சிரியாவில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமான பத்தாவது ஆண்டை நினைவு கூருமுகமாக இவ்வாண்டு மார்ச் நடுப்பகுதியில் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்ட அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள், சிரியாவில் நடைபெற்று வரும் மோதல்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி பஸீர் அல் – ஆஸாத்தும் அவரை பின்னால் இருந்து ஆதரிப்பவர்களும்தான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்கள்.
ஆனால், உண்மை வேறு விதமானது. ஆஸாத் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்பே அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., 1947-ம் ஆண்டே சிரியாவில் தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. ஆட்சி மாற்றம், சதி முயற்சிகள், கொலை முயற்சிகள், கூலிப்படைத் தாக்குதல்கள் என சி.ஐ.ஏ-வால் சிரியாவில் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகளுக்கு ஒரு தொடர்ச்சியான வரலாறு உண்டு.
1949-ல் அப்போதைய சிரிய ஜனாதிபதி சுக்ரி அல் – ஹ-வாட்லிக்கு எதிராக இரத்தம் சிந்தாத இராணுவச் சதியொன்றை சி.ஐ.ஏ. அரங்கேற்றியது. இதுபற்றி பின்னர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்ட அந்தக் காலகட்டத்தில் சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸில் இருந்த சி.ஐ.ஏ. நிலையத்தின் தலைமையதிகாரியான மைல்ஸ் கோப்லான்ட் (ஜூனியர்), இந்தச் சதியின் நோக்கம் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்தும், மற்றைய தீவிரவாதிகளிடம் இருந்தும் சிரியாவைப் பாதுகாப்பதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவச் சதியின் பின்னர் சி.ஐ.ஏ-வால் பதவியில் அமர்த்தப்பட்ட கேர்ணல் அடிப் ஸேய்ஸாக்லி பதவியில் இருந்த 4 வருட காலத்தில் அமெரிக்க ஆதரவைப் பெறுவதற்காக கொலை, விபச்சாரம், கொள்ளை போன்ற பல வகையான பாவச்செயல்களில் ஈடுபட்டார். பின்னர் அவரை பாத் கட்சியும், இராணுவ அதிகாரிகளும் இணைந்து பதவியில் இருந்து தூக்கியெறிந்தனர்.
1955-ல் சிரியாவில் இன்னொரு இராணுவச் சதிக்கான நிலைமைகள் உருவாகியிருப்பதாக சி.ஐ.ஏ. மதிப்பிட்டது. 1956 ஏப்ரலில் சி.ஐ.ஏ-வும், எஸ்.ஐ.எஸ்-ம் (பிரித்தானிய இரகசிய உளவுச் சேவை) இணைந்து வலதுசாரி சிரிய இராணுவ அதிகாரிகள் மூலம் ஒரு சதியை நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் சுயெஸ் கால்வாய் பிரச்சினை உருவானதால் அந்தத் திட்டம் தடைப்பட்டுவிட்டது.
சிரிய அதிபர் பஷார் அல் அஸாத்
சிரியாவை ‘கம்யூனிஸத்திலிருந்து காப்பாற்றுவது’ என்ற நோக்கத்துடன் இன்னொரு சதியை 1957-ல் சி.ஐ.ஏ. அரங்கேற்றியது. இதற்காக சிரிய இராணுவ அதிகாரிகளுக்கு 3 மில்லியன் டொலர்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டது. இதுபற்றி 2008-ல் ‘பரம்பரைச் சொத்தின் சாம்பல்: சி.ஐ.ஏ-ன் சரித்திரம்’ என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்ட ரிம் வெய்னர் பின்வருமாறு கூறுகிறார்:
“கடவுளுக்கு எதிரான கம்யூனிஸத்துக்கு எதிராக இஸ்லாமிய ஜிகாத் கருத்தை நாம் உருவாக்க வேண்டும் என (ஜனாதிபதி) ஐஸனோவர் கூறினார். 1957இல் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ‘புனித யுத்தம்’ என்ற கருத்தை முடியுமான எல்லா வழிகளிலும் வலியுறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்”.
ஆனால் சில “வலதுசாரி – இராணுவ” அதிகாரிகள் இந்தத் திட்டம் பற்றி சிரியாவின் உளவுச் சேவைக்கு தகவல் கொடுத்துவிட்டனர். அதன் காரணமாக சிரியா டமஸ்கஸ்ஸில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த 3 சி.ஐ.ஏ. அதிகாரிகளை வெளியேற்றியதுடன், அங்கிருந்த அமெரிக்கத் தூதுவரையும் திருப்பியழைக்கும்படி அமெரிக்காவை நிர்ப்பந்தித்தது. அதைத் தொடர்ந்து சிரியாவை அமெரிக்கா “சோவியத் துணைக்கோள்” என வர்ணித்ததுடன், மத்தியதரைக் கடலில் தனது கடற்படையையும் நிறுத்தியது.
அத்துடன் சிரியாவின் “அத்துமீறல்களுக்கு எதிராக” என்ற போர்வையில் அமெரிக்கா சிரியா மீது இராணுவத் தாக்குதல் ஒன்றையும் நடத்தியது. இந்தத் தோல்வியடைந்த சதி நடவடிக்கையில் பிரித்தானியாவின் எம்16-ம் பங்குபற்றியது. இந்த விபரம், பின்னர் அந்தக் காலகட்டத்தில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சராகவிருந்த காலம் சென்ற டன்கான் சான்டேஸ் அவர்களின் ஆவணங்கள் சில 2003-ல் தற்செயலாக வெளியானபோது அம்பலத்துக்கு வந்தது.
2006-ல் ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ஒரு தகவலின்படி, லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் சிரியர்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பதுடன், சி.ஐ.ஏ. குழு கிளர்ச்சிக் குழுக்களை உருவாக்கி சிரியாவுக்குள் இறக்கியுள்ளதுடன், குறிப்பிட்ட விநியோக வழிகளையும் உருவாக்கியுள்ளது. 2012-ற்குப் பிறகு வருடாந்தம் 1 பில்லியன் செலவிட்டு சிரிய அரசுக்கு எதிராகப் போரிடும் 10,000 கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
நன்கறிந்த அமெரிக்க புலனாய்வு ஊடகவியலாளரும், அரசியல் எழுத்தாளருமான சேமௌர் ஹேர்ஸ் எழுதியதின்படி, அந்த நேரத்தில் லிபியாவின் பெங்காசியிலிருந்து தனது புலனாய்வு அதிகாரிகளை அமெரிக்கா சிரியாவுக்கு நகர்த்தியுள்ளது. உலகத்திலேயே ஆஸாத்தை சிரியாவிலிருந்து அகற்ற வேண்டும் என 2011-ல் பகிரங்கமாக அறிவித்த ஒரே உலகத் தலைவர் பராக் ஒபாமாதான்.
பாரசீக வளைகுடாவிலுள்ள அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபுக் குடியரசு என்பன சிரியாவில் அரச படைகளை எதிர்த்துப் போராடும் ஆயிரக்கணக்கான ஜிகாதிகளுக்கு தமது செலவில் நிதியுதவியும் தளபாட வசதிகளும் அளித்து வருகின்றன. இந்த நிலைமையில் 2015-ல் ரஸ்யா சிரிய அரசாங்கத்துக்குச் சார்பாகக் களமிறங்கியதை அடுத்து, 2017-ல் சவூதி அரேபியா அங்கிருந்து வெளியேறியது.
சிரியாவின் உள்நாட்டுப் போர்தான் எமது காலத்தில் நடைபெறும் மிகவும் அழிவுகரமான யுத்தமாகும். இந்த யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான சிரிய மக்கள் இறந்து போயுள்ளனர், சனத்தொகையில் அரைவாசிப்பேர் இடம் பெயர்ந்துள்ளனர், மில்லியன் கணக்கான மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் வாடுகின்றனர். ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கணிப்பீட்டின்படி, சிரியாவின் சனத்தொகையில் 70 சதவீதமானோர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர், 6.7 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளனர், 13 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் மனிதாபிமான உதவிகளையும் பாதுகாப்பையும் வேண்டி நிற்கின்றனர், சனத்தொகையில் 60 வீதமான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.
மத்திய கிழக்கில் சிரியா உயர்ந்த சமூகக் கட்டமைப்பையும், மத்தியதரமான வாழ்க்கைத் தரத்தையும் கொண்ட ஒரு நாடாக விளங்கியது. அந்த நாட்டை அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சேர்ந்து சீர்குலைத்து நிலைகுலைய வைத்துள்ளன. ‘அரபிஸம்’ என்ற கருத்துருவத்தை அமெரிக்கா திட்டமிட்டு அழித்து வருவதையே சிரியாவில் நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கி போரை முடிவுக்குக் கொண்டுவர இரு தடவைகள் முயன்றாராயினும், அமெரிக்க பெண்டகன் இராணுவ அதிகாரிகள் அதற்கு விடவில்லை. புதிய ஜனாதிபதி பைடன் சிரிய விடயத்தில் என்ன செய்யப் போகின்றார் என்பது இன்னமும் தெரிய வரவில்லையாயினும், அங்கிருந்து அமெரிக்கத் துரப்புகளை விலக்கிக் கொள்ளும் நோக்கம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
தேர்தல் நெருங்கிவிட்டது. ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் தேர்தலில் வாக்குக் கேட்டு பவனி வரத் துவங்கிவிட்டன. அழுகை முதல் நடனம் வரை அனைத்து கூத்துக்களையும் அரங்கேற்றி ஓட்டுக் கேட்டு வருகின்றனர் தேர்தல் கட்சிகள்.
ஜனநாயகத்தின் ஆட்சி எனும் பெயரில் மக்களின் வாழ்வில் தாக்கம் செலுத்தும் மின்சாரம், கல்வி, மருத்துவம், தண்ணீர், கடல் என அனைத்தையும் நீதிமன்றங்களையே செல்லாததாக்கும் ஆணையங்களின் கைகளுக்குக் கொடுத்த பின்னர் நடைபெறும் இந்த தேர்தல் என்பது வெறும் கண் துடைப்பு நாடகம் தான் என்பதை இந்தப் பாடலில் விளக்குகின்றனர் தருமபுரி மக்கள் அதிகாரம் கலைக்குழு தோழர்கள் !!
பாருங்கள் !! பகிருங்கள் !!
பாடல் – இசை :
புரட்சிகர கலைக்குழு, தருமபுரி
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
செல்: 97901 38614
சமூக மாற்றத்திற்கான புரட்சிகர பாடல்களை தொடர்ந்து கொண்டுவர நிதி கொடுத்து ஆதரவு தாருங்கள் !
பெயர் : Gopinath P
கணக்கு எண் : 6720415617
வங்கி விவரம் : Indian Bank, Pennagaram Branch
IFSC NO : IDIB000P076
பாடல் வரிகள் :
கையில மையவச்சா
வந்திருமா மாற்றம்
தேர்தல் எப்போதுமே
மக்களைதான் ஏமாத்தும்
இன்னுமா புரியல
தேர்தல் ஒரு சூதாட்டம்
ஒட்டு போட்டு ஒன்னுமில்ல
தொடங்கிடு நீ போராட்டம்
எட்டுவழிசாலைய
இங்கே தடுக்காது தேர்தலு
மீதேன், சாகர்மாலா
நிறுத்தாது தேர்தலு
மின்சார திருத்த சட்டம்
முடக்காது தேர்தலு
வேளாண் திருத்த சட்டம்
துரத்தாது தேர்தலு
விவசாயி கோவணத்த
உருவதான்டா தேர்தலு
விலைவாசி குறைய
இங்கே உதவாது தேர்தலு
சாதிய படுகொலைய
தடுக்கலடா தேர்தலு
பெண்களுக்கு பாதுகாப்பு
கொடுக்கலடா தேர்தலு
லஞ்சம் ஊழல் கொறையலடா
திருடத்தான்டா தேர்தலு
சாதிமத மோதலுக்கு
தூபமிடும் தேர்தலு
மத்தியில் ஆளும் சனாதன பாஜக அரசு, “பள்ளர் – பண்ணாடி – குடும்பர் – கல்லாடி – கடையர் – தேவேந்திர குலத்தார்-வதிரியார் ” உள்ளிட்ட 7 சாதிகளை இனி தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கான திருத்தத்தை பாராளுமன்றத்தில் சட்டம் ஆக்கியுள்ளனர் (constitution (SC) order (amendment) bill 2021). இனி இந்த சாதி பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவரின் சாதிச் சான்றிதழ்களிலும் தேவேந்திரகுல வேளாளர் என்று குறிப்பிடப்பட்டு அடைப்புக் குறியில் அவர்களது பழைய ஜாதிப் பெயரும் இடம்பெறும்.
மேற்குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இல்லாமல் இந்த சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.
தேவேந்திரகுல வேளாளர் சமூகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட 7 சாதிகளைச் சேர்த்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் ஒட்டுமொத்த பட்டியலினத்தவர்களின் மக்கள் தொகையில் 17.07 விழுக்காடு உள்ளதாக 2011-ல் எடுத்த மக்கள் தொகை கணக்கீடு கூறுகிறது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட இச்சமூகத்தின் சில தலைவர்கள் வெறும் பெயர்மாற்றத்தை மட்டும் கோரிக்கையாக முன் வைக்கவில்லை. பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக தங்கள் சமூகத்தை அறிவிக்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாகும். பெயர் மாற்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வர்ணாசிரம கும்பல் பட்டியலின வெளியேற்றத்தைப் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.
பாசிச மோடி கும்பல் கொண்டு வந்துள்ள நீட் தேர்வால் மருத்துவப் படிப்பிற்கு தனிப் பயிற்சி எடுக்க வாய்ப்பற்ற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு கானல்நீராகிப் போயிருக்கிறது. தற்போது அட்டவணைப் பட்டியலில் இருக்கும்போதே தேவேந்திர குல வேளாள சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை, நீட் வந்த பின்னர் மிகவும் பின்னடைந்து உள்ள நிலையில், மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டால், தேவேந்திரகுல வேளாள சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கனவு வெறும் கனவாகவே முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது என ஆங்கில் இந்து நாளேடு (20-03-2021) குறிப்பிட்டு சுட்டிக் காட்டுகிறது.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்றவர்கள், இந்த கோரிக்கையையே தேவேந்திர குல வேளாளர் மக்களின் துயரத்தைப் போக்கும் கோரிக்கையாக முன் வைப்பதோடு, இதனை சங்க பரிவாரக் கும்பல் நிறைவேற்றும் என்று கூறி அச்சமூக மக்களை சங்க பரிவாரத்தின் கீழ் அணி சேர்க்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகம் வந்த அமித்ஷாவும் தேவேந்திர குல வேளாள சமூகத்தினரை பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றுவதாக உறுதியளித்துவிட்டுச் சென்றது நினைவிருக்கலாம். காலங்காலமாக பள்ளன் என்றும் பறையன் என்றும் தலித் மக்களை இழிவாக நடத்தி சாதிய ஒடுக்குமுறையைச் செய்து வந்த சங்க பரிவார சனாதன கும்பலுக்கு திடீரென தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் மீது ஏன் இவ்வளவு கரிசனம் ?
காவிக் கும்பலின் சமூக பொருளாதார அடித்தளமே, பார்ப்பன –பனியா – மார்வாரி சமூகத்தை மையப்படுத்தி தான் இருக்கிறது. தங்களது சனாதன இந்துமதவெறி அரசியல் அடித்தளத்தை தமிழகத்தில் உருவாக்கவேண்டிய தொலைநோக்குத் திட்டத்தை அரங்கேற்றுவதில் தீவிரமாக ஆர் எஸ் எஸ் முனைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத் தான் இட ஒதுக்கீடுகளை படிப்படியாக ஒழிப்பது என்பது. அதற்கு இந்த வகையான சாதியரீதியான முன்னெடுப்புகளும், அணிதிரட்டல்களும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு அவசியம்.
சனாதனத்தின் மகா சன்னிதானத்திடம் ஆசிபெறும் ’சின்ன சன்னிதானம்’ கிருஷ்ணசாமி
குறிப்பாக, இந்தியாவில் இருப்பது போன்ற சாதிய படிநிலைதான் இந்த சனாதனக் கும்பல் இன்றுவரையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கியக் காரணம். மேலே இருப்பவன் கீழே இருப்பவனை மிதிப்பான் எனில், கீழே இருப்பவன் மேலே இருப்பவனை எதிர்க்கக் கூடாது என்பதற்காகவே, அவனுக்குக் கீழாக ஒரு சாதியப் படிநிலையை உருவாக்கி, சாதியரீதியிலான தனது மேலாதிக்கத்தைப் பாதுகாத்து வந்திருக்கிறது பார்ப்பனக் கும்பல்.
“எங்களை தலித்துகளாக குறிப்பிடாதே, நாங்கள் ஆண்ட பரம்பரை” என்பதுதான் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களில் ஓரளவு வசதி வாய்ப்போடு வாழும் நடுத்தர, உயர் நடுத்தர மக்கட் பிரிவினர் மற்றும் கிருஷ்ணசாமி போன்ற காரியவாத தலைவர்களின் முழக்கம். இது ஓரளவு வர்க்கரீதியாக முன்னேறிய பிரிவினரை ஈர்க்கிறது. ஆனால் இன்னும் வர்க்கரீதியில் ஏழ்மையில் உழலும் இலட்சக் கணக்கான மக்களுக்குக் கிடைக்கவிருக்கும் அரைகுறையான இட ஒதுக்கீட்டு நலனைப் பற்றி எதுவும் பேசாமல் கடந்து செல்கிறது இந்த முழக்கம். ஒருவேளை பட்டியலின வெளியேற்றக் கோரிக்கையும் பெயர் மாற்றக் கோரிக்கையும் இச்சமூகத்தைச் சேர்ந்த அனைத்து வர்க்கப் பிரிவு மக்களின் கோரிக்கையாக இருக்கும்பட்சத்தில் அதில் பிரச்சினை ஏதுமில்லை. பிரச்சினையே இங்கு சனாதனத்தை தனது கொள்கையாக வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-வுடனான இச்சமூகத் தலைவர்கள் சிலரின் கூட்டுதான்.
அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு பாகங்களில் மனுநீதி வர்ணாசிரம கொடுங்கோன்மை இன்றளவும் ஆட்சி செய்கிறது. தமிழகத்தில் நீண்ட நெடிய வர்ணாசிரம எதிர்ப்புப் போராட்ட மரபின் காரணமாகவும், கம்யூனிஸ்ட்டுகளின் நீண்ட நெடிய சாதிய, வர்க்கச் சுரண்டல்களுக்கு எதிரான போராட்டங்கள், தந்தை பெரியார் அவர்களின் மகத்தான கருத்தியல் மற்றும் நடைமுறைப் போராட்டங்களின் விளைவாகவும் சனாதன கும்பல் அவ்வளவு எளிதாக தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. தற்போது கிருஷ்ணசாமி போன்றவர்களின் மூலம் தமிழகத்தில் சனாதன தர்மத்தை நிலைநாட்ட களமிறங்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் !!
நிலைமை இப்படி இருக்கையில், “வேளாளர் பெயரை எங்களைத் தவிர யாரும் பயன்படுத்தக்கூடாது” என்று பல்வேறு சூத்திர ‘ஆண்ட பரம்பரைகள்’ போர்க்கொடி தூக்கி விட்டன. கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சாதிக் கட்சி /அமைப்புத் தலைவர்களும், பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சாதிக் கட்சி /அமைப்புத் தலைவர்களும் தாங்கள் தான் வேளாளப் பட்டத்திற்கு முற்று முழுதான ஜவாப்தாரி என்று களத்தில் இறங்கியிருக்கின்றன.
ஏன் எங்கள் சாதியின் பெயரை அவர்களுக்கு வைக்க வேண்டும் “பிராமணர்” என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கேட்கிறார் வெள்ளாளர் சங்க தலைவர். ஆர்.எஸ்.எஸ்.-ன் அடிமடியிலேயே கைவைத்துக் கேட்டிருக்கிறார்தான். ஆனால், சாதிய வன்மத்தில் இருந்துதான் அந்த கேள்வி அவர் மூளையிலிருந்து வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் பலனை கமுக்கமாக ‘சூத்திர’ பட்டத்தில் அனுபவித்துக் கொண்டே, மறுபக்கத்தில்சத்திரிய வம்சம் என்ற ஆண்டபரம்பரை பெருமையைப் பேசுவது என இரட்டை வேடம் போட்டுக் கொண்டு திரிகின்றனர் இத்தகைய ‘ஆண்ட சாதி’ சங்கத் தலைவர்கள்.
இந்துத்துவ சனாதன கோட்பாட்டின்படி பிறப்பால் தீர்மானிக்கப்பட்ட சாதி படிநிலையை எவராலும் மாற்ற இயலாது. சனாதனத்தையே தனது கொள்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் தங்களை இவ்வளவு ஆண்டுகாலமாக பீடித்திருந்த தீண்டாமைக் கொடுமையை விட்டு சமூக ரீதியாக வெளியேறுவதை ஏற்றுக் கொள்ளுமா என்ன ? அப்படி தங்களுக்காகவே பாஜக–வும் ஆர்.எஸ்.எஸ்.-உம் செயல்படும் என நினைப்பது அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நினைப்பார்களெனில் அது கசாப்புக்கடை ஆடு கசாப்புக்கடைக்காரனை நம்புவதற்குச் சமம்.
தமிழகத்தில் தங்களது சமூக அடித்தளத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். கும்பல், தேவேந்திர குல உழைக்கும் மக்களை பகடைக்காயாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. தேவேந்திரகுல உழைக்கும் மக்களின் உரிமை வாழ்வுக்கான போராட்டங்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் தான் இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல். மாறாக தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களை ஒடுக்கிய ஆதிக்க சாதியினருக்கு வெண்சாமரம் வீசியவர்களே இந்த சங்பரிவார் கும்பல்.
1957-முதுகுளத்தூர் பயங்கரம், 1979-ஊஞ்சனை படுகொலை, 1981-மீனாட்சிபுரம் கலவரம், 1982-புளியங்குடி வன்முறை, 1995-கொடியன்குளம் வன்கொடுமை, 1997-மாஞ்சோலை தாமிரபரணி படுகொலைகள், பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு என தேவேந்திர குல வேளாள சமூகத்தினர் மீது ஆதிக்க சாதியினர் மற்றும் போலீசின் திட்டமிட்ட வன்முறைகள் நடத்தப்பட்ட போது, எங்கே போனது இந்த சங்பரிவார் கும்பல்? இந்தத் தாக்குதல்களை எல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்து நின்றன இந்த சனாதனக் கும்பல்.
தமிழகத்தில், குறிப்பாக தஞ்சை மண்ணில் சாதிய, நிலவுடைமை கொடுங்கோன்மைக்கு இலக்காகி அடிமை வாழ்வு வாழ்ந்து வந்த உழைக்கும் மக்களை அணிதிரட்டி போராட்டக் களம் அமைத்தது பொதுவுடமை இயக்கம்தானே ஒழிய சங்க பரிவாரக் கும்பல் அல்ல.
உழைப்புச் சுரண்டல், சாணிப்பால் சவுக்கடி, சுரண்டல் அடக்குமுறை கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் ஆதிக்கசாதி பண்ணையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்களான சீனிவாசராவ், ஜாம்பவான் ஓடை சிவராமன், வாட்டாக்குடி இரணியன், களப்பால் குப்பு உள்ளிட்ட எண்ணற்ற மாவீரர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களே. இந்தக் காலங்களில் ஒடுக்கும் மிட்டா மிராசுகளுக்கு ஆதரவாக இருந்ததுதான் சங்க பரிவாரக் கும்பல்.
பசுந்தோல் போர்த்திய புலியாக இன்று தேவேந்திர குல மக்களின் நண்பனாக நாடகமாடும் சனாதன சக்திகளை அந்த மக்கள் புறந்தள்ளி ஒதுக்க வேண்டும்.
மாஞ்சோலை போலீசு வன்முறை வெறியாட்டம்
மோடி –அமித்ஷா– குரு மூர்த்தி உள்ளிட்ட கார்ப்பரேட் காவி பாசிச கும்பலின் அரசியல் முகவர்களுக்கு தொண்டூழியம் புரிவதால் கிருஷ்ணசாமி போன்ற ஒரு சிலருக்கு ஆதாயங்கள் கிடைக்கலாம். ஆனால் ஒரு சமூகம் என்ற வகையில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரும் பின்னடைவையே சங்க பரிவாரத்தின் சகவாசம் ஏற்படுத்தும்.
மராட்டிய மன்னன் சிவாஜி சூத்திரன் என்பதால் மன்னனாக மகுடம் சூட்டுவதை தடுத்ததுதான் பார்ப்பன கும்பல். சூத்திரன் நாடாள தகுதியற்றவன் என்பதுதான் பார்ப்பன கோட்பாடு. காமராஜரைக் கொல்ல ஆர்.எஸ்.எஸ். முயற்சித்தது என்பது ஊரறிந்த வரலாறு.
தற்போது பெயர் மாற்றத்தை அங்கீகரித்திருப்பது என்பது தூண்டிலில் மாட்டப்பட்ட புழு. அதை தனக்கான உணவு என மீன் எண்ணினால், அது சங்க பரிவாரத்தின் சதிக்கு பலியாகும் செயலே ஆகும். யாரை அருகில் வைத்திருக்க வேண்டும், யாரை பலியாடாக பயன்படுத்த வேண்டும் என்பதில் சனாதனக் கும்பல் மிகத் தெளிவாக இருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை என்பது யாரும் போட்ட பிச்சை அல்ல; அது சாதி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தின் விளைவாகக் கிடைத்த உரிமையே. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் போன்ற மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி அதன் விளைவாக அரசு வேலை வாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை கானல் நீராக்கி வருகிறது மத்திய அரசு. இக்கொள்கைகளின் விளைவாக பணியிலும் கல்வியிலும் இட ஒதுக்கீடு என்பது கானல் நீராக்கப்பட்டுவிட்டது.
வெறுமனே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயர் மாற்றமோ, பட்டியலின வெளியேற்றமோ இச்சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் சமூக பொருளியல் வாழ்வில் பெரும் மாற்றம் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை. இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் மற்றும் காவிப் பாசிச சட்டங்களை எதிர்த்துப் போராடினால் மட்டுமே சமூக இழிவுகளில் இருந்து வெளியேற முடியுமே அன்றி, வெறுமனே பட்டியலின வெளியேற்றத்தால் அல்ல என்பதை உணர்ந்து போராட வேண்டிய தருணம் இது !!
அஞ்செட்டிவட்டம், நாட்றாம்பாளையம்பஞ்சாயத்தில்உள்ளகிராமம்அத்திரமரத்தூர், ஆரோக்கியபுரம்கிராமங்கள். இங்குசுமார்300 குடும்பங்கள்தாழ்த்தபட்டமக்கள்வசித்து வருகின்றனர். இக்கிராமமக்கள்முதியவர்கள்வீட்டிலிருக்கஇளைஞர்கள்பெங்களூருக்குவேலைதேடிசென்றுபிழைத்து வருகின்றனர்.
இதுசம்மந்தமாகவட்டாட்சியர், மாவட்டஆட்சியர்எனபலமுறைமுறையிட்டும்மனு கொடுத்தும்அரசுகண்டுகொள்ளவில்லை. குறிப்பாக, இரண்டாண்டுகளுக்குமுன்னர் மயான வசதி செய்து தரக்கோரி இதுபோல்போராடியபோதுநான்மயானவசதிசெய்துதருகிறேன்என்றுவட்டாட்சியர்கைப்படமக்களுக்குகடிதம்எழுதிவாக்குறுதிஅளித்துச்சென்றார்.
அக்கடிதம் மக்களிடம் உள்ளது. ஆனால், இன்றுவரைஇதைநிறைவேற்றவில்லை. இதுபோன்றஅடிப்படைவசதியில்லாமல்தவித்துவரும்நிலையில்மேலும்அம்மக்களுக்குசிரமம்கொடுக்கும்வகையில்நாட்றாம்பாளையம்பஞ்சாயத்திற்குட்பட்டஅத்திமரத்தூர்ஆரோக்கியபும்ஆகியஇருகிராமங்களையும்கேரெட்டிபஞ்சாயத்தில்வருவாய்அதிகாரிகள்இணைத்துள்ளனர். இதன்மூலம்ரேஷன்கடைக்கும்கிராமநிர்வாகஅலுவலகத்திற்கும்சென்றுவர7 கிலோமீட்டர்செல்லவேண்டியநிலைஏற்பட்டுள்ளது.
ஏன்இதற்குமுன்னர்பலமுறைமனுகொடுத்தும், வட்டாட்சியர் கைப்பட எழுதி வாக்குறுதி கொடுத்தும் ஏன்கண்டுகொள்ளவில்லைஎன்றுஅதிகாரிகளைகேட்ட மக்கள், பேனரைஅகற்றமுடியாதுஎன்றனர். இதன்பின்னர்அதிகாரிகளும்போலீசும்பேனரைகிழித்துஎடுத்துச்சென்றனர். இதற்குஎதிர்ப்புதெரிவிக்கும்முகமாகபேனரைதிரும்பஒப்படைக்ககோரியும்கோரிக்கையைநிறைவேற்றகோரியும்24-03-2021 அன்றுஒகேனக்கல் – அஞ்செட்டிசாலையைமறித்துபோராட்டத்தில்இறங்கினர்.
இப்போராட்டத்திற்குபின்னர்அதிகாரிகள்பேனரைஒப்படைத்துச் சென்றனர். தேர்தலுக்குபிறகுகோரிக்கையைநிறைவேற்றுவதாககூறினர். எனினும்அதிகாரிகள்பொய்வாக்குறுதிளைகண்டுபலமுறைஏமாந்தமக்கள்இம்முறைதொடர்ந்துதேர்தலைபுறக்கணிக்கஊர்கூடிமுடிவுசெய்து மீண்டும் ஊர் நுழைவாயிலில் பேனர் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.தேர்தல்புறக்கணிப்புபோராட்டமும்தொடர்கிறது.
இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இங்கிலாந்து அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம் இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்திருக்கிறது மோடி அரசு.
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. அதே சமயத்தில் சீனா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டது. பெரும்பான்மை அடிப்படையில் இலங்கைக்கு எதிரானஇந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து குவித்தது இலங்கை அரசு.
இந்தப் போரை இலங்கையின் மோடியான ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு முன்னின்று நடத்தினாலும், இந்தப் போருக்கு சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஏகாதிபத்தியங்களும் அவற்றின் அடியாட்களான இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் முக்கிய பங்களிப்பு செய்தன.
இந்தப் போருக்கு இந்திய அரசு உதவி புரிந்ததை முழுக்க முழுக்க சோனியா காந்திக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் உள்ள தனிப்பட்ட பகைமையின் காரணமாக நடந்ததாக சித்தரித்து, அதன் மூலம் தமிழகத்தில் “நாம் தமிழர்” உள்ளிட்ட பாசிச, பிழைப்புவாத தமிழ்தேசிய கட்சிகள் இன்றளவும் பிழைப்பு நடத்தி வருகின்றன.
சோனியா காந்திக்குப் பழிவாங்கும் உணர்வு இருந்ததா இல்லையா என்பதை இங்கு நாம் விவாதிக்கப் போவதில்லை. ஆனால் அப்பாவி இலங்கைத் தமிழர்களை போர் என்ற பெயரில் இலங்கை அரசு கொன்று குவிக்க, இந்தியா துணை போனதற்கு சோனியாவின் பழிவாங்கும் உணர்வு மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியுமா? அப்படியெனில், சீனாவும் பாகிஸ்தானும் அந்தப் போர்க் குற்றத்தில் இலங்கைக்கு உதவி செய்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு சீமான் உள்ளிட்ட தமிழ் தேசிய சித்தாந்தவாதிகள் வாய் திறப்பதில்லை.
அதிகபட்சமாக, இலங்கை பூலோக ரீதியாக முக்கியமான இடத்தில் இருப்பதாகவும், அதாவது அமெரிக்காவைப் பொருத்தவரையில் சீனாவிற்கு ‘செக்’ வைக்கவும், சீனாவைப் பொருத்தவரையில் தனது நாட்டை அமெரிக்காவின் இராணுவ முற்றுகையில் இருந்து காத்துக் கொள்வதற்கும் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அவசியம் இருப்பதாகவும் அதற்காகவே இந்தப் படுகொலைகளுக்கு இந்த நாடுகள் துணை போயிருப்பதாகவும் கூறுகின்றனர். பெரும் ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா, சீனா போன்றவற்றிற்கு இப்படி ஒரு அவசியம் இருந்தாலும்இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஏகாதிபத்திய அடியாள் நாடுகளுக்கு இந்தப் போரை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன ?
இந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்களாக அமைந்துள்ள ஏகபோக முதலாளிகள், தரகு முதலாளிகள் மற்றும் நிதியாதிக்கக் கும்பலின் நலன்கள் தான் இந்தப் போருக்கு பிற நாடுகள் துணைபோனதன் பிண்ணனியில் அடங்கியுள்ளன. இந்த உண்மை பல்வேறு சமயங்களில் அம்பலப்பட்டிருந்தாலும் ஊடகங்களும், தமிழகத்தைப் பீடித்திருக்கும் தமிழ் தேசியவாதிகளும் அது குறித்து வாய் திறப்பதில்லை.
இன அழிப்புப் போர் குற்றவாளி இலங்கையின் மோடி, ராஜபக்சே
இலங்கை அரசு தமிழ் ஈழ மக்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலைத் தொடுத்து ஒரு இன அழிப்புப் போரை முடித்த பின்னர், இலங்கையை நோக்கிப் பாய்ந்த இந்திய முதலாளிகளின் மூலதனத்தைப் பார்க்கும் போதுதான் அப்போருக்கு இந்தியா ஏன் ஆதரித்தது என்பது புரியவரும் ! அதே போல சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் எவ்வளவு மூலதனத்தை இலங்கையில் இட்டு அந்த நாட்டு மக்களைச் சுரண்டினர் என்பதிலிருந்துதான் இந்தப் போரின் உண்மையான நோக்கம் தெரியவரும்.
இந்தப் போர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடத்தப்படும் உள்நாட்டுப் போர்கள், அண்டை நாடுகளின் மீதான தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இத்தகைய மூலதனப் போர்தான்.
அந்த அடிப்படையிலேயே தற்போது இந்திய அரசு இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்ததாகக் கணக்குக் காட்டி விட்டு, மறைமுகமாக இலங்கையை காப்பாற்ற முயற்சித்ததன் பின்னணியைப் பார்க்கலாம்.
இந்த தீர்மானம் ஐ.நா. சபையில் கொண்டு வரப்படுவதற்கு முன்னரே, இதில் இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவாகத் தான் நடக்கும் என்று தான் நம்புவதாக இலங்கை வெளியுறவுத்துறை செயலர் உறுதிபட வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் இலங்கை அதிபர் நேரடியாக இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக கட்சிகள் அனைத்தும் இது குறித்து ஒரே குரலில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய அரசு அந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட வேண்டும் என்றும், எதிராக வாக்களிக்கவோ புறக்கணித்து வெளிநடப்பு செய்யவோ கூடாது என்று குறிப்பாக சுட்டிக் காட்டி கூறினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைவரின் பார்வையும் இந்த தீர்மானத்தின் மீது இருக்கையில், தமிழக பாஜக – அதிமுக கூட்டணிக்கே ஐ.நா.-வின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் இருந்தது.
இலங்கைக்கும் மனம் நோகக் கூடாது, இங்கு ஓட்டுக்கும் எவ்வித சேதாரமும் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நைச்சியமாக வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகச் சொல்லி வெளியேறிவிட்டார். ஒருவேளை தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் இருந்திருந்தால் இலங்கை மீதான இந்தத் தீர்மானத்திற்கு எதிராகவே தான் பாஜக அரசு வாக்களித்திருக்கும். ஏனெனில் இலங்கைக்கு ஆதரவு தருவதன் பின்னணியில் இந்திய முதலாளிகளின் முதலீட்டு நலன்கள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு ஒன்று பார்க்கலாம். இலங்கையின் துறைமுக மேம்பாட்டு பணிக்கான டெண்டர் இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற இழுபறி நிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், டெண்டர் வேண்டுமெனில் இலங்கை அரசுடன் அனுசரித்துப் போக வேண்டியக் கட்டாயம் இந்திய அரசுக்கு முதன்மையாக இருக்கிறது. இந்தக் கார்ப்பரேட் நலனில் இருந்துதான் இலங்கை அரசுடன் முதன்மையாக நெருங்கிச் செல்கிறது மத்திய மோடி அரசு.
தமிழர்கள் மீதான மோடியின் வெறுப்பும், ராஜபக்சே மோடியின் இயற்கையான கூட்டாளி என்பதும் இரண்டாவதாகத் தான் பங்காற்றுகின்றன.
சரி, இந்தத் தீர்மானத்தை மறைமுகமாக எதிர்க்கும் இந்திய அரசுக்கு மட்டும்தான் இத்தகைய நலன் இருக்கிறதா? இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கும் இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் உண்மையிலேயே ஈழத் தமிழ் மக்கள் மீதான கரிசனம் மற்றும் மனித உரிமைகள் மீதான தீராக்காதல் காரணமாகத்தான் தற்போது ஐ.நா. சபை-யில் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்களா ?
கண்டிப்பாகக் கிடையாது. அமெரிக்க ஒற்றைத் துருவ ஆதிக்கத்தைத் தகர்த்து மற்றொரு சக்தியாக உருவாகி வரும் சீனா தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளைக் கொண்டு வருவதற்குப் பொருளாதார ரீதியான பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளை தனது அணியில் சேர்த்துக் கொண்டு அந்த நாட்டு வளங்களைச் சுரண்டுகிறது.
இலங்கை அரசும் சீனாவின் பக்கம் சாய்ந்து வருகிறது. பல ஒப்பந்தங்கள் சீன நிறுவனங்களுக்கு வழங்கப் படுகின்றன. இந்நிலையில் சீனாவை நோக்கிய இலங்கையின் சரிவை தடுத்து தங்களது பக்கத்திற்கு மிரட்டிக் கொண்டு வருவதற்காகவே, ஐ.நா. சபை-யில் தற்போது கொண்டுவரப்படும் மனித உரிமை மீறல், போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றன, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் .
ஏற்கெனவே இலங்கையின் மீது பொது விசாரணை நடத்தப்பட வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குப்பையில் வீசப்பட்ட நிலையில், மீண்டும் புதியதாக தீர்மானம் எனத் துவங்கியிருப்பது முழுக்க முழுக்க இலங்கையை மீண்டும் மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிதான்.
இன அழிப்புப் போர்களின் பிணங்கள் முதல் போர்க்கால அகதிகளாய் கடலில் மூழ்கிச் சாவும் பச்சிளங் குழந்தைகளின் பிணங்கள் வரை அவற்றின் மீதுதான் ஏகபோக மூலதனம் நடனமாடிக் கொண்டிருக்கிறது. மூலதனத்தின் வெறியாட்டத்தின் மீது வரவேண்டிய மக்களின் கோபத்தைக் குறுகிய இனவாதமாக மடைமாற்றி, ஏகபோகங்களின் மூலதனத்தை வாழச் செய்யும் வேலையைத்தான் ஊடகங்களும், பாசிச கும்பல்களும் செய்து கொண்டிருக்கின்றன.
அடிக்கொள்ளியைப் பிடுங்கி எரியாமல் தீயை அணைக்க முடியாது. மூலதனத்தின் வெறியாட்டத்தை அடக்கி ஒடுக்காமல் இத்தகைய துயர்களை ஒழிக்க முடியாது !
அடித்து நொறுக்கப்பட்டாலும் உடைந்துவிடவில்லை: பகத் சிங்கால் ஈர்க்கப்பட்ட இளம் தொழிலாளர் நலச் செயல்பாட்டாளர்களான சிவ குமார், நோதீப் கவுரை சந்தியுங்கள்!
கடந்த 2016-ம் ஆண்டில், அரியானாவில் நுண்ணிய உபகரணங்கள் உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துதல் குறித்துத் தான் கற்றுக் கொண்ட தொழில் பயிற்சி நிறுவனத்தில் (ஐ.டி.ஐ) நடத்தப்பட்ட பணிக்கான கலந்தாய்வில் பங்கேற்றபோது, சிவகுமாரிடம், “நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.
“நான் அவர்களிடம் ஒரு புரட்சியாளனாக மாற விரும்புவதாகக் கூறினேன்” என்கிறார் சிவகுமார் என்ற கலகக்காரர்.
இப்படி அவர் சொன்ன பதிலைக் கேட்டு நேர்காணலுக்காக சூழ்ந்திருந்த பல்கலைக்கழக மாணவர்களிடையே நகைப்பை உண்டாக்கியது. ஆனால், குமார் உறுதியாக இருந்தார்.
“தொடக்கம் முதலே என்னுடைய வாழ்வு போராட்டமாகவே இருந்தது” என்கிறார் இந்த 25 வயதான தொழிலாளர் செயல்பாட்டாளர்.
“நாங்கள் தலித் என்பதால் அனைத்துத் துறைகளிலும் நிறுவனங்களிலும் கிராமங்களிலும் சுரண்டப்படுகிறோம். அனைத்து இடங்களிலும் சுரண்டல் உள்ளது. எனவே போராட வேண்டிய எதிர்பார்ப்பு உள்ளது”
சோனிபட்டின் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து கந்திலியின் தொழில் நகரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு பணியாற்றச் சென்றார் குமார். அங்குதான் மஸ்தூர் அதிகார் சங்கதன் அல்லது தொழிலாளர் உரிமைகள் சங்கத்தை 2018-ல் தொடங்கினார்.
இந்த சங்கம் இப்பகுதியைச் சேர்ந்த தொழிற்சாலைப் பணியாளர்களை நியாயமான ஊதியத்தையும், முறையான வேலை நேரத்தையும், நல்லதொரு பணியாற்றும் சூழ்நிலையையும் உத்தரவாதப் படித்தும்படி கோரி திரட்டினார். இந்தியாவில் மூன்று பத்தாண்டுகளுக்கு இல்லாத மிகப்பெரிய அளவிலான விவசாயிகளின் போராட்டம் குறுக்கிடும்வரை குமாரின் செயல்பாடுகள் கவனிக்கப்படாமல்தான் இருந்தன.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியின் அரசு மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டத்தை எதிர்த்து, கடந்த நவம்பர் முதல் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் நாட்டின் தலைநகரின் எல்லையில் திரண்டார்கள். இந்த மூன்று வேளாண் சட்டங்களும் தங்களை தனியார் நிறுவனங்களிடம் கையேந்த வைக்கும் எனவும், தங்களுடைய வாழ்வாதாரத்தை மேலும் கீழ்நிலைக்கு இட்டுச் செல்லும் எனவும் விவசாயிகள் பயம் கொள்கின்றனர்.
ஜனவரி மாதம், டெல்லியின் சிங்கூ எல்லையில் விவசாயிகள் போராட்ட முகாம் அமைத்துள்ள இடத்திலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில், குமாரும் அவருடைய சக பணியாளருமான நோதீப் கவுர் ஊதியம் வழங்காத தொழிற்சாலைக்கு வெளியே போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். மிரட்டி பணம் பறித்தல், திருட்டு, கொலை முயற்சி ஆகிய மூன்று வழக்குகளில் போலீசார் அவர்கள் மீது வழக்கு தொடுத்தது.
போலீசின் கொட்டடியில் கடுமையாக உடல்ரீதியான தாக்குதலுக்கு உள்ளானதாகவும் சாதி ரீதியானத் தூற்றுதலுக்கு உள்ளானதாகவும் இளம் செயல்பாட்டாளர்களின் குடும்பங்கள் குற்றம்சாட்டின. வலது கண் பார்வை குறைபாடு உள்ளவரான குமார், பிப்ரவரி 23-ம் தேதி அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளில், (போலீசாரின் கொட்டடியில் தாக்கப்பட்டதில்) பல எலும்பு முறிவுகள், கால் நகங்கள் உடைந்தது, அவரது கைகளிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 26-ம் தேதி நோதீப் கவுருக்கு பிணை வழங்கப்பட்டது. அன்று இரவு சிறையிலிருந்து வெளியான நோதீப், அடுத்த நாள் சிங்கூ எல்லையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, குமாரை விடுவிக்கும்படிக் கேட்டார்.
சிவ குமார், நோதீப் கவுர்
மார்ச் 4-ம் தேதி நீதிபதி குமாருக்கு பிணை வழங்கினார். சோனிபட் மாவட்ட சிறையிலிருந்து விடுதலையாகக் காத்திருந்த அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், அவருடைய காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை அழைத்துச் செல்ல நினைத்தனர். ஆனால், தாக்குதலுக்கு உள்ளான கால்களுடன் நொண்டியபடி வெளியே வந்த குமார், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, கிசான் மஸ்தூர் ஏக்தா ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டபடி வெளியே வந்தார் என நினைவு கூர்கிறார் சத்ரா ஏக்தா மஞ்ச்-அமைப்பின் அங்கித் குமார்.
“அவருக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் கிடைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை” என வியக்கிறார் அங்கித் குமார்.
வதையிலிருந்து உயிர்த்திருத்தல்
25 வயதான சிவகுமாரும் நோதீப் கவுரும், நிலமில்லா தலித் விவசாய தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள். தொழிற்சாலை தொழிலாளர்களாக வளர்ந்தவர்கள். தற்போது இயக்கத்தில் உள்ள விவசாயிகள் – தொழிலாளர் ஒற்றுமையின் அடையாளங்களாக இந்த இளம் செயல்பாட்டாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள். குறிப்பாக, பெரு விவசாயிகள் மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களைக் கொண்ட பஞ்சாப், எதிர்ப்பு வரலாற்றைக் கொண்டிருந்தாலும் மூன்று கருப்பு சட்டங்களை அரசாங்கம் நீக்க வேண்டும் என ஒன்றிணைந்துக் கேட்கின்றனர்.
தாங்கள் எதிர்கொண்ட உடல் மற்றும் மன அளவிலான இன்னல்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகையோடு சிங்கூ எல்லையில் டெண்டில் அமர்ந்திருந்தனர். போலீசு கொட்டடியில் உடைக்கப்பட்ட தனது வலது காலை, அவ்வப்போது சரிபடுத்திக்கொண்டு அமர்கிறார் குமார்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு அவர்கள் தன்னிச்சையாக ஈர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினர். ஏனென்றால் வேளாண் சட்டங்கள் முழுத் தொழிலாளர் வர்க்கத்தையும் பாதிக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றனர்.
ஜனவரி 12-ம் தேதி, மஸ்தூர் அதிகார் சங்கதன் தனது தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத ஒரு தொழிற்சாலைக்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தியது. போராட்டத்தில் ஒரு சச்சரவு ஏற்பட்டது. அதன் பின்னர் அதே நாளில் நோதீப் கைது செய்யப்பட்டு கர்னல் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறுகிறார். கைது செய்யப்பட்ட பின்னர், போலீசார் அவரை சித்திரவதை செய்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
“யாரோ ஒருவர் என்னை உதைத்தார், இன்னொருவர் என் முடியை பிடித்து இழுத்தார்” என்கிறார். “யாரும் இல்லாத இடத்தில் வைத்து என்னை அடித்தார்கள். அதன்பின் சோனிபட் சிறையில் என்னை தூக்கிப் போட்டனர். என்னால் நடக்க முடியவில்லை, குளிர்காலத்தில் மெல்லிய போர்வையை தந்தார்கள்”.
அரியானா போலீசு இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் கூறவில்லை. நோதீப் கைது செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு தன்னை போலீசு அதிகாரிகள் அழைத்துச் சென்றதாக குமார் கூறினார். ஆனால் ஜனவரி 23-ம் தேதி அன்றுதான் அவரை கைது செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.
ஜனவரி 16-ஆம் தேதி சிங்கூ எல்லைப் போராட்டக் களத்தில் கழிப்பறையில் இருந்தபோது, சிலர் தன் முகத்தில் துணியை மூடியதாகக் கூறுகிறார். அவர் கூச்சலிட முயன்றபோது, ஒரு நபர் அவரது இடுப்பில் துப்பாக்கியை வைத்து, அமைதியாக இருக்கும்படி மிரட்டியுள்ளார். அதன்பின், போராட்டக் களத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் தொழிற்சாலைப் பகுதிக்கு அவரை நடந்தே அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவரை ஒரு காரில் அமரச் சொல்லியுள்ளனர். சோனிபட் போலீசு நிலையம் அழைத்துச் செல்லும் வரை அவர்கள் யார் என தனக்குத் தெரியவில்லை என்கிறார் குமார். போலீசு நிலையத்தில் வைத்து அவரை நிர்வாணமாக்கி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
“என்னை ஒரு விலங்கு என நினைத்து அடித்தார்கள்” என்கிற குமார், அரியானா போலீசு ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது மிகக் கொடூரமான சித்திரவதை செய்ததாகக் கூறுகிறார்.
“என்னுடைய கால்களை விரித்து வைத்துவிட்டு, நடுப்பகுதியில் உதைத்துக் கொண்டே இருப்பார்கள். தொடை எலும்புப் பகுதியில் தங்களுடைய எடை முழுவதையும் செலுத்துவதைப் பார்த்து ஏன் இப்படிச் செய்கிறார்கள் என சிரித்தேன். ஆனால், ஒரு பெரிய உலோக உருளையை எடுத்து என்னை அழுத்திய போது எனக்கு கோபம் வந்தது. அது சுமார் 10 கிலோ எடை இருக்கும். அதைக் கொண்டு 100 கிலோ எடை கொண்ட இரு நபர்கள் என்னை அழுத்தினார்கள்.
போலீசு அதிகாரிகள் தங்களுடைய ஷூக்களைக் கொண்டு தலையில் தாக்கியதாகவும், அவருடைய நகங்களை தடிகளால் தாக்கியதாகவும் கால்களில் வெந்நீர் ஊற்றியதாகவும் கூறுகிறார் குமார்.
(போலீசு கொட்டடியில் சித்திரவதைக்குள்ளான சிவகுமாரின் ரத்தம் உறைந்த மற்றும் உடைந்த கால் நகங்களைப் படத்தில் காணலாம்)
சோனிபட் மாவட்ட சிறையில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை குமாரின் காயங்களை உறுதிப்படுத்தியுள்ளது. போலீசின் சித்திரவதைகளால் குமாரிடம் மன உளைச்சல் கோளாறு அறிகுறிகளை காண முடிந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
“அவர்கள் என்னை மூன்று நாட்களாகத் தூங்க விடவில்லை; மனதளவில் சித்திரவதை செய்தார்கள்”. பல வாரங்களுக்கு குமாரின் வழக்கறிஞரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ சந்திக்க விடவில்லை போலீசு.
போலீசார் முன்பின் தெரியாத மூன்று பேரின் படங்களைக் காட்டி, அவர்களை அடையாளம் காணும்படி சொன்னதாக கூறுகிறார். ஆனால் அவர்களை தனக்குத் தெரியாது என்கிறார் குமார். அவருடைய அமைப்புக்கு யார் பணம் தருகிறார்கள் எனவும் போலீசு கேட்டுள்ளது. “துண்டுப் பிரசுரங்களை அச்சிடத் தொழிலாளர்களிடம் ரூ.10 வாங்குவோம். எங்களுக்கு இரண்டு அறைகள் உள்ளன. அங்குதான் தொழிலாளர்களை சந்திப்போம். அதன் வாடகை ரூ.5,500” என்கிறார் குமார்.
விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடமும் ஒற்றுமை உணர்வு ஏற்படுவதை போலீசுக்கு அச்சுறுத்தலாகத் தெரிந்துள்ளது என்கிறார் குமார். தனக்கு எதிரான வன்முறைகளில் சாதிய தொனி அதிகமாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“நீ ஒரு சாமர் தானே. நீ தலைவனாக நினைக்காதே. நீ எதற்காக இருக்கிறாயோ அதைச் செய்” என ஒரு போலீசு அதிகாரிக் கூறியதை நினைவு கூர்ந்தார்.
“அவர்கள் என் முகத்தில் துப்புவார்கள்”. “அனைவரும் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் சிறையில் அது இல்லவே இல்லை”.
தனக்கும் நோதீப்புக்கும் நிகழ்த்தப்பட்டவை குறித்து குமார் சினம் கொள்கிறார். ஆனால், அவருடைய சினம் போலீசு மீது அல்ல. “என்னுடைய சினம் இந்த சீரழிந்த அமைப்பின் மீதும் ஏழைக்கும் பணக்காரனுக்குமான இடைவெளியின் மீதும். போலீசு என்பது இந்த அமைப்பின் ஓர் அங்கம்தான்” என்கிறார் குமார்.
நோதீப், குமார் ஆகிய இருவரும் போராட்டம் மிக்க குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்திருக்கின்றனர். நோதீப், பஞ்சாபின் முக்த்சர் சாஹிப் எனும் மாவட்டத்தில் வளர்ந்தவர். அவருடைய பெற்றோர் “பஞ்சாப் கேத் மஸ்தூர் யூனியன்” என்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான அமைப்பில் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் தலித் பெண்களுக்கு எதிராக நடைபெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் தன் தாயுடன் இவரும் பங்கேற்பார்.
2019-ம் ஆண்டு, வடக்கு டெல்லியில் உள்ள அசாத்பூரில் கால் சென்டர் பணியை விட்டுவிட்டு டெல்லிக்கு வந்து, கடந்த அக்டோபரில் குமாரை தொடர்பு கொண்டார் நோதிப்.
அதன்பின் மஸ்தூர் அதிகார் சங்கதனில் இணைந்து ஒரு கண்ணாடி தொழிற்சாலையில் பணிக்குச் சேர்ந்தார். அதன்பின் விவசாயிகள் போராட்டத்துக்காக சிங்கூ எல்லைக்கு வரும் தொழிலாளர்களை திரட்டுவதற்காக அந்த பணியை விட்டுவிட்டார் நோதிப்.
“தொழிலாளர் உரிமைக்காகப் பணிபுரிவது கத்தியின் மீது நடப்பது போல என நாங்கள் எச்சரிக்கப் பட்டோம்” என்கிறார் நோதீப். “நாங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். எங்களுடைய வாழ்க்கை மிக நீண்டது அல்ல” என்கிறார்.
இந்த அமைப்பு, விவசாயிகள் போராட்டத்தில், மோடி அரசாங்கம் குறித்து (தொழிலாளர் சட்டம் 2020-ல் கொண்டுவந்த மாற்றங்கள் குறித்து) விழிப்புணர்வை ஏற்படுத்த நல்வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டது. மத்திய அரசு 44 தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக வெறும் நான்கு சட்டங்களைக் கொண்டு வந்தது. இது தொழிலாளர்களின் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் துறைசாராத் துறையினரின் பிறப் பாதுகாப்புகளுக்கு அச்சுறுத்தல் தரக்கூடியது.
ஜனவரியில் கர்னால் மாவட்ட சிறையில் இருந்தபோது, சிறைக் கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினர் தொலைபேசியில் தொடர்புக் கொள்வதைச் சிறை அதிகாரிகள் நிறுத்தியதால், உண்ணாநிலைப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறார் நோதீப்.
“நாம் போராடவில்லை என்றால் மரணித்து விடுவோம்” என்கிறார் நோதீப். “நாங்கள் குழந்தை பருவத்திலிருந்தே போராடினால்தான் எதுவும் கிடைக்கும் என்பதைப் பார்த்தவர்கள். நான் இதை என்னுடைய தாயிடமிருந்தும் எனது சகோதரி ராஜ்வீர் கவுரிடமிருந்தும் கற்றுக் கொண்டேன்”
சிவகுமார், அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் தேவ்ரூ கிராமத்தில் வளர்ந்தவர். அவருடைய தந்தை விவசாயத் தொழிலாளராகப் பணியாற்றியவர். அவருடைய அம்மாவிற்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு மனநலக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. குமாருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் இரண்டு இளையவர்களும் உள்ளனர். நடுவில் பிறந்தவராக, பள்ளி காலத்திலேயே குடும்பத்துக்கு உதவ பணிபுரியத் தொடங்கினார்.
2014-ம் ஆண்டு, இளம் புரட்சியாளரான பகத்சிங் 1931-ம் ஆண்டு எழுதிய ‘நான் ஏன் நாத்திகன்’ என சிறு பிரசுரத்தைப் படித்தார். அது குமாரிடம் எதிரொலித்தது.
“அந்த நேரத்தில் கடவுள் மீது பெரிய நம்பிக்கை இல்லை. அங்கே நம்பிக்கை கொள்ளப் பெரிதாக ஒன்றும் இல்லை” என்கிறார் குமார். “என்னுடைய அம்மா 23 ஆண்டுகளாக உடல் நலம் குன்றியுள்ளார். கடவுள் என்பவர் இருந்தால், அவரை ஏன் குணமாக்கவில்லை? கடவுள் என்பவர் இருந்தால் இங்கே ஏன் இவ்வளவு பாகுபாடு உள்ளது? ஏன் இங்கே ஒருவர் பணக்காரராகவும் மற்றொருவர் ஏழையாகவும் உள்ளனர்? ஏன் சிலர் வயிறு முட்ட உண்கின்றனர், சிலர் பட்டினியில் வாடுக்கின்றனர்?”
கல்வி கற்கும் உரிமையின் அடிப்படையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையை சேர்க்க மறுத்த தனியார் பள்ளிக்கு எதிராக 2015-ம் ஆண்டு போராடிய போது சோனிபட் போலீசு, குமாரை மற்றவர்களுடன் சேர்த்து கைது செய்தது. இதுவே oரு செயல்பாட்டாளராக குமாரின் முதல் போராட்டக் களம். அப்போது குமார் பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தார். அவருடைய குடும்பம் அவருடைய சமூக செயல்பாட்டை விரும்பவில்லை.
जेल से सीधा चंडीगढ़ अस्पताल में आया हूं…. हिरासत में हौंसले तोड़ने की पुरजोर कोशिश की गई….. वो सिर्फ टांग तोड़ पाए….. आप सभी के साथ से ही मजबूत बना हूं….✊✊ कितनी बड़ी है जेलें तेरी देख लिया है देखेंगे pic.twitter.com/4d723V2ty1
“என்னுடைய குடும்பம் என்னைப் படிக்கச் சொல்லி, நான் ஒரு நல்ல பணிக்குச் செல்ல வேண்டும் என நினைத்தது. ஆனால், அவர்களுடைய நினைப்புக்கு மாறாக நான் நடந்து கொண்டேன்”. இப்போது தன்னுடைய குடும்பம் தனக்கு முழு ஆதரவாக உள்ளதாகவும் கூறுகிறார்.
2016-2017-ம் ஆண்டுகளில் தொழிற் பயிற்சி நிலையத்தில் சாயம் ஏற்றுதல் மற்றும் அச்சுகளின் பயன்பாடு குறித்துப் படித்த பின், குந்திலிக்கு பணி தேடி வந்ததாகக் கூறுகிறார். அவருடைய முதல் பணியில் மாதம் ரூ.8000 ஊதியம் பெற்றார். பிற தொழிற்சாலை பணிகளுக்குத் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருந்த போது, ஒரு தொழிலாளராக தான் சுரண்டப்பட்டதாகக் கூறுகிறார்.
தன்னைப் போன்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைவிடக் குறைவாக தரப்பட்டது. பணியிடத்தில் நிகழும் விபத்துகளுக்குத் தொழிற்சாலை உரிமையாளர்கள் நியாயமான இழப்பீட்டை தரவில்லை. பணிக்கு தாமதமாக வந்தால் அரை ஊதியம் மட்டுமே கிடைக்கும். “நான் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்கு ஒரு சங்கம் தேவை என்பதை உணர்ந்தேன்” என்கிறார். மூன்று ஆண்டுகளில் மஸ்தூர் அதிகார் சங்கதன் 300 தொழிலாளர்களைக் கொண்ட பலமான அமைப்பாக மாறியது.
எதிர்ப்புணர்வின் வாழ்க்கை
இளம் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் தீஷா ரவி
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக மற்றொரு 22 வயதான, பெங்களூருவைச் சேர்ந்த தீஷா ரவி என்ற இளம் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். செயல்பாட்டாளர் கிரேட்டா தென்பர்க் ட்விட்டரில் வெளியிட்ட போராட்டம் குறித்த ஆவணம் ஒன்றை திருத்தியதற்காக டெல்லி போலீசு, தீஷாவின் பெங்களூரு இல்லத்தில் அவரைக் கைது செய்தது. இந்த டூல் கிட், சீக்கியப் பிரிவினைவாதக் குழுக்களுடன் சேர்ந்து தயாரிக்கப்பட்டதாக போலீசு குற்றம் சாட்டியது.
தீஷா ரவி-யின் வழக்கு பரவலான கவனம் பெற்றது. அவருடைய கைது தலைப்பு செய்தியானது. பிப்ரவரி 23-ம் தேதி பிணையில் வந்தவர். ஒரு அறிக்கை வெளியிடும்வரை வெளிச்சத்தில் இருந்தார்.
“வர்க்கத்தில் வேறுபாடு உள்ளது” என்கிறார் நோதீப். “மேல்தட்டு வர்க்கம் மீண்டும் பேசினால் தங்களைக் குறிவைப்பார்கள் என நினைக்கிறது. ஆனால், அமைதியாக இருந்தாலும் நாம் தாக்கப்படுவோம்”
நோதீப்பும் குமாரும் பிப்ரவரியில் தங்களுடைய பிறந்தநாளை சிறையில் கொண்டாடினார்கள். அவர்கள் விடுதலையான பிறகு, நேர்காணலுக்காக அணுகப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் உறவினர் மீனா ஹாரீஸ் தன்னைப் பற்றிய ட்விட் செய்தவுடன் ஊடக வெளிச்சம் கிடைத்ததை நோதீப் அறிவார். விவசாயிகளின் போராட்டத்துடன் தொடர்புடையதாலேயே தங்களுடைய கைதுகள் செய்தியாயின என்கிறார் குமார்.
“ஊரடங்கின் போது, தொழிலாளர்கள் தங்களுக்காக உணவைப் பெறவில்லை; அவர்கள் பட்டினியாக இருந்தார்கள். ஊடகம் அதைக் கூறவில்லை” என்கிறார் குமார். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கக் கோரி சாலை மறியல் செய்ததாகக் கூறுகிறார். “அவர்கள் தங்கள் அறையிலிருந்து தூக்கியெறியப்பட்டபோதோ, ஒருவரின் விரல் அல்லது கை துண்டிக்கப்பட்டபோதோ இந்த ஊடகம் செய்தி வெளியிடுவதில்லை”
“போலீசின் வதைக்கு ஆளான பின், சரியாக உறங்க முடியவில்லை” என்கிறார் குமார். நோதீப் தனக்கு சிறிதளவு ஓய்வு தேவை என்கிறார். ஆனால், அவர்களால் அது முடியாது. தற்போது அவர்கள் பணி இல்லாமல் இருக்கிறார்கள். தங்களுடைய செயல்பாடுகளுக்காகவும் தினசரி தேவைகளுக்காகவும் அவர்கள் பணம் ஈட்ட வேண்டும். “ஒரு விழுக்காடு பணி கூட முடிக்கப்படவில்லை” என்கிறார் நோதீப்
எதிர்காலத்தில் எந்தெந்தப் பிரச்சினைகளையெல்லாம் எடுத்துக் கொள்ளப் போகிறார் எனக் கூறும் அவர், “குழந்தைகள் பணிபுரிய தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் ஆண்களைப் போல பெண்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பதையும் பார்க்கிறேன்”
நோதீப் மற்றும் குமார் இருவரும் தங்களுடைய செயல்பாடுகளால் தங்கள் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய பின்விளைவுகளுக்கு தயாராகவே உள்ளனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு தங்களுடைய ஆதரவை, புதிய வேளாண் விரோத சட்டங்கள் நீக்கப்படும் வரைத் தொடருவோம் எனவும் தெரிவிக்கின்றனர்.
“இந்தப் போராட்டத்தில் நான் போராடியே ஆக வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் சமரசத்துக்கு இடமில்லை. நான் பின்வாங்கமாட்டேன். நான் முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்கிறார் குமார்.
கட்டுரையாளர் : விஜய்தா லால்வானி
தமிழாக்கம் : அனிதா
நன்றி : ஸ்க்ரால்
தேர்தல் ஜனநாயகம் : மாயப் பெட்டியும் – மந்திர மையும்
கும்பல் கொலைகளும், தொழிலாளர் சட்டத் திருத்தம், வேளாண் சட்டத் திருந்தங்களும் குத்தீட்டிகளாய் நிற்கும் தேசத்தில் தேர்தல் ஜனநாயகத்தைக் கொண்டு பாதுகாப்பாக தரையிறங்க முடியுமா ?
நம்மில் பலர் எங்கேனும் ஓரிடத்திலாவது இந்த வாக்கியங்களையெல்லாம் ஆண்களை நோக்கிப் பயன்படுத்தப்பட்டிருப்பதை கேட்டியிருப்போம். “பொம்பளப்பிள்ள மாதிரி அழக்கூடாது”, “உனக்கு எதுக்கு பேண்ட் சட்ட.. நீயெல்லாம் பாவாடை கட்டிட்டுப் போ”. ஆண்களின் ‘வீரத்தை’ சீண்டிப் பார்க்கும் வசனங்களாகவே இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அழுதல், பாவாடை அணிதல் போன்றவை எல்லாம் பெண்களுக்கானவை என்று எழுதப்படாத விதியாக ஆணாதிக்க சமூகத்தின் சிந்தனை நம் தலைகளில் ஊறிப் போயிருப்பதன் வெளிப்பாடுதான் இந்த வசனங்கள் எல்லாம். இவற்றை பெண்களுக்கானது என்று வரையறைத்த சமூகம் ஏன் அவற்றின் வரலாற்றை பேச மறுக்கிறது? ஏன் ஆண்கள் அழக்கூடாதா என்ன? அது போன்று தான் ஆண்கள் ஏன் பாவாடை அணியக் கூடாதா? அது ஏன் கேலிக்குரியதாகப் பார்க்கப் படுகிறது. இந்தப் பாவாடை எனும் உடை பெண்களுக்கான உடுப்பாக மட்டுமே இருந்து வந்ததா? வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போம் வாருங்கள் !
நாம் தெருவில் நடக்கையில் யாரேனும் ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து சென்றால் அதை பார்த்துவிட்டு கடந்து விடுவது போல, ஓரு ஆண் பாவாடை அணிந்து சென்றால் அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிடுவதில்லை. அதை ஆண்கள் அணிவதைக் கண்டு கடந்து செல்வதில் ஏன் அவ்வளவு தயக்கம்?
வரலாற்று ரீதியாகப் பாவாடை பெண்களுக்கான அடையாளமாகவே நீடித்ததா எனில் அதற்கான பதில் ‘இல்லை’ என்பதுதான். உண்மை என்வெனில், பண்டைய நாட்களில் இந்த பாவாடையானது ஆண் பெண் இருபாலரும் உடுத்தும் உடையாக இருந்து வந்துள்ளது. பண்டைய கால எகிப்து மற்றும் ஆசியா-வில் பாவாடை அவர்களின் தினசரி ஆடையாக இருந்து வந்துள்ளது.
பண்டைய எகிப்து-ல் முதன் முதலில் பாவாடை உடுத்தியதும் ஆண்களே. இடுப்பிற்கு கீழ் துணிகளை சுற்றி உடம்பை மறைக்கும் ஓரு அங்கி. அதன் பெயர் ஷெண்டிட்(Shendyt). இது மிகவும் மெல்லியதாக இருந்ததோடு உடம்பிலிருந்து வெப்பத்தை வெளியேற்றும் என்று கருதி அவர்களின் சூழல்களுக்கு ஏற்றவாறு ஆடையை வடிவமைத்திருந்தனர். அப்போது அங்கு ஆட்சி செய்த அரசர் முதல் விவசாயி வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை இதைத்தான் உடுத்தி வந்தனர். விலைக்கேற்ப ஆடையின் தரம் கூடுதமே தவிர ஆடையில் எந்த மாற்றமும் இல்லை. ஆண்களைவிட தரம் மற்றும் விலையில் குறைவான ஆடைகளை பெண்கள் அணிந்திருந்தனர். ஏனெனில் அப்போது அங்கு வேலைப் பிரிவினைகளும் அதன் காரணமாக பாலினப் பாகுபாடுகளும் வளர்ந்திருந்தன.
இதைப் போன்றே சீனாவிலும் பேரரசர்கள் ஜரிகையால் நெய்யப்பட்ட நீண்ட மஞ்சள் நிறப் பாவாடைகளையே ஆடைகளாக அணிந்திருந்தனர். அதைப் போன்றே தென் அமெரிக்காவிலுள்ள இன்கா நாகரிக மக்கள் (ஆண், பெண் என இரு பாலரும்) பாவாடையையே உடுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து பண்டைய ரோமாபுரி மற்றும் கிரீஸ்-யில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் டுனிக்ஸ் (Tunics) என்ற ஆடையை பயன்படுத்தினார். அது உடல் முழுவதும் துணிகளை சுற்றி தோள்பட்டையில் கிடத்தி கையில் ஏந்தியவாறு நடப்பது வழக்கம்.
பண்டைய ரோமானிய, கிரீஸ் அரசுகளைப் பற்றிய இன்றைய சினிமாக்களில் அதனைக் கண்டிருப்பீர்கள். அவற்றை இன்றைய அருங்காட்சியங்களிலும் பார்க்க முடியும். பெண்களுக்கும் அதே ஆடையே ஆனால் நீளமான நிலத்தை தவழும் வடிவமைப்பு கொண்ட உடையை அணிந்தனர். இதேப் போன்று ஐரோப்பியர்களும் ஆண், பெண் இருபாலரும் பாவாடையை உடையாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இப்படி வரலாறு முழுவதும் பாவாடை எனும் இந்த உடை ஆண்களுடன் பயணித்து வந்திருக்கிறது.
பின் எங்கிருந்து இந்தப் பாகுபாடு தொடங்கியது? வர்க்க சமூகத்தில் சொத்துடைமை தீவிரமடையத் தீவிரமடைய ஆண் பெண் பாகுபாடும், பெண்கள் மீதானக் கட்டுப்பாடுகளும் அதிகரித்தன. குறிப்பாக நாகரிகச் சமூகமாக மனித இனம் வளர்ந்தாலும் அதன் வளர்ச்சிப் போக்கில் போரும், மதமும் ஒரு அங்கமாகின.
பெண்களை போரில் இருந்து தவிர்த்தன இந்த சொத்துடைமைச் சமூகங்கள். போர்களில் குதிரையேற்றத்திற்கு வசதியான வகையில் ஆண்களின் உடைகள் சுருக்கப்பட்டன. மதங்கள் வேறுன்ற தொடங்கியதும் மத நூல்கள் ஆண்-பெண் பாலினங்களின் ‘அம்சங்களாக’ உடைகளையும் வகுத்தன. அப்படி பைபிளில் இடம்பெற்ற வார்த்தைகள் ஆண்-பெண் பாகுப்பாட்டை வெளிக் கொணர்ந்தது.
“The women shall not put on the weapons(armour) of the warrior, neither shall a warrior put on a women’s garment for all that do are abomination and the LORD thy God. ”
அதாவது, “பெண்கள் ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது அதே போல, பெண்களின் ஆடைகளை அணிந்து ஆண்கள் போருக்குச் செல்லக்கூடாது” என்பதே இதன் பொருள். கி.பி.1604-க்குப் பின் இங்கிலாந்தை ஆண்ட அரசர் ஜேம்ஸ் 1-ஆல், பைபிள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த மொழிபெயர்ப்பு சில இடங்களில் தவறானப் புரிதலை உருவாக்கியது. அதன் பின் “Modern International English”-ல் மொழி பெயர்க்கப்பட்டது.
“A women must not wear Mens clothing nor a man wear women’s clothing for the Lord your God detests anyone who does this”
இத்தகைய மத ரீதியானக் கட்டுப்பாடுகள் மற்றும் பணி நிலைமைகள் ஆகியவற்றின் காரணமாக பெண்கள் ஆடையும் ஆண்களின் ஆடையும் தனித்தனியாக வளர்ந்து வந்தன. முன்பே கூறியது போல, இதற்கு மத நூல்கள் மட்டும் காரணமல்ல. அதைக் கடந்த நடைமுறைப் பணி நிலைமைகளும் முக்கியக் காரணமாக இருந்தது. ஆண்கள் பயன்படுத்தத் துவங்கிய டிரவுசர்கள் (Trousers) வேலைகளை எளிமையாக செய்யவும், குதிரை சவாரி செய்யவும், போர் புரியவும் உதவின.
சொத்துடைமை அடிப்படையிலான வர்க்கச் சமூகம் பெண்களை அழகுப் பதுமைகளாகவே (ஒரு சில விதிவிலக்குகள் தவிர) நடத்தி வந்தது. அதற்கேற்ற வகையில் அவர்களது உடைகளின் பரிணாம வளர்ச்சி இருந்தது.
காலத்திற்கேற்ப நாகரிகம் வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளிலும் இன்றும் கூட ஓரு ஆண் பாவாடை அணிந்து தெருவில் நடந்தால் கேலியாகவும் கிண்டலாகவும் பார்க்கின்றனர். காரணம், நாம் நம் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பாலினப் பாகுபாட்டின் விளைவே.
இன்றும் கூட பல நாடுகளிலும் பாவாடை போன்ற ஆடைகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஒரு சுற்றலாவாசியாக நான் பூட்டானில் அவற்றைப் பார்த்திருக்கிறேன். பூட்டானில் ஆண்கள் அணியும் அடர்த்தியான, கோ(Gho) என்ற ஆடையும் பாவாடையைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது. அங்கு பெண்கள் அணியும் கீரா(Kira) கணுக்கால் வரை நீண்டிருக்கும்.
ஆசிய புத்தத் துறவிகள் அணியும் ஆடை கூட ஓரு வித சீலை போன்ற தோற்றத்தையே தருகின்றது. ஆனால் அதைப் பார்த்து நாம் சிரிப்பதில்லை. அதேபோல, பாலி நாட்டில் சாராங்(Sarang) எனப்படும் நீண்ட துணிகளை இடுப்பிற்கு கீழ் உடுத்தும் பழக்கம் இருக்கிறது.
ஸ்காட்லாந்தில் ஆண்கள் கில்டு(Kilt) என்ற ஆடையை அணிந்து வேலைகளைச் செய்கின்றனர். “As they say in Scotland, It takes a real Man to wear a skirt” என்று ஓரு பழமொழிக் கூட உண்டு. ஸ்காட்லாந்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த ஆடையும் கீல்டு (Kilt). ஏன் தென் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருக்கிறது.
இப்போது சொல்லுங்கள் ஆண் பாவாடை அணிந்தால் என்ன தவறு ?
இன்று பெண்களும் தங்களது வேலை சூழலுக்கு ஏற்ற வசதியான ஆடையாக சுடிதார், ஜீன்ஸ் உள்ளிட்ட உடைகளையே பயன்படுத்துகின்றனர். பெண்கள் பயன்படுத்துகின்றனர் என்பதற்காக இந்தச் சமூகம் இந்த ஆடைகளையும் இளப்பமான ஆடைகளாக அடையாளப்படுத்தப் போகிறதா?
ஆண்களின் கோழைத்தனத்திற்கு அடையாளப்படுத்தும் விதமாக ஆண்களைப் பார்த்து “பாவாடை கட்டிக் கொள்” என்று யாரேனும் சொன்னால் அதை ‘உரிய’ முறையில் எதிர்கொள்ளுங்கள். தைரியம் என்பது எந்த ஒரு பாலினத்திற்குமான தனிப்பட்ட உரிமை கிடையாது. கோழைத்தனத்தைப் பெண்மைக்கு நிகரானதாகவும், பாவாடையை அதற்கான அடையாளமாகப் பேசுவதும் கேலிக்கூத்தாகும். வரலாற்று அறிவோ சமூக அறிவோ இல்லாதவர்களாக நம்மை நாமே தூற்றிக் கொள்வது போன்றதாகும். ஆடை வெறும் அடையாளம் அல்ல. அது பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம்.
ஆகவே, இனி நாம் கேட்போம், “Why dont Men wear skirt? ”
இன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமரசமின்றி போராடிய போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டு 90-ம் ஆண்டு நினைவு நாள்.
காந்தியின் கருத்துக்கள் சென்றடைந்ததைப் போல, விதைக்கப்பட்ட இந்தப் போராளிகளின் கருத்துக்கள் பரந்துபட்ட மக்களிடம் சென்றடையவில்லை என்பதுதான் இக்கருத்துக்கள், ஏகாதிபத்திய ஆதரவு ஆளும்வர்க்கத்திற்கு எந்த அளவிற்கும் பெரும் சவாலாக அமைந்திருக்கின்றன என்பதற்குச் சான்று.
இன்று, ஒருபுறத்தில் இந்துத்துவ பாசிசம் உச்சத்தை அடைந்திருக்கும் வேளையில் மற்றொரு புறத்தில் தமிழ் இனவெறி பாசிசம் வளர்ந்து வருகிறது. முன்னதை பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல் வளர்த்து வரும் சூழலில் பின்னதை தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி வளர்த்து வருகிறது.
இன்று தமிழகத்தைக் கவ்வியிருக்கும் இந்த இரு பெரும் பாசிச அபாயங்களில் இருந்து தமிழகம் மீள வேண்டுமெனில் மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் அறிவு பெற்று இருக்க வேண்டும். சீமானின் கட்சியில் கூடத்தான் இளைஞர்களும் மாணவர்களும் இருக்கிறார்கள். இதை யாராலும் மறுக்க முடியாதுதான். இங்கு நாம் மாணவர்களும் இளைஞர்களும் பெறவேண்டிய அரசியல் அறிவு எனக் குறிப்பிடுவது சமூகப் பிரச்சினைகளுக்கு விரிவான பரந்துபட்ட கண்ணோட்டத்துடனான தீர்வை முன் வைக்கும் அறிவியல்பூர்வமான அரசியல் அறிவைப் பற்றியே !
அத்தகையதோர் அரசியல் அறிவு என்பது மதரீதியான, இனரீதியான பிரிவினையற்ற, முழுக்க முழுக்க வர்க்கரீதியான அரசியல் பார்வையே என்று அடித்துக் கூறியிருக்கிறார் தோழர் பகத்சிங். அப்படிப்பட்ட அரசியல் அறிவை இளைஞர்களும் மாணவர்களும் ஏன் பெற வேண்டும் என்பதை 1928-ம் ஆண்டு எழுதிய இந்தக் கட்டுரையில் விளக்கியிருக்கிறார் பகத் சிங். ”கேளாத செவிகள் கேட்கட்டும்” என்ற நூலில் பகத் சிங்கின் சிறைக்குறிப்புகள், கடிதங்கள் ஆவணங்கள் ஆகியவற்றை தமிழாக்கம் செய்து தோழர் த. சிவக்குமார் வெளியிட்டிருக்கிறார். அந்த நூல் நெம்புகோல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பகத் சிங்கின் அரசியலைப் புரிந்து கொள்ள விளைபவர்கள் பகத் சிங்கின் வார்த்தைகளிலேயே அதனை படிக்க இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும்.
தோழர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாளில் மாணவர்கள் அரசியலில் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பகத் சிங் எழுதிய இந்தக் கட்டுரையை வாசகர்களுக்கு முன் வைக்கிறோம்.
000
இன்று பல அதிமேதாவிகள் கூவிக் கொண்டிருப்பது போலவே அன்றும் சிலர் “மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது. அவர்கள் கவனம் படிப்பில் மட்டும் தான் இருக்க வேண்டும்” என்று கூறிக் கொண்டிருந்தனர். அதன் மூலம் தாய் நாட்டின் விடுதலைக்காக பாடுபட வேண்டிய பொறுப்பில் இருந்து அன்றைய மாணவர்களை – இளைஞர்களை திசை திருப்பிக் கொண்டிருந்தனர். ஆளும் வர்க்கத்தின் மனதை மகிழச் செய்வதற்காக தாய்நாட்டிற்கு துரோகம் செய்து கொண்டிருந்தனர்.
வெளிப்பார்வைக்கு அதிபுத்திசாலித்தமானதாக தோற்றமளிக்கும் இவர்களது வாதங்களை இக்கட்டுரையின் மூலம் பகத்சிங் தகர்த்தெறிகிறார். அவர்களையும் அவர்களது வாதத்தின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறார். இக்கட்டுரை 1928 ஜுன் கீர்த்தி இதழில் வெளிவந்தது.
படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் (மாணவர்கள்) அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சிலர் வீட்டுக் கூரைகளின் மேல் நின்று கொண்டு உரக்கக் கத்துகின்றனர். பஞ்சாப் அரசாங்கமும் அத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ளது. மாணவர்கள் கல்வி நிலையங்களில் சேரும் போதே, அவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதிமொழியில் கையெழுத்திடுமாறு செய்யப்படுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது கல்வி அமைச்சர் மனோகர் லால், மாணவர்களோ ஆசிரியர்களோ அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பது நமது துரதிர்ஷ்டமே. லாகூரில் மாணவர் சங்கங்களாலும் மாணவர் அமைப்புகளாலும் “மாணவர்கள் வாரம்” கொண்டாடப்பட்ட போது சர்.அப்துல் காதரும் பேராசிரியர் ஈஸ்வர் சந்த்தும் மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தினர்.
நாட்டில் அரசியல் ரீதியில் பின்தங்கிய மாகாணமாக பஞ்சாப் வரிசைப்படுத்தப்படுகிறது. ஏன் அவ்வாறு கருதப்படுகிறது? பஞ்சாப் குறைவாகவா தியாகம் செய்துள்ளது. காரணம் என்னவென்றால் நமது கல்வித் துறையின் அதிகாரிகள் கத்துக்குட்டிகள். இன்றைய பஞ்சாப் சட்ட மன்ற அவை நடவடிக்கைகள், நமது கல்வியின் தரம் மிக மோசமான நிலையிலும் பயனற்றதாகவும் இருப்பதையும் நமது நாட்டில் என்ன நடந்தாலும் அதில் இளம் மாணவர்கள் பங்கெடுப்பதில்லை என்பதையுமே நமக்கு காட்டுகின்றன. இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சிப் போக்குகள் பற்றி அவர்கள் (மாணவர்கள்) அறியாதவர்களாகவே இருக்கின்றனர். பள்ளிக் கல்வி முடித்து வெகுசிலர் உயர்கல்விக்குச் சென்றாலும் அவர்கள் பேசும் அறிவுக்குப் பொருந்தா குப்பைப் பேச்சுக்களைக் கேட்டு எவரும் சிரிக்காமல் இருக்க முடியாது.
இந்த நாட்டின் ஆட்சியதிகாரம் யாருடைய கைகளுக்குச் செல்லப் போகின்றதோ அந்த இளைஞர்களுக்கு திருப்தியற்ற விதத்தில் கல்வியளிக்கப்படுகிறது. இத்தகைய பெருமுயற்சிகளின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை யூகிப்பதில் எந்த கஷ்டமும் இல்லை.
மாணவர்களின் பிரதான கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டும். அவர்களது நேரமும் சக்தியும் முழுவதும் அதற்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் நமது நாட்டின் நிலைமையையும் அந்நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் புரிந்துகொள்ளக்கூடிய திறனை வளர்த்துக் கொள்வது அவர்களது படிப்பில் ஒரு பகுதி இல்லையா ? அப்படி இல்லையென்றால் அவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி பயனற்றது என்றே நான் கருதுகிறேன். அக்கல்வி நம்மை வெறும் எழுத்தர்களாக மட்டுமே ஆக்கக் கூடியது என்றால், அதனை நாம் பெற்றிருப்பதில் ஒரு மகிழ்ச்சியும் இல்லை. அத்தகைய கல்வி நமக்குத் தேவையா?
தந்திரக்காரர்கள் சிலர் கூறுகின்றனர்: “மாணவர்களே, நீங்கள் அரசியலைப் பற்றிப் படிக்கலாம் ; அதைப் பற்றி சிந்திக்கலாம். ஆனால் நடைமுறை அரசியலில் மட்டும் ஈடுபடக்கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி உங்கள் திறனை வளர்த்துக் கொண்டால் நீங்கள் நாட்டிற்கு அதிகம் பயனுள்ளவர்களாக இருப்பீர்கள்”. வெளிப்படையாகப் பார்க்கும் போது இது ஒரு நல்ல ஆலோசனை. ஆனால் இது மேலோட்டமான கருத்து என்பதற்காகவும் நான் இதை நிராகரிக்கிறேன். நான் அதை விரிவாக விளக்குகிறேன். ஒரு மாணவர், பிரின்ஸ் க்ரொபோத்கின் எழுதிய “இளைஞர்களுக்கு அறைகூவல்” (Appeal to the young) எனும் நூலை படித்துக் கொண்டிருக்கிறார். ஒரு பேராசிரியர், இது ஏதோவொரு வங்காளியின் படைப்பு போல் இருக்கிறதே, அந்த புத்தகம் என்ன புத்தகம் ? என்று விசாரிக்கிறார். அம்மாணவர் பதில் சொல்கிறார்: பிரின்ஸ் க்ரொபோத்கின் பிரபலமான பெயர். பொருளாதாரத்தில் அதிகாரம் பெற்ற மேதை. ஒவ்வொரு பேராசிரியரும் இப்பெயரைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்பேராசிரியரின் “திறனைப்” பார்த்து நகைத்துக் கொண்டே அம்மாணவர் மேலும் கூறுகிறார்: அவர் ஒரு ருஷ்ய நாட்டவர். ருஷ்யா என்ற வார்த்தை அப்பேராசிரியருக்கு இடி விழுந்தது போல் கேட்டது. உடனே அவர் சொன்னார்: “நீ ஒரு போல்ஷ்விக் ஏனென்றால் நீ அரசியல் புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கிறாய்”
என்ன ஒரு திறமையான பேராசிரியர் ! பாவம் அந்த மாணவன். அப்பேராசிரியரிடமிருந்து என்ன கற்றுக் கொள்ள முடியும் ? இத்தகைய சூழ்நிலையில் நமது இளைஞர்களால் என்ன கற்றுக்கொள்ள முடியும்?
இரண்டாவதாக, “நடைமுறை அரசியல்” என்றால் என்ன என்று நாம் பார்ப்போம். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை வரவேற்பதும் அவர்களது சொற்பொழிவுகளைக் கேட்பதும் நடைமுறை அரசியல். ஒரு ராயல் கமிஷனை அல்லது வைஸ்ராயை வரவேற்பதற்கு பெயர் என்ன ? அதுவும் கூட அரசியல் இல்லையா? அரசாங்கம் அல்லது நாட்டின் நிர்வாகத்துடன் தொடர்புடையது எதுவானாலும் அரசியல் என்றால், இதுவும் அரசியல் இல்லையா ? ஆனால் என்ன இருந்தாலும் இது அரசாங்கத்தை மனங்குளிரச் செய்கிறது, மற்றதோ அரசாங்கத்தை கோபம் கொள்ளச் செய்கிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
நீங்கள் அரசாங்கத்தின் மனமகிழ்ச்சியையும் கோபத்தையும் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள் என்பதே இதற்கு அர்த்தம். பிறந்தது முதற்கொண்டு அரசாங்கத்திற்கு துதிபாடும் கல்வியா மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும் ? அந்நிய கொள்ளைக் கூட்டத்தினரால் இந்தியா ஆளப்படும் வரை, அரசாங்க விசுவாசத்தைக் காட்டும் அரசாங்க ஆதரவாளர் (Loyalist) களை நான் துரோகிகள் என்றே கருதுவேன். அவர்கள் மனிதர்களே அல்ல. மிருகங்கள். அவர்கள் தங்களது வயிற்றுக்கு அடிமையானவர்கள் ! இந்த அரசாங்க விசுவாசத்திற்கான பாடத்தைக் கற்குமாறு நமது மாணவர்களை நாம் எவ்வாறு கூற முடியும்?
இந்தியாவிற்கு இப்பொழுது, தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து, பித்துப் பிடித்தவர்களைப் போல் தங்களது வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்து இந்நாட்டின் விடுதலைக்காக போராடக்கூடிய தேச பக்தர்களே தேவைப்படுகின்றனர். இதை ஏறத்தாழ அனைவருமே ஒப்புக் கொள்வார்கள். அத்தகைய தேசபக்தர்களை வயதானவர்களிடம் நம்மால் கண்டறிய முடியுமா? தங்களது குடும்பம், உலக வாழ்க்கை விவகாரங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் புத்திசாலியான மனிதர்களின் மத்தியில் இருந்து அத்தகைய தேசபக்தர்கள் வெளிவருவார்களா ? இல்லை! இத்தகைய விஷயங்களின் பிடியில் இல்லாத இளைஞர்களின் அணிவரிசை களில் மட்டுமே அத்தகைய தேசபக்தர்களைக் காண முடியும். ஆனால் நமது இளைஞர்களுக்கு விஷயங்களைப் பற்றிய நடைமுறை அறிவு கொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் மத்தியில் அத்தகைய தேசபக்தர்கள் கிடைப்பார்கள். கணிதம் மற்றும் புவியியல் கேள்விகளுக்கான விடைகளை குருட்டு மனப்பாடம் செய்து கற்றுக் கொள்வது மட்டும் இதற்குப் போதாது.
இங்கிலாந்து நாட்டு மாணவர்கள் கல்லூரிகளைத் துறந்து விட்டு ஜெர்மனிக்கு எதிராக போருக்குச் சென்றார்களே ஜெர்மனிக்கு எதிராக போருக்குச் சென்றார்களே, அது அரசியல் இல்லையா? நம்முடைய போதகர்கள் அங்குபோய் அவர்களது படிப்பைத் தொடருமாறு அந்த மாணவர்களிடம் ஏன் சொல்லவில்லை!
தங்களது கல்லூரியைத் துறந்து பரதோலியின் சத்யாகிரகப் போராட்ட வீரர்களுக்கு துணை நின்றார்களே அந்த அகமதாபாத் தேசியக் கல்லூரியின் மாணவர்கள் என்ன முட்டாள்களா ? கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் இளைஞர்களும் மாணவர்களுமே தங்களது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எப்பொழுதும் முன்வரிசையில் இருக்கின்றனர். இந்தியாவின் இளைஞர்களும் மாணவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கியிருப்பதன் மூலம் தங்களது நாட்டைக் காப்பாற்ற முடியுமா ? 1919-ல் இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை அவர்கள் மறக்கலாமா? புரட்சி, இன்றைய காலகட்டத்தின் தேவை என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
மாணவர்கள் படிக்க வேண்டும். கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால் அதனுடன் கூடவே அவர்கள் அரசியல் அறிவையும் பெறவேண்டும். நேரடி நடவடிக்கை எப்போது தேவைப்படுகிறதோ அப்போது களத்தில் குதிக்கத் தயங்கக் கூடாது. அப்பணிக்காக தங்களது வாழ்க்கையை அவர்கள் அர்ப்பணிக்க வேண்டும். இக் குறிக்கோளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்கக் கூடாது. இந்த நிலைமையில் இருந்து மீள்வதற்கு அது ஒன்றே வழி.
பகத்சிங்
நூல்: கேளாத செவிகள் கேட்கட்டும்… (தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்) தொகுப்பும், தமிழும்: த. சிவக்குமார்
கடந்த ஜனவரி மாதம் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மாணவர்களை சென்னைப் பல்கலைக் கழக தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜன் பழிவாங்கும் நோக்கில் தேர்வில் தோல்வியடையச் செய்துள்ளார். அதைக் கண்டித்து, மறு திருத்தம் செய்யக் கோரி கடந்த பிப்ரவரி மாதம் தொடர் போராட்டம் நடத்தினார்கள் மாணவர்கள்.
அதன்பின், அவர்கள் அனைவரும் தேர்வில் தேறிவிட்டதாக வாய்வழித் தகவல் கூறியிருக்கிறது பல்கலை நிர்வாகம். பெற்ற மதிப்பெண் பற்றி கேட்டதற்கு கல்லூரி நிர்வாகம் எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் கடந்த மார்ச் 16-ம் தேதி அன்று நீண்ட நேரம் காத்திருந்து, தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜனை துறை அலுவலகத்தில் சந்தித்துக் கேட்டுள்ளனர். அதற்கு சௌந்திரராஜன் தகாத வார்த்தைகளில் பேசி, பெண் மாணவியின் மீது பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளார். இதை எதிர்த்துக் கேட்ட சகமாணவர்களையும் அடித்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக பதிவாளர், பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கமிட்டி, துணைவேந்தர் ஆகிய மூன்று பேருக்கும், இந்த பாலியல் வன்கொடுமை சம்மந்தமாக, புகார் கடிதம் கொடுத்துள்ளார்கள் மாணவர்கள். அந்த கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவந்தனர் மாணவர்கள்.
பல்கலை நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்ட பல்வேறு கமிட்டிகள், பிரச்சினையை பற்றி ஒன்றுமே பேசாமல், என்ன காரணத்திற்கு என்று முறையாக தெரிவிக்காமலேயே, கடிதங்கள் தந்துள்ளது. “கடிதங்களில் எழுதியிருப்பது முன்னுக்குபின் முரணாக உள்ளது. பேரா.சௌந்திரராஜனுக்கு ஆதரவாக உள்ளது” என்ற அடிப்படையில் அனைத்துக் கமிட்டிகளையும் நிராகரித்துள்ளார்கள் மாணவர்கள்.
பாலியல் குற்றத்தை விசாரிக்க வந்த கமிட்டிக்கு மட்டும் மாணவர்கள் சென்றார்கள். ஆனால், அந்த கமிட்டியோ, மாணவியைக் கொச்சையான கேள்விகளைக் கேட்டு மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கமிட்டியில் உறுப்பினராக இருக்கும் உசைன் என்பவர் “உனக்கு குடும்பம் இருக்கு, பாலியல் துன்புறுத்தல் வழக்குக் கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே, அதை விட்டுட்டு நடவடிக்கை எடு என்று பசங்களுடன் உட்கார்ந்து இருக்கியே” என்று கேவலமாகப் பேசியுள்ளார். அதே கமிட்டியில் இருந்த ஒரு பெண் வழக்கறிஞர் சாந்தக்குமாரி என்பவர் “அவர் போகிற போக்கில் தெரியாமல் உன்னைத் தொட்டுட்டுப் போயிருப்பார்” என்று அலட்சியமாகப் பேசியிருக்கிறார். அதற்கு பாதிக்கப்பட்ட மாணவி “ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை நடத்திருப்பது என்பதால், இது பாலியல் வன்கொடுமைதான்” என்று உறுதியாகக் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் வழக்கறிஞர் சாந்தக்குமாரி “அவருக்குத் தெரியாமல் நடந்திருக்கும்” என்று மீண்டும் அலட்சியமான பதிலையே கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 20-ம் தேதி அன்று இரவு, D1 போலீசு நிலைய இன்ஸ்பெக்டர் சீதாராமன் பல்கலைக் கழகத்திற்குள் வந்து, “ஒருவேளை உங்களை இடைநீக்கம் செய்யும் உத்தரவு வந்து, உங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று போராடும் மாணவர்களைக் கேட்கிறார். அவர் கேட்டுச் சென்ற பத்து நிமிடத்திற்குள், பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு ஒரு கடிதம் தருகிறது. அதில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடன் இருந்த நான்கு மாணவர்களையும் இடைநீக்கம் செய்வதாகக் கூறியுள்ளார்கள். அந்தக் கடிதத்தை மாணவர்கள் முழுவதுமாகப் படித்து முடிப்பதற்கு முன்பே மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அப்புறப்படுத்த வந்துவிட்டது போலீசு. ஆனால், மாணவர்கள் பலரின் எதிர்ப்பினால் திரும்பிச் சென்றது போலீசு.
தவறு செய்த ஒரு பேராசிரியரை பதிவாளரும், துனைவேந்தரும், போலீசும் ஏன் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று புரியவில்லை என்கிறார் மாணவர் சிவப்பிரகாசம்
குற்றவாளியான சௌந்திரராஜனைக் காப்பாற்ற கல்லூரி நிர்வாகமும், போலீசும் தீவிரமாக இறங்கி, போராடும் மாணவர்களையே குற்றவாளிபோல் பொது வெளியில் சித்தரித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனால், கடந்த மார்ச் 21-ஆம் தேதி அன்று விடியற்காலையில் கைகளை கண்ணாடியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவி. சகமாணவர்கள் மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு அதிகரித்தவண்ணம் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த மாணவி, அன்று மதியம் மீண்டும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். அவர் தற்கொலைக்கு முயலக் காரணம் இந்த பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர், பதிவாளர், துணைவேந்தரும்தான் என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள் போராடும் மாணவர்கள்.
பல்கலைக்கழகத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கக் கூடாது என்று அவர்களை மிரட்டி வெளியேற்ற முயற்சித்துள்ளது போலீசு. அதையும் மீறி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது.
கடந்த 5 நாட்களாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக மாணவர்களை, போராட்டத்தின் ஆறாம் நாளான மார்ச் 22-ஆம் தேதி அன்று காலையில் கைது செய்து பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்கு எதிரில் இருக்கும் போலீசு நிலையத்தின் அருகில் ஒரு இடத்தில் அடைத்து வைத்துள்ளது போலீசு.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம்
மாணவி கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகத்தை பெயரளவுக்குக் கூட போலீசு கண்டித்ததாகத் தெரியவில்லை. பாலியல் புகார் அளித்த பேராசிரியர் சௌந்தர ராஜன் சுகவாசியாக உலா வருகையில், நியாயம் கேட்டுப் போராடிய பாதிக்கப்பட்ட மாணவர்களை குற்றவாளிகள் போல் கைது செய்திருக்கிறது போலீசு. இந்த மாணவர்கள் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள்தான் அநியாயக் கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடினார்கள். அதற்காகவே அவர்கள் மதிப்பெண் குறைக்கப்பட்டு, பெயிலாக்கப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு எதிராகவும் அவர்கள் போராடியிருக்கிறார்கள். இறுதியில் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்டிருப்பதோடு இடைநீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த மாணவர்களின் போராட்டம், மாணவர்களைக் கொள்ளையிடும் சென்னைப் பல்கலை நிர்வாகம், அதற்குத் துணை போன பேரா. சௌந்தரராஜன் ஆகியோரின் அதிகாரத் திமிரையும், இக்கும்பலுடனான போலீசின் கூட்டுக் களவானித்தனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.
அவர்களைப் பொறுத்தவரையில் நமக்கு சொல்ல வரும் செய்தி, கல்விக் கட்டணக் கொள்ளை அடிக்க முயன்ற சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்துப் போராடியதே மாணவர்கள் செய்த முதல் தவறு. போராடிய ‘குற்றத்திற்காக’ தேர்வில் ஃபெயில் போட்ட பேரா.சௌந்திரராஜனுக்கு எதிராகப் போராடியது இரண்டாவது தவறு. தேர்வின் மதிப்பெண்ணைப் பொதுவெளியில் வெளியிடுங்கள் என்று மாணவர்கள் கேட்டது மூன்றாவது தவறு. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த, பேரா.சௌந்திரராஜனுக்கு எதிராக புகார் கொடுத்ததும், நீதி கேட்டு போராடியதும் நான்காவது தவறு.
சமூகத்தில் மிகவும் பின்தங்கிய வர்க்கத்தில் இருந்து தங்கள் வாழ்க்கைக்காகப் படிக்க வந்த மாணவர்களின் மேற்கூறிய ‘தவறு’களுக்காகத்தான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகமும், போலீசும் சேர்ந்து வெறியாட்டம் போடுகிறது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டதை அறிவித்து நடத்திய இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த தோழர்களை அடித்து, பெண் தோழர்களை பாலியல் துன்புறுத்தல் செய்து கைது செய்துள்ளது D1 நிலைய போலீசு.
பாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை இடைநீக்கம் செய்ய வேண்டும், அவருக்கு துணைப்போகும் பதிவாளர், துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய மாணவர்களை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்கை நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகளைக் கொண்டு கமிட்டி அமைத்து விசாரித்தால் மட்டுமே நாங்கள் உட்படுவோம். எங்கள் தேர்வு மதிப்பெண்களை பொது வெளியில் வெளியிட வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. நீதி கிடைக்கும் வரை தொடர்ந்துப் போராடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சென்னை பல்கலைக்கழக கிரிமினல் நிர்வாகத்தை எதிர்த்துத் தொடர்ந்து அஞ்சாமல் போராடும் மாணவர்களுக்கு பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஜனநாயக சக்திகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் துணை நிற்பது மிகவும் அவசியம். இன்றைய நமது ஆதரவுதான் சமூகத்தின் மீதான போராடும் மாணவர்களின் நம்பிக்கைக்கான அடிப்படையாகும்.
கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய அச்சமும் அதன் அதிர்வலைகளும் மொத்த நாட்டையும் ஏன் உலக நாடுகளையும் கூட உலுக்கின. தொழிற்சாலைகளும் அரசு – தனியார் அலுவலகங்களும் பெரிய சிறிய வணிக நிறுவனங்களும், கடைகளும் மூடப்பட்டன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட துயரம், உயிர் பலி, உழைக்கும் மக்கள் வாழவே முடியாத நிலைக்கு தள்ளிய அவலம் என சுருக்கமாக சொல்வதென்றால் போர் ஏற்பட்டால் எத்தகைய சூழல் உருவாகுமோ அதற்கு இணையான நிலைமை உருவாகியது என்றால் அது மிகையில்லை.
இந்த பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பு அரசியல் சமூக நிலைமைகளிலும் மாற்றத்தைக் கோரின. பள்ளி – கல்லூரி பாடங்கள் மட்டும் அல்ல அரசியல் கூட்டம் கூட ஆன்லைன் மூலம் நடந்தேறின. குறிப்பாக மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் பிழைப்புக்கான வழியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தின. கொரோனா தொற்றால் ஊரடங்கு அறிவிக்கும் முன்பாக தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தேன். கொரோனா ஊரடங்கு துவங்கிய பின்னர், வேலையும் இல்லை. வருமானமும் இல்லை.
இந்த மாதிரியான நாட்களை கடப்பதென்பது கொடூரமானது. ஒவ்வொரு நொடியும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். உணவும் இதர தேவைகளும் உத்திரவாதமில்லாத நிலை ஏற்படுத்தும் சூழல், மன அழுத்தத்தை அதிகமாக்கி குடும்பத்தில் சண்டைகள் வெளிப்பட்டு நிம்மதியிழக்க செய்தது. அமைப்பும் – தோழர்களின் உதவியும் நெருக்கடியில் இருந்து மீண்டு வர உதவினாலும், பிழைப்புக்கான வழியில் சுய முயற்சி இல்லாத எனது போக்கைக் கண்டு என் துணைவி விமர்சனம் செய்ததோடு, மாற்றாக செயல்படவும் துணிந்தார்.
கோயம்பேடு மார்க்கெட்டிற்குச் சென்று பழங்களை வாங்கிக் கொண்டு வந்து ட்ரை சைக்கிளில் வைத்து விற்கத் துவங்கினார். ஓரளவு நடந்த வியாபாரத்தின் காரணமாக குடும்பத்தின் அடிப்படை வருவாய் பிரச்சினை தீர்ந்தாலும் வேறொரு பிரச்சினை எழுந்தது.
தினந்தோறும் மார்க்கெட் செல்ல விடியற் காலை 4 மணிக்கு ஆட்டோ பிடிக்க வேண்டுமனால் 3 மணிக்கே எழுந்து தயாராகி, மெயின் ரோட்டிற்கு வர வேண்டும். அதைத் தொடர்ந்து வாங்கி வந்த பழங்களை வகை பிரித்து வியாபாரத்திற்கு கிளம்பி மீண்டு்ம் வீடு வர மதியமோ, சில நாட்கள் இரவு கூட ஆகி விடும். வியாபார வேலையை என் துணைவி பார்த்துக் கொண்ட பிறகு வீட்டு வேலையை நான் பார்க்கலானேன்.
வீட்டில் காலை – இரவுக்கு சமைப்பது துணிகளை துவைப்பது குழந்தையை பராமரிப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்தாலும் எனக்கும் என் துணைவியாருக்கும் இடையே பிரச்சினை வெடிக்கும். அதுவும் வியாபரம் ஆகாத நாட்கள் என்றால் அன்றைக்கு சண்டை உக்கிரமாக நடக்கும்.
நாம்தான் ஆணாதிக்கத்தோடு நடந்து கொள்வதில்லையே மரியாதையோடுதான் பேசுகின்றோமே வேலையும்தான் செய்கின்றோமே என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. என் துணைவியார் சிறுசிறு குறைகளை சுட்டிக் காட்டினால் கூட, நாம் ஆணாதிக்கம் இல்லாமல் வீட்டு வேலைகளை செய்து வந்தாலும் இப்படி சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் அக்கப்போர் நடக்கிறதே என எண்ணுவேன்.
என் துணைவியார் தள்ளுவண்டி பழ விற்பனைக்கு செல்லத் துவங்குவதற்கு முன்னரெல்லாம் என் இளைய மகள் தென்மொழி மலம் கழித்தால் கால்கழுவி விடுவதைக் கூட அருவெறுப்பாக பார்த்த நான் இந்த காலகட்டத்தில் குழந்தையை குளிக்க வைப்பது, களி (சத்து மாவு), பால் போன்ற உணவுகளை செய்து கொடுப்பது, குழந்தையை குளிக்க வைப்பது உள்ளிட்ட அனைத்து வகையான பராமரிப்பு வேலைகளையும் கற்றுக்கொண்டேன். அதை அன்றாடம் செய்து வந்தேன். மறுபுறம் குழந்தையும் என்னிடம் நெருக்கமானது. இவையெல்லாம் சேர்ந்து எனக்கு சுயதிருப்தி மேலோங்கி என்னை பரிசீலிக்காதபடி செய்தது.
சுயபரிசீலினை செய்து கொள்ள நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என அமைப்பு கற்றுக் கொடுத்துருக்கின்றது. அதன்படி நிதனமாக யோசிக்க துவங்கினேன். வீட்டு வேலைகளை செய்தாலும், துணைவி அதில் ஏதேனும் தவறை சுட்டிக் காட்டினால் கூட அதில் நான் எரிச்சலைடய காரணம் என்ன? சண்டை வர காரணம் என்ன ? என்று யோசித்துப் பார்த்தேன்.
“ஒரு ஆணாக இருந்து கொண்டு வீட்டு வேலைகளைச் செய்வதையே” நான் செய்யும் மிகப்பெரிய சாதனையாகக் கருதுவதால் தான், வேலைகளை ஏனோதானோவென்று செய்திருப்பதை என் துணைவியார் சுட்டிக் காட்டும் போது எரிச்சலுணர்வு ஏற்படுவதை உணர முடிந்தது.
எனது வேலைகள் ஏனோ தானோவென்றும் ஒழுங்கற்றும் இருக்கும். சான்றாக, சமையல் வேலையை சரியாக செய்தாலும், அடுப்பைச் சுற்றி சுத்தமாக துடைக்காமல் விட்டிருப்பேன். துணிகளை துவைத்திருந்தால் வீட்டை கூட்டி மாப்பு போட்டிருக்க மாட்டேன். இப்படி ஏதாவதொரு வேலையை விட்டுவிட்டாலும், அரைகுறையாகச் செய்தாலும் எனது தரப்பை நியாயப்படுத்த மட்டும் நான் ஒருபோதும் தயங்கியதே இல்லை. அதற்குக் காரணம் ஒரு ஆணாக இருந்து கொண்டு இதனைச் செய்ததே பெரிய விசயம் என்று நினைத்ததுதான்.
வீட்டு வேலை என்ற ஒற்றை வார்த்தைக்கு பின்னே சமையல், பாத்திரங்களை கழுவுவது, தண்ணீர் பிடித்து வைப்பது, துணி துவைப்பது, வீட்டை பெருக்கி சுத்தமாக வைத்திருப்பது, குழந்தையை பராமரிப்பது, கழிவறையை சுத்தப்படுத்தி வைப்பது இவை அனைத்தும் நோ்த்தியாகவும் விரைவாகவும் செய்வதே வீட்டு வேலையாகும். அதை செய்வது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான அளவுகோல்தான் உண்டு. அதை அரைகுறையாகச் செய்வதே பெரிய சாதனையைப் போல சிந்தித்து வந்ததை உணர்ந்து, அதனை மாற்றிக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டேன்.
என் தவறை உணர்ந்ததைத் தொடர்ந்து, அந்த சிந்தனையை மாற்றிக் கொண்டு, வீட்டு வேலைகளை முழுமையான ஈடுபாட்டோடு வரிசைப்படுத்தி செய்ய முயன்றபோது, உரிய நேரத்தில் வேலைகளை முடிக்க முடியாமல் திணறினேன். குறிப்பாக சமையல் வேலையானது கவனமாகவும் நிதனமாகவும் செய்வதோடு பாத்திரங்களை கழுவும் வேலையும் அக்கம் பக்கமாகவும் செய்ய வேண்டிய வேலையாக இருந்தது. அதைச் செய்து கொண்டிருக்கும் போதே குழந்தை மலம் கழித்தால் உடனடியாக துக்கிச் சென்று கால்கழுவி விட வேண்டும்; அல்லது, விளையாட்டின் ஊடாக கீழே வீழ்ந்து விட்டால் தேற்ற வேண்டும். இதற்குள் இரவு 7 மணி ஆகி விடும். அப்போது ஏற்படும் எரிச்சலும் சலிப்பும் சொல்லி மாளாது.
ஏற்கெனவே சொன்னபடி மனைவியிடம் மரியாதையாக பேசுவது (கொரோனாவுக்கு முந்தைய காலத்தில்) மற்றும் வீட்டு வேலைகளில் சிலவற்றை செய்வதே ஆணாதிக்கத்தை விட்டொழித்து விட்டதாக கருதிக் கொண்டேன். இப்படிப்பட்ட சீர்த்திருத்தவாத கண்ணோட்டமும் அதற்குறிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்திக் கொண்டே குடும்பத்திலும் வெளியிலும் புரட்சியாளன் என தம்பட்டமடித்துக் கொண்டிருந்தேன் என்பதை இந்தக் கொரோனா காலகட்டத்தில் ஆழமாக பரிசீலிக்கையில் உணர முடிகின்றது.
சொத்துடைமை கண்ணோட்டத்தின் விளைவாக உருவான ஆணாதிக்கத்தை முதலாளித்துவம் உயர்த்திப் பிடித்திருக்கிறது. தனது இலாப நோக்கத்திற்கு இதனை பயன்படுத்திக் கொண்டது. பெண்களின் உழைப்பை மலிவான விலைக்குச் சுரண்டிக் கொழுத்தது முதலாளித்துவம். கருத்துரீதியாகவும் பலவந்தமாகவும் (உடல் ரீதியாகவும்) ஆணாதிக்கம் பிரயோகிக்கப்பட்டதை எதிர்த்து அன்றைக்கு ஐரோப்பா உள்ளிட்ட மேலை நாடுகளில் தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு உழைக்கும் மக்கள் தங்களது அரசியல் – ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதன் வரலாற்றை பார்க்கின்றோம்.
ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அல்லது மாற்ற விரும்பும் ஆண்கள் யாராக இருப்பினும் ஆணாதிக்க எதிர்ப்பில் தங்களை முழு சுய சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி உட்படுத்திக் கொள்ளத் தவறினால், மாற்றத்திற்கு வழி வகுக்காத மத போதனையாகவே ஆணாதிக்க எதிர்ப்பு எனும் கோஷம் முடிந்துவிடும். அதே சமயத்தில் ஆணாதிக்கமானது இடைவிடாது இயக்கத்தில் இருக்கின்றது. கிராமம் – நகரம், படித்தவர் – படிக்கதாவர் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து பார்ப்பனியம் – முதலாளித்துவம் ஆகிய நச்சுக்கள், ஆணாதிக்கத்தை நிலைநாட்டும் வகையிலான கருத்தையும் கண்ணோட்டத்தையும் அன்றாடம் வழங்கி வருகின்றன.
கொரோனா தொற்று ஊராடங்கின் போது அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள்தான் இந்த பெரும் நெருக்கடியிலிருந்து தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள முடிந்தது, என்றார் பு.ஜ.தொ.மு.–வின் முன்னாள் பொருளாளர் தோழர் விஜயகுமார். உண்மைதான் எனினும், சங்கமாக திரட்டப்படுவது மட்டுமல்லாமல், மா.லெ. சித்தாந்த ரீதியான கண்ணோட்டம்தான், நெருக்கடி மிகுந்த காலத்தை கடந்து வருவதற்கான பார்வையை வழங்குகின்றது. முன்னது ஒடுக்குமுறைக்கெதிராக அனைவரையும் ஒன்றுபட வைக்கின்றது என்றால் பின்னது அனைத்துப் பிரிவு ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையில் இருந்து சிந்திக்கவும் – செயல்படவும் வைக்கின்றது.
கார்ட்டூனிஸ்ட் அலி ஃபெர்சாட் : சிரியாவின் அதிபர் பஷர் அசாத்தின் ஒடுக்குமுறைகளை தமது தூரிகையால் அம்பலப்படுத்தியதன் காரணமாக பஷர் அசாத்தி குண்டர் படையின் தாக்குதலுக்கு ஆளானவர். இந்த விரல்கள்தானே வரைந்தன’ எனக் கேட்டு அவரது விரல்களை நொறுக்கினர்; கைகளை உடைத்தனர். குற்றுயிராய் வீதியில் வீசப்பட்டார் கார்டூனிஸ்ட் அலி ஃபெர்சாட்.
எனினும் தளர்வடையவோ, பயந்து ஒதுங்கவோ இல்லை. பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் உயிர்த்தெழுந்தார். இன்னும் உக்கிரமாக ஜனநாயகத்துக்காக போர்க்கொடி தூக்கினார். அவர் மீண்டதும் வரைந்த கார்ட்டூன்தான் இது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.டெக். பயோடெக்னாலஜி படிப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்சாதி பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதைக் கண்டித்துள்ள சென்னை உயர்நீதி மன்றம், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என உத்திரவிட்டுள்ளது. இப்பிரச்சனையின் ஆரம்பத்திலிருந்தே பல கேள்விகளுக்கு உரிய சரியான பதிலை பல்கலைக்கழக நிர்வாகமோ மாநில அரசோ கூறாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றனர். குறிப்பாக,
1. எம்.டெக். பயோடெக்னாலஜி படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதா? அல்லது மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதா என்ற சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக, முறையான ஒப்புதல்களோ அல்லது அறிவிப்புகளோ இல்லாமலே முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தியது ஏன்? – மாணவர்கள் கேள்வி எழுப்பியதனால் “மத்திய அரசின் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மாநில அரசு ஏற்றுக்கொள்ளாதால்” – மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழகம் விளக்கம் கூறியது. குறிப்பாக மாணவர்கள் நீதிமன்றம் சென்றதன் விளைவாகவே 2020-21 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும் நடத்தப்படுகிறது. இதில் பல்கலைக்கழக நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
2. அண்ணா பல்கலைக்கழகம் ஓரு மாநில பல்கலைக்கழகம். பல்கலைக் கழகத்திற்கான மொத்த நிதியும் மாநில அரசாலேயே வழங்கப்படுகிறது. மாநில அரசின் நிதி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிதி என இரண்டும் சேர்த்துதான் ஒவ்வொரு ஆண்டும் இப்பல்கலைக்கழகத்திற்கு பல கோடிகள் செலவு செய்யப்படுகிறது. மத்திய உயிரித் தொழில்நுடபத் துறையுடன் அண்ணா பல்கலைக்கழகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் இவ்விரண்டு எம்.டெக். படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இம்மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கும். இதற்காக ஒவ்வொரு ஆண்டுக்கும் சில லட்சங்களை மத்திய அரசு ஒதுக்குகிறது. மற்றபடி அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கூடவே UGC-ன் சமீபத்திய சுற்றறிக்கையானது மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் மாநிலப் பல்கலைக்கழகங்கள் தங்களுடைய இடஒதுக்கீட்டு முறையையே பின்பற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்துவிட்டது. இருப்பினும் 69 சதவிகித இடஒதுக்கீடு கைவிட்டு போனது ஏன்?
மாநில அரசும் பல்கலைக்கழகத் தரப்பும் போதிய ஆதாரங்களை முன்வைத்து உறுதியான வாதங்களை முன்வைக்காத காரணத்தினாலேயே 49.5 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்ததாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. மாநில அரசும் பல்கலைக்கழகத் தரப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் ஏன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை?
இத்தீர்பின் மூலம் மிகவும் பிறபடுத்தப்பட்ட(MBC) பிரிவினர், பிற்படுத்தப்பட்ட–முஸ்லீம் பிரிவினர், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான உள் ஒதுக்கீடுகள் அனைத்தையும் ஒன்றும் இல்லாமல் செய்து அவ்விடத்தில் வெளிமாநிலத்தவரையும் உயர்சாதியினரையும் கொண்டுவந்துள்ளனர்.
3. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்சாதி பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் எம்.டெக் படிப்பிற்கான மாணவர் பட்டியலை 10 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக வெளியிட்டுள்ளது. இது குறித்து உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியும் பல்கலைக்கழக நிர்வாகம் மலுப்பலான பதிலையே தந்துள்ளது. 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து சிண்டிகேட்டிற்கு தெரியப்படுத்தவில்லை என சிண்டிகேட் உறுப்பினர்கள் கூறுகின்றனர். இவ்வளவு விதிமீறல்களோடு 10 சதவிகித இடஒதுக்கீட்டை துணைவேந்தரும் பதிவாளரும் ஏன் நடைமுறைப்படுத்த வேண்டும்?
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும் உயர்சாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. யாருடைய ஒப்புதலோடு இந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினர்?
மேற்சொன்ன விவரங்களிலிருந்து சில முடிவுகளுக்கு நாம் வரமுடியும். அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் இச்சிக்கலின் தொடக்கத்திலிருந்தே மத்திய அரசு ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசோ மாநிலத்தின் உரிமைக்காக போராடாமல் தங்களுடைய ஆட்சியின் நலன்களிலிருந்து சமரசமாகவே கையாண்டுள்ளனர். இதன் விளைவு, மாநிலப் பல்கலைக்கழகங்களின் இடஒதுக்கீடுகளில் மத்திய அரசு தலையிடலாம் என்பதற்கு சட்ட அங்கீகாரத்தை இவர்கள் பெற்றுத்தந்தது.
***
சூரப்பா
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்குவது தடைப்பட்டதிற்கு இடஒதுக்கீடே முதன்மைக் காரணியாக அமைந்தது எனலாம். தமிழ்நாட்டின் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பின்பற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு உத்திரவாதம் கொடுத்திருப்பதாகக் கூறிய எடப்பாடி அரசு பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான வேலையில் இறங்கியது. ‘சிறப்புத் தகுதி விதிகளின்படி மாநில இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வராது’ என சூரப்பா உறுதி கூறினார்.
பல்கலைக்கழக பேராசிரியர்களோ சிறப்புத் தகுதி கிடைத்தால் ஆயிரம் கோடி நிதி கிடைக்கும் உலகத்தரத்திலான ஆய்வுகளைச் செய்யமுடியும் என்று சிறப்புத் தகுதிக்கு பிரச்சாரம் செய்தனர். ஆனால் மத்திய அரசோ 69 சதவிகித இடஒதுக்கீடு குறித்து எந்தவித எழுத்துப் பூர்வமான உறுதியையும் அளிக்க முன்வரவில்லை. மேலும் சிறப்புத் தகுதி பெற்ற கல்லூரிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளோ, ‘மத்திய அரசின் இடஒதுக்கீட்டையே அமல்படுத்த வேண்டும்’ எனக் வலியுறுத்துகிறது. இதனை CCCE வெளியீட்டில் விரிவாக விளக்கியுள்ளோம்.
சட்ட ரீதியான வாய்ப்புகள் இருந்தும் எம்.டெக். படிப்புகளில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை கோட்டை விட்ட சூரப்பா, இடஒதுக்கீட்டுக்கான வாய்ப்புகள் கேள்விக்குறியாக உள்ள மத்திய அரசின் சிறப்புத் தகுதி கிடைத்தால் எவ்வாறு 69 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும்? இக்கேள்வி பலத்தரப்புகளிலிருந்தும் எழுப்பப்பட்ட பிறகும் கூட எடப்பாடியோ அல்லது பல்கலைக்கழகத் தரப்போ அதற்கு பதில் சொல்லத் தயாராக இல்லை.
உலகத்தரம் என்ற போர்வையில் சிறப்புத் தகுதியை ஆதரித்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினர் எம்.டெக் பிரச்சனையில் வாய்திறக்கவில்லை. சூரப்பாவின் மீதான ஊழல் விசாரணையை கண்டித்தும் ரத்து செய்யக்கோரியும் அறிக்கை அம்புகளைத் தொடுத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் எம்.டெக் இடஒதுக்கீடு பிரச்சனையில், மாணவர்கள் உதவி கோரியும், வாய் திறக்க மறுத்துவிட்டனர்.
உலகத்தரம், சிறப்புத்தகுதி, ஊழல்எதிர்ப்பு இறுதியாக மத்திய அரசு ஆதரவு இவைதான் இவர்களை இணைக்கும் புள்ளி. எனவேதான் இவர்கள் மாநில உரிமையையோ, சமூகநீதி கொள்கைகயையோ, இந்துத்துவ எதிர்ப்பையோ பெரிதாக கண்டு கொள்வதில்லை. இப்போக்குகள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தெளிவாகவே வெளிப்பட்டுள்ளன.
எம்.டெக். விவகாரத்தை சூரப்பாவும் எடப்பாடியும் கையாண்ட விதத்தை பார்க்கும் போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி கிடைத்திருந்தால் பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடமே ஒப்படைத்திருந்திருப்பார்கள் என்ற முடிவுக்கே வரமுடியும்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரங்களை சமகால அரசியல் சூழலோடு இணைத்துப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்திய அரசினுடைய நிறுவனங்கள் அனைத்தும்(Government Institutions) பிஜேபி/ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன. அவர்களின் முதல் தாக்குதலே உயர்கல்வி நிறுவனங்களிலிருந்துதான் ஆரம்பித்தன.
பல்கலைக்கழகங்களை இந்துத்துவக் கொள்கைப்பிரச்சாரத் தளங்களாகப் பயன்படுத்தபடுவதோடு மட்டுமல்லாமல் தனியார்மயத் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை ஆதரவு, மாநில உரிமைகள் பறிப்பு, ஜனநாயக சக்திகள் மற்றும் மாணவர் இயக்கங்களை ஒடுக்குவது என தங்களுடைய பாசிச நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகங்களுக்குள் முன்தள்ளுகின்றனர்.
இதற்கு தகுந்த துணைவேந்தர்களும், பதிவாளர்களும், கவர்னர்களும் நியமிக்கப்படுகின்றனர். ஜே.என்.யு–வை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஜெகதீஸ் குமார் என்றால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சூரப்பா அவ்வளவுதான்.
சூரப்பா ஊழலற்றவர் என்ற வாதத்தின் மூலம் இடஒதுக்கீட்டு மற்றும் தமிழகத்திற்கு எதிரான அவரின் நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. கடந்த மூன்று வருடகாலமாகவே துணைவேந்தர் நியமனங்கள் நேர்மையாக நடப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் பிஜேபி/ஆர்.எஸ்.எஸ் கடைக்கண் பார்வையில்லாமல் யாரும் துணைவேந்தர் ஆக முடியாத என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. ஊழலைவிட சமூகநீதியும் மாநில உரிமையும் பறிபோவது மிகவும் ஆபத்தானது.
ஒக்கி புயல் : மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது !
2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஒக்கி புயல் பேரழிவினால் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் மாண்டு போயினர். நீரோடி வரையிலான கிராமங்களில் எங்கு சென்றாலும் இறந்து போன, காணாமல் போன மீனவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இருந்தன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மீனவர்களை மீட்டுத் தா! என்ற கோரிக்கையை முன்வைத்து சின்னத்துறை, பூத்துறை முதலான பல கிராமங்களில் தன்னெழுச்சியாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உலகிலேயே மிகப்பெரிய கடற்படையை வைத்திருப்பதாக பெருமை பேசிக் கொண்டிருந்த இந்த அரசு மீனவர்களை காப்பாற்ற எதுவும் செய்யவில்லை;எதுவும் செய்ய முடியாமல் கிடந்தது .
இராணுவப் பெருமை எல்லாம் மக்களை காப்பாற்றுவதற்கு இல்லை, இந்த அரசு மக்களுக்கானது இல்லை என்று மீனவ மக்கள் புரிந்துகொண்டு போராடினார்கள். சுமார் பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாக குளச்சல் ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டார்கள். மண்டைக்காடு கலவரத்தால் சாதி சமயப் பிளவு ஏற்பட்ட பின்னர், சாதி சமய வேறுபாடின்றி மக்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய போராட்டம் இதுதான்.
மீனவ மக்களுக்கு மீட்புப்பணியில் உதவுவதற்காகச் சென்ற மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அன்பு, மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது, தோழர் ஆதி, தோழர் மாரிமுத்து, தோழர் கின்சன், கோவில்பட்டி தோழர் கணேசன், தோழர் முகம்மது அனஸ் ஆகியோர் நீரோடியில் ஒரு மீனவர் வீட்டில் தங்கியிருந்த பொழுது அதிகாலை 5 மணிக்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட சீருடை அணியாத போலீஸ் ஏதோ பயங்கரவாதிகளை பிடிப்பது போல அடித்து உதைத்து கைது செய்தது.
கைது செய்யப்பட்ட தோழர்களை வேனில் வைத்து கொடூரமாக தாக்கியது. அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அதிகமுள்ள மண்டைக்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றது. அங்கே அனைத்து தோழர்களையும் ஆடைகளை கழட்டச் சொல்லி அடித்து உதைத்து சித்ரவதை செய்தது. மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது உடைகளை அகற்ற மறுத்ததால் மிகவும் கொடூரமாக கழுத்து, கை, கால் என உடலெங்கும் தாக்கப்பட்டு நிர்வாணமாக போலீஸ் லாக்கப்பில் வைக்கப்பட்டார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் தோழர் சிவராஜ் பூபதி , வழக்கறிஞர்கள் ஹாமில்டன் அலெக்சாண்டர், தமிழ் நிதி ஆகிய வழக்கறிஞர்கள் மண்டைக்காடு காவல் நிலையத்திற்கு வந்தனர்.
அவர்களையும் சந்திக்க விடாமல் போலீசார் மறுத்தனர். ” டிஎஸ்பி அலுவலகத்திற்கு வாருங்கள் கைது செய்யப்பட்டவர்களை சொந்த ஜாமீனில் விட்டு விடுகிறோம்” என்று சொல்லிவிட்டு நேரடியாக ரிமாண்ட் செய்வதற்கான அனைத்து வேலைகளும் செய்தனர். அரசு மருத்துவமனையில் சென்று அரசு மருத்துவரிடம் ரிமாண்ட் ஃபார் ஃபிட் (Remand for fit) என்ற சான்றிதழை பெறாமல், அரசு மருத்துவமனையில் சீட்டு வாங்கிக்கொண்டு, அந்த அரசு மருத்துவர் நடத்தக்கூடிய தனியார் மருத்துவமனையில் சென்று சான்றிதழை வாங்கினர்.
கைது செய்யப்பட்டது முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை தோழர்களை சித்திரவதை செய்த இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், ஏட்டு பீட்டர், முருகன் SSI ஆகியோர் மீது நீதிமன்றத்தில் புகார் அளித்தபோது, அந்த குற்றவியல் நடுவரோ அதையெல்லாம் காதில் வாங்காமல், “மெட்ராஸில் இருந்து இங்கே எதற்காக வந்தாய், கலவரம் செய்யவா? ஜெயிலுக்கு போனால் தான் நீங்கள் பிரபலம் அடைய முடியும், ஆகவே ஜெயிலுக்கு போங்கள்” என்றார் . தோழர் மருது தனது கழுத்தில் அடித்ததால் கழுத்து எலும்பு உடைந்து இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அதனால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று முறையிட்ட போதும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிறையிலடைத்தார்.
அடுத்தநாள் வானொலியில் “மீனவர்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்ட பயங்கரவாதிகளை விடுதலை செய்யக்கூடாது” என்று அப்போது இணை அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார் .
சிறையில் இருக்கும் பொழுது தோழர் மருது , கழுத்து வலி அதிகமாக இருப்பதாக கூறியதால், அங்கே பரிசோதித்த அரசு மருத்துவர் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் போலீசார் திட்டமிட்டு பாதுகாப்புக்கு போலீஸ் இல்லை என்று கூறி அதனை மறுத்தது .
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தோழர்கள் அனைவரும் பிணையில் வெளியே வந்தாலும் சுமார் பதினைந்து நாட்கள் காலையிலும் மாலையிலும் கொல்லங்கோடு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டிய நிபந்தனைக்கு உட்பட்டனர்.
குழித்துறை அரசு மருத்துவமனையில் எடுத்த எக்ஸ்ரேயில் கழுத்தெலும்பு உடைந்தது தெரிந்த போதும் அரசு மருத்துவரோ கழுத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி விட்டுச் சென்றார்.
வேறு வழியின்றி ரிலாக்சேஷன் பெற்ற பின்பு சென்னையில் மருத்துவம் பார்க்கும் பொழுது கழுத்து எலும்பு உடைந்தது உறுதியானது. சுமார் மூன்று மாதங்கள் படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
இதை ஒட்டி மனித உரிமை ஆணையத்திற்கும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட புகார் மனுக்கள் என்னவாயின என்பது யாருக்கும் தெரியாது .
இந்த வழக்கு விசாரணை 2021 ஜனவரி மாதத்தில் தொடங்கியது. இந்த வழக்கை வழக்குரைஞர் ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர் அவர்கள் எவ்விதக் கட்டணமும் இன்றி நடத்தினார். மேலும் இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பாண்டித்துரை அவர்கள் மூலமாக தாக்கல் செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பொய் வழக்கை ரத்து செய்வதற்காக தொடக்கத்திலிருந்தே உதவி புரிந்த வழக்கறிஞர்கள் சிவராஜ் பூபதி, மரிய பால்ராஜ், ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர் , பாண்டித்துரை ஆகியோருக்கு நன்றி!
எங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது. தோழர்களைத் தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதற்கு பதில் கண்டிப்பாக கிடைக்கப் போவதில்லை.
1871-ம் ஆண்டில் நிகழ்ந்த பாரிஸ் கம்யூன் எழுச்சிக்கு 1848-ம் ஆண்டே கட்டியம் கூறியது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. பாட்டாளி வர்க்கத்தால் ஒரு அரசை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்க முடியும் என்ற கருத்தாக்கம் 1848-ம் ஆண்டு அன்றைய முதலாளித்துவத்திற்கு ஒருபுறத்தில் அச்சமூட்டினாலும், பாட்டாளிவர்க்கம் ஆளும்வர்க்கமாய் நீடிக்க முடியாது என்று இருமாந்திருந்தது.
அந்தச் சிந்தனைக்கு சம்பட்டி அடி கொடுக்கும்விதமாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை பாரிஸ் நகரில் நிறுவினார்கள் பாரிஸ் நகர பாட்டாளிகள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வுக்குப் பின்னர் 1872-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஜெர்மன் மறுபதிப்புக்கு முன்னுரை எழுதிய மார்க்சும் எங்கெல்சும், பாரிஸ் கம்யூன் எவ்வகையில் தமது அறிக்கைக்கு செறிவூட்டியிருக்கிறது என்பதை குறிப்பிட்டிருப்பதோடு, பாரிஸ் கம்யூன் வாரிக் கொடுத்திருக்கும் புதிய படிப்பினையையும், தமது அறிக்கையின் ஒரு பகுதியில் கொடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் சில விவரங்கள் காலங்கடந்ததாகிவிட்டது என்பதையும் குறிப்பிடுகின்றனர்.
“அறிக்கையே கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக்கூடிய வலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில்முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தை இன்று வேறு விதமாய் வரைய வேண்டியிருக்கும்.
கடந்த 25 ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை பெருநடை போட்டுப் பிரமாதமாய் முன்னேறியிருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கட்சி நிறுவன ஒழுங்கமைப்பும், மேம்பாடுற்றும், விரிவடைந்தும் உள்ளது. இவற்றையும், மற்றும் முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு இன்னும் முக்கியமாய், முதன்முதலாய்ப் பாட்டாளி வர்க்கம் முழுதாய் இரு மாதங்களுக்கு அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும் கிடைத்த நடைமுறை அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங்கடந்ததாகி விடுகிறது.
கம்யூனானது முக்கியமாய் ஒன்றை நிரூபித்துக் காட்டிற்று; அதாவது ஏற்கனவே பூர்த்தியான தயார்நிலையிலுள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த காரியங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நிரூபித்துக் காட்டிற்று. ” கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஜெர்மன் மறுபதிப்புக்கான (1872) முன்னுரை – மார்க்ஸ் – எங்கெல்ஸ்
வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளாத தலைமுறையோ, இயக்கமோ தனது அடுத்தகட்ட நகர்வை முன்னெடுப்பதில்லை என்பதே வரலாறு நமக்குக் கற்றுத் தரும் பாடம்.
மார்க்சியம் எனும் தத்துவத்தைக் கொண்டு, பாரிஸ் கம்யூன் எழுச்சி, முதலாளித்துவத்தின் வளர்ச்சி உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றை பரிசீலித்து, உலகின் முதல் சோசலிச அரசை நிர்மாணித்தார் லெனின்.
வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளவே வரலாற்று நிகழ்வுகளை நாம் நினைவு கூர்கிறோம். நெருங்கி வரும் காவி கார்ப்பரேட் பாசிச சூழலில் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளும்படி நமக்கு நினைவுபடுத்துகிறது பாரிஸ் கம்யூன். பாரிஸ் கம்யூன் எழுச்சி குறித்து தோழர் கலையரசன் தமது வலைப்பூவில் கடந்த 2014-ம் ஆண்டு எழுதிய பதிவை இங்கு மீள் பதிவேற்றுகிறோம்.
தோழமையுடன் வினவு
000
கம்யூனிசம், சோஷலிசம் என்றால் பலருக்கும் ரஷ்யா, சீனா தான் மனதில் தோன்றும். ஆனால், “உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சியின் தாயகம் பிரான்ஸ்” என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. 18 மார்ச் 1871, பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கிய கம்யூனிசப் புரட்சி வெடித்தது. பிரான்ஸ் நாடு பல புரட்சிகளைக் கண்டுள்ளது. 1789 ம் ஆண்டு ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி,பிரெஞ்சு மொழியில் “பூர்ஷுவா” என்று அழைக்கப் படும், மத்திய தர வர்க்கத்தினரின் புரட்சி ஆகும். பிற்காலத்தில், அந்தப் புரட்சியை ஐரோப்பா முழுவதும் பரப்பும் பொறுப்பை ஏற்ற நெப்போலியன் காலத்தில், பிரெஞ்சு பேரினவாதமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது.
பூர்ஷுவா வர்க்கம் ஆளும் உலக நாடுகள் எங்கும், முதலாவது பிரெஞ்சுப் புரட்சிக்கு, இன்றைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. அது பற்றிய குறிப்புகள், மாணவர்களின் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பாரிஸ் கம்யூன் புரட்சி முற்று முழுதாக இருட்டடிப்புச் செய்யப் படுகின்றது. ஏனென்றால், 1871-ம் ஆண்டு ஏற்பட்ட புரட்சி, உழைக்கும் வர்க்க மக்களின் முதலாவது பொதுவுடைமைப் புரட்சி ஆகும். நமது நாடுகளிலும், முதலாளிகளின் கையில் உள்ள எந்த ஊடகமும், அதைப் பற்றி எதுவும் கூறுவதில்லை. தமிழ் பேசும் பூர்ஷுவாக்கள், அதைப் பற்றி அறிந்திருந்தாலும், தெரியாதது மாதிரி காட்டிக் கொள்வார்கள். அந்தளவுக்கு வர்க்க மனப்பான்மை, எமது சமூகத்தில் கோலோச்சுகின்றது.
1871-ம் ஆண்டு, மார்ச் மாதம் தோன்றிய பாரிஸ் கம்யூன், மே மாதம் பிரெஞ்சு இராணுவத்தினால் கொடூரமாக அழித்தொழிக்கப் பட்டது. மூன்று மாதங்களுக்கு குறைவான காலமே நின்று பிடித்தாலும், உலக வரலாற்றில் குறிப்பிடத் தக்க தாக்கத்தை உண்டாக்கியது. உலகில் உழைக்கும் வர்க்க மக்களின் பொதுவுடைமைப் புரட்சி சாத்தியமே என்பதை நிரூபித்தது. பாரிஸ் உழைக்கும் வர்க்கத்தினரின் புரட்சியை, பல்வேறு பட்ட புரட்சிகர சக்திகள் வழிநடத்தின. அனார்க்கிஸ்ட்கள், மார்க்சிஸ்டுகள், லிபரல்கள் போன்ற பல்வேறு வகையிலான சித்தாந்தங்களை பின்பற்றினாலும், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தனர்.
26 மார்ச், உழைக்கும் வர்க்கப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டு, ஒரு கம்யூன் (பொதுவுடைமை) அரசாங்கம் உருவாக்கப் பட்டது. 28 மார்ச் 1871, “பாரிஸ் கம்யூன்” பிரகடனம் செய்யப் பட்டது. மக்கள் பிரதிநிதிகள் நேரடி ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப் பட்டனர். உலக வரலாற்றில் முதல் தடவையாக, அடி மட்டத் தொழிலாளர்களும், அரசாங்கத்தில் அங்கம் வகித்தனர். ஒரு புதிய சமத்துவ சமுதாயம் உருவானது. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்கப் பட்டது. முந்திய சமூகத்தில், அமைச்சர், மருத்துவர், முகாமையாளர் என்று உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களும், ஆலைத் தொழிலாளிக்கு சமமான சம்பளம் பெற்றனர். உயர்ந்த பட்ச சம்பளம், ஆறாயிரம் பிராங்குகள் என்று தீர்மானிக்கப் பட்டது.
அந்தக் காலத்தில், பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் நடந்த யுத்தத்தின் விளைவாக தான் பாரிஸ் கம்யூன் புரட்சி வெடித்தது. அன்று பிருஷிய பேரரசு என்று அழைக்கப் பட்ட ஜெர்மனியப் படைகள், பாரிஸ் மாநகருக்கு வடக்கே இருந்த பிரதேசங்களை கைப்பற்றி விட்டிருந்தன. பிரெஞ்சு இராணுவம் பாரிசின் தெற்குப் பகுதியில் நிலை கொண்டிருந்தது. பிரெஞ்சு அரசாங்கம், வெர்சேய் நகரினை தற்காலிக தலைநகராக்கி, அங்கிருந்து இயங்கிக் கொண்டிருந்தது. பிரான்சு, ஜெர்மனிக்கு இடையிலான போர் நிறுத்தத்தின் பின்னர், பாரிஸ் நகரை சேர்ந்த, படையினரின் ஆயுதங்களை களைய முயற்சித்த காரணத்தினால் தான் புரட்சி வெடித்தது.
உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போல, பாரிஸ் நகரிலும், பெரும்பாலும் பாட்டாளி வர்க்க இளைஞர்கள் தான், இராணுவத்தில் சேர்ந்து இருந்தனர். பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஆயுதங்களை விட்டு வைப்பது, தனக்கு ஆபத்தானது என்று பிரெஞ்சு பூர்ஷுவா அரசு நினைத்தது. அவர்கள் பயந்தது மாதிரியே நடந்தது. பிரெஞ்சு பூர்ஷுவா வர்க்கத்தினால் தேசியவாத வெறியூட்டப் பட்டிருந்த இராணுவமாக இருந்தாலும், பாரிஸ் நகரை சேர்ந்த வீரர்கள் வர்க்க விழிப்புணர்வு கொண்டவர்களாக இருந்தனர். அதனால் தான், பாரிஸ் புரட்சி வெற்றி பெற்றது. பாரிஸ் கம்யூன் உருவானதும், தொழில் முறை இராணுவம் கலைக்கப் பட்டது. அதற்குப் பதிலாக, ஒரு மக்கள் படை உருவானது. வயது வந்த அனைத்துக் குடி மக்களின் கைகளிலும் ஆயுதங்கள் வழங்கப் பட்டன.
பாரிஸ் கம்யூன், மதத்தையும், அரசையும் பிரித்தது. மதத்திற்கு வழங்கப் பட்ட உயர்ந்த அந்தஸ்து இரத்து செய்யப் பட்டது. மத நிறுவனங்களின் சொத்துக்கள் மக்கள் மயமாக்கப் பட்டன. கல்விக் கூடங்கள், அலுவலகங்களில் மாட்டப் பட்டிருந்த சாமிப் படங்கள் அகற்றப் பட்டன. பாடசாலைகள், பணியிடங்களில் பிரார்த்தனை செய்யும் வழமை அகற்றப் பட்டது. அவற்றை விட, முந்திய அரசாங்கம் வைத்திருந்த, பிரெஞ்சு பேரினவாதத்தை பறை சாற்றும் சின்னங்கள் அகற்றப் பட்டன. பேரினவாதம், தேசியவாதம், இனவாதம் எதற்குமே அங்கே இடம் இருக்கவில்லை. பாரிஸ் கம்யூன் என்பது தேசிய அரசு அல்ல. அது ஒரு உலக மக்களின் அரசாங்கம். அதிலே சில வெளிநாட்டவர்களும் அங்கம் வகித்தனர். உலகில் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், உழைக்கும் மக்கள் என்ற பொதுத் தன்மை அவர்களை ஒன்றிணைத்தது.
நமது காலத்தில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான பகைமை உணர்வு மாதிரித் தான், அன்றிருந்த ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது. இருபதாம் நூற்றாண்டு வரையில், ஜெர்மனியும், பிரான்சும் ஜென்மப் பகையாளிகள். சதா சர்வ காலமும், கீரியும், பாம்புமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அவ்விரண்டு நாடுகளும், ஒரு காலத்தில் சமாதானமாக வாழும் என்று சொன்னால், அன்றைக்கு யாரும் நம்ப மாட்டார்கள். “சிங்களவனும், தமிழனும் இனிமேல் எந்தக் காலத்திலும் ஒன்று சேர்ந்து வாழ முடியாது” என்று, இன்றைக்கு சிலர் பேசுவதைப் போன்று தான், அன்றைக்குப் பலர் ஜெர்மானியர்கள், பிரான்சியர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
அன்றைய போரில் வெற்றி, தோல்வி காண முடியாமல், போர் நிறுத்தம் செய்து கொண்ட ஜெர்மனியும், பிரான்சும், பாரிஸ் கம்யூன் புரட்சியின் பின்னர் ஒன்று சேர்ந்தன. அப்போது ஜெர்மன்-பிரெஞ்சு ஆளும் வர்க்கங்களின் வர்க்க உணர்வு விழித்துக் கொண்டது. உலகில் தோன்றிய முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சியை நசுக்குவதற்காக கை கோர்த்துக் கொண்டனர். ஜெர்மன் உதவியுடன் படை நகர்வுகளை மேற்கொண்ட பிரெஞ்சு இராணுவம், மே மாதம் பாரிஸ் கம்யூனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை கைப் பற்றியது.
பிரெஞ்சு இராணுவ நடவடிக்கை காரணமாக தப்பிச் செல்ல முயற்சிக்கும் புரட்சியாளர்களை, ஜெர்மனி தடுத்து நிறுத்தியது. அவர்களை தப்ப விட வேண்டாம் என்று, வடக்கே நிலை கொண்டிருந்த ஜெர்மன் படைகளுக்கு உத்தரவிடப் பட்டிருந்தது. அதனால், பாரிஸ் கம்யூனில் இருந்த யாரும் தப்பியோட முடியாதவாறு, நாலாபக்கமும் சுற்றி வளைக்கப் பட்டனர். அடுத்து அங்கே ஒரு இனப் படுகொலை அரங்கேறியது. பெண்கள், குழந்தைகள் என்று பேதம் பாராது, அனைவரும் தெருத் தெருவாக, வீடு வீடாக சுட்டுக் கொல்லப் பட்டனர். அன்றைய இனப் படுகொலையில், சுமார் முப்பதாயிரம் நிராயுதபாணிகளான பொது மக்கள், பிரெஞ்சு இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
இன்று பாரிஸ் கம்யூனை நினைவுகூரும் இடங்கள் யாவும் அழிக்கப் பட்டு விட்டன. தற்போது எஞ்சியிருப்பது, பாரிஸ் நகரில் உள்ள கம்பட்டா சுடலையில் உள்ள, மதில் சுவர் ஒன்று மட்டுமே. அந்த மதில் சுவருக்கு முன்னாள் வைத்து, இறுதியாக பல நூறு புரட்சியாளர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அந்த இடத்தில், “பாரிஸ் கம்யூனில் இறந்தவர்களின் நினைவாக” என்று எழுதப் பட்டுள்ளது. அதனை இன்றைக்கும் யாரும் சென்று பார்வையிடலாம்.
பாரிஸ் கம்யூன் விட்ட நடைமுறைத் தவறுகளை விமர்சித்து, கார்ல் மார்க்ஸ் “பிரான்சின் உள்நாட்டுப் போர்” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். அந்த நூலில் இருந்து பெறப்பட்ட படிப்பினைகளின் அடிப்படையில் தான், லெனின் ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சியை வழிநடத்தினார். சீனப் புரட்சிக்கும், பாரிஸ் கம்யூன் ஒரு உந்து சக்தியாக இருந்துள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ ஆகியோர் பாரிஸ் கம்யூன் பற்றி எழுதிய கட்டுரைகள், இன்றைக்கும் வாசிக்கக் கிடைக்கின்றன. உலகம் முழுவதும் வாழும் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்லாது, அனார்க்கிஸ்ட்கள், சோஷலிஸ்டுகளும், பாரிஸ் கம்யூன் புரட்சியை இன்றைக்கும் நினைவுகூர்ந்து வருகின்றனர். பாரிஸ் கம்யூன் பற்றிய ஆய்வுகள் நடக்கின்றன. அது சம்பந்தமான நூல்கள், ஆவணங்கள் மறு வாசிப்புக்குட்படுத்தப் படுகின்றன.
உலகில் எந்த நாட்டில், உழைக்கும் வர்க்க மக்களின் புரட்சி ஏற்பட்டாலும், எதிரெதிர் துருவங்களாக, மொழியால் பிரிந்திருக்கும் பூர்ஷுவா வர்க்கம், ஒன்று சேர்ந்து எதிர்க்கும் என்பதற்கு, பாரிஸ் கம்யூன் ஒரு வரலாற்று சாட்சியம். பாரிஸ் கம்யூனின் படிப்பினைகள், இலங்கை, இந்தியாவில் உள்ள நிலைமைகளுக்கும் பொருந்தும். இலங்கையில் அல்லது ஈழத்தில் ஒரு கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டால், இன்று எதிரிகளாக அடித்துக் கொள்ளும், சிங்களத் தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும், வர்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதே போன்று, இந்தியாவில் அல்லது பாகிஸ்தானில் ஒரு கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டால், இந்திய-பாகிஸ்தானிய ஆளும் வர்க்கங்கள், தமது பகைமையை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். இது நாங்கள் பாரிஸ் கம்யூனில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை ஆகும்.