Wednesday, July 1, 2026
முகப்பு பதிவு பக்கம் 286

ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு !

ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு!

டந்த டிசம்பர் 15 தேதியன்று குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகப் போராடிய டெல்லி  ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்திய போலீசும், ஏ.பி.வி.பி. குண்டர்களும், இப்படியோர் எதிர்வினையைக் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். டிசம்பர் அன்றே, பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் கூடித் தொடங்கிய போராட்டம் 50 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பெண்களால் தலைமை தாங்கப்படும் இப்போராட்டத்தில் சாதி  மதத்திற்கு அப்பாற்பட்டு பல்லாயிரம் ஆண்களும், பெண்களும் தினமும் கலந்து கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகிய இந்துத்துவ திரிசூலத்திற்கு எதிராகக் கண்டனங்களை முழங்குகின்றனர்.

ஷாஹீன் பாக்கை முன்னுதாரணமாகக் கொண்டு ஜார்க்கண்டின் வசேபூர், இராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உத்தரபிரதேசத்தின் அலகாபாத், கான்பூர், எட்டாவா மற்றும் லக்னோ, பீகாரில் பாட்னா மற்றும் கயா, மும்பையின் ஆசாத் மைதானம், கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் மைதானம் என நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பெண்கள் கூடித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பீகாரின் கிஷன்கஞ்ச், கோபால்கஞ்ச், பகதூர்கஞ்ச் போன்ற இதுவரை அறியப்படாத சிறுநகரங்களிலும், சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் புனேவிலும் பெண்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். அனைவரின் கோரிக்கையும் ஒன்றுதான், சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யைக் கைவிடு!”

ஷாஹீன் பாக்கில் போராடிக் கொண்டிருக்கும் பெண்களில் ஆகப் பெரும்பான்மையானோர் தச்சர், வெல்டர், வாட்ச்மேன், பெயிண்டர், டிரைவர் வேலைகளில் ஈடுபடும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களோடு வியாபாரிகள் உள்ளிட்ட பிற வர்க்கத்தினரும் சேர்ந்து பங்களிப்பும் ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.

மும்பையிலோ நான்கில் மூன்று பங்கு பெண்கள் நன்கு கல்வியறிவு பெற்ற, வசதியான குடும்பப் பிண்ணனி கொண்டவர்கள், தொழில் வல்லுநர்கள், மேலாண்மைப் பட்டதாரிகள், மென்பொருள் வல்லுநர்கள், சுயதொழில் செய்வோர், பன்னாட்டு நிறுவன நிதி ஆலோசகர்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டம் சாதி, மதம் வர்க்கங்களைத் தாண்டி, ஆண் வித்தியாசங்களைக் கடந்து இந்திய மக்களை ஒன்றிணைந்திருக்கிறது என்பதற்கு இந்தப் போராட்டக் களங்கள் கட்டியம் கூறுகின்றன.

பணமதிப்பு நீக்கத்தைக் கொண்டு வந்து எங்களது பணத்தைப் பறித்துக் கொண்டபோதுகூடப் பொறுத்துக் கொண்டோம். ஆனால், எங்களது குடியுரிமையைப் பறிப்பதை எப்படிப் பொறுக்க முடியும்?” எனக் கேள்வியெழுப்புகிறார் ஒரு பெண்மணி. மோடி  அமித் ஷா கும்பல் கடந்த ஆறாண்டுகளாக உருவாக்கி வரும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பையும், மாட்டுக் கறி தடை, பசுப் பாதுகாப்பு என்ற முகாந்திரத்தில் முஸ்லிம்களின் மீது ஏவிவிட்டுவரும் வன்முறையையும், பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பொருளாதாரரீதியான தாக்குதல்களையும் கண்டு மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பின் மூலமாக வெடித்திருக்கிறார்கள்.

ஜாமியா மிலியா மாணவர்கள் மீதான தாக்குதலைத் தமது சொந்தக் குழந்தைகள் மீதான தாக்குதலாகவே, தமது குழந்தைகளின் எதிர்காலத்தின் மீதான தாக்குதலாகவே உணர்ந்திருக்கிறார்கள் ஷாஹீன் பாக்கில் போராடும் தாய்மார்கள். மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, பிழைப்பு தேடி வந்த இக்குடும்பங்களின் குழந்தைகள் படிக்க விரும்பும் இடமாகவும், கனவுக் கல்வி நிறுவனமாகவும் இருக்கிறது ஜாமியா மிலியா பல்கலைக்கழகம். இவர்களோடு ஏதாவொரு வகையில் தொடர்புடையதாக, இவர்களது பிள்ளைகளோ, உறவினர் பிள்ளைகளோ படிக்கும் இடமாக ஜாமியா பல்கலை இருந்து வருகிறது. இம்மாணவர்கள் மீதான தாக்குதல் அனைவரையும் உலுக்க, எந்தவொரு முறையான அணிதிரட்டலும் இல்லாமலேயே, அக்கம் பக்கத்தாரை அழைத்து போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். என் குழந்தைகள் சிறியவர்கள், ஆனால், அவர்கள் வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு ஒருநாள் செல்வார்கள். எதிர்காலத்தில் இது போன்று ஏதாவது நடக்கும் நாளைப் பற்றி சிந்திக்கவே நடுக்கமாக இருக்கிறது” எனத் தனது உணர்வை வெளிப்படுத்துகிறார் அஃப்ரீன்.

படிக்க :
தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !
♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !

தமது புத்தகப்பைகளுடன் வரும் கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பப் பெண்கள் என ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகின்றன போராட்டக் களங்கள். இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெரும்பான்மை இஸ்லாமியப் பெண்களுக்கு இதுதான் முதல் போராட்டம். முதலில் முழக்கம் போடுவது, தேசிய கீதம் பாடுவது என ஆரம்பித்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் கவிதை படித்தல், பாடல்கள் பாடுதல், வீதி நாடகங்கள் நடித்தல், ஷயாரி (கஸல்) பாடல்கள் இசைத்தல், ஓவியங்கள் வரைதல் மற்றும் பொது சமையலில் ஈடுபடல் எனப் படைப்பூக்கம் கொண்டதாகப் போராட்டத்தை மாற்றியிருக்கின்றனர். போராட்டம், எங்களுக்குத் திருவிழா போல இருக்கிறது என்கிறார் மும்பை போராட்டக் களத்தில் நிற்கும் ஒரு பெண்மணி.

பொதுவாக, முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள், அரசியல் பேசமாட்டார்கள் என்ற பின்தங்கிய நிலையை இப்போராட்டங்கள் உடைத்திருக்கின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமாக அரசியல்ரீதியாக மாபெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறார்கள் என்பதை அவர்களது வார்த்தைகளே காட்டுகின்றன.

இங்கு நாங்கள் 38 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகிறோம். போராட்டம் என்றால் என்னவென்றே இதற்கு முன்னர் வரை எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” எனும் நஸ்ரின் பேகம், இப்போராட்டத்தால் நாங்கள் படைவீரர்களைப் போன்று உணர்கிறோம்” என்கிறார் உற்சாகம் ததும்ப. அரசியல் நம்மை பாதிக்காது என்று நினைத்து, குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு அரசியலை விட்டுவிட்டோம். நான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே என் சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவேன் என்ற அச்சம், இன்று செய்தித்தாள்களில் அச்சிடப்பட்ட அரசியலைப் படித்துப் புரிந்துகொள்ளச் செய்துள்ளது” என்கிறார் பன்னாட்டு நிறுவனத்தின் நிதி ஆலோசகரான நாசியா.

இந்த எதிர்ப்பு முஸ்லிம் சமூகம் தங்களுக்குள்ளும் முஸ்லிமல்லாதவர்களுடனும் ஒன்றிணைய உதவியுள்ளது” என்கிறார், நாக்பாடாவில் உள்ள பத்லுபுராவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஜூவேரியா கான். மேலும், ஷாஹீன் பாக் போராட்டம் தொடங்கிய பின்னர், உள்துறை அமைச்சர் மற்றும் மோடியின் உரைகளை நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். மோடி ஏன் உண்மையை வெளிப்படுத்தவில்லை? நாங்களும் இந்த நாட்டின் ஒரு பகுதி. எனவே, மோடி ஏன் எங்கள் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை? என்று கேள்வியெழுப்புகிறார்.

தன்னுடைய பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஒரு வார காலத்திற்குள் நடக்கவிருக்கும் நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்த நாட்டின் குடிமக்களாக இருக்க எங்களுக்கு அனுமதி இல்லை என்றால், இந்தத் தேர்வுகளால் என்ன பயன்?” என்று நெஞ்சைத் துளைக்கும் பார்வையுடன் கேட்கிறார் 16 வயது மாணவி அல்வீனா ஆஃப்ரீன்.

நாங்கள் கல்வி, வேலைகள், சிறந்த சுகாதாரம் ஆகியவற்றைத் தான் விரும்புகிறோம். சி.ஏ.ஏ. அல்ல” என்கிறார் கொல்கத்தாவில் போராட்டத்தைத் தொடங்கிய திருமதி ஜமீல். மேலும், இப்போது நகரத்தின் பேசுபொருளாக மாறியுள்ள போராட்டத்தைத் தனிநபராக எப்படித் தொடங்கினார், அதற்கான தைரியம் அவருக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜமீல், ஜே.என்.யு. நடத்தப்பட்ட தாக்குதல், நாடு ஆபத்தில் இருப்பதை எனக்கு உணர்த்தியது. நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தைரியத்தைத் தந்தது. சுமார் 60 பெண்களை ஒன்றாக இணைத்தேன், எங்களுடன் பல்வேறு கல்லூரி  பல்கலைக்கழக மாணவிகள் 15 பேர் இணைந்தார்கள், நாங்கள் இங்கே அமர்ந்தோம்” என்கிறார்.

லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் போராட்ட முன்னணியாளர்கள் மீதும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மீதும் வழக்கு போட்டுள்ளது, போலீசு. எந்த நேரத்திலும் போலீசால் தாங்கள் தாக்கப்படலாம் என்பதை போராட்டக் களத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். இருப்பினும் பெண்கள் மனவுறுதியுடன் தங்கள் போராட்டத்தைத்  தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சி.ஏ.ஏ. ஓர் இன்ச்கூடப் பின்வாங்க முடியாது என்று சொன்ன அமித்ஷாவிற்குப் பதிலடியாய், சி.ஏ.ஏ. திரும்பப்பெற வைக்காமல், இங்கிருந்து ஒரு மில்லி மீட்டர்கூட நகரமாட்டோம்” என்கிறார் ஷாஹீன் பாக் போராளி.

இஸ்லாமியப் பெண்களின் இத்தகைய உணர்வும், காவி கும்பல்களின் மிரட்டலுக்கு எதிரான போராட்ட உறுதியும் பலதரப்பட்ட மக்களின் ஆதரவை வென்றெடுத்துள்ளது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் போராட்டங்களில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வதோடு, தங்களது பங்களிப்பையும் செய்து வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த விவசாயிகள், 9 பேருந்துகளில் உணவுப் பொருட்களை எடுத்துவந்து, சமூக சமையல் கூடத்தை நிறுவி, ஷாஹீன்பாக்கில் போராடும் பெண்களுக்கு தினமும் இருவேளை உணவளித்து வருகின்றனர்.

எந்தவித அரசியல் கட்சிகளின் தலைமையுமின்றி இஸ்லாமியப் பெண்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மக்கள் திரள் போராட்டமாக இந்தியாவெங்கும் பரவி வருகிறது. தமிழகத்திலும் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு, கோலப் போராட்டமாக வடிவம் பெற்றது. பொது மக்களின் இத்தகைய எதிர்ப்புகளைக் கண்டுதான் காவி கும்பலும் அஞ்சுகிறது. அதனால்தான் நாங்கள் டெல்லியில் ஆட்சி அமைத்தால் ஒரே நாளில் போராட்டத்தை ஒடுக்கிவிடுவோம் என்றும், துப்பாக்கியால் சுட்டும் போராட்டத்தில் ஊடுருவி பாகிஸ்தான் வாழ்க என முழக்கமிட்டுப் போராட்டத்தைச் சீர்குலைக்கவும் முயற்சிக்கிறது, காவி கும்பல்.

ஒரு கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் பௌதீக சக்தியாக மாறும் என்ற மார்க்சின் வார்த்தைக்குச் சான்றாக அமைந்துள்ளன நாடெங்கும் சி.ஏ.ஏ. எதிரான போராட்டங்கள்!

வசந்தன்

(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழில் வெளியான கட்டுரை)


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கொரோனா நிவாரண நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் ! செய்திகள் படங்கள்

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்களுடனும், ஜனநாயக சக்திகளுடைய ஒத்துழைப்புடனும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கால் துயருற்று வரும் மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

***

சென்னை முகப்பேர்- நொளம்பூர் கொரோனா ஒழிப்பு உதவிக்குழு சார்பில்
முகப்பேர் – கெங்கையம்மன் நகர் பகுதியில் கபசுரக் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. 200 பேர் வரை மக்கள் ஆர்வமுடன் வாங்கி குடித்தனர்.

நொளம்பூர் பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளர்களுக்கு 9 நாட்கள் உறவுகள் என்ற டிரஸ்ட் மூலம் உணவு பெற்று வழங்கப்பட்டது. 150 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

சென்னை, ஓசாங்குளம், புதிய பூபதி நகர் மற்று புல்லாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் 400-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

சென்னையில் தங்கியுள்ள தெலுங்கு பேசும் கட்டிட தொழிலாளர்களுக்கு 200 பேருக்கு பத்து நாட்களாக உணவு விநியோகிக்கப்பட்டது.

சென்னை சேத்துப்பட்டு பகுதிக்கு அரசு சார்பில் நடமாடும் காய்கறி வண்டி தெருவிற்கு வந்தது. பகுதி குழு சார்பில் அது ஒழுங்குபடுத்தப்பட்டது.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் வசிக்கும் மாற்று திறனாளிகள் 20 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் 10 நாட்களுக்கு பயன்படும் வகையிலானவை “முகப்பேர்- கொரோனா உதவிக்குழு”வின் சார்பாக வழங்கப்பட்டது.

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். 350 மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். அவர்கள் கடந்த 20 நாட்களாக வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு ரகுநாத் என்பவர் மதிய உணவு ஏற்பாடு செய்துவருகிறார்.

முகப்பேர் – நொளம்பூர் பகுதி கொரோனா- உதவி குழு உறுப்பினர்கள் மூலமாக மூன்றாவது நாளாக மக்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. மக்கள் வரிசையில் நின்று 200 பேர்வரை வாங்கிச்சென்றனர்.

மேற்கு வங்கம், அசாம், போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் சென்னை முகப்பேர் கலெக்டர் நகர் பகுதியில் வசித்து வருக்கின்றனர். இவர்கள் அனைவரும் உணவகத்தில் வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக உணவகம் மூடிய நிலையில், ஊருக்கு திரும்பி போக முடியாத நிலையில் உள்ளனர்.
இவர்களுக்கு கோதுமை, அரிசி, எண்ணெய் போன்ற உணவு பொருட்கள் முகப்பேர் பகுதி கொரோனா – உதவி குழுவின் சார்பாக வழங்கப்பட்டது.

சென்னை, சேத்துப்பட்டில் உள்ள பள்ளி கூடச்சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் உள்ள ரெயின்போ பெண்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கும் மற்றும் மாணவர்களின் இல்லத்திற்கும் மக்கள் அதிகாரம் சார்பாக உணவு பொருட்கள் பருப்பு, எண்ணெய், சோப்பு மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டது.

முகப்பேர் பகுதியில் வசிக்கும் நேபாளத்தை சேர்ந்த 4 குடும்பங்களுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக அரிசி வழங்கப்பட்டது.

சென்னை மக்கள் அதிகாரத்தின் சார்பாக முகப்பேர் மேற்கு பகுதியில் மாநகராட்சி தொழிலாளர்கள், தெலுங்கு பேசும் தொழிலாளர்கள், ATM காவலாளர்கள், சாலை ஓர கடை வியாபாரிகள் என 100-க்கும் மேற்பட்டோர்க்கு முககவசம் அளிக்கப்பட்டது

காஞ்சிபுரம் மக்கள் அதிகாரம் சார்பில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு காவல் அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள், பாதுகாவலர்கள் என 200 பேருக்கு கொடுக்கப்பட்டன.

காஞ்சிபுரம், அய்யங்கார்குளம் பகுதி ஊராட்சி மன்றத்தின் கிளர்க் புவனா அவர்களிடம் மக்கள் அதிகாரம் சார்பாக 75 முககவசம் ஒப்படைக்கப்பட்டது.

சைதாப்பேட்டை பகுதியில் துப்புரவு தொழிலாளர்கள், காய்கறி வியாபாரிகள், சிறு வணிகர்கள் முதியோர்கள், மற்றும் பொது மக்களுக்கு முக கவசம் (துணி வாங்கி தைத்த) வழங்கப்பட்டது.

நொளம்பூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தின் வாசலில் கபசூர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. 200 மேற்பட்டோர் வாங்கி குடித்து பயனடைந்தனர்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தினக்கூலியாக வேலை செய்யும் 6 நபர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டு (4000 ரூ பெருமானமுள்ள) மளிகை பொருட்கள் பொருட்கள் சைதை – கொரோனா தடுப்பு உதவிக்குழு மூலம் விநியோகிக்கப்பட்டது.

ஆரணி பகுதியில் மக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

முகப்பேர் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர், விதவை பெண்கள், ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் 500க்கு மேற்பட்ட வீடுகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

விருத்தாச்சலத்தில் 1000 வீடுகளுக்குகிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

விருத்தாச்சலத்தில் 500க்கும் மேற்பட்டோர்க்கு கபசுர குடி நீர் வழங்கப்பட்டது.

விருத்தாச்சலத்தில் ஆட்டோ தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர்க்கு அரிசி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டன.

விருத்தாச்சலம் கோ. பூவனூர் கிராமம் முழுவதும் கிருமிநாசினி எல்லா இடங்களிலும் தெளிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டணர். சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கிருமிநாசினி தெளித்தனர், இப்பணியை ஊர் பொது மக்கள் வரவேற்றனர். மேலும் இதேபோன்று தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

நாகை – சீர்காழி தாலுக்கா எடமணல். கிராமத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் எடமணல் கிராம இளைஞர்களும் சேர்ந்து கரோனா வைரஸ். தொற்று ஏற்படாமல் தடுக்க கிருமிநாசினியை 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் தெளித்தனர்.

புதுச்சேரி மதகடிபட்டு பகுதியில் உள்ள சிறு கடை வியாபாரிகள் மற்றும் மக்களுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் துணியால் தயாரிக்க பட்ட முக கவசம் (மாஸ்க்) 400 எண்ணிக்கையில் வழங்கபட்டது.

புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சின்னபாபு சமுத்திரம் கிராம மக்களுக்கு இயற்கை கிருமி நாசினி வழங்கபட்டது.

திருச்சி – கொரனோ வைரஸ் தாக்குதல் 144 தடை உத்தரவையொட்டி, திருச்சி, துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் பிகார் மாநிலத்தை சேர்ந்த தினக்கூலிக்கு வேலைக்கு செல்ல கூடிய தொழிலாளர்கள்; இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் 20 பேர் மற்றும் BHELஆர்டர் பெற்று இயங்கும் சிறு தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் பெயிண்டர், கொத்தனார், சித்தாள், வேலை உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் வேலையின்றி அன்றாட வயிற்று பிழைப்புக்கே வழியின்றி தவித்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு நிதி சேகரித்து 31/03/2020 அன்று அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் , காய்கறி உள்ளிட்ட 9 வகையான(1000 ரூபாய் மதிப்புள்ள) உணவு பொருட்களை நாற்பது குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது உதவிகளை பாய்லர் பிளாண்ட் ஓர்க்கர்ஸ் யூனியன் மற்றும் SDPI, இசுலாமிய அமைப்புகள் மற்றும் நண்பர்கள் செய்து வருகின்றனர்.

மதுரை – உசிலை முண்டு வேலம்பட்டியில் 400 முகக்கவசங்ககள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

நெல்லை பகுதியில் தொடங்கப்பட்ட கொரோனா மக்கள் பாதுகாப்பு குழுவின் சார்பாக திரட்டப்பட்ட நிதியில் இருந்து முதல்கட்டமாக ஆரோக்கியநாதபுரம் பகுதியில் கபசுர குடிநீர் இளைஞர்களின் பங்களிப்புடன் 1000-க்கு மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் கிராமத்தில் கொரோனா தடுப்புக் குழு சார்பாக கபசுர குடி நீர் 400 பேருக்கு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொரோனா தடுப்புக் குழு சார்பாக 100 முதியோர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. கரைப்புதூர் கிராமத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களுடன் அவ்வூர் இளைஞர்களும் இணைந்து கொரோன தடுப்புக் குழு ஏற்படுத்தியுள்ளனர். 1000 வீடுகளுக்கும், ஊர் முழுக்கவும் கிருமி நாசினி தெளித்துள்ளனர்.

தருமபுரியில் 200 முககவசங்கள் தயாரித்து முதல் கட்டமாக தருமபுரி மாவட்ட தலைமை அரசு மருந்துமனை பணியாளர்கள், மற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டது.

கொரானா ஒழிப்பு நிவாரண பணிகுழு, மற்றும் கள்ளிபுரம் பகுதி இளைஞர்
சார்பாக, கொரானா தடுப்பு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீர் கள்ளிபுரம் பகுதியில் 1000 பேருக்கு மூன்று நாட்கள் கொடுக்கப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !

எட்டு மணி நேர வேலை கிடையாது! குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் கிடையாது! நிரந்தர வேலை, பணிப்பாதுகாப்பு கிடையாது! தொழிற்சங்க உரிமைகள் கிடையாது!

தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது
புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு!

டைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை  ஊதியம் குறித்த தொகுப்பு, தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, பணியிடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு  இயற்றி, அவற்றைச் சட்டமாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது, மோடி அரசு.  இவற்றுள் ஊதியம் குறித்த தொகுப்பு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அரசுத் தலைவரின் அனுமதியுடன் சட்டமாக்கப்பட்டுவிட்டது. மற்ற மூன்று தொகுப்புகளும் மக்களவையில் நிலுவையில் உள்ளன.

மேற்குறிப்பிடப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களும் தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை மட்டும் வரையறுக்கவில்லை. தொழில் நிறுவனங்கள் அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறும்பட்சத்தில், ஆலை நிர்வாகம் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனைகள், அபராதங்கள் குறித்தும் அவற்றில் கூறப்பட்டிருக்கிறது. இதனுடன் இச்சட்டங்களின் அமலாக்கம் குறித்துக்  கண்காணிக்கவும், தொழிலாளி தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முறையிடும்போது அதனை விசாரிப்பதற்கு முறையாக இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளையும் அவற்றின் அதிகாரங்களையும் வரையறுத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் நீக்கி விட்டு, அதனிடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கு அநீதி இழைக்கக்கூடிய அம்சங்களை, வழிகாட்டுதல்கள் என்ற பெயரில் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. இந்த வழிகாட்டுதல்களை முதலாளிகள் மீறும்போது அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து எந்தவொரு விளக்கமும் இத்தொகுப்பில் சொல்லப்படவில்லை. முந்தைய சட்டத்தில் கூறப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளைக் கலைக்கச் சொல்லும் இத்தொகுப்புகள், அவற்றுக்கு மாற்று குறித்துப் பேசாமல், தொழிலாளி வர்க்கத்தைக் கைவிடுகின்றன.

உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் ஊதியத் தொகுப்பு

தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948; ஊதிய வழங்கல் சட்டம், 1936; சம ஊதியச் சட்டம், 1976 மற்றும் போனஸ் பட்டுவாடா சட்டம் 1965 என நான்கு சட்டங்கள் இருந்துவரும் இடத்தில், அவற்றுக்குப் பதிலாக ஊதியம் குறித்த தொகுப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஊதியம் குறித்தும், தொழிலாளர் நல அதிகாரிகள் குறித்தும் பல்வேறு சட்டங்களில் காணப்படும் குழப்பமான வரையறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் ஊதியம் வழங்குவதில் தற்போது உள்ள நெருக்கடிகளைப் புதிய ஊதிய தொகுப்பு நிவர்த்தி செய்யும்” என்று மைய அரசு புதிய ஊதியத் தொகுப்பை வியந்தோதுகிறது.

ஆனால், இப்புதிய ஊதியத் தொகுப்பு ஊதியம் குறித்த வரையரைகளைத் தெளிவாகக் கூறாமல்,  நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் தமது விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை வியாக்கியானம் செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கு ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களையும், அதிகாரிகளையும் நீக்கியிருக்கும் இத்தொகுப்பு, அதனிடத்தில் புதிதாக எந்தவொரு அமைப்பையும் உருவாக்காமல் சூன்யமாக விட்டிருக்கிறது.

குறைந்தபட்ச ஊதியத்தை எதன் அடிப்படையில், எவ்வாறு நிர்ணயம் செய்வது என்ற கேள்விக்கு, தொழிலாளர்களின் திறன், வேலையின் தன்மை ஆகியவற்றை மட்டும் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வழிகாட்டுகிறது இத்தொகுப்பு.

படிக்க :
சிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…
♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !

ஒரு தொழிலாளி எவ்வளவு திறமையானவர் என்பதை வைத்து அவருக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கக் கூறும் இவ்வழிகாட்டுதலைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு தொழிலாளியைத் திறமையற்றவர் என்று முத்திரை குத்தி, அவரது ஊதியத்தை வெட்டிவிடுவது ஆலை நிர்வாகத்திற்கு இனி எளிமையாகிவிடும்.

1957 நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாடு சம்பள விகிதத்தைக் கணக்கிடுவதற்குப் பல்வேறு அளவுகோல்களை வகுத்துத் தந்தது. அவற்றின்படி, போதுமான அளவு ஊட்டச்சத்து, துணிகள், எரிபொருள், மின்சார வசதி, கல்வி, சுகாதாரம், முதியோர் நலன் ஆகியவற்றோடு திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட சமூகச் செலவுகள் ஆகிய அனைத்தையும் மூன்று பேருக்கு வழங்கும் விதத்தில் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்தது.

மேற்சொன்ன கணக்கீட்டு முறையின் அடிப்படையில்தான் ஏழாவது சம்பளக் கமிசன் மைய அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு 18,000 ரூபாய், அதாவது நாள் ஒன்றுக்கு 600 ரூபாயைக் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால், மைய அரசோ தேசியக் குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு 178 ரூபாய் என அடிமாட்டுக் கூலியை நிர்ணயம் செய்திருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், இந்த தேசியக் குறைந்தபட்ச ஊதியம் இரண்டு ரூபாய் மட்டுமே அதிகரித்திருப்பது குரூர நகைச்சுவையாகும்.

ஒவ்வொரு தொழில்துறைக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாறுபட்டு இருக்கும் என்றும் மைய அரசு கூறியிருப்பதால், இந்த தேசியக் குறைந்தபட்ச ஊதியமும் நாடெங்கும் ஒரே சீராக அமல்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும், இவ்வூதியத்தை யார், எந்த அளவுகோலின்படி நிர்ணயம் செய்வார்கள் என்பதையும் தெளிவாகக் கூறாமல், அதனை நிர்ணயம் செய்வதை நடைமுறைப்படுத்தும் அதிகாரியின் முடிவுக்கு விட்டுவிட்டது.

இதற்கு முன்பு இருந்த ஊதியச் சட்டங்களின்படித் தொழிலாளர் நல ஆய்வாளர்கள் ஊதியம் வழங்கப்படுவது குறித்து தங்களுக்குப் புகார் வந்தால், சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள். ஆனால், தற்போது தொழிலாளர் நல ஆய்வாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒருங்கிணைப்பாளர்” என்ற பொம்மை பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒருங்கிணைப்பாளர் ஊதியம் குறித்து முதலாளிக்கும், தொழிலாளிக்கும் வகுப்பெடுத்துப் புரிய வைப்பாராம். நிறுவன முதலாளி ஊதியம் குறித்த நடைமுறைகளைத் தான் முறையாகப் பின்பற்றுவதாகத் தனக்குத்தானே சான்றளித்து, அந்த ஆவணத்தை இணையத்தில் பதிவேற்றினால், அதற்கு ஒப்புதல் அளிக்கும் வேலையைச் செய்வாராம். நேரடி ஆய்வு என்பதெல்லாம் இனிமேல் கிடையாதாம். எனில், ஒரு ரப்பர் ஸ்டாம்பிற்கும் ஒருங்கிணைப்பாளர் என்ற இந்த அலங்காரப் பதவிக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

இதற்கு முன்பு ஒரு முதலாளி தனது தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக சம்பளம் வழங்கினால், அவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை மட்டுமன்றி, கொத்தடிமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முடியும். புதிய ஊதியத் தொகுப்பில் அத்தண்டனை சட்டப்பிரிவு எவ்வித மாற்றும் இன்றி நீக்கப்பட்டுள்ளது.

இது போன்று ஊதியம் குறித்த பிரச்சினைகள், சர்ச்சைகளுக்காகத் தொழிலாளர்கள் இனி நீதிமன்றத்தை நாட முடியாது. அதற்கென இருந்த சட்டப்பிரிவுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதில் தொழிலாளர்கள் தங்களது தாவாக்களை இதற்கென அமைக்கப்படும் அதிகாரம் ஏதுமற்ற அமைப்புகளில் சென்று பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்த நிறுவனம் அத்தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்காமல் ஏமாற்றினால், அதனை அந்தத் தொழிலாளி வேலை செய்யும் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என வரையறுத்திருந்த முந்தைய ஊதிய பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்தி வரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொறுப்பும் கடமையும் தட்டிக் கழிக்கப்பட்டுவிட்டது.

படிக்க :
கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !
♦ பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் !

தகவல் தொழில்நுட்பத் துறையில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது தொழிலாளார்களது சம்பளத்தில் ஒரு பகுதியைச் செயல்திறன் என்ற அடிப்படையில் பிடித்துவைத்து வருகின்றன. இச்சட்டவிரோத நடைமுறையைப் புதிய ஊதிய தொகுப்பு சட்டபூர்வமாக மாற்றியிருப்பதோடு, பிற தொழில் பிரிவுகளுக்கும் இச்சுரண்டலை நீட்டித்திருக்கிறது.

நவீன கொத்தடிமை ஆகிறது தொழிலாளி வர்க்கம்

சங்கமாக அணி திரளும் உரிமை, 8 மணி நேர வேலை உரிமை, சட்டவிரோதக் கதவடைப்பு மற்றும் வேலை நீக்கம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் உரிமை உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க மூன்று முக்கிய தொழிற்சங்கச் சட்டங்கள் உள்ளன. அவை, தொழிற்தகராறு சட்டம் 1947, தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழிற்சாலை வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம், 1946 ஆகியன. இந்தச் சட்டங்கள் மூன்றும் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

தொழிலாளர்களது சங்கம் சேரும் உரிமையை ரத்து செய்வது, நினைத்த மாத்திரத்தில் தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவது அல்லது நிறுவனத்தைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மூடுவதற்கு அனுமதி அளிப்பது, வேலை நேர வரம்புகளை உயர்த்தவது என முதலாளிகளுக்குச் சாதகமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் இந்த நடைமுறைத் தொகுப்பு செய்து கொடுக்கிறது.

முதலில் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் குறித்த  வரையறைகள் இத்தொகுப்பில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சேவைத் துறைகளைத் தொழிற்சாலை என்ற வரையறைக்குள் வராமல் விலக்கி வைக்கும்படி தொழிற்சாலைக்கான வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், எந்தவொரு தொழில்துறையையும் சேவைத் துறை என வரையறுக்கும் அதிகாரத்தை மைய அரசிற்கு இச்சட்டத் தொகுப்பு வழங்குகிறது.

ஒரு நிறுவனத்தில் 15,000 ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறுபவரையே தொழிலாளி என வரையறுக்கிறது இத்தொகுப்பு. அதற்கும் அதிகமாக ஊதியம் பெறுபவர் கண்காணிப்பாளர் அல்லது மேலாளர் என வரையறுக்கப்படுவதால், அவருக்குத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் எதுவும் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. அத்துடன் இந்த 15,000 ரூபாய் ஊதியம் என்ற வரையறையைக் கூட்டவோ குறைக்கவோ மைய அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு 15,000 ரூபாய்க்கு அதிகமாக ஊதியம் வாங்கும் அனைவரும் தொழிலாளர்களே அல்ல என்று வரையறை செய்வதன் மூலம், ஏற்கெனவே சங்கமாக அணிதிரண்டுள்ள தொழிலாளர்களைத் தொழிலாளர்களே அல்ல என்று தகுதி நீக்கம் செய்கிறது, இத்தொகுப்பு. இதன் வழியாகத் தொழிற்சங்கங்கள் அனைத்தையும் காலி செய்து முடக்குகிறது.

பதிவாளர் என்ற அதிகாரியின் கருணை, தயவைப் பெற்றால்தான் தொழிற்சங்கத்தைச் சட்டப்படி பதிவு செய்ய முடியும் என்றவாறு காலனிய காலத்தில்கூட இல்லாத எதேச்சதிகாரத்தை இச்சட்டத் தொகுப்பு உருவாக்கியிருக்கிறது. அதாவது, எந்தவொரு நியாயமான காரணமும் இன்றித் தன் விருப்பப்படி ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யாது பதிவாளர் மறுக்கலாம் எனக் கட்டைப் பஞ்சாயத்து அதிகாரத்தைப் பதிவாளருக்கு வழங்குகிறது, இத்தொகுப்பு. இதனால் நிர்வாகங்களுக்கு எதிரான தொழிற்சங்கங்களைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்வது இனி குதிரைக் கொம்புதான்.

மேலும், புதிதாகத் தொழிற்சங்கம் தொடங்க குறைந்தபட்சம் 100 தொழிலாளர்கள் சங்கத்தில் இருக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே இருக்கும் தொழிற்சங்கங்களில் 100 தொழிலாளர்கள் இல்லையென்றால், அவர்களது பதிவு ரத்து செய்யப்படும் என்றும் தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் வகையில் இத்தொகுப்பில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகளை முன்னறிவிப்பின்றி மூடுவதற்கான நிபந்தனைகள் இத்தொகுப்பில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 100 தொழிலாளர்களுக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மட்டுமே முன்னறிவிப்பின்றி மூடமுடியும் என்பதை மாற்றி, அந்த எண்ணிக்கையை அந்தந்த மாநில அரசுகள் அவ்வப்போது முடிவு செய்யலாம் எனச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு” (fixed term employment) என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதன்படி, மிகுஉற்பத்தி தேவைப்படும் காலத்தில் அதிகத் தொழிலாளர்களை பணிக்கமர்த்தி, அத்தேவை முடிந்த பிறகு அவர்களை எந்தச் சட்டச் சிக்கலும் இன்றி வேலையை விட்டு நீக்கிவிட முடியும். இவ்வேலைவாய்ப்பு முறை மூலம் நிரந்தரத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க விரும்பும் கார்ப்பரேட்டுகளின் கனவை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது, இத்தொகுப்பு.

ஏற்கெனவே நீம் திட்டம் மூலம் (தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டம்) கல்லூரியிலிருந்து வெளிவரும் இளம் பட்டதாரிகளை, பட்டயப் பொறியாளர்களைத் தொழிற்பழகுனர்களாக (Apperentice, Trainee) உபயோகித்து கொண்டு மொத்த ஆலையையும் இயக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இச்சட்டத் தொகுப்போ இனி யாரும் நிரந்தரத் தொழிலாளி இல்லை, யாருக்கும் பணிப் பாதுகாப்பு இல்லை என்ற நவீனக் கொத்தடிமை நிலையை ஏற்படுத்துகிறது.

இவையெல்லாம் போதாதென்று 8 மணி நேரம் என்று இருந்த வேலை நேரத்தை நாள் ஒன்றுக்கு 9 மணி நேரம் எனக் கூட்டுவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஒரு மணி நேர கூடுதல் உழைப்பு சக்தியை, திறனை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவசமாக வாரிக் கொடுக்கும் அயோக்கியத்தனத்தைச் சட்டமாக்கிவிட முயலுகின்றனர்.

***

பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வர்க்கத் தட்டும் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வரப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு இலாபம் தரத்தக்க விலையை நிர்ணயம் செய்யவும் கடன் தள்ளுபடியும் கோருகின்றனர். தொழிலாளர்கள் பணிப் பாதுகாப்பு வழங்கவும், குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட்டித் தரவும் கோருகின்றனர். சிறு முதலாளிகள் ஜி.எஸ்.டி.யை நீக்கவும், குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் கோருகின்றனர்.

கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் இப்பொருளாதார மந்தத்திலிருந்து மீள தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம், நிலச் சீர்திருத்தம், வங்கித் துறை சீர்திருத்தம், வரி சீர்திருத்தம்  உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத மோடி அரசு, முதலாளித்துவ வர்க்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்குத் தீயாய் வேலை செய்வதை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு அம்பலப்படுத்துகிறது.

அழகு

(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழில் வெளியான கட்டுரை)


பிப்ரவரி மாதம் வெளியான புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இக்கட்டுரையை மிகவும் தாமதமாக ஏப்ரல் மாதத்தில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டமைக்காக மிகவும் வருந்துகிறோம். இவ்விதழில் வெளியான கட்டுரைகள் காலம் கடந்தவையாக இருப்பினும், அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டே வெளியிடுகிறோம்.

– வினவு


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் !

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல்மயம்!

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய தொகுதி பிரிவுத் தேர்வில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி, தரகர்கள், கீழ்மட்ட ஊழியர்கள், மோசடியாக வேலைபெற்றவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளனர். இம்முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எனக் கண்டறியப்பட்ட 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு போட்டித் தேர்வுகளை எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, ஆதார், விரல்ரேகை பதிவு உள்ளிட்ட புதிய கண்காணிப்பு வழிமுறைகளைப் பின்பற்றப் போவதாகத் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இவ்விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் சரியான திசையில்தான் செல்கின்றன என்பதைப் போன்றதொரு தோற்றம் இதன் மூலம் வலிந்து உருவாக்கப்படுகிறது.

தொகுதி 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமானதைத் தொடர்ந்து, வட்டாட்சியர், துணை ஆட்சியர், போலீசு துணைக் கண்காணிப்பாளர், சார்பதிவாளர்  உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும்  தொகுதி 1, 2 மற்றும் 2-ஏ தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதும் அம்பலமாகியிருக்கின்றன. டி.என்.பி.எஸ்.சி. மட்டுமல்லாது, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டி.ஆர்.பி. தேர்வுகள், கணினி ஆசிரியர் தேர்வுகள் ஆகியவற்றிலும், தட்டச்சுத் தேர்வுகளிலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவலர் பணிக்கான தேர்வுகளிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் நியமனத்திலும் மோசடி  முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

எனினும், அரசுப் பணியாளர் தேர்வு முறைகேட்டில் தேர்வாணைய உறுப்பினர்கள், உயரதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் பங்கு குறித்து கேள்வி எழுப்புவோரின் வாயை அடைக்கும் நோக்கில், வதந்திகளைப் பரப்புவோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்பும் என மிரட்டுகிறார் தேர்வாணையத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஜெயக்குமார். சுண்டெலிகளைப் பலியிட்டுவிட்டு, பெருச்சாளிகளைக் காப்பாற்ற  அ.தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டது என்பதற்கான அடையாளமே இந்த மிரட்டல்.

படிக்க :
கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !
♦ TNPSC மோசடி : இது வெறும் ஊழல் அல்ல ! உங்கள் உழைப்பை அழிப்பது !

***

ஒப்பீட்டு அளவில் பணிப் பாதுகாப்பும், ஊதிய உத்தரவாதமும், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பும் மட்டுமின்றி, சமூகத் தகுதியும் அரசு வேலைகள் மூலம் கிடைப்பதால்தான், தனியார் துறை வேலைகளைவிட அரசு வேலைகளுக்கு இளைஞர் பட்டாளம் ஆளாய்ப் பறக்கிறது. துப்புரவுப் பணியாளர் வேலைக்கும்கூட எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ. உள்ளிட்ட உயர் படிப்புகளை முடித்த இளைஞர்களும் விண்ணப்பிக்க முன்வருவது வேலையில்லா திண்டாட்டத்தின் கோர முகத்தை மட்டும் காட்டவில்லை. அரசு வேலை குறித்து இளைஞர்கள் மத்தியில் உள்ள மயக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த மயக்கத்தைத்தான் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள், தரகர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மோசடிக் கும்பல் தூண்டில் முள்ளாய்ப் பயன்படுத்திக் கொள்கிறது.

தொகுதி 4 தேர்வின் விடைத்தாட்களைத் திருத்துவதற்கு நடந்த அத்துமீறல்கள், முறைகேடுகள்; 2017 நடத்தப்பட்ட தொகுதி 2ஏ தேர்வில் “வெற்றி” பெற்றுப் பணியில் சேர்ந்த 26 அதிகாரிகள் திடீரெனத் தலைமறைவாகியிருப்பது; 2008 நடந்த தொகுதி 1 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் சென்னை  தி.நகரிலுள்ள பயிற்சி மையத்திற்கு இருந்த தொடர்பு; தேர்வாணையத்தில் உறுப்பினராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராமின் மகன் தனது முதல் முயற்சியிலேயே தொகுதி 1 தேர்வில் தேர்வாகி வணிக வரித்துறையில் துணை ஆணையர் ஆனது உள்ளிட்ட பல முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. இவையாவும் இம்முறைகேடுகளின் பின்னே அமைச்சர்- அதிகார வர்க்கம் –  பயிற்சி மையம் – என்றொரு வலைப் பின்னல் இருப்பதை அம்பலப்படுத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால், இது தமிழகத்தில் அ.தி.மு.க. நடத்தியிருக்கும் “வியாபம் ஊழல்!”

2011-ஆம் ஆண்டில் ஜெயா தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு தேர்வாணையம் கிரிமினல் கூடாரமாக மாற்றப்பட்டது. குறிப்பாக, 2016-ஆம் ஆண்டில், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்கு கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுத்தது அம்பலமாகி, ஜெயா அரசால் நியமிக்கப்பட்ட 11 தேர்வாணைய உறுப்பினர்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. எனினும், நீதிமன்றத்திற்கே சவால் விடும் வகையில் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுள் 5 பேரை மீண்டும் உறுப்பினராக நியமித்தது,  ஜெயா அரசு. சம்பளமில்லாத கவுரவப் பதவியான டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் ஆவதற்கு, இலட்சங்களில் சம்பளம் வாங்கிய நீதிபதி பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற இராமமூர்த்தி, “நீதிபதிக்கான சம்பளத்தைவிட இதில் எத்தனை மடங்கு சம்பாதிப்பார்?” எனக் கேள்வியெழுப்பியது உச்ச நீதிமன்றம்.

படிக்க :
TNPSC ஊழல் – பின்னணி என்ன ? | பேரா ப.சிவக்குமார் | காணொளி
♦ நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !

தொகுதி 1 முதன்மைத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக அத்தேர்வில் பங்கேற்ற ஸ்வப்னா என்ற திருநங்கை பொதுநல வழக்கு தொடர்ந்தார். குறிப்பாக, அத்தேர்வில் சென்னை மனிதநேயம், அப்பல்லோ பயிற்சி மையங் களிலிருந்து மட்டும் 62 பேர் (மொத்த வெற்றியாளர்கள் 74 பேர்) வெற்றி பெற்று அதிகாரிகளாகி இருக்கிறார்கள். அத்தேர்வே மிகப்பெரும் மோசடி என்பதை இந்த 62 பேரின் தேர்வு எடுத்துக் காட்டுகிறது. இதனைத் தொடர்ந்து பயிற்சி மைய இயக்குநர் சாம் மற்றும் தேர்வாணையத்தைச் சேர்ந்த ஓரிரு கீழ்நிலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். எனினும், சாம் சிறைக்குச் செல்லும் முன்பே முன் பிணை கொடுத்துக் காப்பாற்றப்பட்டார். மேலும், விசாரணை மனித நேயப் பயிற்சி மையத்தை நடத்திவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சைதை துரைசாமி உள்ளிட்டு மேல்மட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளை நோக்கி நகருகிறது எனப் புரிந்துகொண்ட அ.தி.மு.க. அரசு 2018-இல் விசாரணை அதிகாரிகளை அதிரடியாக மாற்றி, அவ்விசாரணையை முடக்கிப் போட்டுவிட்டது.

முறைகேடுகளின் மூலம் நிரப்பப்படும் நியமனங்கள் நியாயமான முறையில் தேர்வெழுதிக் காத்திருக்கும் இளைஞர்களை மட்டும் ஏமாற்றவில்லை. அதனைவிட முக்கியமாக, மோசடிகளின் மூலம் அரசுப் பதவிகளைப் பெறுபவர்கள், குறிப்பாக வட்டாட்சியர், போலீசு துணைக் கண்காணிப்பாளர், வணிக வரி அதிகாரிகள் என அதிகாரமிக்க பதவிகளைப் பெறுபவர்கள் சட்டப்படியும் நியாயப்படியும் நடந்துகொள்வார்கள் என்பதற்கு அடிப்படையே கிடையாது. இப்படிப்பட்ட நியமனங்கள் சிவில் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் குரூரத் தாக்குதலாகும். இப்படிப்பட்ட அதிகாரிகள், அவர்களது மோசடி நியமனங்கள் அம்பலமாகி பிற்பாடு பதவி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர்கள் பதவியில் இருந்த காலத்தில் போட்ட உத்தரவுகள், எடுத்த நடவடிக்கைகள் செல்லுபடியாகும் என்றால், அதனைவிட குரூர நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது.

படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாதவர்கள், அதற்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்தும் திராணியற்றவர்கள் தமது தோல்வியை மறைக்கவே போட்டித் தேர்வு முறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். வேலை தேடும் இளைஞர்களுள் தகுதியும் திறமையும் கொண்டவர்களைக் கண்டுபிடிக்கத்தான் போட்டித் தேர்வுகளை நடத்துவதாக அவர்கள் கூறுவதெல்லாம் நாடகம், மோசடி என்பது தேர்வாணையத் தேர்வுகளில் நடந்திருக்கும் முறைகேடுகளின் வழியாக மட்டுமல்ல, வியாபம் ஊழல், நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள், மத்தியப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வினாத்தாட்கள் வெளியானது என வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

இவையாவும் இந்தக் கட்டமைப்பு எவ்வளவு தூரத்திற்குத் திருத்த முடியாத அளவிற்குச் சீரழிந்து நிற்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றன. இந்த நிலையில் முறைகேடுகளைத் தடுப்பதற்கு புதிய புதிய கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கி இந்த அமைப்பு முறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த முனைகிறார்கள். அவையெல்லாம் புற்று நோய்க்கு பாரசிட்டமால் மாத்திரை கொடுப்பதைப் போன்றதாகும்.

கைகளில் புத்தகக் கட்டுகளோடும், கண்களில் கனவுகளோடும், மனதில் நம்பிக்கையோடும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களே, இனி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். பாரசிட்டமால் மாத்திரை போதுமா, அல்லது அறுவைச் சிகிச்சை தேவையா என்பதை!

தமிழ்ச்சுடர்

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

கொரோனா பொருளாதார நெருக்கடியில் மோடி அரசின் 12 மணி நேர வேலை யோசனை !

அருண் கார்த்திக்
12 மார்ச் அன்று செய்தித்தாள்களில் ‘ஊரடங்கு முடிந்ததும் தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை!’ என்பது போன்ற தலைப்பிட்ட செய்தி வந்தது. தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை அதிகரிக்க அரசு அமைத்த குழு பரிந்துரை செய்ததாகவும் அந்தப் பரிந்துரையை ஏற்று சட்ட திருத்தங்களை மோடி அரசு கொண்டு வரப் போவதாகவும் அந்த கட்டுரை கூறியிருந்தது. இதனால் உற்பத்தி செலவு குறையும் என்றும் அதனால் தொழிற்சாலைகள் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் விளக்கம் கூறியிருந்தது.

இந்த மாதிரி அறிவுரைகளைக் கூறும் பொருளாதார வல்லுனர்கள் என கூறப்படுபவர்கள் கண்டிப்பாக மூளையை முதுகில் வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும்! நடப்பதைப் பற்றி எந்த புரிதலும் இல்லாதவர்கள் மட்டுமே இவ்வாறு யோசனை கூற முடியும்.

கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பாகவே பொருளாதாரம் மந்த நிலையில் தான் இருந்தது. Consumption எனப்படும் நுகர்வு சமீபத்திய வரலாற்றில் காணப்படாத அளவு குறைந்திருந்தது. நடுத்தர மக்கள் வாங்கும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் கீழ்தட்டு மக்கள் வாங்கும் பிஸ்கட், பற்பசை முதல் உள்ளாடை வரை அனைத்தும் விற்பனை சரிவை சந்தித்து இருந்தது. பொருளாதாரம் ஒரு சங்கிலித்தொடர் என்பதால் இந்த சரிவு மற்ற துறைகளையும் பாதித்தது. எடுத்துக்காட்டாக சரக்கு வாகனங்களின் விற்பனை 50 சதவீதத்துக்கு மேல் சரிவை கண்டது. இந்த தேக்க நிலையினால் நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை கட்ட முடியாமல் வராக்கடனாக மாறியது. வங்கிகளின் கணக்குகளில் வராக்கடன் அதிகரிப்பதால் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைக்க தொடங்கின. இவ்வாறு நீண்டு கொண்டே சென்றது.

இவை அனைத்துக்கும் காரணம் அடித்தட்டு மக்களால் பொருட்களை வாங்க முடியாமல் போனதுதான். பொருளாதாரத்தில் இதற்கு demand side constraint என்று கூறுவார்கள். அதாவது சந்தையில் பொருட்கள் இருக்கின்றன ஆனால் அதை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை, அதாவது தேவை இல்லை, என்பதுதான் இதற்குப் பொருள். பொதுவாக இந்த விற்பனை குறைவுக்கு பொருளாதாரத்தில் இன்னொரு காரணம் கூறப்படுவது உண்டு. அதற்குப் பெயர் supply side constraint. அதாவது, போதுமான அளவு பொருட்கள் சந்தையில் இல்லாததால் விற்பனை குறைவது. எந்த வகையில் விற்பனை குறைகிறதோ அதற்கு ஏற்றாற்போல் அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொருட்கள் சந்தையில் இல்லாமல் இருப்பதனால் விற்பனை குறைகிறது என்றால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களால் வாங்க முடியாமல் விற்பனை குறைகிறது என்றால் மக்களின் வாங்கும் திறனை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிக்க:
♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !
♦ கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !

இப்போது இந்தியா சந்தித்து வரும் சரிவு மக்களின் வாங்கும் திறன் குறைந்து இருப்பதால் இருக்கும் சரிவு. இதுதான் சரிவுக்குக் காரணம் என்று நம்மால் எப்படி உறுதியாக கூற முடிகிறது? அனைத்து துறைகளிலும் உள்ள தொழிற்சாலைகள் அவை உற்பத்தி செய்யக்கூடிய அளவில் எத்தனை சதவீதத்திற்கு உற்பத்தி செய்கின்றன என்பதை வைத்து இதை முடிவு செய்வார்கள். இதை திறன் பயன்பாடு (capacity utilisation) என்று சொல்வார்கள். தற்போதைய நிலையில் இந்தியாவில் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் தொடங்கி பல துறையில் செயல்படும் தொழிற்சாலைகள் மிகவும் குறைந்த திறன் பயன்பாட்டில் இயங்குகின்றன.

இதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான குறியீடு ஒன்று உள்ளது. நாட்டிலுள்ள மின்சார உற்பத்தி ஆலைகள் அவர்களுடைய உற்பத்தி அளவில் எத்தனை சதவீதம் உற்பத்தி செய்கின்றன என்பதுதான் அந்தக் குறியீடு. இதற்கு plant load factor என்று பெயர். எடுத்துக்காட்டாக, 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு ஆலை 50 மெகாவாட் உற்பத்தி செய்கிறது என்றால் அந்த ஆலை 50% plant load factor-இல் இயங்குகிறது என்று பொருள். கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி ஆலைகளிலும் இந்த plant load factor வரலாறு காணாத அளவு குறைவாக இருந்துள்ளது. இதற்குப் பொருள் என்னவென்றால் நாட்டில் மின்சார உற்பத்தி திறன் இருக்கிறது ஆனால் அந்த மின்சாரத்தை வாங்கி உபயோகப்படுத்த ஆர்வமில்லாமல் இருக்கிறது. இன்னும் அனைத்து வீடுகளும் மின்சார மயமாக்கப்படாத ஒரு நாட்டில் மின்சாரத் தேவை குறைவது என்பது வேறு ஏதோ பெரிய பிரச்சனையை காட்டுகிறது.

இதற்கும் அதே பொருள் தான். மக்களிடம் வாங்கும் திறன் இல்லை அதனால் உற்பத்தியாளர்கள் பொருட்களை உற்பத்தி செய்வதில்லை. அதனால் உற்பத்தியாளர்கள் மின்சாரத்தை பயன்படுத்துவது குறைந்துள்ளது.

பிரச்சனை இவ்வளவு பெரிதாக இருந்தாலும் இதற்கு தீர்வு மிக எளிதானது. மக்களின் வாங்கும் திறனை அதிகரித்தால் இந்த பொருளாதார சுழற்சி என்பது மீண்டும் நகர தொடங்கிவிடும். எளிதாக சொல்ல வேண்டுமென்றால் சாதாரண மக்களின் கைகளில் அதிகப்பணம் புழங்கினால் அவர்கள் இயல்பாகவே அதிக பொருட்களை வாங்குவார்கள். அது அதிக உற்பத்திக்கு வழிவகுக்கும். அது வேலைவாய்ப்பை சிறிதளவேனும் அதிகரிக்க வழிவகை செய்யும். இதை demand side intervention என்று கூறுவார்கள்.

இது ஒன்றும் கம்யூனிச அல்லது சோசலிச கொள்கை அல்ல, முதலாளித்துவ அறிஞர்கள் கூறும் தீர்வு தான் இது. ஜான் மேனார்டு கீன்ஸ் என்ற பொருளாதார அறிஞர் வகுத்த கொள்கைகள் தான் இது. முதலாளித்துவத்தின் சொர்க்க பூமி என்று கருதப்படும் அமெரிக்காவிலேயே 1930களில் பொருளாதார தேக்க நிலை வந்த பொழுது பிராங்க்ளின் ரூசவெல்ட் என்ற அதிபரால் அமல் படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற கொள்கைகள் தாம் இவை!

ஆனால், இந்திய அரசு இதை எதையும் செய்யாமல் நேரெதிரான வேலைகளை செய்து வருகிறது. வாங்கும் திறனை அதிகரிப்பதற்கு பதிலாக உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேலைகளை செய்கிறது. அதாவது குறைந்த வட்டியில் கடன்கள் கொடுப்பதன் மூலமும் வருமானவரி விலக்கு அளிப்பதன் மூலமும் மற்ற முறைகளில் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும் உற்பத்தியை அதிகரிப்பார்களாம். உற்பத்தி அதிகரித்தால் விலை குறைந்து மக்கள் வாங்கத் தொடங்கி விடுவார்களாம். Supply side intervention என்று இதற்குப் பெயர்.

இவ்வாறு உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிப்பதன் ஒரு அங்கம்தான் தொழிலாளர்களுடைய சம்பளத்தை குறைப்பது. சம்பளத்தில் நேரடியாகவும் குறைக்கலாம் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலமும் மறைமுகமாக குறைக்கலாம். கடந்த காலங்களிலும் பெருநிறுவனங்களுக்கு வருமான வரி சலுகை, குறைந்த வட்டியில் கடன் போன்றவற்றை மோடி அரசு கொடுத்து பொருளாதாரத்தை நிமிர்த்தும் முயற்சி செய்தது. ஆனால் அவை எதுவும் எடுபடவில்லை.

இவர்கள் கையாலாகா தனத்திற்கு பாவப்பட்ட கொரோனா பழியை ஏற்றுக் கொண்டது. சாதாரண காலங்களிலேயே செயல்படாத இந்த முயற்சிகள் இப்போது நாம் சந்திக்கும் இக்கட்டான சூழலில் எப்படி செயல்படும் என்று இவர்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாம் செயல்பட்டுக் கொண்டிருந்த பொழுதே சாதாரண மக்களிடம் பணம் இல்லாமல் இருந்தது. அதனால் அவர்கள் பொருட்களை வாங்காமல் இருந்தனர். இப்போது எல்லாம் ஸ்தம்பித்து போன பிறகு அவர்கள் கையில் சுத்தமாக காசே இருக்காது, பட்டினி கிடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்த சமயத்தில் ஒரு முதலாளித்துவ பொருளாதார அறிஞரை கேட்டாலும் கூட மக்கள் கையில் பணம் போய் சேர வேண்டும் என்று தான் கூறுவார்கள். பொருளாதார வலதுசாரிகள் என்று கருதப்பட்ட டிரம்ப் முதல் போரிஸ் ஜான்சன் வரை அனைவரும் மக்களிடம் ‘நீங்கள் வீட்டிலேயே இருங்கள், உங்களுக்கு தேவையானதை அரசு செய்யும், உங்களுக்கு மாதம் இவ்வளவு என்று பணத்தையும் நாங்கள் தருகிறோம்’ என்று கூறுகிறார்கள். ஆனால் இந்திய அரசு மட்டும் அறிவாளி தனமாக வேலை நேரத்தை எப்படி அதிகரிப்பது என்று பேசிக் கொண்டிருக்கிறனர்.

அரசு இவ்வாறு செய்வதன் மூலம் வரப்போகும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்க போகின்றது. ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு இல்லாததால் வன்முறையில் ஈடுபட்டதாக குஜராத்திலிருந்து செய்தி வந்துள்ளது. நிலைமை மோசமாக ஆக இது நாடு முழுதும் பரவும் அபாயம் உள்ளது.

வேதனை என்னவென்றால் இந்த நிலையிலும் கூட அமெரிக்க எஜமானர்கள் எப்படி திருப்தி செய்வது என்றே நமது ஆட்சியாளர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மண்ணில் தலையை புதைத்துக்கொண்ட நெருப்புக்கோழி என்று ஒரு எடுத்துக்காட்டு சொல்வார்கள், நம்ம ஆட்சியாளர்களோ மண்ணில் தலையை புதைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் கண்ணையும் மூடிக்கொண்டு இருப்பது போல் தெரிகிறது.

நாம் இதை எல்லாம் சொன்னால், இப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களில் கூட அரசை குறைகூறுவதிலேயே குறியாக உள்ளீர்கள் என்று நடுநிலையாளர்கள் நம்மை குறை கூறுகிறார்கள்.

அய்யன் திருவள்ளுவரே எப்போதும் போல இதற்கும் பதில் சொல்லியுள்ளார்!

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

அருண் கார்த்திக்

கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !

கொரோனோ பிரச்சனை காரணமாக ஊரடங்கு. மக்கள் பலரும் வீட்டில் இருக்க அவர்களைப் பாதுகாக்க மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் .
மற்ற அனைவரையும் விட சுகாதாரப் பணியாளர்கள் வேலை என்பது கடினமானது மட்டுமல்ல போராட்டமானதும்கூட.

அவர்களோடு இணைந்து வேலை செய்யும் போது அவர்களுடைய வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. ஊரடங்கு காரணமாக ஊரே தாமதமாக எழுவதை வழக்கமாக கொண்டிருக்கும்போது,
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக நகராட்சி துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் காலை ஐந்தரை மணிக்கு எல்லாம் அலுவலகம் வர வேண்டும். அப்படி வரவேண்டும் என்றால் அவர்கள் எத்தனை மணிக்கு எழுந்திரிக்க வேண்டும்?

அதிகாலையே கண்விழிக்க வேண்டும். அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் சுமார் மூன்று கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கிறது. காலை 5.45 மணிக்குள் அனைவரும் கையெழுத்திட வேண்டும். ஆறு மணிக்கு தங்களுக்கான பாதுகாப்பு (அதன் தகுதியை பற்றி பின்னர் பேசலாம்) கவசங்களை மாட்டிக்கொண்டு மண்மவெட்டி, கடப்பாரை சாக்கடையை சுத்தம் செய்வதற்கு தேவையான இழுப்பான், பிளிச்சிங் பவுடர் மூட்டை அதை தெளிக்கும் பாண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதிகாரிகள் சொல்லும் வார்டுகளுக்கு செல்ல வேண்டும். சுமார் 6.30 மணியிலிருந்து 7.30க்குள் வேலைகளைத் தொடங்க வேண்டும்.
அப்படி அவர்களோடு நாம் பல இடங்களில் வேலை செய்தோம் அவர்களோடு ஒரு சிறிய நேர்காணல்….

தொற்றுநோய் பரவ காலத்திலே வேலை செய்றீங்களே! உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையா?

பிளிச்சிங் பவுடர் தெளிக்கும்போது வியர்வை வரும். சுண்ணாம்பும் வியர்வையும் சேர்வதால் கை எல்லாம் ஏரிய ஆரம்பிச்சிடும். கொளுத்தற வெயில்ல வேர்வையும் சேர்ந்துக்கும். கண்களும் எரியும் பிளிச்சிங் பவுடர் அலர்ஜியால கையிலேர்ந்து இருந்து அரிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். அதிலே வேர்வையும் உப்பும் சேர்ந்து எரிச்சலும் அரிப்பும் சேர்ந்தா சொல்லவா வேணும் வேலை செய்யவே முடியாது.
காலையிலேயே சீக்கிரம் எந்திரிக்கறதால பசி வந்து அதிகமாயிடும். ஆனால் உடனே சாப்பிட முடியாது .

வேலை செஞ்சுட்டு அலுவலகத்திற்கு போய்தான் சாப்பிட வேண்டும். அதுக்கே மணி பத்தரை ஆயிடும். வேற வழியில்ல மூக்கு, வாய் எல்லலாம் எரியும். வேலைகள் முடியலன்னா மேஸ்திரி சத்தம் போடுவார். இன்ஸ்பெக்டர் மிரட்டுவார். அதிகாரி பேனாவை எடுப்பார். வேலைக்கு சிக்கலாக்கும், சொல்றத செஞ்சுதான் ஆகணும்.

சரி எல்லாம் எங்கே தங்கி இருக்கீங்க? எல்லா வசதிகளும் சரியா செய்து இருக்கா ?

சரியான தூக்கம் இல்ல. அந்த குப்பை வண்டியிலே வச்சி கூட்டிக்கிட்டு போவாங்க.
சத்தான உணவு சாப்பிட்டால் தான் நோய் வராதுன்னு சொன்னாங்க. மருந்தடிக்கும் எங்களுக்கு எப்படி சோறு போடுறாங்க தெரியுமா? தயிர் சோறு போடுறாங்க அது கஞ்சி சோத்தை விட மோசமா இருக்கு ஊறுகா கூட கிடையாது .

நோய் எதிர்ப்பு ஊசி எங்களுக்கு போடணும்னு சொல்றாங்க அதுவும் கிடையாது. மருந்து அடிக்கறதால கையெல்லாம் புண்ணாகிவிடும். குடிக்க டீ தர மாட்டேங்குறாங்க; சுத்தமான தண்ணி கொடுக்க மாட்டேங்கிறாங்க ஆனால் வேலை செய்யாமலா இருக்கிறோம்? சாக்கடைய, குப்பையை வராமலா இருக்கோம்… ப்ளீச்சிங் பவுடர் போடாம இருக்கோமா?

படிக்க:
♦ கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !
♦ தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு ! தமிழக தலைமை செயலாளருக்கு PRPC யின் மனு !

ஒவ்வொரு வீட்டுக்கும் காலையில் மருந்து அடிச்சு முடிக்கிறதுக்கு காலைல பத்தரை மணி ஆயிடும். அப்புறம் சாப்பாடு சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்டு. அதுக்கு அப்புறம் கவர்மெண்ட் ஆபீஸ் எல்லாம் போய் மருந்து அடிக்கணும். அப்புறம் ஆஸ்பத்திரிக்கு போகணும்.

அப்புறம் கார்பரேஷன் ஆபீஸிர்ங்க வீட்டுக்கு போகணும். கலெக்டர் வீட்டுக்கு போகணும். நீதிபதி வீட்டுக்கு போகணும். போலீஸ் வீட்டுக்கு போகணும் எஸ்.பி. வீட்டுக்கு போகணும்.

இதெல்லாம் முடிச்சிட்டு தான் மதிய சாப்பாடு. அதான் சொன்னேனே தயிர் சோறு போடுவான் கஞ்சி மாதிரி இருக்கும். ஒரு ஊருகா இருக்காது. அப்புறம் கொஞ்ச நேரம் ரெஸ்ட்.

இரண்டு மணிக்கு வேலைக்கு கிளம்ப வேண்டும். மீண்டும் அதே மாதிரி வேலை. ஐந்து ஆறு மணிக்கு தான் கடைவீதியில குப்பையை அள்ளணும். சாக்கடை அள்ளணும். அங்கே கடையில நிக்கறவங்களுக்கு எல்லாம் வட்டம் போடணும். இந்த வேலை செஞ்சு முடிக்கிறதுக்கு ஏழு எட்டு மணி ஆயிடும். அப்புறம் வீட்டுக்கு போயி
படுத்தால் உடனே தூக்கம் வருமா கைகால் அசதியா இருக்கும். லேட்டா தூக்கம் வரும் காலை நாலு மணிக்கு போகணும் .

பாதுகாப்பு கவசம் எல்லாம் கரெக்டா கொடுத்து இருக்காங்களா?

அதெல்லாம் குடுத்தாங்க… அடுத்த நாளே கிழிஞ்சு போச்சு. இருபது ரூவா கொடுத்து ஓரம் அடிக்க மாட்டியான்னு திருப்பி நம்மலே கேக்குறாங்க. கை உறையெல்லாம் கிழிஞ்சு போச்சு இப்போதைக்கு இது தேவலாம். என்ன பண்ண முடியும்?

டெய்லி வீட்டுக்கு போய்ட்டு வந்துருவீங்களா ?

இந்தப் பில்லுகடை சந்து இருக்குல்ல. அங்கதான் அரங்கம் எடுத்து கொடுத்திருக்காங்க. அங்க தான் பகல்ல போய் 40 பேர் தங்கி இருக்கோம்.

அங்க தண்ணி போக மாட்டேங்குது கக்கூஸ் சரி கிடையாது எங்க ஆபீஸ்ல பிளம்பர் எல்லாரும் இருக்காங்க. அவங்கள வச்சு எந்த வேலையும் செய்யறதுல்ல.
அத விடுங்க இதுவரைக்கும் டாக்டர் கூட வந்து காய்ச்சல் அடிக்குதா ? தலைவலிக்குதான்னு எங்களை செக்கப் செஞ்சதே கிடையாது. கேட்டா நீ ஒழுங்கா வேலைசெய்யுறீயான்னு கேக்குறாங்க.

பேர்தான் தூய்மைப் பணியாளர், நல்ல கக்கூசு உண்டா? தண்ணித்தொட்டி உண்டா ?
நாங்க அம்பது பேரு பகல்ல அந்த இடத்தில் தான் தங்கி இருக்கோமே. அந்த இடத்துக்கு வந்து பாருங்க கக்கூஸ வந்து பாருங்க. தண்ணீ டேங்க்க வந்து பாருங்க. நாங்களாவது ஆம்பளைங்க பரவாயில்லைங்க. 33 பொம்பளைங்க இருக்காங்க எப்படிங்க ஒன்னுக்கு ரெண்டுக்கு போவாங்க. நீங்களாவது பார்த்து ஏதாவது செய்யுங்க

இப்படி தொற்றுநோய் பரவ காலத்தில் நீங்க வரிங்களே உங்களுக்கு பிரச்சனை இல்லியா வீட்டில் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா ?

வேற என்ன பண்றது வேலை செஞ்சுதான் ஆகணும். ஒரு சில பேர் இந்த வேலைக்கு புதுசா வந்து இருக்காங்க. அவங்க இதுக்கு முன்னாடி பல இடங்களில சாக்கடை அடைப்பு எடுக்குறவங்க தான், இங்க அதேபோல வேலைகளத்தான் செய்றாங்க. பெர்மணண்ட் ஆக்குவாங்கன்னு ஒரே ஆசைதான் வேற என்ன இருக்கு.

சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி சொல்கிறோமென்று கை தட்டுவதும் சங்கு ஊதுவதும் மணியடிப்பதும் பயனளிப்பதில்லை. பஞ்சாபின் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மலர் தூவினார்களாம். அதைப்பற்றி நான் ஒருவரிடம் கேட்ட போது, அவர் சொன்னார் “அந்த குப்பையையும் நாங்க தான் அள்ளணும்”

சுகாதாரப் பணியாளர்கள் சாதாரண காலங்களில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் போது திமிர் புடிச்சவங்க ஒழுங்கா வேலைய பார்க்குறாங்களா பாரு என்று ஏளனமாகவும் கேவலமாகவும் பேசும் சமூகம் தான் இன்றைக்கு அவர்களை வாழ்த்துகிறது என்றால் அது நம்பவா முடிகிறது ? அப்படி அவர்களுடைய சேவைக்காக அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றால் அவர்கள் பணி நிரந்தரமாகவும் அவரது உரிமைகளுக்காக தோள் கொடுப்பதும் தான் ஒரே வழி.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நேர்காணல் : தோழர் பாலு, மண்டல ஒருங்கிணைப்பாளர், கடலூர்.

***

க்கள் அதிகாரத்தின் சார்பில் கடலூர் நகராட்சி தொழிலாளர்களுடைய வேலை மற்றும் வாழ்விடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த வகையில் நகராட்சி அதிகாரிகள் முன் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றில் கடுமையாக வேலை செய்யும் இந்த நகராட்சி தோழர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை, என்ற அடிப்படையில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும், அனைவருக்கும் முகக் கவசம், கையுறை கொடுக்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் நல்ல முறையில் உணவு கொடுக்க வேண்டும். பெண்கள் தங்குகின்ற டிவிஷன் 3 மஞ்சக்குப்பம் பில்லு கடை சந்தில் உள்ள கலைஞர் மண்டம் பழுதடைந்துள்ளது. இங்கு அனைத்தும் இருக்கிறது எதுவும் இயங்கவில்லை. கழிவறை உள்ளது அவை பயன்படுத்த இயாலாத வகையில் உள்ளது. தண்ணீர் வருகிறது அதை முறையாக பயன்படுத்த முடியாது, பெரிய அளவில் மண்டபம் இருக்கிறது அங்கு மின்விசிறி இல்லை. குறிப்பாக கழிவறை இல்லாமல் பெண்கள், சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக நாம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பேசியதன் அடிப்படையில் தற்போது அப்பகுதியில் உள்ள அனைத்து நகராட்சி ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட்டுள்ளார்கள். மேலும் முககவசம் மற்றும் கையுறைகளை கொடுத்துள்ளார்கள்.

This slideshow requires JavaScript.

இவை மட்டுமின்றி அதிகாலையில் “ஒரு டீ கிடைக்குமா தம்பி…” என்று நம்மிடம் உரிமையாக கோரிக்கை வைத்தார்கள் தூய்மைப் பணியாலார்கள், இதனை மஞ்சக்குப்பம் பகுதியிலுள்ள இஸ்லாமிய நண்பர்கள் மத்தியில் கோரிக்கை வைத்தோம் திரு நஸ்ருதீன், திரு ஷேர் அலி, திரு மாலிக் ஆகியோர் கடந்த ஐந்து நாட்களாக அவர்களுக்கு காலையில் தேனீர் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். அந்த நண்பர்களுக்கு மக்கள் அதிகாரத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

அதேபோல தற்காலிக பணியாளர்கள் ஏற்கனவே தினக் கூலிகளாக வேலை செய்து வந்தவர்கள், எனவே அவர்களுக்கான ஊதியத்தை வாரத்தில் ஒரு நாள் என்று கொடுக்க வேண்டும் என்பதையும் ஏற்று அதயும் கொடுத்துள்ளார்கள். மேலும் தூய்மைப் பணியாலர்களின் பல்வேறு நியாயமான கோரிக்கைகளையும் மெல்ல மெல்ல அமல் படுத்துவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள நகராட்சி தொழிலாளர்கள் மற்றும் மேஸ்திரிகள் அனைவரும் மக்கள் அதிகாரம் தோழரிடம் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர். தொடர்புக்கு : 81108 15963

கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !

கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !

சுமார் ஒரு வாரத்திற்கு முன்னதாக முத்து மாவட்டம் ஆப்’பில் தன்னார்வலராக பணி செய்ய பெயர் பதிவு செய்தோம்.

தேவைப்படும்போது அழைப்பதாக அதில் பதில் வந்தது. பதிவு செய்ததற்கான வரிசை எண்ணும் தரப்படவில்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து, தூத்துக்குடி தாலுகா அலுவலகம் சென்று “தன்னார்வலராக மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணி செய்ய விருப்பம், இதனால் ஆன்லைனில் பதிவு செய்தோம், ஆனால் எந்த ஒரு தகவலும் இல்லை” என்றோம். அங்கு இருந்த பணி அலுவலர்கள் “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தான் ஒரு பெயர் பட்டியல் வந்தது அதில் உங்கள் பெயர் இல்லை, தேவைப்பட்டால் கூப்பிடுவோம்” என்றனர். “அப்படியானால் எங்கள் பெயர் மற்றும் செல்போன் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்” என்றோம். அவர்கள் “இல்லை நாங்களே கூப்பிடுகிறோம்” என்றனர்.

“எங்கள் பெயர், செல்போன் எண் இல்லாமல் எங்களை எப்படி நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்?, எங்கள் அமைப்பின் சார்பில் தான் அரசு, தன்னார்வலர்களை  நிவாரணப் பணிகளில் இணைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம், அதனால் நாங்களும் நிவாரணப் பணி செய்ய விரும்புகிறோம்”  என்று தெரிவித்தோம்.

அதன்பிறகு “பலர் பெயர் பதிவு செய்கிறார்கள், கூப்பிட்டால் வர மறுக்கிறார்கள், சார்” என்று கூறியவாறு அவர்களின் பராமரிப்பில் இருந்த ஒரு நோட்டில் எனது பெயரையும் PRPC செயற்குழு உறுப்பினர் மைக்கேல் பெயரையும் பதிவு செய்தனர்.

11-04-2020 அன்று மதியம் 12.00 மணிக்கு “இரண்டு போட்டோக்களை எடுத்துக் கொண்டு  தாலுகா அலுவலகத்திற்கு உடனே வாங்க”என்று தாலுகா அலுவலகத்திலிருந்து அழைத்தார்கள். அங்கு சென்ற நாங்கள் தலா இரண்டு போட்டோக்கள் கொடுத்ததும் ஐந்து நிமிட நேரத்தில் தன்னார்வலர் அடையாள அட்டை கொடுத்தார்கள்.

அடையாள அட்டை பெற்ற பிறகு நாங்கள், எங்கே போகவேண்டும்?, என்ன வேலை? சார்… என்று கேட்டோம்.

“போல்டன்புரம் போனும்”,

“அங்க உள்ள ரேஷன் கடை பொருட்களை பொதுமக்களுக்கு வீடு வீடாக போய் கொடுக்கனும்” என்றனர்.

போல்டன்புரம் பகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் “ரெட் அலர்ட்” அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதி. மாநகரத்தின் கிட்டத்தட்ட மையப் பகுதி. அந்தோணியம்மாள் என்ற 65 வயது பெண்மணி இறந்து இதற்கு முந்தைய நாள் தான் அடக்கம் செய்யப்பட்டார். மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பலமான போலீஸ் பந்தோபஸ்து. வெளியாட்கள் யாரும் செல்ல முடியாத அளவில் பாதுகாப்பாக இருந்தது.

நாங்கள் போலீசாரிடம் விவரம் தெரிவித்து, ரேஷன் பொருள் விநியோகிக்கும் பகுதிக்கு சென்று விட்டோம். ரேஷன் கடை ஊழியர் பில் போடும் முனீஸ் என்பவரிடம் “எங்களை தாசில்தார் ஆபீஸிலிருந்து அனுப்பியுள்ளார்கள், நாங்கள் தன்னார்வலர்கள்” என்ற விவரம் கூறி அறிமுகப்படுத்தினோம். “என்ன வேலை எங்களுக்கு”? என்றோம். அவர் “இப்பகுதியில்  ரேஷன் கடைக்கு மக்கள் வந்தால் கூட்டமாகிவிடும், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், நாமே ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பொருட்களை விநியோகிக்க வேண்டும், நீங்கள் மக்களை கூட்டமாக  சேராமல் ஒழுங்குபடுத்துங்கள்” என்றார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நமக்கு முன்பாகவே ராஜுவ் நகரை சேர்ந்த ராஜா (தி.மு.கவை சேர்ந்தவர்) டூவிபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் மற்றும் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த பவர் ராஜேந்திரன் தன்னார்வலராக பணியை சிறப்பாக செய்து கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் சேர்ந்து “ரேஷன்கடை ஜாமான் வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கொஞ்சம் சத்தமாக ஒவ்வொரு வீட்டு முன்பும், காம்பவுண்ட் முன்பும் தகவலை தெரியப்படுத்தினோம். குரலை கேட்டு வெளியே மக்கள் வந்தனர். போல்டன்புரம் பகுதி அதிமுக பிரமுகர் இளையராஜாவும் எங்களுடன் வந்து உதவி செய்தார்.

நாங்கள் இந்த (ஏப்ரல்) மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களிடம் அவர்களின் கார்டை வாங்கி என்ன வேண்டும்? என்று கேட்டு, பில் போடும் முனீஸிடம் கொடுத்து பதிவு செய்து, பதிவு செய்த ரேசன் பொருட்களை எடை போட்ட பின்பு ஊழியர்கள் வீட்டின் முன்பு தூக்கிக் கொண்டு போய் சேர்த்தோம். சிலர் எங்களுக்கு சிரமம் என்று கருதி, லோடு ஆட்டோவில் எடைபோட்ட இடத்திற்கு வந்து சமூக விலகளை  கடைப்பிடித்து அமைதியாக, பொறுமையுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

“இதோ… அந்த வீடுதான் கொரோனாவில் இறந்த பெண்ணின் வீடு என்று ஒருவித அச்சத்தோடு சிலர் எங்களிடம் காண்பித்தனர். அந்தத் தெருவில் தான் முதல் நாள் நாங்கள் விநியோகித்தோம். நாங்கள் அந்த தெருவில் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்த ஒரு சில மணி நேரங்களில் இருமுறை மாநகராட்சி வாகனத்தில் கிருமிநாசினி தெளித்துச் சென்றார்கள் சுகாதாரப் பணியாளர்கள்.

எங்களுடன் வந்த இளையராஜா (அ.தி.மு.க பிரமுகர்) என்பவர் தான் நாங்கள் கையுறை இல்லாமல் இருப்பதை பார்த்து அவர் வீட்டிலிருந்து எனக்கும், மைக்கேலுக்கும் மற்ற தன்னார்வலர்களுக்கும் எடுத்துத் தந்தார். மாஸ்க் நாங்களே கொண்டுவந்திருந்தோம். ஏற்கனவே 15 ரூபாய்க்கு வாங்கினோம். அது பாதுகாப்பான மாஸ்க் இல்லை என்பது தெரியும். ஆனால் மருந்துக் கடைகளில் போதுமான அளவு உயர்தர பாதுகாப்பான மாஸ்க்குகள் ஸ்டாக் இல்லை.

படிக்க:
♦ பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் !
♦ தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு ! தமிழக தலைமை செயலாளருக்கு PRPC யின் மனு !

ரேஷன் கடை ஊழியரும், எடை போடுபவருமான தமிழ் என்பவருக்கு வயது சுமார் 56க்கு மேல் இருக்கும். அரிசியை அள்ளுவது, நிறுத்தி எடை போடுவது, குனிந்து பையில் தட்டுவதும் என நூற்றுக்கணக்கான முறை குனிந்தும், நிமிர்ந்தும் ஒரு நொடி கூட வீணாக்காமல் வெயிலில் வியர்வை சிந்தி, சிரித்தபடியும், நகைச்சுவை உணர்வுடனும் மக்கள் பணி செய்தார்.

பில் போடும் முனீஸ், யாராவது ஒருவர் பொருள் வாங்காமல் கால தாமதமாக வந்தாலும், அந்த ஒருவருக்காக தனது டூவீலரை திருப்பி கொண்டு போய் பில் போட்டு வருவார். கொரோணா நிதி வாங்காத கார்டுதாரர்களை, அவர்களே மறந்தாலும் இவர் நினைவுபடுத்தி ரூ. 1000/- வழங்கிக் கொண்டும் வந்தார். “அரசு ஊழியர்கள் ஒழுங்காக வேலையை செய்ய மாட்டார்கள், ஒப்பேத்துவார்கள்” என்ற பொதுக்கருத்தை இந்த கடைநிலை ஊழிர்கள் இருவரும் உடைத்துக் கொண்டே வந்தனர்.

போல்டன் புரம், ஒடுக்கப்பட்ட மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் அநேக குடும்பங்கள் உள்ள பகுதியானாலும், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வழக்கறிஞர்கள் எனவும் கணிசமானவர்கள் வசித்து வருகின்றனர். பல குடும்பத்தினர்கள் சுய தொழில் செய்தும் பெரிய காங்கிரீட் வீட்டில் வசித்து வருகின்றனர். இது ஒரு கலவையான பகுதி.

“போல்டன்புரம் சொன்னா கேட்க மாட்டாங்க, ரப்சர் பண்ணுவாங்க” இப்படி ஒரு பிம்பம் உள்ள பகுதி. ஆனால் நாங்கள் ஒழுங்குபடுத்தாமல் அவர்களே பெரும்பாலும் சமூக இடைவெளியை கடைபிடித்தார்கள். முகக்கவசம் அணிந்து வந்து வாங்கினார்கள். ஒரு சிலர் அணியாமல் அப்படியே வந்தாலும் நாங்கள் சுட்டிக்காட்டியபிறகு உடனே அணிந்து வருவார்கள்.

வீட்டிற்கு முன்பு ரேஷன் பொருட்களை நாங்கள் சுமந்து இறக்கி வைத்தால் வாஞ்சையோடு நன்றி கூறுகிறார்கள். “தண்ணீர் குடிக்கிறீர்களா?” என்று பாசம் காட்டுகிறார்கள். இறந்த அந்தோணியம்மாள் வீட்டில் அருகே வசிக்கும் நடுத்தர வயதை சேர்ந்த ஆண்கள் சிலர் “ரெட் அலர்ட் பகுதி என்று தெரிந்தும் எங்க மக்களுக்கு வீடுவீடாக பொருட்கள் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி” என்று கூறி இரு கைகளை கூப்பி நன்றி தெரிவிக்கிறார்கள்.

11, 12-ம் தேதிகளில் அரிசி கோதுமை, பாமாயில், சீனி பருப்பு விநியோகிக்கப்பட்டது. இதில்லாமல் பிற பொருட்கள் கேட்டு வரும் பொதுமக்களிடம் “மற்ற பொருட்கள் இருப்பில் இல்லை” என்று ரேஷன் ஊழியர்கள் கூறுகிறார்கள். “சரி வந்தால் போடுங்கள்”, என்று கூறி மக்கள் நகருகின்றனர். யாரும் கோபப்படவில்லை. காரணம் அந்த ரேஷன் கடை எழுத்தர் மீதிருந்த நம்பிக்கைதான். அரசு பணியாளர்கள் நேர்மையாக இருந்தால் மக்கள் ஒத்துழைக்கின்றனர் என்பதை காண முடிந்தது.

இதற்கு (கொரோனாவுக்கு) முன்பு ரேஷன் அரிசி வாங்காத பல நடுத்தர குடும்பங்கள் ரேஷன் அரிசி வாங்குவதை அறியமுடிந்தது. அவர்களை மாடியிலிருந்து கீழே இறங்கியுள்ளது ஊரடங்கு. மக்களை சுகாதார பாதுகாப்பு கருதி கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் அதே வேளையில், அரசாங்கம் அவர்கள் பசியை போக்க வேண்டும். ஏனைய நாடுகளைப் போல கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

பல குடும்பங்கள் எங்களிடம் “கொரோனா கூட எங்களை கொல்லாது, பசியில தான் நாங்க செத்துப் போவோம்” என்று ஒட்டிய வயிறை மறைத்து நிற்கிறார்கள்.
கண் கலங்கினால் கையறு நிலைமை வெளியில் தெரியும் எனக் கருதி வழக்கம்போல் இயல்பாய் இருக்க முயற்சி செய்கிறார்கள்.

முதல் நாளில் மாலை 6.00 மணிக்கு பணி முடிந்தது. லோடு ஆட்டோவில் இருப்பு உள்ள அரிசி மூட்டைகளையும், பருப்பு பைகளையும் ரேஷன் கடையில் இறக்கி வைத்து விட்டுத்தான் வீடு திரும்பினோம்.

வீடு கிளம்ப தயாரானபோது எங்களை ரேஷன் கடை ஊழியர் முனீஸ் அழைத்து, லோஷன் கொடுத்து கைகளை கழுவ சொன்னார். அதற்கு முன்பாகவே நாங்கள் அணிந்திருந்த பாலித்தின் கையுறை கிழிந்து தொங்கி விரல் வழி வியர்வை வழிந்து கொண்டிருந்தது.

2ம் நாளான 12-04-2020 அன்று KSPS ரோடு, கக்கன் பூங்காவிற்கு வடக்கு பக்க தெருவில் உள்ள வீடுகளில் மதியம் சுமார் 1.45 மணிக்குள் ரேடின் பொருள் கொடுத்து முடித்து விட்டோம். ரேஷன் பொருட்களை லோடு ஆட்டோவில் ஓட்டி வந்த அதன் டிரைவர்கள் பரமசிவன் (அ.ம.மு.கவைச் சேர்ந்தவர்) இன்னொருவர் பெயர் நினைவில் இல்லை. சலிப்புத் தட்டாமல் வண்டியை நிறுத்த, திருப்ப, மூவ் செய்யவும், ஓட்டுநர் பணி போக அரிசி, சீனி மூட்டைகளை நகர்த்துவது, ரேஷன் பொருட்களை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பது என பணி செய்தனர்.

ஆனால் 2ம் நாள் நாங்கள் மூடைகளைத் தூக்கவில்லை. கான்ட்ராக் வேலையில் லோடுமேனாக வந்த  பார்ப்பதற்கு படித்த இளைஞரைப்போல இருந்தவர் எங்களை மூடைகளைத் தூக்க விடாமல் அவரே எல்லா வேலைகளையும் சுறு சுறுப்புடனும் செய்தார்.

விநியோகம் முடிந்து, ரேஷன் கடைக்கு வந்து, உடன் பணி செய்த ரேஷன் கடை ஊழியர்களிடம்  விடை பெறும் போது தான்,  நான் ஒரு வழக்கறிஞர் என்றும், மைக்கேல் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் எனது ஜூனியர் என்றும், எனது அலுவலகமும் போல்டன் புரத்தில் தான் இருக்கிறது என்றும், அவர்களுடன் பணிபுரிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் நான் கூறி எனது விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்து முனீஸிடம் கொடுத்து வந்தோம். அதுவரை எங்களை நாங்கள் சுய அறிமுகம் ரேஷன் கடை ஊழியர்களிடம் செய்யவில்லை. ஒருவேளை வழக்கறிஞர் என்று முன்பே தெரிந்தால் அவர்கள் எங்களை எப்படி வேலை வாங்குவதென்று யோசிப்பார்கள், வேலை செய்ய சொல்ல கூச்சப்படுவார்கள் என்றும் கருதியதால் விடைபெறும்போது தெரிவித்து, வேறு வேலை ஏதும் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறி விடை பெற்றோம்..

முதல் நாள் (11.04.2020) மதிய சாப்பாடு ஓய்வில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் எங்களுக்கு அறிமுகமான சமூக அக்கறையுள்ள ஒரு சில நண்பர்களிடம் “தன்னார்வலராக பணி செய்ய நீங்கள் ஏன் வரவில்லை?, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணி செய்யலாமே?” என்று கேட்டோம். “கண்டிப்பாக செய்யலாம். இப்பொழுதும் உணவு தயார் செய்து தாசில்தாரிடம் கொடுத்து விநியோகம் செய்து வருகிறோம். ஃபீல்ட் ஒர்க் வேலைக்கு வந்தால் கை – முகக்கவசங்கள், மருத்துவ பரிசோதனை உட்பட எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலையை உணர்கிறோம். அதனால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. வர்ற பசங்க குடும்பத்துக்கும் நம்ம ரெஸ்பான்ஸா இருக்கணும் சார்… ஏதாவது ஒண்ணுன்னா அவங்க பேரண்ட் நம்ம கிட்ட தான் கேப்பாங்க” என்றனர். அவர்கள் சொன்னது சரிதான். நாம் தன்னார்வலராக பணி செய்வதால் இதை உணர்ந்து கொண்டுள்ளோம்.

இதை  மனதில் வைத்து இரண்டாவது நாளான 12-04-2020 அன்று மதியம் சுமார் 2.00 மணிக்கு தன்னார்வலர் வேலை முடிந்த பின்பு தாசில்தார் செல்வகுமார் அவர்களை தாலுகா அலுவலகத்தில் சந்தித்தோம். தன்னார்வலராக வந்து வேலை செய்யும் இளைஞர்களின் பாதுகாப்பிற்காக தாங்கள் பாதுகாப்பு கவசங்கள்- மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அவர் கண்டிப்பாக இதை சரி செய்வதாக கூறினார். தொடர்ந்து நாங்கள் வேலை செய்ய எங்களுக்கு கையுறை முக கவசம் கிருமிநாசினி கொடுத்ததோடு நாங்கள் பசியில் இருந்ததை பார்த்து கடலை பாக்கெட்டுகள் கொடுத்தார். வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொண்டு நன்றி கூறி வந்தோம்.

வரும் வழியில் தன்னார்வலராக பதிவு செய்து தொடர்ந்து 10 நாட்களாக  SFI பொறுப்பாளர் ஜாய்சன், கரிக்களம் காலனி மாரி மற்றும் இவர்களின் நண்பர்கள் பலர் மாவட்ட சொஸைட்டி தலைமை அலுவலகத்தில் காய்கறி எடை போட்டு – பேக்கிங் வேலை செய்து கொண்டிருக்கின்றவர்களை பார்த்ததும் வண்டியை நிறுத்தி பேசினோம். இப்படி பணி செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என அவர்களின் பணிச்சுமையால் ஏற்பட்ட முதுகுவலியை கூட வெளிக்காட்டாமல் புன்முறுவலித்தனர்.
இப்படி காணும் இளைஞர்கள் அனைவரும் தன்னார்வலராக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.

மாவட்ட – மாநகர நிர்வாகம் தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் மருத்துவ உதவிகளும் செய்ய வேண்டும். அந்த நம்பிக்கையை ஏற்படுத்தினால் ஏராளமான இளைஞர்கள்  கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன் பயமின்றி கரம் கோர்த்து துணை நிற்பார்கள்.

கெ. அரிராகவன், (வழக்கறிஞர்)
13-04-2020
செயலாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC)
தூத்துக்குடி மாவட்டக் கிளை.


தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தொடர்புக்கு : 99623 66320.

பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் !

ப்ரல் ஏழாம் தேதி நிலவரப்படி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அளித்திருக்கும் தகவல்களின்படி, கொரோனாவினால் நோயாளிகள் இருக்கும் விகிதாச்சாரம் இந்தியாவிலேயே குஜராத்தில்தான் அதிகம் என்கிறது Thewire.inல் வந்திருக்கும் ஒரு கட்டுரை.

குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது 7.88 சதவீதம். இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 2.87 சதவீதம்தான்.

இந்தியாவுக்கே முன்னுதாரமாக குஜராத் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அந்த மாநிலத்தில் பொது சுகாதாரத்தின் நிலை இவ்வளவு மோசமாக இருக்கிறது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டப் பிறகுதான் குஜராத் அரசு கொரோனாவுக்கென மருத்துவமனைகளை ஒதுக்கீடு செய்ய ஆரம்பித்தது. பிறகுதான் 156 வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டன. அதற்குப் பிறகுதான் 9000 சுகாதாரப் பணியாளர்களுக்கு அதை எப்படி இயக்குவது என்று சொல்லித்தரப்பட்டது.
பொது சுகாதாரத் துறையில் நீண்டகாலமாகவே மோசமாக இருக்கும் மாநிலம் குஜராத். இம்மாதிரி ஒரு நிலையை உருவாக்கியதில் 4 முறை முதல்வராக இருந்த மோதியின் பங்கு மிக முக்கியமானது என்கிறது இந்தக் கட்டுரை.

2001-லிருந்து 2014 வரை 13 ஆண்டுகள் முதல்வராக இருந்த மோதி, குஜராத் பாணியிலான வளர்ச்சி என்பதை முன்னிறுத்தினார்.

குஜராத்தில் ஆயிரம் பேருக்கு 0.33 படுக்கைகளே உள்ளன. இந்த அளவுக்கு மோசமான நிலையில் இந்தியாவில் இருக்கும் மற்றொரு மாநிலம் பிஹார்தான். தேசிய அளவில் 1000 போருக்கு 0.55 படுக்கைகள் இருக்கின்றன.

சமூக ரீதியில் செலவழிப்பதில் இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் குஜராத் 17வது இடத்தில் இருக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. தன் மொத்த பட்ஜெட்டில் வெறும் 31.6 சதவீதத்தையே சமூக ரீதியில் செலவழிக்கிறது குஜராத்.

படிக்க:
♦ மனித குல சேவையில் கியூப மருத்துவ அறிவியல் !
♦ குடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை ! இதுதான் குஜராத் மாடல் வளர்ச்சி !

தனிநபர் சுகாதரத்திற்கு செலவழிப்பதில் 1999 – 2000ல் நாட்டில் நான்காவது இடத்தில் இருந்த குஜராத் 2009 – 10ல் 11வது இடத்திற்குப் போய்விட்டது. இந்த காலகட்டத்தில் அசாம், உத்தரப்பிரதேசம்கூட மேலே வந்தன. 99 – 2000ல் தன் பட்ஜெட்டில் 4.39 சதவீதத்தை சுகாதரத்திற்கு செலவிட்டுவந்த குஜராத், 09-10ல் வெறும் 0.77 சதவீதத்தையே செலவிட்டது.

தமிழ்நாடும் அசாமும் இந்த காலகட்டத்தில் தங்கள் சுகாதாரத்துறைச் செலவுகளை இரட்டிப்பாக்கியிருக்கின்றன.

குஜராத்தில் அரசு மருத்துவமனைக்குச் செல்பவர், செய்யும் சொந்தச் செலவு பிஹாரில் அரசு மருத்துவமனைக்குச் செல்பவர் செய்யும் செலவைவிட அதிகம். 2001ல் மோதி முதல்வரானபோது அங்கு 1,001 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 244 சமூக சுகாதார மையங்களும் 7,274 துணை மையங்களும் இருந்தன. பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1158 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 318 சமூக சுகாதார மையங்களும் இருந்தன. துணை மையங்களின் எண்ணிக்கை சுத்தமாக அதிகரிக்கவில்லை.

ஆரம்ப சுகாதார நிலையைப் பொறுத்தவரை, இப்போதும் பிஹாரைவிட மோசமாக இருக்கிறது குஜராத். குஜராத்தில் உள்ள கிராமப்புற மருத்துவமனைகளைவிட பிஹாரில் மூன்று மடங்கு அதிகமாக மருத்துவமனைகள் உள்ளன.


கட்டுரையை எழுதியவர் டாடா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்சின் ஆய்வாளரான சஞ்சீவ் குமார். லிங்க் கீழே.

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

 

தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு ! தமிழக தலைமை செயலாளருக்கு PRPC யின் மனு !

♦ தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு!

♦ அடித்தட்டு மக்கள், கூலி தொழிலாளிகள், வெளி மாநில தொழிலாளிகளின் உயிரைக் காப்பாற்று!!

***

நான் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். மேலும், மக்கள் கோரிக்கைகளுக்காக சட்டரீதியாக உதவி செய்யும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் எனும் அமைப்பின் சென்னை கிளை செயலாளராகவும் செயல்பட்டு வருகின்றேன்.

தமிழக அரசு கடந்த 24.03.2020 முதல் 14.04.2020 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, தற்போது 30.04.2020 வரை நீட்டித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் ரூபாய்.1000 உதவித்தொகை, அம்மா உணவகங்கள், பொது உணவகங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

ஆனால் அத்திட்டங்கள் குடும்ப அட்டை இல்லாதவர்கள், நடைபாதை வாசிகள், மாற்றுத்திறனாளிகள், வெளிமாநில தொழிலாளர்கள் (குறிப்பாக Migarant Workers Act -ன்படி பதிவு செய்யாதவர்கள்), ஆதரவற்றவர்கள், வயது முதிர்ந்தவர்கள் போன்ற பிரிவினருக்கு முறையாக சென்று சேருவதில்லை.

தமிழக அரசு (தமிழக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்) 24.03.2020 அன்று கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் உதவிப்பணிகளில் ஈடுபட தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனடிப்படையில் இன்றைய தேதிவரை தன்னார்வலர்கள் அரசு இணையதளத்தில் (stopcorona.tn.gov.in) பதிவுசெய்து வருகின்றனர். ஆனால், நாங்கள் அதற்கு முந்தைய நாளான 23.04.2020 அன்றே சென்னை மாநகராட்சிக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் பேசி தன்னார்வலர்களாக எங்களை பதிவுசெய்திருந்தோம். மேலும் கூடுதலாக, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசிடம் இணைய வழியாகவும் பதிவுசெய்திருந்தோம். ஆனால், இது நாள்வரை அரசிடமிருந்து எந்த ஒரு முறையான பதிலும் வரவில்லை. கட்டுப்பாட்டு அறைக்கும், மண்டல அதிகாரி திரு.காமராஜ் (மண்டலம் 4 – 9445190004) அவர்களிடம் நேரில் சென்றபோதும், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோதும் முறையான பதில் இல்லை.

தன்னார்வலர்களாக பதிவு செய்பவர்களுக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறதென்ற தகவலோ, அனுமதி வழங்கப்பட்ட தன்னார்வலர்கள் – அமைப்புகளின் பட்டியலோ இதுவரை குறிப்பிடப்படவில்லை.
இத்தகைய நிலைமையை கருத்தில்கொண்டு 27.03.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் பொதுநல வழக்கு (W.P.No.7414/2020) தொடுத்திருந்தோம். அவ்வழக்கில் “தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அறிவியல் மாணவர்கள் கொண்ட தன்னார்வு குழுக்களை உருவாக்கி, பயிற்சியளித்து வீடு தோறும் COVID-19 தொற்றுநோய் தடுப்பு, மருத்துவ பரிசோதனை, உணவுப்பொருட்கள் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்” என்ற இடைமனுவினையும் தாக்கல் செய்திருந்தோம் (W.M.P.No. 8880/2020). இப்பணிகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை சட்டம் – 2005 ன்படி மாவட்ட வாரியாக தன்னார்வலர்களை உள்ளடக்கிய சிறப்பு “செயல்பாட்டு குழுக்களை” அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தோம். நாங்கள் வைத்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று நடைமுறைப்படுத்த பரிந்துரைப்பதாக கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் திரு.அரவிந்த் பாண்டியன் அவர்கள் நீதிபதிகள் முன்பாக தெரிவித்திருந்தார்.

படிக்க:
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?
♦ கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !

27.03.2020 அன்று தன்னார்வலர்கள் – தொண்டு நிறுவனங்களின் நிவாரணப்பணிகளை ஒருங்கிணைக்க திரு.ச.கிருஷ்ணன் இ.ஆ.ப, டாக்டர். ஜெ.இரதாகிருஷ்ணன் இ.ஆ.ப, திரு.வே.விஷ்ணு இ.ஆ.ப ஆகியோர் அடங்கிய குழு (9 வது குழு – செய்தி அறிக்கை. 235) அமைக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து 27.03.2020 அன்றைய அறிக்கையில் (செய்தி அறிக்கை. 234)” ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்கள் சமைத்த உணவை விநியோகிக்க வேண்டாம். பொருட்களை சென்னையில் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமும் வழங்கலாம். மாவட்ட நிர்வாகம், இவற்றுக்கென ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்பிரிவை தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்தந்த மாவட்ட நிர்வாக தனிப்பிரிவு தொடர்பு எண்கள் கொடுக்கப்படவில்லை. மேலும், உதவிப்பொருட்கள் கொண்டு சேர்க்கும் முறைகுறித்தும் தெளிவாக விளக்கப்படவில்லை.

உச்சநீதிமன்றமும் 31.03.2020 அன்று பிறப்பித்த உத்தரவில் தன்னார்வலர்களை உட்படுத்திட பரிந்துரைத்திருந்தது.

மதுரையில் வழக்கறிஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உணவுப் பொருட்களை வினியோகம் செய்தனர்.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அரசின் நலத்திட்டங்கள், செயல்பாடுகள் சென்றடையாத மக்கள் இருப்பதைக்கண்டு பல தன்னார்வ குழுக்கள் உரிய பாதுகாப்போடு உணவு பொருட்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கும் பணிகளில் ஈடுபடத்துவங்கினர்.

அந்த வகையில் நாங்களும் எங்கள் நண்பர்களோடு ஒன்றிணைந்து சென்னை (காசிமேடு, வியாசர்பாடி, முகப்பேர், நொளம்பூர், ஓசாங்குளம்,
சேத்துப்பட்டு, முகப்பேர் கிழக்கு, முகப்பேர் மேற்கு), மதுரை, காஞ்சிபுரம், கடலூர், விருதாச்சலம், நாகை (சீர்காழி), புதுச்சேரி, திருச்சி, நெல்லை, திருப்பூர் (கரைப்புதூர் கிராமம்), தர்மபுரி என தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் முகக்கவசங்கள், கையுறைகள், Sanitizer போன்ற பாதுகாப்பு உபகரணங்களோடும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் நிவாரண பொருட்களை அர்ப்பணிப்போடு வழங்கி வருகிறோம். கூடுதலாக கையுறை, முககவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களையும் வழங்கி வருகிறோம்.

அதிலும், நாங்கள் குறிப்பாக அரசின் பல அறிவிப்புகளில் புறக்கணிக்கப்பட்ட அல்லது அரசின் நடைமுறைப்படுத்துதலில் உள்ள குறைபாடுகளால் நிவாரணங்கள் சென்றடையாத சர்க்கஸ் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், காவலாளிகள் (Wachman), ஆட்டோ ஓட்டுநர்கள், சொந்த ஊர் திரும்பமுடியாத தொழிலாளர்கள், பதிவுசெய்யப்படாத கட்டிடத்தொழிலாளர்கள் & வெளிமாநில தொழிலாளர்கள், நடைபாதையில் வசிப்பவர்கள் என்று பயனாளிகளை கண்டறிந்து கடந்த இருபதுநாட்களாக தமிழகம் முழுவதும் 3000 குடும்பங்களுக்குமேல் உணவுப்பொருட்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுவருகிறது. வடசென்னையில் (காசிமேடு, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, எர்ணாவூர்)மட்டும் இதுவரை 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

எங்களைபோன்றே தமிழகம் முழுதும் தன்னார்வலர்கள் – குழுக்கள், அரசு சென்றடையாத பல இடங்களிலுள்ள மக்களை கண்டறிந்து அவர்களது உணவுத்தேவையை பூர்த்தி செய்துவருகின்றனர். இத்தகைய தன்னார்வலர்களின் உன்னதமான செயல்பாடுகள்தான் இன்றளவும் பெரும் பாதிப்புகளிலிருந்து தமிழக மக்களை பாதுகாத்துவருகின்றது. ஆனால் இன்னுமும் எந்தவித உதவியும் சென்றடையாத மக்கள் வாழும் பகுதிகளும் இருக்கவேசெய்கிறது.

படிக்க:
♦ “கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !
♦ அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !

இந்நிலையில் (12.04.2020) தமிழக அரசு “சில நபர்களும், சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊரடங்கு உத்தரவுக்கு புறம்பாக” செயல்படுவதாகவும் மேலும் அத்தகைய தன்னார்வலர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் வெளியிட்டிருந்த அறிவிப்பானது (அரசு செய்தி அறிக்கை.265) தமிழக அளவில் பெரும் விவாதப்பொருளானது.

அதன்பிறகு, தமிழக அரசனாது (13.04.2020) “தன்னார்வலர்கள் உதவிசெய்ய தடை இல்லை எனவும், மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் “2500-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களும், 58,000 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் பதிவு செய்துள்ளதாகவும், சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படதான் அரசு கேட்டுக்கொண்டுள்ளதே தவிர, யாருக்கும் தடை விதிக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டு, தேவைப்படும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்யதான் அரசு வலியுறுத்தியதே தவிர, தடை விதிக்கவில்லை.” எனவும் தனது அறிவிப்பில் (செய்தி அறிக்கை.266) தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தமிழக முதல்வரே பேரிடர் நிவாரணப்பணிகளில் தன்னார்வலர்களின் பங்கினை வெகுவாக பாராட்டியுள்ளார்.

காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கவேண்டுமென்பது எவ்வளவு அவசியமானதோ அதேபோன்று தன்னார்வலர்களின் நிவாரணப்பணியும் அத்தியாவசியமானதாகும்.

இதனை உணர்ந்து தமிழக அரசானது தன்னார்வலர்கள் ஈடுபடுவதை தடைசெய்வதை கைவிட்டு, ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், எங்களது மேற்கண்ட வழக்கு (W.P.No.7414/2020) கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், நிவாரணப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு அரசு அதிகாரிகளை கொண்டு பயிற்சி வழங்க வேண்டும்.

கட்டுப்பாட்டு அறையினை உருவாக்கி, தன்னார்வலர்கள் தாங்கள் நிவாரணப்பணி செய்யவிருக்கும் இடம், நேரம், பொருட்கள் மற்றும் இதர அவசியமான முன் அறிவிப்பினை (அ) தகவலை வழங்குவதற்கு பொது தொலைபேசி எண்ணை வழங்கவேண்டும்.

நிவாரணப்பணிகள் நடக்கும் இடங்களை மேற்பார்வையிட்டு, பாதுகாப்பான முறையில் நலஉதவிகள் நிறைவேறுவதை உத்திரவாதப்படுத்த வார்டு அளவில் அதிகாரிகளை நியமிக்கவேண்டும்.

இவ்வாறு மக்களுக்கான நிவாரணப்பணியில் அரசு தன்னார்வலர்களை அங்கீகரித்து அவர்களையும் இணைத்து செயல்பட்டால்தான் இந்த பேரிடரிலிருந்து நாம் மீண்டுவர முடியுமென தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,

வழக்கறிஞர் சு.ஜிம்ராஜ் மில்ட்டன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
சென்னை கிளை செயலாளர்


தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தொடர்புக்கு : 99623 66320.

மனித குல சேவையில் கியூப மருத்துவ அறிவியல் !

கியூபா ஒரு சிறிய கரிபீயன் தீவு. காலனி ஆதிக்கத்தாலும், ஏகாதிபத்தியத்தாலும் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடையாமல் இருந்த ஒரு நாடு. கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்காவின் பிராந்திய பொருளாதார தடைக்கு உட்பட்ட நாடு. இன்று  கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தொற்று நோய் நெருக்கடி நிலையில்  உலக நாடுகள் அனைத்துக்கும்  கியூபா ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது.

மார்ச் மாத இறுதி நிலவரப்படி கியூபா, தன்னுடைய மருத்துவ குழுக்களை 59 கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறது. இத்தாலியில்   கொரோனா  வைரஸ் தொற்று நோய் உச்சத்தில் இருந்த போது தொற்று நோயின் மையமான லோம்பார்டி பிராந்தியத்திற்கு 53 கியூப மருத்துவ நிபுணர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா வைரஸ்  நெருக்கடி நிலையின் போது பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் உள்ள அண்டோரா என்ற பகுதிக்கு 39 கியூப மருத்துவ நிபுணர்கள் அடங்கிய  குழு அனுப்பப்பட்டது. மேற்கூறிய மருத்துவர்கள் அனைவரும் ஹென்றி ரீவ் என்ற மருத்துவ படைப்பிரிவை சேர்ந்தவர்கள்.

இப்படைப்பிரிவு 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்படைப்பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் தொற்று நோய் தடுப்பு  மற்றும் இயற்கை பேரிடர் போது மருத்துவ பணி செய்வதற்கு பயிற்சி பெற்றவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்பானிய காலனியாதிக்கத்திற்கு எதிராக கியூபர்களோடு சேர்ந்து போராடிய ஹென்றி ரீவ் என்ற இளம் அமெரிக்கரின் நினைவாக இப்படைப்பிரிவுக்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்படைப்பிரிவு  கியூப முன்னாள் அதிபர் காஸ்ட்ரோவால் முன்மொழியப்பட்டது.

கோவிட் -19 வைரஸ்  பாதிப்புக்குட்பட்ட  5 பயணிகள், 682  பயணிகள் மற்றும் 381 பணியாளர்களை கொண்ட பிரிட்டிஷ் கப்பலுக்கு  அமெரிக்கா போன்ற நாடுகள் அனுமதி அளிக்கமால்  இருந்ததை அடுத்து  அது ஒரு வாரம் கடலில் சிக்கித் தவித்தது. ஆனால், அப்பயணிக் கப்பலை கியூபா தன் நாட்டிற்குள் அனுமதித்ததோடு மட்டுமில்லாமல், தன் நாட்டு மருத்துவமனைகளில் பரிசோதனையும், சிகிச்சையும் அளித்து அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப விமானம் வரை கொடுத்து உதவியது. உலகளாவிய தொற்றுநோயை கையாள்வதில் இன்று கியூபா முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால்  உலகிலுள்ள முதலாளித்துவ அரசுகள், கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிர்வினையாக மக்களை  வீட்டிற்குள்ளே முடங்கியிருக்கச் செய்வதை மட்டும் தங்களுடைய சுகாதாரச் செயல்பாடாக சித்தரிக்கின்றன.

முதலாளித்துவத்தின் சுதந்திர சந்தை மட்டுமே செயல்திறனை உறுதி செய்யும் என்று பல ஆண்டுகளாக மக்களுக்கு கூறப்பட்ட கருத்தை, இன்றைய  உலகளாவிய சுகாதார நெருக்கடி, கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்  மூலம் கேள்விக்குள்ளாக்குகிறது.  கியூபாவின் சுகாதார பங்களிப்பு முதலாளித்துவத்தால் திறமையான விளைவுகளை சாதிக்க முடியாது என்பதை நமக்கு உணர்த்துகிறது. சமூக இலாபத்தால் அளவிடப்படக்கூடியவை மட்டுமே அதிக செயல்திறனை கொடுக்க முடியும். தனியார் இலாபத்தால் கொடுக்க முடியாது  என்பதை உலகம் முழுவதும் உள்ள முன்னேறிய முதலாளித்துவ நாடுகள்  மெய்ப்பித்து வருகின்றன.

கியூபப் புரட்சிக்கு பின்னர், கியூப அரசு, உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான மருத்துவர்கள் விகிதத்தை அடைந்தது. அந்நாட்டில் ஆயிரம் பேருக்கு 8 மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்தியா பத்தாயிரம் பேருக்கு ஒரு மருத்துவரை பெற்றிருக்கிறது. தன்னை அனைத்து நாடுகளின் தலைமை என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவால் கூட கியூபா போன்று மருத்துவர்களின் விகிதத்தை  அதிகரிக்க முடியவில்லை.

கியூபாவில் அனைத்து நிலைகளிலும் இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. இதன் பயன்கள் உலகளவில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கடந்த ஆறு பத்தாண்டுகளாக 40,000 கியூப மருத்துவர்கள் ஏழை நாடுகளில் சுகாதாரப் பணிக்காக வேலை செய்து வந்துள்ளனர். கியூபா தனது தொற்றுநோய்க் கட்டுப்பாடு, பேரழிவு இடர் குறைப்பு போன்றவற்றில் உலக அளவில் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவங்கள் கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்து வினையாற்ற பயனளிக்கிறது.

கியூபாவின் சுகாதார அமைப்பு நோய் வருமுன் தடுப்பதையே முதன்மையாக கொண்டுள்ளது. குடும்ப மருத்துவர்களின் வலைப்பின்னலானது நோயாளிகளோடு தங்கி வேலை செய்வதன் மூலம் சமூக ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. இந்த தொற்று நோய்க்கு எதிராகப் போராட சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிலும் சென்று சோதனைகள், பரிசோதனைகள், தொடர்பைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், கூடுதல்  மருத்துவ கவனம் தேவைப்படுவர்களுக்கு ஒரு பதிவேட்டை பராமரித்தல் போன்றவற்றை நடத்துகிறார்கள். நாட்டின் பொது சுகாதார இணையதளம் மற்றும்  புது செயலி –கோவிட்-19 Infocu மூலம்  பொதுக்கல்வி பிரச்சாரங்கள், அன்றாடம் வரும் புது தகவல்கள்  போன்றவை மக்களை சென்றடைகிறது.

படிக்க:
♦ கொரோனா – கருத்துப்படங்கள் !
♦ கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !

உயிர்த் தொழிற்நுட்பத் துறையில் கியூபாவின் சாதனை :

கியூபா உயிர்தொழிநுட்பத்துறையில் மிக பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. 1980 களின் முற்பகுதியிலேயே அந்நாட்டு மருத்துவ விஞ்ஞானிகளை வைரஸ் எதிர்ப்பு மருந்து (interferon)  கண்டுபிடிப்பதற்கான  பணியில் ஈடுபடுத்தியதன் மூலம், கியூப அரசு உயிர்தொழில்நுட்பத்துறையில் ஆரம்ப மற்றும் தனித்துவமான வளர்ச்சியை ஊக்குவித்தது. காஸ்ட்ரோ தலைமையிலும் அவரது தொலைநோக்கு பார்வையாலும் 1981-லேயே டெங்டை தடுப்பதற்கு இண்டர்ஃபெரான் கண்டறியப்பட்டது. முதலாளித்துவ பெரிய மருத்துவ நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்ட இண்டர்ஃபெரான் ஆல்ஃபா 2B, அவற்றின் தயாரிப்புகள் ஒரு பொதுவான உட்பொருள்களை பகிர்ந்துகொள்கின்றன, ஆனால் கியூப இண்டர்ஃபெரான் ஆல்ஃபா 2B ஒரு தனித்துவமான தயாரிப்பு. கியூபர்கள் தான் இந்த மருந்தை ஒரு வெகுஜன வைரஸ் எதிர்ப்பு பொது சுகாதாரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முதலில் பயன்படுத்தினர்.

முதலாளித்துவ உயிர்த்தொழிற்நுட்பத்துறையின் இலாப வேட்டை:

அமெரிக்காவில் உலகின் முதல் உயிர் தொழில்நுட்பத்துறையானது சான் பிரான்ஸ்கோவில்  ஜெனிடெக் என்ற  நிறுவனத்தின் மூலதன உதவியோடு  1976 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1980 ஆம் ஆண்டு ஏ.எம்.ஜென் என்ற மற்றொரு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. சர்வதேச அளவில் உயிரித்தொழிநுட்பத்துறையானது 2009 ஆம் ஆண்டு வரை அதன் தயாரிப்பு பொருட்கள் விற்பனையில் இலாபம் ஈட்டவில்லை. ஆயினும் கூட  பில்லியன் கணக்கான டாலர்கள் அத்துறையில் கொட்டப்பட்டன. பயோடெக் நிறுவனங்கள்  ஒரு இலாபகரமான தயாரிப்புகளில் மட்டுமே ஆராய்ச்சியை செலுத்துகின்றன. அதன் தயாரிப்பு இலாபத்தை நிறைவேற்றாவிட்டால் அந்நிறுவனங்களின் வளர்ச்சி தடைப்படும். மேலும் அதன் பங்கு வீழ்ச்சி அடைவதோடு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்ப பெறுகின்றனர்.

கியூபாவின் உயிர்த்தொழில்நுட்பமும் அரசின் ஆதரவையையும், பொது நிதியுதவியையும் பெறுவதால் மட்டுமே  தனித்துவமானதல்ல. அந்நாட்டில் 1960 களில் இருந்தே சுகாதாரம், கல்விக்காக முன்னுரிமை கொடுப்பதற்கான உத்தியை அரசு வடிவமைத்திருப்பதோடு, பொருளாதாரத்தை அதன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருப்பதால் தான் கியூப உயிர்த் தொழிற்நுட்பத்துறை தனித்துவமாக இருக்கிறது.

உயிர்த் தொழில்நுட்பத் துறையில் கியூபாவின் தன்மை:

கியூபாவில் உயிர்த் தொழில்நுட்பத் துறை அமெரிக்காவின் ஜெண்டெக்கிற்கு  ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே ஆரம்பிக்கப்பட்டது. அக்காலக் கட்டத்தில் பெரும்பாலான வளரும் நாடுகளுக்கு அத்துறையின் புதிய தொழிற்நுட்பங்களான டி.என்.ஏ மறுசீரமைப்பு, மனித மரபணு சிகிச்சை, போன்றவற்றை அணுகுவதிலும் ஈடுபடுவதிலும்  சிறிதளவே வாய்ப்பிருந்தது. ஆனால் கியூபா  பொது  சுகாதாரத் துறையிலும் தேசிய வளர்ச்சி திட்டத்திலும் தான் மேற்கொண்ட உத்தி காரணமாக  உயிர்தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடைந்தது. இத்துறைக்கு தேவையான தொழிற்நுட்பங்கள், உபகரணங்கள், பொருட்கள், நிதி மற்றும் அறிவு பரிமாற்றம்  போன்றவற்றை அமெரிக்கா தடுத்தபோதிலும் கியூபா இதை சாத்தியப்படுத்தியது. கியூப அரசுக்கு மட்டுமே சொந்தமான இத்துறை,  தனியார் நலன்கள் அல்லது ஊக முதலீடுகள் எதுவும் இல்லாமல் அரசு மூதலீட்டில் மட்டுமே நிறுவப்பட்டது. அத்துறையில் பங்குதாரர்கள் அனைவரும் அந்நாட்டின் உள்ள 11 மில்லியன் கியூபர்களே என்றார் கியூபாவின் மூலக்கூறு நோய் எதிர்ப்பு மையத்தின் தலைவர்.

படிக்க:
கொரோனா : மனநலம் குறித்த உரையாடலைத் தொடங்குவோம் | மருத்துவர் ருத்ரன்
♦ அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !

இந்நாட்டின் உயிர்த் தொழில்நுட்பம் பொது சுகாதாரத் துறையின் தேவைக்கேற்ப இயக்கப்படுகிறது. அரசின் சுகாதாரத் துறையோடு இது ஒருங்கிணைக்கப் பட்டிருப்பதால் இலாபத்தை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இத்துறை ஆராய்ச்சி, கண்டுப்பிடிப்புகள், சோதனைகள், பயன்பாடுகள் என்று விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று கியூபாவில் பயன்படுத்தும் மருந்துகளில் 70% மருந்துகள் அமெரிக்காவின் தடை காரணமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.

அந்நாட்டில் பல்வேறு உயிர்த் தொழிற்நுட்ப நிறுவனங்களுக்கிடையே ஆராய்ச்சிகள் மற்றும் புதிய விசயங்கள் பகிரப்படுவதால் போட்டியை விட ஒத்துழைப்பே அவைகளுக்கிடையே நிலவுகிறது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் பல்வேறு வணிகத்துறையின் அறிவியலாளர்கள் குழு, அறிவியல் மூலம்  தங்களது திட்டத்தை  உற்பத்தி சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும் சந்தைப்படுத்தலுக்கும் மட்டுமே  மேற்கொள்கின்றன.

கியூபன் சிகிச்சை :

இந்த தனித்துவமான கியூப  சுகாதாரஅமைப்பின் பலன்கள் என்ன? கடந்த 26 ஆண்டுகளில் கியூப வல்லுநர்கள் உலக அறிவுசார் சொத்துடைமை அமைப்பிலிருந்து (WIPO) பத்து தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். முதல் பதக்கம் 1989 ஆம் ஆண்டு மூளைத்தண்டுக் காய்ச்சல் தடுப்பூசிக்காக ( Meningitis B vaccine ) வழங்கப்பட்டது. மற்றது Hib தடுப்பூசிக்காக கொடுக்கப்பட்டது.  உலகம் முழுவதும் நீரிழிவு கால புண்களால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  422 மில்லியன் ஆகும். இந்த நோயின் சிகிச்சைக்கான மருந்தை (Heberprot-P) கியூபா கண்டுபிடித்ததன் மூலம் பத்து வருடங்களில் 71,000 கியூபர்களும், மற்ற 26 நாடுகளை சேர்ந்த 1.3 இலட்சம் நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர். மற்ற ஒரு WIPO விருதானது சொரியாஸிஸ் நோயின் மருந்துக்கு (Itolizumab)கொடுக்கப்பட்டது. இதன் மூலம் உலகம் முழுவதும்  ஒரு இலட்சம் பேர் சிகிச்சையடைந்திருக்கின்றனர்.

தாயிலிருந்து சேய்க்கு எச்.எய்.வி பரவமால்  தடுப்பதில்  கியூபா உலகில் முதல் இடத்தில் இருப்பதாக 2015ல் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. தன்னுடைய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மருந்தைக் கொண்டு (antiretroviral) எய்ட்ஸ் தொற்று நோயைத் தடுத்தது. கடந்த பத்து வருடங்களில் உலகம் முழுவதும் நூறு மில்லியன் கியூப ஹெபடைஸிஸ்-பி தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு முன்பே பிறவி தைராய்டு சுரப்பு குறைபாடு இல்லாத நாடாக கியூபா மாறியது. மேலும் அல்சைமர் நோய்க்கான பயோமார்கர் பரிசோதனைகளையும் அந்நாட்டின் மூளை நரம்பியல் துறை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. கியூபாவின் பயோடெக் நிறுவனங்களின் மூலம் தயாரிக்கப்படும் 200 வகையான மருந்துகள் 49 வளரும் நாடுகளுக்கு மலிவான விலையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கியூபாவின் அரசுக்கு சொந்தமான உயிர்த் தொழிற்நுட்பத் துறைக்கும் முதலாளித்துவ நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கும் இடையிலான வேறுபாடு தொற்று நோய் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. கியூபா நம் அனைவருக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறது.

பிரேசிலின் முன்னாள் அதிபர்  லூலா டா சில்வா ஆட்சியின் போது பிரேசில் மக்கள் நலனுக்காக பத்தாயிரத்திற்கும் அதிகமான கியூப மருத்துவர்கள் பணிபுரிந்தனர். இம்மருத்துவர்கள் பிரேசில் நாடு முழுவதும் குறிப்பாக பழங்குடிகள் மத்தியில் தங்கி எண்ணற்ற உயிர்களை காப்பாற்றினர். ஆனால் அதன் பிறகு பிரேசிலின் வலது சாரி ஆட்சியாளர் பொல்சானரோ ஆட்சிக்கு வந்த பிறகு அவர் கொண்டு வந்த தனியார்மய சுகாதார நடவடிக்கைகளினாலும், கியூப மருத்துவர்கள் தங்கள் நாட்டில் புரட்சியை தூண்டிவிடுவதற்காக தங்கி உள்ளனர் என்ற பொய்க் குற்றச்சாட்டுகளினாலும் 2019 முற்பகுதியில் கியூப மருத்துவர்கள் பிரேசிலை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.

இப்போது தொற்று நோய் பரவி வருவதால் பிரேசில் கடுமையான சுகாதார நெருக்கடியின் கட்டத்தில்  உள்ளது. கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியன்று பிரேசிலின் சுகாதாரத் துறை செயலர் ஜோவா கபார்டோ, தங்கள் நாட்டிற்கு கியூப மருத்துவர்களை திரும்ப அனுப்புமாறு கியூப அரசைக் கேட்டுக் கொண்டார். பிரேசிலின் தொழிலாளர் கட்சியின் தலைவர் லூலா டா சில்வா, பிரேசில் அதிபர் பொல்சனோரா கியூப மருத்துவர்களைப் பற்றி முன்பு பொய்க்குற்றச்சாட்டை கூறியதற்காக பிரேசில் மக்களிடமும், கியூப மருத்துவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஒரு நாட்டின் ஆரோக்கியம் அதன் பொது சுகாதாரக் கட்டமைப்பில் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது கியூபா. முதலாளித்துவ நாடுகளிலோ சுகாதாரம் என்பது தனியார் நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் வர்த்தகமாக இருக்கிறது. கொரோனா வைரஸை அழிக்கும் வல்லமை சோசலிசக் கட்டமைப்புகளுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை நம் காலம் ஓங்கி உணர்த்துகிறது.

– பரணிதரன்

“கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !

“எங்களை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு ஆவேசமாக திட்டித் தீர்த்தபடி அடித்துக் கொண்டே இருந்தார்கள்” என்கிறார் சுராஜுத்தீன். பஞ்சாப் – ஹிமாச்சல் எல்லைப் பகுதியில் உள்ள ஹோஷியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டல்வாரா பகுதியைச் சேர்ந்த சுராஜுத்தீன் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம். பாரம்பரியமாக மாடு மேய்ப்பது, பால் கறந்து விற்பது இவர்களின் தொழில். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய பிரிவினரான இவர்கள் அதிக வெளியுலக தொடர்பு இல்லாதவர்கள். இவர்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இந்துக்களால் தாக்கக்கப்பட்டு பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட சுமார் 80 இசுலாமியர்கள் உயிருக்கு பயந்து தற்போது சுவான் நதியின் கரையில் மறைந்துள்ளனர்.

தில்லியில் நடந்த தப்லீகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் வாட்சப் பல்கலைக்கழகங்களை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் கொரானா வைரசுக்கு குல்லா போட்டு சுன்னத் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இசுலாமியர்கள் திட்டமிட்டு நோயைப் பரப்பிக் கொண்டிருப்பதாகவும், இது “கொரானா ஜிஹாத்” என்றும் பலவாறான அவதூறுகளை பரப்பிக் கொண்டுள்ளனர். படிப்பறிவில்லாத மாட்டுவளைய மாநிலங்களைச் சேர்ந்த ‘இந்துக்கள்’ இந்த பிரச்சாரத்திற்கு பலியானதன் விளைவாகத் தான் சுராஜுத்தீனும், அவருடன் சுவான் நதிக்கரையில் தஞ்சம் புகுந்துள்ள அப்பாவி இசுலாமியர்களும் தாக்கப்பட்டனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

“எங்களில் யாரும் இது வரை தில்லியைப் பார்த்ததே கிடையாது. அது எப்படி இருக்கும் என்றும் தெரியாது. ஆனால், இங்கே இருப்பவர்கள் எங்களைக் கொல்லும் நோக்கத்தோடு அடித்து துன்புறுத்தினர். அரசு நிர்வாகத்திடமிருந்தும் போதிய உதவி கிடைக்கவில்லை” என்கிறார் ஷஃபி முகமது. தாக்குதலுக்கு பயந்து சுமார் 8 கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் சுமார் மூன்று நாட்களாக பசி பட்டினியோடும் அச்சத்தோடு மறைந்து வாழ்ந்துள்ளனர். சுராஜுத்தீனின் 80 வயது தாயாருக்கு மருந்து வாங்கச் சென்ற போது மருந்துக்கடையில் “நோயைப் பரப்ப வந்தீர்களா?” எனக் கேட்டு விரட்டியடித்துள்ளனர்.

படிக்க:
♦ ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடும் வதந்திகள் !
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

அந்தக் குழுவில் இருந்த இருவர் தங்கள் கைகளில் ஆதார் அட்டையை உயர்த்திக் காட்டி “இதை வைத்திருந்தும் கூட எந்த நன்மையும் விளையவில்லையே” என்று அப்பாவித்தனமாக கேட்கிறார்கள். சுராஜுக்கு சொந்தமான ஆறு பசுமாடுகள் செத்து விட்டன. “அதில் மூன்றை நேற்றே புதைத்து விட்டேன். இதோ இன்னும் மூன்று மாடுகள் என் முன்னே செத்துக் கிடக்கின்றன” என்கிறார் சுராஜ்.

குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்களின் ஒரே தொழில் மாடு மேய்ப்பதும், பால் கறந்து விற்பதும் தான். ஆனால், அக்கம் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களோ இப்போது இவர்களிடம் பால் வாங்குவதை நிறுத்தி விட்டனர். தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் ஹோஷியாபூர் போலீசு துணை கமிசனர் அப்னீத் ராவத்தை தொடர்பு கொண்ட போது, குஜ்ஜார் முசுலீம்கள் தாக்கப்படுவது குறித்து தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மூன்று நாட்களாக பசி பட்டினியில் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி மளிகைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதை பத்திரிகையாளர்கள் உறுதி செய்தனர்.

பத்திரிக்கையாளர்களின் முயற்சியால் கிடைக்கப்பெற்ற மளிகைப் பொருட்கள்.

எனினும், கிராமங்கள் மற்றும் உள்ளூர் அளவில் குஜ்ஜார் முசுலீம்கள் தாக்கப்படுவதும் விரட்டப்படுவதும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. அவ்வாறான தாக்குதல்களுக்கு எதிராக உள்ளூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குஜ்ஜார் முசுலீம்கள் தாக்கப்படுவது தனக்கு தெரியும் என்று மாவட்ட கமிஷனர் தெரிவித்தாலும், அந்த பகுதியின் போலீசு துணை சூப்பிரெண்டு கவுரவ் கார்க் தனக்கு அப்படி எந்த புகாரும் வரவில்லை என்கிறார்.

கவுரவ் கார்க்கிடம் குஜ்ஜார் முசுலீம்கள் பால் விற்பதை உள்ளூர்வாசிகள் தடுப்பது குறித்து கேட்ட போது, “மக்களுக்கு அவர்களிடம் பால் வாங்குவதில் ஏதாவது அச்சம் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். அது என்ன அச்சம் என்று கேட்டதற்கு “அதை நான் எப்படி சொல்ல முடியும்?” என அலட்சியமாக பதில் சொல்லி இருக்கிறார். மேலும் அத்தியாவசிய பொருளான பால் விற்பனையைத் தடுப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டதற்கும் அவரிடம் பதில் இல்லை.

இப்படி ஒரு புறம் அரசு இயந்திரத்தின் மௌன ஒப்புதலோடு இசுலாமியர்கள் தாக்கப்படும் நிலையில் – கீழ்மட்ட அளவில் நேரடியாகவே வெறுப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஹோஷியாபூரின் நௌஷேரா ஷிம்லி, கோட்டா, வாஸிரியா, சார்யானா, சிப்போ சாக் போன்ற பகுதிகளில் உள்ள கோவில் மற்றும் குருத்வாராக்களின் ஒலிபெருக்கிகளில் “இசுலாமியர்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து” குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கிராமத்தின் சாலைகளில் தடுப்பரண் அமைத்து அப்பகுதி இளைஞர்கள் கைகளில் கட்டை கம்புகளுடன் ரோந்து சுற்றி வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமானவர்கள் மற்றும் முசுலீம்களை குறிவைத்து தாக்குகின்றனர்.

உலகெங்கும் கொரோனா வைரசை எதிர்த்து முறியடிக்க சுகாதாரப் பணியாளர்களும், செவிலியர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் போராடிக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில் அதற்கு மதச் சாயம் பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் சங்கிகள். தமிழகத்திலும் இவ்வாறான ஒரு நிலையைத் தோற்றுவிக்கும் முயற்சியில் வாட்சப் செயலியில் ஏராளமான வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த மாரிதாஸ் என்கிற பொறுக்கி யூட்யூப் இணையதளத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக விசத்தைக் கக்கி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் – எனினும், இது வரை உறுதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

“நோய்க்கு மதம் கிடையாது”, “நெருக்கடியான தருணங்களில் அரசியல் பேசக் கூடாது” – இது போன்ற பிலாக்கணங்களில் ஏதாவது பொருள் உள்ளதா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

– தமிழண்ணல்


செய்தி ஆதாரம் : த வயர்.

கொரோனா : மனநலம் குறித்த உரையாடலைத் தொடங்குவோம் | மருத்துவர் ருத்ரன்

மூன்றாவது வாரத்தில் மனம் சோர்வடையும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பார்த்ததைவிடவும் அதிகம் பேர் பாதிப்பின் ஆரம்பக் கட்டத்திற்கு வந்து விட்டார்கள்.

சாலைகளில் அசாதாரணமான ஒரு நிசப்தம், அவ்வப்போது பொறுப்பற்ற சில விடலைகளின் வாகன வேகத்தால் நாராசமாகிறது.வீடுகளிலும் பேச்சு குறைந்து விட்டது. புத்தகங்கள் பாதியில் மூடப்பட்டு கிடக்கின்றன. டிவியில், கணினியில் படங்கள் ஓடவில்லை. எல்லா கண்களும் கைகளில் இருக்கும் செல்பேசியில்- விரல்களால் நீவி நீவி செய்திகளையும் பொய்களையும் பார்த்துக் கொண்டு தேதி கிழமை தெரியாத மெத்தனத்தில் வாழ்க்கை நின்று விட்டது போல் தோன்றுகிறது.

தொழில்நுட்பம் தெரியாத சிலர் தெரிந்தது போல் பேசுபவர் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு வெறுமையில் கிடக்கிறார்கள். நாம் மாறிவிட்டோமா? மீண்டும் பழைய நிலைக்குச் செல்வோமா? என்று யாருக்கும் புரியாத ஒரு மந்த நிலை. ஒரு நாளில் நாற்பது தடவை தொற்று எண்ணிக்கை, சாவு எண்ணிக்கை என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதை விட்டுவிட்டார்கள். பல எழுத்தாளர்களின் பேனா முனைகள் உலர்ந்து கிடக்கின்றன, ஓவியத்திரைகள் வெள்ளையாகவே இருக்கின்றன. எல்லா நாட்களும் இரவின் தூக்கத்தை நோக்கியே நகர்கின்றன.

வாழ்வை நடத்துவதே தினசரி போராட்டம் என்று பழகிய வறியவர்கள் கூட திகைத்து விட்டார்கள். தினமும் வேலை, வேலைக்கு ஊதியம், ஊதியத்தில் வாழ்க்கை எனும் இயல்பு பிரழ்ந்து விட்டது. வேலை இல்லை, வெளியே போகவும் முடியாது, பொருட்கள் வாங்கவும் பணம் இல்லை என்ற நிலையில் உதவிகள் எங்கிருந்து எப்போது வரும் எனும் ஏக்க எதிர்பார்ப்பில் அவர்களது நாட்கள் தேய்ந்தன.

அவர்களிடம் வேலை வாங்கிப் பழகிவிட்ட நடுத்தர வர்க்கம் தன் வேலையைத் தானே செய்வதன் சிரமத்தை இயல்பாக லகுவில் ஏற்றுக்கொண்டது. ஆனாலும் பழகிய வசதிகள் இல்லாதது ஓர் இறுக்கத்தை அவர்களிடமும் ஏற்படுத்தி விட்டது. இன்னும் ஒரு வாரம், இரண்டு வாரம் எனும் கணக்குகளில் அவர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. வீட்டிலேயேஅடைபட்டிருக்கும் குடும்பத்தில் நெருக்கத்துக்குப் பதிலாய் இறுக்கம் கூட ஆரம்பித்தது. சிரு தவறுகள் பெரிதாய்த் தெரிந்தன, பொழுது போவது பெரும் பாரமாகியது. வளமான வாழ்வை அமைத்துக் கொண்டவர்களுக்குப் பணி செய்ய இன்னமும் சிலர் இருந்தார்கள். அவர்களது இயல்பு எனும் கேளிக்கை, சமூகவலைவிரிப்புகள் மட்டுமே இல்லாமல் போயின.

படிக்க:
♦ அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !
♦ கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !

குடிப்பதற்கும் புகைப்பதற்கும் பழகியவர்களுக்கு அவை இல்லாமல் ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே வந்தது. அதன் வெளிப்பாடு வீட்டில் இருப்பவர்களின் மீது தேவையில்லாத கோபமாய் வந்து கொண்டிருந்தது. திடீரென்று அறிவிக்கப்பட்ட நாடடங்கில் திட்டமிடாமல் வந்த உறவினர்கள் சில வீடுகளில் பாரமாக உணரப்பட்டனர். அவர்களுக்குப் போக முடியாமல், இவர்களுக்கும் அனுப்ப முடியாமல், செலவுகளோடு உறவுச்சிக்கல்களையும் பல வீடுகள் சமாளிக்கத் திணறின. அத்தியாவசியத்திற்கே மிகுந்த பிரயத்தனம் தேவைப்படும்போது, இளைப்பாற எந்த செலவும் சாத்தியமில்லாமல் போனது.

இதன் அடுத்த கட்டம்தான் மனநலம் பாதிக்கப்படும் நிலை. பதட்டத்தில் ஆரம்பித்து, வெறுப்பில், விரக்தியில் தொடர்ந்து, எரிச்சலாய் வெளிப்பட்டு முடிவில் மனச்சோர்வில் முடியும்.

இந்த வாரத்திற்குப்பின் மனச்சோர்வின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.

மனச்சோர்வின் ஆரம்ப அறிகுறிகள் உறக்கம் கெடுதல், உணவுப் பழக்கத்தில் மாறுதல், எதிலும் நாட்டமின்மை, கவனச்சிதறல், சோகமான மனநிலை, தனிமை நாடுதல், ஆர்வம் இருந்த காரியங்களிலும் ஈடுபட முடியாத நிலை, பேசுவதும் பிறரிடம் தொடர்பு கொள்வதும் குறைதல். மெல்ல, மணிக்கொருமுறை செல்பேசியில் கணினியில் கொரோனா செய்தி தேடுவதும் குறைந்து விடும். வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு இது சோம்பல் போல் தெரியும். இவர்களை இதே மனச்சோர்வில் விட்டுவிட்டால் விளைவுகள் விபரீதமாகவும் முடியலாம். இப்படி யாராவது இருந்தால் அவர்களிடம் பேசுங்கள். வெட்டியாகவாவது பேசுங்கள். அறிவுரை ஆலோசனை என்றெல்லாம் ஆரம்பிக்காமல் அடுத்த வீட்டின் பூனை பற்றி கூட பேசுங்கள். அவர்கள் உங்கள் பேச்சை விரும்பாவிட்டாலும் பேசுங்கள். அந்நேரம் அவர்களது சோகம் எரிச்சலானாலும் அது அவர்களுக்கு உதவும்.

இது பற்றி நிறைய பேச வேண்டியிருக்கிறது. இதற்கான நேரம் வந்து விட்டது.

நன்றி : ஃபேஸ்புக்கில் ருத்ரன் மனநல மருத்துவர்.,

அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதில் சீனா, இத்தாலி ஆகிய நாடுகளைத் தாண்டி அமெரிக்க முதலிடம் பெற்றுள்ளது. அமெரிக்க நாட்டின் சுகாதாரக் கொள்கையும் மருத்துவக் காப்பீட்டு திட்டங்களும் “கையில் காசு வாயில் தோசை” என்கிற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஏழை அமெரிக்கர்கள் கொரானா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கருப்பின மக்கள் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருப்பின மக்கள் அடர்த்தியாக வாழும் நியூ ஆர்லியன்ஸ், டெட்ராய்ட், நியூயார்க் போன்ற நகரங்களில் கொரோனா வைரசால் மரணமடைவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இறந்தவர்கள் குறித்த இனவாரியான தகவல்களை இல்லினாய்ஸ், லூசியானா, மிச்சிகன் மற்றும் வட கரோலினா தவிர்த்த பிற மாகாண அரசுகள் வெளியிடவில்லை. அமெரிக்காவில் உள்ள “தொற்று நோய்களுக்கான தேசிய அமைப்பின்” ( National Institute of Allergy and Infectious Diseases) இயக்குநர் அந்தோனி ஃபாவ்சி ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

இது மிக மோசமான சவால் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர், இதற்கான காரணம் என்னவென்பதை கண்டுபிடித்தாக வேண்டும் என்றார். “இப்போதைக்கு இதைக் குறித்து செய்வதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் (கருப்பினத்தவர் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து) மிகவும் கவலை கொள்கிறோம். இப்போதைக்கு அவர்களுக்கு போதிய கவனிப்பை உறுதி செய்தைத் தவிற வேறு வழியில்லை” என்கிறார் ஃபாவ்சி.

இனவாரியான தகவல்களை வெளியிட்டுள்ள மாகாணங்களின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கருப்பினத்தவர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது. இல்லியனாய்ஸ் மாகானத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள தொற்று உள்ளவர்களில் 28.4 சதவிதம் பேர் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள். 10 சதவீதம் பேர் ஹிஸ்பேனிக் (ஸ்பானிய), 27.1 சதவீதம் பேர் காகாசிய இனத்தவர் (வெள்ளையினம்). இறந்தவர்களில் 42.9 சதவீதம் பேர் கருப்பினத்தவர். அந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் கருப்பினத்தவரின் சதவீதம் 15 என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் பரிமாணம் புரியும்.

அதே போல் மிச்சிகனின் மக்கள் தொகையில் 14 சதவீதமாக கருப்பினத்தவர்கள் உள்ளனர் – ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் 33 சதவீதமும் இறந்தவர்களில் 40 சதவீதமாகவும் உள்ளனர். நியூயார்க் மக்கள் தொகையில் 22 சதவீதமாக கருப்பினத்தவர் உள்ளனர் – ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் 28 சதவீதமாக உள்ளனர்.. கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லூசியானா மாகாணத்தில் இறந்தவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் – ஆனால், அவர்களின் மக்கள் தொகை சதவீதமோ 32 சதவீதம் தான்.

படிக்க:
♦ கொரோனா – கருத்துப்படங்கள் !
♦ உத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை !

லூசியானா மாகாண கவர்னர் எட்வர்ட்ஸ், “உண்மையில் இது மிகப் பெரிய அளவில் பாரபட்சமாக உள்ளது. இதை உடனடியாக நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்கிறார். கருப்பின மக்கள் பெரும்பாலும் ஏழைகளாகவும், சேரிகளில் அடர்த்தியாக வாழும் நிலையில் இருப்பது ஒருபுறம் என்றால் அவர்களில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் பலருக்கு ஏற்கனவே நீரிழிவும் ஆஸ்துமா போன்ற நிரையீரல் பாதிப்பும் உள்ளது.

லூசியானா மாகாண சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் அலெக்ஸ் பில்லியோக்ஸ், “வருத்தத்திற்குரிய வகையில் இனரீதியிலான மிகப் பெரும் பாகுபாடு உள்ளது” என ஒப்புக் கொண்டுள்ளார். அமெரிக்க மருத்துவக் காப்பீடு பெரும் கார்ப்பரேட்டுகளின் நலனைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது நேரடியாக உழைக்கும் மக்களின் உயிர்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது ஒரு எதார்த்தம். இதன் விளைவாக ஏழை கருப்பினத்தவர்கள் குணப்படுத்தி விடக்கூடிய சாதாரண நோய்களுக்கும் கூட பலியாகும் சூழல் நிலவுகின்றது.

“நமக்கெல்லாம் ஏற்கனவே தெரிந்த இந்த மொத்த கட்டமைப்பின் ஓட்டாண்டித்தனமும் இப்போது பளிச்சென்று அம்பலமாகி உள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க அமெரிக்க சமூகத்தின் இடையே கொரோனா வைரஸ் என்கிற கிரியா ஊக்கி நுழையும் போது அது உண்டாக்கும் பாதிப்புகள் பன்மடங்காக உயருகின்றது” என்கிறார் National Association for the Advancement of Colored People என்கிற அமைப்பின் தலைவர் டெர்ரிக் ஜோன்சன்

நோய் யாரைக் கொல்கிறது என்பதை பொருளாதார சமத்துவமின்மையே தீர்மானிக்கின்றது என்பதை தற்போது வெளியாகி உள்ள தரவுகளே நிரூபிப்பதாக உள்ளது என்கிறார் நியூயார்க்கின் மேயர் டெ ப்ளாஸியோ. மேலும், “நாம் பல பத்தாண்டுகளாக பார்த்து வரும் சுகாதாரத் துறை கொள்கையின் பாகுபாடுகளின் விளைவுகளை இப்போது கொரோனா வைரசின் எதிர்மறையான தாக்கங்கள், அது உண்டாக்கும் மரணங்கள், மேலும் தெளிவாக உணர்த்தி உள்ளது” என்கிறார்.

சில மாகாணங்களைத் தவிர பெரும்பான்மையான மாகாணங்கள் பாதிப்புக்கு உள்ளானவர்கள் குறித்த இனவாரியான தரவுகளை வெளியிடாமல் இருப்பதை கண்டிக்கும் சமூக செயல்பாட்டாளர்கள், கருப்பினத்தவர்கள் தாங்கள் அதிகம் பாதிக்கப்பட்டது குறித்து அறிந்து கொள்ளாமல் அரசு தடுக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

“வீட்டிலேயே முடங்கி இருங்கள்” என்கிற செய்தியைத் தாண்டி நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது என்கிறார் ரோச்செஸ்டரின் மேயர் வாரன்.

அனைவருக்குமான இலவச பொது சுகாதார ஏற்பாடுகளைக் கொண்ட நாடுகளே கொரோனாவை எதிர்கொள்வதில் வெற்றி பெற்றுவருவதை நாம் பார்த்து வருகின்றோம். அவ்வாறான ஒரு ஏற்பாடு முதலாளித்துவத்தின் கல்லாவில் ஓட்டையைப் போட்டு விடும் என்பதால் முதலாளித்துவ உலகம் இப்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது.

தங்களது பண்டங்களை விற்க சந்தை வேண்டும் – சந்தையில் பொருட்களை வாங்க மக்கள் வேண்டும் – மக்கள் உயிரோடு வாழ அனைவருக்குமான பொது சுகாதாரம் அவசியம் – ஆனால், முதலாளித்துவமோ “இலவசங்களுக்கு” கொள்கையளவிலேயே எதிரானது. அங்கே மருத்துவ சேவை என்பதும் கூட விற்பனைக்கான ஒரு பண்டம் தான். இதில் மாற்றத்தைக் கொண்டு வருவது அதன் உடலில் இருந்து ஆன்மாவைப் பிடுங்கி எரிவதற்கு ஒப்பானது.

இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை தான். முதலாளித்துவம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்ப்போம்.


– தமிழண்ணல்
செய்தி ஆதாரம் :  USA TODAY

உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுங்கள் ! – ஆனந்த் தெல்தும்டேவின் திறந்த மடல் !

Tamil translation of Open letter of Anand Teltumbde

னக்கு நன்றாக தெரியும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கூட்டு மற்றும் அவர்களது கோரிக்கைகளை எந்த கேள்வியும் எழுப்பாமல் ஏற்கும் ஊடகங்கள் – இவர்கள் எழுப்பப் போகும் திட்டமிட்ட அருவருப்பான ஒலியில் எனது குரல் கேட்காமல் போகும். இருந்தபோதிலும் இப்போது பேசுவது தேவையான ஒன்று என்றே கருதுகிறேன். ஏனெனில் எனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா என தெரியாது.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவா மேலாண்மை கல்வி நிலைய வளாகத்தில் உள்ள என் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதிலிருந்தே எனது உலகம் தலைகீழாக மாறிவிட்டது.

எனது மோசமான கனவுகளில் கூட, எனக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்துப் பார்த்தது இல்லை.

பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் நான் ஆற்றிய உரைக்கு ஏற்பாடு செய்த அமைப்பாளர்களிடம் என்னைப் பற்றி விசாரித்து போலீஸ் அச்சமூட்டிய போது, நான் கூட போலீஸார் பல காலத்திற்கு முன்பு எங்கள் வீட்டை விட்டு வெளியேறிய என் சகோதரர் குறித்து விசாரிக்கிறார்கள். நான்தான் அவர் என் தவறுதலாக நினைத்து விசாரிப்பதாகவே நினைத்தேன்.

நான் ஐஐடி கரக்பூரில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, ஒரு பி.எஸ்.என்.எல் ஊழியர் என்னை தொலைப்பேசியில் அழைத்தார். எனது நலம் விரும்பி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், எனது ஃபோன் உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாகக் கூறினார்.

நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். ஆனால், அதன் பின்பும் கூட என் சிம்கார்டை நான் மாற்றவில்லை.

படிக்க:
♦ ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு ! பாசிச UAPA சட்டங்களை ரத்து செய் !
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

இது போன்ற கண்காணிப்புகளால் நான் தொந்தரவுக்கு உள்ளாகி இருந்தாலும், என்னைக் கண்காணிப்பதன் மூலம் போலீஸுக்கு உண்மை புரியும்… நான் சட்டத்துக்கு புறம்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என அவர்கள் புரிந்து கொள்வார்கள் என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

போலீஸை கேள்வி கேட்பதால் அவர்கள் பெரும்பாலும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை வெறுப்பார்கள். நானும் அத்தகைய ஒருவன் என்பதால் போலீஸ் என்னை கண்காணிப்பதாக நினைத்தேன். ஆனால், என் பணி நிமித்தம் காரணமாக அவ்வாறான செயல்பாடுகளிலும் நான் ஈடுபடுவதில்லை என்பதை என்னைக் கண்காணிப்பதன் மூலம் போலீஸ் உணர்வார்கள் என நினைத்தேன்.

ஆனால், ஒரு நாள் அதிகாலை என்னை அழைத்த எனது கல்வி நிலையத்தின் இயக்குநர் போலீஸ் எங்கள் கல்வி நிலையத்தைச் சோதனை இடுவதாகவும்… நான் எங்கே என தேடுவதாகவும் கூறிய போது.. ஒரு சில விநாடிகள் வார்த்தையற்று போனேன்.

ஒரு அலுவலக வேலை காரணமாக சில மணி நேரங்களுக்கு முன்புதான் நான் மும்பை வந்திருந்தேன். என் மனைவி எனக்கு முன்பே வந்திருந்தார்.

மேலும் சில இடங்களில் சோதனை நடந்தது என்றும், அப்படி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றும் நான் அறிந்த போது, சில மணி நேரங்களுக்கு முன்பு அங்கிருந்து மும்பை பயணித்ததால் தப்பித்தேன் என்ற நினைப்பே என்னை உலுக்கியது.

ஆனால், போலீஸூக்கு நான் எங்கு இருக்கிறேன் என தெரியும். என்னைக் கைது செய்திருக்கலாம். ஆனால், ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

போலீஸார் காவலரிடமிருந்து பெற்ற டூப்ளிகேட் சாவிக் கொண்டு வலுக்கட்டாயமாக என் வீட்டை திறந்தார்கள். வீட்டை வீடியோ பதிவு செய்தபின் மூடிவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால் எங்களது இன்னல்கள் அங்கிருந்துதான் தொடங்கியது.

எங்களது வழக்குரைஞர்களுடன் ஆலோசித்தப்பின் என் மனைவி அடுத்த விமானம் பிடித்து கோவா சென்றார். பிகோலிம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

அதாவது நாங்கள் இல்லாத போது எங்கள் வீடு சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. வீட்டில் ஏதாவது பொருள் வைக்கப்பட்டிருந்தால் நாங்கள் பொறுப்பில்லை என்பதுதான் அந்த புகார்.

இதுதொடர்பாக எங்களை விசாரிப்பதற்காக எங்கள் தொலைபேசி எண்ணையும் காவல் நிலையத்தில் கொடுத்துவிட்டே வந்தார்.

ஆனால், அதன் பின் போலீஸ் பத்திரிகையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்து மாவோயிஸ்ட் கதைகள் சொல்லும் காரியத்தில் இறங்கியது.

எனக்கு எதிரான ஒரு முன்முடிவை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். ஊடகத்தின் மூலம் அந்த சித்திரத்தை ஏற்படுத்தி என்னை கைது செய்ய திட்டமிட்டார்கள்

2018 ஆக்ஸ்ட் மாதம் 31ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், சோதனை செய்யப்பட்ட வீடுகளில் உள்ள கணிணியிலிருந்து எடுக்கப்பட்ட கடிதம்தான் எனக்கு எதிரான ஆதாரம் எனக் கூறி அந்த கடிதத்தை வாசித்தார்கள்.

ஆனால், அந்த கடிதத்தில் எதுவுமே இல்லை. நான் கல்வி தொடர்பாகக் கலந்து கொண்ட மாநாடுகள் தொடர்பான தகவல்கள் அது. அந்த தகவல்கள் அமெரிக்கன் யுனிவர்சிட்டி ஆஃப் பாரிஸ் இணையதளத்தில் இருக்கிறது.

முதலில் நான் சிரித்துக் கொண்டேன் ஆனால் அதன் பின் அந்த அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு வழக்குப் போட தீர்மானித்தேன். அனைத்தும் நடைமுறைகள்படி நடக்க வேண்டும் என்பதற்காக இதுதொடர்பாக ஒரு கடிதத்தை மகாராஷ்டிரா அரசுக்கு அனுப்பினேன்.

ஆனால், இன்று வரை அவர்களிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. உயர்நீதிமன்றம் கண்டித்தபின் இப்படியான பத்திரிகையாளர் சந்திப்புகள் ஒரு கட்டத்தில் நின்றது.

இந்த வழக்கின் மொத்த பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கை வெளிப்படையாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயற்பாட்டாளர் ரமேஷ் படாங்கே என்னை குறித்து ஒரு கட்டுரை அவர்களது பிரசார இதழான பஞ்சன்யாவில் எழுதி இருப்பதாக எனது மராத்தி நண்பர் கூறினார்.

அந்தக் கட்டுரையில் நான் ‘மாயாவி அம்பேத்கர்வாதி’ என குறிப்பிடப்பட்டு இருந்தேன். அருந்ததி ராய் மற்றும் கையில் ஓம்வெட் ஆகியோருடன் என்னை இணைத்து அந்தக் கட்டுரை புனையப்பட்டு இருந்தது. மாயாவி என்பது இந்து புராணங்களில் அழிவை உண்டாக்கும் துர்சக்தியை குறிக்கும் வார்த்தை.

எனது புனே இல்லத்தில் நான் சட்டப்படி கைது செய்யப்பட்டபோது, இந்துத்துவவாதிகளின் இணைய கும்பல் என்னை குறித்து இணையத்தில் தாக்குதல் நடத்தியது.

எனது விக்கிமீடியே பக்கம் அழிக்கப்பட்டு… அதில் பொய் தகவல்கள் சேர்க்கப்பட்டன. பல ஆண்டுக்காலமாக அந்த விக்கிமீடியா பக்கம் பப்ளிக் பேஜ் (Public Page) ஆகத்தான் இருந்திருக்கிறது. இது குறித்து எனக்கே தெரியாது.

அந்த பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் அழித்து, “எனக்கு மாவோயிஸ்ட் சகோதரர் இருக்கிறார்… அவர் வீடு போலீஸால் சோதனை செய்யப்பட்டது… மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்துள்ளதால் கைது செய்யப்பட்டுள்ளார்…” ஆகிய தகவகளை அதில் சேர்த்தனர்.

அதனை திருத்த எனது மாணவர்கள் ஒவ்வொரு முறை முயற்சி செய்த போதும் அந்த கும்பலால் மீண்டும் மீண்டும் இதே தகவல் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனை என் மாணவர்கள் என்னிடம் கூறினர்.

இறுதியாக விக்கிமீடியா தலையிட்டு என் பக்கத்தை மீட்டது. அந்த இந்துத்துவ கும்பலின் கருத்தும் அதில் சேர்க்கப்பட்டது.

நக்சல் நிபுணர்களைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, ஊடகங்களில் பொய்யையும், புரட்டையும் கட்டவிழித்துவிட்டது.

இது தொடர்பாக நான் ஊடக அமைப்புகளுக்கு, குறிப்பாக இந்தியா ப்ராட்காஸ்டிங் ஃபவுண்டேசனுக்கும் புகார் அளித்தேன். ஆனால் எந்த பலனும் இல்லை.

என் கைபேசியில் இஸ்ரேலி ஸ்பைவேர் பொருத்தப்பட்டு தகவல்கள் எடுக்கப்பட்டதாகவும் இதிகாச கதைகள் அதன் பின்ன வெளிவந்தன. ஆனால், இதனை வைத்து ஊடக சலசலப்புகள் உடனே எழுந்தன. ஆனால், அந்த கதைகளும் பின் மரணித்தது.

நான் ஒரு எளிய மனிதன். நியாயமாக உழைத்து உண்கிறேன். எனது எழுத்தின் மூலமாக எனது அறிவை பகிர்ந்து கொண்டு பிறருக்கு உதவுகிறேன்.

ஆசிரியனாக, சிவில் சமூக செயற்பாட்டாளனாக, சமூக அறிவுஜீவியாக கடந்த ஐம்பதாண்டுகாலமாக இந்த கார்ப்பரேட் உலகத்தில் எந்த களங்கமும் இல்லாமல் சேவையாற்றி இருக்கிறேன்.

எனது எழுத்துகள் 30 புத்தகங்களாக, பல ஆராய்ச்சி கட்டுரைகளாக வெளிவந்திருக்கிறது. சர்வதேச அளவில் என் கட்டுரைகள், எனது நேர்காணல்கள் பிரசுரமாகி இருக்கின்றன. ஆனால் என் வாழ்வின் இறுதி காலகட்டத்தில், கொடூரமான குற்றம் புரிந்ததாக சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களை தடுக்கும் கொடுமையான சட்டமான UAPA சட்டத்தில் கைது செய்யப்படுகிறேன்.

என்னை போன்ற தனிமனிதர்கள் அரசால் ஊக்கமூட்டப்பட்ட பிரசாரத்தை, அவர்களுக்கு கீழ்படியும் ஊடகங்களை எதிர் கொள்ள முடியாது. இணையத்தில் இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. அதை படிக்கும் அனைவருக்கும் இது ஜோடிக்கப்பட்ட வழக்கு எனப் புரிந்து கொள்ள முடியும்.

AIFRTE இணையத்தில் இது தொடர்பாகச் சுருக்கமான தகவல்கள் கிடைக்கின்றன. அதனைச் சுலபமாகப் படிக்க முடியும். இருந்த போதிலும் உங்களுக்காக இந்த வழக்கின் சுருக்கத்தை தருகிறேன்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் கணிப்பொறியில் கிடைத்த 13 கடிதங்களில் ஐந்து கடிதங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் நான் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறேன். என்னிடமிருந்து நேரடியாக எதுவும் மீட்கப்படவில்லை.

ஆனந்த் என சில கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பலருக்கு இருக்கும் பொதுவான பெயர் அது. ஆனால்,போலீஸார் எந்த கேள்வியும் இல்லாமல் என்னை அதனுடன் சம்பந்தப்படுத்துகிறார்கள். அந்த கடிதத்திலும் பெரிதாக எதுவும் இல்லை. பல வல்லுநர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி உட்பட இந்த சாட்சியை புறந்தள்ளி இருக்கிறார்கள். சாதாரண வழக்காகக் கூட பதியப்பட முடியாத கடிதத்தை சாட்சியாக கொண்டு கொடூரமான UAPA சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

நீங்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள இந்த வழக்கை பின்வருமாறு விவரிக்கிறேன்:

திடீரென ஒருநாள் காவல்துறை எந்த வாரண்டையும் காட்டாமல் உங்கள் வீட்டுக்குள் நுழைகிறது. உங்கள் வீட்டை சேதப்படுத்துகிறது. இறுதியில் உங்களை கைது செய்து சிறையில் தள்ளுகிறது.

நீதிமன்றத்தில் ஏதேதோ சொல்கிறது. அதாவது ஒரு திருட்டு குற்றச்சாட்டை இந்தியாவில் ஏதோவொரு இடத்தில் விசாரிக்கும் போது, போலீஸுக்கு ஒரு பென் டிரைவ் கிடைத்ததாகவும், அதில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் கடிதம் எழுதியதாகவும், அதில் ஏதோவொரு பெயர் குறிப்பிடப்பட்டதாகவும், ஆனால் போலீஸை பொறுத்தவரை அது நீங்கள்தான் என்றும் கூறுகிறது.

ஆழமான சதித்திட்டத்தில் உங்களை சிக்க வைக்கிறார்கள். உங்களது வாழ்க்கை திடீரென தலைகீழாக மாறுகிறது. உங்கள் வேலை பறிபோகிறது. உங்கள் குடும்பம் அனைத்தையும் இழக்கிறது. உங்களால் எதிர்கொள்ளவே முடியாத அளவுக்கு ஊடகங்கள் உங்களுக்கு எதிரான பரப்புரையில் இறங்குகின்றன.

போலீஸார் சீல் இடப்பட்ட கவரை நீதிபதிகளிடம் தருகிறார்கள். உங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முகாந்திரம் இருப்பதாகவும், உங்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென்றும் கூறுகிறார்கள்.

நீதிமன்ற விசாரணை முடிந்தபின் உங்களைச் சிறைக்கு அனுப்புகிறார்கள். நீங்கள் பிணை கோருகிறீர்கள். ஆனால் நீதிமன்றம் மறுக்கிறது .

கற்பனை செய்து பாருங்கள்… நீங்கள் என்ன செய்வீர்கள்?

இந்தியாவில் ஒருவர் குற்றமே செய்யவில்லை என இறுதியில் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டாலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் விசாரணை கைதியாகச் சராசரியாக நான்கிலிருந்து பத்து ஆண்டுகள் வரை சிறையில் இருக்கிறார்.

தேசத்தின் பெயரால் கொடூரமான சட்டத்தைக் கொண்டு தனி நபர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.

தேசம்.. தேசியம்.. என்பதெல்லாம் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

மக்களுக்கு தன்னலமற்று சேவை செய்பவர்கள் தேசத் துரோகிகளாகவும், தேசத்தை அழிப்பவர்கள் தேசபக்தர்களாகவும் பொருட்பட தொடங்கிவிட்டனர்.

எனது இந்தியா சிதைக்கப்படுவதை நான்பார்க்கும் இந்த நேரத்தில், பலவீனமான நம்பிக்கையுடன் இந்த கடிதத்தைக் கடுமையான தருணத்தில் எழுதுகிறேன்.

சரி… என்.ஐ.ஏ கட்டுப்பாட்டிற்குள் செகிறேன். உங்களுடன் மீண்டும் எப்போது பேச முடியும் என எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுவீர்கள் என நம்புகிறேன்.

– ஆனந்த் டெல்டும்டே
தமிழாக்கம் : மு. நியாஸ் அகமது

நன்றி : ஃபேஸ்புக்கில்Niyas Ahmed

உத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை !

த்திரப் பிரதேசம் இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலையாக மாற்றப்பட்டிருப்பதை, அம்மாநில முசுலிம்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது அம்மாநிலத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் கும்பல் அடுத்தடுத்து ஏவிவிட்டிருக்கும் அடக்குமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன.

டெல்லியில் நடத்தப்பட்ட இந்து மதவெறித் தாக்குதலில் தளபதிகளாகச் செயல்பட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா ஆகியோர் மீதும்; இத்தாக்குதலை நடத்துவதற்காக உ.பி. உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து டெல்லிக்குக் கொண்டுவரப்பட்ட ஆர்.எஸ்.எஸ். காலிகள் மீதும் இதுநாள் வரையில் ஒரு முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவு செய்யப்படவில்லை.

அதேசமயம், உ.பி.யிலோ குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய முசுலிம்கள் மீதும், அப்போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் ஜனநாயக சக்திகள் மீதும் அடுத்தடுத்துப் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு, அவர்கள் அனைவரையும் தேசத் துரோகிகளாக, அரசின் எதிரிகளாகப் பொது வெளியில் சித்தரிக்கும் ஆள்காட்டி வேலையைச் செய்து முடித்திருக்கிறது, யோகி ஆதித்யநாத் அரசு.

உ.பி.யில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களின் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டனர். சிறுவர்கள் உள்ளிட்டு 1,640 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் அனைவரின் மீதும் 450-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. 27 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் வழக்கு தொடுக்கப்பட்டது.

இக்கிரிமினல் வழக்குகள் உ.பி. போலீசால் புனையப்பட்ட பொய் வழக்குகள் என்பது முதற்கட்ட நீதிமன்ற விசாரணையிலேயே அம்பலமாகிவிட்டது. எனினும், இந்து மதவெறி பாசிஸ்டான யோகி ஆதித்யநாத்தின் பழி தீர்க்கும் வெறியோ சற்றும் அடங்கிவிடவில்லை.

உ.பி. தலைநகர் லக்னோவில் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் வெளியே வந்துவிட்டவர்களுள் 57 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய தட்டிகளை லக்னோ நகரின் 100 இடங்களில் நிறுவி, அவர்கள் அனைவரையும் அரசின் எதிரிகளாக அடையாளப்படுத்தி அவமதிக்கும் சட்டவிரோதமான, கீழ்த்தரமான தாக்குதலை ஏவியிருக்கிறது, ஆதித்யநாத் அரசு.

இந்த ஆட்காட்டி வேலையின் தொடர்ச்சியாக, அந்த 57 பேரும் ஆர்ப்பாட்டத்தின்போது வன்முறையில் இறங்கி அரசு மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தி, அவர்கள் அனைவரும் 1.56 கோடி ரூபாய் நட்ட ஈடும், அத்தொகையின் மீது 10 சதவீத வசூல் கட்டணத்தையும் சேர்த்து, மொத்தத் தொகையையும் உடனடியாகக் கட்டக் கோரும் நீதிமன்றத் தாக்கீதையும் அனுப்பி வைத்திருக்கிறது.

அலகாபாத் உயர் நீதிமன்றம் உ.பி. அரசின் இந்த ஆட்காட்டி விளம்பரத் தட்டிப் பிரச்சாரத்தைத் தானே முன்வந்து, இரண்டு நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு அமர்வை நியமித்து, விடுமுறை தினமான ஞாயிறு என்றும் பாராமல் விசாரித்தது. அவ்வமர்வு இந்த ஆட்காட்டி நடவடிக்கையை, “அரசியல் சாசனப் பிரிவு 21 மற்றும் தனி மனித உரிமைக்கு எதிரானது எனச் சுட்டிக் காட்டியதோடு, அரசின் நிறச் சார்பை (colourable exercise) வெளிக்காட்டுகிறது” என்றும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தச் சுவரொட்டிகளை உடனே அகற்ற வேண்டுமென்றும், அகற்றப்பட்டது குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்திடம் அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

உ.பி. மாநில இந்து மதவெறி அரசோ ஆட்காட்டி விளம்பரத் தட்டிகளை அகற்றுவதற்குப் பதிலாக,  அவற்றை அகற்றச் சொன்ன உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்ததோடு, அந்த 57 பேர் மீதும் குண்டர் சட்டத்தை ஏவித் தனது பாசிச குரூரப் புத்தியை வெளிக்காட்டிக் கொண்டது.

இந்த 57 பேர் மீதான வழக்குகள் முடிவடையாத நிலையில், அவர்களுள் ஒருவர்கூட இன்னும் எந்தவொரு நீதிமன்றத்தாலும் குற்றவாளியாக அறிவிக்கப்படாத நிலையில் அவர்களின் புகைப்படங்களையும் முகவரிகளையும் சுவரொட்டியில் அச்சிட்டு வெளியிட்டது அடிப்படையிலேயே சட்டவிரோதமானது என்கிறார்கள் வழக்குரைஞர்கள்.

ஆனால், இம்மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வோ, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டாலும், இந்த வழக்கைச் சட்டரீதியாக ஆராய வேண்டியிருப்பதால், அதிக எண்ணிக்கை கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரிக்கப் பரிந்துரை செய்து தீர்ப்பளிப்பதிலிருந்து நழுவிக் கொண்டுவிட்டது.

உ.பி. அரசின் இந்த ஆட்காட்டி நடவடிக்கையை அரசியல் சாசனப் பிரிவு 21-க்கு எதிரானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய பிறகும்கூட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கைச் சட்டரீதியாக ஆராய வேண்டியிருக்கிறது எனக் கூறியிருப்பது இந்து மதவெறிக் கும்பலுக்குக் காட்டப்பட்ட சலுகை தவிர வேறில்லை.

படிக்க:
கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !
ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு ! பாசிச UAPA சட்டங்களை ரத்து செய் !

இந்தச் சலுகையை அளித்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவர் நீதிபதி யு.யு.லலித் என்பது குறிப்பிடத்தக்கது. யு.யு. லலித் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தபோது, சோராபுதின் போலி மோதல் கொலை வழக்கில் அமித் ஷாவின் சார்பாக வழக்காடி வந்தார். அதற்குச் சன்மானமாக, நரேந்தர மோடி மே 2014-இல் பிரதமராகப் பதவியேற்ற ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே யு.யு. லலித்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை அளித்தார் என்பது சமீபத்திய வரலாறு.

உச்ச நீதிமன்ற அமர்வு இவ்வழக்கைக் கூடுதல் நீதிபதிகள் விசாரிக்கப் பரிந்துரைத்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் ஆர்ப்பாட்டங்களின்போது பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து வசூலிப்பதற்கு ஏற்றவாறு போடப்பட்ட அரசு உத்தரவைச் சட்டமாக இயற்றிக் கொண்டுவிட்டது, யோகி ஆதித்யநாத் அரசு.

***

“லக்னோ நகரில் வன்முறையைத் திட்டமிட்டுத் தூண்டிவிட்ட இந்த 57 பேரும் செல்வாக்குமிக்க நபர்கள்; இவர்கள் தமது செல்வாக்கைக் கொண்டு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுவார்கள்” என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வாதாடியது, உ.பி. அரசு. ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானது.

இந்த 57 பேரில், லக்னோ-ஹஸன்கஞ்ச் பகுதியில் வசித்துவரும் இருபது வயதான கல்லூரி மாணவன் ஒசாமா சித்திக்கும் ஒருவன். சித்திக்கும் அதே பகுதியில் வசித்துவரும் வேறு பன்னிரெண்டு பேரும் 21.76 இலட்ச ரூபாய் நட்ட ஈடாகத் தர வேண்டுமென தாக்கீது அனுப்பியிருக்கிறது, உ.பி அரசு.

சித்திக்கை கலவரம் நடந்த பகுதியில் கையும் களவுமாகப் பிடித்ததாகக் கூறுகிறது, போலீசு. ஆனால், மதியம் இரண்டு மணி வரை வீட்டில் இருந்த சித்திக், தனக்குத் தேவையான எழுது பொருட்களை வாங்குவதற்காகக் கடைவீதிக்குச் சென்றிருந்தபோது போலீசார் அவனைப் பிடித்துக் கைது செய்துவிட்டதாகக் கூறுகிறார், சித்திக்கின் தாய்.

“தனது வீட்டிலிருந்து இரண்டு கி.மீ. தூரம் தள்ளியுள்ள பகுதிக்குக் கலவரம் நடந்த சமயத்தில் வர வேண்டிய அவசியமென்ன?” எனக் கேட்டு சித்திக் கூறியதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது, நீதிமன்றம். அதேசமயம், சித்திக் நேரடியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதற்கோ, வன்முறையில் இறங்கியதற்கோ எந்தவிதமான நேரடியான ஆதாரம், சாட்சியங்களை போலீசும் அளிக்கவில்லை. எனினும், நட்ட ஈடு கேட்டு சித்திக்கிற்கு நீதிமன்ற நோட்டீசு அனுப்பப்பட்டிருக்கிறது.

சித்திக்கின் தந்தைக்கு நிரந்தர வருமானம் தரும் வேலையெதுவும் கிடையாது. அவர்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வாடகைப் பணம்தான் குடும்ப வருமானம். “இப்படிப்பட்ட நிலையில் எங்களால் எப்படி நட்ட ஈடைச் செலுத்த முடியும்?” எனக் கேள்வி எழுப்புகிறார், சித்திக்கின் தாய்.

உ.பி. அரசால் கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் 25 பேரின் வழக்குரைஞரான ஆஷ்மா இஜ்ஜத், “தனது கட்சிக்காரர்கள் பெரும்பாலோர் தினக் கூலிகள். சிலரோ வேலையில்லாத பரம ஏழைகள். இந்த 25 பேரில் ஒருவரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாசீம் சையத் சிறிய உணவகமொன்றில் உணவு பரிமாறும் தினக் கூலி. கலீம் என்பவர் ரிக்சா ஓட்டி வாழ்க்கை நடத்திவரும் ஏழைத் தொழிலாளி. நட்ட ஈடு கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டவர்களுள் இருவர் சிறுவர்கள்” எனப் பட்டியில் இடுகிறார்.

பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் முகம்மது ஆனஸ், வணிகவியல் பட்டப்படிப்புப் படித்துவரும் மாணவன். சம்பவ நாளன்று தனிப்பயிற்சி வகுப்புக்குச் சென்று கொண்டிருந்த தன்னை போலீசு பிடித்துச் சென்று வழக்குப் போட்டதாகக் கூறுகிறார், ஆனஸ்.

உ.பி. அரசால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முகம்மது தாரிக், கல்லூரி மாணவன். “தனது தந்தைக்கு மருந்து வாங்குவதற்காகக் கடைவீதிக்குச் சென்றிருந்த தன்னை போலீசு பிடித்துச் சென்றதாகவும், அப்பொழுது ஆர்ப்பாட்டம் தொடங்கியிருக்கவேயில்லை” என்றும் கூறுகிறார், தாரிக்.

லக்னோவின் பரிவர்தன் சௌக் என்ற பகுதியில் இருந்து மட்டும் 15 இளைஞர்களை, அவர்கள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது பிடித்துச் சென்று வழக்குத் தொடுத்திருக்கிறது, உ.பி. அரசு. இவர்கள் அனைவருமே அந்தப் பகுதிகளில் உள்ள சிறு உணவகங்களில் வேலை செய்து வரும் தினக்கூலிகள். இவர்களுள் ஒரு சிலர் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முசுலிம்கள் என்பதைச் சாக்காகக் கொண்டு, அவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்த ‘ஊடுருவிகள்’ எனக் குற்றஞ்சுமத்தி, தனது கைது நடவடிக்கையை நியாயப்படுத்தியிருக்கிறது, உ.பி. போலிசு.

உ.பி. அரசால் குற்றவாளியென அடையாளப்படுத்தப்பட்டிருப்பவர்களுள் முன்னாள் ஐ.பி.எஸ். போலீசு அதிகாரியும் அம்பேத்கர் இயக்கமொன்றை நடத்தி வருபவருமான எஸ்.ஆர்.தாராபுரியும் ஒருவர். உ.பி. மாநிலமெங்கும் குடியுரிமைச் சட்டத் திருத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற டிசம்பர் 19-ஆம் தேதிக்கு முன்பே அவரை வீட்டுக் காவலில் அடைத்துவிட்டது உ.பி. போலீசு. ஆனாலும், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நாளன்று அவர் தனது முகநூலில், “அரசியல் சாசனத்தைக் காப்போம்” எனப் பதிவிட்டதால், மறுநாள் காலையில் தாராபுரியைக் கைது செய்த போலீசு, தனது குற்றப்பத்திரிக்கையில் டிசம்பர் 20 அன்று இரவு ஏழு மணிக்கு தாராபுரியைப் பொது இடத்தில் வைத்துக் கைது செய்ததாகப் புளுகியிருந்தது. நீதிமன்றமும் இந்தப் புளுகை மறுவார்த்தையின்றி ஏற்றுக்கொண்டு, தாராபுரியைச் சிறைக்கு அனுப்பியதோடு, அவர் அரசுக்கு நட்ட ஈடு செலுத்த வேண்டுமென்றும் தாக்கீது அனுப்பியிருக்கிறது.

ரிஹாய் மஞ்ச் என்ற பெயரில் மனித உரிமை அமைப்பொன்றை நடத்திவரும் மூத்த வழக்குரைஞரான முகம்மது ஷோயிப்பும் தாராபுரியைப் போலவே, ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாகவே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். உ.பி. போலீசின் போலி மோதல் கொலைகளைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்திவரும் முகம்மது ஷோயிப்பைப் பழிதீர்த்துக் கொள்ளக் காத்திருந்த உ.பி. அரசு இச்சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அவரையும் கைது செய்து சிறையில் தள்ளியதோடு, சுவரொட்டியில் புகைப்படமாக வெளியிட்டும் அவமானப்படுத்தியிருக்கிறது.

உ.பி. மாநிலத்தில் மிகப் பிரபலமான ஷியா மத போதகர் கல்ரே சாதிக்கின் மகனான கல்பே சிப்தைன் நூரியும் அவரது நண்பருமான மௌலானா சாயிப் அப்பாஸும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற டிசம்பர் 19 அன்று இமாம்பதா என்ற பகுதியில் முசுலிம்கள் மத்தியில் அமைதியாக இருக்கும்படி பிரச்சாரம் செய்துள்ளனர். இவர்கள் முசுலிம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ததையே சாட்சியமாகக் காட்டி, கலவரத்தைத் தூண்டிய சதிகாரர்கள் என அவர்கள் இருவர் மீதும் குற்றஞ்சுமத்தி வழக்குத் தொடுத்திருக்கிறது, உ.பி. போலீசு.

உ.பி போலீசால் கைது செய்யப்பட்ட ஏழை முசுலிம்களின் வாக்குமூலத்தை மட்டுமல்ல, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி தாராபுரி, மூத்த வழக்குரைஞர் முகம்மது ஷோயிப், காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவரும் சமூகச் செயல்பாட்டளுருமான சதாஃப் ஜாபர் ஆகியோரும் தம்மை போலீசார் கெடுமதி நோக்கத்தோடு வழக்கில் இணைத்திருப்பதாக அளித்த வாக்குமூலங்களையும் கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிபதி காது கொடுத்துக் கேட்கவில்லை. மாறாக, “10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டங்களில் வெறும் 57 பேர் மீது மட்டுமே நட்ட ஈடு கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டிருப்பது, உ.பி. போலீசின் திறமையின்மையைக் காட்டுவதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், அரசனை விஞ்சிய விசுவாசி போலும் அந்நீதிபதி!

படிக்க:
யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

சுவரொட்டியில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 57 பேரில் 52 பேர் முசுலிம்கள் என்பது தற்செயலானது அல்ல. யோகி ஆதித்யநாத் அரசு தனது முசுலிம் வெறுப்பு-காழ்ப்புணர்ச்சியை இந்நடவடிக்கையின் மூலம் மிகவும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டிருப்பதோடு, யார் போராடினாலும் அவர்களுக்கும் இதே கதிதான் எனப் பீதியூட்டவும் இந்நடவடிக்கையைப் பயன்படுத்தியிருக்கிறது. உ.பி மாநில அமைச்சரும், அவ்வரசின் பத்திரிகை தொடர்பாளருமான சித்தார்த் நாத் சிங், “யோகி அரசுக்கு எதிராகப் போராடத் துணிபவர்களை இப்படி விளம்பரப்படுத்தி அவமானப்படுத்துவது தடுப்பு நடவடிக்கையைப் போன்றதாகும்” எனக் கூறி, இச்சட்டவிரோதச் செயலை வெளிப்படையாகவே நியாயப்படுத்தியிருக்கிறார்.

அவ்விளம்பரத் தட்டியில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இந்த 57 பேர் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதை உ.பி. அரசு அத்தட்டிகளில் எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக, அவர்களைத் தேசத்தின், அரசின் எதிரிகளாக காட்டியிருப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். கும்பலால் அவர்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டுத் தாக்கப்படும் அபாயகரமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இட்லரின் ஜெர்மனியில் யூதர்கள் மீதான இன அழித்தொழிப்பு நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாக, யூதர்களை இழிவான வெறுக்கத்தக்க குடிமக்களாகவும், இட்லரைத் தேவதூதனைப் போன்றும் சித்தரிக்கும் சுவரொட்டி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. மோடி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தமும், உ.பி.யில் அச்சட்டத்திற்கு எதிராகப் போராடத் துணிந்த முசுலிம்களை, ஜனநாயக சக்திகளைத் தேசத் துரோகிகளாகச் சித்தரிக்கும் இந்தச் சுவரொட்டிப் பிரச்சாரமும் நாடு இட்லரின் பாதையில் இழுத்துச் செல்லப்படுவதை எடுத்துக் காட்டுகின்றன.

– குப்பன்