Sunday, November 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 351

நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம்.ஜி.ஆர் – திரையிலும் அரசியலிலும்)

நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம். ஜி. ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்)

ம்.ஜி.ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்.) அவர்களின் சகாப்தத்தை நவீன கால அரசியல் புனைவாக இந்தப் புத்தகம் பகுத்து ஆய்கிறது. தமிழக அரசியலில் இதற்கு முன் எவரும் பெற்றிடாத செல்வாக்கை பெற்றிருந்த எம்.ஜி.ஆர். ‘தமிழ்நாட்டு ஏழைகளின் ஈடிணையில்லாத காவல் தெய்வம்’ என அவரின் ரசிகர்களால் புகழ்ந்துரைக்கப்பட்டவர். ‘அரசியல் கோமாளி’ என்று அவரின் எதிர்ப்பாளர்களால் வசைபாடவும்பட்டார். அவர் வாழ்நாளிலேயே ஜாம்பாவனாகத் திகழ்ந்தவர். ஏதேனும் அரசியல் அல்லது சொந்த சிக்கல்களில் எம்.ஜி.ஆர் சிக்கிக் கொண்டபோதெல்லாம் அவரின் நன்றிமிகுந்த ஆதரவாளர்கள் விருப்பத்தோடு தங்களின் உயிர்களை ஈந்தார்கள். அவரின் அரசியல் எதிரிகள் எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பின்னரும் அவரின் பெயர் பொதுமக்களிடையே உண்டாக்கும் உணர்ச்சிப்பெருக்கை கண்டு பயம்கொண்டார்கள்.

எம். ஜி. ஆர். எனும் ஆளுமையின் தாக்கத்தில் குறிப்பிடத்தகுந்த அம்சம் அவர்  வெறுமனே அரசியல் ஆளுமையாக மட்டுமல்லாமல் சினிமா நட்சத்திரமாகவும், அரசியல்வாதியாகவும் ஒரே சமயத்தில் திகழ்ந்தார் என்பதே ஆகும்…

… எம்.ஜி.ஆர். தாக்கத்தை உருவாக்கிய நிகழ்வுகள் பற்றிய கால வரிசையிலான வர்ணனையில் இந்நூல் ஈடுபடவில்லை. அதற்குப் பதிலாகப் பலதரப்பட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய பண்புக்கூறுகளை விவரித்து அவற்றை ஒன்று சேர்த்து கோர்வையான வர்ணனையின் மூலம் அவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை இந்நூல் நிறுவும். ஏன் எம்.ஜி.ஆர். தாக்கம் தீவிரமான தேடலுக்கு உரிய ஒன்றாக உள்ளது என்பது பற்றிய முக்கியக்கூறுகளைக் காட்டுகிறது எம்.ஜி.ஆரின் திரை பிம்பத்தின் வெவ்வேறு கூறுகள் குறித்து விவரமாக அலசுகிறது, அது ஏன் பொதுமக்களால் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அவர்களோடு பிணைந்தது அல்லது தமிழகத்தின் கலாசார மரபோடு அது எவ்வாறு தொடர்புடையது என்பன குறித்துப் பேசுகிறது. மேலும் முன்னோக்கி பயணித்து எப்படி இந்தத் திரை பிம்பத்தை எம்.ஜி.ஆரின் புனையப்பட்ட வாழ்க்கை வரலாறுகளின் மூலம் அரசியல் களத்துக்கு வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்க முடிந்தது என்பது குறித்தும் பகுத்து ஆய்கிறது. இந்தப் புனையப்பட்ட வாழ்க்கை வரலாறுகள் அவரின் திரை பிம்பத்தோடு முழுக்கப் பொருந்தும் வகையில் இரண்டுக்கும் வேறுபாடு காணமுடியாத வகையில் கவனமாக உருவாக்கப்பட்டன. இறுதியாக, இந்நூல் அடித்தட்டு மக்களின் பொருளியல்/பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் எம்.ஜி.ஆர் தாக்கத்தின் எழுச்சிக்கு இடையே உள்ள உறவை கண்டறிகிறது. (நூலின் முன்னுரையிலிருந்து)

பெண்கள் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் அனுபவிக்கும் விடுதலைத் தருணங்கள் சிதறிக்கிடப்பவை. அவை தமிழ் சமூகத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தைத் திறந்த மனதுடன் விமர்சிக்கவில்லை என்பதை இறுதியாகப் பகுத்தாய்வு செய்து பார்க்கையில் காண முடிகிறது. இதற்கு மாறாக, படத்தின் முடிவுகள் பெண்களுக்கான உரிமை சார்ந்த கேள்விகளை ஆணாதிக்கச் சமூகத்தின் மதிப்பீடுகளை உறுதிபடுத்தியே இருக்கின்றன. இப்படி ஆணாதிக்கத்தை உறுதிபடுத்துவது இரண்டு வழிகளில் இயல்பாக நடக்கிறது. ஆணின் இச்சைக்கு உரிய, ஆணின் கவலைக்குரிய, கீழ்படிய மறுக்கிற பெண்ணை , அல்லது அடங்காப்பிடாரி என்று அழைக்கப்படும் கதாப்பாத்திரத்தை நாயகன் கீழ்படிய வைப்பார். இரண்டாவதாக, இப்படங்களில், ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு மற்றும் பிற ஆணாதிக்க அமைப்புகளோடு தொடர்புடைய அடையாளங்கள் அனைத்தும் பெண்ணின் முக்கிய நற்குணங்களாக விவரிக்கப்பட்டு நியாயப்படுத்தப்படும். (நூலிலிருந்து பக்-104)

சுருக்கமாக, எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் மூலம் எங்கும் கண்ணுக்குத் தெரியாமல் நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தின் கட்டமைப்பு தமிழகத்தில் மறு உறுதி செய்யப்பட்டது. இத்திரைப்படங்களில் பெண்களுக்கு விடுதலை தரப்படும் தருணங்களும், ஆணாதிக்கக் கட்டமைப்புக்குள்ளேயே அடங்கும்படி உருவாக்கப்பட்டன. ( நூலிலிருந்து பக்.112)

படிக்க:
எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !
ரஜினி, கமல், அஜித், விஜய், ஹீரோவா ஜீரோவா ? – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2016

எம். ஜி.ஆரின் திரைப்படங்களில், அவருக்கு சினிமாவிலும், அரசியல் செயல்பாடுகளிலும் பெண்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்ததென்றால் அதற்கு தமிழ்க்கலாசாரத்தின் தலையாய பண்பாக இருந்த தந்தைவழி சமூக அமைப்பே காரணமாகும். பெண்களின் குழந்தைப் பருவம் முதல் வீடே உலகம், கற்பே சிறந்த பண்பு எனச் சொல்லி வளர்க்கப்படுகின்றனர். இளம் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்கவேண்டும் என்றும், மணமான பெண்கள் தங்கள் கணவனுக்கு நீண்ட ஆயுளை அருள் வேண்டும் என்றும் இறைவனை வேண்டுகின்றனர். சமூகத்தைக் கட்டமைக்கும் வெளிப்படுத்தும் தமிழ் மொழியே ஆணாதிக்கத் தன்மையுடையதாக இருக்கிறது. கணவனை இழந்த பெண்ணைக் குறிக்க விதவை (கைம்பெண்) என்ற சொல் இருப்பதைப் போல், மனைவியை இழந்த ஆணைக் குறிக்கும் சொல் ஏதும் இல்லை. முறை தவறிய உறவுகளில் ஈடுபடும் பெண்களை, வைப்பாட்டி, கூத்தியாள், தாதி, கணிகை, பரத்தை போன்ற சொற்களால் குறிப்பதைப் போல் ஆண்களைக் குறிக்கும் சொற்கள் இல்லை.

தமிழகத்தின் அடித்தட்டு மக்களுடைய எல்லாக் கதையாடல்களும் ஆணாதிக்கமுடையவை என்று சொல்லிவிட முடியாது. நாம் ஏற்கனவே சொன்னதைப்போல், பொதுபுத்தி என்பது ஒன்றுக் கொன்று முரண்பட்ட எண்ணங் களின் தொகுப்பாகும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள், அடித்தட்டு மக்களின் பொதுபுத்தியானது, தனக்கே உரிய வகையில் ஆணாதிக்கத்துக்கு எதிரான கூறுகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன. (நூலிலிருந்து பக்.114-115)

… குறிப்பிட்ட வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கட்டமைப்பதன் மூலம், எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் காட்டப்படும் அதே வாழ்க்கையையே அவர் நிஜத்திலும் வாழ்கிறார் என்று நம்ப வைக்கப்பட்டது. இந்தத் திரைப்பட வாழ்க்கைக்கும் நிஜவாழ்க்கைக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை எனத் துடைத்து அழித்துப் பதிய வைத்தது பொதுபுத்தியில் கச்சிதமாகச் சென்று சேர்ந்தது. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் பற்றி எழுதிய ஒரு ஆய்வு அறிக்கை இப்படிச் சொல்கிறது:

”எம். ஜி. ஆரின் திரைப்படங்களில் வெளிப்பட்ட பிம்பங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைத் தாண்டி இந்த ரசிகர்மன்ற உறுப்பினர்களால் செல்ல இயலாமல், திரையில் காட்டப்படுவதே எம்.ஜி.ஆரின் குணம் என நம்பப்படுகிறது. அவரின் ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர் நல்ல மனிதர் என்கிற அவர்களின் வாதத்தை நிறுவுங்கள் எனக் கேட்ட பொழுது, எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் இருந்தே எல்லாரும் எடுத்துக்காட்டுகள் தந்தனர் என்பதில் இருந்து இது தெளிவாகின்றது.” (நூலிலிருந்து பக்.157)

நூல்:பிம்பச் சிறை
(எம்.ஜி. ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்)
ஆசிரியர்: எம்.எஸ்.எஸ். பாண்டியன்
தமிழில்: பூ.கொ. சரவணன்

வெளியீடு: பிரக்ஞை பதிப்பகம்,
10/2 (8/2), போலீஸ் க்வாட்டர்ஸ் சாலை,
தியாகராய நகர், சென்னை – 600 017.
தொலைபேசி எண்: 044 – 2434 2771
கைபேசி : 99400 44042 – 98414 94448
மின்னஞ்சல் : publications@pragnai.com

பக்கங்கள்: 248
விலை: ரூ 225.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க: udumalai | noolulagam

குழந்தைகள் கணிதத்தை எப்படிப் பார்க்கிறார்கள் ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 6

பாடங்களுக்கு இடையிலான நேரத்தை – எப்படிப் பயன்படுத்துவது? (தொடர்ச்சி…)

விரைவில் அடுத்த பாடவேளை துவங்கும் மணி அடிக்கும். நான் ஏற்படுத்திய சூழல் இடைவேளையில் எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டும். என்ன நடக்கிறது? இன்று தாமாகவே மேற்பார்வையாளர்களாக இருக்கும் பெற்றோர்கள் சுவரில் தொங்கும் தாளில் குழந்தைகள் வரைவதைத் தடை செய்கின்றனர், சிரிப்புப் படங்களைத் தொடவிடாமல் தடுக்கின்றனர். குழந்தைகளிடமிருந்து விளையாட்டுச் சாமானைப் பிடுங்குகின்றனர். குழந்தைகளை அடக்கும் குடும்ப அனுபவம் பள்ளி இடைவழியில் புகுந்து, குழந்தைகளின் குறும்புகளை மாற்றியமைக்கும் என் நோக்கங்களுக்குக் குறுக்காக நிற்கிறது. “குழந்தை வளர்ப்பு, பெற்றோர் வளர்ப்பிலிருந்து துவங்க வேண்டும்” என்று எப்போதோ ஒரு முறை ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூறியது என் நினைவிற்கு வருகிறது. இன்றே முதல் பெற்றோர் கூட்டத்தை நடத்துவது என்ற முடிவிற்கு வருகிறேன். முதல் இடைவேளையைக் குலைக்க பெற்றோர்கள் செய்த முயற்சி பலிக்கவேயில்லை.

நான்காண்டு காலக் கல்வியின் போது மொத்த இடைவேளை நேரம் 166,500 நிமிடங்கள். இந்த நேரத்தை வீணாக்காமல் நன்கு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது ஆசிரியர் தன் மாணவர்களுடன் நன்கு கலந்து பழகும் 175 நாட்களுக்குச் சமமாகும்.

இனிய மணியோசை கேட்கிறது. “குழந்தைகளே, வகுப்பறையினுள் வாருங்கள். சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!”

“நம்மில் யார் சரி, யார் தவறு?”

அனேகமாக எல்லாக் குழந்தைகளுக்கும் பத்து வரை அல்லது இருபது வரை, ஏன் நூறு வரை கூட எண்ணத் தெரிந்திருக்கும். என் அனுபவத்திலிருந்து இது எனக்குத் தெரியும். இவர்களில் ஒவ்வொருவரும் “ ஒன்று – இரண்டு – மூன்று – நான்கு -ஐந்து” எனும் பாடலை தங்கு தடையின்றி சரளமாகச் சொல்வதை சரிபார்க்க வேண்டுமா என்ன? இதை இன்று செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் குழந்தைகளுக்கு எண்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்களுக்குப் பழக்கமில்லாதவற்றிலிருந்து துவங்குவது நல்லது. இது அவர்கள் ஏற்கெனவே அறிந்தவற்றைப் பயன்படுத்துவதாயும், “ஒன்று – இரண்டு – மூன்று – நான்கு – ஐந்து’ எனும் மனப்பாடப்பாட்டிற்கு பொருளைத் தருவதாயும் இருக்கும்.

ஆனால், முதலில், நமது தாய்மொழிப் பாடவேளையில் அட்டைப்பெட்டியில் எவ்வளவு அட்டைவில்லைகள் (சொற்கள்) சேர்ந்தன என்பதைப் பார்க்க வேண்டும். இலிக்கோ அட்டைப்பெட்டியை எடுத்து வர அவன் பின் தேன்கோவும் மாயாவும் வருகிறார்கள். “ஏராளமாக உள்ளன!” என்கிறாள் மாயா. “நூறுக்கும் மேலே!’ என்று விளக்கினான் தேன்கோ . “பார்த்தீர்களா, இன்று நாம் எவ்வளவு வார்த்தைகளைச் சேகரித்துள்ளோம்! நாளை நாம் இன்னமும் அதிகமாகச் சேர்க்க வேண்டும்” என்று நான் குழந்தைகளைப் பார்த்துக் கூறுகிறேன். “வார்த்தை அட்டைவில்லைகளை எண்ண உதவியதற்கு உங்களுக்கு மிக்க நன்றி!.”

“உங்களுக்கு எதற்கு இவ்வளவு நிறைய சொற்கள்?” என்று நாத்தோ கேட்கிறான்.

”எனக்கு வேண்டும்!”

“நான் இதை அடுத்த முறை விளக்குவேன்!” என்று நான் நாத்தோவிடம் கூறுகிறேன். “இப்போது கணிதப் பாடத்தைத் துவக்குவோம்.”

சாதாரணமாக முதல் கணித வகுப்பில், குழந்தைகள் கூட்ட, கழிக்க, பெருக்க, வகுக்க கற்றுக் கொள்ளத் துவங்குவதாக விளக்குவார்கள். இது குழந்தைகளுக்குப் புரியக் கூடிய ஒரு விளக்கம் என்று கருதப்படுகிறது. ஒருவேளை உண்மையிலேயே இது சரியாக இருக்கலாம். ஆம், உண்மையிலேயே, ஐந்து ஆப்பிள்களிலிருந்து மூன்று ஆப்பிள்களை எப்படிக் கழித்து மீதியிருப்பதை அறிவது; அல்லது மூன்று கடலைகளுடன் ஆறு கடலைகளை எப்படிச் சேர்ப்பது , பத்து பேரிக்காய்களை இருவருக்கு எப்படிப் பகிர்ந்தளிப்பது, என்றெல்லாம் கூறினால் குழந்தைகளுக்கு நன்கு விளங்கும். ஆனால் கூட்டுவதும் கழிப்பதும், பெருக்குவதும் வகுப்பதும் மட்டுமே கணிதத்தின் சாரம் இல்லை அல்லவா !

படிக்க:
அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?
நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும் ! ஐன்ஸ்டைனும் !

முறையியல் ரீதியாக நான் தவறிழைத்தாலும் நான் செய்வது இப்படித்தான்.

“குழந்தைகளே, கணித விஞ்ஞானம் என்றால் என்ன தெரியுமா?”

தாம்ரிக்கோ: “அதாவது, நூறு வரை எண்ணுவது…”

எலேனா: ‘நூறு வரை எண்ணத் தெரிய வேண்டும், இது தவிர கூட்டத் தெரிய வேண்டும்… எனக்கு கூட்டத் தெரியும்… ஐந்தும் ஐந்தும் பத்து ….”

வாஹ்தாங்: “எனக்கும் கூட்டவும் கழிக்கவும் தெரியும்…. அப்பா சொல்லித் தந்தார்…”

நான் கரும்பலகையை அணுகி, திரையை விலக்குகிறேன். அதில் நியூட்டன் விதியும், வழிச் சார்பும் வண்ண சாக்பீஸ்களால் எழுதப்பட்டிருந்தன, டெக்கார்ட்டிசின் கூற்றுத் தொகுதி சார்பாலனோடு வரையப்பட்டிருந்தது .

சாஷா: “என்ன இது? எவ்வளவு அற்புதமான எழுத்துக்கள்!”

பலரின் கண்கள் அகல விரிந்தன, கரும்பலகையில் உள்ளதை நன்கு பார்ப்பதற்காகப் பலர் தம் இடங்களை விட்டு எழுந்தனர்.

“இது உண்மையான கணிதம், அளவின உறவுகள் மற்றும் இடஞ்சார்ந்த வடிவங்களைப் பற்றிய விஞ்ஞானம்.”

“எவ்வளவு அழகாயுள்ளது!” என்று கரும்பலகையிலிருந்து கண்களை அகற்றாத படி லேலா ஆச்சரியத்துடன் கூறுகிறாள்.

“ஏனெனில் கணிதமே அழகானது, இது தான் விஞ்ஞானங்களிலேயே ராணி போன்றது என்கின்றனர் அறிஞர்கள். இந்தச் சூத்திரங்கள் உங்களுக்குப் பிடித்துள்ளனவா?”

கணிதத்தைப் பற்றிய இவ்விளக்கம் குழந்தைகளுக்குப் புரியுமா? நான் கூறியதிலும் காட்டியதிலும் பல விஷயங்கள் அவர்களுக்கு நிச்சயமாகப் புரியவில்லை. ஆனாலும் அவர்களுக்கு எவ்வளவு சுவாரசியமாக இருந்தது தெரியுமா!

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

“ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !

0

மீபத்தில் நியூஸ் நேஷன் என்ற தொலைக்காட்சிக்கு மோடி அளித்த பேட்டியில் பாலகோட் தாக்குதல் பற்றி அவிழ்த்துவிட்ட பொய் சமூக ஊடகங்களில் பகடிக்கு உள்ளாகியிருக்கிறது.

மோடி தனது பேட்டியில் “மேகமூட்டங்களில் விமானங்களை ஒளித்துவைக்கமுடியும்” என தெரிவித்திருந்தார். கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் ‘அறிவியல்’ பாடாய்பட்ட நிலையில், தனது அறிவிலித்தனத்தை பட்டவர்த்தனமாக அறிவிக்கும்விதமாக மோடி அளித்திருக்கும் பேட்டி, மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறது.

இன்னொரு பக்கம் இத்தகைய நபர் ஒருவர் நாட்டின் பிரதமராகியிருப்பது அவமானமாக இருப்பதாகவும் பலர் சமூக ஊடகங்களில் கருத்திட்டுள்ளனர்.

தமிழ் முகநூலில் கேலி கிண்டல் பதிவுகள் மட்டுமல்லாது, மீம்களும் பறந்தன.

விநாயகமுருகன்:

“பாலகோட் விமான தாக்குதலின் போது அன்றைய தினம் இரவு சுமார் 9 – 9.30 மணிவாக்கில் நான் தாக்குதல் குறித்து ஆராய்ந்தேன். அதே ஆய்வை மீண்டு இரவு 12 மணிக்கு மேல் செய்ய நேரிட்டது. இதற்கு அப்போது வானிலையில் ஏற்பட்ட மாறுதலே காரணம் ஆகும். அதன் பிறகு நான் சில நிமிடம் யோசித்தேன். எனது மனதில் இது நடக்குமா அல்லது நடக்காதா என்னும் கேள்வி எழுந்திருந்தது.

தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த தாக்குதலை வேறு ஒரு தினத்தன்று மாற்றலாம் என யோசனை அளித்தனர். ஆனால் உடனடியாக நடத்தாவிடில் இந்த ரகசியம் எப்படியும் வெளியாகி விடும் என எனக்கு தோன்றியது. நான் விஞ்ஞானம் படிக்காதவன். இருந்தாலும் மேகங்கள் இருப்பதாலும் கனமழை பெய்வதாலும் ராடாரால் நமது விமானங்களை கண்டறிய முடியாது என்பதை நான் அறிவேன்.

இந்த மழை மற்றும் மேக மூட்டம் நமக்கு நன்மை தரும் என்பதையும் நான் தீர்மானம் செய்து விட்டேன். அதனால் நான் அன்றே பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்த உகந்த நாள் என முடிவு செய்தேன். அதனால் மேகங்கள் சூழ்ந்துள்ளன. கிளம்புங்கள் என உத்தரவிட்டேன். அவர்களும் கிளம்பினார்கள்…”

… அண்மை பேட்டியொன்றில் மோடி

நம்மூர்ல சீமான் எப்படி பெரிய தலைக்கட்டோ அவங்க ஊர்ல அவரு. ஆனா, ஒண்ணு இந்த ஆபரேஷனில் மேஜர் மாலனோட கருத்தை பிரதமர் கேட்காமல் போனதில் எனக்கு வருத்தம்தான். திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவே

வசந்தா சுசீலா:

Actually அந்த ராடார் கதை சொல்லி முடிச்ச 10-வது நிமிடத்தில் இங்க ஒரு ராணுவ புரட்சி வந்திருக்கணும்..

நமக்கே இம்புட்டு கடுப்பாகுது. பாவம் அந்த எல்லையில் இருக்கும் ராணுவ வீரன்!!

படிக்க:
♦ தொழிலாளர் சட்டத்தை ஒழி – தொழில் வளரும் ! மோடினாமிக்ஸ் !
♦ இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்

ராஜசங்கீதன்:

Aviator என ஓர் ஆங்கிலப் படம். Hughes கதாபாத்திரத்தில் Dicaprio நடித்து மார்டின் ஸ்கார்சசி இயக்கியிருப்பார்.

போரைப் பற்றிய படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருப்பார் டிகாப்ரியோ. எடுத்தவரை படத்தை போட்டு பார்க்கும்போது, நிஜமாகவே வானில் விமானம் பறக்க வைத்து, விமானத்தில் இருந்து அதை படம் பிடித்த உழைப்பு ஏதும் தென்படாது. ஸ்டுடியோவில் கயிறு கட்டி ப்ளைட் மாடலை கேமராவுக்கு அருகே வைத்து எடுப்பதை போலவே தெரிகிறது. காரணம் புரியாமல் மண்டையை உடைத்துக் கொள்ளும் டிகாப்ரியோ, ஒரு கட்டத்தில் காரணத்தை கண்டுபிடித்து விடுகிறார். வானுக்கும் விமானத்துக்கும் இருக்கும் தூரத்தை காட்ட இன்னுமொரு object திரையில் இருக்க வேண்டும். அதுதான் தூரத்தை relate செய்து காட்ட இயலும். Relativity!

வானில் வேறென்ன இருக்க முடியும்?

Clouds!

மேக மூட்டம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விமானம் பறக்கவிட்டு படம்பிடித்தால் திரையில் வானத்தின் பிரம்மாண்டம் தெளிவாக தெரியும். மேகங்களுக்குள் இருந்து வரும் விமானம், மேகத்துக்குள் மறையும் விமானம் என மக்களால் மேகத்துடன் relate செய்து வானை பிரமிக்க முடியும். டிகாப்ரியோ ஒரு வானியல் அறிஞரை வேலைக்கு அமர்த்துகிறார்.

ஷூட்டிங்கின்போது இருவரும் பேசிக் கொள்ளும் ஒரு வசனம்:

Di Caprio: Why there’s no clouds?

Climatologist: They are clouds Mr.Hughes. They move. That’s what they do.

Di Caprio: Find me some goddamn clouds.

என கத்திவிட்டு செல்வார். கொஞ்ச நேரம் கழித்து வானியலாளர் குதித்து கொண்டு ஓடி வந்து சந்தோஷமாக ‘மேகங்களை கண்டுபிடித்து விட்டேன்’ என்பார். உடனே அங்கு விமானங்கள் அனுப்பி படம் பிடிப்பார்கள்.

நம்மூரில் டிகாப்ரியோ இல்லை. மோடிதான் இருக்கிறார். ஆதலால் Find some goddamn clouds என மோடியே சொல்லியிருக்கிறார்.

அநேகமாக மோடிக்கு மேகங்களை கண்டுபிடித்து தந்த வானியலாளர் பால்கோட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்த மாலனாக இருக்கலாம். Aviator படமாவது drama ரகம். மோடி பேசுவது tragic comedy ரகம். தியேட்டருக்குள் நுழைந்தது நம் தப்பு. குறை கூறினால் என்ன நியாயம்? பார்த்து ரசியுங்கள்…

ரகுபதி பாலசுப்ரமணியன்:

ஒரளவுக்கு வாசிச்சு தெரிஞ்சுகிட்ட இந்திய அரசியல் வரலாற்றுல, இப்படி ஒரு தற்குறித்தனமான பிரதமர கேள்விப்படல. மண்ட முழுக்க மாட்டுச்சாணிதான் போல. பிள்ளையார் பிளாஸ்டிக் சர்ஜரி பேஷண்ட்டுன்னு சொன்னதுல தொடங்கி, இன்னைக்கு மேகங்கள வச்சு ரோடாரயே ஏமாத்தலாம்னு, வாயத்தொறந்தாலே OVOP’க்கள்தான்..

வெங்கடேஷ் ஆறுமுகம்:

மேஜர் நான் பிரதமர் பேசுகிறேன்.. குண்டு வீசச் சென்ற நம் விமானங்கள் எப்போது தாக்குதல் நடத்தும்?

ஜி.. அவர்களின் வான் எல்லைக்குள் நுழைந்துவிட்டோம் துல்லியமாக இன்னும் 3 நிமிடம் 36 நொடிகளுக்குள் குண்டுகளை வீசிவிடுவோம்!

அச்சா.. கோவைக்கோ திருச்சூருக்கோ எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது முடிந்தால் வயநாட்டிலும் 4 குண்டுகளை போட்டுவிட்டு திரும்புங்கள்!

ப்ரைம் மினிஸ்டர்ஜி என்ன சொல்றிங்க?!!! அதெல்லாம் நம்ம இந்தியாவில் கேரளாவில் இருக்கும் ஊரு ஜி!!

அரே நம்பிள் இந்தியா விமானமெல்லாம் பாலக்காடுல குண்டு போட போயிருக்குன்னு அமித்ஜி சொன்னாரே!

ஹே பஹ்வான்!! ஜி அது கேரளா பாலக்காடு நஹி.. பாகிஸ்தான் பாலாகோட் ஹே!

ஸ்வரா வைத்தி:

இவ்வளவு முட்டாளா இருக்க மோடி தான் ரபேல் விமானம் வாங்கற டீல பேசி முடிச்சிருக்காப்ல 😐😐😐

விக்னேஷ் பழனிசாமி:

நிலாவுக்கு விண்கலம் அனுப்புறீங்க. சூரியனுக்கு ஏன் அனுப்பலன்னு கேட்டேன். சூரியன் மேற்பரப்பு சூடா இருக்கும்னு சயிண்டிஸ்ட் சொன்னாங்க. எனக்கு இவங்கள்லாம் எப்படி சயிண்டிஸ்ட் ஆனாங்கன்னே தெரியல. நைட்டுல அனுப்பவேண்டியது தானே.

– மோடி (சொன்னாலும் சொல்வார்).

செ. அன்புச்செல்வன்:

இரேடார் நிகழ்விலிருந்து இந்தியராகிய நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்…. அடிப்படை அறிவியலில் நாம் மிகமிகப் பின்தங்கி இருக்கிறோம் என்பதே அது. உலகில் எங்கோ ஒருமூலையில் எவரொருவர் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்துத் தருவனவற்றை மட்டும் பெற்றுக்கொள்ளும் வெறும் பயனாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்.

சான்றாக, பல்லாயிரங்கள் செலவு செய்து ஒரு திறன்பேசியை வாங்கிப் பயனுறும் நாம் அதன்பின்னே இருக்கும் அறிவியல் இன்னதென்று துளியளவும் சிந்திப்பதில்லை.

நித்தியானந்தா போன்ற சாமியார்கள் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை பொய்யென்று சொல்வதை வேண்டுமானால் பகிர்ந்து அறிவுப்பசியாறிக் கொள்வோமேயன்றி ஏன் பொய்யல்ல என்று தேடியறிந்துகொள்ள முயலோம். சக்கி சாமியார் சரியான உணவுப்பழக்கம் இல்லாததால்தான் மனவழுத்தம் வருகிறது என்று சொன்னால் ஆதி ஓகியைப் போலவொரு ஆசான் இவ்வுலகில் இல்லையென்று அவர் அடியொற்றிக் கொள்வோம்.

வெறும் கையடக்க திறன்பேசியை வடிவமைத்து அதை இயங்கச்செய்ய, பத்து நோபல் பரிசுவென்ற அறிவியலாளர்களும் அவர்தம் இருநூறாண்டு உழைப்பும் தேவைப்படுகிறது என்பதை நாம் எற்றைக்கு உணர்வோம்??!!

ட்விட்டரிலும் மோடியின் ‘அறிவிலித்தனம்’ பாடாய்ப்பட்டது.

“கண்டுபிடிக்காதபடி எப்படி இந்தியாவிலிருந்து தப்பியோடினீர்கள் மல்லையா?” என மேகங்களுக்குள் பதுங்கியிருக்கும் மல்லையாவிடம் கேட்கிறார் கஜோல் ஸ்ரீனிவாசன்.

ரேடாரிலிருந்து தப்பிக்க விமானங்களை மேகங்களில் ஒளித்து வைக்க முடியுமா? என்ற கேள்வியைத்தான் கூகுளில் கடந்த இரண்டு நாட்களாக பலர் தேடியிருக்கின்றனர். உண்மையில் அப்படி ஒளித்து வைக்க முடியாது என்பதே விமானப்படை அதிகாரிகளின் பதிலாக உள்ளது.

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கபில் காக், டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “பல ஆண்டுகளாக பயிற்சி பெற்ற தொழில்ரீதியிலான படையை இவர் இப்படி அதிகாரம் செய்யக்கூடாது. பொருளாதாராத்தை புறம் தள்ளலாம்; அரசியலை புறம் தள்ளலாம்; அவர் உள்நாட்டு பாதுகாப்பை புறம் தள்ளலாம்; சிறுபான்மையினரை புறம் தள்ளலாம்; நாட்டில் பேரழிவுகளை உருவாக்கும் முடிவுகளை புறம் தள்ளலாம்; ஆனால், பிரச்சினைக்குரிய இடத்தில் போர் விமானத்தை பயன்படுத்துவதா வேண்டாமா என்பதில் அவர் தலையிடக்கூடாது. விமானப்படை தலைவரும் காமாண்டருமே அத்தகைய முடிவுகளை எடுப்பார்கள். அதுபோன்ற முடிவுகள் நிபுணர்களால் எடுக்கப்படுகின்றன..” என தெரிவித்துள்ளார்.

படிக்க:
♦ ரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை !
♦ எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !

முன்னதாக கபில் காக் உள்ளிட்ட 1,500 முன்னாள் வீரர்கள், அரசியல்வாதிகள் எல்லை தாண்டிய தாக்குதல்கள் குறித்து அரசியலுக்காக பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இத்தனைக்கும் நடுவே, நியூஸ் நேஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி மோடியின் மற்றுமொரு ஜோடிக்கப்பட்ட பேட்டி என்கிற தகவலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறார் ஆல்ட்நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் பிரதீக் சின்ஹா.

ஆட்சியை பிடிக்கும் அவஸ்தையில் இருக்கும் மோடி, இறுதிநேரத்தில் தனது அறிவிலித்தனத்தை அப்பட்டமாக காண்பிக்கிறார். இந்திய பிரதமர்களின் வரிசையில் ஒரு களங்கமாக அமைந்துவிட்ட மோடியின் ஆட்சி தொடருமானால், நாட்டுக்கு அது எத்தகைய பேரழிவாக அமையும் என்பதற்கு இறுதி எச்சரிக்கையாகவே இது உள்ளது.


தொகுப்பு :
கலைமதி

ஐ.ஐ.டி -யில் 10% இட ஒதுக்கீடு – ஒரு கேலிக் கூத்து !

பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான 10% இட ஓதுக்கீடு எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை ஐஐடி மாணவர் அனுமதியைப் பற்றிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இத்தரவுகளை வாங்கி வெளியிட்ட நண்பர் எத்திராஜன் முரளிதரனைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். மாணவர் அனுமதி மற்றும் ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் இடப்பங்கீட்டுக் கொள்கையை மீறி ஐஐடி சென்னை தில்லுமுல்லுகள் செய்வதைத் தொடர்ந்து கண்காணித்தும் வழக்குகள் தொடுத்தும் வரும் இவரைப் பாராட்ட வேண்டும்.

படிக்க :
♦ ஸ்டெர்லைட்டை மட்டுமல்ல டெல்டாவையும் அனில் அகர்வாலுக்கு அள்ளித் தந்த மோடி !
♦ ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

முரளிதரன், நான் ஐஐடி சென்னையில் ஆராய்ச்சி மாணவராக இருந்தபொழுதுதான் அங்கு ஆராய்ச்சி மாணவராக இருந்தார். அப்பொழுது ஐஐடி சென்னையின் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இருந்தார். சென்னையைச் சேர்ந்த ஓரளவுக்கு வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். ஐஐடியில் ஆய்வு மாணவர்களுக்கான மாத ஊதியத் தொகை இவர்களைப் போன்ற பல சென்னை மாணவர்களுக்கு கைச் செலவுக்கான தொகை. நல்ல வண்டி, வெளியே நல்ல உணவகங்களில் உணவு, திரைப்படங்கள், விளையாட்டுத் துறைக்கான செலவு என செலவழிப்பார்கள். ஆனால் கிராமங்களிலிருந்து முதல் தலைமுறையாக கல்லூரிப் படிக்கும் வாய்ப்புப் பெற்ற எங்களைப் போன்ற நிறைய சிற்றூர்/சிறுநகர மாணவர்களுக்கு அவ்வூதியத்தில் ஊரிலுள்ள எங்கள் குடும்பத்தையும் ஆதரித்து எங்களுடைய செலவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதனால் எங்களுக்குள்ளேயே கூட இரண்டு பிரிவாகத்தான் இருந்திருக்கிறோம். விடுதிகளில் இந்த இரண்டு பிரிவினரும் ஒன்றாகக் கூடி இருந்தாலும் தனித்தனி நண்பர்கள் குழுவாகவே இருந்ததுண்டு. அப்பொழுதெல்லாம் ஐஐடிக்குள் பெரியார், கலைஞர், தமிழ், ஈழம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த என்னையெல்லாம் இவர்களெல்லாம் ஏளனமாகக் கிண்டலடிப்பார்கள். மலையாள மாணவர்கள் என்னை நமட்டுத்தனமாகக் கிண்டலடிக்கும் ”பாண்டி” என்ற பெயரை இவர்களும் அவ்வப்பொழுது பயன்படுத்துவதுண்டு.

மண்டல் கமிசன் பரிந்துரைகளுக்கெதிரான எங்கள் விடுதி மாணவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நானும், இப்னு சாத் என்ற இன்னொரு கேரள மாணவரும்தான் வெளிப்படையாக எதிர்த்துக் களத்தில் இறங்கினோம். ஐஐடி ஊழியர்களைத் துணைக்கொண்டு போட்டிக் கையெழுத்து வேட்டை நடத்த ஆரம்பித்த பின்னர் வார்டனால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டோம். நாங்கள் இருவரும் கைவிடாதபடியால், பின்னர் இரண்டு தரப்பு நடவடிக்கைகளும் வார்டனால் நிறுத்தப்பட்டன.

அப்பொழுதெல்லாம் முரளிதரனோ, இடப்பங்கீட்டைப் பயன்படுத்தி தமிழ்நாட்டு அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டம் படித்த நிறைய மாணவர்களோ எங்களிருவருக்கும் துணையாக வந்ததில்லை. ஒருசில அறிவுஜீவிகள் எங்களிருவரையும் விமர்சனம் செய்து, ஐஐடியின் தரத்தைக் குறைக்கக் கூடாதென்று மண்டல் கமிசன் அமலாக்கத்தை எதிர்த்துக் கையொப்பமிட்டனர். அவர்களெல்லாம் பார்ப்பன ஆசிரியர் / மாணவர்களிடம் தம் நட்பை இழக்க விரும்பாமல் மவுனம் காத்தனர்.

படிக்க :
♦ சென்னை ஐ.ஐ.டி APSC நிறுவனர்களில் ஒருவரான ரமேஷை குறி வைக்கும் மோடி அரசு !
♦ பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி!

எங்களிருவருக்கும் இரண்டு சாதகமான நிலைகளும் இருந்தன எனலாம். 1. நாங்களிருவரும் இடஒதுக்கீட்டுக் கொள்கையினால் பலனடந்தவர்களல்லர் என்பதனால் எங்களுக்கெதிரான முத்திரை குத்தலைப் பற்றிய தயக்கமில்லை. 2. அண்மையில் மறைந்த என்னுடைய ஆராய்ச்சி வழிகாட்டி பேராசிரியர் பி.டி.மனோகரன் – சட்டத்துக்குட்பட்டு என்னுடைய செயல்பாடுகளுக்கான உரிமைகளை எப்பொழுதும் மதித்தவர். (முன்னரே ஒருமுறை என்னை ஐஐடியை விட்டு வெளியேற்றப்படலாம் என்று எச்சரிக்கப் பட்டபொழுது நிர்வாகம் சட்டப்படி அதைச் செய்ய இயலாது என்று உறுதி அளித்தார்.) இப்பொழுதும் அவர் அரசின் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் செயல்பட முடியுமென்றால் அதைவிட எங்களிருவருக்கான உரிமை இன்னும் அதிகமென்றார். என்னுடைய ஆய்வறிக்கை தாமதமாகியதே தவிர வேறெந்தச் சிக்கலும் எனக்கு ஏற்படவில்லை. முடித்தகையோடு அமெரிக்கா வந்து விட்டேன்.

ஆனால், முரளிதரன் அவருடைய ஆராய்ச்சி வழிகாட்டியிடம் வேறொரு தனிப்பட்ட பிரச்னையில் முரண்பட்டு மோதியதால் ஐஐடி நிர்வாகம் அவரைக் கடைசிநேரத்தில் பழிவாங்கியது. தேர்வானபிறகும் அவருடைய பட்டச் சான்றிதழை அளிக்காமல் பட்டமளிப்பு விழாவில் வெற்றுக் காகிதத்தை அளித்து ஏமாற்றியது. அதன்பின்னர்தான் ஐஐடி நிர்வாகம் கமுக்கமாக எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட முடியுமென்று முரளிதரன் உணர்ந்தார். அமெரிக்கா வந்தபின்னரும் கூட அவருடைய பட்டச்சான்றிதழை அளிக்காததால் சென்னைக்குத் திரும்பி ஐஐடியின் மீது வழக்குத் தொடுத்தார். அதன்பின்னர் அங்கேயே இருந்து கடந்த 30 ஆண்டுகளாக ஐஐடியின் பல்வேறு பிரச்னைகளைச் சட்ட ரீதியாகப் போராடி வருகிறார் என்று அறிந்தேன்.

அவருடன் எனக்குத் தொடர்பில்லை என்றாலும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

முகநூலில் : சொ.சங்கரபாண்டியன்

ரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை !

0

மியான்மரில் ரோஹிங்கியா முசுலீம் இனப்படுகொலையை ஆதாரங்களுடன் எழுதியதற்காக ஏழாண்டு சிறை தண்டனை பெற்ற இரண்டு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் 500 நாள் சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் வா லோன் (33) மற்றும் யாவ் சோ ஓ (29) ஆகியோர் டிசம்பர் 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் புத்த மதத்தினர் இணைந்து பத்து ரோஹிங்கியா முசுலீம்களை கொன்றது குறித்த செய்தி வெளியிட்டதற்காக இவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தது மியான்மர் அரசு. அரசு ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் இவர்களுக்கு ஏழாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மியான்மர் அரசின் ‘ஜனநாயகம்’ குறித்து கேள்வி எழுந்ததோடு, ஊடக நிறுவனங்களிடமிருந்தும் மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்தும் கடும் கண்டனங்களும் வந்தன. இந்த நிலையில், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு காரணமாக இவர்கள் இருவரும் கடந்த செவ்வாய்கிழமை அன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் முதல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு காரணமாக 6,520 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறையிலிருந்து விடுதலையான வா லோன் மற்றும் யாவ் சோ ஓ தங்களுடைய குழந்தைகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இவர்கள் இருவரும் எந்தத் தவறையும் செய்யவில்லை எனக் கூறியதோடு, உடனடியாக இவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கூறியது.

சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டபின், தங்களுடைய குடும்பத்துடன் இணைந்த உற்சாகத்தில் இருவரும்..

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள்…

வா லோன் மற்றும் அவருடைய மனைவி பான் எல் மோன் தங்களுடைய மகளுடன் விடுதலையை கொண்டாடுகிறார்கள்.

யாவ் சோ ஓ, தனது மனைவி சித் சு வின் மற்றும் மகளுடன் தனது விடுதலையை கொண்டாடுகிறார்.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் 10 ரோஹிங்கியா முசுலீம் ஆண்கள் மற்றும் சிறுவர்களைக் கொன்றது தொடர்பான விசாரணையில் இருந்தபோது, டிசம்பர் 2017-ம் ஆண்டு இவர்கள் இருவரும் கைதாகினர்.

இன்செயின் சிறையிலிருந்து விடுதலையான வா லோன்.

இன்செயின் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த யாவ் சோ ஓ புன்னகைக்கிறார்.


– அனிதா
நன்றி : அல்ஜசீரா 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்!

“தமிழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் இலவசமாய் வழங்க உதவுங்கள் !”என வாசகர்களுக்குக் கோரிக்கை வைத்திருந்தோம். அதனை ஏற்று, ஜெயகர் என்ற வாசகர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் வழங்கக் கோரி பணம் செலுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு ஏற்கனவே புதிய கலாச்சாரம் நூல்களை வழங்கி இருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் மற்றும் இதயத்தை மீட்பது எப்படி ? என்ற இரண்டு வெளியீடுகள் 100 எண்ணங்களை மீண்டும் மாணவர்கள் மத்தியில் விநியோகித்தோம்.

தேர்வு நேரம் என்பதால் முன்னர் நூல் வாங்கிய மாணவர்கள் பலரையும் சந்திக்க முடியவில்லை. கடந்த முறை நூல் வாங்கிய மாணவர்கள் சிலர் அந்தப் புத்தகங்கள் தனியார் பிடியில் உள்ள கல்வி நிலையங்களை பற்றி புரிந்து கொள்ள முடிந்தது என்றும், அரசே எப்படி திட்டமிட்டு ஆபாச இணையதளங்களை அனுமதிக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது என்று கூறினர். இந்த முறை அம்மாணவர்கள் தாங்களாகவே நூல்களை ஆர்வமாக வாங்கிச் சென்று வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்தனர்.

இம்முறை வெளியீடு வாங்கிய ஆய்வு மாணவர் ஒருவர் நூலின் தலைப்புகளே படிக்கத் தூண்டும் வகையில் உள்ளது என்றும், கண்டிப்பாக படிப்பதாகவும் கூறினார்.

முதுகலை மாணவர்கள் சிலர், “நல்ல முயற்சி.. கண்டிப்பாக படிக்க வேண்டிய விசயம்தான், இப்பொழுது படிக்க வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது. சரியான தருணத்தில் இது போன்ற விசயங்களை எங்களிடம் சேர்த்துள்ளீர்கள்” என்றும் கூறினர்.

நீங்களும் உங்கள் பங்களிப்பாக புதிய கலாச்சாரம் வெளியீடுகளை மாணவர்களுக்கு வழங்குங்கள். நீங்கள் விரும்பிய கல்லூரிகளை தெரிவு செய்தும் பணம் அனுப்பலாம். கீழே உள்ள இணைப்பில் முழு விவரங்கள் உள்ளன. ஆதரவு தாருங்கள் !

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

பாசிஸ்டு பலே தந்திரக்காரன் ! பாவனை செய்வான் !

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 13

ழுந்து நிற்க வீண் முயற்சி செய்த பின் நிலை குலைந்து விழுந்த அலெக்ஸேய் கனநேர உணர்வு அவனைச் சுய நினைவு அடையச் செய்தது. பைன் மரச் சோலைவில் சந்தேகமின்றி மறைந்திருந்தார்கள் ஆட்கள். அவர்கள் அவனைக் கண்காணித்தார்கள். எதையோ பற்றிக் கிசுகிசு வென்று பேசிக்கொண்டார்கள்.

அலெக்ஸேய் கைகளை ஊன்றி நிமிர்ந்து, வெண்பனியிலிருந்து ரிவால்வாரை எடுத்துக்கொண்டு அதைத் தரைக்கு அருகில் மறைவாகப் பிடித்தவாறு உன்னிப்பாக நோக்கலானான். அபாயம் அவனை சுயநினைவுக்குக் கொண்டுவந்தது. உணர்வு தெளிவாக வேலை செய்தது. இவர்கள் யார்? விறகு வெட்டுவதற்காக பாசிஸ்டுகளால் இங்கே வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டிருக்கும் மரம் வெட்டிகளோ? ஒருவேளை அவனைப் போலவே பகைவர்களால் சூழப்பட்ட ருஷ்யர்களோ? ஜெர்மானியப் பின்னணிகளிலிருந்து முனைமுக வரிசையின் ஊடாகத் தம்மவர்களிடம் செல்கிறார்களோ? அல்லது அந்த வட்டாரத்தைச் சேர்ந்த குடியானவர்களில் யாரேனுமோ? யாரோ ஓருவன் “மனிதனா” என்றுத் தெளிவாகக் கத்தியது அவன் காதில் படத்தானேச் செய்தது?…

இவ்வாறு அவன் எண்ணமிடுகையில் புதர்களிலிருந்து கிளர்ச்சி பொங்கும் குழந்தைக் குரல் கணீரென ஒலித்தது:

“ஏய், நீ யார்? ஜெர்மன்காரனா? உனக்கு ஜெர்மன் பாஷை தெரியுமா?’

இச்சொற்கள் அலெக்ஸேயைத் திடுக்கிடச் செய்தன. ஆனால் கத்தினவன் சந்தேகமின்றி ருஷ்யன், சந்தேகமின்றிச் சிறுவன் என்பது தெளிவாயிருந்தது.

“நான் ருஷ்யன், ருஷ்யன். நான் விமானி. ஜெர்மானியர்கள் என் விமானத்தைச் சுட்டு வீழ்த்திவிட்டார்கள்.”

இப்போது அலெக்ஸேய் எச்சரிக்கையாக இருக்கவில்லை. புதர்களின் பின்னே இருப்பவர்கள் தன்னவர்கள், ருஷ்யர்கள், சோவியத் நாட்டினர் என்பது அவனுக்கு உறுதிப்பட்டு விட்டது. அவர்கள் அவனை நம்பவில்லையாக்கும். அதனால் என்ன? யுத்தம் எச்சரிக்கையை கடைப்பிடிக்க கற்பிக்கிறது. தான் முற்றிலும் வலு இழந்து விட்டதையும் கையையோ காலையோ மேற்கொண்டு அசைக்கவோ, இயங்கவோ, தற்காத்துக் கொள்ளவோ தன்னால் முடியாது என்பதையும் தனது நெடும் பயணத்தில் முதல் தடவையாக அவன் உணர்ந்தான். இவனுடைய கன்னங்களில் கறுத்த குழிவுகள் வழியே பெருகி வழிந்தது கண்ணீர்.

”பார், அழுகிறான்! ஏய், நீ எதற்காக அழுகிறாய்?’ என்று ஒலித்தது புதரின் பின்னிலிருந்து வந்த குரல்.

“அட, ருஷ்யன் நான், ருஷ்யன், நம்மவன், விமானி.”

“எந்த விமான நிலையத்தை சேர்ந்தவன்?”

“ஆமாம் நீங்கள் யாரோ?”

“உனக்கு அது எதற்காக? நீ பதில் சொல்லு!”

“நான் மொன்ச்சாலோவ்ஸ்க் விமான நிலையத்தைச் சேர்ந்தவன். எனக்கு உதவுங்களேன், வெளியே வாருங்களேன்! என்ன சனியன் பிடித்த…”

புதர்களுக்குள் ஆட்கள் தீவிரமாகக் கிசுகிசுத்து விவாதித்தார்கள். இப்போது அவர்களுடைய பேச்சு அலெக்ஸேய்க்குத் தெளிவாகக் காதில் விழுந்தது.

படிக்க:
மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்
அல்லாவின் பெயரால் : பாகிஸ்தானியரின் கனவும் … சவுதி மரண தண்டனையும் !

“கேட்டாயா, மொன்ச்சாலாவ்ஸ்க் நிலையத்தைச் சேர்ந்தவனாம்…. ஒருவேளை உண்மையாயிருக்கலாம்… ஏய், விமானி, ரிவால்வாரை இப்படி வீசி எறி! எறிந்து விடு, சொல்லி விட்டோம். இல்லாவிட்டால் வெளியே வர மாட்டோம், ஓடி விடுவோம்!”

அலெக்ஸேய் ரிவால்வாரை ஒரு புறம் எறிந்தான். புதர்கள் விலகின. ஆவல் கொண்ட சிட்டுக் குருவிகள் போன்று எந்த நிமிடமும் சிவ்வென்றுப் பறந்து விடத் தயாராக எச்சரிக்கையுடன், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு அவன் பக்கம் நெருங்களாயினர் இரண்டு சிறுவர்கள்.

மூத்தவன், தகப்பனின் பிரம்மாண்டமான நமுதா நீள் ஜோடுகளை அணிந்து அலெக்ஸேயின் அருகே வந்து வெண் பனியில் கிடந்த ரிவால்வாரை எற்றித் தள்ளினான்.

“விமானி என்றா சொல்லுகிறாய்? தஸ்தாவேஜுகள் இருக்கின்றனவா? காட்டு”

சட்டைப் பைக்குள்ளிருந்து பிரமாணப் புத்தகத்தை எடுத்துக் காட்ட வேண்டியதாயிற்று. கமாண்டருக்குரிய நட்சத்திரம் பொறித்த சிவப்புப் புத்தகம் சிறுவர்கள் மீது மந்திரம் போட்டது போன்ற விளைவை ஏற்படுத்தியது. பகைவர் கைப்பற்றலுக்கு உள்ளாகியிருந்த நாட்களில் அவர்கள் இழந்துவிட்ட பிள்ளைமைக் கூட, அவர்கள் முன் தங்களவன், அருமை சோவியத் சேனையைச் சேர்ந்த விமானி இருப்பதைக் கண்டதுமே ஒரேயடியாகத் திரும்பி வந்துவிட்டது போல் இருந்தது.

“மாமா, நீ ஏன் இப்படி இளைத்துப் போயிருக்கிறாய்?”

“பாசிஸ்டுகள் இங்கிருந்து விரட்டப்பட்டார்கள். நம்மவர்கள் அவர்களை எப்படி அடித்துப் புடைத்து நொறுக்கினார்கள் தெரியுமா? பயங்கரச் சண்டை நடந்தது இங்கே. ஜெர்மன்காரர்களைக் கொன்று குவித்து விட்டார்கள் நம்மவர்கள். அடேயப்பா, எத்தனை பேரைக் கொன்று விட்டார்கள் தெரியுமா?”

“பாசிஸ்டுகள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அகப்பட்டதில் ஏறிக்கொண்டு தப்பி ஓடினார்கள். ஒருவன் தொட்டியை ஏர்க்காலுடன் சேர்த்துக் கட்டிக் கொண்டு தொட்டியில் சவாரி செய்தான். காயமடைந்த இரண்டு பேர் குதிரை வாலைப் பிடித்துக் கொண்டார்கள். மூன்றாமவன் அதன் மேல் ஏறிக் கொண்டான். இந்தக் கோலத்தில் அவர்கள் பிரயாணம் செய்தார்கள்… ஆமாம் மாமா, உன் விமானத்தை யார் அடித்து வீழ்த்தினார்கள்?” இப்படிச் சற்று நேரம் புட்கள் போலச் சிலம்பிய பின் சிறுவர்கள் காரியத்தில் முனைந்தார்கள்.

திறப்பு வெளியிலிருந்து குடியிருப்பு அவர்களின் தகவலின்படி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. வில்லோ மரக்கிளைகள் சேகரிப்பதற்காக “ஜெர்மானியக் காடு திருத்திடத்துக்கு இச்சிறுவர்கள் கொண்டுவந்திருந்த ஸ்லெட்ஜ் மிகமிகச் சிறியதாக இருந்தது. தவிர, பாதையற்ற கன்னி வெண்பனிமீது ஓர் ஆளை இழுத்துச் செல்வது சிறுவர்களின் சக்திக்கு மீறிய செயல். முழு மூச்சாகக் கிராமத்துக்கு ஓடி ஆட்களை அழைத்து வரும்படி இளையவன் பேத்யாவுக்கு உத்தரவிட்டான் மூத்தவன் செர்யோன்கா. தான் அலெக்ஸேயை ஜெர்மானியர்களிடமிருந்து பாதுகாப்பதற்பாக அவனருகே தங்கிவிட்டான். ஆனால் வெளிக்கு இப்படிச் சொன்ன போதிலும் உள்ளூற அவன் நினைத்தது வேறு. அலெக்ஸேயை அவன் நம்பவில்லை. பாசிஸ்டு பலே தந்திரக்காரன். சாகப்போகிறவன் போலப் பாவனைச் செய்வான், சான்றுப் பத்திரங்களையும் எங்கேனும் திருடியிருப்பான்…” என்று எண்ணினான். ஆனால் கொஞ்சங் கொஞ்சமாக இருந்தச் சந்தேகங்கள் விலகிவிடவே சிறுவன் கலகலவென்று பொரிந்து கொட்டத் தொடங்கினான்.

மென்மையான, புஸ்புஸுவென்று அடர்ந்த ஊசியிலைப் பரப்பின் மேல் படுத்து, பாதி மூடிய விழிகளுடன் உறங்கி வழிந்தான் அலெக்ஸேய். சிறுவனின் கதையை அவன் அரை குறையாகவே கேட்டான். திடீரென அவனது உடல் முழுவதையும் பிணித்த அமைதியான உறக்க நிலையில், தனித்தனியான, சம்பந்தா சம்பந்தம் இல்லாத சொற்றொடர்களே அவன் உணர்வை எட்டின. அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ளாமலே தாய் மொழியின் ஒலிகளில் துயிலுடனே இன்பம் துய்த்தான் அலெக்ஸேய். ப்ளாவ்னி என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி அப்புறம்தான் அவன் தெரிந்து கொண்டான்.

“பாசிஸ்டுகள் இங்கிருந்து விரட்டப்பட்டார்கள். நம்மவர்கள் அவர்களை எப்படி அடித்துப் புடைத்து நொறுக்கினார்கள் தெரியுமா? பயங்கரச் சண்டை நடந்தது இங்கே.

காடுகளும் ஏரிகளும் நிறைந்த இந்தப் பிரேசத்துக்கு ஜெர்மானியர்கள் அக்டோபர் மாதமே வந்துவிட்டார்கள். ப்ளாவ்னியின் சுற்று வட்டாரங்களில் சண்டைகள் நடக்கவில்லை. ஒரு முப்பது கிலோ மீட்டர் மேற்கே அவசர அவசரமாக நிறுவப்பட்டிருந்த தற்காப்பு அரண்வரிசையில் இருந்த சோவியத் படைப் பிரிவைத் தாக்கி அழித்துவிட்டு விறல் மிக்க டாங்கி முன்னணிப் பிரிவுகளுடன் வந்த பாசிஸ்ட் படைகள், பாதையிலிருந்து ஒதுக்குப்புறமாகக் காட்டு ஏரியின் பக்கத்தில் மறைந்திருந்த இந்தக் கிராமத்தின் உள்ளே புகாமலே கிழக்கு நோக்கிச் சென்றுவிட்டன.

படிக்க:
♦ பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா !
♦ சென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை ! பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா ?

போர் தங்களை விட்டு விலகிப் போய்விட்டது என்று பளாவ்னி கிராமக் குடியானவர்கள் மகிழ்ந்தார்கள். பாசிஸ்டுகள் வழக்கமாகக் கோருவதற்கு இணங்கத் தங்கள் கூட்டுப் பண்ணைத் தலைவனது பதவிப் பெயரை நாட்டாண்மைக்காரன் என்று மாற்றிவிட்டார்கள். ஆக்ரமிப்பாளர்கள் சதாகாலமும் சோவியத் மண்ணை மிதித்து வைத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. ஆகவே இத்துன்பம் விலகும் வரைப் பொறுத்துச் சமாளிக்கக் காட்டின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ப்ளாவ்னி கிராமத்தவர்களுக்கு ஒரு வேளை முடியலாம். இவ்வாறு நம்பி, கிராமவாசிகள் முன் போலவே கூட்டுறவு முறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்கள். ஆனால் சதுப்பு நிலப் பூண்டு நிறச் சீருடை அணிந்த ஜெர்மானியர்களைத் தொடர்ந்து மோட்டார்களில் வந்தார்கள் கறுப்புநிறச் சீருடை அணிந்த ஜெர்மானியர்கள். அவர்களுடைய தொப்பிகளின் மேல் மண்டையோடும் எலும்புகளும் அடையாளமாகப் பொறிக்கப்பட்டிருந்தன. ஜெர்மனிக்கு நிரந்தர வேலைக்காகச் செல்ல பதினைந்து தொண்டர்களை இருபத்து மணி நேரத்திற்குள் தருமாறு ப்ளாவ்னி வாசிகளுக்கு உத்தரவு இடப்பட்டது. உத்தரவு நிறைவேற்றப்படாவிட்டால் கிராமம் பெரு விபத்துக்கு உள்ளாகும் என்று அச்சுறுத்தப்பட்டது.

ஆனால் குறித்த நேரத்தில் ஒருவரும் வரவில்லை. கறுப்பு உடையணிந்த ஜெர்மானியர் ஏற்கனவே அடைந்துள்ள அனுபவம் காரணமாக, ஆட்கள் வருவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சில ஆட்களைப் பிடித்து, கிராம நிர்வாக அலுவலகத்துக்கு முன் அவர்களைச் சுட்டுக் கொன்றார்கள் – மற்றவர்களை எச்சரிப்பதற்காக. நாட்டாண்மைக்காரன், குழந்தைப் பள்ளியின் முதிய ஆசிரியை வெரோனிக்கா கிரிகோர்யெவ்னா, இரு கூட்டுப் பண்ணைக் குழுத் தலைவர்கள், ஜெர்மானியர் கைகளில் பிடிபட்ட ஒரு பத்து குடியானவர்கள் ஆகியவர்கள் இந்த மாதிரிச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய உடல்களை அடக்கம் செய்யவும் ஜெர்மானியர் அனுமதிக்கவில்லை. இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் தொண்டர்கள் உத்தரவில் குறிக்கப்பட்ட இடத்துக்கு வந்து சேராவிட்டால் கிராமத்தினர் எல்லோருக்கும் இந்தக் கதியே என்று அறிவித்தனர்.

தொண்டர்களோ இந்தத் தடவையும் வரவில்லை. எஸ்.எஸ். படையினர் காலையில் கிராமத்தைச் சுற்றிப் பார்க்கையில் எல்லா வீடுகளும் வெறுமையாயிருந்தன. கிழவர்களோ, சிறுவர்களோ, ஒரு பூதரும் இல்லை அவற்றில். தங்கள் வீடுகளையும் நிலத்தையும் வருஷக்கணக்காக சேர்த்திருந்த எல்லாப் பண்டங்களையும், அனேகமாக எல்லாக் கால்நடைகளையும் அப்படியே போட்டுவிட்டு, இந்த வட்டாரங்களில் அடர்த்தியாக இருக்கும் இரவுப் பனி மூட்டத்தின் மறைவில் எல்லா ஜனங்களும் போன சுவடு தெரியாமல் மறைந்து விட்டார்கள். கிராமத்தார் அனைவரும் ஓர் ஆள் பாக்கியின்றிப் பதினெட்டு வெர்ஸ்டாக்கள் தொலைவில் காட்டுக்குள் இருந்த பழையத் திருத்திடத்துக்குக் குடியேறிப் போய்விட்டார்கள். மண்ணைத் தோண்டி நிலவறைகள் அமைத்த பின் ஆண்கள் கொரில்லாப் போர் புரியச் சென்றார்கள். பெண்களும் குழந்தைகளும் வசந்த காலம் வரும் வரை காட்டில் தங்கியிருந்தார்கள். கலகக்கார கிராமத்தை எஸ். எஸ். படையினர் எரித்து சாம்பலாக்கிவிட்டார்கள். பாசிஸ்டுகள் செத்த பிரதேசம் என்று அழைத்த இந்த வட்டாரம் முழுவதிலும் பெரும்பாலான கிராமங்கள் இவ்வாறே தீக்கிரையாக்கப்பட்டன.

“… எங்கள் அப்பா கூட்டுப் பண்ணைத் தலைவராக – இருந்தார். அவரை நாட்டாண்மைக்காரர் என்று ஜெர்மானியர்கள் அழைத்தார்கள்” என்று சொல்லிக் கொண்டு போனான் செர்யோன்கோ. அவனுடைய சொற்கள் சுவரின் மறுபுறமிருந்து வருபவைப் போல அலெக்ஸேயின் உணர்வில் சென்று பதிந்தன. “அவரையும் என் அண்ணனையும் ஜெர்மானியர் கொன்று விட்டார்கள். பதினாறு ஆட்கள் கொல்லப்பட்டார்கள். என் கண்ணால் பார்த்தேன். அவர்களைப் பார்ப்பதற்கு நாங்கள் எல்லோரும் இழுத்து செல்லப்பட்டோம். அப்பா விடாமல் கத்தித்திட்டி நொறுக்கினார். ’பன்றிப் பயல்களா, எங்களுக்காக உங்களைப் பழிவாங்குவார்கள் சோவியத் வீரர்கள்! எங்களைப் படுத்தியதற்குத் தண்டனையாக இரத்த கண்ணீர் வடிக்கப் போகிறீர்கள்’ என்று இரைந்தார்…”

அவரையும் என் அண்ணனையும் ஜெர்மானியர் கொன்று விட்டார்கள். பதினாறு ஆட்கள் கொல்லப்பட்டார்கள். என் கண்ணால் பார்த்தேன். அவர்களைப் பார்ப்பதற்கு நாங்கள் எல்லோரும் இழுத்து செல்லப்பட்டோம்.

அலெக்ஸேய் உறக்க மயக்கத்திலிருந்து சிரமத்துடன் தன்னை விடுவிடுவித்துக் கொண்டு, ”அப்படியானால் காட்டி தான் வசிக்கிறீர்களாக்கும்?” என்று காதில் அரிதாகவே படும்படி ஈன சுரத்தில் சிறுவனிடம் வினவினான்.

“வேறு எங்கே? அங்கேதான் வசிக்கிறோம் பேத்யா, அம்மா, நான், மூன்று பேர் தாம் இருக்கிறோம். நியூக்ஷா என்று ஒரு தங்கை இருந்தாள். பனிக்காலத்தில் காலமாகிவிட்டாள் – உடம்பெல்லாம் வீங்கிச் செத்துப் போனாள். இன்னோரு சின்னக் குழந்தையும் செத்துப் போய்விட்டது. ஆக மீதம் இருப்பவர்கள் நாங்கள் மூன்று பேர் மட்டுமே… அதோ பேத்யாவோடு, தாத்தா வருகிறார் பாருங்கள்!”

சிறுவர்களால் மிஹாய்லா தாத்தா என்று அழைக்கப்பட்ட கிழவர் உயரமும் கூனலும் ஒடிசலுமாக இருந்தார். அவர் முகத்தில் நல்லியல்பு சுடர் விட்டது. குழந்தையினுடையவை போன்ற தூய விழிகள் ஒளி வீசின. முற்றிலும் வெள்ளியாக நரைத்த அடர்த்தியற்ற மென் தாடி, அருவிப் போலக் காட்சியளித்தது. பல நிற எட்டுத் துணிகளால் ஆன பழைய ஆட்டுத் தோல் மேல் கோட்டை அலெக்ஸேய்க்கு மாட்டி, அவனுடைய லேசான உடலை அனாயசமாகத் தூக்கி அப்புறமும் இப்புறமும் புரட்டியவாறு கிழவர் இடைவிடாது பேசிக் கொண்டு போனார். அவர் குரலில் குழந்தைத் தனமான வியப்பு தொனித்தது.

“அடப் பாவமே! ஆள் எப்படி ஒரேடியாக தேய்ந்து மாய்ந்து போயிருக்கிறான்! எவ்வளவு எய்த்து இளைத்து விட்டான் பாரேன்!… அட என் ஆண்டவனே, வெறும் எலும்புக்கூடு தான் மிச்சம்! சண்டைதான் ஆட்களை என்னவெல்லாம் பாடுபடுத்து கிறது. அடா-டா-டா! அடா-டா-டா!”

பச்சைக் குழந்தையைப் போல அலெக்ஸேயைப் பதபாகமாகத் தூக்கி, அகன்ற ஸ்லெட்ஜில் கிடத்தினார். பூட்டுக்கயிற்றை அவன் மேல் சுற்றிக் கட்டினார், சற்று யோசித்தார். தமதுத் துணிக் கோட்டைக் கழற்றிச் சுருட்டி அலெக்ஸேயின் தலைக்கு அடியில் வைத்தார். முன்னே போய், கோணிச் சாக்குகளால் ஆன நுகத்தில் கழுத்தை மாட்டிக் கொண்டார், சிறுவர்களுக்கு ஆளுக்கு ஒரு கயிறு கொடுத்து, “”ஊம், புறப்படுவோம்!” என்றார். மூவருமாக இளகிய வெண்பனிமீது ஸ்லெட்ஜை இழுத்துச் செல்லலானார்கள். வெண்பனி, ஸ்லெட்ஜின் சறுக்கு கட்டைகளுக்கு அடியே உருளைக்கிழங்கு மாவுப் போல ஒட்டிக் கொண்டு கறுமுறுத்தது, பாதங்களுக்கு அடியே புதைந்தது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !

மே 22 தியாகிகளுக்கு நினைவஞ்சலி நிகழ்த்த ஆதரவு கோரி  வணிகர் சங்கங்களின் பேரவையிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு  மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை !

தூத்துக்குடியில் 05.05.2019 அன்று வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக 36-வது மாநில மாநாடு (சுதேசி பொருளாதார மாநாடு) நடைபெற்றது. அதில் வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர், ஐயா வெள்ளையன் அவர்களிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக மே -22 அன்று, அவரது தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவஞ்சலி நடத்த வேண்டும் என்றும், அன்று ஒரு நாள் முழு கடையடைப்பு செய்யவேண்டும் என்றும் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும் அந்த மாநாட்டில் கலந்துகொண்ட வழக்கறிஞர் ஹென்றி திபேன், ஐயா பழ. நெடுமாறன் அவர்களையும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் சந்தித்தனர். அவர்களிடமும் நினைவஞ்சலி நடத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று ஐயா பழநெடுமாறன் அவர்கள் மே 22 அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவஞ்சலி நடத்துவதாக கூறியுள்ளார்.

தூத்துக்குடியின் மண்ணையும், மக்களையும் பாதுகாக்க ஸ்டெர்லைட் எனும் நாசகார ஆலைக்கு எதிராகப் போராடி தங்கள் உயிரை அர்ப்பணித்த தியாகிகளுக்கு அனைத்து கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் நினைவஞ்சலி செலுத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இப்படிக்கு,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,
தூத்துக்குடி. 

மன்னர்களை மண்டியிடச் செய்த மாவீரனுக்கு சாஸ்திரத்தைக் காட்டுகிறார்கள் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 14


காட்சி : 20

இடம் : இந்துமதி தனிஅறை
உறுப்பினர்கள் : இந்துமதி.

(இந்துமதி தனிமையில் சோகமாய்ப் பாடுகிறாள்)

காட்சி : 21
இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : சிவாஜி, மோகன், தளபதிகள், வீரர்கள்.

(கோட்டை உடைத்தல்)

தளபதி – 1 : காகப்பட்டரின் மறுமொழி கிடைத்துவிட்டதாமே? சாஸ்திர சம்மதம் பெற்ற மார்க்கம் இருக்கிறதாமே?

சிவாஜி : ஆமாம்! சூத்திரனை க்ஷத்திரியனாக்குகிறாராம். அதற்கு ஒரு சடங்கு இருக்கிறதாம்.

மோகன் : பறவைக்கு இறக்கையை ஒட்டிவிடப் பார்க்கிறார்கள். சூட்சி பலித்துவிட்டது.

சிவாஜி : இதிலே சூட்சி என்ன இருக்கிறது? அவர்கள் சாஸ்திரத்தைத் தானே கூறுகிறார்கள்?

மோகன் : ஆமாம்! சாஸ்திரத்தைதான். ஆனால், யாருடைய சாஸ்திரம்? எதிரிகளிடம் இந்த நாடு சிக்கிய போது, அந்த சாஸ்திரம் உதவவில்லையே? யாரும் அதன் துணையைத் தேடவில்லையே? கங்கைக் கரைக்கா ஓடினோம். களத்திலே என்ன செய்வது, எப்படிப் போரிடுவது என்று கேட்க ? மராட்டியரின் தோள் வலிமையும், அவர்கள் ஏந்திய வாளின் கூர்மையும், அப்போது தேவைப்பட்டது. இப்போது மன்னர்களை மண்டியிட வைத்த மாவீரனுக்கு சாஸ்திரத்தைக் காட்டுகிறார்கள். சாஸ்திரத்தை !

தளபதி – 1 : அதைத் தவிர வேறு வழி காணோமே?

மோகன் : எங்கே போக வழி வேண்டும் தோழரே? வீரபுரிக்கு மார்க்கம் வெகு தெளிவாக இருக்கிறது. விவேக புரிக்கும் அப்படித்தான். ஆனால் வைதீகபுரிக்குத் தான் – வளைந்த பாதை இருக்கிறது.

தளபதி – 1 : காகப்பட்டர் நமது தலைவரை க்ஷத்திரியராக்க இசையும் போது, நமக்கென்ன கஷ்டம்? சிக்கல் தீர்ந்து விட்டது என்றல்லவா தெரிகிறது.

மோகன் : அதை நான் மறுக்கிறேன் மாதவரே! பலமாக மறுக்கிறேன். சிக்கல் தீரவில்லை; சிக்கல் பலமாகிறது. வீர சிவாஜியின் வெற்றிகள் அத்தனையும் வீண் என்பதை நாம் பிற்காலச் சந்ததிக்குச் சாசனமாக்குகிறோம். போரிலே புலியாக இருந்தார். ஆனால் வைதீகபுரியிலே சிக்கினார் சிவாஜி என்று வருங்காலத்தில் மக்கள் கூறத்தான் போகின்றனர். நெடுங்காலத்துக்குப் பிறகும் போரிடவோ, ஆளவோ, உழைக்கவோ, ஊருக்கு உதவி செய்யவோ, வீரமோ, தீரமோ , தகுதியோ, திறமையோ அற்றக் கூட்டம் பெருமையுடன் தலை நிமிர்ந்து கூறத்தான் போகின்றது. மாவீரன், மராட்டியம் பெற்றெடுத்த தீரன், களத்திலே சூரன் சிவாஜி. ஆனால் எமது காகப்பட்டரிடம் அடைக்கலம் புகுந்த பிறகே அரியாசனம் ஏற முடிந்தது. எமது ஆதிபத்தியத்தைப் பாரீர் என்று பேசத்தான் போகிறது.

வீரத் தலைவனே! வேண்டாம். வேண்டாம், இந்த விபரீத காரியம். மராட்டியத்தின் மானத்தைக் காக்கத் தயங்காதீர். மணிமுடி தரிக்க உமக்கு எந்த ஜடாதரியின் தயவும் தேவையில்லை

சிவாஜி : தயவல்ல! ஆசீர்வாதம் தானே அது! அதைப் பெறுவதிலே இழிவு என்ன?

தளபதி – 1 : சாஸ்திரப் பலத்தைத்தான் தேடுகிறோம்.

மோகன் : மகனை இழந்தாலும் மனம் தளராத மாதர்கள் மராட்டியத்திலே இருக்கிறார்கள். வீரர்கள் ஏராளமாக உள்ளனர். தியாகப் புருஷர்கள் இருக்கிறார்கள். இவர்களால் வரும் பலம் உங்களுக்குப் பலமாகத் தோன்றவில்லை. மகராஜ்! பச்சிளங் குழந்தைக்குப் பாடுவது போல் இருக்கிறது தங்களுடைய வாதம். காகப்பட்டர் தங்களைச் க்ஷத்திரியராக்குகிறார். தாங்கள் தோன்றிய திருக்குலத்தையல்ல. அந்தக் குலம் என்றும் சூத்திரக் குலமாகவே இருக்குமே. தங்களை எங்களிடமிருந்து பிரித்து விடுகிறார். தாங்கள் பிறந்த குலம் தாழ்ந்தது. நாடாளத் தகுதியற்றது என்று தாங்களே ஒத்துக் கொள்ளும்படி சொல்கிறார்.

பெற்ற தாயைப் பிச்சைக்காரியாக்கிவிட்டு, மகன் பெருநிதி பெற்று வாழ்ந்தால் அவனை பெரியோன் என்று பேதையும் கூறானே. குடியானவர் குலத்துக்கு என்ன மாசு? நமது குலத்தைக் குறை கூறும் ஏட்டை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று அவர்கள் காட்டும் ஏட்டின் துணைகொண்டு, நாம் நாட்டை மீட்டிருந்தால் அதற்கு நாம் மதிப்பளிக்கலாம். எதிரிகள் நம்மைத் தாக்கிய போது அந்த ஏடு கேடயமாக இல்லை, வாளாக இல்லை, வாளையிடும் உறையாகக் கூடப் பலனளிக்க வில்லையே! ஏன் அந்த ஏடு மகராஜ்?

சிவாஜி : சந்திரமோகன்! ஆரியர்களின் அபிப்பிராயப்படி நடப்பதால் நீ இவ்வளவு அதிருப்தி கொள்ளலாமா? நானும் முதலிலே கோபித்துக் கொண்டேன். ஆனால் இப்போது காக்கப்பட்டரின் யோசனை இருதரப்பாருக்கும் திருப்திகரமாக இருக்கிறது என்றே எண்ணுகிறேன். சாஸ்த்திர சம்பிரதாயமும் நிலைக்கும். உன் போன்ற உள்ள தோழர்களின் அபிலாஷையும் நிறைவேறும்.

மோகன் : மராட்டியத் திலகமே மன்னிக்க வேண்டும். நான் வெற்றி வீரன் சிவாஜி ஆவதை விரும்பி வந்தேனே ஒழிய, ஆரிய தாசனான பிறகு அரியாசனம் ஏறும் துர்ப்பாக்கிய காட்சியைக் காண வரவில்லை. மகராஜ் ஆரிய சிரேஷ்டர் என்று அர்ச்சிக்கிறீர். ஒரு ஆற்றலற்ற கூட்டத்தை பார்ட்டாரி தேசத்துப் புரவிகள் மீதமர்ந்து. தகதகவெனும் கவசம் பூண்டு, பளபளக்கும் கடகம் ஏந்தி, போர்க் குணம் படைத்த மக்கள் இங்குப் புயலெனக் கிளம்பிய பொழுது, காய்ந்த புல்லைக் கையிலேந்தி திரிந்த கூட்டம் என்ன செய்தது? தாங்கள் யார்? தங்களுடைய வீர தீரம் எத்தகையது? தாங்கள் எங்கள் கண்களுக்கு மராட்டிய நாட்டிலே மார்தட்டி நின்று, மகத்தான போராட்டங்களை நடத்திய மாவீரராக காட்சியளிக்கிறீர். கட்கமெடுத்து, புரவி மீதேறி, காடு மலை கடந்து சென்று, கடும் போரிட்ட வீரன். ஆனால் அவர்கள் கண்களுக்கு ஒரு சூத்திரராகத் தெரிகிறீர். கண்ணிலும், கருத்திலும் கடும் விஷம் இருக்கிறது காவலா!

மராட்டிய மண்டலத்தைக் கமண்டல நீர் தெளித்து அவர்கள் உண்டாக்கவில்லை. மராட்டியரின் ரத்தத்தைச் சிந்தி இந்த மண்டலத்தைப் பெற்றோம். யாக குண்டத்தின் விளைவல்ல மராட்டியம். தியாகத் தீயிலே தோன்றிய தேசம். இந்த வேலையை வேதம் ஓதும் அவர்கள் செய்யவில்லை. நாம் செய்தோம்; நம்மை நிந்திக்கிறார்கள், சூத்திரர்கள் என்று. அதை நாம் ஏற்றுக் கொள்வதா, மன்னா! இது நமது வீழ்ச்சியின் அறிகுறி என்பேன்.

தளபதி – 2 : தளபதிகளே ! மராட்டிய மண்டலத்திற்கு ஒரு மன்னன் தேவை. மக்களின் விருப்பம் மட்டுமல்ல, பரத கண்டம் முழுவதும் இதே பேச்சாக உள்ளது. ஆகவே நாம் சில்லறை விஷயங்களைப் பேசிக்கொண்டு சிக்கலை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல. காகப்பட்டரை வரவழைத்து, அவர் கூறும் சடங்கு செய்து, நமது தலைவரை முடிசூட்டிக் கொள்ளச் செய்வதே முறை.

மோகன் : தளபதிகளே! மிக மிக சாமான்யக் குடியிலே பிறந்த சிவாஜி. ஒரு பெரிய அரசை, மராட்டிய சாம்ராஜ்யத்தைத் தன் தோள் வலிமையால் கண்டார். அவரது மின்னும் வாள் ஒளி வீசாத இடமில்லை . அவருடைய படையின் பரணி கேட்காத நாளில்லை. அவருடைய கண்ணோட்டம் அடிமைத்தனத்தைப் போக்கிற்று காடுகளிலே கூடாரங்கள், மலைகளிலே கோட்டைகள், குகைகளிலே பாசறைகள். யாரால் ஏற்பட்டன? நமது இனத்தின் பங்கத்தைப் போக்கிய சிங்கத்தால், அந்தச் சிங்கம் சிலந்திக் கூட்டிலே சிக்குவதா? ஈட்டிக்கு மார்பு காட்டுகின்ற இணையில்லா வீரன், உலர்ந்த சருகு கண்டு உடல் துடிக்க நிற்பதா? மார்பு வாள் வடுவுடன் விளங்க, மராட்டியத்திலே மண்ணோடு குருதி கலந்து குழைய, மராட்டியக் குடும்பங்களிலே தாய்மார்கள் கோவெனக் கதற, போரிட்டு நிறுவியது மராட்டிய சாம்ராஜ்யம். மலை, காடு, நதி, படை எதுவும் தடுக்கவில்லை சிவாஜியை! ஆனால் ஆரியர்கள் தடுக்கின்றனர். எவ்வளவு விசித்திரம். வேதனை தரும் விசித்திரம். கூண்டிலே சிக்கிய புலி, தூண்டிலிலே சிக்கிய மீன், வலையிலே வீழ்ந்த மான், வர்ணாஸ்ரமத்திலே வீழ்ந்த வீரன் – இந்த வேதனை தரும் காட்சியையா நான் காணவேண்டும்? ஐயோ, மராட்டியமே! உன் நிலை இப்படியா குலைய வேண்டும்? ஒரு சிறு கூட்டத்திடம் சிக்கிச் சீரழிகிறாயே.

சிவாஜி : மக்களின் மனப்போக்கைக் கவனிக்க வேண்டாமா?

மோகன்: மக்களின் மனம்! தாங்கள் வீரமாகக் கிளம்புவதற்கு முன்பு மக்களின் மனம் இனி என்றென்றும் நாட்டிற்கு விடுதலை கிடையாது; விடுதலை பெற முடியாது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தனர். போரிடக் கிளம்பிய நீர், புதுமையைக் கண்டீர். கோழையும் வீரனானான் ; கோட்டைகள் தூளாயின; கொட்டினோம் வெற்றி முரசு, பறக்கிறது, சுதந்திரக் கொடி.

சிவாஜி : மோகனா! காகப்பட்டரின் யோசனையை மறுத்தால், என்ன நேரிடும் என்பதை எண்ணிப் பார்க்காமலே பேசுகிறாய் .

மோகன் : என்ன நேரிடும்? காகப்பட்டர் தமது ரத, கஜ, துரக பதாதிகளுடன் மராட்டியத்தின் மீது படையெடுத்து விடுவார். நாம் அவரது அசகாய சூரர்களால் தோற்கடிக்கப்பட்டு விடுவோம்! அதுவா சத்திரபதி தங்கள் சிந்தை கலங்குவதற்குக் காரணம்?

சிவாஜி : மோகன்! நீ என்னைக் கேலி செய்கிறாய்! நான் நெடுநேரமாக உனது பேச்சுக்கு இடமளித்து வந்தேன். இனி வாதிடப் போவதில்லை. நான் காகப்பட்டரை வரவழைப்பதென்று தீர்மானித்து விட்டேன். தீர யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். இனி நீ போகலாம்; காகப்பட்டரை வரவழைக்க ஏற்பாடுகள் தயாராகட்டும்.

(மோகன் தலை குனிந்து நிற்கிறான். சபை கலைகிறது. மோகன் போகிறான். சிவாஜி உலவியப்படி)

சந்திரமோகன் கூறுவது அவ்வளவும் உண்மைதான்!

(கோட்டைகளைப் பார்த்து)

அதோ தோர்ணா, அந்தக் கோட்டையைப் பிடிக்க நடந்த பயங்கரச் சண்டையை நினைத்துக் கொண்டால், ஆபத்தைத் துரும்பாக எண்ணிய சிவாஜியின் நிலைமையை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்…..? எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.

“சத்திரபதி இந்தக் கணவாயின் பக்கம் போகக்கூடாது.”

”ஏன்?”

“எதிரியின் படை பலம் அதிகம்.”

“கோழைகள் விலகட்டும், வீரர்கள் பின் தொடரட்டும்.”

”கொட்டு முரசு” என்று உத்தரவிட்டுப் பாய்ந்து சென்று வெற்றி பெற்ற புரந்தர். எதிரியே ஆச்சரியம் அடையும்படியான அபார வீரத்துடன் வெற்றி பெற்ற ராஜகிரி, மராட்டிய கீர்த்தியின் உறைவிடம் போலுள்ள கல்யாண்…

கோட்டைகள் வெற்றியின் சின்னங்கள் ; வீரத்தின் அறிகுறிகள்; அந்த சிவாஜியா நான்? அஞ்சா நெஞ்சன் எங்கே? பஞ்சையிடம் பணியப்போகும் நான் எங்கே ? ஒழிந்தது. அந்த சிவாஜி மங்கிவிட்டான். எதற்கும் அடிபணியும் சிவாஜி உலாவுகிறான். தோர்ணா! புரந்தர்! ராஜகிரி! என் கண்முன் இருக்க வேண்டாம்.

(கோட்டைகளை உடைத்து )  சிதறுகின்றன சிறுசிறு துண்டுகளாக. வீரத்தின் சின்னங்கள். என் மனக்கோட்டை பொடிப் பொடியாகிறது.

(மெளனமாக உலவிவிட்டு)

சந்திரமோகா! நீ எல்லாம் அறிந்திருக்கிறாய் வெட்டு ஒன்று; துண்டு இரண்டாகப் போகிறாய்; வீரன். ஆனால் என் நிலையை மட்டும் உணரவில்லை. ஒரு வினாடியில் காகப்பட்டர் வேண்டாம், மகுடாபிஷேகம் இன்று நடக்குமென்று உத்தரவு பிறப்பித்து விடலாம். மராட்டியம் மறுக்காது. ஆனால் மறுகணம் முதல் என்ன நடைபெறும்? இந்த மண்டலத்திலும், வேறு பல மண்டலங்களிலும் ஆஸ்ரமவாசிகள் ஆரம்பிப்பார் தமது பிரச்சாரத்தை.

படிக்க:
சாதி உங்களுக்கு என்ன செய்தது ?
மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! புதிய கலாச்சாரம் மின்னிதழ்

‘மராட்டிய மண்டலாதிபதி சாஸ்திர விரோதி! சம்பிரதாய வைரி! சனாதனத்தைக் கெடுத்தவன்! அவனுடைய ராஜ்யம் பாவ பூமி!’என்று கூறுவர்.

அவர்கள் பூதேவர்கள்! மக்கள் அப்படித்தானே எண்ணுகிறார்கள். அந்த மக்கள் பிறகு மராட்டிய மண்டலத்தை உள்ளிருந்து கெடுத்துவிடுவர். நான் இன்று பட்டாச்சாரிக்குப் பணியாவிட்டால், அந்தப் பாதகர்கள் பாமரரை நாளை என் மீது ஏவிவிடுவர். மராட்டியனைக் கொண்டே மராட்டியனை அழிப்பர். பரத கண்டம் முழுவதும் ‘சிவாஜி நீச்சன், சாஸ்திர சம்மதமில்லாது ராஜ்யம் ஸ்தாபித்தான். அவனுக்குச் சர்வ நாசம் சம்பவிக்கும். – இமயம் முதல் குமரி வரை எனக்கு எதிர்ப்பு, ஏளனம் கிளம்பும். என்ன செய்வேன்? மராட்டியத்தை அவர்கள் சும்மா விட மாட்டார்களே. ஒருபுறம் வெளிநாட்டார் எதிர்ப்பு ; வேறொரு புறம் வேறு வேந்தர்களின் எதிர்ப்பு! மராட்டியத்திலேயே எதிர்ப்பு. எத்தனை கணைகளைத்தான் மராட்டிய மாதா தாங்குவாள். மோகன் நான் பணிந்துதான் ஆகவேண்டும்; வீழ்ச்சிக்குத் தான்! ஆனால் வேறு வழியில்லை; வேறு வகையில்லை.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

தூத்துக்குடி தியாகிகளின் நினைவைப் பேசாதே ! போலீசு பொய் வழக்கு !

பத்திரிகைச் செய்தி

11.05.2019

தூத்துக்குடி தியாகிகளின் முதலாமாண்டு நினைவைப் பேசக்கூடாது என்பதற்காகவே பொய்வழக்கு!

கடந்த 2018-ம் ஆண்டு, டிசம்பர் 29 அன்று “14 பேரின் உயிர் தியாகம் வீணாகலாமா? குற்றவாளிகளை கைது செய்!”  என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தோழர் இளஞ்சேகுவேரா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு, ஜனநாயக வழக்குரைஞர் சங்கத்தின் செயலர் பாரதி, வழக்குரைஞர் சுரேஷ் சக்தி முருகன் ஆகியோர் மீது 505(i)(b) சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது திருவல்லிக்கேணி போலீசு.

இந்த வழக்கு பதிவு செய்ததின் பின்னணி என்ன?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டடத்தை சீர்குலைத்து வன்முறையை ஏவி 15 பேரை சுட்டுக் கொன்றது போலீசு.

சுட்டுக்கொன்ற போலீசு மீது எந்த நடவடிக்கையும் இல்லை, ஆனால் போராடிய மக்கள் மீதும், மக்கள் அதிகாரம் அமைப்பின் மீதும், போடப்பட்ட வழக்குகளும், ஏவப்பட்ட அடக்குமுறைகளும் ஏராளம்.

படிக்க :
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் ! மக்கள் அதிகாரம் ராஜு பதில்
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | போலீசு உருவாக்கிய பொய்க் கதை

மக்கள் அதிகாரம் சார்பில் கூட்டங்கள் நடத்த போலீசு அனுமதி மறுக்கிறது. அரங்க நிர்வாகிகளை அச்சுறுத்துகிறது. அதையும் எதிர்கொண்டு சென்னை நிருபர்கள் சங்கக்கட்டிடத்தில் நடத்திய கூட்டத்திற்குதான் இந்த வழக்கு.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவேந்தலை மக்கள் அனுசரிக்க உள்ள நிலையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றுவரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசுவதையேகூட குற்றமாக்கி பொது அமைதியை சீர்குலைத்தது போலீசுதான். அது மட்டுமல்ல, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, மீத்தேன் என எதைப் பேசிடவும் கூடாது என்கிறது அரசு.

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக, மக்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள் மீது போலீசு வழக்கு பதிவு செய்கிறது.

இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மீதும், மற்ற தலைவர்கள் மீதும் போடப்பட்ட பொய் வழக்குகள் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

போலீசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தங்கள்
தோழர். மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்
9962366321
ppchennaimu@gmail.com
Facebook id : makkal athikaram

ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

ச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது அவரிடம் பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார். இதனை விசாரிக்க அமர்த்தப்பட்ட மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வும், அதிவேகமாக விசாரித்துவிட்டு கோகோய் குற்றமற்றவர் என அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

ஒரு வழக்கறிஞர் இதன் பின்னணியில் தலைமை நீதிபதிக்கு எதிராக ஒரு பெரும் சதி நடப்பதாக வழக்குப் பதிவு செய்திருந்தார். விசாரணையில் அவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இது போக, புகார் அளித்த அந்தப் பெண் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்து வெளியே வந்ததை ‘யாரோ’ பார்த்ததாக  வாட்சப் செய்திகள் ஒரு புறமும், உச்சநீதிமன்ற நீதிபதியை ’மிரட்டி’ வைப்பதற்காகவே, அப்பெண் காங்கிரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்பது போன்ற சந்தேகங்கள் மற்றொரு புறமும் எழுப்பப் படுகின்றன. ஜனநாயகத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் பாஜக-வும், காங்கிரசும் இவ்விவகாரம் குறித்து வாய் கூட திறக்கவில்லை. .

எனில் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மை என்ன ? அந்தப் பெண் பொய் சொல்கிறாரா ? ரஞ்சன் கோகாய் மிரட்டப்படுகிறாரா ? விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜு.

பாருங்கள் ! பகிருங்கள் !

வெனிசுலா : அமெரிக்க தடைக்குக் குவியும் கண்டனங்கள் ! மவுனிக்கும் ஊடகங்கள் !

0

வெனிசுலா மீது ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து முறைகேடான மற்றும் கடுமையான பொருளாதாரத் தாக்குதல்களைத் தொடுத்து வருவதை வல்லுனர்களும் பொருளாதார அறிஞர்களும் எச்சரித்து வருகின்றனர். ஆனால் ஊடகங்களோ அந்த எச்சரிக்கையை கண்டும் காணாமலும் இருக்கின்றன.

சான்றாக,”condemns US sanction” என்று மேற்கோளுடன் கூகுளில் தேடிப் பாருங்கள். வட கொரியா, ஈரான், வெனிசுலா, கியூபா மற்றும் இரசியா பொன்ற நாடுகள்தான் அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்ப்பதாக பல்வேறு முக்கிய ஊடகங்கள் கூறுவதை பார்க்க முடியும். மோசமான  நாடுகளை வாசிங்டன் தண்டிக்கிறது பதிலுக்கு அந்த மோசமான நாடுகள் குறை சொல்லுகின்றன – இது எளிமையான சிக்கலில்லாத ஒரு விளக்கம்.

வெனிசுலா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் அமைப்பு வெளிப்படையாக கண்டித்திருப்பது குறித்து கூகுளுக்கு தெரியாது போலும்.  இந்த தடைகள் ஏழைகளை மிகக் கடுமையாக பாதிக்கும் என்று அது கூறியிருந்தது.

பொருளாதாரத் தடையினால் சாமானிய மக்களுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகள் குறித்து தனிப்பட்ட முறையில் ஐக்கிய நாடுகள் அவையின் வல்லுனர்களும் பொருளாதார அறிஞர்களும் கூறியிருப்பதை எந்த ஊடகங்களும் முதல் பக்கத்திலோ அல்லது நடுப்பக்கத்திலோ போடுவதேயில்லை.

படிக்க:
♦ மேற்குவங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை
♦ கவுரி லங்கேஷ் கொலை – சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு : ஒரே குற்றவாளிகள் !

அமெரிக்காவின் பொருளாதாரத் தாக்குதல்கள் குறித்து சமீபத்தில் பேசியிருப்பவர் ஐ.நா வின் பொருளாதாரத் தடைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான பதிவரான இட்ரிஸ் ஜஸேரி(Idriss Jazairy).  பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா ஆட்சி கவிழ்ப்பு செய்வதை அவர் கண்டித்தார். சாதாரண மக்களை பகடைக் காய்களாகவும் பணயக் கைதிகளாகவும் வாசிங்டன் மாற்றுகிறது என்று அவர் விமர்சனம் செய்தார்.  இது போன்ற தாக்குதல்கள் நேரடியாக அடிப்படை மனித உரிமையை தடுப்பதாகும். மேலும் இதை ஒரு ஏற்றுக்கொள்ளத்தக்க சர்வதேச உறவாகக் கருத முடியாது என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

வெனிசுலா மக்களின் மனித உரிமைகள் குறித்து அக்கறை கொண்ட பத்திரிக்கையாளர்களின் குரலாக இதை சிலர் கருதலாம். அப்படி இல்லை. எந்த ஒரு முக்கிய அமெரிக்க ஊடகமும் ஜஸேரியின் கண்டனத்தை பதிவு செய்யவில்லை.

ஆனால் வெனிசுலாவிற்கான ஐநாவின் முன்னால் பதிவரான அல்ஃப்ரெட் டி ஜயாஸிற்கு (Alfred de Zayas) சிறிது நல்ல நேரம் இருந்ததால் இங்கிலாந்து மற்றும் ஐரிஸ் பத்திரிகைகளில் அவரது கருத்துக்கள் இடம் பிடித்துள்ளன. அமெரிக்க பொருளாதார தடைக்கும் மரணத்திற்குமான நேரடி தொடர்பை எதிர்த்து அவர் பேசினார். இது குறித்து எந்தவொரு முக்கியமான அமெரிக்க பத்திரிகைகளும் பேசவில்லை. இதில் ஒரே மாதிரியான பாங்கு தென்படவில்லையா?

வெனிசுலா அதிபர் மதுரோ

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எப்படி வெனிசுலாவின் 40,000 குழந்தைகளின் குறை மரணங்களுக்கு காரணமாக இருந்தது என்பதை மிக சமீபத்தில் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான மையத்தைச் (Center for Economic and Policy Research ) சேர்ந்த பிரபல பொருளாதார வல்லுனர்களான மார்க் வெய்ஸ்ப்ராட் மற்றும் ஜெஃப்ரி சேச்சஸ் இருவரும் தங்களது ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும் ஜெனீவா மற்றும் ஹேக் கூட்டு ஒப்பந்தத்தின் ”மொத்த குடிமக்களுக்கான கூட்டு தண்டனைக்கு” பொருத்தமான விளக்கமாக இது இருக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறியது.

இந்த அறிக்கை பெரும்பான்மையான ஊடகங்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டது. ஃபாக்ஸ் நியூஸ் இது குறித்து செய்தி வெளியிட்ட போதும் ”ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான இடதுசாரி சிந்தனையாளர்களின் தாக்குதல்” என்று கூறி அந்த அறிக்கையை அது நிரகரித்தது.

பொருளாதார தடையை எதிர்த்து நோம் சோம்ஸ்கி உள்ளிட்ட 70 அறிஞர்கள் கையெழுத்திட்ட கண்டன அறிக்கையையும் பெரும்பாலான அமெரிக்க பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை.  மேலும் வெனிசுலாவில் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவின் தடைகள் முக்கியமான ஒரு காரணம் என்று ஃபண்டலதின் (Fundalatin) எனும் பிரபலமான அரசு சாரா தொண்டு நிறுவனம் கூறுவதை யாரும் கோடிட்டுக் காட்டவில்லை.

நேர்மையான செய்திகளை சிறிதேனும் வெளியிடுவதற்குக் கூட நேர்மையற்ற ஊடகங்கள் இதை, ”அமெரிக்காவின் மென்மையான போக்கு” என்றும் ”போருக்குப் பதிலாக இந்நடவடிக்கைகள் பரவாயில்லை” என்றும் ”இது பணக்காரர்களை மட்டுமே பாதிக்கும்; ஏழைகளுக்கு நல்லது செய்யும்” என்றும் செய்தி பரப்பி வருகின்றன.

தவறான செய்தி பரப்புவதாகச் சொல்லப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை.  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ஈலன் ஒமர் பலவீனமான வெனிசுலாவை அமெரிக்கா கொடுமைப்படுத்துவதை கடுமையாக எதிர்த்த்துடன் இது வெனிசுலாவின் பொருளாதாரத்தை பேரழிவுக்குள்ளாக்கும் என்று கடுமையாக சாடினார். சென்ற வாரம் அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் இது பெரும் ஆத்திரத்தை உண்டாக்கியது.

படிக்க:
♦ வெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை
♦ வெனிசுலா: அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !

ஆனால் இந்த எதிர்ப்புகள் வெறுமனே கருத்துக்களோ ஊகங்களோ மட்டுமல்ல. ஏற்கனவே நொடிந்து கொண்டிருக்கும் வெனிசுலாவின் பொருளாதாரத்தை மூச்சு திணற அடித்து பட்டினி போடும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்பது நடைமுறை உண்மை. ஊடகங்கள் என்னதான் கூச்சல் போட்டாலும் பொருளாதார தடை மக்களை கடுமையாக பாதிக்கும் என்ற எளிமையான உண்மையை மறைக்க இயலாது. அதாவது மக்களை பட்டினி போடுவது அதன் மூலம் வன்முறைகளை தூண்டுவது, ஆட்சியை கவிழ்த்து  வாசிங்டனுக்கான பொம்மை ஆட்சியை நிறுவுவது – இது அமெரிக்காவின் வழமையான ஒரு ஆட்சி கவிழ்ப்பு உத்தியாகும்.

இப்படி ஒரு கணம் எண்ணுங்கள். வெனிசுலா போன்ற சிரமத்திலிருக்கும் நாட்டின் மீது ஒருவேளை இரசியா இதுபோன்ற தாக்குதல் தொடுத்திருந்து அதை ஜயாஸ், ஜஸேரி, வெய்ஸ்ப்ராட் மற்றும் மற்றவர்கள் சாடினால் என்ன நடக்கும். அது சி.என்.என், எம்.எஸ்.என்.பி.சி மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் முன்பக்கம் நடுபக்கம் என முடிவுறாமல் செய்தி வெளியிட்டு கூக்குரலிடும்.

இது போன்ற பொருளாதாரத் தடைகள் குறித்து சரியான செய்திகளை வெளியிடாததால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் குறித்து பத்திரிகை கண்காணிப்பு நிறுவனங்களான ஃபேர் (FAIR) மற்றும் மீடியா லென்ஸ் (Media Lens)  ஆகியவை அழுந்தக் கூறுகின்றன. ஆனாலும் இப்படி அப்பட்டமான நெறி பிறழ்ந்த ஊடகத்தன்மை முற்றிலும் எதிர்பார்க்ககூடியதுதான்.  பொதுவாகவே நெருக்கடிகளை பொய்யும் புரட்டுமாக காட்டும் தேசிய வெறியின் நீட்சிதான் இது.

வெள்ளை மாளிகையின் முன்பு வெனிசுலா ஆக்கிரமைப்பை எதிர்த்து அமெரிக்க மக்கள் நடத்திய போராட்டம்

அமெரிக்காவின் கருத்தாடல் இதழியல் குறித்த ஃபேர் ஆய்வின்படி ஜனவரி – ஏப்ரல் மாதங்களில் நியூயார்க் டைம்ஸ் அல்லது வாசிங்டன் போஸ்டில், அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை குறித்து கருத்து பக்கத்தில் ஒரு செய்தி கூட வெளியாகவில்லை.  தொலைக்காட்சியிலும் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்க பத்திரிக்கைகளின் இந்நடவடிக்கைகளை “ஆட்சி மாற்றம் செய்வதற்கான ஒரு முழு அளவிலான பிரச்சாரம்” அல்லது வேறு சொற்களில் சொல்வதானால் ”போர் பிரச்சாரம்” என்றும் கூறலாம்.

ஹெய்தி, எல் சால்வடோர் போன்ற நாடுகளிலிருந்து அகதிகள் மற்றும் தெற்கு எல்லை வழியாக இலத்தீன் அமெரிக்கர்களும் படையெடுப்பதாக மோசமான கருத்திட்ட ட்ரம்ப்பை ஒரு தீய சக்தியாகக் காட்டிய ஊடகங்கள், இன்று ஒட்டுமொத்த அமெரிக்க நிர்வாகத்தையும் ஏதொ வெனிசுல மக்களுக்கு நன்மை செய்பவர்களாக காட்டி பல்டியடிக்கின்றன.  அமெரிக்க உயரதிகாரிகள் கூட அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வெனிசுலாவின் எண்ணைய் வளத்தை அபகரிப்பது தான் தங்களுடைய திட்டம் என்று வெளிப்படையாக அறிவித்தும் கூட இந்த ஊடகங்கள் இப்படி செய்தி வெளியிடுவதை என்னவென்று சொல்ல.

அமெரிக்கத் தலையீடுகள், ஆட்சிக் கவிழ்ப்பு என்று வந்துவிட்டாலே பத்திரிகைகளின் நிலை இதுதான். குழப்பமான தேசியவாதம் பற்றி பேசினாலே ஜனநாயகவாதிகள், குடியரசுவாதிகள் அல்லது மொத்த ஊடகங்களும் சாட்டையால் அடிபட்டது போலத் துடிக்கிறார்கள்.

வெனிசுலாவின் மீது பொருளாதார தாக்குதலிலிருந்து அதை விட கொடுமையான போர் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் ஆலோசித்திருகின்றது. போர் முரசுகளுடன் ஊடகங்கள்  கூக்குரலிடுவதை மீண்டுமொருமுறை நாம் கேட்கலாம்.


கட்டுரையாளர் : Danielle Ryan
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : RT

 

முதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி !

நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM & FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமைமுறையைத் தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை (GATT) தூக்கியெறிவோம்! என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் 133-வது மேநாள் பேரணி – பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகளின் காணொளி !

பாருங்கள் ! பகிருங்கள் !

இப்பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் ஆற்றிய உரை !

பாருங்கள் ! பகிருங்கள் !

நூல் அறிமுகம் : தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன்

தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன் – தமிழில் : திலகன்

ண்டை நாடுகளுடன் பெரிதாகப் போர் என்று எதுவும் நடைபெறாத போதிலும் இராணுவத்துக்கு என்று மைய அரசு ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தில் பெரும்தொகை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் மைய அரசின் இச்செயலை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் விவாதத்தை ஏற்படுத்தும் நூல்கள் வெளிவர வேண்டிய தேவை உள்ளது.

ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் “தேசப்” பாதுகாப்புக்கு ஒதுக்கீடு என்று இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு உயர்ந்து கொண்டே செல்லும் போது கல்வி, மருத்துவம், உணவு ஆகியவற்றுக்கான மானியம் குறைந்து கொண்டே உள்ளது.

மேலும் இந்திய கார்ப்பரேட் கொள்ளையர்களில் ஒருவரான விஜயமல்லையா ரூ. 9000 கோடிகள் கடன் பெற்று வங்கிப் பணத்தை (மக்களின் பணத்தை) சுருட்டிக் கொண்டு நாட்டைவிட்டே தப்பியபோது, இங்குள்ள முப்படைகளால் என்ன பயன் விளைந்தது ?

விவசாயம் நலிவடைந்து வாங்கிய கடனைக் கட்ட வழி தெரியாமல் இலட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வரும் இந்நாட்டில்தான் இவ்வாறான நிலை! பெருமுதலாளிகள் திரும்ப செலுத்தாதக் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடிகளை எட்டி விட்டதால் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ஆட்டங் கண்டு வருகின்றன.

இது மட்டுமின்றி நாள்தோறும் ரூ.240 கோடிகள் கறுப்புப் பணமாகவே நாட்டை விட்டு வெளியேறிச் செல்கிறதாம்! கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் இலட்சக்கணக்கான டன் இரும்புக் கனிமத்தை வெட்டி கப்பலில் ஏற்றினார்கள் என்றால், இங்குள்ள பி.ஆர்.பி. -யோ ஒரு இலட்சம் கோடிகள் வரை கிரானைட்டை வெட்டிக் கடத்தியுள்ளார். ஆனால் இவற்றை எல்லாம் தடுக்கும் திறனற்ற முப்படைகளையும் வைத்துள்ள இந்நாட்டின் ஆட்சியாளர்கள்தான் ஆளே வசிக்க முடியாத சியாச்சின் பனிப்பகுதியைக் காப்பாற்ற பல ஆயிரம் கோடிகளை விரயம் செய்வதோடு அப்பாவி இராணுவ வீரர்களையும் பாரத மாதாவுக்கு பலிகடா வாக்குகிறார்கள்… (நூலின் பதிப்புரையிலிருந்து)

இவ்வாறு நிகழ்காலத்தில் நாட்டுக்காக – நாட்டு மக்கள் நலனுக்காக, தேசப்பாதுகாப்புக்காக, இராணுவத்துக்காக, வேலை வாய்ப்புக்காக என்று சொல்லி புனிதமான ஒளிவட்டம் போட்டுக் காட்டப்படும் பாதுகாப்புத்துறைத் தொடர்பான ஆட்சியாளர்களின் திட்டங்களைப் பற்றி மக்களிடம் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது அனைத்து முற்போக்கு, இடதுசாரி அமைப்புகள் முன்பு மாபெரும் சவாலாக உள்ளது. ஒருவேளை அவை இவ்வாறான நிகழ்வுகளைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றன என்றால் மைய அரசாங்கத்துக்கு மறைமுகமாக ஆதரவு வழங்குவதுபோல ஆகிவிடும்.

படிக்க:
தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் !
மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !

இந்நிலையில் மும்பையில் இயங்கி வரும் அரசியல் பொருளாதார ஆய்வு மையம் (Research Unit For Political Economy) என்ற நிறுவனமானது நமது இக்கவலையைப் போக்கும் வகையில் ‘இந்தியப் பொருளாதாரத்தின் அம்சங்கள்’ (Aspect of India’s Economy) என்ற தமது ஆய்வு இதழில் பேராசிரியர் ராகுல் வர்மன் அவர்களின் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதன் மொழியாக்கமாகவே இந்நூல். (நூலின் பதிப்புரையிலிருந்து)

***

ந்தியாவின் ஆயுதத் தளவாடத் தொழில் பற்றி ஒரு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். ஆயுத உற்பத்தியில் அந்நிய முதலீட்டை, “பாதுகாப்புத் துறைக்காக இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தை மோடியின் அரசாங்கம் அறிவித்தது. திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதத்தை இந்தியாவிலேயே உற்பத்திச் செய்ய வேண்டும் என்று கூட அது அதிகாரபூர்வமாகக் கூறியுள்ளது. இறக்குமதிகளின் இடத்துக்குப் பதிலாக இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று ஊகிக்கிறது.

உள்நாட்டு உற்பத்திக்காக என்று உரிமைப் பாராட்டுவது. மோசடியானது என்பது இக்கட்டுரைகளில் வாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ஆயுதத் தளவாட உற்பத்தியாளர்கள் தமது சொந்த நாடுகளுடன் நெருக்கமாகவும், மூலஉத்தி ரீதியாகவும் முறைப்படுத்தப்பட்டுள்ளனர். தமது அறிவை பேராசைத்தனத்துடன் காத்து வருகிறார்கள். இதனால் ஒரு சுதந்திரமான உள்நாட்டுத் தொழில் மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்ப அடித்தளமின்றி சுதேசி மயப்படுத்துவது நடைபெறாது. முன்பு பொதுத்துறை இராணுவ நிறுவனங்கள் உள்நாட்டு இளைய பங்காளிகளாக அந்நிய நிறுவனங்களுக்கு இருந்ததென்றால் தற்போது அந்தப் பாத்திரத்தைத் தனியார்துறை நிறுவனங்கள் வகிக்கும் என்பதுதான் “பாதுகாப்புத் துறைக்காக இந்தியாவில் தயாரிப்போம்” என்பதன் மெய்யான முக்கியத்துவமாக உள்ளது.

இதன் காரணமாகத்தான் இந்தியப் பெருந்தொழிலதிபர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள். இந்தியத் தனியார்துறை கூட்டாளிகள் தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றத்தைக் கோரி அழுத்தம் தராமல் ஓர் இலாபப் பங்கோடு (ஒரு சிறுவீத அளவாக இருந்தாலும்) மகிழ்வார்கள் என்பதால் அந்நிய நிறுவனங்களும் கூட இத்திட்டத்தை வரவேற்கின்றன. இதுதான் இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்களின் தன்மையாக உள்ளது. ஏற்கெனவே மிகவும் கீழ்மட்டத்தில் இருக்கும் சுதேசியமயத்தை இன்னும் குறைப்ப தைத்தான் “இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்” இவ்வாறு முன்னறிவிக்கிறது.

மார்ச் மாதத்தில் இந்தக் கட்டுரை இணையத்தில் வெளியான உடனே, அந்த மதிப்பீடு உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, இந்திய அரசாங்கமானது போட்டி ஏலம் மற்றும் பேரத்தின் ஒரு நெடிய நிகழ்வுப் போக்குக்குப் பின்னர் பிரெஞ்சு நிறுவனமான டசால்டின் ரஃபேல் போர் விமானத்துக்கு தனது நடுத்தர பன்முக போர் விமானத்துக்காக (Medium Multi Role Combat Aouraft – MMRCA) ஒரு மாபெரும் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் வழங்கக் கேட்கப்பட்டுள்ள மொத்த 126 விமானங்களில் 108 தயாரிக்கப்பட வேண்டும் என்று முன்வரை செய்யப்பட்டுள்ளது. 2012 -ஆம் ஆண்டில் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்ட நிலையில் அதை நிறைவேற்றாமல் டசால்ட் இழுத்தடித்தது. இந்திய விமானப் படையில் உள்ள போர் விமானப் படையின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையிலும் கூட இவ்வாறு அந்த டசால்ட் நிறுவனம் ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் இழுத்தடித்து வந்தது.

படிக்க:
ரஃபேல் ஊழல் நூல் பறிமுதல் : மோடிக்கு ஆதரவாக தேர்தல் கமிசனின் நடவடிக்கை !
♦ இராணுவத் தளவாட தொழிற்சாலையில் இருப்பது தேசபக்தியா, ஊழலா ?

2015 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மோடி தனது பாரீசு பயணத்தின் போது முந்தைய ஒப்பந்தத்தை ஒதுக்கிவிட்டு, 36 ரஃபேல் போர் விமானங்களை அளிப்பதற்காக அரசாங்கங்களுக் கிடையில் ஓர் உடன்படிக்கையைப் புதியதாக செய்து கொள்கிறார். அவற்றை பிரான்ஸ் நாட்டிலேயே தயாரிப்பதாக உடன்படிக்கை செய்து கொள்ளப்படுகிறது. இப்புதிய உடன்படிக்கையின் விதிமுறைகள் முற்றிலும் திரைமறைவிலேயே உள்ளன.

விதிமுறைகளை இனிமேல் தான் பேசிக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சரான பரிக்கர் போகிற போக்கில் அள்ளிவிட்டார். ரஃபேல் விமானங்கள் ஒருவேளை இந்தியாவில் தான் தயாரிக்கப்பட வேண்டு மெனில், HAL தவிர்த்து ஓர் இந்தியக் கூட்டாளியைப் பரிசளிப்போம் என்றும் கூட அவர் சொன்னார். அம்பானி சகோதரர்களுள் எவரோ ஒருவர் இதில் ஈடுபடுத்தப்படலாம் என்று அறிகுறிகள் தெரிகின்றன. (நூலின் ஆசிரியர் உரையிலிருந்து)

நூல்: தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள்
ஆசிரியர்: ராகுல் வர்மன்
தமிழில்: திலகன்

வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,
எண் : 5/ 1 ஏ, இரண்டாவது தெரு,நடேசன் நகர்,
இராமாபுரம், சென்னை – 600 089.
கைபேசி: 98417 75112.

பக்கங்கள்: 88
விலை: ரூ 60.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகத்தின் புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க: Marina Books 

குறும்புத்தனம் – குழந்தைகளிடம் உள்ள ஒரு நல்ல குணம் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 5

பாடங்களுக்கு இடையிலான நேரத்தை – எப்படிப் பயன்படுத்துவது? (தொடர்ச்சி…)

ள்ளி இடைவேளைகளின் போது வகுப்பறையிலோ, பள்ளி இடைவழிகளிலோ இக்குறும்புக்காரச் சிறுவர்கள், இந்த செயல் முனைப்பான கற்பனையாளர்கள் என்ன தான் செய்ய வேண்டும்? சுவரில் தொங்கும் சுவர் பத்திரிகைகளைப் படிக்க வேண்டுமா? அல்லது இடைவழிகளில் நடந்து கோஷங்களையும் சுவரொட்டிகளையும் அறிவிப்புப் பலகைகளையும் காட்சிப் பெட்டிகளையும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? அல்லது பிரபல எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளின் படங்களை முடிவற்றபடி பார்த்து அவர்களைப் போல் ஆக வேண்டும் என்று கனவு காண வேண்டுமா? இப்படிப்பட்ட வளர்ப்பு முறை குழந்தைக்கு ஒத்து வராது; உணர்வுப்பூர்வமாக கட்டுப்பாடாக இருக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தை புரிந்து கொள்வதே கடினம்.

குறும்புத்தனம் என்பது குழந்தைகளிடம் உள்ள ஒரு நல்ல குணமாகும். இதை சரிவர அணுகிப் பயன்படுத்த வேண்டும். கீழ்க்காணும் முடிவிற்கு நான் எப்போதோ வந்து விட்டேன்:

குழந்தை ஒழுக்கம் என்பது குறும்புகளை மாற்றியமைப்பதில்தான் உள்ளதே தவிர இவற்றை அடக்கி ஒடுக்குவதில் அடங்கியிருக்கவில்லை. நமது பயிற்சி முறையின் மூலம் அவர்களின் உள்ளே புகுத்த முடியாததைச் செய்யும்படி அவர்களைக் கோர வேண்டாம்.

குழந்தைகளின் குறும்புகள் அடக்கி ஒடுக்கப்படாமல் மாற்றியமைக்கப்பட என்ன செய்ய வேண்டும்? அதுவும் குறிப்பாக இடைவேளைகளின் போது இதை எப்படிச் செய்வது? ஏனெனில் இடைவேளைகளின் போதுதான் உட்சக்திகள் அடக்க இயலாதவாறு பொங்குகின்றன. இவற்றின் சுதந்திரமான உந்து சக்திகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இவ்வாறாக, பள்ளி இடைவேளைகள் மற்றும் பள்ளிக் கட்டுப்பாடு சம்பந்தமான சிக்கலான ஆசிரியரியல் பிரச்சினை எனக்குத் தோன்றுகிறது. இப்பிரச்சினையை நான் தீர்க்கவில்லை, அனேகமாக இதைத் தீர்க்கவும் முடியாது. என்றாலும் ஒரு சில சக ஆசிரியர்களை விட சற்றே அதிகமாக நான் நிம்மதியாக இருக்க முடியும். ஏனெனில் என் சிறுவர் சிறுமியர் எதைக் கண்டிப்பாகச் செய்வார்கள் என்று எனக்குத் தெரியும்.

இலிக்கோ, தேன்கோ, மாயா ஆகிய மூவரையும் வார்த்தை அட்டைவில்லைகளை எண்ணுவதற்காக அறையின் ஒரு மூலைக்கு அனுப்பினேன்.

போன்தோ பையிலிருந்து ஒரு பெரிய ஆப்பிளை எடுத்து அதைக் கடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.

ருசிக்கோ தன் ”சான்ட்விச்சை” சாப்பிடுவதில் ஈடுபட்டிருக்கிறாள்.

ஒரு சில சிறுமியர் மேற்கோட்டுகளை மாட்டும் இடத்தில் ஸ்கிப்பிங் கயிறுகளைக் கண்டுபிடித்தனர். இடைவழியில் அவர்கள் குதித்து விளையாடும் லயமும் கணீரென்ற சிரிப்பும் என் காதுகளை எட்டுகின்றன.

இடைவழியிலுள்ள சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சிரிப்புப் படங்கள் ஒரு சிலரின் மகிழ்ச்சிகரமான மன நிலையை அதிகப்படுத்துகின்றன.

வகுப்பறையில் இரண்டு மீட்டர் நீளமுடைய ஒரு பெரிய, கெட்டியான வெற்றுத் தாள் தொங்குகிறது. இதைச் சுற்றி மரச்சட்டம் உள்ளதால் இது ஒரு படத்தைப் போல் உள்ளது. ”விருப்பப்பட்டதை வரை” என்று ஒரு அறிவிப்பு அதன் மேல் உள்ளது. அருகே வண்ணப் பென்சில்கள் இருக்கின்றன. 4-5 பேர் ஏற்கெனவே அதில் தம் கைவண்ணங்களைக் காட்டிக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

குறுகலான நீண்ட கரும்பலகையும் அருகே வண்ண சாக்பீஸ்களும் துண்டும் உள்ளன. அனேகமாக ஒரு சிலர் இந்நேரம் தம் கரங்களையும் முகங்களையும் அழுக்குப்படுத்தியிருப்பார்கள்.

வெவ்வேறு வார்த்தைகள், பழமொழிகள், பாடல் வாசகங்கள், விடுகதைகள், எண்கள் முதலியன பெரும் எழுத்துக்களில் எழுதப்பட்ட அட்டைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. குழந்தைகளில் ஒரு பகுதியினர் கண்டிப்பாக இவற்றைப் படிக்க முயலுவார்கள்.

குழந்தைகள் பார்த்து, படித்து, வரைவதற்கு ஏற்றவாறு இவையெல்லாம் அவர்களுக்கு எட்டக் கூடிய உயரங்களிலேயே மாட்டப்பட்டுள்ளன.

படிக்க:
Trust WHO ஆவணப்படம் : உலக சுகாதார நிறுவனத்தின் மறுபக்கம் !
பெண்களின் பார்வையில் அழகு – ஆபரணம் – ஆடை – உணவு | பெண்கள் நேர்காணல்

நான்கு சிறு மேசைகளில் (இவற்றைச் சுற்றி சிறு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன) வண்ணப் படங்களுடன் கூடிய நூல்கள், குழந்தைகளுக்கான சஞ்சிகைகள், கணித விளையாட்டு, சிறு விளையாட்டுக் கட்டுமானப் பொருட்கள், சொக்கட்டான், சதுரங்கம் முதலியன வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன.

சில நாட்களுக்குப் பின் வகுப்பறையில் வில்லும் அம்பும் இருக்கும். அப்போது என் பங்கேற்போடு இதில் போட்டி நடக்கும்.

இடைவழியில் சுவர் ஓரமாக ஒரு செங்குத்தான ஏணி வைத்து, தரையில் மெத்தென்ற விளையாட்டு மெத்தையை விரிக்க எண்ணியுள்ளேன். குழந்தைகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா?

ஒரு நாள் நானே நிச்சயமாகக் குழந்தைகளுக்கு குழாய்களைக் கொண்டு வந்து தருவேன். அப்போது ஒருவரையொருவர் பரஸ்பரம் சுட்டுக்கொள்வோம். ஆனால் கசங்கிய காகிதத் துண்டுகளுக்குப் பதில் சுத்தமான குண்டுகளைப் பயன்படுத்துவோம்.

இவையனைத்தையும் நேரத்திற்குத் தக்கபடி, ஒவ்வொரு வகுப்பிலும் குழந்தைகள் வளருவதைப் பொறுத்து, இவர்களின் குறும்புகள் மாறுவதைப் பொறுத்து நான் மாற்றுவேன். எனது கற்பனைத் திறன் மற்றும் குறும்பு இதில் பெரும் பங்காற்றும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் தன் குழந்தைகளின் குறும்புகளை மாற்றியமைக்கும் முறையை ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவருக்கே குறும்பு செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது.

குழந்தைகள் பெரியவர்களாக உதவ வேண்டும் என்றால் அவர்களில் தன்னைப் பார்க்க வேண்டும்; அவர்களின் மூலம் தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ள தனது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களின் உருவத்தில் காண வேண்டும்; என்றென்றும் மனிதாபிமானம் மிக்க ஆசிரியராக இருக்க வேண்டுமெனில் குழந்தையோடு குழந்தையாக வாழ வேண்டும்.

குழந்தைகள் மாற்றத்தை நாடும் ஆக்கப்பூர்வமான கற்பனையாளர்கள், சுறுசுறுப்பானவர்கள். எனவே, இவர்களுக்கு ஒரு சரிப்பட்ட சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இச்சூழல் இவர்களை அச்சுறுத்தக் கூடாது, விளைவுகளை நினைவு படுத்தக்கூடாது, அறிவுரைகளைக் கூறக்கூடாது, மாறாக இது இவர்களின் நடவடிக்கைகளை வழிகாட்டி நடத்த வேண்டும்.

கரும்பலகையில் நான் கணிதப் பாடத்திற்கான கணக்குகளை எழுதுகிறேன். ஒரு சில குழந்தைகள் என்னைச் சுற்றிக் கொண்டு நான் என்ன செய்கிறேன் என்று ஆவலோடு கவனிக்கின்றனர்.

“மாமா, நீங்கள் என்ன எழுதுகின்றீர்கள்?”

“அவர் மாமா இல்லை, ஆசிரியர்…”

“ஏன் வண்ண சாக்பீஸ்களால் எழுதுகின்றீர்கள்?”

“நான் ஏன் சிரித்தேன் என்று சொல்லட்டுமா?”

கோத்தே: “நான் சிறுவனாக இருந்த போது…”

ஏக்கா: “நீ இப்போதும் சிறுவன் தான்…”

கோத்தே: “பொறு… நான் மிகவும் சிறுவனாக இருந்த போது மேசை விரிப்பைப் பிடித்திழுத்து அறை வழியே இழுத்துச் சென்றேன், மேசை மீது பல பொருட்கள் இருந்ததால் எல்லாம் தரையில் விழுந்தன…”

நாத்தோ : “இதில் சிரிக்க என்ன உள்ளது …”

தாம்ரிக்கோ : “’இது முட்டாள் தனமானது…”

கோத்தே: “ஏன், நான் என்ன செய்கிறேன் என்று தான் எனக்குத் தெரியாதே!”

நாத்தோ: “அடி வாங்கியிருந்தால் அப்போது தெரிந்திருக்கும்…”

குழந்தை ஒழுக்கம் என்பது குறும்புகளை மாற்றியமைப்பதில் தான் உள்ளதே தவிர இவற்றை அடக்கி ஒடுக்குவதில் அடங்கியிருக்கவில்லை. நமது பயிற்சி முறையின் மூலம் அவர்களின் உள்ளே புகுத்த முடியாததைச் செய்யும்படி அவர்களைக் கோர வேண்டாம்.

நிக்கோ: “நான் சிறுவனாக இருந்த போது என்ன நடந்தது தெரியுமா? என்னை ஒரு முறை வீட்டில் தனியே விட்டுச் சென்றார்கள். அப்போது, யார் வந்து தட்டினாலும் கதவைத் திறக்க வேண்டாம் என்றார்கள். சிறிது நேரம் கழித்து யாரோ கதவைத் தட்டினார்கள், நான் மிகவும் பயந்து, ‘உதவி, உதவி !’ என்று கத்தத் துவங்கினேன். கதவைத் தட்டும் சத்தம் அதிகமாகியது, நானோ ‘உதவி !’ என்று இன்னமும் பலமாகக் கத்தினேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து, ‘பயப்படாதே, கதவைத் திற, உனது சகோதரி பள்ளியிலிருந்து வந்திருக்கிறாள் !..’ என்றனர். பின்னர் நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.”

நான் சிரிக்கிறேன், சுற்றியிருந்த குழந்தைகளும் சிரிக்கின்றனர்: “இது உண்மையிலேயே சிரிப்பானது !”

தாத்தோ: “எனக்கு இரண்டு வயதாயிருந்த போது என் அம்மா என்னை நர்சரிப் பள்ளியில் சேர்க்க விரும்பினாள். எனக்கு அங்கு செல்ல விருப்பமில்லை, எனவே, ஒளிந்து கொள்ள ஓடிய நான் படிக்கட்டில் தலைகீழாக விழுந்தேன்…”

கியோர்கி: “நான் சிறுவனாக இருந்த போது, என்னை என் அப்பா நர்சரிப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் விளையாடினோம், சண்டை போட்டுக் கொண்டோம், நான் அலமாரியில் ஒளிந்து கொண்டேன்.”

கோச்சா: “நீ கோழை, எனவேதான் ஒளிந்து கொண்டாய்.”

எலேனா: “’நான் சிறுமியாக இருந்த போது…’

இராக்ளி: “நான் சிறுவனாக இருந்த போது…”

குழந்தைகள் ஒருவர் பேசுவதில் ஒருவர் குறுக்கிடுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் “நான் சிறுவனாக (சிறுமியாக) இருந்த போது” என்று துவங்குவதை அப்போதுதான் நான் கவனித்தேன். அப்படியென்றால் அவர்கள் இப்போது தம்மைச் சிறுவர் சிறுமியராக கருதவில்லை தான் ஏனெனில் அவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டார்களே! ஒருவேளை பெரியவர்களாகிவிட்ட இந்த உணர்வை அவர்களிடம் நான் உறுதிபடுத்த வேண்டுமோ!

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!