Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 351

பாசிஸ்டுக் கட்சியில் ஓர் உறுப்பினராக இருப்பதன் பொருள் என்ன?

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 21

டோக்ளியாட்டி

பாசிசத்தின் இராணுவ மற்றும் பிரசார அமைப்புகள்

துவரை, பாசிஸ்டுக் கட்சியின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றிக் கூறினோம். பாசிஸ்டுக் கட்சியின் ஸ்தாபன அமைப்பையும் அதன் அரசியல் நடவடிக்கைகளது தன்மையையும் எடுத்துரைத்தோம். புதிய சட்டதிட்டங்களை வகுத்துக் கொண்ட பிறகு, அது எவ்வாறு தன்னை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் விவரித்தோம்.

எல்லா வகையான உட்கட்சி ஜனநாயகமும் இல்லாதிருப்பதும், கட்சிக்குள் விவாதங்கள் மிக அரிதாகவே நடைபெறுவதும், உண்மையான அரசியல் வாழ்க்கை காணப்படாததும் பாசிஸ்டுக் கட்சியின் ஒரு முக்கியமான அம்சமாக எவ்வாறு இருந்து வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டினோம். அக்கட்சியின் இயல்பு எவ்வாறு ஒரு சிவிலியன் படைக்குரியதாக இருக்கிறது என்பதையும் பார்த்தோம்; கட்சிப் பதவிகளுக்கு எவ்வாறு தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை என்பதையும், குறிப்பாக சர்வாதிகார இயல்பை ஒத்த ஓர் அதிகாரவர்க்க இயல்பை அது எவ்விதம் பெற்றிருக்கிறது என்பதையும், எல்லா ஜனநாயக அமைப்புகளையும் ஒழித்துக் கட்டி, எவ்விதம் தன்னை ஒரு பகிரங்க சர்வாதிகார அமைப்பாக வெளிப்படுத்திக் கொண்டது என்பதையும் கண்டோம். பாசிஸ்டுக்கட்சியின் இந்த இயல்பு சர்வாதிகாரத்தின் இயல்பை அதாவது ஜனநாயகத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் இயல்பை ஒத்திருக்கிறது.

எனவேதான் ஒரு புது வகையான கட்சியை உருவாக்கி இருப்பதாக லெனினைப் பகடி செய்து முசோலினி கூறியதில் ஓரளவு உண்மை இருக்கிறது. இந்தப் புதிய அம்சம் – ஜனநாயகத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் ஒழித்துக் கட்டுதல், சர்வாதிகார வடிவங்களை கட்சி வரித்துக் கொள்ளுதல் என்னும் அம்சம் – உண்மையிலேயே கட்சிக்கு சில புதிய இயல்புகளை வழங்குகிறது என்பதில் ஐயமில்லை .

எனினும் இந்தக் கட்சியின் ஸ்தாபன வடிவங்கள் நிலையானவை அல்ல என்பதையும், கட்சியின் வளர்ச்சிப் போக்கில் அவை உருவானவை என்பதையும், முசோலினியால் முன்னுணரப்பட்டவை அல்ல என்பதையும் நாம் எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும்.

கட்சி அமைக்கப்பட்ட விதமும் தேசத்தின் வாழ்க்கையில் அது வகிக்கும் செல்வாக்கும் ஓர் உடனடியான விளைவை ஏற்படுத்தி இருக்கிறது : அதாவது ஒரு ஜனநாயக ஆட்சியில் பல்வேறு கட்சிகளிடையே நடைபெறும் போராட்டமும் தவிர்க்கமுடியாத முரண்பாடுகளும் பாசிஸ்டுக்கட்சிக்குள்ளேயே கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

இப்போது, பல்வேறு பாசிஸ்டு அமைப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

இன்று உருவாக்கப்பட்டுள்ள வடிவத்தில் பாசிஸ்டுக் கட்சி தேசத்தின் முழு வாழ்க்கையின் மீதும், மக்களில் அனைத்துப் பகுதியினர்மீதும் கட்டுப்பாடு செலுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது. இதற்குக் காரணம் உண்டு; பாசிஸ்டுக்கட்சி அளவுக்கு மீறி அதிகார வர்க்கமயமாக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு சீரான அமைப்பு என்பது வெளித் தோற்றத்திற்குத்தான். உண்மையில் அப்படியல்ல. அனைத்து மக்களையும் அனுசரித்துப் போகும் கோட்பாடு அதனிடமில்லை.

இன்று இத்தாலியில் பாசிஸ்டுக் கட்சியில் ஓர் உறுப்பினராக இருப்பதன் பொருள் என்ன? சில உறுப்பினர்கள் அரசியல் ரீதியில் செயலூக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர், கட்சிப் பொறுப்புகளில் இருந்து வருகின்றனர், அரசியல் செயற்பாடுகளில் பங்கு கொள்கின்றனர். ஆனால் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் மிகப் பெரும்பாலோர் அரசியல் ரீதியில் செயலற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். அப்படியிருந்தும் அவர்கள் இன்னமும் கட்சியில் இணைந்திருக்கின்றனர். ஏன்? ஏனென்றால் பல்வேறு நிர்ப்பந்த நிலைகள் காரணமாக அவர்கள் கட்சியில் சேர வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

வாழ்வதற்காக வேலை செய்ய வேண்டியிருப்பவர்களும் வேலை செய்து வாழ வேண்டியிருப்பவர்களுமான ஏராளமான குட்டி பூர்ஷுவா வர்க்கத்தினரும் மத்திய பூர்ஷுவா வர்க்கத்தினரும் கட்சியில் சேர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இந்த நிர்ப்பந்த நிலைகள் இருவகைப்பட்டவை; ஒன்று நேரடியானவை, மற்றொன்று மறைமுகமானவை. மறைமுகமான நிர்ப்பந்த நிலைகளை எடுத்துக் கொண்டால், உதாரணமாக, பாசிஸ்டுக் கட்சியில் உறுப்பினராக இருப்பது எந்த அரசு உத்தியோகத்தையும் வகிப்பதற்கு ஒரு முக்கிய தேவையாகும்; பாசிஸ்டுக் கட்சியில் உறுப்பினராக இருப்பது அரசு உத்தியோகங்களுக்கான தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு இன்றியமையாதது. இன்று இத்தாலியில் நீங்கள் ஒரு கட்சி உறுப்பினராக இல்லை என்றால் ஓர் எழுத்தராகவோ, ஆசிரியராகவோ, பல்கலைக் கழகப் பேராசிரியராகவோ ஆக முடியாது. இந்தவிதமான நிர்ப்பந்தம் எல்லாத் துறைகளுக்கும் பரவி வழக்குரைஞர்களாகவோ, பத்திரிகையாளர்களாகவோ இருக்க வேண்டுமென்றால் கட்சி உறுப்பினர்களாக இருப்பது அவசியத் தேவையாகிவிட்டது. கடந்த காலத்தில் மிகப் பெருமளவுக்கு சுதந்திரம் அனுபவித்து வந்த மருத்துவர்களும் இன்று இத்தகைய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். பாசிஸ்டுக் கட்சியில் சேராமல் நீங்கள் இன்று பொது நலவாழ்வு மருத்துவராக இருக்க முடியாது.

இவ்வாறுதான், வாழ்வதற்காக வேலை செய்ய வேண்டியிருப்பவர்களும் வேலை செய்து வாழ வேண்டியிருப்பவர்களுமான ஏராளமான குட்டி பூர்ஷுவா வர்க்கத்தினரும் மத்திய பூர்ஷுவா வர்க்கத்தினரும் கட்சியில் சேர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

மற்றொரு நிர்ப்பந்த வடிவம் ஆலைகளில் தொழிலாளர்கள் மீது பிரயோகிக்கப்படும் பகிரங்க நிர்ப்பந்த நிலையாகும். தொடர்ந்து வேலையில் இருக்க வேண்டுமென்றால் கட்சி உறுப்பினராக இருப்பது அவசியம் என்பது இன்னும் வலியுறுத்தப்படவில்லை என்பது உண்மையே. ஆனால் இந்த நிர்ப்பந்தம் வேறொரு முறையில் பயன்படுத்தப்படுகிறது; உதாரணமாக வேலையில்லாத இரண்டு தொழிலாளர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்; அவர்களில் ஒருவர் கட்சி உறுப்பினர், மற்றவர் கட்சி உறுப்பினரல்லாதவர்; அப்போது இவ்விருவரில் பாசிஸ்டுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆக, இவ்வாறு தொழிலாளர்களிடையே கூட முந்திய பழைய உறவுகளில் ஓரளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். உழைக்கும் சக்தி இன்னும் விற்கப்படுகிறது என்பதும், முதலாளிகளால் வாங்கப்படுகிறது என்பதும் உண்மையே. ஆனால் இன்று இந்தப் பாரம்பரியமான உறவுகளில்கூட அரசியல் அமைப்புகள் ஊடுருவி வருவதை இன்று பார்க்கிறோம்.

இந்த நிர்ப்பந்த நிலையை மனத்திற் கொண்டு, பாசிஸ்டுக் கட்சி உறுப்பினர்களைப் பார்த்தீர்களானால், அவர்கள் அரசியல் ரீதியில் செயலற்று இருப்பதையும், அரசியலில் பங்கு கொள்ளாதிருப்பதையும் மட்டுமன்றி, அவர்கள் நுட்பமான முறையில் பாசிசத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதையும் காண்பீர்கள். இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஒரு பிராந்தியத் தலைவர் தமது அறிக்கை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். கூட்டுறவு முறையில் அமைந்த ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்தின் ஊழியர் ஒருவரை ஒரு நாள் அவர் சந்திக்க நேர்ந்தது. இது ஒரு பெரிய தொழில் துறை நகரில் நடை பெற்றது. அவர் புலம்பிக் கொண்டிருந்தார். என்ன விஷயம்? என்று நம்முடைய தோழர் கேட்டார். பாசிஸ்டுக் கட்சியில் சேருவதற்கு நாற்பது லயர் தரவேண்டியிருப்பது குறித்து தான் மனக்கசப்பு அடைந்திருப்பதாக அவர் பதிலளித்தார். அதில் நீங்கள் ஏன் சேர வேண்டும்? இல்லையென்றால் ஆட்குறைப்பின்போது எனக்குத்தான் முதலில் சீட்டுக் கிழியும் என்று அவரிடமிருந்து பதில் வந்தது. அப்படியானால் உண்மையில் நீங்கள் ஒரு பாசிஸ்டு இல்லையா? பாசிஸ்டா? பாசிஸ்டுகள் நரகத்துக்குப் போகட்டும்!

படிக்க:
கியூபாவில் ஒருவர் பணக்காரனாக உருவாகவே முடியாதா ?
கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல் !

இந்த நபரை எடுத்துக் கொள்ளுங்கள். இவர் எவ்வாறு ஒரு செயலூக்க மிக்க உறுப்பினராக இருக்க முடியும்? பாசிஸ்டுக் கட்சியுடன் இவருக்குள்ள உறவுகள் முற்றிலும் பொருளாதாரப்பந்தங்களால் பிணைக்கப்பட்டவை, அவர் தமது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியிருப்பதால்தான் பாசிஸ்டாக இருக்கிறார். அரசியல் பிணைப்புகள் மிக நுட்பமானவை.

இதனை நீங்கள் பொதுமைப்படுத்திப் பார்த்தால், எல்லா இடங்களிலும் இதே போன்ற காட்சியைத்தான் காண்பீர்கள். ஒட்டுமொத்தக் காட்சியைப் பார்ப்பீர்களேயானால் வெகுஜனங்களை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர வேண்டுமானால் பாசிசம் எவ்வாறு இதர பல அமைப்புகளையும் நிறுவ வேண்டியுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இது ஏன்? ஏனென்றால் இத்தகைய அமைப்புகளை உருவாக்கவில்லை என்றால், இந்தப் பகுதியினர் தூர விலகிச் செல்வர் அல்லது பாசிஸ்டுக்கட்சியைத் தீவிரப்படுத்துவர். கட்சியை இவ்விதம் தீவிரப்படுத்துவது அதன் இயல்பு காரணமாக பாசிசத்துக்கே அபாயத்தை உண்டு பண்ணக்கூடும்.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

கேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி !

கேள்வி: இந்தோனேசியாவுல 1965-66-ல ஐந்து லட்சம் கம்யூனிஸ்டுகளை டேபிள் காலுக்கடியில் போட்டு மேல உக்காந்து நசுக்கி கொன்றது இசுலாமிய வெறியர்களே! ஆனாலும் பாருங்க மக்களே கம்யூனிஸ்டுங்க இசுலாமியர்களைத்தான் தூக்கி பிடிப்பாங்க! ஆகா!என்னே அவர்களின் மன்னிக்கும் குணம்!

சுரேஷ்

ன்புள்ள சுரேஷ்,

இந்தோனேசியாவில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டது குறித்து உங்களுக்கு வருத்தமில்லை. கொன்றவர்களும், கொல்லப்பட்டவர்களும் உங்களுடைய கொள்கைக்கு எதிர்ப்பானவர்கள் என்பதால் இப்படிக் கேட்பீர்கள் போலும்! வரலாறோ இந்தப் படுகொலையில் முசுலீம் மதவெறியர்கள் மட்டும் இருப்பதாகக் கூறவில்லை. உங்களைப் போன்றவர்களுக்கு மெக்காவாக இருக்கும் அமெரிக்க சொர்க்கம்தான், இந்தப்படுகொலையின் பின்னே ஒளிந்திருக்கிறது. இங்கு மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்டுகளை கொலை செய்ததில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானது. அவற்றில் முசுலீம் நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகளும் அடக்கம். முசுலீம் நாடுகளில் ஜனநாயகம் மற்றும் கம்யூனிசத்தை ஒழிப்பதற்கு முசுலீம் மதவாதிகளுடன் கூட்டு சேர்ந்து அல்லது அவர்களை உருவாக்கி வேலை செய்தது அமெரிக்கா. இன்றளவும் சவுதி உள்ளிட்ட நாடுகளில் மதவெறியர்களாக இருக்கும் அரச பரம்பரையை காத்து நிற்பது அமெரிக்காதான்.

இது குறித்து வினவு தளத்தில் வெளிவந்த சில கட்டுரைகளை படியுங்கள்:

அடுத்து இந்தோனேசியாவில் நடந்த கம்யூனிஸ்டுகள் மீதான படுகொலை குறித்து தோழர் கலையரசன் எழுதிய வரலாற்றுக் கட்டுரையை இங்கே இணைக்கிறோம். அதன் மூலம் அந்த வரலாற்றை உள்ளது உள்ளபடி நீங்கள் மட்டுமல்ல, வாசகர்களும் அறியலாம்.

 ♦ ♦ ♦

கம்யூனிஸ்டுகளை கொலை செய்வது ஒரு சுகமான அனுபவம்! அவர்களை  (இனப்) படுகொலை செய்ததற்காக பெருமைப் படுகிறேன். போர்க்குற்றம் என்றால் என்னவென்று வென்றவர்களே தீர்மானிக்கின்றனர். கம்யூனிசத்திற்கு எதிரான போரில் நாங்கள் வென்று விட்டோம்.”
– 1965 ம் ஆண்டு, இந்தோனேசிய இனப்படுகொலையில் ஈடுபட்ட ஒரு கொலைகாரனின் சாட்சியம்.

உலகம் முழுவதும் நடக்கும் இனப்படுகொலைகளை பற்றிய தகவல்களை சேகரிக்கவும், மக்களுக்கு நினைவு படுத்தவும் தயங்காத மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும், இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலை பற்றி வாயைத் திறப்பதில்லை. எங்காவது ஒரு நாட்டில், இனப்படுகொலை நடந்த பிறகாவது, ஐ.நா. மன்றத்தை கூட்டி விசாரணை நாடகமாடும் சர்வதேச சமூகம், இந்தோனேசிய இனப்படுகொலை நடந்து ஐம்பது வருடங்கள் கடந்த பின்னரும், ஒரு கண்டனத் தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை. ஏனிந்த இருட்டடிப்பு? ஏனிந்த பாரபட்சம்? ஏனிந்த புறக்கணிப்பு? காரணம்: இந்தோனேசிய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்கள், கம்யூனிஸ்டுகள். எந்த நாட்டிலாவது, கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டால், சர்வதேச நீதிமன்றமோ அல்லது ஐ.நா. மன்றமோ தலையிட்டு விசாரிக்க மாட்டாது. இந்தோனேசியா மட்டுமல்ல, சிலி, குவாத்தமாலா போன்ற நாடுகளில் நடந்த “கம்யூனிஸ எதிர்ப்பு இனப்படுகொலைகள்”, இன்று வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் பட்டு விட்டன.

இனப்படுகொலை செய்தவர்கள், எவ்வாறு இந்தளவு தைரியமாக, சுதந்திரமாக நடமாட முடிகின்றது? “இனப்படுகொலையில் ஈடுபட்டதற்காக பெருமைப் படுகின்றோம்.” என்று, எவ்வாறு பகிரங்கமாக கூற முடிகின்றது? எல்லாம் அமெரிக்கா கொடுக்கும் தைரியம் தான். ஒரு நாட்டில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்ற விடாமல் தடுக்க வேண்டுமானால், எத்தனை இலட்சம் போரையும் இனப்படுகொலை செய்யலாம். அது தவறென்று சர்வதேச சமூகம் கூறாது. அது பாவம் என்று மத நம்பிக்கையாளர்கள் கூற மாட்டார்கள். எந்த ஊடகமும் அதைப் பற்றி ஆராய மாட்டாது. எந்தக் கல்லூரியும் அதைப் பற்றி மாணவர்களுக்கு போதிக்க மாட்டாது.

இந்தோனேசியாவில் இனப்படுகொலை செய்த ஒரு கொலைகாரன் சொன்னதைப் போல,போர்க்குற்றம் என்றால் என்னவென்று, வென்றவர்களே தீர்மானிக்கிறார்கள்.”  கடந்த மூவாயிரம் வருட உலக வரலாறு முழுவதும், அவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய உலகம் மாறி விட்டதாகவும், நியாயத் தீர்ப்பு வழங்குவதற்கென இயங்கும், ஐ.நா. போன்ற சர்வதேச ஸ்தாபனங்கள் கடமையைச் செய்து வருவதாகவும், எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும், அதற்கு டச்சுக்காரர்கள் உரிமை கோரியதால், அங்கே ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. இடையில் சில வருடங்கள், ஆக்கிரமித்த ஜப்பானியர்களுடன், இந்தோனேசிய தேசியவாதிகள் ஒத்துழைத்தனர். இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் மட்டுமே, டச்சுக்காரரையும், ஜப்பானியரையும் எதிர்த்து போராடினார்கள்.  இறுதியில்,  தேசியவாதிகளிடம் சுதந்திரத்தை கையளிக்குமாறு அமெரிக்கா வற்புறுத்தியதால், டச்சு காலனிய படைகள் வெளியேறின.

இராணுவ அதிகாரிகளுடன் சுகார்னோ.

அன்று இந்தோனேசியாவை ஆண்ட சுகார்னோவும், அவரது ஆதரவாளர்களும் கம்யூனிஸ்டுகளோ, சோஷலிஸ்டுகளோ அல்லர். அவர்கள் தேசியவாதிகள். உண்மையில் இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகியது. உண்மையான, நேர்மையான தேசியவாதிகள், சிலநேரம் மேற்குலக நலன்களுக்கு எதிரானவர்களாக மாறலாம். சுகார்னோ, காலனிய முதலாளிகளின் நிறுவனங்களை தேசியமயமாக்கினார். அமெரிக்காவையோ, ரஷ்யாவையோ ஆதரிக்காத, அணிசேரா  நாடுகளின் கூட்டமைப்பை ஸ்தாபித்ததில் சுகார்னாவுக்கு பெரும் பங்குண்டு. மேலும், சீனாவுடனும் நெருங்கிய தொடர்பை பேணி வந்தார். “இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனாதிபதி சுகார்னோவை பொம்மை போல ஆட்டி வைத்ததாக,” சில சரித்திர ஆசிரியர்களும் எழுதியுள்ளனர். ஆனால், அது எந்தளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குறி. இனப்படுகொலைக்கு நியாயம் கற்பிப்பதற்காக, அவ்வாறு வரலாற்றை திரித்திருக்கலாம்.

1913 ம் ஆண்டு, ஹென்க் ஸ்னேவ்லீட் (Henk Sneevliet) என்ற டச்சு கம்யூனிஸ்ட், “இந்தோனேசிய சமூக ஜனநாயக கூட்டமைப்பு” என்ற, கம்யூனிஸ்டுகளுக்கு முன்னோடியான சோஷலிசக் கட்சியை உருவாக்கினார். இவர் நெதர்லாந்து நாட்டின் தேசிய நாயகன். அதற்கான காரணம் வேறு. கம்யூனிசத்தின் பெயரால், இந்தோனேசிய மக்களையும் ஒன்று திரட்டி வந்ததை விரும்பாத டச்சு காலனிய அரசு, அவரை வெளியேற்றியது.  ஹென்க் தாயகம் திரும்பி வந்த காலத்தில், நெதர்லாந்து ஜெர்மன் நாஜிப் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. நாஜிகளின் யூத மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியதால், ஜெர்மன் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி.

1924 ம் ஆண்டு,   “இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி” (Partai Komunis Indonesia) உருவாகியது. (சுருக்கமாக PKI). 1926 ம் ஆண்டு, டச்சு காலனிய அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சி ஒன்று இடம்பெற்றது. அது தோல்வியடைந்ததும், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டது. 13000 கம்யூனிஸ்டுகள் கைது செய்யப் பட்டனர். டச்சு காலனிய அரசு, ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளை நியூ கினியா தீவுக்கு நாடு கடத்தியது. (இந்தியாவை ஆண்ட  ஆங்கிலேயருக்கு அந்தமான் தீவுகள் போன்று, இந்தோனேசியாவை ஆண்ட டச்சுக் காரருக்கு நியூ கினியா). இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் உருவான, சுகார்னோவின் தேசிய அரசுக்கு எதிராகவும், கம்யூனிஸ்டுகள் மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள்.

அந்தக் காலத்தில், இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த மூசோ, ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்தவர். இரண்டாம் உலகப்போரில், ஜப்பானிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக போரிட்ட கம்யூனிச கெரில்லாப் படைகளுக்கு சோவியத் யூனியன் உதவி வந்தது. ஆனால், இந்தோனேசியா குடியரசானதும், தேசியவாதிகளுடன் இணைந்து ஒரு தேசிய அரசமைக்குமாறு சோவியத் யூனியன் அறிவுறுத்தியது. ஆனால், மூசொவின் தலைமை அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. 1948 ம் ஆண்டு, டச்சு காலனியாதிக்க படைகளின் வெளியேற்றத்தை பயன்படுத்திக் கொண்ட கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள், கிழக்கு ஜாவா பகுதியில் ஒரு விவசாயிகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கினார்கள்.

கிழக்கு ஜாவா விவசாயிகளின் புரட்சி வெற்றி பெற்றதால், அங்கு ஒரு “இந்தோனேசிய சோவியத் குடியரசு” உருவானது. அன்றைய சுகார்னோ அரசு பிரச்சாரம் செய்ததற்கு மாறாக, சோவியத் ஒன்றியம் அந்த கம்யூனிஸ்ட் எழுச்சியை அங்கீகரிக்கவில்லை. ஜாவா விவசாயிகளின் புரட்சிக்கு, வெளியுலக ஆதரவு கிடைக்காத நிலையில், சுகார்னோவின் படைகளால் கடுமையாக அடக்கப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மூசொவும், அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டார். ஆகவே, “சுகார்னோ கம்யூனிஸ்ட் கட்சியின் பொம்மை போல ஆட்சி நடத்தியதாக” கூறுவது, பின்னாளில் நடந்த இனப்படுகொலைக்கு ஒரு காரணத்தை கண்டு பிடிப்பதற்காக என்பது இங்கே தெளிவாகும்.

1955 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி பதினாறு சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டில் நான்காவது பெரிய கட்சியாக உருவானது, சிலர் கண்களை உறுத்தி இருக்கலாம். 1965 ம் ஆண்டு, கட்சி அழிக்கப்பட்ட காலம் வரையில், மூன்று மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அன்றிருந்த சோஷலிச நாடுகளுக்கு வெளியே இருந்த எந்த நாட்டிலும், இவ்வளவு பெருந்தொகையிலான உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இருந்ததில்லை. மேலும், கட்சியோடு சேர்ந்தியங்கிய விவசாயிகள் முன்னணியில் எட்டு மில்லியன் உறுப்பினர்கள் இருந்தனர். இந்த விபரங்கள் யாவும், சிலருக்கு எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்திருக்கலாம். அன்று அடுத்தடுத்து பல ஆசிய நாடுகளில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்ததால், இந்தோனேசியாவிலும் ஒரு கம்யூனிசப் புரட்சி உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று பலர் நம்பினார்கள்.

இந்தோனேசியாவில் மிக முக்கியமாக, நான்கு அரசியல் சக்திகள், கம்யூனிஸ்ட் கட்சியை கருவறுக்க கங்கணம் கட்டின. அவையாவன:

  1. இராணுவத்திற்குள் ஒரு பிரிவினர். வலதுசாரி முதலாளித்துவ நலன் சார்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு, சுகார்ட்டோ தலைமை தாங்கினார்.
  2. நிலவுடமையாளர்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக, நிலமற்ற விவசாயிகள்பெருமளவு நிலங்களை ஆக்கிரமித்து வந்தனர். அதனால் நாடு முழுவதும் இருந்த நிலவுடமையாளர்கள், தமது எதிர்காலம் சூனியமாகி விடும் என்று அஞ்சினார்கள்.
  3. கடும்போக்கு இஸ்லாமிய மதவாதிகள். இந்தோனேசியா, உலகிலேயே அதிகளவு முஸ்லிம் சனத்தொகையை கொண்ட நாடு. இஸ்லாமிய மதவாதிகள், “நாஸ்திக கம்யூனிஸ்டுகளை” வெறுத்தார்கள்.பிற்காலத்தில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களாக கருதப்பட்ட மத அடிப்படைவாத அமைப்புகள், அன்றைய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இனப்படுகொலையின் ஊடாக வளர்ந்தவை.
  4. அமெரிக்கா. அமெரிக்க தூதரகமும், சி.ஐ.ஏ. யும் மிகத் தீவிரமாக இந்தோனேசிய அரசியல் விவகாரங்களில் தலையிட்டு வந்தன. அவர்கள் மேலே குறிப்பிட்ட மூன்று பிரிவினருடனும், மிகவும்நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தனர். சுகார்ட்டோ என்ற கொடுங்கோல்சர்வாதிகாரியையும், இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதிகளையும், அமெரிக்கர்களே உருவாக்கினார்கள்.

30 செப்டம்பர் 1965, ஜகார்த்தா நகரில் இராணுவ தளபதிகளின் வீடுகளின் முன்னால் ஒரு டிரக் வண்டி வந்து நின்றது. மிகவும் முக்கியமான ஏழு படைத்தளபதிகளை பிடித்துச் செல்வதே, டிரக் வண்டிகளில் வந்தவர்களின் நோக்கம். கைது செய்ய வந்தவர்களுடன் எதிர்த்துப் போராடியதால், மூன்று பேர் ஸ்தலத்திலே கொல்லப்பட்டனர். மூன்று பேர் அழைத்துச் செல்லப் பட்டு, அடுத்த நாள் கொல்லப் பட்டனர். ஒருவர் பிடிபடாமல் தப்பி ஓடி விட்டார். அடுத்தநாள், 1 ஒக்டோபர் 1965, ஆறு இராணுவ தளபதிகள் கொலை செய்யப் பட்ட செய்தி நாடு முழுவதும் பரவியது.  “30 செப்டம்பர் குழு” என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள், ஒரு சதிப்புரட்சி நடந்துள்ளதாக வானொலியில் அறிவித்தனர். ஆனால், யார் இந்த சதிப்புரட்சியாளர்கள்? உலகில் இன்று வரை துலக்கப் படாத மர்மங்களில் அதுவும் ஒன்று. அந்த சதிப்புரட்சி, CIA தயாரிப்பில் உருவான நாடகம் என்று சிலர் சந்தேகப் படுகின்றனர். அது உண்மையா? இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலையில், அமெரிக்காவுக்கும் பங்கு உண்டா?

இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானால் ஆக்கிரமிக்கப் பட்டது. ஆனால், சுகார்னோ தலைமையிலான இந்தோனேசிய தேசியவாதிகள், ஜப்பானுடன் ஒத்துழைத்தார்கள். ஜப்பானிய ஏகாதிபத்திய படைகளின் பாதுகாப்பு நிழலின் கீழே ஒரு தனி நாட்டை அமைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்தில், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தேசியவாதியான நேதாஜியும், அதே மாதிரியான திட்டத்தை மனதில் வைத்திருந்தார். அதாவது, இந்தியாவை ஜப்பானிய படைகள் கைப்பற்றிய பின்னர், அங்கே நேதாஜி தலைமையில் “இந்தியர்களின் நாடு” உருவாகி இருக்கும்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், பழைய ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், ஆசியாவில் தாம் இழந்த காலனிகளுக்கு உரிமை கோரினார்கள். நெதர்லாந்து, இந்தோனேசியாவை மீண்டும் தனது அதிகாரத்தின் கீழே கொண்டு வர விரும்பியது. ஆனால், போருக்கு பின்னர் புதிய உலக வல்லரசாகி இருந்த அமெரிக்கா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்தது. அமெரிக்க அழுத்தம் காரணமாகத் தான், பிரிட்டனும் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது. ஆசியக் கண்டத்தின், இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும், இந்தோனேசியாவும், சில ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இந்தியாவில் நேரு எந்த வகையான கொள்கைகளை கொண்டிருந்தாரோ, அதே மாதிரியான கொள்கைகளை, இந்தோனேசியாவில் சுகார்னோ கொண்டிருந்தார்.

நேருவும், சுகார்னோவும் சேர்ந்து, காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க விரும்பினார்கள். அதற்காக, இந்தோனேசியாவில் பாண்டுங் என்ற இடத்தில் ஒரு மகாநாடு நடந்தது. இலங்கையில் இருந்து பண்டாரநாயக்கவும் கலந்து கொண்டார். உண்மையில், அமெரிக்கா இந்தக் கூட்டமைப்பை விரும்பவில்லை என்று தெரிகின்றது. அதனால் தான், CIA பண்டாரநாயக்கவை கொலை செய்தது என்றும் ஒரு கதை உலாவுகின்றது. நேருவை விமான விபத்தொன்றில் கொல்வதற்கு CIA சதி செய்ததாகவும் ஒரு தகவல். (De CIA Moorden in de Derde Wereld, Kunhanandan Nair & Michael Opperskalski ) இதன் தொடர்ச்சியாக, சுகார்னோவை அகற்றிய 1965 சதிப்புரட்சி அமைந்தது. அந்த சதிப்புரட்சியில், CIA யின் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதை, பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

பாண்டுங் மகாநாட்டுக்கு போட்டியாக, இன்னொரு கூட்டமைப்பு உருவானது. யூகோஸ்லேவியாவில் டிட்டோ, எகிப்தில் நாசர் ஆகியோரின் முயற்சியில் “அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாடு” நடந்தது. சுகார்னோ தனது பாண்டுங் மகாநாட்டு திட்டங்களை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியாமல் இருந்தது மட்டுமல்ல, அவரும் அணிசேரா மகாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. இந்தப் போட்டியின் காரணமாக, இறுதி வரைக்கும் சுகார்னோவுக்கு உறுதுணையாக இருந்தது சீனா மட்டுமே. அதனால், இந்தோனேசியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்தது.

ஸ்டாலினின் மரணத்தின் பின்னர், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு தோன்றியது. சில கட்சிகள் குருஷேவின் சோவியத் யூனியனையும், சில கட்சிகள் மாவோவின் சீனாவையும் ஆதரித்தன. இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி (PKI)  சீன சார்பு நிலைப்பாடு எடுத்து. இதனால், சுகார்னோ, சீனா, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (PKI) இடையில் ஒரு முக்கோண உறவு உருவானது. இந்தோனேசிய அரசில், PKI யின் செல்வாக்கு அதிகரித்தது. அது “கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு புரட்சியை வெல்லலாம்…” என்ற மாயையை தோற்றுவித்திருக்கலாம். அன்றிருந்த PKI தலைவர் அய்டீத், அது போன்ற ஒரு திரிபுவாத பாதையை தேர்ந்தெடுத்ததாக, புலம்பெயர்ந்து வாழும் PKI உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அது உண்மையாயின், “கத்தியின்றி, இரத்தமின்றி” புரட்சி நடத்தும் கோட்பாடு, இறுதியில் கட்சியின் அழிவுக்கே வழிவகுத்தது.

இதற்கிடையே, இந்தோனேசியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு சர்வதேச அரசியல் நிலைமை பற்றியும் குறிப்பிட வேண்டும். இந்தோனேசிய மொழி பேசும் மக்களும், மலே மொழி பேசும் மக்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். இரண்டு மொழிகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழும், மலையாளமும் மாதிரி என்ற அளவுக்கு கூட வித்தியாசம் கிடையாது. ஈழத் தமிழும், இந்தியத் தமிழும் மாதிரி நெருக்கமானவை.  ஆனால், இரண்டு வேறு மொழிகளாக வளர்க்கப் பட்டன.  இந்தோனேசியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான மிகப்பெரிய பிரிவினை, காலனியாதிக்க காலத்தில் ஏற்பட்டது. அதாவது ஆங்கிலேயர்கள் காலனிப் படுத்திய பகுதி தான், இன்றைய மலேசியா. இந்தோனேசியா நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரமடைந்த பின்னரும், மலேசியா பிரிட்டிஷ் காலனியாக தொடர்ந்தது.

1963 ம் ஆண்டு, மலேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் நேரம், அந்த நாடு இந்தோனேசியாவுக்கு சொந்தமானது என்று சுகார்னோ உரிமை கோரினார். இந்தோனேசியப் படைகள், மலேசியப் பகுதிகளினுள் ஊடுருவி மட்டுப்படுத்தப் பட்ட இராணுவ நடவடிக்கையிலும் இறங்கியது. இறுதியில், மலேசியா கையை விட்டுப் போனதால் ஏற்பட்ட விரக்தி, இந்தோனேசிய அரசின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கியது. இராணுவத்திற்குள் தேசிய உணர்வு மேலோங்கியது. PKI அதை சாட்டாக வைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வலைகளை தூண்டி விட்டது. உண்மையில், மலேசிய பிரச்சினையின் எதிர்வினையாக, அரசுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சி பலம்பெற்று வந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி (Pemuda Rakjat) யும், மகளிர் அணி (Gerwani) யும் தீவிரமாக இயங்கத் தொடங்கின. கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பு, கல்லூரிகளில் இயங்கிக் கொண்டிருந்த இஸ்லாமிய மாணவர் அமைப்பை தடை செய்ய வேண்டுமென கோரியது. பொதுவாக, நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் இளைஞர்களின் பிரசன்னம் அதிகரித்துக் காணப்பட்டது. இது பலருக்கு எரிச்சலைக் கொடுத்தது. ஒரு பக்கம், நிலப்பிரபுக்கள் கம்யூனிஸ்டுகளை வெறுத்தார்கள். ஏனென்றால், நிலமற்ற விவசாயிகள், தமக்கு வேண்டிய நிலங்களை ஆக்கிரமிக்குமாறு, கம்யூனிஸ்ட் கட்சி ஊக்குவித்தது. மறுபக்கத்தில், இஸ்லாமிய மதகுருக்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள்.

இஸ்லாமிய மதகுருக்கள், வெளிப்படையாகவே நிலப்பிரபுக்களின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்.  கடவுள் மறுப்பாளர்களான கம்யூனிஸ்டுகளை அழிப்பதற்கு, அமெரிக்காவுடன் மட்டுமல்ல, எந்தப் பிசாசுடனும் கூட்டுச் சேரலாம்.” இஸ்லாமிய மதவாதிகளின் நாஸ்திக எதிர்ப்பு பிரச்சாரம், கடவுள்  நம்பிக்கையுள்ள ஏழை விவசாயிகளை மனம் திரும்ப வைத்தது. இது பின்னர் நடந்த இனப்படுகொலையில் திருப்புமுனையாக அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த, ஏழை விவசாயிகளான கீழ் மட்ட உறுப்பினர்கள் கூட, கம்யூனிச அழிப்பு படுகொலைகளில் பங்கெடுத்தனர். அதற்கு காரணம், குறிப்பிட்ட அளவு நிலத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற உத்தரவாதத்தை, இஸ்லாமிய மதகுருக்கள் நிலப்பிரபுக்களிடம் இருந்து பெற்றுக் கொடுத்தனர்.

30 செப்டம்பர் 1965, அன்றைய தினம் இந்தோனேசியாவின் தலைவிதியை தீர்மானித்தது. அன்றிரவு ஏழு இராணுவ உயர் அதிகாரிகள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு கீழே வேலை செய்த, கீழ் நிலை அதிகாரிகள், அவர்களுக்கு விசுவாசமான இராணுவத்தினர், திடீர் சதிப்புரட்சியை நடத்தி இருந்தனர். சதிப்புரட்சியை அடக்கி, சர்வாதிகார ஆட்சியை கொண்டு வந்த சுகார்ட்டோவும், சில மேற்கத்திய ஊடகங்களும் அறிவித்தது போன்று, அது ஒரு கம்யூனிச சதிப்புரட்சி அல்ல. இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல், ஆடம்பரமான வாழ்க்கை, அதிகார துஷ்பிரயோகம், இவற்றினால் வெறுப்புற்ற படையினரில் ஒரு பிரிவினரின் வேலை அது.

வான்படையில் சில  முற்போக்கான அதிகாரிகள், அந்த சதிப்புரட்சிக்கு ஆதரவளித்தனர். அவர்களுக்கு, இரகசியமாக சீன ஆயுதங்கள் வந்திறங்கி இருந்தன. PKI தலைவர் அய்டீத் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கம்யூனிச இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு, வான்படைத் தளத்தில் இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டது. இருப்பினும், வான்படை கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக, தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. வான்படை தளபதிகள், எந்தளவு முற்போக்காக இருந்த போதிலும், ஒரு கம்யூனிசப் புரட்சிக்கு ஆதரவளிக்கவில்லை. காலம் தனக்கு சார்பாக கனிந்து வருவதாக,  PKI தப்புக் கணக்குப் போட்டது. (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)

சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு, PKI அரசியல் ஆதரவு மட்டுமே வழங்கியது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் செக்கோஸ்லேவியாவில் நடந்தது போன்று, ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப் பட்டால், அது சில வருடங்களின் பின்னர், உழவர், தொழிலாளரின் புரட்சிக்கு வழிவகுக்கும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கனவு கண்டது. ஆனால், அது வெறும் கனவாகவே இருந்து விட்டது. சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களின் நிர்வாக சீர்கேடுகள், திட்டமிடல் குறைபாடுகள், பிற படைப்பிரிவுகளுடன் தொடர்பின்மை, இவை போன்ற காரணங்களினால், சதிப்புரட்சி அதிக பட்சம் 24 மணிநேரம் கூட நீடிக்கவில்லை. அந்நாட்களில் அதிகம் கவனிக்கப்படாத இராணுவ அதிகாரியான சுகார்ட்டோ, தனக்கு விசுவாசமான படையினருடன் தலைநகரை முற்றுகையிட்டார். வெளியுதவி எதுவும் கிடைக்காததால், சதிப்புரட்சியில் ஈடுபட்ட படையினர், எதிர்ப்பு காட்டாமல் சரணடைந்தனர்.

உண்மையில், அதற்குப் பிறகு தான் படுகொலைகள் தொடங்கின. விமானப்படை முகாமுக்கு அருகில் கொன்று புதைக்கப்பட்ட ஆறு இராணுவ அதிகாரிகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன. சில உடல்கள் சிதைவடைந்து காணப்பட்டதால், அதை வைத்து வதந்திகள் பரப்பப் பட்டன. கம்யூனிசக் கட்சி இளைஞர் அணியை சேர்ந்த பெண்கள், அந்த அதிகாரிகளை சித்திரவதை செய்ததாகவும், கண்களை தோண்டியெடுத்து, பிறப்புறுப்புகளை அறுத்ததாகவும் கதைகள் புனையப்பட்டன. அந்தக் கதையில் எந்தவித உண்மையும் இல்லாத போதிலும், பெருமளவு அப்பாவி மக்கள் அதனை நம்பினார்கள். இப்போதும் நம்புகின்றார்கள். ஏனென்றால், இராணுவ அதிகாரிகளின் கொலைகளை பிரச்சாரம் செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்று, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் காண்பிக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது.

சதிப்புரட்சிக்கு முன்னர், கல்லூரிகளில் மத அடிப்படைவாதம் பேசிய, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தடை செய்ய வேண்டுமென, கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்து வந்தது.  கல்லூரிகளுக்குள் இரண்டு பிரிவினரும் எதிரிகள் போல நடந்து கொண்டாலும், அப்போது எந்த கைகலப்பும்  நடைபெறவில்லை. சுஹார்ட்டோவின் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கை ஓங்கியது. கம்யூனிச எதிரிகளுடன் கணக்குத் தீர்த்துக் கொள்ளுமாறு, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தூண்டி விட்டது. இந்தோனேசியாவின் இனப்படுகொலை கல்லூரி மாணவர் விடுதிகளில் ஆரம்பமாகியது.

ஜகார்த்தாவில் ஒரு சீன பல்கலைக்கழக மாணவரை தாக்கும் இந்தோனேசிய இளைஞர்கள்.

ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், படையினரும் கூட்டுச் சேர்ந்து இனப்படுகொலை செய்யக் கிளம்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அவ்வாறு சந்தேகிக்கப் பட்டவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும், ஆயுதமேந்திய காடையரினால் படுகொலை செய்யப் பட்டனர். சில சமயம், அயல் வீட்டுக்காரனுடன் காணித் தகராறு காரணமாக பகை இருந்தாலும், கம்யூனிஸ்ட் என்று பிடித்துக் கொடுத்தார்கள். இவ்வாறு கம்யூனிஸ்ட் அழிப்பு என்ற பெயரில், பலர் தமக்குப் பிடிக்காதவர்களையும் கொலை செய்தனர். மொத்தம் எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற விபரம் யாருக்கும்  தெரியாது. குறைந்தது பத்து இலட்சம் அல்லது இருபது இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம் என கணக்கிடப் பட்டுள்ளது.

உண்மையில், இந்தோனேசியாவில் ஒரு இனப்படுகொலை நடத்தப்பட வேண்டுமென,  சிலர் முன்கூட்டியே இரகசியமாக திட்டம் தீட்டி இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில், அடுத்தடுத்து நடந்த பல சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, அந்த சந்தேகம் ஏற்படுவது இயல்பு. இனப்படுகொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, 30 செப்டம்பர் நடந்த சதிப்புரட்சி ஒரு சாட்டாக பயன்படுத்தப் பட்டுள்ளது. ஏனெனில், சதிப்புரட்சிக்கு காரணம், பாதுகாப்புப் படைகளின் உள்ளே நிகழ்ந்த அதிகார மோதல் என்பதை நிரூபிக்க பல சான்றுகள் இருந்தன. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்பு படுத்துவதற்கான ஆதாரங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. இருந்த போதிலும், “கம்யூனிஸ்ட் அழித்தொழிப்பு” என்ற அளவுக்கு செல்ல வேண்டிய காரணம் என்ன?

ஏற்கனவே, CIA க்கும், சுஹார்ட்டோவுக்கும் இடையில் ரகசிய தொடர்பிருந்திருக்கலாம்.  கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 5000 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலினை, அமெரிக்க தூதரகம் சுஹார்ட்டோவுக்கு விசுவாசமான படைகளிடம் கொடுத்திருந்தது. இந்த தகவலை ஜகார்த்தாவில் பணியாற்றிய CIA அதிகாரியான Clyde McAvoy  உறுதிப் படுத்தி உள்ளார். அவரின் வாக்குமூலத்தின் படி, தீர்த்துக் கட்ட வேண்டிய கம்யூனிஸ்டுகளின் பட்டியலையும், வாக்கிடோக்கி கருவிகளையும், CIA  வழங்கி இருந்தது. அதற்கு முன்னரே, கம்யூனிச எதிர்ப்பு அரசியல்வாதிகளையும், படையினரையும் விலைக்கு வாங்கும் பொறுப்பு, அன்றைய வெளிவிவகார அமைச்சர், ஆதம் மாலிக்கிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.  (ஆதாரம்: Legacy of Ashes: The History of the CIA, by Tim Weiner) ஆகவே, இந்தோனேசிய இனப்படுகொலையில், அமெரிக்க அரசும் சம்பந்தப் பட்டிருந்தமை, இத்தால் உறுதிப் படுத்தப் படுகின்றது.

“கொள்கை வேறுபாடு காரணமாக, பெருந்தொகையான மக்களை படுகொலை செய்தால், அதனை இனப்படுகொலை என்று அழைக்கலாமா?”  என்று சிலர் கேள்வி கேட்கலாம். இன்னொரு இனத்தை, அல்லது மதத்தை சேர்ந்தவர்களை கொன்று குவிப்பது மட்டுமே இனப்படுகொலை ஆகும், என்று சிலர் கறாராக வரையறுக்கலாம்.  அதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இந்தோனேசியாவில், எல்லா இடங்களிலும் பரவலாக வாழும், சீன சிறுபான்மை இனத்தவர்கள் நிறையப்பேர், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். வேற்று மொழி பேசும் சீனர்கள், கம்யூனிஸ்டுகளாகவும் இருந்ததால், ஈவிரக்கமின்றி  படுகொலை செய்யப்பட்டனர். கல்லூரிகளில் நடந்த படுகொலைகளில், சீன மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகளை குறிவைத்து தாக்கினார்கள். (அந்தக் காலத்திலும், பிற்காலத்தில் சுஹார்ட்டோவின் இறுதிக் காலத்தில், தொன்னூறுகளில் நடந்த சீன விரோத இனக்கலவரங்களிலும், சீன பெரு முதலாளிகள் பாதுகாக்கப் பட்டனர்.)

அதே போல, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பாலித் தீவிலும், பெருமளவு மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அந்த தீவின் சனத்தொகையில் பத்தில் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கிழக்கு இந்தோனேசிய தீவுகளான, புலோரெஸ், அம்பொன் ஆகிய இடங்களில் பெருமளவு கிறிஸ்தவர்கள், வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அங்கேயும் படுகொலைகள் நடந்துள்ளன. கிறிஸ்தவ பாதிரியார்களும், இனப்படுகொலையாளிகளுடன் ஒத்துழைத்தனர். கொலைப் பட்டியலில் தமது பெயர்களும் இருப்பதாக நினைத்தவர்கள், தேவாலய உறுப்பினர் அத்தாட்சிப் பத்திரம் கேட்ட பொழுது, அதைக் கொடுக்க பாதிரிகள் மறுத்துள்ளனர். சில சமயம், பாவமன்னிப்பு கேட்க வரும் நபர், தான் ஒரு PKI உறுப்பினர்/ஆதரவாளர் என்ற உண்மையை ஒப்புக் கொண்டு விட்டால், அவரை பாதிரியாரே கொலைகாரர்களிடம் பிடித்துக் கொடுத்தார். (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)

படிக்க:
கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா !
மத்திய பட்ஜட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் | மக்கள் அதிகாரம்

இன்று வரையில், இனப்படுகொலை என்றால் என்னவென்பதற்கு, சரியான வரைவிலக்கணம் கிடையாது. நாஜிகளின் யூத இன அழிப்பை குறிப்பதற்கு உருவாக்கப்பட்ட சொல், இன்று பல நாடுகளிலும் பயன்படுத்தப் படுகின்றது. இந்தோனேசியாவில், “கம்யூனிஸ்டுகளை கொன்றது இனப்படுகொலை ஆகாதுஎன்று வாதாடுபவர்கள், எதனை  அடிப்படையாக கொண்டு கம்போடியாவில் இனப்படுகொலை நடந்ததாக கூறுகின்றார்கள்? பொல்பொட் ஆட்சிக் காலத்தில் நடந்த, கம்போடிய இனப்படுகொலையை விசாரிப்பதற்கு .நா. சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஏன் இந்தோனேசியாவில் அத்தகைய நீதிமன்றம் ஒன்று செயற்படவில்லை? ஏன் சர்வதேச சமூகம் அது குறித்து பாராமுகமாக இருக்கிறது?

நன்றி: தோழர் கலையரசன்


வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

நூல் அறிமுகம் : அரசாங்கத்தின் பென்ஷன் சூதாட்டம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 டிசம்பர் 30 அன்று ஓய்வூதிய ஒழுங்காற்று – மேம்பாட்டு ஆணையம் ஒன்றை நிறுவுவதற்கென அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தது.

… 2004 ஏப்ரல் முதல் தேதி அன்றும், அதற்குப் பிறகும் மத்திய அரசுப் பணியில் சேர்ந்த சட்டப் பாதுகாப்பு ஏதுமற்று இருக்கும் 40,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் ஓய்வூதியத்தைப் பாதுகாக்கும் பொருட்டே ஒழுங்காற்று ஆணையம் ஒன்றை நிறுவ வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது என்று விரிவானதொரு விளக்கத்தை நிதியமைச்சர் (ப.சிதம்பரம்) அளித்திருந்தார். உண்மையில், நடைமுறையில் இருந்து வந்த ‘வரையறுக்கப்பட்ட’ அல்லது ‘உத்திரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது தன்னிச்சையான வகையில் இந்த ஊழியர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி, இந்த ஊழியர்கள் தங்களது பணிக்காலத்தில் செல்லும் தொகைக்கு ஏற்பவும், அவர்கள் செலுத்திய தொகைக்கு பணியிலிருந்து அவர்கள் செய்து பெறுகையில், இருக்கும் மதிப்பிற்கு ஏற்பவும் ஓய்வூதியம் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், எந்தவொரு ஓய்வூதியத் திட்டத்திலும் இடம்பெறும் சமூகப் பாதுகாப்பு என்ற அடிப்படைக் கோட்பாடு இப்புதிய திட்டத்தில் இல்லாதநிலை எழுந்துள்ளது. இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதெனில், 1935-ல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வரையறுக்கப்பட்ட அல்லது உத்திரவாதப்படுத்தப்பட்ட’ செய்வூதியப் பயன்களை தலைகீழாக மாற்றி, அவற்றை சந்தையைச் சார்ந்ததாக மாற்றி அமைத்துள்ள அமெரிக்க அதிபர் புஷ் செல்லும் பாதையை அடியொற்றிச் செல்லவே இந்தியா விழைகிறது எனலாம்.

தனியார்மயமாக்கப்படும் செய்வூதிய நிதி

இது ஓய்வூதிய நிதியை தனியார்மயமாக்கும் முயற்சியே ஆகும். பெருமளவில் உள்ள ஓய்வூதிய நிதியை, ஆழம் காணமுடியாத சூதாட்ட களமாகத் திகழும் பங்குச் சந்தைக்கு திசை திருப்பிவிடும் முரட்டுத்தனமான முயற்சி மட்டுமின்றி, இது நிதிமூலதனம் இடும் கட்டளைக்கு ஏற்ப அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையும் ஆகும். பங்குச் சந்தையில் பொதுவாக நிதி வழங்கி வரும் முறையிலிருந்தே இதில் அடங்கியுள்ள அபாயத்தை எளிதாக உணர முடியும். பங்குச் சார்ந்ததாக செய்வூதியத்தை மாற்றியமைக்க முன்மொழிந்தவர்களின் அசட்டு தைரியத்தைக் கண்டு வியக்கவே வேண்டியுள்ளது. இது ஏகாதிபத்திய புதிய பொருளாதாரக் கொள்கையினை ஏற்றுக் கொண்டதன் விளைவாக அரங்கேற்றப்படும் நாடகத்தின் ஓர் அங்கமே ஆகும். உலக அளவில் நடைபெற்று வரும் இச்சதியினை நாம் இங்கே மீண்டும் கண்டு வருகிறோம்.

தொழிலாளர்களுக்கு இழப்பினை ஏற்படுத்தும் தனியார்மயமாக்கல்

ஓய்வூதிய நிதி எங்கெல்லாம் தனியாரின் சூறையாடலுக்குத் திறந்து விடப்பட்டதோ அங்கெல்லாம் தொழிலாளர்கள் அளவிட முடியாத இழப்பையே அடைந்தார்கள். சில சமயங்களில் தங்களது சேமிப்பு முழுவதையுமே தொழிலாளர்கள் இழந்திருக்கின்றனர். (நூலிலிருந்து பக்.2-3)

சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்காக, தொழிலாளர்களும் முதலாளிகளும் செலுத்தும் தொகையினை பங்குச் சந்தைக்கு திருப்பி விடவேண்டும் என்ற கோரிக்கையை உள்ளடக்கிய சந்தைச் சார்ந்த நவீன, தாராளமய சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட தொடங்கிய பிறகு இவற்றால் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டன. காலங்காலமாக போற்றப்பட்டு வந்த சமூகப்பாதுகாப்பு, செய்வூதியத் திட்டங்களின் மீது தாக்குதல் தொடுத்ததில் கோல்ட்வாட்டா, மில்டர் ப்ரைட்மேன் ஆகியோர் முன்னணியில் நின்றனர். பல தலைமுறைகளாகவே, குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், பிரபலமாக இருந்த சமூக பாதுகாப்புத் திட்டமானது உலக முழுவதிலும் உள்ள நவீன தாராளமயவாதிகளால் தாக்குதலுக்கு ஆளாகி வந்துள்ளது.

இந்தியாவில் அரசு ஊழியர்கள், ராணுவத்தில் பணியாற்றுவோர் ஆகியோருக்குப் பென்ஷன் என்பது வரலாற்று ரீதியான தொடர்பையும் அடித்தளத்தையும் கொண்டதாக இருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். சிங்கால் தலைமையிலான 4-வது ஊதியக் கமிஷனின் அறிக்கையின் இரண்டாவது பிரிவில் அதிகாரபூர்வமாக கூறப்பட்டுள்ளனவற்றை கவனத்தில் கொள்வது பொருத்தமாக அமையும். வயது மூப்பின் காரணமாக, திறமையுடன் பணியாற்ற முடியாத தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் வழக்கம் 19 -ம் நூற்றாண்டியேலே ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது என்றும், பின்னர் அது உலகின் இதர நாடுகளுக்கும் பரவியது என்றும் 1986-ல் வெளியான ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

ஓய்வூதிம் – நிலையான, அமல்படுத்தப்பட வேண்டியதோர் உரிமை.

‘இந்த ஊழியர்களைப் பொறுத்தவரையில் ஓய்வூதியம் என்பது தாராள மனப்பாங்குடனோ அல்லது கருணையின் அடிப்படையிலோ அல்லது சமூகநலக் கண்ணோட்டத்துடனோ அளிக்கப்படும் தொகையல்ல. மாறாக, சட்டரீதியாக அமல்படுத்தப்பட வேண்டியதோர் உரிமையாகும்’ என முன்னாள் ராணுவத்தினர் மத்திய அரசு உழியர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம் குறித்து மேலே கூறிய அறிக்கை தெளிவாகக் கூறுகின்றது. ‘ஒய்வூதியம் என்பது அரசின் தாராள சிந்தனையோடும் விருப்பத்தோடும் தானமாகத் தரப்படுவதல்ல.

மாறாக ஓய்வூதியம் பெறும் உரிமையானது அரசு ஊழியர்களின் நிலையான உரிமையாகும்’ என தேவகிநந்தன் பிரசாத் -பீகார் மாநில அரசு – இதர தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பையே இந்த அறிக்கை ஆதாரமாகக் கொண்டிருந்தது. மேலும் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை குறித்துக் கூறுகையில், ‘அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 31 (1), பிரிவு 19 (1) (F) ஆகியவற்றின் படி, ஓய்வூதியம் என்பது சொத்தாகும். பிரிவு 19-ன் உட்பிரிவு (5)-இன் படி பாதுகாக்கப்படவில்லை ‘ என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சொத்துரிமை என்பது அடிப்படை உரிமையாக தற்போது நடைமுறையில் இல்லாத போதிலும், செய்வூதியம் பெறுவதற்கான உரிமையின் சொல்லத்தக்க தன்மை நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (நூலிலிருந்து பக்.10-11)

தனியானதொரு பென்ஷன் ஒழுங்காற்று ஆணையத்தை அமைத்ததன் மூலம் பென்ஷன் திட்டங்களையே தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது இந்திய மக்களின் சேமிப்பையும் – ஏன் இந்தியப் பொருளாதாரத்தையும் இதன் மூலம் அன்னிய சக்திகளிடம் ஒப்படைக்கும் வேலையிலேயே தற்போது அரசு ஈடுபட்டுள்ளது. சுதந்திர சந்தை ஆதரவாளர்களான அன்னிய கம்பெனி முதலாளிகள் பென்ஷன் திட்டங்களுக்காக இந்திய மக்கள் செலுத்தக்கூடிய சேமிப்புத்தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கே ஆர்வம் காட்டுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை…

படிக்க:
தஞ்சாவூர் : உழைக்கும் மக்களை விரட்டிவிட்டு யாருக்கு ஸ்மார்ட் சிட்டி ?
கார்ப்பரேட் ‘சமூக’ப் பாதுகாப்புத் திட்டங்கள்

… பென்ஷன் திட்டம் என்பது ஒரு நீண்டகால சேமிப்புத் திட்டம். இதனை இந்திய நாட்டின் தனியார் கம்பெனிகளிடமோ அல்லது அன்னிய தனியார் கம்பெனிகளிடமோ ஒப்படைக்கக்கூடாது. பென்ஷன் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்த பல்வேறு நாடுகளின் கசப்பான அனுபவங்களை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களின் சேமிப்பை தங்கள் இலாப வேட்டைக்காக பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. (நூலிலிருந்து பக்.23)

நூல் : அரசாங்கத்தின் பென்ஷன் சூதாட்டம்
ஆசிரியர் : என்.எம். சுந்தரம்
தமிழில் : கி. இலக்குவன், கிரிஜா, வீ.பா. கணேசன்

வெளியீடு : அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்துடன்
இணைந்து பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424.
மின்னஞ்சல் : info@tamizhbooks.com

பக்கங்கள்: 24
விலை: ரூ 10.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

புகை பிடிப்பது தீங்கானதா ? | மருத்துவர் BRJ கண்ணன்

புகை பிடிப்பது தீங்கானதா ?

ணக்கம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், திருமணமாகாத இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்தார் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் அதிலிருந்து மீண்டு வந்தார்.

“பொதுவாக மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு, அவர்களது முந்தைய பரிசோதனைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா ?” எனப் பார்ப்போம். ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்  என ஏதாவது பிரச்சினை உள்ளதா என பரிசீலிப்போம்.  புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா எனவும் பார்த்தால், அதுவும் இல்லை என பரிசோதனையில் தெரிவித்துள்ளார்.

சிறிதுநேரம் கழித்து அவரே என்னை அழைத்து, “சார் எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது” எனத் தெரிவித்தார். “உங்களை இங்கு அட்மிட் செய்யும்போது புகைப் பழக்கம் இல்லை என தெரிவித்து உள்ளீர்களே ஏன்?” என வினவினேன். “அப்போது என் பெற்றோர்கள் உடன் இருந்தார்கள்” எனக் கூறினார்.  எனவே, சிறிய வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு புகைப்பிடித்தல் ஒரு முக்கியமான காரணியாகும்.

அதேபோல் இரண்டு வாரத்திற்கு முன்பு 35, 36 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வருகிறார். இவருக்கு ஐந்து வருடத்திற்கு முன்பே தீவிர மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் ஸ்டெண்ட் வைத்து, சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வந்துள்ளார்.  சமீபகாலமாக மருந்து மாத்திரைகளை நிறுத்திவிட்டு புகைப் பழக்கத்தையும் தொடர்ந்துள்ளார். இப்போது மறுபடியும் இரண்டாம் முறையாக மாரடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இப்போது மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர், “நான் புகைப்பிடிப்பதனால்தான் எனக்கு மாரடைப்பு வந்தது என என்னால் நம்ப முடியவில்லை. எனது பல நண்பர்கள் புகைபிடிக்கிறார்கள், எனக்கு வேறு காரணம் உள்ளது. நீங்கள் கூறாமல் இருக்கிறீர்கள்” என வாதிடுகிறார்.

புகைபிடிப்பது என்றால் நமக்கு பிற்காலத்தில் புற்றுநோய் ஏற்படும். எனவே, பிற்காலத்தில் எப்போதாவது புற்றுநோய் ஏற்பட்டுதான் சாகப் போகிறோம். வேறு எந்த பிரச்சினையும் இருக்காது என அலட்சியமாக இருக்கிறார்கள். இது தவறு, புகைப்பிடிப்பதனால் பல்வேறு பிரச்சினைகள் நம் உடலுக்கு ஏற்படும். அதில் மூன்று முக்கியமானவற்றை நாம் பார்க்கலாம்.

முதலாவது புற்றுநோய், மற்றொன்று மாரடைப்பு, மூன்றாவது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள்.  இந்த நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயை சி.ஓ.பி.டி அல்லது சி.ஓ.எல்.டி எனக் கூறுவர். புற்று நோய் வந்து இறப்பதற்கு முன்பே மாரடைப்பு வந்து இறந்து விடுகிறார்கள். இவற்றில் இருந்து தப்பித்தாலும் நுரையீரல் சம்பந்தப்பட்ட இந்த நோய்க்கு ஆட்படுகிறார்கள். இந்த சி.ஓ.பி.டி. பிரச்சினை நுரையீரலை தாக்கி அடிக்கடி நம்மை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது மட்டுமல்லாமல், வீட்டிலேயே சுவாசிக்க சுவாசக் குழாய் உபயோகப்படுத்துமாறு செய்துவிடும். வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நாம் சிக்கிக் கொள்வோம்.  இவ்வாறெல்லாம் இருக்கிறது என்று பலபேருக்குத் தெரிவதில்லை.

புகைபிடிப்பதனால் ஏற்படும் மரணம் பற்றி நான் ஐம்பதுக்கு ஐம்பது உறுதி கூறுகிறேன். சாதாரண மக்கள் எப்படி இறக்கிறார்கள்? இயற்கையாக வயது முதிர்ந்து இறக்கிறார்கள். அல்லது ஏதேனும் விபத்தின் மூலம் இறக்கிறார்கள். இல்லையென்றால் இனம்புரியாத நோயினால் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் புகை பிடிப்பவர்கள் புகை பிடிப்பதினால் வரும் தீங்கினால் மட்டுமே 50% இருக்கிறார்கள்.

படிக்க :
♦ பீடி புகைப்பதால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 80,000 கோடி இழப்பு
♦ மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

புகைபிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் என்று பலரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இது மட்டுமல்ல புகை பிடிப்பதினால் 12 விதமான புற்று நோய்கள் ஏற்படுகின்றன.  தலையிலிருந்து ஆரம்பித்து வயிற்று பாகத்துக்கும் கீழ்வரை எல்லா பாகங்களிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு புகைபிடிப்பதில் உள்ளது. புற்றுநோயால் இறப்பவர்களில் சரிபாதி, புகைபிடிப்பவர்களாக உள்ளார்கள். அப்படி என்றால் இது தீங்கானதுதானே. இதை நாம் விட்டு விட வேண்டும்தானே!

சில பேர் பள்ளிப்பருவத்திலேயே புகைபிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் அவர்களுக்கு நான் இதைக் குறிப்பாக வலியுறுத்துகிறேன். இந்தப் பழக்கம் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்ற பின்பும் தொடர்கிறது. இவர்களுக்கு நான் இரண்டு  அறிவுரைகளை வழங்குகிறேன்.

ஒன்று நீங்கள் புகைப்பிடிப்பதை உடனடியாக நிறுத்தியாக வேண்டும். இல்லை என்றால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். ஏனென்றால் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள், அது தனி மனித சுதந்திரம். உங்களது வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கும் உள்ளது. சல்மான்கான், யோகி ஆதித்யநாத்,  வாஜ்பாய் போன்ற பலபேர் திருமணமாகாமலேயே பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார்கள் இல்லையா? அவர்களைப் போல் நீங்களும் முயற்சியுங்கள்.

இப்படி இருக்க முடியாது. நான் எல்லாரையும் போல் குடும்பம், குழந்தை என வாழ வேண்டும் என்றால் புகைபிடிப்பதை உடனடியாக நிறுத்தித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் முடிவு எடுக்கலாம். ஆனால், அவர்களுடைய வாழ்க்கையையும் நீங்கள் தீர்மானிக்கக்கூடாது இல்லையா.

அதேபோல் நீங்கள் திருமண வயதில் இருக்கக்கூடிய பெண் என்றால். உங்களுக்கு வரக்கூடிய கணவர் எப்படி இருக்க வேண்டும் எனப் பல நிபந்தனைகள் வைத்திருப்பீர்கள் அல்லவா? அதில் நீங்கள் முக்கியமாக சேர்த்துக்கொள்ள வேண்டியது உங்களது வருங்காலக் கணவர் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும் என்பதுதான். உங்களது வருங்கால கணவர் அல்லது காதலரை புகைப்பிடிக்கிறார் எனத் தெரிந்தும் நீங்கள் திருமணம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு மவுண்ட்ரோட்டில் நடப்பதற்கு சமம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் ரோட்டை கடந்து மறுபுறத்திற்கு செல்வீர்கள். இல்லையென்றால் என்ன நடக்கும் என நாம் கூற முடியாது.

நமக்குத் தெரியும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று. நீரிழிவு நோய் உள்ளவருக்கு 5 சதவீதம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றால், புகை பிடிப்பவருக்கும்  மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 5% உண்டு. அதுவே அவர் நீரிழிவு நோய் உள்ளவராகவும் இருந்து புகைப்பிடிப்பவராகவும் இருந்தால். அவருக்கு 5 X 5 = 25 சதவீதம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

படிக்க :
♦ பெட்டகம் : ஐ.டி.சி ஊழல் புகையில் கோடிகள் மாயம்
♦ அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !

யாரெல்லாம் புகைப்பிடித்து, நீரிழிவு நோய் உள்ளவராகவும் இருக்கிறார்களோ அவர்கள் 60 வயதைத் தாண்டுவதே கடினமாக இருக்கும். நாம் முன்னர் கூறியதுபோல நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். ஆனால், புகை பிடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.  ஒருவர் புகைபிடிக்கும் பழக்கமும் இருந்து நீரிழிவு நோயும் உள்ளவராகவும் இருந்து எழுபது எழுபத்தைந்து வயதை தாண்டி வாழ்கிறார் என்றால்? அது அவரது அதிர்ஷ்டம்தான் என நாம் கூற வேண்டும்.

நீங்கள் நீரிழிவு நோயும் இருந்து, புகைபிடிப்பவராகவும் இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்றால், நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திக் கொள்ளத்தான் வேண்டும். புகைப்பிடிப்பதை நிறுத்துவதன் மூலம் உங்களது வாழ்நாளை நீங்கள் அதிகரித்துக் கொள்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை. அதேபோல் நீரிழிவு நோயையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

சிலபேர், நான் புகை பிடிப்பதில்லை. ஆனால், புகையிலையை வாயில் வைத்துக் கொள்வேன் எனக் கூறுகிறார்கள். இது தவறு. புகையிலை எந்த வடிவில் இருந்தாலும், அதை நாம் தவிர்க்க வேண்டும்.  இல்லையென்றால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் உண்டு.

“என்ன சார் இப்படி கூறுகிறீர்கள். எனது பக்கத்து வீட்டுக்காரர் 75 வயது கடந்தவர். 40 வருடங்களாக புகை பிடிக்கிறார். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என குதர்க்கமாக கேள்விகள் கேட்பார்கள். அதற்கான விடையை நாம் அடுத்த காணொளியில் காணலாம்.

இந்த கட்டுரையின் மூலக் காணொளி :

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

தஞ்சாவூர் : உழைக்கும் மக்களை விரட்டிவிட்டு யாருக்கு ஸ்மார்ட் சிட்டி ?

5000-க்கும் மேற்பட்ட வீடுகளையும் 1000-க்கும் அதிகமான சிறுவணிகர்களையும் விரட்டிவிட்டு யாருக்கு ஸ்மார்ட் சிட்டி?

ஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி (பொலிவுறு நகரம்) என்ற பெயரில் நகரின் மையப்பகுதியான மேல அலங்கம், வடக்கு அலங்கம், சேவப்பநாயக்கன் வாரி ஆகிய இடங்களில் வசிக்கும் சுமார் 8000 ஏழை எளிய குடும்பங்களை விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது மாநகராட்சி. அதேபோல் பழைய பேருந்து நிலையம், கீழவாசல் மார்க்கெட், பெரிய மார்க்கெட் (காமராஜர் மார்க்கெட்) ஆகிய இடங்களில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சிறு வணிகர்களையும் அப்புறப்படுத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால் பொதுமக்களும், சிறுவணிகர்களும் அச்சமடைந்துள்ளனர். அரசின் இந்தச் செயல் அநீதியானது, மக்கள் விரோதமானது

மத்திய அரசு அறிவித்துள்ள 200 ஸ்மார்ட் சிட்டிகளில் ஒன்றுதான் தஞ்சாவூர். சுமார் 1290 கோடி செலவில் உருவாகப்போகும் தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி தஞ்சை மக்களுக்கு நவீன வசதிகளைத் தந்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அரசின் திட்டமல்ல. தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி என்பது கம்பெனிகள் சட்டத்தின்படி பதிவு (எண்.114311) செய்யப்பட்ட ஒரு வியாபார நிறுவனம். அரசு, நிதி நிறுவனங்கள், தனியார் முதலாளிகள் எனப்பலரும் மூலதனம் போட்டு இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்திற்கானதே தவிர ஏழை எளிய மக்களுக்கு வசதி செய்து தருவதற்கல்ல.

கீழ்அலங்கம் பகுதியில் இடிக்கப்பட்ட வீடுகள்.

தஞ்சாவூர் நகரம் பெருமளவு சுற்றுலாவைச் சார்ந்துள்ளது. இந்தத் தொழிலை மேம்படுத்தி இலாபம் சம்பாதிக்க வேண்டுமென்றால் பெரிய கோயில், சரசுவதி மகால் அரண்மனை ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்த வேண்டும். அதிநவீன குடியிருப்புகள், பிரமாண்டமான வணிக வளாகங்கள், கட்டப்படும். இதை பயன்படுத்தி ஒருசில தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்கத்தான் இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளையும் கடைகளையும் ஈவிரக்கமின்றி இடிக்கத் துடிக்கிறது மாநகராட்சி.

படிக்க :
எது வளர்ச்சித் திட்டம் ?
கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா !

மேல அலங்கம், வடக்கு அலங்கம், சேப்பநாயக்கன் வாரி ஆகிய இடங்களில் வாழும் காய்கறி விற்போர், ஆட்டோ ஓட்டுவோர், தையல் தொழில் செய்வோர், பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்ற உழைக்கும் மக்கள் தான் தஞ்சை நகரம் உயிர்போடு இருப்பதற்கு அடிப்படை. பழைய பேருந்து நிலையம், கீழவாசல் மார்க்கெட், பெரியமார்கெட், ஆகிய இடங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவணிகர்கள்தான் நகரத்தில் உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு ஓரளவு மலிவான விலையில் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுகின்றனர். இவர்கள் தான் இந்த நகரத்தை உருவாக்கியவர்கள், இந்த நகரத்தோடு இரத்தமும் சதையுமாக பிணைந்துள்ளவர்கள். பெற்ற தாயிடமிருந்து குழந்தையைப் பறிப்பது போல சுமார் 40 ஆயிரம் பேரை வெளியேற்றிவிட்டு தஞ்சை நகரை பணக்காரர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் உல்லாசபுரியாக்க வெறி கொண்டு அலைகிறது அரசாங்கம். இந்த அநீதியை எப்படி அனுமதிப்பது?

தஞ்சை நகரம் நமக்குச் சொந்தமானது. இங்கு வாழும் நமது உரிமையைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. நமது குடியிருப்பு, தொழில், வேலை, நமது குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் எல்லாவற்றிற்கும் இந்த இடம்தான் அடிப்படை. உயிரே போனாலும் வெளியேற்ற அனுமதிக்கக்கூடாது. யாராவது தீர்த்துவைக்க மாட்டார்களா என ஏங்குவதோ அல்லது யாரோ ஒரு தலைவர் போராடி பெற்றுத் தருவார் என நம்புவதோ பேதமை. வீதிக்கு வராமல் அஞ்சி நிற்பதால்; எந்தப் பலனுமில்லை எதிர்த்து நிற்பதே ஏற்ற வழி!

♦ பட்டா இல்லையென சட்டம் பேசுகிறார்களா? பட்டாக் கொடு! கொடுப்பதில் என்ன பிரச்சினை என்று கேளுங்கள்!

♦ போலீசு வந்து மிரட்டுகிறதா? சிவில் பிரச்சனையில் உனக்கென்ன வேலை எனக் கேளுங்கள்! சாஸ்திரா பல்கலைக்கழகம் அபகரித்த அரசு நிலத்தை எடுத்துவிட்டு வா என திருப்பி அனுப்புங்கள்!

♦ ஏழை உழைப்பாளிகளின் வீடுகளால் நகரின் அழகு கெடுகிறது என்றால், இது நம்மையும் நமது உழைப்பையும் அவமானப்படுத்தும் செயல் அல்லவா?

♦ நம்மை வெளியேறச் சொல்பவர்கள் பணக்காரர்களுக்கான உல்லாசபுரியை ஏழைகளே இல்லாத இடத்தில் அமைத்துக்கொள்ள வேண்டியதுதானே?

உழைக்கும் மக்களே!

♦ 8 வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம் என பட்டா நிலத்தையே பறிக்கும் அரசு புறம்போக்கு நிலத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிடுமா? ஆனால், உழைக்கும் மக்கள் ஒன்றாக திரண்டால் முடியாதது எதுவுமில்லை. மக்களின் ஒற்றுமை என்ற ஆயுதத்திற்கு முன்னால் அரசின் எல்லா ஆயுதங்களும் மண்ணைக் கவ்வியதுதான் வரலாறு.

♦ நமது வாழ்வாதாரத்தைக் காக்க, நமது குடியிருப்பை நிரந்தரமாக உரிமையாக்கிக்கொள்ள ஓரணியில் திரள்வோம்! அரசின் மக்கள்விரோத திட்டத்தை முறியடிப்போம்!

தகவல்:
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.
தொடர்புக்கு : 94431 88285
93658 93062

இவர்களுக்கு நீதான் தலைசிறந்த ஆசிரியர் !

2
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 07

நான் கரும்பலகையை நோக்கிச் செல்கிறேன்.

“இப்போது இன்னமும் சிக்கலான ஒரு கேள்வி. இங்கே நான் சில சதுரங்களை வரைந்திருக்கிறேன், ஆனால் இவற்றை எண்ண முடியவில்லை. நீங்கள் கவனமாகப் பார்த்து எண்ணி என் காதில் மெதுவாகச் சொல்லுங்கள்.

கரும்பலகையின் இன்னொரு பகுதியைத் திறக்கிறேன், அங்கு பின்வருமாறு வரையப்பட்டுள்ளது:

“பதில் சொல்ல அவசரப்படாதீர்கள்!” என்று குழந்தைகளை எச்சரித்துவிட்டு, நானும் கணக்கில் ஈடுபடுகிறேன். வகுப்பறையின் நடுவே நின்று கொண்டு விரலால் சுட்டிக் காட்டியபடி “ஒன்று, இரண்டு, மூன்று…” என்று எனக்குள்ளேயே எண்ணுகிறேன்.

ஒரு சிலர் பதில் சொல்வதற்காக என்னை ஏற்கெனவே அழைக்கின்றனர். “நான்கு”, “எட்டு”, “பன்னிரண்டு”, “நூறு”, “மூன்று” என்று ஏராளமான தப்பான பதில்கள் வருகின்றன. தம் பதிலைச் சரிபார்க்குமாறு ஒவ்வொருவர் காதிலும் சொல்கிறேன். சிலருக்கு ஒன்பதாவது சதுரத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறேன், இது. படத்தின் மையத்தில் உள்ளது, சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதைத்தான் பலர் கவனிக்கவில்லை.

ஒரு நிமிடம் கூடக் கழியும் முன், ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இந்தக் ”கண்டுபிடிப்பாளர்களால்” பதிலைக் கூச்சலிட்டுக் கூறாமல் இருக்க முடியவில்லை .

“எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள்!” என்று கூறிய படியே சைகை காட்டுகிறேன்.

“எட்டு !… ஒன்பது!”

8 மற்றும் 9 என்று நான் கரும்பலகையில் எழுதுகிறேன்.

“இங்கு எட்டு சதுரங்கள் உள்ளன என்று கூறுபவர்கள் கைகளை உயர்த்துங்கள்!” கிட்டத்தட்ட பாதிப் பேர் கைகளை உயர்த்தினர். இப்போது, ஒன்பது சதுரங்கள் உள்ளன என்று கருதுபவர்கள் கைகளை உயர்த்துங்கள்!” எஞ்சியவர்கள் கைகளை உயர்த்தினர்.

இரு தரப்பின் சார்பாயும் மாக்தாவையும். மாயாவையும் கரும்பலகைக்கு அழைக்கிறேன்.

“நிரூபியுங்கள்!”

“இங்கே ஒன்பது சதுரங்கள் உள்ளன” என்கிறாள் மாயா.

“இல்லை, எட்டு!” என்று மற்றவர்கள் கத்துகின்றனர்.

“இதோ பாருங்கள்!” என்று மாயா ஒவ்வொரு சதுரமாக அடையாளக் குச்சியால் சுட்டிக் காட்டத் துவங்குகிறாள். “ஒன்று, இரண்டு, மூன்று… ஒன்பது!” இறுதியாக, மையத்தில் உள்ள சிறு சிவப்பு சதுரத்தைச் சுட்டிக் காட்டு கிறாள்.

“ஓ!” என்று ஒரு பாதியினர் பெருமூச்சு விடுகின்றனர்.

“நாங்கள் சொன்னதுதான் சரி!” என்று மற்றப் பகுதியினர் மகிழ்கின்றனர்.

“இப்போது குனிந்து கண்களை மூடுங்கள்” என்கிறேன் நான்.

உடனே வகுப்பறையில் சத்தம் நின்றது. கணக்குப் போட்டபோது தோன்றிய உணர்ச்சிகளிலிருந்து குழந்தைகளின் கவனம் திரும்புகிறது. இப்போது வேறு கேள்வியைக் கேட்கலாம். வரிசைகளின் இடையே நடந்தபடியே மெதுவாகச் சொல்கிறேன்:

“இன்னமும் சிக்கலான கணக்கைத் தரட்டுமா?”

“தாருங்கள்!”

“நான் கரும்பலகையில் A, B என்று இரண்டு தொகுதி சதுரங்களை வரைந்தேன். எந்தத் தொகுதியில் சதுரங்கள் அதிகம் என்று சொல்லுங்கள். (நீங்கள் எப்படி சிந்திப்பீர்களென நான் உங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அனேகமாக சிலரின் முகங்கள் கருத்தாழம் மிக்கவையாக, ஒருமுனைப்படுத்தப்பட்டவையாக இருக்கும். சரிபார்க்காத எதையும் வாய் சொல்லும்படி விட்டுவிடாதீர்கள். நான் கரும்பலகையில் உள்ள திரையை விலக்குகிறேன்.) நிமிருங்கள். பாருங்கள், சிந்தியுங்கள்.”

கரும்பலகையில் பின்வருமாறு வரையப்பட்டிருக்கிறது:

குழந்தைகள் என்ன பதில் சொல்வார்கள்? அனேகமாகப் பெரும்பாலோர் A தொகுதியில் B தொகுதியில் உள்ளதை விட அதிக சதுரங்கள் உள்ளன என்று கூறுவார்கள், கண்டிப்பாக இவர்கள் எண்ணிக்கையையும் பரப்பளவையும் குழப்புவார்கள். “எவ்வளவு?” என்பதை “பரப்பளவில் பெரிய” என்று ஏற்றுக் கொள்வார்கள்.

சமீபத்தில் இதே மாதிரி கேள்விகளைக் கேட்டபோது அனைவரும் சரியாகப் பதில் சொல்லவில்லை. கரும்பலகையில் வரையப்பட்டிருந்த மூன்று சிறிய, இரண்டு பெரிய பேரிக்காய்களைக் காட்டிக் கேட்டேன்:

“எங்கே பேரிக்காய்கள் அதிகமுள்ளன? வலப்புறமா, இடப்புறமா?”

”வலது புறம்!” என்று கூறினார்கள்.

“வாருங்கள், எண்ணிப் பார்ப்போம்!” என்றேன் நான்.

எண்ணினோம்: இடது புறம்-மூன்று, வலது புறம் இரண்டு. பேரிக்காய்களின் படத்தின் கீழ் நான் எண்களை எழுதினேன்:

“எது அதிகம், மூன்றா, இரண்டா ?”

“மூன்று அதிகம்!” என்றனர் குழந்தைகள்.

“அப்படியெனில் எங்கே பேரிக்காய்கள் அதிகம் உள்ளன – இடதுபுறமா, வலதுபுறமா?

“வலது புறம்.”

“ஏன்?”

குழந்தைகள் எனக்கு விளக்கினார்கள்: வலது புறம் உள்ளவை அளவில் பெரியவை, இடதுபுறம் சிறியவை.

அப்போது சாஷா மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை.

“தப்பு!” என்றான் அவன். “இடது புறம் மூன்றும் வலது புறம் இரண்டும் உள்ளன. எனவே, இடது புறம்தான் அதிகம்.”

நான் வகுப்பறையின் குறுக்காக நடந்து சென்று சிறுவனை நோக்கிக் கையை நீட்டினேன். அவன் கையைப் பிடித்துக் குலுக்கினேன். சாஷா புரியாதபடியே கையை நீட்டினான். வகுப்பில் உள்ளவர்கள், என்ன நடந்தது என்று ஆர்வத்தோடு பார்த்தார்கள்.

“நீ யோசித்து பதில் சொன்னதற்கு நன்றி, சாஷா. நீ என்னை மிகவும் சந்தோஷப்படுத்தினாய்.”

சாஷாவோடு சேர்ந்து நாங்கள் கரும்பலகையை அணுகினோம்.

“பாருங்கள், சாஷா எப்படி யோசிக்கிறான்!… சாஷா, இங்கே எந்த இடத்தில் அதிக வட்டங்கள் உள்ளன என்று சொல் பார்க்கலாம்” என்று கூறியபடியே இரண்டு ஓரங்களிலும் உள்ள கரும்பலகைகளைத் திறந்து காட்டி, நடுவில் உள்ளதை மூடினேன்.

படிக்க:
மத்திய பட்ஜட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் | மக்கள் அதிகாரம்
நாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம் !

இடதுபுறமுள்ள பலகையில் ஆறு வட்டங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக வரையப்பட்டிருந்தன. வலதுபுறமுள்ள பலகையில் வட்டங்கள் எல்லா இடங்களிலும் வரையப்பட்டிருந்தன . சிறுவன் இரு பலகைகளிலும் உள்ள படங்களை கவனமாகப் பார்க்கத் துவங்கினான்.

”சாஷா, எங்கே எனக்கு உதவி செய். இப்போது இங்குள்ளவர்களுக்கு என்னை விட அதிகமாக உன்னால் உதவ முடியும். இப்போது இவர்களுக்கு நீதான் தலைசிறந்த ஆசிரியர்” என்று எனக்குள் நான் எண்ணிக் கொண்டேன்.

நான் வகுப்பறையின் நடுவில் நின்றபடி முழு நிசப்தத்தில் மெதுவாகப் பேசினேன்:

“பாருங்கள், அவன் எப்படி கவனமாக நோக்குகிறான்….. அவன் ஒன்றுமே பேசவில்லை, கவனித்தீர்களா!..  தவறு செய்யாமலிருப்பதற்காகத் தன் நாக்கை அடக்கிக் கொண்டு நிற்கிறான்.”

சாஷா இடது பலகையை அணுகி வட்டங்களை விரல் விட்டு எண்ணுகிறான். நான் குழந்தைகளிடம் மெதுவாகச் சொல்கிறேன்.

“பார்த்தீர்களா, அவன் தன்னைத்தானே சரிபார்த்துக் கொள்கிறான்.”

“சாஷா, இப்போது தயவு செய்து தப்பு செய்து விடாதே! மனிதனுக்குச் சிந்திப்பது எவ்வளவு முக்கியம், அவசியம், சிந்திக்கும் மனிதனைப் பார்க்க எவ்வளவு அழகாக உள்ளது என்று எல்லாக் குழந்தைகளுக்கும் காட்ட வேண்டியது மிக மிக அவசியம்” என்று என் மனதிற்குள்ளாகவே சாஷாவை நோக்கி கூறிக் கொண்டேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

முகிலன் கடத்தப்பட்டதற்கு யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

திருப்பதியில் ஆந்திர ரயில்வே போலீசால் கைது செய்யப்பட்டு, பின்னர் தமிழக சிபிசிஐடி போலீசால் கைது செய்யப்பட்டிருக்கிறார் முகிலன். அவரை சென்னைக்கு கொண்டு வந்த போலீசு, பின்னர் பாலியல் புகார் ஒன்றை வைத்து கைது செய்து வழக்குப் போட்டு சிறையில் அடைத்திருக்கிறது. நீதிமன்ற வளாகத்தில் முகிலன் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார்.

அதில் தான் ஸ்டெர்லைட் ஆதரவு ஆட்களால் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாகவும், பல ஊசிகள் போட்டு மனநிலையை பாதிக்கச் செய்ய அவர்கள் முயன்றதாகவும் கூறியிருக்கிறார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து அவர் வெளியிட்ட சி.டி போலீசாருக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை. ஏனென்றால் அந்த சி.டி-யின் மூலம் துப்பாக்கி சூடு நடத்திய போலீசின் குற்றம் பகிரங்கமாக; ஆதராப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்போதே சி.டி வெளியீடுக்கு பிறகு தனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறியுள்ளார் முகிலன். அது போலவே அந்த வெளியீட்டு நிகழ்வு முடிந்ததும் காணாமல் போனார்.

தமிழகத்தின் ஜனநாயக சக்திகளின் முயற்சியால் இந்த பிரச்சினை நீதிமன்றம், மக்கள் அரங்கம் இரண்டிலும் கொண்டு செல்லப்பட்டது. தற்போது முகிலனை அவரது குடும்பத்திடம் ஒப்படைப்பதற்குப் பதில் சிறையில் அடைத்திருப்பது பல கேள்விகளையும் முகிலன் சொன்னது போல அந்தக் கடத்தல் மிரட்டல் நடந்திருக்கலாம் எனவும் யூகிக்க வைக்கிறது.

ஏனெனில் பாலியல் புகார் குறித்த வழக்கில் எந்த விசாரணையும் இல்லாமலே அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதை விட அவர் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது பாரதூரமான விசயம். இதை ஏன் போலீசார் விசாரிக்கவில்லை என்றால், அவர்களுக்கும் இது தெரிந்தே நடந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இன்றைய கேள்வி:

முகிலன் காணாமல் போனதற்கு யார் காரணம்?

♣ ஸ்டெர்லைட் நிர்வாகம்
♣ தமிழக போலீசு
♣ பாலியல் பிரச்சினை
♣ தானே மறைந்து வாழ்ந்தார்

(பதில்களில் இரண்டை தெரிவு செய்யலாம்)

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூப் :

வாக்களிக்க இங்கே அழுத்தவும்

கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல் !

2019 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க., எதிர்பாராதவிதமாகத் தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர்கள், பா.ஜ.க. ஆதரவு பத்திரிகைகள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட அனைவரும், “சாதி அரசியலை இந்திய மக்கள் புறக்கணித்துவிட்டதாக” அறிவித்தனர்.

அவர்கள் இப்படிக் கூறியதற்குக் காரணம், சாதி அரசியலின் மையமான உ.பி.யிலும், பீகாரிலும் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து நின்ற அகிலேஷ் யாதவ் – மாயாவதி கூட்டணியும், லாலு பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த கூட்டணியும் இந்தத் தேர்தலில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்திருப்பதுதான். தனது வெற்றியைச் சாதி- கடந்த, அதற்கும் மேலே வர்க்கம் கடந்த வெற்றியாகவும் பீற்றி வருகிறது, பா.ஜ.க.

எதிர்க்கட்சிகள், குறிப்பாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள் கட்சி ஆகியவை குறிப்பிட்ட சாதி ஓட்டுக்களை அடித்தளமாகக் கொண்ட சாதிக் கட்சிகள்தான் என்பதை பா.ஜ.க. சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.

சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ்.

உ.பி.யில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக அமைக்கப்பட்ட சமாஜ்வாதிக் கட்சி- பகுஜன் சமாஜ் கட்சி – ராஷ்டிரிய லோக் தள் கட்சிகளின் கூட்டணி, தமது வெற்றிக்கு யாதவ்- வாக்குகளையும்; பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து நின்ற லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள்-காங்கிரசு கூட்டணி, தமது வெற்றிக்கு யாதவ், முஸாஹர், கோய்ரி, மல்லா, குஷ்வாஹா உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி ஓட்டுக்களையும், முசுலீம்களின் ஓட்டுக்களையுமே பிரதானமாக நம்பியிருந்தன.

“தேசிய”க் கட்சியான காங்கிரசும் கூட இத்தேர்தலில், அக்கட்சி தனித்துப் போட்டியிட்ட உ.பி., ம.பி., இராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தனது வெற்றிக்கு பார்ப்பனர்கள், தாக்குர் உள்ளிட்ட ஆதிக்க சாதிகள் மற்றும் ஜாட், யாதவ், அஹிர், லோதி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி ஓட்டுக்களையும் நம்பியிருந்தது.

எதிர்க்கட்சிகளைச் சாதிக் கட்சிகள் என்றும், அக்கட்சிகளின் தோல்வியைச் சாதி அரசியலின் தோல்வி என்றும் கேலி செய்யும் பா.ஜ.க.வின் யோக்கியதை என்ன? இந்திய அரசியல் கட்சிகளிலேயே, பார்ப்பன- கட்சி எனச் சாதி பெயரைக்  குறிப்பிட்டு அழைக்கப்பட்ட பெருமை கொண்ட ஒரே கட்சி பா.ஜ.க.தான்.

1990-க்கு முன்பு வரை அக்கட்சிக்குப் பார்ப்பனர், தாக்குர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரைத் தவிர, வேறு யாரும் வாக்களிக்க முன் வந்ததில்லை. பா.ஜ.க.வும் நிலவுடமை ஆதிக்க சாதிகளையும், வட்டிக்கடை நடத்திவரும் மார்வாடி சேட்டுக்களையும்தான் அண்டிப் பிழைத்து வந்தது.

1990-களுக்குப் பின்னர், இந்து என்ற போர்வையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தன் பக்கம் அணிதிரட்ட பா.ஜ.க முயன்றது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலோ, பா.ஜ.க. அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேசிய சாதிக் கூட்டணி என அழைக்கப்படும் அளவிற்கு வட இந்திய மாநிலங்களில் யாதவ் அல்லாத மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகள், ஜாதவ் அல்லாத மற்ற தாழ்த்தப்பட்ட சாதிகளின் வாக்குகளைக் குறிவைத்தும், சாதிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டும்தான் இந்தத் தேர்தலையே சந்தித்தது.

படிக்க :
♦ ’உயர்’சாதி ‘ஏழை’களுக்கு 10% இடஒதுக்கீடு : மோடி அமைச்சரவை ஒப்புதல்
♦ பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !

காங்கிரசு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆதிக்க சாதியினரின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக, “தான் தத்தாத்ரேய கோத்திர பிராமணன்” எனக் கூச்சமின்றிக் கூறிக் கொண்டார் என்றால், வளர்ச்சியின் நாயகனாக (விகாஸ் புருஷ்) முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியோ, உ.பி. மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில், “தான் மிக, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன்” எனக் கண்ணீர் விடாத குறையாகப் பேசி வாக்கு சேகரித்தார்.

இந்தக் கடந்த கால மற்றும் நிகழ்கால உண்மைகளை மூடிமறைத்துவிட்டு, தன்னைச் சாதிக்கு அப்பாற்பட்ட கட்சியாகப் பெருமை பாராட்டிக் கொள்வதற்கும்; எதிர்க்கட்சிகளைச் சாதிக் கட்சிகள் எனச் சாடுவதற்கும் பா.ஜ.க.விற்கு எந்தவிதத் தகுதியும் கிடையாது.

மண்டலும் பா.ஜ.க.வும்

1980-களின் இறுதியில் மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலான பிறகு, இந்தியத் தேர்தல் முடிவுகளைச் சாதி வாக்குகள் தீர்மானிப்பது ஒரு புதிய கோணத்தில் தீவிரமடைந்தது. குறிப்பாக, மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலாக்கத்திற்குப் பிறகுதான் குறிப்பிட்ட சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சாதிக் கட்சிகள் இந்திய அரசியல் அரங்கில் தோன்றின.

தமிழகத்தில் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக அவதாரமெடுத்தது. சோசலிஸ்டு ராம் மனோகர் லோகியாவின் சிஷ்யர்கள் எனப் பெயரெடுத்திருந்த முலயம் சிங் யாதவ், யாதவ் சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சமாஜ்வாதிக் கட்சியை உ.பி.யிலும்; லாலு பிரசாத் யாதவ், யாதவ் சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியை பீகாரிலும்; ஜார்ஜ் பெர்ணாண்டஸ் – குமார் கூட்டணி, குர்மி சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சமதா கட்சியை பீகார் உள்ளிட்ட ஒன்றிரண்டு மாநிலங்களிலும் தொடங்கினர்.

இவர்களுக்கெல்லாம் முன்பே, கன்சிராம் தாழ்த்தப்பட்ட சாதிகளுள் ஒன்றான ஜாதவ் சாதி ஓட்டுக்களை அடித்தளமாகக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார்.

மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலாக்கத்திற்குப் பிறகுதான் குறிப்பிட்ட சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சாதிக் கட்சிகள் இந்திய அரசியல் அரங்கில் தோன்றின.

இவற்றுக்கெல்லாம் அப்பால், இதே காலக்கட்டத்தில் அரசு அதிகாரத்தில் பங்கு பெறமுடியாமல், அதற்கு அப்பால் நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு சாதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் முளைத்துச் செயல்படத் தொடங்கி, அவை சாதிக் கட்சிகளாகவும் உருமாறி, தமது சாதி ஓட்டுக்களை வைத்துக்கொண்டு அரசியல் கட்சிகளிடம் பேரம் நடத்தி ஒன்றிரண்டு நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தொகுதிகளைப் பெறவும் தொடங்கின.

மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டதையும், சாதிக் கட்சிகள் தேர்தல்களில் வெற்றிபெறும் அளவிற்குச் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியதையும் கண்டு, பா.ஜ.க. பெரும் பதற்றம் கொண்டது. ஏனென்றால், அதுகாறும் ஆதிக்க சாதிகளின் முற்றாளுமையின் கீழ் இருந்துவந்த அரசு அதிகாரத்தில் இக்கட்சிகள் பங்கு கேட்பதை பார்ப்பன- கட்சியான பா.ஜ.க.வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும், புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலமும் இதுதான்.

ஒருபுறம் தனது சமூக அடித்தளமான பார்ப்பன, பனியா உள்ளிட்ட ஆதிக்க சாதியினரைத் தூண்டி விட்டு மண்டல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திக் கொண்டே, இன்னொரு புறம் “ராமர் எதிர் பாபர்”, “இந்து எதிர் முசுலீம்” என இந்துத்துவ அரசியலையும் கடை விரித்தது, பா.ஜ.க.

படிக்க :
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !
♦ மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !

இந்து என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தம் பக்கம் அணிதிரட்டிக் கொண்டு, சாதிக் கட்சிகளை வீழ்த்திவிட முயன்ற பா.ஜ.க.வின் செயலுத்தி 1990 பிற்பகுதியில் உ.பி. மாநிலத்திலேயே படுதோல்வியடைந்தது. அங்கு மட்டுமின்றி, இத்தேர்தல் உத்தி பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் தொடர்ச்சியான, நிரந்தரமான வெற்றியைத் தரவில்லை.

இத்தோல்விகள் மற்றும் பின்னடைவுகளின் விளைவாக, ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறும் ஒவ்வொரு தேர்தல்களுக்குத் தக்கவாறும் சாதிக் கூட்டணிகளை உருவாக்கித் தேர்தல்களைச் சந்திக்கும் தந்திரோபாயத்தில் பா.ஜ.க இறங்கியது. அதற்கான பரிசோதனைக் களமாக உ.பி.யைத் தேர்ந்தெடுத்தது.

1990- பின், உ.பி. மாநிலத்தில் காங்கிரசு பலவீனமடைந்துவிட்டதையும், மண்டல் எதிர்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு பார்ப்பனர், தாக்குர் உள்ளிட்ட ஆதிக்க சாதி வாக்குவங்கியின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண்ட பா.ஜ.க., பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் வாக்குகளைத் தன் பக்கம் திருப்பிக் கொள்வதற்கு, சாதிகளுக்கு இடையே காணப்படும் வரலாற்றுரீதியான முரண்பாடுகளையும், பதவி வேட்டைக்காக அவற்றுக்கிடையே நடந்துவரும் மோதல்களையும் பயன்படுத்திக் கொண்டது.

குறிப்பாக, யாதவ் சாதி தவிர்த்த பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் ஜாதவ் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தனது அணிக்கு மடைமாற்றியதன் மூலம்தான் உ.பி.யில் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பிரம்மாண்டமான வெற்றியை பா.ஜ.க. சாதித்தது.

ஜி.எஸ்.டி., பண மதிப்பழிப்பு ஆகிய பொருளாதாரத் தாக்குதல்கள் ஏற்படுத்திய பாதிப்புகளைக்கூடச் சாதி உணர்வு மழுங்கடித்துவிட்டதை உ.பி.யில் நாம் கண்டோம். இந்த உத்தியை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நாடு முழுவதும் விரிவுபடுத்தியிருக்கிறது.

கமண்டலத்திடம் சரண் அடைந்த மண்டல்

மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலுக்கு வந்தபொழுது, கமண்டலை (பா.ஜ.க.வை) மண்டல் ஓரங்கட்டிவிடும் என சில அறிவுத்துறையினர் கருதினர். ஆனால், பா.ஜ.க.வோ, அதே மண்டல் இட ஒதுக்கீடைத் தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்படுத்தியது.

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடில் யாதவ் சாதியினரும், தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடில் ஜாதவ் சாதியினரும் அதிகப் பலன் அடைந்திருக்கும் உண்மையைப் பயன்படுத்திக் கொண்ட பா.ஜ.க., மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் பலன்களைப் பெறும் வகையில் உள் ஒதுக்கீடை அமலாக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்ததோடு, அதற்கான கமிசன்களையும் அமைத்தது. இதன் வழியாக, யாதவ், ஜாதவ் அல்லாத சாதியினரின் ஓட்டுக்களைக் கவர முயன்றது.

பாஜக சாதி வேறுபாடு பார்க்காத கட்சி எனக் காட்டிக் கொள்ளவும், தாழ்த்தப்பட்ட சாதி வாக்குகளைப் பொறுக்கும் நோக்கத்தோடும் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஒடிசாவிலுள்ள தியோகாவ் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரின் வீட்டில் உணவருந்தும் நாடகம். (கோப்புப் படம்)

இந்த உள் ஒதுக்கீடு உத்திக்கு அப்பால், தான் குறிவைக்கும் சாதிகளைச் சேர்ந்த வரலாற்றுத் தலைவர்களை இந்து மதக் கதாநாயகர்களாகச் சித்திரிப்பதற்கு ஏற்ப வரலாற்றைத் திரிப்பது, சாதி உணர்வை முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறியாக வளர்த்துவிடுவது, தனக்கு ஆதரவான சாதிகளைச் சேர்ந்த பிழைப்புவாதிகளைக் கூட்டணிக்குள் இணைத்துக் கொண்டு குளிப்பாட்டுவது என இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு பல தந்திரங்களை பா.ஜ.க. கையாண்டு வருகிறது.

“பிற்படுத்தப்பட்ட சாதிகளுள் ஒன்றான ராஜ்பார் சாதியின் வரலாறே முசுலீம்களுக்கு எதிரான வரலாறாக ஆர்.எஸ்.எஸ்.-ஆல் திரித்துக் கூறப்படுவதாகவும், அச்சாதியைச் சேர்ந்த இளைய தலைமுறையிடம், இந்துயிசத்தைக் காப்பாற்றும் வீரர்கள் நாம் என்ற கருத்துத் திணிக்கப்படுவதாகவும்” கூறுகிறார், “காவோன் கே லோக்” என்ற இந்தி இதழின் ஆசிரியர் ராம்ஜி யாதவ்.

ராஜ்பார் சாதியினரால் தமது வரலாற்று நாயகனாகக் கருதப்படும் சுஹேல்தேவ், ஒரு முசுலீம் தளபதியைப் போரிட்டு வீழ்த்தியதாகக் கூறப்படும் கதையிலிருந்து, ராஜ்பார் சாதியை முசுலீம்களுக்கு எதிரானதாகச் சித்திரிக்கும் கட்டுக்கதையை ஆர்.எஸ்.எஸ்.  உருவாக்கியிருக்கிறது. அச்சாதியினரை பா.ஜ.க.விற்கு நெருக்கமாகக் கொண்டுவரும் முயற்சியாக, காசிபூரிலிருந்து டெல்லி வரை செல்லும் அதிவிரைவு தொடர்வண்டிக்கு சுஹேல்தேவ் பெயரைச் சூட்டியிருக்கிறது, மோடி அரசு.

கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடியதால் முஸாஹர் சாதியினரால் தெய்வமாக வணங்கப்படும் தீனாபத்ரி; அஹிர் சாதியைச் சேர்ந்த வரலாற்று நாயகன் லோரிக் யாதவ்; ஜாதவ் சாதியைச் சேர்ந்த ரவிதாஸ் உள்ளிட்ட பலரும் இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.-ஆல் இந்துத்துவ நாயகர்களாகச் சித்தரிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் இந்துத்துவ நஞ்சு விதைக்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்கெனவே அம்பேத்கர் குறித்த பிம்பமும், கருத்துக்களும் பரவியிருப்பதால், சாதிப் படிநிலையில் அச்சாதியினரைவிட மேலேயுள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் இந்த இந்துத்துவா நஞ்சு உடனடியாகவே வேலை செய்வதாக அறிவுத்துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர்.

முஸ்லீம் எதிர்ப்பு இந்துத்துவ அரசியலின் கீழ் எல்லா சாதியினரையும் கொண்டுவரும் நோக்கத்துடன் மதவெறியை உள்ளீடாகக் கொண்ட தேசவெறியை மோடி தனது பிரச்சாரம் அனைத்திலும் பயன்படுத்திய போதிலும், வேர் மட்ட அளவில் சாதிரீதியான கணக்கீடுகளின் அடிப்படையிலும் சாதிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டும்தான் பா.ஜ.க. தனது வெற்றியை சாதித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சாதியை மறுத்த இந்து உணர்வும் இல்லை, இந்துத்துவமும் இல்லை. இருக்கவும் முடியாது.

குப்பன்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

உலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை

0

உலகமயத்தின் புதிய சாதனை – 2018-ம் ஆண்டில் அகதிகளின் எண்ணிக்கை 7.8 கோடி மக்கள்

லகம் முழுவதிலும் 2018-ம் ஆண்டில் தங்களது வாழிடங்களை விட்டு 7.8 கோடி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையம் (UNHCR) கூறியுள்ளது. 2017-ம் ஆண்டை விட இது 20 இலட்சம் அதிகம். அகதிகளின் எண்ணிக்கை என்ற அடிப்படையில் பார்த்தால் உலகின் 20-வது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இது இருக்கும்.

ரோஹிங்கிய அகதி முகாம் ஒன்றில் சிறுமி.

இடம்பெயர்ந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் உள்நாட்டு அகதிகள் என்று ஆணையம் கூறுகிறது. பெர்லினில் இதற்கான அறிக்கையை வெளியிட்ட போது இந்த போக்கு கவலையளிப்பதாக ஆணையத்தின் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி கூறியிருக்கிறார்.

புலம் பெயர்ந்த 2.59 கோடி அகதிகளில் பாலஸ்தீன மக்கள் கிட்டதட்ட 20 விழுக்காடாக இருக்கின்றனர். இவர்கள் தற்போது ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பில் உள்ளனர். 2018-ம் ஆண்டில் மட்டும் 1.36 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் 28 இலட்சம் மக்கள் வேறு நாடுகளுக்கும் 1.08 கோடி மக்கள் உள்நாட்டிலும் இடம்பெயர்ந்துள்ளதாக ஆணையம் கூறுகிறது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் (Central African Republic) ஜைக் (Zike) கிராமத்திலிருந்து தப்பி வந்துள்ள அகதிகளை பாதுகாக்கும் கேமரூன் அமைதிப்படை வீரர்கள். மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தொடர்ந்து நடக்கும் உள்நாட்டு வன்முறையிலிருந்து தப்பி வெளியேறியவர்களின் எண்ணிக்கை உலக அளவில் எட்டாவது பெரியதாகும்.

காங்கோ மக்கள் குடியரசிலிருந்து வெளியேறிய மக்கள் உள்நாட்டு அகதிகள் முகாமொன்றில் ஆடைகளை வாங்குவதற்காகக் காத்திருக்கின்றனர்.

அஃப்கானிஸ்தான் காபூலிலுள்ள உள்நாட்டு அகதிகள் முகாமொன்றில் சுற்றித்திரியும் சிறுவர்கள். 2018-ம் ஆண்டின் இறுதிவாக்கில் 21 இலட்சம் மக்கள் உள்நாட்டு அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.

லெபனானிலுள்ள ஒரு முறைசாரா முகாமில் உள்ள சிரிய அகதிகள். அரசாங்க மதிப்பீடுகளின்படி, 2018-ம் ஆண்டின் இறுதியில் சுமார் 15 இலட்சம் அகதிகள் அங்கே வாழ்கின்றனர். போரில் இருந்து தப்பிச் செல்லும் சிரியர்களுக்கு முதன்மையான நாடு இதுவாகும்.

தெற்கு சூடான் தலைநகரின் புறநகர் பகுதியில் உள்நாட்டு மேங்கடீன் அகதிகள் முகாமில் தண்ணீர் சேகரிக்க வரிசையில் நிற்கும் உள்நாட்டு அகதிகள். சென்ற ஆண்டின் கணக்குப்படி சுமார் 19 இலட்சம் உள்நாட்டு அகதிகள் இங்கே இருந்தனர்.

எரித்திரியா மற்றும் பங்களாதேசைச் சேர்ந்த அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள். ஐரோப்பா செல்வதற்காக லிபியாவிலிருந்து கிளம்பிய நெரிசல் மிகுந்த ஒரு மரப்படகில் இருந்து மீட்கப்படுவதற்காக காத்திருக்கிறார்கள்.

கொலம்பியாவில் பாம்ப்லொனாவில் (Pamplona) உள்ள ஒரு பெட்ரோலிய நிலையத்தில் ரொட்டி மற்றும் காஃபிக்காக காத்திருக்கும் வெனிசுலா அகதிகள். 2018-ம் ஆண்டின் இறுதிவரை 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.


– சுகுமார்
நன்றி : அல்ஜசீரா

கியூபாவில் ஒருவர் பணக்காரனாக உருவாகவே முடியாதா ?

1

கலையரசன்
ன்னுடன் கூட வேலை செய்யும் கியூபா நாட்டவர் ஒருவர், தனது நாட்டு நிலைமை பற்றி நிறைய சுவையான தகவல்களை தெரிவித்தார். அவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

*****

கியூபாவில் பொதுவாக சம்பளம் குறைவுதான். எனது சக தொழிலாளி அங்கு ஓர் ஆங்கில ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவருக்கும் அதிக சம்பளம் இல்லை. அதனால் தனது ஆங்கில மொழிப் புலமையை பயன்படுத்தி சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்தார். அங்கு கொடுக்கும் சம்பளம் அதிகம்தான். அது வாழ்க்கைக்கு திருப்தியாகப் போதும். ஆனால் எல்லோருக்கும் சுற்றுலாத் துறையில் தொழில் செய்யும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக, சிறு தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுகின்றனர். கடை வியாபாரம், முடி திருத்துதல் போன்ற பல சேவைத் துறைகளில் திறமை உள்ளவர்கள் சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கலாம். அவர்கள் தமது வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் அரசுக்கு வரியாகக் கட்ட வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

எந்தக் காலத்திலும், சிறு தொழில் முனைவோர் பெருமளவு பணம் திரட்டி கோடீஸ்வரனாக வர முடியாது. உலகில் எந்த நாட்டிலும் இந்த அதிசயம் நடப்பதில்லை. ஆகவே இத்தகைய சிறு தொழில் முதலாளித்துவத்தால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இன்று வரையில் பெரிய நிறுவனங்களில் முதல் இடும் ஏகபோக உரிமை கியூப அரசிடம் மட்டுமே உள்ளது.

இருப்பினும் சிறு தொழில் முனைவோர் தமக்கு வரும் இலாபப் பணத்தைக் கொண்டு கியூபாவில் வசதியாக வாழ முடியும். அதிகபட்சம் சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளலாம். அது சரி, சிலநேரம் யாராவது ஓர் அதிர்ஷ்டசாலி அதிக இலாபம் சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் என்ன செய்யலாம்? அப்படியானவர்கள் தமது வீட்டையும், வியாபாரத்தையும் வேறு யாருக்காவது விற்று விட்டு வெளிநாடொன்றுக்குச் சென்று குடியேறி விடுவார்கள்.

அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஒருவர் எந்தளவு பணம் வைத்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. கையில் உள்ள பணத்தைக் கொண்டு அதிகபட்சம் காணி, வீடு, நகை, கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை வாங்கி வைத்திருக்கலாம். ஆனால், மாளிகை போன்ற வீடு கட்டி, ஊதாரித்தனமாக செலவழித்து பணக்காரத்திமிர் காட்டுவோர் கியூபாவில் வாழ முடியாது. அதாவது, சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வந்தாலும், அது எல்லை மீற விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

கியூபா முழுமையான சோஷலிச நாடு அல்ல. அந்நாட்டின் பொருளாதாரம் சில கட்டுப்பாடுகளுடன் முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. சுருங்கக் கூறின், முதலாளித்துவ உற்பத்தி சாதனங்கள் உருவாக்கும் செல்வம், அனைத்து மக்களுக்குமான சோஷலிச நலத் திட்டங்களில் முதலிடுவதற்கு உதவுகின்றது. கியூபாவுக்கு உலகவங்கி, IMF என்று யாருமே கடன் கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
கிரனடா : புரட்சியின் நாயகன் மொரிஸ் பிஷப் !
♦ ஃபிடல் காஸ்ட்ரோ – சிறப்புக் கட்டுரை !

கியூபா இன்னமும் ஓர் ஏழை நாடுதான். இருப்பினும் உலகில் பிற ஏழை நாடுகளில் உள்ள ஏழை மக்களைப் போன்று, கியூபாவில் யாரும் பட்டினி கிடப்பதில்லை. தெருவில் அல்லது குடிசையில் வசிப்பதில்லை. இலங்கையை விட சற்றுப் பெரிதான கியூபாத் தீவின் சனத்தொகை பத்து அல்லது பதினொரு மில்லியன்கள். இருப்பினும் அந்நாட்டில் ஒருவர் விடாது அனைவருக்குமான அத்தியாவசிய தேவைகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

அதாவது, எல்லோருக்கும் வசிப்பதற்கு ஒரு வீடு இருக்கிறது. தண்ணீர், மின்சாரக் கட்டணம் மிகவும் குறைவு. பிள்ளைகள் படிப்பதற்கு எந்த செலவும் இல்லை. பல்கலைக்கழகம் வரை கல்வி இலவசம். மருத்துவம் இலவசம். அது மட்டுமல்ல, எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசு உணவுப் பொருட்களுக்காக பெருமளவு மானியம் ஒதுக்குகின்றது.

அரிசி, சீனி, மாவு, எண்ணை, மரக்கறி, இறைச்சி எல்லாம் அரசு கடைகளில் மிக மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். அதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் முத்திரைகள் அல்லது கூப்பன்கள் கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த உணவுப் பொருட்கள் அதிகபட்சம் இரண்டு கிழமைகள் தாராளமாகப் போதும். மிகுதி நாட்களுக்கு தேவையென்பதை அறிந்து மிச்சம் பிடிக்க வேண்டி இருக்கும். அல்லது சில பொருட்கள் தேவைக்கு அதிகமாக இருந்தால், அவற்றை அயலவருடன் பண்டமாற்று செய்து கொள்ளலாம்.

அயலவருக்கு இடையிலான பண்டமாற்று வணிகம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. பண்டமாற்று செய்ய எதுவும் இல்லாவிட்டாலும், காசு கொடுத்தும் ஒரு பொருளை வாங்கலாம். உதாரணத்திற்கு, ஒரு கிராமத்தில் ஒருவர் கோழிப் பண்ணை வைத்திருந்தால், அவரிடம் கோழி, முட்டை வாங்கலாம். வீட்டுத் தோட்டத்தில் மாமரங்கள் வைத்திருப்பவரிடம், மாம்பழங்கள் வாங்கலாம். இப்படியான வணிகமும் அரசால் அங்கீகரிக்கப்பட்டதுதான். ஆனால், பிரச்சினை என்னவென்றால் இவற்றை விற்பவர்கள் சந்தையை வைத்து பொருட்களின் விலையை தீர்மானிக்கிறார்கள். அதாவது அந்த ஊரில் மற்றவர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு விற்கிறார்கள் என்பதை விசாரித்துவிட்டு, அயல்வீட்டுக் காரரும் தனது கோழியை அதே விலைக்கு விற்பார்.

அதை விட, கியூபாவில் சட்டவிரோதமான சந்தையும் (Black Market) உள்ளது. அங்கே எல்லா விதமான பொருட்களும், சேவைகளும் விற்கப்படுகின்றன. இந்த கறுப்புச் சந்தை இயங்குவது அதிகாரிகளுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாத மாதிரி இருப்பார்கள். எங்காவது யாராவது நிறையப் பணம் வைத்திருப்பது கேள்விப்பட்டால் மட்டும் தலையிடுவார்கள். இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று விசாரித்து கறுப்புச் சந்தை வணிகத்தில் சேர்ந்த இலாபம் என்று கண்டுபிடித்து விடுவார்கள். அதற்குப் பிறகு அது ஒரு குற்றமாகக் கருதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

படிக்க:
திபெத் மடாலய மர்மங்கள் | கலையரசன்
♦ மத்திய பட்ஜட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் | மக்கள் அதிகாரம்

அண்மைக் காலத்தில், ரவுல் காஸ்ட்ரோ அரசாங்கம் கொண்டு வந்த முதலாளித்துவ பொருளாதார சீர்திருத்தம் காரணமாக, சிறு தொழில் முனைவோர் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்கும் வழக்கமும் வந்துவிட்டது. உதாரணத்திற்கு, ஒருவர் தனது வீட்டைத் திருத்தி, விரிவுபடுத்தி கட்டி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட முடியும். ஆனால், அது சர்வதேச தரத்துடன் கூடிய தங்குமிடமாக தயார்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்தத் தரம் இல்லா விட்டால், அதிகாரிகள் அனுமதி கொடுக்க மாட்டார்கள். அதனால், சில இடங்களில் இலஞ்சம் கொடுப்பதும் நடக்கிறதாம்.

கியூபாவில் சோஷலிசம் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில், அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் கூட சாதாரண வீடுகளில்தான் வசித்தார்கள். பணக்காரர் என்று யாரும் இருக்கவில்லை. இருந்தாலும், யாரும் தம்மிடம் பணம் இருப்பதாக வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஒருவர் தன்னை மற்றவர்களை விட வசதிபடைத்தவராக காட்டிக் கொள்வது அவமானத்திற்குரிய செயலாக கருதப்பட்டது. அந்த நிலைமை இன்றைக்கும் நீடிக்கிறது.

ஆனால், தற்போதைய முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு பின்னரான சமூக நிலைமையில் சில மாற்றங்கள் வந்துள்ளன. பல்வேறு முதலாளித்துவ உற்பத்தி நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்ட அரசாங்க அல்லது இராணுவ அதிகாரிகள் சிலரிடம் தாராளமாக பணம் புழங்குகிறது. அவர்கள் அந்தப் பணத்தை வைத்து கியூபாவில் ஆடம்பரம் காட்டுவதில்லை. ஆனால், அவர்களது பிள்ளைகள் பாரிஸ், லண்டன் என்று ஐரோப்பிய நகரங்களுக்கு சென்று தம்மிடம் உள்ள பணத்தை செலவழிக்கிறார்கள்.

(தொடரும்)

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

 

மக்களிடையே நெருங்கிய பிணைப்பை பராமரிக்கும் பாசிஸ்டு கட்சி !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 20

டோக்ளியாட்டி

பாசிஸ்டுக் கட்சியின் உட்கட்சி வாழ்க்கை செத்துவிட்டது என்றே கூறலாம். பெயரளவுக்கு ஆண்டுதோறும் உறுப்பினர்களின் பொதுச்சபைக் கூட்டம் நடைபெறுகிறது. அங்கு படாடோபமாக நிகழ்த்தப்படும் பல உரைகளை உறுப்பினர்கள் செவிமடுத்துக் கேட்கின்றனர். அவர்கள் பழைய இயக்கத்தின் பணியை அங்கீகரிக்கின்றனர். புதிய இயக்கத்தின் பொறுப்புகளை உறுதி செய்கின்றனர். ஆனால் இது வெறும் சம்பிரதாயம்தான். ஜனநாயக ரீதியான தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

எனினும் பாசிஸ்டுக் கட்சியில் அறவே உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று கருதுவது தவறு. ஏன்? ஏனென்றால் பாசிஸ்டுக் கட்சி அணிகளிடையே அதிலும் குறிப்பாக மத்திய மட்டத்திலுள்ள அணிகளிடையே கீழ்மட்டத்திலுள்ள ஊழியர்களுடன் இடையறாது தொடர்பு கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். மேலும் தாங்கள் அன்றாடம் தொடர்பு கொண்டிருக்கும் வெகுஜனங்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள் அவர்கள்.

அர்பினிதி (leandro arpinati)

இத்தகைய அணிகளிடமிருந்துதான் கருத்து எதிரலைகள் வருகின்றன. எந்த மார்க்கமாக, எந்த வழியில் அவை வருகின்றன? முரண்பாடான முறையில் அவை வருகின்றன. நிலைமை மிகவும் முற்றிய பிறகுதான் இந்தப் பிரதிபலிப்புகளை ஒருவர் காணமுடியும். பொலோக்னாவில் அர்பினிதி ¹¹ விவகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கோஷ்டியினர் அதிகாரப்பூர்வமான வேலைத் திட்டத்துக்கு மாற்றாக வேறொரு திட்டத்தை முன்வைக்கத் துணிந்தபோது, அதனை பாசிசத்தால் மேற்கொண்டும் சகித்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டபோதுதான் இந்த விவகாரம் அம்பலத்துக்கு வந்தது.

இந்த நிகழ்வுப் போக்கு கவனிக்கப்படாமலேயே நடைபெற்று வருகிறது. கிராமப் பகுதிகளிலுள்ள பாசிஸ்டுக் கட்சி அமைப்புகளில்தான் இது அநேகமாக விகசிதமாகத் தெரிகிறது. ஏனென்றால் இங்குதான் மக்களின் அதிருப்தி அதிகம்; இங்குதான் பாசிஸ்டு அமைப்புகள் வெகுஜனங்களுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன; இங்குதான் நகரங்களில் இருக்கும் அளவுக்கு காவல்துறையின் உதவி அதிகமில்லை. மக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ள எமிலியாவில் வெகு அண்மையில் மிகப் பெருமளவுக்கு கலக உணர்ச்சியும் கொந்தளிப்பும் அதிகரித்தற்கு இதுவே காரணம்.

கடைசியாகக் குறிப்பிடப்பட்ட இந்த நிகழ்வு 1933-34-ம் ஆண்டில் நடைபெற்றது. இதனால் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் திட்டத்துக்கு பாசிசம் ஓராண்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டியதாயிற்று. வருடாந்தர அழைப்பின்போதுதான் உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் நடைபெறும். இதுதான் வழக்கமாக நடைபெறும் வழிமுறை. இதற்கு மத்தியில் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்தான் கட்சியின் கதவுகள் திறந்துவிடப்படும். இன்று அவை மூடப்பட்டுவிட்டன. 1933-34-ல் உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்றது. அப்போது தொழிலாளர்களைக் கட்சிக்குள் ஈர்க்க பெருமுயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது.

படிக்க:
மேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி ?
தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !

உறுப்பினர் சேர்க்கும் இந்த இயக்கத்துக்குப் பலன் கிட்டிற்று என்பதை மறுக்க முடியாது. உறுப்பினர்கள் எண்ணிக்கை 7 இலட்சம் முதல் 8 இலட்சம் அதிகரித்தது. தொழிலாளர்கள் பாசிஸ்டுக் கட்சியில் சேரும் சம்பவங்கள் ஏற்கெனவே அங்குமிங்குமாக நடைபெற்று வந்தன. 1932 ஆரம்பத்தில் ஃபியட்டிலும் வேறு சில தொழிற்சாலைகளிலுமுள்ள பாசிஸ்டுக் கட்சியில் தொழிலாளர்கள் சேர்ந்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனினும் 1934-ம் ஆண்டில்தான் உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் மிகப் பெரும் பாய்ச்சலைக் கண்டது. ஆண்டுத் தொடக்கத்தில் உறுப்பினர் எண்ணிக்கை 10,99,000 ஆக இருந்தது. அதே ஆண்டு இறுதி வாக்கில் 18,50,000-ஐ எட்டிற்று: அதாவது கிட்டத்தட்ட 8 இலட்சம் அதிகரித்தது. ஏராளமான ஆலைத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர் என்பதில் ஐயமில்லை.

பாசிஸ்டுக் கட்சி இவ்விதம் புது வலுவும் உத்வேகமும் பெற்றதன் விளைவாக அதிகார வர்க்க ஜபர்தஸ்துகள் முடுக்கிவிடப்பட்டன. வெகுஜனங்களின் வாய்களுக்குப் பூட்டுப் போடப்பட்டது. ஆனால் அதே சமயம் வேறொரு விளைவும் ஏற்பட்டது. கட்சியில் ஓரளவு உட்கட்சி ஜனநாயகம் தலைதூக்கிற்று. நகர்ப்புறங்களை விடக் கிராமப்புறங்களில்தான் இது துலாம்பரமாகத் தெரிந்தது.

இந்த வளர்ச்சிப் போக்கின் முடிவுக்கு இன்னும் நாம் வந்துவிடவில்லை. நம் முன்னால் 18 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட பாசிஸ்டுக் கட்சி இருக்கிறது. இத்தாலிய மக்களின், இத்தாலிய பூர்ஷுவாக்களின் முக்கியமான பகுதியினர் அதில் அங்கம் வகிக்கின்றனர். வேறு எந்த இத்தாலிய பூர்ஷுவா அமைப்பும் இப்போது இல்லை. பாசிஸ்டுக் கட்சியில் உறுப்பினரல்லாத ஒரு பூர்ஷுவாவைக் கூடக் காண்பது மிகவும் அபூர்வம். பூர்ஷுவாக்களின் பழைய அரசியல் வடிவங்கள் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டன.

இது பூர்ஷுவாக்களுக்குப் புது வலுவை அளித்துள்ளது. கட்சியானது ஒரு கட்சிக்குரிய இயல்பை இழந்துவிட்டாலும் இத்தாலிய பூர்ஷுவாக்களின் சித்தாந்தத்தை அது பெரிய அளவுக்கு ஒன்றுபடுத்தியுள்ளது. இது கட்சிக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதை மறந்துவிடக் கூடாது; இது மிக முக்கியமானது.

தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகப் பகிரங்கமாகச் சர்வாதிகாரத்தைப் பிரயோகிக்கக் கூடிய ஒரு புது வகையான அரசியல் கட்சியைப் பாசிஸ்டுக் கட்சியில் இத்தாலிய பூர்ஷுவாக்கள் காண்கின்றனர். மேலும், இதர பல அமைப்புகள் மூலமும் பிணைப்புகள் மூலமும் எக்காலத்திலும் தொழிலாளர் வர்க்கத்தினர் மீது ஆயுதந்தாங்கிய நிர்ப்பந்தத்தைப் பிரயோகிக்கக் கூடிய ஆற்றலை இத்தாலியப் பூர்ஷுவா வர்க்கத்தினருக்கு அளிக்கும் ஓர் அமைப்பாக பாசிஸ்டுக் கட்சி பரிணமித்திருக்கிறது. பாசிஸ்டுக் கட்சி தோற்றுவித்துள்ள படையும் பல மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் பாசிஸ்டுக் கட்சி ஓர் ஆயுதந்தாங்கிய கட்சி என்ற இயல்பையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. பாசிஸ்டுக் கட்சியின் படை கரபினியரி படைப்பிரிவு போன்றதோ அல்லது இராணுவத்தைப் போன்றதோ அல்ல. எனினும் அது இராணுவத்தின் அம்சத்தை ஓரளவுக்குப் பெற்றிருக்கிறது. கட்சி தனது படையின் மூலம் வெகுஜனங்களின் மிகப் பரந்த பகுதியினரைக் கட்டுப்படுத்தி வருகிறது. இது சர்வாதிகாரத்தின் வலிமைக்கு பிரதான அடித்தளங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.

எனினும் இங்கு கூட சில முரண்பாடுகள் தென்படுகின்றன. அரசியல் வாழ்க்கை இல்லாத காரணத்தால் படைக்குக் குறிப்பிட்டளவு திட்பத்தையும் உறுதியையும் அளிக்க இயலாமல் இருக்கிறது. படைக்குள் நாம் குறிப்பிட்டளவு பணியை மேற்கொள்வதற்கு இது நமக்கு வாய்ப்பளிக்கிறது. எனினும் இந்த முரண்பாடுகளைக் காணாதிருப்பதும், பாசிஸ்டுக் கட்சி ஒரு வலுவான அம்சத்தைக் கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளாதிருப்பதும் தவறாகும்.

பாசிஸ்டு கட்சி தனது படையின் மூலம் வெகுஜனங்களின் மிகப் பரந்த பகுதியினரைக் கட்டுப்படுத்தி வருகிறது. இது சர்வாதிகாரத்தின் வலிமைக்கு பிரதான அடித்தளங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.

அடிமட்டத்தில், பாசிஸ்டுக் கட்சியில் உறுப்பினராக இருப்பது ஒருவித பிணைப்பை, ஏறத்தாழ ஒரு சித்தாந்தப் பிணைப்பை, ஸ்தாபனப் பிணைப்பைப் பெற்றிருக்கிறது. ஒருவகையில், கட்சியில் சேர்ந்துள்ள தொழிலாளர்கள் ஒருவிதமான இராணுவ சீருடையை அணிந்திருக்கின்றனர் எனலாம். இந்தப் படைவீரனும் இன்றைய நிலைமை குறித்து அதிருப்தி அடைந்திருக்கிறான். ஆனால், அவன் ஒரு படைவீரன், அவனுக்கென்று ஒரு சீருடை இருக்கிறது. எனவே, அவன் பணிகிறான், கீழ்ப்படிகிறான். ஒரு புரட்சிகர நெருக்கடி தோன்றினாலொழிய அவன் எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய முடியாது.

நமது கட்சி விடாஉறுதியோடு, அயராது சோராது பணியாற்றினால்தான் இந்தப் பிணைப்புகளைத் துண்டிக்க முடியும். இந்தப் பிணைப்புகள் தாமாகவே நொறுங்கி விழும் என்று நினைப்பது தவறு. இந்தப் பிணைப்பை எப்படித் துண்டிக்க முடியும் என்பதை எப்போதும் நாம் புரிந்து கொள்ளாததே அடித்தளத்தில், தொழிற்சாலைகளில் நாம் செய்யும் பணிக்கு ஓரளவு இடையூறாக இருக்கிறது. நமது கோஷங்களை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது என்பதை நாம் எப்போதுமே அறியாதிருக்கிறோம். இந்த வகையான சீருடையை அணிவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் விஷயத்தில் நமது குறிக்கோள்கள் சரிவர வரையறுத்துக் கொள்ளத் தெரியாதவர்களாகவும் இருக்கிறோம். இதேபோல், அவர்களது மனநிலையைப் புரிந்து கொள்ளாதவர்களாகவும், அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடச் செய்யும் பாதையைப் புரிந்து கொள்ளாதவர்களாகவும் நாம் இருக்கிறோம்.

சட்டரீதியான சாத்தியக்கூறுகளை நடைமுறையில் பயன்படுத்திக் கொள்ளும்போது இந்த அம்சத்தை நாம் மனதிற்கொள்ள வேண்டும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

11. லியான்ரோ அர்ப்பினதி (1892-1945) 1929 செப்டம்பர் முதல் 1933 மே வரை உள்துறை உதவிச் செயலாளராக இருந்தார். பி.என்.பி.லிருந்து இவரும் இவரைப் பின்பற்றும் சிலரும் வெளியேற்றப்பட்டனர். முசோலினிக்கு எதிராகச் சதி செய்ததாக குற்றம் சாட்டி அவர் ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பொலோக்னா அருகில் 1945 ஏப்ரல் 22-ம் தேதி கொரில்லாக்களால் கொல்லப்பட்டார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

மத்திய பட்ஜட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் | மக்கள் அதிகாரம்

பத்திரிகைச் செய்தி

மத்திய பட்ஜெட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் !

06.07.2019

னித்த பொறுப்புடன் செயல்படும் முதல் பெண் நிதியமைச்சர் என்ற ‘பெருமை’யுடன் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள மத்திய நிதி நிலை அறிக்கை ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்’ என்பது போலத்தான் இருக்கிறது.

45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயத்தில் தீராத நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை, பெருகிவரும் ஏற்றத்தாழ்வு, தொழில்துறை மந்தம், சிறு தொழில் நசிவு, வர்த்தகப் பற்றாக்குறை, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் நெருக்கடி என்று மூச்சுத்திணறும் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் சிக்கலில் தள்ளிவிடும் நிதிநிலை அறிக்கையே இது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் மதிப்பீடுகள் எல்லாம் முழுமையாக நிறைவேறக் கூடியவை அல்ல என்பதை மனதிற்கொண்டே நாம் பரிசீலிக்க வேண்டும். உதாரணமாக கடந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட வரி வருவாய் குறைவாகவே வசூலானது. இராணுவம் உள்ளிட்ட நிர்வாகத்திற்கான செலவை அரசு சிறிதும் குறைக்காது. எனவே வருவாய் குறைந்தால் முதலில் பலியாவது மக்கள் நலத்திட்டங்கள்தான்.

கிராமங்கள் ஏழைகள், விவசாயிகள் இவர்களை மையமாகக் கொண்டுதான் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதியமச்சர் பேசியிருக்கிறார். இது ஒரு ஏமாற்று. விவசாயத்திற்கு ரூ. 1,51,518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 78% அதிகம் என்கிறார்.

இதில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஆறாயிரம் உதவித்தொகை வழங்க ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 75,000 கோடியைக் கழித்தால் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பது கடந்த ஆண்டைவிட ரூ. 21,686 கோடி குறைவு. இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளின் விளைபொருளுக்கு ஆதரவு விலைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை வெறும் ரூ. 3,000 கோடி. ‘சோளப் பொறி யானையைப் பசியை எப்படித் தீர்க்கும்?’

100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்ற ஆண்டை விட ரூ. 1,054 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. 27% விவசாயிகளும், 28% சாகுபடிப் பரப்பும்தான் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதிப்பேரின் கதி என்ன?

படிக்க:
பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்
♦ வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !

செலவில்லாத விவசாயம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியத்தை ஒழித்துக்கட்டும் சதித்திட்டத்திற்குத்தான் இப்படியொரு அழகான பெயர்.

45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மையைப் போக்க, புதிய வேலைவாய்ப்பை உருவாக்க ஒதுக்கியிருக்கும் தொகை ரூ. 4,583 கோடி. இது எத்தனை பேருக்கு வேலை வழங்கும் என்பது நிர்மலாவுக்கே வெளிச்சம். வேலைவாய்ப்பை உருவாக்க வாய்ப்புள்ள மூலதனச் செலவு சென்ற ஆண்டைவிட ரூ. 50,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வேலைவாய்ப்பில் மிகப் பெரும் பங்கு வகிக்கும் சிறு தொழில்களைப் பாதுகாக்க எந்தத் திட்டமும் இல்லை. 2 சத வட்டிச் சலுகைக்கு வெறும் ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் துறை எப்படி வளரும்? வாராக்கடனால் திணறும் வங்கிகள் எப்படிக் கடன் கொடுக்கும்?

கிராமப்புற மேம்பாடு, பள்ளிக்கல்வி, சமூக நலம் ஆகிய துறைகளுக்குக் கடந்த ஆண்டை விட நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறையில் உருப்படியான திட்டமேதுமில்லை.

44 தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்து 4 நெறிமுறைத் தொகுப்பாக மாற்றுவது என்ற அறிவிப்பின் மூலம் போராடிப் பெற்ற உரிமைகளை பறித்து, தொழிலாளிகளை கார்ப்பரேட் முதலாளிகளின் கொத்தடிமைகளாக்கும் துரோகத்தையும் அரங்கேற்றியிருக்கிறார் நிதியமைச்சர். மேலும் இருக்கும் வாய்ப்பு பறிபோகும் அபாயம் அதிகரிக்கும்.

அதே நேரத்தில் அந்நிய, தனியார் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குக் கதவுகளை திறந்து விட்டிருக்கிறார். இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீடு, விமானப் போக்குவரத்து, ஊடகத்துறை, இரயில்வே ஆகியவற்றில் வெளிநாட்டு மூலதனம் அனுமதிக்கப்படுகிறது. இருக்கும் பொதுத்துறைகளை அழிக்கும் நோக்கில் ரூ. 1,05,000 கோடிக்கு பங்குகளை விற்கத் திட்டமிட்டிருக்கிறார்.

ரிசர்வ் வங்கியின் சேமிப்பிலிருந்து ரூ. 90,000 கோடியை உருவுவதன் மூலம் அந்த நிறுவனத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறார். 99% தொழில் நிறுவனங்களுக்கு நிறுவன வரியைக் குறைத்திருக்கிறார். எனவே கார்ப்பரேட், தனியார் முதலாளிகளை வாழவைக்க உழைக்கும் மக்களை வதைக்கும் மக்கள் விரோத பட்ஜெட். அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த பட்ஜெட்டை வரவேற்றிருப்பதே, இது யாருக்கான பட்ஜெட் என்பது தெளிவாகும்.

தோழர் காளியப்பன்
மாநில பொருளாளர்

அர்ச்சனை, உண்டியல் என அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி போதும் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 10

மக்கு நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண்படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன் ! ஊன் வேண்டாத சாமி! ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல் அலங்காராதிகள், அப்பம் பாயசம் அக்காரவடிசில் கேட்காத சாமி! அங்கே, இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை, உண்டியல் என்று கூறி, அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும். நம்மிடமிருந்து தியானத்தை பெறட்டும். அருளைத் தரட்டும்; நம்மிடமிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்குத் தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவே, நாம் நம்மை இந்து அல்லவென்று கூறுகிறோம்.

ஆள் நடமாட ஓர் உலகம், ஆவி உலவ மற்றோர் உலகம்; இந்திரன் இருக்க ஓர் உலகம், நாகன் தங்க ஓர் உலகம் ; மேலே ஏழு, கீழே ஏழு எனப் பதினான்கு உலகங்களாம்! அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதாளம் என ஏழாம்! பூலோக, புவலோக, சுவலோக, சனலோக, தபலோக, மகலோக, சந்திரலோகம் என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டு ஏட்டிலே.

நமக்கு இவை வேண்டாம்; நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும்; நன்செயும், புன்செயும், சாலையும், சோலையும், வாவியும் நதியும், மக்களும் சுபீட்சமும் இருக்கட்டும். காமதேனுவும் கற்பக விருட்சமும், ரம்பையும் ஊர்வசியும் இருக்கிற உலகத்திலே, டாக்டர் வரதராஜுலுவே உலவட்டும்! முடிசூட்டிக் கொள்ளட்டும்! நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாலு ஜாதியிலே நாம் கீழ் ஜாதி என்ற கொடுமை இன்றி “நாமார்க்குங் குடியல்லோம்” என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தில்தான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.

நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக யாகப் புரட்டுகள், புரோகிதப் பித்தலாட்டம், மனுக் கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை ‘இந்து’ என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்?

இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக் கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதை விட்டு, மாளவழி தேடிக்கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத் திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்; இழிவைத் தேடார்!

படிக்க:
மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !
முசுலீம்களுக்கு விடிவைத் தருமா மத்தியப் பிரதேச அரசின் பசுவதை சட்டதிருத்தம் ?

டாக்டர் நாயுடு, ஆரியராவது திராவிடராவது என்று கூறும் அவசரவாதி. எல்லாம் கலந்துவிட்டது என்று பேசும் சமரசவாதி. ஆராய்ச்சியாளர்கள் அவர் போல், அரசியல் ஊஞ்சலில் உள்ளவர்களல்லர்; அவர்களின் அபிப்பிராயம் படிப்பாலும் பண்பாலும், விருப்பு வெறுப்பு அற்ற விவேக விளக்கத்தாலும் உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உயர் நோக்கத்தாலும் உண்டாவன. இந்துமகா சபையிலே சேர்ந்தோம்; எனவே இனி அதற்குத் தக்கபடி கருத்தைத் திருத்தி அமைப்போம் என்ற முறை டாக்டர் வரதருக்குப் பிரியமாக இருக்கலாம். அறிஞர், தமது அபிப்பிராயத்தை அப்படி விபச்சார விடுதிக்கு அனுப்பிட மாட்டார்கள்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

கொடிய வேதனை இருக்கும்போது சிரிப்பதும் கிண்டல் செய்வதும் பயங்கரம் அல்லவா ?

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 8-ஆ

“ஆமாம், எதற்காக, எதற்காக நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? இவ்வளவு கொடிய வேதனை இருக்கும் போது சிரிப்பதும் கிண்டல் செய்வதும் பயங்கரம் அல்லவா? உங்களுக்கு வலிக்கிறது என்பதை நினைக்கையில் என் நெஞ்சு சுரீர் என்றது. தனி வார்டில் இருக்க ஏன் மறுத்துவிட்டீர்கள்?”

இவ்வாறு கூறியவள், அழகிய தோற்றமும் இதமான இனிமையும் வாய்ந்த வார்டுத்தாதி க்ளாவ்தியா மிஹாய்லவ்னா அல்ல போலவும் யாரோ அசரீரி போலவும் அலெக்ஸேக்குத் தோன்றியது. மன எழுச்சி பொங்க எதிர்ப்பு தெரிவித்த அந்த மாது பேசினாள். அவளுடைய குரலில் துயரம், ஒருவேளை இன்னும் சோக உணர்ச்சி, ஒலித்தது. மெரேஸ்யெவ் கண்களைத் திறந்தான். சாந்தமும் அன்பும் சுடர்ந்த விழிகள் கொண்ட கமிஸாரின் வெளிறி ஊதிய முகமும், மருத்துவத்தாதியின் மென்மையான பெண்மைப் பாங்குள்ள பக்கத் தோற்றமும் மப்ளரால் மறைக்கப்பட்டிருந்த விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவனுக்குத் தென்பட்டன. பின்புறத்திலிருந்து பட்ட வெளிச்சத்தில் தாதியின் செழித்து வளர்ந்த பொன் கூந்தல் மின்னி ஒளிர்ந்தது. தான் செய்வது சரியல்ல என்று உணர்ந்ததும் அவள் மீதிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.

“அடா-டா-டா, ஸிஸ்டர்…. கண்ணீ ர் விடுகிறீர்களே இப்படி! ப்ரோமைட் அருந்தலாமா? ஊம்?” என்று சிறுமியிடம் சொல்வது போல அவளிடம் சொன்னார் கமிஸார்.

“மறுபடியும் கேலி செய்கிறீர்கள். என்ன மனிதர் நீங்கள்! இது விகிருதம், தெரிகிறதா, அழ வேண்டிய சமயத்தில் சிரிப்பதும், தானே துண்டுதுண்டாகப் பிய்ந்து கொண்டிருக்கும் போது மற்றவர்களை தேற்றுவதும் நல்ல ஆள்தாம்! சொந்த விஷயத்தில் இப்படி நடந்து கொள்ளத் துணியாதீர்கள், உங்களுக்கு அந்த உரிமை கிடையாது….”

தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவள் நெடுநேரம் சத்தமின்றி அழுதாள். மேலங்கிகள் நடுங்கிய அவளுடைய மெல்லிய தோட்களை ஏக்கமும் பரிவும் ததும்ப நோக்கினார் கமிஸார்.

“நேரம் கடந்துவிட்டது, அருமைப் பெண்ணே. சொந்தக் காரியங்களில் இப்போது நான் எப்போதுமே தவறாகவே தாமதம் செய்தேன், நேரமே இல்லாதிருந்தது. இப்போதோ, முற்றிலும் நேரம் கடந்து விட்டது என்று தோன்றுகிறது.”

கமிஸார் பெருமூச்சு விட்டார். மருத்துவத் தாதி நிமிர்ந்து கண்ணீர் மல்கும் விழிகளுடன், ஆர்வம் பொங்கும் எதிர்பார்ப்புடன் அவரை நோக்கினாள். அவர் முறுவலித்தார், மறுபடி பெரு மூச்சுவிட்டார், பின்பு தமக்கு வழக்கமான நல்லியல்பும் ஓரளவு கிண்டலும் தொனிக்கும் குரலில் பேச்சைத் தொடர்ந்தார்.

படிக்க :
மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !
முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் !

“கேளுங்கள் ஒரு கதையை, சமர்த்துப் பெண்ணே. எனக்குச் சட்டென்று நினைவு வந்தது. இது நடந்தது வெகு காலத்துக்கு முன்பு, உள்நாட்டுப் போர் நாட்களில், துர்கிஸ்தானில். ஆம்… ஒரு குதிரைப் படைப் பிரிவு பஸ்மாச்சிகளை விரட்டிக் கொண்டு போயிற்று. ஒரு பாலைவனத்தை அடைந்தது. குதிரைகளோ, ருஷ்யப் பரிகள், மணலுக்குப் பழக்கப்படாதவை, எனவே விழத் தொடங்கின. திடீரென்று நாங்கள் காலாட்கள் ஆகிவிட்டோம். அப்போது கமாண்டர் முடிவு செய்தார் – சுமைகளை எறிந்து விட்டு துப்பாக்கிகளை மட்டும் எடுத்துக் கொண்டு கால்நடையாக பெரிய நகரத்துக்குப் போவது என்று. நகரமோ நூற்று அறுபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. நாங்கள் வெற்று மணலில் நடக்க வேண்டியதாயிற்று.

புரிகிறதா உங்களுக்கு? ஒரு நாள் நடந்தோம், இரண்டாம் நாள், மூன்றாம் நாள். வெயில் அனலாய் பொசுக்கிற்று. குடிக்க நீர் இல்லை. வாயில் தோல் வெடிக்கத் தொடங்கிவிட்டது. கால் கொதிக்கும் மணல். கால்களுக்கு அடியில் மணல் சரசரத்தது. பற்களுக்கிடையே கரகரத்தது, கண்களில் படிந்தது, தொண்டைக் குழியை நிறைத்தது. எங்களுக்குத் தாவு தீர்ந்து போய் விட்டது. ஒருவன் மணல் அலை மேல் விழுவான், தரையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அப்படியே கிடந்துவிடுவான். எங்கள் கமிஸாராக இருந்தவர் வலோதின் யாக்கோவ் பாவ்லவிச். பார்வைக்கு ஒடிந்து விழுந்து விடுவது போல இருப்பார். படிப்பாளி. வரலாற்று நிபுணர் அவர். ஆனால் உறுதிமிக்க போல்ஷெவிக். பார்க்கப் போனால் அவர்தாம் முதலில் தொய்ந்து விழுந்திருக்க வேண்டும். அவரோ, விடாது நடந்தார், ‘நகரம் இதோ வந்துவிடும், பக்கத்தில் தான் இருக்கிறது’ என்று எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். விழுந்து கிடந்தவர்களை ரிவால்வரைக் காட்டி, ‘எழுந்திரு, இல்லா விட்டால் சுட்டுவிடுவேன்’ என்று பயமுறுத்தினார்..,

“நாலாம் நாள். நகரம் இன்னும் பதினைந்தே கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தபோது, எல்லோருமே செத்துச் சாவடைந்து போனோம். கால்கள் பின்னின. குடிவெறி கொண்டவர்கள் போலத் தள்ளாடினோம். எங்கள் பின்னே காலடித்தடங்கள் காயமடைந்த விலங்கினது போன்று கோணல் மாணலாக இருந்தன. திடீரென்று கமிஸார் ஒரு பாட்டுப் பாடத் தொடங்கினார். அவருடைய குரல் மகா மோசம், பலவீனமானது. அவர் பாடத் தொடங்கியதும் பாடாவதியான, பழைய வீரர் பாட்டு. ஆனாலும் அந்தப் பாட்டை எல்லோரும் பாடினோம்! ‘அணிவகுங்கள்!’ என்று நான் கட்டளை இட்டேன், அடி வைப்பை ‘இடம், வலம்’ என்று கணக்கிட்டேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள் – இப்படி நடப்பது எளிதாக இருந்தது.”

“இந்தப் பாட்டுக்குப் பின் இன்னொரு பாட்டும் அப்புறம் மூன்றாவது பாட்டும் பாடப்பட்டது. வறண்டு வெடிப்புக் கண்ட வாய்கள், கொளுத்தும் வெயில் – அந்த நிலைமையிலும் ஆட்கள் பாடினார்கள்! புரிகிறதா? தெரிந்த பாட்டுக்களை எல்லாம் வழி நெடுக மறுபடி மறுபடி பாடிக் கொண்டு போனோம். ஒரு ஆளைக் கூட மணலில் விட்டுவிடாமல் நகரை அடைந்தே தீர்ந்தோம்…… பார்த்தீர்களா, எப்பேர்பட்ட விஷயம் என்று?”

“கமிஸார் என்ன ஆனார்?” என வினவினாள் கிளாவ்தியா மிஹாய்லவ்னா.

“கமிஸாருக்கு என்ன? இப்போதும் உயிரோடு சௌக்கியமாக இருக்கிறார். அவர் பேராசிரியர், தொல்பொருள் இயல் அறிஞர். வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட குடியிருப்புகளை தரைக்கு அடியிலிருந்து அகழ்ந்து எடுக்கிறார்கள். அந்த நடைப் பயணத்துக்கு பிறகு அவர் தொண்டை போய்விட்டது. கம்மிய குரலில் பேசுகிறார். அவருக்குக் குரல் எதற்காம்.? நல்லது.. போதும் அரட்டை.. நீங்கள் போங்கள், அருமை சகோதரி. இன்று இனி சாகமாட்டேன் என்று குதிரைப் படை வீரன் என்ற முறையில் வாக்குறுதி அளிக்கிறேன்.”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

மேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி ?

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்டு கட்சியின் படுதோல்விக்கும் பா.ஜ.க.-வின் வெற்றிக்குமான காரணங்கள் என்ன? 2014 மக்களவைத் தேர்தலில் 17.02% வாக்குகளையும் 2 இடங்களையும் கைப்பற்றிய பா.ஜ.க., இன்று 40.25% வாக்குகளையும் 18 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. 2014-ல் 30% வாக்குகளைப் பெற்று 2 இடங்களை மட்டுமே பெற்ற மார்க்சிஸ்டு கட்சியின் வாக்குவீதம் 6.28% ஆகச் சரிந்து விட்டது.

பா.ஜ.க.வும் திருணமுல் காங்கிரசும் போட்டி போட்டுக்கொண்டு மதவெறியைத் தூண்டியதால் ஏற்பட்ட மதரீதியான முனைவாக்கத்தின் காரணமாக ஜனநாயக உணர்வுக்கான வெளி இல்லாமல் போய்விட்டதாகவும், வாக்காளர்கள் அதற்குப் பலியாகிவிட்டதாகவும், இதுதான் தங்களது தோல்விக்குக் காரணமென்றும் கூறியிருக்கிறார் யெச்சூரி.

தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு பா.ஜ.க. திட்டமிட்டே முஸ்லிம் எதிர்ப்பு இந்துவெறியைத் தூண்டியது என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். ஆனால், எதிர்த் தரப்பிலிருந்து இந்து எதிர்ப்பு முஸ்லிம் மதவெறியும் தூண்டப்பட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. இது பா.ஜ.க.-வின் பக்கம் சாய்ந்து விட்ட பெரும்பான்மை சமூகத்தை தாஜா செய்து, மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவரும் பொருட்டு வேண்டுமென்றே உண்மையைத் திரிக்கின்ற தந்திரமாகும்.

மேற்கு வங்க பா.ஜ.க. வின் மாநிலத் தலைவர் திலிப் கோஷ் காரக்பூர் சதார் தொகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடத்திய ராம நவமி ஊர்வலம்.

மார்க்சிஸ்டுகளின் வீழ்ச்சியும் பா.ஜ.க.வின் வளர்ச்சியும் திடீரென்று இந்தத் தேர்தலிலோ, திருணமுல் ஆட்சிக்கு வந்ததன் விளைவாகவோ நடந்து விடவில்லை. மாறாக, மார்க்சிஸ்டுகளின் வீழ்ச்சிதான் மமதாவை ஆட்சியில் அமர்த்தியது. “நாடாளுமன்றத்தை வர்க்கப் போராட்டத்துக்கான கருவியாகப் பயன்படுத்தப் போகிறோம்” என்று தேர்தல் பங்கேற்புக்கு விளக்கம் சொல்லி, பிறகு தேர்தல் பாதை மூலமாகவும், தேர்தல் பாதைக்கு அப்பாற்பட்ட வடிவங்கள் மூலமாகவும் புரட்சியை நோக்கிச் செல்லப்போவதாகத் தமது சந்தர்ப்பவாதத்துக்குப் பொழிப்புரை கூறி, இறுதியில் சட்டமன்ற, நாடாளுமன்றப் பதவிகள் இல்லாமல் உயிர்வாழவே முடியாது என முதலாளித்துவக் கட்சிகளின் நிலைக்குத் தாழ்ந்து, ஊழல், கிரிமினல்மயம் உள்ளிட்ட எல்லாத் தீமைகளும் வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகளுக்குள் குடியேறிவிட்டன.

மூன்று பத்தாண்டுகள் வங்கத்தில் ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்டு கட்சி, அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து கொண்டு மக்களின் மீது அதிகாரம் செலுத்துகின்ற இன்னொரு ஒடுக்குமுறைக் கருவியாகவே மாறிவிட்டது. சிங்குர், நந்திகிராம் பிரச்சினைகளில் புத்ததேவ் அரசு புதிய தாராளவாதக் கொள்கையின் வெறி பிடித்த முகவராகச் செயல்பட்டது மட்டுமின்றி, கட்சி அணிகள் என்று கூறிக்கொண்ட குண்டர் படைகள் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே களத்தில் நின்றன.

இப்போராட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்துக்கு வந்த மமதாவின் கட்சி, அதனினும் கொடியது என்பதை விரைவிலேயே அனைவருக்கும் புரிய வைத்தது. கடந்த 8 ஆண்டுகளில் மார்க்சிஸ்டு கட்சியினர் பலரைக் கொலை செய்ததுடன், அவர்களது கட்சி அலுவலகங்களையும் திருணமுல் கட்சிக் குண்டர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.

படிக்க :
♦ பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்
♦ மேற்குவங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை

மமதா கட்சியினரின் ரவுடித்தனத்தை எதிர்கொள்ள இயலாத நிலையில்  இருந்த மார்க்சிஸ்டு கட்சியின் அணிகளும் சரி, மக்களும் சரி, “சட்டத்தின் ஆட்சி”யை யாரேனும் நிலைநாட்ட மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்த சூழல், வங்கத்தில் பா.ஜ.க. காலூன்றுவதற்கு மிகவும் பொருத்தமான தருணமாக அமைந்துவிட்டது.

“ஒழுங்கை” இந்துத்துவத்துடனும், “மதச்சார்பின்மையை” ரவுடித்தனத்துடனும் இணைத்துப் பெரும்பான்மை சமூகத்தை நம்ப வைப்பதில் சங்கப் பரிவாரம் வெற்றி பெற்று விட்டது. “மோடியின் ஆட்சி வந்தால், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும்” என்ற நம்பிக்கை நகர்ப்புற நடுத்தரவர்க்கதினரிடமே நிலவுவதாகப் பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அது மட்டுமல்ல, “தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு பா.ஜ.க.-வுக்கு வாக்களிப்பதும், அந்தக் கட்சியிலேயே சேர்ந்து விடுவதும்தான் தீர்வு” என்று மார்க்சிஸ்டு கட்சியினரே கருதியதன் விளைவுதான் மார்க்சிஸ்டு கட்சியினரின் வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க.வை நோக்கித் திரும்பியதற்குக் காரணமாகும்.

“கிராமப்புற ஏழை இந்துக்கள்தான் பா.ஜ.க.-வின் முக்கியமான சமூக அடித்தளம். இதை வைத்துப் பார்த்தால், முஸ்லிம்களின் ஆதரவு இல்லாத இடதுசாரிக் கட்சியைப் போல பா.ஜ.க. தோற்றமளிக்கிறது” என்று கிண்டலாக எழுதுகிறார், காவிப் பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா.

மே.வங்கத்தின் இந்த வீழ்ச்சி திடீரென்றும் நிகழ்ந்து விடவில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். -ஆல் நடத்தப்படும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் மாநிலம் முழுவதும் தோன்றியிருக்கின்றன. சங்கப் பரிவாரத்தின் பல்வேறு அமைப்புகளும் கிராமப்புறங்கள் முதல் பழங்குடி மக்கள் பகுதிகள் வரையில் மாநிலம் முழுவதும் எல்லா இடங்களிலும் பெருகியிருக்கின்றன. அந்த மாநிலத்தின் பண்பாட்டுக்கே அறிமுகமில்லாத ராமன் வழிபாடும், அனுமன் கோயில்களும் மாநிலம் முழுவதும் பெருகியிருக்கின்றன. ராமநவமி ஊர்வலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பஸிர்ஹாட், துலாகோரி ஆகிய இடங்களில் கலவரங்கள் நடந்திருக்கின்றன.

மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டத்திலுள்ள பஸிர்ஹாட் பகுதியில் நடந்த மதக் கலவரம். (கோப்புப் படம்)

மமதாவின் அரசு இவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, மார்க்சிஸ்டு கட்சியும் இந்துத்துவ பாசிசம் தலையெடுப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. எனவே, எந்தவிதத் தடையும் இல்லாமல் பார்ப்பன பாசிச சக்திகள் அங்கே வளர்ந்திருக்கின்றன.

வங்காளத்தின் மக்கள் தொகையில் 27% முஸ்லிம்கள் என்பதால், இந்து வெறியைத் தூண்டுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மே.வங்க முஸ்லிம்களில் பலர் சட்டவிரோதக் குடியேறிகள் என்றும் அவர்களை வங்கதேசத்துக்கு அனுப்பவேண்டுமென்றும் பா.ஜ.க. மேற்கொண்ட பிரச்சாரத்தையும் நடவடிக்கைகளையும் மமதா எதிர்த்த காரணத்தினால், மமதாவை முஸ்லிம் ஆதரவாளர் என்று பா.ஜ.க. முத்திரை குத்தியது.

பா.ஜ.க. வின் இத்தகைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் முஸ்லிம் எதிர்ப்பு இந்து வெறியைப் பரவச் செய்வதில் முக்கியப் பங்காற்றின. குறிப்பாக, மதச்சார்பற்றவர்களாகத் தங்களைக் கூறிக்கொண்ட வங்காளத்தின் இந்து நடுத்தர வர்க்கத்தினர், பண்பாட்டுரீதியாகவும், கருத்தியல்ரீதியாகவும் மிதவாத இந்துத்துவ கருத்துகளைக் கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். குறிப்பாக, புதிய தாராளவாதக் கொள்கைகளின் ஆதாயத்தை நுகர்ந்து, சமூக உணர்வை இழந்திருக்கும் நடுத்தர வர்க்கம் இந்துத்துவத்துக்கு எளிதில் பலியாகியிருக்கிறது.

படிக்க :
♦ தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !
♦ வட இந்தியர்கள் காந்தியையும் விரும்புகிறார்கள் ! மோடியையும் நேசிக்கிறார்கள் !

“மமதா பானர்ஜி பிறப்பால் முஸ்லிம் என்பதனால்தான், அவர் முஸ்லிம்களை ஆதரிக்கிறார்” என்று சங்கப் பரிவாரம் கிளப்பிவிட்ட மட்டரகமான பொய்ப் பிரச்சாரத்தை, உண்மை என்று கொல்கத்தா நகரின் படித்த இந்து நடுத்தர வர்க்கத்தினரே நம்பத்தொடங்கி விட்டனர் என்று கூறுகிறார் ஒரு மே.வங்கப் பத்திரிகையாளர்.

பெரும்பான்மைச் சமூகத்தின் மதரீதியான சாய்வைக் கண்டு அஞ்சிப் பின்வாங்குகிறது மார்க்சிஸ்டு கட்சி. விநாயகர் ஊர்வல எதிர்ப்பு, ராமராஜ்ய ரதயாத்திரை எதிர்ப்பு, ராமர் பால எதிர்ப்பு, இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு, சங்கராச்சாரி எதிர்ப்பு ஆகிய நடவடிக்கைகள் தமிழகத்தில் நடந்ததைப் போல, அங்கே நடந்ததில்லை.

பன்மைத்துவம் என்ற பெயரில் பார்ப்பன இந்து மதத்தையும், ஒருமைப்பாடு என்ற பெயரில் பார்ப்பன இந்து தேசியத்தையும் வழிமொழிவதே வலது,  இடது கம்யூனிஸ்டுகளின் கொள்கையாக இருந்ததால், கருத்தியல்ரீதியாக இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்து நிற்கும் அடிப்படையே அக்கட்சியினருக்கு இல்லாமல் போய்விட்டது.

ஆகவே, மார்க்சிஸ்டு கட்சியின் ஆதரவாளர்கள் கூண்டோடு பா.ஜ.க.-வுக்கு வாக்களித்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மருதையன்
புதிய ஜனநாயகம் ஜூன் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart