“எங்க ஊர்ல சாவு ஏற்பட்டாலே பகீர்னு இருக்குங்க. துக்கம் ஒருபுறம் இருந்தாலும் ஆதிக்க சாதிக்காரங்க வசவுகளை கேட்டுக்கொண்டு அவர்கள் தெரு வழியாக சவத்தை எப்படி கொண்டு செல்ல போகிறோம் என்று நினைக்கும் போது பகீர்னு இருக்குங்க” என்கிறார் இருளர் குடியிருப்பை சேர்ந்த ஒரு பெண்.
இது நடப்பது திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்தை அடுத்த ரங்காபுரம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்புப் பகுதி. இந்த தீண்டாமைக் கொடுமை குறித்து மேலும் விவரிக்கிறார்கள் இப்பகுதி இருளர் இன மக்கள்.
“எங்களுக்கு மின்சாரம், அம்மா வீடு, கழிவறை என்று எல்லா வசதிகளும் கிடைத்திருக்கிறது. ஆனால், பொது வழியில் பிணத்தைக் கொண்டு போகக் கூடாது என்றும் அதனால் தங்களது ஐஸ்வர்யம் கெட்டுப் போகிறது என்றும் இங்கு இருக்கும் வன்னியர்கள் கூறுகிறார்கள்.
சொல்லப்போனால், நாங்கள் வெடி வைப்பதில்லை பூ தூவுவதில்லை, ஏன் பறை கொட்டுவது கூட இல்லை. அமைதியான ஊர்வலம் செல்லக்கூட அனுமதிக்க அவர்கள் விரும்புவதில்லை. பிணத்தை அங்கேயே நடுரோட்டில் வைத்து விடலாமா என்று கூட தோன்றும் அளவுக்கு அவர்கள் எங்களைத் திட்டித் தீர்க்கிறார்கள்.
அவர்களது மயானத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது எனக்கூறி எங்களுக்கு என்று சிறு பகுதியை ஒதுக்கி கொடுத்தனர். ஆனால் இப்போது அங்கும் அவர்களின் தேவைகளுக்காக மண்ணைத் தோண்டி எடுக்கின்றனர். எங்களது தேவையெல்லாம் பிணத்தைக் (அமைதியாக, வசவின்றி) கொண்டு செல்ல ஒரு சாலை, அடக்கம் செய்து பாதுகாக்க சிறு பகுதி” எனக் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஆரம்ப காலங்களில் சுமார் 25 வருடங்களுக்கு முன் பூப்பறிக்கவும், தங்களது வயல்களில் வேலை செய்யவும் இருளர்கள் தேவைப்பட்டதால் தங்களது குடியிருப்பின் ஒரு ஓரத்தில் குடியேற இருளர்களை வன்னியர்கள் அனுமதித்துள்ளனர்.
தற்போது வயல் வேலைகள் குறைந்துள்ளதாலும், தொழிற்சாலைகளை நோக்கி இருளர்கள் வேலைக்கு சென்று விடுவதாலும் தம்மை மீறி இருளர்கள் வளர்ந்து விடுவதாக எண்ணி அஞ்சுகின்றனர் ஆதிக்க சாதியினர். “ஒரு நாள் முழுவதும் உழைத்தாலும் ஆதிக்கச் சாதியினர் தரும் கூலி ரூ. 80-ஐத் தாண்டாது. அதுவும் வருடத்தில் சில மாதங்களே கிடைக்கும். நாங்கள் வெளியில் சென்று மூட்டை தூக்கினாலும், தொழிற்சாலைக்கு சென்றாலும் ரூ.600 வரை சம்பாதிப்போம்” என்கின்றனர் இருளர் இன மக்கள்.
படிக்க:
♦ சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்
♦ நூற்றாண்டு கால சுடுகாட்டு பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டிய மக்கள் அதிகாரம் !
ஒரே கிராமத்தில் வசித்தாலும், விழாக்காலங்களில் இருளர்கள் தீ மிதிக்கக்கூடாது. ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த தீமிதி திருவிழாவில் ஆதிக்க சாதியினர் தீ மிதித்து அவர்களுக்கு ஏற்பட்ட கால் கொப்புளங்களுக்கு இருளர்கள் தீ மிதித்து தீட்டு ஏற்படுத்தியதுதான் காரணம் எனக் கூறி தடை விதித்துள்ளனர். பொங்கல் விளையாட்டு போட்டிகளில் இருளர் குழந்தைகள் கலந்து கொள்ளவோ அல்லது வேடிக்கை பார்க்கவோ கூட அனுமதி இல்லை.
ஊரின் கடைசிப் பகுதி என்பதால் ஆதிக்கச் சாதியினர் தெருவைக் கடந்துதான் இருளர்கள் வேலைக்குச் சென்று வர வேண்டியுள்ளது. பைக்கில் சென்றால், “இருளப் பசங்க பைக்ல பொறுமையாத்தான் போகணும்”னு சட்டம் பேசுவது, அதிகாலை நான்கு மணிக்கு மேலே ரோட்டில் வழிவிடாமல் கட்டில் போட்டு படுத்துக்கொள்வது என பாதையை பயன்படுத்த முடியாத அளவுக்குத் தொல்லை கொடுக்கின்றனர்.
32 குடியிருப்புகளைக் கொண்டுள்ள இருளர்கள் 100 குடும்பங்களைக் கொண்ட ஆதிக்க சாதியினருக்கு பயப்படுவது இயல்பே. பெரும்பாலானோர் அவர்களின் வீடுகளில் வேலை செய்பவர்களாகவே உள்ளனர்.
“நீங்க ஏன் பயப்படுறீங்க தைரியமா பிணத்தை பொது வழியில் கொண்டு போங்க. திட்டினா கேஸ் கொடுங்க” என்று கூறும் ஆதிக்க சாதியினரும் இருக்கின்றனர்.
வேறு சிலர் “நீங்க எதுக்கு இப்படி அவமானப்படணும்? கலெக்டரிடம் மனு கொடுத்து தனிச் சாலை போட்டுக் கொள்ளுங்கள். நாங்களும் கையெழுத்துப் போட்டுத் தருகிறோம்” என்றும் சொல்கின்றனர்.
இருளர் கிராமத்தில் 20 இளைஞர்கள் வரை இருக்கின்றனர். இவர்களில் எவரும் பத்தாவது தாண்டியது கிடையாது. எழுதப்படிக்க ஓரிருவருக்குத்தான் தெரியும். அதில் ஆறுமுகம் எனும் ஆட்டோ ஓட்டும் வாலிபர் தனது ஊர் மக்களோடு சென்று அதிமுக – எம்.எல்.ஏ ஏழுமலையைச் சந்தித்து தங்களது கோரிக்கையை வாய்மொழியாக கூறியுள்ளனர். மேலும் கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கிறார் ஆறுமுகம்.
இவர்களுக்கு மிக அருகிலேயே நயப்பாக்கம் எனும் இருளர் கிராமம் உள்ளது. அங்கு சுமார் 50 வீடுகள் உள்ளன. அவர்கள் தனிக் கிராமமாக இருப்பதால் இவ்விதம் சாதிய பிரச்சனைகள் ஏற்படுவது இல்லை எனத் தெரிவிக்கின்றனர். மேலும் ரங்காபுரத்தில் உள்ள இருளர்களது பிரச்சனையின் காரணமாக போராட்டம் ஏதேனும் நடக்கும் பட்சத்தில் அவர்களும் அதில் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்பிக்கையுடன் இருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.
“ஊர் மக்கள் போராடி தங்களது கோரிக்கையை பெறத் தயாராக உள்ளனர். ‘நீங்க சொல்லுங்க சார் நாங்க இப்ப கூட போராட்டம் பண்ண தயார்’ என்று சொல்றாங்க. ஆனா அவர்களை வழிநடத்தவும் அரசியல்படுத்தவும் வேண்டி உள்ளது” என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.



உலகத் தொழிலாளர் நாளான மே 1 அன்று மஞ்சுளாவைப் போன்ற ஆயத்த ஆடைத்தொழிலாளர்கள், அரசாங்கத்தின் செயலின்மையை அம்பலப்படுத்தவும் குறைந்த அளவு ஊதியத்தை வழங்க கோரியும் பேரணி – பொது கூட்டத்தை நடத்தினர்.
ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்த கோரி ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நீதிமன்றங்களுக்கும் நடந்திருக்கின்றனர். பெங்களூருவில் குறைந்தது 1,200 ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களானது இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் பணிபுரிவது பெண்கள் தான். அவர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேல் திறன் குறைந்த தொழிலாளர்களாக உள்ளனர்.




விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடி, வாழ்ந்து மறைந்த தோழர் சீனிவாச ராவின் பெயர் தஞ்சை மண்ணில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அடிமைப்பட்டுக் கிடந்த டெல்டா மக்களை தலைநிமிரச் செய்த தன்னிகரில்லாத தலைவர். தன் வாழ்நாளையே பொதுவுடைமைத் தத்துவத்திற்கும், உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்துக் கொண்டவர். இவரைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்.



பிறகு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது ‘மிஷன் சக்தி’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்திருப்பதாக நேரலையில் தோன்றி அறிவித்தார்.

இந்தியாவில் இந்நாளுக்கான சிறப்பிற்கு பல காரணங்கள் உண்டு. தற்போது, இந்திய உழைக்கும் வர்க்கமும் இதர இந்தியாவும் புதிய ஒன்றிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் கட்டத்தில் இருக்கின்றனர். வெற்றி பெரும் கட்சியின்(களின்) கொள்கைகள் அவர்களின் கவனத்திற்குரியதாக இருக்கிறது. பெரிய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களது கோரிக்கைகளை கட்சிகளின் தேர்தலறிக்கையில் இடம் பெற வலியுறுத்தியுள்ளன.
தொழிலாளர் நலச்சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் பெஸ்லே மற்றும் பர்கீஸ் (Besley and Burgess – BB) என்ற வெளிநாட்டு முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரை முதன்மையாக பங்காற்றியது எனலாம். தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்கள்தான் தொழிற்துறை வளர்ச்சி இன்மைக்கும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்காததிற்கும், ஏழ்மைக்கும் காரணம் என்று கூறினர்.
அமைப்புசார் தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 1992-93 களில் 12 விழுக்காட்டிலிருந்து 2016 -ல் 30 விழுக்காடாக அதிகரித்துவிட்டது. தொழிற்சாலையின் மதிப்பில் கூலியின் பங்கு என்பது கடந்த முப்பதாண்டுகளில் குறைந்து கொண்டே வருகிறது. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் உண்மையான கூலி உயராமலே இருக்கிறது. அது கிராமப்புறங்களில் எதிர்மறைக்கு சரிந்திருகிறது. இது பரவலாகி வரும் ஏற்றத்தாழ்வை காட்டுகிறது. பணியிடங்களில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குன்றி வருகிறது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது.
எம் அனைவர் வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு நூலாக அது கருதப்படுகிறது. அதன் பாடல்கள் திருமண மந்திரங்களாகப் பயன்படுகின்றன. அந்நூலின் வரிகளை அழகுற எழுதி சட்டகமிட்டு சுவர்களில் மாட்டுகிறார்கள்; கல்லில் பொறிக்கிறார்கள்; வாகனங்களில் ஒட்டுகிறார்கள்.

எனினும் மொத்தமாகப் பார்க்கும் பொழுது, பெட்டி அரசியல் கணிதத்தின்பால் கொண்டிருந்த தீவிரமான ஆர்வம் அவரைத் தமது பொருளாதாரத் தத்துவத்தை வளர்க்க முடியாதபடி செய்தது ; முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அடிப்படையான விதிகளை அவர் புரிந்து கொள்ள முடியாதபடி செய்தது. ஆய்வுரையிலிருந்த பல சிறப்பான ஊகங்களை அவர் மேலும் வளர்த்துச் செல்லவில்லை. இப்பொழுது எண்கள் அவரைக் கவர்ந்தன. எல்லாவற்றுக்கும் அவையே திறவு கோலாகத் தோன்றின.
பணக்கார நில உடைமையாளரான பெட்டி பெரிய டோபாவும், தரையில் புரளும் பட்டு அங்கியும் அணிந்த போதிலும் (அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதியில் வரையப்பட்ட ஓவியங்களில் ஒன்றில் அவர் இப்படித் தோற்றமளிக்கிறார்) பெருமளவுக்குக் கரடுமுரடான சாமான்யராகவும், ஓரளவுக்குக் கிண்டலான பேச்சுடைய மருத்துவராகவும் கடைசிவரை இருந்தார். அவரிடம் அதிகமான செல்வம் இருந்தது, பட்டங்கள் இருந்தன; ஆனால் அவர் முடிவில்லாதபடி சிந்தனையில் மட்டுமல்லாமல் உடலாலும் பாடுபட்டார்.
அப்புறம் மாடுகளை என்ன செய்வது? கறவை நின்று போன மாடுகளைதான் விவசாயிகள் விற்பார்கள். அதை விற்க முடியாது என்றால்? “ஒரு மாட்டை பராமரிக்க வேண்டுமானால் மாதம் 5 முதல் 7 ஆயிரம் வரை செலவாகும். அந்த பசு பால் தந்தால், அந்த வருமானத்தில் செலவழிக்கலாம். கறவை நின்றுபோன மாடுகளுக்கு எப்படி தொடர்ந்து செலவு செய்ய முடியும்? இதற்கு முன்பு, கறவை நின்ற மாடுகளை விற்றுவிடுவோம். இப்போது இந்த பசு பாதுகாவலர்களின் கண்காணிப்பினால் எந்த வியாபாரியும் மாடுகளை வாங்க முன்வருவதில்லை. வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வெளியூருக்குச் செல்வது மேலும் அபாயமானதாக மாறிவிட்டது. ஆக, தெருவில் விடுவதைத் தவிர எங்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது?” என்று கேட்கிறார்கள் விவசாயிகள்.





வளர்ச்சி -வேலைவாய்ப்பு என்ற கோஷத்தை முன் வைத்து 10.06.2009 அன்று ரூ.19,058 கோடியில் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 59% நிதியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனமும் (Japan International Cooporation Agency – JICA) மத்திய அரசு 20%, மாநில அரசு 21% நிதியையும் வழங்கின. இதற்காக 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சென்னையில் வாழ்ந்த பல்வேறு குடிசைவாசிகள், வணிக வளாகங்கள், நடுத்தர மக்களின் குடியிருப்புகளை விழுங்கிவிட்டு பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது சென்னை மெட்ரோ ரயில். தற்போது அதன் நிரந்தரப் பணியாளர்களையும் விழுங்கத் துடிக்கிறது மெட்ரோ நிர்வாகம்.
இதனை எதிர்த்து சி.ஐ.டி.யூ சங்கத்தலைவர் தோழர் சௌந்தராஜன், “நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படும் வகையில் தாங்கள் அவுட் சோர்சிங் முறையில் ஆட்களை எடுப்பதாக தெரிய வருகிறது. இதனை பரிசீலிக்குமாறு கேட்டு கடிதம் எழுதுகிறார்.






