாடமெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

சந்தோஷ் குமார் :

ஒவ்வொரு முறை மோடி தமிழகத்திற்கு வருகிறார் எனத் தெரிந்ததும் தமிழக மக்கள் #泰米尔纳德邦欢迎习近平 #回到莫迪 #GoBackModi என முழங்க ஆரம்பிக்கின்ற்னர்.

கோபிநாத் :

இந்த மோடிஜியைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் #GoBackModi

பாலாஜி :

#泰米尔纳德邦欢迎习近平 #回到莫迪 #GoBackModi – நான் காத்திருக்கிறேன்.

ஷஹ்ரன் :

ப்ரோ, இது ரொம்ப போயிருச்சே !
#回到莫迪 #GoBackModi

அகமதுதீன் :

பாசிஸ்ட்டுகள் தமிழகத்திற்குள் நுழையும்போது…. #GoBackModi

அகதி ரமீஸ் ராஜா :

ஒருவேளை @narendramodi நீங்களே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், எங்களிடமிருந்து நீங்கள்,
#GobackModi #回到莫迪 #GoBackSadistModi என்பதைத்தான் பெற்றிருக்க முடியும்.

சகாவே :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு – ரூ. 71
வெங்காய விலை – ரூ. 80
தக்காளி விலை – ரூ. 80
பெட்ரோல் விலை – ரூ. 80
எடுடா இரண்டு லெமன… #GoBackModi

தோகா டாக்கீஸ் :

நண்பர்களே.. ம்ம்.. ஆரம்பியுங்கள்…
#GoBackModi #WelcomeXiJinping

அதிமுக ஃபெயில் :

கண்டிப்பாக பார்க்க வேண்டியது : தமிகத்தில் மோடி – டிவிட்டரில்
#GoBackModi விளக்கப்பட்டது.

அலர்ட் ஆறுமுகம்:

சீனமொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன் #gobackmodi

சாய் பிரசாத் :

வெட்கங்கெட்ட தமிழக அரசு அப்பாவி ஆத்மாக்களின் உடல் மீது பேனர்களைக் கட்டிக் கொண்டிருக்கிறது. #GoBackModi

பாரதிதாசன் :

#gobackmodi #返回莫迪 – இதோட அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. கூகுளில் தேடிப்பார்த்தேன். நான் ஷாக்காகிட்டேன்

கரிகாலன் அரிமா :

தமிழ் மீம் தேசம் : #GoBackModi

Sofia | சோபியா

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியில் சுட்டுக் கொல்லப்படாமல் இருந்திருந்தால், இந்த வாரம் ஸ்னோலினுக்கு வயது 19 ஆகியிருக்கும்.
#Sterlite #GoBackModi #返回莫迪 #ThoothukudiMassacre #SterliteProtest

போஸ்கோ

நாங்கள் அனிதாவை இன்னும் மறக்கவில்லை… #GoBackModi


தொகுப்பு :  நந்தன்

வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா

0
bjp-linguistic-agenda

சில நாட்களுக்கு முன் கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் வேலியில் விரிவுரையாற்றினேன். உலகின் தகவல் தொழில்நுட்ப மையமான சிலிக்கான் பள்ளத்தாக்கு சமீப காலங்களில் ஆப்பிள், கூகிள் மற்றும் பல முன்னோடி முயற்சிகளின் தளமாகவும் இணைய புரட்சியைத் தூண்டிய மின்னணு துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இடமாகவும் அது உள்ளது.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஐ.டி முதல் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் வரை பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களில் வட இந்தியர்களைவிட தென்னிந்தியர்கள் அதிகமாக உள்ளனர். எந்தவொரு பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனங்களிலும் இந்தி-பசு வளையத்தைச் சேர்ந்த இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. அமெரிக்காவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் உள்ள இரண்டு உயர் அதிகாரிகளான சத்யா நதெல்லா மற்றும் சுந்தர் பிச்சை ஆகிய இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஏன்? இதற்கு இந்தி காரணம் அல்ல, ஆங்கிலம்தான் காரணம்!

காஞ்சா அய்லய்யா

தென்னிந்தியர்கள் தங்கள் பிராந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதைத் தவிர, அதிக முக்கியத்துவத்துடன் ஆங்கிலம் கற்றனர். பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு திராவிட கழக இயக்கத்தின் காரணமாக, இந்தியை முற்றிலுமாகத் தவிர்ப்பதன் மூலம் பள்ளி கல்வி மட்டத்தில் இரண்டு மொழிகளை மட்டுமே கற்க வேண்டும் என்ற இயக்கம் தமிழகத்தால் வழிநடத்தப்பட்டது.

அதிக எண்ணிக்கையிலான கிறித்துவ ஆங்கில பள்ளிகள் இருப்பதன் காரணமாக, இந்தியை மறுப்பதன் மூலம் ஆங்கில வழி கல்வியை மேம்படுத்தி கேரளா தனக்கென ஒரு மாதிரியை உருவாக்கிக் கொண்டது. தெலுங்கு மாநிலங்களும் கர்நாடகாவும் தமிழ்நாடு மற்றும் கேரள மாதிரி பள்ளிகளால் தாக்கம் கண்டன. இந்தியாவின் முதல் தலித் தலைவர் கே. ஆர். நாராயணன், இந்தியாவின் முதல் தலித் தலைமை நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணன் ஆகியோர் கேரளத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தானாக அந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஆனால் இத்தகைய உயர் பதவிகளுக்கு வருவதற்கு முன் தங்களுக்கென்று ஒரு பெயரை அவர்கள் உருவாக்கியிருந்தனர். ஏன்? இந்தி காரணம் அல்ல, ஆங்கிலமே காரணம்.

படிக்க:
நூல் அறிமுகம் : இதிகாசங்களின் தன்மைகள்
சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !

தற்போது ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டாய தெலுங்கு பாடத்துடன் ஆங்கில வழி கற்பித்தலை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதைச் செய்ய எந்த வடமாநில முதலமைச்சரும் துணிய மாட்டார். குஜராத்தில் மிக மோசமான நிலையில் ஆங்கில வழி கல்வி உள்ளது. எந்தவொரு வட இந்திய மாநிலத்தையும்விட, இந்தி – பசு வளைய மாநிலங்களைவிட கல்வி மேம்பாட்டு முறைகள் தென்னிந்தியாவில் மிக உயரிய நிலையில் உள்ளன.

LANGUAGES-INDIAகூடுதலாக, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் ஆங்கில வழிக் கல்வி காரணமாக சில சிறந்த கல்வி நிறுவனங்களில் நுழையும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மேலும் சில தசாப்தங்களில், ஆரம்ப கல்வி ஆங்கில வழியில் தொடர்ந்தால் பல துறைகளில் அவர்கள் வழிநடத்தும் நிலைக்கு வருவார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக இந்த வளர்ச்சியை விரும்பத்தகாததாகப் பார்க்கிறது. இந்தியை திணிக்கும் அவர்களுடைய எந்த முயற்சியும் வடகிழக்கில் வரவேற்கப்படாது.

எப்படியிருப்பினும், அமித் ஷாவும் பாஜகவும் கடிகாரத்தை திருப்பி தென்னிந்தியாவிலும் வடகிழக்கிலும் இந்தியை திணித்து ஆங்கிலத்தை வெளியேற்ற திட்டமிடுகிறார்கள். இதன் மூலம் முழு இந்தியாவையும் இந்தி-பசு வளைய மாநிலங்களின் கல்வி நிலைக்கும் தரத்துக்கு கீழிறக்க முடியும். அதன்பிறகு பாஜகவின் இந்தி-இந்துராஷ்டிரத்தை நிறுவும் இலக்கு நிறைவேறும்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் நீண்டகால நிகழ்ச்சி நிரலாக உள்ள இந்தி திணிப்பு தொடர்பாக அவர்கள் மறுப்பதை நான் சந்தேகிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 22 அன்று ஹூஸ்டனில் அமித் ஷாவின் சமீபத்திய கருத்துக்கள் குறித்த அச்சங்களை மட்டுப்படுத்த முயற்சித்த போதிலும், பிரதமர் ஒரு வெளிநாட்டில் உரையாற்றுவதற்குப் பதிலாக இந்தியாவில் இதை தெளிவுபடுத்தியிருக்க முடியும்.

இந்து – இந்தி – இந்துஸ்தான் என்ற தேசத்தை உருவாக்குவதும், மெதுவாக இந்தியாவின் பெயரை மாற்றுவதும் பாஜகவின் நீண்டகால குறிக்கோளாகும். அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள பாரத் – இந்துஸ்தானுக்கு நன்கு அறியப்பட்டதாகும்.

இந்த முழு திட்டத்திலும், பாகிஸ்தான் ஒரு முன்மாதிரியாகவும் மதசார்பற்ற, பின்தங்கிய முஸ்லீம் நாடுகளுடனான போட்டியிடும் திசையிலும் அவர்கள் செல்கிறார்கள். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான உலகளாவிய போட்டி மனப்பான்மையுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்ட சீனா அல்லது தென்னாப்பிரிக்காவுடன் இந்தப் போட்டியிடவில்லை. அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் தென்னிந்தியாவில் இருப்பதைப் போன்ற ஆர்வம் காட்டுகிறார்கள்.

நவீனமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலுக்கு பிந்தைய கட்டத்திலும் மொழி ஒரு முக்கிய இணைப்பாக உள்ளது. முன்னாள் பிரெஞ்சு காலனிகளாக இருந்த ஆப்பிரிக்காவில் தங்கள் சொந்த மொழிகளில் கல்வியை ஊக்குவிக்க வலியுறுத்தவில்லை, மெதுவாக அவர்கள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றன. ஆங்கில மொழி தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சியுடன் உலகளாவிய ஒருங்கிணைப்பால் அவர்களின் பொருளாதார வளர்ச்சி இப்போது வேகமாக உள்ளது.

படிக்க:
குழந்தைகளுக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பது எப்படி ?
♦ 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு மொழியியல் மற்றும் கலச்சார துறைகளின் உலகளாவிய திசையைப் பற்றி எந்தவிதமான தீவிர புரிதலும் இல்லை. பாஜக, ஆர்.எஸ்.எஸ். வணங்கும் இஸ்ரேலும்கூட ஹூப்ரு தவிர, ஆங்கில கல்வியை ஊக்குவிக்கிறது, இது ஒரு பொதுவான கலாச்சார மாற்றமாகும்.

இந்தியாவில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு நிதியளிக்கும் அனைத்து தொழிற்துறை வர்க்கமும் இந்தியில் கவனம் செலுத்துகிறது. மொழியியல் மற்றும் கலாச்சார வர்க்க வேறுபாடுகள் வட இந்தியாவைவிட, தென்னிந்தியாவில் உயரிய இடத்தில் உள்ளன. தெற்கில், அனைத்து பிரிவினரும் தங்கள் பிராந்திய மொழிகளுடன் ஆங்கிலம் கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். எனவே, மொழியியல் மற்றும் கலாச்சார இடைவெளி குறுகி வருகிறது. வட இந்தியாவில் அது பரந்து வருகிறது. பொருளாதார மற்றும் கலாச்சார வளங்களின் வறுமை அப்பட்டமாகத் தெரிகிறது.

வட இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் குழந்தைகளுக்காக உலகளாவிய தரமான ஆங்கில வழி பள்ளிகளை நடத்தி வரும் முன்னணி தொழிற் நிறுவனங்களை இந்தி வழி கல்விக்கு மாறுங்கள் என அமித் ஷா அல்லது ஆர்.எஸ்.எஸ் கட்டாயப்படுத்த முடியுமா? வடக்கு மற்றும் தெற்கில் உள்ள தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளை இந்தி வழிப் பள்ளிகளுக்கு அனுப்புமாறு அமித் ஷா வற்புறுத்த முடியுமா? தென்னிந்தியா மற்றும் வடகிழக்கில் இந்தியை சரியாக யாரிடம் திணிக்க ஷா விரும்புகிறார்? எனவே, இந்தத் திட்டம் அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமங்களில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தெளிவாகிறது.

இந்துத்துவ சக்திகளால் முன்வைக்கப்படும் உணர்வுபூர்வமான மொழி பிரச்சாரம் குறித்து தலித்துகள், ஓபிசிக்கள் மற்றும் மேல்தட்டு சூத்திரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களின் குழந்தைகள் இப்போதுதான் நவீன நாகரிக மற்றும் உலகமயமாக்கப்பட்ட கலாச்சாரங்களை எட்டிப் பிடித்திருக்கிறார்கள். இந்துத்துவ கற்பனைகளான ஒரு தேசம், ஒரு மொழி மற்றும் ஒரு கலாச்சாரத்தை தாங்கிச் செல்ல அவர்கள் தங்களை அனுமதித்தால், அவர்கள் இடைக்காலக் கட்டத்தின் வறுமை, அறியாமை மற்றும் சமத்துவமின்மைக்குத் திரும்பிச் செல்வார்கள்.

இந்தி – பசு வளையத்தைச் சேர்ந்த மாநிலங்களுடன் தென்னிந்திய மக்களின் அறிவியல் மனப்பான்மையை ஒப்பிடும்போது, தென்னிந்தியாவில் மூடநம்பிக்கை, அறியாமை மற்றும் சுரண்டல் இல்லாதது அறிவியல் சிந்தனை சிறந்த பங்காற்றியிருப்பதை ஆதாரமாகக் காட்டுகிறது.

தென்னிந்தியாவில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சமத்துவத்திற்கான அறிவுநிலைகள் மற்றும் வலியுறுத்தல்கள் மிக அதிகம். ஒரு குழந்தை உலகளாவிய தகவல்தொடர்பு மொழியைக் கற்கும்போது, அந்தக் குழந்தையின் சொற்களஞ்சியம் வளமாக இருக்கும். ஒரு சிறு குழு அல்லது ஒரு சிறு பிராந்தியத்தில் பேசப்படும் ஒரு மொழியைப் பேசும் குழந்தையைவிட சிறந்த நம்பிக்கையும் அறிவும் இந்தக் குழந்தைகளுக்கு இருக்கும்.

சமூக மற்றும் இயற்கை அறிவியல் ஆய்வை பலவீனப்படுத்துவதன் மூலம் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் -ம். ஏற்கனவே பல்கலைக்கழகங்களுக்கு நிறைய சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. புராண அறிவியல் மற்றும் புராண நூல்கள் அறிவியல் அறிவை வளர்க்கும் என அவர்கள் நம்புவது நகைப்புக்குரியது. அவர்கள் போலி அறிவியலாளர்களை டி.என்.ஏ. மற்றும் தொல்பொருள் அறிவியல் நிபுணர்கள் என அறிவிப்பதும் மனித இடப்பெயர்வு குறித்த அனைத்து உலகளாவிய அறிஞர்களின் கோட்பாடுகளையும் தவறானவை என அறிவிக்கவும் செய்கிறார்கள். அறிவியல் உலகம் இவை அனைத்தையும் கேலிக்கூத்தாகவே பார்க்கின்றன. இப்போது அவர்களின் அரசியல்வாதிகள் மற்ற அனைத்து மொழிகளையும் விட்டுவிட்டு இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். அப்போதுதான் அகண்ட பாரதம் தங்கம் மற்றும் வெள்ளி விளையும் நிலமாக மாறும் என்கிறார்கள்.

அனைத்து தென்னிந்தியர்களும் நல்ல விதமாக, அமித் ஷாவின் அபத்தமான இந்தி – இந்து – இந்துஸ்தான் கோட்பாட்டுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க, தமிழகத்தின் இரு மொழி சூத்திரத்தை நாம் எடுத்துக்கொண்டு, நமது அறிவியல் மனப்பான்மையை வலுப்படுத்த வேண்டும். இதனால் சீனா போன்ற வேகமாக வளர்ந்துவரும் நாடுகளால் இந்தியா மீண்டும் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படுவது தடுக்கப்படும்.


கட்டுரையாளர் : எழுத்தாளர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர் காஞ்சா அய்லய்யா.
தமிழாக்கம் :
கலைமதி
நன்றி: கவுண்ட்டர் கரண்ட்ஸ் 

நூல் அறிமுகம் : இதிகாசங்களின் தன்மைகள்

திகாசங்கள் என்பன இராமாயணமும், பாரதமுமாகும். இவை இரண்டும் ஆரிய நூல்கள்.

இக்கதைகளுக்கு ஆரியப் பார்ப்பனர்கள், தெய்வத் தன்மையை ஏற்றிப் பல காரணங்களால் தமிழ்நாட்டில் புகுத்தி, அறியா மக்களிடையே அவற்றில் நம்பிக்கை உண்டாக்கித் தங்கள் உயர்வுக்கும் வாழ்வுக்கும் வழிகோலிக்கொண்டு அவற்றை நிலைநிறுத்தி வருகிறார்கள்.

உலகத்திலேயே ஒப்பற்ற அறிஞராக, உலக மக்களுக்கே நாகரிகத்தைப் பரவச் செய்த பெரியோர்களாக இருந்த தமிழ் மக்கள், காலமாற்றத்தால் நாளடைவில் அறியாமையில் மூழ்கி, இப்படிப்பட்ட கதைகளை நம்பி, தமது உண்மைப் பெருமையை மறந்து, இவ்விதிகாசங்கள் தம்மைச் சேர்ந்த நூல்களெனக் கொண்டு மயங்கித் தவிக்கின்றனர்.

இதனாலேயே தோழர் ஈ.வெ. இராமசாமிப் பெரியாரவர்களுடைய வேண்டுதலுக்கு இசைந்து இராமாயண ஆராய்ச்சியைக் ‘குடி அரசு’ இதழில் வெளியிட்டோம். அது முடிந்தவுடன் பாரத ஆராய்ச்சியும் ஓரளவு வெளிவந்து நின்றது. இராமாயண ஆராய்ச்சியை ஏழு காண்டங்களாக அச்சிட்டுப் பெரியார் இராமசாமி அவர்கள் வெளியிட்டு உலகுக்கே அழியாத பேருதவியைச் செய்திருக்கிறார்கள். (நூலிலிருந்து பக்.1)

இதிகாசங்கள் என்று தலைப்பிட்டு இச்சிறு நூல் எழுதுவதன் நோக்கம், இராமாயண, பாரதங்களின் சிறுமையைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டுவதேயாகும். இதனால் விளையும் பயன் யாதெனில், இதிகாசங்களைப் பற்றிய தமிழ் மக்களின் தவறான எண்ணங்கள் மாறி, “இதிகாசங்களைப் படிப்பதனால் சகோதரத் துரோகமும், விபச்சாரத்தனமும் வளரும்” என்ற உண்மையை ஒருவாறு உணரச் செய்யும் என்பதோடு மற்றும் இவற்றைப் படிப்பதனால் தமிழ் மக்கள் தன்மானமற்று ஆரியக் கூட்டில் வீழ்ந்து அல்லல்படுவதிலிருந்து விடுபடுவார்கள் என்பனவேயாகும். ஆதலால் தமிழ் மக்கள் அனைவரும் இதனை ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கி, உண்மை உணர்ந்து பயன்பெறுவார்களாக. (நூலிலிருந்து பக்.2)

இராமாயணம் என்பது, இராமன் என்ற ஆரிய அரசனின் மகன், இராவணேசுவரன் என்ற தமிழ் மன்னனைக் கொன்ற வரலாறு ஆகும்.

இராவணன் காட்டிலிருந்த சீதையைத் தூக்கித் தன் மடிமீது வைத்துச் சென்று, இலங்கையில் சிறைவைத்து இருந்தான்.

இராவணன் அப்படிச் செய்வதற்குக் காரணம் என்ன? என்று பார்த்தால், இராவணனுடைய தங்கையாகிய சூர்ப்பநகை என்பவளை, இராமனுடைய ஏவலால் அவனது தம்பி இலக்குவன் மூக்கு, முலை, முடி ஆகியவற்றை அறுத்து, அவமானம் செய்துவிட்டான். இதற்குக் காரணம் என்னவென்றால், “சூர்ப்பநகை இராமனையும் இலக்குவனையும் தன்னை மணந்து கொள்ள வேண்டுமென்று கேட்டாள். அதனாலேயே இலக்குவன் அவளை அவமானம் செய்தான் ” என் ஆரிய வால்மீகியே தம் இராமாயணத்தில் எழுதி இருக்கிறார்.

தன்னை மணம் செய்துகொள்ள வேண்டுமென்று கேட்ட ஒரு பெண்ணை இப்படி அவமானம் செய்வது எவ்வளவு கொடுமை? எந்த நாட்டிலாவது இப்படிப்பட்ட காரியம் நடந்ததாக யாராவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட கொடுஞ்செயலைப் பெரிதாக எழுதாமல், “இராவணன் சீதையைச் சிறை வைத்திருந்தான்” என்பதை மாத்திரம் ஒரு மாபெரிய கொடுஞ்செயலாகக் கூறி, இராவணன் மேல் மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படிச் செய்திருக்கின்றனர்.

படிக்க:
ரூ. 76,600 கோடி : இரகசியமாக கடன் தள்ளுபடி செய்த SBI
“பூமராங் ஆனது இராமபாணம்!” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே

இராவணன் சீதையை மூக்கு, முலையை அறுத்து அவமானம் செய்தானா? அல்லது பலவந்தமாவது செய்தானா? இல்லவே இல்லை. மற்றென்ன செய்தான் எனில், தன் கூடப்பிறந்த தங்கையை அலங்கோலஞ் செய்து, அவளுடைய வாழ்க்கையையே கெடுத்த பாவியாகிய இராமனின் மனைவியைத் தூக்கிச் சென்றான். அதுவும் எப்படித் தூக்கிச் சென்றான் எனில், “தூக்கித் தன் மடிமீது வைத்துக்கொண்டு சென்றான்.” இது வால்மீகி முனிவரே சொல்லுவதாகும். –

ஆனால், கம்பர் போன்ற சிலர், “முன் இராவணனால் பலவந்தப்படுத்தப்பட்ட ஒரு பெண், வேறு பெண்களைத் தொட்டால் அவன் மண்டை வெடித்துப் போகுமென சபித்தாள்” என்ற பொய்க் கதையை வால்மீகி முனிவருடைய மூலக்கதைக்கு மாறாக எழுதி, அதனால் “இராவணன் சீதையைக் குடிசையோடு தூக்கிச் சென்றான்” என்று பொய்க்கதை புனைந்தனர். (நூலிலிருந்து பக்.3-4)

… இராமனது ராஜ்யம் வருணாசிரம ராஜ்யமாகவே இருந்திருக்கிறதுடன், அவன் ராஜ்யத்தில் பிராமணர்களுக்கே அதிக ஆதிக்கம் இருந்திருக்கிறது. ஒரு “சூத்திர அரசன்” தவம் செய்ததற்காக (சூத்திரர் தவம் செய்ய அருகதை அற்றவர்கள் என்று) கொல்லப்பட்டிருக்கிறான். அதுவும் கடவுள் அவதாரம் என்று சொல்லப்படும் இராமனாகிய அரசன் கையாலேயே கொல்லப்பட்டிருக்கிறான்.

… இராமன், அவன் மனைவி ஆகிய எல்லோருமே மாமிசத்தையும், மதுவையும் ஏராளமாக உண்டவர்களாகவேயிருக்கிறார்கள். இராமனும், இலக்குவனும் அகால மரணத்தையே அடைந்திருக்கிறார்கள். மற்றும் இதுபோன்ற அநேக சேதிகளை இராமாயண ஆராய்ச்சியில் காணலாம். (நூலிலிருந்து பக்.8)

… பாரதம் என்பது பஞ்சபாண்டவருக்கும் துரியோதனாதியருக்கும் நடந்த போரைப் பற்றிய வரலாறு. திருதராட்டிரன் என்பவனும், அவனுக்குத் தம்பி முறையாகிய பாண்டுவும் நாடாண்டு வந்தனர். திருதராட்டிரனுடைய பிள்ளைகள் துரியோதனன் முதலிய நூறு பேர். தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற அய்ந்து பேரும் பாண்டுவின் மனைவியருக்குப் பிறந்த பிள்ளைகள். திருதராட்டிரனே அரசன். அதனால் அவனுடைய மூத்த பிள்ளையாகிய துரியோதனனே அரசனாக உரியவன். தருமன் முதலியோர்  தங்களுக்கும் நாட்டில் பங்கு உண்டு என்று கெடுவழக்காடி கிருட்டினனுடைய துணையைக் கொண்டு துரியோதனாதியருடன் சண்டைபோட்டுக் கொன்று அரசாட்சியை அடைந்தனர். இதுவே பாரதப் போரின் உண்மை . இதனால் பஞ்ச பாண்டவர்களே வம்பர்கள் என்று விளங்குகின்றதல்லவா?

பாரதக் கதையின் அடிதொட்டு முடிவுவரை எங்கு நோக்கினும் விபச்சாரமே தாண்டவமாடுகின்றது. … வேதங்களையெல்லாம் வகுத்தமையால் வேதவியாசன் என்ற பெயரைப் பெற்ற அந்த வியாசனுக்கு இவ்விரண்டு பெண்களைக் கூடியும் காமவேதனை தீராமல் அம்பாலிகையின் தாதியையும் கூடி, விதுரன் என்பவனையும் பெற்றான்! நான்கு வேதங்களையும் வகுத்தமையோடு வியாசன் பாரதக் கதையையும் எழுதினான். அதனால் பாரதம் அய்ந்தாம் வேதம் என்று புகழப்படுகிறது. காமக்கலையும் அய்ந்தாம் வேதமென்றே கூறப்படுகிறது. காமக்கலைக்கும் விபச்சாரத்துக்கும் நிலைக்களமானதால்தான் பாரதம் அய்ந்தாம் வேதமெனப்படுகிறது போலும். ஆரிய முனிவனாகிய வேதவியாசனே விபச்சாரத்துக்கு நிலைக்களமானவனாகி நடந்துகாட்டியதோடு, அதையே கதையாகவும் எழுதிவிட்டான். என்னே இவன் துணிச்சல்! இத்தகைய இழிவான கதைகளையும் தமிழ் மக்கள் தம்முடையவை என எண்ணி ஏமாந்து படித்து மகிழ்கின்றனரே; ஆரிய சூழ்ச்சியின் வல்லமைதான் என்னே? (நூலிலிருந்து பக்.10)

நூல் : இதிகாசங்களின் தன்மைகள்
ஆசிரியர் : பண்டிதர் இ.மு.சு.

வெளியீடு : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 9626657609 | 7639818254

பக்கங்கள்: 32
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : dravidianbookhouse | periyarbooks.in

குழந்தைகளுக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பது எப்படி ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 07

தாய் மொழிப் பாடம்

பாட நோக்கம்: படிப்பது, பேசுவதன் அடிப்படையில் புதியவற்றை அறியும் ஆர்வத்தை மேற்கொண்டு வளர்த்தல்; நன்மை, தீமை பற்றிய கருத்துகளை உருவாக்குதல்.

பாடத்தின் உள்ளடக்கம்: நான் குழந்தைகளுக்கு ஏற்கெனவே படித்துக் காட்டிய தனித்தனி கவிதைகள், கதைகளிலிருந்து சிறு சிறு பகுதிகள் (”இது எதிலிருந்து என்று கண்டு பிடியுங்கள்!”); தனித்தனியான இரண்டு வாக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள் (“இந்த வாக்கியங்களைக் கண்டுபிடியுங்கள்!”); மாற்றியமைக்கப்பட்ட நாலடிப் பாடல் வரிகள் (“இந்த நாலடிப் பாடலை எப்படி வாசிப்பது?”); பழமொழிகள், முதுமொழிகள் (“இவை உங்களுக்குப் பிடித்துள்ளனவா?”); வாக்கியத்தில் விட்டுப் போன வார்த்தையைக் கண்டு பிடிக்கும் பயிற்சி (“இங்கே என்ன வார்த்தையை எழுதலாம்?”).

பாட அமைப்பு:

  1. பாட வேலைகளை முன்வைத்தல். (காரிய ரீதியான வேகம், கருத்தாழத்தோடு, நட்பு ரீதியான தொனி.) நேரம் 3 நிமிடங்கள்..

“பாருங்கள், உங்களுக்காக எதையெல்லாம் தயாரித்துள்ளேன்!”

இரண்டு கரும்பலகைகளின் திரைகளையும் அகற்றுகிறேன்.

“இந்த இடங்கள் எதிலிருந்து எடுக்கப்பட்டன என்று யோசித்துச் சொல்லுங்கள்!..”

”இங்கே நான் வேண்டுமென்றே இரண்டு வாக்கியங்களின் வார்த்தைகளையும் நாலடிப் பாடல் வரிகளையும் கலந்துள்ளேன். இவற்றைப் பிரித்துச் சொல்ல முடியுமா?”

“இந்த வாக்கியத்தில் இரண்டாவது வார்த்தையைக் ’காணோம்’. நீங்கள் அதைக் கண்டு பிடித்து உரிய இடத்தில் வைக்க வேண்டும்.”

“இதோ நான் இங்கு வார்த்தைகளை எழுதியிருக்கிறேன். தப்பு இருக்கிறதா பாருங்கள்! சரிபார்க்க வேண்டும்!”

“இதோ இங்கே (கரும்பலகையின் திரையைத் திறந்து விட்டு உடனே மூடுகிறேன்) என் ரகசியம் உள்ளது. இதைப் பற்றிப் பின்னால் சொல்வேன்.”

“உங்கள் ஒவ்வொருவரின் டெஸ்கிலும் பழமொழிகள், முதுமொழிகள் எழுதப்பட்ட சிறு அட்டை உள்ளது. இவற்றை என்ன செய்வதென்று உங்களுக்குத் தெரியும்.”

“இது தவிர, இதோ இம் மாதிரியான தாள்களை உங்களுக்காகத் தயாரித்துள்ளேன். ஒவ்வொன்றிலும் இரண்டு கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுங்கள், பின்னால் அதை மனப்பாடம் செய்யலாம். இன்னொரு தாளில் உங்களுக்குப் பிடித்தமான வேலை உள்ளது – வார்த்தைகளையும் படங்களையும் இணைக்க வேண்டும். இரண்டு தாள்களையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.”

“சரி, எதிலிருந்து துவங்குவோம்?”

குழந்தைகள் தமக்கு விருப்பமானதை முதலில் எடுக்கின்றனர்.

  1. தனிப்பட்ட பகுதிகளிலிருந்து உரிய கவிதை, கதையைக் கண்டுபிடித்தல். (சாதாரண வேகம், கவர்ச்சிகரமாக.) நேரம் 3 நிமிடங்கள்.

“முன்னர் நான் உங்களுக்குக் கதைகள், கவிதைகளைப் படித்துக் காட்டியிருக்கிறேன். இப்பகுதிகள் எவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை என்று யோசித்துச் சொல்ல முடியுமா?”

கரும்பலகையில் மூன்று வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. குழந்தைகள் அவற்றைப் படிக்க வாய்ப்பளிக்கிறேன்.

அவை எந்தக் கதை, கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என்று அவர்களால் கண்டுபிடிக்க இயலாவிடில் ஒரு சில கதை, கவிதைகளின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு உதவுகிறேன்.

III. தனித்தனியாகப் பிரித்து எழுதப்பட்டுள்ள சொற்களிலிருந்து வாக்கியங்களை உருவாக்குதல், நாலடிப் பாடலின் மாறிய வரிகளைச் சரியாக வைத்தல். (உற்சாகமாக, விரைவான வேகம், கவர்ச்சிகரமாக.) நேரம் 5 நிமிடங்கள்.

கரும்பலகையின் ஒரு பகுதியைத் திறக்கிறேன். அங்கு இரண்டு வெவ்வேறான வாக்கியங்களின் சொற்கள் கலந்து எழுதப்பட்டுள்ளன: குதிரை, சமைத்தாள், அம்மா, வேகமாக, சாப்பாடு, ஓடியது, நல்ல.

“இங்கே இரண்டு வெவ்வேறான வாக்கியங்களின் சொற்கள் கலந்துள்ளன என்று விளக்கி, இவற்றிலிருந்து அந்த வாக்கியங்களை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுமா?” என்று கேட்கிறேன்.

குழந்தைகள் தம் விடைகளைச் சொன்னதும் நான் கரும்பலகையில் எழுதியிருந்ததைத் திறந்து காட்டுகிறேன்: “குதிரை வேகமாக ஓடியது. அம்மா நல்ல சாப்பாடு சமைத்தாள்”.

பின், உறுதியோடு, சவாலாகச் சொல்கிறேன்: “இதோ இப்போது இங்கு என்ன எழுதியுள்ளது பாருங்கள்! இங்கே ஒரு குழந்தைப் பாட்டின் வரிகள் மாறியுள்ளன. இதை ஒழுங்கான முறையில் விரைவாக உங்களால் மாற்றியமைக்க முடியுமா?”

இப்படிச் சொல்லியபடியே கரும்பலகையின் திரையை விலக்குகிறேன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

நீ ஓய்ந்திருக்கலாகாது, பாப்பா!

ஒரு குழந்தையை வையலாகாது, பாப்பா!

ஓடி விளையாடு, பாப்பா!

கூடி விளையாடு, பாப்பா!

குழந்தைகள் தம் விடைகளைச் சொல்கின்றனர். பின் நான் கரும்பலகையைத் திறந்து சரியான விடையைக் காட்டுகிறேன்:

ஓடி விளையாடு, பாப்பா!

நீ ஓய்ந்திருக்கலாகாது, பாப்பா!

கூடி விளையாடு, பாப்பா!

ஒரு குழந்தையை வையலாகாது, பாப்பா!

  1. பழமொழிகள், முதுமொழிகள் அடங்கிய சிறு அட்டைகளுடனான வேலை. (மிதமான வேகம், கருத்தாழத்தோடு, நம்பிக்கையோடு.) நேரம் 3 நிமிடங்கள்.

“உங்களுக்குப் பிரபல வார்த்தைகளும் முதுமொழிகளும் பிடித்துள்ளதைப் பார்க்க மகிழ்ச்சி. எனவே, நான் உங்களுக்காகப் புதிய மூதுரைகளைக் கண்டுபிடித்து சிறு அட்டைகளில் எழுதியிருக்கிறேன். இவை உங்கள் டெஸ்குகளின் மீது உள்ளன. இவை உங்களுக்குப் பிடிக்கும், உங்கள் நினைவில் நிலைத்திருக்குமென நம்புகிறேன்.”

சிறு அட்டைகளில் எழுதப்பட்டுள்ள மூதுரைகளை வாய் விட்டுப் படிக்கும் படி ஒரு சில குழந்தைகளிடம் சொல்கிறேன்:

உழைப்பின்றி ஊதியமில்லை.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

உண்மை வெல்லும்.

ஆபத்தில் உதவுபவன் நண்பன்.

இவை உங்களுக்குப் பிடித்துள்ளனவா?.. இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று படியுங்கள். இவை உங்களுக்குக் கண்டிப்பாகப் பயன்படும்.”

  1. வாக்கியத்தில் விட்டுப் போன வார்த்தைகளைப் பூர்த்தி செய்தல். (விரைவான வேகம், அன்பான தொனி.) நேரம் 4 நிமிடங்கள்.

வார்த்தை விடப்பட்ட வாக்கியம் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள இடத்தைத் திறந்து காட்டுகிறேன்:

சூரியன்           உதித்தது.

“இந்த வெற்றிடத்தில் எந்த வார்த்தையை நிரப்பலாம் என்று சொல்லுங்கள்.”

குழந்தைகள் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் கரும்பலகையில் எழுதுகிறேன். பின்வருமாறு இது இருக்கலாம்:

சூரியன்           உதித்தது.

மினு மினுப்பாக

செந்நிறமாக

பழுப்பு நிறத்தில்

பெரிதாக

சந்தோஷமாக

ஆரஞ்சு வண்ணத்தில்

புன்சிரிப்போடு

பிரகாசமாக, அழகாக என்று நான் என் விடைகளை சேர்த்துக் கொள்கிறேன்.

“சரி, இப்போது இவற்றில் எது வாக்கியத்தில் நன்கு பொருந்தி வரும்?”

குழந்தைகள் தம் முடிவை நிரூபிக்க உதவுகிறேன்.

  1. வார்த்தைகளில் உள்ள தவறுகளைத் திருத்துதல்.

(நம்பிக்கையளிக்கும் தொனி.) நேரம் 1 நிமிடம்.

எழுத்துப் பிழைகளுடன் வார்த்தைகள் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள இடத்தைத் திறந்து காட்டுகிறேன்.

“இதற்கு இப்போது நேரம் செலுத்த வேண்டாம். இதை இப்படியே விட்டு வைக்கிறேன். யாருக்கு விருப்பமோ அவர்கள் இடைவேளையின் போது இதில் ஈடுபடலாம். இப்போது மிக சுவாரசியமானது நம்மை எதிர்நோக்கியுள்ளது.”

VII. வீட்டிற்குத் தர வேண்டிய பொருட்கள்: தாமாகவே தேர்ந்தெடுக்க வசந்தத்தைப் பற்றிய கவிதைகள், வார்த்தைகளையும் படங்களையும் இணைக்கும் பயிற்சி அடங்கிய தாள்கள். (காரிய ரீதியான வேகம், நட்புத் தொனி.) நேரம் எஞ்சிய நிமிடங்கள்.

படிக்க:
புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ
தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா பெண் சிசுக்கொலை ?

“இந்த பாக்கெட்டுகளில் கவிதைகளும், இணைக்க வேண்டிய படங்களும் வார்த்தைகளும் அடங்கிய தாள்கள் உள்ளன. பயிற்சியை நீங்கள் ஓய்வு நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். கவிதைகளை நாளைக்குள் படித்து, இவற்றில் உங்களுக்கு எது மிகவும் பிடித்துள்ளது என்று சொல்லுங்கள்.”

VIII. பாடத்தை முடித்து வைத்தல். (அன்பாக, மகிழ்ச்சிகரமான தொனி.) –

“நமது பாடவேளை முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனக்கு மகிழ்ச்சி, நீங்கள் புத்திசாலியானவர்களாக, கவனமுள்ளவர்களாக, விடா முயற்சியுள்ளவர்களாக இருந்தீர்கள்! புதியவற்றை அறியும் ஆர்வமுள்ளவர்களாக நீங்கள் இருப்பதற்கு நன்றி! நீங்கள் வெகு வேகமாக முன்னேறுகின்றீர்கள், எனவே, அனேகமாக நான் உங்களுக்கு சிக்கலான வேலைகளைத் தயார்படுத்த வேண்டும்.”

“இப்போது எழுந்திருங்கள் பார்க்கலாம்!… சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!… ஓய்வெடுங்கள்!…”

இரண்டாவது பத்து நிமிட இடைவேளை

குழந்தைகள் பூந்தொட்டிகளுக்கு நீர் ஊற்றுகின்றனர், மீன்தொட்டியைக் கவனித்து சரிசெய்கின்றனர், தாழ்வாரத்தில் விளையாடுகின்றனர், தம் விருப்பப்படி கரும்பலகையில் உள்ள சொற்களில் தப்பைக் கண்டுபிடித்துத் திருத்துகின்றனர், வார்த்தைகளை சரியான படங்களுடன் இணைக்கும் பயிற்சியைச் செய்கின்றனர்.

குழந்தைகள் செய்யும் காரியங்களிலும் பொழுது போக்குகளிலும் நானும் கலந்து கொள்கிறேன், அவர்கள் செய்யும் விஷயங்கள் மீது அக்கறை காட்டுகிறேன், அவர்களுடன் பேசுகிறேன். சாதாரண வேகம், பிரதான தொனி.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை

0

ரோப்பிய முதலாளித்துவம் தனது பிறப்பிலேயே எப்படி சுரண்டலை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை கார்ல் மார்க்ஸ் விளக்கியிருப்பார். அடிமை வர்த்தகம், காலனியச் சுரண்டல் என நவீன சமூகத்தின் கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை அன்றைய ஐரோப்பிய முதலாளிகள் கட்டவிழ்த்துவிட்டு தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டனர். ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கருப்பு மனிதர்களை விலங்குகளைப் போல் பொறிவைத்துப் பிடித்து கூட்டம் கூட்டமாக கூண்டுகளில் அடைத்து அமெரிக்காவுக்கு ”ஏற்றுமதி” செய்தனர் அன்றைய ஐரோப்பிய முதலாளிகள்.

வேட்டையில் சிக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்தும், உறவுகளில் இருந்தும் பிய்த்தெறியப்பட்டு விலங்குகளைப் போல் நடத்தப்பட்டு பெரும் கப்பல்களில் அடைத்து ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். பசிபிக் பெருங்கடலைக் கடப்பதற்குள் கூண்டுகளில் அடைபட்ட மனிதர்களில் பலர் இறந்தும் போயுள்ளனர். சுமார் 400 ஆண்டுகள் நடந்த அடிமை வியாபாரத்தில் இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறத்தாழ 20 கோடி. அலெக்ஸ் ஹேலி எழுதிய “ஏழு தலைமுறைகள்” நூலின் துவக்கத்தில் ஆப்பிரிக்கர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுங்கோன்மைகளின் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரம் காணக்கிடைக்கிறது.

முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மைகளை குறித்துப் பேசும் போதெல்லாம் அதன் பண்டித சிரோமனிகள்  ஆஜராகி, ”அதெல்லாம் அந்தக்காலம். இப்போது முதலாளித்துவம் சைவமாகி விட்டது. எவ்வளவோ நாகரீகம் வளர்ந்து விட்டது. நீங்கள் ஸ்கேண்டிநேவிய நாடுகளைப் பார்த்ததில்லையோ?” எனப் பாடம் எடுப்பதைப் பார்த்திருப்போம். இது உண்மைதானா? முதலாளித்துவம் ”முதிர்ச்சியடைந்து திருந்திவிட்டதா”? கொத்தடிமைத்தனம் ஒழிந்து விட்டதா? இல்லை என்பதே பதில்.

கூலி உழைப்புதான் (அதாவது ஊதியத்திற்கு வாங்கப்பட்ட மனித உழைப்பு) முதலாளித்துவத்தின் பிரதான சுரண்டலாக இப்போது நிலவுகின்றது – என்றாலும், எங்கெல்லாம் தனக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிமை உழைப்பை உறிஞ்சிக் கொள்ள முதலாளித்துவம் தயங்குவதில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பு கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் அந்த ஆண்டில் உலகெங்கிலும் சுமார் 2.5 கோடி கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகெங்கும் இருக்கும் கொத்தடிமைத் தொழிலாளர்களில் சுமார் 24 இலட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர் என்கிறது அதே அறிக்கை. இந்த எண்ணிக்கையில் உலகெங்கிலும் மாபியா கும்பல்களால் கடத்தப்பட்டு கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், அமெரிக்காவில் உள்ள சுமார் 20 இலட்சம் சிறைக்கைதிகளை அந்நாட்டின் 13-வது அரசியல் சாசனத் திருத்தம் ”அடிமைகளாக” வகைப்படுத்தியுள்ளது – இந்த எண்ணிக்கையும் மேற்படி அறிக்கையின் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

படிக்க:
பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் !
சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !

குறிப்பாக 2010-ம் ஆண்டில் இருந்து கொத்தடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் கொத்தடிமைத் தொழிலாளர்களை அதிகளவில் பயன்படுத்துவது அந்நாட்டு பாதுகாப்புத் துறை.

சவுதியைச் சேர்ந்த தைமிமி குழுமம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஏராளமான ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்டுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு உணவு சப்ளை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களை வென்றுள்ள தைமிமி குழுமம், கொத்தடிமைத் தொழிலாளிகளை பணியில் ஈடுபடுத்தியிருப்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலமாகியுள்ளது. 2011-ம் ஆண்டு பரவலாக ஊடகங்களில் இப்பிரச்சினை வெடித்ததைத் தொடர்ந்து தைமிமி குழுமத்தின் மீது 11 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏழைகளை கவர்ந்திழுக்கும் தைமிமி குழுமம், அவர்களிடம் ஓட்டல் வேலை என பொய் சொல்லி ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கி போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாதம் ஆயிரம் டாலர் சம்பளம் என வாய் வார்த்தையாய் சொல்லி விட்டு, ஒப்பந்தத்தில் 400 டாலரே எழுதப்பட்டிருக்கும் – இதே போல், ஒப்பந்தங்களில் மாற்றி எழுதப்பட்ட விசயங்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அத்தொழிலாளிகள் படிப்பறிவு பெற்றவர்கள் இல்லை.

வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏமாற்றி பிடித்து வரப்படும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு  ஆபத்தான இடங்களில் பணிக்கமர்த்தியுள்ளது தைமிமி குழுமம். தகிக்கும் பாலைவன வெப்பத்தில் சிறிய தகரக் கொட்டகைகளுக்குள் ஆறேழு தொழிலாளர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளது. மேலும், தொழிலாளர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் பிடுங்கி வைத்துக் கொள்ளும். அயல் நாட்டுத் தொழிலாளர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பது அமெரிக்க பாதுகாப்புத் துறையில் உள்ள விதி – இது மீறப்பட்டுள்ளது என்பதில் இருந்தே உயரதிகாரிகளின் ஆசியின்றி கொத்தடிமை முறை நிலவுவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்க இராணுவ முகாம்களில் பணியாற்றும் கொத்தடிமைகள்.

இதே போல் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் காண்டிராக்ட் நிறுவனமான டைன்கார்ப் எனும் மற்றொரு நிறுவனம், போஸ்னியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் வைத்து விபச்சார விடுதியே நடத்தியது 1999-ம் ஆண்டு அம்பலமாகி நாறியது. டைன்கார்ப் நிறுவனம் இந்த குற்றங்களுக்காக உரிய தண்டனை பெறவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அந்நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய அதன் முன்னாள் ஊழியரோ கொலை மிரட்டல்களுக்கு அஞ்சி போலீசுக் காவலில் முடங்கிக் கிடக்கிறார். இதே நிறுவனத்திற்கு மீண்டும் ஆப்கானில் இராணுவ ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. மீண்டும் 2009-ம் ஆண்டு ஆப்கானிய சிறார்களைக் கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபத்தியது அம்பலமானது.

இது ஏதோ ஒரு சில காண்டிராக்ட் நிறுவனங்களின் பிரச்சினை அல்ல. அமெரிக்க இராணுவம் வெளியிடும் டெண்டர்களை வெல்வதற்கான போட்டியில் குறைந்த தொகையை குறிப்பிடுகின்றன. இவ்வாறு வெல்லப்படும் ஒப்பந்தங்களில் இருந்து இலாபம் ஈட்ட ஒரே வழி தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் குறைப்பது. அதற்கு ஒரே உத்திரவாதமான வழி கொத்தடிமை முறை. அனைத்தும் சட்டப்பூர்வமாகவே நடந்தேறுகின்றது. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஒரு குறிப்பிட்ட கூலி என்பது நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக யார் குறைந்த கூலிக்கு செய்ய முன் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்த வேலைக்கான ஒப்பந்தத்தைக் கொடுக்கின்றனர். இதன்மூலம் மறைமுகமாக தெரிந்தே கொத்தடிமை முறை நிலவுவதற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றனர்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அடிமை முறை ஒழிந்து போகவில்லை. அது நம் பார்வையில் படாமல் சட்டப்பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி மிகச் செழிப்பாக வளர்ந்துள்ளது. முதலாளித்துவத்தின் லாபவெறி அதற்கு தண்ணீர் ஊற்றி உரமிட்டுக் கொண்டுள்ளது.


சாக்கியன்

செய்தி ஆதாரம் :
The US Military and the Slave Trade

ஊட்டச்சத்து குறைபாடு – காலரா : ஏமன் மக்களின் தீராத்துயரம் ! – படக்கட்டுரை

மனில் ஐந்து ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 70 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போர் பல லட்சம் மக்களை பஞ்சத்தின் விளிம்பில் தள்ளியுள்ளது. இதை ‘உலகின் மிக மோசமான மனிதநேய நெருக்கடி’ என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

ஏமன் நாட்டில் சுத்தமற்ற நீர்நிலைகளால் காலரா போன்ற தொற்று நோய்கள் அதிகரித்துள்ளது. ஆதலால், ஏமனில் நீர்நிலைகள் கூட ஆயுதபாணியாக்கப்பட்டிருக்கிறது என்று உள்ளூர் அரசுசாரா தொண்டு நிறுவனம் ஒன்று கூறுகிறது. 1.8 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

கடந்த சில ஆண்டுகளில் இந்நாட்டில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையால், காலரா நோய்த் தொற்று ஏற்பட்டதில், 12 லட்சம் மக்கள் பாதிப்படைந்தனர்.

Malnutrition-cholera-Yemen-woes
ஏமனில் நீர்நிலைகள் கூட ஆயுதபாணியாக்கப்பட்டிருக்கிறது

அங்கு கிடைத்த தரவுகளின்படி, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி கூட்டணிப் படை, 20 ஆயிரம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட மக்கள் வசிப்பிடப் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்குப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வான்வழி, கடற்படைத் தாக்குதல் மற்றும்  கடல்வழிப் பாதை முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை முடக்கிவிட்டன. இதனால் ஆரோகியமான, சத்தான உணவு கிடைப்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. ஊட்டச்சத்து குறைப்பாட்டால் குழந்தைகள் பெரும்பாலும் நோஞ்சான் குழந்தைகளாகவே வளர்கிறது.

நாட்டின் பல பகுதிகளில், ஊட்டச்சத்து குறைபாடு தடுப்பு மையங்கள் இருந்தும், டஜன் கணக்கான மக்கள் நாள்தோறும் மணிக்கணக்கில் வரிசையில் காத்து நிற்கின்றனர். மையத்தின் தாழ்வாரத்தில், தன் இரண்டு வயது பெண் குழந்தையை மடியில் வைத்து அமர்ந்திருந்தார் அகமது முகமது அல் பஹியாலி. பசியால் கதறும் தன் குழந்தைக்கு தண்ணீரை மட்டுமே கொடுக்க முடிகிறதே என கவலைபடுகிறார், அகமது.

படிக்க:
ஏமன் மக்கள் மீது காலராவை ஏவிவிடும் அமெரிக்க-சவுதி கூட்டணி
♦ ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை

“என் குழந்தை தொடர்ந்து வாந்தி எடுக்கிறாள். யாராவது அவளைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இங்கு அழைத்து வந்திருக்கிறேன். இது காலராவா அல்லது வேறு நோய்த் தொற்றா என்று எனக்கு சரியாக தெரியவில்லை.

நாங்கள் ஏழைகள். போருக்கு முன்பு நான் சவூதி அரேபியாவில் வேலை செய்து கொண்டிருந்தேன். இப்பொழுது எனக்கு வேலை, வீடு என்று எதுவுமில்லை; வேறு இடத்திற்கு செல்லவும் வழியில்லை. எங்களது மோசமான இந்த நிலைமைக்கு கடவுள் மட்டுமே உதவி செய்ய முடியும்” என்கிற அகமதுக்கு இரண்டு வயது பெண் குழந்தையும் சேர்த்து மொத்தம் 11 குழந்தைகள்.

“குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவினை எங்களால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் மாவு மட்டுமே உண்கின்றனர். சில நேரங்களில் வாரக் கணக்கில்கூட அவர்களுக்கு சத்தான பழங்கள், காய்கறிகள், பால் போன்ற எதுவும் கிடைக்காது” என்கிறவர், “நான் ஒரு பிச்சைக்காரனைப் போல் உணர்கிறேன். இந்தப் போர் என் கண்ணியத்தைப் பறித்துக் கொண்டது” என்று ஆதங்கப்படுகிறார் அகமது.

Malnutrition-cholera-Yemen-woes-1ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வலுவாக உள்ள ஒரு நகரத்தில், சவூதி கூட்டணி படையினரால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தையும் தாயும், சாடா (Saadah) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Malnutrition-cholera-Yemen-woes-2வறண்டு வரும் நீர்நிலைகளால், 1.45 கோடி மக்கள் சுத்தமான குடிநீரும் சுகாதாரமும் இன்று தவிக்கின்றனர். இதனால் காலரா போன்ற நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

Malnutrition-cholera-Yemen-woes-3ஏமனில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் கடுமையான பஞ்சத்தைச் சந்தித்துள்ளன. ஹாஜா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் உணவுப் பொட்டலங்கள்.

Malnutrition-cholera-Yemen-woesமருத்துவ முகாமாக மாற்றப்பட்ட பெனி கைஸ் மாவட்ட பள்ளிக்கூடத்தில், தனது இரண்டு வயது குழந்தையுடன் மருத்துவருக்காகக் காத்திருக்கும் அகமது முகமது அல் பஹியாலி.

Malnutrition-cholera-Yemen-woesஅப்ஸ் (Abs) மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு. நோய்த் தொற்று ஆபத்து தெரிந்தும் தனது வீட்டில் கவனிக்க யாருமில்லாததால் முதல் குழந்தையையும் உடன் அழைத்துவந்துள்ள தாய்.

Malnutrition-cholera-Yemen-woesஅப்ஸ் மருத்துவமனையில் குறைப் பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தை. ஏமனில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகள் பாதிக்கு பாதி மூடப்படலாம் எனவும், இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகும் எனவும் ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Malnutrition-cholera-Yemen-woesவடமேற்கு ஏமனில். அப்ஸ் மருத்துவமனை பகுதியிலிருந்து, 20 கி.மீ தூரத்தில் இருக்கும் அஸ்லாம் கிராமம் மருத்துவ முகாமில், மருந்துச்சீட்டிற்காக குழந்தைகளுடன் காத்திருக்கும் தந்தையர்கள்.

Malnutrition-cholera-Yemen-woesமருத்துவ முகாமாக மாற்றப்பட்ட பள்ளிக்கூடத்தில் சிகிச்சைப் பெற்று வரும் ஏமன் பெண்.

Malnutrition-cholera-Yemen-woesஊட்டச்சத்து குறைப்பாடுடைய 9 மாதக் குழந்தையை பரிசோதிக்கும் பெண் மருத்துவத் தாதி. அக்குழந்தையின் எடை 2.8 கிலோ.

Malnutrition-cholera-Yemen-woesஆப்ஸ் மாகாணத்தில் உள்ள தண்ணீர் கிணறு. கிணற்று தண்ணீரை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அத்தண்ணீரில் காலரா பரவக்கூடும் என்றும் மனிதநேய அமைப்புகள் எச்சரித்துள்ளன.


செய்தி ஆதாரம் : In Pictures: Malnutrition, cholera add to Yemen woes
தமிழாக்கம்  :
ஷர்மி

மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! புதிய கலாச்சாரம் நூல்

ழுபது ஆண்டுகளில் காணாத பொருளாதார நெருக்கடி, மீள வழி தெரியாத பொருளாதார மந்தத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்” என்று பொருளாதார அறிஞர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் பொருட்கள் சேவைகள் மட்டுமின்றி கிராமப்புற நகர்ப்புற ஏழைகளின் அடிப்படையான நுகர்வும் கணிசமாக குறைந்திருக்கிறது. ஐந்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட்டுகளின் விற்பனை வீழ்ச்சி, அதற்குச் சான்று பகர்கிறது.

பெரு நிறுவனங்களின் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் இதர நுகர் பொருட்களின் வீழ்ச்சியை பேசும் ஊடகங்கள் விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் மக்களின் நெருக்கடியைப் பேசுவதில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க, செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி, “ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தை 3-லிருந்து 5 ட்ரில்லியனாக உயர்த்தப் போகிறேன்; நாடு முழுவதும் 100 சுற்றுலா மையங்களை உருவாக்கப் போகிறேன்” என்று கூசாமல் சவடால் அடிக்கிறார். நாட்டு மக்களோ, சாப்பிடும் ரொட்டி-பிஸ்கெட் கூட கிடைக்கவில்லையே என்று பதறிக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடி குறித்து ஆளும்வர்க்கமே கூவத் தொடங்கியதால் வேறு வழியின்றிச் சில சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். அவை ரொட்டி வாங்க முடியாத இந்தியர்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான சலுகைகள் அல்ல. பட்ஜெட்டில் போடப்பட்ட சூப்பர் ரிச் வரி நீக்கம், கருப்புப் பண முதலைகளுக்கு ஏஞ்செல் வரி ரத்து, சி.எஸ்.ஆர். மீறல் குற்றம் என்ற விதி நீக்கம், பொதுத்துறை வங்கிகள் மூலம் தாராளக் கடன் வழங்க ஏதுவாக ரூ, 70,000 கோடி மறுமூலதன உதவி, கார்ப்பரேட் கடனுக்கான வட்டி குறைப்பு, அரசு இலாகாக்கள் புதிய கார்களை வாங்குதல்… என அனைத்துமே பன்னாட்டு நிதி மூலதனச் சூதாடிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கான சலுகைகள்.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு என்ற அறிக்கையை கவுன்சில் ஃபார் சோசியல் டெவலப்மென்ட் என்ற அமைப்பு ஜூன் மாதம் வெளியிட்டுள்ளது. 2000-களில் சமூக ஏற்றத்தாழ்வு 6 மடங்கு அதிகரித்திருக்கிறது. 2015-ம் ஆண்டில் மக்கட்தொகையின் மேல்தட்டில் இருக்கும் 1 விழுக்காடு கோடீசுவரர்கள் நாட்டின் செல்வத்தில் 22% வைத்திருந்தனர். அது 2018-ல் 58.4% ஆக அதிகரித்து விட்டது என்று கூறுகிறது அவ்வறிக்கை.

மோடி அரசின் பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு மக்களின் பொருளாதாரத்தை பேரழிவுக்குள் தள்ளுவதில் பெரும்பங்காற்றின என்பது உண்மையே. எனினும், இவற்றைத் தவிர்த்திருந்தால் நெருக்கடியே வந்திருக்காது என்பது உண்மையல்ல. இன்று ஏற்பட்டிருக்கும் வேண்டல் (demand), சுருக்கம் அல்லது மக்களின் வாங்கும் சக்தியின்மை என்பது அடிப்படையில் புதிய தாராளவாதக் கொள்கை தோற்றுவித்திருக்கும் விளைவு. இந்த அபாயத்தை தொகுத்துத் தருகிறது இந்நூல்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி – புதிய கலாச்சாரம் அக்டோபர் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

“மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ.1,76,000 கோடி: யாருக்கு இலாபம்? யாருக்கு இழப்பு?
  • தேங்கிக்கிடக்கும் கார்கள்! வேலையிழக்கும் தொழிலாளர்கள்! காரணம் என்ன?
  • தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி: மோடி வித்தைகள் பலிக்காது!
  • முதலாளித்துவத்தின் சாதனை: டெட்ராய்ட் நகரம் திவால்!
  • அமெரிக்கக் கடன் நெருக்கடி: மைனரின் சாயம் வெளுத்தது!
  • தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்!
  • செல்லாக்காசாகிறது ரூபாய்! திவாலாகிறது மறுகாலனியாக்கப் பாதை!
  • படுவீழ்ச்சியில் இந்திய சேவைத்துறை: ஓராண்டு காணாத பின்னடைவு!
  • உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!
  • பொருளாதார வீழ்ச்சி: மறைக்கும் நிர்மலா! வீதிக்கு வரும் ஆதாரங்கள்!
  • மேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம்!
  • கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி!
  • வாகன உற்பத்தி சரிவு: முதலாளிகளின் பொய் புரட்டுகள்!
  • பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம்!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மீ டு இயக்கம்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

தனது விமானத்துடன் அவன் இரண்டறக் கலந்துவிட்டான் !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 11

மெரேஸ்யெவ் விடாமுயற்சியுடன் நிறையப் பறந்தான். மறுபடி விமானத்துடன் ஒன்று கலந்துவிட, பொய்க்கால்களின் உலோகம், தோல் இவற்றின் ஊடாக அதைப் புரிந்து கொள்ள அரும்பாடுபட்டான். இதில் தான் வெற்றி அடைவதாகச் சில வேளைகளில் அவனுக்குத் தோன்றும். அவன் களிப்புற்று விமானத்தை ஏதேனும் சிக்கலான வடிவுப் பறப்பில் செலுத்துவான். ஆனால் அவன் இயக்கம் சரியானதாக இல்லை, விமானம் இடக்குப் பண்ணுகிறது, தன் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறது என்று உடனேயே உணர்வான். நம்பிக்கை ஒளி மங்கிவிட்டதால் துயருற்று, சலிப்பூட்டும் பயிற்சியில் மறுபடி ஈடுபடுவான்.

இத்தகைய நிலையில் வந்தது வெண்பனி உருகத் தொடங்கும் மார்ச்சு மாதம். ஒரு நாள் விமானத்திடலில் ஒரே காலையில் வெண்பனி சிறிது இளகிக் கருத்து விட்டது. புரையோடிய வெண்பனி தரையோடு தரையாகப் படிந்துவிட்டது. அதன் மேல் இயங்கிய விமானங்கள் உழுசால் போன்ற ஆழ்ந்த தடங்களை ஏற்படுத்தின. அன்று அலெக்ஸேய் தனது சண்டை விமானத்தில் வானில் கிளம்பினான். அப்போது காற்று எதிரிலிருந்து விலாப் புறமாக வீசியது. விமானம் ஒரு பக்கம் விலகிற்று, அலெக்ஸேய் அதை ஓயாமல் நேர்படுத்த வேண்டியிருந்தது. அப்போதுதான், விமானத்தை நேர்பாதைக்குத் திருப்புகையில் தான் அலெக்ஸேய் சட்டெனக் கண்டு கொண்டான் – விமானம் தனக்குக் கீழ்படுகிறது என்பதையும், தான் அதை உள்ளத்தாலும் உடலாலும் முழுமையாக உணர்வதையும். இந்த உணர்வு மின்வெட்டுப் போலப் பளிச்சிட்டது. முதலில் அலெக்ஸேய் அதை நம்பவில்லை. மட்டுமீறிய ஏமாற்றங்களை அனுபவித்தவன் ஆதலால் தனது நல்லதிர்ஷ்டத்தை உடனே நம்ப அவனால் முடியவில்லை.

விமானத்தைச் சட்டென வலப்புறம் திருப்பி ஒரு வளையமிட்டான். விமானம் படிந்து, கணக்காகத் திரும்பியது. மப்பு மந்தாரமான நாள் திடீரென வெயிலொளியில் சுடர்வது போலிருந்தது அலெக்ஸேய்க்கு.

எத்தனை எத்தனையோ நாட்கள் செய்த கடும் உழைப்பின் பலனை இப்போது அவன் எளிதாக அனுபவித்தான். இவ்வளவு நீண்ட காலமாகக் கை வராமல் நழுவிச் சென்ற முக்கிய விஷயம் இப்போது அவனுக்குக் கைவந்து விட்டது. தனது விமானத்துடன் அவன் இரண்டறக் கலந்துவிட்டான், தனது உடலின் நீட்சி போல அதை உணர்ந்தான். உணர்ச்சியோ பிகுவோ அற்ற பொய்க் கால்கள் கூட இந்த ஒன்று கலத்தலுக்கு இப்போது தடையாக இல்லை. தனக்குள் ஊற்றெடுத்துப் பெருகும் உவகையை உணர்ந்த அலெக்ஸேய் சில குறுகிய வளையங்கள் இட்டான், கரணமடித்தான், அடித்து முடித்ததுமே விமானத்தை பம்பரமாகச் சுழலச் செய்தான். தரை சீழ்கையுடன் வெறிகொண்டு சுழன்றது. விமான நிலையமும், பள்ளிக் கட்டிடமும், காற்று நிரப்பிய கோடிட்ட பலூன் பறந்து கொண்டிருந்த வானிலை ஆராய்ச்சிக் கோபுரமும் எல்லாமே மொத்தையான சுழற்சியில் ஒன்று கலந்தன. அலெக்ஸேய் விமானத்தைத் தயக்கமின்றி நேர் நிலைக்குக் கொண்டுவந்து சுருக்கு வளையமிட்டான். அந்தக் காலத்தில் பெயர் பெற்றிருந்த “லா-5” ரக விமானம் தனது வெளிப்படையானவையும் உள்ளார்ந்தவையுமான பண்புகளை இப்போதுதான் அவனுக்குத் தெரியக் காட்டியது. அனுபவசாலியின் கைகளில் இந்த விமானந்தான் எப்படி அற்புதங்கள் செய்தது! ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்ப நுட்பமாகச் செயல்பட்டு, அது மிக மிகச் சிக்கலான கோலங்களை அனாயசமாக இட்டது, வர்ணம்போல் சர்ரென்று கோலங்களை மேலே பாய்ந்தது. கச்சிதமான, லாகவமான, விரைவுள்ள விமானம் அது.

மெரேஸ்யெவ் குடிகாரன் போலத் தள்ளாடிக் கொண்டு அர்த்தமற்ற புன்னகையால் முகம் மலர விமானத்திலிருந்து வெளியே வந்தான். தனக்கு முன்னே கோபக் கனல் வீசிய பயிற்சி ஆசிரியரை அவன் காணவில்லை, அவருடைய வசவுகளைக் கேட்கவில்லை. திட்டினால் திட்டிவிட்டுப் போகட்டும். காவல் தண்டனையா? அதற்கென்ன, குறித்த கெடுவைக் காவலறையில் கழிக்க அவன் தயார். இப்போது இவை எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டாகுமா? அவன் விமானி, நல்ல விமானி, விலைமதிப்பற்ற பெட்ரோல் அவனது பயிற்சிக்காகத் திட்ட அளவுக்கு மேல் செலவிடப்பட்டது வீண் போகவில்லை என்பது தெளிவாயிருந்தது. அவன் மட்டும் போர்முனைக்கு, சண்டை செய்வதற்கு, சீக்கிரமாக அனுப்பப்படட்டும், இந்தப் பெட்ரோல் மதிப்புக்கு நூறு மடங்கு அதிகமாக ஈடுசெய்து விடுவான்!

விடுதியில் அவனுக்கு இன்னொரு மகிழ்ச்சி காத்திருந்தது. தலையணை மேல் கிடந்தது க்வோஸ்தியேவின் கடிதம். முகவரியாளனைத் தேடுகையில் எங்கெங்கே, யார் யாருடைய பைகளில், எவ்வளவு தூரம் அது பயணம் செய்தது என்பதைத் திட்டமாக அனுமானிப்பது கடினமாக இருந்தது. ஏனெனில் உறை கசங்கி நைந்து கறைபட்டு எண்ணெயில் ஊறியிருந்தது. அன்யூத்தா கைப்பட முகவரி எழுதியிருந்த புதிய உறைக்குள் வைக்கப்பட்டு அது அலெக்ஸேயிடம் வந்திருந்தது.

க்வோஸ்தயேவ் தனக்குப் படுமோசமான அனுபவம் நேர்ந்ததாக எழுதியிருந்தான். அவன் தலையில் அடிபட்டிருந்தது. எதனால் தெரியுமோ? ஜெர்மன் விமானத்தின் இறக்கையால், இப்போது அவன் படைப்பிரிவின் மருத்துவமனையில் படுத்திருந்தான். சில நாட்களில் அங்கிருந்து வெளியேறலாம் என்று திட்டம் இட்டிருந்தான். நம்ப முடியாத இந்தச் சம்பவம் நிகழ்ந்த விதம் இதுதான்: ஆறாவது ஜெர்மன் சைனியம் மற்றப் படைகளிலிருந்து துணிக்கப்பட்டு ஸ்தாலின் கிராதின் அருகே வளைத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்களுடைய படைப்பிரிவு பின்வாங்கிய ஜெர்மானியரின் முனைமுகத்தைப் பிளந்து, அங்கு ஏற்பட்ட இடைவெளிக்குள் புகுந்து ஸ்தெப்பி வழியே ஜெர்மன் பின்புலத்தை நோக்கி எல்லா டாங்கிகளுடன் விரைந்து முன்னேறியது. இந்தத் தாக்குதலில் டாங்கிப் பட்டாளத்துக்குத் தலைமை தாங்கினான் க்லோஸ்தியேவ்.

டாங்கித் தொகுதிகள் ஜெர்மன் பின்புலப் படையின் வியூகங்களையும் கிராமக் காப்பரண்களையும் தகர்த்து நொறுக்கிக் கொண்டு முக்கிய ரெயில்வே நிலையங்களை அடைந்து, திடீரெனப் பாய்ந்து அவற்றை இடி போலத் தாக்கின. டாங்கிகள் தெருக்களில் சுற்றி வழியில் எதிர்பட்ட, பகைவரைச் சேர்ந்த எல்லாவற்றையும் குண்டு மாரியால் அழுத்தன. தாணையங்களில் எஞ்சிய படையினர் சிதறி ஓடி விட்ட பிறகு டாங்கிவீரர்களும் கவச மோட்டார்களில் கொண்டுவரப் பட்ட காலாட்படையினரும் போர்த்தளவாடக் கிட்டங்கிகளைத் தீக்கிரையாக்கினர். பாலங்களையும் இருப்புப் பாதை இணைப்பு விசைகளையும், ரெயில் நிலையங்களில் திருப்பு வளையங்களையும் பெயர்த்து அகற்றினார்கள், பின்வாங்கும் ஜெர்மானியர்களுக்கு ரெயில்கள் பயன்படாதவாறு அடைத்துவிட்டார்கள். பகைவர்களின் சேமிப்புக்களிலிருந்து டாங்கிகளுக்கும் மோட்டார்களுக்கும் பெட்ரோல் போட்டுக் கொண்டார்கள், உணவுப் பண்டங்களைத் திரட்டிக் கொண்டார்கள், பின்பு மேலே சென்றார்கள். ஜெர்மானியர்கள் சுதாரித்துக் கொண்டு எதிர்ப்புக்காகத் தங்கள் படைகளைக் கொண்டுவரவோ அல்லது டாங்கிகள் மேலே சென்ற வழியைத் திட்டமாகத் தெரிந்துகொள்ளவோ முற்படுவதற்குள் சோவியத் டாங்கிகள் நெடுந்தூரம் சென்று விட்டன.

“…. இப்படி நாங்கள் முன்னேறுகையில் தான் எனக்கு நேர்ந்தது இந்தத் தொல்லை. படைத் தலைவர் எங்களை அழைத்தார். வேவு விமானம் அவருக்குச் செய்தி தெரிவித்திருந்தது: இன்னின்ன இடத்தில் பிரமாண்டமான விமானத்தளம் இருக்கிறது. ஒரு முன்னூறு விமானங்கள், எரிபொருள், சரக்குகள் எல்லாம் அங்கு இருக்கின்றன. எங்கள் படைத்தலைவர் செம்பட்டை மீசையைக் கிள்ளியவாறு உத்தரவிட்டார்: ‘க்வோஸ்தயேவ், இரவில், சந்தடி இல்லாமல், குண்டு சுடாமல், தன்னவர்கள்போல மரியாதைப்பாங்குடன் விமான நிலையத்தை நெருங்கு. அப்புறம் ஒரு மொத்தமாகக் குண்டுகளைப் பொழிந்தவாறு பாய்ந்து தாக்கு. அவர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டி நீர்த்தூளி செய்துவிடும். ஒரு விமானங்கூடப் பறந்து தப்ப விட்டுவிடாதே.’ இந்தப் பொறுப்பு என் பட்டாளத்துக்கும் என் தலைமைக்குக் கீழ்ப்பட்ட இன்னொரு பட்டாளத்துக்கும் கொடுக்கப்பட்டது. பிரதானப் படைமுந்திய திட்டப்படியே ரஸ்தாவை நோக்கி முன்னேறியது.”

“ஆக, நாங்கள் இந்த விமானத் தளத்தை அடைந்தோம். கோழிக்குடிலுக்குள் நரி போல நுழைந்தோம். நண்பா, அலெக்ஸேய், நீ நம்பக்கூட மாட்டாய்- ஜெர்மன் ஸிக்னலர்கள் இருக்குமிடம் வரை நாங்கள் மளமளவென்று சென்றோம். ஜெர்மனியர்கள் எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, தங்களவர்கள் என்ற நினைப்பில். அதிகாலை, மூடுபனி, எதையும் தெளிவாகக் கண்டுகொள்ள முடியவில்லை. மோட்டார்களும் டாங்கிச் சக்கரங்களும் தடதடத்துக் கணகணத்துக் கொண்டிருப்பது மட்டுமே கேட்டது. அப்புறம் நாங்கள் திடீரென்று பாய்ந்து தாக்கினோம் பாரு. விமானங்கள் வரிசைகளாக நின்றன. நாங்கள் கவசந் துளைக்கும் குண்டுகளை அவற்றின் மேல் பொழிந்து ஒவ்வொரு குண்டுக்கும் ஐந்தைந்து, ஆறாறு விமானங்களாகத் தகர்த்துத் தூள் பரத்தினோம். அப்புறம் பார்த்தோம். இப்படித் தாக்கிச் சமாளிக்க முடியாது என்று பட்டது. துணிச்சல் மிக்க விமானிகள் எஞ்சின்களை முடுக்கத் தொடங்கினார்கள். அவ்வளவுதான், நாங்கள் டாங்கி மேல் கதவுகளை அறைந்து சாத்திக் கொண்டு, விமானங்களை மோதித் தகர்க்கப் புறப்பட்டோம். கவசப் பகுதியால் விமானங்களின் வால்களை இடித்து உடைத்தோம். அவை துருப்பு விமானங்கள், பிரமாண்டமானவை. எஞ்சின்களை எட்டுவது நடவாத காரியமாக இருந்தது. எனவே தான் வால்களைத் தாக்கினோம். வால் இல்லாத விமானம் எஞ்சின் இல்லாத விமானம் போன்றது தானே, அதனால் பறக்க முடியாதே.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் நான் உற்சாகப் பெருக்கில் அசட்டுத்தனம் செய்துவிட்டேன். மேல் கதவைத் திறந்து நீட்டிச் சுற்றுமுற்றும் பார்த்தேன் நிலைமையை அவதானிப்பதற்காக அதே சமயத்தில் என் டாங்கி ஒரு விமானத்தின் மேல் மடாரென்று போட்டது. நல்ல வேளை, தலைகாப்பு அடியதிர்ச்சியைக் குறைத்துவிட்டது, இல்லா விட்டால் என் ஆட்டம் தீர்ந்திருக்கும் ஒரேயடியாக… ஆனால் இதெல்லாம் வெட்டிப் பேச்சு. நான் குணமடைந்து விரைவில் வெளியேறிவிடுவேன். என் டாங்கி வீரர்களை மறுபடி சீக்கிரமே காண்பேன். என் தொல்லை வேறு ஒன்று. மருத்துவமனையில் என் தாடியைச் சிரைத்துவிட்டார்கள். இவ்வளவுகாலமாகக் கொஞ்சங் கொஞ்சமாக வளர்த்து உருவாக்கியிருந்தேன் அதை. அடர்த்தியாக அகன்று வளர்ந்திருந்தது. அவர்களோ சிறிதும் கருணையின்றி மழித்துத் தள்ளிவிட்டார்கள். அட எக்கேடுங்கெட்டுப் போகட்டும் அந்தத் தாடி! நாம் விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்றாலும் இந்தப் போர் முடிவதற்குள் மறுபடி தாடி செழித்து வளர்ந்து என் முக விகாரத்தை மறைத்து விடும் என்று நம்புகிறேன். ஆனால் ஒன்று தெரியுமா, அலெக்ஸேய்? அன்யூத்தாவுக்கு எதனாலோ என் தாடி பிடிக்கவில்லை. தனது ஒவ்வொரு கடிதத்திலும் அதன் மேல் பாய்ந்த வண்ணமாயிருக்கிறாள்.”

அது நீண்ட கடிதம். மருத்துவமனைச் சலிப்பினால் ஏங்கிப் போய் க்வோஸ்தயேவ் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தான் என்பது தெளிவாயியிருந்தது. ஸ்தாலின்கிராதின் அருகே தன்னுடைய டாங்கிவீரர்கள் டாங்கிகளை இழந்து புதிய டாங்கிகளை எதிர்பார்த்தவாறு காலாட்படையினராக அணிவகுத்துச் சண்டை நடத்திக் கொண்டிருக்கையில் புகழ் பெற்ற மமாயேவ் குன்று வட்டாரத்தில் ஸ்தெபான் இவானவிச்சைக் கண்டதாக அவன் முடிவில் போகிறபோக்கில் எழுதியிருந்தான். முதியவர் விஷேசப் பள்ளியில் பயிற்சி பெற்று இப்போது ஸார்ஜென்ட் மேஜர் ஆகிவிட்டாராம், டாங்கி எதிர்ப்புப் பீரங்கிப் பிளாட்டூனுக்குத் தலைவராம். எனினும் ஸ்னைப்பர் பழக்கத்தை அவர் இப்போதும் விடவில்லையாம். அவருடைய சொன்னபடி பார்த்தால், இப்போது அவருடைய தாக்குக்கு இரையாகும் விலங்கு முன்னைவிடப் பெரியது: காப்பகழிலியிருந்து வெளியே வந்து வெயில் காயும் பாசிஸ்டு ஏமாளி அல்ல, ஜெர்மன் டாங்கி நுட்பமான அமைப்புள்ள உறுதியான இயந்திரம். ஆனால் இந்த விலங்குகளை வேட்டையாடுவதிலும் கிழவனார் சைபீரிய வேட்டைக்காரருக்கு இயல்பான தந்திரத்திலும் அளவற்ற பொறுமையிலும், தாங்குதிறனிலும் தவறாது தாக்குவதிலும் முன்போலவே சிறந்து விளங்குவதாக க்வோஸ்தயேவ் குறிப்பிட்டிருந்தான். தன்னைக் கண்டதும் செட்டாகச் சேமிப்பவரான ஸ்தெபான் இனாவிச் பகைவரிடமிருந்து கைப்பற்றிய மதுப் புட்டியைத் தேடி எடுத்துத் திறந்தாராம். இருவரும் அந்தப் படுமோசமான மதுவைப் பருகினார்களாம்; பழைய நண்பர்கள் எல்லோரையும் நினைவுபடுத்திக் கொண்டார்களாம். ஸ்தெபான் இனாவிச்; மெரேஸ்யெவுக்குத் தாழ்மையான வணக்கங்களைத் தெரிவிக்கச் சொன்னாராம், இருவரும் உயிரோடிருந்தால் போர் முடிந்த பிறகு சைபீரியாவில் தமது கூட்டுப்பண்ணைக்கு வந்து அணில்களையோ பறவைகளையோ வேட்டையாடிக் களிக்கும் படி அழைத்தாராம்.

படிக்க:
நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !

இந்தக் கடிதத்தைப் படித்ததும் மெரேஸ்யெவுக்கு இதமாகவும் இருந்தது, ஏக்கமும் பொங்கியது. நாற்பத்து இரண்டாம் வார்டைச் சேர்ந்த எல்லா நண்பர்களும் வெகு காலமாகவே போரிட்டுவருகிறார்கள். கிரிகோரிய் க்லோஸ்தியேவும் முதிய ஸ்தெபான் இனாவிச்சும் இப்போது எங்கே இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள் அவர்கள்? போர்க் காற்று அவர்களை எந்தெந்த இடங்களுக்கெல்லாம் அடித்துச் செல்லும்? அவர்கள் உயிரோடு தாம் இருக்கிறார்களா? ஓல்கா எங்கே இருக்கிறாள்? …

கமிஸார் வரபியோவின் சொற்களை அலெக்ஸேய் மீண்டும் நினைவு கூர்ந்தான். அவர் சொல்வார்: போர் வீரர்களின் கடிதங்கள் அணைந்துவிட்ட விண்மீன்களின் ஒளிக் கதிர்கள் போல நம்மை வந்து அடைய மிக மிக நீண்டகாலம் எடுத்துக் கொள்கின்றன. சில வேளைகளில் இப்படியும் நேர்வதுண்டு – விண்மீன் எப்போதோ அவிந்து போய்விட்டது, ஆனால் மகிழ்வும் பிரகாசமும் திகழும் அதன் கதிர் இன்னும் நெடுங்காலத்துக்கு இடவெளியை ஊடுருவிப் பாய்ந்து வந்து கொண்டே இருக்கும், அவிந்து மறைத்து விட்ட விண்விளக்கின் அன்பு சுடரும் ஒளிர்வை மக்களுக்குக் கொண்டுதரும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

நாட்டைப் பாதுகாக்க ரஃபேல் ! ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !

7

ந்திய மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து வாங்கியுள்ள ரஃபேல் விமானத்தில் ஓம் என எழுதுவது, தேங்காய் உடைப்பது, எலுமிச்சை பழத்தை டயருக்கு அடியில் வைப்பது இந்தியாவை இந்து தேசம் என கூறும் மறைமுக அறிவிப்பு.

இதனை டிவிட்டரில் பலரும் கண்டித்துள்ளனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக…

***

எதுக்குடா ரஃபேலு… ரெண்டு எலுமிச்சை, நாலு மஞ்சா கயிறு போதாதா !
மந்திரிச்சி விட்டா எதிரி நாடுகளும் பஞ்சா பறந்திடுமே !

நாட்டைப் பாதுகாக்க ரஃபேல், ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !

ஊடகங்களின் வாயைக் கட்டிய இந்துக் குறியீடு !

ராஜ்நாத்தைப் போல, முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஏ.கே. ஆண்டனி சிலுவையை வரைந்திருந்தால், இந்ந்தியாவும் ஊடகங்களும் கொலைவெறியோடு கதறியிருக்கும் !

கருத்துப்படம் : வேலன்

ஷாலினி :

இது நமது பாரம்பரியம், மதச் சடங்கு என்றெல்லாம் கூறுபவர்களுக்கு, இந்தியா என்பது முசுலீம்கள், கிறித்தவர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் பல்வேறு மக்கள் இந்த நாட்டைஉயர்த்த தங்களது வரியை செலுத்துகிறார்கள். மத்திய அரசாங்கம் ஏன் இந்துக்களின் சடங்குகளை மட்டும் பின்பற்றுகிறது?

சமீர் ஹூடா :

பல்லாயிரக்கணக்கான கோடி செலவழித்து நாட்டைப் பாதுகாக்க ஜெட் விமானம் வாங்கவும். அதனைப் பாதுகாக்க எலுமிச்சையை வாங்கவும். அதற்கு பதிலாக நாட்டைப் பாதுகாக்க ஏன் முதலிலேயே எலுமிச்சையை வாங்கி அனைத்து பணத்தையும் சேமிக்கக் கூடாது ?

ரஹ்மது :

டஸ்ஸால்ட் மற்றும் ஏவியேசன் குழுவினரே, நாங்கள் இப்போதுதான் ரஃபேல் பூஜையைத் துவக்கியுள்ளோம். நாங்கள் கேடு விளைவிக்கும் பார்வைகளின் எதிர்ப்பை நசுக்க, எலுமிச்சையின் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இந்த வகையான பாதுகாப்பு அமைப்பை ஏன் ரஃபேல் விமானத்தில் நீங்கள் பொறுத்தவில்லை ?

இந்திய மின்னணுப் படை :

ஒருவழியாக ரஃபேல் தயாராகிவிட்டது !

சத்தூட்டி :

மொத்த ரஃபேல் ஒப்பந்தமும் அவரது சமூகத்திற்கு மட்டுமானது என்பதை உறுதி செய்யும் வகையில் வரிப்பணத்தை எடுத்து இந்துத்துவாவை பரப்ப முயற்சிக்கிறார் இந்த அமைதி விரும்பி !

#பாஜகதோற்றது :

இதற்காகத்தான் இந்தியா வேண்டிக் கிடந்தது.

சுஷில் யதி :

இந்த உலகிற்கு நமது பங்களிப்பு! #RafalePujaPolitics

இஷ்ரத் வளி :

மாட்டுக்கறி உண்பவர்களால் செய்துமுடிக்கப்பட்ட விமானத்தை இப்படித்தான் நீங்கள் சுத்திகரிக்க முடியும்
#RafalePujaPolitics

முகமது சமி :

என்ன இது ? தனது மதத்தின் குறியீட்டை ஏன் இவர் வரைகிறார் ? முசுலீம்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு இந்தியனின் வரிப்பணத்தில் இருந்துதான் ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒருவேளை, முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே அந்தோணி, இவரைப் போல சிலுவைக் குறியீட்டை வரைந்திருந்தால், மொத்த இந்தியாவும், அதன் ஊடகங்களும் பெரும் கொலை நடந்ததாகக் கதறியிருக்குமே ? #RafalePujaPolitics

மிதுன் கே மது :

நமது அரசியல் சாசன சட்டப் பிரிவு 51A (h) “ அறிவியல் வேட்கை, மனிதம் மற்றும் அறிந்து கொள்வதற்கும், சீர்திருத்துவதற்குமான உத்வேகம் ஆகியவற்றை வளர்ப்பதுவும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்” என்று குறிப்பிடுகிறது

சந்தீப் வர்ரி :

இந்தியா தனது முதல் ரஃபேல் விமானத்தைப் பெற்றிருக்கிறது. ஒருவேளை, பிரான்ஸ் “விமானத்தின் மீது தேங்காய் உடைத்து விட்டதால் வாரண்டி கிடையாது” என்று கூறிவிட்டது என்றால் என்ன நிலைமை என்பதை கற்பனைச் செய்து பாருங்கள் #RafalePujaPolitics #RafaleDeal

டி.ஆர்.பி.ராஜா :

ரஃபேல் விமானத்தின் சக்கரங்கள் மிகவும் சிறியதாக இருக்கின்றனவா ? அல்லது அந்த எலுமிச்சம்பழங்கள் மிகவும் பெரியதாக இருக்கின்றனவா ? ரஃபேல் பூஜை தொடர்பான அரசியலை மறந்துவிடுங்கள். நான் பெரிய எலுமிச்சைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொள்கிறேன்.

நயீம் :

இந்தியா அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வகை நிறுத்துவான்.
#RafalePujaPolitics

மணீஷ் குப்தா :

#RafalePujaPolitics Is it necessary
இது அவசியமா ?

ஸ்ரீகாந்த் :

அவை சாதாரண எலுமிச்சைகள் அல்ல. அவை மேகமூட்டமான சூழலிலும் எதிரியின் விமானங்களைக் கண்டுபிடிக்கவல்ல ரேடார்கள்.
#RafalePujaPolitics #RajnathSingh #RafaleDeal

பீர் சடாஷா:

என்னத்த சொல்ல ? #RafalePujaPolitics

சுரேஷ் திக்வால்:

“120 மில்லியன் டாலர் பாதுகாப்பு” எதிர் “5 ரூபாய் எலுமிச்சை”. இந்தியா இப்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது.
#RafalePujaPolitics #RafaleOurPride

வொய்ட் ப்ளேஸ்:

மொத்த உலகும் இந்தியாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது! ஒன்னுத்துக்கும் ஆகாத பசங்க ! என்ன செய்கிறார்கள்? இவர்கள் என்ன பைத்தியமா ?

ஷோஹில் ரெய்னா :

மன்னிக்கவும், 56” இன்ச்சைக் காணவில்லை.
#RafalePujaPolitics

ரேட்டோபஸ் :

நம்ம பாதுகாப்பு அமைச்சரையே புரிந்துகொள்ளாத முட்டாள்களாக இருக்கிறார்கள். சக்கரத்திற்கு அடியில் வைக்கப்படும் எலுமிச்சை, நிம்பஸ் எனும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளும். ரேடார்களில் இருந்து மறைந்து கொள்ள உதவும். இது பழைய பாதுகாப்புத் தொழில்நுட்பம். எதிரி விமானம் நம்மைத் துறத்தி வந்தால் “முந்திச் செல்லாதே, பொறுத்துவா” என வரைந்து வைப்போம்.

க்ருஷிகா :

உங்கள் தலைவர் அவரது நண்பருக்கு உதவுவதற்காக அதிக விலை கொடுத்து வாங்கியதால் மட்டுமே இது பெருமைக்குரியதாகி விடுவதில்லை. அது ரஃபேல் ஊழல் என்றாகிவிடுகிறது. பிரான்சில் அமைச்சர் மூலமாக அமானுஷ்ய பூஜைகள் நடத்துவது ஊழலை இல்லாமல் செய்துவிடாது.

க்ருஷிகா :

ரஃபேல் எங்கள் பெருமை என டிவிட் செய்யும் பக்தாள்களுக்கு,
அருமை முட்டாள்களே, இவை ஃபிரெஞ்சு பொறியியலாளர்களால் கட்டப்பட்டது. பிரெஞ்சு அரசுக்கும் திப்பு சுல்தானுக்கும் 18-ம் நூற்றாண்டில் நல்ல உறவு இருந்தது. அவர் பிரெஞ்சுடன் கூட்டணி வைத்திருந்தார். இங்கு ஏதாவது பெருமைக்குரியது என்று சொல்லப்படவேண்டுமெனில், தேஜாஸ் மட்டுமே பெருமைக்குரியதாக இருக்க முடியும். ஏனெனில் அதுமட்டுமே இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

சைது முகமது கான் :

ரஃபேல் டெலிவரிக்கு முன் / டெலிவரிக்குப் பின்

ஸ்நேகா அரோரா :

இது இந்தியப் பாரம்பரியம் #RafalePujaPolitics

ஆர்.கே தகர்வால் :

#RafalePujaPolitics
வெறும் 20 நாள் இடைவெளி மட்டுமே இருந்தது. இந்த இடைவெளிக்கு இந்தியா செலவழித்த தொகை ரூ. 58,000 கோடி. பிரான்ஸ் லட்சுமியை அள்ளிக் கொண்டது. “துர்கா பூஜை” எதிர் “லட்சுமி பூஜை”

சுனில் :

நாட்டைப் பாதுகாக்க இந்தியா ரஃபேல் விமானத்தை வாங்கியது. பின்னர் ரஃபேலைப் பாதுகாக்க எலுமிச்சையை வாங்கியது. பின்னர் எலுமிச்சையைப் பாதுகாக்க பூச்சிக் கொல்லியை வாங்கியது.
#RafalePujaPolitics

சயீது அகமது :

பிரெஞ்சு பொறியாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் தொடர்ச்சியாக மாட்டுக்கறியும், பன்றிக்கறியுமே உண்டு வருகின்றனர். அதன் காரணமாகவும், மாட்டுக்கறி தின்னும் பாகிஸ்தானின் கெட்ட பார்வைக்கு எதிராகவும், புனிதப்படுத்துதலும் சுத்திகரிப்பும் இத்தகைய சடங்குகளால் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது.#RafalePujaPolitics

ராஜேந்திர குமார் :

எலுமிச்சையும் மிளகாயும் கொண்டுவா ! ரஃபேலைப் பாதுகாப்போம் ! #RafalePujaPolitics


தொகுப்பு :  நந்தன்