ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு!
கடந்த டிசம்பர் 15 தேதியன்று குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகப் போராடிய டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்திய போலீசும், ஏ.பி.வி.பி. குண்டர்களும், இப்படியோர் எதிர்வினையைக் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். டிசம்பர் அன்றே, பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் கூடித் தொடங்கிய போராட்டம் 50 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பெண்களால் தலைமை தாங்கப்படும் இப்போராட்டத்தில் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு பல்லாயிரம் ஆண்களும், பெண்களும் தினமும் கலந்து கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகிய இந்துத்துவ திரிசூலத்திற்கு எதிராகக் கண்டனங்களை முழங்குகின்றனர்.
ஷாஹீன் பாக்கை முன்னுதாரணமாகக் கொண்டு ஜார்க்கண்டின் வசேபூர், இராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உத்தரபிரதேசத்தின் அலகாபாத், கான்பூர், எட்டாவா மற்றும் லக்னோ, பீகாரில் பாட்னா மற்றும் கயா, மும்பையின் ஆசாத் மைதானம், கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் மைதானம் என நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பெண்கள் கூடித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பீகாரின் கிஷன்கஞ்ச், கோபால்கஞ்ச், பகதூர்கஞ்ச் போன்ற இதுவரை அறியப்படாத சிறுநகரங்களிலும், சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் புனேவிலும் பெண்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். அனைவரின் கோரிக்கையும் ஒன்றுதான், சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யைக் கைவிடு!”
ஷாஹீன் பாக்கில் போராடிக் கொண்டிருக்கும் பெண்களில் ஆகப் பெரும்பான்மையானோர் தச்சர், வெல்டர், வாட்ச்மேன், பெயிண்டர், டிரைவர் வேலைகளில் ஈடுபடும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களோடு வியாபாரிகள் உள்ளிட்ட பிற வர்க்கத்தினரும் சேர்ந்து பங்களிப்பும் ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.
மும்பையிலோ நான்கில் மூன்று பங்கு பெண்கள் நன்கு கல்வியறிவு பெற்ற, வசதியான குடும்பப் பிண்ணனி கொண்டவர்கள், தொழில் வல்லுநர்கள், மேலாண்மைப் பட்டதாரிகள், மென்பொருள் வல்லுநர்கள், சுயதொழில் செய்வோர், பன்னாட்டு நிறுவன நிதி ஆலோசகர்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டம் சாதி, மதம் வர்க்கங்களைத் தாண்டி, ஆண் வித்தியாசங்களைக் கடந்து இந்திய மக்களை ஒன்றிணைந்திருக்கிறது என்பதற்கு இந்தப் போராட்டக் களங்கள் கட்டியம் கூறுகின்றன.
பணமதிப்பு நீக்கத்தைக் கொண்டு வந்து எங்களது பணத்தைப் பறித்துக் கொண்டபோதுகூடப் பொறுத்துக் கொண்டோம். ஆனால், எங்களது குடியுரிமையைப் பறிப்பதை எப்படிப் பொறுக்க முடியும்?” எனக் கேள்வியெழுப்புகிறார் ஒரு பெண்மணி. மோடி அமித் ஷா கும்பல் கடந்த ஆறாண்டுகளாக உருவாக்கி வரும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பையும், மாட்டுக் கறி தடை, பசுப் பாதுகாப்பு என்ற முகாந்திரத்தில் முஸ்லிம்களின் மீது ஏவிவிட்டுவரும் வன்முறையையும், பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பொருளாதாரரீதியான தாக்குதல்களையும் கண்டு மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பின் மூலமாக வெடித்திருக்கிறார்கள்.
ஜாமியா மிலியா மாணவர்கள் மீதான தாக்குதலைத் தமது சொந்தக் குழந்தைகள் மீதான தாக்குதலாகவே, தமது குழந்தைகளின் எதிர்காலத்தின் மீதான தாக்குதலாகவே உணர்ந்திருக்கிறார்கள் ஷாஹீன் பாக்கில் போராடும் தாய்மார்கள். மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, பிழைப்பு தேடி வந்த இக்குடும்பங்களின் குழந்தைகள் படிக்க விரும்பும் இடமாகவும், கனவுக் கல்வி நிறுவனமாகவும் இருக்கிறது ஜாமியா மிலியா பல்கலைக்கழகம். இவர்களோடு ஏதாவொரு வகையில் தொடர்புடையதாக, இவர்களது பிள்ளைகளோ, உறவினர் பிள்ளைகளோ படிக்கும் இடமாக ஜாமியா பல்கலை இருந்து வருகிறது. இம்மாணவர்கள் மீதான தாக்குதல் அனைவரையும் உலுக்க, எந்தவொரு முறையான அணிதிரட்டலும் இல்லாமலேயே, அக்கம் பக்கத்தாரை அழைத்து போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். என் குழந்தைகள் சிறியவர்கள், ஆனால், அவர்கள் வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு ஒருநாள் செல்வார்கள். எதிர்காலத்தில் இது போன்று ஏதாவது நடக்கும் நாளைப் பற்றி சிந்திக்கவே நடுக்கமாக இருக்கிறது” எனத் தனது உணர்வை வெளிப்படுத்துகிறார் அஃப்ரீன்.
படிக்க :
♦ தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !
♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !
தமது புத்தகப்பைகளுடன் வரும் கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பப் பெண்கள் என ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகின்றன போராட்டக் களங்கள். இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெரும்பான்மை இஸ்லாமியப் பெண்களுக்கு இதுதான் முதல் போராட்டம். முதலில் முழக்கம் போடுவது, தேசிய கீதம் பாடுவது என ஆரம்பித்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் கவிதை படித்தல், பாடல்கள் பாடுதல், வீதி நாடகங்கள் நடித்தல், ஷயாரி (கஸல்) பாடல்கள் இசைத்தல், ஓவியங்கள் வரைதல் மற்றும் பொது சமையலில் ஈடுபடல் எனப் படைப்பூக்கம் கொண்டதாகப் போராட்டத்தை மாற்றியிருக்கின்றனர். போராட்டம், எங்களுக்குத் திருவிழா போல இருக்கிறது என்கிறார் மும்பை போராட்டக் களத்தில் நிற்கும் ஒரு பெண்மணி.
பொதுவாக, முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள், அரசியல் பேசமாட்டார்கள் என்ற பின்தங்கிய நிலையை இப்போராட்டங்கள் உடைத்திருக்கின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமாக அரசியல்ரீதியாக மாபெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறார்கள் என்பதை அவர்களது வார்த்தைகளே காட்டுகின்றன.
இங்கு நாங்கள் 38 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகிறோம். போராட்டம் என்றால் என்னவென்றே இதற்கு முன்னர் வரை எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” எனும் நஸ்ரின் பேகம், இப்போராட்டத்தால் நாங்கள் படைவீரர்களைப் போன்று உணர்கிறோம்” என்கிறார் உற்சாகம் ததும்ப. அரசியல் நம்மை பாதிக்காது என்று நினைத்து, குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு அரசியலை விட்டுவிட்டோம். நான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே என் சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவேன் என்ற அச்சம், இன்று செய்தித்தாள்களில் அச்சிடப்பட்ட அரசியலைப் படித்துப் புரிந்துகொள்ளச் செய்துள்ளது” என்கிறார் பன்னாட்டு நிறுவனத்தின் நிதி ஆலோசகரான நாசியா.
இந்த எதிர்ப்பு முஸ்லிம் சமூகம் தங்களுக்குள்ளும் முஸ்லிமல்லாதவர்களுடனும் ஒன்றிணைய உதவியுள்ளது” என்கிறார், நாக்பாடாவில் உள்ள பத்லுபுராவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஜூவேரியா கான். மேலும், ஷாஹீன் பாக் போராட்டம் தொடங்கிய பின்னர், உள்துறை அமைச்சர் மற்றும் மோடியின் உரைகளை நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். மோடி ஏன் உண்மையை வெளிப்படுத்தவில்லை? நாங்களும் இந்த நாட்டின் ஒரு பகுதி. எனவே, மோடி ஏன் எங்கள் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை? என்று கேள்வியெழுப்புகிறார்.
தன்னுடைய பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஒரு வார காலத்திற்குள் நடக்கவிருக்கும் நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்த நாட்டின் குடிமக்களாக இருக்க எங்களுக்கு அனுமதி இல்லை என்றால், இந்தத் தேர்வுகளால் என்ன பயன்?” என்று நெஞ்சைத் துளைக்கும் பார்வையுடன் கேட்கிறார் 16 வயது மாணவி அல்வீனா ஆஃப்ரீன்.
நாங்கள் கல்வி, வேலைகள், சிறந்த சுகாதாரம் ஆகியவற்றைத் தான் விரும்புகிறோம். சி.ஏ.ஏ. அல்ல” என்கிறார் கொல்கத்தாவில் போராட்டத்தைத் தொடங்கிய திருமதி ஜமீல். மேலும், இப்போது நகரத்தின் பேசுபொருளாக மாறியுள்ள போராட்டத்தைத் தனிநபராக எப்படித் தொடங்கினார், அதற்கான தைரியம் அவருக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜமீல், ஜே.என்.யு. நடத்தப்பட்ட தாக்குதல், நாடு ஆபத்தில் இருப்பதை எனக்கு உணர்த்தியது. நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தைரியத்தைத் தந்தது. சுமார் 60 பெண்களை ஒன்றாக இணைத்தேன், எங்களுடன் பல்வேறு கல்லூரி பல்கலைக்கழக மாணவிகள் 15 பேர் இணைந்தார்கள், நாங்கள் இங்கே அமர்ந்தோம்” என்கிறார்.
லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் போராட்ட முன்னணியாளர்கள் மீதும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மீதும் வழக்கு போட்டுள்ளது, போலீசு. எந்த நேரத்திலும் போலீசால் தாங்கள் தாக்கப்படலாம் என்பதை போராட்டக் களத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். இருப்பினும் பெண்கள் மனவுறுதியுடன் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சி.ஏ.ஏ. ஓர் இன்ச்கூடப் பின்வாங்க முடியாது என்று சொன்ன அமித்ஷாவிற்குப் பதிலடியாய், சி.ஏ.ஏ. திரும்பப்பெற வைக்காமல், இங்கிருந்து ஒரு மில்லி மீட்டர்கூட நகரமாட்டோம்” என்கிறார் ஷாஹீன் பாக் போராளி.
இஸ்லாமியப் பெண்களின் இத்தகைய உணர்வும், காவி கும்பல்களின் மிரட்டலுக்கு எதிரான போராட்ட உறுதியும் பலதரப்பட்ட மக்களின் ஆதரவை வென்றெடுத்துள்ளது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் போராட்டங்களில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வதோடு, தங்களது பங்களிப்பையும் செய்து வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த விவசாயிகள், 9 பேருந்துகளில் உணவுப் பொருட்களை எடுத்துவந்து, சமூக சமையல் கூடத்தை நிறுவி, ஷாஹீன்பாக்கில் போராடும் பெண்களுக்கு தினமும் இருவேளை உணவளித்து வருகின்றனர்.
எந்தவித அரசியல் கட்சிகளின் தலைமையுமின்றி இஸ்லாமியப் பெண்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மக்கள் திரள் போராட்டமாக இந்தியாவெங்கும் பரவி வருகிறது. தமிழகத்திலும் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு, கோலப் போராட்டமாக வடிவம் பெற்றது. பொது மக்களின் இத்தகைய எதிர்ப்புகளைக் கண்டுதான் காவி கும்பலும் அஞ்சுகிறது. அதனால்தான் நாங்கள் டெல்லியில் ஆட்சி அமைத்தால் ஒரே நாளில் போராட்டத்தை ஒடுக்கிவிடுவோம் என்றும், துப்பாக்கியால் சுட்டும் போராட்டத்தில் ஊடுருவி பாகிஸ்தான் வாழ்க என முழக்கமிட்டுப் போராட்டத்தைச் சீர்குலைக்கவும் முயற்சிக்கிறது, காவி கும்பல்.
ஒரு கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் பௌதீக சக்தியாக மாறும் என்ற மார்க்சின் வார்த்தைக்குச் சான்றாக அமைந்துள்ளன நாடெங்கும் சி.ஏ.ஏ. எதிரான போராட்டங்கள்!
வசந்தன்
(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழில் வெளியான கட்டுரை)
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
₹15.00Add to cart |






































மேற்குறிப்பிடப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களும் தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை மட்டும் வரையறுக்கவில்லை. தொழில் நிறுவனங்கள் அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறும்பட்சத்தில், ஆலை நிர்வாகம் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனைகள், அபராதங்கள் குறித்தும் அவற்றில் கூறப்பட்டிருக்கிறது. இதனுடன் இச்சட்டங்களின் அமலாக்கம் குறித்துக் கண்காணிக்கவும், தொழிலாளி தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முறையிடும்போது அதனை விசாரிப்பதற்கு முறையாக இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளையும் அவற்றின் அதிகாரங்களையும் வரையறுத்திருக்கிறது.
ஊதியம் குறித்தும், தொழிலாளர் நல அதிகாரிகள் குறித்தும் பல்வேறு சட்டங்களில் காணப்படும் குழப்பமான வரையறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் ஊதியம் வழங்குவதில் தற்போது உள்ள நெருக்கடிகளைப் புதிய ஊதிய தொகுப்பு நிவர்த்தி செய்யும்” என்று மைய அரசு புதிய ஊதியத் தொகுப்பை வியந்தோதுகிறது.
1957 நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாடு சம்பள விகிதத்தைக் கணக்கிடுவதற்குப் பல்வேறு அளவுகோல்களை வகுத்துத் தந்தது. அவற்றின்படி, போதுமான அளவு ஊட்டச்சத்து, துணிகள், எரிபொருள், மின்சார வசதி, கல்வி, சுகாதாரம், முதியோர் நலன் ஆகியவற்றோடு திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட சமூகச் செலவுகள் ஆகிய அனைத்தையும் மூன்று பேருக்கு வழங்கும் விதத்தில் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்பு இருந்த ஊதியச் சட்டங்களின்படித் தொழிலாளர் நல ஆய்வாளர்கள் ஊதியம் வழங்கப்படுவது குறித்து தங்களுக்குப் புகார் வந்தால், சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள். ஆனால், தற்போது தொழிலாளர் நல ஆய்வாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒருங்கிணைப்பாளர்” என்ற பொம்மை பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு” (fixed term employment) என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதன்படி, மிகுஉற்பத்தி தேவைப்படும் காலத்தில் அதிகத் தொழிலாளர்களை பணிக்கமர்த்தி, அத்தேவை முடிந்த பிறகு அவர்களை எந்தச் சட்டச் சிக்கலும் இன்றி வேலையை விட்டு நீக்கிவிட முடியும். இவ்வேலைவாய்ப்பு முறை மூலம் நிரந்தரத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க விரும்பும் கார்ப்பரேட்டுகளின் கனவை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது, இத்தொகுப்பு.
தொகுதி 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமானதைத் தொடர்ந்து, வட்டாட்சியர், துணை ஆட்சியர், போலீசு துணைக் கண்காணிப்பாளர், சார்பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தொகுதி 1, 2 மற்றும் 2-ஏ தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதும் அம்பலமாகியிருக்கின்றன. டி.என்.பி.எஸ்.சி. மட்டுமல்லாது, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டி.ஆர்.பி. தேர்வுகள், கணினி ஆசிரியர் தேர்வுகள் ஆகியவற்றிலும், தட்டச்சுத் தேர்வுகளிலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவலர் பணிக்கான தேர்வுகளிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் நியமனத்திலும் மோசடி முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
தொகுதி 4 தேர்வின் விடைத்தாட்களைத் திருத்துவதற்கு நடந்த அத்துமீறல்கள், முறைகேடுகள்; 2017 நடத்தப்பட்ட தொகுதி 2ஏ தேர்வில் “வெற்றி” பெற்றுப் பணியில் சேர்ந்த 26 அதிகாரிகள் திடீரெனத் தலைமறைவாகியிருப்பது; 2008 நடந்த தொகுதி 1 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் சென்னை தி.நகரிலுள்ள பயிற்சி மையத்திற்கு இருந்த தொடர்பு; தேர்வாணையத்தில் உறுப்பினராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராமின் மகன் தனது முதல் முயற்சியிலேயே தொகுதி 1 தேர்வில் தேர்வாகி வணிக வரித்துறையில் துணை ஆணையர் ஆனது உள்ளிட்ட பல முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. இவையாவும் இம்முறைகேடுகளின் பின்னே அமைச்சர்- அதிகார வர்க்கம் – பயிற்சி மையம் – என்றொரு வலைப் பின்னல் இருப்பதை அம்பலப்படுத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால், இது தமிழகத்தில் அ.தி.மு.க. நடத்தியிருக்கும் “வியாபம் ஊழல்!”
முறைகேடுகளின் மூலம் நிரப்பப்படும் நியமனங்கள் நியாயமான முறையில் தேர்வெழுதிக் காத்திருக்கும் இளைஞர்களை மட்டும் ஏமாற்றவில்லை. அதனைவிட முக்கியமாக, மோசடிகளின் மூலம் அரசுப் பதவிகளைப் பெறுபவர்கள், குறிப்பாக வட்டாட்சியர், போலீசு துணைக் கண்காணிப்பாளர், வணிக வரி அதிகாரிகள் என அதிகாரமிக்க பதவிகளைப் பெறுபவர்கள் சட்டப்படியும் நியாயப்படியும் நடந்துகொள்வார்கள் என்பதற்கு அடிப்படையே கிடையாது. இப்படிப்பட்ட நியமனங்கள் சிவில் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் குரூரத் தாக்குதலாகும். இப்படிப்பட்ட அதிகாரிகள், அவர்களது மோசடி நியமனங்கள் அம்பலமாகி பிற்பாடு பதவி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர்கள் பதவியில் இருந்த காலத்தில் போட்ட உத்தரவுகள், எடுத்த நடவடிக்கைகள் செல்லுபடியாகும் என்றால், அதனைவிட குரூர நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது.

கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பாகவே பொருளாதாரம் மந்த நிலையில் தான் இருந்தது. Consumption எனப்படும் நுகர்வு சமீபத்திய வரலாற்றில் காணப்படாத அளவு குறைந்திருந்தது. நடுத்தர மக்கள் வாங்கும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் கீழ்தட்டு மக்கள் வாங்கும் பிஸ்கட், பற்பசை முதல் உள்ளாடை வரை அனைத்தும் விற்பனை சரிவை சந்தித்து இருந்தது. பொருளாதாரம் ஒரு சங்கிலித்தொடர் என்பதால் இந்த சரிவு மற்ற துறைகளையும் பாதித்தது. எடுத்துக்காட்டாக சரக்கு வாகனங்களின் விற்பனை 50 சதவீதத்துக்கு மேல் சரிவை கண்டது. இந்த தேக்க நிலையினால் நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை கட்ட முடியாமல் வராக்கடனாக மாறியது. வங்கிகளின் கணக்குகளில் வராக்கடன் அதிகரிப்பதால் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைக்க தொடங்கின. இவ்வாறு நீண்டு கொண்டே சென்றது.
இதற்கும் அதே பொருள் தான். மக்களிடம் வாங்கும் திறன் இல்லை அதனால் உற்பத்தியாளர்கள் பொருட்களை உற்பத்தி செய்வதில்லை. அதனால் உற்பத்தியாளர்கள் மின்சாரத்தை பயன்படுத்துவது குறைந்துள்ளது.


அதிகாலையே கண்விழிக்க வேண்டும். அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் சுமார் மூன்று கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கிறது. காலை 5.45 மணிக்குள் அனைவரும் கையெழுத்திட வேண்டும். ஆறு மணிக்கு தங்களுக்கான பாதுகாப்பு (அதன் தகுதியை பற்றி பின்னர் பேசலாம்) கவசங்களை மாட்டிக்கொண்டு மண்மவெட்டி, கடப்பாரை சாக்கடையை சுத்தம் செய்வதற்கு தேவையான இழுப்பான், பிளிச்சிங் பவுடர் மூட்டை அதை தெளிக்கும் பாண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதிகாரிகள் சொல்லும் வார்டுகளுக்கு செல்ல வேண்டும். சுமார் 6.30 மணியிலிருந்து 7.30க்குள் வேலைகளைத் தொடங்க வேண்டும்.
வேலை செஞ்சுட்டு அலுவலகத்திற்கு போய்தான் சாப்பிட வேண்டும். அதுக்கே மணி பத்தரை ஆயிடும். வேற வழியில்ல மூக்கு, வாய் எல்லலாம் எரியும். வேலைகள் முடியலன்னா மேஸ்திரி சத்தம் போடுவார். இன்ஸ்பெக்டர் மிரட்டுவார். அதிகாரி பேனாவை எடுப்பார். வேலைக்கு சிக்கலாக்கும், சொல்றத செஞ்சுதான் ஆகணும்.
அப்புறம் கார்பரேஷன் ஆபீஸிர்ங்க வீட்டுக்கு போகணும். கலெக்டர் வீட்டுக்கு போகணும். நீதிபதி வீட்டுக்கு போகணும். போலீஸ் வீட்டுக்கு போகணும் எஸ்.பி. வீட்டுக்கு போகணும்.

2001-லிருந்து 2014 வரை 13 ஆண்டுகள் முதல்வராக இருந்த மோதி, குஜராத் பாணியிலான வளர்ச்சி என்பதை முன்னிறுத்தினார்.
தமிழக அரசு (தமிழக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்) 24.03.2020 அன்று கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் உதவிப்பணிகளில் ஈடுபட தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனடிப்படையில் இன்றைய தேதிவரை தன்னார்வலர்கள் அரசு இணையதளத்தில் (stopcorona.tn.gov.in) பதிவுசெய்து வருகின்றனர். ஆனால், நாங்கள் அதற்கு முந்தைய நாளான 23.04.2020 அன்றே சென்னை மாநகராட்சிக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் பேசி தன்னார்வலர்களாக எங்களை பதிவுசெய்திருந்தோம். மேலும் கூடுதலாக, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசிடம் இணைய வழியாகவும் பதிவுசெய்திருந்தோம். ஆனால், இது நாள்வரை அரசிடமிருந்து எந்த ஒரு முறையான பதிலும் வரவில்லை. கட்டுப்பாட்டு அறைக்கும், மண்டல அதிகாரி திரு.காமராஜ் (மண்டலம் 4 – 9445190004) அவர்களிடம் நேரில் சென்றபோதும், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோதும் முறையான பதில் இல்லை.
காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கவேண்டுமென்பது எவ்வளவு அவசியமானதோ அதேபோன்று தன்னார்வலர்களின் நிவாரணப்பணியும் அத்தியாவசியமானதாகும்.
இப்படைப்பிரிவு 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்படைப்பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் தொற்று நோய் தடுப்பு மற்றும் இயற்கை பேரிடர் போது மருத்துவ பணி செய்வதற்கு பயிற்சி பெற்றவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்பானிய காலனியாதிக்கத்திற்கு எதிராக கியூபர்களோடு சேர்ந்து போராடிய ஹென்றி ரீவ் என்ற இளம் அமெரிக்கரின் நினைவாக இப்படைப்பிரிவுக்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்படைப்பிரிவு கியூப முன்னாள் அதிபர் காஸ்ட்ரோவால் முன்மொழியப்பட்டது.
கியூபப் புரட்சிக்கு பின்னர், கியூப அரசு, உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான மருத்துவர்கள் விகிதத்தை அடைந்தது. அந்நாட்டில் ஆயிரம் பேருக்கு 8 மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்தியா பத்தாயிரம் பேருக்கு ஒரு மருத்துவரை பெற்றிருக்கிறது. தன்னை அனைத்து நாடுகளின் தலைமை என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவால் கூட கியூபா போன்று மருத்துவர்களின் விகிதத்தை அதிகரிக்க முடியவில்லை.
இப்போது தொற்று நோய் பரவி வருவதால் பிரேசில் கடுமையான சுகாதார நெருக்கடியின் கட்டத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியன்று பிரேசிலின் சுகாதாரத் துறை செயலர் ஜோவா கபார்டோ, தங்கள் நாட்டிற்கு கியூப மருத்துவர்களை திரும்ப அனுப்புமாறு கியூப அரசைக் கேட்டுக் கொண்டார். பிரேசிலின் தொழிலாளர் கட்சியின் தலைவர் லூலா டா சில்வா, பிரேசில் அதிபர் பொல்சனோரா கியூப மருத்துவர்களைப் பற்றி முன்பு பொய்க்குற்றச்சாட்டை கூறியதற்காக பிரேசில் மக்களிடமும், கியூப மருத்துவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.


தொழில்நுட்பம் தெரியாத சிலர் தெரிந்தது போல் பேசுபவர் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு வெறுமையில் கிடக்கிறார்கள். நாம் மாறிவிட்டோமா? மீண்டும் பழைய நிலைக்குச் செல்வோமா? என்று யாருக்கும் புரியாத ஒரு மந்த நிலை. ஒரு நாளில் நாற்பது தடவை தொற்று எண்ணிக்கை, சாவு எண்ணிக்கை என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதை விட்டுவிட்டார்கள். பல எழுத்தாளர்களின் பேனா முனைகள் உலர்ந்து கிடக்கின்றன, ஓவியத்திரைகள் வெள்ளையாகவே இருக்கின்றன. எல்லா நாட்களும் இரவின் தூக்கத்தை நோக்கியே நகர்கின்றன.
இது மிக மோசமான சவால் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர், இதற்கான காரணம் என்னவென்பதை கண்டுபிடித்தாக வேண்டும் என்றார். “இப்போதைக்கு இதைக் குறித்து செய்வதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் (கருப்பினத்தவர் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து) மிகவும் கவலை கொள்கிறோம். இப்போதைக்கு அவர்களுக்கு போதிய கவனிப்பை உறுதி செய்தைத் தவிற வேறு வழியில்லை” என்கிறார் ஃபாவ்சி.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவா மேலாண்மை கல்வி நிலைய வளாகத்தில் உள்ள என் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதிலிருந்தே எனது உலகம் தலைகீழாக மாறிவிட்டது.


உ.பி. மாநில இந்து மதவெறி அரசோ ஆட்காட்டி விளம்பரத் தட்டிகளை அகற்றுவதற்குப் பதிலாக, அவற்றை அகற்றச் சொன்ன உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்ததோடு, அந்த 57 பேர் மீதும் குண்டர் சட்டத்தை ஏவித் தனது பாசிச குரூரப் புத்தியை வெளிக்காட்டிக் கொண்டது.
ரிஹாய் மஞ்ச் என்ற பெயரில் மனித உரிமை அமைப்பொன்றை நடத்திவரும் மூத்த வழக்குரைஞரான முகம்மது ஷோயிப்பும் தாராபுரியைப் போலவே, ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாகவே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். உ.பி. போலீசின் போலி மோதல் கொலைகளைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்திவரும் முகம்மது ஷோயிப்பைப் பழிதீர்த்துக் கொள்ளக் காத்திருந்த உ.பி. அரசு இச்சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அவரையும் கைது செய்து சிறையில் தள்ளியதோடு, சுவரொட்டியில் புகைப்படமாக வெளியிட்டும் அவமானப்படுத்தியிருக்கிறது.