Thursday, June 25, 2026
முகப்பு பதிவு பக்கம் 139

பாசிச எதிர்ப்பு இயக்கங்களை ஒழித்து கட்டுவதுதான் மருதையனின் வேலை | தோழர் மருது | பகுதி 3

பாசிச எதிர்ப்பு இயக்கங்களை ஒழித்து கட்டுவதுதான் மருதையனின் வேலை | தோழர் மருது | பகுதி 3

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஒரிசாவில் ரயில் தடம் புரண்டு 200-க்கும் மேற்பட்டோர் பலி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

03.06.2023

ஒரிசாவில் ரயில் தடம் புரண்டு 200-க்கும் மேற்பட்டோர் பலி!

பலியான மற்றும் படுகாயம் அடைந்த மக்களின் துயரத்தில்
மக்கள் அதிகாரம் பங்கு கொள்கிறது!

பத்திரிகை செய்தி

வுராவிலிருந்து ஒரிசா வழியாக சென்னை நோக்கி வந்த ரயில் ஒரிசாவில் தடம் புரண்டும் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகியும் இருக்கின்றன.

ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயணம் செய்த இந்த ரயிலில் இப்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் 900-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான காட்சிகளைத் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் பார்க்கும் பொழுதே நெஞ்சமெல்லாம் பதைபதைக்கிறது.

இந்த விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

இந்த விபத்து நடந்த உடனேயே தமிழ்நாடு அரசு மீட்புப் பணிகளுக்காக அமைச்சர்கள் தலைமையில் குழுவை அமைத்துள்ளது. அக்குழுவானது ஒரிசாவுக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள உள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

படிக்க : ‘சிங்காரச் சென்னை’ மேட்டுக்குடிகளுக்கே!

இவ்விபத்து தொடர்பாகக் கட்டுப்பாட்டு அறையையும் தமிழ்நாடு அரசு துவக்கி உள்ளது. இது போன்ற தமிழ்நாடு அரசின் செயல்கள் வரவேற்புக்குரியன. விபத்துக்குள்ளான இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தானாக முன்வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது நெகிழ்ச்சியானது.

முன்பதிவு செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், முன்பதிவு செய்யப்படாத மக்களின் நிலையை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.

இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த மக்களின் துயரத்தில் மக்கள் அதிகாரம் பங்கு கொள்வதுடன் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கான எல்லா முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா இருபது லட்ச ரூபாய் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உங்கள் பாதிப்புக்கு ஏற்ப நிதி வழங்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
99623 66321.

ராஜஸ்தான்: ஹஜ் யாத்திரிகர்களைத் தாக்கிய இந்துத்துவ கும்பல்!

0

ராஜஸ்தானின் கோட்டா நகரில் கடந்த மே 24 இரவு ஹஜ் யாத்திரிகர்கள் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது இந்துத்துவ கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. பேருந்து ஜெய்ப்பூர் விமான நிலையம் நோக்கி கோட்டா – பூண்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது இந்துத்துவ கும்பலால் இடைமறிக்கப்பட்டது.

குடிபோதையிலிருந்த இந்துத்துவ கும்பல் தங்களைக் கடந்து சென்ற பேருந்தை வழிமறித்து கற்களை வீசித் தாக்கியதில் பேருந்து ஓட்டுநர், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் காயமுற்றனர். இத்தாக்குதல் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கும் காணொளி அச்சமூட்டுவதாக உள்ளது.

மே 25 அதிகாலையில் சவுதி அரேபியா செல்லவிருக்கும் விமானத்தைப் பிடிக்கச் சென்ற பேருந்தை இந்துத்துவ கும்பல் பின் தொடர்ந்து வழிமறித்தது. சுமார் 40 யாத்திரிகர்கள் பயணித்த இப்பேருந்தில் அத்துமீறி நுழைந்த இக்கும்பல் உள்ளே இருந்த இளம் பெண்களின் பெயர்களை விசாரித்தது. அனைவரும் இஸ்லாமியர்கள் என்று அறிந்தவுடன் அக்கும்பல் அவர்களை தாக்கத் தொடங்கிவிட்டது. ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குமாறு மிரட்டியுள்ளது. பேருந்தினுள் இருந்த பெண்களைக் கடத்தி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளது. பேருந்திற்குப் பலத்த சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


படிக்க: ராஜஸ்தான் : ரம்சான் அன்று கலவரத்தை நடத்திய காவி பாசிஸ்டுகள் !


முதலில் பெண்களை இழிவாகப் பேசியது அந்த இந்துத்துவ கும்பல். அதை மற்றவர்கள் தட்டிக் கேட்கத் தொடங்கியதும் இரும்பு கம்பி உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளது. கேள்வி கேட்ட அப்துல் கலாம் என்ற யாத்திரிகர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ஆறு தையல் போடும் அளவிற்கு இரும்புக் கம்பியைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளது இக்கும்பல்.

இத்தாக்குதலால் தனது இடது காலில் கடுமையாகக் காயமுற்ற முகமது பர்தீன் (Mohammad Fardeen) என்ற 18 வயது இளைஞர் கூறியதாவது: இந்துத்துவ பயங்கரவாதிகள் குழந்தைகள் பெண்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை; அனைவரையும் தாக்கினர். எனது 60 வயது பாட்டியின் துப்பட்டாவைப் பிடுங்கினர். அவர் வைத்திருந்த ₹30,000 பணத்தையும் பறித்துக் கொண்டனர்.

இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசு வழக்குப் பதிவு செய்து 6 பேரைக் கைது செய்துள்ளது. சுமார் 25 – 30 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகப் போலீசின் முதல் தகவல் அறிக்கையே கூறுகிறது.

கடந்த சில மாதங்களாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவ வெறியர்கள், இந்து சாமியார்கள் ஆகியோர் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுகளை பேசி வருகின்றனர். இஸ்லாமியர்கள் மீது வன்முறையை ஏவும் வகையில் அவர்களது பேச்சுகள் அமைந்துள்ளன. சில இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.


படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!


இவ்வாறு தொடர் இந்து மதவெறி ஊட்டப்பட்டதன் விளைவாகத்தான் இத்தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்மையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் துர்கா வாகினி அமைப்புகள் இணைந்து 7 நாள் ஆயுதப் பயிற்சி வகுப்புகளை நடத்தின.

அரசு எந்திரத்தில் சங்கப் பரிவார் கும்பலின் ஊடுருவல் காரணமாக ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசாங்கம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. இந்த காவி பாசிச கும்பலை எதிர்கொள்வதற்கு ஒரே வழி, மக்களை அமைப்பாக்கி அணி திரட்டுவது மட்டும்தான் என்பதை ராஜஸ்தானில் நடைபெற்று வரும் தொடர் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.


பொம்மி

‘சிங்காரச் சென்னை’ மேட்டுக்குடிகளுக்கே!

டந்த 12-04-2023 ஆம் தேதி பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள லூப் சாலையை மறித்து நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்ற உத்தரவிட்டதே அதற்கு காரணம். லூப் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டு தீர்ப்பும் வழங்கியது.

லூப் சாலையில் மீனவர்களின் கடைகள் இருப்பது குறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா, “இந்த மீனவர்களை பொதுச் சாலையில் குத்த வைத்து உட்கார ஏன் அனுமதிக்கிறீர்கள்? அவர்கள் அழகான இடத்தைக் கெடுக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு என்ன வேலை? அவர்களை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு அனுப்புங்கள்” என்று ஆண்டை மனப்பான்மையுடன் கட்டளையிட்டார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலாஜி மற்றும் சுந்தர் தலைமையிலான அமர்வு, “பொதுச் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை ஏற்க முடியாது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை இலக்கை மாநகராட்சி எப்படி அடைய முடியும்?” “சிங்கார சென்னை என்று பேசுகிறீர்கள். ஆனால் கடற்கரை அருகே உள்ள சென்னையின் மிக அழகிய சாலை வேறு விதமாக இருக்கிறது” என்று கூறினர்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீர்ப்பு வந்த அடுத்த நாளே துரிதமாக செயல்பட ஆரம்பித்துவிட்டனர். லூப் சாலையோரத்தில் உள்ள மீன் கடைகள், ஐஸ் பெட்டிகள், வலைகள் மற்றும் மேசைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.


படிக்க: 1985 சென்னை துப்பாக்கிச்சூடு | வழக்குரைஞர் லிங்கன் நேர்காணல்


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விற்பனைக்காக வைத்திருந்த மீன்கள், நண்டுகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுநாள் மக்களின் போராட்டம் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்தது. படகுகளை வைத்து சாலைகளை மறித்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையின் நடுவே கூடாரம் அமைத்து முழக்கமிட்டு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி ஒருவர் “மெரினாவை அழகுபடுத்துறோம்னு கட்டுமரங்களை அங்கே நிறுத்தக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இப்போ நொச்சிக்குப்பம் பகுதியை ஆக்கிரமிக்கிறோம்ன்னு எங்க பொழப்புல மண்ணள்ளிப் போடுறாங்க. இன்னையோட அஞ்சு நாள் ஆச்சு. கடை போடவிடலை. தினக்கூலி நாங்க. இப்படியே போச்சுன்னா பட்டினியாகத்தான் கிடக்கனும்” என வருந்தினார்.

மக்களின் போராட்டங்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல் போலீஸ் உதவியுடன் கடைகளை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். “தனியாரின் பெரிய பெரிய ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இதே வேகத்தில் இடிக்குமா அரசு?” என மிக எளிதான கேள்விகளால் மக்கள் அதிகாரவர்க்கத்தை எதிர்கொண்டனர். மேலும், லூப் சாலைதான் மீனவர்களின் பாரம்பரிய இடத்தை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தினர். சாலையை விரிவாக்கம் செய்யக்கூடாது, நடைபாதைகள் அமைக்கக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை மீறி போக்குவரத்து வசதிக்காக என்ற பெயரில் மாநகராட்சி சாலையை விரிவுபடுத்தி இருப்பதாக தெரிவித்தனர்.

லூப் சாலை போடப்பட்டுள்ள இடம் மீனவர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த இடமாகும். சாலை அமைக்கும்போதே மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஆனால் நீங்கள் நடைபாதைகளில் கடைகளை அமைத்துக்கொள்ளலாம் என நயவஞ்சமாக மீனவ மக்களை ஏமாற்றி இடங்களை பறித்துதான் அரசு அப்போது சாலை அமைத்தது. மேலும் லூப் சாலை என்பது  பொதுப் போக்குவரத்திற்கான சாலை அல்ல. மீனவர்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட சாலைதான். சாந்தோம் சாலையில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக லூப் சாலையில் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அம்மக்களின் வாழ்வாதாரத்திற்கான கடைகளை ‘ஆக்கிரமிப்பு’ என்று கூறி அப்புறப்படுத்துகின்றனர்.

மீனவ மக்களின் தொடர் போராட்டங்களாலும், ஜனநாயக சக்திகளின் ஆதரவாலும் மீன் சந்தை கட்டப்படும் வரை, லூப் சாலையின் மேற்கு பக்கத்தில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடைகளை அமைத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்குப் பிறகு மீனவ மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டமும் பின்வாங்கப்பட்டுள்ளது.


படிக்க: மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !


“சிங்காரச் சென்னை” என்ற பெயரில் உழைக்கும் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, வாழ்வாதாரங்கள் அழிக்கப்படும்போது, இதுபோன்ற மக்கள் போராட்டங்கள் வெடித்துக்கொண்டுதான் இருக்கும்.

நீதிபதிகள், அதிகாரிகள் போன்ற மேட்டுக்குடி வர்க்கத்தின் பார்வையில் உழைக்கும் மீனவ மக்கள் சென்னையை விட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்களாகத் தெரிகிறார்கள். அம்மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சாலையோரத்தில் வைத்திருக்கும் கடைகள் மற்றும் மீன்பிடி பொருட்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சலானவையாகத் தெரிகிறது. மீன் மற்றும் கருவாடுகளின் வாசனை கூட அவர்களுக்கு அறுவருக்கத்தக்கதாகத் தெரிகிறது.

இது தீண்டாமையின் நவீன வடிவமாகும். அதிகார வர்க்கத்திற்கே உள்ள வர்க்கத் திமிராகும். “சிங்காரச் சென்னை” என்ற அரசின் திட்டமும் சரி, அதிகாரவர்க்கம் மற்றும் நீதிபதிகளின் பார்வையும் சரி, இந்நகரம் உழைக்கும் மக்களுக்கானதல்ல, மேட்டுக்குடிகளுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குமானது என்பதில் ஒன்றாக உள்ளது.

இவர்கள் கூறும் சிங்காரச் சென்னையில், நகரத்தை அழகுப்படுத்துவது என்ற பெயரில் பூங்காக்கள், நீரூற்றுகள், அருங்காட்சியங்களுக்கு இடம் உண்டு. உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்ற பெயரில் பாலங்கள், சுரங்கப் பாதைகள், மெட்ரோ ரயில்களுக்கு இடம் உண்டு. ஆனால், இக்கட்டுமானங்களை எல்லாம் இரத்தத்தை வியர்வையாக சிந்தி கட்டியெழுப்பும் உழைக்கும் மக்களுக்கு இடமில்லை.

கூவம், அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் உழைக்கும் மக்கள் ‘ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் அகற்றப்பட்டு, கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற புறநகர் பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்படுவதும் இதன் காரணமாகத்தான்.

ஆற்றின் பாதைகள், கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிற்கும் கட்டிடங்கள் இவர்களின் கண்களுக்கு ஆக்கிரமிப்பாக தெரிவதில்லை. மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் முதல் ராமாபுரம் மியாட் மருத்துவமனை வரை பல தனியார் கல்லூரிகளும், மருத்துவமனைகளும், ஷாப்பிங் மால்களும் ஆற்றின் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டவைதான். ஆனால் இவைகளை அகற்றக்கோரி நீதிபதிகள் யாரும் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடுப்பதில்லை. இதுதான் அவர்களுடைய வர்க்கப் பாசத்தின் வெளிப்பாடு!


குப்பு

‘மஹாமேதை’ மருதையன் அரசியலும், முதலைவாயில் மாட்டிக்கொண்ட யூடியூபர் கரிகாலனும் | தோழர் மருது | பகுதி 2

‘மஹாமேதை’ மருதையன் அரசியலும்,
முதலைவாயில் மாட்டிக்கொண்ட யூடியூபர் கரிகாலனும் | தோழர் மருது | பகுதி 2

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

புதிய ஜனநாயகம் – ஜூன் 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

ஜூன் – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தலையங்கம்: நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!
  • கர்நாடக தேர்தல் முடிவுகள்: தேர்தல் தோல்வி மட்டுமே பாசிசத்தை அளக்குமா?
  • மாநிலக் கல்விக் கொள்கை: மக்களுக்கு துரோகமிழைக்கும் தி.மு.க.!
  • எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!
  • டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!
  • கருப்புப் பண ஒழிப்பு 2.0: மக்கள் சேமிப்பை சூறையாடும் சதித்திட்டம்!
  • சிறப்புப் பதிவு: “வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” – வெற்றிகரமாக நடைபெற்ற புரட்சிகர அமைப்புகளின் மதுரை மாநாடு
  • மே நாள் போராட்டங்கள்: புரட்சிகரக் கட்சிக்காக உலகம் காத்திருக்கிறது!

 

கோவனை ‘கோபாலபுரத்து நாயே’ என்று சொன்னது உண்மையா? | தோழர் மருது | பகுதி 1

கோவனை ‘கோபாலபுரத்து நாயே’ என்று சொன்னது உண்மையா? | தோழர் மருது | பகுதி 1

பாருங்கள்! பகிருங்கள்!!

போக்குவரத்துத் துறையில் கமுக்கமாக நடைபெறும் தனியார்மயம்: ஊடகங்களே மவுனம் கலைப்போம்!

கிக்கும் கோடைக்காலத்தில் காலையிலும் மாலையிலும் பேருந்துக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் சென்னை பெருநகர மக்கள். சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. அவைதான் மக்கள் நெடுநேரம் பேருந்துக்காக காத்திருப்பதன் காரணம். இது ஏதோ சாதாரண விசயமல்ல. பேருந்து இயக்க எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குவதில் தி.மு.க. அரசு மேற்கொள்ளும் அடுத்தடுத்த நடவடிக்கைகளே காரணமாகும்.

சென்ற மார்ச் மாதம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வழித்தடங்களில், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி அளிப்பதாக செய்திகள் வெளியாகின. அரசின் இந்த தனியார்மயாக்க முயற்சியை எதிர்த்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

எதிர்ப்புகள் வலுப்பெற்ற பிறகு ஊடகங்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை. உலக வங்கியின் அறிவுத்தல்படி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தனியார் பேருந்துகள் இயக்குவது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை மீதான சாதக பாதங்களை ஆராயவே டெண்டர் விடப்பட்டது” “… ஒருபோதும் போக்குவரத்துத்துறையை தனியார்மயாக்கும் திட்டம் இல்லை” என்று தெரிவித்தார்.

தனியார்மயமாக்கப் போவதில்லை என்பதுதான் கருத்தென்றால், அந்த டெண்டரில் ஆராய்வதற்கு என்ன இருக்கிறது?

அமைச்சர் ஊடகங்களுக்கு அளித்த அதே பேட்டியில், “டெல்லி போன்ற பெருநகரங்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. ஏன் கம்யூனிஸ்டுகள் ஆட்சிசெய்யும் கேரளாவில் இந்த திட்டம் நடைமுறையில்தான் உள்ளது. ஒருவேளை இத்திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டாலும் ஒரு பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களைப் பற்றி பெரும்பாலான ஊடகங்கள் வாய்திறக்கவே இல்லை.

தற்போது போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் மெல்ல மெல்ல முன்னேறிவருகிறது தி.மு.க. அரசு. ஓட்டுநர்களை தனியார் நிறுவனங்களைக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் வேலையை ஆங்காங்கே கமுக்கமாக செய்துவருகிறது.


படிக்க: திராவிட(கார்ப்பரேட்) மாடல் : தனியார்மயமத்தை நோக்கி தமிழ்நாடு போக்குவரத்து கழகம்!


கடந்த ஏப்ரல் மாதம், தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. சென்னை, நாகை, கும்பக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் ஒப்பந்த ஓட்டுநர்கள் 400 பேரை நியமிக்க இருப்பதாகவும், இவர்கள் 12 மாதங்கள் பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்களில் 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதை கண்டித்தும், தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவை மீறி ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கும் அதிகாரிகள் மீது நடவடடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த மே 5 அன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த 29ஆம் தேதி அரசின் இத்தனியார்மயமாக்கப் போக்கைக் கண்டித்து மாலை ஐந்து மணியளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் பேருந்து ஓட்டுநர்கள் தன்னெழுச்சியாக வேலைநிறுத்தம் செய்துள்ளனர். அதன்பிறகு அமைச்சர் மேற்கொண்ட சமாதனப் பேச்சுவார்த்தையால் பணியைத் தொடர்ந்தனர்.

ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் இதேவேளையில், சென்னை மாநகர பேருந்துகளில் ஓட்டுநர் பற்றாக்குறையை ஏற்படுத்தி நடத்துநர்களுக்கு பணி வழங்க மறுத்துவருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

ஓட்டுநர்கள் கணிசமான அளவு இருந்தும், ஒரு பணிமனையில் 15 பேர் வீதம், 24 பணிமனைகளில் 350க்கும் கூடுதலான ஊழியர்களுக்கு பணி மறுக்கப்பட்டுவருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் குறைந்தது 350 பேருந்துகள் மக்களின் போக்குவரத்துக்காக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பணி மறுக்கப்படும் ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படுவதில்லை.

ஓட்டுநர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி, அதையே காரணமாகக் காட்டி நடத்துநர்களை பணிக்கு எடுக்காததன் மூலம் ஒப்பந்தப் பணியை திணிப்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது.


படிக்க: மக்களின் உழைப்பில் உருவான போக்குவரத்துத் துறையை விழுங்கவிருக்கும் கார்ப்பரேட்டுகள் | தோழர் பரசுராமன்


ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் பணிவழங்கப்படாத நடத்துநர்களிடம், ஒப்பந்தமயமாக்கலை எதிர்க்கும் ஓட்டுநர்களால்தான் தங்களுக்கு இந்த நிலைமை என்ற கருத்தை ஏற்படுத்தி தொழிலாளர்களை தங்களுக்குள் மோதவிடுவதும், மக்களிடையே போராடும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதும் திட்டமிட்டு நடைபெற்றுவருகின்றன.

பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு அரசின் இந்த சதி நடவடிக்கைகளை ஊடகங்கள் கொண்டுசேர்க்கவில்லை. பேருந்துக்காக கால்கடுக்க நிற்கும் மக்கள், பேருந்துப் பற்றாக்குறையை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் காலதாமதப் பிரச்சினையாகக் கருதி ஆங்காங்கே சண்டபோட்டு வருகிறார்கள். மைய ஊடகங்கள்தான் இப்பிரச்சினையை இருட்டடிப்பு செய்கின்றன என்றால், மக்கள் பிரச்சினைகள் விவாதிக்கப்படுவதாகக் கருதும் யூடியூப் சானல்களும் டிரெண்டிங்கான விசயத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. எதிர்ப்பு பேசும் பெரும்பான்மையான ஊடகங்களோ, தி.மு.க. மீது விமர்சனத்துக்குரிய விசயங்கள் ஏதேனும் வந்தால் அதைத் திட்டமிட்டே விவாதப் பொருளாக்காமல் தவிர்க்கின்றனர்.

இது ஆபத்தான போக்காகும். காவி மட்டுமல்ல, கார்ப்பரேட்டும் மக்களுக்கு எதிரானதாகும். தனியார்-கார்ப்பரேட்மயமாக்க சதியால் மக்கள் பாதிக்கப்படும்போது அதை எதிர்த்துக் குரல்கொடுப்பதுதான் மக்களுக்காக வேலைசெய்யும் ஊடகங்களது பணியாகும். இதை உணர்ந்து இப்பிரச்சினையை விவாதப் பொருளாக்க முன்வருமாறு மக்கள் மீது அபிமானமுள்ள அனைத்து ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

000

போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் இந்த திட்டம் என்பது சராசரியான ஒன்றல்ல. ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையையும் கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கிக் கொடுக்கும் சதித்திட்டமாகும். இதுகுறித்து எமது மே மாத இதழில் “கார்ப்பரேட்மயம்: நேற்று பள்ளிக்கல்வித்துறை, இன்று போக்குவரத்துத் துறை, நளை?” என்ற தலைப்பில் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பாசிசத்திற்கு எதிரான கலகக் குரல்கள்!

றுமை, பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை நாடு முழுக்க தலைவிரித்தாடுகின்றன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் சிறுதொழில் நசிவைச் சந்தித்த வணிகர்களும் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. சாதிவெறியும் மதவெறியும் கோலோச்சுகின்றன. இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், தலித்துகள் மீதான பாசிசத் தாக்குதல்கள், அம்மக்களை நான்காந்தரக் குடிமக்களாக மாற்றிவருகின்றன. அம்பானி-அதானி-வேதாந்தா வகையறா கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிதான் பாசிஸ்டுகளால் தேசத்தின் வளர்ச்சியாக சித்தரிக்கப்படுகிறது. நாட்டு மக்களின் சொத்துக்கள் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

நாட்டைப் பீடித்துள்ள இந்த அரசியல் சூழல், தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இன்ன பிற உழைக்கும் மக்களையும் எப்படி போராடத் தூண்டுகிறதோ, அதைப் போலவே, நாட்டுப்பற்றுள்ள கலை-இலக்கியவாதிகளையும், அறிவுத்துறையினரையும் நிலவும் பாசிசச் சூழலுக்கு எதிராக கலகக் குரலை எழுப்ப வைக்கிறது.

000

காவி பாசிஸ்டுகளின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தில் இருந்துகொண்டே, யோகியையும் மோடியையும் தனது பாடல்கள் மூலம் அம்பலப்படுத்திவருகிறார் 25 வயதே நிரம்பிய இளம் பெண் பாடகி நேஹா சிங் ரத்தோர். பல்வேறு தேசிய இனங்களின் மொழிகளை அழித்து, ஒற்றை ஆதிக்க மொழியாக இந்தியை நிலைநிறுத்த காவிக் கும்பல் வேலைசெய்துகொண்டிருக்கையில், இவர் தன் தாய்மொழியான போஜ்பூரியில் பாடுவது காவிகளுக்கு மேலும் ஒரு அடி.

கல்லூரி படிக்கும்போது நண்பர்களுடன் பாடல்களை எழுதி பாடிப் பழகியவர், கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி பாட ஆரம்பிக்கிறார். அதன்பிறகு, யோகி அரசை விமர்சித்தும் மக்கள் படும் துன்பங்களைப் பற்றியும் தொடர்ந்து பாடிவருகிறார்.

நேஹாவின் யூடியூப் சேனலுக்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் சந்தாதாரர்களாக உள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் டிவிட்டரிலும், முகநூல் பக்கத்திலும் இவரை பின் தொடர்கிறார்கள். படித்தப் பெண்ணாக இருந்தாலும், கிராமத்துப் பெண் போல, சேலையை தலையில் முக்காடிட்டுக் கொண்டு, இயல்பாக நையாண்டி தொனியில் இவர் பாடல்களை பாடுகிறார். அவரது பாடல்கள் மக்களை வெகுவாக ஈர்க்கின்றது. அனைவராலும் எளிதில் பாடக்கூடியதாகும் உள்ளது.


படிக்க: மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல் பாடும் நேஹா சிங் ரத்தோர்! | தோழர் அமிர்தா | வீடியோ


பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி, “அவர்கள் நல்ல காலம் பிறக்கும் என சத்தியம் செய்தார்கள். ஆனால் நமக்கு கிடைத்ததோ தோளில் மாட்டுவதற்கு ஒரு பையும் பிச்சை எடுக்க ஒரு திருவோடும்தான்” என்று இவர் பாடிய வரிகள் மிகப் பிரபலமானவை. மேலும், லக்கிம்பூரில் பா.ஜ.க. அமைச்சரின் மகனால் விவசாயிகள் ஈவிரக்கமின்றி கார் ஏற்றிக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும் இவர் பாடிய பாடல்கள் மக்களால் வெகுவாக கேட்கப்பட்டதாகும்.

யோகி அரசுக்கு எதிராக மட்டும் இதுவரை கிட்டதட்ட 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருடைய பாடல்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் யோகி அரசு, இவர் மீது ஒடுக்குமுறை செலுத்த ஆரம்பித்துள்ளது.

2023 பிப்ரவரி 16 ஆம் தேதி “யுபி மெய்ன் கா பா – 2” என்ற பாடலை வெளியிட்டார். அப்பாடலுக்கு எதிராக அவருக்கு போலீசு அனுப்பிய நோட்டீஸில், நேஹா சிங் ரத்தோர் தமது பாடல்கள் மூலம் வெறுப்பைத் தூண்டியதாகவும், சமூகத்தில் பகைமையையும் பதற்றத்தையும் உருவாக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் அப்படியென்ன சமூகத்தில் ‘வெறுப்பையும்’ ‘பதற்றத்தையும்’ தூண்டினார் என்பதை அப்பாடலின் சில வரிகளே உணர்த்தும். “ராமராஜ்ஜியம் என்ற பெயரில் வன்முறை அரங்கேறிவிட்டது. அடுத்து காசி, மதுராவில் இரத்தக்கறை படியப் போகிறது. சாமியார் முதலமைச்சரின் தொகுதியான கோரக்பூரில் இரத்தக்கறை படிந்துள்ளது. எதிர்த்துக் கேட்டால் காக்கிச் சட்டை போலீசு வந்து கஞ்சா கேசு போடுகிறது” என்று பாடியிருந்தார். தமது நிகழ்ச்சிரலை மக்கள் மத்தியில் துல்லியாக அம்பலப்படுத்திப் பாடியதுதான் காவிக் கும்பலுக்கு எரிச்சலைத் தந்திருக்கிறது.

நேஹா சிங் ரத்தோர் மீதான யோகி அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டத்தைத் தெரிவித்துவருகின்றன. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா “உத்தரப்பிரதேச காவல்துறையின் நடவடிக்கை வெட்கக்கேடானது” என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ், “ஒரு நாட்டுப்புற பாடகரின் குரலுக்கு பா.ஜ.க இவ்வளவு பயப்படுகிறதா?” எனக் கூறியுள்ளார்.


படிக்க: பாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்


மக்களிடத்தில் நேஹா சிங் ரத்தோருக்கு உள்ள ஆதரவாலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களாலும் நோட்டீஸ் அனுப்புவதைத் தவிர இதுவரை வேறெந்த தீவிர ஒடுக்குமுறைகளிலும் யோகி அரசு ஈடுபடவில்லை. அப்படியொரு நிலைக்குச் சென்றால், அவரது பாடல்கள் மேலும் மக்கள் ஆதரவைப் பெறும் என்று யோகி அரசு அஞ்சுகிறது.

சட்டப்படியான ஒடுக்குமுறை மட்டுமின்றி, இவருக்கு சமூகரீதியான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கும் காவிக் கும்பல் முயன்றது. வாரணாசி விஸ்வநாதர் கோயிலில் சில காவி வானரங்கள் இவரை கல்வீசி தாக்க முற்பட்டுள்ளனர்.

நண்பர்கள் எச்சரித்தபோதும், தாய், தந்தை அச்சப்படும்போதும், இவர் யோகி அரசை விமர்சிப்பதில் அச்சங்கொள்ளவில்லை. யோகி அரசு எத்தகைய ஒடுக்குமுறை செலுத்தினாலும், மக்கள்படும் துன்பங்களைப் பற்றியும் யோகி அரசின் அயோக்கியத்தனங்களை விமர்சித்தும் தொடர்ந்து பாடுவதில் உறுதியாக உள்ளார்.

அண்மையில், 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி மோடி அரசை விமர்சித்து ஒரு பாடல் பாடியுள்ளார். அதில் அதானி, நீரவ் மோடி, லலித் மோடி ஆகிய கொள்ளையர்களை அம்பலப்படுத்தியுள்ளார். அதுவும் மக்கள் மத்தியில் வரவேற்புக்குள்ளாகி உள்ளது.

000

மகாராஷ்டிராவிலும் இரு ராப் பாடகர்கள் காவிக் கும்பலை விமர்சித்து பாடல்களை பாடி வருகின்றனர். வெளிப்படையாக பா.ஜ.க. தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், சூசகமாக புரிந்துகொள்ளும்படி பாடிவருகின்றனர். இவர்களையும் யூடியூப் சேனலில் லட்சக்கணக்கான மக்கள் பின் தொடர்கிறார்கள். மகாராஷ்டிரா போலீசும் இவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து ஒடுக்க முயற்சிக்கிறது.

ராஜ் முங்காசே என்பவர், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது அணியினரை விமர்சித்து பாடுகிறார். “50 கோடியுடன் திருடர்கள் வந்திருக்கிறார்கள் பாருங்கள்… பாருங்கள், திருடர்கள் நன்றாக இருக்கிறார்கள்!” என்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

உமேஷ் காடே, அரசியல்வாதிகள் தங்கள் தனிப்பட்ட இலாபத்திற்காக வறுமையில் வாடும் மக்களை புறக்கணிப்பதாக விமர்சித்துப் பாடியுள்ளார். “பொதுமக்களை நிர்வாணமாக்கி விட்டீர்கள்” என்ற வரிகள் மூலம் அரசியல்வாதிகள் தனது குடிமக்களைப் பற்றி கவலைப்படாததை தாக்குகிறார்.

இவர்கள் மட்டுமல்ல, இவர்களைப் போன்ற இன்னும் எண்ணற்ற நபர்கள் அரசை விமர்சித்து தங்களுக்கு தெரிந்த வடிவங்களில் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கலை இலக்கியவாதிகளும், அறிவுத்துறையினரும் அரசை விமர்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துள்ளது. மக்களின் அவலநிலையும் பாசிஸ்டுகளின் நடவடிக்கையும்தான், இவர்களின் செயல்பாடுகளுக்கு அடிப்படை.


படிக்க: யோகி, மோகன் பகவத்-ஐ விமர்சித்த ராப் பாடகர் மீது தேசத் துரோக வழக்கு !


ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் பேயாட்சியில் மக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பல்களுக்கான புரோக்கர் வேலையையே அரசாட்சியாக செய்துவருகிறார்கள். இதைக் கண்டு சமூக அக்கறையுள்ள அறிவித்துறையினர் கொதித்தெழுகின்றனர். தங்களுக்கு தெரிந்த வடிவங்களில் அரசை விமர்சித்தும், மக்களின் அவலநிலையைப் பற்றியும் தங்கள் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர்.

உதாரணத்திற்கு, பத்திரிகையாளரான முகமது ஜூபைர் தனது ஆல்ட் நீயூஸ் இணையதளத்தின் மூலம் சங்கப் பரிவாரக் கும்பல்களின் போலிச் செய்திகளை அம்பலப்படுத்தி வருகிறார். “ஹிந்துத்துவா வாட்ச்” (Hindutva Watch) என்ற இணையதளம், காவி பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அம்பலப்படுத்தி வருகிறது. தி வயர், ஸ்காரல் போன்ற இணையதளங்களும் மோடி அரசையும் காவிக் கும்பலின் நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்திவருகின்றன. சமூக அக்கறை கொண்ட பல பத்திரிகையாளர்கள் கார்ப்பரேட் ஊடகங்களைவிட்டு வெளியேறி சுதந்திர ஊடகங்களை தொடங்கி ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வினரை விமர்சித்துவருகின்றனர்.

இவர்களைப் போன்றோரின் வரிசையில்தான் நேஹா சிங் ரத்தோர் இந்துமதவெறியர்களின் கோட்டையான உத்தரப்பிரதேசத்தில் பயப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை மக்களும் ஆதரிக்கிறார்கள். இது, நாம் மக்கள் படும் துன்பங்களை பற்றி பேசும்போது, அவர்களுடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தும்போது, மக்கள் நம்மை ஆதரிப்பார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஆனால், உத்தரப்பிரதேசம் போன்ற காவிகள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசதான் ஆள் இல்லை.

காவி பாசிஸ்டுகள் தங்கள் கனவான இந்துராஷ்டிரத்தை நிறுவதை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் தீவிரமாகிவருகிறது. பாசிஸ்டுகள் ஏறித்தாக்கி வரும் இச்சூழலில் நாம் அவர்களைக் கண்டு அஞ்சக்கூடாது. பாசிசக் கொடுமைகளை சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கக்கூடாது. பாசிசத்திற்கு எதிராக நாம் ஏதாவது ஒரு வடிவங்களில் வினையாற்ற வேண்டும். அது கடுகளவு சிறிதாயினும் சிறந்ததுதான். இதுதான் நேஹா சிங் ரத்தோர் போன்ற கலைஞர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.


சிவராமன்

மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து! | பு.மா.இ.மு கண்டனம்

0

01.06.2023

மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில்
மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து!

தேசிய மருத்துவ ஆணையத்தின் ஓரவஞ்சனை!

கண்டன அறிக்கை!

டந்த மூன்று தினங்களுக்கு முன்பு எல்லா பத்திரிகைகளிலும் வந்த செய்தி தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டின் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதனால் 500 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 16,000 ரூபாய் செலவில் மருத்துவம் படிக்க முடியும்.அதிலும் ஏழை மாணவர்களுக்குத் தான் இது போன்ற வாய்ப்புகள் பெரும் பலனைக் கொடுக்கின்றன. அதில் விழுந்த பெரிய அடி தான் இது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை வன்மம் நிறைந்தது என்பதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார். அதாவது மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டைச் சரிவர ஏற்பாடு செய்யவில்லை கண்காணிப்பு கேமராக்களை முறையாக வைத்துக் கொள்ளவில்லை போன்ற சிறிய விஷயங்களுக்கெல்லாம் அங்கீகாரத்தை ரத்து பண்ணுவது அதே வேலையில் தனியார் மருத்துவமனை கல்லூரிகளில் முறையான வசதிகள் இல்லை, உள் நோயாளிகள் இல்லை அதற்கெல்லாம் தேசிய மருத்துவ ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காது இதெல்லாம் உள்நோக்கம் கொண்டது எனப் பதிவு செய்துள்ளார்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை போன்ற பல துறைகளைக் கொண்டுள்ள 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சிக்கலான அமைப்பு கொண்ட கல்லூரிகளுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டுள்ள அம்சங்களைச் சரி செய்யச் சற்று காலம் எடுத்துக் கொள்ளும், அதனைக் கணக்கில் கொண்டு எந்திர கதியாக அணுகாமல் கால அவகாசத்தைக் கூடுதலாகக் கொடுத்திருக்க வேண்டும் என்பதையும் பதிவு செய்துள்ளார்.


படிக்க: கார்ப்பரேட் – காவிமயமாகும் மருத்துவத்துறை ! தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் !!


தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தாத தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் அங்கீகாரத்தை ரத்து செய்வதென்பது வன்மம் நிறைந்ததே. அப்படிப் பார்த்தால்இன்னும் ஒரு செங்கல்லை கூட நட்டு வைக்காத எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரிக்கு ஆள் சேர்க்கை நடத்த அனுமதித்த தேசிய மருத்துவ ஆணையத்தின் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

இந்திய மருத்துவ கவுன்சில்-இன் ஊழல் முறைகேடுகளுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டது தேசிய மருத்துவ ஆணையம் என்பதெல்லாம் ஒரு அண்டப் புளுகு. ஏனென்றால் ஊழலும் முறைகேடுகளும் எல்லாம் இன்னும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் பொறுப்பேற்ற உடனே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு எந்த கட்டுப்பாடும் ஆணையம் விதிக்காது என கை கழுவிக் கொண்டது. இந்த 50 விழுக்காடு இடங்களுக்குத் தனியார் கல்லூரிகள் முடிவு செய்வது தான் கட்டணம் இன்னும் எல்லாம். இதேபோன்று 50% புதிய பாடப்பிரிவுகளைத் தனியார் மருத்துவக் கல்லூரிகளே உருவாக்கி நடத்திக் கொள்ளலாம் எனவும் அனுமதி அளித்துள்ளார்கள். இந்த சட்டத் திருத்தங்கள் எல்லாம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை அடிப்பதற்கான ஏற்பாடு தான். இதுபோக மருத்துவக் கல்லூரிகள் புதிதாகத் திறக்கும் போதும் அந்த கல்லூரியை நேரில் ஆய்வு செய்யாமலேயே அனுமதி வழங்கலாம் எனவும் விதிகளைத் திருத்தி அமைத்துள்ளார்கள்.

முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய மருத்துவ ஆணையத்தை வரவேற்றுப் பேசும்போது முந்தைய இந்திய மருத்துவ கழகம் இன்ஸ்பெக்டர் ராஜ் என்ற கண்காணிப்பை வைத்துள்ளது அது தேவையற்றது எனப் பேசினார். குறைந்தபட்ச கண்காணிப்பு இருக்கும்போதே இவ்வளவு ஊழல் என்றால் கண்காணிப்பே அற்றுப்போகும் இந்த தேசிய மருத்துவ ஆணையம் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் கார்ப்பரேட்டுக்கும் ஒரு வரப்பிரசாதம் தான். ஆகவே இவர்கள் கண்டிப்பாக நடந்து கொள்வது போல் நடிப்பதெல்லாம் ஏமாற்று வித்தைதான்.


படிக்க: சீரழிந்து வரும் அரசு மருத்துவ கட்டமைப்பு! பலியாகும் அப்பாவி உழைக்கும் மக்கள்!


இதுபோக தமிழக அரசின் மாநில பட்டியலில் தான் மருத்துவம் சுகாதாரம் போன்ற அனைத்து விவகாரங்களும் இருந்தன. அதெல்லாம் படிப்படியாக காலி செய்யப்பட்டு வந்தது இன்று தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலமாக அது ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வரும் நிலைக்கு வந்துவிட்டது. நீட் தேர்வு மூலமாக மருத்துவ இடங்கள் பறிபோனது. தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலமாக ஒட்டுமொத்த அரசு மருத்துவமனைகளும் பறிபோகப் போகிறது. நீட்டின் தொடர்ச்சி தான் தேசிய மருத்துவ ஆணையம்.

தனியார்மயத்தின் ஏஜெண்டு தான் தேசிய மருத்துவ ஆணையம்; நீட் கியூட் அனைத்தும் தனியார்மயப்படுத்தத்தான். கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தையும் தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தைத் தீவிரப் படுத்தும்போது தான் மருத்துவம் என்பது தரமாகவும் சேவை அடிப்படையிலும் கிடைக்கப் பெறும். செங்கோல் நிறுவப்பட்டது போதும், வேறு என்ன மோடி நமக்குச் செய்ய வேண்டும் என்ற ஆதீனங்கள் வழியில் நாம் சென்றால் கழுத்தில் கத்தி வைக்கப் போவது நிதர்சனமான உண்மை.


தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
9444836642.

ஐ.பி.எல் 2023: கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்திற்கு!

0

மே 28, 2023 அன்று நாடே விழாக்கோலம் பூண்டதாக ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. ஒருபுறம், ‘தேச பக்தர்’களும் சங்கிகளும் ‘வீர’ சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட இருந்ததால் ஆரவாரமாகவும் உற்சாகமாகவும் இருந்தனர். இன்னொருபுறம், கிரிக்கெட் ரசிகர்கள் ஐ.பி.எல் ஜுரத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்; இறுதிப் போட்டிக்காகப் பேரார்வத்துடனும் உற்சாகத்துடனும் காத்திருந்தனர்.

அதே நாளில், டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா நடைபெறும் இடத்தை நோக்கி நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் அமைதிப் பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர். பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்த இருந்தனர். பேரணியைத் துவங்க முயன்றபோது தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

செங்கோல் ஏந்தி முடி சூட்டிக்கொண்ட கொடுங்கோல் ’மன்னர்’ மோடியின் இந்த பாசிச நடவடிக்கை சங்கிகளின் உற்சாகத்தை மேலும் அதிகரித்திருக்கும். தங்களது மன்னரின் அதிகாரத் திமிரை எண்ணி களியுவகை கொண்டிருப்பார்கள். பாசிச சங்கிகளின் மனநிலை அப்படித்தானே இருக்கும்.

ஆனால் நமக்கு வேதனை அளிப்பது என்னவென்றால், ஐ.பி.எல் உற்சாக பெருவெள்ளத்தில் மூழ்கியிருந்த நமது இளைஞர்களுக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் கண்களுக்கும் மல்யுத்த வீரர்கள் மீதான பாசிச மோடி அரசின் அடக்குமுறை புலப்படவில்லை என்பதே.


படிக்க: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !


போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு உள்ளிட்ட அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார் பிரிஜ் பூஷண் சரண் சிங். ஆனால், பாசிஸ்டுகளை எதிர்த்து நீதி கேட்ட குற்றத்திற்காக மல்யுத்த வீரர்கள்மீது ஏழு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதனைக் கண்டும் நம் இளைஞர்களுக்குக் கோபம் வரவில்லை.

ஆனால், மே 28 அன்று நமது இளைஞர்கள் கடுஞ்சினம் கொண்டனர். அவர்களுக்கு யார் மீது கோபம் வந்தது தெரியுமா? அகமதாபாத்தில் மே 28 அன்று மாலை முதல் இரவு வரை பொழிந்து வெப்பத்தைத் தணித்த மழை மீது கடுங்கோபம் ஏற்பட்டது; ஐ‌.பி.எல் இறுதிப்போட்டிக்குத் தடையை ஏற்படுத்தி விட்டதென்பதால்.

ஆனால், நாம் உண்மையில் எதைக்கொண்டு கோபம் கொள்ள வேண்டும்?

நாடாளுமன்றத்தில் விவாதங்களையே விரும்பாத, மாற்றுக்கருத்துகளை எட்டிக்காயாகப் பார்க்கும் பாசிஸ்டுகள், இந்து ராஷ்டிர முடியாட்சியை நிறுவும் பொருட்டு, பார்ப்பனிய சடங்குகளைப் பின்பற்றி சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறக்கவிருந்ததைக் கண்டு கோபப்பட்டிருக்க வேண்டும்.

‘மதச்சார்பற்ற’ இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பார்ப்பனர்கள் வளர்த்த ஹோமப் புகை, வெளியே போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர்களை நம் மக்களின் கண்களில் இருந்து மறைத்து விட்டதே! அதைக் கண்டு நமது இளைஞர்கள் கோபப்பட்டிருக்க வேண்டும்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி நமது விவசாயிகள் போராடிய போது, வெளிநாடுகளில் இருந்து பல ஜனநாயக சக்திகள் ஆதரவுக் குரல் எழுப்பினர். அப்போது மோடியின் பிம்பம் உடைபடுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலர் “இது எங்கள் நாட்டுப் பிரச்சனை. இதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று ஒருமித்த குரலில் முழங்கினர். சச்சின், ரவி சாஸ்திரி, கோஹ்லி, ரோகித் சர்மா, யுவராஜ் சிங், ரெய்னா, ஆர் பி சிங், கௌதம் கம்பீர் எனக் குரல் எழுப்பியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மோடியைக் காப்பாற்றக் குரல் கொடுத்த இந்த கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணிக்காகப் பதக்கம் பெற்றுத் தந்த மல்யுத்த வீரர்களுக்குக் குரல் கொடுக்கவில்லை. (இர்ஃபான் பதான், கபில் தேவ், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சிலர் மட்டும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்). இதைக் கண்டு நமது கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கோபம் வரவில்லை.


படிக்க: ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!


2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின்போது இனவெறிக்கு எதிராக ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்று மண்டியிட்டு முழங்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இந்தியாவில் நடக்கும் சாதிவெறி குற்றங்களுக்கு எதிராக வாயைத் திறந்ததே இல்லை. இதனைக் கண்டும் நமது கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கோபம் வந்ததில்லை.

கிரிக்கெட் மோகம் பாசிச மோடி அரசின் அடக்குமுறைகள், மணிப்பூர் வன்முறை, மல்யுத்த வீரர்கள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளிலிருந்து பெரும்பான்மையினரின் கவனத்தை திசை திருப்பிவிட்டது. அதிலும் குறிப்பாக, வழக்கமான கிரிக்கெட் ரசிகர்களைக் கடந்து புதிதாகப் பலர் இவ்வாண்டில் ஐ.பி.எல் போதைக்கு அடிமையாகி உள்ளனர். பாசிசம் அரங்கேறிவரும் இந்த சூழலில், நமது இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டியது ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அல்ல.

மாறாக நாம் காவி பயங்கரவாதம் மீது, பாசிஸ்ட் மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். நாம் கோபம் கொள்ள வேண்டியது அவற்றின் மீது தான்; ஐ.பி.எல் போட்டியின்போது குறுக்கீடு செய்த மழையின் மீதல்ல.

முக்கிய பிரச்சினைகளின் போது பாசிஸ்டுகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்களையும், வாயைப் பொத்திக்கொண்டு நடுநிலை காக்கும் கிரிக்கெட் வீரர்களையும் ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும். இளைஞர்கள் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து கொண்டு கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும் அவர்களது பொறுப்பை உணர்த்த வேண்டும்.


பொம்மி

புதிய ஜனநாயகம் – ஜூன் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜூன் – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – ஜூன் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தலையங்கம்: நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!
  • கர்நாடக தேர்தல் முடிவுகள்: தேர்தல் தோல்வி மட்டுமே பாசிசத்தை அளக்குமா?
  • மாநிலக் கல்விக் கொள்கை: மக்களுக்கு துரோகமிழைக்கும் தி.மு.க.!
  • எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!
  • டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!
  • கருப்புப் பண ஒழிப்பு 2.0: மக்கள் சேமிப்பை சூறையாடும் சதித்திட்டம்!
  • சிறப்புப் பதிவு: “வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” – வெற்றிகரமாக நடைபெற்ற புரட்சிகர அமைப்புகளின் மதுரை மாநாடு
  • மே நாள் போராட்டங்கள்: புரட்சிகரக் கட்சிக்காக உலகம் காத்திருக்கிறது!

திருமங்கலம் சுங்கச்சாவடி அடாவடித்தனம் || மக்கள் நேர்காணல்

துரை மாவட்டம் திருமங்கலம் சுங்கச்சாவடி நிர்வாகம் பொதுமக்களிடன் அராஜகமாக வழிப்பறி செய்து வருகிறது. அந்த சுங்கச்சாவடி ஒரு சட்ட விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கேரளா: மோடி அரசைக் கண்டித்து ரப்பர் விவசாயிகள் போராட்டம்!

0

கேரள ரப்பர் விவசாயிகள் மே 25, 26 ஆகிய தேதிகளில் பாசிச மோடி அரசை கண்டித்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் இல்லம் முன்பு இரவு பகலாக போராட்டம் நடத்தினர். ரப்பருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும், ரப்பரை வேளாண் பயிராக அறிவிக்க வேண்டும், ரப்பர் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) துணை அமைப்பான கேரள கர்ஷக சங்கம் (Kerala Karshaka Sangham) ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் 15,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பேரணியாக சென்ற‌ விவசாயிகள் ரப்பருக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ₹300-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், ரப்பரை உள்ளடக்கிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் (FTA) இருந்து இந்திய அரசு விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் ஆதரவு ரப்பர் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும், ரப்பர் வாரியத்தை கேரள மாநிலத்திலேயே மீண்டும் அமைக்க வேண்டும் என்றும், ரப்பர் விவசாயிகளுக்கு முறையாக மானியம் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் AIKS சார்பாக வலியுறுத்தப்பட்டது.


படிக்க: அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!


இப்பேரணிக்கு முன்னதாக, மாநிலம் முழுவதும் 600 கி.மீ தூரத்திற்கு 28 நீண்ட பேரணிகள் சுமார் 29,000 விவசாயிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டன. மேலும் 2.8 லட்சம் வீடுகளுக்குச் சென்று ரப்பர் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விளக்கப்பட்டன. ரப்பர் விவசாயிகளின் பிரச்சினைகளை விளக்கி 3.3 லட்சம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்தியாவின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 90 சதவிகிதத்தை கேரள‌ விவசாயிகள்தான் உற்பத்தி செய்கின்றனர். ரப்பர் விலை பல ஆண்டுகளாக, குறிப்பாக கடந்த 10 – 15 வருடங்களாக, ஏற்ற இறக்கமாக இருப்பதால் ரப்பர் விவசாயிகள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக ரப்பருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோ ஒன்றிற்கு ₹300-ஐ உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். ஆனால், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தியாவில் கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து உயர்தர ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு ரப்பரின் இறக்குமதியை எளிதாக்கும் வகையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் முந்தைய காங்கிரஸ் மற்றும் தற்போதைய பா.ஜ.க அரசாங்கங்கள் கையெழுத்திட்டுள்ளதாக AIKS கூறுகின்றது. இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மத்திய அரசால் கவனத்தில் கொள்ளப்படவில்லை.


படிக்க: கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!


மேலும், ரப்பர் பணப் பயிர் என்பதால் அதை வேளாண் பயிராக வரையறுக்க முடியாது என்று கூறி மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. வாகனங்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் டயர்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் டயர் உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக மத்திய அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாக AIKS கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி 2016-இல், விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்குவதாக மோடி வாக்குறுதி அளித்திருந்தார். பின்னர், டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் இயற்றுவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் இவற்றையெல்லாம் நிறைவேற்றுவது என்பது பாசிச மோடி அரசின் நோக்கமல்ல. தனது எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மூலப் பொருட்களாக பயன்படும் வேளாண் உற்பத்தி பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதே மோடி அரசின் நோக்கம்.


பொம்மி

மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை உடனே மூடு!

திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட இரயிலடி கீழத்தெரு பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மக்கள் குடியிருப்பு பகுதியிலே இந்த டாஸ்மாக் கடையானது அமைய இருப்பதால் ஊர் பொதுமக்கள் கிராமசபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், மக்கள் நிறைவேற்றிய தீர்மானத்தைத் துளியும் மதிக்காத மாவட்ட நிர்வாகமே மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் டாஸ்மாக் கடையைத் திறக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கீழத்தெருவில் பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடையானது ஏற்கெனவே திருவாரூர்- மன்னை பிரதான சாலையில் இயங்கிவரும் விளமல் டாஸ்மாக் கடைகள் ஆகும். அங்குப் போக்குவரத்துக்கு நெருக்கடியாகவும் முக்கிய அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை இருப்பதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக சக்திகள் தொடர்ச்சியாகப் போராடி வந்தது, டாஸ்மாக் கடையை மூட வக்கற்ற அரசு தன்னுடைய லாபநோக்கத்திற்காவும் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதற்தாகவும் விளமலுக்கு அருகே உள்ள தேவர்கண்டநல்லூர் ஊராட்சிக்கு டாஸ்மாக் கடையை மாற்றத் திட்டமிட்டுள்ளது. முதலில் தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட தியான புரம் என்ற பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுவந்தது . தண்டலை ஊராட்சி மக்கள் மற்றும் தியான புரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக டாஸ்மாக் திறக்கும் முயற்சியை அங்குக் கைவிட்டது. அதன் தொடர்ச்சியாக தியான புரம் பகுதியை அடுத்த 100 மீட்டரில் உள்ள கீழத்தெரு பகுதியில் டாஸ்மாக் திறக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் தற்போது மேற்கொண்டுவருகிறது.

படிக்க : பாசிசத்தை எதிர்த்து ஓரணியில் திரள்வோம்! | தோழர் தொல்.திருமாவளவன் | காணொலி

இரயிலடி கீழத்தெரு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை உடனே கைவிடக் கோரி ஊர் பொதுமக்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற்று ஊர் பொது மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இணைந்து 26-5-2023 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் மனுவின் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்காகச் செயல்பட்டு வருகிறது.

இப்படி தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் போராடிவரும் சூழலில் டாஸ்மாக் கடைகளை மூடாமல் வேறு வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான காரணம், திருவாரூர் மாவட்டமானது அதிகமாக விவசாயம் நடைபெறக்கூடிய பகுதியாகவும் அதிக அளவு கனிம வளங்களைக் கொண்ட பகுதியாகவும் உள்ளது. இங்குப் பல ஆண்டுகளாக நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியை கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனத்தின் முயற்சியை முறியடித்துள்ளனர். அப்படிப்பட்ட மக்களின் போராட்டத்தையும், மக்களின் போராட்ட குணங்களையும் மழுங்கடிப்பதற்காகவே மாவட்டத்தின் எல்லா மூலைகளிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வருகிறது அரசு. மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்தது மட்டுமல்லாமல், பள்ளி, கல்லூரி மாணவர், பெண்கள் என எல்லோரையும் போதைக்கு அடிமையாக்கி அரசின் கஜானாவுக்குக் கல்லாக்கட்டும் வேலையை அரசு செய்து வருகிறது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் செய்தி செய்தித்தாள்களிலிருந்து இன்னும் மறையாத அதே வேலையில் திமுக அரசானது ஊரின் எல்லா மூலைகளிலும் அரசு டாஸ்மாக் கடையைத் திறக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது சாராயம் குடித்து இறந்தாலும் அது அரசிற்கு வருமானத்தைக் கொடுத்து விட்டுச் சாக வேண்டுமென்ற எண்ணத்தில் திமுக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஆட்சியாளர்களை நம்பி இனி ஒருபோதும் பயனில்லை. மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை மக்கள் அமைப்பாகத் திரண்டு வீதியில் இறங்கிப் போராடுவதன் மூலம் மட்டுமே மூட முடியும்.

வினவு களச்செய்தியாளர்