நேற்று ஒரு OLA ஓட்டுநரிடம் கேட்டபோது இப்படி சொன்னார். அதற்கு முன்பு ஒரு ஸ்விக்கி இளைஞரும் இதையேதான் சொன்னார். அதை சொல்லும்போதே அவர்களின் கண்களில் வழிந்தோடிய தூக்கத்தையும், குரலில் அதற்கான ஏக்கத்தையும் கண்டேன்.
“நேத்து மதுரவாயல் சவாரி முடிச்சுட்டு மடிப்பாக்கம் வீட்டுக்குப் போய் சேரும்போது மணி 1.30. இன்னிக்கு காலையில 7 மணிக்கு ‘ஆப்’ ஆன் பண்ணினேன். 7.10-க்கு முதல் சவாரி. இப்போ நைட் 9 மணியாச்சு. இன்செண்டீவ் பாய்ண்ட் ரீச் பண்ண இன்னும் ஒரு சவாரி எடுத்தாதான் முடியும்’’ என்று அந்த ‘ஓலா’ ஓட்டுனர் சொன்னபோது அவர் என்னை சாலிகிராமத்தில் இறக்கிவிட்டார்.
“ஒரே ஒரு ஹெல்ப் சார். நீங்க ட்ராப் பாய்ண்ட் கிண்டி வரைக்கும் மாத்தி போட முடியுமா? அமவுண்ட் இப்போ என்ன வருதோ அதை குடுங்க. ட்ராப் பாய்ண்ட் மட்டும் மாத்தி போட முடியுமா?”
அப்படி மாற்றி போட்ட பிறகு, ‘ஏன் அப்படி?’ என்று கேட்டேன்.
“வழக்கமான சவாரில நீங்க குடுக்குற ரூபாய்ல பெருசா ஒண்ணும் மிஞ்சாது. 100 ரூபாவ் சவாரில கிடைச்சா, 30 ரூபாய் அவங்களுக்கு கமிஷன். (இது தொடக்கத்தில் 5% ஆகவும், பின்னர் 10%-ஆகவும் இருந்தது) மீதிதான் எங்களுக்கு. OLA Money-ன்னா, அது கைக்கு வந்து சேர ஒரு மாசமாயிடும். மத்தபடி இன்செண்டீவ்ல கிடைக்கிற அமவுண்ட்தான் எங்களுக்கு மிச்சம்’’
“அது என்ன இன்செண்டீவ்?”
“ஒவ்வொரு நாளும் மார்னிங் பீக் ஹவர்ல ரெண்டு சவாரி, ஈவினிங் பீக் ஹவர்ல ரெண்டு சவாரி எடுக்கனும். இது எடுத்தாதான் இன்செண்டீவ் கிடைக்கும். பீக் ஹவர் இல்லாத நேரத்துல எத்தனை சவாரி எடுத்தாலும் இன்செண்டீவ் கிடைக்காது. ஒவ்வொரு சவாரிக்கும் எங்க கணக்குல பாய்ண்ட் போட்டுக்கிட்டே வருவாங்க. இந்த பீக் ஹவர் சவாரி-யை முடிச்சு, ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாயையும் ரீச் பண்ணிட்டா இன்செண்டீவ் கிடைக்கும். அதுலயும் கம்பெனி கமிஷன் பிடிச்சுக்குவாங்க.
இப்போ நீங்க ட்ராப் பாய்ண்டை மாத்தி போட்டுட்டதால, நான் ஸ்ட்ரைட்டா கிண்டி வழியா வீட்டுக்குப் போயிடுவேன். இன்செண்டீவ் பாய்ண்ட்டையும், அதுக்கான அமவுண்டையும் ரீச் பண்ணிருவேன். இல்லேன்னா, மிச்சம் இருக்கிற சின்ன அமவுண்டுக்காக இன்னொரு சவாரி எடுக்கனும். அது எங்க விழும்னு தெரியாது. எங்கயாவது அம்பத்தூர், ஆவடின்னு விழுந்துச்சுன்னா.. அப்புறம் வெறும் வண்டியை ஓட்டிக்கிட்டு வீடு போய் சேர மறுபடியும் நடு ராத்திரி ஆயிடும். இப்பவே உடம்பெல்லாம் அடிச்சுப் போட்டா மாதிரி வலிக்குது. கொஞ்சம் தூங்கிக்குவேன். அதான் சார்..’’
இத்தனை திட்டமிட்டு இதை செய்வதால் அவர் அடையப்போகும் ஆதாயம் மிக சொற்பம். ‘இன்றைக்காவது தூங்கிட முடியுமா?’ என்ற பரிதவிப்பே அதில் தெரிந்தது. அதற்கும் முந்தைய தினம், கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே ஒன்றும் முடியாமல் போக, காட்டாங்கொளத்தூர் அருகே சாலையோரம் காரை நிறுத்தி ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகே ஓட்டியதாக சொன்னார். “தூங்கலை.. சும்மா ஒரு மணி நேரம் அப்படியே ஸ்ட்டியரிங்கில தலவெச்சு படுத்திருந்தேன்’’ என்றார்.
ஓலா, ஊபர் ஓட்டுனர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது, 16 மணி நேரம் ஓட்டுகின்றனர். அப்படி ஓட்டினால்தான் அவர்களால் காருக்கான தவணை கட்டியதுபோக வீட்டுக்கு கொஞ்சம் கொண்டுபோக முடியும். ஆறு லட்சம், எட்டு லட்சம் கொடுத்து கார் வாங்கி, அதை ஓலா, ஊபர் உடன் இணைத்து ஓட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் தவணை கட்டுகிறார். பெரும்பாலும் 50 மாத தவணை.
“அஞ்சு வருஷம் கண்ண மூடிக்கிட்டு சமாளிச்சுட்டா, அதுக்குப் பிறகு தவணைக்காசு மிஞ்சும்’’ என்பது இவர்கள் போடும் கணக்கு. யதார்த்தம் என்னவெனில், பல மாதங்களில் இவர்கள் உரிய தேதிக்கு தவணை கட்ட முடியாமல் போகும். அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். எப்படியோ சமாளித்து ஐந்து ஆண்டுகளை ஓட்டினால், முடிவில் அந்த கார் காயலாங்கடை கண்டிஷனில்தான் இருக்கும். மேற்கொண்டும் இரண்டு ஆண்டுகள் ஓட்டலாம். விற்க சென்றால் டி-போர்டு வண்டிகளின் விலை அடிமாட்டு ரேட்டுக்குப் போகும். அப்புறம் இன்னொரு புது வண்டி, புது தவணை.. இதே சுற்று.
“நம்ம வண்டி… தொழில் நம்ம கைக்குள்ள இருக்கு…. நெனச்சா ஓட்டலாம். தேவைன்னா ‘ஆப்’பை ஆஃப் பண்ணிட்டு லீவ் எடுத்துக்கலாம்… இப்படி நினைச்சுதான் சார் வண்டியை வாங்கினேன். மூணு வருஷத்தை ஓட்டிட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு.
சேர்ந்தா மாதிரி 8 மணி நேரம் தூங்கி மாசக்கணக்காயிடுச்சு. பீக் ஹவர் சவாரி எடுத்தாதான் நாலு காசு பார்க்க முடியும். அதனால காலையிலயும் தூக்கம் இருக்காது, நைட்டுலயும் தூக்கம் இருக்காது. மதிய நேரத்துல எங்காவது ரெண்டு மணி நேரம் அப்படியே படுத்துக்குறது. சாப்பாடு எல்லாம் வண்டிலேயேதான். இதுல எவனாவது வந்து மோதிட்டா, இல்ல நம்ம மோதி வண்டிக்கு டேமேஜ் ஆயிட்டா அது தனி செலவு.
புலி வால் புடிச்ச கதையா இருக்கு. ஏழெட்டு லட்சம் கடன்ல கார் வாங்கியிருக்கோம். நடுவுல விட்டா, பேங்க்காரன் வண்டியை தூக்கிருவான். இத்தனை வருஷம் உழைச்சதெல்லாம் போயிடும். மீதி கிணறை எப்படியாச்சும் தாண்டிரலாம்’னு ஓட்டுறோம். தாண்டி முடிக்கும்போது வெறும் நடைபொணமாயிடுறோம். இதுக்கு பேசாம ஊர்லயே கழனி வேலை பார்த்துக்கிட்டு இருந்திருக்கலாம் போலருக்கு.’’
சவாரி அல்லது டெலிவரி-க்கு அடிப்படை தேவையான டூ-வீலர் அல்லது காருக்கான மூலதனத்தையும் தொழிலாளியின் சொந்த உழைப்பில் இருந்தே அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
ஓலா மற்றும் ஊபர் இரண்டு நிறுவனங்களில் மட்டும் இந்தியாவில் 15 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுனர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் இந்திய சந்தையில் உள்ளே நுழையும்போது, ‘ஒரு ஓட்டுனர் மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக சம்பாதிக்கலாம்’ என்று விளம்பரப்படுத்தினார்கள் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
“நாலஞ்சு நாள் சேர்ந்தா மாதிரி வேலை செஞ்சுட்டு ஒரு நாள் போன்.. கீன் எல்லாத்தையும் ஆஃப் பண்ணி போட்டுட்டு தூங்குவேன் பாருங்க, பேய் மாதிரி தூங்குவேன். நடுவுல எழுந்திருச்சு சாப்பிட போனா தூக்கம் போயிரும்னு ஒரு பிரியாணி பொட்டலத்தை வாங்கி வெச்சுக்கிட்டு தூங்குவேன். எழுந்திருச்சு சாப்பிட்டு அப்படியே படுத்துக்குறது. இப்போ எனக்கு கல்யாணம் ஆகலை. ஆனுச்சுன்னா, இன்னும் கொடுமையா இருக்கும்ல..’’
ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ் உள்ளிட்ட உணவு டெலிவரி செய்யும் இளைஞர்களின் நிலையும் இதுதான். “நினைச்சா வேலை பார்க்கலாம். நினைச்சா லீவு எடுத்துக்கலாம்’’ என்பதை இந்த வேலையின் நேர்மறை அம்சமாக இவர்கள் கருதுகின்றனர். அதுதான் இந்த வேலைக்கு நிச்சயமற்ற தன்மையை வழங்குகிறது. வேலை தருபவர், தன் தொழிலாளிக்கு வழங்க வேண்டிய மிக குறைந்த உரிமைகளும் இதில் அகற்றப்படுகின்றன. இவர்கள் ஒப்பந்த கூலிகளை விட மோசம். மாத ஊதியம், வரையறுக்கப்பட்ட வேலைநேரம் மற்றும் வேலை என எதுவுமின்றி, இலக்கு நிர்ணயித்து துரத்தப்படுகின்றனர்.
ஓர் ஒழுங்குப்படுத்தட்ட நிறுவன வரம்புகளின் கீழ் பணிபுரியும் மனோநிலை இவர்களிடம் இருந்து மெல்ல மெல்ல அகற்றப்படுகிறது. சொந்த வாழ்வின் உதிரித்தன்மையும், இந்த பணிவாழ்வின் உதிரித்தன்மையும் இணையும்போது, அது ‘இந்த கணத்தை வாழ்ந்து பார்க்கும்’ பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இடம், வலம் கவலை இல்லை. மேல் கீழ் கவலை இல்லை. உரிமை, உரிமை மறுப்பு கவலை இல்லை. மோடி, எடப்பாடி கவலை இல்லை. அக்கவுண்டில் பணம் கிரெடிட் ஆனால், நான் ராஜா. இல்லைன்னா? “அதுக்கு யார் என்னா பண்ண முடியும்? நம்ம உழைச்சாதான் துட்டு. சும்மா உட்கார்ந்துருந்தா துட்டு வருமா?”
தொழிலாளி வர்க்கம் உதிரி மனோபாவத்தில் இருப்பதன் ஆகப்பெரிய பலன், அவர்களே முதலாளிகளின் மனசாட்சியாய் மாறிவிடுவதுதான். வேறுமாதிரி சொல்வதானால், நிச்சயமற்ற தன்மையுடன் இருக்கும் தனது இருப்பை நீட்டித்துக்கொள்ள வேண்டுமானால் முதலாளிகளுக்கு தொழிலாளியும் நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வேண்டும். அல்லது சமூகத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதை ஊக்கப்படுத்த வேண்டும். “எல்லாரும் படிச்சுட்டு வேற வேலைக்குப் போயிட்டா ஊர்வேலை எல்லாம் யார் பார்க்குறது?’’ என்று ஆண்ட சாதி பீத்தைகள் பேசுவதைப் போன்றது இது.
ஆனால், நம்முடைய தொழிலாளிகளின் உடல்கள் சாறு எடுக்க பிழியப்படும் கரும்பைப் போல ஆகக்கடைசி சொட்டு வரையிலும் பிழியப்படுகிறது.
இது ஒரு அகால மரணம். தோழர் ராமசாமியைப் போன்ற போராளிகள் 60 வயதுக்குள் இறக்க வேண்டுமா? 1947 முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் இன்று வாழ்நாள் அதிகரித்திருக்கிறது. வளர்ந்துவரும் அறிவியல் நூற்று ஐம்பது வயது வரை மனிதர்கள் உயிர் வாழ்வதைச் சாத்தியமாக்கப் போகிறது.
அதே நேரத்தில், சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சமூகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருவதையும் காண்கிறோம். 12-ம் வகுப்பில் தோல்வியால் தற்கொலை, நீட்டில் தோல்வி-தற்கொலை, கல்விக் கடன் கட்டமுடியாத மாணவன் தற்கொலை, கடன் கட்ட முடியாத விவசாயி தற்கொலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் சிறு, குறு தொழில் உரிமையாளர்கள் தற்கொலை. இந்தத் தற்கொலைகளுக்கு எல்லாம் என்ன பொருள்? எதிர்காலம் குறித்த அவர்களது கனவு அழிந்துவிட்டது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர் விளவை ராமசாமி. (கோப்புப் படம்)
தோற்றுவிட்ட கனவுகள் தற்கொலைகளில் முடிகின்றன. இருப்பினும் கனவு காண்பதை இளையதலைமுறை நிறுத்தவில்லை. இன்று கனவு என்பது ஒரு கிராமத்து இளைஞனின் கையில் உள்ள தொடுதிரை கைபேசியில் இருக்கிறது. அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும், அவனது கையிலேயே இருக்கும் வாழ்க்கைக்கும் மிகப்பெரிய தொலைவு இருக்கிறது. தொடுதிரையில் தொட முடிந்ததை வாழ்க்கையில் தொடமுடிவதில்லை. இதுதான் எதார்த்தம்.
பேருந்திலும், ரயில்களிலும் எல்லோரும் குனிந்து கைபேசியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். “நாணும் குலமாதர் முகம் பார்த்ததில்லை, வீரர் விழி சாய்ந்து நிலம் பார்த்ததில்லை” என்பது ஒரு திரைப்படப் பாடல். இப்போது வீரர் சூரர் யாரும் குலமாதர் போலவே குனிந்த தலை நிமிர்வதில்லை. நிமிர்ந்து சமூகத்தை பார்க்க அவர்கள் விரும்பவில்லை. உங்கள் கனவு உங்கள் கையில்!
இந்த முகநூல், வாட்ஸ்அப் என எதுவாகினும், அவை ஏற்படுத்துகின்ற தனிநபர் வாதம், கண்ணோட்டம், ஆசை, விருப்பங்கள், ரசனை இவையெல்லாம் நான், எனது, என்னுடைய மகிழ்ச்சி என்று அதை நோக்கி மட்டுமே சிந்திக்க வைக்கின்றன. ராமசாமியைப் போன்ற தோழர்கள் தோற்றுப்போகும் இடம் இதுதான். வெளியே பல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் பஞ்சாலைகள் நிறைந்த இந்த கோவை மாநகரில் நின்று பேசுகிறோம். ஆலைத் தொழிலாளி என்றால் ஒரு கூரையின் கீழே பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள். அவர்களை இணைத்துக் கட்டக்கூடிய சங்கங்கள். அந்தச் சங்கங்களின் போராட்டங்கள் வாயிலாக அவர்களது பொருளாதாரத்தை, உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளக் கூடிய காலம் என்று ஒன்று இருந்தது.
விளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் உரையாற்றும் தோழர் மருதையன்.
இன்று நடப்பது என்ன? சங்கம் வைக்க முதலாளி அனுமதிக்கவில்லை என்பது ஒரு பிரச்சினை. சங்கத்தில் சேர தொழிலாளி விரும்புகிறாரா என்பது முக்கியமான பிரச்சினை. தொழிலாளிகள் காரியவாதிகள் ஆகிவிட்டார்களா, கெட்டுச் சீரழிந்துவிட்டார்களா? இல்லை. இன்று நிலைமை எப்படி மாறிக்கொண்டிருக்கிறது?
இங்கே பேசினார்கள். ஒரு தொழிலாளி முருகன் மில்லில் வேலைக்குச் சேர்ந்தார், 30 ஆண்டுகளுக்குப் பின்பு பணிஒய்வு பெற்றார் என்று சொன்னார்கள். அந்தக் கதை இனி கிடையாது. மில் தொழிலாளிகள் மட்டுமல்ல, பி.எஸ்.என்.எல்.-லில் பணிபுரிந்தார், பணிக்கொடைகளைப் பெற்று ஒய்வு பெற்றார் என்ற நிலைமையும் இனி இல்லை.
***
ஊபர் ஆட்டோ, கேப், ஊபர் ஈட்ஸ், சொமாட்டோ இதில் பணிபுரிபவர்கள் யார்? அவர்களை நிறுத்தி கேட்டுப் பாருங்கள். அவர்களில் 60 சதவீதத்தினர் இன்ஜினியரிங் படித்தவர்கள். ஏற்கெனவே ஐ.டி. அல்லது கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பலர். முனைவர் பட்டம் பெற்றவர்களெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் 15 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக விரிவுரையாளர்களாகப் பணிபுரிகின்றனர்.
வாழ்க்கை எப்படி மாறுகிறது? குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம், அதன்பிறகு கல்லூரிப் பருவம், அரசு வேலைவாய்ப்பு, திருமணம், பிறகு முதுமை, ஓய்வூதியம், மரணம். நாம் பார்த்திருந்த நவீன நகர்ப்புற வாழ்க்கை இப்படி இருந்தது. ஆனால், இன்றைக்கு 3 வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே வேலைக்குத் தயார்படுத்துகிறார்கள். இந்தப் படிப்பு சாகும் வரையில் முடிவதில்லை.
தனியார்மயம் உருவாக்கியிருக்கும் நவீன உதிரித் தொழிலாளர்கள் : இந்திய நகரங்களில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும் சொமாட்டோ பணியாளர்கள்.
நான் சில ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஜெர்மனியிலிருந்து வந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பணிபுரிந்த ஐ.டி. நிறுவனத்தில் அவருக்கு பிளம்பர் வேலையும் டாக்சி ஓட்டும் பணியும் கற்றுத் தருவதாக அவர் கூறினார். ஏன் இந்தப் பயிற்சியை அந்த நிறுவனம் இவர்களுக்கு அளிக்கிறது என்றால், இவர்களுக்குப் பணி உத்தரவாதம் கிடையாதாம். மாற்றுத் தொழிலை, அந்தந்த முதலாளிகளைக் கொண்டு கற்றுத்தர அரசு உதவி புரிகிறதாம்.
ஒரு பொறியாளர் பிளம்பர் வேலை செய்வாரா என நாம் சிந்தித்திருப்போமா? ஆனால், இன்று நாம் அதை கண்கூடாகப் பார்க்கிறோம். அமெரிக்காவில் 20 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் அவர்களுடைய வாழ்நாளில் சுமார் 20% நேரத்தை ஏதாவது புதிய தொழிலைக் கற்றுக்கொள்ள செலவழிக்கிறார்களாம்.
சங்கத்தில் ஏன் தொழிலாளர்கள் சேர்வதில்லை? தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள். சங்கம் வைத்தால் வேலையை விட்டு நீக்கிவிடுவார்கள் போன்ற அடக்குமுறைகள் ஒரு காரணம். இவை ஒருபுறம் இருந்தாலும், தான் இன்ன தொழில் செய்பவன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள இயலாத நிலையில், ஒன்றிலிருந்து மற்றொரு தொழில் என எல்லோரும் மிதந்து கொண்டிருக்கிறார்கள். காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்துக்கொண்டு போகப்படும் குப்பையைப் போன்ற நிலை. இப்படி இருப்பவர்களுக்கு தன்னுடைய சக தொழிலாளியின் மீது, அவன் துன்பங்களின் மீது எப்படி அனுதாபம் ஏற்படும்?
ஐ.டி. நிறுவனங்களைக் கூட நாம் எடுத்துக்கொள்ளலாம். ஐ.டி. நிறுவனங்களில் விப்ரோ, இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். என எதை எடுத்துக்கொண்டாலும் அங்கு இரண்டு விதிகள் உண்டு. ஒன்று உன்னுடைய சம்பளம், சம்பள உயர்வு என்ன என்பதை நீ பக்கத்தில் உள்ளவனுக்குச் சொல்லக்கூடாது. அடுத்து உன் சக ஊழியர் பணியை விட்டுத் துரத்தப்பட்டால், ஏன் அனுப்பினீர்கள் என்று கேட்கக்கூடாது. ஏன் இப்படி தீங்கு இழைத்தார்கள் என்று நான் கேட்டது நிர்வாகத்திற்குத் தெரிந்தால், எனக்கும் பணிப் பாதுகாப்பில்லாமல் ஆகிவிடும்.
பணியை இழந்தவர் தனக்குத் தகுதியில்லை என நினைப்பதற்கும், சக ஊழியர்கள் அவர் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்று கருதுவதற்கும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு படிப்பறிவற்ற தொழிலாளிக்கு இருக்கக்கூடிய அறிவும் உணர்வும், படித்த ஐ.டி. தொழிலாளிக்கு இல்லை. விலங்குகளைப் போலத் தன்னை மட்டும் தற்காத்துக்கொள்ளப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இந்த ஆட்டத்தின் நீதி இதுதான் எனப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
சாலையோரத் தள்ளுவண்டி உணவகங்கள்.
ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஜெர்மனியில் நடைபெற்ற சம்பவம் இது. ஹேம்பர்க் என்றொரு நகரத்தில் உள்ள பிரம்மாண்ட மால் ஒன்றிற்குள் தொழிலாளர்கள் நுழைகிறார்கள். தேவையான உணவுப் பொருட்களையெல்லாம் அள்ளி வண்டியில் போட்டுக்கொண்டு பில் போடும் இடத்துக்கு வருகிறார்கள். காசாளரான பெண்ணிடம் ஒரு சீட்டைக் கொடுக்கிறார்கள். அந்தச் சீட்டில், “நாங்கள் இந்த நகரத்தின் தொழிலாளர்கள். இந்த நகரத்தை உருவாக்கியவர்கள். இன்று நாங்கள் எங்களது தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியாத நிலையில் வைக்கப்பட்டிருக்கிறோம். அதனால் நாங்கள் உருவாக்கிய செல்வத்தை நாங்களே எடுத்துக்கொண்டு போகிறோம்” என எழுதப்பட்டிருந்தது.
போலீசு வருவதற்குள் இவர்கள் அந்த உணவுப் பண்டங்களை இவர்கள் வசிக்கும் ஹேம்பர்க் நகரத்தின் சேரிக்குச் சென்று விநியோகித்து விடுகிறார்கள். அதை வீடியோ எடுத்துப் பதிவேற்றியும் விடுகிறார்கள்.
உலகமயமாக்கலுக்குப் பின் திடீரென்று 150 கோடி தொழிலாளிகள் உலகின் உழைப்புச் சந்தைக்கு வருகிறார்கள். ஒரு அமெரிக்கத் தொழிலாளி வாங்கக்கூடிய ஊதியத்தில் 30-இல் ஒரு பங்கை வாங்கிக் கொண்டு, அந்தப் பணியை முடிக்க ஒரு இந்தியத் தொழிலாளி அல்லது சீனத் தொழிலாளி உலகச் சந்தையில் தயாராக உள்ளார். இது அங்கே ஒரு நிலைகுலைவை, வேலையின்மையை ஏற்படுத்துகிறது.
இத்தாலியில் பிராக்டோ என்றொரு நகரம். நெசவுத் தொழிலுக்கும் கைவினைத் தொழிலுக்கும் பெயர் போன நகரம். ஏற்றுமதி செய்துகொண்டிருந்த நகரம். 1990-இல் உலகமயமாக்கல் வந்த போது, சீனர்கள் கணிசமானோர் அங்கே தொழிலாளிகளாகக் குடியேறிக் குறைந்த கூலிக்கு வேலை செய்தனர். சிறிது காலத்திற்குள் நெசவுத்தொழில் சீனர்கள் கைக்கு மாறுகிறது. 1990 வரை பிராக்டோ நகர மக்கள் கம்யூனிஸ்ட்களுக்கே வாக்களித்து வந்தார்கள். அவர்கள் 90-களுக்குப் பிறகு பாசிஸ்டுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
“வெளிநாட்டிலிருந்து வந்த சீனத் தொழிலாளர்கள் என்ற புல்லுருவிகளை ஒழித்துக்கட்டுவேன்” என்று முழங்கிய பெர்லுஸ்கோனி என்ற பாசிஸ்டைத் தெரிவு செய்கிறார்கள். இப்படித்தான் ட்ரம்ப் வெற்றிபெற்றார், அமெரிக்காவில். வங்க தேசத்திலிருந்து வரும் கரையான்களை ஒழித்துக்கட்டுவேன் என அமித் ஷா பேசுவதை இங்கே நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
பயணக் கட்டண விகிதத்தை மாற்றியமைக்கக் கோரி ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்கள் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
வறுமை, வேலையின்மை பெருகும்போது சக உழைக்கும் மக்களை எதிரிகளாகக் காட்டி வன்முறையைத் தூண்டுகிறார்கள். நான் ஓட்டுநரா, பிளம்பரா, வியாபாரியா என்று எந்தக் குறிப்பான தொழிலோ அடையாளமோ இல்லாமல் தத்தளிப்பவர்களுக்கு, நீ ஒரு இந்து என்ற அடையாளத்தை வழங்குகிறார்கள். முஸ்லீம்களை ஒழித்தால்தான் தீர்வு என்கிறார்கள். நீ ஒரு தமிழன், டீக்கடையில் வேலைபார்க்கும் வட நாட்டுக்காரனை விரட்டினால்தான் உனக்கு வேலை என்பார்கள். இப்படித்தான் பாசிஸ்ட் இயக்கங்கள் மூளைச்சலவை செய்கின்றன.
இந்த மக்கள் மதவெறிக்கு ஆளாகி விட்டார்கள் என்று மட்டும் இதனைப்புரிந்து கொள்ளக் கூடாது. குஜராத்திலும், மும்பயிலும் வீதியில் இறங்கிக் கலகம் செய்பவர்கள் பார்ப்பன பனியாக்களா? இல்லை. இத்தகைய மக்களைத்தான் சக உழைக்கும் மக்களுக்கு எதிராக ஏவி விடுகிறார்கள். தொழிலாளி வர்க்கம், தன்னை விடுவிக்கக்கூடிய சங்கத்தில் சேராவிட்டால், தங்களுக்கு எதிரான பாசிஸ்டுகளால் தவிர்க்கவியலாமல் ஈர்க்கப்படுவர்.
தொழிலாளி வர்க்கத்தை விட முதலாளி வர்க்கம் என்றைக்கும் எண்ணிக்கையில் பெரியது அல்ல. ஆனால், அவர்களால் பெருவாரியான மக்களை எப்படி அடக்கியாள முடிகிறது? ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. “We have never been out numbered – we are out organised” எதிரிகள் ஒருபோதும் எண்ணிக்கையில் நம்மைத் தோற்கடித்ததில்லை. அமைப்பு ரீதியாகத் திரண்டு நிற்பதில்தான் நம்மைத் தோற்கடித்திருக்கிறார்கள்.
உலக முதலாளி வர்க்கம் அமைப்பாய்த் திரண்டு நின்று நம்மை முறியடிக்கிறான். ஆனால், நாம்? கூட்டுப் பேரம் பேசும் தொழிற்சங்க உரிமையையும் ஒழித்துத் தனித்தனியாகப் பிரித்து, நம் உழைப்பை விலை பேசவேண்டும் என்பதுதான் மோடி அரசு கூறும் லேபர் மார்க்கெட் டீ ரெகுலேஷன். 44 சட்டங்களை 4 வழிகாட்டும் கோட்பாடாக மாற்றுவது என்பது இதுதான். சம வேலைக்குச் சம ஊதியம் என்பதை ஒழித்து, பத்து ரூபாய் சேர்த்து வேண்டுமென்றால், அதை நீ தனியாகக் கேள், சங்கமாகச் சேர்ந்து கேட்கக் கூடாது என்கிறார்கள். இதில் முதலாளி வர்க்கத்தின் பொருளாதார ஆதாயம் மட்டும் இருப்பதாக நாம் புரிந்துகொள்ளக்கூடாது.
பிரிட்டனில் தனிமைத் துயரத்தை நீக்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் துறையின் அமைச்சர் ட்ரேஸி க்ரௌச்.
நாம் என்பதை உடைத்து நான் என மாற்றினால் என்ன நடக்கும்? விரக்தி, இயலாமை, மனச்சோர்வுஆகியவைதான் இதன் விளைவுகள். இன்றைக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலே 20-60 வயது வரை உள்ளவர்களில் 27% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. தொழிற்சங்கங்கள் இல்லாத இடங்களில்தான் தொழிலாளிகள் மனநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஒரு ஆய்வு உள்ளது.
2018-ம் ஆண்டு முதல் பிரிட்டனில் புதிதாக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தனிமைத் துன்பத்தை அகற்றுவதற்கான அமைச்சர் (Minister for Loneliness). இது முதலாளித்துவ சமூகத்தின் நிலை குறித்த விளக்கம்.
ஆகவே, தொழிலாளி வர்க்கத்திற்கு இருக்கின்ற ஒரே ஆயுதம் அமைப்பு. அது தொழிற்சங்கம் மட்டுமல்ல, தொழிலாளி வர்க்கத்துக்கான கட்சி. அது எப்படிப்பட்ட கட்சியாக இருக்கவேண்டும், அந்தக் கட்சியின் கீழ் திரளுகின்ற தொழிலாளி வர்க்கம் என்ன கோரிக்கைக்காகப் போராட வேண்டும் என்ற பார்வையைத்தான் என்ன செய்ய வேண்டும் என்ற நூலிலும், ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூலிலும் லெனின் கொடுக்கிறார்.
***
1980-ல் கிழக்கு ஐரோப்பிய, ரசிய வீழ்ச்சிக்குப் பிறகு கம்யூனிசம் வீழ்ந்துவிட்டது. இனிமேல் அப்படியொரு கட்சி உருவாக முடியாது என்று மீண்டும் மீண்டும் அவநம்பிக்கையை விதைக்கிறார்கள்.
நமது நாட்டில் 1969 நக்சல்பாரி எழுச்சியை ஒட்டி எண்ணற்ற மாணவர்களும், இளைஞர்களும் தங்களைக் கட்சியோடு இணைத்துக்கொண்டு கல்வியை இழப்பதற்கும், வேலையை இழப்பதற்கும் உயிரை இழப்பதற்கும் தயங்காமல் முன்வந்தார்களே, அது இன்றைக்கு நடக்குமா?
பொது நலனுக்காக ஒரு இழப்பையோ, மாற்றத்தையோ ஏற்றுக்கொள்ளத் தயாராகயில்லாத நாம், இன்ஜினியர், ஓட்டுனர், சுயதொழில் என முதலாளித்துவத்தால் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குக் குப்பையைப் போல் விசிறி எறியப்படும்போது மாறிக்கொள்கிறோம். ஆனால், சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் இழப்பை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இருப்பதில்லை.
தோழர் விளவை ராமசாமி இழப்பதற்குத் தயாராக இருந்தார். வேலை போனால் பரவாயில்லை. மகன் கைதானால் பரவாயில்லை. அவற்றை எதிர்கொள்வோம் என்று கருதினார். தோற்றாலும் கவுரவமாகத் தோற்கவேண்டும் என்று அவர் கூறுவாரென ஒரு தோழர் இங்கே குறிப்பிட்டார். கவுரவமான என்ற உரிச்சொல் ஒரு மனிதனின் விழுமியத்திலிருந்து வருகிறது. தோற்கிறோமா, வெல்கிறோமா என்பதல்ல பிரச்சினை. நாம் எப்படி வாழவேண்டும் என்பது குறித்த விழுமியம் அது.
***
இன்று நாம் என்ன மாதிரியான அரசியல், சமூகச் சூழலில், வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம், வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் உரிமங்கள், எட்டுவழிச் சாலைக்கு நிலப்பறிப்பு – இதையெல்லாம் செய்வது யார்? மக்களின் வாழ்வாதாரத்தையும், சூழலையும் பாதுகாப்போம் என உறுதியேற்றுக்கொண்ட அரசுதான் இவற்றையெல்லாம் செய்கின்றது.
பூமிக்கடியிலும், கடலுக்கடியிலும், ஆர்ட்டிக் பகுதியிலும் இருக்கும் கனிமவளங்களை எல்லாம் கொள்ளையடிக்க உலகு தழுவிய அளவில் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்த உலக முதலாளித்துவத்தின் தாக்குதல் என்பது தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. மனித குலமே வாழமுடியுமா என்ற கேள்வி இன்று எழுந்திருக்கிறது.
தூத்துக்குடியில் ஒரு இலட்சம் பேர் தடைகளை மீறி திரண்டு வந்த காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளிகள், வேன் ஓட்டுபவர்கள், மூட்டை தூக்குபவர்கள் இப்படிப் பல்வேறு பிரிவு மக்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இலட்சக்கணக்கில் ஏன் திரண்டு வந்தார்கள்? ஒரே காரணம், அங்கே யாரும் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.
காற்று, நிலம், நீர் அனைத்தும் நஞ்சாகிவிட்டன. தூத்துக்குடியை விட்டு எங்கே ஓடுவது? அப்படி ஒரு நிலை ஏற்படும்பொழுது தங்கள் உயிரைத் துரும்பாக மதித்து மக்கள் போராடுவதற்குத் தயாராகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு நாடும் உலகமும் சென்று கொண்டிருக்கின்றன.
அதனால்தான் எதிர்த்துப் போராடும் உழைக்கும் வர்க்கத்திற்குச் சோர்வூட்டுவதற்கு அவர்கள் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். கார்ல் மார்க்ஸின் மருமகன் பால்லபார்க், தன்னைச் சந்திக்க வந்த லெனினிடம் ஐரோப்பிய புரட்சி குறித்த தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். விரக்தி பரவியிருந்த இந்தக் காலத்திற்குப் பிறகுதான் 1917- ரசிய சோசலிசப் புரட்சி நடக்கிறது.
இது ஒரு சவாலான காலம். இந்தச் சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் சொந்த முறையிலேயே சிந்தித்துப் பாருங்கள். இந்த உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதை நினைவூட்டுகிறேன். ஒரே நேரத்தில் 5 அடையாளங்களுடன், 6 அடையாளங்களுடன், ஆறு தொழில்களுடன் நேற்று இந்த வேலை, நாளை அந்த வேலை, நாளை மறுநாள் இன்னொரு வேலை என்று மிதந்து கொண்டு இருக்கின்ற ஒரு உழைப்பாளியை எப்படிச் சங்கமாக சேர்ப்பது?
பாதி நாள் வேலை இருக்கிறது. பாதி நாள் வேலை இல்லை என்று அரை வேலைவாய்ப்புடன் இருக்கின்ற எண்ணற்ற மக்களை, “தண்ணீர் வந்தால் விவசாயி; தண்ணீர் வரவில்லை என்றால் தொழிலாளி” என்று நகரத்திற்கு ஓடுகின்ற ஒரு மனிதனை எப்படி அமைப்பாக்குவது?
காவி பாசிஸ்டுகளை முறியடிப்பது என்பது காவி அரசியலை எதிர்த்து பேசுவதனால் மட்டும் நடந்து விடுவது அல்ல. அதுவும் தேவை. தொழிலாளி வர்க்கத்தை உழைக்கும் வர்க்கத்தை இந்த வகையில் அணி சேர்ப்பதும் தேவை.
விளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் அவருக்குச் செவ்வணக்கம் செலுத்தும் தோழர்கள்.
தோழர் விளவை ராமசாமி தொண்ணூறுகளில் புரட்சிகர அரசியலுக்கு வந்தார். முப்பது ஆண்டுகளில் மறைந்து விட்டார். அவர் மறைகின்ற காலத்திலேயே புதிய தாராளவாதக் கொள்கையின் தீமைகள் தலைவிரித்து ஆடத் தொடங்கிவிட்டன. இன்றைக்குப் பள்ளிச் சிறுவர்களாக, கல்லூரி மாணவர்களாக இருக்கின்றவர்களுடைய எதிர்காலத்தை எண்ணும்போது கவலை ஏற்படுகிறது.
தண்ணீர் எங்கிருந்து வரும்? தெரியவில்லை. வேலை எங்கிருந்து வரும்? தெரியவில்லை. அவர்களுக்கு இதைப் புரியவைக்க வேண்டியிருக்கிறது. நம்முடைய கல்விமுறை என்பது ஏற்கனவே இருந்த அளவிற்குக்கூடச் சமூக உணர்வு இல்லாத அளவிற்கு, இருந்த சமூக உணர்வையும் அழிக்கின்ற அளவிற்குப் பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இளைஞர்கள், மாணவர்கள் மாற்றப்படுகிறார்கள்.
அதில் நமக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அவர்களுக்கு இந்தச் சமூக உணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு இருக்கிறது. ஆகவே தோழர் விளவை ராமசாமி பழுத்த இலையாக இந்த மண்ணிலே உதிர்ந்தார். அவரை உரமாகப் பருகி வளரக்கூடிய புரட்சியாளர்களை உருவாக்குவதற்கு, இந்த அரசியல் கண்ணோட்டத்தை எடுத்துச் செல்வோம். நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய பண்புகளை எடுத்துச் சொல்வோம். நாமும் மாறிக் கொள்வோம். நன்றி.
– மருதையன்
(தோழர் விளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் சுருக்கம்)
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
இனி, ஒரு சமயத்து ஒரு பார்ப்பனப் பெரியவர், “Hospitality” என்பதற்குத் தமிழில் சொல் இல்லை . எனவே “Hospitality”தமிழர்கட்கு இருந்ததே கிடையாது என்றார். நான் உடனே அவரைப் பார்த்து, “நீர் தமிழைப் படித்ததுண்டா ? ‘வேளாண்மை’ என்ற சொல்லையாவது கேள்விப்பட்டிருக்கின்றீரா?’’ என்று கடாவினேன். அவர் விழித்தார். ”தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள்) என்றபடி பிறருக்கு உபகாரமாகும் பொருட்டே வாழ்பவன் தமிழன், துறவு என்பதென்ன? ஒரு குடும்பத்தில் மட்டும் அன்பு செலுத்தியவன், உலகத்தை ஒரு குடும்பமாக நினைத்து எல்லோரிடத்தும் அன்பு செலுத்துவதாகும். இதுதான் உண்மைத் துறவியின் கடமை. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் தமிழன். ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் உண்மையான். இவ்வுலகம் உண்டு’’ என்று கூறிப் போந்தார் தமிழ்ப்புலவர் ஒருவர்.
காதல் என்றால், உடல் அதாவது புலன் இன்பத்தில் தமிழர்கள் மூழ்கவில்லை. அன்று தமிழர்களிடத்தில் கொக்கோகம் கிடையாது. கேவலம் மெய் உணர்ச்சியை மட்டும் தமிழன் விரும்பவில்லை. ஒரு மொழியில் அமைந்து கிடக்கும் சொற்களை யாரும் மாற்ற முடியாது . Warm Reception என்று ஆங்கிலர் சொன்னால், நாம் Cool Reception என்றுதான் கூற வேண்டும்.
பல மொழிகளிலும் இல்லாத ஒரு சிறப்பு தனிச் சிறப்பு – தமிழுக்குண்டு. உயர்திணை என்ற பிரிவுக் கொள்கை, தமிழில்தான் உண்டு. திணையென்றால் ஒழுக்கம் ஆகும். திணைக்கு இடம் எனப் பொருள் கூறுவர் அறிவில்லாதவர்கள். அகவொழுக்கம் புறவொழுக்கம் என்பதே அகத்திணை புறத்திணையாகும். ஒழுக்கம் என்பது மிகவும் கடினமானது. விருப்பம் செல்லும் வழி செல்லாமையே ஒழுக்கமாகும். அதாவது ஆள்வினை உடைமையாகும். விருப்பத்தைத் தணித்து அறிவால் ஆளுவது திட்டம்; திண்மை என்றும் கூறலாம். எனவே திண்மை பற்றித் திணை வந்ததோ என அனுமானிக்கின்றேன்.
நிற்க; ஆரியம் போன்ற மொழிகளில் பெண்ணைக் குறிக்கவரும் ஒவ்வொரு சொல்லும் ஒரு பாலைக் குறிக்கும். தமிழில் அப்படியில்லை. ஏன்? பொருள் அர்த்தம் பற்றிப் பெயர் வைப்பது தமிழ்முறை. ஆறறிவுடைமையால் மனிதன் உயர்ந்தவன். எனவே, உயர்திணையென்பது தவறு. பின்னும், ‘பேசும் திறமை மனிதனுக்கு மட்டுந்தான் உண்டு. ஆதலின் மனிதனை உயர்திணை’ என்றார் தோழர் இரா. இராகவய்யங்கார். இதையும் நான் மறுக்கிறேன். நாம் மட்டுந்தான் பேசுகிறோமா? எறும்பு கூடத்தான் பேசுகிறது. நமக்குப் புரியாமையால், அவை பேசவில்லை என்று கூறிவிட முடியுமா?
எனவே, ஒழுக்கமுடைமைதான் மனிதனை உயர்த்துகின்றது. விரும்புகிறபடி போகாமல் அறிவால் மனதை ஒரு வழி நிறுத்தலே ஒழுக்கமுடைமை. இது மக்களுக்குத்தான் உண்டு. எனவே, உயர்ந்த ஒழுக்கத்தை உடையது உயர்திணையாயிற்று. அஃறிணையென்றால், இழிந்த திணையில்லை; திணையில்லாதது. (ஒழுக்கமற்றது என்று பொருள்) அல்-திணை அஃறிணையாகும்.
ஆனால் ஒருவன், மக்கள் தேவர், நரகர் உயர்திணை என்றான். தொல்காப்பியரோ ‘உயர்திணையென்மனார் மக்கட் சுட்டே’ என்றார். ஒழுக்கத்தை உடைய மக்களெல்லாம் உயர்திணை. அல்லாதது மக்களேயாயினும் அஃறிணையின்பாற் சேர்க்கப்பட வேண்டியவரே, “மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரை யாம் கண்டதில்” (குறள்) என்றவிடத்து, ஒழுக்க உணர்ச்சி இல்லாதவர்களைக் கயவர் என்கிறார். மேலும், “தேவரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுகலான்” என்றவிடத்து, இருவருக்கும் ஒழுக்கமென்பதே கிடையாது; மனம் போன போக்கில் போகின்றவர்கள் என்கிறார். இந்தத் தேவனை ஒரு மடையன் உயர்திணை என்கிறான். எனவே, தொன்று தொட்டுத் தமிழன் ஒழுக்கத்தை விடாதவன். ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்பது தமிழன் கொள்கை. எவ்வழி நோக்கினும், ஆரிய நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றிற்கொன்று மாறுபட்டது.
தமிழன், அறம் வேறு இன்பம் வேறு என நினைப்பவனல்லன். இருவர், காதலால் அறத்தைக் கைப்பிடித்து இன்பத்துடன் வாழ்பவர் தமிழர்.
மாடமாளிகை மண்மேடாகி விட்டது; மதி கெட்டதால் நமது நிதி கெட்டது ; கதி கெட்டது. சதிகாரர் விட்ட சரங்கள் நமது உயிரைத் துடைத்திடக் காண்கிறோம். என்னே நம் நிலை! ஏனோ இன்னமும் நம்மவருக்குத் தெரியவில்லை ஆரியத்தின் வலை!
சரித ஆதாரங்களையும் சான்றோர் மொழிகளையும் சிந்தையுட்கொண்டு, சீரிய முறையிலே சுயமரியாதை உணர்வுடன் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டு, சொந்த விருப்பு வெறுப்புகளை மாற்றிச் சோர்வின்றிப் பணிபுரிவோருக்கு, நிச்சயமாக ஆரிய மாயையிலிருந்து தாம் விலகவும், பிறரை விலகச் செய்யவும் வழி பிறந்தே தீரும். அனைவரும் ஒன்று என்று அழகாகக் கூறிவிட்டு, அடிமைகளாக நம்மை ஆக்கி வைத்திடுவது ஆரியம். அரசர்களை ஆண்டிகளாக்கியதும், ஆடு, மாடுகளுடன் வந்தோருக்கு வீடு வாசல் தந்து மற்றவருக்குக் கேடு செய்யும் மூட மதியினைப் பீடமேற்றியதும், ஆரியம், கற்பனையை ஊட்டிக் கருத்திலே துலங்கும் அறிவினை ஒட்டிப் பழங்குடி மக்களை வாட்டிப் பார்ப்பனீயம் எனும் பொறியிலே தமிழரை மாட்டியது ஆரியம். அந்த ஆரியம் தேவனைச் சாட்சிக்கு இழுக்கும்! மந்திரம் கூறி மக்களை மிரட்டும்! மகாதேவன் கட்டளை எனக் கூறி மயக்கும்! மட்டற்ற மடமைத்தனத்திலே மக்களை அழுந்தச் செய்து களிக்கும்! விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே! தோள் தட்டி மார்தட்டி, வாழ்ந்த மறத்தமிழனை இன்று வயிறொட்டிக் கன்னத்தே குழிதட்டிப் பட்டினியில் வாழும் பாமரானாக்கியதும் ஆரியமே! அபினைக் கொடுத்து உடலைக் கெடுத்துப் பின்னர் அவ்வபின் கிடைக்காவிட்டால் எதைக் கொடுத்தேனும் அதே அபினைப் பெற்றே தீர வேண்டிய கேவலமான நிலைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் போல், ஆரியம் பையப் பையத் தன் நஞ்சினை ஊட்டித் தமிழனைச் செயலற்றவனாக்கி விட்டது. ஆரியக்கலை தமிழ் இனப்பண்பை அழித்தது.
ஆரியம் வேறு தமிழ் வேறு என்பதற்கு இச்சிறு நூலிலே ஆராய்ச்சியாளர்களின் மொழிகளைத் தந்துள்ளேன். ஆரியத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய குறிப்பும் பொறித்துள்ளேன். இது ஒரு பழம் பெருமை வாய்ந்த இனம். வேற்று இனத்தின் வெள்ளாட்டியாகிக் கிடப்பது சரியா? தமிழ் இன வீரர்களே! தன்மானத் தீரர்களே! வலிவில்லாதவன் வலிமையுள்ளவனை அடக்கிய விந்தையைப் பாரீர்! இந்தக் கேவல நிலையை மாற்றி அமைப்பதையே உமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு பணிபுரிய முன் வாரீர் என்று அழைக்கிறேன்.
நமது தமிழகம்! முல்லைக்காடு இன்று முட்புதராகிக் கிடக்கிறது! மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும். ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம் மக்கள் விடுபடுவர்! ஆண்மை பெறுவர்! உலகின் அணியாவர்!
ஆரியராவது திராவிடராவது என்று பேசிடும் அறிவிலிகளானாலும் சரியே. ஆரியரை என்ன செய்ய முடியும் என்றுரைத்திடும் ஆணவக்காரராயினும் சரியே, ஆவது ஒன்றும் இல்லை நம்மால் என்று பேசிடும் ஆண்மையற்ற வராயினுஞ் சரியே, ஆரிய மாயையின் ஆதிநாள் வரலாறு பற்றியும், வளர்ச்சி பற்றியும் வரையப்பட்டுள்ள அறிவுரைகட்கு, நேரிய முறையிலே சீரிய பதிலுரைக்க முன் வருவாரா என்று கேட்கிறேன். மற்றவரின் மனப்போக்குப் பற்றித் தமிழ் இளைஞர்கள் உங்கட்குக் கவலை வேண்டாம். ஆரியத்தைக் குறித்து இங்கு திரட்டித் தொகுத்துத் தரப்பட்டுள்ள விஷயங்களைச் சற்றே பொறுமையுடன், அக்கறையுடன் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாருங்கள். வீழ்ச்சியுற்ற இனத்தினைக் காப்பாற்ற வீறு கொண்ட இளைஞர்களே தேவை. விலா ஒடிந்த வீணரல்ல!
இணையில்லாத வீரத்துடன் வாழ்ந்து வந்த இனத்திலுள்ள வீரர்களே! எடுப்பார் கைப்பிள்ளையாய் இருக்கலாமா? இமயத்திலே புலிக்கொடி பொறித்த கரிகாலன் வழி வந்த நாம் இதயத்திலே சூதே நிரம்பிய ஆரியத்திடம் அடிபணிவது கேட்டால் உலகு நகையாதோ? சேரன் புகழ், கனக விசயரின் சென்னியிலே சூடேற்றியதாம். அலைகளை ஆலவட்டமாகக் கொண்டு, மரக்கலத்தை ஆட்சி பீடமாகக் கொண்டு, அஞ்சா நெஞ்சுடன் அரசோச்சிய இராசேந்திரனின் பெயரைக் கூறவும் உரிமை இல்லாதவரானோம்! ஊமைகளானோம், குருடரானோம், அடிமையானோம்! பொன் ஒரு புறமும், மணி மற்றொரு புறமும் திகழப் பூங்காவிலே தூங்கா விளக்கென ஒளிவிடு கண்களுடன் ஓடி விளையாடிய குமரிகள், மணி என விளங்கினராம் இங்கு! வீரரின் வேலின் ஒளியும், வேல் விழியாரின் புன்னகைப் பாணமும் ஒன்றையொன்று எதிர்த் திடும் மாடசியினைத் திறம்பட உரைத்திடும் நாவலர் நடமாடிய நாட்டிலே, இன்று சோறு இல்லை. சோறு இல்லை என்று அழும் வேதனை வெண்பாவே மிகுந்திடக் காண்கிறோம். மாடமாளிகை மண்மேடாகி விட்டது; மதி கெட்டதால் நமது நிதி கெட்டது ; கதி கெட்டது. சதிகாரர் விட்ட சரங்கள் நமது உயிரைத் துடைத்திடக் காண்கிறோம். என்னே நம் நிலை! ஏனோ இன்னமும் நம்மவருக்குத் தெரியவில்லை ஆரியத்தின் வலை!
நமது தமிழகம்! முல்லைக்காடு இன்று முட்புதராகிக் கிடக்கிறது! மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும். ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம் மக்கள் விடுபடுவர்! ஆண்மை பெறுவர்! உலகின் அணியாவர்! ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிஞர்கள் தந்துள்ள அரிய உண்மைகளைக் காண்மின்! பிறருக்குக் கூறுமின்! அறப்போர் தொடுமின்! வெற்றி நமதே!
முற்றும்.
அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.
ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.
உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 13-அ
அன்று இரவு அலெக்ஸேய் நிம்மதி இன்றி உறங்கினான். ஒரு தரம் வெண்பனிக் குவைகள் நிறைந்து கிடந்த விமானத்திடலும் பழக்கமற்ற அமைப்பு உள்ள “லா-5” ரக விமானமும் அவனுக்குக் கனவில் தோன்றின. இந்த விமானத்தின் இறங்கு சக்கரங்களுக்குப் பதில் பறவைக் கால்கள் அமைந்திருந்தன. விமானி அறைக்குள் ஏறி வந்தான் டெக்னீஷியன் யூரா. “அலெக்ஸேய் பறந்து தீர்த்துவிட்டான்” என்றும் இப்போது பறக்கும் முறை தன்னுடையது என்றும் ஏறி வந்ததுமே சொன்னான் அவன். மறுதரம் அலெக்ஸேயின் கனவில் தோன்றினார் மிஹாய்லா தாத்தா, வெள்ளைச் சட்டையும் ஈரக் கால் சட்டையும் அணிந்து, வைக்கோல் மேல் அலெக்ஸேய்க்கு வெந்நீர் ஸ்நானம் செய்வித்தவாறு, “கலியாணத்துக்கு முன் வெந்நீரில் குளிப்பது நல்லது” என்று கூறி இடைவிடாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.
பிறகு, விடியும் தறுவாயில் கனவில் தென்பட்டாள் ஒல்கா. வெயிலில் பழுப்பேறிய வலிய கால்களை நீரில் தொங்கவிட்டபடி லாவகமுள்ள கொடி போன்ற மேனி முழுவதும் ஏதோ சுடர் வீச, கவிழ்ந்த படகின்மேல் அமர்ந்திருந்தாள். வெயில் படாதவாறு உள்ளங்கையால் மறைத்தவாறு சிரித்துக்கொண்டே அவள் அவனைத் தன்னருகே வரும்படி சைகையால் அழைப்பது போல இருந்தது. அவன் அவள் பக்கம் நீந்திச் சென்றான். ஆனால் விசையும் கொந்தளிப்பும் உள்ள நீரோட்டம் அவனைக் கரையிலிருந்து, அவளிடமிருந்து பின்னே இழுத்துப் போயிற்று. கைகளையும் கால்களையும் எல்லாத் தசைகளையும் தீவிரமாக அசைத்து அடித்து அவன் நீந்தி அவளை மேலும் மேலும் நெருங்கினான். காற்று அவளுடைய மயிர்க் கற்றைகளை அலையடிக்கச் செய்வதும் அவளுடைய பழுப்பேறிய கால் தோல் மீது பளிச்சிடுவதும் ஏற்கனவே அவனுக்குத் தென்படலாயின….
ஆனால் அந்தச் சமயத்தில் அவன் விழித்துக் கொண்டான். அவன் உள்ளம் களி பொங்கியது, ஒளி வீசியது. உறக்கம் கலைந்த பிறகும் படுத்தவாறு மறுபடி உறங்கவும் இந்த இன்பக் கனவைத் தொடர்ந்து காணவும் முயன்றான். ஆனால் பிள்ளைப் பருவத்தில்தான் இவ்வாறு செய்வது இயலும். கனவில் தோன்றிய ஒடிசலான, பழுப்பேறிய நங்கையின் உருவம் சட்டென எல்லாவற்றையும் ஒளிமயமாக்கியது. எண்ணி எண்ணி ஏங்காமல், சோர்வு அடையாமல், ஓல்காவை எதிர் கொண்டு நீந்திச் செல்ல வேண்டும், நீரோட்டத்துக்கு எதிராக நீந்த வேண்டும், நீந்தி முன்னேற வேண்டும், என்ன விலை செலுத்த நேரினும் சரியே, வலிமையை எல்லாம் ஈடுபடுத்தி நீந்திக் குறிக்கோளை அடைய வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டான். ஆனால் கடிதம்? கடிதம் தன்பாட்டில் போகட்டும். உண்மைக் காதலை இத்தகைய கடிதம் அச்சுறுத்திப் போக்கிவிடாது.
காலையில் கவைக்கோல்கள் இல்லாமல் நடந்து பார்த்தான். பதபாகமாகக் கட்டிலிலிருந்து இறங்கினான். நின்றான். கால்களை அகற்றி வைத்து, சமனிலை வருவிப்பதற்காகக் கைகளை இரு புறமும் நீட்டியவாறு சற்று நின்றான். அப்புறம் கைகளால் சுவற்றைப் பிடித்துக் கொண்டு ஓர் அடி எடுத்து வைத்தான். பொய்க்கால் தோல் கறுமுறுத்தது. உடல் ஒருபக்கமாகச் சாய்ந்தது, ஆனால் அவன் கைவீச்சால் அதைச் சமப்படுத்திக் கொண்டான். சுவற்றிலிருந்து கையை அகற்றாமல் இன்னொரு அடி எடுத்து வைத்தான். நடப்பது இவ்வளவு கடினமானது என்று அவன் ஒருபோதும் எண்ணியதில்லை. மூன்றாவது அடி வைப்பின்போது உடல் ஒருபுறம் சாய்ந்து கால் புரண்டு விடவே தொபுகடீர் என்று தரையில் குப்புற விழுந்துவிட்டான்.
வார்டுக்காரர்கள் சிகிச்சை அறைக்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கும் நேரத்தை அவன் தன் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். எவரையும் உதவிக்கு அழைக்காமல் சுவரோரமாய் ஊர்ந்துபோய், அதை ஆதரவாகப் பற்றிக் கொண்டு மெதுவாக எழுந்து நின்று அடிபட்ட விலாவைத் தொட்டுப் பார்த்தான், முழங்கையில் கன்றியிருந்த தழும்பை நோக்கினான். இந்தத் தழும்பு சிவப்பாகத் தொடங்கியிருந்தது. சுவரிலிருந்து விலகி, பற்களை இறுகக் கடித்துக் கொண்டு மீண்டும் ஓர் அடி முன்னே எடுத்து வைத்தான். இப்போது அவன் இதன் மர்மத்தைப் புரிந்து கொண்டுவிட்டான் போலும். சாதாரணக் கால்களுக்கும் அவனுடைய செயற்கைக் கால்களுக்கும் இருந்த வேறுபாடு இவற்றில் மீள் விசை இல்லாதது தான். இவற்றின் இயல்பை அவன் அறியவில்லை. நடக்கும்போது கால்களின் நிலையை மாற்றிக் கொள்ளவும், அடி எடுத்து வைக்கையில் உடற் சுமையைக் குதிகாலிலிருந்து உள்ளங்காலுக்குக் கொண்டு வரவும் மறுபடி உடற்சுமையை அடுத்த குதிகால் மீது வைக்கவும் தேவையான பழக்கத்தை, தனிவகை மறுவினையை அவன் பயிற்சியால் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. உள்ளங்கால்களை ஒருபோக்காக இன்றி, சிறிது சாய்வாக, நுனிகளை அகற்றி வைப்பதால் நடக்கையில் அதிக நிலையுறுதி ஏற்படும் என்பதையும் அவன் அறியவில்லை.
குழந்தை தனது தாயின் கண்காணிப்பில் குட்டையும் மென்மையுமான கால்களால் தத்தக்கபித்தக்கவென்று முதல் அடிகளை எடுத்துவைக்கும் பொழுது இந்தப் பழக்கங்கள் எல்லாம் அவனுக்கு ஏற்பட்டு விடுகின்றன. இந்தப் பழக்கங்கள் வாழ்நாள் முழுவதும் நிலையாக வேரூன்றிவிடுகின்றன, இயற்கைத் தூண்டல் ஆகி விடுகின்றன. மனிதன் பொய்க்கால்கள் அணிந்து கொண்டு, அவனது உடலின் இயல்பான ஒப்புநிலைமைகள் மாறியதும் குழந்தைப் பிராயத்திலிருந்து பெறப்பட்ட இந்தத் தூண்டல் நடைக்கு உதவியாக இருப்பதற்குப் பதில் இடைஞ்சல் ஆகி விடுகிறது. புதிய பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு இந்தத் தூண்டலை எப்போதும் அடக்கிவைத்திருப்பது அவசியம் ஆகிறது. கால்களை இழந்த சித்த வலிமை அற்ற பல மனிதர்கள், குழந்தைப் பருவத்தில் நமக்கு அவ்வளவு சுலபமாகக் கைவரும் நடைக்கலையை முதுமைவரையில் மீண்டும் பெற இயலாதவர்களாக இருக்கிறார்கள்.
மெரேஸ்யெவ் தன் குறிக்கோளை அடைய வல்லமை கொண்டிருந்தான். தன் தவறுகளைக் கருத்தில் கொண்டு அவன் மறுபடி சுவற்றிலிருந்து விலகி, செயற்கைக் கால் நுனியை ஒருபுறம் திருப்பி குதிங்காலை ஊன்றி நின்றான். பிறகு உடல் கனத்தை நுனிக்குக் கொண்டுவந்தான். பொய்க்கால் சினத்துடன் கிரீச்சிட்டது. கனம் நுனிமீது சார்ந்த கணத்தில் அலெக்ஸேய் மறுகாலைச் சட்டெனத் தரையிலிருந்து எடுத்து முன்னே வைத்தான். குதிகால் தொப்பென்று தரையில் அடித்தது. கைகளால் நிலையைச் சமப்படுத்தியவாறு இப்போது அவன் அறை நடுவே நின்றான். அடுத்த அடியை எடுத்து வைப்பது பற்றித் தயங்கியபடி ஓயாமல் சமனிலையை இழந்து தள்ளாடுவதும் கைகளால் நிலையைச் சமப்படுத்துவதுமாக நின்றான். மூக்குத் தண்டில் சில்லென்ற வியர்வை அரும்பியதை உணர்ந்தான்.
இந்தக் கோலத்தில்தான் வஸீலிய் வஸீலியெவிச் அவனைக் கண்டார். கதவருகே நின்று மெரேஸ்யெவைச் சற்று நேரம் கவனித்துக் கொண்டிருந்துவிட்டு அருகே வந்து கக்கத்துக்கு அடியில் கைகொடுத்துத் தாங்கிக் கொண்டார்.
“சபாஷ், ஊர்வான்! தாதியோ, மருத்துவ ஊழியனோ இல்லாமல் தனியாக ஏன் பாடுபடுகிறாய்? மனிதனுடைய ஆணவத்தைப் பார்… பரவாயில்லை. எந்தக் காரியத்திலும் முதல் அடி வைப்பதுதான் முக்கியமானது. எல்லாவற்றிற்கும் கடினமானதைச் செய்துவிட்டாய்” என்றார்.
“நீங்கள் எல்லோரும் போங்கள் உங்கள் காரியத்தைப் பார்த்துக்கொண்டு. இது சர்க்கஸ் அல்ல, வேடிக்கை பார்ப்பதற்கு. நான் இல்லாமலே வார்டுகளைச் சுற்றிப் பார்த்து முடியுங்கள்” என்று உடன் வந்தவர்களை அதட்டி அனுப்பி விட்டு, “எங்கே, மெரேஸ்யெவ், சேர்ந்து பயிலுவோம் வாருங்கள். வாருங்கள் தம்பீ, ஒன்று… என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள், இதில் என்ன கூச்சம்? பிடித்துக்கொள்ளுங்கள், நான் ஜெனரல், என் சொல்லுக்குக் கீழ்ப்படிய வேண்டும் நீங்கள். ஊம், இரண்டு, அப்படித் தான். இப்போது வலது கால் சபாஷ். இடது. அருமை!” என்று மெரேஸ்யெவை உற்சாகப்படுத்தினார்.
மனிதனுக்கு நடக்கப் பயிற்சி அளித்ததன் மூலம் ஏதோ மகத்தான மருத்துவச் சோதனையை நிறைவேற்றிவிட்டவர் போல மகிழ்ச்சியுடன் கைகளைத் தேய்த்துக் கொண்டார் அந்தப் புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானி. ஆனால் அவரது சுபாவத்தின் தன்மையே அப்படி; எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் தன்னை மறந்து ஒன்றிவிடுவார்; தமது ஆற்றல்மிக்க பெரிய உள்ளம் அனைத்தையும் அதில் ஈடுபடுத்திவிடுவார். வார்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை மெரேஸ்யெவை அவர் நடக்க வைத்தார். களைத்து சோர்ந்து போய் அவன் நாற்காலியில் சாய்ந்ததும் ஒரு நாற்காலியை அவனருகே இழுத்துத் தாமும் உட்கார்ந்து கொண்டார்.
“ஊம், விமானம் ஓட்டப் போகிறாய் அல்லவா? ஆம், ஆம். அப்பனே, இப்போதைய யுத்தம் அப்படிப்பட்டது. கை பிய்ந்து போனவர்கள் தாக்குதலுக்குத் தலைமை வகித்து படைப் பகுதியை நடத்திச் செல்கிறார்கள். மரணக் காயம்பட்டவர்கள் மெஷின்கன்களைத் தங்கள் மார்பினால் அடைக்கிறார்கள்…. ஆம், இறந்தவர்கள் மட்டுமே சண்டை செய்வதில்லை…” இவ்வாறு சொல்லுகையில் கிழவரின் முகத்தில் நிழல் படர்ந்தது, அவர் பெருமூச்செறிந்தார். “அவர்களுங்கூடத் தாம் போரிடுகிறார்கள், தங்கள் புகழினால். ஆம்… நல்லது, மறுபடி தொடங்குவோம், தம்பி” என்றார்.
இரண்டாவது முறை வார்டைச் சுற்றி வந்த பிறகு மெரேஸ்யெவ் இளைப்பாறுகையில் தலைமை மருத்துவர் க்யோஸ்தியேவின் கட்டிலைத் திடீரெனச் சுட்டிக் காட்டினார்.
“இந்த டாங்கி வீரன் எப்படி? சொஸ்தமாகி வெளியேறி விட்டானா?” என்று கேட்டார்.
அவன் குணமடைந்து வேறிடம் சென்று விட்டதாகவும் ஆனால் ஒரே சங்கடம் என்னவென்றால் அவனுடைய முகம், முக்கியமாகக் கீழ்ப்பகுதி தீப்பட்ட புண்ணினால் நேராக்க முடியாத படி விகாரமாகியிருப்பது தான் என்றும் மெரேஸ்யெவ் கூறினான்.
“அதற்குள் கடிதம் எழுதிவிட்டானா? அதற்குள் ஏமாற்றமா? பெண்கள் விரும்பவில்லையாமோ? மீசை தாடி வளர்க்கும் படி அவனுக்கு யோசனை சொல்லுங்கள். மெய்யாகவே, தோற்றம் சீர்படுவதுடன் அசாதரணமானவன் என்ற பெயரும் கிடைக்கும். பெண்களுக்கு இது மிகவும் உவப்பாயிருக்கக் கூடும்!” என்றார் மருத்துவர்.
அப்புறம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டவர் கதவருகே நின்று திரும்பிப் பார்த்து உற்சாகமாகக் கத்தினார்: “அவனுக்கு, அதுதான் உங்கள் நண்பனுக்கு, கட்டாயம் எழுதுங்கள்- நான் தாடி வளர்க்கச் சொன்னதாக, கை கண்ட மருந்து இது! பெண்களிடையே கோலாகலமான வெற்றி கிடைக்கும்!”
மாலையில் மருத்துவ நிலையத்தின் முதிய பணியாள் ஒருவர் மெரேஸ்யெவுக்கு ஒரு கைத்தடி கொண்டு வந்து கொடுத்தார். கருங்காலி மரத்தால் செய்த அருமையான பழங்காலக் கைத்தடி அது. வசதியான தந்தக் கைப்பிடி வைத்தது. ஏதோ கூட்டுக் கையெழுத்து முத்திரை அதில் பொறிக்கப்பட்டிருந்தது.
“தலைமை மருத்துவர் வஸீலிய் வஸீலியெவிச் கொடுத்தனுப்பினார். அவருடைய சொந்தக் கைத்தடியை உங்களுக்காகப் பரிசளித்தார். இதை ஊன்றிக் கொண்டு நடக்கும்படி சொன்னார்” என்றார் அந்தப் பணியாள்.
அந்த கோடைக்கால மாலையில் மருத்துவமனையில் எல்லோருக்கும் சலிப்பு ஏற்பட்டிருந்தது. எனவே நாற்பத்து இரண்டாம் வார்டுக்கு ஆட்கள் வரலாயினார்கள். வலப்புறமும் இடப்புறமும் இருந்த பக்கத்து வார்டுகளிலிருந்தும், மாடியிலிருந்தும் கூட ஆட்கள் தலைமை மருத்துவரின் பரிசைப் பார்ப்பதற்கு வந்தார்கள். கைத்தடி உண்மையாகவே நன்றாயிருந்தது.
“நாடே துண்டாடப்படுவதற்கு இட்டுச்செல்லக் கூடிய … இந்திய அரசியல் சாசன வரலாற்றிலேயே மிகவும் மோசமான நாள்” – வழக்கறிஞரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப. சிதம்பரம் கூறிய இந்த வலிமையான வார்த்தைகள் எச்சரிக்கையூட்டும் முன்னறிவிப்பாகவே படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் நிலையையே மாற்றியமைக்கும் வகையில் சரத்து 370-ஐ ரத்து செய்த பிறகு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பிறகு, பிற மாநிலங்களின் நிலையும் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.
சரியாகச் சொல்லப்போனால், பல மாநிலங்களை ஒருங்கிணைந்ததே இந்தியா என்ற மிக அடிப்படையான ஒன்று இன்று தடுமாற்றத்திற்குள்ளாகியிருக்கிறது.
படையணிகளைக் குவித்து, முன்னாள் முதல்வர்கள் இருவர் உட்பட எதிர்கட்சித் தலைவர்களைக் கைது செய்து, அனைத்து வகையான தொடர்புகளையும் துண்டித்து அங்கு இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட விதமானது, பாஜக அங்கு எவ்விலை கொடுத்தேனும், வன்முறையை ஏவியும் கூட, தனது காரியத்தை நிறைவேற்றத் தயாராயிருப்பது தெரிகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கருத்துக்கள் அதற்கு ஒரு பொருட்டல்ல என்பதும் தெரிகிறது.
தற்போது தனது ஆசைக்குரிய திட்டங்களை எதிர்ப்புப் பயமின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கான தளம் பாஜகவிற்கு அமைந்துள்ளது. அயோத்தியில் இராமர் கோவில், பொது சிவில் சட்டம், அரசியல்சாசனத்தை மாற்றுவது, முசுலீம்களை திட்டமிட்ட வகையில் ஒதுக்குவது உள்ளிட்ட பலவும் அதன் விருப்பப் பட்டியலில் உள்ளது. சங்க பரிவாரத்தின் நீண்டநாள் கனவான சரத்து 370-ஐ நீக்குவது என்பது தற்போது நனவாகியுள்ளது.
எந்த எதிர்ப்புகளையும் கண்டுகொள்ளவில்லை, எந்த ஒரு சிறிய சட்டரீதியான அல்லது அரசியல் சாசன சட்ட குழப்பங்கள் குறித்தும் அக்கறை செலுத்தவில்லை. பொதுக் கருத்துபற்றியோ அல்லது நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் கருத்து பற்றியோ கருத்துக் கேட்கத் தேவையில்லை. மொத்த நாடும் மிகப்பெரிய தேர்தல் வெற்றியை கொடுத்திருக்கும் போது, இவர்கள் யார் கருத்துச் சொல்வதற்கு ?
கேள்வி கேட்கத்தகுந்த எந்த விவகாரத்திலும், தனிப்பெரும்பான்மையில் தாம் வெற்றி்பெற்றதையே தமது ஒவ்வொரு முடிவுகளையும் நியாயப்படுத்துவதற்கு பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பயன்படுத்தப்படுகின்றனர். ஆனால் அரசாங்கமானது, அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி (குடிமக்களால்) எதிர்கொள்ளப்படவும் கேள்வி கேட்கப்படவும் வேண்டும். மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். இதை பாஜக புரிந்து கொள்வதில்லை.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாக இருக்கட்டும், பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு மறுப்பு சொல்வதாக இருக்கட்டும், அல்லது, நிதித்துறை அமைச்சக விவகாரத்தில் சமீபத்தில் நாம் பார்த்தது போல், நிருபர்களைக் கேள்வி கேட்க விடாமல் தடுத்ததாக இருக்கட்டும், அதனை பொறுப்பாக்கக் கூடிய அனைத்து விவகாரங்களின் மீது அரசாங்கம் வெறுப்புக் கொள்கிறது.
தனது முதல் ஐந்தாண்டு ஆட்சியில் மோடி அரசாங்கம், பிரச்சினைக்குரிய சில முடிவுகளை எடுப்பதற்கான சில முயற்சிகளைச் செய்தது. அவற்றுக்கு எவ்வித வருத்தமோ, விளக்கமோ கொடுக்கவில்லை. ஆனால், பிற அரசியல் கட்சிகளிடமிருந்தோ அல்லது கருத்தாளர்களிடமோ, இன்னும் சொல்லப்போனால் பாதுகாக்கப்பட்ட மக்களிடமிருந்தோ வரும் விமர்சனங்கள் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்தின என்பது தெளிவாகத் தெரிந்தது.
வணிகவியலாளர்களிடமிருந்து வரும் சிறு புகார்களின் அடிப்படையில் ஜி.எஸ்.டி-யிலும்கூட நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தது மோடி அரசு. மோடி அரசாங்கத்தை “சூட்- பூட் போட்டவர்களின் அரசு” என ராகுல்காந்தி கூறியது மோடியை பெருமளவில் வெறுப்பேற்றியது. பொருளாதார கொள்கைகளில் தனது பிடிப்பை திடீரென மாற்றிக்கொண்டார். மன்னிப்பு எதுவும் கேட்கப்படவில்லை என்றாலும் அப்போது பொதுமக்கள் பார்வை முக்கியமாக பார்க்கப்பட்டது என்பது மட்டும் உறுதி.
ஆனால், இப்போது அப்படி இல்லை. சட்டங்கள் வேகமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒன்று, எதிர்க்கட்சிகள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர் அல்லது நிராகரிக்கப்படுகின்றனர். சில விவகாரங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கூட முக்கியச் சட்ட மசோதாக்கள் வேகமாக அறிமுகப்படுத்துவதையும் நிறைவேற்றப்படுவதையும் ஆதரித்தன. நாம் அறிவதற்கு முன்னரே, நம் வாழ்வின் மீது தாக்கம் செலுத்துவதற்கான அதிகாரத்தை அரசுக்கு கொடுப்பதற்கான சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றிவிடுகிறது. இச்சட்டங்களின்படி விசாரணையின்றியே யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதியாக குற்றம்சாட்டப்படலாம். தகவலறியும் உரிமைச் சட்டம் அதற்குப் பல்லில்லாதவாறு திருத்தப்பட்டுள்ளது.
ஒருசில மாற்றுக் கருத்துள்ளவர்களாலும் கூட முடிவெடுக்கும் வழிமுறையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. முன்னாள் தகவல் ஆணையர்கள், தகவலறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதால் வரவிருக்கும் அபாயங்கள் குறித்து எச்சரித்ததை யாரும் கவனம் கொடுத்துக் கேட்கவில்லை. இது அரசாங்கத்தின் மனதை மாற்றிவிடப் போவதில்லை.
நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை இருக்கிறது என்ற வகையிலும் அரசாங்கம் செய்யவேண்டிய வேறுபல அவசர விசயங்கள் பல இருக்கின்றன என்ற அடிப்படையில் பார்த்தாலும், இந்த மசோதாக்களுக்கு இப்போது என்ன அவசரம்? மிகவும் அவசரமான அவசியமான காரியம் என்னவெனில், தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதுதான். நுகர்வோர் தேவைகள் மிகவும் கீழ்நிலைக்கு இறங்கிவிட்டன. வேலைவாய்ப்பு உருவாவதற்குப் பதில் குறைகின்றன. இது அரசாங்கத்தைக் கவலையுறச் செய்யவில்லையா ?
பொருளாதாரம்தான் முக்கியமானது. ஆனால் பாஜகவிற்கும் அதன் சித்தாந்த குருவான ஆர்.எஸ்.எஸ்.-க்கும் அதன் வெகுநாள் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள்தான் முக்கியமானவை. சங்க பரிவாரங்களுக்கு ஒரு இலக்கு உண்டு. பல பத்தாண்டுகளாக இடைவிடாமல் அவை அதை நோக்கி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு குறைந்தபட்ச வாய்ப்பையும் தனது இலக்கை நோக்கி முன்னேறுவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஜன்சங்கம் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் இணைந்து ஜனதா கட்சியின் ஒரு பகுதியாக மாறியது. வி.பி.சிங்கின் குறுகிய கால அரசாங்கத்திற்கும் ஆதரவு அளித்தது உள்ளிட்டு அதிகாரத்தை நோக்கிய அனைத்துவிதமான செயல்தந்திர நகர்வுகளை முன்னெடுத்தது.
அவசரநிலை காலத்தில் ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டு அதன் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைந்தது. ஆனாலும் அதன் இலட்சியம் மாறவில்லை. வாஜ்பாயி அரசாங்கத்தின் காலத்தில் அது பிறரிடம் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இருந்தது. எனினும் அது கூட்டணி அரசாங்கமாக இருந்ததால், தனது பல்வேறு குறிக்கோள்களை அதனால் நிறைவேற்ற முடியவில்லை.
தற்போது மோடி தலைமையில் இருக்கையில் சங்கப் பரிவாரம் தனது இறுதி இலட்சியமான இந்து ராஷ்டிரத்தை சாதிக்கும் நிலையை நெருங்கிவிட்டது. அதன் ஒவ்வொரு அடியும் அதன் இறுதியிலக்கை நோக்கி அதனைக் கொண்டு செல்கிறது. இந்து இந்தியா அரசியல் அமைப்புச் சட்டத்தில் புனிதமாக்கப்பட வேண்டியதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டியது மட்டும்தான் பாக்கி. அதற்குக் குறைவாக எதுவும் திருப்திகரமானதாக இருக்காது.
அரசியல்சாசன சட்டம் அதனை அனுமதிக்கவில்லை எனில், அது மாற்றப்படலாம். ஆனால் அதன் ஒப்புதல் முத்திரை மட்டும் தேவைப்படும். அப்போது ஆர்.எஸ்.எஸ். பெருமையுடன் இது மக்களின் விருப்பம் என்று தெரிவிக்கும். சங்கபரிவார் விரைவில் அந்த இடத்தை நெருங்கிவிடும். – இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டான 2022 அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன நூற்றாண்டான 2025 ஆகிய இரண்டும் அதற்கான நல்ல தேதிகள்தான். ஆனால் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் அதற்காகக் காத்திருக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் வேகமாக முடிவெடுப்பவர்கள். நினைவிருக்கிறதா ?
பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டபோது திகிலுற்றிருந்ததைப் போல் இந்தியாவில் நிறைய பேர் சம்பவங்களின் இந்தச் சுற்றைக் கண்டு திகிலுறுவார்கள். அவர்கள் யாரும் எவ்வித மாயையிலும் இருக்க வேண்டாம். இந்த நகர்வு அதிகாரம், வசதி வாய்ப்பு மற்றும் தமது குரலைக் கேட்கச் செய்யும் திறன் கொண்ட பலருடைய ஆதரவைப் பெற்றிருக்கிறது. இந்த ஒப்புதல், பக்தாள்களிலிடமிருந்தும், பாஜக இணையதள பகடியாளர்களிடமிருந்தும் மட்டுமோ அல்லது சோரம் போன ஊடகங்களிடமிருந்து மட்டுமோ வரப்போவதில்லை. மற்றபடி பொறுப்புள்ள மக்கள் பலரும் பிற முயற்சிகள் எல்லாம் சரியாக நடக்கும்பட்சத்தில் இந்து ராஷ்டிரம் அறிவிக்கப்படும் சமயத்தில் இது நடப்பது குறித்து மகிழ்ச்சி அடைவர். சங்க பரிவாரம் தமது கனவு ராஜ்ஜியத்தில் அதுமட்டும் தனியாக இல்லை.
தமிழாக்கம் : நந்தன் கட்டுரையாளர் : சித்தார்த் பாட்டியா நன்றி :தி வயர்
மோடியின் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து கடலூர் பெரியார் அரசு கலை கல்லூரி மாணவர்கள் இன்று (14-08-2019) காலையில் வகுப்புப் புறக்கணிப்பு ஈடுபட்டனர்.
1 of 4
பெரும்பான்மையான மக்களின் கல்வி உரிமையை பறிக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும்; 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது ஏழை மாணவர்களை வடிகட்டும் நோக்கத்தை கொண்டது என்பதையும்; மும்மொழி கொள்கை திணிக்கும் முயற்சியையும் அம்பலப்படுத்தும் விதமாக கண்டன முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர்.
முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து மாணவர்கள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டுமென்றும் அறைகூவல் விடுத்தனர்.
தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 97888 08110.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. – ஐக்கிய ஜனதா தள் கூட்டணி நாற்பதில் முப்பத்தொன்பது தொகுதிகளை வென்றதற்கு, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் முன்னெடுத்த வளர்ச்சித் திட்டங்களும் ஒரு காரணமென்று கூறப்பட்டது. சொல்லிக் கொள்ளப்படும் இந்த வளர்ச்சியின் அருகதை என்ன என்பதை அம்மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த இளஞ்சிறார்களின் மரணம் அம்பலப்படுத்திவிட்டது.
கடந்த ஜூன் மாதத்தில் அம்மாநிலத்தைத் திடீரெனத் தாக்கிய ஒருவித மூளை அழற்சி நோயினால் ஏறத்தாழ 500 சிறுவர்கள் இறந்து போயிருக்கக்கூடும் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பீகார் மாநில அரசு இம்மூளை அழற்சி நோயினால் 824 சிறுவர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களுள் 157 சிறுவர்கள் மட்டுமே இறந்துபோனதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. இம்மூளை அழற்சி நோயின் மையப் பகுதியாக இருந்த முசாஃபர்பூர் மாவட்டத்தில் மட்டும் 150- மேற்பட்ட சிறுவர்கள் இறந்து போனதைச் சமூக அக்கறையுள்ள மருத்துவர்கள் அம்பலப்படுத்திய பிறகும், அம்மாநில அரசு சாவு எண்ணிக்கையைத் துணிந்து குறைத்துக் காட்டிவருகிறது. உண்மையான புள்ளிவிவரங்களைத் தமக்குச் சாதகமாக மறைத்தும், கூட்டியும், குறைத்தும் காட்டுவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கைவந்த கலை என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.
இம்மூளை அழற்சி நோய் மருந்து மாத்திரைகளுக்குக் கட்டுப்படாத கொள்ளை நோயும் அல்ல; குணப்படுத்த முடியாத மர்ம நோயும் அல்ல. ஒரு முப்பது ரூபாய் பெறுமான டெக்ஸ்ட்ரோஸ் என்ற திரவ மருந்தைப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நரம்பு வழியாகச் செலுத்தியிருந்தால், பெருவாரியான சிறுவர்களை, ஏன் அத்துணை சிறுவர்களையும்கூடக் காப்பாற்றியிருக்க முடியும். அம்மலிவான மருந்தைக்கூட வாங்கிக் கையிருப்பில் வைத்திருக்காமல் இயங்கி வந்திருக்கின்றன அரசு மருத்துவமனைகள். எனவே, இச்சாவுகளை அரசின் அலட்சியத்தால் விளைந்த கொலைகள் என்றே கூறலாம்.
சிறுவர்கள் வெறும் வயிற்றில் லிச்சிப் பழங்களைச் சாப்பிட்டதால்தான் மூளை அழற்சி நோய் ஏற்பட்டு மரணமடைய நேரிட்டதாகக் கூறிவருகிறது நிதிஷ் குமார் அரசு. பன்றிக் காய்ச்சலுக்குப் பன்றிகளைக் குற்றஞ்சுமத்துவது எந்தளவிற்கு நகைக்கத்தக்கதோ, அது போன்றது பீகார் அரசு கூறியிருக்கும் காரணம்.
பா.ஜ.க. கூட்டணி மெச்சிக்கொள்ளும் பீகார் வளர்ச்சியின் இலட்சணம் : ஒரே படுக்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் அவலம்.
கடுமையான கோடைக் காலம், அப்பருவத்தில் பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டப் பகுதிகளில் விளையும் லிச்சிப் பழங்கள், சிறுவர்களின் அகால மரணங்கள் – இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்றபோதும், இந்த மரணங்களுக்கான அடிப்படையான காரணம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் நிலவும் வறுமையும் ஏழ்மையும்தான்.
லிச்சிப் பழங்கள் உண்ணத் தகுந்தவைதான் என்றபோதும், அப்பழங்களை ஆரோக்கியமில்லாத குழந்தைகள், அதாவது தினந்தோறும் சத்தான உணவு கிடைக்காமல், அரைகுறைப் பட்டினியால் வாடும் குழந்தைகள் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது என்கிறது, மருத்துவ அறிவியல். அப்படி உண்டுவிட்டால், அப்பழங்களில் சுரக்கும் ஒருவித இரசாயனம் இரத்தத்திலுள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) அளவைக் குறைத்துவிடும். அரைகுறைப் பட்டினியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல் இயக்கம் குறைந்த சர்க்கரையை ஈடுகட்டும் அளவிற்கான சர்க்கரையை வளர்சிதை மாற்றத்தின் மூலம் உற்பத்தி செய்ய முடியாது. இதன் காரணமாக அக்குழந்தைகளின் மூளை இயக்கம் பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்குச் சென்று மரணித்துவிடுகின்றன. இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நோயின் அறிகுறிகள் தென்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்த்து, அவர்களுக்கு 10% டெக்ஸ்ட்ரோஸ் என்ற மருந்தை நரம்பு வழியாகச் செலுத்தித் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தால், அவர்களைச் சாவிலிருந்து காப்பாற்றிவிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பீகார் மாநில அரசு முசாஃபர்பூர் மாவட்டக் குழந்தைகளின் பட்டினியையும் போக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் அம்மலிவான மருந்தையும் வாங்கி வைக்கவில்லை. விளைவு, கொத்துக்கொத்தாக சிறுவர்களின் அகால மரணங்கள்.
♦♦♦
பீகார் மாநிலமே மிகவும் பின்தங்கிய, வறுமை நிறைந்த மாநிலம் என்றாலும், ஜூன் மாதத்தில் நடந்த குழந்தைகளின் மரணங்கள் முசாஃபர்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் அதிகம் நடந்திருக்கின்றன. இதற்குக் காரணம் அம்மாவட்டத்தில் வறுமையும் பட்டினியும் தாண்டவமாடும் அளவிற்கு லிச்சித் தோட்டங்களும் நிறைந்துள்ளன.
லிச்சித் தோட்டங்கள் ஆதிக்க சாதியான பூமிகார் நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமானவை. லிச்சிப் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும் மே, ஜூன் மாதங்களில் பழங்களைப் பறிப்பது, அவற்றைத் தரம் பிரித்து வகைப்படுத்துவது ஆகிய வேலைகளைச் செய்வது மல்லா, சாஹ்னி, மஜ்ஹி, சமர், பஸ்வான் ஆகிய தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள். மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போன சிறுவர்களுள் ஆகப் பெரும்பான்மையானவர்கள் இந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான்.
இப்பெண்கள் லிச்சிப் பழங்களைப் பறிப்பதற்கு அதிகாலை நான்கு மணிக்குத் தோட்டத்திற்குச் சென்று காலை பத்து மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார்கள். இதற்கு இவர்களுக்குக் கிடைக்கும் கூலி அதிகபட்சமாக அறுபது ரூபாய்தான். அறுவடை முடிந்துவிட்டால் இந்தக் கூலியும் கிடைக்காது. உள்ளூரில் இருந்தால் வயித்தைக் கழுவக்கூட வருமானம் கிடைக்காது என்பதால், அம்மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் கூலித் தொழிலாளர்கள் வேலை தேடி டெல்லி வரையிலும் இடம் பெயர்ந்து செல்கிறார்கள். இதனால் அம்மாவட்டத்திலுள்ள அடித்தட்டு சாதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் குடும்பங்களில் மூன்று வேளை உணவு என்பது குதிரைக் கொம்பு போன்றது.
முசாஃபூர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளைப் பார்க்க வந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம்.
பெண்கள் பழங்களைப் பறிப்பதற்குத் தோட்டங்களுக்குச் செல்லும்போது சிறுவர்களும் அவர்களோடு கூடவே செல்வதும், தோட்டத்தில் கீழே விழுந்து கிடக்கும் பழங்களை எடுத்து உண்ணுவதும் வழமையாக நடைபெறுகின்ற நிகழ்வு. ஆனால், காலையில் பழங்களைச் சாப்பிட்ட சிறுவர்களுள் யார் யாருக்கெல்லாம் அன்றிரவு போதிய உணவு கிடைக்கவில்லையோ, அச்சிறுவர்கள் மறுநாள் அதிகாலையில் மூளை அழற்சி நோயால் பாதிக்கப்படுவது உறுதி. இப்படித்தான் இந்நோய் முசாஃபர்பூர் மாவட்டத்தைத் திடீர்ச் சூறாவளி போலத் தாக்கியிருக்கிறது.
மருத்துவ அவசர ஊர்திப் பற்றாக்குறை, குழந்தை மருத்துவர் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை – இப்படிப் பல பற்றாக்குறைகளின் காரணமாகவே முசாஃபர்பூர் மாவட்டத்தில் மட்டும் கிட்டதட்ட 150 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து போயுள்ளன. இந்நோய் தாக்கிய மற்ற பகுதிகளில் இறந்த சிறுவர்களின் எண்ணிக்கையையும் கணக்கிட்டால், அது 500- தொடும் என்பது மருத்துவர்களின் கணக்கு.
இவ்வகையான மூளை அழற்சி நோய் பீகார் மாநிலத்தைத் தாக்குவது இது முதன்முறையல்ல. 1995 ஆண்டு தொடங்கியே கடந்த 24 ஆண்டுகளாக இந்நோய் கோடைப் பருவத்தில், லிச்சிப் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும் வேளையில் சிறுவர்களைத் தாக்கிக் காவு கொண்டுவருவதாக மருத்துவர்கள் அருண்ஷா, ஜேகப் ஜான், முகுல்தாஸ் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். 1995-க்கு முன்பாகவும் மரணங்கள் நடந்திருக்கலாம், ஆனால், அது தொடர்பாக எந்தவொரு பதிவுகளும் இல்லை என்கிறார்கள் அம்மருத்துவர்கள். 2012 தொடங்கி 2018 முடிவுள்ள ஏழு ஆண்டுகளில் இந்நோய்க்கு 292 சிறுவர்கள் பலியாகியிருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய்க்கு இப்படியொரு நீண்ட வரலாறு இருந்தாலும், பீகார் மாநில அரசு இந்நோய்க்கான அடிப்படைக் காரணம் என்ன, அதனை ஒழிப்பதற்கு சமூகரீதியாகவும் மருத்துவரீதியாகவும் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனும் விதத்தில் எந்தவொரு முயற்சியையும் இதுநாள்வரை எடுக்கவில்லை. அதேசமயத்தில் மருத்துவர்கள் அருண் ஷா, ஜேகப் ஜான், முகுல்தாஸ் ஆகிய மூவரும் தமது சொந்த முயற்சி மற்றும் நிதி ஆதாரங்களைக் கொண்டு இந்நோய்க்கும் பட்டினிக்கும், இந்நோய்க்கும் லிச்சிப் பழங்களுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிந்து, அதனை அறிக்கையாக மருத்துவ இதழ்களில் வெளியிட்டுள்ளனர். மைய அரசும் அமெரிக்க நிறுவனம் ஒன்றும் இணைந்து நடத்திய ஆய்வும் மேற்சொன்ன மருத்துவர்கள் நடத்திய ஆய்வு முடிவுகளை உறுதி செய்திருக்கிறது.
இந்நோயை ஒழிக்க வேண்டுமென்றால் முதலில் பட்டினியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் இம்மருத்துவர்கள். குறிப்பாக, நோய் தாக்கக்கூடிய பருவத்திலாவது சிறுவர்களுக்கு இரவு நேரங்களில் சூடான, சத்தான உணவு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். இரண்டாவதாக, நோய் தாக்கக்கூடிய பகுதிகளில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மூன்றாவதாக, நோய்த் தாக்கக்கூடிய பருவத்தில் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்த வேண்டும் எனக் கோரும் இம்மருத்துவர்களது அறிக்கை, இறுதியாகத்தான் மருத்துவ வசதிகளைப் பற்றிப் பேசுகிறது. அதிலும்கூட, மாவட்டத் தலைமை மருத்துவமனைகளைவிட ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவது, மருத்துவர் தொடங்கி காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்புவது ஆகியவற்றைச் செய்ய வேண்டும் எனக் கோருகிறது.
பீகார் மாநில அரசோ இப்பரிந்துரைகளுள் எந்தவொன்றையும் உருப்படியாக நடைமுறைப்படுத்த வில்லை. குறிப்பாக, இந்த ஆண்டின் கோடைப் பருவத்தில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைக்கூட நடத்தவில்லை. காரணம், ஆளுங்கட்சிக் கூட்டணியும் அரசு இயந்திரமும் தேர்தல் வேலைகளில் இறங்கி, மக்களைக் கைவிட்டுவிட்டன.
தேசிய ஊரக சுகாதாரத் திட்டம், மதிய உணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், பொது விநியோகத் திட்டம், குழந்தைகளின் சத்துக் குறைவின்மை திட்டம் என விதவிதமான திட்டங்கள் ஏழைக் குழந்தைகளின் நலன்களுக்காக பீகாரில் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், ஒன்று அந்தத் திட்டங்கள் வெறும் ஏட்டளவில் உள்ளன அல்லது ஊழலுக்குப் பயன்படுகின்றன என்பதுதான் உண்மை.
எடுத்துக்காட்டாக, துணை சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்குச் சூடான உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்படும் நிதியில் 71 சதவீதமும்; இத்திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பத்தினருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு ஒதுக்கப்படும் நிதியில் 38 சதவீதமும் சுருட்டப்படுவதாகக் குற்றஞ்சுமத்துகிறார் மும்பையைச் சேர்ந்த மருத்துவரும் இந்திய மருத்துவர் இதழின் ஆசிரியருமான சோஹம் டி.பாதுரி.
இந்நோய் கொத்துக்கொத்தாக பீகார் மாநிலக் குழந்தைகளைக் காவுவாங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் மைய அரசு தனது பட்ஜெட்டைத் தயாரித்துக் கொண்டிருந்தது. எனினும், ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்நோயை ஒழிப்பது குறித்து எந்தவொரு வார்த்தையும் கிடையாது.
மூளை அழற்சி நோயால் பீகார் மாநிலக் குழந்தைகள் கொத்துக்கொத்தாக இறந்துகொண்டிருந்த வேளையில் மோடி அரசும், பா.ஜ.க. கட்சியும் என்ன செய்து கொண்டிருந்தன என்பதை நினைவுப்படுத்திப் பாருங்கள். குழந்தைகள் மரணத்தைப் பேரிடராகவோ, உடனடியாகக் கவனம் கொடுக்க வேண்டிய முக்கியப் பிரச்சினயாகவோ அவர்கள் கருதவில்லை. மாறாக, அச்சமயத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு அரசு மருத்துவரை முசுலீம் நோயாளியின் உறவினர்கள் தாக்கியதைத் தேசியப் பிரச்சினையாக உருமாற்றி, மம்தா அரசிற்கு நெருக்கடி கொடுத்து வந்தார்கள். பீகார் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதைவிட, மேற்கு வங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்களின் நிகழ்ச்சி நிரலாக இருந்தது.
♦♦♦
2022-ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுள் 31.4 சதவீதக் குழந்தைகள் நோஞ்சான் குழந்தைகளாக இருக்கும்.
சத்தான உணவு கிடைக்காமல், அரைகுறை பட்டினியால் சவலைப் பிள்ளைகளாக வளரும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருந்தாலும், உண்மையில் இது நாடு தழுவிய பிரச்சினையாகும். இந்திய அரசும் ஐ.நா.சபையின் சர்வதேச உணவுத் திட்டக் கழகமும் இணைந்து சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளுள் ஒரு குழந்தை, அதாவது இந்தியக் குழந்தைகளுள் 31.4 சதவீதக் குழந்தைகள் சத்தான உணவின்றி நோஞ்சான் குழந்தையாக வளரும் என்றும், இதனை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டுமெனில், தற்போது சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கும் தொகையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறது.
அறிக்கையை வெளியிட்டிருக்கும் மோடி அரசு அதற்குப் பொறுப்பாக நடந்துகொள்ள மறுப்பதை, பட்ஜெட் ஒதுக்கீடுகளே எடுத்துக்காட்டுகின்றன. பீகார் உள்ளிட்டு, இந்திய நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதைப் பற்றிப் பேச மறுக்கும் மோடி, அதற்கு மாறாக, 2024-ல் 350 இலட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியாவை மாற்றப் போவதாக உதார்விட்டு வருகிறார். கேக்கை எந்தளவிற்குப் பெரிதாகச் செய்கிறோமோ, அந்தளவிற்கு கேக்கின் பங்கு அனைவருக்கும் கிடைக்கும்” என இதற்கு உவமானம் சொல்கிறார்.
பிரெஞ்சு மக்கள் சாப்பிடுவதற்கு ரொட்டிகூடக் கிடைக்காமல் போராட்டத்தில் குதித்தபோது, அந்நாட்டு மகாராணியாக இருந்த மேரி அண்டாய்னேட், ரொட்டி கிடைக்கவில்லையென்றால் என்ன? கேக் சாப்பிடுங்கள்” எனத் திமிராகவும் வக்கிரமாகவும் கூறினாளாம். பீகார் மாநிலக் குழந்தைகள் இரவில் ஒரு கவளம் சோறு கிடைக்காமல் செத்துப் போய்க் கொண்டிருக்கும் தருணத்தில், பிரதமர் மோடியோ இதோ கேக் தயாராகிக் கொண்டிருக்கிறது” என்றவாறு பேசி வருகிறார்.
அம்மகாராணியின் தலையை கில்லட்டினில் வைத்துக் கொய்து எறிந்தது, பிரெஞ்சு புரட்சி. மோடியை வரலாறு என்ன செய்யக் காத்திருக்கிறதோ?!
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக, மோடி – அமித்ஷா கும்பலை அம்பலப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டிருந்த கேலிச்சித்திரம் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினரான போடியைச் சேர்ந்த தோழர் ஜோதிபாசு.
தோழர் ஜோதிபாசு.
அவர் பகிர்ந்திருந்த கேலிச்சித்திரப் பதிவை, முகநூலில் பார்வையுற்ற பி.ஜே.பி. போடி நகர செயலாளர் தண்டபாணி போலீசில் அளித்த புகாரின் பேரில், கடந்த ஆகஸ்டு 10 அன்று, மாலை தோழர் ஜோதிபாசுவை போலீசார் கைது செய்தனர். பி.ஜே.பி. கும்பலுக்கு ஆதரவாக தோழரை தரைக்குறைவாக பேசியும் கீழ்த்தரமான முறையிலும் நடந்துகொண்டார் போலீசு துணைக் காணிப்பாளர்.
போலீசு மற்றும் பி.ஜே.பி. கும்பலின் மிரட்டலைக் கண்டு பின்வாங்காமல், உறுதியோடு எதிர்கொண்டார் தோழர் ஜோதிபாசு. அவசரம் அவசரமாக ஐ.பி.சி.504, 505 (IB), IPC 2 OF, 66F-ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ரிமாண்ட் செய்வதற்காக அன்று இரவே தேனியில் உள்ள நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேற்கண்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்படவில்லை என்று கூறி ரிமாண்டு செய்யாமல் திருப்பி அனுப்பிவிட்டார் நீதிபதி. அன்று இரவு முழுவதும் போலீசு நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டார் தோழர் ஜோதிபாசு. பின்னர், நீதிபதி ஏற்கத்தக்க வகையில் போதுமான காரணங்களை புனைந்து எடுத்துக்கொண்டு மீண்டும் ரிமாண்ட் செய்யக்கோரி ஆக-11 அன்று காலை 11 மணிக்கு நீதிபதியின் முன் நிறுத்தினர் போலீசார். இம்முறை, தோழர் ஜோதிபாசுவை சிறையிலடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. இதனைத் தொடர்ந்து, கண்டமனூர் துணை சிறைக்கூடத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் தோழர் ஜோதிபாசு.
கேலிச்சித்திரத்தை முகநூலில் பகிர்ந்ததற்காக ஒருவரை சைபர் பயங்கரவாதி என்று முத்திரைக்குத்தி சிறையிலடைக்க முடிந்திருக்கிறதென்றால், எந்த நிலையில் இருக்கிறது தமிழக அரசு ? எவ்வகையில் எதிர்வினையாற்றப்போகிறது, தமிழகம்?
‘தமிழகத்தை நாசமாக்காதே’ என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 6, 2019 அன்று உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில், மக்கள் அதிகாரம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இப்பொதுக்கூட்டதிற்கு மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார்.
♦ திரு. மூவேந்திரன், உசிலை தி.மு.கழகப் பேச்சாளர்
♦ தோழர் வழக்கறிஞர் ராஜன், உசிலை சி.பி.எம்
♦ திரு. தென்னரசு, (வி.சி.க, விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில துணை செயலாளர்)
♦ திரு. பச்சைச்துண்டு பெருமாள், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம்
♦ தோழர்.சினேகா, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மதுரை
♦ தோழர்.ஆசை, ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், உசிலை
– ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இக்கூட்டத்தில் தமிழகத்தை நாசமாக்கிவரும் அழிவுத் திட்டங்களான ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு, 8 வழிச்சாலை மற்றும் நியூட்ரினோ திட்டங்களைப் பற்றியும், புதிய கல்விக் கொள்கை 2019 பற்றியும் அவற்றால் ஏற்படும் அபாயங்கள் பற்றியும் விளக்கிப் பேசப்பட்டது.
தமிழகத்தை நாசமாக்காதே ! பொதுக்கூட்டம் - உசிலை
1 of 10
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
இக்கூட்டத்தில், சிறப்புரை ஆற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகவே காவி பாசிஸ்டுகள் திட்டமிட்டு நாசகர திட்டங்களை அமல்படுத்தி வருவதையும், காஷ்மீரின் மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்பின் காரணமும் கார்ப்பரேட் நலனுக்கானதே என்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும், ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பும் நிலைகுலைந்துள்ளதை சுட்டிக்காட்டி, இதை சமாளிக்க முடியாமல் கார்ப்பரேட்-காவி கும்பல் பாசிசத்தை, நாட்டு மக்கள் மேல் ஏவுவதையும் அம்பலப் படுத்தினார். இந்தக் காவி-கார்பரேட் பாசிஸ்டுகளை மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்கள் மூலம் முறியடிக்க வேண்டுமென அறைகூவினார்.
திரளான மக்கள் இறுதிவரை கலையாமல் நின்று கூட்டத்தை கவனித்தனர்.
அத்திவரதர் தரிசனத்தில் சராசரி மக்கள் சிலரை வி.வி.ஐ.பி வரிசையில் அனுமதித்ததாக ஒரு போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு கொதிக்கும் கலெக்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்தது. கலெக்டரிடம் போலீஸ்காரர் மன்னிப்பு கேட்டு கெஞ்சும் காட்சியும் அதில் வருகிறது. மத உணர்வு நிரம்பிய ஒருவருக்கு கலெக்டரின் செயல் தவறில்லை என்று தோன்றலாம். ஆனால் அடிப்படை மனித அற உணர்வு நிரம்பிய ஒருவருக்கு நிச்சயம் ஒரு சிறு தவறுக்கு வழங்கப்படும் அதிகப்படியான தண்டனையாகத்தான் அது தோன்றும்.
காமிராக்களுக்கு மத்தியில், போலீசை மிரட்டும் காஞ்சிபுரம் கலெக்டர்.
அந்த போலீஸ்காரரின் செயலுக்கு அவரை கூனிக்குறுக செய்து அவமானப்படுத்தி உள்ளார், கலெக்டர். உச்சபட்சமாக அவருக்கு வழங்கப்படும் தண்டனையை அங்கேயே அறிவித்து மிரட்டுகிறார். கலெக்டரின் ஆவேசம் வீடியோ பதிவு செய்யப்பட்டு பின்னர் அது அதிகளவுக்கு பகிரப்படுவதால் கூடுதல் அவமானப்படுத்தலை அந்த போலீஸ்காரர் சந்தித்து வருகிறார்.
ஓரிரு வாரங்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் மாணவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று கையை உடைத்தது போலீஸ். பின்னர் மாவு கட்டு போடப்பட்ட கரங்களுடன் மாணவர்கள் தோன்றும் வீடியோ காட்சி மாலையில் வெளியானது. சில சமூக வலைதள கணக்காளர்கள் குதூகலமாக அதை பரப்பினார்கள். சமூக வலைதளத்தில் அது பேசுபொருளாகவும் ஆனது. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட சமூக ஒழுங்கை மீறுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி விடுகையாக அது கருதப்பட்டது.
போலீசு ரவடிகளால் கை உடைக்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.
இந்த தண்டனைகளின் உள்ளியல்பு 18–ம் நூற்றாண்டு வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழைய தண்டனை முறையை ஒத்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விவரத்தை மக்கள் முன்னால் காட்சிப்படுத்துவதன் மூலம் மொத்த சமூகமும் குற்றமிழைக்க காத்திருப்பது போன்ற ஒரு எண்ணத்தை அது ஏற்படுத்துகிறது. தனக்கு விதிக்கப்பட்ட சமூக அந்தஸ்தை மீற நினைத்தால் என்ன நடக்கும் என்ற விளைவு பற்றிய எச்சரிக்கையை விடுக்கிறது. என்.டி.டி.வி வெளியிட்ட செய்தியின்படி தள்ளாட்டம் கொண்ட ஒரு முதிர்ந்த ஜோடியை தான் வி.வி.ஐ.பி வரிசையில் அந்த போலீஸ்காரர் அனுமதித்துள்ளார். நல்ல சமாரியன் செயல்தான் அது. அதற்கு சனாதன தர்மத்தில் எந்த மதிப்பும் இல்லை.
பெண் அல்லது புலி? நூலின் முகப்பு அட்டை.
இயேசு சிலுவையில் ஏற்றப்பட்டது, சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதும் கூட மக்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட தண்டனை நிறைவேற்றம்தான். மத்தியகால தண்டனை முறையை நகைக்கும் ஒரு அங்கத சிறுகதையாக ஃபிராங்க் ஆர். ஸ்டாக்டனின் ‘பெண் அல்லது புலி?’–ஐ (The Lady or the Tiger) கொள்ளலாம். ஒரு அரைக்காட்டுமிராண்டி மன்னன் தனது ஆளுகைக்கு உட்பட்ட குடிமக்கள் செய்யும் தவறுகளை வித்தியாசமான முறையில் தீர்த்து வைப்பான். குற்றம் சாட்டப்பட்ட நபர் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். பின்னர் அந்த நபரின் வயது மற்றும் சமூக தகுதிக்கேற்ப ஒரு பெண் தேடப்படுவார். குற்றத்தின் தீவிரத்துக்கேற்ப புலியும் கொண்டு வரப்படும்.
தண்டனை நாளின் போது குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு மைதானத்துக்கு அழைத்து வரப்படுவார். மைதானத்தில் இரண்டு அறைகள் இருக்கும். சுற்றிலும் மக்கள் திரண்டிருப்பர். குற்றம் சாட்டப்பட்ட நபர் இரண்டு அறைகளில் ஒன்றை திறக்க வேண்டும். அவரின் அதிருஷ்டத்தை பொறுத்து பெண்ணோ? புலியோ? அறையிலிருந்து வெளிப்படுவார்/வெளிப்படும். ஒரு வேளை பெண் வெளியே வந்தால் அவளை மணந்து கொள்ள உரிமை உண்டு. அது குற்றமின்மையின் அறிவித்தலாக கொள்ளப்படும். ஒரு வேளை புலி வெளிப்பட்டால் அவருடைய ‘குற்றத்துக்கு’ உடனடி மரண தண்டனை கிடைத்ததாக கொள்ளப்படும். கூடியிருக்கும் மக்கள் இரண்டு விதமான தண்டனை அமலாக்கத்துக்கும் உரிய உணர்ச்சி வினையாற்றலை ஆற்றி விட்டு கலைந்து செல்வர்.
பெண் அல்லது புலி? கதையைச் சித்தரிக்கும் ஓவியம்.
இது குழந்தைகளுக்கு சொல்லப்படும் விளையாட்டு கதையாக தோன்றினாலும் பதினெட்டாம் நூற்றாண்டு வரை மக்கள் முன்னிலையில்தான் கைதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கான பதிவுகள் இருக்கின்றன. 1757–ம் ஆண்டு ஃபிரான்சில் ராபர்ட் டேமியன்ஸ் என்ற முன்னாள் ராணுவ வீரர் 15–ம் லூயி மன்னனை நோக்கி ஓடி சென்று உடலில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி சிறு காயத்தை ஏற்படுத்தினார். உடனடியாக கைது செய்யப்பட்ட டேமியன்ஸ் மீது இரண்டு விதமான கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ராஜ கொலை (regicide) மற்றும் தந்தை கொலை — parricide (மன்னன் குடிமக்களின் தந்தை என்பதால்) — குற்றச்சாட்டுகள் அவை.
தண்டனை நாளின் போது டேமியன்ஸின் கரங்களில் எரியும் மெழுகை ஏந்த செய்து பாரீஸ் தேவாலயத்திலிருந்து மரண கம்பம் வரை கட்டை வண்டியில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு மரண மேடையில் வைத்து அவரது கை, தொடை மற்றும் நெஞ்சு பகுதிகளிலிருந்து கூர்மையான இடுக்கி ஒன்றின் மூலம் சதை உருவப்பட்டது. துளையிடப்பட்ட உடல் பாகங்களில் சூடான எண்ணெய், கந்தகம் மற்றும் சுடுபசை ஆகியவை ஊற்றப்பட்டன. அதன் பின்னர் நான்கு குதிரைகள் அழைத்து வரப்பட்டன. மரண கம்பத்தில் கட்டிவைக்கப்பட்ட அவரது உடலிலிருந்து தசைநார்களை உருவும் பொருட்டு நான்கு குதிரைகளையும் அவர் உடலோடு பிணைத்து பின்னர் இயக்கப்பட்டன. அப்போது அவரது உடல் பாகங்கள் துண்டாயின. இவை அனைத்தும் மக்கள் முன்னிலையில் அரங்கேறின என்பது முக்கியமானது. குற்றம் புரியும் எண்ணத்திலிருந்து விடுபடும் ஆன்ம துப்புரவாக்கலாக அது அப்போது கருதப்பட்டது.
ஃபிரான்சில் ராபர்ட் டேமியன்ஸ் – உடலில் நான்கு குதிரைகளைக் கட்டி நாலாபுறமும் சிதறியடிக்கப்படும் கொடூரத் தண்டனையை விவரிக்கும் கோட்டோவியம்.
‘பெண் அல்லது புலி?’ சிறுகதையிலும் தண்டனை அமலாக்கத்துக்கு பிறகு கூடியிருக்கும் மக்கள் தங்கள் மனஅழுக்குகளை தூய்மைப்படுத்தி விட்டுச் செல்வர். மாணவர்களின் கைகளை உடைக்கும் போலீஸின் நடவடிக்கையை ஆதரிக்கும் நபர்கள் ‘தப்பு செய்யணும் என்ற எண்ணம் இனிமேல் யாருக்கும் வராதென்று’ கூறி நியாயப்படுத்துகின்றனர்.
ஐரோப்பாவில் மத்தியகால காட்டுமிராண்டி தண்டனை முறைகள் பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு படிப்படியாக கைவிடப்பட்டன. தண்டனை வழங்கல் நான்கு முக்கிய அளவுகளில் மாற்றம் அடைந்தது. 1) மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது ஒழிக்கப்பட்டது. அது தனியாக, மக்களின் உணர்ச்சியை கிளறாத நடவடிக்கையாக பார்த்துக் கொள்ளப்பட்டது. 2) குற்றவாளியின் சமூகப் பொருளாதார மற்றும் வளர்ப்பு சூழல் தண்டனை வழங்கலின் போது கவனத்தில் கொள்ளப்பட்டது. 3) தண்டனையை நிறைவேற்றுவது நீதிபதியின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அதற்கென்று பணியமர்த்தபட்ட ஊழியர்கள், மருத்துவர்கள், உளவியலாளர்கள் என்று பல துறையினருடன் பகிரப்பட்டது. 4) தண்டனையின் நோக்கம் பழி வாங்குவது என்றில்லாமல் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு என்பதாக மாற்றப்பட்டது.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கொண்டாடும் இந்துமதவெறியர்கள்.
தற்போதைய நவீன கால தண்டனை முறையில் போலீஸ் வதை என்பது மறைமுகமாக தொடர்ந்தபடியேதான் உள்ளது. அவற்றின் கொடூரம் பற்றிய புரிதல் அனைவரின் நினைவுகளிலும் இருக்கிறது. என்றாலும் மக்கள் இந்த தண்டனை வழங்கலின் ஒரு பகுதியாக தங்களை இணைத்து சிந்திப்பது ஒரு புதிய போக்காக சமீபகாலத்தில் இருந்து வருகிறது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை பஜ்ரங் தள் மற்றும் ஏபிவிபி அமைப்பினர் கொண்டாடித் தீர்த்தனர். சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரங்களை மட்டுமே முன்வைத்து அஃப்சல் குருவுக்கு எதிராக தீர்ப்பெழுதிய நீதிபதி சொன்னது, ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சி இந்த வழக்கில் மரண தண்டனை மூலம்தான் திருப்தியுறும்’ என்றார்.
இயேசுவும் கூட சமூகக் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்தத்தான் கொல்லப்பட்டார் என்று கூற முடியும். ரோம ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து இயேசுவை விடுவிக்கவே விரும்பினான். இயேசுவிடம் எந்த குற்றத்தையும் அவன் காணவில்லை. அவனது மனைவியும் கூட இயேசு விடுவிக்கப்படுவதையே விரும்பினாள். ஆனால் அதற்கு மாறாக இருந்தது மதவாதிகளின் கூச்சல். மதவாதிகள் மற்றும் அவர்களால் தூண்டப்பட்ட மக்கள் முன்பு பிலாத்து ஒரு தெரிவுரிமையை வைத்தான். பஸ்கா பண்டிகைக்கு ஒருவரை விடுவிக்க வேண்டும். அதற்கு யாரை விடுவிக்கலாம் — இயேசுவையா? அல்லது குற்றங்கள் மிகுபுரிந்த பாரபாசையா? என்று முடிவு செய்யும்படி கோரினான். பாரபாசை விடுவிக்கவே கூடியிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இயேசுவை சிலுவையில் அறைய விரும்பும் மதவாதிகளின் கோரிக்கைக்கு பிலாத்து வேறு வழியில்லாமல் இணங்கினான்.
மதப் பெரும்பான்மைவாதத்தின் பாதிப்புக்கு இந்திய சமூகத்தின் கூட்டு மனசாட்சி ஆளாகி வருவது சிறுபான்மையின மக்கள், தலித் மக்கள் மற்றும் சமூகப் படிநிலையில் கீழே இருக்கும் மக்கள் பிரிவினரின் நல்வாழ்வுக்கு மிகுந்த கேட்டை விளைவிக்கிறது. அத்தி வரதர் தரிசனத்தில் வி.வி.ஐ.பி. வரிசை மீதான அதீத அக்கறை, மத்தியில் இருக்கும் மதவாத ஆட்சியாலும், மாநிலத்தில் இருக்கும் பொம்மை ஆட்சியாலும் கலெக்டருக்கு வருகிறது. ஆட்சியாளர்கள் எவரேனும் வருகை புரியும்போது அவர்களுக்கு சிறிது அசவுகரியமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்விலிருந்து அது ஆவேசமாக பீறிட்டு வெளி வந்துள்ளது.
உ.பி. அரசால் பழிவாங்கப்பட்ட, குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான்.
அந்த போலீஸ்காரர் ஓர் இஸ்லாமியராக இருந்தால் அவருடைய ‘கடமை மீறல்’ மாபெரும் சதியாக மாற்றப்பட்டிருக்கும். விசாரணை செய்யப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டிருக்கலாம். உ.பி.யின் கோராக்பூர் மருத்துவமனையில் 2017–ம் ஆண்டு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் குழந்தைகளின் உயிர்களை அப்போது காப்பாற்ற போராடிய குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கானுக்கு ஏற்பட்ட நிலைமை எண்ணிப் பார்க்கத்தக்கது.
மாணவர்களின் கையை உடைத்து மாவுக்கட்டு போட்டதை ஆதரிக்கும் உளவியல் மத்தியகால நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டிலிருந்து முழுமையாக நாம் விடுதலையாகவில்லை என்பதை காட்டுகிறது. ‘பெண் அல்லது புலி?’ சிறுகதையில் மன்னனை அரைக்காட்டுமிராண்டி என்று கதாசிரியர் குறிப்பிட்ட இடத்தில் அது சற்று நேர்மறை தன்மையில்தான் இருந்தது. தூரத்து லத்தீன் மற்றும் கிரேக்க தாக்கத்தால் கவித்துவ நீதியின் மேல் மன்னனுக்கு ஏற்பட்ட தாகத்தின் காரணமாக கொடூரமான தண்டனை முறையிலும் வெளிப்பட்ட சில நற்பண்புகளின் அடிப்படையில் அவ்வாறு அழைக்க முற்பட்டார்.
கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறாமல் இருக்க வயதான தம்பதியரை காலியாக இருந்த வி.வி.ஐ.பி வரிசையில் அழைத்து சென்ற போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்வதாக மிரட்டும் கலெக்டரிடம் என்ன அற உணர்வு அல்லது நேர்மறை அம்சம் உள்ளது?
வியட்நாம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியென் பியென்பூ போர் ஒரு திருப்புமுனையான கட்டம். பிரெஞ்சுக்கு எதிரான விடுதலைப் போரில் 1945-ல் வியட்நாமின் பெரும் நிலப்பரப்பை வியட்நாமின் மக்கள் படை கைப்பற்றிவிட்டது. தென் வியட்நாமின் ஒரு சில பகுதிகளே எஞ்சியிருந்தன. ஆனால் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஹோசிமின் தலைமையிலான அரசை அங்கீகரிக்க மறுத்து வந்தது. தொடர்ந்து வியட்நாமை தன் காலனியாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
1953-ம் ஆண்டு நவார்ரே திட்டம் என்ற இராணுவ நடிவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்தியது. பதினெட்டே மாதங்களில் வியட்நாம் மக்கள் படையை அழித்து ஒழிப்பதற்காகத் தீட்டப்பட்ட திட்டம் இது. அதற்காக பெரும் எண்ணிக்கையில் தனது படைகளை தியென் பியென் பூ மலைப்பள்ளத்தாக்குப் பகுதியில் குவித்தது. இந்தத் திட்டத்தை ஹோசிமின்னும் அவரது ராணுவத்தளபதியுமான தளபதி கியாப்பும் எவ்வாறு முறியடித்தனர் என்பதை விவரிக்கும் நூல் இது. (பதிப்புரையிலிருந்து…)
இந்நூலாசிரியர், பிரெடெரிக் ஃஎப். கிளெய்ர்மோன்ட் ஐ.நா. வில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். புகழ்பெற்ற பொருளாதார நிபுணர். இவர் தனது அலுவலகப் பணி தொடர்பாக வியட்நாம் சென்றிருந்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளிவந்த நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறது, தமிழோசை பதிப்பகம்.
” … இது ஓர் அந்தரங்கக் குறிப்பு. இந்தோ சீனாவில் நான் தங்கியிருந்ததுடன் தொடர்பு உடையது. அப்போது ஏற்பட்ட நெருக்கமான ஓர் உறவு குறித்த நான் ஒரு சிறிய விளக்கம் தர விரும்புகிறேன்.
சர்வதேச கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுவின் ஓர் உறுப்பினனாக நான் இந்தோ சீனாவுக்குச் சென்றிருந்தேன். இது நான் கூறவரும் கதையின் ஒரு பகுதி.
இரண்டாயிரமாவது ஆண்டில் காலமான என் வாழ்க்கைத் துணைவியும் தோழரும் நண்பருமான ஜெர்த்ரு கிளெய்ர்மோனுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அவரது உயிர்ப்பு மிக்க தூண்டுதலும் ஆதரவும் இல்லாமல் இந்தோ சீனாவுக்கும், அதனைத் தொடர்ந்து சீனத்துக்கும் நான் சென்ற பயணம் முழுமை பெற்றிருக்க முடியாது.
தியென் பியென் பூ போர் முடிவுற்ற உடனே நான் வியட்நாமில் இருந்தாக வேண்டிய தேவையை அவர் எனக்கு உணர்த்தினார். நான் அங்கு கட்டாயம் இருந்தாக வேண்டியது இன்றியமையாதது என அவர் எண்ணினார்; நம்பினார். அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அவரது அவ்வெண்ணத்தை உறுதி செய்வனவாக இருந்தன. இந்தோ – சீன பயணம் என் வாழ்வில் மட்டுமின்றி என் துணைவியாரின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அது ஒரு துயரகரமான பிரிவு என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்திருந்தோம். அத்துடன் எங்களது பரந்துபட்ட அரசியல் பணிகளின் காரணமாக அப்பிரிவின் விளைவுகளையும் மதிப்பிட நாங்கள் தவறவில்லை.
ஜெர்த்ரூ ஒரு புள்ளிவிவர நிபுணர், சர்வதேச தொழிலாளர் அலுவலகத்தில் பணி. சிறப்புக் குணங்கள் கொண்ட ஒரு தனிவகையான போராளி. போராட்ட குணம் மிக்கவர். அவரது சிவில் சர்வீஸ் தகுதி, அவரது அரசியல் கொள்கை ஆகியவற்றின் காரணமாக தனித்தன்மைமிக்கதோர் போராளியாக அவர் இருந்தார். நம் எல்லோரையும் போலவே பிறப்பிலிருந்து ஒருவர் சந்திக்கும் வரலாற்றுச் சக்திகளாலும் அதன் தாக்கங்களாலும் உருவாக்கப்பட்டிருந்தார். இந்த வரலாற்றுச் சக்திகள் தற்செயலானவை என்று ஏற்றுக் கொள்பவரல்ல. அவரது கொள்கை முடிவுகள் ஏகாதிபத்தியப் பரவலால் ஏற்பட்ட பாதிப்புகள், செத்துக் கொண்டிருக்கின்ற ஏகாதிபத்திய நோய், அதன் விளைவுகள் ஆகியன குறித்த சிந்தனா பூர்வமான வரலாற்றுப் புரிதல்களின் அடிப்படையில்தான் உருவானவை.
ஹோசி மின்.
அவர் தனது சொந்த நாடான ஆஸ்திரியாவிலிருந்து அரசியல் அகதியாக வந்தவர். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், எஃகு போன்ற இதயமுள்ளவராக அவரை உருவாக்கியிருந்தன. இது அவரிடம் இருந்த திறனாய்வு ஆற்றலை மேலும் கூடுதலாக்கியது என்று கூறலாம். அதன் காரணமாக அவர் முதலாளித்துவத்தின் மிக மோசமான வெளிப்பாடான பாசிசத்தை ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாகப் பார்த்தார். இட்லரின் ஜெர்மனியை இக்கொடூர சக்தியின் மிகச் சிறந்த முன்னுதாரணமாக அவர் எண்ணினார். “நான் இட்லரை மதிக்கிறேன். அவர் என் ஆசானும் மாபெரும் ஆசானுமாவார். அதாவது எதிர்மறையான உதாரணம் என்ற வகையில்” என ஜெர்த்ரூ அடிக்கடி கூறுவதுண்டு.
உலகு குறித்த அவரது பார்வையில் அது திசைகாட்டியாக இருந்தது. ஏகாதிபத்தியத்தை அவர் ஒரு கொடூரமான சக்தியாகப் பார்த்தார். அதற்கு எதிராகப் போராடுவதில் சமரசம் செய்து கொள்ளாத போராளி. மூழ்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியப் பேரரசுகளான பிரான்சையும் வட அமெரிக்காவையும் அவர் ஒன்றாகக் கருத இதுவே காரணம். வியட்நாமும் அதன் விடுதலைப் போராட்டமும் அவரது அரசியல் இலக்குகளாவதற்கும் கூட இதுவே காரணம்.
வியட்நாமின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதில் அவர் தடுமாற்றம் கொண்டதில்லை. அதன் பலமான ஆதரவாளராக இருந்தார். அது மட்டுமின்றி மிகத் தாராளமாயும் இடைவிடாதும் நிதியுதவி அளித்து வந்தார். அதை அவர் என்றும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அது குறித்து அவர் கூறுவதாவது: உலகில் எந்தவொரு தேசமும் மனித குலமும் சிந்தாத அளவு இரத்தம் சிந்தியவர்கள் வியட்நாமியர்கள். நாம் ஏதோ சில தங்கத் துகள்களைக் கொடுத்து அவற்றை ஈடுகட்டப் பார்க்கிறோம். இது ஒரு சமத்துவமில்லாத பண்டமாற்றம். ஆனால் ஒரு வேறுபாடு என்னவெனில், இந்த சமத்துவமில்லாத பண்டமாற்று என்பது இரு பெரும் நண்பர்களிடையே நடக்கிறது. பின் ஒரு கட்டத்தில் வெளிப்படையாக அவர் ஒத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்தது. அவ்வுதவியை அவர் தனது ”சிறிய இரகசியம்” என்றும் காலமெல்லாம் தான் அதைப் பாதுகாத்து வந்ததாகவும் அவர் கூறினார்.
நாங்கள் எதிர்பார்த்த நீண்ட பிரிவு இடையிலேயே – இந்தோ சீனாவில் நான் இருந்தபோது மகிழ்ச்சிகரமாக முறிந்தது. தற்செயலாக அது நடைபெற்றது.
லாவோசில் நான் இருந்த காலத்தில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். சிகிச்சைக்காக நான் ஹாங்காங் அனுப்பிவைக்கப்பட்டேன். அச்சமயத்தில் ஜெர்த்ரூவும் சர்வதேச தொழிலாளர் மாநாட்டுக்காக டோக்கியோவுக்கு வரவிருந்தார். வழியில் நாம் அங்கு – ஹாங்காங்கில் – சந்திக்கலாம் என்று எனக்குத் தகவல் தந்திருந்தார். மிகமிகக் குறுகிய நாட்கள் ஆனால் அவை உன்னதமான காலங்கள். அவர் என் அனுபவங்களை மிகக் கூர்ந்து கேட்டார். ஆனால், அவர் துருவித் துருவிக் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் விடையளிப்பதில் நான் எப்போதுமே முழுமையாக வெற்றிபெற்றதில்லை. பழுப்புத்தாளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த, நாள்தோறும் அந்நிமிடம் வரை நான் நேர்மையுடன் எழுதி வந்த எனது அந்தரங்கக் குறிப்பேட்டினை அவரிடம் காண்பித்தேன். சிறிய மிட்டாய் ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் அழும் குழந்தையைப் போல் அவர் வாய்விட்டு அழுதுவிட்டார். நான் மனநிறைவுற்றேன். இதுதான் அவர் எப்போதுமே விரும்பியதும் கவனித்துவந்ததும் ஹாங்காங்கின் மிகச்சிறந்த உணவைச் சாப்பிடுவதை விட மிகமிகச் சிறப்பானதாயிருந்தது. அவரது உதட்டிலிருந்த மலர்ந்த ஆனந்தப் புன்னகை.
விரைவில் குணமடையுங்கள். உங்கள் நோய்க்கான மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள், மறந்து விடாதீர்கள்; அத்துடன் தொடர்ந்து கேள்விகளைக் கேளுங்கள். இது போன்ற குறிப்பேடுகளைத் தொடர்ந்து எழுதிவாருங்கள் என அவர் பிரியா விடையுடன் கூறிய சொற்கள் மிக சாதாரணமானதல்ல. அதைத்தான் நான் செய்தேன். அக்குறிப்பேட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளையே நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.” (ஆங்கிலப் பதிப்பின் முன்னுரையிலிருந்து)
நூல் : வியட்நாமில் பிரெஞ்சுப் படைகளின் சரணாகதி ஆசிரியர் : ஃபிரெடெரிக் ஃஎப். கிளெய்ர்மோன்ட் தமிழில் : க. விசயகுமார்
வெளியீடு : தமிழோசை பதிப்பகம், 1050, சத்திசாலை, காந்திபுரம், கோவை – 641 012. தொலைபேசி எண் : 94865 86388. மின்னஞ்சல் : tamilosai_vijayakumar@yahoo.co.in பக்கங்கள்:64 விலை:ரூ 30.00
முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 7-ம் தேதி மாலை 7 மணியளவில் காஷ்மீருக்கான சிறப்புரிமை வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ-ஐ மத்திய அரசு நீக்கியதை விவாதித்ததற்காக 30 மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் கூட மாணவர்கள் நடப்பு நாட்டு நிலைமை குறித்து விவாதிப்பதையே தடை செய்வது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, கல்வியின் தரத்தையே சீர்குலைப்பதாகும். விவாத சுதந்திரம் இல்லாத கல்விமுறை சமூகத்தை காட்டுமிராண்டி நிலைக்குத்தான் இட்டுச் செல்லும்.
காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து விட்டு அம்மக்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவி வருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு. தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. சிறுரவைகளால் (பெல்லட்) தாக்கப்பட்டு பலர் பார்வையிழந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. கடும் அடக்குமுறை நடப்பதையும் அதையும் மீறி பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு எதிர்த்து வருவதையும் பிபிசி அம்பலப்படுத்தியிருக்கிறது.
இவற்றையெல்லாம் மூடி மறைத்து, காஷ்மீரில் அமைதி நிலவுவதாகவும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மோடி அரசு பொய்களைப் பரப்பிவருகிறது. மொத்த காஷ்மீரையும் இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தகவல் தொடர்பினை கடந்த ஒரு வாரமாக முடக்கி வைத்திருப்பதோடு பத்திரிகையாளர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் தடுத்து வருகிறது.
மத்திய அரசு காஷ்மீர் மக்கள் மீது தொடுத்துவரும் இராணுவ ஒடுக்குமுறைகளை உடனே நிறுத்தவும், பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கவும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். மேலும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் 30 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறது.
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 17
கூடுதல் பள்ளி நேரம்: பன்முக நடவடிக்கை
திங்கட்கிழமை முதல் கூடுதல் பள்ளி நேரம் ஆரம்பமாகும். அதாவது வகுப்புகள் முடிந்த பின் குழந்தைகள் 6-7 மணி நேரத்தைப் பள்ளியில் கழிப்பார்கள். இந்நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது? அவர்கள் பள்ளியில் சலிப்போடு உட்கார்ந்திருக்க விடக்கூடாதல்லவா!
தான் வளர்க்கப்பட வேண்டுமெனக் குழந்தை விரும்புகிறான் என நான் நம்புகிறேன். ஆனால் அக்குழந்தையால் இதை வாய்விட்டுச் சொல்ல முடியாது, ஏனெனில் இதை அவன் இன்னமும் முழுமையாக உணரவில்லை. ஓய்வு நேரம், என்றழைக்கப்படுவதை அவன் விரும்புவதில்லை. இச்சமயத்தில் என்ன செய்வதென அவனுக்குத் தெரியாது. குழந்தை சும்மாயிருக்கலாம் என்றால் என்ன பொருள்? விரும்பமானதைச் செய் என்று பொருளா? ஆனால் அவன் என்ன விரும்புகிறான் என்பது அவனுக்கு என்ன வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தது.
குழந்தை ஓடியாடித் திரியும் தன்மையுள்ளவன், சுறுசுறுப்பானவன். என்ன செய்வது என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லாவிடில் சுதந்திரம், ஓய்வு நேரம் என்பதெல்லாம் அவனைப் பொறுத்தமட்டில் ஒன்றையுமே குறிப்பதில்லை. கூடுதல் பள்ளி நேரத்தின் போது பல்வேறு விதமான, உணர்ச்சிகரமான, புதியவற்றை அறியும் விஷயங்களுக்கும் பொழுது போக்கு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யாவிடில் குழந்தைகளுக்குச் சலிப்பேற்படுமென நான் உறுதியாக நம்புகிறேன். குழந்தைகளுக்குப் பிடித்தவற்றைச் செய்யவல்ல உற்சாகமான, அன்பான ஆசிரியர்களுக்காக அவர்கள் ஏங்குவார்கள். நாள் பூராவும் குழந்தைகள் குறிப்பிட்ட நோக்கமின்றி ஓடியாடி, அலைந்து திரிந்து, சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் முற்றிலுமாக மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர், இவையெல்லாம் அவர்களுடைய முழுத் திருப்தியின் வடிவம் என்று யாரும் எண்ண வேண்டாம். பல விதங்களில் சலிப்பை வெளிப்படுத்தலாம், விஷயமின்றி குழந்தை அங்குமிங்கும் அலைந்து திரிந்தால் அவன் தன் சலிப்பை இதன் மூலம் வெளிப்படுத்துகிறான் என்று என்னால் நிச்சயம் கூற முடியும்.
எனது சக ஆசிரியர்களைப் போன்றே நானும் என் வகுப்புக் குழந்தைகளைப் பன்முக ரீதியாக வளர்க்க முயல்கிறேன், அவர்களின் அறிவு, உழைப்பு, தார்மிக, மானுட, அழகியல், உடற்கூறு வளர்ச்சிக்குப் பாடுபடுகிறேன். குழந்தையிடம் உருவாகும் மனநிலையில் இந்த அம்சங்கள் அனைத்தும் சீரிசைவாக இணைய வேண்டும், பரஸ்பரம் செயலாக்கம் புரிய வேண்டும் (ஏனெனில் மனநிலை என்பது மேற்கூறிய பண்புகளின் வெறும் கூட்டல் அல்ல, இது சீரிசைவான முழுமை) என்று விழைகிறேன். எனது இந்த ஆசை எதார்த்தமாக பன்முக நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் மீது அக்கறை காட்டுகிறேன். இவற்றில் எனது ஆறு வயதுக் குழந்தைகள் பங்கேற்கலாம், ஏனெனில் நடவடிக்கை தான் வளர்ச்சிக்கும் மனிதன் உருவாவதற்கும் தேவையான நிபந்தனையாகும்; ஒன்றுடன் ஒன்று செயல் நோக்கமுள்ள வகையில் தொடர்பு கொண்ட நடவடிக்கைகள் மட்டுமே சீரிசைவான, பன்முக வளர்ச்சிக்கான நிபந்தனையாக முடியும்.
ஆசிரியர்களால் மட்டும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது – குழந்தைகளுக்கு உற்சாகமான கூடுதல் பள்ளி நேரத்தை அளிக்க இயலாது. எங்களுக்கு உதவி வேண்டும். எந்த விதமான உதவி வேண்டும்? யாரிடமிருந்து?
பெற்றோர்களிடமிருந்து உதவி வேண்டும். பாடங்கள் முடிந்த பின் என் வகுப்புக் குழந்தைகளின் கூடுதல் பள்ளி நேரத்தை சிந்தித்துப் பார்க்கிறேன்: இந்த வகுப்பறையில், தாழ்வாரத்தில், பள்ளி முற்றத்தில், பூங்காவில் எப்படியிருக்குமென யோசித்துப் பார்க்கிறேன். அவர்களுடன் எப்படி பொழுதைக் கழிக்கலாம்?
வகுப்பறையில் மேசைகள் அகற்றப்பட்டு விட்டன. அறையின் நடுவில் நாற்காலிகள் மட்டும் அரை வட்ட வடிவத்தில் போடப்பட்டுள்ளன. சிலர் உட்கார்ந்திருக்கின்றனர்,
சிலர் நிற்கின்றனர். குழந்தைகளிடம் மரக் கரண்டிகள், முக்கோணங்கள், கஞ்சிரா, பேரிகைகள், கிசிலோஃபான் எனும் இசைக் கருவி முதலியன உள்ளன. இது சந்த இசைக் குழு. கோச்சாவின் தந்தையாகிய வலேரி மாமா உருவாக்கியுள்ள இசை நாடகத்தை இவர்கள் நடத்துகிறார்கள். சமீபத்தில் தான் இவர் என்னிடம் வந்து, “வீரமுள்ள முயல்” எனும் இசை நாடகத்தைத் தான் எழுதியுள்ளதாக மகிழ்ச்சியோடு அறிவித்தார்; சில பாடல்களைப் பாடிக் காட்டினார். அவை எனக்குப் பிடித்திருந்தன, சந்தமும் இசைநயமும் உள்ளவையாக, பாட எளிமையானவையாக இருந்தன. குழந்தைகளுக்கு இசை வகுப்புகள் நடத்தவும் இசைக் குழுவை தோற்றுவிக்கவும் இவர் ஒப்புக் கொண்டார். இந்த உற்சாகமான, இசைநேயமுள்ள மனிதர், அதிசயமான இசையுலகை குழந்தைகளுக்குத் திறந்துகாட்ட முயலுகிறார். இந்தக் கூடுதல் பள்ளி நேரத்தில் நடக்கப் போவதை நான் இப்படித்தான் கற்பனை செய்து பார்க்கிறேன்.
“நாம் இப்போது எந்த காட்சியை நடித்துக் காட்டுகிறோம்?”
“வீரம் மிக்க முயல் சிங்கத்திடம் செல்ல இருக்கையில் மற்ற மிருகங்கள் இதை வழியனுப்புகின்றன.”
“நமது இசைக்கருவிகள், பாடல் எதை வெளிப்படுத்த வேண்டும்?”
”மற்ற மிருகங்கள் முயலின் மீது இரக்கம் காட்டுகின்றனவா?”
“முயலை விட்டுப் பிரிவது குறித்து மற்ற மிருகங்கள் – கவலை கொள்கின்றன.”
“நாம் துக்கத்தை, வருத்தத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில், முயல் ஒருவேளை திரும்பாமல் இருக்கலாம்.”
”நீ உனது கிசிலோஃபான் கருவியில் இதை எப்படி வாசிப்பாய்? பேரிகையில்….. இப்படியில்லை, நாம் இசையின் மூலம் அச்சத்தையும் முயலுக்கான கவலையையும் வெளிப்படுத்த வேண்டும். தயாரா…”
இசைக்குழு இசைக்க, வலேரி மாமா கையை ஆட்டி, சைகை காட்டி, குரல் எழுப்பி இசைக்குழுவை வழி நடத்துகிறார்.
“நான் இப்போது உங்களுக்குச் சிறிது வாசித்துக் காட்டட்டுமா?” என்று இறுதியில் அவர் குழந்தைகளைக் கேட்டுவிட்டு, பியானோ முன் அமருகிறார். குழந்தைகள் அவரைச் சுற்றிக் குழுமுகின்றனர்.
“இன்னமும் கொஞ்சம் வாசியுங்கள்!” என்கின்றனர் குழந்தைகள். அவர் இன்னமும் வாசிக்கின்றார். குழந்தைகளுக்கோ வலேரி மாமாவை விடவே விருப்பமில்லை…..
“உங்களுக்கு நாட்டிய மொழியைச் சொல்லித் தரட்டுமா?” குழந்தைகளுக்கு விருப்பம்தான்: நாட்டியமும் புன்சிரிப்பு மிக்க இளைஞரும்.
“நான் இப்போது உங்களுக்கு என்ன சொல்லப்போகிறேன் தெரியுமா?” என்று அவர் அங்கேயே சில நடன அம்சங்களைச் செய்து காட்டுவார்.
பின்னர் இவர் குழந்தைகளை வட்டமாக நிற்கச் செய்து பாலே நடன அம்சங்களைச் சொல்லித் தர ஆரம்பிப்பார். நுக்ஸார் மாமா கண்டிப்பானவர், ஒரே மாதிரியான பாவனையைப் பன்முறை செய்து காட்டும்படி செய்வார் என்ற போதிலும் குழந்தைகளுக்கு இந்த வகுப்புகள் பிடிக்கும். களைப்படைவார்களா? களைப்படைந்தால் நீக்ஸார் மாமா இவர்களை வட்டமாக உட்கார வைத்து நடனங்களைப் பற்றி சுவாரசியமான கதைகளைச் சொல்லுவார், எல்லோருக்கும் புரியக் கூடிய இந்த வியத்தகு “நடன மொழி” பற்றிக் கூறுவார்.
“ஞாயிற்றுக்கிழமை ஒப்பேரா, பாலே அரங்கின் காலைக் காட்சிக்கு வாருங்கள். நான் நடனமாடப் போகிறேன். பின்னர் உங்களுக்கு என்ன பிடித்தது, என்ன பிடிக்கவில்லையென்று சொல்லுங்கள்…”
நீனோவின் தந்தையாகிய கீவி மாமாவுடன் பேசுவதும் சுவாரசியமாக இருக்கும். இவர் பொம்மலாட்ட அரங்கில் பணிபுரிகிறார். மழை பெய்யும் போது வீதியில் மனிதர்கள் எப்படி நடப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று கூறி துவங்குவார். லேலா வெட்கப்படுகிறாள். ஏல்லாவிற்கு விருப்பமில்லை. மாக்தாவிற்கு சரியாக வரவில்லை. மாயாவோ முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு அறையில் அங்குமிங்கும் நடந்து காட்டுகிறாள்.
“மழையில் இப்படியா நடப்பார்கள்?” என்று பார்வையாளர்கள் மறுப்பு தெரிவிப்பார்கள்.
லேரி தலையைப் பத்திரிகையால் மூடியபடி “நடை பாதை” விளிம்பில் கவனமாக நடக்கிறான். அவன் முற்றிலுமாக நனைந்து விட்டான், வழுக்கி, “குட்டையில்” வேறு விழுந்து விட்டான், எழுந்திருக்க முயன்று மீண்டும் விழுகிறான்; யாரோ அவனுக்கு எழ உதவுகின்றனர்; அருகேயுள்ள வீட்டு வாசலை நோக்கி ஓடுகிறான், அங்கே கும்பலாயிருந்தாலும் மழை கிடையாது.
கற்பனையான ஊமை நாடகம் மகிழ்ச்சிகரமானது, எல்லோருக்கும் புரியக் கூடியது. குழந்தைகள் சிரிக்கின்றனர், கை தட்டுகின்றனர். கீவி மாமாவும் நடித்துக் காட்டுகிறார்.
“நான் யார் மாதிரி நடிக்கிறேன் என்று சொல்லுங்கள்” என்று அவர் செய்து காட்டுகிறார்.
“முதியவர் மாதிரி!”
“சரி, இப்போது?”
“நீங்கள் இளைஞர்கள் இருவர்களைப் போல் நடித்தீர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர்!”
“இப்போது?”
குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். கீவி மாமா சிறுமியைப் போல் நடித்தாரென சிலரும், நாயுடன் உள்ள சிறுவனைப் போல் நடித்தாரென வேறு சிலரும் கூறுகின்றனர். ஆனால் லேரி மட்டுமே கண்டு பிடித்தான்:
“நீங்கள் ஒரு சிறுமியைப் போல் நடித்தீர்கள். ஆனால் அவள் மழையில் நடக்கவில்லை, மாறாக சூரியன் பிரகாசிக்கும் சூழலில் இருக்கிறாள்.”
பின் கீவி மாமா மகிழ்ச்சிகரமான ஒரு கவிதையை சோகமயமான குரலில் படித்து, தான் படித்தது சரியா, இல்லையெனில் ஏன் என்று கேட்பார். பாடம் முடிவை நெருங்கும். ”நீங்கள் நாடக மொழியைக் கற்பீர்கள்” என்று விடை பெறுகையில் குழந்தைகளைப் பார்த்து கீவி கூறுவார்.
இந்த இசை, நாட்டிய, நுண்கலை, நாடக வகுப்புகள் குழந்தைகளின் அழகியல் உணர்வையும் ரசனையையும் வளர்க்கும். “தன்னை வெளிப்படுத்தும் போது மனிதன் வளருகிறான். தன் உணர்வுகளைப் பாடலில், நடனத்தில், ஊமை நாடகத்தில் வெளிப்படுத்துவதன் மூலம் மனிதன் தன்னை நன்கு உணருகிறான்” என்று சோவியத் ஆசிரியரியலின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகிய நதேழ்தா கான்ஸ்தன்தீனவ்னா குரூப்ஸ்கயா கூறினார்.
தனிப்பட்ட கலைகளைப் பயிற்றுவிப்பதன் சாரத்திற்குப் பொது அடிப்படை இருக்க வேண்டுமென நான் யோசிக்கிறேன். எது இப்படிப்பட்ட அடிப்படையாக இருக்க முடியும்? சய்கோவ்ஸ்கியின் இசைத் தட்டைப் போட்டு இதற்கேற்ப மனதில் தோன்றுவதை வரையும்படி குழந்தைகளிடம் சொல்லலாமா? இது நல்லது. என்றாலும் இசை, வரைதல், நடனம், நாடகம் (இவற்றையெல்லாம் ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கூடுதல் பள்ளி நேரத்தில் சொல்லித்தர விரும்புகிறேன்) ஆகியவற்றை இணைப்பது எது?
இதில் பிரச்சினை எதுவும் இருக்கக்கூடாது. எல்லா விஞ்ஞானங்களையும் போன்றே எல்லா வகையான கலையம்சங்களுக்கும் பொதுவானது யதார்த்தமாகும். ஆனால் கலை பிரதிபலிக்கும் யதார்த்தத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். தனியான பட்ட மரம் ஒன்றை ஓவியர் வரைகிறார். இதில் ஒரேயொரு இலை மட்டும் எப்படியோ தொங்கிக் கொண்டிருக்கிறது. ஓவியர் இதில் எதை பிரதிபலிக்கிறார்? இந்த மரத்தை இந்த இலையுடன் காட்டவா இவர் விரும்பினார்? ஒரு இசையமைப்பாளர் இசையை அமைக்கும் போது ஒலிகளின் இணைப்புதான் எல்லாவற்றையும் விட முக்கியமானதா?
உண்மையான கலைப் படைப்புகள் எல்லாவற்றிலும் மனிதர்களின் பால், இயற்கையின் பால், தன்மீது, மொத்தமாக வாழ்க்கையின்பால் தனி நபருக்குள்ள உணர்வுப்பூர்வமான, உணர்ச்சிகரமான உறவு பிரதிபலிக்கிறது. சிம்பனி இசை, சித்திரம், உடலின் வளைவு, நெளிவுகள் இவையெல்லாம் மனித மகிழ்ச்சிகள், ஏமாற்றங்கள், நாட்டங்களின் பல்வேறு விதமான வெளிப்பாடுகளாகும். ஒவ்வொரு கலைப் படைப்பிலும் யதார்த்தம் – கலைஞன், இவனுடைய உலகக் கண்ணோட்டம், போராட்டம் – உருக்கொண்டு நிற்கிறது. ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு விதத்தில் – ஒலி, வண்ணம், நெளிவு சுழிவுகள் மூலம் – இந்த யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது…. கலைப் படைப்பைப் புரிந்து கொள்ள இந்தக் கலையின் மொழி தெரிந்திருக்க வேண்டும், எப்படி கிரகிப்பது, எப்படிக் கேட்பது, எப்படிப் படிப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும்.
துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நூலை வெளியிட உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அந்த விழாவில் பாஜகவின் காது குளிர ஐஸாக உருகியிருக்கிறார் ரஜினி. “காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து மிகவும் சிறப்பான நடவடிக்கை; அது குறித்த அமித்ஷாவின் பாராளுமன்ற உரை அற்புதம்; மோடியும் அமித்தும் அர்ஜுனன் – கிருஷ்ணன் போல; அதில் யார் அர்ஜுனன், யார் கிருஷ்ணன் என்பது அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த இரகசியம்” என்று போற்றிப் புராணம் பாடியிருக்கிறார் ரஜினி.
இந்த போற்றி ஃபுளோவில் பார்த்திபன், பகவான் என்று உவமை பேசினாலும் அதிலும் பாதுகாப்பாக உளறியிருக்கிறார் ரஜினிகாந்த். இருவரில் யார் பகவான், யார் பார்த்திபன் என்று சுட்டியிருந்தால் பிரச்சினை. அதனால் அந்த விசயம் அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று சேஃப்பாக செப்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
காஷ்மீரே இழவு விழுந்த வீடு போல தத்தளிக்கும் போது இந்த நடிகரோ நீரோ போல மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு பிடில் வாசிக்கிறார். இணையம், தொலைபேசி, செல்பேசி, பத்திரிகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ஊரடங்கு போட்டு, பாதுகாப்புப் படைகள் மட்டும் காஷ்மீரின் தெருக்களில் வலம் வரும் வேளையில் ஒரு புயலுக்கு முந்தைய அமைதி போல காஷ்மீர் காணப்படுகிறது. காஷ்மீர் மக்களின் வாயையும் வயிற்றையும் கட்டிவிட்டு அங்கே எதிர்ப்பு குரலே இல்லை என நாடகமாடுகிறது அரசு. அந்த நாடகத்தை பொய்யென விரைவிலேயே காஷ்மீர் மக்கள் நிரூபிப்பார்கள்.
வெங்கய்யா, நூல் விழாவில் அடிமை எடப்பாடி அரசின் இரட்டையரும் கலந்து கொண்டு பாஜகவைப் போற்றி புராணம் பாடியிருக்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி – பாஜக – அதிமுக கூட்டணிக்காக பாடுபடும் துக்ளக் குருமூர்த்தியும் அந்த விழாவில் இருந்தார்.
அதிமுக-வின் பாராளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் முன்னர் ஒருமுறை அங்கே பேசும் போது “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்” என்று பாடி தனதும், அதிமுகவினதும் வக்கிரத்தை காட்டியது போல இங்கே ரஜினி எனும் திரை நடிகர் காஷ்மீரின் சோகத்தை கேலி செய்வது போல அமித்ஷா – மோடி கூட்டணியை வாய் வலிக்க பாராட்டுகிறார். ஒரு சினிமா ஷூட்டிங் என்ற பார்வையைத் தாண்டி இந்த கருமாந்திரத்திற்கு காஷ்மீர் குறித்து என்ன தெரியும்?
இன்றைய கருத்துக் கணிப்பின் கேள்வி:
காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ?
♣பாஜக-விற்கு சொம்படிக்க ♣அதிமுக-பாஜக-ரஜினி கூட்டணிக்காக ♣ காஷ்மீரில் சொத்து வாங்க ♣முஸ்லீம் வெறுப்பு ♣அனைத்தும்
டிவிட்டரில் வாக்களிக்க :
காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ?
♣ பாஜக-விற்கு சொம்படிக்க ♣ அதிமுக-பாஜக-ரஜினி கூட்டணிக்காக ♣ காஷ்மீரில் சொத்து வாங்க ♣ முஸ்லீம் வெறுப்பு