‘கருப்புப் பணக்காரர்களுக்கு எதிரான போர்’ என்று சென்ற வருடம் நவம்பர் 8 அன்று பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி (இப்படித்தான் இப்போதெல்லாம் அவருடைய கட்சிக்காரர்கள் அவரை விளிக்கிறார்கள்) அறிவித்தது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியமான கொள்கை முடிவு. பேரழிவுமிக்க அணுஆயுதம் வெடிக்கும்போது ஏற்படும் கதிரியக்கம்போல் வெகுஜனங்களின் எல்லாப் பகுதியினரையும் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு வகைகளில் ஒவ்வொரு நாளும் தாக்கி வருகிறது அந்த முடிவு. அவர்கள் உழைத்து ஈட்டிய பணத்தை அவர்களே எடுத்துப் பயன்படுத்தமுடியாத கொடுமைக்கு நடுவிலும்கூட, துணிச்சல்கார மோடி நம்மைச் சுரண்டி கொழுத்திருக்கும் பணக்காரர்களின் அடிமடியில் கை வைத்துவிட்டார், இனியெல்லாம் சுகமே என்று இன்றும் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் பாமரர் பலர்.
அவர் நடத்திய ‘துல்லியத் தாக்குதல்’ பெரும்பான்மை மக்களின்மீது தொடுக்கப்பட்டது. கருப்புப் பணம் என்பது கற்றை கற்றையாக ரூபாய் நோட்டுகளாக சினிமாத்தனமாக சுவரின் மீதுள்ள ஓவியத்தைச் சுழற்றும்போது திறக்கும் கதவுக்குப்பின் சிவப்பு வெளிச்சத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதல்ல; அவை நிலமாக, தங்கமாக மாற்றப்பட்டுவிட்டன; அல்லது ஹவாலா மற்றும் பிற வர்த்தக மோசடி நடைமுறைகளின் மூலமாக வரியில்லா சொர்க்கபுரிகளுக்குச் சென்று மீண்டும் அன்னிய மூலதனமாக அரசு விரிக்கும் சிவப்புக் கம்பளங்களின் மீது நடந்துவந்து நம் பொருளாதாரத்திற்குள் வந்துவிடுகின்றன.
கருப்புப் பணம் உற்பத்திக்கு உதவிசெய்யும் வகையிலான கொள்கைகளை வகுத்து, அமைப்புகளை ஏற்படுத்தி, சட்டங்களை வளைத்தும் அவற்றின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, கம்பெனிகளின் கணக்குகளில் தில்லுமுல்லு செய்து வரி ஏய்ப்புச் செய்யும் முறைகளைச் சொல்லிக்கொடுத்துப் பிழைக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், வக்கீல்களும், ஆடிட்டர்களும் பத்திரிகையாளர்களும் இன்ன பிற ‘அறிவுஜீவிகளும் மோடியின் ‘தாக்குதலினால் சிறிதளவும் பாதிக்கப்படப்போவதில்லை என்றெல்லாம் மக்களுக்கு அவர்கள் புரியும் மொழியில், எளிமையாக ஆனால் கோட்பாடுகள் நீர்த்துப்போகாத வகையில் சொல்லிக் கொடுக்க வெகுசிலரே இருக்கின்றனர்; இருந்தனர்.
அந்த வெகுசிலரில் ஒருவர்தான் ஜெயரஞ்சன். ஏற்கெனவே தொலைக்காட்சி விவாதங்களின் வாயிலாக பரவலாக அறியப்பட்டவராக இருந்தபோதிலும், நவம்பர் 8-க்குப் பிறகு இவர் விவாதங்களில் எடுத்துவைத்த வாதங்களின் எளிமையும், ஆழமும், அவற்றின் பின்னிருந்த தார்மீகக் கோபமும் அவரை ஒரு தமிழ்கூறும் நல்லுலகின் சூப்பர் ஸ்டாராகவே மாற்றிவிட்டன என்றால் மிகையல்ல…
மோடியின் நடவடிக்கை குறித்து இவர் முன்வைத்த கூர்மையான வாதங்கள் காணொளிகளாக ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டிருக்கின்றன, ஆயினும், அச்சில் இதை ஆவணப்படுத்தி இன்னும் பரந்துபட்ட மக்களிடையே கொண்டு செல்லவேண்டிய தேவையை உணர்ந்து மின்னம்பலம் இணைய இதழுக்காக கட்டுரைகளாக ஜெயரஞ்சன் எழுதினார். அவற்றை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் மின்னம்பலத்தின் முயற்சி இந்த காலகட்டத்தின் வரலாற்றுத் தேவை. (நூலின் முன்னுரையிலிருந்து…)
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (UNCTAD) தற்போது தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இத்தகைய அறிக்கை வருடந்தோறும் வெளியிடப்படும் ஒன்றுதான். ஆனால் இந்த வருட அறிக்கை உலகைப் பிடித்திருக்கும் (குறிப்பாக, மேற்கு உலகம் மற்றும் சீனம்) மந்தநிலைக்கான காரணம் என்ன என்று அலசி ஆராய்ந்திருக்கிறது. ஆராய்ந்தபின், அது முன்வைக்கும் காரணம் இதுவரையிலும் கூறப்படாத ஒரு காரணமாகும்.
2015-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் அளவைவிட உலக அளவில் நடந்த வர்த்தகத்தின் அளவு குறைவு. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் தேங்கியுள்ளன. இந்த நிலை 2016-ம் ஆண்டில் இன்னும் மோசமடையும், மோசமடைந்துள்ளது.
இதற்கு முதல் காரணமாக சுட்டப்படுவது, மேற்குலகில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியாகும். நிதி நெருக்கடியால் தேவையின் அளவு அதிகரிக்கவில்லை. சொல்லப்போனால் கடந்த சில வருடங்களாகவே, உலகளவில் ஏற்பட்ட தேவை அதிகரிப்பு என்பது வளரும் நாடுகளில் ஏற்பட்டதுதானே தவிர, வளர்ந்த நாடுகளில் தேவை உயரவேயில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தேவையின் அதிகரிப்பு உலக அளவில் எதிரொலித்தது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆனால் அதிலும் ஒரு மாற்றம் வந்துவிட்டது. சீனம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் உயர்ந்துவந்த தேவை தற்போது குறைந்துவிட்டது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது ஒரு காரணம். மற்றொன்று, உலகளவில் பண்டங்களின் விலையும் பெட்ரோலியப் பொருள்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியுமாகும்.
… பின் எதனால்தான் உலக வர்த்தகம் மந்தம் அடைந்துள்ளது? UNCTAD அறிக்கை கூறுவது யாதெனில், கூலி வருமானம் குறையத் தொடங்கியதால்தான் வர்த்தகம் குன்றியுள்ளது என்பதாகும். வளர்ந்த நாடுகளில் கூலி வருமானம் தேங்கிப்போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன அல்லது அவை குறையத் தொடங்கியுள்ளன. நாட்டின் மொத்த வருமானத்தில் கூலியின் பங்கு தொடர்ந்து குறைந்துகொண்டே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது, மேற்கு உலக வர்த்தக நாடுகளில் நிலவும் சூழல்.
படிக்க:
♦ சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
♦ விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !
வளரும் நாடுகளில் கூலி மட்டம் மிகப்பெரிய சவாலை சந்திக்கிறது. உலக அளவில் நிலவும் போட்டி சந்தை காரணமாக கூலிமட்டம் தொடர்ந்து குறைவாகவே வைக்கப்படுகிறது. கூலி சிறிது உயர்ந்தாலும் குறைவான கூலி இடங்கள் நோக்கி தொழில்கள் இடம் பெயர்கின்றன. அவ்வாறு இடம் பெயர்ந்தால் மட்டுமே அத்தொழில் போட்டி சந்தையில் பிழைத்திருக்க முடியும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில், கூலி மட்டம் குறைவாக இருக்க இதுவே காரணமாகும். குறைந்த கூலிக்காக தொழில்கள் நாடுவிட்டு நாடு செல்வதால் கூலி உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.
வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நிலவும் இத்தகைய சூழலால், 2002-07 ஆண்டுகளில் கூலியின் பங்கு என்பது உலக அளவில் குறைந்துபோனது. இதே காலகட்டத்தில் உலகப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியைக் கண்டபோதும் கூலியின் பங்கு குறைந்துபோனதுதான் மிகவும் அவலம். (நூலிலிருந்து பக்.156-157)
நூல் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரசஞ்சன் கட்டுரைகள்
ஆசிரியர் : ஜெ. ஜெயரஞ்சன்
வெளியீடு : மின்னம்பலம் பதிப்பகம்,
44, 3-வது மெயின்ரோடு, கஸ்தூரிபா நகர், சென்னை – 600 020.
தொலைபேசி எண் : 044- 24421307 / 24422307
மின்னஞ்சல் : books@minnambalam.com
பக்கங்கள்: 162
விலை: ரூ 150.00
வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க









ஏதோ 17-ம் நூற்றாண்டில் நடந்தது மட்டுமல்ல இன்றும் ஒரு இந்தியரின் வாழ்வில் மிகவும் ஆதிக்கம் செலுத்துகின்ற சக்தி மதமோ, நாடோ அல்ல சாதிதான் என்பதை புரிந்துகொள்ளாத குருடராக நாம் இருக்க முடியாது. பாடநூல்களில் மட்டுமே இருக்கும் இந்துக்களின் நான்கு வருணப்பிரிவுகளும் அதற்கு பொதுப்படையாக கொடுக்கப்படும் தத்துவ விளக்கங்களையும் சாதியாக புரிந்து கொள்ளக்கூடாது. உண்மையில் சாதி இருக்கிறது. அது மனித சமூகப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள் அதனிலும் பிரிவுகள் (இன்னும் சரியாக சொல்வதானால் மரத்தின் கிளைகள் அல்லது இலைகள் என்று கூட நான் கூற வேண்டும்!) என்று அதனுள் ஒவ்வொரு சாதியும் பிளவுப்பட்டு, அதற்குள் கொள்வினை கொடுப்பினை செய்துக்கொள்வதும், சாப்பிடுவதும், குடிப்பதுவுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக சக்தி தான் சாதி.
இந்துக்கள் மீது தேர்தல் வரி விதிக்கப்படுவதை எதிர்த்து அரங்கசீப்பிற்கு எழுதிய கடிதம், சிவாஜியின் தெளிவான தர்க்கம், பொறுமையான மனநிலை மற்றும் அரசியல் ஞானத்தின் தலைசிறந்த படைப்பாகும். அவர் ஒரு இந்து பக்திமான் என்றாலும், ஒரு முசல்மானிடத்திலும் உண்மையான புனிதத்தை அவரால் அடையாளம் காண முடிந்தது. எனவே அவர் பாபா யாகுத் என்ற இசுலாமிய புனித மனிதருக்கு கெலேசியில் தர்க்காவை நிறுவினார். அவரது சேவையில் அனைத்து மதங்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைத்தன. அவர் குவாசி ஹைதர் என்ற முஸ்லீம் செயலாளரை நியமித்தார். சிவாஜியின் மரணத்திற்குப் பிறகு டெல்லி சென்ற அவர் முகலாயப் பேரரசின் தலைமை நீதிபதியாக உயர்ந்தார்.
ஆகையால், எதிர்ப்புகள் அனைத்தையும் அமைதியாக்க முதலில் திறமையான ஒரு பண்டிதரின் ஆதரவைப் பெறுவது அவசியமாக இருந்தது, அப்படி ஒருவர் விஸ்வேஸ்வரில் வாழ்ந்து வருவது தெரிந்தது. பெனாரஸை சேர்ந்த அவரது பட்ட பெயர் காகா பட்டா. சர்ச்சைக்குரிய பெரும் சமற்கிருத அறிஞரான அவருக்கு நான்கு வேதங்களிலும், ஆறு தத்துவங்களிலும், அனைத்து இந்து மத இலக்கியங்களிலும் புலமை இருந்தது. பிரம்ம தேவா என்றும் அந்த காலத்தின் வியாஸர் என்றும் அவர் பிரபலமாக அறியப்பட்டார்.





ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டத்தினை, சோவியத் யூனியனின் தொழிற்புரட்சி என்று அழைக்கலாம். நாடு முழுவதும் விவசாயத்தை இயந்திரமயமாக்குவது அடிப்படையாக இருந்தது. கூட்டுத்துவ பொருளாதாரக் கட்டமைப்பில் இது இலகுவாக சாத்தியமானது. இருப்பினும் ஒரு பிரச்சினை இருந்தது. போதுமான அளவு டிராக்டர்கள், இயந்திரங்கள் இருக்கவில்லை. அவற்றைப் புதிதாக உற்பத்தி செய்ய வேண்டி இருந்தது. அதற்காக புதிய தொழிற்சாலைகளை கட்ட வேண்டும். அதற்குத் தேவையான தொழிநுட்ப நிபுணர்கள், தொழிற்தேர்ச்சி தொழிலாளர்கள் போன்றவற்றுக்கும் பற்றாக்குறை நிலவியது.
































இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது பொஸ்டன் குளோப் நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. வின்செஸ்டர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பிரியா சுந்தரலிங்கம் என்ற 17 வயது மாணவி கடந்த பதினொரு நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை. இலங்கை போரில் சிக்கி தினம் செத்துக்கொண்டிருக்கும் 300,000 தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார். அவருடைய தாயார் தன் மகள் பொஸ்டனில் இருந்தாலும் அவருடைய இதயம் முழுக்க ஈழத்து போரில் அல்லலுறும் மக்களிடம் இருப்பதாகக் கூறுகிறார். பிரியா கடைசி வேளை உணவை பிப்ரவரி இரண்டாம் தேதி இரவு உண்டார். ஒரு மாதகாலம் உணவு உட்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே அருந்தப்போவதாக கூறுகிறார். ‘இனம் அழிகிறது. நிலம் அழிகிறது. ஒரு கலாச்சாரம் அழிகிறது. போரை நிறுத்த உலகம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் எல்லாத்தையும் இழந்துவிடுவோம்’ என்று சொல்கிறார். அவருடன் சேர்ந்து 1100 அமெரிக்கர்கள் ஒருவேளை உணவைத் துறந்திருக்கிறார்கள். பத்தாயிரம் வேளை உணவைத் துறப்பது தங்கள் இலக்கு என்று கூறுபவரிடம் உண்ணாவிரதத்தால் என்ன பயன் என்று கேட்டால் உணவு துறப்பதும் உலகை நோக்கிய ஒருவித குரல்தான் என்று பதில் கூறுகிறார்.
இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. போரில் சிக்கி சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படும் மக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க தீர்மானித்திருக்கிறது. அது ‘நல்வாழ்வு கிராமங்கள்’ அமைக்கும் திட்டம். யாருக்கு நல்வாழ்வு என்பதை அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. யுத்த நிலத்திலிருந்து தப்பி வந்த மக்கள் வன்னிக்கு வெளியே தங்கள் புதுவாழ்வை தொடங்கலாம். வவுனியாவில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நாலு கிராமங்களும், 100 ஏக்கர் நிலப்பரப்பில் மன்னாரில் ஒரு கிராமமும் அமைக்கப்படும். இந்தக் கிராமங்கள் முழுக்க முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் இயங்குவதால் உச்சமான பாதுகாப்புக்கு உத்திரவாதம் உள்ளது என்று அரசாங்கம் சொல்கிறது.


மேற்கு ஐரோப்பாவோடு ஒப்பிடுகின்ற பொழுது அமெரிக்காவில் மத சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் நிலவும் என்று நம்பப்பட்டது. ஆனால் பிராங்க்ளின் பிறப்பதற்குச் சில வருடங்களுக்கு முன்பு அவருடைய சொந்த ஊரான போஸ்டன் நகரத்துக்கு மிக அருகேயுள்ள சேலம் என்ற இடத்தில் “சூனியக்காரிகள்” விசாரிக்கப்பட்டு சிரச் சேதம் செய்யப்பட்டனர். அங்கே வெவ்வேறு மதப்பிரிவுகளைப் பின்பற்றியவர்களும் ஒருவரோடொருவர் கூடி வாழவில்லை; தனித்தனியே பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்; அவர்களுடைய வாழ்க்கையில் மதகுருக்கள், திருச்
அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை நிறுவினார்; முதல் விஞ்ஞானக் கழகத்தையும் பொது நூலகத்தையும் அமெரிக்காவிலேயே முதன்முறையாகத் தீயணைப்புப் படையையும் ஏற்படுத்தினார். அமெரிக்காவில் முதன் முதலாக தேசிய செய்தித்தாள் நடத்தியதும் அவரே. தபால் இலாகாவில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1754-ம் வருடத்தில் நடைபெற்ற அல்பனி காங்கிரசில் அவர் தன்னுடைய மாகாணத்தின் சார்பில் கலந்து கொண்டார். அமெரிக்காவிலுள்ள எல்லாக் குடியேற்றங்களையும் இங்கிலாந்தின் அரசரின் கீழ் – ஆனால் ஓரளவு சுயாட்சி அதிகாரத்தோடு ஒன்றுபடுத்தக் கூடிய திட்டத்தை முன்வைத்தார். ஆனால் லண்டனில் இருந்தவர்கள் அமெரிக்கக் குடியேற்றங்கள் ஒன்று சேர்ந்து விடுமோ என்று மிகவும் அதிகமாக பயந்து கொண்டிருந்த காரணத்தால் அவருடைய திட்டம் நிராகரிக்கப்பட்டது.


இந்திய வரலாறு என்பதே வேத கால நாகரிகம் என்று நிறுவ மோடி அரசாங்கம் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில், அதற்கான எந்தச் சான்றும் கிடைக்காத தருணத்தில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதை போல 2016-ல் கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்பொருள்களை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் கண்டறிந்திருந்தது. விளைவு தொல்பொருள் ஆய்வாளர் கே. அமர்நாாத் ராமகிருஷ்ணனை இடமாற்றம் செய்தது. பின்னர் இப்பணியை தமிழக தொல்பொருள் ஆய்வு மையம் எடுத்துக்கொண்டு நான்காம் கட்ட ஆய்வினை முடித்து “
இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு சீசன் நோய் போல வந்து மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. எத்தனை உயிர்கள் மடிந்தாலும் சமாளிப்பதற்கு ஒரு காரணத்தை எப்போதும் கைவசம் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் காய்ச்சலால் மருத்துவமனையை நோக்கி ஓடி வரும் ஏழைகளின் உயிரைக் காக்க போதிய மருத்துகள்தான் இந்த அரசிடம் இல்லை.
டெங்குவிற்கான தடுப்பூசிகள் ஆராய்ச்சியில் உள்ளது என்பது உண்மை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய பின்னரும் டெங்குவைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கும், நோய்க்கான மருத்துவத்தை துரிதப்படுத்தி பரவலாக்குவதற்கும் அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதே கேள்வி?
மாதவிடாய் என்பதை சுருக்கமாக கூறவேண்டுமென்றால், ஒவ்வொரு மாதமும் இனப்பெருக்க வயதை அடைந்த பெண்ணிற்கு அவளது கருவில் (ovary) இருந்து ஒரு முட்டை (ovum) முதிர்ச்சி அடைந்து உடைந்து வெளியேறும்.
தன்னை சந்திக்க கோடிக்கணக்கான விந்தணுக்களில் ஒன்று வந்தவுடன் அதனுடன் இரண்டறக்கலந்து கருமுட்டையாக மாறிவிடும். இது சுபமான முடிவு.
இதனால் PCOD-ஐ பொருத்தவரை கருமுட்டை சரியாக வெளியேறாது. இதற்காகத்தான் PCOD -க்கு மெட்ஃபார்மின் மாத்திரை பரிந்துரை செய்யப்படுகிறது. பல புதிதாக திருமணம் ஆன வீட்டில் புதுப்பெண் Metformin மாத்திரை விழுங்கினால் அவருக்கு சுகர் இருப்பதாக மாமியார்கள் நினைக்கிறார்கள்.


இங்கு புதிதாக டாஸ்மாக் திறக்கப்படாது என்பதை எழுத்து பூர்வ உத்திரவாக வட்டாட்சியர் தரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது போராட்டம் நடக்கும் பகுதிக்கு வட்டாட்சியர் நேரில் வந்துள்ளதால், அவரிடம் மக்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.