Thursday, June 25, 2026
முகப்பு பதிவு பக்கம் 147

மகாராஷ்டிரா: தலைவிரித்தாடும் காவி பாசிசம்!

0

காராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இந்துத்துவ கும்பல்களால் 50 பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. இப்பேரணிகள் அனைத்திற்கும் பொதுவானது என்னவென்றால் “லவ் ஜிஹாத், நில ஜிஹாத், கட்டாய மதமாற்றம், முஸ்லீம்களை பொருளாதார ரீதியாக புறக்கணிப்பது” என்ற இஸ்லாமிய வெறுப்பு தான்.

கடந்த மார்ச் 12 அன்று, மும்பையின் மிரா சாலையில் (Mira Road) ஒரு பெரும் மக்கள் கூட்டம் காவித் தொப்பிகள் அணிந்தும் கைகளில் காவிக் கொடிகளை ஏந்தியும் அணிவகுத்துச் சென்றது. அங்கு இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் உரைகள் பேசப்பட்டன.

பேரணியில் உரையாற்றிய பேச்சாளர்களில் ஒருவர் காஜல் ஹிந்துஸ்தானி. அவருக்கு புளூ டிக் ட்விட்டர் கணக்கு மற்றும் 95.4 ஆயிரம் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இதில் பிரதமர் நரேந்திர மோடியும் அடக்கம். அவர் பேசுகையில் “இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன – லவ் ஜிஹாத், நில ஜிகாத் மற்றும் மதமாற்றம். இந்த மூன்று குடைச்சல்களுக்கும் ராமர் வழங்கிய தீர்வு உள்ளது. அதை அரசியல் தலைவர்கள், உச்சநீதிமன்றம் மற்றும் ஊடகங்களால் கூட தடுக்க இயலாது. அந்தத் தீர்வுதான் பொருளாதாரப் புறக்கணிப்பு” என்று உரையாற்றினார்.

மேலும், “முஸ்லீம் விற்பனையாளர்கள் நஞ்சு கலந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்கிறார்கள். இந்த ஜிகாதி விற்பனையாளர்களை புறக்கணித்து, கூடுதல் செலவு செய்து இந்து விற்பனையாளர்களிடம் வாங்குங்கள். நீங்கள் செலவு செய்யும் பணம் ஒரு இந்துவின் வீட்டிற்குச் செல்லட்டும்” என்று பேசினார்.

“மிரா ரோட்டில் அமைந்துள்ள நயா நகர் (Naya Nagar) பகுதி ஜிஹாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காரணத்தால் அங்கு இந்துக்கள் தஞ்சம் அடையக்கூட இடமில்லை” என்றும் ஹிந்துஸ்தானி கூறினார்.


படிக்க: ‘வீட்டில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள்’- இந்துமதவெறியை கக்கும் பாஜக எம்.பி. பிரக்யா!


மார்ச் 12 அன்று நடந்த பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த மிராவின் சுயேச்சை எம்.எல்.ஏ கீதா ஜெயின், “மிரா – பயாந்தர் (Mira – Bhayander) புறநகர்ப் பகுதியானது முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட பகுதியாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, மிரா – பயந்தரில் வசிப்பவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழில் அவரது குடியிருப்பின் பெயர் ‘வங்காளதேச ஜோபாட்பட்டி’ (Bangladesh Zopadpatti) என்று இருந்தது; மற்றொருவரின் மின்சாரக் கட்டண ரசீதில் ‘சோட்டா பாகிஸ்தான்’ (Chhota Pakistan) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை தற்செயல் நிகழ்வுகள் அல்ல” என்று உள்நோக்கம் கற்பித்துப் பேசினார்.

இந்தப் பேரணியில் விஷ்வ ஹிந்து பரிஷத் – பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நித்தேஷ் ரானே ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நவம்பர் 20, 2022 தொடங்கி, மகாராஷ்டிரா முழுவதும் கிட்டத்தட்ட 36 மாவட்டங்களில் குறைந்தது 50 “இந்து ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சா” (Hindu Jan Aakrosh Morcha) பேரணிகள் நடைபெற்றுள்ளன. தில்லியில் ஷ்ரத்தா வாக்கர் 35 துண்டுகளாக அவரது கூட்டாளி ஆப்தாப் பூனாவாலா-வால் வெட்டப்பட்ட சம்பவம் அனைவரையும் பதபதைக்க வைத்தது. அச்சம்பவத்தை பின்னணியாக வைத்து முதல் பேரணி பர்பானி (Parbhani) மாவட்டத்தில் நடத்தப்பட்டது. லவ் ஜிகாத்தின் ஆபத்துகள் குறித்து இந்து சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பேரணி நடத்தப்படுவதாக இந்து மதவெறியர்கள் தெரிவித்தனர்.

இந்து ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சாவின் பதாகையின் கீழ் இந்துத்துவா அமைப்புகளின் கூட்டமைப்பான சாகல் ஹிந்து சமாஜால் (Sakal Hindu Samaj) இப்பேரணிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. “இந்த பேரணிகளின் நோக்கம்‌, பசுவதை, லவ் ஜிஹாத் மற்றும் மத மாற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகும். இந்தச் சட்டங்களை நாடு முழுவதும் அமுல்படுத்தினால் மட்டுமே இந்தப் பேரணிகளை நிறுத்துவோம்” என்று ஏற்பாட்டாளர்களான காவி குண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

“நான் ஒரு இந்து என்பதால் நானும் ஆபத்தில் இருக்கிறேன். பச்சை நிற ஆடைகள் அணிவதற்கு என் கணவர் தடை விதித்துள்ளார். அது ஒரு முஸ்லீம் நிறம்” என்கிறார் பேரணியில் கலந்து கொண்ட இந்துத்துவ சித்தாந்தம் பற்றி அறிந்திராத பெண்மணி ஒருவர்.

இந்துத்துவ சித்தாந்தத்தை அறிந்திராதவர்கள்கூட காவிகளின் பின்னால் அணிதிரள்கிறார்கள் என்பதுதான் பேராபத்து. “வலதுசாரி பேரணிகளில் பெண்கள் அதிக அளவில் கலந்துகொள்வது ஒரு புதிய போக்கு” என்று வி.எச்.பி (மகாராஷ்டிரா பிரிவு) பொதுச் செயலாளர் சங்கர் கைகர் ‘பெருமித’ப்பட்டுக்கொள்கிறார். “லவ் ஜிஹாத் தாக்குதலுக்கு தாங்களும் ஆளாக நேரிடும் என அஞ்சுவதால்தான் பெண்கள் பேரணிகளில் அதிக அளவில் கலந்து கொள்கிறார்கள்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


படிக்க: ‘கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் எப்போது கொல்வீர்கள்’ – வெறுப்பு விஷத்தை கக்கும் காவி குண்டர்கள்!


இதேபோல, பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 4,000 பேர் கலந்து கொண்ட ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சா பேரணி ஒன்று கடந்த பிப்ரவரி 26 அன்று வாஷி (Vashi) மற்றும் நவி மும்பையில் (Navi Mumbai) நடைபெற்றது. கடந்த ஜனவரியில், தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் இருந்து பிரபாதேவியில் உள்ள கம்கர் மைதானத்திற்கு அணிவகுத்து சென்ற பேரணியில் ஏறக்குறைய 10,000 பேர் கலந்துகொண்டு முஸ்லீம்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

அரசின் துணையோடு காவி குண்டர்களால் நடத்தப்படும் இந்த மதவெறி பேரணிகள் நீதிமன்றங்களின் கண்களுக்கு தெரிவதில்லை. முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை சுட்டிக்காட்டி பேரணிகளுக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஒருபுறம், மகாராஷ்டிரா மாநிலத்தின் ஏக்நாத் ஷிண்டே அரசால் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; கைதுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

மற்றொருபுறம், மார்ச் 9 அன்று அவுரங்காபாத் (Aurangabad) நகரின் பெயரை சத்ரபதி சாம்பாஜி நகர் (Chhatrapati Sambhaji Nagar) என மாற்றுவதற்கு எதிராக அமைதியான முறையில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் 1,500 பேர் கலந்து‌கொண்டனர். அதில் பலர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

லவ் ஜிஹாத்துக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்ற மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக துணை முதல்வர் ஃபட்னாவிஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், போலீசுத்துறைக்கு லவ் ஜிஹாத் குறித்து விழிப்புணர்வு ஊட்டுமாறு போலீசு தலைமை இயக்குநருக்கு அறிவுறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 2022 இல் இந்துமதவெறி சிவசேனாவை உடைத்து வெளியேறி பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததிலிருந்து மகாராஷ்டிராவில் காவிகளின் அச்சுறுத்தல் பெருமளவு அதிகரித்துள்ளது. உத்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத்தைப் போல, ‘இந்து ராஷ்டிர’த்தின் ஒரு மாதிரியாக உருவெடுத்து வருகிறது.

பொம்மி

தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் தி.மு.க அரசு!

தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க – தி.மு.க இடையே போட்டி!

ந்தியாவிலேயே மே தினத்துக்கு அரசு விடுமுறை அறிவித்த ஆட்சி; மே தினத்தியாகிகள் நினைவாக சென்னையில் “மே தினப் பூங்கா” அமைத்த ஆட்சி என்றெல்லாம் தி.மு.க-வினர் அடிக்கடி பீற்றிக் கொள்வார்கள். ஆனால், கார்ப்பரேட் சேவையில் எந்தக் கட்சி ஆட்சியும் ஒன்றாகவே இருக்கிறது. கட்சிகளது ஆட்சி என்று வெளியில் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அதிகாரிகள் தான் ஆட்சியை நடத்துகின்றனர். முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவே ஆட்சியை நடத்துகின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணமாக, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதாவைச் சொல்லலாம்.

1948 ஆம் வருடத்திய தொழிற்சாலைகள் சட்டம் உள்ளிட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களை சுருக்கி 4 தொகுப்புகளாக்குவது (Labor Codes) என்கிற தொழிலாளர் விரோத நடவடிக்கையை ஏற்கனவே நாடாளுமன்ற ஒப்புதலுடன் சட்டமாக்கி தயார் நிலையில் வைத்துள்ளது. தொழிற்சாலைகள் சட்டம் உள்ளிட்ட 13 சட்டங்களை உள்ளடக்கிய பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் தொகுப்பு, 2020-ஐ கடந்த செப்டம்பர் 2020-ல் ஒன்றிய அரசு சட்டமாக்கினாலும் அமலாக்கம் செய்யாமல் தள்ளி வைத்துள்ளது.

சட்டத் தொகுப்பு (code) அமலாக்கம் தாமதமானாலும் கார்ப்பரேட் செவைகள் தடையின்றி நடக்க வேண்டும் என்பதில் அரசு எந்திரம் குறியாக இருக்கிறது. தொழிற்சாலைகள் சட்டம் மத்திய சட்டம் என்கிற போதிலும், பிரிவு 127-ல் மாநில அரசுகளுக்கு சில ‘உரிமைகள்’ வழங்கப்பட்டுள்ளது.

பிரிவு 127-ல் கண்டுள்ள ‘உரிமைகளின்படி’ மாநில அரசானது தனது மாநிலத்துக்குட்பட்ட ஆலை அல்லது ஆலைகளின் குழு (factory or group of factories) ஆகிய எதிலும் மிகை நேரப்பணியை கவனத்தில் கொண்டு வேலைநேரத்தை தளர்த்துதல் (flexible working hours) பணியிடை ஓய்வு நேரத்தை கணக்கில் கொண்டு வேலைநேரத்தை பரவலாக்குதல் (spread-over hours) ஆகியவற்றை செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தைத் தான் தமிழ்நாடு அரசு பயன்படுத்தியுள்ளது.

படிக்க : இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிகப்பு அலை பாடல் | வீடியோ

தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ள தொழிற்சாலைகள் சட்டத் திருத்தமானது இச்சட்டத்தின் பிரிவு 51, 52, 54, 55, 56 அல்லது 59 ஆகியவற்றை தளர்த்தி ஒரு தொழிற்சாலை அல்லது தொழிற்சாலைகளின் குழுக்கள் ஆகியவற்றுக்கு விலக்கு (exemption) அளிக்க வழிவகை செய்துள்ளது.

இந்த விலக்கு எந்தெந்த தொழிற்சாலைகள் அல்லது தொழிற்சாலைகள் குழுவுக்கு எந்தெந்த வகையில் தரப்படும் என்பதை அரசு அடுத்தடுத்த நாட்களில் முடிவு செய்யும். இந்த விலக்கினால் தொழிலாளர்களுக்கும் – குறிப்பாக – பெண் தொழிலாளர்களுக்கு – நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் நன்மை ஏற்படும் என்று வழக்கம் போல் புருடா விட்டுள்ளனர். ஆனால், இந்த சட்டத்திருத்தமானது தளர்வாக்கப்பட்ட வேலைநேரம், பரவலாக்கப்பட்ட வேலைநேரம் என்கிற பெயரில் 8 மணிநேர உரிமையை முற்றிலும் பறிக்கக் கூடியது. தொழிற்சங்க உரிமையையும், அதன் உடன் பிறந்த கூட்டுப்பேர உரிமையையும் பறிக்கக் கூடியது. நிரந்தர வேலை என்பதையும் பறிக்கக் கூடியது.

தளர்வாக்கப்பட்ட வேலைநேரம் என்பதன் பொருள் ஷிப்ட் நேரத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம். அப்படி மாற்றியமைக்கப்பட்ட ஷிப்ட் நேரத்தில் இடை, இடையே ஓய்வுகள் (இடைவெளி) தரப்பட்டு மீண்டும் வேலையை தொடர்ந்து செய்யலாம் என்பதே பரவலாக்கப்பட்ட வேலைநேரம் என்பதன் பொருள்.

உதாரணமாக, ஒரு கணக்கை பார்க்கலாம். இதில் எண்ணால் குறிப்பிடுவதை வேலைநேரமாகவும், எழுத்தால் குறிப்பிடப்படுவதை இடைவெளி நேரமாகவும் எடுத்துக் கொண்டால்,

3 + மூன்று + 3 + மூன்று + 3 என 12 மணி நேரத்துக்கும்,

4 + இரண்டு + 2 + இரண்டு + 2 என 12 மணி நேரத்துக்கும்

3 + இரண்டு + 3 + இரண்டு + 2 என 12 மணி நேரத்துக்கும்

வேலைநேரத்தை பரவலாக்க (spread over) செய்ய முடியும். இந்த வேலை நேரத்தை உற்பத்திப் பொருளின் தன்மை, சந்தையின் தன்மை, உற்பத்தி அல்லது பணியில் ஈடுபடுவோரின் தன்மை ஆகியவற்றுக்கேற்ப 24 மணிநேரத்துக்கும் மாற்றியமைக்க தளர்த்தப்பட்ட வேலைநேரம் (flexible working hours) கட்டமைக்கப்படும். இது தொழிற்சாலைகளுக்கு மட்டும் பொருந்தக்கூடியதாக இருக்காது. கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்தையும் (Shops and Establishment Act) உள்ளடக்கிக் கொண்டால், வங்கிகள், இன்சூரன்ஸ், ஐ.டி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (I.T & ITES) ஆகிய அனைத்துக்கும் இது பொருந்தக்கூடியது.

காலை 6 முதல் மாலை 6 வரை அல்லது மாலை 6 முதல் காலை 6 வரை; தலா 12 மணிநேரம் ஒரு தொழிலாளியின் வேலைநேரம் நீடிக்கும். இடைப்பட்ட உணவு நேரம், தேநீர் இடைவெளி நேரம் (தலா 15 நிமிடங்கள், இரண்டு முறை) ஆகியவை தொழிலாளியின் சொந்தக்கணக்கில் சேர்க்கப்படும். அதாவது, உணவு நேரம், தேநீர் நேரம் ஆகியவற்றை இடைவெளி நேரக்கணக்கில் சேர்த்து விட்டால் சிந்தாமல், சிதறாமல் எட்டு மணி நேர உழைப்பை முதலாளி அறுவடை செய்து கொள்வான். தினசரி 12 மணி நேரம் ஆலையோடு பிணைக்கப்பட்டிருந்தாலும் 8 மணிநேர வேலைக்கு அப்பால் வேலை செய்தால் தரப்பட வேண்டிய மிகைநேரப் பணிக்கான இரட்டிப்பு ஊதியத்தை முதலாளி தர வேண்டியதில்லை. வேலை நேரம் என்று கணக்கிட்டால் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம்; வாரத்துக்கு 48 மணிநேரம் என்கிற கணக்கு சரியாகி விடும்.

இந்த இடைவெளி நேரத்தில் நிரந்தரத் தொழிலாளியை உற்பத்தியில் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, காண்டிராக்ட், பயிற்சி மற்றும் நீம் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கான சாத்தியமே அதிகம். பகுதிநேர, பீஸ் ரேட் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்வதற்கும் இந்த சட்டத்திருத்தம் கதவைத் திறந்து விட்டுள்ளது.

“வீட்டிலிருந்து பணி” என்கிற நவீனரக சுரண்டல் முறையை கார்ப்பரேட்டுகள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் தளர்த்தப்பட்ட, பரவலாக்கப்பட்ட வேலைநேர சட்டத்திருத்தம் தீவிரமாக்கியுள்ளது. ஒரு ஷிப்ட்டுக்கான நிரந்தரத் தொழிலாளியை மட்டும் வைத்துக் கொண்டு மூன்று ஷிப்ட்டுகளையும் ஓட்ட வைக்கும் திட்டத்துக்கான முன்னேற்பாடே இந்த சட்டத் திருத்தம்.

இந்த சட்டத்திருத்தம் மூலம் நிரந்தரத் தொழிலாளர்களது எண்ணிக்கை சொற்பமாகக் குறைவதோடு, தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதும், தமது பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதும் சாத்தியமற்றதாகிறது. இதன் விளைவாக, தொழிற்சங்க செயல்பாடும், கூட்டுப்பேர உரிமையும் தேவையற்றதாகி விடுகிறது.

இதில், தொழிலாளருக்கு நன்மை கிடைக்குமாம். குறிப்பாக, பெண் தொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்குமாம். எப்படிப்பட்ட நன்மை கிடைக்கும்? பெண் தொழிலாளர்கள் 3 வகையான ஷிப்ட்டுகளிலும் ஈடுபடுவதற்கு குடும்பப் பராமரிப்பு வேலைகள் தடையாக இருக்கிறது. பெண் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பது, வேலைநிறுத்தம் செய்வது போன்ற ‘இடையூறுகள்’ எதையும் தரமாட்டார்கள். அப்படியே போராட நேர்ந்தாலும்  குடும்பத்தினரே போராட்ட நடவடிக்கைகளை தடுத்து விடுவார்கள்.

இதெல்லாம் முதலாளிகள் தெள்ளத்தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். பெண் தொழிலாளர்கள் குடும்பப் பராமரிப்புக்கு நேர இடைவெளி கொடுத்தால் நாள் முழுக்க வேலை செய்வது சாத்தியமானது தான் என்பதையும் முதலாளிகள் நன்கறிவர். பெண் தொழிலாளர்களுக்கு இடைவெளி தேவைப்படுகின்ற நேரம் காலை 6-10 மற்றும் மாலை 6-8 என்பதுதான். இந்த கால இடைவெளியில் ஓய்வு கிடைத்துவிட்டால் எந்த தொந்தரவும் இன்றி இரவு 10 மணி வரை வேலை செய்வார்கள்.

இப்படி, இடைவெளி நேரத்தில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் மலிவான, தொந்தரவு செய்யாத, அதட்டலுக்கு அடங்கிப்போகும் உழைப்பாளிகள் கிடைத்து விடுவார்கள். சில துறைகள் தவிர, பொதுவில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தக் கூடாது என தற்போதைய தொழிற்சாலைகள் சட்டம் சொல்வதை அடித்து நொறுக்குகின்றனர். இதுதான் இந்த சட்டத் திருத்தம் பெண் தொழிலாளர்களுக்கு செய்யப்போகும் ‘நன்மை’.

இதில், இன்னொரு உள்குத்தும் இருக்கிறது. திருப்பெரும்புதூர், ஓசூர், கோவை, திருப்பூர் போன்ற தொழில் மைங்களில் பெண் தொழிலாளர்கள் தங்குமிடத்தை கார்ப்பரேட்டுகள் சொந்த ஏற்பாட்டில் செய்து கொடுக்கின்றனர். சமீபத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 60,000 தொழிலாளர்கள் ஒரே இடத்தில் தங்குவதற்கான கட்டுமானத்தை திருப்பெரும்புதூர்-ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கட்டி வருகின்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் வந்தது. பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வெவ்வேறு சைஸ்களில் இது போன்ற தங்குமிடங்களை கட்டி வருகின்றன.

இத்தகைய தங்குமிடங்கள் உற்பத்தி ஸ்தலத்தை ஒட்டியே கட்டப்படுகின்றன. புதிய தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம் மூலமாக பரவலாக்கப்பட்ட, இடைவெளிகள் கொண்ட -வேலைநேரம் கொண்ட- ஷிப்ட்டுகள் உருவாக்கப்பட்டால், பெண் தொழிலாளர்கள் இடைவெளி நேரங்களில் தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதும், இடைவெளி நேரம் முடிந்த பிறகு மீண்டும் பணியிடங்களுக்கு அழைத்து செல்லப்படுவதும் சாத்தியமான ஒன்றாகி விடுகிறது. இது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொருந்தக்கூடிய பார்முலா தான்.

ஏற்கனவே சொல்லப்பட்ட பகுதிநேர, பீஸ்ரேட், காண்டிராக்ட், நீம் மற்றும் அவுட்சோர்ஸிங் வேலைமுறை மூலம் தொழிலாளியை தனித்தனியாக பிரித்து வைத்து உற்பத்தியை தீவிரப்படுத்தவே  மேற்படி சட்டத்திருத்தம்.

இதிலும் கூட 21..4.2023 அன்று ஒரு நாடகம் நடந்திருக்கிறது. 12.4.2023 அன்று மசோதா முன்வைக்கப்பட்ட தளர்த்தப்பட்ட, பரவலாக்கப்பட்ட வேலைநேரம் என்கிற முன்மொழிதல் பின்னுக்குத்தள்ளப்பட்டது. வாரத்தில் 4 நாட்கள் தலா 12 மணிநேரம் வேலை செய்துவிட்டு எஞ்சிய 3 நாட்கள் ஓய்வெடுக்கலாம் என்கிறார், அமைச்சர். ஒரு நாளுக்கு 6 முறை சாப்பிட்டுவிட்டு அடுத்த 3 நாட்கள் பட்டினி கிடப்பது என்பதைப் போன்றிருக்கிறது.

12 மணிநேரம் வேலை செய்தால் தொழிலாளிக்கு வருவாய் பெருகும் என்றொரு முத்தான அறிவுரையை சொல்லி இருக்கிறார், அமைச்சர் பெருமகன். இது ஐ.டி ஊழியர்களுக்குத் தான் என்றும் அருளி இருக்கிறார். இதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக் கொண்டால், வேறு பல கேள்விகள் எழுகின்றன.

ஐ.டி துறையிலோ, தொழிற்பூங்காக்களிலோ வேலை செய்யும் எவருக்கும் வீட்டு வாசல்படியில் பணியிடம் இல்லை. குறைந்தபட்சம் 90 நிமிடங்கள் பிக்கப் பஸ்சில் சென்றாக வேண்டும். காலை 8 மணி ஷிப்ட்டுக்கு 6 மணிக்கே கிளம்ப வேண்டும். காலை 8 மணிக்கு ஷிப்ட் துவங்கினால் இரவு 8 மணிக்கு முடியும். அதன் பிறகு பிக்கப் பஸ் ஏறினால் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்துவிடலாம். பின்னர் சாப்பிட்டு தூங்கச் சென்றால் மறுநாள் காலையில் 5 மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும்.

6 மணிநேரம் கூட தூங்க முடியாது என்கிறபோது குடும்பம் அல்லது சமூகத்துடன் எப்படி உறவாட முடியும்? எந்திரத்தை விட மோசமாக இருக்கிறதல்லவா? அடுத்ததாக கூடுதல் வருவாய் விசயத்துக்கு வருவோம். எந்திரத்தொடு எந்திரமாய் உழைத்து, 40 வயதும்குள் மூட்டுகள் தேய்ந்து, முதுமை அடைந்து சாகச் சொல்கிறார்கள்.

12 மணிநேர வேலை என்பது கட்டாயமல்ல; தொழிலாளி ஒப்புக் கொண்டால் செய்யலாம் என்கிற பம்மாத்தும் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த ஆலையில் தொழிலாளர்கள் வேலைநேரத்தை தீர்மானிக்கும் அதிகாரத்துடன் இருக்கிறார்கள்? இதெல்லாம் தொழிலாளர் துறை அதிகாரிகள் அமைச்சருக்கு சொல்லமாட்டார்களா? கார்ப்பரேட்டுகளே அரசை நடத்துகிறார்கள் என்கிறபோது அமைச்சர் பதவி வெற்று தானே?

படிக்க : தமிழ்நாட்டில் சாதி – மத கலவரங்களுக்கு திட்டமிடும் பாஜக! | தோழர் மருது | வீடியோ

12 மணிநேர வேலையை நடைமுறைப்படுத்தி அதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் சொல்கிறார்கள். இவர்கள் சொல்லும் அனுபவத்தை யாரிடம் கேட்டு பெறப்போகின்றனர்? தொழிலாளியிடமா? தொழிற்சங்கத்திடமா? முதலாளிகளிடமா? அப்படி அனுபவத்தை தொகுப்பதற்கான காலக்கெடு என்ன? அனுபவத் தொகுப்புக்கான குழு அமைக்கப்பட்டிருக்கிறதா? அனுபவத்தொகுப்பு குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் யாரும் பதில் சொல்லப்போவதில்லை. மாறாக, ஏதாவது சொல்லி 12 மணிநேர வேலையை நம் தலைமீது திணிப்பது மட்டுமே தி.மு.க அரசின் நோக்கமாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநில அரசும் இதேத் திட்டத்தை சட்டமாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

44 தொழிலாளர் சட்டங்களை நாடாளுமன்றத்தில் 40 நொடிகளில் ஒழித்துக்கட்டிய மோடி அரசுக்கும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலமாக தொழிற்சாலைகள் சட்டத்திருத்ததை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின் அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? ஒன்றிய அரசு, மத்திய தொழிற்சங்கங்களுடன் விவாதிக்காமல் தொழிலாளர் உரிமைகளை பறித்ததற்கும், அதே போக்கில் எந்த தொழிற்சங்கத்தின் கருத்தையும் கேட்காமல் தமிழ்நாடு அரசு முடிவெடுத்ததற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஒன்றிய அரசோ, மாநில அரசோ – எந்த அரசானாலும் மக்கள் உரிமையைப் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. அரசுகளின் பார்வையில் கார்ப்பரேட் நலன் தான் முக்கியமானதாகத் தெரிகிறது. ஏனெனில், இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. ஆனால், நாம் காலனியாதிக்க காலத்திலேயே போராடிப் பெற்ற உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. நமது உரிமைகளைப் பாதுகாக்க சங்க – அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்று சேர அறைகூவல் விடுக்கிறோம்.


இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
தமிழ்நாடு. செல் : 7397404242.

இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிகப்பு அலை பாடல் | வீடியோ

வினவு யூடியூப் சேனலில் ம.க.இ.க சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் “இவங்க எல்லாம் சங்கிங்க” பாடல் காணொலி வடிவில்

இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிவப்பு அலை | Red Wave Song

பாருங்கள்! பகிருங்கள்!!

“ஸ்டிங் ஆப்பரேஷன்”: ஊடக புரோக்கர்களும் ஊடுருவும் பாசிசமும்!

டந்தாண்டு கே.டி.ராகவன் காணொளியை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், “மார்ஸ் தமிழ்நாடு” என்ற தனது யூடியூப் சானலில், “ஸ்டிங் ஆப்பரேஷன்” என்ற பெயரில் பல காணொளிகளை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட யூடியூபர்கள் பணம், சாராயம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு 2024 தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் எதிராகவும் வேலைசெய்வதற்காக பேரம் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அந்த காணொளிகளில், நியூஸ் கிளிட்ஸ் ஐயப்பன் ராமசாமி, சத்தியம் தொலைக்காட்சி முக்தார், ஆதன் டிவி மாதேஷ், பேசு தமிழா பேசு ராஜவேல் நாகராஜன், அரசியல் விமர்சகர் என்று சொல்லிகொள்ளும் ரவீந்திரன் துரைசாமி, சங்கி கிஷோர் கே.சுவாமி உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்தது பெரும் பேசுபொருளானது.

இது யூடியூப் வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில யூடியூப் சேனல்கள் நேரடியாக மக்களிடம் கருத்து கேட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த பலரும் பத்திரிகைத்துறை மீது ஏற்பட்ட அதிருப்தியையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள், “இதழியல் துறையின் வெற்றிமாறனாக ஐயப்பனை பார்த்தோம்”, “முக்தார், ராஜவேல் நாகராஜன் போன்றோர் அப்பட்டமாக காசுக்கு மாரடிக்கும் ஆட்கள் என்பது தெரியும், ஆனால்  ஐயப்பன், உமாமகேஸ்வரன் ஆகியோர் இவ்வாறு செய்ததுதான் அதிர்ச்சியாக உள்ளது” போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

தன்னை திராவிட சித்தாந்தம் கொண்டவராகக் காண்பித்து கொள்ளும் ஐயப்பன் ராமசாமி, பிராமண சங்க தலைவரிடம் சமஸ்கிருத மந்திரம் ஒப்புவித்து “நான் ஏன் அர்ச்சகர் ஆகக் கூடாது” என்று கேட்டது; பைக் சாகசம் செய்யும் இளைஞர்களின் நாயகன் டி.டி.எஃப் வாசனை கேள்விகளால் திக்குமுக்காடச் செய்து விரட்டியது; பகாசுரன் பட இயக்குனர் மோகன்ஜி, மதுவந்தி, அமர் பிரசாத் ரெட்டி போன்றோரை அம்பலபடுத்தியது – போன்ற நேர்காணல்கள் மூலம் இணையத்திலும் இளைஞர்களும் மத்தியிலும் பிரபலமடைந்தவர்.

படிக்க : ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி: தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது!

தன்னிடம் பேட்டி காண வருபவர்கள கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பவராகவும், அவர்களது வாயாலேயே அவர்களை அம்பலப்படுத்திக் காட்டுபவராகவும் அறியப்பட்டவர் சத்தியம் தொலைக்காட்சி முக்தார். ஐயப்பன் ராமசாமியைப் போல, முக்தார் நடுத்தர வயதினர் மத்தியில் செல்வாக்கு கொண்டவராக விளங்கினார்.

மதனின் காணொளியில் சிக்கியவர்களில் தங்களை முற்போக்காளர்களாக காட்டிகொண்டவர்கள் ஒரு பிரிவினர் என்றால், ஏற்கெனவே “சங்கிகள்” “கூலிக்கு மாரடிப்பவர்கள்” என்று அம்பலப்பட்டு போனவர்கள் மற்றொரு பிரிவினர். கிஷோர் கே.சாமி, ராஜவேல் நாகராஜன், ரவீந்திரன் துரைசாமி, மாதேஷ் ஆகியோர் இந்த வகையினர்.

இந்த இருபிரிவினருக்கு இடையிலும் கருத்தியில் வேறுபாடுகளெல்லாம் ஒன்றும் கிடையாது, கூலிக்கு மாரடிப்பதில் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதை மதனின் ஸ்டிங் ஆபரேஷன் அம்பலப்படுத்தியிருக்கிறது.

சங்கிகளை தனது வாதத் திறனால் வாயடைக்க வைப்பவர் என்று பார்க்கப்பட்ட ஐயப்பனை அவ்விடத்திற்கு அழைத்து வந்ததே சங்கி கிஷோர் கே.சாமி என்பது அம்பலமாகியிருக்கிறது. மிகவும் பிரபலமடைந்த ஐயப்பன் – அமர் பிரசாத் ரெட்டியுடனான நேர்காணலில், ஐயப்பனுக்கு கேள்வி எழுதித் தந்ததும், அமர் பிரசாத் ரெட்டிக்கு பதில் எழுதித் தந்ததும் கிஷோர்.கே.சாமிதான் என்று அவர்களே சொல்லி சிரித்துகொள்ளும் காட்சி மதனின் காணொளிகளில் இடம்பெற்றிருந்தது.

இவர்கள் அனைவருமே பணம் வாங்கிகொண்டு வெவ்வேறு கட்சிகளுக்கு மறைமுகமாக வேலை செய்தவர்கள். அதன் தொடர்ச்சியாகவே தற்போது இவ்விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.

மதன் வெளியிட்ட காணொளியில், ஐயப்பன் ராமசாமி பேசுகையில் கடந்த தேர்தலில் அவரும் நியூஸ் க்ளிட்ஸ் சேனலும் அ.தி.மு.க-விற்கு வேலை செய்துள்ளது என்பதை போட்டு உடைத்தார். தற்போதும் பணம் கொடுத்து குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதற்கு அவர் ஒப்புகொண்டார்.

அதேபோல ஆதன் டிவி மாதேஷ், “வாழ்க்கையில் ஒரு நிலையை அடைய 2024 தேர்தலை நம்பிதான் நான் இருக்கிறேன்” என்று வெளிப்படையாகக் கூறுகிறார். மேலும், தேர்தல் சமயத்தில் சேனலோடு சேர்ந்து 4 கட்சிகளிடம் 1 கோடியே 20 லட்சம் பெற்று வேலை செய்ததாகவும் கூறுகிறார்.

சாதிவெறியன் ரவீந்திரன் துரைசாமி மோதிரத்தை வங்கி கொண்டு, வேலை செய்ய ஒப்புகொண்டதோடு தனக்கு யாரோடெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை பட்டியலிடுகிறார். மேலும், முக்தார் குடித்துவிட்டு கொஞ்சமும் பத்திரிகை அறமின்றி வக்கிரத்தை கக்கினார்.

இந்த யோக்கியவான்களின் குட்டுகளை மதனின் காணொளிகள் அம்பலப்படுத்திய நிலையில், எல்லாரும் வெளியேவந்து தனித்தனி விளக்கம் தந்தனர்.

ஐயப்பன் ராமசாமி அவர்களின் சூழ்ச்சியை புரிந்துகொண்டு தான் ஏதோ அவர்களை ஸ்டிங் செய்தது போல நாடகமாடினார். கடைசியில், உண்மையை மறைக்க முடியாமல் மாட்டிக்கொண்டார். மாதேஷ் “எனக்கு 2 வயது குழந்தை உள்ளது, அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று நீலிக்கண்ணீர் வடித்தார்.

ஆனால், ‘நேர்மையாளர்களான’ ரவீந்திரன் துரைசாமியும் ராஜவேல் நாகராஜனும் தங்களது அம்மணத்தை மறைக்க முயற்சிக்காமல், நேரடியாக ஒப்புக் கொண்டனர். “அந்த காணொளியில் இருந்தது நான்தான், யார் பணம் கொடுத்தாலும் செய்து தருவேன், இனிமேலும் செய்வேன்” என்கிறார் ரவீந்திரன் துரைசாமி. ராஜவேல் நாகராஜன் ஒரு படி மேலே சென்று, “யூடியூபர்களுக்கு  குடும்பங்கள் இல்லையா? அவர்களுக்கு செலவு இல்லையா?” என்று பேசுகிறார்.

இவர்கள் ஒருபுறம் பேசிகொண்டிருக்க சவுக்கு சங்கர், சாட்டை துரைமுருகன் போன்றோர் சரக்கு அடிப்பது, உணவகத்தில் சாப்பிடுவது எல்லாம் ஸ்டிங் ஆப்பரேஷனா? என்று ஒன்றுமே நடக்காதது போல் பூசி மெழுக முயல்கின்றனர்.

“இது மற்ற யூடியூபர்களுக்கு எதிராக மதனின் பழி வாங்கும் சதி”, “மதன் ஒரு தி.மு.க. பினாமி”, “அண்ணாமலை மீது அதிருப்தியில் இருக்கும் பாஜக-வினரால் நிதியுதவி அளிக்கப்பட்டு செயல்படுகிறார்” – என்றும் பலவாறாக பேசப்படுகிறது. ரெட் பிக்ஸ் சேனலில் அமர்ந்துகொண்டு மதனின் வரலாற்றை மணிக்கணக்காக பேசுகிறார் சவுக்கு சங்கர்.

வடிவேலு நகைச்சுவை காட்சியில் வருவதைப் போல, “என்னய்யா பண்ணிட்டான் என் கட்சிக்காரன்” என்பதுதான் அவர்களது பேச்சின் சாரம்சமாக இருந்தது. மதனின் அருகதையை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம் மாட்டிக் கொண்ட அயோக்கியர்களை காப்பற்றும் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

மதன் ரவிச்சந்திரன் அயோக்கியனாகவே இருக்கட்டும் அவன் வெளியிட்ட காணொளிகள் அம்பலப்படுத்திய செய்தி என்ன என்பதுதான் கேள்வி.

எல்லா தொலைக்காட்சி ஊடகங்களுமே குறிப்பிட்ட கட்சிகளது ஊடகங்களாகவும் கார்ப்பரேட் முதலாளிகளுடையதாகவும் இருப்பதால், தங்களுடைய பிரச்சினைகளைப் பேசாமல், அவை தங்கள்மீது ஒருசார்பான கருத்தை திணிப்பவை என்று மக்களுக்கு ஏற்பட்ட பார்வையானது, அவர்களை யூடியூப் சானல்கள் மீதும், யூடியூபர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளச் செய்தன. மதன் ரவிச்சந்திரனின் காணொளி, அந்த நம்பிக்கையையும் சுக்குநூறாக்கியுள்ளது.

ஒரு பக்கம் மக்களுக்காக பேச வேண்டும் என்று கருதக்கூடிய ஊடகவியலாளர்களுக்கு ஒரு களமாக இருக்கும் சமூக ஊடகங்கள், காசு வாங்கிக் கொண்டு யாருக்காகவும் எப்படி வேண்டுமனாலும் பேசும் ஊடக புரோக்கர்களுக்கும் களமாக இருக்கிறது. ஆல்ட் நியூஸ் ஜுபைர், சித்திக் கப்பன் போன்ற பத்திரிகையாளர்கள் உள்ள துறையில்தான் இவர்களும் தங்களை பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.

நாம் என்ன சிந்திக்க வேண்டும், எந்தக் கட்சியைப் பற்றி எப்படி கருத வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும், எந்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஊடக புரோக்கர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

ஸ்டெர்லைட் விசயத்திலும் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கிலும் அப்பட்டமாக ஆளும் வர்க்கத்திற்கு துணை போகும் வகையில் பேசிய சவுக்கு சங்கரின் பேச்சுகள் குறிப்பிட்ட பிரிவினரால் ஆதரிக்கப்பட்டன. இப்போது, அவர் பணம் வாங்கிகொண்டு எடப்பாடிக்கு பழனிசாமிக்கு சொம்படித்துகொண்டு தி.மு.க-வை தாக்குவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறார். தி.மு.க.வின் மேலுள்ள அதிருப்தியில் சவுக்கு சங்கரின் பேச்சை பரிசீலிக்க இப்போதும் ஒரு கூட்டம் இருக்கிறது. காரணம் சவுக்கு போன்றவர்கள் ‘நடுநிலை’ என்ற போர்வையில் ஒளிந்துகொள்வதுதான்.

படிக்க : புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | அச்சு இதழ்

தாமரை, சாணக்யா, மாரிதாஸ் பதில்கள் போன்ற சானல்கள் வெளிப்படை சங்கிகளாக உள்ளன. ‘நடுநிலை’ என்ற போர்வையில் செயல்படும் இதுபோன்ற ஊடக புரோக்கர்கள்தான், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலின் நிழல் கோயல்பல்சுகளாக செயல்படுகின்றனர் என்பது நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய ஆபத்தான விசயம்.

மாட்டுக்கறி தமிழனின் உணவு இல்லை, பிபிசி ஆவணப்படம் மூலம் பிரிட்டிஷ் இன்னும் நம்மை ஆள நினைக்கிறது போன்ற சங்கி கருத்துக்களை பரப்பும் ராஜவேல் நாகராஜன் “பேசு தமிழா பேசு”, “ஹலோ தமிழா”, “அக்னி சிறகே”, “எல்.கே.ஜி”, “திருவருள் டிவி”, “லவ் டாக்ஸ்” உள்ளிட்டு ஐந்துக்கும் மேற்பட்ட சேனல்களை வைத்துள்ளார். இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிசக் கருத்துக்களை பல்வேறு வடிவங்களில் தமிழ்நாட்டு மக்களிடையே கொண்டுசெல்லும் கருவிகளாக உள்ளன.

ஓரளவு பா.ஜ.க. மீது விமர்சன பார்வை கொண்டவராக அறியப்பட்ட மதன் கௌரி பிபிசி ஆவணப்படத்திற்கு எதிராக பேசுகிறார். அறிவியலை எளிய முறையில் இளைஞர்களை கவரும் வகையில் அறியத்தந்த எல்.எம்.இ.எஸ் சாணல், புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக காணொளி போட்டது. ஜீவா டுடே, பரிதாபங்கள் ஆகிய சேனல்கள் தமிழினவெறியை கிளப்பிவிடுகின்றன.

நம்மால் எளிதில் உணர்ந்துகொள்ள முடியாத ஒரு மறைமுகப் போர் நம் சிந்தையின் மீது தொடுக்கப்பட்டுள்ளது. எதிரி யாரென்றே தெரியாமல், அவனுக்கு நம்மை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அச்சு செய்தித்தாள்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என எதில் பரப்பப்படுகின்ற கருத்தாக இருந்தாலும் சரி, யார் பரப்புரை செய்கின்ற கருத்தாக இருந்தாலும் சரி, அதை நடைமுறையில் உரசிப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஊடகம் சொல்கின்ற கருத்தை விட, நடைமுறையில் மக்களிடம் வேலை செய்கின்ற கட்சிகள், அமைப்புகள் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும். அந்த அமைப்புகள் முன்வைக்கும் அரசியலில் இருந்து அவர்களது கருத்தைப் பரிசீலிக்க வேண்டும். இவைதான் உண்மையை அறிந்துகொள்வதற்கான வழியாக இருக்க முடியும்.


துலிபா

தமிழ்நாட்டில் சாதி – மத கலவரங்களுக்கு திட்டமிடும் பாஜக! | தோழர் மருது | வீடியோ

மிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. அதனடிப்படையில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற பேரணியில் தற்போதையை மாவட்ட செயலாளரை தீர்த்துக்கட்ட முன்னால் மாவட்ட செயலாளர் அடியாட்களை அனுப்பியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் பேரணியை வைத்து ஒரு நபரை கொலை செய்வதற்கான திட்டமிடல் எங்கிருந்து வருகிறது?

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தின் உண்மையான நோக்கத்தை இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நிலக்கரி சுரங்கங்கள்: டெல்டாவை சூறையாடத் துடிக்கும் கார்ப்பரேட்டுகள்

0

மிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் காவேரி டெல்டா மண்டலமாகும். தமிழகத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்காற்றுகிறது. கடந்த 2021- 2022 நிதியாண்டில், 22.05 இலட்சம் ஹெக்டர் பரப்பளவில், 122.22 இலட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முப்போகம் விளையும் விவசாய பகுதிதான் மோடி அரசால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக, வளர்ச்சி என்ற பெயரில் (மீத்தேன், ஹைட்ரோகார்பன்) இயற்கை எரிவாயுக்கள் மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் நாசகாரத் திட்டங்களை செயல்படுத்தியது மோடி அரசு. டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் – 2020 நிறைவேற்றப்பட்டது. ஆனால் மோடி அரசு, விவசாயத்தை அழித்து டெல்டா மாவட்டங்களை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றும் தன்னுடைய நோக்கத்தில் இருந்து துளியும் பின்வாங்கவில்லை.

இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் எடுப்பதை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்கங்களை அமைக்க தற்போது ஏல அறிவிப்பு வெளியிட்டு இருப்பதும் அதன் வெளிப்பாடுதான். டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலக்கரி வளங்களை சூறையாட நீண்ட கால திட்டத்துடன்  செயல்பட்டு வந்துள்ளது. மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் போது, இது நிலக்கரி எடுப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை  என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டினர். தற்போது அது நிரூபணமாகியுள்ளது.

படிக்க : டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்! தமிழ்நாட்டை சூறையாட வரும் பாசிசக் கும்பலை முறியடிப்போம்! || மக்கள் அதிகாரம்

மேலும், தமிழ்நாட்டில் நிலக்கரி எந்தெந்த மாவட்டங்களில் எத்தகைய அளவு உள்ளது என்பதை ஆய்வு செய்து வைத்துள்ளது மோடி அரசு. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலக்கரி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மூன்று சுரங்களுக்கான அறிவிப்பு என்பது ஒரு தொடக்கம் தான். வருங்காலங்களில் பிற நிலக்கரி சுரங்களுக்கான அறிவிப்பை மோடி அரசிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

ஒருபுறம், நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதில் கார்ப்பரேட் கும்பல்களின் நலன் அடங்கியிருந்தாலும், மறுபுறம், இது காவி பாசிஸ்டுகளின் தமிழ்நாட்டு மக்களின் மீதான தாக்குதலும் ஆகும்.

தமிழ்நாட்டின் எதிர்ப்புணர்வும்
மோடி அரசின்  தற்காலிக பின்வாங்குதலும்

கடந்த மார்ச் 29 ஆம் தேதி, ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் இந்தியாவின் பல மாநிலங்களில் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான  ஏழாவது ஏல அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில் தமிழ்நாட்டில் மூன்று வட்டாரங்கள் இடம்பெற்றிருந்தன. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு சேத்தியாத்தோப்பில் 84.41 சதுர கிலோமீட்டர், தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு அருகே உள்ள வடசேரியில் 68.30 சதுர கிலோமீட்டர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டியில் 14.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கரி எடுக்க உள்ளதாக அறிவித்து இருந்தது.

மேலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் எவ்வளவு பழுப்பு நிலக்கரி உள்ளது, நிலக்கரியை எடுத்துச்செல்ல தொடர்வண்டிப் பாதை எவ்வளவு அருகில் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அந்த ஏல அறிவிப்பில் வெளியிட்டு இருந்தது. இது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமல்ல, சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள் உள்ளிட்ட அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்க்கும் என்று தெரிந்தே, திமிர்த்தனமாக இத்தகைய நாசகார திட்டத்தை அறிவித்தது.

நிலக்கரி எடுப்பது போன்ற திட்டங்களை அமல்படுத்துவதற்கு மோடி அரசு, தமிழ்நாடு அரசிடம் இருந்து தொழிற்துறை அனுமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் மோடி அரசு, தமிழ்நாடு அரசை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. இத்திட்டத்தை பற்றி தெரியப்படுத்த கூட இல்லை. தன்னிச்சையாக அறிவித்தது. “இந்த செய்தி வந்தபோது உங்களைப் போன்று தான் நானும் அதிர்ச்சி அடைந்தேன்” என்று கூறும் நிலைமையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே இருந்தார். இது மாநில அரசின்  பெயரளவிலான இறையாண்மையும் மதிக்காத மோடி அரசின் பாசிச அணுகுமுறையாகும்.

மோடி அரசின் இந்த பாசிச நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் சம்மட்டி அடி கொடுத்தது. இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியான அன்று மாலையிலே டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். போராட்டங்களில் ஈடுபடுவோம் என அறிவித்தனர். மக்களும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இத்திட்டத்திற்கு ஆளும் தி.மு.க அரசும் எதிராக இருந்தது. முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதினார்; சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் இதற்கு முன்னர் செயல்படுத்தப்பட்ட போது எதிர்க்காத தமிழக பா.ஜ.க, தற்போது நிலக்கரி எடுப்பதை எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது. எதிர்க்கவில்லை என்றால் தமிழக மக்களின் வெறுப்புக்கு உள்ளாக வேண்டும் என்பதே அதற்கான காரணம். ஏற்கெனவே இந்தித் திணிப்பு, ஆர்.என்.ரவி தமிழ்நாடு பெயரை தமிழகம் என்று மாற்றக்கூறியது, ஆன்லைன் ரம்மி ஆகியவற்றில் தமிழக மக்களின் வெறுப்புக்கு உள்ளான தமிழக பா.ஜ.க, வேறுவழியில்லாமல் இத்திட்டத்தை எதிர்ப்பது போன்று நாடகமாடியது.

மோடி அரசு வேறுவழியில்லாமல் ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மூன்று வட்டாரங்களை நீக்கி அறிவித்துள்ளது. இதற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்புதான் பிரதான காரணமாகும். ஆளும் தி.மு.க அரசு இத்திட்டத்திற்கு எதிராக இருப்பது முக்கிய காரணமாகும்.

இது தற்காலிக பின்வாங்கலாகும். மோடி அரசு, தமிழகத்தில் உள்ள மூன்று வட்டாரங்களை ஏல பட்டியலில் இருந்து தான் நீக்கியுள்ளது. இனிமேல் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மாட்டோம் எனக் கூறவில்லை.ஏனென்றால் கார்ப்பரேட்டுகள், தமிழகத்தின் எட்டு மாவட்டங்களுக்கு கீழ் கோடிக்கணக்கான டன் அளவில் கொட்டிக்கிடக்கும் நிலக்கரியை சூறையாடுவதில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டார்கள்.

ஆத்ம நிர்பார் பாரத் அல்ல! 
அதானி நிர்பார் பாரத்!

மோடி அரசு நிலக்கரி சுரங்கங்களை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்து விடுவதில் பெரும் ஆதாயம் அடையப் போவது அதானி கும்பல்தான். இந்தியாவில் அதிக அளவில் நிலக்கரி சுரங்கங்களை பராமரிப்பதிலும், நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்வதிலும், நிலக்கரியை மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்வதிலும் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது.

சத்தீஸ்கர், ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில்  ஒன்பது நிலக்கரி சுரங்கங்களையும், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் தலா ஒரு நிலக்கரி சுரங்கங்களையும் கொண்டுள்ளது. நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஏழு மின் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது. மேலும், அதானி குழுமத்திற்கு சொந்தமான கிட்டதட்ட 12 துறைமுகங்களில் நிலக்கரி கையாளப்படுவதாக கூறப்படுகிறது. தொலைத்தொடர்புத் துறை என்றால் அம்பானி ஞாபகம் நமக்கு வருகிறதோ, அதுபோல நிலக்கரி என்றால் அதானி கும்பல்தான்.

மோடி அரசும் அதானி கும்பலுக்கு நிலக்கரி சுரங்கங்களை அடிமாட்டு விலைக்கு தூக்கி கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஏலத்தில் மோடி அரசும் அதானியும் கூட்டு சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு, ஏலத்தை அடிமாட்டு விலைக்கு முடித்தது அம்பலமாகி உள்ளது. இதன் மூலம் மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. ஏலத்தில் ஈடுபட்ட இரு நிறுவனங்களும் அதானி குழுமத்தின் நிறுவனங்கள் ஆகும். இதற்காக மோடி அரசு ஏலத்தில் குறைந்தபட்சம் மூன்று நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்ற விதியை திருத்தி இரண்டு நிறுவனங்களாக மாற்றியுள்ளது.

படிக்க : நிலக்கரி முதல் மின் தட்டுப்பாடு வரை – தனியார்மயமாக்கத்தின் விளைவே !

அதானி குழுமம் முறைகேடுகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளின் மூலம் பங்குச் சந்தையில் தனது குழுமத்தின் பங்கை செயற்கையாக உயர்த்திக் காட்டியதை விரிவாக அம்பலப்படுத்தியது ஹிண்டன்பர்க் அறிக்கை. இந்தியாவில் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, எல்லா துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. அதற்கு நிலக்கரி துறையும் விதிவிலக்கல்ல. அதற்கேற்ப பல்வேறு விதிகள் தளர்த்தப்பட்டன. ஆனால் தளர்த்தப்பட்ட விதிகள் கூட அதானி குழுமத்தின் இலாபவெறியை பூர்த்தி செய்யவில்லை.

நிலக்கரி சுரங்களை அதானி போன்ற கார்ப்பரேட் கும்பல்களுக்கு திறந்துவிடுவதன் மூலம், இந்தியாவின் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய உள்ளதாக காரணம் கூறுகிறது மோடி அரசு. 101 வட்டாரங்களில் நிலக்கரி சுரங்களுக்கான ஏல அறிவிப்பும் அதற்காகத்தான். அதை பறைசாற்றும் விதமாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி , “நாட்டின் நிலக்கரி உற்பத்தி 2025 -2026 ஆம் நிதியாண்டிற்குள் 1.1 பில்லியன் டன்களை எட்டும் எனவும், அதில் 200 மில்லியன் டன்கள் தனியார் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கிடைக்கும்” என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

அதற்கேற்ப, தனியார் நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்து வருகிறது. கடந்த 2022 -23 நிதியாண்டில் தனியார் நிலக்கரி சுரங்க உற்பத்தியாளர்கள் 121.88 மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளனர். இது முந்தைய நிதியாண்டை விட 34.59% அதிகம் ஆகும். மேலும், உபரியாகும் நிலக்கரி இலங்கை, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனக் கூறியுள்ளார் அமைச்சர். கார்ப்பரேட் கும்பல்கள் தான் ஏற்றுமதி செய்ய போகிறார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. இதற்கான விதிகள் 2020 ஆம் ஆண்டே தளர்த்தப்பட்டு விட்டன.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானி குழுமத்தின் மோசடிகள் அம்பலப்பட்டு போயுள்ள இச்சூழலில் மோடி அரசானது, அதானி குழுமத்தின் நெருக்கடிகளை தீர்ப்பதற்காக தீவிரமாக வேலை செய்துகொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் நாடாளுமன்ற விசாரனைக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. மாறாக, தொழிலாளர் ஓய்வூதிய நிதியை அதானி குழுமத்தில் முதலீடு செய்கிறது. அடிமாட்டு விலைக்கு நிலக்கரி சுரங்கங்களை தாரை வார்க்க காத்துக் கொண்டிருக்கிறது. அதானிகளின் வளர்ச்சி தான் தேசத்தின் வளர்ச்சி என்பதை தன்னுடைய செயல்பாட்டின் மூலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

பிரவீன்

கலாசேத்ராவில் நடந்தது என்ன? | தோழர் அமிர்தா | வீடியோ

சென்னை திருவான்மியூரில் இருக்கக்கூடிய கலாசேத்ரா கல்லூரியில் நிகழ்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை செய்தவர்களே அங்கிருக்கக்கூடிய பேராசிரியர்கள் என்ற கொடூரமான உண்மை இன்று தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய பேசு பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு || மே 1 மதுரை மாநாட்டை வாழ்த்தி வரவேற்கும் ஜனநாயக சக்திகள்! | வீடியோ

மதுரையில் மே 1, 2023 அன்று ”ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” ”சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு; துவழாது போராடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பேரணி – மாநாட்டை வாழ்த்தி வரவேற்றும் ஜனநாயக அமைப்புகள்.

காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்! மாநாடு அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.

000

தேர்தலே நடத்தக்கூடாது என்பதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம்! | சந்தோஷ் – திவிக

000

மாநாட்டின் தலைப்பே வீரத்தையும் விழிப்புணர்வையும் தருகிறது | சு.பஷீர்

000

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பாசிசத்தை வேரறுக்க வேண்டும் | சீ.சு.சாமிநாதன்

000

மே 1 மதுரை மாநாடு வெற்றிபெறட்டும்! | கலைப்பிரியன் | முனுசாமி

காணொலிகளை பாருங்கள் ! பகிருங்கள்!!

ராகுல் தகுதி நீக்கம்: நாடாளுமன்றத்தை முடக்கினால், மக்கள் மன்றத்தில் முழங்குவோம்!

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்ற தீர்ப்பையோ, அதைத்தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்றோ எதிர்க்கட்சிகளால் முன்னூகித்திருக்க முடியாது. இந்த நிகழ்வுகள் எதிர்க்கட்சிகளுக்கு நிச்சயமாக அதிர்ச்சியூட்டுபவைதான். ஆனால், மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் இப்படி அதிர்ச்சியூட்டும் பல நிகழ்வுகள்  இயல்பாக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற விவாதநேரம் படிப்படியாக வெட்டிச்சுருக்கப்பட்டதும், பா.ஜ.க. கொண்டுவரும் மக்கள்விரோத-கார்ப்பரேட் கொள்ளை மசோதாக்கள் விவாதங்களின்றி சட்டமாக்கப்படுவதும் நேற்றுவரை இருந்த நிலைமை. பா.ஜ.க.வின் இந்த பாசிசப் போக்கைக் கண்டித்துக் குரலெழுப்பவும், போராடவும், இதன்மூலம் ‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ அடைந்திருக்கின்ற அவநிலையை நாட்டுமக்கள் முன் அம்பலப்படுத்தவும் மட்டுமே எதிர்க்கட்சிகளால் செய்ய முடிந்தது.

ராகுலின் தகுதி நீக்கம் மூலம், இப்போது அந்தக் ‘கண்டக் குரலெழுப்பும் ஜனநாயகமும்’ பறிக்கப்பட்டுள்ளது. பாசிச பா.ஜ.க.வை அம்பலப்படுத்திப் பேச முயன்றால், நீங்கள் நாடாளுமன்றத்தைவிட்டே தூக்கியெறிப்படுவீர்கள் என்ற புதிய இயல்புநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ராகுலின் தகுதி நீக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சட்டப்பூர்வ பாசிசத் தாக்குதலாகும்.

படிக்க : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யார் பேசினாலும் வழக்கு போடறாங்க | தோழர் மருது

பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் மீது, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் எப்படி ஏவிவிடப்படுகிறதோ, மக்களுக்காக போராடும் செயல்பாட்டாளர்கள், அறிவித்துறையினர் மீது எப்படி ஊ.ஃபா கொடுஞ்சட்டம் பாய்ச்சப்படுகிறதோ, சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது என்.ஐ.ஏ எப்படி ஏவிவிடப்படுகிறதோ – அதுபோல, இதுவும் சட்டப்பூர்வமான பாசிசத் தாக்குதலாகும்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடாவில் உரையாற்றிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்? நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?”என்று பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து, குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி, “ராகுல் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்திவிட்டார்” என்று அவதூறு வழக்கு பதிவுசெய்தார்.

நான்கு ஆண்டுகளாக சூரத் நீதிமன்றத்தால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், 23-03-2023 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சூரத் நீதிமன்றம்.

இத்தீர்ப்புக்காகவே காத்துக் கொண்டிருந்ததைப்போல, அடுத்த 24 மணிநேரத்திற்குள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் ராகுல் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவரது தொகுதியான வயநாடு காலியான தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.

1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(3)-ன் படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எந்த குற்றத்திற்காகவும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு கூடுதலான காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இதன்படி ராகுலின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பை வழங்கிய சூரத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எச்.வர்மா, காவிக் கும்பலுக்கு தான் செய்த கைங்கரியத்திற்கு இவ்வாறு விளக்கம் தருகிறார் : “குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அவர் ஆற்றிய உரை பொதுமக்களிடையே பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அவருக்கு குறைந்தபட்ச தண்டை வழங்கப்பட்டால், அது பொதுமக்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும். மேலும், அவதூறு சட்டத்தின் நோக்கமும் நிறைவேறாது”

ராகுல்மீது தொடர்ப்பட்ட சாதாரண அவதூறு வழக்கில், இரண்டு ஆண்டுகள் சிறை என்பது உச்சபட்ச தண்டனையாகும். பாசிசக் கும்பல், ராகுலின் பதவியைப் பறித்து நாடாளுமன்றத்தை விட்டுத் துரத்துவதற்கு தோதாகவே இத்தீர்ப்பு “தயாரிக்கப்பட்டிருக்கிறது”.

அந்நிய மண்ணில் ‘இந்திய ஜனநாயகத்தை’ இழிவுப்படுத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொடர்ந்து ஒருவார காலத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தை பா.ஜ.க. முடக்கிவந்த சூழலில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு, அதைத்தொடர்ந்து ராகுல் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

தெளிவான விசயம், ராகுல் பழிவாங்கப்பட்டிருக்கிறார். எதற்காக?

“அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய எனது பேச்சுக்கள் அனைத்தும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன”

“… பிரதமர் மோடியை நோக்கி மூன்று கேள்விகள் முன்வைத்தேன். அதானி குழுமத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது, அந்த பணம் யாருடையது? என்று கேட்டேன். மோடி வெளிநாடு சென்றபோதெல்லாம் அதானி குழுமத்திற்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டேன். அதானிக்காக விமான நிலையங்களின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதானி குழும முறைகேடு விவகாரத்தில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு உள்ளது. பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய தகவலை வெளியிடுவேன் என்பதாலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்” – என்று தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

அதானியின் கொள்ளைகளை அம்பலப்படுத்தும் ஹிண்டன்பர்க் அறிக்கை, மோடியின் ரத்தக் கறை படிந்த கைகளை அம்பலப்படுத்தும் குஜராத் இனப்படுகொலை தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் ஆகியவை மக்களிடயே விவாதப்பொருளானதை பாசிசக் கும்பலால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-இல் உள்ள அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி இணையம் மற்றும் சமூக வலைதளங்களிலிருந்து பிபிசி ஆவணப்படத்தை நீக்கிய மோடி அரசு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ஐப் பயன்படுத்தி அதானியை அம்பலப்படுத்திய ராகுலை பழிதீர்த்துவிட்டது. ராகுலின் பதவி பறிப்பைக் காட்டி, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முயற்சிக்கிறது.

லண்டனில் பேசிய ராகுல் காந்தி, பிபிசி ஆவணப்படம் தடை, ஹிண்டன்பர்க் அறிக்கையை விவாதிக்க அனுமதிக்காதது, விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவது, பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பலவற்றையும் சுட்டிக்காட்டித்தான் இந்தியாவில் ஜனநாயக நிறுவனங்கள் தாக்கப்படுவதாகப் பேசினார்.

மேலும், “இந்தியா எதிர்கொண்டிருக்கும் அபாயம் பா.ஜ.க. என்ற தனிப்பட்ட கட்சி அல்ல. ஒட்டுமொத்த ஜனநாயக நிறுவனங்களையும் இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கைப்பற்றியிருக்கிறது. நாம் ஒரு கட்டமைப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிக்கிறோம்” என்றார்.

இதைக்காட்டித்தான் ராகுல் அந்நிய மண்ணில் ‘இந்தியாவின் ஜனநாயகத்தை’ இழிவுபடுத்திவிட்டார். நம் நாட்டின் மாண்புகளை குலைத்துவிட்டார் என்று ஊளையிட்டது பாசிசக் கும்பல்.

படிக்க : காக்னிட் உளவு செயலி: டிஜிட்டல் பாசிசத்தை ஏவும் மோடி அரசு!

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசக் கும்பல்தான் இந்தியாவை ஆட்சி செய்துவருகிறது; சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயகம் என்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. அம்பானி-அதானி பாசிச கும்பல்களுக்கான ஜனநாயகமாகவும் இந்திய மக்கள் மீதான பாசிசமாகவும் இருக்கிறது என்பது – இன்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அம்பலப்பட்டுவருகிறது. அடக்குமுறையை ஏவிவிடுவதன் மூலம் இதை முடிவுக்கு கொண்டுவர முயல்கிறது பாசிசக் கும்பல். அதன் ஒருபகுதிதான் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு.

தங்களை நோக்கி எழுப்பப்படும் எந்தக் கேள்விக்கும் பதில் அளிப்பதற்கு பாசிஸ்டுகளுக்கு துணிச்சல் இல்லை. இந்த அடக்குமுறை பாசிஸ்டுகள் கோழைகள் என்பதற்கான சாட்சியே. வெறும் கொலு பொம்மையாக வைத்திருக்கும் நாடாளுமன்றத்தை அவர்களே இழுத்து மூடுவதற்கு எத்தனிக்கிறார்கள்.

நாம் ஏன் இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கட்டி அழ வேண்டும்? இந்தக் குட்டிச்சுவர்தான் பாசிச ஆட்சிக்கு வழிகோலுகிறது எனும் போது, அதனை உறுதிப்படுத்த நாம் முயற்சிப்பதன் மூலம் பாசிச ஆட்சிக்கு நாமும் அடியெடுத்துக் கொடுப்பவர்களாகிவிடுகிறோம். ஆகையால், நாம் மக்கள் மன்றத்தை நிரப்புவோம்.

எதைப் பேசக்கூடாது என்று பாசிசக் கும்பல் தடை போடுகிறதோ, அதைப் உரக்கப் பேசுவோம். எப்படி பேசக்கூடாது என்று பாசிசக் கும்பல் கருதுகிறதோ, அப்படி பேசுவோம்.

“ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” என்று முங்குவோம்!

பல்லை புடுங்கிய சைக்கோ போலீசு | தோழர் மருது | வீடியோ

ம்பா சமுத்திரத்தில் ஏடிஎஸ்பி-யாக பணியாற்றிய பல்பீர் சிங் என்பவர் பலபேரின் பல்லை பிடுங்கியுள்ளார். பலரின் ஆணுருப்பை நசுக்கி சித்திரவதை செய்திருக்கிறார். இந்த பிரச்சினை வெளியே தெரிந்ததும் விசாரணையை துவங்குகிறார்கள். விசாரணை துவங்கிய பிறகுதான் அநியாயம் அக்கிரமம் அதிகமாக நடக்கிறது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி: தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது!

ண்மையில், காவிக் கும்பலுக்கு சாதமான இரண்டு தீர்ப்புகள் வெளியானது. ஒன்று தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்ச நீதிமன்றத்தின் அனுமதி; இரண்டாவது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி. தீர்ப்புகள் இரண்டாயினும் தன்மை ஒன்றுதான். ‘நீதிமன்றத் தீர்ப்புகளின் வழியே’ தமிழ்நாட்டில் நுழைவதற்கான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலின் எத்தனிப்புகள் இவை.

சென்ற ஆண்டு காந்தி பிறந்தநாளையொட்டி தமிழ்நாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாட்டு மக்கள், புரட்சிகர ஜனநாயக அமைப்ப்புகளின் எதிர்ப்பின் காரணமாக ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது போலீசு.

ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆர்.எஸ்.எஸ், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. பாசிசக் கும்பலுக்கு சாதகமான தீர்ப்பினை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், “ஊர்வலம் நடத்த அனுமதிக்கவில்லை என்றால், தமிழ்நாடு போலீசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என மிரட்டியது. ஒரே நாளில் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்றது தமிழ்நாடு அரசு. கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டும் பேரணி நடத்த அனுமதி வழங்கியதோடு, சுற்றுச்சுவருடன் கூடிய காலி மைதானம் அல்லது விளையாட்டு அரங்குகளில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், பேரணி, பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என நிபந்தனைகளை விதித்தது.

படிக்க : ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவியின் உளறல்கள் – பின்னணி என்ன? | தோழர் ஆ.கா.சிவா வீடியோ

எந்த மாநிலத்திலும் பா.ஜ.க. சந்தித்திராத படுதோல்வி இது. இதனை சகித்துக்கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ் கும்பல், அனைத்து இடங்களிலும் பேரணிக்கும் அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திடம் முறையிட்டது.

அவ்விசாரணையில், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய ஆறு இடங்களைத் தவிர்த்து மற்ற 44 இடங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ்.க்கு தமிழ்நாடு போலீசு அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இவ்வழக்கின் மீதான விசாரணையில், தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதனையடுத்து வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி, தமிழ்நாட்டில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்த தமிழ்நாடு போலீசும் அனுமதி அளித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-க்கு சாதகமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான அடுத்த தினமே, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அர்ஜூன் சம்பத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்த அனுமதியளிக்க போலீசுக்கு உத்தரவிடக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த காலங்களில் இந்து மக்கள் கட்சியினர் அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க சென்றபோது அளிக்கப்பட்ட உத்தரவாதத்தைப் போல உத்தரவாதம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க செல்லும்போது பிறரைப்பற்றி கோஷங்கள் எழுப்ப மாட்டோம். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம், அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவிக்க மாட்டோம்; விபூதி, சந்தனம், குங்குமம் பூச மாட்டோம், போலீசு வாகனத்தில்தான் சென்று வருவோம் என உறுதியளித்தது இந்து மக்கள் கட்சி. இதனையடுத்து அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதியளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அம்பேத்கருக்கு காவி உடை அணிவிக்கப் படுகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அர்ஜூன் சம்பத் கையால் அம்பேத்கருக்கு மாலை அணிவிப்பதே அம்பேத்கரை காவிமயமாக்கும் நடவடிக்கைதான்.

அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்தில் மதச் சாயம் பூசியது தொடங்கி, ஆ.ராசா இந்துக்களை வேசிமகன் என்று கூறிவிட்டார், மனுநூலை சுட்டிக்காட்டிய திருமாவளவன் இந்துப் பெண்களை தவறாக பேசுகிறார் என மதவெறியை கிளரப்பார்த்தது காவிக் கும்பல். ஆனால், மதம் கடந்து அனைத்து மக்களும் நல்லிணக்கத்தோடு ஒற்றுமையுடன் வாழும் தமிழ்நாட்டில் காவிக் கும்பலின் எண்ணம் எடுப்படவில்லை; மண்ணைக் கவ்வியது. பெரியார் விதைத்த பார்ப்பனிய எதிர்ப்பும், மோடி – ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க எதிர்ப்பு அலையும் இயல்பிலேயே இருப்பதால் மற்ற மாநிலங்களைப் போல மத கலவரங்களின்மூலம் தமிழ்நாட்டில் ஊடுறுவது குதிரை கொம்புதான் என்பதை புரிந்து கொண்ட பாசிசக் கும்பல் ‘நீதிமன்ற தீர்ப்புகளின் வழியே’ தமிழ்நாட்டில் நுழைய எத்தனிக்கிறது.

வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிராக கையாளும் நடவடிக்கைகளில் ஒன்று ஊர்வலங்கள். ராம நவமி, அனுமான் ஜெயந்தி போன்ற ‘இந்துப் பண்டிகைகளில்’ ஊர்வலங்களை நடத்துவதன் மூலம் அந்நாட்களை முஸ்லீம்கள், தலித்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான கலவர நாட்களாக அறிவித்து வருகிறது. பண்டிக்கைகள் இல்லாத நாட்களிலும், முஸ்லீம்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் பெரிய ஒலிப்பெருக்கியைக் கொண்டு, “பாரத் மாதாகீ ஜெய்” “ஜெய் ஸ்ரீராம்” போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் ஊர்வலங்கள் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படுவோம் என்று அச்ச மனநிலையை இஸ்லாமிய மக்களிடம் விதைத்து வருகிறது பாசிச கும்பல்.

அண்மையில் நடத்தப்பட்ட ராம நவமி ஊர்வலங்களின்போது பீகார், மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ம.பி, உ.பி, போன்ற மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய மக்கள் வாழும் வீதிகள் கலவரக்காடானது. இஸ்லாமியர் கடைகள், வீடுகள், மசூதிகள் அனைத்தும் காவிக் குண்டர்களால் சூறையாடப்பட்டன. ஊர்வலம் சென்ற வழிகளில் இருந்த மசூதிகள் மீது கற்களும் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. மதராஸாக்களில் இருந்த புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. “ஜெய் ஸ்ரீராம்” “இந்தியா இந்துக்களுக்கான தேசம்” போன்ற மதவெறி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முஸ்லீம் சிறுபான்மையினரை ஒடுக்கி, தங்களது இந்துராஷ்டிரக் கனவினை நனவாக்க பாசிசக் கும்பல் மேற்கொண்டு வரும் முதன்மையான வழிமுறை இதுபோன்ற ஊர்வலங்கள்தான்.

மதம் கடந்து சகோதரத்துவத்துடன் ஒன்றுமையாக வாழ்ந்துவரும் தமிழ்நாட்டிலும் இத்தகைய கலவரச் சூழலை கொண்டுவரக் காவிப் பாசிசக் கும்பல் முயற்சிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கும் அம்பேத்கருக்கு அர்ஜூன் சம்பத் மாலை அணிவிப்பதற்கும் நீதிமன்றங்கள் அனுமதி வழங்கிவிட்டன. எனினும், தமிழ்நாடு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது!

படிக்க : தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் அடியாள்படையாக செயல்படும் தமிழ்நாடு போலீசு!

சென்ற முறை தமிழ்நாட்டில் பேரணி நடத்தப்போவதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்தபோது, அதற்கு சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதியளித்திருந்த நிலையில் தமிழ்நாடு போலீசு பேரணிக்கு அனுமதி மறுத்தது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு மக்கள், பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையாகும். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை எதிர்த்து வி.சி.க அறிவித்த சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் ம.தி.மு.க, தி.க, பல்வேறு இடதுசாரி அமைப்புகள் உள்ளிட்டு 17 கட்சிகள் மற்றும் 44 இயக்கங்கள் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

அதேபோல் சென்ற ஆண்டு, அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்த தனக்கு பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிடக்கோரி, அர்ஜூன் சம்பத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்த அர்ஜூன் சம்பத் வளாகத்துக்குள் இருந்த அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவ முயற்சி செய்தபோது, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டார். அன்றே, நீதிமன்ற அனுமதி பெற்று போலீசு பாதுகாப்போடு வந்த அர்ஜூன் சம்பத்தை அம்பேத்கர் மணிமண்டபத்துக்குள்ளும் நுழையவிடாமல் வி.சி.க உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காவி பாசிசக் கும்பலை நீதிமன்றம் அனுமதித்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிசக் கும்பலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! இது தமிழ்நாடு என்பதை மீண்டும் ஒருமுறை சங்கிக் கும்பலுக்கு உணர்த்துவோம்!

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்
13-04-2023

பரந்தூர் செல்ல முயன்றால் கழுகாக பறந்து கைது செய்யும் தமிழ்நாடு போலீசு

டந்த ஞாயிற்றுக்கிழமை (09-04-2023) அன்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில துணைப் பொறுப்பாளர் ரஹ்மதுல்லா அவரது ஆதரவாளர்களுடன் பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது அவரை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது தமிழ்நாடு போலீஸ்.

இதேபோல் பரந்தூர் விமான நிலைய போராட்டத்தின் 200-வது நாளில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பாக போராட்டத்திற்கு ஆதரவளிக்க சென்ற வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதே போன்று தொடர்ச்சியாக அப்பகுதிக்கு செல்லும் அரசியல் இயக்கங்களை சார்ந்தவர்களை தடுத்து திருப்பி அனுப்புவதும் முக்கியமான அரசியல் தலைவர்களை கைது செய்வதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது இந்திய அரசு. அதையெடுத்து நிலங்களை கையகப்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விமான நிலைய உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 12 கிராம மக்கள் போராடி வருகிறார்கள்.தொடர்ச்சியாக 250 நாட்களுக்கு மேலாக இப்போராட்டம் நடந்து வருகிறது.

இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருபவர்கள். அவர்களின் கோரிக்கை விவசாய நிலங்களை அழித்துவிட்டு அதன்மேல் விமான நிலையம் கொண்டு வர வேண்டாம், விவசாயம் நடைபெறாத மக்கள் பயன்பாட்டில் இல்லாத காலி இடங்களை தேர்வுசெய்து இதுபோன்ற திட்டங்களை அமுல்படுத்துங்கள் என்பது தான்.

படிக்க: பரந்தூர்: விமான நிலையத்திற்காக அழிக்கப்படும் கிராமம் – கார்ப்பரேட் சேவையில் திமுக அரசு!

இதனையடுத்து இந்த கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர், அமைப்புகள், இயக்கங்கள் பேசி வருகின்றன. குறிப்பாக ஆளும் திமுக அரசின் கூட்டணி கட்சிகளே அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இவ்வாறு போராட்டமும் போராட்டத்திற்கான ஆதரவும் தீவிரமடைந்து வருவதனால் பரந்தூர் கிராமத்தை சுற்றி 200-க்கும் மேற்பட்ட போலீசை குவித்து 24 மணி நேரமும் அப்பகுதியை கண்காணித்து வருகிறது தொடர்ந்து கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்தி வரும் திமுக அரசு. குறிப்பாக வெளியூரை சேர்ந்தவர் யாரும் அப்பகுதிக்குள் எளிதில் நுழைய முடியாத அளவிற்கு பாதுகாப்பை பலப்படுத்தி போராட்டத்திற்கு ஆதரவு தர வரும் எவரும் அப்பகுதியை நெருங்க முடியாத அளவிற்கு செயல்பட்டு
வருகிறது.

இவ்வளவு பெரிய மக்கள் போராட்டம், கட்சிகள் இயக்கங்கள் இத்திட்டத்திற்கு எதிர்த்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கார்ப்பரேட் சேவைதான் கட்சியின் சேவை என உறுதியாக இருக்கிறது திமுக அரசாங்கம். மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் தொடர்ச்சியாக காவல்துறை மூலம் அப்பகுதி மக்களையும் அரசியல் இயக்கங்களையும் ஒடுக்கி வருகிறது ‘திராவிட மாடல்’ அரசு.

டேவிட்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யார் பேசினாலும் வழக்கு போடறாங்க | தோழர் மருது

ந்த நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எது தேவையோ அதை செய்துகொடுப்பதுதான் அரசின் கடமை. தூத்துக்குடி மக்கள் இன்றுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாய்திறக்க முடியாத நிலையில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முதல் ஆளுநர் வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருப்பதுதான் ஜனநாயகம் என்றால் அதன் மீது தமிழ்நாட்டு மக்கள் காரி உமிழ்வார்கள்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தொடர்ந்து தமிழர் நலனுக்கெதிராக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அதை விரைவில் நாம் செய்வோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

காக்னிட் உளவு செயலி: டிஜிட்டல் பாசிசத்தை ஏவும் மோடி அரசு!

0

பெகாசஸ்” (Pegasus) என்ற உளவு செயலிமூலம் அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சிகள், நீதித்துறையினர் உள்ளிட்டோரை வேவு பார்த்த மோடி அரசு, தற்போது “காக்னிட்” (Cognyte) என்ற புதிய உளவு செயலியை வாங்கவுள்ளதாகவும் இதற்காக 12 கோடி டாலர் (₹986 கோடி) செலவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 30 அன்று வெளியான பைனான்சியல் டைம்ஸின் அறிக்கையில், இஸ்ரேலின் என்.எஸ்.ஓ குழுவை விட நன்கு அறியப்படாத நிறுவனத்தால் விற்கப்படும் புதிய உளவு செயலியை வாங்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியானது. இதனைத்தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இஸ்ரேலிய உளவு செயலி நிறுவனமான ”காக்னிட்”டிடம் இருந்து பெகாசஸுக்கு மாற்றாக உளவு செயலியை வாங்கவுள்ளதாக வர்த்தக தரவுகளை ஆராய்ந்த ‘தி ஹிந்து’ கடந்த ஏப்ரல் 5 அன்று ஒரு செய்தியை வெளியிட்டது.

காக்னைட் நிறுவனம் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (META) வெளியிட்ட ”கண்காணிப்பு தொழில் பற்றிய அச்சுறுத்தல் அறிக்கை”யில் (Threat Report on the Surveillance-for-Hire Industry) இடம்பெற்றுள்ள நிறுவனமாகும். இவ்வறிக்கையானது பணம் வாங்கிக்கொண்டு இணையம் வழியாக உளவு வேலைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்தது. ஊடகவியலாளர்கள், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மாற்றுக்கருத்துடையவர்களின் சமூக வலைதள கணக்குகளில் ஊடுருவுவதன்மூலமோ அல்லது அவர்களின் செல்போன் மடிக்கணினி போன்றவற்றை ஹேக் செய்வதன் மூலமோ இம்மாதிரியான உளவு நிறுவனங்கள் அவர்களை முழுமையாகக் கண்காணிக்கும்.


படிக்க: பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!


மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, காக்னிட் மற்றும் அதன் அப்போதைய தாய் நிறுவனமான வெரின்ட் சிஸ்டம்ஸ் இன்க்., (Verint Systems Inc.) ஆகியவற்றிடமிருந்து பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (Defence Intelligence Agency DIA) கீழ் வரும் சிக்னல் புலனாய்வு இயக்குநரகத்திற்கு (Signal Intelligence Directorate SID) கணினி உபகரணங்களை அரசு வாங்கி வழங்கி வருவதாக தி இந்துவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எஸ்.ஐ.டி-யில் (SID) இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த பணியாளர்கள் உள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சேவைப் பகுதிகள் (in service areas), வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அஸ்ஸாம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கணினிகளிலிருந்து உருவாக்கப்பட்ட, அனுப்பப்பட்ட, பெறப்பட்ட அல்லது சேமிக்கப்பட்ட எந்தவொரு தகவலையும் இடைமறிக்க, கண்காணிக்க மற்றும் படிக்க அவர்களுக்கு அனுமதி உள்ளது. இவ்வளவு அதிகாரங்களை தன்னகத்தே கொண்ட எஸ்.ஐ.டி-யின் கையில், பெகாசஸ் போன்றதொரு உளவு செயலியான காக்னிட் இருப்பதென்பது மிகப்பெரிய பேராபத்தாகும்.

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, ”இதற்கு முன்னதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா, பெகாசஸ் மற்றும் ’டீம் ஜார்ஜ்’ தலைமையிலான இஸ்ரேலிய ஒப்பந்த ஹேக்கர்களைப் பயன்படுத்தியது மோடி அரசாங்கம். தற்போது இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ஜனநாயகத்தில் தலையிட ஒரு புதிய உளவு செயலியை பயன்படுத்துகிறது” என்று கூறினார்.


படிக்க: பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?


இந்திய அரசு பெகாசஸை பயன்படுத்தியது அம்பலமானபோது முதலில் அதை ஒப்புக்கொள்ள மறுத்தது. பெகாசஸ் நிறுவனமோ இறையாண்மை கொண்ட அரசுகளுக்கு மட்டும்தான் உளவு செயலியை விற்பதாகக் கூறியது. பின்னர், இந்திய அரசு சார்பாக உளவுத்துறை பணியகம் (Intelligence Bureau IB) என்.எஸ்.ஓ குழுவிடமிருந்து பெகாசஸ் செயலியை வாங்கியது உறுதியானது. நீதிமன்றத்தில் ”தேசநலன் தொடர்பானது என்பதால்  பெகாசஸ் குறித்து கூற இயலாது” என்று கூறி நீதிமன்றத்தின் துணையோடு உளவு பார்த்ததை நியாயப்படுத்திவிட்டது மோடி – அமித்ஷா கும்பல். ஆனால், 2017-ஆம் ஆண்டில் இஸ்ரேலிடம் போடப்பட்ட $2 பில்லியன் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே பெகாசஸ் வாங்கப்பட்டது என்று ஜெருசலேமில் இருந்து செய்தி வெளியிட்டது நியூயார்க் டைம்ஸ்.

தற்போது நாம் வாழும் டிஜிட்டல் யுகத்தில் காக்னிட், பெகாசஸ் போன்ற உளவு செயலிகள் பாசிஸ்டுகள் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள பேருதவி புரிகிறது. வேவு பார்ப்பதன்மூலம் எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்களை முன்னறிந்து முறியடிக்க முடியும்; நீதித்துறையை – நீதிபதிகளை கட்டுப்படுத்த முடியும். அரசின் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை கேள்வி கேட்கும் அறிவுஜீவிகள் மற்றும் அவற்றை எதிர்த்துப் போராடும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் செல்போன், மடிக்கணினி போன்றவற்றில் போலியான ஆவணங்களை இந்த உளவு செயலிகளின்மூலம் உள்நுழைத்து அவர்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) மூலம், எல்கர் பரிஷத் வழக்கில் வேட்டையாடியதுபோல, வேட்டையாடவும் முடியும்.

பொம்மி

சிக்கிய ஆர்.என்.ரவி – ரம்மி தடைக்கு ஒப்புதல் | தமிழ்நாடு vs ஆளுநர் | தோழர் மருது | வீடியோ

பி.டி.ஆர் தியாகராஜன் ஆளுநர் மீது பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சட்டமன்றத்தில் கூறி ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள் ஆன்லைன் ரம்மி தடை தட்டத்தில் ஆர்.என்.ரவி கையெழுத்திடுகிறார்.

தமிழ்நாட்டில் செல்லும் இடங்களில் எல்லாம் காறி உமிழக்கூடிய நபராக இருக்கக்கூடிய இந்த ஆர்.என்.ரவி இப்போது கீழே விழுந்திருக்கிறார். பாவம் பார்த்து விடக்கூடாது என்பதுதான் என்கருத்து.

தமிழ்நாடு அரசு இதே எதிர்ப்பில் தொடர்ந்து நிற்க வேண்டும்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!