Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 193

‘இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்’ – காவி பயங்கரவாதி பிரக்யா சிங் !

0
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி – பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி – பிரக்யா சிங் தாக்கூர் கடந்த ஜூன் 9 அன்று, முஹம்மது நபியை அவதூறு செய்ததற்கான இடைநீக்கம் செய்யப்பட்ட கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
செய்தியாளர்களிடம் காவி பயங்கரவாதி பிரக்யா, “இது இந்தியா, இது இந்துக்களுக்கு சொந்தமானது, சனாதன தர்மம் இங்கேயே இருக்கும். அதை உயிருடன் வைத்திருப்பது எங்கள் பொறுப்பு, நாங்கள் அதை செய்வோம். இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் (நுபுர் சர்மாவிற்கு எதிரான கருத்து) செய்திருக்கிறார்கள். கமலேஷ் திவாரி ஏதோ சொல்ல கொன்றுவிட்டனர். வேறொருவர் (நுபுர் ஷர்மா) ஏதோ சொன்னார், அவர்களுக்கும் கொலை மிரட்டல் வந்தது. நமது தெய்வங்களை சிதைத்து திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். இது அவர்களின் மனநிலையை காட்டுகிறது.” என்றார்.
நூபுர் ஷர்மாவைத் தவிர, மற்றொரு பாஜக தலைவரான நவீன் ஜிண்டாலும் முகமது நபியைப் பற்றி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது, இது இந்தியாவில் மட்டுமல்ல, வளைகுடா நாடுகளிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இதனால் நுபர் சர்மாவை இடைநீக்கம் செய்து ஜிண்டாலை வெளியேற்றியது பாஜக.
படிக்க :
♦ மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு !
♦ மாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் !
முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்களுக்காக தண்டிக்கப்பட்ட இந்துத்துவா தலைவர் கமலேஷ் திவாரி – அக்டோபர் 18, 2019 அன்று உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே படுகொலை செய்யப்பட்டார்.
திவாரியின் கொலைக்கு முஸ்லீம் மதகுருமார்கள் மீது போலீசுத்துறை குற்றம் சுமத்தியது – ஆனால், அவரது கொலைக்கு உள்ளூர் பாஜக தலைவர்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆதித்யநாத் அரசாங்கம்தான் காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதன் பின்னர்தான் திவாரி கொலை வழக்கு ஒரு கூர்மையான திருப்பு முனையை எடுத்தது. திவாரியின் தாயும் மருமகனும், தாத்தேரியில் வசிக்கும் உள்ளூர் பாஜக தலைவர் சிவக்குமார் குப்தா, ‘கோயில் தகராறு’பிரச்சினையில் திவாரியைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறினர்.
சிவக்குமார் குப்தா ஒரு “மாஃபியா” என்றும், அவர் மீது சுமார் 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். திவாரி, தான் கொல்லப்படுவதற்கு முன்பு முகநூல் நேரலை வீடியோவில், பாஜக தலைவர்கள் தன்னை கொலை செய்ய சதி செய்வதாக கூறியிருந்தார். ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்றவுடன், அவரது பாதுகாப்பு அகற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி – பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி – பிரக்யா சிங் தாக்கூர்
கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளின்படி, திவாரி கொலை செய்யப்பட்ட அன்று காலையில் காவி நிற குர்தா அணிந்த இருவர் திவாரியின் இல்லத்தை நோக்கி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. திவாரியின் வீட்டிற்கு அவரைக் கொல்வதற்காக வந்த இருவர் டீ குடித்துவிட்டு, அவரைக் குத்திக் கொல்லும் முன் சுமார் 30 நிமிடம் அவருடன் அரட்டையடித்திருக்கிறார்கள். இதை வைத்து பார்க்கும் போது, கொலையாளிகள் திவாரிக்கு தெரிந்தவர்கள் என்றும் அவருடைய சக இந்துத்துவவாதிகளகவும் இருக்கலாம் என்றும் போலீசு கூறியது.
ஆனால், தன் சொந்த கட்சிக்காரர்களையே கொலை செய்து அரசியல் செய்யும் வரலாறு கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான காவி பயங்கரவாதி பிரக்யா, கமலேஷ் திவாரியை ஏதோ முஸ்லீம் மக்கள்தான் கொன்று விட்டார்கள் என்று மதவெறியை தொடர்ந்து கிளப்பி வருகிறார்.
பிரக்யா இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது இதுமுதல் முறையல்ல. நவம்பர் 2019-ல், காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவை ‘தேசபக்தர்’ என்று பிரக்யா குறிப்பிட்டார். இது அவரது அறிக்கையை எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்ததால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
மே 2019-ல் கூட, லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, ​​பிரக்யா “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர், அப்படித்தான் இருப்பார். அவரை பயங்கரவாதி என்று கூறுபவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பதில் அளிக்கப்படும்” என்றார்.
2008-ம் ஆண்டு செப்டம்பரில் மாலேகானில் ஒரு மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில், 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பிரக்யா சிங் தாக்கூர் மிக முக்கிய குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், மோடி அரசு ஆட்சி அரியணையில் ஏறியது, மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். பிரக்யா சிங்-க்கும் பிணை வழங்கப்பட்டுவிட்டது.
படிக்க :
♦ சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !
♦ பயங்கரவாதி பிரக்யாசிங் கோட்சே விவகாரம் | பாஜக-வின் இரட்டை வேடம் !
இந்த காவி பயங்கரவாதி, இன்னொரு காவி பயங்கரவாதியை ஆதரிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இவர்கள் இந்தியா இந்துக்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று கூறி முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்களை திட்டமிட்டு செய்து வருகின்றனர். இந்து ராஷ்டிரத்திற்காக இவர்கள் செய்யும் படுகொலைகள் ஏராளம். மாலேகான் குண்டுவெடிப்பு, கொத்தரா ரயில் எரிப்பு, குஜராத் படுகொலை, முசாபர் நகர் கலவரம், கோவை கலவரம் என நாடு முழுவதும் முஸ்லீம் சிறுபான்மை மக்களை படுகொலை செய்வதே இவர்களின் முழுநேரப்பணி. மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்ததும் காவி பயங்கரவாதிகளின் அடிதளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
முஸ்லீம் சிறுபான்மை மக்களை காவி பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க, நாடு முழுவதும் பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் அடித்தளங்களை தகர்க்க, பாசிச எதிர்ப்பு படையாய் களமிறங்குவோம்.

சந்துரு

மோடியின் 8 ஆண்டுகால ‘சாதனை’, நாட்டு மக்களுக்கு தீராத வேதனை !

1
ளர்ச்சி என்ற முழக்கத்தை பிரச்சாரம் செய்து, குஜாராத் மாடல் வளர்ச்சியை முன்னிறுத்தி, 2014-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. அடுத்து நடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போதும் பா.ஜ.க வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. மோடி பொறுப்பேற்று கொண்ட 8 ஆண்டு காலம் நிறைவை ஒட்டி, நாடு முழுவதும் சாதனைகளை பட்டியலிட்டு பா.ஜ.க.வினரும், ஊடகங்களும் தொடர்ச்சியாக பிராச்சாரம் செய்து வருகின்றனர்.
000
5 டிரில்லியன் பொருளாதரத்தை எட்டி பிடிப்பதாக கூறியது மோடி அரசு; அதனை நிறைவேற்றியதா? இந்த ஆண்டு ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளோம் என்று கூறுகின்றனர். ஆனால், உண்மைநிலை என்ன? 2019-ம் நிதியாண்டில் ரூ.147.36 இலட்சம் கோடி, 2020-ம் நிதி ஆண்டில் ரூ.135.58 இலட்சம் கோடி. 2021-ம் நிதி ஆண்டில் ரூ.145.16 இலட்சம் கோடி ஆகும். சென்ற ஆண்டு 2019-ல் ஜி.டி.பி வளர்ச்சி மைனஸ் -6.6 சதவீதம் ஆகும். இந்த வீழ்ச்சி அடைந்த அடித்தளத்தோடு, 2020-2021 ஆண்டு வளர்ச்சியை கணக்கிட்டால் உண்மையான வளர்ச்சி என்பது ரூ.2.2 இலட்சம் கோடி. அதாவது உண்மையான வளர்ச்சி விகிதம் 1.52 சதவீதம் மட்டுமே.
படிக்க :
♦ சிலிண்டர் விலை உயர்வு : உழைக்கும் மக்களின் அடுப்பை அணைக்கும் மோடி அரசு | கேலிச்சித்திரம்
♦ எல்.ஐ.சி.யின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் மோடி அரசு !
மோடி அரசின் 8 ஆண்டுகளையும் ஒப்பிட்டு பார்த்தால் ஜி.டி.பி சராசரி வளர்ச்சி என்பது 7.5 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 5 டிரில்லியன் பொருளாதாரம் சாதிப்போம் என்று கூறிய மோடி அரசு 3 டிரில்லியன் கூட எட்டவில்லை என்பதுதான் உண்மை. இந்த புள்ளிவிவரங்களில் நாம் உண்மையான வளர்ச்சியை காண முடியாது. மாறாக, நாட்டில் பட்டினிக் கிடப்பவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து இருப்பதாகதான் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களின் சுமையை அதிகப்படுத்தும் விலைவாசி உயர்வு :
அன்றாடம் மக்கள் உட்கொள்ளும் உணவு பொருள்களின் விலை, கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதிகரித்துகொண்டு வருகிறது. உருளைகிழங்கு 65 சதவீதம், வெங்காயம் 69 சதவீதம், பால் 25 சதவீதம், உப்பு 28 சதவீதம், தக்காளி 155 சதவீதம், சமையல் எண்ணெய் 23 சதவீதம் என உணவு பொருள்களின் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும் விலைவாசி உயரும் என ஆர்.பி.ஐ கவர்னர் அறிவிப்பு செய்துள்ளார்.
பெட்ரோலிய வரிகள் மூலம் மட்டுமே, கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜ.க அரசாங்கம் மக்களிடம் இருந்து கொள்ளையடித்த தொகை ரூ.18.23 இலட்சம் கோடி. உணவு தானியங்களின் உற்பத்தி 22 சதவீதமும், பருப்பு வகைகள் உற்பத்தி 49 சதவீதமும் அதிகரித்துள்ளன. உற்பத்தி அதிகரித்த போதிலும், பொருள்களை வாங்கி நுகரும் வகையில் மக்கள் கையில் பணம் இல்லை என்பதுதான் உண்மைநிலை.
மக்களின் வருமானம் அனைத்தும் வரி என்ற பெயரில் மோடி அரசு கஜானாவிற்கு சென்றுவிடுகிறது. விலைவாசி ஆண்டுதோறும் கடுமையாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. தொழிலாளர்களின், விவசாயிகளின் வருமானம் தேக்க நிலையில் உள்ளது அல்லது வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது.
தொழிலாளர்களின் வருமானம் கடந்த இரு ஆண்டுகளில் 0.3 சதவீதம் மற்றும் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. விவசாயம் சாராத கிராமப்புற தொழிலாளர்கள் ஊதியம் 1 சதவீதம் அதிகரித்து, பின்னர் 0.3 சதவீதம் குறைந்துள்ளது.
000
ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் என பிராச்சாரம் செய்தது பா.ஜ.க.
புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கவில்லை என்பது மட்டும் அல்ல, ஏற்கெனவே உள்ள வேலைவாய்ப்புகளையும் ஒழித்து கட்டியுள்ளது மோடி அரசு. கடந்த 5 ஆண்டுகளில் 40.9 கோடியாக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 40.3 கோடியாக குறைந்துள்ளது.
பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், எட்டாயிரம் ரயில்வே பணிகளுக்கு 1.25 கோடி பேர் விண்ணபித்துள்ளனர். நகர்புறத்தில் 9 கோடி (23 சதவீதம்) பேருக்கு வேலையில்லை.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 2019-ம் ஆண்டு 7.8 கோடி பேர் இணைந்துள்ளனர். தற்போது இத்திட்டத்தில் 10.62 கோடி வேலையாட்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உயர்கல்வி படித்த இளைஞர்கள் பலர் பதிவு செய்யும் நிலைமை அதிகரித்து உள்ளது. ஒரு நாள் ஊதியம் 209, அதுவும் ஆண்டுக்கு 50 நாட்கள் மட்டுமே முழுமையான வேலைகள் கிடக்கிறது. சமீபத்தில், படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்று படித்த கல்லூரி வாசலில் டீக்கடை நடத்தும் அவலநிலைதான் மோடி ஆட்சியில் உள்ளது.
000
“என் வாழ்க்கையில் எல்லாமே 130 கோடி மக்கள்தான். என்னுடைய வாழ்வு என்பது அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு. எனது எட்டு ஆண்டு ஆட்சி நிறைவு செய்கிற இந்த தருணத்தில் ஏழைகளுடைய கவுரவத்திற்காகவும், மரியாதைக்காகவும் தொடர்ந்து இந்த வாழ்வு அர்ப்பணிக்கப்படும்” என்று மோடி கூறியுள்ளார்.
ஆனால், உண்மையில் நடந்தது என்ன? கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசின் சாதனைகள் இந்துத்துவா கருத்தியல் சித்தாந்தத்தை வேகமாக அமல்படுத்தும் வகையில், ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியது, குடியுரிமை சட்டத்திருத்தம், முத்தாலாக் தடைச்சட்டம், காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், இஸ்லாமியர்களுக்கு எதிரான தனது இந்துத்துவா கொள்கைகளை வேகமாக அமல்படுத்தி வருகிறது மோடி அரசு.
மறுபுறம், கார்ப்பரேட்களுக்கு பல்வேறு சலுகைகளை வார் வழங்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை பணமாக்கல் திட்டத்தின் மூலம் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் கார்ப்பரேட்களுக்கு ரூ.13 இலட்சம் கோடி தள்ளுபடி செய்துள்ளது. ரூ.6.5 இலட்சம் கோடி வரி சலுகைகள் அளித்துள்ளது. அதானி, அம்பானி, டாடா போன்ற பெரும் முதலாளிகளுக்கு, சுரங்கம், தொலைத்தொடர்பு, மின்சாரம், விமானப் போக்குவரத்து போன்ற மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
படிக்க :
♦ மோடிக்கு எதிரான கருத்து கொண்ட மாணவர்களை சல்லடைபோட்டு தேடும் ஐ.எஸ்.பி நிர்வாகம் !
♦ புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வை புரட்டிப் போட்ட பாசிச மோடி அரசு !
மோடி அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகள் வளர்ச்சி அடைந்துள்ளனர். மோடியின் பொருளாதர கொள்கையின் தோல்விகளை மறைப்பதற்கும், கார்ப்பரேட்கள் மக்கள் சொத்தை கொள்ளையடிப்பதற்கும் வழிவகை செய்வதற்கு, தினந்தோறும் இந்துத்துவ கருத்துகளை பிரச்சாரம் செய்து, திட்டமிட்ட இந்துமதவெறி கலவரங்களை நடத்தி வருகின்றனர்.
காவி – கார்ப்பரேட் இரண்டையும் ஒழித்து கட்டாமல் மக்களுக்கான வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியம் இல்லை. அதிகரித்து வரும் மோடி அரசின் பொருளாதர தாக்குதல்களையும், காவி பாசிச தாக்குதல்களையும் மோதி வீழ்த்த தாயாராவோம்.
தங்கபாலு

மறுகாலனியாக்க சுரண்டலுக்கு நவீன பண்ணை அடிமைகளாக மாற்றப்படும் செவிலியர்கள் !

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் செவிலியர்களை “தேவதைகளாக” “கடவுளாக போற்றிய“ அரசு இன்று அவர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்து, தான் ஒரு வன்முறை கருவி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
கடந்த ஜுன் 7-ம் தேதி அன்று “மருத்துவ பணியாளர் தேர்வு” (MEDICAL SERVICES RECRUITMENT BOARD EXAM – MRB) எழுதி ஒப்பந்த முறையில் 7 ஆண்டுகளாக வேலை செய்துவரும் செவிலியர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்து அணிதிரண்டு வந்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இதில், ஒரு பகுதியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்திற்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு தங்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் போன்ற அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து “திராவிட மாடல் ஆட்சியில்” மூன்றாவது முறையாக ஏதேனும் “விடியல்” வந்துவிடாத என செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒரு மூத்த பெண் செவிலியர், அரசு கொடுக்கும் அற்பக் கூலியை வைத்துக்கொண்டு இன்று இருக்கும் விலைவாசி உயர்வில், எங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்றே தெரியவில்லை. என் பிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டுப் பராமரிப்பு செலவு, போக்குவரத்து செலவு என எதையுமே என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. கடன் வாங்கிதான் இவற்றை தீர்க்க முடியும் என்ற நிலைமை உள்ளது. அந்த கடனும் இப்பொழுது என் கழுத்தை நெருக்குகிறது என கலங்கினார்.
படிக்க :
♦ கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கைவிடும் தமிழக அரசு !
♦ உயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் !
மற்றொரு பெண் செவிலியர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவரும் இளங்கலை, முதுகலை என்று செவிலியர் படிப்பில் உயர் படிப்பை முடித்தவர்கள். எங்கள் தகுதிக்கு இந்த அரசு கொடுக்கும் மரியாதை இது தானா? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
செவிலியர்களின் போராட்டத்தை கண்டு அஞ்சிய தி.மு.க அரசு போராட்டத்தை ஒடுக்குவதற்காக 200-க்கும் மேற்பட்ட காக்கி குண்டர்களை இறக்கிவிட்டது. செவிலியர்களை – கைது செய்து – வலுக்கட்டாயமாக தூக்கி வேனில் ஏற்றியது. போராட்டத்தை முடித்துக் கொள்ள மறுத்த செவிலியர்கள் காக்கி ரவுடிகளால் தரதர வென்று அடித்து இழுத்து செல்லப்பட்டனர். இதனால் இரண்டு செவிலியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
495 செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போலீசுத்துறை. இத்தகைய மோசமான ஒடுக்குமுறையை செவிலியர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுவிட்டு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே பத்து பதினைந்து ஆண்டுகளாக நீங்கள் உழைத்து விட்டீர்கள், தேவையில்லாமல் வெயிலில் போராடி உடம்பை வருத்திக் கொள்ளாதீர்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு மூலம் பதினோராயிரம்  செவிலியர்களை பணிக்கு எடுத்தது தமிழக அரசு. இவர்களுக்கு பணி வழங்கும் போதே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுப்பதாகவும், இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் நிரந்தர (காலமுறை ஊதிய முறைக்கு) பணிக்கு மாற்றுவதாகவும் கூறியது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு செவிலியர்களை ஏமாற்றி வந்தது.
எம்.ஆர்.பி என்ற தேர்வு முறை வருவதற்கு முன்பு, அரசு கல்லூரியில் படித்த மாணவர்களை நேரடியாக வேலைக்கு எடுத்து வந்தார்கள். இதற்காக தனி தேர்வுகள் எதுவும் கிடையாது. சுகாதாரத்துறையில் ஏற்படும் ஆள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய “எமெர்ஜென்சிக்காக” அரசாணை 230-ன் படி ஒப்பந்தம் செய்து பணிக்கு எடுப்பார்கள்.
பிறகு 101A விதிகளின் படி அவர்கள் நிரந்தர பணியாளராக அமர்த்தப்படுவர். இதுதான் 2013-க்கு முன்பு வரை இருந்த நடைமுறை. எம்.ஆர்.பி தேர்வு என்பது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது.
தற்போது ஆளும் ‘விடியல்’ அரசும், இந்த 230 அரசாணையைத்தான் பிரதானப்படுத்துகிறது. ஆனால் போராடும் செவிலியர்கள், G.O 191 1st February 1962 Public Services (A) அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் (Time to Scale) என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதை பிரதானப்படுத்துகிறார்கள்.
000
மறுகாலனியாக்க சூறையாடலுக்காக மருத்துவத்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதிகளை வெட்டி சுருக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அரசு, அதில் ஒரு உச்சகட்ட நடவடிக்கையாக MRB தேர்வு முறை கொண்டு வந்தது (இதில் நீட் போன்ற தேர்வுகளும் அடங்கும்). இதன் நோக்கம் அரசு மருத்துவமனையின்  உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமல்ல அதில் வேலைபார்க்கும் செவிலியர்களும் மருத்துவர்களும் கூட சரி இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்த ஆளும் வர்க்கம் நினைக்கிறது. இதன் மூலம் மருத்துவத்தை தனியார் – கார்ப்பரேட் – முதலாளிகளின் இலாப வேட்டைக்காக மடை மாற்றி விடுகின்றது.
தற்போது செவிலியர்களை, அரசு மருத்துவமனை வேலைகளுக்கு எடுப்பதில்லை. உற்பத்தி தொழில்களில் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தி ஒட்ட சுரண்டுவதுபோல மருத்துவத் துறையிலும் ஒப்பந்த முறையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டு சுரண்டபடுகிறார்கள்.
அரசு ஊழியராக நியமித்தால் அடிப்படை ஊதியமாக மட்டும் மாதம் ரூ.19,000 மேல் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே, தொகுப்பூதியம் (கான்ட்ராக்ட்) அடிப்படையில்  செவிலியர்களை வேலைக்கு அமர்த்துவதால் அவர்களுக்கு மாதம் ரூ.7,000; ரூ.10,000  என்ற  அடிமாட்டு கூலி கொடுத்தால் போதும். சில ஆண்டுகள் வேலை செய்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவர்களும் வேலை செய்ய துவங்குகிறார்கள். அதன் பிறகு செவிலியர்களின் நிலை தூண்டியலில் சிக்கிய புழுவின் கதையாகி விடுகிறது.
தனியார்மய கொள்கைகள் காரணமாக – கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக – அரசு மருத்துவமனைகளை அரசாங்கம் பாராமுகமாக கைவிட்டாலும், அவை ஓரளவு இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள் தான் முதன்மையான காரணம். இது நிதர்சனமான உண்மை என்பதை கொரோனா பெரும் தொற்றும் நமக்கு நிரூபித்ததுள்ளது.

படிக்க :

♦ டெல்லி ஜிப்மர் : பணியிலிருக்கும் செவிலியர்கள் மலையாளம் பேசக் கூடாதாம் !

♦ போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் !

இந்தியாவின் மொத்த மருத்துவ சந்தையின் மதிப்பு 2015-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலரிலிருந்து 2020-ம் ஆண்டில் அதாவது ஐந்தாண்டுகளில் 280 பில்லியன் டாலராக இருக்கும் எனவும் அதன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 22.9 சதவீதமாக இருக்குமென்றும் கணிக்கப்பட்டது. இந்திய மருத்துவ சந்தையை பன்னாட்டு ஏகபோக நிதி மூலதன கும்பல்களுக்கு சுறையடுவதற்கான காரணத்தை இந்த ஒரு புள்ளி விவரமே போதும்.
மருத்துவ துறையில் தனியார்மய தாராளமய கொள்கை திணிக்கப்படுவதால் பாதிக்கப்படும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களையும் ஓரணியில் அணிதிரட்டி இந்த தனியார்மய – தாராளமய கொள்கையை எதிர்த்து போராடுவது மட்டுமே நமக்கான முழுதும் முற்றான தீர்வாக அமையும்.
கதிர்
வினவு களச்செய்தியாளர்

ஆரவல்லி மலைத்தொடரை அழிக்கும் சட்டவிரோத சுரங்கங்கள் !

0
ரவல்லி – உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்று – டெல்லியில் இருந்து தென்மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இருப்பினும், இந்த பழைய மலைகள் சட்டவிரோத சுரங்கங்களின் காரணமாக படிப்படியாக மறைந்து வருகின்றன.
2002-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆரவல்லி பகுதி முழுவதும் சுரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதித்த போதிலும், கடந்த ஆண்டில் பல சட்டவிரோத சுரங்கங்கள் இயங்கியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் உள்ள ஆரவல்லிகளின் பந்தலா மலைகளில், 2021-2022-ம் ஆண்டில் (மலையேறுபவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் செல்லாத) எட்டு மாத கால இடைவெளியில் 30 முதல் 40 அடி வரை குன்றுகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
“ஏழு முதல் எட்டு மாதங்களில், ஒரு முழு மலையும் அழிக்கப்பட்டு, தின்று பல மீட்டர்கள் பின்னால் தள்ளப்பட்டது” என்று ஆரவல்லி பச்சாவ் இயக்கத்தின் நிறுவனர் – நீலம் அலுவாலியா மற்றும் இயக்கத்தின் மற்றொரு உறுப்பினரான ஜோதி ராகவன் கூறினார்.
படிக்க :
♦ ஆரவல்லியை கூறுபோட்டு விற்கும் பா.ஜ.க !
♦ அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !
வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன், குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது ஆரவல்லி பச்சாவ் இயக்கம். கடந்த ஆண்டில் சட்டவிரோத சுரங்கம் தொடர்பான புகார்களுக்கு போலீசுத்துறை உள்ளிட்ட உள்ளூர் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இயக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த மே 23 அன்று, ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோத சுரங்கத்தை கண்காணிக்கவும் தடுக்கவும் தவறியதற்காக அரியானா மற்றும் மத்திய அரசுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டித்தது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தங்கள் பதில்களை தாக்கல் செய்யுமாறு பல அரசுத் துறைகளுக்கு உச்ச பசுமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அரியானா வனத்துறை, சுரங்கம் மற்றும் புவியியல் துறை மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை அடங்கும்.
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோட்டா கண்டேவ்லா கிராமத்திற்கு அருகில் சட்டவிரோத சுரங்கம். புகைப்படம்: ஆரவல்லி பச்சாவோ குடிமக்கள் இயக்கம்
ஆரவல்லி மலைத்தொடர், இலையுதிர் காடுகள் மற்றும் புதர்க்காடுகளை உள்ளடக்கியது, ராஜஸ்தான், அரியானா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மலைத்தொடர் விரவிக்கிடக்கிறது. 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய குழுவின் (CEC) அறிக்கை, ராஜஸ்தானில் 1968-ம் ஆண்டு முதல் சட்டவிரோத சுரங்கங்கலால் ஆரவல்லி மலைத்தொடரின் 25 சதவீத மலைகளை இழந்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது.
அலுவாலியாவின் கூற்றுப்படி, உச்ச நீதிமன்றத்தால் 2002 தடை செய்யப்பட்டபோதிலும் அப்பகுதியில் சுரங்கத் தடையை அமல்படுத்துவதற்கான “அரசியல் மற்றும் நிர்வாக விருப்பமின்மை” என்பதே அது தடையின்றி தொடர்வதற்குக் காரணம். ஆரவல்லியில் சுரங்கம் தோண்டுவதில் நிர்வாக அக்கறையின்மை புதிதல்ல. இந்த சட்டவிரோத சுரங்கங்கள் உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.
ஜனவரி 2022-ல், அரியானாவின் பிவானி மாவட்டத்தின் தாதம் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 2021-ல், அப்பகுதியில் உள்ள சட்டவிரோத சுரங்கங்கள் குறித்து உள்ளூர் போலீசு நிலையத்தில் உள்ளூர்வாசிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட துறைகள் – மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உட்பட – எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
படிக்க :
♦ கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
♦ தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தை இயற்கை எழில் கொஞ்சும் இடமாக காண்பிக்கும் ஆரவல்லி மலைத்தொடர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவிக்கிடக்கிறது. இந்த மலைத்தொடரில் சட்டவிரோதமான சுரங்கங்கள் தோண்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டவிரோத சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதிலிருந்தே, அரசின் அனைத்து துறைகளும் கூட்டு சேர்ந்துகொண்டு மலைத்தொடரை கொள்ளையடித்து அழித்துக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது.
சட்டவிரோத சுரங்கங்களிடமிருந்தும், அதற்கு துணைபோகும் அரசிடமிருந்தும் ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

புகழ்

தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !

0

தி கேரவன் பத்திரிகையுடன் தொடர்புடைய மல்டிமீடியா பத்திரிகையாளர் ஷாஹித் தந்த்ரே, கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தன்னையும் அவரது குடும்பத்தினரையும் ஜம்மு & காஷ்மீர் போலீசுத்துறை தொடர்ந்து மிரட்டல் விட்டு அச்சுறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜூன் 8, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி கேரவன் பத்திரிக்கை நிறுவனத்தின் வேலைக்காக ஜனவரி மாதம் ஸ்ரீநகருக்குச் சென்றதிலிருந்து தற்போது வரை காஷ்மீர் போலீசுத்துறை தன்னைப் பின்தொடர்ந்து வருவதாகக் கூறுகிறார்.

காஷ்மீரில் 370-வது பிரிவை அமல்படுத்திய பிறகு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான அரசின் ஒடுக்குமுறைகள் தொடர்ப்பான முதல் கட்டுரையை பிப்ரவரி 1-ம் தேதியும், ஜம்மு&காஷ்மீரில் “தேசியவாத எதிர்ப்புகளில்” இந்திய இராணுவத்தின் பங்கை ஆராய்ந்தது தொடர்பான இரண்டாவது கட்டுரையை ஜூன் 1-ம் தேதியும் பத்திரிகையாளர் ஷாஹித் தந்த்ரே தயாரித்து வெளியிட்டார்.

படிக்க :

♦ காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !

♦ காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !

குறிப்பாக இந்த இரண்டு கட்டுரைகள் தொடர்பாக விசாரிக்க தான், காஷ்மீரில் உள்ள போலீசு நிலையங்களுக்கு தந்த்ரேயும் அவரது தந்தையும் பலமுறை அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார். போலீசு அதிகாரி, காஷ்மீரில் தந்த்ரே தனது தொழிலை செய்ய விரும்பினால், அவர் முன் மூன்று வழிகள் இருப்பதாகக் கூறினார்.

ஒன்று, அரசாங்கத்திற்கு எதிராக எதையும் எழுதமாட்டேன் என்று அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் கொடுத்தால் தந்த்ரே காஷ்மீரில் தங்கலாம். இரண்டு, அவர் காஷ்மீரில் தங்கி, “அதிருப்தி அடையும் அரசாங்கத்தின்” எழுத்துக்களைத் தொடரலாம். இந்த வழக்கில் அவர் “சுடப்படுவார் அல்லது சிறைக்கு அனுப்பப்படுவார்.” மூன்று, அவர் “உடனடியாக” காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும். என்று போலீசுத்துறை தந்த்ரேவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இருப்பினும் பிப்ரவரி 7-ம் தேதி காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு சென்றதாக தந்த்ரே கூறுகிறார்.

ஏப்ரல் 10-ம் தேதி, காஷ்மீர் பத்திரிகையாளர் ஆசிப் சுல்தான், மற்றொரு வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகு, பொதுப் பாதுகாப்புச் சட்டம் (பிஎஸ்ஏ) பதிவு செய்யப்பட்டதைப் பற்றி தந்திரே ட்வீட் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஸ்ரீநகரில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியிடமிருந்து தனக்கு அழைப்பு வந்தது, இந்த பிரச்சினை பற்றி ஏன் ட்வீட் செய்தீர்கள் என்று கேட்டதாக தந்த்ரே கூறுகிறார். “இது ஐரோப்பா இல்லை” என்றும், “காஷ்மீர் ஒரு போலீஸ் மாநிலம்” என்றும், திருமணம் செய்துகொள்வதே நல்லது என்றும் அவருக்கு மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

தி கேரவன் பத்திரிகையுடன் தொடர்புடைய மல்டிமீடியா பத்திரிகையாளர் ஷாஹித் தந்த்ரே

பத்திரிகை நடைமுறைக்கு ஏற்ப, ஜே & கே போலீஸ், உளவுத்துறை அதிகாரிகள், கவர்னர் அலுவலகம் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுக்கு தனது அறிக்கையின் ஒரு பகுதியாக கேள்வித்தாள்களை அனுப்பியதாக தந்த்ரே கூறுகிறார்.

இருப்பினும், போலீசு தன்னையும், குடும்பத்தினரையும் “தொடர்ந்து” துன்புறுத்தி வருவதாக தந்த்ரே கூறுகிறார்; அவர் எங்கிருக்கிறார் என்று விசாரிப்பதற்காக காஷ்மீர் போலீசுத்துறையினரால் அவரது தந்தைக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் கட்டுரைகளில் மேற்கோள் காட்டிய ஆதாரங்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு அதிகாரிகளால் பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 4-ம் தேதி, தந்த்ரே-வைப் பற்றி விசாரிக்க அவரது தந்தை காஷ்மீரில் உள்ள ரெங்ரெத் போலீசுத்துறையால் அழைக்கப்பட்டார். அவரது தந்தை, தனது மகன் டெல்லியில் பணியில் இருப்பதாக பதிலளித்தார். அதைத் தொடர்ந்து, ஜூன் 5-ம் தேதி, ஒரு துணைக் போலீசு கண்காணிப்பாளர் தந்தைக்கு போன் செய்து, “தந்த்ரே காஷ்மீருக்கு வருவாரா அல்லது டெல்லிக்கு தேடுதல் குழுவை அனுப்ப வேண்டுமா என்பதை இன்னும் அரை மணி நேரத்தில் சொல்லுங்கள்” என்று மிரட்டியுள்ளார்.

தனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) நிலுவையில் உள்ளதா? என்பதை வெளிப்படுத்துமாறு உயர் அதிகாரிகளை தனது கடிதத்தில் கேட்டுள்ளார் தந்த்ரே. எப்.ஐ.ஆ.ரின் நகலை கேட்ட அவர், சட்டப்படி தனக்கு உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டால் விசாரணைக்கு உட்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். போலீசு அதிகாரிகளிடமிருந்து கடிதங்கள் பெறப்பட்டதற்கான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என்று தந்த்ரே கூறுகிறார்.

படிக்க :

♦ முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !

♦ காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !

காவி பயங்கரவாதிகள் பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதையும் கொலை செய்வதையும் பார்த்திருப்போம். ஆனால் காஷ்மீர் போலீசுத்துறையே காவிக் குண்டர் படையாக மாறி வருகிறது. தி கேரவன் பத்திரிகையாளரை துன்புறுத்தியது மட்டுமல்லாது சிறையில் அடைப்போம் அல்லது சுட்டுக்கொல்வோம் என்று மிரட்டல் விடுகிறது காவி போலீசுப்படை.

மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் கேலிக்கூத்தாக மாறிவரும் நிலையில், மத்திய மாநில அரசு எந்திரங்களும் காவி பாசிஸ்டுகளின் கூடாரமாக மாறிவருகிறது. குறிப்பான காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து அரச வன்முறை ஏவப்பட்டு வருகிறது. அரசின் உண்மையான பாசிச முகத்தை அமபலப்படுத்தும் முற்போக்கு பத்திரிகையாளர்களை காவி – கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.


காளி

2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் : தனியார் பள்ளிகளை வளர்க்க திமுக அரசு செய்யும் சதி!

0
08.06.2022
2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல்!
அங்கன்வாடி மையங்களிலேயே தொடர கல்வித்துறை முடிவு!
அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டி தனியார் பள்ளிகளை வளர்க்க திமுக அரசு செய்யும் சதி!
அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் 2019-ல் தொடங்கப்பட்டன. 3-4 வயது குழந்தைகள் எல்.கே.ஜி வகுப்பிலும், 4-5 வயது குழந்தைகள் யு.கே.ஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர்.
இதில், தற்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வரை படித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் பள்ளிக் கல்வித்துறையின் மேற்கண்ட உத்தரவு வந்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையுடன் இணைந்து 3 ஆண்டு சோதனை முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால், ஆசிரியர்கள், கட்டிடங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, மழலையர் வகுப்புகளை அங்கன்வாடி மையங்களிலேயே தொடர முடிவானது. அதற்கேற்ப மழலையர் வகுப்புக்கு தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 2,381 ஆசிரியர்கள் மீண்டும் அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். எனவே, இனி மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை அங்கன்வாடி மையங்கள் மூலமாகவே நடத்தப்படும்’ ’எனக் கூறியுள்ளனர்.
படிக்க :
♦ “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு
♦ பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மூன்று ஆண்டுகளுக்கு சோதனை முயற்சிதான் இந்த திட்டம் என்கிறார்கள். ஆனால், இந்த மழலையர் பள்ளிகளை தொடங்கும்போது அரசு சொன்ன விஷயம் என்னவென்றால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது அதை அதிகப்படுத்ததான் இந்தத் திட்டம் என்றார்கள்.
இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த விடாமல் அரசே தடையாக இருந்ததையும் மீறி சில தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியில் பலரிடமும் நிதி திரட்டி ஆசிரியர்களை அமர்த்தி இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். இந்த திட்டம் செயல்பட்டதன் விளைவாக மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதை பல்வேறு தலைமை ஆசிரியர்களும் தங்கள் சொந்த நடைமுறையில் நிரூபித்துள்ளனர்.
திரு வீரமணி, தலைமையாசிரியர், (மாநில நல்லாசிரிய விருதாளர்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கெரிகேப்பள்ளி, ஊற்றங்கரை கிருஷ்ணகிரி அவர்கள் கூறும்போது, “எங்கள் பள்ளி தொடக்கப்பள்ளி, இங்கு மழலையர் வகுப்பு தொடங்க அரசு அனுமதி வழங்கவில்லை. என் சொந்த முயற்சியில், விருப்பத்தின் பேரில் மழலையர் வகுப்புகளைத் துவக்கினேன். 2018-ல் 28 என்ற மாணவர் எண்ணிக்கை இன்று 150 ஆகியுள்ளது! தேவையான அனைத்து நிதி, கற்பித்தல் வசதிகளையும் அரசின் உதவியின்றி நாங்களே செய்து கொள்கிறோம்” என பதிவு செய்துள்ளார்.
திரு குணசேகரன், தலைமை ஆசிரியர், அரசு தொடக்கப் பள்ளி, மாயனூர், கரூர் அவர்கள் கூறும்போது, “எங்கள் பள்ளியிலும் மழலையர் வகுப்பு ஆரம்பிக்க விரும்பி அரசு அதிகாரிகளிடம் அனுமதி கேட்டால் எந்த பதிலும் இல்லை. பெற்றோர்கள் அரசு மழழையர் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப விருப்பமுடன் இருக்கின்றனர். எல்லா ஏற்பாடுகளையும் நாங்களே செய்து கொள்கிறோம். அனுமதி மட்டும் தாருங்கள் என்றால், சட்ட விதிகள் இல்லை என்கின்றனர். அது மட்டுமல்ல, ஏதாவது குழந்தைகளுக்குப் பிரச்சினை என்றால், நீங்கள் தான் பொறுப்பு என்றும் அச்சமூட்டுகின்றனர். ஆயினும் ஆரம்பித்துவிட்டோம். மழலையர் வகுப்பு ஆரம்பித்த பிறகுதான் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது. குறைந்த பட்சம் அனுமதி மட்டுமாவது வழங்கவே இவ்வளவு தயக்கம் காட்டினால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களை எப்படி தக்க வைக்க முடியும்? எனக் கேட்கிறார்.
இதைப்போல இன்னும் பல உதாரணங்களை இங்கு குறிப்பிட முடியும்? இப்படி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தி உள்ள இந்த திட்டத்தை ஏன் இந்த அரசு மூன்று ஆண்டுடன் நிறுத்திக் கொள்கிறது? போட்டுக்கொண்ட திட்டம் வெற்றி என்றபோதும் ஏன் தொடரவில்லை?
இதற்கும் அதிகாரிகள் காரணம் கூறாமல் இல்லை. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது கட்டிடங்கள் இல்லை ஆசிரியர் இல்லை அதனால் இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டு; இதில் உள்ள ஆசிரியர்களை நடுநிலைப் பள்ளிகளில் பணியமர்த்த போவதாகவும் கூறுகிறார்கள்.
மாணவர்கள் அதிகமாக சேர்கிறார்கள் என்றால் அதற்கேற்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டியதை பற்றிப் பேசாமல் நழுவிச் செல்வதையே வேலையாக வைத்துள்ளது அரசு. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 25 சதவீத மாணவர்களுக்கு அரசே பணம் வழங்கி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறது. இதை கணக்கிட்டால் ஒவ்வொரு வருடமும் ரூ.100 கோடிக்கும் மேல் வருகிறது. இந்தப் பணத்தை வருட வருடம் முறையாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பிற்கு செலவு செய்திருந்தால் இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும். ஆதலால் அரசின் நோக்கம் இப்போது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.
இந்த புறக்கணிப்பின் பின்னால் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையும் அதற்கேற்றபடி அரசுப் பள்ளிகளை கைகழுவும் திட்டமும் அடங்கியுள்ளது.
இதை மறைத்துக் கொண்டு பல்வேறு காரணங்களைச் சொல்லி மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதற்கு திமுக அரசும் விதிவிலக்கு அல்ல.
2019-க்கு முன்பு வரை எந்த அரசுப் பள்ளியிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் இல்லை. இந்த சூழலில்தான் பல்வேறு தனியார் பள்ளிகளும் பிளே ஸ்கூல் மற்றும் கிண்டர் கார்டன் போன்ற மழலையர் வகுப்புகளை ஆரம்பித்து பெற்றோர்களை கவர்ந்து இழுத்தன. இதிலிருந்து பார்க்கும் பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகளுக்கு போவதற்கு மனம் வரவில்லை.
அடுத்தடுத்து மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கும் இந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் அடிப்படையாக அமைந்தன. இதிலிருந்துதான் ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைய ஆரம்பித்தது.
படிக்க :
♦ தொழில்நுட்ப கல்வி கட்டணங்களை உயர்த்தும் ஏ.ஐ.சி.டி.இ | புமாஇமு கண்டனம்
♦ அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு
இதை பல்வேறு ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கண்டு கொண்டதால்தான் இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும்; அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசு ஒத்துழைக்காத போதும் செயல்பட்டனர்.
ஆனால், இன்று சமூகநலத் துறை அதிகாரிகள் “இந்த ஆசிரியர்கள்; தலைமையாசிரியர்கள் ஒத்துழைக்காததால் தான் இந்த திட்டம் கைவிடப்படுகிறது” என்று எளிமையாக பொய்யான பழி சுமத்தி விட்டு தங்களின் தனியார்மய நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.
ஏற்கனவே சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடிகளில் பழைய முறையிலேயே பயிற்சி தரப்படும் என்ற அறிவிப்பு எல்லாம் பெற்றோர்களை மீண்டும் தனியாருக்கு போகச் சொல்லும் அறிவிப்புதான்.
தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு போய்விடக் கூடாது என்பதற்காகவே உடனடியாக கட்டணத்தை கட்டச் சொல்லி நெருக்கடி தருகிறார்கள். மாற்றுச் சான்றிதழ் தரமாட்டேன் என நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த அறிவிப்பானது தனியார் பள்ளிகளுக்கு வரப்பிரசாதமாகவே அமையும்.
பெற்றோர்களின் வருமானத்தை தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்க போவதை தடுக்க வேண்டுமென்றால், மாணவர்களின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் இந்த தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் கொள்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தையும் முறியடிக்க வேண்டிய தேவை நம்முன் உள்ளது.

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.

சத்தீஸ்கர் அரசு : காடுகளை அழிக்க காத்திருக்கும் கழுகு !

0
த்தீஸ்கர் மாநில வனத்துறை, அங்குள்ள பர்சா ஈஸ்ட் கென்டே பாசன் (PEKB) நிலக்கரிச் சுரங்கத்தில் இரண்டாம் கட்டச் சுரங்கத்திற்காக மரங்களை வெட்டத் தொடங்கியது. பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஹஸ்டியோ அரந்த் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிராக கிராம மக்கள் மே 30 அன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிராம மக்கள் போராட்டம் காரணமாக மரம் வெட்டுவது நிறுத்தப்பட்டது. சுமார் 250 மரங்கள் வெட்டப்பட்டதாக கிராம மக்கள் கூறினாலும், 50-60 மரங்கள் வெட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம், சுர்குஜா மாவட்டத்தில் PEKB கட்டம்-II நிலக்கரி சுரங்கத்திற்காக வன நிலத்தை காடு அல்லாத பயன்பாட்டிற்கு மாநில அரசு இறுதி அனுமதி வழங்கியது.
வனத் துறையினர் மே 30 அன்று காலை காட்பர்ரா கிராமத்தை ஒட்டியுள்ள பெண்ட்ராமர் வனப்பகுதியில் மரங்களை வெட்டத் தொடங்கினர். அப்போது பல கிராம மக்கள் மரங்களை வெட்ட எதிரிப்பு தெரிவித்து சம்பவ இடத்தில் ஒன்று கூடினர். போராட்டம் காரணமாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை தவிர்க்கும் வகையிலும், மரம் வெட்டுவது நிறுத்தப்பட்டு, கிராம மக்கள் சமாதானப்படுத்தப்பட்டனர்.
PEKB சுரங்கத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அனுமதி போலியான கிராம சபை ஒப்புதல் ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக காட்பர்ரா கிராமங்களின் சர்பஞ்ச் ஜைனந்தன் போர்ட் கூறினார்.
படிக்க :
♦ சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் பெயரில் மீண்டும் ஓர் போலி என்கவுண்டர் !
♦ சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு 2022 : 180 நாடுகளில் இந்தியா கடைசி இடம் !
“PEKB நிலை II-க்கான கிராம சபை 2019-ல் நடைபெற்றது. அந்த நேரத்தில் காட்பர்ரா கிராமவாசிகளுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வழங்கப்படவில்லை. உண்மையில், அந்த கிராம சபையின் வருகைப் பதிவேட்டில் 2019-ம் ஆண்டுக்கு முன்னர் இறந்த கிராமத்தைச் சேர்ந்த மூவரின் கையொப்பங்கள் உள்ளன. அந்த கிராம சபை முற்றிலும் போலியானது. ஆனால் அதன் அடிப்படையில் சுரங்கத் தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
“கடந்த ஏப்ரல் மாதம், பர்சா நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக வனத்துறை மரம் வெட்டத் தொடங்கியது, அதுவும் கிராம மக்களால் முறியடிக்கப்பட்டது. பழங்குடியினரின் நலனை மாநில அரசு புறக்கணிக்கிறது” என்று பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக போராடி வரும் சிபிஏ சுக்லா கூறினார்.
சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட ஹஸ்டியோ அராண்ட் பகுதியில் சுரங்கம் தோண்டினால் 1,70,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளுக்குள் யானைகள் நடமாட வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
மே 2022 நிலவரப்படி, ICFRE மற்றும் Wildlife Institute of India (WII) ஆகியவற்றின் இரண்டு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சுரங்கம் சந்தேகத்திற்கு இடமின்றி பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை இருவரும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சத்தீஸ்கரில் யானைகள் குறைவாக இருந்தாலும், காடுகளை அழிப்பதன் காரணமாக யானைகளின் நடமாட்டம் நகர்ப்புறங்களுக்கு பரவ வழிவகுக்கும், இந்த ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, 2007-ல் RVUNL-க்கு ஒதுக்கப்பட்ட PEKB பிளாக்கில் 762 ஹெக்டேர் நிலத்தில் முதல் கட்ட சுரங்கம் 2013-ல் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. பார்சா தொகுதி 2015-ல் ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டத்தால் தங்களின் நிலம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கிராம மக்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த பிரச்சினையில் நீண்டகாலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களில் இப்பகுதியில் சுரங்கத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் ஆர்வளர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். கடந்த அக்டோபர் 2021-ல், “சட்டவிரோதமாக” நிலம் கையகப்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 350 பேர் ராய்ப்பூருக்கு 300 கி.மீ நீள அணிவகுப்பு நடத்தினர்.
கடந்த மே 24 அன்று, RRVUNL CMD சர்மா, “சத்தீஸ்கரில் இருந்து நிலக்கரியைப் பெறத் தவறினால் ராஜஸ்தான் கடுமையான மின் நெருக்கடியில் மூழ்கும். ஆர்வலர்கள் உள்ளூர் மக்களை “தவறாக வழிநடத்துகிறார்கள்”. சுரங்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக சத்தீஸ்கரில் 8 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்படும். வேலை வாய்ப்புகள், கல்வி ஆகியவற்றில் உள்ளூர் மக்கள் பயனடைந்துள்ளனர். சர்குஜாவில் “100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை”விரைவில் கட்டப்படும்” என்று கூறினார்.
படிக்க :
♦ சத்தீஸ்கர் : உள்ளூர் மோதலை முஸ்லீம் வெறுப்பாக மாற்றும் காவிக் குண்டர்கள் !
♦ சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !
இயற்கை வளங்களை அழிக்கத்துடிக்கும் அதிகாரிகளின் நடவடிக்கையை கிராம மக்களது போராட்டம் தடுத்து நிறுத்தியுள்ளது. காடுகள், மலைகள், நீர்நிலைகள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்காக இந்திய அரசினால் அழிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு சத்தீஸ்கர் மாநிலம் ஓர் சான்று. நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டும் சத்தீஸ்கர் அரசை எதிர்த்து போராடும் கிராம மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம்.

சந்துரு

‘மசூதிகளை புல்டோசரால் இடிக்க வேண்டும்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவி பயங்கரவாதி பூஜா ஷகுன் பாண்டே!

0
கான்பூரில் பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் நபிகள் நாயகம் பற்றி முஸ்லீம் வெறுப்பு கருத்துக்கு எதிராக கடந்த ஜூன் 5 அன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டம் வன்முறையாக மாறியது. அதைத் தொடர்ந்து ‘அன்னபூர்ணா மா’ என்று அழைக்கப்படும் இந்துமதவெறி தலைவர்களுள் ஒருவரான பூஜா ஷகுன் பாண்டே முஸ்லீம்களுக்கு எதிரான மற்றொரு வெறுப்பு விஷத்தை கக்கியுள்ளார்.
கடந்த ஜூன் 5, 2022 அன்று, பாண்டே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு எழுதிய கடிதத்தில், “இந்து எதிர்ப்பு கூட்டம்” என்று அவர் கூறும் வாராந்திர வெள்ளிக்கிழமைகளின் மசூதிகளில் நடைபெறும் முஸ்லீம் மக்களின் தொழுகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையின் விளைவாக தனது கோரிக்கை எழுந்துள்ளது என்று பாண்டே கூறினார்.
“வெள்ளிக்கிழமை தொழுகை நாள் அல்ல. மாறாக, இது பயங்கரவாதத்திற்கான நாள். முஸ்லீம்களின் வெள்ளிக்கிழமை கூட்டங்கள் வணக்கத்திற்காக அல்ல, மாறாக முஸ்லீம் அல்லாதவர்களை இனப்படுகொலை, கொள்ளை, தீ வைப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்காக. எனவே, அகில பாரத இந்து மகாசபை உங்களிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது: வெள்ளிக்கிழமைகளில், சிறிய மசூதிகளில் 10 முஸ்லீம்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பெரிய மசூதிகளில் 25 முஸ்லீம்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். வெகுஜன தொழுகைகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் கலவரங்கள் நடக்கும் மசூதிகள் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்பட வேண்டும்” என்று கடிதத்தில் குறியுள்ளார் இந்துமதவெறியர் பூஜா ஷகுன் பாண்டே.
படிக்க :
♦ வரவர ராவின் கவிதையில் இருந்து ‘இந்துத்துவா’ ‘காவிமயமாக்கல்’ போன்ற வார்த்தைகளை நீக்கும் சங் பரிவார கும்பல் !
♦ கூகுள் நிறுவனத்தில் சாதிய ஒடுக்குமுறை ! சாதிய – இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் !
இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக, கடந்த ஜூன் 6 அன்று இந்து மகாசபா தேசிய செயலாளர் பாண்டே மீது அலிகார் போலீசுத்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது. “இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று அலிகார் எஸ்.எஸ்.பி கலாநிதி நைதானி வீடியோ அறிக்கையில் தெரிவித்தார்.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு, பாண்டே ஒரு தொலைக்காட்சி குழு விவாதத்தில், தனது வெறுப்பு கடித்தத்தை பற்றி சுருக்கமாக விளக்கினார். மேலும் நுபுர் ஷர்மாவின் கருத்துக்களை ஆதரித்து பேசினார்.
அகில பாரத இந்து மகாசபா தலைவர் பூஜா ஷகுன் பாண்டே முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் செயல்பாடுகளில் இது முதல்முறையல்ல.
கடந்த 2021 டிசம்பரில், ஹரித்வாரில் நடைபெற்ற “தரம் சன்சத்” மத மாநாட்டின்போது,​​முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ய ஆயுதங்களை வாங்குமாறு இந்துக்களுக்கு அழைப்பு விடுத்த இந்துமத வெறியார்களில் பாண்டேவும் ஒருவர்.
“ஆயுதங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. நீங்கள் அவர்களின் (முஸ்லீம்) மக்கள் தொகையை அகற்ற விரும்பினால், அவர்களைக் (முஸ்லீம்) கொல்லுங்கள். கொல்லவும், சிறை செல்லவும் தயாராக இருங்கள். நம்மில் 100 பேர் 20 லட்சம் பேரை (முஸ்லீம்களை) கொல்லத் தயாராக இருந்தாலும், நாங்கள் ஜெயிலுக்குப் போவோம். கோட்சேவைப் போல, நான் இருக்கத் தயாராக இருக்கிறேன். எனது மதத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒவ்வொரு அரக்கனிடமிருந்தும் என்னைக் காக்க ஆயுதம் ஏந்துவேன்” என்று அவர் கூறினார்.
அதே நிகழ்வில், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பாண்டே, “இன்று பெண்கள் தனது கைகளில் வாள் எடுக்க வேண்டிய நேரம் இது. எனது தாய்மார்கள் தங்கள் மகன்களின் பலவீனமாக மாறாமல், அவர்களின் பலமாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்காவது அதர்மம் நடந்தால் சொல்லுங்கள், அவர்களை வெட்ட நான் உன்னுடன் வருவேன். வழக்குகள் எதுவும் இருக்காது ஆனால் சில நாட்களுக்கு ஒரு சிறிய சிரமம் மட்டுமே இருக்கும்; எங்களை அழைக்கவும், நாங்கள் உங்களுடன் இருப்போம்” என்று வெறுப்பு விஷத்தை கக்கினார்.
2021 மார்ச் மாதத்தில், தாஸ்னாவில் ஒரு இந்து கோவிலுக்குள் ஒரு முஸ்லீம் சிறுவன் நுழைந்ததற்காக இந்துமதவெறியார் சிருங்கி யாதவ் அச்சிறுவன் மீது தாக்குதல் தொட்டுத்தான். தக்குதலுக்கு பிறகு, தாஸ்னாவின் கோவிலைபோல மற்ற இந்து கோயில்களில் முஸ்லீம்கள் நுழைவதைத் தடைசெய்யும் பலகைகளை வைக்க வேண்டும் என்று பாண்டே கோரினார்.
படிக்க :
♦ “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு
♦ பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
2020 ஏப்ரல் மாதத்தில், தப்லிகி ஜமாத் உறுப்பினர்களுக்கு எதிராக பாண்டே வெறுப்பு பேச்சுக்களை பேசினார். மத அடிப்படையில் பல்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்த்து, பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மே 2019-ல், சாவர்க்கர் பிறந்தநாளில் சிறுமிகளுக்கு பாண்டே கத்திகளை வினியோகித்தார். ஜனவரி 2019-ல், பாண்டே காந்தியின் உருவ பொம்மையை சுட்டு, கோட்சேவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார். பின்னர் அவர் உருவபொம்மையை தீ வைத்து எரித்தார். உடனே பாண்டே உடன் பாஜக தொடர்பை துண்டித்துக் கொண்டாலும், பாஜக எம்.பி சாத்வி பிரக்யா மற்றும் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் போன்றவர்களுடன் பாண்டே தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். முஸ்லீம்களை கொலை செய்ய பலமுறை வெளிப்படையாக அழைப்பு விடுத்தும், உ.பி போலீசுத்துறை இன்னும் பாண்டேவை கைது செய்யவில்லை.
முஸ்லீம் வெறுப்பு விஷங்களை வெளிப்படையாக கக்கி வரும் காவிக் குண்டர்களை உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து அடித்து விரட்ட வேண்டும். நாடு முழுவதும் பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை மோதி வீழ்த்த அணிசேர வேண்டிய தருணம் இது.

சந்துரு

மக்கள் அதிகாரம் – அறிவிப்பு !

08.06.2022
அறிவிப்பு
க்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் முத்துக்குமார் அவர்கள் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ஒரு பகுதியில் கலைப்புவாத நடவடிக்கைகள் மற்றும் சீர்குலைவு வேலைகளை செய்தது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அதிகாரம் அமைப்பின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலச் செயலாளர் கோபிநாத் அவர்கள் தனக்கு தொடர்பே இல்லாத பகுதியில் சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், அமைப்பு விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆகவே, கோபிநாத் அவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நிரந்தமாக நீக்கப்படுகிறார்.
மேற்கண்ட இருவருடனும் மக்கள் அதிகாரம் தோழர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
தோழமையுடன்,
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை
9962366321.

வரவர ராவின் கவிதையில் இருந்து ‘இந்துத்துவா’ ‘காவிமயமாக்கல்’ போன்ற வார்த்தைகளை நீக்கும் சங் பரிவார கும்பல் !

0
ந்தியாவின் முன்னணி பதிப்பகமான பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் (PRH), தெலுங்கு கவிஞர் வரவர ராவின் புத்தகமான “வரவர ராவ்: தி புரட்சிக் கவிஞர் – Varavara Rao: The Revolutionary Poet” என்ற புத்தகத்தில் இருந்து ‘இந்துத்துவா’ ‘சங்க பரிவார்’ மற்றும் ‘அயோத்தி’ உள்ளிட்ட பல வார்த்தைகளை நீக்க பரிந்துரைத்துள்ளது.
வரவர ராவ் 1960-களில் இருந்து பல்வேறு மக்கள் இயக்கங்களுடன் தொடர்புடையவர் மற்றும் எல்கர் பரிஷத் – பீமா கோரேகான் வழக்கில் தொடர்புடையதாகக் கூறி ஆகஸ்ட் 2018-ல் கைது செய்யப்பட்டார்.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 81 வயதான வரவரராவின் கவிதைத் தொகுப்பான “வரவர ராவ்: தி புரட்சிக் கவிஞர்” என்ற புத்தகம் முதல் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவர உள்ளது.
புத்தகத்தின் திருத்தப்பட்ட வரைவின் நகலை தணிக்கைக்கு உட்படுத்திய வெளியீட்டாளரின் சட்டக்குழு ‘காவிமயமாக்கல்,’ ‘ஊபா – UAPA’ மற்றும் ‘நக்சல்பாரி’ பற்றிய குறிப்புகளை கோடிட்டதாக, ஜூன் 3 அன்று குயின்ட் அறிக்கை கூறுகிறது.
வரைவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், தேசத்துரோகம் மற்றும் அவதூறு வழக்குள் பதிவு செய்யப்படும் என்ற பென்குயின் அச்சத்தை காட்டுகிறது. பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ள வரவர ராவ் தற்போது மருத்துவ ஜாமீனில் உள்ளார். இப்பிரச்சினையை பற்றி ராவ் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஏனெனில், அவரது ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்று, அவர் ஊடகங்களுடன் பேசக்கூடாது.

படிக்க :

♦ கூகுள் நிறுவனத்தில் சாதிய ஒடுக்குமுறை ! சாதிய – இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் !

♦ “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு

புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான கவிஞர், நாவலாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான மீனா கந்தசாமி, தி குயின்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சட்டரீதியான சோதனை பற்றி பேசுகிறார். “எனக்கு, ஒரு ஆசிரியராக இது பேரழிவை ஏற்படுத்துகிறது. ஒரு எழுத்தாளராக, இது இன்னும் இதயத்தை உடைக்கிறது, ஏனென்றால் இன்று வரவர ராவுக்கு என்ன நடக்கிறது என்பது நாளை நம் அனைவருக்கும் நடக்கும்” என்றார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பென்குயின் ரேண்டம் ஹவுஸின் மூத்த ஆணையாளர் ஆசிரியர் இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருப்பதாகத் தோன்றி, ஒரு திட்டத்தைச் சமர்ப்பிக்கும்படி எங்களிடம் கேட்டார். நான் இந்தப் புத்தக முன்மொழிவை எழுதி, வேணுகோபால் ராவை (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் வரவர ராவின் மருமகன்) வரவழைத்து, அதைச் சமர்ப்பித்தோம்.” என்றார்.
“வரவர ராவ் எப்போதுமே தனது வாழ்க்கைப் படைப்பின் தொகுப்பை பெங்குயின் வெளியிட வேண்டும் என்று விரும்பினார் என்றும், அவர் (சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு) தனது படைப்பை சிறப்பாகப் பிரதிபலிக்கும் குறிப்பிட்ட கவிதைகளைத் தேர்ந்தெடுத்தார் என்றும் வேணுகோபாலிடமிருந்து நான் அறிந்தேன்” என்றார் மீனா.
புத்தகத்திற்கான ஒப்பந்தம் 2020-ல் கையெழுத்தானது மற்றும் வெளியீட்டாளர் அது 2021 நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். இருப்பினும், ஒப்பந்தம் வெளியிடுவதற்கு 24 மாத கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது. வரவர ராவின் மருமகன் வேணுகோபால், புத்தகத்தை வெளியிட வெளியீட்டாளர்களுக்கு அக்டோபர் 2022 வரை அவகாசம் இருப்பதாகவும், தவறினால் “ஒப்பந்தத்தை மீறியதற்காக ஆசிரியர்கள் அவர்கள் மீது வழக்குத் தொடரலாம்” என்று கூறினார்.
65 கவிதைகளில் மூன்று கவிதைகள் 2021-ல் கைவிடப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட 65-ல் ராவின் மூன்று கவிதைகள் ஏன் தொகுப்பிலிருந்து கைவிடப்பட்டன என்பது குறித்து, வேணுகோபால் ராவ் விசாரணையை எதிர்கொள்ளும் போது எழுதப்பட்டதால் “சட்ட சிக்கல்கள்” என்று மேற்கோள் காட்டியுள்ளார்.
“அவர் ஒரு வழக்கின் கீழ் இருப்பதால் சில சட்டச் சிக்கல்கள் இருந்தன, அதனால்தான் மூன்று கவிதைகளை கைவிட்டோம். அவர் ஒரு வழக்கில் இருப்பதால், இது சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று வெளியீட்டாளர்கள் தெரிவித்தனர்” என்று அவுட்லுக் அறிக்கை வேணுகோபால் கூறியதை குறிப்பிட்டது.
000
2014-ம் ஆண்டில், பென்குயின் அவர்களின் சொந்த புத்தகமான “வெண்டி டோனிகரின் தி ஹிந்துஸ் – Wendy Doniger’s The Hindus” புத்தகத்தை திரும்பப் பெற்றது. இந்த புத்தகம் இந்து மதத்தின் “சிதைக்கப்பட்ட” பார்வையை முன்வைத்ததாகக் கூறி புகார்களை தொடுத்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அம்பேத்கர் ஜெயந்தி அன்று (ஏப்ரல் 14), பென்குயின் ரேண்டம் ஹவுஸ் “தலித் ட்ரூத்” என்ற புத்தகத்தை வெளியிட்டது. அதில் “தற்போதைய தலித் நிலையை, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக, அம்பேத்கரின் பொருத்தம் மற்றும் புதிய பாதையை பகுப்பாய்வு செய்கிறது. பல தலித் உண்மைகள் மற்றும் சாதி அமைப்பால் நிகழ்த்தப்படும் பொய்களுக்கு எதிரான அவர்களின் போர்கள் இந்த புத்தகத்தின் பக்கங்களில் பிரதிபலிக்கின்றன, இது எதிர்கால சந்ததியினருக்கான வாக்குறுதிகள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது” என்றும் வெளியீட்டாளர் கூறினார்.
இருப்பினும், தி தலித் ட்ரூத் வெளியான ஒரு மாதத்திற்குள், ராவின் சமீபத்திய கவிதைத் தொகுப்பு பென்குயின் ரேண்டம் ஹவுஸின் சட்டக் குழுவின் கைகளால் தணிக்கைக்கு உட்படுத்தியுள்ளது.

படிக்க :

♦ பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்

♦ காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !

முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்களின் புத்தகங்கள் விலைமதிக்க முடியாதவை; உழைக்கும் மக்களை செயலுக்கத்துடன் சிந்திக்கவைப்பவை; பகுத்தறிவை விதைப்பவை; புரட்சிகர சிந்தனையை பட்டைத்தீட்டிக்கொள்ள உதவுபவை. எனவே முற்போக்கு சிந்தனையாளர்களின் புத்தகங்களில் இருக்கும் “இந்துத்துவா”, “சங்க பரிவார்”, “நக்சல்பாரி” “காவிமயமாக்கல்” “ஊபா” போன்ற வார்த்தைகளை நீக்க முயற்சிக்கின்றன. இது தன்னை விமர்சிக்க முடியாத இடத்தில் வைத்து பார்க்கும் பாசிஸ்டுகளின் மனநிலையாகும். அவ்வார்த்தைகளை எழுத்துபவர்களையும், பதிப்பிப்பவர்களையும், மொழிப்பெயர்ப்பவர்களையும் ஒடுக்க முயற்சிக்கின்றன.
ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல் புரட்சிகர, பகுத்தறிவு, முற்போக்கு படைப்புகளை வெளி கொணர்வோம். உழைக்கும் மக்களின் விடுதலைக்கான, காவி பயங்கரவாதிகளுக்கு படைப்புகளையும், புத்தகங்களையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் காவி பாசிஸ்டுகளிடமிருந்து பாதுகாப்போம்.
காளி

கூகுள் நிறுவனத்தில் சாதிய ஒடுக்குமுறை ! சாதிய – இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் !

0

லிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட ஒரு தலித் சிவில் உரிமைகள் அமைப்பான ஈக்வாலிட்டி லேப்ஸ், தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் “ஜாதி வெறி மற்றும் துன்புறுத்தல்கள் அதிகமாக செயல்படுத்த அனுமதிப்பதாக” குற்றம் சாட்டியுள்ளது.

தி வாஷிங்டன் போஸ்ட்டில் ஜூன் 2-ம் தேதி வெளியான அறிக்கையின்படி, நிறுவன ஊழியர்கள், தோன்மொழி சௌந்தரராஜனைப் பற்றி “இந்துவெறி” மற்றும் “இந்து எதிர்ப்பு” போன்ற “தவறான தகவல்களை” பரப்பத் தொடங்கியுள்ளனர்.

“இந்த நேரத்தில், சாதி சமத்துவத்தை எதிர்ப்பவர்கள், தேன்மொழி சௌந்தரராஜன் மற்றும் சமத்துவ ஆய்வகங்கள் பற்றிய தவறான தகவல்களை உள்நாட்டில் பரப்பி, சிவில் உரிமைகள் நிகழ்வை இறுதி ரத்து செய்யும் வரை எடுத்து செல்வார்கள்” என்று சமத்துவ ஆய்வகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தலித் உரிமைகள் ஆர்வலர் தேன்மொழி சௌந்தரராஜன், அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு, ஏப்ரல் மாதம் கூகுள் செய்தி ஊழியர்களுடன் திட்டமிடப்பட்ட பேச்சு வார்த்தைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தேன்மொழி சௌந்தரராஜனை பேச அழைத்த கூகுள் நியூஸ் மூத்த மேலாளர் தனுஜா குப்தா, அவரது பேச்சை கூகுள் நிறுவனம் ரத்து செய்ததைத் தொடர்ந்து தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். “நிறுவனத்தில் எனது வேலையைச் செய்து, சாதி சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில், நான்கு பெண்கள் துன்புறுத்தப்பட்டு அமைதியாக இருப்பதைக் கண்டேன். உண்மை என்னவென்றால், இவை தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் அல்ல” என்று குப்தா தனது கடிதத்தில் கூறினார்.

படிக்க :

♦ இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்!

♦ கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !

கூகுள் நிறுவனத்திற்குள் நடக்கும் இந்த சாதிப் பாகுபாட்டிற்கு அல்பபெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (AWU) கண்டனம் தெரிவித்துள்ளது. “பணியிடத்தில் சாதி சமத்துவத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூகுள் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது.

கூகுள் வைத்திருக்கும் நிறுவனமான Alphabet-ன் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள் தேன்மொழி மற்றும் மூத்த மேலாளர் தனுஜா குப்தா ஆகியோருக்கு ஆதரவு இருக்கிறார்கள். “நாங்கள் தேன்மொழி சௌந்தரராஜன், தனுஜா குப்தா மற்றும் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையை அனுபவிக்கும் மற்றும் எதிர்த்துப் பேசும் அனைவருடனும் நிற்கிறோம்” என்று ஆல்பாபெட் தொழிலாளர் சங்கம் (Alphabet Workers Union-AWU) கூறியது.

தேன்மொழி சௌந்தரராஜன்

தேன்மொழியின் பேச்சை மீண்டும் நிலைநிறுத்துவது, சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பேச்சாளர்களை தொடர்ந்து கொண்டு வருவது, நிறுவனத்தில் உள்ள சாதியப் பாகுபாடுகளை தடுத்து நிறுத்தற்கு ஏற்ற முதலீடுகள் என மூன்று அம்சங்களில் நடவடிக்கை எடுக்குமாறு கூகுளை வலியுறுத்தியது AWU.

எனினும், கூகுள் நிறுவனம் சாதி பாகுபாடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஷானன் நியூபெரி “எங்கள் பணியிடத்தில் சாதி பாகுபாடுகளுக்கு இடமில்லை. எங்கள் பணியிடத்தில் பழிவாங்குதல் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக நாங்கள் மிகவும் தெளிவான, பொதுவில் பகிரப்பட்ட கொள்கையையும் கொண்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.

சௌந்தரராஜனின் பேச்சுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏழு கூகுள் ஊழியர்கள் நிறுவனத் தலைமை மற்றும் குப்தாவிற்கு “சாதி சமத்துவம் பற்றிய விவாதத்தால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்” என்று வெறுப்பு வார்த்தைகளை பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இந்த ஊழியர்களிடமிருந்து வரும் புகார்கள், “தெரிந்த தவறான தகவல் தளங்களில் இருந்து உள்ளடக்கத்தை நகலெடுத்து, பேச்சாளரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது”என்று மின்னஞ்சல்கள் கூறப்பட்டுள்ளன. “இந்து தேசியவாதம் அல்லது சாதிய படிநிலையை விமர்சிக்கும் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள கல்வியாளர்களை குறிவைத்துள்ள” தளங்களும் அமைப்புகளும் இதில் அடங்கும் என்று அறிக்கை கூறியது.

படிக்க :

♦ சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !

♦ டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்

தேன்மொழி சௌந்தரராஜன், ஏப்ரல் 27 அன்று, பிச்சை மற்றும் கூகுள் தலைமை பன்முகத்தன்மை அதிகாரி மெலோனி பார்க்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், பிச்சையின் “தார்மீகக் கடமை” பற்றி அவர் நினைவுபடுத்தினார். “நீங்களும் நானும் தமிழர்கள். நீங்கள் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர், நான் தலித் குடும்பத்தைச் சேர்ந்தவன். நீங்கள் இருக்கும் மதுரையில், என்னைப் போன்ற தலித் மக்கள் கொடூரமான வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.. சாதி சலுகை உள்ள ஒருவராக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சரியானதைச் செய்யும் பாத்திரத்தில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள்” என்று அவரது கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் சாதிய ஒடுக்குமுறைகள் தற்போது தேன்மொழியின் உரையை தடுத்து நிறுத்தியதில் இருந்து அம்பலமாகியுள்ளது. கூகுல் நிறுவனம் போன்ற பல கார்ப்பரேட் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிகழும் சாதிய – இன ஒடுக்கு முறைகளை எதிர்த்து உலகின் பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் ஒன்றிணைத்து குரல் கொடுப்பது மிகவும் அவசியம்.

சந்துரு

“பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு

0
05.06.2022

“பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’

நாடு முழுவதும் உள்ள மாநில கல்வி அமைச்சர்களின் 2 நாள் தேசிய மாநாடு, குஜராத்தின் காந்தி நகரில் ஜுன் 1 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எதிர்காலத்துக்கு மாணவர்களை முழுமையாக தயார்படுத்தும் விதமாக ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த அதிநவீன பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தின் ஆய்வகமாக இருக்கும் என்றார்.
மேலும், தேசிய கல்வி கொள்கை 2020 வரைவை தாக்கல் செய்த கஸ்தூரிரங்கன் அவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். இவர்தான் புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான குழுவின் தலைவரும் ஆவார்.
இந்த பள்ளிகளை தான் ஆய்வகம் என்கிறார்கள். இந்தப் பள்ளிகளில் சோதனை செய்து அதை நாடு முழுவதும் அமல்படுத்துவார்கள். அதனால்தான் இதை நாம் விசக் குஞ்சுகள் என்கிறோம். இது பரவும் இடங்களிலெல்லாம் காவி ஆதிக்கமும் கார்ப்பரேட் ஆதிக்கமும் நிலைநாட்டப்படும்.
தேசிய கல்வி கொள்கை 2020-ன் முன்னுரையில் இவர்கள் கொடுத்துள்ள விளக்கத்தை பார்த்தாலே இது எவ்வளவு அபாயகரமானது என்பது நம் கண்முன்னே அரங்கேறும்.
தேசிய கல்விக் கொள்கையின் முன்னுரையில் “அனைவருக்கும் உயர்தரமான கல்வியை அளிப்பதே நமது நாட்டின் அறிவுத்திறனை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கான சிறந்த வழிமுறையாகும். தனிநபர்களுக்கு மட்டுமல்ல, இந்தச் சமூகத்துக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் அதுவே நல்லது. அடுத்த பத்தாண்டுகளில் உலகளவில் அதிக இளைஞர்கள் வாழும் நாடாக இந்தியா விளங்கும். அவர்களுக்கு உயர்தரமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதே நம்முடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்கள்.
படிக்க :
♦ பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
♦ தொழில்நுட்ப கல்வி கட்டணங்களை உயர்த்தும் ஏ.ஐ.சி.டி.இ | புமாஇமு கண்டனம்
உயர்தரமான கல்வியை யார் தரப் போகிறார்கள்? மத்திய அரசே அனைவருக்குமான இலவசக் கல்வியை தந்து தனியார் கல்வியை ஒழிந்துவிடுமா? இல்லை மாறாக இந்த அறிக்கையில் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. அப்படி என்றால் இவர்கள் அனைவருக்குமான உயர்தரமான கல்வி என பேசுவதெல்லாம் யாருக்கானது? அம்பானிகளும் அதானிகளும் பல்கலைக் கழகங்களை தொடங்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். அம்பானியின் ஜியோ பல்கலைக் கழகத்தை அரசே ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து ஆரம்பிக்கச் சொல்கிறது.
அனைவருக்குமான உயர்தரக் கல்வி என்பது ஒரு வெற்றுப் பேச்சு இதனால் ஏழைப் பின்தங்கிய மாணவர்கள் அனைவரும் கல்வியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மேலும், இந்த முன்னுரையில் “உலகளாவிய கல்வி இலக்குகளையும் கருத்தில் கொள்கிற அதே சமயம், இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக மரபுகளையும் விழுமியங்களையும் ஒருசேரக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இது உறுதியெடுத்துக் கொண்டிருக்கிறது” எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தியாவின் மரபு என இந்த காவி கும்பல் சொல்வதெல்லாம் அப்பட்டமான புராண இதிகாசக் குப்பைகளையும் சாதி – மத வேறுபாடுகளையும் பெண்ணடிமைத் தனத்தையும் ஆகப் பிற்போக்கான கலாச்சாரங்களையும் கொண்டுள்ளதாகும். அவர்கள் மொழியிலேயே சொல்வதென்றால் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கான கல்வித் திட்டம்தான் இது. இது ஒட்டுமொத்த மாணவர்களையும் அடிமைச் சிந்தனைக்குள் தள்ளி அடிமைகளாகவே மாற்றக் கூடியது.
பள்ளிக் கல்வியுடன் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைப்பது என்ற பெயரில் நவீன குலக் கல்வியை கொண்டு வருகிறார்கள். இதில்தான் அப்பா அம்மா செய்த தொழில் பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழில் என சாதிய குலக்கல்வி முறையை திணிக்கிறார்கள் மேலும் மாணவர்களை கூலி அடிமைகளாக மாற்றுவதற்கான திட்டத்தையும் இதனுள் இணைத்துள்ளார்கள். மாணவர்களை கார்ப்பரேட் கொத்தடிமைகளாக மாற்றுவதற்கே இது வழிவகுக்கும்.
படிக்க :
♦ அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு
♦ பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை ! புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே ! | புமாஇமு
ஆசிரியர்களே கல்விச் சீர்திருத்தங்களின் மையம் என்பதால் ஆசிரியர்களுக்கான தகுதியும் புதிய வரையறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இந்தப் புதிய கொள்கை வலியுறுத்துகிறது.
இது ஆசிரியர்களை தகுதி என்ற பெயரில் நிரந்தரமற்ற பணியாளர்களாக மாற்றி கார்ப்பரேட்டுகளுக்கு ஏற்றமாதிரி வடிவமைக்க நினைக்கிறார்கள். மேலும் காவி சிந்தனையும் முக்கியம் என்பது கூடுதல் தகுதி. இதில் ஆசிரியர்களின் அரசு வேலை பறிக்கப்பட இருக்கிறது.
இன்னும் இதுபோல இந்த கல்விக் கொள்கையில் உள்ள வெற்று சவடால்களையும், நடைமுறையில் இவர்கள் செய்ய இருப்பதையும் நாம் மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. அதுதான் இந்த விசக் குஞ்சுகளை அழித்தொழிப்பதை நோக்கி முன்னேறும்.
மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்!
அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைத்து, காவி – கார்ப்பரேட் பாசிசத்தை களத்தில் இறங்கி அம்பலப்படுத்தி முறியடிப்போம்!


இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.
rsyftamilnadu@gmail.com

16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை : கிரிமினல் கும்பலின் அடியாள்படை அதிகார வர்க்கமே!

1
ரோட்டில் 16 வயது சிறுமியை வளர்ப்பு தந்தை மூலமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணமான தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் கைது என்ற செய்தியை ஜூன் 3 அன்று தினகரன், தினமலர் இரண்டிலுமே ஒரேபோன்று வெளியானதை பார்த்திருப்போம். உண்மையை திரித்து போலி செய்தியை ஒன்று போல் பரப்பி உள்ளனர்.
அந்த செய்தியில் சொல்லப்பட்டிருப்பது என்ன? 16 வயது சிறுமி அவள் 12 வயதில் பூப்படைகிறாள். அதன் பின் அவளுடைய தாயாரின் இரண்டாவது கணவன் (வளர்ப்பு தந்தை) இந்த குழந்தையை 12 வயதில் பாலியல் வன்கொடுமை செய்கிறான். அதன் பின் அந்த கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் ஒரு புரோக்கர் மூலமாக ரூ.25,000-க்கு விற்று, அதில் ரூ.5,000 புரோக்கருக்கு கொடுத்து விடுகின்றனர்.
இது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. தொடர் பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளான். இப்பொழுது அந்த குழந்தைக்கு 16 வயது. 4 வருடத்தில் 8 முறை அந்த குழந்தையிடமிருந்து கருமுட்டை பெற்று ஈரோடு, ஓசூர் சேலம், பெருந்துறையில் என 8 தனியார் மருத்துவமனைகளில் விற்று உள்ளனர். இப்படி வரும் வருமானத்தை வைத்துதான் அவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.
பார்த்த உடனே நமக்கு என்ன தோன்றும், முதலில் அந்த குழந்தையின் அம்மா மீது கோபம் வரும் ”இவ எல்லாம் ஒரு தாயா? இவளும் ஒரு பெண்ணா? என்று தோன்றும். இது இயல்புதான். ஏனென்றால் ஊடகங்கள் என்ன சொல்கின்றனரோ அதை அப்படியே நாம் ஏற்றுக் கொள்ளும்போது இயல்பாகவே நாம் அந்த குழந்தையின் தாய் மீதும், வளர்ப்பு தந்தை மீதும், புரோக்கர் மீதும்தான் கோபம் வரும்.
படிக்க :
♦ காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !
♦ இந்து மதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்!
எவ்வளவு சீரழிந்த சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை இந்த செய்தியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். திட்டமிட்டு NEWS 7 சேனலில் செய்தி பரப்பப்படுகிறது. குற்றவாளி அந்த மூன்று நபர்கள் மட்டும்தான் (தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர்) என்று செய்தியை பரப்பி அப்படியே உண்மையை ஊற்றி மூடுகின்றனர்.
தனது வறுமைக்கு கணவனால் கைவிடப்பட்ட பெண் வேறு ஒரு ஆண் நண்பருடன் (இரண்டாவது கணவருடன்) சேர்ந்து கொண்டு குழந்தையை சீரழித்து இருப்பது தவறுதான். இந்த குற்றத்திற்கு பின் இருப்பது வறுமை என்ற ஒன்றுதான். அதை போக்கினால் இந்த குற்றம் அப்பொழுதே முடிவுக்கு வரும். ஆனால், அந்த 12 வயதிலிருந்து 16 வயது குழந்தையின் கருமுட்டையை 8 முறை வாங்கிய அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் மருத்துவமனை நிர்வாகங்களும் குற்றமற்றவர்களா? 12 வயது பெண்ணுக்கு 16 வயது என்று போலியாக வயதுச் சான்றிதழ் அளித்த அரசு அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை?
ஒரு மருத்துவருக்கு 12 வயது குழந்தையை பார்த்தால் தெரியாதா? ஆனால், அந்த குழந்தையின் தாய் குழந்தையின் வயதை 16 என ஆதார் அட்டையில் மாற்றம் செய்து போலி ஆவணம் தயார் செய்து கொடுத்ததாகவும், இதனால் மருத்துவமனைக்கும், அந்த மருத்துவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுபோல் திட்டமிட்டு செய்தியை பரப்புகின்றனர். இது மிகவும் அப்பட்டமான பொய். தாய் உட்பட அந்த 3 நபர்களை மட்டும் குற்றவாளிகளாக்க மருத்துவமனை நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்துகொண்டு போலீசுத்துறை தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்த போலீசின் போலி செய்தியைத்தான் ஊடக நிறுவனங்கள் செய்திகளாக்கி நம் மனதில் பதிய வைக்கின்றன.
எதோ குழந்தைகளின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளில் விற்பதாக போலீசுத்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்ததாகவும் இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளும்போது இவர்கள் பிடிபட்டதாவும் செய்தியை முதலில் பரப்புகின்றனர். ஆனால், உண்மை என்னவோ அந்த குழந்தை, தன் தாயிடமிருந்து தப்பித்து சித்தி, சித்தப்பாவிடம் சொல்லி அவர்கள் மூலம்தான் செய்தி வெளிவந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில்தான், போலீசுத்துறை வந்துள்ளனர். ஆனால், ஏற்கனவே போலீசுத்துறை இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் தடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு இருப்பதான ஒரு பிம்பம் மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் பரப்பட்டு வருகிறது.
ஆனால் ஈரோடு, சேலம், ஓசூர், பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் இந்த குழந்தையிடமிருந்து மட்டுமே 8 முறை கருமுட்டை எடுத்துள்ளன. அப்படியானால் இது ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விட்டதாகவும், அதை போலீசுத்துறை மிகவும் இலாவகமாக கையாண்டு பிடித்து விட்டதாகவும் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன. ஆனால், இந்த மருத்துவமனைகள் கள்ள மெளனம் சாதிக்கும்போதே தெரிகிறது இது தொடர் நிகழ்வு என்று. அதிலும் குறிப்பாக போலீசுத்துறை பரபரப்பாக காட்டும்போதே தெரிகிறது இது அவர்களின் கண்காணிப்பில் தான் அரங்கேறுகிறது என்பது.
ஏனென்றால், இது சாதரணமாக ஒரு எளிய மக்களால் செய்யப்படக் கூடிய குற்றமா? அப்படி செய்துவிடதான் முடியுமா? ஆனால், இப்பொழுது இந்த பிரச்சினை பரபரப்பாக பேச காரணம் என்பது அந்த குழந்தையின் சித்தி, சித்தப்பா தான். அவர்கள் கொடுத்த புகாரினால் தான் வேறுவழி இல்லாமல் இந்த 3 பேர் மட்டுமே குற்றவாளி என்ற வகையில் பிரச்சினையை திசைதிருப்பி மூடுகின்றனர். அப்படியானால் இந்த குற்றம் நின்று விடுமா? இதுபோன்ற நடவடிக்கை என்பது குற்றத்தை மேலும் அதிகரிக்கதான் செய்யும்.
உண்மையான, குற்றத்திற்கு அடிப்படையான குற்றவாளிகளான ஈரோடு, ஓசூர், சேலம், பெருந்துறை பகுதிகளில் பெயர் வெளியிடப்படாத தனியார் மருத்துவமனை நிர்வாகம், அதன் மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திற்கு துணைபோகும் போலீசுத்துறை, 16 வயது குழந்தையின் வயதை 20 என மாற்றிய அரசு அதிகாரிகள் ஆகிய அனைத்து பணத்திற்காக அதிகாரத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இருக்கும் இந்த பணவெறி பிடித்த நாய்கள் தான் முதன்மை கிரிமினல் குற்றவாளிகள்.
படிக்க :
♦ ரூ.265 கோடி நிதியை திருப்பி அனுப்பிய முந்தைய அதிமுக அரசு : வஞ்சிக்கப்படும் பழங்குடி மக்கள் !
♦ ’காவி கொடி தேசிய கொடியாக மாறும்’ பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா : இந்து ராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை தகர்ப்போம்!
இது ஏதோ இக்குற்றத்தில் மட்டுமல்ல பல குற்றங்களுக்கும் அடிப்படையாக இந்த அரசுக்கட்டமைப்பு நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது. இந்த உண்மையை மக்களிடமிருந்து மறைக்க பிரச்சினையை கிளுகிளுப்பாகவும் ரசிக்கக் கூடியதாகவும் கண்ணீர் வரக்கூடியதாகவும் போட்டு நம் சிந்தனைகளை திசைத்திருப்புகின்றன இந்த ஊடகங்கள்.
இந்த குற்றவாளிகளை இச்சமூக அமைப்போ அல்லது சட்டமோ தண்டிக்குமா? அல்லது இதுபோன்ற குற்றங்களுக்கு இவர்கள் தண்டனைதான் அனுபவித்து உள்ளார்களா? கட்டாயமாக தண்டிக்கப்படவில்லை என்று நம் உள்மனம் சொல்கிறது. அப்படியானால் யார் தண்டிப்பது இந்த கயவர்களை?
இந்த சமூகமும் கட்டமைப்பும் முழுக்க முழுக்க சீரழிந்து, சீரழிவு மட்டுமே புறையோடிப்போய் உள்ளது. இதில் குற்றவாளிகளாகப் பார்க்கப்படுபவர்கள் அல்லது ஆக்கப்படுபவர்கள் சாதாரண மக்களே!
உழைக்கும் கரங்கள் தான் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். இதுபோன்ற மருத்துவமனைகளை மக்களே ஒன்று திரண்டு இழுத்து மூட வேண்டும் அல்லது அரசுடைமையாக்க வேண்டும். பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகங்களை அடித்து நொறுக்க வேண்டும். சமூக மாற்றம் என்பது நம்முடைய அத்தியாவசிய தேவையாக மாறிப்போய் உள்ளது.

ஓவியா

திருநெல்வேலி – ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) – ஆவணப்படம்

திருநெல்வேலியில் உழைக்கும் மக்களின் கடைகளை அகற்றி ஓர் பிரம்மாண்ட ஸ்மார்ட் சிட்டி கட்டப்பட்டு வருகிறது.
நகரங்களின் வேர்களாய் இருக்கும் விவசாயிகள், நாடி நரம்புகளாய் இருக்கும் தொழிலாளர்கள், முகங்களாய் இருக்கும் வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளிகள், கொத்தனார்கள், எலக்ட்ரிசியன்கள், பிலம்பர்கள், துப்புரவு தொழிலாளர்கள், உதிரி பாட்டாளிகள் என அனைத்து உழைக்கும் மக்களின் வியர்வையிலும், உழைப்பிலும் இரத்தத்திலும் தான் ஒரு நகரம் உருவாக்கப்பட்டு இன்று வளர்ந்து நிற்கிறது. ரயில்வே மின்சாரம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் இந்த மோடி அரசு இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களை கூருபோட்டு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டமே இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம்
உழைக்கும் மக்களை அவர்களின் உழைப்பில் இருந்து உருவான நகரங்களில் இருந்தே வெட்டியெறிவது என்கிற நவீன தீண்டாமையை கொண்ட திட்டம்தான் இது.
திருநெல்வேலியில் கொண்டுவரப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பற்றிய ஆவணப்படம் :

பாருங்கள்! பகிருங்கள் !!
உழைக்கும் மக்களின் துயரங்களை கலை வடிவில் கொண்டு வரும்
மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கு ஆதரவு தாரீர் !
கலை இலக்கியம் ஆர்வமுள்ளவர்கள் ம.க.இ.க-விற்கு தோள்கொடுக்க தொடர்பு கொள்ளுங்கள்!
இணைவீர் ம.க.இ.க || தொடர்புக்கு : 97916 53200
இதுபோன்ற ஆவணப் படங்களை தொடர்ந்து படைத்திட நன்கொடை தாரீர் !
வங்கி விவரம் :
Name: R MUTHIAIAH
Bank Name : Canara Bank
A/C.No: 1598101018208
Ifsc code: CNRB0001598
Branch Location : Pudur, Madurai
Account Type : Savings
Mobile – (91) 97916 53200
Email – vinavu@gmail.com
ஆவணப்படம் தயாரிப்பு, ஆக்கம் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு : 97916 53200

பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்

1
03.06.2022
பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்
அரசியல் பேச தடை உத்தரவு!
நீட்டப்படும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின்
கொடும் கரங்களை உடைப்பதற்கு ஒன்றுபடுவோம்!
பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக பதிவாளர் கோபி அவர்கள் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கை பல்கலைக்கழகம் மட்டும் அதன் கீழுள்ள உறுப்பு கல்லூரிகளுக்கும் சேர்த்தே அனுப்பி உள்ளார்.
அதன்படி சுற்றறிக்கையில் பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் பயிலும் மாணவர்கள் பல்வேறு அமைப்புகள் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை, விவாதங்களை நடத்த தடை என உத்தரவு பிறப்பித்துள்ளார். மாணவர்கள் கல்வியில் கவனத்தை குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உத்தரவு என்கிறார்.
மாணவர்கள் கல்வியில் கவனத்தை குவிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளக் கூடாது பேசக்கூடாது என்றால் இது பாசிசத்தின் உச்சம். அதைத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவு துணைவேந்தர் செய்து வருகிறார்.
இதை இன்று பல்வேறு மாணவர் அமைப்புகளும் முற்போக்காளர்களும் பேராசிரியர்களும் கண்டித்து வரும் வேளையில் திராவிட மாடல் என்று பேசிக்கொள்ளும் திமுக அரசு மௌனமாக வேடிக்கை பார்க்கிறது.
மோடி அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் வராத மாநிலங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்களை ஆளுநர்களாக நியமித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில்தான் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட ஆளுநர்கள் இன்று பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு சக்திகளை துணைவேந்தர்களாக நியமித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர் தான் இந்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன்.
படிக்க :
♦ போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மாணவர் குபேரன் கைது !
♦ மருத்துவத்தில் அரங்கேறும் மனுதர்மம் ! பார்ப்பன மேலாண்மையை முறியடிப்போம் !!
துணைவேந்தராக அமர்த்தப்பட்ட பிறகு வேதசக்தி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-ன் புராண குப்பைகளையும் பிற்போக்கு குப்பைகளையும் பரப்புவதற்கு ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தார். அந்தக் கருத்தரங்கம் கலைஞர் ஆய்வு மையத்துடன் இணைந்து நடத்துவதாக இருந்தது. இது பல்வேறு தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது. அத்துடன் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இப்போது மீண்டும் துணைவேந்தர் தனது பாசிச கரங்களை நீட்டி உள்ளார். அதற்குத்தான் இந்த அரசியல் பேச தடை உத்தரவு.
மாணவர்கள் அரசியல் பேசாமல் இருக்க முடியுமா?
காசு இருப்பவனுக்குதான் கல்வி என்று ஒட்டுமொத்த கல்வியையும் தனியார் மயமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து வருகிறார்கள். அதற்காகத்தான் நீட் தேர்வு க்யூட் தேர்வு புதிய கல்விக்கொள்கை என அடுத்தடுத்து கொண்டு வருகிறார்கள். இதனால் கல்வி இழக்கும் ஏழை பின்தங்கிய மாணவர்கள் இதை எதிர்த்துப் பேசாமல் இருக்க முடியுமா?
சமீபத்திய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் உத்தரவுப்படி, சில இலட்சங்கள் கட்டணமாக செலுத்தாமல் கல்வி கற்க முடியாது. மாணவர்கள் வரவில்லை என்றால் அதற்காக கட்டணத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை என பகிரங்கமாக காசில்லாதவன் படிக்க வேண்டிய அவசியமில்லை என்ற உத்தரவை பிறப்பித்தார்கள். இதையெல்லாம் மாணவர் சமுதாயம் கேள்வி எழுப்பாமல் வேடிக்கை பார்க்க முடியுமா?
சேலம் சுற்றுவட்டார பகுதிகளிலேயே எட்டுவழிச் சாலையை கொண்டுவர துடிக்கிறார்கள். இயற்கை வளங்கள், கனிம வளங்கள் எல்லாம் சூறையாடப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்காக தொடர்ச்சியாக வேலை நடக்கிறது இதைப்பற்றி பேசாமல் இருக்க முடியுமா?
இன்று நாட்டினுடைய பொது சொத்துக்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு வேலை என்பது நீக்கப்பட்டு மாணவர்களும் இளைஞர்களும் நிரந்தர கூலி அடிமைகளாக மாற்றப்பட இருக்கிறார்கள். இதைப்பற்றி பேசாமல் இருக்க முடியுமா?
இன்னொரு பக்கம் இதே பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் மாணவர்களை மதவெறியூட்டி சாதிவெறியூட்டி கலவரங்களை நடத்துகிறது. சமீபத்தில் கூட கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினையை திட்டமிட்டு கிளப்பி மாணவர்களை மதவெறிக்கு ஆழ்த்தி இஸ்லாமிய பெண்களின் கல்வி உரிமையை பறித்து இன்று கல்வியை விட்டே வெளியேற்றி உள்ளார்கள். இதைப்பற்றி நாம் பேசாமல் இருக்க முடியுமா?
இதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஆதரவு மாணவர் அமைப்புகள் புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து கார்ப்பரேட் கொள்ளையை ஆதரித்து நாட்டை விற்பதை ஆதரித்து போராடுகிறார்கள் இவர்களை எதிர்த்துப் பேசாமல் இருக்க முடியுமா?
பேசக் கூடாது என்பதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம். அப்படிப்பட்ட பாசிச வேலையைத்தான் இந்தத் துணைவேந்தர் ஜெகநாதன் செய்து வருகிறார். அதுமட்டுமல்ல மக்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் இன்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி செய்ய முடியவில்லை. ஏனென்றால் இவர்கள் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையின் அடிப்படையில் நாட்டை தீவிரமாக விற்று வருகிறார்கள் அது என்றைக்கும் மக்களுக்கு எதிரானது தான்.
இந்த பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய – மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய – மிக முக்கியமான சக்திகள் மாணவர்கள் இளைஞர்கள் தான். வரலாறு முழுவதும் அதைத்தான் சொல்கிறது. இந்தியாவிலேயே கூட சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பகத்சிங் போன்ற இளைஞர்களின் வருகை மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அன்று பிரிட்டிஷ்க்கு ஆதரவாக செயல்பட்ட காந்தியின் செல்வாக்குக்கு நிகராக பகத்சிங் மற்றும் புரட்சிகர தோழர்களின் செயல்பாடு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கை ஏற்படுத்தியது.
இன்றும் கூட ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், விவசாயிகள் போராட்டம் போன்றவற்றில் மாணவர்கள் முன்னணியில் நின்று மக்களுக்கு மாபெரும் நம்பிக்கையாக இருக்கிறார்கள். சமூக மாற்றத்தை சாதிக்கக் கூடிய புரட்சியின் முன்னணி சக்திகளே மாணவர்கள் தான்.
அதனால்தான் மாணவர்களைக் குறி வைக்கிறார்கள் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பல். அதனால்தான் அவர்களே எழுதி வைத்துள்ள பெயரளவிற்கான பேச்சுரிமை என்பதைக்கூட மறுக்கிறார்கள். ஆதலால் இதை அனுமதித்தோம் என்றால் மாணவர்கள் மட்டுமல்ல அடுத்ததாக தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள் என அனைவரையும் அடிமைப் படுத்துவார்கள்.
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் நமது ஜனநாயக உரிமையை கூட தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதுதான் மேற்கண்ட பல்கலைக்கழகத்தின் உத்தரவு நமக்கு எடுத்துக் காட்டுவது.
நீட்டப்படும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் கொடுங்கரங்களை உடைக்க உழைக்கும் மக்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுபடுவோம்! மாணவர்களே நாம் இப்போது விட்டால் எப்போதும் அடிமைதான்!

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.