Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 178

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: அனைத்து மர்ம மரணங்களும் நீதி கிடைக்காமல் ஊற்றி மூடப்பட்டுவிட்டது! | மருது வீடியோ

மாணவி இறந்து போனது தொடர்பான எவ்வித முடிவும் எட்டப்படாமல், அதற்கு முன்பே மாணவி தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார், அதுவும் தனது சொந்த பிரச்சினையின் காரணமாகத்தான் என்று ஏறக்குறைய தீர்ப்பு வந்துவிட்டது.

இந்த சூழ்நிலையில்தான் அந்த பள்ளியை மறுசீரமைப்பு செய்வதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமையை வைத்து பார்க்கும்போது, போராடி வெற்றிபெற முடியுமா என்ற கேள்விதான் பலருக்கும் எழும். ஆனால் அதனை அப்படி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு போராட்டம் என்பது யாரை எதிர்த்து என்பதுதான் மிகவும் முக்கியமானது.

அது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பிண்ணனி கொண்ட ஒரு பள்ளி. தனியார் பள்ளி முதலாளிகள் – 9987 பள்ளிகளை வைத்திருக்கக் கூடிய ஒரு கூட்டமைப்பு ஒரு மிகப்பெரிய லாபி. இவர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம். இவர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் இருக்கிறது. தற்போது நீதிமன்றம் பள்ளியை இயக்க பரிசீலனை பன்னுங்கள் என்று கூறியுள்ளது.

மாணவியின் தாய் தோற்று விட்டார். பள்ளியை நிர்வாகிக்கு பொறுப்பை மீண்டும் அதே குடும்பத்திற்கே வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்கனவே பள்ளியில் நடைபெற்ற சம்பவங்கள் அப்படியே நீடிக்கும். யாரும் எந்த கேள்வியும் கேட்ட முடியாது. நீங்கள் எத்தனாயிரம் பேரை அழைத்துவந்து எங்கள் பள்ளியை சேதமடைய செய்தாலும் எங்களுக்கு தேவையான நீதியை நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பெற்றுக்கொள்வோம். நீங்கள் எந்த கேள்வியும் கேட்க முடியாது என்ற இன்னொரு நீதியும் அதனுள் இருக்கிறது.

அதனால் பிரச்சினை ஸ்ரீமதி மட்டுமல்ல… ஸ்ரீமதிக்கும் முன்பு பலர் இறந்திருக்கிறார்களே அந்த மரம மரணங்களுக்கெல்லாம் மொத்தமாக சேர்ந்து ஸ்ரீமதி மரணத்தையும் ஊற்றி மூடிவிட்டார்கள். மேற்கொண்டு அதை பற்றி யாரும் பேசமுடியாது என்று வாயடைத்து விட்டார்கள். தற்போது குற்றவாளியார் ஸ்ரீமதியின் அம்மா என்று வரும். அதற்கு நீதிமன்றம் எங்கேயும் தடை விதிக்கப்போவதில்லை.

ஸ்ரீமதியை கொலை செய்த கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஜார்க்கண்டில் கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏற்றி படுகொலை செய்த மகேந்திரா நிறுவனம்!

0

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மித்திலேஷ் மேத்தா (56). விவசாயியான இவர், கடந்த ஆண்டு தனது நிலத்தை உழுவதற்காக டிராக்டர் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்காக மகேந்திரா நிதி நிறுவனத்திடம் அவர் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். கொரோனா பாதிப்பு, விளைச்சல் குறைவு போன்ற காரணங்கள் இருந்தாலும், தான் வாங்கிய கடனுக்கு மித்திலேஷ் மேத்தா முறையாக தவணை செலுத்தி வந்திருக்கிறார்.

இந்நிலையில், ஜார்க்கண்டில் கடந்த சில மாதங்களாக பருவம் தவறி கனமழை பெய்து வந்தது. இதனால் அங்குள்ள விவசாயிகள் சாகுபடி செய்திருந்த கோதுமை உள்ளிட்ட பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இவர்களின் விவசாயி மித்திலேஷ் மேத்தாவும் ஒருவர். இந்த நஷ்டத்தின் காரணமாக மித்திலேஷ் மேத்தாவால் கடந்த 5 மாதங்களாக கடன் தவணை கட்ட முடியவில்லை.

இதில் அந்த தவணைகளுக்கு வட்டி மேல் வட்டியும் சேர்ந்து போனது. இதனால் மகேந்திரா நிறுவன அதிகாரிகள் சமீபகாலமாக அவரை தொலைபேசியிலும், நேரிலும் வந்து திட்டுவதும் செல்வதுமாக இருந்துள்ளனர். மேலும், இன்னும் சில தினங்களில் மொத்த தவணையையும் வட்டியையும் செலுத்தாவிட்டால் டிராக்டரை பறிமுதல் செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் மித்திலேஷ் மேத்தா தனது மனைவியின் நகைகளை விற்றும், உறவினர்களிடம் கடன் கேட்டும் வந்துள்ளார். இருந்தபோதிலும், மூன்று மாத தவணைகளுக்கும், வட்டிக்குமான பணம் சேரவில்லை எனத் தெரிகிறது.

படிக்க : இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகளை வஞ்சிக்கும் அதானி குழுமம்!

இந்நிலையில், நேற்று (19.09.2022) மதியம் அந்த மகேந்திரா நிறுவன அதிகாரிகள், சில குண்டர்களை விவசாயி மித்திலேஷ் மேத்தாவின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது அந்த குண்டர்கள் விவசாயி மித்திலேஷ் மேத்தாவை ஆபாசமாக பேசியுள்ளனர். அந்த சமயத்தில், அங்கிருந்த 6 மாத கர்ப்பிணியான அவரது மகள் பூஜா ராணி (27), ‘எனது தந்தையை ஆபாசமாக பேசாதீர்கள், உங்களிடம் வாங்கிய கடனை இன்னும் இரு தினங்களில் கட்டிவிடுவோம்’ எனக் கூறியுள்ளார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது பூஜா ராணி, டிராக்டர் முன்னால் வந்து நின்று, ‘இன்று மாலைக்குள் பணம் தருகிறோம். டிராக்டரை எடுத்துச் செல்லாதீர்கள்’ எனத் தெரிவித்தார். ஆனால் அதற்கு சம்மதிக்காக நிதி நிறுவனத்தினர், ‘இப்போதே பணம் தர வேண்டும்; இல்லையென்றால் டிராக்டரை எடுத்து செல்வோம்’ எனக் கூறியிருக்கின்றனர்.

மேலும், பூஜா ராணியை டிராக்டர் முன்னால் இருந்து நகர்ந்து செல்லுமாறும் கூறியுள்ளனர். ஆனால் பூஜா ராணி அவர்களுக்கு வழிவிடாமல் அங்கேயே நின்று விடாப்பிடியாக போராடி கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அவர் மீது டிராக்டரை ஏற்றினர். இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பூஜா ராணி உயிரிழந்தார். இதை பார்த்து பயந்துபோன நிதி நிறுவனத்தினர் அங்கிருந்து தப்பியோடினர். விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த கிராம மக்கள், பூஜா ராணியை உடலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு கொண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அனிஷ் ஷா, “ஹசாரிபாக் சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தமும் கலக்கமும் அடைந்துள்ளோம். ஒரு சோகமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. தற்போதுள்ள (கடன் கொடுக்கும் நிறுவனம் மற்றும் வாங்கியவருடன் தொடர்பில்லாத) மூன்றாம் நபர் வசூல் நிறுவனங்களைப் பயன்படுத்தும் நடைமுறையை நாங்கள் மீளாய்வு செய்வோம்” என பேசியுள்ளார். அதாவது நாங்கள் இனிமேல் கடன் வசூல் செய்ய குண்டர்களை அனுப்புவதை பரிசீலிக்கிறோம் என பேசியுள்ளார்.

மூன்றாம் நபர் வசூல் நிறுவனங்களை பயன்படுத்துவது தான் பிரச்சினை என்று பேசுவது அப்பட்டமான மோசடி இதற்கு முன்பு தமிழகத்தில் இதைப்போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அதில் பல அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் நேரடியாக தலையிட்டுள்ளனர்.

***

2016-ல் தஞ்சாவூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடனுக்கான தவணை செலுத்தத் தவறிய பாலன் என்ற விவசாயியை, போலீஸார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் காவிரி டெல்டா விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

2018-ல் காட்டுமன்னார்கோவில் அருகே தனியார் நிதி நிறுவனத்தினர் டிராக்டர் பறிமுதல் செய்ததால் மனமுடைந்த விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார், காட்டுமன்னார்கோவில் அடுத்த கருணாகரநல்லுாரைச் சேர்ந்தவர் தமிழரசன்.

படிக்க : ஆதிவாசி பணிப் பெண்ணை சித்திரவதை செய்த பாஜக-வின் சீமா பத்ரா!

2022-ல் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள தேவனூரை சேர்ந்த சின்னத்துரை என்பவரின் டிராக்டரை பறிமுதல் செய்ததால் மனம் உடைந்த விவசாயி சின்னத்துரை தற்கொலை செய்து கொண்டார்.

***

வங்கி அதிகாரிகளையும் போலீசையும் விட்டு விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் இந்த கார்ப்பரேட் கும்பல் தான் தற்போது “மூன்றாம் நபரை அனுமதிப்பதை பரிசீலிப்போம்”என நாடகம் போடுகிறது.

அக்னிபத் திட்டத்தில் நான்கு ஆண்டுகள் பயிற்சி முடித்து வெளியே வரும் வீரர்களை எங்கள் நிறுவனத்தில் பணியமர்த்துவோம் என மகேந்திரா நிறுவனம் பகிரங்கமாக அறிவித்தது எதற்காக? இனிமேல் மகேந்திரா நிறுவனமே நேரடியாக குண்டர் படையை வைத்துக்கொண்டு விவசாயிகளையும் போராடக்கூடிய மக்களையும் ஒடுக்கும் என்பதுதான் எதார்த்தம். ஆகவே இந்த கார்ப்பரேட் கும்பலை பாதுகாக்கும் அரசு கட்டமைப்பையும் காவி கும்பலையும் வீழ்த்தாமல் விவசாயிகளுக்கு வாழ்க்கையில்லை!


ரவி

மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் – செருக்கையும் சுயதிருப்தியையும் ஒழித்துக்கட்டுதல்!

ந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மார்க்சிய லெனினியவாதிகள் பல குழுக்களாக பிளவுபட்டு சிதைந்து இருக்கிறார்கள். அதற்கு முதன்மையான காரணம் அந்த குழுக்களின் தலைவர்களிடமுள்ள குட்டிமுதலாளித்துவ பண்பான “தான்” என்ற அகம்பாவம்தான். தமிழகத்திலுள்ள குட்டிமுதலாளித்துவ வர்க்கப் பிரிவைச் சேர்ந்தவர்களிடம் இந்த பண்பு இயல்பாக காணப்படுகிறது. இந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கங்களிலிருந்து வருபவர்கள்தான் இந்த குழுக்களில் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இயல்பாக உள்ள இந்த குட்டிமுதலாளித்துவ பண்பை கைவிட்டு பாட்டாளி வர்க்க பண்பை வளர்த்துக் கொள்வதன் மூலமாகவும் பிறரிடமிருந்தும் பிற குழுக்களிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுவதன் மூலமே பாட்டாளிவர்க்க முன்னணியில் பலரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பொதுக்கொள்கையை உருவாக்கி ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்ட முடியும்.

மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் – செருக்கையும் சுயதிருப்தியையும் ஒழித்துக்கட்டுதல் குறித்து மத்தியக் குழுவின் வழிகாட்டுதல்.

டிசம்பர் 13, 1963.

(மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி ஒன்பது – பக்கம் 56)

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அறிக்கை கீழே:-

நமது தோழர்களிடம் பொதுவாகக் காணப்படும் குறைகளை இப்படிப் பட்டியலிடலாம். சுயதிருப்தி, தற்பெருமை; மார்க்சிய இயக்கவியல், பகுப்பாய்வு அணுகுமுறை – அதாவது ஒன்றை இரண்டாகப் பகுத்து ஆய்தல் (சாதனைகள், குறைபாடுகள் என இரண்டாக) இவற்றை தமது செயல்பாடுகளில் பொருத்திப் பார்க்கத் தவறுதல்; தமது தளத்தில் என்ன வேலை உண்டோ அதை மட்டும் செய்வது; சாதனைகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது, குறைபாடுகளையும் தவறுகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பது; முகஸ்துதியை விரும்புவது, விமர்சனங்களை வெறுப்பது; உயர், நடுத்தர கட்சி ஊழியர்களை அவர்களது மாகாணங்கள், நகரங்கள், ஊர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறைகளில் மட்டும் அல்லாது, பிற மாகாணங்கள், நகரங்கள், ஊர்கள், பிற துறைகளிலும் களப்பணி ஆற்றச் செய்து தமது அனுபவங்களை தமது பிரதேசம் மற்றும் துறைகளிலும் பொருத்திப் பார்த்து ஒப்பீடு செய்து தமது பணிகளை மேலும் கூர்மைப்படுத்துவது ஒரு சிறந்த அணுகுமுறை.

படிக்க : நூல் அறிமுகம் : ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் கதை | பொதும்பு வீரணன்

ஆனால் இத்தகைய களப்பணிகளில் ஆர்வமின்றி இருப்பது; தமது மாவட்டத்தில், தனது துறையில் மட்டும் கவனம் செலுத்துவது, (குறுகிய பிரதேசமான) அங்கே தனது பணிகளைப் பற்றித் தானே பீற்றிக்கொண்டு அகங்காரம் கொள்வது, இதனால் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றிவருவது, வெளியே இருக்கும் ஒரு மிகப்பரந்த உலகைப் பற்றிய பார்வையோ அறிவோ இன்றி இருப்பது; மத்தியக் குழுவால் ஆங்காங்கே அனுப்பப்படுகின்ற வெளிநாட்டு விருந்தினர்கள், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வரும் விருந்தினர்களுக்கு, தத்தமது சாதனைகளைப் பற்றி மட்டுமே பெருமையாக எடுத்துக் கூறுவது, குறைகளை மறைப்பது, தமது பணிகளைப் பற்றியே கூட மேம்போக்காகப் பேசுவது, ஆர்வமின்றி இருப்பது.

இதுபோன்ற குறைபாடுகளை நமது தோழர்களிடம் பலமுறை சுட்டிக்காட்டி “திருந்துங்கள்” என்று வேண்டிக்கொண்டோம். ஒரு கம்யூனிஸ்டின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? எந்த ஒரு விசயத்தையும் மார்க்சிய இயக்கவியல் பார்வையோடு அணுகவேண்டும். சாதனைகள் இருக்கும்போது குறைபாடுகளும் இருக்கும். உண்மை இருக்கும்போது உண்மைக்கு நேர்மாறான தவறுகளும் இருக்கும்.

எல்லா விசயங்களும் இயக்கங்களும் எப்போதும் இயங்கிக்கொண்டே வளர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. பொருளாதாரம், அரசியல், தத்துவம், கலாச்சாரம், ராணுவம், கட்சி எனவும் இன்னபிற அனைத்தும். இதுதான் ஒரு மார்க்சியவாதியின் பொதுவான அடிப்படை புத்தியாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறை என்னவாக இருக்கின்றது? மத்தியிலும் கீழ்மட்டங்களிலும் இருக்கின்ற பல தோழர்களுக்கு இதுபோன்ற பார்வையும் இல்லை, தமது பணிகளில் இதுபோன்ற அணுகுமுறையும் இல்லை. அவர்கள் மனங்களில் மரத்துப்போன பழங்கோட்பாடு ஆழமாக வேர்விட்டுப் பதிந்துபோய் உள்ளது.

அவர்களால் அதைப் பிடுங்கி எறியமுடியாத அளவுக்கு அது பலமாக உள்ளது. மரத்துப்போன பழங்கோட்பாட்டு எதிர்மறைக் கூறுகளின் ஒருங்கிணைவை மறுக்கின்றது, எதிர்மறைக் கூறுகளின் நேரெதிர் குணாம்சங்களை மறுக்கின்றது (ஒன்றை இரண்டாகப் பிரித்துப் பார்ப்பது), ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இரண்டு நேரெதிர் கூறுகள் தனது குணாம்சங்களை தலைகீழாக மாற்றிக்கொள்ளும் என்ற கோட்பாட்டை மறுக்கின்றது.

விளைவு என்ன? இந்த தோழர்களுக்கு சுயதிருப்தியும், அகங்காரமும் தலைக்கு ஏறுகின்றது; தமது சாதனைகளைப் பற்றி பெருமை பேசுவார்கள், பலவீனங்களையோ குறைகளையோ கண்டுகொள்ள மாட்டார்கள்; தமக்கு இதமானவற்றை மட்டுமே மற்றவர்கள் பேசினால் கேட்ப்பார்கள், விமர்சனம் இவர்களுக்கு வேப்பங்காய்; சுயவிமர்சனமோ சுத்தமாக இல்லை (இரண்டாக பிரித்துப் பிரித்துப் பார்ப்பது); மற்றவர்கள் விமர்சித்தால் பயப்படுவார்கள். ‘அகங்காரம் தன்னை அழிக்கும் பணிவு ஒருவனை மேம்படுத்தும்’ என்ற நமது பழமொழி இன்றும் பொருந்தும். பாட்டாளி வர்க்கப் பார்வையிலிருந்தும் சாமானியர்களின் பார்வையிலிருந்தும் இந்த பழமொழி எப்போதும் சரியாகவே இருக்கின்றது.

1) அகங்காரம் எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா வடிவங்களிலும் தலையெடுத்து வளர்கின்றது. பொதுவாக, வெற்றிபெற்றவர்களிடம் அகங்காரம் தலையெடுக்கிறது. ஏன்? மிக மோசமான ஒரு சூழலில்தான் ஒருவனுக்கு தனது குறைபாடுகள் என்ன என்பது தெளிவாகத் தெரிகின்றது, எனவே அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பான். மிக இக்கட்டான சூழலில் அடக்கமும் எச்சரிக்கையும் மட்டுமே ஒருவனை காப்பாற்றும். ஆனால் வெற்றி பெற்ற ஒருவனைச் சுற்றி மக்கள் பணிவுடன் நிற்கின்றார்கள்; எதிரிகள்கூட புகழாரம் சூட்டக் கூடும். இவையாவும் வெற்றி பெற்றவன் தலையில் அகந்தையையும் அகங்காரத்தையும் திணித்துவிடுகின்றன. “இனி எனது ராஜ்யத்தில் எல்லாம் சுகமே” என்று அவன் கனவுகளைத் தொடங்குவான். வெற்றி நமது பக்கம் இருக்கும்போது அகங்காரம் என்னும் வைரஸ் நம்மை மிக எளிதாகத் தொற்றித் தாக்கிவிடும் என்பதை நமது கட்சி நன்றாகவே உணர்ந்துள்ளது.

2) அகங்காரமும் தன்முனைவும் வெற்றிபெற்றவனைத் தழுவும்போது தற்பெருமை தானாகவே தலைதூக்கி ஆடும். இது ஒருவகை அகங்காரம். மற்றொருவகை தற்பெருமை உண்டு. அது சாதாரண சூழலில் தலைதூக்குவது. ஆரவாரமான வெற்றியுமல்ல, மோசமான தோல்வியுமல்ல என்ற சூழலில் “மிக நன்று என்று சொல்லமுடியாது; ஆனால் மிக மோசம் என்பதையும் விட பரவாயில்லை”, “இருபத்து நான்கு வருசம் மருமகளாக இருந்தால், ஒருத்தி தானாகவே மாமியார் ஆகிவிடுவாள்தானே” – இதுபோன்ற பிற்போக்குத்தனமான நொண்டிச் சமாதானங்களை நியாயப்படுத்தும் போது தற்பெருமை தலைதூக்குகின்றது.

மூன்றாவது வகை தற்பெருமை உண்டு. அது பின்தங்கியிருக்கின்ற சூழலில் தலைதூக்கும். தாங்கள் பின்தங்கியிருப்பதைக் கூட சிலர் பெருமையாகக் கருதுகின்றார்கள். “எங்களது பணிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது உண்மைதான்; ஆனால் கடந்தகாலத்தை விட எவ்வளவோ மேல்”, “அவர்களைப் பாருங்கள்! எங்களை விடவும் படு மோசம்!” என்று நினைத்துவிட்டால் தாங்கள் பின்தங்கியிருந்தாலும் அவர்களுக்கு தற்பெருமை தலைதூக்கிவிடுகின்றது. இவர்களிடம் பேசிப்பாருங்கள், அவர்களது செயல்பாடுகளைப் பற்றிப் பேச ஏதாவது ஒரு சந்து கிடைத்தால் போதும், “முன்னொரு காலத்தில்…..” என்று மிகப் பிரகாசமான முகத்தோடு தமது வரலாற்றைக் கதைக்கத் தொடங்கி விடுவார்கள்.

3) மக்கள் சக்தியை எப்போது குறைத்து மதிப்பிடத் தொடங்குகிறோமோ அப்போதே தற்பெருமை தலைதூக்கத் தொடங்கிவிட்டது. எதார்த்தத்தை உணராதபோதும் தமது பணிகளை அளவுக்கு அதிகமாக ஊதிப் பெரிதாகக் காட்டிப் பெருமை கொள்ளும் போதும் தற்பெருமை தலைதூக்கும்.

4) தற்பெருமை, தற்பற்றுப் (தன்நலம்) பார்வையிலிருந்து பிறக்கிறது; தற்பெருமை தற்பற்றுப் பார்வையை வளர்க்கின்றது. அது தற்பற்று சார்ந்தது.

5) வர்க்கப் பார்வையுடன் ஆய்வோமானால், தற்பெருமை அடிப்படையில் சுரண்டல் வர்க்கக் கோட்பாட்டிலிருந்து பிறப்பதாகும்; இரண்டாவதாக சிறு உற்பத்தியாளர்கள் கோட்பாட்டிலிருந்து பிறக்கின்றது.

6) தொழிலாளி என்ற நிலையில் பார்த்தால், சிறு உற்பத்தியாளர்கள் பல சிறப்பான குணங்களைக் கொண்டவர்கள்தான். அவர்கள் கடும் உழைப்பாளிகள், சிக்கனமானவர்கள், எதார்த்தவாதிகள், எச்சரிக்கை உணர்வுடன் கூடிய எதையும் எதிர்நோக்கி சமாளிக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால், சிறு உடமையாளர்கள் என்ற நிலையில் அவர்கள் தற்பற்றாளர்கள் (தன்நலக்காரர்கள்) என்பதும் உண்மையே. முக்கியமாக, இவர்களது பணிக் கலாச்சாரம் மற்றும் பண்டையகால உற்பத்திமுறைகளின் காரணமாக இவர்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், குறுகிய மனப்பான்மையும் உலக ஞானமும் இல்லாத தற்பற்றாளர்களாக இருக்கின்றார்கள். ஒன்றுபட்டு நிற்பதன் மகத்தான பொருளை உணராதவர்களாகவே இருக்கின்றார்கள். இதனால் அவர்கள் தன்னலம் பற்றிய சிந்தனையில் திளைத்தவர்களாகவே இருக்கின்றார்கள். சிறுசிறு சாதனைகளில் கூட இவர்கள் திருப்தி அடைந்து விடுகின்றார்கள். “ஆஹா, இதுவல்லவோ சாதனை”, “மிக நன்று என்று சொல்ல முடியாது; ஆனால் மிக மோசம் என்பதை விடவும் பரவாயில்லை” என்று தற்பெருமையில் மூழ்கி விடுகின்றார்கள்.

7) தற்பெருமை என்பது, முதலாளி வர்க்க, கருத்தியல்வாதக் பார்வையிலிருந்து பிறக்கிறது. (அதாவது முதலாளி வர்க்க கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து பிறக்கிறது). தற்பெருமை ஒருவரை மிகமிக மோசமான மனிதராக்கிவிடும். எதார்த்தத்துடன் மோதவேண்டிய சூழலுக்கு ஒருவரைத் தள்ளிவிடும். சமூகம் வளர்ந்துகொண்டே செல்லும், நிலைத்து நிற்பதில்லை என்பதுதான் எதார்த்தம். ஆனால் அத்தகைய எதார்த்தத்துடன் ஒருவர் மோதுகின்றார் என்றால் அவர் இயற்கை விதியை மீறுகின்றார் என்றே பொருள்; விளைவு என்ன? அவர் தோல்வியையே சந்திப்பார். பொருள்முதல்வாதி வரலாற்றை எப்படிப் பார்க்கின்றான்? சமூக வளர்ச்சி வரலாறு என்பது யாரோ ஒருசில பெரிய மனிதர்களின் வளர்ச்சியைக் குறிப்பதல்ல; உழைப்பாளிகள் திரளின் வளர்ச்சிதான் சமூக வளர்ச்சி என்பதன் உண்மையான பொருள். அகங்காரம் தலைக்கேறிவிட்டால் “நான் யார் தெரியுமா”, “என்னால்தான் எல்லாமும்” என்ற போக்குகள் தானாகவே தலைதூக்கும். மக்கள் திரளின் மகத்தான சக்தியை துச்சமாக மதிப்பிடுவார்கள்.

8) எனவேதான், தற்பெருமை, தற்புகழ்ச்சி – இவை மார்க்சிய – லெனினியத்துக்கு எதிரானவை; நமது கட்சியின் இயக்கவியல் பொருள்முதல்வாத – வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வைக்கு எதிரானவை என்று சொல்கிறேன்…………… தொடரும்.

படிக்க : வீரவணக்கம், அஞ்சலி செலுத்துவது தொடர்பாக பாட்டாளி வர்க்கக் கட்சியின் அணுகுமுறை பற்றிய சில குறிப்புகள்

குறிப்பு:- குட்டிமுதலாளித்துவ வர்க்கங்களிலிருந்துதான் அறிவுஜீவிகள் உருவாகிறார்கள். இத்தகைய அறிவுஜீவிகள்தான் புரட்சிகர கம்யூனிச அமைப்புகளுக்கு தலைமைதாங்குகிறார்கள். இவர்கள்தான் மார்க்சிய லெனினிய சித்தாந்தங்களை உள்வாங்குகிறார்கள். அதன் அடிப்படையில் சமூக அரசியல் பொருளாதாரத்தை வரலாற்றுரீதியாக ஆய்வுசெய்து சமூகத்தை மாற்றுவதற்கான கருத்துக்களை உருவாக்கி முன்வைக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் சமூகத்தை மாற்றுவதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டு மக்கள் திரட்டப்பட்டு மக்கள்திரளினால் போராட்டங்கள் நடத்தப்பட்டு சமூகங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது வரலாறு. சமூக மாற்றத்திற்கான வரலாற்றில் குட்டிமுதலாளித்துவ வர்க்கங்களிலிருந்து வரும் அறிவு ஜீவிகளின் பங்கு இத்தகையதாகும்.

இத்தகைய அறிவுஜீவிகளால் தலைமைதாங்கி வழிநடத்தப்பட்ட சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியானது புரட்சி நடத்தி சாதனைபுரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கட்சிக்குள் சில அறிவுஜீவிகள் அகம்பாவம் பிடித்து தற்புகழ்ச்சிக்கு ஆளாகினார்கள். அத்தகைய தோழர்களால் கட்சிக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தே சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு இதுபோன்ற குட்டிமுதலாளித்துவ பண்புகளை கைவிடவேண்டும் என்று கூறியது.

ஆனால் சீனாவைப் போல் இங்கு புரட்சி எதுவும் நடத்தப்படாத சூழலிலும், ஒரு பலம் வாய்ந்த கட்சி இல்லாமலும் குழுக்களாகவே நீடித்துக்கொண்டுள்ள சூழலில் இந்த குழுக்களிலும் கட்சிக்குள்ளும் செயல்படும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் இந்த குட்டிமுதலாளித்துவ நோயான தற்பெருமை, அகம்பாவம், பிறரை மதிக்காமல் உதாசீனப்படுத்தும் தன்மைகள் நீடிப்பது எவ்வளவு பெரிய அபாயம் என்பதை உணர்த்தி இத்தைய குட்டிமுதலாளித்துவ பண்புகளான அகம்பாவத்தை கைவிட்டு பாட்டாளிவர்க்க பண்பை உயர்த்திப் பிடித்து செயல்பட வேண்டும்.

நன்றி : இலக்கு இணைய இதழ்

பெட்ரோல் – டீசல் விலை: உழைக்கும் மக்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகள்!

பெட்ரோல், டீசல் எரிப்பொருட்களின் விலையை தீர்மானிப்பது யார்?

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதனால் தான் பெட்ரோல் – டீசல் விலை ஏறுகிறது என்று மோடி அரசு கூறிவந்த நிலையில், தற்போது குறிப்பாக ஜூலை மாத இறுதியில் பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 110 டாலர்க்கு வர்த்தகமான கச்சா எண்ணெய், செப்டம்பர் மாத தொடக்கத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலர்க்கு கீழ் குறைந்துள்ளது.

இது கடந்த ஏழு மாதங்களில் இல்லாத சரிவாகும். ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மக்களை வஞ்சித்து வருகிறது மோடி அரசு.

கச்சா எண்ணெயின் விலை கடுமையாக குறைந்துள்ள போது பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பதை பற்றி பேசாமல், கிட்டத்தட்ட 85 சதவிகிதம் எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு இது ஒரு பெரிய நிம்மதி என்றும், கச்சா எண்ணெய் விலை குறைவதால் பணவீக்கத்தின் ஒரு பகுதியை குறைக்க முடியும் என்றும் கூறிவருகின்றனர் ஆளும் வர்க்க பொருளாதார நிபுணர்கள்.

இதற்கு மேல் ஒருபடி சென்று, கச்சா எண்ணெய் விலை குறைவது அனைத்து பங்குதாரர்கள், அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு பெரிய நிவாரணம் என்று கூறுகின்றனர். ஆனால் உழைக்கும் மக்களுக்கு இந்த விலை குறைவு எந்த பலனையும் அளிக்கவில்லை என்பதை பற்றி வாய் திறக்க மறுக்கின்றனர்.

படிக்க : பெட்ரோல், டீசல் விலை உயர்வு : காரணம் என்ன?

மேலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு அதன் மீது விதிக்கப்படும் வரியும் முக்கிய காரணமாக உள்ளது.

பெட்ரோல் – டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் 69 சதவீதம் வரி விதிக்கிறது. உலகிலேயே பெட்ரோல் – டீசல் மீது அதிக வரிவிதிக்கும் நாடாக இந்தியா இருப்பதே விலையேற்றத்திற்கு முக்கிய காரணம்.

குறிப்பாக கலால் வரியை அதிகரித்து கல்லா கட்டும் வேலையை செய்து வந்த மோடி அரசு, தற்போது பெட்ரோல் – டீசல் (எரிப்பொருட்கள்) மீதான செஸ் வரியையும் உயர்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவில் தினசரி பெட்ரோல் – டீசல் (எரிப்பொருட்கள்) விலையை தீர்மானம் செய்யும் உரிமையை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் முறையாக எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கியது. இதன் பிறகுதான் இந்தியாவில் எரிப்பொருட்களின் விலை அன்றாடம் மாறுபடும் ஒன்றாக இருக்கிறது.

பெரும்பாலும் எரிப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் இங்கு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதில்லை.

படிக்க : 5G அலைக்கற்றையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்ற மோடி அரசு!

மக்கள் மத்தியில் உருவாகும் கொந்தளிப்பை சமாளிக்க எப்போதாவது ஒன்று இரண்டு ரூபாய் குறைப்பார்கள். உதாரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் காலகட்டத்தில் தேர்தலில் ஓட்டு பொறுக்குவதற்காக மட்டும் 137 நாள்கள் பெட்ரோல்-டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் மோடி அரசு கட்டுக்குள் வைத்திருந்தது.

தற்போது இந்திய ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருட்களை கொள்முதல் செய்து வருகிறது. இதனுடைய பலனும் உழைக்கும் மக்களுக்கு கிடைப்பதில்லை. தங்களது இலாப நோக்கத்திற்காக பெட்ரோல் – டீசல் (எரிப்பொருட்கள்) விலையின் ஏற்றம் இறக்கத்தை கார்ப்பரேட் முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள், அதற்கு இந்த காவி அரசு அவர்களுக்கு உதவி செய்கிறது.


ஜீவா

Let’s unconditionally support the Kallakurichi struggle model! Let’s stand by the students and youth of Tamil Nadu!!

The Kallakurichi model is a form of struggle carried out by a part of the mass of people who have directly or indirectly gained various experiences from tens of thousands of spontaneous struggle models.

Educational institutes around Kaniyamoor in Kallakurichi district are mostly owned by gounder caste-fanatics.  Sakthi Matric Higher Secondary School is not only a symbol of private education but also a part of the caste dominance  of the kongu vellala gounder caste-fanatics.

Sakthivel, the Principal of the school, is the administrator of Dheeran Chinnamalai Peravai, a caste-fanatic outfit of gounders. He was very close to Edappadi Palaniswami.  He recently joined BJP.  Moreover, RSS programs and shakhas are being held in the school.

Gounder casteists don’t even allow the oppressed caste people to run shops in that locality. A few years ago an oppressed caste man was attacked by gounder caste-fanatics while trying to open a beef chilli shop. This shows that Kaniyamoor is a stronghold of gounder caste fanatics.

Not only the mysterious death of the student Srimathi, but also seven other students are said to have died in Sakthi Matric School so far.  However, the death of four students were confirmed ones.  A student died after falling off a school bus; two students were fighting in the bathroom and one student was killed — these two incidents were accidents and hence can be passed over.  But the death of Class 12 student Prakash cannot be considered that way.

Also Read : Shinzo Abe’s Assassination – US Intervention?

Prakash, son of Subramaniam of Nainarpalayam, Eriyur, died mysteriously in 2007. Even after 15 years, the case has not come up for trial. This exposes the relationship between the school management and the State bureaucracy.

When there was no reason to kill himself, the boy was found dead in a well about 2 kilometers away from the school. Not only his parents; no-one else can believe it!

Hundreds of people protested in front of the school demanding justice for Prakash’s mysterious death.  As a result, talks have been held with the school management.  Hundreds of gounder caste-fanatics with sticks in hand threatened from outside the negotiation room.  Finally the matter is settled by paying the parents a certain amount.

Support of the bureaucracy, support of the dominant casteists, RSS background – who would have expected that the protest that demanded justice for Srimathi would question the enormity of the private school.

All the struggles of Srimathi’s mother to perceive how her daughter died ended up in vain. The fact that the police and the bureaucracy are protecting Sakthi Matric School also got exposed.

It is said that Kannagi burned Madurai to seek justice for her husband’s death.  The tears of the mother who demanded justice for the death of Srimathi, burned the hearts of the students and youth of Tamil Nadu.  The great struggle started by the mother of the student demanding justice for her daughter has turned into a mass struggle crossing caste barriers. The protagonists of this heroic struggle are the students and youth of Tamil Nadu.

Also Read : Parliamentary Fascism

The spontaneous student-youth protest in Kallakurichi reminds us of the jallikattu protest model.  Just as the students and the youth have organised themselves through social media during the jallikattu protest, various WhatsApp groups have been formed in the name of ‘Justice for Srimathi’ and they organised themselves against Kallakurichi Sakthi Matriculation School.

They have produced and disseminated many e-banners, short videos and recordings demanding justice for Srimathi. Placards and black shirts have been made ready on the protest day.  Among the youth of the area who participated, members of fan clubs were also included.

On July 17, when hundreds of protestors began demanding justice for Srimathi, road roko was conducted. This hundred has increased to about five thousand when students and youth joined the protest.  This changed the quality of the struggle and the struggle got  intensified. The continuous struggle of those who have been fighting for justice for the student’s death for 4 days, the police inaction against the school administration, and the RSS background of the school administration created a storm in the minds of the people which looted the school and set ablaze.

The protest was an act of revenge for the lives lost due to the privatization of education. Till now, Tamil Nadu has never seen such protest against the atrocities of private schools and institutional killings. It is not a common thing that the youth got spontaneously mobilized to fight against an injustice, that too from a relatively backward, casteist area called Chinna Salem and not from a metropolitan area like Chennai. This is a special feature of this protest.

Those ‘neutral’ speakers including many among us spoke of Kallakurichi as a violent struggle, RSS instigated struggle or struggle by anti-social elements without any logic. They are unable to grasp the fundamental rule that spontaneous popular struggle against injustice could take a violent form depending on the circumstances. Those who speak like this fall prey to the debate stirred up by those who prop-up the DMK regime;  On the other hand, they express their lack of trust in the people.

But the ruling class and the State knew better than us and sensed that a jallikattu style protest is propagating. Kallakurichi agitation has threatened them.  After this protest, by unleashing massive police terror, the State has openly threatened the students and youth of Tamil Nadu, who are fighting injustice with passion.

After the protesters dispersed around 12 O’clock, the police arrested more than 300 innocent youths, students and people from that surrounding for rioting. On the other hand, the gounder caste-fanatics, who could not bear the destruction of the symbol of their caste supremacy, conducted hunts in parallel with the police in the area and attacked other caste youths including the Dalits and Vanniyars;  Dalit youths in particular have been brutally attacked by them and were taken to the police.

The police searched for and arrested the students who created WhatsApp groups demanding justice for Srimathi.  The police broke the limbs of the youths and openly advertised that they had ‘slipped and fallen in the bathroom’.

It is impossible to count how many students have committed suicide, been murdered or mysteriously died in educational institutions in the last decade.  Because the government and the bureaucracy have turned all those murders into suicides. This gave a bonafide that privatization of education and the ‘noble’ education mafia has nothing to do with the killings that took place in these schools. Even in the death of Kallakurichi Srimathi, the bureaucracy is moving the case in that direction.

The entire political-economic policy of the State is privatization-liberalisation-globalisation, and this government can only defend it and enrich the corporates with these policies.  Only when we think from the perspective of how such a government could render justice to those killed by these private educational institutions, we can understand and also support the struggle against Kaniyamoor Sakthi Matric School.

Also Read : Droupadi Murmu, Illayaraja: Be traitor and get a Post!

The jallikattu model shows that lakhs of people can gather on the beach and bring the Modi government to its feet; Thoothukudi model shows that corporate Vedanta can be shut down if lakhs of people gather; The burning of fishermen’s huts in Chennai, the brutal attacks on people, the Thoothukudi shootings and subsequent repressions were all to prevent such methods of protest from spreading. These are models created by the police and the State to suppress people.

The Kallakurichi model is a form of struggle carried out by a part of the mass of people who have directly or indirectly gained various experiences from tens of thousands of spontaneous struggle models. Another model was the model of oppression that included police crackdown in collaboration with the casteist gang led by Rajasekhar against this Kallakurichi protest model.

We can only side with one of these two.  Because henceforth Kallakurichi model or an improved model will be the form of people’s struggle. When people’s lives are being robbed little by little every day, they will erupt like a volcano against the injustice. Those who support the anti-Rajapaksa model of struggle in Sri Lanka do not support the Kallakurichi model. Because caste and class influence their thoughts. The claims of these neutral heroes should be rejected.

Let us understand the intent of the bureaucracy to suppress the conscience against injustice by intimidation, and support the Kallakurichi model of struggle unconditionally!

Editorial

ஊடகவியலாளர் நக்கீரன் பிரகாஷ் மற்றும் அஜித் ஆகியோர் மீதான தாக்குதலை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது!

20.09.2022

கள்ளக்குறிச்சி இருப்பது தமிழ்நாட்டிலா? உத்தரப்பிரதேசத்திலா?

சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளின் பிணையை ரத்து செய்க!

ஊடகவியலாளர் நக்கீரன் பிரகாஷ் மற்றும் அஜித் ஆகியோர் மீதான தாக்குதலை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது!

சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்துக!

நேற்றைய தினம் (19.09.2022) கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தொடர்பாக செய்தி சேகரித்து விட்டு திரும்பிக்கொண்டிருந்த நக்கீரனின் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமராமேன் அஜித் ஆகியோரை சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் தம்பி அருள்பிரகாஷ் மற்றும் அதிமுக கவுன்சிலர் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய கும்பல் இரண்டு முறை தாக்கியிருக்கிறது.

படுகாயம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்குப்பிறகு  அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கவுன்சிலர் ராஜசேகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கவுன்சிலர் ராஜசேகர் என்பவர் யார்? ஆதிக்க சாதிவெறி சங்கத்தின் முக்கிய பிரமுகரான ராஜசேகர் சமீபத்தில் பி.ஜே.பி.யில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த கவுன்சிலர் ஆனவர். சக்தி மெட்ரிக் பள்ளி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு தன்னுடைய ஆதிக்க சாதிவெறி கூலிப்படையை வைத்து போலீசுடன் கூட்டுச்சேர்ந்து சாலையில் வந்தவர்கள், சென்றவர்கள் அனைவரையும் பிடித்து அடித்து  சாதிரீதியாக இழிவுபடுத்திய கிரிமினல்.

பள்ளியை சேதப்படுத்தினார்கள் என்று ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களை கைது செய்த போலீஸ்,  இப்போராட்டத்திற்கு சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் தேடித்தேடி பிடித்து கைகால்களை உடைத்த இந்த ராஜசேகர் கும்பல் மீது கை வைக்க துணியவில்லை. ஏனென்றால் மக்கள் மீதான தாக்குதல் என்பதே ராஜசேகரும் போலீசும் சேர்ந்து இணைந்து நடத்தியதுதான்.

ராஜசேகரின் பின்னணியும் அராஜகங்களும் வெளிவந்த உடனே அரசு அவரை கைதுசெய்து இருக்குமேயானால், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த துணிந்து இருக்கமாட்டார்கள்.

ராஜசேகர் மற்றும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகளுக்கு இப்படிப்பட்ட தைரியத்தையும் துணிவையும் கொடுத்தது தமிழ்நாடு போலீசின் நடவடிக்கைகளே.

சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் இப்பொழுது இப்பள்ளியின் கிரிமினல் தனமான நடவடிக்கைகளுக்கு பதில் கூறியாக வேண்டும்.

சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர், அவருடைய மனைவி உள்ளிட்ட அனைவரின் பிணை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதற்கு நக்கீரன் பிரகாஷ் உள்ளிட்டோர் மீதான தாக்குதலே முக்கியமான ஆதாரம்.

ஆகவே, இந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மட்டுமல்ல; இப்பள்ளிக்கு ஆதரவாக வந்த அனைத்து கல்வி நிறுவனங்களும் அரசுடமையாக்கப்பட வேண்டும்.

இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கும் அப்பள்ளியின் தாளாளர் தம்பி உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட வேண்டும். மேலும் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321.

ஆ.ராசா மீதான இந்து மதவெறி பாசிச சக்திகளின் தாக்குதல்களை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது !

19.09.2022

ஆ.ராசா மீதான
இந்து மதவெறி பாசிச சக்திகளின் தாக்குதல்களை
மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது !

பத்திரிகை செய்தி

ழைக்கும் மக்களை சாதி ரீதியாக இழிவுபடுத்தி அவர்களை வேசி மகன் என்று அழைத்தது ஆரிய பார்ப்பனர்களின் வேதமே!

ஆரிய, வேத, இதிகாச புராண புரட்டுக்களை அம்பலப்படுத்துவதே தமிழர் பண்பாடு!

மனுதர்மத்தில் சூத்திரர்களும் பஞ்சமர்களும் எவ்வாறு வகைபடுத்தி இருக்கிறார்கள் என்பதை விளக்கிப் பேசினார் திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா.

அவருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, இந்து முன்னணி பாசிச சக்திகள் பல்வேறு அவதூறுகளையும் பொய் புரட்டுகளையும் கிளப்பி தாக்குதல் தொடுத்து வருகின்றன.

இந்துக்களை விபச்சாரி மகன் என்று ஆ.ராசா கூறியதாக பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியும் நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு செய்ய வேண்டுமென்றும் பாசிச சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதன்மூலம் தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்து மதம் மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து வைத்து பிரம்மனின் காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும் அழுக்கில் பிறந்தவன் பஞ்சமன் என்றும் கூறி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை இழிவுபடுத்தும் இந்து மத வேதங்களை அம்பலப்படுத்தியது தவறல்ல.

அம்பேத்கர், பெரியார் மட்டுமல்ல சித்தர்கள் முதல் வள்ளலார் வரை பார்ப்பனிய எதிர்ப்பு மற்றும் வேத எதிர்ப்பு என்பது தமிழகத்தின் மரபாகும்.

தமிழ்நாட்டில் வேதம் எப்போது திணிக்கப்பட்டதோ அக்காலத்திலிருந்தே வேத எதிர்ப்பு என்பது தொடங்கிவிட்டது. நால் வர்ணங்களை உருவாக்கிய ஆரியத்துக்கு எதிராகத்தான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை படைத்தான் வள்ளுவன்.

படிக்க : சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை! ஒருபோதும் வரவேற்க முடியாது! | மக்கள் அதிகாரம்

பறைச்சியாவது ஏதடா பார்ப்பனத்தியாவது ஏதடா என்றார்கள் சித்தர்கள்.

வேத, இதிகாச மரபை எள்ளி நகையாடுவதும் தூக்கி எறிவதுமே தமிழ்ப் பண்பாடு, சுயமரியாதை பண்பாடு.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மீதான தனிப்பட்ட பிரச்சினை அல்ல இது. தமிழ்நாட்டின் மீது தமிழனின் தன்மானத்தின் மீது பாசிச சக்திகளால் விடப்பட்டிருக்கும் சவால்.

ஆ.ராசாவுக்கு விடப்பட்ட மிரட்டல், தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்துக்கு விடப்பட்ட சவால்.

ஆரிய – வேத – இதிகாசத்தை வைத்துக்கொண்டு இந்து மதவெறி பாசிச சக்திகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடத்தப்படும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றால், ஆ.ராசா தெரிவித்த வேத இதிகாசம் எதிர்ப்புக் கருத்துக்களுக்கு ஆதரவாக நாம் களம் இறங்குவதும், தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்ற திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, இந்து முன்னணி பாசிச சக்திகளை விரட்டியடிப்பதும், இந்துமதவெறி பாசிச எதிர்ப்பு, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் ஆகிய நம் அனைவருடைய கடமை என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், ஆ.ராசாவுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் இந்து மதவெறி பாசிச சக்திகள் உடனடியாக கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் வலியுறுத்துகிறது.


தோழமையுடன்,
தோழர் மருது
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

நேரலை – ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | சென்னையில் மாநாடு!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!
செப்டம்பர் 17, 2022 பெரியார் பிறந்த நாளில், சென்னையில் மாநாடு!

நேரலை இன்று மாலை சரியாக 5 மணிக்கு துவங்கும்!

பாகம் 1:

பாகம் 2:

மாநாடு நடைபெரும் இடம் :
EVP ராஜேஸ்வரி மண்டபம், குமணன்சாவடி,
பூவிருந்தவல்லி, சென்னை.

நேரம் : மாலை 5 மணி

♦ ஆர்.எஸ்.எஸ்-பாஜக, அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியாக ஒன்றிணைவோம்!

♦ போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் மீதுள்ள மாயையை உதறியெழுவோம்! பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!

♦ பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்போம்!

000

நிகழ்ச்சி நிரல்

தலைமை: அமிர்தா, மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்.

உரையாற்றுவோர்:

  • வெற்றிவேல் செழியன், மாநிலச் செயலர், மக்கள் அதிகாரம்
  • தொல்.திருமாவளவன், MP தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
  • ஜவாஹிருல்லா, MLA, தலைவர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
  • B.அப்துல் ஹமீது, மாநிலத் துணைத் தலைவர், SDPI கட்சி, தமிழ்நாடு
  • கே.பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர், SKM, தமிழ்நாடு
  • பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
  • பரசுராமன், மாநில ஒருங்கிணைப்புக் குழு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
  • சேல்முருகன், வழக்கறிஞர், ம.ஜ.இ.க
  • பழனி, ம.ஜ.இ.மு
  • பொழிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழக மக்கள் முன்னணி
  • அபிகவுடா, நிறுவனர், ஒருங்கிணைப்பாளர், திராவிட சிட்டி இயக்கம், கர்நாடகா
  • இராமலிங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
  • துணைவேந்தன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

நன்றியுரை: ரவி, மாநில ஒருங்கிணைப்புக் குழு, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

பாசிச எதிர்ப்பில் அனைவரும் கைகோர்ப்போம்!

000

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
9791653200, 9444836642, 7397404242, 9962366321

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது ஏமாற்று! டெல்டாவை சூறையாடத் துடிக்கும் மோடி அரசு!!

டந்த 2020-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டது. “தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் 2020” இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி இம்மாவட்டங்களில் 2016-க்கு முன் அனுமதி பெற்ற ஹைட்ரோகார்பன் கிணறுகள் தவிர்த்து காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்ட கிணறுகளைத் திறக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு ஓ.என்.ஜி.சி நிறுவன பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் எடுக்கும் பணியால் விவசாய நிலங்கள் மீட்டுருவாக்கம் செய்ய முடியாத நிலையில் நாசமானது, நிலத்தடி நீர் மாசுபட்டது, பல்வேறு உடல் நலக் கேடுகளைத் தோற்றுவித்தது. இதனால் ஹைட்ரோகார்பன் எடுக்க தடைகோரி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களைக் கட்டமைத்ததன் பலனாகவே அதிமுக அரசால் டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதை தமிழக மக்கள் ஆதரித்து வரவேற்றனர்.

படிக்க : எல்கர் பரிஷத் வழக்கு: மனித உரிமை ஆர்வலர் கோன்சால்வ்ஸ்-க்கு மருத்துவம் மறுக்கும் சிறைத்துறை!

ஆனால், அண்மைக் காலமாக நடந்த நிகழ்வுகள் மூலமாக, ஓ.என்.ஜி.சி.க்கும் கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்களுக்கும் டெல்டாவை சூறையாடக் கொடுக்கும் தனது திட்டத்திலிருந்து பாசிச மோடி அரசு பின்வாங்கவில்லை என்பதும், வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பெல்லாம் வெறுமனே மாய்மாலம் என்பதும் அம்பலமாகியிருக்கின்றன.

0-0-0

கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி மாலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், பெரியகுடி எண்ணெய் கிணற்றிலிருந்து எரிவாயு எடுப்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் வழிகாட்டுதலோடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக கலந்தாலோசனைக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டது.

இதனையடுத்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், விவசாயிகளின் எதிர்ப்பால் அத்திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை எதுவும் கிடப்பில் போடப்படவில்லை என்றும் கூறினார்.

ஆகஸ்ட் 15 போலி சுதந்திர தினத்தன்று, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் இயக்குநரான அனுராக், கந்து வட்டிக் குழுக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் காரணமாக ஓ.என்.ஜி.சி 200 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறினார். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகளை, “கந்துவட்டிக்காரர்கள்” என்று இழிவுபடுத்தினார்.

இந்நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்க்கும்போது, மீண்டும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் டெல்டாவில் பல புதிய கிணறுகளை அமைப்பதற்காக ஆயத்தமாகி வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் சில தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னரும்கூட ஓ.என்.ஜி.சி நிறுவனம் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் காண முடிகிறது. தற்போது அதை தீவிரப்படுத்தி டெல்டாவை மேலும் சூறையாடுவதற்காக மோடி அரசு திட்டமிட்டு வருகிறது.

0-0-0

2018 ஆம் ஆண்டு ஆய்வின்படி, காவிரிப் படுகையில் மொத்தம் 700 கிணறுகள் உள்ளதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவித்தது. ஆனால் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் வெறும் 219 கிணறுகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே இருந்தன. மேலும் 183 கிணறுகளில் உற்பத்தி நடைபெறுவதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவிக்கிறது; ஆனால் 71 கிணறுகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே தங்களிடம் உள்ளதாகவும், அந்த 71 கிணறுகளுக்குமே சட்டப்பூர்வமாக இயங்குவதற்கு முறையான அனுமதி கொடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது.

இதே சட்டவிரோத நடவடிக்கையை 2020-ஆம் ஆண்டுக்குப் பின்னும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடர்ந்தது. காவிரிப்படுகைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு படிப்படியாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அறிவிப்பு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் முழுமையாக திருப்பித் தரப்படவில்லை. அங்கு தோண்டப்பட்ட கிணறுகளும் இன்னும் அகற்றபடாமலே உள்ளன.

இவையன்றி ஓ.என்.ஜி.சி-யின் பல கிணறுகளுக்கு, செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட அனுமதி காலம் முடிந்தும், அவற்றை மூடாமல் வைத்திருக்கிறார்கள். பல கிணறுகள் அனுமதியே இல்லாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, 2016-க்கு முன் அனுமதி பெற்ற ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தவிர்த்து புதிய கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவன பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் மராமத்து பணிகள் செய்வதாக நாடகம் ஆடிக்கொண்டு பழைய எண்ணெய் வயல்களில் புதிய கிணறுகளை ஓ.என்.ஜி.சி அமைத்து வருகிறது. பழைய கிணறுகளில் உற்பத்தித் தூண்டலுக்கு அபரிமிதமான ரசாயனக் கலவையை உள்ளே செலுத்துவதன் மூலம் பழைய கிணறுகளைப் புதுப்பித்து வருகிறது. இதனால் இன்னும் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இவ்வாறு டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும் ஓ.என்.ஜி.சி. அங்கு தன் நாசகர வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஆனால் வித்தியாசம் என்னவெனில், இதுநாள் வரை திரைமறைவில் கொல்லைப்புறமாகச் செய்து கொண்டிருந்தவற்றை இப்போது பகிரங்கமாகவே செய்யவும், மேலும் தனது திட்டங்களை விரிவுபடுத்தவும் துணிந்திருக்கிறது.

மறுபக்கம், திமுக அரசும் ராமேஸ்வர் டெலி-யின் பதிலுக்கோ, அனுராக்-கின் கருத்திற்கோ எவ்வித மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காமல் கள்ளமௌனம் காத்து வருகிறது. “புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு பாதுகாக்கப்பட்ட மண்டலத்தை மீண்டும் ஓ.என்.ஜி.சி-யிடம் தாரை வார்ப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளதா? இது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படையாக தனது கொள்கை நிலையை அறிவிக்க முன்வர வேண்டும்” என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மை என்னவெனில், எதார்த்தத்தில் முந்தைய அதிமுக ஆட்சியிலும் சரி, தற்போதைய திமுக ஆட்சியிலும் சரி, டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தாததன் மூலம் இரு கட்சிகளுமே மோடி அரசின் பேரழிவு திட்டத்திற்கு மறைமுக ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா.செயராமன் 23.04.2022 தேதியிட்ட தனது அறிக்கையில் திமுக, அதிமுக கட்சிகளின் செயல்பாட்டை இவ்வாறு விளக்குகிறார் :

“2015-ல் 30 புதிய கிணறுகள் அமைக்க இந்திய சுற்றுச்சூழல் துறையிடம் ஓ.என்.ஜி.சி அனுமதி பெற்றது; அன்றைய அதிமுக அரசின் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் எந்த கிணறு அமைக்கவும் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார். அடுத்து வந்த திமுக அரசும் ஒரு காலத்திலும் நாங்கள் எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்க அனுமதி கொடுக்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டது.

இந்நிலையில் 2015க்கு பிறகு, காவிரிப் படுகையில் 21 கிணறுகள் அமைத்துவிட்டதாகவும், இன்னமும் அமைக்கப்பட வேண்டிய 9 கிணறுகளை அமைக்க காலநீட்டிப்பு வேண்டுமென்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இந்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்து இருக்கிறது. அதுவும் காலநீட்டிப்புக்கு பரிந்துரை செய்துள்ளது. அப்படி என்றால், தமிழ்நாட்டில் அதிமுக அரசும், திமுக அரசும் அனுமதி கொடுக்காத நிலையில், ஓ.என்.ஜி.சி 21 கிணறுகளை எப்படி அமைத்தது?”

நாகப்பட்டினம் பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து ரூ.31,580 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து வருகிறது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றியுள்ள திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் தொழில் மண்டலத்தை அமைக்கத் திட்டமிட்டு, 2021 நவம்பரில் அறிவிப்பாணை வெளியிட்டது திமுக அரசு. அதாவது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான  நாகபட்டினத்தின் திருமருகல் பகுதியை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து டெண்டர் கோரியது.

இந்த திட்டத்தால், கிட்டதட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகள், விளைநிலங்களை இழந்து வாழ்வாதாரத்தைக் கைவிட்டு அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. மேலும், இத்திட்டத்திற்காக முட்டம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம், நரிமணம், பனங்குடி ஆகிய கிராமங்களில் விளை நிலங்களை விவசாயிகளின் ஒப்புதலின்றி அச்சுறுத்தி கையகப்படுத்த ஸ்டாலின் அரசு முயன்று வந்தது.

படிக்க : அன்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!

இதனையடுத்து, பெட்ரோ-கெமிக்கல் மண்டலம் அறிவிப்பாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பர் 16-ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறும் எனத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே வேறு வழியின்றி, போராட்டம் செய்வதாகச் சொன்ன நாளுக்கு முதல் நாள் பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டத்தை வாபஸ் பெறுவதாக ஸ்டாலின் அரசு அறிவித்தது. இதுதான் திமுக அரசின் உண்மை முகம்.

காவிரி மண்டலத்தைச் சுடுகாடாக்குவதற்கான எல்லா வேலைகளும் அரங்கேறி கொண்டிருக்கின்றன. இதற்கு முன்பு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற பெயரில்லாமல் டெல்டா பகுதியை வேட்டைகாடாக பயன்படுத்தி வந்த நிறுவனங்கள், இப்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற பெயரிலேயே அதனை வேட்டைக்காடாக பயன்படுத்த துடிக்கின்றன. இதை நாம் அனுமதித்தால் இன்னும் சில ஆண்டுகளில் டெல்டா  படுகை “பாதுகாக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் மண்டலமாக” தான் இருக்குமே ஒழிய அது வேளாண் மண்டலமாக இருக்காது.

டெல்டாவில் ஓ.என்.ஜி.சி-இன் வருகை என்பது தொடக்கம்தான், அடுத்து வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளும் சூறையாடுவதற்கு தயாராக உள்ளார்கள். எனவே ஒரு திட்டத்தோடுதான் பாசிச மோடி அரசு காய்நகர்த்திக் கொண்டிருக்கிறது.

மீண்டும் ஒரு நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற போராட்டக் களங்களால் மட்டுமே காவிரிப் படுகையிலிருந்து இப்பேரழிவுத் திட்டங்களை விரட்டியடிக்க முடியும்.


குயிலி

போபால்: பள்ளி வேனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வெறிப்பிடித்த மனிதர்களை உருவாக்கி வரும் சமூகம்!

போபாலில் பள்ளி வேனில் மூன்றரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர்: வெறிப்பிடித்த மனிதர்களை உருவாக்கி வரும் சமூகம்!

மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் உள்ள “கிண்டர் கார்டன்” தனியார் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு நர்சரி வகுப்பு இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மூன்றரை வயது சிறுமி படித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (09.09.2022) அன்று பள்ளி பேருந்தில் இருந்து இறங்கும்போது சிறுமியின் பள்ளி சீருடை மாற்றப்பட்டு வேறு சீருடையில் இறங்கியுள்ளார்.

சிறுமியிடம் தாய் விசாரித்தபோது “பள்ளி பேருந்தில் வந்தபோது ஓட்டுனர் தனது சீருடையை அகற்றி, வேறு ஆடையை அணிவித்து மோசமான செயலில் ஈடுப்பட்டதாகவும், தனது அந்தரங்க உறுப்பில் வலி இருப்பதாகவும்” கூறியுள்ளார்.

மேலும் பேருந்தில் பெண் உதவியாளர் ஒருவர் இருந்ததும், அவரும் ஓட்டுநரின் வக்கிர செயலுக்கு உடந்தையாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஓட்டுனரும், பெண் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி வேன் டிரைவர் கிஷோர் குமாரை(32) விசாரித்ததில் பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

படிக்க : பாலியல் குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் கேரள நீதிமன்றத்தின் ஆணாதிக்க தீர்ப்பு !

இச்சம்பவத்தை தகவலறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேன் டிரைவரின் வீட்டின் முன் திரண்டு சுத்தியல், கடப்பாரையால் இடித்து தள்ளியுள்ளனர்.

பெண் உதவியாளர் முன்பே பாலியல் வன்கொடுமை செய்துள்ளது என்பது இச்சமூக நுகர்வு வெறியின் கோரமுகத்தை நமக்கு திரையிட்டு காண்பிக்கிறது.

***

இதுபோன்ற செய்திகள் ஊடகங்களில் உலா வருவதும், இதை படிப்பதற்கே ஒரு கூட்டம் உருவாகி இருப்பதும் செய்திதாளில் தினசரி அத்தியாவசியமான செய்திகளாக வரும்படியாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு செய்திதாளிலும் ஐந்திற்கும் மேற்பட்ட பாலியல் சீண்டல்கள், பாலியல் பலாத்காரம், முதியவர் சிறுமியிடம் பாலியல் சீண்டல் போன்ற ஏராளமான பரபரப்பு செய்திகளாக சமூக ஊடகங்களில் உலா வருவது என்பது இன்று இயல்பாகிவிட்டன.

அந்த ஓட்டுனருக்கு, மூன்றரை வயது சிறுமியிடம் பள்ளி வேனில் அவ்வளவு பேரின் முன்னால் தனது பாலியல் வக்கிர வெறியை காட்டும் துணிவு எங்கிருந்து வந்தது?, இச்செயலுக்கு பெண் உதவியாளர் துணைப்போக முடிந்ததுதென்றால் அது எப்படி? ஓட்டுனருக்கும் பெண் உதவியாளருக்கும் அந்த சிறுமியை தனது குழந்தையாகக் கூட பார்க்க முடியவில்லையே ஏன்? சிறுமியின் ஆடையை மாற்றுவதுபோல் பாலியல் சீண்டலில் ஈடுபடும் வக்கிர புத்தி எங்கிருந்து வருகிறது?.

இதுபோன்று ஏராளாமான கேள்விகள் எழுகின்றன. கேள்விக்கான பதில், அதற்கான தீர்வை எங்கே போய் தேடுவது?

இதுபோன்ற, பாலியல் வக்கிர வெறிப்பிடித்தவர்களை கைது செய்து கொண்டுதான் இருக்கிறது போலீசு, நீதிமன்றமும் பல வருடம் விசாரித்து தண்டனையும் கொடுக்கிறது. ஆனால் எதுவும் மாறவேயில்லையே. இச்சிறுமிக்கு நடந்தது நாளை நமது குழந்தைக்கும் நடக்கும் என்ற அச்சம் நம்மிடம் இருந்தாலும் கூட “நம்மால் என்ன செய்ய முடியும்” என்று கடந்து செல்லவே வைக்கிறது.

மனிதன் விலங்கு மாதிரி மாறிக்கொண்டிருக்கிறான் என்று கூற முடியுமா? நிச்சயம் முடியாது. விலங்குகள் கூட ஒரு குறிப்பிட்ட நேரம், காலத்தில் மட்டும்தான் தனது சக விலங்குடன் உடலுறவு வைத்துக் கொள்கிறது. ஆனால் இன்று பாலியல் வெறிபிடித்தவர்கள் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பாலியல் இச்சைக்கான செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள்.

2020 என்.சி.ஆர்.பி ஆய்வின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு பலியாகின்றனர். இன்று சமூக ஊடக பயன்பாட்டு அதிகரிப்பால் பல்வேறு வடிவம் எடுத்து பாலியல் சீண்டல்கள் அரங்கேறி வருகின்றன. இதை வெறும் சமூக சீரழிவு என்று மட்டும் ச்ச்சு செய்துவிட்டு கடந்துச் செல்ல முடியாது.

ஏனென்றால், மனித சமூகம் இந்த முதலாளித்துவ நுகர்வுவெறி கலாச்சாரத்தில் மிக வேகமாக பயணித்து வருகிறது. இன்னும் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையாது, யாரும் இந்த முதலாளித்துவ சிலந்தி வலையில் இருந்து தப்பிக்கவும் முடியாது.

படிக்க : தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் – தீர்வு என்ன?

இணையதள பயன்பாடு அதிகரித்துவரும் இச்சூழலில் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதற்காக பல்வேறு வடிவம் எடுத்துக் கொண்டிக்கிறது. இதில் சீரழிந்து இருப்பது வெறும் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான்.

***

இதற்கு உடனடி தீர்வு வேண்டும் என்று வாதம் வைப்பவர்கள் “கடுமையான சட்டம் வேண்டும்” என்று கூறுவார்கள். இதுவரை பெண்களை பாதுகாப்பதாக கூறிவந்த சட்டத்தையே பயன்படுத்தாதபோது கடுமையான சட்டம் வந்தாலும் இதே நிலைதான். 2012-ம் ஆண்டில் டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது நிர்பயா என்ற மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதற்கு 2020-ம் ஆண்டில்தான் மரணதண்டனை தீர்ப்பு வந்தது. அதுவரை பல்வேறு குற்றங்களும் நடந்துள்ளது, அதற்கு பின்னரும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

குற்றங்களுக்கு அடிப்படையாக இருப்பது இச்சமூகத்தில் எது என்று ஆராயாமால் “கடுமையான சட்டம் வேண்டும்” என்று கூறுவது, தீர்வை நோக்கி நம்மை சிந்திக்கவிடாமல் செய்வதற்கே உதவும். வெறிப்பிடித்த மனிதர்களாக மாற்றிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூக கட்டமைப்பை ஒழித்துக்கட்டாமல் வெறும் நபர்களை தண்டிப்பதை மட்டும் வைத்து குற்றங்களை தடுக்க முடியாது.

இந்த சமூக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் பற்றியும் சமூக கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான வழிகள் பற்றியும் விவாதத்தை தொடங்குவதே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.


எழிற்குழலி

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை! ஒருபோதும் வரவேற்க முடியாது! | மக்கள் அதிகாரம்

16.09.2022

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை!
ஒருபோதும் வரவேற்க முடியாது!

பத்திரிகை செய்தி!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்றைய (15.09.2022) தினம், நீதிமன்றத்தை அவமதித்ததாக தானே முன்வந்து விசாரித்த வழக்கின் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை அளித்துள்ளது.

சவுக்கு சங்கர் மீதான தவறுகள் காரணமாக இப்படிப்பட்ட அராஜகமான தீர்ப்பை ஒருபோதும் ஆதரிக்க முடியாது. ஏனென்றால் சவுக்கு சங்கர் மீதான நடவடிக்கை என்பது, அவர்   மக்களுக்கு எதிராக செயல்பட்டார் என்பதற்காக அல்ல; மாறாக நீதித்துறையை அவமதித்தார் என்பதற்காக மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி விவகாரத்திலே கூட இப்பிரச்சினையை பற்றி பேசிய யூடியூப் நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு அராஜக நடவடிக்கைகளை நீதிமன்றம் மேற்கொண்டதை நாம் கண்டோம்.

அயோத்தி(பைசாபாத்) பாபர் மசூதி தீர்ப்பு, கியான் வாபி மசூதி மீதான சமீபத்திய வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவு, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு, முன்னாள் நீதிபதிகள் பெறும் உயர்ந்த பதவிகள், அமித்ஷாவுக்கு வாதாடிய வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆனது, ஆண் மயில்கள் பிரம்மச்சாரிகள் என்று உளறியது என எதையும் கேள்வி கேட்க முடியாது.

படிக்க : அன்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!

பொதுமக்களுடைய வழக்குகளும் தொழிலாளிகளின் தொழிற்சங்க உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை தொடர்பான வழக்குகளும் பொதுநல வழக்குகளும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன.

நீட் தேர்வு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இப்பொழுது வரை இறுதி விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் நீட் தேர்வு இந்தியா முழுமைக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் வழக்கையும் ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து இறுதியில் கட்டாயம் இல்லை என்று கூறியது உச்ச நீதிமன்றம். இறுதியில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்பதை நடைமுறையில் நாம் காண்கிறோம்.

ஆனால், தன்னை விமர்சித்துவிட்டார்கள் என்று உடனுக்குடன் தானே முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து தீர்ப்பும் வழங்கியிருக்கிறது நீதிமன்றம். பொதுமக்களுக்கு ஒன்றாகவும் தனக்கு ஒன்றாகவும் நடந்து கொள்வதுதான் நீதித்துறையின் அணுகுமுறை.

சவுக்கு சங்கர் மீதான தண்டனையை தொடர்ந்து அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவும் நீதிமன்ற ஃபாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது தானாகவே முன்வந்து வழக்குகளை எடுத்து விசாரித்து நீதிமன்றங்கள் தண்டனை வழங்கும் என்பது திண்ணம்.

நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் சங்கரின் பேச்சு இருந்ததாக பதிவாளர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சவுக்கு சங்கர் மட்டுமல்ல நீதித்துறையை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் பல்வேறு வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோரால் நீதித்துறையின் மாண்பு எப்போதும் குலைக்கப்படவில்லை. அது மாறாக நீதித்துறையின் நடவடிக்கைகளாலேயே நடைபெறுகின்றது.

மேற்கண்ட தீர்ப்பானது, இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை, பேச்சுரிமை ஆகியவைகள் மறுப்பதுடன் ஏற்கனவே கருத்து சுதந்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த பல்வேறு வழிகாட்டுதல்களையும் உயர் நீதிமன்றம் மீறி இருக்கிறது.

ஆகவே, சவுக்கு சங்கர் மீதான தண்டனையை ஒருபோதும் வரவேற்க முடியாது!

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

Droupadi Murmu, Illayaraja: Be traitor and get a Post!

The faces of ‘new social justice’, from BJP’s Annamalai to Edappadi Palaniswamy and PMK’s Anbumani Ramadoss have been cackling that supporting Sinha, belonging to a forward caste, and not supporting Droupadi Murmu, who is a tribal woman, is against social justice.

Uddhav Thackeray, whose rule is dissolved by BJP with the aid of Eknath Shinde, supported the candidate proposed by the BJP. Chandrababu Naidu, who posed himself as a strong critic of Modi, also supported Murmu. Other than this, few Congress MLAs in states like Assam have also voted in support of Murmu.

Fearing of losing their vote bank, a faction within the opposition parties supported Murmu, while another section did not oppose Murmu.

Hence, Murmu won with a thumping majority. And she took charge as President with boastings such as first tribal President, youngest President, second women President.

Also Read : Parliamentary Fascism

There were speculations about who will be chosen as Presidential candidate by the fascistic RSS-BJP. Since BJP is planning to expand its base in the south, Venkaiah Naidu was expected to be chosen. But every move of Hindutva fascism, which has a 100-year history, appears to be taking them forward towards their target.

Murmu was born in Uparbeda village of Mayurbhanj district in Odisha. She was the first person in her village to become a graduate. She was a teacher; elected as a councillor in 1997; served two terms as MLA between 2000 and 2009; served as a Minister in the BJD-BJP coalition government; the Governor of Jharkhand. Other than this, she had also served as the vice-president of BJP’s Scheduled Tribes Morcha.

She acted as a mentor for the State terrorism of the union and the state governments on the tribal people, when she served as the Governor of Jharkhand (2015 – 2021). Particularly, “tribal” Murmu remained a mute spectator, when people from eight tribal villages were forcefully relocated from Palamu tiger reserve.

It was recommended that a compensation 0f Rs. 10 lakh or five acres of land should be provided by the Jharkhand government to those people who are to be shifted. But, because of the absence of land, the government ordered to just throw Rs. 10 lakh at the face of the people. This incident took place, when Murmu was the Governor.

In 2019, the tribal people of Jharkhand erected stone plaques with the provisions of the Panchayats (Extension to Scheduled Areas) Act as a gesture of upholding their legal and constitutional safeguards. This action of the tribal people against the union government was called the Pathalgadi movement. As a result of this, more than 10,000 people were booked under sedition, and Murmu was the then Governor of Jharkhand.

The land of Jharkhand which belongs to the tribes is full of mineral resources. The union and the state governments are doing all that they can do to gift it to the corporates. The tribes have been fighting since the time of British to protect their land rights. Maoists are fighting in support to the demands of the tribal people. In the name of suppressing the Maoists, countless tribal people are being tortured and killed.

The honour of the tribal people lies in their demand for land rights and self-respect; and not in Murmu becoming President. Murmu was chosen only because of her loyal service as henchman to the corporates.

We can say that Illayaraja is so popular not only in Tamil Nadu but throughout India; and there is no one in Tamil Nadu who don’t enjoy his music. He compared Modi with Ambedkar. Even though his statement faced strong criticism, he did not retract from his statement. Beyond his reactionary tendency, he was revered by some of his fans. Even such hardcore fans are now opposing his statement.

Those who uphold identity politics are expressing their abjection by saying that Illayaraja is being criticized just because he is a dalit. As expected, Illayaraja won a bumper prize i.e., getting nominated to the Rajya Sabha.

The working people of the country are the base for Illayaraja’s music. He got his initial knowledge in music by helping his brother Pavalar Varadarajan compose and sing Communist anthems in party meetings. But this ‘maestro’ is claiming that he got his knowledge for music as a boon from the god.

He didn’t even move a muscle against the brahmanical untouchability and the atrocities by the caste-chauvinistic caste-Hindus. He remained mute when the oppressed people were forcefully fed human excreta in Thinniyam village and when the houses of the dalits were ransacked in Kodiyankulum village. Illayaraja’s brahmanical servitude is visible from the fact that he remains silent on caste atrocities on dalits by the caste-Hindus.

‘Maestro’ remained silent on State terrorism. He never opened his mouth on incidents such as Jayaraj-Bennix’s custodial death or Thoothukudi police firing.

Illayaraja, who gets provoked when someone calls him a dalit, donated a few lakhs to the construction of Thiruvannamalai gopuram. But, when the Brahmins commanded him not to attend the kumbhabishekam, he obliged. Illayaraja, who heartily composed music to Thiruvasagam, paid no heed when Arumugasamy was thrashed for attempting to recite Thiruvasagam in Thillai temple.

Also Read : New Democracy – September 2022 | Magazine

Should one comment on every single incident? Are those who didn’t speak up guilty? But our question is that why Illayaraja who didn’t open his mouth for any of the aforementioned issues opened his mouth only to compare Modi with Ambedkar. He expressed that he was dejected when his son Yuvan Shankar Raja got converted to Islam. This reveals that whose representative our ‘Maestro’ is.

Those from among the dalits, tribes and the minorities who will act as henchmen for the saffron-corporate fascism are being rewarded by the BJP. Arjun Sampath, Krishnasamy, L Murugan, Mukhtar Abbas Naqvi are all stooges who had been rewarded.

In order to uplift India’s prestige following the aftermath of the Gujarat pogrom, Abdul Kalam was made as President by the BJP. Kalam was projected against K.R.Narayanan, who belonged to the dalit community and had opposed some of the BJP’s actions. Kalam knew well that he was becoming President only by holding his nose under the blood stench of the Muslims.

After his death, RSS media applauded Kalam as a man with “Gita on one hand and missile on the other”. He became President only because he dared to do anything for his subsistence. The names of Murmu and Illayaraja are now added to the list of the traitors.


Marudhu

செப்டம்பர் 17, 2022 சென்னையில் மாநாடு! அனைவரும் வாரீர்! – வீடியோ உரை || ச.குமரன் || ஜி.செல்வா

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!
செப்டம்பர் 17, 2022 பெரியார் பிறந்த நாளில், சென்னையில் மாநாடு!
அனைவரும் வாரீர்!

மாநாடு நடைபெரும் இடம் :
EVP ராஜேஸ்வரி மண்டபம், குமணன்சாவடி,
பூவிருந்தவல்லி, சென்னை.

நேரம் : மாலை 5 மணி

0-0-0

பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று மாநாட்டிற்கு அழைக்கிறார் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் சு.குமரன் அவர்கள்…

0-0-0

பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று மாநாட்டிற்கு அழைக்கிறார் சி.பி.ஐ.எம் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா அவர்கள்…

0-0-0

♦ ஆர்.எஸ்.எஸ்-பாஜக, அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியாக ஒன்றிணைவோம்!

♦ போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் மீதுள்ள மாயையை உதறியெழுவோம்! பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!

♦ பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்போம்!

000

நிகழ்ச்சி நிரல்

தலைமை: அமிர்தா, மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்.

உரையாற்றுவோர்:

  • வெற்றிவேல் செழியன், மாநிலச் செயலர், மக்கள் அதிகாரம்
  • தொல்.திருமாவளவன், MP தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
  • ஜவாஹிருல்லா, MLA, தலைவர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
  • B.அப்துல் ஹமீது, மாநிலத் துணைத் தலைவர், SDPI கட்சி, தமிழ்நாடு
  • கே.பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர், SKM, தமிழ்நாடு
  • பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
  • பரசுராமன், மாநில ஒருங்கிணைப்புக் குழு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
  • சேல்முருகன், வழக்கறிஞர், ம.ஜ.இ.க
  • பழனி, ம.ஜ.இ.மு
  • பொழிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழக மக்கள் முன்னணி
  • அபிகவுடா, நிறுவனர், ஒருங்கிணைப்பாளர், திராவிட சிட்டி இயக்கம், கர்நாடகா
  • இராமலிங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
  • துணைவேந்தன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

நன்றியுரை: ரவி, மாநில ஒருங்கிணைப்புக் குழு, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

பாசிச எதிர்ப்பில் அனைவரும் கைகோர்ப்போம்!

000

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
9791653200, 9444836642, 7397404242, 9962366321

கொடூர குற்றவாளிக்கு ஒப்பாரியா? எலிசபத் ராணியின் உண்மை முகம் | மருது வீடியோ

பொதுவாக யாராவது இறந்துவிட்டார்கள் என்றால், அவர் கடைந்தெடுத்த பிழைப்புவாதியாக இருப்பினும் அவருக்கு, மன்னவரே சின்னவரே என்று ஒப்பாரி பாடுவார்கள்.

ஜெயலலிதா இறப்பில் கூட, ஜெயலலிதாவை இதுவரை யார் கேவலமாக விமர்சனம் செய்தார்களோ, அவர்களில் பலபேர் அவரை இரும்பு மனிதர், அந்த அம்மா மாதிரி யாரேனும் இருக்க முடியுமா என்று கூறினார்கள்.

சோ ராமராமி எவ்வளவு இழிவானவர் என்றால், இங்கிருக்கக்கூடிய சனாதனத்தை – பார்ப்பனீயத்தை ஆதரித்து மீண்டும் ஒரு இந்துராஷ்டிரத்தை அமைக்க வேண்டும் என்று தீவிரமாக பேசியவர். அப்படிப்பட்ட சோ ராமராமி இறந்தபோது, மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார். அதையும் தாண்டி பலபேர் சென்று அவர் மிக சிறந்தவர், மிக சிறந்த ஆளுமை என்று பேசினார்கள்.

இவர்கள் போன்றோரை ஆளுமை என்று பேசுவதே தவறு. எலிசபத் ராணிக்கு என்ன யோக்கிதை இருக்கு…! அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் கூட 15 நாடுகளுக்கு ராணியாக இருந்துள்ளார். தற்போது இருப்பது ஒரு நாகரிக உலகம் என்று நாம் சொல்கிறோம். ஓர் முதலாளித்துவ அரசுமுறை வந்துவிட்டது. இப்போதும் கூட 15 நாடுகளுக்கு ராணியாக இருந்து ஒரு அம்மையார் சாகிறார்கள் என்றால் இதைவிட கேவலம் வேறு ஏதேனும் இருக்க முடியுமா?

பலபேர் அவர் சிறந்த ஆளுமை! எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் என்கிறார்கள். அவர் எதில் சிறந்து விளங்கினார்? இதற்கு பதில் தெரிந்தாக வேண்டும்.

செய்தி ஊடகங்களை திறந்தால் அந்த அம்மையார் இறந்த மூன்று நாட்களுக்கு புகழ் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்திய நாட்டிற்கு விடுதலையை கொடுத்தார் என்கிறார்கள். இதை சொல்வதற்கு குறைந்த பட்சம் சூடு சுரணை வேண்டுமல்லவா? அந்த அம்மையார் தானாக சுதந்திரம் கொடுத்து விட்டாரா? இங்கு யாரு போராடவில்லையா? பகத்சிங் சுகதேவ் ராஜகுரு போன்ற எத்தனையோ தியாகிகள் தங்கள் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈன்றார்களே! அவை அனைத்தும் பொய்யா அது எல்லாம் நாடகமா?

இந்த அம்மையாருக்கு எதிராகத்தான் பகத்சிங், வ.உ.சி போன்ற அனைவரும் போராடினார்கள். இவரை தற்போது புனிதர் போல காட்டுவதற்கான அவசியம் என்ன? இந்த அம்மையாருக்கு புனிதர் பட்டம் சூட்டுபவர்கள் எல்லாம் அயோக்கியர்களாக இருக்கிறார்கள்!

எலிசபத் ராணிக்கு புகழாரம் சூட்டுவது தொடர்பான பல்வேறு விமர்சனங்களை RED SEA என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அன்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!

13.09.2022

அன்று பாபர் மசூதி!
இன்று ஞானவாபி மசூதி !
இசுலாமியர்களின் கண்ணியமான வாழ்வை காப்பது நம் கடமை!
நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

த்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாக தொழுகை செய்கின்றனர். திடீரென்று இந்த மசூதி, காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்றும் மசூதியில்  சென்று காசி விஸ்வநாதரை வழிபடுவோம் என்றும் ஐந்து பெண்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை சட்டவிரோதமாக நீதிமன்றம் நியமித்தது.

இதற்கெதிராக ஞானவாபி மசூதி கமிட்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் முடிவில் “மசூதியில் சென்று காசி விஸ்வநாதரை வழிபட வேண்டுமென்று ஐந்து பெண்கள் அளித்த மனு விசாரணைக்கு உகந்தது” என்று வாரணாசி நீதிமன்றம் நேற்றைய (12.09.22) தினம் தீர்ப்பளித்திருக்கிறது.

பாபர் மசூதியை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக 30 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, பார்ப்பன பாசிச கும்பல் அபகரித்தார்களோ அதைப்போன்றே ஞானவாபி மசூதியிலும் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களின் பாசிச நடவடிக்கைகள் ஞானவாபி மசூதியோடும் கண்டிப்பாக முடிவடையாது.

1947 ஆம் ஆண்டுக்கு முன் வழிபாட்டுத்தலங்கள் எந்த நிலைமையில் இருந்ததோ அதைப் போன்ற நிலைமையே நீடிக்கப்பட வேண்டும் என்பதையே 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் (சிறப்புச் சட்டங்கள்) தெரிவிக்கிறது.

பாபர் மசூதியை தவிர்த்த வழிபாட்டுத்தலங்கள் என்று அச்சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிட்டதன் மூலம் 1991 ஆம் ஆண்டு முதலே பாபர் மசூதியை அபகரிப்பதற்கான முயற்சிகள் அப்போதே தொடங்கிவிட்டன என்பதை எவராலும் உணர முடியும்.

இப்போது 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அந்தச் சட்டத்திற்கும் எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

பாபர் மசூதியோடு பிரச்சினை முடிந்தது இனி அமைதியான வாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த இஸ்லாமியர்களுக்கும் “இந்த ஒரு மசூதி தானே விட்டுவிடுங்கள், அமைதி கிடைக்கும்” என்று கூறிய மற்ற மக்களுக்கும் பேரிடியாக அமைந்திருக்கிறது இந்த வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு. இத்தீர்ப்பினை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளை, உப்புக்கும் தயிருக்கும் ஜி.எஸ்.டி வரி, குமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து இயற்கை வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பு என மக்களை வாட்டிவதைக்கும் பாசிச நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மோடி தலைமையிலான  பாசிச கும்பல்தான் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள், தலித் மக்களின் கண்ணியமிக்க வாழ்வை பறித்து அவர்களை அகதிகளாக்குகிறது.

இராணுவம், நீதிமன்றம், போலீசு உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் ஊடுருவி இருக்கிறது ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பல்.

இஸ்லாமிய மக்களின் உரிமைகளை படிப்படியாக அழித்து, அவர்களின் கண்ணியமிக்க வாழ்வைப் பறிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி,  அம்பானி-அதானி  பாசிச கும்பலை வீழ்த்த வேண்டும் என்றால் தேர்தல் மூலமாக ஒருபோதும் முடியாது என்பதைத்தான் இந்த நீதிமன்றம் தீர்ப்பு நமக்கு தெரிவிக்கிறது.

இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் சுயமரியாதை மிக்க வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துவது நம்முடைய கடமை.

ஆகவே ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, அம்பானி-அதானி பாசிச கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321.