Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 194

தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஃபோர்டு ஆலை : கண்டுகொள்ளாத அரசு !

0

சென்னை மறைமலை நகரில் இயங்கிவரும் ஃபோர்டு கார் கம்பெனி தனது ஆலையை ஜூலை மாதம் முதல் மூடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து அங்கு பணி புரிந்து வரும் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் மூன்று நாட்களுக்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் போர்டு நிறுவனம் கடந்த 1995-ம் ஆண்டு முதல் இந்தியாவில் குஜராத் மற்றும் சென்னையில் தனது ஆலைகளை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குஜராத்தில் 4 ஆயிரம் தொழிலாளர்களும் சென்னையில் 2 ஆயிரம் தொழிலாளர்களும் நேரடியாக பணியாற்றி வருகின்றனர். தற்போது 2 ஆலைகளையும் அந்த நிறுவனம் மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தொழிலாளர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்கள் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகி உள்ளது.

முன்னதாக சென்னையில் செயல்படும் ஆலையில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டு மின்சார கார்களை உற்பத்தி செய்யப்போவதாக தொழிலாளர்களிடம் அந்நிறுவனம் உறுதி அளித்திருந்தது. இதனால் தங்களது வேலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தொழிலாளர்கள் ஆலையை முழுமையாக நம்பி இருந்தனர்.

படிக்க :

ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !

புதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் !

பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போர்ட் நிறுவன ஆலையை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்கபோவதாகவும் அதனால் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது என்றும் மீண்டும் தொழிலாளர்களை நம்பவைத்தது ஆலை நிர்வாகம். இதனை நம்பிய தொழிலாளர்கள் 2 மாதத்தில் உற்பத்தி செய்ய நிர்ணயக்கப்பட்ட கார்களை 98 சதவீதம் வரை உற்பத்தி செய்து முடித்துவிட்டனர். மீதம் 1500 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டிய இருக்கும் நிலையில் ஆலையை ஜூன் மாதத்தில் மூடுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்து தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது.

தொடர் வருவாய் இழப்பு மற்றும் நட்டம் காரணமாகவும் எதிர்காலத்தில் ஆலையை மறுசீரமைப்பு செய்வது மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளின் காரணமாக அதிக அளவு மூலதனம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதால் இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக அந்நிறுவனம் கதையளந்துள்ளது. இந்த ஆலை மூடப்பட்டால் நேரடியாக பணியாற்றும் 3 ஆயிரம் தொழிலாளரகளும் அவர்களை சார்ந்து இருக்கும் குடும்பங்களும் பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல் மறைமுகமாக சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளை கூவி கூவி அழைக்கின்றன. அவற்றிற்கு பல்வேறு சலுகைகளை வாரி இறைத்து, இயற்கை வளங்களை அடிமாட்டு விலைக்கு விற்று மூலதனத்தை இந்தியாவில் முதலீடு செய்ய உதவுகின்றன.

தேவையான அளவிற்கு இந்தியாவின் இயற்கை வளங்களையும், அரசின் சலுகைகளையும் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டி கொழுத்துவிட்டு, நட்ட கணக்கு காட்டி ஆலையை மூடிச் செல்வது என்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே நோக்கியா, ஃபாக்ஸ்கான் என தமிழகம் முதல் இந்திய வரை ஆயிரம் உதாரணம் கூற முடியும்.

தொழில் தொடங்குவதற்காக பல்வேறு சலுகைகளையும், ஊடகத்தில் விளம்பரங்களையும் தேடிக்கொள்ளும் இந்த ஆளும் வர்க்க அரசுகள் ஆலையை மூடும்போது மௌன நிலைக்கு சென்று விடுகின்றன. தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களின் பிரச்சினை குறித்தோ எந்த அரசும் கண்டு கொள்வதில்லை. இந்த விவகாரத்தில் திமுக மட்டும் விதிவிலக்கா என்ன? இதுவரை ஃபோர்ட் ஆலை தொழிலாளர்களின் கோரிக்கையை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கண்டுகொள்ளவே இல்லை என்று அங்கு பணிபுரியும் தொழிலாளி ஒருவர் வருத்தத்துடன் கூறுகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் ஷிப்ட்டில் வேலைக்கு சென்ற தொழிலாளர்களிடம் ஒரு படிவத்தை கொடுத்து அதில் கையெழுத்து போடுமாறு ஆலை நிர்வாகம் கட்டாயப்படுத்தியுள்ளது. அந்த படிவத்தில் ஆலைக்கு எதிராக போராடக் கூடாது என்றும் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பணிபுரிய வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது.

படிக்க :

நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!

வால்வோ தொழிலாளர்களின் போராட்டம்: தொழிலாளர் வர்க்கம் கற்கவேண்டியது என்ன?

ஆலை நிர்வாகத்தின் இந்த செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 2,000 தொழிலாளர்கள் ஆலைக்குள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது ஷிப்ட்டுக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்களிடமும் அதே படிவத்தை கொடுத்து அதில் கையெழுத்து போட வேண்டும் என்றும் அவ்வாறு போடவில்லை என்றால் ஆலைக்குள் அனுமதிக்க முடியாது என்று தனது முதலாளித்துவ திமிரை காட்டியுள்ளது ஆலை நிர்வாகம்.

தொழிலாளர்களை சுரண்டி கிடைத்த கொள்ளை இலாபங்களை அள்ளிச் செல்லும் இந்த கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனங்களை, இந்த கார்ப்பரேட் நல அரசு எதுவும் செய்யப்போவதில்லை. இதனால் இந்த விவகாரத்தில் அரசையோ, ஃபோர்டு ஆலையையோ நம்பி எந்தவித பலனும் இருக்கப்போவதில்லை. நோக்கியா ஆலை மூடலால் வேலையிழந்து நடுத்தெருக்கு வந்த தொழிலாளர்கள் போல், ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் வாழ்க்கையும் சிதைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அத்தொழிலாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டியது இந்திய தொழிலாளி வர்க்கத்தின் கடமை.

ஏழைநாடுகளின் உழைப்பையும், வளங்களையும் சுரண்டி கொழுத்துவிட்டு, வேறுஒரு ஏழை நாட்டிருக்கு செல்லும் இந்த கார்ப்பரேட் முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் – தனியார்மய – தாராளமாய – உலகமயக் கொள்கையை வீழ்த்தாமல் – தொழிலாளர்களுக்கு விடிவில்லை.

வினோதன்

காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !

0
ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட டிஜிட்டல் பத்திரிகையான தி காஷ்மீர் வாலாவின் இளம் பத்திரிகையாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் கீழ் போலீசால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜூன் 2 அன்று ஒரு வழக்குக்கு (எஃப்ஐஆர்) ஆஜராகுமாறு ஜே & கே போலீசுத்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்.ஐ.ஏ) பத்திரிகையின்  ஆசிரியரான (23வயது) யாஷ்ராஜ் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. “தேசத்துரோக” கட்டுரையை வெளியிட்டதற்காக பத்திரிகைக்கு எதிராக எண் (01/2022) 2011-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் வாலா பத்திரிகையின் ஆசிரியர் ஃபஹத் ஷா ஏற்கனவே எஸ்.ஐ.ஏ காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆசிரியர் அப்துல் ஆலா ஃபாசிலி, காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் கடந்த ஏப்ரல் 17 அன்று ஸ்ரீநகரில் SIA-வால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 6 அன்று ‘அடிமைத்தனத்தின் கட்டுகள் உடைந்து விடும் – The Shackles of Slavery Will Break’ என்ற தலைப்பில் தி காஷ்மீர் வாலாவின் இளம் பத்திரிகையாளர் யாஷ்ராஜ் ஷர்மாவின் கட்டுரை வெளியானபோது அவருக்கு 12 வயது. ராஜஸ்தானில் வசிக்கும் யாஷ்ராஜ் ஸ்ரீநகரில் பத்திரிகை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
படிக்க :
♦ உலகப் பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியாவிற்கு 150-வது இடம் !
♦ காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !
தி காஷ்மீர் வாலா ஆசிரியர் அப்துல் ஆலாவுக்கு எதிராக, SIA சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 120-பி (குற்றச் சதிக்கான தண்டனை), 121-ன் பிரிவுகள் 13 (சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தண்டனை) மற்றும் 18 (பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல்) இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 (தேசத்துரோகம்), 153-பி (தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான குற்றச்சாட்டுகள்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளை தொடர கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட புலனாய்வு அமைப்பு, கடந்த மே 30 அன்று நீதிமன்றத்தில் 2011-ம் ஆண்டு வெளியான இக்கட்டுரை “ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிக்க வழிவகுத்தது” என்று கூறியது.
இதற்கு முன் அரங்கேற்றப்பட்ட, புலனாய்வு அமைப்பின் தி காஷ்மீர் வாலா ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான பாசிச நடவடிக்கைகளை பார்ப்போம். கடந்த 2022 பிப்ரவரி மாதம், சமூக ஊடகங்களில் “தேச விரோத உள்ளடக்கத்தை” பதிவிட்டதாக ஃபஹத் முதன்முதலில் புல்வாமா போலீசுத் துறையினரால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 22 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இருப்பினும், அவர் காவலில் இருந்து வெளியேறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, ஃபஹத் ஷா இதேபோன்ற வழக்கில் ஷோபியான் போலீசுத்துறையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். மார்ச் 5 அன்று அவ்வழக்கிற்கு ஜாமின் கிடைத்தது. இருப்பினும், கலவரம், கொலை முயற்சி, தூண்டுதல், அவதூறான விஷயங்களை அச்சிடுதல் ஆகிய குற்றங்களின் கீழ் மூன்றாவது வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மார்ச் 14 அன்று, ஸ்ரீநகரில் உள்ள நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, நான்காவது வழக்கு போடப்பட்டு ஃபஹத் ஷா, வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள சிறைக்கு மாற்றினர். அவர் தொடர்ந்து கைது செய்யப்பட்டதை எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, எல்லைகள் இல்லாத செய்தியாளர்கள் மற்றும் பிற சுதந்திரமான பேச்சுக் குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
படிக்க :
♦ ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
♦ பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
இருப்பினும், கடந்த மே 23 அன்று, கடுமையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபஹத் ஷா, குப்வாராவில் உள்ள சிறையிலிருந்து எஸ்.ஐ.ஏ-க்கு மாற்றப்பட்டார். ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளருக்கு எதிரான ஐந்தாவது வழக்கு இதுவாகும்.
இதுபோன்ற பாசிச நடவடிக்கைகள், காஷ்மீர் வாலா பத்திரிகையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடர்ந்து மோடி அரசால் ஏவப்பட்டு வருகிறது. கட்டுரை எப்படி கலவரத்தை தூண்டும்? ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க இந்து மதவெறியர்கள் நாடுமுழுவதும் வெளிப்படையாகவே முஸ்லீம் வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்கள்; இவர்களை கைது செய்து தட்டிக்க துப்பில்லாத அரசு பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி அவர்களை செயல்படவிடாமல் செய்து வருகிறது.
காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களின் அரங்கேற்றப்படும், கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் இந்த செயல்பாடுகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். முற்போக்கு பத்திரிகையாளர்களை காவி – கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
புகழ்

தமிழகத்தில் இரட்டை ஆட்சி : அண்ணாமலையை காப்பாற்றும் தமிழக அரசு | தோழர் மருது | வீடியோ

மிழகத்தை இன்னும் ஒரு குஜராத் மாற்றியே தீருவோம் என்ற திமிர் பிடித்த ஆணவம் பிடித்த ஒரு நபரின்(அண்ணாமலையின்) கருத்து அது; போலீசில் புகார் கொடுப்பதெல்லாம் விட செருப்பால்தான் அடிக்க வேண்டும். ஒரு பத்திரிகையாளர் என்ன சார் இப்படி சாதியை இழிவாக பேசியுள்ளீர்களே என்று அண்ணாமலையை கேட்டதற்கு ஆங்கில அகராதியை புரட்டிபாருங்கள் என்று திமிராக பதிலளித்திருக்கிறார்.
ஒருவரை பார்த்து தமிழில் நாயே என்று திட்டினால், அது தமிழில்தான் நாய் ஆப்பிரிகாவில் நாய் என்றால் அர்த்தமே வேற என்று சொல்லி பேச முடியுமா? அந்த யுத்தியைத்தான் அண்ணாமலை கையாள்கிறார். இதுவே ஒரு பார்ப்பன சாதியை சார்ந்த ஒரு நபரை இப்படி பேசியிருந்தால் விசயம் வேறவாக இருந்திருக்கும்.
இஸ்லாமியர்களையும், தாழ்த்தப்பட்டிவர்களையும் கொன்றொழிக்கின்ற அந்த விஷ்வ குரு என்பதுதான் கேவலம். இந்த கேவலம் அநியாயத்தை பார்த்துக்கொண்டு தமிழகம் ஏன் அமைதியாக இருக்கிறது?. அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழக மக்கள் செருப்பையும் துடைப்பத்தையும் வைத்துக்கொண்டுதான் வரவேற்க வேண்டும்.
மோடி ஊரெல்லாம் சுற்ற முடியும், ஆனால் தமிழ்நாட்டிற்கு வந்தால் மூத்திர சந்து வழியாகத்தால் ஐஐடி-க்கு செல்லமுடியும் என்ற நிலையை உருவாக்கிய தமிழ்நாடு, இன்றைக்கும் இழிவான விஷயத்திற்கு ஒரு சுடுகாட்டு அமைதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பறையன் என்று சாதி இழியை கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டன செய்யும் விதமாக நெட் பிக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்களின் நேர்காணல் வீடியோ.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இந்து மதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்!

0
தி நரசிங்கானந்த், மஹந்த் பஜ்ரங் முனி மற்றும் ஆனந்த் ஸ்வரூப் ஆகியோரை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று ட்வீட் செய்ததற்கான Alt News என்ற இணைய தளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர்-ன் மீது உத்தரப்பிரதேசத்தின் கைராபாத்தில் உள்ள போலீசு நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
ராஷ்டிரிய இந்து ஷேர் சேனாவின் மாவட்டத் தலைவர் பகவான் சரண் என்பவரின் புகாரின் அடிப்படையில், ஜுபைர் மீது பிரிவு 295 ஏ (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள், மதத்தை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளை தூண்டும் நோக்கம்) தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (மின்னணு வடிவில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
டைம்ஸ் நவ் சேனலின் ‘தி கியன்வாபி ஃபைல்ஸ்’ குறித்த விவாதத்தின் வீடியோ கிளிப்பைப் பகிர்ந்து, சுபைர் ட்வீட் செய்துள்ளார். ட்வீட்டைக் குறிப்பிட்டு, ஜுபைரின் ட்வீட்டால் அவரது மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாக புகார் தாரர் கூறியுள்ளார். மேலும், மஹந்த் பஜரங் முனியை வெறுப்பாளர் என்றும், இந்து தலைவர்களை “கொலை” செய்ய ஜுபைர் முஸ்லீம்களை தூண்டுவதாகவும் சுபைர் மீது குற்றம்சாட்டினார்.
படிக்க :
♦ ’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !
♦ ’இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டும்’ : அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள் !
யதி நரசிங்கானந்த், ஜூனா அகாராவில் தீவிர இந்துத்துவா தலைவராவார். இவர் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வன்முறைக்கான அழைப்புகளின் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்.
“நமது தற்போதைய காலத்தில் முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுபவர்கள் முந்தைய காலங்களில் பேய்கள் என்று அழைக்கப்பட்டனர். நாதுராம் கோட்சே ஜியைப் புகழ்வதற்கு போதுமான வார்த்தைகள் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீர சாவர்க்கர் மற்றும் நாதுராம் கோட்சே ஆகியோரை எனது மிகப்பெரிய ஹீரோக்களாக நான் கருதுகிறேன்” என்று கூறியவர்தான் யதி நரசிங்கானந்த்.
முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கான நரசிங்கானந்தின் அழைப்புகள் உண்மையில் CAA மற்றும் அதற்கு எதிரான போராட்டங்களுக்கு முந்தையவை. 2019 அக்டோபரில் லக்னோவில் ஒரு தீவிர இந்துத்துவா தலைவர் கமலேஷ் திவாரி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட உடனேயே, அவர் அனைத்து முஸ்லீம்களையும் வன்முறையால் அச்சுறுத்தினார் மற்றும் இந்தியாவில் இருந்து இஸ்லாத்தை ஒழிப்பேன் என்று கூறினார்:
“ஒரு இந்து சிங்கம் கொல்லப்பட்டதையடுத்து, எங்கள் வீடுகள் அனைத்தும் துக்கத்தில் இருக்கிறது. இன்று கமலேஷ் திவாரியின் வீடு துக்கப்படுவதைப் போல நான் உங்களை துக்கப்படுத்தாவிட்டால், நான் என் தந்தையின் மகன் அல்ல என்று முஸ்லீம்களிடம் சொல்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரை ஆயுதங்களைப் பயன்படுத்துவேன். ஒவ்வொரு முஸ்லீம்களிடமும் நான் சொல்கிறேன், ஒரு நாள் நாட்டில் இருந்து இஸ்லாத்தை ஒழிப்போம்” என்று வெறுப்பு பேச்சு பல பேசித் திரிபவர்தான் யதி நரசிங்கானந்த்.
இதேபோல், பாடி சங்கத் ஆசிரமத்தின் பூசாரி மஹந்த் பஜ்ரங் முனி, கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் இந்து புத்தாண்டின்போது போலீசுத்துறை முன்னிலையில் முஸ்லீம் பெண்களுக்கு எதிராக பாரிய பாலியல் வன்முறைக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.
மஹந்த், கைராபாத் பகுதியில் உள்ள பாடி சங்கத் உதாசின் ஆசிரமத்தின் தலைமை பூசாரி ஆவார். “நீங்கள் ஒரு இந்து பெண்ணை துன்புறுத்தினால், நான் வெளிப்படையாக உங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வேன்” என்று மஹந்த் மிரட்டினார்.
இப்படி வெறுப்பு பேச்சுக்களை பேசித் திரியும் யதி நரசிங்கானந்த், மஹந்த் பஜ்ரங் முனி மற்றும் ஆனந்த் ஸ்வரூப் போன்ற இந்துமதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவதில் எந்த குற்றமும் இல்லை. எனினும் இது ஓர் குற்றம்போல் சித்தரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு கருத்து சுதந்திரத்திற்கு மிகவும் ஆபாயத்திற்குறியது.
முஸ்லீம் மக்களை படுகொலை செய்ய வேண்டும், விரட்டியடிக்க வேண்டும், பாலியல் வன்கொடுமை செய்யவேண்டும் என்று பொதுவெளியில் பேசி இந்துமத வெறியையும், மத கலவரங்களையும் தூண்டி நடந்தி வரும், இந்த இந்து பயங்கரவாதிகளை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம். இதைவிட கேலிக்கூத்து இந்த நாட்டில் வேறெதுவும் இருக்க முடியாது. இது போன்ற கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலை நாம் உழைக்கும் மக்களாக இணைந்து ஒழித்துக் கட்டாவிட்டால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் சங் பரிவார் கும்பல் ஜனநாயகத்தின் நுகத்தடியை முற்றாக வெட்டிவீசும் நாள் வெகுத்தொலைவில் இல்லை.
காளி

ரூ.265 கோடி நிதியை திருப்பி அனுப்பிய முந்தைய அதிமுக அரசு : வஞ்சிக்கப்படும் பழங்குடி மக்கள் !

0

பழங்குடியின மக்களுக்கான ரூ.265 கோடி நிதியை மத்திய அரசிடம்
திருப்பி ஒப்படைத்த முந்தைய அதிமுக அரசு !

மிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை (Tamilnadu government Tribal Welfare department) மூன்று ஆண்டுகளில் ரூ.265 கோடி நிதியை பயன்படுத்தாமல், அந்த நிதியை திருப்பி ஒப்படைத்துள்ளது.

இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் எஸ்.கார்த்திக், “மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.1,310 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். அதில் ரூ.1,045 கோடி மட்டுமே பல்வேறு அடிப்படைத் திட்டங்களுக்கு செலவு செய்துள்ளனர். மீதம் ரூ.265 கோடி செலவு செய்யப்படாமல் அரசிற்கே மீண்டும் திரும்பவும் ஒப்படைத்துள்ளனர் என்பதை தெரிவித்துள்ளார்.

மதுரையில் கல்மேடு, சக்கிமங்கலம் போன்ற பகுதிகளில் பல்வேறு பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதுபோக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த பகுதிகள் பார்ப்பதற்கு நவீன சேரிகளை போல் காட்சியளிக்கும். முறையான குடிநீர் வசதி இருக்காது. 500 குடும்பங்களுக்கு இரண்டு தண்ணீர் குழாய்கள்தான் உள்ளன; அதைக் கூட அந்த மக்கள் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கிட்டத்தட்ட ஆறு குடும்பங்கள் ஒன்றாக வாழ்வதாக அந்த மக்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு முறையும் அந்த மக்களிடம் வந்து பல்வேறு கோரிக்கைகளையும் வாக்குறுதிகளையும் வாரி வழங்கும் அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ பேருக்கு பிச்சை போடுவதைப்போல் சில விஷயங்களை செய்வார்கள் அதுவும்கூட அந்த மக்களின் தொடர்ச்சியான அழுத்தமும் போராட்டமுமே அத்தகைய நடவடிக்கை எடுக்கவும் அடிப்படையாக உள்ளது.

படிக்க :

♦ ’காவி கொடி தேசிய கொடியாக மாறும்’ பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா : இந்து ராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை தகர்ப்போம்!

♦ இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் அடுத்த நிகழ்ச்சி நிரல் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம்!

வீடு, மின்சாரம், குடிநீர், வேலைவாய்ப்பு, வருமானம் என அனைத்திலும் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வரும் பழங்குடியின மக்களுக்கு இந்த ரூ.265 கோடியை வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடிய நோக்கம்தான் என்ன?

இந்த அதிமுக – பாஜக கும்பலுக்கு மக்கள் நலன் என்றாலே கசப்பான ஒன்றுதான். போன ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அரசு கல்விக்காக ஒதுக்கிய நிதியில் ரூ.4,000 கோடி தொகையை திருப்பி அனுப்பியதும் அது அனைவராலும் கண்டிக்கப்பட்டதும் நடந்தது.

காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் துரத்தி அடிக்கப்பட்டு வாழ வழியில்லாமல் நகரங்களில் வந்து குவிந்துள்ள இத்தகைய பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு இன்னும் சரியான வேலை கிடைக்காமல் நிற்கும்போது, அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் நம்மை சினம் கொள்ள வைக்கிறது.

ஜெய் பீம் படம் வந்தபோது திமுக தலைவர் ஸ்டாலின் பழங்குடியின மக்களுக்கு ஆதரவானவர் என்பதுபோல காட்டிக்கொண்டு வளம் வந்தார். பல்வேறு உதவிகள் செய்வதாகவும் காட்டிக் கொண்டார். அப்படி இருக்கும்போது அந்த மக்கள் இன்றும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் வாழ்நிலை இன்றும் மாறவில்லை.

மாறாக, சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கியுள்ள தமிழக அரசு அதை உருவாக்க இன்று பல்வேறு உழைக்கும் மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி வருகிறது. ஒரு கார்ப்பரேட் நகரை உருவாக்க இப்படி உழைக்கும் மக்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கி வருகிறது. மக்களை அப்புறப்படுத்தி நவீன சேரிகளை உருவாக்கி வருகிறது. இதற்கு நிகரானதுதான் இப்படிப்பட்ட பழங்குடியின மக்களை புறக்கணிப்பது என்பது. கார்ப்பரேட்டுகளுக்கு விழுந்து விழுந்து சேவை செய்யும் இத்தகைய திராவிட மாடல்தான் நாளை உழைக்கும் மக்களை காப்பாற்ற போவதாக சொல்வது எவ்வளவு பெரிய ஏமாற்று.

கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் கார்ப்பரேட் சேவை மட்டும் நிரந்தரம் என்பதுதான் எதார்த்தம் ஆகிவிட்டது. பல்வேறு உழைக்கும் மக்களின் உரிமைகளும் உடமைகளும் பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு எதிரான மக்களின் போராட்டங்களும் வெடிக்க காத்திருக்கிறது அத்தகைய போராட்டங்களுடன் பழங்குடியின மக்களும் இணைந்து போராடுவதே தங்களுடைய உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள உள்ள ஒரே வழி.


ரவி

மீடியாக்களின் தைரியத்தில் விசக் கொடுக்குகளை நீட்டும் பாசிஸ்டுகள் | கேலிச்சித்திரம்

ந்தைப் பெரியாரை எண்ணி
மனம் வருந்துகிறேன்,
ஒரு தடியையேனும்
விட்டுச் சென்றிருக்கக் கூடாதா!

கிடைத்ததை மேய்ந்துவிட்டு
கண்டதை வாந்தியெடுத்துக்கொண்டிருக்கும்
அண்ணாமலை போன்ற அரைப்பைத்தியங்களின்
நடமாட்டங்கள் அதிகரித்துவிட்டன.

தடியின்
ஒரு சிதிலமேனும் இருந்திருந்தால்
தாமரைக் கம்பங்கள்
தரைமட்டமாக்கப்பட்டிருக்கும்!
கமலாலயங்கள்
கற்குவியலாய் மாறியிருக்கும்!

அரசியல் கட்சிகளும்
மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களும்
அரசியல் – ஜனநாயகம் என்று
பாசிச சர்வாதிகாரத்திற்கு
பக்க மேளம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது
மனிதர்களுக்கான பூமி
“பறையா” என இகழும் இழிபிறவிகளுக்கு
இங்கு இடமில்லை என பாடம் புகட்டுவோம்.

கேலிச்சித்திரம் : மு.துரை

What is the ‘quality’ of NEET?

The BJP and its supporters have long been shouting that NEET for medical admissions is being conducted to admit students to medical education on the basis of merit. But from time to time, many data have revealed that aptitude competitive exams like NEET helps well-to-do students and also pave the way for coaching centres to loot and exploit.
However, there are still people who recite the mantra that NEET in India helps in identifying ‘qualified’ students. Another data has now emerged, which spit on their faces.
“Careers-360’’ conducted a study on medical admissions. The study, conducted in March, has exposed with data that NEET is the easiest way for self-financing colleges to make large sums of money.
Moreover, the study explains how foolish is the dominant caste mentality that backward and scheduled caste students get seats in medical colleges even if they score low marks.
Read :
♦ The RSS Governors hindering the state governments from functioning!
♦ Ban on grazing cows in the forest! No ban on the bourgeois to deceive the country!
Careers360 analysed and compared the closing ranks in state-level counselling for NRI (Non Resident Indian) quota and government seats across five states. (The closing rank is the lowest rank at which admission was granted)
A comparison has revealed that the students who come under the affluent NRI quota are lagging far behind in the ranks and marks. Thus, the tinge of selecting deserving students has faded away. It has been revealed that a person who has money can study whatever he wants and does not need any qualification. NEET or any other exams won’t bother them.
Let’s take a look at the summary of the study:
Of the 16 lakh students who registered to appear for NEET in 2020, 13.6 lakh appeared for the exam. About 7.7 lakh of them (including those who have ‘just pass’ed) cleared the exam.
Generally, many people believe that all the medical seats will be filled according to the rank and score, starting with the student from the top. But that doesn’t happen.
Of the five states that “Carriers-360’’ has taken up for study, let’s take Karnataka for example. Check out the table below:
(For information regarding Medical Colleges of other states look into the source article “NEET: How NRI quota dilutes ‘merit’ but faces none of the flak reservation gets”)
In 2020, about 40,000 of the 80,000 UG medical seats in the country were held by government colleges and the other 40,000 seats by private colleges. In these private colleges, there are only 1,869 seats in the NRI category.
As per the policy formulated, the fee for NRI section is around ₹10 lakh. None of the students from middle-class families are ready to enrol at such a high fee. These colleges can admit anyone of their choice if NRI students do not enrol in the first two rounds of counselling. These colleges collect around ₹1 crore to ₹2 crore from the students who are admitted in those seats.
Read :
♦ Tek Fog App: The digital world under the grip of saffron fascists!
♦ Ongoing dominance of Dikshitars in Thillai Natarajah temple: The self-respecting Tamilians won’t tolerate it anymore!
This is why private colleges are supporting NEET. For instance, Sankalp Charitable Trust, which was the first to file a case in the Supreme Court in support of NEET, runs medical colleges. The court had also rolled out the red carpet for the looters.
Look at how all the arguments made by the BJP and snobbish commentators like Sumanth Raman and Balagurusamy about ‘quality’ and ‘merit’ have been falsified.
In the same private college, a well-to-do NRI, with a ‘just pass’ NEET score and ranking several lakhs below the ranks of the last student in the Scheduled Caste category admitted under the government quota, gets a medical seat. How can these students be considered superior in ‘quality’? The ‘quality’ of NEET exam had been torn apart!

Dhinakaran

சாதிய – மத மோதல்களை தூண்டிவிடும் அண்ணாமலையை கைது செய்! | மக்கள் அதிகாரம்

31.05.2022
ஆயிரங்காலம் அடிமை என்றாயே
பறையன் என்று இழித்துரைக்க யாரடா நாயே!
பத்திரிகை செய்தி
ரேந்திர மோடி பிரதமரானதன் எட்டாவது ஆண்டையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஒரு விளம்பரம் வெளியிட்டு இருந்தார். அதில், இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி, நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கையை நோக்கி என பல்வேறு உவமைகளை காட்டிய அவர், பறையாவிலிருந்து விஸ்வ குருவை நோக்கி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இழிவான நிலையிலிருந்து மேம்பட்ட நிலையை நோக்கி என்பதே அந்த விளம்பரத்தின் உள்ளடக்கம். அதன்படி, பறையா என்ற இழிவான நிலைமையிலிருந்து விஸ்வ குரு என்ற மேம்பட்ட நிலையை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருப்பதாகவே அவர் கூறியுள்ளார்.
இந்த நாட்டின் உழைக்கும் மக்களே உயர்ந்தவர்கள்! சாதிய மத – மோதல்களைத் தூண்டிவிட்டு நரித்தனமாக ஆட்சியை பிடித்து பாசிச ஆட்சியை நிறுவும் விஸ்வ குருக்கள் ஒருபோதும் உயர்ந்தவர்கள் அல்ல!
படிக்க :
♦ குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக : காவி பாசிஸ்டுகளை விரட்டியடிப்போம் ! | வீடியோ
♦ குற்றவியல் நடைமுறை (திருத்த) மசோதா 2022 : ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் பாசிசக் கொடுங்கரங்கள்!
இப்படி பச்சையாக சாதிவெறியைக்கக்கும் ஒரு அரசியல் கட்சி தலைவனை இதுவரை தமிழ்நாடு கண்டதில்லை. ஆனாலும் பா.ஜ.க-வின் அண்ணாமலைக்கு எதிராக தமிழ்நாடு கிளர்ந்தெழவில்லை. இது குறித்து பத்திரிகையாளர்கள் மற்றும் பலர் கேள்வி எழுப்பிய பின்னர், பறையா என்பதற்கு அகராதியை தேடிப்பாருங்கள் நக்கலாக பதில் அளிக்கிறார் அண்ணாமலை.
ஒரு வார்த்தை பொதுவாக எந்த அர்த்தத்தில் தொடங்கப்படுகிறதோ அதை அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்ளப்படும்.
தாழ்த்தப்பட்ட மக்களை இவ்வளவு கேவலமாக பேசிவிட்டு ஒருவன் தமிழகத்தில் நடமாட முடிகிறது என்றால் அதுவே தமிழ்நாட்டின் மிகப்பெரிய இழிவு.
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசிய அண்ணாமலையை இன்னமும் தமிழ்நாடு போலீசார் கைது செய்யாமல் இருப்பது என்பதே தமிழகத்தின் மிகப்பெரிய அவமானம் ஆகும்.
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு செய்த அண்ணாமலை, தான் செய்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அண்ணாமலை செல்லும் இடங்களிலெல்லாம் விளக்குமாறும் செருப்பும்தான் வரவேற்பு பொருட்களாக இருக்க வேண்டும்.
ஆகவே, தமிழக அரசு அண்ணாமலையே உடனே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்துவதுடன் சாதிய – மத மோதல்களை தூண்டிவிடும் அண்ணாமலையை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான போரை தொடங்க வேண்டும் | அருந்ததி ராய் | மணிவேல்

ந்தியாவில் மோடி ஆட்சியை விமர்சித்தாலும் சரி, எதிர்த்து குரல் கொடுத்தாலும் சரி அவர்களை அச்சுறுத்தி முடக்கிப்போடும் விதமாக பொய்வழக்குகளும் சிறைவாசமும் பாய்ந்து குதறுகின்றன. இது ஆண்டுக்காண்டு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதுதான் மோடியின் அமைதி தவழும் முகத்தின் – மோடி ஆட்சியின் – உண்மையான பக்கம்.
அதுமட்டுமல்ல, வெளியில் இருந்தாலே இவர்களது வார்த்தைகள் மக்களை தட்டி எழுப்பும் என்று மோடி, யாரையெல்லாம் நினைத்து கனவிலும் பயந்து கொண்டிருக்கிறாரோ, அவர்களும் பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணையின்றி சிறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிணை மறுக்கப்படுகிறது. மருத்துவ வசதிகள் மறுக்கப்படுகின்றன. அப்படி மறுக்கப்பட்டதால் மலைவாழ் மக்களின் உரிமைப் போராளி ஸ்டான் சுவாமி சிறையிலேயே இறந்து போனார். உடல்ரீதியாக அசைவில்லாமல் சக்கர நாற்காலியில் வாழக்கையை ஓட்டும் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, அவரும் சிறைக்குள் பிணையோ மருத்துவ வசதியோ கிடைக்காமல் இருக்கிறார்.
இதல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கான குரலாய் வெடித்து கிளம்பிய, இடதுசாரிகள் அறிவுஜீவிகள் ஆகியோருடன் கூட்டணியாய் இலட்சக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டிய பீமா கோரேகான் போன்ற ஒரு நிகழ்ச்சியை மீண்டும் அவர்கள் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்பதற்காக அந்த நிகழ்வில் பங்கேற்காதவர்கள் உட்பட  அறிஞர்கள், ஆர்வலர்கள், பாடகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என 16 பேர், இன்றைக்கு பொய் வழக்குகளில் சிறைபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று, மிக நகைப்புக்குரியது, ‘மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள்’ என்பது. இன்றுவரை போலீசுத்துறையால் அதற்கான ஆதாரங்கள் எதையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க முடியவில்லை.
CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்)-வுக்கு எதிராக போராடி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆர்வலர்கள், உழைக்கும் மக்கள் மற்றும் ஐந்து மாதங்களுக்கு முன் காஷ்மீரில் கைது செய்யப்பட்ட குர்ரம் பர்வேஸ் ஆகியோரை நினைவில் கொண்டுவர வேண்டும். அவரும் (குர்ரம் பர்வேஸ்) அவர் பணிபுரியும் அமைப்பான ஜம்மு – காஷ்மீர் சிவில் சொசைட்டி (ஜேகேசிசிஎஸ்) அமைப்பும் பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், மர்மமான முறையில் காணாமல் போனவர்கள் மற்றும் மரணங்கள் ஆகியவற்றின் உண்மை தன்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர். இன்றைக்கு அவர்கள் அனைவரையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
படிக்க :
♦ சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !
♦ குற்றவியல் நடைமுறை (திருத்த) மசோதா 2022 : ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் பாசிசக் கொடுங்கரங்கள்!
பாஜக-வை, ஆர்.எஸ்.எஸ்-ஐ, மோடியை, ஆதித்யநாத்தை கருத்தியல் ரீதியாக வேறுபட்டு விமர்சிப்பவர்கள் அனைவரும் இந்தியாவில் ‘தேசவிரோத குற்றவாளி’ யாக்கப் படுகின்றனர். அதன் பரிணாம வளச்சியாக இப்போது ‘அறிவார்ந்த பயங்கரவாதிகள்’ என்று வெளிப்படையாக முத்திரை குத்தப்பட்டு அது எங்கெங்கும் ஒலிக்கும் படி பார்த்துக் கொள்ளப்படுகிறது.
பல ஆண்டுகளாக, சாதாரண மக்களை, அவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்களை, அடக்கி ஒடுக்கி எவ்வித விசாரணையுமில்லாமல் கொட்டடிகளில் அடைத்து வைக்க உதவிக் கொண்டிருந்த கொடூரமான ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (ஊபா) மோடியால் அறிவிக்கப்ட்ட ‘அறிவார்ந்த பயங்கரவாதிகள்’ மீதும் எளிதாக பாய்ச்சும் வகையில் இப்போது திருத்தப்பட்டுள்ளது.
அதோடு அவர்களெல்லோரும் ‘மாவோயிஸ்டுகள்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ளார்கள். அதற்கு நாட்டுப்புற பாஷையில் ‘நகர்ப்புற – நக்சல்கள்’ அல்லது ‘ஜிஹாதிகள்’என பழக்கியுள்ளார்கள்; அவர்கள் அனைவரும் அவர்களுக்கு தெரியாமலே எப்போதும் குறிவைக்கப்பட்டுள்ளார்கள். எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில்தான் இருக்கிறார்கள்.
இந்தியாவை விட்டு வெளியே செல்லும்போது, நாம் ஒருவித திடுக்கிடும் நடவடிக்கைகளை உடைய வாசலைத் தாண்டிவிட்டோம் என்பதாக உணருகிறோம். இந்த நாடு நமதுதான், நமது சொந்த பூமிதான் என்ற உணர்வு ஒவ்வொருவரிடமிருந்தும் கரைந்து கொண்டிருக்கிறது. அது எப்போது திரும்ப வரும் என்பதற்கான உத்திரவாதத்தை பெற என்ன செய்ய வேண்டும்?
மார்ச் 2022-ல், பாரதிய ஜனதா கட்சி (BJP) இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. UP தேர்தல்கள் எப்போதுமே நாட்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படும். அந்த வகையில் மே 2024-ல் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கான “அரை இறுதி” ஆட்ட வெற்றியாக உ.பி தேர்தல் வெற்றிகள் கருதப்படுகிறது.
ஆனால், ஒரு விசயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. தேர்தல் பிரச்சாரம் என்பது, காவி அங்கி அணிந்த சாமியார்களால் பகிரங்கமாக ‘முஸ்லீம் சமூகத்தை இனப் படுகொலை செய்யவும் மற்றும் அவர்களை சமூக மற்றும் பொருளாதார புறக்கணிப்பு செய்யவும்’  விடுத்த அச்சமூட்டும் அறைகூவல்களாலும் அதை செய்ய வேண்டும் என்ற தூண்டுதல்களாலும் நிரம்பி இருந்தது.
தேர்தலில் பாஜக-வின் வெற்றி வலுவானதாகத் தோன்றினாலும், களத்தில் அவர்கள் மிகுந்த நெருக்கடிகளையும் கடுமையான போட்டியையும் எதிர்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. இதன் விளைவாக பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடையே ஒரு விசித்திரமான, ஏற்றுக்கொள்ள முடியாத கவலை மற்றும் வெற்றியின் மூலம் கிடைத்த அதீத நம்பிக்கை ஆகியவற்றின் கலவையை உருவாக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, இந்த ஆண்டு ரம்ஜானுடன் இணைந்த ராம நவமி பண்டிகையை பாஜக – ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் இந்துக்களை கொண்டாட வைத்தனர். ராம நவமியைக் குறிக்க, வன்முறை முழக்கங்களுடன் பாஜக – ஆர்.எஸ்.எஸ் இந்துவெறி கும்பல் – கைகளில் ஆயுதங்கள், வாள்கள் மற்றும் தடிகளுடன் பதினொரு நகரங்களின் வீதிகளில் ஊர்வலம் என்ற பெயரில் வெறியாட்டம் நடத்தினார்கள்.
சாமியார்கள் மற்றும் பாஜக செயல்பாட்டாளர்கள் தலைமையில், அவர்கள் முஸ்லீம் குடியிருப்புகளுக்குள் நுழைந்தனர்; மசூதிகளுக்கு வெளியே கூச்சலடித்தும், விசிலடித்தும் இழிவுப்படுத்தினார்கள். ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு கோஷமிட்டனர், பகிரங்கமாக மேடைகள் தோறும் “முஸ்லீம் பெண்களை பலாத்காரம் செய்து கருவூட்டவைப்பது மற்றும் இனப்படுகொலை செய்வதற்கு” பகிரங்கமாக பொதுவெளிகளில் வெளிப்படையாக தூண்டினார்கள்.
இம்மாதிரியான அச்சமூட்டும் பயங்கரவாத கொடுமைகளுக்கெதிராக முஸ்லீம்கள் எடுத்து வைக்கும் எந்த தற்காப்பான நடவடிக்கைகளும் அவர்களை சமூகத்தில் வாழ தகுதியில்லாத குற்றவாளிகளாக்கி, அவர்களது சொத்துக்கள் அரசாங்கத்தாலேயே புல்டோசர்கள்கள் மூலம் அழித்தொழிக்கப் படுவதற்கே வழிவகை செய்தது அல்லது இந்துமதவெறி கும்பல்கள் அவற்றை எரித்து நாசமாக்கினர்.
சதித்திட்டமிட்டு கலவரம் செய்தார்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்கள், ஏறக்குறைய பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்தான். அவர்கள் எவ்வித விசாரணையும் இன்றி தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழிக்க வேண்டி வரும். இதில் கொடுமை என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் ராம நவமிக்கு முன்னதாகவே வெவ்வேறு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர்கள்.
மற்றொருவர், வாசிம் ஷேக், பாஜக – ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் நடத்திய இந்து மத ஊர்வலத்தின்மீது கற்களை வீசி கலவரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்; என்ன ஆச்சிரியம்! அவர் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டவர் மற்றும் முன்கைகள் இல்லாதவர். அவர்களின் வீடுகளும் கடைகளும் கூட அரசாங்கத்தால் புல்டோசர்களை கொண்டு அடித்து நொறுக்கப்பட்டன. சில நகரங்களில் வக்ரமனம் படைத்த தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் புல்டோசர்களுக்குள் சவாரி செய்து படம் பிடித்து வெறியூட்டி மகிழ்வித்தனர்.
1984 சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு அடுத்து ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறை 2020-ல் முஸ்லீம்களுக்கெதிராக டெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை ஆகும். அந்த கலவரத்தில் ஏராளமான முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர்! படுகொலை செய்யப்பட்டனர்!! குறிவைத்து அவர்களது சொத்துகள் சூறையாடப்பட்டன!!!
உதாரணத்திற்கு டெல்லி சிவவிஹாரில் இருந்த 30 வீடுகளில் 27 வீடுகள் முஸ்லீம்கள் குடியிருந்தனர். மூன்று வீடுகள் மட்டுமே முஸ்லீம் அல்லாதவருடையது. கலவரத்தில் அந்த 27 வீடுகள் மட்டும் அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கப்பட்டன. அந்த முஸ்லீம் குடும்பங்கள் அங்கே வாழ முடியாத நிலை ஏற்பட்டது. மீதி மூன்று வீடுகள் எந்தவித சேதாரமுமின்றி பாதுகாப்பாக இருந்தன. வாக்காளர் பட்டியலுடன்தான் வன்முறையாளர்கள் களத்தில் கலவரத்தை செய்தனர்.
இந்த கலவரங்களுக்கு முன்னதாக, போராடிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களை குறிவைத்து அவர்களை தாக்கி அந்த இடத்திலிருந்து காலி செய்யவைக்க, காவி குண்டர்களுக்கு வெறியூட்டும் விதமாக, தாக்குதலை நடத்த அனுமதியும் அங்கீகாரமும் கொடுக்கும் விதமாக கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர், பர்வேஷ் வர்மா போன்ற பாஜக தலைவர்கள் பகிரங்கமாக பொதுவெளியில் தொடர்ந்து பேசி வந்தனர். இவர்களின் பேச்சுக்கள்தான் அந்த கலவரத்துக்கான காரணமாக அமைந்திருந்ததை முன்னாள் போலீசுத்துறை தலைவர் ஜீலியோ ரெபைய்ரோ உட்பட பலரும் அம்பலபடுத்தியிருந்தனர்.
குறிப்பாக, அனுராக் தாகூரின் “கோலி மாரோ” முழக்கம். போராடிக் கொண்டிருந்தவர்களை அங்கிருந்து கலைந்து செல்லாவிட்டால் “துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்” கோஷம்!
இப்படியெல்லாம் ‘பொதுவெளியில் மற்றொரு சமூகத்தினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பேசி விஷத்தை கக்கியிருந்தாலும் அதை பேசும்போது அவர்கள் புன்னகையுடன் காணப்பட்டால் அது குற்றமாகாது’ என்று டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்து கலவரங்களை வெளிப்படையாகத் தூண்டிய பாஜக தலைவர்களை விடுவித்தது.
இப்போது விடுதலையான அவர்களில் சிலர் மற்ற நகரங்களின் தெருக்களுக்குத் சென்று, ‘புன்னகையோடு’ இதேபோன்ற வன்முறையைத் தூண்டியுள்ளனர்.
அதேவேளையில் இளம் முஸ்லீம் அறிஞர் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் இன்னும் சிறையில் இருக்கிறார். அவர் மீதான போலீசுத்துறையின் குற்றப் பத்திரிகையில்” 2020 டெல்லி படுகொலைக்கான சதித்திட்டத்தில் பங்கேற்று அதனை வழிநடத்தியதை மறைப்பதற்கான நடவடிக்கையே CAA எதிர்ப்புப் போராட்டங்களின்போது,’ இந்திய அரசியலமைப்பை நிலைநிறுத்தும் வகையில் சகோதரத்துவம், அன்பு மற்றும் அகிம்சை பற்றி உமர்காலித் பேசியிருந்தது” என குறிப்பிட்டிருந்தனர். ஒரு முஸ்லீம் இந்திய தேசிய கொடியை உயர்த்தி அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என்று பேசினாலும் அது சந்தேகத்துக்குரியதாக பார்க்கப்படும். பாஜகவினர் கொலைகள் செய்தாலும் புன்னகையுடன் செய்தார்கள் என்று சொல்லி விடுவிக்கப்படுவார்கள்!
இது மட்டுமா? டொனால்ட் டிரம்பின் அரசுமுறை பயணத்தின்போது இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே, முஸ்லீம்கள் ‘தாங்களே கலவரத்தை ஏற்படுத்தி, தாங்களே தற்கொலை செய்து கொள்ளவும்’ சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இவை அனைத்தின் மூலமாகவும்தான்,– ‘2002-ம் ஆண்டு குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் மூலம்தான் பிரதமர் நரேந்திர மோடியின், சொந்த அரசியல் பயணமும் பெரும் பாய்ச்சலுடன் தொடங்கியிருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது’, – நாடு முழுமைக்கும் மோடி ஒரு உதாரண புருஷராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இம்மாதிரியான நேரங்களில் பெரும்பாலும் மௌனமாக இருக்கிறார். அதைவிட பெரும்பாலும் உதிரி கும்பல்களின் முன்னணியில் நின்று அதை வழிநடத்தி செல்பவராக, அந்த கும்பல்களின் தேவ தூதுவராக மற்றும் அவர்களின் வழிகாட்டியாக இருந்து, வாட்ஸ்அஃப் போன்றவை பரப்பும் விஷமத்தனமான வதந்திகளான ‘முஸ்லீம்களால் நிகழ்த்தப்பட்டதாக புனையப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட வரலாற்று அடக்குமுறை மற்றும் இனப்படுகொலை போன்ற பொய்யான வரலாற்றுக்கு’ இப்போது இங்கே பழிவாங்குவதற்காக முனைப்புடன் செயல்படுகிறார்.
இப்போது நாம் உண்மைகளே அல்லாத அபாயமான ஒரு பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவோ அல்லது குறைந்த பட்சம் அதைப்பற்றிய விவாதத்தை முன்னெடுக்கும் வகையிலான உண்மைகள் அல்லது வரலாறுகள் எதுவும் அனுமதிக்கப்படாத அல்லது இல்லாத ஒரு ஆபத்தான இடத்தில் நாம் தற்போது இருக்கிறோம்.
விவரிப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமலும் அல்லது ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக் கொள்ளாமலும் இருக்கின்றன.
இது என்ன என்றால் வரலாற்று உண்மைகளுக்கு எதிராக மேம்பட்ட வகையில் ஆரவாரத்துடன் கற்பனை கட்டுக்கதைகளை உண்மையைபோல திரித்து வைத்து ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான தகிடுதத்தம் ஆகும்.
புராண கட்டுக்கதைகளை மக்கள் மனதுக்குள் இவைதான் உண்மை என்று உட்காரவைக்க சகல அரசு இயந்திரங்களும் இரவு பகல் பாராமல் வேலை செய்கின்றன. கார்ப்பரேட்கள் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளித்தருகின்றன. இவை மட்டுமா? சாதாரண அப்பாவி மக்களின் வாழ்வோடு ஒன்றி போயிருக்கும் எண்ணற்ற 24/7 தொலைக்காட்சி செய்தி மற்றும் பொழுது போக்கு சேனல்கள் நாள் முழுதும் ஓய்வில்லாமல் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. அவற்றின் எல்லையும் ஆற்றலும் ஈடு இணையற்றது. இதில் பலியாகாத மனித மனம் இருக்க முடியாது.
இந்த உலகம் இதற்கு முன்பும் இங்கேதான் இருந்தது. ஆனால், இப்போது விவாதங்கள் முடிவுக்கு வரும் அந்த நேரத்தில் ஒரு போர்க்களத்தில் நிற்கும் அனுபவத்தை நாம் உணருவோம்.
சமூக வாழ்க்கையில் அன்றாடம் கடமைகளை நிறைவேற்றும் நபராக நடமாடும் நாம் திடீரென மரண தண்டனை விதிக்கப்பட்டவராகவோ அல்லது சிறைகொட்டடியில் அடைக்கப்படுபவராகவோ மாறும்போது நமது நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! மனதில் ஏற்படும் அச்ச உணர்வு! உடம்பெங்கும் நகரும் நரம்புகளின் நடுக்கம்!! சமூக வெளிகளில் யாரைப் பார்த்தாலும் ஏற்படும் சந்தேகம்!! ஏற்கனவே ஒரு இனம் சமூகம் மதத்தால் அடையாளப்படுத்தி அப்படிப்பட்ட நிலையில்தான் வைக்கப்பட்டிருக்கிறது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு திட்டமிட்ட வகையில் ஒரு சமூகமாக, முஸ்லீம்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டு, சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டு பெரும் அவமானத்திற்கிடையிலும் அச்சத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கூடுதலாக தொடர்ச்சியாக முஸ்லீம்களின் மனித உணர்வுகளுக்கு கூட கிரிமினல் சாயம் பூசி மனித இனத்திலிருந்து அகற்றும் பணியை மோடியின் பக்தர்கள் பாஜக – ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன வெறியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு காதல் வந்தால் அது ‘லவ் ஜிஹாத்’ (முஸ்லீம் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக இந்து பெண்களை காதலிக்க வைக்கும் சதி), நாட்டில் கொரோனா பரவிய நேரத்தில் முஸ்லீம்கள் சதிவேலைகள் செய்து பரவசெய்திருக்கிறார்கள், அதுதான் ‘கொரோனா ஜிஹாத்’ (கோவிட்-ஐ வேண்டுமென்றே பரப்ப சதி செய்தல், யூதர்கள் மீது நாஜிக்கள் குற்றம்சாட்டி இனஒழிப்பு செய்த்தை மறுஒலிபரப்பாக செய்கிறார்கள்) என்று இழிவான முறையில் அர்த்தம் கற்பித்து சமூக குற்றவாளிகளாக இனம் பிரித்து தொடர்ந்து அவர்கள் தன்மானத்தை சுயகவுரத்தை குத்தி கிளறி வருகிறார்கள்.
இது மட்டுமா, ‘வேலை ஜிஹாத்’ (சிவில் சர்வீசஸ்களில் வேலை வாங்கி இந்து மக்களை ஆள சதி செய்வது) – ‘உணவு ஜிஹாத்’, ‘ஆடை ஜிஹாத்’, ‘சிந்தனை ஜிஹாத்’, ‘சிரிப்பு ஜிஹாத்’ என்று எல்லாவற்றையும் ஜிஹாத் கண்ணாடி போட்டு பார்க்க வைக்கிறார்கள்.
முஸ்லீம்களிடம் இருந்துவரும் எந்த பதில் வாதமும், அவருடைய எந்த சிறிய தவறும் அவரை அடித்து நொறுக்கி, ஏன் கொலை செய்வதற்கு கூட போதுமானது! காட்டுமிராண்டித்தனமாக அதை நியாயப்படுத்தவும் செய்வார்கள்! இப்படிப்பட்ட கொலைகாரர்களைதான் பொதுவெளியில் ஹீரோ வாக்கி மாலை அணிவித்து, மரியாதைகள் செய்து வெகுமதிகள் பாராட்டுகள் அள்ளி கொடுத்து பாஜக-வும் – ஆர்.எஸ்.எஸ்-ம் மற்றவர்களுக்கு முன்னுதாராணமாக முன்னிறுத்துகிறார்கள். அவருக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் உறுதியளிக்கப்படும். இவர்களை அங்கமாக கொண்ட ஒரு சர்வ வல்லமை பெற்ற அரசாங்கத்திடம்தான் நாம் சிக்கியிருக்கிறோம்.
பல மதங்கள், மொழிகள், சாதிகள், இனங்கள் மற்றும் துணை தேசியங்களுக்கு இடையே நிலவும் அரசியல் சட்டப்படியான ஒரு சமூக ஒப்பந்தத்தினால்தான் இந்தியா ஒரு நாடாக, ஒரு நவீன தேசிய – அரசாக, அதனால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் ‘இந்த அல்லது அந்த’ என்று ஏதோ ஒரு வகையில் சிறுபான்மையினருடன் சம்பந்தபட்டவராக இருக்கிறார். பல்வேறு நடைமுறைகளால் கல்வி, உணவு, வியாபாரம், தொழில், தொழிற்சங்கம், மருத்துவம், கட்டுமானம், பேரிடர் காலங்களில் உதவி என அவர்களுடன் பின்னி பிணைந்துள்ளார்.
படிக்க :
♦ ம.பி : முஸ்லீம் என்று சந்தேகித்து மாற்றுத்திறனாளி முதியவரை அடித்தே கொன்ற பாஜக குண்டர்!
♦ கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கு : வழக்கறிஞர் ப.பா.மோகன் உரை | வீடியோ
இந்த சமூக நல்லிணக்கம்தான் மோடியின் பாஜக – ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன மேலாண்மையை நிலைநாட்டும் சித்தாந்தத்திற்கு எதிராக, பெரும் தடையாக இருக்கிறது. எனவே மக்களின் மனதில் விஷத்தை கலந்து, ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கி, நல்லிணக்கத்தை – ஒற்றுமையை – சீர்குலைப்பதற்காகவே நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் இந்து மக்களுக்கு பெரும் ஆபத்து வந்துவிட்டதாக அதையே முதன்மை பிரச்சினையாக்கி ஆர்ப்பரித்து கூச்சலிட்டு இந்திய சமூகத்தை ஒரு பதட்டத்திலேயே இருக்குமாறு பார்ப்பன மதவெறியர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.
அதன் விளைவாகவே அந்த சமூக ஒப்பந்தம் கட்டுப்பாடு, தவிடுபொடியாக்கப்பட்டு கொண்டிருக்கிறது, இந்த நாட்டில் ‘முதல் குடிமக்கள்’ மற்றும் ‘வாழ தகுதி பெற்றவர்கள்’ என தங்களை மட்டுமே கற்பிதம் செய்து கொண்டு மற்றெல்லோரையும் ‘தேசத்துரோகிகள்’ என பதியவைக்கிறார்கள்.
இந்த நாட்டை சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற ஒரு நாடாக உருவாக்க போராடியவர்கள்தான் நம்மைப் பற்றிய ஒரு நேர்த்தியான, களங்கமற்ற வரலாற்றை முன்வைக்க முடியும். உண்மையில் இதில் நாம் ஒடுக்குமுறைக்கு பலியானவர்களாக இருக்கிறோம். ஆனால் இன்று நடப்பதென்ன? நமது வரலாறுகள் அதன் பரப்பில் குறுக்கப்படுகிறது. வெட்டப்படுகிறது. புதிய புனைவுகள் சேர்க்கப்படுகின்றன. பல உண்மைகள் திரிக்கப்படுகின்றன. அப்படி உருவாக்கியிருக்கும் வரலாற்றின் மூலமே பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல் நம்மை அடையாளப்படுத்துகிறார்கள்.
சாதி, வர்க்கம், மதம், பாலினம் மற்றும் இனம் ஆகியவை சமூகத்தின் மேல்மட்டத்தில் நிலவி வந்தாலும், நமது சமூகம் அதன் கருநிலையிலேயே ‘படிநிலை சாதிய ஒடுக்குமுறை’ அமைப்பாக இருக்கிறது. ‘நால்வர்ணங்களை நானே படைத்தேன்’ என்று அகம்பாவத்துடன் பேசிய கீதை, ’மனுதர்மத்தை மண்ணில் நிலைக்க செய்யவே பிறவி எடுத்ததாக செயல்பட்ட ராமன்’ இவர்களை ஆதார புருஷர்கள்ளாக அடையாளப்படுத்தி ஏற்கவைத்த பார்ப்பன கும்பலின் மேலாண்மை வெறிக்கு பலியாகி ஏற்றத்தாழ்வு இழிவுகளை ஏற்றுக்கொள்வதே நமது கர்மம் என்று ஆரம்பத்திலிருந்தே வாழ்ந்து வருகிறது.
இந்திய துணைக்கண்டம் வரையறுக்கப்பட்டு, பிரிவினைக்குள்ளான போது நூறாயிர, இலட்சக்கணக்கான மக்கள்- இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கியர்கள் – ஒருவருக்கெதிராக ஒருவர் என கோபத்துடன் ஆற்றாமையுடன் நின்றனர். பத்து இலட்சம் மக்கள் எல்லா தரப்பிலிருந்தும் கொல்லப்பட்டனர். பல இலட்சக்கணக்கானோர் தாங்கள் வழிவழியாக வாழ்ந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர்.
தனிநபர் அல்லது ஒரு சமூகத்தின் பேரழிவு அல்லது துரதிர்ஷ்டம் பற்றிய எந்த ஒரு வரலாற்றிலும் அது எவ்வளவு உண்மையாக இருந்தாலும், மொத்த நிகழ்விலும் ஒரு பக்கத்தின் நிகழ்வுகளை மட்டும் குறிப்பாக மறைக்கும் அழிக்கும் வகையில் செயல்படும்போது அது எவ்வளவு பெரிய கொடூரமானதாக இருக்கும் என சொல்லத்தேவையில்லை. ஒரு ஆபத்தான பொய். இதன் மூலம் ஒரு வரலாற்றைத் தட்டி ஒட்டி வெட்டி தங்களுக்கேற்றவாறாக தகவமைத்துக் கொண்டு அதிலிருக்கும் சிறப்பான அம்சங்களை வெட்டி தூக்கியெறிந்துவிட்டு, அதையே தாக்குகின்ற ஆயுதமாகவும் மாற்றிக் கொள்வது, எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
துணைக் கண்டத்தில் உள்ள நம் அனைவருக்கும் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. நமது கூட்டு மனசாட்சியை உறுத்தும் வலி மற்றும் வெறுப்பை வெளியேற்றி, நீதிநெறிகளை பற்றி நமக்குள் பகிரப்பட்டிருக்கும் கருத்துகளை நோக்கி செயல்படுவது, அல்லது அதை மேம்படுத்திக் கொள்வது. அப்படி மேம்படுத்துவதற்கு இந்தியப் பிரதமர், அவர் தலைமை வகிக்கும் அரசியல் கட்சியான பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (RSS) – அவர் அங்கம் வகிக்கும் ஒரு பாசிச அமைப்பு – ஆகியவற்றை தேர்ந்தெடுத்துள்ளனர்.
நமது இரத்தம் தோய்ந்த பூமியின் உட்பகுதியிலிருந்து புரியாத தீயசக்திகளை வெளிக் கொணர்ந்து உலவ விடுகிறார்கள். அவர்கள் பற்ற வைத்த நெருப்பு ஒரு வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட பாதையோடு நின்று விடாது. அது நாட்டையே எரித்து சுடுகாடாக்க கூடும்.
இப்போது தீப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியா மற்றும் காஷ்மீர் முஸ்லீம்களுடன், கிறிஸ்தவர்களும், அவர்களின் தாக்குதல் இலக்கில் முன் வரிசையில் இருக்கின்றனர். கடந்த ஆண்டில் மட்டும், தேவாலயங்கள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் நடந்துள்ளன. கிறிஸ்துவின் சிலைகள் அவமதிக்கப்பட்டன, பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் தாக்கப்படுகின்றனர்.
நாம் நமது சொந்த கைகளை கொண்டுதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். வெளியிலிருந்து எந்த உதவியும் வராது. ஏமனில் படுகொலைகள் நடந்தபோது உதவிக்கு யாரும் வரவில்லை. இலங்கைக்கும், ருவாண்டாவுக்கும் வரவில்லை. இந்தியராகிய நாம் மட்டும் ஏன் எதிர்பார்க்க வேண்டும்?
சர்வதேச அரசியலில், இலாபம், அதிகாரம், இனம், வர்க்கம் மற்றும் புவிசார் அரசியல் மட்டுமே ஒழுக்கத்தை தீர்மானிக்கிறது. மற்ற அனைத்தும் வெறும் தோரணை, நிழல் நடனம்.
பட்ட பகலில் நாடு முழுமையும் உள்ள மக்கள் கண்முன்னே கற்பனையான படுகொலை சதிகளால் தயாரிக்கப்பட்ட வெறித்தனத்தோடு ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்து அதன் மூலமாக ஓட்டு வங்கியை கைப்பற்றி அதிகாரத்திற்கு வந்த மனிதர்களால் இந்தியா ஆளப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஆனாலும், ஒவ்வொரு சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்த சாதாரண மக்களிடமிருந்தும், முஸ்லீம்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடியவர்களிடமிருந்தும், கடந்த ஆண்டு நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க விவசாயிகள் இயக்கத்திலிருந்தும், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலுள்ள பிராந்திய அரசியல் கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமல்ல இந்த மாநில அரசியல் கட்சிகள் தோளோடு தோள் சேர்ந்து பாஜக-வை சில மாநிலங்களில் மட்டும் தோற்கடிக்கவும் செய்தன.
இப்போது நாட்டில் நடக்கும் சகிக்கவொண்ணாத செயல்களை பெரும்பான்மை இந்தியர்கள் ஏற்கவில்லை என்று சொல்வதுதான் சரியானதாகவும் நியாயமானதாகவும் இருக்கும். ஆனால், அவர்களின் மறுப்பு பெரும்பாலும் அப்போதைய வெறுப்பினடிப்படையில்தான் வெளிப்படுகிறது, விதியை நொந்து கொண்டு நம்மால் செய்ய முடிந்தது இதுதான் என மெளனமாக இருப்பது நியாயமானதல்ல.
ஏனெனில் பாசிசத்தின் கொடுமைகளை திட்டமிட்டு அரங்கேற்றிக் கொண்டிருப்பது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட, அதற்கேற்ற முறையில் சகல வசதிகளும் செய்துதரப்பட்டுள்ள, வன்முறைகளுக்கு அஞ்சாத, எந்த சட்டஒழுங்கிற்கும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் கட்டுப்படாத ஒரு ஆயுதம் தாங்கிய சமூக விரோத பாசிச கும்பலின் ஆர்ப்பரிக்கும் செயல்களின் முன் நம்முடைய மௌனமும் அல்லது ஓட்டுப்போடுவதன் மூலமே மாற்றத்தை கொண்டுவந்துவிடலாம்; அதுதான் நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதி என்று முடங்கிக் கொள்வதும் முற்றிலும் பயனற்றது. பாசிசத்தை எதிர்கொண்டு வீழ்த்திய வரலாறுகள் நம்முன்னே காணக்கிடக்கின்றன.
ஒரே தேசிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரசு, பாஜக-வை எதிர்ப்பதற்கான சித்தாந்த பலமோ தொண்டர்கள் வலிமையோ இல்லாமல் திணறிக்கொண்டிருப்பதையே கண்கூடாக பார்க்கிறோம். மதவெறி பாசிசத்தை எதிர்கொள்வதற்கான ஒரு உறுதியான நிலைப்பாட்டினை எடுக்க மன தைரியத்தையும் அந்தக் கட்சி கொண்டிருக்கவில்லை. இதுவரை நாடு முழுதும் எதிரொலிக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.
நாட்டிலுள்ள மாநிலத்திலுள்ள பெரிய கட்சிகளும் பாஜக-வை எதிர்த்து – அதன் ஆட்சி அவலங்களை எதிர்த்து – நாட்டை உலுக்கும் போராட்டங்களை முன்னெடுக்க வக்கற்று கிடக்கின்றன. பாசிச கொடுமைகளை அனுபவிக்கும் உழைக்கும் மக்களுக்கு மீண்டும் மீண்டும் தேர்தல் பாதையே தீர்வாக வைக்கப்படுகிறது. அந்த தேர்தலையே தனது இஷ்டத்திற்கு நடத்தும் பாஜக-வின் முன் இது எப்படி தீர்வாகும்.
“காங்கிரஸ் முக்த் பாரத்” -காங்கிரஸ் கட்சி இல்லாத இந்தியாவுக்கான மோடியின் அழைப்பு உண்மையில் எதிர்க்கட்சிகளே இல்லாத அரசாங்கத்திற்கான அழைப்பு ஆகும். இதை நாம் வேறு என்ன பெயர் சொல்லி அழைக்க விரும்பினாலும், இருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தையும் ஒழித்துக்கட்டும் வேலைதான் இது என்பதுதான் உண்மை.
ஒரு தேர்தல் ஜனநாயகத்தின் அனைத்து அலங்கார வேலைகளையும் திரைகிழித்து உள்ளிருக்கும் அலங்கோலங்களையும் கசடுகளையும இந்தியா இப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்றாலும், நம்மை மதச்சார்பற்ற, சோசலிசக் குடியரசு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட; ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியால் நடத்தப்படும் ஒரு பாராளுமன்றம், ஒரு சுதந்திரமான நீதித்துறை மற்றும் சுதந்திர ஊடகம் – என்று அழைத்துக் கொள்ள வகை செய்யும் ஒரு அரசியல் சட்டத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
உண்மையில், இந்த அரசு இயந்திரம் (அதிக அளவில், நீதித்துறை, சிவில் சேவைகள், பாதுகாப்புப் படைகள், புலனாய்வுப் பிரிவுகள், போலீசுத்துறை மற்றும் தேர்தல் கமிஷன்உட்பட) நேரடியாகக் கையகப்படுத்தப்படாவிட்டாலும், இந்தியாவின் சக்திவாய்ந்த அமைப்பான, வெளிப்படையான பாசிச, பார்ப்பன தேசியவாத ஆர்.எஸ்.எஸ்.-ல் உள்ளிருந்து ஆழமாகச் செல்வாக்கு செலுத்தப்படுவதை நேரடியாக கண்கூடாக நாம் உணர்கிறோம் என்பதே உண்மை. இது பல நேரங்களில் அரசு நிறுவனங்களுக்கும் மேலாக நின்று ஆணைகள் போட்டு செயல்படுத்துவதையும் நாம் பார்க்கிறோம்.
1925-ல் நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ், இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டங்களை தூக்கியெறிந்துவிட்டு அதற்கு நேர் எதிராக நின்று ‘இந்தியாவை இந்து ராஷ்டிரா – இந்து தேசமாக’ அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகள் ஹிட்லரை வெளிப்படையாகப் போற்றி புகழ்கின்றனர். இந்திய முஸ்லீம்களை, ஜெர்மனியின் நாஜிகள் எப்படி யூதர்களை நடத்தினார்களோ, அதே பாணியில் அதே நடைமுறைகளை பயன்படுத்தி கையாள்கின்றனர்.
ஆரிய மேன்மைவாதம், சில மனிதர்கள் மட்டும் தெய்வீகமானவர்கள் மற்றும் கடவுளைப் போன்றவர்கள், மற்றவர்கள் ஆரியர்களுக்கு பணிபுரிய பிறந்தவர்கள், அழுக்கானவர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள் என்ற சித்தாந்தம்தான் பார்ப்பனியத்தின் அஸ்திவாரம், இந்து சாதிய சமூகத்தின் அடிப்படைக் கொள்கை, ஏன், இன்றைக்கும் இந்துக்களை ஒன்றிணைக்க, அமைப்பாக்க, பாஜக – ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தும் கொள்கையாகவும் இதுதான் இருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, மிகவும் ஒடுக்கப்பட்டவர்களிடையே கூட பலர் ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக அவர்கள் பின்னே அணிதிரண்டு நிற்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்-ன் ஆர்ப்பாட்டமான வலிமையான பிரச்சார சுனாமிக்கு பலியாகி, தங்களை எப்போதும் அடிமைகளாகவே, தீண்டத்தகாதவர்களாகவே, இழிபிறப்பாளர்களாகவே நிரந்தரமாக ஆக்கவல்ல ஒரு சித்தாந்தம் அதிகாரம்பெற்று ஆட்சிக்கு வர வாக்களிக்கின்றனர்.
2025-ல் ஆர்.எஸ்.எஸ் தனது நூற்றாண்டைக் கொண்டாட இருக்கிறது. ஒரு நூறு ஆண்டு கால தொடர் பிரச்சார இயக்கம் அதை ஒரு தேசத்திற்குள்ளேயே, அதற்கு எதிரான இன்னொரு தேசத்தை உருவாக்கியுள்ளது. வரலாற்று ரீதியாக ஆர்.எஸ்.எஸ் மேற்கு கடற்கரை சித்பவன் பார்ப்பனர்களின் கூட்டத்தால் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அது கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் மோடி, அவரது அமைச்சரவை அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் என்று எல்லோரும் அடக்கம்.
தங்களுக்கு சொந்தமாக பல்லாயிரக்கணக்கான தொடக்கப் பள்ளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள், சொந்த பதிப்பகப் பிரிவு, காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை “சுத்திகரித்து” அவர்களை “திருப்பி இந்துத்துவாவிற்கு” கொண்டு வர வேலை செய்யும் ஒரு வலிமையான பிரச்சார பிரிவு, ஒரே தன்மை கொண்ட பல்வேறு பெண்கள் அமைப்புகள், முசோலினியின் கருப்பு சட்டை படைகளை போன்றதொரு பல இலட்சக்கணக்கான பேரைக் கொண்ட மிருக பலம் வாய்ந்த ஆயுதமேந்திய படைப்பிரிவுகள் மற்றும் போலியாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பணியைச் செய்யும் மற்றும் நம்பத்தகுந்த மறுப்பு என்று அழைக்கப்படுபவற்றை கொண்டுள்ள நினைத்தே பார்க்க முடியாத அளவு நாடெங்கும் மிதமிஞ்சி இயங்குகின்ற இந்து பயங்கரவாத அமைப்புகள் என இன்னொரு உலகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
வேலையில்லா திண்டாட்டம் என்றுமில்லாத அளவு அதிகரித்துள்ள நிலையில் நாடே பொருளாதாரக் குழப்பத்தில் மூழ்கி சிக்கித்திணறிக் கொண்டிருக்கும்போது, பா.ஜ.க கட்சியோ தொடர்ந்து செல்வச் செழிப்புடன் வளர்ந்து, இப்போது உலகின் பணக்கார அரசியல் கட்சியாக உள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கணக்கு காட்ட தேவையில்லாத அநாமதேய தேர்தல் பத்திரங்கள் மூலம் பெயரை வெளிபடுத்த தேவையில்லாத மறைமுக நிறுவன நிதியளிப்பு’ முறையை செயல்படுத்துகிறது.
கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய மொழியிலும் உள்ள, கார்ப்பரேட் நிதியுதவி பெறும் பல நூறு டிவி செய்தி மற்றும் பொழுதுபோக்கு சேனல்களால் ஆதரிக்கப்படுகிறது, அவை மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் நிபுணத்துவம் பெற்ற சமூக ஊடக ட்ரோல்களின் படைப்பிரிவுகளால் ஏராளமான தவறான செய்திகள் சந்தைப்படுத்தப்படுகின்றன.
இத்தனைக்கும், பாஜக இன்னும் ஆர்.எஸ்.எஸ்-ன் முகப்பு அலுவலகமாக மட்டுமே உள்ளது. இப்போது நமது நாட்டிற்குள்ளேயே அதன் நிழலில் இருந்த ‘அ(வாள்)வர்களின்’ நாடு அதிலிருந்து  வெளியேறி, உலக அரங்கில் தனது இடத்தைப் பிடிக்க தயாராகி வருகிறது. ஏற்கனவே வெளிநாட்டு தூதர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு தங்களின் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்து மரியாதை செலுத்துவதற்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்காவில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் இத்தகைய நியாயமானது எனக் கருதிக் கொண்டுள்ளவற்றின் ஆபத்தை உணராத தேடுதலின் போர்க்களம் மையம் கொண்டுள்ளது. இதிலிருக்கும் அபாயம் என்னவென்றால் நேரடியாக வெற்றிபெற முடியாது போனாலும் முதலாளித்துவத்தின் பொருளாதார வல்லமையை கொண்டு வாங்கிவிட முடியும் என குற்றச்சாட்டுகளை எழுப்பும் பேர்வழிகள் நம்புகிறார்கள்.
2025 ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாக இருக்கும். அதற்கு முந்தைய ஆண்டு 2024-ல் பொதுத் தேர்தல் வரவுள்ளது. இதுதான் வன்முறைச் செயல்கள் திடீர் திடீரென பெருகுவதற்கான காரணத்தை விளக்குகிறது.
இதற்கிடையில் ‘மோடி என்ற காவலன் மீட்பர்’ நாடெங்கும் எங்கு திரும்பினாலும் நிறைந்திருக்கும் வண்ணம் ஏற்பாடுகள் நடக்கின்றன. நமது ஒவ்வொருவரின் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் அவரது முகம் உள்ளது. புதிதாக சமூகத்தில் இணைந்துள்ள வேலையில்லாத பல இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைகளுக்குப் பதிலாக மோடியின் படத்துடன் கூடிய மாவு மற்றும் உப்பு பைகள் வழங்கப்படுகின்றன. மக்கள் எப்படி நன்றி இல்லாமல் இருக்க முடியும்?
மற்றும் இரண்டாவது கோவிட் அலையின்போது, பெரும் எண்ணிக்கையில் பிணங்கள் தகனம் செய்யப்படுவதையும், புனித கங்கை நதியில் மிதக்கும் பிணங்களின் எண்ணிக்கையால் அதன் தோற்றம் மாறி இருப்பதையும் கண்டவர்கள் கரையில் தோண்டப்பட்ட கல்லறை குழிகளின் வரிசைகளை கண்டவர்கள் எவரும் அவர்களிடம் நம்ப வேண்டும் என போதித்ததை எப்படி நம்புவார்கள்?  நம்பமாட்டர்கள்.
இந்தப் போரில் ஆர்.எஸ்.எஸ் வெற்றி பெற்றால், அதன் வெற்றியோடு இப்போதிருக்கும் இந்தியா என்ற நாடு இல்லாமல் போய்விடும். தேர்தல்கள் எதுவும் இந்த நிகழ்ச்சிகளின் போக்கை மாற்றிவிடாது. ஏனெனில் தேர்தல்களும் மறைந்து விடும்!
இந்த நாட்டை தங்களது அயராத உழைப்பால் உருவாக்கி வளப்படுத்தி பாதுகாத்து வரும் உழைக்கும் மக்களுக்கு, ஒரு கொடூரமான உலகத்தை பரிசளிக்க காத்திருக்கிறது பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன மதவெறி கும்பல். அதை எதிர்கொண்டு மக்களை பாதுகாப்பதற்கான தெம்பும் திராணியும் இந்தியாவிலிருக்கும் எந்த வோட்டு பொறுக்கி அரசியல் கட்சிகளுக்கும் இல்லை!
படிக்க :
♦ பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு
♦ சொத்துவரி உயர்வு : தி.மு.க. பேசும் மாநில உரிமையும் வெங்காயமும்!
அப்படியென்றால் பாசிச சக்திகளை வேரறுக்க என்னதான் வழி? ஜெர்மனியின் நாஜி படைகள் உலகமெங்கும் வெற்றி வாகைசூடி நாடுகளை அடிமைப்படுத்தி சூறையாடிய வேளையில் ஹிட்லருக்கான முதல் மரண அடி ரஷ்யாவின் சின்னஞ்சிறு கிராமத்தில் தொடங்கியது. அங்கிருந்து பின்வாங்கி ஓடத்துவங்கிய ஹிட்லர் சொந்த நாட்டில் அவனது இரகசிய அறையில் தற்கொலை செய்துகொள்ளும் வரை நிற்கவில்லை. பாசிசத்தால் ஆட்படுத்தப்பட்ட நாடுகளை விடுதலை செய்தது ஸ்டாலினின் செஞ்சேனை!
அந்த மகத்தான சாதனையை படைத்தது மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனைகளால் வார்க்கப்பட்டு பாட்டாளி வர்க்கத் தலைமையிலான உழைக்கும் மக்களின் ஆட்சியை நடத்திவந்த மாபெரும் ஸ்டாலினின் சாதனை ஆகும். உலகம் முழுதும் மார்க்சிய சிந்தனைகளின் தாக்கம் உழைக்கும் மக்களின் துன்ப துயரங்களுக்கு தீர்வு காணும் வழிகளை காட்டுகிறது.
பாசிச பாஜக, ஆர்.எஸ்.எஸ், பார்ப்பன மதவெறி கும்பலின் சித்தாந்தத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் தூர்த்தி எடுத்து தூர எறியும் ஆற்றல் மார்க்சிய – லெனினிய –மாசேதுங் சிந்தனைகளுக்கு மட்டுமே உண்டு. அந்த சித்தாந்தத்தால் உருவாக்கப்படும் பாட்டாளி வர்க்க தலைமையிலான உழைக்கும் மக்களின் படைதான் பாசிச கும்பலுக்கு சரியான பதிலடி கொடுக்கும்!. அதற்காக சாதி, மதம், இனம், மொழி கடந்து ஒரு வர்க்கமாக, உழைக்கும் மக்கள் பாட்டாளி வர்க்கத் தலைமையில் அணிவகுக்க வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது. ஏற்கனவே நக்சல்பாரி எழுச்சியும், தெலுங்கானா புரட்சியும் நமக்கு அளப்பரிய பாடத்தையும் அனுபவத்தையும் தந்துள்ளது.
ஏற்கனவே, மிகவும் தாமதமாகிவிட்டது. நாம் ஒவ்வொருவரும் ஒரே வர்க்கமாக வேறுபாடுகளை களைந்து கொண்டு வீதியலிறங்கி பாசிச சக்திகளுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது. இருட்டை களையும், பாசிசத்தை எரித்து சாம்பலாக்கும் நெருப்பு நம் ஒவ்வொருவர் வீட்டு வாசலில் உள்ளது. கையில் ஏந்தி நமது எதிர்காலத்தை, நமது எதிர்கால சந்ததியினருக்கான இந்தியாவை படைக்கபோகிறோமா? இல்லையா? அது நம் கையில்தான் உள்ளது.
மூலக்கட்டுரை : The Battle to Save India – Arundhati Roy
மணிவேல்
நன்றி : த வயர்

பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு

லகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் என்பவர்தான் ட்விட்டர் (TWITTER) நிறுவனத்தின் பங்குகளை இப்போது வாங்கி இருக்கிறார். “பேச்சு சுதந்திரம்” மற்றும் “ஜனநாயகத்தை” பாதுகாக்க விரும்புவதாலேயே உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க சமூக ஊடக தளங்களில் ஒன்றான ட்விட்டர்-ஐ வாங்க இருப்பதாக சொல்கிறார்.
ட்விட்டர் எனும் சமூக ஊடகம் தற்போது (330 மில்லியனுக்கும்) 33 கோடி மக்களுக்கும் அதிகமான உபயோகிப்பாளர்களை கொண்டு இருக்கும் மிகப்பெரிய நிறுவனம். இந்த உபயோகிப்பாளர்களை எல்லாம் தனக்குகீழ் கொண்டு வருவதற்காக எலன் மஸ்க் ஏறக்குறைய இந்திய மதிப்பில் ரூ.3,30,000 கோடி ($ 44 பில்லியன்) செலவில் வாங்கி இருக்கிறார்.
பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் தொழிலாளி வர்க்கத்தின் குரலை உயர்த்தி பிடிக்கவும்தான் அதிக தொகையை மூலதனமாக இட்டு இந்த சமூக ஊடகத்தை வாங்கி இருக்கிறார் என்று எலோன் மஸ்க்கை, பலரும் பெருமையாக பேசி புழங்காகிதம் அடைவதை பார்க்கும் வேளையில், நாம் கடந்த காலத்தில் இவருடைய செயல்களை பற்றி பார்க்க வேண்டியது இருக்கிறது. அப்படி நாம் பார்க்கும்போது இவருக்கு இந்த மாதிரியான நல்லெண்ணம் இருப்பதாக எந்த இடத்திலும் தோன்றவில்லை.
படிக்க :
சொத்துவரி உயர்வு : தி.மு.க. பேசும் மாநில உரிமையும் வெங்காயமும் !
சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அமெரிக்க பயணத்தின்போது, டெஸ்லா எனும் நிறுவனத்திற்கு சென்று அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க் என்பவரையும் சந்தித்து வந்திருப்பது செய்திகள் வாயிலாக நாம் பார்க்க முடிகிறது. இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா சென்ற மோடி, இந்த முறை எலோன் மஸ்க் எனும் சர்ச்சைக்குரிய தொழிலதிபரை சந்தித்திருக்கிறார்.
ஜனநாயகம் பேச்சு சுதந்திரம் என்று போலியாக பெருமை பேசும் மஸ்க்கை, ஆண்டுதோறும் பேச்சு சுதந்திரத்திற்கான தரவரிசையில் இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும் பாரத பிரதமர் மோடி அவர்களின் சந்திப்பு என்பது யதார்த்தமாக ஏற்படக்கூடியது தான்.
சர்வாதிகாரிகள் ஒன்று கூடுவதும் வலது சாரிகள் ஒன்றிணைவதும் இயற்கைதான் என்பதை இந்த சந்திப்பு மீண்டும் உறுதி செய்து இருக்கிறது.
எலன் மஸ்க் என்பவர் கனடா நாட்டை பூர்வீகமாக தென்னாப்பிரிக்கவில் வைர சுரங்கம் வைத்து இருக்கும் அதிபரின் மூத்த மகன். கனடாவில் படிக்கும்போது 1 லட்சம் டாலர் கடனாளியாக இருந்ததாகவும் தனது பாக்கெட்டில் வெறும் 2,000 அமெரிக்க டாலர்களை மட்டும் வைத்துக்கொண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு தனது 24 வயதில் வந்து, தனது கடின உழைப்பால் இன்று உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறேன் என்று சுய புராணம் பேசுகிறார். தான் அமெரிக்காவிற்கு வந்து zip2 நிறுவனத்தை தொடக்கிய காலத்தில் இரண்டாவது கணினிக்குக் கூட பணம் இல்லாத நெருக்கடி நிலையில் இருந்ததாக அவர் சொன்னாலும் கூட, தென்னாப்பிரிக்க வைர சுரங்க முதலாளியின் மகன் என்பதையும், முதலீடு அங்கே இருந்தும் வந்தது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
அந்த நிறுவனத்தை 300 மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டதாக அவர் கூறுவது என்பது இவர் நமது பாரத பிரதமரைபோல் பல இடங்களில் முன்னுக்கு பின் முரணாக சுய புராணங்களை அபேசும் நபர் என தெரிகிறது.
பல ஆண்டுகளாக, மஸ்க் தன்னை ஒரு “பேச்சு சுதந்திரத்திற்காக போராடும் போராளி” என்று கூறி வருகிறார். கடந்த கால நிலைப்பாடுகள் நீதிமன்ற வழக்குகள், அவரது ட்வீட்கள் அவரது நிறுவனங்களில் இருக்கும் தொழிலாளர் விரோத போக்குகள் மற்றும் அவரது வணிக நடைமுறைகள் ஆகியவற்றை ஆராயும்போது அவர் அடிப்படை உரிமைகளுக்கே எதிரானவர் என அறியமுடியும்.
ஊழியர்களுக்கு வாய்ப்பூட்டு சட்டம்
டெஸ்லா (Tesla) எனும் நிறுவனமானது பங்கு பரிவர்த்தனைகளில் மோசடி செய்ததாக அமெரிக்க பங்குகள் பரிவர்த்தனை ஆணையம் (SEC) வழக்கு தொடர்ந்து இருக்கிறது. ஆனால், இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கில்தான், இப்போது இருக்கும் அரசை விமர்சிப்பதால் அரசாங்கம் தனது நிறுவனங்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாக சொல்லி இருக்கிறார். அதாவது தன்னை யாரும் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்ற திரிமிரில் கூறி வருகிறார்.
டெஸ்லா ஊழியர்களை தனது விருப்பம்போல பணிநீக்கம் செய்து முதலாளியின் ஆணவத்தை காட்டும் மஸ்க், வேலையைவிட்டு செல்லும் ஊழியர்கள் நிறுவனத்தைப் பற்றி பொது வெளியில் எதிர்மறையான கருத்துக்களைப் பேசக் கூடாது, பகிரக் கூடாது என்று பணி நீக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகுதான் உரிய பணம் பட்டுவாடா செய்யும் நடைமுறையை டெஸ்லா கொண்டுள்ளது என்பது குறித்து பல்வேறு அறிக்கைகள் வெளிவந்துள்ளன.  இப்படி தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை கூட மறுக்கும் இவர்தான் பேச்சுரிமை பற்றி வாய்கிழிய பேசி வருகிறார்.
இன பாகுபாடு
சி.என்.பி.சி எனும் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, மஸ்க்-ன் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிச்சூழல் தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் கிடைக்கபெற்று கலிபோர்னியா தொழிலாளர் நலத்துறை California’s Department of Fair Employment and Housing (DFEH) மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விசாரணை செய்தத்தில் கீழ்க்கண்ட உண்மைகளை கண்டறிந்தது:
♦ பல ஆண்டுகளாக நீடித்துவரும் கறுப்பினத் தொழிலாளர்களுக்கு எதிரான இனவெறித் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு
♦ கறுப்பினத் தொழிலாளர்களை நிறுவனத்தின் கீழ்மட்டத்தில் வைத்திருப்பது.
♦ புகார் செய்த கறுப்பின ஊழியர்களை பழிவாங்குதல்.
♦ பொது இடங்களில் கறுப்பின ஊழியர்களுக்கு என்று தனி வரிசை.
♦ இனரீதியான அவதூறுகள் ஸ்வஸ்திக் எனும் ஹிட்லரின் சின்னம் உள்ளிட்ட பிற வெறுப்புச் சின்னங்கள் பொதுவான பகுதிகளில் பொறிக்கப்படுதல்.
முகாந்திரத்தின் அடிப்படையில் California’s Department of Fair Employment and Housing (DFEH) தற்போது டெஸ்லா நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. அதனை எதிர்த்து தான் இந்த அரசாங்கம் தனக்கு எதிராக பொய் வழக்குக்களை போடுவதாக மஸ்க் கூறி வருகிறார்.
இனவெறியை தூண்டுதல்
கடந்த ஆண்டு கலிபோர்னியா நடுவர் குழு, டெஸ்லா நிறுவனத்தில் வேலை செய்த ஓவன் டயஸ் என்ற கறுப்பின ஊழியர் பணியில் சந்தித்த இனவெறி பாகுபாட்டிற்கும், அதை கண்டுகொள்ளாத நிறுவனத்திற்கு 137 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
பணியிடத்தில் இனவெறி பாகுபாடு தொடர்பான மற்றொரு வழக்கில், கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள டெஸ்லா தொழிற்சாலைக்கு மஸ்க் அனுப்பியதாகக் கூறப்படும் இன வெறி தூண்டுதலான மின்னஞ்சல் வெளிவந்தது. வேலையில் இருக்கும் கருப்பர்கள் “தடிமனான தோலை” கொண்டிருக்க வேண்டும் என்று மஸ்க் நம்புகிறார்.
ஊடக கட்டுப்பாடு
மஸ்க் பெரும்பாலான ஊடகங்களிடம் NDA (NON DISCLOSURE AGREEMENT)-களில் கையெழுத்திட்ட பின்னர்தான் பேட்டி மற்றும் அறிக்கைகள் கொடுப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். அதாவது இந்த NDA மூலம் இவரைப் பற்றிய செய்திகளை கட்டுரை வரைவுகளை நிறுவனத்திடம் காட்டி வெளியிடுவதற்கு முன் ஒப்புதல் பெறுமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளுக்கே கருத்து சுதந்திரம் கொடுக்க மறுக்கும் மஸ்க்தான் கருத்து சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டு வருகிறார்.
கொரோன குறித்த துவேஷ பிரச்சாரம்
அமெரிக்காவில், COVID-19 தொற்றுநோய் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கிய மார்ச் 2020-ல் தனது டிவிட்டர் பதிவில், கொரோனா என்பது ஏமாற்றுவேலை என்று கூறிய அவர் தடுப்பூசி “எதிர்மறையான எதிர்வினைகளை” உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார்.
பெருந்தோற்று காலகட்டத்தில் அவரது தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களின் உடல்நலத்திற்கு பெரும் ஆபத்து இருந்தபோதிலும் ஊழியர்களை கட்டாயமான முறையில் பணிகளை செய்ய வைத்தார். தேவையில்லாமல் அங்கிருந்த 10,000 தொழிலாளர்களை பாதிப்படையச் செய்தது.
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பது, தொழிலாளர்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளாதது, தொழிற்சங்க எதிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். யுனைடெட் ஆட்டோ தொழிலாளர்கள் (UAW) மற்றும் தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் (NLRB) மஸ்க் தொழிலாளர்களின் உரிமைகளை கருத்தில் கொண்டு இவர் நிறுவனத்தின் பல மீறல்களை மேற்கோள் காட்டி நடவடிக்கை எடுத்து வருகிறது.
மஸ்க்-ன் பேச்சு சுதந்திரம் என்பது அவரது தனி நபர் சார்ந்ததாகவே இருக்கிறது.
அரசியல் நிலைப்பாடு
எலோன் மஸ்க், தான் இடதும் அல்ல வலதும் அல்ல நடுநிலை என்றும் மையம் என்றும் பலமுறை சொல்லி வந்தாலும் கூட இவரது நிலைப்பாடு முழுவதும் தீவிர முதலாளித்துவ வலதுசாரி என்பதைதான் காட்டுகிறது.
பொலிவியாவுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தபோது, “நாங்கள் யாருடைய ஆட்சியை வேண்டுமானாலும் கவிழ்ப்போம்! சமாளித்துக்கொள்.” என்று தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், அமெரிக்க ஆளும் கட்சியான ஜனநாயகக் கட்சி “தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுவிட்டது” என்றும் கூறினார்.
படிக்க :
குற்றவியல் நடைமுறை (திருத்த) மசோதா 2022 : ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் பாசிசக் கொடுங்கரங்கள்!
ம.பி : முஸ்லீம் என்று சந்தேகித்து மாற்றுத்திறனாளி முதியவரை அடித்தே கொன்ற பாஜக குண்டர்!
அமெரிக்க குடியுரிமை விதியின் அடிப்படையில் இவரால் அங்கே தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும் கூட தனக்கு வேண்டப்பட்டவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாளித்துவத் திட்டங்களை அமல்படுத்த டிவிட்டர் மூலம் முயன்று வருகிறார்.
டிவிட்டர்
டிவிட்டர் எனும் சமூக வலைத்தளம் இனி பொய்களை பரப்புவோர் கைகளில் செல்லப்போகிறது. கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இந்த முதலாளிகளுக்கு சாதகமான விடயங்களை இவர்கள் இன்னும் வேகமாக இன்னும் பல போலி கணக்குகள் மூலம் பரப்புவார்கள்.
ஏற்கனவே, பிகாசுஸ் மூலம் ஒட்டுக்கேட்பும், பேஸ்புக் மூலம் பொய் செய்திகளை பரப்பியவர்கள் புதிதாக டிவிட்டரை விலைக்கு வாங்கி அதில் இருக்கும் வாடிக்கையாளர்களை வலதுசாரி மனநிலையில் மாற்றுவதுதான் இவரது நோக்கம். இதை உறுதி செய்யும் நோக்கில்தான் மோடி, மஸ்க் சந்திப்புக்கள் நடந்திருக்கிறது.  இந்தியாவிலும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக தொடங்கி விட்டது. போலியாக கட்டமைக்கப்படும் ஜனநாயக விரோத சக்திகளை அடையாளம் கண்டு முறியடிப்போம். யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வையுங்கோ எனும் சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.
ஆர்.எம்.பாபு

இடதுசாரி ஆதரவாளர்
disclaimer***

The RSS Governors hindering the state governments from functioning!

We remember that in the past, Puducherry Chief Minister Narayanasamy and Delhi Chief Minister Arvind Kejriwal used to sit on dharnas at the gates of the Raj Bhavan. The power of the elected representatives was ridiculed by the Governors there.
These power interferences are not only confined to the Union Territories, but also extended to the states. In order to clear the path for its Hindu Rashtra dream, the RSS-BJP has been sending its spies under the guise of “Governors” and using them to control the opposition-ruled states.
This has led to an open conflict between opposition Chief Ministers in Tamilnadu, Kerala, West Bengal & Maharashtra and the Governors, who are the overseers of the RSS.
In Tamilnadu, within a few months after DMK  assumed office, the then Governor Banwarilal Purohit was transferred to another state before completing his five-year term and R.N. Ravi, who was the Governor of Nagaland, was appointed as the Governor of Tamilnadu.
Governor Ravi, who had an intelligence background, as everyone expected, crossed his power limits and interfered in the functioning of the state government. As soon as he took over, he created a sensation by calling the DGPs of Law and Order and Intelligence in person. He asked the Chief Secretary to report directly to him.
Read :
Ban on grazing cows in the forest! No ban on the bourgeois to deceive the country!
Tek Fog App: The digital world under the grip of saffron fascists!
Even the DMK’s allies, including the VCK and the Tamil Nadu Congress, had already started expressing their disregard to Governor R N Ravi. The DMK, which initially remained silent, was also forced to openly protest against the Governor’s continued bureaucratic attitude.
R N Ravi had kept pending the resolution against NEET passed by the Tamilnadu Assembly for more than four months without sending it to the President. Irked by the fact that he went to meet Amit Shah and waited for more than 10 days and Amit Shah refused to meet him, T R Baalu said, “Tamilnadu Governor R N Ravi should resign”. Since then, the conflict which had been going on covertly became apparent. Finance Minister PT Palanivel Rajan said that so far 19 Bills have not been approved.
Governor Ravi is not only interfering in the functioning of the state government but is also propagating his ideology like a RSS cadre. In his greetings for Republic Day, he had said that “divine Holy Scripture – Thirukkural”, “The wisdom of life and beyond embedded in Thirukkural constitutes a fountainhead of Bharat’s eternal spirituality”, “Lord Rama lives eternally in the hearts of every Indian citizen”.
Presiding over the recently held South Zone Vice Chancellors’ Meet, he said that “India was made up of diverse cultural and spiritual values of the people who lived from one end of ‘Bharat’ to the other and the Constitution of India defines India as ‘Bharat’ before it refers to it as a Union of States”.
In the neighbouring state of Kerala, the conflict between the Pinarayi Vijayan-led CPM government and the Governor Arif Mohammed Khan had begun two years ago.
When a resolution was passed in the Kerala Assembly against the Citizenship Amendment Act with the support of the Congress, the Governor lashed out that, “I will not be watching all this; This is against the Constitution”.
In February, Governor Arif Mohammed Khan had appointed former BJP state committee member Hari S Kartha as his additional personal assistant. The Pinarayi-led government had opposed the appointment. “No one in government has the authority to control Raj Bhavan” Arif furiously said. He refused to endorse the government’s policy statement. Finally, the Governor read out the policy statement only after the Principal Secretary KR Jyothilal, who wrote a letter to the Governor on behalf of the government, was transferred.
West Bengal Governor Jagdeep Dhankhar recites the mantra “law and order has deteriorated” whenever any problem arise in the state. He has been effectively interfering in the day-to-day functioning of the government and putting pressure on the Mamata government, even if he finds a small reason.
Maharashtra Governor Bhagatsingh Koshyari to visit RSS headquarters in Nagpur.
After Mamata’s victory in the May 2021 Assembly elections, clashes broke out between the BJP and the Trinamool Congress at several places. Despite the tussle was between the two sides, Jagdeep Dhankhar started reciting “law-and-order” by targeting the ruling Trinamool Congress.
Chief Minister Mamata Banerjee has been alleging that Governor Jagdeep Dhankhar is holding several files sent by the government without signing them. Due to this confrontational trend, Mamata has written several times to the Prime Minister urging him to withdraw the Governor.
While the Mamata government was contemplating on passing a resolution against the Governor in the Assembly session, the Governor had on February 12 prorogued the West Bengal Assembly by exercising the power vested with him under Article 174 of the Constitution. Tamilnadu Chief Minister M K Stalin immediately condemned this. However, he later clarified that he had prorogued the Assembly on the recommendation of the ruling party.
Recently, eight people were killed when houses were set ablaze in Birbhum area following the killing of a Trinamool Congress panchayat leader. West Bengal was boiling at its peak after the incident. On March 28, legislators of the ruling Trinamool Congress and the Opposition BJP came to blows and a legislator was injured in the Assembly. This gave the Governor a golden opportunity to initiate a coup.
Rejecting Mamata’s objection the Calcutta High Court ordered a CBI probe into the Birbhum riots case. This action of the High Court could be viewed as a major step towards that. Speaking in the Rajya Sabha about this violence, the BJP MP Roopa Ganguly said that President’s rule should be imposed in West Bengal.
Karala Governor Arifkhan to donate funds to the Ram Temple in Ayodhya.
Like Tamilnadu Governor Ravi, Jagdeep Dhankhar is also presenting himself as an open Sangh Parivar member. He welcomed the High Court’s order banning Muslim girls from wearing hijabs in educational institutions in Karnataka. He also recently welcomed the film “Kashmir Files”, which is based on a lie that the saffron gang brought up for its anti-Muslim agenda. He has been a special invitee to an event of a religious institution with RSS background.
Maharashtra Governor Bhagat Singh Koshyari has been a ‘big bother’ to Chief Minister Uddhav Thackeray. Similar to the Governors of West Bengal and Kerala, he has been intervening in the day-to-day affairs of the government and is opposing everything.
During the corona lockdown, he taunted by saying that the state government should take steps to open temples. “There is no safety for women in Maharashtra and there should be a special discussion on this in the Assembly”, he said. He has also been delaying the approval of various schemes being brought by the government.
In February last year, Nana Patole, who was the speaker of the Maharashtra Assembly, resigned from his post and became the state Congress president. Governor Koshyari had refused permission to hold elections to elect a new speaker. Amendment made by the Rules Committee of the State Legislature to conduct the election of the Speaker by a voice vote instead of a secret ballot is said to be the reason for this.
Read :
♦ Ongoing dominance of Dikshitars in Thillai Natarajah temple: The self-respecting Tamilians won’t tolerate it anymore!
♦ Property Damage Prevention Act : A fascist weapon to curb protests !
The fact of the matter is that Uddhav Thackeray’s amendment to the Maharashtra Legislative Assembly Rules was due to the fear that if indirect elections were to take place, his allies would be bought through horse-trading and his government will be toppled.
Koshyari had also refused to accept the list given by the ruling party for the appointment of 12 members for the Legislative Council in the Governor’s quota. To date, these 12 MLC seats remain vacant. Governor Bhagat Singh Koshyari is working in line with the objective of the RSS-BJP, which is actively working to topple the Shiv Sena-led government at any cost.
The interference of pro-RSS Governors in state governments is not the problem of ruling parties. It is associated with ridiculing of the supposed sovereignty of the state governments. Even though the RSS-BJP get defeated in the elections, they retain power through their overseers called Governors. Thereby, the state governments are not able to function independently.
The demands of the people, including the anti-NEET bill and the resolution to release seven convicts, remain pending without Governor’s assent. The Governors are indulging in intolerable bullying such as supporting the hijab ban, supporting the NEET-New Education Policy, and propagating hindutva venom. They should be driven out of the state through mass agitations. It is only through the path of struggle that the powers of the RSS-BJP, which is interfering with the powers of the states, can be curbed.

Thulipa

சொத்துவரி உயர்வு : தி.மு.க. பேசும் மாநில உரிமையும் வெங்காயமும்!

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வேலையிழப்பு, மூலப் பொருட்களின் விலை உயர்வால் முடங்கும் சிறுதொழில்கள், நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் பெட்ரோல்-டீசல்-எரிவாயு விலை உயர்வு ஆகியவை ஏற்கெனவே மக்களின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் தமிழக அரசு அறிவித்திருக்கும் சொத்து வரி உயர்வு மேலும் மக்களது சுமையைக் கூட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல்-1 ஆம் தேதி இரவு அரசு வெளியிட்ட அறிவிப்பில், “பல ஆண்டுகளாக சொத்து வரியில் எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளது” என்று நியாயப்படுத்தி சொத்து வரியை 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தி அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி, குறைந்தபட்சமாக சென்னையின் முதன்மைப் பகுதிகள் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கு 25 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையின் பிரதான பகுதிகளில் அமைந்துள்ள 1800 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவுள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கும், வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கும் 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு அறிவிப்பிற்கு எதிராக அ.தி.மு.க, பா.ஜ.க, பாமக போன்ற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் அக்கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
படிக்க :
♦ இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு : சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு !
♦ ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் அராஜகத்தை கண்டிப்போம்! | மக்கள் அதிகாரம்
சொத்து வரி உயர்வு குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்த சொத்து வரி உயர்வு வெறும் டிரெய்லர்தான். இனி வரும் காலங்களில் மக்களுக்கு பல ‘பம்பர் பரிசுகள்’ காத்திருக்கின்றன” என்றார்.
“தமிழக அரசின் இம்மக்கள் விரோதப் போக்கால், சொந்தத் தொழில் செய்வோர், வீடு வாடகைக்கு விட்டிருப்பவர்கள், வாடகை வீட்டில் தொழில் செய்பவர்கள் மற்றும் குடியிருப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்” என பா.ஜ.க கண்டனம் தெரிவித்தது.
தி.மு.க. எதிர்ப்பில் தன்னை ஆளாக்கிக் கொள்ள விழையும் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இச்சொத்துவரி உயர்வு வாயில் விழுந்த அவலாக கிடைத்தது. குறிப்பாக தமிழகத்தில் நடைமுறையில் எதிர்க்கட்சியாகத் திகழ்கிற பாசிச பா.ஜ.க.விற்கு பொன்னான வாய்ப்பாகியது. இதனை ஒட்டி பா.ஜ.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.
000
சட்டமன்றத்தில் சொத்துவரி உயர்வு குறித்தான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த சொத்துவரி உயர்வை இந்த அரசு மனமுவந்து செய்யவில்லை. குறிப்பாக அடித்தட்டு மக்களை ஏழை, நடுத்தர வகுப்பு மக்களைப் பாதிக்காமல் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளை மனதிலே வைத்துக் கொண்டு சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 83 சதவீத மக்களை இவ்வரி உயர்வு பாதிக்காது” என்றார்.
ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் சொத்துவரி அதிகரிக்கப்பட மாட்டாது” என வாக்குறுதி அளித்திருந்ததை வசதியாக மறந்துவிட்டார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, “சென்னை மாநகராட்சியில் வரி உயர்த்தப்பட்டு 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு பிறகு, தற்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சந்தை மதிப்பு, பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆகிய காரணிகளைப் பரிசீலித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
சொத்துவரி உயர்வு தவிர்க்க முடியாதது என்று சொல்வதோடு, பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் சொத்துவரி இன்னமும் குறைவாகத்தான் இருக்கிறது என்றும் வாதிடுகிறது தமிழக அரசு. இது தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புக் கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் குறைந்தபட்ச சொத்துவரி ரூ.810 ஆகும். சீராய்விற்குப் பிறகு, இது ரூ.1215 ஆக உயரும். ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்புக் கட்டடத்திற்கு, மும்பையில் ரூ.2,157 ஆகவும், பெங்களூருவில் ரூ.3.464 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,510 ஆகவும் மற்றும் புனேவில் ரூ.3,924ஆகவும் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படித்தான், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திடீரென ஒரே இரவில் ஏற்றப்பட்ட பால்விலை, பேருந்து கட்டண உயர்வின்போது கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவுதான் என்றும், பல வருடங்களாக உயர்த்தாமல் தி.மு.க. அரசு நட்டத்தை உருவாக்கி விட்டதாகவும் அ.தி.மு.க.வினர் அப்போது நியாயப்படுத்தினர்.
சொத்துவரி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் பா.ஜ.க.வினர்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுங்கட்சியைக் கண்டித்து அறிக்கை விட்டு, போராட்டம் நடத்தி எதிர்ப்பைக் காட்டிய தி.மு.க. தாங்கள் ஆளுங்கட்சியாக மாறியதும், முந்தைய அரசாங்கம் செய்த அதே மக்கள் விரோத செயல்பாடுகளைச் செய்து அவற்றை நியாயப்படுத்துகிறது.
000
சொத்துவரி உயர்வுக்கான காரணம் குறித்துப் பேட்டியளித்த அமைச்சர் நேரு, மார்ச் 31-ஆம் தேதிக்குள் சொத்து வரியில் மறுசீராய்வு செய்யவில்லையெனில், மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிலுவை தொகையான ரூபாய் 7 ஆயிரம் கோடி நிதியையும், இந்த வருடம் தரவேண்டிய ரூபாய் 15 ஆயிரம் கோடி நிதியையும் தர முடியாது என நிதி ஆணையத்தின் 15-வது நிதிக்குழு நிபந்தனை விதித்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த நிதி ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விளக்கம் குறித்து பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தமது வசதிக்கேற்ப விளக்கமளித்து, தி.மு.க. அரசை விமர்சித்தாலும், நிதி ஆணையம் குறித்த இந்த விளக்கத்தில்  உண்மை உண்டு. இந்த நிதி ஆணையத்தின் செயல்பாடு குறித்து புரிந்து கொள்ளும் போதுதான், அவர்கள் மாநில அரசுகளுக்குக் கொடுக்கும் அழுத்தம் பற்றி  புரிந்துகொள்ள இயலும்.
மத்திய அரசு மக்களிடமிருந்து வசூல் செய்யும் மொத்த வரி வருவாயை மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கும் அமைப்பே நிதி ஆணையம். மாநிலங்களின் மக்கள்தொகை, நிலப்பரப்பு, மாநில உள்நாட்டு உற்பத்தி, கொடுக்கும் நிதியை சரியாக பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி கொடுக்கப்படுகிறது.
ஒன்றிய அரசின் நிதி பாரபட்சமின்றி எல்லா மாநிலங்களுக்கும் சமமாக சேர வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்நிதி ஆணையம் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையத்தின் நிதிக்குழு மாற்றியமைக்கப்பட்டு, ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை தனி தலைவர்களும் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது 15-வது நிதிக்குழுவின் காலகட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
13-வது நிதிக்குழு வரை நிதிப் பகிர்வானது 1971-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 2014-ம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு நியமிக்கப்பட்ட 14-வது நிதிக்குழு, 1971-ம் ஆண்டினது மக்கள் தொகையைவிட 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக்கு முக்கியத்துவம் கொடுத்தும், காடுகளின் பரப்பளவு உள்ளிட்டவற்றை புதிய அளவுகோளாக சேர்த்தும் நிதி ஒதுக்கீடுகளை கணக்கிட்டது. இந்நடவடிக்கையானது பெருமளவிற்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய, ‘தொழில் வளர்ச்சி’க்காகத் தொடர்ச்சியாக வனப்பகுதிகளை இழந்து வந்த தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு பலத்த அடியைக் கொடுத்தது.
ஏற்கெனவே 10-வது நிதிக்குழுவிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்த தமிழகத்திற்கான நிதி, 14-வது நிதிக்குழுவில் கிட்டத்தட்ட 16 சதவிகிதம் வரையில் குறைந்தது. இந்த நிதிக்குழுவின் பரிந்துரையால் தென்மாநிலங்கள் இழப்பைச் சந்தித்த அதே வேளையில், வடமாநிலங்கள் பெரும் லாபத்தை அடைந்தன. சான்றாக, தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசுக்கு கொடுக்கப்படும் 100 ரூபாய் வரியில் 29 ரூபாய் மட்டுமே தமிழகத்திற்குத் திருப்பித் தரப்படுகிறது. அதே நேரத்தில் பீகாருக்கு 219 ரூபாயாகவும், உத்திரபிரதேசத்திற்கு 149 ரூபாயாகவும் திருப்பித் தருகிறது, ஒன்றிய அரசு. (செய்தி ஆதாரம்: மெட்ராஸ் ரிவியூ)
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதியை வெட்டிச் சுருக்கிய மோடி அரசு, நிதி கொடுப்பதற்கு விதிக்கும் நிபந்தனைகளும், அவற்றை நடைமுறைப்படுத்தக் கொடுக்கும் அழுத்தங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் இந்திய அரசானது நிதிமூலதனக் கும்பலின் கங்காணியாக மாறி, மறுகாலனியாக்கத்தைத் தீவிரப்படுத்தி வருவதை எடுத்துக் காட்டுகின்றன. அதன் ஒரு பகுதியாகவே ஆண்டுதோறும் சொத்துவரி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதும் நடக்கிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வைத் திணித்து வருவதையும் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
ஏற்கெனவே, ஜி.எஸ்.டி.யைக் கொண்டுவந்து மாநிலங்களின் வரி வருவாயில் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. மேலும், எரிபொருட்கள் மீது பங்கிடப்படும் வரிகளைக் குறைத்து, ஒன்றிய அரசு மட்டுமே எடுத்துக் கொள்ளும் வரிகளை அதிகப்படுத்துவதன் மூலம் மாநில அரசுகளுக்குத் தரவேண்டிய நிதிகளை இல்லாதொழித்து வருகிறது. அவ்வப்போது தரவேண்டிய நிதிப்பங்கீடுகளை நிறுத்தி வைப்பது, புயல் – வறட்சி நிவாரணத் தொகைகளைத் தர மறுப்பது ஆகியவற்றின் மூலம் மாநிலக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எந்தவிதமான மக்கள் நலத் திட்டங்களும் செயல்படுத்த முடியாத நிலையை உருவாக்குகிறது.
இதன் மூலம் குறைந்தபட்ச மக்கள்நலத் திட்டங்களையேனும் செயல்படுத்தி, மக்களிடம் தமது செல்வாக்கை நிலைநாட்டவும் வாக்கு வங்கியைத் தக்க வைக்கவும் விரும்பும் தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகளின் செல்வாக்கைக் குறைக்கும் தமது நோக்கத்தை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் நிறைவேற்றி வருகிறது.
படிக்க :
♦ தலோஜா சிறையின் சித்திரவதைகளை எதிர்த்து போராடும் சாகர் தத்யாராம் கோரகே !
♦ அமேசானில் உதயமானது தொழிற்சங்கம் : நியூயார்க் நகர தொழிலாளர்கள் வென்றது எப்படி – ஓர் அனுபவ பகிர்வு!
நாம் சொல்லும் நிபந்தனையை ஏற்று நடைமுறைப்படுத்தினால்தான் நிதி தருவேன் என்று மாநிலங்களை தமது காலனியாக கருதி நடத்துகிறது ஒன்றிய அரசு. மாநில உரிமை வாய்ப்பந்தல் போடும் தி.மு.க. அரசு இதற்கெதிராக போராடாமல் “மனம் உவந்து செய்யவில்லை, வேறுவழியில்லை” என்று பசப்புகிறது. உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயமாகத்தான் தி.மு.க.வின் பேச்சு இருக்கிறது.
நீட், புதிய கல்விக் கொள்கை, எழுவர் விடுதலை, காவிரி நீர் உள்ளிட்ட பல்வேறு விசயங்களிலும் “சட்டப் போராட்டம் நடத்துவோம், சட்ட நுணக்கங்களை ஆராய்வோம்” என்ற வரம்புக்குட்பட்டு மாநில உரிமை பேசுகிறது தி.மு.க. அண்டை மாநிலமான தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தன்னுடைய மாநில விவசாயிகளிடமிருந்து புழுங்கல் அரிசியைக் கொள்முதல் செய்யாமல் வஞ்சித்ததால், மோடி அரசைக் கண்டித்து டெல்லியில் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
மக்கள் ஆதரவை தக்கவைத்துக் கொள்ளுதல், பா.ஜ.க. எதிர்ப்பு அணியில் தன்னை முக்கியத் தலைவராக முன்னிறுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நிரலே அவரது இத்தகைய எதிர்ப்பை உந்தித் தள்ளின. எனினும் அது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் தி.மு.க.வோ தனக்கு நெருக்கடி வராமல் ஒரு பக்கம் மாநில உரிமை பேசுகிறது. மறுபக்கம் வேறு வழியில்லை என்று மோடி அரசின் திட்டங்களுக்கு அடிபணிகிறது.
தி.மு.க.வின் இந்த இரட்டைப் போக்கை விமர்சிக்கும் தார்மீகப் பொறுப்புள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு எதிராக அக்கட்சியை ஆதரித்தவர்கள். இதுபோன்ற ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அவர்கள் வாய்திறந்து பேச வேண்டும். இல்லையெனில் பாசிச பா.ஜ.க. பேசுவதுதான் மக்கள் காதில் ஒலிக்கும். அது அபாயமிக்கது.

துலிபா

Ban on grazing cows in the forest! No ban on the bourgeois to deceive the country!

On March 4, 2022, the Madras High Court had ruled that cattle should not be allowed to graze in any of the areas declared as “forests” within Tamilnadu.
The litigant Thirumurugan said that due to the continuous grazing of cattle on Megamalai, the place where Vaigai river originates, the catchments are being damaged and thereby the volume of water reaching the river gets reduced; He further said that the Forest Department officials are issuing grazing permits in large numbers to help the cattle graze in the forests; Such a clearance would devastate the Megamalai forest area and eventually prevent the flow of water to the five districts. Hence, he sought a direction to stop the traditional practice of cow-grazing. It was in this case that the judges delivered the above verdict.
Who will be affected by this judgment? Who will benefit? Can anyone guarantee that if the cows stop grazing, the water resources in Vaigai river will not be affected? Well, if one is making a case on an issue, should the opinion of the respondents in that case be heard or not? There was no such necessity for the court.
In the Megamalai region, grazing is the second most common occupation after agriculture. Already, the forest department has been harassing those seeking permission to graze cows with cases, fines, etc.
The first reason for the shortfall in the supply of water to the Vaigai river is the mismanagement of the irrigation department. Moreover, there is a rampant water theft on both sides of the river above the Vaigai dam; There are many important reasons such as improper practices of the irrigation department in diverting water to unrelated areas.
Read :
♦ Property Damage Prevention Act : A fascist weapon to curb protests !
Thalavadi forest: Tribals threatened by Tiger Reserve and Corporate Interest!
A report compiled by the Theni District Collector and the Irrigation Department on water theft was released last year. It was clarified that the reason for the scarcity of water was that even before the river water reached the Vaigai dam, hundreds of pumps were placed and the water was transported for several miles indulging in illegal irrigation. Ignoring all this, the High Court provided justice with its eyes closed when it comes to the common man.
Megamalai is a biodiversity reserve forest, a protected area, an area inhabited by squirrels and tigers; Therefore, the cows should not be allowed inside’’. – the Court ruled on this basis.
The submissions made by conservation biologist Priya, who had been appointed as amicus curiae to assist the court, said that since Megamalai forests are a sanctuary area, risk of transmission of diseases like Foot and Mouth Disease (FMD) and Anthrax from domesticated cattle to wild animals is a huge risk; The noisy sounds made by the cows torment the wild animals; Therefore, cows should not be allowed to graze.
A bogus viewpoint is being created as if Megamalai has been an animal sanctuary for centuries, and suddenly some people started grazing cows and causing harm to wild animals.
Prior to 1947, Megamalai was a land area under the Kandamanur Zamindar. There are many privately owned tea gardens, private tourist resorts and properties belonging to the rich.
In 1978, the Government of Tamilnadu issued a legal notification to define settlement rights in parts of Megamalai amidst many difficulties. According to the notification, finally in 2010, about 25,000 hectares of land was designated as reserved forests. In the meantime, many people, including the inhabitants, the surrounding villagers, and the pastoralists, continued to graze.
The forest department was also involved in providing arbitrary licensing, imposing certain restrictions and harassing the herdsmen. But it didn’t stop completely. It is not legally possible under the existing laws to enforce such a ban.
Within the last ten years, the government further expanded the reserve forest area and declared about 63,000 hectares of land as Megamalai Wildlife Sanctuary. It then incorporated the nearby Srivilliputhur forests and declared it as a squirrels and tiger reserve recently. Even then, it was declared that about 37,500 hectares of land could be used for grazing purposes and that no one should come close to 64,000 hectares of land.
The pastoralists were there before the animal sanctuary was established. Neither is the Tamilnadu government willing to speak of the fact that they have a hereditary right, nor is the court willing to listen to the views of the pastoralists who speak this fact.
The concept of “wildlife sanctuaries in which no one enters” is not an accepted unanimous scientific basis. Many countries in the world have declared such comments to be “unscientific ideas that stand out from the people”.
It is only in countries like ours, which have accepted colonial laws as they are, there are ‘intellectuals’ who rely solely on literacy and ‘wildlife enthusiasts’ who have sculptured them by watching television channels like Animal Planet, National Geographic, etc. They are now teaching the people who have been grazing sheep and cattle in the forests for hundreds of years.
Read :
♦ Tek Fog App: The digital world under the grip of saffron fascists!
♦ Ongoing dominance of Dikshitars in Thillai Natarajah temple: The self-respecting Tamilians won’t tolerate it anymore!
The litigant is seeking a ban on herding goats and cows in Megamalai, while the court is banning the grazing of cows in forest areas across Tamilnadu. If a factory management has issued a termination order without due legal proceedings for a worker, will the High Court hearing a case in this regard, deliver justice to all such sacked workers across Tamilnadu without due legal action? It is in this question that the class outlook of the court lies hidden.
The Supreme Court verdict in the case filed against the eight-lane expressway is not that the eight-lane expressway should not be allowed; Only the conversion of land acquired from farmers for the eight-lane expressway into government land has been banned. At the same time, the verdict is that the government can issue a fresh notification formally after obtaining environmental clearance. Isn’t there any damage to wildlife, mountains and forests along the way of the eight-lane expressway project, which has been developed for the need of foreign capital?
How dramatical it is for the government, which works based on the policies of privatisation-liberalisation schemes aimed at ceding agricultural land, forests and mountains to multinational companies, to say, “We are going to increase forest cover, save nature and protect the environment”! The courts are the best accompaniment to this drama.
When the question arises, “Is it the capitalist or the nature?” the courts stand by the side of the capitalists. When it comes to “People or Nature?”, the courts side with nature. None of the people are ready to believe in this justice the courts provide.

Krishnaraj

குற்றவியல் நடைமுறை (திருத்த) மசோதா 2022 : ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் பாசிசக் கொடுங்கரங்கள்!

மோடி அரசு கொண்டுவந்த கார்ப்பரேட் நல – மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தோ, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பாசிச பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்தோ ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் பங்குபெற்று இருக்கிறீர்களா அல்லது சமூக ஊடகங்களில் விமர்சித்துள்ளீர்களா? அதற்காக போலீசு விசாரணை, வழக்குகளை எதிர்கொண்டிருப்பீர்கள். முன்பு அதையெல்லாம் சிறிய நிகழ்வாக கடந்துசென்றிருப்பீர்கள். எச்சரிக்கை! இனி மோடி அரசின் டிஜிட்டல் பாசிச கொடுங்கரங்களிலிருந்து நீங்கள் தப்ப முடியாது.
ஆம், இதுதான் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) திருத்த மசோதா 2022-இன் (Code of Criminal Procedure (Identification) bill 2022) பின்னணியில் ஒளிந்திருக்கும் பேரபாயம். நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி பா.ஜ.க. இம்மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய அமித்ஷா, “நாட்டில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 100 பேரில் 66 பேரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 100 பேரில் 70 பேரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றத்தண்டனை விகிதம் குறைந்துவருவதைப் பற்றியோ, அதனை அதிகரிக்கச் செய்வது பற்றியோ எதிர்க்கட்சிகளுக்கு கவலை இல்லை” என்று குற்றஞ்சாட்டினார். மேலும் தற்போது கொண்டுவந்திருக்கும் இச்சட்டமானது போலீசுத்துறைக்கு அதிக அதிகாரமளித்து பெருகிவரும் குற்றங்களைத் தடுக்கும் என்று கூறினார்.
அமித்ஷா பேசும் புள்ளிவிவரங்களையும் வைக்கும் வாதங்களையும் கேட்கும்போது, பொதுவில், சமூகத்தில் பெருகிவரும் குற்றங்களைக் குறைப்பதைப் பற்றி அக்கறைகொள்வது போல் தோன்றலாம். அப்படியானால் குற்றங்களைக் குறைக்க எண்ணும் அமித்ஷா, தன்னுடைய கட்சியினரைத்தான் முதலில் கூண்டோடு சிறைவைக்க வேண்டும். குண்டு வைக்கும் பயங்கரவாதிகள், கொலைக்குற்றவாளிகள், கிரிமினல்கள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரே எம்.எல்.ஏ.க்களாகவும் எம்.பி.களாகவும் நிரம்பி வழியும் கட்சி அல்லவா பா.ஜ.க.
படிக்க :
♦ குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 : பாசிசத்தை நோக்கிய அடுத்த அடி!
♦ குற்றவியல் சட்டத் திருத்தம் : மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு !
“பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்ற கூற்றே இவ்விசயத்திற்கு பொருந்தும். நம்மை ஆள்பவர்களைப் பொறுத்துதான் சட்டங்களின் அமலாக்கமும். பாசிச மோடி அரசின்கீழ் யார் யாரெல்லாம் குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள். மோடி அரசை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை விமர்சிக்கும் அறிவுத்துறையினர், இந்த பாசிச அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள், சிறுபான்மை முஸ்லீம் மக்கள் ஆகியோரே என்.ஐ.ஏ, தேசவிரோத வழக்கு, ஊ.ஃபா என்று ஒடுக்கப்படுகிறார்கள்.
சுருக்கமாக, பாசிச எதிர்ப்பாளர்களும் ஜனநாயகத்துக்காகப் போராடுபவர்களுமே காவிகளின் அகராதியில் ‘குற்றவாளிகள்’. அக்’குற்றவாளிகளை’ ஒடுக்குவதற்கான புதிய ஆயுதமாகப் புறப்பட்டிருப்பதே குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டம்.
உயிரணுக்களிலும் ஊடுருவும் கண்காணிப்பு பரவல் :
குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டம் என்பது குற்றவாளியிடமிருந்து சேகரிக்கப்படும் தரவுகளைப் பற்றியும் அதைக் கையாளும் முறைகள் பற்றியும் வரையறுக்கும் சட்டமாகும்.
ஏற்கெனவே இருந்த சட்டத்தின்படி, குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களிடமிருந்து மட்டுமே புகைப்படம், கை மற்றும் பாத ரேகைகள் ஆகியவை மாதிரிகளாக சேகரித்து வைக்கப்பட்டன. தேவைப்படும்பட்சத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணைக் கைதிகளிடமிருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
ஆனால் தற்போது திருத்தப்பட்ட சட்டத்தின்படி, தலைமுடி, உள்ளங்கை ரேகைகள், பாத ரேகைகள், கண் விழித்திரை, கருவிழிப் படலம், விந்தணு, சளி-எச்சில், மரபணு (டி.என்.ஏ.) ஆகிய உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் சேகரிக்கப்பட இருக்கின்றன. மேலும் கையெழுத்து மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவைகூட தரவுகளாக சேகரிக்கப்பட இருக்கின்றன.
000
டி.என்.ஏ.வானது நபருக்கு நபர் வேறுபடுவது. உயிரியல் மாதிரிகளில் இது ஒன்றை வைத்தே அவரது குடும்ப பின்னணி, அவர் உடலில் இருக்கும் குறைபாடுகள் – நோய்கள் உள்ளிட்டு அனைத்தையும் எளிதாகக் கண்டறிய முடியும். ஒருவரது கைக்குட்டையோ அல்லது அவர் உபயோகித்த பொருளோ குற்றம் நடந்த இடத்தில் இருந்தால்கூட டி.என்.ஐ.வை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பார்த்தால், அவரைக் குற்றம் புரிந்தவர் என முத்திரைக் குத்தப் போதுமானதாக இருக்கும்.
குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டத்தில் சேகரிக்கப்பட இருக்கும் உயிரியல் மாதிரிகளில் முக்கியமானது கண்விழித்திரை, கருவிழி படலம். இது முக அடையாளத்தை விடவும் நபர்களை எளிதாக அடையாளப்படுத்தக்கூடிய ஒரு முன்னேறிய வடிவம்.
முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், இன்று பல்வேறு நாடுகளில் மக்களை டிஜிட்டல் கண்காணிப்பின்கீழ் கொண்டுவர உதவுகின்றன. சமீபத்திய சான்று ஒன்றைக் குறிப்பிடுவதெனில், இரசியாவில் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யக் கூடியவர்களையும் உக்ரைனில் உளவாளிகளையும் அடையாளம் காண்பதற்காக இத்தொழில்நுட்பம், கண்காணிப்பு கேமராக்களோடு இணைத்துப் பயன்படுத்தப்படுகின்றன.
‘குற்றச்சம்பவங்களைக் குறைப்பது’ என்ற பெயரில், ஒருநபரது உணர்ச்சி வெளிப்பாடுகளைக்கூட நுட்பமாகக் கண்காணித்து உணரும் வகையிலான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட கேமராக்களை சென்னையில் 7,500 இடங்களில் பொருத்துவதற்குத் தீர்மானித்துள்ளது போலீசு. இது மக்கள் மீது தொடுக்கப்படும் பெருந்திரள் கண்காணிப்பாகும் (Mass Surveillance). இவற்றை மோடி அரசின் சட்டத்தோடு இணைத்துப் பார்த்தால் ஆபத்து விளங்கும்.
மோடி அரசால் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படும் நபர்களிடமிருந்து சேகரிக்கப்படும் இத்தகைய மாதிரிகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் உள்ளிட்ட பல கண்காணிப்பு கருவிகளுடன் இணைக்கப்படும்.
பழக்கவழக்கங்களைச் சேகரிப்பது என்ற அம்சத்தை வைத்துக்கொண்டு, மோடி அரசு சட்டவிரோத உண்மை கண்டறியும் சோதனைகளான நார்கோ பகுப்பாய்வு (Narco Analysis), மூளை வரைபட சோதனை (Brain mapping), பாலிகிராப் சோதனை (Polygraph test) போன்றவற்றை விசாரணையில் பயன்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இவை மிக ஆபத்தான சோதனை முறைகளாகும்.
சான்றாக, நார்கோ பகுப்பாய்வு என்பது ஒருவரை அரைமயக்க நிலைக்கு கொண்டுசென்று விசாரிக்கும் முறையாகும். இதற்காக அந்நபருக்கு கொடுக்கப்படும் சோடியம் அமிடால் (Sodium amytal) என்ற மயக்க மருந்து இதயத்துடிப்பை நிறுத்தலாம், இரத்த நாளங்களைச் செயலிழக்கச் செய்யலாம்; சில நேரங்களில் மரணத்தைக்கூட விளைவிக்கும் ஆபத்து நிறைந்தது.
இவற்றின் ஆபத்தை உணர்ந்து பல உலக நாடுகள் இந்த சோதனை முறையை தங்கள் நாடுகளில் தடை செய்துள்ளன. நம் நாட்டிலும் ஒருவரைக் கட்டாயப்படுத்தி இச்சோதனைக்கு உட்படுத்துவது தனியுரிமை மீறலாகும். ஆனால் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தியும் ஒருவரது சம்மதத்தின் பேரிலும் இச்சோதனை முறைகளை மேற்கொள்ளலாம் என்று 2010-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்போது திருத்தப்பட்டிருக்கும் சட்டத்தின்மூலம், இச்சோதனை முறைகள் எதுவும் பயன்படுத்தப்படாது என்று கூறுகிறார் அமித்ஷா. இன்னும் நுணுக்கமாக ‘குற்றங்களைக் கண்டறிய’ இச்சோதனை முறைகள் தேவை என நாளைக்கே இச்சட்டத்தின் ஒரு அம்சமாக சேர்க்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
கிரிமினல் குற்றவாளிகளாக்கப்பட இருக்கும் அரசியல் கைதிகள் :
முந்தைய சட்டத்தின்படி, குறைந்தபட்சம் ஓராண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள் மற்றும் நீதிமன்றம் உத்தரவிடும் விசாரணைக் கைதிகளிடமிருந்து மட்டுமே அடையாள மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. திருத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி, ஓராண்டுக்கும் குறைவான தண்டனைக்குட்பட்ட சாதாரண குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும் அல்லது குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகளாகவே இருந்தாலும் அவர்களது மாதிரிகளும் சேகரிக்கப்படும்.
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் 2019-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, மொத்தமுள்ள சிறைவாசிகளில் 69.05 சதவிகிதம் பேர் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். 2018-இல் இது 69.41 சதவிகிதமாகவும் 2017-இல் 68.49 சதவிகிதமாகவும் இருந்தது. இதுதான் நம்நாட்டு குற்றவிசாரணையின் யோக்கியதை. பாதிரியார் ஸ்டேன் சுவாமியைப் போல குற்றம் நிரூபிக்கப்படாமலேயே சிறைக்கொடுமையால் வாட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்டவர்கள் ஏராளம்.
இவ்வாறிருக்க, அற்ப விசாரணைக்காக போலீசு நிலையம் அழைத்துச் செல்லப்படுபவர்களின் உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளும் இச்சட்டத்தின்படி சேகரிக்கப்படும். அந்நபர்களிடமிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளை தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் கட்டுப்பாட்டில் 75 ஆண்டுகளுக்கு அழியாமல் பாதுகாத்து வைப்போம் என்று கூறுகிறார்கள்.
குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகளுக்கு மட்டுமல்லாது, குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டோரின் உயிரியல் தரவுகளும் தேவைப்படுமானால் (நீதிபதி உத்தரவின் பேரில்) அழிக்காமல் பாதுகாத்து வைக்கப்படும் என்று சொல்கிறார்கள். இது தீய உள்நோக்கம் கொண்டவை.
இனி ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை எதிர்ப்பவர்களுக்கு நாடே திறந்தவெளிச் சிறைச்சாலையாக்கப்படும். அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படும். பாசிஸ்டுகள் தருணம் குறிக்கும்போது ஏதேனும் சித்திரிக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளால் – ‘மோடியைக் கொல்ல சதி’ என்று பீமாகோரேகான் வழக்கில் அறிவுத்துறையினர் பலர் கைதுசெய்யப்பட்டதைப் போல – அவர்கள் கைதுசெய்யப்படலாம்.
நாடாளுமன்றத்தில், இச்சட்ட மசோதா அரசியல் காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். அப்போது இச்சட்ட மசோதாவின் பிரிவு 3-இன் கீழ் புதிய விதிகளை உருவாக்கலாம் என்று தெரிவித்த அமித்ஷா, புதிய விதிகளைச் சேர்க்க முடியும் என்ற அடிப்படையில், அரசியல் கைதிகளுக்கு மட்டும் உயிரியல் மாதிரிகளைச் சேகரிப்பதிலிருந்து விலக்களிக்க உறுதிசெய்வோம் என்றார். அதனோடு கூடவே அரசியல் தலைவர் ஒருவர் கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டால் அவர் மற்ற குடிமக்களைப் போல்தான் நடத்தப்படுவார் (அவரது மாதிரிகள் சேகரிக்கப்படும்) என்றும் சொல்கிறார். எது கிரிமினல் குற்றம்? அதை பாசிஸ்டுகள்தான் முடிவு செய்வார்கள்.
சட்ட அங்கீகாரம் பெற்றது டிஜிட்டல் பாசிச ஒடுக்குமுறை :
குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவின் நோக்கம் பொதுவில் குற்றங்களைக் குறைப்பது, குற்றவாளிகளைப் பிடிப்பது அல்ல. அது சிறுபான்மை மக்கள், ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதற்காக பாசிஸ்டுகள் ஏற்படுத்திக் கொண்டுள்ள சட்ட ஆயுதம் என்று கற்பனையிலிருந்தும் ஒருதலைப்பட்சமான பார்வையிலிருந்தும் நாம் சொல்லவில்லை. அவர்களது நடைமுறையிலிருந்து சொல்கிறோம்.
2019-ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், 2021-இல் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற செங்கோட்டை முற்றுகை ஆகியவற்றில் போராட்டக்காரர்களை அடையாளம் காண்பதற்காக முக அடையாளம் காணும் (facial recognition) தொழில்நுட்பங்களைப்  பயன்படுத்தியுள்ளது போலீசுத்துறை.
2019-ஆம் ஆண்டே குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், அதை நாடு முழுவதும் உள்ள போலீசுத்துறையினர் தங்களுக்கிடையே பகிர்ந்துகொள்வதற்காகவும் தேசிய தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பை (AFRS – Automated Facial Recognition System) ஏற்படுத்துவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது மோடி அரசு.
விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வருகைப் பதிவைக் கணக்கிட என அனைத்து வகைகளிலும் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் புகுத்தி பெருந்திரள் கண்காணிப்பை ஏற்படுத்திவருகிறது.
000
முந்தைய சட்டப்படி அடையாள மாதிரிகளைச் சேகரிக்க ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பு வகிக்கக்கூடிய போலீசார் மட்டுமே கோரிக்கை வைக்க முடியும். ஆனால் திருத்தப்பட்டச் சட்டத்தின்படி, ஒரு தலைமைப் போலீசு (Head constable) நிலையில் உள்ளவரே மாதிரிகளைச் சேகரிப்பதற்கான கோரிக்கையை வைக்க முடியும் என்று மாற்றியிருக்கிறார்கள்.
கருவிழி முதல் டி.என்.ஏ. வரையிலான நுட்பமான உயிரியல் மாதிரிகளைச் சேகரிக்கும் மோடி அரசு, அம்மாதிரிகளைச் சேகரிக்கும் பொறுப்புக்குரியவர்கள் விசயத்தில் தாராளவாதம் செய்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வினர் குறிவைக்கும் நபர்களின் மீது திட்டமிட்டு பொய்வழக்கு புனைந்து அவர்களிடமிருந்து சேகரிப்படும் தரவுகளை உள்ளூர் காவி பயங்கரவாத கும்பலுக்கு பரிமாற்றம் செய்துகொள்வதற்கு இந்தமுறை வசதியானதாக இருக்கலாம்.
2002-ஆம் ஆண்டு குஜராத்தில், முஸ்லீம் மக்களின் மீது கொடூரமான இனப்படுகொலையை அரங்கேற்றுவதற்கு விஷ்வ இந்து பரிஷத்துக்கு வழிக்காட்டியாக உதவியது வாக்காளர் பெயர் பட்டியல். எவையெல்லாம் முசுலீம் வீடுகள், வீட்டில் எத்தனை பேர் என்று குறித்துவைத்துக் கொண்டு படுகொலைகளை அரங்கேற்றினார்கள். தற்போது சேகரிக்கப்படவிருப்பதோ உயிரியல் மாதிரிகள். அவை டிஜிட்டல் கருவிகளோடு இணைக்கப்பட இருக்கின்றன. இவற்றை வைத்துக் கொண்டு காவி பயங்கரவாதிகள் நம்மை நுணுக்கமாகக் கண்காணிப்பார்கள். அதிதுல்லியமாக தாங்கள் இலக்கு வைப்பவர்கள்மீது தாக்குதல் தொடுப்பார்கள்.
படிக்க :
♦ தலோஜா சிறையின் சித்திரவதைகளை எதிர்த்து போராடும் சாகர் தத்யாராம் கோரகே !
♦ ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
குற்றவியல் நடைமுறை (அடையாள) திருத்தச் சட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் இலக்கில் ஒரு சிறுநகர்வே. பழைய காலனியக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒட்டுமொத்த குற்றவியல் சட்டங்களையும் (அடையாளச் சட்டம் என்பது இதன் ஒரு அங்கம் மட்டுமே) மொத்தமாக மாற்றியமைக்க வேண்டும் என்று மோடி-அமித்ஷா அரசு நீண்டகாலமாகக் கூறிவருகிறது. அதுதான் குற்றவியல் திருத்தச் சட்டம். அவர்களின் அடுத்த நிகழ்ச்சி நிரல்.
ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால், அவர்களின் மாதிரிகளைச் சேகரிக்கும் விசயத்தைப் பற்றிதான் அடையாள திருத்தச் சட்டம் பேசுகிறது. ஆனால் குற்றவியல் திருத்தச் சட்டமோ எவையெவை குற்றங்கள், எந்தெந்த குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை என்று வரையறுக்கும் தொகுப்பு.
ஈராயிரம் ஆண்டுகளாக நம்மை கொடூரமாக ஒடுக்கிவந்த பார்ப்பன மனுநீதி நவீன டிஜிட்டல் முறைக்கேற்ப மறுவார்ப்பு செய்யப்படலாம். அந்நாள் தற்போது நிலவுகிற போலி ஜனநாயக அரசமைப்புச் சட்டத்தைக்கூட ஒழித்துக்கட்டி இந்து ராஷ்டிர தண்டனைச் சட்டத் தொகுப்பை அறிமுகப்படுத்தும் நாளாக இருக்கும்.
போலியான சட்ட மாயைகளிலிருந்து விடுபட்டு, களத்தில் புரட்சிகர-ஜனநாயக சக்திகள் பாசிச பயங்கரவாதிகளுக்கு எதிரான மக்கள் எழுச்சியை உருவாக்கத் தவறும் ஒவ்வொரு நொடியும் பாய்ச்சல் வேகத்தில் இந்துராஷ்டிரம் நம்மை நெருங்கிவருகிறது.

வெண்பா

ம.பி : முஸ்லீம் என்று சந்தேகித்து மாற்றுத்திறனாளி முதியவரை அடித்தே கொன்ற பாஜக குண்டர்!

0
மத்திய பிரதேசத்தில் மாற்றுத்திறனாளி முதியவர் பாஜக ரவுடியால் அடித்துக்கொலை!
இது ஹிட்லரின் இன அழிப்பை போல் ஒரு முன்னோட்டம்!
டந்த மே 21 அன்று மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பாஜகவைச் சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என்பவர், முதியவரைப் பார்த்து ‘உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள்’ என்று கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொல்லப்பட்ட முதியவர் வேறு மதத்தைச் சேர்ந்தவராக இருப்பாரோ என்ற எண்ணத்தில் தினேஷ் குஷ்வாஹா தாக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பாஜக பிரமுகரால் அடித்தே கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி முதியவர் நீமுச் பகுதியைச் சேர்ந்த பன்வர்லால் ஜெயின் என அடையாம் காணப்பட்டுள்ளார்.
இந்த பிரச்சினையை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கு பேராசிரியர் அசோக் ஸ்வைன் (ஸ்வீடன், உப்பாசல் பல்கலைக்கழகம்) அவர்கள் பேசியது மிகவும் பொருத்தமாக இருக்கும். “முன்பெல்லாம் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி இஸ்லாமியர்களை அடித்துக் கொலை செய்தார்கள். பிறகு, இந்துப் பெண்களை திருமணம் செய்ததாக கூறி அடித்துக் கொலை செய்தார்கள். இப்போது முஸ்லீம்கள் போல் தோற்றம் அளித்தாலே கொலை செய்கிறார்கள்” எனக் கூறினார்.
படிக்க :
♦ தமிழகத்தில் தொடரும் அரசு நிர்வாகத்தின் அடக்குமுறைகள் மற்றும் கொட்டடிக் கொலைகள் !
♦ குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக : காவி பாசிஸ்டுகளை விரட்டியடிப்போம் ! | வீடியோ
ஆம்! முதியவர் யாரென்றே தெரியாது! அப்படி இருக்கும்போது அவரினுடைய தோற்றத்தை வைத்தே பாஜகவை சேர்ந்த இந்தக் கிரிமினல் அவர் இஸ்லாமியர் என முடிவு செய்கிறான் பாஜக காவிக் குண்டர். பிறகு அவர் இஸ்லாமியர் என நினைத்துக்கொண்டு அவருடைய அடையாள அட்டையை கேட்டு அடித்து கொலை செய்கிறான்.
ஆம்! இது காவி பாசிசத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்தான்.
ஒரு தனி மனிதனை யார் என்று தெரியாமலே விசாரித்து அடித்துக் கொள்ள முடியுமென்றால் இவருக்கு இந்த அளவுக்கு துணிச்சலை யார் கொடுத்தது.
இதே மத்தியப் பிரதேசத்தில்தான் ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்கள் அதைத்தொடர்ந்து இந்து மதவெறிக் கும்பலின் அட்டகாசம் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து அரசானது இஸ்லாமியர்கள் மீது பழியைபோட்டு இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்தது. முன்பெல்லாம் இந்த இந்துமதவெறி கலவர கும்பல்தான் பல்வேறு தீ வைப்புகள் கலவரங்களில் ஈடுபடும் தற்போது அந்தப் பணியை மத்தியப்பிரதேச அரசே கையில் எடுத்துள்ளது.
முதியவரை அடித்துக் கொள்ளும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவிக் குண்டர்களுக்கு துணிச்சலை கொடுத்தது இதே மத்தியப் பிரதேச அரசும் அதன் நடவடிக்கையும்தான்.
இதேபோன்ற நடவடிக்கைகள்தான் ஹிட்லரின் இனவெறி யூதர்களை கொள்ளவும்  பயன்படுத்தப்பட்டது. யூதர்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள பல சோதனைகள் வைத்துள்ளார்கள் அதில் ஒன்று, யூதர்கள் ஆண் குழந்தை பிறந்த உடனே ஸர்கம்ஃபிகேஷன் என்னும் ஆண் பிறப்புறுப்பில் முன் தோல் நீக்க சிகிச்சையை மதகுருமாரைக் கொண்டு செய்து விடுவார்கள்.
எனவே நாஜிக்கள் தெருவில் போகும் எந்த சந்தேகத்துக்கு இடமான ஆணையும் அவர்களின் கால் சட்டையை இறக்கி பார்த்து சோதிப்பார்களாம். இன்னும் இதுபோல் பல வழிமுறைகளை கையாண்டு யூதர்கள் யார் என கண்டுபிடிப்பார்கள் நாஜிகள்.
இப்படிப்பட்ட வேலையைத்தான் இன்று ஆர்.எஸ்.எஸ் – பாஜக சங் பரிவாரக் குண்டர் படை தொடங்கி வைத்துள்ளது என்பதையே மேற்கண்ட முதியவரை கொன்ற சம்பவம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இந்த வன்முறையும் இனஅழிப்பும்தான், மக்களை மேலும் மேலும் பிளவுபடுத்தவும் மதவெறி போதையில் அழுத்தவும் இந்த காவி – கார்ப்பரேட் கும்பலுக்கு பயன்படப் போகிறது.
இந்த மதவெறி போதையானது, நம் நாட்டைப் பீடித்துள்ள தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் போன்ற கார்ப்பரேட் சுரண்டலைப் பாதுகாக்கவும் அதை மக்களிடமிருந்து மறைக்கவும்தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கண் முன் உள்ள உதாரணம் இலங்கையில் நடக்கும் சம்பவம். ஆகவே, இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் வாழ்வில்லை என்பதை எடுத்துக்கொண்டு மக்களிடம் செல்வோம்! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம். பாசிசத்தை வீழ்த்துவோம்.

ரவி