சென்ற 2018-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் மீ டு (#MeToo) இயக்கம் அனைத்து இடங்களிலும் பேசப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் – குறிப்பாக ஊடகம் மற்றும் திரைத்துறையில் இருந்து தங்கள் கதைகளை வெளிப்படையாகப் பகிர ஆரம்பித்தனர். உடனேயே அந்தப் பெண்களின் ஆளுமையை இழிவுபடுத்தும் பிரச்சாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரத்தில் உள்ள ஆண்கள் செய்ய ஆரம்பித்தனர். ஆயினும் இவர்களது அவதூறுகளை தூக்கி வீசிவிட்டு மீ டு இயக்கம் மக்களிடையே பரவ ஆரம்பித்தது.
ஆணாதிக்கவாதிகளால் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி, ஏன் பத்து, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பேசுகிறார்கள். சமூக வாழ்க்கையில் இருக்கும் சாதாரண பெண்களே இத்தகைய துன்புறுத்தல்களை மவுனமாக கடந்து போகையில் அதிகாரத்தில் உள்ள ஆண்களை அத்தனை சுலபமாக எதிர்க்க முடியுமா என்ன? அப்படி புகார் தெரிவித்தால் அந்தப் பெண்ணை விபச்சாரி என்று தூற்றுவது, இல்லையேல் வேலையை விட்டு தூக்குவது, எதிர்காலத்தையே ஒன்றுமில்லையென ஆக்குவது என அத்தனை ஆயுதங்களும் இப்பெண்களைக் குதறுவதற்கு எப்போதும் காத்திருக்கின்றன.
அமைச்சர்கள், தனியார் நிறுவன உயர் பொறுப்பில் இருப்பவர்கள் என பல பிரபலங்கள் மீ டு இயக்கத்தால் அம்பலப்படுத்த்தப்பட்டார்கள். அவர்களில் பலர் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள் அல்லது பதவி விலகினார்கள். சில பெண்கள் துணிந்து தம் கதையை பொதுவெளியில் பகிர்வதற்கான மனத்தின்மையை மீ டு இயக்கம் அளித்தது. அதனாலேயே பிரபலமல்லாத சாதாரண பெண்கள் கூட தங்களது வதைக் கதைகளை பொது வெளியில் எடுத்து வைத்தார்கள். ஊடகங்களில் முன்னுக்கு வர வேண்டுமா, டிசம்பர் சங்கீத சீசனில் மேடை ஏற வேண்டுமா அத்தனையும் பெண்களை பலிகடாக்களாக ஆக்கிவிட்டுத்தான் நடந்தேற வேண்டும் என்பது எத்தனை கொடுமையானது?
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்காக சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வேலை பறிபோனது, கணவருக்கும் அதே நிலை என எத்தனை எத்தனை கொடுமைகள்? |
பார்ப்பனியமும் ஆணாதிக்கமும் சேர்ந்து நடத்திய இந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் நமது சமூகத்தின் ‘தரத்தை’ தெளிவாகக் காட்டுகிறது. அவ்வகையில் மீ டு இயக்கம் குறித்த ஒரு பறவைப் பார்வையை இத்தொகுப்பு எடுத்து வைக்கிறது.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
***
இந்தியாவில் #MeToo இயக்கம் – புதிய கலாச்சாரம் ஜூலை 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .
அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.
” இந்தியாவில் #MeToo இயக்கம் “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
ஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா ?
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம்!
#Metoo : நாம் யார் பக்கம் நிற்பது ?
பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை!
போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ?
உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?
நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இந்தியாவில் அதிகம் – ஏன்?
#MeToo – வில் விடுபட்ட பழங்குடியின – பட்டியலின பெண்களின் ”கண்ணியத்துக்கான பேரணி”!
பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான்!
#MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள்! இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன? ஒரு முழுமையான அறிக்கை!
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.
வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி:
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்:
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
டாக்டர் வரதர்போலத் திரு. T. R. வெங்கடராம சாஸ்திரியார் 1940 பிப்ரவரியில் குடந்தையில், திராவிடராவது ஆரியராவது என்று பேசிய காலை, பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் கீழ்க்காணும் கருத்தினை வெளியிட்டார். அறிவு மிளிரும் அவர் உரையினை அன்பர்கட்கு அளிக்கிறோம்.
தங்களுக்குத்தான் யோக்கியதையும் புத்தியும் இருப்பதாக இறுமாப்புடன் பேசுவது ‘மகாத்மா’ வின் புதிய யோசனைகளில் ஒன்றுதான் என்று நினைக்க வேண்டி இருக்கிறது. தோழர் சாஸ்திரியாரைப் போல விசால புத்தியுள்ளவர் வேண்டுமென்று குறை கூறுவதை, நம்மால் இன்னதென்றே தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எந்த விஷயத்தையும் அலங்காரமாய் ஜோடித்துச் சொன்னால் அதை நம்புவார்கள் என்றும், பண்டைய காலத்துத் திராவிட மக்களுக்கு ஒன்றுமே தெரியாதென்றும் சொன்னது முட்டாள்தனமே.
அவர் சொன்ன விஷயங்களில், சில கேள்விகள் கேட்பதற்கு நமக்கு நியாயமிருக்கிறது. அதற்கு அவர் பதில் சொல்லியே தீர வேண்டும். ஏனெனில் அவர் புதியதாய்க் கண்டுபிடித்துச் சொன்ன விஷயங்களைப் பற்றிச் சந்தேகங்களை நிவர்த்தி செய்யக் கடமைப்பட்டவர்கள். தமிழர்கள் கலைப்பயிற்சியிலும் பழக்க வழக்கங்களிலும், நம்பிக்கைகளிலும், ஆரியக் கலப்பற்றதொன்றுமில்லை என்று கண்டுபிடித்ததாய்த் தெரிகிறது.
பரந்த நோக்கமே உறைவிடமாயுள்ளவரிடத்தில், நமக்கு இன்னும் அநேக விஷயம் தெரிய வேண்டி இருக்கிறது.
திவான் பகதூர் இராமசாமி சாஸ்திரி.
தோழர் சாஸ்திரியார் நமது தென்னிந்தியாவில் குடியிருக்கும் ஜனங்கள் பூராவும் ஒரே மதமென்றும், ஒரே கலைஞானமுள்ளவர்கள் என்றும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்.
தென்னிந்தியாவில் உள்ள முகமதிய மதம், கிறிஸ்தவ மதம் போக இந்த ஜனங்கள் என்ன மதம் என்று கேட்கிறோம். அவர்கள் எல்லாரும் வேதத்தை ஆதாரமுறையாகப் பின்பற்றுவார்களென்று சொல்ல முடியாது. பிராமணர்கள் கூட பழக்கங்களில் வேதங்கள் படி நடப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க, எல்லோருக்கும் பொதுவான மதம் என்று சொல்ல எப்படித் துணிந்தார்?
இப்போது பிராமணர்கள், பிராமணரல்லாதார் கோயிலுள் போவதே கிடையாது. அப்படியே பிராமணரல்லாதார் கூட எல்லோரும் தினந்தோறும் கோயிலுக்குப் போவதுமில்லை. வேதமும் வேதத்தின்படி நடப்பதும் பிராமணரல்லாதாருக்குச் சாபத்தீட்டே ஒழிய வேறில்லை.
தமிழ்க் கலைஞானமாகிய சைவசித்தாந்த சாஸ்திரங்களும் ஆகமங்களும், பிராமணர்களுக்கு வேண்டியதில்லை என்றே தள்ளியிருக்கிறார்கள்.
ஆரியர்கள் ஆதிக்கமான திராவிடத் தமிழ் மக்கள் கோயில்களிலும், அல்லது வேதமில்லாத சிவாலயங்களிலும் வேத பாராயணம் செய்து பிராமணர்கள் பிரசாதம் முதலியன வாங்கிக்கொண்டு போன பிறகுதான் தேவாரப் பதிகங்கள் பாடலாம் என்று வைத்திருக்கிறார்கள். இறந்துவிட்டாலும் அல்லது கருமாதி காரியங்களிலும் கூட ஒரு பிராமணனாவது பிராமணரல்லாதவன் இறந்து போன வீட்டிற்குத் துக்கம் கொண்டாட வரும் வழக்கம் கிடையாது. பிறகு இறந்து போனவனுடைய 16 நாள் கழித்துத்தான், ஏதாவது வரும்படி வருமென்று தெரிந்தால்தான் வருவார்கள். அதுவுமில்லை என்று தெரிந்தால் அதுகூட வரமாட்டார்கள்.
எந்த நல்ல காரியங்களுக்குப் பிராமணக் குருக்கள் வந்தாலும், பிராமணனுக்கு உள்ள மந்திரங்களைச் சொல்லாமல் வேறு ஏதோ மந்திரங்களைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
கம்பல நாயக்கமார்களிடத்தும், இன்னும் அநேக ஜாதியார்களிடத்தும், கலியாண காலங்களிலும் அல்லது நல்ல விசேஷ காலங்களிலும் கூடப் பிராமணர்கள் வந்தால் அபசகுனமென்றும், தங்கள் வீட்டுக்குள் எல்லாக் காரியங்களும் முடிந்த பிறகுதான் வரலாம் என்றும் வழக்கம் இருந்து வருகிறது.
தமிழர்கள், பொதுவில் ஏராளமாகப் பிராமணர்களின் மத விஷயங்கள் தெரியாமலே இருந்து வருகிறார்கள்.
பிராமணர்களின் புரோகிதத்தைத் தெரிந்தும் தெரியாமலுமிருக்கிற ஜனங்களின் நம்பிக்கைகளைப் பற்றி, தோழர் சாஸ்திரியார் என்ன சொல்லுகிறார்? இந்து மதமென்பது அர்த்தமற்றது, முடிவு இன்னதென்று தெரியாததுமான அன்னிய வார்த்தை. இந்துக்கள் என்ற ஜாதியாருக்குப் பொதுவாகக் கோட்பாடு என்ன என்பதைச் சொல்லுவாரா? புத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், இன்னும் மலையில் வாசம் செய்யும் கலைஞர்கள் எல்லோரும் வித்தியாசமில்லாமல் இந்துக்கள் என்று சொல்லுகிறார். எல்லோரும் ஒருவரை ஒருவர் ஒத்துக் கொள்ளாமல் இருப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. புத்தர்களும், ஜைனர்களும், பிராமணர்களுக்குரிய வேதத்தையும் அதன் கிரியைகளையும் கண்டிப்பாக ஒத்துக்கொள்வதில்லை.
பிராமண மதத்திற்கு உறைவிடமாயுள்ள ஜாதி வித்தியாசம் புத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் கிடையாது. இப்படி இருந்தும்கூட, இவர்களை இந்து மதஸ்தர்கள் என்று சொல்லுகிறார். இதைவிட உண்மையில்லாததும், யோக்கியதை இல்லாததும், அர்த்தமில்லாததுமான வார்த்தை ஏதாவது உண்டா? இதுதானா தென்னிந்தியாவிலுள்ள சகல ஜனங்களின் பொது மதம் என்று சொல்லும் யோக்யதை?
இப்போது தோழர் சாஸ்திரியாரின் மற்ற சங்கதியைப் பற்றிக் கவனிப்போம்.
தினந்தோறும் நடை உடை பழக்க வழக்கங்களிலும் நம்பிக்கைகளிலும் மற்ற விஷயங்களிலும், பிராமணரல்லாதார்களுக்கும் பிராமணர்களுக்கும் அநேக வித்தியாசமுண்டு. பிராமணர்கள், தாம் பிறப்பாலே உயரந்தவரென்றும், மற்ற எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்றும், ஜாதி வித்தியாசத்தால் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.
மற்ற மூன்று வகுப்பு ஜாதியர்களும் பிராமணர்களை எல்லாவிதத்திலும் சிறந்தவர்களென்று ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் சொல்லுகிறார்கள்.
பிறப்பால் உயர்ந்த ஜாதியார் என்பவர்கள், மற்ற ஜாதியார் பெண்களை மணந்து கொள்ளலாமென்றும், அல்லது வைப்பாட்டியாய் வைத்துக் கொள்ளலாமென்றும், கீழ் ஜாதியார், மேல்ஜாதியார் பெண்களை மணந்து கொள்ளக் கூடாதென்றும், அப்படி எண்ணங்கொண்டால் கூட அவனுக்கு கொடூரமான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்றும், அது நியாயமென்றும் சொல்கிறார்கள். இது என்ன நியாயம்? அநேக ஆண்டுகளாகத் தமிழ்மக்கள் வியாபார முறையாலும், பலவிதமான காரணங்களாலும், பலப்பல ஜாதிகளாகப் பிரிந்தும், ஒருவருக்கொருவர் உயர்ந்தவர்கள் என்றும் கூறுவதை ஒத்துக்கொள்வதில்லை.
ஆரியர் என்று சொல்லிக்கொள்ளுவோர், ஏர் உழுவது பாவமென்றும், இழிவான தொழில் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் தமிழர்கள், அதுதான் உயரிய மகத்துவமான தொழில் என்று நினைக்கிறார்கள்.
சவுகரியத்திற்கும் சமயத்திற்கும் தகுந்தாற்போல சட்டத்தையும், தமிழர்கள் நடவடிக்கைகளையும் பிராமணர்கள் கண்டிருக்கிறார்கள்.
ஆரியர்கள் ஸ்மிருதிகளில் உயிர் வாழ்வதற்கு மரியாதையை விட்டு விடலாமென்று சொல்லியிருப்பதாயும் சொல்லுகிறார். ஆனால் உயிரைவிட மரியாதையே பெரியது என்று தமிழர்கள் கருதுகிறார்கள்.
(தொடரும்)
அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.
ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.
உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 8-இ
அலெக்ஸேய் வெகு நேரம் தாமதித்து உறக்கத்திலிருந்து எழுந்தான். ஏதோ மகிழ்வு நிறைந்த உணர்வுடன் அவன் கண் விழித்தான். தூக்கமா? எப்பேர்பட்ட தூக்கம் … உறக்கத்தில் கூட அவன் கை இறுகப் பற்றியிருந்த சஞ்சிகை மீது அவன் பார்வை விழுந்தது. லெப்டினன்ட் கார்ப்போவிச் கசங்கிய பக்கத்திலிருந்து முன் போலவே விரைப்பாக, வீரம் திகழப் புன்னகை செய்து கொண்டிருந்தான். மெரேஸ்யெவ் சஞ்சிகையைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
அதற்குள் முகங்கழுவித் தலைவாரிக் கொண்டு தயாராக இருந்த கமிஸார் புன்சிரிப்புடன் அலெக்ஸேயைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
“அவனைப் பார்த்து என்ன கண்ணடிக்கிறாய்?” என்று மனநிறைவுடன் வினவினார்.
“பறப்போம்” என்று விடையிறுத்தான் அலெக்ஸேய்.
“எப்படி? அவனுக்கு ஒரு பாதந்தான் இல்லை, உனக்கோ, இரண்டு கால்களுமே கிடையாதே?”
“ஆனால் நான் சோவியத் குடிமகன், ருஷ்யன் ஆயிற்றே!” என்றான் மெரேஸ்யெவ்.
அவன் லெப்டினன்ட் கார்ப்போவிச்சைக் கட்டாயம் முந்தி விடுவான், விமானம் ஓட்டுவான் என்பதை இந்த விஷயம் உத்தரவாதப்படுத்தியது போலிருந்தது இந்தச் சொற்களை அவன் உச்சரித்த தோரணை.
அறைத்தாதி கொண்டு வந்த காலையுணவு அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு, வெறும் தட்டுக்களை வியப்புடன் நோக்கி, இன்னும் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டான். நரம்புக் கிளர்ச்சி நிலையில் இருந்தான் அவன். பாடினான், சீழ்கை அடித்துப் பார்த்தான், தனக்குத் தானே உரக்கத் தர்க்கம் செய்து – கொண்டான். தலைமை மருத்துவர் பார்வையிட வந்தபோது அவரது மனநிலை வாய்ப்பாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, விரைவில் உடல் நலம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேள்விகளாகக் கேட்டு அவரைத் துளைத்து விட்டான். நிறைய சாப்பிடுவதும் உறங்குவதுமே இதற்குத் தேவை என்று அறிந்து, பகல் சாப்பாட்டின் போது இறைச்சி வடைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டுத் தின்னமாட்டாமல் திண்டாடிச் சிரமப்பட்டு அவற்றையே உள்ளே தள்ளினான். பகல் வேளையில் ஒன்றரை மணி நேரம் போல மூடிய கண்களுடன் படுத்திருந்தான் ஆயினும் அவனால் உறங்க முடியவில்லை.
இன்பம் மனிதனை சுயநலமி ஆக்கிவிடுகிறது. தலைமை மருத்துவரைக் கேள்வியால் நச்சரித்த அலெக்ஸேய், வார்டு முழுவதும் கருத்து செலுத்திய ஒரு விஷயத்தைப் பார்க்காமலே இருந்துவிட்டான். வஸீலிய் வஸீலியெவிச் வார்டைப் பார்வையிட வழக்கம் போலவே நேரம் தவறாமல் வந்துவிட்டார். பகல் போதில் வெயிலொளி மெதுவாக தரை மீது ஊர்ந்து வார்டு முழுவதையும் கடக்கும். அது சிலும்பு எழும்பிய பிளாச்சு விளிம்பை எட்டுவதும் அவர் அறைக்குள் வருவதும் ஒருங்கே நிகழும். அன்று வெளிப்பார்வைக்குத் தலைமை மருத்துவர் முன்போலவே கவனம் உள்ளவராக காணப்பட்டார்.
எனினும் இயல்புக்கு முற்றிலும் மாறான உள்ளார்ந்த ஞாபக மறதிக்கு அவர் ஆளாகியிருப்பதை எல்லாரும் கண்டார்கள். அவர் திட்டவில்லை. வழக்கம் போலக் காரசாரமான சொற்களைப் பிரயோகிக்கவில்லை. அவரது சிவந்து வீங்கிய கண்களின் ஓரங்களில் நரம்புகள் இடைவிடாது துடித்தன. மாலையில் அவர் வாடி, தென்படும் அளவுக்குக் கிழடு தட்டிப் போயிருந்தார். கதவுப் பிடியில் துணியை மறந்து விட்ட அறைத் தாதியை தணிந்த குரலில் கடிந்து கொண்டார். கமிஸாரின் உடற்சூடு பற்றிய குறிப்பைப் பார்வையிட்டார், அவரது சிகிச்சை முறையில் மாறுதல்கள் செய்தார், பின்பு அவர் போன்றே எங்கோ நினைவாக மௌனமாயிருந்த உதவியாளர்கள் பின் தொடர் வெளியே போனவர் நிலையில் இடறி விழத் தெரிந்தார். நல்லவேளையாக மற்றவர்கள் பிடித்துக் கொண்டதால் தப்பினார்.
மறுநாள் காலை எல்லாம் தெளிவாகிவிட்டது. தலைமை மருத்துவரின் ஒரே மகன் மேற்குப்போர் முனையில் கொல்லப்பட்டுவிட்டான். அவன் பெயரும் வஸீலிய் வஸீலியெவிச், அவனும் மருத்துவன். அவன் பெருத்த விஞ்ஞானி ஆவான் என்ற நம்பிக்கை இருந்தது. தகப்பனாருக்கு அவனைப் பற்றி ஒரே பெருமை, அவனே அவரது மகிழ்ச்சியாக இருந்தான். அத்தகைய மகனை அவர் பறிகொடுத்து விட்டார். தலைமை மருத்துவர் வழக்கம் போல வார்டுகளைச் சுற்றிப் பார்க்க வருவாரா மாட்டாரா என்று மருத்துவமனை முழுவதும் குறித்த நேரத்தில் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. நாற்பத்து இரண்டாவது வார்டுக்காரர்கள் தரை மீது வெயில் புலப்படா வகையில் மெதுவாக ஊர்வதை இறுக்கத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள். முடிவில் வெயில் சிலம்பு எழும்பிய பிளாச்சு விளிம்பை எட்டியது. எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள் – வர மாட்டார் என்று.
ஆனால் அந்தச் சமயத்தில் பழக்கமான கனத்த அடிவைப்பும் பல துணையாளர்களின் பூட்சொலியும் ஆளோடியில் கேட்டன. தலைமை மருத்துவர் முந்தைய நாளை விட நன்றாகக் கூடக் காணப்பட்டார். அவருடைய விழிகள் சிவந்திருந்தன, இமைகளும் மூக்கும் கடுமையான ஜலதோஷத்தின் போது இருப்பது போல வீங்கியிருந்தன என்பது உண்மையே. கமிஸாரின் மேஜை மேலிருந்து உடல் வெப்பக் குறிப்பை எடுத்தபோது, பருத்த தோலுரிந்த அவருடைய கைகள் வெளித்தெரியும்படி நடுங்கின என்பதும் உண்மையே. ஆனால், அவர் முன்போலவே சுறுசுறுப்பாகவும் காரிய நாட்டம் கொண்டவராகவும் இருந்தார். அவருடைய கத்தலும் அதட்டலும் தாம் மறைந்துவிட்டன.
காயமடைந்தவர்களும் நோயாளிகளும் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டவர்கள் போல எப்படியாவது அவருக்கு மகிழ்ச்சியூட்ட முயன்றார்கள். அன்று அவர்கள் எல்லோருக்கும் உடல்நிலை முன்பை விட சீர்பட்டு இருந்தது. மிகக்கடும் நோயாளிகள் கூட எதுவும் குறை சொல்லவில்லை, தாங்கள் குணமடைந்து வருவதாகக் கூறினார்கள். எல்லோருமே கொஞ்சம் அதியுற்சாகத்துடன் கூட, மருத்துவமனை ஒழுங்குமுறையைப் புகழ்ந்தார்கள். பல்வேறு சிகிச்சை முறைகள் ஏதோ மந்திர சக்தி போலப் பயன் விளைப்பதாகச் சொன்னார்கள். பொதுவான பெருந்துயரத்தால் ஒன்று இணைக்கப்பட்ட நட்பார்ந்த குடும்பமாக விளங்கியது மருத்துவமனை.
இன்று காலையிலிருந்தே தமக்கு இத்தகைய சிகிச்சை வெற்றி கிடைப்பது என்ன காரணத்தால் என்று வார்டுகளைச் சுற்றிப் பார்க்கையில் வியந்தார் வஸிலிய் வஸீலியெவிச்.
உண்மையில் வியப்படைந்தாரா? இந்த மௌனச் சூழ்ச்சியை ஒருவேளை அவர் கண்டுகொண்டார் போலும். அப்படிக் கண்டுகொண்டார் என்றால், தமது ஆற்ற முடியாத பெரும் புண்ணைத்தாங்கிக் கொள்வது அவருக்கு முன்பை விட எளிதாயிற்று போலும்.
மோடியின் வெற்றி தனித்துப் பார்க்கக்கூடிய நிகழ்வு அல்ல. உலகின் பல்வேறு நாடுகளில் நிறவெறி, இனவெறி, மதவெறியைத் தூண்டுகின்ற பாசிஸ்டுகளும் தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளும் அதிகாரத்துக்கு வருகின்றனர்.
துருக்கியில் எர்டோகன், பிரேசிலில் பொல்சானரோ, இசுரேலில் நெதன்யாகு, அமெரிக்காவில் டிரம்ப், ஆஸ்திரேலியாவில் கன்சர்வேடிவ் கட்சி ஆகியோர் வெற்றி பெற்றிருக்கின்றனர். பிரான்சில் லிபென், இத்தாலியில் மாட்டோ சால்வி, ஹங்கேரியில் விக்டர் ஆர்பன் ஆகிய வலதுசாரிகள் ஐரோப்பாவில் செல்வாக்கு பெற்று வருகின்றனர்.
தனது நாட்டை உலக அரங்கில் செல்வாக்குள்ள நாடாக மாற்றவிருப்பதாகச் சொல்லித் தேசவெறியைத் தூண்டுவது, தீவிரவாத ஒழிப்பு, அகதிகள் மற்றும் வெளிநாட்டினர் மீது வெறுப்பை கக்குவது, விரட்டியடிப்பது, பிற்போக்குக் கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிப்பது, வேர்மட்ட அளவிலான வன்முறை அமைப்புகளைக் கட்டியமைப்பது போன்ற கூறுகளைக் கொண்ட வலதுசாரி, பாசிச கட்சிகள் உலகெங்கும் தோன்றி வளர்ந்து வருகின்றன. அண்மையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் இத்தகைய சக்திகள் கணிசமான ஓட்டுகளைப் பெற்றுள்ளன.
(இடமிருந்து) பாசிஸ்டுகள், வலதுசாரிகலின் வெற்றி : துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன், பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சானரோ, இசுரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இந்தியாவில் இது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பார்ப்பன பாசிசமும், புதிய தாராளவாதக் கொள்கையை உள்ளார்ந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் பாசிசமும் இணைந்த ஒரு ஹைபிரிட் பாசிசமாக உருப்பெற்றிருக்கிறது.
கார்ப்பரேட் பாசிசத்தைப் புதிய தாராளவாதக் கொள்கையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால், மோடியின் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறும் எதிர்க்கட்சிகள் அவ்வாறுதான் இதனை அணுகுகின்றன. புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவாகத்தான் பணமதிப்பிழப்பு முதல் ஜி.எஸ்.டி. வரையிலான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன என்பதையும் மோடியின் வெறிபிடித்த கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளுக்கு அடிப்படை அதுதான் என்பதையும் அவர்கள் பேசுவதில்லை.
அதே புதிய தாராளவாதக் கொள்கையை மனிதமுகத்துடன் அமல்படுத்த முடியும் என்பதைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் கூறுகின்றனர். புதிய தாராளவாதத்துக்கு மனித முகம் சாத்தியமே இல்லை, பாசிச முகம்தான் சாத்தியம் என்பதையே இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வரும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காட்டுகின்றன.
பாசிசத்தின் வேர் ஏகாதிபத்தியத்திலும் அது அமல்படுத்தி வரும் புதிய தாராளவாதக் கொள்கையிலும் இருக்கிறது. உலக ஏகாதிபத்தியக் கட்டமைப்பே பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் என அனைத்துத் துறைகளிலும் – மீள முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அதன் கோட்பாடுகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியாத கடைசிக் கட்டத்திற்கு ஏகாதிபத்தியக் கட்டமைப்பு வந்துவிட்டது.
இதன் கோர விளைவுகளால் மிகப்பெரிய சுரண்டலிலும் ஒடுக்குமுறையிலும் சிக்கியுள்ள மக்கள் உலகெங்கும் போராடிக் கொண்டிருக்கின்றனர். மரபுரீதியான கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு மக்கள் தாங்களே இணைந்து போராடுகின்றனர்.
உலக முதலாளித்துவத்துக்கு எதிரான மக்களின் கோபத்தை திசைதிருப்பும் பொருட்டு, இசுலாமியர், அகதிகள், கருப்பினத்தவர் என ஒவ்வொரு நாட்டிலும் அதன் சூழலுக்கு ஏற்ப பலிகடாக்களைக் கண்டுபிடித்து தேசவெறி, இனவெறி, மதவெறி, நிறவெறியை அந்தந்த நாடுகளின் பாசிச சக்திகள் தூண்டுகின்றன. மக்களைச் சரியான திசையில் வழிநடத்தக் கூடிய கம்யூனிச இயக்கங்கள் பலநாடுகளில் இல்லை அல்லது செல்வாக்குடன் இல்லை. இதன் காரணமாக மக்கள் பாசிச சக்திகளின் சவடாலுக்கும் திசைதிருப்பலுக்கும் எளிதில் பலியாகிறார்கள்.
அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக் கழக வளாகத்தில், “வலதிசாரிகளே ஒன்றுபடுங்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து வெள்ளை இனவெறியர்கள் கடந்த ஆண்டு நடத்திய தீவட்டி ஊர்வலம். ( கோப்புப் படம் )
மக்களுக்கு வழமையான அரசியல் கட்சிகள் எதன் மீதும் நம்பிக்கையில்லை. நமது நாட்டில் மார்க்சிஸ்டு கட்சியைப் போல, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சோசலிஸ்டுகள் அல்லது இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் கட்சியினரை மக்கள் வெற்றிபெற வைத்திருக்கின்றனர். மனித முகம் கொண்டு புதிய தாராளவாதக் கொள்கையை அமல்படுத்தப் போவதாகச் சொன்ன அவர்கள் அனைவரும் அந்த முயற்சியில் தோற்றது மட்டுமின்றி, மக்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டனர்.
இருப்பினும், எந்த மாற்றமாயினும் அது தேர்தல் மூலம்தான் சாத்தியம் என்று மக்கள் எண்ணுவதால், அல்லது இதைத்தவிர வேறு வழியில்லை என்று கருதுவதால், தேர்தல் ஜனநாயகம் மீதும் அதன் அமைப்புகளைச் சார்ந்தே சிந்திக்கிறார்கள். இந்த முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் யார் பதவிக்கு வந்தாலும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை.
நேர்மையான, ஊழல் அற்ற, தேசபக்தியுள்ள, வலிமையான, துணிச்சலான தலைவரைக் கொண்ட ஒரு கட்சி நாட்டை ஆண்டால், நாட்டின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம் என்று நம்புகிறார்கள். அத்தகைய நம்பிக்கையை முதலாளித்துவ வர்க்கம் திட்டமிட்டே மக்களிடம் உருவாக்குகிறது.
எதிர்க்கட்சிகள் எல்லாம் மறுகாலனியாக்கக் கொள்கைகளைப் பின்பற்றும் கட்சிகளாகவோ, மக்கள் மத்தியில் மத்தியில் அம்பலமான ஊழல், குடும்ப அரசியல் கட்சிகளாகவோ, மிதவாத இந்துத்துவா கட்சிகளாகவோ, பா.ஜ.க.வின் மிரட்டலுக்குப் பணிந்து நடக்கும் கட்சிகளாகவோ, பதவிக்கு ஆசைப்பட்டு பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்துவிடும் கட்சிகளாகவோ அல்லது அப்படிப்பட்ட கீழ்மட்டத் தலைவர்களைக் கொண்ட கட்சிகளாகவோ தான் இருக்கின்றன.
இத்தகைய சூழலில்தான், பா.ஜ.க. என்ற கட்சிக்கும் அப்பாற்பட்ட, அதனை விடவும் உயர்ந்த, வலிமை கொண்ட, நேர்மையான தலைவனாக மோடியை ஆளும் வர்க்கம் திட்டமிட்டே மக்களிடம் முன்நிறுத்தியது. மோடியின் தோல்வியையும், தவறுகளையும், மதவெறியையும், உளறல்களையும் மறைத்து கார்ப்பரேட் ஊடகங்கள் நடத்திய பிரச்சாரப் போருக்கு மக்கள் பலியாகிவிட்டார்கள்.
நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குள் சிந்திப்பவர்கள் இந்தத் தேர்தல் முடிவை, “மோடியின் வெற்றி, – எதிர்க்கட்சிகளின் தோல்வி” என்று சுருக்கிப் பார்க்கின்றனர். ஆனால், புதிய தாராளவாதம், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களையே பறித்து வருகிறது.
அதிகார வர்க்கமும், கார்ப்பரேட் நிர்வாகிகளும் கொண்ட தேர்ந்தெடுக்கப்படாத ஆணையங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதும், அந்த ஆணையங்களின் முடிவை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதும் புதிய தாராளவாதம் வகுத்திருக்கும் இலக்கணங்களாகும். இந்தப் பொருளில் தேர்தல் என்பதும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டமியற்றுவது என்பதுமே கேள்விக்குள்ளாகிவிட்டன. இது இந்தக் கட்டமைப்பே பாசிச மயமாகிவருவதற்கான எடுத்துக்காட்டாகும்.
முதலாளித்துவக் கட்டமைப்பின் தோல்வி மற்றும் இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வி ஆகியவற்றின் அங்கமாகத்தான் தேர்தல் கட்சிகளின் தோல்வி இருக்கிறது. இங்கே நாம் அவர்களுடைய தேர்தல் தோல்வியைக் குறிப்பிடவில்லை. கொள்கை, உட்கட்சி ஜனநாயகம் ஆகியவை மருந்துக்கும் இல்லாமல், அரசு அதிகாரத்தையும் புதிய தாராளவாதக் கொள்கைகள் வழங்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு ஊழல் செய்வது, பொதுச்சொத்தை கொள்ளையடிப்பது, தரகு முதலாளிகளாக மாறுவது என்ற நோக்கத்துக்காகவே தேர்தலில் நிற்பவர்களாக எல்லா கட்சியினரும் மாறியிருக்கிறார்கள். இவர்கள் பாசிசத்துக்கு எதிராகப் போராடும்படி நிர்பந்திக்கப்பட்டாலும், அதில் உறுதியாக நிற்பார்கள் என்று சொல்ல இயலாது.
நடுநிலையாகத் தேர்தலை நடத்தப் பொறுப்பேற்றிருக்கும் தேர்தல் ஆணையமோ கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் கைப்பாவையாகவே இயங்கியது. இந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு எந்திர தில்லுமுல்லு குறித்த புகார்கள், மதவெறிப் பேச்சுகள், பண விநியோகம் உள்ளிட்ட எல்லா வகையான தில்லுமுல்லுகளுக்கும் தேர்தல் ஆணையம் துணை நின்றது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டோம் என்று ஓட்டுக்கட்சிகள் பகிரங்கமாக அறிவிக்கும் நிலையும் ஆணையத்துக்குள்ளேயே பிளவு ஏற்படும் நிலையும் வந்து விட்டது. பாசிசத்தை முறியடிக்கத் தேர்தல்தான் வழி என்று கூறும் கட்சிகளுக்கு, “தேர்தல் மூலம் பாசிசத்தை முறியடிக்க முடியாது” என்ற உண்மையை தேர்தல் ஆணையமே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உணர்த்தியிருக்கிறது.
எடப்பாடி ஆட்சியைக் காப்பாற்றுவதற்கு மோடி அரசு மேற்கொள்ளும் எல்லா முறைகேடுகளுக்கும் தேர்தல் ஆணையம் மட்டுமின்றி நீதித்துறையும் துணை நிற்கின்றன. ரபேல் ஊழல், சகாரா ஊழல், லோயா மர்ம மரணம் ஆகியவை தொடர்பான வழக்குகள் அனைத்திலும் அப்பட்டமாக மோடி அரசுக்கு ஆதரவாகவும் முறைகேடாகவும் உச்ச நீதிமன்றம் நடந்திருப்பதும் அம்பலமாகியிருக்கின்றன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் மீதான பாலியல் குற்றச்சாட்டும், குற்றம் சாட்டிய பெண்ணை நீதிபதியும் போலீசும் இணைந்து வேட்டையாடியதும் நீதித்துறையின் “மாண்பை” சந்தி சிரிக்கச் செய்திருக்கின்றன.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகங்கள், பாசிசத்தின் தூண்களாகவே செயல்பட்டிருக்கின்றன. இந்த தேர்தலில் கார்ப்பரேட் ஊடகங்கள் அப்பட்டமாக மோடியின் பிரச்சார பீரங்கிகளாகவே இயங்கின. பா.ஜ.க. செய்திகளுக்கு முன்னுரிமை தருவது என்பது மட்டுமல்ல, பிரைம் டைம் எனப்படும் நேரத்தில் மோடியை விளம்பரப்படுத்துவதற்கு தரப்பட்ட நேரத்தில் நான்கில் ஒரு பங்கு கூட ராகுல் காந்திக்கு தரப்படவில்லை.
அதுமட்டுமின்றி மோடி சரஞ்சரமாக அவிழ்த்துவிடும் பொய்களை ஊடகங்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. ஊடக அறத்திற்கு எதிராக முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்வி, பதில்களை வைத்துக்கொண்டு இயல்பாக பேட்டி எடுப்பது போல ஊடகங்கள் நடித்தன. இவை போதாதென்று நமோ டி.வி. என்றொரு சானல் தொடங்கப்பட்டு அது எந்த விதிக்கும் கட்டுப்படாமல் சட்டவிரோதமாக இயங்கியது. 24 மணிநேரமும் தேர்தல் பிரச்சாரம் செய்தது.
இந்த நாடாளுமன்ற அரசியலின் எல்லைக்கு வெளியே ஆர்.எஸ்.எஸ். இன் பயங்கரவாத கொலைப்படைகள் இயங்குகின்றன. சங்கப் பரிவார அமைப்புகள் துப்பாக்கிப் பயிற்சி நடத்துகின்றன. இவையனைத்தும் போலீசு, அதிகார வர்க்கம், நீதிமன்றம் ஆகியோருடைய பார்வையின் கீழ் வெளிப்படையாகவே நடந்த போதிலும், இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள் எதையும் அரசின் உறுப்புகள் தடுப்பதில்லை.
மொத்தத்தில் அரசியல் சட்டத்தின்படி ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கப் பொறுப்பேற்றிருக்கும் அமைப்புகள் எனக் கூறப்படும் அரசின் உறுப்புகள், பாசிசத்தின் கருவிகளாகப் பயன்பட்டு வருகின்றவே தவிர, அதனை ஒடுக்குவதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ எள்ளளவும் பயன்படவில்லை. இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியை பாசிசம் தனது நோக்கத்துக்கு எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதற்கான சமீபத்திய சான்றுகள் இவை.
எதிர்க்கட்சிகளின் தேர்தல் தோல்வியைக் காட்டிலும் நமது கவனத்துக்கும் அக்கறைக்கும் உரியவை அரசுக் கட்டமைப்பின் இந்தத் தோல்விகளே.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
புவாகில்பேரின் கருத்துக்களில் இருந்த கவர்ச்சியான, மேன்மையான அம்சம், அவற்றிலடங்கியிருந்த மனிதாபிமானமே. எனினும் பொருளாதாரத் தத்துவக் கோணத்திலிருந்து பார்க்கும் பொழுது, அவருடைய ”விவசாய மோகம்” அதன் மறுபக்கத்தையும் கொண்டிருந்தது.
தொழில்துறை மற்றும் வர்த்தகத்தின் பாத்திரத்தைக் குறைவாக மதிப்பிட்டு விவசாயப் பொருளாதாரத்தை இலட்சியமாகக் காட்டிய பொழுது அவர் பெருமளவுக்குப் பின் திசையில் பார்த்தாரே தவிர முன் திசையில் பார்க்கவில்லை. இது அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிய அவருடைய கருத்துக்களில் ஆதிக்கம் செலுத்தியது .
புவாகில்பேரின் கருத்துக்கள் பெட்டியின் கருத்துக்களிலிருந்து குறிப்பிட்ட வகையில் வேறுபட்டிருந்ததற்குக் காரணங்களை பிரெஞ்சு முதலாளித்துவத்தின் வளர்ச்சியிலிருந்த வரலாற்று ரீதியான தனித்தன்மைகளில் காண முடியும். தொழில்துறை, வர்த்தக முதலாளி வர்க்கம் இங்கிலாந்தைக் காட்டிலும் பிரான்சில் ஓப்பிடவும் இயலாத அளவுக்கு பலவீனமானதாக இருந்தது; மேலும் அங்கே முதலாளித்துவ உறவுகள் மெதுவாகவே வளர்ச்சியடைந்தன.
இங்கிலாந்தில் விவசாயத்தில் கூட முதலாளித்துவ உறவுகள் வேரூன்றியிருந்தன. இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் உழைப்புப் பிரிவினையும் போட்டியும் மூலதனம் மற்றும் தொழிலாளர்களின் இடப்பெயர்வும் பெருமளவுக்கு இடம் பெற்றிருந்தன. இங்கிலாந்தில் அரசியல் பொருளாதாரம் என்பது கலப்பற்ற முதலாளித்துவக் கருத்துக்களைக் கொண்ட முறையியலாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. ஆனால் பிரான்சில் அது பிரதானமாகக் குட்டி முதலாளித்துவத் தன்மையைக் கொண்டிருந்தது.
ஆங்கில மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரம் – அதன் பிறப்பிடத்தில் நிற்பவர் பெட்டி – இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகளை, ஒன்றோடொன்று இணைந்துள்ள பிரச்சினைகளை விஞ்ஞான ஆராய்ச்சியின் மையத்தில் வைத்தது, பண்ட விலைகளின் இறுதியான அடிப்படை என்ன, முதலாளியின் லாபம் எங்கேயிருந்து வருகிறது என்பவையே அவை. இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு மதிப்பின் இயல்பை ஆராய்வது அவசியமாயிற்று. உழைப்பளவை மதிப்புத் தத்துவம் ஆங்கிலப் பொருளியலாளர்களுடைய சிந்தனையின் தர்க்கரீதியான அடிப்படையாயிற்று.
இந்தத் தத்துவத்தை வளர்க்கும் பொழுது, பல்வேறு பயன் மதிப்புக்களை உருவாக்குகின்ற ஸ்தூலமான உழைப்புக்கும் குணரீதியான தன்மையைக் கொண்டிராமல் நீளம், அளவு என்ற ஒரு அளவுருவை மட்டுமே பெற்றிருக்கும் சூக்குமமான உழைப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வதை நோக்கி அவர்கள் படிப்படியாக முன்னே வந்தார்கள். இந்த வேறுபாடு மார்க்சுக்கு முன்பு ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை, முறையாக எடுத்துக் கூறப்படவுமில்லை. ஆனால் அதை அணுகுவதற்குச் செய்யப்பட்ட முயற்சியே பெட்டி முதல் ரிக்கார்டோ வரை ஆங்கில அரசியல் பொருளாதாரத்தின் வரலாறாக ஓரளவுக்காவது இருக்கிறது.
அதன் ஆராய்ச்சிகள் உண்மையில் மதிப்பு விதியைப் பற்றியே இருந்தன. ஆனால் மார்க்ஸ் குறிப்பிட்டது போல, ”மதிப்பு விதி முழு வளர்ச்சி அடைவதற்கு, பெரும் அளவில் தொழிலுற்பத்தியும், சுதந்திரமான போட்டியும் நிலவுகின்ற சமூகத்தை, வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நவீன முதலாளித்துவ சமூகத்தை முன்னூகிக்கிறது”. (1) இந்தச் சமூகம் இங்கிலாந்துக்கு வெகு காலத்துக்குப் பிறகுதான் பிரான்சில் ஏற்பட்டது. எனவே தத்துவாசிரியர்கள் மதிப்பு விதியின் இயக்கத்தைப் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் கஷ்டமானதாக இருந்தது – புவாகில்பேர் தனது “அளவு விகித விலைகள்” என்ற கருதுகோளின் மூலமாகப் “பண்டங்களின் பரிவர்த்தனை மதிப்பை உழைப்பு நேரத்துக்கு நடைமுறையில் வகைப்படுத்தினார்…. ஆனால் அவருக்கே அது தெரியாது” (2) என்பது உண்மையே. ஆனால் உழைப்பின் இரட்டை அம்சத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை. எனவே செல்வத்தின் மதிப்பு அம்சத்தை அவர் முழுமையாகப் புறக்கணித்தார். இந்த மதிப்பு அம்சம் எக்காலத்துக்கும் உரிய சூக்குமமான உழைப்பைக் கொண்டிருக்கிறது. அவர் செல்வத்தின் பொருளாயத அம்சத்தை மட்டுமே பார்த்தார்; அதைப் பயனுள்ள பொருள்களின், பயன் மதிப்புக்களின் குவியல் என்பதாக மட்டுமே கருதினார்.
புவாகில்பேரின் சிந்தனையிலடங்கியுள்ள இந்தக் குறையை பணத்தைப் பற்றிய அவருடைய கருத்துக்களில் குறிப்பிடத்தக்க வகையில் தெளிவாகக் காணலாம். மதிப்பின் விதி இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தில் பண்டங்களும் பணமும் பிரிக்க முடியாத மொத்தமாக இருக்கின்றன என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.
ஏனென்றால் பரிவர்த்தனை மதிப்பின் தனி முதலான கொள்கலமாகிய பணத்தில் சூக்குமமான உழைப்பு தனது முழுமையான வெளியீட்டை அடைகிறது. புவாகில்பேர் பணத்தை வெறும் பயனுள்ள பொருள்கள் என்று மட்டுமே கருதிய பண்டங்களிலிருந்து வேறுபடுத்திப் பார்த்தார்; பணத்தை எதிர்த்து வெறிகொண்ட வகையில் போராடினார்.
பணம் அதனளவில் நுகர்வுப் பொருள் அல்ல என்பதால் அது அந்நியப் பொருளாக, செயற்கையானதாக அவருக்குத் தோன்றியது. பணம் இயற்கைக்கு மாறான, கொடுமையான ஆட்சியைப் பெற்று விடுகிறது; இதுவே பொருளாதார அழிவுக்குக் காரணம். அவர் பணத்தைப் பற்றிக் கசப்பான கண்டனத்தோடு தம் ஆராய்ச்சியுரையைத் தொடங்குகிறார். ”.. நம்முடைய மனங்கள் கெட்டுப் போயிருப்பதால் தங்கமும் வெள்ளியும் தெய்வ உருவங்களாகி விட்டன.. அவற்றை தெய்வங்களாகவே மாற்றி விட்டோம். பெரும்பாலான மக்களின் மதமாகவும் வழிபடுகின்ற பொருளாகவும் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கின்ற போலித் தெய்வங்களுக்குக் குருட்டுத்தனமான பண்டைக் காலம் ஒருபோதும் படைத்திராத அளவுக்கு அதிகமான பொருள்களையும் விலைமதிப்பற்ற காணிக்கைகளையும் மக்களையும் கூட இன்னும் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.”(3)
முதலாளித்துவ உற்பத்தியைப் பணத்தின் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும், அதே சமயத்தில் அதன் அடிப்படைகளை மாற்றிவிடக் கூடாது என்ற கற்பனாவாத ஆசை, மார்க்ஸ் குறிப்பிட்டது போல, புவாகில்பேர் முதல் புரூதோன் வரை பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தின் ”தேசிய மரபுரிமைக் குறைபாடாகும்”.
புவாகில்பேர் காலத்தில் முதலாளித்துவ சமூகம் அப்பொழுதுதான் நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் உருவாகத் தொடங்கியிருந்தது. எனவே அந்த முதலாளித்துவ சமூகத்தின் வர்க்க இயல்பை, சுரண்டும் தன்மையை அவரால் வெளிப்படுத்த இயலவில்லை. ஆனால் அவர் பொருளாதார, சமூக ஏற்றத் தாழ்வையும் ஒடுக்குமுறையையும் வன்முறையையும் ஆத்திரத்தோடு கண்டனம் செய்தார்.
“பழைய அமைப்பு” வீழ்ச்சி அடைவதற்கும் புரட்சி தோன்றுவதற்கும் வழிவகுத்த புத்தகங்களை முதன்முதலாக எழுதிய சிலரில் புவாகில்பேரும் ஒருவர். சர்வாதிகார முடியாட்சியை ஆதரித்தவர்கள் 18-ம் நூற்றாண்டிலேயே இதை உணர்ந்திருந்தார்கள். புவாகில்பேரின் “அருவருப்பான நூல்கள்” அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டின, கொள்ளையடித்தலையும் கலகத்தையும் ஊக்குவித்தன; இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் கைகளில் அவை குறிப்பிடத்தக்க வகையில் ஆபத்தானவையாக இருந்தன என்று அத்தகைய ஆதரவாளர் ஒருவர் அவர் மரணமடைந்து அநேகமாக ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் எழுதினார். ஆனால் அவருடைய புத்தகங்களும் ஆளுமையும் முக்கியமானவை, சுவாரசியமானவை என்று நாம் கருதுவதற்குரிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1) K. Marx, A Contribution to the Critique of Political Econorm, Moscow, 1970, p. 60..
(2)1bid., p. 54.
(3)Economistes financiers (dit XVIIIe siecte, Paris, 1843, pp. 394-395,
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
இதுவரை, பாசிஸ்டுக் கட்சியின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றிக் கூறினோம். பாசிஸ்டுக் கட்சியின் ஸ்தாபன அமைப்பையும் அதன் அரசியல் நடவடிக்கைகளது தன்மையையும் எடுத்துரைத்தோம். புதிய சட்டதிட்டங்களை வகுத்துக் கொண்ட பிறகு, அது எவ்வாறு தன்னை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் விவரித்தோம்.
எல்லா வகையான உட்கட்சி ஜனநாயகமும் இல்லாதிருப்பதும், கட்சிக்குள் விவாதங்கள் மிக அரிதாகவே நடைபெறுவதும், உண்மையான அரசியல் வாழ்க்கை காணப்படாததும் பாசிஸ்டுக் கட்சியின் ஒரு முக்கியமான அம்சமாக எவ்வாறு இருந்து வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டினோம். அக்கட்சியின் இயல்பு எவ்வாறு ஒரு சிவிலியன் படைக்குரியதாக இருக்கிறது என்பதையும் பார்த்தோம்; கட்சிப் பதவிகளுக்கு எவ்வாறு தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை என்பதையும், குறிப்பாக சர்வாதிகார இயல்பை ஒத்த ஓர் அதிகாரவர்க்க இயல்பை அது எவ்விதம் பெற்றிருக்கிறது என்பதையும், எல்லா ஜனநாயக அமைப்புகளையும் ஒழித்துக் கட்டி, எவ்விதம் தன்னை ஒரு பகிரங்க சர்வாதிகார அமைப்பாக வெளிப்படுத்திக் கொண்டது என்பதையும் கண்டோம். பாசிஸ்டுக்கட்சியின் இந்த இயல்பு சர்வாதிகாரத்தின் இயல்பை அதாவது ஜனநாயகத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் இயல்பை ஒத்திருக்கிறது.
எனவேதான் ஒரு புது வகையான கட்சியை உருவாக்கி இருப்பதாக லெனினைப் பகடி செய்து முசோலினி கூறியதில் ஓரளவு உண்மை இருக்கிறது. இந்தப் புதிய அம்சம் – ஜனநாயகத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் ஒழித்துக் கட்டுதல், சர்வாதிகார வடிவங்களை கட்சி வரித்துக் கொள்ளுதல் என்னும் அம்சம் – உண்மையிலேயே கட்சிக்கு சில புதிய இயல்புகளை வழங்குகிறது என்பதில் ஐயமில்லை .
எனினும் இந்தக் கட்சியின் ஸ்தாபன வடிவங்கள் நிலையானவை அல்ல என்பதையும், கட்சியின் வளர்ச்சிப் போக்கில் அவை உருவானவை என்பதையும், முசோலினியால் முன்னுணரப்பட்டவை அல்ல என்பதையும் நாம் எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும்.
கட்சி அமைக்கப்பட்ட விதமும் தேசத்தின் வாழ்க்கையில் அது வகிக்கும் செல்வாக்கும் ஓர் உடனடியான விளைவை ஏற்படுத்தி இருக்கிறது : அதாவது ஒரு ஜனநாயக ஆட்சியில் பல்வேறு கட்சிகளிடையே நடைபெறும் போராட்டமும் தவிர்க்கமுடியாத முரண்பாடுகளும் பாசிஸ்டுக்கட்சிக்குள்ளேயே கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
இப்போது, பல்வேறு பாசிஸ்டு அமைப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.
இன்று உருவாக்கப்பட்டுள்ள வடிவத்தில் பாசிஸ்டுக் கட்சி தேசத்தின் முழு வாழ்க்கையின் மீதும், மக்களில் அனைத்துப் பகுதியினர்மீதும் கட்டுப்பாடு செலுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது. இதற்குக் காரணம் உண்டு; பாசிஸ்டுக்கட்சி அளவுக்கு மீறி அதிகார வர்க்கமயமாக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு சீரான அமைப்பு என்பது வெளித் தோற்றத்திற்குத்தான். உண்மையில் அப்படியல்ல. அனைத்து மக்களையும் அனுசரித்துப் போகும் கோட்பாடு அதனிடமில்லை.
இன்று இத்தாலியில் பாசிஸ்டுக் கட்சியில் ஓர் உறுப்பினராக இருப்பதன் பொருள் என்ன? சில உறுப்பினர்கள் அரசியல் ரீதியில் செயலூக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர், கட்சிப் பொறுப்புகளில் இருந்து வருகின்றனர், அரசியல் செயற்பாடுகளில் பங்கு கொள்கின்றனர். ஆனால் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் மிகப் பெரும்பாலோர் அரசியல் ரீதியில் செயலற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். அப்படியிருந்தும் அவர்கள் இன்னமும் கட்சியில் இணைந்திருக்கின்றனர். ஏன்? ஏனென்றால் பல்வேறு நிர்ப்பந்த நிலைகள் காரணமாக அவர்கள் கட்சியில் சேர வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
வாழ்வதற்காக வேலை செய்ய வேண்டியிருப்பவர்களும் வேலை செய்து வாழ வேண்டியிருப்பவர்களுமான ஏராளமான குட்டி பூர்ஷுவா வர்க்கத்தினரும் மத்திய பூர்ஷுவா வர்க்கத்தினரும் கட்சியில் சேர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இந்த நிர்ப்பந்த நிலைகள் இருவகைப்பட்டவை; ஒன்று நேரடியானவை, மற்றொன்று மறைமுகமானவை. மறைமுகமான நிர்ப்பந்த நிலைகளை எடுத்துக் கொண்டால், உதாரணமாக, பாசிஸ்டுக் கட்சியில் உறுப்பினராக இருப்பது எந்த அரசு உத்தியோகத்தையும் வகிப்பதற்கு ஒரு முக்கிய தேவையாகும்; பாசிஸ்டுக் கட்சியில் உறுப்பினராக இருப்பது அரசு உத்தியோகங்களுக்கான தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு இன்றியமையாதது. இன்று இத்தாலியில் நீங்கள் ஒரு கட்சி உறுப்பினராக இல்லை என்றால் ஓர் எழுத்தராகவோ, ஆசிரியராகவோ, பல்கலைக் கழகப் பேராசிரியராகவோ ஆக முடியாது. இந்தவிதமான நிர்ப்பந்தம் எல்லாத் துறைகளுக்கும் பரவி வழக்குரைஞர்களாகவோ, பத்திரிகையாளர்களாகவோ இருக்க வேண்டுமென்றால் கட்சி உறுப்பினர்களாக இருப்பது அவசியத் தேவையாகிவிட்டது. கடந்த காலத்தில் மிகப் பெருமளவுக்கு சுதந்திரம் அனுபவித்து வந்த மருத்துவர்களும் இன்று இத்தகைய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். பாசிஸ்டுக் கட்சியில் சேராமல் நீங்கள் இன்று பொது நலவாழ்வு மருத்துவராக இருக்க முடியாது.
இவ்வாறுதான், வாழ்வதற்காக வேலை செய்ய வேண்டியிருப்பவர்களும் வேலை செய்து வாழ வேண்டியிருப்பவர்களுமான ஏராளமான குட்டி பூர்ஷுவா வர்க்கத்தினரும் மத்திய பூர்ஷுவா வர்க்கத்தினரும் கட்சியில் சேர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
மற்றொரு நிர்ப்பந்த வடிவம் ஆலைகளில் தொழிலாளர்கள் மீது பிரயோகிக்கப்படும் பகிரங்க நிர்ப்பந்த நிலையாகும். தொடர்ந்து வேலையில் இருக்க வேண்டுமென்றால் கட்சி உறுப்பினராக இருப்பது அவசியம் என்பது இன்னும் வலியுறுத்தப்படவில்லை என்பது உண்மையே. ஆனால் இந்த நிர்ப்பந்தம் வேறொரு முறையில் பயன்படுத்தப்படுகிறது; உதாரணமாக வேலையில்லாத இரண்டு தொழிலாளர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்; அவர்களில் ஒருவர் கட்சி உறுப்பினர், மற்றவர் கட்சி உறுப்பினரல்லாதவர்; அப்போது இவ்விருவரில் பாசிஸ்டுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆக, இவ்வாறு தொழிலாளர்களிடையே கூட முந்திய பழைய உறவுகளில் ஓரளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். உழைக்கும் சக்தி இன்னும் விற்கப்படுகிறது என்பதும், முதலாளிகளால் வாங்கப்படுகிறது என்பதும் உண்மையே. ஆனால் இன்று இந்தப் பாரம்பரியமான உறவுகளில்கூட அரசியல் அமைப்புகள் ஊடுருவி வருவதை இன்று பார்க்கிறோம்.
இந்த நிர்ப்பந்த நிலையை மனத்திற் கொண்டு, பாசிஸ்டுக் கட்சி உறுப்பினர்களைப் பார்த்தீர்களானால், அவர்கள் அரசியல் ரீதியில் செயலற்று இருப்பதையும், அரசியலில் பங்கு கொள்ளாதிருப்பதையும் மட்டுமன்றி, அவர்கள் நுட்பமான முறையில் பாசிசத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதையும் காண்பீர்கள். இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஒரு பிராந்தியத் தலைவர் தமது அறிக்கை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். கூட்டுறவு முறையில் அமைந்த ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்தின் ஊழியர் ஒருவரை ஒரு நாள் அவர் சந்திக்க நேர்ந்தது. இது ஒரு பெரிய தொழில் துறை நகரில் நடை பெற்றது. அவர் புலம்பிக் கொண்டிருந்தார். என்ன விஷயம்? என்று நம்முடைய தோழர் கேட்டார். பாசிஸ்டுக் கட்சியில் சேருவதற்கு நாற்பது லயர் தரவேண்டியிருப்பது குறித்து தான் மனக்கசப்பு அடைந்திருப்பதாக அவர் பதிலளித்தார். அதில் நீங்கள் ஏன் சேர வேண்டும்? இல்லையென்றால் ஆட்குறைப்பின்போது எனக்குத்தான் முதலில் சீட்டுக் கிழியும் என்று அவரிடமிருந்து பதில் வந்தது. அப்படியானால் உண்மையில் நீங்கள் ஒரு பாசிஸ்டு இல்லையா? பாசிஸ்டா? பாசிஸ்டுகள் நரகத்துக்குப் போகட்டும்!
இந்த நபரை எடுத்துக் கொள்ளுங்கள். இவர் எவ்வாறு ஒரு செயலூக்க மிக்க உறுப்பினராக இருக்க முடியும்? பாசிஸ்டுக் கட்சியுடன் இவருக்குள்ள உறவுகள் முற்றிலும் பொருளாதாரப்பந்தங்களால் பிணைக்கப்பட்டவை, அவர் தமது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியிருப்பதால்தான் பாசிஸ்டாக இருக்கிறார். அரசியல் பிணைப்புகள் மிக நுட்பமானவை.
இதனை நீங்கள் பொதுமைப்படுத்திப் பார்த்தால், எல்லா இடங்களிலும் இதே போன்ற காட்சியைத்தான் காண்பீர்கள். ஒட்டுமொத்தக் காட்சியைப் பார்ப்பீர்களேயானால் வெகுஜனங்களை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர வேண்டுமானால் பாசிசம் எவ்வாறு இதர பல அமைப்புகளையும் நிறுவ வேண்டியுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இது ஏன்? ஏனென்றால் இத்தகைய அமைப்புகளை உருவாக்கவில்லை என்றால், இந்தப் பகுதியினர் தூர விலகிச் செல்வர் அல்லது பாசிஸ்டுக்கட்சியைத் தீவிரப்படுத்துவர். கட்சியை இவ்விதம் தீவிரப்படுத்துவது அதன் இயல்பு காரணமாக பாசிசத்துக்கே அபாயத்தை உண்டு பண்ணக்கூடும்.
(தொடரும்)
பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் தமிழில் : ரா. ரங்கசாமி பக்கங்கள் : 233 விலை : ரூ. 50.00 வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கேள்வி:இந்தோனேசியாவுல 1965-66-ல ஐந்து லட்சம் கம்யூனிஸ்டுகளை டேபிள் காலுக்கடியில் போட்டு மேல உக்காந்து நசுக்கி கொன்றது இசுலாமிய வெறியர்களே! ஆனாலும் பாருங்க மக்களே கம்யூனிஸ்டுங்க இசுலாமியர்களைத்தான் தூக்கி பிடிப்பாங்க! ஆகா!என்னே அவர்களின் மன்னிக்கும் குணம்!
சுரேஷ்
அன்புள்ள சுரேஷ்,
இந்தோனேசியாவில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டது குறித்து உங்களுக்கு வருத்தமில்லை. கொன்றவர்களும், கொல்லப்பட்டவர்களும் உங்களுடைய கொள்கைக்கு எதிர்ப்பானவர்கள் என்பதால் இப்படிக் கேட்பீர்கள் போலும்! வரலாறோ இந்தப் படுகொலையில் முசுலீம் மதவெறியர்கள் மட்டும் இருப்பதாகக் கூறவில்லை. உங்களைப் போன்றவர்களுக்கு மெக்காவாக இருக்கும் அமெரிக்க சொர்க்கம்தான், இந்தப்படுகொலையின் பின்னே ஒளிந்திருக்கிறது. இங்கு மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்டுகளை கொலை செய்ததில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானது. அவற்றில் முசுலீம் நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகளும் அடக்கம். முசுலீம் நாடுகளில் ஜனநாயகம் மற்றும் கம்யூனிசத்தை ஒழிப்பதற்கு முசுலீம் மதவாதிகளுடன் கூட்டு சேர்ந்து அல்லது அவர்களை உருவாக்கி வேலை செய்தது அமெரிக்கா. இன்றளவும் சவுதி உள்ளிட்ட நாடுகளில் மதவெறியர்களாக இருக்கும் அரச பரம்பரையை காத்து நிற்பது அமெரிக்காதான்.
இது குறித்து வினவு தளத்தில் வெளிவந்த சில கட்டுரைகளை படியுங்கள்:
அடுத்து இந்தோனேசியாவில் நடந்த கம்யூனிஸ்டுகள் மீதான படுகொலை குறித்து தோழர் கலையரசன் எழுதிய வரலாற்றுக் கட்டுரையை இங்கே இணைக்கிறோம். அதன் மூலம் அந்த வரலாற்றை உள்ளது உள்ளபடி நீங்கள் மட்டுமல்ல, வாசகர்களும் அறியலாம்.
♦ ♦ ♦
“கம்யூனிஸ்டுகளைகொலைசெய்வதுஒருசுகமானஅனுபவம்! அவர்களை(இனப்) படுகொலைசெய்ததற்காகபெருமைப்படுகிறேன். போர்க்குற்றம்என்றால்என்னவென்றுவென்றவர்களேதீர்மானிக்கின்றனர். கம்யூனிசத்திற்குஎதிரானபோரில்நாங்கள்வென்றுவிட்டோம்.”
– 1965 ம் ஆண்டு, இந்தோனேசிய இனப்படுகொலையில் ஈடுபட்ட ஒரு கொலைகாரனின் சாட்சியம்.
உலகம் முழுவதும் நடக்கும் இனப்படுகொலைகளை பற்றிய தகவல்களை சேகரிக்கவும், மக்களுக்கு நினைவு படுத்தவும் தயங்காத மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும், இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலை பற்றி வாயைத் திறப்பதில்லை. எங்காவது ஒரு நாட்டில், இனப்படுகொலை நடந்த பிறகாவது, ஐ.நா. மன்றத்தை கூட்டி விசாரணை நாடகமாடும் சர்வதேச சமூகம், இந்தோனேசிய இனப்படுகொலை நடந்து ஐம்பது வருடங்கள் கடந்த பின்னரும், ஒரு கண்டனத் தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை. ஏனிந்த இருட்டடிப்பு? ஏனிந்த பாரபட்சம்? ஏனிந்த புறக்கணிப்பு? காரணம்: இந்தோனேசிய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்கள், கம்யூனிஸ்டுகள். எந்த நாட்டிலாவது, கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டால், சர்வதேச நீதிமன்றமோ அல்லது ஐ.நா. மன்றமோ தலையிட்டு விசாரிக்க மாட்டாது. இந்தோனேசியா மட்டுமல்ல, சிலி, குவாத்தமாலா போன்ற நாடுகளில் நடந்த “கம்யூனிஸ எதிர்ப்பு இனப்படுகொலைகள்”, இன்று வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் பட்டு விட்டன.
இனப்படுகொலை செய்தவர்கள், எவ்வாறு இந்தளவு தைரியமாக, சுதந்திரமாக நடமாட முடிகின்றது? “இனப்படுகொலையில் ஈடுபட்டதற்காக பெருமைப் படுகின்றோம்.” என்று, எவ்வாறு பகிரங்கமாக கூற முடிகின்றது? எல்லாம் அமெரிக்கா கொடுக்கும் தைரியம் தான். ஒருநாட்டில்,கம்யூனிஸ்டுகள்அதிகாரத்தைகைப்பற்றவிடாமல்தடுக்கவேண்டுமானால், எத்தனைஇலட்சம்போரையும்இனப்படுகொலைசெய்யலாம்.அதுதவறென்றுசர்வதேசசமூகம்கூறாது. அது பாவம் என்று மத நம்பிக்கையாளர்கள் கூற மாட்டார்கள். எந்த ஊடகமும் அதைப் பற்றி ஆராய மாட்டாது. எந்தக் கல்லூரியும் அதைப் பற்றி மாணவர்களுக்கு போதிக்க மாட்டாது.
இந்தோனேசியாவில் இனப்படுகொலை செய்த ஒரு கொலைகாரன் சொன்னதைப் போல, “போர்க்குற்றம்என்றால்என்னவென்று, வென்றவர்களேதீர்மானிக்கிறார்கள்.” கடந்த மூவாயிரம் வருட உலக வரலாறு முழுவதும், அவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய உலகம் மாறி விட்டதாகவும், நியாயத் தீர்ப்பு வழங்குவதற்கென இயங்கும், ஐ.நா. போன்ற சர்வதேச ஸ்தாபனங்கள் கடமையைச் செய்து வருவதாகவும், எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும், அதற்கு டச்சுக்காரர்கள் உரிமை கோரியதால், அங்கே ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. இடையில் சில வருடங்கள், ஆக்கிரமித்த ஜப்பானியர்களுடன், இந்தோனேசிய தேசியவாதிகள் ஒத்துழைத்தனர். இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் மட்டுமே, டச்சுக்காரரையும், ஜப்பானியரையும் எதிர்த்து போராடினார்கள். இறுதியில், தேசியவாதிகளிடம் சுதந்திரத்தை கையளிக்குமாறு அமெரிக்கா வற்புறுத்தியதால், டச்சு காலனிய படைகள் வெளியேறின.
இராணுவ அதிகாரிகளுடன் சுகார்னோ.
அன்று இந்தோனேசியாவை ஆண்ட சுகார்னோவும், அவரது ஆதரவாளர்களும் கம்யூனிஸ்டுகளோ, சோஷலிஸ்டுகளோ அல்லர். அவர்கள் தேசியவாதிகள். உண்மையில் இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகியது. உண்மையான, நேர்மையான தேசியவாதிகள், சிலநேரம் மேற்குலக நலன்களுக்கு எதிரானவர்களாக மாறலாம். சுகார்னோ, காலனிய முதலாளிகளின் நிறுவனங்களை தேசியமயமாக்கினார். அமெரிக்காவையோ, ரஷ்யாவையோ ஆதரிக்காத, அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை ஸ்தாபித்ததில் சுகார்னாவுக்கு பெரும் பங்குண்டு. மேலும், சீனாவுடனும் நெருங்கிய தொடர்பை பேணி வந்தார். “இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனாதிபதி சுகார்னோவை பொம்மை போல ஆட்டி வைத்ததாக,” சில சரித்திர ஆசிரியர்களும் எழுதியுள்ளனர். ஆனால், அது எந்தளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குறி. இனப்படுகொலைக்கு நியாயம் கற்பிப்பதற்காக, அவ்வாறு வரலாற்றை திரித்திருக்கலாம்.
1913 ம் ஆண்டு, ஹென்க் ஸ்னேவ்லீட் (Henk Sneevliet) என்ற டச்சு கம்யூனிஸ்ட், “இந்தோனேசிய சமூக ஜனநாயக கூட்டமைப்பு” என்ற, கம்யூனிஸ்டுகளுக்கு முன்னோடியான சோஷலிசக் கட்சியை உருவாக்கினார். இவர் நெதர்லாந்து நாட்டின் தேசிய நாயகன். அதற்கான காரணம் வேறு. கம்யூனிசத்தின் பெயரால், இந்தோனேசிய மக்களையும் ஒன்று திரட்டி வந்ததை விரும்பாத டச்சு காலனிய அரசு, அவரை வெளியேற்றியது. ஹென்க் தாயகம் திரும்பி வந்த காலத்தில், நெதர்லாந்து ஜெர்மன் நாஜிப் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. நாஜிகளின் யூத மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியதால், ஜெர்மன் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி.
1924 ம் ஆண்டு, “இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி” (Partai Komunis Indonesia) உருவாகியது. (சுருக்கமாக PKI). 1926 ம் ஆண்டு, டச்சு காலனிய அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சி ஒன்று இடம்பெற்றது. அது தோல்வியடைந்ததும், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டது. 13000 கம்யூனிஸ்டுகள் கைது செய்யப் பட்டனர். டச்சு காலனிய அரசு, ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளை நியூ கினியா தீவுக்கு நாடு கடத்தியது. (இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு அந்தமான் தீவுகள் போன்று, இந்தோனேசியாவை ஆண்ட டச்சுக் காரருக்கு நியூ கினியா). இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் உருவான, சுகார்னோவின் தேசிய அரசுக்கு எதிராகவும், கம்யூனிஸ்டுகள் மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள்.
அந்தக் காலத்தில், இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த மூசோ, ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்தவர். இரண்டாம் உலகப்போரில், ஜப்பானிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக போரிட்ட கம்யூனிச கெரில்லாப் படைகளுக்கு சோவியத் யூனியன் உதவி வந்தது. ஆனால், இந்தோனேசியா குடியரசானதும், தேசியவாதிகளுடன் இணைந்து ஒரு தேசிய அரசமைக்குமாறு சோவியத் யூனியன் அறிவுறுத்தியது. ஆனால், மூசொவின் தலைமை அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. 1948 ம் ஆண்டு, டச்சு காலனியாதிக்க படைகளின் வெளியேற்றத்தை பயன்படுத்திக் கொண்ட கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள், கிழக்கு ஜாவா பகுதியில் ஒரு விவசாயிகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கினார்கள்.
கிழக்கு ஜாவா விவசாயிகளின் புரட்சி வெற்றி பெற்றதால், அங்கு ஒரு “இந்தோனேசிய சோவியத் குடியரசு” உருவானது. அன்றைய சுகார்னோ அரசு பிரச்சாரம் செய்ததற்கு மாறாக, சோவியத் ஒன்றியம் அந்த கம்யூனிஸ்ட் எழுச்சியை அங்கீகரிக்கவில்லை. ஜாவா விவசாயிகளின் புரட்சிக்கு, வெளியுலக ஆதரவு கிடைக்காத நிலையில், சுகார்னோவின் படைகளால் கடுமையாக அடக்கப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மூசொவும், அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டார். ஆகவே, “சுகார்னோ கம்யூனிஸ்ட் கட்சியின் பொம்மை போல ஆட்சி நடத்தியதாக” கூறுவது, பின்னாளில் நடந்த இனப்படுகொலைக்கு ஒரு காரணத்தை கண்டு பிடிப்பதற்காக என்பது இங்கே தெளிவாகும்.
1955 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி பதினாறு சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டில் நான்காவது பெரிய கட்சியாக உருவானது, சிலர் கண்களை உறுத்தி இருக்கலாம். 1965 ம் ஆண்டு, கட்சி அழிக்கப்பட்ட காலம் வரையில், மூன்று மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அன்றிருந்த சோஷலிச நாடுகளுக்கு வெளியே இருந்த எந்த நாட்டிலும், இவ்வளவு பெருந்தொகையிலான உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இருந்ததில்லை. மேலும், கட்சியோடு சேர்ந்தியங்கிய விவசாயிகள் முன்னணியில் எட்டு மில்லியன் உறுப்பினர்கள் இருந்தனர். இந்த விபரங்கள் யாவும், சிலருக்கு எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்திருக்கலாம். அன்று அடுத்தடுத்து பல ஆசிய நாடுகளில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்ததால், இந்தோனேசியாவிலும் ஒரு கம்யூனிசப் புரட்சி உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று பலர் நம்பினார்கள்.
இந்தோனேசியாவில் மிக முக்கியமாக, நான்கு அரசியல் சக்திகள், கம்யூனிஸ்ட் கட்சியை கருவறுக்க கங்கணம் கட்டின. அவையாவன:
இராணுவத்திற்குள் ஒரு பிரிவினர். வலதுசாரி முதலாளித்துவ நலன் சார்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு, சுகார்ட்டோ தலைமை தாங்கினார்.
நிலவுடமையாளர்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக, நிலமற்ற விவசாயிகள்பெருமளவு நிலங்களை ஆக்கிரமித்து வந்தனர். அதனால் நாடு முழுவதும் இருந்த நிலவுடமையாளர்கள், தமது எதிர்காலம் சூனியமாகி விடும் என்று அஞ்சினார்கள்.
கடும்போக்கு இஸ்லாமிய மதவாதிகள். இந்தோனேசியா, உலகிலேயே அதிகளவு முஸ்லிம் சனத்தொகையை கொண்ட நாடு. இஸ்லாமிய மதவாதிகள், “நாஸ்திக கம்யூனிஸ்டுகளை” வெறுத்தார்கள்.பிற்காலத்தில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களாக கருதப்பட்ட மத அடிப்படைவாத அமைப்புகள், அன்றைய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இனப்படுகொலையின் ஊடாக வளர்ந்தவை.
அமெரிக்கா. அமெரிக்க தூதரகமும், சி.ஐ.ஏ. யும் மிகத் தீவிரமாக இந்தோனேசிய அரசியல் விவகாரங்களில் தலையிட்டு வந்தன. அவர்கள் மேலே குறிப்பிட்ட மூன்று பிரிவினருடனும், மிகவும்நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தனர். சுகார்ட்டோ என்ற கொடுங்கோல்சர்வாதிகாரியையும், இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதிகளையும், அமெரிக்கர்களே உருவாக்கினார்கள்.
30 செப்டம்பர் 1965, ஜகார்த்தா நகரில் இராணுவ தளபதிகளின் வீடுகளின் முன்னால் ஒரு டிரக் வண்டி வந்து நின்றது. மிகவும் முக்கியமான ஏழு படைத்தளபதிகளை பிடித்துச் செல்வதே, டிரக் வண்டிகளில் வந்தவர்களின் நோக்கம். கைது செய்ய வந்தவர்களுடன் எதிர்த்துப் போராடியதால், மூன்று பேர் ஸ்தலத்திலே கொல்லப்பட்டனர். மூன்று பேர் அழைத்துச் செல்லப் பட்டு, அடுத்த நாள் கொல்லப் பட்டனர். ஒருவர் பிடிபடாமல் தப்பி ஓடி விட்டார். அடுத்தநாள், 1 ஒக்டோபர் 1965, ஆறு இராணுவ தளபதிகள் கொலை செய்யப் பட்ட செய்தி நாடு முழுவதும் பரவியது. “30 செப்டம்பர் குழு” என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள், ஒரு சதிப்புரட்சி நடந்துள்ளதாக வானொலியில் அறிவித்தனர். ஆனால், யார் இந்த சதிப்புரட்சியாளர்கள்? உலகில் இன்று வரை துலக்கப் படாத மர்மங்களில் அதுவும் ஒன்று. அந்த சதிப்புரட்சி, CIA தயாரிப்பில் உருவான நாடகம் என்று சிலர் சந்தேகப் படுகின்றனர். அது உண்மையா? இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலையில், அமெரிக்காவுக்கும் பங்கு உண்டா?
இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானால் ஆக்கிரமிக்கப் பட்டது. ஆனால், சுகார்னோ தலைமையிலான இந்தோனேசிய தேசியவாதிகள், ஜப்பானுடன் ஒத்துழைத்தார்கள். ஜப்பானிய ஏகாதிபத்திய படைகளின் பாதுகாப்பு நிழலின் கீழே ஒரு தனி நாட்டை அமைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்தில், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தேசியவாதியான நேதாஜியும், அதே மாதிரியான திட்டத்தை மனதில் வைத்திருந்தார். அதாவது, இந்தியாவை ஜப்பானிய படைகள் கைப்பற்றிய பின்னர், அங்கே நேதாஜி தலைமையில் “இந்தியர்களின் நாடு” உருவாகி இருக்கும்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், பழைய ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், ஆசியாவில் தாம் இழந்த காலனிகளுக்கு உரிமை கோரினார்கள். நெதர்லாந்து, இந்தோனேசியாவை மீண்டும் தனது அதிகாரத்தின் கீழே கொண்டு வர விரும்பியது. ஆனால், போருக்கு பின்னர் புதிய உலக வல்லரசாகி இருந்த அமெரிக்கா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்தது. அமெரிக்க அழுத்தம் காரணமாகத் தான், பிரிட்டனும் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது. ஆசியக் கண்டத்தின், இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும், இந்தோனேசியாவும், சில ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இந்தியாவில் நேரு எந்த வகையான கொள்கைகளை கொண்டிருந்தாரோ, அதே மாதிரியான கொள்கைகளை, இந்தோனேசியாவில் சுகார்னோ கொண்டிருந்தார்.
நேருவும், சுகார்னோவும் சேர்ந்து, காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க விரும்பினார்கள். அதற்காக, இந்தோனேசியாவில் பாண்டுங் என்ற இடத்தில் ஒரு மகாநாடு நடந்தது. இலங்கையில் இருந்து பண்டாரநாயக்கவும் கலந்து கொண்டார். உண்மையில், அமெரிக்கா இந்தக் கூட்டமைப்பை விரும்பவில்லை என்று தெரிகின்றது. அதனால் தான், CIA பண்டாரநாயக்கவை கொலை செய்தது என்றும் ஒரு கதை உலாவுகின்றது. நேருவை விமான விபத்தொன்றில் கொல்வதற்கு CIA சதி செய்ததாகவும் ஒரு தகவல். (De CIA Moorden in de Derde Wereld, Kunhanandan Nair & Michael Opperskalski ) இதன் தொடர்ச்சியாக, சுகார்னோவை அகற்றிய 1965 சதிப்புரட்சி அமைந்தது. அந்த சதிப்புரட்சியில், CIA யின் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதை, பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
பாண்டுங் மகாநாட்டுக்கு போட்டியாக, இன்னொரு கூட்டமைப்பு உருவானது. யூகோஸ்லேவியாவில் டிட்டோ, எகிப்தில் நாசர் ஆகியோரின் முயற்சியில் “அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாடு” நடந்தது. சுகார்னோ தனது பாண்டுங் மகாநாட்டு திட்டங்களை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியாமல் இருந்தது மட்டுமல்ல, அவரும் அணிசேரா மகாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. இந்தப் போட்டியின் காரணமாக, இறுதி வரைக்கும் சுகார்னோவுக்கு உறுதுணையாக இருந்தது சீனா மட்டுமே. அதனால், இந்தோனேசியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்தது.
ஸ்டாலினின் மரணத்தின் பின்னர், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு தோன்றியது. சில கட்சிகள் குருஷேவின் சோவியத் யூனியனையும், சில கட்சிகள் மாவோவின் சீனாவையும் ஆதரித்தன. இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி (PKI) சீன சார்பு நிலைப்பாடு எடுத்து. இதனால், சுகார்னோ, சீனா, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (PKI) இடையில் ஒரு முக்கோண உறவு உருவானது. இந்தோனேசிய அரசில், PKI யின் செல்வாக்கு அதிகரித்தது. அது “கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு புரட்சியை வெல்லலாம்…” என்ற மாயையை தோற்றுவித்திருக்கலாம். அன்றிருந்த PKI தலைவர் அய்டீத், அது போன்ற ஒரு திரிபுவாத பாதையை தேர்ந்தெடுத்ததாக, புலம்பெயர்ந்து வாழும் PKI உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அது உண்மையாயின், “கத்தியின்றி, இரத்தமின்றி” புரட்சி நடத்தும் கோட்பாடு, இறுதியில் கட்சியின் அழிவுக்கே வழிவகுத்தது.
இதற்கிடையே, இந்தோனேசியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு சர்வதேச அரசியல் நிலைமை பற்றியும் குறிப்பிட வேண்டும். இந்தோனேசிய மொழி பேசும் மக்களும், மலே மொழி பேசும் மக்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். இரண்டு மொழிகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழும், மலையாளமும் மாதிரி என்ற அளவுக்கு கூட வித்தியாசம் கிடையாது. ஈழத் தமிழும், இந்தியத் தமிழும் மாதிரி நெருக்கமானவை. ஆனால், இரண்டு வேறு மொழிகளாக வளர்க்கப் பட்டன. இந்தோனேசியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான மிகப்பெரிய பிரிவினை, காலனியாதிக்க காலத்தில் ஏற்பட்டது. அதாவது ஆங்கிலேயர்கள் காலனிப் படுத்திய பகுதி தான், இன்றைய மலேசியா. இந்தோனேசியா நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரமடைந்த பின்னரும், மலேசியா பிரிட்டிஷ் காலனியாக தொடர்ந்தது.
1963 ம் ஆண்டு, மலேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் நேரம், அந்த நாடு இந்தோனேசியாவுக்கு சொந்தமானது என்று சுகார்னோ உரிமை கோரினார். இந்தோனேசியப் படைகள், மலேசியப் பகுதிகளினுள் ஊடுருவி மட்டுப்படுத்தப் பட்ட இராணுவ நடவடிக்கையிலும் இறங்கியது. இறுதியில், மலேசியா கையை விட்டுப் போனதால் ஏற்பட்ட விரக்தி, இந்தோனேசிய அரசின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கியது. இராணுவத்திற்குள் தேசிய உணர்வு மேலோங்கியது. PKI அதை சாட்டாக வைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வலைகளை தூண்டி விட்டது. உண்மையில், மலேசிய பிரச்சினையின் எதிர்வினையாக, அரசுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சி பலம்பெற்று வந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி (Pemuda Rakjat) யும், மகளிர் அணி (Gerwani) யும் தீவிரமாக இயங்கத் தொடங்கின. கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பு, கல்லூரிகளில் இயங்கிக் கொண்டிருந்த இஸ்லாமிய மாணவர் அமைப்பை தடை செய்ய வேண்டுமென கோரியது. பொதுவாக, நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் இளைஞர்களின் பிரசன்னம் அதிகரித்துக் காணப்பட்டது. இது பலருக்கு எரிச்சலைக் கொடுத்தது. ஒரு பக்கம், நிலப்பிரபுக்கள் கம்யூனிஸ்டுகளை வெறுத்தார்கள். ஏனென்றால், நிலமற்ற விவசாயிகள், தமக்கு வேண்டிய நிலங்களை ஆக்கிரமிக்குமாறு, கம்யூனிஸ்ட் கட்சி ஊக்குவித்தது. மறுபக்கத்தில், இஸ்லாமிய மதகுருக்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள்.
இஸ்லாமியமதகுருக்கள், வெளிப்படையாகவேநிலப்பிரபுக்களின்பக்கம்சேர்ந்துகொண்டார்கள். “கடவுள்மறுப்பாளர்களானகம்யூனிஸ்டுகளைஅழிப்பதற்கு, அமெரிக்காவுடன்மட்டுமல்ல, எந்தப்பிசாசுடனும்கூட்டுச்சேரலாம்.” இஸ்லாமியமதவாதிகளின்நாஸ்திகஎதிர்ப்புபிரச்சாரம், கடவுள்நம்பிக்கையுள்ளஏழைவிவசாயிகளைமனம்திரும்பவைத்தது. இது பின்னர் நடந்த இனப்படுகொலையில் திருப்புமுனையாக அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த, ஏழை விவசாயிகளான கீழ் மட்ட உறுப்பினர்கள் கூட, கம்யூனிச அழிப்பு படுகொலைகளில் பங்கெடுத்தனர். அதற்கு காரணம், குறிப்பிட்ட அளவு நிலத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற உத்தரவாதத்தை, இஸ்லாமிய மதகுருக்கள் நிலப்பிரபுக்களிடம் இருந்து பெற்றுக் கொடுத்தனர்.
30 செப்டம்பர் 1965, அன்றைய தினம் இந்தோனேசியாவின் தலைவிதியை தீர்மானித்தது. அன்றிரவு ஏழு இராணுவ உயர் அதிகாரிகள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு கீழே வேலை செய்த, கீழ் நிலை அதிகாரிகள், அவர்களுக்கு விசுவாசமான இராணுவத்தினர், திடீர் சதிப்புரட்சியை நடத்தி இருந்தனர். சதிப்புரட்சியை அடக்கி, சர்வாதிகார ஆட்சியை கொண்டு வந்த சுகார்ட்டோவும், சில மேற்கத்திய ஊடகங்களும் அறிவித்தது போன்று, அது ஒரு கம்யூனிச சதிப்புரட்சி அல்ல. இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல், ஆடம்பரமான வாழ்க்கை, அதிகார துஷ்பிரயோகம், இவற்றினால் வெறுப்புற்ற படையினரில் ஒரு பிரிவினரின் வேலை அது.
வான்படையில் சில முற்போக்கான அதிகாரிகள், அந்த சதிப்புரட்சிக்கு ஆதரவளித்தனர். அவர்களுக்கு, இரகசியமாக சீன ஆயுதங்கள் வந்திறங்கி இருந்தன. PKI தலைவர் அய்டீத் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கம்யூனிச இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு, வான்படைத் தளத்தில் இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டது. இருப்பினும், வான்படை கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக, தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. வான்படை தளபதிகள், எந்தளவு முற்போக்காக இருந்த போதிலும், ஒரு கம்யூனிசப் புரட்சிக்கு ஆதரவளிக்கவில்லை. காலம் தனக்கு சார்பாக கனிந்து வருவதாக, PKI தப்புக் கணக்குப் போட்டது. (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)
சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு, PKI அரசியல் ஆதரவு மட்டுமே வழங்கியது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் செக்கோஸ்லேவியாவில் நடந்தது போன்று, ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப் பட்டால், அது சில வருடங்களின் பின்னர், உழவர், தொழிலாளரின் புரட்சிக்கு வழிவகுக்கும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கனவு கண்டது. ஆனால், அது வெறும் கனவாகவே இருந்து விட்டது. சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களின் நிர்வாக சீர்கேடுகள், திட்டமிடல் குறைபாடுகள், பிற படைப்பிரிவுகளுடன் தொடர்பின்மை, இவை போன்ற காரணங்களினால், சதிப்புரட்சி அதிக பட்சம் 24 மணிநேரம் கூட நீடிக்கவில்லை. அந்நாட்களில் அதிகம் கவனிக்கப்படாத இராணுவ அதிகாரியான சுகார்ட்டோ, தனக்கு விசுவாசமான படையினருடன் தலைநகரை முற்றுகையிட்டார். வெளியுதவி எதுவும் கிடைக்காததால், சதிப்புரட்சியில் ஈடுபட்ட படையினர், எதிர்ப்பு காட்டாமல் சரணடைந்தனர்.
உண்மையில், அதற்குப் பிறகு தான் படுகொலைகள் தொடங்கின. விமானப்படை முகாமுக்கு அருகில் கொன்று புதைக்கப்பட்ட ஆறு இராணுவ அதிகாரிகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன. சில உடல்கள் சிதைவடைந்து காணப்பட்டதால், அதை வைத்து வதந்திகள் பரப்பப் பட்டன. கம்யூனிசக் கட்சி இளைஞர் அணியை சேர்ந்த பெண்கள், அந்த அதிகாரிகளை சித்திரவதை செய்ததாகவும், கண்களை தோண்டியெடுத்து, பிறப்புறுப்புகளை அறுத்ததாகவும் கதைகள் புனையப்பட்டன. அந்தக் கதையில் எந்தவித உண்மையும் இல்லாத போதிலும், பெருமளவு அப்பாவி மக்கள் அதனை நம்பினார்கள். இப்போதும் நம்புகின்றார்கள். ஏனென்றால், இராணுவ அதிகாரிகளின் கொலைகளை பிரச்சாரம் செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்று, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் காண்பிக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது.
சதிப்புரட்சிக்கு முன்னர், கல்லூரிகளில் மத அடிப்படைவாதம் பேசிய, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தடை செய்ய வேண்டுமென, கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்து வந்தது. கல்லூரிகளுக்குள் இரண்டு பிரிவினரும் எதிரிகள் போல நடந்து கொண்டாலும், அப்போது எந்த கைகலப்பும் நடைபெறவில்லை. சுஹார்ட்டோவின் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கை ஓங்கியது. கம்யூனிச எதிரிகளுடன் கணக்குத் தீர்த்துக் கொள்ளுமாறு, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தூண்டி விட்டது. இந்தோனேசியாவின் இனப்படுகொலை கல்லூரி மாணவர் விடுதிகளில் ஆரம்பமாகியது.
ஜகார்த்தாவில் ஒரு சீன பல்கலைக்கழக மாணவரை தாக்கும் இந்தோனேசிய இளைஞர்கள்.
ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், படையினரும் கூட்டுச் சேர்ந்து இனப்படுகொலை செய்யக் கிளம்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அவ்வாறு சந்தேகிக்கப் பட்டவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும், ஆயுதமேந்திய காடையரினால் படுகொலை செய்யப் பட்டனர். சில சமயம், அயல் வீட்டுக்காரனுடன் காணித் தகராறு காரணமாக பகை இருந்தாலும், கம்யூனிஸ்ட் என்று பிடித்துக் கொடுத்தார்கள். இவ்வாறு கம்யூனிஸ்ட் அழிப்பு என்ற பெயரில், பலர் தமக்குப் பிடிக்காதவர்களையும் கொலை செய்தனர். மொத்தம் எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற விபரம் யாருக்கும் தெரியாது. குறைந்தது பத்து இலட்சம் அல்லது இருபது இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம் என கணக்கிடப் பட்டுள்ளது.
உண்மையில், இந்தோனேசியாவில் ஒரு இனப்படுகொலை நடத்தப்பட வேண்டுமென, சிலர் முன்கூட்டியே இரகசியமாக திட்டம் தீட்டி இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில், அடுத்தடுத்து நடந்த பல சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, அந்த சந்தேகம் ஏற்படுவது இயல்பு. இனப்படுகொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, 30 செப்டம்பர் நடந்த சதிப்புரட்சி ஒரு சாட்டாக பயன்படுத்தப் பட்டுள்ளது. ஏனெனில், சதிப்புரட்சிக்கு காரணம், பாதுகாப்புப் படைகளின் உள்ளே நிகழ்ந்த அதிகார மோதல் என்பதை நிரூபிக்க பல சான்றுகள் இருந்தன. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்பு படுத்துவதற்கான ஆதாரங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. இருந்த போதிலும், “கம்யூனிஸ்ட் அழித்தொழிப்பு” என்ற அளவுக்கு செல்ல வேண்டிய காரணம் என்ன?
ஏற்கனவே, CIA க்கும், சுஹார்ட்டோவுக்கும் இடையில் ரகசிய தொடர்பிருந்திருக்கலாம். கம்யூனிஸ்ட்கட்சியின்முக்கியஉறுப்பினர்கள் 5000 பேரின்பெயர்கள்அடங்கியபட்டியலினை, அமெரிக்கதூதரகம்சுஹார்ட்டோவுக்குவிசுவாசமானபடைகளிடம்கொடுத்திருந்தது. இந்ததகவலைஜகார்த்தாவில்பணியாற்றிய CIA அதிகாரியானClyde McAvoyஉறுதிப்படுத்திஉள்ளார். அவரின் வாக்குமூலத்தின் படி, தீர்த்துக் கட்ட வேண்டிய கம்யூனிஸ்டுகளின் பட்டியலையும், வாக்கிடோக்கி கருவிகளையும், CIA வழங்கி இருந்தது. அதற்கு முன்னரே, கம்யூனிச எதிர்ப்பு அரசியல்வாதிகளையும், படையினரையும் விலைக்கு வாங்கும் பொறுப்பு, அன்றைய வெளிவிவகார அமைச்சர், ஆதம் மாலிக்கிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. (ஆதாரம்: Legacy of Ashes: The History of the CIA, by Tim Weiner) ஆகவே, இந்தோனேசியஇனப்படுகொலையில், அமெரிக்கஅரசும்சம்பந்தப்பட்டிருந்தமை, இத்தால்உறுதிப்படுத்தப்படுகின்றது.
“கொள்கை வேறுபாடு காரணமாக, பெருந்தொகையான மக்களை படுகொலை செய்தால், அதனை இனப்படுகொலை என்று அழைக்கலாமா?” என்று சிலர் கேள்வி கேட்கலாம். இன்னொரு இனத்தை, அல்லது மதத்தை சேர்ந்தவர்களை கொன்று குவிப்பது மட்டுமே இனப்படுகொலை ஆகும், என்று சிலர் கறாராக வரையறுக்கலாம். அதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இந்தோனேசியாவில், எல்லா இடங்களிலும் பரவலாக வாழும், சீன சிறுபான்மை இனத்தவர்கள் நிறையப்பேர், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். வேற்று மொழி பேசும் சீனர்கள், கம்யூனிஸ்டுகளாகவும் இருந்ததால், ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். கல்லூரிகளில் நடந்த படுகொலைகளில், சீன மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகளை குறிவைத்து தாக்கினார்கள். (அந்தக் காலத்திலும், பிற்காலத்தில் சுஹார்ட்டோவின் இறுதிக் காலத்தில், தொன்னூறுகளில் நடந்த சீன விரோத இனக்கலவரங்களிலும், சீன பெரு முதலாளிகள் பாதுகாக்கப் பட்டனர்.)
அதே போல, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பாலித் தீவிலும், பெருமளவு மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அந்த தீவின் சனத்தொகையில் பத்தில் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கிழக்கு இந்தோனேசிய தீவுகளான, புலோரெஸ், அம்பொன் ஆகிய இடங்களில் பெருமளவு கிறிஸ்தவர்கள், வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அங்கேயும் படுகொலைகள் நடந்துள்ளன. கிறிஸ்தவ பாதிரியார்களும், இனப்படுகொலையாளிகளுடன் ஒத்துழைத்தனர். கொலைப் பட்டியலில் தமது பெயர்களும் இருப்பதாக நினைத்தவர்கள், தேவாலய உறுப்பினர் அத்தாட்சிப் பத்திரம் கேட்ட பொழுது, அதைக் கொடுக்க பாதிரிகள் மறுத்துள்ளனர். சில சமயம், பாவமன்னிப்பு கேட்க வரும் நபர், தான் ஒரு PKI உறுப்பினர்/ஆதரவாளர் என்ற உண்மையை ஒப்புக் கொண்டு விட்டால், அவரை பாதிரியாரே கொலைகாரர்களிடம் பிடித்துக் கொடுத்தார். (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)
இன்று வரையில், இனப்படுகொலை என்றால் என்னவென்பதற்கு, சரியான வரைவிலக்கணம் கிடையாது. நாஜிகளின் யூத இன அழிப்பை குறிப்பதற்கு உருவாக்கப்பட்ட சொல், இன்று பல நாடுகளிலும் பயன்படுத்தப் படுகின்றது. இந்தோனேசியாவில், “கம்யூனிஸ்டுகளைகொன்றதுஇனப்படுகொலைஆகாது” என்றுவாதாடுபவர்கள், எதனைஅடிப்படையாககொண்டுகம்போடியாவில்இனப்படுகொலைநடந்ததாககூறுகின்றார்கள்? பொல்பொட்ஆட்சிக்காலத்தில்நடந்த,“கம்போடியஇனப்படுகொலையை“விசாரிப்பதற்குஐ.நா. சிறப்புநீதிமன்றம்ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது. ஏன்இந்தோனேசியாவில்அத்தகையநீதிமன்றம்ஒன்றுசெயற்படவில்லை? ஏன்சர்வதேசசமூகம்அதுகுறித்துபாராமுகமாகஇருக்கிறது?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 டிசம்பர் 30 அன்று ஓய்வூதிய ஒழுங்காற்று – மேம்பாட்டு ஆணையம் ஒன்றை நிறுவுவதற்கென அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தது.
… 2004 ஏப்ரல் முதல் தேதி அன்றும், அதற்குப் பிறகும் மத்திய அரசுப் பணியில் சேர்ந்த சட்டப் பாதுகாப்பு ஏதுமற்று இருக்கும் 40,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் ஓய்வூதியத்தைப் பாதுகாக்கும் பொருட்டே ஒழுங்காற்று ஆணையம் ஒன்றை நிறுவ வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது என்று விரிவானதொரு விளக்கத்தை நிதியமைச்சர் (ப.சிதம்பரம்) அளித்திருந்தார். உண்மையில், நடைமுறையில் இருந்து வந்த ‘வரையறுக்கப்பட்ட’ அல்லது ‘உத்திரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது தன்னிச்சையான வகையில் இந்த ஊழியர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது.
மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி, இந்த ஊழியர்கள் தங்களது பணிக்காலத்தில் செல்லும் தொகைக்கு ஏற்பவும், அவர்கள் செலுத்திய தொகைக்கு பணியிலிருந்து அவர்கள் செய்து பெறுகையில், இருக்கும் மதிப்பிற்கு ஏற்பவும் ஓய்வூதியம் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், எந்தவொரு ஓய்வூதியத் திட்டத்திலும் இடம்பெறும் சமூகப் பாதுகாப்பு என்ற அடிப்படைக் கோட்பாடு இப்புதிய திட்டத்தில் இல்லாதநிலை எழுந்துள்ளது. இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதெனில், 1935-ல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வரையறுக்கப்பட்ட அல்லது உத்திரவாதப்படுத்தப்பட்ட’ செய்வூதியப் பயன்களை தலைகீழாக மாற்றி, அவற்றை சந்தையைச் சார்ந்ததாக மாற்றி அமைத்துள்ள அமெரிக்க அதிபர் புஷ் செல்லும் பாதையை அடியொற்றிச் செல்லவே இந்தியா விழைகிறது எனலாம்.
தனியார்மயமாக்கப்படும் செய்வூதிய நிதி
இது ஓய்வூதிய நிதியை தனியார்மயமாக்கும் முயற்சியே ஆகும். பெருமளவில் உள்ள ஓய்வூதிய நிதியை, ஆழம் காணமுடியாத சூதாட்ட களமாகத் திகழும் பங்குச் சந்தைக்கு திசை திருப்பிவிடும் முரட்டுத்தனமான முயற்சி மட்டுமின்றி, இது நிதிமூலதனம் இடும் கட்டளைக்கு ஏற்ப அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையும் ஆகும். பங்குச் சந்தையில் பொதுவாக நிதி வழங்கி வரும் முறையிலிருந்தே இதில் அடங்கியுள்ள அபாயத்தை எளிதாக உணர முடியும். பங்குச் சார்ந்ததாக செய்வூதியத்தை மாற்றியமைக்க முன்மொழிந்தவர்களின் அசட்டு தைரியத்தைக் கண்டு வியக்கவே வேண்டியுள்ளது. இது ஏகாதிபத்திய புதிய பொருளாதாரக் கொள்கையினை ஏற்றுக் கொண்டதன் விளைவாக அரங்கேற்றப்படும் நாடகத்தின் ஓர் அங்கமே ஆகும். உலக அளவில் நடைபெற்று வரும் இச்சதியினை நாம் இங்கே மீண்டும் கண்டு வருகிறோம்.
தொழிலாளர்களுக்கு இழப்பினை ஏற்படுத்தும் தனியார்மயமாக்கல்
ஓய்வூதிய நிதி எங்கெல்லாம் தனியாரின் சூறையாடலுக்குத் திறந்து விடப்பட்டதோ அங்கெல்லாம் தொழிலாளர்கள் அளவிட முடியாத இழப்பையே அடைந்தார்கள். சில சமயங்களில் தங்களது சேமிப்பு முழுவதையுமே தொழிலாளர்கள் இழந்திருக்கின்றனர். (நூலிலிருந்து பக்.2-3)
சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்காக, தொழிலாளர்களும் முதலாளிகளும் செலுத்தும் தொகையினை பங்குச் சந்தைக்கு திருப்பி விடவேண்டும் என்ற கோரிக்கையை உள்ளடக்கிய சந்தைச் சார்ந்த நவீன, தாராளமய சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட தொடங்கிய பிறகு இவற்றால் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டன. காலங்காலமாக போற்றப்பட்டு வந்த சமூகப்பாதுகாப்பு, செய்வூதியத் திட்டங்களின் மீது தாக்குதல் தொடுத்ததில் கோல்ட்வாட்டா, மில்டர் ப்ரைட்மேன் ஆகியோர் முன்னணியில் நின்றனர். பல தலைமுறைகளாகவே, குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், பிரபலமாக இருந்த சமூக பாதுகாப்புத் திட்டமானது உலக முழுவதிலும் உள்ள நவீன தாராளமயவாதிகளால் தாக்குதலுக்கு ஆளாகி வந்துள்ளது.
இந்தியாவில் அரசு ஊழியர்கள், ராணுவத்தில் பணியாற்றுவோர் ஆகியோருக்குப் பென்ஷன் என்பது வரலாற்று ரீதியான தொடர்பையும் அடித்தளத்தையும் கொண்டதாக இருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். சிங்கால் தலைமையிலான 4-வது ஊதியக் கமிஷனின் அறிக்கையின் இரண்டாவது பிரிவில் அதிகாரபூர்வமாக கூறப்பட்டுள்ளனவற்றை கவனத்தில் கொள்வது பொருத்தமாக அமையும். வயது மூப்பின் காரணமாக, திறமையுடன் பணியாற்ற முடியாத தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் வழக்கம் 19 -ம் நூற்றாண்டியேலே ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது என்றும், பின்னர் அது உலகின் இதர நாடுகளுக்கும் பரவியது என்றும் 1986-ல் வெளியான ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
‘இந்த ஊழியர்களைப் பொறுத்தவரையில் ஓய்வூதியம் என்பது தாராள மனப்பாங்குடனோ அல்லது கருணையின் அடிப்படையிலோ அல்லது சமூகநலக் கண்ணோட்டத்துடனோ அளிக்கப்படும் தொகையல்ல. மாறாக, சட்டரீதியாக அமல்படுத்தப்பட வேண்டியதோர் உரிமையாகும்’ என முன்னாள் ராணுவத்தினர் மத்திய அரசு உழியர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம் குறித்து மேலே கூறிய அறிக்கை தெளிவாகக் கூறுகின்றது. ‘ஒய்வூதியம் என்பது அரசின் தாராள சிந்தனையோடும் விருப்பத்தோடும் தானமாகத் தரப்படுவதல்ல.
மாறாக ஓய்வூதியம் பெறும் உரிமையானது அரசு ஊழியர்களின் நிலையான உரிமையாகும்’ என தேவகிநந்தன் பிரசாத் -பீகார் மாநில அரசு – இதர தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பையே இந்த அறிக்கை ஆதாரமாகக் கொண்டிருந்தது. மேலும் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை குறித்துக் கூறுகையில், ‘அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 31 (1), பிரிவு 19 (1) (F) ஆகியவற்றின் படி, ஓய்வூதியம் என்பது சொத்தாகும். பிரிவு 19-ன் உட்பிரிவு (5)-இன் படி பாதுகாக்கப்படவில்லை ‘ என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சொத்துரிமை என்பது அடிப்படை உரிமையாக தற்போது நடைமுறையில் இல்லாத போதிலும், செய்வூதியம் பெறுவதற்கான உரிமையின் சொல்லத்தக்க தன்மை நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (நூலிலிருந்து பக்.10-11)
தனியானதொரு பென்ஷன் ஒழுங்காற்று ஆணையத்தை அமைத்ததன் மூலம் பென்ஷன் திட்டங்களையே தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது இந்திய மக்களின் சேமிப்பையும் – ஏன் இந்தியப் பொருளாதாரத்தையும் இதன் மூலம் அன்னிய சக்திகளிடம் ஒப்படைக்கும் வேலையிலேயே தற்போது அரசு ஈடுபட்டுள்ளது. சுதந்திர சந்தை ஆதரவாளர்களான அன்னிய கம்பெனி முதலாளிகள் பென்ஷன் திட்டங்களுக்காக இந்திய மக்கள் செலுத்தக்கூடிய சேமிப்புத்தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கே ஆர்வம் காட்டுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை…
… பென்ஷன் திட்டம் என்பது ஒரு நீண்டகால சேமிப்புத் திட்டம். இதனை இந்திய நாட்டின் தனியார் கம்பெனிகளிடமோ அல்லது அன்னிய தனியார் கம்பெனிகளிடமோ ஒப்படைக்கக்கூடாது. பென்ஷன் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்த பல்வேறு நாடுகளின் கசப்பான அனுபவங்களை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களின் சேமிப்பை தங்கள் இலாப வேட்டைக்காக பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. (நூலிலிருந்து பக்.23)
நூல் : அரசாங்கத்தின் பென்ஷன் சூதாட்டம் ஆசிரியர் : என்.எம். சுந்தரம் தமிழில் : கி. இலக்குவன், கிரிஜா, வீ.பா. கணேசன்
வெளியீடு : அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்துடன்
இணைந்து பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. தொலைபேசி எண் : 044 – 2433 2424. மின்னஞ்சல் : info@tamizhbooks.com
முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
வணக்கம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், திருமணமாகாத இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்தார் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் அதிலிருந்து மீண்டு வந்தார்.
“பொதுவாக மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு, அவர்களது முந்தைய பரிசோதனைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா ?” எனப் பார்ப்போம். ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் என ஏதாவது பிரச்சினை உள்ளதா என பரிசீலிப்போம். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா எனவும் பார்த்தால், அதுவும் இல்லை என பரிசோதனையில் தெரிவித்துள்ளார்.
சிறிதுநேரம் கழித்து அவரே என்னை அழைத்து, “சார் எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது” எனத் தெரிவித்தார். “உங்களை இங்கு அட்மிட் செய்யும்போது புகைப் பழக்கம் இல்லை என தெரிவித்து உள்ளீர்களே ஏன்?” என வினவினேன். “அப்போது என் பெற்றோர்கள் உடன் இருந்தார்கள்” எனக் கூறினார். எனவே, சிறிய வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு புகைப்பிடித்தல் ஒரு முக்கியமான காரணியாகும்.
அதேபோல் இரண்டு வாரத்திற்கு முன்பு 35, 36 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வருகிறார். இவருக்கு ஐந்து வருடத்திற்கு முன்பே தீவிர மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் ஸ்டெண்ட் வைத்து, சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வந்துள்ளார். சமீபகாலமாக மருந்து மாத்திரைகளை நிறுத்திவிட்டு புகைப் பழக்கத்தையும் தொடர்ந்துள்ளார். இப்போது மறுபடியும் இரண்டாம் முறையாக மாரடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இப்போது மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர், “நான் புகைப்பிடிப்பதனால்தான் எனக்கு மாரடைப்பு வந்தது என என்னால் நம்ப முடியவில்லை. எனது பல நண்பர்கள் புகைபிடிக்கிறார்கள், எனக்கு வேறு காரணம் உள்ளது. நீங்கள் கூறாமல் இருக்கிறீர்கள்” என வாதிடுகிறார்.
புகைபிடிப்பது என்றால் நமக்கு பிற்காலத்தில் புற்றுநோய் ஏற்படும். எனவே, பிற்காலத்தில் எப்போதாவது புற்றுநோய் ஏற்பட்டுதான் சாகப் போகிறோம். வேறு எந்த பிரச்சினையும் இருக்காது என அலட்சியமாக இருக்கிறார்கள். இது தவறு, புகைப்பிடிப்பதனால் பல்வேறு பிரச்சினைகள் நம் உடலுக்கு ஏற்படும். அதில் மூன்று முக்கியமானவற்றை நாம் பார்க்கலாம்.
முதலாவது புற்றுநோய், மற்றொன்று மாரடைப்பு, மூன்றாவது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள். இந்த நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயை சி.ஓ.பி.டி அல்லது சி.ஓ.எல்.டி எனக் கூறுவர். புற்று நோய் வந்து இறப்பதற்கு முன்பே மாரடைப்பு வந்து இறந்து விடுகிறார்கள். இவற்றில் இருந்து தப்பித்தாலும் நுரையீரல் சம்பந்தப்பட்ட இந்த நோய்க்கு ஆட்படுகிறார்கள். இந்த சி.ஓ.பி.டி. பிரச்சினை நுரையீரலை தாக்கி அடிக்கடி நம்மை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது மட்டுமல்லாமல், வீட்டிலேயே சுவாசிக்க சுவாசக் குழாய் உபயோகப்படுத்துமாறு செய்துவிடும். வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நாம் சிக்கிக் கொள்வோம். இவ்வாறெல்லாம் இருக்கிறது என்று பலபேருக்குத் தெரிவதில்லை.
புகைபிடிப்பதனால் ஏற்படும் மரணம் பற்றி நான் ஐம்பதுக்கு ஐம்பது உறுதி கூறுகிறேன். சாதாரண மக்கள் எப்படி இறக்கிறார்கள்? இயற்கையாக வயது முதிர்ந்து இறக்கிறார்கள். அல்லது ஏதேனும் விபத்தின் மூலம் இறக்கிறார்கள். இல்லையென்றால் இனம்புரியாத நோயினால் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் புகை பிடிப்பவர்கள் புகை பிடிப்பதினால் வரும் தீங்கினால் மட்டுமே 50% இருக்கிறார்கள்.
புகைபிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் என்று பலரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இது மட்டுமல்ல புகை பிடிப்பதினால் 12 விதமான புற்று நோய்கள் ஏற்படுகின்றன. தலையிலிருந்து ஆரம்பித்து வயிற்று பாகத்துக்கும் கீழ்வரை எல்லா பாகங்களிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு புகைபிடிப்பதில் உள்ளது. புற்றுநோயால் இறப்பவர்களில் சரிபாதி, புகைபிடிப்பவர்களாக உள்ளார்கள். அப்படி என்றால் இது தீங்கானதுதானே. இதை நாம் விட்டு விட வேண்டும்தானே!
சில பேர் பள்ளிப்பருவத்திலேயே புகைபிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் அவர்களுக்கு நான் இதைக் குறிப்பாக வலியுறுத்துகிறேன். இந்தப் பழக்கம் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்ற பின்பும் தொடர்கிறது. இவர்களுக்கு நான் இரண்டு அறிவுரைகளை வழங்குகிறேன்.
ஒன்று நீங்கள் புகைப்பிடிப்பதை உடனடியாக நிறுத்தியாக வேண்டும். இல்லை என்றால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். ஏனென்றால் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள், அது தனி மனித சுதந்திரம். உங்களது வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கும் உள்ளது. சல்மான்கான், யோகி ஆதித்யநாத், வாஜ்பாய் போன்ற பலபேர் திருமணமாகாமலேயே பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார்கள் இல்லையா? அவர்களைப் போல் நீங்களும் முயற்சியுங்கள்.
இப்படி இருக்க முடியாது. நான் எல்லாரையும் போல் குடும்பம், குழந்தை என வாழ வேண்டும் என்றால் புகைபிடிப்பதை உடனடியாக நிறுத்தித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் முடிவு எடுக்கலாம். ஆனால், அவர்களுடைய வாழ்க்கையையும் நீங்கள் தீர்மானிக்கக்கூடாது இல்லையா.
அதேபோல் நீங்கள் திருமண வயதில் இருக்கக்கூடிய பெண் என்றால். உங்களுக்கு வரக்கூடிய கணவர் எப்படி இருக்க வேண்டும் எனப் பல நிபந்தனைகள் வைத்திருப்பீர்கள் அல்லவா? அதில் நீங்கள் முக்கியமாக சேர்த்துக்கொள்ள வேண்டியது உங்களது வருங்காலக் கணவர் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும் என்பதுதான். உங்களது வருங்கால கணவர் அல்லது காதலரை புகைப்பிடிக்கிறார் எனத் தெரிந்தும் நீங்கள் திருமணம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு மவுண்ட்ரோட்டில் நடப்பதற்கு சமம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் ரோட்டை கடந்து மறுபுறத்திற்கு செல்வீர்கள். இல்லையென்றால் என்ன நடக்கும் என நாம் கூற முடியாது.
நமக்குத் தெரியும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று. நீரிழிவு நோய் உள்ளவருக்கு 5 சதவீதம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றால், புகை பிடிப்பவருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 5% உண்டு. அதுவே அவர் நீரிழிவு நோய் உள்ளவராகவும் இருந்து புகைப்பிடிப்பவராகவும் இருந்தால். அவருக்கு 5 X 5 = 25 சதவீதம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
யாரெல்லாம் புகைப்பிடித்து, நீரிழிவு நோய் உள்ளவராகவும் இருக்கிறார்களோ அவர்கள் 60 வயதைத் தாண்டுவதே கடினமாக இருக்கும். நாம் முன்னர் கூறியதுபோல நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். ஆனால், புகை பிடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவர் புகைபிடிக்கும் பழக்கமும் இருந்து நீரிழிவு நோயும் உள்ளவராகவும் இருந்து எழுபது எழுபத்தைந்து வயதை தாண்டி வாழ்கிறார் என்றால்? அது அவரது அதிர்ஷ்டம்தான் என நாம் கூற வேண்டும்.
நீங்கள் நீரிழிவு நோயும் இருந்து, புகைபிடிப்பவராகவும் இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்றால், நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திக் கொள்ளத்தான் வேண்டும். புகைப்பிடிப்பதை நிறுத்துவதன் மூலம் உங்களது வாழ்நாளை நீங்கள் அதிகரித்துக் கொள்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை. அதேபோல் நீரிழிவு நோயையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
சிலபேர், நான் புகை பிடிப்பதில்லை. ஆனால், புகையிலையை வாயில் வைத்துக் கொள்வேன் எனக் கூறுகிறார்கள். இது தவறு. புகையிலை எந்த வடிவில் இருந்தாலும், அதை நாம் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் உண்டு.
“என்ன சார் இப்படி கூறுகிறீர்கள். எனது பக்கத்து வீட்டுக்காரர் 75 வயது கடந்தவர். 40 வருடங்களாக புகை பிடிக்கிறார். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என குதர்க்கமாக கேள்விகள் கேட்பார்கள். அதற்கான விடையை நாம் அடுத்த காணொளியில் காணலாம்.
5000-க்கும் மேற்பட்ட வீடுகளையும் 1000-க்கும் அதிகமான சிறுவணிகர்களையும் விரட்டிவிட்டு யாருக்கு ஸ்மார்ட் சிட்டி?
தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி (பொலிவுறு நகரம்) என்ற பெயரில் நகரின் மையப்பகுதியான மேல அலங்கம், வடக்கு அலங்கம், சேவப்பநாயக்கன் வாரி ஆகிய இடங்களில் வசிக்கும் சுமார் 8000 ஏழை எளிய குடும்பங்களை விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது மாநகராட்சி. அதேபோல் பழைய பேருந்து நிலையம், கீழவாசல் மார்க்கெட், பெரிய மார்க்கெட் (காமராஜர் மார்க்கெட்) ஆகிய இடங்களில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சிறு வணிகர்களையும் அப்புறப்படுத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால் பொதுமக்களும், சிறுவணிகர்களும் அச்சமடைந்துள்ளனர். அரசின் இந்தச் செயல் அநீதியானது, மக்கள் விரோதமானது
மத்திய அரசு அறிவித்துள்ள 200 ஸ்மார்ட் சிட்டிகளில் ஒன்றுதான் தஞ்சாவூர். சுமார் 1290 கோடி செலவில் உருவாகப்போகும் தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி தஞ்சை மக்களுக்கு நவீன வசதிகளைத் தந்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அரசின் திட்டமல்ல. தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி என்பது கம்பெனிகள் சட்டத்தின்படி பதிவு (எண்.114311) செய்யப்பட்ட ஒரு வியாபார நிறுவனம். அரசு, நிதி நிறுவனங்கள், தனியார் முதலாளிகள் எனப்பலரும் மூலதனம் போட்டு இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்திற்கானதே தவிர ஏழை எளிய மக்களுக்கு வசதி செய்து தருவதற்கல்ல.
கீழ்அலங்கம் பகுதியில் இடிக்கப்பட்ட வீடுகள்.
தஞ்சாவூர் நகரம் பெருமளவு சுற்றுலாவைச் சார்ந்துள்ளது. இந்தத் தொழிலை மேம்படுத்தி இலாபம் சம்பாதிக்க வேண்டுமென்றால் பெரிய கோயில், சரசுவதி மகால் அரண்மனை ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்த வேண்டும். அதிநவீன குடியிருப்புகள், பிரமாண்டமான வணிக வளாகங்கள், கட்டப்படும். இதை பயன்படுத்தி ஒருசில தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்கத்தான் இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளையும் கடைகளையும் ஈவிரக்கமின்றி இடிக்கத் துடிக்கிறது மாநகராட்சி.
மேல அலங்கம், வடக்கு அலங்கம், சேப்பநாயக்கன் வாரி ஆகிய இடங்களில் வாழும் காய்கறி விற்போர், ஆட்டோ ஓட்டுவோர், தையல் தொழில் செய்வோர், பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்ற உழைக்கும் மக்கள் தான் தஞ்சை நகரம் உயிர்போடு இருப்பதற்கு அடிப்படை. பழைய பேருந்து நிலையம், கீழவாசல் மார்க்கெட், பெரியமார்கெட், ஆகிய இடங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவணிகர்கள்தான் நகரத்தில் உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு ஓரளவு மலிவான விலையில் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுகின்றனர். இவர்கள் தான் இந்த நகரத்தை உருவாக்கியவர்கள், இந்த நகரத்தோடு இரத்தமும் சதையுமாக பிணைந்துள்ளவர்கள். பெற்ற தாயிடமிருந்து குழந்தையைப் பறிப்பது போல சுமார் 40 ஆயிரம் பேரை வெளியேற்றிவிட்டு தஞ்சை நகரை பணக்காரர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் உல்லாசபுரியாக்க வெறி கொண்டு அலைகிறது அரசாங்கம். இந்த அநீதியை எப்படி அனுமதிப்பது?
தஞ்சை நகரம் நமக்குச் சொந்தமானது. இங்கு வாழும் நமது உரிமையைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. நமது குடியிருப்பு, தொழில், வேலை, நமது குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் எல்லாவற்றிற்கும் இந்த இடம்தான் அடிப்படை. உயிரே போனாலும் வெளியேற்ற அனுமதிக்கக்கூடாது. யாராவது தீர்த்துவைக்க மாட்டார்களா என ஏங்குவதோ அல்லது யாரோ ஒரு தலைவர் போராடி பெற்றுத் தருவார் என நம்புவதோ பேதமை. வீதிக்கு வராமல் அஞ்சி நிற்பதால்; எந்தப் பலனுமில்லை எதிர்த்து நிற்பதே ஏற்ற வழி!
♦ பட்டா இல்லையென சட்டம் பேசுகிறார்களா? பட்டாக் கொடு! கொடுப்பதில் என்ன பிரச்சினை என்று கேளுங்கள்!
♦ போலீசு வந்து மிரட்டுகிறதா? சிவில் பிரச்சனையில் உனக்கென்ன வேலை எனக் கேளுங்கள்! சாஸ்திரா பல்கலைக்கழகம் அபகரித்த அரசு நிலத்தை எடுத்துவிட்டு வா என திருப்பி அனுப்புங்கள்!
♦ ஏழை உழைப்பாளிகளின் வீடுகளால் நகரின் அழகு கெடுகிறது என்றால், இது நம்மையும் நமது உழைப்பையும் அவமானப்படுத்தும் செயல் அல்லவா?
♦ நம்மை வெளியேறச் சொல்பவர்கள் பணக்காரர்களுக்கான உல்லாசபுரியை ஏழைகளே இல்லாத இடத்தில் அமைத்துக்கொள்ள வேண்டியதுதானே?
உழைக்கும் மக்களே!
♦ 8 வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம் என பட்டா நிலத்தையே பறிக்கும் அரசு புறம்போக்கு நிலத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிடுமா? ஆனால், உழைக்கும் மக்கள் ஒன்றாக திரண்டால் முடியாதது எதுவுமில்லை. மக்களின் ஒற்றுமை என்ற ஆயுதத்திற்கு முன்னால் அரசின் எல்லா ஆயுதங்களும் மண்ணைக் கவ்வியதுதான் வரலாறு.
♦ நமது வாழ்வாதாரத்தைக் காக்க, நமது குடியிருப்பை நிரந்தரமாக உரிமையாக்கிக்கொள்ள ஓரணியில் திரள்வோம்! அரசின் மக்கள்விரோத திட்டத்தை முறியடிப்போம்!
தகவல்: மக்கள் அதிகாரம்,
தஞ்சை.
தொடர்புக்கு : 94431 88285
93658 93062
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 07
நான் கரும்பலகையை நோக்கிச் செல்கிறேன்.
“இப்போது இன்னமும் சிக்கலான ஒரு கேள்வி. இங்கே நான் சில சதுரங்களை வரைந்திருக்கிறேன், ஆனால் இவற்றை எண்ண முடியவில்லை. நீங்கள் கவனமாகப் பார்த்து எண்ணி என் காதில் மெதுவாகச் சொல்லுங்கள்.
கரும்பலகையின் இன்னொரு பகுதியைத் திறக்கிறேன், அங்கு பின்வருமாறு வரையப்பட்டுள்ளது:
“பதில் சொல்ல அவசரப்படாதீர்கள்!” என்று குழந்தைகளை எச்சரித்துவிட்டு, நானும் கணக்கில் ஈடுபடுகிறேன். வகுப்பறையின் நடுவே நின்று கொண்டு விரலால் சுட்டிக் காட்டியபடி “ஒன்று, இரண்டு, மூன்று…” என்று எனக்குள்ளேயே எண்ணுகிறேன்.
ஒரு சிலர் பதில் சொல்வதற்காக என்னை ஏற்கெனவே அழைக்கின்றனர். “நான்கு”, “எட்டு”, “பன்னிரண்டு”, “நூறு”, “மூன்று” என்று ஏராளமான தப்பான பதில்கள் வருகின்றன. தம் பதிலைச் சரிபார்க்குமாறு ஒவ்வொருவர் காதிலும் சொல்கிறேன். சிலருக்கு ஒன்பதாவது சதுரத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறேன், இது. படத்தின் மையத்தில் உள்ளது, சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதைத்தான் பலர் கவனிக்கவில்லை.
ஒரு நிமிடம் கூடக் கழியும் முன், ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இந்தக் ”கண்டுபிடிப்பாளர்களால்” பதிலைக் கூச்சலிட்டுக் கூறாமல் இருக்க முடியவில்லை .
“எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள்!” என்று கூறிய படியே சைகை காட்டுகிறேன்.
“எட்டு !… ஒன்பது!”
8 மற்றும் 9 என்று நான் கரும்பலகையில் எழுதுகிறேன்.
“இங்கு எட்டு சதுரங்கள் உள்ளன என்று கூறுபவர்கள் கைகளை உயர்த்துங்கள்!” கிட்டத்தட்ட பாதிப் பேர் கைகளை உயர்த்தினர். இப்போது, ஒன்பது சதுரங்கள் உள்ளன என்று கருதுபவர்கள் கைகளை உயர்த்துங்கள்!” எஞ்சியவர்கள் கைகளை உயர்த்தினர்.
இரு தரப்பின் சார்பாயும் மாக்தாவையும். மாயாவையும் கரும்பலகைக்கு அழைக்கிறேன்.
“நிரூபியுங்கள்!”
“இங்கே ஒன்பது சதுரங்கள் உள்ளன” என்கிறாள் மாயா.
“இல்லை, எட்டு!” என்று மற்றவர்கள் கத்துகின்றனர்.
“இதோ பாருங்கள்!” என்று மாயா ஒவ்வொரு சதுரமாக அடையாளக் குச்சியால் சுட்டிக் காட்டத் துவங்குகிறாள். “ஒன்று, இரண்டு, மூன்று… ஒன்பது!” இறுதியாக, மையத்தில் உள்ள சிறு சிவப்பு சதுரத்தைச் சுட்டிக் காட்டு கிறாள்.
“ஓ!” என்று ஒரு பாதியினர் பெருமூச்சு விடுகின்றனர்.
“நாங்கள் சொன்னதுதான் சரி!” என்று மற்றப் பகுதியினர் மகிழ்கின்றனர்.
உடனே வகுப்பறையில் சத்தம் நின்றது. கணக்குப் போட்டபோது தோன்றிய உணர்ச்சிகளிலிருந்து குழந்தைகளின் கவனம் திரும்புகிறது. இப்போது வேறு கேள்வியைக் கேட்கலாம். வரிசைகளின் இடையே நடந்தபடியே மெதுவாகச் சொல்கிறேன்:
“இன்னமும் சிக்கலான கணக்கைத் தரட்டுமா?”
“தாருங்கள்!”
“நான் கரும்பலகையில் A, B என்று இரண்டு தொகுதி சதுரங்களை வரைந்தேன். எந்தத் தொகுதியில் சதுரங்கள் அதிகம் என்று சொல்லுங்கள். (நீங்கள் எப்படி சிந்திப்பீர்களென நான் உங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அனேகமாக சிலரின் முகங்கள் கருத்தாழம் மிக்கவையாக, ஒருமுனைப்படுத்தப்பட்டவையாக இருக்கும். சரிபார்க்காத எதையும் வாய் சொல்லும்படி விட்டுவிடாதீர்கள். நான் கரும்பலகையில் உள்ள திரையை விலக்குகிறேன்.) நிமிருங்கள். பாருங்கள், சிந்தியுங்கள்.”
கரும்பலகையில் பின்வருமாறு வரையப்பட்டிருக்கிறது:
குழந்தைகள் என்ன பதில் சொல்வார்கள்? அனேகமாகப் பெரும்பாலோர் A தொகுதியில் B தொகுதியில் உள்ளதை விட அதிக சதுரங்கள் உள்ளன என்று கூறுவார்கள், கண்டிப்பாக இவர்கள் எண்ணிக்கையையும் பரப்பளவையும் குழப்புவார்கள். “எவ்வளவு?” என்பதை “பரப்பளவில் பெரிய” என்று ஏற்றுக் கொள்வார்கள்.
சமீபத்தில் இதே மாதிரி கேள்விகளைக் கேட்டபோது அனைவரும் சரியாகப் பதில் சொல்லவில்லை. கரும்பலகையில் வரையப்பட்டிருந்த மூன்று சிறிய, இரண்டு பெரிய பேரிக்காய்களைக் காட்டிக் கேட்டேன்:
எண்ணினோம்: இடது புறம்-மூன்று, வலது புறம் இரண்டு. பேரிக்காய்களின் படத்தின் கீழ் நான் எண்களை எழுதினேன்:
“எது அதிகம், மூன்றா, இரண்டா ?”
“மூன்று அதிகம்!” என்றனர் குழந்தைகள்.
“அப்படியெனில் எங்கே பேரிக்காய்கள் அதிகம் உள்ளன – இடதுபுறமா, வலதுபுறமா?
“வலது புறம்.”
“ஏன்?”
குழந்தைகள் எனக்கு விளக்கினார்கள்: வலது புறம் உள்ளவை அளவில் பெரியவை, இடதுபுறம் சிறியவை.
அப்போது சாஷா மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை.
“தப்பு!” என்றான் அவன். “இடது புறம் மூன்றும் வலது புறம் இரண்டும் உள்ளன. எனவே, இடது புறம்தான் அதிகம்.”
நான் வகுப்பறையின் குறுக்காக நடந்து சென்று சிறுவனை நோக்கிக் கையை நீட்டினேன். அவன் கையைப் பிடித்துக் குலுக்கினேன். சாஷா புரியாதபடியே கையை நீட்டினான். வகுப்பில் உள்ளவர்கள், என்ன நடந்தது என்று ஆர்வத்தோடு பார்த்தார்கள்.
“நீ யோசித்து பதில் சொன்னதற்கு நன்றி, சாஷா. நீ என்னை மிகவும் சந்தோஷப்படுத்தினாய்.”
சாஷாவோடு சேர்ந்து நாங்கள் கரும்பலகையை அணுகினோம்.
“பாருங்கள், சாஷா எப்படி யோசிக்கிறான்!… சாஷா, இங்கே எந்த இடத்தில் அதிக வட்டங்கள் உள்ளன என்று சொல் பார்க்கலாம்” என்று கூறியபடியே இரண்டு ஓரங்களிலும் உள்ள கரும்பலகைகளைத் திறந்து காட்டி, நடுவில் உள்ளதை மூடினேன்.
இடதுபுறமுள்ள பலகையில் ஆறு வட்டங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக வரையப்பட்டிருந்தன. வலதுபுறமுள்ள பலகையில் வட்டங்கள் எல்லா இடங்களிலும் வரையப்பட்டிருந்தன . சிறுவன் இரு பலகைகளிலும் உள்ள படங்களை கவனமாகப் பார்க்கத் துவங்கினான்.
”சாஷா, எங்கே எனக்கு உதவி செய். இப்போது இங்குள்ளவர்களுக்கு என்னை விட அதிகமாக உன்னால் உதவ முடியும். இப்போது இவர்களுக்கு நீதான் தலைசிறந்த ஆசிரியர்” என்று எனக்குள் நான் எண்ணிக் கொண்டேன்.
நான் வகுப்பறையின் நடுவில் நின்றபடி முழு நிசப்தத்தில் மெதுவாகப் பேசினேன்:
“பாருங்கள், அவன் எப்படி கவனமாக நோக்குகிறான்….. அவன் ஒன்றுமே பேசவில்லை, கவனித்தீர்களா!.. தவறு செய்யாமலிருப்பதற்காகத் தன் நாக்கை அடக்கிக் கொண்டு நிற்கிறான்.”
சாஷா இடது பலகையை அணுகி வட்டங்களை விரல் விட்டு எண்ணுகிறான். நான் குழந்தைகளிடம் மெதுவாகச் சொல்கிறேன்.
“பார்த்தீர்களா, அவன் தன்னைத்தானே சரிபார்த்துக் கொள்கிறான்.”
“சாஷா, இப்போது தயவு செய்து தப்பு செய்து விடாதே! மனிதனுக்குச் சிந்திப்பது எவ்வளவு முக்கியம், அவசியம், சிந்திக்கும் மனிதனைப் பார்க்க எவ்வளவு அழகாக உள்ளது என்று எல்லாக் குழந்தைகளுக்கும் காட்ட வேண்டியது மிக மிக அவசியம்” என்று என் மனதிற்குள்ளாகவே சாஷாவை நோக்கி கூறிக் கொண்டேன்.
திருப்பதியில் ஆந்திர ரயில்வே போலீசால் கைது செய்யப்பட்டு, பின்னர் தமிழக சிபிசிஐடி போலீசால் கைது செய்யப்பட்டிருக்கிறார் முகிலன். அவரை சென்னைக்கு கொண்டு வந்த போலீசு, பின்னர் பாலியல் புகார் ஒன்றை வைத்து கைது செய்து வழக்குப் போட்டு சிறையில் அடைத்திருக்கிறது. நீதிமன்ற வளாகத்தில் முகிலன் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார்.
அதில் தான் ஸ்டெர்லைட் ஆதரவு ஆட்களால் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாகவும், பல ஊசிகள் போட்டு மனநிலையை பாதிக்கச் செய்ய அவர்கள் முயன்றதாகவும் கூறியிருக்கிறார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து அவர் வெளியிட்ட சி.டி போலீசாருக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை. ஏனென்றால் அந்த சி.டி-யின் மூலம் துப்பாக்கி சூடு நடத்திய போலீசின் குற்றம் பகிரங்கமாக; ஆதராப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்போதே சி.டி வெளியீடுக்கு பிறகு தனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறியுள்ளார் முகிலன். அது போலவே அந்த வெளியீட்டு நிகழ்வு முடிந்ததும் காணாமல் போனார்.
தமிழகத்தின் ஜனநாயக சக்திகளின் முயற்சியால் இந்த பிரச்சினை நீதிமன்றம், மக்கள் அரங்கம் இரண்டிலும் கொண்டு செல்லப்பட்டது. தற்போது முகிலனை அவரது குடும்பத்திடம் ஒப்படைப்பதற்குப் பதில் சிறையில் அடைத்திருப்பது பல கேள்விகளையும் முகிலன் சொன்னது போல அந்தக் கடத்தல் மிரட்டல் நடந்திருக்கலாம் எனவும் யூகிக்க வைக்கிறது.
ஏனெனில் பாலியல் புகார் குறித்த வழக்கில் எந்த விசாரணையும் இல்லாமலே அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதை விட அவர் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது பாரதூரமான விசயம். இதை ஏன் போலீசார் விசாரிக்கவில்லை என்றால், அவர்களுக்கும் இது தெரிந்தே நடந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இன்றைய கேள்வி:
முகிலன் காணாமல் போனதற்கு யார் காரணம்?
♣ ஸ்டெர்லைட் நிர்வாகம்
♣ தமிழக போலீசு
♣ பாலியல் பிரச்சினை
♣ தானே மறைந்து வாழ்ந்தார்
(பதில்களில் இரண்டை தெரிவு செய்யலாம்)
டிவிட்டரில் வாக்களிக்க :
முகிலன் காணாமல் போனதற்கு யார் காரணம்?
* ஸ்டெர்லைட் நிர்வாகம் * தமிழக போலீசு * பாலியல் பிரச்சினை * தானே மறைந்து வாழ்ந்தார்
2019 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க., எதிர்பாராதவிதமாகத் தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர்கள், பா.ஜ.க. ஆதரவு பத்திரிகைகள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட அனைவரும், “சாதி அரசியலை இந்திய மக்கள் புறக்கணித்துவிட்டதாக” அறிவித்தனர்.
அவர்கள் இப்படிக் கூறியதற்குக் காரணம், சாதி அரசியலின் மையமான உ.பி.யிலும், பீகாரிலும் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து நின்ற அகிலேஷ் யாதவ் – மாயாவதி கூட்டணியும், லாலு பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த கூட்டணியும் இந்தத் தேர்தலில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்திருப்பதுதான். தனது வெற்றியைச் சாதி- கடந்த, அதற்கும் மேலே வர்க்கம் கடந்த வெற்றியாகவும் பீற்றி வருகிறது, பா.ஜ.க.
எதிர்க்கட்சிகள், குறிப்பாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள் கட்சி ஆகியவை குறிப்பிட்ட சாதி ஓட்டுக்களை அடித்தளமாகக் கொண்ட சாதிக் கட்சிகள்தான் என்பதை பா.ஜ.க. சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.
சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
உ.பி.யில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக அமைக்கப்பட்ட சமாஜ்வாதிக் கட்சி- பகுஜன் சமாஜ் கட்சி – ராஷ்டிரிய லோக் தள் கட்சிகளின் கூட்டணி, தமது வெற்றிக்கு யாதவ்- வாக்குகளையும்; பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து நின்ற லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள்-காங்கிரசு கூட்டணி, தமது வெற்றிக்கு யாதவ், முஸாஹர், கோய்ரி, மல்லா, குஷ்வாஹா உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி ஓட்டுக்களையும், முசுலீம்களின் ஓட்டுக்களையுமே பிரதானமாக நம்பியிருந்தன.
“தேசிய”க் கட்சியான காங்கிரசும் கூட இத்தேர்தலில், அக்கட்சி தனித்துப் போட்டியிட்ட உ.பி., ம.பி., இராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தனது வெற்றிக்கு பார்ப்பனர்கள், தாக்குர் உள்ளிட்ட ஆதிக்க சாதிகள் மற்றும் ஜாட், யாதவ், அஹிர், லோதி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி ஓட்டுக்களையும் நம்பியிருந்தது.
எதிர்க்கட்சிகளைச் சாதிக் கட்சிகள் என்றும், அக்கட்சிகளின் தோல்வியைச் சாதி அரசியலின் தோல்வி என்றும் கேலி செய்யும் பா.ஜ.க.வின் யோக்கியதை என்ன? இந்திய அரசியல் கட்சிகளிலேயே, பார்ப்பன- கட்சி எனச் சாதி பெயரைக் குறிப்பிட்டு அழைக்கப்பட்ட பெருமை கொண்ட ஒரே கட்சி பா.ஜ.க.தான்.
1990-க்கு முன்பு வரை அக்கட்சிக்குப் பார்ப்பனர், தாக்குர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரைத் தவிர, வேறு யாரும் வாக்களிக்க முன் வந்ததில்லை. பா.ஜ.க.வும் நிலவுடமை ஆதிக்க சாதிகளையும், வட்டிக்கடை நடத்திவரும் மார்வாடி சேட்டுக்களையும்தான் அண்டிப் பிழைத்து வந்தது.
1990-களுக்குப் பின்னர், இந்து என்ற போர்வையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தன் பக்கம் அணிதிரட்ட பா.ஜ.க முயன்றது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலோ, பா.ஜ.க. அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேசிய சாதிக் கூட்டணி என அழைக்கப்படும் அளவிற்கு வட இந்திய மாநிலங்களில் யாதவ் அல்லாத மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகள், ஜாதவ் அல்லாத மற்ற தாழ்த்தப்பட்ட சாதிகளின் வாக்குகளைக் குறிவைத்தும், சாதிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டும்தான் இந்தத் தேர்தலையே சந்தித்தது.
காங்கிரசு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆதிக்க சாதியினரின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக, “தான் தத்தாத்ரேய கோத்திர பிராமணன்” எனக் கூச்சமின்றிக் கூறிக் கொண்டார் என்றால், வளர்ச்சியின் நாயகனாக (விகாஸ் புருஷ்) முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியோ, உ.பி. மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில், “தான் மிக, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன்” எனக் கண்ணீர் விடாத குறையாகப் பேசி வாக்கு சேகரித்தார்.
இந்தக் கடந்த கால மற்றும் நிகழ்கால உண்மைகளை மூடிமறைத்துவிட்டு, தன்னைச் சாதிக்கு அப்பாற்பட்ட கட்சியாகப் பெருமை பாராட்டிக் கொள்வதற்கும்; எதிர்க்கட்சிகளைச் சாதிக் கட்சிகள் எனச் சாடுவதற்கும் பா.ஜ.க.விற்கு எந்தவிதத் தகுதியும் கிடையாது.
மண்டலும் பா.ஜ.க.வும்
1980-களின் இறுதியில் மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலான பிறகு, இந்தியத் தேர்தல் முடிவுகளைச் சாதி வாக்குகள் தீர்மானிப்பது ஒரு புதிய கோணத்தில் தீவிரமடைந்தது. குறிப்பாக, மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலாக்கத்திற்குப் பிறகுதான் குறிப்பிட்ட சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சாதிக் கட்சிகள் இந்திய அரசியல் அரங்கில் தோன்றின.
தமிழகத்தில் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக அவதாரமெடுத்தது. சோசலிஸ்டு ராம் மனோகர் லோகியாவின் சிஷ்யர்கள் எனப் பெயரெடுத்திருந்த முலயம் சிங் யாதவ், யாதவ் சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சமாஜ்வாதிக் கட்சியை உ.பி.யிலும்; லாலு பிரசாத் யாதவ், யாதவ் சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியை பீகாரிலும்; ஜார்ஜ் பெர்ணாண்டஸ் – குமார் கூட்டணி, குர்மி சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சமதா கட்சியை பீகார் உள்ளிட்ட ஒன்றிரண்டு மாநிலங்களிலும் தொடங்கினர்.
இவர்களுக்கெல்லாம் முன்பே, கன்சிராம் தாழ்த்தப்பட்ட சாதிகளுள் ஒன்றான ஜாதவ் சாதி ஓட்டுக்களை அடித்தளமாகக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார்.
மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலாக்கத்திற்குப் பிறகுதான் குறிப்பிட்ட சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சாதிக் கட்சிகள் இந்திய அரசியல் அரங்கில் தோன்றின.
இவற்றுக்கெல்லாம் அப்பால், இதே காலக்கட்டத்தில் அரசு அதிகாரத்தில் பங்கு பெறமுடியாமல், அதற்கு அப்பால் நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு சாதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் முளைத்துச் செயல்படத் தொடங்கி, அவை சாதிக் கட்சிகளாகவும் உருமாறி, தமது சாதி ஓட்டுக்களை வைத்துக்கொண்டு அரசியல் கட்சிகளிடம் பேரம் நடத்தி ஒன்றிரண்டு நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தொகுதிகளைப் பெறவும் தொடங்கின.
மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டதையும், சாதிக் கட்சிகள் தேர்தல்களில் வெற்றிபெறும் அளவிற்குச் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியதையும் கண்டு, பா.ஜ.க. பெரும் பதற்றம் கொண்டது. ஏனென்றால், அதுகாறும் ஆதிக்க சாதிகளின் முற்றாளுமையின் கீழ் இருந்துவந்த அரசு அதிகாரத்தில் இக்கட்சிகள் பங்கு கேட்பதை பார்ப்பன- கட்சியான பா.ஜ.க.வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும், புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலமும் இதுதான்.
ஒருபுறம் தனது சமூக அடித்தளமான பார்ப்பன, பனியா உள்ளிட்ட ஆதிக்க சாதியினரைத் தூண்டி விட்டு மண்டல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திக் கொண்டே, இன்னொரு புறம் “ராமர் எதிர் பாபர்”, “இந்து எதிர் முசுலீம்” என இந்துத்துவ அரசியலையும் கடை விரித்தது, பா.ஜ.க.
இந்து என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தம் பக்கம் அணிதிரட்டிக் கொண்டு, சாதிக் கட்சிகளை வீழ்த்திவிட முயன்ற பா.ஜ.க.வின் செயலுத்தி 1990 பிற்பகுதியில் உ.பி. மாநிலத்திலேயே படுதோல்வியடைந்தது. அங்கு மட்டுமின்றி, இத்தேர்தல் உத்தி பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் தொடர்ச்சியான, நிரந்தரமான வெற்றியைத் தரவில்லை.
இத்தோல்விகள் மற்றும் பின்னடைவுகளின் விளைவாக, ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறும் ஒவ்வொரு தேர்தல்களுக்குத் தக்கவாறும் சாதிக் கூட்டணிகளை உருவாக்கித் தேர்தல்களைச் சந்திக்கும் தந்திரோபாயத்தில் பா.ஜ.க இறங்கியது. அதற்கான பரிசோதனைக் களமாக உ.பி.யைத் தேர்ந்தெடுத்தது.
1990- பின், உ.பி. மாநிலத்தில் காங்கிரசு பலவீனமடைந்துவிட்டதையும், மண்டல் எதிர்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு பார்ப்பனர், தாக்குர் உள்ளிட்ட ஆதிக்க சாதி வாக்குவங்கியின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண்ட பா.ஜ.க., பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் வாக்குகளைத் தன் பக்கம் திருப்பிக் கொள்வதற்கு, சாதிகளுக்கு இடையே காணப்படும் வரலாற்றுரீதியான முரண்பாடுகளையும், பதவி வேட்டைக்காக அவற்றுக்கிடையே நடந்துவரும் மோதல்களையும் பயன்படுத்திக் கொண்டது.
குறிப்பாக, யாதவ் சாதி தவிர்த்த பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் ஜாதவ் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தனது அணிக்கு மடைமாற்றியதன் மூலம்தான் உ.பி.யில் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பிரம்மாண்டமான வெற்றியை பா.ஜ.க. சாதித்தது.
ஜி.எஸ்.டி., பண மதிப்பழிப்பு ஆகிய பொருளாதாரத் தாக்குதல்கள் ஏற்படுத்திய பாதிப்புகளைக்கூடச் சாதி உணர்வு மழுங்கடித்துவிட்டதை உ.பி.யில் நாம் கண்டோம். இந்த உத்தியை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நாடு முழுவதும் விரிவுபடுத்தியிருக்கிறது.
கமண்டலத்திடம் சரண் அடைந்த மண்டல்
மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலுக்கு வந்தபொழுது, கமண்டலை (பா.ஜ.க.வை) மண்டல் ஓரங்கட்டிவிடும் என சில அறிவுத்துறையினர் கருதினர். ஆனால், பா.ஜ.க.வோ, அதே மண்டல் இட ஒதுக்கீடைத் தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்படுத்தியது.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடில் யாதவ் சாதியினரும், தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடில் ஜாதவ் சாதியினரும் அதிகப் பலன் அடைந்திருக்கும் உண்மையைப் பயன்படுத்திக் கொண்ட பா.ஜ.க., மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் பலன்களைப் பெறும் வகையில் உள் ஒதுக்கீடை அமலாக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்ததோடு, அதற்கான கமிசன்களையும் அமைத்தது. இதன் வழியாக, யாதவ், ஜாதவ் அல்லாத சாதியினரின் ஓட்டுக்களைக் கவர முயன்றது.
பாஜக சாதி வேறுபாடு பார்க்காத கட்சி எனக் காட்டிக் கொள்ளவும், தாழ்த்தப்பட்ட சாதி வாக்குகளைப் பொறுக்கும் நோக்கத்தோடும் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஒடிசாவிலுள்ள தியோகாவ் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரின் வீட்டில் உணவருந்தும் நாடகம். (கோப்புப் படம்)
இந்த உள் ஒதுக்கீடு உத்திக்கு அப்பால், தான் குறிவைக்கும் சாதிகளைச் சேர்ந்த வரலாற்றுத் தலைவர்களை இந்து மதக் கதாநாயகர்களாகச் சித்திரிப்பதற்கு ஏற்ப வரலாற்றைத் திரிப்பது, சாதி உணர்வை முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறியாக வளர்த்துவிடுவது, தனக்கு ஆதரவான சாதிகளைச் சேர்ந்த பிழைப்புவாதிகளைக் கூட்டணிக்குள் இணைத்துக் கொண்டு குளிப்பாட்டுவது என இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு பல தந்திரங்களை பா.ஜ.க. கையாண்டு வருகிறது.
“பிற்படுத்தப்பட்ட சாதிகளுள் ஒன்றான ராஜ்பார் சாதியின் வரலாறே முசுலீம்களுக்கு எதிரான வரலாறாக ஆர்.எஸ்.எஸ்.-ஆல் திரித்துக் கூறப்படுவதாகவும், அச்சாதியைச் சேர்ந்த இளைய தலைமுறையிடம், இந்துயிசத்தைக் காப்பாற்றும் வீரர்கள் நாம் என்ற கருத்துத் திணிக்கப்படுவதாகவும்” கூறுகிறார், “காவோன் கே லோக்” என்ற இந்தி இதழின் ஆசிரியர் ராம்ஜி யாதவ்.
ராஜ்பார் சாதியினரால் தமது வரலாற்று நாயகனாகக் கருதப்படும் சுஹேல்தேவ், ஒரு முசுலீம் தளபதியைப் போரிட்டு வீழ்த்தியதாகக் கூறப்படும் கதையிலிருந்து, ராஜ்பார் சாதியை முசுலீம்களுக்கு எதிரானதாகச் சித்திரிக்கும் கட்டுக்கதையை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியிருக்கிறது. அச்சாதியினரை பா.ஜ.க.விற்கு நெருக்கமாகக் கொண்டுவரும் முயற்சியாக, காசிபூரிலிருந்து டெல்லி வரை செல்லும் அதிவிரைவு தொடர்வண்டிக்கு சுஹேல்தேவ் பெயரைச் சூட்டியிருக்கிறது, மோடி அரசு.
கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடியதால் முஸாஹர் சாதியினரால் தெய்வமாக வணங்கப்படும் தீனாபத்ரி; அஹிர் சாதியைச் சேர்ந்த வரலாற்று நாயகன் லோரிக் யாதவ்; ஜாதவ் சாதியைச் சேர்ந்த ரவிதாஸ் உள்ளிட்ட பலரும் இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.-ஆல் இந்துத்துவ நாயகர்களாகச் சித்தரிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் இந்துத்துவ நஞ்சு விதைக்கப்படுகிறது.
தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்கெனவே அம்பேத்கர் குறித்த பிம்பமும், கருத்துக்களும் பரவியிருப்பதால், சாதிப் படிநிலையில் அச்சாதியினரைவிட மேலேயுள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் இந்த இந்துத்துவா நஞ்சு உடனடியாகவே வேலை செய்வதாக அறிவுத்துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
முஸ்லீம் எதிர்ப்பு இந்துத்துவ அரசியலின் கீழ் எல்லா சாதியினரையும் கொண்டுவரும் நோக்கத்துடன் மதவெறியை உள்ளீடாகக் கொண்ட தேசவெறியை மோடி தனது பிரச்சாரம் அனைத்திலும் பயன்படுத்திய போதிலும், வேர் மட்ட அளவில் சாதிரீதியான கணக்கீடுகளின் அடிப்படையிலும் சாதிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டும்தான் பா.ஜ.க. தனது வெற்றியை சாதித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சாதியை மறுத்த இந்து உணர்வும் இல்லை, இந்துத்துவமும் இல்லை. இருக்கவும் முடியாது.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
உலகமயத்தின் புதிய சாதனை – 2018-ம் ஆண்டில் அகதிகளின் எண்ணிக்கை 7.8 கோடி மக்கள்
உலகம் முழுவதிலும் 2018-ம் ஆண்டில் தங்களது வாழிடங்களை விட்டு 7.8 கோடி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையம் (UNHCR) கூறியுள்ளது. 2017-ம் ஆண்டை விட இது 20 இலட்சம் அதிகம். அகதிகளின் எண்ணிக்கை என்ற அடிப்படையில் பார்த்தால் உலகின் 20-வது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இது இருக்கும்.
ரோஹிங்கிய அகதி முகாம் ஒன்றில் சிறுமி.
இடம்பெயர்ந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் உள்நாட்டு அகதிகள் என்று ஆணையம் கூறுகிறது. பெர்லினில் இதற்கான அறிக்கையை வெளியிட்ட போது இந்த போக்கு கவலையளிப்பதாக ஆணையத்தின் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி கூறியிருக்கிறார்.
புலம் பெயர்ந்த 2.59 கோடி அகதிகளில் பாலஸ்தீன மக்கள் கிட்டதட்ட 20 விழுக்காடாக இருக்கின்றனர். இவர்கள் தற்போது ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பில் உள்ளனர். 2018-ம் ஆண்டில் மட்டும் 1.36 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் 28 இலட்சம் மக்கள் வேறு நாடுகளுக்கும் 1.08 கோடி மக்கள் உள்நாட்டிலும் இடம்பெயர்ந்துள்ளதாக ஆணையம் கூறுகிறது.
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் (Central African Republic) ஜைக் (Zike) கிராமத்திலிருந்து தப்பி வந்துள்ள அகதிகளை பாதுகாக்கும் கேமரூன் அமைதிப்படை வீரர்கள். மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தொடர்ந்து நடக்கும் உள்நாட்டு வன்முறையிலிருந்து தப்பி வெளியேறியவர்களின் எண்ணிக்கை உலக அளவில் எட்டாவது பெரியதாகும்.
காங்கோ மக்கள் குடியரசிலிருந்து வெளியேறிய மக்கள் உள்நாட்டு அகதிகள் முகாமொன்றில் ஆடைகளை வாங்குவதற்காகக் காத்திருக்கின்றனர்.
அஃப்கானிஸ்தான் காபூலிலுள்ள உள்நாட்டு அகதிகள் முகாமொன்றில் சுற்றித்திரியும் சிறுவர்கள். 2018-ம் ஆண்டின் இறுதிவாக்கில் 21 இலட்சம் மக்கள் உள்நாட்டு அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.
லெபனானிலுள்ள ஒரு முறைசாரா முகாமில் உள்ள சிரிய அகதிகள். அரசாங்க மதிப்பீடுகளின்படி, 2018-ம் ஆண்டின் இறுதியில் சுமார் 15 இலட்சம் அகதிகள் அங்கே வாழ்கின்றனர். போரில் இருந்து தப்பிச் செல்லும் சிரியர்களுக்கு முதன்மையான நாடு இதுவாகும்.
தெற்கு சூடான் தலைநகரின் புறநகர் பகுதியில் உள்நாட்டு மேங்கடீன் அகதிகள் முகாமில் தண்ணீர் சேகரிக்க வரிசையில் நிற்கும் உள்நாட்டு அகதிகள். சென்ற ஆண்டின் கணக்குப்படி சுமார் 19 இலட்சம் உள்நாட்டு அகதிகள் இங்கே இருந்தனர்.
எரித்திரியா மற்றும் பங்களாதேசைச் சேர்ந்த அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள். ஐரோப்பா செல்வதற்காக லிபியாவிலிருந்து கிளம்பிய நெரிசல் மிகுந்த ஒரு மரப்படகில் இருந்து மீட்கப்படுவதற்காக காத்திருக்கிறார்கள்.
கொலம்பியாவில் பாம்ப்லொனாவில் (Pamplona) உள்ள ஒரு பெட்ரோலிய நிலையத்தில் ரொட்டி மற்றும் காஃபிக்காக காத்திருக்கும் வெனிசுலா அகதிகள். 2018-ம் ஆண்டின் இறுதிவரை 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.