
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 15
நீண்ட இடைவேளை. நாங்கள் உலாவத் தயாராகின்றோம்.
பள்ளிக்கு அருகே ஒரு பூங்கா உள்ளது. சாலையைக் கடக்கக் கூடத் தேவையில்லை. அங்கே ஓடியாடி விளையாடலாம், தூய காற்றை சுவாசிக்கலாம். நீண்ட இடைவேளை வரும் போதெல்லாம் நாங்கள் இங்கு செல்வோம், அற்புதமாக உலாவுவோம்.
நான் குழந்தைகளை விளையாடும்படி கட்டாயப்படுத்துவதில்லை, “ஓடாதீர்கள், குறும்பு செய்யாதீர்கள், பெஞ்சில் உட்காருங்கள்” என்றெல்லாம் வற்புறுத்துவதில்லை. குழந்தைகள் ஓடுவார்கள், குறும்பு செய்வார்கள். சிலர் எறும்பும் புற்றை கவனித்துக் கொண்டிருப்பார்கள்; சிலர் மரக் கிளைகள், இலைகளைச் சேகரிப்பார்கள், சிறுமிகள் ஸ்கிப்பிங் கயிற்றை எடுத்து வந்து, களைப்பின்றி குதித்துக் கொண்டிருப்பார்கள்; இது என்ன?”, “ஏன்”, “நீங்கள் என்ன புத்தகத்தைப் படிக்கின்றீர்கள்?” என்று சிலர் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்கள். நான் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருப்பேன், என் குழந்தைகளை நன்கு புரிந்துகொள்ள முயலுவேன். – இன்றும் பூங்காவில் சுவாரசியமாக இருக்குமென நம்புகிறேன். இன்று என்ன நடக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. சிலர் கண்டிப்பாக எறும்புப் புற்றைக் கவனிப்பார்கள். ஆச்சரியக் குரல்கள் என் காதுகளை எட்டும்.
“பாருங்கள், இவை எப்படி வேகமாக ஓடுகின்றன?”
“இதோ… இந்த எறும்பு… எவ்வளவு பெரிய இரையை எடுத்துச் செல்கிறது!”
இவையெல்லாம் ஒரே கோட்டில் முன்னும் பின்னுமாகச் செல்வதைப் பார்த்தீர்களா!”
“இவை எங்கே போகின்றன என்று தேடுவோமா!”
“அவை மரத்தின் மீது ஏறுகின்றன!”
“இவை ஒன்றையொன்று சந்திக்கும் போது, நின்று, தம் தலைப்பகுதியை அசைப்பதைக் கவனித்தீர்களா!”
“இவை இப்படித் தான் முகமன் கூறிக்கொள்கின்றன!”
“இரை எங்குள்ளது என்று இவை ஒன்றிற்கொன்று சொல்லிக் கொள்கின்றன.”
“இவற்றால் பேச முடியாது!”
“இல்லை, முடியும்!”
“உனக்கு அவை பேசுவது கேட்கிறதா?”
“கேட்கவில்லை அதனால் என்ன… அவை தலையால் பேசுவது தெரிகிறதே!”
”தலையால் எப்படிப் பேச முடியும்!”
“ஏன், நன்றாக முடியுமே!”
“இதோ ஷல்வா அலெக்சாந்தரவிச்சைக் கேட்போம், அவர் சொல்வார்.”
இந்த விவாதம் ஒரே இரைச்சலாக இருக்கும். எறும்புகளுக்கு மொழி உண்டா எனும் பிரச்சினைக்குத் தீர்வு காண குழந்தைகள் என்னிடம் வருவார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்வது? எறும்புகளின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதாவது தெரிந்திருந்தால் நல்லது… இப்படிப்பட்ட கேள்விகள் வரும் என்று நான் யோசித்திருக்க வேண்டும்!” என்று நான் எண்ணுவேன்.
இம்முறை தீர்வு கண்டாகி விட்டது. “யார், என்ன” எனும் கலைக்களஞ்சியத்தை நாளை கண்டிப்பாக எடுத்து வந்து எறும்புகளின் வாழ்க்கையைப் பற்றிய கட்டுரையை வாசிப்பதாக உறுதியளிப்பது சிறந்ததாயிருக்கும். “எறும்புகளின் வாழ்க்கை ஒரு சுவாரசியமான விஷயம் தெரியுமா, குழந்தைகளே! பூமியின் அடியில் இவற்றிற்கு பெரும் நகரங்கள் உள்ளன. எறும்புகள் இறக்கைகளுடன் பிறக்கின்றன தெரியுமா? சரி, உங்களுக்கு இவ்வளவு ஆர்வமிருப்பதால் நாளை நான் அந்தக் கட்டுரையைப் படிப்பேன், நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வீர்கள்!”
சாஷா, மாயா அல்லது தேயா, நான் என்ன புத்தகத்தைப் படிக்கிறேன் என்று கண்டிப்பாகக் கேட்பார்கள், குலிவேர் பயணம் பற்றிய இந்நூலின் மீது குழந்தைகளுக்கு ஆர்வமேற்படுவதற்காக இதை பூங்காவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். லிலிபுட் என்ற குள்ளர்களின் நாட்டிலும், அசுரர்கள் நாட்டிலும் மற்ற கற்பனை நாடுகளிலும் குலிவேரின் வீர சாகசங்களைப் பற்றியும் இந்நாடுகளில் உள்ள மக்களின் பழக்கவழக்கங்களைப் பற்றியும் இதில் எழுதப்பட்டுள்ளதாக நான் குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்வேன்.
திடீரென யாராவது ஒரு சிறுவன் ஓடி வந்து “நாங்கள் ஒரு ஆமையைக் கண்டுபிடித்து விட்டோம்” என்று முழுக் குரலில் அறிவித்தால் இப்பேச்சு தடைப்படும்.
குழந்தைகள் தம்மிடங்களிலிருந்து துள்ளி எழுந்து இதை நோக்கி ஓடுவார்கள். விரைவிலேயே இரைச்சலிட்டுக் கொண்டு திரும்பி வருவார்கள்:
“பத்திரமாகப் பிடி!”
“பயப்படாதே, கடிக்காது!”
“சிறிய ஆமையா?”
“நம்மோடு ஆமையை எடுத்துச் செல்லலாம்” என்று நான் குழந்தைகளிடம் சொல்வேன். நாங்கள் ஆமையோடு பள்ளிக்குத் திரும்பி வருவோம்.
பூங்காவில் நாங்கள் உலாவும் இந்த 30 நிமிடங்களில் இவ்வளவு சுவாரசியமான விஷயங்கள் நடக்கும். எனவே தான் நானும் குழந்தைகளும் நீண்ட இடைவேளைகளை விரும்புகின்றோம்….
“தயாரா?” நாங்கள் மாடியிலிருந்து இறங்கி பள்ளி முற்றத்திற்கு வந்து பூங்காவை நோக்கி புறப்படுகிறோம். ஆனால் திடீரென…
“நில்லுங்கள்!” கோத்தே தனியாக வருகிறான், அவனருகே அவனுடைய நண்பனைக் காணோம்.
அவர்கள் சேர்ந்தல்லவா வந்து கொண்டிருந்தார்கள்.
அவன் நம்முடன் அல்லவா இருந்தான்? சிறுவன் எங்கே?
“கோத்தே, எங்கே அவன்?”
“அவனை ஒரு மாமா கூட்டிச் சென்று விட்டார்.”
“எந்த மாமா?”
“தெரியாது… உயரமாயிருந்தார்…”
“எப்போது?”
“நாம் படியில் இறங்கி வந்த போது!”
நான் குழந்தைகளை விளையாடும்படி கட்டாயப்படுத்துவதில்லை, “ஓடாதீர்கள், குறும்பு செய்யாதீர்கள், பெஞ்சில் உட்காருங்கள்” என்றெல்லாம் வற்புறுத்துவதில்லை. குழந்தைகள் ஓடுவார்கள், குறும்பு செய்வார்கள்.
மற்ற குழந்தைகளும் பார்த்திருக்கின்றனர்: உயரமான ஒருவர் சிறுவனை நெருங்கி “என்னோடு போகலாம் வா” என்றார். அவர் சிறுவனின் கையைப் பிடித்து வெளியே கூட்டிச் சென்றார்.
யார் சிறுவனைக் கூட்டிச் சென்றிருக்க முடியும்? ஏன் அவர் என்னிடம் செல்லவில்லை? நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு வேளை அவர்கள் அங்கு தாழ்வாரத்திலேயே தங்கி விட்டார்களோ, சிறுவன் இப்போது இறங்கி வந்து விடுவானோ?
“கோத்தே, மேலே ஏறிச் சென்று வகுப்பறையில் அவனைத் தேடு. நாங்கள் அவனுக்காகக் காத்திருப்பதைச் சொல்.”
கோத்தே விரைவாகத் திரும்பி வந்து அங்கு யாருமில்லை என்று சொன்னான்.”
ஆம், ஏதோ நடந்து விட்டது. அந்த “உயரமான மாமா” வேறொரு வாசல் வழியே வெளியேறியிருக்க வேண்டுமென்பது தெளிவு. அப்படியெனில், அவர் உண்மையிலேயே எனக்குச் சொல்லாமல் சிறுவனைக் கூட்டிச் செல்ல விரும்பியிருக்கின்றார்.
“குழந்தைகளே, இங்கேயே நில்லுங்கள்… நான் இதோ வருகிறேன்!…”
அவர்களைப் பிடிக்கும் பொருட்டு வேறு வாசலை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் செல்கிறேன். அவர்கள் ஏற்கெனவே வீதியில் இருக்கின்றனர். சிறுவன் முரண்டு பிடிக்கிறான், பெரியவரோ கார் கதவைத் திறந்து “சீக்கிரமாக உட்கார், நமக்குத் தாமதமாகிறது” என்று குழந்தையைப் பார்த்து அதிகாரத் தொனியில் கூறுகிறார்.
“பொறுங்கள்!” என்று காரை நோக்கி விரைந்தபடியே நான் கத்துகிறேன்.
அந்த நபரோ ஏதோ என் குரலையே கேட்காதது! போல் அவசர அவசரமாகக் காரில் உட்காருகிறார். இப்படிப்பட்டவர்களின் கார் இயந்திரங்கள் உடனடியாக வேலை செய்ய ஆரம்பிக்காதது எவ்வளவு நல்லது!
“ர்ர்ர்…” என்று என்ஜின் சத்தமிடுகிறது. இந்த நொடிப்பொழுதில் நான் காரை நெருங்குகிறேன்.
“உடனே குழந்தையை வெளியே விடுங்கள், நீங்களும் காரை விட்டு வெளியே வாருங்கள்.”
“வணக்கம்!” என்கிறார் அந்நபர். “ஏன் கோபப்படுகின்றீர்கள்? எனக்கு விருப்பமான போது என் மகனைப் பள்ளியிலிருந்து கூட்டிச் செல்ல முடியாதா என்ன!”
“இல்லை, முடியாது, காரை விட்டு வெளியே வாருங்கள்.”
“எங்களுக்கு அவசர வேலையுள்ளது, எங்களுக்குத் தாமதமாகிறது!” – பிள்ளைப் பாசமுள்ள தந்தைக்கு கோபம் வருகிறது.
“எனக்கு இப்போதுள்ள வேலையை விட அவசரமான வேலை இருக்க முடியாது. காரை விட்டு வெளியே வாருங்கள்!”
சிறுவன் கதவைத் திறந்து, காரிலிருந்து குதித்து என்னை நோக்கி ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறான்.
“சரி பையா, நான் வகுப்புகள் முடிந்ததும் வந்து உன்னைக் கூட்டிச் செல்வேன்” என்று பாசமுள்ள தந்தை சொல்கிறார். அச்சிறுவனின் கைகள் நடுங்குவதை நான் நன்கு உணருகிறேன்.
“இல்லை, நீங்களும் வெளியே வாருங்கள், என்ன நடந்தது என்று பேசுவோம்.”
“பேச என்ன இருக்கிறது! நான் தந்தை, அவன் என் மகன்! அவசரமான ஒரு தனிப்பட்ட காரியத்திற்கு அவனைக் கூட்டிச் செல்ல விரும்பினேன். தனிப்பட்ட விஷயங்களே இருக்க முடியாதா என்ன! நீங்கள் எனக்கு இடையூறு செய்கின்றீர்கள், இன்னும் பேச வேறு வேண்டுமா!”
“காரை விட்டு வெளியே வாருங்கள், பள்ளி இயக்குநரிடம் செல்வோம்.”
வேறு வழியில்லை என்பது ஒருவழியாக பாசமுள்ள தந்தைக்கு புரிந்தது. அவர் காரை விட்டு வெளியே வந்து ரகசியக் குரலில் விளக்க முற்படுகிறார்:
“இன்று சிறுவனின் விதி முடிவு செய்யப்படுகிறது, புரிந்து கொள்ளுங்கள்.”
“பள்ளி இயக்குநரிடம் போகலாம் வாருங்கள்…”
“எதற்கு பள்ளி இயக்குநரிடம்?…”
“வேண்டும்! நீ நண்பர்களிடம் ஓடு, அவர்கள் பள்ளி முற்றத்தில் காத்திருக்கின்றனர்.”
சிறுவன் ஓடுகிறான். தந்தையைத் திரும்பிப் பாராமல் ஓடுவதிலிருந்து அவனுக்கு மகிழ்ச்சி எனத் தெரிகிறது.
பள்ளி இயக்குநரின் அறையில், என்ன நடந்தது என்று பேச நாங்கள் முற்படுகிறோம்.
பாசமுள்ள தந்தை ஏன் ஆசிரியருக்குத் தெரியாமல் தன் மகனைக் கூட்டிச் சென்றார்?
ஏன் அவர் தன் மகனை வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றார்? ஏன் சிறுவன் தன் அன்புத் தந்தையுடன் செல்ல விரும்பவில்லை?
தன் மனைவியிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெறும் தந்தைக்கு யாருடைய விதியில் – தன் விதியிலா, தன் மகனின் விதியிலா – பெரும் அக்கறையிருக்கிறது?
ஏன் அவர் மகனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினார்?
வழக்கு எப்போது ஆரம்பமாகப் போகிறது? மூன்று மணி நேரம் கழித்தா? அது வரை அவர் குழந்தையுடன் என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்?
இப்பாசமுள்ள தந்தை தன் ஆறு வயது மகனை அச்சுறுத்தி, நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லும்படி கட்டாயப்படுத்த விரும்பினாரோ?
தன் வகுப்பு குழந்தை காணவில்லை என்று ஆசிரியருக்குத் தெரிய வந்தால் அவருக்கு எப்படியிருக்கும் என்பது இந்தப் பாசமுள்ள தந்தைக்கு, அதுவும் உயர்கல்விக்கூட ஆசிரியருக்கு விளங்கவில்லையா? மகனைக் கூப்பிடத் தாய் வந்தால் அவரிடம் ஆசிரியர் என்ன சொல்வார்?
ஆம், இதைப் பற்றியெல்லாம் உயர்கல்விக்கூட மேலாளருக்கும் நீதிமன்றத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும்.
சரி, இப்போது போய் வாருங்கள். எங்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது. தந்தையர்கள் பல்வேறு விதமானவர்கள், இவர்களில் சிலரிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பது நன்கு புரிகிறது.
இப்படிப்பட்ட தந்தைக்கு நம் பாடங்கள், நாம் உலாவுவதன் மீது என்ன அக்கறை? நம் மகிழ்ச்சிகள், இன்ப துன்பங்கள் மீது என்ன அக்கறை? கோச்சா இன்று பூங்காவில் ஆமையைக் கண்டெடுக்காவிடில் இவருக்கு என்ன? எறும்புகளின் வாழ்க்கையைப் பற்றி அங்கு பேசாவிடில் இவருக்கென்ன கவலை? புதிய நாடுகளைப் பற்றிய குலிவேரின் கதையைக் குழந்தைகள் கேட்காவிடில் இவருக்கென்ன கவலை? அடுத்த பாடங்களைச் சரிவர நடத்துவதே சந்தேகமாயிருக்கும் அளவிற்கு ஆசிரியர் உணர்ச்சி வசப்பட்டிருப்பது குறித்து இப்படிப்பட்ட தந்தைக்குக் கவலையா என்ன?
நான் குழந்தைகளிடம் திரும்பி வருகிறேன். நான் வருவேன், சுவாரசியமாக உலாவலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் 30 நிமிடங்கள் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றனர்.
படிக்க:
♦ பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்
♦ உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !
“சிறுவனே, கெட்ட விஷயத்திலிருந்து நான் உன்னைக் காப்பாற்றினேனா? உனது துக்கம் பெரியது! இதனால் தான் உன் கண்கள் அவ்வளவு சோகமாக உள்ளனவா, நமது மினி-பாடவேளைகளில் எதைப் பற்றியோ அடிக்கடி சிந்தனையில் மூழ்குகின்றாயோ? “கவனக் குறைவானவன், மறதி மிக்கவன்” என்று உன்னைப் பற்றி என் நாட்குறிப்பில் எழுதினேன். இன்றுதான் எனது கவனக் குறைவு புரிந்தது. என்னை தயவு செய்து மன்னித்து விடு.”
“ஓ!” என்று என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியால் கத்தினார்கள் குழந்தைகள். கலைந்து நின்றவர்கள் மீண்டும் ஒழுங்காக நிற்க, “பூங்காவை நோக்கிச் செல்கிறோம்!” என்கின்றனர்.
ஆம், இப்போது மினி-பாடவேளைகளை நடத்த முடியாது. விரைவிலேயே இவற்றை ஈடு கட்ட நேரம் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது இவர்களைப் பூங்காவிற்கு அழைத்து செல்வேன். ஒரு வேளை அவர்கள் உண்மையிலேயே ஆமையைக் கண்டு பிடிப்பார்களோ?
(தொடரும்)
முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!




ஒரு கணக்கெடுப்பின் படி கடந்த பத்து வருட கால அளவில் 2014 -க்கு பிறகுதான் 90 சதவீத கும்பல் வன்முறை நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் 64 சதவீதம் பேர் முஸ்லிம்கள்; 14 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள்; பிற சதவீதத்தினர் தலித்கள் என்று குறிப்பிட்டார். ஜெ.என்.யூ.-வை நிந்திக்கும் இவர்களுக்கு அதன் பெருமை தெரியாது. அங்கு பல நேரங்களில் மாணவர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர்களால் உடனே பதில் சொல்லிவிட முடியாது. ‘எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்; நாளை சொல்கிறேன்’ என்று கூறுமளவுக்கு மாணவர்கள் அறிவில் சிறந்தவர்கள். ஆனால் அது மாசு கற்பிக்கப்பட்டு இருக்கிறது. வறுமை மற்றும் சுரண்டலிலிருந்து விடுதலை வேண்டும் என்ற கன்னையா குமாரின் முழக்கம் இந்தியாவிலிருந்து விடுதலை என்பதாக திரிக்கப்பட்டது.
பாசிச ஆபத்தை உள்ளது உள்ளபடியே நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்தான். அதே நேரம் சில பற்றுக்கோடுகளை நாம் — அது கற்பனையாக இருந்தாலும் கூட — ஏற்படுத்திக் கொள்வது முக்கியமானது. அது நம்மைச் சோர்ந்து போகாமல் செயல்பட வைக்கும்; நமது படகை செலுத்தும் துடுப்பு போன்றது.




பத்மினியைச் சந்திக்க வந்த பெண்மணியின் மனதில் இந்தக் கேள்வி முப்பத்தைந்து வருடங்களாக இருந்ததாம். இப்பொழுது வட்டியும் குட்டியும் போட்டு மிகவும் கனத்தோடு அது வெளியே வருகிறது. ‘நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்து கொள்ளவில்லை?’
படப்பிடிப்பு சமயம் பத்மினியின் நடனம் அமோகமாக அமைந்தது. வைஜயந்தி மாலா புளகாங்கிதம் அடையவில்லை. அவர் ‘சாதுர்யம் பேசாதேடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி’ என்று தோளிலே சடைதுவழ, காலிலே தீப்பொறி பறக்க, புயல்போல சுழன்றபடி மேடையிலே தோன்றுவார். ஒருமுறை இருவரும் ஆடும்போது பத்மினியின் நிழல் வைஜயந்தி மாலாவின்மேல் விழுந்தது. பத்மினி மன்னிப்பாக நடனத்தை நிறுத்தி ‘என்னுடைய நிழல் உங்கள் மேலே விழுகிறது’ என்றார். உடனேயே வைஜயந்தி மாலா ஆங்கிலத்தில் இரண்டு அர்த்தம் தொனிக்க ‘It’s only a passing shadow’ என்றார். தமிழ் நாட்டின் முதல் நடிகையை பார்த்து ‘நகரும் நிழல்’ என்று சொன்னது பத்மினியைப் புண்படுத்தி விட்டது. அந்த இரண்டு வார்த்தைகளுக்காக தான் இரண்டு இரவுகள் தொடர்ந்து அழுததாக பத்மினி கூறினார். படம் வெளிவந்த போது நாட்டிய தாரகை யார் என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

இந்தக் கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் தலைமை தாங்கினார். கருத்துரையாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில செயலாளர் முனைவர் ஜானகி.ராஜா உரையாற்றினார். அவர் பேசும்போது, “கல்வியில் புதிய மாற்றங்கள் தேவைதான். புதிய மாற்றங்கள் வரக்கூடாது என்பது நமது நிலைப்பாடு அல்ல. ஒருங்கிணைந்த இந்தியா உருவாவதற்கு முன்பே அறிவுசார் தொடர்ச்சி இங்கு இருந்துவந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சங்க காலத்திலேயே ஆணும் – பெண்ணும் சமமாக கல்விகற்று, அறிவியலில் சிறந்து விளங்கியவர்களாக இருந்தனர். ஆக நாம் ஏதோ கல்வியறிவு அல்லது கல்விமுறை இல்லாது இருந்தோம் என்பதல்ல, நம்முடைய மரபிலேயே கல்வியானது இருந்துள்ளது.
ஏனென்றால் அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் அவர்களுடைய பிரதிநிதிகள் இருக்கிறார்கள், நீதித்துறை, கல்வி, ஆட்சி அதிகாரம் என அனைத்திலும் சில குறிப்பிட்ட பிரிவுகள் வந்திருக்கிறார்கள்.
இப்பொழுது கொண்டு வந்த மாற்றத்தினால் நீட் தேர்வில் 450 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால், மேனேஜ்மன்ட் கோட்டாவில் இணையலாம். ஆனால் கேட்கப்படும் கட்டணம் ஒரு கோடி ரூபாய் வரை இருக்கிறது. இதனால் இந்தியாவை விட்டு மாணவர்கள் வெளிநாட்டுக்கு மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள். ரஷ்யாவில் ஒரு ஆண்டு படிப்பதற்கு 30 லட்சம் செலவாகிறது, இந்தியாவில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்க ஆண்டு கட்டணம் ஒரு கோடி ரூபாய்.
இதனை இரட்டிப்பாக்குவது எப்படி என்றால் அதிகப்படியான பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் கட்ட வேண்டும். இல்லையென்றால் மாற்ற முடியாது, இந்திய அரசு இந்தியாவில் படிக்கும் 3.66 கோடி பேருக்கு ஒதுக்கும் நிதி 33 ஆயிரம் கோடி. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று படிக்கும் மாணவர்கள் 2 லட்சம் பேர். அவர்கள் செலவு செய்யும் பணம் 50 ஆயிரம் கோடி.










“ஒரு குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் குடிக்கமுனையும் போது அம்மு, அம்மு என ஓசை எழுப்புவதால் அம்மா என்ற சொல் பிறந்தது; அதிலிருந்தே அமிழ்தம் (தாய்ப்பால்) என்ற சொல் பிறந்தது . அமிழ்வதால் (உள்ளிறங்கி சுவையீட்டுவதால்) அமிழ்தம் எனப்படும்”. இச் சொல்லானது வடமொழியிலுள்ள அ+மிர்த் என்பதிலிருந்து வேறுபட்டது {அமிர்த்= சாவற்ற வாழ்வு என்ற பாற்கடல் கடைந்த கற்பனைக்கதை, இரண்டிற்குமுள்ள பலுக்கல் (ஒலிப்பு) ஒற்றுமையினைக் கொண்டு, இரண்டும் ஒன்றல்ல}. அமிழ்து என்ற சொல் தோன்றியதனை மேலே பார்த்தோம். இப்போது அமிழ்து என்ற சொல்லை இடைவிடாமல் விரைவாக மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
இங்கு எங்களிற்குச் சார்பாக அமைந்துள்ள விடயம் யாதெனில் இன்று மரபணு ஆய்வுகள், தொல்லியல் உடற்கூறு ஆய்வுகள் போன்ற அறிவியல் முறைகள் மூலம் சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்றும், அது ஆரியர்கள் வருகைக்கு முற்பட்டது என்பதும் ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றிச் சான்றுப்படுத்தப்பட்டுவிட்டது. குறிப்பாக இங்கிலாந்திலுள்ள ஒரு பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த 16 அறிவியலாளர்கள் (16 scientists led by Prof. Martin P. Richards of the University of Huddersfield, U.K.) மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஆரியர்களின் இந்தியப் படையெடுப்பு ஐயத்திற்கு இடமின்றி சான்றுப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அரியானாவின் ராகிகடி ஆய்வும் இதனையே வலியுறுத்தியிருந்தது(“An Inconvenient Truth” என்ற தலைப்பில் இந்தியா டுடே’ 2018 செப்.10-ல் வெளிவந்தது).

என்.ஐ.ஏ. திருத்தத்தின்படி, இனி ஒரு மாநிலக் காவல்துறை ஆய்வாளருக்கு உள்ள அதிகாரத்தை என்.ஐ.ஏ.-வின் ஆய்வாளரும் பெறுகிறார். இதுவன்றி, இதுகாறும் மாநிலக் காவல்துறையின் அதிகார வரம்புக்குள் இருந்த ஆட்கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதங்கள் தயாரித்தல், வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66(f) ஆகியவை அனைத்தையும் இனி மாநிலக் காவல்துறையின் அனுமதியின்றி நேரடியாக என்.ஐ.ஏ. விசாரிக்கும். மேலும், வெளிநாடுகளுக்குச் சென்று விசாரிப்பதற்கான அதிகாரம், என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றங்களை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள்தான் நியமிக்க வேண்டும் என்பதை மாற்றி, குறிப்பிட்ட அமர்வு நீதிமன்றங்களைச் சிறப்பு நீதிமன்றங்களாக மைய அரசு நேரடியாக அறிவிப்பதற்கான அதிகாரம் ஆகியன உள்ளிட்ட கூடுதல் அதிகாரங்கள் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கின்றன.
அமித் ஷா பேசிய அனைத்தும் பொய். என்.ஐ.ஏ. மாநிலங்களின் உரிமையில் தலையிடுகிறது என்றும், எனவே அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர், வேறு யாருமல்ல, பிரக்யா சிங் தாக்குர். இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த ப.சிதம்பரமே, இது நீதிமன்றத்தில் நிற்குமா என்று தெரியவில்லை எனக்கூறியதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருந்தது.


கிணறு உள்ள பகுதி மணல் பூமியாக இருந்தால் 10 அடிக்குக் கீழ் கால் சேறுமாதிரி புதையும். அப்போதே உசாராவோம். உடனே உறைகளை சுற்றி இறக்கி கரைகளை பலப்படுத்திவிடுவோம். அதற்கு மேல் உறைகளுக்கு உள்ளிருந்து மணலை எடுப்போம். அது மிகவும் கஷ்டமான பணி. இருந்தாலும் உயிர் முக்கியமில்லையா. அதிகபட்சம் 40 அடி ஆழம் மேல் போனால் ரிஸ்க்தான். எனவே அதோடு வேலையை முடித்து வெளியே வர முயற்சிப்போம். புறநகர் என்பதால் பெரும்பாலும் அதற்குள் தண்ணீர் கிடைக்கும். 50 அடி கிணற்றில் 5 அடி ஆழம் தண்ணீர் ஊறினால் போதும். வீட்டுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும். அதற்கே உறை, கூலி என 60 ஆயிரம் ரூபா செலவாகும்.
வீட்டோட காலி இடத்தின் வசதிக்கு ஏற்ப கிணற்றின் அகலம் 3 அடியிலிருந்து 6 அடி வரை இருக்கும். இதற்கு 7 பேரிலிருந்து 9 பேர் வரை 3 நாள் தொடர்ந்து வேலை செய்வோம். ஒரு கிணறு தோண்டினால் ஒருவருக்கு 3 நாள் கூலியாக குறைந்தது ரூபா 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரை கிடைக்கும். இப்படி மாதத்திற்கு ஒரு வேலை வருவதே கஷ்டம்.
கழிவுநீர்த் தொட்டியில் விசவாயு இருக்கிறதா என்று பார்க்க, பக்கெட்டில் கற்பூரத்தை கொளுத்தி வைத்து குழியில் இறக்குவோம். நீர்மட்டம் வரை கற்பூரம் அணையாமல் இருந்தால் விஷவாயு இல்லையென தைரியமாக இறங்குவோம். நீர் மட்டத்திற்கு மேல் கற்பூரம் அணைந்துபோனால் ஆபத்து இருக்கிறது என்று தெரியும். அதுக்கும் ஒரு வைத்தியம் செய்வோம். 10, 20 எலுமிச்சை பழங்களை அறுத்து அதன் சாறை தொட்டியில் ஊற்றுவோம். அதில் கேஸ் பொங்கி வெளியேறும். அதற்குமேல் மரக்கிளையை ஒடித்து சம்ப் முழுவதுமாக குத்தி குத்தி கேஸை வெளியேத்துவோம். இப்படி உயிரை பணயம் வைத்தால்தான் ஏதாவது கிடைக்கும்.











இவை எல்லாமே சென்னையில் உள்ள பெயர்பெற்ற பள்ளி வளாகங்களில் கேட்ட குரல்கள். ஆகப்பெரும்பாலான பள்ளிகளுக்கு ஆற்றுப்படுத்துனர் எனும் பதமே அறிமுகமாகியிருக்காது. கவுன்சிலிங் / கவுன்சிலர் போன்ற வார்த்தைகளை அறிந்தவர்களுக்கும்கூட அவர்கள் பணி என்ன என்பது பற்றியும் அதன் அவசியம் பற்றியும் தெளிவில்லை. தெரியாதவர்களால் உருவாகும் சிக்கல்கள் ஒரு பக்கம் என்றால் அரைகுறையாக தெரிந்தவர்களும் / தவறாக புரிந்தவர்களும் வேறு வகையான சிக்கல்களை உருவாக்குகிறார்கள். கவுன்சிலர் சமூகத்திற்குள்ளும் பல அதிர்ச்சிகளை காண முடிகிறது.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் உதாரணங்கள் எல்லாவற்றிலும் உள்ள ஆற்றுப்படுத்துதல் பற்றிய புரிதல்கள் தவறானவையே. கவுன்சிலிங் என்பது அறிவுரை சொல்லும் வேலை அல்ல. இன்னும் சொல்வதானால் அதன் அடிப்படை விதியே கவுன்சிலர் மிக அரிதான சமயங்களைத் தவிர வேறெப்போதும் அறிவுரை சொல்லக்கூடாது என்பதுதான்.
முன்பு ஒரு 12 வயது மாணவி சந்திக்க வந்திருந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் பணிக்கு செல்பவர்கள். காலை அவரே வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு வரவேண்டும். அவர் வீட்டுக்கு எதிரேயுள்ள கடையில் வேலைசெய்யும் இளைஞரிடம் காதல்வயப்பட்டிருக்கிறார். அந்த இளைஞன் இந்தப் பெண்ணை தமது ஊருக்கு வரும்படி அழைத்திருக்கிறார். சிறுமிக்கோ போகவேண்டும் எனும் விருப்பமும் செல்வது நல்லதில்லை எனும் எச்சரிக்கையுணர்வும் ஒருங்கே வந்திருக்கிறது. இதனை விவாதிக்க நம்பிக்கையான பெரியவர்கள் யாரும் இல்லை, நண்பர்களிடம் கேட்க பயம் (அவர்கள் பள்ளி ஆசிரியரிடம் சொல்லிவிடக்கூடும் இல்லையா?). ஆகவே அவர் கவுன்சிலரை சந்திக்க முடிவெடுத்தார். அந்த அமர்வுக்குப் பிறகு அவர் காதலரோடு செல்லும் முடிவை கைவிட்டார். நம்பகமான, ரகசியங்களை காப்பாற்றும் ஒரு மனிதர் பள்ளியில் இருப்பதன் அவசியத்தை உணர இந்த உதாரணம் போதுமானது என கருதுகிறேன்.
ஒருமுறை மூன்றாம் வகுப்பு மாணவருக்கு கற்றல் குறைபாடு இருப்பதாக சந்தேகித்து அவரது அம்மாவிடம் விளக்கினோம். அவர் கடுமையான ஆத்திரமடைந்து என்னை சகட்டுமேனிக்கு முக்கால் மணிநேரம் திட்டினார் (அதாவது என் வழியே பள்ளியை). அவரது நிலையும் புரிந்துகொள்ளக்கூடியதே, மகனுக்கு ஒரு குறைபாடு இருப்பதாக சொல்வதை ஏற்பது அத்தனை இலகுவானது அல்ல. இறுதியில், நான் சொன்ன கருத்தோ அல்லது சொன்ன விதமோ உங்களை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்க வேண்டியதாயிற்று.
உதாரணமாக, எந்த வயதில் ஆபாசப்படம் பார்க்க ஆரம்பிக்கிறார்கள் எனும் தரவுகளோ எந்த வயதில் புகைப்பதற்கான ஆர்வம் வருகிறது எனும் தரவுகளோ அனேகமாக இருப்பதில்லை. இவற்றை பராமரிப்பது என்பது நாம் எந்த இடத்தில் எப்போது கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறியத்தரும்.