Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 323

மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !

0

மும்பை மெட்ரோ திட்டத்திற்கு இடையூறாக இருந்த “100 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய ஆலமரம் வெட்டப்படாது” என்று கடந்த ஜூன் மாதம் செய்தி வெளிவந்தது. இது சமூக ஆர்வலர்களுக்கும் மரங்களை நேசிப்பவர்களுக்கும் தற்காலிக மகிழ்ச்சியளித்தது. ஆனால் இது ஒரு சிறிய ஆறுதல்தான். வளர்ச்சியின் பெயரில் மாநகரின் மற்ற பகுதிகளில் இன்னும் கொடூரமான அழித்தொழிப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மாநிலத்தின் சுற்றுப்புறச் சூழலுக்கு நேரடி கேடு விளைவிக்கும் மூன்று பெரிய திட்டங்களுக்கும் பல்வேறு நடுத்தர திட்டங்களுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் மாநில அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. ஏனைய புல்லட் ரயில் திட்டங்களைப் போலவே ஆரவாரமான மும்பை கடற்கரை வழி புல்லட் ரயில் திட்டமும் சதுப்புநிலக் காடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான மரங்களை அழிப்பதுடன் பல்வேறு பழங்குடி சமூகங்களின் வாழ்விடங்களையும் காலி செய்ய இருக்கிறது.

மும்பை – அகமதாபாத் புல்லட் இரயில் திட்டத்தால் 13.36 ஹெக்டேரில் பரவியுள்ள 54,000 சதுப்புநில மரங்கள் பாதிக்கப்பட உள்ளதாக மகாராஸ்டிர சட்டமன்ற அவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் திவாகர் ரோட்டே ஜூன் 24 -ம் தேதி தெரிவித்தார்.

குஜராத் (724.13 ஹெக்டேர்) மற்றும் மகாராட்டிரத்தின் (270.65 ஹெக்டேர்) இரண்டு மாவட்டங்களில் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புல்லட் ரயில் திட்டத்தால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் அழிவு குறித்து முதன்முறையாக மாநில அரசு ஒப்புக்கொண்டது.

புல்லட் இரயில் பாதையானது பல ஹெக்டேர் விவசாய நிலங்கள், மலைப்பாங்கான பகுதிகள், தரிசு நிலங்கள், பழத்தோட்டங்கள், பழங்குடிப் பகுதிகள், வனப்பகுதிகள், மலைகள், ஆறுகள், உப்பங்கழிகள் மற்றும் பிற நகர வசிப்பிடங்களின் வழியாகச் செல்லும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆண்டுதோறும் மும்பையில் அடாத பருவமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. சதுப்பு நிலக் காடுகளை அழிப்பது நிலைமையை இன்னும் கடுமையானதாக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். கடந்த முப்பதாண்டுகளாக கடற்கரைகளில் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்க இந்திய சதுப்பு நில சமூக அமைப்பு (The Mangrove Society of India – MSI) முயன்று வருகிறது. இந்த அமைப்பும் ஜவகர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையும் (Jawaharlal Nehru Port Trust) புல்லட் ரயில் திட்டங்கள், கடற்கரை வழிச் சாலை, நவி மும்பை சர்வதேச விமான நிலையம் (NMIA) போன்ற திட்டங்கள் குறித்த அச்சத்தை வெளியிட்டிருக்கின்றன.

ஜூலை 26, 2005-ல் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கினால் 1,000 பேர் பலியானார்கள். ஜூலை 1 முதல் 2 வரை மும்பையில் 200 மிமீ கனமழை பெய்தது. நாம் இயற்கையுடன் விளையாடினால் அதன் எதிர்வினை இப்படித்தான் கடுமையாக இருக்கும் என்று மழைக்கு பிறகு இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சதுப்பு நில சமூக அமைப்பின் நிர்வாக இயக்குனர் அர்விந்த் உண்ட்வாலெ கூறியுள்ளார்.

கடற்கரை சாலையும் அழிவின் தொடர்ச்சியும்

கடற்கரை சாலைக்காக 164 ஹெக்டேர் நிலப்பகுதி மொத்தமாக அக்கிரமிக்கப்பட வேண்டும். இதற்காக பல்வேறு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் தளார்த்தப்பட இருப்பதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 1,400 கோடி ரூபாய்க்கான கடற்கரை சாலை திட்டம் 2018-ம் ஆண்டில் முன் வைக்கப்பட்ட மறுகணமே அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்த ஐந்து வழக்குகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன.

மாற்று இடத்திற்கான கூட்டுமுயற்சி (Collective for Spatial Alternatives) உறுப்பினரும், கட்டிடக் கலைஞருமான ஸ்வேதா வாக், இத்திட்டத்தைத் தடை செய்யக் கோரி 2018-ம் ஆண்டின் பிற்பகுதியில் உயர் நீதிமன்றத்தை நாடினார். தற்போதைய நில ஆக்கிரமிப்பு சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்லாமல், கடலோர உருவவியல் (coastal morphology), பல்லுயிர் மற்றும் பாரம்பரிய சுற்றுச்சூழல் நடைமுறைகளை மீள முடியாத வகையில் அழித்துவிடும் என்று கூறினார். கடற்கரை சாலை மற்றும் மற்ற திட்டங்களுக்காக நடந்து கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்புகள் அனைத்தும் சுற்றுச்சூழல் அனுமதி, பாரம்பரிய நில உரிமைகள் ஆகியவற்றின் மீதான அப்பட்டமான உரிமை மீறல்களாகும் என்றும் கூறினார்.

படிக்க:
மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !
♦ அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி

மேலும் கோலிவாடா நகவா மீன்வள சங்கம் (Koliwada Nakhawa Fisheries) மற்றும் வொர்லி மச்சிமார் சர்வோதய கூட்டுறவு சங்கம் (Worli Machhimar Sarvoday Co-operative Society) ஆகிய இரு மீனவ சங்கங்களும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி இந்த திட்டத்தை தடை செய்யக் கோரியுள்ளன. இத்திட்டத்தால் கடற்கரையில் உள்ள சிப்பி படுகைகள் அதிகபடியாக பாதிப்பிற்குள்ளாகும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இவர்களின் அச்சத்திற்கு காரணமில்லாமல் இல்லை என்று வனசக்தி என்ற தன்னார்வ அமைப்பை சேர்ந்த சரிதா ஃபெர்னாண்டஸ் கூறுகிறார். கடற்கரை சாலையெங்கும் உள்ள மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவுள்ளது. மும்பையில் வோர்லி மீனவர்களை பொருத்தவரையில் பாரம்பரிய மீன்பிடி வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். குறிப்பாக தெற்கு மும்பையில் உள்ள வோர்லி கோலிவாடா மீனவர்கள் பன்ரா-வோர்லி (Bandra-Worli) கடற்கரைப் பாறைகளை மீன்பிடிக்கு நம்பியுள்ளனர்.

ஏனைய வளர்ச்சி திட்டங்களை போலவே இதற்கும் பணத்தை கொடுத்து சரிகட்ட மாநில அரசும் முயற்சித்தது. ஆனால் மீனவர்கள் நிராகரித்து விட்டனர்.பல பத்தாண்டுகளாக, இன்னும் சொல்லப்போனால் நூற்றாண்டுகளாக அவர்கள் சார்ந்திருந்த அந்தக் கடற்கரையை அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்கவே, அரசாங்கத்தின் பண நிவாரணத்தை அவர்கள் நிரகரித்தனர். அவர்களது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டால் அவர்களது குழந்தைகளின் நிலை என்னவாகும்?” என்று கேட்கிறார் ஃபெர்னாண்டஸ்.

கடற்கரை சாலைத் திட்டத்தின் விசயத்திலும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் பாதிக்கப்படும் சதுப்பு நிலக்காடுகளை மீட்டுருவாக்கம் செய்து விடுவோம் என்று அரசாங்கம் தீவிரமாக வாதிடுகிறது. ”இழந்து போன சதுப்பு நிலக்காடுகளை ஐந்து மடங்குக்கு மீட்டுருவாக்கம் செய்வதற்கு நிலம் எங்கே இருக்கிறது? இது முதல் சிக்கல். ஏற்கெனவே இது போன்ற பல முயற்சிகள் உயிர் இயற்பியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தோல்வியடைந்திருக்கின்றன. மேலும் சதுப்பு நிலக்காடுகளின் தனிச்சிறப்பான உயிரிகளை நம்பியுள்ள காட்டுயிர்களின் நிலை ஒரு இன்றியமையாத சிக்கலாகும். காட்டைப் பெயர்த்து மீட்டுருவாக்கம் செய்வது என்பது ஒருபோதும் வெற்றிகரமான தீர்வல்ல” என்று அவர் மேலும் கூறுகிறார்.

மும்பை – அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் அதன் வழியிலுள்ள பழத்தோட்டங்களைக் கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் போராடுவதற்கு முதன்மையான காரணியாக இது இருக்கிறது. இத்திட்டத்தினால் 26,980 பழமரங்களும் 53,457 மரசாமான்கள் தயாரிக்க பயன்படும் மரங்களும் பாதிக்கப்படும் என்று இத்திட்டத்தின் முதன்மை புரவலரான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (Japan International Cooperation Agency) கடந்த 2015-ம் ஆண்டில் செய்த ஆய்வில் தெரிவித்துள்ளது.

வெட்டப்பட்ட மரங்கள் “இடமாற்றம் செய்யப்படும்” என்று தேசிய அதிவேக இரயில் நிறுவன (NHSRCL) அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தக் கூற்றுக்களை கேள்வி எழுப்பியுள்ளனர். “மரங்களை அவற்றின் அசல் இடத்திலிருந்து ஒரு புதிய இடத்திற்கு பிடுங்கி நடுவதை அவர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த காலங்களில் இந்த செயல்பாட்டினால் மரங்கள் அழிந்து போனதை நாம் பார்த்திருக்கிறோம்” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் அமிர்தா பட்டாச்சார்யா சுட்டிக்காட்டுகிறார்.

அது மட்டுமல்லாமல் மரங்களை மீண்டும் நடுவதற்கு வேறு இடத்தை தேசிய அதிவேக இரயில் நிறுவனம் இன்னும் பார்க்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். நிலப்பற்றாக்குறை கொண்ட மும்பை மற்றும் தானே போன்ற மாவட்டங்களில் மரங்களை பிடுங்கி நடுவது ஒருபோதும் எளிதான செயலல்ல. சரியாக திட்டமிடவில்லை எனில் முடிவில் 50,000 மரங்களுக்கு மேல் நாம் இழக்க நேரிடும் என்று அவர் மேலும் கூறினார்.

சுற்றுச்சூழல் மட்டுமல்ல மக்களை அகதிகளாக்குவதும் கூடுதலான சிக்கல். மும்பைக்கு வெளியே தானே மற்றும் பல்ஹர் இரண்டு மாவட்டங்களும் பல கோடி மதிப்புமிக்க திட்டங்களால் கடுமையாக பாதிக்கப்பட உள்ளன. சான்றாக ஏழு கிலோமிட்டர் நீளம் கொண்ட கடல் வழி சுரங்கப்பாதையின் காரணமாக குன்பி மற்றும் ஆக்ரி போன்ற விவசாய சமூக மக்களும் தானே மாவட்டத்தில் பாதிக்கப்பட இருக்கின்றன.

தானே மாவட்டத்தில் உள்ள தனது சிறு நிலத்தை காண்பிக்கும் வழக்குரைஞர் பரத்வாஜ் சவுத்ரி.

பாதிக்கப்பட்ட தானே மாவட்ட கிராமமொன்றில் தனக்கு சிறிய நிலம் இருந்ததாக மும்பையை சேர்ந்த வழக்குரைஞரான பரத்வாஜ் சவுத்ரி கூறினார். கடுமையாக எதிர்ப்பு இருந்த போதிலும் நிலங்களை கொடுக்க கிராம மக்கள் கடுமையாக நிர்பந்திக்கப்பட்டனர். “இப்படி நிலங்களை இழப்பதென்பது முதன்முறையல்ல. முன்னரும் நிலங்களை இப்படியான திட்டங்களுக்கு நாங்கள் இழந்துள்ளோம். மேலும் இப்படியான இழப்புகளுக்கு எவ்விதமான முறையான இழப்பீடுகளும் வழங்கப்பட்டதில்லை” என்று அவர் கூறினார்.

ஆனால் புல்லட் இரயில்கள் மூலம் மாநகரங்களை இணைப்பது கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இதற்கு எவ்விதமான அறிவியல்பூர்வமான பின்னணியும் இல்லை. இத்திட்டம் சுற்றுப்புறச் சூழலை இன்னும் கடுமையாகப் பாதிக்கும் என்றே தோன்றுகிறது.

“கிராம மக்கள் கூற்றுக்கு மாறாக 2,200 பேர்களது ஒப்புதலின் பேரில்தான் 40 விழுக்காடு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது வங்கி சேமிப்புகளுக்கு பணமும் செலுத்தப்பட்டுள்ளது. உரிமையாளர்களது ஒப்புதலின் பேரிலேயே நிலம் பெறப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்” என்று தேசிய அதிவேக இரயில் நிறுவன செய்தித்தொடர்பாளர் சுஷ்மா கவுர் கூறினார். மேலும்  2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் மீதி நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

பட்டாச்சார்யா மற்றும் ஃபெர்னாண்டஸ் இருவரது பீதிக்கும் காரணமில்லாமல் இல்லை. மெட்ரோ திட்டத்திற்காக “2017 முதல் இன்று வரை 1,200 -க்கும் அதிகமான மரங்கள் தெற்கு மும்பையிலிருந்து ஆரேய் (Aarey) காலனிக்கு பிடுங்கி நடப்பட்டன. அவற்றில் 50 விழுக்காட்டிற்கும் மேல் புதிய இடத்திற்கு போவதற்குள் மடிந்து விட்டன. வேரோடு பெயர்ப்பது, எடுத்து செல்வது மற்றும் மீண்டும் நடுவது போன்ற செயல்கள் முறையாக நடக்காததால் மரங்கள் சில நாட்கள் கூட உயிருடன் இல்லை” என்று பட்டாச்சார்யா கூறினார்.

படிக்க:
மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !
♦ கார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் !

மெட்ரோ-3 திட்டத்தின்போது ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களில் மரங்கள் வாடி விடுவதும் ஒன்று. ஆரேயில் உள்ள பெரிய எண்ணிக்கையிலான பழங்குடி மக்கள் ஆரேய் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலுள்ள தங்களது வாழ்வாதாரமான பாரம்பரிய விவசாய நிலங்களை இழந்துள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளாக மெட்ரோ-3 (கொலாபா – பந்த்ரா சிறப்பு பொருளாதார மண்டலம்) திட்டத்திற்காக கார் நிறுத்த கொட்டகை ஒன்றை அமைப்பதை எதிர்த்து அப்பகுதி மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் பசுமை தீர்ப்பாயம், மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை போராடி வருகின்றனர்.

மெட்ரோ கார் நிறுத்த கொட்டகைக்கு அருகிலேயே 190 ஏக்கர் நிலத்தில் உயிரியல் பூங்கா ஒன்றை அமைக்க மும்பை நகராட்சி திட்டம் தீட்டியுள்ளது. அங்கு சபாரி வசதியை ஏற்பாடு செய்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் அழிந்து வரும் விலங்குகளை அங்கு வைத்து பாதுகாக்கவும் திட்டமிட்டு வருகிறது.

திட்டத்திற்கான பரிந்துரை தயாரான மறுகணமே நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மும்பை நகராட்சி தொடங்கியது. உயிரியல் பூங்காவை அமைக்க நகராட்சி ஆணையர் பிரவீன் பரதேசி வனத்துறையுடன் கைகோர்த்திருக்கிறார்.

இந்த முனைப்பான திட்டம் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாப்பதாக கூறிக்கொண்டாலும் அதன் நேரடியான பாதிப்பு ஆரேய் வனப்பகுதியில் ஏழு கிராமங்களில் வாழ்ந்து வரும் வார்லி சமூகத்திற்கு தான்.

மனிஷா திண்டே தன் தாயாருடன் அவர்களது நிலத்தில் இருக்கும் புகைப்படம். இது போன்ற நூற்றுக்கணக்கான பழங்குடிகளின் நிலங்கள் உயிரியல் பூங்காவுக்காக அரசால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட இருக்கும் ஏழு கிரமங்களில் மனிஷா திண்டேவுடைய மொராஷி கிராமமும் ஒன்று. இப்பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வரும் பழங்குடிகளை அழித்து, விலங்குகளை பாதுகாக்க இங்கே உயிரியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது என்று அவர் கூறினார். திண்டெவுக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் விளைச்சலை நம்பி 8 பேர் கொண்ட குடும்பம் இருக்கிறது.

”எங்களுக்கு வேறு வருமானம் எதுவும் கிடையாது. ஒருவேளை இந்த அரசு எங்களுக்கு இழப்பீடு கொடுத்தாலும் மாற்றுத் தொழில் எதுவும் எங்களுக்கு கிடையாது. பழங்குடிகளை கட்டாயமாக வெளியேற்றி எந்த வளர்ச்சி திட்டங்களும் இருக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.

மக்கள் இயக்கங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் கூட அதிகாரிகளுடைய முடிவுகளை மாற்ற அழுத்தம் கொடுத்திருக்கின்றன. சான்றாக புல்லட் ரெயில் திட்டத்திற்காக 54,000 சதுப்பு நில மரங்கள் வெட்டப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் கூறியிருந்தார். அதற்கு ஒரு வாரம் கழித்து போக்குவரத்து அமைச்சகத்தின் தலையீட்டிற்கு பின்னர் தானே மாவட்ட இரயில் நிலைய வடிவமைப்பு சதுப்பு நிலப்பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு மாற்றப்பட்டதாக தேசிய அதிவேக இரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் அச்சல் காரே தி வயர் பத்திரிகைக்கு கூறினார்.

”இதன் மூலம் 21,000 சதுப்பு நில மரங்களை பாதுகாத்து விட்டோம். 32,044 மரங்கள் மட்டுமே தற்போது வெட்டப்பட உள்ளன” என்று காரே கூறினார். பாதிக்கப்படும் சதுப்பு நில மரம் ஒன்றிற்கு பதிலாக 5 மரங்களுக்கான நிதியை ”சதுப்பு நில செல்” ஒன்றிற்கு ஒதுக்கி அதன் மூலம் புதிய சதுப்பு நில காடுகளை தேசிய அதிவேக இரயில் நிறுவனம் உருவாக்க இருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் எண்ணிக்கை குறைந்தாலும்கூட அது ஆபத்தானது. கடந்த காலங்களில் மரங்களை நடுவதில் தோல்வியடைந்த திட்டங்களை பார்க்கும் போதும் புதிய மரங்கள் வளர நீண்ட ஆண்டுகள் பிடிக்கும் என்பதாலும் இந்த திட்டங்கள் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் சுற்றுச்சூழலின்பால் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தும்.


கட்டுரையாளர் : Sukanya Shantha
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி: தி வயர்

பள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 23

டோக்ளியாட்டி

க்கள் படையின் சமூகக் கட்டமைப்பு ராணுவத்தின் சமூகக் கட்டமைப்புடன் மிக நெருங்கி வருகிறது என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும். இந்த மக்கள்படை கிராமப்புற முதலாளிகள் உருவாக்கி வந்த பழைய பாணி படைகளைப் போன்றவை அல்ல என்பது இங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிரான்சில் நடைபெறுவது போன்றே வேலையில்லாதவர்கள் ஒரு தொண்டர் படைப்பிரிவாக அணி திரட்டப்படுகின்றனர். இதனை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்; ஏனென்றால் மக்கள் படையில் பணியாற்றுவது இராணுவத்தில் பணியாற்றுவதற்கு ஒப்பானதாகக் கருதப்படும் சாத்தியக் கூறுகளை இது தோற்றுவிக்கிறது.

இனி அடுத்து, இராணுவ ரீதியாக மட்டுமன்றி பிரசார ரீதியாகவும் அமைந்துள்ள பாலில்லா, இளைஞர் முன்னணிப் படை, இளம் பாசிஸ்டுகள் போன்ற அமைப்புகளைப் பற்றிப் பார்ப்போம். பாலில்லா அமைப்புகளில் பதினான்கு வயது வரையுள்ள குழந்தைகள் இடம் பெறுகிறார்கள். பாசிஸ்டுக் கட்சியில் சேரும் கட்டம் வரையிலான இளைஞர்களைக் கொண்டு இளைஞர் முன்னணிப் படை ஆரம்பத்தில் அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் பிறகு இளைஞர் முன்னணிப் படைக்கும் இளம் பாசிஸ்டுகளுக்கும் இடையே ஒரு பாகுபாடு புகுத்தப்பட்டது. முன்னணிப்படையில் சேருவதற்கான வயது 17 வரை என்று நிர்ணயிக்கப்பட்டது. 17 வயது முதல் பாசிஸ்டுக் கட்சியில் சேரும் கட்டம் வரையுள்ள இளைஞர்கள் இளம் பாசிஸ்டுகள் அமைப்பில் சேரலாம்.

இத்தகைய ஏற்பாடு கூட உடனடியாக செய்யப்படவில்லை; தொடர்ந்து பல முயற்சிகளும், பரிசோதனைகளும் செய்யப்பட்ட பிறகே இந்த ஒழுங்கமைப்பு சாதிக்கப்பட்டது.

1926-1927 வரை பாலில்லா அமைப்பு சுய விருப்ப அடிப்படையில் அமைந்ததாகவே இருந்தது. பிறகு அது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் நூறு சதவீதக் கட்டாயமல்ல, தொண்ணூறு சதவீதக் கட்டாயம்தான். பாலில்லாவில் தமது குழந்தைகளைப் பதிவு செய்து கொள்ளும்படி பெற்றோர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதை மீறினால் அபராதம் முதலிய தண்டனைகள் உண்டு.

கட்டாயப் பதிவுதான் பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த விதிமுறையாகும்.

இந்த அமைப்புக்கும் பாசிஸ்டுக் கட்சி நிறுவனத்துக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருந்தது; கட்டாயப்படுத்தும் அம்சம் பிந்தையதைவிட முந்தையதுக்குத்தான் மிகத் தீவிரமானது. பட்டவர்த்தனமாகக் கூறுவதானால் ஓர் ஆலைத் தொழிலாளி பாசிஸ்டுக் கட்சியில் சேர வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை. ஆனால் பள்ளிக்குச் செல்லும் அவனுடைய மகன் பாலில்லாவில் அவசியம் சேர்ந்துதான் ஆக வேண்டும். இந்த நிறுவனத்தின் நிர்ப்பந்த அம்சம் இதில்தான் பொதிந்திருக்கிறது. இளைஞர் முன்னணிக்கும் இது பொருந்தும். எனினும் சற்றுக் குறைவான அளவில் இது பொருந்தும். இங்கும் கட்டாய அம்சம் உண்டு. இளம் பாசிஸ்டுகள் அமைப்பை எடுத்துக் கொண்டால் கட்டாய அம்சம் இதில் எவ்விதம் புகுத்தப்படுகிறது என்பதையும், எத்தகைய வடிவங்களை அது மேற்கொள்கிறது என்பதையும் காணலாம். இவை போன்ற வெகுஜன நிறுவனங்களுக்கும் பாசிஸ்டுக் கட்சிக்குமுள்ள வேறுபாட்டை துலாம்பரமாக சுட்டிக்காட்டும் பொருட்டு இளம் பாசிஸ்டுகள் அமைப்பைப் பற்றி இங்கு சற்று விரிவாகவே கூற விரும்புகிறேன்.

ஒரு பாசிஸ்டுக் கட்சி உறுப்பினரின் கடமைகள் என்ன? அவன் எதைச் செய்யக் கட்டுப்பட்டிருக்கிறான்? தேசத்தை நேசிப்பது, தந்தையர் நாட்டுக்குச் சேவை செய்வது போன்ற பொதுக் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதைத் தவிர அவன் செய்ய வேண்டியவை மிகவும் குறைவு. வருடாந்தர உறுப்பினர் மகாசபைக் கூட்டத்தில் கலந்து கொள்வது, சில அணிவகுப்புகளில் பங்கு கொள்வது, அருகிலுள்ள மன்றத்துக்கு அடிக்கடி செல்வது போன்ற பணிகளை இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடலாம். உண்மையில், மன்றத்துக்கு இவ்விதம் அடிக்கடிச் செல்ல வேண்டும் என்பது கூடக் கட்டாயமில்லை.

மாறாக, இளம் பாசிஸ்டுகள் முக்கியமாக சீருடையை விலை கொடுத்து வாங்கி தவறாது அணிய வேண்டும். அடிக்கடி அணி வகுப்புகள் நடைபெற்று கிட்டத்தட்ட ஒவ்வொரு ஞாயிறன்றும் – இராணுவ போதனைகள் அளிக்கப்படுகின்றன. தவிரவும் இளம் பாசிஸ்டுகள் தாங்கள் உறுப்பினர்களாக இருக்கும் காலம் வரையிலும் இராணுவ ரீதியான கட்டுப்பாட்டை கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். பயிற்சிப் பிரிவின் தலைவர் எல்லா இளைஞர்களுடனும் நிரந்தரமாக இடையறாது தொடர்பு கொண்டிருக்கிறார். உச்சி மட்டத்திலிருந்து கடைசி உறுப்பினர் வரை ஒரு வரையறுக்கப்பட்ட படிநிலை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை பாசிஸ்டுக் கட்சியில் காண முடியாது. ஓர் இளம் பாசிஸ்டு தனது பயிற்சிப் பிரிவின் தலைவன் யார் என்பதை அனுதினமும் அறிவான். எந்தக் காலத்திலும் பயிற்சிப் பிரிவின் தலைவன் தன் இல்லத்துக்கு வந்து தன்னைச் சந்திப்பான் என்பதையும் அவன் அறிவான். அவன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும் (சென்ற வருடம் ஐம்பது பாசிஸ்டு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன). இது பாசிஸ்டுகளுக்கு இல்லாத மற்றொரு கடமைப் பொறுப்பாகும்.

இந்தக் கடமைப் பொறுப்புகளை நீங்கள் நோக்கினால், பாசிஸ்டுக் கட்சியைவிட அதன் இந்த இணை அமைப்பில் இந்தக் கடமைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதைக் காணலாம். இந்த அமைப்பின் முதல் அம்சம் இது.

அடுத்து, இரண்டாவது அம்சத்தைப் பார்ப்போம். இத்தனை கடமைப் பொறுப்புகள் இருந்த போதிலும் இந்த அமைப்பு பாசிஸ்டுக் கட்சியைவிட அதிக வெகுஜனத்தன்மை கொண்டதாகும். பாலில்லாவின் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். கட்சியிலுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு இது கிட்டத்தட்ட சமம். 1930-ல் பாலில்லாவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 13 இலட்சம். அதே சமயம் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையோ பத்து லட்சத்தைக் கூட எட்டவில்லை. பாலில்லாவில் ஆறு முதல் பதினான்கு வயதுள்ளவர்கள்தான் இடம் பெற முடியும். கட்சியில் சேருவதற்கோ எத்தகைய வயது வரம்பும் இல்லை. இதனைக் கருத்திற் கொண்டு பார்த்தால் பாலில்லாவின் மிகப் பரந்த இயல்பை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

படிக்க:
ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் !
இந்தியாவில் #MeToo இயக்கம் ! அச்சுநூல்

இளம் பாசிஸ்டு அமைப்புக்கும் இது பொருந்தும். பதினெட்டு முதல் இருபத்தியொரு வயதுள்ளவர்கள்தான் இதில் சேர முடியும் என்றிருந்தாலும் இந்த நிறுவனத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஏறத்தாழ ஐந்து லட்சத்தை எட்டியிருக்கிறது. இதனை பாசிஸ்டுக் கட்சியின் வயது வந்தோர் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த அமைப்பின் வெகுஜனத் தன்மை மிகத் தெளிவாகப் புலப்படுவதைப் பார்க்கலாம். இவ்வாறிருந்தும் இளம் பாசிஸ்டு அமைப்பின் கடமைகள் ஏராளம். இதில் வெளிப்படையான ஒரு முரண்பாடு இருப்பதைக் காணலாம். இது எவ்வாறு தீர்க்கப்பட்டது? மிகுந்த கட்டுப்பாட்டைப் புகுத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 12

பிராமணர்கள் , சவுகரியத்திற்குத் தகுந்தாற்போலக் கூட்டுக் குடும்பம் சவுகரியமென்கிறார்கள். தமிழர்கள் அன்புக்குக் கல்யாணம் செய்யவேண்டுமென்று கூறித் தம் குழந்தைகளை அந்த அன்புடன் பாதுகாக்கிறார்கள். பிராமணர் அல்லது ஆரியர், இவ்வுலகத்தில் தம் ஜாதியார் முன்னால் வரவேண்டுமென்றும் அதற்காகவே குழந்தைகளைப் பெற வேண்டுமென்றும் கல்யாணம் செய்கிறார்கள். மற்றும் தம் வகுப்பை விருத்தி செய்யவேண்டுமென்கிற எண்ணத்துடனும், தம் பிள்ளைகளைக் காப்பாற்றி ஆண்பிள்ளைகளைப் பெறவேண்டுமென்ற எண்ணத்துடனும் கல்யாணம் செய்கிறார்கள்.

பிச்சை கேட்பது, தமிழர்களால் இழிவாகக் கருதப்படுகிறது. ஆனால், பிராமணர்கள் எனப்படும் ஆரியர்கள் அதுதான் சிறந்தது என்று எண்ணுகிறார்கள். இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம். இதுதானா ஆரியர்களுக்கும் ஆரியரல்லாத தமிழ் மக்களுக்கும் வித்தியாசமில்லாத பொதுவான கலை என்று சொல்லக்கூடியது.

பல பொய்க் கூற்றுகள், சரித ஆராய்ச்சியின்மையால் முளைக்கின்றன. இக்காளான்களைப் போக்கப் பேராசிரியர் பாரதியார் கூறியது போன்ற ஆராய்ச்சியுரைகள் மேலும் சிலவற்றைத் தருகிறோம்.

பண்டைக் காலத்தில் தமிழ்ப் பெருமக்கள் அறிவிலும் ஆற்றலிலும் கைத்தொழில் வியாபாரங்களிலும், அரசியல் நாகரிகத்திலும் தலை சிறந்து விளங்கினார்கள் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. பல நாட்டுச் சரித்திரங்களில் இதற்கு ஆதாரங்களுண்டு. ஆயினும், இடைக் காலத்தில் ஆரியர் தமிழர் நாகரிகத்தைத் திருத்தி மாற்றி தங்களுக்கே பெருமை உண்டாக்கத்தக்க விதமாகப் பலவித வேத புராணங்களை எழுதித் தமிழர் சிறப்பை உருத்தெரியாமல் மாற்றிவிட்டார்கள்.

ஆரியர், படையெடுத்து வந்த தமிழர்களைப் போரில் வென்றதாகவும், தமிழர்கள் ஆரியர்களை எதிர்த்து நிற்க  மாட்டாமல், விந்திய மலைக்குத் தெற்கே பின்வாங்கி ஓடி விட்டதாகவும், ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதென்றும், ஆரியர்கள் தந்திரமாகச் செய்து வந்த பிரச்சாரம் காலக்கிரமத்தில் நாடெங்கும் பரவி வேரூன்றி விட்டது. பெரும்பான்மையினரான மக்கள், இன்றும் இந்தக் கதைகளை உண்மையென நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் புலவர்களிலும் பலர், இந்தப் பொய்க் கதைகளை உண்மை போல எடுத்துக் கூறிப் பிரசங்கங்கள் செய்து வருகிறார்கள். இதுவும் போதாதென்று சென்ற நூற்றாண்டின் கடைசிப் பாகத்தில், ஐரோப்பிய அறிஞர் சிலர் இந்தியப் புராதனக் கதைகளை உண்மைபோல நம்பி, ஆரியர் என்ற ஒரு வகுப்பார் மத்திய ஆசியாவிலிருந்து கிளம்பி ஐரோப்பா முதலிய இடங்களுக்குச் சென்றனர் என்றும், அவர்களில் ஒரு பிரிவினர் இந்தியாவுக்கும் படையெடுத்து வந்து இந்தியாவை நாகரிகப்படுத்தினர் என்றும் புதுமை புனைந்து ஒரு புதுக்கதை செய்தனர். இதை இங்குள்ள ஆரிய வகுப்பினர் தங்கள் குலப் பெருமையை நிலைநாட்டுவதற்காக வெகு சாமர்த்தியமாகப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள்.

ஆரியர் படையெடுத்து வந்து இந்தியாவையும் திராவிடப் பெருமைகளையும் நாசப்படுத்தினர் என்ற இந்தக் கற்பனைக் கதைக்குச் சரியான ஆதாரம் எதுவுமே கிடையாது. ‘வேலிக்கு ஓணான் சாட்சி’ என்பது போல் ஆரியர் எழுதின வேத புராணங்களே இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. ஆனால் அறிஞர், தோழர் பி.டி. சீனிவாச ஐயங்கார் எம்.ஏ. இந்தப் படுபொய்யை அடியோடு மறுத்து, இதெல்லாம் வெறும் கற்பனை என்று எடுத்துக்கூறி இருக்கிறார். ஒரு சம்பவம் சம்பந்தமாக அவர், (இந்தியப் புராதன ஆராய்ச்சி வெளியீடு 42 -ம் ஆண்டு புத்தகம் 77-வது பக்கத்தில்) எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின் சாரம் வருமாறு:

பி.டி. சீனிவாச ஐயங்கார்.

”தற்காலச் சரித்திராசிரியர்கள் பெரும்பாலோருக்கு அரசியல் கொள்கைப் பற்றும், மதப்பற்றும் இருந்தே வந்திருக்கின்றன. உதாரணமாகச் சரித்திராசிரியர்களான ஹியூமையும், மக்காலேயையும் கவனித்தால், சரித்திர உண்மைகளைத் தொகுப்பதிலும், அவற்றை வருணித்துக் கூறுவதிலும், ஹியூம் தமது ”கன்சர்வேடிவ்’’ கட்சிக் கொள்கைகளையும், மக்காலே தமது ”லிபரல்’’ கட்சிக் கொள்கைகளையும் இலைமறை காய் போல் வெளியிட்டிருப்பதைக் காணலாம். புராதன சரித்திர விஷயத்திலும் இப்படித்தான்.

ஆரிய நாகரிகத்தைப்பற்றி மேற்கண்ட கற்பனை ஆரம்பமான பொழுது, ஆரியர் உயர்ந்த உருவமும் நீண்ட தலையும் அழகிய மேனியுமுள்ளவர்களென்றும், அவர்கள்தான் ஜெர்மனியின் மூதாதைகள் என்றும், ஜெர்மன் ஆராய்ச்சிக்காரர்கள் கூறினார்கள்.

அதற்கு மாறாகப் பிரெஞ்சு ”ஆல்ப்பின்” வகுப்பினர் மூலமாகத்தான் ஆரிய நாகரிகமும் மொழியும் ஐரோப்பாவுக்குள் புகுந்தது என்று வற்புறுத்தினார்கள் பிரெஞ்சு அறிஞர்கள். ஆல்ப்பின் இனத்தினர் பிரெஞ்சுக்காரரில் பெரும்பாலாராய் இருப்பதே இதற்குக் காரணம்.

இத்தாலிய ஆசிரியர் செர்ஜி கூறியிருப்பது. இவ்விதக் கருத்துக்களுக்கு முற்றும் மாறானது. ஐரோப்பாவில் ஏற்பட்ட கிரேக்க – ரோம் நாகரிகம், மத்திய தரைக்கடல் பக்கத்திலுள்ள ஓர் இனத்தினரால் கொண்டுவரப்பட்டதென்றும் ஐரோப்பா மீது படையெடுத்து வந்த ஆரியர்கள் காட்டுமிராண்டிகள் என்றும் கூறியிருக்கிறார் அவர்.

இப்படிச் சரித்திரத்தைப் பலவாறு மாறுபடுத்தி இருப்பதால், கூரிய புத்தியால் அனுதாபத்துடன் சுயநலப் பித்தலாட்டப் பிரச்சாரமாகிய தடித்த திரையைக் கிழித்தெறிந்து அதனுள் மறைந்திருக்கும் உண்மைகளைப் பகுத்தறிவுடன் கண்டு பிடித்து வெளியிட வேண்டும்.

படிக்க:
தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !
கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?

ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வெற்றி பெற்று நாடெங்கும் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற கற்பனையைப் பகுத்தறிவு வாயிலாக ஆராய்ச்சி செய்தல் வேண்டும்.

வட இந்தியா, பாரசீகம், அர்மீனியா பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் ஆகிய தேசங்களில் பேசப்படும் பல்வேறு பாஷைகள், ஒரே பாஷைத் தொகுதியைச் சேர்ந்தவையென்று மொழி ஆராய்ச்சிக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு, இந்திய – ஜெர்மன் பாஷைகள் என்று பெயர் கொடுத்தார்கள். அதன் மேல் இந்தப் பாஷைகளுக்கெல்லாம் ஒரு தாய் மொழி இருந்திருக்க வேண்டும் என்றும், அந்தப் பாஷையைப் பேசியவர்கள் (அதாவது ஆரியர்கள்) இந்துக்குஷ் மலைக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில் வாழ்ந்திருந்தார்களென்றும், சரித்திர காலத்துக்கு முன் அவர்களில் சில பிரிவினர் பாரசீகம், இந்தியா, ஐரோப்பா முதலிய நாடுகளுக்குச் சென்று குடியேறினார்களென்றும் அழகாகக் கற்பனை செய்து சரித்திரம் எழுதினார்கள்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

நீங்கள் எங்கள் சோவியத் தேவதை !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 9

மாஸ்கோ ஆற்றின் மேல் உறைந்திருந்த பனிப்பாளம் உருகி அகன்றுவிட்டது. பனிக்கட்டி உருகியபோது இரைச்சலுடன் பாய்ந்த ஆறு இப்போது மீண்டும் அமைதியுற்றுப் பெருகியது. அதன் விறல்மிக்க கப்பல்களுக்கும் தோணிகளுக்கும் ஆற்று டிராம்வே எனப்பட்ட பயணிப் படகுகளுக்கும் போக்குவரத்துக்குப் பணிவுடன் இடமளித்தது. அந்த கடினமான நாட்களில் சோவியத் தலைநகரில் சாலைப் போக்குவரத்து அருகியிருந்தது, ஆற்றுப் போக்குவரத்தே அதற்கு ஈடு செய்தது. குக்கூஷ்கின் அவச்சொல் கூறியது போல நாற்பத்து இரண்டாவது வார்டில் ஒருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படவில்லை. மாறாக, கமிஸார் ஒருவர் நீங்கலாக எல்லோரது உடல் நிலையும் சீர்பட்டு வந்தது. மருத்துவமனையிலிருந்து வெளிச் செல்வது பற்றிய பேச்சே அடிபட்டது.

முதன்முதலாக வார்டை விட்டு வெளியேறினார் ஸ்தெபான் இவானவிச்.

தமது இராணுவச் சீருடையை அணிந்து பயணம் செய்வதற்காக அவர் வார்டுக்கு வந்தார். சாயம் போய் வெள்ளை வெளேறென்று சலவை செய்யப்பட்ட சட்டையை ஒரு மடிப்பு கூட விழாதபடிக் காற்சட்டைக்குள் செருகி இடுப்புவாரால் இறுக்கியிருந்த அந்த ஈசறுகூடான மனிதர் ஒரு பதினைந்து ஆண்டுகள் வயதில் இளையவராகக் காணப்பட்டார். கண்கூசும் படி மின்னுமாறு மெருகேற்றப்பட்டிருந்த வீர நட்சத்திரமும் லெனின் விருதும் “துணிவுக்காக” அளிக்கப்பட்ட பதக்கமும் அவருடைய மார்பின் மீது பளிச்சிட்டன. மேலங்கி அவரது படை வீர மாண்பை மறைக்கவில்லை. பழைய நீள் ஜோடுகளிலிருந்து அரும்பு மீசை வரை ஸ்தெபான் இவானவிச்சின் தோற்றம் முழுவதும் 1914-ம் ஆண்டுப் போர்க்காலக் கிறிஸ்துமஸ் கார்டில் அச்சிடப்பட்ட பகட்டான ருஷ்யப் படைவீரனுடைய தோற்றத்தை ஒத்திருந்தது.

ஸ்தெபான் இவானவிச் வார்டில் ஒவ்வொரு தோழரையும் அணுகி விடை பெற்றுக் கொண்டார். ஒவ்வொருவரையும் அவரது பட்டத்தைக் கூறி அழைத்து, பூட்சுக் குதிகளை ‘டக்’கென்ற ஒலியுடன் அடித்து இராணுவ முறையில் அவர் வணங்கி விடை பெற்றதைக் காணவே உவப்பாயிருந்தது.

“விடைபெற அனுமதியுங்கள், தோழர் ரெஜிமென்ட் கமிஸார்” என்று ஓரக் கட்டில் அருகே தனிப்பட்ட மனநிறைவுடன் சொன்னார் அவர்.

“மீண்டும் சந்திப்போம், ஸ்தெபான். நலமே வாழ்” என்று கூறி வலியையும் பொருட்படுத்தாமல் அவர் பக்கம் கையை நீட்டினார் கமிஸார்.

ஸ்தெபான் இனாவிச் முழந்தாள் படியிட்டு, கமிஸாரின் பெரிய தலையை அணைத்துக் கொண்டார். ருஷ்ய வழக்கப்படி இருவரும் மூன்று முறை மாற்றி மாற்றி முத்தமிட்டுக் கொண்டார்கள்.

“குணமடையுங்கள், ஸெம்யோன் வஸீலியெவிச். ஆண்டவன் உங்களுக்கு உடல் நலமும் நீண்ட ஆயுளும் அருள்வாராக, பொன்னான மனிதரே. எங்கள் தகப்பனார் எங்களை இவ்வளவு பரிவுடன் பேணவில்லை. உங்களது அன்பை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்…” என்று குரல் தழுதழுக்கக் கூறினார் ஸ்தெபான் இவானவிச்.

“போங்கள், போங்கள், ஸ்தெபான் இவானவிச். இவரைக் கிளர்ச்சி அடையச் செய்வது கெடுதல்” என்று அவர் கையைப் பற்றி இழுத்தவாறு சொன்னாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா.

“ஸிஸ்டர், நீங்கள் காட்டிய அன்புக்கும் பரிவுக்கும் நன்றி” என்று மரியாதையுடன் கூறி, தரை வரை குனிந்து வணங்கினார் ஸ்தெபான் இவானவிச். “நீங்கள் எங்கள் சோவியத் தேவதை. ஆமாம், தேவதை நீங்கள்…”

இன்னொருமுறை எல்லோருக்கும் தலைவணங்கிய பின் அவர் வார்டுக்கு வெளியே போய் மறைந்தார். எல்லோரும் குணமடைந்தார்கள். இப்போது அவர்களுடைய உரையாடல் வெறும் கனவாக இல்லை, காரியரீதியான பேச்சாக இருந்தது. குக்கூஷ்கின் ஆளோடியில் நடக்கத் தொடங்கிவிட்டான். அங்கே நடக்கும் பல நோயாளிகளுடன் அதற்குள் சச்சரவிட்டும் விட்டான். டாங்கிவீரனும் படுக்கையிலிருந்து எழுந்துவிட்டான்.

ஆளோடியில் இருந்த கண்ணாடி முன் நின்றுகொண்டு கட்டுக்கள் அகற்றப்பட்டுக் காயம் ஆறிக் கொண்டிருந்த முகத்தையும் கழுத்தையும் தோட்களையும் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அன்யூத்தாவுடன் அவனது கடிதப் போக்குவரத்து எவ்வளவுக் கெவ்வளவு உற்சாகமாக நடைபெற்றதோ, அவளுடைய பல்கலைக்கழக விவரங்களை அவன் எவ்வளவுக்கெவ்வளவு ஆழ்ந்து அறிந்து கொண்டானோ, தீ சுட்ட புண்ணால் அலங்கோலமாக்கக் காட்சியளித்த தன் முகத்தை அவன் அவ்வளவுக்கவ்வளவு அதிகக் கலவரத்துடன் கூர்ந்து நோக்கத் தலைப்பட்டான்.

மங்குலில் அல்லது அரையிருள் சூழ்ந்த அறையில் அது நன்றாக, அழகாகக்கூட இருந்தது. உயர்ந்த நெற்றியும் சற்றே சிறு மூக்கும் மருத்துவமனையில் வளர்க்கப்பட்ட குறுகிய மீசையும் இளமை ததும்பும் சிவந்த உதடுகளில் பிடிவாதத் தோற்றமுமாகத் திகழ்ந்தது மெல்லிய வடிவம். ஆனால் வெளிச்சத்தில் தோல் காயங்களால் நிறைந்து அவற்றின் சுருக்கம் விழுந்திருப்பது தென்பட்டது. அவன் கிளர்ச்சி அடைந்த போதும் நீர்ச் சிகிச்சைக்குப்பின் “என்ன சடைந்து கொள்கிறாய்? சினிமா நடிகன் ஆக விரும்புகிறாயா என்ன? அவள், அதுதான் உன் தோழி, சரியானவள் என்றால் இந்தத் தழும்புகள் அவளை அச்சுறுத்தமாட்டா. அச்சுறுத்தினால் அவள் மடைச்சி என்று அர்த்தம், அவளை எக்கேடும் கெட்டுப்போ என்று தொலைத்துத் தலை முழுகிவிடும். அவள் ஒழிந்ததே நல்லதாகும். பாங்கானவள் ஒருத்தி உனக்குக் கிடைப்பாள்” என்று அவனைத் தேற்றினான் மெரேஸ்யேவ்.

“எல்லாப் பெண்களும் இப்படித்தான்” என்றான் குக்கூஷ்கின்.

“உங்கள் தாயாருங்கூடவா?” என்று கேட்டார் கமிஸார். வார்டில் குக்கூஷ்கின் ஒருவனைத்தான் அவர் “நீங்கள்” என்று பன்மையில் அழைத்தார்.

படிக்க :
மாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் !
நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

அமைதியான அந்தக் கேள்வி குக்கூஷ்கின் மீது விளைவித்த உளப்பதிவை வருணிப்பது கடினம். குக்கூஷ்கின் கட்டிலில் துள்ளி எழுந்தான். அவனுடைய விழிகள் வெறியுடன் அனல் சிந்தித்தன. அவன் முகம் வெளிறி துப்பட்டியைவிட வெண்மை ஆகிவிட்டது.

“பார்த்தீர்களா? நல்ல மாதரும் உலகில் இருக்கிறார்கள் என்று ஆகிறது” என்று சமாதானப்படுத்தும் தோரணையில் சொன்னார் கமிஸார். “க்யோஸ்தியேவுக்கு அப்படிப்பட்டவள் ஏன் வாய்க்கக் கூடாது? அன்பர்களே, வாழ்க்கையில் நடப்பது இது தான்: அவனவனுக்கு கொடுத்துவைத்ததுதான் கிடைக்கும்.”

சுருங்கக்கூறின், வார்டு முழுவதும் குணமடையலாயிற்று. கமிஸாரின் உடல்நிலைதான் நாளுக்குநாள் சீர்கேடு அடைந்து கொண்டு போயிற்று. மோர்பியாவாலும் கற்பூரத் தைலத்தாலுமே அவர் பிழைத்திருக்கிறார். இந்தக் காரணத்தால் சில வேளைகளில் லாகிரி போதையின் அரை மயக்க நிலையில் நாள் முழுவதும் கட்டிலில் புரண்டுகொண்டிருப்பார். ஸ்தெபான் இவானவிச் போன பிறகு எதனாலோ அவர் வெகுவாகச் சோர்ந்து விட்டார். தேவைப்பட்டால் கமிஸாருக்கு உதவும் பொருட்டு தனது கட்டிலை அவர் அருகே போடும்படி மெரேஸ்யெவ் கேட்டுக் கொண்டான். இந்த மனிதர்பால் அவனுக்கு வரவர அதிகக் கவர்ச்சி ஏற்பட்டது.

கால்கள் இன்றி வாழ்வது மற்ற மனிதர்களுடன் ஒப்பிடும் போது தனக்கு அளவிட முடியாதபடிக் கடினமாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதை அலெக்ஸேய் புரிந்து கொண்டான். எனவே, எத்தனையோ இடர்கள் இருப்பினும் பொருட்படுத்தாமல் உண்மையான முறையில் வாழத் திறன் கொண்டிருந்த இந்த மனிதர்பால், தமது பலவீனத்தை அலட்சியம் செய்தவாறு மற்றவர்களைக் காந்தம் போல ஈர்க்க வல்லவராக இருந்த இந்த மனிதர்பால் அவனுக்கு இயல்பாகவே ஈடுபாடு ஏற்பட்டது. இப்பொழுது கமிஸார் ஆழ்ந்த அரை மயக்க நிலையிலிருந்து வெளிவருவது மேலும் மேலும் அரிதாகிக் கொண்டுபோயிற்று. ஆனால் அறிவு தெளிந்திருக்கும் கணங்களில் அவர் பழைய மனிதராகவே விளங்கினார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி

மக்கள் அதிகாரம் ஜூலை 17 சட்டமன்ற முற்றுகை போராட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக போராடுவோர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெறு!

தேதி : 13-7-2019

பத்திரிக்கைச் செய்தி

ன்புடையீர், வணக்கம் !

தமிழகத்தில் இன்று அறிவிக்கப்படாத போலீஸ் ஆட்சிதான் நடந்து வருகிறது. எது ஜனநாயகம்? எது கருத்து சுதந்திரம் என்பதை உளவுப் பிரிவு, கீயூ பிரிவு போலீசுதான் முடிவு செய்கிறது. மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும்  கொலை, கொள்ளையில் ஈடுபடும் கிரிமினல்களைப் போலவே காவல்துறையால் நடத்தப்படுகிறார்கள்.

விழுப்புரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மாணவர்கள் மீது பேருந்துகளை கல்வீசி நொறுக்கியதாக பொய்வழக்கு போட்டு சிறை வைக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் ஸ்டெர்லைட் படுகொலைக்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மாணவர்கள் இருவர் தேசத்துரோக வழக்கில் சிறை வைக்கப்பட்டு, பிறகு நிபந்தனை பிணையில் ஒரு மாத காலம் காவல்நிலையத்தில் கையெழுத்திடுகிறார்கள். திரு வைகுண்டத்தில் கல்லூரி வாயிலில் துண்டறிக்கை விநியோகித்ததற்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்டனர்.

காவிரி நீர் உரிமைக்காக நெய்வேலியில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட பலர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு வேறு வழக்கில் கைதான த.வா.க. தலைவர் வேல்முருகன் அவர்களை நெய்வேலியில் போடப்பட்ட தேசதுரோக வழக்கிலும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கதிராமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த பேரா.ஜெயராமன் மற்றும் பலர் மீது எண்ணற்ற வழக்குகள். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதும் எண்ணற்ற வழக்குகளை பல ஊர்களில் பதிவு செய்து வைத்துக் கொண்டு, ஒரு வழக்கில் கைதானவுடன் அடுத்தடுத்த வழக்குகளுக்கு கைது செய்து, இறுதியில் உபா சட்டத்திலும் சிறைவைக்க முயற்சி நடந்தது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களுக்கு உதவிய வழக்கறிஞர்ள் மீது நூறு வழக்குகள் பதிவு செய்து கைது செய்ததுடன், தேசியப் பாதுகாப்பு சட்டத்திலும் நிறை வைத்தனர். இது சட்டவிரோதம் என்று மதுரை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் வரவழைத்து கண்டித்தது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்காக  தூத்துக்குடி மக்கள் மீதும், மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் மீதும் போடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட வழக்குகளை ரத்து செய்து அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்குப் பின்னரும் தனக்கு அதிகாரமே இல்லாத குநச 107 ஐ தூத்துக்குடி காவல்துறை மக்களுக்கு எதிராகப்  பயன்படுத்தியது. இதையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுடன் அப்பட்டமாக கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக போலீசார் நடந்து கொள்வதை விமர்சித்தது. இத்தனை முறை நீதிமன்றத்தால் விமரிசிக்கப்பட்ட பின்னரும் தனது சட்டவிரோத நடவடிக்கைகளை தமிழக காவல்துறை நிறுத்திக்கொள்ளவில்லை.

மே- 22 துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு ஓராண்டுக்குப் பின்னும் நினைவஞ்சலி செலுத்தக்  கூடாது” என்பதற்காக பல ஊர்களில் மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் முதல் நாளே தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர். “மக்கள் அதிகாரம் அமைப்புக்கு எந்த ஊரிலும் அரங்கம் தரக்கூடாது” என்று காவல்துறை தமிழகம் முழுவதும் வாய்வழி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பு பெறாமல் ஒரு பொதுக்கூட்டம் கூட நாங்கள் நடத்தமுடியவில்லை.

அரங்கத்தில் கூட்டம் நடத்த சட்டப்படி காவல்துறை அனுமதி தேவையில்லை. ஆனால், மத்திய மாநில அரசுகளை விமரிசித்து அரங்குக் கூட்டம் நடத்த முயன்றால், அரங்க உரிமையாளர்களை காவல்துறை மிரட்டுகிறது.

ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமங்களில் ஒரு சாமியானா பந்தல் அமைத்து அங்கே அமர்ந்து பெண்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தடை, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றத் தடை, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த ஊர்களிலெல்லாம் கிராம சபைக் கூட்டம் ரத்து .. என எந்த சட்டத்துக்கும் கட்டுப்படாத ஒரு போலீசு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.

கூட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அனுமதி மறுத்து காவல்துறை அளித்துள்ள கடிதங்களில் சிலவற்றை இத்துடம் இணைத்திருக்கிறோம். போலீஸ் சட்டம் 30(2) என்பதைக் காட்டி பல கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த சட்டம் அமலில் இருக்கும்  காலங்களில் கூட்டம் நடத்துவதற்கு போலீசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றுதான் அந்த சட்டம் கூறுகிறது. ஆனால் அந்த சட்டம் அமலில் இருந்தாலே அனுமதி மறுக்கலாம் என்று காவல்துறை ஒரு புதிய சட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இங்கே அரசியல் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை – போலீசு ஆட்சிதான் நடக்கிறது என்பதை புரிந்து  கொள்வதற்கு இது ஒரு சான்று மட்டுமே.

கோலார் சுரங்கத்தில் அணுக்கழிவைப் புதைக்கக் கூடாது என்று அங்கே பாஜக, காங் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி அதனைத் தடுத்து விட்டனர். ஆனால், தமிழகத்திலோ, கூடங்குளத்தில் அணுக்கழிவை புதைக்காதே என்று கருத்து சொல்வதற்கே தடை!

படிக்க:
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் : வளர்ச்சியா அழிவா ?
மக்கள் அதிகாரம் மீது அடக்குமுறை ! காவியும் காக்கியும் ஒரணியில் !!

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கொடுக்கமுடியாது என்று குஜராத்திலும் மகாராட்டிரத்திலும் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அந்த திட்டமே அங்கே முடக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலோ எட்டு வழிச் சாலையை எதிர்த்துப் பேசுவதற்கே தடை!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று புதுச்சேரி முதல்வர் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார். ஆனால் வேண்டாம் ஹைட்ரோ கார்பன் என்று துண்டறிக்கை விநியோகிக்கும் மாணவர்களுக்கு தமிழகத்தில் சிறை!

ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான எங்களது சுவரொட்டிகளை போலீசு கிழிக்கிறது. சுவரெழுத்துகளை அழிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கூட இப்படிப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

ஜனநாயக உரிமை பறிப்பு என்பதும் சட்டவிரோத போலீசு ஆட்சி என்பதும் தமிழகத்தில் நிறுவனமயமாகிவிட்டது. இதனை நீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை. ஜனநாயக உரிமை தொடர்பாக ஒரு குறிப்பிட்ட வழக்கில் ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பும், அதே மாதிரியான வழக்கில் இன்னொரு நீதிபதி வழங்கும் தீர்ப்பும் முரண்படுகின்றன. ஒரு நிறுவனம் என்ற முறையில் அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதாக நீதித்துறை இல்லை. ஒரு வழக்கு உண்மையா பொய்யா, நீதிமன்றக் காவல் தேவையா தேவையில்லையா என்ற பரிசீலனையே இல்லாமல், கைது செய்யப்படும் அனைவரையும் நீதித்துறை நடுவர்கள் ரிமாண்டு செய்கின்றனர்.

இந்த போலீசு ஆட்சியை நாம் அனுமதிக்க கூடாது. இதற்கு எதிராக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், மக்கள் மன்றத்தில் இயக்கங்களும் அறிவுத்துறையினரும் ஊடகங்களும்  குரல் எழுப்ப வேண்டும், போராட வேண்டுமென்று கோருகிறோம். இத்தகைய போலீசு ஆட்சியை நடத்திவரும் எடப்பாடி அரசைக் கண்டித்து நாங்கள் 17.7.2019 அன்று நடத்தவிருக்கும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் உங்கள் ஆதரவை வழங்க வேண்டுமென்றும்  கோருகிறோம்.

தோழமையுடன்,
வழக்கறிஞர்.சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

நீட் எதிர்ப்பு மசோதா ரத்து, புதிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருத திணிப்பு, இட ஒதுக்கீட்டு உரிமைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மருத்துவர் எழிலன்.

* தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய நீட் ரத்து மசோதாவை ரத்து செய்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது?

* தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களது கொள்கை என்று அதிமுக அரசு கூறுகிறது. நடைமுறையில் அவ்வாறு உண்மையிலேயே நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அது முயல்கிறதா?

* இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டிருக்கும் போது தமிழகம் மட்டும் எதிர்ப்பது சரியா?

* நீட் தேர்வில் திறனுள்ள மாணவர்கள் வெற்றிபெறுகிறார்கள், திறனில்லாதவர்கள் தோற்கிறார்கள் மதிப்பெண்கள் குறைவாக பெறுகிறார்கள், தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்ப்பது என்பது திறனில்லை என்பதை ஒத்துக் கொள்வது போல இல்லையா?

* மருத்துவக் கல்வி தற்போது மாநில அரசின் கையிலா, மத்திய அரசின் கையிலா? மத்திய அரசின் கையில் இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய முடியும்?

* உச்சநீதிமன்றத்தின் 50% இட ஒதுக்கீட்டைத் தாண்டி தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது போல நீட் தேர்வை ரத்து செய்யவும் தனிச் சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதா? பாஜக ஆளும் நேரத்தில் அப்படி தனிச் சட்டம் சாத்தியமா?

* தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக அனிதா துவங்கி இந்த ஆண்டில் இரு மாணவிகள் இறந்து போயிருக்கிறார்கள். இதற்கு தமிழக அரசியல்வாதிகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று நம்பிக்கை ஊட்டியதுதான் காரணமா?

* நீட் தேர்வில் கேள்விகள் கடினமாக இருக்கிறது என்று கூறுகிறார்களே, எனில் தமிழக பிளஸ் 2 பாடத்திட்டம் அந்த தரத்தில் இல்லையா?

* நீட் தேர்வுக்கு முன்பும் பின்னும் தமிழக அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிகளுக்கு சென்றிருக்கிறார்கள். புள்ளிவிவரம் தர இயலுமா?

* தமிழகத்தில் அரசு சார்பில் இருக்கும் பொது சுகாதரத்துறை கட்டமைப்பு வலிமையாக இருக்கிறது என்று கூறுகிறார்களே, அது குறித்து சொல்ல இயலுமா?

* தமிழகத்தில் நீட் தேர்வு அறிமுகமானதற்குப் பிறகு அரசு கல்லூரிகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் சாதி – வர்க்க கட்டமைப்பு பற்றி புள்ளிவிவரங்கள் கூற இயலுமா?

* தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டுமென்றால் உங்களது ஆலோசனை என்ன?

* புதிய தேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி உங்கள் கருத்து என்ன? அதில் உள்ள இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, தனியார் மயம், தாய்மொழிக் கல்வி அழிவு, நவீன குலக்கல்வி இன்னபிற அம்சங்கள் பற்றி விரிவாக கூறுங்கள்? இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு, தமிழகத்திற்கு என்ன பாதிப்பு என்பதை விரிவாக விளக்க இயலுமா?

ஆகிய கேள்விகளுக்கு மருத்துவர் எழிலனின் பதிலைக் காண காணொளியைப் பாருங்கள்!

பாகம் – 1

பாகம் – 2

பகிருங்கள்!!

ஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை !

ஈழப் போர்க் குற்ற விசாரணை : இலங்கைக்குச் சலுகை ! ஈழத் தமிழருக்கு வஞ்சனை !!

ழத் தமிழர் இனப் படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. “ஈழ இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்துக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு இலங்கை அரசு அயல்நாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்களையும் கொண்ட சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்” என்பது உள்ளிட்டு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் (30/1) நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், நீதி இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2015-ம் ஆண்டு ஈழப்போர் தொடர்பாகத் தீர்மானம் எண்.30/1 நிறைவேற்றப்பட்டபொழுது, அதிலுள்ள அம்சங்களை 2017 மார்ச்சுக்குள் செயலுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அக்கெடு 2019-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. 2019 மார்ச்சில் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, அக்காலக்கெடுவை மேலும் இரண்டு ஆண்டுகள், அதாவது 2021 வரை இலங்கைக்குக் கால அவகாசம் கொடுக்கும் முடிவை அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுவிட்டன. ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பது திட்டமிட்டரீதியில் மறுக்கப்படுவதைத்தான் இவை அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.

ஈழ இறுதிப் போரின் பத்தாம் ஆண்டு நிறைவுபெற்றதையொட்டி, அப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர்ந்து ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் நடத்திய நினைவேந்தல்.

ஐ.நா. மன்றமோ அல்லது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலோ, இலங்கை அரசு இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்ததை இதுவரை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஈழப் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்துதான், அப்போது ஐ.நா.மன்ற பொதுச் செயலராக இருந்த பான் கீ மூன் இறுதிக்கட்டப் போர் குறித்து விசாரிக்க குழுவொன்றை அமைத்தார். “இலங்கை அரசு கொடிய போர்க் குற்றங்களைச் செய்திருப்பதாகக் கூறிய அக்குழு, இது குறித்துப்  பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனப் பரிந்துரைத்தது. எனினும், இப்பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்த ஐ.நா. மன்றம் முன்வரவில்லை.

மாறாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அப்பொழுது இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே அமைத்திருந்த “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணத்திற்கான ஆணையத்தின்” பரிந்துரைகளை அமல்படுத்துமாறு ராஜபக்சேவிடம் கோரிவந்தது. யாரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டுமோ, அக்குற்றவாளியிடமே நீதி கேட்ட கேலிக்கூத்து இது. ராஜபக்சே அமைத்த அந்த ஆணையமும், இறுதிக் கட்டப் போரின்போது இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதா என்பதை இலங்கை அரசே விசாரித்துவருவதாக ஒரு தோற்றத்தை உலக நாடுகளிடம் ஏற்படுத்த காட்டிவந்த நாடகமே தவிர, வேறில்லை. இறுதிக் கட்டப் போரில் இலங்கை இராணுவம் திட்டமிட்டரீதியில் மனிதப் படுகொலை எதிலும் ஈடுபடவில்லை என்றுதான் அந்த ஆணையம் அறிக்கை அளித்திருந்தது.

படிக்க :
♦ இலங்கை குண்டுவெடிப்பு
♦ ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!

2014, மார்ச்சில்தான் இறுதிக் கட்டப் போர் குறித்த ஒரு விரிவான விசாரணையை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆணையர் நடத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையை மார்ச் 2015-ல் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதன்படி விசாரணை நடத்தப்பட்டு, செப்.2015-ல் விசாரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்மானம் எண்.30/1 நிறைவேற்றப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்று, மைத்ரிபால சிறீசேனா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ராஜபக்சே அதிபராக இருந்த பொழுது, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதை அனுமதிக்க மறுத்தார். ஆனால், சிறீசேனாவோ இவ்விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுத்ததோடு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானம் 30/1 -ஐ முன்மொழிந்தபோது, அதில் தானும் இணைந்துகொண்டார். மேலும், இந்த ஒத்துழைப்புக்கான பலன்களையும் அதிபர் சிறீசேனா அறுவடை செய்து கொண்டார்.

ஐ.நா. மன்றப் பொதுச் செயலர் பான் கீ மூன் அமைத்த விசாரணைக் குழு, ஈழ இறுதிக் கட்டப் போர்க் குற்றங்களை விசாரிக்கப் பன்னாட்டு விசாரணை மன்றம் அமைக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானமோ, இப்பன்னாட்டு விசாரணையைக் கைவிட்டு, அதனிடத்தில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் பங்குகொள்ளும்படியான ஒரு சிறப்பு நீதிமன்றத்தை இலங்கை அரசே அமைத்துக்கொள்ள அனுமதித்தது. பன்னாட்டு விசாரணை கூடாது என ராஜபக்சே கோரி வந்ததை, சிறீசேனா கொல்லைப்புற வழியில் சாதித்துக் கொண்டார்.

மைத்ரிபால சிறீசேனா

இச்சிறப்பு நீதிமன்றத்துக்கு அப்பால், “வடக்கு – கிழக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும். இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள ஈழத் தமிழர்களின் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். போரின் முடிவில் வதை முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நட்டஈடு – நிவாரணம் வழங்கும் அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு சமூக, அரசியல் உரிமைகள் வழங்கக்கூடிய வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்” ஆகிய அம்சங்களோடு நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்தை மார்ச் 2017-க்குள் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. எனினும், இக்காலக்கெடு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டு, தற்பொழுது மார்ச் 2021 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

மார்ச் 2015 -க்கும் மார்ச் 2019 -க்கும் இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளில், இலங்கை அரசு 30/1 தீர்மானத்தின்படி ஈழத் தமிழர்களுக்கு நீதியும் நியாயமும் வழங்குவதற்கு ஏதேனும் உருப்படியான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறதா எனப் பரிசீலித்து, காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. மாறாக, இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்றுகொண்டு வழங்கப்பட்ட சலுகை இது. காலக்கெடுவைத் தள்ளிக் கொண்டே போவதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுவதை நடைமுறைப்படுத்தும் தந்திரம் இது.

நீர்த்துப்போன ஒன்று என்றாலும், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பது 30/1 தீர்மானத்தின் முக்கியமான அம்சமாகும். ஆனால், இச்சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் திசையில் இலங்கை ஒரு அடிகூட இதுவரை எடுத்து வைக்கவில்லை. மாறாக, இனப் படுகொலையில் ஈடுபட்ட அதிகாரிகளையும் சிப்பாய்களையும் போர்க் கதாநாயகர்கள் என அழைக்கத் தொடங்கிய சிறீசேனா, பத்திரிகைச் செய்திகளிலும், இராணுவச் சிப்பாய்களைக் கூட்டி நடத்தப்படும் கூட்டங்களிலும், இராணுவ வீரர்கள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என மீண்டும் மீண்டும் உறுதியளித்து வருகிறார்.

படிக்க :
♦ நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !
♦ முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 2016-ம் ஆண்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த அதேவேளையில், நீதித்துறை அமைச்சர் விஜேவாயாடஸா ராஜபக்சே, “இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக விமர்சிப்போர் மீது கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும்” என மிரட்டினார்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தின்படி, காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகமும் போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நட்ட ஈடு-நிவாரண உதவி அலுவலகமும் அமைக்கப்பட்டிருப்பதாகக் கணக்குக் காட்டிவருகிறது, இலங்கை அரசு. எனினும், இந்த இரண்டு அமைப்புகளும் சோளக்காட்டு பொம்மையைவிடக் கேவலமானவை.

சர்வதேச காணாமல் போனவர்கள் தினத்தையொட்டி, ஈழப் போரில் சிங்கள இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழர்களை நினைவுகூர்ந்தும், அதற்கு நீதி கேட்டும் ஈழத் தமிழ் அமைப்புகள் இலங்கை மன்னார் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி. (கோப்புப் படம்)

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் ஒரு குறிப்பிட்ட நபர் போரின்போது காணாமல் போனதாகச் சான்றிதழ் வழங்கி, அதற்குரிய நட்ட ஈடு வழங்குமாறு பரிந்துரைக்க முடியுமே தவிர, அதற்கு மேற்பட்டு குற்றவியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அந்த அலுவலகத்திற்குச் சட்டபூர்வத் தகுதியும், உரிமையும் கிடையாது. இறுதிக்கட்டப் போரின்போது எத்துணை ஈழத் தமிழர்கள் காணாமல் போனார்கள் என்ற விவரத்தைக்கூட வெளியிட மறுத்துவருகிறது, இலங்கை அரசு.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நட்டஈடு- நிவாரணம் வழங்கும் அலுவலகத்தைப் பொருத்தவரையில், அதனின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இலங்கை அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அலுவலகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமைகூட கிடையாது. சுருக்கமாகச் சொன்னால், இந்த இரண்டு அமைப்புகளுமே இலங்கை அரசின் தொங்கு தசைகளாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையைச் சார்ந்த “அடையாளம்” மற்றும் “பேர்ல்” என்ற இரண்டு மனித உரிமை அமைப்புகள் ஜூலை 2017-ல் வெளியிட்ட அறிக்கையில், முல்லைத் தீவில் மட்டும் இரண்டு சிவிலியன்களுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் என்ற அளவில் அப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது தொடருவதாகக் குறிப்பிட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து வன்னிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியைக் கடந்து செல்லக் காத்திருக்கும் ஈழத் தமிழர்கள். (கோப்புப் படம்)

“தேசியப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் நிலங்களை இராணுவம் திரும்ப ஒப்படைக்காது” என ஜூலை 2017-ல் நடந்த இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் வெளிப்படையாகவே அறிவித்தார், அதிபர் சிறீசேனா.

முள்ளிவாய்க்கால் பகுதியில் தேசியப் பாதுகாப்புக்காக 672 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் அறிவிக்கையை அக்டோபர் 2017-ல் வெளியிட்டது இலங்கை கடற்படை.

வன்னி, கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய பகுதிகளில் மார்ச் 2018-ல் கூடத் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, இராணுவ முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் புதிய கருப்புச் சட்டத்தை இயற்றிவிட்டுத்தான், பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது, இலங்கை அரசு.

சுருக்கமாகச் சொன்னால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் வெறும் காகிதத் தீர்மானமாகவே இருந்து வருகிறது. ஆனாலும், இலங்கை அரசிற்கு அடுத்தடுத்து இரண்டு முறை காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கும் சிறீசேனா அரசிற்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்திருப்பதுதான். மார்ச் 2017-க்குப் பிறகு, அமெரிக்கா இடையே 44 முறை இராணுவம் தொடர்பான சந்திப்புகள் நடந்திருப்பதாகவும், இரண்டு இராணுவங்களும் இணைந்து கூட்டுப் பயிற்சி நடத்தியிருப்பதாகவும் குறிப்பிடுகிறது, மனித உரிமை அமைப்பான பேர்ல்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்புவிலுள்ள நெகோம்போ பகுதியில் அமைந்திருக்கும் புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயலுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையை அணுகி வருகிறது, அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த நோக்கத்திற்கு அணுசரனையாக இலங்கை அரசும் நடந்துவருவதால், அந்நாட்டுக்குச் சலுகைகளும் நிதியுதவிகளும் அளிப்பதில் தாராளமாக நடந்துவருகிறது அமெரிக்கா. இலங்கைக்கு மீண்டும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதை இந்தப் புவி அரசியல் பின்னணியிலிருந்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுவொருபுறமிருக்க, சமீபத்தில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்புகளைச் சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, “போர்க் காலத்தில் இருந்த கடுமையான இராணுவப் பாதுகாப்பு அம்சங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால்தான், இந்தக் குண்டு வெடிப்புகள் நடந்துவிட்டதாக”க் கூறியிருக்கும் இலங்கை அரசு, இனி இது போன்ற குண்டுவெடிப்புகள் நடப்பதைத் தடுப்பது என்ற பெயரில் ஈழப் போரில் இனப் படுகொலை குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் அமர்த்தி, அக்குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கத் தொடங்கியிருக்கிறது.

மேலும், பௌத்த மதவெறி அமைப்புகளைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை நடத்துவதன் மூலம், ஐ.நா. தீர்மானத்தைச் செயல்படுத்துவதற்கான சூழல் இல்லை எனக் காட்டி, ஈழத் தமிழர்களுக்கு அரைகுறையான நீதி, நியாயம்கூடக் கிடைத்துவிடாதபடிச் செய்யும் சதியிலும் இறங்கியிருக்கிறது.

திப்பு

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு : மீண்டும் பிரிவினைவாத பீதி !

ந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை கடந்த மே மாதம் 13-ம் தேதியோடு முடிவடைய இருந்த நிலையில், அத்தடையை மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு  –  2024-ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது, மைய உள்துறை அமைச்சகம்.

இந்த உத்தரவு, மே 14, 2019 அன்று பிறப்பிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வந்து புதிய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்வரைகூடக் காத்திராமல், காபந்து அரசான மோடி அரசே இந்த உத்தரவை வெளியிட்டிருப்பதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தனது தீராத வன்மத்தையும் வெளிக்காட்டிக் கொண்டுவிட்டது.

2009-ம் ஆண்டு நடந்த ஈழ இறுதிக் கட்டப் போரின்போதே விடுதலைப் புலிகள் இருந்த தடம்கூடத் தெரியாத அளவிற்கு அவர்களை இந்திய அரசின் உதவியோடு கொன்றொழித்தது, இலங்கை அரசு. கடந்த பத்தாண்டுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழத்திலோ, தமிழகத்திலோ மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதற்கு எந்தவொரு அவசியமும் இல்லை.

ஆனாலும், விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு வருவது போலக் கூறி, “அதனின் குந்தகச் செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு விளைவிப்பவையாக உள்ளன” என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடி, அவ்வியக்கத்தின் மீதான தடையை நீட்டித்திருக்கிறது, இந்திய அரசு. “கற்பனையான எதிரிகளை உருவாக்கிப் பீதியூட்டுவதன் மூலம்தான் பாசிஸ்டுகள் தமது அடக்குமுறைகளை நியாயப்படுத்திக் கொள்ள முடியும்” என்பதை இத்தடையின் மூலம் மீண்டும் நினைவூட்டியிருக்கிறார்கள், இந்து மதவெறி பாசிஸ்டுகள்.

இத்தடை நீட்டிப்பின் மூலம் தமிழகத்தின் நியாயமான உரிமைகளுக்காகச் சட்டபூர்வமாகப் போராடும் இயக்கங்களைக்கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி ஒடுக்குவதற்கான முகாந்திரத்தையும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது, இந்திய அரசு.

– புதிய ஜனநாயகம், ஜூன் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

நூல் அறிமுகம் : ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும்

ன்ஸ்டீன் பற்றிய இந்த நூல் சிறிய நூல்தான். எனினும் விஞ்ஞானிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை பெரிய அளவில் இந்த சிறிய நூல் தூண்டும்.

ஐன்ஸ்டீன், படிப்படியாக முழு மனிதனாக உருப்பெறுவது காட்சிகளாய் இந்த நூலில் விரிகிறது. நூலைப்படித்து முடித்தவுடன் பல நூல்களைப் படித்துவிட்ட திருப்தி ஏற்படுகிறது. இந்த நூலை கடைசியில் இருந்து அத்தியாயம் அத்தியாயமாகப் படித்தாலும் சிக்கல் இருக்காது. ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் தொடர்போடும் கதை சொல்கிறது.

”அறிவு முக்கியமானதுதான், ஆனால் அதைவிட முக்கியமானது கற்பனைத்திறன்” என்று ஐன்ஸ்டீன் கூறினார். இந்தக் கற்பனைத்திறன் எப்படிக் கைவரப்பெறும்? இளம்வயதில் சொந்த மொழியில் பயிலுவதும், இதைத்தான், இப்படித்தான் பயில வேண்டும் என்ற கட்டாயத்திற்காளாகாமல் சொந்த வழியில் கற்பதும் கற்பனைத்திறன் வலுப்பெறுவதற்கு அவசியமான நிபந்தனைகள்.

சிறுவயதிலேயே ஐன்ஸ்டீன் அவர்களின் கற்பனைச் சிறகுகள் வெளியிலிருந்து வருகிற எந்த ஆணைக்கும் அடிபணியவில்லை. இளங்கன்று பருவத்திலேயே பட்டாளத்துக்காரனின் மிடுக்கான நடையும், விரைப்பான கை வீச்சும் அவருக்கு கிலுகிலுப்பையும் கிளர்ச்சியையும் தரவில்லை. சமாதான வேட்கையும், மனிதாபிமானமும், சமூகக் கவலையும் கொண்ட மனிதனாக இந்தப் பயிர் விளையும் என்பது இப்படி முளையிலேயே தெரிந்தது.

ஒரு மனிதனின் மனதிற்குள் புதைந்திருக்கும் விஷயங்களை உளவியல் பூர்வமாக நுட்பமாக சொல்வதற்கும் இந்த நூலில் முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது இந்த நூலின் தனிச்சிறப்பு.

… ஹிட்லரின் இன வெறி மற்றும் பாசிச ஆட்சியின் வேட்டையில் இருந்து அவர் தப்பியது உலகம் செய்த பேறு எனலாம். அவர் மயிரிழையில் தான் தப்பியிருக்கிறார். நாசி ஆட்சியின் எதிரிகளும் குற்றவாளிகளும் என்று ஹிட்லரின் ஆட்சி ஒரு ஆல்பத்தை வெளியிட்டிருந்தது. அந்த ஆல்பத்தின் முதல் பக்கத்தில் ஐன்ஸ்டீன் படம் போடப்பட்டு, இவர் செய்த குற்றம் என்ற பட்டியலில் ”சார்புநிலைக்கொள்கை” என்று எழுதப்பட்டிருந்தது. இதன் பின் குறிப்பில் ”இன்னும் தூக்கிலிடப்படவில்லை” என பதிவாகியுள்ளது.

இது போன்ற மனதை அறுக்கும் பல தகவல்கள் இந்த நூல் தருகிறது.

ஹிட்லரின் ஜெர்மனி அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்பதையும், அவர்கள் பேரழிவு ஆயுதத்திற்கு நெருக்கத்தில் உள்ளனர் என்பதையும் அறிந்து பதறிப்போன ஐன்ஸ்டீன் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டிற்கு இதைத் தடுக்கும் உபாயங்கள் பற்றி கடிதம் எழுதினார். ஆனால், அமெரிக்காவே அணுகுண்டை தயாரித்துக் கொண்டது.

நூல் நெடுக உளவியல் பூர்வமாகவும், தத்துவ சாயலோடும், விஞ்ஞான நுணுக்கத்தோடும் தகவல்கள் பரிமாறப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது படித்துப் பயன்பெற வேண்டிய கையடக்க நூல். (நூலின் முன்னுரையிலிருந்து)

பாடப்புத்தகங்களில் தனது கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கவில்லையென்றால், வேறு புத்தகங்களில் தேடும் பழக்கம் ஆல்பர்ட்டிடம் இருந்தது.

அன்று ஜெர்மனியில் மிகவும் பிரபலமாக இருந்த இயற்கை விஞ்ஞான பொது விளக்க வரிசைகளை ஆல்பர்ட் விரும்பிப் படித்தான். கேள்வி கேட்டால் எள்ளி நகையாடும் ஆசிரியர்களிடமிருந்து பெற முடியாததைப் பெற இப்புத்தக வரிசை உதவியது. விலங்கியல், தாவரவியல், வானவியல், புவியியல் ஆகியவை பற்றிய விளக்கங்கள் இப்புத்தக வரிசையில் இருந்தன. மதவாத விளக்கங்களாகவும், புராணக் கதைகள் மூலம் விளக்கங்களாகவும் இல்லாமல், இவை பொது விளக்கங்கள் தந்தன. சிறு பிராயத்திலேயே இந்த விளக்கங்களை அறிய நேர்ந்ததால் மத அடிப்படையிலான நம்பிக்கைகள் ஐன்ஸ்டீனின் மனதில் ஒட்டவே இல்லை. (நூலிலிருந்து 17-18)

1909 முதல் 1911 வரை சூரிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஐன்ஸ்டீனிடம் கற்ற ஹான்ஸ்டானர் என்ற மாணவர் அவரது பாட உரையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் :

வகுப்பறையின் மேடை மீது முதலில் ஐன்ஸ்டீன் ஏறிய பொழுது, நாங்கள் நொந்துப்போனோம். கலைந்த, சற்றும் பொருத்தமில்லாத நிறங்கள் கொண்ட சூட்டுடன் அவர் ஏறியதால் புதிய பேராசிரியர் பற்றி சலிப்புடன் பார்த்தோம். வெகுசீக்கிரத்திலேயே அவர் பாடக்குறிப்பை விளக்கிய விதம், கடினமான எங்கள் இதயங்களைக் கவ்விப் பிடித்தது. கையடக்க அளவில் உள்ள தாளில் ஒரு குறிப்பை வைத்துக்கொண்டு அவர் உரையாற்றினார். அவரது தலையிலிருந்து அந்த உரைகள் நேரடியாக வருவது போல் தோன்றியது. அவரது மூளை வேலை செய்கிற விதத்தை நாங்கள் பார்த்தோம்.

இதைவிட குறையற்ற நடையில் மேன்மையான பாட உரைகள் கேட்டிருக்கிறோம். ஆனால், அவைகள் எங்கள் மனதிலே ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கசப்புடன் உணரவைக்கும். ஆனால், இவரது உரை அந்த இடைவெளியை உணர்த்தாத சுவையான அனுபவமாக இருந்தது.

சில நேரங்களில், நூதனமான முறையில் சில மதிப்புமிக்க விஞ்ஞான முடிவுகள் பெற முடியும் என்பதை நாங்களாகவே உணர முடிந்தது. ஒவ்வொரு பாட உரைக்குப் பிறகும், இப்படி நாமேகூட உரை ஆற்றலாம் என்று எங்களை உணர வைக்கும். (நூலிலிருந்து பக்.47)

ஐன்ஸ்டீன் எழுதுகிறார் : ” எனது அகவாழ்வும், புறவாழ்வும் மறைந்த மற்றும் உயிருடன் இருக்கிற பிற மனிதர்களின் உழைப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை தினசரி நூறு தடவையாவது நினைத்துப் பார்ப்பேன். இதுவரை பெற்றதற்கும், இன்று பெறுவதற்கும் கடன்பட்டுள்ளேன் என்ற உணர்வோடு உழைக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த நினைப்பு என்னை சிக்கன வாழ்விற்கு ஈர்த்ததோடு, சகமனிதர்களின் உழைப்பை கூடுதலாக அனுபவிப்பது போல் என் மனசாட்சி உறுத்திக்கொண்டே இருந்தது”

படிக்க:
கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?
நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா !

சமூக உழைப்பைச் சுற்றித்தான் மானுட சமூகம் உயிர்வாழ முடியும் என்ற உண்மையை, எத்தனை விஞ்ஞானிகள், அரசியல், பொருளாதார நிபுணர்கள் அரசியல் தலைவர்கள், தத்துவ மேதைகள் இன்றும் ஏற்பார்கள் என்பது சந்தேகமே. தாங்கள் அவதரிக்கப் போய்தான் மானுடம் முன்னேறுகிறது என்ற மயக்கத்தில் இருப்பவர்களுக்கு சமூக உழைப்பின் மகிமையை உணர முடியுமா என்பதும் கேள்விக்குறியே. பிறர் உழைப்பை மதிக்கும் குணம் ஐன்ஸ்டீனிடம் இருந்ததாலேயே சாமான்ய மக்களின் பார்வையிலே உயர்ந்த மனிதனாகக் காட்சி அளித்தார். (நூலிலிருந்து பக்.89)

ஐன்ஸ்டீன் இன்பெல்டோடு பேசியதிலிருந்து ; ” வாழ்வு என்பது ஒரு கிளர்ச்சியுறச் செய்யும் காட்சி. நான் அதை அனுபவிக்கிறேன். அது ஆச்சரியகரமானது. ஆனால் அடுத்த மூன்று மணிநேரத்தில் நீ சாக வேண்டுமென்ற நிலை இருந்தாலும், என்னை அது பாதிக்காது. அந்த கடைச மூன்று மணி நேரத்தையும் எவ்வாறு நல்ல முறையில் செலவிடுவது என்றுதான் யோசிப்பேன்; ஆவணங்களை தயாரிப்பேன். அமைதியாகப் படுத்துவிடுவேன்” – (நூலிலிருந்து பக்.95)

நூல் : ஐன்ஸ்டீன் வாழ்வும், சிந்தனையும்
ஆசிரியர் : வே. மீனாட்சி சுந்தரம்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424.
மின்னஞ்சல் : info@tamizhbooks.com

பக்கங்கள்: 96
விலை: ரூ 30.00 (முதற் பதிப்பு)

இணையத்தில் வாங்க : noolulagam | panuval

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக கட்டியமைக்கப்பட்ட பாசிஸ்டு படையணி !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 22

டோக்ளியாட்டி

பாசிஸ்டுக் கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகளை ஆபேரா பாலில்லா1 போன்ற அதன் இணை அமைப்பு ஒன்றின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பாலில்லா, பாசிஸ்டைவிட அதிகம் செயலூக்கத்துடன் இருப்பதைக் காணலாம். எல்லா இணை நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். பரந்த வெகுஜனப் பகுதியினருடன் ஆனால் அதிகம் செயல்படாத மையத்துடன் கூடிய ஒரு பெரிய கட்சி நிறுவனம் இருந்து வருவதைப் பார்க்கிறோம். குறிப்பிட்ட நலன்களின் அடிப்படையில் வெகுஜனப் பகுதிகளை ஒழுங்கமைக்க இந்த மையம் பாடுபடுகிறது; பாசிசம் அடைய விரும்பும் ஸ்தூலமான குறிக்கோள்களுக்கு ஏற்ப தனது ஸ்தாபன வடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டு இப்பணியை அது செய்கிறது.

பாசிஸ்டு நிறுவனங்கள் முழுவதையும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். படைப் பிரிவு, படை அணி – பிரசாரம், தொழிற் சங்கம் ஆகியவையே அவை. இந்த மூன்று வகைகளுக்கும் இடையிலான வேறுபாடு அவ்வளவு அதிகமில்லை. படைப்பிரிவை முதல் வகையைச் சேர்ந்த அமைப்புக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இளம் பாசிஸ்டுகளை இரண்டாவது வகையில் சேர்க்கலாம். பாசிஸ்டுத் தொழிற்சங்கங்கள் மூன்றாவது வகைப்பாற்பட்டவை. இந்த அமைப்புகளிடையே சில பொது அம்சங்கள் உள்ளன. உதாரணமாக, படைப்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று வருவோர்க்கும் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இளம் பாசிஸ்டுகளுக்கும் இடையே சில பொது அம்சங்கள் காணப்படுகின்றன. சிவில் ஊழியர் சங்கங்கள் (குமாஸ்தாக்கள், ரயில்வே ஊழியர்கள் முதலானோர்) தொழிற்சங்கங்களை ஒத்திருக்கின்றன. ஆனால் அவை தொழிற்சங்கங்கள் அல்ல.

ஆபேரா பாலில்லா படையணி.

இந்த அமைப்புகள் சிலவற்றைப் பற்றி இப்போது ஆராய்வோம். முதலில் படைப்பிரிவுடன் ஆரம்பிப்போம். இது பற்றிய தகவல்கள் நம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. எனினும் நமக்குத் தேவைப்படும் விவரங்கள் எல்லாம் இருப்பதாகக் கூற முடியாது. இது குறித்து எவரேனும் அதிக விவரங்கள் தந்தால் நலமாக இருக்கும். படைப்பிரிவின் சட்ட திட்டங்கள் கிடைக்குமாயின் உகந்ததாக இருக்கும்.

நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் இரண்டு அடிப்படை அம்சங்களைக் காட்டவில்லை. ஒன்று, பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இன்று வரையிலும் படைப்பிரிவு அடைந்துவந்துள்ள மாற்றம்; இரண்டு, படைவீரர்கள் எந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் அல்லாமல் அவர்களது கடமைகள், அவர்களது ராணுவப் பொறுப்புகள் அடிப்படையில் அதன் உள் கட்டமைப்பின் அடுக்கமைவுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள். பத்து வருடம் சேவை செய்யக் கூடிய அடிப்படையான ஒரு மையக் கருவை இன்று படைப்பிரிவு பெற்றிருக்கிறது. இது ஒரு முக்கியமான அம்சமாகும்.

இதற்கு முன்னர் இவ்வாறிருந்ததில்லை. முன்னர், படைப்பிரிவு ஸ்குவாட்ரிஸ்டுகளின் ஓர் அமைப்பாக இருந்தது. இன்றைய கட்டத்தை அடைவதற்கு அதற்குக் கால அவகாசம் பிடித்தது, அரசு எவ்வகையிலும் பொறுப்பேற்க விரும்பாத செயற்பாடுகளில் ஸ்குவாட்ரிஸ்மோ வடிவில் படைப் பிரிவைப் பயன்படுத்தவே ஆரம்பத்தில் பாசிசம் விரும்பிற்று. எல்லாத் துறைகளிலும் சர்வாதிபத்தியத்தைக் கட்டி வளர்க்க ஆரம்பித்தபோதுதான் படைப்பிரிவு தனது இப்போதைய வடிவத்தை எழுதத் தொடங்கிற்று.

ஸ்குவாட்ரிஸ்மோ கொலைகாரப் படையணி.

இன்று, இந்தப் படைப்பிரிவு தொழில்முறை படை வீரர்களைக் கொண்ட ஒரு மையத்தைக் கொண்டிருக்கிறது. அது இரண்டு பணிகளை ஆற்றுகிறது: ஓர் அரசியல் காவல் படையாக அச்சொல்லின் பரந்த அர்த்தத்தில் அது செயலாற்றுகிறது – காவல் படையாக மட்டுமன்றி, சமூக ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவும் அது செயல்படுகிறது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்; அண்மை ஆண்டுகளில் இந்த மக்கள் படையை மிகத் தீவிரமான சந்தர்ப்பங்களில்தான் பாசிசம் பயன்படுத்தி வருகிறது; சிறு சிறு இயக்கங்களைச் சமாளிப்பதற்கு ஒரு காவல் படையாகவும் கரபியனரியாகவும் மட்டுமே அது பயன்படுத்தப்படுகிறது. இந்தப் போக்கு அவநம்பிக்கையை ஓரளவு பிரதிபலிக்கிறது.

இன்றைய பொருளாதார முரண்பாடுகளின் வர்க்கத்தன்மையைப் புரிந்து கொள்வது எளிது; சாதாரண விவசாயிகள் கூட அதனைப் புரிந்து கொள்ள முடியும். இதனால்தான் கலகக் கொடி தூக்கும் விவசாயிகளுக்கு எதிராக மக்கள் படையைச் சேர்ந்தவர்கள் மிகப்பல சந்தர்ப்பங்களில் செயல்படுவதில்லை; மாறாக நிலப்பிரபுக்களுக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனுதாபமே காட்டுகின்றனர். எனினும் இந்தப் போக்கில் மற்றொரு அம்சமும் பொதிந்துள்ளது: மிகப்பரந்த சமூக இயக்கங்களிலும், உள்நாட்டுப் போரிலும் தலையிடுவதற்கு இந்தப் படைப்பிரிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பொருட்டு அதற்கு உண்மையான இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

படிக்க:
ரூ. 4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித் தந்த மோடி !
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு – பாஜக அரசின் பட்ஜெட் நாடகம் !

சிறு அளவிலான ஸ்தல சச்சரவுகளைச் சமாளிப்பதற்கு அல்லாமல் மிகப்பரந்த வெகுஜன இயக்கங்களைக் கடுமையாக ஒடுக்குவதற்கு அது தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் பணியை இராணுவப் பணியுடன் ஒப்பிடலாம். ஆனால் அதேசமயம் அரசியல் கட்டுப்பாடும் அதன்மீது திணிக்கப்படுகிறது. உள்நாட்டுப் போரில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், எந்திரத் துப்பாக்கிகள், டாங்கிகள் முதலிய எல்லாவிதமான ஆயுதங்களையும் கையாள்வதற்கு இன்று இப்படைப் பிரிவு பயிற்றுவிக்கப்படுகிறது. இதுவல்லாமல், போர் விமானங்கள், வானொலி, விஷ வாயு முதலியவற்றைப் பயன்படுத்தவும் அதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசியல் போதனையும் அதற்கு அளிக்கப்படுகிறது.

அதன் இரண்டாவது பணி இத்தாலிய இராணுவ அமைப்பு சம்பந்தப்பட்டதாகும். இந்தப் படைப்பிரிவு எதிர்கால அதிகாரிகளின் அணியாக அமைந்திருக்கிறது. இதன் பணி ரெய்ச்ஸ்வரின் கீழ் படைக்கலைப்பு செய்யப்பட்ட ஜெர்மனியில் பூர்த்தி செய்யப்பட்ட பணியை ஒத்ததாகும்; இன்று இது  1 இலட்சம் வரை  தொழில்முறை படைவீரர்களைப் பயிற்றுவித்து வருகிறது. மக்கள் படையை ஒரு இராணுவப் பிரிவாக்கும் முயற்சி இந்தப் போக்கில் வெளிப்படுவதைக் காணலாம். அவசியமாகும்போது வெகுஜனங்களையும் இராணுவ சேவைக்கு அழைக்க முடியும். எனவேதான் இத்தாலிய ஆயுதப்படைகளைப் பற்றி எண்ணும்போது சில கண்டிப்பான சேவை விதிகளைக் கொண்ட இராணுவத்தை மட்டுமே கருத்தில் கொள்ளக் கூடாது. மக்கள் படை இருப்பதால் கட்டாய இராணுவ சேவைக் காலத்தைப் பாசிசத்தால் குறைக்க முடியும். பிரான்ஸ் உட்பட ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த இதர நாடுகளிலுள்ளவற்றிலிருந்து மாறுபட்ட வகையைச் சேர்ந்த ஒரு இராணுவ அமைப்பை பாசிசத்தால் அமைக்க முடிந்திருக்கிறது. பாசிசத்தின் இராணுவ அமைப்பு ஏற்கெனவே நன்கு பயிற்சி பெற்ற அணிகளையும், வெகுஜனங்களை ஆயுதபாணிகளாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டது, இவ்வகையான இராணுவ அமைப்பை உருவாக்குவதில் மக்கள் படை ஒரு கேந்திரப் பங்காற்றுகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

1. ஆபேரா பாலில்லா : 1926 ஏப்ரலில் அமைக்கப்பட்ட ஆபேரா நாசியோனலே பாலில்லா: இத்தாலிய குழந்தைகள், இளைஞர்களின் பள்ளிக்கு வெளியிலான நடவடிக்கைகளை இதன் மூலம் ஆட்சி கட்டுப்படுத்தியது. ஆரம்பத்தில் சிறுவர்களுக்காக பல இணை ஸ்தாபனங்களாக இவை அமைக்கப்பட்டிருந்தன (பாலில்லா, பதினான்காம் வயதில் முன்னணிப் படை வீரர்களாகி இராணுவத்திற்கு முந்திய பயிற்சி பெற்றனர்). இளம் பெண்களுக்கும் (சிறிய இத்தாலியர்கள் இளம் இத்தாலியர்களாக ஆயினர்). 1930-ல் பதினெட்டு முதல் இருபத்தி ஒன்று வயதான இளைஞர்களுக்கு இளம் பாசிஸ்டுகள் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

குழந்தைகளிடம் கற்பனைத் திறனைத் தூண்டும் கணிதம் !

1
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 08

சாஷா வகுப்பை நோக்கித் திரும்பினான்; அவன் கண்கள் சுருங்கியிருக்கின்றன, ஜன்னல் வழியே எங்கோ பார்க்கின்றன.

ஒன்றுக்குள் ஒன்றாக வட்டங்களிருந்த பலகையைக் காட்டி “இதில் 6 வட்டங்கள் உள்ளன” என்றும் அடுத்த பலகையைக் காட்டி “இதில் 5 வட்டங்கள் உள்ளன” என்றும் “எனவே, முதல் பலகையில் அதிக வட்டங்கள் உள்ளன” என்றும் கூறுகிறான்.

சிலர் சாஷாவுடன் விவாதித்தனர்: “இல்லை, ஓரிடத் தில் 6 வட்டங்களும் இன்னொரு இடத்தில் 5 வட்டங்களும் இருந்தால் என்ன; வலது புற பலகை பூராவும் வட்டங்கள் உள்ளதால் அங்கு தான் இவை அதிகம். இங்கு பார்த்தாயா எவ்வளவு வெற்றிடம்!”. ஆனால் சாஷா தான் சொல்வதே சரியெனப் பிடிவாதம் பிடித்தான். வகுப்பில் தனக்கு ஆதரவாளர்களைக் கண்டுபிடித்தான். “என்ன வித்தியாசம்? வட்டங்கள் சிதறிக் கிடந்தால் என்ன, ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தால் என்ன? ஆறு எப்பவுமே ஐந்தை விட அதிகம்!” என்றனர் அவர்கள்.

… ஒரு சில நாட்களுக்கு முன் இப்படியிருந்தது. இன்று இதே விஷயத்திற்கு நான் திரும்பி வருகிறேன்.

”நிமிர்ந்து பாருங்கள், யோசியுங்கள்!”

ஆனால் குழந்தைகள் தலையைத் தூக்கி படத்தின் மீது கண்பார்வைபட்டதுமே பலர் கைகளைத் தூக்கினர்.

“பாருங்கள், இலிக்கோ எப்படி யோசிக்கிறான். அவன் பதில் சொல்ல அவசரப்படவில்லை. நீங்களும் முதலில் யோசியுங்களேன்?”

எல்லோரும் கைகளைக் கீழே போடுகின்றனர், கரும்பலகையை கவனமாக உற்று நோக்கும் இலிக்கோ மீது கண்பார்வைகள் செல்கின்றன. அவன் தனக்குள்ளாகவே ஏதோ கூறியபடி விரலால் சுட்டிக்காட்டி சதுரங்களை எண்ணுகிறான்:

ஒரு நிமிட சிந்தனை… குழந்தைகள் மீண்டும் கைகளை உயர்த்துகின்றனர். ஒவ்வொருவரின் அருகேயும் குனிந்து பதிலைக் கேட்கிறேன். B என்ற தொகுதியை விட A தொகுதியில் சதுரங்கள் அதிகமிருப்பதாக ஏற்கெனவே 6 அல்லது 8 குழந்தைகள் என் காதில் சொல்லி விட்டனர். “இல்லை, தப்பு” என்று ஒவ்வொருவர் காதிலும் நான் திரும்பச் சொன்னேன். ஆனால் ஏக்கா, B என்ற தொகுதியில் பத்து சதுரங்களும் A தொகுதியில் ஒன்பதும் இருப்பதாக என் காதில் கூறினாள்.

“ஏக்கா சரியாகச் சொன்னாள்” என்று கூறுகிறேன்.

“நன்றி, ஏக்கா!” என்று அவள் கையைப் பற்றிக் குலுக்குகிறேன்.

நீக்கா, இராக்ளி, நாத்தோ, இயா, கீயா, மாக்தா முதலானோர் தவறாக பதில் சொன்னார்கள். “ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு சதுரங்கள் என்று எண்ணிப் பாருங்கள்!” அவர்களுக்கு நான் யோசனை சொல்கிறேன். கீகா, சான்த்ரோ, தேயா, மாயா, நீயா, தேன்கோ ஆகிய ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உரக்க ”நன்றி” சொல்லி, கரங்களைப் பற்றிக் குலுக்குகிறேன்.

யோசித்து, நல்ல விடையை கண்டுபிடித்து, அதைச் சொல்லி நிரூபிக்கும் போது நான் குழந்தைகளுக்கு “’நன்றி” சொல்லி அவர்களின் கரங்களைப் பற்றிக் குலுக்குகிறேன்.

கல்வியின் பால் ஆர்வத்தையும், சுய முயற்சியையும், சிந்தனையையும், துணிவையும் விடா முயற்சியையும் குழந்தை வெளிப்படுத்தும் போது நான் குழந்தைக்கு “நன்றி” சொல்கிறேன். தன் வளர்ப்பிலும் கல்வியிலும் இதன் மூலம் அவனே என் உதவியாளனாகிறான். குழந்தையின் ஒவ்வொரு முயற்சியையும், தன் வளர்ச்சியில் இன்னுமொரு கட்டத்திற்கு உயர அது மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஊக்குவிக்க வேண்டும். எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் நட்பையும் வெளிப்படுத்துவதை விட இதற்கு வேறு வழி எனக்குத் தெரியாது.

படிக்க:
மேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி ?
மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !

…சரி, இன்றுள்ள நிலை என்ன? என் வகுப்புக் குழந்தைகளால் இந்த இடையூறுகளைக் கடக்க முடியும். அனேகமாக பயிற்சியும் கல்வியும் இப்போக்கை விரைவுபடுத்தக் கூடும்.

“வாருங்கள், A தொகுதியில் எவ்வளவு சதுரங்கள் உள்ளன என்று எண்ணுவோம்” என்று நான் முன்மொழிகிறேன்.

ஒன்றுசேர்ந்து எண்ணினோம். ஒன்பது சதுரங்கள் இருக்கின்றன. இதைப் படத்தின் கீழ் எழுதுகிறேன்.

B தொகுதியில் உள்ள சதுரங்களை எண்ணினோம். அதில் பத்து சதுரங்கள் இருக்கின்றன. இதை அந்தப் படத்தின் கீழ் எழுதுகிறேன்.

“எதில் அதிக சதுரங்கள் உள்ளன?”

“B தொகுதியில்” என்று வகுப்பு முழுவதும் சேர்ந்து சொல்லுகிறது. சிறிது நேரத்திற்கு முன்னர் தான் வேறுவிதமாகக் கூறிய குழந்தைகள் கூடத் தம்மை மாற்றிக் கொண்டனர்.

“அப்படியெனில் A தொகுதியில் அதிக சதுரங்கள் உள்ளதாக ஏன் ஒரு சிலருக்குத் தோன்றியது?”

தான் ஏன் தவறு செய்தேன் என்று மாக்தா எப்படி விளக்கப் போகிறாள்!

“இதில் பலகை முழுவதும் சதுரங்கள் சிதறிக் கிடப்பதால் B தொகுதியை விட இதில் அதிக சதுரங்கள் இருப்பதாக எனக்குப்பட்டது.”

இராக்ளி (இவனும் முதலில் தவறான பதிலைச் சொன்னான்) பின்வருமாறு கூறுகிறான்: “அவை எப்படி சிதறியுள்ளன என்று பார்க்க வேண்டாம், அவற்றை எண்ணி ஒப்பிட வேண்டும். சிந்திக்க வேண்டும்!”

“ஆம், எப்போதும் யோசித்துப் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்குப் பிடித்துள்ளன என்று “எனக்குத் தெரிகிறது.”

“ஆம், மிகவும் பிடித்துள்ளன.”

“அப்படியெனில், யாருக்கெல்லாம் விருப்பம் உள்ளதோ அவர்கள் எல்லாம் பாடங்கள் முடிந்த பின் என்னிடம் வாருங்கள். இப்படிப்பட்ட கேள்விகள் பல அடங்கிய பாக்கெட்டைத் தருவேன்.”

எல்லோரும் இப்பாக்கெட்டை வாங்க விரும்பினார்கள். அவர்கள் இரண்டு முறை இப்படிப்பட்ட கேள்விகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர், இதோ இப்போது மீண்டும் கேட்கின்றனர். ஆண்டு பூராவும் பல்வேறு விதமான கேள்விகளை பாக்கெட்டுகளில் பன்முறை தருவேன்; ஒவ்வொரு முறையும் “யாருக்கு வேண்டும். விருப்பமிருந்தால்!…” என்று கூறியபின் தான் தருவேன். கடினமான அல்லது எளிதான கேள்விகள் வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யும்படி விட்டு விடுவேன். ஓரிரு நாட்களுக்குப் பின் பதில்கள் வந்ததும் அவற்றை அந்தந்த குழந்தையோடு சேர்ந்து ஓய்வு நேரத்தில் சரிபார்ப்பேன், பின் அவரவரைப் பற்றிய தனிக் கோப்பில் அவற்றைச் சேர்ப்பேன்.

இம்முறை பின்வரும் கேள்விகள் அடங்கிய அட்டைகளை பாக்கெட்டுகளில் போட்டேன்:

“கவலைப்படாதீர்கள். விருப்பப்படும் அனைவருக்கும் பாக்கெட் கிடைக்கும். இப்போது வடிவ கணிதப் படங்கள் உள்ள பெட்டிகளைத் திறந்து வையுங்கள்.”

“ஓ!” என்று உற்சாகம்.

ஒவ்வொரு பெஞ்சின் மீதும் ஒவ்வொரு குழந்தைக்கும் முன்னும் சிறிய, தட்டையான பிளைவுட் பெட்டி உள்ளது (பெற்றோர்களுக்கு நன்றி!). அதில் “மந்திர” விளையாட்டுகள் உள்ளன. பேராசிரியர் பி. இ. ஹச்சாபுரீத்ஸே இவற்றைக் கண்டுபிடித்தார். இவற்றில் வட்டம், முக்கோணம், சதுரம், செவ்வகம், முட்டையுரு ஆகிய வடிவங்களாலான அட்டைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் மூன்று அளவுகளும் (பெரிய, நடுத்தர, சிறிய) நான்கு நிறங்களும் (சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள்) உள்ளன. ஆக 12 வட்டங்கள், 12 முக்கோணங்கள்….. என்று மொத்தமாக 60 அட்டைகள் பெட்டியில் உள்ளன.

முதலில் எளிய கட்டளைகளைத் தந்தேன். ஒரே விதமான வடிவங்கள், பெரிய அல்லது சிறிய வடிவங்கள், சிவப்பு, பச்சை… நிறங்கள் போன்றவற்றை மட்டும் தனியே எடுக்கும்படி சொன்னேன்… ஒவ்வொரு முறையும் குழந்தைகள் அந்தந்த அடிப்படையில் சேர்க்கப்பட்ட வடிவங்களை மட்டும் பகுப்பாய்வு செய்தனர். பின், இரண்டு குணங்கள் (அளவு, நிறம்), மூன்று குணங்களுக்கேற்ப (வடிவம், அளவு, நிறம்) அட்டைகளைச் சேர்க்க சொல்லித் தந்தேன். அட்டைகளுக்கிடையே ஒற்றுமையையும் வேற்றுமையையும் கண்டுபிடிக்கச் சொல்லித் தந்தேன். அதே சமயம் எல்லா வடிவங்களின் பெயர்களையும் குழந்தைகள் கற்று வந்தனர்.

இப்படிப்பட்ட கணக்குகளைப் போட்ட பின் கற்பனையில் இறங்குமாறு அவர்களுக்கு முன்மொழிந்தேன்: இவற்றைக் கொண்டு உதாரணமாக விமானங்கள், விண்வெளி இராக்கெட்டுகள், கப்பல்கள், கார்கள், வீடுகள் போன்றவற்றைக் கட்டுமாறு கூறினேன். நானும் அவர்களோடு சேர்ந்து கற்பனையில் மூழ்கினேன்: மேசையிலிருந்த பெரிய வடிவங்களை எடுத்து கப்பல்களையும் கார்களையும் கட்டினேன். சிலருக்கு என் “கற்பனைகள்” பிடிக்கவில்லை, இவற்றில் ஏதோ சரியில்லை, பொருத்தமில்லை என்று கண்டுபிடித்தனர், இவற்றைச் சரி செய்து, மேம்படுத்த உதவினர்.

இரண்டு நாட்களுக்கு முன் சிக்கலான கணக்கைக் கொடுத்தேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?

கேள்வி: பட்டத்துக்கு வந்துவிட்ட “மூன்றாம் கலைஞர்” என்று பிளெக்ஸ் – டிஜிட்டல் – கடவுட்-களில் ஜொலிக்கிற உதயநிதி பற்றி உங்களின் பார்வை ..?
கார்பொரேட் அரசியல் கட்சிகளில் இது சாதாரணம் என்று “மௌனமாக” இருக்கப் போகிறீர்களா ..?

– எஸ். செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

கார்ப்பரேட் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல தேமுதிக, பாமக போன்ற லோக்கல் கட்சிகளிலும் இதுதான் நிலைமை. முன்பெல்லாம் வாரிசு அரசியல் என்ற வாதம் நடைபெறுமளவுக்கு இருந்த நிலைமை, தற்போது அப்படி வாதிட்டு பயனில்லை என்ற நிலைமையை அடைந்து விட்டது.

உதயநிதி ஸ்டாலின் சில வருடங்களுக்கு முன்பு திடீரென திரைப்படத் தயாரிப்பாளர் ஆனார். ஏதோ அப்பா கொடுத்த பாக்கெட் மணியை வைத்து சகஜமாக படம் தயாரிப்பது போல அவரது படக்கம்பெனி துவக்கப்பட்டது. பின்னர் திடீரென நடிகரும் ஆனார். தற்போது சில பல படங்களில் ‘நடித்து, பாடி, ஆடி’ முகத்தை மக்கள் திரளிடம் பதிய வைத்தார். அப்புறம் என்ன? அடுத்து “இளைஞரணி செயலாளர்”தான்.

தி.மு.க போன்ற தரகு முதலாளிகளின் கட்சியில் வாரிசுரிமை என்பது குடும்ப அரசியலாக மாவட்டம், வட்டம் வரை பிரதிபலிக்கிறது. ஒருபுறம் திராவிடம் 2.0 என்று கொள்கை பரப்புகிறார்கள். மறுபுறம் குடும்ப அரசியல் 2.0 அல்லது 3.0-வாக வாரிசுகளை இறக்குகிறார்கள்.

கனிமொழியின் மகன் ஆதித்தியன் எப்போது பட்டத்துக்கு வருவார் என்று தெரியவில்லை. இந்நிலைமை அ.தி.மு.க, பாஜக, காங்கிரசு என்று எல்லாக் கட்சிகளிலும் வழிந்தோடுகிறது. ஒய்.எஸ்.ஆர் மகன் ஜெகன் மோகன் தந்தையின் மரணத்திற்கு பிறகு கட்சி ஆரம்பித்து முதல்வரே ஆகிவிட்டார். தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளை எம்.பி தேர்தலிலே நிறுத்தினார்.

சென்ற பாராளுமன்றத் தேர்தல் தோல்வியை ஒட்டி நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் பல தலைவர்கள் தமது வாரிசுகளுக்கு சீட் கேட்டு மிரட்டினார்கள் என்று ராகுல் காந்தியே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவரும் நேரு குடும்பம் இன்றி காங்கிரசு கடைத்தேற முடியாது என்று அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர்தான். பாஜக-வில் மாநில அளவில் பல்வேறு வாரிசுகள் களமிறக்கப்படுகிறார்கள். இன்னும் லல்லு, முலாயம் போன்ற சமூகநீதிக் கட்சிகளிலும் மகன்களே அடுத்த தலைவர்களாக அரியணை ஏறியிருக்கிறார்கள்.

படிக்க:
தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?
♦ காஞ்சிபுரம் அத்தி வரதர் கெடுபிடியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு !

இப்படி கட்சிகளில் வாரிசுகள் நேரடியாக களமிறக்கப்படுவதனால் என்ன நட்டம்? அக்கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் என்ற வஸ்து இருக்காது; இல்லையென்றால் பெயரளவுக்கு இருக்கும். தி.மு.க போன்ற கட்சிகளில் கூட பெயரளவுக்கு உட்கட்சி ஜனநாயகத்தை வைத்திருக்கிறார்கள். கட்சியின் தலைவர், செயலர், பொருளாளர் போன்றோர் கட்சி உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுகிறார்கள். இவை போக உள்ள பதவிகள், எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுக்கள் எல்லாம் நியமனமாக உட்கட்சி தேர்தல் இன்றி நியமிக்கப்படுகின்றனர்.

நாம் தமிழர், தேமுதிக, பாமக போன்ற கட்சிகளில் அனைத்துமே நியமனம்தான். அங்கே பெயரளவுக்கு கூட தேர்தல் கிடையாது. சீமான் போன்றோர் கட்சியை தன்னுடைய பாக்கெட்டில் இருக்கும் பர்ஸ் போல பாவிக்கிறார்கள். அன்புமணி, சுதீஷ், பிரேமலதா போன்றோர் எந்த தகுதியுமின்றி அரசியலுக்கு வந்து குடும்பம் போல கட்சிகளை நிர்வகித்து வருகிறார்கள்.

இப்படி கட்சிகள் அனைத்தும் குடும்பமயமாகி வருகின்றன. ஜெயா உயிரோடு இருந்த போது கூட அவர் நினைத்தால் யாரையும் எந்த பதவிக்கும் நியமிப்பார் என்ற நிலைமை இருந்தது. அதனால் பலருக்கு அதிர்ஷடவசமாக பதவிகள் கிடைத்தன. இங்கேயும் ஜனநாயகம் இல்லை. அம்மா மனது வைத்தால் வார்டு கவுன்சிலர் கூட நாடாளுமன்ற மேலவை எம்.பி-யாக மாறலாம். தி.மு.க.வில் இந்த அதிருஷ்டங்கள் இல்லவே இல்லை எனலாம். மாவட்ட அளவிலேயே வாரிசுகளுக்குத்தான் பதவிகள் என்பது பெரும்பான்மையாக இருக்கிறது.

கட்சித் தொண்டர்களும் இத்தகைய குடும்ப அரசியல் குறித்து அலட்டிக் கொள்வதில்லை. மாறாக கட்சி தனக்கு என்ன செய்தது என்று அதாவது தான் சம்பாதிப்பதற்கு என்ன வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றே பார்க்கிறார்கள். உள்ளூர் தலைவர்களிடம் கல்லூரி சீட்டுக்கள், அரசு மானியங்கள், இலவச வீடுகள் – பொருட்கள், நிவாரண நிதிகள் போன்றவை சுமூகமாக கிடைக்கிறதா, அதில் கொஞ்சம் கமிஷன் அடிக்கலாமா என்பதே அவர்களுடைய கவலையாக இருக்கிறது. அதிமுக போன்ற கட்சிகள் இப்படித்தான் தனது கீழ்மட்ட தொண்டர் படையை தீனி போட்டு நடத்துகிறது.

கீழ்க்கண்ட பகுதி தேர்தல் முடிவுகளை ஒட்டி எழுதப்பட்டது. வெளியிடப்படாத அந்தக் கட்டுரையை இங்கே பொருத்தம் கருதி இணைக்கிறோம்.

 ♦ ♦ ♦

“இன்டர்ஸ்டெல்லர்” படத்தில் ஒரு வசனம் வரும் “மரிப்பதற்கு முன்னால் கணிசமான அளவு ஆண்கள் தமது குழந்தைகளை நினைத்துக் கொள்கிறார்கள்”. இப்படி குடும்பம் குழந்தை வாரிசு என்பது ஏதோ அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல. கோலிவுட் முதல் பாலிவுட் வரை குடும்பத்தின் சென்டிமென்ட் இல்லாத ஒரு கதையோ காட்சியோ பார்க்க இயலாது.

ஹாலிவுட் படங்களில் கதை சொல்லும் பாணியில் ஒரு விசயத்தை கவனித்திருக்கலாம். நாயகர்களுக்கு குடும்பம் உண்டு மனைவி உண்டு பிள்ளை உண்டு. அவர்கள் விண்வெளிக்கு செல்பவர்களாக இருக்கலாம்; சிஐஏவின் தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு ஈராக்கில் ஏஜெண்டுகளை இயக்குபவர்களாக இருக்கலாம்; அமெரிக்க அதிபராக இருக்கலாம்; எகிப்து அல்லது தென்னமெரிக்காவின் தொல்லியல் தடயங்களைப் பின்பற்றி ஆய்வு செய்யும் பேராசிரியராக இருக்கலாம்; அனைவரும் குடும்பஸ்தராக இருப்பதோடு தமது அபாயகரமான அல்லது குடும்பத்தை பிரிந்திருந்து செய்யும் முக்கியமான பணிகளுக்கிடையே குடும்பத்தை நினைப்பதும் இறுதிக்காட்சியில் மனைவி குழந்தைகளோடு ஒன்று கூடுவதும் ஒரு முக்கியமான விடயம். ஆனால் வில்லன்களுக்கு இந்த பாக்கியத்தை ஹாலிவுட் படைப்பாளிகள் கொடுப்பதில்லை.

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பொறியியல் கல்லூரி பேருந்துகள் வந்து நிற்கும்போது ஒரு காட்சியை கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம். நடுத்தர வயதில் கவலையுடன் இருக்கும் ஒரு தந்தை அருகே பொறியியல் படிக்கும் ஒரு மகள்.

ஏன் அந்த மகள் வீட்டில் இருந்து தனியாகவோ இல்ல வாகனத்திலோ இல்ல வேறு நண்பர்களோடு கூடவோ பேருந்து செல்லும் இடத்திற்கு வருவதில்லை. அல்லது கல்லூரி தொடர்பான வேறு பயணங்கள்; தேர்வு தொடர்பான பயணங்கள்; மேற்படிப்பு அல்லது வேலை தேடும் பயணங்கள் அத்தனையிலும் இந்த சால்ட் அன்ட் பெப்பர் தந்தைகள் உடன் பயணிக்கிறார்கள். அப்போது அவர்கள் முகத்தை கண்டால் இது என் மகள் இது என் ரத்தம், அவ்வளவு நல்லது கெட்டது அனைத்தும் எண்ணில் குடிகொண்டிருக்கிறது என்பதான ஒரு பாச – நேச அல்லது இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு உணர்ச்சியை அந்த முகங்களில் பார்க்கலாம்.

மனிதகுலம் சொத்துடைமையை மையமாக வைத்து, வர்க்கங்களாக பிரியும் பொழுது தமது சொத்துக்களை காப்பாற்றுவதற்கும், கை மாற்றுவதற்கும் அவர்கள் கண்டுபிடித்த முதன்மையான நிறுவனமே குடும்பம்தான். நல்லது இப்போது நாம் தலைப்புக்கு திரும்புவோம்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 20 திமுக வேட்பாளர்களில் ஆறு வாரிசுகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 4 பேர் வாரிசுகளாகவும் இருந்தனர்.

இவர்களில் கனிமொழி, தயாநிதி மாறன் போக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான தமிழச்சி தங்கபாண்டியன், ஆற்காடு வீராசாமி மகன் டாக்டர் கலாநிதி, பொன்முடி மகன் கவுதம் சிகாமணி ஆகியோர் குறிப்பிடத்தக்க வாரிசுகளாக களமிறக்கப்பட்டார்கள். துரைமுருகன் போன்றோர் பேட்டியளிக்கும் போது இதெல்லாம் ஒரு மேட்டரா என்று ஒரு அலட்சியம் நிச்சயம் இருக்கும்.

படிக்க:
மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் !
♦ இந்தியாவில் #MeToo இயக்கம் ! புதிய கலாச்சாரம் நூல்

அதிமுகவைப் பொறுத்தவரை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் வி.வி.ஆர். ராஜ் சத்யன், மற்றும் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், பீச் பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன் ஆகிய வாரிசுகளும் களமிறங்கினர்.

கட்சிகளில் வாரிசுகள் களமிறக்கப்பட்டாலும் அவர்கள் கண்டிப்பாக மக்களின் ஓட்டுக்கள் வாங்கித்தான் எம்.பி-யாகவோ, எம்.எல்.ஏ-வாகவோ பதவி ஏற்க முடியும். அந்த அளவுக்காவது அவர்களுக்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அந்த நிபந்தனை கூட இல்லை. எல்லாம் பகிரங்கமான வாரிசு அரசியல்தான்.

தாதுமணற் கொள்ளையர் வைகுண்டராசனின் வாரிசு நியூஸ் 7 சானலையும், கல்விக் கொள்ளையர் பச்சமுத்துவின் வாரிசு புதிய தலைமுறை சானலையும் நிர்வகிக்கின்றன. பிறகு அம்பானி, அதானி, அகர்வால், டாடா, டி.வி.எஸ், தி இந்து குழுமம் என எந்த நிறுவனத்தை எடுத்தாலும் இந்தியாவின் தரகு முதலாளிகளின் தொழில் சாம்ராஜ்ஜியத்தில் வாரிசு அரசியல்தான். அரசியல்வாதிகளின் வாரிசுகள் களமிறக்கப்படுவதை விட கார்ப்பரேட்டுகளின் வாரிசுகள் களமிறக்கப்படுவதுதான் முக்கியமான பிரச்சினை என்றார் அருந்ததி ராய்.

அரசியல்வாதிகளை ஏஜெண்டுகளாக வைத்துக் கொண்டு நாட்டு வளத்தை இந்த வாரிசுகள்தான் கொள்ளையடிக்கிறார்கள். யாரும் தொழிற்முறையில் சாதனைகள் செய்து பதவி ஏற்பது கிடையாது. அப்பன் சொத்து மகனுக்கு என்ற முறைப்படி நிறுவனங்களுக்கு வருகிறார்கள். தனது அப்பாக்கள் என்னென்ன முறையில் ஊழல் செய்து தொழில் சாம்ராஜ்ஜியத்தை படைத்திருக்கிறார்கள் என்ற குறுக்கு வழியிலேயே பயணிக்கிறார்கள். அதற்காக கட்சிகளுக்கு குறிப்பாக பாஜக-விற்கு நன்கொடையை கொட்டிக் கொடுக்கிறார்கள். இயல்பிலேயே மக்கள் மீது வெறுப்பும், கட்சிகள் மீது எரிச்சலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இப்படி நேரடியாக வரும் கார்ப்பரேட் வாரிசுகள் மூலம் நாட்டு மக்களை ஒடுக்கும் பல்வேறு திட்டங்கள் அரசாங்கங்களின் மூலம் வருகின்றன. மக்களுக்கு பதில் சொல்வதற்கு கடமைப்பட்டவர்கள் அல்ல என்பது இந்த கார்ப்பரேட் கட்டமைப்பிலேயே இருப்பதால் அவர்கள் இயல்பிலேயே அப்பன்களை விட அதிகமாய் மக்களை வெறுக்கும் நிலையை அடைகிறார்கள்.

இவர்களுக்குத்தான் நாம் முன்னர் கண்ட அரசியல் வாரிசுகள் சேவை செய்கிறார்கள். ஊடகங்கள் ஆளும் கட்சி சார்பாக இருப்பதற்கு காரணம், அந்த ஊடக நிறுவனங்களின் வாரிசு தலைமைகள்தான். இப்படி ஒவ்வொரு துறையிலும் இந்தக் கூட்டணி வேலை செய்கிறது. எனவே கார்ப்பரேட் வாரிசுகளை நாம் முதன்மையாக அம்பலப்படுத்த வேண்டும். கட்சி வாரிசுகளை அதற்கடுத்த அளவில் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.


வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா !

0

னிநபர்களை மரபணு அடிப்படையில் அடையாளப்படுத்துவதற்கு வகை செய்யும் “மரபணு தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா” பாராளுமன்றக் கீழவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று (ஜூலை 8-ம் தேதி) இந்த மசோதாவை எதிர்கட்சிகளின் கடும் ஆட்சேபங்களுக்கு இடையே அறிமுகம் செய்துள்ளது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி. இதே போன்ற ஒரு மசோதா கடந்த ஜனவரி மாதம் கீழவையில் நிறைவேற்றப்பட்டது; எனினும், மேலவையில் பாரதிய ஜனதாவுக்குப் போதிய உறுப்பினர் பலம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது.

முந்தைய பாராளுமன்றக் கீழவையின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அப்போது நிறைவேற்றப்பட்ட மசோதா செல்லாததாகி விட்டதால், மீண்டும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது மூன்றாவது முறையாக பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இம்மசோதாவுக்கான அடித்தளம் 2003-ம் ஆண்டே (வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலேயே) போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திருத்தங்களுக்குப் பின் 2015-ம் ஆண்டு இறுதி வடிவத்தை எட்டிய இந்த மசோதா பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.

விசாரணைக் கைதிகளின் மரபணுக்களை சேகரிப்பதற்கு வகை செய்யும் இந்த மசோதா அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது என பாராளுமன்றக் கீழவையின் காங்கிரசு உறுப்பினர்களின் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார். மேலும் மரபணுத் தரவுகளை சேமித்து வைப்பது குறித்து தனிநபர்களின் விருப்பங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என காங்கிரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இம்மசோதா “கண்காணிப்பு அரசு” (“surveillance state”) என்பதை நிறுவனமயமாக்கி விடும் என்கிறார் காங்கிராசு கட்சியின் மற்றொரு உறுப்பினர் சசி தரூர். முதலில் மரபணுத் தரவுகளுக்கான பாதுகாப்புச் சட்டமே இல்லாத நிலையில் மரபணுக்களை சேகரிக்க வகை செய்யும் சட்டம் என்பது “குதிரைக்கு முன் வண்டியைப் பூட்டுவதற்கு” ஒப்பானது என அவர் விமரிசித்துள்ளார்.

எனினும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளில் எந்தப் பொருளும் இல்லை என்கிறார். பலசுற்று விவாதிக்கப்பட்டு இறுதியாக்கப்பட்ட இந்த சட்ட மசோதா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் நிறைவேற்றப்படாமல் இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மசோதாவின் படி, மரபணு தரவுகளை சேமிக்க தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் “தரவு வங்கிகள்” நிறுவப்படும். இதில் சந்தேகத்திற்குரியவர்கள், விசாரணைக் கைதிகள், குற்றவாளிகள், இறந்து அடையாளம் தெரியாதவர்கள் ஆகியோரின் மரபணுக்கள் சேகரிக்கப்பட்டு இந்த வங்கிகளில் சேமிக்கப்படும். அதே போல் மரபணு ஒழுங்கமைப்பு வாரியம் ஒன்றும் அமைக்கப்படும். மேலும், மரபணுச் சோதனைச் சாலைகள் இந்த ஒழுங்கமைப்பு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

படிக்க:
ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் !
♦ ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !

மசோதாவின்படி, தனிநபர்களிடம் மரபணுக்களை சேகரிக்க எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை. அதே நேரம், ஓராண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்களிடம் எந்த அனுமதியும் இன்றி மரபணுக்களை சேகரிக்க முடியும். நீதிமன்ற உத்தரவைப் பெற்றே மரபணு விவரங்களை நீக்க முடியும். மரபணு தடய அறிவியலின் மூலம் சட்டபரிபாலனத்தை பராமரிக்க முடியும் என்கிறது மத்திய அரசு.

இந்த மசோதாவை உருவாக்கும்போக்கில் தனியுரிமை குறித்து சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. “புட்டசாமி எதிர் இந்திய அரசு” வழக்கின் தீர்ப்பில் தனியுரிமை என்பது ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமை என்கிறது உச்சநீதிமன்றம். எனினும், இந்த தீர்ப்பை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதற்கு மத்திய சட்ட கமிசன் ஏராளமான விளக்கங்களை அளித்துள்ளது. “இந்திய நிலைமைகளின் கீழ் தனியுரிமை என்பது அரசியல் சட்டப் பிரிவு 21-ன் கீழ் வருமா இல்லையா என்பது துறைசார் வல்லுநர்களால் விவாதிக்கப்பட வேண்டியது. மேலும் இந்தப் பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்கிறது மத்திய சட்டக் கமிசன்.

இரண்டாவதாக, நீதியரசர் சிறீகிருஷ்ணா அறிக்கையில் இந்தியர்களுக்கு தங்களைக் குறித்த “மின் தரவுகளின்” மேல் உள்ள உரிமைகளைக் குறித்து சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என முன்மொழிந்துள்ளது. அதன்படி தனிநபர்களின் மின் தரவுகளை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது அபராதத்திற்குரிய குற்றமாக கருத வேண்டும் என்கிறது அந்த அறிக்கை. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மசோதா மரபணு தரவுகளை சேகரிப்பது குறித்து பேசுகிறதே தவிர, அப்படி சேகரிக்கப்பட்டு மின் தரவுகளாக இருக்கும் விவரங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கவில்லை.

மூன்றாவதாக, மத்திய அரசு மரபணு தரவுகளை சேமிக்கும் தரவு வங்கிகளுக்காக 20 கோடி செலவிட்டாலே போதும் என்கிறது. ஆனால், தி வயர் இணையதளம் நடத்திய ஆய்வின் படி தற்போது கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மட்டுமே மரபணுக்களை சேகரிக்க ரூ. 1,800 கோடி செலவாகும் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் இவ்வாறு மரபணு ரீதியில் வகைபிரிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளோ, அதைக் குறித்த தொழில்நுட்ப அறிவோ, குற்ற விசாரணைகளில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற வழிகாட்டுதலோ இந்தியாவில் இல்லை. அடுத்து, மரபணு சேகரிக்கும் மத்திய அரசு அமைப்பான CDFD, தன்னிடம் மாதிரிகளை சமர்ப்பிப்பவர்களின் சாதி விவரங்களையும் கட்டாயமாக கோரிப் பெறுகிறது. இவ்வாறு மரபணு ரீதியிலான வகைபிரித்தல் குடிமக்களை சாதி அடிப்படையில் பிரித்துப் பார்ப்பதற்கே வகை செய்வதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தப் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, மரபணு வங்கிகளை நடத்தும் பொறுப்பை அம்பானி – அதானி போன்ற முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை. மொத்த நாட்டின் மக்கள் அனைவரின் மரபணு விவரங்கள் சில தனியார் முதலாளிகளின் கையில் சிக்குவது நமது எதிர்காலச் சந்ததியினரின் குடுமியை நாமே அவர்கள் கையில் பிடித்துக் கொடுப்பதற்கு ஒப்பானதாயிருக்கும்.

மேலும் இந்த மசோதா அமலுக்கு வரும்பட்சத்தில் அரசியல்ரீதியான போராட்டங்களில் கைதாகி சிறை செல்லும் புரட்சிகர – ஜனநாயக சக்திகள் அனைவரையும் மரபணு வங்கிகளில் சேகரித்து வைத்து போராடும் சக்திகளை ஒடுக்க முடியும். ஆதார் அடையாளத்தோடு இனி மரபணு அடையாளமும் நாட்டு மக்களை ஒடுக்க கண்காணிக்க, மிரட்ட வந்து கொண்டிருக்கிறது.


சாக்கியன்.

செய்தி ஆதாரம் : தி வயர்

கனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை

0

ருடாந்திர பருவமழை காரணமாக, மும்பையின் பெரும்பாலான பகுதி இன்னலுக்கு உள்ளாகியுள்ளது. கட்டுப்பாடற்ற கட்டுமானப் பணிகள், குப்பைகளால் அடைப்புக்குள்ளான நீர் வழிகள் – வடிகால்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன.

கடும் பருவமழை காரணமாக மும்பையில் சுவர் இடிந்து மட்டும் 27 பேர் கொல்லப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடும் நெரிசலுக்கு உள்ளாகியுள்ளது.

கடுமையான பருவமழை காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால் ரயில்வே தண்டவாளங்களில் தேங்கியுள்ள நீரில் நடந்து செல்லும் மக்கள்.

மும்பையின் மேற்கு புறநகர் பகுதியான மலாட்-இல் ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றி கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், அருகில் வசித்த குடிசைப் பகுதி மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்.

கல்யாண் பகுதியில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.

மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் கனமழை காரணமாக குடிசைகள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 18 பேரைக் கொன்றது.

மும்பை அருகே உள்ள புனே நகரத்தில் சுவர் இடிந்து ஆறு பேர் இறந்தனர். கடந்த சனிக்கிழமை மட்டும் வெவ்வேறு இடங்களில் 15 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர்.

ஜூலை 1, 2-ம் தேதிகளில் மட்டும் மும்பையின் சில பகுதிகளில் 300மி.மீ.-க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பணி நிமித்தமாக பயணிக்கும் சில புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

படிக்க:
நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !
♦ வறண்ட இந்தியா : நீரைத் தேடி … | படக்கட்டுரை

இடைவிடாத கனமழை காரணமாகவும், மேலும் கனமழை பொழிவு இருக்கும் என்ற வானிலை முன் அறிவிப்பின் காரணமாகவும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

சுவர் இடிந்துவிழுந்ததில் தனது குடும்பத்தை இழந்த பெண் கதறுகிறார்.

மீட்புப் பணி இன்னும் முடியவில்லை. இதுவரை 2 டசனுக்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றியுள்ளதாகக் கூறுகிறார் ஒரு தீயணைப்பு வீரர்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையான ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும், இந்தியாவில் பலமில்லாத அடித்தள கட்டுமானத்தின் காரணமாக கட்டிடங்கள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுவது வாடிக்கையாக நிகழும் ஒன்றாகிவிட்டது.

ஜூலை 1 மற்றும் 2-ம் தேதிகளில் மும்பையின் சில இடங்களில் 300மி.மீ.க்கும் அதிகமான மழையளவு பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மைய அதிகாரிகளின் கனமழை எச்சரிக்கை காரணமாக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் நகரத்தின் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவித்தனர்.


தமிழாக்கம் : அனிதா
நன்றி : அல் ஜசீரா

காஞ்சிபுரம் அத்தி வரதர் கெடுபிடியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு !

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘எழுந்தருளும்’ அத்தி வரதர் வைபவத்தால் தமிழ்நாட்டின் எட்டுத் திக்கிலும் ஊடகங்கள் பரபரக்கின்றன. வணிக ஊடகங்களின் விளம்பரத் தீயில் உள்ளூர் மக்களும், ஏழை பக்தர்களும் நாளும் வதைப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

அரசு – அதிகார வர்க்கமும், உயர்மட்டப் பார்ப்பனக் கூட்டமும் ஒன்று சேர்ந்து இங்கு, விழா நிர்வாக வேலை என்ற பெயரில் தினவெடுத்துத் திரிகின்றனர். இதனால், காஞ்சிபுரத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள், தொழிலுக்குக்கூட வெளியே செல்ல முடியாமல் அல்லலுறுகின்றனர். காஞ்சிபுரம் நகரையே திறந்தவெளி கொட்டடியாக மாற்றியுள்ளது, போலீசு.

இரண்டு, நான்கு சக்கரம் ஓட்டுவதற்குக் கூட உள்ளூரில் கட்டுப்பாடு. ஒரு மாதத்துக்கு முன்னரே வண்டி எண் குறித்துக் கொடுத்து, அதிகார வர்க்கத்திடம் அனுமதிச் சீட்டு வாங்கியிருக்க வேண்டும். அப்படி வாங்கியிருந்தாலும் ஓட்டும்போது மரியாதையின்றிப் பேசி அலைக்கழிக்கின்றனர். அபராதம் விதிக்கின்றனர். காஞ்சிபுரத்திற்குள் திடீரேன பொதுப் போக்குவரத்தை குறைத்தும்; நிறுத்தியும் திட்டமிட்டு அத்தி வரதர் கூட்ட நெரிசலை வடியாமல், குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

கட்டுக்கடங்காத கூட்டம். பத்து லட்சம் பக்தர்கள் குவிந்தனர் என்று பரவசக் கதைகளை பரப்புகின்றனர். குவிந்த கூட்டத்திற்கு அவசர ஏற்பாடுகள் செய்வதாகக் கூறி நிர்வாக முறைகேடுகளிலும், பகல் கொள்ளையிலும் ஈடுபடுகின்றனர்.

ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் வரலாறு காணாத  தண்ணீர்ப் பஞ்சம். தற்போதைய திடீர் கூட்ட நெரிசலால் குடிநீர், சுகாதாரப் பாதுகாப்பு அனைத்தும் தறிகெட்டுக் கிடக்கிறது. குடிக்கவே முடியாதபடி குளோரின் நீரை கொடுக்கின்றனர். போதுமான கழிப்பிட வசதி செய்ய வக்கற்ற அதிகார வர்க்கம், போலீசு, பாதுகாப்பு என்ற பெயரில் பொது மக்களை வதைப்பதோடு உயிரையும் எடுத்து படுகொலையும் செய்கிறது.

அத்திவரதர் விழா தொடங்கியதும் நேரடியாக அதிகாரவர்க்கத்தால் பலி கொடுக்கப்பட்ட உயிர்கள் :

  1. ஆந்திர மாநிலம் ராஜ முந்திரியிலிருந்து வந்த வயதான பார்ப்பன குடும்பத்தினர் அத்தி வரதரை தரிசித்துவிட்டு திரும்பும்போது அக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரை சன்னதிற்குள்ளேயே லத்தியால் தாக்கி பிணமாக அனுப்பியது. காரணம், ‘அத்தி வரதரை செல்ஃபி’ எடுத்ததாகவும், அதை வாங்கி அழிக்க சொன்னதை அவர் மறுத்ததாகவும், அதற்காக அவரை எச்சரித்ததாகவும் வழக்கமாகப் பொய் செய்தியைப் பரப்பியது போலீசு.
    போலீசு தாக்கியதால் உயிரிழந்த ஆந்திர இளைஞர் (படம் : நன்றி விகடன்)

    உண்மையில் அந்த இளைஞர் கோவிலின் சுற்றுச்சுவரில் கருங்கல் புடைப்பில் செதுக்கி இருக்கும் பல்லியை தன் ஃபோனில் படம் பிடித்துள்ளார். இதற்குதான் வெறிபிடித்த மாதிரி அவர்மீது பாய்ந்த பெண் போலீசு லத்தியால் அவர் முன் மண்டையில் அடிக்க அங்கேயே அவர் சுருண்டு விழுத்தார். அப்போதும் அவரை கவனிக்கவில்லை. குடும்பத்தினர் பதறி அழுதபோதுதான், அவர் இறந்தது தெரிந்தது. உடனே போலீசு, ”அவர் மாரடைப்பில் இறந்தார். வலிப்பு நோயில் இறந்தார்” என்று சுருட்டி ஆந்திராவுக்கு பிணமாக அனுப்பியது.

  2. காஞ்சிபுரம் – அய்யம்பேட்டை புறநகரைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் குமார். இவரை எம்.ஜி.ஆர். குமார் என்றே அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் அழைப்பார்கள். அந்த அளவிற்குத் தீவிரமான எம்.ஜி.ஆர். ரசிகர். கடந்த 20 ஆண்டுகளாக காஞ்சிபுரம் நகரில் ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்.  நாற்பது வயதுடைய அவருக்கு கல்லூரியில் படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஷேர் ஆட்டோ வருமானத்தில்தான் அவர்களை படிக்க வைத்து குடும்பத்தை நடத்தியுள்ளார். அவரையும் அத்தி வரதருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பட்டப் பகலில் படுகொலை செய்தது போலீசு. அவர் குடும்பப் பிரச்சினையாலும், கடன் தொல்லையாலும் தற்கொலை செய்து கொண்டதாக, வழக்கம்போல பொய்ச் செய்தியை பத்திரிகையில் பரப்பியது.

தற்போது நிற்கதியாக நிற்கும் குமாரின் குடும்பத்தை காண வினவு சார்பில்  சென்றிருந்தோம் :

“அன்னைக்கு மதியம் ஒண்ணேகாலுக்கு சாப்பாட்டுக்கு வந்தாரு,  நான் சொல்லி அனுப்புன, டூத்பேஸ்ட், பிரசு, மதியம் பிரிஞ்சி சாதத்துக்கு பச்சடி செய்ய தயிரு எல்லாம் வாங்கினு வந்தாரு. குளிச்சிட்டு வந்து எங்கிட்ட ஆசையா பேசிட்டு, கிளம்புனாரு… அடுத்த ஒரு மணி நேரத்துல என் வீட்டு பக்கத்துல இருக்கற புள்ளளைங்கல்லாம் ஓடி வந்து அக்கா… நம்ம அண்ணன் எரிஞ்சிப் போயிட்டாருன்னாங்க இன்னமும் என்னால நம்ப முடியலயே….”.

“அவருக்கு ஒரு வாரமாவே அலைச்சல். அத்தி வரதர் திருவிழாவுல ஷேர் ஆட்டோ ஓட்டணும்னா உள்ளூர் வாகனமுனு ‘ஸ்டிக்கர் ஒட்ட’ கலெக்டர் கெடு வைச்சாங்க…. அதுக்கு  அலைஞ்சி ஆயிரம் ரூபா கொடுத்து ஸ்டிக்கர் வாங்கினாரு.”

“அதுக்குப் பிறகு, ‘சவாரி ஏத்திக்கிட்டு காஞ்சிபுரத்தில் மற்ற வாகனங்களுக்கு ஒதுக்கியுள்ள டோல்கேட் வரை போக அவரை போலீசு அனுமதிக்கல. அத்தி வரதர் கோயிலிலிருந்து ஐஞ்சு கிலோ மீட்டர் தூரத்துலயே ஆட்டோவை முத்தியால் பேட்டையிலேயே நிறுத்தி உள்ள விடாம திருப்ப சொல்லிட்டாங்க..’ன்னு காலைல எங்கிட்ட குறைப்பட்டாரு…. அப்போது போனில் அவர், ஆட்டோ நண்பர்களிடம் பேசியது… இதுதான்….

‘எல்லா ஆட்டோகாரங்களுமா சேர்ந்து இதுதான் எங்களுக்கு பொழப்பு, இந்த நேரத்துல போலீசு கெடுத்தா எப்படினு? கலெக்டர்கிட்ட பேசுவோம்…. அவரும் விடலன்னா…. ஆட்டோ சாவிய எல்லாரும் சேர்ந்து அவர்கிட்டயே  கொடுத்துட்டு வந்துடுவோம்… எல்லாரும் தயாரா வந்துடுங்க…’னு சொன்னாரு. நான், அவரு பேசி கேட்ட கடைசி வார்த்தை இதுதான்.”

படிக்க:
இந்தியாவில் #MeToo இயக்கம் ! புதிய கலாச்சாரம் நூல்
♦ ஒரு வரிச் செய்திகள் – 01/07/2019

“கஷ்ட நிலைமையில… நிறைய செலவு செஞ்சி ஆட்டோவுக்கு எஃப்.சி இப்பத்தான் வாங்குனாரு.. அத்தி வரதர் விழாவுக்கு மக்கள் வெளியூர்ல இருந்தெல்லாம் வருவாங்க, ஆட்டோ நல்லா ஓடும். கஷ்டம் தீரும்னு நினைஞ்சாரு…. நாங்க பெரிசா ஒண்ணும் நினைக்கலயே.

அன்னைக்கு அவருக்கு நேர்ந்த கொடுமைய நாங்க எதுவும் நேர்ல பாக்கல, பார்த்தவங்க சொல்லறததான் கேட்டோம். மதியம் இங்கிருந்து போனவரு, முக்கால் மணி நேரமா போலீசுக்கிட்ட வாக்குவாதம் பண்ணியிருக்காரு. அவங்க மரியாத இல்லாம அவர பேசியிருக்காங்க, இங்கேயே தீக்குளிச்சி செத்துடுவேன்னு சொல்லியிருக்காரு.”

போலிசார் அவமானப்படுத்தியதால் தீக்குளித்து இறந்த ஆட்டோ ஓட்டுநர் குமார்.

“போலீசு மேலும் அவமானம் படுத்தியிருக்காங்க அதனால, அவங்க எதிரிலேயே வண்டிக்கு வைச்சிருந்த பெட்ரோல ஊத்தி கொளுத்திக்கினாரு, பல பேரு பக்கத்துல இருந்தும் யாருமே தடுக்கலையே….. எரிஞ்சி கரிக்கட்டயாவர வரைக்கும் வேடிக்கை பார்த்திருக்காங்க, முழுசா எரிஞ்சதால அவர யாருக்கும் அடையாளம் தெரியல, அவர் ஆட்டோவை வைச்சி எங்களுக்கு தகவல் கொடுத்தாங்க.

அந்த கோரத்த என்னால பாக்கவே முடியல, மயக்கமாயிட்டேன்… அங்க என்ன நடந்ததுனு கேட்கக்கூட என்னால முடியலயே.”

அருகிலிருந்த அவரது மகன் திருநாவுக்கரசு:

“அன்னிக்கு காலைல என்ன காலேஜ்க்கு வண்டியில விட்டுட்டு போனாரு, மதியம் பக்கத்து வீட்டு சூர்யா வந்து கூப்பிட்டான். “வாடா உங்கம்மா கூப்பிட்டாங்க… உங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம்” என்றான்.. வந்து பார்த்தா ஆஸ்பத்திரி மார்சுவரியில உங்கப்பா பாடி இருக்குன்றாங்க, எனக்கு என்ன சொல்லறதுனே தெரியல அப்போ.. போலீசெல்லாம் சேர்ந்து, அம்மாகிட்ட கையெழுத்து போடுனு கேட்டாங்க… அங்க சப் கலெக்டரும்  கூட நிக்கிறாரு… நான் அவங்கக்கிட்ட “எங்கப்பா எப்படி செத்தாரு” னு கேட்டேன். திரும்ப… திரும்ப அதையே கேட்டேன்.

அவங்க எனக்கு பதில் சொல்லாம, காதுல வாங்காத மாதிரி.. எங்கம்மாவ விடாம ‘வீட்ல பிரச்சினை, டென்ஷனா இருந்தாருனு கையெழுத்துப்போடு’-ன்னு தொல்லை பண்ணாங்க, அவங்க எங்கிட்ட, ‘இன்னா கேள்வி கேட்குற? உங்களுக்கு இப்ப உங்கப்பா பொணம் வேணுமா வேண்டாமா? எங்களுக்கு பல கேஸ்கள், பந்தோபஸ்த்துனு பல வேலைகள் இருக்கு. உங்ககிட்ட பதில் சொல்லிக்கினு இருக்க முடியாது…. நாங்க சொல்ற மாதிரி எழுதி கையெத்துப்போட்டா பாடிய சீக்கிரம் நீங்க எடுத்துட்டு போயிடலாம். இல்லேன்னா… ஆஸ்பிட்டல்லயே காத்துக்கினு இருக்க வேண்டியதுதான் நாங்க கிளம்பிடுவோம்’னு மிரட்டனாங்க. எனக்கு அப்பா போய்ட்டாரேனு அழுவுறதா, இவங்க மிரட்டறதுக்கு கோவப்படுறதானே தெரியல….” என்றார் சோகத்தோடு.

ஆட்டோகாரங்க நிறைய பேர் இருப்பாங்களே… யாரும் துணை நிக்கலயா?

“ஆஸ்பிட்டலுக்கு அவர கொண்டு வந்தது எனக்கு ஆறுதல் சொன்னதோட; டிரைவர்ங்க எல்லாம் நியாயம் கேட்டு  ஆஸ்பிட்டல் ரோட்டுல உக்காந்தாங்க. ஐஞ்சி நிமிசத்துலயே போலீசு மிரட்ட ஆரம்பிச்சிடுச்சி. இந்த ரோட்டுலத்தானே நீங்க ஆட்டோ ஓட்டணும்,  பாத்துக்கறோம்…. என்று மிரட்டியதும் வேறு வழியில்லாம எங்கிட்ட வந்து ஆக வேண்டியத பாப்போம்னு சொன்னாங்க.

அந்த நேரத்துல சப்கலெக்டர்: உங்க பசங்க என்ன படிச்சிருக்காங்க..? அவங்களுக்கு கவர்மெண்ட் வேல போடலாம்; சி.எம் கிட்ட பேசி நிவாரணம் வாங்க ஏற்பாடு பண்றேன்; வேற எதுவும் பிரச்சினை பண்ண வேண்டாம். பாடிய நல்லபடியா அடக்கம் பண்ணுங்க…. இதுல கையெழுத்துப்போடுங்க…..னு வாய் ஒழுக பேசி எங்கிட்ட கையெழுத்து வாங்கிட்டானுங்க….

எனக்கும்  இருந்த மனநிலையில என்ன பண்றதுனே தெரியல, யாரும் எனக்கு துணை இல்ல… வக்கீலா வந்தவனும் அவங்க பக்கமே நின்னு பேசிட்டான்…. என்  குடும்ப சொத்தே போச்சு….. இவனுங்க கொடுக்கற நிவாரணம் எனக்கு எதுக்கு?”

என்று அழுத அவர்… “நாப்பது வருசத்துக்கு ஒரு தடவை  அத்தி வரதர தண்ணியிலருந்து எடுக்கறானுங்களாம், அந்த சாமி என் புருஷன எரிச்சி குளிர் காய்ஞ்சிடுச்சிப்போல”என்றார் விரக்த்தியோடு.

படிக்க:
சென்னை : டாக்சி ஓட்டுநரை தற்கொலைக்கு தள்ளிய போலீசு – ஓட்டுநர்கள் போராட்டம் !
♦ புல்லட்டு பைக் இல்லாம கல்யாண சீர்வரிசை இல்லை !

டி.வி, செய்திதாள்களில் “கடன் தொல்லையால் தீக்குளிப்புனு..” போட்டீருந்தாங்களே என்றோம்.

அவனுங்க “குடும்ப கஷ்டமுனுக்கூட சொன்னானுங்களா……? அவருக்கு நான் பொண்டாட்டியா? இவனுங்க… பொண்டாட்டியா? எங்க குடும்பத்துல எந்த கஷ்டமும்… இல்ல….நாங்க கட்ட முடியாத அளவுக்கெல்லாம் கடனுமில்ல…. எங்க ரெண்டு பிள்ளங்கள நல்லா படிக்க வைச்சாரு…. ஆட்டோத்தான் அவருக்கு உசுரு.. ஒருநாள்கூட ஆட்டோவ ஓட்டாம இருக்க மாட்டாரு…. உடம்பு சரியில்லனாக்கூட ஒரு ரவுண்டு போனாத்தான் தூங்குவாரு…. அப்படி அந்த தொழில நேசிச்சாரு…. எந்த நேரமும் காக்கி சட்டத்தான் போடுவாரு…. காக்கித்தான் டிரைவருக்கு கெத்து…னு சொல்வாரு, அதே காக்கியோட போயிட்டாரு. போன வராத்துலக்கூட முன்னூரு ரூபாத்தான் இன்னிக்கு வருமானம்.. சொன்னவரு, நான் பரவாயில்ல வாடகை ஆட்டோ ஓட்டுற மத்தவங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம். வாடக கட்டணும்; போலீசுக்கு மாமூல் தரணும்; வண்டி ரிப்பேர் பாக்கணும்; அவங்க எப்படித்தான் குடும்பம் நடத்துறாங்களோனு வேதனைப்பட்டாரு.

ஆனா, அந்த மனுசன் எரிஞ்சி கட்டையாவர வரைக்கும் வேடிக்கை பாத்திருக்காங்க ஏன் போலீசு ஒரு தட்டு தட்டி, பெட்ரோல புடுங்கிப் போட்டிருக்க முடியாதா? எவன் செத்த நமக்கென்ன-ன்ற திமிர் தானே… நாளைக்கு போலீசு உனக்கு இதே நில வந்தா யாரு தடுப்பா?

இதுமட்டுமில்ல, அவரு கொளுத்திக்கனப்போ பக்கத்துல இருக்குற பேக்கரியில வீடியோ கேமரா இருக்கு. அதுல எல்லாம் பதிவாயிருக்கும்… அதையும் போலீசு மிரட்டி புடுங்கிட்டாங்க..

அந்த மனுசன் எவ்வளவு கஷ்டத்தயும் தாங்குவாரு… ஆனா, மாரியாத இல்லனா கோவப்படுவாரு, போலீசு மேல கோவப்பட்டு எங்கள விட்டுப்போனத நெனஞ்சாத்தான் தாங்க முடியல….. எந்த கெட்ட பழக்கமும் இல்ல குடி, பீடி எதுவுமே இல்லேயே. எங்கம்மா வீட்டவிட என்ன அவரு நல்லா பாத்துக்குவாரு, இனி நான் என்ன பண்ணப்போறானே தெரியலயே.

ஆட்டோ சவுண்டு நைட்டலெல்லாம் கேட்கற மாதிரியே இருக்கு, ஒருநாள் கூட அம்மா வீட்ல என்ன விட மாட்டாரு, வாம்மா நம்ம வீட்டுக்கு போலாம்னு அங்க வந்து நிப்பாரு… இனி யாரு என்ன கூப்பிடப்போறாங்க….”னு அழ ஆரம்பித்துவிட்டார்.

ஆட்டோ ஓட்டுநர் சங்கம் இருக்குமே அதுல எதுவும் உதவலயா?

“காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கத்துலத்தான் இருக்காரு. அதுக்கு மாசமாசம் பணம் கட்டுவாரு, எப்பவுமே சொல்லுவாரு; அங்க யாரும் தைரியமா பேசமாட்டாங்க, ஏன்னா எல்லாருமே வாடகை ஆட்டோ ஓட்டுறவங்க. எதிர்த்து பேசுனா தொழில் பண்ண முடியாதுனு சொல்லுவாரு, அங்கிருந்துவந்து ஒரு மாலை போட்டுட்டு தியாகி ஆகிட்டாருனு போயிட்டாங்க, வேற ஒண்ணும் சொல்லல.

ஆனா, அவரு இறந்து பிரச்சினை ஆனாதால போலீசு இப்ப எல்லா ஆட்டோவும் உள்ள விடுறான்… அதனால, இன்னிக்கு பல குடும்பங்கள் சந்தோஷமா இருக்கு…. இவரு எங்கள நடுத்தெருவுல நிறுத்திட்டு போயிட்டாரு…” என்றார்.

அடுத்து என்ன செய்வது என்று வழி தெரியாமல் குடும்பமே பித்து பிடித்தவர்கள் போல ஆதரவின்றி தவிக்கின்றனர்.

வினவு செய்தியாளர்.