Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 450

எட்டாவது ஆண்டில் சிரிய உள்நாட்டுப் போரின் அவலம் – படங்கள்

0

சிரியாவின் உள்நாட்டுப்போர் எட்டாவது ஆண்டை எட்டிவிட்டது. அமெரிக்கா மற்றும் இரசிய வல்லரசுகளின் வல்லாதிக்கத்திற்காக இதுவரை தன்னுடைய 4,65,000 இன்னுயிர்களை இழந்து சிதிலமடைந்த சிரியா இன்னொரு ஆண்டிற்காவது தாங்குமா?

2011-ம் ஆண்டு தொடங்கிய அந்த கோரப்போரின் சுவடுகளின் ஏழுப் புகைப்படங்களை இங்கே காணலாம்.

மார்ச் 25, 2011 – தெற்கு சிரியாவின் டேரா நகருக்கு அருகேயுள்ள டேல் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டமொன்றில் ‘விடுதலை’ முழக்கமிடும் சிரியர்கள்.

ஜனவரி 23, 2012 – ஹோம்ஸின் தெருவொன்றில் சிரிய இராணுவத்திற்குச் சொந்தமான சேதமடைந்த கவச வண்டியொன்றின் முன்பு சிரிய சிறுவன் ஒருவன் நிற்கிறான்.

ஆகஸ்டு 21, 2013 – டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதி சாக்பாவில் விசவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆக்ஸிஜன் முகமூடிகள் உதவியால் மூச்சு விடுகின்றனர்.

மார்ச் 9, 2014 – சிரிய அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆதரவுப்படைகளால் அலெப்போவின் ஹெய்டரியே மாவட்டத்தில் வீசப்பட்ட பீரங்கி குண்டிற்குத் தப்பிய பெண்ணொருவர் அழுது கொண்டிருக்கும் தன்னுடைய குழந்தையுடன், அல்-சக்ஹௌர் மாவட்ட மருத்துவமனையொன்றில்.

டிசம்பர் 26, 2015 – தெற்கு இட்லிப் கிராமப்புறமான ஓம் அல்-சீரின் நிலத்தடி குகையில் உள்ள தற்காலிக தங்குமிடத்தில் உள்ள சிரிய உள்நாட்டு அகதிகள்.

டிசம்பர் 2, 2016 – சிரியாவின் அலெப்போ பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்கு அரசாங்கப் படையினர் மீண்டும் கொண்டு வந்த பின்னர் ஹனோனோ பகுதியில் முன்பு தடுப்பரண்களாக இருந்த சேதமான வண்டிகள் அருகே காணப்படும் குழந்தை இழுபெட்டி ஒன்று.

அக்டோபர் 25,2017 – வளர்ச்சிதை மாற்ற கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டரை வயது ஹலா அல்-நுபி படுக்கையில் உட்கார்ந்து அழுகிறாள். கிழக்கு கவுடாவில் ஏற்பட்டுள்ள முற்றுகை மற்றும் உணவு பற்றாக்குறையினால் அவளது நிலை மென்மேலும் மோசமாகி வருகிறது.

நன்றி : அல்ஜசீரா

காவிரியில் வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் மார்ச் 24 முற்றுகைப் போராட்டம் !

0

பத்திரிக்கைச் செய்தி

21.03.2018

காவிரி ஆற்றில் தமிழக உரிமையை மறுப்பதிலும் நீரைத் தடுப்பதிலும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவைக் காட்டிலும் கூடுதலான வெறியுடன் செயல்படுகிறது மோடி அரசு. தேச ஒற்றுமைக்கு மொத்த குத்தகைதாரர் போல் வேடம் போடும் மோடி அரசு காவிரித் தீர்ப்பை அமல்படுத்த மறுத்து வருகிறது. கர்நாடக அரசுக்கு பக்க பலமாய்ப் பக்க மேளம் வாசிக்கிறது. மத்திய அமைச்சர் கட்கரி, நீர்வளத்துறை செயலர் உ.பி.சிங் ஆகியோர் காவிரி மேலண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் பேசுகின்றனர். தமிழக தலைவர்களை சந்திக்கவே மறுக்கிறார் பிரதமர் மோடி.

உச்ச நீதிமன்றம் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் குறைத்துள்ள நீரைக்கூட தடுக்கும் சதி வேலையில் ஈடுபடுகிறது மோடி அரசு. தனது தீர்ப்புகளை சற்றும் மதிக்காமல் செயல்படும் சித்தராமையா அரசு, மோடி அரசு இவற்றை உச்ச நீதிமன்றம் கடுகளவு கூட கண்டிக்கவில்லை அதேநேரம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த ஓ.என்.ஜி.சி -யை முடுக்கி விடுகிறது மோடி அரசு.

தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க ஓ.என்.ஜி.சி -யை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை ஒடுக்க தற்போது திருவாரூரில் மத்திய துணை ராணுவப் படையைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தமிழ் நாட்டை ஒரு பகை நாடு போலவே நடத்துகிறது பாஜக அரசு. ஒரு புறம் உரிமைகளைப் பறிப்பது, மறுபுறம் வளங்களைச் சுரண்டுவது என்பதே தமிழகத்தைப் பற்றிய பாஜக -வின் கொள்கை. தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசோ எட்டப்பனைக் காட்டிலும் கீழாக தமிழக நலன்களை அடகு வைத்து விட்டு கொள்ளையடிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல் படுகிறது. 12 மாவட்டங்களின் விவசாயம் 20 மாவட்டங்களின் குடிநீர், இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு. காவிரியாற்றின் தமிழக உரிமை வரலாற்று வழிப்பட்டது. சட்டங்களையும் அதன் ஓட்டைகளையும் காட்டி மறுப்பதையோ, இழுத்தடிப்பதையோ ஏற்கவே முடியாது.

எனவே மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துச் செயல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் இழைத்த அநீதி உரிய வழியில் களையப்பட வேண்டும். குறைந்தபட்சம் நடுவர் மன்றம் அளித்த 192 டி.எம்.சி நீர் உறுதி செய்யப்பட வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசில் தமிழக எம்.பிக்களுக்கு வேலையில்லை; எனவே அவர்கள் அனைவரும் உடனே பதவி விலக வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி வரும் மார்ச் 24 -ம் தேதி திருச்சியில் தலைமை அஞ்சலக முன் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழக உரிமைக்கான இப்போராட்டத்தில் அனைத்துதரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டுமென அறை கூவி அழக்கிறோம்.
நன்றி.

இப்படிக்கு
காளியப்பன்
மாநிலப்பொருளாளர்,
மக்கள் அதிகாரம்

******

திருச்சி முற்றுகை  – அறைகூவல்

“காவிரியைத் தடுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு! நீட் முதல் நெடுவாசல் வரை தாக்குதல் மேல் தாக்குதல்! தமிழகமே கொதித்தெழு!” என்ற முழக்கத்தின் கீழ் வருகின்ற

24.03.2018 அன்று நடைபெறவுள்ள திருச்சி தலைமை தபால் நிலைய முற்றுகை போராட்டத்தையொட்டி திருஅகர் முழுதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே!

மிழகத்தில் டெல்லியின் அதிகாரத்தை முடக்காமல் பா.ஜ.க அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. நீட் முதல் நெடுவாசல் வரை தாக்குதல் மேல் தாக்குதல், இனியும் பொறுக்க முடியாது? தமிழகமே கொதித்தெழு!

மார்ச் 24 சனிக்கிழமை மக்கள் அதிகாரம் உங்களை திருச்சிக்கு அழைக்கிறது.

தமிழகத்தின் எண்ணெய் வளத்தையும், எரிவாயு வளத்தையும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க தமிழகத்தையே பலிகொடுக்கிறது பா.ஜ.க. மோடி அரசு. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினோம், பாராளுமன்றத்தில் போராடினோம். ஆனால் எந்த பயனும் இல்லை.

காவிரியில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இது வரை இல்லை. தமிழகத்தின் நீரை பிடுங்கி பெங்களுர் பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்த்து இறுதி தீர்ப்பு வழங்கி வஞ்சித்தது உச்சநீதிமன்றம்.

காவிரி நீர் பங்கீட்டில் ஓரவஞ்சணையாக செயல்பட்டு மத்திய அரசு தொடர்ந்து  தமிழகத்தை வஞ்சிக்கிறது. எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் தண்ணீர் தரமாட்டோம் என்ற கர்நாடகாவின் அடாவடிக்கு துணைபோகும் பா.ஜ.க. மோடி அரசை ஒரு கை பார்ப்போம். திருச்சிக்கு வாரீர்!

ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற டெல்லியின் தேசிய ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குவோம்!

மக்கள் அதிகாரம் உங்களை அழைக்கிறது. மார்ச் 24 சனிக்கிழமை காலை 11 மணிக்கு திருச்சி, தலைமை தபால் நிலையம் தாங்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மீண்டும் அழைக்கிறோம்.

தமிழன் கிழிச்ச கோட்டை தாண்டாதவன், சட்டத்துக்கு பயந்தவன் தன்னை வருத்தி கொண்டு, மாத கணக்கில் உட்கார்ந்து, கோசம் போட்டு எழுந்து போய் விடுவார்கள் அவனுக்கு எதற்கு மேலாண்மை வாரியம்? என்று நினைக்கும் டெல்லியின் திமிரை அடக்கி காட்டுவோம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருச்சிக்கு வாரீர்!

தமிழகத்தை கிள்ளு கீரையாக நடத்தும் டெல்லிக்கு எதிராக தமிழக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும்.

காவிரியை தடுத்து, பெரியார் சிலையை உடைக்கும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கவிற்கு எதிராக தமிழகத்தை போர்க்களமாக்குவோம். டெல்லியின் எந்த அதிகாரமும் தமிழகத்தில் செல்லாது என்ற நிலையை உருவாக்காமல் காவிரி மட்டுமல்ல, நீட், மீத்தேன், கெயில் என எதிலும் தமிழகம் தப்பிக்காது. காவிரி நீர் உரிமை விவசாயிகள் பிரச்சினை மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழினத்தின் உரிமை அனைவரும் திருச்சிக்கு வாரீர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு : 99623 66321.

 

பாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி !

15

பாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்போட்ட பிறகு அதனை ரீ சைக்கிளிங் செய்யும் வேலையை மார்க்சிஸ்ட் கையில் எடுத்திருக்கிறது.

பாலேஸ்வரம் கருணை இல்லம்

மா.கம்யூ வாசுகி மற்றும் குழுவினரின் பாலேஸ்வரம் கருணை இல்லம் பற்றிய உண்மை அறியும் குழு அறிக்கை 09.03.2018 அன்று ‘தமிழ் இந்துவில்’ வெளியாகியிருக்கிறது. நல்லது, என்.ஜி.ஓக்கள் மற்றும் மத நிறுவனங்களால் நடத்தப்படும் சேவை மையங்களை தொடர்ந்து கண்காணிப்பதும் அதன் நோக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதும் அவசியம் செய்யப்பட வேண்டியவைதான். ஆனால் அதனை வாசுகி மற்றும் குழுவினர் செய்திருக்கும் விதம் ஒரு எலைட் என்.ஜி.ஓ பாணியில் இருக்கிறது என்பதுதான் கவலையுற வைக்கிறது. ஒருவேளை பத்ரி சேஷாத்ரி மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து அவர் இந்த அறிக்கை கொடுத்திருந்தால் அதுவே இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது.

முதல் குற்றச்சாட்டு, மனித எலும்பு விற்பனை.

மனித எலும்புக்கூடு விற்பனையும் மனித எலும்பு விற்பனையும் (மருந்து செய்யவாம்) நடக்கிறதா என குற்றச்சாட்டும் வகையிலான கேள்வியை எழுப்பியிருக்கிறார் வாசுகி. சும்மா கேட்டுவிட்டு கிளம்ப நீங்கள் என்ன எச்.ராஜாவா? மனித எலும்புக்கு என்ன சந்தை இருக்கிறது, அதனை எப்படி ஏற்றுமதி செய்ய முடியும், அதனை செய்ய ஏனைய அரசு நிறுவனங்கள் உதவி வேண்டுமே எனும் கேள்விகளோ தரவுகளோ இல்லை. ஆர்.எஸ்.எஸ் வாட்சப் தகவல்போல வாய்க்கு வந்ததை எழுதுவதற்கு உண்மை அறியும் அறிக்கை என பெயர் சூட்டமுடியாது.

ஒருவேளை மனித எலும்புகளுக்கு பெரும் சந்தை இருப்பது நிஜம் என்றால் இந்தியாவில் பிணம் எரிப்பது தடை செய்யப்பட்டு சுடுகாடுகள் அத்தனையும் அதானிக்கு தானமளிக்கப்பட்டிருக்கும். ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அதற்கான அடிப்படைகளை விளக்க வேண்டாமா? பத்து ரூபாய் நாணயம் செல்லாது எனும் ஒற்றை வாட்சப் வதந்தியால் 6 மாதங்களுக்கு முன்பிருந்து இப்போதுவரைக்கும் அவற்றை செலவு செய்ய முடியவில்லை (சென்னைக்கு வெளியே). இந்த ஜமாவில் வாசுகி வகையறாக்களும் அய்க்கியமானால் எங்குபோய் முட்டிக்கொள்வது?

இரண்டாம் குற்றச்சாட்டு, கட்டாயப்படுத்தி தங்கவைக்கப்படும் முதியவர்கள்.

இதில் நிச்சயம் உண்மையிருக்கும்தான். ஆனால் அதனை அப்படியே விளங்கிக்கொள்ள வேண்டுமா என்பதுதான் கேள்வி. வீட்டில் கோபித்துக்கொண்டுவரும் முதியவர்கள் இத்தகைய இல்லங்களுக்கு வருவார்கள். ஆனால் அதன் சூழல் அவர்களை இன்னும் சங்கடப்படுத்தும் ஆகவே பலர் வீடு திரும்ப விரும்பலாம். இன்னும் சில முதியவர்கள் வீட்டு நபர்களாலேயே துரத்தப்பட்டவர்கள். அவர்களும் வீடு திரும்ப விரும்பலாம். அவர்களை திருப்பி அனுப்புவதில் ஏன் நிர்வாகம் அலட்சியம் காட்டியது எனும் கேள்வி நியாயம்போல தோன்றலாம். ஆனால் அவர்கள் வீட்டை கண்டறிவதும் பிள்ளைகளிடம் அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி

கைவிடப்பட்ட சிறார்களையே உறவினர்களிடம் ஒப்படைக்க முடியவில்லை. இதில் முதியவர்களை எப்படி வீட்டில் சேர்ப்பது? பெரும்பாலான முதியவர்களை அரசு அமைப்புக்களே அனுப்பியிருக்கின்றன. அவர்கள் போக விரும்பி வெளியேறினாலும் எங்கே போக இயலும்? அப்படி போய் வேறு ஏதேனும் நடந்தால் அப்போதும் வேறொரு வாசுகி வந்து “ஏன் பாதுகாப்பில்லாமல் போக விட்டீர்கள்” என கேள்வியெழுப்பக்கூடும். போக விரும்பும் முதியவர்களை வலுக்கட்டாயமாக தங்க வைப்பதற்கான தேவை என எதை வாசுகி குழு கருதுகிறது?

இந்தியாவில் பணம் இல்லாத முதியவர்கள் நாயினும் கீழாகவே நடத்தப்படுகிறார்கள். அரசும் ஏனைய நிறுவனங்களும் முதியவர்களை தேவையற்ற சுமையாகவே கருதுகின்றன. முதியவர்களால் சம்பாதிக்க இயலாது, அவர்களுக்கு மருத்துவச்செலவு அதிகம். ஆனால் அவர்களுக்குத்தான் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் அதிகம். ரயில் நிலையம், பஸ் நிலையம் ஏனைய அரசு அலுவலகங்கள் என எங்குமே முதியோருக்கென சிறப்பு வசதிகள் இருக்காது.

ஏற்கனவே சம்பாதித்து சேமித்த முதியவர்களுக்கு வட்டியை குறைத்து வயிற்றில் அடித்துவிட்டன வங்கிகள். ஆக அவர்களுக்கு இனி இருக்கும் வாய்ப்பு அடுத்தவரை அண்டி வாழ்வது அல்லது சாவுக்கு காத்திருப்பது. காசில்லன்னா சாவு நாயே என்பது எழுதப்படாத விதியாக உள்ள நாட்டில் முதியோர்கள் கைவிடப்படுவதும், அவர்களுக்கான (லாப நோக்கிலான) கருணை இல்லங்கள் உருவாவதும் அவைகள் தரமற்று இருப்பதும் நிகழ்ந்தே தீரும்.

நாம் இவற்றை வழக்கமாக பேசுவதில்லை. குறந்தபட்சம் பாலேஸ்வரம் சம்பவத்துக்கு பிறகாவது இதனை விரிவான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் வாசுகி அண்ட் கோ இதனை பாலேஸ்வரம் கருணை இல்லம் எனும் வளாகத்துக்குள்ளேயே செட்டில் செய்ய முனைவது ஒரு நாசூக்கான அராஜகம்.

அடுத்த குற்றச்சாட்டு, சுகாதாரமற்ற தங்குமிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது.

இது நிச்சயம் உறுதியான குற்றச்சாட்டுதான். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்காக யாரையேனும் தண்டிக்க விரும்பினால் நாம் நமது அரசை நடத்துவோரைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். அரசு மருத்துவமனை பொது வார்டுகளை பார்த்திருக்கிறீர்களா? அங்கே தொற்று நோய் வந்தவர்களும் தொற்றா நோய் வந்தவர்களும் ஒன்றாக கொட்டப்பட்டிருப்பார்கள்.

செத்துக்கிடக்கும் நோயாளியோடு பல மணிநேரங்களை ஏனைய நோயாளிகள் இருக்க வேண்டும். குளியல் மக் கொண்டுதான் சிறுநீரை நோயாளிகள் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். புதிய நோயாளிகள் காலியாகப்போகும் படுக்கைக்கு அருகே காத்திருப்பார்கள். அனத்தலும், கசகசப்பும் நாற்றமுமே அங்கே நிரந்தரமாக குடிகொண்டிருப்பவை. செத்தால் தேவலாம் என நோயாளிகள் சிந்திக்க வேண்டும் எனுமளவுக்குத்தான் அரசு தமது மருத்துவமனை நோயாளிகளை நடத்துகிறது.

இங்கே அதுதான் ஒரு ஏழை நோயாளியை, இயலாதவனை நடத்துவதற்கான அளவீடு. உனக்கெல்லாம் இதுவே ஜாஸ்தி எனும் தர்மகர்த்தா சிந்தனை அரசின் நிர்வாக மட்டத்தில் வேர்பிடித்திருக்கிறது. அவர்கள் பாலேஸ்வரம் இல்லத்தையும் அப்படித்தான் அனுகுவார்கள். காசு கொடுத்து தங்கவைக்கப்படும் முதியவர்களும், இயலாதவர்களும்கூட இப்படித்தான் பல இல்லங்களில் நடத்தப்படுகிறார்கள்.

இறுதி குற்றச்சாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது.

இதில் பிரதான குற்றவாளி அரசுதான். 5 மாதங்களுக்கு முன்னால் உரிமத்தை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பம் இல்லத்தின் சார்பாக வழங்கப்பட்டுவிட்டது. அதனை கிடப்பில் போட்டது அரசுதான். அங்கு தங்குவதற்கான ஆட்களை அரசு மருத்துவமனைகளும் போலீசுமே அனுப்பியிருக்கின்றன. இந்தியாவில் விதிமுறைகள் என்பவை தேவைப்படும்போது ஒருவனை சிக்க வைப்பதற்காகவும் லஞ்சம் வாங்கவுமே பயன்படுத்தப்படுகிறனவே அன்றி அவை ஒழுங்கான சேவை என்பதை இலக்காக கொண்டு பின்பற்றப்படுவதில்லை.

பிணங்களை அடக்கம் செய்யும் தலைவலியில் இருந்து தான் தப்பித்துக்கொள்ள போலீஸ் அவர்களுக்கு அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் தடையில்லா சான்றிதழ் வழங்கியிருக்கிறது. ஆனால் அப்படி வழங்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. பாலேஸ்வரம் இல்லம் இப்போது மூடப்பட்டுவிட்டது. அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய அதிகாரம் வழங்கிய அதிகாரிக்கு என்ன தண்டனை? 5 மாதங்கள் உரிமத்தை தாமதித்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இவை குறித்து வாசுகி குழுவினரின் பரிந்துரைகள் என்னென்ன?

மேலும் சில கேள்விகள் எழுகின்றன..

அந்த இல்லத்தில் இருந்து வெளியேற விரும்பிய முதியவர்களின்பால் கரிசனம் கொண்ட வாசுகி குழு, அங்கே தங்க விரும்பிய முதியோரின் கோரிக்கை குறித்து ஏதேனும் யோசனை வைத்திருக்கிறதா?

அது ஒரு சாதாரண கருணை இல்லம். அரசின் கட்டமைப்பு பிரம்மாண்டமானது. அந்த அரசு ஒரு இல்லத்தை ஏற்று தற்காலிகமாகக்கூட நடத்த வக்கற்று நோயாளர்களை நலாப்பக்கமும் விசிறியடித்திருக்கிறது. ஆக 300 முதியவர்களைப் பராமரிக்கும் தகுதிகூட அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. இது பற்றி மர்க்சிஸ்ட் இன்வெஸ்டிகேஷன் குழு எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

ஆயிரக்கணக்கான முதியோர் காப்பகங்களுக்கான தேவை நாட்டில் இருக்கிறது. வறியவர்கள் தமது வயதான பெற்றோரை கௌரவமாக பராமரிக்க மருத்துவ உதவியும் பொருளாதார உதவியும் தேவைப்படுகிறது. அது குறித்து மா.கம்யூ எப்போது பேசும்?

காலையில் கஞ்சி, மதியம் மற்றும் இரவில் “ரேஷன்” அரிசி சாதம் ஆகியவை மட்டுமே கிடைப்பதாகவும். இட்லியை பார்த்தே பல மாதங்கள் ஆனதாகவும் புகார்கள் வந்திருப்பதாக இக்குழு சொல்கிறது. ரேசன் அரிசி சாதம் மோசமான உணவு எனில் அந்த சோற்றைத்தான் அரசு பலகோடி மக்களுக்கு தலையெழுத்தென விதித்திருக்கிறது. நாம் என்ன செய்யலாம், ரேசன் அரிசியின் தரத்தை பற்றி கவலைப்படலாமா அல்லது ரேசன் அரிசி சோறு பாலேஸ்வரம் இல்லத்தில் இருப்பதைப் பற்றி மட்டும் கவலைப்படலாமா?

இதே அழகில்தான் இங்குள்ள ஆகப்பெரும்பாலான ஆதரவற்றோர் இல்லங்கள் சோறிடுகின்றன. அவற்றை எப்போது ஆய்வு செய்யலாம்? அவற்றுக்கான மார்க்சிஸ்ட் உ.அ.குவின் தீர்வு என்ன?

இப்போதைய பிரச்சினைக்குப் பிறகு பாலேஸ்வரம் இல்ல முதியவர்கள் பல இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த காப்பகங்கள் நிலை குறித்து மா.கம்யூ எப்போது ஆய்வு செய்யும்?

இதுவரைக்கும் பாலேஸ்வரம் இல்லத்துக்கு ஆட்களை அனுப்பியவர்கள் (போலீஸ், அரசு மருத்துவமனை) இனி எங்கே அனுப்புவார்கள். அரசின் அந்த வட்டாரங்களை எப்போது வாசுகி குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

வாசுகி குழுவினரின் நோக்கத்தையும் கண்ணோட்டத்தையும்கூட குறை சொல்ல வேண்டாம். அவை highly subjective. ஆனால் அதில் ஹீரோயிசம் மட்டுமே இருப்பதுதான் சிக்கல். இந்திய சமூக பொருளாதார அமைப்பை பீடித்திருக்கும் எண்ணற்ற நோய்களின் ஒரு அறிகுறிதான் பாலேஸ்வரம் இல்லம் மற்றும் அதன் விதிமீறல்கள். அதனை அற உணர்வோடும் குறைந்தபட்ச முழுமையோடும் மார்க்சிஸ்ட் அனுகியிருக்க வேண்டும். ஆனால் வாசுகியாரின் அறிக்கை இந்திய அரசுக் கட்டமைப்பின் ஒரு சிரங்கோடு செல்ஃபி எடுத்து போட்டுக்கொண்டது போல இருக்கிறது. ஆகவே அதனை அன்லைக் செய்ய வேண்டிய அவசியம் எழுகிறது.

நன்றி : வில்லவன்

 

பெர்லின் சுவர் மறைந்தாலும் இர‌ண்டு ஜெர்ம‌னிக‌ள் மறையவில்லை !

1

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜெர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை “பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்” என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ “க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்” என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜெர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே “பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!” என்று கூறுகிறார்க‌ள்.

“நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்.” என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜெர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.)

அங்கு இப்போதும் இர‌ண்டு ஜெர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜெர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜெர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜெர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட‌ கிழ‌க்கு ஜெர்ம‌னியில் த‌லைமைய‌க‌த்தை கொண்டிருக்க‌வில்லை.

ஜெர்ம‌ன் அதிப‌ர் அன்கெலா மெர்க‌ல் கிழ‌க்கு ஜெர்ம‌னியை சேர்ந்த‌வ‌ர். ஆனால், அங்கே அவ‌ருக்கு ம‌திப்பில்லை. கிழ‌க்கு ஜெர்மனிய‌ருக்கு அவ‌ர் ஒரு துரோகி! பொருளாதார‌ப் பிர‌ச்சினைக‌ள், ச‌மூக‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ள் கார‌ணமாக‌ தீவிர‌வாத‌க் க‌ட்சிக‌ளுக்கான‌ ஆத‌ர‌வு அதிக‌ரிக்கின்ற‌து. இஸ்லாமிய‌ வெறுப்பை காட்டும் PEGIDA, அத‌னுட‌ன் சேர்ந்து வெளிநாட்ட‌வ‌ர் எதிர்ப்பு அர‌சிய‌ல் ந‌ட‌த்தும் AfD ஆகிய‌ தீவிர‌வ‌ல‌துசாரி க‌ட்சிக‌ளுக்கான‌ ஆத‌ர‌வு கிழ‌க்கு ஜெர்ம‌னியில் அதிக‌ம்.

“Wall is gone but not divisions” The New York Times, (14 feb 2018) ப‌த்திரிகையில் பிர‌சுர‌மான‌ செய்தி.

“ஜெர்ம‌னியில் வெளிநாட்ட‌வ‌ர் எண்ணிக்கை, பூர்வீக‌ ஜெர்ம‌னிய‌ரை விட‌ அதிக‌ம்” என்ப‌ன‌ போன்ற‌ த‌வ‌றான‌ ந‌ம்பிக்கைக‌ளும் காண‌ப் ப‌டுகின்ற‌ன‌. (முத‌லாளித்துவ‌த்தை புரிந்து கொள்ளாம‌ல், “வெளிநாட்ட‌வ‌ரை வெளியேற்றினால் வேலை வாய்ப்புக‌ள் கிடைக்கும்” என்று அப்பாவித்த‌ன‌மாக‌ ந‌ம்புகிறார்க‌ள்.) இத்த‌னைக்கும் கிழ‌க்கு ஜெர்மனியில் வெளிநாட்ட‌வ‌ர் எண்ணிக்கை மிக‌ மிக‌க் குறைவு.

அத‌ற்காக‌ தீவிர‌ வ‌ல‌துசாரி ச‌க்திக‌ளை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் இன‌வாதிக‌ள் என்று முத்திரை குத்துவ‌து த‌வ‌று. அங்கே முக்கியமான‌ பிர‌ச்சினை பொருளாதார‌ பின்ன‌டைவே த‌விர‌ இன‌வாத‌ம் அல்ல‌. அர‌சுக்கு அழுத்த‌ம் கொடுத்து த‌ங்க‌ள‌து குறைக‌ளை கேட்க‌ வைப்ப‌து தான், தீவிர‌ வ‌ல‌துசாரிக் க‌ட்சிக‌ளுக்கு ஓட்டுப் போடும் ம‌க்க‌ளின் நோக்க‌மாக‌ உள்ள‌து. இருப்பினும், இந்த‌ வாய்ப்பை இன‌வாத‌க் க‌ட்சிக‌ள் த‌ம‌க்கு சாத‌க‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கின்ற‌ன‌.

தீவிர‌ இட‌துசாரிக் க‌ட்சியான‌ Die Linke -க்கும் ஆத‌ர‌வு அதிக‌ரித்து வ‌ருகின்ற‌து. அது முன்னாள் கிழ‌க்கு ஜெர்மனியை ஆண்ட‌ க‌ம்யூனிச‌ SED க‌ட்சியின் தொட‌ர்ச்சியாக‌ இருந்து வ‌ருகின்ற‌து. ஜெர்ம‌ன் ஒன்றிணைவின் போது, கிழ‌க்கு ஜெர்ம‌னிய‌ர்க‌ள் ந‌ட‌த்திய‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் பொருளாதார‌ மேம்பாட்டுக்காக‌ இருந்த‌து. அவை மேற்க‌த்திய‌ பாணி ஜ‌ன‌நாய‌கம் கோரி ந‌ட‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் அல்ல‌.

-கலையரசன்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : The New York Times, (14 feb 2018) ப‌த்திரிகையில் பிர‌சுர‌மான‌து. நான் சில‌ இட‌ங்க‌ளில் விரிவான‌ விள‌க்க‌ம் கொடுத்திருக்கிறேன்.

நன்றி : கலையகம்

 

ரத யாத்திரையின் பெயரில் வரும் ரத்த யாத்திரை – சென்னையில் ஆர்ப்பாட்டம்

0

ந்துமதவெறிக்கு இழிபுகழ் பெற்ற விசுவ ஹிந்து பரிசத் தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொள்வதைக் கண்டித்தும், புதுக்கோட்டையில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா சிலை அருகே நேற்று (20.03.2018) மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்

ஆர்ப்பாட்டத்திற்கு புமாஇமு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமை தாங்கினார். தோழர்கள் அண்ணா சிலை நோக்கி பேரணியாகச் செல்லும் வழியில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு திரண்டு வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய  தோழர் கணேசன், “ தமிழகத்தில் இந்துமதவெறிக் கும்பல் காலூன்ற ரத யாத்திரை பெயரில் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதற்கு எடப்பாடி ஓபிஎஸ் கும்பல் மறைமுக ஆதரவை அளித்து வருகிறது. தொடர்ந்து பெரியார் சிலைகள் தாக்கப்படுவதன் மூலமாக கலவரத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் முயற்சிக்கிறது. இதனைக் கண்டித்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலைக் காலூன்ற விடமாட்டோம்.” என்று கூறினார்.

தோழர்களை சாலையிலிருந்து தரதரவென இழுத்துச் சென்று கைது செய்யத் தொடங்கியது போலீசு. கைது செய்து வண்டியில் ஏற்றும்போது ஒரு தோழர் கடுமையாகத் தாக்கப் பட்டிருக்கிறார். மேலும் ஒரு பெண் போலீசு பெண் தோழர் ஒருவரை மோசமாக திட்டி, தாக்கி கியுள்ளார். கைது செய்யப்பட்ட தோழர்கள் அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அங்கே காவி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தி மகஇக பாடல்கள் பாடப்பட்டன.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

_________

பத்திரிக்கைச் செய்தி

20.03.2018

ர்.எஸ்.எஸ் ஆல் திட்டமிடப்பட்டு விஸ்வ இந்து பரிஷத் நடத்தும் ராமராஜ்ய யாத்திரை  மத மோதலை உருவாக்கும் தீய நோக்கங் கொண்டது என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். ஆர்.எஸ்.எஸ் இன் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு வந்த தமிழகத்தில் இப்போது முழு சுதந்திரத்துடன் நடைபோட எடப்பாடி அரசு  அதிகாரமளித்திருக்கிறது.1500க்கும் மேற்பட்ட போலீசுப்பாதுகாப்புடன் விஸ்வ இந்து பரிஷத்தின் இந்த யாத்திரைக்கு அனுமதியளித்திருக்கும் எடப்பாடி அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமைக்கு 144 தடைவிதித்திருக்கிறது. பல தலைவர்கள் , தொண்டர்களை கைது செய்திருக்கிறது. எடப்பாடி அரசின் இச்செயல் ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, தமிழக மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமுமாகும். மக்கள் அதிகாரம் இதனை மிக வன்மையாகக்கண்டிக்கிறது.

இதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் தந்தை பெரியாரின் சிலையின் தலையைத்துண்டித்து வெறியாட்டம் போட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் கும்பலைத்தவிர வேறு யாரும் பெரியார் சிலையை அவமதிக்கத்துணிய மாட்டார்கள்; கனவிலும் நினைக்கமாட்டார்கள்.ஆனால் எச். ராஜாவுக்கு எழுந்த எதிற்பிற்குப்பிறகும்  பெரியார் சிலையை செதப்படுத்தத் துணிகிறார்களென்றால் எடப்பாடி அரசின் எடுபிடித்தனம்தான் காரணம். ஆர்.எஸ்.எஸ் க்கு விலை போகும் எடப்பாடி அரசின் இந்த துரோகத்தைத் தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

எடப்பாடி அரசுக்கு தமிழகத்தை ஆள எந்த தார்மீக உரிமையும் இல்லை.எல்லா முனைகளிலும் தோற்றுப்போய் தேர்தகளிலும் மண்னைக் கவ்விவரும் பா.ஜ.க மதவெறியெனும் அபாயகரமான ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறது. தமிழக மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணமிது.  ஆர்.எஸ்.எஸ் ,வி.இ.ப முதலிய இந்து மதவெறி அமைப்புகள் முற்றாகத்தடை செய்யப்பட வேண்டும். பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பாஜ க இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஓரணியில் திரள்வோம்.

தங்கள்
காளியப்பன்,
மாநிலப்பொருளாளர்,

மக்கள் அதிகாரம்.

________________________

சென்னை சேத்துப்பட்டில் பெரியார் சிலையில் மை பூசிய இந்துமதவெறியர்கள்!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள பெரியார் சிலையில், யாரும் பார்க்காத சமயத்தில் மை பூசியுள்ளனர் காவிகள். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மத்தியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் நேற்று (20.03.2018) பிரச்சாரம் செய்யப்பட்டது.

கூட்டத்தில் தமிழகத்தில் காவி வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிமை எடப்பாடி அரசு ரத யாத்திரையை அனுமதிப்பதற்கு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியார் சிலை உடைப்பு, பெரியார் பெயரின் மீது மை பூசுதல் போன்ற செயல்களைக் கோழைத்தனமாக இரவோடு இரவாக காவிக் கும்பல் செய்துவருவதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை.

 

ஜியோ உலகில் இன்னும் இருக்கிறது சுருக்குப் பை !

4

ஜியோ போன் சர்வீஸ் சென்டருக்கு ரொம்பவும் வேகமா… நடந்திட்டு இருந்தேன்..  என்ன ஒரு பித்தாலாட்டம், ஸ்மார்ட் போனுக்கு போடுற சிம்முக்கு, 153 ரூபாய ரீஜார்ஜ் செய்துட்டேன்.  ஆனா, நெட் கனெக்ட் ஆகல.  என்னன்னு ரீஜார்ஜ் கடையில கேட்டா, சென்ட் மேசேஜ்-ஐ காட்டி, எங்களுக்கு போய்டுச்சி, நாங்க ஒண்ணும் பண்ண முடியாதுனுட்டாங்க…

சரி, வெயில் தாழ்ந்ததும் போவோம்னு, சாயங்காலம் 5.30 மணிக்கு ஜியோ போன் சர்வீஸ் சென்டருக்கு கிளம்பினேன். சரியான கேள்விக் கேட்டு,  சண்டைப் போடணும்னு  நடந்தேன். வழியில் எங்க பார்த்தாலும் ஜெயலலிதா போஸ்டரு. ரோடைக் கிராஸ் பண்ண முடியாத அளவுக்கு,  அடிமை விசுவாத்தை  அம்மா ஆவிக்கு காட்டியிருந்தாங்க அ.தி.மு.க. அடிமைகள்.. அம்மா இருந்தாலும் இல்லனாலும் பாதிப்பு நமக்குத்தான்னு யோசிச்சிக்கினே வேகமா நடந்தேன்.  எதிர்ல, வயதான அம்மா சிரிச்சிக்கிட்ட கிராஸ் பண்ணாங்க… நானும் சிரிச்சேன்… கடந்து வந்துட்டேன்… ஆனா, எதோ ஒண்ணு, நிறுத்தி திரும்பி பார்க்க வைச்சது….. ஏன்னடானுப் பார்த்தா, அவங்க மாட்டிருந்த சுருக்குப்பை… பல வண்ணங்கள்ள… பளபளத்தது.   என்னக் கடந்து 10 அடி போய்ட்டாங்க…

எங்க ஆயாவோட சுருக்குப்பை ஞாபகம் வந்துடுச்சி.. வயசான, எல்லாரும் சுருக்குப் பையை கடந்துத்தான் வந்திருப்போம். இப்ப காணாம போய்டுச்சினு நடந்தேன்.  இதை அப்புறம் யேசிக்கலாம்… முதல்ல சுருக்குப்பை விற்கும் அம்மாவை பிடிக்கணும்னு…. ஓடிப் பிடித்தேன்..

என்னை பார்த்ததுமே…. அவங்க முகத்துல மகிழ்ச்சி… ”என்ன பை வேணும்…..சின்னது,.. 5ரூ, இது 10ரூ,  பெருசு 20ரூ என்று திக்கி, திக்கி சொல்லி, காலைலயிருந்து இதுதான் வியாபாரம்..”  என்று,  சுருக்குப்பையை  காண்பித்து, வாங்காமல் போய்டாதே… என்பதுபோல் பார்த்தார்.  வாங்கிக்கிறேன்.. என்றதும் சிரிப்பை பதிலாக தந்தார்.

வாஞ்சையாக …பாரு, பாரு எது வேணுமோ … எடுத்துக்க…. என்று  பைகளை பிரித்து, பிரித்து காண்பித்தார்.

எந்த ஊரு?என்றேன்.
சொந்த ஊரு ஆந்திரா பக்கம்.., இங்க வந்து ரொம்ப காலமாகுது…… காஞ்சிபுரம் தாண்டி கீழம்பி…..
புள்ளைங்க… ?

பிறகு,தெலுங்கு கலந்த தமிழில் பேசினார்,

மனக்கு(எனக்கு), நாலு கூத்ரு……. எல்லாருக்கும் கல்யாணம் பண்ணிட்டேன்.  வூட்டுகாரு செத்து,10 வருசம்… அவரு கைரேகை பாப்பாரு…  அப்பா,  …. சஸ்போனு (கக்குஸ்) கிளின்பண்றது……  பொம்பளங்க…. இறங்க முடியாதுல்ல… அதனால, அம்மா இந்த வேலைய கத்துக் கொடுத்துச்சி……அம்மாவும் இந்த வேலைய நல்லா செய்யும்…

தினமும் எவ்ளோ கூலி வரும்?

100ரூபாய் மேல வராது. அதுவும் பாதி சாப்பாட்டுக்கே போய்டும்…. எல்லாம் விலை ஏறிப்போயிடுச்சி….. 12 மணிக்கு சாப்பிட்டது….. டீ…குடிக்கக்கூட ல்ல….. வீட்டில பேரப் புள்ளங்க  பார்த்துட்ட இருக்கும்…. அதுங், திங்கறதுக்கு வாங்கிட்டுப் போவேன்…. காலைல புள்ளங்க, ஸ்கூலுக்கு கிளம்பினதும் வந்துடுவேன்… சாயங்காலம்….. 6,7 மணிக்குப் போவேன்….

வேற வருமானம்?

1000 ரூபா பென்சன் வாங்கறேன்…. வீட்டு வாடகைக் கட்ட அத வைச்சிடுவேன்.

துணி எங்க வாங்குவீங்க?

டைலர்  துணி தைச்சிட்டு, மீதி வெட்டிப் போடும் துணிதான், மாசத்துல்ல ரெண்டு கடையில போய் நிப்பேன்….. கொடுப்பாங்க….. காசு எதுவும் கேட்க மாட்டாங்க…… அவுங்க… கடைய சுத்தப்படுத்திட்டு வருவேன்……தைக்க .ஊசியும்,  நூலும் காசுக்கு, வாரம் …50 ரூபா… குஞ்சரம் கட்ட கயிறு… வாங்குவேன், … நானே கையாலயே தைப்பேன். (குஞ்சரம் பையின் அழகை கூட்டும்)

அந்த குஞ்சர கயிற்றை, தன் கழுத்துலேயும் சரடுபோல் போட்டிருந்தார். கவனித்தப் பின் தெரிந்தது.

எப்ப, வீட்டுக்கு போவீங்க….
நடந்தேதான். வியாபாரமும்… நடந்தேதான். … இப்ப கஷ்டமில்ல… வெயில் காலம் வந்தாதான் கஷ்டம்…
பேசிக்கொண்டிருக்கும்போதே… பக்கத்தில் வேர்கடலை விற்கும் அம்மா, இவரை கைதட்டி அழைத்தார். அவரிடம் சென்றார்…..

அவர்…டீ குடிக்கிறீயா? என்றார்.
டீ வேணாம்…  கடலைக் கொடு என சைகையிலேயே பேசினார்.
அவரும் கைநிறைய வேர்கடலையை அள்ளிக் கொடுத்தார்.
நான் சொன்ன மாரி, டபுள் துணி போட்டு தைச்சிருக்கியா ? என்றார்.
அதுக்கு என்னா? … இப்ப தைச்சித் தாரேன்… காசு மட்டும் கொறைக்காம கொடு…. என்றார்.
காசுல்லாம் கிடையாது… கடலை வாங்கிக்க என்றார்,

இவரும் தைக்க ஆரம்பித்தார். ஒரு பை வாங்கிக் கொண்டு … நான் நகர ஆரம்பித்தேன். அவரை கடந்ததும் ..  என் ஆயாவின் சுருக்குப்பை ஞாபகம் எனக்கு!

அப்பாவுக்கு, எவ்ளோ கஷ்டம் வந்தாலும்,  ஆயாவின் சுருக்குப்பையில் மட்டும் பணம் இல்லாமல் இருக்காது. இப்போது நானும் புடவையின் அடி முந்தானையில்  பணத்தை  முடி,   வெளியில் தெரியாமல் வைப்பதை  என் ஆயாவிடம்தான் கற்றுக் கொண்டேன்.

பள்ளியில் படிக்கும்போது பேனா, நோட்டு  வாங்க  அப்பா பணம் தரவில்லையென்றால், ஆயாவின் பக்கத்தில் நின்று அழுது சாதிப்பது, சினிமா பார்க்க பணம் இல்லை என்று சொன்ன  ஆயாவிடம், ”இல்ல…. நீ வைச்சிருப்பே….. பையைக் காட்டு… ” என அழுது புரண்டு  வாங்கியது மறக்க முடியாது..  வீட்டில் சோறு இல்லாத நேரங்களில்,  ஆயாவின் சுருக்குப்பைதான் எங்களுக்கு இட்லி வாங்கி தந்தது.

எங்களுக்கு வந்த மழைக்கால ஜூரத்துக்கு காபியாகவும் குரோசின் மாத்திரையாகவும், வெயிலின் அம்மைக்கு இளநீராகவும் மாறிய சுருக்குபை,   பொங்கலுக்கு துணி எடுக்க வசதியில்லாம  இருந்தபோது, சீட்டிதுணியில் (காட்டன்) பாவாடையாக மாறியது எங்கள் ஆயாவின் சுருக்குப்பை!

இப்படி…  பழைய நினைவில் நடந்துக்கொண்டே சென்றதில் வந்து விட்டது ஜியோ சர்வீஸ் சென்டர்.

வாங்க மேடம்., லேட்டா வந்திருக்கீங்க….. சீக்கிரம் சொல்லுங்க…. என்றார் ஊழியர்.

என் போனை டேபிளில் வைத்து……153 ரூபாய் ரீஜார்ஜ் செய்தேன்…. டச் போனுக்கு அது செல்லாதாம்… ஜியோ போனுக்குத்தான் போகுமாம்….. இப்ப நான் என்ன செய்யறது…

சாரி மேடம்… நாங்க ஒண்ணும் செய்ய முடியாது…..

ரீஜார்ஜ் பண்ண தேதியிலிருந்து 28 வது நாள் டான்னு… எனக்கு  நெட்டு கட் ஆகுது….. போன்  பேசறது கட் ஆகுது…. எல்லாமே சிஸ்டமேடிக்கா இருக்கு…. ஆனா….. ஏத்துக்காத சிம்முக்கு நான், பணம்  தெரியாமல் போடுறேன்…. அது எப்படி? உடனே …அம்பானி கல்லா பெட்டிக்கு போய்டுது…. இதுக்கு உங்க சிஸ்டமேடிக் வேலை செய்யாதா?…… என்றேன்.

சாரி மேடம்…. நீங்க கஸ்டமர் கேருக்கு போன் போட்டு சொல்லுங்க…. நாங்க எதுவும் பண்ண முடியாது….

கஸ்டமர் கேருக்கும் போன் போட்டேன்… போன காசு …போனதுதானாம்…. இந்த, பிரச்சனை நிறைய இருக்காம்….. நாங்க தெரியப்படுத்திடுறோம்….. மேடமுனு வைச்சிட்டாங்க…. கடைசியில் என்னுடைய பணம் 153, அபேஸ்… டூ… அம்பானி.

ரூபாய், 153 ஏமாந்துட்டோமேன்னு வீட்டுக்கு திரும்பி நடக்கும்போது, சுருக்குப்பை குப்பு ஆயா… சிரித்துக் கொண்டே என்னை கடந்து போனார். அவருக்கு பை தைப்பதற்கு தையற்காரங்க இருக்காங்க. பையை வித்து கடலை கொடுக்கும் அம்மாக்கள் இருக்காங்க.ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசை! இவங்கள அழிச்சிட்டு வால்மார்ட்டு, அம்பானி, டாடான்னு நாடு மாறுனதுக்கு பிறகு நம்ம வருமானம் எப்படி போவுது, என்ன ஆச்சுன்னு கண்டே பிடிக்க முடியாது!

– லட்சுமி.

 

மோடி ஆட்சியில் வளரும் சூப்பர் மார்கெட் சாமியார்கள் ! கருத்துப் படம்

2

மோடிக்கு முன்னாடி இவுங்க ஆன்மீக கார்ப்பரேட் சாமிங்க
மோடிக்கு பின்னாடி இவுங்க சூப்பர்மார்கெட் கார்ப்பரேட் சாமிங்க…!

படம்: வேலன்

இணையுங்கள்:

ஆர்.எஸ்.எஸ்-ஐ அடக்குவோம் ! வேலூரில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !

0

பெரியார் – லெனின் – அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திய இந்துத்துவக் கும்பலுக்கு எதிராக வேலூரில் அனைத்துக் கட்சிகள் சார்பாக 11.03.2018 ஞாயிறு அன்று கண்டணப் பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் நகர திராவிடர் கழகம் ஒருங்கிணைத்த இந்தப் போராட்டத்தில் தி.மு.க, இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்சிஸ்ட்), திராவிட இயக்க தமிழர் பேரவை, இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னால் நாடாளுமன்ற – சட்ட மன்ற உறுப்பினரும் தி.மு.க சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினருமான திரு. முகமது சகி அவர்கள் வேலூர் மக்கான் பகுதியில்  அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியைத் துவக்கி வைத்தார்.

மாலை 5 மணிக்கு எழுச்சியோடு தொடங்கிய பேரணி முக்கிய சாலையைக் கடந்து தலைமை அஞ்சலகம்  அருகில் அமைந்துள்ள பெரியார் சிலையை வந்தடைந்தது. திரு. முகமது சகி அவர்கள்  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் – லெனின் – அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திய இந்துத்துவக் கும்பலுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பட்டன.

இந்திய பொதுவுடமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் தேவதாஸ் அவர்களும், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்சிஸ்ட்) யின் மாவட்டச் செயலாளர் தோழர் தயாநிதி அவர்களும்,  முன்னால் நாடாளுமன்ற-சட்ட மன்ற உறுப்பினரும் தி.மு.க சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினருமான திரு. முகமது சகி அவர்களும் கண்டன உரையாற்றினர். இறுதியில் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோ அவர்கள் நன்றி கூற ஆர்ப்பாட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்துத்துவ கும்பலுக்கு எதிராக அனைத்துக் கட்சிகள் சார்ப்பாக நடைபெற்ற இந்தப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இது தவிர மேற்கண்ட பிரச்சனை குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 07.03.2018 புதன் கிழமை அன்று மாலை 5 மணி அளவில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர். தலைமை அஞ்சலகம் அருகிலிருந்து தோழர்கள் முழக்கமிட்டவாறு சென்றது மக்களிடையே பிரச்சாரமாக அமைந்தது. முன் அனுமதி இன்றி திடீரென இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்​.

சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

0

ஜான் பெலாமி ஃபாஸ்டர், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் மன்த்லி ரிவ்யூ இதழின் ஆசிரியர். ஓரேகான் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை பேராசிரியர். மார்க்சிய சூழலியல் தொடர்பான இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. சூழலியலின் பால் மார்க்சியமும், குறிப்பாக மார்க்சின் எழுத்துகளும் கொண்டுள்ள அக்கறைகளை விளக்கப்படுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

வளர்சிதை மாற்றப் பிளவு குறித்த மார்க்சின் கோட்பாடு (Marx’s Theory of Metabolic Rift)  என்ற இவரது புகழ் பெற்ற கட்டுரை, அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சோசியாலஜியில் வெளியிடப்பட்டது. முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவில் நிகழும் நாசகரமான மாற்றங்களைச் சுட்டுவதற்கு மார்க்ஸ் உருவாக்கிய வளர்சிதை மாற்றப் பிளவு என்ற கருத்தாக்கத்தை இக்கட்டுரையின் வாயிலாக அறிமுகப்படுத்தினார் ஃபாஸ்டர்.

ஃபாஸ்டரின் கருத்துப்படி உலகம் இன்று எதிர்கொண்டிருக்கும் சூழலியல் நெருக்கடி என்பது முதலாளித்துவத்தின் விளைவாகத் தோன்றியிருக்கும் ஒரு கட்டமைவு நெருக்கடியாகும். முதலாளித்துவமும் சூழலியல் பேண்தகைமையும் (Environmental Sustainability) ஒன்றுக்கொன்று ஒவ்வாதவை என்கிறார் ஃபாஸ்டர். மனிதகுலத்துக்கு முன்னால் இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் (Socialism or Cannibalism) என்றார் ஜெர்மன் கம்யூனிஸ்டு புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க். ரோசாவின் கூற்றைச் சற்றே மாற்றி, சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு (Socialism or Exterminism)  எனக் கூறுகிறார் ஃபாஸ்டர்.

பத்திரிகையாளர்கள் ஜிப்சன் ஜான், பி.எம்.ஜித்தீஷ் ஆகியோர் ஜான் பெலாமி ஃபாஸ்டருடன் நிகழ்த்திய நேர்காணலை ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழ் (“Socialism a necessity for human survival”,  Feb 02, 2018) வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கப்பட்ட மொழியாக்கத்தைத் தருகிறோம்.

* * *

இயற்கை குறித்து  மார்க்ஸ், எங்கெல்ஸின் கருத்து என்ன?

பொருள்முதல்வாதிகள் என்ற முறையில் மார்க்சும் எங்கெல்சும் வரலாறு குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும், இயற்கை குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும் இயல்பாகவே பிரிக்கவொண்ணாதவையாகக் கருதினார்கள்.

“ஆற்றலைச் சேமிக்கின்ற அதே நேரத்தில், மனிதத் திறனின் சாத்தியங்களை நிறைவு செய்வது என்ற வகையில், மனித இனத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான வளர்சிதை மாற்றத்தினை அறிவுபூர்வமாக நெறிப்படுத்துவதே சோசலிசம்” என்று விளக்கினார் கார்ல் மார்க்ஸ்.

“பூமி யாருக்கும் சொந்தமானது அல்ல. இந்தப் புவிப்பரப்பிலுள்ள மக்கட்சமூகத்தினர் அனைவரும் சேர்ந்தாலும் கூட, அவர்கள் இந்தப் பூமியைத் தங்கள் உடைமையாகக் கருதவியலாது. ஒரு குடும்பத்தலைவன் குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்து, அடுத்த வாரிசுக்கு விட்டுச்செல்வதைப் போல, இந்தப் பூமியைப் பேணிப் பாதுகாத்து, வளர்த்து, வருங்காலச் சந்ததிக்கு விட்டுச்செல்லும் காவலர்களே மக்கட்சமூகத்தினர்” என்கிறார் மார்க்ஸ். முதலாளித்துவத்துக்கும் சூழலியலுக்கும் இடையிலான உறவை, அறிவியல்பூர்வமாகவும், ஒரு வலிமையான இயங்கியல் சட்டகத்தில் வைத்தும் புரிந்து கொள்ளும் விதத்திலும் வேறு யாருடைய ஆய்வும் சொன்னதில்லை என்று நான் கூறுவேன்.

சூழலியல் பேரழிவைத் தோற்றுவிப்பது முதலாளித்துவமே!

முதலாளித்துவம் என்ற தற்போதைய சமூகப் பொருளாதார அமைப்பு உலகின் சூழலியல் அமைப்புகள் அனைத்தையும் அச்சுறுத்துவதோடு நிற்கவில்லை. இந்தப் பூமியே மனித குலத்தின் இருப்பிடமாக தொடர்ந்து நீடித்திருக்குமா என்ற அச்சுறுத்தலை விடுக்கிறது. இது கேள்விக்கிடமற்ற உண்மை. இன்றைய அறிவியலின் எல்லாத்துறைகளும் இந்த உண்மையை அங்கீகரிக்கின்றன. 2017 நவம்பரில் உலகின் 184 நாடுகளைச் சேர்ந்த 15,000 அறிவியலாளர்கள் இது குறித்து மனித குலத்தை இன்னொருமுறை எச்சரித்தார்கள். எனவே, நாம் கேள்வியை இப்படி எழுப்பவேண்டியுள்ளது.

புவியின் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவியலாததாக்குகின்ற இந்தப் போக்கிற்கான கூறுகள், முதலாளித்துவத்தின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்ற விதிகளிலேயே இருக்கின்றனவா? ஆம் என்பதுதான் இதற்கான விடை. முதலாளித்துவத்தின் விதி ஒன்றுதான். அதை மார்க்சின் சொற்களில் கூறுவதாயின், “மூலதனத்தைக் குவி, குவி, மேலும் குவி என்பதுதான் மோசஸின் இறைக்கட்டளை.”

அதிகரித்த அளவில் மூலதனத்தைக் குவிப்பதைத் தவிர, இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு வேறு எதைப் பற்றியும் அக்கறை இல்லை.  அத்தகைய மூலதனக் குவிப்பு சாத்தியமாக வேண்டுமென்றால், பொருளாதாரம் முடிவே இல்லாமல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு வளரவேண்டுமானால், உலகிலுள்ள அனைத்துமே வாங்கவும் விற்கவுமான பண்டமாக்கப்படவேண்டும். உலகமே பணத்தால் ஆனதாக மாற்றப்படவேண்டும்.

இந்தப் பூமியின் உயிரியல், புவியியல், வேதியியல் இயக்கப்போக்குகளில் தோன்றும் முறிவுகளும் பிளவுகளுமே (Ruptures or Rifts in the Bio-Geo-Chemical Processes of the Planet)  இதன் விளைவு. இப்பிரச்சினையைத்தான் வளர்சிதை மாற்றப் பிளவு என்று கணித்தார் மார்க்ஸ் – இன்றைய சூழல் அமைப்பியலாளர்கள் கணிப்பதைப் போலவே.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சூழலியல் நெருக்கடிக்கு ஒரு தீர்வை வழங்கக் கூடுமா?

தொழில்நுட்பம் குறித்துப் பல தவறான அபிப்ராயங்கள் நிலவுகின்றன. நமது காலத்தின் மிக முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்குக் காரணம் – தனியார் மூலதனக் குவிப்புக்கான கட்டமைப்பு என்ற பொருளில் – முதலாளித்துவமல்ல.

புதிய கண்டுபிடிப்புகள் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும் சாத்தியத்தை வழங்குவதால், அணு ஆயுதங்களை இதற்குப் பொருத்தமாக நவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. துல்லியமாகத் தாக்க முடியும் என்பதால், இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக அணு ஆயுதப் போர் கூட சாத்தியமே என்ற ஆபத்தான, அபத்தமான கருத்துகளும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இந்த புவிக்கோளத்தில் தோன்றியிருக்கும் சூழலியல் முறிவை எதிர்கொள்வது எப்படி என்ற பிரச்சினையில் இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் சிந்திப்பதில்லை.

சூழலியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எல்லா தொழில்நுட்பங்களும் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், மூலதனத்தை மென்மேலும் குவித்துக் கொள்ளும் பொருட்டு, இயற்கை இந்தப் பூமிக்கு விதித்திருக்கும் வரம்புகளைத் தாண்டிப் பொருளாதாரத்தை வளரச்செய்ய வேண்டுமென்றும், இந்த நோக்கத்தைப் பாதுகாப்பான முறையில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றும் முதலாளித்துவ அமைப்பு விரும்புகிறது. இந்த விருப்பத்தைத் தொழில்நுட்பத்தால் தீர்த்துவைக்க முடியாது.

இயற்கை விதிக்கின்ற எல்லா வரம்புகளையும் மீறப்பட வேண்டிய தடைகளாக மட்டுமே கருதுகின்ற முதலாளித்துவத்தின் மிகக் குறுகலான பார்வையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இப்பிரச்சினையைக் கடக்கவியலாத இயற்கையின் வரம்புகள் (Insuperable natural limits) என்று அழைத்தார் மார்க்ஸ். நாம் இந்தச் சமூகத்தை அர்த்தமுள்ள சமத்துவத்தையும் சூழலியல் பேண்தகைமையையும் நோக்கிப் பெருமளவில் நகர்த்திச் செல்ல வேண்டுமானால், – சுதந்திரமும் மனித குலத்தின் எதிர்காலமும் இதைத்தான் கோருகின்றன – சமூக உறவுகளை நாம் மாற்றியமைப்பது அவசியம். இந்த முதலாளித்துவ கட்டமைப்பு அதனை ஏற்றுக்கொள்ளாது.

சோசலிசம் இயற்கையைச் சீரழிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

“உற்பத்திச் சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சியை சோசலிசம் கோருகிறது என்று மார்க்சியம் கூறுவதால், அது இயற்கையை மிகப்பெரும் அளவில் சுரண்டுவதற்கும் அழிப்பதற்கும் வழிவகுக்காதா?” என்று கேட்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சி என்பதன் பொருள் என்ன? உற்பத்தி சக்திகளில் தலையாய சக்தி மனிதர்கள்தான் என்பதையும் அவற்றின் வளர்ச்சி என்பது வேலைப்பிரிவினயின் வளர்ச்சியே என்பதையும் மார்க்ஸ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

“இறுதியாக சோசலிசத்தின் கீழ் உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைவானது, மனித சாத்தியத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், ஆற்றலைச் சேமிக்கும் வகையிலும் இயற்கையுடனான தமது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் மார்க்ஸ். இதனை உற்பத்தி உற்பத்திக்காகவே என்றோ, தொழில்மயம் தொழில்மயத்துக்காகவே என்றோ யாரும் விளக்கப்படுத்த முடியாது. வளர்ச்சியின் அலகு இந்தப் பூமிதான் என்பதால், பேண் தகைமையைத்தான் (Sustainability) மார்க்ஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

பருவநிலை மாற்றம் அறிவியல் வழியில் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அதனைச் சிலர் மறுப்பது ஏன்?

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் அறிவியல் எந்த அளவுக்கு அசைக்க முடியாத உறுதியுடன் இருக்கிறதோ, அதைக் காட்டிலும் சற்று அதிகமாகவே பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் இன்றைய அறிவியல் உறுதியாக இருக்கிறது.

“இது அனைத்தையும் மாற்றுகிறது” (This Changes Everything -Naomi Klein)  என்ற தனது நூலில் நவோமி கிளைன் சரியாகத்தான் சொல்கிறார். அவரது கருத்துப்படி பருவநிலை மாற்றப் பிரச்சினையை வலதுசாரிகள் மறுப்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது.

புவி சூடேறுதலைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சியானாலும் சரி, அல்லது புதைபடிவ எரிபொருள் தொழிலின் மீது (fossil fuel industry) கட்டுப்பாடுகளை விதிக்கின்ற முயற்சியானாலும் சரி, அவற்றை முதலாளித்துவத்துக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் புதைபடிவ எரிபொருள் தொழிலை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறைகளுக்கு எதிரான அச்சுறுத்தலாகவுமே வலதுசாரிகள் காண்கிறார்கள். அந்த வகையில் வலதுசாரிகள் அஞ்சுவது சரிதான் (The Right is right)  என்கிறார் நவோமி கிளைன். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான இயக்கமென்பது தவிர்க்கவியலாமல் புரட்சிகரமான மாற்றத்துக்கானதாகவும் முதலாளித்துவத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது என்கிறார் நவோமி கிளைன்.

நவோமி கிளைன் வலதுசாரிகளை விமரிசித்த போதிலும், அவரது உண்மையான இலக்கு வலதுசாரிகள் என்பதை விடத் தாராளவாத மையவாதிகளே (liberal centrists) ஆவர். இந்த மையவாதிகள் வேறொரு முறையில் பருவநிலை மாற்றப் பிரச்சினையை மறுக்கிறார்கள். சமூக உறவுகளில் மாற்றத்தைக் கொண்டு வராமலேயே, சந்தை மற்றும் தொழில்நுட்பத்தின் துணையுடன் மந்திர வித்தையைப் போல புவி சூடேறுதலைத் தடுத்து விட முடியும் என்று எதார்த்தத்துக்குப் புறம்பான வகையில் வாதிடுகிறார்கள்.

சூழலியல் பேரழிவை நம்மால் தடுக்க முடியுமா?

நம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலியல் பேரழிவிலிருந்து தப்புவதற்கு தொழில்நுட்பத் தடைகளோ, வேறு பௌதிகத் தடைகளோ ஏதும் இல்லை. ஆனால், வழமையான முறையில், அதாவது, மூலதனக் குவிப்பு வழக்கம் போல நிகழ்ந்து கொண்டிருக்க, அதன் போக்கிலேயே இப்பிரச்சினைகளைத் தீர்க்கவியலாது.

ஒரு பேரழிவைத் தடுக்கின்ற அதே நேரத்தில், பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் முடியும். சாத்தியமான தீர்வுகள் பல உள்ளன. ஆனால், அநேகமாக அவை அனைத்துமே மூலதனக் குவிப்புக்கு எதிரானவையாகவே இருக்கின்றன.

அமெரிக்காவில் யாருக்கும் தேவைப்படாத, யாரும் விரும்பாத பொருட்களை, பெரும்பாலும் குப்பைகள் என்று சொல்லத்தக்கவற்றை மக்களின் தலையில் கட்டுவதற்கான விளம்பரங்களுக்காக மட்டும் ஒரு டிரில்லியன் டாலர்கள் ஆண்டுதோறும் செலவிடப்படுகின்றன.

உலகப் பொருளாதாரத்தில் சூழலியில்ரீதியில் அழிவுத்தன்மை வாய்ந்த துறை இராணுவம். அழிவினை இலக்காகக் கொண்ட இந்தத் துறைக்கு ஆண்டுதோறும் ஒரு டிரில்லியன் டாலர்களைச் செலவிடுகிறது, அமெரிக்கா. மேலும் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். இத்தகைய செலவுகள் அனைத்துமே தேவையற்றவை. எனினும், இவற்றையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதிகளுக்கு எதிராகச் செயல்படுவது அவசியம்.

ஒரு புரட்சிகரமான எதிர்வினை என்பதன் பொருள் நாம் விதிகளை மாற்ற வேண்டும் என்பதுதான். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, எரிந்து கொண்டிருக்கும் இந்த வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு நாம் வழி தேடவேண்டும். அதற்கான நமது போராட்டத்தில்தான் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் நாம் பெற முடியும்.

முதலாளித்துவ நெருக்கடியும் பாசிசமும்

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நாம் காணும் பாசிசத்தின் எழுச்சி என்பது மையப் பொருளாதாரங்களின் மூலதனம் எதிர்கொள்ளும் கட்டமைவு நெருக்கடியுடன் தொடர்புள்ளவை.

டிரம்பும் வெள்ளை மாளிகையும்  என்ற எனது நூலில் இத்தகைய பிரச்சினைகள் பலவற்றைக் கையாண்டிருக்கிறேன். பாசிசம் என்பது நெருக்கடியில் சிக்கிய முதலாளித்துவக் கட்டமைப்பிலிருந்து பிறப்பது. அது குறிப்பான வர்க்க அடித்தளத்தைக் கொண்ட தெளிவானதொரு அரசியல் கட்டமைப்பு.  தாராளவாத ஜனநாயக அரசின் நெருக்கடியையும் பாசிசத் தன்மை கொண்ட அரசமைப்பால் அது மாற்றீடு செய்யப்படுவதையும் இது காட்டுகிறது.

1930 -களிலும் 40 -களிலும் பாசிசம் குறித்த விமரிசனமென்பது மார்க்சியத்திடமிருந்துதான் வந்தது என்றபோதிலும் அது பரவலாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. ஒரு அரசமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சி நடப்பதைப் போன்ற தோற்றத்தை பாசிச அரசுகள் பராமரித்த போதிலும், தாராளவாத ஜனநாயக அரசுக்குரிய வரம்புகளை மறுத்து, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் நடத்துகின்ற ஆட்சி என்றவாறே பாசிசம் புரிந்து கொள்ளப்பட்டது.

பின்னர் முதலாளித்துவத்துக்கும் பாசிசத்துக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று காட்டும் விதத்தில் பாசிசத்துக்கு வியாக்கியானம் அளிப்பதற்குத் தாராளவாதக் கோட்பாட்டுப் பிரிவினர் அரும்பாடுபட்டார்கள். பாசிசம் என்பதை ஒரு வகை உளவியல் பிறழ்ச்சி போலக் காட்டுவதற்கும், நிறவெறி தோன்றிய வரலாற்றுப் பின்புலத்திலிருந்து அதனைப் பிரித்தெடுத்துவிட்டு, நிறவெறிதான் பாசிசம் என்பதுபோலக் காட்டுவதற்கும் இவர்கள் பெரிதும் முயன்றார்கள். பாசிசம் என்பதை அரசியல்ரீதியான வர்க்கக் கட்டமைவாக நாம் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் அதனைத் தீர்மானகரமாக முறியடிக்க முடியும். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, முதலாளித்துவத்தை எதிர்க்கத் தயாராக இல்லாதவர்கள் பாசிசத்தை எதிர்க்க முடியாது.

ஒரு புதிய புரட்சிகர சூழலை நாம் வந்தடைந்து விட்டோமா?

முதலாளித்துவக் கட்டமைப்பை ஒரு நாளில் கடந்து சென்றுவிட முடியாதென்பதை நாம் அறிவோம். நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை வெற்றி கொள்வதற்கு முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பல நூற்றாண்டுகள் ஆயின. நாம் நீண்டதொரு புரட்சி என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில், தன் ஒவ்வொரு அடி வைப்பிலும் அது புரட்சிகரமானதாகவும் இருக்க வேண்டியுள்ளது. இந்தப் பூமியும் நாமும் பிழைத்திருக்க வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதியை எதிர்த்துத்தான் நாம் நகர வேண்டும். மூலதனக் குவிப்பின் தர்க்க நியாயத்தை முறியடிக்க இடையறாது போராடவேண்டும். இது நம்முடைய காலம் நம் அனைவருக்கும் அளித்திருக்கும் பாடமாகும்.

சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் என்று நாம் பேசும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. இன்று நமது தெரிவு சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு என்பதாக மாறிவிட்டது. சோசலிசத்தை நோக்கிய முன் நகர்வு என்பது தவிர்க்கவியலாத் தேவை ஆகிவிட்டது. மனித சுதந்திரம் என்ற இலட்சியத்துக்காக மட்டுமல்ல, மனித இனம் பிழைத்திருப்பதற்கான வழியே  சோசலிசம்தான் என்றாகிவிட்டது.

150 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மார்க்சுடைய மூலதனத்தின் பொருத்தப்பாடு குறித்து..

மார்க்சின் விமரிசனபூர்வமான இயங்கியல் ஆய்வுமுறையும், முதலாளித்துவ சமூகம் குறித்த அவரது வரலாற்று ஆய்வுகளும் அவரது பணியைத் தன்னிகரற்றதாகவும் தவிர்க்கவியலாததாகவும் ஆக்கியிருக்கிறது. கடந்த 150 ஆண்டு காலத்தில் சமூக விஞ்ஞானத்துறையில் நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள் அனைத்தைக் காட்டிலும் மார்க்சியம் நெடிதுயர்ந்து நிற்கிறது.

மாறி வரும் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப சோசலிச இயக்கம் முன்னேறிச் செல்லச் செல்ல, தான் வாழ்ந்த காலத்தின் தேவைகளுக்கு அப்பால் நெடுந்தொலைவுக்கு ஊடுறுவிப் பார்த்த மார்க்சின் சிந்தனைகளுக்குள் பொதிந்திருக்கும் புதிய, புதிய அறிவியல் கூறுகளை அது கண்டு கொள்ளும் என்று ரோசா லக்சம்பர்க் ஒரு முறை சொன்னார். அது உண்மையென நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நம்முடைய வரலாற்றுக் கட்டத்தின் தேவைகளுக்கேற்ப நமது போராட்டங்கள் புதிய புதிய வடிவங்களை எடுக்கலாம். ஆனால், அவருடைய ஆய்வுமுறை நீடித்து நிற்கிறது.

மொழியாக்கம்: சூரியன்

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

பாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதா ?

1

மீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ப் மீடியா என்ற ஒரு பத்திரிக்கை நிறுவனம், நடத்திய ஆய்வில் நாம் அருந்தும் பாட்டில் தண்ணீரில் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சுத்தமான நீர் வேண்டும் என்று தான் பாட்டில் தண்ணீருக்கும், கேன் தண்ணீருக்கும் தண்டம் கட்டி பருகுகிறார்கள், மக்கள். இதிலுமா பிரச்சினை? என நீங்கள் எண்ணலாம்.

உலக அளவிலான பாட்டில்-கேன் என கொள்கலனில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் சந்தையின் மதிப்பு ஓராண்டுக்கு சுமார் 147 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது 9 இலட்சத்து 56,000 கோடி ரூபாய்கள்.

ஆர்ப் மீடியா நிறுவனம், பாட்டில் தண்ணீர் உற்பத்தி செய்யும் 11 நிறுவனங்களின் 250 பாட்டிலை வாங்கி சோதனைக்கு உட்படுத்தியது. மொத்தம் 5 கண்டங்களில், 9 நாடுகளில் இருந்து 19 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கிருந்து குடிநீர் பாட்டில் மாதிரிகள் வாங்கப்பட்டன. இந்நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் பாலி எத்திலின் தெரெப்தலேட் (PET) என அழைக்கப்படும் பிளாஸ்டிக் வகை கலந்திருக்கிறது.

உலக அளவில் விற்பனை செய்யப்படும் பாட்டில் குடிநீரில் 100 மைக்ரான் அளவிற்கு அதிக அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் சராசரியாக லிட்டருக்கு 10.4 எண்ணிக்கையில் இருக்கின்றன. சில நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் லிட்டருக்கு 10,000 துகள்கள் வரை இருந்திருக்கின்றன. அதேபோல் 100 மைக்ரானுக்குக் குறைவான அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் சராசரியாக லிட்டருக்கு 314.6 எண்ணிக்கையில் இருக்கின்றன.

எடுக்கப்பட்ட மாதிரிகளில் 93% பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கின்றன.  இதே நிறுவனம் கடந்த ஆண்டு குழாய் நீரில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் குறித்த ஆய்வறிக்கை வெளியிட்டது. அதன்படி உலக அளவில் குழாய் நீரில் கலந்துள்ள பிளாஸ்டிக்கின் அளவு சராசரியாக லிட்டருக்கு 4.45 எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இது பாதுகாப்பான குடிநீர் எனக் கூறி விற்கப்படும் பாட்டில் குடிநீரை விட மிகவும் குறைவு.

உடம்பில் உட்கொள்ளப்படும் பிளாஸ்டிக் துகள்களில் சுமார் 90% நமது உடல் வெளியேற்றிவிடுகிறது என்றும் மீதமுள்ள 10% துகள்கள் நமது உடலின் திசுக்கள் மற்றும் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பாகங்களில் தங்கிவிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். மேலும் இந்த பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனங்கள் உடலில் எவ்வகையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது குறித்த முழுமையான ஆய்வு எதுவும் இதுவரை இல்லை.

ஏகாதிபத்தியங்களால் சுரண்டப்படும் மூன்றாம் உலக நாடுகளில் தண்ணீர் வழங்கல், சேவை என்ற நிலையில் இருந்து சந்தைக்கானதாக மாற்றப்பட்டு வருகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் பல நாடுகளில் தண்ணீரை தனியார்மயமாக்கி விட்டார்கள்.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்  தனியார் வசம் சென்று கொண்டிருக்கிறது. உலகவங்கியின் உத்தரவிற்கு இணங்க தேசிய நீர் பாதுகாப்பு மசோதாவை நம் மீது திணிக்கத் தயாராகியிருக்கிறது மோடி அரசு. இதற்கான வரைவை கடந்த காங்கிரசு ஆட்சியிலேயே கொண்டு வந்தனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து   அம்மசோதா கிடப்பில் போடப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், சுத்தமான நீரைப் பெற தனியாரை நாடும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என தரக்கட்டுப்பாடு வைத்து அதனைக் கறாராக அமல்படுத்தும் மேற்குலகிலேயே பாட்டில் தண்ணீரில் அதிக அளவில் பிளாஸ்டிக் இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

இந்தியாவிலோ இதற்கென எந்த கட்டுப்பாடும் இல்லை. இருக்கும் பாதுகாப்பு முறைகளெல்லாம் அதிகார வர்க்கத்தின் ஊழல்களால் பலனில்லாமல் தூங்குகின்றன.

இதை விட முக்கியமானது, தண்ணீர் என்றால் அது பாட்டில், பாக்கெட், கேன் என மாற்றி விட்டார்கள். மக்கள் வருமானத்தில் கணிசமான அளவு குடிநீருக்குச் செல்கிறது. பொது சேவையில் பெறப்படும் குடிநீர் பாதுகாப்பற்றது என்பதாக தற்காலத்தில் மக்கள் மனங்களில் மாற்றப்பட்டு விட்டன. உணவகங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் தனியார் நிறுவனங்களின் குடிநீரே ஆதாரங்களாக இருக்கின்றன. இந்நிலையில் பாதுகாப்பான நீர் குறித்த இத்தகைய விழிப்புணர்வு யாருக்கு ஆதாயம்?

இனி பாட்டிலில் பிளாஸ்டிக் துகள் இல்லாத உயர்தர குடிநீர் என அடுத்த சரக்கு சந்தையில் புதிதாக விற்கப்படும். இப்போது செலவழிப்பதை விட இனி குடிநீருக்கான பட்ஜெட் அதிகரிக்கும். தண்ணீரில் கலந்திருக்கும் தனியார் மயம் எனும் விஷத்தை முறியடிக்காமல் பாதுகாப்பான பாட்டில்களால் என்ன பாதுகாப்பு வந்து விடப் போகிறது?

மேலும் :

போராட்டக்களத்தில் புது மொட்டுக்கள் ! இளம் தோழர்களின் அனுபவம் !

3

மதுரை காவிரி தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான இளம் தோழர்களின் அனுபவம்!

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு சேர வேண்டிய 14 டிஎம்சி தண்ணீரை குறைத்து கடந்த 16.2.2018 வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.  மறுநாள் 17.2.2018 சனிக்கிழமை மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக “டெல்லியின் அதிகாரத்திற்கு கட்டுப்படாதே” என்ற முழக்கத்தோடு மதுரையின் ஜல்லிக்கட்டு புகழ் தமுக்கத்தில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான BSNL அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 4 இளம் தோழர்கள் உட்பட 24 தோழர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின் இளம் தோழர்கள் தவிர மற்றவர்களை வழக்கு போட்டு சிறையில் அடைத்தது காவல்துறை.

கைதான 4 இளம் தோழர்களும் பு.ஜ.தொ.மு., ம.க.இ.க. அமைப்புத் தோழர்களின் குழந்தைகள் தான், அதனாலேயே போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  அவர்களது போராட்ட அனுபவம் இது.

உலகமயத்தின் உக்கிரமான தாக்குதலில் தெருக்களில் ஓடியாடும் குழந்தைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. சுட்டி டி.வி.யும் ‍.சோட்டா பீமும் அவர்களை இரண்டடி பெட்டிக்குள் கைது செய்துவிட்டது. கொஞ்சம் வசதி வாய்ப்புள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளையோ Android மொபைல் போனின் வீடியோ கேம்ஸ்களின் பிடியில் தாரை வார்த்துவிட்டது இந்த சமூகம்.

இவற்றையெல்லாம் தாண்டித்தான் கூடங்குளம் மக்கள் போராட்டத்தில் களம் கண்ட குழந்தைகளையும், டாஸ்மாக் கடைகளை ஏறி உடைத்த சிறுவர்களையும், நெடுவாசலில் போர்களம் புகும் சிறார்களையும் காண்கின்றோம்.

இனி குழந்தைகளின் அனுபவத்திற்கு செல்வோம்.

“எங்க 4 பேருக்கும் அன்னக்கி லீவு, அதனால் முத நாளே அப்பா காவிரி வழக்குல தமிழ் நாட்ட ஏமாத்திட்டாங்க. அதனால நாளைக்கி காலையில போரட்டம் இருக்கு. நீங்களும் வாங்க, காலையில் 8 மணிக்கு எல்லாம் கெளம்பனும். சீக்கிரம் போயி தூங்குங்கன்னு சொன்னாங்க. ஸ்கூல் இருந்தா அப்பா கூட்டிட்டு போமாட்டாங்க. சில நேரம் மட்டும் லீவு போட்டுட்டு கூட்டிட்டு போவாங்க. அதே மாறி காலைல 8 மணிக்கெல்லாம் அங்க போய்ட்டோம். அப்ப அங்க ஒரு போலீஸ்காரரு அப்பாகிட்ட ரொம்ப நேரம் பேசிகிட்டிருந்தாரு. என்கிட்ட பேரு, படிப்பு, எல்லாம் அவரு விசாரிச்சாரு” என்று சொல்கிறார் 6 -ஆம் வகுப்பு படிக்கும் கயல்.

” அப்பறம் போராட்டம் ஆரம்பிச்சப்ப தோழர்களோட‌ சிக்னலில் இருந்து BSNL ஆபிஸ் வரை முழக்கம் போட்டுகிட்டே ஊர்வலமா போனோம். நாங்க முதல் வரிசையில் சென்றோம்.  ஏன்னா போராட்டத்துல எங்களுக்கு எப்பவுமே முதல் வரிசையில் இருக்கத்தான் பிடிக்கும்” என்று ஆர்வத்துடன் சொல்கிறார் 6 -ஆம் வகுப்பு படிக்கும்  இரணியன்.

“முதல்ல சில போலீசுதான் இருந்தாங்க, அவங்க கூட நாங்க ஊர்வலமா வற்றப்ப பக்கத்துலதான் நடந்து வந்தாங்க. ஆனா ஒன்னும் சொல்லலை. அப்பறம் ஆபிஸ் வாசல்ல டி.வி காரங்களுக்கு பேட்டி கொடுத்தப்ப, ஒரு போலீஸ் வந்து, “உடனே எல்லாம் வேன்ல ஏறுங்க உங்கள எல்லாம் கைது பண்றோம்”  என்றாரு. உடனே இப்பத்தான வந்துருக்கோம் கொஞ்சம் இருங்கன்னு தோழர்கள் சொன்னப்ப உங்கள இவ்வளவு நேரம் விட்டதே அதிகம் உடனே வேன்ல ஏறுங்கன்னு சொல்லிக்கிட்டே எல்லாரயும் புடிச்சு தள்ளி ஏத்துனாங்க. அப்புறம் வேன்ல போகும் போது அப்பா சொல்லித்தான் தெரிஞ்சது அவரு பேரு மணிவண்ணன்னு.  அவரு இன்ஸ்பெக்டராமே” என்று போலீசின் அடக்குமுறையை பயமில்லாமல் விளக்குகின்றனர் 5-ம் வகுப்பு படிக்கும் மருதுவும் 9 -ஆம் வகுப்பு படிக்கும் சூர்யாவும்.

ஒரு வழக்கறிஞராகி மக்களுக்காக சேவை செய்து உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்பது சூர்யாவின் ஆசை.

மேலும் “இவங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா, நம்ம ஊருக்கு வர வேண்டிய தண்ணிய தடுத்து நிறுத்தி இருக்காங்க, அப்பறம் விவசாயம் பன்றதுக்கு எங்க இருந்து தண்ணி கிடைக்கும். எப்படி சாப்புட்றது.  இவங்களும் இந்த ஊரு தான.  நம்ம ஊரு பிரச்சினைக்கு நாம போரட‌லைன்னா வேற யாரு போராடுவான்னு நினைச்சோம்.  சரி, இவங்க (போலீசு) எப்பவுமே இப்படிதான, நல்லது பன்றவங்கள கைது பன்றது அப்படின்னு நினைச்சு விட்டுட்டோம். உடனே எங்கள(சிறுவர்களை)  மட்டும் வெளிய போங்கன்னு சொல்லிட்டு தோழர்கள மட்டும் கைது பண்ண பார்த்தாங்க ஆனாநாங்களும் கைதாவோம்னு சொல்லிட்டோம்.

ஒவ்வொருத் தரையும் குண்டு கட்டா தூக்கி வேன்ல ஏத்துனாங்க, இவங்க (போலீசு) எப்பவுமே இப்படித்தான் பன்னுவாங்கன்னு எங்களுக்கு தெரியும். ஏன்னா ரொம்ப நேரம் நாங்க போராட்டம் பண்ணா மக்கள்கிட்ட இந்த விசயம் பரவும், அத தடுக்குறதுக்கு தான் இவங்க இப்படி எல்லாரயும் உடனேயே கைது பண்ணி வேன்ல ஏத்தி மண்டபத்துல அடச்சு வச்சுருவாங்க, இதுதான் இந்த போலீசோட வேலையே. ஆனா எங்கள கைது பன்றப்பவும், ஊர்வலமா வந்தப்பவும் சுத்தி இருந்தவர்களை (மக்களை) பார்த்து கைகாட்டி வரச்சொல்லி முழக்கம் போட்டோம், ஆனால் எல்லாரும் போட்டோ எடுத்தாங்களே தவிர யாருமே வரல, எல்லாம் வேடிக்கை பார்த்துட்டுதான் இருந்தாங்க”.

மேலும் இரணியன் கூறும் போது “சின்ன பசங்கள எல்லாம் வெளிய போங்கன்னு கைய புடிச்சு இழுத்து இழுத்து விட்டாங்க, ஒரு போலீசு கை பிடிச்சு இழுக்கிறேன்னு என் கைய பிசஞ்சு விட்டான், நல்ல தடிமாடு மாதிரி இருக்காங்க. இப்பவே போன போராட்டத்துல முத வரிசையில் கொடியோடு நின்னு முழக்கம் போட்டுட்டு இருந்தப்ப என் பிரண்ட்ஸ் பார்த்துட்டு கட்சிகொடினு பட்ட பேர் வச்சுதான் கூப்புறாங்க, இதுல இது வேற தெரிஞ்சுட்டா ரொம்பவே பன்னுவாங்க” என்று தமது செயலுக்கான அங்கீகாரம் கிடைக்காமை பற்றி வருத்தத்தோடு சொல்கிறார்.

“அப்புறம் வேன்ல போய்ட்டு இருந்தப்ப அடிக்கடி சடன் பிரேக் போட்டாரு டிரைவரு. நான் கூட முன்னாடி போய் முட்டிக்கிட்டேன், அப்ப தோழர்கள் ஏன் இப்படி வண்டிய ஓட்றீங்க, எங்கள மேல கோவமான்னு கேட்டாங்க, ஆனா அந்த டிரைவரு ஏதும் சொல்லாம வண்டிய ஓட்டிக்கிட்ருந்தாரு”  என்கிறார் சூர்யா.

“அங்கருந்து மண்டபத்துல போனதுக்கு போனப்புறம் எல்லாரோட பேரு, வேல அட்ரஸ், படிப்பு, ஸ்கூல் பேரு எல்லாம் கேட்டாங்க. நாங்க கொடுக்க மாட்டோம்னு சொல்லிட்டோம், ஏன்னா எங்கள போராட விடாம, மரியாதை இல்லாம நடத்துனதுக்காக தோழர்கள் பேரு, அடையாளம் எல்லாம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க, அதனால நாங்களும் தரமாட்டோம்னு சொல்லிட்டோம்.

அப்ப எங்கள பார்த்து, “நல்லா படிச்சு பெரிய ஆளா வர வேண்டாமா, ஏன் இப்படி போராட்டம்னு வந்து கஷ்டப்பட்றீங்கன்னு”  கேட்டாரு ஒரு போலீசு, உடனே நாங்க “எம்ஜிஆர் படிச்சாரா?, அவரை இப்படி கேப்பீங்களா?” அப்படீன்னு கேட்டோம், உடனே அவரு “ஏய் அவரு முதலமைச்சர்ப்பா” என்றவுடன் “அவரு படிச்சுதான் முதலமைச்சர் ஆனாரா”ன்னு திருப்பி கேட்டவுடன் “உங்க கூட பேச முடியாதுப்பா நீங்க கிளம்புங்க” அப்படின்னு சொல்லிட்டு அவரு கிளம்பிட்டாரு. அதுக்கப்புறம் எல்லா தோழர்களும் ஒவ்வொருத்தரா காவிரி ஆத்து பிரச்சினைய பத்தி பேசினாங்க. அதைப்பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டோம்”.

மேலும் கயல் மற்றும் மருது சொல்லும்போது, “நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து “எங்க மண்ணு, எங்க ஊரு” பாட்ட பாடுனோம், அப்ப தோழர்கள் எல்லாம் சந்தோசமா பார்த்து கைதட்டுனாங்க” என்று குதூகலத்துடன் சொல்கிறார்கள்.

ஆரம்ப பள்ளி ஆசிரியராகி சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என்பது கயலின் கனவு.

“வெளிய இருந்த‌ தோழர்கள் ஸ்நாக்ஸ் சாக்லெட் எல்லாம் வாங்கி தந்தாங்க. காலையில் பேரு, அட்ரஸ் கேட்டப்ப சொன்ன மாதிரியே எங்கள போராட விடாம கைது செஞ்சதுக்காக போலீஸ் வாங்கி தந்த சாப்பாட சாப்ட மாடோம்னு சொல்லிட்டாங்க தோழர்கள்.  அதுக்கப்புறம் போலீஸ் சாமாதானம் பேசினதுக்கப்புறம் சாப்டறப்ப 3மணி இருக்கும்.” என்கிறார் மருது.

“அதுக்கப்பறம் நாங்க ரொம்ப நேரம் மண்டபத்துலயே ஒடி பிடிச்சு விளையாடிட்டு இருந்தோம், நடுவுல நாங்க எல்லாரும் தோழர்களாகவும், பிரகாஷ் தோழர் போலீசாவும் வேஷம் போட்டு விளாடுனோம், நாங்க எல்லாரும் சேர்ந்து போலீச(பிரகாஷ் தோழரை) தரையில போட்டு புரட்டி எடுத்துட்டோம்.”

சாயங்காலம் திடீர்னு எங்கள எல்லாரையும் ரிமாண்ட் செய்யுறோம், அதனால் மெடிகல் டெஸ்ட்க்கு ஆஸ்பத்திரிக்கு கிளம்பனும்னு போலீஸ் வந்து சொன்னாங்க. அடுத்த நாள் ஞாயித்துகிழமன்றதால எங்களுக்கு ஒன்னும் பிரச்சினையில்ல லீவுதானன்னு இருந்தோம். அங்க இருந்து GH வந்ததுக்கு அப்புறம் எங்கள(சிறுவர்களை)  எல்லாம் ரிலீஸ் செய்யுறோம்னு தோழர்கள் மட்டும் செக்கப் செய்யச் சொன்னாங்க. ஆனா நாங்க மாட்டோம்னு சொல்லிட்டோம். ஏன்னா எங்கள மாதிரி சின்னப்பசங்க எல்லாம் போராடுராங்களேன்னு மக்கள் புரிஞ்சுக்கிட்டு போராட வரணும்னுதான் கைதானாலும் பரவா இல்லைன்னு நாங்க போராட வர்றோம். அதனால நாங்க ரிலீஸ் ஆக மாட்டோம்னு சொல்லிட்டோம்.

அப்பறம் தான் எங்கள செக்கப் செய்ய கூட்டிட்டே போனாங்க. அப்ப வெளிய இருந்த தோழர்கள் வாங்கி கொடுத்த சாக்லெட்ட அங்க இருந்த போலீசுக்கு எல்லாம் நாங்க ஜெயிலுக்கு போறோம் சாக்லெட் எடுத்துக்கொங்கன்னு கொடுத்தோம்.

ஆனா அவங்க உங்கள தான் ரிலீஸ் பண்ணிட்டோம்ல என்றாங்க, சரி, நாங்க ரிலீஸாகப் போறோம் அதுக்காக எடுத்துகொங்க என்றோம் நிறய பேர் எடுத்துட்டாங்க. ஆஸ்பத்திரி வராண்டாவுல நாங்க ஜாலியா விளாடிட்டு இருந்தோம், ஆனா தோழர்கள்தான் ரொம்ப பாவம். ஒன்னுக்கு போறதுக்குகூட போலீசோடதான் போனாங்க. அங்கருந்தப்ப வெளிய இருந்த தோழர்கள் எங்களுக்கு (சிறுவர்களுக்கு) மட்டும் சாப்பாடு வாங்கி கொடுத்தாங்க. அதுக்கப்பறமும் எங்கள விடல.  போலிஸ்டேசனுக்கு கையெழுத்து போட‌ வந்தப்பகூட பசங்கள கூட்டிட்டு போயிறச்சொன்னாங்க, அத ஜட்ஜ் சொல்லட்டும்னு சொல்லிட்டு வேன்ல இருந்து இறங்க மாட்டோம்னு சொல்லிட்டோம்”

மேலும் கயல் சொல்லும் போது “அங்க ஆஸ்பத்திரியில கூட என்ன ஒரு போலிஸ் கூப்டு விசாரிச்சாரு அப்ப நம்ம இரணியந்தான் வந்து என்ன கேளுங்க நான் சொல்ரேன்னு வந்து அந்த போலிஸ்கிட்ட பேசுனான்” என்கிறார்.

“என்ன பேசினான்?” என கேட்ட போது, “அதே தான், நல்லா படி, பெரிய ஆளா வரணும், போராட்டம் எல்லாம் வேணாம்ன்னு சொன்னாரு, இவன் உடனே, ” மக்களுக்காக வாழணும் சார்” ன்னு சொன்னான்”

“இவிங்கள பெத்தாங்களா செஞ்சாய்ங்களா?” என அந்த  போலீசுகாரர் புலம்பியதாக அருகில் இருந்த தோழர்கள் கூறினர்.

“அப்புறம் ஜட்ஜ் வீட்டுக்கு வந்தப்ப கூட எங்கள வெளியவே இருக்க சொன்னாங்க. ஆனா நாங்க ஜட்ஜ் முன்னாடி ஆஜராகியே தீர்வோம்னு தோழர்கள்.. கூடவே இருந்தோம். ஆனா ஜட்ஜ்தான் எங்கள பாத்த உடனயே “குழந்தைகள எல்லாம் ரிலீஸ் பண்ணிருங்கன்னு” ஒரே போடா போட்டாரு. ஜெயில பாக்குறது ஜஸ்ட்ல மிஸ் ஆகிருச்சு” என்று ஒருவித ஏக்கத்தோடு கூறுகின்றனர்.

சரி உங்களுடைய அப்பாக்கள் எல்லாம் கைதாகி ஜெயிலுக்கு போவதை பற்றி உறவினர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்டதற்கு ” அவர்களுக்கு யாருக்கும் இது தெரியாது, இரண்டு நாள்தான் ஜெயில்ல இருந்ததால சொந்தகாரங்க யாருக்கும் தெரியல, ஆனா வீட்ல அம்மா பயந்துகிட்டே இருந்தாங்க போலீஸ் யாரும் நம்ம வீட்டுக்கு தேடி வந்துருவாங்களோன்னு,” என்கிறார் மருது.

இரணியன், “எங்கப்பாம்மா போராட்டத்துக்கு வரல.  நான் மட்டும் தோழர்களோட வந்தேன்.  நான் அரஸ்ட் ஆனது தெரிஞ்சதும் பாட்டி தான் ரொம்ப திட்டினாங்க. ” அப்பன மாதிரியே கெட்டு குட்டிச் சுவரா போகாத” ன்னு சொன்னாங்க.  நான் “நல்ல விசயத்துக்கு தானே போனேன். என்ன தப்புன்னு” கேட்டேன்.  “அப்படீன்னா இனிமே எங்கூட பேசவே செய்யாதன்னாங்க”. நான் ” சரின்னு” சொல்லிட்டேன்.  அப்பறம் ஒரு அஞ்சாறு நாள் பாட்டி எங்கூட பேசவே இல்ல.  அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சுட்டாங்க.” என்றார்.

“இப்படி 20 பேர் மட்டும் போராடினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?” என்று கேட்ப‌தற்கு “தீராதுதான். நாங்களும் எங்க பிரண்ட்ஸ்கிட்ட பேசுவோம், ஆனா அவங்க விளாட்டுலயே இருப்பாங்க. எங்கள கிண்டல் பண்ணுவாங்க,  சிலபேர் ஆசைதான் ஆனா அம்மா விடமாட்டாங்கன்னு சொல்லுவாங்க. அவங்க சொல்றதும் சரிதான எங்க அப்பா அம்மா போக சொல்றாங்க, ஆனா அவங்க அப்பா அம்மா அப்படி இல்லையே என்ன பன்றது. ஆனா நாங்க விடமாட்டோம்.  பசங்ககிட்ட விடாம பேசுவோம், அடுத்த தடவ நிறய பிரண்ட்ஸ கூட்டிட்டு வருவோம்.”

” இப்படி போராட்டம்,  போலீஸ்,  கைது,  கேஸ் என்று போய்க்கொண்டிருந்தா ஆசிரியர்,  மருத்துவர்,  வழக்கறிஞரா,  உங்களுடைய தனிப்பட்ட லட்சியங்கள், ஆசைகள் எல்லாம் என்னவாவது?” என்று கேட்டால்  “மக்களுக்கு சேவை செய்யத்தான் இந்த ஆசை எல்லாம், அது முடியலைன்னா இப்படி போராடி சேவை செய்ய வேண்டியதுதான்” என்றனர்.

-வினவு செய்தியாளர்கள்.

குற்றப் பாரம்பரியம் குரு பரம்பரையான கதை ! பிரைமரி எவிடென்ஸ் !

15

ழ்வார்கள் எனப்படுவோர் புனிதர்கள் என்றும், உலகமகா உத்தமர்கள் என்றும் பொதுமக்கள் நினைக்கக்கூடும். ஆனால், நித்தியானந்தா, எச்.ராசா போன்றோரையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்ற அளவுக்கு இவர்கள் அயோக்கிய சிகாமணிகள் என்பதை வைணவப் பார்ப்பனர்கள் எழுதியுள்ள வரலாற்று நூல்களிலிருந்தே வாசகர்கள் அறியத்தருகிறோம்.

பிரபந்த வித்வான் எதிராஜ ராமானுஜ தாசர் எனும் வைணவப் பார்ப்பனரால் தொகுக்கப்பட்டு, ஆழ்வார்கள் அமுத நிலையம், சென்னை – 2 -ஆல் வெளியிடப்பட்டுள்ள குருபரம்பரை வைபவம் (பதிப்பு : 1992) எனும் நூலிலிருந்தும், ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம் (பதிப்பு : 1927) (வெளியீடு :  திருவல்லிக்கேணி நோபில் அச்சுக்கூடத்தில் சே.கிருஷ்ணமாச்சாரியால் பதிப்பிக்கப்பெற்றது) என்ற நூலிலிருந்தும் இது தொகுக்கப்பட்டுள்ளது.

பார்ப்பன மதத்தின் கிரிமினல்தன்மையை அம்பலப்படுத்தும் விதத்தில் புதிய கலாச்சாரம் மே-1993 இதழில் இக்கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது.

குருபரம்பரா ப்ரபாவம் என்பதன் பொருள் ஆழ்வார் பரம்பரையின் சாதனைகள் என்பதாகும். கொலை, கொள்ளை மற்றும் 420 வேலைகளைச் செய்துதான் ஸ்ரீரங்கம் கோயில் எழுப்பப்பட்டுள்ளது என்பதற்கு அவர்களே அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் இது.

சமஸ்கிருதமயமாக்கப்பட்ட மணிப்பிரவாள நடையில் இவை எழுதப்பட்டுள்ளது. வாசகர்களுக்குப் புரியாது என்பதால், இவற்றைத் தமிழ்ப்படுத்தி அளிக்கிறோம்.

* * *

ரங்கநாதனுக்கு விமானம், கோபுரம், மதிற்சுவர்கள் கட்ட வேண்டுமென்று விரும்பிய திருமங்கையாழ்வார், தன் தொண்டர்களை அழைத்துத் தன் விருப்பத்தைக் கூறி, “இந்த ஆலயத் திருப்பணி செய்ய பணத்திற்கு என்ன செய்யலாம்?” என்று வினவினார். “நாகப்பட்டினத்தில் புலையர் மதத்தின் புத்தர் சிலையொன்று உள்ளது; முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட அந்தச் சிலையைக் கொண்டுவந்து சிதைத்துத் (அதை விற்றுக் கிடைக்கும் பொருளை) திருப்பணிக்குப் பயன்படுத்தலாம்” என்று அவர்கள் யோசனை கூறினர்.

(சான்றுக்கு சில வரிகள் மணிப்பிரவாள நடையில்: பெரிய பெருமாளுக்கும் திருவரங்கச் செல்வரான அழகிய மணவாளர்க்கும் விமாந மண்டப கோபுர ப்ராஸாத ப்ராகாராதி ரூபமான கைங்கர்யங்கள் செய்தருளவேணுமென்று திருவுள்ளமாய், அதுக்குத் தம்முடைய பரிஜனங்களையழைத்து நம்பெருமாளுக்குத் திருமதிள் முதலான கைங்கர்யம் ப்ணுகைக்குத் தனார்ஜநஞ்செய்யும் வருஏன் என்று கேட்டருள, அவர்களும் நாகப்பட்டணத்திலே புலையறமாயிருப்பதொரு புத்த ப்ரதிமை ஹிரண்ய ஸ்வரூபமாயிருக்கும். அத்தைக் கொண்டுவந்து சிந்நாபிந்நமாக்கி அறுப்பதே கருமங்கண்டாய் என்று விண்ணப்பஞ்செய்ய, ஆழ்வாரும் ஸம்மதித்து நாகபட்டணத்திலே போய்..)

அந்த யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு திருமங்கையாழ்வார் நாகை சென்று, அந்நகரிலிருந்த வைணவப் பெண் ஒருத்தியைச் சந்தித்து, இந்தச் சிலை இரகசியம் குறித்து வினவினார். இந்த ஊரிலுள்ள புத்த விகாரையின் உள்ளே தங்கத்தினாலான புத்தச் சிலை ஒன்று உள்ளது என்றும், அந்தச் சிலையையும், விமானத்தையும் (மண்டபத்தையும்) உருவாக்கிய சிற்பி கடல் கடந்த தீவு ஒன்றில் இருக்கிறான் என்றும் என்னுடைய மாமியார் கூறுவதுண்டு” என்று அந்தப் பெண் கூறினாள்.

இதைக் கேட்ட திருமங்கையாழ்வார், “நல்ல காரியத்தில் தாமதம் கூடாது” என்று சொல்லி, தனது தொண்டர்களையும் அழைத்துக்கொண்டு மேற்படி தீவிற்குச் சென்றார். அந்தச் சிற்பியின் வீட்டை விசாரித்து அறிந்து அவன் வீட்டருகில் நின்று தனது தொண்டர்களுடன் கீழ்க்கண்டவாறு புலம்பத் தொடங்கினார். “நாகப்பட்டினம் பவுத்தக் கோயிலையும், விமானத்தையும் உடைத்து உள்ளே இருந்த தங்க விக்கிரகத்தை ஒரு துலுக்கர்கள் கூட்டம் கொண்டு போய்விட்டது; இந்த அநீதியைக் கண்ணால் கண்டபின்னரும் நம் உயிர் பிரியவில்லையே!” வெளியிலிருந்து வீடு திரும்பிய அந்தச் சிற்பி (இந்த புலம்பலை உண்மையென நம்பி) திருமங்கையாழ்வாரிடமே வந்து விவரம் கேட்டான்.

உடனே திருமங்கையாழ்வாரும் அவரது தொண்டர்களும் புத்தர் சிலையைத் துலுக்கர்கள் திருடிச் சென்ற கதையை விலாவாரியாகக் கூறினர். இதைக் கேட்ட சிற்பி, “பீடத்திலிருந்து சிலையை அகற்ற முடியாதவாறு அதனைச் சங்கிலி கொண்டு பிணைத்து, அபிசேக நீர் வெளியேறும் நீர்த்தாரையின் கீழ் கல்லுக்குள் ஒரு இரும்பு ஆணியில் அந்தச் சங்கிலியின் மறுமுனையைக் கட்டியிருந்தேன். இந்த இரகசியத்தை என்னுடனிருந்த துரோகி எவனோ திருடர்களுக்கு காட்டிக் கொடுத்துவிட்டானே” என்று கூறி விழுந்து கதறியழத் தொடங்கினான்.

இவ்வாறு சிலையமைப்பின் இரகசியத்தை அறிந்து கொண்ட ஆழ்வாரும் அவரது தொண்டர்களும் உடனே கடற்கரை நோக்கிச் சென்றனர். கடற்கரையில் தருமவானான ஒரு பாக்குக் கப்பல் வியாபாரியைக் கண்டு அவனுக்கு ஆசி கூறிய ஆழ்வார், தானும் தனது தொண்டர்களும் விரதமிருந்து வருவதாகவும் தங்களை நாகப்பட்டினத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென்றும் அவனிடம் கோரினார். வியாபாரியும் மகிழ்வுடன் அவர்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டான்.

கப்பல் போய்க்கொண்டிருக்கும்போது, அக்கப்பலிலிருந்து ஒரேயொரு கொட்டைப் பாக்கை எடுத்து, அதை இரண்டாகப் பிளந்தார் திருமங்கையாழ்வார். அதில் ஒரு பாதியை அவ்வணிகனிடம் கொடுத்து மறுபாதியைத் தன் கையில் வைத்துக்கொண்டு, “இந்தப் பாதிப்பாக்கு எனக்குத் தேவைப்படுகிறது, எனவே ‘பாதிப்பாக்கு எனக்குத் தருவதாக’ ஒரு சீட்டு எழுதிக்கொடுங்கள்” என்று கேட்டார். வணிகனும் அவ்வாறே எழுதிக் கொடுத்தான்.

அந்தச் சீட்டை வாங்கிக்கொண்ட ஆழ்வார் கப்பல் கரை சேர்ந்தவுடனே கப்பலிலிருந்த பாக்கில் பாதியை எண்ணித்தருமாறு வணிகனிடம் கேட்டார். அதிர்ச்சியடைந்த வணிகன் கப்பலில் ஆழ்வார் வெட்டிவீசிய பாதிப்பாக்கைத் தேடிக் கண்டுபிடித்து, “இந்தா உன்னுடைய பாதிப் பாக்கு” என்று திருப்பித் தந்தான். “இந்த அரைப்பாக்கையா நான் கொடுத்தேன்? நீ எழுதிக் கொடுத்த சீட்டைக் காட்டி உன் சகவணிகர்களிடமே நியாயம் கேட்போம்” என்று ஆழ்வார் கூற, வணிகனும் சம்மதித்தான்.

வணிகர்கள் ஆழ்வாருக்குச் சாதகமாகத் தீர்ப்புச் சொல்ல, வேறு வழியில்லாமல் (கப்பலில்) பாதிப்பாக்குக்கான தொகையை ஆழ்வாரிடம் கொடுத்து அனுப்பினான் வணிகன்.

இப்படியாக அந்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு புத்த விகாரைக்கு வந்து சேர்ந்த ஆழ்வாரும் அவர்தம் தொண்டர்களும் அங்கே ஒளிந்திருந்து, நள்ளிரவில் அந்த தங்க விக்கிரகத்தைத் திருடி, அதைச் சிதைத்து எடுத்துச் சென்றனர்.

சிலையைக் கொண்டு போகும்போது விடிந்து விடவே, ஒரு உழுத வயலில் சிலையைப் புதைத்து வைத்துவிட்டு அருகே காவல் நின்றார்கள். நிலத்துக்குச் சொந்தக்காரன் நாற்றுக் கட்டுடன் நடவு செய்வதற்காக அங்கே வந்து சேர்ந்தான். அவனை மறித்து, “இது என் பாட்டன் தேடின நிலம்” என்று ஆழ்வார் கூறவே, விவாதம் முற்றியது. “நாளை விடிவதற்குள் பத்திரம் கொண்டுவருகிறேன்; இல்லையேல், நீ உழுது கொள்” என்று ஆழ்வார் கூற, அவனும் சம்மதித்துத் திரும்பினான்.

இரவு வரை காத்திருந்து சிலையை அங்கிருந்து எடுத்துக் கொண்டு கிளம்பி ஆழ்வாரும் அவரது தொண்டர்களும் ஸ்ரீரங்கம் அருகில் உள்ள உத்தமர் கோயில் வந்து சேர்ந்தனர்.

சிலை திருட்டுப் போனதையறிந்து நாகை நகரத் தலையாரியும், மணியக்காரரும் விகாரையை நன்றாகச் சோதித்து, பிறகு சிலை திருடர்கள் போன வழியறிந்து உத்தமர் கோயில் வந்து சேர்ந்தனர். “சிலை எங்கே?” என்று திருமங்கையாழ்வாரிடம் அவர்கள் கேட்க, ஆழ்வார், “எனக்குத் தெரியாது” என்றார். “அப்படியானால் உமக்குத் தெரியாதென்று சத்தியம் செய்வீரா?” என்று அவர்கள் கேட்டவுடனே, மேலை வருஷம் பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று உங்கள் விக்கிரகத்தின் சுண்டுவிரல் குறையாமல் திருப்பித் தருகிறேன்.” என்று அவர்களுக்கு ஆழ்வார் சீட்டெழுதிக் கொடுத்தார்.

அதன்பின் விக்கிரகத்தை உருக்கி விற்றுக் கிடைத்த பொருளில் கோயில் திருப்பணி தொடங்கி நடத்தினர். கோயில் மதில் சுவர் கட்டும்போது தொண்டரடிப் பொடியாழ்வாரின் (பார்ப்பனர்) நந்தவனம் குறுக்கே வர, அதைத் தவிர்த்து மதிலைக் கட்டுவித்தார். இதனால் தொண்டரடிப் பொடியாழ்வார் பெரிதும் மகிழ்ந்தார்.

குறிப்பிட்ட காலக்கெடுவில் நாகையிலிருந்து சிலையைப் பறிகொடுத்தவர்கள் வந்தனர். ஆழ்வார் எழுதிக் கொடுத்த சீட்டைக் காண்பித்து சிலையைத் திருப்பிக் கேட்டனர். ஆழ்வார் சிலையின் சுண்டு விரலை மட்டும் திருப்பிக் கொடுத்தார். நியாயம் சொல்பவர்களும், “சீட்டுப்படி சிறுவிரலைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்” என்று தீர்ப்புக் கூற, சிலைக்கு உரியவர்கள் இந்த சிறுவிரலும் வேண்டாமென்று திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

அடுத்து, கோயில் கட்டிய கொத்தனார்களும் சித்தாட்களும் கூலி கேட்டனர். “காவிரிக்கு அந்தப்புறம் ஒரு தீவில் வேண்டிய அளவு பொன்னும் பொருளும் உள்ளன. அங்கு வந்து எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி, அவர்களையெல்லாம் ஓடத்திலேற்றி அழைத்துப்போனார் திருமங்கையாழ்வார். நட்டாற்றில் வைத்து ஓடக்காரனுக்கு ஆழ்வார் ஜாடை காட்ட, அவன் இன்னொரு ஓடத்தில் ஆழ்வாரை ஏற்றிக் கொண்டு, அந்தத் தொழிலாளிகள் இருந்த ஓடத்தைக் கவிழ்த்துவிட்டான்.

ஆழ்வாரும் ஓடக்காரனும் கோயில் வந்து சேர்ந்தவுடன் அந்தத் தொழிலாளிகளுடைய பிள்ளைகள் இருவரையும் சூழ்ந்துகொண்டு, “எங்கள் பெற்றோர் எங்கே?” என்று கேட்டனர். “ஒரு தீவிலே பொன்னையும் பொருளையும் காட்டிவிட்டோம்; அவர்கள் அதை மூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஆழ்வார் அவர்களுக்கு சமாதானம் சொன்னார். அதை நம்பாத அந்தப் பிள்ளைகள், “எங்கள் தகப்பன், பாட்டன்மாரை ஆற்றில் தள்ளிக் கொன்றுவிட்டீர்கள். அவர்களை உயிருடன் கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்தினாலொழிய, உங்களைப் போகவிடமாட்டோம்” என்று ஆழ்வாரை மறித்துக் கொண்டனர். ஆழ்வார் செய்வதறியாமல் விழித்து நின்றார்.

பிறகு ஆழ்வாரின் கனவில் தோன்றிய அரங்கன், “ஏன் கலங்குகிறாய்? அந்தத் தொழிலாளர்களின் பிள்ளைகளை அழைத்து காவிரியில் நீராடச் சொல்லி, அனைவரின் நெற்றியிலும் நாமத்தைச் சார்த்தி என் சந்நிதியில் கொண்டு வந்து நிறுத்து, பிறகு அவரவரின் அப்பன், பாட்டன்மாரின் பெயர் சொல்லி அழைக்கச் சொல்” என்றான்.

ஆழ்வாரும் அவ்வாறே அவர்களை அரங்கனின் சந்நதியில் கொண்டுவந்து நிறுத்த, அவர்களும் தத்தம் பெற்றோரின் பெயர் சொல்லி அழைத்தார்கள். பிதுருக்களாக மாறியிருந்த (அதாவது செத்துப்போன) அவர்களது பெற்றோர்கள் பெருமானின் பின்புறமிருந்து தத்தம் பிள்ளைகளிடம் கீழ்வருமாறு கூறினார்கள். “ஆழ்வாரின் திருவருளால் நாங்கள் அரங்கனின் திருவடிகளை அடைந்து விட்டோம். நீங்கள் ஆழ்வாருக்கு எதிராகக் கலகம் செய்யாமல், அவருக்கு சேவை செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

* * *

வ்வளவு நயவஞ்சகமான, கீழ்த்தரமான, கொடூரமான கிரிமினலைத்தான் ஆழ்வார் என்று கொண்டாடுகிறார்கள். இன்று ஆர்.எஸ்.எஸ். எத்தகைய கிரிமினல் வேலைகளையெல்லாம் செய்கிறதோ, அவை அத்தனையும் அன்றே செய்து காட்டியிருக்கிறார் திருமங்கையாழ்வார்.

ஆண்டாள் பற்றி எழுதியதற்கு பிரைமரி எவிடென்ஸ் இருக்கிறதா என்று கேட்பவர்கள், இந்த எவிடென்ஸுக்கு என்ன பதில் சொல்வார்கள்? ஆண்டாள் பாசுரம், நாச்சியார் திருமொழி ஆகியவற்றின் மகத்தான படைப்புவெளியையும் கவிதைப்பரப்பையும் கொண்டாடி மெய்சிலிர்ப்பவர்கள், இந்த குருபரம்பரா ப்ரபாவத்துக்கு என்ன விளக்கம் சொல்வார்கள்?

புத்தர் சிலையைத் திருடியதும், வியாபாரியைச் சூது செய்து ஏமாற்றியதும், கோயிலைக் கட்டிய தொழிலாளியை கொன்றதும் திருமங்கையாழ்வாரின் படைப்புவெளியா? இந்த அயோக்கியத்தனங்களுக்கும் ஆழ்ந்த ஆன்மீக அர்த்தங்கள் உண்டா? வைரமுத்துவை எச்.ராஜா கேட்டது போல, அவாளைத் திருப்பிக் கேட்பதாயின், எத்தகைய மொழியில் திருப்பிக் கேட்க வேண்டும்?

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

ஆபாசத்தின் தயவில் ஆன்மீக சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்கள் !

2

“தோழர்களே, நாம் இந்தக் காலகட்டத்திற்கு தேவையான கட்டுரைகளை முடிந்த அளவு வெளியிட்டு வருகிறோம். ஆரம்பித்த நாட்களை விட இப்போது நிறைய வாசகர்களைச் சென்றடைந்துள்ளோம்; எனினும், நமது தளத்தை மேலும் அதிகமாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. இதற்காக என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதைக் குறித்து ஒவ்வொருவராக உங்களுடைய ஆலோசனைகளைச் சொல்லுங்கள்”

இது வினவு தோழர்கள் சமீபத்தில் நடத்திய கூட்டம் ஒன்றில் பேசப்பட்ட பொருள். அதில் தோழர்கள் பலர் தளத்தின் தற்போதைய நிறைகுறைகளை மனம் திறந்து குறிப்பிட்டதோடு எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்களைச் சேர்க்கலாம் என்பதற்கு ஆலோசனைகளை முன்வைத்தனர்.

ஒருவர் “புத்தகங்கள் அறிமுகப்படுத்துவதை அதிகப்படுத்த வேண்டும்” என்றார்; இன்னொருவர் “வரலாற்றில் இன்று” என்கிற பகுதி ஒன்றைத் துவங்கலாம் என்றார்; மற்றொருவர் “ஈழம் பற்றி நாம் எழுதுவது குறைந்து விட்டது.. அதை கவனிக்க வேண்டும்” என்றார்; மேலுமொருவர் “அரசியல் பகடிகள் குறைந்து விட்டது அதை அடிக்கடி எழுத வேண்டும்” என்றார். இதே போல் ஒவ்வொருவரும் விதவிதமான கருத்துக்களை முன்வைத்தனர். பல புதிய அம்சங்களை தளத்துக்குச் சேர்க்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் வந்தன.

இவ்வாறாக அந்தக் கூட்டம் முடிவுற்றது. கலந்து கொண்டவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளில் ஏதாவது ஒன்றுக்காவது பொறுப்பேற்றுக் கொண்டு கலைந்தனர். அதிக நிதிச் செலவைப் பிடிக்கும் காரியங்கள் வரிசை கட்டி நிற்பதைக் கண்டு எப்போதும் வறண்ட பாலைவனம் போல் காட்சியளிக்கும் வினவின் வங்கிக் கணக்கை நினைத்து விழித்துக் கொண்டிருந்தார் நிதிப் பொறுப்பை கவனித்து வரும் தோழர்.

திரும்பி வரும் வழியில் எனக்குள் பல்வேறு சிந்தனைகள் ஓடின. “பொருளாத்தாரத் துறையிலும் சரி, அரசியல் துறையிலும் சரி.. இப்போதைய வலதுசாரி ஆட்சியாளர்கள் தோல்வியைச் சந்திக்காத முனை என்று ஏதுமில்லை. என்றாலும், ஏதோவொரு வகையில் தொடர்ந்து வெற்றியடைந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தருணத்தின் அரசியல் பேசுபொருளை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? இந்துத்துவ கும்பல் மக்களிடையே தங்களது கருத்துக்களை எப்படி சுலபமாக எடுத்துச் செல்ல முடிகிறது?” என்பது போன்ற கேள்விகள் மண்டையைக் குடைய, மறுநாள் இணையத்தில் அது குறித்து தேடிப் படித்துக் கொண்டிருந்த போது தான், ஆல்ட்நியூஸ் இணையதளத்தின் இந்தச் செய்தி கண்ணில் பட்டது

மேற்படி கட்டுரையின் சுருக்கம் :

“பிரபல நடிகை தனது தந்தையிடமே தன்னுடைய கன்னித்தன்மையை இழந்ததாக ஒப்புக் கொண்டார்” என்பது அந்தக் கட்டுரைத் தொடரின் தலைப்பு. நான்கு பாக கட்டுரைத் தொடர் அது. சஸ்காடைம்ஸ் (chaskatimes.com ) என்கிற வலதுசாரி இணையதளத்தில் அந்தக் கட்டுரைத் தொடர் வெளியாகியுள்ளது. கட்டுரைத் தொடரின் முதல் மூன்று பாகங்களில் பிரபல இந்தி நடிகை ஆலியாபட்டின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் அவர் தனது தந்தையும் பிரபல இயக்குநருமான மகேஷ்பட்டின் மடியில் அமர்ந்துள்ளார். கட்டுரை நெடுக “பிரபல நடிகை” என்கிற விவரணையும், அதனுள்ளே ஆலியாபட் மற்றும் அவரது தந்தையின் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

கட்டுரைத் தொடரின் நான்காம் பாகத்தில் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயராக காரா டெலெவிங்கே (Cara Delevingne ) எனும் ஆங்கில நடிகையின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இந்த நான்கு பாக கட்டுரை நெடுக ஏராளமான விளம்பரங்கள். சஸ்காடைம்ஸ் இணையதளத்தின் மூலத்தளம் இன்சிஸ்ட்போஸ்ட்.காமிலும் (insistpost.com) ஏறத்தாழ இதே போன்ற கட்டுரைகள். “உங்கள் இணையை படுக்கையில் நீண்ட நேரம் மகிழ்விப்பது எப்படி” “உடலுறவின் போது பெண்கள் ஏன் கண்களை மூடிக் கொள்கின்றனர்” என்பது போன்ற ‘ஆய்வு’ கட்டுரைகளுக்கு மத்தியில் பிரதமர் மோடியைப் புகழ்பாடும் கட்டுரைகளும் இடம் பிடிக்கின்றன.

இவ்வாறாக நடத்தப்படும் இன்சிஸ்ட்போஸ்ட் இணையதளத்திற்கு அம்பானியின் நெட்வொர்க்18 குழுமத்தால் நடத்தப்படும் பர்ஸ்ட்போஸ்ட் (firstpost.com) இணையதளத்தை விட அதிக பார்வையாளர்கள் வருகின்றனர். அலெக்ஸா மதிப்பீட்டின் படி உலகளவில் 1477 -வது இடத்தைப் பெற்றிருக்கும் இன்சிஸ்ட்போஸ்ட், இந்தியளவில் 105 -வது இடத்தில் இருக்கின்றது.

இன்சிஸ்ட்போஸ்ட், சஸ்காடைம்ஸ் போன்ற தளங்களில் இடம் பிடிக்கும் இந்துத்துவ ஆதரவுக் கட்டுரைகள் மெல்ல மெல்ல இண்டியா.காம், போஸ்ட்கார்ட் நியூஸ், ஆப்இந்தியா.காம் போன்ற பிற வலதுசாரி இணையதளங்களுக்கும் செல்வதுண்டு. இதுபோன்ற தளங்களில் வெளியாகும் இந்துத்துவ “ஆதரவு” கட்டுரைகள் நேரடியாக லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைவதுடன், வாட்சப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வழியே கோடிக்கணக்கானவர்களைச் சென்று சேர்கின்றன. பல சந்தர்பங்களில் இது போன்ற ஆபாசத்தளங்களில் வெளியாகும் கட்டுரைகளை இந்துத்துவ தலைவர்களே கூட “ஆதாரங்களாக” காட்டுவதும் உண்டு.

தங்களது கட்டுரைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஏராளமான முகநூல் குழுமங்களை இவர்கள் நடத்தி வருகின்றனர். “அழகிய பஞ்சாப் மாடல்கள்” என்பது அவ்வாறான ஒரு முகநூல் குழுமம். சில லட்சம் பேர்களை சந்தாதாரர்களாக கொண்டுள்ள இந்தக் குழுமத்தில் பெண்களின் ஆபாசப் படங்களின் இடைக்கிடையே சஸ்காடைம்ஸ் மற்றும் இன்சிஸ்ட்போஸ்ட் ஆகிய தளங்களில் வெளியாகும் பாரதிய ஜனதா ஆதரவுக் கட்டுரைகளின் இணைப்புகளும் பகிரப்படுகின்றன.

இவை தவிர்த்து, “ஐ சப்போர்ட் இந்தியன் ஆர்மி” “ஐ சப்போர்ட் அஜித் தோவால்” “வீ சப்போர்ட் நரேந்திர மோடி” “ஐ ட்ரஸ்ட் பிஜேபி” போன்ற முகநூல் குழுமங்களிலும் பகிரப்படுகின்றன. சில பல லட்சங்களில் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இக்குழுமங்களில் இருந்தே வாசர்களைக் கவர்கின்றனர்.

இத்தளங்களை நடத்துபவர் அங்கித் குமார், பாரதிய ஜனதாவுக்கு நெருக்கமானவர் என்பதையோ, அதற்கு ஆதாரமாக பல்வேறு சந்தர்பங்களில் அமித்ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதாவின் முக்கிய தலைகளோடு எடுத்த புகைப்படங்கள் உள்ளன என்பதையோ தனியே சொல்லத் தேவையில்லை. ஆனால், தேசபக்தியும், ‘தேக’பக்தியும் எப்படி ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல்பட முடியும் என்பது உங்களில் பலருக்கு வியப்பாக இருக்கலாம். அப்படி வியந்து போகிறவர்கள் அந்தக்கால அக்கிரகார மற்றும் ‘மேல் சாதி’த் தெருவின் திண்ணைகளையும் அங்கே விவாதிக்கப்படும் விசயங்களையும் அறியாதவர்களாகவே இருக்க முடியும்.

“எந்த மாமிக்கு எந்த மாமாவோடு தொடர்பு” என்பதில் துவங்கி, “அவா தளுக்கிண்டு போறா, இவா குலுக்கிண்டு போறா”, “என்ன ஓய், சார்வாள் ரொம்ப மேயுராறாமே” என்கிற அவதானிப்பு வரையிலான “பலான” சமாச்சாரங்களுக்கு இடையே “அடுத்த வாரம் வரலட்சுமி நோன்பு வருதோன்னோ” என்கிற “ஆன்மீக” விசாரணைகளும் நடக்கும். “அக்கிரகாரம் மற்றும் மேலத்தெருவிற்குள் அபச்சாரமா?” என்று நம்ப முடியாமல் திணறுகிறவர்கள் மேற்படித் தெரு – அக்கிராங்களை கண்டறியாதவர்களாகவே இருக்க முடியும். சென்னை போன்ற மாநகரங்களில் கூட இத்தகைய சாதிப்பிரிவினர் பணியாற்றும் அரசு – தனியார் அலுவலக உணவு இடைவேளைகளில் கமல் பேசுவது போன்ற சென்னைத் தமிழில் இத்தகைய காமசாஸ்திரங்களை நடப்பு அரசியல் – குற்ற நிகழ்வுகளோடு இணைத்து பேசுவதைப் பார்க்கலாம். இல்லை நீங்கள் நித்தியானந்தா மற்றும் அவரது சிஷ்யர்களின் வீடியோக்களிலும் கேட்கலாம்.

ஆபாசமும் ஆன்மீகமும் பார்ப்பனியத்தின் இரண்டு கண்கள். எனவே இந்துத்துவ அரசியல் பிரச்சாரங்களிலும் அது அவ்வாறாகவே அமைந்திருப்பதில் எந்த வியப்புமில்லை. சொல்லப் போனால் மதவெறி, இனவெறி உள்ளிட்ட வலதுசாரி சித்தாந்தங்களின் உள்ளார்ந்த கூறுகளும் அபாயகரமான பாலியல் வெறியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதற்கு பல ஆய்வுகள் இருக்கின்றன. சுருங்கச் சொன்னால் “கற்பும் – விபச்சாரமும்” பார்ப்பனியத்தின் இரு பக்கங்கள். ஆகவே இந்த ‘வெற்றிகரமான’ மசாலாவோடு இணைந்து வலதுசாரி பிரச்சாரங்கள் பொது புத்தியோடு இணைந்து அதன் பாதையிலேயே பயணிப்பதால் எளிதில் பலரைச் சென்றடைகிறது.

உதாரணமாக “ஆலியா பட்டுக்கு அறிவுக் கூர்மையில்லை; ஆனால் பாலுறவு நிலைகளில் அவர் கைதேர்ந்தவர்” என்பது சஸ்காடைம்சில் வெளியாகியுள்ள ஒரு “ஆய்வு”கட்டுரை (மெய்யாகவே அப்படி ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறான்). இதற்கு அக்கம் பக்கமாகவே “எதுவும் செய்யத் துப்பில்லாத காங்கிரசுக்கு பதில் வெற்றியோ தோல்வியோ பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நரேந்திர மோடி பாராட்டுக்குரியவர்” என்கிற ஒரு கட்டுரையும் வெளியாகிறது என்று வைத்துக் கொள்வோம்.

பார்ப்பனிய இந்துத்துவத்தால் புடம்போடப்பட்ட இந்திய நடுத்தர வர்க்க அரைவேக்காடு ஒருவர் இக்கட்டுரைகள் இரண்டையும் அக்கம் பக்கமாக படிக்கும் போது எவ்வாறான மன எழுச்சிக்கு ஆளாவார்? “பெண்கள் என்றாலே புணர்ச்சி இயந்திரம் என்பதால் அவர்கள் தசைப் பிண்டமாக இருந்தால் போதும், மூளையெல்லாம் தேவையில்லை” என்கிற அவரது பார்ப்பனிய கண்ணோட்டத்தை மெல்லத் தடவிக் கொடுத்து அதில் அவர் புளகாங்கிதம் அடைந்திருக்கும் பலவீனமான தருணத்தில் மோடியின் பராக்கிரமத்தை மூளைக்குள் இறக்கி விடுகின்றனர்.

இப்போது அவர் தான் பங்கேற்கும் முகநூல் குழுமங்களிலும், வாட்சப் குழுமங்களிலும் மேற்படி “பராக்கிரமத்தை” பகிர்வார். அது பல சுற்றுகள் சுற்றி கடைசியில் குருமூர்த்தி போன்ற மெத்தப் படித்த மேதாவிகளின் பார்வைக்கும் வந்து, அவர் போன்றவர்களால் தங்களது ட்விட்டர் அல்லது முகநூல் பக்கங்களிலும் பகிரப் படுகின்றன. சில முஸ்லீம் மதவெறியர்களும் விவாதங்களின் போது இத்தகைய ஆபாச வார்த்தைகள், ஆணாதிக்க சொற்றொடர்களை பயன்படுத்துவதை பார்க்கலாம். “பொட்டை, சேலை கட்டி வா” என்றெல்லாம் இவர்களும் தொட்டதுக்கெல்லாம் சவால் விடுவார்கள். இங்கே பார்ப்பனியம் போல வளைகுடாவில் ஷேக்குகளின் இஸ்லாமும் இத்தகைய இரட்டை நிலையோடுதான் பயணிக்கிறது.

இப்படியாக இந்த மதவெறியர்கள் மக்களுக்கு ஒழுக்கமும், தங்களுக்கு கேளிக்கையும் அறமென்பதை வைத்திருக்கிறார்கள். இதில் உலக அளவில் பார்ப்பனியம்தான் சீனியர் என்பதால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் தமது மரபை கண்டெடுத்திருக்கிறார்கள்.

****

ல்ட்நியூஸ் இணையதளத்தின் கட்டுரையை வாசித்து முடித்த போது ஆயாசமாக இருந்தது. “சாக்கடையில் உழலும் பன்றிகளோடு போட்டியிடாதே. அவை உன்னைத் தமது நிலைகளுக்குத் தாழ்த்தி பின் எளிதில் வென்று விடும்” என்கிற பழைய பொன்மொழி நினைவுக்கு வந்தது.

அந்தப் பழமொழி சொல்லப்பட்ட காலத்தில் பொக்லைன் இயந்திரங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. நாம் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு மொத்தமாக பன்றிகளோடு சேர்த்து சாக்கடைகளை நிரவி மூட வேண்டியிருக்கிறது.

சாக்கியன்

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் – கருத்துக் கணிப்பு

0

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என ஏ 1 பெயரில் ஏ 2 -வின் சகோதரி மகன் டிடிவி தினகரன் ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கிறார். இருபது ஆண்டுகள் கொள்ளையடித்த காசை பாதுகாக்கவும், இனி வரும் ஆண்டுகளில் கொள்ளையடிக்கவும், சில எலும்புத் துண்டுகளை முதலீடாகப் போட்டு ஆரம்பித்திருக்கிறார் தினகரன். அதுவும் இக்கட்சி இடைக்காலம்தானாம். முழுக்காலமாக வரவேண்டிய அவசியமில்லாமல் அதிமுகவை கைப்பற்றி இரட்டை இலை சின்னத்தை மீட்பாராம்.

இனி கருத்துக் கணிப்பு கேள்வி :

டிடிவி தினகரனது புதிய கட்சி துவக்கம் – உங்களது கருத்து என்ன?

1. பச்சமுத்து, வைகுண்டராசன் டி.வி வகையறாக்கள் இந்த வாரம் முழுக்க செய்தியிலும், விவாதங்களிலும் இக்கட்சியின் கொள்கைகளை விவாதப் பொருளாக்கி ஜனநாயகத்தைக் கொல்வார்கள்.

2. எடப்பாடி – ஓபிஎஸ் அணியா, சசிகலா – தினகரன் அணியா என பாஜக தனது வளர்ப்பு நாயை முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

3. இனி தமிழக அரசியலில், தமிழிசை, கமல், ரஜினி, டிடிவி என அன்றாடம் ஒரு பிரேக்கிங் நியூஸ் விட்டையும், விநாடிக்கொரு மீம்ஸ் முட்டையும் வரப்போவதால் தியேட்டர்களில் கூட்டம் இருக்காது.

4. அரசியல் ஈவண்ட் மேனேஜ் மெண்ட் கம்பெனிகளுக்கு நன்றாக கல்லா கட்டும்.

5. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கட்சி நடத்துவதை அனுமதிக்கும் தமிழக மக்களது பரந்த மனதின் மற்றுமொரு சாதனை.

(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்.)

 

அசோக் லேலண்டிடம் சரணடைவதா தமிழின உரிமை ? பெ. மணியரசன் – கி.வெங்கட்ராமனிடம் புஜதொமு கேள்வி !

1

தொழிலாளர் வர்க்கத் தலைமையே தொழிற்சங்கத்தின் உயிர் ! கி. வெங்கட்ராமன் போன்றவர்களின் தலைமையால் தொழிற்சங்க இருப்புக்கே ஆபத்து!

சோக் லேலண்ட் தேசம் கடந்து சென்று வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம். நாடு முழுமைக்குமான பயணிகள் மற்றும் கனரக வாகன சந்தையில் 35% கைப்பற்றி வைத்திருக்கிறது. கடந்தாண்டு 2016 – 17 மட்டும் 21,232 கோடிகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இலாபமாக 1,223 கோடிகள் மட்டும் காட்டப்பட்டுள்ளது. ஒசூரில் மூன்று யூனிட்களும், சென்னை எண்ணூரில் ஒரு யூனிட்டும், வடமாநிலங்களில்  மூன்று யூனிட்களும் என உற்பத்தி தளங்கள் உள்ளன.

நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டுவதையும் தொழிலாளர் சட்டபூர்வ உரிமைகளை பறித்து நவீன கொத்தடிமைகளை உருவாக்குவதையும் கொள்கையாக கொண்டு இடைவிடாது செயல்படுகிறது, AL நிர்வாகம் . 16,000 நிரந்தரத் தொழிலாளர்களை 5,000 மாகவும் குறைத்துவிட்டு உரிமைகள் ஏதுமற்ற காண்ட்ராக்ட் , தற்காலிக, பயிற்சித் தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கு மேல் நேரடி உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாலைகளில் INTUC போன்ற பொம்மை மாடல் சங்கமாக இல்லாத போதும் கடந்த 25 ஆண்டுகளில் தொழிற்சங்களின் பேரம் பேசும் உரிமைகளை பறித்து, நிர்வாகத்தின் ஓர் அங்கமாக தொழிற்சங்கத் தலைமைகளை மாற்றி விட்டது, நிர்வாகம்.

இச்சூழ்நிலையில், புதியதலைமை – மாற்று சிந்தனை என்று ஒசூரில் யூனிட் 2 தொழிலாளர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் தொடங்கிய ஊதிய உயர்வு கோரிய ஒப்பந்தம் 12 மாதங்கள் இழுத்தடித்து கடந்த ஜூலை 2017 -ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை பேசி முடித்த தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. கி.வெங்கட்ராமன் (தமிழ்த் தேசதியப் பேரியக்கம் எனும் கட்சியின் தலைவர் பெ. மணியரசன்) அவர்கள் இதை ஒரு ‘வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ‘ என்கிறார். இவ்வொப்பந்தம் தொழிலாளர்களின் உரிமைகளை காவு கொடுத்திருக்கிறதா? அல்லது மீட்டெடுத்திருக்கிறதா? எங்கு கொண்டு போய் கொண்டிருக்கிறது? என்பதை அலசிப் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

புதிய ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்கள் மீதான பணிச்சுமையும் உரிமைப் பறிப்புகளும்!

  1. நேரடி உற்பத்தி உயர்வு 12% . (தொழிலாளர்களின் கருத்தை மீறி அதாவது 8 மணி நேரத்தில் 440 நிமிட வேலை என்பதை 492 நிமிட வேலை செய்ய வேண்டும்.)
  2. நேரடி மற்றும் மறைமுக உற்பத்தி பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட (சர்ப்ளஸ்) நிரந்தரத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 348 பேர். இதனால் உயரும் உற்பத்தி அளவு 23.6% .
  3. 6 – வது நாள் வேலை கட்டாயம் இல்லை. அதாவது,சனிக்கிழமை வேலை கிடையாது (லே.ஆப்). இதன் உற்பத்தி அளவு 21% .

இவையெல்லாம் ஊதிய உயர்வுக்காக சங்கத் தலைமையை மண்டியிட வைத்து கைப்பற்றிக் கொண்டதாகும். இந்த ஒப்பந்த பலன் பெறும் நிரந்தரத் தொழிலாளர்கள்  1,650 பேர் மட்டுமே.  மேலும் யூனிட் 2 ஆலையில் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர் சுமார் 5,000 பேருக்கு மேல் உள்ளனர். இவர்களுக்கு ஒப்பந்த பலன் ஏதும் கிடையாது. ஆனால், வேலைப் பளுவைமட்டும் சுமப்பார்கள்.

ஒப்பந்தம் மூலம்1,650 பேருக்கு இனி சனிக்கிழமை அன்று வேலை தரவேண்டிய அவசியம் இல்லை என தொழிற்சங்கம் இந்த ஒப்பந்தத்தின்மூலம் ஒப்புக்கொண்டுள்ளது . பல ஆயிரம் கோடி லாபம் கொழுக்கும் இவ்வாலையில் 18/(1) ஒப்பந்தம் மூலமாக சட்டவிரோத லே ஆஃப் அமுலாகிறது. ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளிக்கு 6 -வது நாள் வேலை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் தன் உற்பத்தி தேவைகளை 5 வேலைநாட்களில் ஈடு செய்து கொள்ளும். 6-வது நாள் லே ஆஃப். அதாவது சனிக்கிழமை வேலை கிடையாது. தற்போது 5 வேலைநாட்களில் உற்பத்தி இலக்கை எட்டவேண்டும் என்ற அழுத்தத்தை தொழிலாளர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

இந்த ஒப்பந்தம் 6 வது நாள் வேலை இல்லை(லே -ஆஃப்) எனும் கூர்மையான கத்தியை நிர்வாகத்திற்கு வழங்கிவிட்டது. இதை வைத்து தொழிற்சங்க தலைமையை மிரட்டி என்ன சாதிக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மேலும், இந்த அரசு அதிகாரத்தின் கீழ் உள்ள தொழிலாளர் உரிமைகளை பறிக்க 44 சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்ற பிரதமர் மோடி அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அதற்குள் கொல்லைபுற வழியாக லே. ஆஃப்-ஐ திணித்துவிட்டது, லேலாண்டு நிர்வாகம் .

மற்றொரு புறம் GST வரியால் உயர்ந்த விலைவாசி, பஸ் கட்டண உயர்வு இவற்றால் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உரிமைகள் ஏதுமற்ற தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 6 -வது நாள் சனிக்கிழமை வேலை இல்லை என்றால் ஒப்பந்த பலன் பெறாத இவர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள். வாங்கும் அற்பக்கூலியில் மாதம் ரூ1,600 இழந்து விடுவார்கள். இது பேரிழப்பாகும். இதனால் நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு சுமார் 13 கோடி இலாபம் கூடும். (பராமரிப்பு செலவுடன் ரூ 500 x 52 x 5000 பேர் = 13 கோடி ரூபாய்).

படித்தும் பொருத்தமான வேலையின்றியும், பணி நிரந்தரமில்லாத இளம் தொழிலாளர்கள் ஒசூரில் மட்டும் 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவ்வொப்பந்தம் இவர்களை மிக மோசமான சமூக பாதிப்பு என்ற புதைகுழிக்குள் மேலும் இழுத்துச் செல்ல வழி வகுக்கிறது. இவர்களுக்கு இந்த ஒப்பந்தம் மிக மோசமான சமூக பாதிப்பை உருவாக்கிறது.

நமது சமூக அமைப்பில் நான்காம் வர்ணத்தாரின் உழைப்பிற்கு பார்ப்பனியம் உரிய மதிப்பை தந்ததில்லை!
காண்ட்ராக்ட் தொழிலாளர் உழைப்பிற்கு முதலாளித்துவம் உரிய மதிப்பை தருவதில்லை!

பணி நிரந்தரம் இல்லை என்ற முதலாளித்துவ கொள்கையால் ரிசர்வ் பட்டாளமாக இளம் தொழிலாளர்கள் குவிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ரத்தத்தை சுவைத்து கொழுத்துக் கொண்டிருக்கிறது, நிர்வாகம். இவர்களைப் பற்றி நிர்வாகத்திற்கு கிஞ்சித்தும் கவலையில்லை. ஆனால், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெ அவர்கள் சப்தமில்லாமல் துணை போவதுதான் துரோகமாகும்.

மொத்தத்தில் 2017 -ம் ஆண்டு ஒப்பந்தத்தின்மூலம் யூனிட் 2 தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் நேரடி வேலைப்பளு 12% + சர்ப்ளஸ் 23.6% = 35.6% ஆகும். இதன் மதிப்பு 2990.4 கோடிகள் ஆகும். மேலும்,  மறைமுகமாக  லே-ஆப் மூலம் திணிக்கப்படும் உற்பத்தி 21%. இதன் மதிப்பு 1764 கோடிகள்.   என மொத்தமாக 4754.4 கோடிகள் விற்றுக்கொள்முதலில் உயரும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் உயர்ந்த சம்பளத்தின் மதிப்பு ஆண்டுக்கு 27.7 கோடிகள் மட்டுமே ஆகும். திணிக்கப்பட்ட லே. ஆப் அமலுக்கு வரும் போது 7.9 கோடிகள் பிடித்தம் செய்து விடும், நிர்வாகம். இதையெல்லாம் மறைத்து 1% கூலி கூட பெறாமல் ‘வரலாற்று சாதனை’ என்று கொட்டமடித்தால் இது தொழிலாளர் வர்க்கத்தின் மீதான வன்மமின்றி வேறு எப்படி புரிந்து கொள்வது?. கூலி உயர்வு ஏற்ற, தாழ்வாக அமையலாம். ஆனால் தோல்வியை வெற்றி என இட்டுக்காட்டுவதன் நோக்கம் முக்கியமானதாகும்.

எதற்கெடுத்தாலும் Fund (பணம்) இல்லை என்று நிர்வாக அதிகாரிகள் ஒப்பாரி வைக்கின்றனர். ஆனால் 2017 ஒப்பந்தம் பேசிமுடித்தப்பிறகு அதற்காக அதிகாரிகள், MD, ED  உள்ளிட்டவர்கள் எடுத்துக்கொண்ட பங்குகள், பணப்பலன்கள் பற்றி ஆய்வுக்கு எடுக்கையில் இந்த ஒப்பந்தத்தின்மூலம் தொழிலாளர்கள் முதுகில் குத்தப்பட்டது பற்றி ஓர் புரிதலுக்கு வரமுடியும்.

கி.வெ- யுடனான இந்த ரகசிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற ஓராண்டில் பு.ஜ.தொ.மு அணி சார்பாக நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தி பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டி இயக்கம் ஒசூர் முழுவதும் எடுக்கப்பட்டது. இதற்கு பதிலோ, விளக்கமோ தராமல் “அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது” என வன்மத்தை விதைத்தார்கள் திரு கி.வெ-யின்  தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் முன்னணியாளர்கள்.

மாற்று அணியினரின் வெளிப்படையான கேள்விகளுக்கு விளக்கம் தராமல் அராஜகமான பாசிசக் கண்ணோட்டத்தை வளர்த்து வருகிறது, கி.வெ தலைமை. இந்த ஒப்பந்தம் மூலம் நிர்வாகத்தின் கைகள் ஓங்கி நிற்பதையும்  ஒப்பந்த கோரிக்கைகள் படுதோல்வியடைந்ததையும் மறைத்தும்  வெறித்தனமாக வெற்றுக்கூச்சலிட்டுவருகின்றது, கி.வெ தலைமை .

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சுருக்கமாக, 2017 -ம் ஆண்டு ஒப்பந்தத்தை பற்றி கூறின் பழைய கள்ளு, புதிய மொந்தை! இந்த ஒப்பந்தத்தைப் பற்றிய விளைவுகள் அறியாதவர் அல்ல, கி.வெ. ஆனாலும் நிர்வாகத்திடம் தொழிலாளர் உரிமைக்காக வாதிடுவது தனது இனவாத அரசியல் எதிர்காலத்திற்கு எந்த பலனும் அளிக்காது என்பதை உணர்ந்து விட்டதால் தொழிலாளர் உரிமைகளை அடகு வைத்து தன்னை நிலைநிறுத்திக் கொள்வதிலேயே இன்றுவரை கவனமாக உள்ளார்.

கடந்த கால் நூற்றாண்டில் குசேலர், மைக்கேல் போட்ட ஒப்பந்தங்கள் துரோக ஒப்பந்தம் என்றும் முச்சந்தியில் வைத்து விவாதிக்க அழைத்த தமிழ் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெ அவர்கள் வெளிப்படை தன்மையற்ற, தனிநபராக ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாத தாக்குதல்களை மூடி, மறைத்துவிட்டு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று விளம்பரம் செய்வது தன்னை நம்பி வாக்களித்த தொழிலாளர் முதுகில் குத்தும் துரோகமாகும்.

இன்றுவரையில் அசோக்லேலாண்ட் தொழிற்சங்க நடவடிக்கையில் நிர்வாகத்தின் முதலாளித்துவ இலாபவெறி, சமூக விரோத முகம் நேரடியாக அம்பலப்பட்டது கிடையாது. மாறாக, குசேலர், மைக்கேல் தனிமனித துதி, தலைவர் அரசியல், அவரால் மட்டும் முடியும்… என்ற கருத்துக்கள் முன்தள்ளப்பட்டு தொழிலாளர்களின் முன் முயற்சிகள் நசுக்கப்பட்டன. அதுவே தொழிற்சங்க செயல்பாடாக சித்தரிக்கப்பட்டது.

அவுட்சோர்ஸ் (மெசின்சாப் ஒழிப்பு), காண்ட்ராக்ட் தொழிலாளர் முறை,  மைக்ரோ செகண்ட் உற்பத்திமுறை (ALTS) இவற்றால் நிரந்தரத் தொழிலாளர்மீது சர்ப்பிளஸ், டிரான்ஸ்பர் என்ற அடக்குமுறை ஏவியது, நிர்வாகம். இதுபோன்ற நிரந்தரத் தொழிலாளர்மீதான தொடர் தாக்குதலில் இரு தொழிற்சங்க தலைமைகள் மட்டுமே தொழிலாளர்கள் மத்தியில் அம்பலப்பட்டனர். சமூக அரசியல் கண்ணோட்டமின்றி  தொழிலாளர்களும் நல்ல தொழிற்சங்க தலைவர் வந்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என கருதினர்.

இச்சூழலில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெ, மாற்று சிந்தனையாளர் என அறிமுகமானார்.

“நிர்வாகத்தின் லாபவெறி, அடக்குமுறைகளை “ பண்ணையார் மனோபாவம்” என்றும் “ இரண்டு தலைமைகளும் மோசம் செய்து விட்டன, கடந்தகால ஒப்பந்தங்களை பார்த்தேன். துரோகம் செய்துவிட்டார்கள்”. என்றும் “ஒப்பந்தத்தைப்பற்றி முச்சந்தியில் நின்று விவாதிக்க தயார். அவர்கள் தாயாரா? என்றும் தொழிற்சங்க செயல்பாட்டில் தொழிலாளர்களை பார்வையாளனாக வைத்து இருக்கிறார்கள். நான் பங்கேற்பாளனாக செய்வேன். 40 நிமிட வேலைக்குத்தான் ஊதியம் வழங்கப்படுகிறது, இது அநீதி. அறம்சார்ந்து இல்லை. இரண்டு தலைவர்களின் நேர்மையை சந்தேகிக்கிறேன்.

சரியானதை சாத்தியமாக்குவேன். சாத்தியமானதை சரியென சொல்ல மாட்டேன். win – win தான் என் பாலிசி. தொழிற்சங்கம் அரசியலைவிட மோசமாக கெட்டுவிட்டது.. ஆண்டுக்கு ஒரு முறை தொழிற்சங்க தேர்தல் நடத்துவேன் ” என்று ஆலைவாயில் கூட்டங்களில் அடுக்கு மொழியிலும் அழகு தமிழிலும் ஆவேசமாய் பேசினார், கி. வெங்கட்ராமன்.

தொழிற்சங்கத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம்கிடைக்கும் என்றார். மும்முனை போட்டியிலிருந்து மைக்கேல் விலக்கப்பட்டார். கடைசிவரை முதலாளித்துவ சுரண்டல் என்ற வார்த்தையைகூட உச்சரிக்கவேயில்லை. கி.வெ வெற்றியும் பெற்றார். பதவி ஏற்பு விழா என்பதில்கூட எனக்கு உடன்பாடு இல்லை, இது பொறுப்பு ஏற்பு விழா என்றார். பட்டாசு வெடிக்கக்கூடாது என்றார். பேச்சில்,தோற்றத்தில் எளிமை காட்டினார். இப்படியாக பல சவடால்கள், நாடகங்கள், கூத்துக்கள் நடத்தி சங்கப் பதவியை பிடித்தப்பின்னர்தான் ‘அமைதிப்படை அம்மாவாசையை’ தொழிலாளர்கள் பார்க்க முடிந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கடந்த 2. 9. 2016 அகில இந்திய வேலைநிறுத்த நாளில் நயவஞ்சகமாக முதல் பேச்சுவார்த்தைக்கு  நிர்வாகம் அழைத்தது, அதனை மறுக்காமல் ஏற்றார். தொழிலாளர்களின் வேலைநிறுத்த நாளில் நான் வரமாட்டேன் என்று சொல்லவில்லை. மற்ற யூனிட்கள் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கையில் கி.வெ ஒசூர் யூனிட் -2 ல் கிளையை இயக்க அனுமதித்தார்.

நட்சத்திர ஓட்டலில் நிர்வாகத்துடன் தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொழிலாளர்களை மட்டுமல்ல சங்க நிர்வாகிகளையே பார்வையாளராக்கி விட்டார். அறிமுகக் கூட்டம் என்று சமாதானம் சொன்னார். ” வேட்டி கட்டிய சாமானியன் கார்ப்பரேட் நிர்வாகத்திடம் சோரம் போகமாட்டான் ” என்று ஆதவாளர்கள் பரப்புரை செய்தனர்.

“தொழிற்சங்கத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. அவர் சரியில்லை, இவர் சரியில்லை” என்று பிற தலைவர்களை பற்றி பேசியவர், அவர்கள் இருவரும் சென்ற பாதையில் இன்னும் வேகமாக ஓடினார். “மன்மோகன் செயல்படாத பிரதமர் ” என்று என்று மோடி சொன்னபோது அதன் பொருளை இப்போது நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் (கார்ப்பரேட் பாதசேவையை) அதே போல கி.வெங்கட்ராமன் நடந்து கொண்டு வருகிறார்.

கடந்த சங்க தேர்தல் சமயங்களில் இரண்டு தலைமைகளின் மீதான அதிர்ச்சியில் இருந்த தொழிலாளர்களிடம் தன்னை ஒரு மீட்பராக முன்னிறுத்திக்கொண்ட கி.வெ அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்தார். அந்த கால கட்டத்தில் ஆலைவாயிலில், தேர்தல் மேடைகளில் கி.வெ-யின் வாயிலிருந்து வழிந்த வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டினால் காவிரியே கரைபுரண்டு ஓடும். தொழிலாளர்கள் அசந்த நேரம் பார்த்து சங்கத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த ஒன்றரை ஆண்டுகளில் கி.வெ யின் நடைமுறைகள் கண்டு நம்பிக்கைகள் தகர்ந்துப் போய் தமக்கு துரோகம் இழைக்கப்பட்டதைக் கண்டு வாக்களித்தவர்களே திகைத்துப் போயுள்ளனர்.

ஒப்பந்த கோரிக்கையை துல்லியமாக வரையறுத்து (?) நிர்வாகத்திடம் அளித்து அதற்கான பேச்சுவார்த்தை இவரது தலைமையிலான சங்கம் தொடங்கியது என்கிறது, இவரது பத்திரிக்கையான தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோடட்டம்.

2016 -ல் புதிய ஒப்பந்த கோரிக்கையில்  சமவேலைக்கு சம ஊதியம் என வரவேண்டியதை  சம சர்வீஸ்க்கு சம சம்பளம் என்று கோரிக்கையை மாற்றி E2 ,S2 என்றார். ஒப்பந்தம் நிறைவு பெற்ற நாளிலிருந்து, புதிய ஒப்பந்தம் அமல் (Next day, Next settlement) என்று மற்றொரு கோரிக்கை என்றார். இது அறம் சார்ந்து கோரிக்கை மட்டுமல்ல நியாயம் இருக்கிறது என்றார். நிர்வாகத்தின் இதயத்தோடு பேசுகிறேன் என்றவர் இந்த கோரிக்கை நிறைவேறாமைக்கு கி.வெ சொல்லும் காரணங்கள் தான் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும்.

இந்த ஒப்பந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமைக்கு ” இரண்டு முறை யுனிட் 1 சங்கத் தலைவர் குசேலருக்கு கடிதம் கொடுத்தும் ஒத்துழைக்கவில்லை ” என்றும் ” யூனிட் 2 ஆலையில் குசேலர் அணியினர் ஒத்துழைக்கவில்லை ” என்றும் ” லோ கொட்டேசனுக்கு தலையாட்டிவிட்டார் குசேலர்” என சொல்லி குசேலரை மட்டும் குற்றவாளி ஆக்கினாரே தவிர நேரடி உற்பத்தி உயர்வு, நேரடி மற்றும் மறைமுக உற்பத்தி பிரிவுகளிலிருந்து 348 தொழிலாளர்கள் வெளியேற நிர்பந்தித்தது கான்ட்ராக்ட் தொழிலாளர்களை குவிப்பது, 6 வது நாள் வேலையில்லை என்ற பெயரில் ஆண்டுக்கு 52 நாட்கள் வேலை நாட்களை பறிப்பு, வருகை பதிவுக்கு கைரேகையை கட்டாயப்படுத்துவது என இதற்குப் பின்னுள்ள நிர்வாகத்தின் லாபவெறி, அடக்குமுறை, சூழ்ச்சியை பற்றி வாய் திறக்கவில்லை, திரு. கி.வெ. ஆனால் மற்றொருபுறம் நிர்வாகத்தின் கொடிய சுரண்டல் முகத்தை மறைக்க திட்டமிட்டு குசேலர் எதிர்ப்புக் கண்ணோட்டத்தை தீவிரப்படுத்திவருகிறார். சங்கத் தேர்தலில் வெற்றி பெற மைக்கேலுடன் கூட்டணி பேசிய கி.வெ ஒப்பந்த வெற்றிக்காக ஒர் கடிதம் கூட தரவில்லை. “லே. ஆப் இல்லாத நார்மல் ஒப்பந்தம்” என்ற ஆலோசனைக் கூட ஏற்கவில்லை. ஆக முழுக்க, முழுக்க நிர்வாகத்தின் வழிகாட்டுதலே சங்க செயல்பாடுகள் என சுருங்கிப் போனது.

பேச்சுவார்த்தையின் போது ஊதிய உயர்வு கோரிக்கைக்கு எதிராக நிர்வாகம் எதிர் கோரிக்கை வைத்தது. நிர்வாகத்தின் அந்த 4 பக்க எதிர் கோரிக்கைகளை இன்றுவரை தொழிலாளர் கண்களுக்கு காட்டாமல் மறைத்து விட்டார். ஏன் மறைத்தார்? எதற்காக மறைத்தார் ? மறைக்க சொன்னது யார்? பேச்சுவார்த்தை வெளிப்படையாக நடைபெறாமல் இருக்க கி.வெ அவர்கள் ஒப்புக்கொண்டார் என்பதை விட நிர்வாகத்திடம் மண்டியிட்டார் என்று சொல்வதே பொருத்தமானது.

கமிட்டி மீட்டிங்கில் உற்பத்தி உயர்வு ஒப்புதல் கிடைக்காத நிலையிலேயே உற்பத்தி உயர்வை வாரி வழங்கினார். மேலும் 348 நிரந்தரத் தொழிலாளர்களை நேரடி மற்றும் மறைமுக உற்பத்தி பிரிவிலிருந்து விலக்கிவிட்டு அந்த இடங்களில் காண்டராக்ட் தொழிலாளர்களை திணிக்க ஒப்புக் கொண்டார்.

அடுத்து, 6 வது நாள் சனிக்கிழமை வேலை இல்லை (லே ஆப்) என்பதை ஏற்றார். இனிவரும் காலம் ஆண்டுக்கு சட்டவிரோதமாக 52 நாட்கள் லே ஆப் கொடுத்து ஆலையை இழுத்து மூடலாம் என்பது தான் இவரது ஒப்பந்தத்தின் ‘வரலாற்று சிறப்பு மிக்க’ துரோகமாகும். எண்ணூருக்கு இணையான சம்பளம் எனும் கேரட்டை காட்டி குடலை உருவிய கொடுஞ்செயலுக்கு துணைபோனது யார்? என்பதை தொழிலாளர்கள் அடையாளம் கண்டு விட்டனர். முதலாளித்துவ சுரண்டலை மறைத்து துணை போகும் இது போன்ற தலைமைகள் தொழிலாளர் வர்க்கத்துக்கு தலைமை தாங்க எள் முனை அளவு கூட தகுதியற்றவர்கள் ஆவர். அதே சமயம் தனக்கொரு இருப்பை உருவாக்க எப்படி வேண்டுமானாலும் புரட்டி பேசுவார், கி.வெ என்பது தெளிவாகி விட்டது.

சென்னை எண்ணூர் யூனிட்டில் ‘NEEM வேண்டாம், லயம் வேண்டாம் ‘ என்றும் ‘ தேவைப்பட்டால் வழக்கு போடுவோம் ‘ என  இவரின் தொழிலாளர் ஜனநாயகப் பேரியக்கம் பிரசுரம்  வினியோகம் செய்கிறது. அதன் தலைவரான கி.வெ அவர்கள் ஒசூரில் எந்த விதமாக எதிர்ப்பும் எழாத வண்ணம் VTS சாப்  முழுவதும் காண்ட்ராக்ட் – க்கும் , காண்ட்ராக்ட் தொழிலாளர்களை மட்டும் வைத்து சட்டவிரோதமாக டிபன்ஸ் வைக்கிள் ( ராணுவ வாகனம்) உற்பத்தியாவதைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறார், திரு. கி.வெ.

மொத்தத்தில்  இதற்கு பின்புலத்தில் ‘நடைமுறை சாத்தியப்பாடு’என்ற பெயரில் தேர்தல் கூட்டணியில் தொடங்கி ஒவ்வொரு உரிமை பறிப்புக்கு பின்னணியில் ‘ வேறு வழி கிடையாது ‘ என நிர்வாகத்தை நம்பி வாழ்வது என்ற சமூக கண்ணோட்டம் அடித்தளம் உருவாக்கப்படுகிறது. இதற்காக பல முனைகளில் சங்கப் பொறுப்பில் உள்ளவர்களிடம் பல மணிநேரம் தனித்தனியாக பேசுகிறது நிர்வாகம். இதனை முறியடிக்க தொழிலாளர்களின் சொந்த பலத்தை கட்டியமைத்து வழிகாட்டும்  வெளிப்படை தன்மை கொண்ட தொழிற்சங்கத்தலைமையும்  நடைமுறையும் தேவைப்படுகிறது.

தற்போது இந்த ‘ கைநாட்டு ‘ ஒப்பந்தத்திற்கு பிறகு பெயிண்ட்சாப் உள்ளிட்ட உற்பத்தி தளத்தை விரிவு படுத்துகிறது, நிர்வாகம். ஒரு சிப்ட் மட்டுமே இயக்க முடியும் அளவுள்ள நிரந்திரத் தொழிலாளர்களை கொண்டு மூன்று சிப்ட்களை ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை திணித்து ஆலையை இயக்குகிறது, நிர்வாகம். இதுபோல் மிகை உற்பத்தியும் மிகை இலாபத்தையும் ஈட்டிய NLC நிர்வாகம் ஒரு கட்டத்தில் அதன் அதிகாரிகள் மட்டும் பலனடைந்தனர். ஆனால், மிகை உற்பத்தியை காட்டி காண்ட்ராக்ட்  தொழிலாளர்களுக்கு 26 வேலை நாட்களை 22 நாட்களாக குறைத்தது மட்டுமின்றி இனி 19 நாட்கள் மட்டுமே வேலை என்று தொழிலாளர்கள் மீது போர் தொடுத்து பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி மிரட்டி வருகிறது, நிர்வாகம். இதுதான் மிகை உற்பத்தியின் பரிணாமம். லேலாண்டு நிர்வாகத்திற்கு அதே வழியில் சேவை செய்கிறார், கி.வெ.

மேலும் ஒசூரில் நிரந்தரத் தொழிலாளர் அதிகமாக உள்ள இவ்வாலையில், 18(1) ஒப்பந்தம் மூலம் நடைமுறைக்கு வரும் சட்டவிரோத லே-ஆப், உரிமைகளற்ற காண்ட்ராக்ட், தற்காலிக தொழிலாளர் அடிமைமுறை – அடக்குமுறைகள் ஆகியவற்றை பிற ஆலை நிர்வாகங்கள் முன்னுதாரணமாக கொண்டு செயல்படுகின்றன. இது நிர்வாகத்தின் அடக்குமுறையின் ஒருவகைமாதிரியாகும்.

கி.வெ எந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று இதைக் குறிப்பிடுகிறார்? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. எண்ணூர் தொழிலாளர்களைவிட ஒசூர் தொழிலாளர்களுக்கு ஏறக்குறைய பத்தாயிரம் சம்பளம் குறைவாக உள்ளதை சமன் செய்வதாக       E2, S2 எனச் சொல்லி தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்று, இவரால் பேசி முடிக்கப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம்  ஊதிய இடைவெளியை அதிகரித்து விட்டார்.  வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை என்ற இந்தியத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைக்கு தமிழ்மண்ணில் கல்லறைக்கட்டிவிட்டார், திரு. கி.வெ. இது சரியானதா? சாத்தியமானதா? என்பதை கி.வெ அவர்கள் பதில் சொல்லவேண்டும். ஒருவேளை பல ஆண்டுகளாக கி.வே பேசிவரும் தமிழ்தேசியத்தில் வேலை உரிமை என்பதன்பொருள் இதுதானோ?

சட்ட விரோதமான லே. ஆப் ஒப்பந்தத்தில் மண்டியிட்டு விட்டு சட்டபூர்வ 26 வேலை நாளுக்கு  DA கணக்கீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக விண்ணப்பம், சட்ட விளக்கம் தருவது அம்பலப்பட்ட தன் முகத்தை மறைப்பதற்கும் இருப்பை தக்க வைக்கும் தந்திரம் என்பது வெளிப்படையாக தொழிலாளர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். மீசை மீது மண் ஒட்டவேயில்லை என்ற கதையாக அந்த தலைவர் இந்த முயற்சி எடுக்கவில்லை மடை மாற்றுகிறார்கள்.

தொழிற்சங்கத்திற்கு புதிது, கரை படியாத கரம், நெருப்பு போன்ற நேர்மை ஒளிவட்டங்களை நம்பி வாக்களித்த தொழிலாளர்கள், ” யார் வந்தாலும் இப்படித்தான், நிர்வாகத்தின் AC ரூம்ல தொழிலாளர் நலனுக்காக வாய்திறக்க மாட்டார்கள் ” என சோர்வின் உச்சத்துக்கே தள்ளப்பட்டுள்ளார்கள்.  அறம்சார்ந்த பொருளியல் பார்வை  எனும் வார்த்தைகளை கேடயமாக கொண்டு தன் இருப்புக்கு வழித்தேடிக்கொண்டதை தவிர, தொழிலாளர் வர்க்கத்துக்கு வேறு என்ன நன்மை? என்பது யோசிக்க வேண்டிய விசயமாகும். உண்மையான எதிரியான நிர்வாகத்தையும் அதன் செயலையும் மறைத்து ஒன்னரை ஆண்டுகளுக்குமேல் தொழிற்சங்க சக்கரத்தை இயக்கியது தான், கி.வெ யின் சாதனையாகும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, “கருப்புப் பணத்தை மீட்டு அனைவருடைய வங்கிக் கணக்கிலும்15 லட்சம் பணம் போடப்படும் ” என்று கத்திக் கொண்டு RSS -BJP யினர் நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றினர். அவர்களுக்கு கீழுள்ள அராஜகமான சமூக அடித்தளத்தைக் கொண்டு, 120 கோடி மக்களை வதைத்துக் கொண்டும், கார்ப்பரேட் பாத சேவை செய்தும் வருகின்றனர். அதைப்போல தொழிற்சங்க அரங்கில் கி.வெ யின் தலைமை உட்பட தொழிலாளர்களுக்கு பிழைப்புவாத வெறியூட்டிவிட்டு முதலாளித்துவ கொடிய சுரண்டலுக்கு எதிரான உணர்வுக்கும் அரசியல் மீதான சமூக பார்வைக்கும் வேட்டு வைக்கின்றன. ஓட்டுக்கட்சித் தொழிற்சங்கங்களைப்போல சக தொழிலாளியை எதிரியாக்கி, குற்றவாளியாக்கி கேடுகெட்ட வகையில் வழிநடத்துகிறார், கி.வெ.

ஆட்குறைப்பு – காண்ராக்ட் திணிப்பு, சட்டவிரோத லே-ஆப் போன்றவற்றை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு ஆறுமாதத்திற்கு பிறகு சென்னையில் 3.2.2018 தமிழ்நாட்டுவேலைகள் தமிழர்களுக்கே ! வெளிமாநிலத்தவர்களுக்கு அல்ல! என்ற பெயரில் சிறப்பு மாநாடு நடத்தி தமிழர் வேலை உறுதி சட்டவரைவு  என்று முன்மொழிகிறார் கி.வெ.

உலக அளவில் முதலாளித்துவ பொருளாதாரம் தோல்வியடைந்து தொழிலாளர் உரிமைகளை பறித்து வேலைப்பறிப்பு, அடக்குமுறை என ஏவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அற்பக்கூலிக்கு காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. இந்தப்போக்கை  மறைத்தும் குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை எதிர்ப்பதை தவிர்த்தும் வேலைவாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள பணிநிரந்திரமின்மை நெருக்கடிக்கு வடமாநில தொழிலாளர்கள் தான் காரணம் என்று திசை திருப்புகிறார். மற்றொரு பக்கம் காண்ட்ராக்ட்முறை தீவிரப்படுத்தும் லேலாண்டு நிர்வாகத்தின் கோரமுகத்தை மறைத்து குசேலர் மட்டும்தான் பிரச்சினை என்று மடைமாற்றுகிறார்.

தமிழக விவசாயத்தை அழிப்பதில் கார்ப்பரேட் கம்பெனிகள் கரம்கோர்த்து நிற்பதை மறைத்து நாற்புறமும் இன முரண்பாடு என திசை திருப்புகிறார். அதிகார வர்க்கமானது நதி நீர், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இன, சாதி, மத முரண்பாட்டை வளர்க்க திட்டமிட்டு செயல்படுகிறது. தமிழினத்தின் உரிமைகளை பறிக்கும் மத்திய அதிகாரம் என்பது ஆரிய பார்ப்பன தலைமையும் கார்ப்பரேட் கும்பல் என்பதை மறைத்து சிறைக்குள் சிக்கியிருக்கும் பிற தேசிய இனங்களையும் எதிரியாக காட்டுவது குறுங் குழுவாதமில்லையா? மத்திய அதிகாரத்தின் சூழ்ச்சிகள், அடக்கு முறைகள், தாக்குதல்கள் அனைத்தையும் இன முரண்பாடு என்ற ஓர் போர்வையில் மறைக்கிறது, இவரை பொதுச் செயலாளராக கொண்ட தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

சுருங்கக்கூறின் முதலாளித்துவ வர்க்க முரண்பாட்டை மறைக்க குறுகிய சிந்தனையின் வெளிப்பாடான இனவெறி எனும் விச விதைகளை விதைப்பதை கொள்கையாக கொண்டிருக்கிறார். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் என்பதை மறைத்து வேளாண் பொருளியல் நிபுணர், கட்டுரையாளர், ஆலோசகர் என முக்காடுப்போட்டு கொண்டு இருக்கிறார்,  கி.வெ.

நாடுமுழுவதும் பொதுத்துறைகள் தனியார்மயமாவது பற்றி எதிர்ப்பில்லை. போராட்டமில்லை. அதில் வேலைவாய்ப்புகள் எல்லாம் தனியார்மயம் ஆவதற்கு எதிர்ப்பில்லை. போராட்டமில்லை. ஆனால் வட மாநிலத்தார் பணி சேர்வது மட்டும் தான் மூலப் பிரச்சனையாம். மேலும், தமிழக அரசு அற்பக்கூலிக்கு சுமார் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகளை காண்ட்ராக்ட் முறைக்கு தள்ளிவிட முயற்சித்து வருகிறது.

ஆனால், மீதி இருக்கிற 20% வேலைவாய்ப்புகளில் பெரும்பகுதி வடமாநிலத்தவர்கள் எடுத்துக்கொள்கிறார்களாம். இதனை எதிர்த்து போராடுகிறாராம்.முரண்பாட்டை வளர்க்கும் தமிழக அரசின் நோக்கத்தை லாவகமாக மறைப்பது தான் அறமா? இதற்கு பெயர் என்ன? வீடு தீப்பிடித்து எரிந்தாலும் என் பங்கிற்கு உரிய சாம்பலை தர வேண்டும் என்பதுதான். இந்த அரசு அதிகாரம் தன்னுடைய ஏகாதிபத்திய, கார்ப்பரேட் கொள்ளையை மறைக்க சாதி, மத, மொழி. இன முரண்பாட்டை கொம்பு சிவி வளர்த்து வருகிறது.

இந்த அரசு அதிகாரமானது கார்ப்பரேட் சுரண்டலையும் பகற் கொள்ளையையும் மறைக்க ஊழல் தான் பிரச்சனை என முன் தள்ளி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது. இதற்கு சற்றும் குறையாமல் கி.வெ போன்று இனவாதம் பேசுபவர்களும் கார்ப்பரேட், தனியார்மய சுரண்டலை கண்டுகொள்ளாமல் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சில தனிமனிதர்களையும் கட்சிகளையும் அதன் நடைமுறைகளையும் ஊழலையும் காரணமாக காட்டுகிறார்கள். முதலாளித்துவ சுரண்டலை மறைப்பது தான் இனவாத தற்காப்பு அரசியலின் உயிர் மூச்சாக உள்ளது. அழகிய தமிழ் வார்த்தைகளில் பிரச்சனைகளை பட்டியலிட்டு இனவாதம் அதிகாரத்தில் பங்கு கேட்கிறதே ஒழிய மக்களின் பிரச்சனை தீர்ப்பதில்லை என்பது வரலாற்று அனுபவமும் கூட.

பார்ப்பன பாசிச மோடி அரசாங்கம் , கார்ப்பரேட் சேவை செய்வதற்கும் தொழிலாளர் உரிமைகளை நசுக்குவதற்கும் நாட்டை மறுகாலனியாக்குவதற்கும் துடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தொழிலாளர் ஒற்றுமையை சிதைத்து, மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை மழுங்கடித்து தொழிலாளர் வர்க்கத்தினரிடையே பகைமூட்டி, ஆளும்வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு கோடாரிக் காம்பாக வேலை செய்கிறார், கி.வெ.

மொத்தத்தில் தோற்று, அம்பலப்பட்டு நிற்கும் நாடாளுமன்ற கட்டமைப்பு, நாட்டை சூறையாடும் தனியார்மயம், இதை மறைக்கும் பார்ப்பனிய – சாதி கட்டமைப்பை எதிர்த்து போராடாமல் அறவழி அரசியல் என்பது மாற்று சிந்தனை அல்ல, ஏமாற்றும் வழி என்பது மீண்டும் நிருபணமாகி விட்டது.

முதலாளித்துவப் பயங்கரவாதத்தை வெளிப்படையான தொழிற்சங்க நடவடிக்கைகள்மூலம் தொழிலாளர்களுக்கு உணர்வூட்டி அரசியல் போராட்டங்களை கட்டியமைப்பதன் வழியாகத்தான் தொழிலாளர் வர்க்கம் தன்னுரிமைகளையும் விடுதலையை சாதிக்கமுடியும்.

படைப்பு :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
அசோக் லேலாண்ட் யுனிட் – II,
ஒசூர். தொடர்புக்கு: 97880 11784.