Friday, June 26, 2026
முகப்பு பதிவு பக்கம் 149

New Democracy – March 2023 | Magazine

New Democracy March – 2023 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

New Democracy (Puthiya Jananayagam) March – 2023

List of Articles Present in this Issue :

Oxfam Report: This is Modi’s ‘New India’
‘Hindu Rashtra’: A Nation of the Adanis!
”One Nation, One Election”: Hindu Rashtra gateway to turn states into graveyards!
Judiciary always served its Conqueror!
”One Nation”: Tamilnadu resists!
Chhattisgarh: Rising Attacks on Christian Adivasis by Saffron Fascists!
The Telecommunication Bill, 2022: A move to establish fascist dictatorship!
Subsiding Joshimath: A disaster in the name of ‘development’!
The saffron fascist mob taking root in the US!
Tripura Model Electoral Violence: Lessons the Fascists teach us!

To get Free e-magazine, mail us : puthiyajananayagam@gmail.com

To Get the Magazine by Post :
Contribution : Rs. 25
Pay through G-Pay : 94446 32561

Make Payment and send your address details along with Payment receipt to our email : puthiyajananayagam@gmail.com

சாதிய படிநிலையை அமல்படுத்தும் ஹைதராபாத் பல்கலைக்கழகம்!

0

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு (பிஎச்டி) சேர்க்கையின் போது சாதி அடிப்படையில் நேர்காணல் மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு (Ambedkar Students’ Association) குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அவ்வமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் துறை வாரியாகப் பெற்ற பி.எச்.டி விண்ணப்பதாரர்களின் நேர்காணல் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் விவரங்களின் அடிப்படையில் இவ்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கணினி அறிவியல், உயிர்வேதியியல், இயற்பியல், தாவர அறிவியல், மின்னணுவியல், பயன்பாட்டுக் கணிதம் மற்றும் நுண்ணுயிரியல் ஆகிய ஏழு துறைகளில் சாதி அடிப்படையில் நேர்காணல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

‘உயர் சாதியினர்’ நுழைவதற்காக இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பட்டியல் சாதிகள் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் திட்டமிட்டே வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

படிக்க : காஷ்மீரைப் பற்றி பேசாதே : மிரட்டும் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் !

மாணவர்களின் நேர்காணல் மதிப்பெண்கள் சாதிப் படிநிலையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக அவ்வறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, கணினி அறிவியல் துறையில் முதல் ஐந்து ‘உயர் சாதி’ மாணவர்கள் பெற்ற சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 41.4; அதில் அவர்களின் நேர்காணல் மதிப்பெண்களின் சராசரி 24.6. ஆனால், சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 40 பெற்றிருந்த ஓ.பி.சி விண்ணப்பதாரர்களுக்கு, சராசரி நேர்காணல் மதிப்பெண்ணாக 17.2‌ என்ற குறைந்த மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

இதேபோல, பட்டியல் சாதி விண்ணப்பதாரர்களின் சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 30.2 ஆக இருந்தது. ஆனால், அவர்களின் நேர்காணல் மதிப்பெண்களின் சராசரியோ வெறும் 12 மட்டுமே. பட்டியல் பழங்குடியின விண்ணப்பதாரர்களின் சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 25.4; சராசரி நேர்காணல் மதிப்பெண் வெறும் 6.6 மட்டுமே. கணினி அறிவியல் துறை மட்டுமல்ல, மேலே குறிப்பிடப்பட்டிருந்த மற்ற ஆறு துறைகளிலும் இதே நிலைதான்.

மேற்குறிப்பிட்ட ஏழு துறைகளில் பொதுப் பிரிவின் கீழ்வரும் 28 பி.எச்.டி இடங்களில் 27 இடங்கள் ‘உயர் சாதி’ மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, மீதமுள்ள துறைகளில், 79 இடங்களில் 45 இடங்கள் மட்டுமே ‘உயர் சாதி’ மாணவர்களால் நிரப்பப்பட்டுள்ளன.

மேலும், “இது சமூக நீதிக் கொள்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். இடஒதுக்கீட்டின் கீழ் வரும் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் குறைந்தபட்ச பங்கேற்பை உறுதி செய்வதற்காக நேர்மறையாக இடஒதுக்கீட்டு கொள்கையானது கொண்டுவரப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகமோ இடஒதுக்கீட்டின் கீழ் வரும் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை அந்த குறைந்தபட்ச அளவோடு மட்டும் நிறுத்திக் கொள்ள எதிர்மறையாகப் பயன்படுத்துகிறது” என்று அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பின் அறிக்கை கூறுகிறது.

இந்த ஏழு துறைகளைத் தவிர, வேறு துறைகளிலும் தீவிர சாதிய பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளதற்கான சில எடுத்துக்காட்டுகள் உள்ளன. மெட்டீரியல் இன்ஜினியரிங் (Material Engineering) துறையில் பி.எச்.டி நேர்காணலுக்குத் தோன்றிய நான்கு பட்டியல் சாதிப் பிரிவு மாணவர்களுக்கு 30-க்கு வெறும் 0.3, 1.9, 2.1 மற்றும் 8.4 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதே‌ துறையில், எழுத்துத் தேர்வில் 41.25 மதிப்பெண் பெற்ற ஓ.பி.சி மாணவருக்கு நேர்காணலில் வெறும் 2.4 மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

படிக்க : மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்: திரையிட்ட மாணவர்களை ஒடுக்கும் டெல்லி பல்கலை!

இடஒதுக்கீடு பெறும் பிரிவுகளைச் சேர்ந்த ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் பொதுப் பிரிவில் பி.எச்.டி இடங்களை பெறாமல் தடுப்பதற்காகவே பல்கலைக்கழகம் நேர்காணல் மதிப்பெண்களை குறைத்து வழங்குவதாக அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது. மேலும், இந்த ஏழு துறைகளில் காட்டப்படும் அதீத சாதிய பாகுபாடுகளை விசாரிக்க ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதிகளையும் மாணவர் அமைப்பு பிரதிநிதியையும் கொண்டு ஒரு குழுவை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

பார்ப்பன பாசிஸ்டுகளின் ஆணைக்கிணங்க அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த ரோஹித் வெமுலாவை கொலை செய்த பல்கலைக்கழகம் தான் ஹைதராபாத் பல்கலைக்கழகம். அங்கு தொடர்ந்து சாதிய பாகுபாடுகள் காட்டப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மீது சாதிய பாகுபாடுகள் காட்டப்படுவது என்பதோடு, தற்போது ‘உயர் சாதி’ அல்லாத மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு இடங்களை பெறுவதற்கே தடையை ஏற்படுத்துகிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

மனு (அ)நீதி போதிக்கும் சாதிய படிநிலைகளை அப்படியே அமல்படுத்தப்படுகிறது. பாசிச மோடி ஆட்சியின் கீழ், ஹைதராபாத் பல்கலைக்கழகம் உட்பட மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இப்போக்கு அதிகரித்து வருகிறது.

பொம்மி

பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்த கலாஷேத்ரா நிர்வாகம்!

ல்வி நிலையங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள், வன்கொடுமைகள் போன்றவை நடப்பதற்கு அந்த குற்றங்களை செய்யும் “வக்கிர புத்தியுடைய தனிநபர்கள்” மட்டுமே காரணம் என்று மேலோட்டமாக பார்க்க முடியாது. கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் நிறுவனமயமாக்கப்பட்ட அதிகாரத்தின் பின்னணியில் ஒளிந்து கொண்டுதான் இதுபோன்ற பாலியல் குற்றங்களை செய்கிறார்கள்.

எளிமையான ஒரு கேள்வியை கேட்டுக்கொள்வோம். ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒருவன் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் பேசுகிறான் அல்லது செயல்படுகிறான், பாலியல் துன்புறுத்தல்கள், உருவக்கேலி போன்றவற்றை செய்கிறான் என்றால் அங்கே பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். அந்த குற்றவாளியை செருப்பால்  அடிப்பார்கள்.

ஆனால், ஒரு நிறுவனத்தில் மேலாளராக உள்ள ஒருவர் சக ஊழியர்களிடம் அல்லது ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் தவறாக நடக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார். அங்கே என்ன நடக்கும்? அந்த உயர்நிலை அதிகாரத்தில் உள்ளவர்­களை பாதிக்கப்பட்டவர்களால் கேள்வி கேட்க முடியாது. அப்படி கேள்வி கேட்டால் வேலை போகும் அபாயம் உள்ளது. பயிலவிடாமல் செய்யும் அபாயம் உள்ளது.

ஒன்று, நம் மீது யாரும் குற்றம் சுமத்த மாட்டார்கள், மற்றொன்று அப்படியே குற்றம் சுமத்தப்பட்டாலும் நிறுவனம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்ற துணிச்சலில்தான் இந்த வக்கிர புத்தியுடைய குற்றவாளிகள் தைரியமாக தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்களை செய்து வருகின்றனர். இந்தப் பின்னணியில்தான் சென்னை கலாஷேத்ராவில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய விவகாரத்தை நாம் பார்க்க வேண்டும்.

படிக்க : கலாஷேத்ரா: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே! | மக்கள் அதிகாரம் கண்டனம்

சென்னை கலாஷேத்ரா நிறுவனத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பாலியல் தொல்லைகள் நடந்து வருவது தற்போதுதான் ஊடகத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. ஆனால், இதற்காக பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த டிசம்பர் மாதம் முதலே, இதை நிறுவனத்தின் கவனத்திற்கும் பொது சமூகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்ல, போராடி வந்திருக்கிறார்கள்.

பரதநாட்டிய நடனம் மற்றும் கர்நாடக இசைக்கான இந்தியாவின் முதன்மையான நிறுவனமான கலாஷேத்ரா அறக்கட்டளை அறியப்படுகிறது. மேலும் இது மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குவது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் ஊழியர்களும் மாணவர்களும் பரீட்சைகளைப் புறக்கணித்து, மார்ச் 30 (வியாழக்கிழமை) அன்று நிறுவனத்தின் வளாகத்தில் இரவு முழுவதும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

நிறுவனத்தின் நான்கு ஆசிரியர்களான ஹரி பத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராடினார்கள்.

இதற்கிடையில், கலாஷேத்ரா அறக்கட்டளையின் உள் புகார்கள் குழு (Internal Complaints Committee) பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொடுமைகள் தொடர்பாக மேலும் மூன்று புகார்களைப் பெற்றுள்ளது. இந்த முறை புகார் கொடுத்த பாதிக்கப்பட்டவர் அனைவரும் ஆண்கள்.

ஆனால், இந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி புகார்களில் இருந்து  ஹரி பத்மனை பாதுகாக்க இந்த கலாஷேத்ரா நிறுவனம் அனைத்து வழிகளிலும் செயல்பட்டுள்ளது.

மாணவர்களால் கொடுக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய புகாரை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது கலாஷேத்ரா நிறுவனத்தின் உள் புகார்கள் குழு. அதுபற்றி, கலாஷேத்ரா கூறும்போது, ​​“கடந்த சில மாதங்களாக, கலாஷேத்ரா அறக்கட்டளையை இழிவுபடுத்தும் நோக்கில், சமூக ஊடகங்கள் மூலம் பெரும்பாலும் வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுகளைப் பரப்ப ஒரு ஒருங்கிணைந்த மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கலாஷேத்ரா அறக்கட்டளையை பாதுகாப்பற்ற சூழல் என்று பொய்யாகக் காட்டுவதன் மூலம் கலாஷேத்ரா அறக்கட்டளையை அவமதிப்பதை நோக்கமாகக் கொண்டு அவை பெரும்பாலும் தயாரிக்கப்பட்டதாகத் தோன்றியது. நிறுவனத்தின் உள் புகார்கள் குழு விசாரணையை சுயமாக எடுத்து, முழுமையான விசாரணைக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்தக் குழு குற்றச்சாட்டுகளில் தகுதியைக் காணவில்லை” என்கிறது.

அதவாது, அந்த நபர் மீது வைக்கப்பட்ட குற்றம்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என கூறி கலாக்ஷேத்ரா நிறுவனத்தின் உள் புகார்கள் குழு  ஹரி பத்மனுக்கு “உத்தமர் பட்டம் (Clean Chit)” வழங்கியிருக்கிறது.

மேலும், கலாஷேத்ரா தனது இணையதளத்தில் தங்கள் குறிப்பில் இந்த விவகாரத்தைப் பற்றி பேசுவதற்கு எதிராக ஒரு  உத்தரவை பிறப்பித்துள்ளது. “கிசுகிசுக்கள், வதந்திகளைப் பரப்புதல் ஆகியவை கற்றல் சூழலில் நம்பமுடியாத அளவிற்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப் படுகிறது” என்று குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தங்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி புகார் தெரிவிப்பவர்கள் மீதே சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் தொனியில் இருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செய்யபடும் படி ஒரு சில மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

“அவரது [குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரின்] முன்னிலையில் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று அறிவிக்கும் கடிதங்களில் கையெழுத்திட மூத்த மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு ஊழியர் கூறினார்.

இவையெல்லாம் குற்றவாளியை காப்பாற்ற கலாஷேத்ரா நிறுவனம் செயல்பட்டதன் சமீபத்திய உதாரணங்கள்தான். ஆனால் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய புகார்கள் டிசம்பர் மாதமே விவாதம் பொருளாக மாறிவிட்டது.

கிறிஸ்துமஸுக்கு ஒரு நாள் முன்பு, கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன், பத்தாண்டுகளுக்கும் மேலாக மாணவர்களை துன்புறுத்தியும், தொல்லைகள் கொடுத்தும் வந்த ஒரு ஆசிரியரைப் பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதினார்.

“மிக உயர்ந்த கலை மற்றும் சிந்தனையின் புகலிடமாக உள்ள ஒரு பொது நிறுவனம், இப்போது இளம் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றி கண்களை மூடிக்கொண்டதாக இருக்கிறது. அந்த இளம் பெண்கள் பாதிக்கப்படக் கூடியவர்கள். அவர்கள் இன்னும் பெரியவர்களாகவில்லை. ஊழியர்களில் ஒரு ஆண் உறுப்பினர் அவர்களை அச்சுறுத்துவதும் துன்புறுத்துவதும் அறியப்பட்டிருக்கிறது” என்ற லீலா சாம்சன் பதிவிட்டிருந்தார்.

லீலா சாம்சன் அந்த பதிவை விரைவில் நீக்கிவிட்டார், ஆனால் அது ஏற்கனவே ஒரு சலசலப்பான விவாதங்களை ஏற்படுத்திவிட்டது. அந்தப் பதிவு ஸ்கிரீன் ஷாட்கள் எடுக்கப்பட்டு  மாணவர்களாலும்  முன்னாள் மாணவர்களாலும் பிற சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டது. இது பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களை, தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளத்  தைரியம் கொடுத்தது.

மேலும் இதை பற்றி விவாதிக்கவே மாணவர்கள் மத்தியில் செயல்படாமல் இருந்த வாட்ஸ்அப் குழுக்கள் மீண்டும் உயிர்த்தெழுந்தன. ஏனெனில் மாணவர்கள் இந்த விஷயம் இந்த விவாதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சரியாக உணர்த்திருந்தனர். இதனால் இணையத்தில் இதற்கென ஒரு குழுவை உருவாக்கி நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பதிவு செய்தனர்.

ஒவ்வொருமுறை தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து நிறுவனத்திடம் புகார்கள் அளித்த மாணவர்கள் நிறுவனம் கண்டு கொள்ளவில்லை. நிறுவனம் தொடர்ந்து ஹரி பத்மனுக்கு ஆதரவாக இருந்ததாலும், இந்த புகார்களை வெளியில் சொன்னால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டிருக்கும் என்று நிறுவனம் மாணவர்களை மிரட்டியதாலும் தான்‌ மாணவர்கள் இணையத்தில் தங்களது புகார்களை பதிவு செய்தனர். ஆனால் இதைத் தான் கலாஷேத்ரா நிறுவனத்தின் பெயரை கெடுக்க சதி நடப்பதாக சொல்லி நீலிக்கண்ணீர் வடிக்கிறது நிறுவனம்.

கலாஷேத்ரா 8 மார்ச் 2023 அன்று மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூத்த ஆசிரியர் ஒருவரை மகளிர் தினத்தன்று கல்லூரியின் இயக்குனரால் கௌரவிக்கப்பட்டது தான் மாணவர்களை நாம் எப்படிப்பட்ட பாதுகாப்பற்ற இடத்தில் இருக்கிறோம் என்று உணரச் செய்தது. இதுதான் மாணவர்கள்  தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய கதைகள் இணையதளத்தில் அநாமதேயமாக எழுதி எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

ஆனால் இந்த எதிர்ப்புணர்வுனை மழுங்கடிக்கதான் நிறுவனத்தின் உள் புகார்கள் குழு விசாரணையை நடத்தி குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது “தவறில்லை” என பாராட்டு பத்திரம் வாசித்தது.

இதனை தொடர்ந்து தான் மார்ச் மாத இறுதியில் சென்னை கலாஷேத்ராவில் மாணவர்களால் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. ஆசிரிய உறுப்பினர் மற்றும் மூன்று கலைஞர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், உடலை ரீதியாக அவமானப்படுத்துதல் மற்றும் வாய்மொழி வழியாக அவமானப்படுத்துதல் ஆகியவற்றைக் கண்டித்து சுமார் 200 மாணவர்கள் போராட்டம் நடத்திய பிறகு, உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது சென்னை போலீசுத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சுமார் 90 மாணவிகள் தங்கள் மீது ஏவப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி  வெள்ளிக்கிழமை (மார்ச்-31) தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவரிடம் எழுத்துப்பூர்வ புகார்களை அளித்துள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய புகார்கள்  எழுந்தபோதிலும், தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை செவ்வியல் கலைகளுக்கான நாட்டின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனத்தை இழிவுபடுத்தும் வகையில் செய்யப்படும் தவறான பிரச்சாரம் என்று கூறியது.

படிக்க : சுவர் விளம்பரத்தை அழித்த ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலும் அதற்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசும்!

கலாஷேத்ராவில் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் மற்றும் இனப் பாகுபாடுகளை எதிர்கொண்டதாக, வாய்மொழியாக புகார் அளித்தும், நிறுவனம் அலட்சியமாகவும் பதிலளிக்காமலும் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிறுவனத்தின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், கொடுக்கப்பட்ட புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமலும், குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்டதற்காகவும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹரி பத்மன் மற்றும் பிற மூன்று பேர் மீதுதான் பாலியல் துன்புறுத்தல்கள் செயத்தாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் ஒட்டுமொத்த கலாஷேத்ரா நிறுவனமும் அதற்கு மேலாக தேசிய மகளிர் ஆணையமும் இந்த புகார்கள் பொய்யானவை என திசைதிருப்பப் பார்க்கிறது.

ஹரி பத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவரை இன்னும் கைது செய்யவில்லை. ஏப்ரல் 03-ஆம் தேதி செய்தியின் படி, அவர் ஹைதராபாத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார். மீண்டும் 03/04/23 மதிய வேளையில் சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறான். ஓட்டுனர் உரிமம் இல்லாமல், தலைக்கவசம் இல்லாமல் வண்டி ஓட்டும் அப்பாவிகளை பிடிப்பதில் காட்டும் அக்கறையை போலீசுத்துறை இதுபோன்ற பெரிய விஷயத்தில் காட்டுவதில்லை என்பது தற்செயலானது அல்ல.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாலியல் துன்புறுத்தல்கள் கலாஷேத்ராவில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனை அம்பலப்படுத்தி நூற்றுக்கணக்கான நபர்கள் போராடுகிறார்கள். 90-க்கு அதிகமான எழுத்து பூர்வ புகார்கள் வந்துள்ளன.‌  அந்த ஒற்றை நபர் மீது வழக்கு பதியவும் கைது செய்யுமே இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது. இதில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டு மாணவர்களுக்காக பாதுகாப்பான கல்விச் சூழல் உருவாக்கித் தரப்படும் என்பது நாம் எப்படி உறுதியாக நம்ப முடியும். நம்முடைய போராட்டத்தை தவிர இந்த கட்டமைப்பில் வேறு எதுவொன்றாலும் நமக்கான தீர்வை கொடுக்க முடியாது என்பதற்கு இந்த கலாஷேத்ரா விவகாரம் மற்றுமொரு சாட்சியம்.

ராஜன்­­­­­­

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்! தமிழ்நாட்டை சூறையாட வரும் பாசிசக் கும்பலை முறியடிப்போம்! || மக்கள் அதிகாரம்

05.04.2023

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்!
தமிழ்நாட்டை சூறையாட வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க;
அம்பானி – அதானி பாசிசக் கும்பலை முறியடிப்போம்!

பத்திரிகை செய்தி

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களை சூறையாட கார்ப்பரேட்டுகள் எத்தணித்தபோது அதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி டெல்டாவையும் விவசாயிகளையும் காப்பாற்றியது தமிழ்நாடு.

மக்கள் போராட்டங்களின் விளைவாகவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

படிக்க : வீழாது தமிழ்நாடு எங்களில் கோட்டை | ம.க.இ.க சிவப்பு அலை | RED Wave | Pala Gana Song | Audio Launch

அனைத்து இயற்கை கனிம வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் அம்பானி – அதானி பாசிச கார்ப்பரேட் கும்பலுக்கு விற்பதையே ஒரே வேலையாக கொண்டிருக்கிறது மோடி – அமித்ஷா பாசிச ஆட்சி.

தமிழ்நாட்டு அரசுக்கு தெரியாமல் தமிழ்நாட்டு அரசை கேட்காமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளான டெல்டா மாவட்டங்களில் சேத்தியா தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒன்றிய அரசு விடுத்துள்ள சவால் ஆகும்.

2024 ஆம் தேர்தலில் வெற்றி வாகை சூடி இந்துராஷ்டிரத்தை அமைக்கும் கனவில் துடிக்கும்  ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பலுக்கு தேர்தலுக்கு முன்னரே தமிழ்நாட்டின் ஓர்மையை ஒழித்துக் கட்டுவதும் இயற்கை வளங்கள் பொதுத்துறை நிறுவனங்களை அம்பானி, அதானிக்கு தாரை வார்ப்பது முக்கியமான கடமையாக உள்ளது.

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மோடியின் இந்த சதித்திட்டத்தை நிச்சயம் முறியடிப்பார்கள் என்று மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ.20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

ஏப்ரல் – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி.பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம் : ராகுல் தகுதி நீக்கம் : நாடாளுமன்றத்தை முடக்கினால், மக்கள் மன்றத்தில் முழங்குவோம்!

♦ சர்வதேச சட்டங்கள் அனுமதி : பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலுக்கான திறவுகோல்!

♦ இது பாசிஸ்டுகளுக்கான ‘ஜனநாயகம்’! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!

♦ கார்ப்பரேட்மயம் : நேற்று பள்ளிக்கல்வித்துறை! இன்று போக்குவரத்துத்துறை! நாளை?

♦ “ஈரோடு பட்டி ஃபார்முலா” : புழுத்து நாறிக்கொண்டிருக்கும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ மற்றொரு பரிணாமம்!

♦ தொடர்ந்து திவாலாகிவரும் அமெரிக்க வங்கிகள் : வெடிக்கக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம்!

♦ “ஸ்டிங் ஆப்பரேஷன்” : ஊடக புரோக்கர்களும் ஊடுருவும் பாசிசமும்!

♦ திரிபுரா, நாகலாந்து, மேகாலாயா தேர்தல் முடிவுகள் : எச்சரிக்கை, பரவிவருகிறது பாசிசம்!

♦ ஐ.எம்.எஃப்-வின் மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இலங்கை!

♦ மீண்டும் மண்டைக்காடு கலவர அபாயம் : தமிழ்நாடே விழித்துக்கொள்!

♦ ஏப்ரல் 2, 2023. பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 2

♦ பரந்தூர் முதல் ஓசூர் சிப்காட் வரை : கார்ப்பரேட் சேவையில் தி.மு.க!

வீழாது தமிழ்நாடு எங்களில் கோட்டை | ம.க.இ.க சிவப்பு அலை | RED Wave | Pala Gana Song | Audio Launch

மார்ச் 30 அன்று சுற்றிவளைக்குது பாசிசப்படை வீழாது தமிழ்நாடு துவளாது போராடு என்ற பாடல் இசை வெளியீட்டு விழா மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ப்பில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவினரால் வெளியிடப்பட்ட “சுற்றிவளைக்குது பாசிசப்படை, வீழாது தமிழ்நாடு எங்களின் கோட்டை” என்ற பாடல் காணொலி வடிவில் இங்கே வெளியிடுகிறோம்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பெண்களை அசிங்கப்படுத்தும் விதமாகத்தான் ஜெயமோகன் சொல்வார் | தோழர் புவன் | வீடியோ

நூறு கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு நானும் நடிகன் தான் நானும் கலைஞன் தான் என்று கூறுகிறார் ரஜினி. அவரது படங்களில் பணத்தை சேர்த்து வைத்தால் தூக்கமே வராது என்று கூறுவார். அப்படி ரஜினி கூறுவது மக்களுக்கு மட்டும்தான்; அவருக்கு இல்லை. அவர் கோடிகளை வாங்கி சேர்த்துக் கொள்வார்.

பணத்தை சேர்த்து வைத்தால் முள்ளைப் போல குத்தும், மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வராது என்பார். ஆனால் மக்களுக்கு தங்களின் அடுத்த நாளைய பொருளாதார தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என நினைப்பதால் தூக்கம் வருவதில்லை.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை கலைக்குழு பாடல் – இசை வெளியீட்டு விழாவில் மக்கள் அதிகாரம் சென்னை மண்டலம் தோழர் புவன் அவர்கள் ஆற்றிய உரை ரூட்ஸ் யூடியூப் வெளியிட்டுள்ளது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

காய்ந்த சருகுகள் எரிவதற்குத் தேவை சிறு தீ பொறியே!

உலகின் பல நாடுகளில் மக்கள் போராட்டங்கள்:
காய்ந்த சருகுகள் எரிவதற்குத் தேவை சிறு தீ பொறியே!

ண்மையில் உலகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஏகாதிபத்தியப் போர், பொருளாதார நெருக்கடி, பாசிச கொடுங்கோன்மை சட்டங்கள், வறுமை  உள்ளிட்டவை தொடர்ச்சியாக மக்களை போராட்டக்களத்தை நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக பின்தங்கிய நாடுகளில் மட்டுமின்றி பணக்கார நாடுகளாக கருதப்பட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இத்தகைய போரட்டங்கள் தீவிரமடைந்து வருவது கவனிக்கத்தக்கது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் கொண்டுவந்த ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு மேலாக அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். தொழிலாளர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்தியது மற்றும் 43 ஆண்டுகள் வேலை செய்தால் தான் ஓய்வூதியம் வழங்கப்படும் போன்ற ஒடுக்கமுறை அம்சங்களுக்கு எதிராக கடந்த  மார்ச் மாதம் 12 ஆம் தேதி தலைநகர் பாரிசில் 35 லட்சம் மக்கள் ஆறாவது முறையாக மாபெரும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசியும், லத்தியால் தாக்கியும் மாபெரும் மக்கள் போராட்டத்தைக் கலைக்க போலீஸ் முயன்றபோதும் அது தோற்றுப்போனது.

பல இடங்களில்  போலீசே தலைகவசங்களை கழட்டிவிட்டு மக்களுக்கு ஆதரவாக அவர்களுடன் நிற்கும் காட்சிகளும் அரங்கேறின. தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்  பிரான்சின் பல நகரங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. போராடும் மக்கள் அக்குப்பைகளை எரித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒடுக்குமுறையின் மூலமும் கள்ள மௌனத்தின் மூலமும் போராட்டத்தை நீர்த்துப்போக செய்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த மேக்ரோன் அரசின் கனவில் மண்ணை தூவுவது போல நாளுக்கு நாள் பிரான்சில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

பிரான்ஸை போல் ஆளும் அரசை மக்கள் போராட்டத்தின் மூலம் ஸ்தம்பிக்க வைத்த மற்றொரு நாடு என்றால் அது இஸ்ரேல். இஸ்ரேலில் யூத இனவெறி பாசிஸ்டுகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொண்டுவந்த நீதித்துறை சீர்திருத்த சட்டம் பாசிஸ்டுகளுக்கு நீதித்துறை மீது கட்டற்ற அதிகாரத்தை வழங்குகிறது. இதற்கு எதிராக பல வாரங்களாக மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தையும் மீறி நெதன்யாகு அரசு சட்டத்தை நிறைவேற்றிய போதிலும், மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை எதிர்த்து இந்த முடிவை தற்சமயத்துக்கு நிறுத்திவைத்துள்ளது. எந்த அளவிற்கு மக்கள் எதிர்ப்பு தீவிரமாக உள்ளதென்றால் நீதித்துறை சட்டதிருத்தத்திற்கு எதிராக நெதன்யாகு அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சரே வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார்.


படிக்க: இஸ்ரேல்: நெதன்யாகு அரசை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்!


இலங்கையில் மாபெரும் மக்கள் எழுச்சிக்குப் பிறகு ஆளும் வர்க்கத்தால் நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க உலக வட்டிக்காரனான சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்க ஒப்பந்தம் போட்டுக்கொண்டு மக்கள் தலையில் நெருக்கடியை சுமத்தி வருகிறார். ஐ.எம்.எப்-இன் கட்டளைக்கு இணங்க ரணில் அரசு செலவினத்தை குறைப்பதோடு வரியை உயர்த்தி வருகிறது. இதனால் அடிப்படை உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு கூட மக்கள் மத்தியில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கு எதிராக இலங்கை மக்கள் மீண்டும் கிளர்ந்து எழுந்துள்ளனர். உலக கந்துவட்டி ரௌடியிடம் இருந்து வாங்கும் கடனை சமாளிக்கக் கடுமையான சுமையை உழைக்கும் மக்கள் தலைமீது ஏற்றாதே என இலங்கை தலைநகரான கொழும்புவில் பொதுத்துறை ஊழியர்கள் மாபெரும் பொது வேலைநிறுத்தத்தில் இடுபட்டனர்.   இடையில் சற்று தணிந்திருந்த இலங்கை மக்கள் போராட்டம் இந்தாண்டு ஜனவரியில் இருந்து மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

பெறும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் பிரிட்டனில் “ஊதிய உயர்வு இல்லாமல் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாது” என்ற கோரிக்கையை முன்வைத்து பிரிட்டனின் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள். இவர்கள் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் மோசமாகி பெரும்பான்மை மக்கள் தொடர் போரட்டடங்களை நடத்தி வருகின்றனர்.

ஏகாதிபத்திய அமெரிக்க ரசியா மீது பொருளாதார தடை விதித்தால் பெறும் பாதிப்புக்கு உள்ளான மற்றொரு  நாடு ஜெர்மனி. பொருளாதாரத் தடையினால் உணவு மற்றும் எரிப்பொருட்களின் விலை விண்ணை முட்டுகின்றன. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் தவித்தது வருகின்றனர் ஜெர்மன் மக்கள். இந்நிலையில் அனைத்து துறை போக்குவரத்து தொழிலாளர்களும் ஊதிய உயர்வு கோரி எழுச்சிகரமான ஒரு வேலைநிறுத்தத்தை நடத்தி உள்ளனர். இவ்வேலைநிறுத்தத்தில் வெர்டி என்ற தொழிற்சங்கத்தில் இருந்து மட்டும் 25 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பிற தொழிற்சங்கத் தொழிலாளர்களும் இவ்வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். வேலைநிறுத்தத்தால் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. மேலும், பல்வேறு சர்வதேச விமான நிலையங்களும் முடங்கிவிட்டன. இதனால் கிட்டத்தட்ட 4 லட்சம் பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர்.


படிக்க: துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!


பிரிட்டன் மற்றும் ஜெர்மனியை போல் பாதிக்கப்பட்ட மற்றொரு ஐரோப்பிய நாடான போர்த்துகீசியமும் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. நெருக்கடியைச் சமாளிக்கத் தங்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு போர்த்துகீசிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி காலியாகக் கிடக்கும் ஊழியர்களின் பணியிடங்களை நிரப்பாமல் மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளும் கிரீஸ் அரசின் போக்கைக் கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அந்நாட்டுத் தொழிலாளர்கள் மேற்கொண்டனர்.

கடந்த மார்ச் 12 அன்று தென் ஆப்பிரிக்காவில் கல்வி, சுகாதாரம் மற்றும் அதன் துணைதுறைகளை சார்ந்த ஊழியர்கள் ஊதிய உயர்வுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடியுள்ளனர். 2018 ஆம் ஆண்டு மூன்றாண்டுக் கால உடன்பாடு போடப்பட்டது. ஆனால் மீண்டும் 2021 ஆம் ஆண்டு போடப்பட வேண்டிய உடன்பாடு இதுவரையில் எட்டப்படவில்லை. இதனை எதிர்த்து பல்லாயிரம் ஊழியர்கள் போராடினர்.

இவையன்றி ஜியார்ஜியா, தென்னமெரிக்க நாடுகளான பெரு, துனிசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்துள்ளது. உக்ரைன்-ரஷ்யப் போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்காக மட்டுமின்றி உக்ரைன் மீதான போரை கண்டித்து போரை உடனடியாக நிறுத்தக் கோரி ரஷ்யாவுக்கு எதிராகவும், “உக்ரைனுக்கு ஆயுதம் வழங்காதே” என்று அமெரிக்க தலைமையிலான மேல்நிலை வல்லரசுகளை கண்டித்தும் மக்கள் அவ்வபோது போராடி வருகின்றனர்.

பசி, பட்டினி, உணவு மற்றும் எரிப்பொருள் விலையேற்றம், வேலை பறிப்பு, ஏகாதிபத்திய போர் இதற்கெல்லாம் எதிராக மாபெரும் வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் உலகின் குறுக்கும் நெடுக்குமாய் உள்ள பிரான்ஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஜெர்மனி, கிரீஸ் என உலக நாடுகள் முழுவதும் படர்ந்து வருகிறது.

ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க போட்டாபோட்டி காரணமாக ஏற்பட்ட போர்களும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுமே மக்களை இப்போராட்டங்களை நோக்கி தள்ளியுள்ளது. பல நாடுகளில் இனி வாழவே முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் தோல்வியின் நெருக்கடி முழுக்க முழுக்க மக்கள் தலையில் வந்து விடிகிறது. இவையெல்லாம் உணர்த்துவது ஒரு விஷயத்தை தான்.  முதலாளித்துவத்தை தூக்கி எறிந்துவிட்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான ஆட்சியை நிறுவும் ஓர் புரட்சிக்காக இந்த உலகம் ஏங்கிகொண்டிருக்கிறது. அதனை செய்வதற்கான மக்கள் அடித்தளம் கொண்ட போஷ்விக்மயமான கட்சியே ஒவ்வொரு நாட்டிற்கும்  தற்போதைய தேவை. ஏனெனில் உலக மக்கள் புரட்சியை பாற்றிகொள்ள காய்ந்த சருகுகளாக காத்துக்கிடக்கின்றனர். அது எரிவதற்கு தேவை சிறு தீ பொறியே!

நிலம் கையகப்படுத்துதல்: என்.எல்.சி-யின் அடாவடித்தனம் – பாதிப்புள்ளாகும் கடலூர் மாவட்ட மக்கள்! | வீடியோ

தொடர்ச்சியாக மக்களிடமிருந்து விளைநிலங்களை பிடிங்கிக் கொள்ளும் என்.எல்.சி நிர்வாகம் இதுவரை எந்த நிலத்திற்கும் முழு இழப்பீடு தொகையையும் வழங்கவில்லை. வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை என மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசும், மூன்றாம் கட்ட விரிவாத்திற்காக நிலங்களை கையப்படுத்திவரும் ஒன்றிய அரசும் தொடர்ந்து செவிசாய்க்கவில்லை என்றால் பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என குமுறி வருகிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள்.

மேலும் தொடர்ந்து களத்தில் நின்று போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இச்செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ந்து போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும். இவ்விரிவாக்க பணிகளை உடனே நிறுத்தி விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும். இத்திட்டத்தை உடனே அரசு கைவிட வேண்டும்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல் பாடும் நேஹா சிங் ரத்தோர்! | தோழர் அமிர்தா | வீடியோ

உத்தரப்பிரதேசத்தில் குறிப்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்படும் மக்களுக்கெதிரான  திட்டங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி  பாடல்களாக பாடி வருபவர்தான் நேஹா சிங் ரத்தோர்.

இதுவரை இருநூறுக்கு மேற்ப்பட்ட பாடல்களை பாடிய இவர் தொடர்ச்சியாக பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளை அவர்கள் மண்ணில் இருந்து தன்னுடைய தாய்மொழியான போஜ்புரியில் பாடிவருவது பல லட்சக்கணக்கான மக்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. அவர் பாடிய சில மணி நேரத்தில் லட்சம்பேரால் பார்க்கப்பட்டு அம்மக்களிடையே நெருப்பாக பரவியது.

இதை கண்டு அஞ்சிய அம்மாநில பா.ஜ.க அரசு அவர் மீது பல போலிபுகார்கள் பதிவு செய்து தாக்குதல் தொடுத்திருக்கிறது. இவற்றை கடந்து களத்தில் நிற்கும் பாசிச எதிர்ப்புணர்வு கொண்ட நேஹா சிங்கிற்கு துணைநிற்க வேண்டும். அவரிடமிருந்து பாசிச எதிர்ப்புணர்வை வரித்துகொண்டு செயலாற்ற வேண்டும்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் அடியாள்படையாக செயல்படும் தமிழ்நாடு போலீசு!

சுற்றி வளைக்குது பாசிச படை:  வீழாது தமிழ்நாடு துவளாது போராடு” மே 1 மதுரை மாநாட்டுக்கான பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இன்று (02.04.2023) காலை 9 மணி அளவில் தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள கோவில் மரத்தடியில் அமர்ந்து மாநாட்டு பிரச்சாரத்திற்கான பிரசுரங்களை மக்கள் அதிகாரம் தோழர்கள் மடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு போலீசு உடையில் இல்லாத ஒருவர் (போலீசு ஆய்வாளர்) ”இங்கு என்ன நடக்கிறது; யார் நீங்கள்” என்று கேட்டார். தோழர்களிடம் பிரசுரத்தை வாங்கிப்படித்துவிட்டு “இதுபோன்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது. மக்கள் அதிகாரம் தடைசெய்யப்பட்ட அமைப்பு. நீங்கள் எப்படி பிரச்சாரத்தில் ஈடுபடலாம்; நீங்கள் மக்களுக்கு விரோதமாக பிரச்சாரம் செய்பவர்கள்” என்று கூச்சலிட்டார்.  “இங்கெல்லாம் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது” என மிரட்டும் தொனியில் பிரசுரங்களை பிடிங்கி தள்ளுமுள்ளில் ஈடுபட்டார். ”இது உழைக்கும் மக்கள் பணத்தில் தயார் செய்த பிரசுரம்; இதிலிருந்து கையை எடுங்கள்” என்று தோழர்கள் போலீசுக்கு பதில் கூறினர்.

“இங்கு பிரச்சாரம் செய்யவரவில்லை; நாங்கள் வெளியில் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்வதற்காகவே பிரச்சுரங்களை மடித்து கொண்டிருந்தோம்” என கூறிய பிறகும் தோழர்களை உரத்த குரலில் “வெளியே போங்கடா” என ஒருமையில் ஏசி அதிகார திமிருடன் நடந்துகொண்டார். “உங்களை கைது செய்து போலீஸ் ஸ்டேசனுக்கு இழுத்து செல்ல வேண்டும்” என கூறிய அவர் போலீசு உடையில் இல்லாத  மற்றொரு நபரையும் சேர்த்துக்கொண்டு தள்ளுமுள்ளில் ஈடுபட்டார். மிரட்டிய போலீசிடம் “நாங்கள் பிரச்சினையை சந்திக்க தயார்” என தோழர்கள் பதிலளித்தனர்.


படிக்க: மதுரை: மே 1 மாநாடு சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு மீது நடவடிக்கை எடுத்திடுக! | ம.க.இ.க மனு


அங்கு கூடியிருந்த வியாபாரிகள் மக்களிடம் சத்தமாக “நாங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள். மக்களுடைய பிரச்சனைகளை பற்றி பேசும் எங்களை பேசவிடமால் தடுத்து இப்படி அராஜகம் செய்கிறார்கள்; இங்கெல்லாம் பேச கூடாது வெளியே போங்கள் என  மிரட்டுகிறார்கள்”  என்று முறையிட்டனர்.

தலைநகர் சென்னையிலே இப்படி நடக்கும் அதேவேளையில், முன்னதாக மதுரையில் மாநாட்டுக்காக 40-க்கும் மேற்பட்ட சுவர் எழுத்துகளுக்கு வெள்ளை அடித்துள்ளது மதுரை காவித்துறை. இப்படி மாநாட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யும் தோழர்களை குறிவைத்து மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகிறது போலீசு.

இதுபோன்ற சுவரெழுத்து விளம்பரங்களும், பிரச்சாரங்களும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது. பாசிச எதிர்ப்பு குரல்களை ஒடுக்குவதற்கு நாடு முழுவதும் அதிகார வர்க்கத்தை ஆக்கிரமித்துள்ள பாசிசகும்பல், தமிழ்நாட்டிலும் அதிகார வர்க்கத்தில் ஊடுருவி வருகிறது. தனது அடிவருடிகளை உருவாக்கி பாசிச எதிர்ப்பு குரல்களை முடக்க முற்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்திற்கு எதிராகப் போராடும் முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் மீதான போலீசுத்துறையின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒரணியில் திரளுவோம்.

நேரலை | ஏப்ரல் 02, 2023: பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா!

தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதில் புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்!

நிகழ்ச்சி ஏற்பாடு:
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
செல்: 73974 04242

பாகம் – 1
(வீடியோ காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்)
https://fb.watch/jEXDBIjsq6/

பாகம் – 2
(வீடியோ காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்)
https://fb.watch/jEXC0qIcUf/

பாகம் – 3
(வீடியோ காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்)
https://fb.watch/jEXsvhKRC9/

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஈராக்: புல்லுருவி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புபோரை தொடுத்து 20 ஆண்டுகள் நிறைவு!

க்ரைன் ரசிய போரால் தாம் கொல்லப்பட்டுவிட்டால், தமது குழந்தைகளை அடையாளம் கண்டுகொள்வதற்காக முதுகில் முகவரிகளை எழுதிய பெற்றோர்களின் காட்சி நமது நெஞ்சை உலுக்கியது. இத்தகைய கொடூரமான சம்பவம் தான் மார்ச் 20, 2003 அன்று ஈராக் மீது அமெரிக்கா மேற்கொண்ட போர் பிரகடனம். அக்கொடிய நிகழ்வு தொடங்கி 20 ஆண்டுகளை கடந்துவிட்டோம். பிணந்தின்னி ஏகாதிபத்திய அமெரிக்கா தொடுத்த போரினில் கழுத்தறுக்கபட்டு உடலில் இரத்தம் சொட்ட சொட்ட குற்றுயிரும் குலையுயிருமாக உயிரைவிடும் நிலையில் இருந்தது ஈராக். இன்றும் சொட்டும் இரத்தத்தை குடித்து கொண்டுதான் இருக்கிறது அமெரிக்கா.

இந்த மறுகாலனியாக்க நடவடிக்கைக்கு உலக யோக்கியன் புஷ் அன்று இட்ட பெயர் “ஈராக்கிய விடுதலை நடவடிக்கை’’ (Operation Iraqi Freedom). ‘அதிபர் சதாம் உசேனின் ஈராக்கை நிராயுதபாணி ஆக்குவது; பேரழிவு ஆயிதங்களை (Weapons of mass destruction) அழிப்பது’ – இதன்மூலம் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பு அபாயத்தை நீக்குவது என்று முழங்கியது புஷ் – பிளேர் கும்பல்.

ஆனால் எதார்த்தத்தில் நடந்ததோ, அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னிடம் இருந்த பேரழிவு ஆயுதங்களை சோதித்தறிய வாய்ப்பாக ஈராக்கை பயன்படுத்திக் கொண்டது தான். இதன்மூலம் தனது ஆயுத சந்தையை விரிவுபடுத்திக் கொண்டது.

சதாம் உசேனின் கொடுங்கோல் ஆட்சியை நீக்கிவிட்டு ஜனநாயகத்தை நிறுவுவதே தனது நோக்கம் என்று அமெரிக்கா கூறியது. ஆனால் ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவது தான் அமெரிக்காவின் நோக்கம் என்பது உலகிற்கு அம்பலப்பட்டு போனது.


படிக்க: ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை


இந்தப் போர் 2003-ஆம் ஆண்டு தொடங்கப்படவில்லை; இதற்கு முன்னர் 1991-ஆம் ஆண்டிலேயே பல்வேறு முனைகளில் சிறுசிறு அளவுகளில் தொடங்கப்பட்டுவிட்டது. ஐ.நா விதித்த பொருளாதார தடையினாலும் அமெரிக்க தாக்குதலாலும் உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு 6 லட்சம் குழந்தைகள் செத்து மடிந்தனர். போர் காலங்களில் தினமும் 1500 முறைக்கு மேல் விமானங்கள் மூலம் பல ஆயிரம் டன் குண்டுகளை பாக்தாத் நகர் மீது வீசப்பட்டது.

அமெரிக்கா பயன்படுத்திய துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகள், ஏவுகணை முனைகள் அனைத்திலும் நுண்ணிய யுரேனிய அணுசக்தி துகள்கள் பயன்படுத்தப்பட்டன. போரின் போது இராணுவத்தினர் மட்டுமல்ல போருக்கு பின் ஆயிரம் ஆயிரம் குடிமக்களும் செத்து மடிந்தனர். ஈராக் மக்கள் மட்டுமல்ல அமெரிக்க கூலிப்படையினரும் நோய்க்கு பலியானார்கள். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 67 சதவீத குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர். 2003 – 2011 இடைப்பட்ட காலத்தில் மட்டும் 4,61,000 பேர் இறந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது.

“ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் அவர்களின் வர்க்க நலன் அடங்கி இருக்கிறது” என்பதற்கேற்ப புஷ் முழங்கிய வார்த்தைக்கு பின்னும் ஒரு வர்க்க நலன் அடங்கி இருந்தது. அமெரிக்காவை உலக ஒற்றை துருவ மேலாதிக்க வல்லரசாக நிறுவிக்கொள்ளவும் உலக ஏகபோக நிறுவனங்களின் மறுகாலனியாக ஈராக்கை மாற்றுவதே அது.

“ஈராக்கிய விடுதலை நடவடிக்கை’’ என்று முழக்கியது எல்லாம் பிற அரபு நாடுகளில் உள்ளதை போன்று ஈராக்கிலும் ஏகாதிபத்திய அடிவருடி கும்பலுக்கு சேவை செய்யும் உல்லாச – ஊதாரிகள் அடங்கிய ஒரு பொம்மை ஆட்சியை அமைப்பதைதான். அன்று அதிபர் புஷ் பிணக்குவியல் மீது ஏறி நின்று ஈராக்கின் எண்ணெய் வளங்கள் அந்நாடு மக்களின் எதிர்கால நலனுக்காக பாதுகாக்கபட்டுவிட்டது என்று கூச்சலிட்டதெல்லாம் பெட்ரோலிய எரிபொருள் துறையில் அமெரிக்காவின் உலக ஏகபோக சந்தை ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதைதான்.

அமெரிக்கா ஈராக் மீது போர் புரிந்ததன் உண்மையான நோக்கமே, ஈராக் உலகிலேயே இரண்டாவது எண்ணெய் வளம் கொண்ட நாடு என்பதே. ஏற்கனவே பிற எண்ணெய் வளம் கொண்ட நாடுகளை தனது ஆளுகைக்கு கொண்டு வந்து விட்ட நிலையில் ஈராக்கையும் தனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வரவும், வீழ்ச்சி அடைந்து வந்த அமெரிக்க டாலர் மதிப்புக்கு முட்டுக் கொடுக்கவும் அமெரிக்கா வெறித்தனமாக செயல்பட்டது. ஈராக், லிபியா என்று தனது உலக மேலாதிக்கத்திற்கு அடிபணியாத நாடுகள் மீது ஏதாவது ஒரு போரை தொடுத்து அடிபணிய வைப்பதே அமெரிக்காவின் நோக்கம்.


படிக்க: இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !


ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. அமெரிக்கா வீசிய குண்டுகளுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள மூலை முடுக்குகளில் இருந்து அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரை எதிர்த்து முழக்கங்கள் எழும்பின. உலகெங்கிலும் இருந்து கோடான கோடி உழைக்கும் மக்கள் ஈராக்கின் ஆக்கிரமிப்பு போருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உலகப் பாட்டாளி வர்க்க கட்சியின் தார்மீக கடமைக்கிணங்க தமிழகத்திலும் “உலக மேலாதிக்க போர் வெறியன் புஷ்சே ஈராக் மீது கை வைக்காதே! ” என்ற முழக்கத்தின் அடிப்படையில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு மற்றும் பு.மா.இ.மு போன்ற புரட்சிகர அமைப்புகள் சார்பாக திருச்சி, சென்னை, பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் போர் எதிர்ப்பு முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து 20 ஆண்டுகள் ஆகியும் 2,500-க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் ஈராக் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. தற்போது அவர்கள் கூறும் காரணமோ ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது. ஆனால், ஐ.எஸ் அமைப்பு உருவாவதற்கு காரணமே அமெரிக்கா தான் என்பது உலகறிந்த விசயம்.

உலகம் சிவப்பதற்கு எதிராகத்தான் (அதாவது சோவியத் ரஷ்யா விரிவாக்கத்திற்கு எதிராக) நேட்டோ கூட்டணிகள் என்று முழங்கியது அமெரிக்கா. ஆனால் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின்னரும் நேட்டோ ஏன் இன்னும் களைக்கப்படவில்லை? இன்றும் ஏன் நேட்டோ கூட்டமைப்பை வைத்து ரஷ்ய-உக்ரைன் போர் மூலம் பதிலிப் போர் நடத்திகொண்டிருக்கிறது அமேரிக்கா? இதற்கான விடையை தெரிந்து கொண்டாலே ஏன் இன்றும் ஈராக்கில் அமெரிக்காவின் துருப்புக்கள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இரண்டின் நோக்கமுமே ஒன்றுதான்; அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நிறுவுவதும் அதனை தக்கவைப்பதும் தான். அதனை சரிய விடாமல் முட்டுக் கொடுக்கத்தான் அமெரிக்க துருப்புகளும் நேட்டோவும்.

அன்றைய ஈராக் போர், இன்றைய உக்ரைன் பதிலி போர் என அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கரங்கள் உலகம் முழுவதும் நீண்டுள்ளன. தனது ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 800 ராணுவ தளங்களை அமைத்துள்ளது. உலக பாட்டாளி வர்க்கத்தின் பிரதான எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்த ஒன்றிணைவோம்! வீழ்த்துவோம்!

ஊபா உச்சநீதிமன்ற தீர்ப்பு: பாசிச அரசுடன் கைகோர்க்கும் நீதிமன்றம்!

ரலாற்றை ஆராய்ந்தால் முடியாட்சி முதல் குடியாட்சிவரை அனைத்து அரசுகளுமே மக்களின் மீது ஒடுக்குமுறையை செலுத்தும் வன்முறைக் கருவியாக தான் இருந்துவந்துள்ளன. இந்திய வரலாறும் அப்படி தான். அதில் தற்போது மோடியின் எட்டு ஆண்டுகால ஆட்சியில் அரசு இயந்திரத்தின் ஒட்டுமொத்த உறுப்புகளும் மேலும் மேலும் பாசிசமயமாகி வருகிறது. அதற்கு தக்க எடுத்துக்காட்டு தான் சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு.

கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) 1967, மற்றும் பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (TADA), 1987 ஆகியவற்றின் கீழ், “தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற அடிப்படையில் மட்டுமே ஒரு நபரை குற்றஞ்சாட்ட முடியாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை (25.03.2023) அன்று இத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் மாற்றி வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பின்படி, தடைசெய்யப்பட்ட அமைப்பின் வெறும் “உறுப்பினர்” என்ற காரணத்திற்காகவே சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA), 1967 கீழ், ஒருவரை கைது செய்யலாம் எனவும், மேலும் அவர் அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் உள்ளாக நேரிடும் எனும் கட்டற்ற அரச ஒடுக்குமுறைக்கு வழியமைக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த வாரம் தனது தீர்ப்பின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.

இக்கொடிய தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான குஜராத்தை சேர்ந்த எம்.ஆர்.ஷா தொடர்ந்து இதுபோன்ற மக்கள் விரோத தீர்ப்பை வழங்கிவருபவர் ஆவார். இவர் நீதிபதியாகப் பதவி ஏற்றதிலிருந்தே இவர்மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தனது பேட்டி ஒன்றில் மோடியை மாடல் அண்ட் எ ஹீரோ (model and a hero) என்று புகழ்ந்தவர். எனில் அவர் யாருக்காகச் செயல்பட்டு வருகிறார் என்பதனை புரிந்துகொள்ளமுடியும். இப்படி ஆளும் பாசிச பா.ஜ.க – சங்கபரிவாரின் உறுப்பினர் போலவே செயல்பட்டுக் கொண்டிருப்பது எம்.ஆர்.ஷா. மட்டுமல்ல, ஒட்டுமொத்த நீதித்துறையும் பிற அரசு எந்திரங்களும் அரசின் பிரதிநிதிகளாக இருந்தே செயலாற்றி வருகின்றன.


படிக்க: ஊபா (UAPA) : செயற்பாட்டாளர்களை செயலிழக்க செய்வதற்கு தான் || அருந்ததி ராய்


ஏற்கெனவே ஊபா சட்டத்தை கருப்புச்சட்டம் என மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எதிர்த்து வரும் நிலையில், தற்போது வழங்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பானது மிக மோசமான மனித உரிமை மீறல்களை விளைவிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

இத்தீர்ப்பு குறித்து, “வரலாற்றில் இதுவரை வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளை விட இது மிகவும் மோசமான அடிப்படை உரிமைகளை அழிக்கக்கூடிய தீர்ப்பு” என சட்டவியல் அறிஞர் கெளதம் பட்டாயா விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி” எனும் கூற்றிற்கு இணங்க தீர்ப்பு வழங்கும் போது, “இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” என தனது போலி தேசபக்தியைத் தம்பட்டம் அடித்துக் கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

நாட்டையே அதானி அம்பானிக்கு கூறு போட்டு விற்றுக்கொண்டிருக்கும் மோசமான சூழலில் இப்படிப்பட்ட முதலாளிகளுக்குச் சேவை செய்யும் இவர்களின் தேசபக்தி கேலி கூத்தானது. முதலாளிகளுக்குச் சேவை செய்வது தேசப்பக்தி என்றும், தம் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து மக்கள் நிற்பதும், மக்களுக்கு ஆதரவாக புரட்சிகர – ஜனநாயக சக்திகள் நிற்பதும் தேசவிரோதம் எனவும் கற்பித்து கொண்டிருக்கின்றன அரசு இயந்திரங்கள்.

000

மேலே குறிப்பிட்டுள்ள 2011 ஆம் ஆண்டு ஊபா வழக்கில் ஒரு தனிநபர் குற்றம் ஏதும் செய்யாமல், அதாவது எந்தவித பயங்கரவாத செயலிலும் ஈடுபடாமல், இந்திய இறையாண்மைக்கும் எவ்வித தீங்கும் செய்யாத நபர், தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக மட்டும் இருந்தால் அவரைக் குற்றவாளியாகக் கருத முடியாதென அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால் தற்போது தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் வெறும் உறுப்பினராக இருந்தால் மட்டும் கூடப் போதுமானது, அவரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கலாம் எனத் தீர்ப்பை மாற்றியுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஊபா போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டதானது அரசப் பயங்கரவாதத்திற்கு எதிராகப்போராடும் மக்களை, எல்லாவித அடிப்படை உரிமைகளையும் மறுத்துச் சிறையில் தள்ளிக் கொடுமைப்படுத்தி, இனி அரசபயங்கரவாதத்தை யாரும் எதிர்க்கத் துணிய அச்சப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காய் உருவாக்கப்பட்டிருப்பது வெள்ளிடைமலை. அவ்வகையில் சமீபகாலமாக அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூகப் பிரச்சனைக்கு ஜனநாயக ரீதியில் குரல்கொடுப்பவர்கள் என யாராக இருந்தாலும் அனைவரையும் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தி வருகிறது இந்தப் பாசிச மோடி அரசு.`

ஊபா சட்டம் மற்ற குற்றவியல் சட்டத்தைப் போல் இல்லாமல், இது எவ்விதக் காரணமும் இன்றி வருடக் கணக்காக ஒருவருக்குப்பிணை வழங்காமல் சிறையில் அடைக்கும்படியான முகாந்திரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை விசாரிக்கும் தேசியப் புலனாய்வு அமைப்பானது, மாநில அரசின் அனுமதியின்றியே எந்நேரத்திலும் எவரை வேண்டுமானாலும் விசாரிக்கவும், கைது செய்யவுமான அதிகாரத்தினை இச்சட்டமானது சாத்தியப்படுத்தி உள்ளது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திதான்  எல்கர் பரிஷத் வழக்கில் மனித உரிமைப் போராளிகளான முனைவர் ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகா ஆகியோரை கைது செய்தது மோடி அரசு.

இந்தியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆளான மிக வயதான நபரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 84 வயதான பழங்குடியின உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டு மும்பையில் நீதிமன்றக் காவலில் இருக்கும்போது போதிய மருத்துவ வசதி மறுக்கப்பட்டு சூலை 5, 2021 அன்று உயிரிழந்தார். மேலும் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களின் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதேபோல் நாட்டையே உலுக்கிய அத்ராஸ் கொலைத் தொடர்பாக நேரில் தகவல் சேகரிக்க சென்ற கேரளாவைச் சேர்ந்த பதிரிக்கையாளர் சித்திக் கப்பன் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


படிக்க: சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !


மேலும் தங்களது உரிமைக்காகப் போராடும் மக்களின் மீதும் மாணவர்களின் மீதும் இக்கொடிய சட்டத்தை ஏவி அடக்குமுறையை நிகழ்த்தி வருகிறது இந்தப் பாசிச அரசு. இந்நிலையில் தான் இதற்கெல்லாம் மணிமுடி வைத்தாற்போல் “தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருந்தாலே அவரை கைது  செய்யலாம்”  என்ற இத்தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

இந்தப் பாசிச ஆட்சியில் போராட்டமே வாழ்க்கையாக மாறியுள்ள நிலையில் தங்களது உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடும் மக்களை அமைப்புகளாக ஒன்றிணைக்க விடாமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதே இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

இந்தத் தீர்ப்பின்படி தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற நிலையை எதை வைத்து தீர்மானிப்பார்கள்? ஓர் அமைப்புத் தடைசெய்யப்படாத வரை அங்கீகாரம் பெற்ற அமைப்பாகவே கருதப்படுகிறது. ஆனால் தடைசெய்யப்பட்ட உடன் அதில் செயல்படும் உறுப்பினர்கள் எப்படிக் குற்றவாளிகளாகக் கருதப்படுவர்? இதற்கெல்லாம் சட்டத்தில் எந்த பதிலும் இல்லை.

ஏற்கனவே ஊபா சட்டத்தைப் பயன்படுத்தி இது போன்ற பொய்யான வழக்குகளைத் தயார் செய்து பல நபர்களை சிறையில் தள்ளியுள்ளது மத்திய அரசு. இனி அரசை எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசினாலும், தமது உரிமைகளைக் கேட்டாலும் அவர்கள் மீது பொய் வழக்குகளைத் தயார் செய்து சிறையில் அடைப்பதை எளிமைப்படுத்தி இருக்கிறது இச்சட்டம்.

பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருப்பதாகக் கைது செய்யப்பட்ட ஸ்டான்சாமியின் கணினியானது புலனாய்வு துறையைச் சேர்ந்தவர்களால் ஹாக் (Hack) செய்யப்பட்டுப் பயங்கரவாத அமைப்பில் இருப்பதைப் போன்ற தகவல்கள் அதற்குள் செலுத்தப்பட்டது சமீபத்தில் அம்பலமானது. எனில் இச்சட்டம் ஏற்கனவே யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பதனை புரிந்துகொள்ளமுடியும்!

இருப்பினும் அரசானது எந்தளவிற்கு உழைக்கும் மக்களின் போராட்டங்களை கண்டு எந்த அளவிற்கு மிரண்டுப்போய் உள்ளது என்பதனையே அரசின் இந்த மக்கள் விரோத சட்டங்கள் எடுத்து காட்டுகின்றன. அதனால்தான் அத்தகைய அறிவினை வழங்குபவர்கள், வழிநடத்துபவர்கள், கோட்பாட்டாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அமைப்புகள், தனிநபர்கள் என அனைவரின் மீதும் அரச பயங்கரவாத சட்டங்களைப் பாய்ச்சி தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிவகைகளை எல்லா வழியிலும் செய்து வருகிறது மோடி அரசு.

“ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ” – என்றார் பாரதிதாசன்.

இதற்கேற்ப கொடிய சட்டங்களை நிறுவி மக்களை எப்போதும் அடக்கி வைக்கமுடியாது என்பதையே உலக வரலாறுகள் காட்டிநிற்கின்றன. இதை ஆட்சியாளர்கள் உணரும் தருணம் வெகுதொலைவில் இல்லை. மக்களின் கோபத் தீ மூளுமேயானால் அது காட்டுத்தீயைப் போல எங்கும் பரவி, வரலாற்றில் வெல்லவே முடியாத சர்வாதிகாரிகளாகத் தம்மைக் கருதிக்கொண்ட பாசிஸ்டுகளலான ஹிட்லர், முசோலினியன அரசுகளைப்போன்று இந்தப் பாசிச அரசையும், எந்தப் பாசிச அரசையும் வீழ்த்துவர். தத்துவமும் அமைப்புகளும் அனைத்து அரசப் பயங்கரங்களையும் தாண்டி மக்களை அணிதிரட்டி அதனைச் சாதிக்கும் நாள் வரும். இது ஆருடம், அல்ல ஆவணம்!

தீ

கலாஷேத்ரா: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே! | மக்கள் அதிகாரம் கண்டனம்

01.04.2023

நேற்று ஐஐடி! இன்று காலாஷேத்ரா!
ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே!

தமிழ்நாடு அரசே!

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வா!
பார்ப்பன பாலியல் குற்றவாளிகளையும் துணை போன கலாஷேத்ரா நிர்வாக அதிகாரிகள்,
தேசிய மகளிர் ஆணைய நிர்வாகிகளை கைது செய்!

கண்டன அறிக்கை

த்தாண்டுகளுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை, நிறப்பாகுபாடு, உடல் பாகுபாடு போன்ற மனிதவிரோத குற்றங்களை செய்து வந்த காலாஷேத்ராவின் பேராசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் மேற்கொண்ட போராட்டம் நேற்று (31.03.2023) இரவு தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் குற்றம் சாட்டப்பட்ட பொறுக்கிகள் பணிகள் நீடித்திருக்கிறார்கள்.

தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நான்கு பேராசிரியர்கள் மீது மாணவிகள் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். அந்தப் புகார்களில் உண்மை எதுவுமில்லை என்றும் போலீசு தலையிட வேண்டாம் என்றும் தெரிவித்து கலாஷேத்ரா நிர்வாகமும்  தேசிய மகளிர் ஆணையமும் பாலியல் குற்றவாளிகளுக்கு துணையாக இருந்திருக்கின்றனர். இந்த கொடுமைகளுக்கு எதிராக தேர்வுகளை எழுதாமல் புறக்கணித்து மாணவிகள் செய்த போராட்டத்தின் விளைவாக பிரச்சினை வெளியே வந்துள்ளது.

மாணவியரால் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் தொடர்ச்சியாக பணியில் இருக்கும் பொழுது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்று போராடி இருக்கிறார்கள் மாணவர்கள். பிரச்சினை இவ்வாறு வெளிச்சத்திற்கு வந்த பிறகும் பாலியல் குற்றவாளிகளான பார்ப்பன பேராசிரியர்களை அந்த நிர்வாகமும் ஒன்றிய அரசும் காப்பாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. தற்பொழுது முன்னாள் மாணவி ஒருவரிடம் இருந்து புகார் பெறப்பட்டு ஒரு ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மாணவியிடமிருந்து புகார் பெறப்பட்ட அடுத்த நிமிடமே குற்றவாளி ஆசிரியரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த குற்றவாளி ஆசிரியர் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட கலாஷேத்ரா நிர்வாகி ரேவதியும் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும்.


படிக்க: ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | மக்கள் அதிகாரம்


சிறுபான்மை மக்களுக்கு எதிரான,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து ஊடகங்களும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரபலங்களும் இப்பிரச்சினையில் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருக்கின்றனர்.

ஐஐடியில் நடைபெறும் தீண்டாமை குற்றங்கள், ஊழல்கள், கிரிமினல் தனங்கள் ஆகியவற்றிலிருந்து பார்ப்பன கிரிமினல்களை காப்பாற்றும் ஒன்றிய அரசு கலாஷேத்ராவிலேயும் தன்னுடைய வேலையை காட்டுகிறது.

ஆகவே மாணவிகளால் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள்,  பாலியல் பொறுக்கிகளை காப்பாற்றிய தேசிய மகளிர் ஆணைய நிர்வாகி, கலாஷேத்ராவின் நிர்வாக இயக்குனர் ஆகியோரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் புகார்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிய இடங்களை  திரும்பப் பெற வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை.
99623 66321