Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 342

மன்னர்களை மண்டியிடச் செய்த மாவீரனுக்கு சாஸ்திரத்தைக் காட்டுகிறார்கள் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 14


காட்சி : 20

இடம் : இந்துமதி தனிஅறை
உறுப்பினர்கள் : இந்துமதி.

(இந்துமதி தனிமையில் சோகமாய்ப் பாடுகிறாள்)

காட்சி : 21
இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : சிவாஜி, மோகன், தளபதிகள், வீரர்கள்.

(கோட்டை உடைத்தல்)

தளபதி – 1 : காகப்பட்டரின் மறுமொழி கிடைத்துவிட்டதாமே? சாஸ்திர சம்மதம் பெற்ற மார்க்கம் இருக்கிறதாமே?

சிவாஜி : ஆமாம்! சூத்திரனை க்ஷத்திரியனாக்குகிறாராம். அதற்கு ஒரு சடங்கு இருக்கிறதாம்.

மோகன் : பறவைக்கு இறக்கையை ஒட்டிவிடப் பார்க்கிறார்கள். சூட்சி பலித்துவிட்டது.

சிவாஜி : இதிலே சூட்சி என்ன இருக்கிறது? அவர்கள் சாஸ்திரத்தைத் தானே கூறுகிறார்கள்?

மோகன் : ஆமாம்! சாஸ்திரத்தைதான். ஆனால், யாருடைய சாஸ்திரம்? எதிரிகளிடம் இந்த நாடு சிக்கிய போது, அந்த சாஸ்திரம் உதவவில்லையே? யாரும் அதன் துணையைத் தேடவில்லையே? கங்கைக் கரைக்கா ஓடினோம். களத்திலே என்ன செய்வது, எப்படிப் போரிடுவது என்று கேட்க ? மராட்டியரின் தோள் வலிமையும், அவர்கள் ஏந்திய வாளின் கூர்மையும், அப்போது தேவைப்பட்டது. இப்போது மன்னர்களை மண்டியிட வைத்த மாவீரனுக்கு சாஸ்திரத்தைக் காட்டுகிறார்கள். சாஸ்திரத்தை !

தளபதி – 1 : அதைத் தவிர வேறு வழி காணோமே?

மோகன் : எங்கே போக வழி வேண்டும் தோழரே? வீரபுரிக்கு மார்க்கம் வெகு தெளிவாக இருக்கிறது. விவேக புரிக்கும் அப்படித்தான். ஆனால் வைதீகபுரிக்குத் தான் – வளைந்த பாதை இருக்கிறது.

தளபதி – 1 : காகப்பட்டர் நமது தலைவரை க்ஷத்திரியராக்க இசையும் போது, நமக்கென்ன கஷ்டம்? சிக்கல் தீர்ந்து விட்டது என்றல்லவா தெரிகிறது.

மோகன் : அதை நான் மறுக்கிறேன் மாதவரே! பலமாக மறுக்கிறேன். சிக்கல் தீரவில்லை; சிக்கல் பலமாகிறது. வீர சிவாஜியின் வெற்றிகள் அத்தனையும் வீண் என்பதை நாம் பிற்காலச் சந்ததிக்குச் சாசனமாக்குகிறோம். போரிலே புலியாக இருந்தார். ஆனால் வைதீகபுரியிலே சிக்கினார் சிவாஜி என்று வருங்காலத்தில் மக்கள் கூறத்தான் போகின்றனர். நெடுங்காலத்துக்குப் பிறகும் போரிடவோ, ஆளவோ, உழைக்கவோ, ஊருக்கு உதவி செய்யவோ, வீரமோ, தீரமோ , தகுதியோ, திறமையோ அற்றக் கூட்டம் பெருமையுடன் தலை நிமிர்ந்து கூறத்தான் போகின்றது. மாவீரன், மராட்டியம் பெற்றெடுத்த தீரன், களத்திலே சூரன் சிவாஜி. ஆனால் எமது காகப்பட்டரிடம் அடைக்கலம் புகுந்த பிறகே அரியாசனம் ஏற முடிந்தது. எமது ஆதிபத்தியத்தைப் பாரீர் என்று பேசத்தான் போகிறது.

வீரத் தலைவனே! வேண்டாம். வேண்டாம், இந்த விபரீத காரியம். மராட்டியத்தின் மானத்தைக் காக்கத் தயங்காதீர். மணிமுடி தரிக்க உமக்கு எந்த ஜடாதரியின் தயவும் தேவையில்லை

சிவாஜி : தயவல்ல! ஆசீர்வாதம் தானே அது! அதைப் பெறுவதிலே இழிவு என்ன?

தளபதி – 1 : சாஸ்திரப் பலத்தைத்தான் தேடுகிறோம்.

மோகன் : மகனை இழந்தாலும் மனம் தளராத மாதர்கள் மராட்டியத்திலே இருக்கிறார்கள். வீரர்கள் ஏராளமாக உள்ளனர். தியாகப் புருஷர்கள் இருக்கிறார்கள். இவர்களால் வரும் பலம் உங்களுக்குப் பலமாகத் தோன்றவில்லை. மகராஜ்! பச்சிளங் குழந்தைக்குப் பாடுவது போல் இருக்கிறது தங்களுடைய வாதம். காகப்பட்டர் தங்களைச் க்ஷத்திரியராக்குகிறார். தாங்கள் தோன்றிய திருக்குலத்தையல்ல. அந்தக் குலம் என்றும் சூத்திரக் குலமாகவே இருக்குமே. தங்களை எங்களிடமிருந்து பிரித்து விடுகிறார். தாங்கள் பிறந்த குலம் தாழ்ந்தது. நாடாளத் தகுதியற்றது என்று தாங்களே ஒத்துக் கொள்ளும்படி சொல்கிறார்.

பெற்ற தாயைப் பிச்சைக்காரியாக்கிவிட்டு, மகன் பெருநிதி பெற்று வாழ்ந்தால் அவனை பெரியோன் என்று பேதையும் கூறானே. குடியானவர் குலத்துக்கு என்ன மாசு? நமது குலத்தைக் குறை கூறும் ஏட்டை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று அவர்கள் காட்டும் ஏட்டின் துணைகொண்டு, நாம் நாட்டை மீட்டிருந்தால் அதற்கு நாம் மதிப்பளிக்கலாம். எதிரிகள் நம்மைத் தாக்கிய போது அந்த ஏடு கேடயமாக இல்லை, வாளாக இல்லை, வாளையிடும் உறையாகக் கூடப் பலனளிக்க வில்லையே! ஏன் அந்த ஏடு மகராஜ்?

சிவாஜி : சந்திரமோகன்! ஆரியர்களின் அபிப்பிராயப்படி நடப்பதால் நீ இவ்வளவு அதிருப்தி கொள்ளலாமா? நானும் முதலிலே கோபித்துக் கொண்டேன். ஆனால் இப்போது காக்கப்பட்டரின் யோசனை இருதரப்பாருக்கும் திருப்திகரமாக இருக்கிறது என்றே எண்ணுகிறேன். சாஸ்த்திர சம்பிரதாயமும் நிலைக்கும். உன் போன்ற உள்ள தோழர்களின் அபிலாஷையும் நிறைவேறும்.

மோகன் : மராட்டியத் திலகமே மன்னிக்க வேண்டும். நான் வெற்றி வீரன் சிவாஜி ஆவதை விரும்பி வந்தேனே ஒழிய, ஆரிய தாசனான பிறகு அரியாசனம் ஏறும் துர்ப்பாக்கிய காட்சியைக் காண வரவில்லை. மகராஜ் ஆரிய சிரேஷ்டர் என்று அர்ச்சிக்கிறீர். ஒரு ஆற்றலற்ற கூட்டத்தை பார்ட்டாரி தேசத்துப் புரவிகள் மீதமர்ந்து. தகதகவெனும் கவசம் பூண்டு, பளபளக்கும் கடகம் ஏந்தி, போர்க் குணம் படைத்த மக்கள் இங்குப் புயலெனக் கிளம்பிய பொழுது, காய்ந்த புல்லைக் கையிலேந்தி திரிந்த கூட்டம் என்ன செய்தது? தாங்கள் யார்? தங்களுடைய வீர தீரம் எத்தகையது? தாங்கள் எங்கள் கண்களுக்கு மராட்டிய நாட்டிலே மார்தட்டி நின்று, மகத்தான போராட்டங்களை நடத்திய மாவீரராக காட்சியளிக்கிறீர். கட்கமெடுத்து, புரவி மீதேறி, காடு மலை கடந்து சென்று, கடும் போரிட்ட வீரன். ஆனால் அவர்கள் கண்களுக்கு ஒரு சூத்திரராகத் தெரிகிறீர். கண்ணிலும், கருத்திலும் கடும் விஷம் இருக்கிறது காவலா!

மராட்டிய மண்டலத்தைக் கமண்டல நீர் தெளித்து அவர்கள் உண்டாக்கவில்லை. மராட்டியரின் ரத்தத்தைச் சிந்தி இந்த மண்டலத்தைப் பெற்றோம். யாக குண்டத்தின் விளைவல்ல மராட்டியம். தியாகத் தீயிலே தோன்றிய தேசம். இந்த வேலையை வேதம் ஓதும் அவர்கள் செய்யவில்லை. நாம் செய்தோம்; நம்மை நிந்திக்கிறார்கள், சூத்திரர்கள் என்று. அதை நாம் ஏற்றுக் கொள்வதா, மன்னா! இது நமது வீழ்ச்சியின் அறிகுறி என்பேன்.

தளபதி – 2 : தளபதிகளே ! மராட்டிய மண்டலத்திற்கு ஒரு மன்னன் தேவை. மக்களின் விருப்பம் மட்டுமல்ல, பரத கண்டம் முழுவதும் இதே பேச்சாக உள்ளது. ஆகவே நாம் சில்லறை விஷயங்களைப் பேசிக்கொண்டு சிக்கலை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல. காகப்பட்டரை வரவழைத்து, அவர் கூறும் சடங்கு செய்து, நமது தலைவரை முடிசூட்டிக் கொள்ளச் செய்வதே முறை.

மோகன் : தளபதிகளே! மிக மிக சாமான்யக் குடியிலே பிறந்த சிவாஜி. ஒரு பெரிய அரசை, மராட்டிய சாம்ராஜ்யத்தைத் தன் தோள் வலிமையால் கண்டார். அவரது மின்னும் வாள் ஒளி வீசாத இடமில்லை . அவருடைய படையின் பரணி கேட்காத நாளில்லை. அவருடைய கண்ணோட்டம் அடிமைத்தனத்தைப் போக்கிற்று காடுகளிலே கூடாரங்கள், மலைகளிலே கோட்டைகள், குகைகளிலே பாசறைகள். யாரால் ஏற்பட்டன? நமது இனத்தின் பங்கத்தைப் போக்கிய சிங்கத்தால், அந்தச் சிங்கம் சிலந்திக் கூட்டிலே சிக்குவதா? ஈட்டிக்கு மார்பு காட்டுகின்ற இணையில்லா வீரன், உலர்ந்த சருகு கண்டு உடல் துடிக்க நிற்பதா? மார்பு வாள் வடுவுடன் விளங்க, மராட்டியத்திலே மண்ணோடு குருதி கலந்து குழைய, மராட்டியக் குடும்பங்களிலே தாய்மார்கள் கோவெனக் கதற, போரிட்டு நிறுவியது மராட்டிய சாம்ராஜ்யம். மலை, காடு, நதி, படை எதுவும் தடுக்கவில்லை சிவாஜியை! ஆனால் ஆரியர்கள் தடுக்கின்றனர். எவ்வளவு விசித்திரம். வேதனை தரும் விசித்திரம். கூண்டிலே சிக்கிய புலி, தூண்டிலிலே சிக்கிய மீன், வலையிலே வீழ்ந்த மான், வர்ணாஸ்ரமத்திலே வீழ்ந்த வீரன் – இந்த வேதனை தரும் காட்சியையா நான் காணவேண்டும்? ஐயோ, மராட்டியமே! உன் நிலை இப்படியா குலைய வேண்டும்? ஒரு சிறு கூட்டத்திடம் சிக்கிச் சீரழிகிறாயே.

சிவாஜி : மக்களின் மனப்போக்கைக் கவனிக்க வேண்டாமா?

மோகன்: மக்களின் மனம்! தாங்கள் வீரமாகக் கிளம்புவதற்கு முன்பு மக்களின் மனம் இனி என்றென்றும் நாட்டிற்கு விடுதலை கிடையாது; விடுதலை பெற முடியாது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தனர். போரிடக் கிளம்பிய நீர், புதுமையைக் கண்டீர். கோழையும் வீரனானான் ; கோட்டைகள் தூளாயின; கொட்டினோம் வெற்றி முரசு, பறக்கிறது, சுதந்திரக் கொடி.

சிவாஜி : மோகனா! காகப்பட்டரின் யோசனையை மறுத்தால், என்ன நேரிடும் என்பதை எண்ணிப் பார்க்காமலே பேசுகிறாய் .

மோகன் : என்ன நேரிடும்? காகப்பட்டர் தமது ரத, கஜ, துரக பதாதிகளுடன் மராட்டியத்தின் மீது படையெடுத்து விடுவார். நாம் அவரது அசகாய சூரர்களால் தோற்கடிக்கப்பட்டு விடுவோம்! அதுவா சத்திரபதி தங்கள் சிந்தை கலங்குவதற்குக் காரணம்?

சிவாஜி : மோகன்! நீ என்னைக் கேலி செய்கிறாய்! நான் நெடுநேரமாக உனது பேச்சுக்கு இடமளித்து வந்தேன். இனி வாதிடப் போவதில்லை. நான் காகப்பட்டரை வரவழைப்பதென்று தீர்மானித்து விட்டேன். தீர யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். இனி நீ போகலாம்; காகப்பட்டரை வரவழைக்க ஏற்பாடுகள் தயாராகட்டும்.

(மோகன் தலை குனிந்து நிற்கிறான். சபை கலைகிறது. மோகன் போகிறான். சிவாஜி உலவியப்படி)

சந்திரமோகன் கூறுவது அவ்வளவும் உண்மைதான்!

(கோட்டைகளைப் பார்த்து)

அதோ தோர்ணா, அந்தக் கோட்டையைப் பிடிக்க நடந்த பயங்கரச் சண்டையை நினைத்துக் கொண்டால், ஆபத்தைத் துரும்பாக எண்ணிய சிவாஜியின் நிலைமையை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்…..? எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.

“சத்திரபதி இந்தக் கணவாயின் பக்கம் போகக்கூடாது.”

”ஏன்?”

“எதிரியின் படை பலம் அதிகம்.”

“கோழைகள் விலகட்டும், வீரர்கள் பின் தொடரட்டும்.”

”கொட்டு முரசு” என்று உத்தரவிட்டுப் பாய்ந்து சென்று வெற்றி பெற்ற புரந்தர். எதிரியே ஆச்சரியம் அடையும்படியான அபார வீரத்துடன் வெற்றி பெற்ற ராஜகிரி, மராட்டிய கீர்த்தியின் உறைவிடம் போலுள்ள கல்யாண்…

கோட்டைகள் வெற்றியின் சின்னங்கள் ; வீரத்தின் அறிகுறிகள்; அந்த சிவாஜியா நான்? அஞ்சா நெஞ்சன் எங்கே? பஞ்சையிடம் பணியப்போகும் நான் எங்கே ? ஒழிந்தது. அந்த சிவாஜி மங்கிவிட்டான். எதற்கும் அடிபணியும் சிவாஜி உலாவுகிறான். தோர்ணா! புரந்தர்! ராஜகிரி! என் கண்முன் இருக்க வேண்டாம்.

(கோட்டைகளை உடைத்து )  சிதறுகின்றன சிறுசிறு துண்டுகளாக. வீரத்தின் சின்னங்கள். என் மனக்கோட்டை பொடிப் பொடியாகிறது.

(மெளனமாக உலவிவிட்டு)

சந்திரமோகா! நீ எல்லாம் அறிந்திருக்கிறாய் வெட்டு ஒன்று; துண்டு இரண்டாகப் போகிறாய்; வீரன். ஆனால் என் நிலையை மட்டும் உணரவில்லை. ஒரு வினாடியில் காகப்பட்டர் வேண்டாம், மகுடாபிஷேகம் இன்று நடக்குமென்று உத்தரவு பிறப்பித்து விடலாம். மராட்டியம் மறுக்காது. ஆனால் மறுகணம் முதல் என்ன நடைபெறும்? இந்த மண்டலத்திலும், வேறு பல மண்டலங்களிலும் ஆஸ்ரமவாசிகள் ஆரம்பிப்பார் தமது பிரச்சாரத்தை.

படிக்க:
சாதி உங்களுக்கு என்ன செய்தது ?
மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! புதிய கலாச்சாரம் மின்னிதழ்

‘மராட்டிய மண்டலாதிபதி சாஸ்திர விரோதி! சம்பிரதாய வைரி! சனாதனத்தைக் கெடுத்தவன்! அவனுடைய ராஜ்யம் பாவ பூமி!’என்று கூறுவர்.

அவர்கள் பூதேவர்கள்! மக்கள் அப்படித்தானே எண்ணுகிறார்கள். அந்த மக்கள் பிறகு மராட்டிய மண்டலத்தை உள்ளிருந்து கெடுத்துவிடுவர். நான் இன்று பட்டாச்சாரிக்குப் பணியாவிட்டால், அந்தப் பாதகர்கள் பாமரரை நாளை என் மீது ஏவிவிடுவர். மராட்டியனைக் கொண்டே மராட்டியனை அழிப்பர். பரத கண்டம் முழுவதும் ‘சிவாஜி நீச்சன், சாஸ்திர சம்மதமில்லாது ராஜ்யம் ஸ்தாபித்தான். அவனுக்குச் சர்வ நாசம் சம்பவிக்கும். – இமயம் முதல் குமரி வரை எனக்கு எதிர்ப்பு, ஏளனம் கிளம்பும். என்ன செய்வேன்? மராட்டியத்தை அவர்கள் சும்மா விட மாட்டார்களே. ஒருபுறம் வெளிநாட்டார் எதிர்ப்பு ; வேறொரு புறம் வேறு வேந்தர்களின் எதிர்ப்பு! மராட்டியத்திலேயே எதிர்ப்பு. எத்தனை கணைகளைத்தான் மராட்டிய மாதா தாங்குவாள். மோகன் நான் பணிந்துதான் ஆகவேண்டும்; வீழ்ச்சிக்குத் தான்! ஆனால் வேறு வழியில்லை; வேறு வகையில்லை.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

தூத்துக்குடி தியாகிகளின் நினைவைப் பேசாதே ! போலீசு பொய் வழக்கு !

பத்திரிகைச் செய்தி

11.05.2019

தூத்துக்குடி தியாகிகளின் முதலாமாண்டு நினைவைப் பேசக்கூடாது என்பதற்காகவே பொய்வழக்கு!

கடந்த 2018-ம் ஆண்டு, டிசம்பர் 29 அன்று “14 பேரின் உயிர் தியாகம் வீணாகலாமா? குற்றவாளிகளை கைது செய்!”  என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தோழர் இளஞ்சேகுவேரா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு, ஜனநாயக வழக்குரைஞர் சங்கத்தின் செயலர் பாரதி, வழக்குரைஞர் சுரேஷ் சக்தி முருகன் ஆகியோர் மீது 505(i)(b) சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது திருவல்லிக்கேணி போலீசு.

இந்த வழக்கு பதிவு செய்ததின் பின்னணி என்ன?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டடத்தை சீர்குலைத்து வன்முறையை ஏவி 15 பேரை சுட்டுக் கொன்றது போலீசு.

சுட்டுக்கொன்ற போலீசு மீது எந்த நடவடிக்கையும் இல்லை, ஆனால் போராடிய மக்கள் மீதும், மக்கள் அதிகாரம் அமைப்பின் மீதும், போடப்பட்ட வழக்குகளும், ஏவப்பட்ட அடக்குமுறைகளும் ஏராளம்.

படிக்க :
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் ! மக்கள் அதிகாரம் ராஜு பதில்
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | போலீசு உருவாக்கிய பொய்க் கதை

மக்கள் அதிகாரம் சார்பில் கூட்டங்கள் நடத்த போலீசு அனுமதி மறுக்கிறது. அரங்க நிர்வாகிகளை அச்சுறுத்துகிறது. அதையும் எதிர்கொண்டு சென்னை நிருபர்கள் சங்கக்கட்டிடத்தில் நடத்திய கூட்டத்திற்குதான் இந்த வழக்கு.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவேந்தலை மக்கள் அனுசரிக்க உள்ள நிலையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றுவரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசுவதையேகூட குற்றமாக்கி பொது அமைதியை சீர்குலைத்தது போலீசுதான். அது மட்டுமல்ல, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, மீத்தேன் என எதைப் பேசிடவும் கூடாது என்கிறது அரசு.

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக, மக்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள் மீது போலீசு வழக்கு பதிவு செய்கிறது.

இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மீதும், மற்ற தலைவர்கள் மீதும் போடப்பட்ட பொய் வழக்குகள் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

போலீசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தங்கள்
தோழர். மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்
9962366321
ppchennaimu@gmail.com
Facebook id : makkal athikaram

ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

ச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது அவரிடம் பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார். இதனை விசாரிக்க அமர்த்தப்பட்ட மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வும், அதிவேகமாக விசாரித்துவிட்டு கோகோய் குற்றமற்றவர் என அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

ஒரு வழக்கறிஞர் இதன் பின்னணியில் தலைமை நீதிபதிக்கு எதிராக ஒரு பெரும் சதி நடப்பதாக வழக்குப் பதிவு செய்திருந்தார். விசாரணையில் அவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இது போக, புகார் அளித்த அந்தப் பெண் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்து வெளியே வந்ததை ‘யாரோ’ பார்த்ததாக  வாட்சப் செய்திகள் ஒரு புறமும், உச்சநீதிமன்ற நீதிபதியை ’மிரட்டி’ வைப்பதற்காகவே, அப்பெண் காங்கிரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்பது போன்ற சந்தேகங்கள் மற்றொரு புறமும் எழுப்பப் படுகின்றன. ஜனநாயகத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் பாஜக-வும், காங்கிரசும் இவ்விவகாரம் குறித்து வாய் கூட திறக்கவில்லை. .

எனில் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மை என்ன ? அந்தப் பெண் பொய் சொல்கிறாரா ? ரஞ்சன் கோகாய் மிரட்டப்படுகிறாரா ? விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜு.

பாருங்கள் ! பகிருங்கள் !

வெனிசுலா : அமெரிக்க தடைக்குக் குவியும் கண்டனங்கள் ! மவுனிக்கும் ஊடகங்கள் !

0

வெனிசுலா மீது ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து முறைகேடான மற்றும் கடுமையான பொருளாதாரத் தாக்குதல்களைத் தொடுத்து வருவதை வல்லுனர்களும் பொருளாதார அறிஞர்களும் எச்சரித்து வருகின்றனர். ஆனால் ஊடகங்களோ அந்த எச்சரிக்கையை கண்டும் காணாமலும் இருக்கின்றன.

சான்றாக,”condemns US sanction” என்று மேற்கோளுடன் கூகுளில் தேடிப் பாருங்கள். வட கொரியா, ஈரான், வெனிசுலா, கியூபா மற்றும் இரசியா பொன்ற நாடுகள்தான் அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்ப்பதாக பல்வேறு முக்கிய ஊடகங்கள் கூறுவதை பார்க்க முடியும். மோசமான  நாடுகளை வாசிங்டன் தண்டிக்கிறது பதிலுக்கு அந்த மோசமான நாடுகள் குறை சொல்லுகின்றன – இது எளிமையான சிக்கலில்லாத ஒரு விளக்கம்.

வெனிசுலா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் அமைப்பு வெளிப்படையாக கண்டித்திருப்பது குறித்து கூகுளுக்கு தெரியாது போலும்.  இந்த தடைகள் ஏழைகளை மிகக் கடுமையாக பாதிக்கும் என்று அது கூறியிருந்தது.

பொருளாதாரத் தடையினால் சாமானிய மக்களுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகள் குறித்து தனிப்பட்ட முறையில் ஐக்கிய நாடுகள் அவையின் வல்லுனர்களும் பொருளாதார அறிஞர்களும் கூறியிருப்பதை எந்த ஊடகங்களும் முதல் பக்கத்திலோ அல்லது நடுப்பக்கத்திலோ போடுவதேயில்லை.

படிக்க:
♦ மேற்குவங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை
♦ கவுரி லங்கேஷ் கொலை – சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு : ஒரே குற்றவாளிகள் !

அமெரிக்காவின் பொருளாதாரத் தாக்குதல்கள் குறித்து சமீபத்தில் பேசியிருப்பவர் ஐ.நா வின் பொருளாதாரத் தடைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான பதிவரான இட்ரிஸ் ஜஸேரி(Idriss Jazairy).  பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா ஆட்சி கவிழ்ப்பு செய்வதை அவர் கண்டித்தார். சாதாரண மக்களை பகடைக் காய்களாகவும் பணயக் கைதிகளாகவும் வாசிங்டன் மாற்றுகிறது என்று அவர் விமர்சனம் செய்தார்.  இது போன்ற தாக்குதல்கள் நேரடியாக அடிப்படை மனித உரிமையை தடுப்பதாகும். மேலும் இதை ஒரு ஏற்றுக்கொள்ளத்தக்க சர்வதேச உறவாகக் கருத முடியாது என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

வெனிசுலா மக்களின் மனித உரிமைகள் குறித்து அக்கறை கொண்ட பத்திரிக்கையாளர்களின் குரலாக இதை சிலர் கருதலாம். அப்படி இல்லை. எந்த ஒரு முக்கிய அமெரிக்க ஊடகமும் ஜஸேரியின் கண்டனத்தை பதிவு செய்யவில்லை.

ஆனால் வெனிசுலாவிற்கான ஐநாவின் முன்னால் பதிவரான அல்ஃப்ரெட் டி ஜயாஸிற்கு (Alfred de Zayas) சிறிது நல்ல நேரம் இருந்ததால் இங்கிலாந்து மற்றும் ஐரிஸ் பத்திரிகைகளில் அவரது கருத்துக்கள் இடம் பிடித்துள்ளன. அமெரிக்க பொருளாதார தடைக்கும் மரணத்திற்குமான நேரடி தொடர்பை எதிர்த்து அவர் பேசினார். இது குறித்து எந்தவொரு முக்கியமான அமெரிக்க பத்திரிகைகளும் பேசவில்லை. இதில் ஒரே மாதிரியான பாங்கு தென்படவில்லையா?

வெனிசுலா அதிபர் மதுரோ

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எப்படி வெனிசுலாவின் 40,000 குழந்தைகளின் குறை மரணங்களுக்கு காரணமாக இருந்தது என்பதை மிக சமீபத்தில் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான மையத்தைச் (Center for Economic and Policy Research ) சேர்ந்த பிரபல பொருளாதார வல்லுனர்களான மார்க் வெய்ஸ்ப்ராட் மற்றும் ஜெஃப்ரி சேச்சஸ் இருவரும் தங்களது ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும் ஜெனீவா மற்றும் ஹேக் கூட்டு ஒப்பந்தத்தின் ”மொத்த குடிமக்களுக்கான கூட்டு தண்டனைக்கு” பொருத்தமான விளக்கமாக இது இருக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறியது.

இந்த அறிக்கை பெரும்பான்மையான ஊடகங்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டது. ஃபாக்ஸ் நியூஸ் இது குறித்து செய்தி வெளியிட்ட போதும் ”ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான இடதுசாரி சிந்தனையாளர்களின் தாக்குதல்” என்று கூறி அந்த அறிக்கையை அது நிரகரித்தது.

பொருளாதார தடையை எதிர்த்து நோம் சோம்ஸ்கி உள்ளிட்ட 70 அறிஞர்கள் கையெழுத்திட்ட கண்டன அறிக்கையையும் பெரும்பாலான அமெரிக்க பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை.  மேலும் வெனிசுலாவில் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவின் தடைகள் முக்கியமான ஒரு காரணம் என்று ஃபண்டலதின் (Fundalatin) எனும் பிரபலமான அரசு சாரா தொண்டு நிறுவனம் கூறுவதை யாரும் கோடிட்டுக் காட்டவில்லை.

நேர்மையான செய்திகளை சிறிதேனும் வெளியிடுவதற்குக் கூட நேர்மையற்ற ஊடகங்கள் இதை, ”அமெரிக்காவின் மென்மையான போக்கு” என்றும் ”போருக்குப் பதிலாக இந்நடவடிக்கைகள் பரவாயில்லை” என்றும் ”இது பணக்காரர்களை மட்டுமே பாதிக்கும்; ஏழைகளுக்கு நல்லது செய்யும்” என்றும் செய்தி பரப்பி வருகின்றன.

தவறான செய்தி பரப்புவதாகச் சொல்லப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை.  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ஈலன் ஒமர் பலவீனமான வெனிசுலாவை அமெரிக்கா கொடுமைப்படுத்துவதை கடுமையாக எதிர்த்த்துடன் இது வெனிசுலாவின் பொருளாதாரத்தை பேரழிவுக்குள்ளாக்கும் என்று கடுமையாக சாடினார். சென்ற வாரம் அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் இது பெரும் ஆத்திரத்தை உண்டாக்கியது.

படிக்க:
♦ வெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை
♦ வெனிசுலா: அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !

ஆனால் இந்த எதிர்ப்புகள் வெறுமனே கருத்துக்களோ ஊகங்களோ மட்டுமல்ல. ஏற்கனவே நொடிந்து கொண்டிருக்கும் வெனிசுலாவின் பொருளாதாரத்தை மூச்சு திணற அடித்து பட்டினி போடும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்பது நடைமுறை உண்மை. ஊடகங்கள் என்னதான் கூச்சல் போட்டாலும் பொருளாதார தடை மக்களை கடுமையாக பாதிக்கும் என்ற எளிமையான உண்மையை மறைக்க இயலாது. அதாவது மக்களை பட்டினி போடுவது அதன் மூலம் வன்முறைகளை தூண்டுவது, ஆட்சியை கவிழ்த்து  வாசிங்டனுக்கான பொம்மை ஆட்சியை நிறுவுவது – இது அமெரிக்காவின் வழமையான ஒரு ஆட்சி கவிழ்ப்பு உத்தியாகும்.

இப்படி ஒரு கணம் எண்ணுங்கள். வெனிசுலா போன்ற சிரமத்திலிருக்கும் நாட்டின் மீது ஒருவேளை இரசியா இதுபோன்ற தாக்குதல் தொடுத்திருந்து அதை ஜயாஸ், ஜஸேரி, வெய்ஸ்ப்ராட் மற்றும் மற்றவர்கள் சாடினால் என்ன நடக்கும். அது சி.என்.என், எம்.எஸ்.என்.பி.சி மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் முன்பக்கம் நடுபக்கம் என முடிவுறாமல் செய்தி வெளியிட்டு கூக்குரலிடும்.

இது போன்ற பொருளாதாரத் தடைகள் குறித்து சரியான செய்திகளை வெளியிடாததால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் குறித்து பத்திரிகை கண்காணிப்பு நிறுவனங்களான ஃபேர் (FAIR) மற்றும் மீடியா லென்ஸ் (Media Lens)  ஆகியவை அழுந்தக் கூறுகின்றன. ஆனாலும் இப்படி அப்பட்டமான நெறி பிறழ்ந்த ஊடகத்தன்மை முற்றிலும் எதிர்பார்க்ககூடியதுதான்.  பொதுவாகவே நெருக்கடிகளை பொய்யும் புரட்டுமாக காட்டும் தேசிய வெறியின் நீட்சிதான் இது.

வெள்ளை மாளிகையின் முன்பு வெனிசுலா ஆக்கிரமைப்பை எதிர்த்து அமெரிக்க மக்கள் நடத்திய போராட்டம்

அமெரிக்காவின் கருத்தாடல் இதழியல் குறித்த ஃபேர் ஆய்வின்படி ஜனவரி – ஏப்ரல் மாதங்களில் நியூயார்க் டைம்ஸ் அல்லது வாசிங்டன் போஸ்டில், அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை குறித்து கருத்து பக்கத்தில் ஒரு செய்தி கூட வெளியாகவில்லை.  தொலைக்காட்சியிலும் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்க பத்திரிக்கைகளின் இந்நடவடிக்கைகளை “ஆட்சி மாற்றம் செய்வதற்கான ஒரு முழு அளவிலான பிரச்சாரம்” அல்லது வேறு சொற்களில் சொல்வதானால் ”போர் பிரச்சாரம்” என்றும் கூறலாம்.

ஹெய்தி, எல் சால்வடோர் போன்ற நாடுகளிலிருந்து அகதிகள் மற்றும் தெற்கு எல்லை வழியாக இலத்தீன் அமெரிக்கர்களும் படையெடுப்பதாக மோசமான கருத்திட்ட ட்ரம்ப்பை ஒரு தீய சக்தியாகக் காட்டிய ஊடகங்கள், இன்று ஒட்டுமொத்த அமெரிக்க நிர்வாகத்தையும் ஏதொ வெனிசுல மக்களுக்கு நன்மை செய்பவர்களாக காட்டி பல்டியடிக்கின்றன.  அமெரிக்க உயரதிகாரிகள் கூட அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வெனிசுலாவின் எண்ணைய் வளத்தை அபகரிப்பது தான் தங்களுடைய திட்டம் என்று வெளிப்படையாக அறிவித்தும் கூட இந்த ஊடகங்கள் இப்படி செய்தி வெளியிடுவதை என்னவென்று சொல்ல.

அமெரிக்கத் தலையீடுகள், ஆட்சிக் கவிழ்ப்பு என்று வந்துவிட்டாலே பத்திரிகைகளின் நிலை இதுதான். குழப்பமான தேசியவாதம் பற்றி பேசினாலே ஜனநாயகவாதிகள், குடியரசுவாதிகள் அல்லது மொத்த ஊடகங்களும் சாட்டையால் அடிபட்டது போலத் துடிக்கிறார்கள்.

வெனிசுலாவின் மீது பொருளாதார தாக்குதலிலிருந்து அதை விட கொடுமையான போர் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் ஆலோசித்திருகின்றது. போர் முரசுகளுடன் ஊடகங்கள்  கூக்குரலிடுவதை மீண்டுமொருமுறை நாம் கேட்கலாம்.


கட்டுரையாளர் : Danielle Ryan
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : RT

 

முதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி !

நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM & FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமைமுறையைத் தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை (GATT) தூக்கியெறிவோம்! என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் 133-வது மேநாள் பேரணி – பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகளின் காணொளி !

பாருங்கள் ! பகிருங்கள் !

இப்பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் ஆற்றிய உரை !

பாருங்கள் ! பகிருங்கள் !

நூல் அறிமுகம் : தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன்

தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன் – தமிழில் : திலகன்

ண்டை நாடுகளுடன் பெரிதாகப் போர் என்று எதுவும் நடைபெறாத போதிலும் இராணுவத்துக்கு என்று மைய அரசு ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தில் பெரும்தொகை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் மைய அரசின் இச்செயலை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் விவாதத்தை ஏற்படுத்தும் நூல்கள் வெளிவர வேண்டிய தேவை உள்ளது.

ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் “தேசப்” பாதுகாப்புக்கு ஒதுக்கீடு என்று இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு உயர்ந்து கொண்டே செல்லும் போது கல்வி, மருத்துவம், உணவு ஆகியவற்றுக்கான மானியம் குறைந்து கொண்டே உள்ளது.

மேலும் இந்திய கார்ப்பரேட் கொள்ளையர்களில் ஒருவரான விஜயமல்லையா ரூ. 9000 கோடிகள் கடன் பெற்று வங்கிப் பணத்தை (மக்களின் பணத்தை) சுருட்டிக் கொண்டு நாட்டைவிட்டே தப்பியபோது, இங்குள்ள முப்படைகளால் என்ன பயன் விளைந்தது ?

விவசாயம் நலிவடைந்து வாங்கிய கடனைக் கட்ட வழி தெரியாமல் இலட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வரும் இந்நாட்டில்தான் இவ்வாறான நிலை! பெருமுதலாளிகள் திரும்ப செலுத்தாதக் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடிகளை எட்டி விட்டதால் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ஆட்டங் கண்டு வருகின்றன.

இது மட்டுமின்றி நாள்தோறும் ரூ.240 கோடிகள் கறுப்புப் பணமாகவே நாட்டை விட்டு வெளியேறிச் செல்கிறதாம்! கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் இலட்சக்கணக்கான டன் இரும்புக் கனிமத்தை வெட்டி கப்பலில் ஏற்றினார்கள் என்றால், இங்குள்ள பி.ஆர்.பி. -யோ ஒரு இலட்சம் கோடிகள் வரை கிரானைட்டை வெட்டிக் கடத்தியுள்ளார். ஆனால் இவற்றை எல்லாம் தடுக்கும் திறனற்ற முப்படைகளையும் வைத்துள்ள இந்நாட்டின் ஆட்சியாளர்கள்தான் ஆளே வசிக்க முடியாத சியாச்சின் பனிப்பகுதியைக் காப்பாற்ற பல ஆயிரம் கோடிகளை விரயம் செய்வதோடு அப்பாவி இராணுவ வீரர்களையும் பாரத மாதாவுக்கு பலிகடா வாக்குகிறார்கள்… (நூலின் பதிப்புரையிலிருந்து)

இவ்வாறு நிகழ்காலத்தில் நாட்டுக்காக – நாட்டு மக்கள் நலனுக்காக, தேசப்பாதுகாப்புக்காக, இராணுவத்துக்காக, வேலை வாய்ப்புக்காக என்று சொல்லி புனிதமான ஒளிவட்டம் போட்டுக் காட்டப்படும் பாதுகாப்புத்துறைத் தொடர்பான ஆட்சியாளர்களின் திட்டங்களைப் பற்றி மக்களிடம் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது அனைத்து முற்போக்கு, இடதுசாரி அமைப்புகள் முன்பு மாபெரும் சவாலாக உள்ளது. ஒருவேளை அவை இவ்வாறான நிகழ்வுகளைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றன என்றால் மைய அரசாங்கத்துக்கு மறைமுகமாக ஆதரவு வழங்குவதுபோல ஆகிவிடும்.

படிக்க:
தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் !
மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !

இந்நிலையில் மும்பையில் இயங்கி வரும் அரசியல் பொருளாதார ஆய்வு மையம் (Research Unit For Political Economy) என்ற நிறுவனமானது நமது இக்கவலையைப் போக்கும் வகையில் ‘இந்தியப் பொருளாதாரத்தின் அம்சங்கள்’ (Aspect of India’s Economy) என்ற தமது ஆய்வு இதழில் பேராசிரியர் ராகுல் வர்மன் அவர்களின் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதன் மொழியாக்கமாகவே இந்நூல். (நூலின் பதிப்புரையிலிருந்து)

***

ந்தியாவின் ஆயுதத் தளவாடத் தொழில் பற்றி ஒரு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். ஆயுத உற்பத்தியில் அந்நிய முதலீட்டை, “பாதுகாப்புத் துறைக்காக இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தை மோடியின் அரசாங்கம் அறிவித்தது. திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதத்தை இந்தியாவிலேயே உற்பத்திச் செய்ய வேண்டும் என்று கூட அது அதிகாரபூர்வமாகக் கூறியுள்ளது. இறக்குமதிகளின் இடத்துக்குப் பதிலாக இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று ஊகிக்கிறது.

உள்நாட்டு உற்பத்திக்காக என்று உரிமைப் பாராட்டுவது. மோசடியானது என்பது இக்கட்டுரைகளில் வாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ஆயுதத் தளவாட உற்பத்தியாளர்கள் தமது சொந்த நாடுகளுடன் நெருக்கமாகவும், மூலஉத்தி ரீதியாகவும் முறைப்படுத்தப்பட்டுள்ளனர். தமது அறிவை பேராசைத்தனத்துடன் காத்து வருகிறார்கள். இதனால் ஒரு சுதந்திரமான உள்நாட்டுத் தொழில் மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்ப அடித்தளமின்றி சுதேசி மயப்படுத்துவது நடைபெறாது. முன்பு பொதுத்துறை இராணுவ நிறுவனங்கள் உள்நாட்டு இளைய பங்காளிகளாக அந்நிய நிறுவனங்களுக்கு இருந்ததென்றால் தற்போது அந்தப் பாத்திரத்தைத் தனியார்துறை நிறுவனங்கள் வகிக்கும் என்பதுதான் “பாதுகாப்புத் துறைக்காக இந்தியாவில் தயாரிப்போம்” என்பதன் மெய்யான முக்கியத்துவமாக உள்ளது.

இதன் காரணமாகத்தான் இந்தியப் பெருந்தொழிலதிபர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள். இந்தியத் தனியார்துறை கூட்டாளிகள் தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றத்தைக் கோரி அழுத்தம் தராமல் ஓர் இலாபப் பங்கோடு (ஒரு சிறுவீத அளவாக இருந்தாலும்) மகிழ்வார்கள் என்பதால் அந்நிய நிறுவனங்களும் கூட இத்திட்டத்தை வரவேற்கின்றன. இதுதான் இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்களின் தன்மையாக உள்ளது. ஏற்கெனவே மிகவும் கீழ்மட்டத்தில் இருக்கும் சுதேசியமயத்தை இன்னும் குறைப்ப தைத்தான் “இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்” இவ்வாறு முன்னறிவிக்கிறது.

மார்ச் மாதத்தில் இந்தக் கட்டுரை இணையத்தில் வெளியான உடனே, அந்த மதிப்பீடு உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, இந்திய அரசாங்கமானது போட்டி ஏலம் மற்றும் பேரத்தின் ஒரு நெடிய நிகழ்வுப் போக்குக்குப் பின்னர் பிரெஞ்சு நிறுவனமான டசால்டின் ரஃபேல் போர் விமானத்துக்கு தனது நடுத்தர பன்முக போர் விமானத்துக்காக (Medium Multi Role Combat Aouraft – MMRCA) ஒரு மாபெரும் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் வழங்கக் கேட்கப்பட்டுள்ள மொத்த 126 விமானங்களில் 108 தயாரிக்கப்பட வேண்டும் என்று முன்வரை செய்யப்பட்டுள்ளது. 2012 -ஆம் ஆண்டில் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்ட நிலையில் அதை நிறைவேற்றாமல் டசால்ட் இழுத்தடித்தது. இந்திய விமானப் படையில் உள்ள போர் விமானப் படையின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையிலும் கூட இவ்வாறு அந்த டசால்ட் நிறுவனம் ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் இழுத்தடித்து வந்தது.

படிக்க:
ரஃபேல் ஊழல் நூல் பறிமுதல் : மோடிக்கு ஆதரவாக தேர்தல் கமிசனின் நடவடிக்கை !
♦ இராணுவத் தளவாட தொழிற்சாலையில் இருப்பது தேசபக்தியா, ஊழலா ?

2015 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மோடி தனது பாரீசு பயணத்தின் போது முந்தைய ஒப்பந்தத்தை ஒதுக்கிவிட்டு, 36 ரஃபேல் போர் விமானங்களை அளிப்பதற்காக அரசாங்கங்களுக் கிடையில் ஓர் உடன்படிக்கையைப் புதியதாக செய்து கொள்கிறார். அவற்றை பிரான்ஸ் நாட்டிலேயே தயாரிப்பதாக உடன்படிக்கை செய்து கொள்ளப்படுகிறது. இப்புதிய உடன்படிக்கையின் விதிமுறைகள் முற்றிலும் திரைமறைவிலேயே உள்ளன.

விதிமுறைகளை இனிமேல் தான் பேசிக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சரான பரிக்கர் போகிற போக்கில் அள்ளிவிட்டார். ரஃபேல் விமானங்கள் ஒருவேளை இந்தியாவில் தான் தயாரிக்கப்பட வேண்டு மெனில், HAL தவிர்த்து ஓர் இந்தியக் கூட்டாளியைப் பரிசளிப்போம் என்றும் கூட அவர் சொன்னார். அம்பானி சகோதரர்களுள் எவரோ ஒருவர் இதில் ஈடுபடுத்தப்படலாம் என்று அறிகுறிகள் தெரிகின்றன. (நூலின் ஆசிரியர் உரையிலிருந்து)

நூல்: தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள்
ஆசிரியர்: ராகுல் வர்மன்
தமிழில்: திலகன்

வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,
எண் : 5/ 1 ஏ, இரண்டாவது தெரு,நடேசன் நகர்,
இராமாபுரம், சென்னை – 600 089.
கைபேசி: 98417 75112.

பக்கங்கள்: 88
விலை: ரூ 60.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகத்தின் புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க: Marina Books 

குறும்புத்தனம் – குழந்தைகளிடம் உள்ள ஒரு நல்ல குணம் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 5

பாடங்களுக்கு இடையிலான நேரத்தை – எப்படிப் பயன்படுத்துவது? (தொடர்ச்சி…)

ள்ளி இடைவேளைகளின் போது வகுப்பறையிலோ, பள்ளி இடைவழிகளிலோ இக்குறும்புக்காரச் சிறுவர்கள், இந்த செயல் முனைப்பான கற்பனையாளர்கள் என்ன தான் செய்ய வேண்டும்? சுவரில் தொங்கும் சுவர் பத்திரிகைகளைப் படிக்க வேண்டுமா? அல்லது இடைவழிகளில் நடந்து கோஷங்களையும் சுவரொட்டிகளையும் அறிவிப்புப் பலகைகளையும் காட்சிப் பெட்டிகளையும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? அல்லது பிரபல எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளின் படங்களை முடிவற்றபடி பார்த்து அவர்களைப் போல் ஆக வேண்டும் என்று கனவு காண வேண்டுமா? இப்படிப்பட்ட வளர்ப்பு முறை குழந்தைக்கு ஒத்து வராது; உணர்வுப்பூர்வமாக கட்டுப்பாடாக இருக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தை புரிந்து கொள்வதே கடினம்.

குறும்புத்தனம் என்பது குழந்தைகளிடம் உள்ள ஒரு நல்ல குணமாகும். இதை சரிவர அணுகிப் பயன்படுத்த வேண்டும். கீழ்க்காணும் முடிவிற்கு நான் எப்போதோ வந்து விட்டேன்:

குழந்தை ஒழுக்கம் என்பது குறும்புகளை மாற்றியமைப்பதில்தான் உள்ளதே தவிர இவற்றை அடக்கி ஒடுக்குவதில் அடங்கியிருக்கவில்லை. நமது பயிற்சி முறையின் மூலம் அவர்களின் உள்ளே புகுத்த முடியாததைச் செய்யும்படி அவர்களைக் கோர வேண்டாம்.

குழந்தைகளின் குறும்புகள் அடக்கி ஒடுக்கப்படாமல் மாற்றியமைக்கப்பட என்ன செய்ய வேண்டும்? அதுவும் குறிப்பாக இடைவேளைகளின் போது இதை எப்படிச் செய்வது? ஏனெனில் இடைவேளைகளின் போதுதான் உட்சக்திகள் அடக்க இயலாதவாறு பொங்குகின்றன. இவற்றின் சுதந்திரமான உந்து சக்திகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இவ்வாறாக, பள்ளி இடைவேளைகள் மற்றும் பள்ளிக் கட்டுப்பாடு சம்பந்தமான சிக்கலான ஆசிரியரியல் பிரச்சினை எனக்குத் தோன்றுகிறது. இப்பிரச்சினையை நான் தீர்க்கவில்லை, அனேகமாக இதைத் தீர்க்கவும் முடியாது. என்றாலும் ஒரு சில சக ஆசிரியர்களை விட சற்றே அதிகமாக நான் நிம்மதியாக இருக்க முடியும். ஏனெனில் என் சிறுவர் சிறுமியர் எதைக் கண்டிப்பாகச் செய்வார்கள் என்று எனக்குத் தெரியும்.

இலிக்கோ, தேன்கோ, மாயா ஆகிய மூவரையும் வார்த்தை அட்டைவில்லைகளை எண்ணுவதற்காக அறையின் ஒரு மூலைக்கு அனுப்பினேன்.

போன்தோ பையிலிருந்து ஒரு பெரிய ஆப்பிளை எடுத்து அதைக் கடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.

ருசிக்கோ தன் ”சான்ட்விச்சை” சாப்பிடுவதில் ஈடுபட்டிருக்கிறாள்.

ஒரு சில சிறுமியர் மேற்கோட்டுகளை மாட்டும் இடத்தில் ஸ்கிப்பிங் கயிறுகளைக் கண்டுபிடித்தனர். இடைவழியில் அவர்கள் குதித்து விளையாடும் லயமும் கணீரென்ற சிரிப்பும் என் காதுகளை எட்டுகின்றன.

இடைவழியிலுள்ள சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சிரிப்புப் படங்கள் ஒரு சிலரின் மகிழ்ச்சிகரமான மன நிலையை அதிகப்படுத்துகின்றன.

வகுப்பறையில் இரண்டு மீட்டர் நீளமுடைய ஒரு பெரிய, கெட்டியான வெற்றுத் தாள் தொங்குகிறது. இதைச் சுற்றி மரச்சட்டம் உள்ளதால் இது ஒரு படத்தைப் போல் உள்ளது. ”விருப்பப்பட்டதை வரை” என்று ஒரு அறிவிப்பு அதன் மேல் உள்ளது. அருகே வண்ணப் பென்சில்கள் இருக்கின்றன. 4-5 பேர் ஏற்கெனவே அதில் தம் கைவண்ணங்களைக் காட்டிக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

குறுகலான நீண்ட கரும்பலகையும் அருகே வண்ண சாக்பீஸ்களும் துண்டும் உள்ளன. அனேகமாக ஒரு சிலர் இந்நேரம் தம் கரங்களையும் முகங்களையும் அழுக்குப்படுத்தியிருப்பார்கள்.

வெவ்வேறு வார்த்தைகள், பழமொழிகள், பாடல் வாசகங்கள், விடுகதைகள், எண்கள் முதலியன பெரும் எழுத்துக்களில் எழுதப்பட்ட அட்டைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. குழந்தைகளில் ஒரு பகுதியினர் கண்டிப்பாக இவற்றைப் படிக்க முயலுவார்கள்.

குழந்தைகள் பார்த்து, படித்து, வரைவதற்கு ஏற்றவாறு இவையெல்லாம் அவர்களுக்கு எட்டக் கூடிய உயரங்களிலேயே மாட்டப்பட்டுள்ளன.

படிக்க:
Trust WHO ஆவணப்படம் : உலக சுகாதார நிறுவனத்தின் மறுபக்கம் !
பெண்களின் பார்வையில் அழகு – ஆபரணம் – ஆடை – உணவு | பெண்கள் நேர்காணல்

நான்கு சிறு மேசைகளில் (இவற்றைச் சுற்றி சிறு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன) வண்ணப் படங்களுடன் கூடிய நூல்கள், குழந்தைகளுக்கான சஞ்சிகைகள், கணித விளையாட்டு, சிறு விளையாட்டுக் கட்டுமானப் பொருட்கள், சொக்கட்டான், சதுரங்கம் முதலியன வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன.

சில நாட்களுக்குப் பின் வகுப்பறையில் வில்லும் அம்பும் இருக்கும். அப்போது என் பங்கேற்போடு இதில் போட்டி நடக்கும்.

இடைவழியில் சுவர் ஓரமாக ஒரு செங்குத்தான ஏணி வைத்து, தரையில் மெத்தென்ற விளையாட்டு மெத்தையை விரிக்க எண்ணியுள்ளேன். குழந்தைகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா?

ஒரு நாள் நானே நிச்சயமாகக் குழந்தைகளுக்கு குழாய்களைக் கொண்டு வந்து தருவேன். அப்போது ஒருவரையொருவர் பரஸ்பரம் சுட்டுக்கொள்வோம். ஆனால் கசங்கிய காகிதத் துண்டுகளுக்குப் பதில் சுத்தமான குண்டுகளைப் பயன்படுத்துவோம்.

இவையனைத்தையும் நேரத்திற்குத் தக்கபடி, ஒவ்வொரு வகுப்பிலும் குழந்தைகள் வளருவதைப் பொறுத்து, இவர்களின் குறும்புகள் மாறுவதைப் பொறுத்து நான் மாற்றுவேன். எனது கற்பனைத் திறன் மற்றும் குறும்பு இதில் பெரும் பங்காற்றும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் தன் குழந்தைகளின் குறும்புகளை மாற்றியமைக்கும் முறையை ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவருக்கே குறும்பு செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது.

குழந்தைகள் பெரியவர்களாக உதவ வேண்டும் என்றால் அவர்களில் தன்னைப் பார்க்க வேண்டும்; அவர்களின் மூலம் தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ள தனது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களின் உருவத்தில் காண வேண்டும்; என்றென்றும் மனிதாபிமானம் மிக்க ஆசிரியராக இருக்க வேண்டுமெனில் குழந்தையோடு குழந்தையாக வாழ வேண்டும்.

குழந்தைகள் மாற்றத்தை நாடும் ஆக்கப்பூர்வமான கற்பனையாளர்கள், சுறுசுறுப்பானவர்கள். எனவே, இவர்களுக்கு ஒரு சரிப்பட்ட சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இச்சூழல் இவர்களை அச்சுறுத்தக் கூடாது, விளைவுகளை நினைவு படுத்தக்கூடாது, அறிவுரைகளைக் கூறக்கூடாது, மாறாக இது இவர்களின் நடவடிக்கைகளை வழிகாட்டி நடத்த வேண்டும்.

கரும்பலகையில் நான் கணிதப் பாடத்திற்கான கணக்குகளை எழுதுகிறேன். ஒரு சில குழந்தைகள் என்னைச் சுற்றிக் கொண்டு நான் என்ன செய்கிறேன் என்று ஆவலோடு கவனிக்கின்றனர்.

“மாமா, நீங்கள் என்ன எழுதுகின்றீர்கள்?”

“அவர் மாமா இல்லை, ஆசிரியர்…”

“ஏன் வண்ண சாக்பீஸ்களால் எழுதுகின்றீர்கள்?”

“நான் ஏன் சிரித்தேன் என்று சொல்லட்டுமா?”

கோத்தே: “நான் சிறுவனாக இருந்த போது…”

ஏக்கா: “நீ இப்போதும் சிறுவன் தான்…”

கோத்தே: “பொறு… நான் மிகவும் சிறுவனாக இருந்த போது மேசை விரிப்பைப் பிடித்திழுத்து அறை வழியே இழுத்துச் சென்றேன், மேசை மீது பல பொருட்கள் இருந்ததால் எல்லாம் தரையில் விழுந்தன…”

நாத்தோ : “இதில் சிரிக்க என்ன உள்ளது …”

தாம்ரிக்கோ : “’இது முட்டாள் தனமானது…”

கோத்தே: “ஏன், நான் என்ன செய்கிறேன் என்று தான் எனக்குத் தெரியாதே!”

நாத்தோ: “அடி வாங்கியிருந்தால் அப்போது தெரிந்திருக்கும்…”

குழந்தை ஒழுக்கம் என்பது குறும்புகளை மாற்றியமைப்பதில் தான் உள்ளதே தவிர இவற்றை அடக்கி ஒடுக்குவதில் அடங்கியிருக்கவில்லை. நமது பயிற்சி முறையின் மூலம் அவர்களின் உள்ளே புகுத்த முடியாததைச் செய்யும்படி அவர்களைக் கோர வேண்டாம்.

நிக்கோ: “நான் சிறுவனாக இருந்த போது என்ன நடந்தது தெரியுமா? என்னை ஒரு முறை வீட்டில் தனியே விட்டுச் சென்றார்கள். அப்போது, யார் வந்து தட்டினாலும் கதவைத் திறக்க வேண்டாம் என்றார்கள். சிறிது நேரம் கழித்து யாரோ கதவைத் தட்டினார்கள், நான் மிகவும் பயந்து, ‘உதவி, உதவி !’ என்று கத்தத் துவங்கினேன். கதவைத் தட்டும் சத்தம் அதிகமாகியது, நானோ ‘உதவி !’ என்று இன்னமும் பலமாகக் கத்தினேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து, ‘பயப்படாதே, கதவைத் திற, உனது சகோதரி பள்ளியிலிருந்து வந்திருக்கிறாள் !..’ என்றனர். பின்னர் நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.”

நான் சிரிக்கிறேன், சுற்றியிருந்த குழந்தைகளும் சிரிக்கின்றனர்: “இது உண்மையிலேயே சிரிப்பானது !”

தாத்தோ: “எனக்கு இரண்டு வயதாயிருந்த போது என் அம்மா என்னை நர்சரிப் பள்ளியில் சேர்க்க விரும்பினாள். எனக்கு அங்கு செல்ல விருப்பமில்லை, எனவே, ஒளிந்து கொள்ள ஓடிய நான் படிக்கட்டில் தலைகீழாக விழுந்தேன்…”

கியோர்கி: “நான் சிறுவனாக இருந்த போது, என்னை என் அப்பா நர்சரிப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் விளையாடினோம், சண்டை போட்டுக் கொண்டோம், நான் அலமாரியில் ஒளிந்து கொண்டேன்.”

கோச்சா: “நீ கோழை, எனவேதான் ஒளிந்து கொண்டாய்.”

எலேனா: “’நான் சிறுமியாக இருந்த போது…’

இராக்ளி: “நான் சிறுவனாக இருந்த போது…”

குழந்தைகள் ஒருவர் பேசுவதில் ஒருவர் குறுக்கிடுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் “நான் சிறுவனாக (சிறுமியாக) இருந்த போது” என்று துவங்குவதை அப்போதுதான் நான் கவனித்தேன். அப்படியென்றால் அவர்கள் இப்போது தம்மைச் சிறுவர் சிறுமியராக கருதவில்லை தான் ஏனெனில் அவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டார்களே! ஒருவேளை பெரியவர்களாகிவிட்ட இந்த உணர்வை அவர்களிடம் நான் உறுதிபடுத்த வேண்டுமோ!

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

பொதுப் பாதையில் இறுதி ஊர்வலம் செல்லக் கூடாது : இருளர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதித் திமிர் !

“எங்க ஊர்ல சாவு ஏற்பட்டாலே பகீர்னு இருக்குங்க. துக்கம் ஒருபுறம் இருந்தாலும் ஆதிக்க சாதிக்காரங்க வசவுகளை கேட்டுக்கொண்டு அவர்கள் தெரு வழியாக சவத்தை எப்படி கொண்டு செல்ல போகிறோம் என்று நினைக்கும் போது பகீர்னு இருக்குங்க” என்கிறார் இருளர் குடியிருப்பை சேர்ந்த ஒரு பெண்.

இது நடப்பது திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்தை அடுத்த ரங்காபுரம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்புப் பகுதி. இந்த தீண்டாமைக் கொடுமை குறித்து மேலும் விவரிக்கிறார்கள் இப்பகுதி இருளர் இன மக்கள்.

“எங்களுக்கு மின்சாரம், அம்மா வீடு, கழிவறை என்று எல்லா வசதிகளும் கிடைத்திருக்கிறது. ஆனால், பொது வழியில் பிணத்தைக் கொண்டு போகக் கூடாது என்றும் அதனால் தங்களது ஐஸ்வர்யம் கெட்டுப் போகிறது என்றும் இங்கு இருக்கும் வன்னியர்கள் கூறுகிறார்கள்.

சொல்லப்போனால், நாங்கள் வெடி வைப்பதில்லை பூ தூவுவதில்லை, ஏன் பறை கொட்டுவது கூட இல்லை. அமைதியான ஊர்வலம் செல்லக்கூட அனுமதிக்க அவர்கள் விரும்புவதில்லை. பிணத்தை அங்கேயே நடுரோட்டில் வைத்து விடலாமா என்று கூட தோன்றும் அளவுக்கு அவர்கள் எங்களைத் திட்டித் தீர்க்கிறார்கள்.

அவர்களது மயானத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது எனக்கூறி எங்களுக்கு என்று சிறு பகுதியை ஒதுக்கி கொடுத்தனர். ஆனால் இப்போது அங்கும் அவர்களின் தேவைகளுக்காக மண்ணைத் தோண்டி எடுக்கின்றனர். எங்களது தேவையெல்லாம் பிணத்தைக் (அமைதியாக, வசவின்றி) கொண்டு செல்ல ஒரு சாலை, அடக்கம் செய்து பாதுகாக்க சிறு பகுதி” எனக் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆரம்ப காலங்களில் சுமார் 25 வருடங்களுக்கு முன் பூப்பறிக்கவும், தங்களது வயல்களில் வேலை செய்யவும் இருளர்கள் தேவைப்பட்டதால் தங்களது குடியிருப்பின் ஒரு ஓரத்தில் குடியேற இருளர்களை வன்னியர்கள் அனுமதித்துள்ளனர்.
தற்போது வயல் வேலைகள் குறைந்துள்ளதாலும், தொழிற்சாலைகளை நோக்கி இருளர்கள் வேலைக்கு சென்று விடுவதாலும் தம்மை மீறி இருளர்கள் வளர்ந்து விடுவதாக எண்ணி அஞ்சுகின்றனர் ஆதிக்க சாதியினர். “ஒரு நாள் முழுவதும் உழைத்தாலும் ஆதிக்கச் சாதியினர் தரும் கூலி ரூ. 80-ஐத் தாண்டாது. அதுவும் வருடத்தில் சில மாதங்களே கிடைக்கும். நாங்கள் வெளியில் சென்று மூட்டை தூக்கினாலும், தொழிற்சாலைக்கு சென்றாலும் ரூ.600 வரை சம்பாதிப்போம்” என்கின்றனர் இருளர் இன மக்கள்.

படிக்க:
சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்
♦ நூற்றாண்டு கால சுடுகாட்டு பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டிய மக்கள் அதிகாரம் !

ஒரே கிராமத்தில் வசித்தாலும், விழாக்காலங்களில் இருளர்கள் தீ மிதிக்கக்கூடாது. ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த தீமிதி திருவிழாவில் ஆதிக்க சாதியினர் தீ மிதித்து அவர்களுக்கு ஏற்பட்ட கால் கொப்புளங்களுக்கு இருளர்கள் தீ மிதித்து தீட்டு ஏற்படுத்தியதுதான் காரணம் எனக் கூறி தடை விதித்துள்ளனர். பொங்கல் விளையாட்டு போட்டிகளில் இருளர் குழந்தைகள் கலந்து கொள்ளவோ அல்லது வேடிக்கை பார்க்கவோ கூட அனுமதி இல்லை.

ஊரின் கடைசிப் பகுதி என்பதால் ஆதிக்கச் சாதியினர் தெருவைக் கடந்துதான் இருளர்கள் வேலைக்குச் சென்று வர வேண்டியுள்ளது. பைக்கில் சென்றால், “இருளப் பசங்க பைக்ல பொறுமையாத்தான் போகணும்”னு சட்டம் பேசுவது, அதிகாலை நான்கு மணிக்கு மேலே ரோட்டில் வழிவிடாமல் கட்டில் போட்டு படுத்துக்கொள்வது என பாதையை பயன்படுத்த முடியாத அளவுக்குத் தொல்லை கொடுக்கின்றனர்.
32 குடியிருப்புகளைக் கொண்டுள்ள இருளர்கள் 100 குடும்பங்களைக் கொண்ட ஆதிக்க சாதியினருக்கு பயப்படுவது இயல்பே. பெரும்பாலானோர் அவர்களின் வீடுகளில் வேலை செய்பவர்களாகவே உள்ளனர்.

“நீங்க ஏன் பயப்படுறீங்க தைரியமா பிணத்தை பொது வழியில் கொண்டு போங்க. திட்டினா கேஸ் கொடுங்க” என்று கூறும் ஆதிக்க சாதியினரும் இருக்கின்றனர்.

வேறு சிலர் “நீங்க எதுக்கு இப்படி அவமானப்படணும்? கலெக்டரிடம் மனு கொடுத்து தனிச் சாலை போட்டுக் கொள்ளுங்கள். நாங்களும் கையெழுத்துப் போட்டுத் தருகிறோம்” என்றும் சொல்கின்றனர்.

இருளர் கிராமத்தில் 20 இளைஞர்கள் வரை இருக்கின்றனர். இவர்களில் எவரும் பத்தாவது தாண்டியது கிடையாது. எழுதப்படிக்க ஓரிருவருக்குத்தான் தெரியும். அதில் ஆறுமுகம் எனும் ஆட்டோ ஓட்டும் வாலிபர் தனது ஊர் மக்களோடு சென்று அதிமுக – எம்.எல்.ஏ ஏழுமலையைச் சந்தித்து தங்களது கோரிக்கையை வாய்மொழியாக கூறியுள்ளனர். மேலும் கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கிறார் ஆறுமுகம்.

இவர்களுக்கு மிக அருகிலேயே நயப்பாக்கம் எனும் இருளர் கிராமம் உள்ளது. அங்கு சுமார் 50 வீடுகள் உள்ளன. அவர்கள் தனிக் கிராமமாக இருப்பதால் இவ்விதம் சாதிய பிரச்சனைகள் ஏற்படுவது இல்லை எனத் தெரிவிக்கின்றனர். மேலும் ரங்காபுரத்தில் உள்ள இருளர்களது பிரச்சனையின் காரணமாக போராட்டம் ஏதேனும் நடக்கும் பட்சத்தில் அவர்களும் அதில் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்பிக்கையுடன் இருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

“ஊர் மக்கள் போராடி தங்களது கோரிக்கையை பெறத் தயாராக உள்ளனர். ‘நீங்க சொல்லுங்க சார் நாங்க இப்ப கூட போராட்டம் பண்ண தயார்’ என்று சொல்றாங்க. ஆனா அவர்களை வழிநடத்தவும் அரசியல்படுத்தவும் வேண்டி உள்ளது” என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

ஊதியத்தை உயர்த்து : பெங்களூரு ஆயத்த தொழிலாளர்கள் மே நாள் பேரணி !

0

யத்த ஆடைத் துறையில் 20 ஆண்டுகளாக மஞ்சுளா பணிபுரிந்து வருகிறார். துணிகளைப் பிரித்துக் கொடுப்பது, சில பகுதிகளை தைத்துக் கொடுப்பதாக தொடங்கியது அவரது வேலை. இன்று பெங்களூருவில் பீன்யா தொழிற்பேட்டையில் தரம் சரிபார்ப்பவராக பணியாற்றுகிறார்.

ரூ. 8,300 ஊதியத்தை கொண்டு என்னால் வாடகையும் கொடுக்க முடியவில்லை அன்றாட வாழ்க்கை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியவில்லை என்கிறார் அவர். குறைந்தபட்சமாக ரூ. 11,000 ரூபாய் எனக்கு கொடுக்க வேண்டும். ஆனால் என்னுடைய ஊதியத்தை அவர்கள் உயர்த்தவில்லை என்று அவர் கூறுகிறார்.

உலகத் தொழிலாளர் நாளான மே 1 அன்று மஞ்சுளாவைப் போன்ற ஆயத்த ஆடைத்தொழிலாளர்கள், அரசாங்கத்தின் செயலின்மையை அம்பலப்படுத்தவும் குறைந்த அளவு ஊதியத்தை வழங்க கோரியும் பேரணி – பொது கூட்டத்தை நடத்தினர்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த அளவு ஊதியமாக ரூ. 11,587 வழங்குமாறு மாநில அரசாங்கத்தின் வரைவு அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஆயத்த ஆடை தொழிலாளர் சங்கமும் இந்திய தொழிலாளர் சங்கமும் (Hind Mazdoor Sabha) ஆயத்த ஆடை தொழிலாளர் பேரணியை நடத்தினர். மேலும் இந்த அடிப்படையில் 2018 – 19 ஆண்டிற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தியா முழுவதும் உள்ள ஆஷா – கிராமப்புற மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் என அனைவருக்கும் குறைந்த அளவு ஊதியமாக ரூ. 18,000 அளிக்க வேண்டும் என்பதே கர்நாடகா அரசாங்கத்திடம் அவர்களது நீண்ட கால கோரிக்கை.

20 ஆலைகளிலிருந்து 1000 தொழிலாளர்களாவது பேரணியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக ஆயத்த ஆடை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.சரோஜா கூறினார். பீன்யா தொழிற்பேட்டை, கனகபுரா மற்றும் மைசூரிலிருந்தும் கூட அவர்கள் வருகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

நிறுவனங்களின் எதிர்வினை :

கர்நாடகாவின் குறைந்த அளவு ஊதிய வழங்கல் சட்டத்தின்படி ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறை கர்நாடக அரசு ஊதிய உயர்வை வெளியிட்ட போதும் அது தங்களுக்கு உகந்ததல்ல என்று முதலாளிகள் எதிர்ப்பதால் அரசாங்கம் பின்வாங்கி விடுகிறது.

ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்த கோரி ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நீதிமன்றங்களுக்கும் நடந்திருக்கின்றனர். பெங்களூருவில் குறைந்தது 1,200 ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களானது இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் பணிபுரிவது பெண்கள் தான். அவர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேல் திறன் குறைந்த தொழிலாளர்களாக உள்ளனர்.

படிக்க:
பெண் தொழிலாளிகளின் மே தினம் 2016 – படங்கள் !
♦ அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள்

திறன் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.14,000மும், திறன் குறைந்த தொழிலாளர்களுக்கு ரூ. 11,500  சொச்சமும் குறைந்த அளவு ஊதியமாக வழங்க 2018, பிப்ரவரி மாதத்தில் தொழிலாளர் ஆணையம் வரைவு அறிக்கையை வெளியிட்டது.

எங்களுக்கு அது காட்டுப்படியாகாது என்று மீண்டுமொருமுறை நிறுவனங்கள் கூறிவிட்டதால் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சரோஜா கூறினார்.

வேறு முயற்சி :

விரைவிலேயே தொழிலாளர் ஆணையமும் தன்னுடைய அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது. வரைவு அறிவிப்பை வெளியிட்டு பங்குதாரர்களிடம் கருத்து கேட்பதற்கு பதிலாக அரசாங்கமே புதிய குழுவை உருவாக்கி குறைந்த அளவு ஊதிய சட்டத்தின் வேறொரு பிரிவின் கீழ் ஊதிய உயர்வு பற்றி தனக்கு அறிவுறுத்தலாம் என்று அது பல்டி அடித்தது.

அதன் பின்னர் ஆயத்த ஆடை நிறுவனங்கள் , அரசு தரப்பு மற்றும் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் தரப்பு பிரதிநிதிகளைக் கொண்ட முத்தரப்பு குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது என்று தொழிலாளர் ஆணையத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆனால் அரசாங்கத்தால் ஒரு ஆண்டாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை என்று ஆயத்த ஆடை தொழிலாளர் சங்கம் குறிப்பிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மே மாத சட்ட மன்ற தேர்தலைத் தொடர்ந்து தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் என்று குழு கூட்டத்தை நடத்தாமல் அரசாங்கம் சாக்குபோக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது என்று சரோஜா கூறினார்.

ரூ. 8,000-லிருந்து 11,000 ரூபாயாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வரைவு அறிக்கை வெளிவந்த பின் 2018-19-ம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு நிலுவைத்தொகை 1,800 கோடி ரூபாய்க்கும் மேலிருப்பதாக தொழிலாளர் சங்கம் கணக்கிடுகிறது.

மே தினப் பேரணியில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளை கண்டிக்கும் தொழிலாளர்கள்.

அதே நேரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டுமே தொழிலாளர்களுக்கு ஒரே நம்பிக்கையாய் உள்ளது. அரசாங்கத்தின் குறைந்த அளவு ஊதிய உயர்வு வரைவு அறிக்கையை 34 துறைகளுக்கு உறுதி செய்து தீர்ப்பளித்த நீதிமன்றம் 8 வாரங்களுக்குள் 6 விழுக்காடு ஆண்டு வட்டியுடன் நிறுவனங்கள் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று கூறியது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்பொழுதான் வந்திருக்கிறது. சரியான முடிவு எடுப்பது குறித்து பேசி வருகிறோம் என்று தொழிலாளர் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

(நடைமுறையில்) ரூ.18,000 ஊதிய உயர்வை அடைவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதை சரோஜாவும் ஏற்றுக்கொள்கிறார். அரசாங்கம் தருவதாக ஒப்புக்கொண்ட ரூ. 11,500-ஐ ரூபாயையே அவர்களால் கொடுக்க முடியவில்லை என்றால் ரூ. 18,00 ருபாய் கொடுப்பதற்கு வாய்ப்புகள் குறைவு தான் என்று அவர் கூறினார். ஆனால் திறன் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ. 14,000 கொடுப்பதை அவர்கள் நடைமுறைப்படுத்தினால் ரூ. 18,000-ஐ  நடைமுறைப்படுத்துவதை நோக்கிய முதல் படியாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

படிக்க:
மோடி அரசுக்கு செருப்படி – பெங்களூரு தொழிலாளிகள் போர் !
♦ தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் !

இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் முதலாளிகளின் மனம் வாடும். தொழிலாளர்கள் பாடுபட்டு சேர்த்த சேம நிதியை பண முதலைகள் சூறையாட மோடி கொண்டு வந்த திட்டத்தை முறியடித்ததும் இதே பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர்களின் போர்குணமிக்க போராட்டம் தான்.

ஒவ்வொரு முறையும் தொழிலாளர்கள் ஒன்றுட்டு கோரிக்கைக்கு போராட முன்வரும் போதும் அரசாங்கமும் நீதிமன்றங்களும் ஏதாச்சும் செய்வது போல பாவ்லா செய்து போராட்டங்களை நீர்த்து போக செய்கின்றன. சரியான தலைமையும், தோழமையும் இல்லாத போராட்டங்கள் ஒன்று வன்முறைக்குள்ளாகும் அல்லது நீர்த்து போகும். ஆயத்த ஆடை தொழிலாளர்களின் போராட்டத்தில் கருத்திலும் காலத்திலும் பங்கு பெறுவோம்.


கட்டுரையாளர்: நயன்தாரா நாராயணன்
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : ஸ்க்ரால்

கால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் ?

ஆன்லைனில் புத்தக விளம்பரம் இன்று, அச்சுக்கலை நுழைந்த நாளில் அன்று (19-ம் நூற்றாண்டு) புத்தக விளம்பரம் | பொ. வேல்சாமி

ண்பர்களே…

பொ.வேல்சாமி
இன்றைய காலகட்டத்தில் புத்தகங்களை வாசகர்களிடம் சேர்ப்பதற்கான விற்பனை வழிமுறைகள் எத்தனையோ வகையான நவீன முறைகளாக வளர்ந்து விட்டதை நாம் அனைவரும் அறிவோம். ஏட்டுச்சுவடிகளாக இருந்த நூல்கள் புத்தகங்களாக அச்சு வாகனம் ஏறிய அந்தக் காலத்தில் (19-ம் நூற்றாண்டு) எப்படி இருந்தது என்பதைக் காட்டும் அன்றைய “விளம்பரங்களை” பாருங்கள் நண்பர்களே….

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குறிப்பு : 1873-லும் 1880-லும் உரையுடன் அச்சிடப்பட்ட யாப்பருங்கலக் காரிகை நூலின் பெறுவதற்கான விளம்பரங்கள் அந்த நூல்களின் முதல் பக்கத்திலும் கடைசிப் பக்கத்திலும் இடம்பெற்றிருந்தன. அதிலுள்ள விளம்பர வரிகள் சுவை பயப்பனவாகவும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

*****

“கால்டுவெல்” லண்டனிலிருந்து அனுப்பிய அவருடைய புகைப்படம்.

ண்பர்களே….

கால்டுவெல் அவர்கள் தன்னுடைய இறுதிக் காலத்தில் தன்னுடைய சென்னை நண்பர் ஜோசப் சத்திய நாடார் M.A.,M.L., அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படத்தை 1906 -இல் தான் வெளியிட்ட “தமிழ்” என்ற நூலில் தமிழறிஞர் செல்வகேசவ முதலியார் வெளியிட்டுள்ளார். இந்நூலில் கம்பருடைய உருவச் சிலையும் சிவஞான முனிவருடைய உருவச் சிலையும் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக செல்வகேச முதலியார் குறிப்பிடுகின்றார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.

தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் !

திருத்துறைப்பூண்டி அருகில் ஆலத்தம்பாடி கரும்பியூரில் தோழர் பி. சீனிவாச ராவ் சிலை தரை மட்டமாக தகர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின் படி தலைவர்களின் சிலைகளை மூடுவது வழக்கம். ஆனால் இங்கு அதிகாரிகளோ, தேர்தல் விதிமுறையைக் காரணம் காட்டி சிலையை அதன் பீடத்தோடு தகர்த்து வீசியிருக்கிறார்கள்.

டெல்டா விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடி, வாழ்ந்து மறைந்த தோழர் சீனிவாச ராவின் பெயர் தஞ்சை மண்ணில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அடிமைப்பட்டுக் கிடந்த டெல்டா மக்களை தலைநிமிரச் செய்த தன்னிகரில்லாத தலைவர். தன் வாழ்நாளையே பொதுவுடைமைத் தத்துவத்திற்கும், உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்துக் கொண்டவர். இவரைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்.

கர்நாடகாவில் உள்ள குடகு நாட்டில் பிராமணக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அந்நிய துணி எரிப்புப் போராட்டத்தில் மக்களோடு சேர்ந்து பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தினார். ஆங்கிலேயர்களால் தடியாலும், பூட்ஸ் காலாலும் மிருகத்தனமாக தாக்கப்பட்டார். அத்தனை அடி உதைகளையும் அஞ்சாத நெஞ்சோடு எதிர்க்கொண்டார். பிறகு “நியூ ஏஜ் ” பத்திரிகையில் முழுநேரமாகப் பணிபுரிந்து பொதுவுடைமைக் கருத்துக்களை தன் எழுத்தின் மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை செய்தார்.

பிறகு டெல்டா மாவட்டத்தில் கம்யூனிசத்தையும், விவசாய சங்கத்தையும் உருவாக்க தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் கிராமம், கிராமமாகச் சுற்றி அலைந்து பிரச்சாரம் செய்து அயராமல் உழைத்தார். அப்போதுதான், வயல்களில் கூலி விவசாயிகள், சிறு குறு விவசாயிகள், பண்ணையடிமைகளாய் குறைந்த கூலிக்கு அவர்களின் உழைப்பும், ரத்தமும் உறிஞ்சப்படுவதை கண்டு கொதித்தார்.

சூரியன் உதிக்குமுன் வயலுக்கு சென்று மறையும் வரை வேலை செய்யும் உழைப்புச் சுரண்டலை கடுமையாக எதிர்த்தார். தோளிலே போட வேண்டிய துண்டை இடுப்பிலே கட்டி கூனிக்குறுகிப் போவதைக் கண்டு அதிர்ந்து போனார். அதை மாற்ற மக்களிடமே தங்கி அவர்களில் ஒருவராக மாறவே பல்வேறு போரட்டங்களை நடத்தினார். முதலில் விவசாயிகள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.”வெள்ளை உருவம், அழுக்குப்படியாத சட்டை, மொழிப் பிரச்சனை, உயர்ந்த படிப்பறிவு, பார்ப்பனத் தோற்றம் ஆகியவை மக்களிடமிருந்து இவரை தனிமைப்படுத்தியது. அந்த எண்ணத்தை உடைக்க விவசாயிகளோடு சேர்ந்து வயலிலே வேட்டியை சுருட்டிக்கட்டி களை பறித்தார். அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் எப்போதும் கூடவே இருந்தார். “கூலி உயர்வு” கேட்டு முதன்முதலில் விவசாயிகளை பண்ணையார்களுக்கு எதிராகக் கேள்வி கேட்க வைத்தார்.

படிக்க:
நூல் அறிமுகம் : தென்பறை முதல் வெண்மணி வரை
♦ பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக பி.எஸ். தனுஷ்கோடி

வயலில் நாள் முழுதும் நெளியும் புழுக்களாக இல்லாமல் உரிமைகளுக்காகப் போராட வைத்தார். கீழத்தஞ்சையில் மாடு மேய்க்கும் சிறுவன், மாதர் குல கூலியாட்கள், பண்ணையாள் வரை அடிமைத்தனத்தில் பணிபுரிந்தவர்க்கு “ஆண்டான் அடிமை” என்னும் நிலையை மாற்றி அவர்களை வென்றெடுத்தார். களப்பாள் குப்பு, இரணியன், மணலி கந்தசாமி போன்ற தோழர்களை வீறுகொண்டு எழச் செய்தார். திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பகுதிகளில் இருந்த சாணிப்பால், சவுக்கடி போன்ற வன்முறைக்கு எதிராகக் கடுமையாக போராடினார்.

ஆதிக்க சாதி தெருக்களில் கூட நடக்க விடாத மக்களை “மாதர் சங்கம், கூலி விவசாய தொழிலாளர் சங்கம், சிறு குறு விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளை உணர்வுப்பூர்வமாக தட்டியெழச் செய்து மக்களுக்கு புத்துயிர் ஊட்டினார். ஆரம்ப காலக்கட்டத்தில் படிப்பறிவு இல்லாத பாமர மக்கள் மத்தியில் அமாவாசை ஒன்றுதான் எளிதாக புரிந்து கொள்ளும் நாள். அன்று இரவு நேரங்களில் சிவப்பு தலைப்பாகை, சிவப்பு வண்ண அடையாளங்களை அணிந்து தென் பறை என்ற இடத்தில் கூடுவதற்கு ஏற்பாடு செய்தார். கிராமப்புறங்களில் தங்கிய இடங்களில் எல்லாம் ஏழ்மை நிலையறிந்து அவர்கள் உண்ணும் உணவான நண்டு, நத்தை, குளத்து மீன், நீராகாரம் போன்றவற்றை மக்களோடு மக்களாக உண்டு உணர்வுப்பூர்வமாக அவர்களுக்கு வழிகாட்டி அமைப்புக்களை ஏற்படுத்தினார்.

நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு அஞ்சி வாழ்ந்த மக்கள் மத்தியில் எண்ணற்ற சிரமங்களுக்கு நடுவில் எள்ளளவும் முகம் சுளிக்காமல் பொறுமையின் சிகரமாக மக்களுக்காவே வாழ்ந்தார். தன் குடும்பத்தை விட்டு, தான் யார் என்று கூட சொல்ல விரும்பாமல் டெல்டா மண்ணிலே உயிர் விட்டார்.

இத்தகைய தியாகத் தோழரின் சிலையை தேர்தல் விதிமுறை என்று கூறி இடித்துள்ளனர் காவிகளின் எடுபிடி அதிகாரிகள். தேர்தல் ஆணையம் சிலைகளை மூட உத்தரவிட்டால், கம்யூனிஸ்ட்டுகளின் சிலையை உடைப்பதற்கான கொழுப்பு காவி கொடுக்கும் தைரியத்தில்தானே வருகிறது ? இவ்வளவு நாளும் காவிக் கும்பலிடமும் கார்ப்பரேட் கும்பலிடமும் பொறுக்கித் தின்ன இந்த அதிகாரிகள்தான் இன்று ’நேர்மையான’ தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளாம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழ்நாட்டில் மட்டும் தேர்தல் நடவடிக்கை என்ற பெயரில் பார்ப்பனியத்தை எதிர்த்த பெரியார், கம்யூனிச உணர்வை ஊட்டிய சீனிவாச ராவ் போன்றோரை மக்களிடமிருந்து பிரிக்க நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ் காவிக் கும்பல். சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் வன்முறைகளைத் தமிழ்நாட்டில் அரங்கேற்றி தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக முற்போக்காளர்களின் சிலைகளை சேதப்படுத்தியும் அகற்றியும் வருகிறது. இதற்கான முதல் முன்னோட்டம்தான் திரிபுராவில் லெனின் சிலை உடைப்பும், தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு.

தோழர் சீனிவாச ராவ் சிலை உடைப்பைக் கண்டித்து கரம்பியம் பகுதி மக்கள் தன்னெழுச்சியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்று கூறி நழுவப் பார்த்துள்ளனர். ஆனால் மக்கள் விடாப்பிடியாக போராடியதால் தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின்னர் அதனை மீண்டும் கட்டித் தருவதாகக் கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இத்தகவல் மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு தாமதமாகத்தான் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு சென்று இது குறித்து அப்பகுதி மக்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தோழர் சீனிவாச ராவ் சிலை உடைப்பை கண்டிக்கும் விதமாகவும், சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ ஏற்பாடு செய்யும் வகையிலும், போராட்ட முன்னெடுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமையில் உள்ள தோழர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த தோழர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஜனநாயக சக்திகள் ஆகியோருடன் இது குறித்து பேசப்பட்டு வருகிறது.

கார்ப்பரேட் வேதாந்தா நிறுவனம் டெல்டா பகுதியில் ஹட்ரோகார்பன் எடுக்க துடித்துக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டும், காவி பாசிசமும் மக்களை துரத்திக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் காவி சுரண்டலுக்கு எதிராகப் போராடிய முன்னோடிகளின் சிலைகளைக் கூட அவர்கள் விட்டுவைக்க விரும்பவில்லை. மீண்டும் ஆதிக்க சாதியும், பார்ப்பனியமும் துளிர் விட்டு தலை தூக்க ஆரம்பித்து இருக்கிறது. அதை எதிர்க்கொள்ள தோழர் சீனிவாச ராவ் சென்ற புரட்சிப் பாதையில் நம் பணியைத் தொடர்வோம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 82207 16242

தாய்மொழியைக் கேட்டதும் ஆனந்த வெறி அவன் தலைக்கேறியது !

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 12

னால் தவழ்வது முற்றிலும் கடினமாக இருந்தது. கைகள் நடுங்கின, உடலின் சுமையைத் தாங்க மாட்டாமல் துவண்டு மயங்கின. இளகிய வெண்பனியில் சில தடவை அவன் முகம் புதைய விழுந்தான். புவியின் ஈர்ப்புச் சக்தி பல மடங்கு அதிகமாகி விட்டதும் போல அவனுக்குத் தோன்றியது. அதை எதிர்த்து வெல்வது அசாத்தியமாக இருந்தது. சற்று நேரமாவது, ஒரு அரை மணி நேரமாவது படுத்து இளைப்பாற வேண்டும் என்ற ஆசை அடக்க முடியாத படி எழுந்தது. எனினும் இன்று மிக வலிய கவர்ச்சி அலெக்ஸேயை முன்னே இழுத்தது.

உடலைப் பிணித்த அயர்வை மதியாமல், அவன் மேலே மேலே தவழ்ந்து முன்னேறினான், விழுந்தான். பசியையோ, அவன் உணரவில்லை. எதையும் அவன் காணவில்லை. பீரங்கிக் குண்டு வீச்சையும் துப்பாக்கி வெடிகளையும் தவிர வேறு எந்த ஒலியும் அவன் காதில் படவில்லை. உள்ளங்கைகள் தாங்க வலுவற்றுப் போனதும் அவன் முழங்கைகளை ஊன்றித் தவழ முயன்றான். இது மிகவும் அசௌகரியமாக இருந்தது. அப்போது அவன் நீண்டுப் படுத்து, முழங்கைகளால் வெண்பனியை அழுத்திப் புரண்டு முன் செல்ல முயற்சி செய்தான். இதில் அவனுக்கு வெற்றி கிட்டிற்று. இவ்வாறு புரண்டு உருண்டு முன்னே செல்வது அதிகச் சுளுவாயிருந்தது. அதற்குப் பெரும் பிரயாசைத் தேவைப்படவில்லை. தலை மட்டுந்தான் மிகவும் கிறுகிறுத்தது. ஒவ்வொரு நிமிடமும் தன்னுணர்வு தப்பியது. புரள்வதை அடிக்கடி நிறுத்தி, வெண்பனியில் உட்கார்ந்து, தரையும் காடும் வானும் சுழல்வது நிற்கும் வரை காத்திருக்க நேர்ந்தது.

பசியையோ, அவன் உணரவில்லை. எதையும் அவன் காணவில்லை. பீரங்கிக் குண்டு வீச்சையும் துப்பாக்கி வெடிகளையும் தவிர வேறு எந்த ஒலியும் அவன் காதில் படவில்லை.

தன்னவர்களிடம் போய்ச் சேர வாய்க்குமா என்பது பற்றி இப்போது அலெக்ஸேய் எண்ணவே இல்லை. உடம்பு இயங்கும் நிலைமையில் இருக்கும் வரை தவழ்ந்தும் புரண்டும் முன்னேறிக் கொண்டிருப்போம் என்பதை அவன் அறிந்திருந்தான். பலங்குன்றிய எல்லாத் தசைகளதும் அந்தப் பயங்கர உழைப்பின் விளைவாக அவனுக்குக் கணப்பொழுது நினைவு தப்புகையிலும் அவனுடைய கைகளும் உடல் முழுவதும் முன்போன்றே சிக்கலான இயக்கங்களைத் தொடர்ந்து செய்துகொண்டும் போயின, அவன் பீரங்கிக் குண்டு வீச்சு நடந்த திசையை, கிழக்கை நோக்கி வெண்பனியில் புரண்டு சென்ற வண்ணமாயிருந்தான்.

அந்த இரவை அவன் எப்படிக் கழித்தான், மறு நாள் காலையில் எவ்வளவு நேரம் புரண்டுச் சென்றான் என்பது அலெக்ஸேய்க்குத் நினைவில்லை. துன்புறுத்தும் அரை மறதியில் எல்லாம் அமிழ்ந்து விட்டது. தனது இயக்கப் பாதையில் கிடந்த தடைகள் மட்டுமே அவனுக்கு நினைவிருந்தன: வெட்டப்பட்ட பொன்னிறப் பைன் அடிமரம், அதிலிருந்து கசிந்த அம்பர் நிறக் கீல், வெட்டுக் கட்டைகளின் அடுக்கு, சுற்றிலும் சிதறியிருந்த மரத்தூளும் சிறாய்களும், வெட்டுப் பகுதியில் துலக்கமாகத் தெரிந்த ஆண்டு வரைப்படிவுகள் கொண்ட ஏதோ அடிக்கட்டை ஆகியன இவை…

வெளிச் சத்தம் ஒன்று அலெக்ஸேயை அரை மறதியிலிருந்து சுய நினைவுக்குக் கொணர்ந்தது. அவன் உட்கார்ந்து சுற்று முற்றும் கண்ணோட்டினான். மரங்கள் வெட்டப்பட்ட பெரிய வெளியின் நடுவே தான் இருப்பதை அவன் கண்டான். வெயிலொளி அதை முழுக்காட்டிக் கொண்டிருந்தது. ரம்பத்தால் அறுக்கப்பட்ட இன்னும் துண்டுப் போடப்படாத மரங்களும் கட்டைகளும் அடுக்குகளாக வைக்கப்பட்ட விறகுக் கட்டைகளும் எங்கும் காணப்பட்டன.

திட்டமாக விளங்காத அபாய உணர்வுக்கு உள்ளான அலெக்ஸேய் சுற்றிலும் நோக்கினான். மரங்கள் அண்மையில்தான் அறுக்கப்பட்டிருந்தன. எனவே, இங்கே ஆள் நடமாட்டம் இருப்பதாகத் தெரிந்தது. ஒரு வேளை ஹிட்லர் படையினர் காப்பகங்களும் அரண்களும் அமைப்பதற்காக இங்கே காட்டைத் திருத்துகிறார்களோ? அப்படியானால் விரைவில் இங்கிருந்து அப்பால் போய்விட வேண்டும். மரம் வெட்டிகள் எந்தக் கணத்திலும் வந்து விடக்கூடுமே. ஆனால், வலி என்னும் விலங்கால் மாட்டப்பட்டிருந்த உடல் கல்லாகச் சமைந்து விட்டது போலிருந்தது. அசையத் திராணி இல்லை.

தொடர்ந்து தவழ்ந்து செல்வதா? இதை அவன் முடிவு செய்வதற்குள், காட்டு வாழ்க்கை நடத்திய நாட்களில் அவனுக்குள் செவ்வைப்பட்டிருந்த இயல்பூக்கம் அவனை எச்சரிக்கை கொள்ளச் செய்தது. தன்னை யாரோ கவனமாக, வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்ப்பதை அவன் காணவில்லை. ஏதோ ஒரு விலங்கு என்று நினைத்தான். ஆனாலும் தான் பின் தொடரப்படுவதை அலெக்ஸேய் புலன்கள் அனைத்தாலும் உணர்ந்தான்.

கிளை மடமடத்தது. அலெக்ஸேய் திரும்பிப் பார்த்தான். நீலச்சாம்பல் நிறப் பைன் மரத்தின் அடர்ந்த சுருட்டை முடிகள் காற்றுப் போக்குக்கு இசையச் சார்ந்திருந்தன. ஆனால், சில கிளைகள் பொது இயக்கத்துக்கு ஏற்ப இசையாமல் தமக்கே உரிய தனி வகையில் நடுங்கியதை அலெக்ஸேய் கண்ணுற்றான். கிளர்ச்சிப் பெருக்குள்ள தணிந்த கிசுகிசுப்பு, மனித கிசுகிசுப்பு அங்கிருந்து வருவது போன்று அவனுக்குத் தோன்றியது.

படிக்க:
மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !
மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?

அலெக்ஸேய் மார்புப் பையிலிருந்து துருப்பிடித்த ரிவால்வரை எடுத்தான். அதன் குதிரையைச் சுடுநிலைக்குக் கொண்டு வர இரண்டு கைகளாலும் அவன் சிரமப்பட வேண்டியிருந்தது. குதிரை கிளிக்கிட்டதும் பைன் மரக்கிளைகளிடையே யாரோ திடுக்கிட்டுப் பின்னே நகர்ந்தது போலப்பட்டது. சில மர முடிகள் யாரோ அவற்றில் இடித்துக் கொண்டது போல பின்னுக்குச் சாய்ந்தன. அப்புறம் சந்தடி எல்லாம் அடங்கிப் போயிற்று.

“என்ன அது? விலங்கா, மனிதனா?” என்று எண்ணமிட்டான் அலெக்ஸேய். புதர்களுக்குள் யாரோ கேள்விக் குறிப்புடன் “மனிதனா?” என்று கேட்பது போல அவனுக்குத் தோன்றியது. அப்படிப் தோன்றியதோ அல்லது மெய்யாகவே புதருக்குள் யாரேனும் ருஷ்ய மொழியில் பேசினார்களோ? ஆமாம், ருஷ்ய மொழியில். ருஷ்ய மொழி பேசப்பட்டதால் அவனுக்கு ஆனந்த வெறி திடீரென்று தலைக்கேறி விட்டது. அங்கே இருப்பவர்கள் நண்பர்களா பகைவர்களா என்று சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் வெற்றி முழக்கம் செய்து துள்ளி எழுந்து நின்றான், குரல் வந்த பக்கம் பாய்ந்தான், அக்கணமே ரிவால்வாரை வெண்பனியில் நழுவ விட்டுவிட்டு முனகலுடன் வெட்டுண்ட மரம் போல் விழுந்துவிட்டான்….

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

மோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்

0

டந்துகொண்டிருக்கும் மக்களவை தேர்தலை கண்காணித்துக் கொண்டிருக்கும் இந்திய தேர்தல் ஆணையம், பாஜக உறுப்பினர் போல மோடிக்கு சேவை ஆற்றும் பணியை கூடுதலாக செய்துகொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர்களின் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்து உடனடியாக ‘கடமை’ ஆற்றும் ஆணையம், இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் செய்யாத இழிவான பிரச்சாரத்தில் மோடி இறங்கியபோதும் அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக, மோடி பேசியதில் எந்த குற்றம் குறையும் இல்லை என ‘நற்சான்றிதழ்’ அளித்திருக்கிறது.

படிக்க :
♦ செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள்
♦ ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் !

கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவில் பேசிய மோடி, முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு காணிக்கையாக்கும்படி பேசினார். இது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக புகார் அளிக்கப்பட்டது.

அதுபோல, ஏப்ரல் 1-ம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, முசுலீம் வாக்குகள் அதிகமாக உள்ள கேரளத்தின் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார். முசுலீம்கள் ராகுலுக்கு வாக்களிப்பார்கள். இந்துக்கள் பாஜக -வுக்கு வாக்களிப்பார்கள் என பேசினார். ஒரு நாட்டின் பிரதமர் வாயிலிருந்து வந்த இத்தகைய பிரிவினைவாத பேச்சின் மீதும் புகார் தரப்பட்டது.

பிறகு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது ‘மிஷன் சக்தி’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்திருப்பதாக நேரலையில் தோன்றி அறிவித்தார்.

ஏப்ரல் 21-ம் தேதி ராஜஸ்தானில் பேசிய மோடி, ‘பாகிஸ்தானின் அணு ஆயுத தாக்குதல் பயமுறுத்தலை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்; இந்தியா வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் தீபாவளியில் வெடிக்க அல்ல’ என்றார்.

வாரணாசியில் புதிய இந்தியாவில் பயங்கர வாதத்துக்கு இடமில்லை என்றார். இப்படி பிரதமருக்குரிய எந்தவித மாண்போ கண்ணியமோ இல்லாத மோடியின் தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அனைத்து புகார்களையும் விசாரித்த மோடியின் தேர்தல் ஆணையம், ‘நற்சான்றிதழ்’ அளித்துள்ளது. தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் அனைத்து சுயேட்சையான அமைப்புகளையும் தனது அடிவருடி அமைப்புகளாக மாற்றிவிட்ட மோடி அரசு, தேர்தல் ஆணையத்தையும் விழுங்கி செறித்துவிட்டது. இதை பிரபல கார்ட்டூனிஸ்டுகள் தங்களுடைய கருத்து படங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன் தொகுப்பு இங்கே…

 


கட்டுரை : – கலைமதி
நன்றி: ஸ்க்ரால்

மே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் !

0
வங்கதேச பெண் ஆயத்த ஆடை தொழிலாளர்களின் மே தினப் போராட்டம். “சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு கொடு, பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்திடு” என்று முழக்கமிடும் பெண்கள்

தொழிற்சங்க தலைவர்கள் சடங்கிற்காக அனல் பறக்கும் உரை நிகழ்த்துவதற்கோ அல்லது உழைக்கும் வர்க்கத்தை சாந்தப்படுத்துவதற்காக ஆளும் வர்க்கங்கள் கூறும் வெறும் ஆறுதல் சொற்களுக்காகவோ மட்டுமல்ல மே நாள்.

“எட்டு மணி நேரம் வேலை” உரிமை என்பது ஏதோ ஆளும் வர்க்கங்களாலோ அரசினாலோ மனமிரங்கி கொடுக்கப்பட்டதல்ல. மாறாக உழைக்கும் வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது என்பதை நினைவுப்படுத்துவதற்கே மே நாள். உள்நாட்டிலும் உலகம் முழுவதிலும் உழைக்கும் வர்க்கத்தின் முன் நிற்கும் சவால்கள் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவும் இழந்து போன உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கும் ஒன்றிரண்டு உரிமைகளையும் காப்பாற்றிக்கொள்ளவும் தேவைப்படும் உத்தியை வகுக்கும் தருணமும் கூட இந்த மே நாள்தான்.

இந்தியாவில் இந்நாளுக்கான சிறப்பிற்கு பல காரணங்கள் உண்டு. தற்போது, இந்திய உழைக்கும் வர்க்கமும் இதர இந்தியாவும் புதிய ஒன்றிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் கட்டத்தில் இருக்கின்றனர். வெற்றி பெரும் கட்சியின்(களின்) கொள்கைகள் அவர்களின் கவனத்திற்குரியதாக இருக்கிறது. பெரிய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களது கோரிக்கைகளை கட்சிகளின் தேர்தலறிக்கையில் இடம் பெற வலியுறுத்தியுள்ளன.

உலக தொழிலாளர் கழகம் தொடங்கப்பட்டு இன்றோடு நூறு ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவதையும் இந்நாள் நினைவு கூறுகிறது.

உலக தொழிலாளர் கழகமும் அதன் உறுப்புகளான உலக தொழிலாளர் உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள், உலகளாவிய கோட்பாடுகள் மற்றும் விதிகளை மட்டும் வலியுறுத்தவில்லை. நாடுகள் அளவிலும் அவற்றை அமல்படுத்த உறுதியான அடிப்படைகளை அளிக்கிறது.

படிக்க:
தேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா | சே. வாஞ்சிநாதன்
♦ தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?

இந்தியாவிலும் வேலை நேரத்தை முறைப்படுத்தக் கோரியே தொழிலாளர் இயக்கங்கள் தோற்றம் கொண்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய முதலாளிகள் உலகம் முழுதிலும் உள்ள அவர்களது போட்டியாளர்கள் செய்தது போலவே எவ்வளவுக்கெவ்வளவு தொழிலாளர்களை அதிக நேரம் பிழிகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு தங்களது இலாபம் அதிகரிக்கும் என்று எண்ணினார்கள்.

மெட்ராஸ் தொழிலாளர் சங்கம் உட்பட நாட்டின் பல்வேறு தொழிலாளர் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் வேலைத்தன்மையை சற்றே மாற்ற கோரிக்கொண்டிருந்த நிலையில் அன்றைய ஆங்கிலேய காலனி அரசும் தனியார் நிறுவனங்களும் தொழிலாளர் உரிமைகளையும் சங்கமாய் திரளும் உரிமையையும் முற்றிலும் மறுத்தன.

தொடர்ந்து நடந்த பல்வேறு போராட்டங்களினாலும், அரசியல் சூழலாலும் சிற்சில தொழிற்சங்க உரிமைகளுடன் இந்திய தொழிற்சங்கச் சட்டம் – 1926 உருவாக்கப்பட்டது. ஆனால் இச்சட்டத்தின்படி தொழிற்சங்கங்களை தனியார் நிறுவனங்கள் கட்டாயம் அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் தொழிலாளர் சார்பாக தங்களுடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை செய்வதையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை.

நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் சங்கம் கட்டும் உரிமை மற்றும் கூட்டமாக சேரும் உரிமை போன்ற ஐநா உடன்படிக்கைகளில் இந்திய அரசு கையெழுத்திடவில்லை. இந்திய அரசு, சங்கம் கட்டும் உரிமையை அடிப்படை உரிமையாக 19(1)(c) சட்ட பிரிவின் கீழ் அங்கீகரித்திருக்கிறது. ஆயினும் இந்த உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவது என்பது வேலை நிறுத்தம் செய்யும் உரிமை உட்பட ஒட்டுமொத்த உரிமையையும் கொடுக்க வேண்டி வரும் என்ற காலனியாதிக்க கால சிந்தனையாகும்.

விடுதலைக்கு பிறகு ஊதிய உயர்வுக் கோரிக்கைகளையும் வேலை நிறுத்தங்களையும் குறைத்துக்கொள்ளுமாறு உழைக்கும் வர்க்கத்திடம் இந்திய அரசு அறிவுறுத்தியது. இதன் மூலம் மூலதனம் பெருகுமென்றும் அது தொழிற்துறை வளர்ச்சிக்கு தேவை என்றும் மேலும் நீண்ட கால நோக்கில் தொழிலாளர் வர்க்கத்திற்கு நன்மை பயக்கும் என்றும் கூறியது.

மேலும் தன்னுடைய தொழிலாளர் நிறுவனங்களின் மூலம் தொழிற்துறையில் நேரடியாக தலையிட்டு தொழிலாளர் இயக்கங்களை அரசு கட்டுப்படுத்தியது. ஆயினும் தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம், ஒப்பந்த முறையை ஒழித்தல், ஊக்கத்தொகை, பேறுகால சலுகைகளை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத்திட்டங்கள் மற்றும் நிரந்தர வேலை ஆகியவற்றைக் கோரி தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

உலகமயமாக்கமும் தொழிலாளர் போராட்டமும்

வேலைவாய்ப்பு குறைந்து போனதற்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்புகளின் போராட்டங்களையே காரணமாக நவ தாராளவாத பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். தொழிலாளர் வேலை பறிப்பு, உற்பத்தியை நிறுத்துதல், தொழிற்சாலைகளை மூடுதல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் தாக்குதல்களால் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்திருப்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

மறுபுறத்தில் தொழிற்துறையின் மூடிய மற்றும் அதிகாரத்துவ பொருளாதார கட்டமைப்பில் சிக்கலிருப்பதாக தொழிற்துறை பொருளாதார நிபுணர்கள் கண்டனர். அரசு நேரடி தலையீட்டின் கீழ் அனைவராலும் அனைவர்க்கும் வளர்ச்சி என்ற நேருவின் பொருளாதார கொள்கை முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இது அனைத்தும் சேர்ந்து மீண்டுமொரு பொருளாதார சீர்திருத்தத்திற்கு வித்திட்டது.

1990-களுக்குப் பிறகு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு பெருநிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு மூலதனம் ஆகியவை பெரும் வர்த்தக சீர்திருத்தம் செய்வதற்கு பெரும் அளவிலான தொழிலாளர் நலச்சட்டம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை வலியுறுத்தின. அதாவது அதுவரை தொழிலாளர் வர்க்கம் பாடுபட்டு போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் நீர்த்து போகச் செய்வதுதான் அவர்களது கோரிக்கை.

தொழிலாளர் நலச்சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் பெஸ்லே மற்றும் பர்கீஸ் (Besley and Burgess – BB) என்ற வெளிநாட்டு முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரை முதன்மையாக பங்காற்றியது எனலாம். தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்கள்தான் தொழிற்துறை வளர்ச்சி இன்மைக்கும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்காததிற்கும், ஏழ்மைக்கும் காரணம் என்று கூறினர்.

தவறான வழிமுறைகளால் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆளுமைகளின்பால் தாக்கம் செலுத்தியது. இதன் விளைவாக ஆள் எடுத்தல் – தூக்குதல், குறைந்த கூலி, தொழிலாளர் சட்டங்களின் வலுவைக் குறைத்தல், சமூக பாதுகாப்பை வலுவிழக்கச் செய்தல் மற்றும் தொழிற்சாலை கண்காணிப்புகள் குறைப்பு உள்ளிட்ட பாரிய அளவிலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவில் நவ தாராளவாத உலகமயமாக்கத்திற்குப் பிறகு சிறுபான்மை தொழிளார்களுக்காவது இருந்த நலச்சட்டங்கள் கூட கடுமையான பதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த BB ஆய்வறிக்கை அவர்களது ஆய்வடிப்படையிலான சீர்திருத்தங்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறியிருக்கிறது.

அதே நேரத்தில் பல்வேறு அரசியலமைப்பு வழிகாட்டுதலின் படி தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்ப்புகளை கொடுத்து வந்த நீதித்துறையும் உலகமயமாக்கத்தின் அலைக்கு தப்பவில்லை. சட்டங்களிலும் நீதித்துறையிலும் பல்வேறு சீர்திருந்தங்கள் கொண்டு வரப்பட்டன. இது செயில் (SAIL) தீர்ப்பிலும், தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த உரிமைக்கு எதிரான தீர்ப்பிலும், உமாதேவி எதிர் கர்நாடக அரசு என்ற தீர்ப்பிலும் வெளிப்பட்டுள்ளது.

சமத்துவமின்மையும் கடுமையான போராட்டமும்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் என இரு பிரிவினருக்கும் நிலைமைகள் ஒன்று போலவே இருந்தன. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியும் பொருளாதார சீர்திருத்தங்களும் இன்று அவர்களை அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் இருவரது வாழ்நிலைகளிலும் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இது தொழிலாளர் சந்தையில் ஏற்றத்தாழ்வை கடுமையாக அதிகரித்துவிட்டது. அரசு நிர்வாகத்தின் மீதான உழைக்கும் வர்க்கத்தின் கோபத்தையும் தூண்டி விட்டிருக்கிறது. புதிதாக உருவான படித்த நடுத்தர வர்க்கத்தின் தனிநபர் கனவுகள் மூலம் மென்மேலும் இது பரவலாகியிருக்கிறது.

படிக்க:
மனித குலத்தை எச்சரிக்கிறது மேதின வரலாறு ! பத்திரிக்கைச் செய்தி
♦ உலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் !

இந்த ஏற்றத்தாழ்வுகள் பிரிக்காலிலிருந்து மாருதி சுசூகி வரை இரத்தமயமான போராட்டங்களுக்கு வித்திட்டது மட்டுமல்லாமல் தொழிற்துறை வன்முறைக்கும் இட்டுச்சென்றது. அதே நேரத்தில் உலகமய உத்திக்கு பொருத்தமான நவீன இணைய வர்த்தக பொருளாதாரம் தற்பொருளாதாரவாத “தொழில்முனைவோர்” என்ற புதிய ஒரு வகுப்பினை உருவாக்கியது.

மறைந்துள்ள மூலதனத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பு நெருக்கடிக்குள் இவர்கள் மெதுவாக தள்ளப்படுகிறார்கள். அது அவர்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உடைந்து போக செய்கிறது.

இன்றைய சிக்கல் என்னவெனில் நிறுவனத்தின் தவறான முடிவோ அல்லது சீரமைப்போ கூட முதலில் தொழிலாளர்களின் வயிற்றில்தான் விழுகிறது. அதாவது தொழிலாளர்தான் அனைத்து சிக்கல்களையும் சுமக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேசிய ஊதியத்தில் தொழிலாளர்களது பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பது வர்க்க அடிப்படையிலான தர்க்கத்துக்கு வலு சேர்கிறது.

அமைப்புசார் தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 1992-93 களில் 12 விழுக்காட்டிலிருந்து 2016 -ல் 30 விழுக்காடாக அதிகரித்துவிட்டது. தொழிற்சாலையின் மதிப்பில் கூலியின் பங்கு என்பது கடந்த முப்பதாண்டுகளில் குறைந்து கொண்டே வருகிறது. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் உண்மையான கூலி உயராமலே இருக்கிறது. அது கிராமப்புறங்களில் எதிர்மறைக்கு சரிந்திருகிறது. இது பரவலாகி வரும் ஏற்றத்தாழ்வை காட்டுகிறது. பணியிடங்களில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குன்றி வருகிறது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது.

பழைய தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கவும் புதிதாக உரிமைகளைப் பெறவும் தொழிலாளர் உரிமைகளை நீர்த்து போக செய்யும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்த்தும் தொழிற்சங்க கூட்டமைப்புகளால் இதுவரை 17 முறை இந்திய அளவில் வேலை நிறுத்தங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் தொழிற்சங்க இயக்கங்களில் நண்பன் – எதிரி என்ற அரசியல் சங்கமத்தால் பிரிவினைகள் பல நடந்துள்ளதை ஆய்வுகள் சுட்டுகின்றன.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை மையப்படுத்துகின்றன. ஆனால் பிற அரசு சாரா நிறுவனங்கள் தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிபோகச் செய்வதாக தொழிசங்கங்கள் சந்தேகிக்கின்றன. அதே சமயத்தில் பெரும்பான்மையான அமைப்புசாரா தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் கண்டுகொள்ளவில்லை என்று தொழிற்சங்கங்களை குடிமை சமூக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

தொழிலாளர் உரிமைகள் காலியாகி கொண்டிருக்கும் இந்நேரத்தில் இந்த அமைப்புகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. எப்படி இருப்பினும் தொழிலாளர் அமைப்புகள்தான் தொழிலாளர்களுக்கானவை. தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்திட குறைந்தது தொழிலாளர் ஐக்கியப்பாடு இன்றியமையாதது என்பதை தொழிலாளர் அமைப்புகளுக்கு உணர்திடவே மே நாள்.

உலகின் பல்வேறு சக்திகள் உலகத் தொழிலாளர் கழகத்தினை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டினாலும் 100 ஆண்டுகளாக இது நிலைத்திருக்கிறது. இது தொடர்ந்து “நல்ல உலகமயமாக்கத்திற்கும், நிறுவனமயப்படுத்தப்பட்ட மக்களாட்சிக்காகவும் நாகரீகமான வேலைசூழலுக்காகவும்” பரிந்துரைத்து வருகிறது. மோசமான ஆனால் முற்றிலும் நம்பிக்கையற்று போகாத உலக சூழலில் அதை புத்தாக்கம் செய்வதற்கான நாளே மே நாள்.

ஐக்கியநாடுகள் சபையின் உலக தொழிலாளர் கழகம் பரிந்துரைக்கும் நல்ல உலக மயமாக்கமோ, நல்ல நிறுவனமயப்படுத்தப்பட்ட மக்களாட்சியுமோ வெறும் கானல்நீர் என்பதுதான் யதார்த்தம். தொழிலாளி வர்க்க விடுதலை என்பது முதலாளித்துவத்தை வீழ்த்தியெறியும் வர்க்கப் போராட்டத்தில்தான் சாத்தியம்.

 


கட்டுரையாளர்:
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர்

எம் அற நூல் ஆண்டவன் அருளியதல்ல ! மனிதன் எழுதியது !

ந்த நூல் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை உடையது. அக்காலத்தில் எழுந்த எந்தவொரு அறநூலை விடவும் முற்போக்கானதாக, ஆழம்கொண்டதாக அமைகிறது.

இன்றுள்ள எம் நவீன வாழ்வுக்கும் பொருந்திப்போகும் அறக்கருத்துக்களை தன்னகத்தே கொண்டது. உலகம் முழுவதுமுள்ள அறிஞர்களால் போற்றப்படுவது. எமது சூழலில் எல்லா நூல்களுக்கும் தலை நூலாக ஏற்புப் பெற்றது.

எம் அனைவர் வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு நூலாக அது கருதப்படுகிறது. அதன் பாடல்கள் திருமண மந்திரங்களாகப் பயன்படுகின்றன. அந்நூலின் வரிகளை அழகுற எழுதி சட்டகமிட்டு சுவர்களில் மாட்டுகிறார்கள்; கல்லில் பொறிக்கிறார்கள்; வாகனங்களில் ஒட்டுகிறார்கள்.

ஆனால், அந்நூலின் பாடல்களைப் பாடிக்கொண்டோ, அந்நூலை ஆதராம் காட்டியோ எவரும் பள்ளிவாசல்களை உடைப்பதில்லை; அந்நூலின் கருத்துக்களைச் சொல்லி இளைஞர்களை மூளைச்சலவை செய்து குண்டைக்கட்டிக்கொண்டு வெடித்துச் சாகவைக்க எவராலும் முடியவில்லை; அந்நூலின் பெண்ணடிமைக் கருத்துக்களை எடுத்துக்காட்டி பெண்களை அடக்கியொடுக்க எவராலும் முடிவதில்லை; அந்நூலின் அறத்தினைப் பரப்புவதாய்ச்சொல்லி நியாயம் தேடிக்கொண்டு எந்த இராணுவமும் நாடுகளைப்பிடித்து பேரரசை உருவாக்கவில்லை; அந்நூலில் வாக்களிக்கப்பட்ட நிலத்தை மீட்கவென கொலை வெறியாட்டத்தை எவரும் நிகழ்த்தவில்லை; அந்நூலின் பெயரால் சிறுவர்கள் முடிமழிக்கப்பட்டு இயற்கைக்கு மாறாக துறவுக்குக் கட்டாயப்படுத்தப்படவில்லை.

அதற்கு என்ன காரணம்?

அந்நூலின் காலப்பொருத்தம் பற்றி பட்டிமன்றங்கள் நிகழ்கின்றன. அந்நூலின் பெண்ணடிமைக் கருத்துக்களை பெண்ணியவாதிகள் எந்த அச்சமுமின்றி நார் நாராய் கிழிக்கிறார்கள். அந்நூலின் நல்லவற்றை ஏற்றுப் போற்றி அல்லவற்றை தயக்கமின்றி நீக்கி அனைவரும் கொண்டாடுகிறார்கள்.

அதன் குறைகளைச் சுட்டிக்காட்டத் தயங்கி, அதற்கு மாற்று விளக்கம் கொடுத்து சப்பைக்கட்டுக் கட்டவேண்டிய இழிநிலை பொதுவாக ஏற்படுவதில்லை.

வரலாற்று – மொழியியல் ஆய்வுகளை, திறனாய்வுகளை செய்வதற்கு, மக்கள் உணர்வுகளைத் தூண்டாத வெறும் ஆய்வுப்பொருளாக அறிஞர்களால் அதனைப் பயன்படுத்த முடிகிறது.

படிக்க :
♦ தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்
♦ திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் பாகம் – 2 | பொ. வேல்சாமி

எப்படி?

அந்நூல் மக்களைப் பண்படுத்த உதவுகிறது. அந்நூலை வன்முறையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்த முடியவில்லை.

அது சமூகத்தின் அறம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் அறங்களைப் போதித்தும் கூட அதன்பெயரால் ஒடுக்கும் அதிகாரபீடங்கள் உருவாக முடியவில்லை.

ஏன்?

ஏனெனில், அதனை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட கடவுள் ஓதிக்கொடுத்தார் எனும் பொய் அதனைச்சுற்றிக் கட்டமைக்கப்படவில்லை. விமர்சனங்களுக்கோ மாற்றங்களுக்கோ அப்பாற்பட்ட புனிதப் பிரதியாக அதனை எவரும் எவருக்கும் அறிமுகப்படுத்துவதில்லை.

மனிதரால் ஆக்கப்பட்டவை ஆபத்தற்றவை. ஏனெனில் அவை கேள்விகளுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்புக்கும் மறுப்புக்கும் இடம்கொடுப்பவை.

கடவுளின் பெயரால் ஆக்கப்பட்டவை ஆபத்தானவை. அவை அணுவாயுதங்களை விடவும் ஆபத்தானவை.

நன்றி : முகநூலில் – Muralitharan Mayuran Mauran